<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 19 Aug 2026 14:38:13 +0000</lastBuildDate><item><title>பால் கொள்முதல் விலை உயர்வு - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hike-in-milk-procurement-price-welcomed-by-mla-kanimozhi-santhosh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hike-in-milk-procurement-price-welcomed-by-mla-kanimozhi-santhosh#comments</comments><guid isPermaLink="false">0c9b103f-f941-4c1a-9e4a-3bafa99640b1</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:26:35 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:26:35.300Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Milk procurement,பால் கொள்முதல் விலை,கனிமொழி சந்தோஷ்,kanimozhi santhosh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/5u3l8sv7/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/5u3l8sv7/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். </p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் உற்பத்தி செலவுகள் மற்றும் அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்  என அவர் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், பால் உற்பத்தியை ஊக்குவித்து கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்த விலை உயர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவித்துள்ள கனிமொழி சந்தோஷ், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவோம் என்று உறுதியளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-14-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-14-districts#comments</comments><guid isPermaLink="false">3310ab7f-3479-463a-aa21-6cf3ebef544d</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:11:23 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:11:23.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jfeaxvtg/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jfeaxvtg/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தர்மபுரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdraw-vehicle-announcement-for-mlas-says-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdraw-vehicle-announcement-for-mlas-says-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">43702209-9ffc-4aa3-a1ab-8d8be8baa3c5</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:40:35 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:40:35.380Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தமிழக சட்டசபை,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9mlf179f/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9mlf179f/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனமும், ஓட்டுநரும், வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் அறிவிப்பு “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போன்ற செயலாகும்.</p><p>சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதலாக அரசு சார்பில் கார் வழங்குவதும், மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் பராமரிப்புத் தொகையாக வழங்குவதும் அரசுக்கு அவசியமற்ற கூடுதல் செலவாகவே பார்க்க வேண்டியுள்ளது.</p><p>தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்து, தவெக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்றால், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வழங்கலாமே என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, “விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தல், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,500 வழங்குதல், ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் வழங்குதல், அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணம் வழங்குதல்” எனத் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தவெக அரசுக்கு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?</p><p>“மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டேன்; தொட்டவர்களையும் விடமாட்டேன்” என வீரவசனம் பேசிய முதல்-அமைச்சர், தற்போது அதே மக்களின் வரிப்பணத்திலிருந்து பல நூறு கோடி ரூபாய் செலவில் வாகனங்களை வாங்கி வீணடிப்பது எந்த வகையில் நியாயமாகும்?</p><p>எனவே, தனது துறையின் உச்சத்தை விட்டுவிட்டு, மக்களுக்குச் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்ததாகக் கூறும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வாகனம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வாங்கித் தர வேண்டுமே தவிர, சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம்: உயர் அழுத்த மின் கம்பி உரசி வெல்டிங் தொழிலாளி மரணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-high-voltage-power-line-welder-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-high-voltage-power-line-welder-death#comments</comments><guid isPermaLink="false">ee8cbea4-57f6-4aa3-91b1-0ff541a45a31</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:18:19 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:18:19.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Worker,தொழிலாளி,மரணம்,Kanchipuram,காஞ்சிபுரம்,power line,மின் கம்பி,In Kanchipuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/mqr86x0t/kanniappan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கன்னியப்பன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின் கம்பி உரசி வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன் மரணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/mqr86x0t/kanniappan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>காஞ்சிபுரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசி வெல்டிங் தொழிலாளி மரணம்.</p><h2>கட்டுமான பணிகள்</h2><p>காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் அருகே வேகமாக வளர்ந்து வரும் புறநகர் பகுதியான இந்திரா நகர், ஜி.எஸ்.ஆர் அவென்யூவில் புதிய வீடு ஒன்றின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.​ தற்போது வீட்டின் இரண்டாவது மாடி கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.</p><h2>வெல்டிங் தொழிலாளி</h2><p>இதற்காக, மாடித் தடுப்புகள் அமைக்கும் பணிக்குத் தேவையான இரும்புச் கம்பிகளை கீழிருந்து மேலே ஏற்றும் பணியில், உக்கல் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன் மற்றும் இதர தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.</p><h2>மரணம்</h2><p>பணியின் போது, இரும்பு கம்பிகளை கீழிருந்து மேல் நோக்கி உயர்த்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அருகில் சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">மின்சார கம்பியின்</a> மீது இரும்பு ராடு உரசியது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் இரும்பு கம்பி வழியாக பயங்கர வேகத்தில் மின்சாரம் பாய்ந்தது. மின்சார அதிர்வில் தூக்கி வீசப்பட்ட வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p>  <h2>மின்மாற்றி வெடித்தது</h2><p>இதற்கிடையே, மின்சாரம் தாக்கிய அதிர்வில் அருகில் இருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென பழுதடைந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியே அதிரும் வகையில் சத்தம் கேட்டது. புகை மண்டலத்துடன் மின்மாற்றி வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அலறியடித்தபடி ஓடிவந்தனர். அங்கு கன்னியப்பன் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><p>இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘நடிகர் ராஜ்குமார் மீட்பில் தமிழர்களின் பங்கு குறித்து டி.கே.சிவக்குமார் மறந்துவிட்டார்’ - பழ.நெடுமாறன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dk-shivakumar-has-forgotten-the-role-played-by-tamils-in-the-rescue-of-actor-rajkumar-pazhanedumaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dk-shivakumar-has-forgotten-the-role-played-by-tamils-in-the-rescue-of-actor-rajkumar-pazhanedumaran#comments</comments><guid isPermaLink="false">3fc54bda-4361-4259-a4c5-6b8641315f66</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:12:14 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:12:14.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டி.கே.சிவக்குமார்,DK Sivakumar,பழ.நெடுமாறன்,Pazha.Nedumaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/mgir9mte/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/mgir9mte/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“எங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். தமிழகத் தலைவர்கள் எங்கள் மாநில விவகாரத்தில் தலையிட கூடாது என கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.</p><p>மேய்ச்சலுக்குச் சென்ற தங்கள் மாடுகள் திரும்பவில்லை என்பதற்காக அவற்றைத் தேடி காட்டுக்குள் சென்ற மூன்று தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்திருப்பதை தமிழ்நாட்டு முதல்-அமைச்சரும், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கண்டித்திருக்கிறார்கள். இதுவொரு மனிதநேயப் பிரச்சனை. எந்த மாநிலத்திலும் மனிதநேயம் மீறப்படுமானால், அதைக் கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.</p><p>2000-ம் ஆண்டில் கர்நாடக எல்லைக்குள் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி கர்நாடக காட்டுக்குள் சிறை வைத்திருந்தபோது, அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி கிருஷ்ணா, மூன்று முறை தமிழகத்திற்கு ஓடோடி வந்து அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் ராஜ்குமாரை மீட்க உதவும்படி வேண்டிக்கொண்டார். அப்போது வீரப்பன் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பிய செய்தியில் “நெடுமாறனை அனுப்பினால் பேசுவதற்குத் தயார்” என்று குறிப்பிட்டிருந்தார். </p><p>அதற்கிணங்க தமிழக முதல்-அமைச்சர் என்னை வேண்டிக்கொண்டபடியும், கர்நாடக முதல்-மந்திரி கிருஷ்ணா என்னை அழைத்து என்னிடம் வேண்டிக்கொண்டபடியும், நானும், நக்கீரன் கோபால், கொளத்தூர் மணி, பேரா.கல்யாணி, சுகுமார் ஆகிய தமிழர்கள் காட்டுக்குள் சென்று ஐந்து நாட்கள் வீரப்பன் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்குப்பின் நடிகர் ராஜ்குமார், அவர் மருமகன் கோவிந்தராஜ் ஆகியோரை விடுவித்துப் பத்திரமாக அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம். அந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது, “இது எங்கள் மாநிலப் பிரச்சனை; தமிழர்கள் எதற்காக வருகிறீர்கள் என்று யாராவது கேட்டார்களா? அன்று நாங்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டிருக்காவிட்டால், இரு மாநிலங்களிலும் இனக்கலவரங்கள் மூண்டெழுந்து விரும்பத்தகாத நிகழ்ச்சிகள், படுகொலைகள் நடைபெற்றிருக்கும். </p><p>எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடாத அப்பாவித் தமிழர்கள் மூவரைப் படுகொலை செய்துவிட்டு அதை திரையிட்டு மறைக்க கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சிறிதளவும் மனசாட்சியில்லாமல் பேசுவதைப் பார்க்கும்போது, அண்ணல் காந்தியடிகள் தலைமை தாங்கி நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தானா? என்ற ஐயம் எழுகிறது. முதல்-மந்திரி போன்ற பொறுப்பான பதவிகளில் இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து இருக்க அனுமதிப்பது அவர் சார்ந்துள்ள கட்சிக்குப் பேரிழுக்காகும்.   </p><p>தமிழர்கள் அனைவரையும் மட்டுமல்ல, மாந்தநேயம் கொண்டவர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்திருக்கும் மூன்று தமிழர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தரவும், எதிர்காலத்தில் கர்நாடகம் வாழ் தமிழர்கள் யாருக்கும் இத்தகைய நிலை ஏற்படாமல் பாதுகாக்கவும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கோ அல்லது சுப்ரீம் கோர்ட்டுக்கோ இப்பிரச்சனையை உடனடியாக கொண்டுசெல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்-அமைச்சரை வேண்டிக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஓராண்டுக்கு பிறகும் நினைவில் வைத்து சாலை அமைக்க சொன்ன விஜய்- சட்டசபையில் அமைச்சர் ஆனந்த் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-remembered-the-request-to-lay-the-road-even-after-a-yearminister-anand-shares-details-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-remembered-the-request-to-lay-the-road-even-after-a-yearminister-anand-shares-details-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">ff704f6a-0afd-4039-8c7c-1019d19e9a31</guid><pubDate>Wed, 19 Aug 2026 13:11:38 +0000</pubDate><atom:updated>2026-08-19T13:11:38.083Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,சட்டசபை,Bussy Anand,Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/541qavt6/bussy-anand.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/541qavt6/bussy-anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, தி.மு.க. உறுப்பினர் பெரியசாமி, 'எங்கள் ஆட்சியில் மலையில் இருக்கும் கிராமங்களுக்கு முதல்-அமைச்சர் சாலைதிட்டம் மட்டுமல்லாது, அத்தனை திட்டங்களிலும் சாலைகள் அமைத்து கொடுத்து இருக்கிறோம். மலைப்பகுதிகளில் இருக்கும் சாலைகளை இணைக்கும் பகுதிகளை முடித்துள்ளோம். 5 சாலைகள் மட்டும்தான் மீதம் இருக்கிறது. அதுவும் வனத்துறை அனுமதி கிடைக்காததால்தான். அந்த திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கியிருக்கிறீர்கள்' என்றார்.</p><p>அதற்கு அமைச்சர் ஆனந்த் எழுந்து பதிலளித்தபோது, 'திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தாண்டிக்குடி பஞ்சாயத்தில் கடந்த ஆண்டு மே மாதம் எங்கள் தலைவர் படப்பிடிப்புக்காக சென்றிருந்தார். ஒரு காட்சி எடுக்க கரடுமுரடான பாதையில் ஜீப்பில் சென்றார். நானும் கூட சென்றிருந்தேன். கீழே வரும்போது ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்தார். வந்தவுடன் 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. சொந்த செலவில் சாலைகள் அமைக்கலாமா? என்றார். அப்போது நம்மல பேனர் வைக்கவே விடல... இதுல எங்க ரோடு போட விடுவாங்க சார் என்று நான் சொன்னேன். நம்முடைய ஆட்சி வந்ததும் சாலை அமைத்துவிடலாம் என்றேன். உடனே சிரித்தார். நான் பதவி ஏற்ற 5-வது நாளில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து நோட் சீட் வருகிறது. தாண்டிக்குடி கிராமத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. நான் மறந்துவிட்டேன். அவர் நினைவில் வைத்து உத்தரவிட்டார். இப்போது ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.</p><p>அதனைத்தொடர்ந்து பெரியசாமி கூறுகையில், 'கூடம் நகர்தான் அமைச்சர் சொல்கிறார். பிரதான சாலைகளில் அது இல்லை. கூடம்நகருக்கு நாங்கள் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அதில் டெண்டர் எடுத்த வீரக்குமார் என்பவர் இறந்துவிட்டார். அதன் பிறகு மீண்டும் டெண்டர் வைத்து அதில்தான் இப்போது பணி நடக்கிறது. அதற்கு டெண்டர் கொடுத்ததும் எங்கள் ஆட்சிதான்' என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>2 நாட்களுக்கு &apos;கள்ளக்கடல்&apos; எச்சரிக்கை: கடற்கரை சுற்றுலா மையங்கள் தீவிர கண்காணிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/two-day-freak-sea-warning-coastal-tourism-centers-under-strict-monitoring</link><comments>https://www.dailythanthi.com/news/weather/two-day-freak-sea-warning-coastal-tourism-centers-under-strict-monitoring#comments</comments><guid isPermaLink="false">d7632d70-c1ae-4a1e-9b03-55b6a0564b79</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:51:28 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:51:28.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>warning,எச்சரிக்கை,கண்காணிப்பு,கள்ளக்கடல்,சுற்றுலா மையங்கள்,Swell Surge</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/l5xq6bv4/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/l5xq6bv4/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தென் இந்திய கடலோரப் பகுதிகளில் கள்ளக்கடல் நிகழ்வு நடைபெறக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><h2>கள்ளக்கடல் எச்சரிக்கை</h2><p>தென் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 13-ந்தேதி தென் இந்தியப் பெருங்கடலில், இந்திய கடற்கரையில் இருந்து சுமார் 10,000 கி.மீ. தொலைவில் உருவான உயர் ஆற்றல் கொண்ட நீண்ட அலைகள், தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்த அலைகளின் கால அளவு சுமார் 21 வினாடிகள் என்பதால், அதிக சக்தியுடன் கரையைத் தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>2 நாட்கள் இருக்கும்</h2><p>இந்த அலைகள் இன்று (19-ந்தேதி) அதிகாலை முதல் இந்தியாவின் தென் முனையை தாக்கத் தொடங்கி, மாலை நேரத்தில் உச்சத்தை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளை தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இன்று அதிகாலை 2.30 மணி முதல் நாளை (20-ந்தேதி) மாலை 5.30 மணி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது உயர் அலைகளுடன் கடல் ஏற்றமும் சேர்வதால், தாழ்வான கடற்கரை பகுதிகளில் கடல் நீர் திடீரென உட்புகுந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.</p><aside><cite>'கள்ளக்கடல்' என்பது திடீரென கரைக்கு வரும் கடல் அலைகளை குறிக்கிறது. சாதாரணமாக கடல் அலைகள் காற்றால் அருகிலேயே உருவாகும். ஆனால் கள்ளக்கடல் அப்படி இல்லை, நம்மிடம் இருந்து 5,000 முதல் 10,000 கி.மீ. தொலைவில், அண்டார்டிகாவில் தென் பெருங்கடலில், பெரும்புயல் அல்லது குறைந்த காற்றழுத்தம் உருவாகும். அந்த நீண்ட அலைகள், காற்று இல்லாமலேயே சக்தியை இழக்காமல் பல நாட்கள் பயணித்து இந்திய கடற்கரைக்கு வரும்.</cite>கள்ளக்கடல் என்றால் என்ன?</aside><aside><cite>இந்த அலைகளின் இடைவெளி 18 முதல் 22 வினாடிகள் இருக்கும். சாதாரண அலைகளின் இடைவெளி 8 முதல் 10 வினாடிகள் தான். இந்த கள்ளக்கடல் உருவாகும் போது, கடல் பார்க்க அமைதியாக இருக்கும். வானிலை நன்றாக இருக்கும். எந்த மழையும், காற்றும் இருக்காது. திடீரென ஒரு பெரிய அலை வந்து கரையை தாண்டி, சாலை, வீடுகளுக்குள் புகுந்துவிடும். அதனால் தான் இதற்கு கள்ளக்கடல் என்று பெயர் வைத்தனர்.</cite></aside><aside><cite>முன் அறிவிப்பு இல்லாமல் வருவது போல தெரியும். சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும்போது உள்ளே இழுத்துச் சென்றுவிடும். கரையில் நிற்கும் படகுகளை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து உடைத்துவிடும். கடல் ஏற்ற நேரத்துடன் சேர்ந்தால், கடல் நீர் ஊருக்குள் புகுந்து வெள்ளம் வரும். இதற்கு முன்பு கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் கன்னியாகுமரி, கோள கடற்கரையில் இதேபோல கள்ளக்கடல் வந்து பல வீடுகள், படகுகள் சேதமானது குறிப்பிடத்தக்கது.</cite>படகுகளை உடைத்துவிடும்</aside><p>கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கடலுக்குள் சிறு படகுகள் செல்ல வேண்டாம் என்றும், கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை இடைவெளி விட்டு நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை சுற்றுலா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>ராமநாதபுரம், கன்னியாகுமரி</h2><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 ஆயிரம் விசைப்படகுகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் இந்த கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக இன்று கடலுக்கு செல்லவில்லை.</p><h2>நெல்லை, தூத்துக்குடி</h2><p>நெல்லை மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 1,500 பைபர் படகுகள், தூத்துக்குடி மாவட்டத்தில் தருவை குளம் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 800 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>8 நாட்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி - சென்னை மாநகராட்சி தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabies-vaccines-administered-to-22158-stray-dogs-in-8-days-chennai-corporation-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabies-vaccines-administered-to-22158-stray-dogs-in-8-days-chennai-corporation-statement#comments</comments><guid isPermaLink="false">87f8b29a-d427-4cae-9be2-6b70a5bef4f4</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:51:19 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:51:19.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,ரேபிஸ் தடுப்பூசி,Rabies vaccine</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/eas6v2iv/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/eas6v2iv/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த 11-ந்தேதி தொடங்கிய வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாமின் மூலம் இதுவரையிலான 8 நாட்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சியில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பில் இருந்து பொது மக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அகப்புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் (Mass Anti Rabies Vaccination and Endectoparasiticidal camp) கடந்த 11.08.2026 அன்று திருவொற்றியூர், மணலி மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் தொடங்கப்பட்டது.</p><p>இம்முகாமின் வாயிலாக இந்த 3 மண்டலங்களிலும் உள்ள அனைத்து தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அகபுற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து இதுவரை 8 நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) 22,158 தெருநாய்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.</p><p>ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 10 குழுக்களை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் முடிவுற்றவுடன், பிற மண்டலங்களிலும் இம்முகாம் நடத்தப்பட்டு 75 வேலை நாட்களுக்குள் அனைத்து மண்டலங்களிலும் சுமார் 2,00,000 நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்தும் (Anti Rabies Vaccination and Endectoparasiticidal) செலுத்தப்படவுள்ளது.</p><p>இந்த சிறப்பு முகாம்கள் மூலம் “வெறிநாய்க்கடிநோய் இல்லாசென்னை” (Rabies Free Chennai) என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம்: பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த பசு மாடு ஜே.சி.பி. மூலம் மீட்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-cow-rescued-using-a-jcb-after-falling-into-a-pit-dug-for-underground-drainage-work</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-cow-rescued-using-a-jcb-after-falling-into-a-pit-dug-for-underground-drainage-work#comments</comments><guid isPermaLink="false">7c63bae1-fbe4-413d-b689-f213863f43d0</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:33:11 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:33:11.290Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanchipuram,காஞ்சிபுரம்,ஜேசிபி</media:keywords><media:content height="906" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/g6raucmp/State-05.jpg" width="1600"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/g6raucmp/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் 40 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் கடந்த 1978-ம் ஆண்டு கொடுக்கப்பட்டன. மீதமுள்ள 11 வார்டுகள் ஊராட்சிகளாக இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டவை. அதனால் அந்த பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாமல் இருந்தது. அந்த பகுதிகளில் புதிதாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க ரூ.254 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.</p><p>இந்த திட்டத்தின் மூலம் 180.243 கி.மீ தூரத்துக்கு பாதாள சாக்கடைக்கான குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. பிரதான குழாய்கள் மட்டும் 14.101 கி.மீ தூரத்துக்கு செல்கிறது. அடைப்பு ஏற்பட்டால் ஆங்காங்கே சுத்தம் செய்வதற்கு வசதியாக 9 மீட்டர் தூரத்துக்கு ஒன்று என மேல்நோக்கிய ஆளிறங்கும் அளவிலான குழாய்கள் மொத்தம் 7,437 அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 15,652 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48-வது வார்டு வர்த்தமான் நகர் பகுதியில் அவ்வழியாக போடப்பட்ட பாதாள சாக்கடை பள்ளம் முறையாக மூடப்படாததால் அமைதியாக சென்ற பசு மாடு ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் முயற்சி செய்தும் பள்ளத்தில் சிக்கிய பசுமாட்டை மீட்க முடியாததால், ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டு பசு மாடு பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு பள்ளத்தை சுற்றி மாநகராட்சி ஊழியர்கள் தடுப்புகளை அமைத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடி புகைப்படம்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-social-mirror-photo-that-carries-history-to-next-generation-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-social-mirror-photo-that-carries-history-to-next-generation-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">930930f5-db4f-492f-a041-4318b9ccc5a3</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:21:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:21:52.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,உலக புகைப்பட நாள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/l1ncljbl/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/l1ncljbl/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலக புகைப்பட நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடியே புகைப்படமாகும்.</p><p>வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்நாள் நினைவாக மாற்றுவதோடு, வார்த்தைகளால் சொல்ல இயலாத நிகழ்வுகளை கலைநயம் மிக்க புகைப்படங்களால் உணர்த்தும் அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் எனது 'உலக புகைப்பட நாள்' நல்வாழ்த்துகள்! உங்களின் கலைப் பயணம் சிறக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: ஒன்றாக களம் இறங்கும் சீமான் -கிருஷ்ணசாமி- வேல்முருகன்: இடைத்தேர்தலில் போட்டி?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-politics-seeman-krishnasamy-and-velmurugan-forming-alliance-for-by-election</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-politics-seeman-krishnasamy-and-velmurugan-forming-alliance-for-by-election#comments</comments><guid isPermaLink="false">7e5f10ca-1642-46d2-bc8d-3acd728084ff</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:17:42 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:17:42.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,சீமான்,இடைத் தேர்தல்,தமிழக அரசியல்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vazkzqpy/19.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சீமான் -வேல்முருகன் -கிருஷ்ணசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான் -கிருஷ்ணசாமி- வேல்முருகன் இணைந்து இடைத்தேர்தலில் ஒன்றாக களம் இறங்குகிறார்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vazkzqpy/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசியல் களத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D">சீமான்</a>, கிருஷ்ணசாமி, வேல்முருகன் ஆகியோர் புதிய கூட்டணியாக இணைந்து இடைத்தேர்தலில் ஒன்றாக களம் இறங்குகிறார்கள்.</p><h2>த.வெ.க. வெற்றி</h2><p>தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாற்றாக பல்வேறு அரசியல் கட்சிகள் முளைத்து தங்களது பணிகளை தீவிரமாக செய்தபோதிலும், அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் த.வெ.க. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வேறு எந்த கட்சிகளும் செய்யாத சாதனைகளை<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D"> முதல்-அமைச்சர் விஜய் </a>செய்து காட்டியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.</p><h2>புதிய கூட்டணி</h2><p>தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக இதற்கு முன்பு பல்வேறு கூட்டணிகள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி தோல்வியையே தழுவியது. </p><p>இந்த நிலையில் சட்ட மன்ற தேர்தலுக்குப் பிறகு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் மற்றும் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்த நிலையில் கிருஷ்ணசாமி குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.</p><p>தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த வேல்முருகனும் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களம் கண்டது. இந்த தேர்தலில் விஜய் ஏற்படுத்திய தாக்கத்தால் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் மற்ற கட்சிகளும் படுதோல்வியை தழுவின.</p><h2>மாற்றத்தை ஏற்படுத்துமா?</h2><p>இந்த நிலையில் தான் தமிழக அரசியல் களத்தில் புதிதாக சீமான், வேல்முருகன், கிருஷ்ணசாமி ஆகியோர் பல்வேறு கட்சிகள் அமைப்புகளோடு புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லை இன்னொரு மக்கள் நலக் கூட்டணியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>பாலின் கொள்முதல் விலை உயர்வு: தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் நன்றி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hike-thank-you-to-tamil-nadu-chief-minister-from-milk-agents-workers-welfare-association</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hike-thank-you-to-tamil-nadu-chief-minister-from-milk-agents-workers-welfare-association#comments</comments><guid isPermaLink="false">d90b5774-7762-4612-bf16-7caae27e3cd2</guid><pubDate>Wed, 19 Aug 2026 12:11:57 +0000</pubDate><atom:updated>2026-08-19T12:11:57.357Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர்,milk,thanks,நன்றி,Aavin Milk,ஆவின் பால்,கொள்முதல் விலை உயர்வு,procurement price hike</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vr9pznty/cm-vijay.03.jpg" width="682"><media:title type="html"><![CDATA[ தமிழ்நாடு முதல்-அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாலின் கொள்முதல் விலை உயர்வு: தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் நன்றி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vr9pznty/cm-vijay.03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">பால் கொள்முதல் விலை</a> உயர்வுக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி. பாலுற்பத்தியாளர்களின் கஷ்டங்களை போல பால் முகவர்களின் கஷ்டங்களையும் கவனத்தில் கொண்டு, 110-வது விதியின் கீழான அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-</p> <h2>ஆவின் நிறுவனம்</h2><p>கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறினால் அழிவின் விளிம்பில் <a href="https://www.dailythanthi.com/topic/aavin-milk">ஆவின்</a> நிறுவனம் இருந்து வருவதோடு, தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்காண்டு காலமாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதையும், தற்போது அது அதிகரித்துள்ளதையும் அனைவரும் நன்கறிவோம்.</p><h2>கமிஷன் தொகை</h2><p>ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டுமானால் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதோடு, விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் அத்துடன் பால் முகவர்களுக்கு ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை வரம்பை உயர்த்தி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் . ச.ஜோசப் விஜய்க்கும், பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமிக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்தது.</p><h2>விலையில்லா கறவை மாடுகள்</h2><p>ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்க விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து அதனை ஆண்டுக்கு' கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறினால் அழிவின் விளிம்பில் ஆவின் நிறுவனம் இருந்து வருவதோடு, தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்காண்டு காலமாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதையும், தற்போது அது அதிகரித்துள்ளதையும் அனைவரும் நன்கறிவோம்.</p> <h2>தவெக அரசு</h2><p>ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்க முடிவெடுத்த தவெக அரசு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து அதனை ஆண்டுக்கு 10ஆயிரம் பெண்களுக்கு வழங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் மரிய வில்சன் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த வாரம் அறிவித்தார்.</p> <h2>நன்றி</h2><p>இந்த நிலையில் ஆவினுக்கான பால் கொள்முதல் அதிகரிக்க பால் கொள்முதல் விலையையும் உயர்த்தப்பட வேண்டும், அது ஏற்கனவே இழப்பில் இருக்கும் ஆவின் நிறுவனத்தையும் பாதிக்கக்கூடாது என்பதை சிந்தித்தும், தவெக அரசுக்கு உள்ள கடும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு மாநில அரசிடமிருந்து லிட்டருக்கு 2.00ரூபாயும், ஆவின் தரப்பிலிருந்து லிட்டருக்கு 1.00ரூபாயும் ஆக மொத்தம் லிட்டருக்கு 3.00ரூபாய் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கும், பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி க்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>பால் முகவர்கள்</h2><p>மேலும் அத்தியாவசிய உணவு பொருளாக விளங்கும் பால் பொதுமக்களுக்கு ஆண்டு முழுவதும் தங்குதடையின்றி கிடைத்திட வேண்டுமானால் பாலினை உற்பத்தி செய்யக்கூடிய விவசாய பெருமக்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களோ அது போல வெயில், புயல், கனமழை, பெருவெள்ளம், மூடுபனி போன்ற எந்த இயற்கை பேரிடர் காலங்களானாலும், கொரோனா போன்ற பல்வேறு நோய் பெருந்தொற்று காலங்களானாலும் தங்களை வருத்தி கொண்டும், தங்கள் உடல் நலன் மீதான அக்கறையை தள்ளி வைத்தும் ஆண்டின் 365நாட்களும் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்யக்கூடிய பால் முகவர்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் ஆவர்.</p><h2>கமிஷன் தொகை</h2><p>குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பால் உற்பத்தியாளர்களும், பால் முகவர்களும் மனிதனுக்கு இரண்டு கண்கள் மற்றும் நாணயத்தின் இருபக்கங்களை போன்றவர்கள் என்பதால் அதில் ஒரு கண்ணில் மட்டும் வெண்ணையை தடவி விட்டு, மற்றொரு கண்ணை புறக்கணிப்பதும், நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் எடுத்து கொண்டு மற்றொரு பக்கத்தை தவிர்ப்பதும் ஏற்புடையதல்ல என்பதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு சுட்டி காட்டி பால் கொள்முதல் விலையை உயர்த்தியது போல ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை வரம்பையும் உயர்த்திடும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.</p><h2>நடவடிக்கை</h2><p>எனவே தற்போது 110விதியின் கீழ் வெளியிடப்பட்டுள்ள பால் கொள்முதல் விலை ஊக்கத்தொகை இன்றி லிட்டருக்கு 1.00ரூபாய் என்பதை மறுபரிசீலனை செய்து லிட்டருக்கு 10.00ரூபாய் வரையிலும், பால் முகவர்களுக்கு ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை வரம்பை லிட்டருக்கு 2.00ரூபாய் என்பதை 5.00ரூபாய் வரையிலும் உயர்த்தி வழங்க ஆவண செய்திட வேண்டும் எனவும், அதற்கான அறிவிப்பை அடுத்து வரவிருக்கும் பால் மானிய கோரிக்கையில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ச.ஜோசப் விஜய்யையும், பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமியையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை: பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-paper-mill-fire-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-paper-mill-fire-accident#comments</comments><guid isPermaLink="false">9932d0f7-1902-4c0e-9031-8c5e7da11cea</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:59:46 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:59:46.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire accident,தீ விபத்து,நெல்லை,Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9t3c2335/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9t3c2335/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை,</p><p><a href="https://www.dailythanthi.com/">நெல்லை </a>மாவட்டம் கொண்டாநகரம் அருகே உள்ள கல்லூர் பகுதியில் தனியார் பேப்பர் மில் செயல்பட்டு வருகிறது. இந்த பேப்பர் மில்லில் கழிவு பேப்பர்கள் பண்டல் பண்டலாக அடுக்கி&nbsp;வைக்கப்பட்டுள்ள அவை அட்டை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><h2>தீ விபத்து</h2><p>இந்நிலையில், இந்த பேப்பர் மில்லில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பண்டல் பண்டலாக அடுக்கு வைக்கப்பட்டுள்ள பேப்பரில் தீ வேகமாக பற்றி எரிந்து வருகிறது.</p><p>இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்பிலான பேப்பர்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>டாக்டர்களுக்கு தனித்துவ அடையாள எண்; இந்தியா முழுவதும் பயிற்சி மேற்கொள்ளலாம் - தேசிய மருத்துவ ஆணையம் புதிய நடைமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/unique-identification-number-for-doctors-practice-allowed-across-india-new-procedure-by-the-national-medical-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/unique-identification-number-for-doctors-practice-allowed-across-india-new-procedure-by-the-national-medical-commission#comments</comments><guid isPermaLink="false">482ba0c8-84b8-4e7f-a279-70092034e2b5</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:55:44 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:55:44.856Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>doctors,டாக்டர்கள்,தேசிய மருத்துவ ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/rglbl7ma/State-04.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/rglbl7ma/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவர்கள் பதிவு மற்றும் மருத்துவ உரிம திருத்த விதிமுறைகள் 2026 வரைவு விதிகளில் தேசிய மருத்துவ ஆணையம் மாற்றங்கள் செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, டாக்டர்கள் மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவுடன், தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிசார் வாரியம் மூலமாக அவர்களுக்கு தனித்துவமான அடையாள எண் உருவாக்கப்படும். </p><p>இந்த எண் வழங்கப்பட்ட பிறகு, அந்த மருத்துவர் நாட்டின் எந்த மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ தனியாக மீண்டும் பதிவு செய்ய தேவையில்லாமல் இந்தியா முழுவதும் மருத்துவ பயிற்சி மேற்கொள்ள தகுதி பெறுவார். மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் குறியீடு, மாநில மருத்துவ கவுன்சில் பதிவு எண் ஆகியவை உள்ளடங்கியிருக்கும் வகையிலான தனித்துவ அடையாள எண்ணாக இது இருக்கும்.</p><p>தனித்துவ அடையாள எண் முறை மூலம் ஒரு மருத்துவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாநில பதிவேட்டிலும், தேசிய பதிவேட்டிலும் உடனே அறிந்து கொள்ள முடியும். ஏற்கெனவே மாநில மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்துள்ள டாக்டர்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விவரங்களை புதுப்பித்து தனித்துவ அடையாள எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.</p><p>இதற்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் தங்களின் கருத்துகளையும், ஆட்சேபனைகளையும் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்’ - டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-announcement-regarding-the-provision-of-vehicles-to-all-mlas-must-be-withdrawn-ttv-dhinakaran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-announcement-regarding-the-provision-of-vehicles-to-all-mlas-must-be-withdrawn-ttv-dhinakaran-urges#comments</comments><guid isPermaLink="false">6c954e8e-48d0-4023-bd1e-5d21fffdcea7</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:41:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:41:54.531Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டி.டி.வி.தினகரன்,TTV Dinakaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8x4yiehg/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8x4yiehg/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனமும், ஓட்டுநரும், வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்ற முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவிப்பு “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போன்ற செயலாகும்.</p><p>சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதலாக அரசு சார்பில் கார் வழங்குவதும், மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் பராமரிப்புத் தொகையாக வழங்குவதும் அரசுக்கு அவசியமற்ற கூடுதல் செலவாகவே பார்க்க வேண்டியுள்ளது.</p><p>தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்து, த.வெ.க. சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்றால், முதல்-அமைச்சர் விஜய் தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வழங்கலாமே என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, “விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தல், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,500 வழங்குதல், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்குதல், அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணம் வழங்குதல்” எனத் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் த.வெ.க. அரசுக்கு, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?</p> <p>“மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டேன்; தொட்டவர்களையும் விடமாட்டேன்” என வீரவசனம் பேசிய முதல்-அமைச்சர், தற்போது அதே மக்களின் வரிப்பணத்தில் இருந்து பல நூறு கோடி ரூபாய் செலவில் வாகனங்களை வாங்கி வீணடிப்பது எந்த வகையில் நியாயமாகும்?</p><p>எனவே, தனது துறையின் உச்சத்தை விட்டுவிட்டு, மக்களுக்குச் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்ததாகக் கூறும் முதல்-அமைச்சர் விஜய், வாகனம் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வாங்கித் தர வேண்டுமே தவிர, எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போல் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-7-pm-in-17-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-7-pm-in-17-districts#comments</comments><guid isPermaLink="false">ba13bd9a-ac66-4eeb-a2b7-168b4ce4b33b</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:24:30 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:24:30.920Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/sxe5d5hn/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/sxe5d5hn/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென்மண்டல கவுன்சில் குழுவில் விஜய்க்கு முக்கிய பொறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-to-hold-a-key-role-in-the-southern-zonal-council-committee-led-by-amit-shah</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-to-hold-a-key-role-in-the-southern-zonal-council-committee-led-by-amit-shah#comments</comments><guid isPermaLink="false">0665b22c-e944-419f-9eae-66219ef2ffac</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:55:40 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:55:40.016Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,அமித்ஷா,Amitsha,தென்மண்டல கவுன்சில் கூட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/v78ke43v/VIjay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/v78ke43v/VIjay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டுக்கான குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் விஜய் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா,கேரளா, தமிழ்நாடு ,தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.</p><h2>தென் மண்டல கவுன்சில்  மாநாடு</h2><p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்தநிலையில், 31-வது தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு இன்று  சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி  ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலா ளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.</p> <h2>என்ன ஆலோசிக்கப்படும்?</h2><p>மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம் பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல் வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கி யத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p><h2>அமித்ஷா வருகை</h2><p>இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த டைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கி றார்கள். பின்னர் அவர், காரில் கோவளம் செல்கிறார். இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் 5 மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றம்: வீட்டின் வெளியே காய வைத்த துணிகளை அள்ளிச் சென்ற திருடன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/frustrated-thief-steals-clothes-after-failing-to-break-lock</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/frustrated-thief-steals-clothes-after-failing-to-break-lock#comments</comments><guid isPermaLink="false">7bae54ed-0462-44fa-bfc4-a29c3cae8b8c</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:47:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:47:13.648Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,திருட்டு,Theft,குடியாத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/epfox6ye/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/epfox6ye/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>பூட்டை உடைக்க முடியாததால் நொந்துபோன திருடன் வீட்டிற்கு வெளியே கொடியில் காய வைத்திருந்த சட்டைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் எதிரில் உள்ள ஆற்றோரம் பகுதியை சேர்ந்தவர் சி.செல்வம் (47 வயது). இவர் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு திருடன் வந்துள்ளார். வீட்டு கதவில் உள்ள பூட்டை திருடன் உடைக்க முயற்சி செய்துள்ளார். நீண்ட நேரம் போராடியும் பூட்டை உடைக்க முடியவில்லை.</p><p>இதனால் நொந்துபோன திருடன் வீட்டிற்கு வெளியே கொடியில் காய வைத்திருந்த சட்டைகளை திருடிவிட்டு சென்றுள்ளார். சென்னையில் இருந்து வீடு திரும்பிய செல்வம் துணிகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.</p><p>மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக குடியாத்தம் பகுதியில் இது போன்ற சிறு சிறு திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டெண்டர் முடியாமல் எப்படி பணிகளை துவங்க முடியும்? - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-can-works-start-without-tender-minister-athav-arjuna-questioned-by-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-can-works-start-without-tender-minister-athav-arjuna-questioned-by-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">2f763975-7798-460b-a72f-c3f3ace8ceaa</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:30:11.565Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Aadhav Arjuna,tender,டெண்டர்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/kva38c6d/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/kva38c6d/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அலுவலர்களின் வசதிக்காக என்றாலும் கூட, டெண்டர் முடியாமல் எப்படி பணிகளை துவங்க முடியும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களே? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>முதல்வர் அலுவலகம் மாற்றத்திற்கான டெண்டரில் உள்ள குளறுபடிகள் குறித்து சட்டமன்றத்தில் எழுந்த கேள்விகளுக்கு, “இன்னும் டெண்டரே முடியவில்லை, எல்லாம் அரசு அதிகாரிகளின் வசதிக்காகத் தான், எங்கள் முதல்வர் எளிமையானவர்” என்றெல்லாம் வசனம் பேசிய நீங்கள், ஒரு “Flow”-ல் பல உண்மைகளையும் உளறிவிட்டீர்கள்.</p><p>அதாவது, டெண்டரே இன்னும் முடியவில்லை என்றால், எதன் அடிப்படையில் முதல்வர் அறைக்கான புதுப்பித்தல் பணிகள் துவங்கப்பட்டன? இன்னாருக்கு தான் கொடுக்கப் போகிறோம் என்று ஏற்கனவே “Setting” செய்துவிட்டீர்களா? இதற்கு முன்பு இப்படி டெண்டர் விடாமல் இப்படி பணிகள் நடந்துள்ளனவா? மேலும், செய்தித்தாள் விளம்பரத்தில் 5.54 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுவிட்டு, ஆன்லைன் டெண்டரில் தொகையைக் குறிப்பிடாமல் 'NA' என்று பதிவிட்டது ஏன்? மற்ற ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதைத் தடுக்கவே இந்தச் சதியா?</p><p>பின்பு உங்கள் பித்தலாட்டங்களுக்கு புரட்சித் தலைவி அம்மாவின் பெயரை இழுக்கிறீர்களே, புரட்சித் தலைவி அம்மா ஒட்டுமொத்த தலைமை செயலகத்தையே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தான் நினைத்தாரே தவிர, தனது அலுவலகத்தை மட்டும் நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், உங்கள் முதல்வர் தனது துறைக்கான அலுவலகத்தை மட்டும் புதுப்பித்துக் கொள்ள நினைப்பது ஏன்?</p><p>"அரசு அதிகாரிகளின் வசதிக்காகத் தான் இந்த மாற்றம்" என்று நீங்கள் கூறுவது, "பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது போலானது". காரணம், அனைத்து அரசு அமைச்சர்களுக்கும் செயலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, முதல்வருக்கு மட்டும் சொகுசு அறையை உருவாக்குவது “ஆடம்பரம்” இன்றி வேறென்ன? எனவே, முதல்வரின் அறையை ஆடம்பரமாக்குவதன் உண்மைக் காரணத்தையும், அதன் டெண்டர்களில் நடக்கும் ஊழல்களையும் ஆதாரங்களுடன் மக்கள் முன் சமர்ப்பியுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதல் அமைச்சர் விஜய்க்கு புகழ்ச்சி பிடிக்காது: ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-dislikes-flattery-aadhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-dislikes-flattery-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">acf2f122-9a68-497b-b180-6be63348997e</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:28:05.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,முதல் அமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/caqb6l1h/Adhav-arjuna.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/caqb6l1h/Adhav-arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> தமிழக சட்டசபையில் பேசும் எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சியின் தலைவர்கள் புகழ்ந்து பேசுவதை பார்க்க முடிகிறது.  ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் இல்லாமல் அனைத்து எம்.எல்.ஏக்களும் புகழ்ந்து பேசுகிறார்கள். அந்த வகையில், இன்று  முதல் அமைச்சர் விஜய்யை த.வெ.க எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் புகழ்ந்து பேசினார்.</p><p>பாரிக்கரையிலே மண்டபம் ஒன்றை வளர்ந்து நாரியர்கள் கூடி நாடெங்கும் வாசமிட்டு ஒரு குடைக்குள் ஆள்வாய் உன் காலம் என் மகனே என்று பாடல் பாடி புகழ்ந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நம்முடைய முதல் அமைச்சர் விஜய் மற்ற முதல் அமைச்சர் போல் இல்லை. நம்முடைய முதல் அமைச்சருக்கு புகழாரம் பிடிக்காது. தங்களுடைய தொகுதி சார்ந்த தேவைகளை குறித்து மட்டும் பேசுங்கள். சட்டப்பேரவையில் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் தொகுதி சார்ந்த தேவைகளை குறித்து மட்டும் பேச வேண்டும்" என்றார்.</p><p> அப்போது எழுந்து பேசிய முன்னாள் அமைச்சர் நேரு, "முதல் அமைச்சருக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மற்ற முதல் அமைச்சர்களை போன்று எங்கள் முதல் அமைச்சர் இல்லை என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் புகழ்ச்சி  பிடிக்காது.  தன்னை சட்டமன்ற உறுப்பினர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என பேரவையிலேயே எழுந்து நின்று சொன்னவர் தான்   மு க ஸ்டாலின்" என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது - இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-must-not-deprive-students-youth-of-democratic-rights</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-must-not-deprive-students-youth-of-democratic-rights#comments</comments><guid isPermaLink="false">e12652ad-cb91-4e54-839b-ccef60be309f</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:07:25 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:07:25.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,வலியுறுத்தல்,மாணவர்கள்,CPI,college students,இளைஞர்கள்,A youth,Urges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/updo4svo/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/updo4svo/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் வலியுறுத்தல். இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-</p> <h2>நிர்வாகக்குழு கூட்டம்</h2><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, பொருளாளர் எம்.ஆறுமுகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன், வை.செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p> <p><strong>கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.</strong></p><h2>கண்டனம்</h2><p>தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இடதுசாரி கட்சிகள், தமிழ்நாடு காக்ரோச் கட்சி   நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதை தடுப்பதற்காக பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளதை  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.</p> <h2>ஜனநாயக உரிமை</h2><p>இந்திய குடிமக்களுக்கு அரசியல் சிந்தனை, சமூக அக்கறை, கருத்துரிமை, அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை ஆகியவை அரசியலமைப்பு சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளன. மாணவர்களும், இளைஞர்களும் நாட்டின் குடிமக்களாவர். கல்வி நிறுவனங்களில் பயில்கிறார்கள் என்பதற்காக, அந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிக்க முடியாது.</p> <h2>முக்கிய சக்தி</h2><p> 18 வயதானவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கும் போது, அவர்கள் தமது அரசியல் செயல்பாட்டை வெளிப்படுத்தக்கூடாது என்று அரசு தடுப்பது, கல்வி நிறுவனங்களை ஜனநாயக விவாதங்களிலிருந்து துண்டித்து, இளைஞர், மாணவர்களை அரசியலற்றவர்களாக மாற்ற முயலும் அதிகார வர்க்க அணுகுமுறையாகும்.</p> <p>நாட்டின் விடுதலை போராட்டம் உள்ளிட்டு, வரலாற்றில் மாணவர்களும், இளைஞர்களும் சமூக மாற்றத்தின் முக்கிய சக்தியாக திகழ்ந்துள்ளனர்.</p><h2>குற்றச்செயலாகும்</h2><p>அந்த போராட்ட வரலாற்றை மறுப்பதும், மாணவர்களின் அரசியல் உணர்வை குற்றமாக கருதுவதும் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானதாகும். அரசியலமைப்புச்சட்டம் வழங்கும் உரிமைகளை குடிமக்கள் அனுபவிக்க விடாமல் தடுப்பதுதான் குற்றச்செயலாகும்.</p> <h2>திமாகி நக்சல்</h2><p>நாட்டின் விடுதலை திருநாளன்று செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a>, அரசு கொள்கைகளுக்கு மாற்றாக சிந்திப்பவர்களை, “திமாகி நக்சல்” என்றும், அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.</p> <h2>துறைவாரி நடவடிக்கை</h2><p>திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பட்டியலை, முகவரியோடு ஒரே நாளில் தயாரித்து தருமாறு வட்டாட்சியர் உத்திரவிட்டார்.</p> <p>இதன் தொடர்ச்சியாகவே, இந்த உத்திரவும் வந்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. இந்த ஆணைகள் தற்போது திரும்ப பெறப்பட்டிருந்தாலும், இவற்றுக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான துறைவாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p> <h2>ஜனநாயக மாண்புகள்</h2><p>மாணவர்களின் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை தடுப்பதற்கு பதிலாக, அரசியலமைப்பு சட்ட உரிமைகள், ஜனநாயக மாண்புகள், சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றை கல்வி நிறுவனங்களில் வலுப்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் கருத்துகளை அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் வெளிப்படுத்துவதற்கான உரிமையை அரசு முழுமையாக பாதுகாக்க வேண்டும். </p> <h2>மாணவர் பேரவை தேர்தல்</h2><p>கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள, கல்வி நிறுவன மாணவர் பேரவை தேர்தல்களை உடனடியாக நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘குற்ற வழக்கு உள்ளவர்கள் கபடியில் பங்கேற்க தகுதியற்றவர்கள்’ - மதுரை ஐகோர்ட்டு கிளை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/individuals-with-criminal-cases-pending-against-them-are-ineligible-to-participate-in-kabaddi-madurai-bench-of-the-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/individuals-with-criminal-cases-pending-against-them-are-ineligible-to-participate-in-kabaddi-madurai-bench-of-the-high-court#comments</comments><guid isPermaLink="false">bae7b20e-5638-4756-9dc6-17ac2f59ea25</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:02:05 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:02:05.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai High Court Branch,மதுரை ஐகோர்ட்டு கிளை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9rr0lfeo/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/9rr0lfeo/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கக்கோட்டை கிராமத்தில் மந்தைக்களத்தில் வரும் 29, 30-ந்தேதிகளில் கபடி போட்டி நடத்த அனுமதி மற்றும் காவல்துறை பாதுகாப்புக் கோரி காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போட்டிக்கு அனுமதி வழங்க மறுத்து காவல் ஆய்வாளர் உத்தரவிட்டார். இந்நிலையில், திட்டமிட்ட தேதிகளில் கபடி போட்டி நடத்த அனுமதி மற்றும் காவல்துறை பாதுகாப்புக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் சோழவந்தானை சேர்ந்த முகேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.</p><p>இந்த மனு இன்று மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, “ஆகஸ்ட் 29, 30-ந்தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கபடி போட்டி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. போட்டியை நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள் என யாரும் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது கட்சித் தலைவர், சாதி, சமூகம் அல்லது மதப்பிரிவு ஆகியவற்றுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கூச்சலிடவோ அல்லது முழக்கம் எழுப்பவோ கூடாது.</p><p>பொது அமைதி மற்றும் நிம்மதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் இந்த கபடி போட்டியில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் ஆவர். மேலும், போட்டியில் பங்கேற்பவர்கள் எவ்வித போதைப் பொருட்களையோ அல்லது மதுவையோ உட்கொள்ளக் கூடாது.</p><p>சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் அல்லது மதம் மற்றும் அரசியல் தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட ஆடைகளை போட்டியின் போது அணியக் கூடாது. மதத் தலைவர்களை புகழ்ந்து பாடும் அல்லது மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பாடல்களை போட்டி நடைபெறும் இடத்தில் ஒலிக்கவிடக் கூடாது.</p><p>குறிப்பிட்ட சமூகம் அல்லது தலைவரைக் குறிக்கும் வகையிலான எந்தவொரு விளம்பரப் பலகைகளையும் வைக்கக் கூடாது. இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் கபடி போட்டியை நிறுத்தவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.</p> ]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏக்களுக்கு அரசு கார்: ஆடம்பரத்துக்கு மக்கள் பணமா? நடிகை கஸ்தூரி கோபம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-government-cars-for-mlas-public-money-for-luxury-actress-kasthuri-angered</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-government-cars-for-mlas-public-money-for-luxury-actress-kasthuri-angered#comments</comments><guid isPermaLink="false">7d95716d-c50e-40ad-9d6d-8a04159ed070</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:32:36 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:32:36.520Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,நடிகை கஸ்தூரி,எம்.எல்.ஏ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/rsikpqu9/kasturi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/rsikpqu9/kasturi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காரும், டிரைவர் படிகளாக மாதந்தோறும் ரூ.75,000 மற்றும் உதவியாளர் படிகளாக ரூ. 25,000 வழங்கப்படும் என்று  விஜய் அறிவித்துள்ளார்.  எம்.எல்.ஏக்களுக்கு இதுபோன்ற ஆடம்பர வசதிகளைச் செய்து தருவதற்காகவா நமது வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டும்? லீமா ரோஸ் மார்ட்டின், உதயநிதி, ஆதவ் அர்ஜுனா, எ.வ.வேலு, செங்கோட்டையன், வன்னியரசு, ரேவந்த் சரண் போன்ற மிகவும் ஏழை எளியவர்கள் உட்பட அனைவருக்குமா? என்று நடிகை கஸ்தூர் கேள்வி எழுப்பி உள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் கடந்த 12-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசினார். அப்போது அவர், நான் 280 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து இங்கு வருகிறேன். அதற்கு பயணப்படி கொடுக்கிறீர்கள். ஆனால் எனக்கு சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. வாடகைக்குதான் எடுக்க வேண்டியதுள்ளது. எனது தொகுதியில் 40 கிலோமீட்டர் சுற்றளவு பயணித்து மக்களை சந்தித்து பணிகளை மேற்கொள்வதற்கான வாகன வசதிகள் இல்லை. ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு. அவருக்கு ஊதியம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் வசதிகள் இல்லை. இப்படித்தான் இங்குள்ள எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசி பேர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு கார் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என பேசினார். இதை ஏற்றுக்கொண்ட முதல் அமைச்சர் விஜய்,  எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர் வைத்துக்கொள்ள வாகனப்படி மற்றும் உதவியாளர் படி என மொத்தம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.  விஜய்யின் இந்த அறிவிப்புக்கு எம்.எல்.ஏக்கள் வரவேற்பு தெரிவித்த போதிலும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் கிளம்பியுள்ளது. </p><h2>சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகளா?</h2><p>அரசின் அறிவிப்புக்கு  நடிகை கஸ்தூரி  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது  எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:”ஓட்டுநருடன் கூடிய கார்கள், மாதம் ரூ. 75,000 ஓட்டுநர்படி மற்றும் ரூ. 25,000 உதவியாளர்படி ஆகியவற்றை அனைத்து  எம்.எல்.ஏக்களுக்கு  வழங்கப்படும் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விஜய்</a> அறிவித்துள்ளார்.லீமா ரோஸ் மார்ட்டின், உதயநிதி, ஆதவ் அர்ஜுனா, எ.வ. வேலு, செங்கோட்டையன், வன்னியரசு, ரேவந்த் சரண் போன்ற 'மிகவும் ஏழை' உறுப்பினர்களுக்கு ஆடம்பர வசதிகளைச் செய்து தர நமது வரிப்பணம் வீணடிக்கப்படப் போகிறதா?நினைவில் கொள்ளுங்கள், இந்த ஏழை மனிதர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,05,000, சட்டசபை வரும் நாள்களுக்கு ரூ. 500-ம் பெறுகிறார்க என்ன அபத்தம் இது? பெரும்பான்மையான மக்களைப் போலவே சட்டசபை உறுப்பினர்களும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கட்டும், சாமானிய மனிதனைப் போல நடந்து செல்லட்டும். </p> <h2>விஜய் ரத்து செய்ய வேண்டும்</h2><p>இந்த '5-ஸ்டார்' பாணி நிர்வாகத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தொழிலதிபர்கள் அம்பானி அல்லது அதானியின்   டிரைவருக்கு  கூட அதிகபட்சம் ரூ. 30,000 தான் சம்பளம் இருக்கும்.  எம்.எல்.ஏக்கள்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> சுங்கக் கட்டணம்</a> செலுத்துவதில்லை, இலவச தங்குமிடம் மற்றும் இலவச ரயில் பயண வசதிகளுக்கும் தகுதியுடையவர்கள்.அதிர்ச்சியளிக்கும் இந்தச் செலவுத் திட்டத்தை உடனடியாக விஜய் ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரைக் கூட உறுதி செய்ய முடியாத தவெக அரசு - டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-government-fails-to-provide-clean-drinking-water-to-students-ttv-dhinakaran-slams</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-government-fails-to-provide-clean-drinking-water-to-students-ttv-dhinakaran-slams#comments</comments><guid isPermaLink="false">e45e380a-4edb-4c19-838f-c1dad726f557</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:15:45 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:15:45.002Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,குடிநீர்,drinking water,AMMK,அமமுக,பொள்ளாச்சி,Pollachi,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/fgjmpzx7/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/fgjmpzx7/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவ, மாணவியரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சுத்தமான குடிநீரைக் கூட உறுதி செய்ய முடியாத தவெக அரசு என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி அரசுப் பள்ளியில், பிளீச்சிங் பவுடர் கலந்த குடிநீரை அருந்திய 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.</p><p>மாணவ, மாணவியரின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டிய அரசுப் பள்ளியில், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாதுகாப்பான குடிநீரைக் கூட முறையாக வழங்க முடியாமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட அரசு நிர்வாகத்தால் மாணவ, மாணவியரின் உடல்நலம் மற்றும் உயிர்ப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>தனக்குச் சம்பந்தமே இல்லாத துறைகள் தொடர்பான கேள்விகளுக்குக்கூட தாமாக முன்வந்து அடுக்குமொழியில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இனியாவது தன் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நிலவும் அவலநிலையைப் போக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழக அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-invited-for-tamil-nadu-tourism-awards-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-invited-for-tamil-nadu-tourism-awards-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">420a6974-d275-473f-bf0e-4c09dc2941c0</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:15:03 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:15:03.162Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,சுற்றுலா,Tourism</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/14lrru9w/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/14lrru9w/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையின் மூலம் அனைத்து சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சுற்றுலா தொழில் முனைவோர்கள் மற்றும் ஓட்டல் முகவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. </p><p>இந்த விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட (www.tntourismawards.com) என்ற இணைய தள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை மூலம் கீழ்க்கண்ட 13 வகையான விருதுகள் வழங்கப்படுகின்றன.</p><h2>விருதுகளின் பட்டியல்:</h2><p>1. தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Inbound Tour Operator)</p><p>2. சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Domestic Tour Operator)</p><p>3. சிறந்த பயணபங்குதாரர் (Best Travel Partner, Heritage, Village, Farm Tourism, Adventure tourism)</p><p>4. சிறந்த தங்குமிடம் (Best Accommodation)</p><p>5. சிறந்த உணவகம் (Best Restaurant)</p><p>6. தங்குமிடம் மற்றும் படகு இல்லம் (Tamil Nadu Tourism Development Corporation Star Performer)</p><p>7. சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம் (Tourism Promotion Award (Best District))</p><p>8. சுத்தமான சுற்றுலாத்தலம் (Cleanest Tourism Destination)</p><p>9. பல்வேறு சுற்றுலாப்பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் (Best Niche Tourism Operator)</p><p>10. சிறந்த சிறப்பு சுற்றுலா நிறுவனம் - சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம் (Best Niche Tourism Operator -Best Medical and Wellness Tourism Establishment)</p><p>11. சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Adventure Tourism and Camping site Operator)</p><p>12. சிறந்த சுற்றுலா வழிகாட்டி (Best Tourist Guide)</p><p>13. சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் (Best Educational Institution for Tourism and Hospitality)</p><p>என மேற்குறிப்பிட்ட விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வருகின்ற 30.09.2026-க்குள் (www.tntourismawards.com) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டுமாறு சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 25-ம் தேதி பாஸ்போர்ட் குறைதீர்ப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passport-grievance-camp-in-chennai-on-25th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passport-grievance-camp-in-chennai-on-25th#comments</comments><guid isPermaLink="false">95250a21-6ac8-4c7d-8bc8-00ce05b02480</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:45:51 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:45:51.721Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,passport,பாஸ்போர்ட்,குறைதீர்ப்பு முகாம்,Redressal Camp,Grievance</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4cck6iwt/passport.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பாஸ்போர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் 25-ம் தேதி பாஸ்போர்ட் குறைதீர்ப்பு முகாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4cck6iwt/passport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளிலிருந்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பாஸ்போர்ட் வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் 25.08.2026 அன்று<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D"> பாஸ்போர்ட்</a> குறைதீர்ப்புமுகாம் நடைபெறஉள்ளது.</p> <h2>நடவடிக்கை</h2><p>சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர்   எஸ். விஜயகுமார்.ஐ.எப்.எஸ், அவர்களும் அவரது குழுவினரும் விண்ணப்பதாரர்களுடன் நேரில் கலந்துரையாடி, நீண்ட காலமாக நிலுவையில் 861161டி விண்ணப்பங்கள் மீது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.</p><h2> மின்னஞ்சல் முகவரி</h2><p>மேற்கண்ட அதாலத்தில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களது கோப்பு எண்ணுடன், தங்களது பாஸ்போர்ட் தொடர்பான விவரங்களை விளக்கும் கடிதத்தையும் இணைத்து, 22.08.2026 அல்லது அதற்கு முன்பாக கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். rpo.chennai@cpo.gov.in</p>  <h2>சிறப்பு பாஸ்போர்ட் குறைதீர்ப்பு</h2><p>விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்பு பாஸ்போர்ட் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">குறைதீர்ப்பு முகாம்</a> முயற்சியை முழுமையாக பயன்படுத்தி கொண்டு, தங்களது விவரங்களை விரைவாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p> <p>பாஸ்போர்ட் சேவை</p><p>இந்த முயற்சியின் நோக்கம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைவாக தீர்த்து வைப்பதுடன், விண்ணப்பதாரர்களுக்கு துரிதமான பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதாகும்.</p>]]></content:encoded></item><item><title>1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-department-official-arrested-for-accepting-a-bribe-of-1-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-department-official-arrested-for-accepting-a-bribe-of-1-lakh#comments</comments><guid isPermaLink="false">22e60ff4-a0b9-4a96-b721-8f65d8f5430a</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:40:19 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:40:19.384Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,தென்காசி,லஞ்சம்,police enquiry,வனத்துறை அதிகாரி,Forest Officer,Bribe purchased</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2018/May/201805311901488891_Make-the-task-permanentRs-3-lakh-bribe-was_SECVPF.gif" width="794"><media:title type="html"><![CDATA[ லஞ்சம்- கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ லஞ்சம் பெற்றவர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2018/May/201805311901488891_Make-the-task-permanentRs-3-lakh-bribe-was_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் யானை தடுப்பு அகழி வெட்டும் பணி செய்த ஒப்பந்தக்காரரிடம் ரூபாய் 1 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கிய வனத்துறை அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.</p><h2>யானை தடுப்பு அகழி பணி</h2><p>தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரகத்திற்குட்பட்ட மலைப் பகுதியில், வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக யானை தடுப்பு அகழி வெட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகளை உள்ளூர் ஒப்பந்தக்காரர் ஒருவர் மேற்கொண்டு வந்தார்.</p><h2>ரூ.1 லட்சம் கமிஷன் டிமாண்ட்</h2><p>இப்பணிக்கான தொகையை விடுவிக்கவும், பணிகளைத் தடையின்றி நடத்தவும் சிவகிரி வனச்சரக அலுவலரான கதிரவன் (வயது 51) என்பவர், ஒப்பந்தக்காரரிடம் ரூபாய் 1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்தக்காரர், இது குறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.</p><h2>போலீசார் விரித்த வலை</h2><p>புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் 1 லட்சம் நோட்டுகளை ஒப்பந்தக்காரர் வனத்துறை அலுவலர் கதிரவனிடம் கொடுக்கச் சென்றார். சிவகிரி வனத்துறை அலுவலகத்தில் வைத்து கதிரவன் அந்த லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.</p><h2>கைது நடவடிக்கை</h2><p>ரசாயன சோதனையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வனத்துறை அலுவலர் கதிரவனை போலீசார் முறைப்படி<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது</a> செய்தனர். மேலும், அவரது அலுவலகம் மற்றும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">அரசு அதிகாரிகள் </a>வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியானதால் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shock-as-another-woman-succumbs-to-dengue-fever-near-tenkasi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shock-as-another-woman-succumbs-to-dengue-fever-near-tenkasi#comments</comments><guid isPermaLink="false">ca1f8a23-c730-4e1c-b631-f50cab48ed3b</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:27:56 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:27:56.302Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Tenkasi,தென்காசி,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,கடையநல்லூர்,Kadayanallur</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/h6mg4eg6/tek.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/h6mg4eg6/tek.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடையநல்லூர், </p><p>தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இலங்கை தமிழர் முகாமில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியானார்.</p><h2>டெங்கு பாதிப்பு</h2><p>தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா போகநல்லூர் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.</p><h2>உயிரிழப்பு</h2><p>இங்குள்ள ராஜன்-சைலா ஸ்ரீ தம்பதியின் மகள் ரிஹானா மேரி (வயது 13) என்ற சிறுமி <a href="https://www.dailythanthi.com/topic/dengue-fever">டெங்கு காய்ச்சலால்</a> பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சமீபத்தில் உயிரிழந்தார்.</p><h2>மேலும் ஒரு பெண் பலி</h2><p>இந்நிலையில் தினேஷ் மனைவி நர்மளா (27) என்பவரும் <a href="https://www.dailythanthi.com/topic/dengue-fever">டெங்கு காய்ச்சல்</a> பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் நர்மளா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>இலங்கை தமிழர் முகாம் அருகில் வெளியூர்களில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். அவற்றை தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடாக உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-7-districts-of-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-7-districts-of-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">f538b996-7465-4acc-8251-fff2434a8ffe</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:21:39 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:21:39.274Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்தி,வானிலை ஆய்வு மையம்,heavy rain,வானிலை அறிக்கை,Chennai Metrological centre,Weather Report,Rain Fall,weather center,TN Rain</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/d9huuwu5/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனமழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/d9huuwu5/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை  காரணமாக <strong>இன்று (19-08-2026)</strong> செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (20-08-2026)</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>21-08-2026 முதல் 25-08-2026 வரை</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:-</h2><p><strong>இன்று (19-08-2026) முதல் 23-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும். உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் <strong>இன்று (19-08-2026)</strong> வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை (20-08-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மல்லிகை விலை வீழ்ச்சி: 3 டன் பூக்களை ஆற்றில் கொட்டிய விவசாயிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drop-in-jasmine-prices-farmers-dump-3-tonnes-of-flowers-into-river</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drop-in-jasmine-prices-farmers-dump-3-tonnes-of-flowers-into-river#comments</comments><guid isPermaLink="false">98a7a09c-ddaa-4d67-8d97-bd00c168366d</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:11:59 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:11:59.801Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விலை,கிருஷ்ணகிரி,தென்பெண்ணை ஆறு,Jasmine,flowers,மல்லிகை,All farmers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vyh6rsq7/279.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மல்லிகை பூ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vyh6rsq7/279.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் 3 டன் மல்லிகை பூக்களை தென் பெண்ணை ஆற்றில் விவசாயிகள் கொட் டிச் சென்றனர்.</p><h2>மல்லிகை பூ</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், திம்மாபுரம், அவதானப்பட்டி, சந்தூர், பர்கூர் உள்ளிட்ட 40 கி.மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இதனை நம்பி 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.</p><p>இந்நிலையில், அதிகரித்து வரும் வெப்பநிலையால் மல்லிகை பூக்கள் முன்கூட்டியே பூத்துவிட்டன. இதனால் கடந்த சில நாட்கனாக வெளிச்சந்தைகளில் பூக்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. கடந்த 2 நாட்களாக 40 சரக்கு வேன்களில் அனுப்பப்பட்ட 50 டன் மல்லிகை பூக்களில் 5 டன் பூக்கள் விலை போகவில்லை. சென்ட் தொழிற்சாலைகள் மிகக் குறைந்த விலையே கோரியதால், விவசாயிகளால் அதனை விற்க முடியவில்லை.</p><h2>விவசாயிகள் வேதனை</h2><p>உள்ளூரில் அதிகளவு விளைந்த பூக்களை விற்க வசதியில்லாததாலும், உரிய விலை கிடைக்காத தாலும் வேறு வழியின்றி காவேரிப்பட்டணம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் 3 டன் அளவிலான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82">மல்லிகை</a> பூக்களை கொட்டி விவசாயிகள் அழித்தனர். போதிய விலை கிடைக்காத இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மல்லிகை விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.</p><p>இது குறித்து விவசாயி பாலாஜி என்பவர் கூறும் போது, பருவம் தவறி முன்கூட்டியே பூக்கள் மலர்ந்துவிட்டதால், வரவிருக்கும் பண்டிகை காலங்களில் விளைச்சல் குறைந்துவிடும் என்றும். இதனால் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார். எனவே, கிருஷ்ணகிரியில் அரசு சார்பில் சென்ட் தொழிற்சாலை தொடங்கினால் இதுபோன்ற இழப்புகளை தவிர்க்கலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பழவேற்காடு: மின்னல் தாக்கி படகு தீப்பற்றி எரிந்து நாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pazhaverkadu-boat-destroyed-by-fire-after-being-struck-by-lightning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pazhaverkadu-boat-destroyed-by-fire-after-being-struck-by-lightning#comments</comments><guid isPermaLink="false">20a2020c-2905-46c5-9263-c565b380fb50</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:10:12 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:10:12.477Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire,படகு,மின்னல் தாக்கி,பழவேற்காடு ஏரி,fisherman&apos;s net,fisher</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/oq9v8of9/17.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ படகு தீப்பிடித்து எரிந்தது.]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்னல் தாக்கியதால் படகு தீப்பிடித்தது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/oq9v8of9/17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவள்ளூர் மாவட்டம் </a>பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கடலோரக் கிராமங்களில் நள்ளிரவில் பெய்த கனமழையின் போது, எதிர்பாராத விதமாகத் தாக்கிய பயங்கர மின்னலால் மீன்பிடிப் படகு ஒன்று முற்றிலும் கருகியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து அப்பகுதி மீனவக் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>காலநிலை மாற்றமும் கனமழையும்</h2><p>திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி மற்றும் வங்காள விரிகுடா கடல் இணையும் கடலோரப் பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவுக்குப் பிறகு திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் இடி மற்றும் பலத்த மின்னலுடன் கூடிய பயங்கரமான கனமழை பெய்யத் தொடங்கியது.</p><h2>கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்த மின்னல்</h2><p>மழை தீவிரமடைந்த நிலையில், பழவேற்காடு முகத்துவாரக் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த பைபர் ரக மீன்பிடிப் படகு ஒன்றின் மீது, பயங்கர சத்தத்துடன் மின்னல் நேரடியாகப் பாய்ந்தது. மின்னல் தாக்கிய அடுத்த சில விநாடிகளிலேயே படகின் உட்பகுதியில் தீப்பொறி ஏற்பட்டு மளமளவென எரியத் தொடங்கியது.</p><h2>கொழுந்துவிட்டு எரிந்த தீ</h2><p>கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசியதால், தீயின் வேகம் மிக வேகமாகப் பரவியது. படகில் இருந்த மரக் கட்டைகள், மீன்பிடி வலைகள் மற்றும் பிளாஸ்டிக் உபகரணங்கள் அனைத்தும் அடுத்தடுத்து தீப்பற்றியதால், படகு முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. நள்ளிரவு நேரம் என்பதால் உடனடியாகத் தீயை அணைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இறுதியில் படகு முற்றிலும் எரிந்து நாசமானது.</p><h2>அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்சேதம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்து</a> நடந்த நள்ளிரவு நேரத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லாமல், கரையில் தங்கியிருந்ததாலும், விபத்துக்குள்ளான படகில் யாரும் தூங்காததாலும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. </p><h2>பல லட்சம் ரூபாய் பொருட்சேதம்</h2><p>எனினும், மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மீன்பிடிப் படகும், அதிலிருந்த விலை உயர்ந்த வலைகளும் முழுமையாக எரிந்து நாசமானதால், சம்பந்தப்பட்ட மீனவக் குடும்பத்திற்குப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>அதிகாரிகள் தீவிர விசாரணை</h2><p>இந்த இயற்கை பேரிடர் விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சேதமடைந்த படகின் மதிப்பு குறித்துக் கணக்கெடுப்பு நடத்தி வரும் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மீனவருக்கு அரசு தரப்பில் நிவாரண உதவி வழங்குவதற்கான முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடலோரப் பகுதிகளில் இடி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D">மின்னல்</a> நிலவும்போது மீனவர்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி விவகாரம்: ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாசை சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-court-orders-cbcid-custody-for-interrogation-of-justin-manikandan-and-jayaprakash</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-court-orders-cbcid-custody-for-interrogation-of-justin-manikandan-and-jayaprakash#comments</comments><guid isPermaLink="false">e6bc94a2-c300-4eaf-b7dc-fd61a644fadc</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:01:14 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:01:14.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,பழனி,தமிழகம்,court order,நில மோசடி வழக்கு,Palani,CBCID,கோர்ட்டு உத்தரவு,சி.பி.சி.ஐ.டி.,நில மோசடி,Land fraud case</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/876oavq7/injk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/876oavq7/injk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனியில்</a> ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர், பத்திர எழுத்தரை காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.</p><h2>ரூ.100 கோடி நில மோசடி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a>யில், தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமாக ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் இருக்கிறது. அந்த நிலம் 2 பேருக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தனர். அதோடு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.</p><p>அதையடுத்து திண்டுக்கல்லை சேர்ந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழனியை சேர்ந்த சேதுபதி மற்றும் வக்கீல் அன்வர்தீன், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>ஜாமீன் மனு</h2><p>இதைத்தொடர்ந்து ஜாமீன் கேட்டு 6 பேரும் தாக்கல் செய்த மனுவை, திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் மாவட்ட கோர்ட்டில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி ஆனது. மேலும் முருகதாஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று (புதன்கிழமை) மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.</p><p>இதற்கிடையே நில மோசடி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதனால் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக திண் டுக்கல் 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.</p> <h2>சி.பி.சி.ஐ.டி. விசாரணை</h2><p>இந்நிலையில் பழனி நில மோசடி விவகாரம் தொடர்பாக ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் ஜெயபிரகாசை சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்று மாலை 5.30 மணி வரை காவலில் வைத்து விசாரிக்க திண்டுக்கல் நீதித்துறை குற்றவியல் நடுவர் பாக்யராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  </p><p>அவர்கள்  2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும், மேலும் சிலர் சிக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் நீர்வளம் நம் கையைவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றன - சவுமியா அன்புமணி வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-water-resources-are-slipping-out-of-our-hands-sowmya-anbumani-expresses-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-water-resources-are-slipping-out-of-our-hands-sowmya-anbumani-expresses-anguish#comments</comments><guid isPermaLink="false">da026fb2-059e-4212-b30c-e64f87a58156</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:58:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:58:54.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,Water Resources Department,நீர்வளத்துறை,Sowmiya Anbumani,சவுமியா அன்புமணி,நீர்வளம்,Water Resources</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/85qybyf8/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/85qybyf8/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி பேசியதாவது:-</p><p>இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில்தான் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அதிசயங்களில் ஒன்று. சென்னை கூவம் ஆறு மிகப்பெரிய அதிசயம். கூவம் ஆறு ஆவடி, அம்பத்தூர் தாண்டி சென்னைக்கு வரும்போது ரசாயன கழிவு கலந்து சாக்கடையாக வருகிறது. நல்ல தண்ணீரில் சாக்கடை கலப்பது சட்டப்படி குற்றமாகும். கூவம் ஆற்றில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை முதலில் தடுக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதும் கூவம் ஆறு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.</p><p>தாமிரபரணி ஆற்றில் டன் டன்னாக குப்பைகள் உள்ளன. தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யாமல் அழகுபடுத்தி என்ன பலன்?. தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை சரியாக அளவிட்டு மேப்பிங் செய்ய வேண்டும் என்று பேசினார். இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மேப்பிங் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து சவுமியா அன்புமணி பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும். 2008 முதல் காவிரி - குண்டாறு திட்டம் கிடப்பில் உள்ளது. முதலில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி 2-வது கட்ட திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். நொய்யல் மற்றும் தாமிரபரணி நதிநீர் இணைப்புப் பணிகள், பாலாறு தடுப்பணை மற்றும் நந்தன் கால்வாய் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும்.</p><p>நம் கண் எதிரே நம்முடைய சொத்து கைவிட்டுப்போகிறது என்றால் அது நீர்வளம்தான். எத்தனையோ ஆறு, ஏரி, குளங்கள் காணாமல் போய்விட்டன. கிராமங்களில் ஒரு ஏக்கர் பரம்பரை சொத்துக்காக நீதிமன்றம் வரை சண்டை போடும் மக்கள், நம் கையை விட்டுச் செல்லும் நீர்வளத்தைக் காப்பதில் அக்கறை காட்ட வேண்டும். நீர்தான் நம்முடைய மிகப்பெரிய சொத்து. நம் எதிர்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து நீர்வளம்தான்.</p><p>ஏரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 3-யை செயல்படுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூர்வாற வேண்டும். செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.</p><p>தொடர்ந்து குறும்பர் சமுதாயத்திற்காக தாயுள்ளத்தோடு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவுமியா அன்புமணி கோரிக்கை வைத்தார். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். மேலும் நெய்வேலியில் இருந்த ”தன்னூத்து” குறித்து சவுமியா அன்புமணி விளக்கம் அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கல்வி, சமூகநீதி சார்ந்த போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க ஆணையிடுவதா? -அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-condemned-govt-order-to-prevent-students-participating-in-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-condemned-govt-order-to-prevent-students-participating-in-protest#comments</comments><guid isPermaLink="false">0c48f53d-13fe-4e18-8847-7fb336c60a40</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:46:11 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:46:11.011Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பா.ம.க.,college students,Tamilnadu government,College students protest,அன்புமணி ராமதாஸ் அறிக்கை,பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2026/01/11/44545852-chennai-11.webp" width="750"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ கல்வியும், சமூகநீதியும் தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பவை  என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2026/01/11/44545852-chennai-11.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கல்வி, சமூகநீதி சார்ந்த போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க தமிழக அரசு ஆணையிட்டிருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கல்வி மற்றும் சமூகநீதி சார்ந்த போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீதிக்காக போராடும் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்க தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.</p><h2>முதல்வருக்கு கடிதம்</h2><p>தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் சார்பில் கடந்த 17-ஆம் தேதி அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், இடதுசாரிகள் மற்றும் காக்ரோச் ஜனதாக் கட்சி சார்பில் நடத்தப்படும் போராட்டங்களில் அரசு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>கல்வியும் சமூகநீதியும்</h2><p>தலைமைச் செயலாளர் தலைமையில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கல்வியும், சமூகநீதியும் தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பவை ஆகும். அதற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எதிராக போராட்டம் நடத்துவது மாணவர்களின் கடமை ஆகும்.</p><p>அந்த போராட்டங்களால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் தடுப்பது தான் அரசின் கடமையே தவிர, மாணவர்களை போராட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுப்பது அல்ல. போராட்டத்தில் பங்கேற்காமல் மாணவர்களை தடுக்க முயல்வது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.</p><h2>வாக்குரிமை- சொத்துரிமை</h2><p>நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கல்வித்துறை அமைச்சர் இராஜ்மோகன்</a> கலந்து கொண்டார். அப்போராட்டத்தில் பேசும் போது,’’ "வாக்குரிமை, சொத்துரிமை அனைத்துமே தமிழ்நாடு போராடிதான் பெற்றது. மாணவர்களின் ஒற்றுமைக்கு நான் தலைவணங்குகிறேன்.</p><p>நீட் ஒழிப்பை சட்டபூர்வமாக்கி கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர போராடும் அனைவருக்கும் ஆதரவாக கட்சி வேறுபாடின்றி நாங்கள் ஆதரவு தருகிறோம்’’ என்று கூறினார். ஒருபுறம் அமைச்சரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார். இன்னொருபுறம் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை அரசு தடுக்கிறது. இது என்ன இரட்டை நிலைப்பாடு?</p><h2>அறவழி போராட்டத்திற்கு அனுமதி</h2><p>தமிழ்நாட்டில், இந்தியாவில், உலகின் பல நாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது மாணவர்கள் போராட்டம் தான். நியாயமான கோரிக்கைகளுக்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்க அரசு முயல்வது சரியல்ல. இது தொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும். மாணவர்களின் அறவழி போராட்டத்தை அனுமதிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>3 மாதத்தில் பாலம் இடிந்தது எப்படி..? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-bridge-collapse-within-three-months-former-minister-ev-velu-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-bridge-collapse-within-three-months-former-minister-ev-velu-explains#comments</comments><guid isPermaLink="false">ca0e92bf-2742-49a5-97ee-6a1d6806ec9b</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:32:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:32:52.766Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,எ.வ.வேலு,TN Assembly,பாலம்,Assembly Session,அமைச்சர் மரிய வில்சன்,Minister Marie Wilson,former minister E.V. Velu,MarieWilson,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ueo3tf9o/palam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ueo3tf9o/palam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக ஆட்சியில் கடந்த 2024-ம் ஆண்டு அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் இந்த பாலம் கட்டப்பட்டது. 2024 செப்., 2ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த எ.வ.வேலு அதனை திறந்து வைத்தார்.</p><h2>பெஞ்சல் புயல்</h2><p>தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணை, பெஞ்சல் புயல் காரணமாக வேகமாக நிரம்பியது. இதனையடுத்து அந்த அணைக்கு வந்த சுமார் 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், பல இடங்களை தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது</p><p>இதில், அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூரை இணைக்கும் பாலமும் தப்பவில்லை. ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம், கட்டிய மூன்றே மாதங்களில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளானது. இந்த பாலம் இடிந்து விழுந்ததற்கு, தமிழக அரசு சார்பில் பல காரணங்கள் கூறப்படுகின்றன.</p><h2>அமைச்சர் எ.வ.வேலு</h2><p>இந்நிலையில் இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது திமுக ஆட்சியில் தரமற்ற முறையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 3 மாதங்களில் இடிந்து விழுந்ததாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார். </p><p>அதற்கு பதில் அளித்த பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 57 ஆயிரம் கன அடி தண்ணீரை தாங்கும் அளவுக்கு தான் கட்டப்பட்டது. திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத மழையால் சாத்தனூர் அணையில் 3 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்ததால், இயற்கை சீற்றத்தால் பாலம் உடைந்தது. இதற்கு கட்டிய பொறியாளர் மீது குறை சொல்ல முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கல்லணை கட்டியது சோழர்கள் காலத்தில், அந்த பாலம் இன்னமும் இருக்கிறது. ஆனால் கடந்த ஆட்சியில் மூன்று மாதத்தில் பாலம் இடிந்துள்ளது. வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அது குறித்து விவரம் தெரியவரும்” என்று அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>
நள்ளிரவில் கொடூரம்:  கணவர் குடும்பத்தினரை உயிருடன் எரித்துக்கொன்ற இளம்பெண், தாய், சகோதரர்; கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/midnight-horror-wife-mother-brother-burn-husbands-family-alive</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/midnight-horror-wife-mother-brother-burn-husbands-family-alive#comments</comments><guid isPermaLink="false">3be83619-3e56-4e45-8887-71e7c03f5488</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:31:17 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:31:17.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,Crime News,Madurai,மதுரை,husband</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8y6jhaj3/tpiwc.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8y6jhaj3/tpiwc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>கணவர் குடும்பத்தினரை நள்ளிரவில் உயிருடன் எரித்துக்கொன்ற இளம்பெண் தொடர்பான வழக்கில் மதுரை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.</p><p>மதுரை மாவட்டம் சேடபட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குமாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). பி.காம் பட்டதாரி. கடந்த 2015-ம் ஆண்டில் இவரும், அதே பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி (வயது 21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களிலேயே இரு குடும்பத்தினருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.</p><p>இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த பாண்டீஸ்வரிக்கு கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் பாண்டீஸ்வரி தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு இடையேயான பிரச்சினையை ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் தீர்த்து வைக்கும் முயற்சிகளும் நடந்தன.</p> <h2>நள்ளிரவில் தீ வைப்பு</h2><p>ஆனாலும் இரு தரப்பிலும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரி, அவரது தாய் முருகேஸ்வரி (வயது 40), தம்பி ராஜபாண்டி (வயது 20) ஆகியோர் கண்ணன் குடும்பத்தினரை பழி வாங்க திட்டமிட்டனர்.  குமாரபுரத்தில் உள்ள குடிசை வீட்டில் கண்ணன், அவரது தந்தை வேலு, தாயார் பேச்சியம்மாள், சகோதரி சுகந்தி, அவரது மகள் சங்கீதா (வயது 17), மகன்கள் சஞ்சித் (வயது 12), வினித் (வயது 10) ஆகிய 7 பேரும் சம்பவத்தன்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.</p><p>அப்போது அங்கு வந்த பாண்டீஸ்வரி, அவரது தாயார் முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகிய 3 பேரும் சேர்ந்து தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை குடிசை மீது ஊற்றினர். பின்னர் வீட்டுக்குள் இருப்பவர்கள் வெளியே வர முடியாதபடி கதவை கட்டுக்கம்பியால் இறுகக்கட்டினர். பின்பு அந்த வீட்டுக்கு தீ வைத்தனர். அந்த தீ வீடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியும் வரை அங்கேயே அவர்கள் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.</p> <h2>7 பேர் பலி</h2><p>தீயினால் ஏற்பட்ட வெப்பம் அக்கம் பக்கத்து வீடுகளில் பரவியதால் அலறி அடித்துக்கொண்டு நள்ளிரவில் வெளியேறிய கிராம மக்கள் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து வீட்டுக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர்.</p><p>இதில் சிறுவன் வினித் மட்டும் உயிருக்கு போராடினான். மற்ற 6 பேரும் தீயில் கருகி வீட்டுக்குள்ளேயே உயிரிழந்தனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வினித்தும் சிறிது நேரத்தில் இறந்தார். 7 பேர் கொடூர கொலை குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகியோரை கைது செய்தனர்.</p> <h2>8 ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.  இந்த வழக்கில் நீதிபதி உதய வேலவன் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில், 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்காக ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு ஆயுள் தண்டனை வீதம் தலா 7 ஆயுள் தண்டனையும், கூட்டுச்சதி தண்டனை சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும் என மொத்தம் 8 ஆயுள் தண்டனையை பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை மேற்கண்ட 3 குற்றவாளிகளும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அவர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: மணல் கடத்தல் புகார் அளித்ததாக 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்- 2 பெண்கள் காயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-15-member-gang-attacks-individuals-for-lodging-a-complaint-about-sand-smuggling-two-women-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-15-member-gang-attacks-individuals-for-lodging-a-complaint-about-sand-smuggling-two-women-injured#comments</comments><guid isPermaLink="false">d7bbd55f-d876-491b-935b-55fe21b27bad</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:13:59 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:13:59.847Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை மிரட்டல்,Social Activist,சமூக ஆர்வலர்,Police action,மணல் கடத்தல்,Handicapped,பெண்கள் காயம்</media:keywords><media:content height="410" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/z9xa18cc/3.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காயமைந்த சித்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/z9xa18cc/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வைப்பாளையத்தில் 2 பெண்களை 15 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>மணல் கடத்தல்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை  வைப்பாளையத்தில் வசித்து வரும் ரமேஷ். சமூக ஆர்வலரான இவர், மணல் கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக விழுப்புரத்திற்கு சென்றிருந்தார். இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் 15 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்கு சென்று, ரமேஷின் மாற்றுத்திறனாளி சகோதரரை திட்டி உள்ளனர். மணல் கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு ஏன் தகவல் தெரிவிக்கிறீர்கள்? என வாய்க்கு வந்தபடி பேசி உள்ளனர்.</p><h2>இரண்டு பெண்கள் காயம்</h2><p>சத்தம் கேட்டு வந்த ரமேஷின் மகள் அக்‌ஷயா (கல்லூரி மாணவி) இதை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அக்சயாவின் உடையை கிழித்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளது. தடுக்க வந்த சித்தி பாக்கிய லட்சுமியையும் (வயது 38) இந்த கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது. </p> <p>தாக்குதலில் காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். </p><h2>போலீசார் விசாரணை </h2><p>இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் தாக்கிய 15 பேரையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  <a href="https://www.dailythanthi.com/topic/sand-smuggling-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">மணல் கடத்தல் </a>தொடர்பாக புகார் அளித்ததாக கூறி 2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-tamil-nadu-government-must-press-for-a-cbi-inquiry-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-tamil-nadu-government-must-press-for-a-cbi-inquiry-anbumani#comments</comments><guid isPermaLink="false">de7ddbbd-dabf-4fa1-a433-8bd530fd6548</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:07:26 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:07:26.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani,சென்னை,Karnataka,சிபிஐ விசாரணை,வலியுறுத்தல்,அன்புமணி ராமதஸ்,shot dead,CBI Inquiry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/5t01pp4y/190.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/5t01pp4y/190.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கர்நாடக முதல்-மந்திரி</h2><p>கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது கர்நாடகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த விவகாரம் என்பதால் அது குறித்து தமிழக அரசோ, தமிழக அரசியல் கட்சிகளோ எந்தக் கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக கண்டனம் தெரிவிக்கவும், சிபிஐ விசாரணை கோரவும் தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.</p> <p>கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘எந்த மாநிலமும் இன்னொரு மாநில நிர்வாகத்தில் தலையிட முடியாது. தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது கர்நாடகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு  பிரச்சினை என்பதால் அதில் தமிழக அரசு தலையிட முடியாது. தமிழ்நாடு அதன் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளட்டும்; நாங்கள் எங்கள் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறோம்’’ எனக் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><h2>கர்நாடக வனத்துறை</h2><p>சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பகுதியில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அம்மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த சிக்கல் என்று கூறுவதே இந்த விவகாரத்தை திசை திருப்பும் செயலாகும். காணாமல் போன மாடுகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு ஒவ்வொரு நாளும் புதிய ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. சாம்ராஜ் நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் புட்டரங்கா ஷெட்டி,  மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை  உறுப்பினர் மஞ்சுநாத்  ஆகியோர் வனத்துறையினரின்  விளக்கத்தை ஏற்க மறுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்.</p><h2>தமிழக அரசு கடமை</h2><p>3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலிருந்து புத்தம் புதிய காலணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உயிரிழந்தவர்களில் ஒருவர் அணிந்திருக்கிறார். கொல்லப்பட்டவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டு இருந்தால் புதிய காலணிகள் கரைபடாமல் இருக்க வாய்ப்பில்லை என காவல்துறை அதிகாரிகளில் சிலரே கூறியுள்ளனர். இந்த ஐயங்களை போக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை ஆகும். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக உண்மையை மூடி மறைக்க கர்நாடக அரசு முயல்கிறது. இத்தகைய தருணத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். இதை செய்யக் கூடாது என்று சொல்ல இந்தியா சர்வாதிகார நாடும் அல்ல. கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சர்வாதிகாரியும் இல்லை என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.</p><p>ஒரு மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களோ, ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களோ இன்னொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் தாக்கப்படும் போது அல்லது படுகொலை செய்யப்படும் போது, அதைக் கண்டிக்கவும், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தவும்  பாதிக்கப்பட்டவர்களின் பூர்வீக மாநிலம் அல்லது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உண்டு. கடந்த காலங்களில் இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தமிழ்நாட்டு அரசும், மக்களும் கண்டித்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஈழத்தமிழர் சிக்கலில் மத்திய அரசே தலையிட்டு நடவடிக்கை எடுத்த வரலாறு உண்டு. காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் அதை தமிழ்நாடு கண்டித்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 1991-92ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் 05.01.1992 ஆம் நாள் கர்நாடகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற வரலாறு உண்டு.</p><h2>வலியுறுத்தல்</h2><p>கடந்த பத்தாண்டுகளில் கோவா மாநிலத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பலமுறை தாக்கப்பட்ட போது அதற்கு கர்நாடக சட்டப்பேரவையே கண்டனம் தெரிவித்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு மும்பையிலும், மராட்டியத்தின் பிற பகுதிகளிலும் பிகாரைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்ட போது, அதற்கு அப்போதைய மத்திய அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், பிகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததும், அவர்களின் கோரிக்கையை ஏற்று மராட்டிய முதல்-மந்திரிக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்  கடுமையான வார்த்தைகளில் கடிதம் எழுதியதும் நடந்தது. </p><p>அதனால், கர்நாடகத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசவும், நீதிக்காக போராடவும் தமிழக அரசுக்கும், மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. எனவே, கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக அரசு நியாயமான நடவடிக்கை எடுக்கும் என்று இனியும் நம்பிக் கொண்டிருப்பது தவறு ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">சிபிஐ </a>விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கர்நாடக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
கொடுக்கிறதுதான் கொடுக்கிறீர்கள்... இன்னோவா கார் கொடுங்கள்:  எம்.எல்.ஏ. சண்முகன் கோரிக்கை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-are-giving-just-give-innova-car-mla-shanmugan-request</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-are-giving-just-give-innova-car-mla-shanmugan-request#comments</comments><guid isPermaLink="false">d33a99b4-c010-4067-8971-4d3b466b0dbe</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:55:12 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:55:12.984Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,எம்.எல்.ஏ.,MLA,கோரிக்கை,Request,TNAssembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vmwtuod2/tnsra.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எம்.எல்.ஏ. சண்முகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vmwtuod2/tnsra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தமிழக சட்டசபையில் இன்று பேசிய த.வெ.க. எம்.எல்.ஏ. சண்முகன், உறுப்பினர்களுக்கு இன்னோவா கார் கொடுக்கும்படி கோரிக்கையாக கேட்டு கொண்டார்.</p><p>தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.  இதில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.</p> <h2>எம்.எல்.ஏ.க்களுக்கு கார்</h2><p>அப்போது அவர், எம்.எல்.ஏ.க்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதிப்பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று கூறினார்.  இதன்படி, சட்டசபைக்கு சென்று வர, தொதிப்பணியாற்ற வசதியாக கார் வழங்கப்பட உள்ளது.</p><p>அதனுடன், எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு உதவியாளர்களை நியமிக்க மாதம் ரூ.25 ஆயிரம் படி வழங்கப்படும்.  ஓட்டுநர், வாகன பராமரிப்பு, எரிபொருளுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் படி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்து பேசினர்.</p> <h2>எம்.எல்.ஏ. சண்முகன்</h2><p>இதனை தொடர்ந்து த.வெ.க. எம்.எல்.ஏ. சண்முகன் எழுந்து பேசும்போது, எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து முதல்-அமைச்சர் அமர்ந்திருக்கிறார்.  கோரிக்கையில் நியாயம் உள்ளது என்றால், அது மக்களோ அல்லது சட்டமன்ற உறுப்பினர்களோ, யாரிடம் இருந்து வந்த கோரிக்கையானாலும் உடனடியாக அது நிறைவேற்றப்படும் என்று மீண்டும் ஒருமுறை நம்முடைய முதல்-அமைச்சர் நிரூபித்து இருக்கிறார்.</p><p>அறம், நேர்மை, மக்கள் நலன் ஆகிய மூன்றின் அடிப்படையில் தமிழ்நாட்டை தாங்கி பிடிக்கின்ற முதல்-அமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்ற பெருமையோடு அவருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.</p><p>தொடர்ந்து அவர் பேசும்போது, கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என பின்னால் இருக்கின்ற உறுப்பினர்கள் கூறுகிறார்கள் என்று கூறியதும் முதல்-அமைச்சர், உறுப்பினர்கள் உள்பட அனைவரிடம் இருந்தும் பலத்த சிரிப்பலை எழுந்தது.</p> ]]></content:encoded></item><item><title>பெண்கள் மேம்பாட்டு திட்ட நிதி முறைகேடு: முழுமையான தணிக்கை நடத்த வானதி சீனிவாசன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/misappropriation-of-funds-in-womens-development-schemes-vanathi-srinivasan-urges-a-comprehensive-audit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/misappropriation-of-funds-in-womens-development-schemes-vanathi-srinivasan-urges-a-comprehensive-audit#comments</comments><guid isPermaLink="false">a409ec61-320e-4e9f-865b-cad0eb9d44c0</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:53:06 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:53:06.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,women,வானதி சீனிவாசன்,பெண்கள்,Development Project,fund,நிதி முறைகேடு,தணிக்கை,audit</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jniguqaq/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jniguqaq/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பெண்கள் மேம்பாட்டு திட்ட நிதி</h2><p>தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதியில் கடந்த 2023-2026-ம் காலகட்டங்களில் சுமார் 107.94 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக மயிலாடுதுறை, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது தணிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>மோசடி</h2><p>திட்டங்களைச் செயல்படுத்தாமேலேயே போலி பில்களைத் தயாரிப்பது, வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொண்டது உள்ளிட்ட மோசடிகளால் அரசு நிதியானது தவறகான முறையில் கையாளப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தமிழகத்தில் பாதி மாவட்டங்களில் மட்டுமே முடிவடைந்துள்ள தணிக்கை  பணியிலேயே இத்தனை கோடி முறைகேடுகள் என்றால் தமிழகம் முழுவதும் இன்னும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டால் இன்னும் பல கோடி அரசு பணம் ஊழல் செய்யப்பட்டிருப்பதற்கான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.</p><h2>தணிக்கை</h2><p>கடந்த கால திமுக ஆட்சி எந்த அளவிற்கு ஊழல் குற்றச்சாட்டு நிறைந்த ஓர் ஆட்சியாக செயல்பட்டிருக்கிறது என்பதற்கு துறை ரீதியாக தொடர்ந்து வெளிவரும் பல ஊழல் புகார்களே சாட்சி.</p><p>ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்று பதவியேற்றிருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசு</a> மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் முழுமையான தணிக்கைளை விரைந்து நடத்தி மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்த யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item></channel></rss>