<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 15 Sep 2026 04:28:43 +0000</lastBuildDate><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த துர்கா யானைக்கு வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reception-for-durga-the-elephant-arriving-at-the-madurai-meenakshi-amman-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reception-for-durga-the-elephant-arriving-at-the-madurai-meenakshi-amman-temple#comments</comments><guid isPermaLink="false">778adfd0-6e84-4de9-9cc3-564b5bdeea59</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:25:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:25:16.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Meenakshi Amman Temple,elephant,யானை,மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/szat3w9a/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/szat3w9a/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை,  </p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்ற ஒரு யானை மட்டுமே உள்ளது. அந்த யானையும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறது. எனவே கோவிலுக்கு கூடுதலாக ஒரு யானை வாங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதற்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு 5 யானைகள் அசாமில் இருந்து கொண்டு வரப்பட்டன. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் புதிய யானை கோவிலுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.</p> <p>இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான நேற்று அதிகாலை 2 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு துர்கா என்ற 5 வயது யானை அசாமில் இருந்து வந்தது. அந்த யானைக்கு கோவில் ஸ்தானீக பட்டர்கள் சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பித்தனர். கோவில் பணியாளர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இந்த யானை அசாமில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற் கொண்டு மதுரை வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>தங்கம் விலை மேலும் குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-further-todays-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-further-todays-status#comments</comments><guid isPermaLink="false">8ef2783b-9453-4234-9202-6cf13649118e</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:24:02 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:24:02.907Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zrc5h8eg/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zrc5h8eg/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.14,125-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையை பொறுத்தவரையில் 4-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அசாமில் இருந்து வந்த 5 வயது யானைக்கு மலர் தூவி வரவேற்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-year-old-elephant-arrives-from-assam-for-the-world-famous-madurai-meenakshi-amman-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-year-old-elephant-arrives-from-assam-for-the-world-famous-madurai-meenakshi-amman-temple#comments</comments><guid isPermaLink="false">1075b9d3-2d34-45b6-9f65-8e0b0487ee67</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:22:41 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:22:41.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அசாம்,யானை,மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/g9e7yt84/ecfas.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/g9e7yt84/ecfas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>கும்பாபிஷேக பூஜைகள் நடந்து வரும் நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 5 வயது யானை அசாமில் இருந்து வந்தது.</p><p>உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். திருவிழாவின்போது சுவாமிக்கு முன்பு டங்கா மாடு, யானை, ஒட்டகங்கள், குதிரைகள் அணிவகுத்து செல்வது வழக்கம். இதற்காக மீனாட்சி அம்மன் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள் இருந்தன. முன்பு கோவிலில் 7 யானைகள் இருந்தன. தற்போது பார்வதி என்ற ஒரு யானை மட்டுமே உள்ளது. அந்த யானையும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறது.</p> <p>எனவே கோவிலுக்கு கூடுதலாக ஒரு யானை வாங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.  அதற்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு 5 யானைகள் அசாமில் இருந்து கொண்டு வரப்பட்டன. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் புதிய யானை கோவிலுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 9-ந் தேதி ராஜஸ்தானில் இருந்து 2 ஒட்டகங்கள் உபயதாரர்கள் மூலம் கோவிலுக்கு கொடுக்கப்பட்டன.</p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான நேற்று அதிகாலை 2 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு துர்கா என்ற 5 வயது யானை அசாமில் இருந்து 3 நாட்கள் பயணமாக வந்தது. அந்த யானைக்கு கோவில் ஸ்தானீக பட்டர்கள் சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பித்தனர். கோவில் பணியாளர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.</p> <p>இந்த யானை அசாமில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு மதுரை வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 7 யானைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் படிப்படியாக அந்த யானைகள் எண்ணிக்கை குறைந்தன.  68 ஆண்டுகள் வரை வாழ்ந்த பார்வதி யானை முதுமை காரணமாக உயிரிழந்தது. அதனுடன் இருந்த அங்கையர்கண்ணி என்ற யானையும் 2007-ம் ஆண்டு இறந்தது.</p><h2>5 வயது யானை</h2><p>அதன் பின்பு கோவில் யானை பார்வதி மட்டும் தனியாக இருந்ததால் அதற்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே பக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது 5 வயதுள்ள துர்கா என்ற பெண் யானை விநாயகர் சதுர்த்தி தினத்தன்றும், கும்பாபிஷேகத்தையொட்டியும் வந்துள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: நகைக்கடை உரிமையாளரை தாக்கிய பழ கடைக்காரர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-fruit-vendor-arrested-for-attacking-jewellery-shop-owner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-fruit-vendor-arrested-for-attacking-jewellery-shop-owner#comments</comments><guid isPermaLink="false">29173b64-c439-492c-98af-f4d198fca605</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:08:09 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:08:09.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,arrested,தூத்துக்குடி,Debt,உரிமையாளர்,owner,கடன்,நகைக்கடை,Fruits,jewelry shop,கடைக்காரர்,shopkeeper,பழம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/k1q1erhv/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/k1q1erhv/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் கடனாகப் பெற்ற பணத்தை திருப்பிக் கேட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">நகைக்கடை உரிமையாளரை</a> தாக்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D">பழ</a> கடைக்காரரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>நகைக்கடை உரிமையாளர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி </a>மாவட்டம், சாத்தான்குளம் செக்கடி புதுத்தெருவைச் சேர்ந்த ரவி (வயது 63), சாத்தான்குளம் முதன்மை சந்தைப் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சாத்தான்குளத்தில் பழக்கடை நடத்தி வரும் கொம்பன்குளம் மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. </p><h2>ரூ.1 லட்சம் கடன்</h2><p>இந்த நிலையில், பாஸ்கர் தான் வங்கியில் அடமானம் வைத்த நகை ஏலத்திற்கு வருவதாகவும், அதை மீட்பதற்கு ரூ.1 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">கடனாக</a> தருமாறும் ரவியிடம் கேட்டுள்ளார். அதனை நம்பி ரவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாஸ்கரின் வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சம் பணம் பரிமாற்றம் செய்துள்ளார்.</p><h2>நகைக்கடை உரிமையாளரை தாக்கிய பழ கடைக்காரர்</h2><p>அதன்பின்னர் பாஸ்கர் ரூ.70 ஆயிரத்தை மட்டும் ரவியிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.30 ஆயிரத்தைக் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரவி, பாஸ்கரின் வீட்டிற்கு நேரில் சென்று பணத்தைத் தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், நகை வியாபாரி ரவியை அவதூறாகப் பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். </p><h2>கைது</h2><p>இதில் காயமடைந்த ரவி, சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாஸ்கரை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் பற்றி அவதூறு பேச்சு: திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/defamatory-remarks-against-chief-minister-vijay-case-registered-against-dmk-mp-a-raja-under-seven-sections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/defamatory-remarks-against-chief-minister-vijay-case-registered-against-dmk-mp-a-raja-under-seven-sections#comments</comments><guid isPermaLink="false">443f444c-f0b0-4c49-ade8-e930affffe0e</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:05:39 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:05:39.215Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்குப்பதிவு,case registered,ஆ.ராசா,A. Raja</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vzqcy29z/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vzqcy29z/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்-அமைச்சர் விஜய் திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.</p><p>மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்றும் மிசா குறித்து பேசும்போது, மு.க.ஸ்டாலினை சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாக முதல்-அமைச்சர் விஜய் உடல்மொழி செய்ததாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.</p> <p>இதற்கிடையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 12-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா, முதல்-அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். ஆ.ராசாவின் பேச்சுக்கு தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.</p><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய ஆ.ராசா மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அமைதியை குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவமதிப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>அண்ணா ஆட்சியை  மீண்டும் நிறுவிட உறுதியேற்போம் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-re-establish-anna-rule-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-re-establish-anna-rule-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">7a35dcf6-1b07-4988-af09-e4fd211199f7</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:02:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:02:16.436Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,பிறந்தநாள்,Anna,பேரறிஞர் அண்ணா,Anna birthday,அண்ணா பிறந்தநாள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xjghhf77/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xjghhf77/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, அண்ணா ஆட்சியை  மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>ஒப்பற்ற தலைவர்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. 
</p><h2>கலங்கரை விளக்கம்</h2><p>அதிகாரத்தை விட கொள்கையையும், பதவியை விட மக்களையும், தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
</p><h2>உறுதியேற்போம்</h2><p>தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன். மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம்! வாழ்க அண்ணா நாமம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். <br><br>அதிகாரத்தை விட கொள்கையையும், <br>பதவியை விட… <a href="https://t.co/BFMvHbCtoa">pic.twitter.com/BFMvHbCtoa</a></p>&mdash; Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&amp;AIADMK (@EPSTamilNadu) <a href="https://x.com/EPSTamilNadu/status/2099703807483793694?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் தோற்றத்தில் விநாயகர் சிலை... உடனடியாக அகற்ற வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-statue-of-lord-ganesha-in-the-guise-of-chief-minister-vijay-should-be-removed-immediately-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-statue-of-lord-ganesha-in-the-guise-of-chief-minister-vijay-should-be-removed-immediately-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">03832a94-c551-428a-aa66-322b34caec6c</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:50:49 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:50:49.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,விநாயகர் சிலை,அகற்ற வேண்டும்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/schofesi/38.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/schofesi/38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விஜய் தோற்றத்தில் விநாயகர் சிலையினை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>விநாயகர் சிலை</h2><p>சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முதல்-அமைச்சர் விஜய் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது மக்களின் ஆன்மிக உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயலாகும்.</p><p>புனிதமான விழாவை அரசியல் சுயலாப மேடையாக்கி, இறை வழிபாட்டைத் தேர்தல் பிரச்சாரமாகத் தரம் தாழ்த்தும் தவெகவினரை முதல்-அமைச்சர் விஜய் ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் மௌனம் காத்ததே இத்தகைய எல்லை மீறிய செயல்கள் தொடர்வதற்குக் காரணமாகும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, மக்களின் மத உணர்வுகளையும் வழிபாட்டு மரபுகளையும் சீர்குலைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இத்தகைய சிலைகளை தவெக அரசு உடனடியாக அகற்ற வேண்டும். இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சுற்றுலா செல்ல அனுமதி மறுத்த பெற்றோர்: மனமுடைந்த கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-deny-trip-college-student-dies-by-suicide</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-deny-trip-college-student-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">295e3d23-5ab2-4c27-a1cc-8674313cfdc7</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:29:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:30:31.741Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,தற்கொலை,Suicide,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/6tmzv150/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/6tmzv150/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>கோவை அருகே சுற்றுலா செல்ல பெற்றோர் அனுமதிக்காததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>அனுமதி மறுப்பு</h2><p>கோவையை அடுத்த வேடப்பட்டி குரும்பம்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி (54 வயது). இவருடைய மகள் பூர்வஜா (20 வயது). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் படித்து வரும் மாணவ-மாணவிகள் பெங்களூருவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து பூர்வஜா தனது பெற்றோரிடம் சென்று பெங்களூருவுக்கு சுற்றுலா செல்ல அனுமதி கேட்டார். அதற்கு அவர்கள் அனுமதி மறுத்ததாக தெரிகிறது.</p><h2>விபரீத முடிவு</h2><p>இதனால் மனமுடைந்த பூர்வஜா, கோபத்தில் தனது அறைக்கு சென்று கதவை பூட்டினார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய், அறையின் கதவை பலமுறை தட்டினார். ஆனால் கதவை திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மின்விசிறியில் பூர்வஜா தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பூர்வஜா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/request-to-attach-additional-coaches-to-the-trichy-rameswaram-express-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/request-to-attach-additional-coaches-to-the-trichy-rameswaram-express-train#comments</comments><guid isPermaLink="false">e0cf5cac-d1cc-49a2-9e5a-31084bb3a0dd</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:29:54 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:29:54.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Express train,Rameswaram,ராமேசுவரம்,எக்ஸ்பிரஸ் ரெயில்,திருச்சி,Trichy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/qgwixusw/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/qgwixusw/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ்</h2><p>திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16849) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேசுவரத்துக்கு பகல் 12.35 மணிக்கு சென்றடை கிறது. மறுமார்க்கத்தில் (வண்டிஎண்: 16850) மதியம் 2.50 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு அதே வழியில் திருச்சிக்கு இரவு 8.05 மணிக்கு வந்து சேருகிறது.</p><p>இந்த ரெயிலில் காலை, மாலை நேரங்களில் நாள்தோறும் அரசு ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என்று ஏராளமானோர் பயணிக்கின்றனர். இந்த ரெயிலில் தினந்தோறும் திருச்சி மற்றும் ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் போதே கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும் பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகரித்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் பயணிகள் தொலை தூரத்துக்கு நின்று கொண்டே பயணிக்க வேண்டி உள்ளது.</p><h2></h2><h2>கூடுதல் பெட்டிகள்</h2><p>இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், "திருச்சி-ராமேசுவரம் ரெயிலில் திருச்சியிலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுவதால் புதுக் கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரையில் ஏறும் பயணிகள் ராமேசுவரம் வரை உட்கார இடமின்றி நின்று கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது. அதுபோல், ராமேசுவரம் திருச்சி ரெயிலில் ராமேசுவரத்திலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுவதால் ராமநாதபுரம், பரமக்குடி. மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் ஏறும் பயணிகள் திருச்சி வரை அமர இடமின்றி நின்றுகொண்டே செல்ல வேண்டியுள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாள்: உதயநிதி ஸ்டாலின் புகழ் வணக்கம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birthday-udhayanidhi-stalins-praise-and-salutations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birthday-udhayanidhi-stalins-praise-and-salutations#comments</comments><guid isPermaLink="false">2d8ec349-dc90-4a89-b0de-d205ae721bb8</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:27:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:27:31.667Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,சென்னை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,பிறந்தநாள்,பேரறிஞர் அண்ணா,Anna birthday</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/n7jlz18o/338.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/n7jlz18o/338.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><h2>பேரறிஞர் அண்ணா</h2><p>பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று. கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!</p><p>தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.</p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் -  மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE">அண்ணா </a>என்றும் நம்மை வழிநடத்துவார். வாழ்க அண்ணாவின் புகழ்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறு: சேகர்பாபு மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-sekar-babu-for-making-defamatory-remarks-about-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-sekar-babu-for-making-defamatory-remarks-about-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">73348636-d8bf-41e3-9cba-c20398d02d84</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:25:25 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:25:25.766Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,DMK,Sekar Babu,சேகர்பாபு,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/548hq4tj/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/548hq4tj/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்-அமைச்சர் விஜய் திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.</p><p>மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்றும் மிசா குறித்து பேசும்போது,  மு.க.ஸ்டாலினை சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாக முதல்-அமைச்சர் விஜய் உடல்மொழி செய்ததாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.</p><p>இதற்கிடையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்-அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து ஒருமையில் பேசினார். சேகர்பாபுவின் பேச்சுக்கு தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.</p><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அமைதியை குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவமதிப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேகர்பாபு மீது வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
தி.மு.க. கூட்டணியில் தொகுதி குறைப்பு.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு நாளை பதில் - பிரேமலதா

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-alliance-seat-reduction-premalatha-responds-to-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-alliance-seat-reduction-premalatha-responds-to-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">7c2a18cd-f676-43c8-ae68-f8da38f9f83d</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:11:12 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:11:12.728Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,பிரேமலதா,தி.மு.க.,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/d6vns7wa/dpgsp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க., பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/d6vns7wa/dpgsp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தி.மு.க. கூட்டணியில் தொகுதி குறைப்பு தொடர்பான திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு நாளை பதில் அளிப்பேன் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.</p><p>சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 22-வது ஆண்டு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்ததுடன், <a href="https://www.dailythanthi.com/">விஜயகாந்த்</a> நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p> <h2>தி.மு.க. வெற்றி</h2><p>இதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்திருப்பது அவர்களின் கட்சி நிலைப்பாடு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. அதுகுறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் அங்கம் வகிக்கும் தி.மு.க., இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறோம்.</p><p>அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம். மு.க.ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறோம். உங்களுடைய ஆதரவு வேண்டும் என கேட்டுக்கொண்டார்.</p> <h2>100 சதவீதம்</h2><p>அப்போது தே.மு.தி.க., தி.மு.க.வுடன்தான் கூட்டணியில் இருக்கும். எங்களின் ஒத்துழைப்பு 100 சதவீதம் உங்களுக்கு இருக்கும் என நான் தெரிவித்தேன். இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் தி.மு.க.வுக்கு முழு ஒத்துழைப்பு இருக்கும்.</p><p>இடைத்தேர்தலில் நான் பிரசாரம் செய்ய இருக்கிறேன். ஒவ்வொரு கட்சியும் அவர்களின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என உழைப்பார்கள். ஆனால் அதற்கான முடிவு மக்கள் கையில் உள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.  கடற்கரை அருகில் தலைமை செயலகம் அமைய உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வருகின்றன.  எனவே, மக்களுக்காக கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் மக்கள் விரும்பும் திட்டமாக இருக்க வேண்டும் என கூறினார்.</p> <h2>தொகுதி குறைப்பு</h2><p>தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், தி.மு.க.வில் தொடர்ந்து கூட்டணியில் இருந்த எங்களுக்கு தொகுதியை குறைத்துவிட்டு, புதிதாக வந்த தே.மு.தி.க.வுக்கு அதிகமான தொகுதி (சீட்) ஒதுக்கப்பட்டது என திருமாவளவன் கூறும் கருத்துக்கு, நாளை (புதன்கிழமை) நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் என்னுடைய பதிலை கூறுகிறேன் என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>த.வெ.க., கொடி வண்ணத்தில் தயார் நிலையில் அரசு 
பஸ்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/buses-being-prepared-in-tvk-flag-colors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/buses-being-prepared-in-tvk-flag-colors#comments</comments><guid isPermaLink="false">1501ee0e-01e1-47bb-9b27-8dbbe9ccb8d0</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:04:44 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:04:44.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க,அரசு பஸ்கள்,government buses</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/6obht68m/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/6obht68m/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>சேலம் மண்டலத்தில், த.வெ.க., கட்சிக்கொடி வண்ணத்தில், 25 புதிய டவுன் பஸ்கள் இயக்கப்பட, தயாராக உள்ளன.</p> <p>முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், அரசு பஸ்கள் பச்சை நிறத்துக்கு மாறின. அதன் பின், தி.மு.க., - அ.தி. மு.க., மாறி மாறி, ஆட்சிக்கு வந்த நிலையில், பஸ்களின் நிறம் மாறவில்லை.</p><p>கடந்த, 2026 சட்ட சபை தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற்றநிலையில், பஸ்களின் நிறத்தில் அக்கட்சி கை வைத்துள்ளது.</p> <p>சேலம் பணிமனையில், 492 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 15 ஆண்டுகளை கடந்த டவுன் பஸ்களுக்கு பதிலாக, புது பஸ்கள் இயக்கப்படுகின்றன. முதற்கட்டமாக, 25 பஸ்கள், த.வெ.க., கட்சியின் கொடி வண்ணமான, மஞ்சள், சிவப்பு பூசப்பட்டு, இயக்குவதற்கு தயாராக, ஜான்சன்பேட்டை பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>சேலம் அரசு போக்கு வரத்து அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது, 25 புதிய டவுன் பஸ்கள் வந்துள்ளன. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்களின் வண்ணம் குறித்து, எதுவும் தெரியாது' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாகூர் தர்காவில் இந்து மத ஜோடிக்கு நடந்த திருமணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-of-a-hindu-couple-held-at-nagore-dargah</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wedding-of-a-hindu-couple-held-at-nagore-dargah#comments</comments><guid isPermaLink="false">c519ae06-677c-4ad4-8774-6d6d12811e28</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:01:44 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:01:44.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,hindu,Marriage,இந்து மதம்,நாகூர் தர்கா,Nagore Dargah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/0x0fzs1w/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/0x0fzs1w/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நாகை,</p><h2>நாகூர் தர்கா</h2><p>நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக் தர்கள் வந்து செல்கிறார்கள். மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழும் நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் வழிபட்டு செல்வதை பார்க்க முடியும்.</p><h2>இந்து மத ஜோடிக்கு திருமணம்</h2><p>நேற்று நாகூர் தர்காவில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக இந்து மணமக்களுக்கு திருமணம் நடந்தது. முன்னதாக மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மணமக்களை நாகூர் தர்காவிற்கு காலையிலேயே அழைத்து வந்தனர். பின்னர் ஆண்டவர் சன்னதி முன்பு மணமக்களை அமர வைத்தனர்.</p><p>இதையடுத்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். அப்போது அங்கு இருந்த நாகூர் தர்கா நிர்வாகம் மற்றும் ஆலோசனை குழு தலைவர் முகமது கலிபா சாஹிப் மற்றும் மணமக்களின் பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள், திருமணத்துக்கு வந்து இருந்தவர்கள் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர்.</p><h2>பாராட்டு</h2><p>நாள்தோறும் நாகூர் தர்காவுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் வந்து வழிபட்டு சென்றாலும், இதுபோன்று திருமணங்கள் நடந்ததை பார்த்து மணமக்களின் பெற்றோரை தர்காவுக்கு வந்து இருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இடப்பிரச்சினையில் கிராம மக்கள் கோஷ்டி மோதல்: பெண்கள் உள்பட 21 பேர் படுகாயம்- போலீஸ் குவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-21-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-21-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">16c93a5d-9af0-44a8-a683-0fb9f3131e5d</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:55:37 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:55:37.729Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Thoothukudi,தூத்துக்குடி,people,காயம்,மக்கள்,clash,மோதல்,villages,கிராமங்கள்,injuries,போலீஸ் குவிப்பு,Accumulation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/promvnos/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடப்பிரச்சினையில் கிராம மக்கள் கோஷ்டி மோதல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/promvnos/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், விளாத்திகுளம் அருகே இரண்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கிராம மக்களிடையே</a> ஏற்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கோஷ்டி மோதல் </a>மற்றும் கல்வீச்சு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்குதலில்</a> பெண்கள் உள்பட 21 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">படுகாயம் </a>அடைந்தனர். </p><h2>இரண்டு கிராம மக்களிடையே இடப்பிரச்சினை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே லெக்கம்பட்டி மற்றும் இலந்தைகுளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. லெக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடம் தொடர்பாக இந்த இரு கிராமங்களை சேர்ந்தவர்களிடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>வாக்குவாதம்</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் லெக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்களும் வந்துள்ளனர். அவர்களும் அதே இடத்தில் விளையாடத் தொடங்கினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. </p><h2>13 பேர் காயம்</h2><p>வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி கற்களை வீசி தாக்கினர். இதில் லெக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த காசி மகன் அழகர்சாமி, ராமமூர்த்தி மனைவி பழனிதேவி (வயது 50), மாயழகு மகன் அழகுபாண்டி(24), கோபால் மகன் ராமகிருஷ்ணன்(19), தனுஷ்கோடி மகன் ராமர்(45), முருகன் மகன் ஆனந்தகுமார் (25), ஊமைத்துரை மகன் கோவிந்தராஜ்(33), ராமகிருஷ்ணன் மனைவி துளசியம்மாள்(53), பஞ்சவர்ணம், முத்துலட்சுமி, தினேஷ்குமார், முனியம்மாள், ஸ்ரீராம் உள்ளிட்ட 13 பேர் காயம் அடைந்தனர். </p><h2>8 பேர் காயம்</h2><p>இதேபோல இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராக்கம்மாள்(54), முத்துகனி(37), முத்துமாரி(55), திருமால்அம்மாள்(52), செல்வி(50), சீதாலெட்சுமி(38), அனந்தம்மாள்(47) உள்பட 8 பேர் காயத்துடன் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். </p><h2>3 போலீசார் காயம்</h2><p>அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தவும், மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் மீதும் சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில் கோபால், மலையரசன், முத்தமிழரசன் ஆகிய 3 போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><h2>போலீஸ் குவிப்பு</h2><p>இரு கிராமங்களுக்கிடையே ஏற்கனவே இருந்து வந்த இடப்பிரச்சினை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து லெக்கம்பட்டி மற்றும் இலந்தைகுளம் பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருவதால், அங்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">போலீசார் குவிக்கப்பட்டு</a> தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை கடலில் புதிய எண்ணெய் கிணறுகள்: “தமிழக அரசு பார்வையாளராக இருக்க கூடாது” - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-oil-wells-in-the-mayiladuthurai-sea-tamil-nadu-government-should-not-be-a-spectator-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-oil-wells-in-the-mayiladuthurai-sea-tamil-nadu-government-should-not-be-a-spectator-velmurugan#comments</comments><guid isPermaLink="false">4f0553a2-dd1b-4838-beee-5683fd0cd95d</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:37:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:37:36.522Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,சென்னை,sea,Mayiladuthurai,கச்சா எண்ணெய்,Velmurugan,Oil well</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/fk2nief3/337.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/fk2nief3/337.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மயிலாடுதுறை கடற்பரப்பில் மேலும் 5 கிணறுகளுக்கு அனுமதி கோருவது மக்களை வஞ்சிக்கும் செயலாகும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள்</h2><p>மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிழக்கே வங்கக் கடலில் ஏற்கனவே 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வரும் PY-3 எண்ணெய் வயலை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இப்பகுதியில் மேலும் 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்க, ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் புரொடக்‌ஷன் இந்தியா நிறுவனம் மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணப்பித்துள்ளது.</p><p>1997 இல் தொடங்கப்பட்ட இந்த எண்ணெய் வயலில் 2011-ஆம் ஆண்டு உற்பத்தி நிறுத்தப்பட்டது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 மே மாதம் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முயல்வது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>கடல் என்பது வெறும் கச்சா எண்ணெய் எடுக்கும் களம் மட்டுமல்ல, லட்சக்கணக்கான மீனவக் குடும்பங்களின் உயிர்நாடி. கடலுக்குள் தொடர்ந்து கிணறுகள் தோண்டுவதால் கடல் சூழலியல், பவளப்பாறைகள் மற்றும் மீன்வளத்திற்கு ஏற்படக்கூடிய தீவிரப் பாதிப்புகளை முழுமையாக மதிப்பிடாமல் இத்தகைய திட்டங்களுக்கு அனுமதி தரக் கூடாது.</p> <h2>மீனவர்கள்</h2><p>ஏற்கனவே பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் சுமார் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக மீனவர்களும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஒருபுறம் மக்கள் வாழ்வுரிமைக்காகக் களத்தில் நிற்கும்போது, மறுபுறம் மயிலாடுதுறை கடற்பரப்பில் மேலும் 5 கிணறுகளுக்கு அனுமதி கோருவது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மீனவ மக்கள் பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர். எளிய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதா? அல்லது பெருநிறுவனங்களின் சுரண்டலுக்கு வழிவகுப்பதா?</p><p>தமிழக அரசு இதில் வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ள இந்த அனுமதி விண்ணப்பத்தை நிராகரிக்கத் தேவையான உறுதியான அழுத்தத்தை அரசு கொடுக்க வேண்டும். மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் வழியே எந்தவொரு தடையின்மைச் சான்றிதழும் வழங்கப்படக் கூடாது. கடல் வளம் அழிந்த பின் நிவாரணம் வழங்குவது தீர்வாகாது. அதை முன்கூட்டியே பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை.</p><p>எனவே, மயிலாடுதுறை கடலில் 5 புதிய கிணறுகள் அமைக்கும் ஹார்டி நிறுவனத்தின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும். தமிழக அரசு இத்திட்டத்திற்கு எவ்வித இசைவும் தராமல், கடல் சூழலியலையும் மீனவர் வாழ்வுரிமையையும் பாதுகாக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு; நாகூர் ஆண்டவர் தர்காவில் இந்து மத ஜோடிக்கு திருமணம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/example-of-religious-harmony-hindu-couple-married-at-nagore-dargah</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/example-of-religious-harmony-hindu-couple-married-at-nagore-dargah#comments</comments><guid isPermaLink="false">e5097ce6-b93e-40e3-bcd2-3c516a20c376</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:29:25 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:29:25.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,wedding,நாகூர் தர்கா,Nagore Dargah,தர்கா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/2r4noll4/rhinw.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாகூர் ஆண்டவர் தர்கா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/2r4noll4/rhinw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாகூர்</p><p>நாகூர் ஆண்டவர் தர்காவில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, இந்து மத ஜோடிக்கு திருமணம் நடந்தது.</p><p>நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.  மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் வழிபட்டு செல்வதை பார்க்க முடியும்.</p> <h2>இந்து மணமக்கள்</h2><p>இந்த நிலையில், நாகூர் தர்காவில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்து மணமக்களுக்கு நேற்று திருமணம் நடந்தது. முன்னதாக மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மணமக்களை நாகூர் தர்காவிற்கு காலையிலேயே அழைத்து வந்தனர்.</p><p>இதன்பின்னர் ஆண்டவர் சன்னதி முன்பு மணமக்களை அமர வைத்தனர். இதையடுத்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். அப்போது அங்கு இருந்த நாகூர் தர்கா நிர்வாகம் மற்றும் ஆலோசனை குழு தலைவர் முகமது கலிபா சாஹிப் மற்றும் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், திருமணத்துக்கு வந்து இருந்தவர்கள் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர்.</p> <h2>நாள்தோறும் வழிபாடு</h2><p>நாள்தோறும் நாகூர் தர்காவுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் வந்து வழிபட்டு சென்றாலும், இதுபோன்று திருமணங்கள் நடந்ததை பார்த்து மணமக்களின் பெற்றோருக்கு, தர்காவுக்கு வந்து இருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>நீளமான சரக்கு பெட்டக கப்பலை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tuticorin-port-achieves-a-milestone-by-handling-a-long-container-vessel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tuticorin-port-achieves-a-milestone-by-handling-a-long-container-vessel#comments</comments><guid isPermaLink="false">e744d388-1ee6-4630-ba02-48fb3996ad13</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:23:28 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:23:28.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Tuticorin,தூத்துக்குடி துறைமுகம்,Thoothukudi port,சரக்கு கப்பல்,Cargo ship,Tuticorin port</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/7aftap7l/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/7aftap7l/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பெரிய வகை கப்பல்கள் வந்து செல்லும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், துறைமுகத்திற்கு முதல் முறையாக 335.23 மீட்டர் நீளம், 51 மீட்டர் அகலமும், 13.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட எம்.வி., சி.எம்.ஏ., சி.ஜி.எம்., தோரியம் என்ற சரக்கு கப்பலை நேற்று கையாண்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.</p><p><strong>இதுகுறித்து துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-</strong></p><p>தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பிரேசிலின் சாண்டோஸ் துறைமுகத்தில் இருந்து சி.எம்.ஏ. சி.ஜி.எம். தோரியம் என்ற சரக்கு பெட்டக கப்பல் நேற்று வந்தது. இந்த கப்பல் 335.23 மீட்டர் நீளம், 51 மீட்டர் அகலம் மற்றும் 13.5 மீட்டர் மிதவை ஆழம் கொண்டதாகும். 13 ஆயிரம் டி.இ.யு. சரக்கு பெட்டக கொள்ளளவு கொண்ட பெரியவகை சரக்கு கப்பல் ஆகும்.</p><p>டி.இ.யு. என்பது கடல்சார் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அளவீட்டு குறியீடு ஆகும். இந்த கப்பல் மெத்தனால் மற்றும் கடல்சார் எரிபொருள் ஆகிய இருவகை எரிபொருட்களிலும் இயங்கும் திறன் கொண்டது. துறைமுகத்துக்கு வந்த கப்பலை வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன் மற்றும் துறைமுக அதிகாரிகள், சரக்கு பெட்டக முனைய அதிகாரிகள் வரவேற்றனர்.</p><p>இந்த கப்பலில் இருந்து மொத்தம் 3,276 டி.இ.யு. சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட உள்ளன. இதில் 1,324 டி.இ.யு. இறக் குமதி சரக்குகளும், 1,952 டி.இ.யு. ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளும் அடங்கும். இந்த கப்பல் வ.உ.சி. துறைமுகத்தில் இதுவரை கையாண்டுள்ள சரக்குப் பெட்டக கப்பல்களிலேயே மிக நீளமானதா கும். 2026-27 நிதியாண்டில் கடந்த ஆகஸ்டு மாதம் வரையிலான காலகட்டத்தில், வ.உ.சி. துறைமுகம் 3.67 லட்சம் டி.இ.யு. சரக்கு பெட்டகங்களை கையாண்டுள்ளது.</p><p>இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப் பட்ட 3.62 லட்சம் டி.இ.யு. சரக்கு பெட்டகங்களை விட அதிகமாகும். ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்தை பொறுத்தவரை 18.27 மில்லியன் டன் சரக்குகளை துறைமுகம் கையாண்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 17.89 மில்லயன் டன் சரக்குகளுடன் ஒப்பிடுகையில், இது 2.10 சதவீதம் வளர்ச்சி ஆகும்.</p><p>தற்போது வ.உ.சி. துறைமுகம் நீளமான கப்பலை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை, பெரிய கப்பல்களை ஈர்ப்பது, சரக்குப் பெட்டக கையாளுதலை அதிகரிப்பது மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் நேரடி இணைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் விநாயகர் படத்துடன் பிரியாணி விளம்பர பேனர்: ஓட்டல் உரிமையாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hotel-owner-arrested-for-advertising-biryani-with-ganesha-image-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hotel-owner-arrested-for-advertising-biryani-with-ganesha-image-in-nellai#comments</comments><guid isPermaLink="false">51efd3b7-52b0-4103-9689-918c2569983c</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:22:25 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:22:25.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrested,hotel,ஓட்டல்,உரிமையாளர்,owner,விநாயகர்,Ganesha,படம்,picture,விளம்பர பேனர்,Advertising banner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xxodwvdd/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் விநாயகர் படத்துடன் பிரியாணி விளம்பர பேனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xxodwvdd/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">ஓட்டல் </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">விளம்பர பேனரில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">விநாயகர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">படத்தை</a> சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தியதாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">பிரியாணி கடை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">உரிமையாளரை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வி.எம்.சத்திரத்தில் உள்ள தூத்துக்குடி சாலையில் இயங்கி வரும் அசைவ ஓட்டல் ஒன்றில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சலுகை விலையில் பிரியாணி வழங்கப்படுவதாக விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதில் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. </p><h2>இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு</h2><p>அந்த படமானது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உணவகத்தின் முன்பு திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. </p><h2>மாநகர போலீசார் பேச்சுவார்த்தை</h2><p>இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர போலீசார், பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சர்ச்சைக்குரிய விளம்பர பதாகையை உடனடியாக அகற்றினர். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். </p><p>இந்துக்களின் கடவுளை அவமதிக்கும் வகையிலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்நோக்கத்துடன் இந்தப் பதாகை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நரசிங்கநல்லூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். </p><h2>ஓட்டல் உரிமையாளர் கைது</h2><p>அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அசைவ உணவகத்தின் உரிமையாளரான கே.டி.சி. நகரைச் சேர்ந்த முருகையா என்பவரின் மகன் ஜெயந்த் (வயது 30) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாள்: மு.க. ஸ்டாலின் புகழ் வணக்கம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birthday-mk-stalins-praise-and-worship</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birthday-mk-stalins-praise-and-worship#comments</comments><guid isPermaLink="false">b6e75420-ae32-456b-b0d4-0b514ecc374e</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:16:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:16:00.455Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பிறந்தநாள்,Anna,பேரறிஞர் அண்ணா,மு.க. ஸ்டாலின்,Anna birthday,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8gkv024d/336.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பேரறிஞர் அண்ணா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8gkv024d/336.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழ் வணக்கம்</h2><p>தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாக பிறந்து தாய்க்கு பெயரிட்ட மாபெரும் தமிழ் கனவு அவர்!</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE">பேரறிஞர் அண்ணா</a> சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-worker-dies-after-being-struck-by-lightning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-worker-dies-after-being-struck-by-lightning#comments</comments><guid isPermaLink="false">386e8dbc-526d-42fd-9f32-f6511005c2ce</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:51:57 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:51:57.833Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திண்டுக்கல்,Worker,உயிரிழப்பு,வடமாநில தொழிலாளி,மின்னல்,lightning,Die</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/mg5og2g1/335.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/mg5og2g1/335.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னிவாடி,</p><p>திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சில்வாரப்பட்டியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் திருச்செங்கோடு போர்வெல் வண்டியுடன் வந்திருந்தனர். </p><p>நேற்று மாலை போர் போடும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது லேசான மழை பெய்தது. அப்போது மழையில் நனையாமல் இருப்பதற்காக ஒடிசா மாநிலம் நபரங்குபூர் பகுதியை சேர்ந்த சோனு ராம்கோண்டு (வயது 25) என்பவர் அருகில் இருந்த வேப்ப மரத்தடியில் சென்று நின்றார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் வேப்ப மரத்தின் வழியாக மின்சாரம் பாய்ந்து சோனு ராம்கோண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். </p><p>இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராம்கோண்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியை கொடுமைப்படுத்திய தோழிகள்: கையில் கற்பூரம் ஏற்றி துன்புறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-engineering-student-tortured-over-ghost-possession-claim</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-engineering-student-tortured-over-ghost-possession-claim#comments</comments><guid isPermaLink="false">6317f216-5eca-4460-90c9-356ab7c050ec</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:51:46 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:51:46.453Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,College student,கல்லூரி மாணவி,வழக்குப்பதிவு,Case filed,கொடுமை,சின்னசேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/cxnhvd7w/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/cxnhvd7w/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>கல்லூரி மாணவி</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இதயா மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வாணாபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி முதலாம் ஆண்டு சி.எஸ்.இ. படித்து வருகிறார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார்.</p><p>அவருடன், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவி, வாணாபுரம் பகுதியை சேர்ந்த பி.டெக் முதலாம் ஆண்டு மற்றும் சி.எஸ்.இ. முதலாம் ஆண்டு படிக்கும் 2 மாணவிகள், கடலூர் பகுதியை சேர்ந்த பி.டெக். முதலாம் ஆண்டு மாணவியும் விடுதியில் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது.</p><h2>தோழிகள் கொடுமை</h2><p>இந்த நிலையில் வாணாபுரம் பகுதியை சேர்ந்த மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி, அவருடன் தங்கியிருந்த தோழிகளான 4 பேரும் அந்த மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளனர். மேலும் துடைப்பத்தால் அந்த மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். தோழிகளின் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி, சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சக மாணவிகள் 4 பேர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தேங்காய் ஏற்றுமதி விலை கிலோ ரூ.70 ஆக உயர்வு.! காரணம் என்ன.?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/export-price-of-coconut-increased-to-rs-70-per-kg-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/export-price-of-coconut-increased-to-rs-70-per-kg-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">13cd96de-7584-48c9-b5b8-e05a10b55fbc</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:46:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:46:16.791Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏற்றுமதி,தேங்காய் விலை,Coconut Export,Coconut Price</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xmsgx63a/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xmsgx63a/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தேங்காய் ஏற்றுமதி விலை இரண்டாண்டுளுக்கு முன்பு கிலோ சராசரியாக 25 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 55-70 ரூபாயாக உயர்ந்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது. என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன் கூறியதாவது:</p><p>நாட்டின் மொத்த தேங்காய் ஏற்றுமதியில் தமிழகம் 31 சதவீதம் பங்களிப்புடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்திலிருந்து கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஏமன், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய் யப்படுகிறது. அதற்கடுத்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகிறது. ஏற்றுமதிக்கான 96 தேங்காய் அளவு 13 அங்குல சுற்றளவும், 100-300 கிராம் எடையும் இருக்க வேண்டும். ஒரு மூட்டைக்கு 13 கிலோ அல்லது 25 தேங்காய்கள் இடம்பெற வேண்டும். ஒரு கன்டெய்னருக்கு கிட்டத்தட்ட 18,000 தேங்காய்கள் அனுப்பப்படும். </p><h2></h2><h2>மேற்காசிய போர்</h2><p>தேங்காய் ஏற்றுமதிக்கான திருப்பூர் மாவட்டம், காங்கேயம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஆகிய இடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பதற்றம் குறைந்த பின் தற்போது தேங்காய் ஏற்றுமதி படிப்படியாக அதிகரித்து வருகிறது.</p><p>இரண்டாண்டுகளுக்கு முன் கிலோ தேங்காய் சராசரியாக 25 ரூபாய்க்கும், கடந்தாண்டு 40 முதல் 48 ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. எப்போதும் தேங்காய் ஏற்றுமதி விலை 25-30 ரூபாய்க்குள் இருந்த நிலையில், தற்போது 3 மடங்கு உயர்ந்துள்ளது. தேங்காய் விலை உயர்வால் ஏற்றுமதி செலவு அதிகரித்துள்ளது. போதுமான மழை இல்லாததால் உற்பத்தி குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், ஏற்றுமதிக்கான தரமான தேங்காய் கிடைப்பது சிரமமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகரால் முருகன் புறக்கணிப்பு.. வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagaral-murugan-purakkanippu-verichchodi-thiruthani-murugan-kovil</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagaral-murugan-purakkanippu-verichchodi-thiruthani-murugan-kovil#comments</comments><guid isPermaLink="false">b86ef557-4e65-404c-bc7a-95e3050f312e</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:44:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:44:36.048Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முருகன் கோவில்,Murugan Temple,திருத்தணி,Thiruttani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/6kiowght/tltld.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/6kiowght/tltld.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கூடக்கூடிய சூழலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.</p><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக விளங்கும் திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.</p> <h2>பஞ்சாமிர்த அபிஷேகம்</h2><p>இந்த நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா என்பதால் வெளியூர்களில் இருந்து திருத்தணி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைவாக காணப்பட்டது. இதனால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.</p><p>இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எவ்வித கூட்ட நெரிசலும் இன்றி பொது வழியில் விரைவாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.  முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறு: விவசாயி குத்திக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-placement-of-ganesha-idol-farmer-stabbed-to-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-placement-of-ganesha-idol-farmer-stabbed-to-death#comments</comments><guid isPermaLink="false">1a5f9517-1fcc-455a-b139-473332f0e613</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:28:49 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:28:49.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திண்டுக்கல்,farmer,விவசாயி,Dispute,தகராறு,விநாயகர் சிலை,குத்திக்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/10gpa961/334.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/10gpa961/334.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p>விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>தகராறு</h2><p>திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, ராமகிரி அடுத்த பொம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பொம்மன் (வயது 47). விவசாயியான இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். 2 மனைவிகள் திண்டுக்கல் மாவட்டம் பொம்ம நாயக்கன் பட்டியில் வசித்து வருகின்றனர். 3-வது மனைவி கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சியை அடுத்த கருவாடு நாயக்கனூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொம்மனின் சொந்த ஊரான பொம்ம நாயக்கன்பட்டியில் விநாயகர் சிலை வைப்பதில் அங்குள்ள சிலருக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.</p> <h2>வெள்ளியணை போலீசார்</h2><p>பின்னர் பொம்மன் நள்ளிரவு 1 மணிக்கு குஜிலியம்பாறையில் இருந்து புறப்பட்டு மூக்கணாங்குறிச்சியை அடுத்த கருவாடு நாயக்கனூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். ஆனால் அவர் 3-வது மனைவியின் வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் முஷ்டகிணத்துபட்டி சாலையில் பொம்மன் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு, காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதனையடுத்து வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொம்மனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து பொம்மனை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதி இடைத்தேர்தல்: கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-for-two-constituencies-communist-parties-to-announce-candidates-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-for-two-constituencies-communist-parties-to-announce-candidates-today#comments</comments><guid isPermaLink="false">7cf073e3-9d25-45c9-a929-a2c4e1dbc678</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:21:05 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:21:05.608Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,Communist Parties,கம்யூனிஸ்டு கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/qxf09iks/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/qxf09iks/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுகின்றனர். மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிடுகிறது. 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படுகிறார்கள்.</p><p>சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்களை அறிவித்து, அறிமுக கூட்டம் நடைபெற உள்ளதாக மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு). சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-the-hubballi-kollam-special-train-service-operating-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-the-hubballi-kollam-special-train-service-operating-via-salem#comments</comments><guid isPermaLink="false">279c88cb-130e-487d-b989-efe973d280c4</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:17:24 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:17:24.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zqfnhu9i/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zqfnhu9i/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>சிறப்பு ரெயில் நீட்டிப்பு</h2><p>கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரளம் மாநிலம் கொல்லத்திற்கு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-07313) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண்-07314) இயக்கப்படுகிறது.</p><p>இந்த ரெயில் இயக்கத்தின் சேவை இந்த மாதத்தோடு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் 2 மாதம் அதாவது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரையிலும் நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07313) அக் டோபர் 4-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கி ழமை தோறும் (9 சேவை) நீட்டித்து இயக்கப்படுகின்றன. ஹூப்ளியில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு ஹாவேரி, பீரூர், தும்கூரு, பெங்களுரு. கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக சேலத்திற்கு மறுநாள் அதி காலை 3.07 மணிக்கு வரும். அதன்பிறகு ஈரோடு. திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியாக கொல்லத்திற்கு மதியம் 1.15 மணிக்கு சென்றடைகிறது.</p><h2>கொல்லம்-ஹூப்ளி</h2><p>அதேபோல் மறுமார்க்கத்தில் கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் (07314) வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும் (9 சேவை) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கொல்லத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, போத்த னூர் வழியாக சேலத்திற்கு மறுநாள் அதிகாலை 4.05 மணிக்கும் வந்தடையும்.</p><p>இதையடுத்து சேலத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில், பங்காரு பேட்டை, பெங்களூரு வழியாக ஹூப்ளிக்கு மாலை 6.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐ.ஆர்.சி.டி.சி. வரலாற்றில் புதிய சாதனை: ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/irctc-history-new-record-over-2-million-tickets-in-a-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/irctc-history-new-record-over-2-million-tickets-in-a-day#comments</comments><guid isPermaLink="false">6666cbfd-ec24-4427-84ad-3e39ffffdc0f</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:15:05 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:15:05.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிக்கெட் முன்பதிவு,Ticket Booking,train,ரெயில்,IRCTC,சாதனை,ஐ.ஆர்.சி.டி.சி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/9bwdkg7y/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/9bwdkg7y/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஐ.ஆர்.சி.டி.சி. வரலாற்றில் புதிய சாதனையாக ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய் யப்பட்டு உள்ளன.</p><h2>ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம்</h2><p>இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளத்தின் மூலம் ஏராளமான பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களுக்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாததால், பொதுமக்கள் இந்த வசதியை பெரிதும் விரும்புகின்றனர்.</p><p>தங்கள் செல்போனில் உள்ள செயலி மூலமாகவே, தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே எளிமையாக டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். சாதாரண நாட்களை விட, பண்டிகை காலங்களில் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில், பயணிகள் அனைவரும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தைப் பயன்படுத்தி முன்பதிவு செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.</p><h2>தீபாவளிப் பண்டிகை</h2><p>அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வருகிற நவம்பர் 8-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கான 60 நாட்கள் முன்னதாகச் செய்யும் ரெயில் டிக்கெட் முன்பதிவு கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இதனால் சொந்த ஊர்களுக்குச் செல்ல நினைக்கும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். இதன் காரணமாக, கடந்த 7-ந்தேதி ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 20 லட்சத்து 6 ஆயிரத்து 353 டிக்கெட்டுகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் வெற்றிகரமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><h2>வரலாற்று சாதனை</h2><p>ஐ.ஆர்.சி.டி.சி. வரலாற்றில் 20 லட்சம் என்ற எண்ணிக்கையை ஒரே நாளில் கடந்து, ஆன்லைன் ரெயில் டிக்கெட் முன்பதிவில் புதிய உலகளாவிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ந்தேதி பண்டிகை காலத்தில் 18.40 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. இதேபோல, கடந்த 8-ந்தேதி சுமார் 19 லட்சத்து 50 ஆயிரத்து 699 டிக்கெட்டுகள் முன்பதிவாகின. இது கடந்த ஆண்டின் பண்டிகைக் கால முன்பதிவை விட 6 சதவீதம் அதிகமாகும்.</p><h2>புதிய சர்வர்</h2><p>ஐ.ஆர்.சி.டி.சி. தரவுகளின்படி, முன்பதிவு திறக்கப்படும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலான முதல் ஒரு மணி நேரத்தில் ஒட்டுமொத்த நாளின் டிக்கெட்டுகளில் 8.43 சதவீதம் முதல் 14.14 சதவீதம் வரை மட்டுமே பதிவாகிறது. குறிப்பாக, காலை 8 மணி முதல் 8.15 மணி வரையிலான முதல் 15 நிமிடங்களில் அதிவேக முன்பதிவும் நடைபெறும். மீதமுள்ள 85 சதவீதத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் அந்த நாளின் அடுத்தடுத்த மணி நேரங்களில் நிதானமாக பதிவு செய்யப்படுகின்றன.</p><p>கூட்ட நெரிசலையும், பயனர்களின் தேவையையும் சமாளிக்கும் பொருட்டு ஐ.ஆர்.சி.டி.சி.யின் தொழில்நுட்ப கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு. புதிய 'சர்வர்'கள் மூலம் அதன் செயல்திறன் மற்றும் வேகம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான முன்பதிவின் போதும் இணையதளத்தில் பெரிய அளவில் எந்தவொரு தொழில்நுட்பக் கோளாறோ அல்லது முடக்கமோ ஏற்பட வில்லை.</p><h2>அதிரடி தணிக்கை</h2><p>இதேபோல, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய, சட்ட விரோதமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு எதிராக ஐ.ஆர்.சி.டி.சி. கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் போலி இணையதள முன்பதிவு 55 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கும் முதல் 10 நிமிடங்களுக்கு (காலை 8 முதல் 8.10 வரை) பொது அங்கீகாரம் பெற்ற முகவர்கள் டிக்கெட் புக் செய்ய தடையும் விதிக்கப்பட்டது.</p><p>அதிரடி தணிக்கை மூலம் சுமார் 3.04 கோடி போலி பயனர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் 6.33 கோடி கணக்குகள் மறு-சரிபார்ப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் ரெயில்களில் முன்பதிவு செய்யப்படும் மொத்த டிக்கெட்டுகளில் சுமார் 89 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் போல் சித்தரித்து விநாயகர் சிலை: போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணி நிர்வாகி தர்ணா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindu-front-executive-stages-dharna-in-front-of-police-station-to-deface-ganesha-statue-depicting-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindu-front-executive-stages-dharna-in-front-of-police-station-to-deface-ganesha-statue-depicting-chief-minister#comments</comments><guid isPermaLink="false">95e4c9db-3a7a-4153-bfee-28a37b785a3f</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:11:30 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:11:30.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்து முன்னணி,Chennai,சென்னை,Executive,நிர்வாகி,hindu munnani,விநாயகர் சிலை,Dharna,தர்ணா,Ganesha Statue,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/alhakk79/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் போல் சித்தரித்து விநாயகர் சிலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/alhakk79/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> கொருக்குப்பேட்டை பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> போல் சித்தரித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">விநாயகர் சிலை</a> வைக்கப்பட்டதை கண்டித்து ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் முன்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF">இந்து முன்னணி</a> மாநில <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">நிர்வாகி</a> ஒருவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE">தர்ணா</a>வில் ஈடுபட்டார். </p><h2>முதல்-அமைச்சர் விஜய் போல் சித்தரித்து விநாயகர் சிலைகள்</h2><p>சென்னை கொருக்குப்பேட்டை, கருமாரியம்மன் நகரில் முதல்-அமைச்சர் விஜய் போல் சித்தரித்து விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.</p><h2>போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணி நிர்வாகி தர்ணா</h2><p>இந்த நிகழ்வு இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் இந்து முன்னணி மாநில இளைஞரணி துணை செயலாளர் செல்வம் என்பவர் நேற்று மதியம் சென்னை ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்தனர். </p><h2>த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிய வலியுறுத்தல்</h2><p>அப்போது அவர், தெய்வங்களை நடிகர் மற்றும் முதல்-அமைச்சர் போல் சித்தரிக்க கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிய வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு போலீசார், அந்த சிலைகளை பறிமுதல் செய்து தனியார் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் பறக்கும் படை சோதனை: மதுராந்தகத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-flying-squad-raid-rs-1-lakh-seized-in-madhurantakam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-flying-squad-raid-rs-1-lakh-seized-in-madhurantakam#comments</comments><guid isPermaLink="false">a7f34656-6d52-4192-989b-efea09fc4b0f</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:01:09 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:01:09.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>raid,தேர்தல்,seized,பறக்கும் படை,சோதனை,Election Flying Squad,மதுராந்தகம் அருகே</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/tgrnahen/333.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பறக்கும் படை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/tgrnahen/333.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், </p><p>மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.</p><h2>பறிமுதல்</h2><p>மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தவமணி என்பவர், சென்னையில் உள்ள உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்காக காரில் சென்று கொண்டிருந்தார். </p><p>மதுராந்தகம் அடுத்த அரைப்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தலைமையிலான குழுவினர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தவமணியின் காரை சோதனையிட்டதில், அதில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.</p><p>பறிமுதல் செய்யப்பட்ட பணம் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">பறக்கும் படை</a> மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் சோதனையைத் தீவிர படுத்தியுள்ளனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-58</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-58#comments</comments><guid isPermaLink="false">9ed45565-d613-47c5-8490-65232bf72a50</guid><pubDate>Tue, 15 Sep 2026 00:49:11 +0000</pubDate><atom:updated>2026-09-15T00:49:11.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zt3i490q/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zt3i490q/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (116.09.2026 திங்கட்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் முதல் அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு குறைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-reduced-for-former-chief-minister-o-panneerselvam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-reduced-for-former-chief-minister-o-panneerselvam#comments</comments><guid isPermaLink="false">9ce47f08-834b-4a19-93d5-365a45d52903</guid><pubDate>Mon, 14 Sep 2026 22:36:27 +0000</pubDate><atom:updated>2026-09-14T22:36:27.302Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,cm,பன்னீர்செல்வம்,O pannerselvam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/auaaaqsu/O-panner-selvam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/auaaaqsu/O-panner-selvam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திகழ்கிறார். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 3 முறை முதல்-அமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். மேலும் துணை முதல்-அமைச்சர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அவர் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் போடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><h2>அடிப்படை பாதுகாப்பு</h2><p>முன்னாள் முதல்-அமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத் துக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப் பட்டுள்ளது. அவருடைய வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆயுதப்படை பிரிவுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். அதுபோல், 'வி.ஐ.பி.' வாகன பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அவருக்கான பாதுகாப்பு 'ஒய்' பிரிவில் இருந்து 'எக்ஸ்' பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. 'எக்ஸ்' பிரிவு என்பது அடிப்படை பாதுகாப்பு வழங்குவது ஆகும்.</p><h2>அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வு</h2><p>இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் ‘அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வு' மேற்கொள்ளப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது" என்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு திடீரென குறைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
தொடர் விடுமுறை நிறைவு:  ரெயில், பஸ்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/end-of-long-holiday-crowds-of-passengers-thronged-trains-and-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/end-of-long-holiday-crowds-of-passengers-thronged-trains-and-buses#comments</comments><guid isPermaLink="false">dd8cc571-53de-4db3-aa8e-21197041101f</guid><pubDate>Mon, 14 Sep 2026 22:15:51 +0000</pubDate><atom:updated>2026-09-14T22:15:51.299Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bus,ரெயில்,Crowd,rail,பயணிகள் கூட்டம்,பஸ் bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/uba24far/passenger.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/uba24far/passenger.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>வார விடுமுறையோடு விநாயகர் சதுர்த்தி விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பணிபுரியும் இடங்களான சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் உற்றார் உறவினர்களை சந்தித்து விட்டு விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு புறப்பட்டனர்.இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்து ரெயில் மற்றும் பஸ்களில் ஏறி அவர்கள் பயணம் செய்தனர்.</p><p>நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்வதற்காக மக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதுநெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களில் முழுமையாக இருக்கைகள் நிரம்பிய நிலையில் அந்த ரயிலில் உள்ள பொதுப்பட்டிகளில் ஏராளமான பயணிகள் முண்டியெழுத்து ஏறி பயணம் செய்தனர் மேலும் நாகர்கோவில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு இயக்கப்படும் முழுவதும் முன்பதிவு இல்லாத அந்தியோதயா ரெயியில் பயணிக்க 3-வது நடைமேடையில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். மாலை 5.05 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்து சேர்ந்த அந்தியோதயா ரெயிலில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறி இடம் பிடித்தனர். இடம் கிடைக்காதவர்கள் நின்று கொண்டும் தரையில் அமர்ந்தும் பயணித்தனர்.</p><p>கட்டணம் குறைவு குறித்த நேரத்தில் சென்னை சென்று சேர்ந்து விடலாம் உள்ளிட்ட காரணங்களால் பேருந்துகளை விட மக்கள் அதிக அளவில் ரயில்களை பயன்படுத்தப்பட்டனர் கூடுதல் ரெயில்கள் விழாக்காலங்களில் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.</p><h2>பஸ் நிலையம்</h2><p>இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது அங்கிருந்து சென்னை பெங்களூர் கோவை திருப்பூர் போன்ற நகரங்களுக்கு இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகளில் மற்றும் அரசு பஸ்களில் பயணிகள் போட்டி போட்டு ஏறிச் சென்றனர் மேலும் மதுரைக்கும் அதிக அளவு பயணிகள் பஸ்களில் ஏறி பயணம் செய்தனர் இதை வட்டி நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை, தென்காசி பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-lashes-nellai-and-tenkasi-regions-residents-happy-as-heat-subsides</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-lashes-nellai-and-tenkasi-regions-residents-happy-as-heat-subsides#comments</comments><guid isPermaLink="false">39410766-cfa4-4a38-8446-27b11b8d3d0b</guid><pubDate>Mon, 14 Sep 2026 20:23:03 +0000</pubDate><atom:updated>2026-09-14T20:23:03.243Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,நெல்லை,மழை,தென்காசி,tenkas</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/3woaydms/rain.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/3woaydms/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக நெல்லையில் 105 டிகிரி வெயில் பதிவாகி பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் பகலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை வீட்டு வெளியே வருவதை தவிர்த்தனர். சாலையிலும் அனல்காற்று வீசியது.இந்த நிலையில் நேற்று மதியம் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, பெருமாள்புரம், தச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. மாலையில் சந்திப்பு பகுதியில் சாரல் மழை பெய்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.</p> <h2>மழை அளவு</h2><p>விக்கிரமசிங்கபுரம், மானூர், ராமையன்பட்டி, திசையன்விளை, இட்ட மொழி, அம்பை, சேரன்மாதேவி, வீரவநல்லூர், மணிமுத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 12 மில்லி மீட்டர் மழை பதிவானது. அம்பையில் 8 மி.மீ., சேரன்மாதேவியில் 2.40 மி.மீ., மணிமுத்தாறு பகுதியில் 2.20 மி.மீ., பாளையங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது.</p> <h2>மின்னல் தாக்கி தொழிலாளி பலி</h2><p>தென்காசி மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கடையநல்லூரில் மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது கடைய நல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பாட்டு சாலையில் வீடு கட்டுமான பணியில், புளியங்குடி டி.என்.புதுக்குடி தியாகராஜநகரைச் சேர்ந்த தொழி லாளி காசிராஜ் (வயது 42) என்பவர் ஈடுபட்டு இருந்தார்.இவர் வீட்டின் 2-வது மாடியில் நின்று வேலை செய்தபோது, திடீரென்று மின்னல் தாக்கியது. </p> <p>இதில் உடல் கருகி கீழே விழுந்ததில் பலத்த காயம டைந்த காசிராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடையநல் லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழி யிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இறந்த காசிராஜிக்கு மனைவி மற் றும் 2 மகள்கள் உள்ளனர். இதேபோல் தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், அச்சன்பு தூர், இடைகால், நயினாரகரம், வடகரை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக் களில் மழைநீர் தேங்கியது.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு: மீனவர்கள் இன்று ஆலோசனை கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-new-secretariat-fishermen-to-hold-consultative-meeting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-new-secretariat-fishermen-to-hold-consultative-meeting-today#comments</comments><guid isPermaLink="false">3ee79426-b5c2-486c-9657-e2fe0cf32800</guid><pubDate>Mon, 14 Sep 2026 19:52:44 +0000</pubDate><atom:updated>2026-09-14T19:52:44.566Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,Fisherman- மீனவர்,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/360qsmor/Pattinampakkam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/360qsmor/Pattinampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க முள்ளிக்குப்பம்- சீனிவாசபுரம் மற்றும் முள்ளிமாநகர் மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் பட்டினப்பாக்கம் முள்ளிக்குப்பம் சமூக நலக் கூடம் எதிரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.</p> <p>இதில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் நைனார்குப்பம் வரையுள்ள அனைத்து மீனவக் கிராம நிர்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர். 9 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் இந்த அரசாணையைத் திரும்பப்பெற வலியுறுத்தி போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என மீனவ சங்க வட்டாரத்தினர் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>கூடலூர் வனப்பகுதியில் கடும் வறட்சியால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kudalur-forest-drought-green-fodder-shortage-for-wildlife</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kudalur-forest-drought-green-fodder-shortage-for-wildlife#comments</comments><guid isPermaLink="false">d2ec0b71-8df9-4b9c-b40e-fee70bfc67d4</guid><pubDate>Mon, 14 Sep 2026 16:17:34 +0000</pubDate><atom:updated>2026-09-14T16:17:34.129Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வனப்பகுதி,Forest,கூடலூர்,வனவிலங்குகள்,wild animals,Kudalur,வறட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/n9pgbhot/dry.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வனவிலங்குகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கூடலூர் வனப்பகுதியில் கடும் வறட்சியால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/n9pgbhot/dry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>நீலகிரி மாவட்டத்தில் எல்-நினோ பாதிப்பு காரணமாக நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதிகளான மாவனல்லா, மசினகுடி, மாயார், சிரியூர், சிங்காரா மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">வறட்சி</a> ஏற்பட்டுள்ளது.</p> <h2>இடம் பெயரும் வனவிலங்குகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">வனப்பகுதியில்</a> உள்ள புற்கள் அனைத்தும் காய்ந்து கருகி காட்சியளிக்கின்றன. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட பெரிய வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வேறு பகுதிகளுக்கு இடம் பெயர தொடங்கியுள்ளன. </p> <h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>அதே சமயம், போதிய உணவு மற்றும் தண்ணீரின்றி மான்கள் உள்ளிட்ட சிறு வனவிலங்குகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. எனவே, வனவிலங்குகளின் பசியை போக்க வனத்துறையினர் வெளியில் இருந்து பசுந்தீவனங்களை கொண்டு வந்து வழங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை எண்ணூர் கடலில் குளிக்கச் சென்ற ஆசிரியை அலையில் சிக்கி உயிரிழப்பு - மற்றொருவர் மாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-who-went-swimming-in-the-sea-at-ennore-chennai-dies-after-getting-caught-in-the-waves-another-person-is-missing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-who-went-swimming-in-the-sea-at-ennore-chennai-dies-after-getting-caught-in-the-waves-another-person-is-missing#comments</comments><guid isPermaLink="false">1ca59949-08cd-46ab-b66c-ee83fbd38884</guid><pubDate>Mon, 14 Sep 2026 16:03:31 +0000</pubDate><atom:updated>2026-09-14T16:03:31.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Ennore,எண்ணூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/03n5ism3/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/03n5ism3/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தாழங்குப்பத்தைச் சேர்ந்த 26 வயதான கலைச்செல்வி, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடன் பணியாற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் மற்றும் வேலூர் ஆரணியை சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் கலைச்செல்வி வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட வந்திருந்தனர்.  </p><p>பின்னர் மதிய உணவு முடித்து கலைச்செல்வி, நவீன், கார்த்தி மற்றும் கலைச்செல்வியின் தங்கை கவுசல்யா ஆகியோர் தாழங்குப்பம் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கலைச்செல்வியும், நவீனும் ராட்சத அலையில் சிக்கினர்.</p><p>இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் கடலில் குதித்து இருவரையும் மீட்க முயன்றனர். இதில் கலைச்செல்வி மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நவீன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். மீட்கப்பட்ட கலைச்செல்வி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். மாயமான நவீனை எண்ணூர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ. ரூ.97 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hydroponic-ganja-worth-rs-97-lakh-seized-at-chennai-international-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hydroponic-ganja-worth-rs-97-lakh-seized-at-chennai-international-airport#comments</comments><guid isPermaLink="false">b3ccc9e7-585a-46bb-9e9a-bd05dc1de819</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:56:26 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:56:26.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கஞ்சா,பறிமுதல்,சர்வதேச விமான நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/hkbytrwg/kanja.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஹைட்ரோபோனிக் கஞ்சா]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ. ரூ.97 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/hkbytrwg/kanja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>துபாயில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை சுங்கத்துறை விமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய உளவுத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். </p><p>அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இந்திய ஆண் பயணி ஒருவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.ரூ.97 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a> சிக்கியது.</p><h2>பச்சை வழித்தடம்</h2><p>அவர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், ‘பச்சை வழித்தடம்’ வழியாக நைசாக வெளியேற முயன்றார். உடனே அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து, அவரது உடைமைகளை அங்குள்ள தனி அறைக்கு கொண்டு சென்று விரிவாக பரிசோதித்தனர். அப்போது அவரது பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில பொட்டலங்கள் சிக்கின. </p><h2>ரூ.97 லட்சம்</h2><p>பொட்டலங்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, மண்ணில்லாமல் நீர் மூலம் பயிரிடப்பட்ட உயர் ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப்பொருள் கண்டறியும் நவீன கருவியை கொண்டு சோதித்ததில், அது கஞ்சா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 2,794 கிராம் எடையுள்ள இந்த போதைப்பொருளின் சர்வதேச கள்ளச்சந்தை மதிப்பு சுமார் ரூ.97 லட்சம் ஆகும்.</p><h2>பயணி கைது</h2><p>இதனை தொடர்ந்து, போதைப்பொருள் மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.97 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், போதைப்பொருள் கடத்தி வந்த அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இது குறித்த மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-catches-fire-on-salem-coimbatore-national-highway-family-escapes-unharmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-catches-fire-on-salem-coimbatore-national-highway-family-escapes-unharmed#comments</comments><guid isPermaLink="false">35308985-d77d-45df-997f-efdae7499dd5</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:47:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:47:18.084Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire,Car,கார்,Salem,சேலம்,தீ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/sxt0i9as/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/sxt0i9as/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கொண்டிருந்தார். அவர்களது கார் நெய்க்காரப்பட்டி பகுதி அருகே வந்தபோது திடீரென இன்ஜின் சூடாகி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. </p> <p>இதையடுத்து பாலசுப்பிரமணியம் உடனடியாக காரை நிறுத்தி, தனது குடும்பத்தினரை காரில் இருந்து வெளியேற்றினார். இதனால் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. </p><p>கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-falling-from-chennais-kathipara-flyover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-falling-from-chennais-kathipara-flyover#comments</comments><guid isPermaLink="false">b7c4a304-c8aa-4fd7-859f-e98281b5b064</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:34:10 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:34:10.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7jaxoa24/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7jaxoa24/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர், பாலத்தின் மேல் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். </p><p>இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item></channel></rss>