<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 30 Jul 2026 09:21:13 +0000</lastBuildDate><item><title>வேலைக்கு போகாததை கண்டித்த தந்தை... ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-reprimanded-for-not-going-to-work-son-commits-shocking-act-in-anger</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-reprimanded-for-not-going-to-work-son-commits-shocking-act-in-anger#comments</comments><guid isPermaLink="false">c5f70791-0db3-445e-9a44-cb52c1f96008</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:20:22 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:20:22.861Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வேலூர்,மகன்,வெட்டிக்கொலை,போலீசார்,கைதுArrest,தொழிலாளிWorker</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/eq6a8pfd/138.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/eq6a8pfd/138.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர், </p><p>வேலைக்கு செல்லாததை தட்டிக்கேட்டதால் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.</p><h2>தகராறு</h2><p>வேலூர் மாவட்டம், சலவன்பேட்டை, அம்மணாங்குட்டை ரோட்டை சேர்ந்தவர் சந்திரன் (வயது 70). இவரது மகன் சக்திவேல் (42). இருவரும் தச்சுத்தொழிலாளிகள். சக்திவேலுக்கு 2 மனைவிகள். மதுபோதைக்கு அடிமையான சக்திவேல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் 2 மனைவிகளும் அவரை விட்டு பிரிந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மதுபோதையில் சக்திவேல் வீட்டுக்கு வந்தார். அப்போது சந்திரன், மகனிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றித்திரிகிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல், சந்திரனை கத்தியால் வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>கைது</h2><p>இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் தந்தையை மகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை தலைமை செயலகத்தில் 3 பெண்கள் திடீர் தற்கொலை முயற்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-women-attempt-suicide-at-chennai-secretariat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-women-attempt-suicide-at-chennai-secretariat#comments</comments><guid isPermaLink="false">2161d366-32a9-4e76-bc17-a3dc30dc7865</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:05:51 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:05:51.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,தலைமைச்செயலகம்,Secretariat,womens</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hbi9vb46/hospital33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  தற்கொலை முயற்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hbi9vb46/hospital33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நான்காவது நுழைவு வாயில் முன்பு தூக்க மாத்திரை உட்கொண்டு இரு பெண்கள் தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>திருச்சியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சென்னை தலைமை செயலகத்தில்</a> உள்ள முதல் அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிப்பதற்காக இன்று காலை வந்துள்ளார்.</p><p>ஆனால், புகார் மனு வழங்குவதற்கு முன்னதாகவே, மூன்று பேரும் தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><p>திருச்சியில் தாய் மற்றும் இரு மகள்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் உடனடியாக காலி செய்யச் சொல்லி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.</p><p>இதுதொடர்பாக திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரின் தனிப் பிரிவில் புகார் அளிப்பதற்காக இன்று வந்திருந்ததாக தகவலகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தலைமை செயலக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>13 முன்னாள் வீரர்களுக்கு ஓய்வூதியம்; 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-adhav-arjuna-issues-pension-to-13-former-athletes-appoints-6-coaches</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-adhav-arjuna-issues-pension-to-13-former-athletes-appoints-6-coaches#comments</comments><guid isPermaLink="false">71d48aaf-218c-436c-8603-51b0bc58464a</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:50:44 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:50:44.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,pension,ஓய்வூதியம்,Athlete,பணி நியமன ஆணைகள்,Appointed,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Adhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/lfnoults/137.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/lfnoults/137.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%20">ஆதவ் அர்ஜுனா </a>இன்று தலைமைச் செயலகத்தில், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையினையும், 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.</p><h2>ஓய்வூதிய திட்டம்</h2><p>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.9.36 இலட்சத்திற்கான காசோலைகளும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.4.77 இலட்சத்திற்கான காசோலைகளும், 4 பெண் பயிற்றுநர்கள், 2 ஆண் பயிற்றுநர்கள் என 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார்.</p><p>விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், ஓய்விற்குப் பின் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதற்காகவும், 58 வயதை எட்டிய பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000 ஓய்வூதியமாகவும் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 82 நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களும் மற்றும் 13 குடும்ப ஓய்வூதியதாரர்களும் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.</p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், பொது மேலாளர் சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் பைக் விபத்தில் இன்ஜினியர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineer-dies-in-bike-accident-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineer-dies-in-bike-accident-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">b707178a-7ae0-4853-8ccd-352aa9afdab8</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:42:26 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:42:26.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Death,உயிரிழப்பு,Engineer,bike accident,பைக் விபத்து,இன்ஜினியர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/zi28cf18/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/zi28cf18/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பைக் விபத்தில் </a>படுகாயம் அடைந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">இன்ஜினியர்</a> மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. </p><h2>என்ஜினியர்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகிலுள்ள வெள்ளாளன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிச்செல்வம் (வயது 27). பி.இ. சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், தனியார் சோலார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவில் வெள்ளாளன்கோட்டை கிராமத்திலிருந்து செட்டிகுறிச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.</p><h2>பைக் விபத்து</h2><p>அப்போது எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், மாரிச்செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><h2>உயிரிழப்பு</h2><p>பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-permitted-to-bathe-in-courtallam-waterfalls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-permitted-to-bathe-in-courtallam-waterfalls#comments</comments><guid isPermaLink="false">6715fa91-07a1-45c9-80ae-53f6f688766f</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:41:11 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:41:11.113Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,குற்றாலம் அருவி,tourist,Courtalam Falls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ohmzieh2/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ohmzieh2/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. </p><h2>குற்றாலம் அருவிகள்</h2><p>தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் முற்றிலும் குறைவாகவே விழுந்தது. புலியருவியும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.</p> <h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது. புலியருவிக்கும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணி கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.</p><p>குற்றாலம், இலஞ்சி பகுதியில் மாலையிலும் சாரல் மழை பெய்தது. குற்றாலம், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p><h2>குளிக்க தடை </h2><p>இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவால் குற்றாலம் அருவிகளில் இன்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. </p><h2>சாரல் திருவிழா</h2><p>ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. தற்போது அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சாரல் திருவிழாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>அனுமதி</h2><p>இந்நிலையில் அருவிகளில் தற்போது நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்குள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.  </p>]]></content:encoded></item><item><title>சென்னை - கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-attached-to-the-chennai-coimbatore-intercity-express-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-attached-to-the-chennai-coimbatore-intercity-express-train#comments</comments><guid isPermaLink="false">da39afaa-61c5-4017-9245-01feb9b792f0</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:17:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:17:46.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,கோவை,Chennai,சென்னை,தமிழகம்,Express train,எக்ஸ்பிரஸ் ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Kovai,இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்,Intercity Express</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/lhyvj8pa/kiererr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/lhyvj8pa/kiererr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை சென்டிரல் - கோவை இடையேயான இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது. </p><h2>இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - கோவை இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு இருக்கை வசதி முன்பதிவு பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த நடைமுறை இன்று (ஜூலை 30) முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 2 மாதங்கள் அமலில் இருக்கும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-11</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-11#comments</comments><guid isPermaLink="false">8276962b-8f95-4c82-b37f-3dc8c6de7e97</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:17:18 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:17:18.880Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4zoq51qz/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4zoq51qz/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்,  திருநெல்வேலி கிராமப்புறம், கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  </p><p>சங்கரன்கோவில், பெருமாள்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் அன்று சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். </p><p>மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். </p><p>எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம். </p><p>கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. </p><p>அதன்படி ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம். </p><p>ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழுநீர்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>புளியங்குடி மற்றும் வீரசிகாமணி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ளகவுண்டன்பட்டி. </p><p>வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோயில், வென்றி லிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கால்நடை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/veterinary-science-courses-rank-list-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/veterinary-science-courses-rank-list-released#comments</comments><guid isPermaLink="false">0601bf73-21e5-4588-be9c-4221ce606ff8</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:17:09 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:17:09.450Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கால்நடை மருத்துவம்,தரவரிசைப் பட்டியல்,மருத்துவ படிப்புகள்,கால்நடை மருத்துவப் படிப்பு,கால்நடை மருத்துவ படிப்பு,Veterinary College,Veterinary medicine courses,veterinary courses,Veterinary Science Courses</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/szmmcxnp/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/szmmcxnp/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பட்டியல் வெளியானது</h2><p>தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (B.V.Sc &amp; A.H.) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (B.Tech உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு) தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியல் 30.07.2026 (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ. கமலியால் வெளியிடப்பட்டது. </p><h2>முதல் 5 இடங்களை பெற்ற மாணவர்கள்</h2><p>இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் அரசு செயலர் அனு ஜார்ஜ், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர்(பொறுப்பு) ர. நரேந்திரபாபு மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ச.மு.க. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். தரவரிசைப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் (B.V.Sc &amp; A.H. மற்றும் B.Tech) விவரங்களும் வெளியிடப்பட்டன.</p><h2>இணையதளத்தில் காணலாம்</h2><p>தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை (B.V.Sc &amp; A.H. மற்றும் B.Tech) பல்கலைக்கழக இணையதளத்தில் https://adm.tanuvas.ac.in அல்லது https://tanuvas.ac.in காணலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Online Counselling) விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். தரவரிசைப் பட்டியலில் உள்ள சந்தேகங்களுக்கு 31.07.2026 முதல் 02.08.2026 வரை 044-29997349 மற்றும் 044-29997348 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது admission@tanuvas.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ்: சிறுவன் உள்பட 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reels-with-weapons-on-social-media-2-people-including-a-boy-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reels-with-weapons-on-social-media-2-people-including-a-boy-arrested#comments</comments><guid isPermaLink="false">771f0f62-320d-4a58-b910-d9526df039aa</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:07:35 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:07:35.697Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,2 arrested,2 பேர் கைது,ரீல்ஸ்,weapons,ஆயுதங்கள்,சமூக வலைதளம்,Reels,social media,சிறுவன்,boy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ic8rvwlg/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ic8rvwlg/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சமூக வலைதளங்களில்</a> பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் '<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">ரீல்ஸ்</a>' வீடியோ பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>சமூக வலைதளங்களில் கத்தியுடன் ரீல்ஸ்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், காயல்பட்டினம், வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மகன் மதன் (வயது 18). இவரும், இவரது நண்பரான 16 வயது சிறுவன் ஒருவரும் சேர்ந்து பொதுமக்களுக்கு பயத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கையில் ஏந்தியபடி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.</p><h2>சிறுவன் உள்பட 2 பேர் கைது</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த காயல்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இருதயராஜ் உடனடியாக இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் தலைமையிலான போலீசார் மதன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கான்பூர் - மதுரை, பிரயாக்ராஜ் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-trains-between-kanpurmadurai-and-prayagrajnellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-trains-between-kanpurmadurai-and-prayagrajnellai#comments</comments><guid isPermaLink="false">cc04a8ee-1a8f-4fb0-8dda-992986f13404</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:05:29 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:05:29.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,நெல்லை,Nellai,தமிழகம்,சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Madurai,மதுரை,Special train,Kanpur,கான்பூர்,பிரயாக்ராஜ்,Prayagraj</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/lidi01g3/kan.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/lidi01g3/kan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் இருந்து மதுரைக்கும், பிரயாக்ராஜில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. </p><h2>மதுரையில் இருந்து</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>கான்பூர் சென்டிரலில் இருந்து ஆகஸ்டு 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 01925) 3-வது நாள் காலை 7.15 மணிக்கு மதுரையை வந்தடைகிறது. </p><p>மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து ஆகஸ்டு 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (01926) 3-வது நாள் காலை 4.30 மணிக்கு கான்பூர் சென்டிரலை சென்றடையும்.</p><p>22 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் தமிழ்நாட்டில், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><h2>பிரயாக்ராஜில் இருந்து</h2><p>இதேபோல், பிரயாக்ராஜில் இருந்து ஆகஸ்டு 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) காலை 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (04171) 3-வது நாள் மதியம் 1.15 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். </p><h2>திருநெல்வேலியில் இருந்து</h2><p>மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்டு 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (04172) 4-வது நாள் அதிகாலை 3.30 மணிக்கு பிரயாக்ராஜ் சென்றடைகிறது. </p><p>19 பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><h2>நாளை டிக்கெட் முன்பதிவு</h2><p>இதில், கான்பூர் சென்டிரல் - மதுரை இடையேயான சிறப்பு ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியிட்டது. பிரயாக்ராஜ் - நெல்லை இடையேயான சிறப்பு ரெயிலுக்கு டிக்கெட் முன்பதிவு நாளை (31-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mous-signed-with-various-industrial-companies-in-the-presence-of-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mous-signed-with-various-industrial-companies-in-the-presence-of-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">b0a95b7d-683d-43fe-b336-68cb2dc6421f</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:54:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:54:50.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,புரிந்துணர்வு ஒப்பந்தம்,தொழில் நிறுவனங்கள்,Industrial companies,தொழில்துறை,MoU signed,CM Vijay,Chief Minister Vijay,industrial development</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ijypozm8/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ijypozm8/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>சென்னை நந்தனத்தில் உள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்குமிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக, தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சப் நிறுவனம்</h2><p>சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் நிறுவனம், தனது உலகளாவிய திறன் மையம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ்நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை தமிழ்நாட்டில் முதன்முறையாக நிறுவ முன்வந்துள்ளன. சப் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 220 பேருக்கும், நார்டெக்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 1,000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் மொத்தம் 1,220 உயர்தர ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.</p><p>இந்த முதலீடுகள், உயர்மதிப்புடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக சென்னை நகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும். புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல், அறிவுசார் திறன் சார்ந்த முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் திறன்மிக்க மனிதவளத்திற்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற முதல்-அமைச்சரின் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றாற்போல், இம்முதலீடுகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்</h2><p>மேலும், உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia - UWA), இந்தியாவில் தனது வளாகத்தை சென்னை நகரில் நிறுவ உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாகும். 1911-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், QS உலகப்பல்கலைக்கழக தரவரிசை 2026-ல் 77-வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை வேளச்சேரியில் சுமார் ரூ.125 கோடி முதலீட்டில் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தென் கொரிய நிறுவனம்</h2><p>தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ் லிங்க் (Motive Link), காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><h2>முதல்-அமைச்சர் உறுதி</h2><p>இந்த முதலீடுகள், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார். மேலும், இந்நிறுவனங்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அமைய தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் முதல்-அமைச்சர் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சையில் ஆகஸ்ட் 3 -ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-protest-in-thanjavur-on-august-3rd-mk-stalins-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-protest-in-thanjavur-on-august-3rd-mk-stalins-announcement#comments</comments><guid isPermaLink="false">0a916afb-cb79-4320-b5e5-48aa14ad6429</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:32:07 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:32:07.324Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,ஆர்ப்பாட்டம்,Thanjavur,தஞ்சை,MK Stalin&apos;,DMK Protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ghjkqscd/stalin-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ghjkqscd/stalin-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p> வேதனை தரும் த.வெ.க. ஆட்சி! விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி! என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர்.</p><h2>கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்:</h2><h2>தேர்தலுக்கு முன்பு:</h2><p>”5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்.”</p><h2>தேர்தலுக்குப் பின்பு:</h2><p> 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டு, அதன்காரணமாக விவசாயிகள் வெகுண்டெழுந்து தற்போது வரை போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால், 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதல்-அமைச்சர், இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும்.</p><h2>த.வெ.க. அரசின் செயல்படா நிலை:</h2><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.</p><p>ஜூன் 11: மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களை கர்நாடக முதல்-மந்திரி நேரில் சந்தித்து மேகதாது நிதியுதவி கோரி மனு அளித்துள்ளார்.</p><p>ஜூன் 12: மத்திய ஜல்சக்தி துறை மந்திரியை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தினார்.</p><p>ஜூலை 27: டெல்லியில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கூட்டம் நடத்தி, மேகதாது அணை கட்டக் கடைமடை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய ஜல்சக்தி துறை தெரிவித்த பதிலை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.</p><p>அதேநாளில், கர்நாடக மந்திரி ராமலிங்க ரெட்டி, கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மேகதாது அணை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தையும்நடத்தியுள்ளார். ஊடகங்களிடம் தொடர்ந்து மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனவும், தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை எனவும் பேசி வருகிறார். இதற்கு மாறாக, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மவுனம் காத்து வருகிறார்.</p><p>இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று வேளாண் துறை அமைச்சர் சொன்னார். பின்னர் அவரும் இன்னும் சிலரும் இல்லை என்று மறுத்தார்கள். இப்போது தமிழ்நாடு சார்பில் சில விவகாரங்கள் தொடர்பாகத் முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக, கர்நாடக முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் கர்நாடகா செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், காவிரியில் நமக்கு உரிய பங்கினை வழங்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், அதனை நிறைவேற்ற முடியாது என்று கர்நாடக மாநில முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்.</p><p>அதுமட்டுமல்ல, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்துபோகச் செய்யாதா? என்ற கேள்வியும் எழுகிறது. இப்படி இந்த அரசைப் பொறுத்தவரையில் எந்தத் தகவல்களிலும் தெளிவு இல்லை; எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. எதற்கெடுத்தாலும் குழப்பம்; எல்லாவற்றிலும் ஏமாற்றம். இதுவே இந்த அரசின் வழக்கமாக மாறியிருக்கிறது. தனது திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே முதல்-அமைச்சர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன. அதற்கும் எந்தப் பதிலும் இல்லை.</p><h2>அனைத்துக் கட்சிக் கூட்டம்:</h2><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்தோடு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தையும் கூட்டச் சொல்லி, முதல்-அமைச்சருக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார் முதல்-அமைச்சர். </p><p>மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல. அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.</p><h2>விவசாயிகளின் அடுத்த பெரும் பிரச்சினை</h2><h2>குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு:</h2><p>கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 1.5 லட்சம் ஏக்கர் சாகுபடி மட்டுமே நடப்பதாகச் செய்திகள் வருகிறது. இதனால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்குக் கீழ்க்கண்ட வகையில் தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும்.</p><p>1) ஏக்கர் ஒன்றுக்குக் குறுவை நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய்.</p><p>2) காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தி முழுக் காப்பீடு கிடைக்க உதவி.</p><p>3) சம்பா சாகுபடிக்கான மறுமுதலீடாக விதை, உரம், பூச்சிக்கொல்லி என இடுபொருட்கள் மானியமாக வழங்குதல்.</p><h2>கழகம் சார்பில் டெல்டா மண்ணில் போராட்டம்:</h2><p>இப்படி, விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 அன்று காலை 10.00 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் கழக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளது.</p><p>இப்போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழகத் துணை அமைப்புகளானப் பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.</p><p>மேலும், அனைத்து விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த தோழர்களும், இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளின் தோழர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் வென்றிடத் துணை நிற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இந்தக் கண்டன <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்ப்பாட்டம்</a> என்பது, விவசாயிகளின் குரலைக் கேட்காமல் இருக்கும் த.வெ.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் முதல்கட்ட நடவடிக்கைதான். அரசின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-issue-tamil-nadu-government-must-immediately-convene-an-all-party-meeting-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-issue-tamil-nadu-government-must-immediately-convene-an-all-party-meeting-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">3605791f-7ea0-4717-9037-1613cf425583</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:25:27 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:25:27.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,அனைத்துக்கட்சி கூட்டம்,VCK,திருமாவளவன் எம்.பி,விடுதலை சிறுத்தைகள் கட்சி,Viduthalai chiruthaigal katchi,Cauvery issue,காவிரி விவகாரம்,all-party meeting,Thirumavalavan MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/e8tbxqfr/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/e8tbxqfr/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நீர் திறந்துவிட மறுப்பு</h2><p>காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆணையிட்ட பிறகும் கூட காவிரியில் நீர் திறந்துவிடாத கர்நாடக அரசின் தமிழர் விரோதப் போக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒழுங்காற்றுக் குழுவையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்.  கர்நாடக அரசின் இத்தகைய பிடிவாதப் போக்கினால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதி முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுப் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.  </p><p>“தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்து விட்டுள்ள நீர் இதுவரை ஒட்டுமொத்தமாக ஒரு டி.எம்.சி. அடி (tmcft) அளவைக்கூட எட்டவில்லை” என்று   காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் (CWRC) தலைவர் வினீத் குப்தா கூறியுள்ளார்.</p><h2>10 சதவீதம் மட்டுமே</h2><p>“2018-இல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் கிடைக்கப்பெற வேண்டிய அளவு 27.2 டி.எம்.சி. அடியாக இருந்த நிலையில், ஜூலை 27 வரையிலான நிலவரப்படி அங்கு 0.6 டி.எம்.சி. அடி மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறது. ஜூன் முதல் நாள் முதல் நீர் வரத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்தப் பற்றாக்குறை சுமார் 33 டி.எம்.சி. அடியாகும். நிர்ணயிக்கப்பட்ட அளவான 36.4 டி.எம்.சி. அடியுடன் ஒப்பிடுகையில், ஜூன் 01 முதல் ஜூலை 27 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீரின் அளவு சுமார் 3.6 டி.எம்.சி. அடி மட்டுமே. அதாவது 10 சதவீதம் மட்டுமே” என அவர் தெரிவித்துள்ளார். </p><p>இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அடுத்துவரும் 15 நாட்களுக்கு 3500 கியூசெக் நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையிட்டுள்ளது. ஆனால், அதையும் கொடுக்கக்கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் போராடுகின்றனர். </p><h2>அனைத்துக்கட்சிக் கூட்டம்</h2><p>குறுவை சாகுபடி இல்லாமல் போய்விட்டது. சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலையில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ஒட்டுமொத்த விவசாயமும் கேள்விக் குறியாகி உள்ளது. </p><p>இனியும் கர்நாடகா அரசு நமக்கு நியாயம் செய்யும் என நம்புவதற்கு இடமில்லை. எனவே, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>சார்பில் நாம் நமது  நியாயமான குரலை உரத்து வெளிப்படுத்த வேண்டும். இந்நிலையில் தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து கோவில்களுக்கும் பொதுவான டெண்டர் முறை - அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/common-tender-system-for-all-temples-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/common-tender-system-for-all-temples-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">4f425123-4ebc-4ddd-8a81-1aa3388263a5</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:22:02 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:22:02.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,கோவில்கள்,இந்து சமய அறநிலையத்துறை,Hindu Religious Endowments Department,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/c4nt75r7/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/c4nt75r7/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்காமல், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற முறையில், கோவில் பணிகளுக்கு புதிய டெண்டர் வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து கோவில்களுக்கும் டெண்டர் விண்ணப்பங்களில் ஒரே மாதிரியான படிவங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். 40 நாட்களாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.</p><p>தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கொண்டு வந்து இருக்கிறோம். இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைனில் நடக்க போகிறது. இனிமேல் அனைத்து கோவில்களுக்கும் பார்க்கிங், மொட்டை போடுதல், கடைகள் அமைப்பது உள்ளிட்டவற்றிற்கு பொதுவான டெண்டர் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆன்லைனில் டெண்டருக்கான ஒப்பந்த புள்ளி கோருவது நடக்கும். அதற்கான ஏலமும் ஆன்லைனில் நடக்கும்.</p><p>அனைத்து டெண்டர்களுக்கும் ஜிஎஸ்டி, பான், கட்டாயம். விலை பட்டியல் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். இதன் மூலம் சரியான விலைக்கு தான் விற்பனை செய்கிறார்களா என்று கண்காணிக்க முடியும். பார்க்கிங் பொறுத்தவரைக்கும் நிறைய இடங்களில் இருந்து புகார்கள் வருகின்றன. ஒரு கோவிலில் ரூ.100 வாங்குகிறார்கள்; ஒரு கோவிலில் ரூ.200 வாங்குகிறார்கள் என நிறைய புகார்கள் வருகின்றன. டிஜிட்டல் முறையில் பில்லிங் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான டெண்டர்களும் கொண்டு வந்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்:  அதிமுக சார்பில் 3ம் தேதி மலர் தூவி மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theeran-chinnamalais-221st-death-anniversary-aiadmk-to-pay-floral-tributes-on-the-3rd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theeran-chinnamalais-221st-death-anniversary-aiadmk-to-pay-floral-tributes-on-the-3rd#comments</comments><guid isPermaLink="false">31cd324a-9e5e-4a3e-9b99-35e869623c1a</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:02:26 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:02:26.503Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,AIADMK,நினைவு நாள்,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai,தீரன் சின்னமலை சிலை,Edapadi Palanisamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/7eitpf7m/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/7eitpf7m/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>221-வது நினைவு நாள்</h2><p>சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளான 3.8.2026 - திங்கட்கிழமை காலை 10 மணியளவில், சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருஉருவச் சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கும்,</p><p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். </p><p>அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><h2>ஈரோடு மணிமண்டபத்தில் மரியாதை</h2><p>ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்திருக்கும் தீரன் சின்னமலையுடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எஸ்.பி. வேலுமணி, கழக அமைப்புச் செயலாளர் கே.சி. கருப்பணன், சின்னசாமி செல்வராஜ், செ.ம. வேலுசாமி, செ. தாமோதரன், பி.சி. ராமசாமி, ஹரிபாஸ்கர், கே.சி. பழனிச்சாமி, வி.பி.சிவசுப்பிரமணி, ஆர்.மனோகரன், கே. கமலக்கண்ணன், கே.எஸ். தென்னரசு, எஸ். செல்வகுமார சின்னையன், ஆர்.என். கிட்டுசாமி, எஸ். பாலகிருஷ்ணன்,  ஆகியோர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.</p><p>இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள்; அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><h2>சேலம் நினைவுச் சின்னத்தில் மரியாதை</h2><p>சேலம் மாவட்டம், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பி. தங்கமணி, வெ. சரோஜா, ஆர். இளங்கோவன், எஸ். வெற்றிவேல், கே.பி.பி. பாஸ்கர் ஆகியோர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.</p><p>இந்நிகழ்ச்சியில், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>’எல் நினோ’ தாக்கம், பாதிப்புகள் குறித்து கண்காணிக்க 7 பேர் கொண்ட நிபுணர் குழு - தமிழ்நாடு அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-formation-of-a-seven-member-expert-committee-to-monitor-the-impact-and-effects-of-el-ni%C3%B1o</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-formation-of-a-seven-member-expert-committee-to-monitor-the-impact-and-effects-of-el-ni%C3%B1o#comments</comments><guid isPermaLink="false">cca96345-a58f-489c-9a11-78c6401274f4</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:00:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:00:06.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu Government,TN govt,பாதிப்புகள்,நிபுணர்கள் குழு,El Nino,எல் நினோ</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/62yxcamp/tn-fo.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/62yxcamp/tn-fo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>’எல் நினோ’ தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து கண்காணிக்க 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து <a href="https://www.dailythanthi.com/topic/tamil-nadu-government">தமிழ்நாடு அரசு</a> உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/yztzgcn3/first.jpg" /></figure><h2>தமிழ்நாடு பேரிடர் இடர் குறைப்பு முகமை</h2><p>மேலே முதலில் குறிப்பிடப்பட்ட அரசாணையில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (TNSDMA) உதவ ஒரு செயல்முறை முகமையை (Executive Agency) நிறுவவும், அதனை தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975-ன் கீழ் பதிவு செய்யவும் அரசு ஆணையிட்டது. </p><p>அதன்படி, மேலே இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட அரசாணையில் ஆணையிடப்பட்டவாறு, அந்த முகமையானது 'தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை' (TNSDMA) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேலே நான்காவதாகக் குறிப்பிடப்பட்ட அரசாணையில், 'தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை' (TNSDMA) என்பதன் பெயரை 'தமிழ்நாடு பேரிடர் இடர் குறைப்பு முகமை' (TNDRRA) என மாற்றி அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>தீவிர வானிலை நிகழ்வுகள்</h2><p>2. மேலே ஐந்தாவதாகக் குறிப்பிடப்பட்ட கடிதத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள், 2026-ஆம் ஆண்டில் கடுமையான 'எல் நினோ' (El Nino) நிகழ்வு உருவாக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, தென்மேற்குப் பருவமழை இயல்பு அளவைவிடக் குறைவாக இருக்கக்கூடும். </p><p>இது காவிரி ஆற்றில் நீர்வரத்து மற்றும் பாசன வசதிகளைப் பாதிக்கலாம். மேலும், வடகிழக்குப் பருவமழைக்காலத்தில் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தீவிர 'எல் நினோ'வால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் இடர் குறைப்பு முகமைக்கு (TNDRRA) ஆலோசனை வழங்க, ஒரு நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைப்பதற்கான முன்மொழிவை கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ளார்.</p> <h2>'எல் நினோ'</h2><p>3. வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளரின் மேற்கூறிய முன்மொழிவை அரசு பரிசீலித்தது. தீவிர 'எல் நினோ' நிகழ்வினால் ஏற்படக்கூடிய தாக்கங்களை அறிவியல் பூர்வமாக கண்காணிக்கவும் மதிப்பிடவும், அத்துடன் தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, 'பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005'-இன் பிரிவு 17(1)-ன் கீழ், காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், கடலோர வள மேலாண்மை, நகர்ப்புற உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் சிறப்பு அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு நிபுணர் ஆலோசனைக் குழுவை அரசு இதன் மூலம் பின்வருமாறு அமைக்கிறது:-</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/rpi82koq/char.jpg" /></figure><h2>முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள்</h2><p>4. நிபுணர் ஆலோசனைக் குழுவின் செயல்பாட்டு வரம்புகள் பின்வருமாறு இருக்க வேண்டும் என்றும் அரசு இதன் மூலம் ஆணையிடுகிறது:-</p><p>i. இக்குழு மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரத்தைக் கண்காணித்து, பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளை அடையாளம் காணுதல் மற்றும் 'தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை'யில் (TNDRRA) முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் (Early Warning Systems) குறித்த ஆலோசனைகளை வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.</p><p>ii. எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ளும் வகையில் உரிய நேரத்தில் போதுமான தயார்நிலையை உறுதிசெய்ய, பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வறட்சி மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இக்குழு ஆலோசனை வழங்கும்.</p><p>iii. இக்குழு 2026-27 மற்றும் 2027-28 ஆகிய ஆண்டுகளுக்கான காலகட்டத்தில் 'தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை'யில் (TNDRRA) செயல்படும்.</p><p>iv. இக்குழுவிற்கு எவ்விதக் கூட்டக் கட்டணமோ (sitting fees) அல்லது பயணப்படி / அகவிலைப்படியோ (TA/DA) வழங்கப்பட வேண்டியதில்லை.</p><p>v. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோரின் முன்மொழிவின் அடிப்படையில், எதிர்காலத்தில் இக்குழுவிற்கு கூட்டக் கட்டணம் அல்லது பயணப்படி/அகவிலைப்படி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>பிரதீப் ஜான்</h2><p>வறட்சி, வெள்ளத்தடுப்பு என எல்லாவற்றையும் முன்கூட்டியே கண்காணித்து முன்னெச்சரிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு இந்த குழு உதவு புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மக்களுக்கு, வானிலை குறித்த தகவல்களை மிக எளிய முறையில் அளித்து பல்வேறு விவரங்களையும் விளக்கி வந்த தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி திருநங்கையை கரம் பிடித்த ஐ.டி. ஊழியர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-employee-holds-transgender-womans-hand-despite-family-objections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-employee-holds-transgender-womans-hand-despite-family-objections#comments</comments><guid isPermaLink="false">015a09d6-c01a-4c60-8571-c68eda43ce5b</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:47:41 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:47:41.398Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,திருவள்ளூர்,Marriage,IT employee,transgender,திருநங்கை,Tiruvallur,ஐ.டி. ஊழியர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/xjx4ey2u/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/xjx4ey2u/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோபி,</p><p>திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை பகு தியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (வயது 30). இவர் சென்னையில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வருகிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வருகூராம்பட்டியைச் சேர்ந்தவர் கயல்விழி (28). திருநங்கையான இவருக்கும், பிரவீன்ராஜுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.</p><p>இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரவீன்ராஜை அவரது பெற்றோர் சென்னை யில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் அவரை அங்கிருந்து அழைத்து வந்து வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.</p><p>இதுகுறித்து அறிந்த பிரவீன்ராஜ், கயல்விழியிடம் கூறினர். இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மனித சட்ட உதவி மையத்தை அணுகினர். அங்கு அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று 2 பேரும் மாலை மாற்றி தாலி கட்டி சுயமரியாதை பதிவு திருமணம் செய்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடிக்கு போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க வேண்டும் -  மத்திய மந்திரியிடம் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boeing-and-airbus-aircraft-should-be-operated-to-thoothukudi-anitha-radhakrishnan-requests-union-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boeing-and-airbus-aircraft-should-be-operated-to-thoothukudi-anitha-radhakrishnan-requests-union-minister#comments</comments><guid isPermaLink="false">5940538f-d42f-4fb2-980f-ea5f9d5d98fd</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:32:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:32:43.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Union Minister,Anitha Radhakrishnan,அனிதா ராதாகிருஷ்ணன்,தூத்துக்குடி விமான நிலையம்,Thoothukudi Airport,விமான போக்குவரத்து துறை,விமானப் போக்குவரத்து,Civil Aviation,அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ,Civil Aviation Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/yz3alhnm/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/yz3alhnm/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி விமான நிலையத்தில் பெரிய ரக போயிங், ஏர்பஸ் விமானங்களை இயக்க வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். </p><h2>தொழில்கள் நிறைந்த மாவட்டம்</h2><p>டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இணைப்பு சேவையுடன் பெரிய விமானங்களை இயக்கினால் பயணிகளுக்கான கட்டணமும் குறையும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக  திமுக மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எல்.ஏ.வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து பெரிய ரக விமானங்களை இயக்க வலியுறுத்தி மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏராளமான தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். உப்பு உற்பத்தி, தீப்பெட்டி தயாரிப்பு போன்ற பாரம்பரிய தொழில்களுடன் அனல் மின் நிலையங்கள், ஸ்பிக் உரத் தொழிற்சாலை, கனநீர் தயாரிப்பு, சிர்கோனியம், DCW கெமிக்கல் ஆலை ஆகிய கனரக இயந்திர தொழிற்சாலைகள் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் என்ற வகையில் தொழில்வளம் பெருகியுள்ளது. </p><p>தற்போது வின் பாஸ்ட் நவீன கார் தொழிற்சாலை, உடன்குடி அனல் மின் நிலையம், குலசேகரபட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் போன்று புதிய தொழில்கள் வருகின்றன. மேலும் பல பெரிய தொழிற்சாலைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.</p><h2>போயிங் ஏர்பஸ் விமானங்கள்</h2><p>துறைமுகம், ரெயில் நிலையம், நான்கு வழிச் சாலைகள் இணைப்பு என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பெருகியுள்ளது. அண்டை மாவட்டமான திருநெல்வேலியில் கூடங்குளம் அணு மின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ திரவ எரிபொருள் நிறுவனம், விஜயநாராயணம் கட்டபொம்மன் கடற்படைத் தளம் போன்ற மத்திய அரசு நிறுவனங்களும் கங்கை கொண்டான் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன.</p><p>இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையம் நவீனப்படுத்தப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக விமான நிலையம் அமைந்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த பல துறையினர் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். தற்போது தூத்துக்குடி சென்னை 4 முறை, தூத்துக்குடி -பெங்களூரு 1 முறை என விமானம் இயக்கப்படுகிறது. சிறிய ரக விமானம் இயங்கி வரும் நிலையில் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் நிலையும் இருக்கிறது.</p><p>இந்நிலையில் தொழில் வளர்ச்சிக்கேற்ப விமானப் போக்குவரத்தை கூடுதல் படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் புது டெல்லி, கொல்கத்தா நகரங்களுக்கு சென்னை வழியாகவும், மும்பை பெரு நகருக்கு பெங்களூரு வழியாகவும், ஐதராபாத்திற்கு கோயம்புத்தூர் வழியாகவும் போயிங் ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்கிட வேண்டும். பெரிய ரக விமானங்கள் இயக்கப்படும் போது பயணிகளுக்கான கட்டணம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குறைவதற்கான </a>வாய்ப்புள்ளது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-18</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-18#comments</comments><guid isPermaLink="false">2c3e7ff1-8f6c-4b38-80f9-255e72c61a2c</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:29:58 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:29:58.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/v46ckxzc/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/v46ckxzc/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர், திருநெல்வேலி நகர்ப்புறம், கல்லிடைக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக பின்வருமாறு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பணகுடி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன் குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. </p><p>அதன்படி திருநெல்வேலி டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர் ,திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை கோட்டீஸ்வரன்நகர், சாஸ்திரிநகர், தீன்நகர், திருமங்கைநகர், செந்தமிழ்நகர், பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலி டவுன் SN ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம் ,சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழ ரத வீதி வீதி, போஸ் மார்க்கெட், A.P. மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம், மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரிநகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.</p><h2>காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை</h2><p>இதேபோல் கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். </p><p>அதன்படி திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோநகர், பரணிநகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதிநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் பின்வரும் நேரங்களில் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை. </p><p>அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி. </p><p>மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம்.  </p><p>கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி,  ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி. </p><p>கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர், கோவிந்தபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள் - நயினார் நாகேந்திரன் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dr-muthulakshmi-reddys-birthday-nainar-nagendran-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dr-muthulakshmi-reddys-birthday-nainar-nagendran-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">ae14c525-285d-4d2f-9202-76a63b34b694</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:13:19 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:13:19.106Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,birthday,பிறந்த நாள்,முத்துலட்சுமி ரெட்டி,Muthulakshmi Reddy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ks9o0nik/89.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ks9o0nik/89.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மருத்துவம், பெண்கள் கல்வி, சமூக நீதி ஆகிய துறைகளில் அழியாத தடம் பதித்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் பத்ம பூஷன் டாக்டர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">முத்துலட்சுமி ரெட்டி </a>அவர்களின் பிறந்தநாளில், அவரது உயர்ந்த சேவைகளையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்கிறோம்.</p><h2>அவ்வை இல்லம்</h2><p>ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட சிறுமிகளுக்காக அவ்வை இல்லம் தொடங்கி ஆதரவாக இருந்தவர், மேலும் 1954இல் அடையாறு புற்றுநோய் நிலையத்தை தொடங்கி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார்.</p><p>பெண்களின் உரிமைகள், குழந்தைகள் நலம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் மேற்கொண்ட முன்னோடி முயற்சிகள், தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டியாகத் திகழ்கின்றன. அவரது கனவுகளும் கொள்கைகளும் என்றும் நமக்கு ஊக்கமாக இருக்கட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வழக்குகளை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்: மாவட்ட நீதிபதிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-district-judges-to-conclude-sexual-assault-cases-within-2-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-district-judges-to-conclude-sexual-assault-cases-within-2-months#comments</comments><guid isPermaLink="false">1b36884a-c145-4443-9d98-357f16a4192d</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:07:58 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:07:58.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ஆந்திரா,Andhra Pradesh,rape,பெண்,Woman,பாலியல் பலாத்காரம்,பாலியல் வழக்கு,sexual case,ஐகோர்ட்டு உத்தரவு,Conclusion,High Court orders,முடிக்க வேண்டும்,2 மாதம்,2 months</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/bntoqjfz/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/bntoqjfz/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் 2 மாதத்துக்குள் பாலியல் வழக்குகளை விசாரித்து முடிக்க மாவட்ட கோர்ட்டு நீதிபதிகள் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81">சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது</a>.</p><h2>போலீஸ்காரர்கள் கைது</h2><p>ஆந்திராவில் இருந்து உறவினருடன் திருவண்ணாமலைக்கு சாமி கும்பிட இளம்பெண் ஒருவர் வந்தார். அவரை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் வேலை செய்யும் போலீஸ்காரர்கள் சுந்தர், சுரேஷ் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் போலீஸ்காரர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். </p><h2>சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு</h2><p>இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநில பெண், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் "பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவு 346 (1)-ன்படி பாலியல் வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து, 2 மாதத்துக்குள் அந்த பாலியல் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். போக்சோ வழக்கிலும், பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலத்தை 30 நாட்களுக்குள் பெற வேண்டும். ஆனால் இந்த 2 நடைமுறைகளும் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுவது இல்லை.  </p><p>2025-ம் ஆண்டு நவம்பர் 4-ந்தேதி என்னுடைய வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால் கடந்த ஏப்ரல் 7-ந்தேதி வரை குற்றச்சாட்டு பதிவுக்குபின் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதேபோல, ராணிப்பேட்டையில் 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கும் குறித்த நாளுக்குள் விசாரித்து முடிக்கப்படவில்லை. எனவே, என் வழக்கு உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">பாலியல் வழக்கு</a>களை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.</p><h2>தமிழ்நாட்டில் 1,920 பாலியல் பலாத்கார வழக்குகள்</h2><p>இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் இதுநாள் வரை 1,920 பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளன. அதில், ஆயிரத்து 55 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள 18 ஆயிரத்து 518 போக்சோ வழக்குகளில் 12 ஆயிரத்து 983 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன" என்பது உள்ளிட்ட விவரங்கள் கூறப்பட்டிருந்தது.</p><h2>பாலியல் வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க நடவடிக்கை</h2><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: </p><p>பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க அனைத்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிகளும், மகளிர் சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.</p><h2>வேலியே பயிரை மேய்ந்த கதை</h2><p>வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரே வேட்டைக்காரர்களாக மாறும் நிகழ்வுகள் மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதை போலீஸ் டி.ஜி.பி. உறுதி செய்யவேண்டும். அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை தேவையின்றி கீழ் கோர்ட்டுகள் தள்ளிவைக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.</p><h2>ஒரு ஆண்டுக்குள் போக்சோ வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">போக்சோ வழக்கு</a>களில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 30 நாட்களில் பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது சிறார்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, ஓராண்டுக்குள் வழக்கு விசாரணையை போக்சோ சிறப்பு கோர்ட்டுகள் முடிக்க வேண்டும்.</p><h2>6 புதிய போக்சோ சிறப்பு கோர்ட்டுகள்</h2><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மாநிலத்தில் 6 புதிய போக்சோ சிறப்பு கோர்ட்டுகளை தொடங்குவது குறித்து முடிவு எடுத்து, 2 மாதங்களில் இதுதொடர்பாக ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். </p><p>இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-water-flow-in-courtallam-waterfalls-bathing-banned-at-main-falls-and-five-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-water-flow-in-courtallam-waterfalls-bathing-banned-at-main-falls-and-five-falls#comments</comments><guid isPermaLink="false">da7e55a6-42f6-4b4d-8ed5-69be8610cff6</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:04:56 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:04:56.110Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,Courtala Falls,குற்றாலம் அருவி,குற்றாலம்,குற்றாலம் மெயின் அருவி,Courtallam fivefalls,குற்றாலம் அருவிகள்,ஐந்தருவி,Courtallam Main Falls</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/44sdn36h/patha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/44sdn36h/patha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் <a href="https://www.dailythanthi.com/topic/courtallam">குற்றாலம்</a> அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. </p><h2>குற்றாலம் அருவிகள்</h2><p>தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் முற்றிலும் குறைவாகவே விழுந்தது. புலியருவியும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது. புலியருவிக்கும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணி கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.</p><h2>குளிக்க தடை </h2><p>குற்றாலம், இலஞ்சி பகுதியில் மாலையிலும் சாரல் மழை பெய்தது. குற்றாலம், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p><p>இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவால் குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>சாரல் திருவிழா</h2><p>ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை ) தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. தற்போது அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சாரல் திருவிழாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-orders-to-complete-metro-works-as-soon-as-possible</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-orders-to-complete-metro-works-as-soon-as-possible#comments</comments><guid isPermaLink="false">4a45f831-7ab7-4edf-a1b5-a99c5518ab2a</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:56:39 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:56:39.535Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,சென்னை,மெட்ரோ ரெயில்,சென்னை மெட்ரோ,chennai metro,Metro train,Metro Work,மெட்ரோ பணி,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/dw1whln6/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/dw1whln6/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மெட்ரோ ரெயில் பணிகள் ஆய்வு</h2><p>சென்னையில் 2-ம் கட்டமாக ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனை முதல்-அமைச்சர் விஜய் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மெட்ரோ ரெயில் மூலம் நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு விஜய் சென்றார். அங்குள்ள மெட்ரோ ரெயில் நிலைய தலைமையகத்தில் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார்.</p><p>நந்தனத்தில் ஆய்வு கூட்டத்தை முடித்துவிட்டு கார் மூலம் கிண்டி சென்றார். அங்குள்ள கத்திப்பாரா அருகே பட்ரோட்டில் இருந்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரையில் 6 தூண்களை ஒன்று சேர்க்கும் வகையில் 1,354 அடி தூரத்துக்கு 101 அடி உயரத்தில், 410 அடி ஆரத்துடன் கூடிய 'பேலன்ஸ்டு கேன்டிலீவர்' என்ற புதிய தொழில்நுட்பத்துடன் பிரமிப்பூட்டும் வகையில் மெட்ரோ வளைவு ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு</h2><p>இதனை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு, நவீன தொழில்நுட்பம் மற்றும் பணிகளின் சவால்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பணிகளை தரமாகவும், திட்டமிட்ட காலத்தில் முடிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் போரூரில் இருந்து டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் நவீன மெட்ரோ ரெயிலில் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு விஜய் சென்றார். அங்கு நடந்துள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.</p><p>இந்த நிலையில், மெட்ரோ ரெயில் திட்டங்களை குறித்த காலத்துக்குள் முடிக்க பணிகளை துரிதப்படுத்துமாறு மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கத்திப்பாராவின் மெட்ரோ கட்டுமானம், ஆளில்லா மெட்ரோ ரெயில் இயக்கம் தொடர்பான முன்னெடுப்புகள் சிறப்பாக இருப்பதாகவும் முதல்-அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் மெட்ரோ கட்டுமானப் பணியில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பகலுக்கு மாற்றாக இரவு நேர கட்டுமான பணிகளை கூடுதலாக மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு: இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyans-bail-plea-to-come-up-for-hearing-again-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyans-bail-plea-to-come-up-for-hearing-again-today#comments</comments><guid isPermaLink="false">85a1a3fc-0a8b-4512-948f-3f5de118383c</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:32:57 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:32:57.438Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,DMK,தமிழகம்,Thoothukudi,தூத்துக்குடி,ஜாமீன் மனு,bail plea,DMK MLA,திமுக எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/jgwvndco/inidae.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/jgwvndco/inidae.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி கோர்ட்டில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.</p><h2>மார்க்கண்டேயன் கைது</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/தூத்துக்குடி">தூத்துக்குடி</a> மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையில் பேசியதாகவும் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>ஜாமீன் மனு தள்ளுபடி</h2><p>இந்த வழக்கு தொடர்பாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் கடந்த 22-ந் தேதி தள்ளுபடி செய்தது.</p><h2>இடைக்கால ஜாமீன்</h2><p>இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் போடப்பட்ட வழக்கு சட்ட முரண்களுக்கு எதிரானது எனக்கூறி இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரியும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.</p><h2>இன்று விசாரணை</h2><p>இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நீதிபதி எஸ்.சுபாதேவி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, ஐகோர்ட்டில் எம்.எல்.ஏ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சில விளக்கங்களை கேட்டு ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி: நிறுவனம் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lizard-found-in-food-served-to-sanitation-workers-case-filed-against-company</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lizard-found-in-food-served-to-sanitation-workers-case-filed-against-company#comments</comments><guid isPermaLink="false">0ed8eb4b-0d0c-462a-bd88-d59b5d6bb211</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:32:22 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:32:22.012Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காலை உணவு,Sanitation workers,தூய்மை பணியாளர்கள்,Lizard,பல்லி,Aavadi,ஆவடி மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/xfldr4ia/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/xfldr4ia/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஆவடி மாநகராட்சி</h2><p>ஆவடி மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 700-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் சுமார் 21 மையங்களில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.</p><p>இந்த பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் தனியார் கேட்டரிங் நிறுவனம் மூலம் தினமும் காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உணவு சமைக்கப்பட்டு, அங்கிருந்து வாகனங்கள் மூலம் 21 மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு பணியாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.</p><h2>சாம்பாரில் பல்லி</h2><p>இந்த நிலையில், நேற்று காலை தூய்மை பணியாளர்களுக்கு சாம்பார் மற்றும் வெள்ளை சாதம் வழங்கப்பட்டது. ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா பகுதியில் பணியாற்றி வந்த சுமார் 50 தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது, சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி இருந் ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் மற்ற மையங்களில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களிடமும் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பல இடங்களில் பணியாளர்கள் உணவு சாப்பிடுவதை நிறுத்தினர்.</p><h2>வாந்தி-மயக்கம்</h2><p>இதற்கிடையில், பருத்திப்பட்டு பகுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட வசந்தா (வயது 50), எமிலி (50), விஜய லட்சுமி (50), குமார் (40) ஆகிய 4 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுடன் பணியாற்றிய மற்ற தூய்மை பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.</p><p>இதுகுறித்து ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா கூறுகையில், 'இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. ஒரு மையத்தில் சாம்பாரில் பல்லி இருந்தது தெரியவந்த உடனேயே மற்ற அனைத்து மையங்களிலும் அந்த உணவை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆய்வில் தவறு உறுதியானால், சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இந்த நிலையில், ஆவடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி இருந்த விவகாரத்தில் உணவு வழங்கிய நிறுவனத்தின் நிர்வாகி ஸ்ரீஹரி மீது ஆவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர் குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நள்ளிரவில் திடீர்  கனமழை; 15 விமானங்கள் தாமதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-heavy-rain-in-chennai-at-midnight-15-flights-delayed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-heavy-rain-in-chennai-at-midnight-15-flights-delayed#comments</comments><guid isPermaLink="false">8792f47b-1f4d-4722-8bb9-6320ccc34d51</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:08:35 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:08:35.642Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கனமழை,heavy rain,விமானங்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/kyd5ry7l/Plnae-images.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமானங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/kyd5ry7l/Plnae-images.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பாதையின் தாக்கத்தால், சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன்படி சென்னையில் நேற்று மாலையில் இருந்து பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.  </p> <h2>பரவலாக மழை</h2><p>அடையாறு, மயிலாப்பூர், தாம்பரம், பெருங்குடி, தரமணி, கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பதிவானது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p><h2>தாமதமாக இயக்கம்</h2><p>மீனம்பாக்கம் பகுதியில் கனமழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தில் 15 விமானங்களின் சேவை தாமதமானது. அபுதாபி, டெல்லி, கவுகாத்தி, கோவை, திருச்சி மற்றும் மும்பையில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பின்னர் தரையிறங்கின. அதேபோல், சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூரு, மும்பை, அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன. </p><h2>இன்றும் மழைக்கு வாய்ப்பு</h2><p>இதற்கிடையே, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது</p>]]></content:encoded></item><item><title>ஒரு மாதமாக அதிகரித்து வந்த மஞ்சள் விலை திடீர் சரிவு: என்ன காரணம்? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-drop-in-turmeric-prices-after-a-month-long-rise-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-drop-in-turmeric-prices-after-a-month-long-rise-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">461c6dab-8b84-4062-a46a-a3eff2fbc492</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:07:52 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:07:52.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Erode,ஈரோடு,மஞ்சள்,Erode Turmeric,விரலி மஞ்சள்,finger turmeric,மஞ்சள் விலை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hi9iwytj/yellow.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hi9iwytj/yellow.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வணிகம் (Business)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஒரு மாதமாக அதிகரித்து வந்த <a href="https://www.dailythanthi.com/topic/மஞ்சள்-விலை">மஞ்சள் விலை</a> திடீரென சரிவை சந்தித்துள்ளது. </p><h2>ஏலம் முறை</h2><p>ஈரோட்டில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் விளைவித்து கொண்டுவரும் பொருட்கள் ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.  அந்த வகையில், மஞ்சள், கொப்பரை, நெல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையாகின்றன. </p><h2>ரூ.2 ஆயிரம் சரிவு</h2><p>கடந்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி விரலி மஞ்சள் குவிண்டால் (100 கிலோ), தரத்திற்கு ஏற்ப ரூ.11,206 முதல் ரூ.14,269 வரையும், கிழங்கு ரூ.10,429 முதல் ரூ.13,140 வரையும் விற்பனையானது. </p><p>கடந்த 20-ந் தேதி அதிகபட்சமாக, விரலி மஞ்சள் ரூ.12,967 முதல் ரூ.19,779 வரை விற்பனை செய்யப்பட்டது. இப்படி, ஒரே மாதத்தில் ரூ.4,500 வரை விலை உயர்ந்த மஞ்சள் விலை, தற்போது ரூ.2 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. </p><h2>வரத்து அதிகரிப்பு</h2><p>தாவது, நேற்று விரலி மஞ்சள் ரூ.11,329 முதல் ரூ.18,311 வரையும், கிழங்கு ரூ.10,869 முதல் ரூ.16,616 வரையும் விற்பனை ஆனது. </p><p>மஞ்சள் விலை திடீர் சரிவு குறித்து, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, "கடந்த மாதம் மஞ்சள் தேவை அதிகரித்து, வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. இதனால், இருப்பு வைத்திருந்த மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். இந்த நிலையில், தேசிய அளவில் அனைத்து மார்க்கெட்டுகளிலும் மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை கூடுதலாக கிடைக்காமல் சரியத் தொடங்கியுள்ளது" என்றனர். </p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dr-muthulakshmi-reddys-birthday-chief-minister-vijay-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dr-muthulakshmi-reddys-birthday-chief-minister-vijay-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">3a1b3d44-311d-4a08-b41b-ae397a0b676f</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:01:37 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:01:37.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,முத்துலட்சுமி ரெட்டி,Muthulakshmi Reddy</media:keywords><media:content height="630" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/69dh9t3t/Untitled-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/69dh9t3t/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்</h2><p>தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முன்னேற்றத்திற்காகவும்</a>, ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!</p><p>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக 'அவ்வை இல்லம்', புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக 'அடையாறு புற்றுநோய் நிலையம்' போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார்.</p><h2>என்றும் நிலைத்திருக்கும்</h2><p>அவரது உயரிய லட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜாமீனில் வந்த ரவுடி.. மறுநாளே மனைவியை வெட்டிக்கொன்ற கொடூரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-released-on-bail-hacks-wife-to-death-the-very-next-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-released-on-bail-hacks-wife-to-death-the-very-next-day#comments</comments><guid isPermaLink="false">428a2053-0869-4908-8bd8-7c1de0269c76</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:56:33 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:56:33.190Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,கிரைம் செய்திகள்,சிவகங்கை,Sivagangai,கீழடி,Keeladi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/dkgtqvst/cikre.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/dkgtqvst/cikre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்புவனம், </p><p>சிறையில் இருந்து வந்த மறுநாளே தனது மனைவியை, ரவுடி வெட்டிக்கொன்றார். இதனால் தாயை இழந்து அவர்களுடைய குழந்தைகள் தவித்து வரு்கிறார்கள்.</p><h2>பல்வேறு வழக்குகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/sivagangai">சிவகங்கை</a> மாவட்டம் கீழடி அருகே சொட்டதட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோக ராஜா (வயது 29). இவருடைய மனைவி பாண்டிச்செல்வி (25). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவுடியாக வலம் வந்த யோகராஜா மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>மனைவி கொலை</h2><p>ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று நேற்று முன்தினம் மாலை யோகராஜா, சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கும், மனைவி பாண்டிச்செல்விக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.</p><p> இதில் ஆத்திரம் அடைந்த யோகராஜா அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவல் அறிந்து மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், கீழடி இன்ஸ்பெக்டர் மயில் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பாண்டிச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக யோகராஜாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>குழந்தைகள் தவிப்பு</h2><p>சிறையில் இருந்து வந்த மறுநாளே மனைவியை ரவுடி வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாண்டிச்செல்வியை இழந்து அவருடைய 2 குழந்தைகளும் தவித்து வரு்கிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி - விரைவில் கைது?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-corruption-case-senthil-balaji-files-petition-seeking-anticipatory-bail</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-corruption-case-senthil-balaji-files-petition-seeking-anticipatory-bail#comments</comments><guid isPermaLink="false">bb807bdf-afa3-4f09-9d5a-c887491413b6</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:25:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:25:15.589Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,செந்தில் பாலாஜி,டாஸ்மாக் ஊழல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/f1reql23/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/f1reql23/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>அடுக்கடுக்கான வழக்கு</h2><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.</p><p>தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.</p><h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p>இந்த நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் நேற்று முன்தினம் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர். </p><p>இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.</p><h2>செந்தில் பாலாஜியிடம் விசாரணை</h2><p>செந்தில்பாலாஜி சென்னை ஆழ்வார்பேட்டை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கிருந்துதான் அவர் தினமும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார். நேற்று காலையில் இந்த ஓட்டலுக்கும், லஞ்சஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு யுவராஜ் தலைமையில், 3 அதிகாரிகள் சென்றனர்.</p><p>அங்கு செந்தில்பாலாஜி தங்கியிருந்த அறையில், செந்தில்பாலாஜி முன்னிலையில் சோதனை நடத்தினார்கள். பிற்பகலில் சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சோதனையின்போது, செந்தில்பாலாஜியிடம் சில ஆவணங்களை காட்டி விசாரணை நடத்தப்பட்டது. லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணைக்கு, செந்தில்பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.</p><h2>முன்ஜாமின் மனு தள்ளுபடி</h2><p>இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்தவிதமான ஆதரமும் இல்லை; பொத்தம் பொதுவாக செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகிகள் செய்த குற்றத்திற்காக செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டுவது சரியல்ல என வாதிட்டார்.</p><p>இதனையடுத்து காவல் துறை தரப்பில் ஆஜரான வக்கீல், “100 கோடி முறைகேடு புகாரின் புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கினால் விசாரணை முற்றிலுமாக பாதிக்கப்படும்; வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டிய இருப்பதால் அவருக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது” என வாதிட்டார்.</p><h2>விரைவில் கைது?</h2><p>இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><p>முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியை தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத் துறை விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சமூக வலைதளங்களில் போலி தகவல் பரவுவதை தடுக்க விரைவுக் குழுக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-protests-prompt-action-rapid-response-teams-formed-to-curb-the-spread-of-fake-information-on-social-media</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-protests-prompt-action-rapid-response-teams-formed-to-curb-the-spread-of-fake-information-on-social-media#comments</comments><guid isPermaLink="false">e4492f07-bb00-4663-8a96-fbe387dc6674</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:02:35 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:02:35.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,Tamilnadu,டெல்லி,தமிழகம்,மத்திய அரசு,Central Govt,social media,சமூக வலைதளங்கள்,Fake News,மாணவர்கள் போராட்டம்,Students protest,போலி செய்திகள்,cockroach janata party,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/sm7kysel/infopr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/sm7kysel/infopr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் எதிரொலியாக சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்களை தடுக்க மத்திய அரசு தனது அமைச்சகங்கள், துறைகள் வாரியாக விரைவுக் குழுக்களை அமைக்க உள்ளது.</p><h2>தர்மேந்திர பிரதான் பதவி விலகல்</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று, மத்திய கல்வி மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து கரப்பான் ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இளைஞர்களிடம் ஆதரவு பெருகியது. போராட்டம் தீவிரம் அடைந்ததால் மந்திரி பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார்.</p><h2>'ஜென் இசட்'</h2><p>'ஜென் இசட்' தலைமுறையினரிடம் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டதே அதிகப்படியானவர்கள் டெல்லியில் ஒன்றுகூடியதற்கு காரணமாக கூறப்படுகிறது. </p><p>இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எழுத்து, வீடியோ மற்றும் புகைப்பட வடிவில் பரப்பப்படும் போலியான தகவல்களை முறியடித்து, உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><h2>விரைவுக் குழுக்கள்</h2><p>அதன்படி, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலியான தகவல்களை உடனுக்குடன் கண்டுபிடிக்க விரைவுக் குழுக்களை வேகமாக அமைக்குமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>அதன்படி, தங்களை மையப்படுத்தி வரும் போலியான தகவல்களை நிகழ்நேர அடிப்படையில் கண்டுபிடித்து, அதிகாரப்பூர்வ சமூக வலைதளபக்கத்தில் அதுபற்றிய உண்மை தகவல்களை 2 மணி நேரத்துக்குள் பதிவிட வேண்டும் என்று அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>உண்மைத்தன்மையுடன் பதிவுகள்</h2><p>போலி தகவல்களை ஒடுக்க பயன்படுத்தப்படும் பதிவுகள் 200 வார்த்தைகளை தாண்டக்கூடாது. அதேபோல அந்த பதிவுகள் துல்லியமான உண்மைத்தன்மையுடன் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஏற்படுத்த உள்ள விரைவு குழுக்களை சேர்ந்தவர்களுக்கு நிபுணர்களை கொண்டு பயிலரங்கங்கள் நடத்தி பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெற்றிலையின் மருத்துவ ரகசியங்கள்... பலருக்கும் தெரியாத ஆரோக்கிய நன்மைகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-medicinal-secrets-of-betel-leaves-health-benefits-that-many-people-dont-know-about</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-medicinal-secrets-of-betel-leaves-health-benefits-that-many-people-dont-know-about#comments</comments><guid isPermaLink="false">3b9f29ba-9f20-4be5-a40e-9d30c6d66339</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:54:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:54:28.910Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆரோக்கியம்,நன்மைகள்,வெற்றிலை,betel leaf,beneficial health</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/1cqqyz43/88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/1cqqyz43/88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>வாய் சிவப்பதற்காக பயன்படுத்தக்கூடிய வெற்றிலையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெற்றிலை கொடி வகையை சேர்ந்தது. வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.</p><h2>ஆரோக்கிய நன்மை</h2><p>இந்தியாவில், திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போது, கடவுளுக்கு வெற்றிலைப் படைக்கப்படுகிறது மற்றும் மரியாதைக்கான அடையாளமாக வயதானவர்களுக்கும் வெற்றிலைக் கட்டு கொடுக்கப்படுகிறது. இந்த பளபளப்பான, இதய வடிவிலான இலைகளில் மறைந்துள்ள பெரிய அளவிலான ஆரோக்கிய நன்மைகளை நாம் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.</p><h2>தாய்ப்பால் சுரப்பி</h2><p>2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும். உடலுக்கு வெப்பம் தரும் வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது. வெற்றிலையை போடுவதால் ஈறுகளில் இருக்கின்ற வலி, ரத்த கசிவை நீக்கி, பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. பலர் பலமான விருந்துக்குப் பிறகு வெற்றிலை போடுவர், சிலர் அடிக்கடி வெற்றிலைப் போடுவதை ஒரு பழக்கமாகவே வைத்திருப்பர். ​​​​இந்தியாவில் மத சடங்குகளின் போது வெற்றிலை குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கிறது.</p><h2>ஞாபக சக்தி</h2><p>வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது. நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும். </p><h2>முடி உதிர்வு பிரச்சினை தீர்வு</h2><p>வெற்றிலையைத் தொடர்ந்து பயன்படுத்துவது முடி வேகமாக வளர உதவுகிறது. வெற்றிலையைத் தொடர்ந்து பயன்படுத்தினால், முடி உதிர்வு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். மேலும், அவை முடியின் பொலிவை அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரவும் உதவுகிறது. வெற்றிலையின் சிகிச்சை பண்புகள் அரிப்பு, பொடுகு மற்றும் தலைமுடி வெடிப்புகளுக்குச் சிகிச்சையளிக்க உதவுகிறது.</p><h2>உடல் எடை குறையும்</h2><p>அளவோடு வெற்றிலை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும். வெற்றிலை வாய் துர்நாற்றத்தை போக்கும். வெற்றிலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும். கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.</p><h2>வலி நிவாரணி</h2><p>வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணி, இது வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. வெட்டுக்கள், சிராய்ப்புகள், சினப்புகள் காரணமாக ஏற்படும் வலியைப் போக்க இதைப் பயன்படுத்தலாம். கொழுந்து வெற்றிலையை பேஸ்ட் போல அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">வெற்றிலை</a> சாறு உடலின் உள்ளே ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி நோயாளிகளை 1 கி.மீ. தூரம் சுமந்து செல்லும் மக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-carrying-patients-on-stretchers-for-1-km-due-to-lack-of-road-facilities</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-carrying-patients-on-stretchers-for-1-km-due-to-lack-of-road-facilities#comments</comments><guid isPermaLink="false">90304751-c8a4-429d-8c2e-bc0b1e94e2ba</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:50:03 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:50:03.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,கோத்தகிரி,Kothagiri,சாலை வசதி,Road facility</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/16f9csob/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/16f9csob/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><h2>நடைபாதை</h2><p>நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட இடுகொரை அருள்நகர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியையொட்டி இந்த கிராமம் அமைந்து உள்ளதால், இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கோத்தகிரியில் இருந்து கிராமத்துக்கு செல்ல இடுகொரை ஹட்டி வரை தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. </p><p>அங்கிருந்து இடுகொரை அருள்நகர் செல்வதற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் 6 அடி அகலத்தில் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த வழியாக கிராம மக்கள் நடந்து சென்று வந்தனர். ஆனால், அந்த நடைபாதை புதுப்பிக்கப்படாததால் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதோடு, ஒற்றையடி பாதையாக மாறியது. இதனால் கிராம மக்களில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், சிகிச்சைக்காக கோத்தகிரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லை.</p><h2>தொட்டில் கட்டி...</h2><p>இதன் காரணமாக கிராம மக்கள் தொட்டில் கட்டி நோயாளிகளை தோளில் சுமந்து, 1 கி.மீ. தொலைவில் உள்ள இடுகொரை ஹட்டிக்கு சென்று அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருகின்றனர். அவ்வாறு தேயிலை தோட்டத்திற்கு நடுவே செல்லும்போது, வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, பழுதடைந்த நடைபாதையை சற்று அகலப்படுத்தி ஆம்புலன்ஸ் சென்று வரும் வகையில் தார் சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><p>இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இடுகொரை அருள்நகரை சேர்ந்த ஞானபிரகாஷ் (வயது 53) என்பவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் தொட்டில் கட்டி, அவரை சிகிச்சைக்காக கிராம இளைஞர்கள் தோளில் சுமந்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விட்டு, மீண்டும் அவரது வீட்டுக்கு சுமந்து சென்றனர். இதற்கிடையே சமீபத்தில் சிகிச்சை பலனின்றி ஞானபிரகாஷ் இறந்தார்.</p><h2>தார் சாலை</h2><p>இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வனவிலங்குகள் நட மாட்டம் அதிகம் உள்ள இடுகொரை அருள்நகர் கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. இதனால் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் தினமும் 1 கி.மீ. தொலைவிற்கு வனப்பகுதி வழியாக வனவிலங்குகள் தாக்கி விடுமோ என அச்சத்துடன் கரடு, முரடான ஒற்றையடி பாதை வழியாக நடந்து சென்று வருகின்றனர்.</p><p>அவசர சிகிச்சைக்கு நோயாளி களை தொட்டில் கட்டி சுமந்து செல்ல வேண்டிய சிரமமான நிலை உள்ளது. இவ்வாறு நோயாளிகள், வனவிலங்கு தாக்குதலுக்கு உள்ளானவர்களை தொட்டில் கட்டி சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ், வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தார் சாலை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே முறைகேடுகளும் நீட் வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன! - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-and-neet-question-paper-leaks-continue-only-in-bjp-ruled-states-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-and-neet-question-paper-leaks-continue-only-in-bjp-ruled-states-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">7fa36a21-a31a-4c41-9cd6-eee079fe23b5</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:49:57 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:49:57.197Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,NEET,நீட்,நீட் வினாத்தாள் கசிவு,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,NEET question paper leak</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/q0ll9fmx/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/q0ll9fmx/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் விவகாரத்தில் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்த அநியாயத்திற்குப் பிறகும் மவுனம் காப்பது ஏன்?  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வினாத்தாள் பேரம்</h2><p>பாஜக கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளும் நீட் வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன! </p><p>மராட்டியம் லாத்தூர் மருத்துவமனையில் ரூ.5 லட்சத்திற்கு வினாத்தாள் பேரம் பேசப்பட்டு, தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே (ஏப்ரல் 23) (Samsung Fold7) போனில் 132 கேள்விகள் புகைப்படம் எடுக்கப்பட்டு கசிந்துள்ளன. மேலும் ரூ.30,000-க்கு PhonePe மூலம் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு கேரளா முதல் ராஜஸ்தான் வரை வாட்ஸ்அப் வழியே பரவியுள்ளது என சிபிஐ அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.</p><p>பிரதமர் நரேந்திர மோடியும், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னவிஸ்சும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?</p><h2>ஒரு பயனும் இல்லை!</h2><p>இதையெல்லாம் மறைக்க நேற்று அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட "ஹேக்-ப்ரூப்/ஆண்டி-பேப்பர் லீக்" சட்டமும், சிறப்பு நீதிமன்றங்கள், 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் போன்ற காகித அறிவிப்புகளும் வெறும் கண் துடைப்பு நாடகமே அன்றி வேறில்லை! வினாத்தாள் கசிவைத் தடுக்கத் துப்பில்லாத பாஜக அரசு கொண்டு வரும் இந்த போலி சட்டங்களால் ஒரு பயனும் இல்லை!</p><p>கோடிக்கணக்கான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாணவர்களின் </a>எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்த அநியாயத்திற்குப் பிறகும் மவுனம் காப்பது ஏன்? </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமா செய்ய காரணம் என்ன? - 4 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட சபாநாயகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-reason-for-resigning-speaker-orders-4-mlas-to-provide-an-explanation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-reason-for-resigning-speaker-orders-4-mlas-to-provide-an-explanation#comments</comments><guid isPermaLink="false">0d664963-1219-4f63-9ae2-423f21a1aa0f</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:33:34 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:33:34.372Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Tamilnadu,அதிமுக,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Edappadi Palanisami,அதிமுக எம்.எல்.ஏ.க்கள்,எடப்பாடி  பழனிசாமி,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,TVK Government,AIADMK MLAs,Speaker J.C.D. Prabhakar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/i1ct95xr/addmk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/i1ct95xr/addmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அ.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களும் ஆகஸ்டு 4-ந் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/jcd-prabhakar">சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</a> அழைப்பு விடுத்துள்ளார். </p><h2>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்</h2><p>அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். </p><h2>சபாநாயகர் அழைப்பு</h2><p>இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டப்படி தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கும்படி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளித்திருந்தார். இந்த புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி 4 பேருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/jcd-prabhakar">சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</a> அழைப்பு விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளித்தனர். </p><h2>ஆகஸ்டு 4-ந் தேதி</h2><p>இந்த நிலையில் மீண்டும் விளக்கம் அளிக்க 30-ந் தேதி (இன்று) வரும்படி 4 பேருக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமியும் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார்.இந்த நிலையில் ஆஜராக வேண்டிய தேதியை வரும் ஆகஸ்டு 4-ந் தேதிக்கு மாற்றி சட்டசபை செயலகம் அறிவுறுத்தியுள்ளது. </p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அளித்த விளக்கத்தின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ளது. அந்த விளக்கங்களை சபாநாயகர் தந்த பிறகுதான் சபாநாயகர் முன்பு ஆஜராவது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே கூறியிருக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/athletes-with-record-achievements-can-apply-for-padma-awards-thoothukudi-collector-informs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/athletes-with-record-achievements-can-apply-for-padma-awards-thoothukudi-collector-informs#comments</comments><guid isPermaLink="false">0a7f0cd9-f449-442c-b994-23e0c7b0ddd2</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:20:55 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:20:55.063Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Collector information,கலெக்டர் தகவல்,விளையாட்டுத்துறை,Sports,apply,விண்ணப்பிக்கலாம்,பத்ம விருதுகள்,Padma awards,Achievements,சாதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/g4owpvht/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/g4owpvht/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விளையாட்டு வீரர்கள்</a> 2027-ம் ஆண்டிற்கான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பத்ம விருதுகள் </a>பெற வருகிற 31-ம் தேதிக்குள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">விண்ணப்பிக்கலாம்</a> என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D">தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>இந்திய அரசால் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், பொதுச்சேவை, விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த சாதனை புரிந்த தனி நபர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.</p><h2>2027-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்</h2><p>அந்த வகையில் விளையாட்டுத் துறையில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், மலையேற்றம், விளையாட்டுத் துறையை மேம்படுத்தியவர்கள் மற்றும் ஊக்கப்படுத்தியவர்கள், பன்னாட்டு அளவிலான போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள், பன்னாட்டு அளவில் யோகா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் ஆகி சாதனையாளர்களுக்கு 2027-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.</p><h2>விளையாட்டுத்துறை</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை படைத்த தகுதியான நபர்கள், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான awards.gov.in வாயிலாக விண்ணப்பங்களைப் பெற்று, வரும் 31.7.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாளர்.</p>]]></content:encoded></item><item><title>கணவருடன் தகராறு: அடி தாங்க முடியாமல் தெருவுக்கு ஓடிய பெண்.. அடுத்து நடந்த கொடூரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-with-husband-woman-runs-onto-the-street-unable-to-bear-the-blows-the-horrific-incident-that-followed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-with-husband-woman-runs-onto-the-street-unable-to-bear-the-blows-the-horrific-incident-that-followed#comments</comments><guid isPermaLink="false">5165121c-d3d7-44d9-8da9-e3583bfd2df1</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:58:47 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:58:47.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Karaikudi,காரைக்குடி,கிரைம் செய்திகள்,சிவகங்கை,Sivagangai,குடும்ப பிரச்சினை,மனைவி கொலை,Wife murdered,family issue</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4zjzdzlm/too.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4zjzdzlm/too.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காரைக்குடி, </p><p>மனைவியின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்ததில் கல் தூணில் தலை மோதி அப்பெண் உயிரிழந்தார். இந்த கொடூர செயலை செய்த 2-வது கணவர் போலீசில் சரண் அடைந்தார்.</p><h2>திருமணம்</h2><p>சிவகங்கை மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/karaikudi">காரைக்குடி</a> அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37) இவர் கொட்டகை போடும் தொழில் செய்து வந்தார். சாக்கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் உய்யவந்தாள் (40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இவர் தென்னை ஓலை பின்னும் தொழில் செய்து வந்தார்.</p><p>பிரகாஷ் தனது தொழில் ரீதியாக தென்னை ஓலைகளை வாங்க அடிக்கடி உய்யவந்தாளை சந்தித்து வந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்த 6 மாதங்களுக்கு முன்பு பிரகாசும், உய்யவந்தாளும் திருமணம் செய்து கொண்டனர். சென்னைக்கு சென்ற இவர்கள் மீண்டும் சாக்கோட்டைக்கு வந்து தங்களது தொழிலை செய்து வந்தனர்.</p><h2>குடும்ப பிரச்சினை</h2><p>கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் பிரகாஷ் ஆத்திரம் அடைந்து மனைவி உய்யவந்தாளை கடுமையாக தாக்கினார். வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த உய்யவந்தாளை விரட்டினார்.</p><h2>கொடூர கொலை</h2><p>மனைவியின் தலைமுடியை பிடித்து தெருவில் இருந்து வீட்டுக்கு தரதரவென இழுத்துச்சென்றார். அப்போது அங்கிருந்த கல்தூணில் உய்யவந்தாளின் தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.</p><p>உடனடியாக மனைவி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷ், மனைவியின் உடலை வீட்டுக்குள் வைத்துவிட்டு, உடலின் மேலே போர்வையை போர்த்திவிட்டு நேரடியாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம்: ஈரோடு மாவட்டத்தில் ஆக. 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-local-holiday-on-aug-3-in-erode-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-local-holiday-on-aug-3-in-erode-district#comments</comments><guid isPermaLink="false">c0a881d6-abae-49b4-998f-8233b728f5b0</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:53:37 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:53:37.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரோடு,Local Holiday,உள்ளூர் விடுமுறை,மாவட்டம்,Erode District</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/vl2m2oib/87.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/vl2m2oib/87.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><h2>உள்ளூர் விடுமுறை</h2><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான வருகிற 3-ந்தேதி அன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும்.</p><h2>வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது</h2><p>இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற ஆகஸ்ட் 22-ந்தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் விடுமுறை அல்ல என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">உள்ளூர் விடுமுறை</a> நாளான வருகிற 3-ந்தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணி: 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-changes-in-the-service-of-12-express-trains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-changes-in-the-service-of-12-express-trains#comments</comments><guid isPermaLink="false">b48a3796-6c57-4a96-9b53-b011b155344a</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:52:26 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:52:26.310Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எக்ஸ்பிரஸ் ரெயில்,Southern Railway,Express trains,ரெயில்,ரெயில்வே கோட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/w3smair3/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/w3smair3/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி யஷ்வந்த்பூர் -மங்களூரு சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் (16565) வருகிற 2-ந்தேதி யும், மங்களூரு சென்ட்ரல் -யஷ்வந்த்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16566) வருகிற 3-ந்தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து அதிகாலை 5.10 மணிக்கு கிளம்ப வேண்டிய கே.எஸ்.ஆர். பெங்களூரு -எர்ணாகுளம் சந்திப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 26651) நாளை மறுநாள் (சனிக்கிழமை), 2, 3, 4-ந்தேதிகளில் பெங்களூரு கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து புறப்படும்.</p><h2>கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்</h2><p>கன்னியாகுமரியில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் 2-ந்தேதிகளில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி -கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16525) மாற்றுப்பாதையில் அதாவது பைப்பன ஹள்ளியில் இருந்து எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வரை இயக் கப்படும். இதன் காரணமாக இந்த ரெயில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையங்களில் நிற்காது.</p><p>கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய கே.எஸ்.ஆர். பெங்களூரு -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16526) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் எஸ்.எம்.வி.டி. பெங்களூருவிலிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும்.</p><p>கோவை சந்திப்பிலிருந்து நாளை மறுநாள் 2, 3-ந்தேதிகளில் காலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை -கே.எஸ்.ஆர். பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22666), கிருஷ்ணராஜபுரம் முதல் கே.எஸ்.ஆர். பெங்களூரு வரையிலான வழித்தடத்தில் பகுதிய ளவு ரத்து செய்யப்பட்டு, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு நோக்கி மாற்றியமைக்கப்படும்.</p><p>கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய கே.எஸ்.ஆர். பெங்களூரு -கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22665) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் எஸ்.எம்.வி.டி. பெங்களூருவிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும். வருகிற 3-ந்தேதி இயக்கப்படும் எர்ணாகுளம் சந்திப்பு -கே.எஸ்.ஆர். பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 26652) கிருஷ்ணராஜபுரத்துடன் நிறுத்தப்படும். கிருஷ்ணராஜபுரம் முதல் கே.எஸ்.ஆர். பெங்களூரு வரை இயக்கப்படாது.</p><h2>லோக்மான்ய திலக்</h2><p>யஸ்வந்த்பூரிலிருந்து பிற்பகல் 3.55 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ள யஸ்வந்த்பூர் -சேலம் ரெயில் (வண்டி எண் 16211) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் பனஸ்வாடியிலி ருந்து மாலை 4.22 மணிக்கு கிளம்பி சேலம் சந்திப்பு வரை இயக்கப்படும். சேலம் சந்திப்பிலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட திட்ட மிடப்பட்டுள்ள சேலம் -யஸ்வந்த்பூர் ரெயில் (வண்டி எண் 16212) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் பனஸ்வாடியுடன் நிறுத்தப்படும். பனஸ்வாடி முதல் யஸ்வந்த்பூர் வரை இயக்கப்படாது.</p><p>லோக்மான்ய திலக் முனையம் -கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 11013) இன்று (வியாழக்கிழமை) நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 1, 2-ந்தேதிகளில் யலஹங்கா ஓசூர் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதன் காரணமாக பெங்களூரு கிழக்கு. பெங்களூரு கண் டோன்மென்ட் மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது.</p><p>இதேபோல் கோவை -லோக்மான்ய திலக் முனையம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 11014) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் ஒசூர் -யலஹங்கா இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.</p><p>இதன் காரணமாக பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் எரித்துக்கொலை - வாலிபர் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-burnt-to-death-in-erode-over-fake-love-affair-youth-commits-brutal-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-burnt-to-death-in-erode-over-fake-love-affair-youth-commits-brutal-act#comments</comments><guid isPermaLink="false">196e5e20-64d3-48ce-9b41-a74278c1d08c</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:06:31 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:06:31.403Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,young woman,இளம்பெண்,கள்ளக்காதல்,Erode,ஈரோடு,கிரைம் செய்திகள்,fake love</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/n0x118v6/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/n0x118v6/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><h2>'இன்ஸ்டாகிராம்' பழக்கம்</h2><p>ஈரோடு பாரதி நகரை சேர்ந்த சென்னப் பன் என்பவரது மகள் வினோதினி (வயது 24). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனிஷ் (4) என்கிற மகன் உள்ளான். வினோதினிக்கும். சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக வினோதினி மகனுடன் தனது பெற்றோர் வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் வசித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் வினோதினிக்கு 'இன்ஸ்டாகிராம்' மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் நவீன் என்கிற நவநீதிகிருஷ்ணன் (26) என் பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் அவ்வப்போது வினோதினியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது.</p><h2>கடும் வாக்குவாதம்</h2><p>இதற்கிடையில் நவநீதகிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காததால், கடந்த சில நாட்களாக வினோதினி அவருடன் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இதனால், வினோதினி வேறு ஒரு நபருடன் பழகி வருவதாக நவநீதகிருஷ்ணன் சந்தேகம் அடைந்து, வினோதினியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதைத்தொடர்ந்து ஈரோட்டுக்கு வந்த நவநீதகிருஷ்ணன், சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் மகனுடன் வினோதினி இருப்பதை உறுதி செய்தபிறகு வீட்டுக்குள் நுழைந்து வினோதினியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><h2>உடலில் தீ வைப்பு</h2><p>இதில் ஆத்திரம் அடைந்த நவநீதகிருஷ்ணன், வீட்டில் இருந்த மண்எண் ணெயை எடுத்துவந்து வினோதினி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தீ உடலில் பற்றி எரிந்ததால் வலியால் அலறி துடித்த வினோதினி அருகில் இருந்த நவநீதகிருஷ்ணனையும் இறுக பிடித்துள்ளார். வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதைப்பார்த்த நவநீதகிருஷ்ணன் தீக்காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.</p><p>இதையடுத்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வினோதினியை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வினோதினியிடம், ஈரோடு கூடுதல் மகளிர் கோர்ட்டு நீதிபதி அன்புசெல்வி நேரில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதில், நவநீ தகிருஷ்ணன்தான் தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார் என்று வினோதினி தெரிவித்துள்ளார்.</p><h2>கொலை வழக்குப்பதிவு</h2><p>தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து நவநீதகிருஷ்ணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வந்தனர். நவநீதகிருஷ்ணன் இரு கைகள் மற்றும் முகத்தில் தீக்காயம் அடைந்து, கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போலீசாருக்கு தெரியவந்தது.</p><p>இதுகுறித்து போலீசார் கூறுகையில், நவநீதகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ததும், உடனடியாக கைது செய்யப்பட்டு கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்படுவார். தொடர்ந்து, மருத்துவமனையில் நவநீதகி ருஷ்ணனை கண்காணித்து வருகிறோம், என்றனர்.</p><p>கள்ளக்காதல் விவகாரத்தால் இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>