<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 17 Sep 2026 08:23:29 +0000</lastBuildDate><item><title>தூத்துக்குடி: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை- போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-college-student-commits-suicide-by-hanging-herself-police-investigating</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-college-student-commits-suicide-by-hanging-herself-police-investigating#comments</comments><guid isPermaLink="false">96e03fe0-4155-4588-823a-37c3db110923</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:22:19 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:22:19.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>College student,கல்லூரி மாணவி,Thoothukudi,தூத்துக்குடி,தூக்குப்போட்டு தற்கொலை,commits suicide by hanging,Police investigating,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/udca33my/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/udca33my/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">கல்லூரி மாணவி</a> வீட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><h2>கல்லூரி மாணவி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சந்தையாடி தெருவைச் சேர்ந்தவர் லாமேக் வினோத். இவரது மகள் பெல்சியா (வயது 19), பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெல்சியா, இரவு வீட்டின் தனி அறைக்குச் சென்றுள்ளார். </p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, அறையின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் அவர் சடலமாகக் கிடந்துள்ளார். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சுதர்சன நாச்சியப்பன் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-sudarshana-nachiappan-communist-party-of-india-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-sudarshana-nachiappan-communist-party-of-india-condoles#comments</comments><guid isPermaLink="false">85d0ddda-789d-4095-80ab-0a7fcd3c642e</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:21:18 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:21:18.664Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,சுதர்சன நாச்சியப்பன்,Sudarshana Nachiappan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/lml78uup/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/lml78uup/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு;</p><p>”இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் (வயது 78) இன்று உடல்நலக் குறைவால் சிவகங்கையில் காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது. இ.எம்.சுதர்சன நாச்சியப்பனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஏரியூர் ஆகும். அவர் எம்.ஏ., பி.எல்., படித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.</p> <p>அவர், 1999 முதல் 2004 வரை சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினராகவும், 2004 முதல் 2016ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் 2013 முதல் 2014ம் ஆண்டு வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.</p><p>சுதர்சன நாச்சியப்பன் சமூக நீதியில் மிகுந்த அக்கறையும், ஈடுபாடும் கொண்டவர். இந்தியா சார்பில் ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் இரண்டு முறை பேசியிருக்கிறார். ஐ.நா சபையின் அமைதிக்கான முன்னெடுப்புகள், உலகமயமாக்கல் ஆகியவை தொடர்பாக உரையை நிகழ்த்தியுள்ளார்.</p><p>அவரது மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>விஜய் லண்டன் பயணம் இன்ப சுற்றுலாவா.. முதலீடுகள் ஈர்ப்பா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-vijays-london-trip-a-pleasure-tour-or-for-attracting-investments-edappadi-palaniswami-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-vijays-london-trip-a-pleasure-tour-or-for-attracting-investments-edappadi-palaniswami-asks#comments</comments><guid isPermaLink="false">6b450770-66aa-4327-af4f-74906a6d9580</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:19:30 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:19:30.524Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/yflw19oi/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/yflw19oi/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>சம்பந்தமில்லாத அதிகாரிகளை அழைத்துச் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக தவெக அரசு கூறியுள்ளது. லண்டனில் முதலீடுகளை ஈர்க்க தொழில்துறை அமைச்சர், அதிகாரிகளை அழைத்துச் செல்லாதது ஏன்?; முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றது முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது இன்பச் சுற்றுலாவா?. என மக்கள் கேள்வி கேட்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுடன் லண்டனில் சென்று எதற்காக ஒப்பந்தம் போடுகிறீர்கள்?. </p><p>தமிழ்நாட்டில் எங்கேயும் மின்வெட்டு இல்லை என்று சொல்லிவிட்டு, மின் பற்றாக்குறை இருப்பதாகவும் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க இருப்பதாகவும் அந்தத் துறையின் அமைச்சர் கூறுகிறார். மின் வெட்டே இல்லை என்றால், எதற்காக வெளிச் சந்தையில் மின்சாரத்தை அரசு வாங்க வேண்டும்?. ஆனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசும் நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு நேரிடுகிறது. தமிழக அமைச்சர் பேட்டி அளிக்கும்போதே மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் மின்சார உற்பத்தியை பெருக்கி அண்டை மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை வழங்கினோம். இந்த அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லாததால் மின் கொள்முதலில் திட்டமிடல் இல்லாமல் இருக்கிறது.</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நான்கே மாதங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு பிறகு தான் அதிக ஊழல் நடைபெறுகிறது. முன்பு கொடுத்ததை வாங்கினார்கள், இப்போது டிமாண்ட் செய்து வாங்குகிறார்கள். லஞ்சம் வாங்கவில்லை என்றால் அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தும்போது பணம் எப்படி கைப்பற்றப்படுகிறது?.</p><p>தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, அடியோடு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் என குற்றம் நடக்காத நாளே இல்லை. தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்டவற்றின் விலை உயர்வை தவெக அரசு கட்டுப்படுத்தவில்லை. ரீல்ஸ் போடுவது, ரீல் விடுவது தான் த.வெ.க அரசின் சாதனையாக உள்ளது. தவெக கட்சி தொடங்கி 3 ஆண்டுகள்தான் ஆகிறது; அவர்களுக்கு எந்த அனுபவமும் கிடையாது.</p><p>தமிழக அரசுக்கு கடன் சுமை இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் தேவைதானா? கடன் சுமை சீரானதும் கட்டிக் கொள்ளலாமே, அதுவும் மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி, குடியிருப்புகள், பள்ளிகள் இருக்கும் பகுதியில் அமையக் கூடாது. தவெக அரசு இதுவரை ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது. நெரிசல் இல்லாமல், அனைவரும் வந்து செல்லக்கூடிய நல்ல இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும். நடுநிலையாக இருப்பதாக சபாநாயகர்தான் கூறுகிறார், நேரலையில் பார்த்தால் மக்களுக்கு தெரியும்.</p><p>அதிமுக நிர்வாகிகள் இல்லத்தில் சோதனை நடத்தினால் ஒன்றும் கிடைக்காது. எங்கள் வீட்டில் எதுவும் இல்லை, அரசிடம் இருந்துதான் நாங்கள் நிவாரணம் பெற வேண்டிய நிலை உள்ளது. மிசா, சர்க்காரியா கமிஷன் பிரச்சினை பற்றி தற்போது பேசி என்ன பயன்? இதனால் மக்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக விரைவில் ஆதரவு தருவார்கள். தவெக ஆட்சிக்கு துணை நிற்கும் இடதுசாரிகளே இடைத்தேர்தலை திணிக்கப்பட்டவை என கூறுகின்றனர். மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இடைத்தேர்தலில் தவெகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-dengue-fever-need-to-intensify-mosquito-control-operations-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-dengue-fever-need-to-intensify-mosquito-control-operations-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">2c59336d-c372-4aa8-befb-706ebd222971</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:18:10 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:18:10.923Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,முன்னெச்சரிக்கை நடவடிக்கை,Mosquito,கொசு ஒழிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/rjgopmgv/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/rjgopmgv/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.</p><p>டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் (Aedes) கொசுக்களை ஒழிப்பதிலும் சுகாதாரத்துறை காட்டிய அலட்சியமே 9 பேரின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பு அதிகரித்த பின்னரே நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையைக் கைவிட்டு, பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு சுகாதாரத்துறைக்கு உண்டு என்பதை இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.</p><p>எனவே, தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, டெங்குவால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்தும் இந்நேரத்தில், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பைக் மீது வாகனம் மோதி விபத்து: இளம்பெண் பலி; கணவர், குழந்தை படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-young-woman-dies-after-vehicle-hits-bike-husband-and-child-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-young-woman-dies-after-vehicle-hits-bike-husband-and-child-injured#comments</comments><guid isPermaLink="false">a99980f6-4e1d-4093-bc77-3245a4e9542e</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:04:39 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:04:39.317Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Thoothukudi,தூத்துக்குடி,bike,பைக்,Kovilpatti,கோவில்பட்டி,வாகனம்,Vehicle,படுகாயம்,seriously injured,இளம்பெண் பலி,young woman killed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/5ei46ee7/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து, இளம்பெண் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/5ei46ee7/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - சாத்தூர் சாலையில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">இளம்பெண் உயிரிழந்தார்</a>. அவரது கணவர் மற்றும் ஒரு வயது குழந்தை படுகாயம் அடைந்தனர். </p><h2>தனியார் நிறுவன தொழிலாளி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி </a>வேலாயுதபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 30), கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவரது மனைவி சுபிக்சா(27). இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. </p><h2>பைக்கில் பயணம்</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. இதையடுத்து குழந்தையைச் சமாதானப்படுத்துவதற்காக சிவசங்கர், மனைவியையும் குழந்தையையும் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி-சாத்தூர் சாலையில் சென்றுள்ளார். </p><h2>அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து</h2><p>தனியார் கல்லூரி அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றது. இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">விபத்தில்</a> தூக்கி வீசப்பட்ட சிவசங்கர், சுபிக்சா மற்றும் குழந்தை ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். </p><p>அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையில் இருந்த சுபிக்சா மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். </p><h2>இளம்பெண் உயிரிழப்பு</h2><p>அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-regarding-extra-charges-for-dengue-treatment-tamil-nadu-health-department-warns-private-hospitals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-regarding-extra-charges-for-dengue-treatment-tamil-nadu-health-department-warns-private-hospitals#comments</comments><guid isPermaLink="false">aadfb7a1-0190-4f2c-a893-d243543d4f12</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:03:02 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:03:02.895Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Dengue,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,Treatment,சிகிச்சை,health department,கூடுதல் கட்டணம்,தனியார் மருத்துவமனை,Tamil Nadu Health Department,Private hospitals,Extra Charges,தமிழக சுகாதாரத்துறை,கூடுதல் கட்டணம் வசூல்,டெங்கு காய்ச்சல் பாதிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/19xjte5i/kler.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/19xjte5i/kler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/dengue-fever">டெங்கு காய்ச்சல்</a> சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><h2>டெங்கு காய்ச்சல் பாதிப்பு </h2><p>தமிழ்நாட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/dengue-fever">டெங்கு காய்ச்சல் பாதிப்பு</a> நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.  </p><p>இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத் துறைக்கு புகார்கள் வந்தன.</p><h2>கூடுதல் கட்டணம் வசூல் புகார்</h2><p>அதாவது, சில தனியார் மருத்துவமனைகளில், <a href="https://www.dailythanthi.com/topic/dengue-fever">டெங்கு காய்ச்சல்</a> பாதிப்புக்கு சாதாரண சிகிச்சைக்கு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><h2>புகார்களுக்கு 104</h2><p>இதனைத் தொடர்ந்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும், இதுபோன்ற புகார்களுக்கு 104 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் - மனைவி தற்கொலை... அதிர்ச்சி சம்பவம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-wife-suicide-over-childlessness-shocking-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-wife-suicide-over-childlessness-shocking-incident#comments</comments><guid isPermaLink="false">e90b6f84-24f6-4217-8b4d-c5496ab7c612</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:43:00.455Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,தற்கொலை,Suicide</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qvlpnav1/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qvlpnav1/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>குழந்தை இல்லை</h2><p>தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன் (51 வயது). இவருடைய மனைவி வித்யா (42 வயது). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாததால் இந்த தம்பதி மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தனர். வித்யா, மகிழங்கோட்டை மேலக்காடு பகுதியில் உள்ள தனது அக்கா வனிதா வீட்டில் வந்து தங்கி இருந்தார்.</p><h2>தீக்குளித்து தற்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற வித்யா, திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீயின் வேதனை தாங்காமல் அவர் சத்தம்போட்டு அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து வித்யாவை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.</p><p>அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வித்யா இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>இதனிடையே வித்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை சண்முகநாதனிடம் தெரிவிப்பதற்காக உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவரது போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை.</p><p>இந்த நிலையில் மதுக்கூர் அருகே பத்தாங்காடு கிராமத்தில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சண்முகநாதனின் அண்ணன் பரந்தாமன் அங்கு சென்று பார்த்தபோது அது சண்முகநாதன் என்பது தெரியவந்தது. அவருடைய உடலை மதுக்கூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விளைச்சல் பாதிப்பால் தேங்காய் விலை உயர வாய்ப்பு... இருப்பு வைக்கும் விவசாயிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coconut-prices-likely-to-rise-due-to-impact-on-yield</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coconut-prices-likely-to-rise-due-to-impact-on-yield#comments</comments><guid isPermaLink="false">e6e812d3-ffbf-4a62-a400-addb17cab7b3</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:42:39 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:42:39.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coconut,தேங்காய்,தேங்காய் விலை,Coconut Price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/xmzpz8l3/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/xmzpz8l3/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><h2>தேங்காய் விளைச்சல்</h2><p>திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தேங்காயை விட இளநீர் அதிக வருவாய் தருவதால் விவசாயிகள் பலரும் இளநீர் உற்பத்தியில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடும் வெயில், தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது.</p><p>வறண்ட வானிலை தொடர்வதாலும், ஏராளமான மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் விளைச்சல் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளம் மாநிலத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தேங்காய் விலை மளமளவென அதிகரித்து விரைவில் புதிய உச்சத்தை தொடும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.</p><h2>இருப்பு வைப்பு</h2><p>தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தேங்காயின் விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.52 வரை விற்பனையாகிறது. ஒரு டன் தேங்காய் ரூ.52 ஆயிரம் வரை விற்பனையாகிறது. விரைவில் ஒரு கிலோ ரூ.70 என்ற நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பல விவசாயிகள் பறித்த தேங்காய்களை விற்பனை செய்யாமல் விளைநிலங்களில் குவித்து வைத்து இருப்பு வைக்கின்றனர்.</p><p>தேங்காயை இருப்பு வைப்பதற்கு அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. கூடுதல் செலவினங்கள் எதுவும் இல்லாமல் தோப்பிலேயே குவித்து வைத்து இருப்பு வைக்க முடியும். எனவே தேங்காய்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>‘1033’ உதவி எண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-upgrade-the-1033-helpline-with-ai-technology</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-upgrade-the-1033-helpline-with-ai-technology#comments</comments><guid isPermaLink="false">82aefa2e-1548-4fff-a5a2-ac1d125d165a</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:42:06 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:42:06.594Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,அவசர உதவி எண்,National Highway,ஏ.ஐ. தொழில்நுட்பம்,A.I. Technology,செல்போன் செயலி,தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்,Help Center,உதவி எண்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/x2zzwc7t/loer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/x2zzwc7t/loer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'1033' உதவி எண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது விபத்து நடந்த இடத்துக்கு 30 வினாடிகளுக்குள் ஆம்புலன்ஸ் அனுப்ப உதவும்.</p><h2>15 ஆயிரம் அழைப்புகள்</h2><p>இந்தியாவில் உள்ள மொத்த சாலை வலையமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகள் 2.3 சதவீதம் மட்டுமே என்றாலும், சாலை விபத்து உயிரிழப்புகளில் 36 சதவீதத்துக்கும் அதிகமானவை அவற்றிலேயே நிகழ்கின்றன.</p><p>இதனால், விபத்து நடந்த முதல் 60 நிமிடங்களுக்குள் உயிர்களை பாதுகாக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் '1033' என்ற உதவி எண் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது 1.46 லட்சம் கிலோமீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவைக்கு, தினமும் சராசரியாக 15 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன.</p><h2>அவசர உதவி எண்</h2><p>இந்தநிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு விரைவான மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதற்காக, 1033 என்ற அவசர உதவி எண்ணை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் நவீன அவசரகால பதில் அமைப்புகளுடன் மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.</p><h2>30 வினாடிகளுக்குள்</h2><p>புதிய அமைப்பு உதவி எண்ணை அழைப்பவர்களின் இருப்பிடத்தை உடனுக்குடன் துல்லியமாக கண்டறியும். பல்வேறு இந்திய மொழிகளில் பேசப்படும் கோரிக்கைகளை புரிந்துகொண்டு, விபத்து நடந்த இடத்துக்கு 30 வினாடிகளுக்குள் அருகில் உள்ள ஆம்புலன்ஸ், கிரேன் அல்லது ரோந்து வாகனங்களை அனுப்ப உதவியாக இருக்கும்.</p><p>மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை நிலவரங்களை நேரடியாக கண்காணித்து விரைவான பாதையில் வாகனங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கும்.</p><h2>ராஜ்மார்க் யாத்ரா</h2><p>விபத்துக்களுக்கான உதவி மட்டுமின்றி, சுங்கச்சாவடி, பாஸ்டேக், சாலை நிலவரம் குறித்த புகார்கள் போன்ற அவசரமில்லாத கோரிக்கைகளும் குரல் வழி, 'எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப்' மற்றும் செல்போன் செயலி மூலமும் மேம்படுத்தப்பட்ட உதவி எண் நிர்வகிக்கப்படும். புதிய திட்டத்தின் கீழ், இந்த அமைப்பு அவசரகால உதவி எண் 112 மற்றும் 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.</p><p>தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டாலும், மனித தலையீடு தேவைப்படும் சூழல்களில் ஆபரேட்டர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>19-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmks-grand-festival-to-be-held-on-the-19th-under-the-leadership-of-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmks-grand-festival-to-be-held-on-the-19th-under-the-leadership-of-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">a3b761bc-78f1-4e8d-bc0b-e4f82321b3e8</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:39:34 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:39:34.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,Chennai,சென்னை,Announcement,அறிவிப்பு,முப்பெரும் விழா,தேதி மாற்றம்,Date Change,திமுக தலைவர்,DMK leader MK Stalin,Mupperum Vizha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/culn49xq/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. தலைமை கழகம், அண்ணா அறிவாலயம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/culn49xq/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">தி.மு.க. தலைவர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் வரும் 19-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தி.மு.க. முப்பெரும் விழா</h2><p>தி.மு.க. தொடங்கிய நாள் (செப்டம்பர் 17), தி.மு.க. நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளான (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில், ஆண்டுதோறும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">முப்பெரும் விழா</a> கொண்டாடப்பட்டு வருகிறது. </p><p>இந்த முப்பெரும் விழாவின் போது, தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா கடந்த 15-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. </p><h2>மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு</h2><p>இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81">உடல்நலக்குறைவு</a> ஏற்பட்டதன் காரணமாக அன்று நடைபெறவிருந்த தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் அன்று மாலை நடக்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது; முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இந்த நிலையில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறும் நாள் தொடர்பாக இன்று தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>19-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா</h2><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15.9.2026 அன்று நடைபெற இருந்த தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அறிவிக்கப்படும்</a> என்று அறிவித்ததையொட்டி, தற்போது தி.மு.க. முப்பெரும் விழா வருகிற 19.9.2026, சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில், அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" வைத்து நடைபெறும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உளுந்தூர்பேட்டை அருகே அதிர்ச்சி: கிரைண்டர் செயலி மூலம் இளைஞருக்கு கத்திக்குத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-incident-near-ulundurpet-youth-stabbed-using-grindr-app</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-incident-near-ulundurpet-youth-stabbed-using-grindr-app#comments</comments><guid isPermaLink="false">e468338a-68d3-45e2-9e4c-956c6b4f00a2</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:30:56 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:30:56.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,police,2 arrested,2 பேர் கைது,Kallakkurichi,கிரைண்டர் ஆப்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/09knuhzs/7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரைண்டர் செயலி மூலம் பழக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/09knuhzs/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கிரைண்டர் செயலி மூலம் இளைஞரை தனிமையான இடத்திற்கு வரவழைத்து கத்தியால் குத்தி பணம் பறித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மர்ம நபர்களால் கத்திக்குத்து</h2><p>விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பச்சைமுத்து (வயது 30). இவர் <a href="https://www.dailythanthi.com/topic/கிரைண்டர்">கிரைண்டர் </a>செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். இதில் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள டோல்கேட் அருகே வரும்படி கூறியுள்ளனர். இவரும் அவர்களை நம்பி சென்றுள்ளார்.</p><p>பின்னர், அவரை மதியனூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள், அவரிடம் இருந்த ரூ.4,000-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பச்சைமுத்துவை அப்பகுதி மக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>குற்றவாளிகள் கைது</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர் பேட்டை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a>, பச்சைமுத்துவின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். </p><p>விசாரணையில், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-must-withdraw-urban-planning-amendment-immediately-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-must-withdraw-urban-planning-amendment-immediately-seeman#comments</comments><guid isPermaLink="false">e6938137-4e70-4796-9d61-3db007dd8632</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:28:37 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:28:37.122Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,சட்டத்திருத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/omuy8ue4/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/omuy8ue4/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிலங்களின் மீதான ஊராட்சி அமைப்புகளின் அதிகாரத்தை முழுவதுமாகப் பறித்து, அவற்றை நேரடியாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தவெக அரசு நிறைவேற்றியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிநாளில் வளர்ச்சி, நில மேம்பாடு என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களைப் பறித்து தனியார் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தைத் தவெக அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.</p><p>தற்போது நடைமுறையில் உள்ள நில கையகப்படுத்தல் சட்டத்தின்படி, தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளுக்காக ஓர் ஊராட்சிக்கு உட்பட்ட நிலங்களைக் கையகப்படுத்தும்போது அந்த ஊராட்சியில் அதற்காகத் தீர்மானம் போட வேண்டும். ஊர் மக்கள் அதை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும். தவெக அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்திருத்தம் உள்ளாட்சிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே எந்த ஒரு தொழிற்சாலையும் கொண்டுவர முடியும் என்ற குறைந்தபட்ச ஜனநாயக வழிமுறையையும் துடைத்தெறிந்துள்ளது. இப்புதிய திருத்த வரைவின்படி, விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளைக் கையகப்படுத்த இனி ஊராட்சி அமைப்புகளிடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ, தொடர்புடைய விவசாயிகளிடமோ, கருத்துக்கேட்கவோ, ஒப்புதல் பெறவோ தேவையில்லை. மேலும், விளைநிலங்களை, வேறு பணிகளுக்காக அரசு கையகப்படுத்தும்போது முடிவெடுக்கும் அதிகாரம் இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்தது. அதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றுகூறி, நிலத்தை விரைந்து கையகப்படுத்த வசதியாக, நகரத் திட்ட இயக்குநரே இனி நேரடியாக முடிவெடுத்து ஒப்புதல் அளிக்கலாம் என்று அதிகாரத்தை மாற்றி வரையறுக்கிறது இப்புதியச் சட்டத்திருத்தம்.</p><p>அரசு நினைத்தால் எந்த இடத்திலும் யாருடைய நிலத்தையும் கையகப்படுத்தி, தொழிற்சாலைகள் தொடங்க தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கலாம் என்பது கொடுங்கோன்மை இல்லையா? விளைநிலங்களை அழித்து, விவசாயிகளை நிலமற்ற அகதிகளாக்கும் இப்படியொரு எதேச்சதிகார சட்டத்திருத்தத்தை தவெக நிறைவேற்றியது ஏன்? தமிழ்நாட்டு விவசாயிகளை விடவும், தனியார் பெருமுதலாளிகளின் நலன் மட்டும்தான் தவெக அரசுக்கு முதன்மையானதா? பரந்தூரில் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிப்பதை, தடுத்து நிறுத்துவோம், வேளாண்மையைக் காப்பாற்றுவோம் என்று வாக்குறுதியளித்த முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாடு முழுவதும் நிலங்களை உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதலின்றி அபகரிக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டுவர எப்படி அனுமதித்தார்? பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் ஒப்புதல் இன்றித் தலைமைச்செயலகம் கட்டுவதற்காகவா? இதுதான் ஜனநாயகமா? இதற்குப் பெயர்தான் ஜனநாயகன் ஆட்சியா? எத்தனை சட்டங்கள் கொண்டுவந்து வந்து எம் மக்களை அச்சுறுத்தினாலும் நாம் தமிழர் கட்சி இந்த மண்ணில் இருக்கும்வரை ஏழை எளிய மக்களின் நிலங்களை, அவர்களின் விருப்பமின்றி வலுக்கட்டாயமாகப் பறிக்க ஒருபோதும் அனுமதிக்காது.</p><p>நிலங்களின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்கும் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கூட்டமாக பறந்து வந்த கதண்டுகள்.. தம்பதிக்கு நேர்ந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/swarm-of-hornets-attacks-tragedy-strikes-a-couple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/swarm-of-hornets-attacks-tragedy-strikes-a-couple#comments</comments><guid isPermaLink="false">4e051650-f8be-44d4-818a-51e01b47e7a5</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:11:29 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:11:29.454Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ariyalur,அரியலூர்,தம்பதி பலி,கதண்டுகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zfpp923i/sinna.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zfpp923i/sinna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அரியலூர், </p><p>கதண்டுகள் கடித்து வயதான தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>கூட்டமாக பறந்து வந்த கதண்டுகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/ariyalur">அரியலூர்</a> மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்த புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் (வயது 85), விவசாயி. இவரது மனைவி கனகவள்ளி (75). இவர்கள் குமணந்துறை பகுதியில் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தனர். </p><p>நேற்று முன்தினம் சின்னையனும், அவரது மனைவியும் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பனை மரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டுகள் கூட்டமாக பறந்து வந்து சின்னையன் மற்றும் கனகவள்ளியை கை, கால், முகம் போன்ற இடங்களில் கடித்தன. இதில் சிறிது நேரத்தில் தம்பதி மயக்கம் அடைந்தனர்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னையன் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். </p><h2>விசாரணை</h2><p>பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கனகவள்ளி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கனகவள்ளி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதி இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக, சிபிஎம், நாதக கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-for-two-constituencies-nomination-papers-accepted-of-candidates-from-tvk-dmk-aiadmk-cpm-and-ntk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-for-two-constituencies-nomination-papers-accepted-of-candidates-from-tvk-dmk-aiadmk-cpm-and-ntk#comments</comments><guid isPermaLink="false">53e2647a-8442-4165-9a9e-0e33b1ce304a</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:07:02 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:07:02.518Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,அதிமுக,திமுக,DMK,நாதக,NTK,இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,சிபிஎம்,CPM,Madhuranthakam,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/j1u0zasa/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/j1u0zasa/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் த.வெ.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன. இதனால் 5 முனைப் போட்டி நிலவுகிறது.</p><h2>வேட்புமனு பரிசீலனை</h2><p>இடைத்தேர்தலுக்கன வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், பிரதான கட்சிகள், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 39 வேட்பாளர்கள் மொத்தம் 51 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இதில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக, திமுக, சிபிஎம், நாதக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.</p><h2>வேட்புமனுக்கள் ஏற்பு</h2><p>மதுராந்தகத்தில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன், அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.</p><p>இதைபோல தாராபுரத்தில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா, திமுக வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.</p><p>மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் 48 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 32 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 51 வேட்புமனுக்களில் 22 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் 29  மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
தே.மு.தி.க.வை பார்த்து திருமாவளவன் பயப்படுகிறாரா? பிரேமலதா ஆவேசம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-thirumavalavan-afraid-of-dmdk-premalatha-slams</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-thirumavalavan-afraid-of-dmdk-premalatha-slams#comments</comments><guid isPermaLink="false">136ab149-0a04-4e08-85fe-bbe707d1606a</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:01:11 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:01:11.176Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,திருமாவளவன்,Thirumavalavan,பிரேமலதா,தே.மு.தி.க.,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/jcym3upd/dpgsp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா, தே.மு.தி.க.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/jcym3upd/dpgsp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தே.மு.தி.க.வை கண்டு திருமாவளவன் பயப்படுகிறாரா எனவும், அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக கூட்டணி மாறிவிட்டார்கள் எனவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.</p><p>சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 22-வது ஆண்டு தொடக்கவிழா கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. விழாவில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்ததுடன், விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p> <h2>இடைத்தேர்தலில் வெற்றி</h2><p>இதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, நாங்கள் அங்கம் வகிக்கும் தி.மு.க., இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறோம்.  அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம். மு.க.ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறோம். உங்களுடைய ஆதரவு வேண்டும் என கேட்டுக்கொண்டார்.</p><p>அப்போது தே.மு.தி.க., தி.மு.க.வுடன்தான் கூட்டணியில் இருக்கும். எங்களின் ஒத்துழைப்பு 100 சதவீதம் உங்களுக்கு இருக்கும் என நான் தெரிவித்தேன். இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் தி.மு.க.வுக்கு முழு ஒத்துழைப்பு இருக்கும் என்றார்.</p> <h2>ஆலோசனை கூட்டம்</h2><p>தொடர்ந்து பிரேமலதா கூறுகையில், தி.மு.க.வில் தொடர்ந்து கூட்டணியில் இருந்த எங்களுக்கு தொகுதியை குறைத்துவிட்டு, புதிதாக வந்த தே.மு.தி.க.வுக்கு அதிகமான தொகுதி (சீட்) ஒதுக்கப்பட்டது என திருமாவளவன் கூறிய கருத்துக்கு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் பதிலை கூறுகிறேன் என்றார்.</p><p>இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். இதில் அவைத்தலைவர் இளங்கோவன், பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.</p> <h2>முதல்-அமைச்சர் வேட்பாளர்</h2><p>கூட்டத்தில் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும். விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பன உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p><p>இதன்பின்னர், பிரேமலதா நிருபர்களிடம் கூறும்போது, மக்கள் நல கூட்டணியில் இருந்தபோது விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்ட திருமாவளவன், தற்போது தே.மு.தி.க.வுக்கு 10 சீட்டு கொடுத்ததால்தான் கூட்டணியை விட்டு செல்கிறோம் என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.</p> <h2>அமைச்சர் பதவி</h2><p>தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது எனக்காக திருமாவளவனும், கனிமொழியும் மட்டுமே பிரசாரம் செய்தனர். தற்போது ஒரு அமைச்சர் பதவி கிடைத்ததால், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு வேறொரு கூட்டணிக்கு திருமாவளவன் சென்றுவிட்டார்.</p> <h2>என்ன பயம்?</h2><p>கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது போல, நீங்களும் வெளியில் இருந்து ஆதரவு அளித்திருக்கலாமே?. நீங்கள் ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டு, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது தவறு. பல கட்சிகள் இருக்கும் நிலையில், தே.மு.தி.க. மீது மட்டும் ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?.</p><p>தே.மு.தி.க.வை கண்டு என்ன பயம்? எங்களால்தான் நீங்கள் கூட்டணியை விட்டு சென்றீர்கள் என்பது உண்மைக்கு புறம்பான பதில் என மக்களுக்கு தெரியும் என அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vs-babus-condition-is-stable-hospital-administration-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vs-babus-condition-is-stable-hospital-administration-statement#comments</comments><guid isPermaLink="false">de847146-70e5-4f92-bb0e-06ff2c0741f4</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:59:24 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:59:24.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>hospital,மருத்துவமனை,வி.எஸ்.பாபு,V.S. Babu MLA</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/edvb1oto/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/edvb1oto/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.</p><p>கடந்த 9-ம் தேதி அதிகாலை அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, உடனடியாக அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து அவசர சிகிச்சைகளை தொடங்கினர்.</p> <p>எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு. தற்போது மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தற்போது சீராகவும் திருப்திகரமாகவும் உள்ளது. அவரது உடல்நிலையை பல்துறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்குகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை கிரேன் மூலம் கடலில் கரைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-business-development-ganesha-statue-immersed-in-the-sea-by-crane</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-business-development-ganesha-statue-immersed-in-the-sea-by-crane#comments</comments><guid isPermaLink="false">b14435f3-4fc7-4dfb-9a65-cfec38590ee8</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:47:56 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:47:56.023Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>sea,Thoothukudi,தூத்துக்குடி,Procession,ஊர்வலம்,விநாயகர் சிலை,Dissolution,Ganesha idol,கடலில் கரைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/gu4fouji/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை கிரேன் மூலம் கடலில் கரைப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/gu4fouji/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட வியாபார அபிவிருத்தி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">விநாயகர் சிலை</a> மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. </p><h2>வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாநகர பழைய இரும்பு மற்றும் மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்கம் சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் பிரம்மாண்ட வியாபார அபிவிருத்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. </p><h2>ஊர்வலம்</h2><p>இந்த நிலையில், நேற்று காலையில் இறுதிப் பூஜைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, விநாயகர் சிலையை கடலில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மினி வேனில் ஏற்றப்பட்ட விநாயகர் சிலை, மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. </p><h2>கடலில் கரைப்பு</h2><p>தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் பின்புறம் உள்ள கடற்கரைக்கு சிலை கொண்டு வரப்பட்டு, அங்கு மீண்டும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், கிரேன் மூலம் விநாயகர் சிலை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">கடலில்</a> இறக்கப்பட்டு பாதுகாப்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கரைக்கப்பட்டது</a>. இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் உள்பட திரளான வியாபாரிகள் கலந்துகொண்டனர். </p>]]></content:encoded></item><item><title>எத்தனையோ அடக்குமுறைகள்; ஏவப்பட்ட நெருக்கடிகள்: உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/countless-acts-of-oppression-pressures-unleashed-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/countless-acts-of-oppression-pressures-unleashed-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">0efc69f8-ed9e-4b5c-9368-257787d84b1d</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:40:47 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:40:47.414Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/83igglj3/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/83igglj3/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>ஜமீன்களிலும் - பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் இன்று. நாற்பதுகளில் இருந்த பேறிஞர் அண்ணா, இருபதுகளில் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தன் தம்பிமார்களுடன் கொட்டும் மழையில் தொடங்கிய தி.மு.க. இன்று 78-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. </p><p>ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த 78 ஆண்டுகளில் பல எட்டாத உயரங்களுக்குத் தமிழ்ச்சமுதாயத்தை ஏற்றிவிட்ட பெருமை கழகத்துக்கு உண்டு. சமூக நீதி - மாநில உரிமை - பெண் விடுதலை - தொழில் வளர்ச்சி என கொள்கை அடித்தளத்தில், தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது முதல், தன்னிகரற்ற மாநிலமாக்கியது வரை கழகம் ஆற்றிய பணிகள் ஏராளம்.</p><p>எத்தனையோ அடக்குமுறைகள் - ஏவப்பட்ட நெருக்கடிகள் - புதிய புதிய எதிரிகள், இத்தனைக்குப் பிறகும் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துடிப்போடு நடைபோடுகிறது தி.மு.க. நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நம் கழகத்தின் மேன்மைக்கு அயராது உழைப்போம். கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல - நம் உயிர் என்று முழங்குவோம்! வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-breaks-out-after-bridge-explodes-in-apartment-building-near-chengalpattu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-breaks-out-after-bridge-explodes-in-apartment-building-near-chengalpattu#comments</comments><guid isPermaLink="false">fda345d9-abe3-4983-9851-12557e02e374</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:31:39 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:31:39.941Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Chengalpattu,செங்கல்பட்டு,apartment building,போலீசார்,அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qz5qf49h/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qz5qf49h/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பிரிட்ஜ் வெடித்து திடீரென தீப்பற்றியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>திடீர் தீ விபத்து</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூரில் உள்ள 15 அடுக்குகளை கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் 11-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் பிரிட்ஜ் வெடித்து திடீரென தீப்பற்றியது.</p><p>அப்போது அந்த வீட்டில் குழந்தை உள்பட 4 பேர் இருந்துள்ளனர். தீப்பற்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஒன்றுகூடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், வீட்டிற்குள் சிக்கியிருந்த 4 பேரையும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் தீ 13 மற்றும் 14 வது மாடிகளில் பரவ தொடங்கியது.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த சிறுசேரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">தீயணைப்புத் துறை</a>யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர்.</p><h2>ஒருவர் காயம் </h2><p>இந்த தீ விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"> போலீசார்</a> குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. நிர்வாகியை இரும்பு கம்பியால் தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-6-people-who-attacked-trp-executive-with-iron-rod</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-6-people-who-attacked-trp-executive-with-iron-rod#comments</comments><guid isPermaLink="false">ef0ee383-efeb-4304-b6c2-0cdd757267e3</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:20:10 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:20:10.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Thoothukudi,தூத்துக்குடி,T.V.K.,attack,வழக்குப்பதிவு,case registered,administrator,iron rod,இரும்பு கம்பி,6 பேர்,6 people,த.வெ.க. நிர்வாகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/khn32kg5/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ த.வெ.க. நிர்வாகி மீது இரும்பு கம்பியால் தாக்குதல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/khn32kg5/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், குரும்பூர் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">த.வெ.க. நிர்வாகி</a>யை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">இரும்புக் கம்பி</a>யால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்கிய</a> சம்பவம் தொடர்பாக முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D">6 பேர்</a> மீது போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">வழக்குப்பதிவு</a> செய்துள்ளனர். </p><h2>த.வெ.க. நிர்வாகிக்கும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கும் தகராறு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள அம்மன்புரம், கீழப்புதுக்குடியைச் சேர்ந்த பீட்டர் (வயது 48), த.வெ.க. நிர்வாகி ஆவார். இவர் அம்மன்புரம் பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். அந்த இடத்தில் உள்ள பொதுப்பாதை தொடர்பாக பீட்டருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான ஞானராஜ்(65) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. </p><h2>இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல்</h2><p>இந்த நிலையில் சம்பவத்தன்று, அம்மன்புரம் தேவாலயம் அருகே பீட்டர் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஞானராஜின் தம்பி மகன் ஆல்வின்(25) உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் திடீரென பீட்டரை வழிமறித்தது. அவர்கள் தாங்கள் வைத்திருந்த தடி மற்றும் இரும்புக் கம்பிகளால் பீட்டரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி மிதித்தனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். </p><h2>6 பேருக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பீட்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆல்வின், ஞானராஜ் உள்ளிட்ட 6 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். </p><p>இதனிடையே, பீட்டர் தாக்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>பெரியார் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம் - அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-pay-tribute-to-periyar-remembering-his-life-of-public-service-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-pay-tribute-to-periyar-remembering-his-life-of-public-service-annamalai#comments</comments><guid isPermaLink="false">409dcdc8-4319-4e7e-977a-44620371ca9d</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:07:51 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:07:51.241Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,பெரியார்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/iunopp1w/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/iunopp1w/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“செப்டம்பர் 2026: சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.</p><p>சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான புதிய இணையவழி கொள்முதல் : அமைச்சர் காந்திராஜ் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-online-procurement-for-consumer-cooperative-societies-minister-gandhiraj-reviews-the-initiative</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-online-procurement-for-consumer-cooperative-societies-minister-gandhiraj-reviews-the-initiative#comments</comments><guid isPermaLink="false">cd2e2908-ef85-4c3b-86a2-434cc68a514e</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:04:39 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:04:39.408Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Online,கொள்முதல்,இணையவழி,Cooperative Societies,அமைச்சர் காந்திராஜ்,Minister Gandhiraj,கூட்டுறவு நிறுவனம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/s1l8a47x/gandhi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/s1l8a47x/gandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான புதிய இணையவழி கொள்முதல் நடைமுறைகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆய்வு நடத்தினார். </p><h2>நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்கள்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான பழைய கூட்டு கொள்முதல் குழு முறை கலைக்கப்பட்டு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான நுகர்வுப் பொருட்களை வெளிப்படைத்தன்மையுடன், தரமாகவும் நியாயமான விலையிலும் கொள்முதல் செய்வதற்காக புதிய இணையவழி (Online) கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய கொள்முதல் நடைமுறைகள் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் அவர்கள் இன்று (17.09.2026) தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.</p> <h2>இணையவழி கொள்முதல்</h2><p>இணையவழி கொள்முதல் முறையின் செயல்முறை, வழங்குநர் பதிவு, விலை நிர்ணயம், தரப் பரிசோதனை மற்றும் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் நடைமுறைகள் குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்டது. இம்முறையை மேலும் பயனுள்ளதாக செயல்படுத்த தேவையான பல்வேறு அறிவுரைகளை அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு வழங்கினார்.</p><p>கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் (SHGs), விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) ஆகியவற்றுடன், உற்பத்தியாளர்கள் (Manufacturers) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர் (Authorised Dealers) ஆகியோரும் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் விரிவான விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் உற்பத்தியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு புதிய இணையவழி கொள்முதல் முறை, வழங்குநர் பதிவு மற்றும் இணையதள பயன்பாடு தொடர்பாக பல கட்ட பயிற்சிகள் வழங்கி, அதிக எண்ணிக்கையிலான வழங்குநர்களை இம்முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.</p><h2>தரமான பொருட்கள்</h2><p>இணையவழி கொள்முதல் முறையின் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, தரமான பொருட்களை போட்டித்தன்மையுள்ள மற்றும் நியாயமான விலையில் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார். கொள்முதல் செய்யும் நிலையிலும், பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு வந்து சேரும் நிலையிலும் உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நுகர்வோருக்கு தரமான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.</p><h2>அதிகாரிகளுக்கு உத்தரவு</h2><p>மேலும், கூட்டுறவுச் சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் தயாரிக்கும் பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்பும் தொடர்ச்சியான கொள்முதல் ஆணைகளும் கிடைக்கும் வகையில் இம்முறையை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்களின் உற்பத்தி மற்றும் வருமானம் அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்கள் நியாயமான விலையில் எளிதாக கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</p><p>இந்நிகழ்வில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) மற்றும் கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>வேலூர் அருகே சோகம்: கணவர் இறந்த சோகத்தில் கர்ப்பிணி தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-vellore-pregnant-woman-dies-by-suicide-after-husbands-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-vellore-pregnant-woman-dies-by-suicide-after-husbands-death#comments</comments><guid isPermaLink="false">661248e1-7e6f-439d-aabd-1089321aa322</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:03:56 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:03:56.041Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,தற்கொலை,pregnant,கர்ப்பிணி,கே.வி.குப்பம்,KV Kuppam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/de4lf41d/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/de4lf41d/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><p>வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கவசம்பட்டு கிராமம் யாதவர் வீதியைச் சேர்ந்த தம்பதி பூபாலன் - கலா. இவர்களின் மகன் சரத்குமார் (34 வயது). இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மோனிஷா (28 வயது) என்பவருடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.</p><p>இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது மோனிஷா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே கடந்த 13-ந்தேதி சரத்குமார் திடீரென இறந்து விட்டார். கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீளமுடியாத மோனிஷா தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.</p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுதர்சன நாச்சியப்பன் மறைவு: “காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudarshana-nachiyappans-demise-an-irreparable-loss-to-the-congress-movement-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudarshana-nachiyappans-demise-an-irreparable-loss-to-the-congress-movement-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">7495cab6-0c04-431e-b682-c9b0e64bbfb0</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:01:55 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:01:55.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,காங்கிரஸ்,Congress,இரங்கல்,மாணிக்கம் தாகூர்,மறைவு,Manickam Thakur MP,Sudarshana Nachiyappan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/8r3bkndw/361.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/8r3bkndw/361.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>இ.எம். சுதர்சன நாச்சியப்பன்</h2><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். </p><p>தமது இளமை பருவத்தில் அன்னை இந்திரா காந்தி தலைமையை ஏற்று இளைஞர் காங்கிரஸ் இணைந்து , காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார். தொடக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், பிறகு சிவகங்கை மக்களவை உறுப்பினராகவும், மத்திய அரசின் அரசு நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். 2013 ஆண்டில் மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.</p><h2>இரங்கல்</h2><p>பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க உரிமைக் குரல் எழுப்பியவர். காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனைகளை வழங்கியவர். இ.எம். சுதர்சன நாச்சியப்பன் திடீர் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>இறுதி சடங்குகள்</h2><p>இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் மறைவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறும். இதில் முன்னணி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ் </a>தலைவர்கள் பங்கேற்பார்கள். நாளை (18.09.2026) சிவகங்கை மாவட்டம், ஏரியூரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/construction-worker-arrested-for-sexually-harassing-disabled-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/construction-worker-arrested-for-sexually-harassing-disabled-woman#comments</comments><guid isPermaLink="false">5fce1979-35b5-47e9-8486-84adab05c97a</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:35:45 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:35:45.122Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,Sexual harassment,பெண்,Woman,பாலியல் தொந்தரவு,மாற்றுத்திறனாளி,Construction worker,கட்டிட தொழிலாளி,Thuthukudi,differently-abled</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/01yvr9rv/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/01yvr9rv/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே வீட்டில் தனியாக இருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">மாற்றுத்திறனாளி பெண்</a>ணுக்குப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> அளித்த கேரளத்தைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">கட்டிடத் தொழிலாளி</a>யை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.</p><h2>கட்டிட தொழிலாளி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">கேரள மாநிலம்</a>, கோட்டயம் பகுதியைச் சேர்ந்த சுனில் (வயது 57), கட்டிட தொழிலாளி. இவர் தூத்துக்குடி, தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் சக தொழிலாளர்களுடன் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். </p><h2>மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை</h2><p>அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் 35 வயதுடைய திருமணமாகாத மாற்றுத்திறனாளி பெண் தனியாக இருந்ததை நோட்டமிட்ட சுனில், வீட்டிற்குள் புகுந்து அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் சத்தம் போடவே, அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சுனிலை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். </p><h2>கைது</h2><p>இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>
முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் காலமானார்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-union-minister-sudharsan-nachiyappan-passes-away</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-union-minister-sudharsan-nachiyappan-passes-away#comments</comments><guid isPermaLink="false">66ec61fb-fdee-4283-8554-6751435ae6f2</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:34:18 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:34:18.380Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>passes away,முன்னாள் மத்திய மந்திரி,Former Union Minister,சுதர்சன நாச்சியப்பன்,Sudharsana Nachiappan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/vz6h8k6g/eusnp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/vz6h8k6g/eusnp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை</p><p>முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் உடல்நல குறைவால் இன்று காலமானார்.</p><p>காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான சுதர்சன நாச்சியப்பன் உடல்நல குறைவால் இன்று காலமானார்.  அவருக்கு வயது 78.</p> <h2>மத்திய இணை மந்திரி</h2><p>சிவகங்கையில் எரியூர் பகுதியில் வசித்து வந்த அவர் வீட்டில் இருந்தபோது, திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.  இந்த நிலையில், வீட்டில் அவருடைய உயிர் பிரிந்தது.  அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>அவர், 2013-ம் ஆண்டில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் வணிகம் மற்றும் தொழில்துறைக்கான மத்திய இணை மந்திரியாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.</p> ]]></content:encoded></item><item><title>பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-and-udhayanidhi-stalin-pay-tribute-to-the-periyar-statue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-and-udhayanidhi-stalin-pay-tribute-to-the-periyar-statue#comments</comments><guid isPermaLink="false">caff055c-d4f7-4646-b7d2-89f876173aad</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:29:03 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:29:03.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,பெரியார்,Periyar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zy4mqvzg/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zy4mqvzg/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகே உள்ள அவரது சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.</p><p>அதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப் படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது.</p><p>தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய திமுக உடன்பிறப்புகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>தேச சேவைக்காக அர்ப்பணித்துள்ள பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் - எல்.முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-pray-prime-minister-modi-dedicated-to-national-service-lives-in-good-health</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-pray-prime-minister-modi-dedicated-to-national-service-lives-in-good-health#comments</comments><guid isPermaLink="false">8a394fa9-7984-43f4-8017-ddc205e2fd08</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:23:27 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:23:27.089Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,பிரதமர் மோடி,PM Modi,பிறந்தநாள் வாழ்த்து,L Murugan,Birthday wishes,மத்திய இணை மந்திரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zebndvfl/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எல்.முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zebndvfl/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தேசத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்று, கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் சேவையை தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>எளிய மக்களின் நலன், விவசாயிகளின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களுக்கான வாய்ப்புகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பிரதமர் தேசத்தை வழிநடத்தி வருகிறார்.</p><p>அரசுத் தலைமைப் பொறுப்பில் பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்யும் 25 ஆண்டுகாலப் பயணத்தை முன்னிறுத்தி, அவரது சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் நடைபெறும் ‘சேவா சங்கல்ப் அபியான்’ மேலும் சிறப்பான மக்கள் பங்கேற்புடன் வெற்றி பெறட்டும்.</p><p>சேவை தினமான இன்று, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, ஒவ்வொருவரும் ஒரு தீபம் ஏற்றி, 140 கோடி மக்களுடன் இணைந்து, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாட்டின் முதன்மை சேவகரான பிரதமர் நரேந்திர மோடி இதே சேவை உணர்வுடன் தொடர்ந்து பயணிக்க இறைவனை வேண்டுவோம்.</p><p>தேச சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்து தேசப் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெரியாரின் 148-வது பிறந்த நாள்: படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyars-148th-birth-anniversary-tamil-nadu-ministers-pay-floral-tributes-to-the-film</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyars-148th-birth-anniversary-tamil-nadu-ministers-pay-floral-tributes-to-the-film#comments</comments><guid isPermaLink="false">a386a825-2ed7-4cd3-8b73-202ce7fb648d</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:18:51 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:18:51.774Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,birthday,Ministers,தமிழக அமைச்சர்கள்,பிறந்தநாள்,சிலை,statue,Respect,மரியாதை,பெரியார்,Periyar,படம்,picture</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/brgdfcd1/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியாரின் 148-வது பிறந்த நாள்: படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/brgdfcd1/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பெரியாரின்</a> உருவ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">சிலைக்கு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தமிழக அமைச்சர்கள்</a> மாலை அணிவித்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88">மலர் தூவி மரியாதை</a> செலுத்தினர்.</p><h2>பெரியார் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவுப்படி இன்று (17.9.2026) வியாழக்கிழமை, தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆர்.குமார் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கையில் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை : 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivaganga-two-youths-hacked-to-death-after-being-chased-5-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivaganga-two-youths-hacked-to-death-after-being-chased-5-arrested#comments</comments><guid isPermaLink="false">f160db75-318c-464f-8a45-3b81e7f9ea96</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:17:23 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:17:23.735Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,கைது,arrest,கிரைம் செய்திகள்,சிவகங்கை,Sivagangai,double murder,இரட்டைக் கொலை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/4cmooxau/kani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/4cmooxau/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>கண்மாய்க்குள் ஓட, ஓட விரட்டி 2 வாலிபர்களை ஒரு கும்பல் வெட்டிக்கொன்றது. புதிய காரையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றது.</p><h2>கொடிக்காடு கண்மாய்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/sivagangai">சிவகங்கையை</a> அடுத்த குருந்தணி அருகே காயா ஓடை புதுகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 35). கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மதுபார் நடத்தி வருகிறார். இவர் புதியதாக கார் ஒன்றை சிவகங்கையில் வாங்கி இருந்தார்.</p><p>அந்த காரின் முதல் சர்வீசுக்காக ஊருக்கு வந்தார். இந்நிலையில் தெய்வேந்திரனும், மறவமங்கலத்தை அடுத்த சிறுவேலங்குடியை சேர்ந்த பூப்பாண்டியும் (30) அந்த காரில் நேற்று மதியம் சிவகங்கையில் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு சென்றனர்.</p><p>கண்மாய் கரையில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது 3 மோட்டார்சைக்கிள்களில் கும்பலாக சிலர் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். இதைப்பார்த்ததும் தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய 2 பேரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள கண்மாய்க்குள் இறங்கி ஓடினர்.</p><h2>சரமாரியாக வெட்டிக்கொலை</h2><p>பின்தொடர்ந்து ஓடிய அந்த நபர்கள், தெய்வேந்திரனையும், பூப்பாண்டியையும் ஓட ஓட சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.</p><p>மேலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் அவர்களின் முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்தனர். தொடர்ந்து தெய்வேந்திரன் வாங்கிய புதிய காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பின்னர் அந்த கும்பல் அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டது.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, துணை சூப்பிரண்டு அமல அட்வின், நகர் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.</p><p>கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.</p><h2>5 பேர் கைது</h2><p>சம்பவம் நடந்த கண்மாய் கரையில் மதுபான பாட்டில்கள், 3 ஜோடி செருப்புகள் கிடந்தன. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா கூறும்போது, கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார். </p><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/sivagangai">சிவகங்கையில்</a> நேற்று நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.   சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கொலை வழக்கில் தொடர்புடைய பாலமுருகன்(24), தனராஜ் (19), சந்தோஷ்(19), சதீஷ்குமார்(25) மற்றும் காளீஸ்வரன்(23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  </p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-leader-anbumani-ramadoss-wishes-pm-modi-a-happy-birthday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-leader-anbumani-ramadoss-wishes-pm-modi-a-happy-birthday#comments</comments><guid isPermaLink="false">86064b24-7146-44c6-891b-74cbd286c06a</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:11:55 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:11:55.586Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,PM Modi,அன்புமணி ராமதாஸ்,பாமக,PMK,Anbumani,சென்னை,பிறந்தநாள் வாழ்த்து,birthday</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/9xvg2c3h/360.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/9xvg2c3h/360.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>பிரதமர் நரேந்திர மோடி பிறந்ததினத்தை முன்னிட்டு பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">அன்புமணி ராமதாஸ்</a>  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-</p><h2>வாழ்த்து</h2><p>பிரதமர் நரேந்திர மோடியின் 76-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளப்பூர்வமான  நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைக்கவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குலசை தசரா திருவிழா: கடைகளில் விற்பனைக்கு குவிந்த வேடப்பொருட்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasai-dasara-festival-costume-accessories-flood-the-shops-for-sale</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasai-dasara-festival-costume-accessories-flood-the-shops-for-sale#comments</comments><guid isPermaLink="false">7b719ab3-7867-4adc-935d-26bea39cf505</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:03:44 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:03:44.238Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kulasekaranpattinam Mutharamman Temple,Kulasekaranpattinam,குலசேகரன்பட்டினம்,Kulasai Dasara,முத்தாரம்மன் கோவில்,குலசை தசரா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/uqj7a4vn/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/uqj7a4vn/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>குலசேகரன்பட்டினம்,</p><h2>தசரா திருவிழா</h2><p>பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10-ம் திருநாளான 20-ந்தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.</p><p>காளி வேடம் அணியும் பக்தர்கள் 61 நாட்கள், 41 நாட்கள், 21 நாட்கள், 11 நாட்கள் என பல்வேறு நாட்கள் விரதம் கடைபிடிக்கின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி, துளசிமாலை வாங்கி, கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். பல்வேறு ஊர்களிலும் விரதம் இருக்கும் பக்தர்கள் அங்குள்ள கோவில்களில் பிறை அமைத்து தங்கியிருந்து வழிபடுகின்றனர்.</p><h2>வேடப்பொருட்கள்</h2><p>குலசேகரன்பட்டினம் கோவிலில் கொடியேற்றத்துக்கு பின்னர், விரதமிருக்கும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி வேடம் அணிகின்றனர். தசரா விழாவை முன்னிட்டு, உடன்குடி பஜாரில் உள்ள கடைகளில், பக்தர்கள் அணியும் அலங்கார வேடப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. நெல்லை டவுனில் உள்ள கடைகளிலும் தசரா வேடப்பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.</p><p>காளி வேடம் அணியும் பக்தர்கள் நீண்ட சடைமுடி, கிரீடம், சூலாயுதம், கண்மலர் போன்றவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மேலும் சிவன், பார்வதி, விநாயகர், முருகபெருமான், அனுமர், நாராயணர், ராமர், லட்சுமணர் போன்ற வேடம் அணியும் பக்தர்களும் வேடப்பொருட்களை வாங்கி செல்கின்றனர். சிலர் தங்களுக்கு ஏற்ற வேடப்பொருட்களை செய்து தருமாறு ஆர்டர் கொடுத்து செல்கின்றனர். காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு வேடப்பொருட்கள் மொத்தமாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் புறநகர் மின்சார, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக இயக்கம்; பயணிகள் அவதி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suburban-electric-express-trains-delayed-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suburban-electric-express-trains-delayed-in-chennai#comments</comments><guid isPermaLink="false">daaa8ca2-b1b1-4b93-8d46-05dc0c19ec66</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:52:32 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:52:32.134Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்,Express trains,electric trains,மின்சார ரெயில்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/k79pnibr/csute.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எக்ஸ்பிரஸ் ரெயில்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/k79pnibr/csute.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் மின்சார ரெயில்கள், <a href="https://www.dailythanthi.com/">எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</a> தாமதமாக இயக்கப்படுகின்றன.</p><p>சென்னையில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றான புறநகர் ரெயில் சேவை இன்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.</p> <h2>1 மணிநேரம்</h2><p>இதேபோன்று, தாம்பரம் வழியாக கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில்கள் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதத்துடன் இயக்கப்படுகின்றன என தகவல் தெரிவிக்கின்றது. இதுபோன்று தாமதமாக இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லக்கூடியவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.</p><p>தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய ரெயில்களும் ஏறக்குறைய 1 மணிநேரத்துக்கும் மேலாக தாமதம் என தகவல் தெரிவிக்கின்றது. சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>ராமேஸ்வரம்: மீனவர்கள் வலையில் சிக்கிய 112 கிலோ சூரை மீன் - ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rameswaram-112-kg-tuna-caught-sold-for-rs-22k</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rameswaram-112-kg-tuna-caught-sold-for-rs-22k#comments</comments><guid isPermaLink="false">d8ab6c67-28e8-4334-ac2b-b0cebd281d15</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:51:08 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:51:08.076Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,ராமேஸ்வரம்,Fishing,Rameshwaram,Fishermen -,சூரை மீன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/p14v1gss/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/p14v1gss/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம்,</p><p>ராமேஸ்வரம் அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் 112 கிலோ சூரை மீன் சிக்கியது.</p><p>ராமேஸ்வரம் அருகே பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் 6 மீனவர்கள், மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்தபோது பெரிய மீன் ஒன்று அவர்கள் வலையில் சிக்கியது. அந்த மீனை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அது சூரைமீன் என தெரியவந்தது.</p><p>112 கிலோ எடையும், 6 அடி நீளமும் கொண்ட அந்த மீனை மற்ற மீனவர்கள் பொதுமக்கள், வியாபாரிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்த மீனை வியாபாரி ஒருவர் ரூ.22 ஆயிரம் கொடுத்து வாங்கினார். பின்னர் அந்த மீன் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதேபோன்று 106 கிலோ எடை கொண்ட சூரைமீன், ஏற்கனவே மீனவர்கள் வலையில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>“ஜமீன்களிலும் பண்ணைகளிலும் இருந்த அரசியலை பாமரர்களிடம் கொண்டு சேர்த்தது திமுக” - உதயநிதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-brought-politics-that-was-on-the-lands-and-farms-to-the-common-people-udhayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-brought-politics-that-was-on-the-lands-and-farms-to-the-common-people-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">ca05bab2-7128-43f7-b8c8-94380da690e4</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:48:17 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:48:17.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,சென்னை,உதயநிதி,political,Start. தொடக்கம்,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/ci1e4fa9/359.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/ci1e4fa9/359.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><h2>தி.மு.கழகம்</h2><p>ஜமீன்களிலும் - பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் இன்று. நாற்பதுகளில் இருந்த பேறிஞர் அண்ணா, இருபதுகளில் இருந்த கலைஞர் உள்ளிட்ட தன் தம்பிமார்களுடன் கொட்டும் மழையில் தொடங்கிய தி.மு.கழகம் இன்று 78-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.</p><p>ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த 78 ஆண்டுகளில் பல எட்டாத உயரங்களுக்குத் தமிழ்ச்சமுதாயத்தை ஏற்றிவிட்ட பெருமை கழகத்துக்கு உண்டு. சமூக நீதி - மாநில உரிமை - பெண் விடுதலை - தொழில் வளர்ச்சி என கொள்கை அடித்தளத்தில்,</p><p>தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது முதல், தன்னிகரற்ற மாநிலமாக்கியது வரை கழகம் ஆற்றிய பணிகள் ஏராளம். எத்தனையோ அடக்குமுறைகள் - ஏவப்பட்ட நெருக்கடிகள் - புதிய புதிய எதிரிகள், இத்தனைக்குப் பிறகும் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் துடிப்போடு நடைபோடுகிறது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">தி.மு.கழகம்</a>.</p><h2>கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல</h2><p>நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நம் கழகத்தின் மேன்மைக்கு அயராது உழைப்போம். கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல - நம் உயிர் என்று முழங்குவோம்! வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ரூ.15,300 கோடி முதலீடுகள்: முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் தொழில் முதலீட்டின் மைல்கல்  - தமிழ்நாடு அரசு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/investments-worth-15300-crore-chief-ministers-london-visit-is-a-milestone-for-industrial-investment-government-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/investments-worth-15300-crore-chief-ministers-london-visit-is-a-milestone-for-industrial-investment-government-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">650a3c88-f280-4f58-a7ba-3a102485aa83</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:41:58 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:41:58.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,Industrial Investment,London,லண்டன்,தொழில் முதலீடுகள்,TamilNadu Goverment,புதிய மைல்கல்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/r5gv1px3/power.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/r5gv1px3/power.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின் போது ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டை உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக நிலைநிறுத்துவோம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  </p><h2>சிறப்பான ஆட்சி</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாட்டை உலகின் முன்னணி முதலீட்டு மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக உயர்த்திடும் நோக்கில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் இங்கிலாந்து பயணம் வெற்றிப்பயணமாக அமைந்துள்ளது.</p><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் நேர்மையான,  வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான நலத்திட்டங்கள் என மக்கள் போற்றும் சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதுடன், 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை வருத்துச் செயல்படுத்தி வருகிறது.</p><p>அதன்படி தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்கிடும் வகையில் எண்ணற்ற தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2020-ன் வாயிலாக 67,452 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 97 புறிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு. இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ஒரு லட்சம் கேmடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p> <p>இதன் தொடர்ச்சியாக  தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த 10.9.2026 அன்று இங்கிலாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.</p><h2>இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் சந்திப்பு</h2><p>லண்டனில் 12 9.2026 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களை இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி I.F.S. அவர்கள் சந்தித்து இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) பின்னணியில், தமிழ்நாடு மற்றும் பிரிட்டனுக்கு இடையே உருவாகக்கூடிய வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் குறித்துக் கலந்துரையாடினர்.</p><p>சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிட்டு, 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தல்</p><p>தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 3.9.2026 அன் விதி எண் 110-ன் கீழ், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர்</a> அவர்கள், உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட் நகரம் (Motor Sports City) தமிழ்நாட்டில் அமைக்கப்படும்" என்று அறிவித்தார். </p><p>அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள். இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சிங்கரிஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு நேரில் சென்று அங்குள்ள Race Control மற்றும் Race circut பகுதிகளை பார்வையிட்டார். மேலும் சர்வதேச அளவிலான நீண்டதூர கார் பந்தயத்தை நடத்துவதற்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், செயல்பாட்டு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, சில்வர்ஸ்டோன் ரேஸ் மியூசியத்தையும் பார்வையிட்டார்.</p><p>அதனைத் தொடர்ந்து சில்லர்ஸ்டோன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தய திடலில் முன்னணி நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் அவர்கள் கலந்துகொண்ட 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.</p> <h2>தொழில் முதலிட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் முன்னிலையில் லண்டனில் 14.09.2026 அன்று வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capabilty Centres) ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். புதிய தொழில் முதலீட்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நோக்கக் கடிதல் என மொத்தம் 15,300 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து. 10.000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson international ltd.,) நிறுவனம், அதன் ஐரோப்பா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் வடிவமைப்பு. பொறியியல், உற்பத்தி. ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் சார்ந்த வசதிகளை நிறுவுவதன் மூலம் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.</p><p>தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres-GCCs) விரிபடுத்துவதற்கும். நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>ஸ்வீடனை சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குழுயம், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது</p> <h2>உலகளாவிய திறன் மையம்</h2><p>ஏர்ன்ஸ்ட் &amp; யங் நிறுவனம் (Ernst &amp; Young) ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. </p><p>கட்டு - இயக்கு - மாற்றியமை - மாற்று (Build-Operate Transform-Transfer-BOTT) ஏற்பாட்டின் கீழ் இந்த மையத்தை நிறுவுவதற்கும் அதன் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கும் ஏர்ன்ஸ்ட் யங் (Ernst &amp; Young) நிறுவனம் ஆதரவளிக்கும். பின்னர். அம்மையம் அச்சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். </p><p>இந்த உலகளாவிய திறன் மையம் (GCC) சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன். 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மையம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னையில் உள்ள மவுண்ட்- பூத்தமல்லி சாலைப் பகுதியிலுள்ள GCC வழித்தடத்தில் அமையும்.</p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட திறன்மிக்க மின்மாற்றிகளை தயாரிக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் (Wilson Power Solutions) நிறுவனம், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.</p><p>* ஐரோப்பாயின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று. இத்தியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விருப்பத்தக்க கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அவர்களிடம் தனது விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தது.</p><h2>ஹிந்துஜா குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு</h2><p>அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந் துஜா பினோவெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களைச் சந்தித்து ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற வெற்றி IVETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட 2,500 கோடி ரூபாய் மதிப்பிகான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினர்.</p><p>தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் குறிப்பாக காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் விருப்பம் தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வளாகங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன் உற்பத்தித் துறைக்கான ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்</p><h2>முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் சந்திப்புகளுடன், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ரசாயனங்கள். தளவாடங்கள், கட்டுமானம், நிதிச் சேவைகள் சில்லறை வர்த்தகம் மற்றும் சட்ட சேவைகள் ஆகிய துறைகளை சேர்ந்த 10 முன்னணி நிறுவனங்கள் மற்றும் பங்குதார்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் நடத்தினர்.</p><p>பிரிட்டன் வர்த்தக நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டின் ஜவுளி மற்று ஆடை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான மூலப்பொருட்கள் கொள்முதல் ஒப்பந்தங்கள், ஒசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் குழு வருகை புரிவதற்கான வாய்ப்பு, அக்டோபர் மாதம் சென்னைக்கு இங்கிலாந்து மேயர் ஆணையத்தின் (NEMSA) பிரதிநிதிகள் குழு வருகை, நிதிச் சேவைத் துறைக்கான திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மைகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிப் பயிலரங்கம், பிரிட்டன் - இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காட்டும் அறிக்கை தயாரித்தல் போன்றவை குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.</p> <h2>வெற்றிப் பயணம் தொடரும்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர்</a> அவர்கள், தமிழ்நாட்டை நோக்கி வரும் மேற்கண்ட தொழில் முதலீடுகளை சாத்தியமாக்கவும், தமிழ்நாட்டில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து உதவிகளையும் நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.</p><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் தான் தங்கியிருந்த ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு வழங்கிய தமிழ் சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். மேலும் அங்கு தமிழ் சொந்தங்களைச் சந்திக்க இருந்தபோது லண்டன் காவல் துறையிளரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சந்திக்க இயலாமல் போனதற்காக தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு, பேராதரவு வழங்கிய அனைத்து நல்ல உள்ளளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்த்திட மேற்கொண்ட இப்பயணத்தில் லண்டனில் அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கு பேருதவியாக இருந்த இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் அவர்களுக்கும். தூதரக உயர் அலுவலர்களுக்கும். தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட மற்றும் விருப்பக் கடிதம் வழங்கிய தொழில் நிறுவனங்கள், அதன் கூட்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும், உயர் அலுவலர்களுக்கும், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்கு ஏதுவாக சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துக்கூறிய முன்னணி நடிகரும். மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் அவர்களுக்கும் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களுக்கும் இங்கிலாந்து பயணத்தின்போது நல்லாதரவு  அளித்த அந்நாட்டில் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>தமிழ்நாட்டின் திறன்மிக்க மனிதவளம் வலுவான தொழில்துறை அடித்தளம், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் தொடங்குவதற்கான அமைதியான சூழல் மற்றும் எளிய நடைமுறைகள் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைத்து, புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் இங்கிலாந்து வெற்றிப் பயணம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும். முதலீட்டு ஈர்ப்புக்கும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.</p><p>தமிழ்நாட்டை உலக முதலீட்டார்களின் நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக நிலைநிறுத்தும் நமது வெற்றிப் பயணம் தொடரும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modis-birthday-nainar-nagendran-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modis-birthday-nainar-nagendran-wishes#comments</comments><guid isPermaLink="false">4c9376cb-a94d-4efd-b309-3b66c87f4779</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:30:16 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:30:16.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,PM Modi,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,birthday,வாழ்த்து,பிறந்தநாள்,Wishes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/0xc9zsfh/358.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/0xc9zsfh/358.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>பிரதமர் நரேந்திர மோடி பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-</p><h2>வாழ்த்து</h2><p>தேசத்தின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் தனது தொலைநோக்குச் சிந்தனையாலும், அயராத உழைப்பாலும் முன்னெடுத்துச் சென்று, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையையும், வலிமையையும் உயர்த்திப் பிடித்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>‘வளர்ந்த பாரதம்’ என்ற உயரிய இலக்கை நோக்கி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு தொடர்ந்து உழைத்து வரும் அவர்களின் பொதுவாழ்வுப் பணி மேலும் சிறக்கட்டும்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D">பிரதமர்</a> நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், மனநிறைவுடனும் தொடர்ந்து தேசத்திற்கு சேவையாற்ற, எல்லாம் வல்ல இறைவன்  அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்தார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-arrived-in-chennai-after-concluding-his-london-trip</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-arrived-in-chennai-after-concluding-his-london-trip#comments</comments><guid isPermaLink="false">923eb84d-2136-406d-810f-5e9e340812fc</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:21:13 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:21:13.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,London,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/vjoq2ufq/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/vjoq2ufq/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய், அரசு முறை பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றார். அங்கு அவருக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேசையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.</p><p>இந்த நிலையில், 7 நாள் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து காரில் நீலாங்கரை இல்லத்திற்கு சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலையுடன் கச்சத்தீவுக்கு செல்ல முயன்ற 10 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-people-arrested-while-attempting-to-travel-to-katchatheevu-with-a-vinayagar-idol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-people-arrested-while-attempting-to-travel-to-katchatheevu-with-a-vinayagar-idol#comments</comments><guid isPermaLink="false">acb9f6cb-15cf-46be-8584-543ffc904f7d</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:05:19 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:05:19.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,கச்சத்தீவு,Katchatheevu,விநாயகர் சிலை,Vinayagar idol</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/yw74xim7/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/yw74xim7/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>பாரதிய இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் தர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு, விநாயகர் சிலையுடன் சென்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், தமிழக அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கச்சத்தீவில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய வேண்டும், என்று கூறியிருந்தார். </p><p>இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் பாரதிபுரத்தில் இருந்து கச்சத்தீவுக்கு செல்லப்போவதாக பாரதிய இந்து மக்கள் கட்சியினர் அறிவித்தனர். இதையடுத்து கட்சியின் நிறுவன தலைவர் தர்மா தலைமையிலான அந்த கட்சியினர் கச்சத்தீவில் வைத்து வழிபாடு நடத்துவதற்காக 3 அடி உயர விநாயகர் சிலை, பாரத மாதா உருவப்படம் ஆகியவற்றுடன் புறப்பட்டனர்.</p><p>தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களை தடுத்து நிறுத்தினர். கச்சத்தீவுக்கு செல்ல முயன்றதாக நிறுவன தலைவர் தர்மா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த விநாயகர் சிலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modi-dedicated-to-building-strong-india-chief-minister-vijay-greeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modi-dedicated-to-building-strong-india-chief-minister-vijay-greeting#comments</comments><guid isPermaLink="false">f0450d15-9bc8-4f6b-ad3c-c24d7f239149</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:04:52 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:04:52.765Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,PM Modi,பிறந்தநாள் வாழ்த்து,Greetings,வாழ்த்து,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/mk7n9qzk/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/mk7n9qzk/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br><br>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.<br><br>I… <a href="https://t.co/2stjwXq2JC">pic.twitter.com/2stjwXq2JC</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2100431356882772451?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item></channel></rss>