<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 25 Jul 2026 02:01:19 +0000</lastBuildDate><item><title>மனைப்பிரிவு திட்டங்களுக்கு 30 நாட்களில் அனுமதி - மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/approval-for-housing-layout-plans-within-30-days-municipal-corporation-administrations-take-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/approval-for-housing-layout-plans-within-30-days-municipal-corporation-administrations-take-action#comments</comments><guid isPermaLink="false">f2ce508f-f454-492f-b9b4-be6c605b1574</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:59:08 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:59:08.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Municipal Corporation,மாநகராட்சி நிர்வாகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/5jskqihi/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/5jskqihi/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் கட்டுமான திட்டங்கள் போன்று, மனைப்பிரிவு திட்டங்களுக்கு, விரைவாக ஒப்புதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்த, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யில் விண்ணப்பிக்கின்றன. அவற்றை பரிசீலித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில், அதிக தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுகின்றன.</p><p>புதிய மனைப்பிரிவு திட்டங்களை பொறுத்தவரை, அடிப்படை விவரங்களை ஆய்வு செய்து, டி.டி.சி.பி., தொழில்நுட்ப அனுமதி வழங்கும். இதன் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள் முறையான, இறுதி ஒப்புதலை அளிக்க வேண்டும். இதற்காக வரும் மனுக்கள் மீது, விரைவாக நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகங்கள், சில வழி காட்டுதல்களை வழங்கி உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>* டி.டி.சி.பி., தொழில் நுட்ப அனுமதி வழங்கியதும், ஓ.எஸ்.ஆர்., நிலதான ஒப்படைப்புக்கான, பத்திரத்துடன், விண்ணப்பதாரர் மாநகராட்சியை அணுக வேண்டும்</p><p>* மனைப்பிரிவில் அடிப்படை வசதிகள் பராமரிப்புக்கு, ஒரு லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக பெற வேண்டும்.</p><p>* மனைப்பிரிவு ஒப்புதல் தொடர்பான அனைத்து பணிகளையும், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்</p><p>* அடிப்படை வசதிகளுக்கான முழுத் தொகையையும், மனுதாரர் செலுத்தும் நிலையில், 30 நாட்களுக்குள் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்</p><p>* மனுதாரரே அடிப்படை வசதி பணிகளை மேற்கொள்ளும் நிலையில், 60 நாட்களுக்குள் மனைப்பிரிவு ஒப்புதல் வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உலகின் வாழ சிறந்த நகரங்கள் பட்டியல்: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worlds-best-cities-to-live-where-does-chennai-rank</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worlds-best-cities-to-live-where-does-chennai-rank#comments</comments><guid isPermaLink="false">df54f320-4b99-4cc5-8b7e-841728178e02</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:51:42 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:51:42.134Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பாதுகாப்பு,உலகின் சிறந்த நகரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7mtv7rn7/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7mtv7rn7/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>வாழ சிறந்த நகரங்கள்</h2><p>பொருளாதார நிபுணர் புலனாய்வுப்பிரிவு (எக்கனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் வாழ சிறந்த நகரங்கள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. நகரங்களின் அரசியல் சூழல், பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் தரவரிசையில் மாற்றங்கள் நிகழுகிறது.</p><p>குற்றங்களின் விகிதம், போர்கள் மற்றும் உள்நாட்டு கலவரங்கள் இல்லாத பாதுகாப்பான சூழல், தரமான மருத்துவ வசதிகள், தூய்மையான சூழல், காலநிலை, பொழுதுபோக்கு, கலாசார சுதந்திரம், சிறந்த கல்விக்கூடங்கள், உயர்கல்வி வாய்ப்புகள், சிறந்த போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து 100 புள்ளிகளுக்கு (பாயிண்ட்) எவ்வளவு புள்ளிகள் பெற்றுள்ளன என்ற அடிப்படையில் இந்த பட்டியல் தயாராகிறது.</p><h2>டெல்லி, சென்னை</h2><p>அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான உலகின் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலை, பொருளாதார நிபுணர் புலனாய்வுப் பிரிவு அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 173 நகரங்களை கணக்கிட்டு அதில் சிறந்த நகரங்களை பட்டியலிட்டிருக்கிறது. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக ஆஸ்திரியாவின் வியன்னா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரங்கள் உள்ளன.</p><p>இந்த பட்டியலில் இந்தியாவின் நகரங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன. டெல்லிக்கு 120-வது இடம், மும்பைக்கு 121-வது இடம், சென்னைக்கு 123-வது இடம், பெங்களூருவுக்கு 127-வது இடமே கிடைத்துள்ளன.</p><h2>பின்தங்கியதற்கு காரணம் என்ன?</h2><p>இந்திய நகரங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தாலும், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாடு, அடிப்படை உள்கட்டமைப்பு நெரிசல், சுகாதார சேவை அழுத்தம் போன்றவற்றால் பட்டியலில் பின்தங்கியிருக்கின்றன. இந்திய நகரங்கள் உலகின் முக்கிய பொருளாதார மையங்களாக வளர்ந்து வரும் அதே வேளையில், வாழ தகுதியான உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை மேம்படுத்துவது அவசியம் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-to-kollam-via-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-to-kollam-via-tiruppur#comments</comments><guid isPermaLink="false">d77ef7d7-5017-40fe-8d0f-dca2b3005115</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:36:21 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:36:21.004Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,சிறப்பு ரெயில்,Special Train ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/paad9o4v/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/paad9o4v/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சார்லப்பள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூர் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- </p><p>”அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில், சார்லப்பள்ளியில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும் சார்லப்பள்ளி கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரெயில் (எண்: 07195) சனிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தைச் சென்றடையும்.</p><p>மறுமார்க்கமாக அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை சனிக்கிழமைகளில், கொல்லத்தில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் கொல்லம் - சார்லப்பள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (எண்: 07196) திங்கட்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு சார்லப்பள்ளி நிலையத்தை சென்றடையும். </p><p>இந்த ரெயில் கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், பாப்ட்லா, தெனாலி, குண்டூர், நால்கொண்டா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.” </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குடும்பத் தகராறால் விபரீதம்; விஷம் கொடுத்து 8 மாத குழந்தை கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/family-dispute-turns-tragic-8-month-old-baby-killed-by-poisoning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/family-dispute-turns-tragic-8-month-old-baby-killed-by-poisoning#comments</comments><guid isPermaLink="false">96297438-1982-4611-bf82-c760b79adf0d</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:35:35 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:35:35.764Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Family dispute,குடும்ப தகராறு,குழந்தை கொலை,baby death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/rjag0uq1/69.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/rjag0uq1/69.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள அலங்கம்பட்டியை சேர்ந்தவர் வாசு என்ற அடைக்கன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி புனிதா (வயது 22). இவர்களுடைய 8 மாத பெண் குழந்தை ரியா. இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்த புனிதா, தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவு எடுத்துள்ளார்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>சம்பவத்தன்று புனிதா, தனது 8 மாத குழந்தைக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%20">விஷம் </a>கொடுத்தார். அவரும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் வாயில் நுரைதள்ளி மயங்கி கிடந்தனர். இதற்கிடையே உறவினர்கள் இதை கவனித்து இருவரையும் மீட்டு உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரியா பரிதாபமாக இறந்தது. தாய் புனிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-students-two-people-including-a-government-school-headmaster-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-students-two-people-including-a-government-school-headmaster-arrested#comments</comments><guid isPermaLink="false">80e7cdb2-2def-4da4-a07a-6969b3b2bc37</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:31:55 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:31:55.810Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hjggpusp/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hjggpusp/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தில் ஒரு அரசுப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரி யர்கள் பணியாற்றி வருகின்றனர்.</p><p>இந்த பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் மங்கலம் கிராமத்தை சேர்ந்த ரவி(வயது 58), இடைநிலை ஆசிரியர் திருவண்ணாமலை தென்றல் நகரை சேர்ந்த முரளிதரன்(42) ஆகியோர் பள்ளியில் மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் 1098 என்ற உதவி எண்ணிற்கு புகார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மங்கலம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.</p><p>தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் மாலை விசாரணைக்காக தலைமை ஆசிரியர் ரவி, இடைநிலை ஆசிரியர் முரளிதரன் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து, திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், லோடு வாகனம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/beedi-leaves-worth-rs50-lakhs-loaded-vehicle-seized-while-trying-to-smuggle-them-to-sri-lanka</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/beedi-leaves-worth-rs50-lakhs-loaded-vehicle-seized-while-trying-to-smuggle-them-to-sri-lanka#comments</comments><guid isPermaLink="false">3d2ef4b8-dc63-4180-8b3e-18263a9d7661</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:21:12 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:21:12.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ்,Thoothukudi,தூத்துக்குடி,Seizure,பறிமுதல்,ரோந்து பணி,Sri Lanka,beedi leaves,smuggling,இலங்கை,பீடி இலைகள்,கடத்தல்,Police patrol,லோடு வாகனம்,Load vehicle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ks6qxzar/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பீடி இலைகள், லோடு வாகனம் பறிமுதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ks6qxzar/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடற்கரை பகுதி வழியாக கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பீடி இலைகள்</a> மற்றும் லோடு வாகனத்தை தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல் </a>செய்தனர். </p><h2>போலீசார் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இனிக்கோநகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தபடுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, போலீசார் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் ரோந்து பணிக்கு சென்றனர்.</p><h2>ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், லோடு வாகனம் பறிமுதல்</h2><p>அப்போது இனிக்கோநகர் கடற்கரைக்கு செல்லும் வழியில் இன்று அதிகாலையில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக ஒரு லோடு வேனில் கொண்டுவரப்பட்ட 35 கிலோ எடை கொண்ட 36 மூட்டைகள் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. போலீசார் வருவதைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடி விட்டார்கள். எனவே அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். </p><p>அதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் லோடு வாகனம், சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>”ஒரு படம் பார்த்தா ஜோக்கரா? மைக்கை பிடுங்கிட்டு துரத்திட்டாங்க”-  நடிகை சனம் ஷெட்டி  கோபம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/does-watching-a-movie-make-me-a-joker-they-snatched-the-mic-and-chased-me-away-actress-sanam-shetty</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/does-watching-a-movie-make-me-a-joker-they-snatched-the-mic-and-chased-me-away-actress-sanam-shetty#comments</comments><guid isPermaLink="false">21692a22-c314-40be-b586-2acde13d763a</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:17:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:17:10.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகை சனம் ஷெட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zb4uj9u2/Shanam-shetti.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகை சனம் ஷெட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zb4uj9u2/Shanam-shetti.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நீட் தேர்வில் நடைபெற்றத முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p> <h2>விஜய்யின் தீவிர ரசிகை</h2><p>இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. அந்தப் படத்தை முதலமைச்சர் விஜய், தவெக அமைச்சர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பார்த்து கொண்டாடியிருப்பது அரசியல் வட்டாரங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அதே நேரத்தில், மாணவர் போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, நடிகை சனம் ஷெட்டி வெள்ளிக்கிழமை இரவு போராட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேடையில் பேசிய அவர், "இது மாணவர்களின் போராட்டம். இங்கு சிலர் பேசிய கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த மேடையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துபவர்கள்தான் ஜோக்கர்கள்; நாங்கள் அல்ல. நான் விஜய்யின் தீவிர ரசிகை. நேற்று 'ஜனநாயகன்' படம் பார்த்துவிட்டு வந்தேன்" என்று கூறினார்.</p> <h2>சனம் ஷெட்டி அதிருப்தி</h2><p>அவரது பேச்சுக்கு போராட்டத்தில் இருந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பேச்சை நிறுத்துமாறு வலியுறுத்திய நிலையில், "நான் பேசவா, போகவா?" என்று சனம் ஷெட்டி கேட்க, "போய்விடுங்கள்" என்று போராட்டக்காரர்கள் பதிலளித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த சனம் ஷெட்டி, "இது பேச்சுரிமையை பறிக்கும் செயல். யாரும் சொல்லி நான் இங்கு வரவில்லை. மாணவர்களுக்காக பேசவே வந்துள்ளேன்" என்று கூறினார். </p><h2>இதுதான் ஜனநாயகமா?</h2><p>தொடர்ந்து எதிர்ப்பு நீடித்ததால் அவர் அங்கிருந்து வெளியேறினார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, "நான் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிவிட்டு என்னை வெளியேறச் சொன்னார்கள். இதுதான் ஜனநாயகமா? இது ஒரு போலியான போராட்டம். வெற்றி மாறன் உட்கார்ந்து இருக்கிறாரே.. அவர் எத்தனை படங்கள் எடுத்துள்ளார். அவரையும் ஜோக்கர் என்றுதான் சொல்கிறீர்களா? இந்த மேடையை அரசியல் அஜெண்டாவுக்காக பயன்படுத்த  யாராக இருந்தாலும் நான்  அனுமதிக்க மாட்டேன். ஆயிரம் பேர் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஜனநாயகத்திற்காக  அவர்கள் போராடவில்லை. அவுங்க ஏஜெண்டா வைத்துதான் போராடுகிறார்கள். இந்த வலையில் வீழ்ந்து விடாதீர்கள். என்னோட தனிப்பட்ட கருத்துதான் நான் பேசுவேன்.நான்  இவர்களுடைய கைப்பாவையா... பேசுவதற்கு சுதந்திரம் கொடுக்காத இவர்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள்” என ஆவேசமாக பேசினார். </p>]]></content:encoded></item><item><title>மருத்துவ சேர்க்கைக்கு 70 ஆயிரம் விண்ணப்பங்கள்; கடந்த ஆண்டைவிட எண்ணிக்கை குறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/70000-applications-for-medical-admission-number-lower-than-last-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/70000-applications-for-medical-admission-number-lower-than-last-year#comments</comments><guid isPermaLink="false">bfaf1f51-f6ed-42ad-a6cb-d648741fe622</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:01:56 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:01:56.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குறைவு,விண்ணப்பங்கள்,Medical Student Admission,மருத்துவ சேர்க்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/9i5n8sll/68.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/9i5n8sll/68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவை மருத்துவ கல்வி இயக்குனரகம் கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்றது. அதன்படி, இளங்கலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40 ஆயிரத்து 760 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29 ஆயி ரத்து 726 விண்ணப்பங்களும் என மொத்தம் 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்திருக்கிறது.</p><h2>கடந்த ஆண்டை விட குறைவு</h2><p>இது கடந்த ஆண்டுகளுடனான விண்ணப்பங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, குறைவு ஆகும். கடந்த ஆண்டில் 72 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20">மாணவர் சேர்க்கை </a>இடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-price-situation-in-chennai-119</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-price-situation-in-chennai-119#comments</comments><guid isPermaLink="false">2cbee873-7a43-4d58-a434-bf973ba17cf6</guid><pubDate>Sat, 25 Jul 2026 00:44:07 +0000</pubDate><atom:updated>2026-07-25T00:44:07.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>petrol and diesel,பெட்ரோல் விலை,டீசல் விலை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/s52lthzt/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/s52lthzt/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (25.07.2026 சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சேலம்: மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-5-pounds-chain-snatched-from-old-lady</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-5-pounds-chain-snatched-from-old-lady#comments</comments><guid isPermaLink="false">5cce9df5-786b-482b-8a54-e6679474cf3b</guid><pubDate>Sat, 25 Jul 2026 00:38:26 +0000</pubDate><atom:updated>2026-07-25T00:38:26.021Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,நகை பறிப்பு,chain snatching,சேலம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/x7n2f6u8/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/x7n2f6u8/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த ஆலசம்பாளையம் அருகே மோலாணி முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அதேபகுதியை சேர்ந்த ராமாயி (வயது 65) மற்றும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்று இருந்தனர். </p><p>அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த மூதாட்டி கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் எடப்பாடி போலீஸ் மற்றும் கோவில் நிர்வாகத்திடம் புகார் செய்தார். அதன்பேரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: வாய்க்கால் மதகில் சிக்கி விவசாயி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-drowns-in-kalingarayan-canal-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-drowns-in-kalingarayan-canal-erode#comments</comments><guid isPermaLink="false">cb95aee6-b511-4cd8-99db-3ea9273761f3</guid><pubDate>Fri, 24 Jul 2026 23:05:37 +0000</pubDate><atom:updated>2026-07-24T23:05:37.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,gate,Farmer dies,விவசாயி பலி,சிக்கி,மதகு,were trapped</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/g3xwcmcc/farmer.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயி பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/g3xwcmcc/farmer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>ஈரோடு,</h2><p>ஈரோடு அருகே காலிங்கராயன் வாய்க்கால் மதகில் சிக்கி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயி </a>ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலத்திற்கு தண்ணீர் ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52). விவசாயி. </p><p>இவருக்கு காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. தற்போது வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.</p><h2>மதகில் சிக்கினார்</h2><p>இந்த நிலையில், நேற்று தனது விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பழனிசாமி வாய்க்கால் பகுதிக்கு சென்றார். அங்குள்ள மதகு வழியாக தனது நிலத்திற்கு தண்ணீரை திருப்புவதற்கான பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். மதகில் சிக்கினார் அப்போது, எதிர்பாராதவிதமாக பழனிசாமியின் கால் நழுவி, அவர் வாய்க்கால் மதகின் இடுக்கில் சிக்கிக்கொண்டார். </p> <h2>மீட்க முயன்றனர்</h2><p>அந்த சமயத்தில் வாய்க்காலில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், அவரால் மதகில் இருந்து வெளியே வர முடியவில்லை. சுழன்றடித்த தண்ணீரின் வேகத்தில் அவர் வாய்க்கால் வெள்ளத்திற்குள் மூழ்கி தத்தளித்தார். அருகில் இருந்த மற்ற விவசாயிகள் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். </p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>

கூடுதல் விலைக்கு மது விற்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்... டாஸ்மாக் அதிரடி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-10000-fine-for-selling-liquor-at-a-higher-price-tasmacs-strict-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-10000-fine-for-selling-liquor-at-a-higher-price-tasmacs-strict-move#comments</comments><guid isPermaLink="false">e369e4f7-46fc-45cf-a2cc-8758479af774</guid><pubDate>Fri, 24 Jul 2026 23:00:00 +0000</pubDate><atom:updated>2026-07-24T23:00:00.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அபராதம்,டாஸ்மாக்,Tasmac,fine collection,மது,கூடுதல் விலை,டாஸ்மாக் மதுபான கடை,Tasmac employees</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/0ubdv0ck/9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/0ubdv0ck/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>டாஸ்மாக்கில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>மேலாளர்களுக்கு சுற்றறிக்கை</h2><p>டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்களை அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை (எம்.ஆர்.பி) விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>டாஸ்மாக் மதுபான கடைகளில் எம்.ஆர்.பி.யைவிட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக நுகர்வோரிடமிருந்து புகார் பெறப்பட்டாலோ அல்லது டாஸ்மாக் அலுவலர்களின் திடீர் ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட கடையின் பணியாளர்கள் (மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்) மீது கீழ்க்கண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p> <h2>முதல் முறை</h2><p>* முதல் முறை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டால், ஒருமாத காலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பணியாளரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். தற்காலிக பணியிடை நீக்க காலமான ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படாது. ஒரு மாத பணியிடை நீக்கம் முடிந்த பின், இனி மேல் இதுபோன்ற தவறு செய்யமாட்டேன் என்ற உறுதிமொழி பெற்றுக் கொண்டு, தலைமையக ஒப்புதலுடன், அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.</p><h2>3 மாத பணியிடை நீக்கம்</h2><p>* 2-வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டால், 3 மாத காலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். பணியாளரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். 3 மாத தற்காலிக பணியிடை நீக்க காலத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படாது. 3 மாத பணியிடை நீக்கம் முடிந்த பின், இனிமேல் இதுபோன்ற தவறு செய்யமாட்டேன் என்ற உறுதிமொழி பெற்றுக்கொண்டு, தலைமையக ஒப்புதலுடன், அவர் பணிபுரியும் கடையில் இருந்து அதே மாவட்டத்தில் உள்ள மதுபானக் கிடங்கிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டு, குறைந்தது 3 மாதங்கள் அங்கு பணியாற்ற வேண்டும்.</p><p>* 3-வது முறை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட் டால், சம்பந்தப்பட்ட பணியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, குற்றக் குறிப்பாணை வழங்கி உள்விசாரணை நடத்த வேண்டும். உள்விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.</p><h2>ரூ.10 ஆயிரம் அபராதம்</h2><p>ரூ.1 முதல் 9 வரை கூடுதலாக வசூல் செய்தால், ரூ.1-க்கு ரூ.1,000 வீதம் அதிகபட்சமாக ரூ.9,000 என்ற வீதத்தில் அபராதம் விதிக்க வேண்டும். ரூ.10 மற்றும் அதற்கு மேல் கூடுதலாக வசூல் செய்தால் ரூ.10 ஆயிரம் மட்டும் விதிக்க வேண்டும். அபராத தொகையில் 60 சதவீதத்தை விற்பனை செய்த பணியாளரும், 40 சதவீதத்தை அப்போது கடையில் உடன் இருந்த மேற்பார்வையாளரும் (மேற்பார்வையாளர் ஆஜரில் இல்லாத பட்சத்தில் விற்பனை செய்த பணியாளர் அபராத தொகையினை முழுவதுமாக) செலுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> ஓமலூர் அருகே ஏரியில் வண்டல் மண் அள்ளியதால் பனை மரங்கள் சாய்ந்து விழும் அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-mining-near-omalur-puts-century-old-palms-at-risk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-mining-near-omalur-puts-century-old-palms-at-risk#comments</comments><guid isPermaLink="false">3270c37d-fbb9-4d6d-81b2-456f56c2dd9f</guid><pubDate>Fri, 24 Jul 2026 22:35:24 +0000</pubDate><atom:updated>2026-07-24T22:35:24.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏரி,lake,Palm trees,பனை மரங்கள்,அபாயம்,Soil collection,வண்டல் மண்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/zdigl8gw/palm-tree.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பனை மரங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/zdigl8gw/palm-tree.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பனங்காட்டூர் கிராமத்து ஏரியில், விவசாய பயன்பாட்டிற்காக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D">வண்டல் மண்</a> எடுக்க அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அனுமதியைத் தவறாகப் பயன்படுத்திய சில சமூக விரோதிகள், ஏரியின் இயற்கை அரணாக விளங்கும் பனை மரங்களின் வேர்களை ஒட்டியே ஆபத்தான முறையில் விதிகளை மீறி நள்ளிரவிலும், பகலிலும் மண் அள்ளி கடத்தி வந்துள்ளனர். இதனால் நூற்றாண்டு பழமையான பனை மரங்கள் வேரிழந்து, பலத்த காற்று வீசினால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. </p><h2>அதிர்ச்சி பின்னணி</h2><p>வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட அளவை விட, பாக்லைன் மற்றும் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மிக ஆழமாக மண் அள்ளப்பட்டுள்ளது. கரையை ஒட்டி ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டதால், பனை மரங்களை தாங்கி நிற்கும் மண் முழுமையாக அரிக்கப்பட்டு, வேர்கள் அந்தரத்தில் தொங்குகின்றன. ஏரியின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் இந்த சட்டவிரோத மண் கடத்தல் குறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு அவசரப் புகார் அனுப்பினர்.</p><h2>மக்கள் புகார்</h2><p>பொதுமக்களின் புகாரை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமலூர் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அனுமதியை மீறி, பனை மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எல்லையைத் தாண்டி மண் அள்ளி கடத்தியது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. </p><h2>தீவிர விசாரணை</h2><p>இதையடுத்து, விதிகளை மீறி செயல்பட்ட நபர்கள் மீது போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும், இதில் தொடர்புடைய மர்ம நபர்களைக் கைது செய்யவும் தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.</p><h2>மண் அள்ளி கடத்தல் </h2><p>இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், விவசாய நிலங்களுக்கு மண் அள்ளுவதாக அனுமதி பெற்று கொண்டு சிலர் செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளி கடத்தி செல்கின்றனர். இதனால் ஏரியில் உள்ள பனை மரங்கள், மின் கம்பங்கள் அந்தரத்தில் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மண் அள்ளி கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறினர்.</p> <p> அரசு அனுமதியின் பெயரால் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஈரோடு: விவசாய தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-rampage-in-farm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-rampage-in-farm#comments</comments><guid isPermaLink="false">ca68e86f-a71f-4525-8f10-f146e01c40da</guid><pubDate>Fri, 24 Jul 2026 21:25:27 +0000</pubDate><atom:updated>2026-07-24T21:25:27.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,தோட்டம்,காட்டு யானை அட்டகாசம்,farmlands,A wild elephant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/qmtdo2di/elephant.25.07.2026.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காட்டு யானை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/qmtdo2di/elephant.25.07.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புகுந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">காட்டு யானை</a>, விவசாய பயிர்களை துவம்சம் செய்தது. வனத்துறையினர் சைரன் ஒலி எழுப்பி, நீண்ட போராட்டத்திற்குப் பின் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டியடித்தனர்.</p><h2>தோட்டத்திற்குள் புகுந்த யானை</h2><p>ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு எருமைகள், சிறுத்தைகள் மற்றும் காட்டு யானைகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. </p><h2>அதிர்ச்சி</h2><p>இந்த நிலையில், நேற்று நள்ளிரவு கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்திற்குள் திடீரென ஒரு காட்டு யானை புகுந்தது. தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு மற்றும் காய்கறி பயிர்களை அந்த யானை கால்களால் மிதித்தும், தின்றும் பயங்கரமாக சேதப்படுத்தியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். </p><h2>சைரன் ஒலி</h2><p>இதுகுறித்து உடனடியாக ஜீராகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் தலைமையிலான வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்தும், தங்களது வாகனங்களின் 'சைரன்' ஒலியை அலறவிட்டும் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.</p><h2>2 மணி நேரம்</h2><p>சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கடும் போராட்டத்திற்குப் பிறகு, பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை மெல்ல நகர்ந்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே அப்பகுதி விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>
உடன்குடியில் இருதரப்பினர் மோதல்: நடிகர் ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-between-two-groups-in-udangudi-two-people-including-actor-gp-muthus-younger-brothers-wife-hacked-with-sickles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-between-two-groups-in-udangudi-two-people-including-actor-gp-muthus-younger-brothers-wife-hacked-with-sickles#comments</comments><guid isPermaLink="false">8612b97a-3ba6-486b-8249-38a56b04bd8b</guid><pubDate>Fri, 24 Jul 2026 19:27:16 +0000</pubDate><atom:updated>2026-07-24T19:27:16.611Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரிவாள் வெட்டு,Tuticorin,உடன்குடி,Kulasekaranpattinam,GP Muthu,ஜி.பி.முத்து,நடிகர் ஜி.பி.முத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/o2118qsd/4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/o2118qsd/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குலசேகரன்பட்டினம்,</p><p>தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபரும், சினிமா நடிகருமான ஜி.பி.முத்துவின் வீட்டின் அருகே கோவில் கட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 20-ந் தேதி நள்ளிரவில் ஜி.பி.முத்து வீட்டின் முன்பு எதிர் தரப்பினர் கோழியை அறுத்து பலி கொடுத்துப் பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. </p>  <p>இதைத் தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட மோதலில், இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதில் ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி அனிதா, உறவினர் இளையபெருமாள் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். </p> <p>இதுகுறித்து ஜி.பி.முத்து அளித்த புகாரின்பேரில், அப்பகுதியைச் சேர்ந்த பரமசிவன், மாடசாமி, ஆத்திசெல்வம், வேம்புநாதன், முத்துகிருஷ்ணன், மகேஷ், சுந்தரவேல், சுடலையாண்டி ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோன்று எதிர் தரப்பை சேர்ந்த முத்து மகேஷ், சுந்தரவேல், மாடசாமி, ஆத்திசெல்வம் ஆகியோரை ஜி.பி.முத்து, அவருடைய தந்தை கணேசன், ஜி.பி.முத்துவின் மனைவி அஜிதா, ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி அனிதா, இளையபெருமாள், வேல்முருகன் மற்றும் ஜி.பி.முத்து குழந்தைகள் சேர்ந்து பிளாஸ்டிக் நாற்காலிகளால் தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில், ஜி.பி.முத்து உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காரியாபட்டி:  சோலார் ஆலைக்கு நிலம் அளக்க வந்த அதிகாரிகள் மீது கல்வீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stone-pelting-on-officials-during-solar-plant-land-survey</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stone-pelting-on-officials-during-solar-plant-land-survey#comments</comments><guid isPermaLink="false">8a32f38c-ab3a-42a8-8e75-1c3e914cb3b4</guid><pubDate>Fri, 24 Jul 2026 19:25:52 +0000</pubDate><atom:updated>2026-07-24T19:25:52.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிகாரிகள்,government officials,கல்வீச்சு,காரியாபட்டி,attacked with stones,Solar Power Plants,சோலார் நிறுவனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ddya1ur2/crowd.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிராம மக்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ddya1ur2/crowd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>காரியாபட்டி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">விருதுநகர் மாவட்டம்</a> காரியாபட்டி அருகே சூரனூரில் தனியார் சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்க 41 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. </p><h2>நில அளவீடு</h2><p>நீதிமன்ற உத்தரவின்படி, காரியாபட்டி துணை தாசில்தார் ஜெயராஜ் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகளும், தனியார் நிறுவன அதிகாரிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளவீடு செய்ய சம்பவ இடத்திற்கு வந்தனர். </p><h2>முற்றுகை</h2><p>அப்போது, கோவிலாங்குளம், உடுப்புகுளம், ஆவரம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கு திரண்டனர். சோலார் திட்டம் அமைக்க உள்ள பகுதி தங்களின் விவசாய நிலம் என்றும், கண்மாய் நீர்வரத்து பாதையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கக் கூடாது என்றும் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். </p><h2>விவசாயிகள் எதிர்ப்பு</h2><p>இந்த சோலார் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கண்மாய்க்கு நீர்வரத்து தடைபடும் என்றும், விவசாய நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறி நிலத்தை அளக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><h2>கல்வீச்சு</h2><p>ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நில அளவை செய்ய வந்த அதிகாரிகள் மீது திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.</p><h2>பாதுகாப்பு பணி</h2><p>பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கல்வீச்சில் ஈடுபட்ட கிராம மக்களை தடுத்து நிறுத்தி, அதிகாரிகளை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சூரனூர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.1.54 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-cheated-of-rs-154-lakhs-on-the-pretext-of-getting-a-job</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-cheated-of-rs-154-lakhs-on-the-pretext-of-getting-a-job#comments</comments><guid isPermaLink="false">5061056b-4ba5-46a4-8441-6518ebd31884</guid><pubDate>Fri, 24 Jul 2026 16:24:27 +0000</pubDate><atom:updated>2026-07-24T16:24:27.343Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Tiruchy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/v32omf1i/Untitled-13.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/v32omf1i/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி பருப்புக்காரத் தெரு, ஆரோக்கிய மாதா கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ பிரபாகரனின் மகன் அந்தோணி (22), வேலை தேடி வந்த நிலையில், ஆன்லைன் வேலைவாய்ப்பு தளத்தில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார்.</p><h2>பணம் மோசடி</h2><p>இதையடுத்து, வேலைவாய்ப்பு நிறுவனம் எனக் கூறி இ-மெயில் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், அவரது புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளனர். பின்னர் வேலை தயாராகிவிட்டதாகக் கூறி, அவர் வழங்கிய ஆவணங்களை பயன்படுத்தி போலியான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.</p><p>அதன்பின், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமெனில் பணம் செலுத்த வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்தோணி, அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 980-ஐ அனுப்பியுள்ளார்.</p><h2>விசாரணை </h2><p>பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagnanam-appointed-as-tamil-nadu-disaster-management-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagnanam-appointed-as-tamil-nadu-disaster-management-commissioner#comments</comments><guid isPermaLink="false">15827dec-37fc-4269-99c4-b62e242bcdd3</guid><pubDate>Fri, 24 Jul 2026 16:02:56 +0000</pubDate><atom:updated>2026-07-24T16:02:56.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,tngovt,பேரிடர் மேலாண்மை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mdb3joof/siva33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிவஞானம் நியமனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mdb3joof/siva33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக சிவஞானம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>2010 தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சிவஞானம், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">சிவஞானம் ஐஏஎஸ்</a>-ஸை பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>அதற்கு முன்னதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், தேர்தல் சமயத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின் போதும் இணை தலைமை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>அதேபோல, மத்திய அரசு பணியில் இருந்து தமிழ்நாடு பணிக்கு திரும்பியுள்ள ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் புதிதாக உருவாக்கப்பட்ட நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க சென்னை மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-holds-consultative-meeting-to-prevent-school-dropout-of-children</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-holds-consultative-meeting-to-prevent-school-dropout-of-children#comments</comments><guid isPermaLink="false">f8e9a35d-6cfb-4bc7-af8b-16d7c583a42d</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:18:26 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:18:26.078Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சென்னை மாநகராட்சி கமிஷனர்,சென்னை மாநகராட்சி ஆணையர்,Chennai Corporation Commissioner,Greater Chennai Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/b5vybyfe/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/b5vybyfe/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல் தொடர்பாக அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் தலைமையில், குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல், பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகளை (Out-of-School Children), பள்ளியில் சேர்த்து பாதுகாத்தல் தொடர்பாக அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் இன்று (24.07.2026) நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் இணை ஆணையாளர்கள் செ.சரவணன், க.கற்பகம் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>முன்கூட்டியே கண்டறிய ஆலோசனை</h2><p>இக்கூட்டத்தில், பெற்றோர் பராமரிப்பின்றி உள்ள குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல், குழந்தைகளின் மறுவாழ்வு ஆலோசனை சேவைகள், பாதுகாப்பு இல்லங்கள், மறுகுடியமர்வு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள் நியமித்தல், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், உடல் மற்றும் மனநல விழிப்புணர்வு, பள்ளிகளுக்கு அருகிலுள்ள போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள், ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்துதல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பள்ளி இடைநிற்றலை முன்கூட்டியே கண்டறிய துறைகளுக்கிடையேயான தரவு பகிர்வு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><p>அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, கல்வி மற்றும் மறுவாழ்வு சேவைகளை காலதாமதமின்றி வழங்கி, பள்ளியில் தொடர்ந்து கல்வி கற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆணையாளர் அறிவுறுத்தினார்.</p><p>இதனைத் தொடர்ந்து, ஆணையாளர் மாநகராட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்து, சமூக நலத் திட்டங்கள் மற்றும் இரவுநேர தங்குமிடங்களின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செயல்பாடுகளை </a>மேலும் திறம்பட செயல்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reel-hero-must-fulfil-promises-to-be-real-hero-premalatha-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reel-hero-must-fulfil-promises-to-be-real-hero-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">18c0792e-c157-49cb-b54b-89a9454f36e9</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:14:43 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:14:43.778Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/jgbupwb3/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/jgbupwb3/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>தமிழகத்தில் ஒரு மாற்றமும் பார்க்க முடியவில்லை; அதே கண்துடைப்பு தான் நிகழ்கிறது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-</p><p>அரிசி விலை அதிகரித்துள்ளது; நேற்று மட்டும் ஒரு டன் அரசி ரூ.15 ஆயிரம் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு குறித்து அரசு சிந்திக்க வேண்டும். சும்மா சினிமா பாத்துக்கொண்டு, தியேட்டரில் உட்கார்ந்து அழுதுவிட்டு, சீன் போடுவது கிடையாது. இவை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. எல் நினோ பிரச்சினையால் தமிழகம் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பஞ்சம், வறட்சி, விலைவாசி உயர்வு ஆகியவை இல்லாமல் மக்களை பாதுகாக்க வேண்டும்.</p><p>தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணம் நிகழ்ந்துள்ளது. இவை தடுக்கப்பட வேண்டும். எந்த காவல்துறைக்கும் ஒருவரை அடித்துக் கொல்லும் உரிமை, எந்தச் சட்டத்திலும் கிடையாது. ஒருவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றால், விசாரித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். தவறு இருப்பின் நீதிமன்றம் தண்டனை வழங்கும். காவல் மரணம் தொடரக் கூடாது. </p><p>மக்கள் விரும்புவதை தான் சட்டங்களாக கொண்டுவர வேண்டும். நீட் தேர்வை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்க்கையில், அதை நீக்கிவிட வேண்டும். மக்களுக்காக தான் சட்டங்களும், திட்டங்களும். மக்களின் கோரிக்கையை தான் அரசுகள் கேட்க வேண்டும்.</p><p>தமிழகத்தில் ஒரு மாற்றமும் பார்க்க முடியவில்லை; அதே கண்துடைப்பு தான் நிகழ்கிறது. இது சினிமா கிடையாது. ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை மீண்டும் ‘ஜனநாயகன்’ படம் பார்க்கிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-watch-the-film-jananayagan-again-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-watch-the-film-jananayagan-again-tomorrow#comments</comments><guid isPermaLink="false">0ca3ba63-d7c4-461b-b06c-780f6ed8890a</guid><pubDate>Fri, 24 Jul 2026 15:05:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T15:05:53.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,ஜனநாயகன்,Jananayagan,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4zfc6yxp/janangayan33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஜனநாயகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4zfc6yxp/janangayan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எச்.வினோத் இயக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை கடந்து உலகம் முழுவதும் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. இந்தப்படம் ஏற்கனவே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி இருந்தாலும், விஜய் ரசிகர்கள் இந்தப்படத்தை பார்க்க பெரும் ஆவலுடன் இருந்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு முதலே கொண்டாட்டத்தில் களமிறங்கினர்.</p><p>சென்னையில் இந்த படம் வெளியான திரையரங்குகள் அனைத்தும் திருவிழாக்கோலம் கண்டிருந்தன. பல அடி உயர பிரமாண்ட கட்-அவுட்கள், பேனர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தியேட்டர்கள் முன்பு குவிந்த ரசிகர்கள், விஜய்யின் புகைப்படங்களுக்கு மலர் தூவி, கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.</p><p>சட்டமன்றத்தில் விஜய் காட்டும் சைகையை மையப்படுத்தி பெரும்பாலான தியேட்டர்களில் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. படம் திரையிடப்பட்டிருந்த அண்ணாநகர், வடபழனி, வேளச் சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கும் மால்களிலும் ரசிகர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.</p><h2>அமைச்சர்கள்-பிரபலங்கள்</h2><p>சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் 'ஜன நாயகன்' படத்தை பார்த்தார். கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர் படத்தை பார்த்து ரசித்தனர்.</p><p>இது விஜய்யின் கடைசி படம் என்பதால், படத்தின் இறுதியில் விஜய்யின் திரையுலக பயணம் பற்றிய சிறுகுறிப்பு காட்டப்பட்டது. இந்த காட்சியை பார்த்து அமைச்சர் என்.ஆனந்த் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். அதேபோல படம் பார்த்த ரசிகர்கள் அத்தனை பேரும் உணர்ச்சி வசப்பட்டனர்.</p><p>இதே தியேட்டரில் நடிகை திரிஷா, தனது தாயார் உமாவுடன் ‘<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">ஜனநாயகன்</a>' படம் பார்த்தார். நடிகைகள் சனம் ஷெட்டி, சஞ்சனா உள்ளிட்டோரும் அங்கு படம் பார்த்தனர். குரோம்பேட் டையில் உள்ள வெற்றி தியேட்டரில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மமிதா பைஜூ, இசையமைப் பாளர் அனிருத் உள்ளிட்டோர் படம் பார்த்தனர். இதுபோல சினிமா பிரபலங்கள் பலரும் ஆங்காங்கே தியேட்டர்களில் 'ஜனநாயகன்' படத்தை பார்த்து ரசித்தனர்.</p><p>'ஜனநாயகன்' படத்தின் தொடக்கத்திலேயே 'மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சர் தளபதி விஜய்' என்று டைட்டில் கார்டு போடும்போதே ரசிகர்களின் உற்சாகம் பறக்க தொடங்கி விடு கிறது. அதே நேரம் இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர்.</p><p>இந்தநிலையில், ‘ஜனநாயகன்' படக்குழுவுடன் நாளை (ஜூலை 25) காலை 11.30 மணியளவில் மீண்டும் படத்தைப் பார்த்து ரசிக்கவுள்ளார் முதல்-அமைச்சர் விஜய். ஏற்கனவே அரசு அதிகாரிகளுடன் சிறப்புக் காட்சி பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை வார விடுமுறையொட்டி சினிமா தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதனிடையே  உலகம் முழுவதும் 'ஜனநாயகன்' திரைப்படம் 7,400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் மட்டும் 5,300 தியேட்டர்களில் வெளிவந்தது. குறிப்பாக, தமிழகத்தில் 1,250 தியேட்டர்களில், 2,700 திரைகளில் வெளியிடப்பட்டது. ஆக்சன் அதிரடியில் ரசிகர்களை திருப்திபடுத்திய 'ஜனநாயகன்' திரைப்படம், முதல் நாளில் உலக அளவில் ரூ.78 கோடி முதல் ரூ.80 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>இந்தியாவில் மட்டும் ரூ.41 கோடியை வாரி குவித்துள்ளது. தமிழ்நாட்டில், ரூ.36.50 கோடி வசூலித்துள்ள இப்படம், தெலுங்கில் ரூ.2.75 கோடியும், இந்தியில் ரூ.1.75 கோடியும் ஈட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சரிவு: இன்றைய நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-price-drop-in-namakkal-zone-todays-status</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-price-drop-in-namakkal-zone-todays-status#comments</comments><guid isPermaLink="false">039c0de0-a50b-4a76-af8b-3ffdb69abab1</guid><pubDate>Fri, 24 Jul 2026 14:06:39 +0000</pubDate><atom:updated>2026-07-24T14:06:39.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Namakkal,நாமக்கல்,முட்டை விலை,egg price</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/8r7grxiz/egg.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/8r7grxiz/egg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் சரிந்து ரூ.6.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி முதல் ரூ.6.80-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், 8 நாட்களுக்கு பிறகு சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு முட்டை ரூ.7.30 வரை விற்கப்படுகிறது. </p><p>சத்துணவு முட்டை வினியோகம், முட்டை நுகர்வு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலை கடுமையாக உயர்ந்து வந்தது. தற்போது சற்று குறைந்துள்ளதால், நுகர்வோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டத்திற்கு தவெக அரசு துணை நிற்கும் - ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/overnment-will-support-students-protest-aadhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/overnment-will-support-students-protest-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">153f48f0-f6db-49ae-9b2c-ce228a4d6c6f</guid><pubDate>Fri, 24 Jul 2026 14:04:35 +0000</pubDate><atom:updated>2026-07-24T14:04:35.878Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,டெல்லி,ஆதவ் அர்ஜுனா,மாணவர்கள் போராட்டம்,தவெக அரசு,NEETProtest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/fjalgms4/athav33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/fjalgms4/athav33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.</p><h2>தவெக அரசு துணை </h2><p>இந்தநிலையில்,  சென்னையில் உள்ள் எஸ்.ஆர்.எம். பல்கலை.யில் விளையாட்டு வீரர்கள் விடுதியை திறந்துவைத்த பின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-</p><p> நீட் தொடர்பாக போராடுபவர்களுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. அனிதா உள்ளிட்ட பல சகோதர, சகோதரிகளை தமிழகம் இழந்து உள்ளது. நீட்டை தடை செய்ய வேண்டும். <a href="https://www.dailythanthi.com/search?q=%20%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20">டெல்லி</a>யின் குரலுக்கும் தமிழகத்தின் குரலுக்கும் வித்தியாசம் உள்ளது. </p><p>கிராமப்புற மாணவர்களின் சிரமம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். நீட்டை உறுதியாக எதிர்க்கிறோம், வெறும் அரசியலுக்காக அல்ல. ஒருநாள் நீட்டை தடை செய்ய எங்களுடைய குரல் முக்கியமானதாக இருக்கும். அரசியல் லாபத்திற்காக அல்லாமல் நீட்டை உறுதியாக எதிர்க்கிறோம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>ரெயில்வே திட்டங்களை விரைவுபடுத்த தவெக அரசு உடனடியாக நிலங்களை வழங்கிட வேண்டும்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-should-immediately-provide-land-to-expedite-railway-projects-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-should-immediately-provide-land-to-expedite-railway-projects-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">fe752e46-c9c1-4496-b91e-996ea93f59d4</guid><pubDate>Fri, 24 Jul 2026 14:01:26 +0000</pubDate><atom:updated>2026-07-24T14:01:26.965Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/wgzudwrh/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/wgzudwrh/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ரெயில்வே திட்டங்களை விரைவுபடுத்த தவெக அரசு உடனடியாக நிலங்களை வழங்கிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>5 முக்கிய ரெயில்வே திட்டங்கள்</h2><p>தமிழகத்தில் திண்டிவனம்-திருவண்ணாமலை, அத்திப்பட்டு-புத்தூர், மொரப்பூர்-தர்மபுரி, மன்னார்குடி-பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை ஆகிய 5 முக்கிய ரெயில்வே திட்டங்கள், மாநில அரசு நிலம் தராததால் முடங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த ரெயில்வே திட்டங்களின் தேவையில் வெறும் 26% (1,178 ஹெக்டேர்) நிலத்தை மட்டுமே தமிழக அரசு இதுவரை வழங்கியுள்ளது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>இதற்கு முன் மாநிலத்தை ஆண்ட திமுக அரசு நிலம் கையகப்படுத்துவதில் காட்டிய அலட்சியத்தைத் தற்போதைய தவெக அரசும் தொடர்வதால், தமிழக மக்களின் நீண்டநாள் போக்குவரத்துத் தேவைகள் நிறைவேற்றப்படாமல், மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியும் கடுமையாக முடங்கியுள்ளது.</p><h2>முடுக்கிவிட வேண்டும்</h2><p>எனவே, நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தவெக அரசு உடனடியாக முடுக்கிவிட வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, தென்னக ரெயில்வேயுடன் இணைந்து இந்த 5 <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திட்டங்களையும் </a>விரைந்து செயல்பாட்டிற்குக் கொண்டுவர அவசர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-11-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-11-districts#comments</comments><guid isPermaLink="false">0236b353-891f-4b43-9502-aef924d3c68c</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:44:28 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:44:28.701Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/0x6nbeub/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/0x6nbeub/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சராசரி கடல் மட்டத்தில் குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீமை கருவேல மரங்கள் அகற்றம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-seemai-karuvelam-trees-madras-high-court-orders-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-seemai-karuvelam-trees-madras-high-court-orders-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">7dfc1e40-7a8d-462e-b3f5-26f433dadae9</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:41:40 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:41:40.507Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,Vaiko,வைகோ,தமிழ்நாடு அரசு,TN govt,Chennai High Court,சீமை கருவேல மரங்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/frt46jwm/chen.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/frt46jwm/chen.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/சென்னை-ஐகோர்ட்டு">சென்னை ஐகோர்ட்டு</a> உத்தரவிட்டுள்ளது. </p><h2>90 சதவீத மரங்கள் அகற்றம்</h2><p>தமிழகத்தில் சீமை கருவேலம் மரங்களை அகற்றக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போடு தமிழக அரசு தரப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் வளர்ந்திருந்த கருவேலம் மரங்கள் 90 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டதாகவும், வட மாவட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p> <h2>ஜூலை 31-ம் தேதி</h2><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்றம் நியமித்த நீதிபதிகளுடன் அரசு துறை செயலாளர்கள் எந்த கூட்டத்தையும் நடத்தவில்லை என்றும், இதனால் நீதிபதிகளுக்கு யாரை சந்திப்பது என்பது கூட தெரியவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து, கருவேலம் மரங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவை அமல்படுத்தும் வகையில், வருவாய்துறை செயலாளரை நோடல் அதிகாரியாக நியமித்த நீதிபதிகள், ஜூலை 31-ம் தேதி அவர் நேரில் ஆஜராகி தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதேபோல, சீமை கருவேல மரங்களை அகற்ற தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.</p><h2>24 மணி நேரத்திற்குள்</h2><p>மேலும், அரசு நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என வருவாய் துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னை: திடக்கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5.10 லட்சம் அபராதம் விதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-rs-5-10-lakh-fine-for-violating-solid-waste-rules</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-rs-5-10-lakh-fine-for-violating-solid-waste-rules#comments</comments><guid isPermaLink="false">27b877c8-c05b-4c28-9bcd-849d7d20291d</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:33:21 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:33:21.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,fine,அபராதம்,திடக்கழிவு மேலாண்மை,Solid Waste Management</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ogor69t7/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ogor69t7/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் பெருமளவு திடக்கழிவுகள் உருவாக்குபவர்கள் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமானக் கழிவுகள் என முறையாக தரம்பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். 01.07.2026 முதல் 23.07.2026 வரை திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ பின்பற்றாத பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்களுக்கு ரூ.5.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>முதல்-அமைச்சர், தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து பெற்று அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.</p><p>அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி முழுவதும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>இதன் தொடர்ச்சியாக, இன்று (24.07.2026) சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் அண்ணாநகர் மண்டலம், வார்டு - 100, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள குஷால் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk Waste Generators – BWGs) திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ பின்பற்றுகின்றனரா என்பது குறித்து திடீர் களஆய்வு மேற்கொண்டார்.</p><p>இந்த ஆய்வின்போது, பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆகியவற்றின் இணையதளங்களில் கட்டாயப் பதிவை மேற்கொண்டுள்ளனரா, கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக தரம் பிரிக்கப்படுகிறதா, பச்சை, நீலம், சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய நான்கு வண்ணக் குறியீட்டு குப்பைத் தொட்டிகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா, மக்கும் கழிவுகளை வளாகத்திலேயே உரமாக்கும் (Composting) அல்லது உயிரி எரிவாயு (Bio-Gas) நிலையங்கள் மூலம் பதப்படுத்தும் வசதிகள் செயல்படுகிறதா, மறுசுழற்சி செய்யக்கூடிய உலர் கழிவுகள் முறையாக சேமிக்கப்படுகிறதா, வளாகத்தின் தூய்மை மற்றும் சுகாதார நிலை ஆகியவற்றையும் நேரில் ஆய்வு செய்தார்.</p><p>பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது வளாகங்களில் உருவாகும் கழிவுகளை கட்டாயமாக நான்கு பிரிவுகளாக உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து, மக்கும் கழிவுகளை வளாகத்திலேயே உரமாக்கும் நிலையங்கள் அல்லது உயிரி எரிவாயு நிலையங்கள் மூலம் பதப்படுத்த வேண்டும் என்றும், திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, அறிவியல் மற்றும் நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையர் வலியுறுத்தினார்.</p><p>ஆய்வின்போது, அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் ஆணையர் கலந்துரையாடி, கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக தரம் பிரித்தல் மற்றும் வளாகத்திலேயே கழிவு மேலாண்மை மேற்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.</p><p>பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது வளாகங்களிலேயே திடக்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வது, மாநகராட்சி கழிவு போக்குவரத்து மற்றும் பதப்படுத்தும் மையங்களின் சுமையை குறைப்பதுடன், வள மீட்பு, மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கிய பங்காற்றுகிறது என்று ஆணையர் தெரிவித்தார்.</p><p>பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ முழுமையாக பின்பற்றுகின்றனரா என்பதை உறுதி செய்ய, பெருநகர சென்னை மாநகராட்சியால் தொடர்ந்து சென்னை நகரம் முழுவதும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களிடமும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>01.07.2026 முதல் 23.07.2026 வரை திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ மீறிய பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியால் மொத்தம் ரூ.5,10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.</p><p>எனவே, அனைத்து கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் இதர பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ முழுமையாக கடைப்பிடித்து, அபராதத்தை முழுமையாக தவிர்த்திடுமாறும், தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான சென்னையை உருவாக்குவதில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுமாறும் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக் கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் மீதான வழக்கு: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - த.வெ.க. நிர்வாகி புகழேந்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-pollachi-jayaramans-son-high-court-orders-fresh-inquiry-tvk-functionary-pugazhendhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-pollachi-jayaramans-son-high-court-orders-fresh-inquiry-tvk-functionary-pugazhendhi#comments</comments><guid isPermaLink="false">6b256487-aa93-40e5-9b9b-acf4183d7bea</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:18:13 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:18:13.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,பொள்ளாச்சி ஜெயராமன்,Pollachi Jayaraman,புகழேந்தி,Pugazhenthi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/446bok1m/jhi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/446bok1m/jhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் செய்தது திட்டமிட்ட கொலை என்றும், விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க</a>. நிர்வாகி புகழேந்தி பேசியுள்ளார்.</p><h2>ஜனநாயகன்</h2><p>கோவை உடையாம்பாளையம் பகுதியில் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணிகளில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தேர்தலுக்கு முன்பே வர வேண்டிய படத்தை தடை செய்திருந்தனர். ஜனநாயகன் பார்த்து மகிழ்ந்தேன். பல அமைச்சர்கள் கண்ணீர் உருக்கமாக இருந்தது. இப்படி வெளியீட்டை விழாவாக எடுக்க ஆனந்த் கூறியிருந்தார். அடிமைப்பெண் வெளியானபோது ஊர்வலமாக சென்று பார்த்தேன். அந்த நியாபகம் வந்தது. இப்போது படம் வந்துள்ளதால். தடை செய்தவர்களுக்கு வயிறு எரிந்திருக்கும்.</p> <h2>25 எம்எல்ஏக்களும்</h2><p>உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் தெருவில் அலையப்போகிறார்கள். முதல்-அமைச்சர் குறித்து இழிவாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு மனநலக் கோளாறா என்று தெரியவில்லை. இதேபோல் பேசினால் சட்டம் அதன் கடமையை செய்யும், சிறை கதவுகளுக்குப் பின் இருக்கும் நிலை ஏற்படும்.</p><p>அதிமுக முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதிமுகவில் இருந்து வெளியேறுபவர்களை அரவணைத்துக் கொண்டு செல்கிறார் விஜய். அதிமுகவில் யாரும் இருக்கப்போவதில்லை. அதிமுகவில் 25 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவாகவே உள்ளார்கள். இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.</p> <h2>கொலை வழக்கு</h2><p>நீண்ட ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் 4 மாணவிகளுடன் காரில் சென்று விபத்தில் சிக்கினார். அப்போது மற்றவர்களை விட்டுவிட்டு பிரவீன் மட்டும் ஓடிவிட்டார்.</p><p>2 நாட்களுக்குப் பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்தார். அந்த விபத்தில் சிக்கிய வீரசுரேகா என்ற பெண் கொடுத்த வாக்குமூலத்தை அரசு எடுத்துக்கொள்ளாமல் பிரவீனை தப்பவிட்டார்கள். இது கொலை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட பிரவீனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்துள்ளனர்.</p> <h2>சகுனிகள்</h2><p>எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் மதுரை, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, திருவண்ணாமலையில் சகுனிகள் உள்ளனர். நேற்று அதிமுக கூட்டத்தில் சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. </p><p>ஜெயராமனுக்கு நாவடக்கம் வேண்டும். கட்சியை தரைமட்டமாக்கிவிட்டீர்கள்.வீர சுரேகா என்று பெண்ணிற்காக நான் பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன்.பொள்ளாச்சி சம்பவம், தூத்துக்குடி சம்பவங்களை சி.பி.ஐ. தான் கண்டுபிடித்தது. அப்போது இருந்த அதிமுகவும் செய்யவில்லை, அதன்பிறகு வந்த திமுகவும் செய்யவில்லை இருவரும் கூட்டுகளவாணிகள்.எடப்பாடி பழனிசாமி நாசமாகப் போக பொள்ளாச்சி ஜெயராமன் தான் காரணம்.</p> <h2>மோடிக்கு பெரிய அடி</h2><p>முறைத்துக்கொண்டிருக்கும் எம்எல்ஏக்களின் கால்களில் விழுந்து புதிய தலைமையை உருவாக்கினால் மட்டுமே அதிமுக மீண்டும் உயிர் பெறும்.ஒன்று எடப்பாடி பழனிசாமியை தூக்கி எரிவார்கள் அல்லது அனைவரும் தவெகவுக்கு வருவார்கள். ஜனநாயகன் படத்திற்கு அதிக விலையில் டிக்கெட் விற்கவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நடவடிக்கை எடுப்போம். த.வெ.க.வுக்கு வருவோர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூப்பிக்க வேண்டும். அதற்கு தவெக அரசு துணை நிற்காது.</p><p>டெல்லியில் நடைபெறும் போராட்டம் பாராட்டிற்கு உரிய விஷயம். இது மோடிக்கு பெரிய அடி. இதில் இருந்து மோடி வெளியே வரமுடியாது. படம் பல தடைகளுக்கு பின் வந்துள்ளதால் அமைச்சர்கள் சென்று பார்த்தனர். மாணவர் போராட்டம் நடந்தால் ரோட்டில் யாரும் நடக்கக்கூடாது என்றால் எப்படி?</p><p>இவ்வாறு புகழேந்தி கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி - ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukkudi-oka-vivek-express-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukkudi-oka-vivek-express-cancelled#comments</comments><guid isPermaLink="false">677adf96-f93d-428e-bd41-926e4006396b</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:18:01 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:18:01.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,கனமழை,Thoothukudi,தூத்துக்குடி,heavy rain,ரெயில் ரத்து,train canceled,விவேக் எக்ஸ்பிரஸ்,vivek express train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/oex4hvhr/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/oex4hvhr/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குஜராத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இன்று குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் அதன் இணை ரெயிலான தூத்துக்குடியில் இருந்து ஓகா செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தூத்துக்குடியில் இருந்து ஓகாவுக்கு ஜூலை 26-ந்தேதி இரவு 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 19567) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதற்கான இணை ரெயில் (19568) ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கெலவரப்பள்ளி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-release-from-kelavarapalli-dam-from-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-release-from-kelavarapalli-dam-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">c6ce24bc-896b-4fce-b6a6-84b3f4df1a11</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:03:42 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:03:42.591Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி அணை,கெலவரப்பள்ளி அணை,ஓசூர் கெலவரப்பள்ளி,கெலவரப்பள்ளி,Kelavarapalli,Kelavarapalli Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/9897zi49/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/9897zi49/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தண்ணீர் திறப்பு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தற்போது நீர் இருப்பை கருத்தில் கொண்டு, பருவகால புன்செய் பயிரிடுவதற்கு வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய்களில் 25.07.2026 முதல் 21.11.2026 வரை மொத்தம் 120 நாட்களுக்கு முதல் போக புன்செய் பயிர் சாகுபடி பாசனத்திற்கு சுழற்சி முறையில் முதல் மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும், இரண்டாவது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும், மொத்தம் 10 நாட்களுக்கு தண்ணீர் விட்டும், 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், தவணை ஒன்றுக்கு 76.23 மில்லியன் கனஅடி வீதம் 8 தவணையாக மொத்தம் 609.84 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>அரசு ஆணையிட்டுள்ளது.</p><h2>8000 ஏக்கர் நிலங்கள் </h2><p>இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்திலுள்ள 8000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? - சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-dmk-governments-true-stand-on-parandur-airport-seeman-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-dmk-governments-true-stand-on-parandur-airport-seeman-asks#comments</comments><guid isPermaLink="false">ace20037-48a1-4095-ac27-2c95c4e40239</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:58:32 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:58:32.640Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,பரந்தூர்,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/klhwugl3/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/klhwugl3/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு, இதுவரை மத்திய அரசிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. </p><p>சட்டமன்றத் தேர்தலில் வென்று  ஆட்சி, அதிகாரத்தை அடைந்த தவெக அரசு,  பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மோஹோல் பரந்தூரிலிருந்து விமான நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசிடமிருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது, பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரத்தில் தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. </p><p>பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை தவெக தற்போது ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? எதிர்க்கிறது என்றால் இடத்தை மாற்ற வேண்டுமென்று தவெக அரசு இதுவரை மத்திய பாஜக அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? முந்தைய திமுக ஆட்சியின்போது விளைநிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக பரந்தூருக்கே தான் நேரில் சென்றதாவது முதல்வர் விஜய்க்கு நினைவிருக்கிறதா அல்லது அதுவும் மறந்து போனதா? என்ற கேள்விகளுக்கு தவெக அரசின் பதிலென்ன?</p><p>ஆகவே, பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயத்திற்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறதா..? தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-free-three-phase-electricity-provided-for-agriculture-tamil-nadu-electricity-board-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-free-three-phase-electricity-provided-for-agriculture-tamil-nadu-electricity-board-clarifies#comments</comments><guid isPermaLink="false">c94968fe-dbb0-464c-a07e-e1ec895dbee4</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:57:25 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:57:25.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Tamil Nadu Electricity Board,தமிழ்நாடு மின்சார வாரியம்,electricity,விவசாயம்,agriculture,இலவச மின்சாரம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mbfs0xct/minsar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/mbfs0xct/minsar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விவசாய பம்ப் செட்டுகளுக்கு தொடர்ந்து இலவச மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்பட்டு வருவதாக <a href="https://www.dailythanthi.com/topic/தமிழ்நாடு-மின்சார-வாரியம்">தமிழ்நாடு மின்சார வாரியம்</a> தெரிவித்துள்ளது. </p><h2>இலவச மின் விநியோகம்</h2><p>இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>24.07.2026 அன்று The New Indian Express நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள "Ground water depletion, cut in 18-hr free power supply deal blow to delta farmers" என்ற தலைப்பிலான செய்தியின் முதல் இரண்டு பத்திகளில், வேளாண் மின் பம்புகளுக்கான 18 மணி நேர இலவச மின் விநியோகம் இனிமேல் 14 மணி நேரமாகக் குறைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p> <h2>18 மணி நேரம்</h2><p>மேற்கண்ட செய்தி தொடர்பாக, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) சார்பில் தெரிவிக்கப்படுவதுயாதெனில், தமிழக விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்பட்டுவருகிறது.</p><h2>பராமரிப்புப் பணிகள்</h2><p>மேலும், மின் கட்டமைப்பில் எதிர்பாராமல் ஏற்படும் தொழில்நுட்ப சவால்கள், அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணங்களினால் மட்டுமே ஒரு சில மணி நேரங்களுக்கு தற்காலிக மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய தற்காலிக இடையூறுகளைத் தவிர, விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் வழங்கும் நடைமுறையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும், இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒருபக்கம் காதலன், மறுபக்கம் திருமணமானவருடன் பழக்கம்; பெண் போலீஸ் தற்கொலையில் திடுக்கிடும் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-information-about-the-suicide-of-a-female-police-officer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-information-about-the-suicide-of-a-female-police-officer#comments</comments><guid isPermaLink="false">7d6411bc-590b-4111-8959-e260fb60520f</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:43:06 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:43:06.436Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,police,Thiruvannamalai,பெண் போலீஸ்,women</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ujc3agqn/police33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
பெண் போலீஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ujc3agqn/police33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனி (வயது 24). இவர் கடந்த 2022-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த அவர், காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் போலீஸ் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்தார். </p><h2>தற்கொலை</h2><p>நேற்று காலை நீண்ட நேரமாக அவரது அறை தறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேக மடைந்த சக போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரஞ்சனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரஞ்சனியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு ப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>ஆண் போலீஸ் ஒருவருடன் பழக்கம்</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரஞ்சனிக்கு மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் ஆண் போலீஸ் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், இவர்களது காதல் தொடர்பு குறித்து இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏதேனும் ஏற்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>செல்போனுக்கு 3 அழைப்புகளிலும் வேறு வெவேறு நபர்கள்</h2><p>தற்கொலைக்கான உண்மை  காரணத்தை அறிய,  உயிரிழந்த ரஞ்சனியின் செல்போனை பறிமுதல் செய்த நல்லூர் போலீசார், அதில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ரஞ்சனி இறப்பதற்கு முன்பு கடைசியாக எந்தெந்த எண்களில் இருந்து போன் வந்துள்ளது. எங்கிருந்து பேசி இருக்கிறார்கள் மற்றும் எவ்வளவு நேரம் பேசியுள்ளார் என்ற அழைப்பு விவரங்களை சேகரித்தனர். அதில், பெண் போலீஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரது போனுக்கு 3 அழைப்புகள் வந்துள்ளதும், அந்த 3 அழைப்புகளிலும் வேறு வேறு  நபர்களிடம் அவர் பேசியிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்த நல்லூர் போலீசார், ரஞ்சனியிடம் கடைசியாகப் பேசிய 3 போலீசாரை</p><p>கண்டறிந்து, அவர்களை உடனடியாக நல்லூர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. </p><h2>திருமணத்திற்கு சம்மதம்</h2><p>ரஞ்சனியும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20">திருவண்ணாமலை</a>யைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்க ளது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, இரு வீட்டாரும் பேசி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில் திருப்பூரில் பணியாற்றி வரும் திருமணமான போலீஸ்காரர் ஒருவருடன் ரஞ்சினிக்கு பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. மேலும் செல்போனில் இருவரும் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்த விவகாரம் ரஞ்சனியின் காதலனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் ரஞ்சனியுடன் பேசி வந்த அந்த திருமணமான போலீஸ்காரரை நேரில் சென்று மிரட்டியுள்ளார். "எங்களுக்குத் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இனி ரஞ்சனியுடன் பேசுவதையும் தொடர்புகொள்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கண்டிப்புடன் கூறியுள்ளார்.</p><h2>காதலனுடன் சண்டை</h2><p>இதன் தொடர்ச்சியாக, ரஞ்சனிக்கும் அவரது காதலனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் ரஞ்சனி தனது காதலனுடன் செல்போனில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு காதலனுடன் போனில் சண்டைபோட்டபடியே வீட்டிற்குள் சென்ற ரஞ்சனி,மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காசிமேடு மீனவர்களின் 7 விசைப்படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-needed-to-release-7-mechanized-boats-belonging-to-kasimedu-fishermen-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-needed-to-release-7-mechanized-boats-belonging-to-kasimedu-fishermen-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">fe8f9943-85fb-43d8-84c0-db8548698825</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:34:41 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:34:41.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,மீனவர்கள்,அதிமுக,தமிழகம்,fisherman,காசிமேடு,Kasimedu,விசைப்படகுகள்,fishing boats,Edappadi Palaniasamy,எடப்பாடி  பழனிசாமி,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/hp2jijzp/nkvie.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/hp2jijzp/nkvie.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>ஆந்திர மாநில காவல்துறை மற்றும் மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.வெ.க. அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palaniswami">எடப்பாடி பழனிசாமி</a> வலியுறுத்தி உள்ளார். </p><h2>தமிழக மீனவர்கள்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 800 விசைப்படகுகளும், 2 ஆயிரம் பைபர் படகுகளும் தங்குதளமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கான மீன் இறைச்சி தேவையை இவர்கள்தான் பூர்த்தி செய்து வருகின்றனர். </p><h2>மீன்பிடித் தொழில்</h2><p>இங்கு பிடிக்கப்படும் மீன்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, நமது நாட்டிற்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 30,000 வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காசிமேடு மீனவர்களின் மீன்களை நம்பியுள்ளனர்.</p><p>சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா தனி மாநிலமாக பிரிந்து சென்றாலும், இவர்களது வாழ்விடம் ஆந்திராவை ஒட்டி இருப்பதால், எப்போதும்போல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் அமைதியாக மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 50 வருடங்களாக ஆந்திர மீனவர்களும், தமிழக மீனவர்களும் சகோதரர்களாக மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். தமிழக மீன்பிடி படகுகளில் ஆந்திராவைச் சேர்ந்த மீனவத் தொழிலாளர்கள் பெருமளவு பணிபுரிந்து வருகின்றனர்.</p><h3>7 விசைப்படகுகள்</h3><p>இந்நிலையில், ஆந்திர மாநில அரசு தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஆந்திர கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது என்று கூறி, 17.6.2026 அன்று காசிமேடு துறைமுகத்தைச் சேர்ந்த 7 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இன்றுவரை அந்த 7 விசைப்படகுகளை ஆந்திர அரசு விடுவிக்கவில்லை. </p><h2>வாழ்வாதாரம் பாதிப்பு</h2><p>காசிமேடு மீனவர்கள், த.வெ.க. அரசு மற்றும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை தமிழக அரசு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காசிமேடு மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகு உரிமையாளர்களும், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவத் தொழிலாளர்களும், மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல இயலாமல், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>உடனடி நடவடிக்கை</h2><p>எனவே, ஆந்திர அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிக்க த.வெ.க. அரசின் முதல்-அமைச்சர் உடனடியாக முயற்சிக்க வேண்டும். இனியும் காசிமேடு மீனவர்களை, ஆந்திர அரசு அதிகாரிகளால் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரத்தில் மேலும், மேலும் தவறுகளை செய்கிறது தவெக அரசு - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tavega-arasu-megathadu-anai-thavaraigal-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tavega-arasu-megathadu-anai-thavaraigal-anbumani#comments</comments><guid isPermaLink="false">f023e036-5d7e-47bc-9ddc-9e87771352e1</guid><pubDate>Fri, 24 Jul 2026 11:09:14 +0000</pubDate><atom:updated>2026-07-24T11:09:14.562Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,கர்நாடக அரசு,Karnataka,மேகதாது அணை,Mekedatu dam,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4jr03eg1/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/4jr03eg1/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லவிருப்பதாகவும்  வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருக்கிறார். மேகதாது சிக்கல் குறித்து பேச்சு நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>கும்பகோணத்தில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. காவிரி நமது உரிமை. அதை விட்டுக் கொடுக்க மாட்டோம், கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம்தேதி மேகதாது அணை தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் விஜய் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் பேசவுள்ளார்" என்று தெரிவித்தார்.</p><p>கர்நாடகத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தை ஏற்பாடு செய்வது யார்? மத்திய அரசா, கர்நாடக அரசா? என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால், மேகதாது குறித்து பேச்சு நடத்த முதல்-அமைச்சர் விஜய்க்கு  கர்நாடக அதிகாரிகள் மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று நேற்று ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றுத்தான் முதல்-அமைச்சர் விஜய் அம்மாநிலத்திற்கு பேச்சு நடத்த செல்வதாகத் தோன்றுகிறது. இது மிகவும் தவறு.</p><p>பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும், மீண்டும் கூறி வருவது என்னவென்றால், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான பிரச்சினை அல்ல.... அது கர்நாடக அரசின் ஒரு சார்பான கோரிக்கை மட்டும்தான். அதுகுறித்து அந்த மாநில அரசுடன் நாம் எந்த பேச்சுகளையும் நடத்தத் தேவையில்லை என்பதுதான்.</p><p>மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நாம் பேச்சு நடத்தினால் அதை இரு தரப்பு பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று பொருளாகி விடும். அதன் பின்னர் மேகதாது அணையை கட்டக்கூடாது என்பது தீர்வாக இருக்காது. மாறாக, மேகதாது அணையின் கொள்ளளவு எவ்வளவு டி.எம்.சியாக இருக்க வேண்டும்?  அந்த அணையிலிருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பதுதான் தீர்வாக இருக்கும். இது காவிரியில் தமிழ்நாட்டுக்கு  உரிய  உரிமைகளை மொத்தமாக கர்நாடகத்திடம் தாரைவார்ப்பதற்கு ஒப்பானது ஆகும்.</p><p>மேகதாது அணை குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டபோதே  அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு எந்த அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ, அதை விட மோசமான பின்னடைவை மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு நடத்துவது ஏற்படுத்தி விடும்.</p><p>மேகதாது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அதில் சம்பந்தப்பட்ட உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றுடன்  ஆலோசனை நடத்திய பிறகு தான் நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டும். மேகதாது சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக பல வாரங்களாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்காத அரசு, கர்நாடக அரசுடன் பேசும் முடிவை தன்னிச்சையாக எடுத்திருப்பது இவ்விவகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.</p><p>எனவே, மேகதாது அணை குறித்து பேச்சு நடத்துவதற்காக கர்நாடகத்திற்கு செல்லும் முடிவை முதல்-அமைச்சர் விஜய் கைவிட வேண்டும். மாறாக, சட்டப் போராட்டங்களின் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய கல்வி மந்திரி பதவி விலக வலியுறுத்தி 27-ந்தேதி விசிக ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/viduthalai-chiruthaigal-protest-demanding-education-minister-resignation-july-27</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/viduthalai-chiruthaigal-protest-demanding-education-minister-resignation-july-27#comments</comments><guid isPermaLink="false">2f402d43-585c-4a93-8729-7b0f996492ba</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:55:02 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:55:02.158Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,ஆர்ப்பாட்டம்,திருமாவளவன்,Thirumavalavan,VCK,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மத்திய கல்வி மந்திரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/t5pfplvl/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/t5pfplvl/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதிவு விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புதுடெல்லியில் மாணவர்களும், இளைஞர்களும் போராடி வருகின்றனர். இது தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய பேரணியில் மோடி அரசின் காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள், இளைஞர்கள் மீது ஏவப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் ஜூலை 27 திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>தர்மேந்திர பிரதான் கல்வி மந்திரி ஆனதற்குப் பிறகு நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் 152 முறை கசிந்து, பலமுறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு சுமார் ஏழரை கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.</p><p>"கல்வித் துறையைச் சீரழிக்கும் மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்று மாணவர்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். அண்மையில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நாடாளுமன்றம் நோக்கி பேரணி ஒன்றை அறிவித்தது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆரம்பித்த ஜூலை 20-ம் நாள் டெல்லியில் அந்தப் பேரணி அறிவிக்கப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் அதில் பங்கேற்றனர். அந்தப் பேரணியைத் தடுப்பதற்கு வரலாறு காணாத அளவில் டெல்லியின் வீதி தோறும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்களையும், இளைஞர்களையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியால் அடித்தும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். சீருடை அணியாத சில குண்டர்கள் தடிகளை ஏத்தி மாணவர்களைத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாயின. காயம்பட்ட மாணவர்களை நேரில் சென்று விசாரித்தபோது அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மாணவர்கள் தெரிவித்தனர்.</p><p>மாணவர்களை சிவில் உடையில் வந்து யார் தாக்கியது என்பதைப் பற்றி இதுவரை டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் கை, கால்களில் முறிவு ஏற்பட்டும், தலையில் காயம் அடைந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறு காயங்களோடு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். </p><p>பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதை இதுவரை காவல் துறை தெரிவிக்கவில்லை. அவர்களைச் சந்திப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவும் இல்லை. இதற்காக நீதி கேட்டு பிரதமர் இல்லத்துக்கு முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் எம்பிக்களும் காவல்துறையினரால் மோசமாக நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மோடி அரசு முற்றிலும் ஒரு சர்வாதிகார அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. ஜனநாயக மாண்புகள் படுகொலை செய்யப்பட்டுள்ளன. </p><p>போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி மந்திரி தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும்; போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்; இது தொடர்பாக பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் ஆகியவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது.  நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும்; மாநில அரசுகளே மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.</p><p>மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தும், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜூலை 27-ம் தேதி திங்களன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம். அதில் ஜனநாயக சக்திகளும் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு: ஆணைகளை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-issues-orders-for-promotion-of-lecturers-at-state-educational-research-institute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-issues-orders-for-promotion-of-lecturers-at-state-educational-research-institute#comments</comments><guid isPermaLink="false">5f7aecb1-318b-41a6-b88b-f76210ab03ec</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:50:05 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:50:05.897Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜ்மோகன்,Minister Rajmohan,பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்,School Education Minister  Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,Rajmohan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/850criqu/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/850criqu/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வந்த 7 பேர் இணை இயக்குநர் மற்றும் முதல்வராகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதேபோல், விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வந்த 12 பேர் முதுநிலை விரிவுரையாளர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். </p><p>இவர்களுக்கான பதவி உயர்வு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆணைகளை </a>பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். </p><p>இந்த நிகழ்வில், பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் ந.லதா மற்றும் இணை இயக்குநர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளே கவனம்: சென்னை - மும்பை ரெயில் 4 நாட்கள் ரத்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-with-booked-tickets-chennai-mumbai-train-cancelled-for-4-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-with-booked-tickets-chennai-mumbai-train-cancelled-for-4-days#comments</comments><guid isPermaLink="false">50950ca5-fc2c-49f0-9e4c-3a13570a2625</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:48:05 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:48:05.215Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,தமிழகம்,டிக்கெட் முன்பதிவு,தெற்கு ரெயில்வே,Southern Railway,மும்பை,Train Ticket,Reservation,ரெயில்கள் ரத்து,ரெயில் டிக்கெட் முன்பதிவு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ahzsvqb2/ch.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/ahzsvqb2/ch.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மும்பை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமான சென்னை எழும்பூர் - மும்பை இடையே இயக்கப்படும் ரெயில் 4 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.</p><h2>முழுவதுமாக ரத்து</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>சென்னை எழும்பூரில் இருந்து மும்பைக்கு ஜூலை 25 முதல் ஜூலை 28-ந் தேதி வரை காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22158) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. </p><p>மறுமார்க்கத்தில், மும்பையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூலை 25 முதல் ஜூலை 28-ந் தேதி வரை இரவு 10.52 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் (22157) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசுப்பள்ளி மாணவர்களை ஊழியர்களாக நடத்தும் அவலம் எப்போது தான் மாறும்? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-plight-of-government-school-students-being-treated-as-employees-change-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-the-plight-of-government-school-students-being-treated-as-employees-change-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">59ebe69e-afc1-455e-bb50-631d0206d994</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:32:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:32:53.163Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/kk7s472b/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/kk7s472b/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வேலை செய்யும் மாணவர்கள்</h2><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு, தவெக அமைச்சர் தமிழன் பார்த்திபன் “குழந்தைகள் பள்ளிகளை சுத்தம் செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை” என்ற ரீதியில் பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணியில், அங்கு படிக்கும் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. </p><p>அதிலும் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பது கூட தெரியாமல், “ எங்கள் தலைமை ஆசிரியர் தான் செய்ய சொன்னார், பள்ளியில் எப்போதுமே இந்த வேலையை நாங்கள் தான் செய்வோம்” என அப்பாவித்தனமாகக் கூறும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அம்மாணவர்களைக் </a>காண்கையில் ஒரு தந்தையாக நெஞ்சம் கனத்துப் போகிறது. படிக்கும் பிள்ளைகளை, இப்படி துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்துவது, மனிதாபிமானமற்றது மட்டுமன்றி குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. </p><h2>நடவடிக்கை எடுக்க வேண்டும்!</h2><p>எனவே, “உங்கள் விஜய் மாமா” என்று தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும்  முதல்-அமைச்சர் விஜய், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான துப்புரவுப் பணியாளர்களை நியமித்து, அரசுப் பள்ளி மாணவர்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்! மேலும், தனியார் பள்ளிகளை மட்டும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசுப்பள்ளிகளில் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-operate-for-the-weekend-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-operate-for-the-weekend-2#comments</comments><guid isPermaLink="false">3c1a35e0-aeb8-4ebe-8cc2-7491f273b6c4</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:02:52 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:02:52.180Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,special buses,சிறப்பு பேருந்துகள்,State Transport Corporation,சிறப்பு பேருந்துகள் இயக்கம்,அரசு போக்குவரத்து கழகம்,Operation of special buses,சிறப்பு பஸ்கள் இயக்கம்,tamilnadu State Transport Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/h8b6mt8o/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-24/h8b6mt8o/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வார விடுமுறை</h2><p>24/07/2026 (வெள்ளிக்கிழமை) 25/07/2026 [சனிக்கிழமை) மற்றும் 26/07/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>சிறப்பு பேருந்துகள்</h2><p>சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24/07/2026 [வெள்ளிக்கிழமை) அன்று 395 பேருந்துகளும், 25/07/2026 (சனிக்கிழமை) 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24/07/2026 வெள்ளிக் கிழமை அன்று 120 பேருந்துகளும் 25/07/2026 சனிக்கிழமை அன்று 120 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 24/07/2026 மற்றும் 25/07/2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 25 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 26/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 420 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>முன்பதிவு </h2><p>இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6487 பயணிகளும் சனிக்கிழமை 2387 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7089 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>