<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 25 Jul 2026 10:55:21 +0000</lastBuildDate><item><title>வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் விட்ட மு.க.அழகிரி மகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-alagiris-daughter-slapped-the-bank-manager-on-the-cheek</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-alagiris-daughter-slapped-the-bank-manager-on-the-cheek#comments</comments><guid isPermaLink="false">b8f01e81-47c8-4d52-8787-93dea6329428</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:52:02 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:52:02.531Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,SBI,எஸ்.பி.ஐ,மு.க.அழகிரி,கயல்விழி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q2tb5srh/kayalvizi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q2tb5srh/kayalvizi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் </p><p>அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி, தி.மு.க.,வில் தென்மண்டல அமைப்பு செயலராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதால், கட்சி பணிகளில் இருந்து, அவர் ஒதுங்கி இருக்கிறார்.</p><p>சமீபத்திய சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்து, த.வெ.க., ஆட்சி அமைந்துள்ளது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற விஜய்க்கு, அழகிரியின் மகள் கயல்விழி, ஏற்கனவே வாழ்த்து தெரிவித்து இருந்தார்.</p><p>சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் விஜயை, கயல்விழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.</p><p>இந்தநிலையில் கயல்விழிக்கு அடையாறில் சொந்தமாக ஒரு கட்டிட வளாகம் உள்ளது. இதில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது.   எஸ்.பி.ஐ வங்கி செயல்படும் கட்டிடத்தின் லிப்ட் செயல்படாததாதால் உரிமையாளரான கயல்விழியிடம் புகார் அளித்துள்ளனர். </p><p>இந்தநிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அப்போது </p><p>கயல்விழி கோபமாக பேசுவதை வங்கி மேலாளர் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு  ஆசுவாசுமாக கேட்டிருந்ததால்  நான் பேசும் போது கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாயா என கூறி ஆவேசமாக கன்னத்தில் பளார் என்று விட்டார். உடன் கயல்விழியுடன் இருந்தவர் எழுந்து அவரை சமாதானம் செய்துள்ளார். </p><p>இந்த சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் என அறைந்த கயல்விழி மீது காவல் நிலையத்தில்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-cm-vijay-wishes-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-cm-vijay-wishes-him#comments</comments><guid isPermaLink="false">2250cf1f-1635-4e34-9dfc-25a54bb27835</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:10:20 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:10:20.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பா.ம.க,வாழ்த்து,பாமக நிறுவனர் ராமதாஸ்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ma8ezuq0/77.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ma8ezuq0/77.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து,  தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வாழ்த்துகள்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.<br><br>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> <a href="https://x.com/drramadoss?ref_src=twsrc%5Etfw">@drramadoss</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2080955969237135772?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டு சிறை: கோர்ட் அதிரடி தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-involved-in-robbery-sentenced-to-7-years-in-prison-courts-dramatic-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-involved-in-robbery-sentenced-to-7-years-in-prison-courts-dramatic-verdict#comments</comments><guid isPermaLink="false">c86b1acd-d6c5-40d9-92d0-8d1c538da0bb</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:00:31 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:00:31.295Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,கைது,arrest,கொள்ளை,robbery case,thiruvanamalai,கோர்ட் உத்தரவு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2tvjy9x4/21.jpg" width="753"><media:title type="html"><![CDATA[  குற்றவாளி பிரேம்குமார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேம்குமாருக்கு 7 ஆண்டு சிறை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2tvjy9x4/21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவண்ணாமலை</a> நகரில் வசித்து வரும் தனியார் பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர், பணி முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டினார். </p><h2>தங்கச் சங்கிலி கொள்ளை</h2><p>மேலும், அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><h2>குற்றவாளி கைது</h2><p>போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், வழிப்பறியில் ஈடுபட்டது திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரேம்குமார் (வயது 35) என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாகக்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது </a>செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்யதனர்.</p><h2>கோர்ட் உத்தரவு</h2><p>இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் விசாரணை செய்யப்பட்டு, பிரேம்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.</p><p>இதனைத் தொடர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்ட பிரேம்குமாருக்கு 7 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி இன்று (சனிக்கிழமை) தீர்ப்பளித்தார். அந்த அதிரடி தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-phase-2-expansion-work-intensifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-phase-2-expansion-work-intensifies#comments</comments><guid isPermaLink="false">2ea031e8-6cc0-4ea9-bd63-30c5eeb7182b</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:41:20 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:41:20.824Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai Airport,விமான நிலையம்,Infrastructure,உள்கட்டமைப்பு,பணிwork</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hi9z4t5e/76.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hi9z4t5e/76.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் 2023-ல் நிறைவடைந்து, ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகளை கையாளும் புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது 2-ம் கட்டமாக, ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. </p><h2>சென்னை விமான நிலையம்</h2><p>இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி முரளிதர மகாலி, கடந்த 5 ஆண்டுகளில் சென்னை விமான நிலைய உள்கட்டமைப்புக்காக ரூ.236.75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>மேலும், 2022-23 முதல் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை விமான நிலையம்</a> தொடர்ந்து நாட்டின் 5-வது பரபரப்பான விமான நிலையமாக இருப்பதாகவும், விமான நேர ஒதுக்கீட்டில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்றும் அவர் கூறினார்.</p><p>அதேபோல், திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 கோடியில் கட்டப்படும் புதிய ஏ.டி.சி. கோபுரப் பணிகள் 76 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், கோவை விமான நிலையத்தில் ரூ.51 கோடியில் எல்லைச் சுவர் மற்றும் ரூ.14 கோடியில் முனையக் கட்டிட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் ராமதாஸ் 37 ஆண்டுகள் கடந்து வந்த அரசியல் பாதை: சற்று பின்நோக்கி பார்ப்போமா?</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/dr-ramadosss-political-journey-spanning-37-years-shall-we-take-a-look-back</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/dr-ramadosss-political-journey-spanning-37-years-shall-we-take-a-look-back#comments</comments><guid isPermaLink="false">0a711b7a-8d46-40e3-83d0-03d8fb48896a</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:26:02 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:26:02.161Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,ராமதாஸ்,பாமக,Ramadoss,PMK,தமிழகம்,டாக்டர் ராமதாஸ்,Dr Ramadoss,Pattali Makkal Katchi,பாட்டாளி மக்கள் கட்சி,DrRAMADOSS,Doctor Ramadoss,தமிழக அரசியல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/r4w5e6z3/aathier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/r4w5e6z3/aathier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>சிறப்பு செய்திகள்</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தனது 88-வது பிறந்த நாளை இன்று கொண்டாடிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் <a href="https://www.dailythanthi.com/topic/drramadoss">ராமதாஸ்</a>, அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நேரத்தில், அவர் கடந்து வந்த 37 ஆண்டு கால அரசியல் பாதையை சற்று பின்நோக்கி பார்ப்போம். </p><h2>கீழ்சிவிரி கிராமம்</h2><p>பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 1939-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி, விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கிய அவர், 1959-1965-ம் ஆண்டு காலத்தில், சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை மேற்கொண்டார். பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்ட அவர், உறவினர்கள், ஆசிரியர்களின் உதவியுடனேயே மருத்துவம் படித்து முடித்தார்.</p><h2>3 ரூபாய் டாக்டர்</h2><p>1965-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் ராமதாஸ் மருத்துவராக பணிபுரிந்தார். பின்னர், தனியாக ஆஸ்பத்திரி தொடங்கிய அவர் 3 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்தார். இதனால், அவரை 3 ரூபாய் டாக்டர் என்றே மக்கள் அழைத்தனர். </p><p>தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் ஏழை நோயாளிகள், பணம் இல்லை என்று கூறினால், இலவசமாகவே மருத்துவம் பார்த்து மருந்து, மாத்திரைகள் கொடுத்து அனுப்பினார். 10 ஆண்டுகளுக்கு பிறகே 5 ரூபாயாக சிகிச்சை கட்டணத்தை உயர்த்தினார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/n6irkw1t/ayya.jpg" /></figure><h2>வன்னியர் இடஒதுக்கீடு</h2><p>திண்டிவனம் வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், அவர்களுக்கு டாக்டராக சிகிச்சை அளித்தபோதே, கல்வி-வேலை வாய்ப்பில் அவர்கள் பின்தங்கியிருப்பதை உணர்ந்தார். இதனால், 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கத்தை டாக்டர் ராமதாஸ் தொடங்கினார். அன்று முதல், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து போராடத் தொடங்கினார். </p><p>1987-ம் ஆண்டு வன்னியர்கள் இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்தது. அந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியானார்கள். அப்போது, முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை டாக்டர் ராமதாஸ் சந்தித்து, வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தார். மேலும், பல தலைவர்களிடமும் இதே கோரிக்கையை முன்வைத்தபோதும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. </p> <h2>பா.ம.க. தொடக்கம்</h2><p>1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, வன்னியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார். இது டாக்டர் ராமதாசின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது. வன்னியர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கையும் பெற்றுத்தந்தது. </p><p>அதனைத் தொடர்ந்து, 1989-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி பா.ம.க.வை டாக்டர் ராமதாஸ் தொடங்கினார். கட்சியின் பொதுச் செயலாளராக பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர்தான் வர முடியும் என்று கொள்கையை வகுத்தார். இளைஞரணி தலைவர் பொறுப்பிலும் இஸ்லாமியரையே வைத்தார்.</p><h2>வாக்கு வங்கி</h2><p>1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முதன் முதலாக பா.ம.க. எதிர்கொண்டது. 199 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த பா.ம.க., 116 இடங்களில் போட்டியிட்டு, அதில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. என்றாலும், 6 சதவீதம் அளவுக்கு வாக்கு வங்கியை வைத்திருந்தது. </p><p>1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிட்டது. 5 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்றது. மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தது. பட்டியலின சமூகத்தை சேர்ந்த தலித் எழில்மலை மந்திரியானார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ux1inosc/dmk.jpg" /></figure><p>1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க., 7 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது. </p><p>2004 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. 6 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றது. மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக டாக்டர் அன்புமணி பதவி வகித்தார். </p><h2>தி.மு.க. கூட்டணி</h2><p>2006 சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த பா.ம.க., தமிழகத்தில் 6, புதுச்சேரியில் 1 இடம் என 7 இடங்களில் போட்டியிட்டும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. </p><p>2011 சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. 30 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்ற நிலையில், 8 இடங்களில் போட்டியிட்டு தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் மட்டும் வெற்றி பெற்றார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/71vhsq9e/karape.jpg" /></figure><h2>அ.தி.மு.க. கூட்டணி</h2><p>2016 சட்டசபை தேர்தலின்போது, "இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை.  தனியாக ஆட்சி அமைப்பதே இலக்கு" என்று, "மாற்றம்.. முன்னேற்றம்.. அன்புமணி" என்ற முழக்கத்துடன் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெற்றி பெற முடியவில்லை. முதல்-அமைச்சர் வேட்பாளரான அன்புமணி ராமதாசே தோல்வியடைந்தார். </p><p>2019 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க., 7 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. 2021 சட்டசபை தேர்தலில், அதே அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்த பா.ம.க., 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/j4az4t5q/modi.jpg" /></figure><h2>சமச்சீர் கல்வி</h2><p>2012-2014 காலக்கட்டத்தில் டாக்டர் ராமதாஸ் உருவாக்கிய அனைத்து சமுதாய பேரமைப்பு மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்தது. அவருக்கு கெட்டப் பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தது.  </p><p>தேர்தலை தாண்டி, பா.ம.க.வின் சாதனை என்று பார்த்தால், தமிழகத்தில் அதிகமான அம்பேத்கர் சிலைகளை திறந்தது, மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களை நடத்தியது, சமச்சீர் கல்வி அமல்படுத்த காரணமாக இருந்தது ஆகியவற்றை சொல்லலாம். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/k4k361og/kier.jpg" /></figure><h2>மகன் அன்புமணி இடையே பிரச்சினை</h2><p>மக்களுக்கான பிரச்சினைகள், ஆட்சியாளர்களின் நடவடிக்கை குறித்து உடனுக்குடன் அறிக்கை வெளியிட்டு சுட்டிக்காட்டிய டாக்டர் ராமதாஸ், பா.ம.க. சார்பில் 2002-ம் ஆண்டு முதல் நிழல் பட்ஜெட்டையும், 2008-ம் ஆண்டு முதல் வேளாண் நிழல் பட்ஜெட்டையும் வெளியிட்டு வருகிறார். </p><p>சட்டசபை தேர்தலுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே பிரச்சினை ஏற்பட்ட போதிலும், தேர்தலுக்கு பிறகு அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இனி டாக்டர் அன்புமணியை கட்சியை நடத்துவார் என்று டாக்டர் ராமதாசே கூறிவிட்டார். </p><p>ஆனாலும், தனது 37 ஆண்டு கால அரசியல் வாழ்வில், கடைசி வரை, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/drramadoss">டாக்டர் ராமதாஸ்</a> மாறவே இல்லை.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/4pmtownk/image.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>தலைமை செயலகத்தில் புதிய இடத்திற்கு மாறும் முதல்-அமைச்சரின் அலுவலகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-office-will-move-to-a-new-location-in-the-secretariat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-office-will-move-to-a-new-location-in-the-secretariat#comments</comments><guid isPermaLink="false">5744ce98-de71-4d3a-aa54-84647aeb6d5e</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:08:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:08:34.941Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,அலுவலகம்,tngovt,CMVijay,தலைமைசெயலகம்,CMO</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/8xon49gp/vijay33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சரின் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/8xon49gp/vijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில், புதிய இடத்திற்கு முதல்-அமைச்சர் விஜயின் அலுவலகம் மாறுகிறது</p><p>சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில்தான் முதல்-அமைச்சரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இட நெருக்கடி காரணமாக, முதல்-அமைச்சரின் அலுவலகம் இட மாற்றம் செய்யப்படவுள்ளது.</p><p>தற்போது, தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில் இயங்கி வரும் முதல்-அமைச்சர் அலுவலக அறையை, அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி காரணமாகவும், பொது மக்களின் வருகை அதிகரிப்பைக் கருத்தில்கொண்டும் முதல்-அமைச்சரின் அலுவலக அறையை இட மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, 10 அடுக்குமாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் விஜய்யின் அலுவலக அறை, அவரது செயலாளர்கள் 4 பேரின் அறைகள் அனைத்தும் 10-ஆவது மாடியில் அமைய விருக்கிறது. இந்தத் தளத்திலிருந்து கடலின் அழகை ரசிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளது.</p><p>நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்தில் பெரிய மாநாடு கூடம் மற்றும் உணவகப் பகுதியை முதல்-அமைச்சரின் அலுவலகமாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.</p><p>முதல்-அமைச்சரின் அலுவலக அறை மாற்றப்படும் இந்தத் தளத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, வணிக வரித் துறையின் சில பிரிவுகளும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளன. ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் முதல்-அமைச்சரின் அலுவலக அறை இட மாற்றம் முடிவடைந்து விடும் எனக் கூறப்படுகிறது.</p><p>தமிழக முதல்-அமைச்சர்களிலேயே பாரம்பரிய அலுவலகக் கட்டடத்திலிருந்து புதிய இடத்துக்கு அலுவலகத்தை மாற்றும் முதல் <a href="https://www.dailythanthi.com/search?q=vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-mk-stalin-wishes-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-mk-stalin-wishes-him#comments</comments><guid isPermaLink="false">82d6561d-7ae7-42db-8fc7-2098e1705186</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:03:55 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:03:55.370Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமதாஸ்,சென்னை,பா.ம.க,PMK.,Doctor Ramadoss,மு.க.ஸ்டாலின் MK Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xdwxkv9r/75.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xdwxkv9r/75.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின் </a>வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வாழ்த்துகள்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து, முக்கியக் குரலாக ஒலித்து வந்த தாங்கள் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், தங்களது ஓய்வுக்காலம் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் திகழ்ந்திட விழைகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய போராட்டம் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்கிறது’ - கனிமொழி எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-protest-against-the-neet-exam-that-began-in-tamil-nadu-is-now-resonating-across-the-country-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-protest-against-the-neet-exam-that-began-in-tamil-nadu-is-now-resonating-across-the-country-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">5cbe9b70-e106-46f9-bd49-919d1d5dca86</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:41:41 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:41:41.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,நீட் தேர்வு,NEET</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1qnjjz6s/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1qnjjz6s/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இதற்கிடையில், கடந்த 20-ந்தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது.</p><p>போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. </p><p>டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதலை கண்டித்தும், நீட் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர் தற்போது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சென்னை தியாகராய நகரில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இந்த போராட்டத்திற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களாகிய நாங்களே பல நாட்கள் தூக்கி வெளியே எறியப்பட்டுள்ளோம். எதிர்க்கட்சிகளில் இருக்கும் அத்தனை எம்.பி.க்களையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசுதான் மத்திய பா.ஜ.க. அரசு. </p><p>ஆனால் எங்களால் கூட செய்ய முடியாததை, மாணவர்கள் செய்துள்ளனர். டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களை பார்த்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசே முன்வந்துள்ளது. இது மாணவர்களின் மிகப்பெரிய வெற்றி. </p><p>நீட் தேர்வுக்கு எதிராக வந்த முதல் குரல், தமிழ்நாட்டில் இருந்து வந்ததுதான். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய போராட்டம் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. நாடு முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் மட்டும் முறைகேடு நடக்கவில்லை, நீட் தேர்வே முறைகேடுதான்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>தேனியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகை-பணம் திருட்டு; வானதி சீனிவாசன் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-old-woman-was-murdered-in-theni-and-jewellery-and-money-were-stolen-vanathi-srinivasan-is-in-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-old-woman-was-murdered-in-theni-and-jewellery-and-money-were-stolen-vanathi-srinivasan-is-in-anguish#comments</comments><guid isPermaLink="false">42ba500b-5654-44da-9eda-a4765c81a598</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:33:57 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:33:57.307Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Theni,தேனி,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,தேனி மாவட்டம்,THENI DISTRICT</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ndosxgus/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ndosxgus/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மூத்தாட்டி கொலை</h2><p>தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் இன்று அதிகாலை 60 வயது பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.</p><p>முந்தைய திமுக ஆட்சியில்கூட தனியாக வீட்டில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்தன. ஆனால் தற்போதைய தவெக ஆட்சியிலோ குற்றச் சம்பவங்கள் ஒருபடி மேலே சென்று தனியாக வசிக்கும் முதியவர்களை கொலை செய்து பணம், நகைகளைத் திருடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.</p><h2>குற்றங்கள் பெருகி வருவதே நிஜம்</h2><p>தவெக ஆட்சி சிறப்பாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தபோதும், மாற்றாக தொடர்ந்து குற்றங்கள் பெருகி வருவதே நிஜம். பொதுவாக சிங்கங்கள் அதிக நேரம் தூங்கும் இயல்புடையவை; பசித்தால் மட்டுமே இரை தேடும். அதுபோலத்தான் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆரம்பித்து வைத்த சிங்கப் பெண் படையும் கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது போலும். கணக்கு காட்ட வேண்டுமே என்பதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக வழக்குகளைப் பதிந்து “நாங்களும் இருக்கிறோம்” என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காட்டிக்கொள்ளும் </a>அளவில்தான் அவர்களின் செயல்பாடு உள்ளதாகத் தெரிகிறது.</p><p>எனவே சிங்கப் பெண் படையை முழுவீச்சில் களமிறக்கி, சுறுசுறுப்புடன் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்து குற்றங்களைத் தடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘கோவில் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளை அனுமதிக்க கூடாது’ - அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempts-to-usurp-temple-properties-must-not-be-allowed-hrce-minister-ramesh-orders-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempts-to-usurp-temple-properties-must-not-be-allowed-hrce-minister-ramesh-orders-officials#comments</comments><guid isPermaLink="false">7e95d20c-cc29-4922-b76c-7231d40bdcb0</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:27:01 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:27:01.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1m2qxo7d/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1m2qxo7d/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களின் நிர்வாகம், கோவில் சொத்துகள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-</p><p>“கோவில்களில் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். கோவில் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளை அனுமதிக்க கூடாது. கோவில் நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்ய வேண்டும். </p><p>மேலும் இதுகுறித்து அமைச்சர், ஆணையரின் கவனத்திற்கு அதிகாரிகள் உடனடியாக கொண்டு வர வேண்டும். கோவில்களில் பக்தர்கள் சீரான தரிசனத்தை உறுதி செய்ய வேண்டும். அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கல்லூரி அருகே கஞ்சா விற்ற 2 வடமாநில தொழிலாளர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-northern-state-workers-arrested-for-selling-ganja-near-college</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-northern-state-workers-arrested-for-selling-ganja-near-college#comments</comments><guid isPermaLink="false">812fc002-37ac-4204-b5b0-5b133fb282bd</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:26:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:26:40.547Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,2 arrested,2 பேர் கைது,sale of ganja,கஞ்சா விற்பனை,வடமாநில தொழிலாளர்கள்,Northern State workers,Private College,தனியார் கல்லூரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/smvd6fgi/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா விற்பனை, கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/smvd6fgi/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகம், மருதகுளம் அருகே தனியார் கல்லூரி பகுதியில் 130 கிராம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்த போலீசார் 2 வடமாநில தொழிலாளர்களை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>போலீசார் சோதனை</h2><p>திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மருதகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரி பகுதியில் 23.7.2026 அன்று மதியம் 1.30 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான ஸ்ரவன்பஸ்வான் (வயது 37), ஷேக்சமீர்(26) ஆகிய 2 பேரை சோதனை செய்தனர்.</p><h2>வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது, கஞ்சா பறிமுதல்</h2><p>அப்போது அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 130 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அவர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மூன்றடைப்பு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ஸ்ரவன்பஸ்வான், ஷேக்சமீர் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் கார் டயர் வெடித்து விபத்து - இருவர் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-killed-in-accident-caused-by-a-burst-car-tyre-on-the-virudhunagar-thirumangalam-four-lane-highway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-killed-in-accident-caused-by-a-burst-car-tyre-on-the-virudhunagar-thirumangalam-four-lane-highway#comments</comments><guid isPermaLink="false">8e47060f-28b8-49a2-9498-40d8b6f968cd</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:16:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:16:45.950Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Madurai,மதுரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/lpefvkx2/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/lpefvkx2/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் திருமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்கள் காரில் மற்றொரு நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு, திருமங்கலம் திரும்பியுள்ளனர். அவர்கள் விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, காரின் முன் பக்க டயர் வெடித்ததில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழுந்துள்ளது.</p> <p>இதில் மின்வாரிய ஊழியர் பாரதிராஜா, ஐ.டி. ஊழியர் சரண் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். </p>]]></content:encoded></item><item><title>குடும்ப தகராறில் விஷ மாத்திரை சாப்பிட்டவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-dies-after-consuming-poison-pill-in-family-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-dies-after-consuming-poison-pill-in-family-dispute#comments</comments><guid isPermaLink="false">509a18f5-baf7-4bcb-8f00-1ee6a4fd32b6</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:14:41 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:14:41.708Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Family dispute,குடும்ப தகராறு,Death,உயிரிழப்பு,Eaten,விஷ மாத்திரை,சாப்பிட்டு,poison pill</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/fprbz54r/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஷ மாத்திரை சாப்பிட்டவர் உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/fprbz54r/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88">விஷ மாத்திரை</a>யை சாப்பிட்ட நபர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">உயிரிழந்தார்</a>.</p><h2>குடும்ப தகராறில் விஷ மாத்திரை சாப்பிட்டவர்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (வயது 42). மனைவியுடன் ஏற்பட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">குடும்ப தகராறு </a>காரணமாக மன உளைச்சலில் இருந்த சுரேஷ், கடந்த 20-ம் தேதி பன்றிக்கு வைக்கும் விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.</p><h2>உயிரிழப்பு</h2><p>அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சி கிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு மாற்று விடுப்பு கோரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-union-demands-alternative-leave-for-census-work</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-union-demands-alternative-leave-for-census-work#comments</comments><guid isPermaLink="false">33e2d0fc-93f2-47f5-8813-090b098550e8</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:56:55 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:56:55.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,ஆசிரியர் சங்கம்,school teacher,Union</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/rze0emju/74.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/rze0emju/74.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி</p><p>2027 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20">மக்கள்தொகை கணக்கெடுப்பு</a> பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகையாக 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை. பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் தலைவர் மலைக்கொழுந்தன் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக அரசு ஆசிரியர்கள் பயிற்சி ' மற்றும் களப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணியானது பள்ளி நேரத்திற்கு அப்பாலும், விடுமுறை நாட்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.</p><h2>20 நாட்கள் மாற்று விடுப்பு</h2><p>இதனால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், உடல், மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஆசிரியர்கள் கல்விப் பணியையும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியையும் ஒரே நேரத்தில் சிறப்பாக மேற்கொண்டு வருவதால், அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் உரிய நலச்சலுகைகள் வழங்கப்படுவது அவசியமாகும். எனவே 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு சலுகையாக 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்கிட வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/light-to-moderate-rain-possible-in-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/light-to-moderate-rain-possible-in-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">b9282b7d-b5e7-4dc7-839a-d16e7995c2f3</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:56:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:56:34.137Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/08m7kyd7/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/08m7kyd7/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>25-07-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>26-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>27-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>25-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><p><strong>26-07-2026 முதல் 29-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>25-07-2026:</strong> அதிகபட்ச வெப்பநிலை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.</p><p><strong>26-07-2026 முதல் 29-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘நீட் தேர்வு கூடாது என்பதற்கான அவசியம் இந்தியாவில் தற்போது அதிகமாக உணரப்படுகிறது’ - ஜி.கே.வாசன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-need-to-oppose-the-neet-exam-is-being-strongly-felt-in-india-right-now-gk-vasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-need-to-oppose-the-neet-exam-is-being-strongly-felt-in-india-right-now-gk-vasan#comments</comments><guid isPermaLink="false">7d4101bf-8c9d-4fe2-ae21-a9d572728837</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:48:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:48:53.054Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>G.K.Vasan,ஜி.கே.வாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/m4ppbil4/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/m4ppbil4/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“இன்று நாட்டில் நடக்கும் மாணவர் பிரச்சினைகள், தேர்வு சம்பந்தமான பிரச்சனைகள், குறிப்பாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து தேர்வு ரத்தானதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், இதையெல்லாம் பார்க்கும்போது நீட் தேர்வு கூடாது என்பதற்கான அவசியம் இந்தியாவில் தற்போது அதிக அளவில் உணரப்படுகிறது.</p><p>இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நீட் தேர்வு வேண்டும் என்று சொல்பவர்கள் கூட, நீட் தேர்வு வேண்டாம் என்று யோசிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களுடைய பிரச்சனைகளை மத்திய அரசு பொறுப்போடு அணுகவில்லை என்பதுதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கருத்து. </p><p>குறிப்பாக மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை மத்திய அரசின் பொறுப்பற்ற செயலாகவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. எதிர்கட்சிகளின் தலைவர்கள் மாணவர்களுக்காக போராட்டம் நடத்தும்போது அவர்களை கைது செய்வதெல்லாம் அச்சுறுத்துவது போல இருக்கிறது.</p><p>மாணவர்களிடம் காவல்துறையினர் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்பதற்கு பத்திரிகை செய்திகளும், தொலைக்காட்சி செய்திகளும் சான்றாக உள்ளன.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு கல்லூரி மாணவிக்கு மிரட்டல்: ஓட்டுநர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-arrested-for-threatening-college-student-by-opening-cooking-gas-cylinder</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-arrested-for-threatening-college-student-by-opening-cooking-gas-cylinder#comments</comments><guid isPermaLink="false">21b1b1e0-fd7c-4512-8a90-1a2dde6dbcec</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:36:58 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:36:58.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,College student,கல்லூரி மாணவி,Thoothukudi,தூத்துக்குடி,Threat,மிரட்டல்,Kayalpattinam,காயல்பட்டினம்,assault,சமையல் எரிவாயு சிலிண்டர்,driver arrested,cooking gas cylinder,ஓட்டுநர் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7ms4bswv/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு மிரட்டல்; கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7ms4bswv/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">கல்லூரி மாணவி</a>யை அவதூறாக பேசி தாக்கியதுடன், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">சமையல் எரிவாயு சிலிண்டரை</a> திறந்து விட்டு அச்சுறுத்திய தாயின் 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர். </p><h2>2-வது திருமணம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சேர்ந்த ஒரு மாணவி தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது தந்தை இறந்துவிட்டதால், தாய் கைபயார் என்பவர் குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த ஓட்டுநரான முகம்மது அபுபக்கர் சித்திக் (34) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். </p><h2>கல்லூரி மாணவியை தாக்கிய ஓட்டுநர்</h2><p>முகம்மது அபுபக்கர் சித்திக் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியையும், அவரது மகளையும் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கைபயார் தனது மகளுக்கு புதிதாக செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதையறிந்த முகம்மது அபுபக்கர் சித்திக் ஆத்திரமடைந்து, மாணவியை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். </p><h2>சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு மிரட்டல்</h2><p>மேலும் ஆத்திரத்தின் உச்சத்தில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு 2 பேரையும் மிரட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாயும், மகளும் அலறி சத்தமிட்டனர். இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, முகம்மது அபுபக்கர் சித்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். </p><h2>கைது, சிறையில் அடைப்பு</h2><p>இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த முகம்மது அபுபக்கர் சித்திக்கைக் காவல்துறையினர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>கூடலூரில் வீட்டின் முன் உலா வந்த சிறுத்தை - சி.சி.டி.வி.யில் பதிவான காட்சியால் மக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-wanders-in-front-of-a-house-in-gudalur-residents-alarmed-by-cctv-footage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-wanders-in-front-of-a-house-in-gudalur-residents-alarmed-by-cctv-footage#comments</comments><guid isPermaLink="false">4f93b46b-6210-4fe9-8abb-84cfd3407cc2</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:29:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:29:53.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>leopard,சிறுத்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/109594jw/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/109594jw/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில், நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சிகள் அப்பகுதிகள் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>கடந்த சில நாட்களாகவே அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வனத்துறையினர் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி பக்தர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotee-dies-stuck-in-idukku-pillaiyar-temple-cave</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotee-dies-stuck-in-idukku-pillaiyar-temple-cave#comments</comments><guid isPermaLink="false">4ac8c4cd-d7d1-4f29-a246-b9b25d631afd</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:19:22 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:19:22.244Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,பக்தர்,devotee,கிரிவலப் பாதை,மூச்சு திணறல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/uiw2tqsm/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/uiw2tqsm/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர்.</p><p>பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (36 வயது) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்த மணிக்குமார், குகை  வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார்.</p><p>உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் போராடி அவரை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><p>இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் நுழைந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;இனி அரசியல் பேச மாட்டேன்.. தலையிட மாட்டேன்&quot; - ராமதாஸ் அதிரடி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-not-talk-about-politics-from-today-i-will-not-interfere-ramadoss-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-not-talk-about-politics-from-today-i-will-not-interfere-ramadoss-announced#comments</comments><guid isPermaLink="false">fc0b61ad-6d1d-4b9c-90b7-b1ef1b041467</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:10:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:10:45.689Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமதாஸ்,பாமக,Ramadoss,PMK,அரசியல்,politics</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/5ymv32pc/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/5ymv32pc/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Breaking-News</category><content:encoded><![CDATA[ <p>திண்டிவனம்,</p><p> 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். </p><h2>88-வது பிறந்தநாள்</h2><p>பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராமதாசின் பிறந்தநாளையொட்டி, பாமக தலைவரும், ராமதாசின் மகனுமான அன்புமணி ராமதாஸ், திண்டிவனத்தில் உள்ள தைலப்புரம் தோட்டத்துக்கு வருகை தந்து தந்தையை சந்தித்து ஆசி பெற்றார். </p><p>இதன் பின்னர் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் ராமதாஸ் பேசினார். அப்போது, அரசியலில் இருந்து விலகுவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு;</p><h2>அரசியலில் இருந்து விலகுறேன்..</h2><p>”எனது 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், இன்று முதல் அரசியல் பேச மாட்டேன். அரசியலில் தலையிட மாட்டேன். இனி அரசியலை அன்புமணி பார்த்துக் கொள்வார். என்னை காண வரும் அனைவரையும் பார்ப்பேன். வருபவர்கள் என்னிடம் நலம் விசாரிக்கலாம். நானும் நலம் விசாரிப்பேன். அரசியல் பேச வேண்டாம். என்னை இனி தொந்தரவு செய்ய வேண்டாம்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>  ]]></content:encoded></item><item><title>சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-chennai-central-gummidipundi-electric-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-chennai-central-gummidipundi-electric-train-service#comments</comments><guid isPermaLink="false">136ebcff-ef12-4fd7-8d9e-b9a01ebd01dd</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:01:04 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:01:04.651Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,electric train,மின்சார ரெயில்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/wn8nyg14/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/wn8nyg14/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சென்ட்ரல்- கூடூர் பிரிவில் கும்மிடிப்பூண்டி யார்டில் நேற்று முதல் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் இன்றும், நாளையும் நடக்கிறது. இதையொட்டி கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><h2>மின்சார ரெயில் ரத்து</h2><p>இரவு 9.45 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது. இரவு 11.20 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது.</p><p>இரவு 10.35 மணிக்கு புறப்படும். மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்மிப்பூண்டி- மூர் மார்க்கெட் இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடைய ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>அதிகாலை 3.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்பட்டு மூர் மார்க்கெட்டுக்கு வரும் மின்சார ரெயில் கும்மிப்பூண்டி- மீஞ்சூர் இடையே இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>அதிகாலை 4.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க தேசிய ஆணையம் தேவை - கமல்ஹாசன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-commission-needed-to-restore-confidence-in-exams-kamal-haasan-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-commission-needed-to-restore-confidence-in-exams-kamal-haasan-insists#comments</comments><guid isPermaLink="false">c72f1b7e-9da6-4a2a-b46b-1eb310f6d858</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:55:16 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:55:16.178Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கமல்ஹாசன்,Kamal Haasan,ஆணையம்,மக்கள் நீதி மய்யம்,National Commission</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iwf1kf83/kamalhasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கமல்ஹாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iwf1kf83/kamalhasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">கமல்ஹாசன்</a> தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; </p><p>மோதலுக்குப் பதிலாக உரையாடல் இடம்பெறுவதைக் கண்டு மகிழ்ச்சி. கருத்து வேறுபாட்டிற்கு உரையாடல் அவசியம். இதுவே ஜனநாயகத்தின் செயல் வடிவம். பெல்லட் துப்பாக்கிகள், மின் அதிர்ச்சித் தடியடிகள் மற்றும் ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை. அதேபோல், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுச் சொத்துக்கள் மீதான தாக்குதல்களும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறல் பாரபட்சமாக இருக்க முடியாது. இந்தத் தருணமும் வாய்ப்பும் வெறும் தாள் கசிவுகளை விடப் பெரியது. </p><h2>தேசிய ஆணையம்</h2><p>தேர்வுகளின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், கல்வி சார்ந்த மன அழுத்தத்தைக் குறைக்கவும், கல்வியை நவீனமயமாக்கவும் மூன்று மாத கால செயல் திட்டத்துடன் கூடிய, கல்வி மற்றும் தேர்வு சீர்திருத்தத்திற்கான ஒரு தேசிய ஆணையத்தை அமைக்க நான் வலியுறுத்துகிறேன். மேலும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்வினால் ஏற்படும் மனித இழப்புகளை இளம் அனிதாவின் மரணம் முதன்முதலில் வெளிப்படுத்திய தமிழ்நாட்டின் குரலையும் அந்த ஆணையம் கேட்க வேண்டும். இதில் ஈடுபட அரசு காட்டும் விருப்பம் வரவேற்கத்தக்கது. இப்போது, ​​உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகக் கடக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabbed-with-sickle-over-previous-enmity-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabbed-with-sickle-over-previous-enmity-2-arrested#comments</comments><guid isPermaLink="false">24ec6489-8d19-4596-b0db-9d430313a798</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:52:01 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:52:01.841Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,அரிவாள் வெட்டு,Youth,வாலிபர்,2 arrested,2 பேர் கைது,Kovilpatti,கோவில்பட்டி,முன்விரோதம்,previous enmity,slashed with sickle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/x9meu3r0/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/x9meu3r0/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் தாக்கி, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கொலை முயற்சி</a>யில் ஈடுபட்ட 2 பேரை மேற்கு காவல் நிலைய போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>முன்விரோதம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகரைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (வயது 30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>வாலிபருக்கு அரிவாள் வெட்டு</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரதிநகர் பகுதியில் வைத்து ஞானதிரவியத்தை வழிமறித்த கும்பல், அவருடன் தகராறில் ஈடுபட்டு, திடீரென அரிவாளால் வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். </p><h2>2 பேர் கைது</h2><p>போலீசாரின் விசாரணையில் கொலை முயற்சியில் ஈடுபட்டது பாரதிநகரைச் சேர்ந்த செல்லபாண்டி மகன் மகாராஜன்(33) மற்றும் முத்து மகன் முத்துராஜ்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த மகாராஜன், முத்துராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>காவிரிப் பாசன நீரைப் பெற்றுத்தருவது ஒன்றே விவசாயிகளின் வேதனை துடைக்கும் அருமருந்து - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/providing-cauvery-irrigation-water-is-the-only-remedy-to-ease-farmers-pain-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/providing-cauvery-irrigation-water-is-the-only-remedy-to-ease-farmers-pain-seeman#comments</comments><guid isPermaLink="false">344db5ff-b7f7-40ba-847b-4d72af6900d7</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:48:25 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:48:25.139Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,சீமான்,Seeman,Karnataka,கர்நாடகா,விவசாயிகள்,Cauvery,காவிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/bk7fgcq5/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/bk7fgcq5/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வறண்டு கிடக்கும் காவிரி நதிப் பார்த்தும், வாடிக் கிடக்கும் நெற்பயிர்கள் பார்த்தும், நாளும் தமிழ்நாட்டு விவசாயிகள் கவலையில் உழன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அது குறித்து அணுவளவும் கவலையின்றி, தவெக அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துத் திரையரங்கில் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது! வன்மையான கண்டனத்துக்குரியது.</p><p>குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை போதிய நீர் இல்லாததால் இதுநாள் வரை திறக்கப்படாததால் வேதனையில் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடிதான் பொய்த்துப்போனது, குறைந்தபட்சம் சம்பா சாகுபடிக்காவது காவிரி பாசன நீர் திறக்கப்படுமா என்று டெல்டா விவசாயிகள் கண்ணீரோடு காத்திருக்கும் நிலையில், ஒரு சொட்டு நீர்கூடத் தரமுடியாது என்று கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு கை விரித்துவிட்டது. காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கி, ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்துள்ள தவெக அரசு, கர்நாடக அரசின் அடாவடித்தனத்திற்கு இதுவரை ஒரு சிறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசிடம் சுமூகமாக பேசி காவிரி நீரைப்பெற்றுத் தரத்தான் தவெக அரசிற்கு திராணி இல்லை. குறைந்தபட்சம் கண்டனம் தெரிவிக்கக் கூடத் துணிவு இல்லையா? </p><p>அண்மையில் காவிரி நீர் இருப்பு குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டம் முடிந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் முதல் வாரம் கூடி ஆலோசிக்கப்படும் என்று அறிவித்தது கண்டு, வேளாண் பெருங்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆலோசனை நடத்துவதற்கு ஏன் ஆகஸ்ட் முதல் வாரம் வரை காத்திருக்க வேண்டும்? பேச்சுவார்த்தையோ, சட்டப்போராட்டமோ விரைந்து நடவடிக்கை எடுத்து, காவிரிப் பாசன நீரைப் பெற்றுத்தருவது ஒன்றே விவசாயிகளின் வேதனை துடைக்கும் அருமருந்தாகும். அதைவிடுத்து கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவே ஆகஸ்ட் மாதம் வரை இழுத்தடிப்பது காவிரிப் பாசன விவசாயிகளைக் கண்ணீர் கடலில் தவிக்கவிடும் கொடுஞ்செயலாகும்.</p><p>ஏற்கனவே, தமிழ்நாட்டில் அரிசி விலை நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை 25 ரூபாய் வரை அதிகரித்து, கடைகளில் கிலோ 85 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இந்நிலையில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பொய்த்து, நெல் உற்பத்தி மேலும் பாதிக்கப்படுமாயின், தமிழ்நாட்டில் அரிசியின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பன்மடங்கு உயரும். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். அப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டால், அதற்கு காவிரி நீரைப் பெற்றுத்தராத தவெக அரசின் அலட்சிய செயல்பாடே முழுமுதற் காரணமாகும்.</p><p>ஆகவே, கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் மாதம் வரை காத்திராமல், அடுத்தகட்ட நடவடிக்கையை உடனடியாகத் தொடங்கி, விரைந்து காவிரிப்படுகை விவசாயிகளின் கண்ணீர் துடைத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குதிரை பேர வழக்கில் ஜாமீன்: காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balaji-appeared-at-the-triplicane-police-station-and-signed-the-register</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balaji-appeared-at-the-triplicane-police-station-and-signed-the-register#comments</comments><guid isPermaLink="false">62efdb1e-1e0f-4c04-961c-6156466ddfdd</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:47:52 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:47:52.452Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Senthil Balaji,செந்தில் பாலாஜி,குதிரை பேர வழக்கு,Horse-trading case</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2kozobt0/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2kozobt0/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக எம்.எல்.ஏ.வை பேரம் பேசி ஆட்சி கவிழ்க்க முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. 25 ஆயிரம் ரூபாய் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும், மறு உத்தரவு வரும் வரை காலையும், மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.</p><p>இதற்கிடையே, போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையின்போது, “முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை. சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். </p><p>இந்த நிலையில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நேற்று வந்து பிணைத்தொகை செலுத்தினார். அதனை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி இன்று சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் அவரது சகோதரர் அசோக்குமாரும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். </p> ]]></content:encoded></item><item><title>நண்பர்களுடன் கடலில் குளித்தபோது சோகம்: ராட்சத அலையில் சிக்கி மாணவி உயிரிழப்பு, மாணவர் மாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-while-swimming-with-friends-student-dies-another-missing-in-giant-wave</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-while-swimming-with-friends-student-dies-another-missing-in-giant-wave#comments</comments><guid isPermaLink="false">17a66246-991a-4d34-b262-5463127916cf</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:18:35 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:18:35.248Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Ennore,எண்ணூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ry3fx3dk/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ry3fx3dk/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 5 பேர், இன்று சென்னை எண்ணூர் கடற்கரை பகுதிக்கு சென்றனர். இந்த நிலையில் அவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை எழுந்தது. இந்த ராட்சத அலையில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் சிக்கினர்.</p><p>அலை அவர்களை கடலுக்குள் அடித்துச் சென்ற நிலையில், அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் நண்பர்கள் 2 மாணவிகளை மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாண்டிச்சேரியை சேர்ந்த கிருத்திகா (18 வயது) என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>மேலும் ஆவடியைச் சேர்ந்த ஆகாஷ் (20 வயது) என்ற மாணவர் மாயமான நிலையில், அவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடல் அலையில் சிக்கி மாணவி உயிரிழந்த நிலையில், மாணவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு; தூத்துக்குடியில் பரிதாபம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-dies-of-electrocution-tragedy-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-dies-of-electrocution-tragedy-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">8bb1e513-f3be-4982-a2e7-d9de4e990c9a</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:13:37 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:13:37.021Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,House,வீடு,motor,பள்ளி மாணவி,மின்சாரம் தாக்கி உயிரிழப்பு,Schoolgirl,மோட்டார்,electrocuted to death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iyi6kj5r/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iyi6kj5r/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் மோட்டார் சுவிட்சை அணைக்க முயன்ற 11 வயது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">பள்ளி மாணவி</a> மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>மேல்நிலை நீர் தொட்டி நிரம்பியது</h2><p>தூத்துக்குடி காதர்மீரான் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சுப்புலட்சுமி(41). இவர்களது இரண்டாவது மகள் பிரியதர்ஷினி(11). இவர் புதிய துறைமுகப் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரியதர்ஷினி மேல்நிலை நீர் தொட்டி நிரம்பியதை கண்டுள்ளார். </p><h2>மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு</h2><p>இதையடுத்து வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த வாட்டர் மோட்டாரை அணைப்பதற்காக சென்று சுவிட்சை அணைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மாணவியை பதறியடித்துக் கொண்டு மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து மாணவி பிரியதர்ஷினியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்</a> அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு பற்றி பேசும் தகுதி திமுகவுக்கு இல்லை - நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-has-no-standing-to-speak-about-the-neet-exam-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-has-no-standing-to-speak-about-the-neet-exam-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">5f84204a-4f8e-438b-baf6-9f493b1770cc</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:01:08 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:01:08.244Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,NEET Exam,நிர்மல் குமார்,Nirmal Kumar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zmy60f1u/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zmy60f1u/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>"நம்முடைய நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது தான். நீட் தேர்வு தேவையற்றது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிக சுமையை தான் கொடுக்கும். எந்த வித பயனும் இல்லை என்பதை நாம் தெளிவாக சொல்லி இருக்கிறோம். அரசு சார்பாக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு, அறவழியில் நடக்கும் போராட்டங்களுக்கு முழு அளவில் பாதுகாப்பு கொடுத்து, அவர்களுக்கு தேவையான அனுமதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. </p><p>நீட் தேர்வு குறித்து திமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் நிறைய பேசி இருக்கிறார்கள். இதை பேசக்கூடிய எந்த தகுதியும் திமுகவுக்கு கிடையாது. அவர்கள் தான் 5 வருடமாக இதனை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு போனார்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். எப்படி நிறுத்துவார்கள். அது பார்லிமென்டில் மசோதா நிறைவேற்ற வேண்டும்.</p><p>சுப்ரீம்கோர்ட் உத்தரவு, எப்படி நிறுத்துவீர்கள். தவறான நம்பிக்கையை மக்களிடத்தில் கொடுத்து இரண்டு வருடம் ஓட்டினார்கள். இப்பொழுது வந்து மேடையில் பேசுகிறார்கள். பேசக்கூடிய திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாருக்கும் கிடையாது. நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நமது நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது, அதற்கான காலம் வரும் போது முதல் குரலாக கொடுப்போம்.” </p><p>இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>அண்ணா பல்கலை. தொலைதூர எம்.பி.ஏ. படிப்புகளுக்கு ஆகஸ்டு 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-university-distance-mba-applications-can-be-made-till-august-17th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-university-distance-mba-applications-can-be-made-till-august-17th#comments</comments><guid isPermaLink="false">6746d616-a7a2-4f19-b6f8-e582b9c75c65</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:58:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:58:53.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anna University,படிப்பு,அண்ணா பல்கலைகழகம்,எம்.பி.ஏ.,Online Application,ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/rs9af75k/anna-university.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/rs9af75k/anna-university.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம் (சி.டி.ஓ.இ.) வழங்கும் எம்.பி.ஏ. படிப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்</h2><p>எம்.பி.ஏ. பொது மேலாண்மை, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8F.">எம்.பி.ஏ.</a> வணிக பகுப்பாய்வு ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிக்க முடியும். onlinecde.annauniv.edu அல்லது cde.annauniv.edu என்ற ஆன்லைன் வாயிலாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான நுழைவுத் தேர்வு அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண் மற்றும் டான்செட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தெகுதி பெற முடியும்.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலியில் வாலிபரை அரிவாளால் தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-who-attacked-youth-with-machete-in-tirunelveli-gets-2-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-who-attacked-youth-with-machete-in-tirunelveli-gets-2-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">9391bd68-c436-4619-89cc-b00e6e8402b9</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:35:55 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:35:55.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Tirunelveli,திருநெல்வேலி,Youth,வாலிபர்,Verdict,தீர்ப்பு,சிறை தண்டனை,Prison sentence,attack,Sickle,அரிவாள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xgi06u5r/Untitled5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபருக்கு சிறை தண்டனை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xgi06u5r/Untitled5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி , </p><p>திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபரை</a> அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. </p><h2>வாலிபரை அரிவாளால் தாக்கியவர் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு, முன்விரோதம் காரணமாக தருவை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 32) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த காளி(எ) காளிராஜ்(29) அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பாக, முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் புலன் விசாரணை மேற்கொண்டு காளி(எ) காளிராஜை கைது செய்தார். </p><h2>2 ஆண்டுகள் சிறை தண்டனை</h2><p>புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் (எண் - V) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி ராணி நேற்று குற்றவாளிக்கு பிரிவு IPC 324-ன் படி 2 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.</p><p>இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த சேரன்மகாதேவி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், முன்னீர்பள்ளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி, இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் (தற்போது ஓய்வு) மற்றும் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு மாணிக்கராஜா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் அபிதா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி வெகுவாக பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்: குடிபோதையில் ரகளை செய்த போலீஸ்காரர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-policeman-arrested-for-creating-a-ruckus-while-drunk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-policeman-arrested-for-creating-a-ruckus-while-drunk#comments</comments><guid isPermaLink="false">9a0c7655-390f-4a8e-a402-2b100dd0ed90</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:35:35 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:35:35.687Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,கொடைக்கானல்,Policeman arrested,மது போதை,போலீஸ்காரர் கைது,Drunkard</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2023/08/22/1463035-arrest-new-01.webp" width="750"><media:title type="html"><![CDATA[ கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2023/08/22/1463035-arrest-new-01.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திண்டுக்கல் மாவட்டம் </a>கொடைக்கானலில் குடிபோதையில் ரகளை செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.</p><p>தேனி மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆண்டிப்பட்டி </a>கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. அவர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சென்ற அவர் மது போதையில் இருந்தார். அப்போது கொடைக்கானல் அண்ணா சாலையில் நின்றுகொண்டிருந்த வாலிபர்களை தாக்கினார். அதனால் அவருக்கும் வாலிபர்களுக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டது.</p><h2>போலீஸ்காரரின் ரகளை</h2><p>இதனால் போலீஸ்காரர் தங்கப்பாண்டியின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். மேலும் அங்கு வேலையில் இருந்த செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தங்கப்பாண்டி அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த உபகரணங்கள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்.</p><h2>கைது- தற்காலிக பணிநீக்கம்</h2><p>இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் தங்கப்பாண்டியை உடனடியாக<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது</a> செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீஸ்காரர் தங்கப்பாண்டி உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தகுந்த துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் விவகாரத்தில் பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-prime-ministers-announcement-regarding-the-neet-issue-is-merely-an-eyewashmanickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-prime-ministers-announcement-regarding-the-neet-issue-is-merely-an-eyewashmanickam-tagore#comments</comments><guid isPermaLink="false">612b8c93-ec8f-4576-8e5d-0638c2d2cc3c</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:19:06 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:19:06.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,நீட் விவகாரம்,NEET issue,Manickam Tagore</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/vcgrkdaa/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/vcgrkdaa/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>காங்கிரஸ் தலை மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் "விரைவு நீதிமன்றங்கள்" அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! அரசு தரவுகளே உண்மையை உடைக்கின்றன:</p><p>880 விரைவு நீதிமன்றங்களில் 13.9 லட்சம் வழக்குகள் தேங்கி நிற்கின்றன!</p><p>One more court</p><p>ITSC சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் 2025-ல் 2,45,579 ஆக உயர்ந்துள்ளன! </p><p>தேர்வு முறையையே ஒழுங்காக நடத்தத் தெரியாத #NTA முற்றிலும் தோல்வியடைந்த ஒரு அமைப்பு!</p><p>மாணவர்களின் கோரிக்கை</p><p>பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகள் மிகவும் தெளிவானவை:</p><p>1. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி நீக்கம் செய்க!</p><p>2. பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>3. அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!</p><p>வெற்று வாக்குறுதிகளாலும் அடக்குமுறைகளாலும் இந்தியாவின் இளைஞர்களையும் மாணவர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது!”</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தொடரும் காவல் மரணங்கள்: முதல்-அமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuing-custodial-deaths-when-will-the-chief-minister-speak-mk-stalin-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuing-custodial-deaths-when-will-the-chief-minister-speak-mk-stalin-asks#comments</comments><guid isPermaLink="false">22b58a2b-fba2-4c43-add3-4e5f7d252aaa</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:15:29 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:16:00.161Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,MKstalin,காவல் மரணம்,தவெக அரசு,TVK Government,Lockup Death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q2ubnm7k/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q2ubnm7k/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தொடரும் காவல் மரணங்கள். முதல்-அமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதல்-அமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?</p><p>Accountability, Apology - முதல்-அமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?<br><br>எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?<br><br>Accountability, Apology –… <a href="https://t.co/bAcbn0M5fC">pic.twitter.com/bAcbn0M5fC</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2080880741148393500?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் பெண் கொடூர கொலை: மீனவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-murdered-in-thoothukudi-fisherman-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-murdered-in-thoothukudi-fisherman-arrested#comments</comments><guid isPermaLink="false">b1efa49e-4bd7-4ea5-9334-c936ca3a1bb6</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:54:33 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:54:33.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,arrested,தூத்துக்குடி,பெண்,Woman,fisherman,மீனவர் கைது,கொடூர கொலை,Brutal murder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/5l2f5cr2/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் கொலை, மீனவர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/5l2f5cr2/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">பெண்</a>ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, தலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">சுத்தியலால் தாக்கி கொலை</a> செய்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>உயிருக்கு போராடிய பெண்</h2><p>தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 56). கணவரால் கைவிடப்பட்ட இவர், தனது மகள் சத்யாவுடன் வசித்து வந்தார். தெருக்களில் கிடைக்கும் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த முத்துலட்சுமி, கடந்த 15-ம் தேதி மகள் வெளியூருக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று இரவு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் முத்துலட்சுமி தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, அவர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><h2>உயிரிழப்பு, போராட்டம்</h2><p>அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். இதையறிந்த அவரது மகள் சத்யா மற்றும் உறவினர்கள், கொலையாளியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலைப் பெறுவோம் என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>மீனவர் கைது</h2><p>பெண் உயிரிழந்தது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதராரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கன்னியாகுமரி மாவட்டம்,  முட்டம், சகல புனிதர்கள் காலனியைச் சேர்ந்த லோபஸ் மகன், மீனவரான இன்னசென்ட் ரீகன்(34) என்பவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை செய்தனர்.</p><h2>கொடூர கொலை</h2><p>போலீசார் விசாரணையில், கிடைத்த தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட மீனவர் இன்னசென்ட்ரீகன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தூத்துக்குடியில் திருட்டு பைக்கில் சுற்றித் திரிந்துள்ளார். அவர் சம்பவத்தன்று திண்ணையில் தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் விழித்துக் கொண்டு கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், அப்பெண்ணை சுத்தியலால் தலையில் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கில் அதற்குரிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? - அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-convocation-ceremony-is-tamil-motherland-the-3rd-place-anbumani-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-convocation-ceremony-is-tamil-motherland-the-3rd-place-anbumani-condemns#comments</comments><guid isPermaLink="false">960ccaf2-162d-4766-b7a4-0c6ecaaf0e6a</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:46:17 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:46:17.822Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,Manonmaniam Sundaranar University,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,Anbumani Ramadass</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7lhdakcr/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7lhdakcr/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும்  28-ஆம் தேதி நடைபெறவுள்ள  33-வது பட்டமளிப்பு விழாவில் முதலில்    வந்தே மாதரம் தேசியப் பாடலும்,  அடுத்து ’’ஜன கண மன”  தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாகத் தான்  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அப்பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மத்திய அரசே வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகும்  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவது இடத்திற்கு  திட்டமிட்டு தள்ளுவது கண்டிக்கத்தக்கது.</p><h2>வழிகாட்டுதல்கள்</h2><p>நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய  துணைவேந்தர் சந்திரசேகர்,’’இது கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், கவர்னர் மாளிகையிலிருந்து எங்களுக்குத் தெளிவான மற்றும் கண்டிப்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் மற்றும் கவர்னர் பங்கேற்கும் விழாக்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தான்  நடந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.</p><h2>பெரும் சர்ச்சை</h2><p>குடியரசுத் தலைவர், கவர்னர் பங்கேற்கும் மாநில அரசு விழாக்களில் முதலில் தேசியப் பாடல்,  இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு பிறப்பித்திருந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  கடந்த மே 10-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற தமிழக அரசு பதவியேற்கும் விழாவில் முதலில் தேசியப் பாடல், பின்னர் தேசிய கீதம் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. இந்த வரிசை முறைக்கு  தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.</p><h2>மூன்றாவதாக தேசிய கீதம்</h2><p>அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி பிறப்பித்த ஆணையில்,  மாநிலப் பாடல்கள் பாடப்படும் விழாக்களில்  அது தான் முதலில் பாடப்பட வேண்டும்; அதன்பின் தேசியப் பாடல்; மூன்றாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தெளிவாக விளக்கம்  அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,  அதையும் மீறி வந்தே மாதரம் என்ற  தேசியப் பாடலைத் தான்  முதலில் பாட வேண்டும் என்று  கவர்னர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு ஆகும்.</p><p>நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவரே  மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை  அவர்கள் தான்.  அவரது  பெயர்  தான் நெல்லை பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அங்கும் கூட, மத்திய அரசின் வழிகாட்டுதல்களையும் புறக்கணித்து விட்டு, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று கவர்னர் மாளிகை கட்டாயப்படுத்துவதும்,   அதை பல்கலைக்கழக துணை வேந்தர்  அப்படியே  ஏற்றுக் கொள்வதும் சரியல்ல.  இதை  தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>தமிழ்நாட்டில் நடைபெறும்  கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்  தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஜூலை   28-ஆம் தேதி நடைபெறவுள்ள  33-வது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">பட்டமளிப்பு விழா</a>விலும்  தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப் படுவதை  தமிழ்நாடு அரசும்,  பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமா செய்யுங்கள் தர்மேந்திர பிரதான்: நடிகை ஜோதிகா இன்ஸ்டாவில் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/resign-dharmendra-pradhan-actress-jyothika-posts-on-instagram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/resign-dharmendra-pradhan-actress-jyothika-posts-on-instagram#comments</comments><guid isPermaLink="false">df7ee35f-6f20-410a-ac74-3472dd97aba9</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:38:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:38:45.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜினாமா,Jyothika,NEET,ஜோதிகா,நீட் போராட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/0i5nv821/Jothika.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜோதிகா ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/0i5nv821/Jothika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>'நீட்' தேர்வுக்கு எதிராகவும், சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லி உள்பட நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் மாணவர் சங்கங்கள், அமைப்புகள் சார்பில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில்,  நடிகை ஜோதிகாவும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டகிராமில் ஜோதிகா பதிவிட்டு இருப்பதாவது:</p><h2>பெருமைப்படுகிறோம்</h2><p>தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள்; நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் பொறுப்புணர்ச்சியுடன் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்; ஒரு சீர்திருத்தக் கல்விக்காக நிற்கிறேன். தடையின்றி வெளிப்படையாக இருக்கும்  ஜென்சி தலைமுறையினரே, உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம். </p><h2>நன்றி சி.ஜே.பி</h2><p>நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள் சோனம் வாங்சுக், அபிஜீத் தீப்கே மற்றும் சௌரவ் தாஸ், தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம்; எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சி.ஜே.பி" என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>செல்போனுக்கு வந்த கியூ.ஆர். கோடு.. ஸ்கேன் செய்து ரூ.1.21 லட்சத்தை இழந்த வியாபாரி - அரசு உதவித்தொகை எனக் கூறி நூதன மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/qr-code-sent-to-mobile-phone-merchant-loses-121-lakh-after-scanning-it-an-innovative-scam-involving-claims-of-a-government-subsidy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/qr-code-sent-to-mobile-phone-merchant-loses-121-lakh-after-scanning-it-an-innovative-scam-involving-claims-of-a-government-subsidy#comments</comments><guid isPermaLink="false">673ed219-5b4c-4d2a-94f5-348f6da0f04b</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:34:36 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:34:36.542Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மோசடி,scam,QR code,கியூஆர் கோடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/fmg75f2n/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/fmg75f2n/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கொடுங்கையூரில், மகனுக்கு அரசு உதவித்தொகை வந்துள்ளதாக கூறி ஊறுகாய் வியாபாரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதையும் நூதன முறையில் மோசடி கும்பல் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கொடுங்கையூரைச் சேர்ந்த ஊறுகாய் வியாபாரி முத்துக்காமாட்சியின் மகன் தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு அரசு உதவித்தொகையாக ரூ.48 ஆயிரம் வழங்கப்படுவதாக கூறியுள்ளார். அந்த தொகையைப் பெற உங்கள் செல்போனுக்கு வரும் கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்யுங்கள் என்றும் அந்த நபர் கூறியிருக்கிறார்.  </p> <p>அவர் கூறியபடி முத்துக்காமாட்சியின் செல்போனுக்கு ஒரு கியூ.ஆர். கோடு வந்த நிலையில், அதை அவர் ஸ்கேன் செய்துள்ளார். இதையடுத்து சில வினாடிகளில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>ஊருக்குள் புகுந்த குட்டி யானையை கொஞ்சி மகிழ்ந்த கிராம மக்கள் - செல்பி எடுத்து உற்சாகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villagers-dote-on-baby-elephant-inside-village-selfies-and-joy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villagers-dote-on-baby-elephant-inside-village-selfies-and-joy#comments</comments><guid isPermaLink="false">acbc2bc1-ef38-4ccd-8575-bceaf4452e3a</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:25:57 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:25:57.110Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,Krishnagiri,elephant,குட்டி யானை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/a1snicoz/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/a1snicoz/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அவ்வப்போது கிராம பகுதிகளுக்குள் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளைபயிர்களை சேதப்படுத்தி பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்த காட்டு யானை கூட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று கடந்த ஒரு ஆண்டாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறது.</p><p>கிராம பகுதிகளில் சர்வ சாதாரணமாக சுற்றி வரும் இந்த குட்டி யானை கிராமத்தில் வாழும் பொதுமக்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. கிராம மக்கள் இந்த குட்டியை பார்த்தவுடன் தங்களது செல்போன்களில் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது, அதற்கு உணவு கொடுத்து மகிழ்வது என வழக்கமாக நடந்து வருகிறது.</p><p>இந்த நிலையில் இந்த குட்டி யானை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கிராம பகுதிகளுக்குள் வராமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மாரசந்திரம் என்ற கிராமத்திற்கு வந்து செல்கிறது. குட்டி யானையை பார்த்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, அதனுடன் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது, அதற்கு உணவு வழங்கி கொஞ்சி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையை கிராமத்தில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். குட்டி யானையை அதன் தாயுடன் சேர்ப்பதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediately-remove-dharmendra-pradhan-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediately-remove-dharmendra-pradhan-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">76775928-5bf0-4857-a55a-82fedf64114c</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:49:55 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:49:55.384Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,மத்திய அரசு,நீட் தேர்வு,NEET Exam,மாணிக்கம் தாகூர்,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/cco45qun/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/cco45qun/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>NEET-UG 2026 என்பது வெறும் தேர்வு அல்ல. கோடிக்கணக்கான இந்திய மாணவர்களின் கனவு.தேர்வுக் கேள்வித்தாள்கள் கசிந்தன. மே 3 மற்றும் மே 7 நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் மீண்டும் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கேள்வித்தாள் கசிவு நடந்ததை மத்திய கல்வி மந்திரியே ஒப்புக்கொண்டார். தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஊழலின் மிகப் பெரிய விலை என்ன? 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 21 குடும்பங்களின் வாழ்க்கை என்றென்றும் சோகத்தில் மூழ்கியுள்ளது.</p><h2>மிகப்பெரிய கல்வி ஊழல்</h2><p>மாணவர்கள் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு இந்த அரசு தோல்வியடைந்துள்ளது. ஒரு தேர்வை ரத்து செய்ததால் மட்டும் பொறுப்பு முடிவடையாது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்துவது போல, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த மிகப்பெரிய கல்வி ஊழல் குறித்து பிரதமர் மோடியின் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய மாணவர்கள் நியாயமான, வெளிப்படையான, நம்பகமான கல்வி அமைப்பிற்கு தகுதியானவர்கள். தோல்வி, ஊழல், அலட்சியம் ஆகியவற்றிற்கு அல்ல. தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யுங்கள். இந்தியாவின் கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ ரெயில் திட்டம் - விரிவான அறிக்கை தயார் செய்ய டெண்டர் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kilambakkam-chengalpattu-metro-rail-project-tender-issued-for-the-preparation-of-a-detailed-report</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kilambakkam-chengalpattu-metro-rail-project-tender-issued-for-the-preparation-of-a-detailed-report#comments</comments><guid isPermaLink="false">ea74ca22-3c16-413c-a29b-d6d3313d330d</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:36:33 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:36:33.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,கிளாம்பாக்கம்,Kilambakkam,மெட்ரோ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7hjrlfzq/National-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7hjrlfzq/National-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பொறுத்தவரை 2 கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி முதல் கட்டத்தில் சென்னை சென்ட்ரல்-விமான நிலையம், சென்னை சென்ட்ரல்-விம்கோ நகர் என 2 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>அதே போல் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாதவரம்-சிறுசேரி சிப்கார்ட், மாதவரம்-சோலிங்கநல்லூர் மற்றும் பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. </p><p>இதனிடையே, சென்னை மெட்ரோ முதலாம் கட்ட திட்டமான சென்ட்ரல்-விமான நிலையம் வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்வது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p> <p>ஏற்கனவே சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்டத்தின் சென்ட்ரல்-விமான நிலைய வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பதற்கான திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கக்கூடிய நிலையில், இதனை மேலும் செங்கல்பட்டு வரை நீட்டிப்பதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டிருக்கிறது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் பட்சத்தில், அடுத்த கட்டமாக இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக சென்னை மெட்ரோல் நிறுவனம் கோரிக்கை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item></channel></rss>