<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 04 Aug 2026 11:16:20 +0000</lastBuildDate><item><title>&quot;போராட்டம் என்கிற பெயரில் திமுக அராஜகம்&quot; - வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-anarchy-in-the-name-of-protest-vanathi-srinivasan-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-anarchy-in-the-name-of-protest-vanathi-srinivasan-condemns#comments</comments><guid isPermaLink="false">64180f25-d2d3-49a4-b49d-a10cecb872a9</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:10:55 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:10:55.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,திமுக,protest,உதயநிதி ஸ்டாலின்,Vanathi Srinivasan,Condemn,கைதுArrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gjncba3o/vanathi-srinivasan-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gjncba3o/vanathi-srinivasan-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து போராட்டம் என்ற பெயரில் இன்று திமுகவினர் அரங்கேற்றும் அராஜகங்கள் கடும் கண்டனத்திற்குரியவை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.</p><p>இது தொடர்பாக, தேசிய பாஜக மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>கண்டனம்</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து போராட்டம் என்ற பெயரில் இன்று திமுகவினர் அரங்கேற்றும் அராஜகங்கள் கடும் கண்டனத்திற்குரியவை. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், காவல்துறையினரையே அச்சுறுத்தும் வகையில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் இந்த செயல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை.</p><p>சட்டம் தனது கடமையைச் செய்யும் போது அதற்கு மதிப்பளிக்காமல் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் அரசியலை முன்னிறுத்துவது திமுக இன்னும் திருந்தவில்லை என்பதற்கே சான்று. பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசும் தங்களது கட்சியினரைக் கண்டிக்காமல் மௌனம் காக்கும் திமுக மகளிர் அணி, பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் தார்மீக உரிமையையே இழந்து விட்டது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vilaathikulam-dmk-mla-markandeyan-released-on-bail</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vilaathikulam-dmk-mla-markandeyan-released-on-bail#comments</comments><guid isPermaLink="false">434c1879-afa8-44f8-97db-fe45d81c6216</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:07:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:07:59.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,எம்.எல்.ஏ.,MLA,மார்க்கண்டேயன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ompaingj/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ompaingj/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை,</p> <p><a href="https://www.dailythanthi.com/">தூத்துக்குடி </a>மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு  மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார். </p><p>இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.  </p><h2>ஜாமீன் மனு தள்ளுபடி</h2><p>இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை 30ம் தேதி விசாரித்த கோர்ட்டு அந்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.</p><h2>மீண்டும் மனு</h2><p>இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். </p><p>இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.</p><h2>விடுதலை</h2><p>இந்நிலையில், ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் விடுதலை செய்யப்பட்டார்.  சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட மார்க்கண்டேயனை திமுகவினர் வரவேற்றனர். </p><h2>மார்க்கண்டேயன் பேசியது என்ன?</h2><p>மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதல் அமைச்சர்.. உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துகுறோம்.. நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை என மார்க்கண்டேயன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>கைதுக்கு முன் மகனை பார்த்ததும்   கட்டி தழுவிய உதயநிதி ஸ்டாலின் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-stalin-hugs-son-ahead-of-arrest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-stalin-hugs-son-ahead-of-arrest#comments</comments><guid isPermaLink="false">2065034d-a0bc-4336-8a83-6daea78fb363</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:59:41 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:59:41.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கைது,arrest,son,கிருத்திகா உதயநிதி,மகனை,Kiruthiga Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/89sig1xz/stalinson.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/89sig1xz/stalinson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கைதுக்கு முன் தனது மகன் இன்பநிதியை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்</a> பாசத்தோடு  கட்டி தழுவினார்.</p><h2>கைது செய்யப்பட்டார்</h2><p>தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக, தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தஞ்சாவூர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.</p><h2>கட்டி தழுவினார்</h2><p>போலீசார் அவரது வீட்டு வாசலில் குவிக்கப்பட்டு, கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்த வேளையில் வீட்டில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது, வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் வாகனத்தில் ஏறுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக, தனது மகன் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%20">இன்பநிதியை</a> உதயநிதி ஸ்டாலின் பாசத்தோடு  கட்டி தழுவினார். மகனை அனைத்துவிட்டு இன்முகத்தோடு போலீசாருடன் சென்ற காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில்  பரவி வருகிறது.</p><h2>காரசார விவாதம்</h2><p> உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய போலீசார் வீட்டுக்குள்ளே நுழைய முயன்றபோது, அவரது மனைவி கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எவ்வித முகாந்திரமும் இன்றி இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அரங்கேற்றப்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.</p><h2>தொண்டர்கள் திரண்டதால் பதற்றம்</h2><p>கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை போலீசார் காரில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றபோது, நீலாங்கரை இல்லத்தின் முன்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் குதித்தனர். இதனால் அந்த பகுதியே ஸ்தம்பித்தது. </p><p>தொண்டர்களை கலைத்துவிட்டு போலீசார் தற்பொழுது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் கைதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தற்பொழுது உச்சகட்ட பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எல்எல்ஏவாக இருக்கக்கூட உதயநிதிக்கு தகுதியில்லை
- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-is-not-even-qualified-to-be-an-lla-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-is-not-even-qualified-to-be-an-lla-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">dc030d3c-ce16-4d0f-9c9a-652c536944c0</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:59:06 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:59:06.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Nirmalkumar,அமைச்சர் நிர்மல் குமார்,CMVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lwofk86u/nirmal33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்|]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lwofk86u/nirmal33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, ஒரு எல்எல்ஏவாக நிற்கக்கூட உதயநிதிக்கு தகுதியில்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.</p><h2>ஜெயலலிதா இருந்திருந்தால்...</h2><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா  உயிருடன் இருந்திருந்தால் இத்தகைய சூழலில் என்ன நடவடிக்கை எடுத்திருப்பாரோ, அதைத்தான் இன்று முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் துணிச்சலாகச் செய்திருக்கிறார்.</p><h2>இபிஎஸ் வேடிக்கை</h2><p>தான் ஆட்சியில் இருக்கும்போதே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து உதயநிதி ஸ்டாலின் கொச்சையாகப் பேசியபோதும், அன்றைய முதல்-அமைச்சராக இருந்த இபிஎஸ் அவர் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.</p><p>ண்களுக்கு எதிராக இன்று யார் அநாகரீகமாகப் பேசினாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி, அவர்கள் மீது இந்தத் தவெக அரசு எந்தவித தயவுதாட்சண்யமும் இன்றிச் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கையைத் தொடர்ந்து எடுக்கும்.</p><h2>திமுகவினர் வீடுகளில் போட்டுக் காட்டவேண்டும்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</a> பேசியதில் ஏதாவது ஒரு வார்த்தை ஏற்புடையதாக இருக்கிறதா? என்பதை திமுகவினர் தங்கள் வீடுகளில் போட்டுக் காட்டவேண்டும்.  இவ்வளவு கீழ்த்தரமாக, கேவலமாக பேச உதயநிதிக்கு என்ன அவசியம் இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, ஒரு எல்எல்ஏவாக இருக்கக்கூட உதயநிதிக்கு தகுதியில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘டிஜிட்டல் கைது’ மிரட்டல்: முதிய தம்பதியிடம் ரூ.1.53 கோடி மோசடி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-arrest-threat-elderly-couple-defrauded-of-153-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-arrest-threat-elderly-couple-defrauded-of-153-crore#comments</comments><guid isPermaLink="false">bea51f82-5555-46ce-83a8-9c3b25bd61f7</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:46:49 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:46:49.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Money fraud,elderly couple,வயதான தம்பதி,Kovai,மிரட்டி பணம் பறிப்பு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/adzsfuc2/71.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ முதிய தம்பதி]]></media:title><media:description type="html"><![CDATA[  70 வயது முதிய தம்பதியை, மர்ம நபர்கள் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்வதாக மிரட்டி ரூ.1.53 கோடி பறித்துள்ளனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/adzsfuc2/71.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை </a>மாவட்டத்தில் 70 வயது முதிய தம்பதியை, மர்ம நபர்கள் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்வதாக மிரட்டி ரூ.1.53 கோடி பறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>முதிய தம்பதி</h2><p>கோவையில் உள்ள முதியோருக்கான பிரத்யேக அடுக்குமாடி குடியிருப்பில் 70 வயது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதிய தம்பதி </a>வசித்து வந்தனர். அந்த தம்பதியின் 2 மகள்களும் வெளிநாட்டில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மர்ம நபர்கள் தொலைபேசி வாயிலாக அந்த தம்பதியினரை தொடர்பு கொண்டனர். அவர்கள் மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.</p><h2>மர்ம நபர்களின் மிரட்டல்</h2><p>முதியவர்களின் வங்கி கணக்குகள் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளதாகக் கூறி மிரட்டியுள்ளனர். வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை விசாரணைக்காகக் கூறப்படும் கணக்கிற்கு மாற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தினர். மேலும், ஆன்லைன் வீடியோ அழைப்பு மூலம் அவர்களைக் கண்காணித்து, 'டிஜிட்டல் முறையில் கைது' செய்து வைப்பதாகக் கூறி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மர்ம நபர்கள் </a>பயமுறுத்தினர்.</p><h2>ரூ.1.53 கோடி பறிப்பு</h2><p>அவர்களின் மிரட்டலுக்கு பயந்த முதிய தம்பதியினர், தங்கள் வாழ்நாள் சேமிப்பான ரூ.1.53 கோடியை மோசடி கும்பல் தெரிவித்த குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்குப் பிரித்து அனுப்பியுள்ளனர். பணம் அனுப்பிய பிறகு, தங்களை ஏமாற்றியதை உணர்ந்த தம்பதியினர் இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>போலீசார் முக்கிய எச்சரிக்கை</h2><p>எந்தவொரு அரசு விசாரணை அமைப்பும் ஆன்லைன் வீடியோ அழைப்பு மூலம் யாரையும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்யாது. இது போன்ற மிரட்டல் அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். பணத்தை உடனடியாக அனுப்பாமல், குடும்பத்தினரிடமோ அல்லது காவல்துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.</p><p>சைபர் மோசடிக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ள வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது நியாயமான நடவடிக்கையே: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhis-arrest-is-a-fair-move-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhis-arrest-is-a-fair-move-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">43a84999-aaf5-4a81-9772-3d3fe0b1d278</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:35:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:35:43.604Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,TNPolice,UdhayanidhiStalin,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/biqm8zzw/arun33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/biqm8zzw/arun33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,  முதல்-அமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.</p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து சென்றுள்ளனர்.  உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்தநிலையில்,  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>சட்டமன்றத்துக்கு வரக்கூடாது என நினைத்து உதயநிதி அப்படி பேசியிருப்பார்.பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தவெக அரசு பார்த்துக்கொண்டிருக்காது. அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். பெண்கள் குறித்து தவறாக பேசக்கூடாது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.710 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-laid-the-foundation-stone-for-4-new-projects-worth-rs-710-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-laid-the-foundation-stone-for-4-new-projects-worth-rs-710-crore#comments</comments><guid isPermaLink="false">05d287a5-daa1-45ab-8db7-88836b552ac0</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:32:21 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:32:21.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தலைமைச் செயலகம்,அடிக்கல் நாட்டினார்,புதிய திட்டப் பணிகள்,New Project,முதல்-அமைச்சர் விஜய்,Tamil Nadu Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ttsa3okv/178.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ttsa3okv/178.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>ரூ.710 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 112.85 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 710.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.</p><h2>திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்</h2><p><strong>திருப்பூர்</strong> மாநகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், வடக்கு மற்றும் தெற்கு திருப்பூர் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தவும், மழைக்காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் போக்குவரத்துத் தடைகளைத் தவிர்ப்பதற்காகவும் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின் கீழ், 18 கோடி ரூபாய் செலவில் திருப்பூர் மாநகராட்சி, வார்டு 44-க்குட்பட்ட ஈஸ்வரன் கோவில் சாலையில், ஸ்ரீ சக்தி தியேட்டர் சாலை மற்றும் யூனியன் மில் சாலையை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டப் பாலம் நகரின் வளர்ந்துவரும் மக்கள்தொகை, தொழில் வளர்ச்சி மற்றும் எதிர்காலப் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில்கொண்டு. முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><p><strong>பெருந்துறை</strong> நகராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு, நாள்தோறும் நபர் ஒருவருக்கு 73 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் விநியோகக் குழாய்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளதாலும்,அவை அனைத்தும் பழுதடைந்து அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாலும், நகராட்சிப் பகுதிகள் வளர்ச்சி அடைந்த பகுதிகளாக உள்ளதாலும், தற்போதைய மக்கள்தொகை மற்றும் குடிநீரின் தேவையினைப் பூர்த்தி செய்யும் நோக்கில், இப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் 22.65 கோடி ரூபாய் செலவில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும், எல்லைமேடு பகுதியில் 1.5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கக் தொட்டி, 117.26 கி.மீ நீளமுள்ள பகிர்மானக் குழாய்கள் மற்றும் 2.010 கி.மீ நீளமுள்ள பிரதான குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 10,080 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு நகரம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.</p> <p><strong>கோத்தகிரி</strong> நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு, நாள்தோறும் நபர் ஒருவருக்கு 70 லிட்டர் (LPCD) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் விநியோகக் குழாய்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளதால் அவை அனைத்தும் பழுதுதடைந்து அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாலும், நகராட்சிப் பகுதிகள் வளர்ச்சி அடைந்த பகுதிகளாக உள்ளதாலும், தற்போதைய மக்கள்தொகை மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டும், இந்நகர்ப் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டும் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 42.69 கோடி ரூபாய் செலவில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஈளாடா தடுப்பணையிலிருந்து 11.40 கி.மீ குடிநீர் பிரதான விநியோகக் குழாய்கள் (Feeder main) மற்றும் 48.64 கி.மீ பிரதான பகிர்மானக் குழாய்கள் (Distribution main) பதிக்கும் பணிகள், 6 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள், 40 கி.மீ நீளத்திற்கு சாலை மறுசீரமைப்புப் பணிகள் நிறைவுற்றுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் 3,596 எண்ணிக்கையிலான வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதால் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு நாள்தோறும் நபர் ஒருவருக்கு 100 லிட்டர் (LPCD) அளவிற்குக் குடிநீர் விநியோகம் வழங்கப்படும்.</p><p><strong>விக்கிரமசிங்கபுரம்</strong> நகராட்சியில் 21 வார்டுகளை உள்ளடக்கிய இப்பகுதி மக்களுக்கு நாள்தோறும் நபர் ஒருவருக்கு 95 லிட்டர் (LPCD) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள குடிநீரேற்று நிலையம் மற்றும் குடிநீர் விநியோகக் குழாய்கள் சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவையாகும். நகராட்சிப் பகுதி விரிவடைந்து, மக்கள்தொகை அதிகரித்ததாலும் தற்போதைய குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து, பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் வழங்கும் நோக்கில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 29.51 கோடி ரூபாய் செலவில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.</p><p>இத்திட்டத்தின்கீழ், தரைமட்ட நீரேற்று நிலையம், பொதிகையடி பகுதியில் நாளொன்றுக்கு 4 மில்லியன் லிட்டர் (MLD) கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 81.748 கி.மீ நீளமுள்ள பகிர்மானக் குழாய்கள், 6.252 கி.மீ நீளமுள்ள குடிநீர் பிரதான விநியோகக் (Feeder Main) குழாய்கள் அமைத்தல், 1.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் என மொத்தம் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள், 12,890 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் ஆகியன நிறைவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் நிறைவு பெற்றதால் தற்போது அனைத்து வீடுகளுக்கும் நாள்தோறும் நபர் ஒருவருக்கு 135 லிட்டர் (LPCD) அளவிற்குக் குடிநீர் வழங்கப்படும்.</p><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> நகராட்சி நிருவாக இயக்குநரகம் சார்பில் மொத்தம் 112 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவிலான 4 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.</p><h2>அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்</h2><p><strong>திண்டுக்கல்</strong> மாநகராட்சியில் 74.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன், நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இப்புதிய பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதி. 81 வணிகக் கடைகள், உணவகங்கள். இருசக்கர வாகன நிறுத்துமிடம்.சுற்றுச்சுவர். 2 5 கழிப்பிடங்கள், கண்காணிப்புக் கேமரா (CCTV) வசதி. சோலார் மின்சக்தி அமைப்பு, மழைநீர் சேகரிப்பு அமைப்பு. கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் நீர் மறுபயன்பாட்டு வசதி, பசுமைப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், திண்டுக்கல் மாநகரில் பேருந்துப் போக்குவரத்து மேலாண்மை மேம்படுவதுடன், பயணிகளுக்குப் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் அனைத்து நவீன வசதிகளுடனும் கூடிய பேருந்து நிலைய சேவை கிடைக்கும். மேலும், நகரின் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பொதுமக்களின் பயண வசதியும் கணிசமாக மேம்படும்.</p><p><strong>கரூர்</strong> மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 245.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் வங்கி (K1W) நிதியுதவியுடன், குடிநீர்த் திட்டப்பணிகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டப் பணியில் காவிரி ஆற்றில் கூடுதல் குடிநீர் ஆதாரம் நாளொன்றுக்கு 26.83 மில்லியன் லிட்டர் (MLD) பெறுவதற்கான ஊடுருவல் கிணறு 2 எண்ணிக்கை. புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3 எண்ணிக்கை, பழைய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10 எண்ணிக்கை மாற்றி அமைத்தல், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் 2 எண்ணிக்கை மற்றும் 126 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் விநியோகக் குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டப்பணி முடிவுறும்போது, கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் குடிநீர்க் குழாய் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் தினசரி வழங்கப்படும்.</p><p><strong>திருவேற்காடு</strong> நகராட்சியில் 165.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் வங்கி (KIW) நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.</p><p><strong>சென்னை</strong> பெருநகர குடிநீர் வாரியத்தின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீராதாரத்திலிருந்து குடிநீர் பெற்று, நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் (LPCD) என்ற அளவில் மொத்தம் நாளொன்றுக்கு 16.34 மில்லியன் லிட்டர் (MLD) பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 98,499 மக்கள் பயன்பெறுவதுடன், 23,368 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 17.80 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிரதான குடிநீர்க் குழாய்களும், 208 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பகிர்மானக் குழாய்களும் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 91.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் 10 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 தொட்டிகள், 7.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 தொட்டி, 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தொட்டிகள், 2.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 தொட்டி மற்றும் 1.50 இவட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 தொட்டி மற்றும் 20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டப் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், திருவேற்காடு நகராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் மேலும் மேம்பட்டு, பொதுமக்களுக்கு சீரான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வசதி உறுதி செய்யப்படும்.</p><p><strong>மாங்காடு</strong> நகராட்சியில் 225.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் வங்கி (KIW) நிதியுதவியுடன், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தி. நவீன கழிவுநீர் மேலாண்மை வசதியை ஏற்படுத்தும் நோக்கில், பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 68,700 மக்கள் பயன்பெறும் வகையில் 20,258 வீட்டுக் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 84.19 கிலோ மீட்டர் நீளத்திற்கு பகிர்மானக் கழிவுநீர் குழாய்களும், 5.52 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிரதான கழிவுநீர் குழாய்களும் அமைக்கப்படவுள்ளன. மேலும், 3,667 இயந்திரத் துளைகள் (Machine Holes), 3 கழிவுநீர் உந்து நிலையங்கள் (Pumping Stations) மற்றும் 3 கழிவுநீர் ஏற்று நிலையங்கள் (Lift Stations) அமைக்கப்படவுள்ளன.</p><p>இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் நகரின் சுகாதாரத் தரம் மேம்படுவதுடன், கழிவுநீர்த் தேக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்கப்பட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான கழிவுநீர் மேலாண்மை வசதி ஏற்படுத்தப்படும்.</p><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> நகராட்சி நிருவாக இயக்குநரகம் சார்பில் மொத்தம் 710 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.</p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>திருப்பூரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் சத்யபாமா, பாலமுருகன்,  ராம்குமார், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. மனிஷ் நாரணவரே. திருப்பூர் மாநகராட்சி மேயர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எம்.பி. அமித், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது - கி.வீரமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-of-opposition-leader-udayanidhi-without-due-process-condemnable-ki-veeramani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-of-opposition-leader-udayanidhi-without-due-process-condemnable-ki-veeramani#comments</comments><guid isPermaLink="false">63afe3d2-694c-49c2-b312-36b14fef5609</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:28:19 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:28:19.370Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,K. Veeramani,எதிர்க்கட்சி தலைவர்,Opposition Leader,கி.வீரமணி அறிக்கை,கைது Arrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/mn7ibkq9/veeramani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திராவிட கழக தலைவர் கி.வீரமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/mn7ibkq9/veeramani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><h2>பழிவாங்கும் போக்கு என்பது ஜனநாயக விரோதமே!</h2><p>தமிழ்நாடு அரசு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை எந்தவித முகாந்திரமுமின்றி, திடீர் என்று கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது - ஜனநாயக விரோதமானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-</p> <h2>உதயநிதி ஸ்டாலின் கைது </h2><p>தஞ்சையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆட்சேபகரமாக பேசியதாகக் கூறி, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">உதயநிதி ஸ்டாலின் கைது</a> செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும். </p><h2>அவசியம் என்ன?</h2><p>இன்று மதியம் 12 மணி வரை கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, காவல்துறையினர் "அதிவிரைவாக” கைது செய்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? </p><h2>பட்ஜெட் தாக்கல்</h2><p>அவதூறு பேச்சு என்று கருதினால், அதற்கு உரிய சட்ட முறையில் வழக்குத் தொடுத்து, விசாரணை நடத்தி, பிறகு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுதானே முறையானது! அதுவும், நாளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்</a> செய்யப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரை எப்படியாவது அதில் பங்கேற்க செய்யவிட கூடாது என்ற அவசரமே இதற்கு காரணமா என்ற சந்தேகம்தான் பரவலாக எழுகிறது.</p><h2>ஜனநாயக ஆட்சி</h2><p>அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆனால், எதிர்ப்பையோ, பொதுவானவர்களின் கருத்தையோ கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்திவரும் தமிழ்நாடு அரசின் போக்கு கண்டனத்திற்குரியது; இந்தப் போக்கு ஒருபோதும் ஜனநாயக ஆட்சியின் அம்சமும் ஆகாது. இத்தகைய போக்குகள் எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல: மிரட்டப் பார்க்கிறார்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-is-not-speaking-by-mistake-they-are-trying-to-threaten-him-dmk-chief-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-is-not-speaking-by-mistake-they-are-trying-to-threaten-him-dmk-chief-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">3d28b1fc-ed20-491a-a598-f45a250b33bf</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:25:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:27:48.947Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கைது நடவடிக்கை,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/w8xlhpok/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/w8xlhpok/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர் என்று முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொந்தளிப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது.</p><p>கழக உடன்பிறப்புகளோடு உழவர் பெருமக்களும் பொதுமக்களும் பங்கெடுத்து தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை மிகக்கடுமையாக அம்பலப்படுத்தி விமர்சித்தார்.</p><p>"நிர்வாகத் திறனற்ற டம்மி முதல்-அமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவுமில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அமைச்சர்களோ முதல்-அமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை.</p><p>காவிரி பிரச்னையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்துவிட்டதை மறைக்கும் வகையில், பிரச்சினையையே திசை திருப்பும் வகையில் இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை அவரை அராஜகமாக கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது த.வெ.க. அரசு. பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பதன் மூலமாக உதயநிதியை மிரட்டப் பார்க்கிறார்கள்.</p><p>நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.</p><p>நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, 'கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்து விடுவோம்' என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமீனில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்?  மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு. 'உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்' என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!</p><p>ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதல்-அமைச்சர் விஜய் பார்த்து வருகிறார். டுவீட் போட்டால், வீடியோ பேசினால் கைது செய்து வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்தது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களைப் போராட விடவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் மீது அராஜகமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையே பூட்டி வைக்கப்பட்டது பாசிசத்தின் உச்சம். விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராடியதை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் போரடியதாகச் சொல்லப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை செய்யச் சென்ற திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய, அதில் பங்கெடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது கைது நடவடிக்கையைப் பாய்ச்சியது த.வெ.க. அரசு.</p><p>இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில தலைவர்கள், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது. உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சினையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.</p><p>ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!<br><br>-⁠  ⁠கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.<br><br>காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக்… <a href="https://t.co/vAxxv41Jfw">pic.twitter.com/vAxxv41Jfw</a></p>&mdash; DMK (@arivalayam) <a href="https://x.com/arivalayam/status/2084583007516811455?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நெல்லை: ஸ்கூட்டரில் சென்றவர் மீது  திமுகவினர் சரமாரி தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-dmk-cadres-brutally-attack-youth-on-bike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-dmk-cadres-brutally-attack-youth-on-bike#comments</comments><guid isPermaLink="false">aebe8942-270e-4dec-aba1-bf6bb2136ce1</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:21:17 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:21:17.120Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,நெல்லை,Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/cjkrjxz6/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/cjkrjxz6/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>தஞ்சையில் நேற்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற <a href="https://www.dailythanthi.com/">உதயநிதி ஸ்டாலின்</a> இரட்டை அர்த்தத்திலும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசினார்.  இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.</p><p>புகாரையடுத்து, உதயநிதி ஸ்டாலினை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து தஞ்சை போலீசார் இன்று கைது செய்தனர். அதேவேளை, உதயநிதியை விசாரணைக்குப்பின் இன்றே விடுதலை செய்வோம் என்றும் அவரை சிறையில் அடைக்கும் எண்ணமில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, பல இடங்களில் திமுகவினர் வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>திமுகவினர் தாக்குதல்</h2><p>இந்நிலையில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சாலையில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் பைக்கில் சென்ற இளைஞரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அந்த இளைஞரை திமுகவினர் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் சென்ற இளைஞரை திமுகவினர் தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உதயநிதி கைதுக்கு எதிராக வன்முறையில் ஈடுப்பட்ட திமுகவினர் , மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை தாக்கி அராஜகம். <a href="https://t.co/EAZn20tVEb">pic.twitter.com/EAZn20tVEb</a></p>&mdash; Prasanna OG (@OGprasanna) <a href="https://x.com/OGprasanna/status/2084538718388686863?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>முன்னதாக தஞ்சையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது</h2> <p>கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வந்திருக்க வேண்டும். காவிரியில் ஒருசொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதுபற்றி இன்று இருக்கும் முதல்-அமைச்சர் வாயை திறந்து பேசவில்லை.</p><p>முதல்-அமைச்சருக்கு இருக்கும் ஒரே கவலை திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதுதான்’ என்றார்.</p><p>அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், நடிகை ஒருவரின் பெயரை கூறி கூச்சலிட்டனர்.</p><p>அப்போது தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்கே தண்ணீர் வருகிறதோ இல்லையோ அங்கே தண்ணீர் வர வேண்டும்... நான் காவிரியை கூறினேன்’ என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் பற்றி உதயநிதி கண்ணியக்குறைவாக பேசியிருப்பதை இந்திய கம்யூ. கட்சி கண்டிக்கிறது - மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpi-condemns-udayanidhi-remarks-on-women-says-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpi-condemns-udayanidhi-remarks-on-women-says-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">6ef4c224-6070-4496-a54f-86123906a75a</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:01:32 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:01:32.903Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,CPI,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/mc31e3fz/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/mc31e3fz/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நேற்றைய தினம் தஞ்சாவூரில் காவிரி நதி நீர் உரிமை மற்றும் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பெண் பற்றி கண்ணியக்குறைவாக பேசியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.</p><p>அவர் வகித்து வரும் எதிர்கட்சித் தலைவர் என்ற உயரிய பொறுப்புக்கு அது உகந்ததல்ல. அவர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, இன்று (04.08.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>நாளை (05.08.2026) கூடும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2026-27ம்  ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருந்து, ஜனநாயக கடமை ஆற்றும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் அரசு கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.113 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்கள்; முதல்-அமைச்சர்  விஜய் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-medical-buildings-worth-rs-113-crore-cm-vijay-inaugurated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-medical-buildings-worth-rs-113-crore-cm-vijay-inaugurated#comments</comments><guid isPermaLink="false">047c9536-3a32-4596-b181-2abb68c5ec17</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:56:32 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:56:32.118Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,inaugurated,புதிய,மருத்துவ உபகரணங்கள்,திறந்து வைத்தார்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister S.Joseph Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/oljqgg3m/177.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர்  விஜய் திறந்து வைத்தார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/oljqgg3m/177.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.113 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 113 கோடி ரூபாய் செலவில் அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை. பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆத்தூர், மரக்காணம் மற்றும் வளவனூர் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கதிரியக்க சிகிச்சை மையம், புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2 வட்டார பொது சுகாதார அலகுகள் ஆகியவற்றைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார்.</p><h2>முதல்-அமைச்சர் திறந்து வைக்கப்பட்ட மருத்துவ கட்டடங்களின் விவரங்கள்</h2><p><strong>புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை</strong></p><p>புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருத்துவமனை தற்போது 174 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு 46 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கூடுதல் கட்டடமும், 2.81 கோடி ரூபாய் செலவில் அதிநவீன உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டு, அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>இக்கூடுதல் கட்டடத்தின் தரைத்தளத்தில் வெளி மருத்துவப் பயனாளர்கள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், முதல் தளத்தில் அறுவை அரங்கு, இரத்த சுத்திகரிப்புப் பிரிவு, காது, மூக்கு, தொண்டைப் பிரிவு, இரண்டாம் தளத்தில் குழந்தைகள் நலப்பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, ONE STOP CENTRE, மூன்றாம் தளத்தில்பெண்கள் மற்றும் ஆண்கள் உள்பயனாளர்கள் பிரிவு, இரத்த வங்கி, நான்காம் தளத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிகிச்சைப் பிரிவு, விஷமுறிவு சிகிச்சைப் பிரிவு, ஐந்தாம் தளத்தில் உள்மருத்துவப் பயனாளர்கள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, மருந்துப் பொருட்கள் அறை, நிர்வாக அலுவலகம், ஆறாம் தளத்தில் அறுவை அரங்கு, அறுவை சிகிச்சைக்குப்பின் கவனிப்புப் பகுதி ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p> <p><strong>விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவம</strong>னை</p><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையானது. தற்போது 140 படுக்கை வசதிகளுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, திறன்மிகு தீக்காய சிகிச்சைப் பிரிவு மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இம்மருத்துவமனையைத் தரம் உயர்த்திடும் வகையில் 28.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு (Maternal Child Health Wing) இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரே கட்டடமாகத் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், 3.85 கோடி ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.</p><p>மேலும், இக்கட்டடத்தில் புறக்காவல்நிலையம், மைய ஆக்சிஜன் அமைப்பு, சிசிடிவி கேமராக்கள், LAN இணைப்புகள், தீத்தடுப்பு உபகரணங்கள், மின்தூக்கி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கூடுதலாக 50 படுக்கைகளும், மகப்பேறு பிரிவிற்கு கூடுதலாக 100 படுக்கைகளும் அதிகரித்து, ஏற்கனவே உள்ள 140 படுக்கைகளுடன் கூடுதலாக இந்த 150 படுக்கை வசதிகளையும் சேர்த்து மொத்தம் 290 படுக்கை வசதிகள் கொண்டதாக சிவகாசி அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது.</p><p><strong>திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை</strong></p><p>திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை தற்போது 38 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 1.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தில், விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு. செவிலியர் அறை, காவலர் விசாரணை அறை, புறமருத்துவப் பயனாளர்கள் பதிவு செய்யும் இடம், காத்திருப்பு அறை, மருந்தகம், நுண்கதிர் பதிவு, பல்மருத்துவ ஆலோசனை, பெண்கள் மருத்துவ ஆலோசனை, ஆண்கள் மருத்துவ ஆலோசனை, ஆய்வகம், கருப்பைவாய் மற்றும் மார்பகப் பரிசோதனை மையம், மக்களைத்தேடி மருத்துவம், முதன்மை மருத்துவ அலுவலர் அறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்மருத்துவப் பயனாளர்கள் பிரிவு ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p><strong>திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை</strong></p><p>திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை தற்போது 36 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 1.05 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடுதல் கட்டடத்தில், காத்திருப்பு அறை, மருத்துவக் கிடங்கு, நுண்கதிர் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, ஆய்வகம், முதன்மை மருத்துவ அலுவலர் அறை. உள் மருத்துவப் பயனாளர்கள் அறை, கழிவறைகள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p><strong>திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனை</strong></p><p>திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர், அரசு மருத்துவமனை தற்போது 60 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 3.50 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடுதல் கட்டடத்தின் தரைத்தளத்தில் நுண்கதிர் அறை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பிரிவு, ஆய்வகம். மருத்துவப் பயனாளிகள் கழிப்பறை, மருந்துக்கிடங்கு. முதல் தளத்தில் அறுவை அரங்கம், மருத்துவர் அறை. அறுவை சிகிச்சைக்குப்பின் கவனிப்பு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p><strong>விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அரசு மருத்துவமனை</strong></p><p>விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அரசு மருத்துவமனை தற்போது 60 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 3.50 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடுதல் கட்டடத்தின் தரைத்தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, நுண்கதிர் பிரிவு, கட்டுகட்டும் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் மற்றும் காத்திருப்பு அறை, முதல் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப்பின் கவனிப்புப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலியர் அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p><strong>விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அரசு மருத்துவமனை</strong></p><p>விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அரசு மருத்துவமனை தற்போது 28 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 3.50 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கூடுதல் கட்டடத்தின் தரைத்தளத்தில் வெளிமருத்துவப் பயனாளிகள் பிரிவு, ஆய்வுக்கூடம், தொற்றாநோய்ப் பிரிவு, குடும்பநலப் பிரிவு, முதல் தளத்தில் அறுவை அரங்கம், அறுவை சிகிச்சைப்பின் கவனிப்புப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலியர் அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p>கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையம் புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சை வழங்கும் நோக்கில், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 கோடி ரூபாய் செலவில் 20 உள்நோயாளிகள் படுக்கை வசதிகளுடன் கூடிய கதிர்வீச்சு புற்றநோய் பங்கர் கட்டடம் மற்றும் 2.78 கோடி ரூபாய் செலவில் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் என மொத்தம் 6.78 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கதிரியக்க சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் மூலமாக அமைக்கப்பட்டுள்ள இம்மையமானது புற்றுநோய் கதிரியக்க சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்புதிய வசதி மூலம் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவப் பயனாளர்கள் உயர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம். மதுரை, திருநெல்வேலி, சென்னை போன்ற தொலைதூர மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டிய அவசியமும், காலவிரயமும் குறைவதுடன் உரிய நேரத்தில் தரமான சிகிச்சைபெறும் வாய்ப்பும் அதிகரிக்கும்.</p><h2>பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககம்</h2><p>பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககத்தின் சார்பில் 11 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் திருப்பத்தூர், கட்டப்பட்டுள்ள 12 கிராமப்புற மற்றும் நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் 2 வட்டார பொது சுகாதார அலகுகள் கட்டப்பட்டுள்ளன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மொத்தம் 113 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டினை தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர் </a> இன்று தொடங்கி வைத்தார்.</p><p>இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு. தாரேஸ் அகமது,  தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு. எஸ். உமா, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் மரு.அனீஷ் சேகர்,மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணைச் செயலாளர் அழகுமீனா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.அ. ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4260-urban-apartments-inaugurated-by-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4260-urban-apartments-inaugurated-by-chief-minister#comments</comments><guid isPermaLink="false">9cd4ba04-c3ed-4e3d-bfff-8646db910ad9</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:53:04 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:53:04.740Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர்,Chief Minister,apartment building,அடுக்குமாடி குடியிருப்புகள்,Urban Habitat Development Board,நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,திறந்து வைத்தார்,inaugurates</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xohyg6ie/v2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xohyg6ie/v2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 4,260 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.">அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.</a>இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p><h2>முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்</h2><p>தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.525.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகள், சென்னை வளர்ச்சி குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் ரூ.1.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை  தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A.%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்</a> திறந்து வைத்தார். </p> <h2>காணொலி காட்சி</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 525.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சென்னை வளர்ச்சி குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் 1.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவற்றைக் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.</p><p><strong>தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகளைத் திறந்து வைத்தல்</strong></p><h2>500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்</h2><p>தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின்கீழ், சென்னை மாவட்டத்தில் மறுகட்டுமான திட்டத்தின்கீழ், காந்தி நகர் திட்டப்பகுதியில் 85.55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 500 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்.</p><p>திருவள்ளூர் மாவட்டம், பூச்சி அத்திப்பேடு திட்டப்பகுதியில் 156.14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 அடுக்குமாடிக் குடியிருப்புகள்; ஈரோடு மாவட்டம், மோதூர் திட்டப்பகுதியில் 45.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 516 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் ஒடையாக்கவுண்டன்பாளையம் திட்டப்பகுதியில் 40.52 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடிக் குடியிருப்புகள்.</p><p>தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை நல்லம்பள்ளி திட்டப்பகுதியில் 57.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: புதுக்கோட்டை மாவட்டம், ரெங்கம்மாள் சத்திரம் திட்டப்பகுதியில் 60.19 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடிக் குடியிருப்புகள்; தேனி மாவட்டம், உத்தமபுரம் திட்டப்பகுதியில் 39.14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 336 அடுக்குமாடிக் குடியிருப்புகள்.</p> <p>நீலகிரி மாவட்டம், நடுஹட்டி திட்டப்பகுதியில் 22.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 164 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் சேரங்கோடு திட்டப்பகுதியில் 18.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 152 அடுக்குமாடிக் குடியிருப்புகள்.</p><h2>9 திட்டப்பகுதிகள்</h2><p>என மொத்தம் 9 திட்டப்பகுதிகளில் 525.75 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளை  தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.</p><p>இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர்வசதி, கழிவு நீரகற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.</p><p><strong>பெரம்பூரில் புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் திறந்து வைத்தல்</strong></p><h2>பேருந்து நிறுத்தம்</h2><p>சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பெரம்பூரில் 1.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இப்பேருந்து நிறுத்தத்தில் 45 நபர்கள் அமரும் வகையில் காத்திருப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கண்காணிப்பு கேமராக்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>அமைச்சர்கள் கலந்து கொண்டனர்</h2><p>இந்நிகழ்ச்சியில்,  ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் இரா. கிர்லோஷ் குமார், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ஏ.ஆர். ராகுல்நாத், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பெ.ரமண சரஸ்வதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.</p> <h2>உயர் அலுவலர்கள்</h2><p>திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர் ஆர். ரமேஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. கவிதா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் அனாமிகா ரமேஷ். மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">f8eaaf61-cee9-4529-ad0b-3b796f6b80cb</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:33:00 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:33:00.230Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,heavy rain,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/396vh5hv/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/396vh5hv/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் இலங்கையின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 4.5 கி.மீ. உயரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>04-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>05-08-2026:</strong> திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>06-08-2026 மற்றும் 07-08-2026:</strong> தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>04-08-2026 முதல் 08-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>04-08-2026 முதல் 08-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உயர்கல்வித்துறை சார்பில் ரூ.274.46 கோடி செலவில் கல்விசார் கட்டடங்கள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/education-buildings-inaugurated-by-chief-minister-at-cost-of-rs-274-46-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/education-buildings-inaugurated-by-chief-minister-at-cost-of-rs-274-46-crore#comments</comments><guid isPermaLink="false">e46e77f3-7aa0-4638-a006-b3ed3fc773af</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:30:07 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:30:07.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர்,Higher Education Department,Chief Minister,Buildings,உயர்கல்வித்துறை,திறந்து வைத்தார்,கட்டடங்கள்,inaugurates</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/e6eoj66z/v1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/e6eoj66z/v1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உயர்கல்வி துறை சார்பில் ரூ.274.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p> <h2>முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்</h2><p> தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A.%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வி துறை சார்பில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 274 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக்கட்டடங்கள், பணிமனை கட்டடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகங்கள், மின்னணு நூலகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார்.</p> <p><strong>திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்</strong></p><p>சென்னை மாவட்டம் மாவட்டம் தரமணி, செங்கல்பட்டு செங்கல்பட்டு மற்றும் குரோம்பேட்டை, திருவள்ளுர் மாவட்டம் செவ்வாய்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் - சங்கராபுரம், தருமபுரி மாவட்டம் பூமண்டஹள்ளி மற்றும் பாலக்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், பர்கூர் மற்றும் ஊத்தங்கரை, திருவண்ணாமலை மாவட்டம் நாகப்பாடி, நீலகிரி மாவட்டம் பெருந்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம், நாமக்கல் மாவட்டம் -உதகமண்டலம், ஈரோடு மாவட்டம் மோகனூர், புதுக்கோட்டை மாவட்டம் சிவகங்கை கந்தர்வகோட்டை மற்றும் அறந்தாங்கி, தஞ்சாவூர் மாவட்டம்- ரகுநாதபுரம், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், சிவகங்கை மாவட்டம் மற்றும் காரைக்குடி, தேனி மாவட்டம் கோட்டூர் மற்றும் ஆண்டிப்பட்டி, மதுரை மாவட்டம் மதுரை, அம்பலக்காரன்பட்டி மற்றும் உசிலம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மற்றும் எட்டயபுரம், வேலூர் மாவட்டம் மாதனூர், கடலூர் மாவட்டம் கடலூர் மற்றும் விருதாச்சலம், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகர்கோவில், மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 226 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைக் கட்டடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகம், மின்னணு நூலகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடங்கள்.</p> <h2>ஆய்வகங்கள்</h2><p>சேலம் மற்றும் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிகளில் 6 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகக் கட்டடங்கள்; சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர், சிவகங்கை, வேலூர் மாவட்டம் மாதனூர், கடலூர் மாவட்டம் கடலூர் மற்றும் விருதாச்சலம், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 35 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், மின்னணு நூலக கட்டடங்கள்; ஆய்வகங்கள், மின்னணு நூலகக் கட்டடங்கள்.</p><h2>வகுப்பறை கட்டடங்கள்</h2><p>வேலூர் மாவட்டம் - திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 6 கோடி ரூபாய் செலவில் சமூகவியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நுண்ணுயிர் அறிவியல் ஆகிய மூன்று துறைகளுக்கு கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள்; என மொத்தம் 274.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை சார்ந்த 51 கட்டடங்களை  தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.">முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.</a></p><h2>கலந்து கொண்டனர்</h2><p>இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், உயர்கல்வி துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  தீரஜ் குமார், கல்லூரிக் கல்வி ஆணையர் திரு. பொன்னையா, தொழில்நுட்பக் கல்வி ஆணையர்  பொ. இரத்தினசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரங்கசாமிக்கு பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthday-wishes-for-rangaswamy-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/birthday-wishes-for-rangaswamy-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">93d9d3d3-a738-4333-acb0-e42e83673aa2</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:25:51 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:25:51.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சென்னை,பிறந்தநாள் வாழ்த்து,Birthday Wish,புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி,Rangaswamy,Chief Minister S.Joseph Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/sc4xf5jm/176.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/sc4xf5jm/176.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாளை முன்னிட்டு,  தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்-அமைச்சர் விஜய்.</p><p>புதுச்சேரி முதல்-அமைச்சர் என். ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில் தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>, தொலைபேசி வாயிலாக புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><h2>பிறந்தநாள் வாழ்த்து</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, அவரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து.<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://t.co/Krw25Tvzz6">pic.twitter.com/Krw25Tvzz6</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2084560904654631341?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலினை விசாரித்துவிட்டு இன்றே விடுவிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalin-should-be-interrogated-and-released-today-chennai-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalin-should-be-interrogated-and-released-today-chennai-high-court#comments</comments><guid isPermaLink="false">58dede56-5f90-40f9-9185-6fc80f7948e7</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:22:00 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:22:00.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,சென்னை ஐகோர்ட்டு,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கைது,Chengalpattu,தஞ்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ceo536fi/courtone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ceo536fi/courtone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உதயநிதியை விசாரித்துவிட்டு இன்றே விடுவிக்க வேண்டும். உதயநிதியும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.</p><p>திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,  முதல்-அமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.</p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து சென்றுள்ளனர். </p><p>இதனிடையே, <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சென்னை ஐகோர்ட்டில்</a> உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.</p><p>உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "முதல்-அமைச்சர் குறித்தோ எந்த திரைத்துறையினர் குறித்தோ அவதூறு கருத்துகளை தெரிவிக்கவில்லை. பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசவில்லை. அரசியல் காரணங்களுக்காக திருத்தி பிரசாரம் செய்யப்படுகிறது. </p><p>நாளை சட்டசபை கூடும் நிலையில், திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது.</p><p>தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண், "உதயநிதி ஸ்டாலினை காவலில் வைக்கும் எண்ணம் இல்லை. தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தப்பட்டு, காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்படுவார்" என்று தெரிவித்தார்.</p><p>இதையடுத்து அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இன்று இரவுக்குள் விசாரணையை முடித்து, இன்றைக்குள் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும்.</p><p>காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தார். </p>]]></content:encoded></item><item><title>உதயநிதி பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-irresponsible-public-remarks-condemned-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-irresponsible-public-remarks-condemned-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">aa9b6269-103c-4eff-b5f8-4e18dd49e27f</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:07:48 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:07:48.184Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,திரிஷா,கைது நடவடிக்கை,Cauvery issue,காவிரி விவகாரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lpgsdcyw/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lpgsdcyw/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர் பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில் ஐகோர்ட்டு அறிவுறுத்தலையும் மீறி அவசரம் அவசரமாக காவல்துறையை வைத்து தமிழக அரசு உதயநிதி ஸ்டாலினை கைதுசெய்துள்ள நடவடிக்கையும் கண்டனத்திற்குரியது.</p><p>தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கண்டித்து தவெகவினர் ஒருபுறமும், தற்போது அவரின் கைதை கண்டித்து திமுகவினர் மறுபுறமும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.</p><p>மேகதாது அணை மற்றும் காவிரி நீர் பிரச்சனையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கும் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்நேரத்தில், தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளை மறந்து ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தனிப்பட்ட தாக்குதல்களையும், தரக்குறைவான விமர்சனங்களையும் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும் முன்னேடுத்துக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது.</p><p>இதனிடையே நாளை தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், எதிர்கட்சிகளின் குரல்வளையையும், ஜனநாயகத்தையும் நசுக்க முயலும் செயலாகவே உதயநிதி ஸ்டாலினின் கைதை பார்க்க வேண்டியுள்ளது. எந்த ஒரு பிரச்சனையாக இருப்பினும் சட்ட ரீதியாக சந்திப்பதை தவிர்த்து, காவல்துறையை ஏவி அதிகார துஷ்பிரயோகத்தை கையாளும் தமிழக அரசின் செயல்பாடுகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.</p><p>எனவே, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுவிப்பதோடு, அவரது கைதால் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிட வேண்டும் என காவல்துறையையும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சி தலைவரை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/avoid-jailing-opposition-leader-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/avoid-jailing-opposition-leader-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">ef77015e-adb4-47f2-8d0b-1a43389d4298</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:01:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:01:56.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,சிறை,Prison,எதிர்க்கட்சி தலைவர்,Leader of the Opposition</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/m5fraej3/thirumavalavn.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/m5fraej3/thirumavalavn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சி தலைவரை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D"> திருமாவளவன்</a> தெரிவித்தார். இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>இரட்டுற மொழிதல்</h2><p>அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a>,  'இரட்டுற மொழிதல்' என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றை கூறியிருக்கிறார்.</p><h2>பிரபல நடிகை</h2><p>எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்கு போடுவதிலேயே  முதல்-அமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது,  ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரை சொல்லி கூச்சலிடுகின்றனர். அப்போது அவர் கிண்டலாக பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தை பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு - கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது. </p><h2>எள்ளல் நடை</h2><p>எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையை தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணை குறித்து இழிவாக பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்கு பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.</p><h2>அணுகுமுறை கண்டிக்க தக்கதாகும்</h2><p>சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட -  தன்னிலை மறந்த அணுகுமுறையை கைவிட வேண்டும். பெண்மையை கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்க தக்கதாகும். </p> <h2>நன்மதிப்பை உயர்த்தும்</h2><p>நாளை சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில்,  எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரை சிறைப்படுத்துவதை தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும். தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் மீது பதியப்பட்ட வழக்குகள் என்ன?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-cases-registered-against-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-cases-registered-against-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">58794598-dd37-41cc-9096-9e8b955347f5</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:01:46 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:01:46.216Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,கைது,தஞ்சை,UdhayanithiStalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/4gqfdbqv/udayi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/4gqfdbqv/udayi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சை பேச்சு மற்றும் அதனைத் தொடர்ந்து அரங்கேறிய கைது நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p>இதனிடையே, உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், உதயநிதி ஸ்டாலின் பேசிய அதே பனகல் கட்டடம் முன்பு திரண்டு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>அதேபோன்று, தஞ்சாவூர் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் ரெயிலடி முன்பு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேருந்துகளை மறித்தும் ஈடுபட்டனர்.</p><p>தற்போது, <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20">உதயநிதி ஸ்டாலின்</a> தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் ஒன்றுக்கு அழைத்து வரப்படும் நிலையில், நீதிமன்ற வளாகம் மற்றும் பனகல் கட்டடம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிந்துள்ளதாக கூறப்படும் சட்டப்பிரிவுகள்.</p><p>BNS,79 - பெண்ணை கண்ணிய குறைவாக பேசுதல்.</p><p>BNS, 196 - பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல். </p><p>BNS,192 - கலவரத்தை தூண்டுதல்.</p><p> BNS,296(b) - பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல்.</p><p>BNS,351 - ஒருவருக்கு மிரட்டல் விடுவது.</p><p>BNS,352 - பொது அமைதியை சீர்குலைத்தல், ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல்.  போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 - பிரிவு 67 - மின்னணு ஊடகங்களில் ஆபாசமான தகவல், படம் அல்லது விடியோவை வெளியிடுதல் அல்லது பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பழைய குற்றாலம் தவிர மற்ற அருவிகளில் குளிக்க அனுமதி! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-granted-to-bathe-in-waterfalls-other-than-old-courtallam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-granted-to-bathe-in-waterfalls-other-than-old-courtallam#comments</comments><guid isPermaLink="false">f6c4edd6-84d9-48ee-94b9-254be43bdb3e</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:58:22 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:58:22.895Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,Flood,வெள்ளப்பெருக்கு,குளிக்க தடை,குற்றாலம்,சுற்றுலாப் பயணிகள்,Old Courtallam Falls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/vqc77ymf/70.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ குற்றாலம் மெயின் அருவி]]></media:title><media:description type="html"><![CDATA[ பழைய குற்றால அருவி தவிர மற்ற அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/vqc77ymf/70.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தென்காசி மாவட்டம்</a> குற்றாலத்தில் பழைய குற்றால அருவி தவிர மற்ற அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.</p><h2>அருவியில் வெள்ளப்பெருக்கு</h2><p>தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவிகளில் குளிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் தாக்கம் குறைந்து, நீர்வரத்து சீரான நிலைக்கு வந்துள்ளதால் தடையை நீக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>அருவிகளின் தற்போதைய நிலவரம்</h2><p>குற்றாலத்தின் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளம் குறைந்ததை அடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புலி அருவி மற்றும் சிற்றருவியில் பாதுகாப்பான அளவில் தண்ணீர் கொட்டுவதால் பொதுமக்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.</p><h2>பழைய குற்றால அருவி</h2><p>பழைய குற்றால அருவியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெள்ளப்பெருக்கு </a>குறைந்தவண்ணம் இல்லை. எனவே, இங்கு மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. மலைப் பகுதிகளில் மீண்டும் மழை தீவிரமடைந்தால் பாதுகாப்பு கருதி கட்டுப்பாடுகள் மாற்றப்படலாம் என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;பெண்களை அவதூறாகப் பேசுவோருக்கு உதயநிதியின் கைது தக்க பாடம்&quot;- வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhis-arrest-is-a-fitting-lesson-for-those-who-defame-women-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhis-arrest-is-a-fitting-lesson-for-those-who-defame-women-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">2a9b19d9-bb5b-4875-92df-02d9888c7b2f</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:53:41 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:53:41.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,உதயநிதி ஸ்டாலின்,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,பெண்Female,UdhayanidhiStalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/8fxup6yq/vanathi-srinivasan-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/8fxup6yq/vanathi-srinivasan-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>பெண்களை அவதூறாகப் பேசுவோருக்கு உதயநிதியின் கைது தக்க பாடம் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D#google_vignette">வானதி சீனிவாசன்</a> தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>சட்டத்தின் மீதான நம்பிக்கை</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம்.  சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.</p><p>அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்பவர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி இதேபோன்ற கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் முதல்-அமைச்சர் விஜய் இந்த நடவடிக்கையை வரவேற்கலாம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
பொதுமக்கள் மீது தாக்குதல்... திமுகவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attacks-on-the-public-minister-rajmohan-warns-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attacks-on-the-public-minister-rajmohan-warns-dmk#comments</comments><guid isPermaLink="false">b3dd77ed-e7cd-4bd7-9084-9d5f88f63e0c</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:30:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:30:37.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,நெல்லை,Nellai,உதயநிதி ஸ்டாலின்,UdhayanidhiStalin,ராஜ்மோகன்,Rajmohan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/3jiscbqf/z12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/3jiscbqf/z12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>உதயநிதி கைது</h2><p>தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை மேல் விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.</p><h2>தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்ட நிலையில், அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.</p><h2>பரபரப்பான அரசியல் சூழல்</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில், திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டுவருகின்றனர். ஒரு சிலர் பொதுமக்கள் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.</p> <p>இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இதற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! </p><p>மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது! </p><p>அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். </p><p>இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்.. </p><p>சட்டம் தன் கடமையை செய்யும்! </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நெல்லை அருகே தோட்டத்தில் அரிதாக மலர்ந்த சேனைக்கிழங்கு பூ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-rare-senna-flower-blooms-in-the-garden-near-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-rare-senna-flower-blooms-in-the-garden-near-nellai#comments</comments><guid isPermaLink="false">73da0ec7-0fff-43bd-b18d-fd4e509f442a</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:28:19 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:28:19.219Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,farmer,விவசாயி,flower,Garden,தோட்டம்,பூ,Rare,சேனைக்கிழங்கு,Senna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/vq37y9h4/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரிதாக மலர்ந்த சேனைக்கிழங்கு பூ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/vq37y9h4/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">நெல்லை</a> அருகே டவுன் பாறையடி பகுதியில் தோட்டத்தில் அரிதாக மலர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">சேனைக்கிழங்கு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%82">பூ</a>வை அப்பகுதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பொதுமக்கள்</a> பலரும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">ஆர்வத்துடன்</a> பார்வையிட்டனர்.</p><h2>அரிதாக மலர்ந்த சேனைக்கிழங்கு பூ</h2><p>நெல்லை டவுன் பாறையடி பகுதியை சேர்ந்த சண்முகராஜ், விவசாயி. இவரின் தோட்டத்தில் வளர்க்கப்பட்டிருந்த சேனைக்கிழங்கு செடியில் அரிதாக பூ பூத்துள்ளது. தாவரவியல் ரீதியாக சேனைக்கிழங்கு அடிக்கடி பூக்காத தாவரமாகும். இதன் பூ பழுப்பு மற்றும் ஊதா நிறம் கலந்த பெரிய கிண்ணம் போன்ற தோற்றத்துடன், நடுவில் தடிமனான கம்பு போன்ற அமைப்பை கொண்டிருக்கும்.</p><h2>பார்வையிட்ட பொதுமக்கள்</h2><p>இந்த மலர் பொதுவாக 4 முதல் 5 நாட்கள் மட்டுமே நீடிக்கும். மகரந்த சேர்க்கைக்காக ஈக்களை ஈர்க்கும் நோக்கில், பூ பூத்தது முதல் சில நாட்களில் அழுகிய இறைச்சியை போன்ற கடுமையான நாற்றத்தை வெளியிடும் தனித்தன்மையும் கொண்டது. இந்த நிலையில் இந்த பூ, அறுவடை செய்யாமல் விடப்பட்ட சேனைக்கிழங்கு அழுகிய பிறகு அதிலிருந்து வந்த செடியில் பூத்த பூவாகும். இந்த பூவை காண்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் சண்முகராஜின் தோட்டத்துக்கு வந்து பார்வையிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
&quot;எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் பேரவையை நடத்த நினைக்கிறது அரசு&quot; - இபிஎஸ் விமர்சனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-intends-to-conduct-the-assembly-proceedings-without-the-leader-of-the-opposition-eps-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-intends-to-conduct-the-assembly-proceedings-without-the-leader-of-the-opposition-eps-criticizes#comments</comments><guid isPermaLink="false">3c6845b9-2d9b-4b94-82f3-8234eb6ed989</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:19:03 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:19:03.900Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,எடப்பாடி பழனிசாமி,Udhayanidhi Stalin,arrest,உதயநிதி,இபிஎஸ்,எதிர்க்கட்சித் தலைவர்,Edapadi Palanisamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/qabds07e/z11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/qabds07e/z11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது.</p><p>உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p><p>அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உலகளவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் செயலி சில மணிநேரம் நீக்கம்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/telegram-app-removed-from-apple-app-store-globally-for-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/telegram-app-removed-from-apple-app-store-globally-for-hours#comments</comments><guid isPermaLink="false">9557843b-142f-486f-9145-db53d18c9b70</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:04:57 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:04:57.593Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,Apple iPhones,நீக்கம்,ஆப்பிள் நிறுவனம்,டெலிகிராம் செயலி,removed</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ideum3o0/65.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ டெலிகிராம்- ஆப்பிள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெலிகிராம் செயலி தற்போது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து  சில மணிநேரம் நீக்கம் செய்யப்பட்டது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ideum3o0/65.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>உலக அளவில் பலகோடி மக்களால் பயன்படுத்தப்படும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">டெலிகிராம் செயலி</a> ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து  சில மணிநேரம் நீக்கம் செய்யப்பட்டது.</p><h2>ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டெலிகிராம் செயலி நீக்கம்</h2><p>பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராம் உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் டெலிகிராம் திடீரென நீக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை உலகளாவிய தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில மணி நேரத்திற்கு பின்னர் அந்த செயலி மீண்டும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆப்பிள் ஆப் </a>ஸ்டோரில் சேர்க்கப்பட்டுள்ளது.</p><h2>விதிமீறல் உள்ளடக்கமே காரணம்</h2><p>ஆப்பிள் நிறுவனத்தின் கடுமையான விதிமுறைகளை மீறும் வகையிலான சில தடைசெய்யப்பட்ட உள்ளடக்கங்கள் (சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பானவை) டெலிகிராம் தளத்தில் கண்டறியப்பட்டதாக ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் தற்காலிகமாக நீக்கப்பட்டது.</p><h2>உடனடி நடவடிக்கை</h2><p>இது குறித்து தகவல் அறிந்தவுடன், டெலிகிராம் நிறுவனம் தனது தளத்தில் இருந்த அந்த சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை உடனடியாக நீக்கியதுடன், அதற்கு காரணமான பயனரையும் நிரந்தரமாக தடை செய்தது. இந்த துரித நடவடிக்கையை அடுத்து, சில மணிநேரங்களிலேயே டெலிகிராம் செயலியை மீண்டும் ஆப் ஸ்டோரில் ஆப்பிள் நிறுவனம் அனுமதித்தது.</p><h2>பயனர்களுக்கு பாதிப்பா?</h2><p>இந்த தற்காலிக நீக்கத்தால் சில மணிநேரம் புதிய பயனர்கள் செயலியை பதிவிறக்கம் செய்யவோ அல்லது ஏற்கனவே உள்ளவர்கள் அப்டேட் செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், ஏற்கனவே ஐபோன்களில் டெலிகிராம் செயலியை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் பயனர்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி, செய்திகளை அனுப்பும் மற்றும் பெறும் சேவைகள் வழக்கம் போல் தடையின்றி இயங்கின.</p><p>அதே சமயம், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி எந்த தடங்கலும் இன்றி தொடர்ந்து நீடித்தது குறிப்பிடத்தக்கது. "என் வீழ்ச்சி குறித்த செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை" என டெலிகிராம் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விக்கிரமசிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-brutally-murdered-at-wickramasinghapuram-bus-stand-police-arrest-4-people-and-investigate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-brutally-murdered-at-wickramasinghapuram-bus-stand-police-arrest-4-people-and-investigate#comments</comments><guid isPermaLink="false">6e1f440b-a2fe-40f3-86c2-4be04cc1e29d</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:56:15 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:56:15.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,murder,Youth,police investigation,bus stop,வாலிபர் வெட்டிக்கொலை,விக்கிரமசிங்கபுரம்,போலீசார் விசாரணை,பஸ் நிறுத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gb3xv6a9/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விக்கிரமசிங்கபுரத்தில் கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்திய போலீசார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gb3xv6a9/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,  </p><p>நெல்லை மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">விக்கிரமசிங்கபுரம்</a> பஸ் நிறுத்தத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை</a> செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார் விசாரணை</a> நடத்தி வருகின்றனர். </p><h2>வாலிபர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சொரிமுத்து (வயது 30). இவர் விருதுநகரில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அங்குள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மனைவி, குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்தார். அவர்களை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சொரிமுத்து மட்டும் நேற்று விருதுநகருக்கு புறப்பட முடிவு செய்தார். </p><h2>வெட்டிக்கொலை</h2><p>நேற்று மாலையில் அவர் விக்கிரமசிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு 2 பைக்குகளில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சொரிமுத்துவை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து சொரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். </p><h2>பயணிகள் அலறியடித்து ஓட்டம்</h2><p>இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இதை பார்த்த பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த கொலை குறித்து உடனடியாக விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பை டி.எஸ்.பி. கணேஷ்குமார், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சொரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>காரணம் என்ன?</h2><p>முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விக்கிரமசிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாங்கள் என்ன தீவிரவாதியா?- உதயநிதி கைதுக்கு சென்னை மேயர் பிரியா கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-we-terrorists-chennai-mayor-priya-condemns-udhayanidhis-arrest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-we-terrorists-chennai-mayor-priya-condemns-udhayanidhis-arrest#comments</comments><guid isPermaLink="false">8ba7d613-c86e-437e-91fa-d6d205078d8b</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:45:45 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:45:45.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,Udhayanidhi Stalin,Mayor Priya,arrest,கண்டனம்,உதயநிதி,சென்னை மேயர் பிரியா,உதயநிதி ஸ்டாலின் கைது,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/up8eoev7/z10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/up8eoev7/z10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p>செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேயர் பிரியா, தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p>  <h2>உதயநிதி கைது</h2><p>தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை மேல் விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.</p><h2>தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்ட நிலையில், அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.</p>  <h2>சென்னை மேயர் பிரியா கண்டனம்</h2><p>இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேயர் பிரியா, உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், "தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா? தியேட்டருக்கு சென்று 'ஜனநாயகன்' படம் பார்த்து அழுகிறார்கள். ஆனால் இன்று போலீசாரை வைத்து ரத்தம் வரும் அளவுக்கு அடிக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? போலீஸ் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது. இந்த அராஜக அரசியலை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" என்று கூறினார்.</p><h2>பரபரப்பான அரசியல் சூழல்</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா? - ஆர். எஸ். பாரதி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-kind-of-prime-minister-is-trisha-is-she-a-chief-minister-r-s-bharathi-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-kind-of-prime-minister-is-trisha-is-she-a-chief-minister-r-s-bharathi-review#comments</comments><guid isPermaLink="false">3c25e85a-7255-4045-8535-e4f66095a3ed</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:44:54 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:44:54.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,நடிகை திரிஷா,திமுக,DMK,RS Bharathi,ஆர்.எஸ். பாரதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/qfe177x2/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/qfe177x2/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தற்போது தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர். இந்நிலையில் திமுக அமைப்புச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF">ஆர்.எஸ்.பாரதி</a> செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><h2>திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா?</h2><p>ஜனநாயகன் படத்தில் நடித்தாரே தவிர, ஜனநாயகம் பற்றி A,B,C அறியாதவராக விஜய் இருக்கிறார். தண்ணீர் வரவில்லை என்கிற வயிற்றெரிச்சலில் யாரோ ஒருவர் திரிஷா பெயரை கூறினார். அது என்ன உலகமகா தப்பா அது. தண்ணீர் என்பது குடிப்பது தானே. அதை நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? திரிஷா பற்றி பேசினால் ஏன் இவ்வளவு அவசரம், திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா? எதற்காக இவ்வளவு அவசரம்? “திரிஷாவை விமர்சித்தால் கைது செய்வார்களா? மக்கள் பிரச்சினையை கவனிப்பதில் தவெக அரசுக்கு நேரமில்லை.</p><h2>இளைய கலைஞர்</h2><p>எதிர்க்கட்சியினரை கைது செய்ய முனைப்பு காட்டுகிறது". மேலும், இப்படி தான் கருணாநிதியை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இன்று அதே போல உதயநிதியை கைது செய்து வேனில் அழைத்து செல்கின்றனர். இன்று முதல் உதயநிதியை இளைய கலைஞர் என அழைப்பதற்கான வழியை விஜய் வகுத்துவிட்டார்.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது, கடைகள் அடைப்பு; அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhis-arrest-mk-stalins-important-advice-in-arivalayam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhis-arrest-mk-stalins-important-advice-in-arivalayam#comments</comments><guid isPermaLink="false">80c1ad86-3305-4261-8cf9-0b0a7aca3f47</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:28:07 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:28:07.721Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி,மு.க. ஸ்டாலின்,mk stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xu8ppqos/tnfcs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xu8ppqos/tnfcs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்ச்சியாக, அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><p>தஞ்சையில் நேற்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. உதயநிதியின் பேச்சுக்கு த.வெ.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் த.வெ.க. மகளிர் அணி சார்பில், தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேசிய மகளிர் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது.</p>  <h2>9 பிரிவுகளில் வழக்கு</h2><p>த.வெ.க. அளித்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் தஞ்சை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சையில் இருந்து இன்று போலீஸ் குழுவினர், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.</p><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.வினர் பல்வேறு நகரங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால், பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன.  போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  இதனால் கலவரம் பரவி விடாமல் இருப்பதற்காக, அதிரடிப்படையினர் இறக்கி விடப்பட்டு உள்ளனர்.</p>  <h2>மு.க. ஸ்டாலின் வருகை</h2><p>இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.  அவர் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.  தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனும் வந்துள்ளார்.</p>  <h2>பொய் வழக்கு</h2><p>உதயநிதி கைது தொடர்பாக தி.மு.க. வெளியிட்ட செய்தியில், உதயநிதி கைது நடவடிக்கை ஜனநாயக விரோதம்.  அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது.  கைது நடவடிக்கையால், உதயநிதியையோ, தி.மு.க.வையோ முடக்க முடியாது என தெரிவித்து உள்ளது.</p><p>நாளை தமிழக சட்டசபை கூடவுள்ள நிலையில், இன்று கைது நடவடிக்கை ஏன்? என கேட்டுள்ளது.  சட்டசபை கூட்டத்தொடரில் உதயநிதி எழுப்ப உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்ற அச்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு இனி முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற வேண்டும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/promotions-and-job-transfers-must-now-be-approved-by-the-chief-minister-tamil-nadu-government-issues-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/promotions-and-job-transfers-must-now-be-approved-by-the-chief-minister-tamil-nadu-government-issues-order#comments</comments><guid isPermaLink="false">0e90ac67-65c1-41d1-927c-af89e838a44e</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:23:39.206Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,முதல்-அமைச்சர்,தமிழக அரசு,Chief Minister,Transfer,பணியிட மாற்றம்,publication,Government Order,Approval,ஒப்புதல்,பதவி உயர்வு,Promotion,அரசாணை வெளியீடு,பெற வேண்டும்,To get</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/sj90nktv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு உத்தரவு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/sj90nktv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">பதவி உயர்வு</a>, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">பணியிட மாற்றங்களுக்கு</a> இனி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">ஒப்புதல்</a> பெற வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</a> </p><p>தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-ன் விதி 35(4)ன் கீழ், கடந்த 2022 முதல் 2025 வரை வெளியிடப்பட்ட அனைத்து நிலை ஆணைகளும், கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட நிலை ஆணை எண்-7ம் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு பதிலாக பதவி உயர்வு, நியமனம், பணி இடமாற்றம், நிலம் கையகப்படுத்தல், நில மாற்றம் உள்ளிட்டவைக்கு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்ட புதிய உத்தரவில் கூறியிருப்பதாவது:</p><p>துறைத் தலைவர்கள், துறைத் தலைவர்களுக்கு அடுத்த நிலை அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆகியோரின் தற்காலிக மற்றும் நிரந்தர பதவி உயர்வு பட்டியல்கள் முதல்-அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். மற்ற மாநிலப் பணியாளர் பதவி உயர்வு பட்டியல்களில் சம்பந்தப்பட்ட துறை, மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் நிதித்துறைக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதல் போதுமானதாகும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால், மனிதவள மேலாண்மை அமைச்சரின் ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பப்பட வேண்டும். மூப்பு அடிப்படையை மீறிய பதவி உயர்வுகள் தொடர்பான கோப்புகள் தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையுடன் முதல்-அமைச்சரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p><h2>பணி நியமனத்துக்கு முதல்-அமைச்சர் ஒப்புதல்</h2><p>அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அகில இந்திய பணியாளர் அதிகாரிகள், கூடுதல் செயலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் பதிவாளர்கள் மற்றும் கூடுதல் இயக்குநர்கள் ஆகியோரின் நியமனம், பணி இடமாற்றம் தொடர்பான அனைத்து கோப்புகளும் முதல்-அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். சட்ட அலுவலர்கள் நியமனத்தில், அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர், அரசு பிளீடர் உள்ளிட்ட உயர்நிலைப் பதவிகளுக்கான நியமனங்களுக்கு முதல்-அமைச்சரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களுக்கான இதர சட்ட அலுவலர்களின் நியமனங்களை எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் முடிவு செய்வார்.</p><h2>துறை அமைச்சரின் ஒப்புதல்</h2><p>நீர்வளத் துறையில் கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களின் பணியிட மாற்றம் தொடர்பான கோப்புகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பரிசீலிப்பார். பொதுப்பணித் துறையில் இதே நிலை அதிகாரிகளின் கோப்புகளை பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் முடிவு செய்வார். ஒரு ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலம் கையகப்படுத்தப்படும் ரெயில்வே, சாலை, தேசிய நெடுஞ்சாலை, பாசன கால்வாய், மின்வழித்தடம், தொழில் வழித்தடம், மலிவு விலை வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்களுக்கு முதல்-அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மை அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு மிகாத நிலம் கையகப்படுத்தப்படும் திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் வருவாய் அமைச்சரின் ஒப்புதல் போதுமானதாகும்.</p><h2>தடையில்லா சான்றிதழ்</h2><p>ஒரு அரசுத் துறையிலிருந்து மற்றொரு அரசுத் துறைக்கு நிலம் மாற்றும் கோப்புகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மை அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மட்டுமே அந்த கோப்பு முதல்-அமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், துறைத் தலைவர் மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகளை தவிர பிற அதிகாரிகளின் பதவி உயர்வு, இடமாற்றம், பணியமர்த்தல் உள்ளிட்ட கோப்புகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் முடிவு செய்வார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான ‘தடையில்லா சான்றிதழ்’ வழங்கும் அதிகாரமும் அந்த அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. </p><h2>கவர்னரின் ஒப்புதல் வேண்டாம்</h2><p>முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளின் பழைய வாகனங்களை முன்கூட்டியே பயன்பாட்டிலிருந்து நீக்குவது தொடர்பான கோப்புகளுக்கு தலைமைச் செயலாளர் ஒப்புதல் வழங்குவார். மேலும் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், மாநில தகவல் ஆணையம், தமிழ்நாடு லோக் ஆயுக்தா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒம்புட்ஸ்மேன் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான கோப்புகள் கவர்னரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் நியமனங்களை இனி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டியதில்லை. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பள்ளிக் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு: மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/human-excreta-found-in-school-drinking-water-tank-ensure-student-safety-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/human-excreta-found-in-school-drinking-water-tank-ensure-student-safety-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">92fc1395-4674-4fe1-991d-2bf3b8487c4b</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:10:31 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:10:31.009Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,குடிநீர் தொட்டி,drinking water tank</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/5elp3q0w/14.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/5elp3q0w/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் பருகும் குடிநீர் தொட்டிக்குள் மனித மலக்கழிவு கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். கல்வி கற்கும் ஆலயத்தில், பிஞ்சு குழந்தைகளின் உயிருடன் விளையாடும் இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை எவர் செய்திருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>தமிழகத்தையே உலுக்கிய வேங்கைவயல் வடுமறைவதற்கு முன்னரே, மீண்டும் ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கவலை அளிக்கிறது. அரசுப் பள்ளிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே இதற்கு மிக முக்கிய காரணமாகும். எனவே இனியாவது தவெக அமைச்சர்கள் கேமராக்களுடன் பள்ளிகளில் 'ஆய்வு நாடகம்' நடத்துவதை விடுத்து, மாணவர்களின் பாதுகாப்பிற்கு உருப்படியான (உறுதியான) தீர்வை வழங்க வேண்டும்.</p><p>மேலும், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளி குடிநீர் தொட்டிகளையும் முறையாகப் பரிசோதித்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் </p><p> அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது - கனிமொழி எம்.பி. கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-of-udhayanidhi-stalin-mp-kanimozhi-condemns-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-of-udhayanidhi-stalin-mp-kanimozhi-condemns-action#comments</comments><guid isPermaLink="false">4fc390ca-eb67-46f7-9284-638be60f6e7e</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:04:48 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:04:48.620Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கனிமொழி எம்.பி.,MP Kanimozhi</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/0va8cy7x/13.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/0va8cy7x/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தற்போது தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கன்மொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது. நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்.”</p><p>இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>அரசுப் பள்ளி குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு; கடும் நடவடிக்கை கோரி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/human-waste-mixed-in-government-school-drinking-water-manickam-thakur-demands-strict-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/human-waste-mixed-in-government-school-drinking-water-manickam-thakur-demands-strict-action#comments</comments><guid isPermaLink="false">5c462b5e-5354-4ea2-a071-d0e70fd43999</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:51:00.136Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குடிநீர்,drinking water,Government School,மனித கழிவு,Human Waste,அரசுப் பள்ளி,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/18vkysxy/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/18vkysxy/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது</p><h2>சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு</h2><p>திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலக்கழிவு இருந்ததாக கூறப்படும் பிளாஸ்டிக் கவரில் எச்சரிக்கை துண்டுச் சீட்டு ஒன்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதோடு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ஏற்படக் கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. </p><h2>தீவிர விசாரணை</h2><p>இத்தகைய சம்பவங்கள் பள்ளி வளாகத்திலேயே நடைபெறுவது பிஞ்சு உள்ளங்கள் மத்தியில் நஞ்சை விதைப்பதற்கு சமமாகும். இந்தக் கொடூர சம்பவம் குறித்து கரூர் மக்களவை உறுப்பினர்  ஜோதிமணி அவர்கள் சம்பவம் அறிந்தவுடனேயே மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், மாவட்ட காவல்துறை அதிகாரியிடமும் பேசி, தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டுமென கூறியிருக்கிறார். </p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>இதுபோன்ற சமூகவிரோத செயல்களில் எந்தவித சமரசமோ, தயவு தாட்சண்யமோ காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார். மாணவர்கள் படிக்கின்ற பள்ளி வளாகத்திலேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற நாட்டில் அனுமதிக்கவே முடியாது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது - பிரேமலதா கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalins-arrest-premalatha-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalins-arrest-premalatha-condemns#comments</comments><guid isPermaLink="false">e086d4de-0ef5-43f8-a76f-186bc4c7b5c8</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:31:49 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:31:49.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,arrest,Premalatha Vijayakanth,உதயநிதி ஸ்டாலின் கைது,பிரேமலதா கண்டனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/jk5q5c8h/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/jk5q5c8h/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தற்போது தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர். இந்நிலையில்</p><p>இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE">பிரேமலதா </a>விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>அடக்குமுறைச் சட்டங்கள்</h2><p>எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காக அவரைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை ஜனநாயக உரிமையாகும். கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பாகும்; கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. கருத்துக்களை ஒடுக்குவதற்காக காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.</p> <p>சுதந்திர இந்தியாவில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும் ஆளுங்கட்சியினர் மற்றும் முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் அரசியல் மேடைகளில் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர். அதேபோன்று எதிர்க்கட்சியினருக்கும் தங்களது அரசியல் கருத்துகளை ஜனநாயக முறையில் தெரிவிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை குறைக்கும் வகையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. </p><h2>விரைவான நடவடிக்கை</h2><p>அண்மையில் ராணிப்பேட்டையில் செய்தியாளர்கள் தவெக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் சமநிலையான தாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. </p><h2>எதிர்க்கட்சித் தலைவர் கைது</h2><p>நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்த முக்கியமான நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் பொருந்தாத செயலாகும். எனவே, ஜனநாயக மரபுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து, அரசியல் கருத்து வேறுபாடுகளை கைது நடவடிக்கைகள் மூலம் கையாளும் போக்கை கைவிட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
திரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-must-apologize-to-trisha-khushbu-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-must-apologize-to-trisha-khushbu-condemns#comments</comments><guid isPermaLink="false">69cb2e37-dd34-456c-82bd-e319e4a0d39e</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:19:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:19:43.304Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,கண்டனம்,உதயநிதி,குஷ்பு,Kushboo,Controversial speech,திரிஷா,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/32ft1uyw/z8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/32ft1uyw/z8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது.</p><h2>6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு</h2><p>இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து, தவெக மகளிர் அணி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p> <h2>கைது செய்த போலீஸ்</h2><p>இதையடுத்து தஞ்சையில் இருந்து இன்று சென்னை போலீஸ் குழுவினர், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.</p><h2>குஷ்பு கண்டனம்</h2><p>இதற்கிடையில், நடிகையும் பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பொது மேடையில் நடிகை திரிஷாவை அவமதித்ததாக குற்றம்சாட்டிய அவர், "தவறை ஒப்புக்கொண்டு திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதியிடம் உள்ளதா என்பதை பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-girl-in-nellai-sexually-harassed-youth-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-girl-in-nellai-sexually-harassed-youth-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">e2e0b51f-e254-4f22-8b9b-2b1b8e991fe9</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:10:21 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:10:21.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrest,Youth,வாலிபர்,சிறுமி,girl,போக்சோ,POCSO,love affair,காதல் தொல்லை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ephf4qa3/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ephf4qa3/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் 16 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">காதல் தொல்லை</a> கொடுத்த வாலிபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a> சட்டத்தின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை</h2><p>நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் அசோக் (வயது 27). பெயிண்டரான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் 16 வயது சிறுமியிடம் பழகி வந்தார். பின்னர் அவர் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவரின் காதலை சிறுமி ஏற்றுக்கொள்ளவில்லை.</p><h2>வாலிபர் போக்சோவில் கைது</h2><p>இதனால் ஆத்திரம் அடைந்த அசோக், அந்த சிறுமிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனை பறித்து சாலையில் வீசி உடைத்து ரகளை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அசோக்கை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-condemns-udhayanidhi-stalins-remarks-at-the-thanjavur-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-condemns-udhayanidhi-stalins-remarks-at-the-thanjavur-protest#comments</comments><guid isPermaLink="false">61ffbc69-a755-4679-9c7f-cd31c2ad68db</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:07:36 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:07:36.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kss692hv/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kss692hv/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”தஞ்சையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  வரம்பு கடந்து முதலமைச்சர் ஜோசப் விஜய்யை விமர்சனம் செய்து பேசி இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.</p><p>"யாகாவராயினும் நா காக்க" எனும் குறள் மொழியை ,எதிர்க்கட்சித் தலைவர்  பொறுப்பில் உள்ள உதயநிதி கடை பிடிக்க வேண்டும். அதை விடுத்து முதலமைச்சர் மீது மலிவான இழி மொழிகளை வீசுவது அவர் வகித்து வரும் பொறுப்பிற்கு உகந்தது அல்ல.</p><p>அரசுக்கு இடையூறு செய்வதற்கும், அரசியல் நடத்துவதற்கும் காவிரி பிரச்சினையை பயன்படுத்தி திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, நாலாந்தர பேச்சாளர் பட்டியலில் அவரை சேர்த்து இருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.</p><p>காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் குரல் அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aftermath-of-udhayanidhi-stalins-arrest-dmk-cadres-stage-protests-across-various-parts-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aftermath-of-udhayanidhi-stalins-arrest-dmk-cadres-stage-protests-across-various-parts-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">00697dca-146b-4774-8f1d-410f674fce08</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:01:02 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:01:02.010Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கைது,arrested</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/god7owbi/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/god7owbi/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தற்போது தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>முன்னதாக உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் குவிந்தனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர். எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. </p> ]]></content:encoded></item><item><title>502 செவிலியர் பணியிடங்கள் நீக்கம்; தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-condemns-tamil-nadu-government-for-abolishing-502-nursing-posts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-condemns-tamil-nadu-government-for-abolishing-502-nursing-posts#comments</comments><guid isPermaLink="false">923f3db8-7a2e-446a-9ddb-d3224ca4754d</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:55:19 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:55:19.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani Ramadas,பணியிடங்கள்,posts,நீக்கம்,செவிலியர்,Nursing</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xbb10d77/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xbb10d77/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதாரத்துறை ஆகியவற்றில் உள்ள 502 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அந்த இடங்களில் பணியாற்றி வந்த செவிலியர்களை வேறு இடங்களில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் போவதாக வாக்குறுதி அளித்திருந்த தவெக, ஆட்சிக்கு வந்த பின் காலியிடங்களை ஒழிப்பது அநீதியாகும்.</p><h2>செவிலியர்கள் தட்டுப்பாடு</h2><p>தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் வரை அனைத்து இடங்களிலும் செவிலியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றிலுள்ள காலியிடங்களை நிரப்புவதன் மூலம் தான் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். ஆனால், தமிழக அரசோ, ஓரிடத்தில் பணியாற்றும் செவிலியர்களை இன்னொரு இடத்திற்கு மாற்றி நிலைமையை சமாளிக்கும் வித்தையை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த நோயர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.</p><h2>204  அரசாணை</h2><p>சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சேலம் மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லை. புதிய செவிலியர்களை தேர்வு செய்து அந்த இடங்களில் நியமிப்பது தான் இதற்கு தீர்வு ஆகும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய 7 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தலா 30 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அங்கு பணியாற்றி வந்த 210 செவிலியர்களை ஸ்டான்லி, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமித்துள்ளது. இதற்காக கடந்த ஜூலை 21-ஆம் நாள் 204 என்ற அரசாணையை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை பிறப்பித்திருக்கிறது.</p><p>இன்னொருபுறம், மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்காக அரசு மருத்துவமனைகளில் இயங்கும் 17 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்களில் பணியமர்த்துவதற்காக 292 செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை புதிதாக நியமிக்காமல் அரசு மருத்துவமனைகளில் உள்ள 100 செவிலியர் பணியிடங்களையும், பொது சுகாதாரத்துறையில் உள்ள 192 செவிலியர் பணியிடங்களையும் ஒழித்துள்ள அரசு, அந்த பணியிடங்களில் பணியாற்றிய செவிலியர்களை அவசர சிகிச்சை மையங்களில் நியமித்துள்ளது.</p><h2>பணியிடங்களை குறைப்பது நியாயமல்ல</h2><p>தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் வரையறுத்துள்ள விதிகளின்படி  தேவைப்படும் செவிலியர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு செவிலியர்கள் மட்டும் தான் அரசு  மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் 1832 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2334 நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில்,  அவற்றில் 1400-க்கும் குறைவான செவிலியர்கள் மட்டும் தான் நிரந்தர அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல எனும் போது இருக்கும் பணியிடங்களையும் குறைப்பது நியாயமல்ல.</p><h2>தொகுப்பூதிய செவிலியர்கள்</h2><p>தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை 6500-க்கும் கூடுதலான செவிலியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில்  தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் காலியாகும் போது அந்த இடங்கள் தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்பது தான் நடைமுறையாகும். ஆனால், இருக்கும் பணியிடங்களையும் தமிழக அரசு ஒழித்து வருவதால், இப்போது  தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பணி நிலைப்பு பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.</p><p>அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 செவிலியர் கல்லூரிகள் புதிதாகத்  தொடங்கப்படவுள்ளன. அவற்றில் பணி செய்யவும் ஒப்ப்ந்த அடிப்படையிலான செவிலியர்கள் தான் நியமிக்கப்படவுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிலைப்பு என்பது பகல் கனவாக மாறிவிட்டது. இது செவிலியர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வாக்குறுதி</h2><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழக மருத்துவமனைகளில் சில ஆண்டுகளில் செவிலியர்கள் இருக்க மாட்டார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத்  தடுக்க வேண்டும் என்றால், செவிலியர் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>