<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 24 Aug 2026 18:33:56 +0000</lastBuildDate><item><title>கோவில் உண்டியல் திருடுவோம்... சரக்கடிப்போம்... பிடிக்க வந்தால் கடிப்போம் - அமாவாசை திருடர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-steal-temple-offerings-we-will-booze-if-you-catch-us-we-will-bite-amavasai-thieves</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-steal-temple-offerings-we-will-booze-if-you-catch-us-we-will-bite-amavasai-thieves#comments</comments><guid isPermaLink="false">386cf6b0-02c5-4630-8e08-3802b8f6a676</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:28:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:28:52.416Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,புதுக்கோட்டை,Pudukottai,thieves,தனிப்படை போலீசார்,திருடர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/qypd8u7q/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/qypd8u7q/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>அமாவாசை நாளில் கோவில்களில் உண்டியல் திருடிய அமாவாசை திருடர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.</p><h2>உண்டியல் திருட்டு</h2><p>புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கடி கோவில் உண்டியல்கள் திருடப்பட்டு வருகிறது. பல சம்பவங்களில் இதுவரை யாரும் பிடிபடவில்லை. கடந்த மாதம் அமாவாசை நாளில் கீரமங்கலம் கொடிக்கரம்பையில் ஒரு கோவிலில் திருட முயன்றபோது கிராம மக்கள் திரண்டதால் பைக் மற்றும் செல்போனை போட்டுவிட்டு தப்பி ஓடியவர்கள் சற்று தூரத்தில் ஒரு வீட்டு வாசலில் நின்ற பைக்கை திருடிச் சென்றுவிட்டனர்.</p><p>அதேபோல இந்த மாதம் அமாவாசை நாளில் கீரமங்கலம் காவல் சரகம் மேற்பனைக்காடு கிராமத்தில் மழைமாரியம்மன் கோவில், வீரமாகாளியம்மன் கோவில் என ஒரே இரவில் 2 கோவில்களிலும் உண்டியல்கள் திருடப்பட்டிருந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடியில் 2 கோவில்களிலும், ஆவுடையார்கோவிலில் ஒரு கோவிலிலும் உண்டியல்கள் திருட்டு நடந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.</p><h2>தனிப்படை போலீசார்</h2><p>இந்த நிலையில் கோவில்களில் உண்டியல் உடைத்தவர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். முதல்கட்டமாக அமாவாசை திருடர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, பழைய வழக்குகளில் உள்ளவர்களின் கைரேகை பதிவுகளை வைத்து பார்த்தபோது சில கைரேகைகள் ஒத்துப் போனது. அதன் அடிப்படையில் அறந்தாங்கி அருகே நாகுடி வேதியன்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மகன் காளிதாஸ் சில்லரை காசு மூட்டையை தலைக்கு வைத்து படுத்திருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்தனர். </p><p>காளிதாஸிடம் விசாரித்தபோது, "நான் சிறையில் இருந்தபோது அறந்தாங்கியில் உள்ள திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்த கோழி திருடன் விஜய், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா களசங்காடு ஆடு திருடன் கோவிந்தராஜ் மகன் நாகராஜ் ஆகியோர் எனக்கு பழக்கமானார்கள். வெளியே வந்ததும் இன்ஸ்டாகிராமில் பேசிக்கொள்வோம். அடிக்கடி அறந்தாங்கியில் சந்திப்போம். பகலில் ஊர் ஊராகப் போய் நோட்டம் பார்த்துவிட்டு பைக்குகள் கிடைத்தால் திருடுவோம்.</p><h2>திருடுவோம்... சரக்கடிப்போம்</h2><p>இரவில் உண்டியல்கள் உடைத்து திருடி பங்கு வைத்து செலவு செய்வோம். நன்றாக சரக்கடிப்போம்; சாப்பிடுவோம். போன மாதம் கொடிக்கரம்பையில் உண்டியல் உடைக்கும்போது, ஆட்கள் வந்ததால் பைக், செல்போனை விட்டுவிட்டு, ஒரு வீட்டு வாசலில் நின்ற பைக்கை திருடி தப்பிட்டோம். அப்போதே எங்களை பிடித்துவிடுவீர்கள் என்று நினைத்தோம். ஆனால் பிடிக்கவில்லை. அதன் பிறகு பல பைக்குகள், உண்டியல்கள் திருடிவிட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் நாகராஜை பிடிக்கும்போது ஜாக்கிரதையாக இருங்கள். யாராவது பிடிக்க வந்தால் கடித்துவிட்டு தப்பிவிடுவான் என்று கூறியுள்ளார்.</p><p>அதேபோல பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் பிடிக்கும்போது 2 பேரை கடித்துவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இருப்பினும் போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அதே போல திருநாளூர் விஜய்யையும் கைது செய்து, அமாவாசை உண்டியல் திருடர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். </p><h2>சிறையில் அடைப்பு</h2><p>கீரமங்கலம் காவல் ஆய்வாளர் சத்தியதேவி, அவர்களிடம் விசாரணை செய்து, அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை கைப்பற்றினார். தொடர்ந்து அமாவாசை திருடர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு திருடர்களை பிடித்த ஆலங்குடி டிஎஸ்பி மனோகரன், தனிப்படை போலீசார் மற்றும் கீரமங்கலம் போலீசாருக்கு மேற்பனைக்காடு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்ல... வைரல் வீடியோ பெண் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/its-me-not-minister-keerthana-viral-video-woman-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/its-me-not-minister-keerthana-viral-video-woman-clarifies#comments</comments><guid isPermaLink="false">5c2b56a0-259c-4633-8ab6-3d6b6b8d392e</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:14:07 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:14:07.856Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Viral Video,வைரல் வீடியோ,பெண்,விளக்கம்,To clarify,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/idcuve2x/miniss.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெண்]]></media:title><media:description type="html"><![CDATA[ அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்ல... வைரல் வீடியோ பெண் விளக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/idcuve2x/miniss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூக வலைதளங்களில் தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் கீர்த்தனா</a> என தவறாக கூறி, மேலைநாட்டு உடையில் பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் வீடியோ அண்மையில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. </p><h2>வீடியோ</h2><p>இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் உண்மையான பெண் தற்போது "அது நான்தான், அமைச்சர் இல்ல..." என்று உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>மனவேதனை</h2><p>சமூக வலைதளங்களில் வைரலாக்கப்படும் வீடியோவில் இருப்பது அமைச்சர் கீர்த்தனா அல்ல, அது நான்தான் என்று அந்த பெண் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளார். தேவையற்ற அரசியல் காரணங்களுக்காக தனது வீடியோவை எடுத்து, தவறான தகவல்களுடன் பரப்பி வருவதை பார்த்து கடும் மனவேதனை அடைந்ததாக அவர்  கூறியுள்ளார். </p><h2> வேண்டுகோள்</h2><p> தனக்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், தன்னை பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை பெற்ற ரகு கணேஷ் - தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்க கோர்ட்டு அனுமதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-grants-permission-to-raghu-ganeshsentenced-to-death-in-the-sathankulam-caseto-attend-his-fathers-funeral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-grants-permission-to-raghu-ganeshsentenced-to-death-in-the-sathankulam-caseto-attend-his-fathers-funeral#comments</comments><guid isPermaLink="false">00b5158f-3b86-440e-821c-0e1410fa5df0</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:08:48 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:08:48.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாத்தான்குளம்,மதுரை ஐகோர்ட்டு கிளை,Sathankulam case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/0tw80qox/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/0tw80qox/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்துரை என்பவர் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். </p><p>இந்த இரட்டைக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். இதையடுத்து 9 போலீஸ்காரர்களுக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். </p><p>இந்நிலையில், மரண தண்டனை கைதியாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த ரகு கணேஷின் தந்தை காலமான நிலையில், இறுதிச் சடங்குகளில் பங்கேற்க ரகு கணேஷுக்கு அனுமதி வழங்கக்கோரி அவரது மனைவி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரகு கணேஷுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>போராட்டத்தை கைவிட பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-writes-to-milk-producers-association-to-call-off-the-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-writes-to-milk-producers-association-to-call-off-the-protest#comments</comments><guid isPermaLink="false">b8c6da58-7f9b-47c2-b096-f2cafe54989e</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:50:08 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:50:08.118Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/7nvcvpcy/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/7nvcvpcy/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பால் கொள்முதல் விலை உயர்வு கோரி பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் அஜய் யாதவ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பால் உற்பத்தியாளர்களின் பால் கொள்முதல் விலை உயர்வு கோரிக்கை தொடர்பாக இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் தங்களுடன் நேரில் கலந்து பேசி சுமுகமான முடிவெடுக்க பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படுவதை எதிர்நோக்கி தாங்கள் பால் நிறுத்த போராட்டத்தை உடனடியாக கைவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘கோரிக்கைகளுக்காக போராடும் தூய்மை பணியாளர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது’ - நெல்லை முபாரக்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arresting-sanitation-workers-who-are-protesting-for-their-demands-is-condemnable-nellai-mubarak</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arresting-sanitation-workers-who-are-protesting-for-their-demands-is-condemnable-nellai-mubarak#comments</comments><guid isPermaLink="false">00d87a7d-48c7-4884-8d2d-8c6e212f7aa6</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:20:01 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:20:01.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை முபாரக்,Nellai Mubarak</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/g63vgmn3/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/g63vgmn3/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்யும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை. அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு தூய்மைப் பணியாளர்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்றால் த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது?’ - எல்.முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-parandur-airport-project-is-rejected-what-does-the-tvk-government-intend-to-do-l-murugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-parandur-airport-project-is-rejected-what-does-the-tvk-government-intend-to-do-l-murugan-asks#comments</comments><guid isPermaLink="false">81591ae2-5935-47af-9a6a-fef762ca4e6f</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:08:49 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:08:49.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L.Murugan,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9y5fa526/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9y5fa526/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“சென்னை விமான நிலையத்தின் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், சென்னை நகரின் வளர்ச்சியை மையப்படுத்தியும் காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது . பரந்தூர் பகுதியில் முந்தைய தி.மு.க. அரசு இடத்தை தேர்வு செய்வதற்கே பல காலம் தாமதம் செய்தது. பெரும் தாமதம், நெருக்கடி, சிக்கல் என பல கட்ட தடைகளை தாண்டி விமான நிலையத்திற்கு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. </p><p>ரூ.27,400 கோடி மதிப்​பில், சுமார் 5,746 ஏக்​கர் பரப்​பள​வில் இந்த விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதற்​காக சுமார் 1,700 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளதாக தெரிகிறது. </p><p>இந்த நிலையில் தமிழகத்தில் பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கும் பணி கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்த திட்டம் கைவிடப்படுகிறது என்பது குறித்து விரிவான விளக்கம் எதுவும்  தரப்படவில்லை. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் இந்த முடிவு என்பது முழுக்க முழுக்க அரசியல் அன்றி வேறல்ல. </p><p>தேர்தலுக்கு முன்பு பரந்தூர் பகுதிக்கு சென்ற ஜோசப் விஜய், த.வெ.க. ஆட்சியமைந்தால் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படும் என பேசினார். எனவே பரந்தூர் விமான நிலையத்தை த.வெ.க. அரசு முழுக்க முழுக்க அரசியலாகவே பார்ப்பதாக தெரிகிறது. பரந்தூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுகிறது. இதற்காக செலவிடப்பட்ட இழப்பீட்டுத் தொகை என்னாகும் என்னாகும்?</p><p>த.வெ.க. அரசின் இந்த முடிவால் சென்னைக்கு புதிய விமான நிலையம் என்பது கானல் நீராகி விடும். இப்போது பரந்தூர் வேண்டாம் என்றால் த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது? வேறு இடம் என்றால் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பது பெரும் காலதாமதமாகும் என்ற கவலை எழுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் புதிய இடத்தை அடையாளம் காணுவது எப்படி? எப்போது? என்ற கேள்வி எழுகிறது.</p><p>நாடு முழுவதும் பல நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணி பெருமளவு முடிந்து வருகின்றன. சென்னையின் தற்போதைய விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறன் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. பெங்களூரு, ஐதராபாத் என தென் மாநிலங்களில் உள்ள மற்ற பல விமான நிலையங்கள் சென்னையை முந்தி செல்கின்றன.</p><p>பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டம் கைவிடப்​பட்​டால் அந்த பகுதியின் ஒட்​டுமொத்த போக்​கு​வரத்து மற்​றும் வணிக வளர்ச்​சியும் பெரிய அளவில் தடைபடும். மெட்ரோ ரெயில் மற்​றும் சாலை உள்​கட்​டமைப்​புத் திட்டங்களின் நிலையும் கேள்விக்குரியாகி விடும். பூந்தமல்லி வரை இருக்கும் மெட்ரோ ரெயில் திட்​ட​மும் பரந்​தூரை மையப்​படுத்தி நீட்​டிக்கப்படவும் திட்டமிடப்பட்டு இருந்தது. </p><p>பரந்தூர் விமான நிலையத்தை முதன்​மைப்​படுத்தி பரந்​தூர் வழி​யாகச் செல்​லும் வகை​யில் சென்னை - பெங்​களூர் விரைவு வழிச்​சாலை உருவாக்கப்​பட்​டு வருகிறது. வி​மான நிலை​யம் நிறுத்​தப்​பட்​டால், பல  கோடி மதிப்​பீட்​டில் உரு​வாக்​கப்​பட்ட சென்னை - பெங்​களூர் விரைவுச் சாலை மற்​றும் உள்​கட்​டமைப்​பு திட்டங்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுகிறது.</p><p>தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும்,  உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை பொறுத்தவரையில் த.வெ.க. அரசு அரசியலை விடுத்து மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடும் முடிவை திரும்ப பெற வேண்டும்  என  கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் நலனை மனதில் கொண்டு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி முழுவீச்சில் நடத்தி  முடித்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">bc1989a0-d6c2-4e0e-8003-e9646eb97baf</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:02:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:02:27.761Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Rain,கனமழை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/27o6bdd7/rain-in-chennai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/27o6bdd7/rain-in-chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டியும் வருகிறது. நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. திடீர் மழையை எதிர்பார்க்காத மக்கள் பலரும் குடை எதுவும் இல்லாததால், மழையில் நனைந்தபடி சென்றதை பார்க்க முடிந்தது.</p><p>இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருந்த நிலையில், இரவு 8 மணியளவில் திடீரென மழை வெளுக்கத் தொடங்கியது. சென்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி, எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை பெய்து வருவதால் சென்னையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பலரும் மழையில் நனைந்தபடியே சென்றதையும் பார்க்க முடிந்தது.</p>]]></content:encoded></item><item><title>‘முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்’ - சேகர்பாபு எம்.எல்.ஏ.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lord-murugan-himself-will-vote-for-the-dmk-mla-sekar-babu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lord-murugan-himself-will-vote-for-the-dmk-mla-sekar-babu#comments</comments><guid isPermaLink="false">5a437024-d638-418d-9c69-bfe4c701f5ae</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:51:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:51:15.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sekar Babu,சேகர்பாபு,முருகப்பெருமான்,Lord Murugan,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/owyg0flt/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/owyg0flt/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“அரசியலுக்காக நாங்கள் ஒருபோதும் ஆண்டவனை பயன்படுத்துவது இல்லை. நாங்கள் பக்தியை வைத்து பகை வளர்ப்பவர்கள் அல்ல, பக்தியை வைத்து இறை நம்பிக்கையை வளர்ப்பவர்கள். திருச்செந்தூர் முருகன் கோவிலை தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், 400 கோடி ரூபாய் செலவில் புனரமைத்துள்ளார். </p><p>எல்லாம் வல்ல தமிழ்க்கடவுளான முருகனுக்கு 22 நாடுகள் பங்கேற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்திக் காட்டியவர். பழனி முருகன் கோவிலுக்கு பெருந்திட்ட வரைவு வாயிலாக குடமுழுக்கை நடத்தியது நாங்கள்தான். முதல் படை வீடான திருப்பரங்குன்றத்திலும் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் குடமுழுக்கை கண்டோம். மருதமலையிலும், சுவாமிமலையிலும் பக்தர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு, மின்தூக்கியை நாங்கள்தான் கொண்டுவந்தோம். </p><p>முருகப்பெருமானுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்குமேயானால், தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பணிகளுக்காக, தி.மு.க.வுக்குத்தான் அவர் வாக்களித்திருப்பார். அந்த அளவிற்கு தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைக்கு பெருமை சேர்த்த ஆட்சி தி.மு.க. ஆட்சி.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி அருகே 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/13th-century-jewish-inscription-found-near-krishnagiri</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/13th-century-jewish-inscription-found-near-krishnagiri#comments</comments><guid isPermaLink="false">b3c3170b-e689-4c21-9d6c-53f0786784f4</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:42:44 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:42:44.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,Krishnagiri,கல்வெட்டு,Jews,யூதர்கள்,கண்டெடுப்பு,Inscription,discovered</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/g2cjimef/stone.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கல்வெட்டு ]]></media:title><media:description type="html"><![CDATA[ 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/g2cjimef/stone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">கிருஷ்ணகிரி </a>அருகே ஆனந்தூரில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய யூதர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ளது ஆனந்தூர் கிராமம். இங்குள்ள பழமை வாய்ந்த தான்டோன்றீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள புதர்களை பொதுமக்கள் அண்மையில் அகற்றினர்.</p><p>கல்வெட்டு</p><p> அங்கு பழங்கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">கல்வெட்டு</a> ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.</p><p>இது குறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:-</p> <h2>யூதர்கள் குறித்த கல்வெட்டு</h2><p>ஆனந்தூரில் கண்டறியப்பட்டுள்ள யூதர்கள் குறித்த கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கொச்சியில் யூதர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடியேறி இருந்தாலும், இதுவரை யூதர்கள் குறித்து தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தை அடுத்த வாலாந்தரவை என்ற ஊரில் மட்டும் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.</p> <h2>13-ம் நூற்றாண்டை சேர்ந்தது</h2><p>தற்போது 2-வதாக யூதர்களை பற்றிய கல்வெட்டு ஆனந்தூரில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே குலோத்துங்கன் காலத்திய வணிகக்குழு கல் வெட்டு, 3 நடுகற்கள் ஆகியவை தான்தோன்றீஸ்வரம் கோவில் பகுதியில் புதர்களில் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கிடைத்துள்ள கல்வெட்டும் வணிகக்குழு கல்வெட்டே ஆகும். சூதகர், மண்டல வணிகர், தென்னி லங்கை வளஞ்சியர், எழுநூற்றுவர் ஆகிய 4 வணிகக்குழுக்கள் இணைந்து, இங்குள்ள தான்தோன்றீஸ்வரமுடைய நாயனார் கோவிலில் ஒரு மண்டபத்தை கட்டிய செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.</p><p>இதில் குறிப்பிடப்படும் நான்கு வணிக குழுக்களில் முதலாவது இருப்பது சூதகர் என்பதாகும். யூதர் என்பதையே இங்கு சூதகர் என குறிப்பிட்டுள் ளனர். 13-ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல்வெட்டில் வணிகக்குழுக்களில் ஒருவராக யூதர்கள் குறிக்கப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மழைநீர் வடிகால் பணிகளை முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறைவு செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rainwater-drain-works-must-be-completed-with-proper-safety-measures-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rainwater-drain-works-must-be-completed-with-proper-safety-measures-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">f2067d14-3cf1-4cf6-9568-427b9a1426f7</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:34:30 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:34:30.905Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக,மழைநீர் வடிகால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/94bjpmdn/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/94bjpmdn/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறைவு செய்திட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை அண்ணாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>மழைநீர் வடிகால் பணிக்காகப் பள்ளங்கள் தோண்டப்படும்போது, அவற்றைச் சுற்றி உரிய தடுப்புச் சுவர்கள், எச்சரிக்கைப் பலகைகள் உள்ளிட்ட அடிப்படைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்கூட முறையாகச் செய்யப்படாததே ஒரு உயிர் பறிபோகக் காரணமாக அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும் செயல்படுத்தப்படும் மழைநீர் வடிகால் பணிகள், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளின் ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் ‘மரண வடிகால்’ பணிகளாக மாறி வருவது வேதனைக்குரியது.</p><p>முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகளால் பெண் ஒருவரின் உயிர் பறிபோன பின்னர் விசாரணை நடத்துவதும், அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்வதும் நிரந்தரத் தீர்வாக அமையாது என்பதை தவெக அரசு இனியாவது உணர வேண்டும்.</p><p>எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்படாத வகையில், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறைவு செய்திட வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘தினத்தந்தி படித்து வளர்ந்தவன் நான்’ - சட்டமன்றத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-grew-up-reading-dina-thanthi-said-minister-viswanathan-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-grew-up-reading-dina-thanthi-said-minister-viswanathan-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">96f7ecbb-d36a-45be-9175-68350a3db093</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:27:07 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:27:07.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தினத்தந்தி,Dailythanthi,உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்,Minister Viswanathan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/srgi9tu0/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/srgi9tu0/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரும், மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான விஸ்வநாதன், சட்டமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-</p><p>“வாழ்க்கை துவங்குகிற பொழுது சிலருக்கு வசந்தமாக துவங்கும், சிலருக்கு வசதியோடு துவங்கும். ஆனால் வாழ்க்கை எனக்கு துவங்குகிற பொழுது வசந்தமும் இல்லை, வசதியும் இல்லை. </p><p>நானே எனது வாழ்க்கையை உருவாக்கி, குட்டை, குளங்களிலும், ஓடுகிற நதியிலும் என் ஆடைகளை துவைத்து, சைக்கிளை மிதித்து, தினந்தோறும் தினத்தந்தி பத்திரிகையை படித்து வளர்ந்து, அரசியல் ஆசையால் இன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்திருக்கிறேன். ஒரு அரசியல் தலைவராக நான் பெருமையோடு இங்கு நிற்கிறேன்.</p><p>காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாளைய வருங்காலத்தின் பிரதமர், என் தலைவர் ராகுல் காந்தி என்னை சட்டமன்றத்திற்கு அனுப்புகிற வாய்ப்பினை எனக்கு கொடுத்திருக்கிறார். நான் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒருவன். ஆனால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒருவனை, நான் அனுப்பிய ஒரு ஆடியோவின் மூலமாக, ‘நான் ஒதுக்கப்பட்டேன், வாய்ப்புகளை எனக்கு வழங்கித்தான் ஆக வேண்டும்’ என்று என் தலைமைக்கு நான் கொடுத்த வேண்டுகோளின் காரணத்தினால், ஒரே இரவில் அந்த குரல் என் தலைவனுக்கு கேட்டது. மறுநாள் காலை மேலூர் சட்டமன்ற பொதுத்தொகுதியின் வேட்பாளராக நான் ஆக்கப்பட்டேன்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>தேனியில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-announces-manimandapam-for-director-bharathiraja-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-announces-manimandapam-for-director-bharathiraja-in-theni#comments</comments><guid isPermaLink="false">043ebc90-ba90-4a59-99ac-175e1d752af2</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:09:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:09:14.307Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514964</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,Director Bharathiraja,இயக்குநர் பாரதிராஜா,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/sf6ez84a/7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/sf6ez84a/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சினிமா செய்திகள் (Cinema News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளை போற்றும் வகையில் ரூ.2.50 கோடியில் தேனியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/o76i222a/7a.jpg" /></figure><p>இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் உடல் தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. </p><p>மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.</p><p>இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.</p><p>இன்று சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் பாரதிராஜாவின் சாதனைகளை போற்றும் வகையில் ரூ.2.50 கோடியில் தேனியில் மணி மண்டபம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். இது பாரதிராஜா ரசிகர்கள் மற்றும் உறவினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம் - பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-free-travel-scheme-for-women-pmk-mla-sowmya-anbumani-welcomes-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-free-travel-scheme-for-women-pmk-mla-sowmya-anbumani-welcomes-the-move#comments</comments><guid isPermaLink="false">9b74702c-f7ab-450f-8dae-03ff26b692c7</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:48:39 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:48:39.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sowmiya Anbumani,சவுமியா அன்புமணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5fwyeacl/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5fwyeacl/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். </p><p>முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். </p><p>வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. திருநங்கையரும் (Transgender) கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என முதல்-அமைச்சர் விஜய் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். </p><p>இந்நிலையில், மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கத்திற்கு பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-</p><p>“ஏராளமான பெண்களுக்கு இன்றுவரை பொருளாதார சுதந்திரம் இல்லாத நிலைதான் உள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தை நம்பி பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பது மிகவும் பயனுள்ள, நல்ல விஷயமாக இருக்கும். </p><p>இது ஏற்கனவே இருக்கின்ற திட்டம்தான் என்றாலும், அந்த திட்டத்தை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்த திட்டம் மிகவும் வரவேற்கக் கூடிய திட்டம். 10 ரூபாய் மிச்சமானாலும் பெண்களுக்கு அது மிகவும் உபயோகமாக இருக்கும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-22-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-22-districts#comments</comments><guid isPermaLink="false">cec5eb63-d2b5-43f3-b849-4583919ce8dc</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:41:44 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:41:44.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9ackip4w/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9ackip4w/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலைகளை புனரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/roads-must-be-repaired-on-war-footing-says-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/roads-must-be-repaired-on-war-footing-says-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">c64d782c-5b0e-4e57-a9d6-750f866aec08</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:37:10 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:37:10.916Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,நடவடிக்கை,வலியுறுத்தல்,roads,சாலைகள்,போர்க்கால அடிப்படை,restore,Urges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/na9k05xm/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/na9k05xm/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாலைகளை புனரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல். இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/nainar-nagendran">நயினார் நாகேந்திரன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2> வருத்தமளிக்கிறது</h2><p>மக்களின் உயிரை குடிக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D">மழைநீர் வடிகால்</a> பள்ளங்கள். சென்னை அண்ணாநகரில் சாலையோரம் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த பெண் ஒருவர் அநியாயமாக உயிரிழந்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வருத்தமளிக்கின்றன. </p><h2>மழைநீர் வடிகால் பள்ளங்கள்</h2><p>சென்னை முழுவதிலும் இதுபோன்ற மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளங்கள் நிறைய தென்படுகின்றன. சாதாரண நேரத்தில் அவைகளை கடந்து செல்வது எளிதாக இருந்தாலும், மழை காலங்களில் முழுக்க நீர் நிரம்பி சிறு குளம் போலவே காட்சியளிக்கும் அந்தப் பள்ளங்களை பெரும்பாலான மக்கள் கவனிக்க தவறி விடுகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. </p> <h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, தமிழகம் முழுவதிலுமுள்ள மழைநீர் வடிகால் பள்ளங்களை உடனடியாக மூடவும், குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளை புனரமைக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டுமென முதல்-அமைச்சர் விஜய்யை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-thanks-minister-rajmohan-for-raising-her-plea-in-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-thanks-minister-rajmohan-for-raising-her-plea-in-assembly#comments</comments><guid isPermaLink="false">65715878-fcb8-4d4f-a87d-e4a097c2e62a</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:13:42 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:13:42.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோரிக்கை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Legislative Assembly,Request,நன்றி,சட்டமன்றம்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dtu53pnj/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி - வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dtu53pnj/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கன்னிப்பேச்சு</h2><p>சட்டமன்றத்தில் இனி ‘கன்னிப் பேச்சு’ என்ற வார்த்தை இடம்பெறக் கூடாது. கடந்த 2021-ஆம் ஆண்டு கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று, முதல் முறையாக நான் எம்.எல்.ஏ. ஆனபோது, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட பலரும் அதை ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிட்டனர்.</p> <h2> நாகரிகமாக இருக்கும்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சட்டமன்றத்தில்</a> முதல் முறையாக எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தபோது, “வழக்கமாக சட்டமன்றத்தில் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுகிறீர்கள். ‘கன்னி’ என்ற வார்த்தை இளம் வயது பெண்ணை குறிக்கும் வார்த்தை. என்னை பொறுத்தவரை, இந்த முதல் பேச்சை ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுகப்பேச்சு’, ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிட்டால் நாகரிகமாக இருக்கும்” என்றேன்.</p><h2>சட்டப்பேரவை தலைவர் அப்பாவு</h2><p>அதற்கு பதிலளித்த அன்றைய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாக கூறினார். ஆனால், இப்போது புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் ‘கன்னிப்பேச்சு’ என்றே குறிப்பிடுகின்றனர்.</p> <h2>அறிக்கை</h2><p>இதை மாற்றி, ‘அறிமுக பேச்சு’ அல்லது ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிடுமாறு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் தெரிவிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தேன். அது பரவலாக கவனம் பெற்றிருந்தது. பலரும் என்னை தொடர்புகொண்டு, “முக்கியமான ஒரு விஷயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று பாராட்டினர்.</p><h2>எதிர்ப்பு</h2><p>அதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இன்று பாமக சட்டமன்ற கட்சி தலைவர் சௌமியா அன்புமணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. லதாவும், ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடுவதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.</p><h2>அறிமுக உரை</h2><p>அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a>, “கடந்த சட்டப்பேரவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘கன்னிப்பேச்சு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக ‘அறிமுக உரை’ என்று பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கியிருந்தார். </p><p>அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் இதைப் பரிசீலிப்பதாக கூறியிருந்தார். சட்டப்பேரவை தலைவர் இதை பரிசீலித்து, ‘அறிமுக உரை’ என்று குறிப்பிடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.</p><h2>நன்றி</h2><p>எனது கோரிக்கையை ஏற்று, அதை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இனி சட்டமன்றத்தில் பேசும் எந்த உறுப்பினரும், ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுக உரை’ அல்லது ‘முதல் உரை’ என்றே குறிப்பிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை மாற்றக்கூடாது’ - அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/physical-education-classes-in-schools-must-not-be-changed-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/physical-education-classes-in-schools-must-not-be-changed-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">2cd928a3-c09c-47ac-bc72-06a64684da54</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:55:29 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:55:29.197Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/mdxpj5oo/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/mdxpj5oo/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற மானியக்கோரிக்கை உரையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;-</p><p>“எந்த சமூகத்தை பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயே வரகூடாது என்று சொன்னார்களோ, அந்த சமூகத்தில் இருந்து வந்த என்னை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கிய நமது முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரால் மட்டுமே இது சாத்தியம். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஒரு சபாநாயகருக்கு ரசிகர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்றால், அவர் நமது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்தான். அவரிடாம் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். </p><h2>புதிய வெற்றிக் கல்வி</h2><p>எது கல்வி? புத்தகத்தில் இருப்பது எல்லாம் அறிவை கொடுத்துவிடும் என்றால், அடுத்தவர்கள் எழுதியதை அச்செடுத்து எழுதுபவர்கள் அறிவாளிகள் ஆகிவிடுவார்களா? இல்லை. சுயமாக சிந்திக்கக் கூடிய மனிதர்களை உருவாக்குவதுதான் உண்மையான கல்வி. அதுதான் நமது புதிய வெற்றிக் கல்வி. </p><p>இதை பாடத்திட்டத்தில் இருந்து நாம் தொடங்க முடிவு செய்துள்ளோம். இத்தனை நாட்கள் நாம் படித்து வந்த பாடத்திட்டம் நமக்கு இதுவரை உதவி செய்துள்ளது. அதில் சிறிய மாற்றங்களை செய்ய உள்ளோம். </p><h2>தன் வேகத்தில் கற்கும் குழந்தை</h2><p>புத்தகங்களில் இருப்பது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக புரிவது இல்லை. இதில் சராசரி மாணவர்கள்(Average Student) என்று யாரும் கிடையாது. நமது த.வெ.க. அரசின் பள்ளிக்கல்வித்துறை இனி யாரையும் சராசரி மாணவர் என்று சொல்லக் கூடாது என்று தீர்மானித்துள்ளது. </p><p>மெல்ல கற்கும் குழந்தை என்று கூட சொல்ல வேண்டாம், ‘தன் வேகத்தில் கற்கும் குழந்தை’ என்றுதான் அவர்களை குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு தேவையான, சரியான கல்விச் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம் என்பதை விட, எப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம் என்பதைதான் எங்கள் மானியக் கோரிக்கை யோசிக்கிறது. </p><h2>உடற்கல்வி வகுப்புகள்</h2><p>சமீபத்தில் ஒரு பள்ளி சார்ந்த பிரச்சினையின்போது முதல்-அமைச்சர் விஜய் என்னை அழைத்து பேசினார். அந்த பிரச்சினை குறித்து நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை அவரிடம் விளக்கினேன். அவர் என்னை நிறுத்தி, ஒரு மாணவர் தவறு செய்கிறார் என்றால், அந்த மாணவரை குற்றவாளியாக பார்க்காமல், பாதிக்கப்பட்டவராக பார்க்க வேண்டும் என்று கூறினார். </p><p>மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் எப்படி தடுப்பது? இதற்கு நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் உடற்கல்வி வகுப்புகள்தான். தமிழ்நாட்டில் எந்தவொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி வகுப்பைக் கூட மாற்றம் செய்யக் கூடாது என த.வெ.க. அரசு முடிவெடுத்திருக்கிறது. உடற்கல்வி வகுப்பை மாற்றிவிட்டு, கணிதம் அல்லது அறிவியல் வகுப்பு எடுக்கிறார்கள். என்றைக்காவது கணித வகுப்பை மாற்றிவிட்டு உடற்கல்வி வகுப்பிற்கு அனுப்பியிருக்கிறார்களா? </p><h2>ஆசிரியர்கள் பிரச்சினை</h2><p>இந்த சூழலை மாற்றுவதற்காக, உடலை உறுதி செய்வதற்காக, மாணவர்களின் சிந்தனையை செதுக்குவதற்காக பல்வேறு அறிவிப்புகளை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆசிரியர்கள் பிரச்சினையை பேசி தீர்ப்பதற்காக உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு, ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>புதிய ஐபோன் மாடல்களின் விலையை 9% வரை உயர்த்தும் ஆப்பிள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/apple-to-raise-prices-of-new-iphone-models-by-up-to-9</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/apple-to-raise-prices-of-new-iphone-models-by-up-to-9#comments</comments><guid isPermaLink="false">a97652e8-f4a4-44b7-a66c-61324296bbe1</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:45:54 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:45:54.084Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>America,Apple iPhones,அமெரிக்க டாலர்,பங்குச் சந்தை,ஐபோன் தொழிற்சாலை,விலை  உயர்வு,iphone price hike</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/05/04/43771378-3a.webp" width="750"><media:title type="html"><![CDATA[ ஆப்பிள் நிறுவனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்க டாலர் அடிப்படையில் சுமார் 9 சதவீதம் வரை உயர்த்த திட்டம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/05/04/43771378-3a.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம், தனது வரவிருக்கும் புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">ஐபோன்</a> (18 புரோ) மாடல்களின் விலையை <a href="https://www.dailythanthi.com/news/world">அமெரிக்க டாலர் </a>அடிப்படையில் சுமார் 9 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சந்தையில் நிலவும் கடுமையான உதிரிபாகங்கள் பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2>விலை உயர்வுக்கான காரணம்</h2><p>ஆப்பிள் நிறுவனம் தனது அடிப்படை ப்ரோ மாடலின் விலையை 100 அமெரிக்க டாலர் வரை உயர்த்த உள்ளது. இதன் மூலம் இதன் ஆரம்ப விலை சுமார் $1,199 (இந்திய ரூபாய் மதிப்பு சுமார் ரூ.1,14,663) ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் மெமரி சிப்கள் மற்றும் சிலிக்கான் செயலிகளின் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி செலவு பெருமளவு அதிகரித்துள்ளது. ஆப்பிளின் முதன்மை போட்டியாளர்களான சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது புதிய தயாரிப்புகளின் விலையை 100 டாலர் வரை உயர்த்தியுள்ளன.</p><h2>சந்தையில் ஏற்படும் மாற்றங்கள்</h2><p>ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தனது ஐபேட் மற்றும் மேக்புக் சாதனங்களின் விலையை உலக சந்தையில் கணிசமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலர் மதிப்பிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி வரிகள் காரணமாக, இந்தியாவில் இதன் விலை உயர்வு இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.</p><p>எனினும், இந்த விலை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ஆப்பிள் நிறுவனம்</a> இன்னும் வெளியிடவில்லை. வழக்கமாக செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆப்பிளின் மெகா வெளியீட்டு விழாவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்க்கரை விலை உயர்வு: ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விலை கிலோவுக்கு ரூ.80 அதிகரிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sugar-price-hike-palcoa-price-hiked-by-rs-80-per-kg-in-srivilliputhur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sugar-price-hike-palcoa-price-hiked-by-rs-80-per-kg-in-srivilliputhur#comments</comments><guid isPermaLink="false">c6bba82d-10c7-43fe-ba1a-42d10eaaa315</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:36:36 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:36:36.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்ரீவில்லிபுத்தூர்,Srivilliputhur,Sugar,விலை அதிகரிப்பு,சீனி,பால்கோவா,sugar price hike</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/x2t2agkm/46.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பால்கோவா]]></media:title><media:description type="html"><![CDATA[ பால்கோவா விலை கிலோவுக்கு ரூ.80 அதிகரிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/x2t2agkm/46.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>தமிழகத்தில் சர்க்கரை விலை அதிரடியாக உயர்ந்துள்ளதை அடுத்து, உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் விலையும் கிலோவுக்கு ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">இனிப்பு</a> பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>கிலோ ரூ.400-க்கு விற்பனை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விருதுநகர் மாவட்டம் </a>ஸ்ரீவில்லிபுத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட பால்கோவா தயாரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு தயாரிக்கப்படும் பால்கோவாக்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.320-க்கு விற்கப்பட்ட பால்கோவா, தற்போது ரூ.80 உயர்ந்து ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரை கிலோ பால்கோவா ரூ.160-லிருந்து ரூ.200 ஆகவும், கால் கிலோ ரூ.80-லிருந்து ரூ.100 ஆகவும் அதிகரித்துள்ளது.</p><h2>விலை உயர்வுக்கான காரணங்கள்</h2><p>தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:-</p><p>"பால்கோவா தயாரிப்பிற்கு பால் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டும் முக்கிய மூலப்பொருட்களாகும். கடந்த சில நாட்களாக சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.25 வரை உயர்ந்து, தற்போது ரூ.72-க்கு விற்கப்படுகிறது. அத்துடன் பால் தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவுகளும் அதிகரித்துள்ளன. இந்த கடுமையான விலை உயர்வால் பால்கோவா விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் விலை உயர்வு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை சற்று சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>19 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/19-month-baby-organ-donation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/19-month-baby-organ-donation#comments</comments><guid isPermaLink="false">bf9d8db7-9fba-4f40-93c4-e1d0ebce1af5</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:35:18 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:35:18.758Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குழந்தை,child,brain death,மூளைச்சாவு,உடல் உறுப்புகள் தானம்,organs donated</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9dqisfc3/hospital.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 19 மாத குழந்தை]]></media:title><media:description type="html"><![CDATA[ 19 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9dqisfc3/hospital.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெற்ற பிள்ளையை இழந்த துயரத்திலும், பிற உயிர்களை காக்க முன்வந்த பெற்றோரின் நெகிழ்ச்சியான செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ செய்துள்ளது. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, மிகக் குறைந்த வயதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">உறுப்பு தானம்</a> செய்த பெருமையை இந்த 19 மாத  குழந்தை பெற்றுள்ளது.</p> <h2>தீவிர சிகிச்சை</h2><p>சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 'தலைநீர் கோர்வை' எனப்படும் மூளை பாதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த 19 மாதக் குழந்தை  ஒன்று அனுமதிக்கப்பட்டது. அந்த பிஞ்சு குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 6 நாட்களாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.</p><h2>உடல் உறுப்புகள் தானம்</h2><p>இருப்பினும், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81">மூளைச்சாவு</a> அடைந்தது. தங்களின் செல்ல குழந்தை இனி மீண்டு வரமாட்டான் என்ற அதிர்ச்சி தகவலை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர். இந்த துயரமான சூழ்நிலையிலும், தங்களின் குழந்தை மற்றவர்களின் உடலாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில், குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.</p> <h2>பெற்றோரின் சம்மதம்</h2><p>பெற்றோரின் சம்மதத்தை தொடர்ந்து, 19 மாத குழந்தையிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. குழந்தையின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு, உறுப்புகள் தேவைப்படும் மற்ற குழந்தைகளுக்கு பொருத்தப்பட உள்ளன. சோகத்திலும் துணிச்சலான முடிவெடுத்து, பல உயிர்களுக்கு மறுவாழ்வு தந்துள்ள அந்த பெற்றோரின் தியாகத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.</p> ]]></content:encoded></item><item><title>‘அரிசி பருப்பு, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-must-be-taken-to-curb-the-rise-in-prices-of-rice-lentils-and-sugar-communist-party-of-india-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-must-be-taken-to-curb-the-rise-in-prices-of-rice-lentils-and-sugar-communist-party-of-india-urges#comments</comments><guid isPermaLink="false">b4c38a7a-56ab-417c-9c6e-7ab9508a1b21</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:22:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:22:52.008Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jfygrzlq/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jfygrzlq/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.48 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது ரூபாய் 70 வரை விலை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால்  விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p>பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்றவை நெருங்கி வரும் காலத்தில் சர்க்கரை தேவை அதிகரிக்கும். இந்நிலையில் அதன் விலை ஏற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும்.</p><p>சர்க்கரை விலை உயர்வால் டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, வணிக நிறுவனங்களுக்கான  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக  உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ விலை  15 ரூபாய் வரை உயர்ந்தது. காபி விலை ரூ 20 வரை உயர்ந்தது. தற்போது அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.</p><p>கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொன்னி அரிசி ரூபாய் 80க்கு விற்பனை ஆகிறது. இட்லி அரிசி ரூபாய் 35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பருப்பு வகைகளும் விலை உயர்ந்துள்ளன.</p><p>உளுத்தம் பருப்பு கிலோ ரூபாய் 120 லிருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு 80 லிருந்து 100 ஆகவும், தனியா 160 லிருந்து ரூ250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. அதனால் ஏழை, எளிய  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <p>அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது துரதிஷ்டவசமானது: ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-to-drop-parandur-greenfield-airport-a-setback-for-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-to-drop-parandur-greenfield-airport-a-setback-for-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">0f630ad7-e6ff-45c7-a50d-4818b075fe1e</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:18:00 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:18:00.804Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>report,அறிக்கை,பரந்தூர் விமான நிலையம்,Paranthur Airport,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Easwaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5jm39ie5/e.r.eswaran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஈ.ஆர்.ஈஸ்வரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது துரதிஷ்டவசமானது: ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5jm39ie5/e.r.eswaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தமிழ்நாடு சட்டமன்றத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது என்று முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது துரதிஷ்டவசமானது என்று ஈஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்</a> பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p> <h2>எதிர்கால தேவை</h2><p> புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பசுமை விமான நிலையமாக பரந்தூரில் அமைப்பதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயலாக்கத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.</p> <h2>கடந்த கால அரசு </h2><p> ஐந்து ஆண்டு காலமாக இடத்தை தேடி நான்கு இடங்களை மத்திய அரசின் ஒப்புதலுக்கு கடந்த கால அரசு கொடுத்தது. அதிலே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">பரந்தூர்</a> தான் தகுதியான இடமென்று இந்திய விமான போக்குவரத்து துறை ஒப்புதல் கொடுத்தது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக முடியும் தருவாயில் இருந்தது. </p><h2>மெட்ரோ ரெயில் திட்டம்</h2><p>விமான நிலையத்திற்கான ஏற்பாடுகள் மட்டுமில்லாமல் விமான நிலையத்தை சென்னை மாநகரத்தோடு இணைக்கும் மெட்ரோ ரெயில் திட்டம், சென்னை - பெங்களூர் விரைவு வழி தடத்தோடு இணைக்கும் திட்டம், செய்யாறு மற்றும் ஒரகடம் போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியை நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கும் திட்டம், சென்னை மாநகரத்தோடு இணைக்க விரைவுச்சாலை வசதி என்று பல்வேறு ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டன. </p><h2> பின்னடைவு</h2><p>இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்தை கைவிட்டு விட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வோம் என்று அறிவித்திருப்பது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.</p> <h2>அறவே இல்லை</h2><p>வேறு பல இடங்களை பார்த்து இந்திய விமான போக்குவரத்து துறையின் ஒப்புதலை பெற்று தேவையான நிலங்களை கையகப்படுத்தி புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால் இன்னும் 15 ஆண்டுகள் ஆகி போகும். அரசினுடைய அறிவிப்பை பார்க்கும் பொழுது இரண்டாவது விமான நிலையம் சென்னைக்கு கொண்டு வரும் திட்டமே இந்த அரசுக்கு அறவே இல்லை என்று தோன்றுகிறது.</p><h2>சர்வதேச விமான நிலையம்</h2><p> பெங்களூர் மற்றும் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையங்கள் தற்போது சென்னை விமான நிலையத்தோடு ஒப்பிடுகையில் மிக பெரும் வளர்ச்சியை பெற்றிருக்கின்றன. பரந்தூர் விமான நிலையத்தை தடுத்திருப்பது தமிழக எல்லை பகுதியில் ஆந்திர அரசு திட்டமிடுகின்ற விமான நிலைய கோரிக்கைக்கு வலு சேர்க்கும். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் இருப்பவர்கள் கர்நாடகாவில் இருக்கின்ற பெங்களூர் விமான நிலையத்தை பயன்படுத்துவது போல சென்னை பகுதியிலும், வட மாவட்டங்களிலும் உள்ள மக்கள் உருவாக போகும் ஆந்திர சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள். </p><h2>மறுபரிசீலனை</h2><p>அதன்மூலம் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களுடைய பொருளாதார வளர்ச்சிக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை விட்டு கொடுப்பதாக அமையும். தமிழகத்தினுடைய தொழில்துறையினரை தமிழக அரசு கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் பரந்தூர் விமான நிலைய விசயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உங்களின் அரசியல் வீம்பிற்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்காதீர்கள் முதல்வரே - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-block-tamil-nadu-growth-for-political-grandstanding-chief-minister-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-block-tamil-nadu-growth-for-political-grandstanding-chief-minister-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">c9e4e3d0-e49f-4b02-aeb1-9e04f6c75364</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:15:35 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:15:35.199Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport,புதிய விமான நிலையம்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/o9mhrc9c/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/o9mhrc9c/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்திற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்யாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக நீங்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு. பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு? விமான நிலையத்திற்கான இடத்தை புதிதாக தேர்வு செய்வது என்பது அத்தனை எளிதா?</p><p>சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, பயணப் போக்குவரத்து, மணலின் தன்மை, Need &amp; Demand மற்றும் பல அம்சங்களையும் கோணங்களையும் ஆராய்ந்ததன் அடிப்படையில்தான் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலின்போது பரந்தூரை நீங்கள் தேர்தல் பரப்புரைக் களமாக பயன்படுத்திக் கொண்ட ஒரே காரணத்திற்காக, விமான நிலையம் அமைப்பதற்கான மிகப்பெரிய “Process”- ஐயும் மீண்டும் முதலில் இருந்து துவங்க நீங்கள் முடிவு செய்திருப்பது, நேர விரயம், பண விரயம், மற்றும் வளங்களின் விரயம். உங்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் தடை போடுவது கண்டனத்திற்குரியது.</p><p>அதுமட்டுமன்றி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட1,700 ஏக்கர் நிலங்களை உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது? நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்படி, இந்த நிலங்களை விமான நிலையம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா? மேலும் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுத்த மக்களுக்கு உங்கள் அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?</p><p>எனவே ஆரம்பம் முதலே எங்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்திற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? பதிலளியுங்கள் ஜோசப் விஜய் அவர்களே! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் மரியவில்சனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிப்போம் - அன்பில் மகேஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-lodge-a-complaint-with-the-directorate-of-vigilance-and-anti-corruption-against-minister-maria-wilson-anbil-mahesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-lodge-a-complaint-with-the-directorate-of-vigilance-and-anti-corruption-against-minister-maria-wilson-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">385fa427-75bd-41e8-8d2f-6dc74b9ab2ac</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:12:38 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:12:38.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,TN govt,Anbil Mahesh,அன்பில் மகேஸ்,மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/146dsz5y/Anbil-mahesh.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்பில் மகேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/146dsz5y/Anbil-mahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று அவையில் பேசிய  நிதி அமைச்சர் மரிய வில்சன் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கடந்த திமுக ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்   நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், திமுக ஆட்சியில் பல இடங்களில் கட்டாயப்படுத்திதான் லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது. அதில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஒரு ஆள் நான். என்னுடைய பள்ளிக்கே லஞ்சம் வாங்கப்பட்டது. அதற்கு நானே சாட்சி. சென்னை தியாகராய நகரில் வைத்து யார் மூலமாக பணம் பெற்றார்கள் என்பதை பற்றி என்னால் சொல்ல முடியும். இது பற்றி என்மீது என்ன வழக்கு போட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன்." எனக் கூறியிருந்தார். </p> <p>அமைச்சர் மரிய வில்சனின் இந்த குற்றச்சாட்டிற்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் மரிய வில்சன் லஞ்சம் கொடுத்தேன் என்று கூறுவதே முதலில் தவறு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு என்மீது முன்வைக்கப்பட்டது. அவர்களிடம் ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டேன். பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கியவரிடமும் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>அதன் அடிப்படையில் இன்று அமைச்சர் பேசினாரா எனத் தெரியவில்லை. ஒரு அமைச்சர் லஞ்சம் கொடுத்தேன் என்று கூறுவதே தவறு. முதலில் அவரிடம் விசாரணை நடத்தவேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் கண்டிப்பாக இதுகுறித்து புகார் அளிப்போம். உடனடியாக அமைச்சரை அழைத்து விசாரிக்கவேண்டும். அன்பு மொழி, கருணை மொழி தான் தெரியும் என பேசிய அமைச்சர் மரிய வில்சன், என் மீது அவதூறு கூறுகிறார். அவர்கள் செய்வது அனைத்தும் மடைமாற்றம்." எனத் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் முடங்கிய டாஸ்மாக் கடைகள்; மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-shut-in-nellai-employees-lay-siege-to-manager-office</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-shut-in-nellai-employees-lay-siege-to-manager-office#comments</comments><guid isPermaLink="false">180f689b-8be5-4069-98be-7c2e7fded2a7</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:17:03 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:17:03.268Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tasmac Shops,ஊழியர்கள் போராட்டம்,Employees protest,டாஸ்மாக் கடைகள் மூடல்,நெல்லை அணி,In Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/kp7zcs84/tasmac.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ டாஸ்மாக் கடைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் முடங்கிய டாஸ்மாக் கடைகள்; மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/kp7zcs84/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக்</a> கடைகளும் இன்று மூடப்பட்டன. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>திடீர் மூடல் அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை வழக்கம் போல் திறக்கப்பட வேண்டிய அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் திடீரென பூட்டப்பட்டுக் கிடந்தன. கடைகள் திறக்கப்படாததை கண்டு அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர்கள், கடைகளின் முன்பு நீண்ட நேரம் ஏமாற்றத்துடன் தவித்து நின்று அலைமோதினர். மாவட்டம் முழுவதும் மது விற்பனை முற்றிலும் முடங்கியது.</p><h2> முற்றுகை போராட்டம் தீவிரம்</h2><p>நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாதிக்கப்பட்ட தங்களது சக ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்ட அவர்கள், உள்ளே புகுந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2> போலீஸ் குவிப்பு</h2><p>ஊழியர்களின் இந்த திடீர் முற்றுகைப் போராட்டத்தால் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலக வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க, சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த திடீர் கடைகள் மூடல் மற்றும் ஊழியர்களின் முற்றுகைப் போராட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் இன்று பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-7-pm-in-21-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-7-pm-in-21-districts#comments</comments><guid isPermaLink="false">b6af7f78-d70f-4354-b9db-0430778e4418</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:57:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:57:40.060Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/68ar0dtm/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/68ar0dtm/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி அரியலூர், கடலூர், ஈரோடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவாரூர், திருச்சி, கோயம்புத்தூர், திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் சாலை மறியல்; 250 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/temporary-sanitation-workers-road-blockade-in-chennai-250-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/temporary-sanitation-workers-road-blockade-in-chennai-250-arrested#comments</comments><guid isPermaLink="false">175f2fce-3077-4377-bbf9-e02dcf49f576</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:36:45 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:36:45.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrested,சாலை மறியல்,தூய்மைப்பணியாளர்கள்,Sanitation workers protest,Road Blockades</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/vrhb80pa/protest.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தூய்மைப்பணியாளர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் சாலை மறியல்; 250 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/vrhb80pa/protest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை பாரிமுனையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தூய்மைப்பணியாளர்கள்</a> இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளர்களாக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த தி.மு.க. ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.</p><h2>தேர்தல் வாக்குறுதி</h2><p>"தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது</p><h2>தூய்மைப்பணியாளர்கள் அதிருப்தி</h2><p>தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னரும், இந்த தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர் தங்களின் வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 4 நாட்களாக சென்னையில்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.</p> <h2>முக்கிய கோரிக்கை</h2><p> இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திரண்டு திடீர் பேரணியாக சென்றனர். "முதல்-அமைச்சர் விஜய் எங்களை நேரடியாக சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும்" என போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.</p><h2>மறியலால் பரபரப்பு</h2><p> பேரணியாக முன்னேற முயன்ற தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள், காவல்துறையை கண்டித்து அங்கேயே சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.</p><h2>250 பேர் கைது</h2><p>அப்போது தங்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவாறு சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பணி நிரந்தரம்</a> என்ற கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>மகனின் காதல் விவகாரத்தால் விபரீதம்: விஷம் குடித்து பெண் தற்கொலை - கணவன், மகளுக்கு தீவிர சிகிச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-over-sons-love-affair-woman-dies-by-suicide-after-consuming-poison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-over-sons-love-affair-woman-dies-by-suicide-after-consuming-poison#comments</comments><guid isPermaLink="false">ab3283da-7f73-4240-94f9-6bcd763601f5</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:34:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:34:52.417Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,தற்கொலை,Suicide,Kambam,கம்பம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/a4ip5o07/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/a4ip5o07/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், பெண் உயிரிழந்துள்ளார். அவரது கணவன் மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>தேனி மாவட்டம் கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (47 வயது). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி (40 வயது). இவர்களுக்கு பால்பாண்டி (22 வயது) என்ற மகனும், யோகலட்சுமி (18 வயது) என்ற மகளும் உள்ளனர். பால்பாண்டி பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.</p><h2>மகனின் காதல்</h2><p>இந்த நிலையில் தேனியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாண்டீஸ்வரன் வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பால்பாண்டிக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தெரிய வந்ததும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அவர்களை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.</p><h2>தகராறு</h2><p>இதையடுத்து அவரது உறவினர்கள், பெண்ணின் சாவுக்கு பால்பாண்டிதான் காரணம் எனக்கூறி, கம்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று பாண்டீஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாண்டீஸ்வரன், அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள அரளி விதையை அரைத்து (விஷம்) குடித்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டீஸ்வரன் மற்றும் யோகலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>2031-ல் தமிழக அரசியலில் தவெக  மிகப்பெரிய சக்தியாக இருக்கும் -  கவுண்டபாளையம் கனிமொழி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-will-be-the-biggest-force-in-tamil-nadu-politics-in-2031-kaundapalayam-kanimozhi-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-will-be-the-biggest-force-in-tamil-nadu-politics-in-2031-kaundapalayam-kanimozhi-speech#comments</comments><guid isPermaLink="false">25fcf76d-054c-4064-ab35-eafb11844710</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:20:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:20:34.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Coimbatore,கோவை,விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/6mqffzj7/kanimozi33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக]]></media:title><media:description type="html"><![CDATA[ கவுண்டபாளையம் கனிமொழி பேச்சு 
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/6mqffzj7/kanimozi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>2031-ல் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சக்தியாக இருக்கும் என கவுண்டபாளையம்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF"> தவெக எம்.எல்.ஏ கனிமொழி</a> கூறியுள்ளார்.</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் மக்கள் பணி மற்றும் சாதனை விளக்க நிகழ்ச்சி கோவை கவுண்டம்பாளையதில்  நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், திமுக தரப்பிலிருந்து தமக்கு வந்ததாகக் கூறப்படும் ரூ.15 லட்சம் பேக்கேஜ் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>அவர் பேசியதாவது:</p><p>“கடந்த 2025 நவம்பர் மாதம் முதல், திமுகவின் கரூர் கம்பெனி என்று நான் குறிப்பிடும் தரப்பிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான ஒரு பேக்கேஜ் என்னிடம் வந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்று ஜோதிட ரீதியாக யூடியூப் சேனலில் பேச வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது.</p><h2>மக்களின் தீர்ப்புதான் இறுதி தீர்ப்பு</h2><p>அப்போது நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இல்லை. எங்கள் தலைவரிடமிருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை. இருந்தபோதிலும், அப்போதே ‘திமுக ஆட்சிக்கு வராது’ என்று நான் தெளிவாகக் கூறினேன். ஆனால், திமுகதான் வெற்றி பெறும் என்று சொல்ல வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.</p><p>இன்று இதை நான் வெளிப்படையாகச் சொல்வதற்கு காரணம், மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அரசியலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பணம் கொடுத்து ஜோசியம் மூலம் உருவாக்க முடியாது. மக்களின் தீர்ப்புதான் இறுதி தீர்ப்பு.</p><p>சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எதைப் பேசினாலும் நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். மக்கள் குரலை எழுப்புவதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.</p><h2> ‘அழகான பொம்மை’ </h2><p>சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி பேசுபவர்கள், தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசலாம். என்னைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. ‘அழகான பொம்மை’ என்று சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்த அழகான பொம்மை தேவைப்பட்டால் ஆபத்தான பொம்மையாகவும் மாறும்.</p><p>நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்த தேர்தல்களில் தனது வலிமையை நிரூபிக்கும். 2031-ல் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சக்தியாக இருக்கும்.</p><h2>உள்ளாட்சி தேர்தல்</h2><p>கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஒரு குடும்பத்தில் இருப்பதைப் போல நமக்குள் சிறிய சண்டைகள் இருக்கலாம். ஆனால் வெளியில் இருந்து யாரும் நம்முடைய ஒற்றுமையைப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.</p><p>சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு உறுப்பினரும் கேள்விகளை எழுப்புகின்றனர். இதனால் சபாநாயகருக்கும் தொடர்ந்து பணிச்சுமை ஏற்படுகிறது.</p><p>வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் இடங்களில் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். ஒரு இடத்தையும் பாக்கி வைக்காமல் வெற்றி பெறும் அளவுக்கு மக்கள் நமக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.</p><p>மக்களுக்காக பேசுவதற்கும், மக்களுக்காக நிற்பதற்கும் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அரசியலில் பணம், பொய் பிரசாரம், போலியான கணிப்புகள் ஆகியவற்றை விட மக்களின் நம்பிக்கையும் தீர்ப்புமே முக்கியம்” என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால் புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் - உதயநிதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-halt-will-deter-new-companies-from-coming-to-chennai-udayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-halt-will-deter-new-companies-from-coming-to-chennai-udayanidhi#comments</comments><guid isPermaLink="false">57204753-58b9-458f-9401-3f4263d643a6</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:49:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:49:15.625Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,Chennai,சென்னை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport,new airport,புதிய விமான நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/68fxws0c/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/68fxws0c/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால் புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழல் எழுந்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் சோபா மாடல் (Sofa Model) அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.</p><p>இத்திட்டத்திற்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airports Authority of India), இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Union Civil Aviation Ministry) உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.</p><p>இத்தகைய கடினமான  அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.</p><p>இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.</p><p>பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன. </p><p>ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விமான நிலையம்  திட்டம்  ரத்து: பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பரந்தூர் மக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/airport-project-cancelled-parandur-residents-celebrate-by-bursting-firecrackers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/airport-project-cancelled-parandur-residents-celebrate-by-bursting-firecrackers#comments</comments><guid isPermaLink="false">66b3533c-1ec0-495c-b75e-3a44bc9d87f8</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:39:42 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:39:42.567Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Chennai,airport,விமான நிலையம்,பட்டாசு,Parandur,பரந்தூர் விமானநிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/18e6c4es/pardndur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/18e6c4es/pardndur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் அதிரடி அறிவிப்புக்கு பரந்தூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். </p><p>சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். வருடத்துக்கு 3 சிலிண்டர்கள் மற்றும் மாநகர, நகராட்சிப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம்  என்ற திட்டத்தை அறிவித்ததோடு,  பரந்தூர் விமான நிலையத் திட்டம்  அரசால் அதிகாரப்பூர்வமாக கைவிடப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து முதல் அமைச்சர் விஜய் கூறும் போது,  பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கெனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.</p><h2>‘டர்மினல் 5</h2><p>துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் உடன் கலந்துரையாடி விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும். சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட ‘டர்மினல் 5’ ஐந்தாவது பயணிகள் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><h2>புதிய விமான நிலையம் அமைக்கப்படும்</h2><p>அதேபோல தற்போது நடைபெறும் ‘டர்மினல் 3’ கட்டுமான பணிகள் முடிவுற்ற பின் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் இருக்கும். டர்மினல் 5 பணிகள் நிறைவடைந்து, அது செயலாக்கத்துக்கு வந்த பிறகு ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையம் மேம்படுத்த படுவதோடு, பயணிகளின் போக்குவரத்து தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை உறுதி செய்யப்படும்’என்று தெரிவித்தார். தவெக அரசின் அதிரடி அறிவிப்புக்கு பரந்தூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். </p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-forecast-coimbatore-nilgiris-today-and-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-forecast-coimbatore-nilgiris-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">91e849a5-f88c-4f57-925f-c449f2b5b45e</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:25:21 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:25:21.794Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,TN weather</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/t4lgxp5m/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/t4lgxp5m/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>24-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>25-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>26-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>24-08-2026 முதல் 26-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>27-08-2026 மற்றும் 28-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>24-08-2026 முதல் 26-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>27-08-2026 மற்றும் 28-08-2026:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-mudumalai-elephant-camp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-mudumalai-elephant-camp#comments</comments><guid isPermaLink="false">46605c49-b223-4b6e-bd33-7bb5750c640f</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:14:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:14:14.346Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,Elephant Camp,யானைகள் முகாம்,Mudumalai,முதுமலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jngd1iyb/touristin-muthumalai.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முதுமலை யானைகள் முகாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jngd1iyb/touristin-muthumalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற முதுமலை யானைகள் முகாமில், வார இறுதி விடுமுறை நாளான நேற்று வழக்கத்தை விட அதிகமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுற்றுலாப்பயணிகள்</a> திரண்டனர்.</p><h2>யானைகள் முகாம்</h2><p>நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உலக புகழ்பெற்ற முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியான தெப்பக்காட்டில் ஆசியாவின் பழமையான வளர்ப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">யானைகள் முகாம்</a> செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கமாகவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இந்த நிலையில், வார விடுமுறை நாளான நேற்று காப்பகத்தில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.</p><h2>ஆற்றில் குளித்த யானைகள்</h2><p>அங்கு நிலவிய இதமான தட்பவெப்ப நிலை மற்றும் சாரல் மழையை பயணிகள் வெகுவாக ரசித்தனர். முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் அங்குள்ள மாயாற்றில் குதூகலமாக குளிப்பாட்டப்பட்டன.யானைகள் ஆற்றில் தண்ணீரை உறிஞ்சி அடித்துக் கொண்டும், ஒன்றுக்கொன்று விளையாடி கொண்டும் செய்த நளினமான குறும்புகளை கண்டு பயணிகள் வியந்தனர்.</p><h2>ஊட்டச்சத்து உணவுமுகாம்</h2><p> யானைகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காகத் தனி சமையல் கூடத்தில் ராகி, கொள்ளு போன்ற தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு உருண்டைகள் தயார் செய்யப்பட்டன.அவற்றைப் பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் ஒவ்வொரு யானையின் பெயரைக் கூப்பிட்டு வழங்கினர். யானைகள் வரிசையாக நின்று கம்பீரமாக உணவு உட்கொள்ளும் இந்த கண்கொள்ளா காட்சியை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>வழக்குகள்  முடியும் வரை இடைத்தேர்தல் கிடையாது: தேர்தல் ஆணையம் பதில் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-by-elections-until-cases-are-concluded-election-commissions-counter-affidavit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-by-elections-until-cases-are-concluded-election-commissions-counter-affidavit#comments</comments><guid isPermaLink="false">a232da28-457f-4b69-894e-e078462556cd</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:07:17 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:07:17.942Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,வழக்குகள்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/7d4lnav0/Election-Comission.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேர்தல் ஆணையம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/7d4lnav0/Election-Comission.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில் பெரம்பூர் தொகுதியை வைத்து கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார்.  அது போல் கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர். விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுவிட்டு அவர்கள் ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்துவிட்டு இவர்கள் தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலையில் உள்ள போது இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><h2>இடைத்தேர்தல் அறிவிக்க தடை</h2><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன் ஒரே தொகுதிக்கு இரு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும் என கூறி 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து, இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டசபை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.  தொடர்ந்து மனு மீதான உத்தரவு இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது.  </p><h2>அறிவிக்க வாய்ப்பு இல்லை</h2><p>அப்போது சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 8ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையே தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போதைக்கு தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது</p> ]]></content:encoded></item><item><title>புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/identify-and-announce-site-for-new-airport-urgently-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/identify-and-announce-site-for-new-airport-urgently-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">cc3a3f15-30f0-4e0c-bd4d-679bd6a35baf</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:01:44 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:01:44.431Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,சென்னை,Parandur Airport,new airport,புதிய விமான நிலையம்,பரந்தூர் விமானநிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/71td3iq6/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/71td3iq6/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னைக்கு அருகில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக வளர்ச்சிக்கு சென்னையில் இரண்டாம் விமான நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், அதற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும்.</p><p>சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதே நேரத்தில் வேளாண் விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்து விமான நிலையம் அமைப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தவுடனேயே, 4 ஆண்டுகளுக்கு முன் 2022-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி பாதிக்கப்படும் மக்களை எனது தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி குழு சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்து நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்தது.</p><p>அதே நேரத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சென்னைக்கு அருகில் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் 2031-ம் ஆண்டில் அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என்பதால், அதற்கு முன்பாக புதிய விமான நிலையம் கட்டப்பட வேண்டியது அவசியமாகும். சென்னை மாநகருக்கான இரண்டாவது விமான நிலையம் 2007-08ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு தடைகளைக் கடந்து 2022-ம் ஆண்டில் தான் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்பட்டது. இப்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளன.</p><p>பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லி, மும்பை ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய விமான நிலையமாக திகழ்ந்து வந்தது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததாலும், விரிவாக்கப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாகவும் அந்த இடத்தை இழந்துவிட்ட சென்னை விமான நிலையம் இப்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு கொல்கத்தா விமான நிலையத்தை விட பின்தங்கி ஆறாம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் ஜூலை மாதத்தில்தான் மீண்டும் ஐந்தாம் இடத்தை பிடித்தது. எந்த நேரமும் சென்னை விமான நிலையம் மீண்டும் ஆறாம் இடத்திற்கு தள்ளப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் 380 ஆகும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 853 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானங்களை இயக்குவது விமான நிலையங்களின் கவுரவமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து மட்டும்தான் இந்த வகை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இந்த வகை விமானங்களை இயக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த விமானங்களை இயக்க 60 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதைகள்  தேவை; ஆனால், சென்னை விமான நிலைய ஓடுபாதையின் அகலம் 45 மீட்டர் தான். அதேபோல், ஏர்பஸ் 350, போயிங் 777 வகை விமானங்களில் வரும் பயணிகளை கையாளுவதற்கான வசதிகள் மட்டும் தான் சென்னை விமான நிலையத்தில் உள்ளது. அதனால், ஏர்பஸ் 380 விமானங்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்க முடியாது. புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் மட்டும்தான் இந்த வகை விமானங்கள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படக் கூடிய புதிய வகை விமானங்களை சென்னையிலிருந்து இயக்க முடியும்.</p><p>2031-ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் கட்டப்படவில்லை என்றால், சென்னைக்கு புதிய விமானங்கள் வராது. அவை பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களுக்கு சென்றால், அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடுத்த ஐந்தாண்டுகளில் புதிய விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரவேண்டும். இப்போதே பணிகளைத்  தொடங்கினால் கூட, அது சாத்தியமாக இன்னும் 8 ஆண்டுகள் ஆகக்கூடும். எனவே, அவசர நிலையைக் கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை அரசு விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.</p><p>சென்னை விமான நிலையம் அமைக்கும் விஷயத்தில் இத்தனைக் குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணம்  நிலங்களை கையகப்படுத்தும் கொள்கையில் தெளிவு இல்லாததுதான். வேளாண்மை சாராத எந்தப் பணிக்கும் நிலங்களை கையகப்படுத்துவதில்லை என்பதை கொள்கை முடிவாத தமிழ்நாடு அரசு எடுத்திருந்தால், பரந்தூர் விமான நிலையத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்காது. எனவே, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாட்டில் எந்தவொரு திட்டத்திற்காவும் வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும்.</p><p>அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக ஒரு கைப்பிடி மண்ணை கூட கையகப்படுத்திக் கொடுக்க மாட்டோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாக்குறுதி அளிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பரந்தூர் விமான நிலையத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட எந்த திட்டத்துக்காகவும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-acceptance-of-aiadmk-mlas-resignations-dismissed-high-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-acceptance-of-aiadmk-mlas-resignations-dismissed-high-court-order#comments</comments><guid isPermaLink="false">6c737a54-5b43-44d2-8977-516ee562b5c1</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:43:45 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:43:45.941Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,High Court,ஐகோர்ட்டு,அ.தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hp444oj1/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hp444oj1/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதை எதிர்த்து அ.தி.மு.க. கொறடாஅ அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த நிலையில 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்து மதுரையை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. </p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ஒரே காரணத்துக்காக ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன? ஏற்கனவே சம்பந்தப்பட்ட கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர்கள் வாதம் துவங்கியுள்ளது. ஒரு பிரச்சனைக்கு ஒரு வழக்கு போதும். நிலுவையில் இருக்கக்கூடிய வழக்கை நீர்த்துப் போக செய்யக்கூடிய வகையில ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன?” என்று கேள்வி எழுப்பினர்.</p><p>அது மட்டுமின்றி, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-after-falling-into-rainwater-drainage-ditch-in-anna-nagar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-after-falling-into-rainwater-drainage-ditch-in-anna-nagar#comments</comments><guid isPermaLink="false">4e279689-8dab-4011-b020-1b62b9b14c54</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:33:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:33:27.796Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai City,Annanagar,மழைநீர் வடிகால்,அண்ணா நகர்,StormWaterDrain</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8rm4tc4q/women33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெண் உயிரிழப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8rm4tc4q/women33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கலாவதி என்ற பெண் உயிரிழந்தார்.</p><p>சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. நேற்று பெய்த கனமழையால் பள்ளத்தில் தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது.</p><p>இந்நிலையில் அந்த வழியாக வந்த பெண் ஒருவர் கவனிக்காத நிலையில், தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவர் பெயர் கலாவதி என்று தெரிய வந்துள்ளது.</p><p>அவர் பள்ளத்தில் விழுந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளத்தின் அடியில் மின் வயர்கள் சென்றதால் மின்சாரத்தைத் துண்டித்த பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.</p><p>பள்ளத்தில் மின்கசிவு ஏற்பட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20">மின்சாரம் தாக்கி </a>இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இந்தநிலையில் இது குறித்து அரசின் அலட்சியத்தால் தாய் உயிரிழந்துவிட்டதாக கண்ணீருடன் மகள் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், </p><p>பள்ளத்தை சுற்றி தடுப்புகள் இல்லை. மின்வாரிய பண் இநடப்பது குறித்து எச்சரிக்கை இல்லை. அரசின் அலட்சியத்தால் எனது தாய் கலாவதி உயிரிழந்துள்ளார் என கண்ணீர் மல்க கூறினார். </p><p>பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என மக்கள் வேதனை தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதி தோல்வியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-files-case-challenging-kolathur-constituency-defeat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-files-case-challenging-kolathur-constituency-defeat#comments</comments><guid isPermaLink="false">14f7931c-815f-48f5-8aeb-0407d6024c4b</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:29:59 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:29:59.743Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,கொளத்தூர்,Kolathur,கொளத்தூர் தொகுதி,Kolathur Constituency,வி.எஸ்.பாபு,VS Babu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/v6lxiyt1/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/v6lxiyt1/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கொளத்தூர் தொகுதி தோல்வியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.</p><p>சென்னை,</p><h2>மு.க.ஸ்டாலின் தோல்வி</h2><p>தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்றும் மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்றும் திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.</p><h2>மின்னணு எந்திரங்கள் ஆய்வு</h2><p>நீதிமன்ற உத்தரவுப்படி, கொளத்தூரில் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கின. சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநாராட்சி ஆணையருமான சமீரன் முன்னிலையில் 3 நாட்கள் ஆய்வுப் பணிகள் நடைபெற்றன.</p><p>இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆய்வு, சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவின் முடிவுகள் மற்றும் விவிபேட் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில், எந்தவித முரண்பாடும் இல்லாமல் அனைத்தும் சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.</p><p>சரிபார்ப்பு பணியின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் முழுமையாக விளக்கிக் காண்பிக்கப்பட்டன. விண்ணப்பதாரர் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிற போட்டியிட்ட வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்கள் உடனுக்குடன் அளிக்கப்பட்டன.</p><p>ஆய்வு மற்றும் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள சரிபார்ப்பு நடைமுறைகளின்படி முறையாக செயல்படுகின்றன என்று பெல் நிறுவன பொறியாளர்களால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழின் நகல் விண்ணப்பதாரர் வேட்பாளருக்கு வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார்.</p><h2>மு.க.ஸ்டாலின் வழக்கு</h2><p>இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். </p><p>சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கில்,</p><p>நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்தனர்.</p><h2>பல்வேறு முறைகேடுகள்...</h2><p>குறிப்பாக வாக்கு பதிவு மையங்களான 1, 17,28,32,75,78, 79,84,87,112,122 157,170 உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவி பேட், வாக்கு பதிவு எந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பெல் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட என்ஜினீயர் உடன் இருந்தார். நூறு சதவீத விவி பேட் மற்றும் வாக்கு பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.</p><p>இதில் ஆறு வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேடுகளை ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>தேர்தல் எந்திரம் தொடர்பாக புகார் செய்வது தொடர்பான வெளிப்படையான ஒரு நடை முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். பல வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக பல வாக்குப்பதிவு எந்திரங்களில் ஹார்டுவேர் என்று சொல்லக்கூடிய மென்பொருள் கோளாறு ஏற்பட்டது.</p><h2>வி.எஸ்.பாபு வெற்றி செல்லாது என அறிவிக்க...</h2><p>தொழில்நுட்ப கோளாறுகளை சுட்டிக்காட்டிய பின்பும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரிபார்த்தல் நடைபெற்றுள்ளது.</p><p>எனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேடுகளை சரிபார்க்க வேண்டும். மேலும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும், நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் - மு.க. ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandoning-paranthur-airport-will-push-tamil-nadus-development-into-an-abyss-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandoning-paranthur-airport-will-push-tamil-nadus-development-into-an-abyss-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">acfefa2e-3733-4d68-95f4-9d3b26de561f</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:27:28 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:27:28.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,சென்னை,Development,வளர்ச்சி,பரந்தூர் விமான நிலையம்,Paranthur Airport,மு.க. ஸ்டாலின்,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/h0ubpyhe/m.k.stailn.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/h0ubpyhe/m.k.stailn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். </p><p>அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண் 110-ன் கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.</p><h2>ஏமாற்றம்</h2><p>மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!</p><p>சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர்</a> தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக குறைந்துவிடும்.</p><h2>தொழில் வளர்ச்சி</h2><p>முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக திராவிட மாடல் ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதல்-அமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட். தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு 26-ந்தேதி இயங்காது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-outpatient-department-of-jipmer-hospital-puducherry-will-not-function-on-the-26th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-outpatient-department-of-jipmer-hospital-puducherry-will-not-function-on-the-26th#comments</comments><guid isPermaLink="false">7652d780-2adc-4503-9c00-5eb7e2371bc9</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:21:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:21:27.881Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Jipmer Hospital,Milad-un-Nabi,மிலாடி நபி,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/bw3gc7as/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/bw3gc7as/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி,</p><p>மிலாடி நபியை முன்னிட்டு, வரும் 26-ந்தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அரசு விடுமுறை தினமான 26.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாடி நபியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்."</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>