<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 21 Aug 2026 06:19:23 +0000</lastBuildDate><item><title>குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு 70 நாள்கள் ஆகியும் வழங்கப்படவில்லை - அன்புமணி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kuruvai-package-not-yet-provided-despite-70-days-since-announcement-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kuruvai-package-not-yet-provided-despite-70-days-since-announcement-anbumani#comments</comments><guid isPermaLink="false">aafaa3d9-a193-4b27-922b-eb6ce6c75b48</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:14:52 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:14:52.440Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani,Kuruvai,குறுவைத் தொகுப்பு,kuruvai crops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v2bnoubk/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v2bnoubk/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு 70 நாள்கள் ஆகியும் வழங்கப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தொகுப்பை வழங்குவதில் அலட்சியம்</h2><p>காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் குறுவை சாகுபடி செய்யும் உழவர்களுக்கு உரம், விதைகள் மற்றும் நேரடி உதவி என பல வடிவங்களில் ஏக்கருக்கு ரூ.4000 கிடைக்கும் வகையில் குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு, 70 நாள்களாகியும் இன்று வரை உழவர்களுக்கு வழங்கப்படவில்லை. மிகவும் நெருக்கடியான காலத்தில் உழவர்களுக்கு கிடைக்க வேண்டிய குறுவைத் தொகுப்பை வழங்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.</p><p>மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், உழவர்கள் குறுவை சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், எப்போதும் வழங்கப்படும் குறுவைத் தொகுப்பை விரைந்து வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் தான் கடந்த ஜூன் 12-ஆம் தேதி குறுவைத் தொகுப்பு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.</p><h2>உடனடியாக வழங்க வேண்டும்</h2><p>குறுவை சாகுபடி தொகுப்பு என்பதே நெற்பயிர்களை நடவு செய்யும் காலத்திலும், அதைத் தொடர்ந்து வரும் சில நாள்களிலும் வழங்கப்பட வேண்டியதாகும். ஆனால், நடவு முடிந்து விரைவில் அறுவடை தொடங்கவுள்ளது. இன்னும் 10 நாள்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் பருவம் தொடங்கவுள்ள நிலையில், இன்று வரை குறுவைத் தொகுப்பு வழங்கப்படாமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.</p><p>உழவர்களுக்கான உதவி என்பது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயருக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் வேகத்தில் அளிக்கப்பட வேண்டும். இதை அரசு உணர்ந்து கொண்டு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உழவர்களுக்கான </a>குறுவைத் தொகுப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குன்னூரில் கார் செங்குத்தாக கவிழ்ந்து விபத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-overturns-vertically-in-accident-in-coonoor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-overturns-vertically-in-accident-in-coonoor#comments</comments><guid isPermaLink="false">e7281bfc-9837-41f6-80d9-334d47caefdc</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:07:47 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:07:47.697Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,கார்,நீலகிரி,traffic jam,Police advice</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/06uq0roc/28.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ செங்குத்தாக கவிழ்ந்த கார்]]></media:title><media:description type="html"><![CDATA[ குன்னூரில் கார் கவிழ்ந்து விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/06uq0roc/28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீலகிரி மாவட்டம் </a>குன்னூர் மலைப்பாதைப் பகுதியில் ஆன்மீகப் பயணமாக கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த 3 பேர் பயணித்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் செங்குத்தாக தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக பெரும் ஆபத்தின்றி உயிர் தப்பினர்.</p><h2>விபத்து</h2><p>கோவிலுக்குச் செல்வதற்காக 3 பேர், காரில் குன்னூர் மலைப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தனர். வளைவுகள் நிறைந்த மலைப்பாதைப் பகுதியில் கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் ஓரத்தில் செங்குத்தாக கவிழ்ந்து நின்றது. கார் தலைகீழாக நின்ற காட்சியைக் கண்டு அந்த வழியாக வந்த பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.</p><h2>மீட்புப் பணிகள்- ஆஸ்பத்திரியில் அனுமதி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்து</a> நடந்த உடனே, அங்கிருந்த உள்ளூர் பொதுமக்களும் பிற வாகன ஓட்டிகளும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பேரையும் பத்திரமாக வெளியே மீட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக உடனடியாக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போக்குவரத்து சீரமைப்பு</h2><p>மலைப்பாதையின் முக்கிய வளைவில் இந்த விபத்து நிகழ்ந்ததால், குன்னூர் வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீரமைத்தனர். மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தங்களின் வேகத்தைக் குறைத்து, எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என போக்குவரத்துப் போலீசார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மனைவியின் கள்ளக்காதல்.. கண்டித்தும் தொடர்ந்த தகாத உறவு: தச்சுத்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wifes-illicit-affair-illicit-relationship-continued-despite-warnings-carpenter-takes-a-drastic-step</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wifes-illicit-affair-illicit-relationship-continued-despite-warnings-carpenter-takes-a-drastic-step#comments</comments><guid isPermaLink="false">545de88b-6f44-4ab0-baef-2a7419aae224</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:57:16 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:57:16.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,கள்ளக்காதல்,fake love,wife,மனைவி,மயிலாடுதுறை,கணவன் தற்கொலை,husband suicide</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5k2i91mr/vara.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5k2i91mr/vara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை, </p><p>மனைவியின் தகாத உறவால் தச்சுத்தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது மனைவியின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.</p><h2>தச்சுத்தொழிலாளி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/mayiladuthurai">மயிலாடுதுறை</a> மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி கிராமம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 44). தச்சுத்தொழிலாளியான இவருக்கும், மயிலாடுதுறையை சேர்ந்த துர்காதேவி (41) என்பவருக்கும் 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.</p><h2>தகாத உறவு</h2><p>கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் தனது ஊரான வேட்டங்குடிக்கு திரும்பி வந்தார்.</p><p>இந்த நிலையில் அதே கிராமத்தில் வெங்கடேசன் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாலகுருவுக்கும் (40), வெங்கடேசன் மனைவி துர்கா தேவிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது. இவர்களது தகாத உறவு வெங்கடேசனுக்கு தெரிய வந்தது.</p><h2>தாய் வீட்டிற்கு சென்ற மனைவி</h2><p>இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு துர்காதேவியை வெங்கடேசன் திட்டினார். இதில் கோபித்துக்கொண்டு மயிலாடுதுறை அருகே உள்ள சோழ சக்கரநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு துர்காதேவி சென்று விட்டார்.</p><p>துர்காதேவி தனது தாய் வீட்டிற்கு சென்ற பிறகும் பாலகுரு அவருடன் தொடர்ந்து பேசி உறவு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேசன் நேற்று முன்தினம் தனது வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு செல்போன் வாட்ஸ் அப்பில் தனது சாவுக்கு பாலகுரு தான் காரணம் என்றும் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.</p><p>இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தற்கொலைக்கு தூண்டியதாக பாலகுருவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான துர்காதேவியை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகருக்கு வாழ்த்தும்... சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தலும்... சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wishes-for-the-speaker-advice-to-the-mlas-todays-proceedings-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wishes-for-the-speaker-advice-to-the-mlas-todays-proceedings-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">70b9df91-83bb-4ccd-aafa-6fc31d406711</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:56:12 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:56:12.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,TN Assembly,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/19qsw6pr/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/19qsw6pr/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சபாநாயகருக்கு வாழ்த்துகள்...</h2><p>தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "பேரவைத் தலைவரான நீங்கள், இந்த அவையை மிகவும் சிறப்பாக வழிநடத்தி கொண்டு செல்கிறீர்கள். எங்களுக்கும் வாய்ப்பு தந்தாலும் எங்களைவிட ஆளும் கட்சியினருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கிறீர்கள்.</p><p>ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆதாரம் இல்லாமல் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். நீங்களும் அதை அவைகுறிப்பில் இருந்து நீக்குகிறீர்கள். எதிர்கட்சிகளைவிட ஆளும்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை அதிகமாக நீங்கள்தான் அவைகுறிப்பில் இருந்து நீக்கி வரலாறு படைத்திருக்கிறீர்கள். அதற்கு என் வாழ்த்துகள்.</p><h2>உருட்டல், மிரட்டல்...</h2><p>சட்டப்பேரவை நேரலை செய்யப்படுகிறது. நாங்கள் கேள்வி கேட்டால் ஆச்சரியப்படும் அளவுக்கு பதில் தருகிறார்கள். இப்போது பாட்டு எல்லாம் பாடுகிறார்கள். நாங்கள் சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோமா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது. நீங்கள் இதையெல்லாம் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாலும் ரீல்ஸ் மூலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது. நீங்கள் அதை நீக்குவதை அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.</p><p>தனது டேபிளில் பைல் இருப்பதாகவும், திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் பேசினார். தயவு செய்து அவர் திறந்து பார்க்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? காலம் தாழ்த்துகிறீர்கள்? ஜோதிடர் சொன்னால் தான் திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?. நடவடிகை எடுப்பேன் என உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்றார்.</p><h2>திமுகவை தோற்கடித்து...</h2><p>இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மிசாவைப் பார்த்த தனிப்பெரும் இயக்கமான திமுகவை தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தவறுகள் மீது ஆதாரத்துடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் முதல்-அமைச்சர் அன்று சொல்ல வந்தது. இவர்கள் செய்யாத ரீல்ஸா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் யார் பெயரைக் கூறி பதவியேற்றுக்கொண்டார்கள்?</p><p>2021 தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவை நேரலை செய்யப்படும் என்று சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?. நேரலை செய்து வெளிப்படையாக நடத்தக்கூடிய தைரியம் திமுகவுக்கு இதுவரை இருந்ததில்லை. தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஜனநாயகத்தை காக்க நேரலை செய்து வருகிறோம்" என்று கூறினார். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் முதல்முதலில் கேள்வி நேரத்தை நேரலை செய்தது திமுகதான் என்றார். இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.</p><h2>டிரெண்டாகி</h2><p>தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "சட்டப்பேரவையில் நாங்கள் பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டீர்கள். ஆனால், இவையனைத்தும் நேரலையில் சென்று விட்டது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? சட்டப்பேரவை அலுவல் நேரலையை நாங்கள் எதிர்க்கவில்லை. அது ஒரு நல்ல முயற்சி, அதனை நாங்கள் பாராட்டுகிறோம். அவைக்குறிப்பில் நீங்கள் நீக்கியவையெல்லாம் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது" என்று தெரிவித்தார்.</p><h2>சபாநாயகர் வலியுறுத்தல்</h2><p><strong>இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது:-</strong></p><p>குற்றச்சாட்டுகளை எந்தப் பக்கம் இருந்து வைத்தாலும், ஆதாரபூர்வமான கருத்துகளைச் சொல்வதன் மூலமாகவே அவையின் குறைந்தபட்ச மாண்பை நாம் காப்பாற்ற முடியும். அதே வேளையில், ஆதாரமற்ற கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டியது என்பது அவையின் மரபு.</p><p>இனி வருங்காலத்திலும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது என்பது எனது தனிப்பட்ட உரிமை. ஏனெனில், அவையின் மாண்பை காப்பாற்றியாக வேண்டும்.</p><p>மேலும், அவைக் குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்காமல் பேச முயற்சிப்பதும், ஆதாரங்கள் இல்லாமல் பேசாமல் இருப்பது நல்லது. ஏனெனில், இரு தரப்பினரும் ஆதாரங்களை வைத்துக் கொண்டுதான் பேச வேண்டும் என நானும் மக்களும் விரும்புகிறோம். போகிற போக்கிலே அள்ளித் தெளித்துப் போகிற இடமல்ல இது. இங்கு பேசும்போது அவையின் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டும்.</p><p>எல்லா பேச்சுகளை நீக்குவது என்பது எனது நோக்கமல்ல. இருப்பினும், அவைக்குப் பயன்தராத, நம் பண்பாட்டுக்கு உதவாத, அவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய எந்த விஷயமாக இருந்தாலும், அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவேன்" என்று தெரிவித்தார்.</p><h2>இது தான் மரபா? - ஓபிஎஸ் கேள்வி</h2><p>எதிர்கட்சி தலைவருக்கான மரியாதையை சபையில் தர வேண்டும். கேபினேட் அந்தஸ்து எதிர்கட்சி தலைவருக்கு உள்ளது. அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென அமைச்சர் எழுந்து பேசுகிறார்கள். இது மரபா?. 4 முறை எதிர்கட்சி தலைவர் எந்திருச்சு எந்திருச்சு உட்கார்றாரு.. நீங்க மத்தவங்கள பேச கூப்புடுறீங்க.. இது எந்த விதத்துல நியாயம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.</p><p>நீங்கள் பேசுவது எனக்கு புரிகிறது. முதல்-அமைச்சர் பற்றி பேசும்போது, அமைச்சர் எழுந்து பேசாமல் போனால், இங்கு அமர்ந்திருப்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதில் அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னங்கள் கல்வட்டம் கண்டெடுப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3000-year-old-burial-monuments-and-a-stone-circle-discovered-near-sivaganga</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3000-year-old-burial-monuments-and-a-stone-circle-discovered-near-sivaganga#comments</comments><guid isPermaLink="false">512ee20d-a122-43e4-8bd8-38e08b1c0f00</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:50:18 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:50:18.135Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,கற்கால பொருட்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/x0cm1krr/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/x0cm1krr/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,  </p><p>சிவகங்கை அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டம் மற்றும் ஈமச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><h2>பழங்கால கற்கள்</h2><p>சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே உள்ள பிரவலூர் கிராமத்தில் பழங்கால கற்கள் இருப்பதாக இக்கிராமத்தை சேர்ந்த சரவணன், அஜய், மதிச்செல்வம், செந்தூர், பாலசுப்பிரமணியன், மணி ஆகியோர் அளித்த தகவலின் பேரில் அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் வேலாயுதராஜா களஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கற்கள் ஆனது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங் கற்கால ஈமச்சின்னங்கள் மற்றும் கல்வட்டம் என்பது தெரியவந்தது.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><p>பிரவலூர் கிராமத்தின் வடக்குப்பகுதியில், கடம்பன்குடி கண்மாய்க்கு தெற்கு பகுதியில் பரந்துவிரிந்த ஒரு மேட்டுப்பகுதியும், அதன் அருகில் வறண்ட நிலையில் ஒரு ஓடையும் காணப்படுகிறது. அதன் மேற்பரப்பில் ஏராளமான கல்வட்டங்களும், ஈமத்தாழிகளும் காணப்படுகின்றன. மண் அரிப்பு காரணமாக பெரும்பாலான ஈமத்தாழிகள் வெளியில் நன்கு தெரிகின்றன. மேலும் அதிகமான கல்வட்டங்களும், 2 குத்துக்கற்களும் காணப்படுகின்றன.</p><p>மேலும் ஆங்காங்கே உடைந்த கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகளும், இரும்புக்கசடுகளும், குவார்ட்ஸ் வகைக்கற்களும் காணப்படுகின்றன. இவை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்களாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இறந்தவர்களை புதைத்த இடத்திலோ அல்லது அவரது எலும்புகளை புதைத்த இடத்திலோ பெரிய கற்களை கொண்டு எடுக்கப்பட்ட ஈமச்சின்னங்களை, பெருங்கல் சின்னங்கள் என கூறுகிறார்கள்.</p><h2>பெருங்கற்கால சின்னங்கள்</h2><p>இங்கு இரும்பை உருக்கி கருவிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஏனெனில் பிரவலூரில் உள்ள இப்பகுதியில் இரும்பு கசடுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவை சிவகங்கை மாவட்ட தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் விரிவான ஆய்வு செய்வ தன்மூலம் மேலும் அதிக தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>விஜய்க்கு இருக்கும் திமிர்தான் ஜெயலலிதாவுக்கும் இருந்தது.. கடைசியில என்ன நடந்துச்சு? - ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jayalalithaa-possessed-the-same-arrogance-that-vijay-has-what-happened-in-the-end-rs-bharathis-controversial-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jayalalithaa-possessed-the-same-arrogance-that-vijay-has-what-happened-in-the-end-rs-bharathis-controversial-remarks#comments</comments><guid isPermaLink="false">66a2ed7f-a6ad-4fb6-b697-44658fdedcb6</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:36:14 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:36:14.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,ஆர்.எஸ்.பாரதி,RS Bharathi,ஜெயலலிதா,Jayalalitha,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pyl7un2y/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pyl7un2y/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-</p><p>விஜய் அவர்களே.. திருவொற்றியூர் கூட்டம் வாயிலாக உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இப்பத்தான் உங்களுக்கு கேடு காலம் ஆரம்பித்துள்ளது. இப்படித்தான் 1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது டான்சி நில விவகாரம் பிரச்சனையானது.</p><p>ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் முதல்-அமைச்சர் விஜய் டெண்டரில் ஊழல் செய்துள்ளார். அதேபோல 1991-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் டான்சி நிலம் வாங்கப்பட்டது. நான் தான் முதல்முதலாக அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த ஆவணங்களை எல்லாம் பார்த்து தப்பு என்று நான் தான் கூறினேன். </p><p>அந்தம்மா வேறு ஏதும் உலகமகா தப்பு செய்யவில்லை. அந்தம்மாவே நிலம் வாங்கியதை ஒப்புக் கொண்டார். இன்றைக்கு முதல்-அமைச்சர் விஜய்க்கு இருக்கும் திமிரை போலத்தான் அன்றைக்கு ஆட்சிக்கு வந்த முதல்முறை ஜெயலலிதாவுக்கும் திமிர் இருந்தது. காரணம் எதிர்க்கட்சியில் யாரும் இல்லை. ஒரே ஒரு கலைஞர் மட்டும் தான் வெற்றி பெற்றார். டான்சி நிலம் வாங்கினேன். அதில் என்ன தவறு என கேட்டார். அவராக வாய் விட்டு சிக்கி கொண்டார். அதுதான் கடைசிவரை அந்த அம்மாவை சிறைக்கு கொண்டு சென்றது.</p><p>இந்த ஆட்சியிலும் முதல் வழக்கே அப்படித்தான் ஆரம்பித்துள்ளது. இப்போதே சொல்கிறேன், சென்டிமென்டலாக முதன்முதலாக இவரும் அந்த இடத்தில் இருந்து தான் ஆரம்பித்துள்ளார். கடைசியாக ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஆர்.எஸ். பாரதியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reserve-bank-governor-meets-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reserve-bank-governor-meets-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">c328601e-b994-4abc-ae67-5ef18dfab9e2</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:28:37 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:28:37.555Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,தமிழக அரசு,ரிசர்வ் வங்கி கவர்னர்,TamilNadu Goverment,Reserve Bank Governor,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/70uu68xr/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/70uu68xr/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா சந்தித்து பேசினார். </p><p>இந்த சந்திப்பின்போது, தலைமைச் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செயலாளர் </a>மு.சாய்குமார், இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமா சங்கர், தலைமை பொது மேலாளர் யாராசி ஜெயக்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>108 ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவம்.. தாயும் சேயும் நலம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-girl-born-in-108-ambulance-mother-and-child-are-doing-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-girl-born-in-108-ambulance-mother-and-child-are-doing-well#comments</comments><guid isPermaLink="false">46eaed34-18d6-467f-bcb7-a47a9e05c4f8</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:28:25 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:28:25.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுக்கோட்டை,Government Hospital,108 Ambulance,baby girl,பெண் குழந்தை,கர்ப்பிணிப் பெண்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/uc3xhiws/27.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மருத்துவ உதவியாளர்- ஆம்புலன்ஸ் ஓட்டுநர்-பெண் குழந்தை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/uc3xhiws/27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF">கர்ப்பிணி</a> ஒருவருக்கு ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியிலேயே, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவசரக்கால மருத்துவப் பணியாளர்கள் துரிதமாகச் செயல்பட்டு பிரசவம் பார்த்தனர். இதன் மூலம் அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.</p><h2>நடுவழியில் கடுமையான பிரசவ வலி</h2><p>புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பொண்ணு (வயது 32). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழுவினர், கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.</p><h2>துரிதமாகச் செயல்பட்ட மருத்துவக் குழு</h2><p>ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி மிகவும் தீவிரமடைந்தது. ஆஸ்பத்திரிக்குச் செல்ல இன்னும் நேரம் எடுக்கும் என்பதை உணர்ந்த ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர், வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். தொடர்ந்து, மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் உரிய ஆலோசனைகளுடன் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவசரப் பிரசவம் பார்க்கப்பட்டது.</p><h2>தாயும் சேயும் நலம்</h2><p>மருத்துவப் பணியாளர்களின் சாதுர்யமான மற்றும் துரிதமான செயல்பாட்டால், பொண்ணு என்ற அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. முதலுதவிகள் அனைத்தும் செய்யப்பட்ட பின்னர், தாயும் குழந்தையும் பாதுகாப்பாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக <a href="https://www.dailythanthi.com/topic/hospital-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">ஆஸ்பத்திரி</a> வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>பாராட்டுகள்</h2><p>சரியான நேரத்தில் உரிய முதலுதவிகளை வழங்கி, 2 உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு கர்ப்பிணியின் உறவினர்களும் பொதுமக்களும் தங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலை கழிவுகள் காரணமா..? - அமைச்சர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-industrial-effluents-the-reason-for-dead-fish-floating-in-the-ennore-kosasthalaiyar-river-ministers-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-industrial-effluents-the-reason-for-dead-fish-floating-in-the-ennore-kosasthalaiyar-river-ministers-clarification#comments</comments><guid isPermaLink="false">89f63473-129e-4a86-9983-2019a76a60c4</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:22:18 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:22:18.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மீன்கள்,தமிழக சட்டசபை,TN Assembly,Kosasthalai river,கொசஸ்தலை ஆறு,தங்கம் தென்னரசு,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Edappadi Palanisami,Thangam Tennarasu,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,எடப்பாடி  பழனிசாமி,அமைச்சர் ராஜீவ்,minister rajiv</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/n4z3872t/vara.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/n4z3872t/vara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்தது தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palanisamy">எடப்பாடி பழனிசாமி</a> சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். </p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>அப்போது அவர் கூறுகையில், “எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கலப்பதால் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகளின் கழிவுகள் நீரில் கலப்பதால் இந்த நிலை ஏற்பட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.  கழிவுகள் ஆற்றில் கலப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.</p><h2>அமைச்சர் ராஜீவ்</h2><p>இந்நிலையில் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார்.  </p><p>இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், “எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் அல்ல. மனிதக் கழிவுகள் உள்பட கழிவு நீர் கலப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது. எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று  அமைச்சர் ராஜீவ் கூறினார். </p><h2>முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு</h2><p>இதனிடையே முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “"சென்னையின் ஜீவாதாரமாக விளங்கும் வடசென்னை கொசஸ்தலை ஆறு மற்றும் அதன் முகத்துவாரப் பகுதிகள், தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் தொடர்ந்து மாசடைந்து வருகின்றன. ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாகிவிட்டதால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொசஸ்தலை ஆற்றுப் பகுதியைச் சூழலியல் மண்டலமாக அறிவித்து, அரசு உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார். </p><h2>பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார்</h2><p>இதேபோல் பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் கூறுகையில், “சென்னையின் முக்கிய நதிகளில் ஒன்றான கொசஸ்தலை ஆற்றில், அனல் மின் நிலையங்கள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கிறது. மீன்கள் செத்து மிதப்பது முதல் முறை அல்ல. இதனை தடுத்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/GWXD2r2zXwY"></iframe></figure>]]></content:encoded></item><item><title>காட்டின் காவலனுக்கே பாதுகாப்பில்லையா? அதிர்ச்சி தரும் உயிரிழப்பு புள்ளிவிவரங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-forest-guards-not-even-safe-shocking-death-toll-statistics</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-forest-guards-not-even-safe-shocking-death-toll-statistics#comments</comments><guid isPermaLink="false">0493cf52-59a7-4209-bb1c-7fc533a3e22f</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:21:41 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:21:41.302Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Death,உயிரிழப்பு,Elephants,யானைகள்,புள்ளிவிவரங்கள்,Statistics</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/0qc17lyw/elephant.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/0qc17lyw/elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>காடுகளின் காவலனாகவும், இயற்கையின் சமநிலையை பேணும் முதன்மை உயிரினமாகவும் திகழ்பவை யானைகள். காடுகளின் வளத்தை பெருக்குவதில் யானைகள் முக்கிய பங்காற்றுகின்றன.</p><h2>காட்டின் பேருயிர்</h2><p>காடுகளில் இரை தேடி பயணிக்கும் யானைகள் செடிகள், மரக்கிளைகளை ஒடித்து தின்பதோடு, செல்லும் இடங்கள் எங்கும் விதைகளை விதைக்கின்றன. யானைகளின் சாணத்தில் எண்ணற்ற விதைகள் இருக்கும். சாணத்தை உரமாக்கி அந்த விதைகள் வளர்ந்து காட்டை வளமாக்குகின்றன. யானைகளின் வியக்கத்தக்க வாழ்வியலும், அவற்றின் ஆழமான குடும்ப பிணைப்பும் இயற்கையின் வரப்பிரசாதம் எனலாம். காட்டின் பேருயிரான யானைகள் சுதந்திரமாக உலா வரும்போது காடுகளின் வளம் பெருகுகிறது. ஆனால், தமிழகத்தில் காட்டு யானைகளின் உயிரிழப்பு என்பது, அவற்றால் பாதுகாப்பாக காடுகளில் உலாவ முடிகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.</p><h2>1,883 யானைகள் உயிரிழப்பு</h2><p>தமிழக காடுகளில் யானைகளின் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்கின்றன. வயது முதிர்வு. நோய் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு ஒருபுறம் என்றால், இயற்கைக்கு மாறான உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் 1,883 யானைகள் செத்து மடிந்துள்ளன. அதில் இயற்கையான மரணம் 1,663 ஆகும். யானை-மனித மோதலில் மின்சாரம் பாய்தல், வேட்டையாடுதல், விபத்தில் சிக்குவது போன்ற இயற்கைக்கு மாறாக உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை மட்டும் 199-ஐ தொட்டுள்ளது.</p><h2>யானைகளுக்கு பாதுகாப்பு இல்லையா?</h2><p>தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளில் 30 யானைகள் உயிரிழந்துள்ளன. அதில் 18 யானைகள் இயற்கையாகவும், 12 யானைகள் இயற்கைக்கு மாறாகவும் இறந்துள்ளன. மாவட்டத்தில் மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தான் இந்த 30 யானைகளும் இறந்துள்ளன. அதில் வருசநாடு வனச்சரகத்தில் 4, கூடலூர் வனச்சரகத்தில் 7, மேகமலை வனச்சரகத்தில் 4, சின்னமனூர் வனச்சரகத்தில் 6, கம்பம் கிழக்கு வனச்சரகத்தில் 9 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் மின்விபத்தில் சிக்கி மட்டும் 7 யானைகள் செத்துள்ளன. 2 யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டுள்ளன. இயற்கைக்கு மாறான உயிரிழப்புகளில் தமிழக சராசரியை விட தேனி மாவட்டத்தின் சராசரி மிக அதிகமாக உள்ளது. மாநில அளவில் மொத்த இறப்புகளில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பு 10.57 சதவீதமாக உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் இது 40 சதவீதமாக உள்ளது. எனவே. காடுகளின் காவலனாக திகழும் யானைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? என்பது இயற்கை ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.</p><h2>தேவையான நடவடிக்கை</h2><p>யானைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மாவட்ட வனப்பகுதிகளில் அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. அந்த களைச்செடிகளை அகற்றிவிட்டு யானைகளுக்கு தேவையான பழ மரங்கள், இலைதழைகளை கொடுக்கும் மரங்கள், செடி வகைகளை வளர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதுபோல், கடந்த காலங்களில் யானைகள் காட்டில் இறந்தால் அதை வனத்துறையினர் கண்டறியாமல் அழுகிய பின்பு கண்டுபிடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.</p><h2>வனத்துறையில் பணியாளர்கள் குறை</h2><p>இதுபோன்ற சம்பவங்களின் போது யானையின் இறப்புக்கான உண்மையான காரணத்தை அறிய முடியாமல் போகிறது. வனப்பரப்பளவுக்கு ஏற்ப ரோந்து செல்வதற்கு போதிய எண்ணிக்கையில் வனத்துறையில் பணியாளர்கள் இல்லை என்ற குறையும் உள்ளது. எனவே கூடுதல் பணியாளர்களை நியமிப்பதோடு, கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும். ஏனெனில்,<a href="https://www.dailythanthi.com/topic/elephants"> யானை</a>களை பாதுகாப்பது என்பது காடுகளை பாதுகாப்பதற்கு சமம்.</p>]]></content:encoded></item><item><title>’ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.. மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது&apos; - உதயநிதி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/take-action-if-there-is-evidence-the-dmk-will-not-be-intimidated-by-threats-says-udhayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/take-action-if-there-is-evidence-the-dmk-will-not-be-intimidated-by-threats-says-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">35e56cbd-ef28-4b6e-9624-b8321b97b8e6</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:14:17 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:14:17.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,Legislative Assembly</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xluta68q/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xluta68q/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது;</p><h2>ஜோதிடர் சொல்ல வேண்டுமா?</h2><p>தனது டேபிளில் பைல் இருப்பதாகவும், திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று முதல்வர் பேசினார். தயவு செய்து அவர் திறந்து பார்க்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? காலம் தாழ்த்துகிறீர்கள்? ஜோதிடர் சொன்னால் தான் திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? நடவடிகை எடுப்பேன் என உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம். </p><h2>சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி</h2><p>ஆளுங்கட்சியினர் எங்களுக்கு பதில் சொல்லும்போது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். சட்டமன்றத்தில் பாட்டெல்லாம் பாடுகிறார்கள். எங்களுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவுக்கு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. </p><p>நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் கருத்துகள் ரீல்ஸ்சாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. நான் பேசியதை நீக்கிவிட்டீர்கள். ஆனால் அது சமூகவலைதளங்களில் வெளியாகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது என்பதை குறிப்பிடுகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>புகைப்படக் கலைஞர்களை படம் எடுத்த முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-photographs-photographers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-photographs-photographers#comments</comments><guid isPermaLink="false">9ec75f75-49ff-48a8-be46-02104717a2c6</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:42:00.761Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,World Photography Day,உலக புகைப்பட தினம்,CM Vijay,புகைப்பட கலைஞர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z3luizfa/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z3luizfa/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந்தேதி கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கலையின் வரலாறு, அறிவியல் மற்றும் அதன் தாக்கத்தை போற்றும் வகையிலும், இக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை கவுரவிக்கும் விதமாகவும் உலகெங்கிலும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.</p><p>1839-ம் ஆண்டு பிரான்சின் லூயிஸ் டேகுயர் மற்றும் ஜோசப் நைபோர் ஆகியோர் இணைந்து 'டேகுயரோடைப்' என்ற புகைப்பட முறையைக் கண்டுபிடித்தனர். பிரெஞ்சு அரசு இதற்கான காப்புரிமையை வாங்கியதுடன், இந்த நாளைப் புகைப்படக் கலையின் தொடக்கமாக அறிவித்தது. முதன்முதலில் 2010 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று உலகளாவிய அளவில் ஆன்லைன் கேலரி மற்றும் கண்காட்சிகள் மூலம் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/hh7nz95s/Untitled-2.jpg" /></figure><p>இந்த நிலையில், நேற்று முன்தினம் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டதையொட்டி முதல்-அமைச்சர் விஜய் புகைப்படக் கலைஞர்களுக்கு தனது மனமார்த்த வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். இதனையடுத்து முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் உலக புகைப்பட நாளை முன்னிட்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எடுத்து மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று உலக புகைப்பட நாளை முன்னிட்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எடுத்து மகிழ்ந்தார்.<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://t.co/oKk4Hzr7cU">pic.twitter.com/oKk4Hzr7cU</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2090640680293114145?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி அழைப்பு; தமிழக பாஜகவில் பரபரப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/summons-to-delhi-for-nainar-nagendran-stir-within-the-tamil-nadu-bjp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/summons-to-delhi-for-nainar-nagendran-stir-within-the-tamil-nadu-bjp#comments</comments><guid isPermaLink="false">96e40ebc-ec08-4254-bb01-632de5f9dda8</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:13:45 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:13:45.907Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,பாஜக,BJP,Tamilnadu,டெல்லி,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,தமிழக பாஜக,தமிழக அரசியல்,பாஜக தலைமை அலுவலகம்,tn politics</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ve4bsxq6/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ve4bsxq6/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை டெல்லி புறப்பட்டார். அதேபோல், பாஜகவின் முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். இருவரின் டெல்லி பயணமும் தமிழக பாஜகவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><h2>மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை</h2><p>தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பாஜகவின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவது, கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பாஜக தேசிய தலைமை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>பாஜக மேலிடத்தின் அழைப்பை ஏற்று டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன், தேசிய தலைவர்களை சந்தித்து கட்சியின் முக்கியப் பணிகள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>அமித் ஷா ஆலோசனை</h2><p>சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்திருந்தார். அப்போது நயினார் நாகேந்திரனுக்கு கட்சிப் பணிகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம் என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.</p><p>இதன் தொடர்ச்சியாகவே, தமிழக பாஜக தலைவருக்கு டெல்லி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>புதிய பொறுப்புகள் குறித்து ஆலோசனை?</h2><p>தமிழக பாஜகவில் புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது தொடர்பாகவும் டெல்லியில் ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>வானதி சீனிவாசனுக்கும் அழைப்பு</h2><p>இதற்கிடையே, சமீபத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் பதவியில் இருந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-relieved-of-bjp-national-womens-wing-chief-post">வானதி சீனிவாசன்</a> விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரும் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார்.</p><p>வானதி சீனிவாசனுக்கு தமிழக பாஜகவில் முக்கியப் பொறுப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெறலாம் என கட்சி வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p><h2>எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டெல்லி பயணம்</h2><p>நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசனின் டெல்லி பயணம் தமிழக பாஜகவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருடனும் தேசிய தலைமை நடத்தும் ஆலோசனைகளுக்குப் பிறகே, அவர்களின் பயணத்துக்கான முக்கிய காரணங்கள் மற்றும் கட்சியில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஓமனில் சிக்கிய 5 தமிழக மீனவர்கள் மீட்பு! மாணிக்கம் தாகூர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-tamil-nadu-fishermen-trapped-in-oman-rescued-manickam-thakur-reports</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-tamil-nadu-fishermen-trapped-in-oman-rescued-manickam-thakur-reports#comments</comments><guid isPermaLink="false">fb903ab6-9d5b-4364-af22-363d240a3b6f</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:03:03 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:03:03.821Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,மீட்பு,மாணிக்கம் தாகூர்,Fishermen -,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z3xvyb3p/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z3xvyb3p/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>ஓமனில் தவித்து வந்த கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>5 மீனவர்கள் மீட்பு</h2><p>தற்போது 5 மீனவர்களும் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான விசா காலாவதிக் கட்டண நடைமுறைகளை முறைப்படுத்தி, பாதுகாப்பாக தாயகம் அனுப்பி வைப்பதற்கான தூதரக நடவடிக்கைகள் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர் அலுவலகம் தகவல் அனுப்பியது. அனைத்து மீனவர்களும் விரைவில் தாயகம் திரும்புவதை உறுதி செய்யத் தொடர்ந்து கண்காணிப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை: அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-project-report-for-mekedatu-dam-government-must-no-longer-remain-indifferent-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-project-report-for-mekedatu-dam-government-must-no-longer-remain-indifferent-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">f3dc83a6-9a8a-437c-a8b8-51cc709da62b</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:01:19 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:01:19.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,மேகதாது அணை,Mekedatu dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/iwdxt50a/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/iwdxt50a/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>“காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. உரிய அனுமதிகளை பெற்று அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய அணைக்கு அடிக்கல் நாட்டப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேகதாது அணைக்கு கர்நாடகம் இவ்வளவு தீவிரம் காட்டும் நிலையில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.</p><p>மத்திய நீர்வள அமைச்சகத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில், மத்திய அரசால் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான சில திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளனவே தவிர, அணையின் கொள்ளளவு, நீர்த்தேக்கப்பகுதி ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் தமிழகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறைய வாய்ப்பில்லை.</p><p>புதிய விரிவான திட்ட அறிக்கையின்படி மேகதாது அணையின் கொள்ளளவு 67 டி.எம்.சியாக இருக்கும்;  அதில் 4.75 டி.எம்.சி மட்டும் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்; 400 மெகாவாட் மின்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டால் 12,500 ஏக்கர் வனப்பகுதி நீர்த்தேக்கப்பகுதியாக மாற்றப்பட்டு மூழ்கடிக்கப்படும். அணை கட்டப்படும் பகுதிகளில் உள்ள 8 லட்சத்து 90 ஆயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும் என்றும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேகதாது அணை கட்டப்பட்டால், மிகமோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும்; 12,500 ஏக்கர் பரப்பளவிலான  காவிரி வனவிலங்கு சரணாலய நிலப்பகுதி நீரில் மூழ்கும். யானைகள், புலிகள், பறவைகள் வாழிடம் அழியும்; அதனால் வனவிலங்குகள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் அழியும்;  பல மலைவாழ் கிராமங்கள் மூழ்கும்; இது ஒரு மாபெரும் சூழலியல் பேரழிவாக அமையும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வந்தது. அது உண்மை என்பது புதிய விரிவான திட்ட அறிக்கை மூலம் மீண்டும் உறுதியாகி உள்ளது.</p><p>அதேபோல், பெங்களூர் நகரத்தின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி நீர் எடுப்பதற்காக 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டுவது தேவையற்றது. பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக கூறி வருவதைப் போல, அணையின் கொள்ளளவு 67 டி.எம்.சி என கூறப்பட்டாலும் நீர்த்தேக்கப்பகுதி அதிகமாக இருப்பதால் 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக தேக்கி வைக்க முடியும். ஏற்கனவே, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகரம், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளின் கொள்ளளவு 114.57 டி.எம்.சி ஆகும். இப்போது மேகதாது அணையையும் சேர்த்தால் மொத்தக் கொள்ளளவு 185 டி.எம்.சியாக அதிகரிக்கும். இது தவிர ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் 40 டி.எம்.சி நீரையும் சேர்த்து 225 டி.எம்.சி நீரை காவிரியின் குறுக்கே கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது. அதனால் காவிரி பாசன மாவட்டங்கள் விரைவில் பாலைவனமாகி விடும். மேலும் சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும்.</p><p>திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து தேவையான அனுமதிகளைப் பெற்று 2027&amp;ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சாலுவராயசாமி தெரிவித்துள்ளார். இதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் தான் உள்ளது. கர்நாடகத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தி வருவதாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறிவருகிறது. கர்நாடகத்தில் 2028&amp;ஆம்  ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2027&amp;ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டால், அதையே பரப்புரையின் முக்கிய அம்சமாக மாற்றி, அரசியல்   இலாபம் தேடலாம் என்பது தான் கர்நாடக காங்கிரசின் திட்டம். மேகதாது அணை விவகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எதையெல்லாம் கணித்ததோ, அவையெல்லாம் நடந்து வருகின்றன.</p><p>மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு இவ்வளவு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு இனியும் அலட்சியப் போக்கைத் தொடரக்கூடாது. மேகதாது அணை கட்டப்படுவதையும், காவிரியில் தமிழக உரிமைகளை பாதுகாக்கவும் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் தமிழக அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில்  எடுக்கப்படும் முடிவை முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கொண்ட குழு பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் அவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். அப்போது தான் மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2018&amp;ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தம் தரத் தவறினால், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. அது நடந்தால் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகி விடும். அதற்கான பழியை காலம் முழுவதும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் சுமக்க நேரிடும்.</p><p>எனவே, மேகதாது அணை விவகாரத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் கூட்ட வேண்டும். அதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் டெல்லி சென்று பிரதமர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரையாவது நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>85 அடியை நெருங்கும் மேட்டூர் அணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-nearing-85-feet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-nearing-85-feet#comments</comments><guid isPermaLink="false">1196764d-d8c1-40c4-b69a-4741ac26310f</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:00:10 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:00:10.687Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ouaqiunr/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ouaqiunr/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து சுமார் 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக தொடர்கிறது.</p><p>இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரத்து 106 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 692 கனஅடியாக குறைந்தது. நேற்று முன்தினம் 83.52 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 84.50 அடியாக உயர்ந்தது.</p><p>இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 10,579 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 84.95 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 47.067 டி.எம்.சி. ஆக உள்ளது. திறக்கப்படும் நீரின் அளவை விட, வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 85 அடியை நெருங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வருகிற 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ulundurpet-toll-fee-hike-from-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ulundurpet-toll-fee-hike-from-1st#comments</comments><guid isPermaLink="false">36c1ed48-1f9c-49f8-bf23-5081516e8aff</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:55:20 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:55:20.262Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சுங்கச்சாவடி,tollgate,Fee Hike,கட்டணம் உயர்வு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/1vukjtf7/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/1vukjtf7/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உளுந்தூர்பேட்டை,</p><p>உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில், அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதுதொடர்பாக திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மாற்றமின்றி ரூ.70 ஆகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.105 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட் டணம் ரூ.2,125 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>வாகனஓட்டிகள் அதிருப்தி</h2><p>இலகு ரக வணிக வாகனங்களுக்கான ஒரு முறை பயணக் கட்டணம் ரூ.120-ல் இருந்து ரூ.125 ஆகவும், பலமுறை பயணக் கட்டணம் ரூ.180-ல் இருந்து ரூ.185 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.3,715 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லாரி மற்றும் பேருந்துகளுக்கான ஒரு முறை பயணக் கட்டணம் ரூ.240-ல் இருந்து ரூ.250 ஆக வும், பலமுறை பயணக் கட்டணம் ரூ.355-ல் இருந்து ரூ.370 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.7,435 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p> <p>பல்வகை அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கான ஒரு முறை பய ணக் கட்டணம் ரூ.380-ல் இருந்து ரூ.400 ஆகவும், பலமுறை பயணக் கட் டணம் ரூ.575-ல் இருந்து ரூ.595 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.11,950 ஆகும். மேலும், செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த கட்டண உயர்வால், வாகன ஓட்டிகள் மற் றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்களுக்கான கார்களை தேர்வு செய்ய நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/steps-taken-to-select-cars-for-mlas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/steps-taken-to-select-cars-for-mlas#comments</comments><guid isPermaLink="false">da52b4e6-690f-41fc-b5c8-d7a939493f5d</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:16:36.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,Car,கார்,TN Assembly,எம்.எல்.ஏ.க்கள்,MLAs,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/p7powzlg/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/p7powzlg/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>எம்.எல்.ஏ.க்களுக்கு கார்</h2><p>தமிழக சட்டசபையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி சமீ பத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். ஏழ்மை நிலையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் நேர்மையாக இருக்கும் வகையில் அவர்களுக்கு கார் மற்றும் உதவியாளர்களை அரசே கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.</p><p>இந்த கோரிக்கையை உடனடியாக முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டு அதற்கான அறிவிப்பை சட்டசபையிலேயே வெளியிட்டார். அந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட மறுநாளிலேயே, மஹிந்திரா நிறுவனத்தின் குறைந்தபட்சம் ரூ.9 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.26.18 லட்சம் வரை மதிப்பிலான 6 மாடல் கார்கள் நேற்று தலைமைச் செயலகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. </p><h2>டெஸ்ட் டிரைவ்...</h2><p>மஹிந்திரா நிறுவனத்தின் XUV 7XO, XUV 3XO, Scorpio-N, Scorpio Classic, Bolero மற்றும் Bolero Neo ஆகிய முன்னணி எஸ்.யு.வி (SUV) மாடல் கார்கள் தலைமைச் செயலக வளாகத்தில் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இந்தக் கார்களின் மைலேஜ், சொகுசு வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கான நம்பகத்தன்மை ஆகியவற்றை நேரில் பரிசீலித்து, டெஸ்ட் டிரைவ் செய்து வருகின்றனர்.</p><p>இந்த 6 மாடல்களில் எந்த வகையான கார் அவர்களுக்கு சரியாக இருக்கும் என்பது பின்னர் தேர்வு செய்யப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>அரசு கல்லூரிகளில் 42 சதவீத முதுநிலை இடங்களே நிரம்பியுள்ளன..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-42-percent-of-postgraduate-seats-in-government-colleges-have-been-filled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-42-percent-of-postgraduate-seats-in-government-colleges-have-been-filled#comments</comments><guid isPermaLink="false">9ebc7244-bbdb-44c4-a414-f430990eaca9</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:12:14 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:12:14.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர் சேர்க்கை,அரசு கல்லூரி,Government College,அரசு கல்லூரிகள்,Government Colleges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/x4sqfjeu/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/x4sqfjeu/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கான மொத்த இடங்களில் 42.32 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதனால், 14,115 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.</p><h2>181 அரசு கல்லூரிகள்</h2><p>தமிழக உயர் கல்வித் துறையின் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ், 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 2026-27-ம் கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு மொத்தம் 24,470 இடங்கள் உள்ளன.</p><h2>ஜூன் மாதம் தொடங்கிய சேர்க்கை</h2><p>முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான 2026-27-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இதுவரை நடைபெற்ற சேர்க்கையில், 7,442 மாணவர்கள், 2,901 மாணவிகள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 10,355 பேர் சேர்ந்துள்ளனர்.</p><h2>14,115 இடங்கள் காலி</h2><p>மொத்தமுள்ள 24,470 முதுநிலை இடங்களில், 10,355 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இது 42.32 சதவீதமாகும். இதன்படி, இன்னும் 14,115 இடங்கள் மாணவர் சேர்க்கைக்காக காலியாக உள்ளன. </p><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதுநிலை </a>படிப்புகளுக்கான பெரும்பாலான இடங்கள் காலியாக இருப்பது, உயர் கல்வித் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எண்ணூர்-மாமல்லபுரம் சாலைக்கான நிலம் எடுப்பு பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/land-acquisition-work-for-the-ennore-mamallapuram-road-intensifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/land-acquisition-work-for-the-ennore-mamallapuram-road-intensifies#comments</comments><guid isPermaLink="false">ae18b93f-dceb-4e2a-b535-4b360b687ba5</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:05:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:05:57.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamallapuram,மாமல்லபுரம்,Ennore,எண்ணூர்,road work,சாலை பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3canw3yu/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3canw3yu/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>எண்ணூர்- மாமல்லபுரம்</h2><p>சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருகி வரும் போக்குவரத்து மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது. இதனை குறைப்பதற்காக தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 132.87 கி.மீ. தூரத்துக்கு ரூ.17 ஆயிரத்து 958 கோடி மதிப்பில் சென்னை எல்லை சாலை திட்டப்பணிகள் 5 கட்டங்களாக நடந்து வருகின்றன. </p><p>முதல்கட்டமாக காட்டுப்பள்ளி முதல் பஞ்செட்டி வரை 25 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்து வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரையிலான 26.10 கி.மீ. நீளத்திற்கு பணிகளின் ஒரு தொகுப்பு நிறைவடைந்து உள்ளது.</p><h2>நிலம் எடுப்பு</h2><p>தற்போது, திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகை பகுதி யில் ஒரு குறிப்பிட்ட நன்செய், புன்செய் நிலங்களை தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் நிலம் எடுப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள், சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சிட்கோ கிளை அலுவலக வளாகத்தில் 30 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>6 வழிச்சாலை</h2><p>எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்துக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுவதால், அதுதொடர்பாக ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. தொடர்ந்து, மீதம் உள்ள அனைத்து பணிகளும் ஓராண்டுக்குள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதேபோல், சென்னையில் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைப்பதற்காக பெரும்பாலான சாலைகள் உலகத்தரத் தில் 6 வழிச் சாலைகளாக மாற்றப்பட உள்ளன என்று தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-sexually-harassed-driver-arrested-under-pocso-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-sexually-harassed-driver-arrested-under-pocso-act#comments</comments><guid isPermaLink="false">d9a293df-fda2-4320-9b4d-1c02d482dee5</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:02:28 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:02:28.100Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்சோ சட்டம்,POCSO act,driver,டிரைவர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/hjodxxds/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/hjodxxds/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விழுப்புரம்,  </p><p>விழுப்புரம் அருகே உள்ள காணை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அந்தோணிராஜ் (வயது 26), சரக்கு வாகன டிரைவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிராமத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி அந்த மாணவி, அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் கூறினாள். </p><p>இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி ராஜை கைது செய்தனர். பின்னர் அவரை, விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைத்தனர். இவர் மீது கடந்த 2023-ல் ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>பாஜக சொல்வது &apos;அலுவல்&apos;... நாடறியும் அமித் ஷாவின் &apos;நழுவல்&apos;! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-bjp-calls-it-official-business-but-the-nation-knows-it-as-amit-shahs-evasion-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-bjp-calls-it-official-business-but-the-nation-knows-it-as-amit-shahs-evasion-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">8f3fff66-9c00-4889-9d6c-985dd3686675</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:01:05 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:01:05.504Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/e8xe1bc2/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/e8xe1bc2/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக சொல்வது 'அலுவல்'... நாடறியும் அமித் ஷாவின் 'நழுவல்' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பதில் சொல்லப் பயந்தவர்..</h2><p>இது 'அலுவல் பயணம்' என்றால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஓடி ஒளிந்தாரே உள்துறை அமைச்சர் அமித் ஷா, அது என்ன 'அரசுப்பணி' இல்லையா?</p><p>நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான வன்முறை, மற்றும் தொகுதி மறுவரையறை என எதற்குமே அவையில் நின்று நேருக்கு நேர் பதில் சொல்லப் பயந்தவர்..அட, அவரு தான் நாடாளுமன்றத்துக்கே வரதே இல்லையே!</p><h2>'நழுவல்' வேலைதானே இது!</h2><p>அண்ணே ,நாடாளுமன்றத்தில் அவர் கொண்டு வரும் மசோதாக்களின் போதே அந்தப் பக்கம் வராமல் எஸ்கேப் ஆனாரே, அப்ப அது 'அலுவல் பணி'னு தெரியலையா? அதைத்தான் நாங்களும் கேட்கிறோம்... பாஜக அரசின் தோல்விகளை மறைக்க வழக்கம்போல அமித் ஷா செய்யும் 'நழுவல்' வேலைதானே இது! நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்கத் தெரியாத பாஜகவினர் எங்களுக்கு 'அலுவல்' பாடம் எடுப்பது, வடிவேலு சொல்ற மாதிரி சின்னப் புள்ளத்தனமா இருக்கு!</p><p>அண்ணா அப்புறம்... "காங்கிரஸை மக்கள் வெறுக்கிறார்கள்"னு அரசியல் நாகரிகம் பேசுறீங்களே... கொஞ்ச நாள் முன்னாடி, அப்புறம் கொஞ்ச மாசம் முன்னாடினு பெண்களை இழிவா பேசின லிஸ்ட் போயிட்டே இருக்கு.</p><p>இப்படிப் பெண்களைத் தரக்குறைவா பேசுறீங்களே,</p><p>அதுதான் அருவருக்கத்தக்க அரசியல்!</p><p>அந்தப் பேச்சுகளைத் தான் ஒட்டுமொத்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டு </a>மக்களும் வெறுக்கிறாங்க!</p><p>"வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்</p><p>நுண்ணவை அஞ்சு பவர்க்கு"</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்சார கொள்முதலில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல்..? விசாரணையை தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5000-crore-corruption-in-electricity-procurement-anti-corruption-police-begin-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5000-crore-corruption-in-electricity-procurement-anti-corruption-police-begin-investigation#comments</comments><guid isPermaLink="false">700c97d0-01ce-4f7e-b130-25ec7d89cf62</guid><pubDate>Fri, 21 Aug 2026 02:45:25 +0000</pubDate><atom:updated>2026-08-21T02:45:25.320Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,electricity,ஊழல்,Anti-Corruption Police,லஞ்ச ஒழிப்பு போலீசார்,மின்சார கொள்முதல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/prmvyo5f/iioo.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/prmvyo5f/iioo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மின் கொள்முதலில் ரூ.5,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருப்பதாக எழுந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.</p><h2>முறைகேடு</h2><p>கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 'அலுமினிய கண்டக்டர்கள்' வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது.</p><p>அதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் லஞ்சஒழிப்பு போலீசாரால், ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 495 கிலோமீட்டர் 'அலுமினிய கண்டக்டர்கள்' கொள்முதலில் அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு வாங்கியது தெரியவந்தது. அதன் அடிப்படையில்தான் இந்த வழக்கு போடப்பட்டு உள்ளது.</p><h2>60 இடங்களில் சோதனை</h2><p>இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் காலையில், தமிழ்நாடு முழுவதும் லஞ்சஒழிப்பு போலீசார் 60 இடங்களில் அதிரடி சோதனையில் இறங்கினர். 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். மாலை வரை இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனை வேட்டையில் பெரும்பாலும் மின்சார வாரிய அதிகாரிகளும், ஒப்பந்த நிறுவனங்களும்தான் சிக்கியது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னையில்</a> 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. சென்னை தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் தெருவில், காசிராஜன் என்பவர் வீட்டில் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவர் தமிழக மின்சார வாரியத்தில் தலைமை நிதி 'கண்ட்ரோலராக' வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. அவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமாக செயல்பட்டதாக தெரிகிறது.</p><p>இதேபோல, சென்னை பெருங்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் செயல்படும் புவனா எண்டர்பிரைசஸ் உள்பட 4 காண்டிராக்ட் நிறுவனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுதவிர செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.</p><h2>முக்கிய ஆவணங்கள்</h2><p>இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், '60 இடங்களில் நடந்த சோதனையில் வழக்கு தொடர்பான முக்கியமான ஆவணங்களும், டிஜிட்டல் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பெயரளவுக்கு செயல்பட்டு வந்த சில காண்டிராக்ட் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது. </p><p>இந்நிலையில், தி.மு.க., ஆட்சியின்போது, மின்சாரம் கொள்முதலிலும், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, மின்சாரம் கொள்முதல் தொடர்பான ஆவணங்களை, மின் வாரியத்திடம் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பெற்று, முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.</p><p>இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், 'மின்சார தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இருப்பதாக ஆவணங்கள் தயார் செய்து, அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் நடந்திருப்பதாக தெரிகிறது. ஊழல் நடந்தது உறுதியானால், வழக்குப்பதிவு செய்து,  நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - முதியவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1100-kg-of-ration-rice-hoarded-at-home-seized-elderly-man-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1100-kg-of-ration-rice-hoarded-at-home-seized-elderly-man-arrested#comments</comments><guid isPermaLink="false">d8610743-384c-4a31-9679-f2c8ad33f9ea</guid><pubDate>Fri, 21 Aug 2026 02:23:19 +0000</pubDate><atom:updated>2026-08-21T02:23:19.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தஞ்சாவூர்,தஞ்சை,ration rice,ரேஷன் அரிசி,Tanjaore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/12rvgoff/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/12rvgoff/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இட்லி மாவு தயாரிக்கும் தொழிலுக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முதியவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ரேஷன் அரிசி கடத்தல்</h2><p>பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தி யாவசியப் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தஞ்சை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக் டர் ஜெகதீஸ்வரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா மற்றும் போலீசார் அதிராம்பட் டினத்தில் உள்ள சம்சுதீன் (வயது 66) என்பவருடைய வீட்டில் சோதனை நடத்தினர்.</p><h2>இட்லி மாவு தயாரிக்க...</h2><p>அப்போது அங்கு 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் மொத்தம் 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போலீசார் </a>நடத்திய விசாரணையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து, இட்லி மாவு தயாரிக்கும் தொழிலுக்காக அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்சுதீனை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் குண்டு வெல்லம், சர்க்கரை விலை கடும் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sharp-rise-in-prices-of-gundu-jaggery-and-sugar-at-the-salem-sevvaipet-market</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sharp-rise-in-prices-of-gundu-jaggery-and-sugar-at-the-salem-sevvaipet-market#comments</comments><guid isPermaLink="false">77048b11-4e22-427d-8750-8b4d53bbf713</guid><pubDate>Fri, 21 Aug 2026 02:19:50 +0000</pubDate><atom:updated>2026-08-21T02:19:50.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வெல்லம்,Jaggery,சர்க்கரை விலை,Sugar Prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/r99mpn8s/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/r99mpn8s/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,   </p><h2>குண்டு வெல்லம்</h2><p>சேலம், செவ்வாய்ப் பேட்டை சந்தைக்கு, தினமும் சராசரியாக, 200 டன் உருண்டை வெல்லம் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. அங்கு கடந்த மாதம், 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை வெல்லம், 1,400 ரூபாய் வரை விற்ற நிலையில் படிப்படியாக விலை அதிகரித்தது. இரு வாரங்களுக்கு முன், 1,650 ரூபாயாக உயர்ந்தது. </p><p>தொடர்ந்து நேற்று நடந்த ஏலத்தில், 30 கிலோ மூட்டை, 1,900 முதல், 2,000 ரூபாய் வரை விலைபோனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:</p><p>பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளதால், வெல்ல தேவை அதிகரிக்கும் என எதிர்பார்த்து, போட்டி போட்டு பலரும் ஏலம் எடுத்தனர். சமீபகாலமாக சர்க்கரை விலை அதிகரித்து வருவதால், பல்வேறு உணவு, தின்பண்ட தயாரிப்பு நிறுவனங்கள், நாட்டு வெல்லத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதுவும் சந்தையில் கூடுதல் தேவையை ஏற்படுத்தியுள்ளது.  </p><h2>சர்க்கரை விலை உயர்வு</h2><p>இதேபோல், சேலம் மார்க்கெட்டில் சர்க்கரை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது, 50 கிலோ எடை கொண்ட சர்க்கரை கடந்த வாரம் ரூ.2,130-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மூட்டைக்கு ரூ.1,200 அதிகரித்து ரூ.3,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை யாக கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குண்டு வெல்லம் மற் றும் சர்க்கரையை மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். </p><h2>கரும்பு விளைச்சல் குறைவு</h2><p>இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை வியாபாரிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டிற்கு குண்டு வெல்லம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் சர்க்கரையை பொறுத்தவரையில் உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தான் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது சர்க்கரை தயாரிப்பு குறைந்துவிட்டதால் அதன் விலை அதிகரித்துள்ளது.</p><p>தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் கரும்பு விளைச்சல் குறைந்துவிட்டதால் சர்க்கரை தயாரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி, அதன்பிறகு ஆயுதபூஜை, தீபாவளி என தொடர்ச்சியாக திருவிழா காலம் என்பதால் குண்டு வெல்லம், சர்க்கரை விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்காது, என்றனர்.</p>  ]]></content:encoded></item><item><title>மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி. திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/iit-madras-plans-to-launch-medical-courses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/iit-madras-plans-to-launch-medical-courses#comments</comments><guid isPermaLink="false">358ff03f-a805-4bd0-9385-6484c7eab082</guid><pubDate>Fri, 21 Aug 2026 02:18:07 +0000</pubDate><atom:updated>2026-08-21T02:18:07.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Chennai IIT,சென்னை ஐஐடி,IIT Madras,மருத்துவ படிப்பு,Medical Courses,ஐஐடி மெட்ராஸ்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qnojk78w/inida.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qnojk78w/inida.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி, </p><p>இந்தியாவின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் ஏற்கெனவே பொறியியல் மட்டுமின்றி பயோ டெக்னாலஜி, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொடர்பான பட்டப்படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்நிலையில் நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை உருவாக்கும் வகையில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. பட்டப் படிப்புகளை தொடங்க <a href="https://www.dailythanthi.com/topic/chennai-iit">சென்னை ஐ.ஐ.டி.</a> திட்டமிட்டுள்ளது.</p><h2>பொறியியல் பயிற்சி</h2><p>இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/topic/chennai-iit">சென்னை ஐ.ஐ.டி.</a>யின் இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-</p><p>ஒரு நாட்டில் மருத்துவ கருவிகளை சொந்தமாக வடிவமைப்பதற்கு டாக்டர்களும், இன்ஜினியர்களும் இணைந்து செயல்பட வேண்டும். இன்ஜினியர்ககளை டாக்டர்களாக மாற்றுவதை விட டாக்டர்களுக்கு பொறியியலில் பயிற்சி அளிப்பதே எளிதான அணுகுமுறையாக இருக்கும். எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலுமே மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே ஐ.ஐ.டி.-யின் நோக்கம்.</p><h2>எம்.பி.பி.எஸ்., எம்.டி.</h2><p>ஏற்கெனவே ஐ.ஐ.டி. கரக்பூர் சொந்தமாக மருத்துவமனை அமைத்து, எம்.டி. படிப்பையும் வழங்கி வருகிறது . அதேபோன்று, <a href="https://www.dailythanthi.com/topic/chennai-iit">சென்னை ஐ.ஐ.டி.</a>-யும் மருத்துவமனையை உருவாக்கி, முறையான அனுமதியுடன் எதிர்காலத்தில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. ஆகிய படிப்புகளை வழங்க விரும்புகிறது.</p><p>இதற்காக சொந்தமாக மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தை ஏற்படுத்தி, தேசிய மருத்துவ ஆணையத்தின் (NATIONAL MEDICAL COMMISSION) அனுமதியை பெறுவதற்கு சென்னை ஐ.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.</p><h2>ஒரே கூரையின் கீழ்</h2><p>டாக்டர்களும், இன்ஜினியர்களும் இணைந்து புதிய மருத்துவக் கருவிகளைக் கண்டுபிடிக்கவும், மருத்துவத்துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவுகிறது. ஏற்கனவே <a href="https://www.dailythanthi.com/topic/chennai-iit">சென்னை ஐ.ஐ.டி.</a> மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மூலம் 4 ஆண்டு பி.எஸ். மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பு வழங்கப்படுகிறது.</p><p>உயர்தர மருத்துவ உபகரணங்களுக்கு வெளிநாட்டையே நாம் இன்றும் சார்ந்து இருக்கிறோம். நம் நாட்டிலேயே சொந்தமாக மருத்துவ கருவிகளை வடிவமைக்க, டாக்டர்களும், இன்ஜினியர்களும் ஒரே கூரையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 8 பவுன் திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-sovereigns-of-gold-stolen-from-ex-servicemans-house-near-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-sovereigns-of-gold-stolen-from-ex-servicemans-house-near-salem#comments</comments><guid isPermaLink="false">f18e3b26-861c-46c0-8472-994757140f9d</guid><pubDate>Fri, 21 Aug 2026 02:07:32 +0000</pubDate><atom:updated>2026-08-21T02:07:32.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/yge81b7f/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/yge81b7f/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>ஓமலூர் அருகே செக்காரப்பட்டி தொப்பூர் கேன்டீன் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், முன் னாள் ராணுவ வீரர். இவர் தனது மகன் நந்தகுமார் (வயது 32) மற்றும் குடும்பத்துடன் கடந்த 17-ந் தேதி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள் செல்வராஜின் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம், வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர்.</p><h2>8 பவுன் நகை திருட்டு</h2><p>இந்தநிலையில், நேற்று காலை செல்வராஜ் வீடு திரும்பினார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம். 2 வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.</p><p>இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விசாரணை </a>நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.</p><h2>போலீசார் வலைவீச்சு</h2><p>மோப்பநாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வீட்டில் தடயங்களை சேகரித்து விட்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இடைக்கால ஊதியத்தில் அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு: தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dearness-allowance-on-interim-pay-hiked-to-60-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dearness-allowance-on-interim-pay-hiked-to-60-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">f830f23c-d167-4778-8429-6c5832691bed</guid><pubDate>Fri, 21 Aug 2026 02:06:27 +0000</pubDate><atom:updated>2026-08-21T02:06:27.566Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,தமிழக அரசு,dearness allowance,அகவிலைப்படி,இடைக்கால ஊதியம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5bs2l6tj/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5bs2l6tj/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இடைக்கால மாத ஊதியத்தில் அகவிலைப்படியை 60 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>சென்னை,</p><h2>தமிழக அரசு உத்தரவு</h2><p>பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள தகுதியான அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போதோ அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழக்கும்போதோ, அவர்களுக்கு இடைக்கால மாத ஊதியம் அல்லது குடும்பத்தினருக்கு இடைக்கால மாத குடும்ப ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த இடைக்கால மாத ஊதியம், கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம், இதில் எது அதிகமோ அந்தத் தொகையுடன் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படுகிறது.</p><p>இந்த நிலையில், 6-வது ஊதியக்குழு ஊதிய விகிதத்தில் கடைசியாக ஊதியம் பெற்றவர்களுக்கு அகவிலைப்படி 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் 262 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து. இடைக்கால மாத ஊதியம் மற்றும் இடைக்கால மாத குடும்ப ஊதியத்துக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஒரே சீராக 60 சதவீதமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>அடிப்படை ஊதியம்</h2><p>ஆனால், 6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவும், 7-வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் நிர்ணயிக்கப்படாமலும் இருந்தால், இடைக்கால அடிப்படையில் அவர்களின் ஊதியம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>மேலும், 6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு அதிக மாக இருந்தால், 7-வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் நிர்ணயிக்கப்படாத நிலையில், 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் அகவிலைப்படி 262 சதவீதம் வழங்கப்படும்.</p><p>இந்த உத்தரவை முறையாக செயல்படுத்த அனைத்து ஊதியம் மற்றும் கணக்கு அதிகாரிகள், கருவூலங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும்படி கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்பாக்கம் அதிவேக ஈனுலை பணிகள் இறுதிகட்டத்தை எட்டியது: நவம்பரில் மின் உற்பத்தி தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kalpakkam-fast-breeder-reactor-work-reaches-final-stage-power-generation-to-start-in-november</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kalpakkam-fast-breeder-reactor-work-reaches-final-stage-power-generation-to-start-in-november#comments</comments><guid isPermaLink="false">62ff5863-0bac-4e46-84b5-062ae7b41851</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:58:31 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:58:31.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கல்பாக்கம் அணுமின் நிலையம்,கல்பாக்கம்,Kalpakkam,Kalpakkam nuclear power plant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/9aytsiho/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/9aytsiho/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் அதிவேக ஈனுலை மின் நிலையத்தில், வரும் நவம்பரில் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு, 250 மெகாவாட் வழங்க வலியு றுத்தப்பட்டு உள்ளது.</p><p>செங்கல்பட்டு மாவட் டம், கல்பாக்கத்தில் மத் திய அரசின் அணு மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 220 மெகாவாட் திறன் உடைய, இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.</p><p>அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 330 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணு மின் நிலையம் அருகில், அணுசக்தி துறையின் கீழ் செயல்படும், 'பாவினி' நிறுவனம், 500 மெகா வாட் திறனில், முன் மாதிரி அதிவேக ஈனுலை அமைத்து வருகிறது. இந்த மின் நிலையத்தில், நம் நாட்டில் அதிகம் கிடைக்கும் தோரியம் பயன்படுத்தப்பட உள்ளது. </p><p>தற்போது, அதிவேக ஈனுலை மின் நிலையத்தின் அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், வரும் நவம்பரில் உற்பத்தி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மின் நிறுவனங்கள் சார்பில், அனல் மின் நிலையம், அணு மின் நிலையம் அமைக்கப்படும்போது, அதன் மொத்த மின் உற்பத்தித் திறனில், 50 சதவீத மின்சாரம், சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கும், மீதி பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன் அடிப்படை யில், அதிவேக ஈனுலை மின் நிலையத்தில் இருந்து, 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு வழங்க, மின் வாரியம் வலியுறுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கண்களை கட்டிக்கொண்டு கீபோர்டு வாசித்த மாணவன்! உலக சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-plays-keyboard-while-blindfolded-world-record</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-plays-keyboard-while-blindfolded-world-record#comments</comments><guid isPermaLink="false">a0a7cfae-d974-475d-9d8e-6ef6cf97adfa</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:48:04 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:48:04.410Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவன்,student,World record,உலக சாதனை,Keyboard,கீபோர்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/fu010ick/124.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/fu010ick/124.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி டிலைட் பப்ளிக் பள்ளி மாணவன் ஜான் டிசோன், இவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த உலகசாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கீபோர்டு வாசித்தார். இதில் காலை 11 மணி முதல் 12 மணி வரை கண்களை கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து சாதனை படைத்தார். இவரது சாதனையை நோபிள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">உலக சாதனை</a> புத்தக அமைப்பினர் பதிவு செய்து உள்ளனர்.</p><h2>பாராட்டு</h2><p>இளம் வயதிலேயே இந்த அரிய உலக சாதனையைப் படைத்து பள்ளிக்கும், பெற்றோருக்கும். மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவனுக்கு பள்ளி தலைவர் ஜெயசீலன், பள்ளி தாளாளர் பிரபாகரன் ஜான், பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி, பள்ளி டிரஸ்ட் செயலாளர் மெர்லின் பிரமிளா ஆகியோர் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>வருகிற 25-ந்தேதி முதல் .. கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/night-time-electric-trains-between-beach-and-tambaram-cancelled-starting-from-the-25th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/night-time-electric-trains-between-beach-and-tambaram-cancelled-starting-from-the-25th#comments</comments><guid isPermaLink="false">76b46dca-48b6-45b9-a4d0-0f2697afbe4a</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:43:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:43:57.066Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Tambaram,தாம்பரம்,தெற்கு ரெயில்வே,Southern Railway,கடற்கரை,electric trains,மின்சார ரெயில்கள்,beach,electric trains cancelled,மின்சார ரெயில்கள் ரத்து</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v6amh6uv/abn.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v6amh6uv/abn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக <a href="https://www.dailythanthi.com/topic/southern-railway">தெற்கு ரெயில்வே</a> சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பராமரிப்பு பணி</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாளை (22-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>தேதியில் மாற்றம்</h2><p>இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.</p><h2>வாரநாட்களில்...</h2><p>அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரையில் (வாரநாட்களில் மட்டும்) ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படும் ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-</p><p><strong>*</strong> கடற்கரையில் இருந்து இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.</p><p><strong>*</strong> திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.</p><p><strong>*</strong> கடற்கரையில் இருந்து இரவு 9.45 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும். கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.</p><p><strong>*</strong> கடற்கரையில் இருந்து வருகிற 26-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரையில் (வாரநாட்களில்) அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.</p><h2>ஞாயிற்றுக்கிழமை</h2><p>இதேபோல, வருகிற 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) ரத்து மற்றும் பகுதிநேர ரத்து செய்யப்படும் மின்சார ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-</p><p><strong>* </strong>கடற்கரையில் இருந்து இரவு 10, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், தாம்பரத்தில் இருந்து இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.</p><p><strong>*</strong> கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.</p> <p><strong>*</strong> கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும். </p><p>கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.10 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும். </p><p>மேலும், கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.25 மணிக்கு தாம்பரம் செல்லும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்கிக்கு ரூ.3 கோடி பணத்துடன் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் காயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/van-carrying-rs-3-crore-to-bank-overturns-4-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/van-carrying-rs-3-crore-to-bank-overturns-4-injured#comments</comments><guid isPermaLink="false">9e115d4f-71bf-4908-afc9-789d6e02d9da</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:23:30 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:23:30.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bank,வங்கி,4 injured,4 பேர் காயம்,வேன் கவிழ்ந்து விபத்து,van overturns</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/nw9n99qn/123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/nw9n99qn/123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம் ,</p><p>கும்பகோணம் அருகே வங்கிக்கு ரூ.3 கோடியுடன் சென்ற வேன் கவிழ்ந்ததில் காசாளர், பாதுகாவலர்கள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.</p><p> தஞ்சையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து கும்பகோணத்தில் உள்ள வங்கி கிளைக்கு நேற்று மினி சரக்கு வேனில் ரூ.3 கோடி கொண்டு செல்லப்பட்டது. அந்த வேனில் 10 பெட்டிகளில் ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் இருந்தன.</p><p>தஞ்சை-விக்கிரவாண்டி பைபாஸ் சாலையில் தாராசுரம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் வேன் சாலை தடுப்பில் மோதி. சாலையில் கவிழ்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்து</a>க்குள்ளானது. இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக கும்பகோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><h2>4 பேர் காயம்</h2><p>இந்த விபத்தில் வேனில் வந்த தஞ்சையை சேர்ந்த வங்கி காசாளர் திவ்யகுமார்(வயது 36), பாதுகாவலர்கள் திருவையாறு பகுதியை சேர்ந்த சார்லஸ்(46), திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சுப்பிரமணி (51), டிரைவர் நாச்சியார் கோவிலை சேர்ந்த முரளிதரன்(62) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு முதலுதவி அளித்து, கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா போலீசார், காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.</p><h2>பலத்த பாதுகாப்பு</h2><p>பணம் இருந்த வாகனம் என்பதால் போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கும்பகோணம் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தகவலின் பேரில் வங்கி அலுவலர்கள் விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த வாகனத்தில் இருந்த பணத்தை மற்றொரு வாகனத்துக்கு மாற்றி பத்திரமாக கொண்டு சென்றனர். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-proceedings-in-the-tamil-nadu-legislative-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-proceedings-in-the-tamil-nadu-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">896d7d14-f2a9-4fd7-8edb-af588bb3eedf</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:16:36.591Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/cv1qczny/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/cv1qczny/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்து தொடர்பாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.</p><p>இதற்கு பதில் அளித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் பேசுகையில் "எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் அல்ல மனிதக் கழிவுகள் உள்பட கழிவு நீர் கலப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.</p><p>சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை) ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதல்-அமைச்சர் விஜய்யிடம் உள்ளது. அவர் அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் யாரேனும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பா..? வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-weather-department-releases-update-2</link><comments>https://www.dailythanthi.com/news/weather/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-weather-department-releases-update-2#comments</comments><guid isPermaLink="false">73901d21-3713-42a2-b45e-57f9d8caece0</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:16:13 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:16:13.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3qppq0f7/enna.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3qppq0f7/enna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>21-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>22-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>23-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p><strong>24-08-2026 மற்றும் 25-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>26-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>21-08-2026 முதல் 24-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>21-08-2026 முதல் 24-08-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (21-08-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>21-08-2026 மற்றும் 22-08-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>23-08-2026 முதல் 24-08-2026 வரை:</strong> தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>21-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-08-2026 முதல் 23-08-2026 வரை:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>24-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>21-08-2026 முதல் 24-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-operated-from-trichy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-operated-from-trichy#comments</comments><guid isPermaLink="false">06b77231-7b85-4270-afda-a14c37ca70c5</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:06:53 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:06:53.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bsr3vvvm/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bsr3vvvm/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரெயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>வேளாங்கண்ணி திருவிழா</h2><p>வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பயணிக ளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வா கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி காரைக்கால்-தஞ்சை டெமு ரெயில் (வண்டி எண் 76803) திருச்சி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் வண்டி எண் 06861 ஆக மாற்றப்பட்டு வருகிற 29, 31, செப்டம்பர் மாதம் 1 முதல் 5-ந் தேதி வரை மற்றும் 7, 8-ந் தேதிகளில் தஞ்சை யில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.10 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும்.</p><p>இதேபோல் திருச்சி- வேளாங்கண்ணி டெமு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06866) வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை திருச்சி ஜங் ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு அதி காலை 2.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். வண்டி எண் 06865 வேளாங்கண்ணி-திருச்சி சிறப்பு ரெயில் வருகிற 29-ந் தேதி மற்றும் செப் டம்பர் 8-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும்.</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>வண்டி எண் 06864 திருச்சி-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் வருகிற 30-ந் தேதி மற்றும் செப்டம்பர் 9-ந் தேதி ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். வண்டி எண் 76826 திருச்சி-காரைக்கால் டெமு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 29-ந் தேதி மற்றும் செப்டம்பர் 8-ந் தேதி திருச்சி ஜங்ஷனில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஏழை மாணவர்களுக்கு விமானப் பயணம்... முன்னாள் மாணவரின் நெகிழ்ச்சி செயல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-travel-for-poor-students-a-former-students-act-of-resilience</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-travel-for-poor-students-a-former-students-act-of-resilience#comments</comments><guid isPermaLink="false">9e9ea269-570a-4fad-a97c-cf267a73d8a6</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:01:39 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:01:39.305Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>student,பள்ளி மாணவர்கள்,air travel,விமான பயணம்,முன்னாள் மாணவர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/iaatgp8c/122.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/iaatgp8c/122.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1996-ம் ஆண்டு படித்தவர் அசோக் பிரபாகரன். தற்போது காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். தான் படித்த பள்ளி மாணவர்கள் கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடன் படித்த நண்பர்கள் உச்சி மாகாளி, திருப்பதி, ராஜதுரை, முத்துக்கனி, ஜலாலுதீன், கணேசன், ராமசுப்பிரமணியன், ஆகியோரோடு சேர்ந்து, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் துணையோடு கல்வி, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய ஏழ்மை நிலையில் உள்ள 4 மாணவர்கள், 6 மாணவிகள் என 10 பேரை தேர்வு செய்தார்.</p><h2>கல்வி பயணம்</h2><p>கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதியுடன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 3 ஆசிரியர்களுடன் 10 மாணவ-மாணவிகளை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் சொந்த செலவில் அழைத்து வந்தனர். இந்த கல்வி பயணம் தொடர்ந்து 3-வது ஆண்டாக நடத்தப்பட்டது.</p><p>சென்னையில் 2 நாட்கள் தங்கிய மாணவ-மாணவிகளை அசோக் பிரபாகரன் நேரில் அழைத்து சென்று அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரி, அண்ணா நூற்றாண்டு நூலகம், தலைமைச்செயலகம், பிர்லா கோளரங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களை பார்வையிட செய்தார். ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடியை சந்தித்து மாணவ - மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.</p><p>பயணம் முடிந்ததும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர்கள்</a> ஆசிரியர்களுடன் வந்தே பாரத் ரெயிலில் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் இந்த முயற்சிக்கு பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3000-year-old-pottery-shards-discovered-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3000-year-old-pottery-shards-discovered-in-nellai#comments</comments><guid isPermaLink="false">e9258c90-b3eb-4e27-a792-84132797619c</guid><pubDate>Fri, 21 Aug 2026 00:57:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T00:57:57.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,மாணவர்கள்,students,தொல்லியல் துறை,Archaeology Department</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/s40zu2lj/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/s40zu2lj/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,  </p><p>நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><h2>தொல்லியல் மாணவர்கள்</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள் தொல்லியல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று மருதூர் அணைக்கட்டு, சீவலப்பேரி, மறுகால்தலையில் உள்ள 2,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, உழக்குடி அருகே உள்ள 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெடுங்கல், நாட்டார்குளம் நடுகல், ஆதிச்சநல்லூர், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் ஆகிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.</p><p>உழக்குடி அருகே உள்ள நெடுங்கல்லைப் பார்த்த மாணவ, மாணவிகள் அதன் 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையையும் உயரத்தையும் கண்டு வியந்தனர்.</p><h2>பானை ஓடுகள்</h2><p>அப்போது அங்குள்ள நெடுங்கல் அருகே மாணவர் லட்சுமணன் என்பவர் பானை ஓடு ஒன்றைக் கண்டெடுத்தார். அதில், ஒரு அந்துப்பூச்சியின் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தது. வண்ணத்துப்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாகவும், அழகிய பல வண்ண இறக்கைகளுடனும் இருக்கும். ஆனால் அந்துப்பூச்சிகள் பெரும்பாலும் இரவில் செயல்படுபவை. மந்தமான நிற இறக்கைகளையும் உரோமம் போன்ற உடலையும் கொண்டவை. அந்துப்பூச்சிகள் செழிப்பான இடங்களிலேயே காணப்படும். </p><p>அதேபோல் மாணவி பிரியா என்பவர் அங்கு ஒரு மண்பாண்டத்தின் கலைநுட்பம் மிகுந்த அழகிய பானைமூடியின் உடைந்த துண்டு ஒன்றைக் கண்டெடுத்தார். இவை இரண்டும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் உதவிப் பேராசிரியர் மதிவாணன் தெரிவித்தார்.</p><p>இந்த களப்பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: அரசு பள்ளியில் ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள் நியமனமா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-were-teachers-with-no-knowledge-of-english-appointed-in-government-schools-clarification-from-the-information-verification-wing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-were-teachers-with-no-knowledge-of-english-appointed-in-government-schools-clarification-from-the-information-verification-wing#comments</comments><guid isPermaLink="false">ae01ee0d-6f3b-4cc7-916f-8d529bc896da</guid><pubDate>Fri, 21 Aug 2026 00:55:02 +0000</pubDate><atom:updated>2026-08-21T00:55:02.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,அரசு பள்ளி,Fact check,Government Schools,TN Fact Check,தகவல் நம்பகத்தன்மை,தகவல் நம்பகத்தன்மை பிரிவி,தகவல் நம்பகத்தன்மை பிரிவு,Information Integrity Desk</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/4krownwv/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தகவல் நம்பகத்தன்மை பிரிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/4krownwv/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சேலம் அரசு மாதிரிப் பள்ளியில் ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>சேலம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் (Model School) ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.</p><h2>உண்மை என்ன ?</h2><p>இது தொடர்பாக பள்ளி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிர்வாகம் </a>அளித்துள்ள விளக்கத்தில், "சேலம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியின் (Model School) JEE &amp; NEET மண்டல பயிற்சி மையத்தில், NIT மற்றும் IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஆங்கில மொழியில் பயின்ற மற்றும் JEE உள்ளிட்ட போட்டித் தேர்வு பயிற்சியில் அனுபவம் உள்ளவர்கள் மூலம் தலைமையாசிரியர் தலைமையில் மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சந்தேகங்களை விளக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களும் உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் எவை? - பட்டியல் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-717-tasmac-shops-were-closed-in-tamil-nadu-list-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-717-tasmac-shops-were-closed-in-tamil-nadu-list-released#comments</comments><guid isPermaLink="false">1c7d1082-7611-4f34-b67e-2d95a5b88fb6</guid><pubDate>Fri, 21 Aug 2026 00:50:38 +0000</pubDate><atom:updated>2026-08-21T00:50:38.549Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,Tasmac Shops,டாஸ்மாக் கடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3keeor4j/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3keeor4j/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோவில்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில், மூடப்பட்ட 717 கடைகளும் எந்தெந்த பகுதிகளில் செயல்பட்டு வந்தன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.</p><p>அதில், ஒவ்வொரு கடையின் மாவட்டம், பகுதி, கடை எண் மற்றும் கடை செயல்பட்டு வந்த முழுமையான முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியல், அரசாணை எண் 129-ன் அடிப்படையில் 717 கடைகள் மூடப்பட்டதாக குறிப்பிடுகிறது.</p><p>பட்டியலில் முதல் கடை முதல் 717-வது கடை வரை வரிசை எண்ணுடன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக, நேற்று சட்டசபையில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், 717 கடைகள் மூடப்பட்டது தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். </p><p>அதன்படி, தற்போது மூடப்பட்ட அனைத்து 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளுடன் கூடிய முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/jgdbv7go/Untitled-1.jpg" /></figure><p><strong>717 மூடப்பட்ட கடைகள் குறித்த விவரங்களை இந்த கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம்.</strong></p>]]></content:encoded></item><item><title>சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர்: தட்டிக்கேட்ட உறவினருக்கு கத்திக்குத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabs-relative-after-confrontation-over-peeping-at-girl-bathing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabs-relative-after-confrontation-over-peeping-at-girl-bathing#comments</comments><guid isPermaLink="false">0bcc42da-9c91-4acf-ab17-2a2b62688810</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:15:13 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:15:13.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,வாலிபர் கைது,போக்சோ,POCSO,கல்லிடைக்குறிச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6iitx6j3/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6iitx6j3/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் அம்பை அருகே தெற்கு கல்லிடைக்குறிச்சியை அடுத்த செம்பத்தி மேடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சதீஷ் (18 வயது). மேளக்கலைஞரான இவர் அவ்வப்போது கட்டிட வேலைக்கும் சென்று வந்தார்.</p><p>சம்பவத்தன்று இவர் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் உள்ள குளியலறையில் 17 வயது சிறுமி குளித்துக்கொண்டிருந்தார். இதனை கவனித்த சதீஷ், வீட்டின் பின்பக்கமாக சென்று குளியலறையில் சிறுமி குளிப்பதை எட்டி பார்த்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால் சதீஷ் அங்கிருந்து ஓடிவிட்டாராம். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் உடனே தங்களின் உறவினர்களுடன் சதீஷ் வீட்டுக்கு சென்று அவரது தந்தை ராஜூவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராஜூ, சிறுமியின் சித்தப்பாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.</p><p>இதுகுறித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். அதேபோல் சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்ததாக சதீஷ் மீது அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனியாக புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>