<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 20 Aug 2026 11:38:07 +0000</lastBuildDate><item><title>பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - சென்னையில் நடைபெற்றது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultative-meeting-on-re-enrolling-out-of-school-children-held-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultative-meeting-on-re-enrolling-out-of-school-children-held-in-chennai#comments</comments><guid isPermaLink="false">019ab706-0536-408c-8d0c-a1990e881938</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:35:40 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:35:40.241Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/24j7zhx9/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/24j7zhx9/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக துறை சார்ந்த ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்கம் குறித்து களப்பணி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இன்று (20.08.2026) ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்துப் பேசினார்.</p><p>இக்கூட்டமானது, பள்ளிக்கு செல்லாத குழந்தைகளைக் கண்டறிதல், அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல், மீண்டும் பள்ளியில் சேர்த்தல் மற்றும் தொடர்ந்து கல்வி பயில்வதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் (GPL), கல்வித் துறை, சமுதாய வளர்ச்சிப் பிரிவு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>பள்ளிக்கு செல்லாத ஒவ்வொரு குழந்தையையும் மீண்டும் கல்வி அமைப்பிற்குள் கொண்டு வருவதும், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதும் இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் முதன்மை நோக்கமாகும். "எந்தவொரு குழந்தையும் பின்தங்கிவிடக்கூடாது" என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.</p><p>இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் செயல்படுத்தும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் களஆய்வில் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களின் குடும்பங்களுடன் தொடர்புகொள்ளுதல், ஆலோசனை வழங்குதல், பள்ளிகளுடன் ஒருங்கிணைத்தல், மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு உதவுதல் மற்றும் முறையான தொடர் நடவடிக்கைகளை உறுதி செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வார்கள்.</p><p>தெளிவான செயல்படுத்தும் இலக்காக, கண்டறியப்பட்ட பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை 31 ஆகஸ்ட் 2026-க்குள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முறையான குடும்பத் தொடர்பு, ஆலோசனை மற்றும் பள்ளி அளவிலான உதவிகள் மூலம் இந்த இலக்கை அடைய சம்பந்தப்பட்ட துறைகளும் களப்பணிக் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படும்.</p><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பேசும்போது, “பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் தொடர்பான பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் கையாள்வதன் முக்கியத்துவத்துடன், கண்டறியப்பட்ட ஒவ்வொரு குழந்தையையும் மீண்டும் கல்வி அமைப்பிற்குள் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். வெறும் கண்டறிதலோடு நின்றுவிடாமல், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ளுதல், அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடுதல், மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு வழிவகுத்தல் மற்றும் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதையும் கல்வி பயில்வதையும் உறுதி செய்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.</p> <p>பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் மொத்தம் 7,302 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்டறிந்ததன் அடிப்படையில், கள அளவில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான செயல்முறைக்கு உதவவும், NULM-ஐச் சேர்ந்த 96 சமூக ஒருங்கிணைப்பாளர்களுக்கு இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.</p><p>இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகம் முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாநகராட்சி கல்வி அலுவலர் ஜெ.வசந்தி மற்றும் உதவி கல்வி அலுவலர்கள், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் (GPL) குழுத் தலைவர் முனைவர் லெஜிஸ், சமுதாய வளர்ச்சி பிரிவு-தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர், NULM-ன் உதவித் திட்ட அலுவலர்கள், சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் NULM தலைமைச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான் மேகதாது அணை - கர்நாடகா முதல்-மந்திரி சிவக்குமார் பேட்டி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-is-for-the-benefit-of-tamil-nadu-karnataka-chief-minister-shivakumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-is-for-the-benefit-of-tamil-nadu-karnataka-chief-minister-shivakumar#comments</comments><guid isPermaLink="false">a3b11deb-8afb-46ed-9d4a-7a600d44ee1b</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:33:41 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:33:41.785Z</atom:updated><atom:author><atom:name>Gopal J</atom:name><atom:uri>/api/author/2406195</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சென்னை,மேகதாது அணை,கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்,CMVijay,DKShivkumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/9z6u7p4o/siva33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடகா முதல்-மந்திரி சிவக்குமார் பேட்டி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/9z6u7p4o/siva33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான் மேகதாது அணை கட்டப்படுகிறது என கர்நாடகா முதல்-மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார்.</p><p>தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு முடிந்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- </p><p>மேகதாது அணை தமிழகத்துக்காக கட்டப்படுகிறது. கர்நாடகாவிற்காக அல்ல,  மேகதாது அணை மூலம் கர்நாடகாவுக்கு 5 டிம்சி தண்ணீரையே பயன்படுத்த உள்ளோம். பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை கருதியே மேகதாது அணை கட்டப்படுகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் குடிநீருக்காக 5 டிஎம்.சி நீரை எடுத்துக்கொண்டு எஞ்சியதை தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வழங்குவோம் என்றார்.</p><p>முன்னதாக, மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாடுக்குத்தான் அதிக பலன்.மேகதாது அணையின் ஒவ்வொரு சொட்டு நீரும் தமிழ்நாடு, புதுச்சேரி விவசாயிகளுக்கு உதவும்.நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும். </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> கட்டப்படாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும் என அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் சதி: தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-conspiring-to-undermine-the-verdicts-of-the-cauvery-water-disputes-tribunal-and-the-supreme-court-tamil-nadu-government-must-not-be-caught-off-guard-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-conspiring-to-undermine-the-verdicts-of-the-cauvery-water-disputes-tribunal-and-the-supreme-court-tamil-nadu-government-must-not-be-caught-off-guard-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">36b3fed4-0f8a-4027-a3b3-97c0301ed829</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:21:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:21:05.309Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/a9hb4bn7/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/a9hb4bn7/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் நடத்தும் சதியை நம்பி தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“காவிரி நீர் விவகாரத்தில் நதிநீர் பங்கீடு என்ற மனநிலையில் இருந்து விலகி நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலையை நோக்கி நகர வேண்டிய தருணம் வந்து விட்டதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.  இதை காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து துரோகம் செய்ய விரிக்கப்படும் சதி  வலையாகவே பார்க்க வேண்டியுள்ளது. கர்நாடகத்தின் இந்த சதி வலையில் தமிழகம் ஒருபோதும் சிக்கிக் கொள்ளக் கூடாது.</p><p>சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெற்ற 31 ஆம் தென்னிந்திய முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், ‘‘மேகதாது அணை கட்டப்படுவதால் கர்நாடக மாநிலத்திற்கு எவ்வளவு நன்மை கிடைக்குமோ, அதே அளவு நன்மை தமிழகத்திற்கும், புதுவைக்கும் கிடைக்கும். காவிரி நீர் விவகாரத்தில் நதிநீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து விலகி நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலையை நோக்கி நகர வேண்டிய நேரம் வந்து விட்டது’’ என்று தெரிவித்திருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>காவிரி நீர் விவகாரத்தில் ஒத்துழைப்பு என்று பேசும் உரிமையை 100 ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகம் இழந்து விட்டது. 1892 ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்டிருந்த காவிரி நீர்ப்பகிர்வு உடன்பாட்டை மீறி 1910 ஆம் ஆண்டில் கண்ணம்பாடி அணையை கட்ட முயற்சி செய்தது, கண்ணம்பாடி அணை எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை மொத்தம் 11 டி.எம்.சி மட்டுமே கொள்ளளவு கொண்டிருக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் அரசு அறிவுறுத்தியதையும் மீறி, முதலில் 41.50 டி.எம்.சியும், பின்னர் 49.45 டி.எம்.சியும் கொண்ட அணையாக கட்டியது.</p><p>1924 ஆம் ஆண்டு நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்தை 1974 ஆம் ஆண்டில் புதுப்பிக்க மறுத்தது, 1967 &amp;1977 இடையிலான காலத்தில் நிலவிய தெளிவற்ற சூழலை பயன்படுத்திக் கொண்டு காவிரி துணை ஆறுகளின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகளைக் கட்டியது, 1990 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அமைப்பதை எதிர்த்தது, 1991 ஆம் ஆண்டில் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பையும், 2007 ஆம் ஆண்டில் இறுதித் தீர்ப்பையும் எதிர்த்தது, கடந்த 35 ஆண்டுகளில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருவது என காவிரி விவகாரத்தில் கர்நாடகம் இழைத்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது.</p><p>இவ்வளவு துரோகங்களை இழைத்த கர்நாடக அரசு, 1990 முதல் 2018 வரை 29 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி, காவிரி நீரில் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில், இப்போது நீர்ப்பகிர்வு வேண்டாம்; நீர் ஒத்துழைப்பு வேண்டும் என்று கர்நாடம் கூறுவது அப்பட்டமான சதிவலை வீசும் முயற்சி ஆகும். கடந்த அரை நூற்றாண்டுகளில் ஏராளமான சட்டப் போராட்டங்களை நடத்தி காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக நடுவர் மன்றத்திலும், சுப்ரீம் கோர்ட்டிலும் பெற்றுள்ள தீர்ப்புகளை குப்பையில் வீசி விட்டு, 1890 ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு பின்னோக்கி செல்வோம்; எந்த உரிமையும் இல்லாமல் காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் தமிழ்நாடு கையேந்தி நிற்கும் நிலையை ஏற்படுத்துவோம் என்பது தான் இந்த அழைப்பின் பொருள் ஆகும்.</p><p>1892 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மதித்து 1910 ஆம் ஆண்டில் புதிய அணையை கட்டும் பணிகளை தொடங்காமல் இருந்திருந்தாலோ, 1974 ஆம் ஆண்டில் காவிரி நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்து இருந்தாலோ, 1970 ஆம் ஆண்டுகளில் 4 அணைகளை கட்டாமல் இருந்திருந்தாலோ, காவிரி நீர்ப்பகிர்வு குறித்த நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றின் தீர்ப்புகளை மதித்திருந்தாலோ, கர்நாடக முதல்-மந்திரியின் இன்றைய அழைப்பை ஏற்றிருக்கலாம். ஆனால், அதற்கு எதிரான நிலையையே கர்நாடக அரசு மேற்கொண்ட நிலையில், இப்போது அந்த அழைப்பை ஏற்பது தமிழகத்திற்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.</p> <p>கர்நாடக முதல்-மந்திரியின் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்க  கர்நாடக அரசு மறுக்கும் போதெல்லாம் தமிழ்நாடு நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது; மாறாக, கர்நாடக அரசுடன் பேச்சு நடத்திதான் தண்ணீரை பெற வேண்டியிருக்கும். அப்போது கர்நாடகம் பிச்சையாக வழங்கும் நீரை மட்டும்தான் காவிரியில் நாம் பெற முடியும். இது காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பறித்து விடும்.</p><p>எனவே, கர்நாடக முதல்-மந்திரியின் அழைப்பை தமிழக அரசு எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. கர்நாடக அரசுடன் எந்தக் காலத்திலும் பேச்சு நடத்தக் கூடாது. மாறாக, காவிரி நீர்ப்பகிர்வு, மேகதாது அணை ஆகியவை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகளை விரைவாகவும்,  திறமையாகவும் நடத்தி காவிரி நதிநீரில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வனம் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதே உண்மையான சமூகநீதி - மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protecting-livelihood-rights-of-forest-dwelling-people-is-true-social-justice-mu-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protecting-livelihood-rights-of-forest-dwelling-people-is-true-social-justice-mu-veerapandian#comments</comments><guid isPermaLink="false">6963bb87-763e-4d96-b337-2825e78cf538</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:16:12 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:16:12.098Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPI,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/z9dmvafa/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/z9dmvafa/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமை மற்றும் சட்டப்பூர்வ வன உரிமைகளைப் பாதுகாப்பதே உண்மையான சமூகநீதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களைப் புலிகள் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரே அடியாக வெளியேற்றும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு ஆழ்ந்த கவலைக்குரியது.</p><p>மே 29, 2026 தீர்ப்பில், மேகமலைப் பகுதியில் 4,601 ஆக்கிரமிப்புகள் 5,072.653 ஹெக்டேர் பரப்பில் இருப்பதாக நீதிமன்றப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 1,595 பேருக்கு நிரந்தர வீடும், காட்டைச் சார்ந்த வாழ்வாதாரமும்; 233 பேருக்கு தற்காலிக வீடும், காட்டைச் சார்ந்த வாழ்வாதாரமும்; 2,773 பேர் காட்டில் விவசாயத்தை மட்டுமே சார்ந்தவர்களுமாக தமிழ்நாடு அரசு வகைப்படுத்தியுள்ளது. இவர்கள் வெறும் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ அல்ல; வறுமையிலும் வாழ்வாதாரப் பாதுகாப்பின்றியும் காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் ஆவர். பல பத்தாண்டுகளாக, தலைமுறை  தலைமுறைகளாக காடுகளில் வாழும் மக்கள் ஆவர்.</p><p>வன உரிமைகள் சட்டம், 2006 வழங்கியுள்ள உரிமைகள் முழுமையாகக் கண்டறியப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பாக மக்களை வெளியேற்றுவது சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே புறக்கணிப்பதாகும். குறிப்பாக உரிமைகள் அங்கீகரிப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறை முடிவடையும் முன் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான முக்கியமான பாதுகாப்பை வழங்குகிறது.</p><p>சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களின் உரிமைகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. காட்டைப் பாதுகாக்க வேண்டும்; ஆனால் காட்டைப் பாதுகாக்கும் பெயரில் காட்டோடு வாழ்ந்த மக்களை அழித்தொழிக்கக் கூடாது. பெரிய அளவிலான அரசு மற்றும் அதிகார வர்க்க ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக ஏழை வனவாழ் மக்களையே முதன்மை குற்றவாளிகளாக நடத்துவது சமூகநீதிக்கு எதிரானது. நீதிமன்றப் பதிவுகளிலேயே அரசு அதிகாரிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சமீபத்திய அணுகுமுறை தமிழ்நாடு அரசுக்கு ஒரு முக்கிய முன்னுதாரணமாகும். அங்கு 2026 ஜூலை 30-ம் தேதி பழங்குடியினர் விவகாரத்துறை, உரிமைகள் பெறும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு சரிபார்க்கப்படும் வரை அவர்களை வெளியேற்றக் கூடாது என்றும், மாவட்ட நிர்வாகங்கள் மூன்று அடுக்கு சட்ட நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டின் இத்தீர்ப்பை  ஏற்றுக்கொண்டு அவகாசம் கேட்பது பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை உரிமைகளை  பாதுகாக்க வேண்டும் என்ற அரசின் கடமையிலிருந்து தவறும் செயலாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.</p><p>தமிழ்நாடு அரசு, அனைத்து தனிநபர் மற்றும் சமூக உரிமைகளையும் முதலில் முழுமையாகக் கண்டறிந்து அங்கீகரிக்க வேண்டும். அதுவரை கட்டாய வெளியேற்றத்தை நிறுத்த வேண்டும். பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமை மற்றும் சட்டப்பூர்வ வன உரிமைகளைப் பாதுகாப்பதே உண்மையான சமூகநீதியும் சுற்றுச்சூழல் நீதியும் ஆகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காரில் மனைவியை குத்தி கொன்றது ஏன்? கணவர் பரபரப்பு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-the-husband-stab-his-wife-to-death-in-the-car-shocking-news</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-the-husband-stab-his-wife-to-death-in-the-car-shocking-news#comments</comments><guid isPermaLink="false">046e605b-5642-4b70-a8fd-4577692af8b9</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:07:52 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:07:52.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,Car,மனைவி,கிருஷ்ணகிரி,Krishnagiri,Husband wife</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wa3yrd0r/wife33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
காரில் மனைவியை குத்தி கொன்றது ஏன்? ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wa3yrd0r/wife33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>ராயக்கோட்டை அருகே மனைவியை குத்திக் கொன்ற விவசாயி, காரில் இருந்து உடலை கீழே தள்ளி விட்டு ரத்தக்காயங்களுடன் போலீசில் சரண் அடைந்தார்.</p><h2>பிறந்தநாள்</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சின்னபேள கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடசாமி மளகன் எல்லப்பா (வயது 32). விவசாயி. இவருடைய மனைவி பிரேமா (28). இவர்களுக்கு தனுஷ் (11), வெற்றி (8) ஆகிய 2 மகன்களும், லக்ஷயா (10) என்ற மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.</p><p>மூத்த மகன் தனுசுக்கு வருகிற 30-ந்தேதி பிறந்த நாள் என்பதால், நேற்று முன்தினம் அவனுக்கு புத்தாடை வாங்கி கொடுத்துவிட்டு மகன்களை பார்த்து விட்டு கணவன், மனைவி இருவரும் கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.</p><h2>ஓடும் காரில் தகராறு</h2><p>இரவு 8 மணி அளவில் கெலமங்கலம் கூலிசந்திரம் நான்கு வழிச்சாலையில் வந்த போது கணவன்- மனைவி இடையே ஓடும் காரில் தகராறு ஏற்பட்டுள் ளது. உடனே எல்லப்பா காரை நிறுத்தி இருக்கிறார். தகராறு முற்றவே ஆத் திரம் அடைந்த பிரேமா, காரில் இருந்த கத்தியை எடுத்து கணவரை சரமாரி யாக குத்தியதாக தெரிகிறது. இதில் சுதாகரித்துக் கொண்ட எல்லப்பா, மனைவியை தாக்கியதுடன் அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சர மாரியாக குத்தி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரேமா காரி லேயே பிணமானார்.</p><p> உடனே அவரை காரில் இருந்து அங்கேயே கீழே தள்ளி விட்டுவிட்டு எல் லப்பா மத்திகிரி போலீஸ் நிலையம் வந்தார். அவர், கையில் ரத்த காயங் கள் இருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரிடம் போலீசார் விசாரித்த போது, மனைவியை கொலை செய்து விட்டதாகவும். சரண் அடைவதாகவும் கூறியுள்ளார். உடனே போலீசார் அவரை ஒசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இந்த கொலை நடந்த இடம் கெலமங்கலம் போலீஸ் நிலைய எல்லை பகுதி என்பதால், சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கெலமங்கலம் போலீசார் சம் பவ இடத்துக்கு சென்று பிரேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவல்கள் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தன. போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-</p><h2>கருத்து வேறுபாடு</h2><p>எல்லப்பாவுக்கும். பிரேமாவுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 3 குழந்தைகள் பிறந்த நிலை யில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரேமா கெலமங்க லம் அருகே ஜோதிபுரத்தில் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். 2 மகன்களை விடுதியில் தங்கி படிக்க வைத்த எல்லப்பா, மகளை மட்டும் தானே வளர்த்து வந்தார்.</p><p>இதற்கிடையே எல்லப்பாவுக்கும், திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரே மாவுக்கு தெரிந்தவுடன், கணவரை விட்டு பிரிந்து இருப்பதால்தான், அவர் வேறு பெண்ணுடன் பழகுகிறார் என நினைத்துள்ளார். எனவே கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கடந்த 14-ந் தேதி ஒசூர் அனைத்து மகளிர் போலீசில் பிரேமா புகார் அளித்தார்.</p><h2>செருப்பால் அடித்த மனைவி</h2><p>போலீசார் எல்லப்பா, பிரேமா இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேறு பெண்ணுடன் எப் படி பழகலாம் என்று கூறி பிரேமா போலீஸ் நிலையத்தில் வைத்தே கணவரை செருப்பால் அடித்ததாக தெரிகிறது. அத்தனை பேர் மத்தியில் செருப்பால் அடித்து விட்டாளே என்று எல்லப்பா வேதனை அடைந்தார்.</p><p>அப்படி இருந்தும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%20"> கணவன்- மனைவி </a>இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர். கடந்த 3 நாட்களாக எல்லப்பா தன்னுடைய மாமனார் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று முன்தினம்தான் விடுதியில் தங்கி படிக்கும் மகன்களை பார்ப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் காரில் சென்றுள்ளனர்.</p> <h2>யார்? யாரை கொலை செய்வது என்பதில் போட்டி</h2><p>அப்போது போலீஸ் நிலையத்தில் செருப்பால் அடித்து அவமானப்படுத்திய மனைவியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று எல்லப்பா நினைத்துள்ளார். அதற்காகவே கத்தியை எடுத்து காரில் வைத்து இருக்கிறார். ஆனால் கணவன்-மனைவி தகராறு ஏற்பட்ட போது, பிரேமா முந்திக்கொண்டு கத்தியால் கணவரை தீர்த்துக்கட்ட முயன்றுள்ளார். ஆனால் யார்? யாரை கொலை செய்வது என்ற போட்டியில் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டதில் எல்லப் பாவே இறுதியில் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p><p>மனைவியை கணவரே கொலை செய்து விட்டு போலீசில் சரண் அடைந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: தவெக  நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-issue-no-change-in-tvks-stance-minister-nirmal-kumar-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-issue-no-change-in-tvks-stance-minister-nirmal-kumar-clarifies#comments</comments><guid isPermaLink="false">ff79952a-0021-4037-b241-9a3bab0ce57d</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:48:20.876Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா,அமைச்சர் நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/e1r979pj/Nirmal-kumar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/e1r979pj/Nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல் அமைச்சர்  விஜய், தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாக  விமர்சனங்கள் எழுந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடந்த தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய விஜய், “மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். கடந்த வாரம் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><h2>நிலைப்பாடு மாற்றம் என விமர்சனம்</h2><p>543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையை மாற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து முதல் அமைச்சர் விஜய் தற்போது  மாறியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளித்து இருக்கும் அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பதாவது; ஒவ்வொரு மாநிலங்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மின்சார தேவை இருந்தது.  நம்முடைய நிலங்கள் அதிகமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதே மாதிரி ஒவ்வொரு மாநிலங்களின் தேவைகள், பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>கவுன்சிலில் விவாதிக்கவில்லை</h2><p>அடுத்த கூட்டம் தெலுங்கானாவில் வைக்கலாமா? என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 543- என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. யாரும் திரித்து பேச வேண்டாம். காவிரி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம். எனவே அது குறித்து  இந்த கவுன்சிலில் விவாதிக்கவில்லை. முல்லை பெரியாறு அணை உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் 39 எம்பிக்கள் தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.தென் மாநிலங்களைத்தான் தொகுதி மறுவரையறை பாதிக்கும்” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>பேருந்து சேவைகளை ரத்து செய்யும் முடிவை உடனே கைவிடுக! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediately-reverse-the-decision-to-cancel-bus-services-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediately-reverse-the-decision-to-cancel-bus-services-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">2dd9a722-c95b-4be8-944e-65325b8e2fbf</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:03:48 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:03:48.694Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பேருந்து சேவை,Bus Service</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/lj2krody/8.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/lj2krody/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டத்தில் வார நாட்களில் 136 பேருந்துச் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பேருந்து சேவை நிறுத்தம்</h2><p>அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்தவும், டீசல் செலவைக் குறைக்கவும் தமிழகம் முழுவதும் பல பேருந்துச் சேவைகளை நிறுத்த தவெக அரசு திட்டமிட்டு வருவதாகவும், ஏற்கனவே விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டத்தில் வார நாட்களில் 136 பேருந்துச் சேவைகள் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.</p><h2>கிராமப்புற மாணவர்கள் அவதி</h2><p>முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 2000-ஆம் ஆண்டில் கொண்டு வந்த 'பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா' திட்டத்தின் மூலம் கிராமங்களுக்குச் சாலைகள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் அரசு, இன்று அனைத்து நகரங்களையும், கிராமங்களையும் இணைக்கும் வகையில் தரமான சாலைக் கட்டமைப்பை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தற்போதைய தவெக அரசு திடீரென பேருந்து சேவைகளை நிறுத்துவதால் கிராமப்புற மாணவர்களும், கூலித் தொழிலாளர்களும் பெரும் அவதிக்குள்ளாவார்கள்.</p><h2>வணிக ரீதியான துறையல்ல</h2><p>அரசுப் போக்குவரத்து என்பது வணிக ரீதியான லாப-நஷ்டத்தைப் பார்க்கும் துறையல்ல; அது சாமானிய மக்களின் அடிப்படை உரிமை மற்றும் சேவைத் துறையாகும். ‘மாற்றத்திற்கான ஆட்சி' என்று முழங்கிவிட்டு, தவெக அரசு அதிகாரத்திற்கு வந்த 100 நாட்களிலேயே ஏழை, எளிய மக்களைப் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, ரத்து செய்யப்பட்ட அனைத்துப் பேருந்துச் சேவைகளையும் உடனடியாக மீண்டும் இயக்குவதோடு, மேலும் சேவைகளைக் குறைக்கும் முடிவையும் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tambaram-and-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tambaram-and-velankanni#comments</comments><guid isPermaLink="false">f9001f0e-495e-4a87-9f4a-9e3cd3f3f8fb</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:51:38 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:51:38.773Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Tambaram,தாம்பரம்,Special train,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/q2s08nw6/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/q2s08nw6/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.50 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 06037) மறுநாள் காலை 7.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடைகிறது.</p><p>மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 26, செப்டம்பர் 2, 9 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) நள்ளிரவு 12.45 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06038) அதேநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. </p><p>21 அம்ரித் பாரத் ரெயில் பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள் - ரூ.16.2 கோடிக்கு ஏலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/letters-handwritten-by-mahatma-gandhi-auctioned-for-rs-162-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/letters-handwritten-by-mahatma-gandhi-auctioned-for-rs-162-crore#comments</comments><guid isPermaLink="false">24c45db9-5268-4dff-91db-7f52ff4ee40e</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:45:42 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:45:42.158Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>auction,ஏலம்,Mahatma Gandhi,மகாத்மா காந்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/jpok163d/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/jpok163d/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>மகாத்மா காந்தி தனது நெருங்கிய கூட்டாளியும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி.ஹிங்கோரனிக்கு எழுதிய, உண்மை, அகிம்சை மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் சார்ந்த 688 கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு ஒன்று, 'சாப்ரானார்ட்' (Saffronart) நிறுவனம் நடத்திய ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையானது. இதன் மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட இந்திய வரலாற்று ஆவணத்திற்கான உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த பிரதிகள் அனைத்தும் மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய கடிதங்கள் ஆகும். ஆனந்த் டி.ஹிங்கோரனியின் மனைவி வித்யா மறைந்த பிறகு, அவருக்கு ஆறுதல் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் மகாத்மா காந்தி இந்த கடிதங்களை எழுதியுள்ளார். பின்னர் இந்த கடித பரிமாற்றம் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்துள்ளது. பின்னாட்களில் இந்த கடிதங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு "A Thought for the Day" என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. </p> <p>இந்த கடிதங்கள் குறித்து ஏல நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மகாத்மா காந்தியின் இந்த கையெழுத்துப் பிரதியானது உண்மை, அகிம்சை, பிரம்மச்சரியம், உடைமை தவிர்த்தல், அச்சமின்மை, மத சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, பிரார்த்தனை, ராமநாமம், சேவை, உழைப்பு, பசி, கடமை, சுயராஜ்யம், தார்மீகப் பொறுப்பு, மௌனம், மனசாட்சி, பற்றின்மை, சுய-உணர்தல் மற்றும் இறைவனைத் தேடுதல் ஆகியவற்றைப் பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இது மட்டுமின்றி, மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் அடங்கிய 86 தொகுப்புகள் இன்று ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக, கடவுள் மற்றும் பகவத் கீதை குறித்த காந்தியின் சிந்தனைகளை உள்ளடக்கிய, கையெழுத்துப் பிரதி மற்றும் கடிதங்களைக் கொண்ட 'Message on God' (கடவுள் குறித்த செய்தி) என்ற தொகுப்பு, ரூ.1.68 கோடிக்கு விற்பனையானது.</p><p>இந்த ஏலத்தில் இடம்பெற்ற தனிப்பட்ட பொருட்களில், காந்தியின் 'பெட்டி ராட்டை' (box spinning wheel) மற்றும் 2 கடிதங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு ரூ. 1.02 கோடிக்கு விற்பனையானது. அதே போல், காந்தி எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட, அவரது கையொப்பம் இடப்பட்ட புகைப்படம் ரூ.78 லட்சத்திற்கும், பொருளாதார சுதந்திரம் குறித்த காந்தியின் கடிதங்கள், தந்தி செய்திகள் மற்றும் அஞ்சல் அட்டைகள் அடங்கிய தொகுப்பு ரூ.57.60 லட்சத்திற்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை - மைத்துனர் உள்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electrician-hacked-to-death-over-illicit-affair-three-arrested-including-brother-in-law</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electrician-hacked-to-death-over-illicit-affair-three-arrested-including-brother-in-law#comments</comments><guid isPermaLink="false">2f3e1227-9d6b-4887-9de3-017ef171c52f</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:41:51 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:41:51.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,murder,கொலை,செங்குன்றம்,Redhills</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wwaoly7i/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wwaoly7i/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மைத்துனர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>கள்ளக்காதல்</h2><p>சென்னை செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (40 வயது). எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகன்களை பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில், ரத்தினவேல் பாண்டியனுக்கும் அவரது மைத்துனர் சரவணனின் (39 வயது) மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சரவணன் பலமுறை ரத்தினவேல் பாண்டியனை கண்டித்தும், அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், ரத்தினவேல் பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.</p><h2>வெட்டிக்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் செங்குன்றத்தை அடுத்த எம்.எ.நகர். வ.உ.சி. தெருவில் பைக்கில் சென்றுகொண்டிருந்த ரத்தினவேல் பாண்டியனை சரவணன், அவரது தம்பி தனசேகர் (34 வயது), உறவினர் பழனிசாமி (45 வயது) ஆகியோர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ரத்தினவேல் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.</p><p>தகவலறிந்த செங்குன்றம் உதவி கமிஷனர் பிராங்கிளின் ரூபன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ரத்தினவேல் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன், தனசேகர், பழனிசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராஜீவ் காந்தியின் தொலைநோக்குப் பார்வையே இன்றைய டிஜிட்டல் இந்தியா - ஜோதிமணி புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-digital-india-is-rajiv-gandhis-vision-jyothimani-praise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-digital-india-is-rajiv-gandhis-vision-jyothimani-praise#comments</comments><guid isPermaLink="false">ddd279fb-1c5f-4035-b4bb-656e3976b03c</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:40:44 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:40:44.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>birthday,பிறந்த நாள்,Jyothimani MP,ஜோதிமணி எம்பி,Rajiv Gandhi,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/e4k025df/83.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/e4k025df/83.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது.</p><p>இந்தியாவின் இளம் பிரதமராக பொறுப்பேற்று, இளமையின் கனவுகளோடும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையோடும் இந்தியாவை நவீனப் பாதையில் வழிநடத்தியவர் தலைவர் ராஜீவ் காந்தி.</p><p>நவீன இந்தியா, பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம், தொலைத்தொடர்பு புரட்சி என இன்று நாம் காணும் பல மாற்றங்களுக்கான அடித்தளத்தை அவர் தனது தொலைநோக்குப் பார்வையால் உருவாக்கினார்.</p><h2>வாக்களிக்கும் வயது 18</h2><p>அதேபோல், இளைஞர்களை ஜனநாயகத்தின் மையத்திற்கு கொண்டு வருவதற்காக வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்தார். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டிற்கான முயற்சிகள் மூலம், கிராமப்புறப் பெண்களும் அரசியல் அதிகாரத்திலும் முடிவெடுக்கும் அமைப்புகளிலும் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கினார்.</p><h2>ஜனநாயகப் புரட்சி</h2><p>என்னைப் போன்ற கிராமப்புறப் பின்னணியில் இருந்து வரும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண் அரசியலில் அடியெடுத்து வைக்கவும், மக்களுக்காகப் பணியாற்றவும் உருவான வாய்ப்புகளின் பின்னணியில், ராஜீவ் காந்தி முன்னெடுத்த இந்த ஜனநாயகப் புரட்சிக்கும் முக்கியமான பங்கு உண்டு.</p><h2>டிஜிட்டல் புரட்சி</h2><p>இன்று இந்தியா காணும் இளைஞர் எழுச்சியும், டிஜிட்டல் புரட்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கண்ட கனவுகளின் தொடர்ச்சியே. எதிர்கால இந்தியாவை கனவு கண்ட அந்த இளம் பிரதமரின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வைக்கும் நவீன இந்தியாவை உருவாக்கிய அவரது பங்களிப்பிற்கும் அவரது பிறந்த தினத்தில்  எனது நெஞ்சார்ந்த அன்பையும்,  மரியாதையையு.  செலுத்துகிறேன்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/rajiv-gandhi">ராஜீவ் காந்தியின் </a>கனவு நவீனமான, சமத்துவமான, இளைஞர்களின் சக்தியால் முன்னேறும் இந்தியா  என்றும் நமக்கு வழிகாட்டட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>
ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும் ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன்; ஏனென்றால்... கே.என். நேரு விளக்கம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-if-i-have-a-thousand-acres-of-land-i-eat-ration-rice-because-kn-nehrus-explanation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-if-i-have-a-thousand-acres-of-land-i-eat-ration-rice-because-kn-nehrus-explanation#comments</comments><guid isPermaLink="false">824665dc-b4c8-49de-bec6-3edbb3771db0</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:05:12 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:05:12.929Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Assembly,Minister K.N. Nehru,கே.என். நேரு,ration rice,ரேஷன் அரிசி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/k7wr431g/fdkne.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கே.என். நேரு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/k7wr431g/fdkne.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும் ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன் என முன்னாள் அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/">கே.என். நேரு</a> அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் காலை 9.30 மணிக்கு இன்றைய அலுவல்கள் தொடங்கின.  கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.  கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை.  அதற்கான விளக்கம் சபாநாயகர் தரப்பில் அளிக்கப்பட்டது.</p><p>இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக அவையில் பேசினர்.</p>  <h2>வெள்ளை நிற அரிசி</h2><p>இன்றைய நிகழ்வில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி அது தொடர்பான விவாதத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார்.</p><p>இதனை அடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கே.என். நேரு பேசினர். அவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ரேஷன் கடை அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும்தான் மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை என்றார். இதனால், சர்ச்சை எழுந்தது. தி.மு.க. தரப்பில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.</p> <h2>பரம ஏழை</h2><p>இதன்பின்னர், பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, கே.என். நேருவிடம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. அதனால், அவற்றிலேயே அவர் நெல் விளைவித்து கொள்கிறார். ஆனால், பரம ஏழையாக ரேஷன் கடையில்தான் அரிசி வாங்குகிறேன் என அவர் கூறி இன்றுதான் தெரிந்து கொண்டேன் என்றார்.</p><p>தொடர்ந்து அவர் பேசும்போது, சன்ன ரக நெல் அரிசிக்கு அதிக ஊக்கத்தொகை வழங்குவதற்கு காரணம், அதனை உற்பத்தி செய்ய வேண்டும் என பல்வேறு விவசாய சங்கங்களுடனான பலகட்ட ஆலோசனைக்கு பின்னர், முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.</p><h2>ரேஷன் அரிசி</h2><p>நான் சிறு வயதில் இருக்கும்போது, ரேஷன் கடைக்கு சென்று அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம் என் குடும்பம். அரிசி பெரிய அளவில் இருக்கும். விவசாயிகள் எங்களிடம், பயிர்களை மாற்ற வேண்டுமென்றால், சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி கொடுங்கள் என்றனர்.</p><p>இதனால் முதல்-அமைச்சர், மற்ற ஆட்சியை விட்டு விடுவோம். நம்முடைய ஆட்சியில் மக்களுக்கு கொடுக்க கூடிய அரிசியை சன்ன ரக அரிசியாக கொடுப்போம் என்றார். அனைத்து ரேஷன் கடைகளிலும் தாய்மார்கள் உள்பட மக்கள் வாங்கி செல்ல கூடிய அரிசி, சாப்பிட கூடிய அளவில் இருக்க வேண்டும் என கூறியவர் முதல்-அமைச்சர் என்று பேசினார்.</p> <h2>தமிழகத்தில் மட்டும்தான்...</h2><p>இதன்பின்னர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான காமராஜ் பேசும்போது, ரேஷன் அரிசி சாப்பிடுவதில்லை. வாங்குவதில்லை என 2 அமைச்சர்களும் கூறினர். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் அனைவருக்கும் அரிசி வழங்கப்படுகிறது. மற்ற எல்லா இடங்களிலும் பகுதியளவே கொடுக்கிறார்கள். தமிழகத்தில் உள்ளது, அனைவருக்கும் அரிசி வழங்கும் ஒரு பெரிய திட்டம் என்றார்.</p><p>அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டு, நாங்கள் கொச்சைப்படுத்தவில்லை. இந்த அனைத்து திட்டங்களும் எந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டாலும் அதில் நல்லவை உள்ளன. அமைச்சர்கள் இலவச அரிசியை பயன்படுத்தியது இல்லை. அது கருணை என்ற அடிப்படையில் இல்லாமல், தகுதி என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். மக்களை சென்றடைய வேண்டும். அது மக்களின் உரிமை. அதனையே கூறினோம் என்றார்.</p> <h2>கே.என். நேரு பேச்சு</h2><p>இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசும்போது, சன்ன ரக நெல்லை நாம் செய்ய முடியாது. அது அதிக அளவில் கிடைப்பதில்லை. ஆந்திரா பொன்னி போன்ற சில அரிசி ரகம் மட்டுமே அதிகம் கிடைக்கும். சன்ன ரகம் ஒரு பட்டத்தில்தான் பெற முடியும். அவற்றை வெளியில் இருந்து தான் வாங்க முடியும். அதிகம் விளைவிக்க முடியாது என்றார்.</p><p>ஆயிரக்கணக்கான நெல் வைத்திருக்கிறேன் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். எவ்வளவு நிலங்கள் இருந்தாலும், சாப்பிடறதுதான் சாப்பிட முடியும். சர்க்கரை நோய் வந்தவர்கள் அந்த ரேஷன் அரிசி சாப்பிட்டால்தான் குறையும் என டாக்டர் கூறினார். அந்த அறிவுரையின் பேரிலேயே அந்த அரிசியை சாப்பிட்டு வருகிறோம். இதுதான் உண்மை.</p><p>ஏதோ நாங்கள் உற்பத்தி செய்து, அவற்றை உங்களை போன்றவர்களுக்கு கொடுப்பதற்காகதான் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>ஒண்டிவீரன் நினைவு தினம் - வானதி சீனிவாசன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ondiveeran-memorial-day-tribute-to-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ondiveeran-memorial-day-tribute-to-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">72af95df-1793-4fe1-be82-591e0ed89c20</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:01:19 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:01:19.307Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Ondiveeran Memorial Day,ஒண்டிவீரன் நினைவு தினம்,புகழஞ்சலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2wf42dig/82.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2wf42dig/82.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு தினத்தையொட்டி  தேசிய பாஜக முன்னாள் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்  புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.</p><h2>புகழஞ்சலி</h2><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும், தனியாகச் சென்று ஆங்கிலேயப் படைக்கு எதிராகப் பல போர்களில் வெற்றி  கண்ட மாவீரரான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">ஒண்டிவீரன்</a> அவர்களது நினைவு நாளில் அவரது வீரத்தையும்  நாட்டுப் பற்றையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு துணை நிற்போம்&apos; - காங்கிரஸ் கட்சி தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-party-resolves-to-support-the-tamil-nadu-governments-efforts-to-prevent-the-construction-of-a-dam-at-mekedatu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-party-resolves-to-support-the-tamil-nadu-governments-efforts-to-prevent-the-construction-of-a-dam-at-mekedatu#comments</comments><guid isPermaLink="false">26856244-6815-4719-abde-bae7f714b6b3</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:57:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:57:18.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Meghadadu Dam,மேகதாது அணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/dv29xss4/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/dv29xss4/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மறைந்த முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:-</p><p>“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:</p> <h2>அரசியல் தீர்மானம்</h2><p>காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2004 முதல் 2014 வரை இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று மகத்தான சாதனைகளை புரிந்தது. இதற்காக வரலாற்றில் டாக்டர் மன்மோகன்சிங் என்றும் நினைவு கூரப்படுவார்.</p><p>2014 மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது நரேந்திர மோடி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள ரூபாய் 85 லட்சம் கோடி கறுப்புப்  பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்துவோம், ஆண்டுக்கு 2 கோடிப்  பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காகக்  கூட்டுவோம், அனைத்துப் பொருட்களையும் இந்தியாவிலேயே தயாரிப்போம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிப்போம், விலைவாசியைக்  குறைப்போம், எல்லோருக்கும் கழிப்பறை, எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் மின்சாரம், எல்லோருக்கும் சமையல் எரிவாயு இணைப்பு, நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றுவோம், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கில் நிலைநிறுத்துவோம், 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் கோடி டாலராக உயர்த்துவோம், அனைத்து மாநில முதல்வர்களையும் பிரதமருக்கு இணையாக மதிப்போம், இட ஒதுக்கீட்டை உறுதி செய்து சமூகநீதியைக்  காப்போம், அனைத்து மாநில மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்போம் என்ற பல வாக்குறுதிகளை வழங்கினார். தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்து, நரேந்திர மோடி பிரதமராகப்  பொறுப்பேற்று 12 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று பா.ஜ.க.வை கேட்க வேண்டிய இடத்தில்   காங்கிரஸ் கட்சி இருக்கிறது. </p><h2>வரலாறு காணாத சமத்துவமின்மை  </h2><p>நரேந்திர மோடி ஆட்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏழை,எளியவர்களின் நலனைப் புறக்கணித்து சில தொழிலதிபர்கள் பயனடைவதற்கே உதவியிருக்கின்றன. இதை அம்பலப்படுத்துகின்ற வகையில் பல அறிக்கைகள் வெளிவந்துள்ன. 2026ஆம் ஆண்டின் உலக சமத்துவமின்மை அறிக்கையின்படி,  நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 58 சதவீதத்தை மேல்மட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினர் பெற்று வருகின்றனர். கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவிகித மக்களுக்கு வெறும் 15 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. </p><p>மேல்மட்டத்திலுள்ள  10 சதவீத கார்ப்பரேட்டுகள் நாட்டின் 65 சதவீத சொத்துகளை மோடி ஆட்சியில் குவித்துள்ளனர். இதில் உயர்மட்டத்தில் உள்ள  ஒரு சதவிகித நபர்கள் மட்டும் 40 சதவீத சொத்துகளைத் தன்வசப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் தற்போதைய வருமான சமத்துவமின்மை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை விட மோசமான நிலையில் உள்ளது. மேல்மட்டத்தில் உள்ள 10 சதவிகிதத்தினரின் வருமானத்திற்கும், கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினரின் வருமானத்திற்குமான இடைவெளி கடந்த 2014 முதல் 2024 வரை நிலையாக இருக்கிறது. இந்த வரலாறு காணாத சமத்துவமின்மை நரேந்திர மோடியின்  ஆட்சி கார்ப்பரேட்டுகளின் காவலன் என்பதை  உறுதி செய்கிறது. இந்த சொத்துக் குவிப்பை நம்பத்தகுந்த சர்வதேச ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்பார்ம் அறிக்கை உறுதி செய்திருக்கிறது.</p><h2>தொகுதி மறுவரையறை </h2><p>மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுகிறபோதெல்லாம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது தென் மாநில மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்குத்தான் பயன்படும். 1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் 543 மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையே இன்னும் 25 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டுமென்று அன்னை இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது, 1976-ல் அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார். 2002 ஆம் ஆண்டில் பிரதமர் வாஜ்பாய் இதே நிலையை 2026 வரை நீட்டிக்கிற வகையில் மீண்டும் திருத்தம் கொண்டு வந்து மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்று தொடர உறுதி செய்தார். </p><p>ஆனால், 2011 மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை உயர்த்த வேண்டுமென்று பா.ஜ.க. முயற்சி செய்வது, குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் மக்கள் பெருக்கத்தைக்  குறைத்த தென் மாநில மக்களை தண்டிக்கின்ற செயலாகும். எனவே, 1971 மக்கள் தொகை அடிப்படையில் இறுதி செய்யப்பட்ட 543 மக்களவைத் தொகுதிகளையும், அதில் மகளிருக்கான இடஒதுக்கீடு 33 சதவிகிதத்தையும் வழங்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகும். இதன்மூலம் அனைத்து மாநில மக்களையும் உள்ளடக்கி வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற கூட்டாட்சி முறையை உறுதி செய்ய முடியும் என்று  இப்பொதுக்குழுக்  கூட்டம் உறுதியாக நம்புகிறது. </p><h2>விவசாயிகளின் விரோத அரசு </h2><p>விவசாயிகளின் விளை பொருட்களுக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதற்கு மாறாக, குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பறிக்கின்ற வகையில் 3 வேளாண் சட்டங்களை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடும் குளிர், வெயிலைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி அந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைக்கிற நிலையை ஏற்படுத்தினார்கள். பா.ஜ.க.வின் ஒரே நாடு, ஒரே சந்தையை விவசாயிகள் ஏற்கத் தயாராக இல்லை. </p><p>அதற்கு மாறாக, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு என்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கையை ஒன்றிய பா.ஜ.க.  அரசு இதுவரை நிறைவேற்ற முன்வரவில்லை. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதால் அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என்று கூறுகிற ஒருவரை பிரதமராகப் பெற்றிருப்பதற்கு விவசாயிகள் வெட்கித்  தலைகுனிய வேண்டும். நரேந்திர மோடியைப் போன்ற விவசாய விரோத எண்ணம் கொண்ட, கார்ப்பரேட் ஆதரவு பிரதமரை இந்தியா இதுவரை கண்டதில்லை. </p><h2>கறுப்புப் பணம் ஒழிப்பு </h2><p>தேர்தல் பரப்புரையில் கொடுத்த கறுப்புப் பணம் ஒழிப்பு குறித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதற்கு மாறாக, பொருளாதாரப்  பேரழிவுக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி மேற்கொண்டார். ஆனால், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மொத்தத் தொகையில் 99 சதவிகிதம் வங்கிகளுக்குத் திரும்ப வந்து விட்டது. இதனால் கறுப்புப் பணம் ஒழியவில்லை. </p><p>எனவே, கறுப்புப்  பணத்தை கார்ப்பரேட்டுகள் வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்வதற்குத்தான் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை உதவியது. ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால்  35 லட்சம் பேர் வேலையிழந்தனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபாய் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது நரேந்திர மோடியால் நாட்டுக்கு ஏற்பட்ட பேரழிவுகளில் ஒன்றாகும். </p><h2>தேர்தல் பத்திர நன்கொடை குவிப்பு</h2><p>கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை செய்ததற்காக பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திர நன்கொடை குவிந்துள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக அரசியல் கட்சிகள் நிதி பெறுவது  சட்டவிரோதம் என்று கடந்த பிப்ரவரி 2024-ல் உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. </p><p>ஆனால், இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பாக 2018 முதல் 2024 வரை கார்ப்பரேட்டுகள் வழங்கிய மொத்த நன்கொடை ரூபாய் 16,518 கோடி. இதில் பா.ஜ.க. பெற்றது மட்டும் ரூபாய் 8252 கோடி. இது மொத்த நன்கொடையில் 50 சதவிகிதமாகும். இது ஊழல் இல்லை என்றால் வேறு எது ஊழல் என்பதை பா.ஜ.க. விளக்க வேண்டும். </p><h2>தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு</h2><p>தன்னிச்சையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் நரேந்திர மோடியின் கைப் பாவையாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சிறப்பு தீவிர திருத்தம் என்கிற பெயரில் பீகார் தேர்தலுக்கு முன்பாக 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது. இதை எதிர்த்து தலைவர் ராகுல்காந்தி வாக்காளர் உரிமைப் பேரணி நடத்தினார். ஆனாலும், சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் வாக்காளர்களை நீக்கி வாக்கை திருடுகிற தேர்தல் ஆணையத்தின் போக்கு மாறவில்லை. </p><p>சமீபத்தில் மூன்றாவது கட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக 16 மாநிலங்கள் 3 யூனியன் பிரதேசங்களில் ஒன்றரை கோடி வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கையின் காரணமாக தேர்தலில் சமநிலைத்தன்மை இல்லாமல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக செயல்படுகிற போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இதை எதிர்த்து தொடர்ந்து போராடி உரிமைக்குரல் எழுப்பி வருகிற தலைவர் ராகுல்காந்தி அவர்களை இக்கூட்டம் மனதார பாராட்டுகிறது, போற்றுகிறது.</p><h2>காவிரி - மேகதாது</h2><p>நீண்டகாலமாக நிலவி வந்த காவிரி பிரச்சினைக்கு முடிவு கட்டுகின்ற வகையில் 2007 இல் வெளிவந்த நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு, 2018 இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி நீர் பகிர்வு நடைபெற வேண்டும். ஆனால், இவற்றை மீறுகின்ற வகையில் காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. </p><p>தமிழகம் பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரிப் படுகை மாநிலங்களை பாதிக்கின்ற வகையில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீரின் அளவை நிர்ணயிக்கும் தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள பிலிண்குடுலுவிற்கு 4 கி.மீ. தூரத்திற்கு மேலே கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே கட்டுப்படுத்தப்படாத மழை நீரின் மூலம் தமிழகத்திற்கு மட்டுமே கிடைக்கக் கூடிய 80 டி.எம்.சி. நீரை அபகரிக்கும் நோக்கத்துடன் ரூபாய் 9000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தமிழ்நாடு எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளாது. மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால், காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாற வழிகோலும் என தமிழகமே ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. </p><p>இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. இது பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கை உறுதிப்படுத்துகிறது. கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் எல்லோருமே தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவேதான் கடந்த காலங்களில் செயல்பட்டிருக்கிறார்கள். காவிரி நீரின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும் தமிழக அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போம் என்று இப்பொதுக்குழு உறுதி கூறுகிறது. </p> <h2>மாநில உரிமைகள் பறிப்பு  </h2><p>மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்போம் என்று வாக்குறுதி வழங்கிய நரேந்திர மோடி ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் ஒற்றை ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசின் அதிகாரங்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டன. மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் ஜி.எஸ்.டி., திட்டக்குழு கலைப்பு, புதிய கல்விக் கொள்கை, மாநில மொழிகளுக்கான நிதிக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. </p><p>அனைத்து மொழிகளையும் சமமாகக்  கருத வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் புதிய கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழித் திட்டம் திணிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூபாய் 2952 கோடியை விடுவிக்க ஒன்றிய பா.ஜ.க.வின் கல்வியமைச்சர் தயாராக இல்லை. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுகிற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு  ஊதியம் வழங்க முடியாமல் தமிழக அரசே அந்த நிதிச்சுமையை ஏற்று வருகிறது.</p><p>அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக்  கூட்டணி ஆட்சியில்,  2004 இல் தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்பட்டது. 2017 முதல் 2025 வரை சமஸ்கிருத மொழிக்கு ரூபாய் 2532 கோடியும், செம்மொழித்  தகுதி பெற்ற தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கும்  சேர்த்து ரூபாய் 147.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத்  தொகையை விட சமஸ்கிருத மொழிக்கு 17 மடங்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியை இந்தியாவில் பேசுபவர்கள் மொத்தம் 14,000 பேர் தான். பா.ஜ.க.வின் மொழிக் கொள்கை என்பது இந்தி மொழியோடு சமஸ்கிருதத்தையும் திணிப்பதுதான்.</p><h2>வெள்ள நிவாரண நிதி மறுப்பு  </h2><p>கடந்த 12 ஆண்டுகளில் வெள்ளம், வறட்சி நிவாரண நிதியாக தமிழக முதலமைச்சர்கள் ஒன்றிய அரசிடம் கேட்ட மொத்தத் தொகை ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து 500 கோடி. ஆனால், பிரதமர் மோடி வழங்கியதோ ரூபாய் 5778 கோடி. கேட்ட தொகையில் 5 சதவிகிதத்தைக் கூட தர மறுத்த நரேந்திர மோடி தமிழகத்தை வஞ்சித்ததற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. அதனால்தான் தமிழக மக்கள் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வெறுத்து ஒதுக்கினார்கள்.</p><h2>கூட்டணி சகாப்தத்தை வரவேற்கிறோம்</h2><p>கடந்த 60 ஆண்டுகளாக திராவிட இயக்கங்களோடு கூட்டணி வைத்து அவர்கள் ஆட்சி அமைத்ததில்  காங்கிரஸ் கட்சி பெரும் பங்காற்றியிருக்கிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் எந்த வகையிலும் பங்கு கொடுப்பதற்கு திராவிட இயக்கங்கள் தயாராக இருந்ததில்லை. இந்நிலையில் திராவிட இயக்கங்களின் புரையோடிப் போன ஊழலாட்சிக்கு முடிவு கட்டுகின்ற வகையில் த.வெ.க. தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் எடுத்த முயற்சிக்கு 27 மாதங்களில் பலன் கிடைத்து தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக நெஞ்சார இக்கூட்டம் வரவேற்கிறது. </p> <h2>ஊழலற்ற ஆட்சி</h2><p>தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு எந்தவகையிலும் இடமில்லை என்கிற நோக்கத்தோடு, வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவு நிறைவேறியிருக்கிறது. இதைக் கொண்டாடுகிற வகையில் தான் ‘லஞ்சம் தவிர் - நெஞ்சம் நிமிர்” என்கிற இயக்கத்தை காமராஜர் பிறந்தநாளில் தமிழகமெங்கும் காங்கிரஸ் கட்சி பரப்புரை மேற்கொண்டதை இக்கூட்டம் குறிப்பிட விரும்புகிறது. </p><h2>நமது லட்சியமும் இலக்கும்</h2><p>மத்தியில் நடைபெற்று வரும் நரேந்திர மோடி ஆட்சியில் நிகழும் மக்கள் விரோதச்  செயல்களுக்கு எதிராக மக்களவையிலும், மக்கள் மன்றத்திலும் நாள்தோறும் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தமது கடுமையான உழைப்பின் மூலம் எதிர்ப்பைவெளிப்படுத்தி வருகிறார். நரேந்திர மோடியை எதிர்க்கின்ற பேராண்மைமிக்க அரசியல் தலைவராக ராகுல்காந்தி திகழ்ந்து வருகிறார். 140 கோடி மக்களின் ஒற்றைக் குரலாக அவர் ஒலித்து வருகிறார். தலைநகர் டெல்லியில் மாணவர்கள் நிகழ்த்திய பேரணியை சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க. அரசு அடக்குமுறையை ஏவிவிட்டு கடுமையான தாக்குதலை நடத்தியது. இத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு  உத்தரவிட்டவர்கள் யார் என்ற தலைவர் ராகுல்காந்தியின் கேள்விக்கு இதுவரை பதில் சொல்ல பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. </p><p>இந்நிலையில், 2029 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணி வெற்றி பெறுகின்ற வகையில், காங்கிரஸ் கட்சியினர் ஒரே இலக்குடன் பணியாற்ற வேண்டுமென்று இப்பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது. </p><p>தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தலைமையை தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று அவரது கருத்துகளைப்  பரப்பி, மக்கள் ஆதரவைப் பெறுவதன் மூலமே நமது நோக்கத்தை அடைய முடியும். இத்தகைய கடுமையான இயக்கப் பணிகளின் மூலமே 2029 தேர்தலுக்குப் பிறகு தலைவர் ராகுல்காந்தி அவர்களை பிரதமராக்குகிற முயற்சியில் தமிழ்நாடு  பங்களிக்க முடியும். </p><p>தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு த.வெ.க. தலைவர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்த, திராவிட இயக்கங்கள் அல்லாத ஆட்சியில் பங்கேற்க வேண்டுமென காங்கிரஸ் கட்சிக்கு அவர் மிகுந்த விருப்பத்தோடு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொண்டு,  இன்றைக்கு இரு அமைச்சர்கள் ஆட்சியில் பங்கு வகித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் நமது அமைச்சர்களை சந்திப்பதைவிட வேறு மகிழ்ச்சி காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்க முடியாது. </p><p>கடந்த 60 ஆண்டுகளாக திராவிட இயக்கங்களோடு மாறி மாறிக் கூட்டணி வைத்து அவர்களை ஆட்சியில் அமர வைத்தபிறகும்,  காங்கிரஸ் கட்சிக்கு எந்த பங்கையும் அவர்கள் வழங்கியதில்லை. திராவிட இயக்கத்தைச்  சார்ந்தவர்கள்,  தாங்கள் ஆட்சி அமைத்த பிறகு,  கூட்டணிக் கட்சியினரோடு இணைந்து பணியாற்றத் தயாராக இல்லாததற்குக்  காரணம், அவர்களிடம் ஜனநாயக உணர்வோ, வெளிப்படைத் தன்மையோ இல்லாமல் இருந்ததுதான். அதனால்தான் திராவிட இயக்கங்கள் கடந்த தேர்தலில் படுதோல்வி அடைகிற நிலை ஏற்பட்டது. </p><p>தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தனது கொள்கைகளைப்  பறைசாற்றுவதன் மூலம் தனித்தன்மையோடு இயங்கி, நமக்கான கருத்தியலை முன்வைத்து தனித்துவமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கூட்டம் வலியுறுத்துகிறது. இந்த நோக்கத்தை அடைவதன் மூலமே தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி  அமைந்திட பெருந்தலைவர் காமராஜர், பாரத ரத்னா ராஜீவ்காந்தி ஆகியோர் கண்ட கனவை நனவாக்கிட சூளுரை மேற்கொண்டு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வழிகாட்டுதலின்படி கண்துஞ்சாது, அயராது பாடுபடுவோம் என இப்பொதுக்குழுக் கூட்டத்தில் உறுதியேற்போம்.”</p><p>மேற்கண்ட தீர்மானங்கள் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-21-districts-of-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-21-districts-of-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">48f30080-5bcf-433d-8128-e3fc7949d69e</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:56:36 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:56:36.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/kp5ijqux/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/kp5ijqux/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.</p><p><strong>20-08-2026:</strong> செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>21-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>22-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>20-08-2026 முதல் 24-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>20-08-2026 முதல் 24-08-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
5 ஆண்டு கால ஆட்சியில் நெல் மழையில் நனைந்ததா? இல்லையா? தி.மு.க.-த.வெ.க. வாதம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-paddy-get-drenched-in-rain-in-5-years-of-rule-or-not-dmk-tvk-debate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-paddy-get-drenched-in-rain-in-5-years-of-rule-or-not-dmk-tvk-debate#comments</comments><guid isPermaLink="false">419f8e15-b5b0-4549-bb40-106832533d5b</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:43:50 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:43:50.807Z</atom:updated><atom:author><atom:name>Arun Rajan K</atom:name><atom:uri>/api/author/2406194</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,த.வெ.க.,TNAssembly,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0ppc6xqt/tnpwas.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ த.வெ.க.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0ppc6xqt/tnpwas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நெல் மழையில் நனைந்ததா? இல்லையா? என தி.மு.க.-த.வெ.க. அவையில் வாதத்தில் ஈடுபட்டனர்.</p><p>தமிழக சட்டசபையில் காலை 9.30 மணிக்கு இன்றைய அலுவல்கள் தொடங்கின.  கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.  கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை.  அதற்கான விளக்கம் சபாநாயகர் தரப்பில் அளிக்கப்பட்டது.</p><p>இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக அவையில் பேசினர்.</p> <h2>வெள்ளை நிற அரிசி</h2><p>இன்றைய நிகழ்வில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதன்படி அது தொடர்பான விவாதத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார்.</p><p>இதனை அடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசும்போது, எங்களுடைய 5 ஆண்டுகளில் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாப்பாக குடோன்களில் வைத்தோம்.  நெல்லை பாதுகாத்தோம்.  நெல்லை நனையாமல், முளைக்க விடாமல், வெள்ளை நிறத்தில் அரிசி கிடைக்க வழி செய்தோம் என்றார்.</p> <h2>கருப்பான அரிசி</h2><p>தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என். நேரு பேசும்போது, 30 வருடங்களுக்கு முன்பு நானும் இந்த உணவு துறையை பார்த்துள்ளேன்.  அப்போது அரிசி கிடைப்பது கஷ்டம்.  கருப்பான அரிசியே கிடைக்கும் என்றார்.</p><p>அமைச்சராக சக்கரபாணி இருந்தபோது, நெல்லை நனையாமல் கொண்டு சென்றவர் என்றார்.  அதனால் ரேஷன் அரிசி கால்நடைகளுக்கு அல்ல.  எல்லா மக்களும் சாப்பிடுகின்றனர்.  இதனால், சர்க்கரை அளவு குறையும் என்பதே உண்மை என்றார்.</p> <h2>1 லட்சம் மூட்டை</h2><p>தொடர்ந்து அவையில் உணவு துறை அமைச்சர் பேசும்போது, கே.என். நேரு உள்பட முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் பேசும்போது, தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியில் நெல் நனையவில்லை என்றனர்.  ஆனால், எங்களிடம் ஓராண்டு கால அறிக்கை மற்றும் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் உள்ளன.  அவை விவசாயிகள் கூறிய விசயம்தான்.</p><p>எடுத்துக்காட்டாக, 2025 டிசம்பரில் மதுராந்தகத்தில் 5 ஆயிரம் மூட்டைகள் மழையில் நனைந்தன.  விருத்தாசலத்தில் 5 ஆயிரம் நெல் முட்டைகள் நனைந்துள்ளன.  ஜனவரி 2025-ல் சிவகங்கையின் இளையான்குடி பகுதியில் நெல் கொள்முதல் தாமதத்திற்காக விவசாயிகள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  2026 பிப்ரவரியில், சேத்தியாதோப்பில் 1 லட்சம் மூட்டை, நெல் கொள்முதல் தேக்கமடைந்தது.  மானாமதுரையில் பல ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்திருக்கின்றன.  பத்திரிகைகளில் வெளிவந்த இதற்கான அறிக்கையை சேகரித்து வைத்திருக்கிறேன் என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>கட்சி உறுப்பினர் விபரத்தை சேகரிக்க வட்டாட்சியர் வெளியிட்ட உத்தரவு சட்டவிரோதம்: சி.பி.ஐ.(எம்)  கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tahsildars-order-to-collect-party-membership-details-is-illegal-cpim-condemns-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tahsildars-order-to-collect-party-membership-details-is-illegal-cpim-condemns-it#comments</comments><guid isPermaLink="false">2573b426-1781-473e-9eb3-29858d6a16e0</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:41:43 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:41:43.675Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,பெ.சண்முகம்,ஜனநாயகம்,சிபிஎம்,CPM,CPI(M),கட்சி உறுப்பினர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/yjzm6io1/cpi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/yjzm6io1/cpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் (பெ.சண்முகம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் 2026 ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. </p><h2>சட்டவிரோத உத்தரவு</h2><p>இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். </p><p>கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..</p><p>தீர்மானம் 1 :</p><p>சிபிஐ(எம்), சிபிஐ கட்சி உறுப்பினர் விபரத்தை சேகரிக்க குஜிலியம்பாறை வட்டாட்சியர் வெளியிட்ட சட்டவிரோத உத்தரவு ! சிபிஐ(எம்) வன்மையான கண்டனம் !</p><p>இந்த சட்டவிரோத உத்தரவுக்கு வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் பொறுப்பேற்கவும் வலியுறுத்தல் !!</p><p>நவீன தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கம், அது கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் நியாயமற்ற சலுகைகள் ஆகிய காரணங்களால், நாடு முழுவதும் ஜனநாயக உரிமைகள், போராட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும் இடதுசாரி அமைப்புகளும் இத்தகைய கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் மற்றும் மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளுக்கு எதிராகவும் வலுவாக போராடி வருகிறது. அரசு கார்ப்பரேட் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் நியாயமற்ற சலுகைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகிறது.</p><h2>கட்சி உறுப்பினர்களின் விவரம்</h2><p>டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் 40 நாட்கள் வரையிலும் ஓரிடத்தில் அமர்ந்து காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுகிறது. உலகில் பல நாடுகளில் மிக முக்கிய நகரத்தின் மைய பகுதியில், பொதுமக்கள், அரசியல் இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களின் கோரிக்கையை முன் வைத்து போராட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுகிறது. </p><p>ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற ஜனநாயக உரிமைகள், கோரிக்கைகளை முன் வைத்து நடத்தும் போராட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்த போராட்டங்களை காவல்துறை மிக கடுமையாக ஒடுக்கும் செயலை அரங்கேற்றுவது, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை மறுக்கும் செயலாகும். அரசின் இத்தகைய ஒடுக்குமுறையை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.</p><p> மேற்படி அடக்குமுறையின் உச்சமாக, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, தனது அதிகார எல்லை மற்றும் வரம்புகளை மீறி, சட்டத்திற்கு விரோதமாக, தாலுகாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  உறுப்பினர்கள் குறித்த விவரத்தை சேகரிக்க சொல்லி, 18.08.2026 அன்று, ந.க.எண். (2017/2026/அ1) உத்தரவிட்டு உள்ளார். </p><p>இந்த உத்தரவின் நகலை, வட்டாட்சியர் அய்யாசாமி, மாவட்ட ஆட்சியர், பழனி கோட்டாட்சியர், தலைமையிடத்து துணை ஆட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார். மாவட்ட ஆட்சியர், பழனி கோட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மேற்படி சட்ட விரோத உத்தரவின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.</p><h2>ஜனநாயக படுகொலை</h2><p>மேற்படி உத்தரவை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட சிபிஐ(எம்) சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மேற்படி வட்டாட்சியர் பயிற்சி முடிந்துவிட்டது என மாவட்ட ஆட்சியர் 18.08.2026 பிற்பகலில், தனியரை மாவட்ட பயிற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக உத்தரவு வெளியிட்டு உள்ளார். </p><p>மேற்படி வட்டாட்சியர் செயல் கண்டிக்கத்தக்கது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஒன்று என ஜனநாயக குரல்கள் அதிகரித்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை, ஜனநாயக படுகொலைக்கு உடந்தையாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் மாநில வருவாய் துறைக்குள் இருக்கும் ஜனநாயக விரோத கருப்பு ஆடுகளின் செயலாக தெரிகிறது.</p><p>மாநில முதல்வரின் கவனத்திற்கு மேற்படி பிரச்சனை எடுத்து செல்லப்பட்ட பின்னரும், மாநிலம் முழுவதும் ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இது குறித்து விவாதித்து வரும் நிலையிலும், மாவட்ட ஆட்சியர் பயிற்சியில் இருந்து விடுவித்ததாக அறிக்கை வெளியிட்டிருப்பது, மாநில ஆட்சியாளர், வருவாய் துறை அதிகாரிகளுக்கு அளிக்கும் வழிகாட்டுதல் மீது சந்தேகம் வலுவாக ஏற்படுகிறது. </p><p>ஆட்சியரின் செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்த சட்டவிரோத மற்றும் அத்துமீறலுக்கு வருவாய் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டுமெனவும், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.</p><h2>இளைஞர்கள் பங்கெடுப்பதை தடுக்க</h2><p><strong>தீர்மானம் 2:</strong></p><p>போராடும் உரிமையை மறுக்கவும், இடதுசாரி கட்சியினரை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்ட கல்வித்துறை சுற்றறிக்கைக்கு சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!</p><p>தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல் !!</p><p>கல்லூரி கல்வி ஆணையர் 17.08.2026 தேதியிட்டு, அரசு கடித ந.க எண். 1075/அ1/2026-1, 14.08.2026 என்பதை பார்வை என குறிப்பிட்டு, ஒரு உத்தரவை அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பி உள்ளார். இந்த உத்தரவு, பார்வையில் குறிப்பிட்ட அரசு கடிதத்தில், இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களில், மாணவ-மாணவியர் மற்றும் இளைஞர்கள் பங்கெடுப்பதை, தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே, துறை இடைத் தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை எடுத்த விவரங்களை தெரிவிக்குமாறு கல்லூரி கல்வி ஆணையர் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>திட்டமிட்டு நடந்த செயல்</h2><p>14.08.2026 தேதியிட்ட அரசின் சிறப்பு செயலாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பிய கடிதம், மேற்படி உத்தரவை கல்லூரி கல்வி ஆணையருக்கு வழங்கியுள்ளது. ஜூலை மாத சட்ட ஒழுங்கு குறித்த பரிசீலனையின்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் எம்.சாய்குமார் ஐ.ஏ.எஸ் வலியுறுத்தியதாக உள்ளது. </p><p>கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி கல்வி ஆணையரகம் இவை குறித்து என்ன நடவடிக்கை எடுத்தது என்ற அரசின் சிறப்பு செயலாளருடைய கேள்வி மிகத் தீவிர தன்மையுடன் ஜனநாயக இயக்கங்களை ஒடுக்கும் நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது.</p><p>தலைமைச் செயலாளரும் கலந்து கொண்ட கூட்டத்தில் போராடும் உரிமை மறுக்கப்படுவது, கல்வி நிலையங்களுக்குள் காவல்துறை அத்துமீறி செல்வதை அனுமதிக்கும் வழிகாட்டுதல் வழங்கியிருப்பது மிகக் கொடிய அடக்குமுறையை கட்டவிழ்க்கும் நோக்கம் கொண்டதாகும்; அனைத்தும் திட்டமிட்டு நடந்த செயலாகும். எனவே, தலைமைச் செயலாளர் உள்ளிட்டு அதிகாரிகள் பங்கெடுத்து நடந்த பரிசீலனைக் கூட்டத்தின் இந்த முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.</p> <h2>ஜனநாயக பறிப்பு சம்பவங்கள்</h2><p>இடதுசாரி கட்சியினரையும், இதர ஜனநாயக நடவடிக்கைகளையும் குறிவைத்து ஒடுக்க வேண்டும் என்ற நோக்கம் ஏன் உருவானது? தலைமைச் செயலாளர் எப்படி அமைச்சரவைக்கு அல்லது முதல்-அமைச்சருக்கு தெரியாமல், இதுபோன்ற மிகப்பெரிய முடிவுகளை எடுத்திருப்பார்? போன்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுவது இயற்கையானதாகும்.</p><p>19.08.2026 அன்று மீண்டும் கல்லூரி கல்வி ஆணையர் ஒரு கடிதம் மூலம் மேற்படி உத்தரவை விலக்கி கொள்வதாக கூறியுள்ளார். ஆனாலும், மேற்படி உத்தரவுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய வழிகாட்டுதலை வழங்கிய தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டுமெனவும், எதிர்வரும் காலத்தில் இது போன்ற ஜனநாயக பறிப்பு சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை தமிழக முதலமைச்சர் உறுதி செய்திட வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அமித்ஷாவின் தமிழக வருகைக்கு கருப்பு கொடி காட்டுவதா? - காங்கிரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">67c774bb-5604-4f71-b4e4-b4edb6d0d57c</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:30:49 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:30:49.927Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,காங்கிரஸ்,Congress</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/mgammsbm/nainar.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/mgammsbm/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“தமிழகத்திற்கு காவேரி நீரை குறித்த நேரத்திற்கு திறந்து விட மறுத்த உங்கள் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் டி.கே.சிவக்குமார் தற்போது தமிழகத்தில் தான் இருக்கிறார். தமிழகத்தின் குறுவை சாகுபடியை திட்டமிட்டு சீரழித்த அவருக்கு எதிராக, தமிழக பாஜகவாலும் போர்க்கொடி தூக்கியிருக்க முடியும். காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் எங்களுடன் கரம் கோர்த்திருப்பார்கள். </p><p>ஆனால், நாங்கள் அதை செய்யவில்லை, செய்யவும் மாட்டோம். காரணம், நாங்கள் பிறந்த இந்த தமிழ் மண் எங்களுக்கு “விருந்தோம்பலின்” முக்கியத்துவத்தை போதித்துள்ளது. நமது மத்திய உள்துறை மந்திரியை சந்திப்பதற்காக, அரசு முறைப் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும், கர்நாடக காங்கிரஸ் முதல்வருக்கு உரிய மரியாதை கொடுப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை. </p><p>தமிழகக் காங்கிரஸாரைக் கூட சந்திக்காமல், அலுவல் ரீதியாக தமிழகம் வந்து, திரும்பும் கர்நாடக முதல்வரின் அரசுப் பயணத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், அந்த அரசியல் நாகரிகம் உங்களிடம் இல்லை என்பது வருத்தத்துக்குரியது. இதனால் தானோ என்னமோ, இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்கள் உங்கள் கட்சியை வெறுக்கிறார்கள். நாட்டின் மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷாவின் அரசுப் பயணத்திற்கு கருப்பு கொடி காட்டி, தமிழகத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்க நினைத்த உங்களை, மக்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாருக்கு தூக்கு தண்டனை - கோர்ட்டு அதிரடி உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/courts-stern-order-death-sentence-for-priest-who-sexually-assaulted-four-minor-girls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/courts-stern-order-death-sentence-for-priest-who-sexually-assaulted-four-minor-girls#comments</comments><guid isPermaLink="false">31099f5d-4c64-4a35-a836-aeb8aefaf0f1</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:21:30 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:21:30.056Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,தூக்கு தண்டனை,போக்சோ கோர்ட்டு,priest,பாதிரியார்,sexually assaulted,போக்சோ வழக்குகள்,கோர்ட்டு உத்தரவு,போக்சோ கைதி,பாதிரியார் மீது பாலியல் வழக்கு,போக்சோ கோர்ட்டு தீர்ப்பு,Nellai Court Judgment,Nellai court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/laja7rtc/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/laja7rtc/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.</p><h2>4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை</h2><p>தேவர்குளம் அருகே மேல இலந்தைகுளம் பகுதியில் கிறிஸ்தவ சபை செயல்பட்டு வருகிறது. இங்கு பாதிரியாராக பணியாற்றி வந்த ஆபிரகாம் (47), கடந்த 2022-ம் ஆண்டு திருச்சபைக்கு வந்த 4 சிறுமிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.</p><p>மேலும், சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும், அவ்வாறு தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.</p><h2>பாதிரியார் கைது</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில் தேவர்குளம் போலீசார் விசாரணை நடத்தி, பாதிரியார் ஆபிரகாமை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி வாதாடினார்.</p><h2>தூக்கு தண்டனை</h2><p>வழக்கில் போலீசார் தாக்கல் செய்த ஆதாரங்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்களின் அடிப்படையில், ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கோர்ட்டு தெரிவித்தது.</p><p>வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், 4 சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.</p><h2>சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு</h2><p>மேலும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.</p><p>இந்த ஆண்டில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நெல்லை </a>போக்சோ சிறப்பு கோர்ட்டில் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இது 4-வது முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒண்டிவீரன் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ondiveeran-memorial-day-tribute-to-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ondiveeran-memorial-day-tribute-to-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">e17cc21f-acdc-4be0-9c89-28e1915622fe</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:21:08 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:21:08.821Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Tribute,நினைவு தினம்,ஒண்டிவீரன்,Ondiveeran Memorial Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6ddzia0v/289.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6ddzia0v/289.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி அவருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். </p><h2>புகழஞ்சலி</h2><p>இது தொடர்பாக அவர் வெளியிட்ட தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தாய் மண்ணின் மானத்திற்காகவும், அடக்குமுறைக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டிற்காகவும் வரலாற்றில் தடம் பதித்த மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் இன்று. காலங்கள் மாறினாலும், தலைமுறைகள் கடந்தாலும், அவரது பெயருடன் இணைந்த துணிச்சலும் தியாகமும் தமிழர் வரலாற்றின் நினைவுப் பக்கங்களில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். </p><p>தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தாய் மண்ணின் மீதான பற்றின் அடையாளமாக வாழ்ந்த மாவீரர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D"> ஒண்டிவீரனின்</a> இந்த நாளில் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
ரேஷன் கடையில் அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம் என் குடும்பம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-family-that-bought-rice-from-the-ration-shop-and-ate-it-is-my-family-minister-aadhav-arjunas-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-family-that-bought-rice-from-the-ration-shop-and-ate-it-is-my-family-minister-aadhav-arjunas-speech#comments</comments><guid isPermaLink="false">3c669521-f0ab-442c-a276-0a1fb3d4f01f</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:10:18.611Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,அமைச்சர்,ration rice,ரேஷன் அரிசி,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/t3u93005/tnpwa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/t3u93005/tnpwa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>ரேஷன் கடையில் அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம் என் குடும்பம் என <a href="https://www.dailythanthi.com/news/india">அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</a> பேசினார்.</p><p>தமிழக சட்டசபையில் காலை 9.30 மணிக்கு இன்றைய அலுவல்கள் தொடங்கின.  கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.  கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை.  அதற்கான விளக்கம் சபாநாயகர் தரப்பில் அளிக்கப்பட்டது.</p><p>இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக அவையில் பேசினர்.</p> <h2>வெள்ளை நிற அரிசி</h2><p>இன்றைய நிகழ்வில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதன்படி அது தொடர்பான விவாதத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார்.</p><p>தொடர்ந்து சபாநாயகர் அனுமதியுடன் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசும்போது, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூட சுகர் குறையும் என்பதற்காக இதனையே சாப்பிடுகிறார் என்று கூறினார்.  இதனை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என். நேரு பேசும்போது, 30 வருடங்களுக்கு முன்பு நானும் இந்த உணவு துறையை பார்த்துள்ளேன்.  அப்போது அரிசி கிடைப்பது கஷ்டம்.  கருப்பான அரிசியே கிடைக்கும் என்றார்.</p> <h2>சர்க்கரை குறையும்</h2><p>அமைச்சராக சக்கரபாணி இருந்தபோது, நெல்லை நனையாமல் கொண்டு சென்றவர் என்றார்.  அதனால் ரேஷன் அரிசி கால்நடைகளுக்கு அல்ல.  எல்லா மக்களும் சாப்பிடுகின்றனர்.  இதனால், சர்க்கரை அளவு குறையும் என்பதே உண்மை என்றார்.</p> <h2>ஆயிரக்கணக்கான ஏக்கர்</h2><p>இதன்பின்னர், பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, கே.என். நேருவிடம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன.  அதனால், அவற்றிலேயே அவர் நெல் விளைவித்து கொள்கிறார்.  ஆனால், பரம ஏழையாக ரேஷன் கடையில்தான் அரிசி வாங்குகிறேன் என அவர் கூறி இன்றுதான் தெரிந்து கொண்டேன் என்றார்.</p><p>தொடர்ந்து அவர் பேசும்போது, சன்ன ரக நெல் அரிசிக்கு அதிக ஊக்கத்தொகை வழங்குவதற்கு காரணம், அதனை உற்பத்தி செய்ய வேண்டும் என பல்வேறு விவசாய சங்கங்களுடனான பலகட்ட ஆலோசனைக்கு பின்னர், முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.</p> <h2>ரேஷன் அரிசி</h2><p>நான் சிறு வயதில் இருக்கும்போது, ரேஷன் கடைக்கு சென்று அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம் என் குடும்பம்.  அரிசியின் பெரிய அளவில் இருக்கும்.    பெரும்பாலும் தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் ரேஷன் அரிசி வாங்கி சாப்பிடுவதில்லை என்றார்.  இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.</p><p>அப்போது அவர், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மையையும், தற்போதுள்ள கால கட்ட நிலைமையை நாங்கள் கூறுகிறோம்.  அதனால், விவசாயிகள் எங்களிடம், பயிர்களை மாற்ற வேண்டுமென்றால், சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி கொடுங்கள் என்றனர்.</p><p>இதனால் முதல்-அமைச்சர், மற்ற ஆட்சியை விட்டு விடுவோம்.  நம்முடைய ஆட்சியில் மக்களுக்கு கொடுக்க கூடிய அரிசியை சன்ன ரக அரிசியாக கொடுப்போம்.  அனைத்து ரேஷன் கடைகளிலும் தாய்மார்கள் உள்பட மக்கள் வாங்கி செல்ல கூடிய அரிசி, சாப்பிட கூடிய அளவில் இருக்க வேண்டும் என கூறியவர் முதல்-அமைச்சர்.</p> <h2>அரிசி கடத்தல்</h2><p>அதற்காகவே பொது ரக நெல்லுக்கு பதிலாக இனி, சன்ன ரக நெல்லை பயிரிட வேண்டும்.  அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும்.  அப்போதுதான், அவற்றை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் அதிகளவில் கொடுக்க முடியும் என்றார்.</p><p>90 சதவீதம், ரேஷன் அரிசியை வாங்கி யாரும் சாப்பிடுவதில்லை.  இட்லி மாவுக்கு பயன்படுத்தி கொண்டிருந்தனர்.  ஆந்திராவுக்கு, கர்நாடகாவுக்கு கடத்தப்பட்டது.  அது தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.  இதனால், சன்ன ரக நெல்லை அதிகம் கொள்முதல் செய்து, பாதுகாப்பாக வைப்பதற்கான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.</p><p>இது சர்வேயின் அறிக்கை.  இதனை மாற்றுவதற்காக தான் சன்ன ரக நெல்லுக்கு அதிக ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார் என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பின்பற்ற வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/supreme-court-verdict-on-cauvery-issue-must-be-followed-chief-minister-vijay-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/supreme-court-verdict-on-cauvery-issue-must-be-followed-chief-minister-vijay-insists#comments</comments><guid isPermaLink="false">618c9fcb-3988-47ce-9761-dbad5b710bc6</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:07:10 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:07:10.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,காவிரி,Cauvery water,காவிரி தண்ணீர்,Cauvery affair,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/twf2y1l7/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/twf2y1l7/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>முதல்-மந்திரிகள் மாநாடு</h2><p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. </p><p>இதில் முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக் ரமர்கா, கேரளம் முதல்-மந்திரி சதீசன், புதுச்சேரி மாநில கவர்னர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அ திகாரிகள் பங்கேற்றனர்.</p><h2>மாநாடு நிறைவில் முதல்-அமைச்சர் விஜய் பேசியதாவது:-</h2><p>நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்ஜினாக தென்மாநிலங்கள் உள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்கு 30 சதவீதம். நாட்டின் வளர்ச்சியில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்.</p><p>காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பின்பற்ற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய முடிவுகளை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தின் நதிநீர் உரிமையை பாதுகாக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.</p><p>பெங்களூரு மெட்ரோவை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும். இது சிறந்த உள்கட்டமைப்பாக இருக்கும். ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும். தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையாது என சட்டப்பூர்வ உறுதியளிக்க வேண்டும். மக்கள்தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்காக தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது.</p><p>முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நீதித்துறை உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைமடை மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். மாநிலங்களின் நிதி தன்னாட்சியை மதிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு நியாயமான நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும். மாநிலங்களின் செயல்திறன், வளர்ச்சி முதலீடுகளை கருத்தில் கொண்டு நியாயமான நிதிப்பகிர்வை வழங்க வேண்டும். </p><p>தென்மாநிலங்களை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரம்புகளைத் தீர்மானிக்கும் நெகிழ்வுத் தன்மையை மாநிலங்கள் மீண்டும் பெற வேண்டும். போதை பொருட்களை தடுக்க மாநிலங்களுக்கு இடையே கூட்டமைப்பு தேவை. கடல்வழிப் போக்குவரத்து, மீன்பிடித்தலில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம். சகோதர மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டியல் இன மாணவர்களின் வாழ்வை சிதைக்கும் த.வெ.க அரசு - தி.மு.க. குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-is-ruining-the-lives-of-scheduled-caste-students-dmks-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-is-ruining-the-lives-of-scheduled-caste-students-dmks-allegation#comments</comments><guid isPermaLink="false">a3f822d2-1e40-4c4f-9ba5-8a6cb0a7bf73</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:55:22 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:55:22.507Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,student,மாணவர்கள்,வன்னி அரசு,Vanni Arasu,பட்டியல் இனம்,CM Vijay,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/05dgjt8f/inamane.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/05dgjt8f/inamane.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைத்தையும் மூடி மறைக்கும் பொம்மை அரசாக விஜய் அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான இ.பரந்தாமன் தெரிவித்துள்ளார். </p> <h2>அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது:-</p><p>த.வெ.க ஆட்சியில் 8 பட்டியலின அமைச்சர்கள் இருந்தும், ஒரு தலித் மாணவர் தன் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர முடியாமல் பரிதவிக்கும் பரிதாபகரமான நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.  ஏழை எளிய பட்டியல் சமூக மாணவர்கள் அயல்நாடுகள் சென்று உயர்கல்வி பயில பொருளாதாரம் எந்தவிதத்திலும் தடையாக இருக்க கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு அன்றைய முதல்-அமைச்சர் எங்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த திட்டம்தான் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம்! </p><p>அந்த திட்டத்தில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி படித்து வரும் மாணவர்களுக்கு நிதியுதவியை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது தவெக அரசு. தகுதிவாய்ந்த SC, ST மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் முதுகலை, பிஎச்.டி மற்றும் முதுமுனைவர் (Post Doctoral) ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் முழு நிதியுதவித் வழங்கப்பட்டு வருகிறது.</p> <h2>நிதி தாமதம் தொடர்பாக வீடியோ</h2><p>மாணவர்களின் குடும்ப வருமான அடிப்படையில் கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவினம் உட்பட ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வரை முழு நிதியுதவி வழங்கப்படுகிறது. அதோடு விசா, விமானப் பயணக் கட்டணம், மருத்துவக் காப்பீடு போன்ற இதர செலவுகளும் இந்த திட்டத்தில் ஏற்கப்படுகின்றன. வெளிநாடு சென்று உயர் கல்வி பயிலத் திட்டமிடும் மாணவர்களுக்கு, விசா மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் நான் முதல்வன் திட்டம் மூலமாக விலையில்லாமல் வழங்கப்பட்டன.</p><p>கழகத்  தவைர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல்  ஆட்சியில் எந்த தொய்வும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த இந்த திட்டம், தவெக ஆட்சியில் நிதி தாமதத்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மலேசியாவில் உள்ள மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் திசுப் பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவத் துறையில் 2-ஆம் ஆண்டு பிஎச்.டி பயிலும் மதுரையைச் சேர்ந்த பாரதிதாசன் என்ற ஆராய்ச்சி மாணவர் நிதி தாமதம் தொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கிறார்.</p><p>அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் 2023-ல் மலேசியா சென்ற பாரதிதாசன் முதலாம் ஆண்டிற்கான (2024) கட்டணங்களை அரசு வழங்கியதாகவும் ஆனால், இரண்டாம் ஆண்டிற்கான (2025-2026) கல்விக்கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவிற்கான நிதி வரவில்லை என சொல்லியிருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் வர வேண்டிய நிதி 5 மாதங்களாக வரவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.</p> <h2>த.வெ.க. அரசு</h2><p>இது தொடர்பாக பாரதிதாசன் அமைச்சருக்கும், செயலாளருக்கும் 12 முறை மின்னஞ்சல்கள் அனுப்பியும் அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. நிதி கிடைக்காததால் மருத்துவ ஆராய்ச்சி பாதிக்கப்பட்டு நண்பர்களிடம் கடன் வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார். மின்னஞ்சல் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத அரசு, பாரதிதாசன் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரல் ஆன நிலையில் தவறை மறைக்க, அவர் செலவின ஆவணங்களை முறைப்படி சமர்ப்பிக்கவில்லை என பொய்யான காரணங்களை  இப்போது முன் வைக்கிறது.</p><p>இது தொடர்பாக இத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை த.வெ.க அரசின் தவறை மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது. அமைச்சர்  வெளியிட்ட அறிக்கையிலே பாரதிதாசனுக்கு நிதி வழங்கப்பட்ட தேதிகளை குறிப்பிட்டிருக்கிறார். அந்த தேதிகள் அத்தனையும் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டவை. அவரே உண்மையை போட்டு உடைத்துவிட்டார்.  தி.மு.க. ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு த.வெ.க. ஆட்சியில் கிடைக்காமல் போனது ஏன்?</p><p>பாரதிதாசன் ஏப்ரல் மாதமே ஆவணங்களை அனுப்பியிருக்கிறார். மின்னஞ்சல் மூலமும் நினைவூட்டியிருக்கிறார். அவருடைய பெற்றோர் அமைச்சரை நேரிலும் சந்தித்து சொல்லியிருக்கிறார்கள். இவை எதன் மீதும் நடவடிக்கை இல்லை என்பதால்தான் மன உளைச்சலில் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டார். அவர்  தேதி வாரியாக அரசிடம் முன் வைத்த கோரிக்கையையும் ரசீது ஆவணங்களையும் வெளியிட்டுள்ள நிலையில் த.வெ.க. அரசு தனது முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்ளப் போகிறது?</p> <h2>உயர்கல்விக் கனவு</h2><p>ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகத் தொடங்கப்பட்ட இயக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு பொறுப்பு வகிக்கும் துறையில், பட்டியல் இன மாணவரின் அயலக உயர்கல்விக் கனவு சிதைக்கப்படுவது வேதனையின் உச்சம்.  சமூக நீதித்துறை அமைச்சருக்கு இந்த ஆட்சியில் கொஞ்சமாவது அதிகாரம் இருக்கிறதா? அல்லது சூப்பர் பவராக இயங்குபவர்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்களா?</p><p>அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் மிக முக்கியமான இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த உதவித்தொகைக்கான ஆவணங்களை அதிகாரப்பூர்வ நிதி ஆதாரமாக ஏற்றுக்கொள்ள மறுப்பதால் இந்த ஆண்டு வெளிநாடு செல்லவிருக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி குறித்த எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.  இந்த ஆண்டு பிரிட்டனில் படிக்க விண்ணப்பித்த 316 மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த சிக்கலைத் தீர்க்க, உடனடியாக பிரிட்டன் தூதரகத்துடனும், இங்கிலாந்து அரசுடனும் பேசக் கோரி தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் -  நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார்.</p> <h2>அமைச்சர் வன்னி அரசு</h2><p>எதிர்க் கட்சியாக இருந்தாலும் தி.மு.க., ஒன்றிய அரசிடமும் சம்மந்தப்பட்ட தூதரக அதிகாரிகளிடமும் கடிதங்கள் எழுதி குரல் கொடுத்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றிய அரசிடம் இதுபற்றி பேசியதா? ஒன்றிய அரசுக்கு இதுதொடர்பாக சமூகநீதித் துறை அமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறாரா? <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> வாய் திறக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? அனைத்தையும் மூடி மறைக்கும் பொம்மை அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> அரசு.</p><p>சட்டமன்றத்தில் இந்த பிரச்னையை தி.மு.க. உறுப்பினர் கோவி.செழியன் எழுப்பிய போது அதே பொய்யை சொல்லியிருக்கிறார் அமைச்சர் வன்னி அரசு. பிரச்னையை தீர்ப்பதற்கு பதில், பழி தீர்க்கும் நோக்கம் மட்டுமே அவருடைய உரையில் வெளிப்பட்டிருக்கிறது.</p><p>பட்டியல் இனத்தவர்களின் உயர்கல்விக்காக சிறந்த நோக்கத்துடன் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவது போலவே விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இந்திய அளவில் ஒன்றிய பா.ஜ.க அரசு பட்டியல் இன மாணவர்களுக்கான கல்வி நிதியுதவிகள் பலவற்றை நிறுத்தியுள்ள நிலையில், பா.ஜ.க வழியிலேயே தமிழ்நாட்டில் உள்ள த.வெ.க. கூட்டணி அரசும் செயல்படுகிறது.</p> <h2>மக்கள் மன்றம்</h2><p>தாங்கள் பதவியில் இருப்பதற்காக  தலித் மாணவர்களின் உழைப்பையும், கனவையும் குழிதோண்டிப் புதைக்கும் இந்த சோபாமாடல் அரசின் நாடகங்களை மக்கள் மன்றம் நிச்சயம் தண்டிக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>ஒப்பிலா வீரத்துக்கு சொந்தக்காரர் ஒண்டிவீரன்: மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-tribute-to-unparalleled-valor-ondiveeran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-tribute-to-unparalleled-valor-ondiveeran#comments</comments><guid isPermaLink="false">ce237040-31ea-421e-8a9a-805c122ac325</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:47:37 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:47:37.188Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Stalin,முகஸ்டாலின்,ஒண்டிவீரன் நினைவு தினம்,எக்ஸ் தளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/yc5p547o/ondi-veeran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஒண்டிவீரன் நினைவு நாள்.. மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி]]></media:title><media:description type="html"><![CDATA[ மாவீரன் ஒண்டிவீரனுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/yc5p547o/ondi-veeran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255-வது நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">எக்ஸ்</a> தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-</p> <h2>புகழஞ்சலி</h2><p> “18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே ஆங்கிலேயப் படைகளுக்கு அடிபணிய மறுத்து, அவர்களை அடித்து விரட்டிய ஒப்பிலா வீரத்துக்குச் சொந்தக்காரரான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D"> ஒண்டிவீரன்</a> அவர்களின் நினைவுநாள்.</p><p>பூலித்தேவரின் சிறந்த போர்ப்படைத் தளபதியாகவும் தென்னகத்தின் விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்திய தென்மலைப் போர் நாயகனாகவும் திகழ்ந்த அப்பெருந்தீரரின் புகழ் அழியாது மக்கள் மனங்களில் வாழும்!” </p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்சிஜன் டேங்கர் லாரியில் திடீர் கசிவு: வெண்புகை மண்டலமாக மாறிய சாலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-leak-in-oxygen-tanker-lorry-near-sriperumbudur-road-engulfed-in-clouds-of-white-vapour</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-leak-in-oxygen-tanker-lorry-near-sriperumbudur-road-engulfed-in-clouds-of-white-vapour#comments</comments><guid isPermaLink="false">e4ffadb1-a972-4d34-ab92-fb0459ed91fc</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:38:21 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:38:21.736Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Air pollution,கசிவு,Sriperumbudur,Tanker Lorry,ஆக்சிஜன்,ஸ்ரீபெரும்புதூர் அருகே</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/89b316wf/21.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஆக்சிஜன் வாயு கசிவு]]></media:title><media:description type="html"><![CDATA[ டேங்கர் லாரியிலிருந்து ஆக்சிஜன் கசிந்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/89b316wf/21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஸ்ரீபெரும்புதூர்</a> - தாம்பரம் சாலையில் நின்றுகொண்டிருந்த ஆக்சிஜன் டேங்கர் லாரியில் இருந்து ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக, அப்பகுதி முழுவதும் அடர்ந்த வெண்புகை மண்டலமாக மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>ஆக்சிஜன் கசிவு</h2><p>ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் பெரிய தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களாகும். அங்குள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காகவோ அல்லது மருத்துவத் தேவைக்காகவோ திரவ <a href="https://www.dailythanthi.com/topic/oxygen">ஆக்சிஜன்</a> ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, லாரியின் வால்வுப் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆக்சிஜன் கசியத் தொடங்கியது.</p><h2>பனிமூட்டமாக மாறிய சாலை</h2><p>திரவ ஆக்ஸிஜன் காற்றில் கசியும்போது, அது வளிமண்டல ஈரப்பதத்துடன் வினைபுரிந்து அடர்ந்த வெண்புகையை உருவாக்கியது. இதனால் சில நிமிடங்களிலேயே அந்த சாலை முழுவதும் பனிமூட்டம் போல் வெண்புகை சூழ்ந்தது. புகைமூட்டம் மிக அடர்த்தியாக இருந்ததால், எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத நிலை ஏற்பட்டது.</p><p>சாலையின் ஒரு பகுதி முற்றிலும் மறைந்ததால், விபத்து ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். சில நொடிகள் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் மற்றும் பாதசாரிகள் பயந்து ஓடினர்.</p><h2>விரைந்து வந்த மீட்புக்குழு</h2><p>தகவல் அறிந்தவுடன் போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்த பாதையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. பிறகு, தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் டேங்கரின் கசிவு சரிசெய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.</p><p>ஆக்ஸிஜன் என்பது எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு அல்ல என்றாலும், அது எரியும் தன்மைக்கு துணை புரியும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Sriperumbudur | சாலையில் கசிந்த ஆக்ஸிஜன்?  - வெண்புகை மண்டலமாக மாறிய ஸ்ரீபெரும்புதூர் ரோடு <a href="https://t.co/IYjt9htptD">https://t.co/IYjt9htptD</a> <a href="https://x.com/hashtag/sriperumbudur?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#sriperumbudur</a> <a href="https://x.com/hashtag/kanchipuram?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#kanchipuram</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2090300542505685312?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கடன் வாங்கி எம்எல்ஏக்களுக்கு காரா.? - சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cars-for-mlas-bought-on-credit-seeman-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cars-for-mlas-bought-on-credit-seeman-questions#comments</comments><guid isPermaLink="false">b42723e5-a29f-4c81-94f0-14ef719d371f</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:32:55 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:32:55.897Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,Naam tamilar katchi</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/mhfi0kr4/seemaan.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/mhfi0kr4/seemaan.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; </p><p>”நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு?</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?  </p><p>ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?</p><p>ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்?</p><p>அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா? </p><p>விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டமன்ற  உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா? </p><p>மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா?</p><p>தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு?</p><p>அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா?</p><p>மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஏற்காடு பண்பலை வானொலியில் வேளாண்மை, காலநிலை சார்ந்த உள்ளூர் நிகழ்ச்சிகளை  ஒலிபரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-programs-related-to-agriculture-and-weather-should-be-broadcast-on-yercaud-fm-radio-anbumani-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-programs-related-to-agriculture-and-weather-should-be-broadcast-on-yercaud-fm-radio-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">69ad18ae-88f7-4691-8433-437a67b9780a</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:26:20 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:26:20.113Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,Anbumani Ramadas,ஏற்காடு,Tourism,வானொலி,அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்,சுற்றுலாத் தலம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1toqj0yw/anbumani.20.gif" width="750"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1toqj0yw/anbumani.20.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- </p><p>சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பண்பலை வானொலி நிலையம் ( அலைவரிசை: 103.7 மெகா ஹெர்ட்ஸ் ) தரம் உயர்த்தப்பட்டு, கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில், அதில் இன்னும் உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப்படவில்லை. மாறாக, தேசிய அளவிலும், மாநில அளவிலும் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே ரிலே ஒலிபரப்பாக செய்யப்படுகின்றன. இது ஏற்காடு பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும்.</p><h2>பண்பலை வானொலி</h2><p>பண்பலை வானொலிகள் மேம்படுத்தப்பட்ட சமூக வானொலிகள் தான். சமூகத்திற்கு தேவையான தகவல்களை வழங்குவது தான் அவற்றின் நோக்கம். ஏற்காட்டில் பண்பலை வானொலி தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சுற்றியுள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வேளாண்மை, கல்வி, வானிலை உள்ளிட்ட காலநிலை ஆகியவை சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவது தான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும்.</p><p>அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் தில்லியில் இருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்புவது அந்த வானொலி நிலையங்களின் வருவாயைப் பெருக்க உதவுமே தவிர, பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற உதவாது.</p><h2>ஏற்காடு- சுற்றுலாத் தலம்</h2><p>அதிலும் குறிப்பாக ஏற்காடு தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அங்கு நிலவும் காலநிலை, போக்குவரத்து நெரிசல், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட விவரங்கள் பண்பலை வானொலி மூலம் தெரிவிக்கப்பட்டால், அது அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக இருக்கும்.</p><h2>ஒலிபரப்ப ஏற்பாடு</h2><p>எனவே, ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும். சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் கல்வி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE">சுற்றுலா</a> சார்ந்த தகவல்களையும், கலை, இலக்கியச் செழுமையையும் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விடுதலை வீரர் ஒண்டிவீரனின் 255-ஆம் நினைவு
நாள்: அன்புமணி ராமதாஸ் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/freedom-fighter-ondi-veerans-255th-death-anniversary-tribute-to-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/freedom-fighter-ondi-veerans-255th-death-anniversary-tribute-to-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">2b5b3fdc-53c2-4c40-9ba1-c833c94c4579</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:16:51 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:16:51.768Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Anbumani Ramadas,அன்புமணி ராமதஸ்,freedom fighter,ஒண்டிவீரன் நினைவு தினம்,Distributed,புகழஞ்சலி,death anniversary</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/pu1nh4yl/288.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/pu1nh4yl/288.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை வீரர் ஒண்டிவீரனின்  255-ஆம் நினைவு நாளில் அவரது  வீரத்தையும்,  துணிச்சலையும் போற்றுவோம் மற்றும் தேசப்பற்றை கடைபிடிப்போம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><h2>ஒண்டிவீரர்</h2><p>இந்தியாவில் சிப்பாய்க் கலகம் வெடிப்பதற்கு முன்பாகவே 1755-ஆம் ஆண்டில்  ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்ற  பூலித்தேவனின் படைத்தளபதியும், நண்பனுமான ஒண்டிவீரனின் 255ஆம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவருக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவரது வீரத்தையும், தேசப்பற்றையும் போற்றுகிறேன்.</p><h2>புகழஞ்சலி</h2><p>ஆங்கிலேயர்களுக்கு எதிராக பூலித்தேவனும், ஒண்டி வீரனும் நடத்திய போர்கள் வீரம் செறிந்தவை. 1755 முதல் 1760-ஆம் ஆண்டு வரை  பூலித்தேவனுடன் இணைந்தும்,  தனித்தும் போரிட்டு  குறைந்தது  6 முறை ஆங்கிலேயர்கள் மற்றும் அவர்கள் பிரதிநிதிகளின் படைகளை  வீழ்த்திய பெருமை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">ஒண்டி வீரனுக்கு</a> உண்டு.  அவரது நாட்டுப்பற்று  போற்றத்தக்கது; அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>திருவனந்தபுரத்துக்கு திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-to-thiruvananthapuram-via-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-to-thiruvananthapuram-via-tiruppur#comments</comments><guid isPermaLink="false">ef7d33e4-1670-4934-bc65-a04a634f41c7</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:15:46 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:15:46.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Onam festival,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/q1ih2xh5/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/q1ih2xh5/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில் இன்று (வியாழக்கிழமை) இயக்கப்படுகிறது. இன்று மாலை 5.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் ரெயில் இரவு 11.23 மணிக்கு திருப்பூருக்கும் வந்து சேரும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.</p><p>இதுபோல் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து 22-ந் தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு இரவு 9.38 மணிக்கு திருப்பூருக்கு வந்து சேரும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு, அடுத்தநாள் காலை 6 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றுசேரும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா தி.மு.க.? : வடமாநில ஊடக செய்திகளால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dmk-join-the-union-cabinet-reports-in-north-indian-media-spark-a-buzz</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dmk-join-the-union-cabinet-reports-in-north-indian-media-spark-a-buzz#comments</comments><guid isPermaLink="false">1ca62c50-d3b0-4864-b682-e0145c04d2e2</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:10:54 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:10:54.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,Modi,India Alliance,இந்தியா கூட்டணி,Narendra Modi,Union Cabinet,மத்திய அமைச்சரவை,நரேந்திர மோடி,Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா,central ministry</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/5n5u7d66/tenje.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/5n5u7d66/tenje.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a>வும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. </p><h2>மத்திய அமைச்சரவை </h2><p>பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 29 மந்திரிகளும், 39 இணை மந்திரிகளும் உள்ளனர். சமீபத்தில் 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டத்தால், மத்திய கல்வி மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்தார்.  </p><p>இந்த நிலையில், மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்மேந்திர பிரதானுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/jurgiisn/mker.jpg" /></figure><h2>தி.மு.க.வும் இடம்பெறுகிறதா?</h2><p>அதே நேரத்தில், 20-க்கும் மேற்பட்ட மத்திய மந்திரிகளின் இலாகாக்கள் (துறைகள்) மாற்றியமைக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதில், பரபரப்பு என்னவென்றால், மாற்றியமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a>வும் இடம்பெறப் போகிறது என்பதுதான். </p><p>வடமாநில ஊடகங்கள், விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதற்கு காரணமாக, தொகுதி மறுவரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்த <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a>, தற்போது சில நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. </p><h2>'இந்தியா' கூட்டணியில் இல்லை </h2><p>"பா.ஜ.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை" என்று தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> கூறிவருகிறது. இதுவரை, காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க., தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு மாற்றத்தால், தேசிய அளவிலான கூட்டணியை விட்டு வெளியே வந்துள்ளது. </p><p>நாடாளுமன்றத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> எம்.பி.க்களின் பலத்தை பொறுத்தவரை மக்களவையில் 22 ஆகவும், மாநிலங்களவையில் 8 ஆகவும் உள்ளது. எனவே, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்போது, தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தேவையாக உள்ளது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/ofp8086k/mopdiki.jpg" /></figure><h2>கனிமொழி எம்.பி. பங்கேற்பு</h2><p>அதன் அடிப்படையிலேயே, பா.ஜ.க.வும், <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a>வும் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 13-ந் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்துகொண்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதை வைத்தே, மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெறப்போவதாக வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதாகவும் தெரிகிறது. </p>]]></content:encoded></item><item><title>தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும்; பிரித்து விடக்கூடாது; டி.கே.சிவக்குமார் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-should-unite-us-not-divide-us-dk-shivakumar-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-should-unite-us-not-divide-us-dk-shivakumar-speech#comments</comments><guid isPermaLink="false">1d19fda9-8325-4539-9db2-bef80c1c4295</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:04:51 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:04:51.854Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,டி.கே.சிவக்குமார்,DK Shivakumar,மேகதாது அணை,Mekedatu dam,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/xqzvrb67/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/xqzvrb67/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>முதல்-மந்திரிகள் மாநாடு</h2><p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. </p><p>இதில் முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அருகருகே அமர்ந்துள்ளனர். மேலும், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக் ரமர்கா, கேரளம் முதல்-மந்திரி சதீசன், புதுச்சேரி மாநில கவர்னர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அ திகாரிகள் பங்கேற்றுள்ளனர்.</p><h2>மாநாட்டில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-</h2><p>தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும்; பிரித்து விடக்கூடாது. நதி நீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகர வேண்டிய நேரம் இது. ஒத்துழைப்பு அடிப்படையில் நதிநீர் பிரச்சினைகளை அணுகவேண்டும். ஆறுகளுக்கு அரசியல் எல்லை தெரியாது. கர்நாடகா எப்போதும் பிற மாநிலங்களின் உரிமைகளை மதித்து செயல்படுகிறது.</p><p>கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கை மதிக்க வேண்டும். நாங்கள் புகார் கூற வரவில்லை; இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக வந்துள்ளோம். எங்களுக்குத் தேவை நியாயம் மட்டுமே. சமத்துவம், வெளிப்படைத் தன்மை, ஒத்துழைப்பு கர்நாடகாவின் கொள்கைகள். மேகதாது அணை கர்நாடகாவிற்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் முக்கிய திட்டம். உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள். ஒவ்வொரு துளிநீரும் தமிழ்நாடு, புதுச்சேரி விவசாயிகளுக்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும்தான் மக்கள் பயன்படுத்துகின்றனர்:  அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் சர்ச்சை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ration-rice-used-only-for-goats-and-chickens-says-minister-sengottaiyan-controversy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ration-rice-used-only-for-goats-and-chickens-says-minister-sengottaiyan-controversy#comments</comments><guid isPermaLink="false">af48b0cb-19cb-429f-9d45-ae1ec1581ff9</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:57:13 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:57:13.880Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Assembly,தமிழக சட்டசபை,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Sengottaiyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/xhqu96q8/tnpwat.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/xhqu96q8/tnpwat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>ரேஷன் அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும்தான் மக்கள் பயன்படுத்துகின்றனர் என்ற <a href="https://www.dailythanthi.com/">அமைச்சர் செங்கோட்டையனின் </a>பேச்சால் சர்ச்சை எழுந்தது.</p><p>தமிழக சட்டசபையில் காலை 9.30 மணிக்கு இன்றைய அலுவல்கள் தொடங்கின.  கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.  கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை.</p><p>இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக அவையில் பேசினர்.</p> <h2>வெள்ளை நிறத்தில் அரிசி</h2><p>இன்றைய நிகழ்வில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதன்படி அது தொடர்பான விவாதத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார்.</p><p>இதனை அடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசும்போது, எங்களுடைய 5 ஆண்டுகளில் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாப்பாக குடோன்களில் வைத்தோம்.  நெல்லை பாதுகாத்தோம்.  நெல்லை நனையாமல், முளைக்க விடாமல், வெள்ளை நிறத்தில் அரிசி கிடைக்க வழி செய்தோம் என்றார்.</p> <h2>அமைச்சர் செங்கோட்டையன்</h2><p>இதுபற்றி அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ரேஷன் கடை அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும்தான் மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை என்றார்.  இதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.</p><p>இதனை தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, நீங்கள் கூறினீர்கள்.  அதனால், கூறினேன்.  தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தி குறைவு.  அண்டை மாநிலங்களில் இருந்து அவற்றை நாம் வாங்குகிறோம்.  தமிழகத்தில் சன்ன ரக நெல்லை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக, அதற்கான கூலியை முதல்-அமைச்சர் உயர்த்தி கொடுத்துள்ளார்.</p><p>தமிழகத்தில் இந்த ரக நெல் உற்பத்தி குறைவு.  அதனை அதிகரிக்க முதல்-அமைச்சர் கூறியுள்ளார் என்றார்.  ரேஷன் கடை அரிசியை சிலர் பயன்படுத்துவதில்லை என்பதே உண்மை என கூறி முடித்து கொண்டார்.</p> ]]></content:encoded></item><item><title>உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில்1-ந் தேதி முதல் கட்டணம் அதிரடியாக உயர்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sharp-hike-in-toll-charges-at-ulundurpet-toll-plaza-starting-the-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sharp-hike-in-toll-charges-at-ulundurpet-toll-plaza-starting-the-1st#comments</comments><guid isPermaLink="false">51606276-38ee-46bc-b5f4-41314bf0bc85</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:55:54 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:55:54.543Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,சுங்கச்சாவடி,உளுந்தூர்பேட்டை,உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி,Ulundurpet,toll booth,Ulundurpet Tollbooth,செங்குறிச்சி,Sengurichi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2z5sifrw/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2z5sifrw/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன.</p><h2>சுங்க கட்டணம் உயர்வு</h2><p>அந்த வகையில் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வருகிற 1-ந் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் இன்று காலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.5-ல் இருந்து ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது.</p><p>செங்குறிச்சி சுங்கச்சாவடியில் தற்போது பலமுறை பயணிக்கும் கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அதே கட்டணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இலகு ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து கூடுதலாக 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.</p><h2>லாரி, பஸ்களுக்கு ரூ.15 வரை உயர்வு</h2><p>இதேபோன்று ஒருமுறை பயணிக்கும் லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் லாரி, பஸ்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 15 ரூபாய் உயர்த்தி வசூலிக்கப்பட உள்ளது.</p><p>தற்போது லாரிக்கு ரூ.380 சுங்க கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ.20 வரை உயர்த்தப்பட்டு ரூ.400 ஆக வசூலிக்கப்பட உள்ளது. பஸ்சுக்கு ரூ.240 வசூலிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.250 ஆக வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>1-ந் தேதி முதல் அமல்</h2><p>இதேபோன்று செங்குறிச்சி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சுங்கச்சாவடி </a>வழியாக வரும் மல்டி ஆக்சில் வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. செங்குறிச்சி சுங்கச்சாவடியில் இந்த புதிய கட்டண உயர்வு முறையானது செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு விடுதியில் மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை - 4 பேர் சஸ்பெண்ட் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-on-female-students-after-being-given-alcohol-at-a-government-hostel-4-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-on-female-students-after-being-given-alcohol-at-a-government-hostel-4-suspended#comments</comments><guid isPermaLink="false">fa45de9f-224c-44d3-8ab0-9453bf6875ce</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:49:19 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:49:19.830Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,பாலியல் வன்கொடுமை,சஸ்பெண்ட்,suspend,மாணவிகள்,அரசு விடுதி,sexual abuse,Govt hostel</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wnef8jp7/perer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wnef8jp7/perer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வாழப்பாடி, </p><p>வாழப்பாடியில் அரசு பள்ளி மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக விடுதி காப்பாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.</p><h2>பாலியல் தொல்லை</h2><p>சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவிகள் தங்கி அரசு பள்ளிகளில் படித்து வந்தனர். இந்த விடுதியில் தூய்மை பணியாளர் ராதிகா (வயது 45) என்பவர் பணியாற்றி வந்தார். </p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கி இருந்த 2 மாணவிகளை ராதிகாவின் நண்பரான ரகுபதி (30) வெளியில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.</p><p>இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் துப்புரவு பணியாளர் ராதிகா மற்றும் அவரது நண்பர் ரகுபதி ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.</p><h2>4 பேர் சஸ்பெண்ட்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் சின்னசாமி விசாரணை நடத்தினார். தொடர்ந்து விடுதி காப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் கலைச்செல்வி, இரவு காவலர் சுமதி, துப்புரவு பணியாளர் ராதிகா ஆகிய 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். </p><p>இந்நிலையில் இவர்களுக்கு பதிலாக அருகிலுள்ள அரசு விடுதிகளில் பணியாற்றுபவர்கள் தற்காலிகமாக பணியாற்றவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என்.எல்.சி. விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nlc-issue-heated-debate-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nlc-issue-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">2d587d3e-6384-4bbb-8f2d-32a940f10908</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:38:14 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:38:14.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,NLC Company,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,Sowmiya Anbumani,சவுமியா அன்புமணி,என்.எல்.சி. நிறுவனம்,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6kkn01qw/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6kkn01qw/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வின்போது நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.</p><h2>பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி கூறியதாவது:-</h2><p>தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்றால் அது என்.எல்.சி நிறுவனம்தான். ஒரே இரவில் சி.எஸ்.ஆர்.-க்கு ஒரு சதவீதம் கொடுக்க வேண்டும்; அதை அந்த நிறுவனம் கொடுக்கிறதா? என்பதை பாருங்கள்... விளை நிலங்களை அழித்து, தண்ணீரையும் உறிஞ்சி எடுத்துவிட்டார்கள். ஆனால் அப்பகுதி மக்களுக்கு எதையும் செய்யவில்லை.</p><p>நிறுவனத்துக்காக நிலம் கொடுத்த மண்ணின்மைந்தர்களுக்கு நியாயமாக வேலை கொடுக்க வேண்டும். ஆனால் நுழைவுத்தேர்வு நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள். நுழைவுத்தேர்வு நடத்த இது என்ன மருத்துவ படிப்பா?. என்.எல்.சி. நிறுவனம் கொடுக்கும் எந்த தகவலுமே உண்மைக்கு புறம்பான தகவலாக தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>இதற்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதில் அளித்து கூறுகையில்,</h2><p>என்.எல்.சி. நிர்வாகம் குறித்து நிறைய பேர் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளுக்கு பிரச்சினை என்றால் முதல்-அமைச்சர் விஜய் விவசாயிகள் பக்கம் தான் நிற்பார்கள். என்.எல்.சி. நிறுவனம் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் புகார்கள் தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்கான தகவல்கள் உங்களுக்கு (சவுமியா அன்புமணி) வரும். யாருக்கும் எதிராக நாங்கள் கண்டிப்பாக நடந்து கொள்ளமாட்டோம். விவசாயிகளுக்கும், மக்களுக்கும் எப்போது உறுதுணையாக இருப்போம். என்.எல்.சி. நிர்வாகம் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>தொடர்ந்து தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-</h2><p>என்.எல்.சி. நிறுவனத்தால் விருத்தாசலத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கூட்டுக் குடிநீர் திட்டம் வேண்டும் என ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்; நீரில் கால்சியம் இருப்பதால் கிட்னி பாதிப்பு அதிகமாக இருக்கிறது. </p><p>அதுமட்டுமின்றி இதுவரை இழப்பீடு தொகை என்.எல்.சி. நிர்வாகத்தில் வழங்கப்படவில்லை. இன்றுவரை அப்பகுதி விவசாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்.எல்.சி. மூலம் எந்த தீர்வும் விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை என்றார். இவ்வாறு என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>93 நாட்களாக கேள்விகளுக்கான பதில் வரவில்லை: தி.மு.க. உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-response-to-questions-for-93-days-speaker-replies-to-dmk-members-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-response-to-questions-for-93-days-speaker-replies-to-dmk-members-allegation#comments</comments><guid isPermaLink="false">03973616-8cb3-4769-8709-40f89230626d</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:32:12 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:32:12.664Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Speaker,சபாநாயகர்,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/dywqffyu/kielri.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/dywqffyu/kielri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை. இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.</p><h2>93 நாட்களாக</h2><p>இதனிடையே <a href="https://www.dailythanthi.com/topic/dmk">திமுக</a> சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கூறுகையில், “சட்டமன்ற உறுப்பினர்கள் வினாக்கள் கொடுத்து 42 நாட்களுக்குள் துறை சார்ந்த பதில் வந்து, வினா பட்டியலில் சேர்க்கப்படும். 93 நாட்களாக கேள்விக்கான பதில் வரவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். பதில் அனுப்பாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்தார்.</p><p>அப்போது பேசிய சட்டமன்ற முன்னவர் செங்கோட்டையன், “துறை சார்ந்த பதில்கள் பெற அமைச்சர்கள் மும்முரம் காட்டுவோம்” என்று கூறினார். </p><p>இதனைத்தொடர்ந்து திமுக உறுப்பினருக்கு பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “2021ல் கொடுத்த கேள்விக்கு 2025ல் பதில் வராத கோப்புகள் உள்ளது. புதிய உறுப்பினர்கள் வந்துள்ளனர். பதில் தாமதமாக வருகிறது, வந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஒண்டிவீரன் நினைவு தினம்: டிடிவி தினகரன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ondiveeran-memorial-day-ttv-dinakaran-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ondiveeran-memorial-day-ttv-dinakaran-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">2f3c0477-2466-4b14-a7d0-702f524b30d9</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:31:19 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:31:19.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,டிடிவி தினகரன்,Tribute,Memorial Day,நினைவு தினம்,ஒண்டிவீரன்,Ondiveeran,TTV Dinakaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0g1837am/286.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0g1837am/286.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255-வது நினைவு தினத்தையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><h2>புகழஞ்சலி</h2><p>இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் முன்னோடிகளில் ஒருவரும், நெற்கட்டாஞ்செவ்வலை ஆண்ட மன்னர் பூலித்தேவரின் தலைசிறந்த படைத்தளபதியாகத் திகழ்ந்து, ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகண்ட மாவீரருமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">ஒண்டிவீரனின்</a> நினைவு தினம் இன்று.</p><p>ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திற்கு அடிபணியாமல், தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இறுதிவரை துணிச்சலுடன் போராடி, தமிழினத்தின் பெருமையாகத் திகழ்ந்த மாவீரர் ஒண்டிவீரன் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் நினைவில் கொண்டு போற்றிடுவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென்மாநில முதல்வர்கள் மாநாடு: 8 கோடித் தமிழர்களின் குரல் ஒலிக்குமா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/conference-of-southern-chief-ministers-will-the-voice-of-8-crore-tamils-resonate-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/conference-of-southern-chief-ministers-will-the-voice-of-8-crore-tamils-resonate-velmurugan#comments</comments><guid isPermaLink="false">a0542838-0d55-4925-8a4d-0b0c505644e4</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:58:13 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:58:13.066Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/uzmlecp0/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/uzmlecp0/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழகத்தின் உரிமைகளுக்குத் தீர்வு கிடைக்குமா? எட்டு கோடித் தமிழர்களின் குரல் ஒலிக்குமா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/velmurugan">வேல்முருகன் </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முதல்வர்கள் மாநாடு</h2><p>மாமல்லபுரத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாடு, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை, பேசும் கூட்டமாக மட்டும் இருக்கக் கூடாது.</p><p>காவிரி நீர் உரிமை முதல் கல்வி உரிமை வரை, தமிழகத்தின் அடிப்படை மாநில உரிமைகள் அனைத்தும் இம்மாநாட்டில் அழுத்தமாக முன்வைக்கப்பட வேண்டும்.</p><p>காவிரி நீரைத் தமிழகத்திற்கு உரிய அளவில் உறுதி செய்வதுடன், கர்நாடகத்தின் மேகதாது அணை முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மாநிலங்களின் கல்வித் தேவைகளையும், மாணவர்களின் சமூகச் சூழலையும் புரிந்துகொள்ளாத வகையில் மத்திய அரசால் திணிக்கப்படும் ஒரே மாதிரியான தேர்வு முறைகள், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கக் கூடாது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.</p><h2>அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும்</h2><p>தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வரும் நீட் தேர்வை ரத்து செய்து, மருத்துவக் கல்வியில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.</p><p>நீர், கல்வி, வேலைவாய்ப்பு, மொழி, நிதி என ஒவ்வொரு துறையிலும் மாநிலங்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்படும் நிலையில், கூட்டாட்சி என்ற வார்த்தை வெறும் அரசியல் அலங்காரமாக இருக்கக்கூடாது.</p><p>எனவே, இன்றைய தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழகத்தின் நீர்வள உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து மாநில உரிமைகளையும் உறுதியுடன் முன்வைத்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும், நீட் தேர்வை ரத்து செய்யவும், காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், தகுந்த தரவுகளுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
த.வெ.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்திற்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு:  அமைச்சர் வன்னி அரசு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-allocates-rs-135-crore-for-ambedkar-overseas-education-scheme-says-minister-vanni-arasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-allocates-rs-135-crore-for-ambedkar-overseas-education-scheme-says-minister-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">7de086d4-4fd4-4db6-9ba4-c44dc1420d9f</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:55:52 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:55:52.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,TNAssembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7ppn6trf/tnatat.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7ppn6trf/tnatat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>த.வெ.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்திற்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் வன்னி அரசு கூறினார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கின.  காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது.  கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.  அப்போது, அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என மலேசியாவில் பயின்று வரும் மாணவர் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு பதில் அளித்து பேசினார்.</p>  <h2>நிலுவை தொகை</h2><p>அப்போது தி.மு.க. சார்பில் பேசிய எம்.எல்.ஏ. கோவி செழியன், மற்ற மாணவர்களுக்கு வந்து விட்டது.  தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.  தி.மு.க. ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார்.  குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை என்றார்.</p><p>இதுபற்றி அமைச்சர் வன்னி அரசு பதிலளித்து பேசும்போது, இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48.22 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.  நடப்பு ஆண்டில் உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் மாணவர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.  முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை.</p>  <h2>3 மடங்கு உயர்வு</h2><p>மாணவனுக்கு நிதி கொடுத்தது தி.மு.க. ஆட்சியில் என ஒத்துக்கொள்கிறேன்.  கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன்.  நான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.</p><p>500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் தி.மு.க. வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறினார்.</p>  <h2>ரூ.131 கோடி</h2><p>தி.மு.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு.  ஆனால், த.வெ.க. ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  த.வெ.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.</p><p>வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார் என அமைச்சர் வன்னி அரசு கூறினார்.  10 மாதங்கள் ஆகியும் மாணவர் தனது ஆவணங்களை பதிவு செய்யவில்லை.  உள்நோக்கத்துடனும், அரசியல் காரணங்களுக்காகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று கூறினார்.  மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு வன்னி அரசு பதிலளித்து பேசினார்.</p> ]]></content:encoded></item><item><title>கவன ஈர்ப்பு தீர்மானம்: சபாநாயகருக்கு அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/calling-attention-motion-minister-sengottaiyans-request-to-the-speaker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/calling-attention-motion-minister-sengottaiyans-request-to-the-speaker#comments</comments><guid isPermaLink="false">30f4a637-7a15-4745-b43f-35f6d9ccb8fd</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:50:13 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:50:13.318Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கோட்டையன்,Sengottaiyan,சட்டசபை,TN Assembly,JCD Prabhakar,ஜே.சி.டி பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2jcqm59e/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2jcqm59e/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக சபாநாயகருக்கு அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.</p><p>சென்னை,</p><h2>கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை. இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.</p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “”மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் மாவீரன், சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் மீனவர் மாவீரன் உயிரிழந்தார். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக சவுதி அரேபியாவில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர் மாவீரன் உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனவர் மாவீரன் உடலை தமிழகம் கொண்டு வர தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.</p><h2>செங்கோட்டையன் கோரிக்கை</h2><p>முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும்போது, அதற்கு அமைச்சர்களிடம் பதில் இருக்கிறதா? என்பதை முதலில் அறிந்துகொண்டு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என அவை முன்னவர் செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார்.</p><p>இதனை ஏற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், நாளை முதல் அமைச்சர்களுடைய பதில்கள் கிடைக்கப்பெற்ற பிறகே சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவரும் கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முன்னாள் அமைச்சர் துரை முருகன் கூறிய கருத்தை சுட்டிக்காட்டி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.</p>]]></content:encoded></item></channel></rss>