<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 27 Jul 2026 21:22:50 +0000</lastBuildDate><item><title>சென்னை விமான நிலையத்தில் ஒரே மாதத்தில் 16 ஆயிரம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-handles-16000-tonnes-in-single-month-record</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-handles-16000-tonnes-in-single-month-record#comments</comments><guid isPermaLink="false">cb0ee37e-18ca-4855-9cfd-18f35a10613e</guid><pubDate>Mon, 27 Jul 2026 20:26:26 +0000</pubDate><atom:updated>2026-07-27T20:26:26.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Airport,சென்னை விமான நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/27fdwe97/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/27fdwe97/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சரக்கு போக்குவரத்து</h2><p>சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாளுக்கு நாள் சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சென்னை விமான நிலைய கார்கோ மூலம் தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், ஜவுளி வகைகள், எந்திர உதிரிபாகங்கள், தங்க நகைகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து தங்க கட்டிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.</p><h2>20 விமானங்கள்</h2><p>இதனால் சென்னை விமான நிலைய கார்கோ பகுதி 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தினமும் 15 முதல் 20-க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்கள் வந்து, சரக்குகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. சரக்கு கையாளும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக நவீன வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலைய கார்கோவில், கடந்த 2024-2025-ம் ஆண்டை விட 2025-2026-ம் ஆண்டில் 11.7 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் சரக்கு போக்குவரத்து வளர்ச்சி சராசரியாக 6.2 சதவீதமாக உள்ளது.</p><h2>16 ஆயிரம் டன்</h2><p>கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை விமான நிலைய கார்கோவில் ஒரே மாதத்தில் 16 ஆயிரம் டன் சரக்குகள் கையாளப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. சென்னை விமான நிலைய கார்கோ வரலாற்றில் ஒரே மாதத்தில் இந்த அளவு அதிக எடையுள்ள சரக்குகளை கையாண்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், சரக்குகளை கையாளுவதற்கு கூடுதல் இடவசதி தேவை ஏற்பட்டுள்ளது.</p><h2>5-வது சேட்டிலைட் முனையம்</h2><p>இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 5-வது சேட்டிலைட் முனையம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த 5-வது புதிய சேட்டிலைட் முனையம், தற்போதுள்ள 4-வது முனையத்தின் தெற்கு பகுதியில், பல்லாவரம் திசையில் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையத்தின் 2-ம் கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும், 5-வது சேட்டிலைட் முனையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருமணமான 5 மாதங்களில் புதுப்பெண் வெட்டிக்கொலை - குடும்பத்தகராறில் கணவர் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/newlywed-bride-hacked-to-death-in-5-months-of-marriage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/newlywed-bride-hacked-to-death-in-5-months-of-marriage#comments</comments><guid isPermaLink="false">271f90c5-ce97-4187-b109-7f083fc77bde</guid><pubDate>Mon, 27 Jul 2026 20:02:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T20:02:59.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,murder,கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/cz4tc6vy/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/cz4tc6vy/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மங்கம்மாள் சாலை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி வீரமணிகண்டன் (33 வயது). இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலாளி. இவரது மனைவி அன்னலட்சுமி (23 வயது). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.</p><p>திருமணமான முதல் வாரத்தில் இருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அன்னலட்சுமி தென்காசி அனைத்து மகளிர் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரை வழங்கியும் பிரச்சினை தீரவில்லை.</p><p>இந்த நிலையில், நேற்று காலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சக்தி வீரமணிகண்டன், அரிவாளால் அன்னலட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில் உடலில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>இதையடுத்து தப்பியோடிய சக்தி வீரமணிகண்டன் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அன்னலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வாசீஸ்வரர் கோவில் புனிதத்தைக் கெடுக்கும் சமூக விரோதிகள்: அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaseeswarar-temple-desecration-anti-social-elements</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaseeswarar-temple-desecration-anti-social-elements#comments</comments><guid isPermaLink="false">5930444d-ad2e-4645-879e-6d0c87a452a0</guid><pubDate>Mon, 27 Jul 2026 18:29:09 +0000</pubDate><atom:updated>2026-07-27T18:29:09.596Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Thiruvallur,திருவள்ளூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/cij2b6ve/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/cij2b6ve/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் அமைந்துள்ள 1,800 ஆண்டுகள் பழமையான வாசீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் அருகே, மர்ம நபர்கள் தொடர்ந்து மாட்டிறைச்சிக் கழிவுகளைக் கொட்டி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாடல் பெற்ற இப்புனிதத்தலத்தில், திட்டமிட்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் அரங்கேறி வரும் வேளையில், விஜய்யின் அரசும் அதன் இந்து சமய அறநிலையத்துறையும் இதனைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.</p><p>கோவிலின் சுற்றுச்சுவர் அருகே கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளைத் தெருநாய்கள் கோவில் வளாகத்திற்குள் கவ்விக்கொண்டு வருவதால், பிரகாரத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்குச் சொந்தமான 2.15 ஏக்கர் நிலத்தின் சுற்றுச் சுவருக்குள்ளேயே மாட்டிறைச்சிக் கழிவுகள் வீசப்பட்டு, கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p>எனவே கோவிலின் புனிதத்தைக் காக்கத் தவறிய விஜய்யின் அரசு, உடனடியாகத் தனது அலட்சியப் போக்கைக் கைவிட்டு, இச்செயலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வளாகத்தையும் அதற்குச் சொந்தமான இடங்களையும் தூய்மைப்படுத்தி, தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>15 லட்சம் பணம் கொடுத்தால் அரசு வழக்கறிஞர் பணியா? இது தான் ஊழலற்ற ஆட்சியின் லட்சணமா? - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-laksham-panam-koduthal-arasu-vazhakkarignar-paniya-ithu-than-oozhalatra-aatchiyin-latchanama-tdtv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-laksham-panam-koduthal-arasu-vazhakkarignar-paniya-ithu-than-oozhalatra-aatchiyin-latchanama-tdtv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">895f902e-49da-4ee3-9fad-5eb8d5f75e73</guid><pubDate>Mon, 27 Jul 2026 17:24:56 +0000</pubDate><atom:updated>2026-07-27T17:24:56.508Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,லஞ்சம்,Bribery,ஊழல்,அரசு வழக்கறிஞர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/mn55atyd/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/mn55atyd/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் வழங்கப்படும் என கூறும் தொலைபேசி உரையாடல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.</p><p>ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமனம், மூத்த அமைச்சர் ஒருவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் என அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தொடர் புகாரில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரும் சிக்கியிருக்கிறார்.</p><p>யாராவது லஞ்சம் கேட்டால் “விஜய் ஆட்சி என்றும், கொடுக்க முடியாது எனவும் துணிச்சலுடன் சொல்லுங்கள்” என பொதுமக்கள் மத்தியில் முழங்கிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தற்போது தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக எழுந்திருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? முதல்-அமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? தவெக நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா?</p><p>தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து நடக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனம், தவெக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சமாக பணம் கொடுத்தாலே நடக்கும் என்ற நிலை உருவாகியிருப்பது, சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதான பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒட்டுமொத்தாக சீர்குலைக்கும் செயலாகும்.</p><p>எனவே, நீதித்துறையுடன் நேரடி தொடர்புடைய, முக்கிய பொறுப்புகளில் ஒன்றான அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்திருக்கும் லஞ்சப் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்திடுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என  முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>6 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possibility-till-1-am-in-6-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possibility-till-1-am-in-6-districts#comments</comments><guid isPermaLink="false">c02c688c-3b9d-4eec-a366-9c4c8cfd27df</guid><pubDate>Mon, 27 Jul 2026 17:08:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T17:08:59.255Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/pvg4jgcm/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/pvg4jgcm/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின், ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணி வரை மழை வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை துரத்திய வளர்ப்பு நாய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dog-chases-bear-in-residential-area-of-nilgiris</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dog-chases-bear-in-residential-area-of-nilgiris#comments</comments><guid isPermaLink="false">ab180410-8d0b-4569-8e7f-589b901e0c28</guid><pubDate>Mon, 27 Jul 2026 17:02:55 +0000</pubDate><atom:updated>2026-07-27T17:02:55.893Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,கரடி,bear,வளர்ப்பு நாய்,pet dog,தேயிலை தோட்டம்,Tea Estate</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0j9i0849/bear.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரடி, நாய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0j9i0849/bear.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p> நீலகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை, வளர்ப்பு நாய் ஒன்று உயிரை பணயம் வைத்து வீரத்துடன் துரத்தியடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.</p> <h2>குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அடர்ந்த தேயிலை தோட்டங்களை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி ஒன்று, சாவகாசமாக இந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.</p> <h2>அலறிய மக்கள்... பாய்ந்த நாய்</h2><p>தெருவில் கரடி உலா வருவதை பார்த்த பொதுமக்கள், பயத்தில் அலறியடித்து கொண்டு தங்களது வீடுகளுக்குள் ஓடி உடனே கதவுகளை பூட்டிக்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டின் வாசலில் இருந்த வளர்ப்பு நாய், கரடியை பார்த்ததும் ஆக்ரோஷமாக குரைக்க தொடங்கியது. கரடி பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும், நாய் சற்றும் அஞ்சவில்லை. கரடியை நோக்கி நேருக்கு நேர் சீறியது. </p><h2>ஓட்டம் பிடித்த கரடி</h2><p>நாயின் சத்தத்தை கேட்டு தைரியம் வரப்பெற்ற பொதுமக்களும் சத்தம்போட்டு கரடியை விரட்ட முயன்றனர். வளர்ப்பு நாயின் அசாத்திய வீரத்தாலும், மக்களின் சத்தத்தாலும் நிலைகுலைந்த கரடி, அங்கிருந்து தேயிலை தோட்டத்தின் வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது.</p> <h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>நாய் கரடியை விரட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. "நல்லவேளை, அந்த நாய் இருந்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது" என நிம்மதி பெருமூச்சு விடும் அப்பகுதி மக்கள், "சமீபகாலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;மேகதாது அணைக்கு தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை என்பது ஏற்க முடியாது&quot; - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-unacceptable-that-the-meghadadu-dam-does-not-require-the-approval-of-the-tamil-nadu-government-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-unacceptable-that-the-meghadadu-dam-does-not-require-the-approval-of-the-tamil-nadu-government-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">26f23378-15ee-4957-b381-60a42be6649e</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:17:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:17:04.405Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சென்னை,Meghadadu Dam,மேகதாது அணை,தமிழ்நாடு காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர் எம்.பி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fhj5x9by/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fhj5x9by/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> எம்.பி. எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு "தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை" என பாராளுமன்றத்தில் ஜல் சக்தி துறை இணை மந்திரி ராஜ்பூஷன் அளித்திருக்கும் எழுத்துப்பூர்வமான பதில் மிகவும் ஆபத்தானது; முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><h2>பாராளுமன்றம்</h2><p>தமிழ்நாட்டிற்கும் நமது விவசாயிகளுக்கும் எதிராகத்தான் மோடி அரசு எப்போதும் செயல்படுகிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம். மந்திரின் இந்தப் பதில் மூலம் பாஜகவின் தமிழ்நாட்டு எதிரான மக்கள் விரோதப்போக்கு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p>தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளையும், நமது விவசாயிகளின் நலனையும் காக்க இந்த முடிவை எதிர்த்து பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதியாகக் குரல் எழுப்பும்.</p><p>இவ்வாறு  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்-அமைச்சர் அலுவலகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-announcement#comments</comments><guid isPermaLink="false">7197aba6-9ed7-4da9-9313-a0c2a19f697d</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:54:56 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:54:56.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,Chennai,சென்னை,மெரினா கடற்கரை,சென்னை மெரினா,Chennai Merina,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,நாமக்கல் கவிஞர் மாளிகை,முதல்-அமைச்சர் அலுவலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/zmqsne6e/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/zmqsne6e/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு, இட நெருக்கடியின் காரணமாகவும் முதல்-அமைச்சரின் அலுவலகம், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அறை மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாலும், நிர்வாகக் காரணங்களினாலும் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன :-</p><ul><li><p>நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தற்போது உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அலுவகத்தின் பிரிவுகள், வரவு செலவு பிரிவு, பொருட்காட்சி அனுமதிப்பிரிவு, முதல்-அமைச்சசரின் சமூக ஊடகப்பிரிவு (CMO Social Media), செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இயக்குநர் திரு. அருள், தமிழ் வளர்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு, செய்தித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையைச் சார்ந்த திருவாளர்கள். பாஸ்கரன், ரவிச்சந்திரன், அ. வே. சுரேந்திரன் மற்றும் த. கலைச் செல்வன் ஆகிய அலுவலர்களின் அலுவலகம் மற்றும் எழுதுப்பொருட்கள் அறை அனைத்தும் உடனடியாக, தரைத்தளம் (500 சதுர அடி), இரண்டாம் தளம் (400 சதுர அடி) மற்றும் மூன்றாம் தளம் (2000 சதுர அடி) ஆகியவற்றில் காலியாக உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன.</p></li><li><p>செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் காலியாக உள்ள இடத்தினை ஆய்வு செய்து, மேலே கூறப்பட்ட அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு தேவையான இடத்தினை ஒதுக்கீடு செய்து, அவர்கள் பணிபுரிய தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்.</p></li><li><p>நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தற்போது செயல்பட்டு வரும் சுற்றுலா துறையின் எழுதுப்பொருட்கள் அறையினை அத்துறை அமைந்துள்ள 9-வது தளத்திற்கு மாற்றம் செய்து கொள்ளுமாறு அத்துறைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p></li><li><p>கோட்டப் பொறியாளர் (கட்டடங்கள்), பொதுப் பணித்துறையை, மேலே மாற்றம் செய்யப்பட உள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு தேவையான மேஜை, நாற்காலி, சோபா, கணிணி, கோப்புகள் மற்றும் தொடர்புடைய அனைத்தையும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திலிருந்து சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்துதருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்.</p></li></ul><p>2. முதல்-அமைச்சரின் அலுவலகம் 10-வது தளத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதால் தற்போது அத்தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் அறைகள் அனைத்தும் (பின்வரும் பட்டியலில்) அதற்கு எதிரே தெரிவிக்கப்பட்டுள்ள இடத்திற்கு தற்காலிகமாக மாற்றம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செய்யப்படுகின்றன </a>:-</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/gi7vdp8q/Untitled-13.jpg" /></figure><p>3. நாமக்கல் கவிஞர் மாளிகையில் 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் அமைந்துள்ள கூட்ட அரங்குகள் உடனடியாக பொது (கட்டடங்கள்)த்துறைக்கு ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். மேலும் கூட்ட அரங்கில் விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பின் அதை எடுத்துப் பாதுகாக்குமாறு சம்மந்தப்பட்ட துறையின் அலுவலக நடைமுறைப் பிரிவு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>4. உதவி செயற்பொறியாளர் (கட்டடம்), பொதுப்பணித் துறை மேலே மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் அனைத்தையும் இட மாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.</p><p>5. உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அறைகளிலும் அலுவலர்கள் அனைவரும் உடனடியாக பணிபுரிய ஏதுவாக மின்சார வசதிகள் சம்மந்தமாக அனைத்து பணிகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.</p><p>6. பொதுத்துறையின் அலுவலக நடைமுறை-II பிரிவு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு இணைய வசதி (Internet) செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>7. பொதுத்துறையின் தொலைபேசிகள் பிரிவு, தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு ஏற்கெனவே உள்ளவாறு தொலைபேசி வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இம்மாற்றங்கள் </a>அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஏரிகளில் அதிநவீன சென்சார் தொழில்நுட்பம்: நீர்வளத்துறையின் புதிய திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/state-of-the-art-sensor-technology-in-chennai-lakes-water-resources-departments-new-project</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/state-of-the-art-sensor-technology-in-chennai-lakes-water-resources-departments-new-project#comments</comments><guid isPermaLink="false">9e525323-4a9f-4a7b-a988-98b2a957045c</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:51:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:51:03.689Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,திருவள்ளூர்,ஏரி,Water Resources Department,நீர்வளத்துறை,New Project,சென்சார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/whkyn99l/252.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/whkyn99l/252.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் மேற்பார்வை, கட்டுப்பாடு மற்றும் தரவு சேகரிப்பு உள்ளிட்டவற்றிற்கு தொழில்நுட்பம் சார்ந்த தானியக்க நீர்த்தேக்க செயல்பாடுகளை தொலை தூர இடங்களில் இருந்து அப்போதைய தரவை சேகரித்து செயல்பாட்டு நிலைகளைக் கட்டுப்படுத்தும் சென்சார் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.</p><p>இதற்கான மென்பொருள் பொருத்தமட்டு சோதனை அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன. ஏரிகளில் நீர் இருப்பு மற்றும் மதகுகளின் நிலை, வெள்ளத்தின் போது அவசரக்கால நீர் வெளியேற்றம், நீரைத் தேக்கி வைத்தல் மற்றும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துதல் போன்ற முடிவுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது நிர்வாகத்துறை அலுவலகத்தில் இருந்தே தானியக்க முறையில் செயல்படுத்த முடியும். </p><h2>சென்சார் தொழில் நுட்பம்</h2><p>இதுகுறித்து நீர்வளத்துறையின் அதிகாரி ஒருவர் கூறும்போது, நீர்த்தேக்கத்தில் உள்ள உபரிநீர் வெளியேற்றும் இணைப்பு கால்வாய் மதகு, பேபி கால்வாய் மதகு என மொத்தம் 22 மதகுகளும். செம்பரம்பாக்கம் ஏரியில் 24 மதகுகளும், புழல் நீர்த்தேக்கத்தில் மதகுகளும் உள்ளன. </p><p>தற்போது பொருத்தப்பட்டு உள்ள சென்சார் தொழில் நுட்பம் மூலம் சரியான நேரத்தில் தகவல் பெறுதல், வெளிப்படையான நீர் விநியோகம், அணைக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்தல், வெள்ளத்தை கண்காணித்தல் மற்றும் வெளியேற்றுதல், பல்வேறு நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு அளவுகளைச் சீர மைத்தல் ஆகியவை செய்ய முடியும். பூண்டி ஏரியில் முதன்மைக் கட்டுப்பாட்டு மையமும் அதனுடன் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளிலும் இணைக்கப்பட்டு உள்ளது. </p><p>இந்த கட்டுப்பாட்டு அறைகள் சேப்பாக்கத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">நீர்வளத்துறை</a> அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். இத்திட்டத்தின் மொத்தச்செலவு ரூ.32 கோடியாகும். சென்னை குடிநீர் வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து நீர்வளத்துறை இந்தத் தானியக்க தொழில்நுட்பத்தை நிறுவி உள்ளது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>
கொட்டும் மழையில் காத்திருந்த மக்கள்... ஆய்வு பணியை முடித்து குடையுடன் வந்து கையசைத்த முதல்-அமைச்சர் விஜய்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-waiting-in-heavy-rain-cm-vijay-waves-with-umbrella-after-inspection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-waiting-in-heavy-rain-cm-vijay-waves-with-umbrella-after-inspection#comments</comments><guid isPermaLink="false">d54d1e60-3220-4db8-9c68-296dc0f3cfe4</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:44:19 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:44:19.636Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,முதல்-அமைச்சர்,TN,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/vtbewrwe/tncoi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/vtbewrwe/tncoi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை, கோயம்பேட்டில் உள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (Tertiary Treatment Reverse Osmosis - TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், 438 கழிவு நீரேற்று நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் கழிவுநீர் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சுழற்சி நீர் பொருளாதாரத்தை (Circular Water Economy) நடைமுறைப்படுத்தவும், கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் நாளொன்றுக்கு தலா 45 மில்லியன் லிட்டர் (MLD) திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.</p>  <h2>90 மில்லியன் லிட்டர்</h2><p>இந்த இரண்டு நிலையங்களும் நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரித்து வருகின்றன.  இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மேலும் உயர்தரத்தில் சுத்திகரித்து, தொழிற்சாலைகளுக்கு தேவையான தரமான நீரை வழங்குவதாகும். இதன்மூலம் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரின் பயன்பாடு குறைக்கப்படுவதுடன், தொழிற்சாலைகளுக்கு நிலையான மாற்றுநீர் ஆதாரம் உருவாக்கப்படுவதோடு, சென்னை மாநகரின் நீண்டகால நீர் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உயர்தர மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் தொழிற்துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது.  இதன்மூலம், நிலத்தடி நீர்ப்பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமானத்துறை, ரெடிமிக்ஸ் கான்கிரீட் (RMC) மற்றும் கான்கிரீட் பிளாக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாடும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fg752sqn/tncoit.jpg" /></figure> <h2>நீர் பாதுகாப்பு</h2><p>இத்திட்டம் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. நன்னீர் வளங்கள் பாதுகாக்கப்படுவதோடு, கழிவுநீர் வெளியேற்றம் குறைக்கப்படுகிறது. நிலத்தடிநீர் மற்றும் இயற்கை நீர்நிலைகள் பாதுகாக்கப்படுவதுடன், சென்னை மாநகரின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனும் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகளுக்கு நம்பகமான மாற்றுநீர் ஆதாரம் கிடைப்பதால் தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதோடு, குடிநீர் தேவைகளுக்காக கூடுதல் நீர் கிடைப்பதால் பொதுமக்களின் நீர் பாதுகாப்பும் மேம்படுகிறது.</p><p>கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் செயல்படும் TTRO நிலையங்களின் மூலம் கழிவுநீரை மதிப்புமிக்க வளமாக மாற்றி, சுழற்சி நீர் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவதோடு, நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals) அடைவதற்கும் முக்கிய பங்காற்றி வருகிறது.</p>  <h2>கொட்டும் மழையில்</h2><p>இந்த ஆய்வின்போது, அரசு தலைமை கொறடா ரா.சபரிநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், இ.ஆ.ப., சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் உ. பர்வீஸ், தலைமை பொறியாளர்கள் ஏ.இராதாகிருஷ்ணன், கு.பா.வைதேகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இந்த நிகழ்ச்சியின்போது, கோயம்பேடு பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது.  கொட்டும் மழையிலும் முதல்-அமைச்சர் விஜய்யை காண்பதற்காக பாலத்திற்கு கீழேயும், சுற்றியுள்ள பகுதிகளிலும் மக்கள் காத்திருந்தனர்.  இதனால், கொட்டும் மழையிலும் காத்திருந்த மக்களை காண்பதற்காக, காரை விட்டு கீழே இறங்கி குடையுடன் வந்த முதல்-அமைச்சர் விஜய், அவர்களை நோக்கி கையசைத்து விட்டு சென்றார்.</p> ]]></content:encoded></item><item><title>நீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசு பணி வழங்கியதை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் - மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-withdraw-the-government-job-it-granted-in-compliance-with-the-court-verdict-m-veerapandian-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-withdraw-the-government-job-it-granted-in-compliance-with-the-court-verdict-m-veerapandian-insists#comments</comments><guid isPermaLink="false">d1264447-d0df-4d6d-8f92-4815158f5679</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:21:02 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:21:02.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Government job,ரத்து,வலியுறுத்தல்,அரசு பணி,அரசுப்பணி,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/r5n33yry/251.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/r5n33yry/251.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. </p><p>இவ்வாறு வேலை வழங்குவது கருணை அடிப்படையிலானது என்றாலும், இது சட்டத்திற்கு புறம்பானது மற்றும் தவறான முன்னுதாரணமாகும். எனவே, இது குறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி</a> உட்பட பல தரப்பினராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல் அரசு வேலை வழங்கியது. நீதிமன்றம் தற்போது அதற்கு தடைவிதித்துள்ளது.</p><h2>மேல் முறையீடு</h2><p>எனவே, நீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசு பணி வழங்கியதை தமிழ்நாடு அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.</p><p>அதே வேளையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தேவையான வேலைவாய்ப்பு ,மற்றும் பொருளாதார உதவிகளை தவெக தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று செய்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தவெக தலைமையை&nbsp;&nbsp;வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: 2 பேர் தீவிர சிகிச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murderous-attack-on-college-students-near-central-railway-station-2-in-intensive-care</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murderous-attack-on-college-students-near-central-railway-station-2-in-intensive-care#comments</comments><guid isPermaLink="false">2b164bd7-ff37-4df0-b61a-bd0749f317b9</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:03:32 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:03:32.129Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Central Railway Station,student,attack,போலீசார் விசாரணை,மாணவர்கள் மோதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/nlm8cgbo/250.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/nlm8cgbo/250.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் இன்று காலை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இறங்கி மெட்ரோ சுரங்கப்பாதை வழியாக புங்கா பூங்கா ரெயில் நிலையம் சென்று கொண்டிருந்தனர். </p><p>அப்போது 20 பேர் கொண்ட மாணவர் கும்பல் அவர்கள் இருவரையும் வழிமறித்து சரமாரியாக கத்தியால் தாக்கினார்கள். தலை, கழுத்து, உடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டு காயத்துடன் 2 மாணவர்களும் கீழே மயங்கி விழுந்தனர்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>இதைப் பார்த்த பயணிகள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ரத்தகாயங்களுடன் கிடந்த 2 மாணவர்களையும் பெரியமேடு போலீசார் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இதுகுறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர்கள் மோதலில் காயம் அடைந்த ஒரு மாணவரின் பெயர் நிதீஷ்குமார் (19) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மற்றொரு மாணவர் பெயர் ஹேமந்த் குமார் (17) முதலாம் ஆண்டு படித்து வருகிறார். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">மாணவர்கள் மோதலுக்கான</a> காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பணி ரத்து: நாளை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-job-cancellation-appeal-to-supreme-court-tomorrow-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-job-cancellation-appeal-to-supreme-court-tomorrow-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">4dd426cc-6c5b-4563-9f25-107255e4a351</guid><pubDate>Mon, 27 Jul 2026 14:34:37 +0000</pubDate><atom:updated>2026-07-27T14:34:37.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர் கூட்ட நெரிசல்,Supreme Court,சென்னை,Government job,ரத்து,High Court Madurai Branch,அரசுப்பணி,அமைச்சர் நிர்மல்குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0orxr8mo/249.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0orxr8mo/249.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி இருந்தனர். </p><p>இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவுகளை நேரில் வழங்கி இருந்தார்.</p><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கானது இன்று ஐகோர்ட் மதுரை கிளைக்கு விசாரணைக்கு வந்தது. </p><h2>மேல்முறையீடு</h2><p>இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ஆணையை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாதங்களை கேட்காமலேயே ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இதனால் நாளையே மேல்முறையீடு செய்யப்போவதாகவும் சட்டத்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">நிர்மல்குமார்</a> தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: தொழிலாளர் நலன் குறித்த பயிற்சி கருத்தரங்கை தொடங்கி வைத்த அமைச்சர் முகமது பர்வேஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-minister-mohammad-parvez-inaugurated-a-training-seminar-on-labor-welfare</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-minister-mohammad-parvez-inaugurated-a-training-seminar-on-labor-welfare#comments</comments><guid isPermaLink="false">22d3ed38-9dbb-49da-a4f9-b672a9810ff4</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:28:21 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:28:21.449Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,inaugurated,தொழிலாளர்,Labor Welfare Board,அமைச்சர் முகமது பர்வேஸ்,Minister Mohammad Parvez</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/7xww0ch4/248.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் முகமது பர்வேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/7xww0ch4/248.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>இன்று சென்னையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D">அமைச்சர் முகமது பர்வேஸ்</a> தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சார்பில், “சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்” குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.</p><h2>ஒரு நாள் பயிற்சி</h2><p>இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியபோது அமைச்சர், முதல்வர் சார்பாக மியாமோட்டோ மிச்சிகோ, பல்லவி மான்சிங், அரசு அலுவலர்கள் மற்றும் இப்பயிற்சியின் பங்கேற்பாளர்களை நான் உளமார வரவேற்கிறேன் என்றும், நான் இன்று தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் விளங்கும் ஒவ்வொரு தொழிலாளரின் குரலாக உங்கள் முன்னிலையில் நின்று, இந்த ஒரு நாள் பயிற்சியை துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், தமிழக முதல்-அமைச்சரின் தலைமையில், ஒவ்வொரு தொழிலாளரும் பாதுகாப்பாகவும், மதிப்புடன் நடத்தப்படுபவராகவும், முன்னேறும் வாய்ப்பை பெறுபவராகவும் இருக்கும் வெற்றி தமிழகத்தினை உருவாக்கிடும் நோக்கில் நாம் உறுதியாக செயல்பட்டு வருகிறோம். இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் மட்டுமல்லாமல், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">தொழிலாளர்</a> நலனிலும் நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழும் மாநிலமாக தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம் என்றும், மேலும் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களை உளமார வரவேற்கிறேன் என்றும் இன்று தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை உருவாக்கும் ஒவ்வொரு தொழிலாளரின் கண்ணியம் மற்றும் கடின உழைப்பின் குரலாக நிற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பேசினார்கள் .</p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் வீரராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் முனைவர் மா.வள்ளலார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் திரு. செ.ஆனந்த், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் மியாமோட்டோ மிச்சிக்கோ, தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பல்லவி மான்சிங், முதுநிலை நிகழ்ச்சி அலுவலர், திவ்யா வர்மா, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் செந்தில் குமாரி, இணை இயக்குநர்கள் சுப்ரமணியன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். </p><p>இந்நிகழ்ச்சியில், மனிதவள துறை வல்லுநர்கள், நலப்பணி அதிகாரிகள், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறிப்பாக மின்னணுவியல் உற்பத்தித் துறைகள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்தவர்கள் பங்குபெற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டிலேயே புதுச்சேரி சாராயம் விற்பனை - வெளியான வீடியோ </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/puducherry-liquor-sold-from-home-video-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/puducherry-liquor-sold-from-home-video-released#comments</comments><guid isPermaLink="false">d4000101-bf60-41b7-82bc-19349dc0b9f4</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:46:54 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:46:54.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,மயிலாடுதுறை,home,police enquiry,போலீசார் விசாரணை,சாராயம் விற்பனை</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/2ylsnn35/33.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ வீட்டிலேயே புதுச்சேரி சாராயம் விற்பனை]]></media:title><media:description type="html"><![CDATA[ மயிலாடுதுறையில் வீட்டிலேயே புதுச்சேரி சாராயம் விற்பனை செய்யப்பட்டது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/2ylsnn35/33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மயிலாடுதுறை மாவட்டம்</a> அருகே வீடுகளிலேயே புதுச்சேரி சாராயம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அதிரவைக்கும் வீடியோ ஆதாரங்கள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தடையின்றி நடக்கும் 24 மணி நேர விற்பனை</h2><p>மயிலாடுதுறை மாவட்டம், அன்னவாசல் பகுதியில் சட்டவிரோதமான மது மற்றும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சாராயம் விற்பனை </a>படுஜோராக நடைபெற்று வருகிறது. எவ்வித அச்சமும் இன்றி, 24 மணி நேரமும் தொடர்ச்சியாக வீடுகளிலேயே அந்த புதுச்சேரி சாராயம் விற்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் குடியிருப்பு பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படுவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><h2>வைரலாகும் வீடியோ - அதிரடி நடவடிக்கை கோரிக்கை</h2><p>வீடுகளில் சாராயம் விற்கப்படும் தெளிவான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டவிரோத கும்பல் மீது மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரும், மயிலாடுதுறை போலீசாரும் உடனடியாக தலையிட்டு கடுமையான கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள் கோரிக்கை</a> விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் பலி: முதல்-அமைச்சர் விஜய் நிவாரணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-killed-in-sivakasi-firecracker-factory-explosion-chief-minister-vijay-announces-relief</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-killed-in-sivakasi-firecracker-factory-explosion-chief-minister-vijay-announces-relief#comments</comments><guid isPermaLink="false">98f29b00-50c9-42ed-8ec9-5550e7a8bc2c</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:44:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:44:18.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,விருதுநகர்,Sivakasi,சிவகாசி,வெடி விபத்து,firecracker factory,Firecracker Factory Accident,சிவகாசி பட்டாசு ஆலை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0hjbdkun/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/0hjbdkun/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>4 பேர் உயிரிழப்பு</h2><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் நேற்று (26.07.2026) காலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ் (வயது 32), ராமச்சந்திரன் (வயது 40), இன்னாசிமுத்து (வயது 44) மற்றும் நாரணாபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 35) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.</p><h2>ரூ. 4 லட்சம் நிவாரணம்</h2><p>இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா நான்கு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><h2>நடவடிக்கை </h2><p>மேலும், முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசு ஆலைகள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நடத்தப்படுகின்றனவா </a>என்பதனை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக பொறியியல் சேர்க்கை: ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-engineering-admissions-important-notice-for-reserved-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-engineering-admissions-important-notice-for-reserved-students#comments</comments><guid isPermaLink="false">bb18f777-b591-4ab8-8f52-736aaeeed721</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:40:26 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:40:26.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,College,Notice,Engineering,பொறியியல் சேர்க்கை,முக்கிய அறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/wnb1c5rl/247.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பொறியியல் சேர்க்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/wnb1c5rl/247.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திரிப்பதாவது:-</p><p>தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2026 கால அட்டவணையில் கொடுக்கப்பட்டிருந்த படி சிறப்பு கலந்தாய்வு, அரசு பள்ளியில் பயின்ற மற்றும் பொது பிரிவினருக்கு 13.07.2026 முதல் 19.07.2026 வரை நடைபெற்றது. இதில் 950 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணாக்கர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.</p><p>அதை தொடர்ந்து முதல் சுற்று கலந்தாய்விற்கான விருப்பப்பட்டியல் உள்ளீடு செய்தல் 20.07.2026 முதல் 22.07.2026 வரை நடைபெற்றது. இதில் 32,250 மாணாக்கர்கள் தங்கள் விருப்ப கல்லூரி மற்றும் பாடங்களை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 28,550 பேருக்கு மாணாக்கர்களின் தரவரிசை, கல்லூரியில் உள்ள இடங்கள் மற்றும் விருப்ப பட்டியலின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><h2>மாணவர் சேர்க்கை</h2><p>மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டானண வெளியிடுவதற்கு முன்பாக 23.07.2026 அன்று ஒதுக்கீட்டானைகளை 11 அரசு பொறியியற் கல்லூரிகளில் இருந்து 33 பேராசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு தரவரிசை மற்றும் விருப்ப பட்டியலின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்று நேரடி சரிபார்ப்பு செய்யப்பட்டது. தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், தங்கள் விருப்பத் தேர்வில் குறிப்பிட்டுள்ள TFC (Tamil Nadu Facilitation Centre) மையத்திற்கும், இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரியிலும் நேரடியாகச் சென்று 26.07.2026 முதல் 30.07.2026 வரை அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை செலுத்தி சேர்க்கை பெறவேண்டும்.</p><p>மாணாக்கர்கள் தங்களது விருப்ப பட்டியலில் எத்தனை கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு விருப்பங்கள் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அதனை கையாளும் வகையில் திறன்மிகுந்த மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட மென்பொருள் வடிவமைத்து செயலாக்கப்பட்டுள்ளது.</p><p>மாணாக்கர்கள் சேர்க்கை பற்றிய விளக்கங்கள் அளிப்பதற்காக அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் சேர்க்கை மைய அலுவலர்களுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்குநர் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகம் விவேகானந்தா அரங்கில் 16.07.2026 அன்று கூட்டம் நடைபெற்றது. அதில் 423 கல்லூரிகளில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இணையதளம் மூலம் மாணாக்கர் சேர்க்கையை உறுதி செய்வது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தொழில் நுட்ப கல்வி இயக்குநர் அவர்கள், கல்லூரி முதல்வர்களிடம் அரசு பள்ளியில் பயின்ற மாணாக்கர்களிடம் இருந்து எந்த ஒரு கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும், வேறுவிதமாக மாணாக்கர்களின் விவரங்களை கொண்டு தவறான சேர்க்கைகளை செய்ய கூடாதென்றும் வலியுறுத்தினார். மேலும் இந்த நடைமுறையை பின்பற்றாத கல்லூரிகள் மற்றும் நடைமுறையில் வேறு புகார்கள் ஏதேனும் தெரியவந்தால், அதன் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.</p><h2>புகார் தெரிவிக்க...</h2><p>ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம். tndote@tndote.com. கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு பற்றிய விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">பொறியியல் சேர்க்கை</a> சேவை மையங்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களையும் மற்றும் ஒதுக்கீட்டானண பற்றிய விளக்கங்கள் பெற வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழைப்பு எண்: 1800-425-0110. இது தொடர்பாக, மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசு பணி ரத்து!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-stampede-government-jobs-granted-to-the-families-of-the-deceased-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-stampede-government-jobs-granted-to-the-families-of-the-deceased-cancelled#comments</comments><guid isPermaLink="false">53000868-f210-49b0-9a9f-8aca7ee2fff8</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:12:19 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:12:19.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர் கூட்ட நெரிசல்,Karur Stampede,கரூர்,High Court,ஐகோர்ட்டு,Karur,Government job,ஐகோர்ட்டு மதுரை கிளை,High Court Madurai,high court order,ஐகோர்ட்டு உத்தரவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/yk7ewswy/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/yk7ewswy/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><h2>31 பேருக்கு அரசு வேலை</h2><p>கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று&nbsp;கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவுகளை நேரில் வழங்கி இருந்தார்.</p><h2>பொதுநல வழக்கு தாக்கல்</h2><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பிரபாகரன், நாம் தமிழகர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கிளிட்டஸ் மற்றும் அரசு வேலைக்கு படித்து வரும் ஒருவர் என 3 பேர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே அரசு 10 லட்சம் ரூபாயும், த.வெ.க. சார்பில் 20 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><h2>விசாரணையில் தலையீடு</h2><p>கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், அரசியல் கூட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வழக்கு புலன் விசாரணையில் உள்ள போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையில் தலையிடுவதைப் போல உள்ளதாகவும், இது சாட்சியத்தை மாற்றிக் கொடுக்க நிர்பந்திக்கும் வகையில் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அரசாணை ரத்து</h2><p>இந்த நிலையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கியதற்கான வழக்கு விசாரணை ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கரூர் கூட்ட நெரிசலில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உயிரிழந்தவர்களின் </a>குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><h2>நீதிபதிகள் கேள்வி</h2><p>மேலும் "ஏன் சுயத்தொழில் முனைவோராக மாற்றக்கூடாது?  திறன் வளர் பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவலாமே? அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க இயலாது. தினந்தோறும் சாலை விபத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். </p><p>அவர்களுக்கெல்லாம் அரசு வேலை வழங்க முடியுமா? அரசு விதிகளை மீறி கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை தமிழ்நாடு அரசு மீறியுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.</p>]]></content:encoded></item><item><title>கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: யூடியூபர் இர்பானை மீண்டும் விசாரிக்க முடிவு 

</title><link>https://www.dailythanthi.com/cinema/cinemanews/youtuber-irfan-to-face-legal-action-again-for-revealing-gender-of-his-unborn-child</link><comments>https://www.dailythanthi.com/cinema/cinemanews/youtuber-irfan-to-face-legal-action-again-for-revealing-gender-of-his-unborn-child#comments</comments><guid isPermaLink="false">a03b83af-1669-4d22-93cd-35197d2a471a</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:04:37 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:04:37.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>YouTuber,யூடியூபர்,Irfan,யூடியூபர் இர்பான்,இர்பான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fp4o9d8z/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fp4o9d8z/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் <a href="https://www.dailythanthi.com/">இர்பான்</a>. இவர் தமிழகத்தில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று உணவு சாப்பிட்டு அதற்கு ரிவ்யூ கொடுத்து பிரபலமானார்.</p><h2>குழந்தையின் பாலினம் அறிவிப்பு</h2><p>இதனிடையே, யூடியூபர் இர்பான் கடந்த 2024ம் ஆண்டு தனது மனைவி ஆசிபா கர்ப்பமான இருந்தபோது துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு மனைவியின் கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை கண்டறிய மருத்துவமனையில் பரிசோதனை நடத்தியுள்ளார். பின்னர்,  துபாயில் வைத்து கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை விழா நடத்தி அறிவித்தார். தனக்கு பெண் குழந்தை பிறக்கப்போவதாக அறித்தார். இதை தனது யூடியூப் பக்கத்திலும் பதிவிற்றம் செய்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p><p>இந்தியாவில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிவதும், அதை அறிவிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதனால், மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். </p><h2>விசாரணை முடித்து வைப்பு</h2><p>ஆனால், கடந்த திமுக ஆட்சியின் இர்பான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறைக்கு இர்பான் மன்னிப்புக்கடிதம் மட்டும் கொடுத்தார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை இர்பான் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இர்பான் மீதான விசாரணையும் கடந்த திமுக ஆட்சியில் முடித்து வைக்கப்பட்டது. இர்பான் மீது எந்தவித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதேவேளை, இர்பானுக்கு கடந்த 2024 ஜுலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.</p><h2>வழக்கு</h2><p>இதனிடையே, இந்த விவாரத்தில் விசாரணையை சுகாதாரத்துறை முடித்து வைத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு  விசாரணை ஐகோர்ட்டில் வந்தது. அப்போது கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை இர்பான் அறிவித்த விவகாரத்தில் 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.  </p><h2>மீண்டும் விசாரணை </h2><p>இந்நிலையில், கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பானுக்கு சம்மன் அனுப்ப தமிழக மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், அவரை நேரில் அழைத்து விசாரிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இர்பானுக்கு சம்மன் அனுப்ப மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த வழக்கில் இர்பானிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  </p> ]]></content:encoded></item><item><title>மகளிர் உரிமைத் தொகையை மேலும் முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது!  - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-move-to-further-withhold-the-womens-entitlement-allowance-deserves-strong-condemnation-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-move-to-further-withhold-the-womens-entitlement-allowance-deserves-strong-condemnation-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">bc546753-a8ad-42cc-90a5-01325df39511</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:42:21 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:42:21.995Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,மகளிர் உரிமைத் தொகை,Women&apos;s Entitlement Amount,மகளிர் உரிமைத் தொகை திட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/clq3x086/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/clq3x086/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின் படி “ரூ. 2500 மகளிர் மாத உரிமைத் தொகை”யை எப்பொழுது வழங்குவீர்கள் என்ற கேள்விக்கு, “தமிழகத்தின் நிதிநிலை தெரியுமா? ரெண்டு பிள்ளைங்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்ய முடியுமா? முந்தைய ஆட்சியில் 2 வருடம் கழித்துத் தானே கொடுத்தார்கள், எங்கள மட்டும் ஏன் இப்போவே கேக்குறீங்க?” என்றெல்லாம் அலட்சியத்துடன் பதிலளித்துள்ள வருமான வரித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு, முற்றிலும் பொறுப்பற்றது. </p><h2>ஏன் சீக்கிரம் கொடுக்க வேண்டும்</h2><p>முந்தைய அரசின் அட்டூழியங்களைப் பொறுக்க முடியாமல் தான், “மாற்றம் தருவோம்” என்று மன்றாடிக் கேட்ட தவெகவினை மக்கள் அரியணையில் அமர்த்தினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு “போன அரசு லேட்டாகத்தானே மகளிர் உரிமைத் தொகையை கொடுத்தது, நாங்கள் மட்டும் ஏன் சீக்கிரம் கொடுக்க வேண்டும்” என்ற தொனியில் தவெக அமைச்சர் பேசுவது, “திமுகவும் தவெகவும் வெவ்வேறு இல்லை” என்ற உண்மையை மீண்டுமொருமுறை உரக்க உணர்த்துகிறது. நம்பி வாக்களித்த மகளிரை அவமதிப்பது போலானது. </p><p>அதிலும் ஏதோ புதியதாக கண்டுபிடித்ததைப் போல “தமிழகம் கடனில் இருக்கிறது” என்று கூறி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவெக அரசு கிடப்பில் போட முயல்வது, ஏமாற்றுத் தனத்தின் உச்சம். தேர்தல் அறிக்கையைத் தயார் செய்கையில் தமிழகத்தின் நிதிநிலை என்னவென்பது தவெகவிற்கு தெரியாதா? ஆண்டுதோறும் வெளியிடப்படும் நிதிநிலை அறிக்கையைக் கூட வாசிக்காமல் தான், “ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று விஜய் மக்களிடம் கெஞ்சிக் கேட்டாரா? யாரை ஏமாற்ற முயற்சிக்கிறது தவெக அரசு?</p><h2>உடனடியாக வழங்க வேண்டும்</h2><p>எனவே, இதுபோன்ற சாக்கு போக்குகள் எல்லாம் இனி இங்கே எடுபடாது. கொடுத்த வாக்கின்படி ரூ. 2500 மகளிர் மாத உரிமைத் தொகையை உடனடியாக வழங்க <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர்</a> ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;லாட்டரியில் கவனம் செலுத்துபவர்களுக்கு இது புரியாது&quot; - ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த ரகுபதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-focus-on-lottery-will-not-understand-this-raghupathi-criticizes-adhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-focus-on-lottery-will-not-understand-this-raghupathi-criticizes-adhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">c9af6e86-3efe-4be1-adac-8a8973f20437</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:41:21 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:41:21.499Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,Supreme Court,சென்னை,காவிரி நீர்,சுப்ரீம் கோர்ட்,Raghupathi,ரகுபதி,மேகதாது அணை திட்டம்,Adhav Arjuna,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/yxl3a7f3/246.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/yxl3a7f3/246.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டிற்குச் சேரவேண்டிய காவிரி நீரைப் போராடிப் பெறுவதிலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளது.  </p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேற்றைய தினம் திமுக அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து உண்மைக்கு மாறான பல கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே சிறந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு வழக்குகளை சிறப்பாக நடத்தி வெற்றி பெற்ற அரசு திமுக அரசு. ஆனால், மேகதாது விவகாரத்தில் திமுக அரசு சுப்ரீம் கோர்டில் வழக்கை சரியாகக் கையாளவில்லை என ஆதவ் அர்ஜுனா தவறாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் ஒரு கற்றறிந்த வழக்கறிஞரிடம் சென்று என்ன கூறியுள்ளார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு அமைச்சர் இவ்வாறு பொய்யான தகவலை தெரிவிக்க கூடாது. </p><h2>மேகதாது அணை திட்டம்</h2><p>மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க அனுமதி கேட்கிறது அப்போது, தமிழ்நாடு அரசின் எதிர்ப்புகள் இன்றி தயாரிக்க வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் வழங்குகிறது. அந்த உத்தரவை எதிர்த்துதான் திமுக ஆட்சியில் நாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றோம். மேகதாது அணை திட்டமே கூடாது என்பதுதான் நமது முதன்மை நிலைப்பாடாக இருக்கும் போது இந்த உத்தரவே தவறு என கூறி சுப்ரீம் கோர்ட் சென்றோம். அந்த வழக்கில் மேகதாது அணையே கூடாது என்பது தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு அப்படி இருக்கையில் தமிழ்நாட்டின் எதிர்ப்பின்றி DPR தயாரிக்க வேண்டும் என்பது தவறானது என்கிறோம். அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்யவில்லை. 'இன்னும் அணைக்கான அடிப்படை வேலைகளே தொடங்கப்படாததால், இது ஒரு தொடக்க கட்டம் (Premature Stage)' என்றே கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது. குழந்தையே பிறக்காத போது பெயர் வைப்பதைப் போன்ற சூழல்தான் இது. </p><p>ஆனால் ஆதவ் அர்ஜுனாவிற்கு இதெல்லாம் புரியாது புரிய வாய்ப்பு கிடையாது. ஏன் என்றால் அவர்கள் லாட்டரியில் கவனம் செலுத்துபவர்கள் இப்போது புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் ஆகவே தன் அவர் அவ்வாறு தவறான தகவலை கூறி உள்ளார். மேகதாது அணை கட்ட கூடாது அதற்காக சட்டமன்றத்திலே எங்களது எதிர்க்கட்சி தலைவர் ஒரு திருத்தம் கொண்டு வந்து அதில் ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் புதிய நடுவர் மன்றம் அமைத்து அதில் மேகதாது பிரகச்சனையை தீர்க்க வேண்டும் என்றோம். </p> <h2>மு.க.ஸ்டாலின்</h2><p> "மேகதாது அணையைக் கட்டுவதற்கு திமுக அரசு ஒரு சொட்டு கூட, ஒரு படி கூட, ஒரு அங்குலம் கூட அனுமதித்தது கிடையாது. காவிரி டெல்டா விவசாயிகளைக் காப்பதில் திமுக தலைவர் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-க்கு நிகர் எவருமில்லை. ஆனால் இப்போது முதல்-அமைச்சர் கர்நாடகா செல்ல இருப்பதாக கூறுகிறார்கள் அதற்காக ஏதாவது சாக்கு போக்கு காரணத்தை கூற வேண்டும் என திமுக மீது வீண் அவதூறு பரப்புகிறார்கள். ஆனால் இன்றைய அரசு கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முயற்சிப்பது பயனற்றது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த முடிவும் வந்ததில்லை; அது வெறும் 'ரீல்ஸ்' எடுக்க மட்டுமே உதவும். பேச்சுவார்த்தை என்பது விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்து, காலதாமதத்தை மட்டுமே ஏற்படுத்தும்.</p><h2>டெல்டா விவசாயிகள்</h2><p>கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%20">மேகதாது அணை </a>பிரச்சனையை தீர்க்க உடனே ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க வலியுறுத்த வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? முதல்-அமைச்சர் பிரதமரைச் சந்தித்தபோது மேகதாது விவகாரத்திற்காகத் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி கடிதம் கொடுத்தாரா அல்லது நேரில் வலியுறுத்தினாரா என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. மக்கள் நலனிலும் டெல்டா விவசாயிகள் நலனிலும் பட்டும் படாமல் இருக்கிறார்கள். முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளின் மொத்த உருவம்தான் தமிழக வெற்றிக் கழகம். வழக்கறிஞர் உமாபதி குறித்து சட்டமன்றத்தில் நல்லவிதமாக பேசிய ஆதவ் அர்ஜுனா  இப்போது மாற்றி பேசுகிறார். முன்பொரு பேச்சு, இப்போது ஒரு பேச்சு என முரண்படுகிறார்கள். </p><p> எங்களைப் பொறுத்தவரை கடந்த 2-3 மாதங்களாகத் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி தண்ணீர்</a> வரவில்லை. டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். எனவே சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் போராடி காவிரி நீரைப்பெற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை."</p><p> இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இடுக்கு பிள்ளையார் கோவிலில் கட்டுப்பாடுகள் விதிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/restrictions-imposed-at-idukku-pillaiyar-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/restrictions-imposed-at-idukku-pillaiyar-temple#comments</comments><guid isPermaLink="false">45e3a458-6590-447d-bdad-ef1e83f3037f</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:26:28 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:26:28.090Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,Restrictions,கிரிவலம்,கிரிவல பாதை,இடுக்கு பிள்ளையார் கோவில்,Idukku Pillaiyar Temple,Idukku Pillaiyar,இடுக்கு பிள்ளையார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ddu68wrx/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ddu68wrx/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப்பாதையில், நேற்று முன்தினம் ஆந்திர வாலிபர் ஒருவர் உடல் பருமன் காரணமாக சிக்கி, மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகம் மறைவதற்குள், நேற்று அதே இடத்தில் ஆந்திராவை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>இடுக்கு பிள்ளையார் கோவில்</h2><p>திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர்.</p><h2>குடும்பத்துடன் கிரிவலம்</h2><p>கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் 36 வயது) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்த மணிக்குமார், குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார்.</p><h2>மூச்சுத்திணறல்</h2><p>குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் போராடி அவரை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h2>பெண் பக்தர் சிக்கினார்</h2><p>இதனையடுத்து நேற்று, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர், திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் சென்று, அங்கிருக்கும் குறுகிய குகைப்பாதை வழியாக நுழைந்து சாமி தரிசனம் செய்ய முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது உடல் பருமன் காரணமாக அந்த குறுகிய இடுக்கிற்குள் அவர் மாட்டிக்கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் கையை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.</p><h2>கட்டுப்பாடுகள் விதிப்பு</h2><p>இந்த நிலையில், இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குறுகிய குகைப்பாதை வழியாக நுழைந்து சாமி தரிசனம் செய்ய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முயல்பவர்கள் </a>தொடர்ந்து அதில் சிக்கிவருவதை அடுத்து கோவில் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்து பதாகை ஒன்றை வைத்துள்ளது. அந்த பதாகையில், ”உடல் பருமன் உள்ளவர்களுக்கும், உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூர்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரி கைது

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-police-officer-arrested-for-accepting-a-bribe-of-rs-5000</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-police-officer-arrested-for-accepting-a-bribe-of-rs-5000#comments</comments><guid isPermaLink="false">fcb9dfd2-19db-444e-9884-a16a57b26c83</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:08:50 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:08:50.694Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பத்தூர்,போலீஸ் அதிகாரி,Police Officer,Tirupathur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/sx0jf450/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/sx0jf450/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலாங்காயம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) பணியாற்றி வருபவர் ராமகிருஷ்ணன். </p><h2>ரூ. 5 ஆயிரம் லஞ்சம்</h2><p>இவர் விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க வாகன உரிமையாளரிடம்  இன்று ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார். </p><p>அப்போது அங்கு விரைந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்  ராமகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்தனர். </p><p> இதையடுத்து அவரிடமிருந்து லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், எஸ்எஸ்ஐ ராமகிருஷ்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அதிமுகவிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-than-50-people-left-aiadmk-and-joined-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-than-50-people-left-aiadmk-and-joined-dmk#comments</comments><guid isPermaLink="false">264a63a9-5599-4262-a20c-b45f5ccc44c8</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:59:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:59:11.149Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,சென்னை,AIADMK,தி.மு.க,இணைந்தனர்,joined DMK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/dy67w0kz/245.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/dy67w0kz/245.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், விருதுநகர் வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த விருதுநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைத் தலைவர் பூலாங்கால் எம். சித்திக் தலைமையில் மு. ரஜிஸ்அகமத், எம். கோபிநாத், இமாம் அலி உள்ளிட்ட  50க்கு மேற்பட்டோர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தி.மு.க.வில்</a> இணைந்தனர்.</p><h2>பங்கேற்பு</h2><p>அதுபோது, கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விருதுநகர் வடக்குச் செயலாளர் தங்கம் தென்னரசு, எம்.எல்ஏ., விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், திருச்சுழி தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்னுத்தம்பி, திருச்சி வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்தனபாண்டி, காரியாபட்டி நகரச் செயலாளர் ஆர்.கே. செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு, புதுச்சேரி 31-ம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தம்: கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-puducherry-to-stop-sale-of-broiler-chicken-from-31st-poultry-traders-association</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-puducherry-to-stop-sale-of-broiler-chicken-from-31st-poultry-traders-association#comments</comments><guid isPermaLink="false">9c7e1436-4532-41af-bcb9-7e53ed152bd1</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:19:24 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:19:24.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தஞ்சாவூர்,அறிவிப்பு,கடை அடைப்பு,trader,கோழி இறைச்சி,விற்பனை நிறுத்தம்,Broiler Chicken</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/mbhuw6u4/244.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிராய்லர் கோழி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/mbhuw6u4/244.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31 முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தப்படும் என்றும் 60,000 கடைகளில் பிராய்லர் கோழி விற்கப்படாது என்றும் கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  இதனால், இரு மாநிலங்களிலும் கோழிக்கறி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த அறிவிப்பு தொடர்பாக தஞ்சாவூரில் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கோழி வணிகர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.</p><h2>பிராய்லர் கோழி</h2><p>கூட்டத்தில், பிராய்லர் கோழிகளுக்கான தீவனக் கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் தெளிவாக அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.</p><p>மேலும், விற்பனைக்காக அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு குறைந்தது 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும். அப்படி தீவனங்களை வழங்கினால், கோழியின் இறைப்பையில் 100 கிராம் முதல் 200 கிராம் வரை தீவனமும் தண்ணீரும் தங்கிவிடும். கோழி வாங்கும் போது, சுமார் 150 கிராம் வரை செரிக்காத தீவனமாக இருக்கும். இதனால் வாடிக்கையாளருக்கு பண நஷ்டம் ஏற்படும் என்பது வணிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அதேபோல் கோழியை வெட்டி சுத்தம் செய்யும் போது, இறைப்பையில் உள்ள செரிக்காத தீவனமும் அதோடு சேர்ந்த கழிவுகளும் கறியில் சிந்தி இறைச்சியைப் பாழாக்கிவிடுவதாக வணிகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதன் காரணமாக சுத்தமான இறைச்சியை வழங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் வணிகர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.</p><p>தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 31ம் தேதி முதல்  பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தப்படுவதாக விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அன்றைய தினம் முதல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF">கோழி</a> வணிகர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலம் மோசடி வழக்கு: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளரிடம் சிபிசிஐடி விசாரணை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-case-cb-cid-questions-suspended-sub-registrar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-case-cb-cid-questions-suspended-sub-registrar#comments</comments><guid isPermaLink="false">ff7abd91-1fd1-4257-96db-6bbd0db70543</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:11:33 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:11:33.036Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,CBCID,சிபிசிஐடி,Palani temple,பழனி கோவில்,நிலமோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/hrjw0m3y/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/hrjw0m3y/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>பழனி,</p><p><a href="https://www.dailythanthi.com/">திண்டுக்கல் </a>மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.</p><h2>ரூ. 100 கோடி நிலம் - ரூ. 2 கோடிக்கு கிரையம்</h2><p>இதனிடையே, ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. கோவில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>புகார்</h2><p>இந்த முறைகேடு பதிவு குறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அதனை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி என 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த நிலமோசடி வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது ஜாமினில் உள்ளார்.</p><h2>சிபிசிஐடி விசாரணை</h2><p>இந்நிலையில், பழனி முருகன் கோவில் நிலமோசடி வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான ஜஸ்டின் மணிகண்டனிடம் நிலமோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசே; விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை விடுதலை செய்! - வேல்முருகன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-release-farmers-association-leader-ayyakannu-velmurugan-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-release-farmers-association-leader-ayyakannu-velmurugan-urges#comments</comments><guid isPermaLink="false">96cdfb80-6573-41a3-a135-3af71e70e02d</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:32:35 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:32:35.758Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமை கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/3d90r43a/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/3d90r43a/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தவறான அணுகுமுறை</h2><p>விவசாயிகளின் நலனுக்காகச் சட்டப்பூர்வமாகவும், சனநாயக வழியிலும் தொடர்ந்து போராடி வரும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை, வீட்டுக்காவலில் வைத்து அவரது குரலை ஒடுக்க முயற்சிப்பது சனநாயகத்திற்கு எதிரான செயல். கருத்தை எதிர்கொள்ள முடியாத ஆட்சிகள்தான் அடக்குமுறையை ஆயுதமாக்கும்.</p><p>கர்நாடக அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் மேகதாது அணை உள்ளிட்ட பிரச்சினைகளில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கோரி போராட்டம் அறிவித்த விவசாய சங்கத் தலைவரை, வீட்டுக்காவலில் அடைப்பது தமிழக அரசின் தவறான அணுகுமுறையாகும். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், அய்யாக்கண்ணு மீதான வீட்டுக்காவல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். </p><h2>நடவடிக்கையை திரும்பப் பெறுக</h2><p>உடனடியாக வீட்டுக்காவல் நடவடிக்கையை திரும்பப் பெற்று, விவசாயிகளின் சனநாயக உரிமைகளை மதித்து, அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதியாக முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முறைகேடாக பெறப்பட்ட பழங்குடியினர் சாதி சான்றிதழ் ரத்து - தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegally-obtained-tribal-caste-certificates-cancelled-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegally-obtained-tribal-caste-certificates-cancelled-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">6e71f610-fa80-4e8e-a17d-39f2e5b82112</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:29:12 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:29:12.116Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,order,cancelled,தமிழக அரசு உத்தரவு,Tribal Caste Certificate,பழங்குடியினர் சாதி சான்றிதழ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/9ji8g8e8/243.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/9ji8g8e8/243.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பழங்குடியினர் சமூகத்தினருக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சலுகைகளை பெறுவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை பலர் முறைகேடாக பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற்றிருப்பது தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. </p><p>இதைத்தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு சமூகநீதித்துறை செயலாளர்  சுப்பையன் அறிவுறுத்தி உள்ளார்.</p><h2>பழங்குடியினர்</h2><p>இதுதொடர்பாக அவர், கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் உள்ள காணிக்காரன், காணிக்கர் இனத்தை சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மட்டுமே வசித்து வரும் நிலையில் இந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். </p><p>ஆனால், 1.1.2018 முதல் 26.5.2026 வரை சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், மதுரை, ராமநாதபுரம், திருவாரூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 954 பேருக்கு காணிக்காரன், காணிக்கர் சமூகம் என்ற அடிப்படையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D">பழங்குடியினர் சான்றிதழ்</a> வழங்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. </p> <h2>விசாரணை</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளில் மட்டுமே காணிக்காரன், காணிக்கர் சமூகத்தினர் வசித்து வரும் நிலையில் இதர மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு எந்த அடிப்படையில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை கலெக்டர்கள் விசாரிக்க வேண்டும். முறைகேடாக சான்றிதழ் வழங்கியிருந்தால் உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாளையங்கோட்டை சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ.வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-in-palayankottai-prison-met-by-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-in-palayankottai-prison-met-by-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">e40e49c1-4d5f-4efb-8415-f4ccead89ea9</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:16:30 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:16:30.410Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,மார்க்கண்டேயன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/azfx1fmp/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/azfx1fmp/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை,</p><p><a href="https://www.dailythanthi.com/">தூத்துக்குடி </a>மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.  மார்க்கண்டேயன். இவர் கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசியபோது முதல்-அமைச்சர் விஜய்-க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறகவும் பேசினார். </p><h2>மார்க்கண்டேயன் கைது</h2><p>இதையடுத்து, திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 21ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சிறையில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டுள்ளார். </p><h2>பாளையங்கோட்டை சிறையில் உதயநிதி ஸ்டாலின்</h2><p>இந்நிலையில், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். பாளையங்கோட்டை சிறைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயனை சந்தித்து ஆறுதல் கூறினார்.  </p><p>உதயநிதி ஸ்டாலினுடன் திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் பாளை சிறைக்கு சென்று திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை சந்தித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>தண்ணீரின்றித் தவிக்கும் தமிழக மக்கள்: அரசின் மெத்தனப் போக்குக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-of-tamil-nadu-suffering-from-water-scarcity-nainar-nagendran-condemns-the-governments-lethargic-attitude</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-of-tamil-nadu-suffering-from-water-scarcity-nainar-nagendran-condemns-the-governments-lethargic-attitude#comments</comments><guid isPermaLink="false">fac4e8f8-f6fe-4506-b889-c1272b19adfc</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:03:52 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:03:52.948Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/8b7tt0gv/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/8b7tt0gv/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற அவசரப் பணிகளுக்குத் தேவையான சிறப்பு நிதியை உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;</p><h2>மெத்தனப் போக்குக்கு</h2><p>தண்ணீரின்றித் தவிக்கும் தமிழக மக்கள்: தவெக அரசின் மெத்தனப் போக்குக்குக் கண்டனம்!</p><p>தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலவும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டால், பொதுமக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்குக் கூடத் தண்ணீரின்றித் தவிக்கும் அவலநிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தென்மேற்குப் பருவமழை பொய்த்துள்ள நிலையில், அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல், தவெக அரசும் குடிநீர் வடிகால் வாரியமும் அலட்சியப் போக்கோடு செயல்பட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><h2>59 அணைகள் வறட்சி</h2><p>மாநில நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 90 முக்கிய அணைகளில் 59 அணைகள் வறண்டுவிட்டன; நிலத்தடி நீர்மட்டமும் முற்றிலும் சரிந்துவிட்டது. பல மாவட்டங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையைச் சமாளிக்கச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், முதல்-அமைச்சர் விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள துறையிடம் நிதி கேட்க அதிகாரிகள் தயங்குவது தற்போதைய ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டையே காட்டுகிறது.</p><p>மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட வழங்கத் தவறிய தவெக அரசு, இனியாவது விழித்தெழுந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற அவசரப் பணிகளுக்குத் தேவையான சிறப்பு நிதியை உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும். </p><h2>வலியுறுத்தல்</h2><p>மேலும், தற்போதைய வறட்சி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திலுள்ள நீர் ஆதாரங்கள், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களைத் தூர்வாரிச் சுத்தம் செய்ய வேண்டும். ஏரி, குளங்களின் கரைகளை உயர்த்தி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அவற்றிலுள்ள </a>வண்டல் மண்ணை அகற்றி, வரும் காலங்களில் விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில் தண்ணீரைச் சேமித்து வைக்கத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தள்ளிப்போகும் தமிழக உள்ளாட்சி தேர்தல்: மாநில நிதிக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் வரை நீட்டிப்பு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-local-body-polls-delayed-state-finance-commission-tenure-extended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-local-body-polls-delayed-state-finance-commission-tenure-extended#comments</comments><guid isPermaLink="false">6d4fd4ba-f7ad-4295-bce4-e5a9630e0deb</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:58:29 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:58:29.754Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல்,உள்ளாட்சி தேர்தல்,local body elections,local body election,தமிழக உள்ளாட்சி தேர்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/wspobyfq/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/wspobyfq/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>மாநில நிதிக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழக <a href="https://www.dailythanthi.com/">உள்ளாட்சி தேர்தல்</a> தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. </p> <h2>உள்ளாட்சி தேர்தல்</h2><p>தமிழகத்தில் கடைசியாக 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 27 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, சுமார் 92 ஆயிரம் உள்ளாட்சி பதவிகள் காலியாகின.</p><p>அதன்பின்னர், ஊரக உள்ளாட்சி பணிகளை கவனிக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>சிறப்பு அதிகாரிகள் நியமனம்</h2><p>தமிழகத்தில் கடந்த 1½ ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், சிறப்பு அதிகாரிகளின் பணிக்காலம் மட்டுமே நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.</p><p>தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டாலும், உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க.வே கோலோச்சியதால், இன்னும் பதவியில் இல்லாத பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/hzmeqhxc/0.jpg" /></figure><h2>நிதிக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு</h2><p>இதனால், விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி, உள்ளாட்சி பதவிகளையும் கைப்பற்ற த.வெ.க. திட்டமிட்டு வந்தது. ஆனால், த.வெ.க. அரசின் தற்போதைய நடவடிக்கையால், உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகும் என்றே தெரிகிறது.</p><p>அதாவது, நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலவரத்தை ஆய்வு செய்து, மாநில அரசுக்கு உரிய பரிந்துரைகள் வழங்க கடந்த ஆண்டு 7-வது மாநில நிதிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டு 31-ந் தேதியுடன் முடிவடைய இருந்தது. எனவே, அதற்கு முன்னதாக தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில நிதிக்குழுவின் பதவிக்காலத்தை டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>உள்ளாட்சி தேர்தல் எப்போது?</h2><p>இதனால், தமிழக உள்ளாட்சி தேர்தல் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளும் நிலுவையில் இருப்பதால், அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dinakaran-congratulates-raja-muthupandi-for-winning-silver-at-the-commonwealth-games</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dinakaran-congratulates-raja-muthupandi-for-winning-silver-at-the-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">a5bae02c-c8bd-46f8-91c8-d17ab5481990</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:47:35 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:47:35.178Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,டிடிவி தினகரன்,வாழ்த்து,காமன்வெல்த் போட்டி,Commonwealth Games,அமமுக பொதுச்செயலாளர்,வெள்ளி பதக்கம்,TTV Dinakaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/09kgr3r9/242.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/09kgr3r9/242.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டிடிவி தினகரன்</a> எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சார்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். </p><h2>வாழ்த்து</h2><p>தனது தொடர் பயிற்சியாலும், விடா முயற்சியாலும் காமன்வெல்த் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் ராஜா முத்துப்பாண்டியின் வெற்றிப் பயணம் மென்மெலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட த.வெ.க. அரசு ஏன் தயங்குகிறது?&apos; - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-tvk-government-hesitant-to-release-a-white-paper-on-the-closed-tasmac-shops-nainar-nagendran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-tvk-government-hesitant-to-release-a-white-paper-on-the-closed-tasmac-shops-nainar-nagendran-asks#comments</comments><guid isPermaLink="false">fb375f8d-3975-4bb6-a777-cd203f30e643</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:31:25 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:31:25.062Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,டாஸ்மாக்,Tasmac,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/h1s7i62a/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/h1s7i62a/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தொடர்பாக த.வெ.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என தம்பட்டம் அடித்துக் கொள்கிறது ஜோசப் விஜய் தலைமையிலான அரசு. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை. “மூடப்பட்டதாக” கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கும், RTI- இடம் பதில் இல்லை. </p><p>தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்விக்கான பதிலையும் மென்று முழுங்குகிறது தற்போதைய அரசு. </p><p>மொத்தத்தில் மூடப்பட்டதாக கூறிய 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எது கேட்டாலும், “அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அணுகவும்” என்றே ஒரே பதில் மட்டும் தான் RTI இடமிருந்து கிடைக்கிறது. அந்தந்த மாவட்ட மேலாளரிடம் தரவுகள் இருக்குமாயின், அவற்றை சேகரித்து RTI மூலம் எளிதாக மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்? </p> <p>த.வெ.க. ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட ஆளும் அரசு எதற்கு தயங்குகிறது?</p><p>உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென த.வெ.க. அரசே இந்த புரளியைக் கிளப்பியதா? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்! வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-meeting-tomorrow-under-the-leadership-of-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-meeting-tomorrow-under-the-leadership-of-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">c8964c98-8079-4515-8c5f-864c06ab5aed</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:29:55 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:29:55.765Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தி.மு.க.</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/m0odqi5t/16.gif" width="721"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/m0odqi5t/16.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. </p><p>இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்க இருக்கிறார். </p><p>இதற்காக, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (ஜூலை 28) மாலை 5 மணிக்கு காணொலிக்காட்சி வழியாக நடைபெற இருக்கிறது. கூட்டத்திற்கு தலைமை தாங்கும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபை கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எந்தப் பிரச்சினைகளை முன்னெடுக்க வேண்டும், விவாதத்தின்போது யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்க இருக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayor-priya-complains-of-harassment-by-unidentified-person</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayor-priya-complains-of-harassment-by-unidentified-person#comments</comments><guid isPermaLink="false">446e5b25-e55f-4c47-8f3b-001e0ab6eb54</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:18:10 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:18:10.452Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Mayor Priya,மேயர் பிரியா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/blaj6qkk/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/blaj6qkk/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மேயர் பிரியா</h2><p>சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் கமிஷனர் அமல் ராஜை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்து இருக்கிறார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறாக சித்தரித்து பரப்புவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் அலுவலக எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தொல்லை கொடுப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p>மேயர் பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொல்லை கொடுப்பதாக மேயர் பிரியா புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்: மு.க.ஸ்டாலின் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-our-youth-excel-in-sports-as-well-as-education-mkstalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-our-youth-excel-in-sports-as-well-as-education-mkstalin#comments</comments><guid isPermaLink="false">514afe9b-7b4e-4010-b54e-556d8b481fab</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:05:42 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:05:42.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,காமன்வெல்த் போட்டி,Commonwealth Games,M.K. Stalin</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ypny6vn3/15.gif" width="721"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ypny6vn3/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு என் பாராட்டுகள்.</p><p>தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றி ஊக்கமளிக்கட்டும்! கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்!”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>51-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/51st-state-shooting-championship-minister-adhav-arjuna-inaugurated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/51st-state-shooting-championship-minister-adhav-arjuna-inaugurated#comments</comments><guid isPermaLink="false">2f4f9f5f-d8b2-415f-9eef-d69cb26e5a80</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:57:27 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:57:27.852Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாம்பியன்ஷிப் போட்டி,துப்பாக்கி சுடுதல்,Gun shooting,Championship Tournament,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Adhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/4o8ljma6/85.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/4o8ljma6/85.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்; 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியை துப்பாக்கியால் இலக்கை  குறிவைத்து சுட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.</p><p>துப்பாக்கி சுடுதல் விளையாட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் குறித்து கேட்டறிந்ததோடு, தானும் இந்த விளையாட்டை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.</p><h2>துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி</h2><p>தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் 51-வது மாநில <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி</a> சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சென்னை காவல் ஆணையாளர் அமல்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் துப்பாக்கி சுடுதல் வீரர்களை ஊக்குவித்தனர். துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் அடிப்படை நடைமுறைகள் குறித்து பயிற்சியாளர்களிடம் கேட்டறிந்து வீரர்-வீராங்கனைகளுடன் கலந்துரையாடியும் வாழ்த்து தெரிவித்தனர்.</p><h2>கடுமையான பாதுகாப்பு நடைமுறை</h2><p>போட்டிகள் பொதுவாக 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் ரேஞ்ச்களில் நடத்தப்படுகின்றன. 10 மீட்டர் ஏர் ரைபிள்,(Air Rifle) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (Air Pistol), 25 மீட்டர் ஸ்போர்ட் பிஸ்டல், 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் (மண்டியிட்டு, படுத்து, நின்று சுடுதல்) ஷாட்கன். போட்டிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு பிரிவுகளில் நடைபெறுகின்றன. சர்வதேச அளவில் போட்டிகள் International Shooting Sport Federation விதிமுறைகளின்படி நடத்தப்படுகின்றன. வீரர்கள் சிறப்பு பாதுகாப்பு உபகரணங்களுடன், கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பங்கேற்பார்கள். இதில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், துப்பாக்கி சுடும் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-grants-permission-to-conduct-further-investigation-in-vaithilingam-corruption-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-grants-permission-to-conduct-further-investigation-in-vaithilingam-corruption-case#comments</comments><guid isPermaLink="false">1ff38214-1d4c-41c7-a58a-9eecb489ffe2</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:50:52 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:50:52.131Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வைத்திலிங்கம்,Vaithilingam,Corruption case,ஊழல் வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/kmeiviao/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/kmeiviao/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை பெருங்களத்தூர் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அடுக்குமாடி கட்டிடத்திற்கு திட்ட அனுமதி அளிக்க 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக “அறப்போர் இயக்கம்” சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.</p><p>இந்தப் புகாரின் அடிப்படையில், 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை, வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கடந்த ஜனவரி மாதம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.</p><p>இதைத் தொடர்ந்து, வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் முந்தைய ஆட்சியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த அறிக்கையை திரும்பப் பெறவும், வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி கோரியும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், “முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும், விசாரணையை விரைந்து முடித்து மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultation-meeting-on-the-separate-agriculture-budget-in-chennai-ministers-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultation-meeting-on-the-separate-agriculture-budget-in-chennai-ministers-participate#comments</comments><guid isPermaLink="false">b1448197-2c7f-4e92-8418-9ee9fc91a92a</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:46:31 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:46:31.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,வேளாண்மை,நிதிநிலை அறிக்கை,கருத்துக்கேட்பு கூட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ubotyr7s/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ubotyr7s/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2026–2027 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மாநாட்டு கூட்டரங்கில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2026–2027 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. </p><p>இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கலந்து கொண்டு, வேளாண் துறையின் முன்னேற்றம், விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு, நீர்வள மேலாண்மை, பாசன வசதிகள் விரிவாக்கம் மற்றும் நிலையான வேளாண் வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்றார்.</p><p>இக்கூட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தலைமை வகிக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி, கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செ.கமலி, வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் முனைவர் வி.கே.ராஜீவ், </p><p>வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் - வேளாண்மை–உழவர் நலத்துறை முனைவர் பொ.சங்கர், வேளாண்மை இயக்குநர் முனைவர் க.வீ.முரளிதரன், துறை சார்ந்த அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தான்: நகைக்கடையில் கொள்ளை முயற்சி - துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்களை துணிச்சலாக எதிர்த்த ஊழியர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rajasthan-attempted-robbery-at-a-jewelry-store-staff-bravely-confronted-robbers-who-entered-with-a-gun</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rajasthan-attempted-robbery-at-a-jewelry-store-staff-bravely-confronted-robbers-who-entered-with-a-gun#comments</comments><guid isPermaLink="false">ac4f5768-cdf0-4aef-87c3-2f7e1f1ce552</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:37:37 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:37:37.745Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜஸ்தான்,Rajasthan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/t4oa9g53/National-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/t4oa9g53/National-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஜெய்ப்பூர்,</p><p>ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை முயற்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அருகே அமைந்துள்ள நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அவர்கள் கைகளில் துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.</p><p>அந்த சமயத்தில் ஊழியர் ஒருவர் பாதுகாப்பு எச்சரிக்கை மணியை ஒலிக்க விட்டார். இதையடுத்து கடையில் இருந்த அனைத்து ஊழியர்களும், பாதுகாவலர்களும் துணிச்சலாக செயல்பட்டு கொள்ளையர்களை எதிர்த்து, கொள்ளை முயற்சியை தடுக்க முயன்றனர். </p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் கடையில் இருந்து தப்பியோடினர். அவர்கள் செல்லும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>