<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 27 Jul 2026 08:21:48 +0000</lastBuildDate><item><title>அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayor-priya-complains-of-harassment-by-unidentified-person</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayor-priya-complains-of-harassment-by-unidentified-person#comments</comments><guid isPermaLink="false">446e5b25-e55f-4c47-8f3b-001e0ab6eb54</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:18:10 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:18:10.452Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Mayor Priya,மேயர் பிரியா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/blaj6qkk/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/blaj6qkk/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மேயர் பிரியா</h2><p>சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் கமிஷனர் அமல் ராஜை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்து இருக்கிறார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறாக சித்தரித்து பரப்புவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் அலுவலக எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தொல்லை கொடுப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p>மேயர் பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொல்லை கொடுப்பதாக மேயர் பிரியா புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்: மு.க.ஸ்டாலின் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-our-youth-excel-in-sports-as-well-as-education-mkstalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-our-youth-excel-in-sports-as-well-as-education-mkstalin#comments</comments><guid isPermaLink="false">514afe9b-7b4e-4010-b54e-556d8b481fab</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:05:42 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:05:42.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,காமன்வெல்த் போட்டி,Commonwealth Games,M.K. Stalin</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ypny6vn3/15.gif" width="721"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ypny6vn3/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு என் பாராட்டுகள்.</p><p>தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றி ஊக்கமளிக்கட்டும்! கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்!”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>51-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/51st-state-shooting-championship-minister-adhav-arjuna-inaugurated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/51st-state-shooting-championship-minister-adhav-arjuna-inaugurated#comments</comments><guid isPermaLink="false">2f4f9f5f-d8b2-415f-9eef-d69cb26e5a80</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:57:27 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:57:27.852Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாம்பியன்ஷிப் போட்டி,துப்பாக்கி சுடுதல்,Gun shooting,Championship Tournament,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Adhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/4o8ljma6/85.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/4o8ljma6/85.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்; 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியை துப்பாக்கியால் இலக்கை  குறிவைத்து சுட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.</p><p>துப்பாக்கி சுடுதல் விளையாட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் குறித்து கேட்டறிந்ததோடு, தானும் இந்த விளையாட்டை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.</p><h2>துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி</h2><p>தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் 51-வது மாநில <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி</a> சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சென்னை காவல் ஆணையாளர் அமல்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் துப்பாக்கி சுடுதல் வீரர்களை ஊக்குவித்தனர். துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் அடிப்படை நடைமுறைகள் குறித்து பயிற்சியாளர்களிடம் கேட்டறிந்து வீரர்-வீராங்கனைகளுடன் கலந்துரையாடியும் வாழ்த்து தெரிவித்தனர்.</p><h2>கடுமையான பாதுகாப்பு நடைமுறை</h2><p>போட்டிகள் பொதுவாக 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் ரேஞ்ச்களில் நடத்தப்படுகின்றன. 10 மீட்டர் ஏர் ரைபிள்,(Air Rifle) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (Air Pistol), 25 மீட்டர் ஸ்போர்ட் பிஸ்டல், 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் (மண்டியிட்டு, படுத்து, நின்று சுடுதல்) ஷாட்கன். போட்டிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு பிரிவுகளில் நடைபெறுகின்றன. சர்வதேச அளவில் போட்டிகள் International Shooting Sport Federation விதிமுறைகளின்படி நடத்தப்படுகின்றன. வீரர்கள் சிறப்பு பாதுகாப்பு உபகரணங்களுடன், கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பங்கேற்பார்கள். இதில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், துப்பாக்கி சுடும் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-grants-permission-to-conduct-further-investigation-in-vaithilingam-corruption-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-grants-permission-to-conduct-further-investigation-in-vaithilingam-corruption-case#comments</comments><guid isPermaLink="false">1ff38214-1d4c-41c7-a58a-9eecb489ffe2</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:50:52 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:50:52.131Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வைத்திலிங்கம்,Vaithilingam,Corruption case,ஊழல் வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/kmeiviao/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/kmeiviao/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை பெருங்களத்தூர் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அடுக்குமாடி கட்டிடத்திற்கு திட்ட அனுமதி அளிக்க 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக “அறப்போர் இயக்கம்” சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.</p><p>இந்தப் புகாரின் அடிப்படையில், 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை, வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கடந்த ஜனவரி மாதம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.</p><p>இதைத் தொடர்ந்து, வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் முந்தைய ஆட்சியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த அறிக்கையை திரும்பப் பெறவும், வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி கோரியும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், “முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும், விசாரணையை விரைந்து முடித்து மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultation-meeting-on-the-separate-agriculture-budget-in-chennai-ministers-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultation-meeting-on-the-separate-agriculture-budget-in-chennai-ministers-participate#comments</comments><guid isPermaLink="false">b1448197-2c7f-4e92-8418-9ee9fc91a92a</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:46:31 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:46:31.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,வேளாண்மை,நிதிநிலை அறிக்கை,கருத்துக்கேட்பு கூட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ubotyr7s/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ubotyr7s/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2026–2027 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மாநாட்டு கூட்டரங்கில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2026–2027 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. </p><p>இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கலந்து கொண்டு, வேளாண் துறையின் முன்னேற்றம், விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு, நீர்வள மேலாண்மை, பாசன வசதிகள் விரிவாக்கம் மற்றும் நிலையான வேளாண் வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்றார்.</p><p>இக்கூட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தலைமை வகிக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி, கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செ.கமலி, வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் முனைவர் வி.கே.ராஜீவ், </p><p>வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் - வேளாண்மை–உழவர் நலத்துறை முனைவர் பொ.சங்கர், வேளாண்மை இயக்குநர் முனைவர் க.வீ.முரளிதரன், துறை சார்ந்த அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தான்: நகைக்கடையில் கொள்ளை முயற்சி - துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்களை துணிச்சலாக எதிர்த்த ஊழியர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rajasthan-attempted-robbery-at-a-jewelry-store-staff-bravely-confronted-robbers-who-entered-with-a-gun</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rajasthan-attempted-robbery-at-a-jewelry-store-staff-bravely-confronted-robbers-who-entered-with-a-gun#comments</comments><guid isPermaLink="false">ac4f5768-cdf0-4aef-87c3-2f7e1f1ce552</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:37:37 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:37:37.745Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜஸ்தான்,Rajasthan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/t4oa9g53/National-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/t4oa9g53/National-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஜெய்ப்பூர்,</p><p>ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை முயற்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அருகே அமைந்துள்ள நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அவர்கள் கைகளில் துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.</p><p>அந்த சமயத்தில் ஊழியர் ஒருவர் பாதுகாப்பு எச்சரிக்கை மணியை ஒலிக்க விட்டார். இதையடுத்து கடையில் இருந்த அனைத்து ஊழியர்களும், பாதுகாவலர்களும் துணிச்சலாக செயல்பட்டு கொள்ளையர்களை எதிர்த்து, கொள்ளை முயற்சியை தடுக்க முயன்றனர். </p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் கடையில் இருந்து தப்பியோடினர். அவர்கள் செல்லும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி - பொதுமக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-wanders-into-residential-area-in-kotagiri-public-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-wanders-into-residential-area-in-kotagiri-public-alarmed#comments</comments><guid isPermaLink="false">a7c1b470-300f-4cce-8442-c2d4779d01df</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:24:17 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:24:17.016Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,கரடி,bear</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/xh18dcsd/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/xh18dcsd/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கார்சலையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் கரடி ஒன்று உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. செடிகளுக்குள் இருந்து வெளியே வந்த கரடியை பார்த்த மக்கள் உடனடியாக வீடுகளுக்குள் ஓடி கதவுகளை பூட்டிக் கொண்டனர். </p><p>சாலையில் நின்று பேசி கொண்டிருந்தவர்கள் கரடியை பார்த்ததும் ஓடிச் சென்று வீட்டிற்குள் தஞ்சமடைந்தனர். பின்னர் அந்த கரடி அருகில் இருந்த வனப்பகுதிக்குள் ஓடி மறைந்ததாக கூறப்படுகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்திக்கும் குடியிருப்புகளுக்குள் தொடர்ந்து கரடிகள் உலா வருவதால் வனத்துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆடித்தபசு விழா.. தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/devotional/aadi-thapasu-festival-local-holiday-for-tenkasi-district-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/devotional/aadi-thapasu-festival-local-holiday-for-tenkasi-district-tomorrow#comments</comments><guid isPermaLink="false">4ec3f5c0-2fda-487a-82e8-9a50d53f1472</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:24:10 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:24:10.610Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>Aanmigam,Devotional,ஆன்மிகம்,Tenkasi,தென்காசி,Local Holiday,உள்ளூர் விடுமுறை,Sankarankovil,சங்கரன்கோவில்,ஆடித்தபசு காட்சி,ஆடித்தபசு திருவிழா,Aadi Thabasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/dtlk6jgd/sankarankoil-therottam2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடைபெற்ற ஆடித்தபசு திருவிழா தேரோட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு  28-7-2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/dtlk6jgd/sankarankoil-therottam2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (Devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் வெவ்வேறு வாகனத்தில் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.</p><p>விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் கோமதி அம்பாள் எழுந்தருளி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.</p><h2>நாளை உள்ளூர் விடுமுறை</h2><p>விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி, 11-ம் திருநாளான நாளை (28-7-2026) நடைபெறுகிறது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடித்தபசு விழாவில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. </p><p>ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு நாளை (28-7-2026) <a href="https://www.dailythanthi.com/topic/local-holiday">உள்ளூர் விடுமுறை</a> அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு தேர்வுகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வேலைநாளாக பின்பற்றப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.</p><h2>நாளைய நிகழ்ச்சிகள்</h2><p>ஆடித்தபசு காட்சியை முன்னிட்டு நாளை காலை கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/abhishekam">சிறப்பு அபிஷேகம்</a>, காலை 8.30 மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறும்.</p><p>பகல் 12 மணிக்கு மேல் கோமதி அம்பாள் தங்கச்சப்பரத்தில் தெற்கு ரத வீதியில் உள்ள ஆடித்தபசு மண்டகப்படிக்கு எழுந்தருள்கிறார். மாலை 4.30 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், 6.05 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/aadi-thabasu">கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி</a> கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.</p><p>இரவு 11 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.</p>]]></content:encoded></item><item><title>சோழிங்கநல்லூர் கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-consumer-grievance-redressal-meeting-to-be-held-tomorrow-in-sholinganallur-division</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-consumer-grievance-redressal-meeting-to-be-held-tomorrow-in-sholinganallur-division#comments</comments><guid isPermaLink="false">51bd7484-afee-4ab0-afa0-37d34f5726a7</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:03:23 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:03:23.508Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சோழிங்கநல்லூர்,Sholinganallur,மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்,Electricity Consumer Grievance Redressal Meeting</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/74heo0cl/eb.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/74heo0cl/eb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சோழிங்கநல்லூர்,</p><p>தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>சோழிங்கநல்லூர் கோட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்</a> 28.07.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், செயற் பொறியாளர் / இயக்கம் &amp; பராமரிப்பு /சோழிங்கநல்லூர், சேரன் நகர், பெரும்பாக்கம், சென்னை-100. (110 கி.வோ பெரும்பாக்கம் துணைமின் நிலையம் அருகில்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.</p><h2> மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்</h2><p>சோழிங்கநல்லூர் (மேடவாக்கம், நன்மங்கலம், ஜல்லடியன்பேட்டை, கௌரிவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர், நாராயணபுரம், சித்தாலப்பாக்கம் அரசன்காலனி, பெரும்பாக்கம்) ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்சாரத்துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் சென்னை மி.ப.வ/தெற்கு-2 அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>குற்றாலம்: மழை இல்லாததால் வறண்ட புலியருவி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/courtallam-puliyaruvi-dried-up-due-to-the-lack-of-rain</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/courtallam-puliyaruvi-dried-up-due-to-the-lack-of-rain#comments</comments><guid isPermaLink="false">456fd282-de0d-423b-a3f1-b090638fd28a</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:00:53 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:00:53.083Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றாலம் அருவி,Courtallam Falls,புலியருவி,Puliyaruvi</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/zewsd2jt/12.gif" width="721"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/zewsd2jt/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,  </p><p>தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களில் தற்போது முற்றிலுமாக மழை இல்லை. வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான நீரோடைகள் வறண்டு காட்சியளிக்கின்றன.</p><p>இந்த மலைப்பகுதியில் உள்ள நீரையே பிரதானமாக கொண்டிருக்கும் குற்றாலம் அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. பிரதான அருவியான மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்திற்கு உள்ளேயே குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது. இதேபோல் பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் மிகவும் குறைந்த அளவிலேயே விழுகிறது. புலியருவி முற்றிலும் வறண்டு தண்ணீரின்றி வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கிறது. </p><p>இதனால் புலியருவியில் நேற்று குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.</p><p>எனினும் அவர்கள் ஐந்தருவியில் ஐந்து கிளைகளில் மிதமாக விழும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். அதுபோல் மெயின் அருவியில் குளித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>மேகதாது அணை கட்டுவதை தடுக்க உடனடி சட்ட நடவடிக்கை தேவை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-legal-action-is-needed-to-stop-the-construction-of-the-mekedatu-dam-perunthalaivar-makkal-katchi-resolution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-legal-action-is-needed-to-stop-the-construction-of-the-mekedatu-dam-perunthalaivar-makkal-katchi-resolution#comments</comments><guid isPermaLink="false">d0cda73f-73ec-47b4-8024-46daa9044186</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:44:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:44:11.140Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நடவடிக்கை,தீர்மானம்,Legal Action,மேகதாது அணை திட்டம்,Mekedatu Dam Issue,பெருந்தலைவர் மக்கள் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/p5pvzg3y/84.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/p5pvzg3y/84.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> பெருந்தலைவர் மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடகா அரசின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற பெருந்தலைவர் மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் ஒரு மனதாக <a href="https://ailythanthi.com/search?q=தீர்மானம்%20">தீர்மானம் </a>நிறைவேற்றியுள்ளது இதுகுறித்த விபரம் வருமாறு:-</p><p>பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ASG திருமண மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>மாநில அமைப்பு செயலாளர் புழல் A.தர்மராஜ் தொடக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்து நடைபெற உள்ளாட்சி தேர்தல் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் செயல்பாடுகள், பங்களிப்பு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நிறைவாக கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களின் விளக்க உரையை ஏற்று கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை டெல்டா பகுதியை பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுத்து, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேவையான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.</p><h2>காமராஜரின் நினைவிடத்தில் அஞ்சலி</h2><p>பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் அன்று தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் விஜய் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நேரில் வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செய்தமைக்கு இக்கூட்டம் முதல்-அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது. அதேபோன்று அவரது நினைவு நாளான அக்டோபர் 2-ம் தேதி கிண்டியிலுள்ள காமராஜரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திட வேண்டும் என்று இக்கூட்டம் முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறது.</p><h2>கள் இறக்க அனுமதி</h2><p>ஆந்திரப்பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கள் இறக்கும் பனைத் தொழிலாளியின் குடிலுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்துடன் பேசி மகிழ்ந்து கள் குடித்து பனைத் தொழிலாளியை உற்சாகப்படுத்தியதும், அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்றுக் கொள்ள அனுமதி வழங்கியிருப்பது போல் தமிழ்நாட்டிலும், பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள், பதநீர் இறக்கி விற்றுக்கொள்ள பனைத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.</p><h2>காமராஜர் காலை உணவு திட்டம்</h2><p>தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை வருகிற செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா, அச்சம் அகற்றிய அண்ணல் WPA.சௌந்தரபாண்டியனார் ஆகியோரின் பிறந்தநாள் முதல் இத்திட்டம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு விரிவுபடுத்தியும் இத்திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயர் சூட்டியும் அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.</p><p>மத்திய அரசு நடத்திய நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்து கேள்விகள் வெளியானதில் நடந்த முறைகேட்டை கண்டித்து டெல்லியில் நடந்த மாணவர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெல்லி காவல்துறை தண்ணீர் பாய்ச்சியும், தடியடி நடத்தியும் மாணவர்களை காயப்படுத்தியதில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.</p><p>நிறைவாக விழுப்புரம் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.செந்தில்குமார் நன்றி கூற இனிதே முடிந்தது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அப்துல் கலாமின் அரும்பெரும் பணிகளை நினைவில் வைத்து போற்றிடுவோம்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-cherish-and-honor-the-magnificent-contributions-of-abdul-kalam-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-cherish-and-honor-the-magnificent-contributions-of-abdul-kalam-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">e6c726c7-5f2a-4486-8501-0a0f03e6bd01</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:37:05 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:37:05.948Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Abdul Kalam,அப்துல் கலாம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0xrj71lb/11.gif" width="721"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0xrj71lb/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், இளைய சமுதாயத்தினரின் எழுச்சிக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவரும், இளைஞர்களை கனவு காணச் சொன்னதோடு, அதனை நனைவாக்க உழைக்கவும் கற்றுத்தந்த மகத்தான மாமனிதருமான குடியரசு முன்னாள் தலைவர் ஏவுகணை நாயகர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று. </p><p>எளிமையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலமாக உலகமே வியக்கும் விஞ்ஞானியாக உயர்ந்ததோடு, குடியரசுத் தலைவர் எனும் உயரிய பதவிக்குச் சென்ற பின்பும் எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்து நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு - சேலம் இடையே பராமரிப்பு பணிகள்: கேரள ரெயில்கள் தாமதமாக இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-between-erode-salem-kerala-trains-will-run-behind-schedule</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-between-erode-salem-kerala-trains-will-run-behind-schedule#comments</comments><guid isPermaLink="false">433fb916-e6ae-4f42-99ba-c66053baea09</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:21:38 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:21:38.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>maintenance work,பராமரிப்பு பணிகள்,கேரள ரெயில்கள்,Kerala-bound Trains</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/isi9bxgm/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/isi9bxgm/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,  </p><p>ஈரோடு - சேலம் இடையே உள்ள மகுடஞ்சாவடி பகுதியில் ரெயில் தண்ட வாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கேரள ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-</p><p>இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை), 1-ந் தேதி. 3-ந் தேதி ஆகிய நாட்களில் எர்ணாகுளம் டாடா நகர் விரைவு ரெயில் (எண்: 18190) 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இதேபோல் மேற்கண்ட நாட்களில் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரெயில் (எண்: 13352) 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.</p> ]]></content:encoded></item><item><title>அமைச்சர்களின் முரண்பட்ட தகவல்: பெங்களூருவில் ஆகஸ்டு 3-ந்தேதி விஜய் - டி.கே.சிவக்குமார் சந்திப்பு நடக்குமா? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/conflicting-statements-from-ministers-will-the-meeting-between-vijay-and-dk-shivakumar-take-place-in-bengaluru-on-august-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/conflicting-statements-from-ministers-will-the-meeting-between-vijay-and-dk-shivakumar-take-place-in-bengaluru-on-august-3#comments</comments><guid isPermaLink="false">fabab782-581a-42fb-8c37-3705f49ad118</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:20:39 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:20:39.429Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டி.கே.சிவக்குமார்,D.K.Sivakumar,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/8zk5chlg/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/8zk5chlg/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அமைச்சர்களின் முரண்பட்ட தகவலால், பெங்களூருவில் ஆகஸ்டு 3-ந் தேதி விஜய் - டி.கே.சிவக்குமார் சந்திப்பு நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><h2>மேகதாது அணை பிரச்சினை</h2><p>கர்நாடகாவில் இருந்து காவிரி வழியாக இந்த ஆண்டு தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால், எங்களுக்கே விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு மறுத்துவிட்டது. </p><p>இதுவொரு பிரச்சினை என்றால், மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருவது மற்றொரு பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே, கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே 4 இடங்களில் அணை கட்டப்பட்டுள்ளது. மேகதாதுவிலும் அணை கட்டினால், தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் மேலும் குறையும். </p><h2>எம்.ஜி.ஆர். பாணியில் விஜய் </h2><p>இதனால், மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பாணியில், கர்நாடக முதல்-மந்திரியை சென்று சந்திக்க, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொண்டார். </p><p>அதன்படி, ஆகஸ்டு 3-ந் தேதி பெங்களூருவில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது. இதை தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தினார். ஆனால், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மறுத்தார். </p><p>இது தொடர்பாக, கருத்து தெரிவித்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், "முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகா செல்லும் முடிவை அவருடைய அலுவலகமே அறிவிக்கும்" என்று தெரிவித்துள்ளார். </p> <h2>அமைச்சர்களின் முரண்பட்ட தகவல் </h2><p>இப்படி, அமைச்சர்களின் முரண்பட்ட தகவலால், திட்டமிட்டபடி ஆகஸ்டு 3-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூரு சென்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்திப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் தமிழக எல்லையில் போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழக எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் விஜய்யின் பெங்களூரு பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். </p><h2>சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை </h2><p>எனவே, பெங்களூரு சென்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்திக்கலாமா? அல்லது ரத்து செய்யலாமா? என்று முதல்-அமைச்சர் விஜய் யோசித்து வருகிறார். காவிரி, மேகதாது பிரச்சினையை சட்ட ரீதியாக சந்திக்கலாமா? என்று சட்ட வல்லுநர்களுடன் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthuppandi-who-won-silver-in-the-commonwealth-games</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthuppandi-who-won-silver-in-the-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">df70b830-abac-4ec7-9b36-0501feb8d1e4</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:17:16 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:17:16.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Commonwealth Games,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/uz110esb/8.gif" width="721"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/uz110esb/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;</p><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும்   23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.</p><p>ராஜா முத்துப்பாண்டியின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.  அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>&apos;கனவு காணுங்கள்; செயல்படுத்துங்கள்&apos; – கலாமின் இலட்சியத்தை முன்னெடுப்போம் - அண்ணாமலை புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dream-it-make-it-happen-lets-carry-forward-kalams-ideals-annamalai-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dream-it-make-it-happen-lets-carry-forward-kalams-ideals-annamalai-tribute#comments</comments><guid isPermaLink="false">41abe9ee-966b-4614-94cd-6dac408600b1</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:02:27 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:02:27.349Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,Memorial Day,Abdul Kalam,அப்துல் கலாம் நினைவு தினம்,புகழஞ்சலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/b5qizv1y/83.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/b5qizv1y/83.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம்,</p><p> ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலகம் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். </p><h2>இளைஞர்களின் கனவு</h2><p>"கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்" என்ற அவரது வாழ்வியல் தத்துவம்,  நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக அவர் விதைத்த விதைகள், நம் தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.</p><p>வளர்ந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. டாக்டர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அப்துல் கலாம் </a>அவர்களின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட் தொடர்பாக 10 அமைச்சர்கள் கருத்துக் கேட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-ministers-asked-for-their-opinions-on-the-agriculture-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-ministers-asked-for-their-opinions-on-the-agriculture-budget#comments</comments><guid isPermaLink="false">5fec192f-0445-4d4a-bfa1-c3c68cdbc9db</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:54:35 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:54:35.058Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வேளாண் பட்ஜெட்,agriculture budget,TN Budget,TN Agriculture Budget,அமைச்சர் வினோத்,Minister Vinoth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/6wj5p6r1/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/6wj5p6r1/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>வேளாண் பட்ஜெட்</h2><p>தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரியவில்சன் பேரவையில் தாக்கல் செய்கிறார். மறுநாள் (வியாழக்கிழமை) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை அத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‎வேளாண்துறை அமைச்சர் வினோத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், வினோத், ஶ்ரீநாத், ராஜலட்சுமி, கமலி, விஜய் பாலாஜி , ரஞ்சித் குமார், மதன் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதைபோல விவசாயிகள், முட்டை உற்பத்தியாளர்கள், கைத்தறித்துறையினர், வங்கி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.</p><h2>முக்கிய அறிவிப்புகள்</h2><p>கூட்டத்தில் பேசிய அமைச்சர் வினோத், இதுவரை நான்கு மண்டல அளவிலான கூட்டம் நடத்தி உள்ளோம். சென்னையை தவிர மற்ற மாவட்ட விவசாயிகளிடம் கருத்துகள் கேட்டு முதல்-அமைச்சரிடம் வழங்கியுள்ளோம். விவசாயிகளிடம் கருத்துகள் கேட்டு வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. கால்நடை, மீன்வளம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கு வேளாண் நிதிநிலையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும்.</p><p>விவசாயிகள் வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் கவனமாக பரிசிலிக்கப்படும். குளிர் சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் உற்பத்தி மட்டும் அதிகரித்தால் போதாது விவசாயிகளின் வாழ்வதாரமும் உயர வேண்டும். பெண் விவசாயிகளுக்கும் இந்த அரசு முன்னுரிமை அளிக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூரில் போலீசார் இரவு நேரத்தில் திடீர் ரோந்து: சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த அதிரடி நடவடிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/surprise-night-patrols-by-police-in-tirupattur-decisive-action-to-strengthen-law-and-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/surprise-night-patrols-by-police-in-tirupattur-decisive-action-to-strengthen-law-and-order#comments</comments><guid isPermaLink="false">016142ec-f886-478e-b3f1-59a51afc13ca</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:46:34 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:46:34.816Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/4drqouw0/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/4drqouw0/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய் அனில் வாகரே தலைமையில் காவல் துறையினரின் இரவு நேர சிறப்பு ரோந்து பணி மற்றும் அணிவகுப்பு நடைபெற்றது. </p><p>திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம், தண்டபாணி கோவில் தெரு உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடைபெற்றன. </p><p>சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீரென இரவு நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் நாளை 
நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protests-scheduled-to-take-place-in-government-medical-colleges-across-tamil-nadu-tomorrow-evening-have-been-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protests-scheduled-to-take-place-in-government-medical-colleges-across-tamil-nadu-tomorrow-evening-have-been-cancelled#comments</comments><guid isPermaLink="false">3d1dd5f0-bf3d-41b7-b1e7-de9a86aafc47</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:35:47 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:35:47.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆர்ப்பாட்டம்,ரத்து,cancelled,protests,Government Medical Colleges,அரசு மருத்துவக்கல்லூரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/edqejkty/tnmsa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/edqejkty/tnmsa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் இளைஞர்கள் மீது&nbsp;&nbsp;டெல்லி காவல்துறை கடுமையான தாக்குதல் நடத்தியதை&nbsp;&nbsp;கண்டித்தும் , நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று&nbsp;&nbsp;தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், "நீட்" மற்றும் "நெக்ஸ்ட்" தேர்வுகளில் இருந்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ மற்றும்&nbsp;&nbsp;பல்மருத்துவ இடங்களுக்கு விலக்கு வழங்கிட வேண்டும், தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் 100 விழுக்காடு மருத்துவ இடங்களுக்கும் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்.</p><h2>கம்யூனிட்டி இட ஒதுக்கீடு</h2><p>ஏழை மாணவர்களின் கல்வி, விடுதி, உணவு கட்டணங்களை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளே ஏற்க&nbsp;&nbsp;வேண்டும். வட்டியில்லாத கல்விக் கடன்களை எந்த நிபந்தனையுமின்றி மாணவர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட&nbsp;&nbsp;வங்கிகள் மூலம் வழங்கிட வேண்டும்.&nbsp;&nbsp;அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ - பல் மருத்துவ&nbsp;இடங்களில் உள் ஒதுக்கீட்டை வழங்கிட NMC Act மற்றும் NDC Act ல் திருத்தம் செய்திட வேண்டும், தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களிலும் கம்யூனிட்டி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வேண்டும். மாப் அப் மற்றும் ஸ்ட்ரே கவுன்சிலிங்கை ரத்து செய்ய வேண்டும். </p><h2>கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டம்</h2><p>கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தை கடுமையாக்கி நடைமுறை படுத்திட வேண்டும். கட்டாய நன்கொடை மற்றும் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்யும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களை எந்த இழப்பீடுமின்றி அரசுடமையாக்கிட சட்டம் கொண்டுவர வேண்டும். மருத்துவக்கல்வி மற்றும் அரசு மருத்துவமனைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். பொதுசுகாதாரத்துறையை வலுப்படுத்திட வேண்டும், மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கி ,பொது தனியார் பங்களிப்பு முறையில் ( PPP model ) மருத்துவக் கல்லூரிகளை தொடங்கிட அனுமதிக்கக் கூடாது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின், கல்வி, விடுதி மற்றும் உணவுக் கட்டணத்திற்கான நிதியை, இன்றைய விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசு உயர்த்திட வேண்டும். </p><h2>கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து</h2><p>தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் , மாணவர்கள் நல வாரியம் (welfare board),பாதுகாப்பு குழு (security committee),மாணவர் மன்றங்களை (students council) அமைத்திட வேண்டும் .ICC உட்புகார் குழுக்களை (விஷாகா கமிட்டிகளை ) அமைத்திட வேண்டும். பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி வழங்கக் கூடாது. பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு&nbsp;&nbsp;மாணவர்களின் பயிற்சி கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும். சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு&nbsp;&nbsp;கூடுதலாக ஒரு கல்லூரி பேருந்தை&nbsp;&nbsp;தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (28.07.2026) மாலை தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில்&nbsp;&nbsp;நடைபெற இருந்த கண்டன <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்ப்பாட்டம் </a>ரத்து செய்யப்படுகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அப்துல் கலாம் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/abdul-kalams-death-anniversary-nainar-nagendran-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/abdul-kalams-death-anniversary-nainar-nagendran-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">9bebd2d8-91cf-4496-ac8e-240cbfe215ec</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:32:42 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:32:42.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Abdul Kalam,அப்துல் கலாம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/qgo11tnd/7.gif" width="721"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/qgo11tnd/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”மக்களின் மனதில் என்றும் அழியாத இடத்தைப் பெற்ற முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் பாரத ரத்னா, பத்ம விபூஷன், மற்றும் பத்ம பூஷன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>“கனவு காணுங்கள்; அந்தக் கனவை நனவாக்க உழையுங்கள்” என்ற அவரது வார்த்தைகள் இன்று வரை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் ஊக்கமாகவும் திகழ்கின்றன. அறிவு, எளிமை, நேர்மை, தேசப்பற்று ஆகியவற்றின் ஒளிவிளக்காக அவர் என்றும் வாழ்கிறார்.</p><p>அவரது உயரிய சிந்தனைகளும், தன்னலமற்ற சேவையும், இந்தியாவின் வளர்ச்சிக்காக அவர் கண்ட கனவும் தலைமுறைகள் தழுவி நம்மை வழிநடத்தட்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உட்கட்சி பூசல்களுக்கு இடையே அடுத்த மாதம் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-working-committee-meeting-next-month-amid-internal-party-disputes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-working-committee-meeting-next-month-amid-internal-party-disputes#comments</comments><guid isPermaLink="false">7ad8697f-1ed2-4db7-9ac4-2d46767039ea</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:27:19 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:27:19.480Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,Committee Meeting,செயற்குழு கூட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/5jc2fex2/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/5jc2fex2/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><h2>அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் </h2><p>இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்று விதி இருக்கின்றது. அதன்படி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க., ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை பிரமாண்டமாக கூட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. </p><p>ஆனால், இந்த ஆண்டு சற்று முன்னதாக அடுத்த மாதமே (ஆகஸ்டு) அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. </p><h2>மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை</h2><p>ஏற்கனவே, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் தலைதூக்கியுள்ள நிலையில், அதை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 85 மாவட்டங்கள் இருக்கின்றன. சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக, கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து பேசி வந்தார். கூட்டத்திற்கு வராதவர்களின் பெயர்களை தனியாக குறித்து வைத்துக்கொண்டார். இந்த கூட்டம் கடந்த 25-ந் தேதியுடன் முடிவடைந்தது.</p><h2>அதிருப்தியாளர்களை நீக்க திட்டம்</h2><p>இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், பி.தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இதேபோல், எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழி தேவன், சுகுமார், ராகேஷ் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்ளாத அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.</p><p>அதிருப்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளதாம். அதற்கு உடன்படாதவர்களை கட்சியைவிட்டு நீக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம். காலியாகும் கட்சிப் பதவிகளுக்கு உடனடியாக நிர்வாகிகளையும் நியமித்து, அடுத்த மாதம் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தையும் கூட்ட எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருகிறாராம்.</p><h2>உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவு</h2><p>உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எனவே, முக்கிய நிர்வாகிகள் கூட உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-7</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-7#comments</comments><guid isPermaLink="false">79463e6f-aad4-417c-8159-076c379b0071</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:18:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:18:59.313Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power outage,மின் தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ugh011ix/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ugh011ix/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சா வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,</p><h2>ஐடி காரிடார்</h2><p>எம்சிஎன் நகர் மற்றும் விரிவாக்கம், பவுண்டரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, மேப்பிள் அவென்யூ, குளக்கரை தெரு, ஆறுமுகம் நகர் மற்றும் குமரன் நகர், குமரன் நகர், குமரன் நகர் ஆர்.ஈ. நகர், செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், கார்ப்பரேஷன் சாலை, செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு. ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலைவ் நகர், ராமன் நகர், திருமலை, சிபிஐ நகர். மெயின் ரோடு, ஐஐடி காலனி, மீனாட்சிபுரம், மனோகர் நகர், விஜிபி சாந்தி நகர்.</p><h2>ராமாபுரம்</h2><p>மணப்பாக்கம், கிருஷ்ணா நீதிமன்றம், சிஆர்ஆர் புரம், கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, இந்திரா நகர், மற்றும் எம்ஜிஆர் நகர், ஸ்ரீராம் கார்டன், லட்சுமி நகர், பிள்ளையார் கோவில் தெரு. மைக்ரோ மார்வெல், தர்மராஜபுரம், காசாகிராண்ட் உட்சைட் மற்றும் கோட்டை, டி.வி.எஸ். எமரால்டு.</p> <h2>மேடவாக்கம்</h2><p>படேல் கம்பெனி சாலை, ஏரிக்கரை தெரு, சிபிஐ காலனி 1-7வது தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, பெல் நகர் 1-5வது தெரு, சிவகாமி நகர், பஜனை கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ரங்கநாதபுரம், பிரின்ஸ் கல்லூரி.</p><h2>வளசரவாக்கம்</h2><p>விருகம்பாக்கம், ஆழ்வார்திரு நகர்.</p><h2>நொளம்பூர்</h2><p>எஸ்&amp;பி கார்டன், விஜிஎன் மான்டே கார்லோ, எஸ்ஆர்ஆர் நகர், ராஜா கார்டன் ஏரியா, குருசாமி சாலை, நொளம்பூர் முதல் மற்றும் இரண்டாம் யூனியன் சாலை, விஜிஎன் நகர் கட்டம் I-IV, பிளாக்ஸ் 1-8வது, கம்பர்சாலை, கவிமணிசாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, எம்.கே.லாட் பல்கலைக்கழகம், ரெட்டி. பனஞ்சோலை தெரு, மாதா கோவில் பகுதி, பெருமாள் கோவில் பகுதி, கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீ ராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பாடசாலை தெரு.</p><h2>ஆதம்பாக்கம்</h2><p>நிலமங்கை நகர், கேசரி நகர், சாந்தி நகர், சுரேந்தர் நகர், பாரதிதாசன் தெரு, பாரத் நகர்.</p> ]]></content:encoded></item><item><title>‘சுங்கக் கட்டண கொள்ளையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-must-withdraw-the-highway-toll-robbery-tamil-nadu-congress-leader-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-must-withdraw-the-highway-toll-robbery-tamil-nadu-congress-leader-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">63bc75fd-40fa-441d-ae3a-8e031555e227</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:08:38 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:08:38.381Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,சுங்கக் கட்டணம்,Manickam Tagore MP,toll booth fare</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/swko1rhi/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/swko1rhi/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“நெடுஞ்சாலைகளையே தான் கண்டுபிடித்தது போல, எப்போதும் தற்பெருமை பேசி வருபவர் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. 'நெடுஞ்சாலைத் துறை ஹீரோ” என்று, தனக்குத் தானே தம்பட்டம் அடித்து மகிழ்ச்சி அடையும் அமைச்சராகவும் அவர் இருக்கிறார்.</p><p>மோடி ஆட்சியில் நெடுஞ்சாலைகள் என்பது, சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் வழியாக மாறிவிட்டன. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையாலும், மொத்த விற்பனை விலைக் குறியீடு  அடிப்படையிலானகணக்கீட்டுச் சொதப்பலாலும், கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.</p><p>பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருள் விலை உயர்வு,  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், மக்கள் பெரும்  சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, நடுத்தர குடும்பங்களையும், வாடகை வாகன ஓட்டுநர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆனால், இது பற்றியெல்லாம் கவலைப்படாமல், ‘நெடுஞ்சாலைகளை அமைத்து விட்டோம் - இந்தியா வளர்ந்து விட்டது" என்று தினமும் பொய் கதைகளைப் பரப்பி வருகின்றனர்.</p><p>தமிழ்நாட்டில் உள்ள 80 சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ரூ. 4,200 கோடிக்கு அதிகமாக மோடி அரசு வசூல் செய்து வருகிறது. அதன் பிறகும் அடங்காமல், லாரிகளுக்கு ரூ. 30 வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்தி, மீண்டும் தமிழக மக்களுக்கு 'அல்வா” கொடுத்துள்ளது.</p><p>லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பிடுங்கும்  திருட்டு பாஜக அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது. சுங்க கட்டண உயர்வை மோடி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்  சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. ஆனால், தமிழகத்திற்கு எந்த திட்டங்களை தராமல், கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. ரயில்வே துறைக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் தமிழ்நாட்டிற்கு, 'வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்” ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டை வெறும் பணம் காய்க்கும் மரமாக மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அந்த மரத்தையே வெட்ட நினைக்கும் மோடி  அரசுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலுவான குரல் எழுப்புவோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>30 மாத்திரைகளை தின்று 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை... சேலத்தில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10th-grade-student-commits-suicide-after-consuming-30-pills-stir-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10th-grade-student-commits-suicide-after-consuming-30-pills-stir-in-salem#comments</comments><guid isPermaLink="false">ff2b6bee-f06c-4e10-b1ca-3be9bfe40634</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:58:10 +0000</pubDate><atom:updated>2026-07-27T04:58:10.798Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Salem,கிரைம் செய்திகள்,தற்கொலை,Suicide,சேலம்,பள்ளி மாணவி,school girl</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/y7mota1o/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/y7mota1o/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த எம்.செட்டிப்பட்டி மொட்டையன் தெருவை சேர்ந்தவர் சிவக்கு மார். இவருடைய மனைவி வரலட்சுமி (வயது 35). இவர்களுக்கு தேவி ஸ்ரீ (14) என்ற மகளும், நிதிஷ் (7) என்ற மகனும் இருந்தனர். சிவக்குமார் வீட்டு உபயோக பொருட்கள், சோப்பு, சலவை தூள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். தேவி ஸ்ரீ அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள்.</p><p>மாணவி தேவி ஸ்ரீ அடிக்கடி செல்போன் பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவளை கண்டித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 8.30 மணியளவில் மாணவி செல்போன் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் செல்போன் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்றும், நீ எப்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெறுவாய் என்றும் மாணவியை பெற்றோர் திட்டி செல்போனை பிடுங்கியதாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து பள்ளிக்கு சென்ற தேவி ஸ்ரீ மதியம் 12.30 மணி யளவில் வயிறு வலிப்பதாக ஆசிரியரிடம் கூறி உள்ளாள். இது குறித்து தகவல் அறிந்த தேவி ஸ்ரீயின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் மாணவியிடம் விசாரித்ததில் நீங்கள் திட்டியதால் பள்ளியில் கொடுத்த 10 சத்து மாத்திரைகளை வீட்டில் வைத்து தான் தின்றதாகவும், பள்ளியில் வைத்து மேலும் 20 மாத்திரைகளை தின்று விட்டதாகவும் கூறி உள்ளாள்.</p><p>இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத் துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தேவி ஸ்ரீ அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்த புகாரின்பேரில் தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கூவம் தூர்வாரும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி: போக்குவரத்து நெரிசலால் பைக்கில் வந்த அமைச்சர் ஆனந்த் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coovam-dredging-works-inauguration-minister-anand-arrives-on-a-bike-due-to-traffic-congestion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coovam-dredging-works-inauguration-minister-anand-arrives-on-a-bike-due-to-traffic-congestion#comments</comments><guid isPermaLink="false">50e37076-0322-42cc-aacb-0e34017ec9d8</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:53:24 +0000</pubDate><atom:updated>2026-07-27T04:53:24.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கூவம் ஆறு,dredging work,தூர்வாரும் பணிகள்,Koovam River,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/9fg5qw56/82.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/9fg5qw56/82.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கோயம்பேடு அருகே பாடிகுப்பம் பகுதியில் நடைபெற்ற கூவம் தூர்வாரும் பணிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அமைச்சர் என். ஆனந்த் தவெக நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் நிகழ்ச்சி இடத்துக்கு வந்தார்.</p><p>சென்னை கோயம்பேடு அருகில் உள்ள பாடிகுப்பம் கூவம் பகுதியில்,  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலையில் நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் அமைச்சர் வந்து கொண்டிருந்தார்.  </p><h2>அமைச்சர் ஆனந்த் கள ஆய்வு</h2><p>ஆய்வு நடைபெறும் இடத்திற்கு வரும் வழியில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் சென்றால் காலதாமதம் ஏற்படும் என்பதால், அமைச்சர் என்ற ஆடம்பரத்தை விடுத்து உடனடியாக தவெக நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் (பைக்) நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வேகமாக வந்து சேர்ந்தார். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் ஆனந்த்</a> காரைத் தவிர்த்து பைக்கில் வந்து பணிகளைத் தொடங்கி வைத்ததுடன், கூவம் ஆற்றுப் பகுதியில் களமிறங்கி பணிகளின் நிலவரத்தையும் ஆய்வு செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர் பட்டாசு குடோனில் வெடி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/explosion-at-virudhunagar-firecracker-godown-death-toll-rises-to-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/explosion-at-virudhunagar-firecracker-godown-death-toll-rises-to-5#comments</comments><guid isPermaLink="false">d143adcf-5e17-4c43-8f57-4dca88b6e2df</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:50:39 +0000</pubDate><atom:updated>2026-07-27T04:50:39.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,பட்டாசு ஆலை விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/xsdiu7ru/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/xsdiu7ru/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி,</p><p>சட்டவிரோதமாக செயல்பட்ட குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><h2>பட்டாசு குடோன்</h2><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p><h2>கரும்புகை</h2><p>பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், விண்ணை முட்டும் அளவிற்கு அடர்ந்த கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தின் காரணமாக சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு பலத்த அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.</p><h2>4 பேர் பலி</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், போலீசார், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் குடோனில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.</p><h2>உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு</h2><p>வெடி விபத்தில் ஏற்கனவே 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 90 சதவீத தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>அப்துல் கலாமின் அரும்பணிகளை என்றும் போற்றுவோம்: வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-always-cherish-the-achievements-of-abdul-kalam-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-always-cherish-the-achievements-of-abdul-kalam-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">d8c98fea-5bca-470a-9671-2f928fd05ac7</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:25:21 +0000</pubDate><atom:updated>2026-07-27T04:25:21.752Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Abdul Kalam,அப்துல் கலாம்,நினைவு தினம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/nu8lc5f0/81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/nu8lc5f0/81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தில் நாட்டிற்காகவும், மாணவர்களுக்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்.</p><h2>இலட்சியப் பாதை</h2><p>டாக்டர் ஏ.பி.ஜே. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அப்துல் கலாம்</a> அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் பாதுகாப்புத் துறையில் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற மாமனிதர். மேலும் எளிமை, நேர்மை, தேசப்பற்று மற்றும் மாணவர்கள் மீதான அளவற்ற நம்பிக்கையால் இளம் தலைமுறைகளை ஊக்குவித்தவர்."கனவு காணுங்கள்; அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள்" என்ற அவரது இலட்சியப் பாதை என்றும் நமக்கு வழிகாட்டும்</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு... மக்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-and-curd-prices-rise-in-tamil-nadu-people-are-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-and-curd-prices-rise-in-tamil-nadu-people-are-shocked#comments</comments><guid isPermaLink="false">82ea6417-e7eb-4074-8a99-84e278643e71</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:09:07 +0000</pubDate><atom:updated>2026-07-27T04:09:07.889Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,பால் விலை,milk price,பால் விலை உயர்வு,milk price hike</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/5ecxxsw2/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/5ecxxsw2/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>பால் உற்பத்தி சரிவு</h2><p>இந்தியா முழுவதிலும் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியிலும் கடந்த ஓராண்டாகவே பால் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. இதனால், தனியார் பால் நிறுவனங்கள், பால் வணிகத்தை தக்கவைத்துக்கொள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வருகின்றன.</p><h2>தனியார் பால் நிறுவனம்</h2><p>இந்த நிலையில், தமிழகத்தில் நடப்பாண்டில் 2-வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆரோக்யாவை தொடர்ந்து, அமிர்தா, வேதா, சன், ராஜ், சக்ரா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட நிறுவனங்கள் நிகழாண்டில் 2-வது முறையாக பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளன.</p><h2>ஊக்கத் தொகை</h2><p>பால் உற்பத்தி குறைவு, கொள்முதல் விலை மற்றும் மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக விலை உயர்த்தப்பட்டாலும், பால் முகவர்களின் 'கமிஷன்' மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை.</p><p>எரிபொருள், கடை வாடகை, ஊழியர் ஊதியம் உள்ளிட்ட செலவுகளைக் கருத்தில் கொண்டு, பால் முகவர்களுக்கு சதவீத அடிப்படையில் கமிஷன் மற்றும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இந்த ஆண்டில், மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை விலை உயர்ந்துள்ளதால், குறைந்த விலை கொண்ட ஆவின் பாலை மக்கள் அதிகம் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. அதனால், ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-cannot-lay-even-a-brick-in-mekedatu-minister-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-cannot-lay-even-a-brick-in-mekedatu-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">dd1080c6-078d-402a-a944-55a71805da2b</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:44:10 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:44:10.783Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கோட்டையன்,Sengottaiyan,Karnataka,கர்நாடகா,மேகதாது அணை,Mekedatu,Mekedatu dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/k93xznc3/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/k93xznc3/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய், சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுத்து வருகிறார். கோவை, மதுரையில் மெட்ரோ அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரின் விருப்பம். எனவே இது தொடர்பாக பிரதமரிடம் கடிதங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது.</p><p>அ.தி.மு.க.வில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் விலகியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சபாநாயகர் நேரடியாக விசாரணை மேற்கொள்ள கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே சபாநாயகர் அதற்கான முடிவுகளை எடுப்பார்.</p><p>நீட் தேர்வு போராட்டம் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கிற உணர்வுதான். நீட் வேண்டாம் என்பதுதான் முதல்-அமைச்சரின் கொள்கை முடிவு. அந்த முடிவில் அவர் தெளிவாக இருக்கிறார். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பாக இருப்பதையும் அவர் பிரதமரிடம் தெரிவித்து இருக்கிறார்.</p><p>மேகதாது அணை யில் ஒரு செங்கலை கூட கர்நாடகம் எடுத்து வைக்க முடியாது. அதை தமிழக முதல்-அமைச்சர் விஜய் அனுமதிக்கவும் மாட்டார். தமிழக பட்ஜெட் என்பது சீக்ரெட். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் காவல் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு; வடமாநில இளைஞர் கைது - ரெயில் முன்பு பாய்வேன் என மனைவி மிரட்டல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mobile-phone-snatched-from-female-police-officer-youth-from-north-india-arrested-wife-threatens-to-jump-in-front-of-a-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mobile-phone-snatched-from-female-police-officer-youth-from-north-india-arrested-wife-threatens-to-jump-in-front-of-a-train#comments</comments><guid isPermaLink="false">7a49eb2e-8918-4e58-a470-1750988a974a</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:36:53 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:36:53.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,train,செல்போன் பறிப்பு,காவல் அதிகாரி,வடமாநில இளைஞர்,Cellphone snapped</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/mztmx2t5/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/mztmx2t5/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தடய அறிவியல் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அடலின் பிரபா(வயது 25). தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இவர், சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்து, தினமும் அலுவலகத்திற்கு சென்று வருகிறார். </p><p>இந்நிலையில் நேற்று தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயிலில் அடலின் பிரபா பயணம் செய்துள்ளார். அந்த ரெயில் தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்தில் நின்றபோது, ஜன்னல் வழியாக வடமாநில இளைஞர் ஒருவர் அடலின் பிரபாவின் கையில் இருந்த செல்போனை பறித்துள்ளார். </p><p>அந்த நபரை பிடிப்பதற்காக காவல் அதிகாரி அடலின் பிரபா ரெயிலில் இருந்து இறங்க முயன்றார். அந்த சமயத்தில் ரெயில் புறப்பட்டுவிட்டதால் பிளாட்பாரத்தில் தவறி விழுந்து அடலின் பிரபாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. </p><p>இதற்கிடையில் அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் அஜய்(வயது 27) என்பதும், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. </p><p>அதே சமயம், காயமடைந்த பெண் காவல் அதிகாரி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது முகத்திலும், தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு 32 தையல்கள் போடப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.</p> <p>செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அவரது மனைவி அங்கு வந்துள்ளார். அவர் போலீசாரிடம் தனது கணவரை விடுவிக்குமாறு கூறி வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், தனது கணவரை விடுவிக்கவில்லை என்றால் ரெயில் முன்பு பாய்ந்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். </p><p>அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காயமடைந்த பெண் காவல் அதிகாரிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருச்சியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-trichy-facing-a-power-outage-tomorrow-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-trichy-facing-a-power-outage-tomorrow-2#comments</comments><guid isPermaLink="false">543dca8e-fe87-44f8-a4e1-c96ee1ce282a</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:28:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:28:41.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>power outage,மின் தடை,திருச்சி,Trichy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/28ioqrpd/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/28ioqrpd/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,</p><p>திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்டம், வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மூவானூர், வேங்கைமண்டலம், தண்ணீர்பந்தல், மேல கண்ணுகுளம், கீழக்கண்ணுகுளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நம்பர் 2 கரியமாணிக்கம், சென்னக்கரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வால்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண் டியபுரம், சுனைபுகநல்லூர் ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் டவுன் ஆகிய பகுதிகளில் மின் தடை எய்ய்யப்பட உள்ளது.</p><p>மேலும், அலுவலகத்திற்கு உட்பட்ட மூவராயன்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில் லாம்பட்டி, பழையூர், செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, திருவரங்கபட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிகொட்டம், காளவாய் பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம் பாளையம், சாலக்காடு, புலிவலம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட புலிவலம், மண்பறை, சந்தனப் பட்டி, புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லையம்பட்டி ஆகிய பகுதி களில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினி யோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கஞ்சா வியாபாரியை விசாரிக்க சென்ற போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-8-police-officers-who-went-to-question-a-ganja-dealer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-8-police-officers-who-went-to-question-a-ganja-dealer#comments</comments><guid isPermaLink="false">4f4c3621-48cc-4603-a90c-1cac1f9558d6</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:28:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:28:03.754Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,police,Case,வழக்குப்பதிவு,ganja case,போலீசார்,கஞ்சா வியாபாரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fcxpv2h8/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fcxpv2h8/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>கஞ்சா வியாபாரி</h2><p>கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக-கேரளம் எல்லையில் உள்ள அட்டப்பாடி அருகே அகழிபுதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 51). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது ஏராளமான கஞ்சா வழக்குகள் உள்ளன.</p><p>கோவை அருகே உள்ள தடாகம் பகுதியில் உள்ளவர்களுக்கு அவர்தான் கஞ்சா சப்ளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தடாகம் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் கேரளம் மாநிலம் அகழி அருகே உள்ள புதூர் பகுதிக்கு சென்று அங்கு மறைந்து இருந்த முருகேசை பிடித்து விசாரணை நடத்திவிட்டு கோவை திரும்பினர்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதற்கிடையில் தடாகம் போலீசார் எப்படி எங்களின் அனுமதி இல்லாமல் கேரளத்துக்குள் வந்து விசாரணை செய்யலாம் என்று அந்த மாநில போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முருகேஷ் தன்னிடம் தேவையில்லாமல் தடாகம் போலீசார் வந்து விசாரணை நடத்துவதாகவும், கேரளம் போலீசில் புகார் செய்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அகழி போலீசார் கோவையை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.</p><p>அதில் போலீசார் என்று குறிப்பிடாமல், தமிழகத்தில் உள்ள கோவையை சேர்ந் தவர்கள் என்று குறப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதி செய்ய முடியவில்லை. கேரளம் மாநிலம் அகழியை சேர்ந்த போலீசாரின் இந்த நடவடிக்கை கோவை மாவட்ட காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் கேரளம் போலீசாரின் இந்த செயலுக்கு பலர் கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும்; அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பு பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/list-of-dmks-corrupt-acts-to-be-released-during-the-budget-session-minister-maria-wilson-makes-sensational-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/list-of-dmks-corrupt-acts-to-be-released-during-the-budget-session-minister-maria-wilson-makes-sensational-remarks#comments</comments><guid isPermaLink="false">9336a275-dcb5-4786-806a-e3d806fde60a</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:12:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:12:59.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,பட்ஜெட்,Budget,தி.மு.க,மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/pj263rno/Maria-wilson.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/pj263rno/Maria-wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. சார்பில் முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் தொகுதியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 'முதல்வரின் கரம்' என்ற தலைப்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், நிதி அமைச்சர் மரிய வில் சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.</p><h2>பட்ஜெட் கூட்டத்தொடர்</h2><p>நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தனியாக தணிக்கை அறிக்கையை வெளியிட போகிறோம். அந்த ஊழல் பட்டியலில் என்ன இருக்கிறது என்பது அப்போது உங்களுக்கு தெரியும்.</p><h2>'நீட்' தேர்வு விவகாரம்</h2><p>நீங்கள் (எதிர்க்கட்சி) ஒருமையில் பேசி எங்களை கோபப்படுத்தினாலும் நாங்கள் உங்களை போன்று பேச மாட்டோம். உங்களுடைய ஊழல் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு பேசப்போகிறோம். ஊழல், லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டில் அனைவரும் வாழ போகிறோம். 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருங்கள். இந்த நோக்கத்தை சிதைப்பதற்காக இந்த ஆட்சி 60 நாட்கள், 3 மாதம், 6 மாதம் என்று சில பேர் பேசுகிறார்கள். அவர்கள்தான் 5 மாதத்தில் ஆள், 'அட்ரஸ்' இல்லாமல் போக போகிறார்கள். </p> <p>தற்போது 'நீட்' தேர்வை தடை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது. மாணவர்கள் நம்பிக்கையுடன் இருங்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் எப்படி பெரிய மாற்றம் வந்ததோ, அதே போன்று 'நீட்' விவகாரத்தில் நிரந்தர தீர்வை பெற 2029 நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய தலைவர் (முதல்-அமைச்சர் விஜய்) மூலம் சாதிக் கக்கூடிய எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படும். இதை இந்த நாடு பார்க்க போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.</p><h2>100 சதவீதம் நன்மை இருக்கும்</h2><p>விழா முடிந்ததும் அமைச்சர் மரிய வில்சனிடம், 'தமிழக பட்ஜெட்டில் ஊழல் பட்டியல் வெளியிட போகிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதில் எந்த மாதிரியான ஊழல்கள் இடம் பெற்றுள்ளது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார். மேலும் அவர், 100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>உத்தவ் தாக்கரே பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uddhav-thackerays-birthday-mk-stalin-wishes-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uddhav-thackerays-birthday-mk-stalin-wishes-him#comments</comments><guid isPermaLink="false">09456220-e12e-467b-83ba-c539466e6ccb</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:07:46 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:07:46.854Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,birthday,வாழ்த்து,பிறந்தநாள்,Uddhav Thackeray,உத்தவ் தாக்கரே,Wishes,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/7j186lga/80.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/7j186lga/80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.</p><h2>வாழ்த்து</h2><p>நேற்று சிவாஜி பூங்காவில் வெளிப்பட்ட இந்த மகத்தான ஆதரவு, உங்களை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும், உங்களுடன் துணை நிற்பதற்கான மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாக நினைவூட்டியது. உங்கள் அசைக்க முடியாத போராட்ட குணத்தால் சவால்களை வென்று, நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-fees-to-increase-at-chennais-vanagaram-and-surapattu-toll-plazas-from-midnight</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-fees-to-increase-at-chennais-vanagaram-and-surapattu-toll-plazas-from-midnight#comments</comments><guid isPermaLink="false">638b0a70-f1a8-4475-a483-5d282beb190c</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:04:36 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:04:36.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சுங்கச்சாவடி,சுங்கச்சாவடி கட்டணம்,toll plaza fee,toll plazas,வானகரம்,Vanagaram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ppnuuv29/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ppnuuv29/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கட்டண உயர்வு</h2><p>தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளில் 80 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஏப்.1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில், செப்டம்பர் 1-ந்தேதியும் மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் காரணமாக ஏப்ரல் மாத கட்டண உயர்வு, மே 23-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.</p><p>தற்போது சென்னை புறவழிச்சாலையில் உள்ள வானகரம், அம்பத்தூர் அருகில் உள்ள சூரப்பட்டு உள்பட 10-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் அமலுக்கு வந்துள்ளது. </p><h2>2-வது கட்டண உயர்வாகும்...</h2><p>அதுபோல், சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கான, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350 லிருந்து ரூ.360 ஆக உயர்த்தப்பட் டுள்ளது. மே மாதத்திற்கு பிறகு, இது 2-வது கட்டண உயர்வாகும். இதனால்</p><p>இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கடந்த ஆண்டு மொத்த விலை குறியீடு கட்டணத்தை குறைத்தது. இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கில், கோர்ட்டு முந்தைய விலை குறியீடு கட்டணத்தை, மீண்டும் பயன்படுத்த உத்தரவிட்டது.</p><p>அதன் அடிப்படையில், அமைச்சகம் கடந்த மாதம் 29-ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டு, பழைய கணக்கீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தியது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒரு முறை கட்டணம் குறைப்பு ரத்து செய்யப்பட்டு, பல தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது ‘பெல்லட்’ குண்டு தாக்குதல் - மாநிலங்களவையில் இன்று விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pellet-gun-attack-on-students-trinamool-congress-urges-for-a-discussion-in-the-rajya-sabha-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pellet-gun-attack-on-students-trinamool-congress-urges-for-a-discussion-in-the-rajya-sabha-today#comments</comments><guid isPermaLink="false">292ff298-6072-4f2e-90de-cca0df708213</guid><pubDate>Mon, 27 Jul 2026 02:52:05 +0000</pubDate><atom:updated>2026-07-27T02:52:05.939Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திரிணாமுல் காங்கிரஸ்,Trinamool Congress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/vdzgttvm/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/vdzgttvm/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>நாடாளுமன்ற மாநிலங்களவை திரிணாமுல் காங்கிரஸ் துணைத்தலைவர் சகாரிகா கோஸ், மாநிலங்களவை செயலாளரிடம் ஒரு நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளார். அதில், இன்று (திங்கட்கிழமை) மாநிலங்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய அத்துமீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்ப தாவது:-</p><p>“அமைதியாக போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. இருப்பினும், அமைதியாக போராடிய மாணவர்கள், உயிருக்கு அச்சுறுத்தலான ஆயுதங்களால் குறிவைக்கப்பட்டது கவலை அளிக்கிறது. 'பெல்லட்' குண்டு' பயன்படுத்தப்பட்டதால் சில மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஒரு மாணவரின் கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது. 'பெல்லட்' குண்டு பயன்படுத்த யார் அதிகாரம் அளித்தது?”</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி-மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flight-service-between-trichy-and-muscat-resumes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flight-service-between-trichy-and-muscat-resumes#comments</comments><guid isPermaLink="false">c2eec811-c904-4450-9b6f-8f4951238c9d</guid><pubDate>Mon, 27 Jul 2026 02:46:27 +0000</pubDate><atom:updated>2026-07-27T02:46:27.183Z</atom:updated><atom:author><atom:name>Muthu Pandian K</atom:name><atom:uri>/api/author/2401539</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,Air service,விமான சேவை</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/aid6rbbf/plane.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/aid6rbbf/plane.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில மாதங்க ளாக வளைகுடா நாடுகளில் நடைபெற்ற வரும் போர் காரணமாக பல்வேறு விமான சேவைகளை விமான நிறுவனங்கள் நிறுத்தி வைத்தன. </p><p>இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருச்சியில் இருந்து மஸ்கட்டிற்கு நிறுத்தப் பட்டிருந்த நேரடி விமான சேவையை மீண்டும் வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்க உள்ளது. புதன், வெள்ளி, ஞாயிறு என வாரத்திற்கு 3 விமான சேவைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் குறைந்திருந்த பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>10 ஆண்டு பாஜக ஆட்சியில் மாணவர் தற்கொலையும் கல்வி வியாபாரமும் உச்சம் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-suicides-and-education-business-have-peaked-in-the-10-years-of-bjp-rule-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-suicides-and-education-business-have-peaked-in-the-10-years-of-bjp-rule-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">81aaaa39-c1e1-41d9-84b2-53abd4c3dc26</guid><pubDate>Mon, 27 Jul 2026 02:29:39 +0000</pubDate><atom:updated>2026-07-27T02:29:39.951Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP Government,Student suicide,மாணவர் தற்கொலை,பாஜக ஆட்சி,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/nbmlzhkq/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/nbmlzhkq/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>நீட் தேர்வு சுமை, கேள்வித்தாள் கசிவு மற்றும் நாட்டின் கல்விச் சூழல் குறித்து NTA, NCRB (ADSI) மற்றும் CMS:E 2025 அறிக்கைகள் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் இதோ:</p><p>மாணவர் தற்கொலைகள் அதிகரிப்பு: 2014-ல் 8,068 ஆக இருந்த மாணவர் தற்கொலை எண்ணிக்கை 2024-ல் 14,488 ஆக அதிகரித்து, 80% உயர்வைக் கண்டுள்ளது.</p><p>மொத்த தற்கொலைகள்: கடந்த 10 ஆண்டுகளில் (2014-2024) மட்டும் நாட்டில் 1.23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.</p><p>தேர்வுத் தோல்வியால் உயிரழப்பு: 2014 - 2024 காலகட்டத்தில் தேர்வில் தோல்வி அடைந்த அச்சத்தால் மட்டுமே 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.</p><p>பாதிக்கப்படும் இளைஞர்கள்: தற்கொலை செய்துகொண்டவர்களில் 55% பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 42% பேர் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.</p><p>நீட் தேர்வுத் தேர்ச்சி: 2015 முதல் ஆண்டுதோறும் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்தாலும், 57%-க்கும் குறைவானவர்களே (11.21 லட்சம் பேர்) தகுதி பெற முடிகிறது.</p><p>பயிற்சி மையங்களின் ஆதிக்கம்: மேல்நிலைக் கல்வி படிக்கும் மாணவர்களில் 37% பேர் (நகர்ப்புறங்களில் 44.6%) கட்டாயமாகத் தனியார் பயிற்சி மையங்களை நாடும் அவலநிலை உள்ளது.</p><p>பொருளாதாரச் சுமை: பெற்றோர் தங்களின் பள்ளிச் செலவில் மூன்றில் ஒரு பங்கை (மேல்நிலைக் கல்வியில் சராசரியாக ரூ.6,384) பயிற்சி மையங்களுக்கே செலவிட வேண்டியுள்ளது.</p><h2>உயிரைப் பறிக்கும் ஆயுதம்</h2><p>மோடி ஆட்சியில் ஏழை எளிய  மாணவர்களின் மருத்துவராகும் கனவை நசுக்கி, கோச்சிங் மாஃபியா கோடிக்கணக்கிலான கொள்ளைக்குத் துணை போகிறது இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">பாஜக அரசு</a>. வினாத்தாள் கசிவும், தவறான கல்விக்கொள்கையும் நமது மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ஆயுதங்களாக மாறியுள்ளன.</p><p>மாணவர்களின் ரத்தத்திலும், பெற்றோர்களின் கண்ணீரிலும் வியாபாரம் நடத்தும் இந்த சீரழிந்த அமைப்புக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். 2029-ல் நமது தலைவர் ராகுல் காந்தி தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததும், கோச்சிங் மாஃபியாக்கள் ஒழிக்கப்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நேர்மையான கல்வி முறை கட்டாயம் உருவாக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 6 மாதங்களில் 19 யானைகள் உயிரிழப்பு.!அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-news-19-elephants-have-died-in-tamil-nadu-in-six-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-news-19-elephants-have-died-in-tamil-nadu-in-six-months#comments</comments><guid isPermaLink="false">719f140e-ab45-41cc-bc02-8d32c4605970</guid><pubDate>Mon, 27 Jul 2026 02:29:19 +0000</pubDate><atom:updated>2026-07-27T02:29:19.413Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானைகள்,Wild elephants,Elephants,யானைகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/rwuxmvlc/1.gif" width="721"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/rwuxmvlc/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில், 2025 எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில், 3,170 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 2024ல் யானைகள் எண்ணிக்கை, 3,063 ஆக இருந்தது.</p><p>மொத்த எண்ணிக்கை யில், 70 சதவீத யானைகள், நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகளில் வாழ்கின்றன. யானைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதன் வாழிட பரப்பளவும் அதிகரிக்க வேண்டிய தேவை எழுகிறது.</p><p>இந்நிலையில், யானைகள் திட்டத்துக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி வழங்குவதால், அதன் இறப்பு தொடர்பான விஷயங்களை, அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் எந்த பகுதியில், காட்டு யானைகள் இறந்தாலும், அது குறித்த பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை அறிக்கையை,</p><p>மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.</p><p>யானைகள் இறப்பை துல்லியமாக கண்காணிக்க, இதுதொடர்பான விபரங்களை, தமிழக வனத்துறை தணிக்கை செய்து வருகிறது. இருப்பினும், யானைகள் இறப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இதுகுறித்து வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது;</p><p>தமிழகத்தில், காட்டு யானைகள் இறப்புக்கு காரணமான விஷயங்களை தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும், நடப்பு ஆண் டில், ஜனவரி முதல் ஜூன் இறுதி வரையிலான ஆறு மாதங்களில், 19 யானைகள் இறந்துள்ளன.இதில், 18 யானைகள் இயற்கையான முறையிலும், ஒரு யானை விபத்து காரணமாகவும் இறந்தது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் முதுமலை, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், தலா, எட்டு யானைகள் இறந்துள்ளன.</p><p>இந்த யானைகள் இறப்பு குறித்த, பிரேத பரிசோதனை அறிக்கை, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2025ல், 127 யானைகள் இறந்தன என்ற தகவலுடன் ஒப்பிட்டால், தற்போது யானைகள் இறப்பு குறைந்துள்ளது. இதையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>வருங்கால வைப்பு நிதி வட்டி: ரூ.1.44 லட்சம் கோடி செலுத்தியது மத்திய அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/provident-fund-interest-central-government-paid-rs-144-lakh-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/provident-fund-interest-central-government-paid-rs-144-lakh-crore#comments</comments><guid isPermaLink="false">7f18e22d-2b97-4fc9-9f65-4f715eb666e1</guid><pubDate>Mon, 27 Jul 2026 01:56:12 +0000</pubDate><atom:updated>2026-07-27T01:56:12.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central Government,Provident Fund,interest,வருங்கால வைப்பு நிதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/r3xl7ffo/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/r3xl7ffo/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) கணக்கில் இருக்கும் இருப்பு தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி கணக்கிட்டு மத்திய அரசு வழங்கி வருகிறது.</p><p>அந்தவகையில் 2025-26-ம் நிதியாண்டுக்கு 8.25 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டது. ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்பட்டு சந் தாதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பது வழக்கம். அந்த வகையில், 2025-26-ம் நிதியாண்டில் 34 கோடி சந்தாரர்களுக்கு ரூ.1.44 லட்சம் கோடியை வட்டியாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.</p><p>அதன்படி, தற்போது ஒவ்வொரு சந்தாதாரர்களின் வங்கி கணக்கிலும் வட்டி வரவு வைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சந்தாதாரர்களின் பி.எப். கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஒருவேளை இதுவரை வட்டி வரவு வைக்கப்படவில்லையெனில் பதற்றம் அடைய தேவையில்லை என்றும், அடுத்த சில நாட்களில் வட்டி வரவு வைக்கப்படும் என்றும் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>