<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 26 Aug 2026 02:46:39 +0000</lastBuildDate><item><title>ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்: சென்னையில் நாளை 2-வது முத்தரப்பு கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-fares-for-autos-to-be-fixed-2nd-tripartite-meeting-to-be-held-in-chennai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-fares-for-autos-to-be-fixed-2nd-tripartite-meeting-to-be-held-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">49fa2fd4-1c3a-44a1-be70-9a944567cf39</guid><pubDate>Wed, 26 Aug 2026 02:45:12 +0000</pubDate><atom:updated>2026-08-26T02:45:12.188Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Meeting,கூட்டம்,autos,கட்டணம் நிர்ணயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/7qdlf7xv/212.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆட்டோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/7qdlf7xv/212.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை இறுதி செய்யும் நோக்கில், சென்னையில் நாளை இரண்டாவது முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது.</p><h2>புதிய கட்டணம்</h2><p>தமிழகத்தில் இயக்கப்படும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, சென்னையில் கடந்த ஜூலை 9-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும், பயணியர் அமைப்புகளில் இருந்து 90 பேரும் பங்கேற்றனர். </p><p>தொழிற்சங்கங்கள் தரப்பில் குறைந்தபட்ச கட்டணத்தை, 70 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தினர். பயணியர் அமைப்புகளின் நிர்வாகிகள் தரப்பில், குறைந்தபட்ச <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">கட்டணம்</a> 50 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தினர்.</p><h2>முத்தரப்பு கூட்டம்</h2><p>இதையடுத்து, புதிய கட்டணம் தொடர்பான இறுதி அறிக்கையை அரசு தயாரித்துள்ளது. இதனை இறுதி செய்து, புதிய கட்டணத்தை அறிவிப்பதற்காக சென்னையில் நாளை இரண்டாவது முறையாக முத்தரப்பு கூட்டம் நடைபெற உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச வீடியோ இருப்பதாக  மர்ம நபர் மிரட்டல்:  இளம்பெண் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stranger-threatened-with-obscene-video-teen-commits-suicide</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stranger-threatened-with-obscene-video-teen-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">cf30e68f-8c9e-41fb-ae00-331c4682da3e</guid><pubDate>Wed, 26 Aug 2026 02:08:03 +0000</pubDate><atom:updated>2026-08-26T02:08:03.675Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Video,இளம்பெண்,ஆபாச வீடியோ,மிரட்டல்,தற்கொலை,Suicide,threatened</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/393olotj/116.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளம்பெண் தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/393olotj/116.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருகம்பாக்கம்,</p><p>ஆபாச வீடியோ இருப்பதாக மர்ம நபர் மிரட்டிய நிலையில், அதிர்ச்சியடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>மர்ம நபர்</h2><p>சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், மதியழகன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 30). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரட்சிதா (27). நேற்று முன்தினம் ரட்சிதாவை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர். "தன்னிடம் உனது ஆபாச வீடியோ இருப்பதாகவும். அதனை உனது கணவருக்கு அனுப்பிவிடுவதாகவும் கூறி மிரட்டியதாக தெரிகிறது. </p><p>இதனால் அதிர்ச்சியடைந்த ரட்சிதா, இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். ரவிச்சந்திரன் தனது மனைவியிடம் கவலைப்பட வேண்டாம் என கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.</p><p>இதனால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரன், வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது. வீட்டின் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர். கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது ரட்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><h2>போலீசார்</h2><p>இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து ரட்சிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வீடியோ இருப்பதாக மிரட்டிய மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வரலாற்றில் முதன்முறையாக 10 மணிநேரம் தொடர்ந்து நடந்த தமிழக சட்டசபை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/for-the-first-time-in-history-the-tamil-nadu-legislative-assembly-session-continued-uninterrupted-for-10-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/for-the-first-time-in-history-the-tamil-nadu-legislative-assembly-session-continued-uninterrupted-for-10-hours#comments</comments><guid isPermaLink="false">177c3402-922a-4dc4-ab28-9fcc1f698fc4</guid><pubDate>Wed, 26 Aug 2026 02:07:56 +0000</pubDate><atom:updated>2026-08-26T02:07:56.645Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,தமிழக சட்டசபை,TN Assembly,JCD Prabhakar,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/nez80auf/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/nez80auf/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வரலாற்றில் முதன்முறையாக தமிழக சட்டசபை 10 மணிநேரம் தொடர்ந்து நடந்தது. இரவு 7 மணியையும் தாண்டியது.</p><h2>சட்டசபை நிகழ்வுகள்</h2><p>தமிழக சட்டசபை நிகழ்வுகள் கடந்த காலங்களில் பொதுவாக காலையில் தொடங்கி அதிகபட்சமாக பிற்பகல் 3 அல்லது 4 மணி வரை நீடிப்பது உண்டு. இதையே நீண்ட நேரம் நடை பெற்றதாக எம்.எல்.ஏ.க்கள் கூறுவதுண்டு. ஆனால் தற்போது த.வெ.க. ஆட்சியில், சட்டசபையில் கேள்வி நேரம் இல்லாத சூழ்நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த சில தினங்களாக புதிய முயற்சியை மேற்கொண்டார்.</p><p>அதன்படி, அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளின் போது, வெட்டுத் தீர்மானத்தில் பெயர் கொடுத்திருந்த எம்.எல்.ஏ.க்கள் விவாதித்த பிறகு வேறு எம்.எல்.ஏ.க்களையும் அவர்களின் கோரிக்கைகளை கூற அழைப்பு விடுத்தார். அந்த வகையில் தினமும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அவையில் பேசி, அவர்களது தொகுதியின் மிக முக்கியமான கோரிக்கைகளை கூற வாய்ப்பு கிடைத்தது. அதில் சில கோரிக்கைகளுக்கு பதிலும் கிடைத்தது.</p><h2>சபாநாயகர் பாராட்டு</h2><p>நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், காலையில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை, அரசு அதிகாரிகளிடம் இருந்து பெற்று, அவற்றை மாலை நேரத் தில் அறிவிப்புகளாக வெளியிட்டார். இதை சபாநாயகர் வெகுவாக பாராட்டினார். இதுதான் ஒரு அமைச்சரின் பொறுப்புக்கான உதாரணம் என்று குறிப்பிட்டார்.</p><p>எம்.எல்.ஏ.க்கள் பலரையும் கேள்விகள் கேட்க அனுமதிப்பதை அடுத்து அவை நடைபெறும் நேரம் கடந்த சில நாட்களாக மாலை 6 மணியை தாண்டிச் சென்றது. அதன் உச்சமாக நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய அவை இரவு 7.13 மணிவரை நீடித்தது. அந்த வகையில் சுமார் 10 மணி நேரம் அவை அலுவல்கள் நேற்று நடைபெற்றன. இதுதான் தமிழக சட்டசபை வரலாற்றில் இடைவெளி விடாமல் தொடர்ந்து அவை அதிகபட்சமாக நடைபெற்ற நேரமாக கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.65-க்கு விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-kilo-of-sugar-is-being-sold-for-rs65-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-kilo-of-sugar-is-being-sold-for-rs65-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">97a6afae-4733-457a-b2ea-a589356ec4d6</guid><pubDate>Wed, 26 Aug 2026 01:50:41 +0000</pubDate><atom:updated>2026-08-26T01:50:41.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,Action,நடவடிக்கை,மத்திய அரசு,Central Government,Sugar,சர்க்கரை,விலை குறைவு,price drop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/31d6b9vb/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்க்கரை விலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/31d6b9vb/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தமிழகத்தில்</a> சர்க்கரை விலை 9.7 சதவீதம் குறைந்து ஒரு கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">சர்க்கரை</a> ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>வரலாறு காணாத விலையேற்றம்</h2><p>தமிழகத்திற்கு சர்க்கரை வழங்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மராட்டிய மாநிலங்களில் முறையற்ற பருவமழை காரணமாக கரும்பு உற்பத்தி பெருமளவு குறைந்ததால் தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு சர்க்கரை விலையேற்றம் ஏற்பட்டது. இந்த சர்க்கரை விலையேற்றத்தை பயன்படுத்தி, மராட்டிய மாநிலத்தில் உள்ள சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் சர்க்கரை பதுக்கல்களும் நடைபெற்று வந்தது. </p><p>இதுபோக, இ-20 பெட்ரோல் தயாரிக்க கரும்பில் இருந்து எத்தனால் எடுக்கப்பட்டதாலும் சர்க்கரை விலை உயர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால், இதற்கு மத்திய அரசு சார்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டு, சர்க்கரை விலை உயர்வுக்கும் இ-20 பெட்ரோல் தயாரிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்பட்டது. எனினும், சர்க்கரை விலை படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் வரை கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p><h2>மத்திய அரசு அனுமதி</h2><p>இந்த நிலையில், சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டு சர்க்கரை பதுக்கலை தடுத்து வருகிறது. </p><h2>9.7 சதவீதம் விலை குறைவு</h2><p>இதுபோன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் சர்க்கரை கையிருப்பு சீராகி அதன் விலை குறையத் தொடங்கி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை நேற்று ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது சதவீதத்தில் கணக்கிடும்போது, 9.7 சதவீதம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81">விலை குறைவாகும்</a>. இன்னும் வரும் காலங்களில் சர்க்கரை விலை மேலும் குறையும் என்று சர்க்கரை ஆலைகளின் உயரிய அமைப்பான இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத் தலைவர் நீரஜ் ஷிர்கோகர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>
 புதுவையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட அமைச்சர் மரிய வில்சன்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilson-set-out-on-a-pilgrimage-on-foot-from-puducherry-to-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilson-set-out-on-a-pilgrimage-on-foot-from-puducherry-to-velankanni#comments</comments><guid isPermaLink="false">e16913d6-934d-4bae-af9a-ab9b0fdd9cd7</guid><pubDate>Wed, 26 Aug 2026 01:39:22 +0000</pubDate><atom:updated>2026-08-26T01:39:22.076Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுவை,Velankanni,வேளாங்கண்ணி,puduvai,maria wilson,அமைச்சர் மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/p2qj4r6y/velenganni.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/p2qj4r6y/velenganni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட அமைச்சர் மரியவில்சன்பக்தர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படும் என்று உறுதிகடலூர், ஆக.26-நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.அந்த வகையில் தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் புதுச்சேரியில் இருந்து நேற்று காலை வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். </p> <p>மாலை 5 மணி அளவில் கடலூர் வருகை தந்த அவர், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சென்னையில் இருந்து கடந்த 27 ஆண்டுகளாக வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்கிறேன். இந்த வருடம் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளதால், வேளாங்கண்ணி மாதாவிற்கு நன்றி கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனக்கு மட்டுமின்றி, தமிழகத்தி்ற்கும் நல்லது நடந்துள்ளது.அதனால் இந்தாண்டு தொடர்ந்து 28-வது முறையாக சென்று நன்றி சொல்ல பாதயாத்திரை செல்கிறேன். </p> <p>பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பதால் சென்னைக்கு பதிலாக, புதுச்சேரியில் இருந்து புறப்படுகிறேன்.ஏற்கனவே சாதாரணமானவனாக இருந்தேன். ஆனால் தற்போது அமைச்சராக இருப்பதால், ஒவ்வொரு மாவட்டத்தையும் கடந்து செல்லும் போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் மனு அளிக்கின்றனர். இதுதொடர்பாக துறை சார்ந்த அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், கழிவறை, முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக மேற்கொள்ளவும், அடுத்தாண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பிரசவம்: ஆம்புலன்சிலேயே பிறந்த ஆண் குழந்தை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delivery-on-the-way-to-the-hospital-baby-boy-born-in-the-ambulance</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delivery-on-the-way-to-the-hospital-baby-boy-born-in-the-ambulance#comments</comments><guid isPermaLink="false">24dc5818-2d10-4a50-a930-67893f18e355</guid><pubDate>Wed, 26 Aug 2026 01:35:57 +0000</pubDate><atom:updated>2026-08-26T01:35:57.906Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ambulance,ஆம்புலன்ஸ்,ஆண் குழந்தை,Baby Boy,hospital,ஆஸ்பத்திரி,பிரசவம்,Born</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/p47op77b/211.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குழந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/p47op77b/211.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவருடைய மனைவி வாணிப்ரியா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.</p><h2>ஆம்புலன்ஸ்</h2><p>இதனையடுத்து, அவருடைய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த உடனே அருகாமையில் இருந்த வேளச்சேரி பகுதி ஆம்புலன்ஸ் குழுவினர் வாணிப்ரியாவின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரை ஆம்புலன்சில் ஏற்றி, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.</p><p>ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் வாணிப்ரியாவிற்கு பிரசவவலி அதிகமானது. குழந்தை பிறக்கும் அறிகுறி தெரிந்ததால், ஆம்புலன்சை ஊழியர்கள் ஓரமாக நிறுத்தினர். தொடர்ந்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">ஆம்புலன்சில்</a> இருந்த அவசர மருத்துவ சிகிச்சை நிபுணர் யுவராஜாவின் துரித முயற்சியால் வாணிப்ரியாவிற்கு ஆம்புலன்சிலேயே சுகப்பிரசவம் நடந்தது. </p><p>அவருக்கு 2.4 கிலோ எடையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் மேல் சிகிச்சைக்காக சேப்பாக்கத்தில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூரில் இருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இன்று முதல் வழக்கம் போல் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-express-trains-from-egmore-will-operate-as-usual-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-express-trains-from-egmore-will-operate-as-usual-starting-today#comments</comments><guid isPermaLink="false">cf312c37-e87e-4452-9444-0e5522438e6e</guid><pubDate>Wed, 26 Aug 2026 01:15:33 +0000</pubDate><atom:updated>2026-08-26T01:15:33.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Express train,எக்ஸ்பிரஸ் ரெயில்,Egmore,எழும்பூர்,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/shb297s5/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/shb297s5/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எழும்பூரில் இருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>மறுசீரமைப்பு பணி</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.</p><p>இதன் காரணமாக, எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. அதேபோல், தென்மாவட்டங்களிலிருந்து எழும்பூர் வரும் ரெயில்கள் தாம்பரம் மற்றும் மாம்பலம் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வந்தன. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே முறையான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.</p><h2>வழக்கம்போல் இயக்கம்</h2><p>இந்தநிலையில், தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம் போல் இன்று (புதன்கிழமை) முதல் எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. அதேபோல, பிற பகுதிகளில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கே வந்தடையும்.</p><p>இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரெயில்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது. எனவே, தற்போது அனைத்து ரெயில்களும் வழக்கம் போல் எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். அடுத்தகட்டமாக ரெயில் மாற்றங்கள் குறித்த புதிய அறிவிப்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வரும் வரையில் இதே நடை முறை தொடரும்' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெயிண்டர் ஓட, ஓட வெட்டிக்கொலை- 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-painter-hacked-to-death-in-illegal-communication-case-5-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-painter-hacked-to-death-in-illegal-communication-case-5-arrested#comments</comments><guid isPermaLink="false">f0e043df-d876-4313-b4d4-dd6754ad68d8</guid><pubDate>Wed, 26 Aug 2026 01:10:44 +0000</pubDate><atom:updated>2026-08-26T01:10:44.672Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,வெட்டிக்கொலை,Painter,பெயிண்டர்,5 people arrested,5 பேர் கைது,கள்ளத்தொடர்பு விவகாரம்,hacked to death,Fake communication issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/eq16cfzs/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை செய்யப்பட்ட மாரி மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திய கார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/eq16cfzs/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">கள்ளத்தொடர்பு விவகாரத்தில்</a> மோட்டார்சைக்கிள் மீது காரை மோதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">பெயிண்டர்</a> ஓட, ஓட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக்கொலை</a> செய்யப்பட்டது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">5 பேர் கைது</a> செய்யப்பட்டனர். </p><h2>பைக் மீது கார் மோதல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவள்ளூர்</a> அருகே உள்ள சிற்றத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி(எ) ரூபன் (வயது 32). பெயிண்டரான இவர் மீது அடிதடி குற்ற வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்தது தொடர்பாக மாரியை போலீசார் கைது செய்திருந்தனர். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர் வெங்கல் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். வழக்கம் போல் நேற்று காலை 11 மணியளவில் மாரி தனது நண்பர் வெங்கடேசனுடன் மோட்டார் சைக்கிளில் வெங்கல் போலீஸ் நிலையத்தில் வந்து கையெழுத்து போட்டார். பின்னர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். வெங்கடேசன் மோட்டார் சைக்கிளை ஓட்ட பின்னால் மாரி அமர்ந்து சென்றார். பாகல்மேடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. </p><h2>வெட்டிக்கொலை</h2><p>இதில், நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளோடு இருவரும் கீழே விழுந்தனர். உடனே காரில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மாரியை சுற்றி வளைத்தனர். இதனால் பதற்றம் அடைந்த மாரி அவர்களிடம் இருந்து உயிர் தப்பிப்பதற்காக தப்பி ஓட முயன்றார். இருப்பினும் கொலை வெறி கும்பல் மாரியை பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த மாரி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். </p><h2>3 பேரை பிடித்த பொதுமக்கள்</h2><p>அவரது கையின் மணிக்கட்டு பகுதி துண்டாகி தனியாக கிடந்தது. மேலும் மாரியின் முகம் முழுவதும் வெட்டி சிதைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலை திட்டத்தை அரங்கேற்றிய கும்பல் மீண்டும் காரில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். பதற்றத்தில் அவர்கள் காரை ஓட்டி சென்றபோது அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவரின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டு நின்றது. இதையடுத்து திரண்டு வந்த பொதுமக்கள் 3 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து வெங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். </p><h2>5 பேர் கைது</h2><p>கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய கார், அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் கீழானூர் பகுதியைச் சேர்ந்த தீனா(25), நரேஷ்(20), விக்கி(எ) கலாநிதி(23) என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய மேலானூர் பகுதியைச் சேர்ந்த பேரரசு(19), ராஜ்குமார்(20) ஆகிய 2 பேரை ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.</p><h2>கள்ளத்தொடர்பு</h2><p>போலீஸ் விசாரணையில் தீனாவின் திருமணம் ஆன சகோதரி தீபாவுடன் மாரி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் தீபாவின் கணவர் தனது மனைவியை அடித்து உதைத்து அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பழி தீர்க்கும் வகையில் தீனா இந்த கொலையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெயிண்டர் மாரிக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையை 28-ம் தேதி திறக்க திட்டம்? - விஜய் பயண ஏற்பாடுகள் தீவிரம்   </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-reaches-90-feet-plan-to-open-on-the-28th-vijays-travel-arrangements-in-full-swing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-reaches-90-feet-plan-to-open-on-the-28th-vijays-travel-arrangements-in-full-swing#comments</comments><guid isPermaLink="false">d4384aae-fac9-4b9e-b429-22ec6f046cab</guid><pubDate>Wed, 26 Aug 2026 00:56:11 +0000</pubDate><atom:updated>2026-08-26T00:56:11.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,மேட்டூர் அணை,Mettur dam,நீர் மட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/ahor93xe/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/ahor93xe/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்</p><p>மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். நீர் இருப்பை பொறுத்து குறித்த நேரத்திலோ அல்லது கால தாமதமாகவோ அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் உட்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. &nbsp; அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் சுமார் 70 நாட்கள் ஆகிய நிலையிலும் அணையில் இருந்து குறுவை சாகுபடி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். &nbsp; </p> <h2>90 அடியை எட்டும் போது... &nbsp; </h2><p>நேற்று அணையின் நீர்மட்டம் 88.43 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 807 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. வழக்கமாக ஜூன் 12-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படாதபட்சத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும்போது தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி விடும் என தெரிகிறது. &nbsp; நேற்று காலை சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், விரைவில் நல்ல பதில் வரும் என்று கூறி இருந்தார். &nbsp; இதற்கிடையே நேற்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மேட்டூர் அணைக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. &nbsp; </p><h2>நாளை மறுநாள் &nbsp; </h2><p>இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் 28-ந் தேதி (நாளை மறுநாள்) மேட்டூர் அணையை திறக்க இருப்பதாக நேற்று மாலை தகவல் வெளியாகி உள்ளது. அவர், விமானம் மூலம் சேலம் கமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் மேட்டூர் செல்கிறார். அப்போது டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க 10-வது நாளாக தடை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-in-hogenakkal-cauvery-river-increases-ban-on-parisal-operation-for-10th-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-in-hogenakkal-cauvery-river-increases-ban-on-parisal-operation-for-10th-day#comments</comments><guid isPermaLink="false">fe5c1005-fafa-42c7-b708-0cf197de01e3</guid><pubDate>Wed, 26 Aug 2026 00:53:18 +0000</pubDate><atom:updated>2026-08-26T00:53:18.713Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,waterfall,பென்னாகரம்,காவிரி ஆறுCauvery river,Increase in water flow - நீர்வரத்து அதிகரிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/a7ezgu7b/210.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒகேனக்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/a7ezgu7b/210.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம்,</p><p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பரிசல் இயக்க 10-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">ஒகேனக்கல்</a> காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீடிப்பதால், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. </p><h2>பரிசல் இயக்க தடை</h2><p>கரையோரப் பகுதிகளில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 10-வது நாளாக தொடர்கிறது. </p><p>இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். எனினும் அருவிகளில் குளிக்கத் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
தமிழகத்தில் பெண்கள் கட்டணமின்றி எத்தனை பஸ்களில் பயணிக்கலாம் தெரியுமா?
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-many-buses-can-women-travel-free-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-many-buses-can-women-travel-free-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">0b7a8d5f-387d-4494-9662-50b8c04fb1a7</guid><pubDate>Wed, 26 Aug 2026 00:41:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T00:41:45.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>women,பெண்கள்,பஸ்கள்,buses</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/xa10xj6x/tnwha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/xa10xj6x/tnwha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழகத்தில் பெண்கள் கட்டணமின்றி எத்தனை பஸ்களில் பயணிக்கலாம் என்ற விவரம் வெளியாகி உள்ளது.</p><p>தமிழகத்தில் <a href="https://www.dailythanthi.com/">முதல்-அமைச்சர் விஜய்</a>, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தை விரிவாக்கம் செய்து காந்தி பிறந்தநாளான வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் 'வெற்றி பயணம்' திட்டத்தை செயல்படுத்த உள்ளார்.</p><p>அதன்படி, முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரண பஸ்கள் மட்டுமின்றி, மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பஸ்களிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பஸ்களில் மகளிர் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>72 லட்சம் பெண்கள்</h2><p>அதாவது, இதுவரை நடைமுறையில் இருந்த மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தில், தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 710 சாதாரண மாநகர பஸ்களில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்து வந்தனர். அதன்படி தினசரி 72 லட்சம் பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்து வந்தனர்.</p><p>இந்த நிலையில், தற்போது புதிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ள 'வெற்றி பயணம்' திட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பஸ்கள் என கூடுதலாக 2 ஆயிரத்து 302 பஸ்களில் வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க உள்ளனர். இது தவிர, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக 2 ஆயிரத்து 47 சாதாரண கட்டண புறநகர் பஸ்களிலும், 275 சாதாரண கட்டண மலைப்பகுதி பஸ்களிலும் வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.</p> <h2>1.15 கோடி</h2><p>அதன்படி, தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 334 பஸ்களில் வெற்றி பயண திட்டத்தின் மூலம் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். மொத்தமாக புதிய வெற்றி பயணம் திட்டத்தின்படி, ஏற்கனவே பயணித்த பஸ்களைவிட கூடுதலாக 4 ஆயிரத்து 624 பஸ்கள் பெண்களின் கட்டணமில்லா பயணத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இதன் மூலம் தினசரி ஒரு கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் தினசரி பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>தஞ்சையில் உலக தமிழ் மாநாடு:  அ.ம.மு.க. உறுப்பினர் காமராஜ் கோரிக்கை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-tamil-conference-in-thanjavur-ammk-member-kamaraj-request</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-tamil-conference-in-thanjavur-ammk-member-kamaraj-request#comments</comments><guid isPermaLink="false">0e6aeae1-6911-4021-9659-85310408e46b</guid><pubDate>Wed, 26 Aug 2026 00:24:59 +0000</pubDate><atom:updated>2026-08-26T00:24:59.659Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சை,AMMK,அ.ம.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/xs2yvkx4/aplda.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அ.ம.மு.க.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/xs2yvkx4/aplda.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தஞ்சையில் உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என்று அ.ம.மு.க. உறுப்பினர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.</p><h2>உலக தமிழ் மாநாடு</h2><p>அப்போது அ.ம.மு.க. உறுப்பினர் காமராஜ் (மன்னார்குடி) பேசும்போது, எனது தொகுதியில் 100 ஆண்டு கால பிரச்சினையான நீடாமங்கலம் பேரூராட்சிக்கு பஸ் நிலையம் கட்டப்படும் என்ற அறிவிப்பை (நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை) வெளியிட்ட முதல்-அமைச்சருக்கு மன்னார்குடி தொகுதி மக்கள் சார்பிலும், நீடாமங்கலம் பேரூராட்சி மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் ராஜ்மோகன், த.வெ.க. அரசு விரைவில் உலக தமிழ் மாநாட்டை நடத்தும் என்று அறிவித்தார். அவ்வாறு உலக தமிழ் மாநாட்டை நடத்தினால் அதனை தஞ்சையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.</p> ]]></content:encoded></item><item><title>
எனது கணவரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்:  எம்.எல்.ஏ. லீமா ரோஸ்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-drag-my-husband-unnecessarily-mla-leema-rose</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-drag-my-husband-unnecessarily-mla-leema-rose#comments</comments><guid isPermaLink="false">fa615736-13b9-4a72-a0ce-42b6cbd60b43</guid><pubDate>Tue, 25 Aug 2026 23:12:22 +0000</pubDate><atom:updated>2026-08-25T23:12:22.470Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எம்.எல்.ஏ.,MLA,லீமா ரோஸ்,Leema Rose Martin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/en9oh2sr/lcllr.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/en9oh2sr/lcllr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>எனது கணவரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் என லால்குடி எம்.எல்.ஏ. <a href="https://www.dailythanthi.com/news/india">லீமா ரோஸ் </a>கூறியுள்ளார்.</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.</p> <h2>சட்டரீதியாக தொழில்</h2><p>அப்போது, தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவையில் லாட்டரி குறித்து பேசினார்.  இதுபற்றி லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கூறும்போது, சட்டசபையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட சிலர் லாட்டரி குறித்து பேசி அவர்கள் செய்த தவறை  மறைக்கின்றனர்.  அதற்காக லாட்டரி என தொடர்ந்து பேசி வருகின்றனர்.</p><p>என் கணவர் வேறு மாநிலத்தில் தொழில் செய்து வருகிறார். எந்த அரசு வந்தாலும் நாங்கள் வரி செலுத்தி வியாபரம் செய்து வருகிறோம்.  அண்ணா ஆட்சியில் லாட்டரி தொழில் கொண்டு வரப்பட்டது. லாட்டரி விற்பனையை கொச்சைப்படுத்துவது போன்று பேசுகிறார்.  நாங்கள் சட்டரீதியாக உரிமம் பெற்று தொழில் செய்கிறோம்.</p><p>சட்டவிரோத வகையில் லாட்டரி தொழில் எதுவும் செய்யவில்லை.  எந்த அமைச்சர் கேள்வி கேட்டாரோ அவருக்கு பதில் அளிக்க வேண்டும். தேவையில்லாமல் எனது கணவரை இழுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>
தூத்துக்குடி - சில்லாநத்தம் பகுதியில் ரூ.774 கோடியில் மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா:  தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-sillanatham-ev-manufacturing-park-774-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-sillanatham-ev-manufacturing-park-774-crore#comments</comments><guid isPermaLink="false">3f3a62bb-7d46-4424-ab44-3bdc3fd806f3</guid><pubDate>Tue, 25 Aug 2026 19:40:10 +0000</pubDate><atom:updated>2026-08-25T19:40:10.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana,electric vehicle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/y49njklo/tnlka.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/y49njklo/tnlka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தூத்துக்குடி - சில்லாநத்தம் பகுதியில் ரூ.774 கோடியில் மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார்.</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.</p> <h2>மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா</h2><p>இதில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பேசும்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  இதன்படி, தூத்துக்குடி - சில்லாநத்தம் பகுதியில் சுமார் 1,294 ஏக்கர் நிலப்பரப்பில் "மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா" சிப்காட் நிறுவனத்தால் ரூ.774 கோடியில் அமைக்கப்படும். இதன்மூலம் ரூ.7,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதுடன், 10,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.</p><p>இப்பூங்காவில் அடிப்படை, சமூக மற்றும் சிறப்பு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார்.</p> <h2>நிவாரண தொகை உயர்வு</h2><p>இதேபோன்று உப்பள தொழிலாளர் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரண தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.  இத்திட்டத்தின் மூலம் சுமார் 23,000 தொழிலாளர் குடும்பங்கள் பயனடையும். இதற்கான ரூ.16.78 கோடி செலவினை அரசே ஏற்கும் என்றும் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.</p><p>தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இருவித செறிவூட்டப்பட்ட உப்பு, வெற்றி செறிவூட்டப்பட்ட உப்பு நியாய விலைக்கடைகளிலும் வெளிச்சந்தைகளிலும் விற்பனை செய்யப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விஜய் நீக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mariya-vilsonai-amanicharavaiyil-irundu-muthalvar-vijay-neekka-venum-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mariya-vilsonai-amanicharavaiyil-irundu-muthalvar-vijay-neekka-venum-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">0123b72b-cca8-4ee0-ac7f-a11778db69ef</guid><pubDate>Tue, 25 Aug 2026 16:13:52 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:13:52.458Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,நயினார் நாகேந்திரன்,லஞ்சம்,Bribery,Nainar Nagenthran,மரிய வில்சன்,Minister Maria Wilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/jf31cxff/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/jf31cxff/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்! இரு தரப்பினர் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேசுக்கு லஞ்சம் கொடுத்ததை பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் மீதும் முன்னாள் கல்வியமைச்சர் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.</p><p>லஞ்சம் கேட்டவர் மீது மரிய வில்சன் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி எவ்வித புகாரும் அளிக்காமல், இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கூறி விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன? குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கும் வகையில் மரிய வில்சனின் கல்வி நிறுவனத்தில் என்ன சட்டரீதியான குறைபாடுகள் உள்ளன? தனது தனிப்பட்ட நலனுக்காக லஞ்சம் கொடுத்து, தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் குணநலன் கொண்ட மரிய வில்சனை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால், அரசு இயந்திரம் எப்படி நேர்மையாக இயங்கும்?</p><p>எனவே, ஒப்புதல்கள் அல்லது அனுமதிகளைப் பெற ஒரு அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8, ஊழல் செயலுக்குத் துணை போனதற்காக பிரிவு 12, சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் வழங்கியதற்காக BNS-ன் பிரிவு 61 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சமரசமின்றி முறையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை, மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விஜய் நீக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம், மீலாது நபி விடுமுறை: நாளை மறுநாள் மீண்டும் கூடும் சட்டசபை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-and-milad-un-nabi-holidays-assembly-to-reconvene-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-and-milad-un-nabi-holidays-assembly-to-reconvene-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">6e7f5437-f15b-49ad-a17d-be01902a7a5d</guid><pubDate>Tue, 25 Aug 2026 16:10:14 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:10:14.361Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,விடுமுறை,Holiday,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Milad-un-Nabi,Onam,ஓணம்,மீலாது நபி,தமிழக சட்டசபை கூட்டம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/enlda3oi/tomorrow.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/enlda3oi/tomorrow.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நாளை (26.08.2026) மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி <a href="https://www.dailythanthi.com/topic/tn-assembly">தமிழக சட்டசபை</a>க்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>பட்ஜெட்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/tn-assembly">சட்டசபையில்</a> த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.</p><h2>புதிய அறிவிப்புகள்</h2><p>பின்னர் சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் சட்டசபை கடந்த 17-ந்தேதி மீண்டும் கூடியது. அது முதற்கொண்டு, பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. பின்னர், இந்த துறைகளின் சார்பில் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.</p><p>இந்நிலையில் சட்டசபையில் இயற்கை வளங்கள்துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது.</p><h2>மானியக் கோரிக்கைகள்</h2><p>எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்கினார்கள். மேலும் அவர்கள் துறையின் சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. </p><p>காரசார விவாதங்கள், பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தொழில்துறை, சுற்றுசூழல் துறை கனிவனத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. </p><h2>நாளை மறுநாள்</h2><p>இதனைத்தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/tn-assembly">தமிழக சட்டசபையின்</a> இன்றைய நிகழச்சிகள் சரியாக இரவு 7.13 மணிக்கு நிறைவுக்கு வந்தது. காலை 9.30 மணிக்கு கூடிய சபை இடைவிடாமல் சுமார் 10 மணி நேரம் நடந்தது. </p><p>இந்த சூழலில் நாளை மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சட்டசபை நாளை மறுநாள் (27-ந் தேதி) கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அதிகாரிகள் தாமதத்துக்கு மாணவி பொறுப்பல்ல... மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்க ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-delay-not-students-fault-madras-hc-medical-counselling</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-delay-not-students-fault-madras-hc-medical-counselling#comments</comments><guid isPermaLink="false">aa7cddef-bf72-4123-9dc8-2a61372ea1c3</guid><pubDate>Tue, 25 Aug 2026 16:04:40 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:04:40.676Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,Counseling,மருத்துவ கலந்தாய்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/s8yymtl5/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/s8yymtl5/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாதிச்சான்றிதழ் வழங்க அதிகாரி ஏற்படுத்திய தாமதத்துக்காக, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவியை பொறுப்பாக்க முடியாது. மாணவி மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>மருத்துவ படிப்பு</h2><p>மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்னை அம்பத்தூரை சேர்ந்த வி.கீர்த்தி விண்ணப்பித்தபோது, அவரிடம் இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, கிறிஸ்துவ சிறுபான்மை சான்று ஆகியவை இல்லாததால், அவை கிடைத்த பின்னர் சமர்ப்பிப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தார்.</p><p>கீர்த்திக்கு கடந்த 4-ந்தேதி கிறிஸ்துவ சிறுபான்மை சான்று, 11-ந்தேதி இருப்பிடச்சான்று, 15-ந்தேதி சாதிச்சான்று ஆகியவை கிடைத்த பின்னர், அவற்றை பதிவேற்றம் செய்தபோது, அதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டதாக கூறி, அவை ஏற்க மறுக்கப்பட்டுள்ளது.</p><h2>அதிகாரி வழங்க தாமதம்</h2><p>இதனை எதிர்த்து கீர்த்தி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு 12-ந்தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், சாதிச்சான்று 15-ந்தேதிதான் வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி, அந்த தாமதத்துக்கு மாணவியை பொறுப்பாக்க முடியாது என தெரிவித்துள்ளார்.</p><p>சான்றிதழை வழங்கும் அதிகாரியால் ஏற்பட்ட தாமதத்துக்காக மனுதாரரை குறைகூற முடியாது என்றும், நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சான்றிதழை சமர்ப்பிக்காததை மட்டுமே காரணமாக கொண்டு விண்ணப்பத்தை நிராகரித்ததை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>அனுமதிக்க உத்தரவு</h2><p>அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, தகுதி, தரவரிசை மற்றும் இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு உட்பட்டு, கீர்த்தியை கலந்தாய்வு நடைமுறையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துவிட்டால், அடுத்தடுத்த சுற்றுகளில் அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சை பேச்சு விவகாரம்... உதயநிதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversial-remarks-during-farmers-protest-national-commission-for-women-recommends-action-against-udhayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversial-remarks-during-farmers-protest-national-commission-for-women-recommends-action-against-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">4df943e6-fa6d-4c4e-be00-3176680d7be2</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:49:56 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:49:56.868Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,உதயநிதி ஸ்டாலின்,தஞ்சாவூர்,விவசாயிகள் போராட்டம்,தேசிய மகளிர் ஆணையம்,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/u6zt1x6j/ud.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/u6zt1x6j/ud.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.</p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>தஞ்சாவூரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக உதயநிதி மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தஞ்சாவூர் போலீசார், அவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.</p><h2>தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்</h2><p>இதனைத் தொடர்ந்து, தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் செல்வகுமார், உதயநிதியின் பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.</p><p>அந்த புகார் மனுவில், தெரிவித்த கருத்துக்கு உதயநிதியிடம் விளக்கம் கேட்கவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், உதயநிதி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.</p><h2>மாநில மகளிர் ஆணையத்துக்கு பரிந்துரை</h2><p>இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2: வழித்தடம்-5-ல் கடைசி தூண் வார்ப்புப் பணி நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-rail-project-phase-2-casting-of-the-final-pillar-on-corridor-5-completed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-rail-project-phase-2-casting-of-the-final-pillar-on-corridor-5-completed#comments</comments><guid isPermaLink="false">fd8d37e0-6fdd-4f82-a750-0994fe27db4c</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:26:27 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:26:27.193Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,சென்னை மெட்ரோ,chennai metro,சென்னை மெட்ரோ ரெயில்,Metro train</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/si3zxrui/nirai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/si3zxrui/nirai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai-metro">சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்</a> கட்டம்-2, வழித்தடம்-5-ல் ECV-03 திட்டத்தின் கீழ் கடைசி தூண் வார்ப்புப் பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சென்னை மெட்ரோ</h2><p>இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இந்திய உள்கட்டமைப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகரான AEON Consortium மற்றும் ஒப்பந்த நிறுவனமான HCC-KEC Consortium ஆகியவற்றுடன் இணைந்து, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2, வழித்தடம்-5-ல் ECV-03 திட்டத்தின் கீழ் மேடவாக்கம்-1 மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 25 மீட்டர் உயரமுள்ள கடைசி தூணின் (தூண் P814) வார்ப்புப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.</p><h2>சவாலானப் பகுதிகள்</h2><p>உள்ளகரம் மெட்ரோ நிலையத்திலிருந்து எல்காட் மெட்ரோ நிலையம் வரை உள்ள இந்த 11.3 கி.மீ. நீளமுள்ள இப்பகுதியில் மொத்தம் 513 பெரிய அடித்தளத் தூண்கள் (piers) அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 2351 தூண்கள் (Piles) அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மிகவும் சவாலானப் பகுதிகளில் ஒன்று, மேடவாக்கம் கூட்டுச் சாலை அருகிலுள்ள தூண் P879 முதல் செம்மொழிச் சாலையில் உள்ள தூண் P868 வரையிலான பகுதியாகும். இப்பகுதியில் அமைக்கப்பட்ட தூண்கள் இந்தப் பிரிவிலேயே மிக உயரமானவை ஆகும்; இவற்றின் அதிகபட்ச உயரம் சுமார் 29 மீட்டர். </p><h2>இரும்பு இணைப்புப் பாலம்</h2><p>இந்தப் பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ வழித்தடமானது, ஏற்கனவே உள்ள மேடவாக்கம் மேம்பாலத்திற்கு மேலே சுமார் 29 மீட்டர் உயரத்தில் கடந்து செல்கிறது. மேலும், 125 மீட்டர் ஆரம் கொண்ட கூர்மையான வளைவுப் பாதையில் 57 மீட்டர் நீளமுள்ள இரும்பு இணைப்புப் பாலம் (Steel Girder Span) அமைக்கப்பட்டுள்ளது. பொறியியல் ரீதியான சவாலை மேலும் அதிகரிக்கும் விதமாக, மேடவாக்கம்-1 மற்றும் மேடவாக்கம்-2 ஆகிய மெட்ரோ நிலையங்களும் இந்தப் பகுதியில் சாலை மட்டத்திலிருந்து சுமார் 29 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ycz8y0iy/metrrr.jpg" /></figure><h2>முக்கியமான மைல்கல்</h2><p>அதிக மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதிகளில் இத்தகைய சிக்கலான கட்டுமானங்களை மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. குறிப்பாக, போக்குவரத்தை மாற்றி அமைப்பது, பயன்பாட்டில் உள்ள மேம்பாலத்திற்கு மிக அருகிலும் அதற்கு மேலேயும் பணிகளைப் பாதுகாப்பாக நிறைவேற்றுவது ஆகியவை பிரதான சவால்களாக இருந்தன. துல்லியமான திட்டமிடல், சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் சீரான செயல்பாடுகளின் மூலம் இந்தச் சவால்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டன. தற்போது 513-வது மற்றும் கடைசித் தூணான P814-ன் கான்கிரீட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்திருப்பது, இத்திட்டத்தின் முக்கியமான ஒரு மைல்கல்லாகும்.</p><h2>மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம்</h2><p>இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், இணைப் பொது மேலாளர்  ஆர். சீனிவாசன், AEON Consortium நிறுவனத்தின் குழுத் தலைவர் சி. முருகமூர்த்தி, குடியிருப்புப் பொறியாளர்  ஜி. சுரேஷ் கண்ணன், HCC-KEC கூட்டமைப்பின் திட்ட மேலாளர்  லாலிச்சன் ஆண்டனி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், AEON மற்றும் HCC-KEC ஆகிய நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.</p><p>தூண் அமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தை உரிய நேரத்தில் முடிக்கும் வகையில், U-girder அமைத்தல் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 29-ந்தேதி கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-fingerprint-registration-camp-at-all-ration-shops-in-tamil-nadu-on-29th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-fingerprint-registration-camp-at-all-ration-shops-in-tamil-nadu-on-29th#comments</comments><guid isPermaLink="false">4e0cdf53-12ef-46fd-bbd9-8f7c2dffbfbe</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:12:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:12:39.146Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Special camp,சிறப்பு முகாம்,ration shops,கைவிரல் ரேகை பதிவு,ரேசன் கடைகள்,eKYC</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ahogqklp/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ahogqklp/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வருகிற 29-ந்தேதி கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரி பார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இந்த eKYC பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும்பொருட்டு 29.08.2026 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>எனவே, இன்று வரை, ரேசன் கடைகள் மூலம் கை ரேகைப் பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் வருகின்ற 29.08.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கை ரேகைப் பதிவினை (eKYC பதிவினை) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆனைமலையில் 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-school-students-missing-in-anaimalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-school-students-missing-in-anaimalai#comments</comments><guid isPermaLink="false">1fa653b0-37c3-4bfe-9389-502a58c18fb5</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:12:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:12:00.659Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>School students,பள்ளி மாணவர்கள்,ஆனைமலை,missing,Anaimalai,மாயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/lq1w7eve/3-students.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 3 பள்ளி மாணவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆனைமலையில் 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/lq1w7eve/3-students.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> கோயம்புத்தூர்,</p><p> கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள கூமாட்டி மற்றும் நாகரூத் பகுதிகளை சேர்ந்த 3 பள்ளி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர்கள்</a> திடீரென மாயமாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>குளிக்கச் சென்ற மாணவர்கள்</h2><p> பள்ளி நேரத்திற்கு பிறகு, பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதிக்கு குளிக்க சென்ற மாணவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என பள்ளி ஆசிரியர்கள் தகவலை தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் 3 பேர் ஒரே நேரத்தில் மாயமானது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <h2>யானைகள் நடமாட்டத்தால் அச்சம்</h2><p>மாணவர்கள் காணாமல் போன ஆனைமலை வனப்பகுதியில் தற்போது காட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">யானைகள்</a> கூட்டமாக நடமாடி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி வனத்துறையினரும் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-wild-elephants-enter-village-panic-among-residents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-wild-elephants-enter-village-panic-among-residents#comments</comments><guid isPermaLink="false">07b50440-82c2-4fae-b037-102785dd9950</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:39:05 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:39:05.825Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,காட்டு யானைகள்,Wild elephants,கடையநல்லூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/aroo4e59/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/aroo4e59/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>கடையநல்லூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.</p><h2>வனவிலங்குகள்</h2><p>தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரை, அச்சன்புதூர், நெடுவயல் மற்றும் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளைநிலங்கள், தென்னைகளை சேதப்படுத்தி செல்வது வழக்கமாக உள்ளது.</p><h2>கிராமத்தில் புகுந்த யானைகள்</h2><p>இந்த நிலையில் இன்று காலையில் கடையநல்லூர் அருகே உள்ள நெடுவயல் கிராமத்திற்குள் வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள் புகுந்தன. அவை அங்குள்ள குளத்தில் கும்மாளமிட்டு கொண்டு இருந்தது. அப்போது. அந்த வழியாக சென்ற விவசாயிகள், பொதுமக்கள் பார்த்து திடுக்கிட்டு, அலறியடித்து ஓடினார்கள். பின்னர் அந்த காட்டு யானைகள் அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தென்னந்தோப்பில் புகுந்தன.</p><h2>பொதுமக்கள் செல்ல தடை</h2><p>தகவல் அறிந்த கடையநல்லூர் வனத்துறையினர், அச்சன்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் யானைகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் அச்சன்புதூர் - தென்காசி சாலையில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.</p><p>தொடர்ந்து வனத்துறையினர், காவல்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு, யானைகள் வேறு பகுதிகளுக்குள் செல்லாமல் தடுக்க தோட்டத்தைச் சுற்றி தீவிர பாதுகாப்பு பணியில் மாலை வரை ஈடுபட்டனர்.</p><h2>பள்ளிக்கு விடுமுறை</h2><p>இதன் காரணமாக அந்த பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மதியத்திற்கு பிறகு விடுமுறை விடப்பட்டது. உயர் மின் அழுத்த கம்பிகளில் யானையின் துதிக்கை மற்றும் முதுகு பகுதி உரசி விபரீதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரவு நேரத்தில் யானைகளை பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அக்காள்-தங்கைக்கு பாலியல் தொல்லை:  டிரைவர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-sisters-driver-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-sisters-driver-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">f96b3eed-a669-4ef4-8e97-13a62c9e5ce8</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:37:29 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:37:29.733Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Sexual harassment,பாலியல் தொல்லை,டிரைவர்,போக்சோ,sister,தங்கை,POCSO,driver arrested,அக்காள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/m9xrdf3w/pocso.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ லாரி டிரைவர் மாசாணி]]></media:title><media:description type="html"><![CDATA[ அக்காள்-தங்கைக்கு பாலியல் தொல்லை:  டிரைவர் போக்சோவில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/m9xrdf3w/pocso.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>மடத்துக்குளம் அருகே அக்காள் மற்றும் தங்கைக்கு தனித்தனியாக பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவரின் மிரட்டலால், 10-ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி அரளி விதை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> <h2>கூலித்தொழிலாளி தம்பதி</h2><p>திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிக்கு 17 வயது மற்றும் 14 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் 17 வயது சிறுமி ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், 14 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சிறுமிக்களின் பெற்றோர் இருவரும் தினசரி காலையில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில்தான் வீடு திரும்புவது வழக்கம்.</p><h2>பாலியல் தொல்லை</h2><p>பெற்றோரின் இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நீலாம்பூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மாசாணி (வயது 52) என்பவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அக்காள், தங்கை ஆகிய இருவருக்கும் தனித்தனியாக<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88"> பாலியல் தொல்லை</a> கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும், இதுகுறித்து வெளியில் கூறக்கூடாது என 14 வயது சிறுமியை அவர் தொடர்ந்து மிரட்டியும் வந்துள்ளார். </p><h2>அரளி விதை</h2><p>லாரி டிரைவரின் தொடர் பாலியல் தொல்லையாலும், மிரட்டலாலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான 10-ம் வகுப்பு மாணவி மிகுந்த விரக்தி அடைந்தார். இதனால் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் இருந்த அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அவரை அக்கம் பக்கத்தினர், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.</p><h2>சிறுமி வாக்குமூலம்</h2><p>அப்போது, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து டாக்டர்கள் மற்றும் தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறினார். மாசாணி தனக்கும், தனது அக்காவுக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதால் தான் விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக சிறுமி வாக்குமூலம் அளித்தார்.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், மருத்துவமனை நிர்வாகமும் இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையிலும், லாரி டிரைவர் மாசாணி, அக்காள்-தங்கை இருவருக்கும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.</p><h2>போக்சோ சட்டத்தில் கைது</h2><p>இதையடுத்து, உடுமலை அனைத்து மகளிர் போலீசார் லாரி டிரைவர் மாசாணி மீது <a href="https://www.dailythanthi.com/topic/pocso-case">போக்சோ</a> உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், தலைமறைவாக இருந்த மாசாணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p>இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாரதிராஜாவுக்கு மணி மண்டபம்: அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/memorial-hall-for-bharathiraja-seeman-thanks-the-tamil-nadu-chief-minister-for-the-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/memorial-hall-for-bharathiraja-seeman-thanks-the-tamil-nadu-chief-minister-for-the-announcement#comments</comments><guid isPermaLink="false">8672b4fe-447b-4087-9c23-286c236a5cb7</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:16:57 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:16:57.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,நாதக,சீமான்,NTK,Seeman,தமிழகம்,தமிழக அரசு,TN govt,பாரதிராஜா,Bharathiraja,மணி மண்டபம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/2g7vj9cv/mukt.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/2g7vj9cv/mukt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாரதிராஜாவுக்கு தேனியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். </p><h2>அரசு மரியாதை</h2><p>இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் உடல் தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.</p><h2>மணிமண்டபம்</h2><p>மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளை போற்றும் வகையில் ரூ.2.50 கோடியில் தேனியில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் நேற்று அறிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். </p><h2>தமிழ்நாடு அரசு</h2><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, வெள்ளை திரைகளில் ஒப்பற்ற ஓவியங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற படைப்பாளி, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் புகழைப்போற்றும் வகையில் அவர் பிறந்த தேனி மண்ணில் மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.</p><h2>நெஞ்சம் நிறைந்த நன்றி</h2><p>அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பினை வெளியிட்ட<a href="https://www.dailythanthi.com/topic/vijay"> தமிழக முதல்-அமைச்சர்</a> அவர்களுக்கும், பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-12-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-12-districts#comments</comments><guid isPermaLink="false">e495f338-b512-4f2e-b949-dde9bf69a7ae</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:14:48 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:14:48.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ppo411sd/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ppo411sd/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொங்கல் வேட்டி-சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களை கண்ணீரில் ஆழ்த்துவதா? - நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nayinar-nagendran-slams-tamil-nadu-govt-over-pongal-vetti-saree-scheme</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nayinar-nagendran-slams-tamil-nadu-govt-over-pongal-vetti-saree-scheme#comments</comments><guid isPermaLink="false">cd142fc6-33d9-4fa2-8d24-8c74188219e7</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:46:13 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:46:13.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,கண்டனம்,Pongal,condemns,பொங்கல்,வேட்டி,Weavers,நெசவாளர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/on1lrie3/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/on1lrie3/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொங்கல் வேட்டி-சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களைக் கண்ணீரில் ஆழ்த்துவதா? - தவெக அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> கண்டனம். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-</p><h2>3 லட்சம் நெசவாளர்</h2><p>பொங்கல் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு ஜூலை மாதமே அனுமதி வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பொங்கலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், 1.72 கோடி வேட்டி-சேலைகளை உற்பத்தி செய்ய இன்னும் அனுமதி தராமல் காலம் கடத்தி வருகிறது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசு</a>. தற்போதைய அரசின் மெத்தனத்தால் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் வேலையின்றி தவிக்கின்றன.</p><h2>கூட்டுறவுச்சங்கங்கள்</h2><p>புதிய ரகங்கள், ஜரிகை வேட்டிகள் என்ற பெயரில் தேவையற்ற விளம்பரங்களை முன்னிறுத்தி, ஏற்கனவே நெசவாளர்கள் உற்பத்தி செய்துள்ள துணிகளை கொள்முதல் செய்ய மறுப்பது அநீதியாகும். முறையான திட்டமிடல் இல்லாத அரசின் கொள்கைகளால் கூட்டுறவுச்சங்கங்கள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நடைமுறைக்கு சாத்தியமில்லாத அறிவிப்புகளை விடுத்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடுவதை தவெக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><h2>நடவடிக்கை</h2><p>எனவே, முதல்-அமைச்சர் விஜய் அரசு உடனடியாக நூல் கொள்முதலை முடித்து, உற்பத்தி ஆணையை வழங்கி, 3 லட்சம் குடும்பங்களின் பொங்கல் பண்டிகையை சிதைக்காமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“கட்சிக்காரங்க மேலதான் தப்பு” - தஞ்சாவூரில் விசிக போராட்டத்தின்போது நடந்த சம்பவம் குறித்து விவரித்த இளைஞர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-fault-lies-with-the-party-members-a-young-man-describes-the-incident-that-occurred-during-the-vck-road-blockade-protest-in-thanjavur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-fault-lies-with-the-party-members-a-young-man-describes-the-incident-that-occurred-during-the-vck-road-blockade-protest-in-thanjavur#comments</comments><guid isPermaLink="false">ae3afcc4-1c88-4118-bebd-549590833763</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:44:16 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:44:16.803Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,விசிக,VCK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/6coafapg/aka.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/6coafapg/aka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தஞ்சாவூரில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95">விசிக </a>மறியல் போராட்டத்தின்போது நடந்த சம்பவம் குறித்து இளைஞர் ஆகாஷ் விவரித்துள்ளார். </p><h2>சாலை மறியல்</h2><p>தஞ்சாவூரில் விசிகவினர் கடந்த 17-ம் தேதி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26), தான் வேலைக்குச் செல்ல வழிவிட வேண்டும் என்று கூறி விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><h2>காவலருடன் வாக்குவாதம்</h2><p>அப்போது அங்கு வந்த சிறப்பு எஸ்ஐ அப்துல் ரஹீமுக்கும், ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியநிலையில், ஆகாஷை எஸ்ஐ அப்துல் ரஹீம் கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து ஆகாஷும் அவரை தாக்கினார். .</p><p>இதையடுத்து, ஆகாஷையும், அவருக்கு ஆதரவாக பேசிய திருக்கானூர்பட்டியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரையும் போலீசார் காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பின்னர், அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதையடுத்து இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.</p><h2>கட்சிக்காரங்க மேலதான் தப்பு</h2><p>இந்நிலையில், தஞ்சாவூரில் விசிக மறியல் போராட்டத்தின்போது நடந்த சம்பவம் குறித்து ஆகாஷ் கூறியதாவது:</p><p>“அந்தக் கட்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கட்சிக்காரங்க மேலதான் தப்பு. நான் முதலில் ரிக்வெஸ்ட் பண்ணி பேசினேன். ‘உங்க பிரச்சினை எனக்கு தெரியாது. என் பிரச்சினை உங்களுக்கு தெரியாது. நான் வேலை பார்த்தால்தான் எனக்கு சம்பளம்’ என்று சொன்னேன். ஆனால், கட்சிக்காரர்கள் என் மீது வழக்கு போடுவோம் என்று கூறினார்கள்.</p><p>போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடம் என்று எவ்வளவோ சொன்னேன். என்னை அடிக்க வந்தார்கள். அப்போது காவலர்கள் வந்தனர். ‘என் மீது கை வைத்து பாருங்கள்’ என்றேன். அவர்கள் என்னை அடித்தார்கள்.</p><p>நான் யூனிபார்மில் இருந்த காவலரை அடித்தது தவறுதான். அதுவும் அவர் வயதில் பெரியவர். இதில் காவல்துறை மீது எந்த தவறும் இல்லை. அந்த நேரத்தில் அவர்களுக்கும் அது சிரமமாகத்தான் இருந்திருக்கும்.</p><p>‘எங்களை அடித்ததால்தான் இந்த பிரச்சினை இதோடு நின்றது. இதே கட்சிக்காரர்களை அடித்திருந்தால், பி.சி.ஆர். வழக்கு போட்டிருப்பார்கள்’ என்று காவலர்கள் சொன்னார்கள்.</p><p>நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்; காவல்துறையினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை எதுவும் சொல்லாதீர்கள்” என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி வழக்கு: ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-property-fraud-case-bail-and-anticipatory-bail-petitions-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-property-fraud-case-bail-and-anticipatory-bail-petitions-dismissed#comments</comments><guid isPermaLink="false">7190f9a4-456e-4e5f-bf8f-5652ae6dd522</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:23:50 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:23:50.228Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Madurai,மதுரை,ஜாமீன்,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,ஐகோர்ட்டு மதுரை கிளை,HighCourt Madurai Branch,உயர் நீதிமன்ற மதுரை கிளை,property case,சொத்து மோசடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/o240ymtk/meenat.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/o240ymtk/meenat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/meenakshi-amman-temple">மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</a> சொத்து மோசடி வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. </p><h2>ரூ.60 கோடி சொத்து மோசடி</h2><p>மதுரை தல்லாகுளம் அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகாவிலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் சுமார் 2 ஏக்கர் நிலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது. இதன் மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய். ஆனால் அந்த சொத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து பத்திரப் பதிவு செய்ததாக மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>அதன்பேரில் ராமாயி ஆயியார், செந்தமிழ்செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்து ராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், முன்னாள் தாசில்தார் அன்பழகன், இளையராஜா, அனிஷ், அனந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தானகருப்பன் ஆகிய 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>தீவிர விசாரணை</h2><p>மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காளிக்குமார், சப்-கலெக்டர் அன்பழகன், வருவாய் அதிகாரி அரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து மதுரை நகர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.</p><p>அதில் ராமாயி ஆயியார் தரப்பினர் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் அனந்தராமன் மூலம் உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திருவள்ளூர் மாவட்டம் அனிஷ் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணம் பதிவு செய்துள்ளனர்.</p><h2>கைது</h2><p>அது தொடர்பாக போலீசார் விசாரித்த போது அனந்தராமன் நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் என்றும், அவர் தற்போது ஓய்வு பெற்றதும் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அனந்தராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருந்தது. </p><h2>தள்ளுபடி</h2><p>இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளை சொத்து மோசடி வழக்கில் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை  ஐகோர்ட்டு மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. </p><p>அதன்படி அன்பழகன், ராஜ்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 13 பேரின் முன்ஜாமீன் மனுக்களையும் ஐகோர்ட்டு மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-acquire-farmlands-government-must-announce-policy-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-acquire-farmlands-government-must-announce-policy-anbumani#comments</comments><guid isPermaLink="false">4f137a23-d1bc-4c9a-b10c-62997b3d0d60</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:15:31 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:15:31.066Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,நிலம் கையகப்படுத்துதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/4adngvmf/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/4adngvmf/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுரங்கம் உள்ளிட்ட எந்தத் திட்டத்திற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணவும், மூன்றாம் நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு 60 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதை தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில், மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மத்திய அரசிடம் பேசி இச்சிக்கலுக்கு  தீர்வு காண வேண்டியது தானே? என்று தொழில்துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார். கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல்  தொழில்துறை அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கனிம வளங்கள் மற்றும் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தொழில்துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் முழுக்க முழுக்க உழவர்களின் நலனுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. விவாதத்தின்போது பேசிய பாமக சட்டப்பேரவைக் குழு தலைவர் சவுமியா அன்புமணி, கடலூர் மாவட்ட மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்திலிருந்து நிலக்கரி வெட்டியெடுத்து ஆண்டுக்கு ரூ.1,300 கோடிக்கும் கூடுதலாக லாபம் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், அம்மாவட்ட மக்களுக்கு  எதிராக செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். ஏற்கனவே 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திய  என்.எல்.சி நிறுவனம், புதிய திட்டங்களுக்காக மேலும் 60,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தத் துடிப்பதாகவும், அதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தி உழவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதிமுக உறுப்பினர் அருண்மொழித் தேவனும் இதே கோரிக்கையை அரசுக்கு முன்வைத்தார்.</p><p>அதற்கு பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர், உழவர்களின் நலன்களைக் காப்பதற்கு உத்தரவாதம் அளிக்காமல், "என்.எல்.சி நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது; மத்திய அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அங்கு பேசி தீர்வு கண்டால் நன்றாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார். என்.எல்.சிக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்ட வரலாறு தெரியாததால்தான் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.</p><p>1950-ம் ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம், 1980-களில் விளைநிலங்களை அளவுக்கு அதிகமாக கையகப்படுத்தியது மட்டுமின்றி, அவற்றுக்கு உரிய விலை வழங்காமலும், நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்காமலும் துரோகம் செய்து வந்தது. அதற்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்திதான் கடலூர் மாவட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்திருக்கிறது. என்.எல்.சிக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டங்கள் தொடங்கிய காலத்தில் இன்றைய தொழில்துறை அமைச்சர் பிறந்திருக்கக் கூட மாட்டார். அதனால்தான், போராட்ட வரலாறு தெரியாமல் அறியாமையில் இவ்வாறு பேசியிருக்கிறார்.</p><p>என்.எல்.சி மத்திய அரசு நிறுவனமா? மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோமா? என்பது  குறித்த எந்தக் கவலையும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இருந்ததில்லை. கடலூர் மாவட்ட மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தால் சுரண்டலும், அநீதியும் இழைக்கப்படும் போதெல்லாம் அதற்கு எதிராக பாமக போராடி வெற்றி பெற்றுள்ளது. என்.எல்.சி விவகாரத்தில் கடலூர் மாவட்ட மக்களுக்கு கொஞ்சமாவது நீதி கிடைத்திருக்கிறது என்றால், அதற்கான முழு முதல் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சமரசமற்ற போராட்டங்கள்தான்.</p><p>கடந்த திமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் என்.எல்.சி நிறுவனத்தின் தரகர்களாக செயல்பட்டு, காவல்துறை உதவியுடன் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு, நிலங்களைப் பறித்து என்.எல்.சிக்கு தாரை வார்த்தனர். வயலில் ராட்சத எந்திரங்களை இறக்கி கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்களை அழித்தனர். அத்தகைய அநீதிகளுக்கு எதிராக தீவிரமாக போராடியது பாட்டாளி  மக்கள் கட்சிதான். அதன் பயனாகத் தான் சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம், வடசேரி நிலக்கரித் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு ஏலப்பட்டியலில் இருந்து நீக்கியது. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருவதால் வீராணம் நிலக்கரித் திட்டம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி தரப்போவதில்லை என்று முந்தைய திமுக அரசு அறிவித்தது.</p><p>நெய்வேலி மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருவதால், அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான் பாமக மற்றும் கடலூர் மாவட்ட மக்களின் நிலைப்பாடு ஆகும். இதை செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கே உள்ளது. என்.எல்.சி நிறுவனத்தின் 5% பங்குகள் தமிழக அரசிடம் தான் உள்ளன. தமிழக அரசின் எரிசக்தித் துறை செயலாளர்தான் என்.எல்.சியின் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இவை அனைத்துக்கும் மேலாக என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தி தரும் சமூக அநீதி வேலையை செய்வதே தமிழக அரசுதான்.</p><p>அதனால், தமிழக அரசு மறுத்தாலோ, விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்தாலோ, அதற்கு எதிராக என்.எல்.சி நிறுவனத்தால் எதுவும் செய்ய முடியாது. இதை செய்வோம் என்று சொல்வதற்கு பதிலாக மத்திய அரசிடம் கூட்டணி கட்சிகள் பேச வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கூறுகிறார் என்றால், இந்த தவெக அரசுக்கும், முந்தைய திமுக அரசுக்கும் என்ன தான் வித்தியாசம்?</p><p>அதே விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கணேஷ் குமார், பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டங்களுக்காக பயன்படுத்த முடியாது என்பதால் அந்த நிலங்களை உழவர்களிடம் அரசு ஒப்படைக்குமா? என்று கேட்டபோது, 2013-ம் ஆண்டு நிலம் எடுப்பு சட்டத்தின்படி  விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று கூறினார். அதுமட்டுமின்றி, பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தொழில் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை இன்னொரு திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று 2013-ம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும் கூட, ஒரு திட்டம் கைவிடப்பட்டால், அந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அவற்றின் பழைய உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் என்று 2016-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன்படி தான் மேற்குவங்க மாநிலம் சிங்கூர், நந்திகிராமம் ஆகிய இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. அதற்கு மாறாக பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சிப்காட் உள்ளிட்ட தொழில்திட்டங்களைச் செயல்படுத்த தவெக அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி நானே தலைமையேற்று போராடுவேன்.</p><p>விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் விஜய் கூறுகிறார். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா பகுதியில் நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். இவை வரவேற்கப்பட வேண்டிய நிலைப்பாடுகள். ஆனால், முதல்-அமைச்சரின் நிலைப்பாட்டுக்கு எதிராக பரந்தூர் விமான நிலையத்  திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தொழிற்சாலைகளை அமைப்போம், என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. விமான நிலையம் கட்டப்பட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் பாதிக்கப்பட மாட்டார்களா?</p><p>தொழில் வளர்ச்சியை விட விவசாயிகளின் நலன் தான் முக்கியம் என்று கூறும் தவெக அரசு, அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், என்.எல்.சி பழுப்பு நிலக்கரி சுரங்கமாக இருந்தாலும், டங்ஸ்டன் சுரங்கமாக இருந்தாலும், சிப்காட் தொழில்பூங்காவாக இருந்தாலும் அவற்றுக்கு ஒரே ஒரு சென்ட் வேளாண் நிலத்தைக் கூட கையகப்படுத்தித் தர மாட்டோம் என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். அதைச் செய்ய தவெக அரசு தயாரா? என்பதை ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாலை விபத்தில் உயிரிழந்த சக காவலர் குடும்பத்திற்கு ரூ.22 லட்சம் நிதி வழங்கிய காவலர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6971-tamil-nadu-police-officers-support-late-colleagues-family</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6971-tamil-nadu-police-officers-support-late-colleagues-family#comments</comments><guid isPermaLink="false">24a3e6b7-603a-49fc-aa6a-fac105caed02</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:03:38 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:03:38.608Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,family,குடும்பம்,காவலர்,policemen,நிதி,Donate</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/f1mw6hz9/tamilselvan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தமிழ்ச்செல்வன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலை விபத்தில் உயிரிழந்த சக காவலர் குடும்பத்திற்கு ரூ.22 லட்சம் நிதி வழங்கிய காவலர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/f1mw6hz9/tamilselvan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>சாலை விபத்தில் உயிரிழந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D"> காவலரின்</a> குடும்பத்திற்கு, அவருடன் ஒரே பேட்ச்சில் பணியாற்றிய 6,971 காவலர்கள் இணைந்து ரூ.22 லட்சம் நிதி திரட்டி வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.</p> <h2>காவலர் விபத்தில் மரணம்</h2><p>மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 28). இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"> சாலை விபத்து</a> ஒன்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>உயிரிழந்த தமிழ்ச்செல்வனுக்கு மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த தமிழ்ச்செல்வனின் மறைவால், அவரது குடும்பத்தினர் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்தனர்.</p><h2>ரூ.22 லட்சம் நிதி உதவி</h2><p>இந்த நிலையில், தமிழ்ச்செல்வனுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் ஒரே பேட்ச்சில் பணியில் சேர்ந்த சக காவலர்கள், அவரது குடும்ப நிலையை அறிந்து உதவ முன்வந்தனர். இதற்காக அவர்கள் உருவாக்கிய ‘காவலர்கள் காக்கும் உறவுகள்’ என்ற வாட்ஸ்-அப் குழு மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2017 பேட்ச் காவலர்களிடம்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF"> நிதி</a> திரட்டப்பட்டது. அதன்படி மொத்தம் 6,971 காவலர்கள் தங்களால் இயன்ற பணத்தை வழங்கி, குறுகிய காலத்தில் ரூ.22 லட்சத்து 80 ஆயிரம் நிதி திரட்டினர்.</p><h2>வங்கியில் டெபாசிட்</h2><p>இந்த நிதி வழங்கும் நிகழ்ச்சி மதுரை சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திரட்டப்பட்ட மொத்த நிதியும் தமிழ்ச்செல்வனின் குடும்ப எதிர்காலத்திற்காக வங்கியில் பிக்சட் டெபாசிட்  செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.</p> <p><strong>அதன் விவரம் வருமாறு:-</strong></p><p>தமிழ்ச்செல்வனின் 2 வயது மகனின் பெயரில் ரூ.14 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. அவரது மனைவி பெயரில் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. அவரது தாய் மற்றும் தந்தை பெயரில் தலா ரூ.2 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. உடனடி குடும்ப செலவுகளுக்காக ரொக்கமாக ரூ.80 ஆயிரம் வழங்கப்பட்டது. நெகிழ்ச்சிஒரே பேட்ச்சில் சேர்ந்த சக நண்பனின் குடும்பத்தை காக்க, தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் நிதியுதவி வழங்கிய </p><h2>மரக்கன்று</h2><p>இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. நிகழ்ச்சியின் நிறைவாக மறைந்த காவலரின் நினைவாக டி.எஸ்.பி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.</p> ]]></content:encoded></item><item><title>பெண்கள் தங்கியிருந்த அறையில் ரகசிய கேமரா... வீட்டு உரிமையாளர் மகன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/house-owners-son-arrested-for-installing-a-secret-camera-in-womens-room-and-watching-the-footage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/house-owners-son-arrested-for-installing-a-secret-camera-in-womens-room-and-watching-the-footage#comments</comments><guid isPermaLink="false">07844c91-66d6-4601-bf78-729286d27698</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:53:52 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:53:52.572Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வாலிபர் கைது,பறிமுதல்,ரகசிய கேமரா,police enquiry,Youth Arrest,video footage</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/upimx71a/54.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வானகரம் காவல் நிலையம்- சரவணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சரவணன் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/upimx71a/54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வானகரத்தில் பெண்கள் தங்கியிருந்த அறையில் ரகசிய கேமரா பொருத்தி, அவர்கள் உடை மாற்றுவதை செல்போனில் லைவாக பார்த்து வந்த வீட்டு உரிமையாளரின் மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ஸ்விட்ச் பாக்சில் கேமரா</h2><p>சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 4 பெண்கள் வாடகைக்கு தங்கி வந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) தங்களது அறையில் இருந்த மின்சார ஸ்விட்ச் பாக்சில் ஏதோ மாற்றம் இருப்பதை அந்தப் பெண்கள் கவனித்தனர். எனவே, சந்தேகமடைந்த அவர்கள் அந்த ஸ்விட்ச் பாக்சைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் அதிநவீன <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE">ரகசிய கேமரா</a> மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><h2>போலீஸ் விசாரணை- கைது</h2><p>இதுகுறித்து அந்தப் பெண்கள் உடனடியாக வானகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகசிய கேமராவைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில், வீட்டின் உரிமையாளரின் மகனான சரவணன் என்பவர், பெண்கள் இல்லாத நேரத்தில் அவர்களின் அறைக்குள் புகுந்து ரகசிய கேமராவைப் பொருத்தியது தெரியவந்தது.</p><p>மேலும், அந்த கேமராவைத் தனது மொபைல் போனுடன் இணைத்து, பெண்கள் உடை மாற்றுவதை லைவ் ஆகப் பார்த்து கண்காணித்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றவாளி சரவணனை வானகரம் போலீசார் அதிரடியாகக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். மேலும், அவரிடமிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">செல்போன்</a> மற்றும் ரகசிய கேமரா உபகரணங்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்த 6 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-free-coaching-centre-sends-six-under-privileged-students-to-study-medicine</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-free-coaching-centre-sends-six-under-privileged-students-to-study-medicine#comments</comments><guid isPermaLink="false">208c1e7c-a415-4f5d-900a-860957c77977</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:45:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:45:39.984Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கல்வி,Salem,education,நீட் தேர்வு,NEET Exam,பயிற்சி மையம்,Coaching Centres</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/pno9wg23/coaching-centre.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/pno9wg23/coaching-centre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மகுடஞ்சாவடி, </p><p>சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் செயல்பட்டு வரும் சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளையின் இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்த 6 மாணவர்கள், ஒரே ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர்.</p><h2>இலவச நீட் பயிற்சி வகுப்பு</h2><p>தமிழகத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளித்து வரும் இந்த மையத்தின் முயற்சிக்கு, இந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வு மூலம் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்துள்ளது. 6 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.</p><h2>கனவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்</h2><p>ஆகஸ்டு 13-ந் தேதி இரவு சுமார் 8.45 மணியளவில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீட் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், கியூரி மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், தனது ஓராண்டு கடின உழைப்பை நினைவு கூர்ந்து கூறியதாவது:-</p><p>அன்றிரவு அனைத்து பரபரப்பும், உற்சாகமும் அடங்கியிருந்தது. இரவு தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. நகரமும் அடுத்த நாளை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால் எனக்கும், எனது ஆசிரியர்களுக்கும், அந்த 6 மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் அது ஒரு வருட கால அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, ஆர்வம், பலமுறை கைவிடலாம் என்ற நிலை, பகிர்ந்துகொண்ட போராட்டங்கள் மற்றும் கனவுகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இருந்தது.</p><p>எங்கள் கிராம வீடுகளில் இருந்து மகுடஞ்சாவடி வகுப்பறைகளுக்கும், அங்கிருந்து மருத்துவக் கல்லூரிகளின் நடைபாதைகளுக்கும், விரைவில் மருத்துவர்களுக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கும் செல்லும் இந்தப் பயணம் உண்மையிலேயே அற்புதமானது.</p><h2>2024-ல் தொடங்கிய முயற்சி</h2><p>எனது மகன் நிரஞ்சன் நீட் தேர்வு எழுதிய 2024-ம் ஆண்டில் இந்த இலவச நீட் பயிற்சி மையத்தை தொடங்கினேன். சிலுவம்பாளையம், கவுண்டனேரி, வெள்ளந்திவலசு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.</p><p>“ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரி மருத்துவராக மாறும்போது, அந்த குடும்பத்திற்கு அதன் அர்த்தமே தனி. ‘என் பையன், பொண்ணு டாக்டர்’ என்ற வார்த்தை வெறும் வார்த்தை அல்ல. அது அந்த குடும்பத்திற்கு சமூக மரியாதை, கண்ணியம், வேலைவாய்ப்பு உறுதி ஆகியவற்றை அளிக்கிறது. அடுத்த தலைமுறையின் வாழ்க்கைத் தரத்தையும் நம்பிக்கையையும் இது மிகப்பெரிய அளவில் மாற்றுகிறது.</p><h2>வகுப்பறையை அடைவதே சவால்</h2><p>இந்த மையத்தில் பயின்ற பல மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் வரை பயணம் செய்து வகுப்புகளுக்கு வந்தனர். வகுப்புகள் முடிந்த பிறகு வீட்டிலும், விவசாயப் பணிகளிலும் வேலை செய்துவிட்டு, இரவு நேரத்தில் படிப்பைத் தொடர்ந்தனர்.</p><p>அவர்களிடம் திறமையோ, ஆர்வமோ இல்லாதது பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக, அருகில் பயிற்சி மையம் இல்லாதது, பயிற்சிக் கட்டணத்தை செலுத்த முடியாதது, தமிழில் போதுமான புத்தகங்கள் கிடைக்காதது உள்ளிட்டவை தடையாக இருந்தன. குறிப்பாக மாணவிகளுக்கு தொடர்ந்து முயற்சி செய்வதற்கான குடும்ப ஆதரவு குறைவாக இருந்ததால், அவர்களுக்காக பயிற்சி மையத்தில் விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டது.</p><h2>மாணவர்களுக்கு ஏற்ப தனிப்பட்ட பயிற்சி</h2><p>ஒவ்வொரு மாணவரின் தேவைக்கும் ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டது. “நாங்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை. ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கைப் பயணத்தையும் புரிந்துகொண்டோம்.</p><p>அவர்களின் பயம், குறைகள், கற்றல் திறன் ஆகியவற்றை புரிந்துகொண்டு, தமிழ்வழி அல்லது ஆங்கிலவழி மாணவர் என்பதற்கேற்ப தனித்தனி படிப்பு திட்டங்களை ஆசிரியர்கள் உருவாக்கினர். வாராந்திர தேர்வுகள், விடைத்தாள் கலந்துரையாடல்கள், புதன்கிழமை மாலை ஆன்லைன் வீடியோ சந்திப்புகள், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் மற்றும் தினசரி கால அட்டவணை ஆகியவை பயிற்சியின் முக்கிய பகுதிகளாக இருந்தன.</p><h2>4, 5 முறை நீட் எழுதிய மாணவர்கள்</h2><p>இந்த மையத்தில் பயின்ற சில மாணவர்கள் 4 அல்லது 5 முறை <a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">நீட் தேர்வு</a> எழுதியுள்ளனர். எம்.பி.பி.எஸ். இடத்தைப் பெற வேண்டும் என்ற தங்கள் கனவில் அவர்கள் உறுதியாக இருந்தனர். ஏற்கனவே நர்சிங் படிப்பை முடித்திருந்த ஒரு மாணவியும், மருத்துவராக வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை நிறைவேற்றுவதற்காக மீண்டும் பயிற்சி மையத்திற்கு வந்து நீட் தேர்வுக்குத் தயாரானார்.</p><p>தமிழ்வழியில் படித்த ஒரு மாணவி, மொழிப் பிரச்சினையைப் பற்றி கூறியபோது, “கேள்வி புரிந்தால் தானே பதில் சொல்ல முடியும், மேடம்” என்று தெரிவித்தார். “பொருளாதார இடைவெளியை கருத்தில் கொண்டால், இது சமமான நிலையில் எழுதப்பட்ட தேர்வு அல்ல. <a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">தேர்வு அனைவருக்கும் ஒன்றுதான்</a>. அழுத்தங்களும் ஒன்றுதான். சில நேரங்களில் அவர்களுக்கு இன்னும் அதிகமாக இருந்தது.</p><p>ஆனால் மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்ட கனவும், தங்களுக்குள் இருந்த சாதிக்க வேண்டும் என்ற தீவிரமான விருப்பமும்தான் அவர்களை இறுதிவரை அழைத்துச் சென்றது. அந்த முடிவு உண்மையில் மற்றொரு புதிய தொடக்கமாகும். </p><p>“இந்த மாணவர்கள் நிச்சயம் மற்றவர்களுக்கு உதவுவார்கள்”</p><p>“மகுடஞ்சாவடி வகுப்பறைகளில் இருந்து மருத்துவக் கல்லூரிகள் வரை இந்த மாணவர்களின் பயணத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் நான் பெருமைப்படுகிறேன். இந்தக் குழந்தைகள் எதிர்காலத்தில் தாங்கள் பெற்ற உதவியை மற்றவர்களுக்கும் வழங்குவார்கள் என்று நம்புகிறேன். இன்று தொடங்கியுள்ள இந்தச் சிறிய அலை, நாளை பலரின் கனவுகளை மருத்துவர்களாக மாற்றும் மிகப்பெரிய அலையாக மாறும்.</p><h2>ஆதரவளித்தவர்களுக்கு நன்றி</h2><p>இந்த இலவச நீட் பயிற்சி முயற்சிக்கு கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அடிப்படையில் ஆதரவு வழங்கிய கோவை கங்கா மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கல்வி ஆலோசகர்கள் சதீஷ் மற்றும் ராஜேஷ், இயற்பியல் ஆசிரியர் செந்தில், வேதியியல் ஆசிரியர் சக்திவேல், உயிரியல் ஆசிரியர் திலகம், ஒருங்கிணைப்பாளர் அருண் தங்கராஜ் மற்றும் தட்டச்சர் சுகன்யா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவர்கள் அனைவரும் இந்த முயற்சியின் முதுகெலும்பாக இருந்தனர். ஒரு மாணவரின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><h2>அறக்கட்டளை பற்றி..</h2><p>சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளை, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக இலவச நீட் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம் மற்றும் பிற பொருளாதார தடைகளால் பாதிக்கப்படாமல் மருத்துவக் கல்வியை நோக்கி முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.</p><p>2024-ம் ஆண்டு கங்கா மருத்துவமனைகளால் தொடங்கப்பட்ட இந்த மையத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி, படிப்பு உபகரணங்கள், வழிகாட்டுதல் மற்றும் மாணவிகளுக்கான விடுதி வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.</p><p>காயத்ரி அனந்தகிருஷ்ணன், டாக்டர் சண்முகநாதன் மற்றும் கனகவல்லியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><strong>தொடர்புக்கு:</strong> சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளை, 3/285, எம்.ஜி.ஆர். நகர், மகுடஞ்சாவடி, சிங்ககிரி, சேலம் – 637103. தொலைபேசி: 9362525262. </p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையம்: தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-communist-party-marxist-questions-the-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-communist-party-marxist-questions-the-dmk#comments</comments><guid isPermaLink="false">9069b28a-d1fa-4efb-b4de-61c5cae9f07e</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:42:38 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:42:38.963Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,பரந்தூர் விமான நிலையம்,Paranthur Airport,சிபிஎம்,CPM</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/hvceay7s/kker.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/hvceay7s/kker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விமான நிலைய விவகாரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் ‌பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மச்சேந்திர நாதன் ஐ.ஏ.எஸ். அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்..?</p> <p>இந்த விஷயத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?</p><p>இவ்வாறு அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பக்கத்து வீட்டு பெண்ணை குத்திக் கொன்ற வாலிபர் - ரத்தம் வடிந்த கத்தியுடன் சுற்றியதால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-kills-neighbour-woman-kanyakumari</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-kills-neighbour-woman-kanyakumari#comments</comments><guid isPermaLink="false">c869daf9-9fcf-440a-ab15-dc1e0894641f</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:24:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:24:39.228Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/q4gtu91n/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/q4gtu91n/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>தாயை கொன்று ஜாமீனில் வந்த வாலிபர், பக்கத்து வீட்டு பெண்ணை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கைதக்குழி நாரகம்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். அவரது மகன் சிஜூ (24 வயது). இவர் கடந்த 2021-ம் ஆண்டு தனது தாயை கொன்றார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தந்தையுடன் வசித்து வந்தார். சிஜூ சற்று மனநலம் பாதிக்கப்பட்ட வர் என கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் ரத்தம் வடிந்த நிலையில் கத்தியுடன் அங்குமிங்கும் தெருவில் சுற்றினார். இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிஜூவை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அவரை ஆசுவாசப்படுத்திய போலீசார். நடந்த விவரத்தை கேட்டனர். ஆனால் சிஜூவால் சொல்ல முடியவில்லை. சிஜூவின் மனநிலையை உணர்ந்த போலீசார், அவரை பக்குவமாக அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.</p><p>பிறகு சிஜூவின் பக்கத்து வீட்டுக்கு சென்ற நிலையில்தான் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கத்திக்குத்து காயங்களும் இருந்தன. மேலும் பெரிய கல்லும் கிடந்தது. இதனை வைத்து சிஜூ மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். </p><p>அதில் கொல்லப்பட்ட பெண், அசோக்குமாரின் மனைவி லீலா (56 வயது) என்றும், சிஜூவிற்கு உறவினர் என்பதும் தெரிய வந்தது. லீலாவின் வீட்டிற்கு சென்று சிஜூ சாப்பிடுவது வழக்கமாம். மனநிலை பாதிக்கப்பட்டவர் என கருதி லீலாவும், சிஜூவை மென்மையான அணுகுமுறையுடன் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் திடீரென சிஜூ, லீலாவை கத்தியால் குத்தியும், கல்லை தூக்கிப்போட்டும் கொன்றது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>இந்தியா - வியட்நாம் கடலோர காவல் படைகளின் உயர்மட்டக் கூட்டம்: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து வலியுறுத்தல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7th-high-level-meeting-between-the-indian-and-vietnamese-coast-guards</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7th-high-level-meeting-between-the-indian-and-vietnamese-coast-guards#comments</comments><guid isPermaLink="false">608ff7d7-3c82-401c-b330-97c710d17d64</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:14:45 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:14:45.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,சென்னை,Coast Guard,கடலோர காவல்படை,வியட்நாம்,Vietnam,உயர்மட்ட கூட்டம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/roi8jpj6/iet.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/roi8jpj6/iet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய கடலோர காவல் படை மற்றும் வியட்நாம் கடலோர காவல் படைக்கு இடையிலான ஏழாவது சுற்று உயர்மட்டக் கூட்டம்  இன்று (25 ஆகஸ்ட் 2026)  சென்னையில் நடைபெற்றது.</p><p>வியட்நாம் கடலோரக் காவல் படை (VCG) குழுவினர் சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, வியட்நாம் கடலோர காவல் படையின் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் லுவோங் டின் ஹங் (Luong Dinh Hung), இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி AVSM, PTM, TM அவர்களை சந்தித்துப் பேசினார்.</p><p>இச்சந்திப்பை தொடர்ந்து, சென்னையிலுள்ள கடலோர காவல் படை மண்டலத் தலைமையகத்தில் இருநாட்டு கடலோரக் காவல் படைகளுக்கிடையிலான 7-வது உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்தியக் கடலோர காவல் படை குழுவிற்கு அதன் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி AVSM, PTM, TM தலைமை தாங்கினார்; வியட்நாம் கடலோரக் காவல் படை குழுவிற்கு மேஜர் ஜெனரல் லுவோங் டின் ஹங் தலைமை தாங்கினார். </p><p>இருநாட்டு கடலோர காவல் படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்து செயல்படுதல், கடல்சார் செயல்பாடுகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன. </p><p>சிறந்த கடல்சார் சூழலை உறுதி செய்வதற்குரிய செயல்பாடுகளை தொடர்ந்து கூட்டாக மேற்கொள்தல், இருதரப்பு ஒத்துழைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மீதான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் இக்கூட்டத்தில் வலியுறுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>ஆவணி அவிட்டம்: நாளை மறுநாள் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavani-avittam-extra-tokens-at-sub-registrar-offices</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavani-avittam-extra-tokens-at-sub-registrar-offices#comments</comments><guid isPermaLink="false">66f270c9-8d48-474c-bb6c-116b1e2eafba</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:54:40 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:54:40.436Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆவணி அவிட்டம்,கூடுதல் டோக்கன்கள்,sub-registrar offices,சார்பதிவாளர் அலுவலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/dcz7vt0o/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சார்பதிவாளர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/dcz7vt0o/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுபமுகூர்த்தம் மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p>தற்போது ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான 27.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.</p><p>எனவே, ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான 27.08.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“புதிய விமானநிலையம் தேவைதான்.. ஆனால்..” - திருமாவளவன் கூறியதென்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-new-airport-is-indeed-needed-but-what-did-thirumavalavan-say</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-new-airport-is-indeed-needed-but-what-did-thirumavalavan-say#comments</comments><guid isPermaLink="false">1e063dbd-99c5-4ab1-8287-a779294d7fee</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:52:43 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:52:43.785Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,திருமாவளவன்,தமிழக அரசு,TN govt,விசிக,VCK,Thirumavalvan,Paranthur Airport,பரந்தூர் விமானநிலையம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/sxh0zuod/amma.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/sxh0zuod/amma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p><p>சட்டமன்றத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வருடத்துக்கு 3 சிலிண்டர்கள் மற்றும் மாநகர, நகராட்சிப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற திட்டத்தை அறிவித்ததோடு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் அரசால் அதிகாரப்பூர்வமாக கைவிடப்படுவதாகவும் அவர் அறிவித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>புதிய விமான நிலையம்</h2><p>இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> கூறுகையில், “பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கெனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும். துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் உடன் கலந்துரையாடி விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. </p><h2>சென்னை மீனம்பாக்கம்</h2><p>அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும். சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட 'டர்மினல் 5' ஐந்தாவது பயணிகள் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல தற்போது நடைபெறும் 'டர்மினல் 3' கட்டுமான பணிகள் முடிவுற்ற பின் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் இருக்கும். டர்மினல் 5 பணிகள் நிறைவடைந்து, அது செயலாக்கத்துக்கு வந்த பிறகு ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையம் மேம்படுத்த படுவதோடு, பயணிகளின் போக்குவரத்து தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை உறுதி செய்யப்படும்'என்று தெரிவித்திருந்தார். த.வெ.க. அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பரந்தூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். </p><h2>தேவையான வளர்ச்சி</h2><p>இந்நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விமானநிலையம் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ புதிய விமான நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்யும்போதும் அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். காடுகளை அழிக்க வேண்டிய நிலையும் நீர்நிலைகளை தூர்வார வேண்டிய நிலையும் ஏற்படக்கூடும். இருந்தபோதிலும் விமான நிலையம், துறைமுகம், ரெயில் நிலையம் உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலமே மாநிலத்தின் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவையான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.</p><h2>விடுதலைச் சிறுத்தைகள் கட்சி</h2><p>எனவே தமிழகத்துக்கு புதிய விமான நிலையம் தேவை. அதேவேளையில் பொதுமக்களின் இசைவை பெற்று அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள்.</p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விமானநிலையம் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எனவே புதிய இடத்தை தேர்வு செய்து பணிகளை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> விரைவுப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-18-month-old-child-dies-after-accidentally-falling-into-a-water-tank-near-vaniyambadi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-18-month-old-child-dies-after-accidentally-falling-into-a-water-tank-near-vaniyambadi#comments</comments><guid isPermaLink="false">be467709-b681-47e2-8c0e-b9ca22d0e742</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:49:51 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:49:51.845Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,திருப்பத்தூர்,குழந்தை உயிரிழப்பு,தண்ணீர் தொட்டி,police enquiry,baby death</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/4uf9ofe8/53.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ குழந்தை நிதிஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/4uf9ofe8/53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்பத்தூர் மாவட்டம்</a> வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>குழந்தை மாயம்</h2><p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது <a href="https://www.dailythanthi.com/topic/children-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆண் குழந்தை </a>நிதிஷ். இன்று (செவ்வாய்க்கிழமை) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை வீட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாகத் தேடினர்.</p><h2>தொட்டியில் விழுந்த குழந்தை</h2><p>நீண்ட நேரத் தேடலுக்குப் பின், வீட்டின் அருகே இருந்த நிலத்தடி நீர் தொட்டியில் குழந்தை நிதிஷ் தவறி விழுந்து கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பெற்றோர் பதறியடித்தபடி குழந்தையை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>ஆஸ்பத்திரியில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">தீவிர விசாரணை</a> மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் கூவல்குட்டை கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பலூன் ஊதியபோது விபரீதம்... தொண்டையில் சிக்கி 6 வயது சிறுவன் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-while-blowing-up-a-balloon-6-year-old-boy-dies-after-it-gets-stuck-in-his-throat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-while-blowing-up-a-balloon-6-year-old-boy-dies-after-it-gets-stuck-in-his-throat#comments</comments><guid isPermaLink="false">384a88d1-87ee-44e7-acdd-40ff1b985660</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:28:26 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:28:26.083Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பத்தூர்,Balloon,பலூன்,நாட்றம்பள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/h2p2ut8r/thi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பத்தூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/h2p2ut8r/thi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாட்றம்பள்ளி,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D">பலூன் </a>ஊதியபோது அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பலூன் தொண்டையில் சிக்கியது</h2><p>திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தை சேர்ந்த துணி வியாபாரி குமார் - சத்யா தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 2 பேர் இரட்டை ஆண் குழந்தைகள் ஆவர்.</p><p>இந்நிலையில், குமார் மற்றும் சத்யா வழக்கம்போல் துணி வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அவர்களது 6 வயது மகன் சோமநாத் எதிர்பாராதவிதமாக பலூனை விழுங்கியதாகக் கூறப்படுகிறது.</p><p>இதனால் பலூன் தொண்டையில் சிக்கி சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர், சிறுவன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை உடனடியாக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.</p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்த பலூனை மருத்துவர்கள் அகற்றினர்.</p><p>இதையடுத்து, சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>பலூன் தொண்டையில் சிக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.48 ஆக பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்க வேண்டும் - சி.பி.ஐ. வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-must-increase-the-milk-procurement-price-cpi-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-must-increase-the-milk-procurement-price-cpi-urges#comments</comments><guid isPermaLink="false">a4f6109d-ab71-4442-b413-342e2e242fd2</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:25:33 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:25:33.423Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,சி.பி.ஐ.,தமிழ்நாடு அரசு,தமிழக அரசு,TN govt,CPI,milk,பால்,கொள்முதல் விலை,TamilNadu Goverment,மு.வீரபாண்டியன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,procurement price</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/3u8vrfz9/mv.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/3u8vrfz9/mv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார். </p><h2>110 விதியின் கீழ்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை ரூபாய் 48 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.</p><p>இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்</a> அவர்கள், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 38 லிருந்து 41 ஆக அதிகரிக்கப்படும் என அறிவித்தார். இது வரவேற்பிற்குரியது என்றாலும் கூட, பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு  ரூ.48 ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரி போராடி வருகின்றனர்.</p><h2>லிட்டருக்கு ரூபாய் 48</h2><p>எனவே, மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார நலனை, வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 48 ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்.</p><h2>உரிய மானியங்கள்</h2><p>அதே சமயம் நுகர்வோருக்கு பாலின் விலையை அதிகரித்துவிடக்கூடாது. அதற்கேற்ப உரிய மானியங்களை தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்திற்கு வழங்கிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>