<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 26 Aug 2026 11:28:32 +0000</lastBuildDate><item><title>பயிற்சி மருத்துவர்களின் உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும்: தமிழக அரசுக்கு சி.பி.ஐ வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-presses-tamil-nadu-to-hike-medical-trainees-stipend</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-presses-tamil-nadu-to-hike-medical-trainees-stipend#comments</comments><guid isPermaLink="false">7792b30a-5ebd-47fc-a994-7c460ebe3ecd</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:28:14 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:28:14.645Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சி.பி.ஐ,தமிழக அரசு,வலியுறுத்தல்,Salary,CPI,ஊதியம்,பயிற்சி மருத்துவர்கள்,In Tamil Nadu,Urges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/scbpg960/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/scbpg960/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பயிற்சி மருத்துவர்கள்</a> பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சி கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும்- என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள். இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உதவி ஊதியம்</h2><p>தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி கால உதவி ஊதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்திட வேண்டும். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டில் தான் இவர்களுக்கான பயிற்சிக்கால உதவி ஊதியம் குறைவாக உள்ளது. </p> <p>2021 ஆம் ஆண்டிற்கு பிறகு பயிற்சிக்கால உதவி ஊதியம் உயர்த்தப்படவில்லை. தற்பொழுது பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ 27,319 வழங்கப்படுகிறது. இவ்வூதியம் மேற்கு வங்கத்தில் ரூ 44,000, ஒடிசாவில் ரூ 40,000, அசாமில் ரூ 36,000 ஆக உள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ 52,451 முதல் ரூ 56,275 வரை வழங்கப்படுகிறது. இதுவே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">மராட்டிய</a> மாநிலத்தில் ரூ 93,559 முதல் ரூ 95,257 வரை வழங்கப்படுகிறது.</p><p>உயர் சிறப்பு மருத்துவ படிப்பிற்கு ரூ 54,636 முதல் ரூ 60,101 வரை வழங்கப்படுகிறது. இதுவே மராட்டிய மாநிலத்தில் ரூபாய் 85,000 முதல் ரூபாய் 99,000 வரை வழங்கப்படுகிறது.</p><h2>தமிழ்நாடு அரசு</h2><p>பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டைவிட அதிகமாக பயிற்சிகால உதவி ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, இன்றைய பணவீக்கம், விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, விடுதி மற்றும் உணவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, இவர்களுக்கான பயிற்சிக்கால உதவி ஊதியத்தை  உடனடியாக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட  வேண்டும்.</p><h2>உழைப்பு சுரண்டல்</h2><p>பல்வேறு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், பயிற்சி மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும், உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக 36 மணி நேரம் வரை வேலை வழங்கப்படுகிறது. அவர்களின் பயிற்சிக்கு தொடர்பில்லாத வேலைகளும், மருத்துவக் காப்பீட்டு வேலைகளும் வழங்கப்படுகின்றன.  இது அப்பட்டமான உழைப்பு சுரண்டலாகும்.</p><h2>8 மணி நேரம் வேலை</h2><p>இத்தகைய உழைப்பு சுரண்டலை எதிர்த்து, 8 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வழக்கை தொடர்ந்தது. இவ்வழக்கில்  சென்னை உயர் நீதிமன்றம்  8.00  மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக வேலை வழங்கக்கூடாது என தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனாலும் அத்தீர்ப்பை  தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை.</p> <h2>மன மற்றும் உடல் உளைச்சல்</h2><p>இதன் காரணமாக பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மற்றும் உயர்சிறப்பு மருத்துவ மாணவர்கள் கடுமையான மன மற்றும் உடல் உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பலர் படிப்பை விட்டு விலகிவிடுகிறார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே, இத்தகைய அவல நிலையை போக்கிட, எட்டு மணி நேரம் மட்டுமே தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதியிடன் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் உதவிகளை வழங்க வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-central-government-must-provide-assistance-on-a-war-footing-mp-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-central-government-must-provide-assistance-on-a-war-footing-mp-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">f95771ce-cf2f-48ae-9b97-f4326fac599c</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:12:34 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:12:34.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/4fqv6ygg/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/4fqv6ygg/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பது மிகுந்த கவலையளிக்கிறது.</p><p>​குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர் அங்குச் சிக்கியுள்ளனர். இதில் தமிழ்நாட்டின் கும்பகோணம், தஞ்சை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவர்.</p><p>​வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும், உலக நாட்டு மக்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நேபாள அரசுடன் இணைந்து </p><p>பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைந்து அனைத்து உதவிகளையும் வழங்கிட வேண்டும்.</p><p>​அவசர உதவி எண்கள் (Emergency Contacts):</p><p>​கட்டணமில்லா அவசர எண் (Toll-free): 1234</p><p>​ஹாட்லைன் (Hotline): 1144</p><p>​சுற்றுலா காவல்துறை (Tourist Police): 9851289445”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-needed-to-rescue-tamils-stranded-in-nepal-floods-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-needed-to-rescue-tamils-stranded-in-nepal-floods-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">4a6f8043-ff12-4e03-9559-0856ba6b8cba</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:07:26 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:07:26.401Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,Nepal,நேபாளம்,Flood,வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/6szeeww6/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/6szeeww6/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் ராசுவா மாவட்டத்தின் திமுர் பகுதியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நேபாள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளர். இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில்  இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழ்நாட்டின்  கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 57 பேர் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன.</p><p>வெள்ளத்தில் சிக்கியவர்களில் 57 பேர் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்கள் ஆவர். அவர்களில் 22 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p>நேபாள அரசுடன்  தொடர்பு கொண்டு, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் நேபாள அரசுக்கு தேவையான மீட்பு மற்றும் பிற மனிதநேய உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் விழிப்புணர்வு: நாளை மாணவர்களிடையே உரையாற்றுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-awareness-chief-election-commissioner-to-address-students-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-awareness-chief-election-commissioner-to-address-students-tomorrow#comments</comments><guid isPermaLink="false">9a982da5-d890-4bdd-a11f-92a084cbbbfe</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:48:03 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:48:03.413Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,தமிழகம்,Chief Election Commissioner,Chief Election Commissioner of India,தேர்தல் ஆணையர்,தலைமை தேர்தல் அதிகாரி,தேர்தல் விழிப்புணர்வு,election Awareness</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/cjwcoys4/kumar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/cjwcoys4/kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னையில்</a> நடைபெறும் மண்டல மாநாட்டில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாணவர்களிடையே உரையாற்றவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLOs) கலந்துரையாடவும் உள்ளார்.</p><h2>தலைமைத் தேர்தல் ஆணையர்</h2><p>இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27, 2026) <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னைக்கு</a> வருகை தந்து, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள "தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் (ELC) மற்றும் ECINET" குறித்த மண்டல மாநாட்டிற்குத் தலைமை தாங்கி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLOs) நேரடிக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.</p> <h2>அரசியலமைப்பு விழிப்புணர்வு</h2><p>இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் (CEO) ஒருங்கிணைந்து "ஜனநாயகத்தைக் கற்போம், ஜனநாயகத்தை வழிநடத்துவோம்" ("Learn Democracy, Lead Democracy") என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் இந்த முன்னெடுப்பானது, வாக்காளர் விழிப்புணர்வை வலுப்படுத்துதல், வருங்கால வாக்காளர்களிடையே அரசியலமைப்பு விழிப்புணர்வை வளர்த்தல் மற்றும் தேர்தல் பணிகளுக்கு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>நாள் முழுவதும் நடைபெறும் இந்நிகழ்வில் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, தலைமை இயக்குநர் (ஊடகம்) ஆஷிஷ் கோயல் மற்றும் தலைமை இயக்குநர் (தகவல் தொழில்நுட்பம்) சீமா கண்ணா உள்ளிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்கின்றனர்.</p> <h2>300 பள்ளிகள், 75 கல்லூரிகள்</h2><p>இம்மாநாட்டில் தமிழ்நாடு (~900 பிரதிநிதிகள்) மற்றும் புதுச்சேரியைச் (~100 பிரதிநிதிகள்) சேர்ந்த 300 பள்ளிகள், 75 கல்லூரிகள் மற்றும் 25 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் என சுமார் 1,000 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் துணை மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் , மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் துறைசார் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்களும் இதில் பங்கேற்பர்.</p><p>ஆகஸ்ட் 27, காலை அமர்வில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சுமார் 500 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடி, கள அளவிலான வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் களப்பணி சார்ந்த கருத்துக்களைக் கேட்டறிவார்.</p> <h2>கேள்வி-பதில்</h2><p>மதிய அமர்வில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஜனநாயகப் பங்களிப்பு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றி, அதைத் தொடர்ந்து நடைபெறும் கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்பார். மேலும், இம்மாநாட்டில் வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளின் நேரடிச் செயல்விளக்கங்கள், கலந்துரையாடல் கண்காட்சிப் பலகைகள், தேர்தல் வினாடி வினாக்கள் மற்றும் ELC 2.0, ஒருங்கிணைந்த ECINet செயலி போன்ற தொழில்நுட்பத் தளங்களின் பயன்பாடுகளும் இடம்பெறும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் சரிவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-drop-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-drop-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal#comments</comments><guid isPermaLink="false">62791183-399a-49b0-963b-06dc8f7100e1</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:27:24 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:27:24.174Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Hogenakkal,ஒகேனக்கல்,Hogenakkal Cauvery,Hogenakkal Cauvery river,பரிசல்,நீர்வரத்து சரிவு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/m7ktlujc/hoge.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/m7ktlujc/hoge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம், </p><p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தநிலையில், திடீரென நீர்வரத்து சரிந்துள்ளது. </p><h2>ஒகேனக்கல்</h2><p>கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து <a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்</a> காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் வழக்கம். நேற்று முன்தினம் காலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி இந்த நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீடித்தது.</p><h2>நீர்வளத்துறை அதிகாரிகள்</h2><p>இதனால் <a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்லில்</a> உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.</p><p>காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><h2>பரிசல் இயக்க தடை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்</a> காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 11-வது நாளாக நீடிக்கிறது.இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதே நேரத்தில் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>நீர்வரத்து சரிவு</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்</a> காவிரி ஆற்றில் இன்று காலை 10,000 கன அடியாக இருந்து நீர் வரத்து, இன்று பிற்பகல் நிலவரப்படி 6,500 கன அடியாக சரிந்துள்ளது. இதனால், பரிசல் சவாரிக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி: குப்பைகளை தரம் பிரிக்க 40 நாட்கள் சிறப்பு விழிப்புணர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-municipality-40-day-campaign-to-segregate-garbage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-municipality-40-day-campaign-to-segregate-garbage#comments</comments><guid isPermaLink="false">d8d94930-def6-4615-82df-5c38d817be3f</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:21:04 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:21:04.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,விழிப்புணர்வு,waste,Awareness Campaign,குப்பைகள்,தரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/o90jjc78/cor.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ துணை ஆணையர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி: குப்பைகளை தரம் பிரிக்க 40 நாட்கள் சிறப்பு விழிப்புணர்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/o90jjc78/cor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p> சென்னை ,</p><p> "குப்பையை பிரிப்போம் நாளையை காப்போம்" என்ற 40 நாள் வீடுகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அடையாறு மண்டலம், வார்டு-179க்குட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் தெற்கு வட்டார துணை ஆணையர் கலந்துகொண்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>குப்பம் கடற்கரை சாலை</h2><p>சென்னை மாநகராட்சியின் சார்பில், பொதுமக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில் தெற்கு வட்டாரத்தில் தொடங்கப்பட்ட "குப்பையை பிரிப்போம் நாளையை காப்போம்" என்ற 40 நாள் வீடுகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அடையாறு மண்டலம், வார்டு-179க்குட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல்,அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வழங்குவதற்கான பிரத்யேகப் பை மற்றும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் வீடுகளின் சுவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.</p><h2>முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர், தமிழ்நாட்டில் திடக்கழிவுகளை மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து பெற்று அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.</p> <h2>மக்களிடையே விழிப்புணர்வு</h2><p>அதனடிப்படையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> முழுவதும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.</p> <h2>விழிப்புணர்வு நிகழ்ச்சி</h2><p>இதன் தொடர்ச்சியாக,  சென்னை மாநகராட்சியில் பொதுமக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில் “குப்பையைப் பிரிப்போம் - நாளையை காப்போம்” என்ற 40 நாள் வீடுகளுக்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விழிப்புணர்வு</a> நிகழ்ச்சி கடந்த 22.08.2026 அன்று தெற்கு வட்டாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><h2>விழிப்புணர்வு</h2><p>அடையாறு மண்டலம், வார்டு-179க்குட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், இன்று பங்கேற்று அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வழங்குவதற்கான பிரத்யேகப் பை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வீடுகளின் சுவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.</p> <h2>50,000 வீடுகள்</h2><p>இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக தென் சென்னை மண்டலங்களான வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 50,000 வீடுகளை சென்றடையும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 10,000 வீடுகள் தேர்வு செய்யப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.</p> <h2>கலந்துரையாடல் கூட்டம்</h2><p>பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், அவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்கள் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டாயம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இந்நிகழ்வில், அடையாறு மண்டல அலுவலர் காளிதாஸ், செயற்பொறியாளர் ரங்கநாதன், மற்றும் மாநகராட்சி, உர்பேசர் அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி முருகன் கோவிலில் நாளை 4 மணி நேரம் நடை அடைப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/temple-doors-at-tiruttani-murugan-temple-to-remain-closed-for-4-hours-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/temple-doors-at-tiruttani-murugan-temple-to-remain-closed-for-4-hours-tomorrow#comments</comments><guid isPermaLink="false">cea08a7b-3273-46f7-b108-4113b08ab3d6</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:14:56 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:14:56.497Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruttani Murugan temple,திருத்தணி முருகன் கோவில்,திருத்தணி,திருத்தணி முருகன்,tiruttani,Tiruttani Murugan,நடை அடைப்பு,Thiruttani Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/60osygp5/Untitled-16.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருத்தணி முருகன் கோவில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/60osygp5/Untitled-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி,</p><p>திருத்தணி முருகன் கோவிலில், நாளை ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>கோவில் நடை அடைப்பு</h2><p>திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு வரும் 27-ம் தேதி (நாளை) மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பூஜைகள் </a>நடைபெற உள்ளன.</p><p>சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், மாலை 4 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வழக்கம்போல் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். எனவே, நாளை மதியம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது தரிசன நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் க.ரமணி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-zonal-ministers-for-relief-work-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-zonal-ministers-for-relief-work-in-chennai#comments</comments><guid isPermaLink="false">8b6c52a6-2e47-442c-9490-cbbacb66b380</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:08:49 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:08:49.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,monsoon,பருவமழை,நிவாரண பணிகள்,பொறுப்பு அமைச்சர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/slose6dn/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பருவமழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/slose6dn/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பேரிடர் காலங்களில் நிவாரண பணிகள் போன்ற அவசரகால பணிகளை மேற்கொள்ளவும் 7 அமைச்சர்கள் மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்</h2><p>முன்னதாக வெளியிடப்பட்ட அரசாணையில் அமைச்சர்கள் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது முதல்-அமைச்சரின் ஆணையின்படி, மேற்கண்ட மாவட்ட பணிகளோடு கூடுதலாக அமைச்சர் பெருமக்களில் சிலருக்கு சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அவசரகால பணிகளை மேற்கொள்ள...</h2><p>அதன் பேரில் மண்டல வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும் மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரண பணிகள் போன்ற அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், அமைச்சர்கள் மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்களாக பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.</p><p>மண்டலம் 1 (திருவொற்றியூர்), மண்டலம் 2 (மணலி) - <strong>இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் ரமேஷ்</strong></p><p>மண்டலம் 3 (மாதவரம்), மண்டலம் 4 (தண்டையார்பேட்டை) - <strong>வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன்</strong></p><p>மண்டலம் 5 (ராயபுரம்), மண்டலம் 6 (திரு.விகநகர்) - <strong>மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ்</strong></p><p>மண்டலம் 7 (அம்பத்தூர்), மண்டலம் 8 (அண்ணாநகர்), மண்டலம் 9 (தேனாம்பேட்டை) - <strong>கைத்தறி துணி நூல் மற்றும் காதித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி</strong></p><p>மண்டலம் 10 (கோடம்பாக்கம்), மண்டலம் 11 (வளசரவாக்கம்) - <strong>இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு</strong></p><p>மண்டலம் 12 (ஆலந்தூர்), மண்டலம் 13 (அடையார்) - <strong>போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்</strong></p><p>மண்டலம் 14 (பெருங்குடி), மண்டலம் 15 (சோழிங்கநல்லூர்) - <strong>மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ்</strong></p><p><strong>பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</strong> சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள பணிகளை ஒருங்கிணைப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லஞ்சத்திற்கு எதிரான முதல்-அமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனம் தானா..? - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-chief-ministers-slogan-against-corruption-merely-a-movie-dialogue-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-chief-ministers-slogan-against-corruption-merely-a-movie-dialogue-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">1cf84300-a647-45b2-99cd-005cf25c7d8c</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:02:03 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:02:03.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தமிழக அரசு,TN govt,நெல் மூட்டைகள்,AMMK,அமமுக</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/8ujm91ue/vasamam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/8ujm91ue/vasamam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்ச வசூல் - லஞ்சத்திற்கு எதிரான முதல்-அமைச்சரின் முழக்கம் நடைமுறைக்கு உதவாத வெறும் சினிமா வசனம் தானா? என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://dailythanthi.com/topic/ttv-dhinakaran">டிடிவி தினகரன்</a> கேள்வி எழுப்பி உள்ளார். </p><h2>ரூ.50 வரை லஞ்சம்</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லைக் கொள்முதல் செய்ய முடியும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் தங்களது வேதனையையும் ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>ஏற்கனவே, தவெக அரசு அறிவித்த முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை நம்பி ஏமாந்து கடனாளிகளாகியுள்ள விவசாயிகள், மேலும் கடன் பெற்று விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்த நிலையில், லஞ்சம் கேட்டு உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகளால், கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>விவசாயிகள் கண்ணீர்</h2><p>விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளோடு அவர்களின் உழைப்பையும் வீணாக்கிக் கொண்டிருப்பதோடு, விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்படுவதற்கு முன்பாகவே லஞ்சத்திற்கான தொகையை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்கியிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.</p><p>இதே கடலூர் மாவட்டத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த மாதம் ஆய்வுக்கு வந்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள், லஞ்ச வசூலில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற லஞ்ச வசூல் தொடர்ந்து நடைபெற்று வருவது, த.வெ.க. அரசின் மீதான  விவசாயிகளின் நம்பிக்கையை முற்றிலுமாக இழக்கச் செய்துள்ளது.</p><h2>லஞ்ச வசூல் இன்றி</h2><p>எனவே, கடுமையான கண்காணிப்பும், உடனடி நடவடிக்கைகளுமே ஊழலை ஒழிக்குமே தவிர, மேடைகளில் பேசப்படும் வீர வசனங்களால் ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதை இனியாவது உணர்ந்து, விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ஒரு கிராம் ரூ.0.01-க்கு வழங்கப்படுகிறதா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-is-one-gram-being-provided-for-001-clarification-from-the-information-verification-wing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-is-one-gram-being-provided-for-001-clarification-from-the-information-verification-wing#comments</comments><guid isPermaLink="false">d8dbd79c-c8e5-4e3c-bc66-37da15c7a2c5</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:42:54 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:42:54.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Fact Check Unit,Fact check,gold ring,தகவல் சரிபார்ப்பகம்,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,Thaimaman Gold Ring Project,தகவல் நம்பகத்தன்மை பிரிவு,gold scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/vojen1xm/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/vojen1xm/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியான பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ஒரு கிராம் தங்கம், ஒரு பைசாவுக்கு வழங்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தொடர்ந்து பேசி வருகிறார்.</p><h2>உண்மை என்ன?</h2><p>இது முற்றிலும் தவறான தகவல்.</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்கத்தின் விலை தனியாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், காப்பீடு, போக்குவரத்து, பேக்கிங் மற்றும் BIS தரமுத்திரை போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களும் சேர்த்து ரூ.0.01 என நிறுவனங்கள் குறைந்த விலைப்புள்ளியினை அளித்ததால் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.0.01 என்பது தவறான தகவலாகும்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தவறான தகவலைப் பரப்பாதீர்</a> !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘டாஸ்மாக் பணியாளார்கள் கோரிக்கைகள் மீது  முதல்-அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-intervene-and-resolve-the-demands-of-tasmac-employees-communist-party-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-intervene-and-resolve-the-demands-of-tasmac-employees-communist-party-of-india#comments</comments><guid isPermaLink="false">31e3673d-4284-488e-a11c-5aa81af666ce</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:40:39 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:40:39.315Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,டாஸ்மாக்,Tasmac,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/g2d1b716/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/g2d1b716/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) கடந்த 23 ஆண்டுகளாக சில்லரை மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ரூ.15 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி செலுத்தி வருகிறது. </p><p>அரசின் வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு அளவில் பங்களிப்பு செலுத்தும் இந்த டாஸ்மாக் நிறுவனத்தின் பணியாளர்கள் 23 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பகுதி நேர ஒப்பந்தப் பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களுக்கும், தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கைகளுக்கும் எதிரானதாகும்.</p><p>தமிழ்நாட்டில் 1981 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பணி நிரந்தரத் தகுதி வழங்கல் சட்டத்திற்கு முரணாக அரசு நிறுவனம் செயல்படுவது சரியல்ல. மேலும், நிலையாணை சட்டப்படி, டாஸ்மாக் நிறுவனம் இதுவரை நிலையாணை உருவாக்காமல், பணி வரன்முறை ஏதுமின்றி பணியாளர்களை பாதுகாப்பற்ற அசாதாரண பணிச் சூழலுக்கு நெட்டித் தள்ளியுள்ளது.</p><p>கொள்முதல் முனையில் ஏற்பட்டு வந்த நிதிக் கசிவு தடுக்கப்பட்டு கூடுதல் வருவாய் ஈட்டும் வரவேற்கத்தக்க நடவடிக்கையை மேற்கொண்ட தமிழ்நாடு அரசு, பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்கி தருவதில் அக்கறை காட்ட வேண்டும்.</p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழ்நாடு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டம் பொருந்தும் என மாண்பமை சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை இதுவரை டாஸ்மாக் நிர்வாகம் மதிக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.</p> <p>இந்த நிலையில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் காலிப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28.08.2026 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. </p><p>டாஸ்மாக் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது தமிழ்நாடு அரசின் முதல்-அமைச்சர் தலையிட்டு, பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, சுமூகத் தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் சிறந்த முதல்-அமைச்சர்கள் யார்? தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. நிறுவனர் அபிஜீத் திப்கே பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-are-indias-best-chief-ministers-mk-stalin-in-tamil-nadu-cjp-founder-abhijit-dipke-answers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-are-indias-best-chief-ministers-mk-stalin-in-tamil-nadu-cjp-founder-abhijit-dipke-answers#comments</comments><guid isPermaLink="false">197ac1e7-5277-4533-8c22-a7b1d189a2a9</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:32:17 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:32:17.753Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,இந்தியா,India,தமிழகம்,முதல்-அமைச்சர்,Cheif Minister,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,cockroach janata party,அபிஜீத் திப்கே,சி.ஜே.பி.,cjp</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/smyy05rn/jiji.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/smyy05rn/jiji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த முதல்-அமைச்சராக <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> செயல்பட்டுள்ளார் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.</p><p>கடந்த மாதம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த போராட்டம் நாடு முழுக்க எதிரொலித்தது. இந்த போராட்டம் மத்திய அரசையே பின்வாங்க வைத்த நிலையில், கல்வித்துறை மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளில் களமிறங்கி உள்ளது. </p><p>இதற்கிடையே பிரபல ஊடகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அபிஜீத் தீப்கே மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது இந்தியாவின் சிறந்த முதல்-அமைச்சர்கள் யார் என்பது தொடர்பாக நெறியாளர் கேள்வி எழுப்பினார். சில நொடிகள் யோசித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, முன்னாள் முதல்-அமைச்சர்களான <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க. ஸ்டாலின்</a> (தமிழ்நாடு), பினராயி விஜயன் (கேரளம்), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி) ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டார்.</p><p>அதில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் திறனை குறிப்பிட்ட அபிஜீத் திப்கே, மாநிலத்தின் பொருளாதாரத்தை மு.க.ஸ்டாலின் மிக சிறப்பாக மேம்படுத்தியதாக குறிப்பிட்டார். </p><p>மேலும், கேரள முன்னாள் முதல்-மந் திரி பினராயி விஜயனின் ஆட்சியில் கல்வி மற்றும் சுகாதார துறைகளில் வலுவான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் பாராட்டினார். </p><p>டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், அரசு பள்ளிகள் மற்றும் சுகாதார கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்ததாக பாராட்டினார். இப்படி மூன்று முதல்வர்களின் நிர்வாக அணுகுமுறைகளை குறிப்பிட்டு, அவர்கள் சிறந்த முதல்வர்களாக இருந்ததாக அபிஜீத் தீப்கே குறிப்பிட்டார்.</p><p>இந்நிலையில் அபிஜீத் தீப்கேவின் இந்த கருத்துகளை பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஷெஹ்சாத் பூனாவாலா, வீடியோ வெளியிட்டு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சாடியுள்ளார். அந்த மூன்று தலைவர்களும் தங்கள் மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூறிய அவர், இதுபோன்ற தலைவர்களை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமை சிறந்த முதல்-அமைச்சர்களாக தேர்வு செய்திருப்பதை விமர்சித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்: கண்துடைப்பு நாடகமாக இருக்கக் கூடாது - அன்பில் மகேஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aasiriyargal-thakudhi-thervu-vilakku-theermanam-kanthudaippu-naadagamaga-irukka-koodathu-anbil-mahaes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aasiriyargal-thakudhi-thervu-vilakku-theermanam-kanthudaippu-naadagamaga-irukka-koodathu-anbil-mahaes#comments</comments><guid isPermaLink="false">1ea13cb9-612c-479b-84a3-34efa15a1deb</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:19:21 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:19:21.625Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Anbil Mahesh,ஆசிரியர் தகுதித்தேர்வு,Teacher Eligibility Test,அன்பில் மகேஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/sgibt3vd/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்பில் மகேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/sgibt3vd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசு ஆசிரியர்கள் நலனில் இரட்டைவேடம் போடுகிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>‘ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்’ தொடர்பாக த.வெ.க. அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் சங்கங்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இந்த அரசு ஆசிரியர்கள் நலனில் இரட்டைவேடம் போடுகிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றியதற்கு முதல்நாள் சென்னை ஐகோர்ட்டில் ‘ஆசிரியர் தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது! அப்படி குறைத்தால் தேர்விற்கான மதிப்பு குறைந்துவிடும்’ என ஆசிரியர்களுக்கு எதிராக வாதாடியுள்ளது த.வெ.க. அரசு. ஆனால் அதற்கு மறுநாள் தீர்மானம் எனும் பெயரில் நாடகம் ஆடியுள்ளதா எனும் கேள்வி ஆசிரியப் பெருமக்களிடம் எழுந்துள்ளது.</p><p>2025 செப்டம்பர் 1 அன்று ‘அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற வேண்டும்’ என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. உடனடியாக அதே நாளில் செய்தியாளர்களைச் சந்தித்து ‘இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்’ என திராவிட மாடல் அரசின் அன்றைய முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க அறிவித்தோம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தோம். ‘மேல்முறையீடு செய்யப்படும்’ என்ற தலைவரின் அறிவிப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றார்கள். அதற்காக என்னை நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்தார்கள்.</p><p>2025 செம்படம்பர் 11 அன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கழகமும், திராவிட மாடல் அரசும் ஆசிரியர்களின் மனமறிந்து அவர்களை காக்கும் பணிகளில் இறங்கியது. சீராய்வு மனு மீதான தீர்ப்பு வெளியான அடுத்த நாளே ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் சந்தித்து ஆசிரியர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தோம். இரண்டு முறை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினோம். அதற்கு அடுத்த நாளே 2025 நவம்பர் 22 அன்று அன்றைய முதல்-அமைச்சரை பாராளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் வில்சனோடு இணைந்து சந்தித்து ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகளை எடுத்துக் கூறினோம். ஆசிரியர்களின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு நவம்பர் 25 அன்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார் அன்றைய முதல்-அமைச்சர். அக்கடிதத்தில் ‘ஆசிரியர்களை பாதுகாப்பதுடன் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படக்கூடாது என்றால் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார்.</p><p>தொடர்ந்து, அன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சரோடு நானும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்தினோம். மூத்த ஆசிரியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் அன்றைய முதல்-அமைச்சர் விரிவான அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.</p><p>நவம்பர் 29 அன்று கழகத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை மத்திய அரசு பாதுகாத்திடுக’ என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.</p><p>“இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களைப் பாதுகாக்கப் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும்” என்கிற கழகத் தலைவரின் அறிவுரைப்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்தினார்கள். கழக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் 2025 டிசம்பர் 12 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த கழகத் தலைவரின் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து, ஆசிரியர்களுக்காக சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>இதற்கிடையில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று திராவிட மாடல் அரசின் சிறப்பு முயற்சியால் “ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும்” என்று அரசாணை: 231, நாள் 25.10.2025 அன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து வந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5 சதவீதத் தளர்வும் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளார்கள். 2026 ஜனவரி 28 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதி மதிப்பெண்களை குறைத்து அரசாணை வெளியிட்டார் அன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. மாற்றுத்திறன் கொண்ட தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 25 அன்று குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் எனவும் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டது.</p><p>மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிடும் வகையில், அதற்கான பயிற்சிக் கட்டகங்கள்(Training Modules) தயாரிக்கும் பணி மற்றும் இணையவழிப் பயிற்சி வழங்கும் பணியானது, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம்(SCERT) ஒப்படைக்கப்பட்டது. இச்சூழலில்தான் 2026 மே 29-ம் தேதி சீராய்வு மனு மீது தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு ‘தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க மறுத்துவிட்டது’. இதன் பிறகான சட்டப்போராட்டத்தை புதிதாக வந்த த.வெ.க அரசு மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை!</p><p>முந்தைய நமது திராவிட மாடல் அரசு ஆசிரியர்களுக்காக செய்த சிறப்பு செயல்பாடுகளையும் முடக்கும் வேகத்தில்தான் இந்த அரசு செயலாற்றியது. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வர்களுக்காக பயிற்சி கையேடுகள் வழங்குவதிலேயே தாமதம் ஏற்படுத்திய அரசுதான் இவ்வரசு. அதோடு நில்லாமல் ஐகோர்ட்டில் ‘தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது’ என்று ஆணவமாகவும் வாதாடி உள்ளது என்பது மாற்றத்தை அல்லாமல் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தைதான் கொடுத்துள்ளது.</p><p>இந்த புதிய அரசின் செயல்பாடுகளை என்னவாக விளங்கிக்கொள்ள வேண்டும்? கோர்ட்டில் வாதாடிய அரசின் முகம்தான் உண்மை முகமா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் முகம்தான் உண்மை முகமா? இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக் கூறுவதுடன் கழகத் தலைவரின் வழிகாட்டுதலின்படி ஆசிரியப் பெருமக்களின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>50 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மீண்டும் போலீஸ் சைக்கிள் ரோந்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/after-50-years-police-cycle-patrol-around-madurai-meenakshi-amman-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/after-50-years-police-cycle-patrol-around-madurai-meenakshi-amman-temple#comments</comments><guid isPermaLink="false">9ed851d3-0974-4491-a592-9502ece8e972</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:09:39 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:09:39.086Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ்,Madurai,மதுரை,patrol,Meenakshi Amman Temple,சைக்கிள்,மீனாட்சி அம்மன் கோவில்,Bicycle,ரோந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/kxumieem/police-cycle-patrol.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ போலீஸ் சைக்கிள் ரோந்து]]></media:title><media:description type="html"><![CDATA[ 50 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மீண்டும் போலீஸ் சைக்கிள் ரோந்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/kxumieem/police-cycle-patrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</a> சித்திரை வீதிகளில், 50 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் மீண்டும் சைக்கிளில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"> ரோந்து </a>பணியை தொடங்கியுள்ளனர்.</p><h2>மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</h2><p>உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றியுள்ள கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய 4 சித்திரை வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.</p> <h2>வாகனங்கள் செல்ல தடை</h2><p>இங்குள்ள சித்திரை வீதிகளுக்குள் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை தீவிரமாக கண்காணிக்கவும், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கவும் காவல் துறை சார்பில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>சைக்கிள் ரோந்து</h2><p>இதன் ஒரு பகுதியாக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சைக்கிள் ரோந்து முறையை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> மீண்டும் கையில் எடுத்துள்ளனர். இதற்காக முதற்கட்டமாக 5-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>வரவேற்பு</h2><p>சைக்கிளில் சென்று பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் அறிவுரைகளை வழங்கி வரும் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘த.வெ.க. அரசு கொடுத்த சுதந்திரம்... இதனால்தான் விஜய் முதல்-அமைச்சர் ஆனார்’ - அமைச்சர் ஷாஜகான் நெகிழ்ச்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-freedom-granted-by-the-tvk-government-this-is-why-vijay-became-chief-minister-minister-shahjahan-expresses-emotion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-freedom-granted-by-the-tvk-government-this-is-why-vijay-became-chief-minister-minister-shahjahan-expresses-emotion#comments</comments><guid isPermaLink="false">d9fed697-3f2c-463c-9237-f8dc2e71d405</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:58:44.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,அமைச்சர் ஷாஜகான்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Minister Shahjahan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/vq0ay90i/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/vq0ay90i/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சியின் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான ஷாஜகான், சென்னையில் இன்று நடைபெற்ற மிலாதுன் நபி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-</p><p>“2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்தனர். அதனால்தான் த.வெ.க. தலைவர் விஜய், இன்று முதல்-அமைச்சராக பதவியில் அமர்ந்துள்ளார். ஐ.யூ.எம்.எல். கட்சி வேறு அணியில் போட்டியிட்டிருந்தாலும், காலத்தின் சூழ்நிலை கருதி, த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்றோம். இன்று உங்களில் ஒருவனாக, சமுதாயத்தின் பிரதிநிதியாக, அமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்பை எல்லாம் வல்ல இறைவன் எனக்கு வழங்கியுள்ளார். </p><p>கடந்த 3 மாத காலமாக முதல்-அமைச்சரிடமும், பல்வேறு மூத்த அமைச்சர்களிடமும் சமுதாயத்தின் நலன் நாடி பல கட்டங்களாக பேசியுள்ளோம். தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, முதல்-அமைச்சர் விஜய்யும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும், ‘சமுதாயத்தின் பிரதிநிதியாக உங்களை தேர்ந்தெடுத்துள்ளோம். சமுதாயத்திற்கு வேண்டியதை நீங்களே முடிவு செய்யுங்கள்’ என்று சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக நமக்கு த.வெ.க. அரசு இத்தகைய சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது. </p><p>பட்ஜெட் உரையில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், இதுவரை இல்லாத அளவிற்கு ஹஜ் பயணத்திற்கான மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். முஸ்லிம் உதவும் சங்கங்களை மீண்டும் அதிக அளவில் தொடங்குவதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லறை தோட்டங்களை பராமரிப்பதற்கு, சுற்றுச்சுவர் கட்டுவதற்கு, சாலை வசதிகள் ஏற்படுத்துவதற்கு ரூ.34 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியிருக்கிறது. </p><p>அதோடு, நமது மகத்தான தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரால் திருவள்ளுவர் தினத்தன்று தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பை இந்த அரசு வெளியிட்டுள்ளது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precaution-monitoring-officers-appointed-for-all-15-zones-of-the-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precaution-monitoring-officers-appointed-for-all-15-zones-of-the-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">08a16409-5eca-4296-93aa-d0035f2b26fa</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:51:37.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,அதிகாரிகள் நியமனம்,பருவமழை முன்னெச்சரிக்கை,Monsoon Precautions</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/9128wpkn/adhi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/9128wpkn/adhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக <a href="https://www.dailythanthi.com/topic/சென்னை-மாநகராட்சி">சென்னை மாநகராட்சி</a>யில் உள்ள 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்  செய்யப்பட்டுள்ளனர். </p><h2>தமிழக அரசு</h2><p>வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 1 ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்:-</p><p>மண்டலம் 1. திருவொற்றியூர்      - கே. பாலசுப்ரமணியம், IAS</p><p>மண்டலம் 2. மணலி              - பி. குமரவேல் பாண்டியன், IAS</p><p>மண்டலம் 3. மாதவரம்          -  எஸ். அருண்ராஜ், IAS</p><p>மண்டலம் 4. தண்டையார்பேட்டை - ஆர். கண்ணன், IAS</p><p>மண்டலம் 5. ராயபுரம்          - ஆஷா அஜித், IAS</p><p>மண்டலம் 6. திரு.வி.க. நகர்      -     பி. கணேசன், IAS</p><p>மண்டலம் 7. அம்பத்தூர்          - கே. விவேகானந்தன், IAS</p> <p>மண்டலம் 8. அண்ணாநகர்        -   பி. காயத்ரி கிருஷ்ணன், IAS</p><p>மண்டலம் 9. தேனாம்பேட்டை      - டி. கிறிஸ்துராஜ், IAS</p><p>மண்டலம் 10. கோடம்பாக்கம்       - எஸ். கோபால சுந்தர ராஜ், IAS</p><p>மண்டலம் 11. வளசரவாக்கம்        - டாக்டர் ஜெ. விஜயா ராணி, IAS</p><p>மண்டலம் 12. ஆலந்தூர்             - வாகே சங்கெத் பால்வந்த், IAS</p><p>மண்டலம் 13. அடையாறு            - டாக்டர் கே. செந்தில் ராஜ், IAS</p><p>மண்டலம் 14. பெருங்குடி           -  மகேஸ்வரி ரவிக்குமார், IAS</p><p>மண்டலம் 15. சோழிங்கநல்லூர் -டி. பாஸ்கர பாண்டியன், IAS</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/emz9wzmm/scree1111.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/58rhxy66/tow2222.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/bciwdb2l/three-333.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>ஈரோடு: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 4 ஆண்டு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-college-student-sexually-harassed-youth-gets-4-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-college-student-sexually-harassed-youth-gets-4-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">ee5404a4-b8b5-4320-a337-b0adbfac3dbb</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:36:26 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:36:26.539Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>College student,கல்லூரி மாணவி,Sexual harassment,பாலியல் தொல்லை,Youth,வாலிபர்,Erode,ஈரோடு,சிறை தண்டனை,Prison sentence</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/geh9kn0j/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவிககு பாலியல் தொல்லை, சிறை தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/geh9kn0j/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81">ஈரோடு</a> மாவட்டத்தில் கல்லூரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">மாணவிக்கு பாலியல் தொல்லை</a> கொடுத்த வழக்கில் தொடர்புடைய வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  </p><h2>கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை</h2><p>ஈரோடு மாவட்டம், கோபி பகுதியில் கடந்த 14-10-2023 அன்று தியேட்டரில் திரைப்படத்தின் இடைவேளையின்போது கல்லூரி மாணவிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபர்</a> ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். </p><h2>வாலிபருக்கு 4 ஆண்டு சிறை</h2><p>இதுதொடர்பான வழக்கில், கவுந்தப்பாடியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 27) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.சொர்ணகுமார், குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a>யும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். </p>]]></content:encoded></item><item><title>அரசு கலைக் கல்லூரிகளில் 6 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் - தமிழக அரசின் முடிவுக்கு சி.பி.ஐ. வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-in-government-arts-colleges-cpi-welcomes-the-tamil-nadu-governments-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-in-government-arts-colleges-cpi-welcomes-the-tamil-nadu-governments-move#comments</comments><guid isPermaLink="false">58d09427-7344-4877-83a8-7f664b33baa8</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:26:11 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:26:11.390Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,Tamilnadu,தமிழகம்,தமிழக அரசு,TN govt,CPI,உதவி பேராசிரியர்கள்,Assistant Professors,அரசு கலைக்கல்லூரி,Govt Arts College,மு.வீரபாண்டியன்,M.Veerapandian</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/j2olxo9h/veera.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/j2olxo9h/veera.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு கலைக் கல்லூரிகளில் 6 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்பிற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>வரவேற்பிற்குரியது</h2><p>இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிதாக 6 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்பட உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. அந்த நியமனங்களை மாணவர்கள் நலன் கருதி விரைவாக செய்திட வேண்டும்.</p><p>அரசு கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும்  கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம்  ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 35 ஆயிரமாகவும், பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் பகுதி நேர விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூபாய் 25 ஆயிரத்திலிருந்து ரூபாய் 30 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளதும் வரவேற்பிற்குரியது.</p><h2>12 மாதங்களுக்கும் ஊதியம்</h2><p>இவ்வூதிய உயர்வை மேலும் அதிகரித்து வழங்க வேண்டும். வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதிய உயர்வு என்பது இன்றைய வாழ்க்கை நிலைமைகளில் போதுமானதாக இருக்காது.</p><p>அடுத்து இந்த ஊதிய உயர்வு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ மற்றும் பகுதிநேர விரிவுரையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். பகுதிநேர விரிவுரையாளர்களுக்கும் பல்வேறு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களுக்கும் ஆண்டுக்கு 7 முதல் 8 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.</p><p>எனவே 12 மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்கிட வேண்டும். பெண் விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறு கால விடுப்பும் வழங்கப்பட வேண்டும்.</p><h2>2,771 உடற்கல்வி ஆசிரியர்கள்</h2><p>அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவை தேர்தலை நடத்திட வேண்டும். உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உத்தரவாத திட்டத்தின்படி ரூபாய் 20 லட்சம் வரை பிணையற்ற கல்வி கடன் நடப்பாண்டு முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்பிற்குரியது. எந்த விதமான தடைகளும் இல்லாமல், வட்டியில்லாத கடனாக இதை வழங்கிட வேண்டும்.</p><p>ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்  அறிவித்திருப்பதும், 2,771 உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பும் வரவேற்பிற்குரியன. அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.</p><p>2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியது.</p><h2>தேசிய ஆசிரியர் கல்விப் பேரவை</h2><p>இதனால் சுமார் 3 லட்சத்து 28 ஆயிரத்து 701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். 15 முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவமிக்க ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு இதனால் உறுதி செய்யப்படும்.</p><p>கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல் உரிய திருத்தம் மேற்கொள்ளவும், தேசிய ஆசிரியர் கல்விப் பேரவை  மூலம் சுற்றறிக்கை வெளியிடவும் மத்திய அரசை இத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.</p><p>இத்தீர்மானத்தை நடைமுறை படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதிய விபத்தில் வடமாநில வாலிபர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-a-youth-from-the-northern-state-died-in-an-accident-where-a-lorry-hit-his-bike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-a-youth-from-the-northern-state-died-in-an-accident-where-a-lorry-hit-his-bike#comments</comments><guid isPermaLink="false">31749015-0431-411c-bbcd-a2b0b4936fec</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:18:33 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:18:33.570Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Thoothukudi,தூத்துக்குடி,பலி,bike,பைக்,lorry,லாரி,killed,வடமாநில வாலிபர்,northern state youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/d72q601k/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடமாநில வாலிபர் விபத்தில் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/d72q601k/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் பைக் மீது லாரி மோதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்தில்</a>, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபர்</a> சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">பலி</a>யானார்.</p><h2>மேற்கு வங்க மாநில வாலிபர்</h2><p>மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மேதினிபூர் மாவட்டம், மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்தாஸ் மகன் கோகன்தாஸ் (வயது 28). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகப் பகுதியில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானக் கட்டிடத்தில், தனியார் கட்டுமான நிறுவனத்தின் கீழ் கடந்த ஒரு மாதமாக தங்கிப் பணியாற்றி வந்தார். </p><h2>பைக் மீது கார் மோதிய விபத்தில் பலி</h2><p>இன்று கோகன்தாஸ் முத்தையாபுரம் பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு தனது பைக்கில் தெர்மல்நகர் விலக்கு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சரக்கு ஏற்றிவிட்டு வந்த 40 அடி கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக கோகன்தாஸின் பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த கோகன்தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><h2>லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு</h2><p>இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தெர்மல்நகர் போலீசார், கோகன்தாஸின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரான, தூத்துக்குடி முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்த ராஜீவ்காந்தி(34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து!
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-union-minister-of-state-l-murugan-extends-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-union-minister-of-state-l-murugan-extends-greetings#comments</comments><guid isPermaLink="false">f68af9e3-2cb0-4363-9f7d-faedeb11b7a9</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:16:21 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:16:21.239Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L Murugan,மத்திய இணை மந்திரி,ஓணம் பண்டிகை,Onam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/uhqmwd9l/ONAM.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய இணை மந்திரி எல்.முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/uhqmwd9l/ONAM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; அனைவருக்கும் இனிய ஓணம் வாழ்த்துகள்!  ஓணம் திருநாளின் மகிழ்ச்சியும், இனிமையும் நம் வாழ்வில் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை கொண்டு வரட்டும். இந்த மங்களகரமான திருநாள் நம் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வரட்டும்'‘ என்று பதிவிட்டுள்ளார்.</p><p>ஒணம் பண்டிகை </p><p> கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாள் என்று ஒணம்  அழைக்கப்படுகிறது.  ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் மலையாள மக்கள் அனைவராலும்  இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மலையாள வருடத்தின் கொல்லவர்ஷத்தின் சிங்கம் மாதத்தில் துவங்கி திருவோணம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகாபலி மன்னரை வரவேற்று வீடுகளின் வாசலில், பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, சத்யா உணவை உறவினர்களுடன் உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.  கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள், இன்று ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். கேரள எல்லையோரத்தில் உள்ள தமிழக ஊர்களிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பொங்கலுக்கு முன்பே விலையில்லா வேட்டி, சேலைகள் சென்றடைய வேண்டும்:  டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-dhoti-and-sarees-should-reach-before-pongal-ttv-dhinakaran-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-dhoti-and-sarees-should-reach-before-pongal-ttv-dhinakaran-insists#comments</comments><guid isPermaLink="false">e48e172b-67d0-433b-9550-41d15b9ca8da</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:59:48 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:59:48.580Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,வலியுறுத்தல்,Pongal,பொங்கல்,Condemn,விலையில்லா வேட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/981o64gf/103.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/981o64gf/103.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் தருவாயிலும் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், அத்தொழிலையே நம்பியிருக்கும் சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><h2>வேட்டி, சேலைகள்</h2><p>கூடுதல் தரம் கொண்ட புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் வகையில், கடந்த ஜூலை மாதமே முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான உற்பத்தியைத் தொடங்குவதற்கு நெசவாளர்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>உற்பத்தி, நெசவு, தரப்பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோகம் என குறுகிய காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்காமல் அரசு காட்டும் அலட்சியம், பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்திலும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருக்கிறதா? அல்லது ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்கியதைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக </a>அரசு முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. </p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் பயனாளிகளைச் சென்றடையும் வகையிலும், சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>143-வது பிறந்த நாள்: திரு.வி.க. உருவப்படத்திற்கு அரசு மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/143rd-birthday-state-tribute-to-the-portrait-of-shrivk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/143rd-birthday-state-tribute-to-the-portrait-of-shrivk#comments</comments><guid isPermaLink="false">780ab7d5-3394-49fb-92f1-fc8c8eda0dac</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:49:58 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:49:58.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,birthday,பிறந்தநாள்,floral tribute,மலர்தூவி மரியாதை,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,திரு.வி.க.,Thiru.V.K.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/52v91rsz/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%95.-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திரு.வி.க. உருவபடத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/52v91rsz/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%95.-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>143-வது பிறந்த நாளையொட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னையில்</a> திரு.வி.க. உருவப்படத்திற்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. </p><h2>திரு.வி.க. உருவபடத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</h2><p>'தமிழ்த் தென்றல்' என்று போற்றப்படும் திரு.வி.கலியாணசுந்தரனாரின் 143-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு சென்னை எழும்பூர் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில், திரு.வி.கலியாணசுந்தரனாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பள்ளிக் கல்வித்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a>, திரு.வி.கலியாணசுந்தரனாரின் உருவப்படத்திற்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88">மலர்தூவி மரியாதை</a> செலுத்தினார். </p><p>இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், அரசு அலுவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் கலந்துகொண்டனர். </p>]]></content:encoded></item><item><title>கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-and-son-die-after-inhaling-toxic-gas-while-desilting-a-well-sensation-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-and-son-die-after-inhaling-toxic-gas-while-desilting-a-well-sensation-in-chennai#comments</comments><guid isPermaLink="false">4c882f74-ab2e-4bc3-8fcf-38b89f7494ea</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:31:49 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:31:49.806Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தீயணைப்புத்துறை,Toxic Gas,விஷ வாயு,2 பேர் உயிரிழப்பு,Father and son die</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2026/01/16/44547124-mker.webp" width="750"><media:title type="html"><![CDATA[ தந்தை -மகன் உயிரிழப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ விஷவாயு தாக்கி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2026/01/16/44547124-mker.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள 45 அடி ஆழமுள்ள கிணறு ஒன்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த தந்தை மற்றும் அவரது மகன் ஆகிய 2 பேர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>கிணற்றை தூர்வாரும் பணி</h2><p>சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 52). இவரது மகன் அய்யனார் (வயது 21). தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும், இன்று (புதன்கிழமை) சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்த 45 அடி ஆழமுள்ள கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.</p><h2>விஷவாயு தாக்கி பலி</h2><p>கிணற்றை தூர்வாருவதற்காக முதலில் கிணற்றின் ஆழ பகுதிக்கு அய்யனார் சென்றார். அப்போது திடீரென அங்கு தேங்கியிருந்த விஷவாயுவை சுவாசித்ததால் அவர் மூச்சுத்திணறி அங்கேயே மயங்கி விழுந்தார். மகன் நீண்ட நேரமாகியும் மேலே வராததால் அதிர்ச்சியடைந்த தந்தை ரவி, அவரை மீட்பதற்காக உடனடியாக கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, கிணற்றின் அடிப் பகுதியில் அடர்த்தியாக இருந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81"> விஷவாயு </a>ரவியையும் தாக்கவே, அவரும் அதே இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.</p><h2>மீட்புப் பணிகள்- விசாரணை</h2><p>அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81"> தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்</a> துறையினர், முகமூடி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ரவி மற்றும் அய்யனாரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து யானைகவுனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமைதி தவழவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம்: எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-work-tirelessly-to-ensure-peace-and-brotherhood-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-work-tirelessly-to-ensure-peace-and-brotherhood-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">a48a2390-2686-46aa-bcaa-fab4b258472e</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:29:29 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:29:29.037Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,Chennai,சென்னை,AIADMK,Greetings,வாழ்த்து,Milad-un-Nabi,மிலாது நபி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/773ctm6k/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மிலாது நபி- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/773ctm6k/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அண்ணல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">நபிகள் நாயகம்</a> பிறந்தநாளில், அவரது போதனைப்படி அமைதி தவழவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். </p><p>உலகம் முழுவதும் உள்ள இசுலாமிய மக்கள் நபிகள் நாயகம் முஹம்மதுவின் (ஸல்) பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையில் இன்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF">மிலாது நபி</a> திருநாளைக் கொண்டாடுகின்றனர். இந்த நிலையில் மிலாது நபி தினத்தை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.</a> பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி </a>எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:</p><h2>மிலாது நபி வாழ்த்து</h2><p>அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளில், அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக் கூறி, உலகம் முழுவதும் வாழும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'மிலாது நபி' <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வாழ்த்துகளை</a> மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்- 7 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-28-kg-of-ganja-seized-in-a-single-day-7-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-28-kg-of-ganja-seized-in-a-single-day-7-people-arrested#comments</comments><guid isPermaLink="false">61b826a8-e1ad-4dc1-8737-ff098b0dfb13</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:02:55 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:02:55.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Tirunelveli,திருநெல்வேலி,patrol,கஞ்சா பறிமுதல்,7 பேர் கைது,7 arrested,ரோந்துபணி,seized ganja</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/ffcwmdcx/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், 7 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/ffcwmdcx/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் போதைப்பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை மூலம் ஒரே நாளில் 2 வழக்குகளில் 28 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்து, <a href="https://www.dailythanthi.com/topic/7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">7 பேர் கைது</a> செய்யப்பட்டுள்ளனர். </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, போலீசார் தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். </p><h2>அம்பாசமுத்திரம்</h2><p>அதன் தொடர்ச்சியாக நேற்று (25.08.2026) அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் ஆற்றுப்பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த செந்தில் (வயது 42), ஆலங்குளம், நெட்டூரைச் சேர்ந்த கருப்பசாமி(35), திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா(20) மற்றும் A.மருதப்பபுரத்தைச் சேர்ந்த செல்வம்(20) ஆகிய 4 பேரையும் போலீசார் சோதனை செய்தனர். </p><h2>22 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது</h2><p>அப்போது அவர்களிடம் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 4 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். </p><h2>ராதாபுரம்</h2><p>இதேபோல் ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கால்கரை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டம், கால்கரையைச் சேர்ந்த முருகன்(24), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு(22) மற்றும் கணேஷ் அரவிந்த்(21) ஆகிய 3 பேரையும் போலீசார் சோதனை செய்தனர். </p><h2>6 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது</h2><p>அப்போது அவர்களிடம் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ராதாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். </p><h2>பாளை மத்திய சிறையில் அடைப்பு</h2><p>திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் தீவிர போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் மூலம் நேற்று ஒரே நாளில் அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் காவல் நிலைய சரகங்களில் மொத்தம் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். </p><p>திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்க, எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி அறிவுறுத்தலின்பேரில், போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>விமான நிலையமும் வேண்டும்.. விவசாய நிலமும் வேண்டும் - அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-need-both-an-airport-and-agricultural-land-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-need-both-an-airport-and-agricultural-land-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">168b1f9f-f13c-4b73-b125-0a5c9d8ca6ac</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:48:31 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:48:31.193Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>airport,விமான நிலையம்,விவசாயிகள்,Parandur,பரந்தூர்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/ha6rn25f/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/ha6rn25f/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப் படத்திற்குப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><p><strong>அதன்பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</strong></p><p>பரந்தூரில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்ட தொல்லியல் பொக்கிஷமான கம்பன் கால்வாய் உள்ளது. அங்கிருந்துதான் கடைமடை ஏரிகளுக்குத் தண்ணீர் வருகிறது. அவ்வாறு தண்ணீர் வருவதால், பல்லாயிரக்கணக்கான பறவைகளும் புள்ளினங்களும் அங்கு வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல; ஒரு சுற்றுச்சூழல் சங்கிலியாகவும் உள்ளது.</p><p>இவை அனைத்தையும் கடந்து, 1,000 நாட்களுக்கும் மேலாக அங்கு மக்கள் போராடி வந்தார்கள். இந்தியாவுக்குள் ஒரு இந்தியாவையே உருவாக்கியிருந்தார்கள். ஆதார் அட்டை காட்டினால்தான் உள்ளே அனுமதி என்ற நிலை இருந்தது. அந்தச் சூழல் தற்போது மாறியுள்ளது. விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிப்பது, குழந்தையிடமிருந்து தாயைப் பிரிப்பதற்கு சமம். நமக்கு விமான நிலையமும் வேண்டும்; விவசாய நிலமும் வேண்டும். இதற்காகத்தான் சொன்னதை செய்தார் முதல்-அமைச்சர் விஜய்.</p><p>பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதற்காக விவசாய மக்கள் முதல்-அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அந்த நிலத்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்க முடியும். ஆலோசனைக்குப் பிறகு, விவசாயிகளுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு... விழுப்புரம் அருகே சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-dies-after-collapsing-while-playing-cricket-tragedy-near-villupuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-dies-after-collapsing-while-playing-cricket-tragedy-near-villupuram#comments</comments><guid isPermaLink="false">96cf28a7-4b0c-4fbd-bb64-0afaed6433cd</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:34:52 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:34:52.689Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரிக்கெட்,Cricket,விழுப்புரம்,Heart attack,Viluppuram,மாரடைப்பால் மரணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/uqqrrza0/56.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அஜிஸ்கான்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாரடைப்பால் மரணம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/uqqrrza0/56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கிரிக்கெட் விளையாட்டு</h2><p>விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஜிஸ்கான் (வயது 40). அவர் இன்று (புதன்கிழமை) தனது நண்பர்களுடன் இணைந்து அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">கிரிக்கெட்</a> விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விளையாட்டின் நடுவே அவருக்கு திடீரென கடுமையான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81"> நெஞ்சுவலி</a> ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.</p><h2>மாரடைப்பால் உயிரிழப்பு</h2><p>பதற்றமடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அஜிஸ்கான் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><p>இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு மைதானத்தில் அஜிஸ்கான் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதா; கவர்னர் ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bill-granting-priority-in-government-jobs-to-those-educated-in-the-tamil-medium-receives-governors-assent</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bill-granting-priority-in-government-jobs-to-those-educated-in-the-tamil-medium-receives-governors-assent#comments</comments><guid isPermaLink="false">ea35e113-5ab7-44d3-ac8d-4177ac5d6369</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:27:46 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:27:46.791Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Govt job,மசோதா,தமிழ்,அரசுப் பணி,bill,tamil,கவர்னர் அர்லேகர்,Governor Arlekar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/69omdyz4/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/69omdyz4/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><h2>சட்ட திருத்த மசோதா</h2><p>தமிழக அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே நிரப்பப்படும் அனைத்து காலியிடங்களிலும் 20 சதவீதம் இடங்களை தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2010-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ஒரு பணிக்கு விண்ணப்பித்தவர் அரசு பணியில் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராயாமல் இதுநாள் வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு முன்னுரிமை வழங்கி வந்தது.</p><p>இந்த சூழ்நிலையில் சென்னை ஐகோர்ட்டு, ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் முன்னுரிமைக்கு தகுதியற்றவர்கள் என தீர்ப்பளித்தது. இதை தெளிவுப்படுத்தவும் கடந்த 2010 செப்டம்பர் 7-ம் தேதிக்கு பின் இதுநாள் வரை தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பணியில் சேர்ந்தது செல்லும் என்பதை உறுதிப்படுத்தவும், புதிதாக சேருவோருக்கு மட்டும், அச்சலுகையை பயன்படுத்தவும், புதிய சட்ட திருத்த மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><h2>கவர்னர் ஒப்புதல்</h2><p>இந்த நிலையில், தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 20% ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இனிமேல் புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே இந்த திருத்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>அதன்விரவம்:-</h2><p>* 1-ம் வகுப்பு வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள். இதர மொழிகளைப் பயிற்று மொழியாக கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.</p><p>* 1-ம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.</p><p>* பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி: சொத்துத் தகராறில் கொழுந்தனைக் கொன்று பெண் தலைமறைவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-sister-in-law-absconding-after-killing-brother-in-law-over-property-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-sister-in-law-absconding-after-killing-brother-in-law-over-property-dispute#comments</comments><guid isPermaLink="false">538b367d-2c16-459b-b505-aa9913afb15b</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:23:06 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:23:06.127Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,absconding,தலைமறைவு,Kanyakumari,கொலை,property dispute,சொத்துத்தகராறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/wgh4wsxm/55.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நதியா- பாலகிருஷ்ணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சொத்துத் தகராறில் கொழுந்தன் அடித்துக்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/wgh4wsxm/55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் குடும்பத் தகராறு முற்றியதில், கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">அடித்துக் கொலை</a> செய்த அண்ணி தலைமறைவாகினார். இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சொத்துத் தகராறு</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் வசித்து வருபவர் நதியா. அவருக்கும் அவரது கொழுந்தன் பாலகிருஷ்ணன் (வயது 66) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">சொத்துத் தகராறு</a> காரணமாக கடுமையான மோதல் நிலவி வந்தது. உறவினர்கள் சமாதானம் செய்தும் இருவருக்கும் இடையேயான சண்டை ஓயவில்லை.</p><h2>சப்பாத்திக் கட்டையால் தாக்குதல்</h2><p>வழக்கம் போல் இன்று (புதன்கிழமை) அதிகாலை நேரத்திலும் இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அண்ணி நதியா, சமையலறையில் இருந்த சப்பாத்திக் கட்டையை எடுத்து தன் கொழுந்தனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கொழுந்தன் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். கொழுந்தன் இறந்ததை உணர்ந்த நதியா, உடனடியாக வீட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவானார்.</p><h2>தனிப்படை அமைத்து போலீஸ் தீவிர தேடுதல்</h2><p>அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அண்ணி நதியாவைப் பிடிப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மிலாடி நபி திருநாள்: இஸ்லாமிய சொந்தங்களுக்கு சீமான் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milad-un-nabi-warm-%E0%AE%9A%E0%AF%8Dgs-to-muslim-relatives</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milad-un-nabi-warm-%E0%AE%9A%E0%AF%8Dgs-to-muslim-relatives#comments</comments><guid isPermaLink="false">3b639070-d3e6-4bc8-8cfb-1c807b1aa1a0</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:20:21 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:20:21.079Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,சென்னை,Greetings,வாழ்த்து,muslim,Milad-un-Nabi,மிலாடி நபி,இஸ்லாமியர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/obw7lg2n/218.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/obw7lg2n/218.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இஸ்லாமிய சொந்தங்களுக்கு மிலாடி நபி வாழ்த்துகள் தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். </p><p>இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வாழ்த்து</h2><p>இறைவன் திருப்பெயரால் அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் கற்பித்த  மகத்தான வழிகாட்டி!</p><p>போற்றுதற்குரிய பெருமகனார் இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்திட்ட 'மீலாடி நபி' திருநாளில் என்னுயிர் இஸ்லாமியச் சொந்தங்களுக்கு அளவற்ற அன்பாளனும், நிகரற்ற அருளாளனுமாகிய எல்லாம்வல்ல ஏக இறைவன் அல்லாவின் பேரருள் கிடைக்கப்பெற அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rapidly-spreading-swine-flu-in-tamil-nadu-health-department-advisory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rapidly-spreading-swine-flu-in-tamil-nadu-health-department-advisory#comments</comments><guid isPermaLink="false">d8591bee-a385-4135-9852-2a9df0b413d7</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:11:21 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:11:21.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,swine flu,பன்றிக்காய்ச்சல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/91sd6gms/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/91sd6gms/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>இன்புளுவென்சா என்ற வைரசால் ஏற்பட்டுள்ள சுவாச தொற்று நோய் பன்றிக்காய்ச்சல் ஆகும். முதலில் பன்றிகளில் இருந்து பரவிய இந்த பன்றிக்காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. </p><p>பன்றிக்காய்ச்சல் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான், டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது.</p><h2>தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல்</h2><p>இந்நிலையில்,  தமிழ்நாட்டிலும் <a href="https://www.dailythanthi.com/">பன்றிக்காய்ச்சல் </a>வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் தமிழகத்தில் 19 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளான  திடீர் உயர் காய்ச்சல், இருமல்,  </p><p>தொண்டை வலி, உடல் வலி , தசை வலி , மூட்டு வலி, தலைவலி,  கடுமையான சோர்வு , குளிர்  நடுக்கம், மூச்சுத் திணறல்,  சுவாசிப்பதில் சிரமம் ,   நெஞ்சு வலி  போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>இஸ்லாமிய மக்களுக்கு இதயம் கனிந்த மிலாடி நபி வாழ்த்துகள்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heartfelt-milad-e-nabi-greetings-to-the-muslim-people-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heartfelt-milad-e-nabi-greetings-to-the-muslim-people-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b7a53423-1d7a-49f9-b24c-ef19e1fd3f11</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:56:04 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:56:04.633Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,வாழ்த்து,muslim,மிலாடி நபி,milad-e-nabi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/lcu1wz8d/217.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/lcu1wz8d/217.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இஸ்லாமிய மக்களுக்கு இதயம் கனிந்த மிலாடி நபி வாழ்த்துகளை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>மிலாடி நபி திருநாளை முன்னிட்டு, நம் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>நபிகள் நாயகம் அவர்களின் அன்பு, அமைதி, கருணை, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயப் பாதையை நம் வாழ்வில் பின்பற்றி, ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வோம்.</p><p>இந்த இனிய திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, நிம்மதி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை பெருக்கட்டும். அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிறைந்து, நம் சமூகத்தில் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் என்றும் நிலைத்திடட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மிலாடி நபி திருநாளை முன்னிட்டு, நம் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். <br><br>நபிகள் நாயகம் அவர்களின் அன்பு, அமைதி, கருணை, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயப் பாதையை நம் வாழ்வில் பின்பற்றி, ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும்… <a href="https://t.co/QdWIRqc8PZ">pic.twitter.com/QdWIRqc8PZ</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2092449830840959282?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடுவதில் தகராறு; வாலிபர் வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-dancing-at-funeral-procession-youth-hacked-to-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-dancing-at-funeral-procession-youth-hacked-to-death#comments</comments><guid isPermaLink="false">44563ac1-29c1-403f-8c68-e6778a56d36a</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:49:37 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:49:37.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,திருவள்ளூர்,வாலிபர்,கிரைம் செய்திகள்,Tiruvallur,இறுதி ஊர்வலம்,funeral procession</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/3f1inwgy/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/3f1inwgy/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்து போனார். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தனர். அப்போது அகரம் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>வாய்ப்பேச்சு முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அதனை தடுத்து நிறுத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உடல் தகனம் செய்வதற்காக அகரம் சுடுகாடு பகுதிக்கு எடுத்து சென்றபோது இளைஞர்கள் ஒரு புறமாக மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.</p><p>அப்போது அவர்களுக்கிடையே ஒரு தரப்பினர் அகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரை கத்தியால் கழுத்தில் வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு சுடுகாடு பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் சரிந்து கிடந்த மணிகண்டனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.</p><p>இந்த நிலையில், வெட்டுக் காயம் அடைந்து உயிருக்கான ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணிகண்டனை வெட்டிக்கொன்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் படுகொலை: சிபிஐ விசாரணை வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-3-tamils-cbi-probe-needed-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-3-tamils-cbi-probe-needed-anbumani#comments</comments><guid isPermaLink="false">d7074583-5021-48cd-b269-7b5e138ed0ca</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:42:16 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:42:16.651Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,சென்னை,CBI,வனத்துறை,படுகொலை,தமிழர்கள்,kill,கர்நாடகம்,Tamils,Gun shot,Need</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/16lu1qgq/31.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/16lu1qgq/31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலமானது. சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். </p> <h2>3 தமிழர்கள் சுட்டுக்கொலை</h2><p>இதுதொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது இது தரப்பு மோதலில் அல்ல; அவர்களை கர்நாடக வனத்துறை திட்டமிட்டே கொடூரமாக படுகொலை செய்திருக்கிறது என்பது அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. இவ்வளவுக்கு பிறகும் சுட்டுக்கொல்லப்பட்ட  தமிழர் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் வட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த வனத் துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை  கூறிய நிலையில், அது அப்பட்டமான பொய் என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.</p><h2>வனத்துறை</h2><p>ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை செவிமடுக்காத கர்நாடக அரசு, கொல்லப்பட்ட 3 தமிழர்களும் மான் வேட்டைக்காரர்கள் என்று அவதூறு பரப்பியது. அதுமட்டுமின்றி, அவர்கள் மூவரும் வனத்துறையினரை  துப்பாக்கிகளால் சுட்டதால் தான் பாதுகாப்புக்காக அவர்களை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும்  பொய் கூறியது. இந்த நிலையில் தான் அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை கசிந்து, கர்நாடக அரசின் பொய் முகமூடியை கிழித்தெறிந்து, நடந்த உண்மை என்பதை ஒட்டுமொத்த உலகிற்கும் உணர்த்தியுள்ளது.</p><p>கர்நாடக வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட 3 தமிழர்களில் குமாரின் இடது மார்பிலும், இடுப்புக்கு கீழும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அந்தோணி சாமியின் வலது மார்பிலும், அடி வயிற்றிலும் குண்டு பாய்ந்த காயங்கள் உள்ளன. அவரது விலா எலும்புகளும் நொறுங்கியுள்ளன. இருவரின் உடல் முழுவதும்  துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் நெருக்கமாக இருந்து சுடப்பட்டவை என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மூன்றாமவரான  ஜான்ரோஸ் பீட்டரின் உடற்கூராய்வு அறிக்கை கசியவில்லை என்பதால் அது குறித்த விவரங்கள் தெரியவில்லை.</p><h2>வனத்துறை</h2><p>கர்நாடக காட்டு பகுதியில் வனத்துறைக்கும், தமிழர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், அதில் தான் மூவரும் கொல்லப்பட்டதாகவும் கர்நாடக அரசு கூறியிருந்தது. அது உண்மை என்றால், தமிழர்கள் மூவரின் உடல்களிலும் வெகு தொலைவில் இருந்து தான் குண்டுகள் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால்,  மிகவும் நெருக்கமாக இருந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதால், அவர்களை வனத்துறையினர் பிடித்து அருகில் நிற்க வைத்து கொடூரமாக சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறது. நடுநிலையான விசாரணை நேர்மையாக நடந்தால் மட்டும் தான் இந்த விஷயத்தில் உண்மைகள் வெளிவரும்.</p><h2>பாட்டாளி மக்கள் கட்சி</h2><p>கர்நாடகத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து அங்கு சென்று விசாரித்த பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மை கண்டறியும் குழு, ‘‘3 தமிழர்களும் கர்நாடக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, மிகவும் அருகில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தது. இது தொடர்பாக பாமகவின்  உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை  தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.</p><h2>உடற்கூறாய்வு அறிக்கை</h2><p>இவ்வளவுக்குப் பிறகும் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தை மூடி மறைப்பதில் தான் கர்நாடக அரசு தீவிரம் காட்டுகிறதே தவிர, உண்மையை ஒப்புக்கொண்டு கொல்லப்பட்டவர்களின்  குடும்பங்களுக்கு  நீதி வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையைக் கூட கர்நாடக அரசு வெளியிட மறுக்கிறது. இந்த விவகாரம் பற்றி அதிகாரம் இல்லாத மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதன் மூலம் உண்மையை மூடி மறைப்பதற்கு கர்நாடக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.</p><p>கர்நாடக அரசின் இந்த சதித்திட்டத்தை அறிந்திருந்ததால் தான் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர்  வி. இராமசுப்பிரமணியன், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும்  கடிதம் எழுதினேன். இதன் பிறகாவது கர்நாடக அரசு அதன் தவறை உணர்ந்து கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்.</p><h2>சிபிஐ விசாரணை</h2><p>3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த  விவகாரத்தில் தமிழக அரசு இனியும் விலகி நிற்காமல், 3 தமிழர்கள் படுகொலை குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">சிபிஐ </a>விசாரணைக்கு ஆணையிடும்படி கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விவகாரம்: சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது- சிபிஎம்  விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-issue-tamil-nadu-government-must-not-act-unlawfully-cpm-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-issue-tamil-nadu-government-must-not-act-unlawfully-cpm-criticizes#comments</comments><guid isPermaLink="false">108e057f-657e-4357-b542-e08ac2bf8205</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:24:00 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:24:00.866Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,பரந்தூர்,சிபிஎம்,CPM</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/cw3cdl6u/Shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/cw3cdl6u/Shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் நேற்று முன்தினம் அறிவித் தார். தமிழக அரசின் இந்த அதிரடி முடிவுக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபையில் இருந்து அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர். இதற்கிடையே மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பரந்தூர் விமான நிலையத்திட்டம் தொடர்பான விவாதம் நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.  உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கூறியதாவது;  </p><h2>2-வது விமான நிலையம்</h2><p>மாற்றுத்தொழில் திட்டங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களை பாதிக்காதவாறு செயல்படுத்தப்படும். இதன் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். விமான நிலையம் வரவில்லையென்றால் தொழிலே பாதிக்கப்படும் என்கிறார்கள். 49 சதவீதம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பரந்தூர்</a> விமான நிலையத்தை நம்பிதான் போய்க்கொண்டிருக்கிறதா?. 2-வது விமான நிலையம் வேண்டும். மக்கள் பாதிக்கப்படாமல், விவசாய நிலம் பாதிக்கப்படாமல் அது அமைக்கப்படும். சிப்காட்டுக்கும் மக்கள், விவசாயம் பாதிக்கப்படாத வகையில்தான் இருக்கும்” என்று கூறினார். </p><h2> கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு</h2><p>இந்த நிலையில், அரசின் அறிவிப்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; -  பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சட்டமன்ற உறுப்பினர்கள் </a>இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-ramesh-inspection-at-the-tiruvannamalai-annamalaiyar-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-ramesh-inspection-at-the-tiruvannamalai-annamalaiyar-temple#comments</comments><guid isPermaLink="false">07dc6738-018b-4a3a-a0bf-26633f476e83</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:21:09 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:21:09.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,திருவண்ணாமலை கோவில்,Arunachaleshwarar Temple,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்,Tiruvannamalai temple,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/negwwaud/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/negwwaud/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.</p><p>கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசன வழியில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 முதல் 5 மணி நேரம் வரை ஆகும் என பக்தர்கள் மேலானதாக தெரிவிக்கின்றனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர், பிஸ்கட், மோர் வழங்கப்படுகிறது.</p><p>இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விஐபிக்கள் தொடர்ந்து தரிசனம் செய்வதால் சாமியை பார்க்க நீண்ட நேரம் ஆவதாக பொதுமக்கள் அமைச்சரிடம் முறையிட்டனர். "முதன்முறையாக ஆய்வுக்கு வந்துள்ளேன். அனைத்தையும் சரிபார்த்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்" என்று அமைச்சர் ரமேஷ் உறுதி அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கைவிரல் ரேகை பதிவு: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 29-ந் தேதி சிறப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fingerprint-registration-special-camp-at-ration-shops-across-tamil-nadu-on-the-29th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fingerprint-registration-special-camp-at-ration-shops-across-tamil-nadu-on-the-29th#comments</comments><guid isPermaLink="false">5a94080f-35e7-435e-9e5a-ca07026a2735</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:53:38 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:53:38.651Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,ரேஷன் கடை,ration shops,Fingerprint,கைவிரல் ரேகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/8j512ak8/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/8j512ak8/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முன்னுரிமை மற் றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு ரேஷன் அட் டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.</p><p>அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இந்த கைவிரல் ரேகை பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும்பொருட்டு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>எனவே, இதுவரை, ரேஷன் கடைகள் மூலம் கைவிரல் ரேகைப்பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் 29-ந் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைவிரல் ரேகைப் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“அரசியலில் பெரும்பான்மை - சிறுபான்மை என்ற பேதம் இருக்கக்கூடாது” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-should-be-no-distinction-between-majority-and-minority-in-politics-minister-adhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-should-be-no-distinction-between-majority-and-minority-in-politics-minister-adhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">346b392b-0281-4597-a3fa-5f1de8301089</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:52:06 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:52:06.600Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சென்னை,அரசியல்,political,Minority,Adhav Arjuna,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/3wkem3i2/215.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/3wkem3i2/215.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதாயி கல்விக் குழுமம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மீலாதுன் நபி விழா மற்றும் சமய நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், உலகிற்கு நபிகள் நாயகம் வழங்கிய முக்கிய செய்தி அன்பு, கருணை மற்றும் நம்பிக்கை எனக் குறிப்பிட்டார். இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி இருப்பதாவது:-</p><h2>மீலாது நபி வாழ்த்து</h2><p>எல்லோருக்கும் என்னுடைய மீலாது நபி வாழ்த்துகள். ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறார்கள்; வாழ்கிறார்கள். சிலர் தன் குடும்பத்திற்காக வாழ்கிறார்கள்; சிலர் ஊருக்காக வாழ்கிறார்கள். சிலர் மட்டும்தான் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். அப்படி மனிதராகப் பிறந்து இறைத்தூதராக வாழ்ந்து ஒரு சமுகத்திற்கு மட்டுமல்ல... உலகத்திற்கே செய்தியைக் கொடுத்துவிட்டுப் போவார்கள். அப்படிப்பட்ட ஒரு இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் இன்று. நபிகள் நாயகம் இந்த உலகத்திற்கு கொடுத்த செய்தி அன்பும் கருணையும் நம்பிக்கையும் தான் அதனால்தான் அவர் இறைத்தூதர். </p><h2>இஸ்லாமிய மார்க்கம்</h2><p>எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. அவர்கள்தான் இந்த மார்க்கத்தைப் பற்றி எனக்கு நிறைய அறிவைக் கொடுத்தார்கள். அதில் முக்கியமானவர், உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற  நீதியரசர் அக்பர் அலி சார், அவர்தான் இஸ்லாமிய மார்க்கம் பற்றி எனக்கு நிறைய சொன்னவர்.  </p><p>நபிகள் நாயகம் பிறந்த நல்ல நாளில்... ஒரு சந்தோஷமான - மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால்,  கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் கனவு  60 வருடம் கழித்து நிறைவேறி உள்ளது. அது சாதரண கனவு அல்ல. அம்பேத்கர் சொல்வார், ஒரு உண்மையான விடுதலை யாதெனில், பிறப்பால் ஒருவருடைய உயர்வை நிர்ணயம் செய்யக்கூடாது. ஒரு சாதியில் பிறந்தால், இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும்; இவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும்; இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை தீர்மானிக்கக்கூடாது. </p><h2>அம்பேத்கர்</h2><p>அதனால்தான், அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய அம்பேத்கர், இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னார். அதுபோல், சாதி சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றார். எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டை முன்வைத்து அரசியலமைப்பை எழுதினார். அண்ணா சொன்னதுபோல், சிறுபான்மை சமூகம், இஸ்லாமிய சமூகம்-கிறிஸ்தவ சமூகம். </p><p>2026 தேர்தலின் வெற்றி, எங்கள் தலைவர் விஜயின் வெற்றி சாதரண வெற்றி அல்ல. பெண்களாலும், இளைஞர்களாலும் உருவாக்கப்பட்ட வெற்றி என்பதை நான் திரும்பத் திரும்ப பதிவு செய்வேன். அதோடு நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு வேலூர், ராணிப்பேட்டை வழியாக வரும்போது, இஸ்லாமிய சகோதரிகள் வரிசையாக நின்று வரவேற்பு கொடுத்தனர். அப்போது பலர் நம்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுமா? என்று. இந்த மாற்றத்தை கொண்டுவந்ததில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள், இளைஞர்கள் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தனர். </p><p>இந்த மாற்றத்தின் மூலம் அம்பேத்கர் கண்ட கனவு நிறைவேறி உள்ளது. பெரியார் கண்ட கனவு நிறைவேறி உள்ளது. எங்கள் தலைவர் தேர்தல் பிரச்சாரம் போன போதெல்லலாம் விஜய்... விஜய் என்றுதான் சொல்வார்கள்... எழுதுவார்கள்... ஆனால், அவர் வேட்பாளரை அறிவித்தபோது, பெரம்பூர் ஜோசப் விஜய் என்று தைரியமாக அறிவித்தார். அதில் உள்ள செய்தி என்னவென்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கை இந்தியாவில் சவாலாக இருக்கும் நேரத்தில், நான் பிறப்பால் கிறிஸ்தவன் என்றாலும், வளர்ப்பால் அனைவருக்குமானவன். எல்லா மக்களுக்குமானவன் என்பதுதான் அவர் கொடுத்த செய்தி. </p><p>2026 தேர்தல் சாதித்த மிகப்பெரிய வெற்றி என்னவென்றால், இந்த முறை வாக்களித்த தமிழக மக்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> முதல் அனைத்து வேட்பாளர்களையும் எந்த மதம் என்று பார்க்கவில்லை; எந்த சாதி என்று பார்க்கவில்லை. எந்தப் பாகுபாடும் இன்றி வாக்களித்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அதுவும் குறிப்பாக பெண்கள் அந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அதுதான் இந்தத் தேர்தலின் மிகப்பெரிய வெற்றி. </p><p>அரசியலில் பெரும்பான்மை-சிறுபான்மை என்பது இருக்கக்கூடாது. அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கம். கடந்த 60 ஆண்டுகளாக பொதுவாக அரசியலில், இஸ்லாமியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று பல கட்சிகள் சொல்வார்கள். அதில் எனக்கு ஒரு கேள்வி உண்டு. பாதுகாப்புக் கொடுப்பதுதான் அரசியலா? அதிகாரத்தைக் கொடுப்பதுதான் உண்மையான சமத்துவ அரசியல். </p><h2>ஏ.பி.ஜே. அப்துல்கலாம்</h2><p>ஏ.பி.ஜே. அப்துல்கலாமை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்தவர். தமிழ் வழிப்பள்ளியில் படித்து, அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி, நியூக்ளியர் சோதனையில் இந்தியாவை வெற்றியடைய வைத்தவர். இந்தியாவின் பாதுகாப்பு அந்த நியூக்ளியர்  அணு சக்திதான். அப்படி இந்தியாவின் பாதுகாப்பை உருவாக்கியவர் ஒரு இஸ்லாமியர். அவருடைய அக்னி சிறகுகள் புத்தகத்தைப் படித்து வளர்ந்தவன்தான் நான். </p><p>காயிதே மில்லத்தின் செய்தி... மிலாது நபியின் செய்தி... நபிகள் நாயகத்தின் செய்தி... நன்றாகப் படிப்போம்... விளையாட்டுத்துறையில் சாதிப்போம்.. பொருளாதாரத்தில் மிகப்பெரிய வலிமையான இடத்திற்கு வரவேண்டும். ஒரு சாதரண குடிசை வீட்டில் இருந்து கோட்டைக்கு வர வேண்டும். அப்படி வருவதுதான் உண்மையான அரசியல் வெற்றி. அப்படி வருபவர்களால்தான் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். </p><h2>அமைச்சரவை</h2><p>ஐ.யூ.எம்.எல் தலைவர்கள் எங்களிடம் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று கேட்கவே இல்லை. அவ்வளவு நல்லவர்களாக இருந்தார்கள், அப்படி இருக்கக்கூடாது. நம் அதிகாரத்திற்காக நாம்தான் முயற்சிக்க வேண்டும். ஏனென்றால், அப்படி நம்மில் ஒருவர் பெறும் அதிகாரம், அது அவருக்கான அதிகாரம் மட்டுமல்ல; அது அவருடைய குடும்பத்திற்கான அதிகாரம் கிடையாது. அது ஒட்டுமொத்த சமூகத்திற்கான அதிகாரம். இந்த அதிகாரம்தான் எதிர்காலத் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும். நாமும் படிக்க வேண்டும். உயர வேண்டும்; சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் வரும். எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் என்ற நிலை மாறி, எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாமே உருவாக்கும் சட்டமன்றம் - நாடாளுமன்ற பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும். அந்த அதிகாரம்தான், நமக்கு பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கும். </p><p>நான் ஏழையாக இருந்தேன். என் அம்மா 5 வயதில் இறந்துவிட்டார். தற்கொலை செய்து கொண்டு என் கண் முன்னால் இறந்துவிட்டார். அப்பா இல்லை. 15 வயதில் அரசியல் படிக்கும்போது, எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. ஏன் என் அம்மா இறந்தார்? என்ற கேள்வி எழுந்தது. அதற்கான காரணம், என் அம்மா ஒரு ஏழை விவசாயி. அப்போது முடிவு செய்தேன். என்னிடம் அதிகாரம் வரும் போது, எந்த ஊழலும் இருக்கக்கூடாது என்று நினைத்தேன். அதை நினைத்துத்தான் ஒவ்வொரு நாளும் கையெழுத்துப்போடுகிறேன். அதுபோல், நீங்கள் அனைவரும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்கம் கையெழுத்தைப் போடும் அதிகாரத்திற்கு வர வேண்டும். </p><h2>அரசியலமைப்பு</h2><p>அம்பேத்கர் சொல்வார், எந்த இடத்தில் புறக்கணிக்கப்பட்டோமோ, அந்த இடத்தில் உங்கள் உழைப்பால் உயர்ந்து நிற்க வேண்டும் என்று. அவர் அப்படித்தான் உயர்ந்து நின்றார். அவர் படித்த இடங்களில் எல்லாம் ஒதுக்கப்பட்டாரோ... பிறகு அவருடைய அரசியலமைப்புதான் அந்த இடங்களில் எல்லாம் நின்றது. இன்றைக்கு இந்தியாவின் பெரிய சட்ட மேதைகள் எல்லாம், அந்த அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். </p><p>அதைத்தான் எங்கள் கட்சியில் உள்ள தாஹிரா அக்கா சாதித்தார். தைரியமாக அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, தைரியமாக செயல்பட்டு, பெரிய பெரிய அமைச்சர் வேட்பார்களை எல்லாம் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்று, இன்று சட்டமன்றத்தில் தைரியமாக நின்று பேசுகிறார். அதைத்தான் நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும். </p><p>என் அம்மா கொஞ்சம் இதுபோல் தைரியமாக இருந்திருந்தால், அப்படி தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டார். ஆனால், தைரியமாக இருந்த என் பெரியம்மா... நான் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த என் பெரியம்மா, படித்து முதல் ஐ.பி.எஸ் அதிகாரியானர். அவர்தான் திலகவதி ஐ.பி.எஸ். அதுபோல், நீங்களும் சுதந்திரமாக செயல்பட்டு... தைரியமாக படித்து முன்னேறி சாதிக்க வேண்டும். </p><p>இவ்வாறு தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கரூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-head-on-collision-between-lorries-2-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-head-on-collision-between-lorries-2-killed#comments</comments><guid isPermaLink="false">ce94cde0-fb29-4f79-87a2-044a49585f6b</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:24:22 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:24:22.674Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,கரூர்,Karur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/l138446z/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/l138446z/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கரூர்,</p><p>திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது. </p><h2>விபத்து - 2 பேர் பலி</h2><p>கரூர் மாவட்டம் குளித்தலை <a href="https://www.dailythanthi.com/">குமாரமங்கலம் </a>அருகே சென்றபோது நெடுஞ்சாலையில்  எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரி மீது நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி நேருக்குநேர் மோதியது. இந்த கோர விபத்தில் 2 லாரிகளின் 2 டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. </p> ]]></content:encoded></item><item><title>உலகெங்கும் வாழும் மலையாள சொந்தங்களுக்கு ஓணம் வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-onam-to-malayali-people-across-the-world-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-onam-to-malayali-people-across-the-world-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">5201f283-fd54-4859-a37c-45228125d422</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:09:13 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:09:13.134Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Malayalam,வாழ்த்து,Onam,ஓணம்,happy,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/m78v6t1e/214.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/m78v6t1e/214.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழக முதல் - அமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக, முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வாழ்த்துகள்</h2><p>உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்.</p><p>கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">ஓணம்</a> திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!</p><p>அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>