<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 19 Aug 2026 07:36:59 +0000</lastBuildDate><item><title>3 மாதத்தில் பாலம் இடிந்தது எப்படி..? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-bridge-collapse-within-three-months-former-minister-ev-velu-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-bridge-collapse-within-three-months-former-minister-ev-velu-explains#comments</comments><guid isPermaLink="false">ca0e92bf-2742-49a5-97ee-6a1d6806ec9b</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:32:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:32:52.766Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,எ.வ.வேலு,TN Assembly,பாலம்,Assembly Session,அமைச்சர் மரிய வில்சன்,Minister Marie Wilson,former minister E.V. Velu,MarieWilson,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ueo3tf9o/palam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ueo3tf9o/palam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக ஆட்சியில் கடந்த 2024-ம் ஆண்டு அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் இந்த பாலம் கட்டப்பட்டது. 2024 செப்., 2ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த எ.வ.வேலு அதனை திறந்து வைத்தார்.</p><h2>பெஞ்சல் புயல்</h2><p>தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணை, பெஞ்சல் புயல் காரணமாக வேகமாக நிரம்பியது. இதனையடுத்து அந்த அணைக்கு வந்த சுமார் 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், பல இடங்களை தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது</p><p>இதில், அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூரை இணைக்கும் பாலமும் தப்பவில்லை. ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம், கட்டிய மூன்றே மாதங்களில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளானது. இந்த பாலம் இடிந்து விழுந்ததற்கு, தமிழக அரசு சார்பில் பல காரணங்கள் கூறப்படுகின்றன.</p><h2>அமைச்சர் எ.வ.வேலு</h2><p>இந்நிலையில் இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது திமுக ஆட்சியில் தரமற்ற முறையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 3 மாதங்களில் இடிந்து விழுந்ததாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார். </p><p>அதற்கு பதில் அளித்த பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 57 ஆயிரம் கன அடி தண்ணீரை தாங்கும் அளவுக்கு தான் கட்டப்பட்டது. திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத மழையால் சாத்தனூர் அணையில் 3 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்ததால், இயற்கை சீற்றத்தால் பாலம் உடைந்தது. இதற்கு கட்டிய பொறியாளர் மீது குறை சொல்ல முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கல்லணை கட்டியது சோழர்கள் காலத்தில், அந்த பாலம் இன்னமும் இருக்கிறது. ஆனால் கடந்த ஆட்சியில் மூன்று மாதத்தில் பாலம் இடிந்துள்ளது. வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அது குறித்து விவரம் தெரியவரும்” என்று அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>
நள்ளிரவில் கொடூரம்:  கணவர் குடும்பத்தினரை உயிருடன் எரித்துக்கொன்ற இளம்பெண், தாய், சகோதரர்; கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/midnight-horror-wife-mother-brother-burn-husbands-family-alive</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/midnight-horror-wife-mother-brother-burn-husbands-family-alive#comments</comments><guid isPermaLink="false">3be83619-3e56-4e45-8887-71e7c03f5488</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:31:17 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:31:17.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,Crime News,Madurai,மதுரை,husband</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8y6jhaj3/tpiwc.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8y6jhaj3/tpiwc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>கணவர் குடும்பத்தினரை நள்ளிரவில் உயிருடன் எரித்துக்கொன்ற இளம்பெண் தொடர்பான வழக்கில் மதுரை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.</p><p>மதுரை மாவட்டம் சேடபட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குமாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). பி.காம் பட்டதாரி. கடந்த 2015-ம் ஆண்டில் இவரும், அதே பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி (வயது 21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களிலேயே இரு குடும்பத்தினருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.</p><p>இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த பாண்டீஸ்வரிக்கு கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் பாண்டீஸ்வரி தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு இடையேயான பிரச்சினையை ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் தீர்த்து வைக்கும் முயற்சிகளும் நடந்தன.</p> <h2>நள்ளிரவில் தீ வைப்பு</h2><p>ஆனாலும் இரு தரப்பிலும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரி, அவரது தாய் முருகேஸ்வரி (வயது 40), தம்பி ராஜபாண்டி (வயது 20) ஆகியோர் கண்ணன் குடும்பத்தினரை பழி வாங்க திட்டமிட்டனர்.  குமாரபுரத்தில் உள்ள குடிசை வீட்டில் கண்ணன், அவரது தந்தை வேலு, தாயார் பேச்சியம்மாள், சகோதரி சுகந்தி, அவரது மகள் சங்கீதா (வயது 17), மகன்கள் சஞ்சித் (வயது 12), வினித் (வயது 10) ஆகிய 7 பேரும் சம்பவத்தன்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.</p><p>அப்போது அங்கு வந்த பாண்டீஸ்வரி, அவரது தாயார் முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகிய 3 பேரும் சேர்ந்து தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை குடிசை மீது ஊற்றினர். பின்னர் வீட்டுக்குள் இருப்பவர்கள் வெளியே வர முடியாதபடி கதவை கட்டுக்கம்பியால் இறுகக்கட்டினர். பின்பு அந்த வீட்டுக்கு தீ வைத்தனர். அந்த தீ வீடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியும் வரை அங்கேயே அவர்கள் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.</p> <h2>7 பேர் பலி</h2><p>தீயினால் ஏற்பட்ட வெப்பம் அக்கம் பக்கத்து வீடுகளில் பரவியதால் அலறி அடித்துக்கொண்டு நள்ளிரவில் வெளியேறிய கிராம மக்கள் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து வீட்டுக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர்.</p><p>இதில் சிறுவன் வினித் மட்டும் உயிருக்கு போராடினான். மற்ற 6 பேரும் தீயில் கருகி வீட்டுக்குள்ளேயே உயிரிழந்தனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வினித்தும் சிறிது நேரத்தில் இறந்தார். 7 பேர் கொடூர கொலை குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகியோரை கைது செய்தனர்.</p> <h2>8 ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.  இந்த வழக்கில் நீதிபதி உதய வேலவன் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில், 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்காக ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு ஆயுள் தண்டனை வீதம் தலா 7 ஆயுள் தண்டனையும், கூட்டுச்சதி தண்டனை சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும் என மொத்தம் 8 ஆயுள் தண்டனையை பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை மேற்கண்ட 3 குற்றவாளிகளும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அவர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: மணல் கடத்தல் புகார் அளித்ததாக 15 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்- 2 பெண்கள் காயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-15-member-gang-attacks-individuals-for-lodging-a-complaint-about-sand-smuggling-two-women-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-15-member-gang-attacks-individuals-for-lodging-a-complaint-about-sand-smuggling-two-women-injured#comments</comments><guid isPermaLink="false">d7bbd55f-d876-491b-935b-55fe21b27bad</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:13:59 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:13:59.847Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை மிரட்டல்,Social Activist,சமூக ஆர்வலர்,Police action,மணல் கடத்தல்,Handicapped,பெண்கள் காயம்</media:keywords><media:content height="410" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/z9xa18cc/3.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காயமைந்த சித்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/z9xa18cc/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வைப்பாளையத்தில் 2 பெண்களை 15 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>மணல் கடத்தல்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை  வைப்பாளையத்தில் வசித்து வரும் ரமேஷ். சமூக ஆர்வலரான இவர், மணல் கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக விழுப்புரத்திற்கு சென்றிருந்தார். இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் 15 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்கு சென்று, ரமேஷின் மாற்றுத்திறனாளி சகோதரரை திட்டி உள்ளனர். மணல் கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு ஏன் தகவல் தெரிவிக்கிறீர்கள்? என வாய்க்கு வந்தபடி பேசி உள்ளனர்.</p><h2>இரண்டு பெண்கள் காயம்</h2><p>சத்தம் கேட்டு வந்த ரமேஷின் மகள் அக்‌ஷயா (கல்லூரி மாணவி) இதை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அக்சயாவின் உடையை கிழித்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளது. தடுக்க வந்த சித்தி பாக்கிய லட்சுமியையும் (வயது 38) இந்த கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது. </p> <p>தாக்குதலில் காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். </p><h2>போலீசார் விசாரணை </h2><p>இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் தாக்கிய 15 பேரையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  <a href="https://www.dailythanthi.com/topic/sand-smuggling-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">மணல் கடத்தல் </a>தொடர்பாக புகார் அளித்ததாக கூறி 2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-tamil-nadu-government-must-press-for-a-cbi-inquiry-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-tamil-nadu-government-must-press-for-a-cbi-inquiry-anbumani#comments</comments><guid isPermaLink="false">de7ddbbd-dabf-4fa1-a433-8bd530fd6548</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:07:26 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:07:26.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani,சென்னை,Karnataka,சிபிஐ விசாரணை,வலியுறுத்தல்,அன்புமணி ராமதஸ்,shot dead,CBI Inquiry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/5t01pp4y/190.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/5t01pp4y/190.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கர்நாடக முதல்-மந்திரி</h2><p>கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது கர்நாடகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த விவகாரம் என்பதால் அது குறித்து தமிழக அரசோ, தமிழக அரசியல் கட்சிகளோ எந்தக் கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக கண்டனம் தெரிவிக்கவும், சிபிஐ விசாரணை கோரவும் தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.</p> <p>கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘எந்த மாநிலமும் இன்னொரு மாநில நிர்வாகத்தில் தலையிட முடியாது. தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது கர்நாடகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு  பிரச்சினை என்பதால் அதில் தமிழக அரசு தலையிட முடியாது. தமிழ்நாடு அதன் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளட்டும்; நாங்கள் எங்கள் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறோம்’’ எனக் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><h2>கர்நாடக வனத்துறை</h2><p>சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பகுதியில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அம்மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த சிக்கல் என்று கூறுவதே இந்த விவகாரத்தை திசை திருப்பும் செயலாகும். காணாமல் போன மாடுகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு ஒவ்வொரு நாளும் புதிய ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. சாம்ராஜ் நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் புட்டரங்கா ஷெட்டி,  மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை  உறுப்பினர் மஞ்சுநாத்  ஆகியோர் வனத்துறையினரின்  விளக்கத்தை ஏற்க மறுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்.</p><h2>தமிழக அரசு கடமை</h2><p>3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலிருந்து புத்தம் புதிய காலணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உயிரிழந்தவர்களில் ஒருவர் அணிந்திருக்கிறார். கொல்லப்பட்டவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டு இருந்தால் புதிய காலணிகள் கரைபடாமல் இருக்க வாய்ப்பில்லை என காவல்துறை அதிகாரிகளில் சிலரே கூறியுள்ளனர். இந்த ஐயங்களை போக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை ஆகும். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக உண்மையை மூடி மறைக்க கர்நாடக அரசு முயல்கிறது. இத்தகைய தருணத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். இதை செய்யக் கூடாது என்று சொல்ல இந்தியா சர்வாதிகார நாடும் அல்ல. கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சர்வாதிகாரியும் இல்லை என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.</p><p>ஒரு மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களோ, ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களோ இன்னொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் தாக்கப்படும் போது அல்லது படுகொலை செய்யப்படும் போது, அதைக் கண்டிக்கவும், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தவும்  பாதிக்கப்பட்டவர்களின் பூர்வீக மாநிலம் அல்லது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உண்டு. கடந்த காலங்களில் இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தமிழ்நாட்டு அரசும், மக்களும் கண்டித்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஈழத்தமிழர் சிக்கலில் மத்திய அரசே தலையிட்டு நடவடிக்கை எடுத்த வரலாறு உண்டு. காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் அதை தமிழ்நாடு கண்டித்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 1991-92ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் 05.01.1992 ஆம் நாள் கர்நாடகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற வரலாறு உண்டு.</p><h2>வலியுறுத்தல்</h2><p>கடந்த பத்தாண்டுகளில் கோவா மாநிலத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பலமுறை தாக்கப்பட்ட போது அதற்கு கர்நாடக சட்டப்பேரவையே கண்டனம் தெரிவித்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு மும்பையிலும், மராட்டியத்தின் பிற பகுதிகளிலும் பிகாரைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்ட போது, அதற்கு அப்போதைய மத்திய அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், பிகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததும், அவர்களின் கோரிக்கையை ஏற்று மராட்டிய முதல்-மந்திரிக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்  கடுமையான வார்த்தைகளில் கடிதம் எழுதியதும் நடந்தது. </p><p>அதனால், கர்நாடகத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசவும், நீதிக்காக போராடவும் தமிழக அரசுக்கும், மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. எனவே, கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக அரசு நியாயமான நடவடிக்கை எடுக்கும் என்று இனியும் நம்பிக் கொண்டிருப்பது தவறு ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">சிபிஐ </a>விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கர்நாடக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
கொடுக்கிறதுதான் கொடுக்கிறீர்கள்... இன்னோவா கார் கொடுங்கள்:  எம்.எல்.ஏ. சண்முகன் கோரிக்கை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-are-giving-just-give-innova-car-mla-shanmugan-request</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-are-giving-just-give-innova-car-mla-shanmugan-request#comments</comments><guid isPermaLink="false">d33a99b4-c010-4067-8971-4d3b466b0dbe</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:55:12 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:55:12.984Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,எம்.எல்.ஏ.,MLA,கோரிக்கை,Request,TNAssembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vmwtuod2/tnsra.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எம்.எல்.ஏ. சண்முகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/vmwtuod2/tnsra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தமிழக சட்டசபையில் இன்று பேசிய த.வெ.க. எம்.எல்.ஏ. சண்முகன், உறுப்பினர்களுக்கு இன்னோவா கார் கொடுக்கும்படி கோரிக்கையாக கேட்டு கொண்டார்.</p><p>தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.  இதில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.</p> <h2>எம்.எல்.ஏ.க்களுக்கு கார்</h2><p>அப்போது அவர், எம்.எல்.ஏ.க்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதிப்பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று கூறினார்.  இதன்படி, சட்டசபைக்கு சென்று வர, தொதிப்பணியாற்ற வசதியாக கார் வழங்கப்பட உள்ளது.</p><p>அதனுடன், எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு உதவியாளர்களை நியமிக்க மாதம் ரூ.25 ஆயிரம் படி வழங்கப்படும்.  ஓட்டுநர், வாகன பராமரிப்பு, எரிபொருளுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் படி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்து பேசினர்.</p> <h2>எம்.எல்.ஏ. சண்முகன்</h2><p>இதனை தொடர்ந்து த.வெ.க. எம்.எல்.ஏ. சண்முகன் எழுந்து பேசும்போது, எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து முதல்-அமைச்சர் அமர்ந்திருக்கிறார்.  கோரிக்கையில் நியாயம் உள்ளது என்றால், அது மக்களோ அல்லது சட்டமன்ற உறுப்பினர்களோ, யாரிடம் இருந்து வந்த கோரிக்கையானாலும் உடனடியாக அது நிறைவேற்றப்படும் என்று மீண்டும் ஒருமுறை நம்முடைய முதல்-அமைச்சர் நிரூபித்து இருக்கிறார்.</p><p>அறம், நேர்மை, மக்கள் நலன் ஆகிய மூன்றின் அடிப்படையில் தமிழ்நாட்டை தாங்கி பிடிக்கின்ற முதல்-அமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்ற பெருமையோடு அவருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.</p><p>தொடர்ந்து அவர் பேசும்போது, கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என பின்னால் இருக்கின்ற உறுப்பினர்கள் கூறுகிறார்கள் என்று கூறியதும் முதல்-அமைச்சர், உறுப்பினர்கள் உள்பட அனைவரிடம் இருந்தும் பலத்த சிரிப்பலை எழுந்தது.</p> ]]></content:encoded></item><item><title>பெண்கள் மேம்பாட்டு திட்ட நிதி முறைகேடு: முழுமையான தணிக்கை நடத்த வானதி சீனிவாசன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/misappropriation-of-funds-in-womens-development-schemes-vanathi-srinivasan-urges-a-comprehensive-audit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/misappropriation-of-funds-in-womens-development-schemes-vanathi-srinivasan-urges-a-comprehensive-audit#comments</comments><guid isPermaLink="false">a409ec61-320e-4e9f-865b-cad0eb9d44c0</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:53:06 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:53:06.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,women,வானதி சீனிவாசன்,பெண்கள்,Development Project,fund,நிதி முறைகேடு,தணிக்கை,audit</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jniguqaq/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jniguqaq/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பெண்கள் மேம்பாட்டு திட்ட நிதி</h2><p>தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதியில் கடந்த 2023-2026-ம் காலகட்டங்களில் சுமார் 107.94 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக மயிலாடுதுறை, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது தணிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>மோசடி</h2><p>திட்டங்களைச் செயல்படுத்தாமேலேயே போலி பில்களைத் தயாரிப்பது, வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொண்டது உள்ளிட்ட மோசடிகளால் அரசு நிதியானது தவறகான முறையில் கையாளப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தமிழகத்தில் பாதி மாவட்டங்களில் மட்டுமே முடிவடைந்துள்ள தணிக்கை  பணியிலேயே இத்தனை கோடி முறைகேடுகள் என்றால் தமிழகம் முழுவதும் இன்னும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டால் இன்னும் பல கோடி அரசு பணம் ஊழல் செய்யப்பட்டிருப்பதற்கான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.</p><h2>தணிக்கை</h2><p>கடந்த கால திமுக ஆட்சி எந்த அளவிற்கு ஊழல் குற்றச்சாட்டு நிறைந்த ஓர் ஆட்சியாக செயல்பட்டிருக்கிறது என்பதற்கு துறை ரீதியாக தொடர்ந்து வெளிவரும் பல ஊழல் புகார்களே சாட்சி.</p><p>ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்று பதவியேற்றிருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசு</a> மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் முழுமையான தணிக்கைளை விரைந்து நடத்தி மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்த யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>காணியம்மன் கோவில் விழாவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடத்திய இஸ்லாமியர்: நெகிழ்ச்சி சம்பவம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/muslim-man-performed-celestial-wedding-ceremony-for-amman-at-kaaniyamman-temple-festival</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/muslim-man-performed-celestial-wedding-ceremony-for-amman-at-kaaniyamman-temple-festival#comments</comments><guid isPermaLink="false">ca46dbe7-9812-4710-aa19-7ecf0dbd68cd</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:47:38 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:47:38.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Muslims,திருவிழா,தர்மபுரி,Temple festival,இஸ்லாமியர்,Thali,அம்மன் கோவில்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4f89glud/16.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ காணியம்மன் திருக்கல்யாண வைபவம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அம்மன் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்த இஸ்லாமியர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4f89glud/16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி,</p><p>சாதி, மத பேதங்களை கடந்து மனிதநேயமே முதன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில், இருளப்பட்டியில் நடைபெற்ற காணியம்மன் திருக்கல்யாண விழா பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூறாண்டு கால பாரம்பரியமாக இஸ்லாமிய குடும்பத்தினர் அம்மனுக்கு திருக்கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளனர்.</p><h2>நூற்றாண்டு கால பாரம்பரியம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தருமபுரி மாவட்டம்</a> பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">காணியம்மன் கோவில் </a>திருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான காணியம்மன் திருக்கல்யாணத்தின் போது, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிப்பது (மாங்கல்யதாரணம்) தலைமுறை தலைமுறையாக தொடரும் ஒரு உன்னத வழக்கமாகும்.</p><h2>பக்தர்கள் பரவசம்</h2><p>இந்த (2026) ஆண்டும் விழாவையொட்டி காணியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், வழக்கம்போல ஆம்பூரைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தினர் சீர்வரிசையுடன் வந்து, பாரம்பரிய முறைப்படி அம்மனுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்து திருமண சடங்கினை முன்னின்று நடத்தினர். இதில் திரளான இந்து மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.</p><h2>மத நல்லிணக்கத்தின் அடையாளம்</h2><p>சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் நமது பண்பாட்டை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள இந்த திருவிழா, சமூக வலைதளங்களிலும் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு கர்நாடக முதல்-மந்திரி பேசுவதா? - சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-karnataka-chief-minister-speaking-arrogantly-after-shooting-dead-three-tamils-seeman-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-karnataka-chief-minister-speaking-arrogantly-after-shooting-dead-three-tamils-seeman-asks#comments</comments><guid isPermaLink="false">f9204902-44f9-4044-8ed6-21d7de4876a8</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:31:50 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:31:50.919Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நாதக,சீமான்,NTK,Seeman,Karnataka,கர்நாடகா,நாம் தமிழர் கட்சி,Naam Thamilar Katchi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/6epgp0ds/seeman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/6epgp0ds/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடக வனப்பகுதிக்குள் மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசுவதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஆணவத்தின் உச்சம்</h2><p>கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாது கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம். தமிழர்களையும், தமிழ்நாட்டின் தன்மான உணர்வையும் சீண்டிப் பார்க்கும் வகையிலான கர்நாடக அரசின் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.</p><p>ஒவ்வொரு முறையும் காவிரி நதிநீரில் தமிழர்களுக்கான உரிமையையும், பங்கீட்டையும் கேட்டு நாங்கள் போராடும் போதெல்லாம் இனவெறியைத் தூண்டிவிட்டு, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைத் தாக்கி, தமிழர்களின் வணிகத்தலங்களைத் தகர்த்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி, தமிழர்களை ஏதிலிகளாக தமிழ்நாட்டுக்கு விரட்டியடிக்கும் கன்னட இனவெறியின் நீட்சியாகவே, மூன்று தமிழர்கள் வனப்பகுதிக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்துப்பாக்கிச்சூடு தமிழர்கள் என்பதாலேயே, திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.</p><h2>கன்னடர்களைத் தாக்கினாலும்..</h2><p>மான் வேட்டையாடியதாகப் பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி, மூன்று குற்றமற்ற தமிழர்களைக் கொன்றுகுவித்ததோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கருத்துகூட சொல்லக்கூடாது; கண்டனம்கூட தெரிவிக்கக்கூடாது என கர்நாடக முதல்-மந்திரி சிவக்குமார் பேசியிருப்பது மிக மோசமான அடாவடித்தனத்தின் வெளிப்பாடு. கர்நாடக மாநிலத்துக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேட்கக்கூடாதெனக் கூறுவாரென்றால், காவிரி நதிநீரைத் தராது வஞ்சிக்கும் கர்நாடக அரசின் மீதுள்ள கோபத்தில் தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களைத் தமிழர்கள் நாளைத் தாக்கினாலும் கேள்விகேட்காது இருந்துவிடுவாரா அம்மாநில முதல்-மந்திரி சிவக்குமார்? தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை என இருந்துவிடுவாரா? மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொலைசெய்யப்பட்டு, அதில் தொடர்புடைய வனத்துறையினர் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்யப்படவோ, அம்மாநில அரசின் சார்பில் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்கவோ செய்யாத சிவக்குமாருக்கு, எங்களைப் பேசக்கூடாதெனச் சொல்வதற்கான உரிமையையும், துணிவையும் யார் கொடுத்தது? கர்நாடகாவுக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேள்வி கேட்கக் கூடாதெனச் சொல்ல நீங்கள் யார்? நீங்கள் உங்கள் மாநிலத்துக்கு முதல்-மந்திரியாக இருக்கலாம்.</p><p>எங்கள் இனத்தவருக்கு உத்தரவுப் பிறப்பிக்கவோ, கட்டளையிடவோ உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? ஒவ்வொரு முறையும் கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதெல்லாம் தமிழ்நாடும், தமிழர்களும் சனநாயகத்தன்மையோடு நடந்து கொள்வதை ஏமாளித்தனமெனக் கருதினால், உங்கள் அறியாமைக்கு நாங்கள் பொறுப்பல்ல பெருமக்களே! தமிழர்கள் திருப்பி அடித்தால் என்ன நடக்குமென்பதை தமிழீழத்தில் உலகம் பார்த்தது. முப்படைகளைக் கொண்ட மகத்தான மக்கள் ராணுவத்தைக் கட்டியெழுப்பி, உலக வல்லாதிக்கங்களை எதிர்த்துச் சண்டையிட்ட மாவீரத்தைப் போர்க்களத்திலே நிகழ்த்திக் காட்டிய புறநானூற்றுத் தலைவன் பெருமாவீரன் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்; எல்லையைக் காத்து நின்ற வனக்காவலன் வீரப்பனாரின் வாரிசுகள் நாங்கள். எங்கள் சனநாயக உணர்வைக் கோழைத்தனமெனக் கருதினால், அதற்கான பெரும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.</p><h2>அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்க வேண்டும்</h2><p>தமிழர்கள் எனும் மூத்தத் தேசிய இனத்தின் குடிகளைச் சீண்டுவது போலவும், அவமதிப்பது போலவும் பேசுவதைக் கைவிட்டு, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நாவடக்கிப் பேச வேண்டும். கன்னடர் எனும் தேசிய இனத்தையும், அதன் குடிகளையும் ஆரத்தழுவி முழுதாய் நேசிக்கிறோம். பேரன்பு கொண்டு அம்மக்களோடு உறவுபாராட்ட எண்ணுகிறோம். அதற்காக, தமிழ்த்தேசிய இனத்தின் மீது பகைமையும், வெறுப்பும் கொண்டு, கர்நாடக அரசு செய்யும் அட்டூழியங்களை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தமிழர்களின் பரந்த மனப்பான்மையையும், பெருந்தன்மையையும், சனநாயக உணர்வையும் அலட்சியப்படுத்திச் செயல்பட முனைந்தால், பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. தமிழ்நாடு என்பது உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கான வரலாற்றுத்தாயகம். உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் விளைந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து ஆதரவுக்குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும். அதனைக் கேள்வி கேட்பதற்கு கர்நாடக முதல்-மந்திரிக்கு சிவக்குமாருக்கு எந்த உரிமையுமில்லை.</p><p>ஆகவே, மூன்று அப்பாவி தமிழர்களைச் சுட்டுக்கொன்ற கர்நாடக அரசின் வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, மூன்று பேரின் குடும்பத்தாருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதற்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டை </a>ஆளும் தவெக அரசு கர்நாடக அரசுக்கு அரசியல் அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கைதான இளைஞர்.. ஒருநாள் நீதிமன்ற காவலுக்கு பின் விடுதலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-assaulting-special-sub-inspector-released-after-one-day-of-judicial-custody</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-assaulting-special-sub-inspector-released-after-one-day-of-judicial-custody#comments</comments><guid isPermaLink="false">afc9acbd-d614-4131-9015-03f241f370ef</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:24:26 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:24:26.897Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Thanjavur,தஞ்சாவூர்,விசிக,வழக்குப்பதிவு,இளைஞர்,சாலை மறியல்,judicial custody</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8u3ilnzt/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8u3ilnzt/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தஞ்சையில் போலீசாருக்கும்- இளைஞர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞர் மீது 6 பிரிவுகளில் வழங்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். </p><h2>மறியல் போராட்டம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">தஞ்சையில்</a> நேற்றுமுன்தினம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர், அனுமதியின்றி வைக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அகற்றிய விளம்பர பேனரை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் எனவும் கூறி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்ட விளம்பர பேனர் அதே இடத்தில் வைக்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்தின் போது, வழிவிட கூறி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினருடன் விளார் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 26), திருக்கானூர்பட்டியை சேர்ந்த அய்யப்பன் (27) ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்தனர்.</p><h2>7 பிரிவுகளில் வழக்கு</h2><p>அப்போது அங்கு நின்ற போலீசார் இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற போது, ஆகாஷ் போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆகாசை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தாக்கினார். உடனே ஆகாசும் திருப்பி அப்துல்ரஹீமை தாக்கினார். மேலும் அருகே நின்ற அய்யப்பனும் போலீசாரை தகாத வார்த்தையில் திட்டினார்.</p><p>இதையடுத்து நேற்றுமுன்தினம் ஆகாஷ் மற்றும் அய்யப்பன் இருவர் மீதும், பி.என்.எஸ்., 296 (பி) பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், 115 (2) காயம் ஏற்படுத்துதல், 195 (1) கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பொது ஊழியரை தாக்குதல், 221 பொது ஊழியர் தனது பொதுப்பணியை செய்ய இடையூறு செய்தல், 351 (2) மிரட்டுவது, 132 அரசு ஊழியர் தனது கடமையை செய்யும்போது தாக்குதல், 121 அரசு ஊழியர் தனது கடமையை செய்யும்போது அவருக்கு காயம் ஏற்படுத்துதல் ஆகிய 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.</p><h2>போலீசார் விளக்கம்</h2><p>இந்தநிலையில், போலீசார் வாலிபரை முதலில் அடித்த விவகாரத்தில், போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. </p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் இளைஞர் வாக்குவாதம் செய்ததால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில்,பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்ரஹீம் தலையிட்டு, ஆகாசை அமைதிப்படுத்தினார். </p><p>அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். மேலும், நிலைமை மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை அப்துல்ரஹீம் பயன்படுத்தினார். அவரை அந்த நபரை கன்னத்தில் அறைந்துள்ளார்.</p><p>மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா போலீஸ், கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் இடத்தில் தனது மேலாளரை தகாதவார்த்தையில் பேசிய புகார் உள்ளது. போலீசார் ஆகாசை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது. </p><p>இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது. </p><h2>38 பேர் மீது வழக்குப்பதிவு</h2><p>மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் 38 பேர் மீது தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த இளைஞர் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருந்தார். </p><p>இதன்படி இளைஞர் ஆகாஷ் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  </p><p>இந்நிலையில் தஞ்சாவூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கைதான இளைஞர் ஆகாஷ் ஒருநாள் நீதிமன்ற காவலுக்கு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்காக கத்துகிறார்கள்? என்றே தெரியவில்லை:  எடப்பாடி பழனிசாமி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-are-tvk-mlas-shouting-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-are-tvk-mlas-shouting-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">16a1cb3f-0920-464c-933c-2de68e90b7d8</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:15:02 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:15:02.890Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,த.வெ.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/31fmc01m/aitna.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/31fmc01m/aitna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்காக கத்துகிறார்கள்? என்றே தெரியவில்லை என <a href="https://www.dailythanthi.com/news/india">எடப்பாடி பழனிசாமி </a>கூறினார்.</p><p>தமிழக சட்டசபை இன்று காலை கூடியபோது, முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.  அப்போது அவர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று கூறினார்.</p><p>இதேபோன்று, மருத்துவ காப்பீடு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p>  <p>அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு</p><p>இந்நிலையில் அ.தி.மு.க.வினர், கவன ஈர்ப்பு கோரி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  இதன்பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவைக்கு வெளியே நிருபர்களிடம் அளித்த பேட்டியின்போது, சவுதி அரேபியாவில், மயிலாடுதுறையை சேர்ந்த தமிழக மீனவர் ஒருவர் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த விவகாரம் குறித்து பேச அவையில் அனுமதிக்கவில்லை.  உலகின் எந்த பகுதியில் தமிழன் பாதிக்கப்பட்டாலும் அவருக்காக குரல் கொடுப்பதே நமது வழக்கம்.</p><p>தமிழருக்கு பாதிப்பு என்றால் உடனே கவன ஈர்ப்பு எடுக்க வேண்டும்.  கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 5 நாள்களாகியும் இதுவரை எடுக்கப்படவில்லை.  இதுவே அ.தி.மு.க., தி.மு.க. அரசாக இருந்தால் கவன ஈர்ப்பு எடுத்திருப்போம்.</p>  <p>ரீல்ஸ் அரசாங்கம்</p><p>உண்மையான தமிழ் உணர்வு த.வெ.க. அரசிடம் இல்லை.  தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை.  இவர்கள் எப்படி தமிழ்நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவார்கள்? என்று பழனிசாமி கேள்வி எழுப்பினார்.  ஒரு வாரம் ஆகியும் சவுதி அரேபியாவில் இருந்து சீர்காழி மீனவர் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை இல்லை.  தமிழர்களை காப்போம் என பேச மட்டுமே செய்கின்றனர்.</p><p>அரசிடம், தமிழ் உணர்வு இல்லை.  அங்கே மீனவர் இறந்து கிடக்கிறார்.  த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கைதட்டி சிரித்து கொண்டிருக்கின்றனர்.  த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்காக கத்துகிறார்கள்? என்றே தெரியவில்லை.  ரீல்ஸ் அரசாங்கம் நடந்து வருகிறது.  மீனவர் விவகாரத்தை விட வேறு என்ன முக்கிய விஷயம் இருந்து விடப்போகிறது? ரீல்ஸ் வெளியிட்டு ரீல் விடுவதே நடக்கிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. விஜய் முதல்-அமைச்சராக ஆட்சி செய்யப் போவது எப்போது? - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/law-and-order-is-in-shambles-when-will-vijay-govern-as-chief-minister-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/law-and-order-is-in-shambles-when-will-vijay-govern-as-chief-minister-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">035e1829-0cb4-44c8-876e-f38da6e91906</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:09:08 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:09:08.076Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/o648wu1q/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/o648wu1q/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஜோசப் விஜய் முதல்-அமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு</h2><p>சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், பொதுமக்கள் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பதற்றத்துடன் ஓடியதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளிக் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.</p><p>கடந்த இரு நாட்களில் மட்டும் காஞ்சிபுரம் அருகே இரட்டைக் கொலை, திருப்புவனம் அருகே இளைஞர் குத்திக் கொலை, நெய்வேலியில் இளைஞர் வெட்டிக் கொலை, திருப்பூர் அருகே வடமாநில இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை என, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சந்தி சிரிக்கும் அளவிற்குச் சென்றிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.</p><h2>காலக்கொடுமை</h2><p>அதேபோல சேலம் வாழப்பாடியில் சமூகநீதி விடுதியில் தங்கி பயிலும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல், தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, சேலம் கொண்டலாம்பட்டியில் 14 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஈரோடு அருகே 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது என, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>இப்படி, தினந்தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் என, ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், தவெக அரசும் அதன் முதல்-அமைச்சரும் தங்களது முதல் 100 நாள் அலங்கோல ஆட்சியை சாதனையாக அறிவித்து பல கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது காலக்கொடுமையாகும்.</p><h2>எப்போது தான் ஆட்சி செய்யத் தொடங்குவார்?</h2><p>ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து கால அவகாசம் தேவை என்பதையும், தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என்பதையும் வாடிக்கையாகக் கூறி வரும் தமிழக முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஜோசப் விஜய்</a>, எப்போது தான் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்குவார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p>எனவே, குற்றச் சம்பவங்கள் அரங்கேறிய பின்னர் குற்றவாளிகளைக் கைது செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3 துறைகளின் கோப்புகளை ஓபன் பன்ன வச்சிராதீங்க: திமுகவுக்கு முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/files-from-three-departments-are-on-my-desk-chief-minister-vijay-speaks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/files-from-three-departments-are-on-my-desk-chief-minister-vijay-speaks#comments</comments><guid isPermaLink="false">f8d9268d-240d-4ed5-9add-85444eb8e95b</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:04:38 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:04:38.016Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,TN Assembly,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/h8560jqb/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/h8560jqb/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. </p><p>இந்த விவாதத்தின்போது திமுக எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அதற்கு அத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில்களை அளித்தார். இதற்கிடையில் திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா? என திமுக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.</p><p><strong>இதற்கு சட்டென்று எழுந்து முதல்-அமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</strong></p><p>இதை நான் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன்... ஆனால் எதிர்க்கட்சியினர் ஆதாரம்... ஆதாரம் என்று கேட்கிறார்கள்; ஒரு வாரத்திற்கு முன்பு நிதி அமைச்சர் பேசும்போது 3 துறைகள் குறித்து ஆய்வு செய்த கோப்புகள் எனது மேசையில் இருப்பதாக தெரிவித்தார்.</p><p>அதை ஒன்றும் அவர் (நிதி அமைச்சர்) போற போக்கில் சொல்லவில்லை; உண்மையிலேயே அந்த கோப்புகள் எனது மேசையில் தான் இருக்கிறது. அத்தனையும் ஆதாரத்துடன் இருக்கிறது; ஓபன் பன்ன வச்சிராதீங்க; எதை எப்போ வெளியிட வேண்டுமோ, அப்போது அனைத்தும் சரியாக வெளியிடப்படும்...</p><p>மக்களிடம் எப்போது பேச வேண்டும்; எண்ண பேசனும், எப்படி பேசனும் என்று பேசிவிட்டுதான் எங்களை அன்பாக, ஆசையாக இங்கே (சட்டசபைக்குள்) கொண்டு வந்து உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசுவேன்... பேசக்கூடாது என்றெல்லாம் இல்லை; இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்கணும்ல... இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காலியிடத்துக்கு வரிவிதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: பில் கலெக்டரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/40000-bribe-to-assess-tax-on-vacant-land-anti-corruption-police-arrest-bill-collector</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/40000-bribe-to-assess-tax-on-vacant-land-anti-corruption-police-arrest-bill-collector#comments</comments><guid isPermaLink="false">85f2476c-d29f-48c3-871a-0bbfca0ee474</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:37:29 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:37:29.890Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,தமிழகம்,Corruption,வரி விதிப்பு,லஞ்ச ஒழிப்பு போலீசார்,காலியிடம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jph8fwh6/ser.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/jph8fwh6/ser.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவையில்</a> காலியிடத்துக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பில் கலெக்டர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a>யை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சுந்தராபுரம் பகுதியில் மினி தியேட்டர் கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் அங்குள்ள 2 பேரிடம் 39 சென்ட் காலி நிலத்தை வாடகைக்காக பெற்றார். அதில் கட்டிடம் கட்டுவதற்கு, காலியாக கிடக்கும் அந்த பகுதிக்கு மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும்.</p><p>எனவே பிரகாஷ், சுந்தராபுரத்தில் உள்ள வரிவசூல் மையத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் யமுனாதேவி (வயது 59) என்பவரை அணுகினார். அவர் அந்த காலியிடத்துக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.45 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறினார்.</p><h2>போலீசில் புகார்</h2><p>அதற்கு அவர் ரூ.40 ஆயிரம் கொடுப்பதாக கூறியதாக தெரிகிறது. ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக கூடுதல் சூப்பிரண்டு ராஜேசை சந்தித்து, புகார் செய்தார்.</p><p>இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரகாசிடம் கொடுத்து அதை யமுனாதேவியிடம் கொடுக்குமாறு கூறினர்.</p><h2>கைது</h2><p>இதையடுத்து பிரகாஷ், யமுனாதேவியை தொடர்பு கொண்டு பணம் கொண்டு வருவதாக கூறினார். அதற்கு அவர் அலுவலகத்துக்கு வர வேண்டாம், அருகே உள்ள பேக்கரிக்கு வருமாறு கூறினார். அவரும், அங்கு சென்று யமுனாதேவியிடம் ரூ.40 ஆயிரத்தை கொடுத்தார். அதை அவர் வாங்கியதும் அங்கு மறைந்து இருந்த போலீசார் யமுனாதேவியை கைது செய்தனர்.</p><p>கைதான யமுனாதேவி பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆண் வாரிசு இல்லாததால் தந்தையின் இறுதிச் சடங்கை செய்த 3 மகள்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-daughters-performed-their-fathers-last-rites-in-the-absence-of-a-male-heir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-daughters-performed-their-fathers-last-rites-in-the-absence-of-a-male-heir#comments</comments><guid isPermaLink="false">de864b53-cb14-4466-aedf-dff6541abd47</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:29:10 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:29:10.448Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆந்திர பிரதேசம்,son,Andrapradesh,Daughters,மகள்கள்,Father,தந்தை,ஆண்,funeral procession,இறுதிச் சடங்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ox5qip88/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ox5qip88/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நகரி,</p><p>ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாமர்ரு அரண்டல் பேட்டையை சேர்ந்தவர் பலகாணி வெங்கட் நாராயணா (வயது65). இவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவருக்கு வெங்கட்ரமணா என்ற மனைவியும் மற்றும் ஜோதி, லதா, பிரசன்னா என்று 3 மகள்களும் உள்ளனர். </p><p>மகள்கள் மூவருக்கும் திருமணம் நடந்து விட்டதால் அவர்கள் வேறுவேறு பகுதிகளில் வசிக்கின்றனர்.  தந்தை இறந்த செய்திக்கேட்டு 3 மகள்களும் நேரில் வந்து தந்தையின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை செய்தனர். வழக்கமாக ஆண் பிள்ளைகள் தான் கொள்ளி வைப்பது உள்ளிட்ட சடங்குகளில் ஈடுபடுவார்கள். </p><p>ஆனால் வெங்கட் நாராயணாவுக்கு மகன்கள் இல்லாததால் கொள்ளி வைப்பது யார் என்பது பற்றி உறவினர்கள் விவாதித்தனர். இந்நிலையில் மகள்கள் லதா, பிரசன்னா தந்தையின் பாடையை சுமக்க முன்வந்தனர்.</p><p>பெரிய மகள் ஜோதி இந்து சம்பிரதாயப்படி கொள்ளி வைத்து இறுதிச் சடங்கை முடித்து வைத்தார். மகள்களின் செய்கையை பார்த்து உறவினர்கள் கண்கலங்கினார்கள். பலரும் இவர்களை பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக வரும் அரிசி மூட்டைகள்: பணியாளர்கள் வேதனை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rice-sacks-arriving-at-ration-shops-are-underweight-staff-distressed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rice-sacks-arriving-at-ration-shops-are-underweight-staff-distressed#comments</comments><guid isPermaLink="false">1cc08c4d-9d3f-4ea1-b99e-ba0397f94a58</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:20:40 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:20:40.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ரேஷன் கடை,Ration shop,பணியாளர்கள்,allegation,Public,distress,வேதனை,அரிசி மூட்டைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/xaj5uu1r/278.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/xaj5uu1r/278.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் எடை குறைவாக வருவதால் பணியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். </p><h2>எடை குறைவாக வழங்கப்படும் அரிசி</h2><p>தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு உரிய எடையில் அரிசி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. ஆனால், இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்களிடம் கேள்வி கேட்டால், "எங்களுக்கே அரிசி மூட்டை எடை குறைவாகத்தான் வருகிறது. அப்படி இருக்கும்போது, உரிய எடையில் எப்படி பொதுமக்களுக்கு அரிசியை வழங்க முடியும்" என்று வருத்தம் தெரிவித்தனர்.</p><p>சமீபத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு காரணமான அரசு அதிகாரிகளும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.  </p><h2>தரமில்லாத அரிசி</h2><p>50 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் அளவு ஒரு பக்கம் குறைகிறது என்றால், மற்றொரு பக்கம் தரமான அரிசியாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. </p><p>அதாவது,  "நல்ல தரமான அரிசியை வெளிச்சந்தைக்கு திருப்பி விட்டுவிட்டு, தரமில்லாத, பழைய அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. அதுவும் எடை குறைவாகவே வழங்கப்படுகிறது" என்ற புகார் பல ஆண்டுகளாக உள்ளது. </p><h2>அரசுக்கு கோரிக்கை</h2><p>அதனால், நெல் கொள்முதலில் தொடங்கி நெல் அரவை, கிடங்கு, போக்குவரத்து, <a href="https://www.dailythanthi.com/topic/ration-shop">ரேஷன் கடை</a> என முழு விநியோக சங்கிலியையும் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு குறிப்பாக உணவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-historic-moment-in-the-history-of-the-tamil-nadu-legislative-assembly-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-historic-moment-in-the-history-of-the-tamil-nadu-legislative-assembly-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">768ef65c-57dd-4241-b1bf-d8c49b7d5524</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:18:19 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:18:19.457Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/yf7djgrj/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/yf7djgrj/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது என தமிழக பாஜக தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பெருமைப்பட வேண்டிய நாள்</h2><p>ஒரு கதர் சட்டை அணிந்த காங்கிரஸ்காரனாக நெஞ்சார்ந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் உணரும் நாள்; கதர் சட்டை அணிந்த ஒவ்வொரு காங்கிரஸ்காரனும் நெஞ்சம் நிமிர்த்துப் பெருமைப்பட வேண்டிய நாள்!</p><p>அண்ணல் 'தீரர்' சத்தியமூர்த்தியின் பிறந்தநாளான இன்றைய நன்னாளில், 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்யும் அமைச்சர் சகோதரர் ராஜேஷ் குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!</p><h2>சட்டமன்றப் பணிகளும் தொடர்கிறது</h2><p>மத்திய பாஜக அரசு மற்றும் அமித் ஷாவை எதிர்த்து மக்களுக்கான நமது அறவழிப் போராட்டக் களம் ஒருபுறம் தொடரும் அதே வேளையில், மறுபுறம் மக்கள் நலனுக்கான நமது சட்டமன்றப் பணிகளும் கம்பீரமாகத் தொடர்கிறது.</p><p>​தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தங்களது மானியக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோரிக்கை </a>வழிகாட்டட்டும்!</p><p>​வாழ்த்துகள்! வெல்க மக்கள் பணி!</p><p>வளர்க தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக யாக பூஜைகள் 6-ந் தேதி தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/yaga-pujas-for-the-meenakshi-amman-temple-consecration-ceremony-begin-on-the-6th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/yaga-pujas-for-the-meenakshi-amman-temple-consecration-ceremony-begin-on-the-6th#comments</comments><guid isPermaLink="false">c283c1f0-bb40-4649-8f07-0070fe65b7f2</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:06:55 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:06:55.694Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Kumbabhishekam,கும்பாபிஷேகம்,தமிழகம்,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,Meenakshi,poojas,யாக பூஜை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/awnho2mr/kier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/awnho2mr/kier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. விழா நிகழ்ச்சிகள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளன.</p><h2>கும்பாபிஷேக விழா</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது.</p><h2>யாகசாலை பூஜைகள்</h2><p>கூட்டத்தில், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. 6-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை கும்பாபிஷேக விழாவுக்கான யாகசாலை பூஜைகள், 16-ந் தேதி பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 17-ந் தேதி காலை 7.40 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.</p><p>18-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை மண்டல பூஜைகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவை எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையின்றி பாதுகாப்பான முறையில் நடத்தி முடித்திட ஒவ்வொரு துறை அலுவலர்களும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் விளக்கி கூறினார்.</p><h2>லட்சக்கணக்கான பக்தர்கள்</h2><p>கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா, கட்டுப்பாட்டு அறை அமைத்தல், கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும். வாகன நெரிசல் ஏற்படாதவாறு போக்கு வரத்தை உறுதி செய்ய வேண்டும். கோவில் பகுதி மிகவும் நெருக்கமாக போதிய இடவசதியின்றி உள்ளதால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள் ளிட்டவை வந்து செல்ல முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.</p><h2>எல்.இ.டி. திரைகள்</h2><p>கும்பாபிஷேகத்தினை கண்டு தரிக்கும் வகையில் தேவையான இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்க வேண்டும். யாகசாலை பூஜைகளின் போது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும். இதே போன்று மாநகராட்சி, மருத்துவத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மின்சாரத் துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உணவுப்பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை என அனைத்து துறை சார்பில் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை ரூ.3  உயர்வு போதுமானதல்ல: லிட்டருக்கு குறைந்தது 7 ரூபாயாவது உயர்த்த வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-3-hike-in-the-milk-procurement-price-is-insufficient-it-should-be-raised-by-at-least-7-per-litre-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-3-hike-in-the-milk-procurement-price-is-insufficient-it-should-be-raised-by-at-least-7-per-litre-anbumani#comments</comments><guid isPermaLink="false">e2f3fe92-9142-4b53-a29e-fbd3f9e8b90d</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:58:06 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:58:06.015Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாமக,Anbumani,சென்னை,Price,milk,பால்,அன்புமணி ராமதஸ்,கொள்முதல் விலை உயர்வு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/91j9gguk/19.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/91j9gguk/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பால் கொள்முதல் விலை ரூ.3  உயர்வு போதுமானதல்ல, லிட்டருக்கு குறைந்தது 7 ரூபாயாவது உயர்த்த வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</p><p>இது தொடர்பாக, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பால் கொள்முதல் விலை</h2><p>தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு  ரூ.3  உயர்த்தப்பட்டிருக்கிறது. பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலை 35 ரூபாயிலிருந்து  36 ரூபாயாகவும்,  ஊக்கத்தொகை ரூ.3-லிருந்து  ரூ.5 ஆகவும் உயர்த்தப்படும்  என்று  முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல.</p><p>தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாததாலும்,  தனியார் நிறுவனங்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">ஆவின்</a> கொள்முதல் விலையை விட லிட்டருக்கு  ரூ.12 வரை கூடுதலாக வழங்குவதாலும் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. அந்த அளவுக்கு உயர்த்த முடியாவிட்டாலும் குறைந்தது லிட்டருக்கு  ரூ.7 அளவுக்காவது உயர்த்த அரசு முன்வர வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-vehicles-for-all-mlas-chief-minister-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-vehicles-for-all-mlas-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">5af9ec90-ec7d-4d47-aed5-0c970dbec4cc</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:49:22 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:49:22.370Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எம்.எல்.ஏ.க்கள்,MLAs,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/t1xb3x1l/tncia.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர், விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/t1xb3x1l/tncia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் கடந்த 12-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசினார்.  அப்போது அவர், நான் 280 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து இங்கு வருகிறேன். அதற்கு பயணப்படி கொடுக்கிறீர்கள். ஆனால் எனக்கு சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை.  வாடகைக்குதான் எடுக்க வேண்டியதுள்ளது.</p><p>எனது தொகுதியில் 40 கிலோமீட்டர் சுற்றளவு பயணித்து மக்களை சந்தித்து பணிகளை மேற்கொள்வதற்கான வாகன வசதிகள் இல்லை. ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு, அவருக்கு ஊதியம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் வசதிகள் இல்லை. இப்படித்தான் இங்குள்ள எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசி பேர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு கார் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என பேசினார்.</p>  <h2>110 விதியின் கீழ்</h2><p>இந்த நிலையில், சட்டசபையில் வசதி குறைந்த மற்றும் புதிய எம்.எல்.ஏ.க்களில் எந்தெந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கார் உள்ளிட்ட உதவிகளை அரசால் வழங்க முடியும் என்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசித்து வருகிறார். இது சம்பந்தமான அறிவிப்பை அவர் சட்டசபையில் வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.</p><p>இந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று காலை கூடியபோது, முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.</p>  <h2>எம்.எல்.ஏ.க்களுக்கு கார்</h2><p>அப்போது அவர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று கூறினார்.  இதன்படி, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும்.  தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதிப்பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.</p><p>இதன்படி எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு உதவியாளர்களை நியமிக்க மாதம் ரூ.25 ஆயிரம் படி வழங்கப்படும்.  ஓட்டுநர், வாகன பராமரிப்பு, எரிபொருளுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் படி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்து பேசினர்.</p> ]]></content:encoded></item><item><title>மருத்துவ காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-insurance-coverage-increased-to-rs-25-lakh-chief-minister-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-insurance-coverage-increased-to-rs-25-lakh-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">76807acd-ffc7-4129-98cb-507055ba4843</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:46:15 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:46:15.390Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,TN Assembly,Medical Insurance,மருத்துவ காப்பீடு,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/giswr5aw/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/giswr5aw/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><strong>தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியதும் 110- விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-</strong></p><p>முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத்தொகை ஆண்டொன்றுக்கு தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். தஞ்சை, கோவை, நெல்லை , மதுரை மற்றும் விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிசிக்சை மையங்கள் அமைக்கப்படும். </p><p>சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரூ.471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை தலைமை மையம் அமைக்கப்படும். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ.84 கோடியில் 8 தளங்களுடன் மண்டல புற்று நோய் மையம் அமைக்கப்படும். பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.106.17 கோடி ஒதுக்கப்படும். </p><p>தரமான மருத்துவச் சேவையை உறுதி செய்யும் வகையில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் 6,098 கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதில் 660 பி.எஸ்.சி. செவிலியர் இடங்கள், 1,925 செவிலியர் கல்லூரி இடங்கள், 2,778 துணை மருத்துவப் படிப்பு இடங்கள் மற்றும் 735 மருத்துவியல் இடங்கள் அடங்கும்.</p><p>தமிழகத்தில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும். திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவச் சேவைகள் பல மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோய்களைத் தடுத்து ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தரமான சிகிச்சை வழங்குவதற்காக "முதல்-அமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு " (Chief Minister's Cancer Care Mission) ரூ.673 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க ஆணையிட்ட வட்டாட்சியர் - அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tahsildar-orders-collection-of-details-regarding-cpi-and-cpm-party-members-anbumani-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tahsildar-orders-collection-of-details-regarding-cpi-and-cpm-party-members-anbumani-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">da958b81-8e25-4954-9a76-b38bcd3b9ae6</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:32:49 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:32:49.029Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/68iqo6kb/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/68iqo6kb/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கட்சி உறுப்பினர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க ஆணையிட்ட வட்டாட்சியர் மீது நடவடிக்கை வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அதிகார அத்துமீறல்</h2><p>திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் குறித்த விவரங்களை சில மணி நேரங்களில் திரட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என்று குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் பொதுவுடைமை கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை குற்றவாளிகளைப் போல நினைத்து அவர்களின் விவரங்களை சேகரிக்க வட்டாட்சியர் ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>இந்திய விடுதலைக்கு முன்பு சில கட்சிகள் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும், நெருக்கடி நிலை காலத்திலும் தான் ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராடுவதைத் தடுக்க அரசியல் கட்சியினரின் விவரங்களை கடைநிலை அதிகாரிகளைக் கொண்டு சேகரிப்பது வழக்கமாக இருந்தது. ஆங்கிலேயர்களும், அடக்குமுறையாளர்களும் பயன்படுத்திய அதே சட்டவிரோத வித்தையை ஒரு வட்டாட்சியரும் பயன்படுத்தியிருப்பது அதிகார அத்துமீறல் ஆகும், இதை சகித்துக் கொள்ள முடியாது.</p><h2>நாளை போராட்டம்</h2><p>தனிநபர் விவரங்களை சேகரிக்கும் அளவுக்கு பொதுவுடைமைக் கட்சியினர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட வட்டாட்சியரின் தன்னிச்சையான, மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நாளை நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. தமக்கு எதிராக பொதுவுடமை கட்சி போராட்டம் அறிவித்திருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இப்படி ஓர் அடக்குமுறையை வட்டாட்சியர் ஏவி விட்டுள்ளார்.</p><p>இதில் கொடுமை என்னவென்றால் இது தொடர்பாக குஜிலியம்பாறை வட்டாட்சியர் நேற்று நண்பகலில் வெளியிட்ட சுற்றறிக்கையின் நகல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், பழனி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டிருப்பதும், அதைப் பார்த்த பிறகும் குஜிலியம்பாறை வட்டாட்சியரின் அத்துமீறிய செயலை கண்டிக்கவோ, அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ அந்த உயரதிகாரிகள் முன்வரவில்லை என்பது தான்.</p><h2>நடவடிக்கை எடுக்க வேண்டும்</h2><p>மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் அதிகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பறிக்கும் அதிகாரமோ, அதற்காக அச்சுறுத்தும் அதிகாரமோ வட்டாட்சியருக்கும் கிடையாது; மாநில அரசுக்கும் கிடையாது. இதையெல்லாம் மறந்து விட்டு, பொதுவுடமைக் கட்சியினரை மிரட்டும் செயலில் ஈடுபட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குஜிலியம்பாறை </a>வட்டாட்சியர் மீது தமிழக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி கட்டிட மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது: உயிர் தப்பிய மாணவ-மாணவிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plaster-from-government-school-roof-collapses-students-escape-unhurt</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plaster-from-government-school-roof-collapses-students-escape-unhurt#comments</comments><guid isPermaLink="false">57f14d37-e556-4e93-a65b-5d41f9daeee0</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:26:07 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:26:07.096Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சிவகங்கை,Sivagangai,அரசு பள்ளி,திருப்புவனம்,Govt school</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ktl23pfa/kloer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ktl23pfa/kloer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்புவனம், </p><p>அரசு பள்ளி கட்டிட மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் தப்பினர்.</p><h2>அரசு தொடக்கப்பள்ளி</h2><p>சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மஞ்சள் குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் கட்டி சுமார் 10 ஆண்டுகள் இருக்கும் என கூறப்படு கிறது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 24 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.</p><p>தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியை என 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளிக்கட்டிட முகப்பு பகுதி ஏற்கனவே சேதமடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><h2>பூச்சு பெயர்ந்து விழுந்தது</h2><p>இந்த நிலையில் நேற்று மதியம் கட்டிட முகப்பு மேற்கூரையில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது. இதனால் கட்டிடத்தின் கம்பிகள் வெளியே நீட்டியபடி இருந்தன. மாணவ- மாணவிகள் வகுப்பறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் பால் பாண்டி பள்ளிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பு கருதி, முன்னதாகவே மாணவ-மாணவிகள் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs-3-per-litre-chief-minister-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs-3-per-litre-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">c4737e01-633c-4932-ba1c-4c8810582ec3</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:24:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:24:13.048Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,பால் விலை,milk price,பால் உற்பத்தி,Aavin Milk,Milk procurement,ஆவின் பால்,பால் கொள்முதல் விலை,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/johhdozu/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/johhdozu/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஆவின் பால்</h2><p>தமிழகத்தின் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆரம்ப காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் இந்த பால் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று பால் விற்பனை செய்து வந்தனர்.</p><p>ஆனால் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை அதிகரிக்கவில்லை. இதனால் ஆவினுக்கு பால் வழங்குவதற்கு தயக்கம் காட்டி வந்தனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு விவசாயிகள் பால் விற்பனை செய்து வருகின்றனர்.</p><h2>கொள்முதல் விலை</h2><p>ஆவின் நிறுவனம் சராசரியாக 1 லிட்டர் பாலை ரூ.34-க்கு கொள்முதல் செய்கிறது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் பாலை ரூ.50 வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பதற்கே விவசாயிகள் முன்னுரிமை அளிக்கின்றனர். மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் வலியுறுத்தினர்.</p><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் 110- விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.</p><p><strong>இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-</strong></p><p>உலகில் தான் உற்பத்தி செய்யும் பாலை தனது சந்ததிகளுக்கு மட்டுமின்றி, மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளுக்கும் வழங்கி உயிரைக் காக்கும் பசுவை தெய்வமாகப் போற்றி வளர்த்து வருவது நமது பாரம்பரியத்தின் சிறப்பு. இன்றைய அறிவியல் உலகில், ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்காகப் பசுவின் உடலில் சுமார் 500 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதாகக் கூறப்படும்போது, பசுவின் உழைப்பை எண்ணி வியக்க தோன்றுகிறது.</p><h2>34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்</h2><p>தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3,16,000 பால் உற்பட்டதியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>தற்போது 4.3% கொழுப்பு சத்து மற்றும் 8.2% இதர சத்துகள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்க தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய், 5.11.2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.</p><h2>உயர்த்தப்படாத பால் கொள்முதல் விலை</h2><p>அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளைச் சுத்தம் செய்து பால் உற்பத்தி செய்யும் உற்பட்டதியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை. உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது.</p><p>கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில், நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.</p><h2>பால் கொள்முதல் விலை உயர்வு</h2><p>தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கு மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும் அரசு ஊக்க தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டிற்கு 360 கோடியும் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பழனியில் ரூ.100 கோடி நில மோசடி: சார்பதிவாளர், பத்திர எழுத்தரை காவலில் விசாரிக்க போலீசார் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-land-fraud-in-palani-police-seek-custody-of-sub-registrar-and-document-writer-for-interrogation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-land-fraud-in-palani-police-seek-custody-of-sub-registrar-and-document-writer-for-interrogation#comments</comments><guid isPermaLink="false">39a93414-ec8a-4fa5-9411-918a49336f78</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:07:09 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:07:09.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Palani,Palani temple,சார்பதிவாளர்,Sub-Registrar,land dispute case,நில மோசடி,பழனி கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/7yu8h9sh/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/7yu8h9sh/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><h2>ரூ.100 கோடி நில மோசடி</h2><p>பழனியில், தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமாக ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் இருக்கிறது. அந்த நிலம் 2 பேருக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தனர். அதோடு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.</p><p>அதையடுத்து திண்டுக்கல்லை சேர்ந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழனியை சேர்ந்த சேதுபதி மற்றும் வக்கீல் அன்வர்தீன், ஒட் டன்சத்திரத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>காவலில் விசாரிக்க மனு</h2><p>இதைத்தொடர்ந்து ஜாமீன் கேட்டு 6 பேரும் தாக்கல் செய்த மனுவை, திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் மாவட்ட கோர்ட்டில் சார்ப திவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயபிர காஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி ஆனது. மேலும் முருகதாஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று (புதன்கிழமை) மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.</p><p>இதற்கிடையே நில மோசடி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந் துள்ளது. இதனால் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத் திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக திண்டுக்கல் 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.</p><p>இந்த மனு இன்று மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இதனால் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம். அதன்மூலம் மேலும் சிலர் சிக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>உடல் பருமன் அதிகரிப்பு: தொற்றா நோய் பாதிப்புகளால் சவால்களை எதிர்கொள்ளும் தமிழ்நாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-obesity-tamil-nadu-faces-challenges-due-to-non-communicable-diseases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-obesity-tamil-nadu-faces-challenges-due-to-non-communicable-diseases#comments</comments><guid isPermaLink="false">6c8e1aca-6a75-43ac-ae17-517ce2348ee4</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:55:01 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:55:01.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,obesity,உடல் பருமன்,மருத்துவத்துறை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/avz1fk3r/ulad.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/avz1fk3r/ulad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலகளாவிய நோய் பாதிப்பு குறித்த ஆய்வின்படி, தமிழகத்தில் நடக்கும் மொத்த இறப்புகளில் 75 சதவீதம் தொற்றா நோயால் ஏற்படுகிறது. இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.</p><h2>உடல் பருமன்</h2><p>மாறிவரும் உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள் உள்ளிட்டவை மக்களிடையே உடல் பருமனை அதிகரித்து வருகிறது. உடல் பருமன் அதிகம் இருப்போருக்கு, தொற்றா நோய் பாதிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.</p><h2>44.2 சதவீத பெண்கள்</h2><p>தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, தொற்றா நோய் பாதிப்புகளால் அதிகபட்ச சவால்களை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. அதன்படி தமிழகத்தில் அதிக எடை, உடல் பருமனால் 44.2 சதவீத பெண்கள், 38.8 சதவீத ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.</p><h2>10 ஆண்டுகளில்</h2><p>இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறுகையில், “பெரும்பாலான மக்களிடையே உடல் உழைப்பு, உடற்பயிற்சி இருப்பதில்லை. துரித உணவு, புகையிலை பயன்பாடு, மதுப்பழக்கம் ஆகியவை தொற்றா நோய்க்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இந்நிலை நீடித்தால் 10 ஆண்டுகளில் தொற்றா நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், தொற்றா நோயால் ஏற்படும் இறப்பு 80 சதவீதத்தை தாண்டும்” என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/surprise-raids-by-the-directorate-of-vigilance-and-anti-corruption-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/surprise-raids-by-the-directorate-of-vigilance-and-anti-corruption-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">e8541405-7682-449b-9c1f-bd061e0e73e2</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:26:37 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:26:37.979Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,electricity,மின்வாரியம்,Electricity Board,மின்சாரத்துறை,லஞ்ச ஒழிப்புத்துறை,தமிழ்நாடு மின்வாரியம்,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,Vigilance Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ys3kdrw8/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ys3kdrw8/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் செயல்பட்டு வரும் கணினி நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><h2>வருமானவரி சோதனை</h2><p>சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் செயல்பட்டு வரும் கணினி தொழில்நுட்பத் தொடர்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.</p><p>கணினி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் இந்த நிறுவனத்திற்கும் வெளிநாட்டு நிறுவனங்க ளுக்கும், இந்தியாவின் சிறிய நிறுவனங்களுக்கும் இடையே நடந்த நிதிப் பரிமாற்றங்களில் உள்ள முறைகேடுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.</p><h2>நேற்று 5 இடங்களில் சோதனை</h2><p>இந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய எர்ணாவூர், ஆழ்வார்பேட்டை, விருகம்பாக்கம், ராஜமங்கலம் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடந்தது. அனைத்து இடங்களிலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் தீவிர ஆவணச்சரிபார்ப்பு உள்ளிட்ட சோதனையில் ஈடுபட்டனர்.</p><p>வரி செலுத்தாமல் வருவாயை மறைத்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த இந்த புகார்கள் மற்றும் கணக்கில் வராத நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன்படி கணினி பதிவுகள் மற்றும் நிதி ஆவணங்கள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன. சோதனை முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மதிப்பு, ரொக்கம் உள்ளிட்டவை தெரிய வரும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர்.</p><h2>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</h2><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னையில் </a>இன்று டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சென்னையில் மட்டும் பெருங்குடி (4 இடங்கள்), அண்ணா நகர் (3 இடங்கள்) உள்பட 27 இடங்களிலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>காஞ்சீபுரம்:  வீடு கட்ட பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை லாரி ஏற்றிக்கொன்ற மகன் கைது
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kancheepuram-son-who-pushed-his-father-into-a-truck-in-anger-over-not-being-given-money-to-build-a-house-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kancheepuram-son-who-pushed-his-father-into-a-truck-in-anger-over-not-being-given-money-to-build-a-house-arrested#comments</comments><guid isPermaLink="false">2a1d527c-c095-42bc-854e-7096bc7e3ed8</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:18:56 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:18:56.232Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,Kancheepuram,காஞ்சீபுரம்</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/2fzmoboy/upael.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/2fzmoboy/upael.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>காஞ்சீபுரம்</p><p>காஞ்சீபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே வீடு கட்ட பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை லாரி ஏற்றிக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.</p><p><a href="https://www.dailythanthi.com/">காஞ்சீபுரம்</a> மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் ராம்ஜி தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 50). இவரது மனைவி நாகம்மாள்.  இவர்களுக்கு சந்துரு, முனுசாமி (25), சதீஷ் என 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது 2-வது மகன் முனுசாமி. அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தனக்கு வீடு கட்டுவதற்காக இடம் தர வேண்டும் அல்லது இடம் வாங்க பணம் தர வேண்டும் என்று கூறி, கடந்த சில நாட்களாக முனுசாமி தனது தந்தை சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.</p><p>நேற்று முன்தினம் மீண்டும் தந்தையுடன் தகராறு செய்தார். இதில் முனுசாமிக்கும் அவரது தம்பி சதீஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது.</p> <h2>தீவிர சிகிச்சை</h2><p>ஆத்திரம் அடைந்த முனுசாமி, சதீஷை நோக்கி மினி லாரியை வேகமாக ஓட்டி வந்தார். இதனை பார்த்த சத்யா, தனது மகன் சதீஷை காப்பாற்றுவதற்காக அவரை தள்ளிவிட்டார். இதில் சத்யா லாரி சக்கரத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த சத்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சத்யா உயிரிழந்து விட்டார்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய முனுசாமியை தேடி வந்தனர். மண்ணூர் காட்டு பகுதியில் பதுங்கி இருந்த முனுசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை நேரடியாக வாங்க புதிய வசதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-facility-to-directly-purchase-empty-liquor-bottles-at-tasmac-shops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-facility-to-directly-purchase-empty-liquor-bottles-at-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">2b297f54-6af8-4a58-aee1-b01762e75c56</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:02:20 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:02:20.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,டாஸ்மாக்,Tasmac,liquor bottles,காலி மது பாட்டில்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/c8ztquvw/tas.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/c8ztquvw/tas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் கடைகளில் வாகனங்களில் பாஸ்ட் ஸ்கேனர் எனப்படும் கருவியில் நேரடியாக காலி மது பாட்டில்கள் வாங்கப்பட உள்ளன.</p><h2>காலி மதுபாட்டில்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 டெபாசிட் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை வாங்கிய கடையிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலோ திரும்ப ஒப்படைப்பதன் மூலம், ரூ.10-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.</p><p>இத்திட்டத்தை டாஸ்மாக் ஊழியர்கள் கையாளும் நடைமுறைக்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இத்திட்டம் முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டு மாற்றியமைக்கப்படும் என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. டாஸ்மாக் பணியாளர்கள் அல்லாத பிற நபர்களைக் கொண்டு பாட்டில்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><h2>தானியங்கி கருவி</h2><p>இந்த சூழலில் தானியங்கி கருவியில் காலி பாட்டிலை வாங்கவும், அதன் வாயிலாக, 10 ரூபாயை திரும்ப வழங்கவும் டாஸ்மாக் முடிவு செய்தது. சோதனை ரீதியாக பீரோ வடிவில் உள்ள தானியங்கி கருவி, சென்னை எழும்பூரில் உள்ள ஒரு மது கடையில் வைக்கப்பட்டது. </p><p>அந்த கருவி பாட்டிலை தானாகவே உள்ளே எடுத்துக்கொள்ளும். பின்ன்ர் யு.பி.ஐ., கணக்கிற்கு காலி பாட்டிலுக்கான தொகை செலுத்தப்படும். பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் போதிய இடவசதி இல்லாமல், குறைந்த சதுர அடியில் இயங்கி வருகின்றன.</p><h2>'பாஸ்ட் ஸ்கேனர்’</h2><p>அந்த கடைகளில் பீரோ வடிவிலான தானியங்கி கருவிகளை வைக்க இடம் இல்லை. எனவே குறைந்த இட வசதியுடன் தினமும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மது வகைகள் விற்பனையாகும் கடைகளில் 'பாஸ்ட் ஸ்கேனர்’ எனப்படும் கருவியில் நேரடியாக வாகனங்களில், காலி பாட்டில்கள் வாங்கப்பட உள்ளன. இது சென்னை திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூரில் தலா ஒரு கடையில் சோதனை ரீதியாக வைக்கப்பட்டு பாட்டில்கள் வாங்கப்பட்டு வருகின்றன.</p><p>அதன்படி, வாகனத்தில் ஸ்கேனர் கருவியுடன் பணியாளர் இருப்பர். அவரிடம் காலி பாட்டிலை கொடுத்ததும் அதில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை கருவியில் ஸ்கேன் செய்து பாட்டிலை பெற்று கொண்டு 10 ரூபாய் திரும்ப வழங்குவர். இதன் வாயிலாக ஒரு நாளைக்கு 8 ஆயிரம் பாட்டில்களை திரும்ப பெற முடியும் என்று கூறப்படுகிறது. வாகனத்தில் சேகரிக்கப்படும் காலி பாட்டில்கள், டாஸ்மாக் நியமிக்கும் ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம் கோட்டத்தில் வருவாயை அதிகரிக்க வாரத்தில் 3 நாட்கள் 136 அரசு பஸ் சேவைகள் நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/136-government-bus-services-in-the-villupuram-division-suspended-for-three-days-a-week-to-boost-revenue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/136-government-bus-services-in-the-villupuram-division-suspended-for-three-days-a-week-to-boost-revenue#comments</comments><guid isPermaLink="false">c0b36d1a-738b-438c-89e2-58bd48a65a69</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:01:18 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:01:18.307Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Government bus,விழுப்புரம்,Villupuram,revenue,வருவாய்,சேவை நிறுத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/x1bg4tjq/276.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரசு பஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/x1bg4tjq/276.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் கோட்டத்தில் குறைந்த வருவாய் ஈட்டிய 136 புறநகர் பஸ்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது.</p><h2>விழுப்புரம் கோட்டம்</h2><p>தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களுக்குட்பட்ட 10 மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>இந்நிலையில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம். 6 மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-</p><p>அரசு போக்குவரத்துக்கழகத்தின் வருவாய் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும், அதிக சர்வீஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்களிலும், தனியார் பஸ் போக்குவ ரத்து இல்லாத வழித்தடங்களிலும் குறைந்த வருவாய் ஈட்டும் பஸ் சேவைகளை தேர்வு செய்து அவற்றை ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய போக்குவரத்து குறைவாக காணப்படும் வார நாட்களில் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் வருவாய் அதிகரிப்பதுடன், டீசல் செலவினமும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தற்காலிகமாக நிறுத்தம்</h2><p>அதன் அடிப்படையில் அனைத்து மண்டலங்களில் இருந்தும் பஸ்களை நிறுத்தம் செய்ய முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்த வருவாய் ஈட்டும் பஸ் சேவைகள் ஆய்வு செய்யப்பட்டு போக்குவரத்து குறைவாக காணப்படும் வார நாட்களில் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய முன்மொழிவுகள் பெறப்பட்டன.</p><p>இதன்படி விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 26 பஸ்களும், கடலூர் மண்டலத்தில் 28 பஸ்களும், திருவண்ணாமலை மண்டலத்தில் 34 பஸ்களும், வேலூர் மண்டலத்தில் 23 பஸ்களும், காஞ்சீபுரம் மண்டலத்தில் 15 பஸ்களும், திருவள்ளூர் மண்டலத்தில் 10 பஸ்களும் ஆக மொத்தம் 136 புறநகர் பஸ் சேவைகள் (598 முறை இயக்குதல்) நிர்ணயிக்கப்பட்ட கிலோ மீட்டரில் 71,971 கி.மீ. இயக்கத்தை போக்குவரத்து குறைவான வார நாட்களான செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் குறைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.</p><p>இந்த நடைமுறைகளால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு</a> வருவாய் அதிகரிக்கப்பட்டு, டீசல் செலவு குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டாலும், 136 புறநகர் பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை.. அரசு விடுதியில் நடந்த பேரதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirls-sexually-harassed-after-being-given-alcoholshocking-incident-at-a-government-hostel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirls-sexually-harassed-after-being-given-alcoholshocking-incident-at-a-government-hostel#comments</comments><guid isPermaLink="false">58b9260c-885d-4d73-9073-a7038ebbf543</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:33:42 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:33:42.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,பாலியல் தொல்லை,Salem,POCSO act,போக்சோ,சேலம்,POCSO,மது,Liquor,அரசு விடுதி,sexual abuse,Govt hostel,அரசு பள்ளி மாணவிகள்,Govt School Students,வாழப்பாடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/o25px02t/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/o25px02t/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வாழப்பாடி, </p><p>அரசு மாணவிகள் விடுதியில் தங்கி படித்த 2 மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் எதிரொலியாக விடுதி பெண் ஊழியர், நண்பருடன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.</p><h2>மது கொடுத்து பாலியல் தொந்தரவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/salem">சேலம் </a>மாவட்டத்தில் சமீபகாலமாக அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வந்தபடி உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி பகுதியில் 14 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 2 மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இந்த பகீர் தகவல் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>அரசு மாணவிகள் விடுதி</h2><p>சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கான விடுதி உள்ளது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.</p><p>இந்த விடுதியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் ராதிகாவும், அதே பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற கார் டிரைவரும் நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ரகுபதி, ராதிகாவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் 2 பேரை ரகுபதிக்கு அறிமுகப்படுத்தியதாக தெரிகிறது.</p><h2>இரவு நேரத்தில்</h2><p>அதன்பிறகு அடிக்கடி ரகுபதியை மாணவிகள் ராதிகாவின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 8-ந் தேதி இரவு மாணவிகள் விடுதி தூய்மை பணியாளர் ராதிகாவிற்கு பீர் பாட்டில் மற்றும் சில்லி சிக்கன் ஆகியவற்றை ரகுபதி கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து இரவு நேரத்தில் ராதிகா அந்த 2 பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.</p><h2>மாணவிகளுக்கு பாலியல் தொல்லை</h2><p>அப்போது அங்கு வந்த ரகுபதி தனது மோட்டார் சைக்கிளில் 2 மாணவிகளையும் தனிமையான இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு 2 மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>மாணவிகளை விடுதிக்கு அழைத்து வருமாறு ராதிகா அழைத்ததன் பேரில் மீண்டும் விடுதிக்கு வந்து அவர்களை ரகுபதி விட்டு சென்றார். இதன் பின்னர் யாரிடமும் இதுகுறித்து மாணவிகள் தெரிவிக்கவில்லை.</p><p>இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி சுதந்திர தின விடுமுறையில் மாணவிகள் அவர்களது வீட்டுக்குச் சென்றிருந்தனர். அப்போது அவர்கள் பெற்றோரிடம் ரகுபதி நடந்து கொண்ட விவரம் குறித்து தெரிவித்தனர். மேலும் பள்ளிக்கு இனி செல்வதில்லை எனக்கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.</p><h2>பெண் ஊழியர் கைது</h2><p>இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் மகளிர் போலீசார் நடத்திய விசாரணை முடிவில் மாணவிகள் விடுதி தூய்மை பணியாளர் ராதிகாவை போக்சோ சட்டத்தில் நேற்று மதியம் கைது செய்தனர்.</p><p>மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக ரகுபதி மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரையும் போலீசார் கைது செய்தனர்.</p><h2><strong>போலீசார் விசாரணை</strong></h2><p>ராதிகாவும், அவரது நண்பர் ரகுபதியும் வேறு மாணவிகள் யாருக்கும் மது கொடுத்துள்ளனரா? வேறு மாணவிகள் யாரும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா? என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு அருகே கவிழ்ந்த அரசு பஸ்; 25 பேர் காயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-near-chengalpattu-25-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-near-chengalpattu-25-injured#comments</comments><guid isPermaLink="false">cdf9e300-6168-48d9-8e6f-34305ca0e621</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:31:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:31:52.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Government bus,Chengalpattu,செங்கல்பட்டு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/6byzo9a8/tnmats.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/6byzo9a8/tnmats.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>செங்கல்பட்டு அருகே அரசு பஸ் கவிழ்ந்த சம்பவத்தில் 25 பேர் காயம் அடைந்தனர்.</p><p>கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.  பஸ்சில் 25-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.  அப்போது, அந்த பஸ் செங்கல்பட்டு அருகே ஜி.எஸ்.டி. சாலையில் வந்தபோது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவத்தில், பஸ்சில் இருந்த பயணிகளில் 25 பேர் காயம் அடைந்தனர்.  இதுபற்றி தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அவர்களை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>முதல்கட்ட விசாரணையில், பஸ்சின் பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.  விபத்து நடந்தவுடன் பஸ்சில் இருந்த இருந்து ஓட்டுநர், நடத்துனர் தப்பியோடி விட்டனர்.  விபத்து தொடர்ச்சியாக, ஜி.எஸ்.டி. சாலையில் 2 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.  செய்தனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நாடு தழுவிய அளவில் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் சரிபார்ப்பு தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nationwide-verification-of-foreign-money-transfers-has-begun</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nationwide-verification-of-foreign-money-transfers-has-begun#comments</comments><guid isPermaLink="false">88de0dac-ebf7-467c-932a-b23fc574363e</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:14:26 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:14:26.766Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Income Tax Department,வருமான வரித்துறை,Money transfer,வெளிநாட்டு பணம்,பணப்பரிமாற்றம்,foreign money</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/67o8u5tq/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/67o8u5tq/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் குறித்து வருமான வரித்துறை நாடு தழுவிய அளவில் சரிபார்ப்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.</p><h2>வருமான வரித்துறை</h2><p>சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் குறித்து வருமான வரித்துறை நாடு தழுவிய விரிவான சரிபார்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் அதிகப்படியான அந்நிய செலாவணியை வெளிநாடுகளுக்கு அனுப்பிய சந்தேகத்திற்குரிய நிறுவனங்களை உளவுத்துறை மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது.</p><p>போலி அறக்கட்டளைகள் மூலம் நிதி பரிமாற்றம் செய்த நிறுவனங்கள், வருமான வரி தாக்கல் செய்யாதவை அல்லது மிகக்குறைந்த வருவாயைக் காட்டி வருமான வரி தாக்கல் செய்பவை என்பது களஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அறிவிக்கப்பட்ட முகவரிகளில் செயல்படவில்லை என்பதும், சரக்கு போக்குவரத்து. மென்பொருள் இறக்குமதி போன்ற பரிமாற்ற காரணங்கள் உண்மையானவை அல்ல என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>சரிபார்ப்பு நடவடிக்கை</h2><p>குறிப்பிட்ட தொழில் வல்லுநர்களால் அதிக எண்ணிக்கையி லான படிவம் 15 சிபி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கவனித்துள்ளது. இந்த சான்றிதழ்களை வழங்கும் கணக்காளர்கள் போதிய விடாமுயற்சி மேற்கொள்ள வில்லை. தற்போது சுமார் 394 நிறுவனங்கள் மற்றும் 36 தொழில் வல்லுநர்கள் மீது இந்த சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.</p><p>நில எல்லை மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களும் இதில் அடங்கும். சான்றிதழ்களை வழங்கும் கணக்காளர்கள், பணப் பரிமாற்றங்களைச் சான்றளிக்கும் முன் உண்மைகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று வருமான வரி கமிஷனர் வி.ரஜிதா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி:  கள்ளக்காதலனை பிரிந்து குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த பெண் தீவைத்து எரித்துக்கொலை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-woman-burned-alive-after-leaving-illicit-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-woman-burned-alive-after-leaving-illicit-lover#comments</comments><guid isPermaLink="false">5db13678-91e6-4e8b-b184-fdb7e5d21da2</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:12:30 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:12:30.289Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Thoothukudi,தூத்துக்குடி,பெண்,Woman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ftzgfsx9/tdonw.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/ftzgfsx9/tdonw.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தூத்துக்குடி</p><p>தூத்துக்குடியில் கள்ளக்காதலனை பிரிந்து குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த பெண் தீவைத்து எரித்துக்கொல்லப்பட்டார்.</p><p>தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தொழிலாளியான இவரது மனைவி குருவலட்சுமி (வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.  அதே பகுதியை சேர்ந்த சின்ன கெங்குராஜ் (வயது 47), குருவலட்சுமியும் பழகி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த சின்ன கெங்குராஜின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.</p> <h2>தீ வைப்பு</h2><p>அதுபோல் குருவலட்சுமியும், தனது கணவரை பிரிந்து சென்றார்.  பின்னர் குருவலட்சுமி, சின்ன கெங்குராஜ் வெளியூரில் வாடகை வீட்டில் வசித்தனர். 2 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், உறவினர்கள் சிலர் குருவலட்சுமியை கண்டித்தனர்.  இதனை தொடர்ந்து குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலனை பிரிந்து மீண்டும் கணவருடன் குருவலட்சுமி சேர்ந்து குடும்பம் நடத்தினார்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், தொடர்ந்து தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி குருவலட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 10-ந்தேதி கணவர், குழந்தைகள் வெளியே சென்றிருந்த நிலையில் குருவலட்சுமியின் வீட்டுக்கு சின்ன கெங்குராஜ் சென்றார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மீண்டும் அவர் கூறினார். அதற்கு மறுத்த குருவலட்சுமியை அவர் அடித்து உதைத்தார். மேலும் ஆத்திரம் தீராத அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை குருவலட்சுமி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றுவிட்டார்.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பசுவந்தனை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சின்ன கெங்குராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.</p><p>இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குருவலட்சுமி பலியானார். இதனையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.  தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>தொழிலதிபரிடம் ரூ.2.17 கோடி மோசடி - தொண்டு நிறுவன நிர்வாகிகள் 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-defrauded-of-217-crore-two-ngo-office-bearers-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-defrauded-of-217-crore-two-ngo-office-bearers-arrested#comments</comments><guid isPermaLink="false">cc1a705b-b3a2-4308-903a-2ac4d3c0d07a</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:59:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:59:52.622Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,வேலூர்,arrest,மோசடி,தொழிலதிபர்,businessman,தொண்டு நிறுவனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/reuxrt2n/275.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/reuxrt2n/275.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர், </p><p>வேலூரில் தொண்டு நிறுவனத்துக்கு வரும் ரூ.100 கோடியில் இருந்து பங்கு தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>தொண்டு நிறுவனம்</h2><p>வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் ஆலிவர் சினியோன் கதிரேஷ் (வயது 60). தொழில்அதிபர். இவரின் நண்பரான வேலூர் புது பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த பெருமாள் (53) என்பவர் கிரீன் சர்க்கிள் பகுதியில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார்.</p><p>இந்த நிறுவனத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் ரூ.100 கோடி நிதி திரட்ட உள்ளதாகவும், இந்த நிதியை திரட்டுவதற்கு முன்பணமாக சில கோடி தேவைப்படுவதாகவும், முன்பணம் கொடுத்தால் அதற்கு ரூ.100 கோடியில் இருந்து பங்கு தருவதாக பெருமாள் மற்றும் வள்ளலாரை சேர்ந்த ஷாஜகான் (48), திருச்சி தெப்பக்குளத்தை சேர்ந்த மனோஜ்குமார் (50) ஆகியோர் கடந்த 2024-ம் ஆண்டு ஆலிவர் சினியோன் கதிரேஷிடம் தெரிவித்தனர். இதனை உண்மை என்று நம்பிய அவர் ரூ.2 கோடியே 17 லட்சத்தை ரொக்கமாகவும், வங்கிகள் மூலமாகவும் அவர்களிடம் கொடுத்தார். </p><p>அதன் பின்னர் சில மாதங்கள் ஆகியும் பெருமாள், ஷாஜகான். மனோஜ்குமார் ஆகியோர் தொண்டு நிறுவனத்துக்கு நிதி பெறவில்லை. மேலும் அதற்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலிவர் சினியோன் கதிரேஷ் இதுபற்றி 3 பேரிடமும் கேட்டபோது விரைவில் தொண்டு நிறுவனத்துக்கு நிதி வந்துவிடும். அதன் பின்னர் பங்கு தருகிறோம் என்று கூறி காலம் கடத்தி வந்துள்ளனர்.</p><h2>புகார்</h2><p>இதுகுறித்து ஆலிவர் சினியோன் கதிரேஷ் கடந்த 14-ந் தேதி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு சிவராமனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி அவர், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு இருதயராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.</p><h2>கைது</h2><p>அதில், பெருமாள், ஷாஜகான், மனோஜ்குமார் ஆகியோர் ஆலிவர் சினியோன் கதிரேஷிடம் இருந்து பெற்ற ரூ.2 கோடியே 17 லட்சத்தை 3 பாகமாக பிரித்து எடுத்துக் கொண்டதும், தொண்டு நிறுவனத்துக்கு வரும் நிதியில் பங்கு தருவதாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடி</a> செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பெருமாள், ஷாஜகான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மனோஜ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சையில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-sector-job-fair-in-thanjavur-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-sector-job-fair-in-thanjavur-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">41f3a04a-8e11-4365-ad0f-b66f9fadbb6d</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:55:58 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:55:58.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சை,வேலைவாய்ப்பு முகாம்,job fair</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/kac8q8ru/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/kac8q8ru/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>வேலைவாய்ப்பு முகாம்</h2><p>தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் நடக்கிறது. முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.</p><p>முகாமில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தஞ்சை </a>மாவட்டதை சேர்ந்த வேலை தேடும் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். முகாமில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். சுய விவர குறிப்பு. கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.</p><p>இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருமா..? பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-assured-pension-scheme-be-implemented-finance-minister-maria-wilson-responds-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-assured-pension-scheme-be-implemented-finance-minister-maria-wilson-responds-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">f7cc9d92-98cd-49fd-830e-e5c337b87ef2</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:55:09 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:55:09.145Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,pension,Old Pension Scheme,ஓய்வூதிய திட்டம்,TN Assembly session,தமிழக சட்டசபை செய்திகள்,அமைச்சர் மரிய வில்சன்,Minister Marie Wilson,MarieWilson,சட்டசபை கூட்டத் தொடர்,tvk govt</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/6ui5enld/pes.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/6ui5enld/pes.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'டாப்ஸ்' என்பது கண்டிப்பாக வரப்போகிற நாட்களில் தயார்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். </p><h2>தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று பொதுப்பணித்துறை உள்ளிட்ட சில துறைகளின் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர் அப்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள், முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழாவே நடத்தினார்கள்.</p><h2>உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்</h2><p>தேர்தல் வந்ததும், த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையில் 25-வது பக்கத்தில், பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்துதல் என்ற தலைப்பில், தி.மு.க. அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துவிட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கேற்ப முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டம் கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்று சொல்லியிருந்தீர்கள்.</p><h2>மூன்று விஷயங்கள்</h2><p>இப்போது அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடருமா? அல்லது பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொடுக்கப்போகிறதா? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டார்.</p><p>அவருக்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அளித்த பதில் வருமாறு:-</p><p>உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (டாப்ஸ்) தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அந்த திட்டம் தொடர்பாக கடந்த தி.மு.க. ஆட்சியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட் டது. அந்தக் குழு, அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தது. அதில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. </p><h2>விஜய் நிறைவேற்றுவார்</h2><p>அந்த மூன்று விஷயங்களையும் தமிழ்நாட்டில் கண்டிப்பாக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> நிறைவேற்றுவார். குழு பரிந்துரை செய்த மூன்று விஷயங்கள் என்னவென்றால், கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் என்ற அடிப்படையில், அது கண்டிப்பாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். </p><p>இரண்டாவதாக, பணிக்கொடை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்கள். அதுவும் இருக்கும். மூன்றாவதாக, குடும்ப ஓய்வூதியம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள். இதில் நாங்கள் தற்போது அதற்கான விதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.</p><h2>நடைமுறைக்கு வரும்</h2><p>அதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டிகள் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது. அதன்படி 'டாப்ஸ்' திட்டம் விரைவாக, கூடிய சீக்கிரத்தில் நடைமுறைக்கு வரும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், 'டாப்ஸ்' என்பது கண்டிப்பாக வரப்போகிற நாட்களில் தயார்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
திருவண்ணாமலை கோவிலுக்குள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-carrying-mobile-phones-inside-the-tiruvannamalai-temple-starting-september-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-carrying-mobile-phones-inside-the-tiruvannamalai-temple-starting-september-1st#comments</comments><guid isPermaLink="false">7c0af9cb-f5c5-41ec-8fbf-db1f011234fa</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:41:37 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:41:37.864Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,செல்போன்கள்,செல்போன்களுக்கு தடை,திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்,Thiruvannamalai Arunaseleswarar Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8ujqowvp/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8ujqowvp/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. </p>  <h2>இணை ஆணையர் தகவல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/tiruvannamalai-temple">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்</a> இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் செல்போன் எடுத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். </p>  <h2>5 இடங்களில் செல்போன் பாதுகாப்பு மையம்</h2><p>மேலும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல ஏதுவாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகில் 2 இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் 2 இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்."</p>  <h2>போலீசாரின் மூலம் நடவடிக்கை</h2><p>மேலும், "இந்த உத்தரவினை மீறி கோவிலுக்குள் மறைமுகமாக எடுத்துச் செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள் என்னென்ன...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-proceedings-in-the-legislative-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-proceedings-in-the-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">2832a192-45d2-431a-9571-afff793b421e</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:38:00.899Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,Water Resources Department,நீர்வளத்துறை,tourist,சுற்றுலாத்துறை,மானிய கோரிக்கை,Grant request</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4k64zj1w/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/4k64zj1w/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>இந்த விவா தத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச இருக்கிறார்கள். அதன்பின்னர், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த், சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் பேசுகின்றனர். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு அருகே நடுரோட்டில் ஹாயாக படுத்திருந்த சிறுத்தைப்புலி - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-lies-casually-in-the-middle-of-the-road-near-erode-motorists-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-lies-casually-in-the-middle-of-the-road-near-erode-motorists-shocked#comments</comments><guid isPermaLink="false">adc3fb56-8cdf-469d-bd6c-2b54b57ab823</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:33:17 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:33:17.136Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>road,வாகன ஓட்டிகள்,Erode,ஈரோடு,சிறுத்தை,A leopard</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8h9htni0/274.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுத்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/8h9htni0/274.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாளவாடி, </p><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைப்புலிகள் காணப்படுகின்றன. சத்தியமங்க லம் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இரவு நேரங்களில் சிறுத்தைப்புலிகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து திம்பம் மலைப்பாதையில் சுற்றுகின்றன.</p><h2>சிறுத்தைப்புலி</h2><p>இதுபோல் வனவிலங்குகள் அடிக்கடி இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதைக்கு வந்துவிடுவதால், அதன் பாதுகாப்பு கருதி திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் செல்ல கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மற்றும் காய்கறி ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் நேற்று அதிகாலை திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் சிறுத்தைப்புலி ஒன்று 'ஹாயாக’ படுத்திருந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்.</p><h2>வனத்துறை</h2><p>சிலர் வாகனங்களில் இருந்தபடியே செல்போனில் வீடியோ எடுத்தனர். சுமார் 10 நிமிடம் படுத்திருந்த சிறுத்தைப்புலி பின்னர் காட்டுக்குள் ஓடிவிட்டது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">சிறுத்தைப்புலி </a>நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டென மாறும் வானிலை.. எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..? வானிலை அலர்ட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/rapidly-changing-weather-which-districts-are-likely-to-see-heavy-rain-today-weather-alert</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rapidly-changing-weather-which-districts-are-likely-to-see-heavy-rain-today-weather-alert#comments</comments><guid isPermaLink="false">f43aaea1-21c2-48fe-b6a8-2a4962189e91</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:23:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:23:13.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,TN Rains,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/2nddpmwd/tools.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-19/2nddpmwd/tools.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (19-08-2026):</strong> செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p><strong>நாளை (20-08-2026):</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>21-08-2026 மற்றும் 22-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>23-08-2026 மற்றும் 24-08-2026:</strong> வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை ஏனைய மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (19-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>19-08-2026 முதல் 22-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item></channel></rss>