<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 16 Aug 2026 09:37:06 +0000</lastBuildDate><item><title>தவெக அரசு கடந்து வந்த 100 நாட்கள்..! - வெற்றி பயணமா..?, வெற்று பயணமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-governments-first-100-days-a-journey-to-success-or-an-empty-journey</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-governments-first-100-days-a-journey-to-success-or-an-empty-journey#comments</comments><guid isPermaLink="false">7c0b1514-e1de-43fb-82c6-61fc5f7a6425</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:12:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:12:30.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government,Tamil Nadu Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iyz837is/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iyz837is/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று நாளையுடன் (ஆகஸ்டு 17) 100 நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்கள் கடந்து வந்த பாதை வெற்றிப் பயணமாக அமைந்ததா?, வெற்றுப் பயணமாக இருந்ததா? என்பது தொடர்பான அலசல் இது.</p><h2>திராவிட கட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட த.வெ.க.</h2><p>தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகளே மாறி.. மாறி.. ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தன. இருபெரும் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு, அரசியலில் 2½ வயது குழந்தையான த.வெ.க. முட்டுக்கட்டை போட்டது.</p><p>கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய், மே மாதம் 10-ந் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் அன்றைய தினம் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். தொடர்ந்து, மே 21-ந் தேதி நடைபெற்ற 2-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், மே 22-ந் தேதி நடைபெற்ற 3-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/v7cqro4y/Untitled-7.jpg" /></figure><h2>த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி?</h2><p>இந்த நிலையில், தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று நாளையுடன் (திங்கட்கிழமை) 100 நாட்கள் ஆகிறது. பதவியேற்ற அந்த நாள் (மே 10) முதல் இந்த நாள் (100-வது நாள்) வரை த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி? என்பதை பற்றி தொடர்ந்து பார்க்கப்போகிறோம்.</p><p>முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற மே 10-ந் தேதி 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். "2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். </p><p>பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க, 65 போதைப்பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்படும்" என்பவைதான் அவை. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/rh7fapx2/CHENNAI-01.jpg" /></figure><h2>717 டாஸ்மாக் கடைகள் அடைப்பு</h2><p>அதன்பிறகு, குறுகிய நாட்கள் இடைவெளியில், புதிய புதிய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே செயல்பட்ட 717 டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதன் மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்ந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/8i4w66wl/Untitled-1.jpg" /></figure><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>அதன்பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைத்து சுவையுடன் கூடிய தரமான உணவுகளை விநியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். தொடர்ந்து, குறு விவசாயிகள் வாங்கிய ரூ.50 ஆயிரம் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அவர் உத்தரவிட்டார். </p><p>அதன்பிறகு, மே 27-ந் தேதி டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை, தமிழக மீனவர் பிரச்சினை உள்பட 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/uui6m36p/Untitled-5.jpg" /></figure><h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்</h2><p>ஜூன் 9-ந் தேதி குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். அதன்பிறகு, அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அறிவித்தார். </p><p>தொடர்ந்து, கடந்த 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், "திருமணமாகும் பெண்களுக்கு திருமண நாளில் அண்ணனின் சீர் என்ற திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும். குடிசை வீடுகளுக்கு பதிலாக 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். பிளஸ்-1 மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும். அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்படும்" என்பது உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2gu3pidi/Untitled-2.jpg" /></figure><h2>பட்ஜெட்டில் 125 வாக்குறுதிகள் </h2><p>பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், "த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் 125 பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது" என்றார். </p><p>இதற்கு மத்தியில், சத்தம் இல்லாமல் ஒரு சாதனையை தமிழக தொழில் துறை செய்துள்ளது. அதாவது, 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேர் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2o8pgrn4/Untitled-5.jpg" /></figure><h2>தொழில் முதலீடுகள் ஈர்ப்பு</h2><p>குறிப்பாக, கடந்த 13-ந் தேதி நடைபெற்ற, வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் போடப்பட்ட 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க உள்ளன.  அதுவும், தொழில் முதலீடுகள் அனைத்தும் ஒரே பகுதியில் குவிந்துவிடாமல், 23 மாவட்டங்களுக்கு பரவலாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக தொழில் நிறுவனம் அமைய இருக்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/jqvcqxem/Untitled-7.jpg" /></figure><h2>முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்</h2><p>இப்படி, சத்தம் இல்லாமல் தொழில் புரட்சியை த.வெ.க. அரசு ஏற்படுத்தினாலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, மின் தடை பிரச்சினை, குப்பைகள் சரியாக அகற்றப்படாதது உள்ளிட்டவை புதிய அரசின் மீது குற்றச்சாட்டுகளாக வைக்கப்படுகின்றன. </p><p>கடந்த கால ஆட்சிகளில், தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால், அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். அல்லது அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். ஆனால், இப்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகள் எதிர்க்கட்சிகளாக உள்ளன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/39xmkibq/Untitled-4.jpg" /></figure><h2>100 நாள் ஆட்சி எப்படி?</h2><p>இதனால், சட்டசபையில் இரு எதிர் கட்சிகளின் கேள்விக் கணைகளை த.வெ.க. அமைச்சர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. எதிரில் இருப்பவர்கள் சட்டசபை அனுபவத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றாலும், ஆளும் தரப்பினரும் அதைவொரு சவாலாக ஏற்று சமாளித்து வருகின்றனர். </p><p>மொத்தத்தில், கடந்த 100 நாள் த.வெ.க. ஆட்சி, ஊழலுக்கு எதிராக தனது பார்வையை கழுகுப்பார்வையாக அதிகரித்துள்ளதுடன், ஒவ்வொரு தடைகளையும் தாண்டி வெற்றி பெற்று வருவதாகவே தெரிகிறது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5i4uk29j/Untitled-7.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>கர்நாடகா வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த மூன்று விவசாயிகள் சுட்டுக் கொலை - சி.பி.ஐ. கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-farmers-from-tamil-nadu-shot-dead-in-karnataka-forest-area-cbi-condemns-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-farmers-from-tamil-nadu-shot-dead-in-karnataka-forest-area-cbi-condemns-incident#comments</comments><guid isPermaLink="false">1e3abd17-66ae-4161-8896-f1f8f7f58c82</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:36:23 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:36:23.212Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,Tamilnadu,Farmers,தமிழகம்,Karnataka,கர்நாடகா,விவசாயிகள்,இந்திய கம்யூனிஸ்டு,CPI,சுட்டுக்கொலை,மு.வீரபாண்டியன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/svdgd28i/kaithu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/svdgd28i/kaithu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மூன்று விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><h2>சுட்டுக் கொலை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/karnataka">கர்நாடக மாநிலம்</a> சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வனப்பகுதியில் ஆடுமாடுகளை மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.</p><p>அந்த வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகிய மூவரை  கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது.</p><h2>பொய்யான குற்றச்சாட்டு</h2><p>வனத்துறையினர் தங்களது கொலைக் குற்றத்தை திசை திருப்ப அவர்கள் வேட்டையாடினார்கள் என பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். இந்த கொலையை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இக்கொலையை செய்த வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொலைக் குற்றமாக வழக்கை கர்நாடக அரசு பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய புலானாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.</p><h2>உரிய நிவாரணம்</h2><p>கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். இக்கொலை குறித்து, தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தை கர்நாடக அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தீர்மானம் நிறைவேற்றம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-resolution-condemns-udayanidhi-stalin-arrest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-resolution-condemns-udayanidhi-stalin-arrest#comments</comments><guid isPermaLink="false">4c4a4519-eb26-4e22-ba42-dc1c18902ac6</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:32:58 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:32:58.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/tjndudaj/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/tjndudaj/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p>திமுக தலைமையில் அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் <a href="https://www.dailythanthi.com/">திமுக </a>சட்டத்துறை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் அணியினர் கலந்து கொண்டனர் . இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டர்.</p><h2>தீர்மானம் நிறைவேற்றம்</h2><p>இந்த நிகழ்ச்சியில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தஞ்சையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த கைதை கண்டித்து தவெக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு அலட்சியப்போக்குடன் செயல்படுவதாகவும், அதை கண்டித்தும் திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.</p><p>வாக்கு எந்திரத்திற்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>இதனிடையே, கடந்த 3ம் தேதி தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.  </p><h2>தஞ்சை ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, </h2><p> கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வந்திருக்க வேண்டும். காவிரியில் ஒருசொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதுபற்றி இன்று இருக்கும் முதல்-அமைச்சர் வாயை திறந்து பேசவில்லை.</p><p>முதல்-அமைச்சருக்கு இருக்கும் ஒரே கவலை திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதுதான்’ என்றார்.</p><p>அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், நடிகை ஒருவரின் பெயரை கூறி கூச்சலிட்டனர். </p><p>அப்போது தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்கே தண்ணீர் வருகிறதோ இல்லையோ அங்கே தண்ணீர் வர வேண்டும்... நான் காவிரியை கூறினேன்’ என்றார். </p><p>இந்த பேச்சு இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும், ஆபாசமாகவும் இருந்ததாக கூறி உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்; பரிசல் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-okenakkal-disappointed-as-travel-ban-imposed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-okenakkal-disappointed-as-travel-ban-imposed#comments</comments><guid isPermaLink="false">4a207a23-533b-4571-9dce-18e4ccf0e7a9</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:32:39 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:32:39.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒகேனக்கல்,சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்,Tourists flock,Okenakkal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2z0haa7t/114.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2z0haa7t/114.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது வார விடுமுறை தினம் என்பதால், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.</p><h2>பரிசலில் பயணம் செய்ய தடை</h2><p>இந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரியில் 4.500 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வார விடுமுறை தினமான இன்று<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D"> ஒகேனக்கலில்</a> சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாபயணிகள் பரிசலில் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்..?!” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-too-thought-that-was-the-reason-i-was-being-arrested-udhayanidhi-stalins-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-too-thought-that-was-the-reason-i-was-being-arrested-udhayanidhi-stalins-remarks#comments</comments><guid isPermaLink="false">4acdf983-ea9f-47e1-8f09-81e29db5635b</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:14:47 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:14:47.104Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,அரசியல்,tn politics,தவெக அரசு,TVK Government,tvk govt</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/h5k58myu/matter.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/h5k58myu/matter.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் கைது செய்யும் நிலை உள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். </p><h2>நின்னா கைது, நடந்தா கைது, பேசுனா கைது</h2><p>இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் அவர் பேசியதாவது:-</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கறிஞரின் பணி மிக அவசியமானதாக இருக்கிறது. கடந்த 100 நாட்களில் Busy-ஆக இருப்பது வழக்கறிஞர் அணி தான்.  தவெக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் கைது செய்யும் நிலை உள்ளது. ஏனென்றால் நின்னா கைது, நடந்தா கைது, பேசுனா கைது, சமூக ஊடகங்களில் போஸ்ட் போட்டா கைது என ஒரு மோசமான பாசிச அரசாக தவெக அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>அந்தளவுக்கு இந்த அரசுக்கு In-Security ரொம்ப அதிகம். தூங்கி எழுந்தா இன்னைக்கு யாரை கைது செய்ய வேண்டும்? என Time Table போட்டு கைது செய்து வருகிறது</p><p>தோல்விக்கு பிறகு ஜென் z இளைஞர்களை எழுப்பி விட்டுள்ளோம். ஜென் z இளைஞர்களையும் டார்கெட் செய்து கைது செய்கிறார்கள்.</p><h2>கோவை கல்லூரி மாணவர் கொலை</h2><p>முதல்-அமைச்சரையே சிறைக்கு அனுப்பியது திமுக சட்டத்துறை. தவெக அரசு கைது செய்தபோதே திமுக வழக்கறிஞர் அணி சட்டப்போராட்டம் நடத்தியது.  சோர்ந்து போயிருந்த நாம் அரசின் கைது நடவடிக்கை மூலம் மீண்டு வந்துள்ளோம்.</p><p>சீட்டுக்கட்டுல 52ம் ஜோக்கர்.. அடைமொழி வெச்சி கூப்பிட்டாதான் அமைச்சர்கள் யார்னு தெரியுது. யார் எந்த துறை அமைச்சர்னு.. முதல்-அமைச்சருக்கே தெரியாது. </p><p>கோவை கல்லூரி மாணவர் அமுதனின் கொலையை கோஷ்டி பூசல் என தவெக அமைச்சர் சொல்கிறார். 10 பேருக்கும் 10 பேருக்கும் தகராறு நடந்தால் அதுக்கு பெயர் கோஷ்டி பூசல். ஆனால், 10 பேர் சேர்ந்து ஒரு பையனை அடிச்சா அதுக்கு பெயர் கொலை. அது என்ன கோஷ்டி பூசலா? கொலை செய்யப்பட்ட மாணவருக்கு திமுக நிச்சயம் நீதி வழங்கிக் கொடுக்கும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/as1e2634/arart.jpg" /></figure><h2>காவிரியில் தண்ணி வரவேண்டும்</h2><p>டம்மி முதலமைச்சர், வெட்கம்கெட்ட அரசு, கேடுகெட்ட அரசு, எதற்கும் துப்பில்லை, தைரியம் இல்லை, விவசாயிகளை நடுரோட்டில் விட்டுவிட்டீர்கள் என இதையெல்லாம் சொன்னேன். இதற்குத்தான் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் அதற்கு எந்த ரியாக்சனும் இல்லை. இறுதியாக காவிரியில் தண்ணி வரவேண்டும் என சொன்னதற்காக கைதானேன்.</p><p>ஜாலியா TRIP போற மாதிரிதான் போனோம்.. அரசே செலவு செய்து இலவசமாக ‘ரோடு ஷோ’ நடத்தி காட்டினார்கள்</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p> <h2>தீர்மானம்</h2><p>இதனிடையே மேகதாது விவகாரம், தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றங்கள் ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் நடந்த திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோவை மாணவர் கொலையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/sjAjg7vX2tE"></iframe></figure>]]></content:encoded></item><item><title>கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது ஏன்?  - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-are-tons-of-dead-fish-floating-in-the-kosasthalaiyar-river-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-are-tons-of-dead-fish-floating-in-the-kosasthalaiyar-river-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">e705bb58-f172-4302-a807-31cfcd8282c5</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:05:38 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:05:38.468Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Kosasthalai river,கொசஸ்தலை ஆறு,Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/dpwhugge/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/dpwhugge/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாசுபாட்டிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தித் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மீன்கள் செத்து மிதப்பு</h2><p>சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள், இறால், நண்டு உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பது அதிர்ச்சியளிப்பதோடு, தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமானக் கேள்வியை எழுப்புகிறது.</p><p>மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதக்கின்றன என்றால், அந்தத் தண்ணீரில் ஏதோ மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது என்பதே பொருள். ரசாயனக் கழிவுகள் கலந்திருக்கலாம் என மீனவர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், இதை வெறும் சந்தேகம் என புறந்தள்ள முடியாது. எண்ணூர்,மணலி தொழிற்பகுதியைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் நீண்டகாலமாக மாசுபாடு பிரச்சினையை எதிர்கொண்டு வருவது ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் மற்றும் அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது.</p><p>ஒவ்வொரு முறையும் மீன்கள் செத்து மிதந்த பிறகுதான் ஆற்றின் நிலை குறித்து அதிகாரிகளுக்கு நினைவு வர வேண்டுமா?</p><h2>இதுதான் வளர்ச்சிக் கொள்கையா?</h2><p>மீனவர்களின் படகுக் கடன், வலைச் செலவு, குடும்ப உணவு, குழந்தைகளின் கல்வி என மீனவக் குடும்பத்தின் வாழ்வாதாரமே மீன்வளத்துடன் இணைந்திருக்கிறது.</p><p>இன்று மீன்கள் அழிகின்றன. தொடர்ந்து நீர்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டால், மீன்வளம் குறைந்து, எண்ணூர் மீனவ மக்களின் தலைமுறை வாழ்வாதாரமே ஆபத்துக்குள்ளாகும்.</p><p>தமிழ்நாட்டிற்கு தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் தேவை. ஆனால் நிறுவனங்களின் லாபத்திற்காக ஆறுகளையும் கடலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிப்பதை வளர்ச்சி என்று ஏற்க முடியாது.</p><p>நிறுவனங்களுக்கு லாபம். மக்களுக்கு மாசு. இதுதான் தமிழகத்தின் வளர்ச்சிக் கொள்கையா?</p><p>இந்தச் சம்பவத்தை வழக்கமான விசாரணையாக முடித்துவிடாமல், சுற்றுச்சூழல் அவசரநிலையாகக் கருதி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>பரிசோதிக்க வேண்டும்</h2><p>நீர், படிவம், இறந்த உயிரினங்களின் மாதிரிகளைச் சேகரித்து சுயாதீன ஆய்வகங்களில் பரிசோதிக்க வேண்டும்.</p><p>கரைந்த ஆக்சிஜன், அமோனியா, ஹைட்ரோகார்பன்கள், கன உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய அளவுருக்களை ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுவட்டார தொழிற்சாலைகளின் கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>சட்டவிரோத கழிவு வெளியேற்றம் நடந்துள்ளதா? என்பதைக் கண்டறிய வேண்டும்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p>ஆய்வு முடிவுகளை முழுமையாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். மாசுபாட்டிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணத்துடன் வாழ்வாதார இழப்பிற்கான உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.</p><p>கொசஸ்தலையாற்றை பாதுகாக்க வேண்டும். மீனவர்களின் தலைமுறை வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். மாசுபாட்டிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தித் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாஜ்பாய் நினைவு தினம்- தமிழிசை சவுந்தரராஜன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vajpayees-death-anniversary-tamilisai-soundararajans-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vajpayees-death-anniversary-tamilisai-soundararajans-tribute#comments</comments><guid isPermaLink="false">cb179e38-7f70-4b4d-a8eb-8cf30f91bb57</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:02:37 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:02:37.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,நினைவு தினம்,Vajpayee,வாஜ்பாய்,புகழஞ்சலி,death anniversary</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/0o4ddinu/113.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/0o4ddinu/113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை.</p><p>தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாளில்,  மரியாதையுடன் நினைவுகூர்கிறேன். முதுகலை மருத்துவ மாணவியாக தமிழக பாஜகவில் சேர்ந்த போது அவரதுசிறந்த பேச்சாற்றல் மற்றும் தலைமைப் பண்பால் ஈர்க்கப்பட்டேன்.</p><p>பல ஆண்டுகளுக்குப் பிறகு, விதி எனக்கு ஒரு மிகுந்த வேதனையான அதே நேரத்தில் பெரும் பாக்கியமான பொறுப்பை வழங்கியது. பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த நான், அன்றைய தேசியத் தலைவர் அமித் ஷா அவர்களிடமிருந்து, நமது  பிரதமர் நரேந்திரமோடியின் முன்னிலையில், வாஜ்பாய் அவர்களின் அஸ்தியைப் பெற்றுக்கொள்ளும் புனிதமான வாய்ப்பைப் பெற்றேன்.</p><p>மேலும், பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை ஏற்பாடு செய்யும் பெரும் பொறுப்பும் எனக்குக் கிடைத்தது. உணர்வுபூர்வமான இந்த  நிகழ்வுகள் என் வாழ்வில், என்றும் மறக்க முடியாத அத்தியாயமாகும். <a href="https://www.dailythanthi.com/topic/vajpayee">வாஜ்பாய் </a>அவர்கள் நம் இதயங்களில் வாழ்கிறார். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் சுட்டுக்கொலை: கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shooting-death-of-3-tamils-explanation-must-be-sought-from-the-karnataka-government-ttv-dhinakaran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shooting-death-of-3-tamils-explanation-must-be-sought-from-the-karnataka-government-ttv-dhinakaran-urges#comments</comments><guid isPermaLink="false">e31a2c3f-13eb-4bf6-83e2-cf4a25193e7d</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:44:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:44:30.616Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/9faceqpz/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/9faceqpz/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடக மாநில வனப்பகுதிக்கு அருகே வசித்து வந்த அப்பாவி தமிழர்கள் மூவர் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நீதி விசாரணையின் மூலம் உண்மை வெளிவருவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், அம்மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கின்றன.</p><p>பன்னெடுங்காலமாக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் விவசாயம் செய்தும், மாடுகளை மேய்த்தும் தங்களது வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கான அதிகாரம் அம்மாநில வனத்துறைக்கு கொடுத்தது யார் ? இப்படுகொலையை கண்டித்து அப்பகுதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடும் நிலையில், மான் வேட்டையாடியதாலே சுட்டுக் கொன்றதாக அம்மாநில வனத்துறை அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல.</p><h2>விளக்கம் கேட்க வேண்டும்</h2><p>எனவே, கர்நாடக மாநிலத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழர்கள் </a>மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து அம்மாநில அரசிடம் உரிய விளக்கம் கேட்பதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டுவரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு..? வானிலை மையம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/weather/which-areas-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today-meteorological-department-provides-details-2</link><comments>https://www.dailythanthi.com/news/weather/which-areas-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today-meteorological-department-provides-details-2#comments</comments><guid isPermaLink="false">56c785b9-ef0b-47cd-b7ca-212067990df2</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:42:44 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:42:44.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iwz6zety/mulka.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iwz6zety/mulka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வரும் 18-ம் தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>16-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>பலத்த காற்றுடன் கூடிய கனமழை</h2><p><strong>17-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>18-08-2026:</strong> செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><h2>கனமழை</h2><p><strong>19-08-2026:</strong> நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>20-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>21-08-2026 மற்றும் 22-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>16-08-2026 முதல் 20-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>16-08-2026 முதல் 20-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (16-08-2026) மற்றும் நாளை (17-08-2026)</strong>: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>16-08-2026 முதல் 20-08-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>16-08-2026 மற்றும் 17-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>18-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>19-08-2026 20-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>அரபிக்கடல் பகுதிகள் :</h2><p><strong>16-08-2026 முதல் 20-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி: பொருட்காட்சியில் ‘டிராகன் ரெயில்’ தடம்புரண்டு விபத்து - 7 பேர் காயம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-dragon-rail-derails-at-exhibition-7-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-dragon-rail-derails-at-exhibition-7-injured#comments</comments><guid isPermaLink="false">cddf73ba-e1f9-47f7-b27a-2fc62ac7915a</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:42:10 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:42:10.399Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/7w9hlce8/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/7w9hlce8/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாவுபலி பொருட்காட்சி கடந்த 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகிறார்கள். </p><p>இந்த நிலையில் நேற்று சுதந்திர தின விடுமுறையையொட்டி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பொருட்காட்சியை காண வந்திருந்தனர். அவர்கள் வாவுபலி திடலில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினங்களில் ஏறி உற்சாகமாக பொழுதை களித்துக் கொண்டிருந்தனர். 10 அடி உயரத்தில் 6 பெட்டிகள் கொண்ட டிராகன் ரெயிலில் பொதுமக்கள் ஏறி உற்சமாக பயணம் செய்தனர். </p> <p>ஒரு பெட்டியில் 3 முதல் 4 பேர் வரை அமர்ந்திருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 பெட்டி கள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு கீழே சரிந்து விழுந்தன. அதில் பய ணம் செய்த 4 குழந்தைகள் உள்பட 7 பேர் கீழே விழுந்து காயம் அடைந்த னர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் பொருட்காட்சி மூடப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்து உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/financial-assistance-of-30-lakh-for-the-family-of-the-police-officer-who-collapsed-and-died-during-the-independence-day-celebrations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/financial-assistance-of-30-lakh-for-the-family-of-the-police-officer-who-collapsed-and-died-during-the-independence-day-celebrations#comments</comments><guid isPermaLink="false">9c29010d-ad46-453e-843e-bf09f8ac9e18</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:27:31 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:27:31.780Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,போலீஸ்,சுதந்திர தினம்,Independence Day,சுதந்திர தின விழா,Independence Day Celebration,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/gnkfs3x6/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/gnkfs3x6/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் தர்மராஜ் (வயது 56) நேற்று (15.08.2026) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது திடீரென மயங்கி விழுந்து சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.</p><p>முதல்நிலைக் காவலர் தர்மராஜின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தர்மராஜை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dead-fish-found-floating-in-the-ennore-kosasthalai-river-inquiry-needed-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dead-fish-found-floating-in-the-ennore-kosasthalai-river-inquiry-needed-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">9c0288cd-ce8b-4bf6-8553-80d2e8ed76db</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:12:12 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:12:12.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Kosasthalai river,கொசஸ்தலை ஆறு</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/a2rvjccl/15.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/a2rvjccl/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>“எண்ணூர் கழிமுகம் பகுதியில்  கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து கிடப்பது குறித்து </p><p>விசாரணை; மீனவர்களுக்கு இழப்பீடு தேவை!</p><p>சென்னையை அடுத்த எண்ணூர் அருகே கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.  இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.</p><p>அப்பகுதியில் செயல்பட்டு வரும் அனல் மின்நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் வேதிக்கழிவுகள் கடலில் கலக்கவிடப்பட்டது தான் இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கழிவுகளை வெளியேற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகளும், அதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளின் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை.</p><p>கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கும் நிகழ்வுகள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளன. ஆனாலும், இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க அரசும், அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை  மன்னிக்க முடியாது.  இதே பகுதியில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில்  செயல்பட்டு வந்த  கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் வடமாநில  தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகாவது சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விழித்துக் கொண்டிருந்தால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டிருக்காது.</p><p>எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரங்களில் முதன்மையானது  கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடிப்பது ஆகும். மீன்கள் செத்து மிதப்பதால் அடுத்த சில வாரங்களுக்கு அந்தப் பகுதியில் மீன் பிடிப்பது சாத்தியமல்ல. இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். </p><p>கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதப்பது குறித்து  விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.  இதற்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து தண்டத்  தொகை வசூலித்து மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.  ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றி அப்பகுதியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-harassing-a-young-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-harassing-a-young-woman#comments</comments><guid isPermaLink="false">a2f6614f-2192-4c95-87d4-f752e6777ce9</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:07:13 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:07:13.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,Love,காதல் தொல்லை</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/x8n48v1r/13.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/x8n48v1r/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர், </p><p>திருப்பத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும், திருப்பத்தூரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் 2 ஆண்டுகளாக காதலித்தனர். </p><p>இளம்பெண் திடீரென விக்னேசை பிடிக்கவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் இளம் பெண்ணை மிரட்டி உள்ளார். மேலும் காதல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை நேற்று கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை: குடும்பத் தகராறில் மாமனாருக்கு அரிவாள் வெட்டு - மெடிக்கல் கடைக்காரர் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-medical-shop-owner-hacks-father-in-law-with-a-sickle-following-a-family-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-medical-shop-owner-hacks-father-in-law-with-a-sickle-following-a-family-dispute#comments</comments><guid isPermaLink="false">546287ca-65ce-49e0-a58b-0eb67fd63c1a</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:02:31 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:02:31.571Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ceusya5q/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ceusya5q/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை மாவட்டம் ஊசாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். முருகனுக்கும், அவரது மாமனார் பரசுராமனுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்த நிலையில், ஊசாம்பாடி அருகே உள்ள திருவண்ணாமலை-வேலூர் நெடுஞ்சாலையில் முருகன் பட்டப்பகலில் தனது மாமனார் பரசுராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பரசுராமனை, அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரசுராமன், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம், பரசுராமனை வெட்டிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோட முயன்ற முருகனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டதால் சர்ச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversy-arises-after-an-official-implicated-in-a-bribery-case-is-awarded-a-certificate-of-merit-at-the-independence-day-celebration</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversy-arises-after-an-official-implicated-in-a-bribery-case-is-awarded-a-certificate-of-merit-at-the-independence-day-celebration#comments</comments><guid isPermaLink="false">9f5f2173-06a6-4ea1-89d4-2b68aa31f69f</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:58:49 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:58:49.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தின விழா,லஞ்ச வழக்கு,நற்சான்றிதழ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/n4z6r70k/official.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/n4z6r70k/official.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த ஜூலை 3-ந்தேதி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.3.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஜிபே கணக்கை ஆய்வு செய்தபோது. கடந்த 3 ஆண்டுகளில் ஜிபே மூலம் ரூ.25 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. </p> <p>இதற்கு முறையான கணக்கு தெரிவிக்காததால் அவர் மீது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக தெரிகிறது. இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரு மாதம் ஆனநிலையில் நேற்று நடந்த சுதந்திரதின விழாவில் ராமநாதபுரம் நகராட்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.</p> <h2>திரும்பப் பெறப்பட்டது</h2><p>இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், "நகராட்சி ஆய்வாளர் கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தது தெரிய வந்தவுடன் அந்த சான் றிதழ் திரும்ப பெறப்பட்டது” என கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக்கொலை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-shot-dead-by-karnataka-forest-department-communist-party-of-india-marxist-condemns-the-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-shot-dead-by-karnataka-forest-department-communist-party-of-india-marxist-condemns-the-incident#comments</comments><guid isPermaLink="false">09c3220d-1188-4412-aff8-4be936651eb3</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:45:23 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:45:23.986Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,CPIM</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/is2g81rc/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/is2g81rc/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.</p><p>தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தை கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>பட்டாசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு: தங்கம் தென்னரசு குற்றசாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-is-hitting-the-livelihoods-of-firecracker-workers-thangam-thennarasus-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-is-hitting-the-livelihoods-of-firecracker-workers-thangam-thennarasus-allegation#comments</comments><guid isPermaLink="false">0e6e799c-471d-491e-add3-5a0b11028652</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:42:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:42:18.801Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,தங்கம் தென்னரசு,Thangam thennarasu,பட்டாசு தொழிலாளர்கள்,firecracker workers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/97chdk1b/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/97chdk1b/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிவகாசியில் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தியும், தவெக அரசை கண்டித்தும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருச்சுழி எம்.எல்.ஏ.வான தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பட்டாசு தொழிலாளர்கள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.</p><p><strong>ஆர்ப்பாட்டத்தில் தங்கம் தென்னரசு பேசியதாவது:-</strong></p><p>தவெக அரசு பொறுப்பேற்று 3 மாதத்தில் சிவகாசி பட்டாசு தொழிலை அடியோடு நசுக்க முயற்சிக்கிறது. பட்டாசுத் தொழில், தீப்பெட்டி தொழில் முடங்கினால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்பதனை தவெக அரசு உணர வேண்டும். சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் கவனக்குறைவால் நடைபெறும் விபத்துக்களை காரணம் காட்டி, இந்தத் தொழிலையே முடக்க தவெக அரசு முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?.</p><p>சட்டவிரோதமாக, உரிமம் இல்லாமல் பட்டாசு தொழிற்சாலை நடத்தினால் அதன்மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், தீப ஒளி திருநாள் நெருங்கும் நேரத்தில் முறையான அனுமதி பெற்று நடக்கும் தொழிற்சாலைகளை முடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. பட்டாசு தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு தருவோம், பட்டாசு ஆலை உள்ள ஒவ்வொரு 10 கிலோமீட்டர் தூரத்திற்கும் நடுவே தீயணைப்பு நிலையம் அமைப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த தவெக, அது குறித்து நிதிநிலை அறிக்கையில் அறிவிக்காதது ஏன்?.</p><p>பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதராவாக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். சிவகாசியில் பட்டாசுக் கடை நடத்தி வரும் சிறு, குறு வியாபாரிகளின் கடையில் ஆய்வு என்ற பெயரில் சென்று ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு. திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கான நிதியை குறைப்பது மட்டுமல்லாமல், திமுக-வின் மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களையும் மாற்றி வருகிறீர்கள். வெற்றி என அனைத்து திட்டங்களுக்கும் பெயர் வைக்கும் தவெக அரசு, அது வெற்றி திட்டமாக இல்லை. வெற்றுத் திட்டமாகத் தான் உள்ளது.</p><p>மாற்றம் தருவோம் என கூறி ஆட்சிக்கு வந்த தவெக, பயிர்க்கடனை தள்ளுபடி செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த தவெக, நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான நிதியையே குறைத்துவிட்டது. ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்காக திமுக அரசு ஒதுக்கிய நிதியையும் தவெக அரசு பறித்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து மிதக்கும் மீன்கள் விசாரணை; மீனவர்களுக்கு இழப்பீடு தேவை:  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ennur-kosastalai-river-dead-fish-probe-compensation-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ennur-kosastalai-river-dead-fish-probe-compensation-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">b75ad0cd-5dcd-46bf-a1c2-f3ef03c2b9f6</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:40:33 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:40:33.994Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Ennore,எண்ணூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/al3bnqg5/lopar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/al3bnqg5/lopar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து மிதக்கும் மீன்கள் தொடர்பாக விசாரணை நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</p> <h2>டன் கணக்கில் மீன்கள்</h2><p>பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சென்னையை அடுத்த எண்ணூர் அருகே கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.  இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.</p><p>அப்பகுதியில் செயல்பட்டு வரும் அனல் மின்நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் வேதிக்கழிவுகள் கடலில் கலக்கவிடப்பட்டது தான் இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கழிவுகளை வெளியேற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகளும், அதனை தடுக்க தவறிய அதிகாரிகளின் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை.</p> <h2>வடமாநில  தொழிலாளர்கள்</h2><p>கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கும் நிகழ்வுகள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளன. ஆனாலும், இத்தகைய நிகழ்வுகளை தடுக்க அரசும், அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை  மன்னிக்க முடியாது.  இதே பகுதியில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில்  செயல்பட்டு வந்த கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் வடமாநில  தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகாவது சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விழித்துக்கொண்டிருந்தால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டிருக்காது.</p><p>எண்ணூர் பகுதியை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரங்களில் முதன்மையானது கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடிப்பது ஆகும். மீன்கள் செத்து மிதப்பதால் அடுத்த சில வாரங்களுக்கு அந்த பகுதியில் மீன் பிடிப்பது சாத்தியமல்ல. இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.</p> <h2>விசாரணை தேவை</h2><p>கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதப்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.  இதற்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து தண்டத்தொகை வசூலித்து மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.  ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றி அப்பகுதியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title> காவிரியில் தண்ணீர் வரவில்லை எனப் பேசியதால் கைது செய்தனர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-arrested-me-for-speaking-about-the-lack-of-water-inflow-in-the-cauvery-udhayanidhi-stalins-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-arrested-me-for-speaking-about-the-lack-of-water-inflow-in-the-cauvery-udhayanidhi-stalins-remarks#comments</comments><guid isPermaLink="false">1ad03e5f-dccb-461a-b891-29291e93087b</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:15:41 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:15:41.988Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/yzkhc85n/udhayandhi-stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/yzkhc85n/udhayandhi-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத முடிவு வந்தது. நின்றால் கைது, நடந்தால் கைது என டைம் டேபிள் போட்டு கைது செய்கிறார்கள்.தமிழ்நாடு மட்டுமில்லை. ஆட்சியில் இருக்கும் சர்க்கஸ் கூட்டமே எதிர்பார்க்காத தேர்தல் முடிவு வந்துள்ளது. என்னை கைது செய்து தஞ்சை அழைத்துச் சென்றபோது, டிரிப் செல்வது போல ஜாலியாக சென்றோம். டம்மி முதல் அமைச்சார் என்று கூறியதற்காக கைது செய்ய வந்திருக்கிறார்களோ என நினைத்தேன். </p><p>காவிரியில் தண்ணீர் வரவில்லை எனப் பேசியதால் கைது செய்தனர். காலை 10.30 மணி வரை கைது ஆகக்கூடாது என ஸ்டாலின் அப்போது என்னிடம் கூறினார். மின்னல் வேகத்தில் திமுக வழக்கறிஞர்கள் சட்டப் போராட்டம் நடத்தினர். என்னை போலீசார் கைது செய்ய வந்தபோது நான் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். கைது செய்து மிரட்டிப் பார்க்கிறது தவெக அரசு.தேர்தலுக்குப் பின் சோர்ந்து இருந்த திமுகவினர், என்னைக் கைது செய்ததால் மீண்டும் பழைய பாணிக்குத் திரும்பிவிட்டனர். சரியான நேரத்துக்குக் காபி, ஜூஸ் வழங்கினர்.</p> <p>யார் அமைச்சர்கள், யார் எம்.எல்.ஏ.க்கள் என்று நமது டம்மி முதல்வருக்கே தெரியவில்லை.  திமுகவின் வரலாறு தவெகவுக்குத் தெரியவில்லை. திமுக ஜென்சி அணியினரையும் போலீசார் மூலம் மிரட்டுகிறார்கள். திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனையும் கைது செய்து மிரட்டிப் பார்த்தார்கள். தட்டுத்தடுமாறி அதிகாரத்துக்கு வந்துள்ளது புதிய கோஷ்டி. என்னைக் கைது செய்துவிட்டு கைது செய்யும் எண்ணம் இல்லை என்று கோர்ட்டில் கூறியது தவெக அரசு.சட்டப்பேரவையில் அமைச்சர்களிடம் ஒரு கேள்வி கேட்டால் அமைச்சர்கள் ஒரு பதில் தருகிறார்கள்.</p><p>அமைச்சர்களுக்கு எந்தத் துறையை வகிக்கிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை. சீட்டுக்கட்டில் ஒன்று அல்லது இரண்டு ஜோக்கர்கள் இருப்பார்கள். ஆனால், தவெகவில் அனைத்துமே ஜோக்கர்கள்தான் உள்ளனர். நாம் எந்தவிதச் செலவும் செய்யாமல் ரோடு ஷோ செய்ய இந்த அரசு உதவியுள்ளது. திமுகவினர் இன்னும் கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேண்டும். இனி போகப் போக  அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பிரச்சினையில் மாட்டுவார்கள்” என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சிபிஐ விசாரணை தேவை: அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-area-anbumani-urges-for-a-cbi-inquiry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-area-anbumani-urges-for-a-cbi-inquiry#comments</comments><guid isPermaLink="false">77a6d602-8426-4d7d-a7ac-4b8c7707344f</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:59:40 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:59:40.349Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,சிபிஐ விசாரணை,CBI Inquire</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/j3kigcdh/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/j3kigcdh/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கொல்லப்பட்ட மூவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>கர்நாடக வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட  அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரும் முறையே அப்பகுதியில் உள்ள ஜகன்னாததொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மூவரும் எந்த வகையான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்களை சாக்யா பகுதி வன அலுவலகத்தைச்  சேர்ந்த  வனக்காவலர்கள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.  இந்தக் கொலைகளை மறைப்பதற்காக  அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வனத்துறை  கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>கொல்லப்பட்ட மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். சுமார்  100 ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அணை கட்டுவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது,  வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து  வாழ்வாதாரம் தேடி கர்நாடகம் மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மரியமங்கலம் பகுதியில் குடியேறியவர்கள் ஆவர்.</p><p>மரியமங்கலம் காட்டுப்பகுதியில் மான் வேட்டையாடியதற்கோ, இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததற்கோ எந்த சான்றுகளும் இல்லை. கொல்லப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படுவதிலும் உண்மையில்லை. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.</p><p>கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும்,  மாவட்ட பொறுப்பு அமைச்சருமான  புட்டரங்கா ஷெட்டி,  மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை  உறுப்பினர் மஞ்சுநாத்  ஆகியோர் அதிகாலை நேரத்தில் என்கவுன்டருக்கான தேவை ஏன் வந்தது?  என்று வினா எழுப்பியுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்களும் வனத்துறையினரின் செயலைக் கண்டித்துள்ளனர்.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வெளியாகி வருவதால் உண்மையைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக  முதலமைச்சர்  டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.</p><p>தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களை புனரமைக்கும் பணிகள் நாளை தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/restoration-work-on-lakes-and-ponds-in-tamil-nadu-begins-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/restoration-work-on-lakes-and-ponds-in-tamil-nadu-begins-tomorrow#comments</comments><guid isPermaLink="false">02c0a149-2e0b-4afe-bdc8-cdc0aeb9b3cc</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:52:50 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:52:50.260Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>lakes,ஏரிகள்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,ponds,குளங்கள்,ஊரக வளர்ச்சித் துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/bc5krdpm/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/bc5krdpm/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் சுமார் 22,051 சிறுபாசன ஏரிகள் மற்றும் 69,777 குளங்கள் மற்றும் ஊரணிகள் உள்ளன. சிறுபாசன ஏரிகள் ஊராட்சி ஒன்றியங்களின் உரிமையிலும் பராமரிப்பிலும் உள்ளன. குளங்கள், ஊரணிகள் கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்படுகின்றன. </p><p>இந்நீர்நிலைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மாநில நிதியில் செயல்படுத்தப்படும் சிறுபாசன ஏரிகள் புனரமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் புனரமைக்கப்பட்டு வருகின்றன. </p><p>இந்த நிலையில், மத்திய அரசின் VB - G RAMG திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரத்துக் கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, 10,185 கால்வாய்கள், 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகளை புனரமைக்கும் பணிகள் நாளை தொடங்குகின்றன. இதற்காக சென்னையை தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களுக்கு ரூ. 507.92 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ.116.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.32.69 கோடி, விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/jogu1pat/Untitled-1.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>நெல்லை: அகஸ்தியர் அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-bathing-in-agasthiyar-waterfall-is-allowed-from-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-bathing-in-agasthiyar-waterfall-is-allowed-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">411ce2cd-6f5a-4f98-ab03-533d91d1ad25</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:52:00 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:52:00.194Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,அகஸ்தியர் அருவி,Nellie,Agasthiya Falls</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/xsrqmzlx/12.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/xsrqmzlx/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>தாமிரபரணி ஆறு மலைகளுக்கு நடுவே தவழ்ந்து வரும் இடத்தில் அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவி நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். குற்றாலம், மணிமுத்தாறு போன்ற அருவிகள் இருந்தாலும் அங்கு மழை பெய்யும் காலத்தில் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால், பாபநாசம் காரையாறு அணையில் இருந்து சீராக திறந்து விடப்படும் தண்ணீரால், அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் 365 நாட்களும் தண்ணீர் விழும். </p><p>இந்நிலையில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வரும் 12-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோவிலுக்கு அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பொதுமக்களின் நலன் கருதி அகஸ்தியர் அருவிக்கு10 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது 10 நாள் தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனை தொடர்ந்து, நாளை முதல் சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>‘பெண்களை மதிப்பது பா.ஜ.க.வின் அகராதியிலேயே இல்லாத விஷயம்’ - நயினார் நாகேந்திரன் மீது பெ.சண்முகம் கடும் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/respecting-women-is-not-even-in-the-bjps-dictionary-p-shanmugam-severely-criticizes-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/respecting-women-is-not-even-in-the-bjps-dictionary-p-shanmugam-severely-criticizes-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">3fd450a7-6993-4216-8c17-0474fe14cc59</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:47:46 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:47:46.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பெ.சண்முகம்,P.Shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/oeavevde/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/oeavevde/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“நயினார் நாகேந்திரன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெண்களை மதிப்பது பா.ஜ.க.வின் அகராதியிலேயே இல்லாத விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும்.</p><p>பொது வாழ்வில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல் அவர் பேசியிருக்கிறார். நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை. தமிழ்நாடு அரசு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வாஜ்பாயின் தொலைநோக்கும் பார்வை என்றும் உயிரோடு இருக்கும்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vajpayees-visionary-outlook-will-always-endure-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vajpayees-visionary-outlook-will-always-endure-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">67b6bc35-1cf9-4899-adee-8cda074f57bd</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:38:26 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:38:26.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Vajpayee,வாஜ்பாய்</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/0u95em6o/10.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/0u95em6o/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”மக்கள் மனதில் என்றும் அழியாத தடம் பதித்த முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் நினைவு நாள் இன்று, அவரின் உயர்ந்த சிந்தனைகளையும், எளிமையான அணுகுமுறையையும், நாட்டின் வளர்ச்சிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம். </p><p>அரசியலில் வேறுபாடுகள் இருந்தாலும், தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை தனது செயலாலும் சொற்களாலும் உணர்த்திய மாபெரும் தலைவர். கவிதை நயம் கொண்ட பேச்சும், கண்ணியமான அரசியல் பண்பும், இந்தியாவின் எதிர்காலம் மீதான அவரது நம்பிக்கையும் தலைமுறைகளை கடந்து ஊக்குவிக்கின்றன. </p><p>காலம் கடந்தாலும், வாஜ்பாய்-ன் தேசப்பற்று, தொலைநோக்குப் பார்வை மற்றும் மக்கள் மீதான அக்கறை நம் நினைவுகளில் என்றும் உயிரோடு இருக்கும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/500-cubic-feet-of-water-per-second-released-into-the-lower-bhavani-canal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/500-cubic-feet-of-water-per-second-released-into-the-lower-bhavani-canal#comments</comments><guid isPermaLink="false">a0b1e968-f14c-497a-9cde-403191551537</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:27:46 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:27:46.880Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தண்ணீர் திறப்பு,water release,Bhavanisagar Dam,பவானிசாகர் அணை</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ys5li2xv/9.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ys5li2xv/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக் கம். தற்போது பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 60 அடிக்கு கீழ் இருப்பதாலும் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதாலும் தமிழக அரசு கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பை நேற்று மாலை வரை தெரிவிக்கவில்லை.</p><p>இந்த நிலையில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சார்பாக ஈரோடு அருகே உயிர் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தண்ணீர் திறப்பு</p><p>இந்த நிலையில் கலெக்டர் கந்தசாமி ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள் ளார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:-</p><p>நீர்வளத்துறையினர் அறிக்கையின்படி அணையில் இருந்து கீழ்பவானி பிர தான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர் மான கால்வாய் மதகுகளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்க ளுக்கு சிறப்பு நனைப்பிற்காக இன்று (அதாவது நேற்று) முதல் 15 நாட்க ளுக்கு தண்ணீர் திறக்கப்படும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.</p> ]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/crimes-against-women-have-increased-under-the-tvk-government-mp-kanimozhi-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/crimes-against-women-have-increased-under-the-tvk-government-mp-kanimozhi-alleges#comments</comments><guid isPermaLink="false">7962d96d-12ec-45a0-b9fd-a4d11a254a39</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:17:52 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:17:52.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,AIADMK,த.வெ.க.,Thoothukudi,தூத்துக்குடி,allegation,MP Kanimozhi,தி.மு.க.,அ.தி.மு.க.,கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2plthd96/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2plthd96/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தமிழகத்தில் </a>த.வெ.க. ஆட்சியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பெண்களுக்கு எதிரான குற்றங்கள்</a> தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அதிகரித்து</a> வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">குற்றம் சாட்டியுள்ளார்</a>. </p><p>தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">கனிமொழி எம்.பி.</a> அளித்த பேட்டி: </p><p>தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது, அவர்களை பாதுகாப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி மறுக்கப்படுகிறது. </p><h2>பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை</h2><p>பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இத்தகைய குற்றங்களைத் தடுக்க அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட கனிம வளம் தொடர்பான மசோதா, தமிழகத்தின் உரிமைகளையும் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாயையும் பெரிதும் பாதிக்கக்கூடியது.</p><h2>வரவேற்பு</h2><p>எந்தவித நாடாளுமன்ற விவாதமும் இன்றி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து த.வெ.க. அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்யாமல் மவுனம் சாதித்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை த,வெ.க. அரசு நீட்டித்துச் செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது.</p><h2>தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி என்பது த.வெ.க.வின் கனவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">தி.மு.க. </a>- <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.</a> கூட்டணி என்பது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">த.வெ.க.</a>வின் வெறும் கனவாக மட்டுமே இருக்க முடியும்; நிச்சயமாக அத்தகைய கூட்டணி அமைவதற்கு வாய்ப்பே இல்லை. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/surging-crowds-of-devotees-at-tiruchendur-7-hour-wait-for-darshan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/surging-crowds-of-devotees-at-tiruchendur-7-hour-wait-for-darshan#comments</comments><guid isPermaLink="false">0e2cc99a-3b12-49e9-815b-58b843e3b7fe</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:16:35 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:16:35.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruchendur Murugan Temple,திருச்செந்தூர் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/8m04irir/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/8m04irir/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. </p><p>சுதந்திர தின விடுமுறை மற்றும் வார விடுமுறை இணைந்து வருவதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர். பொது தரிசன பாதையில் நீண்ட வரிசையில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போல் முடி காணிக்கை செலுத்தவும், நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடவும் சுமார் 2 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். </p><p>பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் திருச்செந்தூர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் களைகட்டியுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருச்செந்தூர் நகர் பகுதிக்கு வந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதல் விவகாரம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-love-affair-woman-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-love-affair-woman-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">278d4327-eff3-4d80-8b97-1d42a6690dd2</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:00:05 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:00:05.259Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கள்ளக்காதல்,கிரைம் செய்திகள்,பெண்,fake love,Woman,Nilgiris,நீலகிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/25hh4jnu/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/25hh4jnu/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 48). இவர் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சுஜாதா(40) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவரது நண்பரான காம்பாய்கடை பகுதியை சேர்ந்த அச்சு (எ) அச்சுதானந்தன் என்பவருக்கும் சுஜாதாவிற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் அச்சுவின் மனைவி பரிமளா, சிவகுமாரை அழைத்து அவரது மனைவியை கண்டிக்குமாறும், தானும் தனது கணவரை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சுஜாதா தனது கணவரை செல்போனில் அழைத்து அவசரமாக வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.</p><p>உடனே கடையிலிருந்து வீட்டிற்கு சென்ற சிவகுமார் கதவைத் தட்டியும் திறக்காததால் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு சுஜாதா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.</p><p>அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சுஜாதா இறந்ததால் மனவேதனை அடைந்த அச்சுவும் விஷம் குடித்துள்ளார். அவருக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: சார்லபள்ளி-கோட்டயம் இடையே சிறப்பு ரெயில்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-between-charlapalli-and-kottayam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-between-charlapalli-and-kottayam#comments</comments><guid isPermaLink="false">cf861b20-70d7-4a90-bc53-7981e83bb913</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:54:03 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:54:03.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/717dolfq/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/717dolfq/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சார்ல பள்ளி-கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சார்லபள்ளி-கோட்டயம் (வண்டி எண்.07197) வாராந்திர சிறப்பு ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை (3 சேவைகள்) ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.15 மணிக்கு சார்லபள்ளியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமைகளில் மதியம் 12.25 மணிக்கு கோட்ட யத்தை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு திங்கட்கிழமைகளில் நள்ளிரவு 2.25 மணிக்கு வந்து 2.30 மணிக்கு புறப்படும். </p><p>கோட்டயம்-சார்ல பள்ளி (07198) வாராந்திர சிறப்பு ரெயில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை (3 சேவைகள்) திங்கட்கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் நள்ளி ரவு 12.30 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூ ருக்கு திங்கட்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு வந்து 11.55 மணிக்கு புறப்படும்.</p><p>மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொழிலாளியை டைல்ஸ் கல்லால் அடித்து கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-people-including-the-wife-arrested-for-beating-a-worker-to-death-with-a-tile</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-people-including-the-wife-arrested-for-beating-a-worker-to-death-with-a-tile#comments</comments><guid isPermaLink="false">564950c6-d3de-4d5a-a863-a1f34db86bab</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:49:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:49:24.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,murder,Worker,தொழிலாளி,attack,wife,மனைவி,3 arrested,3 பேர் கைது,stone,கல்லால் தாக்கி கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2o9r0nn8/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி கொலை, 3 பேர் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2o9r0nn8/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே மரக்கடைத் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">தொழிலாளி</a> கொடூரமான முறையில் டைல்ஸ் கற்களால் தாக்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். </p><h2>மரக்கடை தொழிலாளி</h2><p>தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜின் மகன் ஞானப்பிரகாசம் (வயது 47). இவர் மாப்பிள்ளையூரணியில் உள்ள ஒரு மரக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் அத்திமரப்பட்டியைச் சேர்ந்த கிளின்டன் என்பவரும் பணியாற்றி வந்தார்.</p><h2>டைல்ஸ் கல்லால் அடித்து கொலை</h2><p>கருத்து வேறுபாடு காரணமாக ஞானப்பிரகாசத்தைப் பிரிந்த அவரது மனைவி பாரதி, தனது 2 குழந்தைகளுடன் கூட்டாம்புளியில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று கூட்டாம்புளி வீட்டிற்குச் சென்ற ஞானப்பிரகாசம், மனைவி பாரதியிடம் தகராறு செய்துவிட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஞானப்பிரகாசத்தை மர்ம நபர்கள் டைல்ஸ் கற்களால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்தனர்.</p><h2>அதிர்ச்சி தகவல்</h2><p>இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய புதுக்கோட்டை போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.  ஞானப்பிரகாசத்தின் மனைவியான பாரதிக்கும், மரக்கடையில் ஞானப்பிரகாசத்துடன் வேலை பார்த்து வந்த கிளின்டனுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.</p><h2>மகள் திருமணத்திற்கு எதிர்ப்பு</h2><p>இதனால் கிளின்டனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க பாரதி முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு ஞானப்பிரகாசம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று இரவிலும் இதுதொடர்பாக ஞானப்பிரகாசத்திற்கும், பாரதிக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. </p><h2>மனைவி உள்பட 3 பேர் கைது</h2><p>பாரதியின் தூண்டுதலின் பேரில், கிளின்டன் தனது நண்பரான வினோத் என்பவருடன் இணைந்து ஞானப்பிரகாசத்தை டைல்ஸ் கல்லால் அடித்து, தலையில் தாக்கி கொலை செய்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, கொலைக்குக் காரணமான மனைவி பாரதி, மரக்கடை ஊழியர் கிளின்டன் மற்றும் அவரது நண்பர் வினோத் ஆகிய 3 பேரையும் புதுக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரனும், அன்புமணியும் எங்கே போனீர்கள்? - மாணிக்கம் தாகூர் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-anbumaniwhere-have-you-gone-manickam-tagore-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-anbumaniwhere-have-you-gone-manickam-tagore-asks#comments</comments><guid isPermaLink="false">ecc0fc08-e58b-4b07-9523-1c642eab13c5</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:27:49 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:27:49.052Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5dla6yh7/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5dla6yh7/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால், முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்தக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (நாளை) விசாரணைக்கு வரவுள்ள நிலையை உணர்ந்து, தனது நிலையைப் புரிந்துகொண்ட கர்நாடக அரசு தற்போது கபினியிலிருந்து முறைப்படி தண்ணீரைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.</p><p>இந்த மாதத் தொடக்கத்திலேயே கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என்று போராட்டங்களை முன்னெடுத்தனர்; தற்போது சட்டப்படி தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையிலும், அதைத் தடுத்து நிறுத்த அணை முற்றுகை நாடகங்களை அறிவித்துப் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமையைத் தடுத்து நிறுத்தத் துடிக்கும் பாஜகவின் இந்த வன்மமும் தமிழர்களுக்கு எதிரான துரோகமும் மன்னிக்க முடியாதது.</p><p>பாஜகவின் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது பழி போடுவதற்கு முன் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்; கர்நாடகத்தில் காங்கிரஸ் முதல்-மந்திரியோ இருந்தாலும் தவறு செய்தால் தமிழகத்தின் உரிமைக்காகத் தட்டிக்கேட்க நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. ஆனால், கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு எதிராகச் செய்யும் இந்த அப்பட்டமான துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் நயினார் நாகேந்திரன் எங்கே போனீர்கள்?. கூட்டணி கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எங்கே இருக்கிறார்?. ஏன் கூனிக் குறுகி மவுனம் காக்கிறீர்கள்?.</p><p>தமிழ்நாட்டைப் பற்றியும் நமது விவசாயிகளைப் பற்றியும் இவர்களுக்குக் கவலையே இல்லையா?. தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் உங்கள் கட்சியினரைக் கண்டிக்க வக்கில்லாமல் இங்கு வந்து அரசியல் நாடகம் நடத்துவதுதான் பாஜகவின் லட்சணமா?. பாஜகவின் இந்த நயவஞ்சகக் கொல்லைப்புற அரசியலும், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிவிட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-assaulting-a-young-woman-and-issuing-death-threats</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-assaulting-a-young-woman-and-issuing-death-threats#comments</comments><guid isPermaLink="false">38a2e470-9ca4-4f49-ab13-ba9ce0d1afc6</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:24:21 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:24:21.501Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Chennai,சென்னை,young woman,இளம்பெண்,Youth arrested,வாலிபர் கைது,கொலை மிரட்டல்,Death threats,assaulting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ci2r8n2m/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ci2r8n2m/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">இளம்பெண்</a>ணை தாக்கி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">கொலை மிரட்டல்</a> விடுத்த வாலிபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>இளம்பெண்ணுக்கு சமூகவலைதளம் மூலம் அறிமுகமான வாலிபர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> ஐ.சி.எப். பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">சமூக வலைதளம் </a>மூலம் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 20) என்பவருக்கு அறிமுகமாகியுள்ளார். 2 பேரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கணேஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்தப் பெண் அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>இளம்பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல்; வாலிபர் கைது</h2><p>இந்த நிலையில், அந்தப் பெண்ணை சந்தித்து பேச வேண்டும் என கணேஷ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்கு அந்த பெண் சென்றார். அங்கு கணேஷ், தன்னுடன் தொடர்ந்து பேசிப் பழக வேண்டும் எனக் கூறி அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசி, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-worth-3-crore-seized-at-chennai-airport-two-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-worth-3-crore-seized-at-chennai-airport-two-arrested#comments</comments><guid isPermaLink="false">ee1f4a98-2754-4a40-a0ac-210f5605dc9f</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:04:47 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:04:47.314Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,airport,Seizure,விமான நிலையம்,பறிமுதல்,2 arrested,2 பேர் கைது,gold smuggling,தங்கம் கடத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2zg6wzn0/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்க கட்டிகள் பறிமுதல், 2 பேர் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2zg6wzn0/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வந்த ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் சிக்கியது. இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">2 பேர் கைது </a>செய்யப்பட்டனர். </p><h2>தங்கம் கடத்தல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> மீனம்பாக்கம் சர்வதேச <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">விமான நிலையத்திற்கு</a> வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தங்கம் கடத்தி</a> வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். </p><p>அப்போது மியான்மர் நாட்டை சேர்ந்த இளம்பெண் மற்றும் 30 வயது வாலிபர் ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.</p><h2>ரூ.3 கோடி தங்கம் பறிமுதல், 2 பேர் கைது</h2><p>இதையடுத்து வாலிபரின் உடைமைகளை அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்தனர். பின்னர் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்திய தங்க கட்டிகள் சிக்கியது. </p><p>2 பேரிடமிருந்து மொத்தம் 1 கிலோ 967 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டிக்கெட் இன்றி பயணம்: திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நேற்று ஒரே நாளில் 408 பேரிடம் ரூ.7.38 லட்சம் வசூல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ticketless-travel-rs-738-lakh-collected-from-408-people-in-a-single-day-yesterday-in-the-trichy-railway-division</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ticketless-travel-rs-738-lakh-collected-from-408-people-in-a-single-day-yesterday-in-the-trichy-railway-division#comments</comments><guid isPermaLink="false">1178aeda-bc5a-4754-bc3e-4c06fa5fc0bd</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:48:10 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:48:10.892Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,railway station,டிக்கெட் பரிசோதனை,Ticket Examiner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/9y1eysgv/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/9y1eysgv/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டன. </p><p>அந்த வகையில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், டிக்கெட் இன்றி பயணித்த 408 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.7.38 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஒரே நாளில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-yercaud-for-the-holidays</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-yercaud-for-the-holidays#comments</comments><guid isPermaLink="false">afe05fa3-7b92-4e56-aaaf-4482acca183c</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:40:48 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:40:48.642Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,ஏற்காடு,Yercaud</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/oygjeuc3/8.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/oygjeuc3/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஏற்காடு,  </p><p>ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷன நிலை நிலவியது. இதனிடையே விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். அவர்கள் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏற்காடு ஏரி, லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட் மற்றும் பக்கோடா பாயிண்ட் போன்ற அனைத்து முக்கிய இடங்களை சுற்றி பார்த்தனர்.</p><p>இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட் டது. குறிப்பாக, ஏரிப்பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் படகு இல்லத்தில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>மேலும், தாவரவியல் பூங்கா மற்றும் குகை கோவில் போன்ற பகுதிகளி லும் இயற்கை அழகை ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அவர் கள் ஏற்காட்டின் சிறப்புகளான வீட்டு முறை தயாரிப்பு சாக்லேட்டுகள் காபி, மிளகு போன்ற பொருட்களை வாங்குவதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.</p><p>ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் ஹோம்ஸ்டேக்களில் பெரும்பாலான அறைகள் நிரம்பின. மேலும், கார், சுற்றுலா வாகனங்கள் சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தப் பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.</p>]]></content:encoded></item><item><title>மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய மந்திரியை சந்திக்க அமைச்சர் ஸ்ரீநாத் நாளை மறுநாள் டெல்லி பயணம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-arrest-issue-minister-srinath-to-travel-to-delhi-the-day-after-tomorrow-to-meet-the-union-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-arrest-issue-minister-srinath-to-travel-to-delhi-the-day-after-tomorrow-to-meet-the-union-minister#comments</comments><guid isPermaLink="false">29083676-c55d-4601-a0c5-2524f6d00d90</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:38:00.040Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,அமைச்சர் ஸ்ரீநாத்,Minister Srinath</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/lasvp20n/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/lasvp20n/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சிந்தாதிரிபேட்டையில் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நேற்று சுதந்திர தின விழாவையொட்டி நடைபெற்ற சமபந்தி விருந்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்றார். அவரிடம், இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல், உணர்வுப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேட்டிருப்பது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.</p><p>அதற்கு அமைச்சர் ஸ்ரீநாத் பதில் அளிக்கையில், "இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நான் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்கிறேன். அங்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும். மீனவர்கள் பிரச்சினையில் த.வெ.க. அரசு எடுக்கும் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை என்ன என்பதை செயலில் காட்டுவோம்" என்றார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-two-juveniles-arrested-for-stabbing-a-transgender-woman-and-snatching-her-mobile-phone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-two-juveniles-arrested-for-stabbing-a-transgender-woman-and-snatching-her-mobile-phone#comments</comments><guid isPermaLink="false">57fe384b-629b-4d8d-b57a-7f98419b4506</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:26:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:26:30.166Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>stabbing,கத்திக்குத்து,Thoothukudi,arrested,தூத்துக்குடி,செல்போன் பறிப்பு,transgender,திருநங்கை,mobile phone,சிறுவர்கள் கைது,snatching,minors</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/lt9ek2ey/2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 சிறுவர்கள் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/lt9ek2ey/2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே திருநங்கையைக் கத்தியால் குத்தி, அவரிடமிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">செல்போனைப் பறித்துச்</a> சென்ற 2 சிறுவர்களை போலீசார் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>திருநங்கையிடம் செல்போனை கேட்டு மிரட்டல்</h2><p>தூத்துக்குடி சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த திருநங்கை சித்ரா (வயது 47). இவர் புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று சித்ரா உணவகம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்த 2 சிறுவர்கள் அவரிடம் இருந்த செல்போனைக் கேட்டு மிரட்டியுள்ளனர். </p><h2>கத்திக்குத்து, செல்போன் பறிப்பு</h2><p>அதற்கு அவர் செல்போனைத் தர மறுத்துள்ளார். செல்போனைத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவின் வயிறு மற்றும் இடது முழங்கை ஆகிய இடங்களில் சரமாரியாகக் குத்தினர். பின்னர் அவரிடமிருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். </p><h2>மருத்துவ சிகிச்சை</h2><p>ரத்த வெள்ளத்தில் கிடந்த சித்ராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். </p><h2>2 சிறுவர்கள் கைது</h2><p>பறிமுதல் செய்யப்பட்ட சித்ராவின் செல்போன் டவர் சிக்னலை ஆய்வு செய்தபோது, அந்தச் சிறுவர்கள் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கே சென்ற புதியம்புத்தூர் போலீசார், தப்பியோடிய 2 சிறுவர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான 2 சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை: குற்றாலத்தில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-time-for-gas-cylinder-verification-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-time-for-gas-cylinder-verification-2#comments</comments><guid isPermaLink="false">b3f18c4d-653a-4f7f-9f2e-e9406959f711</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:14:45 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:14:45.026Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,குற்றாலம்,Courtallam,சுற்றூலா பயணிகள்</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/wqljkj34/6.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/wqljkj34/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகள், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.</p><p>முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.</p><p>இன்று விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி பழைய குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.</p><p>அருவிகளில் குளித்த சுற்றுலா பயணிகள் அருவிக்கரை பகுதியில் உள்ள கடைகளில் தேநீர், தின்பண்டங்களை வாங்கி ருசித்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-water-release-from-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-water-release-from-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">2054277d-bdd5-4f77-a272-f27d9bbc7abd</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:10:18.342Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/agvpxm8w/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/agvpxm8w/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகா, கேரளம் உள்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட் டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடியானது.</p><p>இதற்கிடையே மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து மீண்டும் குறைந்தது. நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 4 ஆயிரத்து 385 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 80.31 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 80.93 அடியாக உயர்ந்தது.</p><p>இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,385 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 80.93 அடியிலிருந்து 81.31 அடியாக அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 42.27 டிஎம்சியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலியில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-kg-of-ganja-seized-in-tirunelveli-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-kg-of-ganja-seized-in-tirunelveli-2-arrested#comments</comments><guid isPermaLink="false">e93bac65-5e29-4347-b88d-38b9370d44aa</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:39:34 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:39:34.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Tirunelveli,திருநெல்வேலி,arrested,patrol,ரோந்து பணி,2 பேர் கைது,கஞ்சா பறிமுதல்,Ganja seized</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/sys5w8p4/7-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 7 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/sys5w8p4/7-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் போலீசாரின் துரித நடவடிக்கையால் 7 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">2 பேர் கைது</a> செய்யப்பட்டுள்னர். </p><h2>கஞ்சா விற்பனை</h2><p>திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலடிப்பட்டி ரெயில்வே நிலையம் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம், டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அந்தோணிராஜ் (வயது 25) மற்றும் பாரதிகண்ணன்(23) ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 7 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. </p><p>மேலும் விசாரணையில், முக்கூடல் காவல் நிலைய கஞ்சா வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த மாஜி(எ) ராகுல் என்பவர் தற்போது ஒடிசா மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து தமிழகத்திற்கு கஞ்சா சப்ளை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரது தொலைபேசி எண்ணை நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்ததில், மேற்சொன்ன நபர்கள் அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. </p><h2>7 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது</h2><p>இதனையடுத்து மேற்சொன்ன நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் ஆலடிப்பட்டி ரெயில்வே நிலையம் அருகே 7 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேரும் கைது செய்யப்பட்டனர். </p><p>இதுகுறித்து கங்கைகொண்டான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>