<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 23 Jul 2026 08:57:21 +0000</lastBuildDate><item><title>சோழவந்தானில் ரெயில் நிலையத்தை தொடர்ந்து தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துகள் அழிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindi-script-defaced-at-the-sholavandan-post-office-following-a-similar-incident-at-the-railway-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindi-script-defaced-at-the-sholavandan-post-office-following-a-similar-incident-at-the-railway-station#comments</comments><guid isPermaLink="false">ab1dc728-d15c-4832-9079-58ad03b83ce1</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:57:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:57:16.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,Post office,தபால் நிலையம்,இந்தி எழுத்துகள்,Hindi text,Chozhavandhan</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/2ygf12gg/4.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தபால் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோழவந்தானில் தபால் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/2ygf12gg/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரெயில் நிலையத்தை தொடர்ந்து தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டன.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுரை மாவட்டம் </a>சோழவந்தானின் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் மர்ம நபரால் கருப்பு மை பூசி  அழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை சோழவந்தான் தபால் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளும் நேற்று அழிக்கப்பட்டன. நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெறும் இந்த நிலையில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டிருப்பத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>ஒரே நேரத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தபால் நிலையம்</a> மற்றும் ரெயில் நிலையம் ஆகிய இரண்டு மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டதால், ரெயில்வே போலீசாரும் உள்ளூர் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்: உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-in-thoothukudi-after-going-for-questioning-relatives-protest-stirs-up-controversy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-in-thoothukudi-after-going-for-questioning-relatives-protest-stirs-up-controversy#comments</comments><guid isPermaLink="false">ee575a05-b429-49a3-aaf5-decec2b3d670</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:44:00 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:44:00.619Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Thoothukudi,தூத்துக்குடி,போராட்டம்,police investigation,போலீஸ் விசாரணை,Excitement,பரபரப்பு,உறவினர்கள்,Relatives,youth death,வாலிபர் மரணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/ffee7l2j/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் வாலிபர் மரணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/ffee7l2j/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபர்</a> மருத்துவமனையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">உயிரிழந்த சம்பவம்</a> பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வாலிபர் கைது</h2><p>தூத்துக்குடி அமுதாநகர் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம் (வயது 24). இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு எப்.சி.ஐ. குடோன் அருகே சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்ததாக தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தரண்யா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.</p><h2>வாலிபர் உயிரிழப்பு</h2><p>அதை தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் இருந்தபோதே அருணாச்சலத்திற்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.</p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>வாலிபர் உயிரிழந்த செய்தி பரவியதும், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் காவல் நிலையப் பகுதியில் திரண்டனர்.  விசாரணை என்ற பெயரில் போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்துள்ளார். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும், பரப்பரப்பான சூழலும் நிலவியது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து, தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருணாச்சலம் விசாரணையின் போது மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதித்ததாக தூத்துக்குடி டி.எஸ்.பி. சுனில் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்த நிலையில் தற்போது அருணாச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தலை உள்ளிட்ட இடங்களில் தாக்கியதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-never-any-compromise-in-the-welfare-of-students-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-never-any-compromise-in-the-welfare-of-students-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">719ab172-f3ac-4d50-ba42-1f8284ec7e27</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:43:25 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:43:25.211Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/293g2ltw/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/293g2ltw/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'நீட்' முறைகேடு தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து 'நீட்' விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.</p><h2>விரைவு நீதிமன்றங்களை</h2><p>இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி முதல் முறையாக இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: "நமது இளைஞர்களின் நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கும் வகையில், விரைவு <a href="https://www.dailythanthi.com/news/india">நீதிமன்றங்களை </a>அமைக்க முடிவு செய்துள்ளோம்.</p><h2>யாரும் தப்ப முடியாது</h2><p>இதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.மாணவர்களின் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது" என்று தெரிவித்தார்</p><p>இந்த நிலையில், மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கடும் கண்டனத்திற்குரியது</h2><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களில் ஒருவர் கூட, சட்டத்தின் பார்வையில் இருந்து தப்ப முடியாது என நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்து விட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளைத் தடுக்க, அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும், முழுக்க முழுக்க “Computer-Based Test” முறையில் நடக்கும் என நமது மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். </p><p>ஆனால், கரப்பான் பூச்சி கூட்டத்துடன் இணைந்து இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலவரமாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது. </p><h2>அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக..</h2><p>எனவே, தங்கள் அரசியல் <a href="https://www.dailythanthi.com/news/india">காழ்ப்புணர்ச்சிக்காக</a>, தேசத்தின் இளைஞர் சக்தியை தவறான வழியில் காங்கிரஸ் கட்சி வழிநடத்தக் கூடாது! இளைஞர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்க, அரசியல் நிலைப்பாடுகளை தாண்டி அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வருகையில்லா ஆவணப்பதிவு: அமைச்சர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/document-registration-without-physical-presence-consultative-meeting-chaired-by-the-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/document-registration-without-physical-presence-consultative-meeting-chaired-by-the-minister#comments</comments><guid isPermaLink="false">a317352f-b52f-4ddf-a8a1-57edbbef47bc</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:39:35 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:39:35.430Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,பத்திரப்பதிவு துறை,வணிகவரித்துறை,அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்,Minister Lokesh Tamilselvan,வருகையில்லா ஆவணப்பதிவு,Document Registration</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/04ztmwyu/five-ye.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/04ztmwyu/five-ye.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) – சந்தேகங்களைத் தீர்க்கும் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் இன்று (23.07.2026) ரிப்பன் கட்டட வளாக அம்மா மாளிகை கலையரங்கத்தில் வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை குறித்து கட்டடவிற்பனையாளர்கள் (Promoters), வங்கியாளர்கள் (Bankers) மற்றும் நிதி நிறுவனங்களுக்கு (Financial Institutions) ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கவும், வருகையில்லா பதிவு முறையை செயல் விளக்க காட்சி (Demo) மூலம் விளக்கவும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p> <h2>வருகையில்லா ஆவணப்பதிவு</h2><p>இக்கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதனை மையமாக கொண்டு, பதிவுத்துறையில். இந்த வருகையில்லா ஆவணப் பதிவு தொடர்பான செயல்முறை விளக்கம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தினைத் தொடங்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.</p><p>அரசு சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும், வெளிப்படையாகவும் வழங்கும் நோக்கில் இந்த அரசு அனைத்து துறைகளிலும் தகவல் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் பதிவுத் துறையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு முன்னோடி சீர்திருத்தமாக “வருகையில்லா ஆவணப் பதிவு” நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>தரம் மற்றும் செயல்திறன்</h2><p>முதற்கட்டமாக, மனை முதல் விற்பனை (First Sale of Plot) மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு முதல் விற்பனை (First Sale of Flat) ஆகிய இரண்டு வகை ஆவணங்களின் பதிவுகள் 17.08.2026 முதல் கட்டாயமாக வருகையில்லா ஆவணப் பதிவு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பதிவு செயல்முறை விரைவாகவும், வெளிப்படையாகவும், எளிமையாகவும் அமையும். இந்த நடைமுறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் பாதுகாப்பான முறையில் மின்னணு வடிவில் சம்பந்தப்பட்ட நபரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் பொதுமக்களின் நேரமும், பயணச் செலவும் குறைவதோடு, பதிவு செயல்முறையின் தரம் மற்றும் செயல்திறன் மேம்படும்.</p><h2>புதிய நடைமுறை</h2><p>கட்டுமான நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் வங்கிகள் ஆகியோர் இந்த புதிய நடைமுறையின் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிய நடைமுறை குறித்த விளக்கம், தேவையான ஆவணங்கள், மின்னணு சமர்ப்பிப்பு முறை, பதிவு செயல்முறையின் ஒவ்வொரு கட்டம் ஆகியவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுவதுடன், நடைமுறை சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களும் அளிக்கப்படும். இதன்மூலம் பதிவு ஆவணங்களில் ஏற்படக்கூடிய பிழைகள் குறைந்து, பதிவு செயல்முறை மிகவும் செம்மையான முறையில் நடைபெற வழிவகுக்கும்.</p><p>இன்று வழங்கப்பட உள்ள பயிற்சியானது, புதிய நடைமுறையை முழுமையாகப் புரிந்து கொண்டு, பொதுமக்களுக்கு தரமான மற்றும் விரைவான சேவையை வழங்குவதற்கு கட்டுமான நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், அரசின் பதிவுத் துறைக்கும், தனியார் துறைகளுக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கும்.</p> <p>அரசின் இந்த முன்னோடியான முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த அனைவரின் முழுமையான ஒத்துழைப்பும் அவசியமாகும். இன்றைய நிகழ்ச்சியில் பெறப்படும் அறிவும், அனுபவமும் 17.08.2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய நடைமுறையை சிறப்பாக நடைமுறைப்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன்.</p><p>தமிழ்நாடு அரசின், மக்கள் நலன் சார்ந்த இத்தகைய சீரிய முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என  அமைச்சர் தெரிவித்தார்.</p><p>இக்கூட்டத்தில் வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., பத்திரப் பதிவுத்துறை தலைவர் திரு.ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப., கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்- கனிமொழி எம்.பி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">6a2c4981-9d78-4e1f-a74e-de4960d54567</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:34:17 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:34:17.204Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,DMK,கனிமொழி,Kanimozhi,தி.மு.க,காவல் மரணம்,ஜனநாயகன் படம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2022/11/28/1006553-kanimozhi.webp" width="750"><media:title type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி காவல் மரணம் குறித்து கேள்வி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2022/11/28/1006553-kanimozhi.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கனிமொழி</a> தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.</p><p>காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!</p><p>நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காவல் மரணம் </a>குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘எம்.ஜி.ஆர். படத்தை முதல் நாளில் பார்த்தது போன்ற மகிழ்ச்சி இன்று எனக்கு ஏற்பட்டது’ - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-i-felt-the-same-joy-i-used-to-experience-watching-an-mgr-movie-on-its-opening-day-speaker-jct-prabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-i-felt-the-same-joy-i-used-to-experience-watching-an-mgr-movie-on-its-opening-day-speaker-jct-prabhakar#comments</comments><guid isPermaLink="false">aff57e0e-3493-4a86-9b99-b3a7d667f867</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:24:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:24:38.443Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜனநாயகன்,Jananayagan,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,J.C.T. Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/qpi5j8a5/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/qpi5j8a5/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து மீண்டு இன்று(23-ந்தேதி) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.</p><p>இந்தப் படம், விஜய்யின் திரைப்பயணத்தின் இறுதித் திரைப்படம் எனக் கூறப்படுவதாலும், தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பதாலும் இந்த படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். விஜய் ரசிகர்களும், த.வெ.க. கொண்டர்களும் நேற்று இரவு முதலே ஆட்டம் பாட்டத்தை தொடங்கியதால் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. </p> <p>சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகள் அனைத்தும் பிரமாண்ட கட்-அவுட்கள், வண்ணமயமான பேனர்கள், மலர் மற்றும் மின்னொளி அலங்காரங்களால் ஜொலித்தன. விஜய்யின் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, மலர் தூவி, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேளதாளங்கள், பட்டாசுகள், ஆட்டம்-பாட்டம் என திரையரங்குகள் முன்பு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. </p><p>இந்நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சென்னையில் உள்ள திரையரங்கில் இன்று ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் காட்சியை பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை முதல் நாள் முதல் காட்சி நான் பார்த்தபோது எந்த அளவிற்கு மகிழ்ச்சி ஏற்பட்டதோ, அதே போன்ற மகிழ்ச்சி இன்று எனக்கு ஏற்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள இந்தியர்களும், தமிழர்களும், சினிமா ரசிகர்களும் பார்த்து ரசிக்க வேண்டிய படம்” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூரில் ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருடுபோன விவகாரம்: 5 வன அலுவலர்கள் சஸ்பெண்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theft-of-red-sanders-logs-worth-50-lakh-in-tirupathur-5-forest-officials-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theft-of-red-sanders-logs-worth-50-lakh-in-tirupathur-5-forest-officials-suspended#comments</comments><guid isPermaLink="false">b21a9673-a603-4241-b86b-d099ca32aff6</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:20:17 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:20:17.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருட்டு,திருப்பத்தூர்,Theft,Tirupathur,சஸ்பெண்டு,செம்மரக்கட்டைகள்,Red Sandalwood</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/wwr4lef0/16.gif" width="768"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/wwr4lef0/16.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர், </p><p>ரூ.50 லட்சம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20">செம்மரக்கட்டைகள் </a>திருடுபோன விவகாரத்தில், 5 வன அலுவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். </p><h2>ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு</h2><p>திருபத்தூரில் தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒன்று உள்ளது. செம்மர வழக்குகளில் பிடிபடும் செம்மரக்கட்டைகளும் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. </p><p>அந்த வகையில், பல்வேறு செம்மர வழக்குகளில் பிடிபட்ட 55 செம்மரக்கட்டைகள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. 1,750 கிலோ எடை கொண்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். </p><h2></h2><h2>5 வன அலுவலர்கள் சஸ்பெண்டு</h2><p>இந்த செம்மரக்கட்டைகள் கடந்த 18-ந் தேதி திருடு போனது. இதுகுறித்து, திருப்பத்தூர் அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒற்றைப்பூட்டு அலுவலர் நா.ஜோதிலிங்கம், திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி வன அலுவலர்கள் 5 பேரை திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் எம்.மகேந்திரன், சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒற்றைப்பூட்டு அலுவலர் என்.ஜோதிலிங்கம், வனக்காப்பாளர்கள் ஆர்.மோகன்குமார், பி.ராமமூர்த்தி, சி.ரேணு, வனவர் பி.பரமகுரு ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கேள்விகளுக்கு  பதில் கிடைக்காமல் தடியடி கிடைத்தால் நாடு தோற்றதாகவே அர்த்தம்: கமல்ஹாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-one-receives-a-lathi-charge-instead-of-answers-to-questions-it-means-the-country-has-failed-kamal-haasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-one-receives-a-lathi-charge-instead-of-answers-to-questions-it-means-the-country-has-failed-kamal-haasan#comments</comments><guid isPermaLink="false">69f4df59-9ad3-4e1d-8833-342d98c05118</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:58:57 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:58:57.069Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,கமல்ஹாசன்,Kamalhasan,டெல்லி போராட்டம்,Delhi protests</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/7l8m963c/Kamal-hasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கமல்ஹாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/7l8m963c/Kamal-hasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">கமல்ஹாசன்</a> தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; </p><p>குழந்தை அழும்போதே கவனிக்காமல் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதற்கு பதில், தடியடி கிடைத்தால் நாடு தோற்றதாகவே அர்த்தம். குழந்தை அழும்போதே கவனிக்காமல், நம் குழந்தைகள் பலர் இறக்கும் வரை காத்திருந்துவிட்டோம்; குழந்தைகள் தங்கள் கடமையைச் செய்துவிட்டார்கள்; அவர்களுக்கான கடமையை செய்வது நாட்டின் பொறுப்பு </p> <h2>மிகவும் சிறப்பானவர்</h2><p>சோனம் வாங்சுக், நீங்கள் நாட்டுக்குத் தேவைப்படுகிறீர்கள். எனவே, இந்தியாவின் மாணவர்களுக்காக உங்களுடைய உண்ணாவிரதத்தை நீங்கள் முடித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களுக்கு மிகவும் சிறப்பானவர். உங்களது வேலையை நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள். நாடு உங்களுக்குத் தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் இது. எங்களுடைய தோல்விகளை விட உங்களுடைய கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.</p><h2>டெல்லி போராட்டம்,</h2><p>நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் பேரணியைக் களைத்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் போராட்டம் விரிவடைந்து வருகிறது. இந்த சூழலில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">கமல்ஹாசன் </a>இந்த விவகாரத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி உப்பு தொழிலை முடக்கும் குஜராத் உப்பு; என்ன காரணம்...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gujarat-salt-is-paralyzing-the-thoothukudi-salt-industry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gujarat-salt-is-paralyzing-the-thoothukudi-salt-industry#comments</comments><guid isPermaLink="false">42e35025-96e4-4ed1-902a-df8f8ba4016f</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:44:53 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:44:53.813Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,Gujarat,Thoothukudi,தூத்துக்குடி,உப்பு உற்பத்தி,Salt production,தூத்துக்குடி உப்பு,குஜராத் உப்பு,Thoothukudi salt,Gujarat salt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/dqbdpf6w/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி உப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/dqbdpf6w/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தூத்துக்குடி உப்பு</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.</p><p>நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள் ஆகும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/1puexbqv/CHENNAI-13.jpg" /></figure><h2>போதிய விலை இல்லை</h2><p>நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கின. தொடர்ந்து புதிய உப்பு உற்பத்தியாகி வந்தது. இடையிடையே பெய்த லேசான மழையால் உற்பத்தி சிறிது பாதிக்கப்பட்டாலும், தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உப்பு உற்பத்தி வேகம் எடுத்துள்ளது. இதுவரை சுமார் 50 சதவீதம் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>அதே நேரத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்காமல் உற்பத்தியாளர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஆண்டு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டபோது, பல நிறுவனங்கள் குஜராத்தில் இருந்து உப்பை வாங்கி விற்பனை செய்தனர். அதன்பிறகு உற்பத்தி அதிகரித்தபோது, போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் உப்பை குறைந்த விலைக்கு விற்பனை செய்யாமல் இருப்பு வைத்தனர். அந்த உப்புக் குவியல்களை இன்றும் பார்க்க முடிகிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/8xto0u55/Untitled-1.jpg" /></figure><h2>குஜராத் உப்பு வருகை</h2><p>இந்த நிலையில் புதிய உப்பும் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் எதுவும் இல்லாததால் உப்பு உற்பத்திக்கு உகந்த காலநிலை நீடித்து வருகிறது. இதனால் உப்பு விலை கடுமையாக சரிந்து உள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் இருந்து தொடர்ந்து தூத்துக்குடியை நோக்கி உப்பை ஏற்றிக் கொண்டு கப்பல்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது மேட்டூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து 34 ஆயிரத்து 427 டன் உப்பு கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு வந்து உள்ளது.</p><p>அதே நேரத்தில் தூத்துக்குடியில் உப்பு அதிகளவில் உற்பத்தியானதால் விலை குறைவாக உள்ளது. அதைவிடவும் குறைந்த விலையில் குஜராத்தில் இருந்து உப்பு விற்பனைக்கு வருவதால் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களின் கூலி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றால் உப்பு விலையை ஓரளவுக்கு மேல் குறைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனை சாதகமாக்கி, குஜராத் உப்பு தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து கொண்டிருக்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/nywxjsl5/Untitled-2.jpg" /></figure><h2>நலிவடையும் தொழில்</h2><p>இதுகுறித்து உப்பு வியாபாரி ஒருவர் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பு இன்னும் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு உப்பு பற்றாக்குறை காரணமாக குஜராத்தில் இருந்து உப்பு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு நேரடி யாக உப்பு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த மார்க்கெட்டை தூத்துக்குடி வியாபாரிகள் இழந்து உள்ளனர்.</p><p>குஜராத்தில் இருந்து நேரடியாக ரெயில் மூலம் கர்நாடகா, ஆந்திராவுக்கும், கன்டெய்னர்களில் கொச்சி துறைமுகம் மூலம் கேரளாவுக்கும் உப்பு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். தற்போது தமிழகத்தின் மார்க்கெட்டையும் தூத்துக்குடி உப்பு குறி வைத்து வருகிறது. தூத்துக்குடியில் தற்போது ஒரு டன் முதல் ரக உப்பு ரூ.1,200 முதல் ரூ.1,400 வரையும், 2-வது ரக உப்பு ரூ.900 முதல் ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/g8krfph7/Untitled-3.jpg" /></figure><h2>மார்க்கெட்டை இழந்துள்ளது</h2><p>தூத்துக்குடி உப்புக்கு தனிப்பெருமை உண்டு. இந்த உப்பு பால் வெண்மையாகவும், எளிதில் கரையக்கூடியதாகவும் இருக்கும். இதனால் சிறப்பிடம் பெற்று இருந்த உப்பு தற்போது விற்பனை வாய்ப்பை இழந்து வருகிறது. குஜராத்தில் ஒரு டன் முதல்தர உப்பு ரூ.400 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உப்பை கப்பல் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்தாலும், குறைந்த விலையிலேயே கொடுக்க முடிகிறது.</p><p>இதனால் தொழிற்சாலைகள் போன்ற பெரிய நிறுவன வாடிக்கையாளர்கள் குஜராத் உப்பை வாங்கத் தொடங்கி விட்டனர். இதன்காரணமாக தூத்துக்குடி உப்பு, மார்க்கெட்டை இழந்துள்ளது. உப்பு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் உப்புத்தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே, அரசு சலுகைகளை வழங்கி உப்புத் தொழிலை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/vzhw4079/Untitled-4.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் 12 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்: வாலிபர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-kg-of-cannabis-chocolates-seized-in-chennai-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-kg-of-cannabis-chocolates-seized-in-chennai-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">1a76f190-2273-453a-ab6a-facfc2b04451</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:41:58 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:41:58.859Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Youth arrested,வாலிபர் கைது,கடத்தல்,கஞ்சா சாக்லேட்,cannabis chocolates</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/d0twpzzl/ganja-chacolate.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் 12 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/d0twpzzl/ganja-chacolate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா சாக்லேட்களை போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக ஒரு வாலிபரைக் கைது செய்தனர்.</p><h2>பார்சல் சர்வீஸ் மூலம் கடத்தல்</h2><p>சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு தனியார் பார்சல் சர்வீஸ் மூலமாகப் போதை சாக்லேட்கள் கடத்தி வரப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.</p><h2>அதிரடி சோதனை- பறிமுதல்</h2><p>அந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் குறிப்பிட்ட பார்சல் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த பார்சல்களை ஆய்வு செய்தபோது, அவற்றில் 12 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லேட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.</p><h2>வாலிபர் கைது</h2><p>இந்த போதை பார்சலை வாங்க வந்த சென்னையின் சௌகார் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற வாலிபரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். </p><p>மேலும், சென்னை சூளைப் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், தர்மேந்தர் என்பவரிடமிருந்து 726 கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரெயிலில் 3 கிலோ கஞ்சா கடத்தல்: வடமாநில வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-youth-arrested-for-smuggling-3-kg-of-ganja-in-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-youth-arrested-for-smuggling-3-kg-of-ganja-in-train#comments</comments><guid isPermaLink="false">02f4dc38-cecd-4b08-b542-cdf3a355422a</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:39:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:39:50.158Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Express train,எக்ஸ்பிரஸ் ரெயில்,Thoothukudi,arrested,தூத்துக்குடி,Police raid,கஞ்சா பறிமுதல்,Ganja seized,வடமாநில வாலிபர் கைது,போலீசார் சோதனை,northern state youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/u09evvjb/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், வடமாநில வாலிபர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/u09evvjb/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 கிலோ <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a>வை கடத்தி வந்த வடமாநில வாலிபரை ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>சோதனை</h2><p>சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கடந்த 20-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் மதுரையை கடந்து வந்தபோது, நெல்லை ரெயில்வே போலீசார் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முன்பதிவு இல்லாத பெட்டியில் சந்தேகப்படும்படியாக இருந்த வடமாநில வாலிபரின் பையை சோதனை செய்தனர்.</p><h2>3 கிலோ கஞ்சா பறிமுதல்</h2><p>ரெயில்வே போலீசார் மேற்கொண்ட சோதனையின்போது, அந்த பையில் 3 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த வாலிபரை பிடித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பீகார் மாநிலம், பஹால்பூரை சேர்ந்த கவுதம்குமார் (வயது 20) என்பதும், அவர் பீகாரில் இருந்து, தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்காக வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பிடிபட்ட கவுதம்குமார் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை தூத்துக்குடி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தேசத்தின் பொது அமைதியை குலைக்க முயலும் காங்கிரஸ்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-attempting-to-disrupt-the-nations-public-peace-nainar-nagendrans-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-attempting-to-disrupt-the-nations-public-peace-nainar-nagendrans-allegation#comments</comments><guid isPermaLink="false">d4bd1977-8a7f-4c1c-a4f3-146ee094c7de</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:16:49 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:16:49.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,காங்கிரஸ்,Congress</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/6nj5e5rg/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/6nj5e5rg/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெல்லியில் இளைஞர்களுடன் சேர்ந்து சேர்ந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சினர் மற்றும் ராகுல் காந்தியைக் கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>"வினாத்தாள் முறைகேட்டிற்கு எதிராகப் போராடுகிறோம்" என்ற போர்வையில், தேச ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, தேசத்தின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பாக இன்று தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p>மாணவர்களின் நலன் என்று வந்து விட்டால், அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் ஓரம்கட்டி வைத்து விட்டு, களத்தில் இறங்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துடிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. நாட்டின் தூண்களாகிய இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து அரசியல் செய்யுமளவிற்கு நாங்கள் தரம் தாழ்ந்து போகவில்லை. ஆனால், அரசியலில் “Field Out” ஆன காங்கிரஸ் போன்ற கட்சிகள், மாணவர்கள் போராட்டத்தை கலவரமாக மாற்ற நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவுவதை ஆதரிக்கும் காங்கிரசின் வெறுப்பரசியலை ஊக்குவிப்பது பேராபத்தானது என்பதை உணர்த்தும் குறியீடு தான், தமிழக பாஜகவின் இன்றைய முற்றுகைப் போராட்டம்.</p><p>இப்போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, காங்கிரசாரை கதிகலங்க வைத்த தமிழக பாஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றிகள்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கிய முட்டையில் கோழிக்குஞ்சு: பெற்றோர் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-shocked-after-finding-chick-in-egg-given-to-child-at-anganwadi-center</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-shocked-after-finding-chick-in-egg-given-to-child-at-anganwadi-center#comments</comments><guid isPermaLink="false">17dc922c-2e17-45ff-a306-4e2a01a899cb</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:01:09 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:01:09.097Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,children,குழந்தைகள்,அதிர்ச்சி,பெற்றோர்,Parents,Chicken,முட்டை,egg,Anganwadi center,அங்கன்வாடி மையம்,Shocked,கோழிக்குஞ்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/7oe24hmj/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கிய முட்டையில் கோழிக்குஞ்சு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/7oe24hmj/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டத்தில் ரெகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88">முட்டை</a>யில் அழுகிய நிலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">கோழிக்குஞ்சு</a> இருந்த விவகாரம் தொடர்பாக நேற்று சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் விசாரணை நடத்தினார்.</p><h2>அங்கன்வாடி மையம்</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு சொர்ணமாரி என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த மையத்தில் குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. இதில், மையத்துக்கு வரும் 1 வயதிலிருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரிடம் வாரத்துக்கு 3 முட்டைகள் வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு மையத்திலேயே முட்டையை வேக வைத்து, உணவுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.</p><h2>முட்டையில் இறந்த நிலையில் கோழிக்குஞ்சு</h2><p>இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி இந்த மையத்தில் 1 வயது குழந்தையின் பெற்றோரிடம் 3 முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை வீட்டுக்கு கொண்டு சென்ற பெற்றோர். நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) ஒரு முட்டையை வேக வைத்தனர். சிறிது நேரத்தில் அந்த முட்டையை உடைத்தபோது, அதில் கோழிகுஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த முட்டையை மையத்துக்கு எடுத்து சென்று ஊழியரிடம் காண்பித்துள்ளனர். அதற்கு அவர் சரிவர பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இது மற்ற பெற்றோருக்கும் தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>அதிகாரி விசாரணை</h2><p>இதை தொடர்ந்து நேற்று சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் பத்மா அந்த அங்கன்வாடி மையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில், "பிரச்சினைக்குரிய முட்டையின் ஓடுகளை பரிசோதித்து, அவை அரசு சார்பில் வழங்கப்பட்டதா? அல்லது வெளியே இருந்து வாங்கி பயன்படுத்திய முட்டையா? என்பது குறித்து அறிந்த பின்னர் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக வேட்பாளர் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றார் பெரியகருப்பன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyakaruppan-withdraws-case-filed-against-tvk-candidates-victory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyakaruppan-withdraws-case-filed-against-tvk-candidates-victory#comments</comments><guid isPermaLink="false">05f688ea-70ee-4f0a-a7f1-c0d7625ad7a4</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:46:02 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:46:02.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,பெரியகருப்பன்,periyakaruppan,சீனிவாச சேதுபதி,seenivasa sethupathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/6sap3d5t/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/6sap3d5t/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி அதே தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதையடுத்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு அனுப்ப வேண்டிய தபால் வாக்குகள் மாறாக திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறி பெரிய கருப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.</p><p>வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, தமிழக சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் வாக்களிக்க திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது.</p><p>இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து ஆணை பிறப்பித்தது. இதற்கிடையில் மேற்கண்ட வழக்கானது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது இந்த விவகாரத்தில் பெரியகருப்பன் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்று அவர்களது தரப்பு வழக்கை வாபஸ் பெற சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்கிறது. மேலும் ஐகோர்ட்டில் இருக்கும் வழக்கை ரத்து செய்ய முடியாது. இரு தரப்பினரும் ஐகோர்ட்டை அணுகலாம். அங்கிருக்கும் வழக்கை சட்டத்திற்கு உட்பட்டு விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும். அதேப்போன்று இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை நீக்கம் செய்கிறோம்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p><p>இந்த நிலையில், தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை, திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் திரும்பப் பெற்றுள்ளார். தற்போது வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முறைப்படியான 'தேர்தல் வழக்கு' தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், முந்தைய மனுவை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-barred-from-entering-chennais-marina-beach</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-barred-from-entering-chennais-marina-beach#comments</comments><guid isPermaLink="false">d7631c07-c172-4572-ae22-1954f0022e99</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:40:55 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:40:55.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மெரினா கடற்கரை,Marina beach,டெல்லி போராட்டம்,Delhi protests</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/tv9a9j0f/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/tv9a9j0f/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் ஏராளமான இளைஞர்கள்  தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் பொதுப்போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.</p><p>டெல்லியின் பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராடும் இளைஞர்களை அப்புறப்படுத்த டெல்லி போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வருகின்றனர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. டெல்லியை தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் இளைஞர்கள், மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த நிலையில்,  சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி, போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்கள் மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தடியடி கொடுத்தால் நாடு தோற்றதாக அர்த்தம்: கமல்ஹாசன் எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/resorting-to-a-lathi-charge-instead-of-answering-questions-implies-the-country-has-failed-kamal-haasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/resorting-to-a-lathi-charge-instead-of-answering-questions-implies-the-country-has-failed-kamal-haasan#comments</comments><guid isPermaLink="false">00547644-4466-431f-bdb5-92628a52f3d7</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:19:08 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:19:08.149Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கமல்ஹாசன்,Kamal Haasan,டெல்லி போராட்டம்,delhi protest</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/em5hgue5/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/em5hgue5/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியினர் மற்றும் ஏராளமான இளைஞர்கள்  தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கமல்ஹாசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>ஒரு குழந்தை அழுதபோதே நாம் அதைக் கவனித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நம் குழந்தைகள் பலர் உயிரிழக்கும் வரை நாம் காத்திருந்துவிட்டோம். கற்றலுக்குப் பதிலாகப் பயிற்சி வகுப்புகளும் (coaching), ஆர்வத்திற்குப் பதிலாகப் பதற்றமும், தகுதிக்கு (merit) பதிலாகக் குற்றச் செயல்களும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அமைப்பு சீரழிந்த ஒன்றாகும்.</p><p>கேள்விகளுக்குப் பதில்கள் கிடைப்பதற்குப் பதிலாகத் தடைகளும் தடியடிகளும் மட்டுமே குழந்தைகளுக்குக் கிடைக்கும்போது, ​​அந்த நாடு தோல்வியடைந்ததாகவே அர்த்தம்.</p><p>இந்திய குழந்தைகளே, நீங்களே எங்களில் மிகச் சிறந்தவர்கள். உங்கள் கடமையை நீங்கள் செவ்வனே செய்துவிட்டீர்கள். இனி, உங்களுக்கான கடமையைச் செய்ய வேண்டியது நாட்டின் பொறுப்பு. உங்கள் கனவுகள் எப்போதும் பெரிதாக இருக்கட்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் - அமைச்சர் செ.ராஜேஷ் குமார் வரவேற்பு  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/naming-the-breakfast-scheme-after-kamarajar-minister-s-rajesh-kumar-welcomes-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/naming-the-breakfast-scheme-after-kamarajar-minister-s-rajesh-kumar-welcomes-the-move#comments</comments><guid isPermaLink="false">47582096-0b11-43c7-bae7-c4acabdd9443</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:08:26 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:08:26.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் ராஜேஷ் குமார்,Minister Rajesh Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/po1n28ru/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/po1n28ru/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சருமான செ.ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் பொறுப்பேற்றதும் அனைவருக்கும் கல்வி வழங்க பள்ளிகள் இல்லாத கிராமமே இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறந்தார். பள்ளிகளை திறந்தும் மாணவர்கள் வருகை எதிர்பார்த்தபடி இல்லாதபோது அதற்கான காரணத்தை அறிந்து மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தினால் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது, அனைவருக்கும் இலவச கல்வி கிடைத்தது, கல்வியில் புரட்சி நடைபெற்றது. </p><p>அதே திட்டம் பிறகு வந்த அரசுகளால் விரிவுபடுத்தப்பட்டது. காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தை ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை த.வெ.க. அரசு விரிவுபடுத்தியது. இந்த திட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்ற பெயரை சூட்டிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற முறையிலும், அமைச்சர் என்ற முறையிலும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>தமிழ்நாட்டு மக்கள் எந்த ஆட்சியால் அடிப்படை வசதிகளை பெற்றார்களோ அந்த ஆட்சியை வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பெயருக்கு புகழ் சேர்க்கின்ற வகையில் பெயர் சூட்டியதற்காக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்றி பெருக்கோடு வரவேற்கிறார்கள், முதல்-அமைச்சரை பாராட்டுகிறார்கள்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>&quot;நீட் தேர்வில் மட்டுமல்ல, நீட் தேர்வே மோசடிதான்&quot; - உதயநிதி ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/not-only-in-the-neet-exam-but-the-neet-exam-itself-is-a-fraud-udhayanidhi-stalins-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/not-only-in-the-neet-exam-but-the-neet-exam-itself-is-a-fraud-udhayanidhi-stalins-post#comments</comments><guid isPermaLink="false">02cfd89b-bd20-4893-804d-0517bc415a41</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:04:39 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:04:39.494Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,X Page,எக்ஸ் பதிவு,நீட் தேர்வு,NEET Exam,கட்டுரை,article,எதிர்க்கட்சி தலைவர்,Opposition Leader,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,DMK leader MK Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/0z7g91gq/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/0z7g91gq/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>நீட் தேர்வில் மட்டுமல்ல, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">நீட் தேர்வே மோசடிதான்</a> என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது  இன்றைய தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் கட்டுரை என்று உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பாக தமிழக சட்டமன்ற <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: </p><p>நீட் தேர்வில் மட்டுமல்ல, நீட் தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது  இன்றைய தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் கட்டுரை. </p><h2>மருத்துவ கல்வி கனவை சிதைப்பதே நீட் தேர்வின் நோக்கம்</h2><p>ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளின் உண்மையான நோக்கம்! </p><p>அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக தி.முக. என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. ஜாமீன் மனு - இன்று பிற்பகல் விசாரணை  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vilathikulam-dmk-mlas-bail-plea-hearing-this-afternoon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vilathikulam-dmk-mlas-bail-plea-hearing-this-afternoon#comments</comments><guid isPermaLink="false">d0be5170-c27d-4ca4-9cbb-6381d61dfa30</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:41:09 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:41:09.721Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,vilathikulam,விளாத்திகுளம்,DMK MLA,திமுக எம்.எல்.ஏ.,மார்க்கண்டேயன்,Markandeyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/zc38nk58/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/zc38nk58/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தி.மு.க. எம்.எல்.ஏ. கைது</h2><p>விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜி.வி.மார்க்கண்டேயன். இவர் கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் கடந்த 20-ந்தேதி காலையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்தனர்.</p><p>பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சுமார் 11 மணி நேர விசாரணைக்கு பிறகு அவரை இரவில் தூத்துக்குடி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.</p><h2>ஜாமின் மனு தள்ளுபடி</h2><p>இதனால் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பு வக்கீல்கள் ஜாமீன் கோரி, கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று காலை நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையே மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி மனுதாக்கல் செய்தனர். இதனால் 2 மனுக்கள் மீதான விசாரணை மதியம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தூத்துக்குடி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மனுதாரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களின் தன்மை மற்றும் தீவிரத்தன்மை, குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களைச் சிதைப்பதற்கான சாத்தியக்கூறு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சுமதி உத்தரவிட்டார். மேலும், காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் தாக்கல் செய்த அனுமதி மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.</p><h2>இன்று பிற்பகல் விசாரணை</h2><p>இந்த நிலையில், அவதூறு வழக்கில் ஜாமீன் கோரியும், சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரியும் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு முறையிடப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி இன்று பிற்பகல் 2.15 மணிக்கு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-5#comments</comments><guid isPermaLink="false">1edbf6a8-c06e-4ae7-8d54-404f9b21b1c5</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:29:20 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:29:20.036Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power cut,மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/g2g9dkgw/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/g2g9dkgw/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (24.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,</p><h2>வேளச்சேரி</h2><p>100 அடி புறவழிச்சாலை, வேளச்சேரி பிரதான சாலை, தேவி கருமாரியம்மன் நகர், வெங்கடேஸ்வரா நகர் 1-வது முதல் 4-வது தெரு வரை, டேவ் பிளாட், பாலகிருஷ்ணா தெரு, திருவள்ளூர் தெரு, கம்பர் தெரு, பாபா கார்டன், வீனஸ் காலனி, காமராஜர் தெரு, டான்சி நகர் மற்றும் முழு வி.ஜி.பி. செல்வா நகர்.</p><h2>ஆவடி</h2><p>சி.டி.எச் சாலை, கவரபளையம், சிந்து நகர், காந்தி நகர், டி.ஆர்.ஆர் நகர், தனலட்சுமி நகர், எம்.ஆர்.எப். நகர், நாசர் பிரதான சாலை, மோசஸ் தெரு.</p><h2>பூவிருந்தவல்லி</h2><p>ஜெ.ஜெ. நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி பிரதான சாலை.</p><h2>மாங்காடு</h2><p>மலையம்பாக்கம் பாரி கார்டன், ராயல் சிட்டி, சக்தி நகர், ரஹ்மத் நகர், எல்.கே.பி. நகர், பிள்ளையார் கோவில் தெரு, அபி எஸ்டேட், ஸ்ரீனிவாச நகர், ஜனனி நகர், நேரு தெரு, காமராஜர் தெரு, வசந்தபுரி பேஸ் I மற்றும் II, ராம் நகர்.</p><h2>தாம்பரம்</h2><p>மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பிரதான சாலை, நூத்தஞ்சேரி லிங்க் சாலை, சபாபதி நகர், ஜோதி நகர், மாணிக்கம்நகர், வேங்கைவாசல், பாலா கார்டன் மற்றும் விரிவாக்கப் பகுதி. X</p><h2>புழல்</h2><p>மதானக்குப்பம், புத்தகரம், பெருமாள் நகர், ஆண்டாள் கோவில் தெரு, சண்முகபுரம். சிவப்பிரகாசம் நகர், நேதாஜி நகர், லட்சுமி அம்மன் நகர்.</p><h2>போரூர்</h2><p>சிக்கராயபுரம், கணபதி நகர், அஷ்டலக்ஷ்மி நகர், ஹரி அவென்யூ, மாசிலாமணி நகர், லட்சுமி அவென்யூ, மாந்தியம்மன் கோவில் தெரு, மங்களாபுரம், கே.கே.நகர், தென் காலனி, சபரி நகர், பாலாஜி நகர், கார்த்திக் பேலஸ், ஆர்.சி. பேலஸ், திருமுருகா மண்டபம், குன்றத்தூர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர். சிலை பஸ் ஸ்டாப், மேட்டு தெரு, பஜனை கோவில் தெரு, காந்தி தெரு, சிவன்தாங்கல், ஆஞ்சநேயர் கோவில் தெரு, அம்பாள் நகர், லீலாவதி நகர், குமாரசாமி நகர்,ஐடியா கம்பெனி.</p><h2>ஐ.டி. காரிடார்</h2><p>எழில் நகர், கண்ணகி நகர், வி.பி.ஜி அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன் குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட்பேட்டன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, என்.ஜி.கே அவென்யூ, செயலக காலனி, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர், தேவராஜ் நகர், ஸ்ரீ நகர், மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்க நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணா நகர், கோபிநாத் அவென்யூ, ஈஞ்சம்பாக்கம், கஸ்தூரிபாய் நகர்.</p><h2>அடையாறு</h2><p>எல்.பி. சாலை, 1-வது முதல் 4-வது பரமேஸ்வரன் நகர், சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ, 1-வது முதல் 3-வது பத்மநாபன் நகர், இந்திரா நகர், சீனிவாசமூர்த்தி அவென்யூ, திருவேங்கடம் தெரு, 1-வது குறுக்குத் தெரு, கே.பி. நகர், அண்ணா அவென்யூ.</p><h2>பெசன்ட் நகர்</h2><p>கங்கை தெரு, அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, கடற்கரை சாலை, ருக்மணி சாலை விரிவாக்கப்பகுதி, அஷ்டலட்சுமி கார்டன், ஓடை குப்பம், திடீர் நகர், கோஸ்டல் சாலை, திருமுருகன் தெரு, வைகை தெரு. பாரி தெரு, காவேரி தெரு.</p><h2>கொட்டிவாக்கம்</h2><p>நியூ கடற்கரை சாலை மற்றும் விரிவாக்கப்பகுதி, சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2-வது மற்றும் 7-வது பிரதான சாலை, 36-வது, 58-வது மற்றும் 59-வது குறுக்குத் தெரு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், தாமரை ஹவுசிங் போர்டு, பேவாட்ச் புல்வார்டு. வாட்டர்லேண்ட் டிரைவ்.</p><h2>கோவிலம்பாக்கம்</h2><p>ஏழுமலை சாலை, வடிவேல் நகர், கோபால் நகர், பெருமாள் நகர், பார்த்தசாரதி சாலை, ஜெய்கணேஷ் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, அபிநாதன் நகர், விஜயலட்சுமி நகர், தமிழன் தெரு. பாலகிருஷ்ணா தெரு, அவிவா என்க்ளேவ், பாலராமன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு.</p><h2>அம்பத்தூர்</h2><p>என்.ஆர்.எஸ். சாலை, பல்லா தெரு, டி.வி.எஸ். நகர், கண்டிகை தெரு, அக்ரஹாரம், சீனிவாசபுரம், செந்தில் நகர், ஐயப்பன் நகர், சீனிவாச நகர், தயாளன் நகர், கணேஷ் நகர், பாபா நகர், கடப்பா சாலை, வனசக்தி நகர், மூகாம்பிகை நகர், மதானக்குப்பம். பெருமாள் கோவில் தெரு மற்றும் ஆர்.கே. சிண்டிகேட்.</p> ]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நெல்லையில் போராடிய மாணவர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-arrested-for-protesting-in-nellai-demanding-cancellation-of-neet-exam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-arrested-for-protesting-in-nellai-demanding-cancellation-of-neet-exam#comments</comments><guid isPermaLink="false">6ca02b27-4ecc-4371-9f03-740d15c2d1c0</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:22:21 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:22:21.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,கைது,arrest,நீட் தேர்வு,NEET Exam,Waiting Struggle,காத்திருப்பு போராட்டம்,இந்திய மாணவர் சங்கம்,Indian Students Union,ரத்து செய்யக்கோரி,demanding cancellation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/tr42g2hi/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நெல்லையில் மாணவர்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/tr42g2hi/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF">நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி</a>, நெல்லையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டம்</a> நடத்திய மாணவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்</h2><p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சென்னையிலும் மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">நெல்லை</a> வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் ஷைலேஷ் அருள்ராஜ் தலைமையில் நேற்று காலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்காததால் மாணவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மாணவர்களை போலீசார் தடுத்தபோது அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.</p><h2>குண்டுக்கட்டாக கைது</h2><p>தொடர்ந்து தடையை மீறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். சிலரை சாலையில் தரதரவென இழுத்து சென்று போலீசார் வாகனங்களில் ஏற்றினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாநகராட்சியில் 132 டெண்டர்களை ரத்து செய்வது குறித்து பரிசீலனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consideration-to-cancel-132-tenders-in-coimbatore-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consideration-to-cancel-132-tenders-in-coimbatore-corporation#comments</comments><guid isPermaLink="false">c84b8550-707c-489d-887d-0f4a1b0a2ef0</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:01:10 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:01:10.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,tender,டெண்டர்,கோவை மாநகராட்சி,Coimbatore Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/2g1ggapi/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/2g1ggapi/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>132 டெண்டர்கள்</h2><p>கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சட்டமன்ற தேர்த லுக்கு முன்பு 100 வார்டுகளில் பல்வேறு திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி (ஏ சேங்சன்) வழங்கப்பட்டது. ஆனால் 'சி சேங்சன்', அதாவது கவுன்சில் கூட்டத்தில் வைத்து தீர்மான ஒப்புதல் தரப்படவில்லை.</p><p>இதனால் மாநகர் முழுவதும் மழைநீர் வடிகால், தடுப்புச்சுவர், போர்வெல், கழிவறை என பல்வேறு திட்ட பணிகள் தொடங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இதுவரை 132 டெண்டர் களில் முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக எந்த முடிவும் அறிவிக்காமல் மவுனமாக இருக்கிறது.</p><h2>கவுன்சிலர்கள்</h2><p>இதேபோன்று மாநகர் முழுவதும் பூங்கா கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டது. மாநகராட்சி கவுன்சிலர்கள் கூறும்போது, கடந்த காலங்களில் தேர்தலுக்கு முன்பு நாங்கள் மாநகராட்சி பொறியாளர்களுடன் இணைந்து வார்டு திட்ட பணிகளை ஆய்வு செய்தோம். அளவீடு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்தோம். நிர்வாக அனுமதி பெற்ற பிறகு அந்த பணிகள் தொடங்கப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. அதே நேரத்தில் சில பணிகளை ரத்து செய்யாமல் நிலுவையில் வைத்துள்ளனர். ஆட்சி மாறிய பிறகு அந்த திட்ட பணிகளின் விவரம் தெரியவில்லை. பணிகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ரத்து செய்ய வேண்டும் என்றனர்.</p><h2>நிதி நிலை அடிப்படையில்...</h2><p>ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், எங்களுக்கு கடந்த கால திட்ட பணிகள் ரத்து தொடர்பாக தகவல் தரவில்லை. அடுத்து மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்ய போகிறது என தெரியாது என்றனர். மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது, மாநகராட்சியின் நிதி நிலை அடிப்படையில் இந்த டெண்டர்கள் நிலுவையில் உள் ளன. நிதி நிலைமைக்கு தகுந்தவாறும், அத்தியாவசிய பணி அடிப்படையிலும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை முற்றிலும்  ஒழிப்பதற்கான நேரம் இது - மு.க.ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-the-time-to-completely-abolish-the-neet-exam-mk-stalins-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-the-time-to-completely-abolish-the-neet-exam-mk-stalins-statement#comments</comments><guid isPermaLink="false">c0685bf5-7cb2-4127-bea7-b79626b132f6</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:47:53 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:47:53.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,நீட் தேர்வு,NEET Exam,M.K. Stalin</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/e3tcdhn4/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/e3tcdhn4/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் ஆதரவுக்குரல் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்வை முற்றிலும் ஒழிக்க வேண்டிய நேரம் இது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>” 3 முக்கிய வாக்குறுதிகளுடன் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p>1. சுமையைக் குறைத்தல்,</p><p>2. வணிகமயமாக்கலை ஒழித்தல், </p><p>3. தரத்தை மேம்படுத்துதல். </p><p>இந்த ஒவ்வொரு அம்சத்திலும் நீட் தேர்வு தோல்வியடைந்துள்ளது.</p><p>* நீட் தேர்வு கற்றலின் மையத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றி உள்ளது. அவ்வளவு தான்.</p><p>* நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானது. சமீபத்திய நிகழ்வுகள் அதை உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>* டெல்லியில் நடைபெறும் போராட்டங்களுக்கு பிறகாவது மத்திய அரசு விழிப்படைய வேண்டும். நீட் விவகாரத்தில் திறந்த மனதுடன், மத்திய அரசு ஆலோசனைகளை நடத்த வேண்டும். </p><p>* இந்தியாவில் அதிகாரக் குவிப்பு தேவையில்லை, மாறாக மாநிலங்கள் மீதும், அதன் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது."</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>&apos;ஜனநாயகன்&apos; வெளியான இன்றைய நாளே எங்களுக்கு பொங்கல் - ரசிகர்கள் உற்சாகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jananayagan-releases-today-pongal-for-us-fans-excited</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jananayagan-releases-today-pongal-for-us-fans-excited#comments</comments><guid isPermaLink="false">de835778-ae28-4ad3-9838-adad31b8b31b</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:27:37 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:27:37.804Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Jana Nayagan,ஜனநாயகன்,ஜனநாயகன் படம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/90cvhqu0/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/90cvhqu0/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ரசிகர்கள் ஏமாற்றம்</h2><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்', பொங்கல் பண்டிகை வெளியீடாக கடந்த ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனதால், படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகவில்லை. இதனால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். </p><p>அப்போதே, என்றைக்கு 'ஜனநாயகன்' திரைக்கு வருகிறதோ, அன்றைய நாளே எங்களுக்கு பொங்கல் என்று கூறினார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிய நேரத்தில், 'ஜனநாயகன்' திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2>இணையத்தில் வெளியானது</h2><p>பல நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம், இப்படி இணையத்தில் வெளியாகிவிட்டதே என்று தயாரிப்பாளர் தரப்பு உள்பட விஜய் ரசிகர்களே அதிர்ந்து போனார்கள். 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.</p><h2>இன்றைய நாளே பொங்கல்</h2><p>இதற்கிடையே, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பின்னர், 'ஜனநாயகன்' படத்திற்கு இருந்த சிக்கல், ஒன்வொன்றாக அகன்றது. இறுதியாக படத்திற்கு 'ஏ' தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, 6 மாத தாமதத்திற்கு பிறகு 'ஜனநாயகன்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.</p><p>அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகத்தில் காலை 6 மணிக்கே சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 1,000 திரையரங்குகளில் 'ஜனநாயகன்' வெளியானது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. 'ஜனநாயகன்' வெளியான எல்லா திரையரங்குகளிலும் விஜய் ரசிகர்கள், த.வெ.க. தொண்டர்கள் திரண்டு வந்து ஆரவாரம் செய்து வருகின்றனர். பைக், கார் முழுவதும் முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை ஒட்டி, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால், ஜனநாயகனைக் காண தியேட்டர்களில் திரண்ட ரசிகர்கள் விஜய்யின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, மலர்களைத் தூவி, இனிப்புகளை வழங்கியும் ஆரவாரம் செய்து வருகின்றனர். 'ஜனநாயகன்' வெளியான இன்றைய நாளே தங்களுக்கு பொங்கல் பண்டிகை என்று மகிழ்ச்சி பெருக்கோடு கூறினார்கள்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/w0glaffb/Untitled-3.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/yeeyups9/Untitled-4.jpg" /></figure><h2>கவனத்தை ஈர்த்த பேனர்</h2><p>நாளைய தீர்ப்பு முதல் ஜனநாயகன் வரை முதல்-அமைச்சர் விஜய் நடித்த படங்கள் அடங்கிய ஒற்றை பேனர் ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதைபோல தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தவெக பாடல் போட்டு ரசிகர்கள் ஆட்டம் போட்டு கொண்டாடினர்.</p><h2>ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர்கள்</h2><p>சென்னை ரோகிணி திரையரங்கில் முதல்-அமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் பட முதல் காட்சியை அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ் கண்டு ரசித்து வருகின்றனர். ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்யுடன் அமைச்சர் அருண்ராஜ் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். இதைபோல புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் ஆனந்த கண்ணீர் சிந்தியபடி ஜனநாயகன் படத்தை பார்த்தார் அமைச்சர் முகமது பர்வேஷ்.</p><p>கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள திரையரங்கில் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் ஜனநாயகன் படத்தை பார்த்தார். குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மமிதா பைஜூ, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ஜனநாயகன் படம் பார்த்து வருகின்றனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/4oh3y9ma/Untitled-1.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/jyus5f8y/Untitled-2.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி: பெண் தற்கொலை வழக்கில் த.வெ.க. பிரமுகர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-tvk-leader-arrested-in-woman-suicide-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-tvk-leader-arrested-in-woman-suicide-case#comments</comments><guid isPermaLink="false">3c497ef9-f2c8-4461-96cf-d60a4d8694ae</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:05:26 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:05:26.304Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,கைது,arrested,Kanyakumari,தூக்குப்போட்டு தற்கொலை,பெண்,Woman,commits suicide by hanging,T.V.K. leader,த.வெ.க. பிரமுகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/mxj1imra/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ த.வெ.க. பிரமுகர் சங்கர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/mxj1imra/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">பெண் தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்த வழக்கில் தொடர்புடைய த.வெ.க. பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><h2>பெண் தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>கன்னியாகுமரி மாவட்டம், மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், துபாயில் எலக்ட்ரீசியனாக உள்ளார். இவருடைய மனைவி அனிஷா (வயது 33) தனியார் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12-ந்தேதி அனிஷா, தன் கணவருக்கு “இது நான் அவன் மேல விருப்பப்பட்டு செய்தது கிடையாது. என்னை அவன் வாழ விடமாட்டான்." என்று வீடியோ மூலம் தகவலை அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.</p><h2>த.வெ.க. பிரமுகர் கைது செய்து சிறையில் அடைப்பு</h2><p>போலீசார் விசாரணையில் அனிஷா வீடியோ தகவலில் குறிப்பிட்ட நபர், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4.%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%95.%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">த.வெ.க. பிரமுகர்</a> சங்கர் என்று தெரியவந்தது. சென்னை பல்லாவரத்தில் நண்பர் வீட்டில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நேற்று அவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை எதிர்த்து காங்கிரஸ் போராடுவது அரசியல் கேலிக்கூத்து - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congresss-protest-against-the-neet-exam-is-a-political-farce-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congresss-protest-against-the-neet-exam-is-a-political-farce-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">5bf96a5c-c96c-4ade-bd54-ffea3fb2460b</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:59:47 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:59:47.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,காங்கிரஸ்,Congress,நீட் தேர்வு,NEET Exam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/rmoxorcv/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/rmoxorcv/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து –  தமிழகத்தில்  அனுமதியின்றி மாணவர்கள் போராடினால் அடக்குமுறை, அதுவே டெல்லியில் அனுமதியின்றி போராடிய ராகுல்காந்தியை கைது செய்தால் அது ஜனநாயகப் படுகொலையா ?</p><p>2010 ஆம் ஆண்டு, மத்தியில் ஆட்சியில் இருந்த போது மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்ற கருத்தை உருவாக்கி, நீட் தேர்விற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி,  இன்று அதே நீட் தேர்வுக்கு எதிராக  தெருக்களில் இறங்கிப் போராடுவது மாணவ, மாணவியர்களின் உணர்வுகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் கீழ்த்தரமான செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.</p><p>நீட் தேர்வை எதிர்த்து தற்போது போலிப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ், 2010 ஆம் ஆண்டு தான் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை தற்போதாவது ஒப்புக் கொள்கிறதா ? அல்லது அப்போது எடுத்த முடிவு சரி என்றால் தற்போதைய போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காகவா ? என்பதை நாட்டு மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும். </p><p>தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பொதுமக்களுக்கு எத்தகைய சிரமத்தையும் ஏற்படுத்தாமல், முறையாக முன் அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் அமைதியாக போராடலாம் என அதிகாரத் தொணியில் பதிலளிக்கும் தவெக அரசு, டெல்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பாக எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தி அவர்களை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ? </p><p>தனது கடந்தகால தவறுகளையும், முடிவுகளையும் மூடி மறைத்து, மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் எனும் முகமுடியை அணிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்கும் இப்போராட்டம், மாணவ, மாணவியர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>இரண்டில் ஒன்று நாடு எதிர்பார்க்கிறது.. டெல்லி போராட்டம் குறித்து வைரமுத்து கருத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vairamuthus-opinion-on-the-delhi-protests</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vairamuthus-opinion-on-the-delhi-protests#comments</comments><guid isPermaLink="false">3cc1c20c-27fa-4144-a314-62ccbe6671de</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:29:44 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:29:44.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கவிஞர் வைரமுத்து,Poet Vairamuthu,டெல்லி போராட்டம்,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி,CJP protest,delhi protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/yrlfmbnm/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/yrlfmbnm/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p><strong>டெல்லி இளைஞர்கள் போராட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>சிறுதுளிகள் சேர்ந்துவிட்டன; டெல்லியிலே சிறுதுளியின் அடுத்த நிலை என்ன என்பதைப் பழமொழி அறிந்தவர்கள் அறிவார்கள். மழை வெள்ளத்திலும் வலியது மனித வெள்ளம். வங்கதேசமும் நேபாளமும் இலங்கையும் அந்த வெள்ளத்தில் மூழ்கிய கதை மூத்தவர்கள் அறியாததில்லை.</p><p>ஆர்ப்பாட்டம் அடங்கவும் அமைச்சர் பதவி நிலைக்கவும் ஒரே தீர்வு நீட் தேர்வின் நிரந்தர நீக்கம்தான். அரசுக்கு அது பின்னடைவாகிவிடும் என்று பேசப்பட்டால் சமரசத் தீர்வு ஒன்றும் இருக்கிறது. அதுதான் நீட் தேர்வை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது. இரண்டில் ஒன்று நாடு எதிர்பார்க்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொக்லைன் எந்திரம் மோதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-aiadmk-mlas-son-dies-after-being-hit-by-a-pokeline-machine</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-aiadmk-mlas-son-dies-after-being-hit-by-a-pokeline-machine#comments</comments><guid isPermaLink="false">9794afa3-7dfb-4e72-b2ab-aa5adfc67969</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:21:36 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:21:36.499Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,அதிமுக,Chennai,சென்னை,AIADMK,Madurai,மதுரை,former mla,முன்னாள் எம்.எல்.ஏ.,Son dies,மகன் பலி,பொக்லைன் எந்திரம் மூலம்,collision accident,Pockline machine</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/mlaxkjby/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டக்கல்லூரி மாணவர் உலகாதிபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/mlaxkjby/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை கிண்டியில் பொக்லைன் எந்திரம் மோதிய விபத்தில் மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் பலியானார். </p><h2>சென்னை சட்டக்கல்லூரி மாணவர்</h2><p>மதுரை மாவட்டத்தை சேர்ந்த உலகாதிபதி (வயது 21), சென்னை தனியார் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். உலகாதிபதி வேளச்சேரியில், நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில், உலகாதிபதி பைக்கில் கல்லூரிக்கு சென்றார்.</p><h2>பொக்லைன் எந்திரம் மோதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் பலி</h2><p>கிண்டி அருகே சாலையில் சென்றபோது, போக்குவரத்து நெரிசல் காரணமாக அவருக்கு முன்பாக சென்ற வாகனங்கள் நின்றன. உலகாதிபதியும் பைக்கை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பொக்லைன் எந்திரம்</a> உலகாதிபதியின் பைக் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, எதிர்பாராத விதமாக பொக்லைன் எந்திரம் உலகாதிபதி மீது ஏறி இறங்கியது. இதில் உலகாதிபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த உலகாதிபதி, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெரியபுள்ளானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. உலகாதிபதியின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழப்பு</a>க்கு அ.தி.மு.க. கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜனநாயகன் ரிலீஸ் கதை எல்லாம் எனக்கு தெரியாது: துரைமுருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-dont-know-the-whole-story-of-jana-nayagan-release-duraimurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-dont-know-the-whole-story-of-jana-nayagan-release-duraimurugan#comments</comments><guid isPermaLink="false">4b4ed6bd-516b-486e-9e5b-dfed5ace15e8</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:13:05 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:13:05.881Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Jana Nayagan,Duraimurugan,துரைமுருகன்,ஜனநாயகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/tsv95hpq/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/tsv95hpq/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>காலை உணவு திட்டத்திற்கு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் என்றுதான் பெயர் வைத்திருந்தார் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். அதை விரிவுப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். ஆகையால் அந்த திட்டம் அந்த இரண்டு பேருக்கு மட்டும்தான் பொருந்தும்.</p><p>இது முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்று தான் சொன்னார்கள். மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டம் என சொல்லவில்லை. ஆனால் ஏன் இப்படி மிரண்டு பெயர் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் பெயர்களை எதுவும் மாற்றவில்லை. உதாரணத்திற்கு அம்மா உணவகம் பெயர் மாற்றாமல் இருந்தது. அவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டோம். அரசியலில் இருப்பவர்களுக்கு பெருந் தன்மை தேவை. அது இவர்களிடம் இல்லை என நிரூபித்து இருக்கிறார்கள்.</p><p>தி.மு.க. அரசு கொண்டுவந்த பல திட்டங்களின் பெயரை தொடர்ந்து மாற்றுகின்றனர். அவர்களால் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த முடியவில்லை. வேறு என்ன செய்வது என்று இருக்கும் திட்டங்களின் பெயரையாவது மாற்றலாம் என மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு பெருமை தரக்கூடியது அல்ல. விமர்சனங்களை முன் வைக்கும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர். சில நேரங்களில் இப்படி பேசினால் அதனை புறம்தள்ள வேண்டும்.</p><p>சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தாமல் புது திட்டங்களை அறிவித்து அதில் கவனம் செலுத்த வேண்டும். அது போன்று எதுவும் இந்த ஆட்சியில் இல்லை. ஜனநாயகன் ரிலீஸ் கதை எல்லாம் எனக்கு தெரியாது. பஸ்களில் பெயர் மாற்றம், வண்ணம் மாற்றம் செய்கிறார்கள். இதெல்லாம் அவர்களுக்கு பெருமை தரும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு சிறுமை தான் தரும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசுக்கு கடந்த 3 மாதங்களில் ரூ.64,945 கோடி வருவாய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-governments-revenue-stood-at-64945-crore-over-the-past-three-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-governments-revenue-stood-at-64945-crore-over-the-past-three-months#comments</comments><guid isPermaLink="false">e676e46d-5a2a-4240-b658-7bc5c5f88af3</guid><pubDate>Thu, 23 Jul 2026 02:07:54 +0000</pubDate><atom:updated>2026-07-23T02:07:54.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,வருவாய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/b334z496/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/b334z496/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக அரசுக்கு, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் பதிவு கட்டணம், விற்பனை வரி, ஆயத்தீர்வை வரி, மத்திய அரசின் மானியம் போன்றவற்றின் வாயிலாக வருவாய் கிடைத்து வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) தமிழகத்திற்கு மொத்த வரி வருவாயாக 64,944.97 கோடி ரூபாய் கிடைத்திருப்பது, மத்திய தணிக்கை துறை அறிக்கையின் தற்காலிக புள்ளிவிவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.</p><p>இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 63,755.70 கோடியாக இருந்தது. இந்தாண்டில், 1,189.27 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இந்தாண்டில் மத்திய அரசின் மானியமும், வரி பகிர்வும் குறைந்துள்ளது. </p><p>இந்த காலத்தில் வரிகள் வாயிலாக மட்டும் 60,061.72 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. வரி அல்லாத வருவாயாக 3,172 கோடி ரூபாயும், மத்திய அரசு மானியமாக 1,710 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. </p><p>கடந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், வரிகள் வாயிலாக, 56,366.76 கோடி ரூபாய் கிடைத்தது. வரி அல்லாத வருவாயாக 2,895.70 கோடி ரூபாயும், மத்திய அரசு மானியமாக 4,493.23 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சிக்னலுக்காக காத்திருக்க தேவையில்லை.. நெல்லையில் அனைத்து ரெயில்களையும் ஒரே நேரத்தில் இயக்கும் வசதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-to-wait-for-signalsfacility-to-operate-all-trains-simultaneously-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-to-wait-for-signalsfacility-to-operate-all-trains-simultaneously-in-nellai#comments</comments><guid isPermaLink="false">fdb0df84-09d6-4eea-bbe1-70ed77440611</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:45:14 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:45:14.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,Trains,ரெயில்கள்,Train Services,நெல்லை ரெயில் நிலையம்,சிக்னல்கள்,Nellai Railway Station,signals</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/xq26i63f/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/xq26i63f/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட நெல்லை ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தண்டவாள சீரமைப்பு பணிகளால் அனைத்து ரெயில்களையும் ஒரே நேரத்தில் இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>தண்டவாள சீரமைப்பு</h2><p>மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் பாதை இரட்டை அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இருப்பினும் நெல்லை ரெயில் நிலையத்தில் இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணி முழுமை பெறாமல் இருந்தது.</p><p>அதனை தொடர்ந்து கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நெல்லை ரெயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்தன. அதாவது ஒரே நேரத்தில் இரட்டை அகலப்பாதையில் ரெயில்கள் இயக்கு வதற்கான தொழில்நுட்ப பணிகள் நடந்து முடிந்தன. இதன் மூலம் நெல்லை ரெயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. </p><p>அதாவது, நெல்லை ரெயில் நிலையத்திற்குள் வரும் ரெயில்கள் அனைத் தும் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் 60 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பாதையில் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் தற் போது 70 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். கூடுதலாக 600 மீட்டர் நீளத் துக்கு ஒரு இணை ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>1-வது, 2-வது மற்றும் 3-வது பிளாட்பார பகுதியில் 686 மீட்டர் நீளத்தில் இருந்த தண்டவாங்கள் முறையே 730 மீட்டர், 716 மீட்டர், 729 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5-வது தண்டவாளம் 791 மீட்டராகவும், 6 மற்றும் 8-வது தண்டவாளங்கள் 815 மீட்டர் நீளமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 4 மற்றம் 5-வது பிளாட்பாரங்கள் 625 மீட்டர் நீளமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><h2>ஒரே நேரத்தில் வந்து செல்ல..</h2><p>தென்காசியில் இருந்து நெல்லை வரும் ரெயில்கள் அனைத்தும் 9-வது ரெயில்வே தண்டவாளம் வழியாக ஒரே நேரத்தில் புறப்படவும், வந்து சேரவும் முடியும். அதேபோல, தென்காசி, திருச்செந்தூரில் இருந்து ஒரே நேரத்தில் ரெயில் நிலையத்திற்குள் ரெயில்கள் வந்து செல்ல முடியும். இதனால் நாகர்கோவிலில் இருந்து வந்து செல்லும் ரெயில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நெல்லை-மேலப்பாளையம் இடையே உள்ள ரெயில்வே கேட் பகுதி சிக்னலுடன் இணைக்கப்பட்டுள்ளது.</p><p>1-வது ரெயில்வே கேட் தானியங்கி கேட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை தொடர்ந்து நெல்லை-தென்காசி, நெல்லை-மேலப்பா ளையம், நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-மதுரை ரெயில் பாதையில் சுமார் 108 புதிய சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் நெல்லை ரெயில் நிலையத்திற்குள் ரெயில் உள்ளே வரும் போதும், வெளியே செல்லும் போதும் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் சொத்துகளை பாதுகாக்க குழு அமைப்பு - அறநிலையத்துறை அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-protect-palani-temple-assets-hrce-department-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-protect-palani-temple-assets-hrce-department-announcement#comments</comments><guid isPermaLink="false">871a788a-6a85-46c8-b6f7-eb4f96085f69</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:44:25 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:44:25.003Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,அறநிலையத்துறை,Palani,HRCE Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/vzrwtjm2/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/vzrwtjm2/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>“இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின்பேரில், அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய ஆய்வுக் குழு பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது. இந்த குழு பழனி கோவில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து, கணக்கில் உள்ள சொத்துகள் மற்றும் வருவாய்கள், கணக்கில் வராத சொத்துகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் போன்றவை நடந்துள்ளதா? என முழுமையாக அறிக்கை தயார் செய்து அதன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும். </p><p>பழனி கோவில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து கோவில் சொத்துகளை பாதுகாக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக இது அமையவிருக்கிறது. பழனியை தொடர்ந்து அறுபடை வீடுகளுக்கும் இதே போல் குழு அமைத்து அமைச்சர் உத்தரவின்பேரில் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் ஊழியர்களுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் இ.எஸ்.ஐ. திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/esi-scheme-for-tasmac-employees-from-october-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/esi-scheme-for-tasmac-employees-from-october-1st#comments</comments><guid isPermaLink="false">4e64c152-a2bb-47d6-9640-d9bdcb566705</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:21:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:21:16.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,அக்டோபர்,October,டாஸ்மாக் ஊழியர்கள்,Tasmac employees,இ.எஸ்.ஐ.,ESI</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/h2jlei7c/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ. திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/h2jlei7c/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து கடை பணியாளர்களும் கட்டாயமாக இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். </p><p>டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கே.நந்தகுமார், அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: </p><p>டாஸ்மாக் இயக்குனர்கள் குழுவின் 223-வது கூட்டம் கடந்த ஜூலை 6-ந்தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், சில்லறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மதுபானக்கடை பணியாளர்கள்</a> அனைவரும் ஊழியர்கள் மாநில காப்பீட்டு சட்டம், 1948-ன் விதிகளின்படி இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. </p><h2>அக்டோபர் 1-ந் தேதி முதல் இ.எஸ்.ஐ. திட்டம்</h2><p>இதையடுத்து, தற்போது டாஸ்மாக்கிற்கு வழங்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. விலக்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைவதால், அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து கடை பணியாளர்களும் கட்டாயமாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%90.">இ.எஸ்.ஐ.</a> திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மைசூர்-கண்ணூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-between-mysuru-and-kannur-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-between-mysuru-and-kannur-via-salem#comments</comments><guid isPermaLink="false">fa3c0ee0-24ba-42ac-86ad-0099e3d51476</guid><pubDate>Thu, 23 Jul 2026 01:19:55 +0000</pubDate><atom:updated>2026-07-23T01:19:55.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Salem,சேலம்,Special Train ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/qud87u5s/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/qud87u5s/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மைசூரில் இருந்து கண்ணூருக்கும் மற்றும் கண்ணூரில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மைசூர்-கண்ணூர் சிறப்பு ரெயில் (06227) நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 5.07 மணிக்கு சேலம் வந்தடையும், இங்கிருந்து 5.10 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும்,</p> <p>அதேபோல கண்ணூர்-பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06228) வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 6.25 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் அதி காலை 3.17 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 3.20 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக காலை 8.35 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>25 பவுன் நகையை மறைத்து வைத்து திருட்டு என நாடகமாடிய தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-for-hiding-25-pounds-of-jewelry-and-pretending-to-steal-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-for-hiding-25-pounds-of-jewelry-and-pretending-to-steal-it#comments</comments><guid isPermaLink="false">6940ad4e-fbd5-4e4a-8aa3-58543d515e53</guid><pubDate>Thu, 23 Jul 2026 00:19:30 +0000</pubDate><atom:updated>2026-07-23T00:19:30.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,கைதுArrest,திருட்டுtheft,போலீஸ்Police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/4fknpzlc/64.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-23/4fknpzlc/64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்புவனம்,</p><p>சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலி (வயது 55). கட்டிட தொழிலாளி. இவர் வீட்டில் இருந்து திருப்புவனம் சென்றிருந்தார். அவருடைய மனைவி பூர்ணவள்ளி சந்தைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் வீட்டுக்கு வந்துபோது கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது. </p><p>இதுகுறித்து சங்கிலி, பழையனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.</p><h2>நகை</h2><p>போலீஸ் மோப்ப நாய் லைலா, நகை மாயமான வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் அந்த வீட்டையே சுற்றி, சுற்றி வந்தது. இது போலீசாருக்கு முக்கிய துப்பாக அமைந்தது. அதன்பேரில் கணவன், மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பூர்ணவள்ளி பழையனூர் போலீசாருக்கு செல்போனில். தனது கணவர்தான் நகைகளை மறைத்து வைத்துள்ளதாக தகவல் கொடுத்தார். </p><h2>கைது</h2><p>அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் அருகில் உள்ள வைக்கோல் படப்புக்குள் மறைத்து வைத்திருந்த 25 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> சங்கிலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த வீட்டிலேயே நகையை திருடி மறைத்து வைத்துவிட்டு திருட்டுபோனதாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>
&apos;ஜனநாயகன்&apos; டிக்கெட் சர்ச்சை... ரூ.200 டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.700 கட்டணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jananayagan-ticket-controversy-those-who-booked-200-tickets-charged-700</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jananayagan-ticket-controversy-those-who-booked-200-tickets-charged-700#comments</comments><guid isPermaLink="false">1db0516d-a162-4efe-a944-78ca74169827</guid><pubDate>Wed, 22 Jul 2026 23:50:00 +0000</pubDate><atom:updated>2026-07-22T23:50:00.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிக்கெட் முன்பதிவு,Ticket Booking,Thanjavur,கட்டண உயர்வு,ஜனநாயகன்,Jananayagan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/nej8eppv/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/nej8eppv/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வேகமாக விற்பனையாகி வருகின்றன.</p><h2>ரூ.200 டிக்கெட்டு.. திடீர் கட்டண உயர்வு</h2><p>தஞ்சை மாநகரில் மட்டும் 4 திரையரங்குகளில் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகிறது. இதற்காக ரசிகர்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தனர்.</p><p>இந்த நிலையில், தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் ரூ.200 கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு, நேற்று வாட்ஸ்-அப் மூலம் புதிய தகவல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகையை கியூஆர் (QR) கோடு மூலம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>  <h2>ரசிகர்கள் அதிர்ச்சி</h2><p>ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு திடீரென கூடுதல் தொகை செலுத்துமாறு தகவல் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட திரையரங்கின் நடவடிக்கை குறித்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>&apos;நீட்&apos; வினாத்தாள் கசிவு... பொறுப்புக்கூறல் எங்கே? – அண்ணாமலை சாடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">3f7c5ab7-8798-4cb2-99fa-dceb38eab732</guid><pubDate>Wed, 22 Jul 2026 23:05:58 +0000</pubDate><atom:updated>2026-07-22T23:05:58.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,சென்னை,நீட் வினாத்தாள் கசிவு,NEET question paper leak</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/k5d4khm4/62.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/k5d4khm4/62.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்காதது ஏன்? என மத்திய அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>'வீ த லீடர்ஸ்' அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>கடந்த பல ஆண்டுகளாக, நாடு முழுவதும் மாணவர் சேர்க் கையில் ஒரு சீரான தன்மையைக் கொண்டு வந்ததாலும், பின்தங்கிய பின்னணி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி கனவை நனவாக்க வாய்ப்பை வழங்கியதாலும், 'நீட்' தேர்வை நான் தனிப்பட்ட முறையில் ஆதரித்து வந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில், 'நீட்' இளங்கலை தேர்வு வினாத்தாள் 3 முறை கசிந்துள்ளது. சீரான தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய அமைப்பே தோல்வியுற்ற நிலையில், இதற்கு காரணமானவர்களிடம் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லை.</p><h2>போராட்டம்</h2><p>போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்க பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? போராட்டம் தீவிரமடைந்து ஒரு கொந்தளிப்பான நிலையை எட்டும் வரை, பேச்சுவார்த்தை ஏன் தாமதப்படுத்தப்பட்டது? ஒரு போராட்டம் வாரக்கணக்கில் நீடிக்கும்போது, சுயநல நோக்கங்களைக் கொண்டவர்கள் மேடையேறி, போராட்டத்தின் ஆரம்பகாலக் கோரிக்கைகளுக்கு தொடர்பில்லாத கருத்துகளை முன்வைப்பதோ அல்லது தங்கள் சொந்த நோக்கத்திற்காக போராட்டத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதோ இயல்பு. </p><p>அத்தகைய சுயநலவாதிகள் தங்கள் நோக்கங்களை முன்னெடுக்க நீங்கள் மவுனம் காத்தால், உங்கள் முக்கிய நோக்கங்களிலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். போராடும் மாணவர்களுடன் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடவும். தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீதிமன்றங்கள் அதிகரிப்பு மூலம் வழக்குத் தேக்கம் குறையும்: அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-courts-will-reduce-case-backlog-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-courts-will-reduce-case-backlog-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">fc62b81a-5f60-4b08-9772-2bee957889ac</guid><pubDate>Wed, 22 Jul 2026 22:30:57 +0000</pubDate><atom:updated>2026-07-22T22:30:57.926Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அதிகரிப்பு,Court,நீதிமன்றங்கள்,அமைச்சர் நிர்மல்குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/did8tq8b/61.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/did8tq8b/61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள 'மெட்ராஸ் பார் அசோசியேஷன்' என்ற பழமையான வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. </p><h2>நீதிமன்றங்களின் எண்ணிக்கை</h2><p>இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "சட்டத்துறை மற்றும் நீதித்துறை நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. கீழமை நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது. வக்கீல்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. 200 வழக்குகளுக்கு ஒரு நீதிமன்றம் என்ற வகையில் முன்னுரிமை வழங்கி கீழமை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நீதிமன்றங்களின்</a> எண்ணிக்கை விரிவுபடுத்தப்படும். இதனால், வழக்குகளில் தேக்கம் குறையும். இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஓரிரு ஆண் டுகளில் முடிக்கப்படும்" என்றார்.</p><p>இந்த நிகழ்ச்சியில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்தியன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் வி.ஆர். கமலநாதன், செயலாளர் ஜெ.போத்திராஜ், பொருளாளர் வி.டி. பாலாஜி, நூலகர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கு திட்டம்.. அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கிவைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/scheme-for-water-management-in-government-schools-minister-rajmohan-inaugurates-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/scheme-for-water-management-in-government-schools-minister-rajmohan-inaugurates-it#comments</comments><guid isPermaLink="false">500905ac-86e7-4320-bae6-ba66f365cf43</guid><pubDate>Wed, 22 Jul 2026 20:07:47 +0000</pubDate><atom:updated>2026-07-22T20:07:47.682Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அரசு பள்ளி,Government School,Water Management,நீர் மேலாண்மை திட்டம்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,நீர் எழில் பள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/d0m7v3dn/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/d0m7v3dn/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>அரசு பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனிசெயல்திட்டம் தொடங்கும் விதமாக “நீர் எழில் பள்ளி" (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர்காலம்) திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு நீர் எழில் பள்ளித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.</p> <p>இந்த திட்டம் முதல்கட்டமாக சென்னையில் எழும்பூர் மாநில அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அசோக்நகர், போரூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய 5 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.</p><p>இந்த திட்டத்தின்கீழ் இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியிலும் நாளொன்றுக்கு சுமார் 25 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் பாதுகாப்பாக சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தூங்கிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவர் மீது சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wall-collapsed-on-a-sleeping-12th-grader-killing-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wall-collapsed-on-a-sleeping-12th-grader-killing-him#comments</comments><guid isPermaLink="false">7d2b1d19-d5e1-4dd1-8d7c-f6ce2915d2f9</guid><pubDate>Wed, 22 Jul 2026 19:50:16 +0000</pubDate><atom:updated>2026-07-22T19:50:16.524Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கடலூர்,உயிரிழப்பு,சுவர் இடிந்து விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/yg2ybjv2/48.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-22/yg2ybjv2/48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் குரு பிரசாத் (வயது 17). இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். குரு பிரசாத்தின் உறவினரான மகேஷ் என்பவரின் வீடு வரக்கால்பட்டில் உள்ளது. </p><h2>சுவர் இடிந்து விழுந்தது</h2><p>குருபிரசாத், தனது உறவினரான மகேஷின் வீட்டில் தூங்குவது வழக்கம். அதன்படி நேற்று முன் தினம் குருபிரசாத், உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு அவர் தனது பாட்டி மற்றும் உறவினர் மகேஷ் ஆகியோருடன் படுத்து தூங்கினார். குரு பிரசாத் சுவரையொட்டி படுத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை குருபிரசாத் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து அவர் மீது விழுந்தது. </p><p>இதில் அவர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகே தூங்கி கொண்டிருந்த பாட்டி மற்றும் உறவினர் மகேஷ் ஆகியோர் விரைந்து எழுந்து, கட்டிட இடிபாடுகளை அகற்றி பார்த்தனர். அப்போது குருபிரசாத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>