<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 12 Aug 2026 09:29:30 +0000</lastBuildDate><item><title>திருநெல்வேலி: ரூ.5 லட்சம் பண மோசடி வழக்கில் 2 இளம்பெண்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-2-young-women-arrested-in-rs-5-lakh-money-laundering-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-2-young-women-arrested-in-rs-5-lakh-money-laundering-case#comments</comments><guid isPermaLink="false">95b78ff9-1187-426e-ab6f-345a976cc28c</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:27:29 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:27:29.269Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,young women,இளம்பெண்கள்,பண மோசடி,money laundering,2 பேர் கைது,Case,வழக்கு,2 people arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/vtyxurkn/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பண மோசடி வழக்கில் 2 இளம்பெண்கள் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/vtyxurkn/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.5 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பண மோசடி</a>யில் ஈடுபட்ட 2 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">இளம்பெண்களை</a> நெல்லை சந்திப்புப் போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>பண மோசடி புகார்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a>யில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் தோறும் லட்சக்கணக்கில் அதிக வருமானம் ஈட்டலாம் என கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி வருமானம் தராமலும், முதலீடு செய்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.</p><h2>2 இளம்பெண்கள் கைது</h2><p>இந்த புகாரின் பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பண மோசடியில் ஈடுபட்டது திருநெல்வேலி அருகே உள்ள காரையிருப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகலட்சுமி (வயது 23) மற்றும் பூரணசெல்வி(30) ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. </p><p>இதையடுத்து அந்த 2 இளம்பெண்களையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் மேலும் பலரிடம் இதுபோன்று மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>220 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-trustees-for-220-temples-application-deadline-extended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-trustees-for-220-temples-application-deadline-extended#comments</comments><guid isPermaLink="false">256b941d-1725-435a-8e23-84861ff695f2</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:15:31 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:15:31.341Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,கோவில்கள்,அறநிலையத்துறை,இந்து சமய அறநிலையத்துறை,Hindu Religious and Charitable Endowments Department,Trustees,அறங்காவலர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0baldls8/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அறங்காவலர்கள் நியமனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0baldls8/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 220 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அறங்காவலர்கள் நியமனம்</h2><p>இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 46(iii)-ன்கீழ் உள்ள 220 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, கடந்த 14.06.2026 அன்று தமிழ் மற்றும் ஆங்கில முன்னனி நாளிதழ்களிலும், இத்துறையின் வலைதளத்திலும் விளம்பரம் செய்யப்பட்டது. இவ்விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் 22.07.2026 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருக்கோவில்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 12.08.2026 மாலை 5.45 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.</p><h2>கால அவகாசம் நீட்டிப்பு</h2><p>விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பக்தர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அதிகப்படியான தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 28.08.2026 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>28ம் தேதி வரை அவகாசம்</h2><p>எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுடைய விருப்பமுள்ள பக்தர்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 28.08.2026 அன்று மாலை 5.45 மணிவரை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இணையத்தளம் </a>வாயிலாக பதிவேற்றம் செய்து / நேரில் / அஞ்சல் மூலமாக அந்தந்த திருக்கோவில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயி மீதான வழக்கை சாதகமாக முடித்து வைப்பதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற எஸ்.ஐ. கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-si-arrested-rs3000-bribe-farmer-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-si-arrested-rs3000-bribe-farmer-case#comments</comments><guid isPermaLink="false">c2af1258-8c73-420d-bad1-b27532cc01c8</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:11:54 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:11:54.659Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ்,கைது,விவசாயி,arrest,லஞ்சம்,வழக்கு,Favor of Farmers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/seo3mpzp/policecoruption.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ எஸ்.ஐ.]]></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.3,000 லஞ்சம் பெற்ற எஸ்.ஐ. கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/seo3mpzp/policecoruption.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p> நில பிரச்சினை வழக்கை சாதகமாக முடிக்க விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கிய நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்.</p><h2>நில ஆக்கிரமிப்பு</h2><p>நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள சாலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுமியராஜ்,  விவசாயி. இவருக்கும், இவரது பக்கத்து நிலத்துக்காரரான முத்துசாமி என்பவருக்கும் இடையே நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>ரூ.30 ஆயிரம் லஞ்சம்</h2><p>இந்த வழக்கை விவசாயி சவுமியராஜுக்கு சாதகமாக முடித்து தருவதற்கும், மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் நல்லூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கெங்காதரன் (53) என்பவர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சவுமியராஜ் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.</p><h2> சப்-இன்ஸ்பெக்டர் கைது</h2><p>லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, சவுமியராஜ் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு நல்லூர் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் கெங்காதரனிடம் அந்த பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்தை பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கெங்காதரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். காவல் நிலையத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/property-tax-hike-in-chennai-corporation-clarification-from-the-information-verification-wing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/property-tax-hike-in-chennai-corporation-clarification-from-the-information-verification-wing#comments</comments><guid isPermaLink="false">7de7e24c-52bc-4e06-bf66-8be8e3f0ceba</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:01:18 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:01:18.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Fact check,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,தகவல் நம்பகத்தன்மை பிரிவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/x0v7yi6x/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/x0v7yi6x/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக பரவும் தவறான தகவல் குறித்து  தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அப்பிரிவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.</p><h2>உண்மை என்ன ?</h2><p>இது தொடர்பாக பெருநகர சென்னை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநகராட்சி </a>அளித்துள்ள விளக்கத்தில், "சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, சொத்துவரி செலுத்துவோருக்கு மட்டுமே சுய-அறிவிப்பு (Self-Declaration) / உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர் !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உலகரங்கில் அனைத்து துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wishing-our-youth-success-in-all-fields-globally-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wishing-our-youth-success-in-all-fields-globally-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">717272e5-b099-4a12-bf37-1642c63449c3</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:01:15 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:01:15.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,X Page,எக்ஸ் பதிவு,Congratulations,இளைஞர்,வாழ்த்துகள்,நாள்,International Youth Day,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/aybntcbk/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/aybntcbk/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A">சர்வதேச</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D">இளைஞர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">நாளை</a> முன்னிட்டு தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச இளைஞர் நாள்</h2><p>இளைஞர்களின் ஆற்றலைக் கொண்டாடுவது மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி "சர்வதேச இளைஞர் நாள்" கடைபிடிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை 1999-ம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் மையக்கருத்து "வெவ்வேறு சூழல், பொதுவான விருப்பம்" (Different Contexts, Common Aspirations) என்பதாகும். </p><h2>முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து</h2><p>சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: </p><p>நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்! </p><p>புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்! </p><p>உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்!</p><p>கனவுகள் நனவாகட்டும்! சாதனைகள் தொடரட்டும்!. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோவையில் கல்லூரி மாணவர் கொலை: 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/five-people-including-a-17-year-old-boy-arrested-in-the-coimbatore-college-student-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/five-people-including-a-17-year-old-boy-arrested-in-the-coimbatore-college-student-murder-case#comments</comments><guid isPermaLink="false">d65c8127-8a68-458a-a924-84ca80475b5b</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:34:19 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:34:19.808Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,Crime News,தமிழகம்,murder,கிரைம் செய்திகள்,Kovai,கல்லூரி மாணவர் கொலை,collage student</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/24jsfdem/amuth.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/24jsfdem/amuth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a> கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h2>கல்லூரி மாணவர்</h2><p>கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியை சேர்ந்தவர் கென்னடி இவருடைய மகன் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். அந்த அறையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமன் (19) உள்பட 4 பேர் தங்கி இருந்தனர்.</p><p>அமுதன், ஸ்ரீமன் ஆகியோர் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள தனது நண்பர்களின் அறைக்கு சென்று தங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு கல்லூரிக்கு செல்ல மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.</p> <h2>சரமாரியாக தாக்குதல்</h2><p>அப்போது அதே கல்லூரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள் அந்த 2 பேரையும் மிரட்டி தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதையடுத்து, நீங்கள் தானே நேற்று எங்கள் அறைக்கு வந்து தாக்கிவிட்டு செல்போனை பறித்தது என்று கேட்டனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தி, அரிவாள் மற்றும் ஆயுதங்களால் அமுதனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.</p><h2>பரிதாப பலி</h2><p>இதையடுத்து 2 பேர், அமுதனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி விடுதியில் அவரின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் அவரை கத்தி, அரிவாளை மாற்றி பிடித்து தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அமுதன் மயங்கி கிடந்தார். மதியம் 1.30 மணிக்கு சாப்பிட வந்த மாணவர்கள் அறையில் அமுதன் அசைவற்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். </p><p>உடனே அவர்கள் அமுதனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அமுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.</p><p>இந்நிலையில் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்லூரி மாணவர்கள் ஆராமுதன், அரவிந்த், சிவரோகித், மணி பாலு, 17 வயது சிறுவன் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>முகமூடி விலகியது</h2><p>முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-</p><p>கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதனின் நண்பர்கள் பலர் ஒத்தக்கால்மண்டபம், மலுமிச்சம்பட்டியில் அறை எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வருகிறார்கள். அவர்களின் அறைக்கு அமுதன் அடிக்கடி சென்று தங்குவது வழக்கம். தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு 3-ம் ஆண்டு படிக்கும் 9 மாணவர்கள் கடந்த 9-ந் தேதி காலை முகமூடி அணிந்து சென்று உள்ளனர். </p><p>அவர்கள் அங்கிருந்த மாணவர்களை கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போன்களை பறித்துள்ளனர். அவர்களுடன் அமுதனும் சென்றதாக தெரிகிறது. அப்போது, அமுதன் முகத்தில் அணிந்து இருந்த முகமூடி விலகியதால் அவரை மற்ற மாணவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். </p><p>இதன் காரணமாக அமுதனை தாக்கி உள்ளனர். அதில் அமுதன் உயிரிழந்து உள்ளார். மேலும் 4-ம் ஆண்டு மாணவர்களிடம் செல்போன்களை பறித்தது தொடர்பாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>போதைப்பொருள் விற்பனை</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவையில்</a> கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்ததால் அவர் கொல்லப்பட்டதாக பெற்றோர் வேதனையுடன் குற்றச்சாட்டி உள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>உயிருடன் இருப்பவர்களை இறந்தவர் போன்று படுக்க வைத்து சடங்குகள்: கோவில் திருவிழாவில் வினோதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rituals-involving-laying-living-people-down-as-if-they-were-dead-a-unique-event-at-a-temple-festival</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rituals-involving-laying-living-people-down-as-if-they-were-dead-a-unique-event-at-a-temple-festival#comments</comments><guid isPermaLink="false">daf7d06b-4d8a-43df-b2dc-eca9e9f1ec99</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:26:53 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:26:53.331Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,Temple festival,கோவில் திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/4i1lo475/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/4i1lo475/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில், உயிருடன் இருப்பவர்களை இறந்தவர் போன்று படுக்க வைத்து சடங்குகள் செய்த வினோதம் நடைபெற்றது.</p><p>திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பின்னத்தூரில் பொட்டல்மேடு என்ற இடத்தில் 21 தெய்வங்களுக்கு கோவில்கள் உள்ளன. இதில் மாரியம்மன் மற்றும் கலுவடியான் கோவிலில் திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 2-ந் தேதி கரகம் பாலித்தல் மற்றும் காப்புக்கட்டுதலு டன் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>இதையொட்டி தினமும் விநாயகர், கருப்பசாமி, எல்லையம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன், காளியம்மன் என ஒவ் வொரு சுவாமிக்கும் ஒவ்வொரு நாளும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடு பலி யிட்டும், மாவிளக்கு போட்டும், அக்னிச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கழுமரம் ஏறுதல் என்ற வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.</p><h2>சடங்குகள்</h2><p>முன்னதாக கழுமரம் என்று அழைக்கப்படும் பச்சை மூங்கில் மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கழுமரத்தை இளைஞர்கள் தோலில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி வந்து கோவில் முன்பாக தோண்டப்பட்டிருந்த குழியில் ஊன்றி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அருள் வந்த மருளாளி கழுமரத்தின் மீது ஏறி குறிப்பிட்ட உயரத்தில் நின்று சாமி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.</p><p>கழுமரம் இருந்த இடத்தின் கீழ் 2 சிறுவர்களை தரையில் படுக்க வைத்து, இறந்தவர்கள் உடலுக்கு செய்வது போன்று, சிறுவர்களின் கை, கால்களைக்கட்டி வேட்டியால் உடலை மூடி மாலை அணிவித்தனர். பின்னர் தாரை தப்பட்டை முழங்க இறந்தவர்களின் உடலுக்கு செய்யும் சடங்குகளை செய்தனர். இதேபோல் கழுமரத்தின் சற்று தொலைவில் ஒரு குழியில் உயிருடன் உள்ள ஒருவரை பிணம் போல் படுக்க வைத்து, பச்சை தென்னங்கீற்றால் மூடிவிட்டு அவரது உறவினர்கள், பொதுமக்களிடம் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.</p><h2>வினோதம்</h2><p>கழுமரத்தில் இருந்த மருளாளி அருள்வாக்கு கூறிய பின்னர். அந்த மரத்தின் கீழே பிணம் போன்று கிடத்தப்பட்ட சிறுவர்களை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆடுகள் பலியிடப்பட்டு அதன் குடலை எடுத்து அதனை மாலையாக கட்டி குழிக்குள் சடலமாக படுக்க வைக்கப்பட்டவரை எழுப்பி குடல் மாலையை அவருக்கு அணிவித்தனர்.</p><p>பின்னர் அங்கிருந்து கரும்புடையபாறை என்ற இடத்திற்கு சாமி செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய ஐதீகத்தின் அடிப்படையில் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த வினோத திருவிழாவில் பின்னத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>போதைக்கு எதிரான இயக்கம் வெறும் விளம்பரமா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-anti-drug-campaign-just-propaganda-nainar-nagendran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-anti-drug-campaign-just-propaganda-nainar-nagendran-asks#comments</comments><guid isPermaLink="false">12c9549a-c76a-4fb5-92d7-a7f7270b9ad8</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:24:06 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:24:06.520Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,நயினார் நாகேந்திரன்,drugs,போதைப்பொருள்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/nm8h2meo/Untitled-112.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/nm8h2meo/Untitled-112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவனை ஆபத்தில் தள்ளிய கல்லூரி நிர்வாகத்தின் மீது காவல்துறை பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்த மூன்றாம் ஆண்டு மாணவன் அமுதன், 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். தம்பி அமுதனை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>தன் கல்லூரியில் நடக்கும் போதைப்பொருள் கலாசாரத்தைத் தடுக்க முயன்ற ஒரு மாணவனின் உயிரைக் கூடக் காப்பாற்றத் தவறிய முதல்வர் விஜய்யின் அரசு, எந்த முகத்தை வைத்துக்கொண்டு போதைக்கு எதிரான இயக்கத்தைப் பற்றிப் பேசுகிறது என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் எந்த அளவிற்குப் பெருகியுள்ளது என்பதற்கு இந்த கொடூரச் சம்பவமே சாட்சியாகும்.</p><p>எனவே, இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய நபர்களை உடனடியாகக் கைது செய்வதோடு, புகார் அளித்த விவரத்தை ரகசியமாக வைக்காமல் வெளியிட்டு, அந்த மாணவனை ஆபத்தில் தள்ளிய கல்லூரி நிர்வாகத்தின் மீதும் காவல்துறை பாரபட்சமின்றி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறையை அரசியலாக்காமல் உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டும் - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-must-understand-the-facts-regarding-constituency-delimitation-without-politicizing-the-issue-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-must-understand-the-facts-regarding-constituency-delimitation-without-politicizing-the-issue-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">3e78f705-38d5-42ac-9fae-2417d3a9e643</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:22:26 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:22:26.270Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அரசியல்,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Regarding,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/yrot27g7/266.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/yrot27g7/266.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறையை அரசியலாக்காமல் உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இன்று தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவந்திருப்பது இது குறித்த முறையான புரிதல் இன்மையையே மீண்டும் நிரூபித்துள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை என்பது எந்த ஒரு மாநிலத்தையோ, பிரதிநிதித்துவத்தையோ, அரசியல் கட்சியையோ பாதிப்பதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறை அல்ல என்பதை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெருகி வரும் மக்கள் தொகை மாற்றத்துக்கு ஏற்ப ஒவ்வொரு வாக்காளருக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே தொகுதி மறுவரையின் அடிப்படை நோக்கம்.</p><p>உதாரணமாக ஒரு தொகுதியில் மக்கள் தொகை பெரிதும் அதிகரித்தும், ஆனால் மற்றொரு தொகுதியில் குறைவாக இருந்தும் ஒரே அளவிலான பிரதிநிதித்துவம் தொடரும் போது, ஒவ்வொரு வாக்கின் பிரதிநிதித்துவ மதிப்பில் சமநிலையின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைச் சரிசெய்வதே தொகுதி மறுவரையறையின் முக்கிய நோக்கம்.</p><p>இதற்கு முன்பாக கடந்த 1952,1963, 1973, 2002 என நான்கு முறை தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, அந்த ஆணையத்தின் (Delimitation Commission)-ன் உத்தரவுகள் சட்ட வலிமை கொண்டவை, நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றம் அவற்றை மாற்ற முடியாது என்றும் தெரிவிக்கிறது.</p><p>மேலும், 84 வது மற்றும் 87வது அரசியலமைப்புத் திருத்தங்களின் மூலம், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்களவை இடங்களின் எண்ணிக்கை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 2026க்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை மாற்றமின்றி வைக்கப்பட்டது. அதே நேரத்தில், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. எனவே தொகுதி மறுவரையறை மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் நடவடிக்கை என்று முன்கூட்டியே கூறுவது முழுமையான உண்மையை பிரதிபலிக்காது.</p><h2>நாட்டின் நலன்</h2><p>மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம், ஒவ்வொரு வாக்காளருக்கும் சமமான அரசியல் பிரதிநிதித்துவம், மாநிலங்களுக்கிடையேயான சமநிலை ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு வெளிப்படையான முறையில் விவாதிப்பதே ஜனநாயகத்திற்கு உகந்தது. நாட்டின் நலனை முன்னிறுத்தாமல் தாங்கள் சார்ந்த கட்சியின் நலனை முன்னிறுத்தும் நோக்கில் தொகுதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">மறுவரையறைக்கு</a> எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே.</p><p>எனவே இவற்றில் அரசியல் தலையீடு இன்றி  தொகுதி மறுவரையறை பற்றிய உண்மைகளை அறிந்து வளர்ச்சி பாரதத்திற்கான ஏணிப்படிகளை நோக்கி முன்னேறுவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை: 17-ம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/four-day-break-for-the-legislative-assembly-debate-on-demands-for-grants-on-the-17th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/four-day-break-for-the-legislative-assembly-debate-on-demands-for-grants-on-the-17th#comments</comments><guid isPermaLink="false">fae5a4d0-82e6-4aa6-915f-41ea3e1a1379</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:06:12 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:06:12.171Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,பட்ஜெட்,Budget,மானிய கோரிக்கை,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,சட்டமன்ற கூட்டத்தொடர்,Budget 2026</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/wqkb94te/viji.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/wqkb94te/viji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. </p><h2>சட்டசபை கூட்டம்</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. </p><p>இந்த நிலையில், கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள், <a href="https://www.dailythanthi.com/topic/budget">பொது பட்ஜெட்</a> மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/budget">வேளாண் பட்ஜெட் </a>மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். </p><h2>4 நாட்கள் விடுமுறை </h2><p>அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் இன்று, 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.dailythanthi.com/topic/budget">பொது பட்ஜெட்</a> மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/budget">வேளாண் பட்ஜெட்</a> மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, இன்றைய கூட்டம் நிறைவடைந்தது. </p><p>நாளை (13-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (14-ந் தேதி) சட்டசபை கூட்டம் கிடையாது. மறுநாள் (15-ந் தேதி) சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை நாளாகும். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றும் விடுமுறை வருகிறது. இப்படி, தொடர்ந்து 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. </p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>அடுத்து வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கின்றது. அன்று முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் தொடங்குகிறது. </p><p>முதல் நாளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: ஐபோன்களை திருடிய பட்டதாரி பெண் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-graduate-woman-arrested-for-stealing-iphones</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-graduate-woman-arrested-for-stealing-iphones#comments</comments><guid isPermaLink="false">82eda20a-67b0-4c88-ada7-d660b00d4f3e</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:52:58 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:52:58.922Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,woman arrested,police enquiry,ஐபோன்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/iizp1cgx/4.jpg" width="753"><media:title type="html"><![CDATA[  கைது செய்யப்பட்ட சந்தோஷினி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஐபோன் திருடிய பட்டதாரி பெண் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/iizp1cgx/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் விலை உயர்ந்த ஐபோன்களை திருடிய பட்டதாரி பெண் ஒருவரை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.</p><h2>விடுதியில் தொடர் திருட்டு</h2><p>சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மகளிர் விடுதியில் ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவிகள் பலர் தங்கிப் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த விடுதியில் தங்கியிருந்த பெண்களின் விலை உயர்ந்த ஐபோன்கள் அடுத்தடுத்து மாயமாகின. இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், இதுகுறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விடுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அங்கு தங்கியிருந்த பெண்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு தங்கியிருந்து, வேலை தேடி வந்த ஒரு பெண்ணின் நடவடிக்கைகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.</p><h2>பட்டதாரி பெண் சிக்கினார்</h2><p>அந்தப் பெண்ணைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர்தான் ஐபோன்களை திருடினார் என்பது உறுதியானது. விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த சந்தோஷினி (வயது 26) என்பதும், பி.காம் பட்டதாரி என்பதும் தெரியவந்தது.</p><p>சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட சந்தோஷினி, அதற்கு பணம் தேவைப்பட்டதால் விடுதி தோழிகளின் கவனத்தைத் திசை திருப்பி ஐபோன்களை திருடினார். திருடிய போன்களை விற்று ஆடம்பரமாக செலவு செய்ய திட்டமிட்டிருந்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.</p><h2>பழைய குற்றம்- கைது</h2><p>போலீசாரின் தொடர் விசாரணையில் சந்தோஷினி மீது ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பது தெரியவந்தது. சென்னையில் தங்கியிருந்தபோது தனது உறவினர் ஒருவரைத் தாக்கிய வழக்கில் இவர் ஏற்கனவே சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்ட சந்தோஷினியிடம் இருந்து விலை உயர்ந்த ஐபோன்களை மீட்ட போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறையை எதிர்த்து நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-resolution-against-delimitation-unnecessary-says-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-resolution-against-delimitation-unnecessary-says-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">f69c0a3b-cb7f-4e0f-8ae9-86e53938d6aa</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:45:40 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:45:40.012Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தனித்தீர்மானம்,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/t23xn81i/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/t23xn81i/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு மசோதாவையும்  நாடாளுமன்றத்தில் கொண்டு வராத நிலையில் அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நாடாளுமன்ற மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே இருக்க வேண்டும், மாநிலங்களுக்கான விகிதாச்சார அளவில் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் உள்ளிட்டவை அடங்கிய தொகுதி மறுவரையறை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் இன்று கொண்டு வந்துள்ளார்.</p><p>மத்திய அரசு, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடாத நிலையில், காவிரி நீர், மேகதாது அணை, முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, மின் கட்டணத்தில் குளறுபடி, போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற தமிழகத்தின் தற்போதைய தலையாய பிரச்னைகளை மறைக்க, தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டியதோடு, தற்போது சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் என்ற மற்றொரு நாடகத்தையும் தவெக அரசு அரங்கேற்றியுள்ளது.</p><p>தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொகுதி மறுவரையறை தொடர்பாக பேசிவிட்டுச் சென்ற அடுத்த வாரமே எம்.பி.க்கள் கூட்டம், அதற்கு அடுத்த வாரமே அரசினர் தீர்மானம் என அவசரகதியில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஆளும் தவெக அரசை காங்கிரஸ் கட்சிதான் இயக்குகிறதோ? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையில், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உட்பட எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்பதோடு, நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவிகிதத்திலிருந்து 7.23 சதவிகிதமாக அதிகரிக்கும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெளிவுபடுத்திய பின்பும், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிப்படையும் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை தமிழக மக்கள் மத்தியில் தற்போது தவெக அரசு திட்டமிட்டு பரப்புவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>எனவே, கடந்த மூன்று மாத கால தவெக ஆட்சியில் தினந்தோறும் எழும் மக்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்பவும், காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தனது இயலாமையை மறைக்கவும், இதுபோன்ற தற்போதைய அவசியமற்ற விஷயங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து காலத்தை வீணாக்காமல், தமிழகத்தின் தலையாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் சொத்து வரி 4 மடங்கு உயர்வா? - மாநகராட்சி ஆணையர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/four-fold-hike-in-property-tax-in-chennai-corporation-commissioner-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/four-fold-hike-in-property-tax-in-chennai-corporation-commissioner-clarifies#comments</comments><guid isPermaLink="false">ee7a8364-2710-4f9c-8437-161f17846458</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:43:56 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:43:56.556Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சொத்து வரி,Property Tax</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/qu20a8dc/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/qu20a8dc/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று காலை அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.</p><h2>சொத்து வரி</h2><p>சென்னை மாநகராட்சியின் பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. இதன் மூலமே, சென்னை மாநகருக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பைகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம், நோய்த் தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில், சென்னையில் சொத்துவரி 3 முதல் 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று காலை அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூபாய் 5,000 சொத்து வரி கட்டிய கட்டிட உரிமையாளருக்கு தற்போது ரூ.28,000 சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது.</p><p>எவ்வித காரணமும் இன்றி முறையான அறிவிப்பு இல்லாமல் சொத்து வரியை 4 மடங்கு உயர்த்தி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 3 முதல் 4 மடங்கு அதிகரித்தது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.</p><h2>யாரும் நம்ப வேண்டாம்</h2><p>இந்நிலையில், சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்று மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு வரி செலுத்தி வந்த சொத்து உரிமையாளர்களுக்கு மட்டுமே தற்போதைய மறுஅளவீட்டின் படி திருத்தப்பட்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.</p><p>சொத்து வரி மதிப்பீட்டு திருத்தம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டு ஆணையினை பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் சொத்து உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்யலாம். அத்தகைய மேல்முறையீடுகள் 30 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும். எனவே, அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் பொய்யான மற்றும் ஆதாரமற்ற வதந்திகளைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-based-census-anbumani-ramadoss-writes-to-prime-minister-modi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-based-census-anbumani-ramadoss-writes-to-prime-minister-modi#comments</comments><guid isPermaLink="false">2345e23e-1901-4f5c-8b09-1f2ef12beb0a</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:43:43 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:43:43.622Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,பிரதமர் மோடி,அன்புமணி ராமதாஸ்,பாமக,PMK,தமிழகம்,Modi,புதுடெல்லி,Narendra Modi,Census,சாதிவாரி கணக்கெடுப்பு,Castewise Census,Caste Census,சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு,மக்கள்தொகை கணக்கெடுப்பு,NewDelhi,Anbumani Ramadass</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8xs4gble/mkoe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8xs4gble/mkoe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதிகள் பட்டியலில் இருந்து சாதியை  தேர்ந்தெடுத்து நிரப்பும் முறையை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  தெரிவித்துள்ளார். </p><h2>100 ஆண்டுகளுக்குப் பிறகு</h2><p>இது தொடர்பாக  <a href="https://www.dailythanthi.com/topic/narendra-modi">பிரதமர் நரேந்திர மோடி</a>க்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இந்தியாவில் முழுமையான சமூகநீதியை ஏற்படுத்தும் நோக்குடன், 2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட  வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2026&amp;27ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று தங்களின் அரசு அறிவித்திருப்பதற்காக எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வந்த கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். இதன் காரணமாக  சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இது இந்தியாவில் சமூகநீதியை பாதுகாப்பதில் நீண்டகாலத்திற்கு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்</p><h2>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு</h2><p>அதேநேரத்தில், இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதில் கடைபிடிக்கப்படும் சில நடைமுறைகளால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுவிடக் கூடும் என்பதால், அது குறித்த எனது கவலைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமான  வீட்டுப்பட்டியல் தயாரிப்பு பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.</p><p>அடுத்தக்கட்டமாக, மக்களை எண்ணும் பணிகள் மலைப்பிரதேசங்களில் உள்ள மாநிலங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதலும், மற்ற மாநிலங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதலும் நடைபெறவுள்ளன. இந்த பணியின் போது, சாதி என்ற கேள்விக்கான பதிலை குறிப்பிடும் பகுதியை காலியாக விட்டு விடுவதென்றும், அந்த இடத்தில் மக்கள் குறிப்பிடும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வதென்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இந்தியத் தலைமைப் பதிவாளர் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில்  செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2>46 லட்சத்து 70 ஆயிரம் சாதிகள்</h2><p>இந்த முறையில் மக்களின் சாதி விவரம் சேகரிக்கப்பட்டால், நிறைய சிக்கல்கள் ஏற்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் சாதியின் பெயரைக் கடந்து உள்பிரிவுகளால் தங்களை அழைத்துக் கொள்வார்கள். ஆனால், அந்த உட்பிரிவுகளின் பெயர்கள் அரசால் பயன்படுத்தப்படும் சாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. இத்தகைய சூழலில், மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அப்படியே நிரப்பி, அது சாதியின் பெயராக இல்லாமல், உட்பிரிவின் பெயராக இருந்தால், ஒரு அரசின் பட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக சாதிகள் இருப்பதாக கணக்கில் காட்டப்படும். இது சரி செய்ய முடியாத குழப்பத்தை  உண்டாக்கி, இந்தக் கணக்கெடுப்பின் தரவுகளை பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிடும்.</p><p>2011-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்பட்டது. அதற்கான வினாக்கள் பட்டியலில் இதே போல் தான் சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் விடப்பட்டு, மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அதில் குறிப்பிடும் முறை பின்பற்றப் பட்டது. அதன் விளைவு அந்தக் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 46 லட்சத்து 70 ஆயிரம் சாதிகள் இருப்பதாக தெரியவந்தது. </p><h2>சிக்கலுக்கான தீர்வு எளிதானது</h2><p>இந்தியாவில் 1931-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 4,147 சாதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், 2011 கணக்கெடுப்பில் 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாகக் கூறப்பட்டது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால், அந்தக் கணக்கெடுப்பு தரவுகள் சமூகநீதிக்காக பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு விட்டன.</p><p>இந்த சிக்கலுக்கான தீர்வு மிகவும் எளிதானது. இந்தியாவில் என்னென்ன சாதிகள் உள்ளன? என்பது குறித்த பட்டியல் மத்திய அரசிடமும், மாநில அரசுகளிடமும் உள்ளன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் நிலையில், அந்தப் பட்டியலை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான  செயலியின் மென்பொருளில் இணைத்து, அந்தப் பட்டியலில் இருந்து மக்கள் தங்கள் சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவது தான் சரியான தீர்வாகும்.</p><h2>துல்லியமான விவரங்கள்</h2><p>கடந்த 2023-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்திலும், 2024-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்திலும் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில், அரசின் பட்டியலில் உள்ள சாதிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அதை மக்கள் தேர்ந்தெடுத்து நிரப்பும் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன் பயனாக பீகார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள் கிடைத்தன. அதனால்  அதே முறையை  இந்த  கணக்கெடுப்பிலும் பின்பற்றலாம்.</p><p>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள மக்களை எண்ணும் பணியின் போது மத்திய அரசின் சாதிகள் பட்டியலைக் காட்டி, அதிலிருந்து அவர்களின் சாதி மற்றும் எண்ணை  பதிவு செய்யும் முறை கடைபிடிக்கும்படி  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்திற்கு தாங்கள் அறிவுறுத்தல்களை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.</p> <h2>அவசர கோரிக்கை</h2><p>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிகளை பதிவு செய்யும்பணிகள் இன்னும் இரு வாரங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதை அவசர கோரிக்கையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை ஒட்டுமொத்த நாடும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. சமூகநீதியை காப்பதற்காக இதை செய்யும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>கஞ்சா விற்பதில் தகராறு: பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நண்பர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-ganja-sales-associate-arrested-for-hurling-a-country-made-bomb-at-a-notorious-rowdys-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-ganja-sales-associate-arrested-for-hurling-a-country-made-bomb-at-a-notorious-rowdys-house#comments</comments><guid isPermaLink="false">3a2d0d94-11ad-4f29-a4c6-e31c3c163ae9</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:27:28 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:27:28.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Ganja,கஞ்சா,House,BOMB,கைது arrested,நாட்டு வெடிகுண்டு வீச்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/lk2be5kp/265.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/lk2be5kp/265.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நண்பர் கைது செய்யப்பட்டார். </p><h2>நாட்டு வெடிகுண்டு வீச்சு</h2><p>சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான வீரா மற்றும் அவருடைய நண்பரான விஜய்  ஆகியோர் இணைந்து கஞ்சா விற்பனை செய்து வந்தனர். விற்பனை செய்த பணத்தை பிரிப்பதில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. </p><p>இதனால், நண்பர்கள் இருவருக்கும் இடையே பகை உண்டானது. இந்த நிலையில், ரவுடி வீராவின் வீட்டு மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு, அவரது நண்பர் விஜய் ஓடிவிட்டார். இதில், வீட்டின் முன்பகுதி சேதம் அடைந்தது. அனைவரும் வீட்டின் உள்ளே இருந்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.</p><h2>கைது</h2><p>வெடிகுண்டு வீச்சு சம்பவம் குறித்து கிளாம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த விஜய்யை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று விஜய்யை போலீசார் கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.61.73 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velinaatil-velai-vaangi-tharuvathaga-vaalibaridam-rs-61-73-latcham-mosadi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velinaatil-velai-vaangi-tharuvathaga-vaalibaridam-rs-61-73-latcham-mosadi#comments</comments><guid isPermaLink="false">cbb345c4-de69-48e6-94d6-46615ef2db46</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:24:10 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:24:10.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மோசடி,சிவகங்கை,Sivagangai,Duping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/drygiu96/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/drygiu96/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.61.73 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>ஜெர்மன் நாட்டில் வேலை</h2><p>திருப்பத்தூரை அடுத்த பட்டமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேஷ் (28 வயது). இவருடைய செல்போனில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்பு கொண்டு பேசிய 2 பேர் ஜெர்மன் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பிய கணேஷ் அவர்கள் கூறியபடி பதிவு கட்டணம், இன்சூரன்ஸ், விசா, மருத்துவ பரிசோதனை, பணம் டெபாசிட் செய்வது உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு தவணைகளில் ரூ.61 லட்சத்து 73 ஆயிரத்து 461 செலுத்தியதாக கூறப்படுகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அதன் பின்னர் அவர்கள் கணேசை ஜெர்மன் நாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கணேஷ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-prime-minister-must-emerge-from-tamil-nadu-aadav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-prime-minister-must-emerge-from-tamil-nadu-aadav-arjuna#comments</comments><guid isPermaLink="false">8f504e22-7070-477b-85e9-3fc243c50d1c</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:13:01 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:13:01.008Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,சட்டசபை,TN Assembly,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9wnerm94/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9wnerm94/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.</p><p><strong>தொகுதி மறுவரையறை எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-</strong></p><p>வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். மாநிலங்கள் இல்லாமல், ஒன்றிய அரசு இல்லை. மாநிலங்கள் இல்லாமல், இந்தியா வளர முடியாது. ஒன்றிய அரசு எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். தேர்தல் அரசியலுக்காக பாஜக சட்டங்களை கொண்டு வர நினைக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. அரசியலமைப்பை பாதுகாக்கவே தற்போது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு உள்ளது.</p><p>தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. மாநில சுயாட்சிக்காக கருணாநிதியும் ஜெயலலிதாவும் குரல் கொடுத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மாறுபடும் நேரத்தில் நமக்கான உரிமை பறிபோகும். நீட்டை விட முக்கியமான தீரம்னம் தொகுதி மறுவறையறைக்கு எதிரான தீர்மானம். தொகுதி மறுவறையறைக்கு எதிராக முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். அதனை வரவேற்கிறோம்.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த திமுகவிற்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்படும்போது தமிழ்நாட்டின் 39 எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்யாமல், மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அரசியல் ரீதியாக திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இருந்து அதனை எதிர்க்க வேண்டும்.</p><p>Fair Demilitation Freeze Delimitation தற்போது முக்கியமானது. 50% உயர்ந்தால் நமக்கு பலன் கிடைக்கும் என பிரேமலதா கூறினார்; ஆனால் அது அப்படி கிடையாது. தொகுதிகளை 50% உயர்த்தினாலும் வட இந்திய ஆதிக்கம் உருவாகும் சூழல் ஏற்படும். அண்ணா அன்றே முழங்கினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று. மாநில நலனுக்காக கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். 5 முதல் 6 இந்தி பேசும் மாநிலங்கள் ஒன்றிணைந்தாலே பிரதமரை தேர்வு செய்யலாம் என்ற சூழல் உள்ளது; அது மாற்றப்பட வேண்டும்; தென் இந்தியாவில் இருந்து.., ஏன் தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிமச் சட்டத் திருத்தம் தேவையற்றது - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/min-sattath-thiruththam-thevaiyatraathu-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/min-sattath-thiruththam-thevaiyatraathu-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">318b9471-f27f-485b-8122-37e695dac7c9</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:03:59 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:03:59.067Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,கனிமச் சட்ட திருத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/d3hshzbu/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/d3hshzbu/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் 9டி என்ற புதிய பிரிவை சேர்ப்பதற்கான சட்டத் திருத்த முன்வரைவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தக் கூடிய இச்சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்த முன்வரைவின் மூலம் சேர்க்கப்படவுள்ள 9டி பிரிவு மிகவும் ஆபத்தானது. அந்த பிரிவின்படி, கனிம வளங்கள் உரிமை மீது எந்த வரியையும், கூடுதல் வரியையும், தீர்வைகளையும் மாநில அரசுகள் தன்னிச்சையாக  விதிக்க முடியாது. அதுமட்டுமின்றி, மாநில அரசுகளால் ஏற்கனவே இதுபோன்ற வரிகள் விதிக்கப்பட்டு, அதை கனிமச் சுரங்க ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் இருந்தால், இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும்போது, நிலுவையில் உள்ள வரித் தொகையை செலுத்தத் தேவையில்லை. கனிமங்கள், அவை கிடைக்கும் நிலங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும், மத்திய அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் மட்டும்தான் வரி விதிக்க முடியும்.</p><p>சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத் திருத்த முன்வரைவு மாநில அரசின் வரி விதித்து, வருவாய் ஈட்டும் அதிகாரத்தைப் பறிக்கிறது. நிலங்கள், கனிமங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும் கூட, வரி விதிப்பை முறைப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதை பயன்படுத்தி கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு முயல்கிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.</p><p>2025&amp;26ம் ஆண்டில் கனிம வளங்கள் மீதான வரி, ராயல்டி உள்ளிட்ட அம்சங்கள் மூலம் தமிழ்நாடு அரசு ரூ.4,100 கோடி வருவாய் ஈட்டியது. 2026&amp;27ம் ஆண்டில் இந்த வருவாயை ரூ.11 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தமிழ்நாட்டின் கனிமவளங்கள் முறையாக கையாளப்பட்டால் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்ட முடியும் என்பது பாமகவின் நிலைப்பாடு ஆகும். எந்தெந்த வகைகளில் எல்லாம் இந்த வருவாயை ஈட்ட முடியும் என்பதை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நிழல் நிதிநிலை அறிக்கைகளில் பாட்டாளி மக்கள் கட்சி தெளிவாக விவரித்திருக்கிறது.</p><p>சரக்குகள் மற்றும் சேவை வரி விதிப்பு சட்டம் 2017ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த பிறகு மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டு விட்டது. மதிப்புக் கூட்டு வரி, மோட்டார் வாகன வரி, பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் கனிமங்கள் மீதான வரிகள் மூலமாகத் தான் மாநில அரசுகள் தங்களுக்கான வருவாயைத் திரட்ட வேண்டியுள்ளது. அதையும் பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றுவது மாநில அரசுகளின் வருவாய் ஆதாரங்களை முடக்கி மக்களுக்கு எந்த வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.</p><p>அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தான் இந்த சட்டத் திருத்தத்தால் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெற்றது. கனிமக் கொள்ளையை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததைத் தொடர்ந்து கனிமக் கொள்ளைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றின் மீது பல்வேறு வரிகளும், அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தவணை முறையிலும் செலுத்தலாம் என்று சலுகை வழங்கப்பட்டதால், அவற்றில் பெரும்பாலான தொகை இன்னும் வசூலிக்கப்படவில்லை. இப்போது கனிமச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், கனிமக் கொள்ளை நடத்தியவர்களிடமிருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய வருமானம் தடைபடும் ஆபத்து உள்ளது.</p><p>கனிமங்களைத் தாங்கி நிற்கும் நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில் கடந்த 25.07.2024ம் நாள் தீர்ப்பளித்த 9 நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சட்ட அமர்வு, கனிமங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாக அறிவித்தது. அந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தான் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு கொண்டு வரும் சட்டத் திருத்தங்கள் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர, மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாது. எனவே, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு உரிமைகளுக்காக இறுதிவரை களத்தில் நிற்போம் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-stand-firm-in-the-battle-for-tamil-nadus-rights-and-oppose-the-constituency-delimitation-bill-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-stand-firm-in-the-battle-for-tamil-nadus-rights-and-oppose-the-constituency-delimitation-bill-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">963ddc36-d37a-42b8-8ff3-a53e7c874f7f</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:03:40 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:03:40.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,constituency,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,In Tamil Nadu,Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/d58izrxj/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/d58izrxj/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>தொகுதி மறுவரையறை மசோதா</h2><p>மக்களவை உறுப்பினர்களின் தற்போதுள்ள எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும். இந்த தொகுதிகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ள, அரசின் தனித் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்.</p><p>கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட ‘தொகுதி மறுவரையறை மசோதா”வை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மீண்டும் கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது.</p><p>இந்த மசோதா சட்டமானால், மாநிலங்களுக்கு இடையிலான மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த போக்கை தடுத்து நிறுத்தத் தான் 1971 மக்கள் தொகை அடிப்படையில் தற்போதுள்ள 543 தொகுதிகளே நீடிக்க வேண்டுமென்ற வகையில் அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 1976 இல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து  2001 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டுமென்று முடிவெடுத்தார். அதற்கு பிறகு 2001 ஆம் ஆண்டில்  பிரதமராக இருந்த ஏ.பி.வாஜ்பாய் இதே நிலையை இன்னும் 25 ஆண்டுகளுக்கு 2026 வரை நீட்டிப்பு செய்தார். ஆனால், தற்போதுள்ள நரேந்திர மோடி அரசு, மக்கள் தொகை பெருக்கத்திற்கு இணையாக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்தினால் மாநிலங்களிடையே வேறுபாடு வளர்ந்து, சமநிலைத்தன்மை சீர்குலைந்து விடும்.</p><h2>வித்தியாசம்</h2><p>இந்த மசோதா சட்டமானால், ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, மக்கள் தொகையைக் குறைத்த தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்குத் தண்டனை கொடுத்தது போலவும், மக்கள் தொகையைக் குறைக்காத வட மாநிலங்களுக்குப் பரிசு கொடுத்தது போலவும் ஆகிவிடும். உத்தரப் பிரதேசம் - தமிழ்நாடு இடையிலான தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம், 41இல் இருந்து 62 ஆக அதிகரிக்கும். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், மாநிலங்களவை அதிகாரமற்றதாக மாறிவிடும்.</p><p>மக்களவையில் 815 எம்.பி.க்கள் இருந்தால், பெரும்பாலானோருக்குப் பேச வாய்ப்புக் கிடைக்காது. தனிப்பட்ட எம்.பி.யின் முக்கியத்துவம் குறைந்து, ‘ஒரு எம்.பி., ஒரு வாக்கு” என்பது அர்த்தமற்றதாகிவிடும். ஒட்டுமொத்தத்தில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> சட்ட மசோதா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும். மாநில சுயாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய நம் இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிடும்.</p><h2>இறுதிவரை களத்தில் நிற்போம்</h2><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதி, துரோகம். எனவே, அப்படிப்பட்ட கட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.</p><p>தமிழ்நாட்டின் உரிமைகளையும், இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து மத்திய பாஜக அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்பிக்கவே முடியாது. தமிழ்நாட்டின் குரலாய், மக்களாட்சியின் காவலனாய் நாம் இறுதிவரை களத்தில் நிற்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யானைக் கூட்டத்தை சீண்டியவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-25000-fine-for-those-who-harassed-a-herd-of-elephants</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-25000-fine-for-those-who-harassed-a-herd-of-elephants#comments</comments><guid isPermaLink="false">4320e923-e4e0-4fbb-8c59-469b25178c6f</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:02:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:02:13.535Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,அபராதம்,Kovai,Penalties,யானை கூட்டம்,Forest Officer</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9iz30rb2/3.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ யானைக் கூட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ யானைக் கூட்டத்தை தொந்தரவு செய்த 5 இளைஞர்களுக்கு வனத்துறையினர் ரூ. 25,000 அபராதம் விதித்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9iz30rb2/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோயம்புத்தூர் மாவட்டம்</a> மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, யானைக் கூட்டத்தை தொந்தரவு செய்த 5 இளைஞர்களுக்கு வனத்துறையினர் ரூ. 25,000 அபராதம் விதித்தனர்.</p><h2>வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள்</h2><p>கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை நீர்நிலை பகுதிக்கு, வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வருவது வழக்கம். சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பதிவுகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள், பைக்குகளில் தடைசெய்யப்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர். அவர்கள் அங்கு வந்த யானைகளின் வழித்தடத்தில் காத்திருந்து, அவற்றை நெருங்கி வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க முயன்று தொந்தரவு செய்தனர்.</p><h2>வனத்துறை நடவடிக்கை</h2><p>அப்போது, அந்தப் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், அத்துமீறி நுழைந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர். வனச்சட்ட விதிகளின்படி, வனப்பகுதிக்குள் அத்துமீறிய குற்றத்திற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5,000 வீதம், மொத்தம் ரூ. 25,000 கூட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு குறித்த கடுமையான எச்சரிக்கையும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வனப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.</p><h2>வனத்துறையின் கடுமையான எச்சரிக்கை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/வனவிலங்கு">வனவிலங்கு </a>பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் யானைகள் மிக உயர்ந்த பாதுகாப்பைப் பெற்ற விலங்கினமாகும். சமூக ஊடக லைக்ஸ்களுக்காக யானைகளின் அருகில் செல்வது, செல்பி எடுப்பது, கற்களை எறிந்து தொந்தரவு செய்வது சட்டப்படி குற்றமாகும்.</p><p>சமீபத்தில் பொள்ளாச்சி அருகே யானையை விரட்ட முயன்ற நபர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய செயல்கள் விலங்குகளை ஆக்ரோஷமடையச் செய்து மனித-விலங்கு மோதல்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் வனப்பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-against-constituency-delimitation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-against-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">b9325528-eec0-48c6-b234-03f9949cb676</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:43:36 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:43:36.014Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,திமுக,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,TN govt,Delimitation of Constituencies,தனித்தீர்மானம்,தமிழக செய்திகள்,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/s492e7pp/thoikuuth.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/s492e7pp/thoikuuth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். </p><h2>சட்டசபையில் தனித் தீர்மானம்</h2><p>தமிழக சட்டசபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானத்தை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> முன்மொழிந்தார். </p><p>அப்போது பேசிய <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>, "நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கு இடையே, அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போது உள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும். வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.</p><h2>பா.ஜ.க., பா.ம.க., அ.தி.மு.க. எதிர்ப்பு</h2><p>இதையடுத்து இந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி பாஜகவின் போஜராஜன் பேசுகையில், பரிசீலனையில் உள்ள மசோதா குறித்து அவசரப்பட்டு தீர்மானம் கொண்டு வருவதாக எதிர்ப்பு தெரிவித்தார்.</p><p>பாமக எம்.எல்.ஏ., கணேஷ் குமார் பேசுகையில், “ஒன்றிய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வருமா? வராதா? என்ற சூழ்நிலையில், செவிவழி செய்தியை வைத்துக் கொண்டு இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதன் அவசியம் என்ன? முதல்-அமைச்சர் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும். மகளிர் உரிமை அதிகாரத்திற்கு எதிராக பாமக ஒருபோதும் நிற்காது” என்று அவர் கூறினார்.</p><p>அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக தவெக அரசு அவசரமாக தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தீர்மானத்தை எதிர்க்கும் அதேநேரம் மகளிர் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்துவதை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.</p><h2>தி.மு.க. தலைவர் கடிதம்</h2><p>சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தொகுதி மறுவரையறை எனக்கூறி தமிழ்நாட்டின் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம் என 2024ம் ஆண்டே தீர்மானம் போட்டோம். இதன் ஆபத்தை விளக்கி தென் மாநில முதல்வர்களுக்கு எங்கள் தலைவர் கடிதம் எழுதி இருந்தார்.</p><p>DELIMITATION கொண்டுவந்தால் அது எவ்வளவு பெரிய பாதிப்பாக அமையும் என்பதை இந்தியாவுக்கே முதலில் சொல்லியவர் அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.</p><p>7 மாநில முதல்-மந்திரிகளுக்கு தொகுதி மறுவரையறை பற்றிய ஆபத்தை எடுத்து உரைத்து தி.மு.க. தலைவர் கடிதம் எழுதினார். Join Action Committee யை சென்னையில் உருவாக்கினோம். ஒருங்கிணைந்த செயல்திட்ட கூட்டத்தையும் எங்கள் தலைவர் நடத்தினார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை இந்த சட்டமன்றத்திலும் விளக்கி கூறினார். மசோதா நகலை எரித்து எதிர்ப்பை வெளிக்காட்டினோம்.</p><h2>தி.மு.க. வரவேற்பு</h2><p>தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது.  அதற்கு திமுக தெரிவித்த எதிர்ப்பு தான் நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தோல்வி அடைந்தது. மீண்டும் அந்த மசோதாவை தற்போது கொண்டு வர நினைக்கிறார்கள். நாங்கள் காட்டிய எதிர்ப்பு தான் மசோதா தோற்கடிக்கப்பட்ட காரணம். திமுகவை பொறுத்தவரை 33 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறோம். வரவேற்கிறோம். </p><p>மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பிரதிநிதித்துவம் 7.18% என்ற அளவில் இருந்து குறையக் கூடாது. </p><p>அரசினர் தனித்தீர்மானத்திற்கு திமுக வரவேற்கிறது. அரசு கொண்டு வந்த இரண்டு தீர்மானத்திற்கும் திமுக ஆதரவு தெரிவித்து வரவேற்கிறது” என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>யானைகளைப் பாதுகாப்போம்; காடுகளைப் பாதுகாப்போம் - அமைச்சர் ரஞ்சித்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-protect-elephants-let-us-protect-forests-minister-ranjithkumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-protect-elephants-let-us-protect-forests-minister-ranjithkumar#comments</comments><guid isPermaLink="false">79a32ed2-00a2-498a-bae2-4f5d3e6c0d2c</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:03:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:03:51.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,யானை,Forest,protect,A wild elephant,காடுகள்,வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார்,Minister Ranjithkumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/hx52rtg9/264.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரஞ்சித்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/hx52rtg9/264.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>யானைகளைப் பாதுகாப்போம்; காடுகளைப் பாதுகாப்போம் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார்.</p><p>உலக யானைகள் தினத்தையொட்டி வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்திருப்பதாவது:-</p><h2>யானைகள்</h2><p>யானைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், அவற்றின் இயற்கையான வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கும் நாளாக இது அமைகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின் படி, யானைகள் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல் மற்றும் மனித – யானை மோதலைத் தணித்தல் ஆகியவற்றிற்கு அறிவியல் சார்ந்த, நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான மற்றும் சமூகப் பங்கேற்புடன் கூடிய அணுகுமுறைகள் மூலம் தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.</p><p>யானைகள் நமது காடுகளின் வளத்தையும் இயற்கைச் சூழலின் சமநிலையையும் பேணுவதில் மிக முக்கியப் பங்காற்றும் உயிரினங்களாகும். காடுகளில் விதைகளைப் பரப்புதல், தாவர வளர்ச்சிக்கு வழிவகுத்தல், வனப்பகுதிகளில் இயற்கையான பாதைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சூழலியல் பணிகளை மேற்கொள்வதால், யானைகள் “சூழலியல் பொறியாளர்கள் (Ecological Engineers)” எனப் போற்றப்படுகின்றன. எனவே, யானைகளைப் பாதுகாப்பது என்பது ஓர் உயிரினத்தை மட்டும் பாதுகாப்பது அல்ல; அவற்றைச் சார்ந்துள்ள காடுகள், நீராதாரங்கள், இயற்கையான வாழ்விடங்கள் மற்றும் அங்கு வாழும் ஒட்டுமொத்த பல்லுயிரினங்களையும் பாதுகாப்பதாகும்.</p><h2>வரலாறு மற்றும் பண்பாடு</h2><p>தமிழ்நாட்டின் இயற்கை, வரலாறு மற்றும் பண்பாட்டுடன் யானைகளுக்கு நீண்டகாலத் தொடர்பு உள்ளது. தமிழ் மரபில் யானை, வேழம், களிறு, பிடி, கரி, குஞ்சரம், வாரணம் எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களால் யானைகள் அழைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் தொடங்கி பல்வேறு தமிழ் இலக்கியங்களிலும் யானைகள் வலிமை, வளம் மற்றும் வீரத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டுள்ளன. “களிறுமிக உடையஇக் கவின்பெறு காடே” எனப் புறநானூறு யானைகள் நிறைந்த வளமான காட்டின் அழகைப் போற்றுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யானைகளும் வளமான காடுகளும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை என்ற சூழலியல் புரிதல் தமிழர் வாழ்வியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>இந்தியாவில் யானைகள் வாழும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பரவியுள்ள விரிவான யானை வாழ்விடங்கள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகத்தின் வனப்பகுதிகளுடன் இயற்கையாகத் தொடர்ச்சியடைந்து, பரந்த மாநிலங்களுக்கு இடையேயான யானை வாழ்விட நிலப்பரப்பாக அமைந்துள்ளன. 2025 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த யானைகள் எண்ணிக்கைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 3,170 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9.1 இலட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் ஐந்து யானைகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2>முகாம்களில் பயிற்சி</h2><p>தமிழ்நாடு வனத்துறையின் நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட யானைகள் முகாம்களில், பராமரிப்பில் உள்ள யானைகள் அறிவியல் அடிப்படையிலான நடைமுறைகளின்படி பராமரிக்கப்பட்டு வருகின்றன. இம்முகாம்களில் பயிற்சி பெற்ற கும்கி யானைகள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிகளுக்குத் திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட மனித–யானை மோதல் தணிப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.</p><p>மாறிவரும் நிலப் பயன்பாடு, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள மனிதக் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளால், மனித – யானை எதிர்கொள்ளல்கள், நம் மாநிலம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சவாலாக உருவெடுத்துள்ளன.</p><p>இச்சவால்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தின் வனப்பரப்பு மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிப்பதுடன், வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில், மாநிலத்தின் வனப்பரப்பு மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்கும், முக்கிய இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பாதுகாத்து மறுசீரமைப்பதற்கும் அரசு உறுதியுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதுகாப்புப் பணிகள்</h2><p>அரசின் இந்த உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் வாழ்விடத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யானைகளின் இயற்கையான வாழ்விடங்களுக்குள் அவற்றிற்குத் தேவையான தீவன வளத்தை அதிகரித்தல், நீராதாரங்களை மேம்படுத்துதல், சீரழிந்த வனப்பகுதிகளை மறுசீரமைத்தல், அந்நிய ஆக்கிரமிப்பு தாவரங்களைக் கட்டுப்படுத்துதல், மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் யானைகளின் பாரம்பரிய வலசைப் பாதைகளைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.</p><p>குறிப்பாக, அதிகரித்து வரும் மனித–வனவிலங்கு மோதல்களை ஒருங்கிணைந்த முறையில் தணிப்பதற்காக இந்த ஆண்டு ரூ.20 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள யானைத்தடுப்பு அகழிகள் மற்றும் கதிரொளி மின்வேலிகளைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல், கூடுதல் மனிதவளத்தைப் பயன்படுத்தி சிறப்பு ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுதல், யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகள், முன்கூட்டிய எச்சரிக்கை வசதிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் மூலம் யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, பொதுமக்களுக்கும் களப் பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்கும் நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>யானைகளின் தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகளைத் தடுப்பதும் மிக முக்கியமானதாகும். குறிப்பாக சட்டவிரோதமாக மின்வேலிகள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் உள்ளிட்ட காரணங்களால் யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு வனத்துறையும் தொடர்புடைய துறைகளும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. விவசாய நிலங்களில் வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின்வேலிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் செலுத்துதல் போன்ற செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.</p><h2>விவசாயிகளின் ஒத்துழைப்பு</h2><p>யானைகளைப் பாதுகாப்பது அரசு மற்றும் வனத்துறையின் பொறுப்பு மட்டுமல்ல. குறிப்பாக யானைகளின் வாழ்விடங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். யானைகள் குடியிருப்பு அல்லது விவசாயப் பகுதிகளுக்குள் வந்தால், வனத்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பதன் மூலம் மனித உயிரிழப்பு, பயிர் மற்றும் உடைமைச் சேதம் மட்டுமின்றி யானைகளின் உயிரிழப்பையும் பெருமளவில் தவிர்க்க முடியும்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">யானைகள்</a> பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய காடுகள் ஆரோக்கியமான காடுகளாகும். அத்தகைய காடுகளே நமக்கு நீர், தூய காற்று, வளமான மண், பல்லுயிரின வளம் மற்றும் காலநிலைத் தாங்குதிறனை வழங்குகின்றன.</p><h2>யானைகள் தினம்</h2><p>எனவே, இந்த உலக யானைகள் தினத்தில், யானைகளைப் போற்றுவோம்; அவற்றின் இயற்கையான வாழ்விடங்களையும் வலசைப் பாதைகளையும் பாதுகாப்போம்; காடுகளைப் பாதுகாப்போம்; வனத்துறையுடன் இணைந்து மனித-யானை நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என்ற உறுதியை அனைவரும் ஏற்போம்.</p><p>யானைகளைப் பாதுகாப்பது நமது காடுகளைப் பாதுகாப்பது; காடுகளைப் பாதுகாப்பது நமது எதிர்கால சந்ததியைப் பாதுகாப்பது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் - சென்னை மாநகராட்சி ஆணையாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-cooperation-needed-for-census-operations-says-chennai-corporation-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-cooperation-needed-for-census-operations-says-chennai-corporation-commissioner#comments</comments><guid isPermaLink="false">7eef64bf-f5e9-4953-8bf8-6aa0dac7bea9</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:02:55 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:02:55.061Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,மாநகராட்சி ஆணையாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/gwol7bzm/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/gwol7bzm/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கும், பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை முறையாகத் திட்டமிடுவதற்கும் முக்கியமான பணியாகும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 தொடர்பான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.</p><p>இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் (Enumerators) தங்களது அடையாள அட்டையை காண்பித்து பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, தேவையான விவரங்களை சேகரித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது சம்மந்தமாக விவரம் வேண்டின், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.</p><p>தொடர்பு கொள்ள வேண்டிய மண்டல அலுவலகங்கள்</p><p>மண்டலம் மண்டலத்தின் பெயர் தொடர்பு எண்</p><p>மண்டலம் – 1 திருவொற்றியூர் 9445190201</p><p>மண்டலம் – 2 மணலி 9445190202</p><p>மண்டலம் – 3 மாதவரம் 9445190203</p><p>மண்டலம் – 4 தண்டையார்பேட்டை 9445190204</p><p>மண்டலம் – 5 ராயபுரம் 9445190205</p><p>மண்டலம் – 6 திரு.வி.க. நகர் 9445190206</p><p>மண்டலம் – 7 அம்பத்தூர் 9445190207</p><p>மண்டலம் – 8 அண்ணா நகர் 9445190208</p><p>மண்டலம் – 9 தேனாம்பேட்டை 9445190209</p><p>மண்டலம் – 10 கோடம்பாக்கம் 9445190210</p><p>மண்டலம் – 11 வளசரவாக்கம் 9445190211</p><p>மண்டலம் – 12 ஆலந்தூர் 9445190212</p><p>மண்டலம் – 13 அடையாறு 9445190213</p><p>மண்டலம் – 14 பெருங்குடி 9445190214</p><p>மண்டலம் – 15 சோழிங்கநல்லூர் 9445190215</p><p>மேலும், பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கும் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளைப் பெறலாம்.</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்/சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-mariyavilsan-must-apologise-for-insulting-tamil-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-mariyavilsan-must-apologise-for-insulting-tamil-seeman#comments</comments><guid isPermaLink="false">f660b110-c99d-4d31-917f-f859b4b48ce3</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:51:10 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:51:10.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,தமிழக சட்டசபை,TN Assembly,அமைச்சர் மரிய வில்சன்,Minister Maria Wilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/x54ui3oe/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/x54ui3oe/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழை அவமதிக்கும் வகையில், பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகச் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதையும், பார்த்து படிக்கும்போதே எண்களைப் பிழையாகக் கூறியதையும் மானியக்கோரிக்கை மீதான விவாத்தில் சுட்டிக்காட்டி, அதனை திருத்திக்கொள்ளக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனுக்கு, நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த பதிலும், வெளிப்படுத்திய உடல்மொழியும் ஆணவத்தின் உச்சம். தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். அப்பண்பு துளியுமற்று, தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாதென அமைச்சர் மரியவில்சன் அதிகாரத்திமிரில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு  ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா? உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், பிற மாநிலத்தவரும் நேரலையில் உற்று நோக்கும் ஓர் அவையில், உங்களைச் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கே இது மாபெரும் அவமதிப்பல்லவா? </p><p>அப்பிழையை ஒருவர் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் கோபம்கொள்வது ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த திருநாட்டில், தமிழைப் பிழையற உச்சரிக்கவே ஒரு அமைச்சர் தடுமாறுவதா? என, நியாயமாக மக்கள்தான் உங்கள் மீது கோபம்கொள்ள வேண்டும்! நாங்கள் குற்றம் சொல்வதில் ஓர் அறம் உள்ளது. நீங்கள் கோபப்படுவதில் என்ன அர்த்தம் உள்ளது? </p><p>'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’. தமிழைப் பிழையின்றிப் பேச நீங்கள் பயிற்சியும், முயற்சியும் எடுத்தால், அது எளிதில் வசப்படும். அதைவிடுத்து "நான் பிறப்பால் கிறிஸ்தவன்; அதுவே எனக்கு அன்பைப் போதித்தது. எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது" என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?</p><p>நீங்கள் கிறிஸ்துவராக பிறந்திருக்கலாம்; பைபிள் உங்களுக்கு அன்பை போதித்திருக்கலாம். அதைச் சொல்வது உங்கள் உரிமை; உங்கள் உணர்வு; அதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் சார்ந்துள்ள மதம் அன்பைப் போதிக்கிறது என்று சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எங்கள் அன்னை தமிழ்மொழி அன்பைப் போதிக்காது, பெறமுடியாது என்று சொல்ல நீங்கள் யார்? உடன்பிறந்த தம்பி குடும்பத்தை, உருட்டுகட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும், இரக்கத்தையும்தான் உலகமே கண்டதே அமைச்சரே!</p><p>உலகிற்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி,  தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா? 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க்குறள்களை அமைச்சர் படித்ததில்லையா?</p><p>உங்கள் கட்சியின் முகப்பில் உள்ள "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உயிர்களின் சமத்துவத்தைப் போதித்தது எங்கள் தமிழ் இல்லையா? "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்று பகிர்ந்துண்ணும் உயரிய பண்பினை கற்பித்தது எங்கள் தமிழ் இல்லையா?</p><p>"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும், ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றும், உலகம் யாவையும் தாமுளவாக்கலும் என்றும், பாரடா உன் மானுட பரப்பை; மானுட சமுத்திரம் நானென்று கூவு! என்றும், புதியதோர் உலகம் செய்வோம்; கெட்டப்போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! என்றும், "உலகு, உலகு" என்று உலக மாந்தர் அனைவரையும் உறவாகக் கருதி நேசித்தது, எங்கள் தமிழ் இல்லையா?</p><p>காக்கைக்குருவி எங்கள் சாதி;  நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம்!  என்று பேரன்பு கொண்டு பாடியது எங்கள் தமிழ் இல்லையா? தன் தவறுக்கு மதத்தை உள்ளிழுத்து தப்பிக்க முயலும் மலிவான அரசியல் செய்யும் மரியவில்சன் அவர்களே! எல்லா சமயங்களும், எல்லா வேதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன! என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. </p><p>இறைமகன் இயேசு "அண்டை அயலானிடமும் அன்பு காட்டு" என்றார்; நபிகள் நாயகம் (ஸல்) "பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் பொழுது நீ உணவருந்தாதே" என்றார்; தமிழ்ச்சைவ திருமுறையோ "அன்பே சிவம்" என்கிறது. பெரும்பாவலர் பாரதியோ "பகைவனுக்கும் அருள்வாய் நன்னஞ்சே" என்று பாடினார். </p><p>'வாடியப்பயிரை கண்டு வாடிய' வள்ளலாரும், 'அன்புவழி' என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளர்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி,  இழிவுபடுத்துவதை எப்படி ஏற்க முடியும்? உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய்  எங்கள் தமிழ்! </p><p>"தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே!" என்றார் பாவேந்தர் தாத்தா பாரதிதாசன்.</p><p>அதே அவையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் "தமிழ் நம் உயிருக்கு நேர்; தமிழ் நம் தாய்" என்று பேசும்போது, தாங்களோ "என் சமயம் மட்டுமே அன்பைப் போதித்தது, தமிழ் போதிக்கவில்லை" என்று பேசுவது ஏற்புடையதன்று. தமிழின் பேரன்பை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பிழைக்கு வருந்தித் திருந்துவதை விடுத்து கோபப்படக் கூடாது.</p><p>கிறிஸ்துவ சமயப்போதகராக தமிழ்நாட்டுக்கு வந்த ஜி.யு.போப், தமிழ்த்தொண்டராகி, தனது கல்லறையில் தமிழ் மாணவனெனப் பொறிக்கச் சொன்ன வரலாறு தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு? இத்தாலியிலிருந்து வந்து தமிழ் இலக்கியங்களை லத்தீனில் மொழிபெயர்த்து, ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை வீரமாமுனிவராக மாற்றிக் கொண்ட மகத்தான மாமனிதர் குறித்து தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு? கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப்போதகர்களே இங்கு தமிழுக்குத் தொண்டாற்றித்தான் மறைந்தார்கள். </p><p>நீங்கள் பிறந்த மதம் கிறிஸ்தவம் என்கிறீர்கள்! அது சரிதான். ஆனால் எத்தனை தலைமுறையாக நீங்கள் கிறித்தவர்கள்? அதற்கு முன்பு? ஆனால், ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் தமிழர்கள். கிறித்துவம் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள சமயம். ஆனால், உங்களின் மொழி என்ன? உங்களின் இனம் என்ன? உங்கள் இனத்திற்கான அடையாளம் என்ன? உங்கள் தாய்மொழி தமிழா? இல்லையா? என்பதை அதே அவையில் நீங்கள் விளக்க வேண்டும். கல்வி நிறுவனம் வைத்து நடத்துகிறேன் என்கிறீர்கள். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம்.</p><p>ஐரோப்பா முழுவதும் கிறிஸ்துவர்கள்தான். பிறகு ஏன் இத்தனை நாடுகள்? ஏனென்றால், மொழி வழியேதான் தேசிய இனங்களும், நிலங்களும். ஒரே கிறிஸ்தவ மதம்தான், ஆனாலும் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது ஏன்? காரணம் மொழி! அவர்கள் இங்கிலிஷ், இவர்கள் ஐரிஷ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். ஆனால், பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மதமல்ல, மொழி! தாய்மொழிதான் அடையாளம்.</p><p>அதனால்தான் I am English, I am French, I am Spanish, I am Irish என்று தாய்மொழியை வைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். எனவே, ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவருடைய தாய்மொழிதானே ஒழிய, ஏற்றிருக்கும் மதமல்ல; மதம் என்பது மாறிக்கொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறிக்கொள்ள முடியாதது என்ற </p><p>அடிப்படை உண்மையை உணராது, தமிழைப் பிழையாக உச்சரிப்பதும், அதனை நியாயப்படுத்தி, தமிழை அவமதிக்கும் வகையில் பேசுவதும், கிறிஸ்துவச் சமயத்தை உள்ளிழுத்து, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தமிழென்பது பேரன்பின் தாய்; அன்பின் உயிர்நிலை! எனவே, எங்களின் உயிர்மொழியான தமிழ்  அன்பைப் போதிக்காது என்று இழித்துரைப்பது, தமிழையும், தமிழ்த்தேசிய இனத்தையும் அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை அவமதிக்கும் வகையிலே, பேசிய அமைச்சர் மரியவில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, அதே அவையில் மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லை - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-nothing-wrong-with-constituency-delimitation-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-nothing-wrong-with-constituency-delimitation-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">68a0d539-a515-44fe-ad29-1948c9e657e5</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:49:30 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:49:30.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,Delimitation of Constituencies,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8522jvld/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8522jvld/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிர்வாக வசதிக்காக தொகுதி மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p><p><strong>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-</strong></p><p>மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது. விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது. அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.</p><h2>அதிமுக எதிர்ப்பு</h2><p>7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கான எம்.பி.க்கள் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும். தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். நிர்வாக வசதிக்காக வாக்காளர்கள் அதிகம் உள்ள மக்களவை தொகுதிகள், சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதில் தவறு இல்லை.</p><p>அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை மட்டும் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>என்ஜின் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-malfunction-indigo-flight-makes-emergency-landing-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-malfunction-indigo-flight-makes-emergency-landing-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">efc5c63b-d53f-4500-8ff8-179a5f04668c</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:48:41 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:48:41.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,airport,இண்டிகோ,சென்னை விமானநிலையம்,என்ஜின்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/4wmvjoc7/Indigo.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இண்டிகோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/4wmvjoc7/Indigo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு  224 பயணிகளுடன் இண்டிகோ நிறுவனத்தின் 6இ-723 விமானம் வந்து கொண்டிருந்தது.  இரவு 11.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்த நிலையில், விமானத்தை தரையிறக்க விமானி தயாரானபோது இடதுபுற என்ஜின் செயலிழந்திருப்பதை கண்டறிந்தார்.இதையடுத்து விமானி உடனடியாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். </p><h2>அவசரநிலை</h2><p>விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விமானம் இரவு 11.37 மணியளவில் ஓடுபாதை 25-ல் பாதுகாப்பாக தரையிறங்கியது.   விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, இரவு 11.47 மணியளவில் முழு அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது. இதன் பின்னர் சென்னை விமான நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகள் எந்தவித பாதிப்புமின்றி தொடர்ந்து நடைபெற்றன.</p><h2>உறவினர்கள் பதற்றம்</h2><p>விமானத்தின் என்ஜின் கோளாறுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தில் என் ஜின் கோளாறு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் மற்றும் அவர்களை வரவேற்க காத்திருந்த உறவினர்கள் மத்தியில் பதற்றம் தொற்றியது. </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறையை எதிர்த்து தனித்தீர்மானம்: பா.ம.க. எதிர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-must-be-withdrawn-pmk-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-must-be-withdrawn-pmk-insists#comments</comments><guid isPermaLink="false">2470e556-bd7f-4026-a163-796427268d2d</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:27:28 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:27:28.377Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,Tamilnadu,விஜய்,பாமக,PMK,தமிழகம்,தமிழக சட்டசபை,தமிழக அரசு,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,தனித்தீர்மானம்,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ffufpw8r/shree.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ffufpw8r/shree.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டபேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்தார்.  </p><h2>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம்</h2><p>மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> தனித்தீர்மானம் கொண்டுவந்தார். இதன்படி 1.நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>2.மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கு இடையே, அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போது உள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>3.வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. </p><h2>பா.ம.க. எதிர்ப்பு</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக பாமக எம்.எல்.ஏ., கணேஷ் குமார் சட்டசபையில் பேசுகையில், “ஒன்றிய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வருமா? வராதா? என்ற சூழ்நிலையில், செவிவழி செய்தியை வைத்துக் கொண்டு இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதன் அவசியம் என்ன? முதல்-அமைச்சர் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும். மகளிர் உரிமை அதிகாரத்திற்கு எதிராக பா.ம.க. ஒருபோதும் நிற்காது” என்று அவர் கூறினார். </p> ]]></content:encoded></item><item><title>இளைஞர்களின் வேலை இல்லாதோர் விகிதம் 15.9 சதவீதமாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-unemployment-rate-rises-to-159-percent</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-unemployment-rate-rises-to-159-percent#comments</comments><guid isPermaLink="false">a34fb85d-c8ba-4dad-9312-e18a5305b9f5</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:22:01 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:22:01.193Z</atom:updated><atom:author><atom:name>S.Mariappan</atom:name><atom:uri>/api/author/2422435</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,இளைஞர்,Female,Unemployment,Rate,decline,வேலை jobs,Labour,தொழிலாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/f4kvvv9k/263.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/f4kvvv9k/263.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாட்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலை இல்லாதோர் விகிதம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இல்லாத அளவுக்கு இது அதிகமாகும்.</p><h2>வேலை இல்லாதோர் விகிதம்</h2><p>மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் கூறியிருப்பதாவது:-</p><p>கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் வேலை இல்லாதோர் விகிதம் 5 சதவீதமாக இருந்தது. தற்போது அது 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் இதே அளவான 5.4 சதவீதம் பதிவாகி இருந்தது. கிராமப்புறங்களில் வேலை இல்லாதோர் விகிதம் 4.3 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6.6 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.</p><h2>பெண்கள்</h2><p>பெண்களுக்கான வேலை இல்லாதோர் விகிதம் 5.3 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகவும், ஆண்களுக்கான விகிதம் 4.8 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களின் வேலை இல்லாதோர் விகிதம் 15 சதவீதத்தில் இருந்து 15.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற இளைஞர்களிடம் இது 13.5 சதவீதத்தில் இருந்து 14.7 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 18.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.</p> <h2>தொழிலாளர் பங்கேற்பு விகிதம்</h2><p>இளம் பெண்களிடம் வேலை இல்லாதோர் விகிதம் 19.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் இது 17.7 சதவீதமாக இருந்தது. இதுவே இதுவரை பதிவான காலாண்டு புள்ளிவிவரங்களில் இளம் பெண்களுக்கான அதிகபட்ச வேலை இல்லாதோர் விகிதமாகும். வேலை செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையை குறிக்கும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 55.5 சதவீதத்தில் இருந்து 54.6 சதவீதமாக குறைந்துள்ளது. பெண்களின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">தொழிலாளர் </a>பங்கேற்பு விகிதம் ஜூன் மாதத்தில் 32.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஒரு ஆண்டில் பதிவான குறைந்த அளவாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எப்.சி.ஆர்.ஏ.-க்கு எதிராக தனித்தீர்மானம்: தேவையற்ற விளம்பர நாடகம் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fcra-resolution-unnecessary-publicity-drama-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fcra-resolution-unnecessary-publicity-drama-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">8aa0c82b-5bf3-4fb0-9fce-89aa58787c2f</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:13:46 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:13:46.563Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,தனித்தீர்மானம்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0qmhqcgt/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0qmhqcgt/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, தேவையற்ற விளம்பர நாடகம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அனைத்து மதங்களைச் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் (NGOs) வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும், 'வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா' (FCRA)-2026க்கு எதிராக, ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசு தனித்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, தேவையற்ற விளம்பர நாடகம்.</p><p>காரணம், இச்சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலமான 1976-ல் கொண்டு வரப்பட்டு, அந்தந்த கால மாற்றங்களுக்கு ஏற்ப 2010, 2016, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஏதோ மத்திய பாஜக-வால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டம் போலவும், சிறுபான்மையின மக்களின் NGO-க்களுக்கு வரும் நிதியை முடக்கும் சட்டம் போலவும் தவெக அரசு ஒரு போலி பிம்பத்தை கட்டமைக்க முயல்வது கண்டனத்திற்குரியது.</p><p>மேலும், NGO-க்களை முறையாக பதிவு செய்வது. விதிமுறைகளின்படி நிதியுதவி பெறுவது, வரவு-செலவுகளுக்கான அறிக்கையை வெளியிடுவது உள்ளிட்ட விதிமுறைகளைத்தான் தற்போதைய மசோதா முன்மொழிகிறதே தவிர, NGO-க்களின் நிதியுதவியை முடக்குவதற்கான எந்த முகாந்திரமும் இதில் இல்லை. சமூக நலனுக்காக வழங்கப்படும் நிதியுதவி, சரியான நோக்கத்திற்காக மட்டுமே செலவழிக்கப்பட வேண்டும் என்பது தான் FCRA-வின் முக்கிய நோக்கம்.</p><p>அதுமட்டுமன்றி ஓர் அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டால், அதன் வெளிநாட்டு பங்களிப்புகளும், அதன் மூலம் உருவான சொத்துக்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்ற 2010-ன் விதியை திருத்தி, ரத்து செய்யப்பட்ட அமைப்பு தனது பதிவை மீண்டும் மீட்டெடுக்கும் பட்சத்தில் அனைத்து சொத்துக்களும், பயன்படுத்தப்படாத நிதிகளும் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்பதை உறுதி செய்கிறது FCRA-வின் புதிய திருத்த மசோதா.</p><p>எனவே, தேசப் பாதுகாப்பையும், தொண்டு நிறுவனங்களின் சமூகப் பாதுகாப்பையும் ஒருசேர உறுதி செய்யும் FCRA-2026 திருத்த மசோதாவை, தங்களின் வாக்கரசியலுக்காக கண்மூடித்தனமாக எதிர்க்கும் போக்கை மாற்றுக் கட்சியினர் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்துக்கு பெருமை: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-entire-society-gains-pride-only-when-women-rise-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-entire-society-gains-pride-only-when-women-rise-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">4cad4e59-0a17-406b-89ad-ec141b836cf1</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:05:36 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:05:36.774Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,TN Assembly,பெண்கள்,womens,Delimitation of Constituencies,தொகுதி மறுவரையறை,Delimitation,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/mntsp3tz/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/mntsp3tz/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெண்கள் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்துக்கு பெருமை என்று முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் ம் கொண்டுவந்தார். </p><h2>தனி தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது:-</h2><p>நன்றி, விசுவாசத்துடன் இங்கு நின்று பேசுகிறேன். இன்னைக்கு இந்த விஜய்க்கு கிடைத்திருக்க இந்த இடத்திற்கு காரணமே என்னுடையா அம்மா, பாட்டி, அக்கா, தங்கைகள் தான்... வீட்டுப் பெண்கள் சமூகத்தில் உயர்ந்தால் தான் நாட்டிற்கே பெயர். அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு பெரிது.</p><p>நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் பெண்கள். பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். 2021 சட்டசபையில் 12 பெண் உறுப்பினர்கள்; இப்போது 23 பெண் உறுப்பினர்கள். சதவீத கணக்குப்படி பேரவையில் பெண் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயரவில்லை.</p><h2>முன்னோடி மாநிலம்</h2><p>பெண்கள் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்துக்கு பெருமை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவது சலுகை அல்ல; சமூக நீதி அரசியல் அமைப்பு சார்ந்தது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் தமிழக வெற்றிக் கழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உள்ளாட்சி 50 சதவீத இட ஒதுக்கீட்டால் அதிகாரத்தில் பெண்கள் உள்ளனர்.</p><p>தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும். தொகுதி மறுவரையறை சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 தொடர வேண்டும். இந்த அடிப்படையில் தான் 2029 தேர்தலையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.. 3-ல் 1 பங்கு தொகுதியை மகளிருக்கு வழங்க வேண்டும்.</p><h2>பெண்களுக்கு சம வாய்ப்பு</h2><p>ஒரு பெண் அதிகாரம் பெறும் போது அந்த குடும்பம் உயர்கிறது.. ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரத்தை பெறும் போது அந்த நாடே உயரும். ஆகையால் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டு மக்கள் தொகையில் பாதி பேர் பெண்கள் தான்; அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும்.</p><p>நம் வீட்டு பெண்கள் அரசியலில் முன்னேற இட ஒதுக்கீடு தர வேண்டும். மக்கள் தொகுதி கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகு தான் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மகளிருக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டாலும், அதை செயல்படுத்துவதில் கால தாமதம் ஆகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையை காரணம் காட்டி நிறுத்தக் கூடாது.</p><h2>தீர்மானம்</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக்கு பிறகு தான் தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றலாம் என முடிவு செய்யப்பட்டது. தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்.. இது ஒரு அரசியல் கட்சியின் தீர்மானம் மட்டும் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாடு கிணற்றில் விழாமல் தடுக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-trying-to-save-cow-from-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-trying-to-save-cow-from-well#comments</comments><guid isPermaLink="false">89692818-5856-48b3-97fe-c54e02de0563</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:57:31 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:57:31.830Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/lq5qzor1/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/lq5qzor1/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே கிணற்றுக்குள் மாடு விழுவதை தடுக்க ஓடிய பெண் கால் தவறி அதே கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>போளூர் தாலுகா சந்தவாசலை அடுத்த ஆத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வேண்டா (40 வயது). நேற்று காலையில் வேண்டா, அவர்களது நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாடு கிணறு பக்கம் சென்றது. கிணற்றுக்குள் தவறி விழுந்து விடுமோ என அஞ்சிய அவர் அதனை தடுப்பதற்காக வேகமாக ஓடினார்.</p><p>அப்போது நிலை தடுமாறி அதே கிணற்றில் விழுந்தார். அந்த கிணற்றில் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையில், மண் தரையில் விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>தகவல் அறிந்து வந்த சந்தவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வி.ஐ.பி., வி.வி.ஐ.பி.களுக்காக ரூ.6.85 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-685-crore-allocated-for-vips-and-vvips</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-685-crore-allocated-for-vips-and-vvips#comments</comments><guid isPermaLink="false">6c8e0c5c-b33b-4b1e-9e8d-d1a67888884b</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:45:46 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:45:46.455Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/hsv7uxbx/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/hsv7uxbx/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதலமைச்சர், அமைச்சர்களை தவிர்த்து பிற முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய செலவுகளுக்காக ஓராண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>ஏ-பிரிவில் உள்ள கோவை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், பி-பிரிவில் உள்ள நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், சி-பிரிவில் உள்ள மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ.15 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-on-a-child-worker-sentenced-to-20-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-on-a-child-worker-sentenced-to-20-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">c55723d2-ebc9-41aa-94f9-037c653d6bdd</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:32:41 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:32:41.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,child,Sexual assault,பெண் குழந்தை,கூலித்தொழிலாளி,சிறைத்தண்டனை,போக்சோ கோர்ட்டு தீர்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/um5japx5/262.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறை தண்டனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/um5japx5/262.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p>3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.</p><p>இமாச்சல பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் நதோன் தாலுகாவை சேர்ந்த பிரகாஷ் சந் மகன் தேசுராஜ் (வயது 42). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பில்லாந்தாங்கல் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து கூலி தொழில் செய்து வந்து உள்ளார்.</p><h2>பாலியல் சில்மிஷம்</h2><p>கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் வருவதை அறிந்த தேசுராஜ் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேசுராஜை கைது செய்தனர்.</p><p>இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. </p><h2>தீர்ப்பு</h2><p>இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா தீர்ப்பு கூறினார். அதில் பெண் குழந்தையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி தேசுராஜூக்கு 20 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறைத்தண்டனையும்</a>, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து தேசுராஜை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஆந்திரா, கர்நாடகாவில் விமான நிலையங்கள் கட்டப்பட்டால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கும் - தி.மு.க. எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-warns-airports-in-andhra-karnataka-may-hurt-tamil-nadu-industry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-warns-airports-in-andhra-karnataka-may-hurt-tamil-nadu-industry#comments</comments><guid isPermaLink="false">49c519b6-3b0d-4c3d-93b2-ad30ca0b03af</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:17:15 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:17:15.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,Karnataka,Andhra,ஆந்திரா,airport,விமான நிலையம்,கர்நாடகா,தமிழக சட்டசபை,TN Assembly,தொழில் வளர்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/jlhc8qt0/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/jlhc8qt0/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆந்திரா, கர்நாடகாவில் விமான நிலையங்கள் கட்டப்பட்டால் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ. சீனிவாசன் (தி.மு.க.) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>ஆந்திரா முயற்சி</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படாவிட்டால், மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சிப்பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். ஆந்திர மாநில முதல்-மந்திரி மத்திய அரசு கூட்டணியில் இருக்கிறவர். அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் விமானப் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருக்கிறார். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலை முடக்குவதற்காகவும், இங்குள்ள தொழிலை அங்கு கொண்டு செல்வதற்காகவும் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.</p><h2>தமிழகத்திற்கு பாதிப்பு</h2><p>கர்நாடக மாநில முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தரப்பிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விமான நிலையம் வராமல் தடுப்பதற்காக அவர்கள் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களும் தங்கள் பகுதிகளில்</p><p>விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு விமான நிலையம் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் தமிழகம் மற்றும் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>ஆதாரங்களோடு பேச வேண்டும்</h2><p>இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "ஆதாரங்கள் இல்லாமல் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டு, சட்டசபையில் தவறான தகவல்களை தெரிவிக்கக்கூடாது. ஆதாரங்களை தந்துவிட்டு பேச வேண்டும்" என்று குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-moved-a-special-resolution-in-the-legislative-assembly-against-constituency-delimitation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-moved-a-special-resolution-in-the-legislative-assembly-against-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">3dcc8dbd-e94a-4fa5-a972-ab1d9d8c5730</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:13:07 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:13:07.415Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,சட்டசபை,TN Assembly,Delimitation of Constituencies,தொகுதி மறுவரையறை,Delimitation,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/3uo914ao/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/3uo914ao/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டுவந்தார். </p><p>தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>சட்ட திருத்த மசோதா தோல்வி</h2><p>தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை/சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது.</p><p>ஏப்ரல் 2026-ல் நாடாளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-ல் இருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது.</p><h2>மத்திய அரசின் கடமை</h2><p>இந்த நிலையில், மீளவும் மேற்குறிப்பிட்ட அரசியமைப்புச் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது எனத் தெரிந்ததன் அடிப்படையில் 1971-ம் ஆண்டுக்கு பிறகு உள்ள எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள்தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.</p><p>மத்திய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்தவொரு மாநிலமும் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது மத்திய அரசின் தலையாய கடமையாகும்.</p><h2>543 எண்ணிக்கையே தொடர வேண்டும்</h2><p>எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கைப் பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், மேலும், தற்போது மக்களவை - மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதே வேளையில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது.</p><h2>விகிதாச்சார பிரதிநிதித்துவம்</h2><p>1.நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>2. தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><h2>மத்திய அரசுக்கு வலியுறுத்தல்</h2><p>3.வரவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.</p><h2>தீர்மானம் நிறைவேற்றம்</h2><p>அதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித்தீர்மானத்தின் மீது கட்சி வாரியாக உறுப்பினர்கள் பேசி, தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன.</p><p>பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தீர்மானத்தின் சில அம்சங்களை தே.மு.தி.க. எதிர்த்தது. இதில், பா.ஜ.க, அ.தி.மு.க., தே.மு.தி.க. ஆகியவை பெண்களுக்கான இடஒதுக்கீடு தீர்மானத்தை மட்டும் ஆதரித்தன. அதன்பின்னர், தீர்மானம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. தொடர்ந்து அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தப் பகுதி: மீண்டும் தீவிரமடையுமா தென்மேற்கு பருவமழை..?</title><link>https://www.dailythanthi.com/news/weather/new-low-pressure-area-forms-in-the-bay-of-bengal-will-the-southwest-monsoon-intensify-again</link><comments>https://www.dailythanthi.com/news/weather/new-low-pressure-area-forms-in-the-bay-of-bengal-will-the-southwest-monsoon-intensify-again#comments</comments><guid isPermaLink="false">0f12cbdf-a375-4e60-ae6e-bb5d412eb0ba</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:00:11 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:00:11.145Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,weather forecast,வானிலை ஆய்வு மையம்,Low pressure area,வானிலை அறிக்கை,weather condition,காற்றழுத்த தாழ்வுப்பகுதி,Bay of Bengal,தென்மேற்கு பருவமழை,வானிலை முன்னறிவிப்பு,வங்கக் கடல்,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="590" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/l6mmqyln/wind.jpg" width="1063"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/l6mmqyln/wind.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. </p><h2>மிதமான மழை</h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது என்றும், இதன் காரணமாக இன்று (12-08-2026) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. </p> <h2>அடுத்த 48 மணி நேரத்தில்</h2><p>இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதன்படி மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. </p><h2>பருவமழை தீவிரமடையும்</h2><p>வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடக்கு, வடமேற்கு மாநிலங்கள் மற்றும் கடலோரப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nia-officials-conduct-raids-at-various-locations-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nia-officials-conduct-raids-at-various-locations-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">c9f7113f-ca03-4de1-9c80-72621adf70e7</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:56:58 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:56:58.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,NIA,NIA Raid,என்.ஐ.ஏ.,என்.ஐ.ஏ. சோதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/n6050hkg/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ என்.ஐ.ஏ. சோதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/n6050hkg/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மற்றும் கோவை உள்பட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 6 இடங்கள் மற்றும் மதுரையில் 1 இடம் உட்பட பல இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.</p><h2>போதைப்பொருள் வழக்கு</h2><p>கடந்த 2024-ம் ஆண்டு அந்தமான் பகுதியில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் பிடிபட்ட 7 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>பர்மாவில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. மியான்மரில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/posters-pasted-condemning-rb-udhayakumars-remarks-about-actress-trisha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/posters-pasted-condemning-rb-udhayakumars-remarks-about-actress-trisha#comments</comments><guid isPermaLink="false">64581ec9-f180-4e05-93f9-f93c95520739</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:40:35 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:40:35.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Trisha,நடிகை திரிஷா,அதிமுக,Madurai,மதுரை,ஆர்.பி. உதயகுமார்,RB Udhayakumar,Actress Trisha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ozegxbiz/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ozegxbiz/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>நடிகை திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மதுரை முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.</p><p>தூத்துக்குடியில் நடந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.</p><p>அவர் பேசுகையில், "அ.தி.மு.கவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க, அழிக்க நினைக்கிறான். அ.தி.மு.க.வை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாக போகும். மேலும் காவிரி தண்ணீரை பற்றி பேசினால், காவிரியாவது, தண்ணீராவது, எங்க அண்ணி திரிஷா பற்றி யார் பேசியது? என்று அக்கட்சியினர் கேட்கிறார்கள்" என்றார்.</p><p>இதனையடுத்து முதல்-அமைச்சர் விஜய், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகு மார் மீது த.வெ.க. நிர்வாகி போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>கண்டன போஸ்டர்கள்</h2><p>இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மதுரை முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'இருவரின் நட்பை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்துக்குரியது. ”யாகாவா ராயினும் நாகாக்க’ வேண்டும் என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின் மாண்பு.</p><p>முன்னாள் அமைச்சரே, மாண்பு தவற வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ”எங்கள் அன்பு அக்கா திரிஷாவை பற்றி யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது. மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புலன் விசாரணை பெயரில் துன்புறுத்தல் கூடாது: விதிமுறை உருவாக்கி ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-harassment-under-the-guise-of-investigation-high-court-orders-formulation-of-guidelines</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-harassment-under-the-guise-of-investigation-high-court-orders-formulation-of-guidelines#comments</comments><guid isPermaLink="false">ae0b3866-ad6e-4ec0-8438-2c52a73c8a07</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:28:54 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:28:54.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,High Court,order,ஐகோர்ட்டு உத்தரவு,investigate,புலன் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/aqov2ove/chennai-highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/aqov2ove/chennai-highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புலன் விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.</p><h2>சென்னை ஐகோர்ட்</h2><p>புலன் விசாரணை என்ற பெயரில் தன்னை போலீசார் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிடக்கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. </p><p>போலீசாரின் புலன் விசாரணையில் பொதுவாக ஐகோர்ட்டு தலையிடுவதில்லை. அதேநேரம் புலன் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> என்ற பெயரில் துன்புறுத்துவதை கண்டுகொள்ளாமல் இருக்கவும் முடியாது.</p><h2>விதிமுறை</h2><p>எனவே, கீழ்கண்ட விதிமுறைகளை உருவாக்குகிறேன். விசாரணைக்கு அழைக்கப்படுபவருக்கு முறையாக சம்மன் அனுப்ப வேண்டும். அதில் எந்த தேதியில், எந்த நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிட வேண்டும்.</p><p>விசாரணை நடவடிக்கைகளை, போலீஸ் நிலைய குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படும் யாரையும் துன்புறுத்தக்கூடாது" என்று உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-supporter-of-kolathur-mla-vs-babu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-supporter-of-kolathur-mla-vs-babu#comments</comments><guid isPermaLink="false">d8de963f-fa64-4fa3-9343-859fd47d3b92</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:20:26 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:20:26.140Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,வழக்கு,கொளத்தூர்,Kolathur,வி.எஸ்.பாபு,VS Babu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/r87it13z/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/r87it13z/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் ஆதரவாளர் என கூறப்படும் ஜமால் முகமது குறித்து வழக்கறிஞர் ரியாஸ் அவதூறாக பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரியாஸை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட கும்பல் அவரை பெரம்பூரின் கே.கே.ஆர். அவென்யூ பகுதிக்கு வரவழைத்து அங்குவைத்து ரியாஸ் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.</p><p>இந்தத் தாக்குதலில் ரியாஸின் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு ரியாஸ் பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து தாக்குதல் குறித்து வழக்கறிஞர் ரியாஸ் திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>புகாரின் அடிப்படையில் கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் ஆதரவாளர் ஜமால் முகமது உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>