<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 02 Aug 2026 14:30:28 +0000</lastBuildDate><item><title>ஊர்க்கூடி தேர் இழுத்த கிராம மக்கள்; வன்னியரசு பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanniyarasu-hails-villagers-chariot-festival</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanniyarasu-hails-villagers-chariot-festival#comments</comments><guid isPermaLink="false">1a0c043a-a2a3-4008-b781-b613b5ef85da</guid><pubDate>Sun, 02 Aug 2026 14:15:58 +0000</pubDate><atom:updated>2026-08-02T14:15:58.596Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாராட்டு,கிராம மக்கள்,praises,chariots,தேர்,village people,Vanniyararasu,அமைச்சர் வன்னியரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7c608g7i/vanniarsu.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7c608g7i/vanniarsu.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஊர்க்கூடி தேர் இழுத்த கிராம மக்கள்; வன்னியரசு பாராட்டு இது தொடர்பாக, தமிழக<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு</a> பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- </p> <h2>ஆடி மாத தேர் திருவிழா</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் - பூட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பூட்டை மாரியம்மன் கோவில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">ஆடி மாத தேர் திருவிழா</a> நேற்று (01.08.26) வெகு சிறப்பாக நடைபெற்றது.</p> <h2>தேரோட்டம்</h2><p>பூட்டை கிராம மக்களின் அழைப்பின் பேரில், தேர் திருவிழாவில் பங்கேற்று, ஜாகிர்தார்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தோம்.</p><h2> பக்தர்கள் பங்கேற்பு</h2><p>அனைத்து சமூகத்தினருக்கும் தேரோட்டம் பொதுவாக நடைபெற வேண்டுமென சட்டப்போராட்டம் நடைபெற்ற காலங்கள் முன்னர் இருந்ததுண்டு. இன்று அனைத்து தரப்பு மக்களும் இணைந்து தேரோட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து செல்லும் சமூக நல்லிணக்கம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதிலிருந்து திரளான பக்தர்கள் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.</p><h2>பாதுகாப்பு</h2><p>இந்து சமய அறநிலையத்துறையின் ஒருங்கிணைப்பு பாராட்டத்தக்கதாய் அமைந்திருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செஹனாஸ் இலியாஸ் முன்னின்று தேரோட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கினார்.</p><h2>பங்கேற்றனர்</h2><p>இந்நிகழ்வில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராகேஷ், பாட்டாளி மக்கள் கட்சியின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பப்லு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சங்கராபுரம் தொகுதி மாவட்ட செயலாளர் இல. சிலம்பன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் உடன் பங்கேற்றனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் - பூட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பூட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி மாத <br>தேர் திருவிழா நேற்று (01.08.26) வெகு சிறப்பாக நடைபெற்றது.<br><br>பூட்டை கிராம மக்களின் அழைப்பின் பேரில், தேர் திருவிழாவில் பங்கேற்று,… <a href="https://t.co/V8wosAmAcD">pic.twitter.com/V8wosAmAcD</a></p>&mdash; வன்னி அரசு (@VanniTamizhVCK) <a href="https://x.com/VanniTamizhVCK/status/2083897253371298295?ref_src=twsrc%5Etfw">August 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>ஆசை 60 நாள், மோகம் 30 நாள்: கிணத்துக்கடவு அருகே இளம்பெண் கொலையில் திடுக்கிடும் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-information-about-the-murder-of-a-young-woman-near-kindathukadavu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-information-about-the-murder-of-a-young-woman-near-kindathukadavu#comments</comments><guid isPermaLink="false">6c553d0c-50b9-41e3-b15a-5d0fcb7eb557</guid><pubDate>Sun, 02 Aug 2026 14:10:33 +0000</pubDate><atom:updated>2026-08-02T14:10:33.939Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கைது,இளம்பெண்,arrest,கள்ளக்காதல்,உல்லாசம்,women</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/kq0ci33q/women333.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளம்பெண் கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/kq0ci33q/women333.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கள்ளக்காதலியை கொன்று எரித்த வாலிபர் தந்தையுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>கோவை -பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையத்தில் தனியார் நிறுவனத்தின் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்தது.</p><p>இது குறித்து நல்லட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண்ணை எரித்துக் கொலை செய்த மர்மநபர்களை கண்டுபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மேற்பார்வையில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.</p><h2>கண்காணிப்பு கேமரா பதிவு</h2><p>இந்த தனிப்படை போலீசார் கிணத்துக்கடவு, கோவில்பாளையம், வடசித்தூர், வடக்கிபாளை யம் மற்றும் தமிழக -கேரள எல்லையில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக் களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளிலும் விசாரணை நடத்தினர்.இந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராவில் ஒரு மோட்டார் சைக்கிள் அடிக்கடி வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த நாளில். தனியாருக்கு சொந்தமான இடத்தில் திடீரென்று தீப்பிடித்து எரியும் காட்சியும் பதிவாகி இருந்தது.</p><p>இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், அடிக்கடி வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அது எங்கிருந்து வந்தது என்று விசாரித்தனர். இதில் அந்த மோட்டார் சைக்கிள் பொள்ளாச்சியில் இருந்து வந்ததும், அதில் 2 பேர் வந்ததும் தெரிய வந்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவருக்கு பெண் கொலையில் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகத்தினர்.</p><h2>பெண் கொலை</h2><p>இந்தநிலையில் அந்த நபர் அங்குள்ள ஒரு எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றும் பழனிமுத்து (வயது 35) என்பதும் அவருடன் வந்து சென்றவர் அவரது தந்தையான குருநாதன் (வயது 60) என்பதும் தெரியவந்தது.</p><p>இதனையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.</p><p>குருநாதனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் குடியேறி இங்கு வேலை பார்த்துள்ளனர். குருநாதன் அவரது மகன் பழனிமுத்து ஆகியோர் பொளாச்சியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளனர்.</p><p>அப்போது அதே ஜவுளிக்கடையில் வேலைபார்த்த ஒரு பெண்ணை ஒரு பெண்ணை பழனிமுத்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு 13 வயது மற்றும் 7 வயதில் 2 மகன்கள் இருக்கிறார்கள்.</p><h2>கள்ளக்காதல் விவகாரம் </h2><p>இந்தநிலையில் அந்த ஜவுளிக்கடையில் பணியாற்றிய சங்கீதா (வயது 30) என்ற பெண்ணுடன் பழனிமுத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டியை சேர்ந்தவர். சங்கீதாவுடன் பழனிமுத்து நெருங்கி பழகினார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் பழனிமுத்துவின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக பழனிமுத்துவும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.</p><p>அதேசமயம் சங்கீதாவுடனான நெருக்கத்தை பழனி முத்து அதிகரித்து கொண்டார்.  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்கீதா அவரது குடும்பத்தை பிரிந்து பழனிமுத்துவுடன் வந்தார். 2 பேரும் கிணத்துகடவு காமராஜர் நகரில்  ஒரு வாடகை வீடு எடுத்து தங்கினர். அங்கு 2 பேரும் உல்லாசமாக இருந்து வந்தனர். </p><h2>ஆசை 60 நாள், மோகம் 30 நாள் </h2><p>ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்பதை போல அவர்களது மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை. 2 பேருக்கும். இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் பணப்பிரச்சினையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவும் பழனிமுத்துவுக்கும், கள்ளக்காதலி சங்கீதாவுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95">உல்லாசமாக இருந்தால் சரி ஆகிவிடும் </a>என்று பழனிமுத்து சங்கீதாவை அழைத்துள்ளார். அதற்கு சங்கீதா மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பழனிமுத்து, சுத்தியை எடுத்து சங்கீதாவை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்துள்ளார்.</p><h2>காட்டுப்பகுதி</h2><p>சங்கீதாவை கொலை செய்ததை மறைக்க பழனி முத்து முயன்றுள்ளார். இதற்காக தனது தந்தையான குருநாதனுக்கு போனில் பேசி ஆலோசனை கேட்டுள்ளார்.அவரும் அதிர்ச்சி அடைந்து பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு வந்துள்ளார். 2 பேரும் சேர்ந்து சங்கீதாவின் பிணத்தை சாக்குப்பையில் திணித்து</p><p>கட்டியிருக்கிறார்கள். பின்னா மோட்டார்சைக்கிளில் பிணத்தை ஏற்றிக் கொண்டு வேலை பார்த்த தொழிற்சாலை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு பழனிமுத்து சென்று இருக்கிறார். கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கியிருக்கிறார்கள். பெட்ரோலை சங்கீதா உடலில் ஊற்றி எரித்துள்ளனர். அதன்பின் வின் அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>பிறகு பழனிமுத்து வேலைக்கும் செல்லாமல் தலைமறைஆக இருந்துள்ளார். கண்கானிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து அவர் பணியாற்றிய தொழிற்சாலையில் அவர் வேலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். </p><p>உடனே சந்தேகம் கொண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது கொலையாளி அவர் தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பழனிமுத்துவையும், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது தந்தை குருநாதனை யும் போலீசார் கைது செய்தனர். இன்று 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>இறந்துவிட்டதாக நினைத்து காட்டு யானையின் அருகில் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-shock-awaited-those-who-approached-a-wild-elephant-thinking-it-was-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-shock-awaited-those-who-approached-a-wild-elephant-thinking-it-was-dead#comments</comments><guid isPermaLink="false">b42ba7b2-6c57-4d5d-ae23-ca6f64e35141</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:59:16 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:59:16.648Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,elephant,யானை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gh2hfm1t/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gh2hfm1t/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை இறந்துவிட்டதாக நினைத்து அருகில் சென்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாடுகாணி டான் டீ தேயிலைத் தோட்டத்தில் யானை ஒன்று படுத்துக் கிடந்ததை பார்த்த தொழிலாளர்கள், அது இறந்துவிட்டதாக நினைத்து அருகில் சென்றனர். </p><p>அருகில் சென்று பார்த்தபோது, அந்த யானை அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், விழித்துக்கொண்டால் நமக்கு என்ன கதி ஏற்படுமோ என நினைத்தவாறு அங்கிருந்து உடனடியாக விலகிச் சென்றனர். </p><p>கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் ஓய்வெடுப்பது வழக்கமாக உள்ளது. மனிதர்களைப் போல படுத்து உறங்கிக் கொண்டிருந்த யானையின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.</p>  ]]></content:encoded></item><item><title>கியாஸ் சிலிண்டர் வெடிப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gas-cylinder-explosion-death-toll-rises-to-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gas-cylinder-explosion-death-toll-rises-to-3#comments</comments><guid isPermaLink="false">4b1c05b7-8196-4607-ae2b-c6ca359af0ab</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:36:25 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:36:25.224Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பலி,தஞ்சாவூர்,அரசு மருத்துவக் கல்லூரி,சிலிண்டர் வெடிப்பு,cylinder explosion,பலிdies</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/5smrlx03/163.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர் வெடிப்பு பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/5smrlx03/163.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள அம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையன் (வயது 66). கூலி தொழிலாளி.</p> <p>இந்த நிலையில், கடந்த மாதம் (ஜூலை 30-ந் தேதி அதிகாலை இவரது வீடு திடீரென தீப்பிடித்து எறிந்தது. இதனால் முருகையன், அவரது குடும்பத்தினர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வீட்டில் இருந்த சமையல் கியாஸ் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">சிலிண்டர் வெடித்து</a> சிதறியது.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>இந்த விபத்தில் முருகையனின் மனைவி செல்வி, மகள் அபிநயா, அதே கிராமத்தை சேர்ந்த காசிநாதன் (37), ராஜசேகர், பழனிவேல் (37), வேம்பையன் (47), வேம்பையனின் மனைவி கலையரசி, செல்வராஜ், காளியம்மாள், புவனேஷ் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.</p><h2>உயிரிழப்பு</h2><p>இந்த நிலையில் நேற்று மாலை பழனிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வேம்பையன். காசிநாதன் ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலருக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-sovereign-gold-chain-snatched-from-woman-sleeping-at-home</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-sovereign-gold-chain-snatched-from-woman-sleeping-at-home#comments</comments><guid isPermaLink="false">85f711d5-2b09-42eb-b8de-9060dd7955d7</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:34:01 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:34:01.225Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,நகை பறிப்பு,chain snatching,சேலம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gre017wz/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gre017wz/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே குட்டப்பட்டி 4 ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ். இவரது மனைவி சுபரஞ்சனா (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர் மநபர் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார். </p><p>இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுபரஞ்சனா, மர்ம நபரை பிடிக்க முற்பட்டார். எனினும், அந்த நபர் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து சுபரஞ்சனா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் இருந்து ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.8 கோடி திருவள்ளூரில் பறிமுதல் - ஹவாலா பணமா? என விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-18-crore-brought-from-andhra-pradesh-without-documentation-seized-in-thiruvallur-investigation-underway-to-determine-if-it-is-hawala-money</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-18-crore-brought-from-andhra-pradesh-without-documentation-seized-in-thiruvallur-investigation-underway-to-determine-if-it-is-hawala-money#comments</comments><guid isPermaLink="false">33eb0e83-eb18-4d27-9c3f-915a6c1d20c0</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:21:20 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:21:20.598Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆந்திரா,Thiruvallur,திருவள்ளூர்,Andhra Pradesh,ஹவாலா பணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/kqs0lc0l/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/kqs0lc0l/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 1 கோடியே 8 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. </p><p>மொண்டியம்மன் நகர் சோதனைச் சாவடி அருகே, பார்சல் லாரியை போலீசார் சோதனையிட்டபோது, மூன்று பைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த இருவர் மற்றும் லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். </p><p>சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் ஹவாலா பணமா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-the-thanjavur-big-temple-for-the-holidays</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-the-thanjavur-big-temple-for-the-holidays#comments</comments><guid isPermaLink="false">d3e4f8d0-8c3a-4c59-868f-88a9fd116b91</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:18:38 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:18:38.768Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தஞ்சை பெரிய கோவில்,Thanjavur,விடுமுறை,Holiday,தஞ்சாவூர்,Tanjore Big Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/o0mw20dx/162.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தஞ்சை பெரிய கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/o0mw20dx/162.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தொடர் விடுமுறையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் குவிந்துள்ளனர்.</p><h2>தஞ்சை பெரிய கோவில்</h2><p>ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து கட்டிடக்கலை, நுணுக்கமான சிற்பக்கலை மற்றும் கோவிலின் பிரம்மாண்ட அழகை பொதுமக்கள் வியப்புடன் ரசித்தனர். மேலும், சுவாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படுகிறது. </p><p>பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் கோவில் நிர்வாகமும் காவல்துறையினரும் இணைந்து பலத்த பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மழை.. ஒரே நாளில் 25 அடி உயர்ந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-rain-chervalar-dam-water-level-rises-by-25-feet-in-a-single-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-rain-chervalar-dam-water-level-rises-by-25-feet-in-a-single-day#comments</comments><guid isPermaLink="false">bdeb0b74-b854-47a6-bd00-6d4e9361cc10</guid><pubDate>Sun, 02 Aug 2026 13:15:27 +0000</pubDate><atom:updated>2026-08-02T13:15:27.404Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,பாபநாசம் அணை,Papanasam dam,சேர்வலாறு அணை,Servalar Dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/axk99wyv/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/axk99wyv/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்ந்தது.  </p><h2>5 அடி உயர்ந்த பாபநாசம்</h2><p>நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் பரவ லாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டித்தீர்த்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. தென் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக திகழும் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.</p><p>143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் காலையில் வினாடிக்கு 898 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 63.40 அடியாக இருந்தது. நேற்று காலையில் அணைக்கு வினாடிக்கு 5,083 கன அடியாக அதிகரித்ததால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடி உயர்ந்து 68.35 அடியை எட்டியது.</p><h2>100 அடியை தாண்டிய சேர்வலாறு</h2><p>மேலும் அதன் அருகே உள்ள உச்ச நீர்மட்டம் 156 அடி கொண்ட சேர்வ லாறு அணை நீர்மட்டம் 76.77 அடியில் இருந்து ஒரே நாளில் சுமார் 25 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது. தொடர்ந்து அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.</p><p>இதேபோன்று மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம் அருகே இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து பைக் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள் - பொதுமக்கள் அச்சம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mystery-individuals-wearing-helmets-stealing-bikes-at-night-near-tambaram-public-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mystery-individuals-wearing-helmets-stealing-bikes-at-night-near-tambaram-public-alarmed#comments</comments><guid isPermaLink="false">a4383a2f-b066-4e52-b369-64036d3ee94d</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:42:59 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:42:59.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,bike theft,பைக் திருட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/xuqye1a4/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/xuqye1a4/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>தாம்பரம் அருகே இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்மநபர்களின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. </p><p>செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்தபடி வீடுகளுக்குள் நுழைந்து, இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்மநபர்களின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. </p><p>குறிப்பாக சி.டி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் குறிவைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விரைந்து கைது செய்து, தொடர் திருட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மேலும் 30 காசுகள் சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-procurement-price-in-namakkal-drops-by-another-30-paise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-procurement-price-in-namakkal-drops-by-another-30-paise#comments</comments><guid isPermaLink="false">3f7a5385-9db3-4776-a49a-aaebe1af1015</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:25:09 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:25:09.427Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டை விலை,egg price</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/wlog11n8/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/wlog11n8/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல், </p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. </p><h2>30 காசுகள் சரிவு </h2><p>நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக (ரூ.5.70) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 30 காசுகள் குறைக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக (ரூ.5.40) குறைந்துள்ளது. </p><p>ஆடி மாதம் காரணமாக முட்டையின் நுகர்வு குறைந்துள்ளதாக விலை குறைந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.1.10 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலுக்காக நான் வெறியோடு காத்து இருக்கிறேன் - சீமான் ஆவேசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-eagerly-waiting-for-the-by-election-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-eagerly-waiting-for-the-by-election-seeman#comments</comments><guid isPermaLink="false">2affd351-644c-4981-a1ed-e00000e0a9d1</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:21:14 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:21:14.980Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சீமான்,NTK,இடைத்தேர்தல்,Seeman Speech</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/ds8qu49y/seeman33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/ds8qu49y/seeman33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தலுக்காக நான் வெறியோடு காத்து இருக்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.</p><p>நாம் தமிழர் கட்சியில் புதிதாக 1,000 பேர் இணையும் நிகழ்ச்சி, பல்லாவரத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில்  சீமான் பேசியதாவது:-</p><h2>திரள் நிதி கூட்டம்</h2><p>நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலை கூட்டம், நடிகனிடம் ஆட்சியை கொடுத்துவிட்டார்கள். பிளாக்கில் டிக்கெட் விற்ற கூட்டம் எங்களை திரள்நிதி கூட்டம் என்கிறார்கள்.  திரள்நிதி திருடர்கள் என்கிறார்கள், இது மக்கள் இயக்கம்; மக்களிடம் இருந்துதானே பெறமுடியும், நீங்கள் வாக்குகளை மக்களிடம்தானே கேட்கிறீர்கள்; நாங்கள் வாக்குகளையும் கேட்கிறோம், வலிமையையும் கேட்கிறோம் திரள்நிதியில் ஒரு தேநீர்கூட அருந்தமாட்டோம். </p><h2>பென்ஸ் கார்</h2><p>சீமான் பென்ஸ் கார் வாங்கிட்டார்னு சொல்றாங்க, என்னுடைய மாமா ஒருத்தர் கார் வாங்கி கொண்டு வந்து வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு சென்றார்.</p><p>தமிழகத்தில் இத்தனை தொகுதி இருக்கும்போது பெரம்பூரில் மதம், திருச்சி கிழக்கில் சாதி மதம் காரணங்களுக்காக போட்டியிட்டுவிட்ட ஜோசப் விஜயால், எப்படி சாதி மதத்தை ஒழிக்க முடியும்?</p><p>திமுக செய்த வெறும் விளம்பர அரசைத்தான், இவர்களும் செய்கிறார்கள். மக்கள் பணத்தை வீணடிக்க மாட்டோம் என்றவர்கள் பஸ் நிலையங்களில் விளம்பர பதாகை வைத்துள்ளார்கள். இவ்வளவு கோடிகளை செலவழித்து எதுக்கு தெருத்தெருவாய் விளம்பரம். விளம்பர அரசுதான்.. ஒன்லி ரீஸ்தான் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. </p><h2>மின்சார வெட்டு </h2><p>6 மணி நேரம் தான் தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்கிறது. ஆனால் அதற்கு இவ்வளவு மின் கட்டணம் வந்துள்ளது. இன்னும் 6 மாதம் கழித்து யாரும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">தமிழக வெற்றி கழகத்திற்கு ஓட்டு போடுவோம் </a>என்று சொல்ல மாட்டார்கள். மீன்பிடிக்கு சென்று 850 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்துக்கு ஏதாவது நிதியோ, அரசு பணியோ கொடுக்கப்பட்டதா? ஆகவே கரூர் அசம்பாவிதத்திற்கு அரசு வேலை கொடுத்ததை நான் எதிர்ப்பேன்.</p><p>லஞ்சம் கேட்டா கொடுக்காதீர்கள் என்று சொல்லக்கூடியவர், லஞ்சம் வாங்கினால் அவரை டிஸ்மிஸ் செய்வேன் என்று சொல்ல முடியவில்லை. ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீரை தருவதற்கு முன் வரும் மத்திய அரசு, நதிநீரை பெற்று தர ஏன் முன்வரவில்லை? இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள் என்று  காத்து இருக்கிறேன் வெறியோடு இருக்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மகளை கொலை செய்து சிறை சென்றவர்... ஜாமீனில் வெளியே வந்து மனைவியை வெட்டிக் கொல்ல முயற்சி - சென்னையில் பயங்கரம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-jailed-for-murdering-daughter-released-on-bail-attempts-to-hack-wife-to-death-horrifying-incident-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-jailed-for-murdering-daughter-released-on-bail-attempts-to-hack-wife-to-death-horrifying-incident-in-chennai#comments</comments><guid isPermaLink="false">483e0967-0786-42e2-ad94-1aed3046103f</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:09:25 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:09:25.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/a0fycz00/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/a0fycz00/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் பெற்ற மகளை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற நபர், ஜாமீனில் வெளியே வந்து தனது மனைவியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சென்னை அடுத்த பெரம்பூரை சேர்ந்த ரெபேக்கா என்ற பெண், கீழ்பாக்கம் ஈ.வி.ஆர். சாலையில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சதீஷ். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், கணவரின் நடத்தை சரியில்லாததால், விவாகரத்து கோரி கோர்ட்டில் ரெபேக்கா வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p> <p>மேலும், தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் ரெபேக்கா கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, குழந்தையை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சதீஷ் கடந்த ஆண்டு தனது மகளை கொலை செய்து, தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைப் பின் சிறையில் அடைக்கப்பட்டார். </p><p>இந்நிலையில், சதீஷ் கடந்த வாரம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சம்பவத்தன்று ரெபேக்கா வேலை செய்யும் வங்கிக்கு சென்ற அவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் ரெபேக்காவின் தலை மற்றும் கையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ரெபேக்கா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுபுறம் சதீஷை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். </p> ]]></content:encoded></item><item><title>நாளை காஞ்சிபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-kanchipuram-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-kanchipuram-tomorrow#comments</comments><guid isPermaLink="false">fb9426a4-9602-47a3-a9c1-821e7ebf3209</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:01:06 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:01:06.389Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,Kanchipuram,காஞ்சிபுரம்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/pizt011m/vijaycm33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சர் விஜய்|]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/pizt011m/vijaycm33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை விஜய் நாளை பார்வையிடுகிறார். </p><p>முதல்-அமைச்சர் விஜய் அவ்வப்போது ஆய்வு பணிகளை மேற்கொள்வதினை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிலைய தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், 2 ஆம் கட்ட மெட்ரோ ரெயில் நிலைய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.</p><p>அந்த வகையில் நாளை முதல்-அமைச்சர் விஜய் காஞ்சிபுரம் மாவட்டம் செல்கிறார். கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளும் உள்ளன. சுங்குவார்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர் என பல தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் இங்கு உள்ளன. முதல்வர் விஜய் நாளை இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை விஜய் பார்வையிடுகிறார்.</p><p>தமிழக அரசுடன் டைம்லர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வணிக வாகன உற்பத்தி செய்து வரும் நிலையில், காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள  டைம்லர் வணிக வாகன உற்பத்தி தொழிற்சாலையை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> பார்வையிடுகிறார். இதே போன்று தமிழக அரசுடன் புர்ந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள செயிண்ட் கோபைன் நிறுவனம் கண்ணாடி உற்பத்தி செய்து வருகிறது. ஸ்ரீபெரும்பத்தூர் சிப்காட்டில் இயங்கி வரும் இந்த ஆலையிலும் முதல்-அமைச்சர் விஜய் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-a-power-outage-the-day-after-tomorrow-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-a-power-outage-the-day-after-tomorrow-3#comments</comments><guid isPermaLink="false">265fc0e3-6588-40be-bb65-ee4016ea697e</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:41:42 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:41:42.030Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,chennai power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/djltxsm7/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/djltxsm7/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் 04.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். </p><h2>வேளச்சேரி</h2><p>சாரதி நகர், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர்.</p><h2>அடையாறு</h2><p>காந்தி மண்டபம் சாலை, சர்தார் பட்டேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோயில் தெரு, காணகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, கே.பி. நகர் 1 வது முதல் 5வது பிரதான சாலைகள், அடையாறு 6வது பிரதான சாலை, கோவிந்தராஜபுரம், பக்தவத்சலம் நகர் 1வது முதல் 5வது சாலைகள்.</p><h2>முடிச்சூர்</h2><p>அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், குமரன் நகர், ஏ.என். காலனி, மணிமங்கலம் பிரதான சாலை, சாஸ்திரி நகர், கணேசபுரம் பிரதான சாலை.</p><h2>மேடவாக்கம்</h2><p>பெரும்பாக்கம் சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், அந்தோணி நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் சாலை, மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி 1வது முதல் 7வது தெருக்கள் வரை, விசாலாட்சி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, கோபாலபுரம் நகர், விக்னராஜபுரம் மோஹி ப்ளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர், பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், சாய் பாலாஜி நகர்,கிருஷ்ணா நகர், துளுக்காத்தம்மன் கோயில் பிரதான சாலை, அருண் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயபால் நகர், மல்லிகேஸ்வரன் நகர், ஆதிசாமி நகர்.</p><h2>செயின்ட் தாமஸ் மவுண்ட்</h2><p>ராமர் கோயில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, நசரத்புரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குடியிருப்பு, செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரிசன் 1வது முதல் 6வது தெரு வரை, திருவள்ளுவர் நகர், எம்.கே.என் சாலை, குமரன் நகர், குளத்துமேடு, மாங்காளியம்மன் கோயில் தெரு, டிபன்ஸ் காலனி, பர்மா காலனி, கரையார் கோயில் தெரு, நார்த் பரேட் சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, நேவி ரெசிடென்சி பகுதி, வுட்கிரீக் கன்ட்ரி, துளசிங்கபுரம், மாரியாபுரம், மாத்தியாஸ் நகர், ஐரோப்பியன் லைன், பஜார் சாலை, மேட்டு தெரு, ஆர்காட் பேட்டை, ஹாப்மேன் 1வது மற்றும் 2வது தெரு, வி.ஜி.பி முர்பி சதுக்கம், நோபல் தெரு, கண்ணன் காலனி, ஆசிரியர் காலனி, எம்.ஜி.ஆர் நகர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில்: சரித்திர பதிவேடு ரவுடி நரேஷ் வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/history-sheeter-rowdy-naresh-hacked-to-death-at-kasimedu-fishing-harbour</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/history-sheeter-rowdy-naresh-hacked-to-death-at-kasimedu-fishing-harbour#comments</comments><guid isPermaLink="false">9152fbec-506f-43cc-9d8e-2ff15098b82d</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:34:05 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:34:05.099Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வெட்டிக்கொலை,Rowdy,history,hacked to death,Kasimedu Fishing Port,காசிமேடு மீன்பிடி துறைமுகம்,சரித்திர பதிவேடு குற்றவாளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/wczrg3ab/naresh.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரவுடி நரேஷ் வெட்டிக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/wczrg3ab/naresh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில், பிரபல <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">சரித்திர பதிவேடு ரவுடி </a>ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>பதிவேடு குற்றவாளி</h2><p>சென்னை புதிய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் குமார் (வயது 24). மீனவரான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடி குள்ள கார்த்திக் என்பவரின் நெருங்கிய கூட்டாளியான இவர், காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.</p><h2>அதிர்ச்சி</h2><p>சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நரேஷ் குமார், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் மர்மமான முறையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். </p><h2>போலீஸ் விசாரணை</h2><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த நரேஷ் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது பழிக்குப்பழியாக நள்ளிரவில் யாராவது இவரை வெட்டிக்கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். </p><p> ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கடனை திரும்பப் பெற என்.எல்.சி. தொழிலாளி கடத்தல்; 3 நாட்கள் அடைத்து வைத்து தாக்குதல் - 4 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nlc-worker-abducted-to-recover-debt-held-captive-and-assaulted-for-3-days-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nlc-worker-abducted-to-recover-debt-held-captive-and-assaulted-for-3-days-4-arrested#comments</comments><guid isPermaLink="false">2d3531a0-9342-4f64-859b-4d556b380d21</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:29:30 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:29:30.010Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,NLC,என்.எல்.சி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/phcqhmlz/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/phcqhmlz/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் மாவட்டம் வடலூர் காட்டுக்கொல்லை பகுதியைச் சேர்ந்த என்.எல்.சி. தொழிலாளி ரமேஷ், கடந்த 28-ந்தேதி வேலைக்கு சென்ற நிலையில், இரவு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சுதா, வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, 30-ந்தேதி ரத்தக் காயங்களுடன் வீடு திரும்பிய ரமேஷ், தன்னை 4 பேர் காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறினார்.</p><p>இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், சிற்றரசு என்பவரின் மனைவியிடம் ரமேஷின் நண்பர் சுரேஷ்குமார் 42 சவரன் நகைகளை பெற்றுக்கொண்டு திருப்பித் தரவில்லை என தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிற்றரசு, தனது கூட்டாளிகளான சதீஷ்குமார், அல்லிராஜன், முத்துக்குமரன் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷையும், சுரேஷ்குமாரையும் கடத்தியுள்ளனர். </p><p>ரமேஷை மிரட்டி, அவரது பெயரில் இருந்த காரை சதீஷ்குமார் பெயருக்கு மாற்றவும், 4 ஏக்கர் விவசாய நிலத்தை கிரயம் செய்து தரவும் கையெழுத்து பெற்றுள்ளனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் முத்துக்குமரன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>கோவை வழியாக இயங்கும் மங்களூரு ரெயில் பகுதியாக ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mangaluru-train-service-via-coimbatore-partially-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mangaluru-train-service-via-coimbatore-partially-cancelled#comments</comments><guid isPermaLink="false">b23cab77-861d-41dd-a233-6333b2511f8b</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:22:03 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:22:03.253Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,ரெயில் சேவை,train service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/t4981vou/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/t4981vou/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,  </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சென்னை மங்களூரு ரெயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-</p><p>வருகிற 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை மங்களூருவில் இருந்து கோவை, ஈரோடு, கரூர், திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்டி ரல் சென்னை எழும்பூர் ரெயில் (எண்:16160) மங்களூரு தாம்பரம் இடையே மட்டும் இயக்கப்படும். தாம்பரம் -எழும்பூர் இடையே இந்த ரெயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல 6-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து மங்களூருவுக்கு இயக்கப்படும் சென்னை எழும்பூர் மங்களூரு சென்டிரல் ரெயில் (எண்:16159) தாம்பரத்தில் இருந்து மங்களூருவுக்கு இயக்கப்படும்.</p><p>சென்னை எழும்பூர் நிலையத்தை பயன்படுத்தி பயணம் செய்ய உள்ள பயணிகள், மேற்கண்ட தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-to-amaravathi-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-to-amaravathi-dam#comments</comments><guid isPermaLink="false">37584e9b-776e-4a39-90cc-978392eee0b4</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:09:47 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:09:47.414Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நீர்வரத்து,Water inflow,அமராவதி அணை,amaravathi dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/94k58rn6/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/94k58rn6/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உடுமலை, </p><h2>அமராவதி அணை</h2><p>உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு, கேர ளம் மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, பாம் பாறு, தேனாறு உள்ளிட்ட பிரதான ஆறுகள் மற்றும் சிற்றோடைகள் மூலம் மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. இதனை ஆதாரமாக கொண்டு திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக் கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.</p><h2>பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு</h2><p>இந்த நிலையில், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால், அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் சென்றது. இருந்தபோதிலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த சாரல் மழையால், கடந்த மாதம் 2-வது வாரத்தில் நீர் மட்டம் 50 அடியை கடந்தது.</p><p>இதையடுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கடந்த மாதம் 21-ந் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் அமராவதி ஆற்றில் உள்ள 8 பழைய ராஜ வாய்க்கால்கள் வழியாக 135 நாட்களுக்கும், புதிய ஆயக்கட்டு பாசனத் திற்கு பிரதான கால்வாய் மூலம் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு 15 நாட்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.</p><p>இதனால் நீர் திறப்பின்போது 51.44 அடியாக இருந்த அணையின் நீர் மட் டம், கடந்த 29-ந் தேதி 28.54 அடியாக சரிந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.</p><h2>4 நாட்களில் 6 அடி உயர்வு</h2><p>இதன் காரணமாக வினாடிக்கு 900 கன அடி வரை நீர் வரத்து ஏற்பட்டுள் ளது. இதனால் கடந்த 29-ந் தேதி 28 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம், நேற்று காலை நிலவரப்படி 34.48 அடியாக உயர்ந்தது. கடந்த 4 நாட்களில் 6 அடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயி கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி யில் மழைப்பொழிவு தொடர வேண்டும், அணையின் நீர் மட்டம் உயர வேண்டும், மகசூல் பெருக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப் பாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி வாலிபர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-killed-by-train-while-crossing-track</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-killed-by-train-while-crossing-track#comments</comments><guid isPermaLink="false">471e4570-f604-41e1-9eb6-ab7c4ed4b5ff</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:07:16 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:07:16.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,Youth dies,வாலிபர் பலி,Tracks,தண்டவாளங்கள்,ரெயில் மோதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/tcje8yi1/death02.08.2026.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் மோதி வாலிபர் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/tcje8yi1/death02.08.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> எண்ணூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">வாலிபர் மீது ரெயில் மோதியதில்</a>, அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். </p><h2>ரெயில் மோதியது</h2><p>சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 35) நேற்று இவர் எண்ணூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள பகுதியை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ரெயில், எதிர்பாராதவிதமாக கண்ணன் மீது பயங்கரமாக மோதியது. </p><h2>துடிதுடித்து சாவு</h2><p>இதில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பொதுமக்கள் வேதனை</h2><p>எண்ணூர் ரெயில் நிலைய பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், தண்டவாளத்தை கடக்கும் போது இதுபோன்ற ரெயில் விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>‘இளைய தலைமுறையினர் என்ன மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை கணிக்க முடியவில்லை’ - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-impossible-to-predict-what-kind-of-change-the-younger-generation-desires-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-impossible-to-predict-what-kind-of-change-the-younger-generation-desires-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">b7a50ac0-fa20-4efc-8132-610e68446e33</guid><pubDate>Sun, 02 Aug 2026 11:02:42 +0000</pubDate><atom:updated>2026-08-02T11:02:42.296Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/dby2j9zl/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/dby2j9zl/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையில் ‘ஜனநாயகம் காப்போம் 2026’ என்ற பெயரில் நடைபெற்ற மாணவர்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“இப்போது புதிய இளைய தலைமுறையினரை ஜென்-ஸி(Gen-Z) தலைமுறை என்று அழைக்கிறார்கள். அவர்கள் எதை விரும்புகிறார்கள், என்ன மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை முன்கூட்டியே யூகிக்க முடியவில்லை, கணிக்க முடியவில்லை. தலைவர் ஒருவர் அழைப்பு விடுக்காமலேயே அமைப்பு ஒன்று உருவாகாமலேயே லட்சக்கணக்கில் திரளும் உளவியல் பொது உளவியலாக வளர்ந்திருக்கிறது. </p> <p>ஜல்லிக்கட்டு புரட்சிக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்க முடியாது. நாங்கள்தான் இதை ஒருங்கிணைத்தோம் என்று எந்த ஒரு தலைவரும் பொறுப்பேற்க முடியாது. ஆனால் லட்சக்கணக்கானவர்கள் பல நாட்கள் மெரினாவில் கூடியது நம்மையே உலுக்கி எடுத்தது. ஒரு அரசையே பணிய வைத்தது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற வைத்தது. ஜல்லிக்கட்டுக்கான உரிமையை நாம் வென்றெடுத்தோம். </p><p>நாம் வென்றெடுத்தோம் என்று ஒவ்வொருவரும் உரிமை கோரிக் கொள்ளலாம், ஆனால் நான்தான் ஒருங்கிணைத்தேன் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி ஒரு புரட்சியை இளைய தலைமுறையினர் தமிழ் மண்ணில் நிகழ்த்திக் காடியதைப் போல், தலைநகர் டெல்லியில் ஒரு அமைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது என்றாலும் கூட, அந்த அமைப்பு முறைப்படி வடிவமைக்கப்பட்ட அரசியல் அமைப்பு அல்ல. </p><p>சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவர் வாய் தவறி ‘கரப்பான்பூச்சிகள்’ என்று சொல்லப்போக, ‘எங்களைப் பார்த்து கரப்பான்பூச்சி என்று சொல்கிறீர்களா? இதோ நாங்கள் வந்துவிட்டோம் என்று டெல்லியை நோக்கி சாரை சாரையாய் கிளம்பிச் சென்று தலைநகரையே திணற வைத்தார்கள். இந்திய அரசு பணிந்தது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இது இந்த தலைமுறையினர் நிகழ்த்திக் காட்டியிருக்கும் ஒரு புரட்சி.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி தமிழகத்தில் கால்வைத்ததும் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வந்து விட்டது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/as-soon-as-rahul-gandhi-set-foot-in-tamil-nadu-cauvery-water-has-reached-tamil-nadu-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/as-soon-as-rahul-gandhi-set-foot-in-tamil-nadu-cauvery-water-has-reached-tamil-nadu-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">56382a44-0b60-4146-832b-a0817979ae24</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:51:40 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:51:40.003Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Congress,ராகுல் காந்தி,Ragul Gandhi,காவிரி தண்ணீர்,மாணிக்கம் தாகூர் எம்.பி.,cavery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/hyem5izz/ragul33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/hyem5izz/ragul33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ராகுல் காந்தி தமிழகத்தில் கால்வைத்ததும் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வந்து விட்டது என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>சென்னையில் தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்</a>  செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;-</p><p>கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கர்நாடகாவிற்காகத்தான் பேசுவார். அவருக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமல்ல. எனக்கு தமிழ்நாடு நலன்தான் முக்கியம் முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் தவறு இல்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டிற்கு எப்படியாவது தண்ணீர் வர வேண்டும்.</p><p>தமிழ்நாடும் கர்நாடகாவும் இந்தியா பாகிஸ்தான் கிடையாது. பேசி தீர்க்கும் நிலையை உருவாக்க வேண்டுமென முதல்-அமைச்சர் விஜய் நினைப்பதே பாராட்டுக்குரிய விஷயம். இரு மாநில முதல்-மந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை. அரசியல் செய்வதுதான் முக்கியமாக உள்ளது. </p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும். திமுக கூட்டணியை விட்டு விலகினாலும் தொகுதி மறுவரையறை பிரச்னையில் காங்கிரஸ் மாறவில்லை.</p><p>தொகுதி மறுவரையறையை எதிர்த்து முன்பு நகலை எரித்தது யார்? பட்டாசு வெடித்தது யார்?. தொகுதி மறுவரையறையில் எட்டப்பர்கள் பாஜக, அதிமுக, பாமகதான். துரோகம் செய்வோரே எட்டப்பர்கள். ராகுல் அதைத்தான் குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு மிகவும் முக்கியமானது.</p><p>“நம்பிக்கையை யார் விற்கிறார்கள் என்பது அடுத்த வாரம், 17ஆம் தேதி தெரிந்துவிடும். வாய் வசனம் பேசுவதை தயாநிதி மாறன் நிறுத்த வேண்டும். மக்கள் இதன் காரணமாகவே உங்களை உட்கார வைத்திருக்க வேண்டிய இடத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள்.</p><h2>தமிழகத்தை நோக்கி வந்த காவேரி </h2><p>தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லாமலையா ராகுல் காந்தி இங்குவந்து பேசிவிட்டு சென்றிருக்கிறார். தொகுதி மறுவரையறை, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பெரிய பிரச்சினை அது குறித்து பேசியுள்ளார். ராகுல் காந்தி வந்த நேரம் மழை பெய்தது. அதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.  ராகுல் காந்தி தமிழகத்தில் கால்வைத்ததும் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வந்து விட்டது எனத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம்  10ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-new-bus-stand-to-be-opened-from-10th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-new-bus-stand-to-be-opened-from-10th#comments</comments><guid isPermaLink="false">3759b5d6-83c3-42ef-8b9d-22ee1a0692ad</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:25:40 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:25:40.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,New bus stand,புதிய பேருந்து நிலையம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/l9m5oa9w/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/l9m5oa9w/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் பழைய பேருந்து நிலையத்தில் ஏற்படும் கடுமையான நெரிசல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுலூரில் ரூ.36 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதில் பணிகள் முழுதுமாக முடிவதற்கு முன்னரே கடந்த மார்ச் 4-ந் தேதி திறக்கப்பட்டது. எனினும் புதிய பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்தது.</p><p>எனவே புதிய பஸ் நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் மீதம் உள்ள கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முழுவதும் முடிந்து உள்ளதால் திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் வருகிற 10-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரப்பட உள்ளது.</p><p>அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்டும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படாது என்று மாவட்ட கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>நெல்லை: மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-bathing-banned-at-manimuthar-falls-for-2nd-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-bathing-banned-at-manimuthar-falls-for-2nd-day#comments</comments><guid isPermaLink="false">0974bbdf-9b6c-4e4a-9fa5-afdac109d96c</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:10:08 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:10:08.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,குளிக்க தடை,ban,Manimutharu falls- மணிமுத்தாறு அருவி,To flood - வெள்ளப்பெருக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7ay6cm3e/159.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மணிமுத்தாறு அருவி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7ay6cm3e/159.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மணிமுத்தாறு அருவி</h2><p>நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF">மணிமுத்தாறு அருவி</a> மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.</p><h2>குளிக்க தடை</h2><p>மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க 2 ஆவது நாளாகத் தடை விதித்துள்ளது.</p><p>அருவியில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியின் இயற்கை அழகை பார்வையிட மட்டும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பாபநாசம் அருகே விவசாயியை கொன்ற கரடி - டிரோன் மூலம் தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-kills-farmer-near-papanasam-forest-department-intensifies-search-using-drones</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-kills-farmer-near-papanasam-forest-department-intensifies-search-using-drones#comments</comments><guid isPermaLink="false">d2fe0906-8ca3-489d-8746-2a994deddec2</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:08:00 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:08:00.583Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாபநாசம்,Papanasam,கரடி,bear</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7h90h2cr/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7h90h2cr/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள வடமலை சமுத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் கரடி ஒன்று சுற்றி வந்தது. அந்த கரடியை விரட்டுவதற்கு விவசாயிகள் முயற்சி மேற்கொண்டபோது அது அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர் இரவு நேரத்தில் கரடி திரும்பி வந்து தோட்டத்தில் பாதுகாப்புக்கு இருந்த விவசாயி ஒருவரை தாக்கி கொடூரமாக கொலை செய்தது.</p><p>கிராம மக்கள் அந்த கரடியை விரட்டிவிட்டு விவசாயியின் உடலை மீட்பதற்கு பல மணி நேரம் போராட வேண்டியிருந்தது. இதனை தொடர்ந்து கரடியை தேடிப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று டிரோன் கேமராவின் உதவியோடு கரடியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. </p><p>வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள மலை முகடுகள், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் டிரோன் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. கரடியை பார்த்தவுடன் அதனை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 இடங்களில் கரடியை பிடிப்பதற்கு கூண்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. </p> ]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-employment-for-nurses-in-government-hospitals-marxists-insist</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-employment-for-nurses-in-government-hospitals-marxists-insist#comments</comments><guid isPermaLink="false">f71fbfaf-e3e8-400e-a89e-ca42e770e7c2</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:52:53 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:52:53.992Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>insistence,வலியுறுத்தல்,Government Hospital,அரசு மருத்துவமனை,பணியிடங்கள்,post,மார்க்சிஸ்ட்,Communist Party of India (Marxist)</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/1sllmkco/ps.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/1sllmkco/ps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு மருத்துவமனைகளில் நிரந்தரப் பணியிடங்கள் மட்டுமே வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>மாநிலக்குழு கூட்டம்</h2><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2026 ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி மற்றும் மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.</p><p><strong>கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..</strong></p><p>அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறைக்கு தீர்வு-ஆட்குறைப்பு கைவிடல் பணி நிரந்தரம் - நிரந்தர நியமனங்களை வலியுறுத்தி..</p><h2>அரசாணை</h2><p>அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு 7 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து 210 செவிலியர் பணியிடங்களை வேறு மருத்துவமனைகளுக்குப் பணி நிரவல் செய்யும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது.</p><h2>ஆட்குறைப்பு பணிகள்</h2><p>மேலும், இதுபோன்ற பொதுச் சுகாதாரத் துறையிலிருந்தும், அரசு மருத்துவமனைகளிலிருந்தும் 292 பணியிடங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்யும் பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, புதிதாகத் தொடங்கப்படும் 6 செவிலியர் கல்லூரிகளிலும் தற்காலிக ஒப்பந்த ஊழியர்களையே பணியமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.</p> <h2> நிரந்தரப் பணி</h2><p>தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (MRB) மூலம் தேர்வு செய்யப்பட்டு, சுமார் 6500 செவிலியர்கள் நிரந்தரப் பணியிடங்கள் இல்லாத காரணத்தால் தொகுப்பூதிய முறையிலேயே 9 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகின்றனர்.</p> <h2>தொகுப்பூதியம் </h2><p>இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் அவர்களின் பணி நிரந்தரம் கேள்விக்குறியாகும். மேலும், இந்த நடவடிக்கை "5 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணி செய்யும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்ற தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக உள்ளது.</p> <h2>வலியுறுத்துகிறது</h2><p>தமிழ்நாடு அரசு இந்த ஆட்குறைப்பு அரசாணை 204-ஐ ரத்து செய்து, தேவைக்கேற்ப புதிய நிரந்தரப் பணியிடங்களை தோற்றுவிப்பதுடன், அரசு மருத்துவமனைகளிலும், அரசு செவிலியர் கல்லூரிகளிலும் நிரந்தரப் பணியிடங்களில் மட்டுமே ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஆகஸ்ட் - 4,5,6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-chennai-door-to-door-distribution-of-ration-items-will-be-held-on-august-4-5-and-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-chennai-door-to-door-distribution-of-ration-items-will-be-held-on-august-4-5-and-6#comments</comments><guid isPermaLink="false">016b0ba8-c761-4e68-b962-cd4692e4d6ae</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:51:59 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:51:59.209Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Distribution,விநியோகம்,ரேஷன் பொருட்கள்,Ration</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/ind0kyt2/158.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/ind0kyt2/158.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் ஆகஸ்ட் - 4,5,6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோக திட்டப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. </p><h2>நியாயவிலை கடைகள்</h2><p>இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், இராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1346 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">நியாயவிலை கடைகளின்</a> விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை: லாரி மீது கார் மோதி கோர விபத்து  - 5 பேர் பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-car-crash-into-lorry-5-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-car-crash-into-lorry-5-killed#comments</comments><guid isPermaLink="false">3edfae3e-b007-4097-8c55-befa9dd1a4a2</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:18:53 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:18:53.345Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Coimbatore,கோவை,Car,கார்,lorry,லாரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/j95sql4v/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/j95sql4v/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,       </p><p>கோவையில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/">கோவை </a>மாவட்டம் பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நல்லாம்பள்ளி பகுதியில் உள்ள செடிகளுக்கு இன்று மதியம் லாரி மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டது. </p><p>அப்போது, உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வேகமாக வந்த கார் நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த லாரி மீது பின்புறத்தில் இருந்து வேகமாக மோதியது.</p><h2>விபத்து - 5 பேர் பலி</h2><p>இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-cannabis-worth-rs-35-crore-seized-at-trichy-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-cannabis-worth-rs-35-crore-seized-at-trichy-airport#comments</comments><guid isPermaLink="false">7bc4d547-7745-4c55-b01d-1f8b2e94b861</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:10:24 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:10:24.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான நிலையம்,passenger,Cannabis,சோதனை,பறிமுதல்seized,திருச்சிTrichy,உயர்ரக கஞ்சா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7d1699g2/161.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/7d1699g2/161.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.</p><p>இதில் துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்காக தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><h2>சோதனை</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று, அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.</p><h2>பறிமுதல்</h2><p>அப்போது அவரது உடைமையில் ரூ.3.5 கோடி மதிப்பிலான 3.5 கிலோ ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். </p><p>இதனை தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">திருச்சி விமான நிலைய</a> பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>விளையாட்டு விழாவில் விபரீதம்.. நிலைத்தடுமாறி விழுந்த அமைச்சர்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tug-of-war-rope-snaps-minister-falls-at-school-event</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tug-of-war-rope-snaps-minister-falls-at-school-event#comments</comments><guid isPermaLink="false">271d32f2-1fb5-4e55-893d-c82a9466f15e</guid><pubDate>Sun, 02 Aug 2026 09:08:39 +0000</pubDate><atom:updated>2026-08-02T09:08:39.388Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Parents,பெற்றோர்கள்,முன்னாள் மாணவர்கள்,விளையாட்டு விழா,போட்டிcompetition,Sports festival,அமைச்சர்Minister,கயிறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/4xh4noun/rope.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கயிறு அறுந்ததால் கீழே விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/4xh4noun/rope.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியில் கயிறு அறுந்ததால் கீழே விழுந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</a></p><h2>பள்ளி விழா</h2><p>சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஹோலி கிராஸ் தனியார் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.</p><h2>விறுவிறுப்பான போட்டி</h2><p> விழாவின் ஒரு பகுதியாக, முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில் முன்னாள் மாணவர்கள் அணியின் சார்பில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் ஆர்வமுடன் களம் இறங்கினார். </p><h2>திடீரென அறுந்த கயிறு</h2><p> இரு அணிகளும் தங்களது முழு பலத்தையும் திரட்டி, வெற்றிக்காக விறுவிறுப்பாக கயிறை இழுத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் கயிறு நடுவே சட்டென்று அறுந்தது.</p> <h2>பதறிய அதிகாரிகள்</h2><p> கயிறு அறுந்த வேகத்தில் நிலைதடுமாறிய அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் கயிறு பிடித்து இழுத்த 15-க்கும் மேற்பட்டோர் மைதானத்தில் கீழே விழுந்தனர். அமைச்சர் திடீரென கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்களும், அதிகாரிகளும் பதறியடித்து கொண்டு ஓடிவந்து அமைச்சரை உடனடியாக பத்திரமாகத் தூக்கி விட்டனர். </p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை அருகே 16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16th-century-inscription-discovered-near-sivaganga</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16th-century-inscription-discovered-near-sivaganga#comments</comments><guid isPermaLink="false">d210093e-911f-4656-938f-4cea53971895</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:51:11 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:51:11.735Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivaganga,Inscription,discovered,கல்வெட்டு கண்டெடுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/8q95rlt6/156.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்வெட்டு கண்டெடுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/8q95rlt6/156.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>சிவகங்கை அருகே உள்ள கண்மாய் பகுதியில், கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வரலாற்று ஆதாரமான 'வாணாதிராயர் கல்வெட்டு' கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வரலாற்று சான்று சுமார் 4 அடி நீளமுள்ள கல்வெட்டாகும். இதில் 'தெய்வ மாவலி வாணாதிராயர்’ என்பவர் வழங்கிய நிலத் தர்மம் (தானம்) குறித்த முக்கிய தகவல்கள் செதுக்கப்பட்டுள்ளன. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">கல்வெட்டில்</a> உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவமைப்பு மற்றும் வரிவடிவங்களின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இதன் காலத்தைக் கணித்துள்ளனர். </p><h2>ஆட்சிக் காலம்</h2><p>அதன்படி, இக்கல்வெட்டு கி.பி. 1515 முதல் 1533 வரை இப்பகுதியை ஆட்சி செய்த 'சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயன்' காலத்தைச் சேர்ந்தது எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: நாட்டுப்படகு கடலில் மூழ்கி விபத்து; 6 மீனவர்கள் மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-boat-sinks-in-sea-6-fishermen-rescued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-boat-sinks-in-sea-6-fishermen-rescued#comments</comments><guid isPermaLink="false">baf3e7bf-b53b-4bfb-85ba-0638bff16445</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:31:28 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:31:28.441Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,fishermen,Thoothukudi,தூத்துக்குடி,மீனவர்கள் மீட்பு,boat accident,rescued,6,கடலில் மூழ்கி,நாட்டுப்படகு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/mnhxxxxe/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ படகு கடலில் மூழ்கியது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/mnhxxxxe/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், திருச்செந்தூர் - மணப்பாடு அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81">நாட்டுப்படகு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81">கடலில் மூழ்கி</a>ய விபத்தில், படகில் இருந்த 6 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.</p><h2>நாட்டுப்படகில் கடலுக்கு சென்ற 6 மீனவர்கள்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் நவமணி தெருவைச் சேர்ந்த சுகிர்தன் (வயது 36) என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், நேற்று காலையில் 6 மீனவர்கள் தருவைகுளத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை தருவைகுளத்தில் இருந்து 29 நாட்டிக்கல் மைல் தொலைவில், திருச்செந்தூர் - மணப்பாடு கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.</p><h2>படகு கடலில் மூழ்கியது</h2><p>அப்போது பலத்த காற்று மற்றும் கடலில் திடீரென எழுந்த கடும் அலைச் சீற்றம் காரணமாக படகின் அடிப்பகுதியில் பிளவு ஏற்பட்டுத் தண்ணீர் புகுந்ததால், படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. படகு மூழ்குவதைக் கண்ட மீனவர்கள், உடனடியாக அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகிற்கு தகவல் அளித்து உதவி கோரினர்.</p><h2>6 மீனவர்கள் மீட்பு</h2><p>விரைந்து வந்த அந்தப் படகின் மீனவர்கள், உயிருக்குப் போராடிய 6 மீனவர்களையும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டுத் தங்கள் படகிற்கு மாற்றினர். தற்போது கடலில் மூழ்கிய நாட்டுப்படகை கடலிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் தங்க மோதிரம் பறிப்பு: 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-ring-snatched-in-nellai-police-arrest-culprit-within-12-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-ring-snatched-in-nellai-police-arrest-culprit-within-12-hours#comments</comments><guid isPermaLink="false">d8349a23-32f5-4532-9bb3-42b8957d71cf</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:23:27 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:23:27.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrested,குற்றவாளி,Robbery,போலீசார்,பறிப்பு,தங்க மோதிரம்,gold ring,culprit</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/t70af568/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/t70af568/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> தாலுகா காவல் நிலைய சரக போலீசாரின் துரித நடவடிக்கையால் குற்றம் நடந்த 12 மணி நேரத்திற்குள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF">வழிப்பறி</a>யில் ஈடுபட்ட குற்றவாளியை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து பறிக்கப்பட்ட தங்க மோதிரம் மீட்கப்பட்டது. </p><h2>தங்க மோதிரம் பறிப்பு</h2><p>திருநெல்வேலி மாவட்டம், தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 31.7.2026 அன்று மாலை, மதுபோதையில் இருந்த ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர், தனது பைக் கே.டி.சி. நகர் அருகே இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார். பின்னர் ஒரு தனியார் கல்லூரி அருகே சந்தோஷ்நகர்-2 பின்புறமுள்ள காட்டுப்பகுதியில் வைத்து அந்த நபரை தாக்கி, அவர் அணிந்திருந்த 3½ கிராம் எடையுள்ள தங்க மோதிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த புகார்தாரர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2>12 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது, மோதிரம் மீட்பு</h2><p>இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பராஜா மற்றும் போலீசார் மேற்கொண்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு மற்றும் தீவிர விசாரணையின் மூலம், தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பதிவேடு குற்றவாளி சின்னதுரை (வயது 34) என்பவரை, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே வைத்து, குற்றம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் கைது செய்து, அவரிடமிருந்து பறிக்கப்பட்ட தங்க மோதிரத்தையும் மீட்டனர். மேலும் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>எஸ்.பி. பாராட்டு</h2><p>இந்த சம்பவத்தில் குற்றம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து, பறிக்கப்பட்ட நகையை மீட்டதுடன், வழக்கில் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட தாலுகா காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை ரெயில் நிலையத்தில் இந்தி பெயர்பலகை சேதம் - வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-condemns-damage-to-hindi-nameplate-at-coimbatore-railway-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-condemns-damage-to-hindi-nameplate-at-coimbatore-railway-station#comments</comments><guid isPermaLink="false">db14bb0e-2c68-41ae-8219-91e3ef725874</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:21:57 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:21:57.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,ரெயில் நிலையம்,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Railway Stations,சேதம்,பெயர் பலகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/qv5rmhi5/vanathi-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/qv5rmhi5/vanathi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பெயர் பலகை சேதம்</h2><p>கோவை, வடகோவை ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு வரும் ரெயில் நிலைய  பணிகளின் போது, பெயர் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை அழிக்கும் நோக்கில் பெயிண்ட் ஊற்றி சேதப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>பிரதமர் நரேந்திர மோடி  அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் 77 ரெயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தில் தேர்வு செய்து, அதில் 17 ரெயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்தி வருகிறது. ஆனால் இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை சில பிரிவினைவாத சக்திகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சீர்குலைக்க முயல்வது தமிழக மக்களின் நலனுக்கே எதிரானது.</p><h2>சட்டவிரோத வன்முறை</h2><p>பொதுவாகவே மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ரெயில்வே நிலையங்களில் இந்தி, உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர்கள் இடம்பெறுவது நீண்டகால நடைமுறையாகும். ஆனால் இதனை "இந்தி திணிப்பு" என தவறாக சித்தரித்து பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது  சட்டவிரோத வன்முறையாகும்.</p><p>இது போன்ற செய்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மீதும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறேன். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க முயலும் பிரிவினைவாத அரசியலுக்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஒகேனக்கல் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் நன்றி&quot; - பிரேமலதா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmdk-thanks-everyone-who-made-the-hogenakkal-protest-demonstration-a-success-premalatha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmdk-thanks-everyone-who-made-the-hogenakkal-protest-demonstration-a-success-premalatha#comments</comments><guid isPermaLink="false">fbf971e4-e0e3-4fa9-9749-c40d0d5cf21b</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:18:24 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:18:24.044Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,ஒகேனக்கல்,Hogenakkal Cauvery,பிரேமலதா விஜயகாந்த்,பிரேமலதா,Premalatha Vijayakand,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/beitdgeh/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/beitdgeh/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேகதாது அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்தும், காவேரி நதியில் தண்ணீர் திறந்துவிடாததைக் கண்டித்தும், ஒகேனக்கலில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>போராட்டம் வெற்றி</h2><p>தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்தும், காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாத கர்நாடக அரசுகளின் செயல்பாட்டை எதிர்த்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது. </p><p>இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றியமைக்க முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கழக அவைத்தலைவர் இளங்கோவனுக்கும், தர்மபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் குமாருக்கும், தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் விஜயசங்கருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் பழனியப்பனுக்கும், திமுக கூட்டணிக் கட்சி  நிர்வாகிகளுக்கும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் காவேரி தனபாலனுக்கும், தாராபுரம் காளிமுத்துக்கும் தேமுதிக சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். </p><h2>மனமார்ந்த நன்றி</h2><p>அதேபோல், கழக அணி நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கழகத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொண்டர்கள் </a>மற்றும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட உறுதுணையாக இருந்த பொதுமக்கள் மற்றும் விவசாய பெருமக்கள் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது தமிழக அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-has-dropped-the-cases-against-students-who-protested-against-the-neet-exam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-has-dropped-the-cases-against-students-who-protested-against-the-neet-exam#comments</comments><guid isPermaLink="false">80f91723-7d50-4264-9662-8d89610d30b9</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:15:07 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:15:07.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,protest,போராட்டம்,மாணவர்கள்,NEET,நீட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/fo8vj9du/Vijay-CM.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/fo8vj9du/Vijay-CM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் இதற்கு தொடர்புடைய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி  விலக வேண்டும் என வலியுறுத்தி  டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உள்படபலரும் பங்கேற்றனர்.  நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் ஆதரவு வலுத்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.  </p><p>போராட்டம் தொடங்கி 36 நாள்களுக்குப் பிறகு, ஜூலை 25 ஆம் தேதியில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதையடுத்து,  போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.   இந்த நிலையில், தமிழகத்திலும்  நீட் தேர்வுக்கு எதிராக போராடிய போது மாணவர்கள்  மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.</p><p>அமைச்சர் ராஜ்மோகன்  இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:   தமிழ்நாடு முதலமைச்சர்   உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நான் ஏற்கனவே சிறையை பார்த்தவன்... செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-have-already-seen-prison-senthil-balaji-sensational-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-have-already-seen-prison-senthil-balaji-sensational-interview#comments</comments><guid isPermaLink="false">251a6c80-30dd-4e73-b369-10c9f5dd2867</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:58:54 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:58:54.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Senthil Balaji,செந்தில் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/53zf5lrz/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/53zf5lrz/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரைப் பேரம் பேச முயன்றதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி நிபந்தனை கையெழுத்திட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட 5 நாள் விலக்கு கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க இருந்ததால் அவகாசம் கேட்டிருந்தேன். அமைச்சர் சொன்னது போல் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் ஏற்கனவே சிறையை பார்த்தவன்.. எதற்கும் பயந்து ஓட வேண்டிய அவசியம் இல்லை. </p><p>தவெக அரசு எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்; எத்தனை வழக்குகள் போட்டாலும் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்பேன். தவெக அரசு அமைந்ததிலிருந்தே தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், வழக்கு போடுவது, கைது செய்வது, வழக்கில் தொடர்பில்லாதவர்களை வழக்கில் சேர்ப்பது போன்ற செயல்களில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது. காவிரி, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சினைகளில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை. மின் கட்டணம் உயர்ந்தது தொடர்பாக பதில் ஏதும் சொல்லாமல் அமைச்சர் நிர்மல்குமார் திசை திருப்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-19</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-19#comments</comments><guid isPermaLink="false">9ac984ad-363c-49be-8985-aab6ef9a7f28</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:30:32 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:30:32.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/snydhkbo/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/snydhkbo/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர், திருநெல்வேலி கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் உள்ள பகுதிகளில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கூடன்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ்மண்டபம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>அதன்படி புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம் விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணை மின் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><p>அதன்படி காரையார், சேர்வலார், பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிளைபட்டி, முதலியார்பட்டி, தாட்டான்பட்டி, கொண்டபையன்பட்டி, வடமலைசமுத்திரம், பசுக்கிடைவிளை, சங்கரபாண்டியபுரம், கருத்தையாபுரம், அய்யனார்குளம். </p><p>ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், A.P. நாடானூர், துப்பாகுடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை 81 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/81-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/81-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">81546926-aed3-4920-8ef3-34698534500b</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:19:56 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:19:56.995Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrest,attempt to murder,attack,கொலை முயற்சி,இந்த ஆண்டு,This year,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gykm1hn2/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/gykm1hn2/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 81 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டு  தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>கொலை முயற்சி, தொடர் தாக்குதல்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மூலச்சி, வடக்கு தெருவைச் சேர்ந்த குருநாதன் மகன் மாடசாமி(எ) மகேஷ் (வயது 36), குருநாதன் மகன் மணிகண்டன்(32), குருநாதன் மகன் கிருஷ்ணன்(எ) கிட்டு(29) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். </p><p>இந்த நிலையில், மேற்சொன்ன 3 பேரும் கொலை முயற்சி,தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் மேற்சொன்ன 3 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார்.</p><h2>3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 3 பேரும் நேற்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>இந்த ஆண்டு இதுவரை 81 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 81 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் டி.கே.சிவக்குமார் செய்கிறார்; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-nirmal-kumar-alleges-that-dk-sivakumar-is-doing-what-mk-stalin-says</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-nirmal-kumar-alleges-that-dk-sivakumar-is-doing-what-mk-stalin-says#comments</comments><guid isPermaLink="false">f0511e2a-08f4-4daf-8897-2283bdb45d7c</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:18:15 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:18:15.198Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,டி.கே.சிவக்குமார்,DK Shivakumar,அமைச்சர் நிர்மல் குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/t2d12pbq/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/t2d12pbq/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை விமான நிலையத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>கர்நாடக முதல்-மந்திரி டி.கே சிவகுமாருக்கும், மு,க.ஸ்டாலின் குடும்பத்துக்கும் கட்சியைத் தாண்டிய நல்ல உறவு இருக்கிறது. எனவே, இவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் டி.கே. சிவகுமார் செய்வார். எல்லாவற்றையும் விட திமுக குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல வகையில் டி.கே. சிவகுமார் விரும்பினார்.</p><p>காங்கிரஸ் தலைமை சொல்வதைக் கேட்பதைவிட, டி.கே. சிவகுமார் திமுக குடும்பம், மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்பார் என்று பல தரப்பினர் சொல்லி வந்தனர். அதேமாதிரிதான் கடந்த ஒரு வாரம் நடைபெற்றது. டி.கே. சிவகுமார் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதைத்தான் திமுக சொல்கிறது. திமுக சொல்வதைத்தான் அவரும் சொல்கிறார். </p><p>இதேமாதிரிதான் இவர்கள் இருவரும் சேர்ந்து கருணாநிதி காலத்திலும் ”தண்ணீர் கொடுக்காதீர்கள், தண்ணீர் கொடுத்தால் ஜெயலலிதாவுக்கு நற்பெயர் கிடைத்துவிடும்” என்று கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, முட்டுக்கட்டை போட்டார்கள். அதையேதான் திமுக இப்போதும் செய்கிறது. தமிழக முதல்-அமைச்சர் தனிமைப்பட்டு நிற்கிறார் என்ற வார்த்தை தமிழக மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் தெரிவித்ததைப் போல உள்ளது.</p><p>மேகதாது விவகாரத்தில், நேற்று காலை முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனைகளை நடத்தி, உச்சச்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்று முடிவு எடுத்தபோது, திமுக 5 மணிக்கு மேல் அவசரமாக வழக்குப் பதிவு செய்கிறது. இதுமாதிரி ஒரே மாநிலத்தில் பல வழக்குகளைப் பதிவு செய்தால் எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கும்? எந்த அளவுக்கு அந்த மாநிலத்தின் உரிமைகளை பின்நோக்கித் தள்ளும்.</p><p>கடந்த 5 வருடங்களாக அவர்கள் என்ன செய்தார்கள்? கடந்த 30 ஆண்டுகளாக எல்லாவகையிலும் காவிரி நீர் பிரச்னையில் குழப்பத்தை ஏற்படுத்தியது திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும்தான். இப்போதும் அதே குழப்பத்தைத் தான் ஏற்படுத்துகிறார்கள். எம்.எல்.ஏ. பேர விவகாரத்தில் பெங்களூருவில் தான் பணம் பிடிப்பட்டது.. திமுகவுக்கு பெங்களூரு பாதுகாப்பானதாக உள்ளதா?. தமிழகத்தில் 17 டி.எம்.சி. காவிரி நீர் வர வேண்டி இருக்கிறது. விநாடிக்கு 3,500 கன அடி என்பது போதாது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-12</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-12#comments</comments><guid isPermaLink="false">1f6d5656-840d-4011-a6c9-1c800b56587b</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:06:17 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:06:17.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/z99xvzt5/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/z99xvzt5/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் அவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானைகோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>