<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 04 Sep 2026 11:25:57 +0000</lastBuildDate><item><title>மேகதாது விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் 5 நாட்கள் போராட்டம் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-tamil-nadu-farmers-announce-a-5-day-protest-condemning-the-karnataka-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-tamil-nadu-farmers-announce-a-5-day-protest-condemning-the-karnataka-government#comments</comments><guid isPermaLink="false">04c4b0f5-49cb-4008-b2fc-f379d1826336</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:21:22 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:21:22.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Tamil Nadu,போராட்டம்,மேகதாது,தமிழக விவசாயிகள்,Megha Dadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/psx6y9nv/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/psx6y9nv/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சியை கண்டித்து, வரும் செப்டம்பர் 20-ந்தேதி முதல் 5 நாட்கள் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டத்தை நடத்தப்போவதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. </p><p>முன்னதாக மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய மின்சாரத் துறை மந்திரி மனோகர் லால் கட்டாருடன் விவசாயிகளின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய விவசாயிகளின் அமைப்பின் தலைவரான பி.ஆர்.பாண்டியன், போராட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். </p> <p>உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக அரசியல் தலைவர்கள் மேகதாது திட்டத்தை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டிய பி.ஆர்.பாண்டியன், பூம்புகாரில் தொடங்கவுள்ள இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக, தேவைப்பட்டால் பிரதமரை சந்திக்கவும் தமிழக விவசாயிகள் முயற்சிப்பார்கள் என்று தெரிவித்தார். </p><p>மேலும், மத்திய நீர் ஆணையத்திடம்(CWC) கர்நாடக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை(DPR) மோசடியானது என்றும் சட்டப்படி செல்லுபடியாகாதது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விரிவான திட்ட அறிக்கையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகியவற்றின் அவசியமான ஒப்புதல் பெறப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில்: ரசாயனத்தில் தயார் செய்த 56 விநாயகர் சிலைகள் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-56-chemically-prepared-ganesha-idols-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-56-chemically-prepared-ganesha-idols-seized#comments</comments><guid isPermaLink="false">16bf9524-98f7-4254-a314-3f1e157f5a71</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:15:40 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:15:40.669Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,நாகர்கோவில்,Seizure,பறிமுதல்,corporation officials,மாநகராட்சி அதிகாரிகள்,விநாயகர் சிலை,chemical,ரசாயனம்,Ganesha idol</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/a4m79jkj/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-56-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாகர்கோவிலில் ரசாயனத்தில் தயார் செய்த 56 விநாயகர் சிலைகள் பறிமுதல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/a4m79jkj/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-56-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில், </p><p>கன்னியாகுமரி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">நாகர்கோவிலில்</a> விதிகளை மீறி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ரசாயனத்தில்</a> தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த 56 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விநாயகர் சிலைகளை</a> மாநகராட்சி அதிகாரிகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்தனர்.</p><h2>நீர்நிலைகள் பாதிப்பு</h2><p>நாடு முழுவதும் கிருஷ்ணஜெயந்தி விழா, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட விழாக்களில் சாமி சிலைகள் வைத்து பூஜை செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் இத்தகைய விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாக்களில் களிமண்ணால் ஆன சிலைகள் கடந்த காலத்தில் விற்பனைக்கு வந்தன. </p><p>விநாயகர் சதுர்த்தி பூஜையின்போது பூஜைக்கு வைக்கப்படும் சிலைகள் பின்பு நீர் நிலைகளில் கரைக்கப்படும். காலப்போக்கில் களிமண் சிலைகளின் எண்ணிக்கை குறைந்து பிளாஸ்டர் ஆப் பாரிசால் தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்பனைக்கு வருகிறது. அதனை நீர் நிலைகளில் கரைக்கும் போது நீர் மாசுபடுவதுடன், நீர் நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.</p><h2>விழா நாட்கள்</h2><p>பூஜையின்போது களிமண்ணால் ஆன சிலைகளை வைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி வருகிறது. அதேசமயம் விதிகளை மீறி பிளாஸ்டர் ஆப் பாரிசால் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணஜெயந்தி விழா மற்றும் வருகிற 14-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக கிருஷ்ணர், விநாயகர், சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் வந்துள்ளன. </p><p>கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பகுதியில் சாலையோரம் வைத்து வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சாமி சிலைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையே பெரும்பாலான சிலைகள் மீது புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த சிலைகள் தொடர்பாக ஆய்வு செய்ததில், சிலைகள் பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்டுள்ளதும், பல வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளதாலும், சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது என மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.</p><h2>56 விநாயகர் சிலைகள் பறிமுதல்</h2><p>அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா உத்தரவின்பேரில் மாநகர் நல அதிகாரி டாக்டர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர் ஜான், ஆய்வாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று வடசேரி பகுதிக்கு வந்தனர். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 56 விநாயகர் சிலைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மற்ற சிலைகளை ஓரிரு நாட்களில் அகற்றிவிடுவதாக வடமாநில தொழிலாளிகள் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களை எச்சரித்துச் சென்றனர். </p><p>நாகர்கோவில் மாநகர் மட்டுமின்றி இதேபோன்று மாவட்டத்தின் பல இடங்களிலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வருகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு நடத்தி, சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயன சிலைகள் விற்பனையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijay-a-prime-ministerial-candidate-minister-sengottaiyan-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijay-a-prime-ministerial-candidate-minister-sengottaiyan-responds#comments</comments><guid isPermaLink="false">40758482-dd12-4609-bd97-615d96ef0377</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:13:28 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:13:28.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் செங்கோட்டையன்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/t11sn344/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/t11sn344/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது; </p> <p>தமிழகத்தில் புதிய சட்டமன்றக் கட்டிடம் என்பது தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவைப்படும் ஒன்று. கர்நாடகாவில் கட்டப்பட்ட சட்டமன்றம் வரலாறு படைத்து வருவதைப் போலத் தமிழகத்திற்கும் புதிய சட்டமன்றம் தேவை. எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் நோக்கம். அதன் அடிப்படையில்தான் ஒரு பெண் உறுப்பினருக்கும், ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவருக்கும் மாற்று சபாநாயகராக அமர்ந்து அவயை வழிநடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. என்றார். </p><p>அப்போது முதல்-அமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து செங்கோட்டையன் பேசியதாவது;</p><p>”எங்கள் தலைவரை (முதல்வர் விஜய்) பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார். இந்த தமிழகம் அவரை நம்பி வாக்களித்துள்ளது. தமிழ்நாடு மக்களை காப்பதற்காக, அவர் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மக்கள் விரும்பும் திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். என்னை சிக்கலில் மாட்டி விடாதீர்கள்.” என்று அவர் கூறினார். </p> ]]></content:encoded></item><item><title>நள்ளிரவில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்..காமுகனை விரட்டி விரட்டி கடித்த நாய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-woman-who-was-alone-was-sexually-assaulted-in-the-middle-of-the-night</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-woman-who-was-alone-was-sexually-assaulted-in-the-middle-of-the-night#comments</comments><guid isPermaLink="false">5e779fe9-b4d2-4850-b4ff-996fbe59d470</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:07:05 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:07:05.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,இளம்பெண்,பாலியல் தொல்லை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/lt629x7t/dog33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பாலியல் அத்துமீறல்]]></media:title><media:description type="html"><![CDATA[ காமுகனை விரட்டி விரட்டி கடித்த நாய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/lt629x7t/dog33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை, 16 வயது சிறுவன் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவனை அந்த தெருவில் இருந்த நாய் கடித்து குதறி துரத்தி அடித்தது.</p><p>கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள அசோகபுரம் பகுதியில் இயங்கி வந்த பெட்டிக்கடை ஒன்றிற்கு கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், துடியலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். </p><h2>மனிதநேயமற்ற கொடூர காட்சி</h2><p>குற்றவாளிகளைக் கண்டறியும் முயற்சியாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர். அப்போது, பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தைத் தாண்டி, மனிதநேயமற்ற மற்றொரு கொடூரக் காட்சி கேமராவில் பதிவாகியிருப்பதைக்கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். </p><h2>மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்</h2><p>நள்ளிரவு நேரத்தில் சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக நடந்து வந்த நபர் ஒருவர் சிறிது நேரம் அங்கும் இங்கும் நோட்டம் விடுகிறார். சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணிடம் நெருங்கி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் ரீதியாக தொல்லை</a> கொடுக்கிறார். அந்த இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதையும் தெரிந்து அந்த பெண்ணை விட வில்லை. இந்த காட்சி அதில் தெளிவாகப் பதிவாகியிருந்தது.</p><h2>கூச்சலிட்டதும் ஓடோடி வந்த தெருநாய் </h2><p>பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட நிலையில், அங்கு நின்றுகொண்டிருந்த தெருநாய் ஒன்று வேகமாக ஓடி வந்து  அப்பெண்ணுக்கு ஆதரவாக நின்றது. அந்த நபர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, கோபமடைந்த அந்தத் தெருநாய் அவரைப் பார்த்துத் தொடர்ந்து உரக்கக் குரைத்து, கடிக்கப் பாய்ந்து தாக்குதல் நடத்தியது. நாயின் கடுமையான அச்சுறுத்தலால் பயந்துபோன அந்த நபர், விட்டால் போதும் என்று துண்டு காணோம் துணியும் காணோம் என்று தலைதெறிக்க அங்கு இருந்து தப்பியோடினார். அந்தத் தெருநாய் விடாமல் அவரைத் துரத்திச் சென்ற காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியிருந்தன.</p><h2>குற்றச்செயலில் ஈடுபட்ட 16 வயது சிறுவன்</h2><p>இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துடியலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளிக்க முயன்றவர் அதே துடியலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அச்சிறுவனைக் கைது செய்து மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆபத்தான சூழலில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காக்கப் போராடிய தெருநாயின் விசுவாசமான செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல்: விபத்தில் 4 மாணவிகள் பலி - கல்லூரி பஸ் டிரைவர் கைது

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/namakkal-4-students-killed-in-accident-college-bus-driver-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/namakkal-4-students-killed-in-accident-college-bus-driver-arrested#comments</comments><guid isPermaLink="false">41ea7a60-4fdb-45f8-8b71-593f223e8adf</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:34:50 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:34:50.833Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Namakkal,நாமக்கல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/xfgpqmgp/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/xfgpqmgp/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[    <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக கல்லூரி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p>  <p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">நாமக்கல் </a>மாவட்டம் திருச்செங்கோடு சக்கராம்பாளையம் போயர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர்-அமுதா தம்பதியின் மகள்கள் பிளஸ் 1 படிக்கும் நிவேதா(17), 7ம் வகுப்பு படிக்கும் தனுஸ்ரீ(13), 6ம் வகுப்பு படிக்கும் அபிநயா(12).</p><p>எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் இவர்களை ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் (சித்தப்பா ரமேஷ்பாபு மகள்) சுபிதா என்ற கலைச்செல்வி (19) தினமும் பள்ளிக்கு சென்று இருசக்கர வாகனத்தில் அழைத்து வருவது வழக்கம்.</p> <h2>விபத்து - 4 மாணவிகள் பலி</h2><p>அந்த வகையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த கலைச்செல்வி பின்னர் இருசக்கர வாகனத்தில் 3 பேரையும் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.</p><p>ராசிபுரம்–திருச்செங்கோடு சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சக்கராம்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் பிரிவு சாலையை கடக்க முயன்றனர்.</p><p>அப்போது ராசிபுரத்தில் இருந்து சங்ககிரி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி, அபிநயா உயிரிழந்தனர்.</p><p>படுகாயமடைந்த நிவேதா, தனுஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே நிவேதாவும், தனுஸ்ரீவும் உயிரிழந்தனர். இதன் மூலம் இந்த கோர விபத்தில் ஒருகுடும்பத்தை சேர்ந்த 4 மாணவிகளும் உயிரிழந்தனர்.</p> <h2>கல்லூரி பஸ் டிரைவர் கைது</h2><p>இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வந்தனர்.</p><p>இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">நாமக்கல் </a>விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில் கல்லூரி பஸ் டிரைவர் பிரவீனை (வயது 23) போலீசார் இன்று கைது செய்தனர்.</p> <p>அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், இறப்பு ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லூரி பஸ் டிரைவர் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-from-papanasam-dam-mp-kanimozhi-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-from-papanasam-dam-mp-kanimozhi-urges#comments</comments><guid isPermaLink="false">a2e024d1-b044-4602-89c4-74acd4faff16</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:03:34 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:03:34.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,MP Kanimozhi,பாபநாசம் அணை,Papanasam dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/b8iauqnl/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/b8iauqnl/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.</p><p>தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை சார்ந்துள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பலமுறை மனு அளித்தும், தொடர் போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகமும் நீர்வளத்துறையும் நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளை சாலையில் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது, இந்த அரசு.</p><p>விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பாபநாசம் அணையிலிருந்து 1,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் &apos;ஏஐ&apos; தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ai-tech-detects-kidney-disease-early</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ai-tech-detects-kidney-disease-early#comments</comments><guid isPermaLink="false">19d1e41e-fb58-49b9-b4a1-1c94e0c3b2be</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:58:21 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:58:21.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏஐ,சிறுநீரகம்,தொழில்நுட்பம்,Technology,கண்டுபிடிப்பு,disease,AI,நோய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/h8w9i3cu/ai.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பேராசிரியர் ஜி எல் சாமுவேல்,ஜெனிபர் டிலைட்டா,பேராசிரியர் சந்தோஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் 'ஏஐ' தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/h8w9i3cu/ai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஐஐடி - வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி ஆகியவற்றின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆராய்ச்சியாளர்கள்</a>, உலகில் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் சிறுநீரக நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிய மருத்துவர்களுக்கு உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பல்வேறு கருவிகளை உருவாக்கியுள்ளனர்.</p> <h2>3 தொழில்நுட்பங்கள்</h2><p>மொத்தம் 3 தொழில்நுட்பங்களை இக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். முதலாவதாக, மருத்துவ மற்றும் ஆய்வக தகவல்களை பயன்படுத்தி நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படும் அபாயத்தை கணிக்கும் இயந்திர கற்றல் மாதிரியாகும். </p><h2>இரண்டாவது</h2><p> சிடி-ஸ்கேன் படங்களை தானாக பகுப்பாய்வு செய்து அவற்றை இயல்பான சிறுநீரகம், சிறுநீரகநீர்க்கட்டி, சிறுநீரகக்கல், சிறுநீரகக்கட்டி என 4 வகைகளாக வகைப்படுத்தும் உள்நோக்கிய கற்றல் அமைப்பாகும். </p><h2>மூன்றாவது</h2><p> சிடி-ஸ்கேன் படங்களிலிருந்து சிறுநீரகத்தின் 3டி உருவத்தை மீண்டும் உருவாக்கி, கட்டியின் அளவையும், சிறுநீரகத்தில் கட்டி எத்தனை சதவீதம் பாதித்துள்ளது என்பதையும் துல்லியமாக மதிப்பிடும் 3டி தளம் ஆகியவையாகும்.</p> <h2>சுகாதார பிரச்சினை</h2><p>இத்தொழில்நுட்பங்கள் முக்கியமான சுகாதார பிரச்சினைக்கு தீர்வளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. சிறுநீரகநோய்கள் ஆரம்ப கட்டத்தில் பெரும்பாலும் அறிகுறியின்றி காணப்படுகின்றன. இதனால், குறிப்பிடத்தக்க அளவில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட பின்னரே நோய் கண்டறியப்படுகிறது. </p> <h2> டயாலிசிஸ் சிகிச்சை</h2><p>குறிப்பாக, மருத்துவர்களுக்கு விரைவாகவும் சீரான முறையிலும் முடிவுகளை வழங்கவும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் பெரிதும் உதவுகின்றன. இதன்மூலம் நோயை முன்கூட்டியே கண்டறிந்து, அதன் தீவிர வளர்ச்சியை தாமதப்படுத்துவதுடன், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D">டயாலிசிஸ்</a> சிகிச்சைக்கான தேவையையும் தவிர்க்க முடியும்.</p> <h2>ஆராய்ச்சி</h2><p>சென்னை ஐஐடி இயந்திர பொறியியல் துறையை சேர்ந்த பேராசிரியர் ஜி எல் சாமுவேல், ஆராய்ச்சி மாணவி  ஜெனிபர் டிலைட்டா ஆகியோர் இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்தனர். சிஎம்சி வேலூர் சிறுநீரகவியல் துறையை சேர்ந்த  பேராசிரியர் சந்தோஷ் வர்கீசுடன் இணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>அணித் தேர்வில் தவறு நடப்பது உண்மை தான்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-true-that-errors-occur-in-team-selection-pakistan-cricket-board-chairman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-true-that-errors-occur-in-team-selection-pakistan-cricket-board-chairman#comments</comments><guid isPermaLink="false">7ab268ee-eacd-411c-ae01-8c197f28c54e</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:36:50 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:36:50.120Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan Cricket,பாகிஸ்தான் அணி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/gq5ke7k6/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/gq5ke7k6/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>லண்டன்,</p> <p>இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் இரு டெஸ்டுகளிலும் படுதோல்வி அடைந்தது. ஒரு இன்னிங்சில் கூட 200 ரன்களை தொடவில்லை. மோசமான தோல்வி எதிரொலியாக முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆஹா, இமாம் உல்-ஹக் உள்பட 7 வீரர்கள் 3-வது டெஸ்டுக்கு முன்பாக தடாலடியாக நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பயிற்சியாளர் சர்ப்ராஸ் அகமதுவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p>பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கையை முன்னாள் கேப்டன்கள் ரமீஷ் ராஜா, ரஷீத் லத்தீப், சாஹித் அப்ரிடி உள்ளிட்டோர் கடுமையாக குறை கூறினர். ஒரு தொடரின் பாதியில் வீரர்களை நீக்குவது சரியானது அல்ல. இது வீரர்களின் மனஉறுதியை சீர்குலைக்கும் என்று அவர் கள் சாடினர்.</p> <p>இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p> <p>பாகிஸ்தான் கிரிக்கெட் மோசமான நிலையில் இருப்பதாக விமர்சிப்பது நியாயமற்றது. ஒருநாள் போட்டி தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடைசி 6 ஒரு நாள் தொடர்களில் 4-ஐ கைப்பற்றியுள்ளது. வெற்றி சதவீ தம் 24-ல் இருந்து 73-ஆக உயர்ந்துள்ளது. அப்படி இருந்தும் நமது கிரிக்கெட் அழிந்து விட்டதா? நான் ஒரு விஷயத்தை உங்களிடம் கேட்கிறேன். சமீபத்தில் இந்திய அணி, அயர்லாந்திடம் 20 ஓவர் போட்டியில் தோற்றது. முத்தரப்பு தொடரில் தென்ஆப்பிரிக்க அணி, நமிபியாவிடம் தோல்வி அடைந்தது. அத்துடன் கிரிக்கெட் முடிந்து விட்டதா என்ன? இது போன்ற சில பின்னடைவுகள் ஒட்டுமொத்த அணியின் தரத்தை தீர்மானித்து விடாது.</p> <p>சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் முற்றிலும் அழிந்து விட்டதாக கூறி வருகிறார்கள். தங்கள் கிரிக் கெட் வாழ்க்கையில் எதையும் சாதிக்காதவர்கள் இப்படி பேசுவது வேடிக்கையானது. சில நேரங்களில் அணித் தேர்வில் தவறு நடப்பது உண்மை தான். அதற்கு நானே பொறுப்பேற்கிறேன். தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. வீரர்கள் சோபிக்காத போது அவர்களை நீக்கிவிட்டு மாற்று வீரர்களை சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை. ஒரு அணியை 9-ல் இருந்து நம்பர் ஒன் இடத்திற்கு 3 அல்லது 6 மாதங்களில் கொண்டு வருவது சாத்திய மல்ல. அதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் போன்று டெஸ்ட் வடிவத்திலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம்.</p> <p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் படுகொலை: சொத்து பிரச்சினையில் அண்ணன் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pudukottai-property-row-elder-brother-kills-former-ministers-son</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pudukottai-property-row-elder-brother-kills-former-ministers-son#comments</comments><guid isPermaLink="false">2c15f3d6-cc3a-448d-9a2d-a57f9a5c4a5b</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:31:15 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:31:15.368Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,முன்னாள் அமைச்சர்,மகன்,படுகொலை,அண்ணன்,property dispute,Former,சொத்து பிரச்சினை,Bihar Deputy Chief Minister,Brutal murder,elder brother</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/34bq6sep/rajarajan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ராஜராஜன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் படுகொலை: சொத்து பிரச்சினையில் அண்ணன் வெறிச்செயல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/34bq6sep/rajarajan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் (40) வெட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">படுகொலை</a> செய்யப்பட்ட வழக்கில், அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது அவரது சொந்த அண்ணன் ராஜபாண்டி (42) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கரமான கொலை சம்பவத்தின் குலைநடுக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சொத்து தகராறில்</h2><p>மறைந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முன்னாள் அமைச்சர் </a>வெங்கடாசலத்தின் முதல் மனைவியின் மகன் ராஜபாண்டி மற்றும் இரண்டாம் மனைவியின் மகன் ராஜராஜன் ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ராஜராஜன் தனது வீட்டை சுத்தம் செய்ய சென்றபோது, அங்கு வந்த ராஜபாண்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.</p> <h2> சிசிடிவி காட்சிகள்</h2><p>வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ராஜபாண்டி பயங்கர ஆயுதங்களுடன் ராஜராஜனை வெட்டப் பாய்ந்தார். உயிருக்கு பயந்து ராஜராஜன் வீதியில் அலறியபடி ஓட, அவரை அரிவாளுடன் ராஜபாண்டி ஆக்ரோஷமாக ஓடவிட்டு விரட்டும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.</p> <h2>சிலிண்டரை தூக்கி போட்டு கொலை</h2><p>தப்பிக்க ஓடிய ராஜராஜன் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்த போதிலும், விடாமல் துரத்தி சென்ற ராஜபாண்டி அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, அங்கு இருந்த கேஸ் சிலிண்டரை தூக்கி அவரது தலையில் போட்டு ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். இதில் தலைநசுங்கி ராஜராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ராஜபாண்டி மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.</p><h2>சாலை மறியல்</h2><p>இந்த நிலையில் ராஜராஜன் மனைவி மற்றும் அவரது குழந்தைகள், உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராஜராஜன் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் கொலை செய்த ராஜபாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்று கூறி வட காடு-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் ராஜராஜன் உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <h2>வழக்குப்பதிவு</h2><p>இந்நிலையில் ராஜராஜனை கொலை செய்த அவரது சகோதரர் ராஜபாண்டி புதுக்கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக வடகாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் விவரங்கள் சேகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/collection-of-details-of-tasmac-employees-who-participated-in-protests-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/collection-of-details-of-tasmac-employees-who-participated-in-protests-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">2e0d6342-4b0d-40b7-8b29-fb396de10856</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:13:17 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:13:17.584Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,டாஸ்மாக்,Tasmac,மதுபான கடை,Employees protest,டாஸ்மாக் நிர்வாகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/3vgkvfck/shop33.jppg.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  டாஸ்மாக் ஊழியர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/3vgkvfck/shop33.jppg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>157 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 136 கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>சமீபத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழக அரசு சம்பள உயர்வை அறிவித்தது. இதனால், நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த கூடுதல் வசூல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கூடுதல் வசூல் குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களின் விவரம் அவர்களின் பணிப் பதிவேட்டில் பதிவாகும். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது முதன்முறை கண்டறியப்பட்டால் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. </p><h2>எச்சரிக்கை</h2><p>கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது 2வது முறையாக கண்டறியப்பட்டால் 3 மாதம் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><h2>புகார் சேவை மையம்</h2><p>எனினும் சில இடங்களில் முறை​கேடு​கள் தொடர்ந்​தன. கூடு​தல் வசூல் தொடர்​பான புகார்​களை பொதுமக்​கள் எளி​தில் தெரிவிக்க, தமிழக அரசு அண்​மையில் பிரத்​யேகப் புகார் சேவை மையத்​தைத் தொடங்​கியது. இந்த மையத்​துக்கு வந்த ஏராள​மான புகார்​களை ஆய்வு செய்த அதி​காரி​கள், கள சோதனை​யில் ஈடு​பட்​டனர்.</p><p>இந்நிலையில், நேற்று முன்​தினம் முதல்கட்​ட​மாக 67 டாஸ்​மாக் ஊழியர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். அதன் தொடர்ச்​சி​யாக நேற்று மேலும் 150 ஊழியர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர் கடந்த 2 நாட்​களில் மட்​டும் 217 பேர் மீதான இந்த அதிரடி நடவடிக்​கை, டாஸ்​மாக் ஊழியர்கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சி​யை​யும் கலக்​கத்​தை​யும் ஏற்படுத்​தி​யுள்​ளது.</p><h2>டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</h2><p>இந்தநிலையில், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கடை வாடகை - மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிவிட்டால், இன்று முதல் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெற மாட்டோம் எனத் தெரிவித்தனர். இவர்களின் போராட்டம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 137 கடைகளும் இன்று(செப். 4) அடைக்கப்பட்டுள்ளன.</p><p>நேற்று சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20">டாஸ்மாக் கடைகள்</a> திடீரென எந்த முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை தடுக்கும் நடவடிக்கையில் ஏற்படும் செலவினத்தை அரசே ஏற்க வலியுறுத்தியதாக தெரிகிறது. காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திலும் தங்கள் சொந்த காசை செலவிடவேண்டியதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.</p><h2>டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை</h2><p>இந்தநிலையில், பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக 157 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 136 கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தில் உள்ள ஊழியர்களின் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் சேகரித்து வருகிறது. அவர்கள் மீது சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்வது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p> ]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்: டிடிவி தினகரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-day-wishes-to-everyone-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-day-wishes-to-everyone-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">33ecfdf2-a4a1-4581-a606-790efa1a0e2c</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:12:56 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:12:56.798Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,ஆசிரியர் தினம்,Teachers&apos; Day</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/s3szn7pl/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/s3szn7pl/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“இந்திய குடியரசின் முன்னாள் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை வழங்குவதோடு, நேர்மை, பொறுப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி, மனிதநேயம் போன்ற சிறந்த பண்புகளையும், சமூகச் சிந்தனைகளையும் கற்பிப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.</p><p>மாணவச் செல்வங்களிடையே அறிவை விதைத்து, ஒழுக்கத்தை வளர்த்து, வெற்றியை அறுவடை செய்யும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரின் கல்விப் பணி மென்மேலும் சிறந்தோங்கிட வேண்டும் எனக் கூறி, ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தோஷம் கழிப்பதாக கூறி நிர்வாண பூஜை: கனடா பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்த ஜோசியர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/naked-ritual-to-ward-off-bad-luck-astrologer-extorts-money-from-canadian-woman-by-threatening-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/naked-ritual-to-ward-off-bad-luck-astrologer-extorts-money-from-canadian-woman-by-threatening-her#comments</comments><guid isPermaLink="false">695bc905-22d7-4480-bad0-81264f5bb626</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:36:19 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:36:19.641Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,police investigation,ஜோதிடர்,மிரட்டி பணம் பறிப்பு,jothidar,நிர்வாண பூஜை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/6ntxg50e/mamaa.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/6ntxg50e/mamaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை கோடம்பாக்கத்தில் கனடா பெண்ணிடம் தோஷம் கழிப்பதாக கூறி நிர்வாண பூஜை நடத்தி மிரட்டி பணம் பறித்த ஜோசியர் கைது செய்யப்பட்டார். </p><h2>தொலைக்காட்சி நிகழ்ச்சி</h2><p>கனடா நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான 37 வயது பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a>யில் தங்கியிருந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி முத்து என்ற கிளி ஜோசியரை சந்தித்து ஜோசியம் பார்த்து உள்ளார். அப்போது ஜோசியர் பெண் குறித்து பல்வேறு தகவல்களை கூறியதால் அவரை நம்பிய பெண் தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்று புகழ் பெற வேண்டும் என கேட்டுள்ளார் </p><h2>நிர்வாண வீடியோ</h2><p>அதற்கு ஜோசியர் தங்கியிருந்த அறையில் இருந்து நிர்வாண பூஜையில் ஈடுபட்டால் புகழ் பெறுவீர்கள் என கூறியுள்ளார். இதை நம்பிய கனடா பெண் தான் தங்கி இருந்த அறையில் இருந்து நிர்வாண பூஜையில் ஈடுபட்டார். அதனை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து, நேரடியாக ஜோசியர் இசக்கி முத்து பார்த்தபடி பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு 20 ஆயிரம் ரூபாய் பெண்ணிடம் பெற்றுள்ளார். </p><p>இந்த நிலையில் மேலும் பணம் கொடுக்க வேண்டும் என  அந்த பெண்ணை இசக்கி முத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இல்லையென்றால் வீடியோ காலில் வந்த நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. </p><h2>வழக்குப்பதிவு</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட பெண் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரின் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றாலத்தில் பதுங்கி இருந்த இசக்கி முத்துவை நேற்று இரவு  கைது செய்தனர். இதுபோன்று வேறு எந்த பெண்களையாவது மிரட்டி வீடியோ எடுத்து இருக்கிறாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/imd-forecast-light-to-moderate-rain-and-thunderstorms-in-tamil-nadu-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/imd-forecast-light-to-moderate-rain-and-thunderstorms-in-tamil-nadu-districts#comments</comments><guid isPermaLink="false">dfe19196-f124-475f-a1c9-f9d9e4d87912</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:18:51 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:18:51.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு,இன்றைய வானிலை</media:keywords><media:content height="463" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/lpp1cah6/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/lpp1cah6/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>நேற்று தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவிய பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) மேல் குறிப்பிட்ட வளிமண்டல சுழற்சியுடன் இணைந்துள்ளது.</p><p><strong>04-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>05-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>04-09-2026 முதல் 08-09-2026 வரை:</strong> கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>04-09-2026 முதல் 08-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்  - தலைமை ஆசிரியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-students-parents-besiege-school-headmaster-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-students-parents-besiege-school-headmaster-arrested#comments</comments><guid isPermaLink="false">1a3db500-2114-4b78-8432-0f32619676c5</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:16:12 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:16:12.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,பாலியல் தொல்லை,திருச்சி,Trichy,school student,பள்ளி மாணவிகள்,தலைமை ஆசிரியர்,sexual abuse,head master,Samayapuram,சமயபுரம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/u0a5gflh/jaer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/u0a5gflh/jaer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சமயபுரம், </p><p>சமயபுரம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு எற்பட்டது.</p><h2>பாலியல் தொல்லை</h2><p>திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சமயபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.</p><p>இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோட்டில் உள்ள சாஸ்தா நகரை சேர்ந்த ஜெயராஜ் (வயது 53) பணிபுரிந்து வருகிறார். இவர், பள்ளியில் படிக்கும் 4 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>பள்ளி முற்றுகை</h2><p>இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுபற்றி நேற்று முன்தினம் தங்களின் பெற்றோர்களிடம் அழுது கொண்டே தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று காலை இதுகுறித்து கேட்பதற்காக பள்ளிக்கு திரண்டு சென்றனர். அவர்களை பள்ளி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.</p><p>இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தினர்.</p><h2>கைது</h2><p>தொடர்ந்து பள்ளிக்குள் சென்ற போலீசார் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் ஜெயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-chennai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">296cb618-2839-43a8-a7a6-5a9973edd9b0</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:09:51 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:09:51.155Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vice President,Chennai,சென்னை,துணை ஜனாதிபதி,சி.பி.ராதாகிருஷ்ணன்,C.P. Radhakrishnan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/n58le99l/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/n58le99l/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகிறார். கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் மதியம் 3 மணிக்கு நடைபெறும் இந்தியா வால்வ்ஸ்-2026 தேசிய கல்வி கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.</p><h2>இந்தியா வால்வ் பதிவேடு தொடக்கம்</h2><p>இதய வால்வு மற்றும் கட்டமைப்பு ரீதியான இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இந்தியா வால்வ் பதிவேட்டை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.</p><h2>வள்ளுவர் கோட்டம் விழாவில் பங்கேற்பு</h2><p>இதைத்தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவிலும் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார்.</p><h2>முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு</h2><p>துணை ஜனாதிபதி வந்து செல்லும் மீனம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2>டிரோன்கள் பறக்க தடை</h2><p>சிவப்பு மண்டல பகுதிகளில் டிரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகளை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டர்ஸ், ஹேங் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றை சென்னை பெருநகரில் பறக்கவிட தடை செய்யப்பட்ட ஆணை நடைமுறையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை: பள்ளிப் பேருந்து மீது லாரி மோதி விபத்து- ஓட்டுநர் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-accident-involving-lorry-and-school-bus-driver-dies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-accident-involving-lorry-and-school-bus-driver-dies#comments</comments><guid isPermaLink="false">68e33910-550e-4868-8143-24100f450ecb</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:07:57 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:07:57.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,உயிரிழப்பு,சிவகங்கை,students,injured,school bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/s9qgm1sb/004.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ லாரி -பள்ளிப்பேருந்து ]]></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளிப்பேருந்து மீது லாரி மோதி விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/s9qgm1sb/004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>சிவகங்கை அருகே பள்ளிப் பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் இருந்த 9 பள்ளி மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.</p><h2>விபத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிவகங்கை மாவட்டம் </a>இடையமேலூர் பகுதியில் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு மாணவர்கள் பள்ளிப்பேருந்தில் வருவது வழக்கம். இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிக்காக மாணவர்களை ஏற்றிக்கொண்டு சிவகங்கை - மேலூர் நெடுஞ்சாலையில் கோமாளிபட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, சிவகங்கையில் இருந்து மேலூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி, எதிர்பாராதவிதமாக பள்ளிப்பேருந்து மீது பயங்கரமாக மோதியது.</p><h2>ஓட்டுநர் உயிரிழப்பு- மாணவர்கள் காயம்</h2><p>இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்தின் </a>தாக்கத்தில் பள்ளி பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. இதில், பேருந்தை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் புல்லுகோட்டை பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் (வயது 65) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 5 மற்றும் 6-ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 9 மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி பெண் உதவியாளர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.</p><h2>ஆஸ்பத்திரியில் அனுமதி</h2><p>மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அங்கு வந்தனர். அவர்கள் காயமடைந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> மாணவர்களை</a> மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-hold-talks-with-striking-sanitation-workers-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-hold-talks-with-striking-sanitation-workers-in-chennai#comments</comments><guid isPermaLink="false">5436a10c-aed7-481a-9523-6b1c4ac351e8</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:03:37 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:03:37.647Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,Sanitation workers,பேச்சுவார்த்தை,தூய்மைப் பணியாளர்கள்,தவெக அரசு,TVK Government,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="463" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ruw39h37/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ruw39h37/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.</p><p>இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>அப்போது தூய்மைப் பணியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆனந்த், "முதல்-அமைச்சர் உங்களுடைய குறைகளைக் கேட்டு அறிந்துகொள்ள எங்களை இங்கு அனுப்பி வைத்துள்ளார். உங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. கடந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டார்கள். அந்த கஜானாவை மீண்டும் அதிகரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><p>கலந்தாலோசித்து, உங்களுக்கு எந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியுமோ, அதை முதலில் செய்வோம். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம்" என்று கூறினார்.</p><p>தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "நீங்கள் எந்தக் கவலையையும் எதிர்கொள்ளத் தேவையில்லை. இது உங்களுடைய அரசு. உங்களை நீங்கள் வருத்திக்கொள்ளத் தேவையில்லை. அதற்காகத்தான் முதல்-அமைச்சர் வருத்தப்பட்டார். ஒவ்வொரு கட்டமாக உங்களுக்கு தேவையான வசதிகளை நாங்கள் செய்வோம்" என்றார்.</p><p>அடுத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான் நாங்கள் இருக்கிறோமே தவிர, அமைச்சர்களாக இல்லை. ஒரு ராணுவக் கட்டுப்பாட்டோடு போராட்டம் நடத்திய உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கஜானா காலியாகிவிட்டது என்று அமைச்சர் ஆனந்த் சொன்னார். கஜானா காலியாகவில்லை, காணாமல் போய்விட்டது. ஆனால், மனிதாபிமானம், கருணை, மனசாட்சி காணாமல் போகவில்லை. போராடுவது உங்கள் உரிமை; நிறைவேற்றுவது எங்கள் கடமை" என்றார்.</p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அனைத்து பிரச்சினைகளையும் உணர்வுபூர்வமாகப் பார்க்கிறோம். நீங்கள் இங்கு போராடிக்கொண்டிருக்கும்போது எங்களுக்கும், முதல்-அமைச்சருக்கும் அங்கு தூக்கம் இல்லை. போன ஆட்சியில் கடன் வாங்கி ஊழல் செய்தார்கள். இந்த ஆட்சியில் கடன் வாங்கி மக்கள் திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறோம். எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>எண்ணற்ற வரலாற்றுச் சாதனைகள் தொடரட்டும்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-countless-historic-achievements-continue-manickam-tagore-congratulates-isro-scientists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-countless-historic-achievements-continue-manickam-tagore-congratulates-isro-scientists#comments</comments><guid isPermaLink="false">abad731f-a083-49ec-9c07-46dfbc0a1dfb</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:44:26 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:44:26.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,காங்கிரஸ்,Congress,இஸ்ரோ,ISRO,மாணிக்கம் தாகூர்,ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்,GSLV Rocket,GSLV,Manickam Tagore,ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்,GSLV F-17 rocket,ஜிஎஸ்எல்வி,GSLVF17</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/bnp6ra2t/mkmer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/bnp6ra2t/mkmer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.</p><h2>மாணிக்கம் தாகூர் வாழ்த்து</h2><p>18 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பாதையில் 'இ.ஓ.எஸ்.-5' செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனை <a href="https://www.dailythanthi.com/topic/isro">இஸ்ரோ</a> விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.</p><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/isro">இஸ்ரோ</a> விஞ்ஞானிகளுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><h2>ஒருபோதும் இமைக்காத கண்</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நமது <a href="https://www.dailythanthi.com/topic/isro">இஸ்ரோ</a> விஞ்ஞானிகள் மற்றும் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>நமது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமைமிகு மைந்தர், இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் அவர்களின் தலைமையின் கீழ் இந்திய விண்வெளித் துறை புதிய சிகரங்களைத் தொட்டு வருகிறது.</p><p>விஞ்ஞானிகள் அழைக்கும் "The Eye in the sky" இது. தேசப் பாதுகாப்பிற்காக ‘ஒருபோதும் இமைக்காத கண்" என்பேன்.</p><p>இது போன்ற எண்ணற்ற வரலாற்றுச் சாதனைகள் தொடர வாழ்த்துகள்;விண்வெளியில் விரியும் நம் தேசத்தின் பெருமை கண்டு என்றும் பெருமிதம் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/environmental-engineer-who-demanded-a-bribe-of-rs-10-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/environmental-engineer-who-demanded-a-bribe-of-rs-10-lakh#comments</comments><guid isPermaLink="false">7c535332-701b-4880-9ce8-ee3b0e7906fa</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:29:39 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:29:39.401Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Bribery,கிருஷ்ணகிரி,Krishnagiri,போலீசார்,லஞ்சம் புகார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/90q94e4j/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லஞ்சம் கேட்ட அதிகாரி கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/90q94e4j/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கல்குவாரி நிறுவனம் அமைப்பதற்கு அனுமதி பெறுவதற்காக வந்த நபரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.</p><h2>லஞ்சம் கேட்ட அதிகாரி</h2><p>சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் பகுதியில் புதியதாக கல்குவாரி நிறுவனம் ஒன்றை அமைப்பதற்காக பணிகளை மேற்கொண்டு வந்தார். அதற்கு முதற்கட்டமாக நிறுவனத்திற்கு அனுமதி சான்றிதழ் பெற சுற்றுச்சூழல் பொறியாளர் புருசோத்தமனிடம் (வயது 48) மனு அளித்திருந்தார். அவருக்கு அனுமதி சான்றிதழ் வழங்குவதற்காக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D">சுற்றுச்சூழல்</a> துறை பொறியாளர் புருசோத்தமன் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரதாப் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.</p><h2>குற்றவாளி கைது</h2><p>புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ரசாயனம் தடவிய ரூ.3 லட்சத்தை பிரதாபிடம் கொடுத்து சுற்றுச்சூழல் பொறியாளரிடம் வழங்குமாறு கூறினர். அதன்படி, அவர் ரசாயனம் தடவிய பணத்தை புருசோத்தமனிடம் வழங்கினார். அப்போது பணத்தை பெற்றதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், இந்த குற்றத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்ட சிவக்குமார் மற்றும் முருகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இடைத்தரகர்கள் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்து, அங்கிருந்த ரூ.25 லட்சம் ரொக்க பணமும், 6 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் வாகனத்தை மறிக்க முயன்ற 8 பேர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-8-people-who-attempted-to-intercept-chief-minister-vijays-vehicle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-8-people-who-attempted-to-intercept-chief-minister-vijays-vehicle#comments</comments><guid isPermaLink="false">97742abb-deb6-4e4f-a86d-229152de3aed</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:13:57 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:13:57.614Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,வழக்குப்பதிவு,case registered,கான்வாய் வாகனம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Convoy Vehicles</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/bxmftm7d/klke.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/bxmftm7d/klke.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போலீஸ் காவலில் உயிரிழந்த ஆகாஷ் குடும்பத்தினர் முதல்-அமைச்சர் விஜய் கான்வாய் வாகனத்தை மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>வாகனத்தை மறிக்க முயற்சி</h2><p>சென்னை தலைமைச் செயலகம் நுழைவாயில் அருகே நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> கான்வாய் வாகனம் வந்த போது அங்கு கூடியிருந்த பொதுமக்களில் சிலர் போலீசாரின் பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி முதல்-அமைச்சரை சந்திக்க வாகனத்தை மறிக்க முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களைத் தடுக்க முயன்ற போது சிலர் போலீசாரை தள்ளிவிட்டு ஓடினார்கள்.</p><p>இதில் போலீஸ்காரர் முத்து கணேசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ராம்குமாரை சக போலீஸ்காரர் ஓடும் போது எதிர்பாராதவிதமாக நெஞ்சில் கையால் குத்திவிட்டார். இதனால் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவர் தலைமைச் செயலக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.</p><h2>போலீசார் அனுமதி மறுத்ததால்...</h2><p>பதற்றமான சூழல் ஏற்பட்டதால் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முதல்-அமைச்சரை சந்திக்க ஓடி வந்த நபர்களை சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.</p><p>விசாரணையில் அவர்கள், கடந்த மார்ச் மாதம் மானாமதுரை போலீஸ் சரகத்தில் காவலில் உயிரிழந்த ஆகாஷின் பெற்றோர் ராஜேஷ் கண்ணன், ஆனந்தி, உறவினர்கள் மற்றும் தமிழ்நாடு இளையோர் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் போலீசாரிடம், "ஆகாஷ் உயிரிழந்த வழக்கில் 6 போலீசார் மீது வழக்குப்பதிவு மட்டும் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த வழக்கில் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்க வந்தோம். போலீசார் அனுமதி மறுத்ததால் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முற்பட்டோம்” என்று தெரிவித்தனர்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இந்நிலையில் முதல்-அமைச்சரின் கான்வாயை மறித்த 8 பேர் மீது கோட்டை காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன்படி சட்டவிரோதமாக கூடுதல் , அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் , காயம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் B3 கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளாகும். இந்த வழக்கில் ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணன், தாய் ஆனந்தி உள்ளிட்ட 8 பேரும் கைது செய்யப்பட்டு, நேற்று இரவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-3-lakh-aid-for-families-of-girls-killed-in-road-accident-cm-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-3-lakh-aid-for-families-of-girls-killed-in-road-accident-cm-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">160385fa-dca9-4f4f-a751-c84895bd1bdb</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:12:37 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:12:37.386Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,நிதியுதவி,Relief,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="463" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/kokmy0k3/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/kokmy0k3/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் நேற்று (03.09.2026) மாலை, கல்லூரியில் பயின்றுவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுபிதா (19 வயது) த/பெ. சேகர், என்ற மாணவி பள்ளியில் பயின்றுவரும் தனது சகோதரிகளான நிவேதா (17 வயது), தனுஸ்ரீ (13 வயது) மற்றும் அபிநயா (12 வயது) த/பெ.ரமேஷ்பாபு ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்லும்போது, தனியார் கல்லூரிப் பேருந்தில் மோதிய விபத்தில் நிவேதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகியோர் சம்பவ இடத்திலேயும், சுபிதா என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.</p><p>இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவிகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர் கல்லம்பாளையத்தில் தூர்வாரப்பட்ட கழிவுநீர் கால்வாய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/desilted-sewage-drain-in-kallampalayam-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/desilted-sewage-drain-in-kallampalayam-tiruppur#comments</comments><guid isPermaLink="false">bff57e83-33b4-454e-97fa-5650049bea2c</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:09:05 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:09:05.547Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் செய்திகள்,Tiruppur District,Tiruppur news</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ovzxncz6/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கழிவுநீர் கால்வாய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ovzxncz6/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் கல்லம்பாளையம் ரெயில்வே தண்டவாள பகுதியில் உள்ள பாலத்தில் (ஒற்றைக்கண் பாலம்) கழிவுநீர் செல்ல தனியாக கால்வாய் உள்ளது. ஆனால் இந்த கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுகள் தேங்கியிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தபோது கழிவுநீரானது ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.</p><h2>மக்கள் பாராட்டு</h2><p>இதுதொடர்பாக ‘<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தினத்தந்தி</a>’யில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தூய்மை பணியாளர்கள் அந்த கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரினார்கள். இதன் காரணமாக தற்போது கழிவுநீர் தடையின்றி கால்வாயில் செல்கிறது. இதனால் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்கள்தான் மாணவர்களின் வெற்றிக்கு உந்து சக்தி - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-are-the-driving-force-behind-students-success-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-are-the-driving-force-behind-students-success-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">bb0dfa62-f622-4b79-9d62-04414901600e</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:04:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:04:10.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,ஆசிரியர் தினம்,Teachers Day,Manickam Tagore</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/e1egjrjp/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/e1egjrjp/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்மாதிரியான ஆசிரியரும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 -ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களது பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் ஒரு ஆசிரியராக இருந்து துணை குடியரசுத் தலைவராகவும், பிறகு குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. </p><h2>ஆசிரியர் தினம்</h2><p>ஆசிரியர்கள் தான் சிறந்த குடிமக்களை வகுப்பறையில் உருவாக்குகிறார்கள். பல மாணவர்கள் நல்ல ஆசிரியர்களிடம் பயின்ற காரணத்தால் பல்வேறு நிலைகளில் உயர்ந்து சாதனைகளைப் படைத்துள்ளனர். அதற்கு உந்து சக்தியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். அந்த வகையில் ஆசிரியர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பங்கை அங்கீகரிக்கும் வகையிலும் செப்டம்பர் 5 ஆம் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ஆசிரியர் தினமாக </a>கொண்டாடுவது மிகவும் பொருத்தமானதாகும். </p><p>எனவே, இந்தியாவின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துகளை&nbsp;தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளித்துறையில் தேசத்தின் புதிய முயற்சிகள், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தட்டும் - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-national-initiatives-in-space-strengthen-indias-security-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-national-initiatives-in-space-strengthen-indias-security-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">eafa2f9e-33fe-4392-8a98-b2206c92322c</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:57:24 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:57:24.007Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,ISRO,ராக்கெட்,Rocket,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="463" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/tcjwfug5/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/tcjwfug5/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 'இ.ஓ.எஸ். 5' என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட்டில் பொருத்தி விண்ணுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் முடிந்ததையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.</p><p>18 நிமிடங்களுக்குப் பிறகு 'இ.ஓ.எஸ்.-5' செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இன்று சூரிய உதயத்திற்கு முன்பாக, இஸ்ரோவால் ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இ.ஓ.எஸ்.-5 வெற்றிகரமாக ஏவப்பட்டது நாட்டின் விண்வெளிப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாகும். இந்த சாதனை நமது தேசத்தின் பாதுகாப்பையும், கண்காணிப்புக்கான நமது திறன்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.</p><p>இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்த அர்ப்பணிப்பு மிக்க இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி பாரதத்திற்கான தொலைநோக்குப் பார்வையால் விண்வெளித்துறையில் தேசத்தின் புதிய முயற்சிகள், நாட்டின் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றம், தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்தி உயரத்திற்கு அழைத்துச் செல்லட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பி.கே. மூக்கையாத் தேவரின் 47-வது நினைவு நாள்: உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் அஞ்சலி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pk-mookkaiah-thevars-47th-death-anniversary-aiadmk-pays-tribute-in-usilampatti</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pk-mookkaiah-thevars-47th-death-anniversary-aiadmk-pays-tribute-in-usilampatti#comments</comments><guid isPermaLink="false">289c979b-c870-4da7-a770-e49546c28792</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:36:59 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:36:59.292Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,மூக்கையாத் தேவர்,Mookkaiah Thevar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/44ai9qrc/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக சார்பில் அஞ்சலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/44ai9qrc/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உசிலம்பட்டி,</p><p>பி.கே. மூக்கையாத் தேவரின் 47-ஆவது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்துவது தொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>47-ஆவது நினைவு நாள்</h2><p>அரசியலிலும், பொதுச் சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றியவரும், கல்விப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவருமான, போற்றுதலுக்குரிய பி.கே. மூக்கையாத் தேவரின் 47-ஆவது நினைவு நாளான 6.9.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவில், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் மூக்கையாத் தேவருடைய நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக நிர்வாகிகள் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள்.</p><p>இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் செய்திடுவார்.</p><h2>நிர்வாகிகளுக்கு அழைப்பு</h2><p>மூக்கையாத் தேவருக்கு வீர அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி கிழக்கு, தேனி மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிர்வாகிகள்</a>, உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இஸ்ரோவின் வெற்றிப் பயணம் தொடரட்டும் - டிடிவி தினகரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-isros-journey-of-success-continue-ttv-dhinakaran-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-isros-journey-of-success-continue-ttv-dhinakaran-wishes#comments</comments><guid isPermaLink="false">7c32f7dd-cc1d-46d9-8e1a-a0d0f67cf66f</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:25:40 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:25:40.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,இஸ்ரோ,ISRO,அமமுக,GSLV,ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்,ஜிஎஸ்எல்வி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/msx2ywtn/ttv.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/msx2ywtn/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.18 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பாதையில் 'இ.ஓ.எஸ்.-5' செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படது. இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மனமார்ந்த பாராட்டு</h2><p>ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட்டின் மூலம் 'இ.ஓ.எஸ். 5' எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நிதி நெருக்கடிக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அவசியம் தானா? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-a-new-secretariat-necessary-amidst-the-financial-crisis</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-a-new-secretariat-necessary-amidst-the-financial-crisis#comments</comments><guid isPermaLink="false">454f26a3-2b16-434c-a3b1-db82d526980a</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:10:33 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:10:33.289Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Secretariat,தலைமைச் செயலகம்,நிதி நெருக்கடி,சட்டசபை கூட்டம்,CM Vijay,தவெக அரசு,TVK Government,tvk govt,புதிய தலைமைச் செயலகம்,new Secretariat,புனித ஜார்ஜ் கோட்டை,ஓமந்தூரார்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ybwmjyvb/nayan.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ybwmjyvb/nayan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்பு செய்திகள்</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நிதி நெருக்கடிக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அவசியம் தானா?  என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விரிவாக இங்கே காண்போம்.  </p><h2>சட்டசபை கூட்ட அரங்கம்</h2><p>105 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சட்டசபை வரலாற்றில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே மெட்ராஸ் மாகாணமாக இருந்த நேரத்தில், 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி, முதல் முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம் நடந்துள்ளது. </p><p>இடையில், செனட் ஹவுஸ் (1937-1938), ராஜாஜி அரங்கம் (1938-1939), கலைவாணர் அரங்கம் (1952-1956), அரன்மோர் அரண்மனை, ஊட்டி (1959 - 10 நாட்கள்), ஓமந்தூரார் அரசினர் தோட்டம் (2010-2011) (தற்போதைய அரசு பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டிடம்) ஆகிய இடங்களுக்கு இடம்மாறினாலும், 98 ஆண்டுகளாக தடம் மாறாமல் புனித ஜார்ஜ் கோட்டை அரங்கத்திலேயே சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/9f7emynx/gee.jpg" /></figure><h2>ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் </h2><p>இந்த நிலையில், சட்டசபையில் நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, "நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்" என்று அவர் அறிவித்தார். </p><p>புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக பட்டினப்பாக்கம் போர் ஷோர் எஸ்டேட், கிண்டி நெருஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம், கிண்டி ரேஸ்கோர்ஸ், நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு இடம் ஆகியவை பரிசீலனையில் இருந்து வருகின்றன. </p><h2>நிதி நெருக்கடியில் அவசியம் தானா?</h2><p>இந்த நேரத்தில், ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் இருக்கும் சூழ்நிலையில் புதிய தலைமைச் செயலகம் அவசியம் தானா?  என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழலாம். </p><p>தமிழ்நாட்டில் மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதி வரையறை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. </p><h2>சட்டமன்ற தொகுதிகள் அதிகரிக்கும் நிலை</h2><p>15 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதுதான் தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற இருக்கிறது. மக்கள்தொகை 8 கோடியை கடந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 120 அதிகரிக்கும் என்று தெரிகிறது. அதாவது, 234 தொகுதிகள், 354 ஆக அதிகரிக்கும் நிலை உள்ளது. </p><p>புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தற்போதைய தமிழக சட்டசபை கூட்ட அரங்கத்தில், 234 சட்டமன்ற உறுப்பினர்களும் நெருக்கடியான நிலையிலேயே அமரவைக்கப்பட்டுள்ளனர். இதுபோக, சபாநாயகர் இருக்கைக்கு வலதுபுறம் அரசு அதிகாரிகள் இருக்கும் இடமும், இடதுபுறம் பத்திரிகையாளர்கள் இருக்கும் இடமும் விசாலமாக இல்லை. </p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/tadqemcg/karnm.jpg" /></figure><h2>பிரிந்து கிடக்கும் 55 துறை அலுவலகங்கள்</h2><p>எதிர்காலத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 354 ஆக உயரும்போது, தற்போதைய கூட்ட அரங்கம் நிச்சயம் போதாது. அந்த நேரத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான தேவை கண்டிப்பாக ஏற்படும். </p><p>எனவே, அப்போதைய தேவையை கருத்தில் கொண்டு, இப்போதே புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் கட்டுவது என்பது தேவையான ஒன்றுதான். தமிழக அரசின் கீழ் 55 துறைகள் இருக்கின்றன. இதற்கான அலுவலகங்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலைக்கு எதிரே உள்ள எழிலகம் கட்டிடம், சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை ஆகிய இடங்களில் பிரிந்து கிடக்கின்றன. இதனை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பது நிர்வாக வசதிக்கு ஏதுவாக இருக்கும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/c8htky9d/vijai.jpg" /></figure><h2>ஓமந்தூரார் அரசினர் தோட்டம்</h2><p>ஆனால், 2006-2011-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டிடத்தை கட்டி, சுமார் ஓராண்டு காலம் (2010-2011) அந்த கட்டிடத்திலேயே சட்டசபை கூட்டத்தையும் நடத்தியது. </p><p>ஆனால், 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் வந்த அ.தி.மு.க. அரசு, புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை, பன்நோக்கு அரசு சிறப்பு மருத்துவமனையாக மாற்றிவிட்டு, மீண்டும் தற்போதைய இடத்திற்கே சட்டசபையை மாற்றியது. </p><h2>சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்</h2><p>எனவே, புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, புதிதாக அமைக்க இருக்கும் தலைமைச் செயலக கட்டிடத்தையாவது அரசியல் காரணங்களுக்காக எதிர்காலத்தில் மாற்றியமைக்காத வகையில், கட்டிய இடத்திலேயே தொடர சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. </p><p>மற்றொரு பக்கம், கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையை மேலும் தரம் உயர்த்தி, ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், பணியாளர்கள், நோயாளிகளை அங்கு மாற்றிவிட்டு, மீண்டும் அதே கட்டிடத்தை தலைமைச் செயலகமாக மாற்றலாம் என்ற கோரிக்கையும் எழுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை ராணுவ அகாடமியில் வீர சாகசம்… இளம் அதிகாரிகளின் தீரச்செயல் நிகழ்ச்சி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heroic-adventure-at-chennai-military-academy-young-officers-show-bravery</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heroic-adventure-at-chennai-military-academy-young-officers-show-bravery#comments</comments><guid isPermaLink="false">b7352f68-7777-4c1f-9e9a-fad3ccb0c906</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:58:07 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:58:07.754Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Officers,அதிகாரிகள்,சாகசம்,நிகழ்ச்சி,Adventure show</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/c5swcb1b/134.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீர சாகசம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/c5swcb1b/134.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையிலுள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நாளை தங்களது பயிறசியை நிறைவு செய்யவுள்ள அதிகாரிகள் இன்று தங்களது தீரச்செயல் திறன்களை செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் பயிற்சி அகாடெமியின் தலைவர்  லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.</p><h2>தற்காப்புக் கலை நிகழ்ச்சி</h2><p>இளம் ராணுவ அதிகாரிகள், தங்கள் உடல் தகுதித் திறன்கள், ராணுவ தற்காப்புக் கலை, குதிரையேற்ற சாகசங்கள், களரிப்பயிற்று, பதுங்கு குழி தகர்ப்புப் பயிற்சி ஆகியவற்றை இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர். உடல் தகுதி மற்றும் வலிமைக்கு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு உடற்பயிற்சிகளுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆயுதங்கள் ஏதுமின்றி எதிரியை எதிர்கொள்ளும் ராணுவ தற்காப்புக் கலை நிகழ்ச்சி இதில் இடம்பெற்றது. </p><h2>சாகச நிகழ்ச்சி</h2><p>அகாடமியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்ற விறுவிறுப்பான குதிரையேற்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சாகச நிகழ்ச்சி</a>, குதிரைகளுக்கும் சவாரி செய்பவர்களுக்கும் இடையிலான அற்புதமான இணக்கத்தை வெளிப்படுத்தியது. குதிரைகளின் துல்லியமான அசைவுகள் மற்றும் சுறுசுறுப்பான இயக்கத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதனைத் தொடர்ந்து, நடனம், தற்காப்பு, இசை, உடல் வளைந்து கொடுக்கும் திறன் ஆகியவற்றின் இணக்கமான கலவையான 'களரிப்பயிற்று' தற்காப்புக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது; இது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. </p><p>இறுதியாக, பயிற்சி அதிகாரிகளின் மன உறுதி மற்றும் திறனை வெளிப்படுத்தும் வகையிலான பதுங்கு குழி தகர்ப்புப் பயிற்சி நடைபெற்றது. போர்க்களத்தில் வீரர்களை வழிநடத்திச் செல்லத் தயாராகி வரும் இந்த இளம் அதிகாரிகள், தங்களுக்கு முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளனர் என்பதை இந்நிகழ்ச்சி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தது. சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>கலப்பு திருமண உதவித்தொகைக்கு பரிந்துரை செய்ய ரூ.1,500 லஞ்சம் வாங்கிய 2 பெண் அலுவலர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-women-officers-arrested-for-rs1500-bribe-in-inter-caste-marriage-aid-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-women-officers-arrested-for-rs1500-bribe-in-inter-caste-marriage-aid-case#comments</comments><guid isPermaLink="false">4b95eccb-81a6-47c0-b433-fcfe54c8a3bb</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:57:36 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:57:36.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Virudhunagar,விருதுநகர்,arrest,லஞ்சம்,Bribery</media:keywords><media:content height="463" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/rfm51a06/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/rfm51a06/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (27 வயது). இவர் கலப்பு திருமணம் செய்த நிலையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.</p><p>இந்த நிலையில், தாமரைக்கண்ணனின் விண்ணப்பத்தை பரிசீலித்து உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத்துறையில் பணியாற்றி வரும் ஊரக நல அலுவலர் சகுந்தலா (56 வயது), விரிவாக்க அலுவலர் பூங்கொடி (58 வயது) ஆகிய இருவரும் ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.</p><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத தாமரைக்கண்ணன், இதுகுறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய 1,500 ரூபாயை தாமரைக்கண்ணனிடம் கொடுத்து, அதனை சமூக நலத்துறை அலுவலர்களிடம் வழங்குமாறு தெரிவித்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து தாமரைக்கண்ணன் நேற்று காலையில் அந்த பணநோட்டுகளை வட்டார வளர்ச்சி அலுவலத்தில் வைத்து பூங்கொடி மற்றும் சகுந்தலா ஆகியோரிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக 2 பெண் அலுவலர்களையும் கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ -  ராமதாஸ் இல்லத்தில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/please-do-not-discuss-politics-a-notice-board-placed-at-ramadosss-residence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/please-do-not-discuss-politics-a-notice-board-placed-at-ramadosss-residence#comments</comments><guid isPermaLink="false">447cdae3-c0af-430e-b882-d260b15b92b2</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:23:30 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:23:30.603Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமதாஸ்,பாமக,Ramadoss,PMK,விழுப்புரம்,Viluppuram,ராமதாஸ் வலியுறுத்தல்,ராமதாஸ் வேண்டுகோள்,தைலாபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/mwgjgqch/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/mwgjgqch/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ என அறிவுறுத்தும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தைலாபுரம் இல்ல வளாகத்தின் நுழைவு வாயில் கதவு முன்பு ‘அரசியல் துறவறம்’ என்ற தலைப்பில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.</p><h2>அரசியல் பேசமாட்டேன் என அறிவிப்பு</h2><p>கடந்த ஜூலையில் நடைபெற்ற தனது 88-வது பிறந்தநாள் விழாவில் பேசிய ராமதாஸ், “இன்று முதல் அரசியல் துறவறம் பூணுகிறேன். <a href="https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/dr-ramadosss-political-journey-spanning-37-years-shall-we-take-a-look-back">அரசியல் துறவறம்</a> என்று சொன்னால், நான் அரசியலை பேசமாட்டேன். அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.</p><h2>காலை 10 மணி முதல் சந்திக்கலாம்</h2><p>இதையடுத்து தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரை ராமதாஸ் சந்தித்து உரையாடி வருகிறார்.</p><p>மேலும், சந்திக்க வருபவர்கள் அவரிடம் அரசியல் பேச முயற்சிக்கின்றனர். இந்நிலையில தைலாபுரம் இல்ல வளாகத்தின் நுழைவு வாயில் கதவு முன்பு அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.</p><h2>பார்வையாளர்களுக்கு வேண்டுகோள்</h2><p>அறிவிப்பு பலகையில், தினசரி காலை 10 மணி முதல் முற்பகல் 12 மணி வரை ராமதாசை சந்திக்கலாம் என்றும், அவர் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால் சந்திக்க வரும் பார்வையாளர்கள் “தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊட்டி அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ooty-government-school-midday-meal-causes-illness-19-students-hospitalised</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ooty-government-school-midday-meal-causes-illness-19-students-hospitalised#comments</comments><guid isPermaLink="false">b72c446a-e3ae-4824-aefc-8223c8f32fe7</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:16:52 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:16:52.489Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊட்டி,Ooty,மருத்துவமனையில் அனுமதி,hospitalised,வாந்தி மயக்கம்</media:keywords><media:content height="463" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ga1zer0r/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவமனையில் அனுமதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ga1zer0r/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி,</p><p>நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மையப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்கள் வழக்கம்போல் சத்துணவு சாப்பிட்டனர். உணவுடன் மாணவர்களுக்கு முட்டையும் வழங்கப்பட்டது. சத்துணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.</p><p>இதனால் மாணவர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஒருவர் பின் ஒருவராக உடல் நலம் பாதிக்கப்பட்டதால், இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஊட்டியில் உள்ள பழைய அரசு மருத்துவமனையிலும், மற்ற மாணவர்கள் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்பட்டனர். மதிய உணவுடன் முட்டை சாப்பிட்டு உடல்நலம் பாதித்த ஒரு மாணவி உள்பட 19 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.</p><p>இதுகுறித்து கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் கூறுகையில், பள்ளி மாணவர்கள் யாரும் ஆபத்தான கட்டத்தில் இல்லை. அனைவரும் சுய நினைவுடன் உள்ளனர். மதிய உணவுடன் முட்டை சாப்பிட்ட பின்னர் தான் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் முழு கவனிப்பில் இருக்கின்றனர். பெற்றோர் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-team-of-ministers-to-hold-talks-with-chennai-corporation-sanitation-workers-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-team-of-ministers-to-hold-talks-with-chennai-corporation-sanitation-workers-today#comments</comments><guid isPermaLink="false">70977944-ec03-4c9e-8efc-54e8e65b5451</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:02:57 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:02:57.241Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Ministers,Sanitation workers,தூய்மை பணியாளர்கள்,பேச்சுவார்த்தை,அமைச்சர்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/vaii6hrv/ani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/vaii6hrv/ani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/சென்னை-மாநகராட்சி">சென்னை மாநகராட்சி</a> தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று (04.09.2026) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. </p><h2>தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்</h2><p>9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். </p><h2>முதல்-அமைச்சர் சந்திக்க மறுப்பது ஏன்?</h2><p>அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதி களான தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 15 நாட்களாகப் போராடி வருகின்றனர். முன் எதிர்க் கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைத் தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சந்தித்துப் பேசிய இன்றைய முதல்-அமைச்சர் இப்போது அவர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?</p><p>முந்தைய அமர்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்றார். ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமைச்சர்களோ அல்லது முதல்வரோ நேரடியாகச் சென்று போராட்டக் களத்தில் உள்ள தொழிலாளர்களைச் சந்திக்காதது ஏன்? கோரிக்கைகளை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றுவார்?” என்று கேள்வி எழுப்பினார்.</p><h2>கடுமையான நிதி நெருக்கடி</h2><p>அதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ராஜ்மோகன், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் சிரமங்களை அரசு நன்கு உணர்ந்துள்ளது. அவர்களின் பல கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால், பிரதான கோரிக்கைகளில் நிர்வாகச் சிக்கல்களுடன் கடுமையான நிதி நெருக்கடியும் உள்ளது. தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை எனது அறைக்கு இருமுறை அழைத்து தலா மூன்றரை மணி நேரம் விரிவாகப் பேசியுள்ளேன்.  முந்தைய ஆட்சியில் தொழிலாளர்கள் 100 முதல் 150 நாட்கள் வரை போராடினார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்,” என்றார்.</p> <h2>வெகு விரைவில்</h2><p>அமைச்சரின் பதிலுக்குக் குறுக்கிட் டுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “எங்கள் ஆட்சிக் காலத்தில் அன்றைய அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முந்தைய ஆட்சியில் 100 நாட்கள் போராட்டம் நடந்ததாகச் சுட்டிக்காட்டும் அரசு, தற்போதும் 100 நாட்கள் கடக்கும் வரை காத்திருக்கப் போகிறதா?” என வினவினார்.</p><p>இதற்கு மீண்டும் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், அரசு ஆவணங்கள் அனைத்தும் தயாராகி விட்டதால் வெகு விரைவில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு நல்வழி பிறக்கும் என்று உறுதி அளித்திருந்தார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/சென்னை-மாநகராட்சி">சென்னை மாநகராட்சி</a> தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதன்படி அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>]]></content:encoded></item><item><title>9 இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூ.5.76 லட்சம் அபராதம் விதிப்பு..! - மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-court-imposes-fine-of-rs-576-lakh-on-9-indian-fishermen-manickam-tagore-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-court-imposes-fine-of-rs-576-lakh-on-9-indian-fishermen-manickam-tagore-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">a082e5ba-d830-40e3-8fb7-108f39581751</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:57:57 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:57:57.150Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள் கைது,Sri Lankan Court,fishermen,காங்கிரஸ்,Sri Lanka,ராமேஸ்வரம்,மாணிக்கம் தாகூர்,தமிழக மீனவர்கள் கைது,Rameshwaram,ராமேஸ்வரம் மீனவர்கள்,Fishermen arrest,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/geki0fns/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/geki0fns/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளில் வரி விலக்கு கொடுக்கும் இந்த பாஜக அரசு, ஏழை மீனவர்களின் இந்த அபராதத் தொகையை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கப் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ரூ.5.76 லட்சம் அபராதம்</h2><p>ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூ.5.76 லட்சம் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சொந்தக் கடலில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் நம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறிக் கைது செய்வதும், சிறையில் அடைத்து லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதும் தொடர்கதையாகிவிட்டது.</p><p>கார்ப்பரேட் நண்பர்களின் வியாபார நலனுக்காக மட்டுமே ஓடி ஓடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கையிடம் சென்று நம் மீனவர்களின் உரிமைக்காக ஒரு வார்த்தை கூட பேச மறுப்பது ஏன்? ரஷ்யா - உக்ரைன் போரையே நிறுத்துவதாகப் பேசி நாடகம் ஆடும் மோடி அவர்கள், தன் சொந்த நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை வதைக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? ஒருவேளை இவர்கள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டு </a>மீனவர்கள் என்பதாலா இந்த அப்பட்டமான பாராமுகமும் ஓரவஞ்சனையும்?</p><h2>தாயகம் அழைத்து வர வேண்டும்</h2><p>கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளில் வரி விலக்கு கொடுக்கும் இந்த பாஜக அரசு, ஏழை மீனவர்களின் இந்த அபராதத் தொகையை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கப் பொறுப்பேற்க வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய தூதரகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த அநியாயக் கைதுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, நமது மீனவர்களையும் அவர்களது படகுகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாகத் தாயகம் அழைத்து வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்கள் கவலையின்றி வாழ வேண்டும் - அன்புமணி வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-should-live-without-worries-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-should-live-without-worries-anbumani#comments</comments><guid isPermaLink="false">c291d7e7-df3e-44a7-9e20-17b0958a0fb2</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:32:15 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:32:15.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,வாழ்த்து,Anbumani Ramadas,ஆசிரியர் தினம்,Teachers Day</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/o3n7bmvb/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/o3n7bmvb/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை.</p><p>முன்மாதிரியான ஆசிரியரும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 -ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>ஏணியாகவும், தோனியாகவும் இருந்து மாணவர்களை ஏற்றம் பெறவும், வாழ்வில் கரை சேரவும் வகை செய்யும்  ஆசிரியர்களை பெருமைப்படுத்துவதற்கான ஆசிரியர்கள் தினத்தை கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும்  எனது நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>ஆசிரியர் தினம்</h2><p>உலகில் அனைவரின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஆத்மாக்கள் ஆசிரியர்கள் தான்; அதேபோல், மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படாமல், மகிழ்ச்சியடையும் மகாத்மாக்களும் ஆசிரியர்கள் தான். அதனால் தான் அவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவர்களாக உள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ஆசிரியர் தினம்</a> என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.</p><h2>புதிய நெருக்கடி</h2><p>உலகில் அனைவராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அரசர்களாலும்   மதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். ஆனால், அவர்கள் வாழ்க்கை மட்டும் கொண்டாட்டமானதாக இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம், சமவேலைக்கு சம ஊதியம், தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு என பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத கோரிக்கைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு புதிய நெருக்கடி ஒன்றும் உண்டாகியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் 2028 ஆகஸ்ட் மாதத்திற்குள் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது தான் இதற்கு காரணமாகும். ஆசிரியர்களின் இந்த நெருக்கடியைப் போக்க கடந்த திமுக ஆட்சி மட்டுமின்றி, புதிய தவெக ஆட்சியும் எதுவும் செய்யாததால் ஆசிரியர்களின் நெருக்கடிகள் தொடர்கின்றன.</p><h2>தேர்ச்சி மதிப்பெண்</h2><p>ஆசிரியர்கள் கவலையின்றி வாழ்ந்தால் தான் மாணவர்களை முன்னேற்ற முடியும். அதற்கு வசதியாக  ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களையும் குறைந்தபட்சம் 35% ஆக குறைக்க வேண்டும்.  இதன் மூலம் ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் தினத்தில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மாயோன் பெருவிழா வாழ்த்துகள்’ - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayon-grand-festival-greetings-to-all-tamils-across-the-world-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayon-grand-festival-greetings-to-all-tamils-across-the-world-seeman#comments</comments><guid isPermaLink="false">36b8a163-69e6-4997-9cb2-1485383c5e71</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:25:35 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:25:35.900Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாதக,சீமான்,NTK,Seeman,நாம் தமிழர் கட்சி,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,Naam Thamilar Katchi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/gjd0boon/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/gjd0boon/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பகவான் கிருஷ்ணரின் அவதார தினம் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் கூடிய தினத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளிலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது. இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>சீமான் வாழ்த்து</h2><p>“மாயோன் மேய காடுறை யுலகமும்</p><p>சேயோன் மேய மைவரை உலகமும்</p><p>வேந்தன் மேய தீம்புனல் உலகமும்</p><p>வருணன் மேய பெருமணல் உலகமும்</p><p>முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்று பகுத்துப் பாடிய தொல்காப்பியர் கூற்றிற்கேற்ப, தமிழினத்தினுடைய, முல்லை நிலத்தின் இறைவனாகவும், ஆயர் குலத்தின் தலைவனாகவும் இருக்கிற எம்மின இறை மாயோனுடைய பெரும்புகழைப் போற்றுகிற நாள் இன்று.</p><p>முதல் திணையான குறிஞ்சி நிலத்திற்கும், மூன்றாம் திணையான மருத நிலத்திற்கும் இடையில் முல்லை நிலத்தில் வாழ்ந்ததால் நாங்கள் ‘இடையர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். அது காரணப்பெயர் தானே தவிர, எங்களின் குடிப்பெயர் ‘கோன்’, ‘ஆயர்’ என்பது தான். முதலில் ‘கோன்’ என்பது முல்லை நிலத்தின் தலைவன் கையில் பெரிய கோலை ஏந்தி நின்றதால் நாங்கள் ‘கோன்’ என்று அழைக்கப்பெற்றோம்.</p><p>பிற்காலத்தில் அது அரசன் கையில் செங்கோலாக மாறியது. ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என்று பாடலே உள்ளது. ‘கோன்’ என்றால் மன்னன் என்று பொருள். ஆடு, மாடுகளை மேய்க்கும் வேலையை செய்ததால், நாங்கள் ‘மேய்ப்பர்கள்’, ‘ஆயர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். முதன்முதலாக தோன்றியது எழுத்தல்ல, எண் தான். ஆடு, மாடுகளை எண்ணுவதற்காக நாங்கள் எண்களை கண்டுபிடித்தோம். எங்கள் தமிழர் மறை, வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய வாழ்க்கை நன்னெறியில் கூட, ‘எழுத்தென்ப ஏனை எண்ணென்ப’ என்று பாடாமல் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று எண்ணை முதலில் வைத்து தான் பாடுகிறது. அப்படி பெருமைப்பட வாழ்ந்த ஒரு இனத்தின் மக்கள் நாங்கள்.”</p><h2>‘மாயோன் பெருவிழா’</h2><p>“எங்கள் மாயோன் பிற்காலத்தில் ‘கண்ணன்’,’திருமால்’, ‘பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். அதில் ‘மால்’ என்றால் ‘கருப்பு’ என்று பொருள். கருகருவென்று மேகம் கூடி மழையை பொழிந்துவிட்டு மாயமாக மறைந்துவிடுவதனால், மாயவன், மாயோன் என்று அழைத்து நாங்கள் வணங்கத் தொடங்கினோம். எனவே, நாங்கள் வணங்கும் தெய்வத்தை மரியாதையோடு அழைக்க வேண்டும் என்று கருதியதனால் ‘திருமால்’ என்றும், பின்னாட்களில் அதுவே ’பெருமாள்’ என்றெல்லாம் அழைக்க காரணம். ஆரியர்களின் வருகைக்கு பிறகு அதுவே கிருஷ்ணராகி, கிருஷ்ண பரமாத்மாவாக மாறிவிட்டது. ஆனாலும், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ் </a>பிள்ளைகள் நாங்கள் வரலாற்றின் தொன்மத்திலிருந்து தழைக்க விரும்புவதால், ‘மாயோன் பெருவிழா’ என்று கொண்டாடி வருகிறோம்.</p><p>உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மாயோன் பெருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன்.</p><p>எங்கள் இறைவன், ஆயர்குல தலைவன், ‘மாயோன்' பெரும்புகழ் போற்றி! போற்றி!’</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-further-todays-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-further-todays-status#comments</comments><guid isPermaLink="false">799b2d96-ea25-4755-87e8-c3477f695807</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:24:15 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:24:15.539Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="463" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/r3hbhh42/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/r3hbhh42/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ.14,240-க்கும் விற்பனையானது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவர்: வெள்ளம் ஏற்படும் ஆபத்து: மீட்சித் திட்டம் அல்ல, அழிவுத் திட்டம் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/retaining-wall-in-pallikaranai-marshland-risk-of-flooding-a-plan-for-destruction-not-restoration-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/retaining-wall-in-pallikaranai-marshland-risk-of-flooding-a-plan-for-destruction-not-restoration-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">120ca501-c669-4371-a6c9-1983325f7f27</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:23:51 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:23:51.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,தமிழகம்,தமிழக அரசு,TN govt,பள்ளிக்கரணை சதுப்பு நிலம்,பள்ளிக்கரணை,Pallikaranai</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/w5fcfkpu/pakker.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/w5fcfkpu/pakker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காப்பதற்காக சென்னை மாநகர மக்களை  திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை தனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என அக்கட்சியின் தலைவர்  <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> எச்சரித்துள்ளார். </p><h2>பள்ளிக்கரணை</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல்  மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டத்தை தி.மு.க. அரசு தொடங்கியதும், இப்போதைய த.வெ.க. அரசு தொடர்ந்து செயல்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை.</p><h2>அழிக்கும் முயற்சி</h2><p>தமிழ்நாட்டின் கடலோர வளங்களை மீட்டெடுப்பதாகக் கூறி, தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற புதிய திட்டத்தை கடந்த 2024ஆம் ஆண்டில் திமுக அரசு தொடங்கியது. உலக வங்கியின் நிதியுதவியுடன்  ரூ.1675 கோடி செலவில் தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீ நீளமுள்ள கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தது. பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பும் இந்தத் திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக திமுக அரசு அறிவித்தது.</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றாலோ, மீட்க வேண்டும் என்றாலோ, அதற்காக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய இரு நடவடிக்கைகள், ஒரு காலத்தில் 15,000 ஏக்கராக இருந்து இப்போது 1750 ஏக்கராக சுருங்கி விட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இயன்றவரை அகற்றுவதும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்வதும் தான். ஆனால், அதற்கு பதிலாக மீதமுள்ள சதுப்பு நிலத்தையும் அழிக்கும் முயற்சியை திமுக அரசு தொடங்கியது. இந்த பேரழிவுத் திட்டத்திற்காக மட்டும் வனத்துறை மூலம் திமுக அரசு ரூ.21 கோடியை ஒதுக்கியுள்ளது.</p><h2>ஊழல் செய்யும் நோக்கத்துடன்</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தமிழக அரசு, அதன் பங்குக்கு  ஆக்கிரமிப்பு செய்து 3 கி.மீ நீளத்திற்கு 6 அடி உயரத்தில் தடுப்புச் சுவரையும், அதற்கு உட்புறத்தில் 2 கி.மீ நீளத்திற்கு  நடைபாதையும் அமைத்து வருகிறது. தடுப்புச் சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியிலும், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு செல்ல முடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும். கடந்த சில நாள்களில் பெய்த லேசான மழைக்கே அப்பகுதியில் மழை நீர் தேங்குவதே இதற்கு சான்றாகும்.</p><p>பள்ளிக்கரணையின் ஆகப்பெரும் சிறப்பே மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் நீரை ஈர்த்துக் கொண்டு, சென்னை மாநகரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாப்பதும் தான். இந்த இரு நோக்கங்களையும் திமுக அரசால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் சிதைத்து  விடும். இப்படி ஒரு திட்டத்தை ஊழல் செய்யும் நோக்கத்துடன் தான் திமுக அரசு அறிவித்தது. ஆனால்,  ஊழலுக்கு இடம் கொடுக்கும் திட்டங்களையும், மக்களை பாதிக்கும் திட்டங்களையும் ரத்து செய்வதே தங்களின் கொள்கை என்று கூறி, ஐம்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களை நிறுத்தியும், ரத்து செய்தும் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு இந்தத் திட்டத்தை மட்டும் தொடருவது ஏன்?</p><h2>தவெக அரசு தொடர்வது ஏற்க முடியாதவை</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியின் எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வசதியாக தனியார் கட்டுமான நிறுவனம் சதுப்பு நிலத்தை ஆக்கிரத்து சாலை அமைத்தது.  இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம், சதுப்பு நிலத்தின் எல்லைகள் வரையறுத்து அறிவிக்கை செய்யப்படாததைக் கண்டித்து, சதுப்பு நில எல்லை அறிவிக்கை செய்யப்படும் வரை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டுமானங்களைக் கட்ட இடைக்காலத் தடை விதித்தது. இந்த உண்மைகள் தெரிந்தும் இந்த அழிவுத் திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், தவெக அரசு தொடர்வதும் ஏற்க முடியாதவை.</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்குள் இத்தகைய தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை அமைப்பது 2017&amp;ஆம் ஆண்டின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இத்தகைய தடுப்பு சுவர் அமைக்கப்படுவதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவது மட்டுமின்றி, சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மையும் பாதிக்கப்படும். அதனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அங்கமாக உள்ள பறவைகள், ஊர்வன வகைகள், நிலநீர் உயிரினங்கள், மீன்கள், மரங்கள், மூலிகைகள், புற்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்டவை அழிவைச் சந்திக்கும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில்  பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது முழுமையாக நின்று விடும்.</p><h2>தமிழக அரசு நிறுத்த வேண்டும்</h2><p>கடந்த காலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவகங்கள் கட்டப்பட்டன. பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரை ரேடியல் சாலை அமைக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் சதுப்பு நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு, பறவைகளின் வருகை நின்று விட்டது. நெய்தல் மீட்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் ஒட்டுமொத்த பள்ளிக்கரணைக்கும் அதே நிலை தான் ஏற்படும்.</p><p>சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மைத் தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மைக் கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் தான். அதை செய்வதற்கு பதிலாக பள்ளிக்கரணை சதுப்பு  நிலத்தை அழிக்கும் வகையிலும், அதையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும் தடுப்புச் சுவர், நடைபாதை பணிகளை மேற்கொள்ளக்கூடாது. உடனடியாக அந்தப் பணிகளை தமிழக அரசு நிறுத்துவதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை அகற்றி அந்தப் பகுதிகளை ஏற்கனவே இருந்த இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதற்கும் மேலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதை செய்யத் தவறினால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காப்பதற்காக சென்னை மாநகர மக்களைத்  திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வழங்கிய ரூ.600 கோடி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-registering-land-worth-600-crore-donated-to-srirangam-temple-as-housing-plots</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-registering-land-worth-600-crore-donated-to-srirangam-temple-as-housing-plots#comments</comments><guid isPermaLink="false">df17d0c7-0606-4bf3-9ceb-a201cdb27d22</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:59:17 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:59:17.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Madurai,மதுரை,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,பத்திரப்பதிவு,Srirangam,ஸ்ரீரங்கம்,கோவில் நிலம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/5bb7v41s/sri-nga.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/5bb7v41s/sri-nga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>ஸ்ரீரங்கம் கோவில் சமய பணிகளுக்காக வழங்கிய ரூ.600 கோடி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.</p><h2>அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/மதுரை">மதுரை</a> வாடிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-</p><p>திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவில் மற்றும் பிற கோவில்களுக்கு தொண்டுகள் செய்வதற்காக அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு சமய பணிகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக ஸ்ரீரங்கம் தாலுகா திம்மராயசமுத்திரம் கிராமத்தில் சுமார் 21 ஏக்கர் மற்றும் 6 சென்ட் பரப்பளவு கொண்ட சொத்துகள் உள்ளன. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை மேற்கண்ட அறக்கட்டளை வழியாக திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது. அந்த சொத்துக்கு அறக்கட்டளையின் நிர்வாகிகளே பராமரிப்பாளர்களாக இருந்து வருகின்றனர்.</p> <h2>சொத்தின் மதிப்பு ரூ.600 கோடி</h2><p>அந்த நிலத்தின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை மட்டுமே சமய பணிகளுக்கு பயன்படுத்த முடியும். அந்த நிலத்தை விற்பதோ, வாங்குவதோ இயலாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மேற்கண்ட நிலமானது, தனிநபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலமாக கிரையப்பத்திரம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.</p><p>அந்த நிலத்தை வாங்கிய நபர்கள் இப்போது அதனை வகை மாற்றி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை கிரையம் செய்ததற்கான பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.</p><p>இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த அறக்கட்டளை சொத்தின் மதிப்பு ரூ.600 கோடி இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>பத்திரப்பதிவு செய்ய தடை</h2><p>இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது நீதிபதிகள், மேற்கண்ட அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை வகை மாற்றி வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்தால் அதனை ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.</p><p>மேலும் இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், திருச்சி மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>7.8% ஜிடிபி வளர்ச்சி புள்ளிவிவரங்களால் இளைஞர்களின் கண்ணீரை மறைக்க முடியாது: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/78-gdp-growth-figures-cannot-hide-the-tears-of-the-youth-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/78-gdp-growth-figures-cannot-hide-the-tears-of-the-youth-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">648b71e1-61c7-42e9-8a42-8102dbd9bde6</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:39:00 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:39:00.736Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/60pl9fs0/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/60pl9fs0/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மோடி அரசு காட்டும் இந்த அதீத ஜிடிபி எண்கள் அனைத்தும் தனது படுதோல்வியை மறைக்க செயற்கையாக கட்டமைக்கப்பட்ட வெறும் போலி பிம்பங்களே என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><h2>ரூ.8 லட்சம் கோடி இழப்பு</h2><p>ஜந்தர் மந்தரில் வேலை கேட்டுப் போராடும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கண்ணீரை, வெற்று 7.8% ஜிடிபி புள்ளிவிவரங்களால் இனி மூடி மறைக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தியின் இந்தக் கட்டுரை, பாஜக அரசின் வெற்று விளம்பரப் பொருளாதாரத்தை ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டியுள்ளது.</p><p>தொழில் முதலீட்டை பெருக்குகிறோம் என்று கூறி 2019-ல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கிய வரிச்சலுகையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டுமே 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8 லட்சம் கோடி). இவ்வளவு சலுகைகள் கொடுத்தும் தனியார் நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை; மாறாக தங்கள் லாபத்தை பதுக்கிக் கொண்டன. கடந்த பத்தாண்டுகளாக தனியார் முதலீடுகள் 14 சதவீதத்தில் இருந்து 10-12 சதவீதமாகக் குறைந்துபோயுள்ளது.</p><h2>அப்பட்டமான மோசடி</h2><p>மின்சாரப் பயன்பாடு, வங்கி கடன் வளர்ச்சி, நுகர்வு என எந்தவொரு உண்மையான பொருளாதாரக் குறியீடுகளோடும் கள எதார்த்தம் பொருந்தவில்லை என்பதை முன்னாள் பொருளாதார ஆலோசகரே சுட்டிக்காட்டியுள்ளார். வேலைவாய்ப்பின்றி தெருவில் நிற்கும் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும் கவலைப்படாமல், ஏட்டளவிலான புள்ளிவிவரங்களை மட்டும் ஊதிப் பெருக்கிக் காட்டுவது அப்பட்டமான மோசடி.</p><p>​ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி மக்களின் வாங்கும் திறனிலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பிலும்தான் இருக்கிறது. ஆனால், களத்தில் வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் தாண்டவமாடும் சூழலில், மோடி அரசு காட்டும் இந்த அதீத ஜிடிபி எண்கள் அனைத்தும் தனது படுதோல்வியை மறைக்க செயற்கையாக கட்டமைக்கப்பட்ட வெறும் போலி பிம்பங்களே!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி திருநாள் - எல். முருகன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanti-l-murugans-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanti-l-murugans-greetings#comments</comments><guid isPermaLink="false">1372a910-f4f2-4e22-b1d6-94d1910f5fc8</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:30:14 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:30:14.398Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாழ்த்து,Krishna Jayanti,கிருஷ்ண ஜெயந்தி,எல். முருகன்,L. Murugan ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/4hb3fcia/132.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிருஷ்ண ஜெயந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/4hb3fcia/132.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பகவான் கிருஷ்ணரின் அவதார தினம் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் கூடிய தினத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளிலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது. இந்நிலையில் இது குறித்து மத்திய இணை மந்திரி எல். முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>கிருஷ்ண ஜெயந்தி திருநாள்</h2><p>பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளாகக் கொண்டாடப்படும் இந்நன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த <a href="https://dailythanthi.com/topic/krishna-jayanthi">கிருஷ்ண ஜெயந்தி</a> நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்நன்னாளில், நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும் ஒற்றுமை, அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் பெருகிட, எல்லாம் வல்ல பகவான் ஶ்ரீ கிருஷ்ணரைப் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>