<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 14 Aug 2026 06:20:44 +0000</lastBuildDate><item><title>வகுப்பறை முன்பு மாணவிகள் மது அருந்தியதாக கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vakupparai-munbu-manavikal-mathu-arunthiyathaga-kurappadum-seithi-pera-thirchi-alikkirathu-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vakupparai-munbu-manavikal-mathu-arunthiyathaga-kurappadum-seithi-pera-thirchi-alikkirathu-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">9bec7498-52b9-455f-a375-df98555f1ff3</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:17:04 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:17:04.436Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,தக்கலை,Thuckalay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/o5399x8w/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/o5399x8w/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வகுப்பறை முன்பு மாணவிகள் மது அருந்தியதாக கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பு மது அருந்தியதாக கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. கடந்த மாதமே இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் தற்போது வீடியோ வெளியாகி பெற்றோர்களிடத்திலும், கல்வியாளர்களிடமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் மதுரை விரகனூர் அரசு பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவரை ஆசிரியர்கள் முன்னிலையில் தாக்குவதும், தரக்குறைவாக பேசியதுமான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவமும் கல்வித்துறையின் ஒட்டுமொத்த மாண்பையே சீர்குலைத்துள்ளது.</p><p>மாற்றம் தருவோம்... மாற்றம் தருவோம் என்று மேடைக்கு மேடை முழங்கி அரியணை ஏறிய தவெக ஆட்சியின் சூப்பரான மாற்றம் இதுதானா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே..? மாணவர்கள் வகுப்பறையில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதும், ஆயுதங்ளைக் கொண்டு வருவதும், ஒழுங்கீனமாக நடந்து கொள்வதும் பெருகி வருவது கவலை அளிக்கும் செயல்.</p><p>எத்தனையோ அரசு பள்ளி மாணவர்கள் பல துறைகளில் சாதித்து வரும் வேளையில் இது போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது ஒட்டுமொத்த அரசு பள்ளிகளின் பெயரையே அவமதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.</p><p>தவெக ஆட்சியில் பள்ளிகளில் என்றைக்கு ரீல்ஸ் மோகங்களும், சினிமா பாடல்களும் வளர ஆரம்பித்ததோ அன்றே அறநெறி வகுப்புகளும், கடும் கட்டுப்பாடுகளும் காற்றில் பறந்து விட்டது என்பதுதான் உண்மை.</p><p>பள்ளிகளில் மாணவர்களுக்கு முதலில் போதிக்க வேண்டியது ஒழுக்கமும், கீழ்படிதலும்தான் என்பதை நினைவில் நிறுத்தி இனி இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டது: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-has-buried-parliamentary-democracy-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-has-buried-parliamentary-democracy-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">ef00653c-8906-498d-ba16-bab33f294ba7</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:12:11 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:12:11.186Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,காங்கிரஸ்,Congress,X Page,மத்திய அரசு,Central Government,எக்ஸ் பக்கம்,Indian Democracy,இந்திய ஜனநாயகம்,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/sp125g2y/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/sp125g2y/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>அரசியல் களம் (Politics)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீட் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து அவையில் விவாதிக்க அஞ்சி நடுங்கும் மத்திய அரசு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">நாடாளுமன்ற</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">ஜனநாயகத்தையே</a> குழிதோண்டிப் புதைத்துவிட்டது என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி</a> தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">மாணிக்கம் தாகூர் எம்.பி. </a>தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: </p><p>ஜனநாயகத்தின் மாண்பைச் சீர்குலைத்து, நாடாளுமன்றச் செயல்பாட்டை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது மோடி அரசு! </p><p>19 அமர்வுகள் கொண்ட இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவை வெறும் 15 சதவீத நேரமும் (22 ஆண்டுகளில் இல்லாத சரிவு), மாநிலங்களவை 33 சதவீத நேரமும் மட்டுமே செயல்பட்டுள்ளது.</p><h2>மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கு</h2><p>அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்களில் 92 சதவீத மசோதாக்களை நிறைவேற்றியதாக மார்தட்டிக்கொள்ளும் மத்திய அரசு, அதில் 11 மசோதாக்களில் 9 மசோதாக்களை மக்களவையில் அமைச்சரைத் தவிர வேறு எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் விவாதத்தில் பங்கேற்கவிடாமல், வெறும் சில நிமிடங்களில் (பிறப்பு-இறப்பு பதிவு மசோதா 2 நிமிடங்களிலும், வரி திருத்த மசோதா 3 நிமிடங்களிலும்) சர்வாதிகாரப் போக்கில் புல்டோசர் செய்து நிறைவேற்றியுள்ளது. </p><h2>நாடாளுமன்ற கேள்வி நேரம் முடக்கம்</h2><p>கேள்வி நேரத்தை முற்றிலுமாக முடக்கியதன் விளைவாக, மக்களவையில் எழுப்பப்பட்ட 380 கேள்விகளில் வெறும் 2 கேள்விகளுக்கு மட்டுமே வாய்மொழிப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை கேள்வி நேரம் வெறும் 9 நிமிடங்களோடு சுருக்கப்பட்டது. 1952-க்குப் பிறகு முதல்முறையாகத் தொடரின் முதல் நாள் தேசிய கீதம் மற்றும் கடைசி நாள் வந்தே மாதரம் பாடலின் போது தவிர முழு தொடரிலும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவைக்கு வராமல் ஓடி ஒளிந்து நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து ஓடி ஒளிந்துள்ளனர். </p><h2>ஜனநாயகம் குழிதோண்டி புதைப்பு</h2><p>நீதிக்காகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தடியடி மற்றும் அத்துமீறல்கள் குறித்தும், நீட் வினாத்தாள் முறைகேடுகள் குறித்தும் அவையில் விவாதிக்க அஞ்சி நடுங்கும் மத்திய அரசு, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டது. </p><h2>ஓடி ஒளியும் மோடி அரசு</h2><p>மக்களின் பிரச்சினைகளுக்கும், மாணவர்களின் போராட்டக் குரல்களுக்கும் பதிலளிக்காமல் ஓடி ஒளியும் மோடி அரசே... விவாதங்களை முடக்கி, நாடாளுமன்றத்தை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மாற்ற நினைத்தால், நீங்கள் மக்களின் மன்றத்தில் தப்பவே முடியாது! மாணவர்களும் மக்களும் உங்கள் சர்வாதிகாரத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்- கண்டிப்பாகத் தட்டிக்கேட்பார்கள், கேள்விக்குள்ளாக்குவார்கள்!. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பைக் மீது லாரி மோதி விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-killed-in-motorcycle-lorry-collision</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-killed-in-motorcycle-lorry-collision#comments</comments><guid isPermaLink="false">7083c299-153c-4009-88ca-b8bd8ff795fd</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:11:43 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:11:43.123Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,bike,விழுப்புரம்,police enquiry,2 பேர் உயிரிழப்பு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ahlo4hlj/i.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ அருண் - நரேஷ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பைக் மீது லாரி மோதி விபத்தில் 2 இளைஞர்கள் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ahlo4hlj/i.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் மாவட்டம் முத்தாம்பாளையம் - அண்ணாமலை ஹோட்டல் புறவழிச்சாலையில் பைக் மீது லாரி மோதியதில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். </p><h2>விபத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விழுப்புரம் மாவட்டம்</a> முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள அண்ணாமலை ஹோட்டல் புறவழிச்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் 2 இளைஞர்கள் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். புறவழிச்சாலையில் திடீரென யு-டர்ன் எடுத்து திரும்ப முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.</p><h2>2 பேர் உயிரிழப்பு</h2><p>இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த அருண் மற்றும் நரேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த விழுப்புரம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு: பஞ்சர் போடும்போது லாரி டயர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-worker-dies-after-lorry-tire-bursts-while-patching</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-worker-dies-after-lorry-tire-bursts-while-patching#comments</comments><guid isPermaLink="false">3f6f44d8-adce-4fde-982f-5f514f686009</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:58:47 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:58:47.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,lorry,லாரி,Worker dies,தொழிலாளி உயிரிழப்பு,டயர் வெடித்து விபத்து,tire burst</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/pz3w6x7i/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.-jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லாலி டயர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/pz3w6x7i/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.-jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">செங்கல்பட்டு </a>மாவட்டம், பல்லாவரம் அருகே பஞ்சர் போடும்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">லாரி</a> டயர் வெடித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்தில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">தொழிலாளி </a>சிகிச்சை பலனின்றி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. </p><h2>பஞ்சர் கடை தொழிலாளி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அருகே உள்ள பம்மல் மூங்கில் ஏரி மசூதி தெருவைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது உறவினர் காதர் பாஷா என்பவருக்கு திருநீர்மலை சர்வீஸ் சாலையில் பஞ்சர் கடை உள்ளது. அங்கு அஷ்ரப் அலி வேலை பார்த்து வந்தார். </p><h2>லாலி டயர் வெடித்து தொழிலாளி காயம்</h2><p>நேற்று முன்தினம் மாலை அஷ்ரப் அலி, லாரி டயர் ஒன்றுக்கு பஞ்சர் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அஷ்ரப் அலியின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். </p><h2>தொலிலாளி உயிரிழப்பு</h2><p>அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அஷ்ரப் அலி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு அழுத்தம் தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-must-be-pressured-to-release-water-in-the-cauvery-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-must-be-pressured-to-release-water-in-the-cauvery-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">9a15ece2-2cdd-4584-9007-ce167fdb1f68</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:51:52 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:51:52.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,protest,ஆர்ப்பாட்டம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/elb3ifhq/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/elb3ifhq/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><h2>அதிமுக ஆர்ப்பாட்டம்</h2><p>மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு மெத்தனம் காட்டுவதாக கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;</p><p>"தலைமைச் செயலகத்தில் தனக்கான அறை மாற்றம்தான் முதல்வர் விஜய்க்கு முக்கியம், மக்கள் முக்கியமில்லை. நானும் அங்கு இருந்தேன், முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் அங்குதான் இருந்தார், ஆனால் தற்போதைய முதல்வர் அதனை மாற்றுகிறார். நடிகர் என்பதால் நவீனமயமாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்து முதலமைச்சர் விஜய் அறையை மாற்றுகிறார்கள். விவசாயிகள் உணவுக்கு வழியின்றி உள்ள நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அறை மாற்றம்தான் முக்கியமா?</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக. அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தவெக அரசு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகள் மீது அரசுக்கு கவலையில்லை. ரீல்ஸ் போடுவதில்தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. காவிரி நீரை பெற முயற்சிக்கவில்லை. </p><p>5 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படும் நிலையில், 2 லட்சம் ஏக்கரில்தான் பாசனம் செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிகப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். </p><p>அரசு விழிப்போடு செயல்பட்டு, சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை கர்நாடகாவிடன் பெற்றுத்தர வேண்டும். காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு அழுத்த தர வேண்டும். மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு உடனடியாக கூட்ட வேண்டும்”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினத்தில் தேசிய கொடியேற்றும் முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் - நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vande-mataram-must-be-sung-before-hoisting-the-national-flag-on-independence-day-high-court-registrys-directive-to-courts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vande-mataram-must-be-sung-before-hoisting-the-national-flag-on-independence-day-high-court-registrys-directive-to-courts#comments</comments><guid isPermaLink="false">da610c34-a108-441f-995b-850662fab3e5</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:50:32 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:50:32.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court,ஐகோர்ட்டு,சுதந்திர தினம்,Independence Day,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hte1xzwo/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hte1xzwo/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியேற்றும் முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முந்தையநாள் சென்னை ஐகோர்ட்டில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கப்பட்டது.</p><h2>வந்தே மாதரம்</h2><p>இந்நிலையில், நாளை நடக்க உள்ள சுதந்திர தின விழாவின்போது, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் எனவும், தேசியக் கொடி ஏற்றிய பின் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் எனவும், உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு, கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு, மத்திய அரசின் அறிவுரைப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-year-old-girl-sexually-assaulted-in-krishnagiri-3-special-forces-formed-to-arrest-mysterious-persons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-year-old-girl-sexually-assaulted-in-krishnagiri-3-special-forces-formed-to-arrest-mysterious-persons#comments</comments><guid isPermaLink="false">628ecc63-432e-47e1-bed4-2aaa39462603</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:27:03 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:27:03.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,mysterious persons,கிருஷ்ணகிரி,police enquiry,8 வயது சிறுமி,girl sexually harassed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-06-26/42ss3yur/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-06-26/42ss3yur/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமியைக் கடத்திச் சென்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a> செய்த மர்ம நபர்களைப் பிடிக்கக் போலீசார் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2>பாலியல் வன்கொடுமை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கிருஷ்ணகிரி மாவட்டம்</a> தேன்கனிக்கோட்டை அடுத்த மலை கிராமத்தைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை மாலையில் பள்ளி வகுப்பு முடிந்து மற்ற குழந்தைகளுடன் நடந்து வீடு திரும்பினார். மற்ற குழந்தைகள் முன்னதாகவே தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட, அந்தச் சிறுமி மட்டும் தனியாக வந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அச்சிறுமியை அருகில் உள்ள புதர் மற்றும் வனப்பகுதிக்குத் தூக்கிச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.</p><h2>ஆஸ்பத்திரியில் சிகிச்சை</h2><p>வீடு திரும்பிய சிறுமி நடந்த கொடூரத்தை அழுதுகொண்டே தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் குழந்தைகளுக்கான உதவி எண் 1098-க்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அன்று இரவில் 108 அவசர ஊர்தி மூலம் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வியாழக்கிழமை காலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>3 தனிப்படை அமைப்பு</h2><p>இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமானி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா மற்றும் மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறையில் அடைக்க, 3 தனிப்படை போலீஸ் அதிகாரிகள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பட்டாசு ஆலைகளை முறையாக கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-must-monitor-firework-factories-to-ensure-worker-safety-gk-vasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-must-monitor-firework-factories-to-ensure-worker-safety-gk-vasan#comments</comments><guid isPermaLink="false">cd8ac9f1-e7a9-4314-bb81-5f91bb991743</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:14:57 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:15:55.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விருதுநகர்,தமாகா,GK Vasan,பட்டாசு ஆலை,ஜி.கே.வாசன்,TMC</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/vb3v92fw/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/vb3v92fw/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறையாக, சரியாக கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், ஒருவர் படுகாயமடைந்திருப்பதும் வேதனைக்குரியது. தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து குணமடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><p>பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து வெடி விபத்து ஏற்படுவது மிகவும் கவலைக்குரியது. பட்டாசு ஆலைகளில் அன்றாடம் வேலை செய்து சம்பாதிக்கும் தொழிலாளிகளின் உயிருக்கு எப்போது ஆபத்து நேரும் என்று தெரியாமலேயே உழைக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தினருக்கு பாதுகாப்பு என்பது மிக மிக அவசியம். அப்படியென்றால் பட்டாசு ஆலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் வகையில் அரசின் கோட்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.</p><p>தமிழக அரசும் பட்டாசு ஆலைகளை தொடர் கண்காணிப்பின் மூலம் ஆய்வு செய்து முறையாக, சரியாக இயக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி&apos;: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-in-direct-alliance-with-bjp-minister-nirmal-kumars-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-in-direct-alliance-with-bjp-minister-nirmal-kumars-statement#comments</comments><guid isPermaLink="false">4b4adf1f-2caf-4a61-b400-270fc9195e3d</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:06:36 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:06:36.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,அமைச்சர் நிர்மல் குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0q1zz9jk/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0q1zz9jk/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தலைமை செயலக வளாகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>“பாஜக உடன் திமுக தற்போது நேரடிக் கூட்டணி வைத்துள்ளது. அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என கனிமொழி சோமு, வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி சிவா மத்திய மந்திரி ஆவார் என கூறப்பட்டதை  திமுக தரப்பில் இருந்து யாரும் மறுக்கவில்லை. டெல்லியில் யாருடன் பேசினாலும் மக்கள் நலனுக்காக இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். </p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிப்போம் என திமுக ஒரு வார்த்தை கூறவில்லை. பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி வைத்திருப்பது இதன் மூலம் தற்போது நிரூபணமாகியுள்ளது. இருக்கை மாற்றத்துக்காக தேநீர் விருந்தில் கலந்துகொண்டேன் என கனிமொழி கூறுவது நம்பும்படி இல்லை. </p><p>காவிரியில் நீர் திறப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. காவிரி உரிமையை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஊடகங்களை அழைக்காததற்கு இடப்பற்றாக்குறையே காரணம். சுதந்திர தினத்தை ஒட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>ஈரோடு: ஆற்றங்கரையில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-rs10-lakh-worth-of-ganja-seized-on-riverbank-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-rs10-lakh-worth-of-ganja-seized-on-riverbank-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">3d7754cc-dfa2-426e-a747-601c3029944c</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:50:44 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:50:44.852Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Youth arrested,வாலிபர் கைது,Erode,ஈரோடு,கஞ்சா பறிமுதல்,Ganja seized,ஆற்றங்கரை,Riverbank</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/y2bmle7o/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/y2bmle7o/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81">ஈரோடு</a> மாவட்டம், பவானி ரிங்ரோடு ஆற்றங்கரை பகுதியில் ரூ.10 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்த போலீசார், இது தொடர்பாக ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வாலிபரை கைது</a> செய்தனர்.</p><h2>கஞ்சா பதுக்கல்</h2><p>ஈரோடு மாவட்டம், பவானி ரிங்ரோடு ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அங்கு சந்தேகப்படும்படி நின்ற புதுச்சேரியைச் சேர்ந்த பல்லா வெங்கட் சிவராம் (வயது 24) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். </p><h2> 20 கிலோ கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது</h2><p>அதில் அவர் மொத்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து ஆற்றுப்பகுதியில் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 20 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>“ஆபாசம்” தான் உங்கள் அரசியல் ஆயுதமா ராகுல்காந்தி? - நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-obscenity-your-political-weapon-rahul-gandhi-nainar-nagendran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-obscenity-your-political-weapon-rahul-gandhi-nainar-nagendran-condemns#comments</comments><guid isPermaLink="false">dd13e4c9-30bd-4934-9585-ee79146d6043</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:48:50 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:48:50.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,PM Modi,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Rahul Gandhi,ராகுல்காந்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qgxdkgpe/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qgxdkgpe/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>நாட்டு மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையை அலங்கரிக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, கொள்கை ரீதியாகவும், சித்தாந்தத்தின் அடிப்படையிலும் எதிர்க்க முடியாத நீங்கள், ஆபாச அரசியலை முன்னெடுத்திருப்பது அருவருக்கத்தக்கது.</p><p>வெளிநாட்டு தலைவர்களுடனான நமது நாட்டு பிரதமரின் பரிசுத்த நட்பை இத்தனை கொச்சையாக வர்ணிக்கும் மனநிலை கொண்ட நீங்கள், நிச்சயம் உளவியல் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் தான்.  </p><p>அரசியலில் 75 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு தேசியக் கட்சியின் வாரிசாக இருந்த போதிலும், பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும், உங்களால் ஏன் அரியணையின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை என்பதை தற்போது நீங்களே நிரூபித்துவிட்டீர்கள். உங்களைப் போன்ற அரசியல் முதிர்ச்சியற்ற ஒருவரால், காங்கிரசின் முடிவுரை எழுதப்படும் என்பதை இந்திரா காந்தி அம்மையார் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.59 கோடி ஒதுக்கீடு: தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தாமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/allocation-of-59-crore-beautifying-the-banks-without-cleaning-the-thamirabarani-river-anbumani-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/allocation-of-59-crore-beautifying-the-banks-without-cleaning-the-thamirabarani-river-anbumani-questions#comments</comments><guid isPermaLink="false">4e4a4ce5-3061-4ef1-95a3-dbbeba924efd</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:34:29 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:34:29.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,தாமிரபரணி ஆறு,Thamirabarani River</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/grjo47pp/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/grjo47pp/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;</p><p>“தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை மேம்படுத்துவதற்காக ஜெர்மனி வங்கியிலிருந்து கடனாகப் பெறப்பட்ட ரூ.59.05 கோடியை நெல்லை மாநகரத்தில் 7 கி.மீ தொலைவுக்கு தாமிரபரணி ஆற்றின் கரைகளை அழகுபடுத்தும் பணிகளுக்காக செலவிட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தி காப்பாற்றுவதற்காக செலவிடப்பட வேண்டிய நிதியை, தேவையில்லாத ஆடம்பர செலவுகளுக்காக பயன்படுத்துவதற்கு அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியில், நெல்லை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட  கருப்பந்துறை முதல் மணிமூர்த்தீஸ்வரம் வரை சுமார் 7 கிலோமீட்டர் நீளமுள்ள ஆற்றங்கரை பகுதி ஐந்து தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் படித்துறைகள், பூங்காக்கள், நடைபாதைகள், மக்கள் அமரும் இடங்கள், உணவகம் ஆகியவை ரூ.59.05 கோடியில் அமைக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஜெர்மனியின் KfW வளர்ச்சி வங்கியிலிருந்து கடனாகப் பெறப்படுகிறது.</p><p>உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தாய்க்கு உடனடியாக மருத்துவம் தேவைப்படும் சூழலில், பக்கத்து வீட்டுக்காரரிடம் கடன் வாங்கி பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தால், அது எவ்வளவு அபத்தமான செயலாக இருக்குமோ, அதேபோல் தான் தாமிரபரணியைக் காக்கும் விவகாரத்தில் அரசின் அணுகுமுறையும் உள்ளது.</p><p>மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான பொதிகை மலையில் பிறக்கும் தாமிரபரணி ஆறு, மூலிகை வனங்களைக் கடந்து பயணிப்பதால் அது நோய்களைப் போக்கும் ஆறாக திகழ்ந்தது. ஆனால், இப்போது  நோய்களை பரப்பும் நோயாக மாறி விட்டது. இதற்கு காரணம் கழிவுகளைக் கலக்கச் செய்வதில் தொடங்கி, அனைத்துச் சீரழிவுத் தாக்குதல்களும் தாமிரபரணி ஆற்றின் மீது தொடர்ந்து நடத்தப்படுவது தான். தாமிரபரணி ஆற்றைக் காக்க வேண்டும் என்பதற்காக முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர், 2018-ஆண்டில்  தொடர்ந்த வழக்கில்  2024-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் தீர்ப்பளித்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதியரசர் புகழேந்தி ஆகியோர் ‘‘தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக தடை செய்ய வேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்தார்கள். ஆனால், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னெற்றமும் ஏற்படவில்லை.</p><p>சீரழிவை எதிர்கொண்டு வரும் தாமிரபரணி ஆற்றை கடந்த ஆண்டு ஆய்வு செய்த நீதிபதிகள், திருநெல்வேலி மாநகரில் உருவாகும் கழிவுகள் எதுவும் ஆற்றில் கலக்கக் கூடாது; அதற்கு வசதியாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆணையிட்டனர். ஆனால், அதற்கும் எந்த பயனும் இல்லை. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு கட்டமாக தாமிரபரணி  ஆற்றை நேரில் ஆய்வு செய்த நான், தாமிரபரணியை காக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனாலும் பயனில்லை. இந்த விவகாரத்தில் அரசின் அலட்சியத்திற்கு கண்டனம் தெரிவித்த மதுரை உயர்நீதிமன்றம், தாமிரபரணி  ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி,  இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று போற்றப்படுபவரான இராஜேந்திர சிங் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அவரும் சில மாதங்களுக்கு முன்  தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்து விரைவில் வரைவு அறிக்கை தயாரித்துத் தருவதாக உறுதி அளித்துள்ளார்.</p><p>இத்தகைய சூழலில், தாமிரபரணி ஆற்றை மேம்படுத்துவதற்காக ஜெர்மனி வங்கியிடமிருந்து கடனாக பெறப்பட்ட தொகையை தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தடுப்பதற்காக மட்டும் தான் அரசு பயன்படுத்த வேண்டும். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் மொத்தம் 23 இடங்களில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடைகள் கலக்கின்றன. அதுமட்டுமின்றி, நெல்லை மாநகரத்தில் இருந்து தாமிரபரணியில் சங்கமமாகும் 4 பெரிய கால்வாய்களில் வீடுகள் மற்றும்  தொழிற்சாலைகளின் திடக்கழிவுகள் கலக்கவிடப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும் 200 டன் திடக்கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலக்கின்றன. இதைத் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள நிதி தான் பெருந்தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது நிதி கிடைத்துள்ள நிலையில், அந்த நிதியை ஆற்றை தூய்மைப்படுத்துபதற்கு பயன்படுத்தாமல் அழகுபடுத்த பயன்படுத்துவதை ஏற்க முடியாது.</p><p>தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுகளைத் தடுத்து, அந்த ஆற்றை தூய்மைப்படுத்தாமல், அதன் கரைகளை அழகுபடுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. ஆற்றை தூய்மைப்படுத்தாமல், அதன் கரைகளை ரூ.59 கோடி அல்ல.... ரூ.590 கோடியில் அழகுபடுத்தினாலும் அங்கு யாரும் செல்ல மாட்டார்கள். நெல்லை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில் ஆற்றின் படித்துறைகள் சேதமடைந்திருப்பது உண்மை தான். அவற்றை மட்டும் இடிந்து கற்களைக் கொண்டு சில லட்சங்களில் மாநகராட்சியே சரி செய்ய வேண்டும். ஜெர்மனி வங்கியிடமிருந்து கடனாக பெறப்பட்ட ரூ.59.05 கோடியையும் தாமிரபரணி ஆற்றில் சாக்கடைகளை கலப்பதை தடுத்து, தூய்மைப்படுத்துவதற்காக மட்டும் தான் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்.</p><p>நெல்லை நகருக்கு வெளியில், பாபநாசத்தைக் கடக்கும் போது, அங்கு திதி என்ற பெயரில் ஆண்டுதோறும் 100 டன் பழைய துணிகள் வீசப்படுதல், சேரன்மாதேவி பகுதியில் 25 லட்சம் லிட்டர் தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கவிடப்படுதல் உள்ளிட்ட சீரழிவுகளைத் தடுக்கவும் தனித் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>திருவாரூர்: வனச்சரக அலுவலகத்தில் ரூ.48 லட்சம் மோசடி; கணக்காளர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvarur-rs48-lakh-fraud-at-forest-department-office-case-registered-against-accountant</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvarur-rs48-lakh-fraud-at-forest-department-office-case-registered-against-accountant#comments</comments><guid isPermaLink="false">00a8aad7-d8c8-435d-aae8-cf9f50e070f9</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:28:50 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:28:50.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvarur,திருவாரூர்,பணம் மோசடி,money laundering,வழக்குப்பதிவு,case registration,forest department office</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/zs03f9wo/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/zs03f9wo/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவாரூர்</a> மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் ரூ.48 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடி</a> செய்த கணக்காளர் மீது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">வழக்குப்பதிவு</a> செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>திருவாரூர் வனச்சரக அலுவலக கணக்காளர்</h2><p>திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றியவர் சிவக்குமார். இவர் பணி மாறுதல் பெற்று தேனி மாவட்டத்திற்கு சென்றார். </p><h2>ரூ.48 லட்சம் மோசடி</h2><p>திருவாரூரில் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்ததில், போலியான ஆவணங்கள் மற்றும் வங்கி முத்திரைகளை பயன்படுத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.48 லட்சத்து 12 ஆயிரத்து 426 மோசடி செய்தது தெரிந்தது. </p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூர் குற்றப்பிரிவு போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>‘மது, வேலைவாய்ப்பின்மை, சமூக அநீதியில் இருந்து விடுதலை பெற  உறுதியேற்போம்’ - அன்புமணி சுதந்திர தின வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-break-free-from-alcohol-unemployment-and-social-injustice-anbumanis-independence-day-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-break-free-from-alcohol-unemployment-and-social-injustice-anbumanis-independence-day-greetings#comments</comments><guid isPermaLink="false">e9e8984e-ddd0-438b-b4e7-8283b46b02dd</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:28:39 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:28:39.302Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,சுதந்திர தினம்,Independence Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0qllxl08/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0qllxl08/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-</p><p>“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதன் 80 ஆம் விடுதலை நாளை கொண்டாடும் வேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வரம் என்பது விடுதலை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 400 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா, 78 ஆண்டுகளுக்கு முன் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டபோது ஒட்டுமொத்த இந்திய மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விடுதலை என்ற அந்த ஒற்றை வார்த்தையின் மூலமாகத்தான் ஆங்கிலேயர்களின் பொருளாதார, சமூக, கல்விச் சுரண்டல்களில் இருந்து நாம் தப்பித்து வந்தோம். அந்த வகையில் ஒவ்வொரு விடுதலை நாளும் பெருமகிழ்ச்சி அளிக்கும் நாள்தான் என்பதில் ஐயமில்லை.</p><p>ஆனால், ஆங்கிலேயர்களின் அடிமைத்தளையில் இருந்து மட்டும் விடுதலை பெற்றால் மட்டும் போதுமா? நம்மை சுரண்டும் சக்திகள், மது, போதை, வேலைவாய்ப்பின்மை, சமூக அநீதி, பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமை, சுற்றுச்சூழல் சீரழிவு, கனிமக் கொள்ளை என நாம் விடுதலை பெற வேண்டிய அடிமைத்தளைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை வென்றெடுத்தால் மட்டும் தான் நாம் உண்மையான விடுதலையை பெற முடியும். இந்த இலக்குகளை எட்டும் நாள்தான் நமக்கு உண்மையான விடுதலை நாள். </p><p>கடந்த ஆண்டு இதே நாளில் விடுதலை நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தபோது, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிகழ்ந்ததை விட அதிகமான சுரண்டல்களும், அத்துமீறல்களும் நடைபெறும் ஆட்சியை அகற்றுவதே நமது இரண்டாவது விடுதலை என்று தெரிவித்திருந்தேன். அந்த இலக்கை நாம் வென்றெடுத்து விட்டோம். எனினும் அதுமட்டுமே போதுமானதல்ல. நாம் வென்றெடுக்க வேண்டிய இலக்குகள் இன்னும் உள்ளன.</p><p>ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மதுவும் போதையும் இன்னும் ஒழியவில்லை; சமூகநீதி தழைக்கவில்லை; வேலைவாய்ப்பு கனவுகள் நனவாகவில்லை. அவற்றையும் நாம் வென்றெடுக்க வேண்டும். அதை நோக்கிய பயணத்தின் முதல் அடியாக, நாட்டிற்கு விடுதலை தேடித் தந்த தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளில் மது இல்லா தமிழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கவிருக்கிறோம். </p><p>இந்த பயணத்தின் நிறைவில் நமது அனைத்து இலக்குகளையும் வென்றெடுத்து உண்மையான விடுதலையைப் பெற முடியும் என்ற நம்பிக்கை என் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறது. அந்த நம்பிக்கையை நனவாக்குவதற்காக இன்று முதல் கடுமையாக உழைக்க நாம் அனைவரும் இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-drop-sharply-today-whats-the-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-drop-sharply-today-whats-the-status#comments</comments><guid isPermaLink="false">644611c4-ed4a-4058-83b5-d1ffe0ecd4a7</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:24:00 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:24:00.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/28v870bt/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/28v870bt/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையானது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160-ம், கிராமுக்கு ரூ.20-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும், ஒரு கிராம் ரூ.14,220-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மக்களவை சபாநாயகர் தேநீர் விருந்தில் பங்கேற்றது ஏன்? கனிமொழி விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-she-attend-the-lok-sabha-speakers-tea-party-kanimozhi-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-she-attend-the-lok-sabha-speakers-tea-party-kanimozhi-explains#comments</comments><guid isPermaLink="false">befa8b56-a8bc-4306-9bdb-c72c1bffea93</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:17:41 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:17:41.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,தேநீர் விருந்து,tea party</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ratm3a3m/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ratm3a3m/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து நீட் தேர்வு முறைகேடு விவகாரம், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை பணம் திருட்டு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.</p><p>இதனால் எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்தது. இருப்பினும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளிக்கு இடையே முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.</p><p>இதனால், மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அமளி தொடர்ந்து நீடித்ததால், மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. அதனை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு 20-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.</p><p>இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் வழக்கம்போல் சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சபாநாயகரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.</p><p>அரசியல் களத்தில் பரபரப்பு...</p><p>ஆனால், தேநீர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டி வருவதாகவும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை திமுக உதவியுடன் பாஜக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பையும் விவாதத்தையும் எற்படுத்தியது. </p><p>இந்த நிலையில், தேநீர் விருந்தில் கலந்துகொண்டது குறித்து கனிமொழி எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது;</p><p>“நாங்கள் காங்கிரசின் இந்தியாகூட்டணியில் இல்லை. நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களின் இடம் மாற்றுவது குறித்து சபாநாயகருடன் பேசுவதற்காக தேநீர் விருந்தில் கலந்துகொண்டேன். தேநீர் விருந்தில் கலந்துகொண்டதில் சரச்சையாக என்ன இருக்கிறது? ”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படுமா? அமைச்சர் அருண்ராஜ் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-reservation-for-government-school-students-be-raised-to-10-percent-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-reservation-for-government-school-students-be-raised-to-10-percent-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">df9ec296-cfa8-43fc-92f4-d73575742724</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:17:40 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:17:40.056Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடஒதுக்கீடு,அரசு பள்ளி மாணவர்,Arun Raj,அமைச்சர் அருண்ராஜ்,govtschool</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/dxpe9rhv/Arun-raj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/dxpe9rhv/Arun-raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டசபை யில் நிறைவேற்றியுள்ளோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான விருது பெறுவதற்காக நான் டெல்லி சென்றிருந்த போது கூட மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்ததில் கூட நீட் குறித்தும் கோரிக்கை வைத்தோம். அரசு சார்பிலும், சட்டப்போராட்டத்திலும் நாம் அதை முன்வைக்கிறோம். </p><h2>கூடுதல் மருத்துவ இடங்கள்</h2><p>நிச்சயமாக நம்முடைய மாநில உரிமையை பெற்றுக்கொள்வோம்.அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சத வீதமாக உயர்த்துவது தொடர்பாக முதல்-அமைச்சருடன் பேசி குழு அமைத்து அந்த குழு எப்படி சொல்கிறார்களோ? அதன்படி செய்வோம். 5 கல்லூரிகளுக்கு கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைத்திருக்கிறது. </p><h2>சட்டப்படி நடவடிக்கை</h2><p>இன்னும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அதற்கான ஆய்வை நடத்தி அனுமதி கொடுக்க இருக்கிறது. அதன் பிறகு அந்த இடங்களில் வரும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான இடங்களும் 2-வது சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும்.மருத்துவப் படிப்புக்கான கட்டணங்களை அதிகமாக கல்வி நிறுவனங்கள் பெறுவதாக புகார்கள் வருகின்றன. கட்டண நிர்ணயம் செய்வதை மட்டுமே கல்வி நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும். தவறு செய்யும் கல்வி நிறுவனங் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தாயுடன் பழகிய வாலிபர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-vayathu-sirumikku-paliyial-thollai-thayudan-pazhagiya-valibar-pocso-vil-kaithu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-vayathu-sirumikku-paliyial-thollai-thayudan-pazhagiya-valibar-pocso-vil-kaithu#comments</comments><guid isPermaLink="false">d91c5f7c-b13a-43a0-96db-1e6339908feb</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:13:25 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:13:25.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,திருநெல்வேலி,arrest,POCSO case,போக்சோ வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/bv75zuvb/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/bv75zuvb/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.</p><h2>இளம்பெண்ணுடன் பழக்கம்</h2><p>நெல்லை டவுன் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மைதீன் கான். இவருடைய மகன் செய்யது பீர் முகமது (30 வயது). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது டவுன் பாரதியார் தெருவில் வசித்து வருகிறார். இவர் 35 வயது இளம்பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.</p><h2>பாலியல் தொல்லை</h2><p>இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண்ணின் 4 வயது மகளை தனியார் பள்ளியில் இருந்து செய்யது பீர் முகமது தனது பைக்கில் அழைத்து வந்துள்ளார். அப்போது அந்த சிறுமி சேட்டை செய்தாள். இதனால் ஆத்திரமடைந்த செய்யது பீர் முகமது சிறுமியை கடித்து துன்புறுத்தினார். மேலும் பாலியல் தொல்லையும் கொடுத்ததாக கூறப்படுகிறது.</p><h2>போக்சோவில் கைது</h2><p>இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே தனது தாயிடம் தெரிவித்தாள். உடனடியாக அந்த பெண் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செய்யது பீர் முகமதுவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பலூர்: கோவில் தேரை இழுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambalur-two-killed-by-electric-shock-while-pulling-temple-chariot</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambalur-two-killed-by-electric-shock-while-pulling-temple-chariot#comments</comments><guid isPermaLink="false">938fca79-fb35-4a3d-a61a-98ea979f7877</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:09:36 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:09:36.853Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்சாரம்,electricity,Perambalur,பெரம்பலூர்,கோவில் தேரோட்டம்,kovil therottam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/u38gr5o6/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/u38gr5o6/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலூர்,</p><h2>மின் கம்பியில் உரசியது</h2><p>பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று திருவிழா நடை பெற இருந்தது. இதற்காக அந்த கோவிலில் உள்ள சுமார் 20 அடி உயரம் உள்ள சகடையை (சிறிய அளவிலான தேர்) அலங்காரம் செய்து சுவாமியை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கான பணியில் நன்னை தெற்கு தெருவை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான அண்ணாதுரை (வயது 42), விவசாயியான பரமசிவம் (42) ஆகியோர் நேற்று இரவு 8.45 மணியளவில் ஈடுபட்டு இருந்தனர்.</p><p>பின்னர் அவர்கள் 2 பேரும் அந்த தேரை கோவிலில் இருந்து சாலை வழியாக இழுத்து சென்றனர். அந்த தேர் ஏரிக்கரை மேட்டில் சென்றபோது மேலே சென்ற மின்சார கம்பியை அவர்கள் 2 பேரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மின் கம்பியில் தேரின் உச்சியில் உள்ள கூம்பு பகுதி உரசியது. </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதில், தேரை இழுத்து சென்ற அண்ணாதுரை, பரமசிவம் ஆகியோர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கோவில் நிர்வாகிகளுக்கும், குன்னம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன். சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ராம்தேவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.</p><p>பின்னர் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் தேரை இழுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திமுக - பாஜக கூட்டணியா? - ஆளூர் ஷா நவாஸ் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-bjp-alliance-aaloor-sha-navas-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-bjp-alliance-aaloor-sha-navas-asks#comments</comments><guid isPermaLink="false">cb0fddd9-3bb2-4fba-9691-7f7fe04c586b</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:52:49 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:52:49.655Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,திமுக,DMK,ஆளூர் ஷா நவாஸ்,Aaloor ShaNavas</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/noe7i03n/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/noe7i03n/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சபாநாயகர் தேநீர் விருந்து</h2><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. ஒவ்வொரு கூட்டத்தொ டரின் நிறைவிலும் இரு அவைகளின் தலைவர்களும் உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று மக்களவை முடிவடைந்த தும், சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார்.</p><p>இந்த விருந்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. ஆனால் அதில் ஒரு அங்கம் வகித்த தி.மு.க., நேற்றைய சபாநாயகரின் தேநீர் விருந்தில் பங் கேற்றது. நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் கனிமொழி எம்பி. இந்த விருந்தில் பங்கேற்றார். ஆனால் உடனடியாக அவர் சென்னை திரும்பியதால் விருந்து நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அங்கிருந்து புறப்பட்டார்.</p><h2>திமுக - பாஜக கூட்டணி</h2><p>பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டி வருவதாகவும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை திமுக உதவியுடன் பாஜக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பையும் விவாதத்தையும் எற்படுத்தியது.</p><p>இந்த நிலையில், சபாநாயகர் தேநீர் விருந்து குறித்து விசிக முதன்மை செயலாளர் ஆளுர் ஷா நவாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>“மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் கவர்னர் கொடுக்கும் தேநீர் விருந்தை தமிழக முதல்-அமைச்சர் விஜய் புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-mettur-dam-has-declined</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-mettur-dam-has-declined#comments</comments><guid isPermaLink="false">2d3e3fce-c0cd-4bfb-b46e-d20f83ac2c91</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:28:07 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:28:07.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர்வரத்து,Water inflow</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/z2tpkzu1/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/z2tpkzu1/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதியில் இருந்து கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.</p><h2>அணையின் நீர்மட்டம்</h2><p>இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.70 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது வினாடிக்கு 7,833 கன அடியில் இருந்து 6247 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 80.70 அடியாகவும், நீர் இருப்பு 42.658 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. </p> ]]></content:encoded></item><item><title>பிரதமர் வேட்பாளர் விஜய்யா? - அமைச்சர் ராஜேஷ்குமார் பரபரப்பு பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-vijay-the-prime-ministerial-candidate-minister-rajeshkumars-sensational-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-vijay-the-prime-ministerial-candidate-minister-rajeshkumars-sensational-response#comments</comments><guid isPermaLink="false">b9ed258e-ef0a-4ce7-a1e8-941fe0a6159f</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:27:38 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:27:38.727Z</atom:updated><atom:author><atom:name>Lingavel Murugan M</atom:name><atom:uri>/api/author/2401545</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,காங்கிரஸ்,Congress,CM Vijay,அமைச்சர் ராஜேஷ்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/drl2rlwp/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/drl2rlwp/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் அமைச்சர் ராஜேஷ் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் ஒருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது அவர் நிலைப்பாடு. எங்களுடைய நிலைப்பாடு. நாங்கள் எதிர்பார்க்கும் தலைவர் ராகுல் காந்தி 2029-ல் பிரதமராக வருவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. </p><p>பிரதமர் வேட்பாளராக த.வெ.க. விஜய்யை முன்னிறுத்த போகின்றார்களா என்று கேட்கும் உங்களது யூகத்துக்கு பதில் கூற முடி யாது. கூட்டணியுடன் இணைந்து மக்களுக்கான வளர்ச்சி திட்டங் களை செயல்படுத்தி வருகிறோம். 59 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சியில் பங்கு வகிக்கிறோம்.</p><p>வாக்குச்சாவடி அளவில் கட் சியை பலப்படுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கைச்சின்னம் வெற்றி பெற நடவடிக்கை எடுப்போம். ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை த.வெ.க. நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சாதிக்க வயது தடையில்லை: 51 வயதில் எம்.பி.பி.எஸ். ‘சீட்’</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-age-limit-to-achieve-mbbs-seat-at-the-age-of-51</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-age-limit-to-achieve-mbbs-seat-at-the-age-of-51#comments</comments><guid isPermaLink="false">c917a505-0c22-447b-a1be-5e941884a009</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:03:09 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:03:09.600Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Nagapattinam,நாகப்பட்டினம்,மாற்றுத்திறனாளி,MBBS,எம்.பி.பி.எஸ்.,சீட்,seat,Disabled,மருத்துவ கலந்தாய்வு,medical consultation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/rd6qvftu/51-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 51 வயதில் எம்.பி.பி.எஸ். சீட்டைப் பெற்றவர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/rd6qvftu/51-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மருத்துவ படிப்பு</a>களில் சேருவதற்காக நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">கலந்தாய்வில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாற்றுத்திறனாளிகள்</a> பிரிவில் கலந்துகொண்ட ஒருவர் வியப்பை ஏற்படுத்தினார். </p><h2>51 வயதில் எம்.பி.பி.எஸ். சீட்</h2><p>நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது பூர்த்தி செய்திருக்கும் சுரேஷ்குமார் என்பவர் எம்.பி.பி.எஸ். சீட்டை தட்டிப் பறித்து இளைஞர் பட்டாளத்துடன் படிப்பில் போட்டி போட தயாராகியிருக்கிறார். "சாதிக்க வயது ஒரு தடையில்லை" என்பதற்கு சுரேஷ்குமார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். </p><h2>தமிழ் வழியில் நீட் தேர்வு</h2><p>பள்ளிப்படிப்பை முடித்து மருத்துவ படிப்பை படிக்க ஆசைப்பட்ட சுரேஷ்குமாருக்கு அப்போது அது சாத்தியப்படவில்லை. இந்த நிலையில் 2022-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஆசை மீண்டும் பொறித்தட்ட நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதினார். ஆனால் அதில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் தாயும், மகளும் சேர்ந்து மருத்துவ இடங்களை தேர்வு செய்த செய்தி அவருக்கு மேலும் உந்துதலை கொடுத்தது. </p><h2>மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு</h2><p>அதன் அடிப்படையில் 2026-ம் ஆண்டு நீட் தேர்வை எழுதி 192 மதிப்பெண் எடுத்திருந்த சுரேஷ்குமார், 2019-ல் நடந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை சுட்டிக்காட்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்று நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்திருக்கிறார். </p><h2>டாக்டராக வலம் வருவேன்</h2><p>இதுகுறித்து சுரேஷ்குமார் கூறுகையில், 'ரத்த பரிசோதனை மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தேன். இப்போது என்னுடைய வேலையை உதறிவிட்டு, படிப்பை தொடர போகிறேன். சொந்த ஊரில் உள்ள கல்லூரியிலேயே படிக்க போகிறேன். நிச்சயம் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து டாக்டராக வலம் வருவேன்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறு பதிவிட்ட வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-defamatory-instagram-post-against-minister-athav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-defamatory-instagram-post-against-minister-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">8462c5ba-dece-4862-bf1a-9f702fa729a6</guid><pubDate>Fri, 14 Aug 2026 02:48:17 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:48:17.617Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,கைது,தூத்துக்குடி,arrest,Thoothukkudi,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/kuqyvd2z/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/kuqyvd2z/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறாக பேசி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><p>தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் செல்வராஜ் (36 வயது). தி.மு.க. பிரமுகரான இவர் தற்போது திருப்பூரில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பற்றி அவதூறாக பேசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டார்.</p><p>இதுதொடர்பாக த.வெ.க. நிர்வாகி ஒருவர் சூரங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செல்வராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் திருப்பூருக்கு சென்று செல்வராஜை அதிரடியாக கைது செய்தனர்.</p><p>அவரை நேற்று முன்தினம் இரவில் விளாத்திகுளம் பகுதிக்கு அழைத்து வந்து உரிமைகள் மற்றும் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து நீதிபதி விசாரணை நடத்திய நிலையில், செல்வராஜ் தினமும் காலை 10.30 மணிக்கு சூரங்குடி போலீஸ் நிலையத்தில் 30 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்-கரூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-diversion-on-the-dindigul-karur-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-diversion-on-the-dindigul-karur-road#comments</comments><guid isPermaLink="false">acd8bedb-17e4-48cc-8406-ebf328e5f751</guid><pubDate>Fri, 14 Aug 2026 02:44:24 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:44:24.026Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,போக்குவரத்து மாற்றம்,traffic diversion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/alls64ng/traffic.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/alls64ng/traffic.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு உதவிக்கோட்டப் பொறியாளர் பாலசெந்தில் நாதன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>’திண்டுக்கல் -குஜிலியம்பாறை-கரூர் சாலையில் அமைந்துள்ள சுரங்கப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-3ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனால் மேற்கண்ட 3 நாட்கள் மட்டும் சுரங்கப்பாலம் வழியாக கரூர் செல்லும் வாகன ஓட்டிகள் திருச்சி சாலை வழியாக செல்ல வேண்டும்.’ என அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் மீது கல்வீச்சு: என்ஜின் டிரைவர் காயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stone-pelted-at-coimbatore-mettupalayam-memu-train-engine-driver-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stone-pelted-at-coimbatore-mettupalayam-memu-train-engine-driver-injured#comments</comments><guid isPermaLink="false">53375039-307b-4741-80a2-8c90ecfd3b94</guid><pubDate>Fri, 14 Aug 2026 02:33:51 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:33:51.116Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,மேட்டுப்பாளையம்,மெமு ரெயில்,Mettupalayam,என்ஜின் டிரைவர்,Engine Driver,MEMU train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0u0ckqmn/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0u0ckqmn/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>மெமு ரெயில்</h2><p>கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு தினமும் மெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட மெமு ரெயிலில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு தற்போது 12 பெட்டிகளுடன் ஓடுகிறது.</p><p>கோவை மற்றும் மேட்டுப்பாளையம் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர். இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்றது.</p><h2>கல்வீச்சு</h2><p>நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த புதுப்பாளையம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் அருகே நின்றிருந்த 3 மர்ம ஆசாமிகள் திடீரென்று ரெயில் மீது கற்களை தூக்கி வீசி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது இதில் ரெயிலின் என்ஜினின் முன்பக்க கண்ணாடி உடைந்து டிரைவர் (லோகோ பைலட்) டென்னி தாமஸ் கை மீது விழுந்தது.</p><p>இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் என்ஜின் டிரைவர் டென்னி தாமஸ் பெரியநாயக்கன்பாளையம் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தினார். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். மேலும் ரெயிலில் வந்த பயணிகள், லோகோ பைலட் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>ஓடும் ரெயில் என்ஜின் மீது மர்ம நபர் கள் கல் வீச்சில் ஈடுபட்ட சம்பவம் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ரெயில் மீது கல் வீசிய மர்ம நபர்கள் யார்? மது போதையில் கல் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிப்படிப்பு முதல் மருத்துவப்படிப்பு வரை; சிறுவயது முதல் சேர்ந்தே சாதிக்கும் இரட்டையர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-school-to-medical-school-twins-who-have-been-achieving-together-since-childhood</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-school-to-medical-school-twins-who-have-been-achieving-together-since-childhood#comments</comments><guid isPermaLink="false">7b28bfd1-b413-406c-928e-5a8154e69fa9</guid><pubDate>Fri, 14 Aug 2026 02:15:59 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:15:59.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Salem,சேலம்,Achievement,இரட்டையர்கள்,twins,சாதனை,மருத்துவ கலந்தாய்வு,medical consultation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/tgsya6hh/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Djpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சேர்ந்து சாதித்த இரட்டையர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/tgsya6hh/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Djpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மருத்துவப் படிப்பு</a>க்கான நேற்று நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">கலந்தாய்வில்</a>, விளையாட்டு பிரிவில் மருத்துவப் படிப்பை தேர்வு செய்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">சேலத்தைச்</a> சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">இரட்டையர்கள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">சாதித்திருக்கின்றனர்</a>.</p><h2>சேலத்தை சேர்ந்த இரட்டையர்கள்</h2><p>சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் தன்னுடைய இரட்டை பிள்ளைகளான நிகில் ஸ்ரீராம், நிக்ஷிதா ஆகிய 2 பேரையும் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு சென்னை அழைத்து வந்திருந்தார். இவர்கள் இருவரும் “வுஷூ" என்ற தற்காப்பு கலை விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கி சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று அதன் மூலம் விளையாட்டு பிரிவில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.</p><h2>மருத்துவப் படிப்பு கலந்தாய்வு</h2><p>நிகில்ஸ்ரீராம் நீட் தேர்வில் 240 மதிப்பெண்ணும், நிக்ஷிதா 370 மதிப்பெண்ணும் விளையாட்டுக்கு மத்தியில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த மதிப்பெண் அடிப்படையிலும், விளையாட்டு பிரிவின் அடிப்படையிலும் நிகில் ஸ்ரீராமுக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியிலும். நிக்ஷிதாவுக்கு சேலம் மருத்துவக் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன.</p><h2>சிறுவயது முதல் சேர்ந்தே சாதித்த இரட்டையர்கள்</h2><p>நிகில் ஸ்ரீராமும், நிக்ஷிதாவும் பள்ளிப் படிப்பில் இருந்து தொடர்ந்து ஒன்றாகவே பயணித்து வருகின்றனர். ஒரே வகுப்பறையில் ஒரே பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவர்கள், விளையாட்டிலும் ஒரே விளையாட்டையே தேர்வு செய்து அதில் சாதித்து, அதன் வாயிலாக இப்போது மருத்துவப் படிப்பு ஆசையையும் நிறைவேற்றியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது. 'எங்கள் குடும்பத்தில் பலர் மருத்துவத்துறையில் பயணிக்கிறார்கள். எங்களுடைய தந்தை மருந்துகள் மொத்த விற்பனையாளராக உள்ளார். அந்த வகையில் நாங்களும் மருத்துவத் துறையில் காலடி வைக்க முயற்சித்தோம். அதை சாதித்து விட்டோம்' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-experiencing-power-outage-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-experiencing-power-outage-today#comments</comments><guid isPermaLink="false">0d12084c-28de-4a2d-8dc4-56ec328a7b3c</guid><pubDate>Fri, 14 Aug 2026 02:07:23 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:07:23.890Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power outage,மின் தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ym9lijjq/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ym9lijjq/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 14.08.2026 (இன்று) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p>திருவொற்றியூர்: டி.எச். சாலை, ராஜா கடை, திருச்சினாங்குப்பம், கன்னிகோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, கணக்கர் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, மார்கெட் லேன், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, சாத்தாங்காடு பகுதி, நியூ தெரு, வசந்தா நகர், ஜான்ரவார் தெரு, ஐய்யப்பள்ளி தோட்டம், ஷேசாச்சல கிராமணி தெரு, திலகர் நகர், சின்னமேட்டுபாளையம், பெரியமேட்டுபாளையம், மேற்கு மற்றும் வடக்கு மாட வீதி, பிகேஎன் காலனி, வீரராகவன் தெரு, குமரன் நகர், கோமாதா நகர், பிபிடி சாலை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> அமித்ஷா தலைமையில் தென்மண்டல முதல்-மந்திரிகள் மாநாடு: சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-zone-chief-ministers-conference-chaired-by-amit-shah-two-day-event-held-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-zone-chief-ministers-conference-chaired-by-amit-shah-two-day-event-held-in-chennai#comments</comments><guid isPermaLink="false">8ec6219d-39d4-4b63-85bb-e9680e09d780</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:58:21 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:58:21.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,Chennai,சென்னை,Amit Sha,மாநில முதல்-மந்திரிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/j1hnx3fb/Amit-sha.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமித்ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித்ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/j1hnx3fb/Amit-sha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>முதல்-மந்திரிகள் மாநாடு</h2><p>இந்தியாவின் தென்மண்டல மாநிலங்களாக ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை உள்ளன. புதுச் சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களையும் இது உள்ள டக்கியுள்ளது. இந்த மாநிலங்களின் மண்டல மாநாடு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுவது வழக்கமாகும்.இதற்கு முன்பு 30-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் 2022-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. இந்தநிலையில் 31-வது மாநாடு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில், சென்னை கோவளத்தில் உள்ள தாஜ் பிஷ்சர்மேன்ஸ் கோவ் என்ற நட்சத்திர ஓட்ட லில் நடைபெறவுள்ளது.</p> <h2>5 முதல்-மந்திரிகள்</h2><p>இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான தென் மண்டல குழுவில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையிலும் இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பார் என்று கூறப்படு கிறது. மேலும், முதல்-மந்திரிகள் சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), டி.கே.சிவ குமார் (கர்நாடகம்), சதீசன் (கேரளம்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), புதுச்சேரி முதல்-அமைச்சர் ரெங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இந்த மாநிலங்களின் முக்கிய மந்திரிகள், அரசுத் துறை செயலாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், மாநில எல்லைப்புறங்களை ஓட்டியுள்ள மாவட்ட கலெக்டர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டின் முன்னோட்டமாக, தமிழகத்தின் அனைத்து அரசுத்துறை செய லாளர்களின் கூட்டம் வருகிற 18-ந் தேதி நடைபெறுவதாக கூறப்படுகிறது.</p><h2>என்னென்ன அம்சங்கள்?</h2><p>இந்த மாநாட்டில் மிக முக்கியமான அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மாநிலங்களின் எல்லைப்புறங்களில் உள்ள பிரச்சினைகள், கடத்தல் குற் றங்கள், மாநிலம் விட்டு மாநிலம் சென்று பதுங்கியுள்ள குற்றவாளிகள் குறித்த தகவல்கள், குற்றங்கள்-நிகழ்வுகள் குறித்த தகவல் பரிமாற்றம், அதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம்,மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பகிர்வு, பிராந்திய உள்கட்ட மைப்பு மற்றும் இணைப்பு, எல்லைப் பகுதிகளில் ஏற்படும் பதற்றநிலை தணிப்பு, கடல்சார் விவகாரங்கள், கடலோரக் காவல், எல்லைகளை ஒட்டிய வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு. சாலை போக்குவரத்து வாகன கண்காணிப்பு, எல்லையோர சோதனை சாவடிகள், சுற்றுச் சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன.இந்த மாநாட்டின் இறுதியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரை யாற்றுவார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;மதுரை பயலுகடா.. கொடூரமடா...&quot; அரசு பஸ்சில் இடம் பெற்ற வாசகத்தால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-payalugada-horror-slogan-on-government-bus-sparks-a-stir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-payalugada-horror-slogan-on-government-bus-sparks-a-stir#comments</comments><guid isPermaLink="false">7aa802ba-6870-4526-beed-ffbeb90a7d0d</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:57:26 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:57:26.151Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Madurai,மதுரை,govt bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/e4x02u5n/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/e4x02u5n/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்ற அரசு பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி. பெயர் பலகையில் 'மதுரை பயலுகடா.. கொடூரமடா..." என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த பயணிகள், அந்த பஸ் எந்த ஊருக்கு இயக்கப்படுகிறது என்பது தெரியாமல் குழம்பியபடி பயணித்தனர். </p><p>இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அரசு பஸ்களில் உள்ள பெயர் பலகைக்கான எல்.இ.டி. திரைகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு ஊர் பெயர்களுக்கு பதிலாக வேறு வார்த்தைகள் இடம்பெறுவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி சீருடையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரல் - தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirls-drink-alcohol-in-uniform-video-viral-action-against-headmistress</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirls-drink-alcohol-in-uniform-video-viral-action-against-headmistress#comments</comments><guid isPermaLink="false">edd8a758-a1ff-4d0c-b261-9ca4deb8cb5d</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:57:11 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:57:11.186Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,தக்கலை,பள்ளி மாணவிகள்,மது அருந்துதல்,Thuckalay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qsi9qtxe/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qsi9qtxe/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மது அருந்திய மாணவிகள்</h2><p>அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் 2 மாணவிகள் மது அருந்துகிறார்கள். பள்ளியின் வகுப்பறை முன்பு மேஜை போடப்பட்டிருக்கிறது. அதில் சாப்பாடு மற்றும் மது குடிப்பதற்கான தின்பண்டங்கள் இருக்கிறது. பாட்டிலில் உள்ள மதுவை மாற்றி, மாற்றி இருவரும் குடிக்கிறார்கள். அதனை மற்றொரு மாணவி வீடியோவாக படம் பிடிக்கிறார். அப்போது, மதுகுடிப்பதை ஏன் படம் பிடிக்கிறாய் என்று மாணவி ஒருவர் கேட்பது போல் வீடியோ இருக்கிறது.</p><h2>கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை</h2><p>இதுகுறித்து அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், தக்கலை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை</h2><p>இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையை நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கு இடமாற்றம் செய்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் மது குடித்த மாணவிகளுக்கு மதுபாட்டில் கிடைத்தது எப்படி? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-chennai-egmoresalem-express-train-timings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-chennai-egmoresalem-express-train-timings#comments</comments><guid isPermaLink="false">0a084c0c-4729-4168-94e9-128f0626ceed</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:28:55 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:28:55.802Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Express train,எக்ஸ்பிரஸ் ரெயில்,Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/8yfc08ex/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/8yfc08ex/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>சென்னை எழும்பூரில் இருந்து சேலத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர் வழியாக தினசரி சேலம் வருகிறது. </p><p>இந்த ரெயில் நேற்று இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இணைப்பு ரெயில் தாமதமாக வருவதால், இந்த ரெயில் 7 மணி 35 நிமிடங்கள் தாமதமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p><p>&lt;</p><p>&gt; &lt;</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யுடன் ‘செல்பி&apos; எடுத்துக்கொண்ட தொழில் அதிபர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/industrialists-took-a-selfie-with-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/industrialists-took-a-selfie-with-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">ca8dfa1b-7752-4e5b-8eab-cfc56f765abd</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:27:23 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:27:23.290Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தொழில் அதிபர்கள்,செல்பி,selfie,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/dcq2y8qa/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/dcq2y8qa/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் நடந்த த.வெ.க. அரசின் முதல் மாநாட்டில் ரஷியா, நியூசிலாந்து உள்பட சர்வதேச நாடுகளின் நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த மாநாட்டில் கையெழுத்தான 97 ஒப்பந்தங்கள் மூலம் 23 மாவட்டங்களில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.</p><p>மாநாட்டு மேடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான போது பெரும்பாலான நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம், அந்நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விஜய் சிறிது நேரம் பேசினார். தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் மேடையிலேயே விஜய்யுடன் 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.</p><p>வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு என்பதை குறிக்கும் வகையில் 'வி' என்ற குறியீட்டுடன் கூடிய பேட்ஜை விஜய் தனது கோட் மீது அணிந்திருந்தார். மாநாட்டில் பங்கேற்ற தொழில் அதிபர் ஒருவர் பொக்லைன் மினியேச்சரை வழங்கினார். அதனை விஜய் ரசித்து பார்த்தார். மாநாட்டில் அமைச்சர் கீர்த்தனா கம்பீரமாக பேசியதை விஜய் உன்னிப்பாக கவனித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு கட்டிடத்தில் தலைக்கு மேல் தொங்கிய டியூப் லைட், உடைந்து கிடந்த சுவிட்ச் போர்டு - அதிகாரிகளை கடிந்து கொண்ட லயோலா மணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tube-light-hanging-precariously-overhead-and-a-broken-switchboard-in-a-government-buildingloyola-mani-reprimanded-the-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tube-light-hanging-precariously-overhead-and-a-broken-switchboard-in-a-government-buildingloyola-mani-reprimanded-the-officials#comments</comments><guid isPermaLink="false">8bce58d4-723a-4f36-9473-1b1308c15505</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:18:53 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:18:53.899Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Loyola Mani,லயோலா மணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/61fz0r8m/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/61fz0r8m/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக த.வெ.க. நிர்வாகி லயோலா மணி கடந்த மாதம் நியமனம் செய்யட்டார். முன்னதாக கடந்த தி.மு.க. ஆட்சியில் பட்டிமன்ற நடுவரும், தி.மு.க. நிர்வாகியுமான திண்டுக்கல் லியோனி இந்த பொறுப்பில் இருந்தார். </p><p>இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமனம் செய்யப்பட்ட லயோலா மணி, பாடநூல் கழகத்தின் குடோன்கள், அலுவலகங்களில் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக குடோனில் லயோலா மணி ஆய்வு மேற்கொண்டார். </p><p>அந்த கட்டிடத்திற்குள் அவர் உள்ளே நுழையும்போது வாசலில் ஒரு பெரிய கான்கிரீட் கல் வைக்கப்பட்டிருந்ததை கண்டார். அது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, படிக்கட்டு கட்டுவதற்கு பதிலாக கல் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அந்த பாதையைத்தான் தினமும் பயன்படுத்தி வருவதாக அவர்கள் கூறினர்.</p><p>இதைக் கேட்டு அதிர்ச்சியான லயோலா மணி, “இப்படி கல் வைப்பதற்கு பதிலாக ஒரு படிக்கட்டு கட்டலாமே? இதில் யாராவது தவறி விழுந்தால் என்ன செய்வது?” என்று அதிகாரிகளை கடிந்து கொண்டார். பின்னர் கட்டிடத்திற்குள் நுழைந்த அவர், அங்கு தலைக்கு மேல் டியூப் லைட் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து மேலும் அதிர்ச்சியானார். அதுமட்டுமின்றி, அங்கு சுவற்றில் இருந்த சுவிட்ச் போர்டு உடைந்து ஆபத்தான முறையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்தைப் பார்த்து, அதிகாரிகளிடம் லயோலா மணி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். </p><p>பின்னர் உடனடியாக தனது செல்போனில் மின்வாரிய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசிய லயோலா மணி, “கடைசியாக எப்போது இங்கு வந்து பார்த்தீர்கள்? இங்கு டியூப் லைட், சுவிட்ச் போர்டு எல்லாம் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. நாளை ஆட்களை அனுப்பி இதை சரிசெய்து கொடுங்கள்” என்று கூறினார். </p><p>இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகளிடம் பேசிய லயோலா மணி, “ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டால் உங்கள் வேலை முடிந்தது என்று நினைக்காதீர்கள். திடீரென்று இங்கு அமைச்சர் ஆய்வுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? என்னிடம்தான் கேள்வி கேட்பார்கள்” என்று கடிந்து கொண்டார். </p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebrations-traffic-diversions-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebrations-traffic-diversions-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6ad4f474-4ed4-42b5-b099-26fa8e562b95</guid><pubDate>Fri, 14 Aug 2026 00:51:08 +0000</pubDate><atom:updated>2026-08-14T00:51:08.092Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து மாற்றம்,Independence Day,சுதந்திர தின விழா,Traffic diversions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/oxl1abdm/traffic.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/oxl1abdm/traffic.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திர தின விழாவையொட்டி போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கியின் சுரங்கப்பாதை வடக்குப்பகுதி வரை அமைந்துள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகியவற்றில் உரிய வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே, வாகனங்களில் செல்லமுடியும். உரிய அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>இதேபோல, காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக திருப்பிவிடப்படும். அதேபோல, பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்களும், வடக்குகோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை சந்திப்பு, முத்துசாமி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.</p><h2>அடையாள அட்டை</h2><p>சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள வாகனங்களில் வருபவர்களுக்கு, வாகன அனுமதி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் 'பர்பிள்' வண்ண அனுமதி அட்டைகள் வைத்திருப்பவர்கள் காலை 8 மணி வரை கோட்டை உள்வாயில் அருகே போக அனுமதி உண்டு. அவர்கள் கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும். ராஜாஜி சாலை வழியாக வருபவர்களுக்கும் இந்த அனுமதி பொருந்தும்.</p><p>இதே அடையாள அட்டையுடன், போர் நினைவுச் சின்னம் வழியாக வருபவர்கள் கொடிமர சாலை, முத்துசாமி பாலம், பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று கோட்டையின் வெளி வாயில் அருகே இறங்கிக்கொண்டு, தங்களது வாகனங்களை கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை இடத்தில் நிறுத்தவேண்டும்.</p><h2>நீல மற்றும் 'பிங்க்' வண்ண அனுமதி அட்டை</h2><p>நீல மற்றும் 'பிங்க்' வண்ண அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக போர் நினைவு சின் னம், கொடிமர சாலை, முத்துசாமி சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி வழியாக சென்று கோட்டையின் வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். வாகனங்களை பொதுப்பணித்துறை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.</p><p>நீல மற்றும் 'பிங்க்' வண்ண அனுமதி அட்டை வைத்திருக்கும், காமராஜர் சாலை வழியாக வருபவர்கள் காலை 8.30 மணிக்கு பின்னர் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணாசாலை வழியாக சென்று முத்துசாமி பாலம், பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக சென்று கோட்டையின் வெளிவாயில் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை இடத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.</p><p>வாகன அனுமதி அட்டை இல்லாதவர்கள் போர் நினைவு சின்னம் அருகே இறங்கிக்கொள்ள வேண்டும். வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்தவேண்டும் என்று போக்குவரத்து போலீசார் சார்பில் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள்</title><link>https://www.dailythanthi.com/others/thalayangam/100-naatkalil-rs-1-latcham-kodi-mudaleedugal</link><comments>https://www.dailythanthi.com/others/thalayangam/100-naatkalil-rs-1-latcham-kodi-mudaleedugal#comments</comments><guid isPermaLink="false">8b81bd3d-f316-4782-9708-0415351bd1ec</guid><pubDate>Fri, 14 Aug 2026 00:50:41 +0000</pubDate><atom:updated>2026-08-14T00:50:41.555Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தலையங்கம்,Thalayangam,தொழில் முதலீடுகள்,Investments,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/xthm6z1q/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/xthm6z1q/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலையங்கம் (Thalayangam)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற ஒரு தெளிவான இலக்கை ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே முதல்-அமைச்சர் விஜய் நிர்ணயித்தார். இத்தகைய பெரும் இலக்கை எட்டுவதற்கு புதிய தொழில்களை உருவாக்குவதும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதும் மிகவும் அவசியம். இதனால், தொழில்துறையை வேகமாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் தொழில்துறை அமைச்சராக கீர்த்தனாவையும், அந்தத் துறைக்கு கூடுதல் தலைமை செயலாளராக எஸ்.விஜயகுமாரையும் நியமித்தார். இந்தியாவிலேயே தமிழ்நாடு, திரிபுரா ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே பெண்கள் தொழில்துறை அமைச்சர்களாக உள்ளனர்.</p><p>பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அமைச்சர் கீர்த்தனாவும், அதிகாரிகள் குழுவினரும் தென்கொரியாவுக்கு சென்று, ரூ.39 ஆயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு நின்றுவிடாமல், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களுடனும், வெளிநாடுகளின் புகழ்பெற்ற நிறுவனங்களுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், தமிழக அரசு வழங்கத் தயாராக உள்ள சலுகைகள், வசதிகள், மானியங்கள் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது கடந்த மே மாதம் 10-ந்தேதிதான். வருகிற 17-ந்தேதிதான் 100 நாட்கள் நிறைவடைகின்றன. ஆனால், இந்தக் குறுகிய காலத்திற்குள்ளாகவே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் குறிப்பிடத்தக்க வேகத்தை தொழில்துறை காட்டியுள்ளது. இந்த முயற்சிகளுக்கு மகுடம் சூட்டுவதுபோல், சென்னையில் நேற்று 'வெற்றி தமிழ்நாடு' என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஒரே நாளில் புதிய தொழில்கள் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் 97 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த விழாவில் அமைச்சர் கீர்த்தனா பேசும்போது. "இந்த ஒப்பந்தங்களோடு எங்கள் ஆட்சியின் மொத்த முதலீடுகள் ரூ.1.02 லட்சம் கோடியை தாண்டும். இதன் மூலம் 1.21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். நாங்கள் ஆட்சி நடத்த தொடங்கிய ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.1,000 கோடியை ஈர்த்து இருக்கிறோம். இதை சிலர் பெரிய சாதனை என்று கூறலாம். ஆனால் எங்கள் அரசைப் பொறுத்தவரை இது கதையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. தொழில் முதலீட்டுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு அனைத்து அனுமதிகளையும் வழங்குவதற்கு 21 நாட்கள் காலக்கெடுவை எங்கள் முதல்-அமைச்சர் நிர்ணயித்துள்ளார். இந்த நிறுவனங்களால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடி தங்களது சொந்த ஊரைவிட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்காது" என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக கூறினார்.</p><p>இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் விஜய், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். தொழில் தொடங்குவதற்கும், விரிவாக்கத்துக்கும் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளும் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒப்பந்தம் செய்துள்ள 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக அமைய உள்ளன என்பதுதான் 'வெற்றி தமிழ்நாடு' மாநாட்டின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். குறுகிய 100 நாட்களுக்குள், ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் என்ற ஒரு இமாலய சாதனையை செய்து காட்டிய முதல்-அமைச்சர் விஜய்யும், தொழில்துறையினரும் பாராட்டுக்குரியவர்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-49</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-49#comments</comments><guid isPermaLink="false">dee8680d-e087-4213-9ce8-eff3bb2dc6c8</guid><pubDate>Fri, 14 Aug 2026 00:32:53 +0000</pubDate><atom:updated>2026-08-14T00:32:53.371Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/9hayqzyg/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/9hayqzyg/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (14.08.2026 வெள்ளிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>“எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல” - மின் கட்டண சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த யூடியூபர் தம்பதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-do-not-belong-to-any-political-party-youtuber-couple-clarifies-electricity-bill-controversy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-do-not-belong-to-any-political-party-youtuber-couple-clarifies-electricity-bill-controversy#comments</comments><guid isPermaLink="false">124037ce-1ffa-4025-87f7-50a463208b8e</guid><pubDate>Thu, 13 Aug 2026 20:05:13 +0000</pubDate><atom:updated>2026-08-13T20:05:13.497Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் கட்டணம்,electricity bill,யூடியூபர்,வைஷாலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/op6574zt/VAI.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பிரபல யூடியூபர் தம்பதி சத்தியதேவ் மற்றும் வைஷாலி வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் தற்போது விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/op6574zt/VAI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">மின் கட்டண உயர்வு</a> குறித்து சமூக வலைதளங்களில் பிரபல யூடியூபர் தம்பதி சத்தியதேவ் மற்றும் வைஷாலி வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் தற்போது விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளனர்.</p><h2>நடுத்தர மக்களின் சுமை குறித்தே பேசினோம்</h2><p>அந்த வீடியோவில், “நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல” என்று தெரிவித்துள்ள சத்தியதேவ் மற்றும் வைஷாலி, 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தி அதிக கட்டணம் செலுத்தும் நடுத்தர மக்களின் சுமையைப் பற்றியே தாங்கள் பேசியதாக விளக்கம் அளித்துள்ளனர்.</p><p>மேலும், தாங்கள் செலுத்திய மின்கட்டணத்திற்கான ஆதாரங்களையும் வீடியோவில் காண்பித்து, மின் கட்டணம் தொடர்பாக தங்களது கருத்தை மட்டுமே தெரிவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.</p><h2>சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க விளக்கம்</h2><p>முந்தைய வீடியோ பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்திய நிலையில், அதற்கான விளக்கமாக அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெண் காவலரை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்... பணி முடிந்து வீடு திரும்பியபோது பயங்கரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-stabs-policewoman-to-death-horror-unfolds-as-she-returns-home-after-duty</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-stabs-policewoman-to-death-horror-unfolds-as-she-returns-home-after-duty#comments</comments><guid isPermaLink="false">8db0b032-198e-4476-b17e-84fcc45bb01f</guid><pubDate>Thu, 13 Aug 2026 18:58:59 +0000</pubDate><atom:updated>2026-08-13T18:58:59.593Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,குடியாத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/6k1b318t/kaval.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வந்த தாமரைச்செல்வி (40), அவரது கணவர் கத்தியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/6k1b318t/kaval.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">வேலூர் </a>மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வந்த தாமரைச்செல்வி (40), அவரது கணவர் கத்தியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தலைமை காவலர்</h2><p>குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (45), ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தாமரைச்செல்வி, குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.</p><h2>கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம்</h2><p>தாமரைச்செல்விக்கும், அவரது கணவர் அரவிந்தனுக்கும் கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (13-ம் தேதி) இரவு பணி முடித்து வீட்டிற்கு திரும்பிய தாமரைச்செல்வியிடம், நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரது கணவர் அரவிந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.</p><h2>கத்தியால் குத்திய கணவர்</h2><p>வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அரவிந்தன், தாமரைச்செல்வியை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தாமரைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>கணவரிடம் போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாமரைச்செல்வியின் கணவர் அரவிந்தனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை கல்லூரி மாணவர் கொலை: “தாய் மாமனாக விஜய் என்ன சொல்லப் போகிறார்?” - சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-coimbatore-college-student-what-is-vijay-going-to-say-as-a-maternal-uncle-seeman-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-coimbatore-college-student-what-is-vijay-going-to-say-as-a-maternal-uncle-seeman-asks#comments</comments><guid isPermaLink="false">79f6da29-e9f0-45cb-978d-33b057d2fe4b</guid><pubDate>Thu, 13 Aug 2026 17:32:21 +0000</pubDate><atom:updated>2026-08-13T17:32:21.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,சீமான்,Seeman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/r1suc1za/see.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/r1suc1za/see.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான் </a>தெரிவித்துள்ளார்.</p><h2>மூடி மறைப்பதா?</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை கல்லூரி மாணவர் அமுதனின் படுகொலையை குழு மோதல் எனக்கூறி மூடி மறைப்பதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மேலும், ஒழுக்கங்களை போதிக்க வேண்டிய கல்விக்கூடங்களில் பகைமை, வெறுப்பு மற்றும் போதைப்பழக்கம் உருவாகி, உயிரைப் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>“போதைப்பொருள் புழக்கம் என்பதை மறைத்து, மாணவர்களின் தகராறு என வழக்கின் கோணத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். தவெக அரசின் போக்கு அநீதிக்கு துணைபோகும் துரோகம் இல்லையா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>“விஜய் என்ன சொல்லப் போகிறார்?”</h2><p>மேலும்,  “இறந்துபோன 19 வயது பிள்ளையின் மரணத்துக்கு ‘தாய் மாமனாக’ விஜய் என்ன சொல்லப் போகிறார்?” என தெரிவித்துள்ளார்.</p><h2> ரூ.25 லட்சம் நிதி</h2><p>மேலும், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், மாணவர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>