<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 13 Aug 2026 07:13:12 +0000</lastBuildDate><item><title>நேரு உள்விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை ஓடுதளம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-8-crore-worth-renovated-synthetic-fiber-athletic-track-minister-athav-arjuna-inaugurates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-8-crore-worth-renovated-synthetic-fiber-athletic-track-minister-athav-arjuna-inaugurates#comments</comments><guid isPermaLink="false">9cecf9f0-910b-4e46-ab12-08afe078f1b9</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:10:54 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:10:54.646Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஓடுதளம்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/z32u15jw/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/z32u15jw/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம், ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளம் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவால் இன்று (13.08.2026) திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு தேசிய, பன்னாட்டு தரத்திற்கு இணையான பயிற்சி வசதிகள் கிடைக்கப்பெறும் வகையில் இந்த தடகள ஓடுதளம், செயற்கை இழை ஓடுதளமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் நோக்கில், செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் ராமநாதபுரம், சேலம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.38 கோடியே 24 லட்சம் மதிப்பில் புதிய செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.</p><p>கடந்த 3 மாத காலங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை, அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, விருதுநகர், விழுப்புரம், கடலூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தடகள எறிதல் மையம், செயற்கை இழை ஹாக்கி மைதானங்கள், பாரா விளையாட்டரங்கங்கள், முதல்-அமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம் ஆகியவை ரூ.31 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பக்கிங்காம் கால்வாயில் &apos;வாட்டர் மெட்ரோ&apos; : சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-metro-on-buckingham-canal-will-traffic-congestion-in-chennai-decrease</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-metro-on-buckingham-canal-will-traffic-congestion-in-chennai-decrease#comments</comments><guid isPermaLink="false">7ef9bde3-93e5-4e50-9070-d7372976d569</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:47:37 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:47:37.808Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,சென்னை மெட்ரோ,chennai metro,வாட்டர் மெட்ரோ,Water Metro,படகு போக்குவரத்து,Buckingham Canal,பக்கிங்காம் கால்வாய்,Boat Transport</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/j3nteses/bum.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/j3nteses/bum.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/சென்னை">சென்னை</a>யில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. </p><h2>சென்னையில் போக்குவரத்து நெரிசல்</h2><p>தமிழ்நாட்டின் தலைநகரான <a href="https://www.dailythanthi.com/topic/சென்னை">சென்னை</a>யில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. சாலை போக்குவரத்தை தாண்டி, மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் போக்குவரத்து வசதிகள் கூடுதலாக இருந்தாலும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது குறைந்த பாடில்லை. </p><p>தமிழ்நாட்டில் வாழும் 8½ கோடி மக்களில், சுமார் 1 கோடி பேர் சென்னை மற்றும் புறநகர் பகுதியிலேயே வசித்து வருகின்றனர். வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்திற்காக இப்படி ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருப்பதால், போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. </p><h2>பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து</h2><p>இந்த நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்தை தொடங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. </p><p>சென்னையில் உள்ள ஆறுகளில் கூவம், அடையாறு போன்றவை இயற்கையானவை. ஆனால், பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. 467 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாய், தமிழ்நாட்டில் 210 கி.மீ. தூரமும், ஆந்திராவில் 257 கி.மீ. தூரமும் பாய்கிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/சென்னை">சென்னை</a> சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஓடுவது பக்கிங்காம் கால்வாய்தான். 1935-ம் ஆண்டு வரை இதில் படகு போக்குவரத்து நடந்துள்ளது. அதற்கு ஆதாரமான நிழல் படங்கள் இன்றும் உள்ளன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ir90h6v8/chenai.jpg" /></figure><h2>90 ஆண்டுகளுக்கு பிறகு...</h2><p>பின்னாளில் இந்த கால்வாய் தூர்ந்துபோய் கழிவுநீர் ஓடையாகவே  மாறிவிட்டது. </p><p>இந்த நிலையில், பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கும் பணியை கடந்த சில ஆண்டாகவே தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது, 90 ஆண்டுகள் கடந்த நிலையில், பக்கிங்காம் கால்வாயில் மீண்டும் படகு போக்குவரத்தை தொடங்க சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது. </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில், முதற்கட்டமாக முட்டுக்காடு - நேப்பியர் பாலம் வரை 30 கி.மீ. தூரத்திற்கு வாட்டர் மெட்ரோ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை செய்திருந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/dff907pf/cochi.jpg" /></figure><h2>டெண்டர்</h2><p>தற்போது, எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை 53 கி.மீ. தூரத்திற்கு படகு போக்குவரத்து சேவையை தொடங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, படகு போக்குவரத்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்போது டெண்டர் வெளியிட்டுள்ளது.</p><p>பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்கும்பட்சத்தில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>திருவாரூரில் காவலரை தாக்கிய தவெக நிர்வாகி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-executive-arrested-for-assaulting-police-officer-in-thiruvarur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-executive-arrested-for-assaulting-police-officer-in-thiruvarur#comments</comments><guid isPermaLink="false">676077a3-65d4-4f12-b599-81af80fb51c1</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:41:50 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:41:50.065Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvarur,திருவாரூர்,கைது,arrested,கலெக்டர் அலுவலகம்,assaulting,தவெக நிர்வாகி</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/wsus8sp8/1.jpg" width="753"><media:title type="html"><![CDATA[  தவெக நிர்வாகி ராஜேஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ போலீசாரை தாக்கிய தவெக நிர்வாகி ராஜேஷ் கைது செய்யப்பட்டார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/wsus8sp8/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த போலீசார் ஒருவரை தாக்கிய தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.</p><h2>திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவாரூர் மாவட்டம் </a>கலெக்டர் அலுவலகத்தில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் போலீஸ்காரர் வினோத் தனது வேலை முடிந்து அங்கு ஓய்வில் இருந்தார். பின்னர் அவர் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ராஜேஷ் என்பவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அங்கு வந்தார்.</p><h2>சண்டை- தாக்குதல்</h2><p>மதுபோதையில் இருந்த ராஜேஷ், அங்கு அமைதியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்த போலீஸ்காரர் வினோத்திடம் பேச்சு கொடுத்து தகராாறு செய்தார். போலீஸ்காரர் எவ்விதப் பிரச்சினையிலும் ஈடுபடாமல் இருந்தபோதிலும், ராஜேஷ் போதையின் உச்சத்தில் ஆபாசமாகவும் திமிராகவும் பேசி வாக்குவாதத்தை வளர்த்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜேஷ் திடீரென போலீஸ்காரர் வினோத் மீது தாக்கினார். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>தவெக நிர்வாகி கைது</h2><p>அங்கிருந்த மற்ற போலீஸ்காரர்கள் உடனடியாகச் செயல்பட்டு தவெக நிர்வாகி ராஜேஷை <a href="https://www.dailytanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். மேலும், திருவாரூர் நகர போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் மீது, அரசுப் பணியில் உள்ள காவலரைத் தாக்கியது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது மற்றும் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டது போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் முறையான வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜேஷை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, கோர்ட் காவலில் வைக்கத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>குரூப் 2, 2ஏ காலி பணியிடங்களின் எண்ணிக்கையை 3,000 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-increasing-the-number-of-group-2-and-2a-vacancies-to-3000</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-increasing-the-number-of-group-2-and-2a-vacancies-to-3000#comments</comments><guid isPermaLink="false">5c23bb7c-a9ec-4085-9b57-6a3d904825c0</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:36:15 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:36:15.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,காலி பணியிடங்கள்,Vacancies,Group 2 and 2A,குரூப் 2, 2ஏ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/tov2azgb/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/tov2azgb/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்காக 821 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. குறைந்தது 3000 பணிகளுக்கு ஆள்தேர்வு நடைபெறும் என இளைஞர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே காலியிடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.</p><p>தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு &amp;2க்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி  அரசுத் துறைகளிலுள்ள சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகளுக்கு 41 பேரும், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2ஏ பணிகளுக்கு 780 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.</p><p>தமிழ்நாடு அரசுத் துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  2 மற்றும் 2ஏ பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் மறைக்கப்பட்ட இடங்களையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணியிடங்களை வைத்துக் கொண்டு வெறும் 821 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல.</p><p>இரண்டாம் தொகுதி பணிகளுக்கு வெறும் 41 பேர் காலியிடங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.  அவற்றிலும் கூட 4 பணியிடங்கள் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டு நிரப்பப்படாததால் ஏற்பட்ட பின்னடைவு பணியிடங்கள் ஆகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே இரண்டாம் தொகுதி பணியிடங்கள் இவ்வளவு குறைவாக நிரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு 50 பேர் இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திமுக அரசின் அந்த வேதனையான சாதனையை இப்போதைய தவெக அரசு முறியடித்திருக்கிறது. இதைவிட மோசமாக இளைஞர்களை ஏமாற்ற முடியாது.</p><p>2011&amp;ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது வரையிலான 16 ஆண்டுகளில் 2021, 2021 ஆகிய ஆண்டுகளைத் தவிர மீதமுள்ள அனைத்து ஆண்டுகளிலும் தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு ஆள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறன்றனர். மிக அதிகமாக 2022&amp;ஆம் ஆண்டில் 6500 பேரும், 2011&amp;ஆம் ஆண்டில் 6241 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள ஆண்டுகளில் 2025&amp;ஆம் ஆண்டைத் தவிர மற்றவற்றில் குறைந்தது 1086 பேர் முதல் 3842 பேர் வரையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது நடப்பாண்டில் மட்டும்  வெறும் 821 பேரை தேர்ந்தெடுப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.</p><p>தொகுதி 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான அடிப்படைக் கல்வித் தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு ஆகும். இந்தப் படிப்பை முடித்து விட்டு, அரசு வேலை கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 4 முதல் 5 லட்சம் பேர் இந்த எண்ணிக்கையில் இணைந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட அரசு வேலைகள் வழங்கப்படாதது அரசின் தோல்வி ஆகும்.</p><p>2026&amp;ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். அதற்கான ஆண்டுக்கு 1.50 லட்சம் பேருக்காவது அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும்.</p><p>ஆனால்,  பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 461, பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 839, தொகுதி 1 பணிகள் 26, தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் 821 என 2147 பணியிடங்களுக்கு மட்டும் தான் 4 ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. இவையும் கூட முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை தான். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக 50,000 பேருக்கு கூட அரசு வேலைகளை வழங்க முடியாது;  அரசுத்துறை காலிப் பணியிடங்களையும் நிரப்ப முடியாது. வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் தவெக தோல்வியடையும்.</p><p>2026&amp;ஆம் ஆண்டில் தவெக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் இளைஞர்கள் தான். அவர்களுக்கு தவெக  அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானவை அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்; வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகை வழங்கப்படும்; தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் 75% வேலைகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டம் இயற்றப்படும் என்பன தான். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். அதை செய்யாமல் இருப்பதை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படவுள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்த வேண்டும். இது தவிர, வேலையில்லாத இளைஞர்களுக்கு   உதவித் தொகை வழங்குதல், தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு  வழங்கும் சட்டத்தை இயற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuing-murders-in-coimbatore-vanathi-srinivasan-urges-police-to-take-stern-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuing-murders-in-coimbatore-vanathi-srinivasan-urges-police-to-take-stern-action#comments</comments><guid isPermaLink="false">8f952fd0-5f4b-454c-879c-ac5aae6dd997</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:13:28 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:13:28.890Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,murder,கொலை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,வலியுறுத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/7hc897op/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/7hc897op/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் தொடரும் கொலை சம்பவங்களுக்கு காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கொலை சம்பவங்கள்</h2><p>தொழில் நகரம் என்ற பெருமைக்குரிய கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் கொடூர கொலை சம்பவங்களால் பொது மக்களின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் நான்கு கொடூர கொலை குற்ற சம்பவங்கள் அரங்கேறி கோவை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.</p><p>குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும், போதைப்பொருள் பயன்பாட்டால் மாணவர்களுக்குள் ஏற்படும் மோதல்கள் கொலை வரை செல்வது தவெக அரசில் சட்டம் ஒழுங்கின் திறனற்ற செயலையே காட்டுகிறது. சிறைக்காவலில் இருக்கும் கைதிகளுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பற்ற சூழல் இருக்கும் பட்சத்தில் காவல் துறையிடமிருந்து பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே.</p><h2>வலியுறுத்தல்</h2><p>இந்நிலை தொடர்ந்தால் கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து பாதுகாப்பற்ற மாநிலம் என்ற சூழல் உருவாகும். எனவே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">காவல்துறை</a> இனியும் காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளை உனடியாகக் கைது செய்து, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2036-க்குள் 1.5 லட்சம் கோடி பொருளாதார இலக்கு: அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/economic-target-of-15-lakh-crore-by-2036-minister-keerthana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/economic-target-of-15-lakh-crore-by-2036-minister-keerthana#comments</comments><guid isPermaLink="false">8603fdc1-0106-40f8-a819-ba10733df71c</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:13:02 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:13:02.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Investors Conference,முதலீட்டாளர்கள் மாநாடு,தொழில்துறை,Industry Department,CM Vijay,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana,பொருளாதார இலக்கு,economic target</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ygiqfsy6/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ygiqfsy6/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு 2026 முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 1,06,998 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.</p><p><strong>மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது:-</strong></p><p>மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் முதலீட்டுக்கான நம்பகமான மாநிலமாக முதல் இடத்தில் உள்ளது. 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன. ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி என்ற அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஒரு லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.</p><p>தவெக ஆட்சியமைத்த 100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு. தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளன. 2036-ம் ஆண்டுக்குள் 1.5 அமெரிக்க டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை முதல்-அமைச்சர் நிர்ணயம் செய்துள்ளார். வேலைக்காக யாரும் சொந்த ஊரை விட்டு செல்லக்கூடாது என்பதே இலக்கு.</p><p>21 நாட்களில் தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் தொழில் பரிமாணங்கள் இந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக மாற்றப்பட உள்ளது. திறமையும் மனித வளமும் தமிழகத்தில் குவிந்துள்ளது. இன்றைய முதலீடுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு எங்களுடைய பாதையை காட்டுகிறது. ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சம் கொள்ளும் சூழல் நீங்குவது எப்போது? - டிடிவி தினகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-fear-of-government-hospitals-end-ttv-dhinakaran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-fear-of-government-hospitals-end-ttv-dhinakaran-asks#comments</comments><guid isPermaLink="false">8b5629f0-380b-4d82-9b0a-e5718cd9c97c</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:11:35 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:11:35.182Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக,அரசு மருத்துவமனை,Govt Hospitals</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/lvojjpyo/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/lvojjpyo/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு ஊழியர்களின் தொடர்ச்சியான அலட்சியப் போக்கு அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு ஒரு மோசமான சூழலை உருவாக்கியுள்ளன என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் ஊட்டச்சத்திற்காக வழங்க வேண்டிய முட்டைகளை அவர்களின் படுக்கையிலும், கால்களுக்கு அருகிலும் ஊழியர்கள் அலட்சியமாக வீசிச் செல்வது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.</p><p>தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையிலேயே, நோயாளிகளை இவ்வளவு மோசமான நிலையில் நடத்தப்படும் நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் நிலையை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. </p><p>அதே போல, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் கெட்டுப்போய் அழுகிய நிலையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.</p><p>அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக வழங்கப்படும் முட்டைகள் தொடங்கி, அரசு உயர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் வரை அனைத்தும் தரமற்றதாக இருப்பதோடு, அரசு ஊழியர்களின் தொடர்ச்சியான அலட்சியப் போக்கும், அரசின் மெத்தனமான செயல்பாடுகளும், அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு ஒரு மோசமான சூழலை உருவாக்கியுள்ளன.</p><p>எனவே, அங்கன்வாடி மையங்களுக்குத் தரமற்ற முட்டைகளை வழங்கிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய நோயாளிகளைக் கண்ணியத்துடன் நடத்திட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி, குட்டியுடன் தாய் யானை உயிரிழந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-mother-elephant-and-her-calf-were-killed-after-being-struck-by-a-train-while-crossing-the-tracks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-mother-elephant-and-her-calf-were-killed-after-being-struck-by-a-train-while-crossing-the-tracks#comments</comments><guid isPermaLink="false">538e31c5-3c53-453f-94be-989227b613c5</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:43:47 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:43:47.617Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கேரளா,Kerala,train,ரெயில்,Elephants,யானைகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/55nk981b/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/55nk981b/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பாலக்காடு,</p><p>கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையார் சாவடிப்பாரா புதுப்பதி வனப்பகுதியில் நேற்றி நள்ளிரவு 11.45 மணியளவில் 4 யானைகள் கொண்ட கூட்டம் ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் யானைகள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. </p><h2>தாய் யானை, குட்டி யானை பலி</h2><p>இந்த விபத்தில் சிக்கிய தாய் யானை மற்றும் குட்டி யானை ஆகிய இரண்டும் ரெயில் என்ஜின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகின. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாளையார் வனத்துறையினர் மற்றும் பாலக்காடு ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் யானைகளின் உடல்கள் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதன் பின்னர், பழுதான என்ஜின் சரிசெய்யப்பட்டு, ரெயில் அங்கிருந்து புறப்பட்டது.</p><h2>வளைவான பாதை</h2><p>விபத்து நிகழ்ந்த இடம் தமிழக எல்லையிலிருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தொலைவில் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. வளைவான பாதையில் ரெயில் வந்தபோது யானைகள் தண்டவாளத்தை கடந்ததாக கூறப்படுகிறது. இதனால் லோகோ பைலட்டால் யானைகளை முன்கூட்டியே பார்த்து ரெயிலின் வேகத்தை குறைக்க முடியாமல் போனதே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ரெயில் வேகமாக இயக்கப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>உலக யானைகள் தினத்தன்று தமிழக-கேரள எல்லைப் பகுதியில் ரெயில் மோதி தாய் யானை மற்றும் குட்டி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>வாணியம்பாடியில் ஜீவானந்தம் சிலை குப்பையில் வீச்சு: அதே இடத்தில் புதிய சிலை நிறுவ வேண்டும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jeevanandams-statue-dumped-in-the-trash-in-vaniyambadi-a-new-statue-must-be-installed-at-the-same-spot-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jeevanandams-statue-dumped-in-the-trash-in-vaniyambadi-a-new-statue-must-be-installed-at-the-same-spot-seeman#comments</comments><guid isPermaLink="false">81d65cbf-50af-4c55-af9d-41772a390975</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:38:34 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:38:34.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,சென்னை,தமிழ்நாடு அரசு,சிலை,statue,வாணியம்பாடி,Vaniyambadi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/qc5fjos8/272.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/qc5fjos8/272.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வாணியம்பாடியில் ஜீவானந்தம் சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளது, புதிய சிலையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுவ வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2>ஜீவானந்தம்</h2><p>வாணியம்பாடியில் பொதுவுடைமை பிதாமகன் ஐயா ஜீவானந்தம் மார்பளவு சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மண்ணுக்கும் மக்களுக்குமாக வாழ்ந்து மறைந்த மகத்தான தலைவரின் சிலையை அலட்சியமாக குப்பையில் வீசியுள்ள செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. </p><p>நாட்டு விடுதலைக்கு போராடி சிறையில் வதைப்பட்ட வீரர், பொதுவுடைமை தத்துவத்தை தமிழ்நாடு முழுவதும் விதைத்த போற்றுதற்குரிய பெருமகன் நம்முடைய ஐயா ஜீவானந்தம். தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்த பெருந்தகை. சுடுகாட்டில் கூரையமைத்து, இடுப்பில் கட்டிய ஒற்றை வேட்டியோடு, ஒழுகும் குடிசையில் புத்தகங்களின் நடுவே உண்மையும், எளிமையும், நேர்மையுமாக வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிய பெருந்தமிழர். அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கும், தூய அரசியல் மாண்பிற்கும் மறுவடிவமாக வாழ்ந்து மறைந்த ஐயா ஜீவானந்தம் சிலையை குப்பையில் வீசியுள்ளது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும். </p><p>தமிழ்நாடு அரசு இதனை வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. இதுதான் நாட்டிற்கு உழைத்த மாபெரும் தலைவருக்கு தவெக அரசு காட்டும் நன்றியா? செலுத்தும் மரியாதையா?</p><h2>புதிய சிலை</h2><p>நாட்டின் போற்றுதற்குரிய தலைவர் பெருமக்களில் ஒருவரான ஐயா ஜீவானந்தம் அவர்களின் 119வது பிறந்த நாள் வருகின்ற 21.08.2026 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அவருடைய சிலையைக் குப்பையில் வீசியவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, புதிய சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">நாம் தமிழர் கட்சி</a> சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>   ]]></content:encoded></item><item><title>மூன்று மாதங்களுக்கு பிறகு 80 அடியை எட்டிய மேட்டூர் அணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-reaches-80-feet-after-three-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-reaches-80-feet-after-three-months#comments</comments><guid isPermaLink="false">00ed7686-838a-44be-b937-0ade6ec1e8a5</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:11:47 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:11:47.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mettur dam,மழை,water,உயர்வு,மேட்டூர்,நீர்,மேட்டூர் அணையின் நீர்மட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/e6ruwxrc/271.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/e6ruwxrc/271.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர், </p><p>மூன்று மாதங்களுக்கு பிறகு 80 அடியை எட்டியது மேட்டூர் அணை.</p><h2>காவிரி</h2><p>கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதியில் இருந்து கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.</p><p>அதிகபட்சமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டது. அதே நேரம் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்தும் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வீதம் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.</p> <h2>அணையின் நீர்மட்டம்</h2><p>மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று 80 அடியை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.31 அடியாக உள்ளது.</p><p>அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது வினாடிக்கு 7,833 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.</p><p>நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 80 அடியை கடந்துள்ளதால், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணையை</a> நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் யோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-suggests-that-the-central-government-conduct-a-caste-based-census</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-suggests-that-the-central-government-conduct-a-caste-based-census#comments</comments><guid isPermaLink="false">c9ac9718-ec84-44ce-97a7-8f133ece0814</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:10:28 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:10:28.660Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,ஜாதிவாரி கணக்கெடுப்,Caste-based Census</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/0rst58en/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/0rst58en/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தெலுங்கானா காங்கிரஸ் அரசு மாதிரியை, மத்திய அரசு பின்பற்ற வேண்டும்</p><p>நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, வீடுகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கவுள்ளது. அதற்கான படிவத்தில், ‘ஜாதி” என்ற கேள்விக்கு, மக்கள் குறிப்பிடும் ஜாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.</p><p>மக்களிடம், ‘உங்கள் ஜாதி என்ன?” என்று கேட்டால், பெரும்பாலும் உட்ஜாதி பெயர்களையே குறிப்பிடுவார்கள். அந்தப் பெயர்கள் அரசின் பட்டியலில் இருக்காது. அவற்றை அப்படியே பதிவு செய்தால், பெரும் குழப்பங்கள் ஏற்படும். இதனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதன் நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.</p><p>எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே ஜாதிகளின் பட்டியலை வழங்கி, அதில் அவரவர் ஜாதியைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும். கடந்த 2021ஆம் ஆண்டு, தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு மிகச் சிறப்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்தது. அது நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றது. தெலுங்கானா காங்கிரஸ் அரசின் மாதிரியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். அப்போதுதான் துல்லியமான, உண்மையான தரவுகள் கிடைக்கும்.</p><p>துல்லியமான, உண்மையான தகவல்கள் கிடைத்தால்தான், உண்மையிலேயே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க முடியும். அவர்களுக்கான தனித்திட்டங்களைச் செயல்படுத்த முடியும். அதன் வாயிலாக, சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.</p><p>எனவே, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை பெயரளவுக்கு நடத்தாமல், அறிவியல் ரீதியாகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மிகச் சிறப்பாக நடத்த வேண்டும். இதற்கு தெலுங்கானா காங்கிரஸ் அரசின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா..? திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5000-fine-for-unmarried-youths-who-consume-alcohol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-5000-fine-for-unmarried-youths-who-consume-alcohol#comments</comments><guid isPermaLink="false">be937256-56fb-4a19-b206-cf0ef1ac1438</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:09:11 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:09:11.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Nagapattinam,நாகப்பட்டினம்,மதுபானம்,Liquor,இளைஞர்கள்,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/sr8j84qc/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/sr8j84qc/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நாகை,</p><p>திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>விழுந்தமாவடி ஊர்</h2><p>போதைப் பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில், மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் பேணவும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து சார்பில் மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.</p><h2>ரூ.5,000/- அபராதம்</h2><p>அதில், பொதுமக்கள் கவனத்திற்கு... நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நீரூபிக்கப்பட்டால் ரூ.5,000/- அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5,000/-அபராதம் வசூலிக்கப்படும். “இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”.</p><p>இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்... ‘மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், விழுந்தமாவடி ஊர் மக்களின் இத்தகைய முடிவு மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-2120-special-buses-to-operate-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-2120-special-buses-to-operate-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">edd12f8e-0dfd-4503-ad51-cfad36abedff</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:02:05 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:02:05.604Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,special buses,Weekend,வார விடுமுறை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/9o5moq3p/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/9o5moq3p/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சென்னையில் உள்ள முக்கியப் பேருந்து முனையங்கள் மற்றும் பிற நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:-</p><p>கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 505 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 570 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.</p><p>கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.</p><p>மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 14 மற்றும் 15-ந் தேதிகளில் நாள் ஒன்றுக்கு தலா 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. </p><p>வெளி மாவட்டங்கள் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.</p> <p>வார விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவைகேற்ப பல்வேறு இடங்களில் இருந்து 465 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>படிக்காமல் செல்போன் பார்த்ததை கண்டித்த தாய்: கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-scolds-daughter-for-phone-college-student-takes-extreme-step</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-scolds-daughter-for-phone-college-student-takes-extreme-step#comments</comments><guid isPermaLink="false">a3fa8242-7967-4d3e-a48e-ef2d917a0fd1</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:00:29 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:00:29.082Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Srivaikundam,ஸ்ரீவைகுண்டம்,Thoothukkudi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/43s47m1c/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/43s47m1c/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>புத்தகத்தை படிக்காமல் செல்போன் பார்த்ததை தாயார் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>கல்லூரி மாணவி</h2><p>தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். விவசாயி. இவரது மகள் இலக்கிய ஸ்ரீநிதி (22 வயது). இவர் நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.</p><p>இவர், கடந்த 5-ந்தேதி வீட்டில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதை கவனித்த அவரது தாயார் ஜான்சிராணி, புத்தகத்தை படிக்காமல் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறாயே என்று கண்டித்துள்ளார்.</p><h2>விஷம் குடித்தார்</h2><p>இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சமூக நீதிக்கு துல்லியமான தரவுகள் அவசியம்: பிரதமரிடம் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/precise-data-is-essential-for-social-justice-manickam-tagore-urges-the-prime-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/precise-data-is-essential-for-social-justice-manickam-tagore-urges-the-prime-minister#comments</comments><guid isPermaLink="false">4f1668b9-d25e-4057-a1eb-9303e3ceb54d</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:39:11 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:39:11.815Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Social justice,வலியுறுத்தல்,மாணிக்கம் தாகூர்,மோடி,Data,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/0d98ioy5/270.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/0d98ioy5/270.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூக நீதிக்கு துல்லியமான தரவுகள் அவசியம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><h2>மக்கள் தொகை கணக்கெடுப்பு</h2><p>இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>9 ஆகஸ்ட் 2026 அன்று, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்</a> சாதிவாரி கணக்கெடுப்பிற்கான முறையியல் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.</p><h2>சாதிப் பதிவுகள்</h2><p>SECC 2011-ல் பின்பற்றப்பட்ட “திறந்த வகை” (Open Column) அணுகுமுறையின் காரணமாக, 1931ஆம் ஆண்டு பதிவான 4,147 சாதிப் பதிவுகளுடன் ஒப்பிடுகையில், 46 லட்சம் சாதிப் பதிவுகள் உருவாகின. இவ்வளவு துண்டு துண்டான தரவுகள் உருவானதால், அவற்றை பயன்படுத்த முடியாதவை என அரசே குறிப்பிட்டது.</p><p>இதை நாம் மீண்டும் செய்யக்கூடாது. 2027ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்:-</p><p><strong>* </strong>முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, குறியீடுகளுடன் கூடிய சாதிப் பட்டியல்கள்</p><p><strong>*</strong> எழுத்துப்பிழை மற்றும் உச்சரிப்பு வேறுபாடுகளால் ஏற்படும் பிழைகளைத் தவிர்க்க ஒவ்வொரு சாதிக்கும் தனித்துவமான குறியீடுகள்</p><p><strong>*</strong> அரிதாகப் பதிவாகும் சாதிப் பெயர்களுக்கு டிஜிட்டல் சரிபார்ப்பு</p><p>ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.</p><p>தெலங்கானாவின் SEEEPC மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக நீதிக்கு அறிவியல் ரீதியாகத் துல்லியமான, நம்பகமான தரவுகள் அவசியம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">9 ஆகஸ்ட் 2026 அன்று, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கான முறையியல் குறித்து பிரதமர் <a href="https://x.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a> அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.<br><br>SECC 2011-ல் பின்பற்றப்பட்ட “திறந்த வகை” (Open Column) அணுகுமுறையின் காரணமாக, 1931ஆம் ஆண்டு பதிவான… <a href="https://t.co/tOScdwoYBS">https://t.co/tOScdwoYBS</a></p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2087742311786750098?ref_src=twsrc%5Etfw">August 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தமிழக காடுகளில் 3,170 யானைகள் - அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3170-elephants-in-tamil-nadu-forests-government-data</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3170-elephants-in-tamil-nadu-forests-government-data#comments</comments><guid isPermaLink="false">09bc206a-576d-4218-9e18-94fc604478cf</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:36:05 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:36:05.186Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,Elephants,யானைகள்,யானைகள் தினம்,International Elephant Day,World Elephant Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/4csd0l6v/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யானைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/4csd0l6v/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலக யானைகள் தினத்தையொட்டி அவற்றை பாதுகாக்க உறுதி ஏற்போம் என்றும் தமிழக காடுகளில் 3,170 யானைகள் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.</p><p><strong>தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</strong></p><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ந் தேதி உலகம் முழுவதும் உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத் தில் யானைகள் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல், மனிதயானை மோதலைத் தணித்தல் ஆகியவற்றிற்கு நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட அணுகுமுறைகள் மூலம் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.</p><p>இந்தியாவில் யானைகள் வாழும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் யானை வாழ்விடங்கள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகத்தின் வனப்பகுதிகளுடன் இயற்கையாகத் தொடர்ச்சியடைந்து, பரந்த மாநிலங்களுக்கு இடையேயான யானை வாழ்விட நிலப்பரப்பாக அமைந்துள்ளன.</p><h2>3,170 யானைகள்</h2><p>2025-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 3,170 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9.1 லட்சம் எக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் 5 யானைகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் மனிதவனவிலங்கு மோதல்களை தடுக்க இந்த ஆண்டு ரூ.20 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.</p><p>யானைகளைப் பாதுகாப்பது அரசு மற்றும் வனத்துறையின் பொறுப்பு மட்டுமல்ல. பொதுமக்கள், இளைஞர்கள், விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியமானதாகும். பாதுகாப்போம் யானைகளை, காடுகளைப் பாதுகாப்போம். வனத்துறையுடன் இணைந்து மனிதயானை நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என்ற உறுதியை அனைவரும் ஏற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-again-todays-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-again-todays-status#comments</comments><guid isPermaLink="false">e9cd7b8b-118d-4118-8bea-0c107eb86cb7</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:31:37 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:32:09.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/vfhya8bh/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/vfhya8bh/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,06,500 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400-ம், கிராமுக்கு ரூ.50-ம் அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.</p><p>அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையில் 2-வது நாளாக மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை.. சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த முனைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-ennore-to-mamallapuram-push-to-implement-the-water-metro-project-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-ennore-to-mamallapuram-push-to-implement-the-water-metro-project-in-chennai#comments</comments><guid isPermaLink="false">b6d6c17c-a4a9-498f-bac3-139668dd9b97</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:21:21 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:21:21.765Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Chennai,சென்னை,Mamallapuram,மாமல்லபுரம்,சென்னை மெட்ரோ,chennai metro,எண்ணூர்,வாட்டர் மெட்ரோ,Water Metro,Chennai Metropolitan Corporation,Ennoor,சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/y0n0116b/metr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/y0n0116b/metr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' (நீர்வழிப் போக்குவரத்து) திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்.</p><h2>சென்னை</h2><p>தமிழ்நாட்டின் தலைநகரான <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a>யை இந்தியாவின் சிறந்த நகரமாக மாற்றும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னையில் பஸ், ரெயில், விமானம், கப்பல் என 4 வகையான போக்குவரத்து சாதனங்கள் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் சென்னைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.</p><h2>மெட்ரோ ரெயில்கள்</h2><p>தற்சமயம் சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்டிரல் வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. </p><p>இரண்டாவது கட்ட திட்ட பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மாதவரம் தொடங்கி  சிறுசேரி சிப்காட் வரையும், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் செங்கல்பட்டு வரை மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><h2>விரிவான திட்ட அறிக்கை</h2><p>இந்நிலையில் சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' (நீர்வழிப் போக்குவரத்து) திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.  </p> <h2>கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம்</h2><p>வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக இச்சேவை திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சென்னை எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிநவீன படகுப் போக்குவரத்து அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை படகுகளை இயக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>முன்னதாக இந்தியாவின் முதலாவது வாட்டர் மெட்ரோ திட்டம் கேரள மாநிலம் கொச்சியில் வெற்றிகரமாக தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. </p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/hxj55zas/cochi.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vetri-tamil-nadu-investors-meet-held-in-chennai-today-chief-minister-vijay-participates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vetri-tamil-nadu-investors-meet-held-in-chennai-today-chief-minister-vijay-participates#comments</comments><guid isPermaLink="false">25eb1504-69e6-4a8f-be24-59107910806a</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:18:45 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:18:45.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,சென்னை,Investors Conference,முதலீட்டாளர்கள் மாநாடு,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/2acc4hhk/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/2acc4hhk/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சென்னையில் இன்று (வியாழக்கிழமை) வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.</p><h2>வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு</h2><p>தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மே 10-ந் தேதி தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.</p><p>அரசு நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வரும் த.வெ.க. அரசு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 96 நாட்கள் நிறைவடையும் நிலையில், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று நடந்தது.</p><h2>97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து</h2><p>கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில், 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.</p><p>இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.67,452 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. ஏற்கனவே, கடந்த 3 மாதங்களில் போடப்பட்ட தொழில் முதலீடுகளையும் சேர்த்து, த.வெ.க. அரசு பதவியேற்ற 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.</p><h2>ரூ.1 லட்சம் கோடி ஈர்ப்பு</h2><p>இதன் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும். 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.</p><h2>எந்தெந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு</h2><p>* தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமம் ரூ.2,500 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.</p><p>* அல்ட்ராவயோலெட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.779 கோடி முதலீடு செய்கிறது. ல்ட்ராவயோலெட் EV ஆலை கிருஷ்ணகிரியில் அமைகிறது. இதனால் 4,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.</p><p>* டெய்ம்லர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்கிறது. டெய்ம்லர் நிறுவனத்தின் ஆலை காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட இருக்கிறது. </p><p>* ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது</p><p>* லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்கிறது</p><p>* தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது டைட்டன்</p><p>* செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது</p><p>* ரூ.5,000 கோடி முதலீடு செய்கிறது ஜே.கே. டயர்ஸ் நிறுவனம்</p><p>* பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு</p>]]></content:encoded></item><item><title>தரையிறங்கும் நேரத்தில் என்ஜினில் கோளாறு... சென்னையில் வானில் வட்டமடித்த விமானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-malfunction-during-landing-plane-circles-over-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-malfunction-during-landing-plane-circles-over-chennai#comments</comments><guid isPermaLink="false">cf0aabc2-07e2-4ec1-8149-dfed16f356ad</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:14:53 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:14:53.994Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,Chennai,Circle,Engine,மீனம்பாக்கம்,சென்னை விமான நிலையத்தில்,என்ஜினில் கோளாறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/9794btkz/269.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/9794btkz/269.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மீனம்பாக்கம், </p><p>கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டது, தரை இறங்காமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து கொண்டிருந்தது. </p><h2>எந்திர கோளாறு</h2><p>சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு கொல்கத்தாவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் என 224 பேர் இருந்தனர். விமானம் சென்னையில் தரை இறங்க முயன்றபோது, விமானத்தின் இடதுபக்க எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. மேலும். எண்ணெய் கசிவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அதே நிலையில் விமானத்தை சென்னையில் சாதாரணமாக தரை இறக்குவது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி, இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான நிலைய ஓடுபாதை பகுதியில் அவசர நிலையை அறிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், மருத்துவக் குழுவினர், அதிரடிப்படையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டன.அதுவரை விமானம், தரை இறங்காமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து கொண்டிருந்தது. இதனால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பின்னர், விமானம் தரை இறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, விமானம் இரவு 11.37 மணிக்கு பத்திரமாக சென்னையில் தரை இறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணி கள், ஊழியர்கள் என 224 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.</p><p>பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி சென்ற பின்னர், விமான என்ஜினீயர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, விமானத்தை பழுதுபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி அளவில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">விமானம்</a> இயங்க முடியாத நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.</p><h2>விசாரணை</h2><p>இதையடுத்து, விமானத்தை 'ரிமோட் பே' எனப்படும் ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்துவதற்கு டெல்லி விமான போக்குவரத்து ஆணையக பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயாரின் கள்ளக்காதலன் மீது போக்சோ வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-class-10-student-pocso-case-filed-against-mothers-paramour</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-class-10-student-pocso-case-filed-against-mothers-paramour#comments</comments><guid isPermaLink="false">8a7da6e8-9bab-4f3c-b01f-3f731a1434c3</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:06:39 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:06:39.417Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,மாணவி,பாலியல் தொல்லை,Salem,கிரைம் செய்திகள்,சேலம்,school student,கள்ளக்காதலன்,sexual harrasement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/v5kb4g93/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/v5kb4g93/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமியின் தந்தை, தாய் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சிறுமி தனது தாயாருடன் வளர்ந்து வருகிறாள்.</p><p>இதனிடையே, சிறுமியின் தாயாருக்கு அதேபகுதியை சேர்ந்த வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் வீரமணி, சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><p>இந்நிலையில், கடந்த 10-ந் தேதி சிறுமிக்கு பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அந்த சிறுமி, பள்ளி தலைமை ஆசிரியையிடம் சென்று தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்துள்ளாள். இதுகு றித்து ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வீரமணி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில் திருவிழாவில் ஆபாசமாக உடை அணிந்து ஆடினால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டு எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-warns-contempt-case-for-obscene-dance-at-temple-festival</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-warns-contempt-case-for-obscene-dance-at-temple-festival#comments</comments><guid isPermaLink="false">fbb9a1ad-f68b-4292-8e55-e44fc2b674b3</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:55:33 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:55:33.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,Temple festival,கோவில் திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/2iyd4qeq/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/2iyd4qeq/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.</p><h2>கரகாட்டம்</h2><p>அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம், பாப்பாத்தம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><h2>ஆபாச நடனத்தை எப்படி அனுமதிப்பது?</h2><p>அப்போது நீதிபதி, "கரகாட்டம் ஆடும் பெண்களின் உடைகளைப் பார்த்திருக்கிறீர்களா? மிகவும் ஆபாசமாக உள்ளது. இதுபோன்ற ஆபாச நடனத்தை எப்படி அனுமதிப்பது? தமிழ்நாட்டை விட ஆந்திர மாநில கரகாட்டம் இன்னும் மோசம்" என்று கருத்து தெரிவித்தார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஆபாச நடனம் மட்டுமல்லாமல், அரசியல் ரீதியான ஸ்லோகங்களையும் எழுப்ப வாய்ப்புள்ளது என்ற அச்சம் உள்ளதால், போலீஸ் அனுமதி வழங்கவில்லை" என்றார்.</p><h2>கிராமத்து கலைநிகழ்ச்சி</h2><p>அதற்கு நீதிபதி, 'அரசியல் பேச நாடு முழுவதும் உரிமை உள்ளது. அந்த உரிமை உடையார்பாளையத்துக்கும் உள்ளது. ஆனால் ஆபாச நடனத்துக்குத்தான் அனுமதி வழங்க முடியாது" என்றார். அதற்கு மனுதாரர் தரப்பில், "கரகாட்டம் காலம் காலமாக கிராமங்களில் நடந்து வரும் கலை நிகழ்ச்சி. அதற்கு அனுமதி வழங்க வேண்டும். பக்கத்து கிராமத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு இந்த ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் கடந்த ஜூன் மாதம் அனுமதி வழங்கியுள்ளது" என்று கூறி அந்த உத்தரவு நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.</p><p>இதை படித்து பார்த்த நீதிபதி, "ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு நிபந்தனை அனுமதி வழங்கியுள்ளதால், இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் உடையார்பாளையம் கோவில் திருவிழாவுக்கும் நிபந்தனையுடன் கரகாட்டத்துக்கு அனுமதி வழங்குகிறேன்.</p><h2>ஐகோர்ட்டு எச்சரிக்கை</h2><p>ஆனால், கரகாட்டம் கலைஞர்கள் ஆபாசமாக உடை அணிந்து நடனம் ஆடினால் உடையார்பாளையம் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, ஆபாசமாக கரகாட்டம் ஆடியதற்கான ஆதாரங்கள் இருந்தால் அந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், தாமாக முன் வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை செய்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>திருமணப் பொருட்கள் வாங்கச் சென்றபோது விபரீதம்: அரசு பஸ் மோதி இளம்பெண் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-strikes-while-shopping-for-wedding-items-young-woman-killed-after-being-hit-by-a-government-bus-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-strikes-while-shopping-for-wedding-items-young-woman-killed-after-being-hit-by-a-government-bus-2#comments</comments><guid isPermaLink="false">228532b4-ab92-4cca-9c5a-24f3ec399120</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:51:10 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:51:10.697Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Government bus,young woman,திருவேற்காடு,இருசக்கர வாகனம்,இளம்பெண் பலி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/htz4pv1s/26.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளம்பெண் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/htz4pv1s/26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவேற்காடு,</p><p>திருமணப் பொருட்கள் வாங்கச் சென்றபோது அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.</p><p>திருவேற்காடு அடுத்த புளியம்படு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள்கள் கீர்த்திகா (26). சர்மிளா (23). இருவரும் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தனர். கீர்த்திகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, அக்டோபர் மாதம் திருமணம் நடை பெற உள்ளது.</p><h2>விபத்து</h2><p>இதற்காக அக்காள்-தங்கை இருவரும் பொருட்கள் வாங்குவதற்காக போரூரில் உள்ள கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அய்யப்பன்தாங்கல் அருகே சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சர்மிளா அதே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். கீர்த்திகா லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். </p><p>இதுபற்றி ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான அய்யப்பன் (50). என்ப வரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை: கல்லூரி மாணவன் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-murder-case-in-coimbatore-another-young-man-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-murder-case-in-coimbatore-another-young-man-arrested#comments</comments><guid isPermaLink="false">6808dd5e-e3c6-4089-a1ae-1598ec181506</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:48:36 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:48:36.741Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,கோவை,Crime News,தமிழகம்,Murder case,கொலை வழக்கு,கிரைம் செய்திகள்,Kovai,கல்லூரி மாணவன்,collage student</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/n0uo1wpm/amutha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/n0uo1wpm/amutha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a> கல்லூரி மாணவர் கொலையில் மானாமதுரையை சேர்ந்தவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 7 மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>கல்லூரி மாணவர் கொலை</h2><p>கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அவர் சகமாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>6 பேர் கைது</h2><p>இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.</p><p>இதைதொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஆரமுதன் (20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த அரவிந்த் (21), தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் சிவா ரோகித் (20), பெரம்பலூர் மாவட்டம் குன்னம்பகுதியை சேர்ந்த மணி பாலு (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்திருந்தனர்.</p><p>இந்நிலையில் கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தோஷ் என்ற மேலும் ஒரு மாணவனை போலீசார்  கைது செய்துள்ளனர். </p><p>இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-</p><h2>செல்போன்கள் திருட்டு</h2><p>கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர் அமுதன், அடிக்கடி வெளியே சென்று தனது நண்பர்கள் அறையில் தங்குவது வழக்கம். கடந்த 9-ந் தேதி காலையில் அமுதன் உள்பட 9 மாணவர்கள், விடுதியில் 4-ம் ஆண்டு மாணவர்கள் தங்கி இருக்கும் அறைக்கு முகமூடி அணிந்து சென்று செல்போன்களை பறித்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்த செல்போன் திருட்டு தொடர்பாக, 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். செல்போன் பறிப்பு சம்பவத்தில் அமுதனை அடையாளம் கண்டுபிடித்த மாணவர்கள், அவரை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்து உள்ளார்.</p><h2>7 பேருக்கு வலைவீச்சு</h2><p>ஆனால் போதைப்பொருட்கள் தொடர்பாக புகார் செய்ததால்தான், அமுதனை சக மாணவர்கள் அடித்து கொன்றதாக தகவல் பரவி வருகிறது. இந்த கொலைக்கு போதைப்பொருள் காரணம் இல்லை. மாணவர்களை தாக்கி, செல்போனை பறித்து சென்றதால்தான் கொலை நடந்து உள்ளது.</p><p>இதில் 20 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்து உள்ளது. அதில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் 7 மாணவர்களை அடையாளம் கண்டு உள்ளோம். அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>கொலைக்கு போதைப்பொருள் காரணமா?</h2><p>இந்த கொலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>ஆனால் போதைப்பொருள் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்ததாகவும், அதை அறிந்த 4-ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்ததாகவும் தகவல் பரவி வருகிறது. </p><p>அமுதனின் பெற்றோரும் இதே கருத்தைதான் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் அமுதனின் பெற்றோர் தெரிவித்ததில் எவ்வித உண்மையும் இல்லை. அமுதன் எந்த போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யவில்லை. அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தவும் இல்லை என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: குடியிருப்பு பகுதியில் கரடி உலா - பொதுமக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-bear-wanders-into-residential-area-public-in-a-state-of-fear</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-bear-wanders-into-residential-area-public-in-a-state-of-fear#comments</comments><guid isPermaLink="false">8c48c844-78a9-462d-8fde-fd44d2958fb0</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:21:54 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:21:54.362Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,கரடி,bear</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/np6v3pi3/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/np6v3pi3/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,  </p><p>நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, குறைந்த எல்லைக்குள் அதிக வனவிலங்குகள் உள்பட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. குறிப்பாக ஊட்டி அடுத்த மஞ்சூர், " குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி கள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் இரவில் கடைகளை உடைத்து பொருள்களை சூறையாடி சாப்பிட்டு வருகின்றன. </p><p>இந்தநிலையில் ஊட்டி சர்ச்ஹில் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை கரடி உலா வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு கரடி வனப்பகுதிக்குள் சென்றது. கரடி நடமாட்டத்தால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடி: கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-fraud-arrested-sub-registrar-justin-manikandan-admitted-to-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-fraud-arrested-sub-registrar-justin-manikandan-admitted-to-hospital#comments</comments><guid isPermaLink="false">790467ff-a795-4550-a164-e23454b59cf8</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:21:26 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:21:26.514Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,பழனி,தமிழகம்,hospital,மருத்துவமனை,Palani,Palani temple,சார்பதிவாளர்,Sub-Registrar,நில மோசடி,பழனி கோவில்,Land fraud case</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/7d8k9rr7/madir.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/7d8k9rr7/madir.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி </a>ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><h2>பழனி நில மோசடி</h2><p>பழனி மலை அடிவார பகுதியில், பழனி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள 1.40 ஏக்கர் நிலத்தை வெள்ளத்துரை (வயது 60), சேதுபதி (67) ஆகியோருக்கு ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த மோசடி விசுவரூபம் எடுத்து வருகிறது. ரூ.100 கோடி மதிப்புடைய நிலம் என கூறப்படுவதால், இந்த மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீ சார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். </p><p>இதுதொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, இவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் சம்பந்தப்பட்ட நாளில் கொடைக்கானலில் இருந்து பொறுப்பு சார்பதிவாளராக சென்று பத்திரப்பதிவு செய்து கொடுத்த ஜஸ்டின் மணிகண்டனும் (49) கைது செய்யப்பட்டார்.</p><h2>விசாரணை</h2><p>இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வக்கீல் அன்வர்தீனுக்கு, திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், அன்வர்தீன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, நீதிபதி ராஜபிரபு விசாரணை நடத்தினார்.</p><h2>ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி</h2><p>இதற்கிடையே, இந்த வழக்கில் கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு ஜஸ்டின் மணிகண்டன், மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.</p><p>அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், "ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஏற்கனவே இதய நோய் பாதிப்பு இருந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சைகள் மேற்கொண்டு, 'ஸ்டெண்ட்' வைத்துள்ளார்.  மேலும் அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளும் உள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்தப்படும். அவரது உடல்நிலை எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாக மேலும் சில பரி சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால் மீண்டும் அவருக்கு 'ஸ்டெண்ட்' பொருத்தப்படும். தற்போது அவர் இதயவியல் சிகிச்சை டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்" என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழாவையொட்டி, முக்கிய ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tight-security-measures-are-in-place-at-major-railway-stations-for-the-independence-day-celebrations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tight-security-measures-are-in-place-at-major-railway-stations-for-the-independence-day-celebrations#comments</comments><guid isPermaLink="false">8c746fd1-47d0-4f66-8f36-63e428bd9cf0</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:14:11 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:14:11.934Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Railway Stations,ரெயில் நிலையங்கள்,Independence Day,சுதந்திர தின விழா</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/zg3roama/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/zg3roama/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>சுதந்திரதின விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சுதந்திர தினத்தை சீர்குலைக் கும் சதி செயலில் மர்ம ஆசாமிகள் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. </p><p>அந்த வகையில், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்புபிரிவு போலீசார் ரெயில் நிலைய வளாகம், வாகன நிறுத்துமிடம் உள்பட பல்வேறு இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். </p><p>போலீஸ் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினார்கள். இதேபோல் பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண் சோறு சாப்பிட்ட பெண்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-who-knelt-with-their-hands-tied-behind-their-backs-and-ate-mann-soru</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-who-knelt-with-their-hands-tied-behind-their-backs-and-ate-mann-soru#comments</comments><guid isPermaLink="false">de56ee26-7075-44d8-97e5-7add389c4a95</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:54:06 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:54:06.113Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,பெண்கள்,மண்சோறு,Womans,mann soru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/x3yi3czb/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/x3yi3czb/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேத்துப்பட்டு,</p><p>திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமி ஜீவசமாதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று அவரது குருபூஜை விழா நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால், சந்தனம், புஷ்ப காவடிகள் எடுத்து வந்தும், பசுக்களுடனும் வந்தும் வழிபட்டனர்.</p><p>இந்த விழாவின்போது குழந்தை இல்லாத பெண்கள் குழந்தை வரம் கேட்டு மண்சோறு சாப்பிட்டு வழிபடுவார்கள். இதையொட்டி நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் விரதம் இருந்து கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்ட பெரிய பந்தலில் நடந்த மகாயாகத்தில் அவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.</p><p>பின்னர் பிரசாதத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அருகில் உள்ள குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண் சோறு சாப்பிட்டனர். வேண்டுதல் நிறைவேறிய தம்பதியினர் குழந்தைகளுடன் வந்து எடைக்கு எடை துலாபாரம் செலுத்தினர். இதனை யொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாடகம், இன்னிசை கச்சேரி, கிராம தேவதை பொன்னியம்மனுக்கு பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.</p>]]></content:encoded></item><item><title>5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-10-am-in-5-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-10-am-in-5-districts#comments</comments><guid isPermaLink="false">e298efc7-c256-4af1-9161-1789eaca2a73</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:53:56 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:53:56.188Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/2oozcj49/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/2oozcj49/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர், தென்காசி, தேனி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவமனை அறை வாடகை 3 நட்சத்திர ஓட்டல் கட்டணத்தை தாண்டக்கூடாது - நாடாளுமன்ற நிலைக்குழு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hospital-room-rent-must-not-exceed-3-star-hotel-fee-parliamentary-panel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hospital-room-rent-must-not-exceed-3-star-hotel-fee-parliamentary-panel#comments</comments><guid isPermaLink="false">4becded4-9df7-42ae-9b8b-1dc7dd3f8318</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:34:42 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:34:42.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Star Hotel,private hospital,தனியார் மருத்துவமனை,நட்சத்திர ஓட்டல்,நாடாளுமன்ற நிலைக்குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/8kv4rqu9/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/8kv4rqu9/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>பெருநகரங்களில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை, 3 நட்சத்திர ஓட்டல் அறையின் அடிப்படை கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.</p><h2>முறைப்படுத்த வேண்டும்</h2><p>சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 176-வது அறிக்கை மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த 7-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 'தனியார் மற்றும் பொதுத்துறையில், சுகாதார வசதிகள் எளிதாக அணுகும் வகையில் இருக்கிறதா? மலிவாக கிடைக்கிறதா?' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை கட்டணத்தை உடனடியாக முறைப்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>பெருநகரங்களில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை கட்டணம், 3 நட்சத்திர ஓட்டலின் அடிப்படை அறை கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. அடிப்படை அறை வாடகையுடன் மருத்துவருக்கான கட்டணம், நர்சிங் சேவைகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய மருத்துவ பொருட்கள், உணவு மற்றும் சலவை கட்டணத்தை சேர்த்துக் கொள்ளலாம்.</p><h2>தனி ஆலோசகர் நியமிக்க வேண்டும்</h2><p>சிக்கலான அல்லது நீண்ட கால சிகிச்சைகளை தொடங்கும் முன்பே, அதற்கான முழு செலவு குறித்த விவரத்தையும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் கட்டாயம் வழங்க வேண்டும். சிகிச்சைக்கான செலவு, காப்பீட்டு வரம்பு, கிடைக்கக்கூடிய நிதியுதவிகள் குறித்து நோயாளிகளின் குடும்பத்தினரிடம் விளக்க மருத்துவமனைகளில் தனி ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும்.</p><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு சராசரியாக ரூ.34,064 வரை குடும்பத்தினர் சொந்த பணத்தை செலவழிக்க நேரிடுகிறது. இதன் காரணமாக மருத்துவ செலவுகள் அதிகரிப்பதால், இத்துறையில் ஆண்டுக்கு 10 - 13 சதவீதம் வரை பணவீக்கம் உயர்கிறது.</p><h2>தேசிய சுகாதார நிதியம்</h2><p>புற்றுநோய் மற்றும் மரபியல் நோய்கள் போன்ற அதிக செலவு பிடிக்கும் சிகிச்சைகளுக்கு உதவ கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., எனப்படும், சமூக நிதி பங்களிப்புகளை ஒருங்கிணைத்து, தனியாக தேசிய சுகாதார நிதியம் உருவாக்கப்பட வேண்டும்.</p><p>முன்கூட்டியே நோய் கண்டறிதல் பரிசோதனை, சிகிச்சை, மறுவாழ்வு மையம் மற்றும் வாழ்நாள் இறுதி வரை சுகாதார பராமரிப்பு என அனைத்து சேவைகளையும் உள்ளடக்கிய ஒற்றை கட்டணப் பொதியை நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் சுகாதார கட்டமைப்புகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-a-two-day-trip</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-a-two-day-trip#comments</comments><guid isPermaLink="false">f18d956c-059c-466b-81d7-82c5e680fe65</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:22:14 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:22:14.892Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,CP Radhakrishnan,சி.பி.ராதாகிருஷ்ணன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/707a5zok/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/707a5zok/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சி.பி.ராதாகிருஷ்ணன்</h2><p>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க என 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து வருகிற 16-ந்தேதி காலை தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார். </p><p>செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவிலும், அதன்பின்னர் தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நடைபெறும் நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும், தொடர்ந்து டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கும் புத்தக வெளியிட்டு விழாவிலும் பங்கேற்கிறார்.</p><h2>சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம்</h2><p>அதன்பின்னர் 17-ந்தேதியன்று சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வருகிறார். பின்னர் அங்கு நடைபெறும் பட் டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.</p><p>இதையடுத்து தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>வீட்டுமனை ஆவணத்தை வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் - சார் பதிவாளர் உட்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-15000-bribe-for-house-plot-document-three-arrested-including-sub-registrar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-15000-bribe-for-house-plot-document-three-arrested-including-sub-registrar#comments</comments><guid isPermaLink="false">d3e34f59-a51a-4dcb-ba3c-d058615b1d63</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:07:44 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:07:44.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,லஞ்சம்,Bribery,வீட்டுமனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/gyfk1sks/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/gyfk1sks/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனை ஆவணத்தை வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சார் பதிவாளர் உள்பட 3 பேரை திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.</p><h2>லஞ்சம்</h2><p>சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், இவர் பொன்னேரி தாலுகா சிறுளப்பாக்கம் கிராமத்தில் 2 வீட்டுமனைகளை விலைக்கு வாங்கி, அவற்றை பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார். பின்னர் பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக சார் பதிவாளர் சங்கரை அணுகினார். அப்போது, பத்திரத்தை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என சார் பதிவாளர் சங்கர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத நடராஜன் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை நடராஜனிடம் கொடுத்து அனுப்பினர்.</p><h2>கையும் களவுமாக சிக்கினர்</h2><p>மேலும் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். ஆடி அமாவாசையையொட்டி பத்திரப்பதிவு செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் அலுவலகத்தில் திரண்டிருந்தனர். போலீசார் பொதுமக்களோடு பொதுமக்களாக கலந்து கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது நடராஜன் லஞ்சமாக கொடுத்த ரூ.15 ஆயிரத்தை சார் பதிவாளர் சங்கர், பத்திரப்பதிவு எழுத்தர் ரமேஷ் மற்றும் எழுத்தரின் உதவியாளர் நித்யா ஆகியோர் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டனர். பின்னர் கைதான 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை பெயர் பலகையை உடைத்த மர்ம நபர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-unidentified-persons-vandalize-major-mukund-varadarajan-road-nameboard</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-unidentified-persons-vandalize-major-mukund-varadarajan-road-nameboard#comments</comments><guid isPermaLink="false">e64bac3d-2203-45d6-bf3d-b6c559d88311</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:06:17 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:06:17.337Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பெயர் பலகை,மேஜர் முகுந்த் வரதராஜன்,Major Mukund Varadarajan,Nameboard</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/1uxb5tbb/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/1uxb5tbb/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ல் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில், ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். அவரது தியாகத்தை போற்றும் வகையில் அமைதிக்கான உயரிய விருதான "அசோக் சக்ரா'வை அவரது குடும்பத்தினருக்கு வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.</p><h2>மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை</h2><p>இந்த நிலையில், அவர் வசித்த பகுதியான, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு, 'மேஜர், முகுந்த் வரதராஜன் சாலை" என, ஜூன் மாதம், தமிழக அரசு பெயர் சூட்டியது. </p><p>இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி நிர்வகிக்கும் அச்சாலையில் கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப். சந்திப்பு, சோலையூர்,  கேம்ப் சாலை உட்பட பல இடங்களில் மேஜர் முகுந்த வரதராஜன் சாலை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. </p><h2>பெயர் பலகை உடைப்பு</h2><p>இதில், கேம்ப் சாலை சந்திப்பில், இடதுபுறம் உள்ள காவல் உதவி மையத்தை ஒட்டி வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை, மர்ம நபர்கள் அடியோடு பிடுங்கி சாலையோரம் வீசியுள்ளனர். </p><p>மேலும், பலகையில் அச்சிடப்பட்டிருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என்ற வாக்கியத்தையும் அட்டையை னவத்து முடியுள்ளனர். இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது;</p><p>'பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே கடை உள்ளது. இந்த கடைக்கு வரும் வாகனங்களை நிறுத்த பெயர் பலகை இடையூறாக இருப்பதால் பிடுங்கி வீசப்பட்டிருக்கலாம். மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, மறைந்த ராணுவ வீரரின் பெயர் பலகையை பிடுங்கி வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>நெல்லை: கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்ற மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-young-man-arrested-for-snatching-jewelry-from-an-elderly-woman-on-her-way-to-a-christian-church</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-young-man-arrested-for-snatching-jewelry-from-an-elderly-woman-on-her-way-to-a-christian-church#comments</comments><guid isPermaLink="false">20c33e12-96d9-45d5-ba1c-5fcad4925adc</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:25:39 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:25:39.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,நகை பறிப்பு,chain snatching</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/i8130vm3/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/i8130vm3/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றபோது மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.</p><h2>சங்கிலி பறிப்பு</h2><p>பணகுடியை அடுத்த காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஏஞ்சல் (வயது 60). தனியாக வசித்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலையில் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று மேரி ஏஞ்சலின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.</p><p>இதுகுறித்து மேரி ஏஞ்சல் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>வாலிபர் கைது</h2><p>விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரது மகன் விக்னேஷ் (25) என்பவர் இந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்த தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>மறுசீரமைப்பு பணி: எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-work-platforms-1-to-5-at-egmore-railway-station-closed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-work-platforms-1-to-5-at-egmore-railway-station-closed#comments</comments><guid isPermaLink="false">f553b3cb-dd38-47d6-8f40-feabab3fea64</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:25:35 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:25:35.524Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore,எழும்பூர்,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/6p0hiom9/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/6p0hiom9/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வருகை மற்றும் பார்சல் பிரிவுக்கான நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடப்பட்டது.</p><h2>மறுசீரமைப்பு பணி</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மறுசீரமைப்பு பணியானது புதிய வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், மேம்படுத்தப்பட்ட நிலைய உள்கட்டமைப்பு மற்றும் பிற அதிநவீன வசதிகளை அமைப்பதை உள்ளடக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது வருகை மற்றும் பார்சல் பிரிவுக்கான நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>முதல் கட்டமாக நடைமேடை 1 முதல் 5 வரையில் 18 மீட்டர் அகலம், 120 மீட்டர் நீளத்துக்கு புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.</p><h2>தண்டவாளங்கள் மூடல்</h2><p>நேற்று முதல் நடைமேடை 1 முதல் 5 வரையில் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, நடைமேடை 4-ல் பள்ளம் தோண்டப்பட்டு பில்லர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, “மறுசீர மைப்பு பணி காரணமாக தற்போது நடைமேடை 1 முதல் 5-வரை உள்ள தண்டவாளங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. எனவே, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 முதல் 9 வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படும்.</p><p>தற்போது நடைபெறும் முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததும், 2-ம் கட்டமாக நடைமேடைகள் 6 முதல் 8 வரையிலான பகுதிகளில் நடைமேம்பாலத்துக்கான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைப்பதற்கான பணிகள் நடை பெற இருக்கிறது. அப்போது அதற்கேற்ப ரெயில் சேவையில் மாற்றம் செய்யப் படும். 3-ம் கட்டமாக நடைமேடைகள் 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-10</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-10#comments</comments><guid isPermaLink="false">2df7b681-6e63-4a0a-9648-8dad9cef5e00</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:08:49 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:08:49.174Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power outage,மின் தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/yfldoomx/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/yfldoomx/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 14.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>திருவொற்றியூர்:</strong> டி.எச். சாலை, ராஜா கடை, திருச்சினாங்குப்பம், கன்னிகோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, கணக்கர் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, மார்கெட் லேன், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, சாத்தாங்காடு பகுதி, நியூ தெரு, வசந்தா நகர், ஜான்ரவார் தெரு, ஐய்யப்பள்ளி தோட்டம், ஷேசாச்சல கிராமணி தெரு, திலகர் நகர், சின்னமேட்டுபாளையம், பெரியமேட்டுபாளையம், மேற்கு மற்றும் வடக்கு மாட வீதி, பிகேஎன் காலனி, வீரராகவன் தெரு, குமரன் நகர், கோமாதா நகர், பிபிடி சாலை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசையில் 100 அடி உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: காரணம் என்ன? - ஆராய்ச்சியாளர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-retreats-100-feet-at-tiruchendur-on-aadi-amavasai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-retreats-100-feet-at-tiruchendur-on-aadi-amavasai#comments</comments><guid isPermaLink="false">75d40d95-d7e2-4959-b1c0-70ae289247b8</guid><pubDate>Thu, 13 Aug 2026 00:58:21 +0000</pubDate><atom:updated>2026-08-13T00:58:21.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,Tiruchendur Murugan Temple,Tiruchendur,திருச்செந்தூர் முருகன் கோவில்,ஆடி அமாவாசை,கடல் உள்வாங்கியது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/h8iirxfp/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/h8iirxfp/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>ஆடி அமாவாசை தினமான நேற்று காலையில் திருச்செந்தூரில் சுமார் 100 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணம் என்ன என்று ஆராய்ச்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>100 அடி உள்வாங்கிய கடல்</h2><p>அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தின, பிந்தின நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடல் உள்வாங்குவது வாடிக்கையாக நிகழ்கிறது. ஆடி அமாவாசை தினமான நேற்று காலையில் திருச்செந்தூரில் சுமார் 100 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரபதி வரையிலும் கடல் உள்வாங்கி காணப்பட்டது.</p><h2>புனித நீராடிய பக்தர்கள்</h2><p>இதனால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும் பக்தர்கள் அச்சமின்றி வழக்கம்போல கடலில் புனித நீராடினர். சிலர் பாசிபடர்ந்த பாறைகளில் ஏறி நின்று செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் மாலையில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.</p><h2>உள்வாங்குவதன் காரணம் என்ன?</h2><p>கடல் உள்வாங்குவது ஏன்? என்பது குறித்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் துறை உதவி பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான செல்வம் கூறியதாவது:-</p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் கடல் அலைகளின் வேகம், உயரத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அதேநேரத்தில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வழக்கமாக கடல் மட்டம் குறைவதும், உயர்வதும் இயல்பாக உள்ளது.</p><p>தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் நில அமைப்புகளை வைத்து பார்க்கும்போது மிகவும் மேடான பகுதியாகும். அதே போன்று அந்த பகுதி ஒரு முனை போன்று வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும். இதனால் கடல் அந்த பகுதியில் உள்வளைந்து செல்லும். இந்த சூழலில் வழக்கம்போல் கடல் நீர்மட்டம் குறையும்போது, நீண்ட தூரம் கடல் உள்வாங்கி மேடான பகுதி வெளியில் தெரிகிறது. இது சாதாரணமாக நடக்கக்கூடிய நிகழ்வுதான். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-tamil-nadu-fishermen-detained-by-the-sri-lankan-navy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-tamil-nadu-fishermen-detained-by-the-sri-lankan-navy#comments</comments><guid isPermaLink="false">b21bb887-7ea2-4be4-a8c4-ce5abd55ef07</guid><pubDate>Thu, 13 Aug 2026 00:54:57 +0000</pubDate><atom:updated>2026-08-13T00:54:57.032Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமேசுவரம்,இலங்கை கடற்படை,Sri Lankan Navy,Tamil Nadu fishermen,மீனவர்,சிறை jail</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/u2tuf5bk/267.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/u2tuf5bk/267.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம், </p><p>இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்தனர்.</p><h2>மீனவர்கள்</h2><p>ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் விசைப்படகு ஒன்றில் 9 மீனவர்கள் சென்று இருந்தனர்.</p><p>நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். விசைப்படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து கைது செய்தனர். மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். </p><h2>கைது</h2><p>5 நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகின் என்ஜின் பழுதாகி, இலங்கை பகுதியில் கரை ஒதுங்கியதால் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் மீண்டும் 9 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீனவர்களை </a>இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்தது ராமேசுவரம் மீனவர்களை வேதனை அடையச்செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் வெற்றியை எதிர்த்து வழக்கு:  விஜய் மனு தாக்கல் செய்ய அவகாசம்-ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-perambur-election-result-high-court-grants-time-for-vijay-to-file-petition</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-perambur-election-result-high-court-grants-time-for-vijay-to-file-petition#comments</comments><guid isPermaLink="false">79583e32-bc7e-4023-ae8d-00c3e49ad082</guid><pubDate>Thu, 13 Aug 2026 00:47:24 +0000</pubDate><atom:updated>2026-08-13T00:47:24.222Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Chennai,ஐகோர்ட்டு,Chennai High Court,பெரம்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/lq9skbiq/Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/lq9skbiq/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>தேர்தலில் வெற்றி</h2><p>தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவர் பெரம்பூர் தொகு தியில் விஜய் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">சென்னை</a> ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஆர்.டி.சேகர், அந்த தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமிநரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல, திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p> <h2>நிராகரிக்கக் கோரி மனு</h2><p>இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஜி.மாசிலாமணி, ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோர் ஆஜராகி, "இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>தரப்பில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அதற்காக விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை வருகிற 25-ந்தே திக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.</p> <h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>அதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தல் வழக்கை ஆர்.சிவ ராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கையும் வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டென மாறும் வானிலை..! இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weather-taking-a-sudden-turn-heavy-rain-set-to-lash-down-todaydo-you-know-where</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weather-taking-a-sudden-turn-heavy-rain-set-to-lash-down-todaydo-you-know-where#comments</comments><guid isPermaLink="false">f5539535-80fd-4f97-b441-86776d6db5b4</guid><pubDate>Thu, 13 Aug 2026 00:44:50 +0000</pubDate><atom:updated>2026-08-13T00:44:50.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN weather</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/euyuanac/om-chuam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/euyuanac/om-chuam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன்காரணமாக இன்று (13-08-2026): நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும். </p><p>மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p><strong>நாளை (14-08-2026):</strong> நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை </a>பெய்யக்கூடும்.</p><p>மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>15-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை</a> பெய்யக்கூடும். </p><p><strong>16-08-2026 மற்றும் 17-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>18-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை</a> பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p>13-08-2026 முதல் 16-08-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>13-08-2026 முதல் 16-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (13-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>13-08-2026 முதல் 16-08-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>13-08-2026 மற்றும் 14-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>15-08-2026 மற்றும் 16-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <h2>அரபிக்கடல் பகுதிகள் :</h2><p><strong>13-08-2026 முதல் 16-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>