<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 17 Aug 2026 05:28:40 +0000</lastBuildDate><item><title>தவெக அரசு கடந்து வந்த 100 நாட்கள்..! - வெற்றி பயணமா..?, வெற்று பயணமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-governments-first-100-days-a-journey-to-success-or-an-empty-journey</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-governments-first-100-days-a-journey-to-success-or-an-empty-journey#comments</comments><guid isPermaLink="false">7c0b1514-e1de-43fb-82c6-61fc5f7a6425</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:12:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:12:30.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government,Tamil Nadu Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iyz837is/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iyz837is/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று நாளையுடன் (ஆகஸ்டு 17) 100 நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்கள் கடந்து வந்த பாதை வெற்றிப் பயணமாக அமைந்ததா?, வெற்றுப் பயணமாக இருந்ததா? என்பது தொடர்பான அலசல் இது.</p><h2>திராவிட கட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட த.வெ.க.</h2><p>தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகளே மாறி.. மாறி.. ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தன. இருபெரும் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு, அரசியலில் 2½ வயது குழந்தையான த.வெ.க. முட்டுக்கட்டை போட்டது.</p><p>கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய், மே மாதம் 10-ந் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் அன்றைய தினம் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். தொடர்ந்து, மே 21-ந் தேதி நடைபெற்ற 2-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், மே 22-ந் தேதி நடைபெற்ற 3-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/v7cqro4y/Untitled-7.jpg" /></figure><h2>த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி?</h2><p>இந்த நிலையில், தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று நாளையுடன் (திங்கட்கிழமை) 100 நாட்கள் ஆகிறது. பதவியேற்ற அந்த நாள் (மே 10) முதல் இந்த நாள் (100-வது நாள்) வரை த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி? என்பதை பற்றி தொடர்ந்து பார்க்கப்போகிறோம்.</p><p>முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற மே 10-ந் தேதி 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். "2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். </p><p>பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க, 65 போதைப்பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்படும்" என்பவைதான் அவை. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/rh7fapx2/CHENNAI-01.jpg" /></figure><h2>717 டாஸ்மாக் கடைகள் அடைப்பு</h2><p>அதன்பிறகு, குறுகிய நாட்கள் இடைவெளியில், புதிய புதிய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே செயல்பட்ட 717 டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதன் மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்ந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/8i4w66wl/Untitled-1.jpg" /></figure><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>அதன்பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைத்து சுவையுடன் கூடிய தரமான உணவுகளை விநியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். தொடர்ந்து, குறு விவசாயிகள் வாங்கிய ரூ.50 ஆயிரம் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அவர் உத்தரவிட்டார். </p><p>அதன்பிறகு, மே 27-ந் தேதி டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை, தமிழக மீனவர் பிரச்சினை உள்பட 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/uui6m36p/Untitled-5.jpg" /></figure><h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்</h2><p>ஜூன் 9-ந் தேதி குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். அதன்பிறகு, அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அறிவித்தார். </p><p>தொடர்ந்து, கடந்த 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், "திருமணமாகும் பெண்களுக்கு திருமண நாளில் அண்ணனின் சீர் என்ற திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும். குடிசை வீடுகளுக்கு பதிலாக 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். பிளஸ்-1 மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும். அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்படும்" என்பது உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2gu3pidi/Untitled-2.jpg" /></figure><h2>பட்ஜெட்டில் 125 வாக்குறுதிகள் </h2><p>பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், "த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் 125 பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது" என்றார். </p><p>இதற்கு மத்தியில், சத்தம் இல்லாமல் ஒரு சாதனையை தமிழக தொழில் துறை செய்துள்ளது. அதாவது, 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேர் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2o8pgrn4/Untitled-5.jpg" /></figure><h2>தொழில் முதலீடுகள் ஈர்ப்பு</h2><p>குறிப்பாக, கடந்த 13-ந் தேதி நடைபெற்ற, வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் போடப்பட்ட 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க உள்ளன.  அதுவும், தொழில் முதலீடுகள் அனைத்தும் ஒரே பகுதியில் குவிந்துவிடாமல், 23 மாவட்டங்களுக்கு பரவலாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக தொழில் நிறுவனம் அமைய இருக்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/jqvcqxem/Untitled-7.jpg" /></figure><h2>முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்</h2><p>இப்படி, சத்தம் இல்லாமல் தொழில் புரட்சியை த.வெ.க. அரசு ஏற்படுத்தினாலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, மின் தடை பிரச்சினை, குப்பைகள் சரியாக அகற்றப்படாதது உள்ளிட்டவை புதிய அரசின் மீது குற்றச்சாட்டுகளாக வைக்கப்படுகின்றன. </p><p>கடந்த கால ஆட்சிகளில், தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால், அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். அல்லது அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். ஆனால், இப்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகள் எதிர்க்கட்சிகளாக உள்ளன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/39xmkibq/Untitled-4.jpg" /></figure><h2>100 நாள் ஆட்சி எப்படி?</h2><p>இதனால், சட்டசபையில் இரு எதிர் கட்சிகளின் கேள்விக் கணைகளை த.வெ.க. அமைச்சர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. எதிரில் இருப்பவர்கள் சட்டசபை அனுபவத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றாலும், ஆளும் தரப்பினரும் அதைவொரு சவாலாக ஏற்று சமாளித்து வருகின்றனர். </p><p>மொத்தத்தில், கடந்த 100 நாள் த.வெ.க. ஆட்சி, ஊழலுக்கு எதிராக தனது பார்வையை கழுகுப்பார்வையாக அதிகரித்துள்ளதுடன், ஒவ்வொரு தடைகளையும் தாண்டி வெற்றி பெற்று வருவதாகவே தெரிகிறது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5i4uk29j/Untitled-7.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் பழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது..? - சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/under-which-administration-did-drug-abuse-increase-heated-debate-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/under-which-administration-did-drug-abuse-increase-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">20d4bcd6-2d62-4d75-b109-2e073e78f145</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:24:43 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:24:43.406Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,தவெக,அதிமுக,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,ஆதவ் அர்ஜுனா,சட்டசபை,drugs,போதைப்பொருள்,TN Assembly,CTR Nirmal kumar,நிர்மல் குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/yy4rwx1d/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/yy4rwx1d/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை இன்று மீண்டும் தொடங்கியது. இன்று முதல் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>முன்னதாக சட்டசபையில், கோவையில் மாணவர் அமுதன் கொலை வழக்கு, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விவாதம் நடத்த திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.</p><h2><strong>உதயநிதி ஸ்டாலின்</strong></h2><p><strong>இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,</strong> கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். 20 பேர் சேர்ந்து ஒரு மாணவரை அடித்துக் கொன்றுள்ளனர். அமுதன் கொலை கோஷ்டி மோதல் அல்ல. போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் தெரிவித்த‌தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>கோவை மாணவன் அமுதன் கொலையை தனிப்பட்ட சம்பவமாகவோ, கோஷ்டி பூசலாகவோ கடந்து போய்விட முடியாது. அரசின் அலட்சியத்தால், காவல்துறையின் பொறுப்பற்ற போக்கு தான் கொலைக்கு காரணம் என்பது தான் குற்றச்சாட்டு. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விவாதம் தேவை என்றும் எண்ணூர் ஆற்றில் மீன்கள் கொத்து கொத்தாக இறந்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது இது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.</p><p><strong>அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் பேசுகையில்,</strong> “20 பேர் கொண்ட கும்பலால் அமுதன் அடித்து கொலை. கோவை மாணவர் கொலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. உரிய நடவடிக்கை தேவை. ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். ஒருவரை 25 பேர் அடித்துக் கொல்வது எப்படி கோஷ்டி மோதலாகும்?. பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் புழக்கத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.</p><p><strong>பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசுகையில்,</strong> “கோவை மாணவர்கள் கொலை வழக்கில் காவல்துறை விளக்கம் ஏற்புடையதல்ல. கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வது வேதனை. பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் எளிதாக கிடைக்கிறது. கடந்த ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோ, இந்த ஆட்சியிலும் போதை பொருள் புழக்கமும், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும் இன்றும் நடைப்பெற்று கொண்டிருக்கிறது</p><p>இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க அரசு வெளிப்படைத்தன்மையுடன் விராசணை நடத்த வேண்டும்; அமுதன் மற்றும் தனுஷ் கொலை குறித்து ஓய்வுப்பெற்ற ஸ்ரீதியரசர் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறினார்.</p><p><strong>சிபிஎம் எம்.எல்.ஏ செல்லசுவாமி பேசுகையில்,</strong> “கோவையில் கடந்த 10 நாட்களில் 3 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்றால் காவல்துறையில் களை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.</p><h2>திசை திருப்ப வேண்டாம்</h2><p><strong>இதையடுத்து கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்து கூறியதாவது:-</strong></p><p>மாணவர் கொலை வழக்கு போதைப் பொருள் புகார் தொடர்பானது இல்லை; உண்மை நிலவரத்திற்கு மாறாக வழக்கை திசை திருப்ப வேண்டாம். எதிர்க்கட்சிகள் கூறியது போல எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது. கோவை மாணவர் கொலையில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>உண்மையை மறைக்க வேண்டிய தேவை காவல்துறைக்கோ, அரசுக்கோ இல்லை. போதைப்பொருள் குறித்து புகார் அளித்ததால் கொலை என்பது தவறு. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>எந்த சம்பவமும் நடைபெறாமல்</h2><p><strong>தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:-</strong></p><p>பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எங்கள் குழந்தைகள். நேர்மையான முறையில் விசாரணை நடத்த முதல்-அமைச்ச விஜய் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தில் அரசு பங்கெடுக்கிறது. மாணவர்கள் கொலை தொடர்பாக உரிய விசாரணை நடக்கிறது. கோவை மாணவர் கொலை வழக்கில் நீதி நிலைநாட்டப்படும். கல்வி நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.</p><p>மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை. மாணவர் தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும். தவெக அரசை பொறுத்தவரை நீதி நிலைநாட்டப்பட வேண்டும்; இனி இது போல எந்த சம்பவமும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம் என்று கூறினார்.</p><h2>காரசார விவாதம்</h2><p>தொடர்ந்து போதை பொருள் மன்னன் ஜாபர் சாதிக்குடன் திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டினார். </p><p>இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “ஜாபர் சாதிக் மீதான குற்றச்சாட்டு வந்த போது, அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால் உங்கள் அமைச்சர் ஒருவர் மைதானத்தில் பவுடர் வைத்திருந்தார். அதை உலகமே பார்த்திருக்கிறது. அது பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.</p><p>இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் கூறுகையில், ஸ்டேடியத்தில் நடந்ததற்கான விளக்கத்தை நான் அளித்துவிட்டேன். அதில் முரண்பாடு இருந்தால், அந்த நிகழ்வு நடந்தது திமுக ஆட்சியில் தான். அப்போது ஸ்டேடியத்தில் போதை பொருளை அவர்கள் அனுமதித்தார்களா? விளக்கம் அளித்த பின் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்.</p><p>என் மீது கூறப்படும் புகார் நடைபெற்றது திமுக ஆட்சி காலத்தில் அப்படியானால் திமுக ஆட்சி காலத்தில் போதை பொருள் விற்றதை ஒப்புக் கொள்கிறீர்களா? என்று கூறினார். இவ்வாறு தமிழக சட்டசபையில் தொடக்கத்திலேயே காரசார விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>திமுக ஆட்சியில் போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-drug-abuse-and-sexual-violence-under-dmk-rule-aadav-arjunas-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-drug-abuse-and-sexual-violence-under-dmk-rule-aadav-arjunas-allegation#comments</comments><guid isPermaLink="false">9ba65843-e1fc-4719-b2a9-00a19fb69dc8</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:15:08 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:15:08.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>drug eradication,போதைப்பொருள் ஒழிப்பு,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vzyzbag1/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vzyzbag1/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது;</p><p>கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இல்லை. போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கிறது. திமுக ஆட்சியில் போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை அதிகரித்தது. திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் காவல்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் பேசுகிறேன். தவெகவின் அறிக்கை அல்ல. </p> <p>போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாகத்தால் திமுகவை மக்கள் தூக்கி எரிந்துள்ளனர். தவெக ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர் கொலை வழக்கில் காவல்துறையின் அறிக்கையா? அல்லது இறந்தவர்களின் தாயா? என்றால், எங்கள் முதல்வர் அந்த தாயின் பக்கம் தான் இருப்பார். எந்த அழுத்தத்திற்கும் இடம் தரமாட்டோம்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் - சட்டப்பேரவையில் உதயநிதி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/numerous-murders-in-tamil-nadu-over-the-past-week-udhayanidhi-speaks-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/numerous-murders-in-tamil-nadu-over-the-past-week-udhayanidhi-speaks-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">d704568e-49a5-454f-a113-cc02ed9c1bb0</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:53:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:53:20.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,போதைப்பொருள்,drug case</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/fe337s76/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/fe337s76/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கோவை மாணவர் கொலை தொடர்பான சிறப்பு கவன தீர்மானத்தின்போது எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;</p><p>”கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். 20 பேர் சேர்ந்து ஒரு மாணவரை அடித்துக் கொன்றுள்ளனர். அமுதன் கொலை கோஷ்டி மோதல் அல்ல. போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் தெரிவித்த‌தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 30 பேர் கும்பலால் மாணவர் தனுஷ் அடித்து கொலை. காஞ்சிபுரத்தில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை. போதை கும்பலை தட்டிக் கேட்ட‌தால் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். </p><p>கோவை மாணவன் அமுதன் கொலையை தனிப்பட்ட சம்பவமாகவோ, கோஷ்டி பூசலாகவோ கடந்து போய்விட முடியாது. அரசின் அலட்சியத்தால், காவல்துறையின் பொறுப்பற்ற போக்கு தான் கொலைக்கு காரணம் என்பது தான் குற்றச்சாட்டு. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” </p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>   ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு லுக் அவுட் நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-case-lookout-notice-issued-for-ips-officers-brother</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-case-lookout-notice-issued-for-ips-officers-brother#comments</comments><guid isPermaLink="false">dc9063d6-92ea-48dc-b75e-3e162542042a</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:49:39 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:49:39.274Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>IPS Officer,லுக் அவுட் நோட்டீஸ்,Look Out Notice,ஐ.பி.எஸ் அதிகாரிகள்,டாஸ்மாக் வழக்கு,TASMAC Case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/j08h17jl/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/j08h17jl/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p>டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.</p><p>செந்தில்பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன், முன்னாள் அதிகாரிகள் டி.ராமதுரை முருகன், ஆர்.பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரரான ரத்தேஷ் ராஜ், சண்முகவேல், எஸ்.கார்த்திக் (எ) முலனூர் கார்த்திக் ஆகிய 7 பேர் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. </p><h2>லுக் அவுட் நோட்டீஸ்</h2><p>ரத்தேஷ் ராஜ், டாஸ்மாக் நிர்வாகத்தில் அங்கீகரிக்கப்படாத இடைத்தரகராக செயல்பட்டு, மதுபான பிராண்ட் அனுமதி, பார் உரிமங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள், அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்டவற்றில் செல்வாக்கு செலுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரியின் சகோதரர் ரத்தேஷ் ராஜூவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தலைமறைவாக ரத்தேஷ் ராஜூவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர் வேறு நாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்கவும், இந்தியா வந்தால் கைது செய்யவும், 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கி உள்ளனர். இந்த வழக்கில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒரு தேர்வைக்கூட முறையாக நடத்த முடியாத மோடி அரசு: மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-cannot-even-conduct-a-single-election-properly-manickam-thakur-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-cannot-even-conduct-a-single-election-properly-manickam-thakur-criticizes#comments</comments><guid isPermaLink="false">bbd916ce-610f-473e-8574-919429172207</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:49:13 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:49:13.405Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi government,மோடி அரசு,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/7kj86tfd/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/7kj86tfd/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை.</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>NTA குளறுபடி செய்யும், NDA வேடிக்கை பார்க்கும் - இடையில் சிதைவது மாணவர்களின் எதிர்காலம் மட்டுமே!</p><h2>நிர்வாகச் சீர்கேடு</h2><p>87 பாடப்பிரிவுகளில் அல்லும் பகலும் படித்து, தங்கள் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் முழுமையாக வெளிப்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்; ஆனால், ஒன்றிய மோடி அரசின் நிர்வாகச் சீர்கேடும் தோல்வியடைந்த அமைப்பும் நாட்டின் லட்சக்கணக்கான இளம் மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையுமே பாழாக்கியுள்ளது.</p><p>‘Exam Warriors’ என்று கவர்ச்சிகரமான வார்த்தைகளில் வாழ்த்துச் சொல்லும் நரேந்திர மோடி அவர்களே, மாணவர்கள் நிஜ வாழ்க்கையில் உங்கள் NTA-வின் குளறுபடிகளோடும்தான் போராட வேண்டுமா? </p><p>தவறுகள் முழுமையாக NTA பக்கம் இருக்கும்போது, அமைப்பின் தோல்விகளுக்குத் துளியும் பொறுப்பேற்காமல் மத்திய அரசு தட்டிக்கழிப்பதும், அதற்கான அலைச்சலையும் மன உளைச்சலையும் அப்பாவி மாணவர்கள் மட்டுமே சுமப்பதும் என்ன நியாயம்?</p><h2>தொடர் நிர்வாகத் தோல்வி</h2><p>அடிப்படை முறைகேடுகளும் குளறுபடிகளும் தர்மேந்திர பிரதான் கல்வி மந்திரியாக இருந்த காலத்திலேயே அரங்கேறின; மாணவர்களின் தொடர் போராட்டங்களாலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் அழுத்தத்தாலும் அவர் பதவி விலகிய பின்னரும்கூட, நாடாளுமன்றத்தில் கொண்டாடிப் பாராட்டியது இதே பாஜக அரசுதான். இப்போது கல்வித்துறையைப் பொறுப்பேற்றுள்ள பிரகலாத் ஜோஷி அவர்களே, அவருக்கும் மேலாக நீங்களும் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்; இந்தத் தொடர் நிர்வாகத் தோல்விக்கு நீங்களும் முழுப் பொறுப்பாளி.</p><p>தொழில்நுட்பம் கோலோச்சும் இந்த டிஜிட்டல் யுகத்திலும், ஒரு தேர்வைக்கூடச் சரியாக நடத்த முடியாத மோடி அரசின் அலட்சியத்தால் மாணவர்களின் வாழ்க்கை நடுத்தெருவில் நிற்கிறது! நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல, மாணவர்களுக்கு இந்த NTA என்பது ‘National Testing Agency’ அல்ல, முழுமையாக நம்பகத்தன்மையை இழந்த "No Trust Agency" - 0! உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு அப்பாவி மாணவர்களை இன்னும் எத்தனை காலம் பலிகடா ஆக்கப் போகிறீர்கள்? </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருமாவளவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-rajinikanth-birthday-wishes-to-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-rajinikanth-birthday-wishes-to-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">6b9224c4-ce20-4405-8fde-b256ef12ee42</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:31:45 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:31:45.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,திருமாவளவன்,Thirumavalavan,நடிகர் ரஜினிகாந்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/x5281cr1/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/x5281cr1/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், திருமாவளவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். <strong>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,</strong></p><p>தனது 28-ம் வயதில் கட்சி ஆரம்பித்து, 36 ஆண்டுகள் கட்சியை கட்டி காப்பாத்தி, தன்னுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும், விட்டு கொடுக்காமல், ஒரு தொண்டனையும் இழக்காமல், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென்று ஓயாமல் போராடி, அதையும் சாதித்தவர் என்னுடைய அருமை நண்பர் தொல்.திருமாவளவன்.</p><p>65-ஆவது வயதில் நுழையும் இந்த தருணத்தில் அவர் பெரும் பேறும் புகழும் பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து, மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ரூ.500 கோடியில் நீர்நிலைகள் புனரமைப்பு; அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-anand-inaugurated-the-reconstruction-of-water-bodies-in-tamil-nadu-at-a-cost-of-rs-500-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-anand-inaugurated-the-reconstruction-of-water-bodies-in-tamil-nadu-at-a-cost-of-rs-500-crore#comments</comments><guid isPermaLink="false">6a563163-0a9c-4067-b2fc-c4d4aa680301</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:18:07 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:18:07.025Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,Water bodies,நீர்நிலைகள்,reconstruction,புனரமைப்பு பணி,In Tamil Nadu,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/67kue14g/118.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/67kue14g/118.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>அமைச்சர் ஆனந்த் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்புப் பணிகளை செங்கல்பட்டில்தொடங்கி வைத்தார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (17.08.2026) திங்கட்கிழமை, வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-GRAMG) கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள், ரூ.500 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.</p><p>மழைநீரை முறையாக சேமித்து, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு நீர்வளத்தை பாதுகாக்கவும் இப்புனரமைப்புப் பணிகள் முக்கிய பங்காற்றும்.</p><h2>அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார்</h2><p>இதன் ஒரு பகுதியாக, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/minister-anand">அமைச்சர் ஆனந்த்</a>, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள புத்தூர் கிராம ஏரி வரத்துக் கால்வாயில் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்தார்.</p><p>தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் நீர்நிலைகளை பாதுகாத்து, நீர்வளத்தை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.</p><p>இந்நிகழ்வில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் டி.சரத்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், ஐ.ஏ.எஸ்.,  செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தியாகராஜன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ் , ஊராட்சித் துறை ஆணையர் வி.அமுதவல்லி, ஐ.ஏ.எஸ்.,அவர்கள் மற்றும் துறை சார்ந்த பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நீர் பிடிப்பு பகுதியில் மழை: அமராவதி அணையின் நீர் மட்டம் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-in-the-catchment-area-water-level-of-amaravathi-dam-rises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-in-the-catchment-area-water-level-of-amaravathi-dam-rises#comments</comments><guid isPermaLink="false">3c007aa3-9ffb-4ec1-b405-d9e0cb0905fe</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:15:12 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:15:12.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,அமராவதி அணை,amaravathi dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/fztobe3t/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/fztobe3t/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை உள்ளது. அணைக்கு கேரளம் மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, பாம்பாறு, தேனாறு உள்ளிட்ட பிரதான ஆறுகள் மற்றும் சிற்றோடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக் கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில், நடப்பு ஆண்டில் எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. இதனால் அணை குறைந்தபட்ச நீர் இருப்புக்கே தள்ளாடி வந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி அணையின் நீர் பிடிப்பு பகுதியான கேரள வனப்பகுதியில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த 29-ந் தேதி முதல் தூவானம் அருவி வழியாக, அணைக்கு நீர்வரத்து ஏற்பட தொடங்கியது. இதனால் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது.</p><h2>நீர் மட்டம் உயர்வு</h2><p>அதன்படி, கடந்த 29-ந் தேதி முதல் நேற்று வரை 19 நாட்களில் அணையின் நீர்மட்டம் 26.97 அடி உயர்ந்து 55 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு தினமும் 600 கன அடிக்கும் மேலாக தொடர்ந்து நீர்வரத்து வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் அணை யில் 88 அடிக்கு தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. </p><p>காலை 6 மணி நிலவரப்படி, அணையின் நீர் மட்டம் 55.51 அடியாக உள்ளது. வினாடிக்கு 651 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. இதனால் அணையில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர் வரத்திற்கு தகுந்தவாறு நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், இருக்கின்ற தண்ணீரை வைத்து நாற்றங்கால் அமைத்து சாகுபடி பணியை தொடங்கினால் பருவமழை தீவிரமடையும் போது தண்ணீர் வீணாகாமல் வயல்வெளிகளை வந்தடையும். அப்போது, மகசூல் முழுமையாக கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>விசிக மாநாடு: உளுந்தூர்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-conference-holiday-for-schools-and-colleges-in-ulundurpet-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-conference-holiday-for-schools-and-colleges-in-ulundurpet-today#comments</comments><guid isPermaLink="false">282cbb6e-1e27-45e0-a7eb-17434f79fafc</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:07:54 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:07:54.128Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,பள்ளிகளுக்கு விடுமுறை,விசிக,VCK,உளுந்தூர்பேட்டை,Ulundurpet,school holiday</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/q5at3s3s/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/q5at3s3s/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ராதாகிருஷ்ணன் நகரில் இன்று (திங்கட்கிழமை) மதியம் 2.15 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து மாநாட்டில் தீர்மானங்கள் வாசிக்கப்பட உள்ளன. இதையடுத்து 4 முன்னணி தலைவர்களின் உரை, இடம் பெறுகிறது. பின்னர் 3.30 மணி முதல் 4.30 மணி வரை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேரூரை ஆற்றுகிறார்.</p><p>திருமாவளவன் தொண்டர்களை சந்திப்பதற்காக 'ரேம்ப் வாக்' செல்லும் வகையில் சுமார் 700 அடி நீள நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா உள் ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அலங்கார வளைவுகள், கட்சி கொடிகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உளுந்தூர்பேட்டை பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.</p><p>இந்த நிலையில், விசிக மாநாட்டையொட்டி மாணவர்கள் நலன், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு உளுந்தூர்பேட்டை நகரத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பத்மஜா உத்தரவிட்டுள்ளார். வி.சி.க. மாநாட்டுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் சர்ச்சையை கிளப்பி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் நவீன பெட்டிகளுடன் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chendur-express-begins-operations-with-modern-coaches-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chendur-express-begins-operations-with-modern-coaches-starting-today#comments</comments><guid isPermaLink="false">f75c77ed-6eb1-48aa-968e-2af1a4f695da</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:04:45 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:04:45.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,Rail service,செந்தூர் எக்ஸ்பிரஸ்,chendur Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/oygy48s9/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/oygy48s9/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருச்செந்தூர்- சென்னை இடையே இருமர்க்கத்திலும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து (வண்டி எண் 20605) மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து (20606) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.25 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது. </p><p>நெல்லை-திருச்செந்தூர் இடையிலான தண்டவாளம் மின்சார வழித்தடமாக மாற்றியதால் மின்சார ரெயில் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ரெயில் நிலையங்களில் பிளாட்பாரங்கள் நீட்டிப்பு காரணமாக பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.</p><h2>நவீன பெட்டிகள்</h2><p>இந்த நிலையில் இந்த ரெயிலுக்கு நவீன எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னை- திருச்செந்தூர் ரெயிலில் நவீன பெட்டிகள் இணைக்கப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் இந்த நவீன பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்படுகிறது.</p><p>இதுவரை இந்த ரெயில் பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 23 பழைய பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இனி மேல் 21 நவீன பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. அதாவது 1 முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி, 3 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 2 இரண்டடுக்கு ஏ.சி. பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளி பெட்டி, 1 ஜெனரேட்டர் பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.</p><h2>பயண நேரம் குறையும்</h2><p>எல்.எச்.பி. பெட்டிகள் எடை குறைந்த, இலகு ரக, அதே நேரத்தில் உறுதியாகவும் அதிவேகமாகவும் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது சென்னை எழும்பூர் -திருச்செந்தூர் இடையே 775 கிலோ மீட்டர் தூரத்தை (தஞ்சாவூர் வழி-மெயின் லைன்) கடந்து செல்ல 14 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதற்கான வேகம் மணிக்கு 90 கிலோ மீட்டர் வரை அனுமதிக்கப்பட்ட போதிலும் சராசரியாக 55.35 கிலோ மீட்டர் வேகம் தான் இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இனிமேல் இந்த ரெயிலுக்கான வேகம் 110 கிலோ மீட்டருக்கு அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் குறையும் என்று தெரிகிறது.</p><h2>பயணிகள் கோரிக்கை</h2><p>அதே நேரத்தில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 11-ல் இருந்து 9 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் எண்ணிக்கை இதில் 72 வரை குறையும் என்று தெரிகிறது. எனவே பழைய எண்ணிக்கையில் பயணிகளை அழைத்துச்செல்லும் வகையில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கூடுதல் பெட்டி இணைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>திருமாவளவன் பிறந்தநாள்; முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumavalavans-birthday-chief-minister-vijay-wishes-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumavalavans-birthday-chief-minister-vijay-wishes-him#comments</comments><guid isPermaLink="false">4f4246f1-6612-453c-85ca-0c7c5cdbf612</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:49:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:49:16.540Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>birthday,வாழ்த்து,பிறந்தநாள்,திருமாவளவன் எம்.பி,Thirumavalavan MP,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/b41b5hft/117.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/b41b5hft/117.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு தமிழக முதல் அமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>திருமாவளவன் பிறந்தநாள்</h2><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் <a href="https://www.dailythanthi.com/topic/tholthirumavalavan-mp">தொல்.திருமாவளவன்</a> அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!</p><h2>முதல் அமைச்சர் விஜய் வாழ்த்து</h2><p>சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும். தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறை ஆள்சேர்ப்பு தள்ளிவைப்பு; போலீசாருக்கு வார விடுமுறை விடுவதில் சிக்கல் - அதிகரிக்கும் பணிச்சுமை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-postponed-difficulties-in-granting-weekly-offs-to-police-personnel-workload-increases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-postponed-difficulties-in-granting-weekly-offs-to-police-personnel-workload-increases#comments</comments><guid isPermaLink="false">4d3d4018-f1fc-47ad-90fd-3c4bd7efcfcc</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:40:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:40:16.124Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,police,காவல்துறை,Holiday,வார விடுமுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/yo4kisvu/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/yo4kisvu/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காவல்துறையில் ஆள் பற்றாக்குறை காரணமாக போலீசாருக்கு வார விடுமுறை தருவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது, ‘காவல் துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களுக்கு, வார விடுமுறை தரப்படும்’ என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. </p><p>அந்த அரசாணையின்படி போலீசாருக்கு, சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில், வார விடுமுறை தரப்பட்டு வந்தாலும், மாவட்டங்களில், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, போலீசாருக்கு வார விடுமுறை தருவது, முடியாத காரியமாகிவிட்டது.</p> <p>இது தொடர்பாக, கடந்த ஆண்டு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் காவலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, 'போதிய எண்ணிக்கையில் காவலர்கள் இல்லாததால், அரசாணையை நடைமுறைப்படுத்த முடியவில்லை' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>அப்போது, 'இந்த நடைமுறை சிக்கலை அரசாணை பிறப்பிக்கும் முன் யோசித்து இருக்க வேண்டும்' என்று தெரிவித்த நீதிமன்றம், போலீசாருக்கு வார விடுமுறை தராததால், அவர்களின் குடும்பத்தாரும் பாதிக்கப்படுவதால், அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. </p><p>தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், போலீசாருக்கு வார விடுமுறை தருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “காவல்துறையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதனால், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் எஸ்.ஐ.,க்கள் வரை, 65,000 பேர் மட்டுமே, பணிபுரிந்து வருகின்றனர்.</p><p>காவல்துறைக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்வதை, அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனால், எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துவிட்டது. பல மாவட்டங்களில், போலீசாருக்கான வார விடுமுறை நிறுத்தப்பட்டு விட்டது” என்று தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ் தேசிய எழுச்சி மாநாடு: திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constructive-discussion-chief-minister-vijays-letter-to-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constructive-discussion-chief-minister-vijays-letter-to-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">ab3cb12b-dad0-4b05-81f3-5835452a832a</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:35:09 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:35:09.591Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திருமாவளவன்,Thirumavalavan,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/4tod88j0/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/4tod88j0/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பிறந்தநாள் மற்றும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு உளுந்தூர்பேட்டையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.</p><p><strong>இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>'தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு" வெற்றிகரமாக நடைபெற எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். "திராவிடமும் தமிழ்த் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள்" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை விளக்க மாநாட்டிலேயே அறிவித்தோம். எங்கள் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை உருவாக்க "பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.</p><p>மேலும், பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையே தமிழகத்தின் உறுதியான மொழிக் கொள்கை என்று அறிவித்துள்ளோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. உரிமைகளுக்காக உண்ணாவிரதப் தமிழக மீனவர்களின் போராட்டத்தையும் நடத்தியுள்ளோம். கச்சத்தீவை இடைக்காலத் தீர்வாகக் குத்தகை அடிப்படையில் இந்தியா கேட்டுப் பெற வேண்டும் என்றும் கழகம் அன்றே வலியுறுத்தியுள்ளது.</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ 2026 தேர்தல் ஆவணத்தில் "தமிழ் அடையாளம்" தனி அத்தியாயமாக இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழி, கலாசாரம். வரலாறு ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்துதல், தமிழ் மொழியின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், இலங்கைத் தமிழர்களின் உரிமையும் தனித்த முக்கியத்துவத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை சர்வதேச அளவில் தொடர்ந்து வலியுறுத்துதல். அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குதல் உள்ளிட்ட நிலைப்பாடுகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு, தமிழ்த் தேசியச் சிந்தனைக் களத்தில் எங்களது அரசியல் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இந்நிலையில், தாங்கள் முன்னெடுத்து வரும் இந்த 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு" எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.</p><p>தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர் உரிமைகளின் அவசியத்தையும், தமிழ்த் தேசியத்தின் தேவையையும் உண்மைத்தன்மையுடன் உலகிற்கு எடுத்துரைத்து வரும் தங்களது முயற்சி பாராட்டுக்குரியது. மேலும், இம்மாநாடு தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்த ஆழமான சிந்தனைகள். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் புதிய கொள்கை நோக்கங்கள் உருவாகும் ஒரு முக்கியமான தளமாக அமையும் என நம்புகிறேன்.</p><p>இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று, தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகள். தீர்மானங்கள் மற்றும் செயல்திட்டங்கள் உருவாகிட வேண்டும் மனமார வாழ்த்துகிறேன். இம்மாநாட்டின் முடிவுகள் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு புதிய திசையை அமைக்கட்டும். தமிழும் தமிழகும் உயரட்டும்! தமிழ்நாடு வளம் பெறட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை-சேலம் விமானம் திடீர் ரத்து.. இன்று வழக்கம்போல் இயக்கப்படுமா.?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-salem-flight-suddenly-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-salem-flight-suddenly-cancelled#comments</comments><guid isPermaLink="false">87353adb-2fe9-4068-9434-59bf7951ed7b</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:20:36 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:20:36.790Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,Salem,flight,சேலம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/xpd02sme/plane.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/xpd02sme/plane.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் அருகே காமலாபுரத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்திற்கும் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அலைன்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு- சேலம்-கொச்சி, கொச்சி- சேலம் -பெங்களூருவுக்கும் தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. </p><p>இந்த நிலையில் சென்னையில் இருந்து நேற்று மதியம் 2.20 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை-சேலம் விமானம் எந்திர தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு வர வேண்டிய அந்த விமானமும் வரவில்லை. பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு சென்னைக்கு செல்ல வேண்டிய விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். </p><p>அதேபோல், சேலம்-கொச்சி, மறுமார்க்கத்தில் கொச்சி-சேலம், சேலம்-பெங்களூரு ஆகிய விமானங்கள் நேற்று வழக்கம்போல் இயக்கப்பட்டன என்றும், இன்று (திங்கட்கிழமை) சென்னை - சேலம் விமானம் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் சேலம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகளின் விலை உயர்வு: திருப்பூர் உற்பத்தியாளர்கள் முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-manufacturers-decide-to-hike-prices-of-childrens-clothing-and-innerwear</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-manufacturers-decide-to-hike-prices-of-childrens-clothing-and-innerwear#comments</comments><guid isPermaLink="false">103bc063-9fbe-4c29-8ac5-298f709187af</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:17:40 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:17:40.675Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,குழந்தைகள்,Clothing store,ஆடை உற்பத்தி,ஆடைகள்,திருப்பூர் உற்பத்தியாளர்கள்,Tiruppur manufacturers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/27ybkga5/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/27ybkga5/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><h2>பின்னலாடை நிறுவனங்கள்</h2><p>திருப்பூரில் 2,500-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். பின்னலாடை நிறுவனங்கள் மூலம் உள்ளாடைகள், டி-ஷர்ட் கள், டிராக் பேண்டுகள், இரவு நேரங்களில் அணியும் ஆடைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.</p><p>திருப்பூர் பின்னலாடை மூலம் ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. அதாவது, உள்நாட்டு விற்பனை சந்தை மூலம் ரூ.27 ஆயிரம் கோடியும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் சுமார் ரூ.42,500 கோடி முதல் ரூ.45,000 கோடி வரையிலும் வருமானம் பெறப்படுகிறது.</p><h2>5 சதவீதம் விலை உயர்வு</h2><p>மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செலவுகளில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக உள்ளாடைகள், இரவு நேரங்களில் அணியும் ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் ஆகியவற்றின் விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூரில் உள்ள தென்னிந்திய உள்ளாடை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-</p><p>பருத்தி விலை ஒரு கேண்டி (355 முதல் 356 கிலோ) ரூ.74 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் பின்னலாடைக்குரிய நூல் விலை கிலோவுக்கு 170 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் தொழிலாளர் கூலி, சாயம் பூசுதல், எலாஸ்டிக், பதப்படுத்துதல், தையல் மற்றும் போக்குவரத்துக்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இது உற்பத்தியாளர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தி செலவு சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><h2>தடையற்ற மூலப்பொருட்கள் வினியோகம்</h2><p>இதன் காரணமாக உள்ளாடைகளின் விலையை முதலில் 10 சதவீதம் உயர்த்தலாம் என முடிவெடுத்தோம். உள்நாட்டு சந்தையில் தேவை குறைவாக இருந்ததால், முழு விலை உயர்வையும் நுகர்வோர் மீது சுமத்துவது கடினமாக இருந்தது. இதனால், விலை உயர்வு 5 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டது.</p><p>உள்நாட்டு சந்தைக்கான உள்ளாடைகள் பொதுவாக சுமார் 90 சதவீதம் பருத்தி மற்றும் 10 சதவீதம் செயற்கை இழை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. வெளி ஆடைகளை பொறுத்தவரை, பருத்தி இருப்பு குறைந்ததால் 5 மாதங்களுக்கு முன்பு உற்பத்தியாளர்கள் செயற்கை இழையின் அளவை 50 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தி உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்யவும், 38 நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் நூல், பருத்தி மற்றும் பிற மூலப்பொருட்களின் தடையற்ற உள்நாட்டு வினியோகத்தை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-must-take-steps-to-reopen-closed-firecracker-factories-communist-party-of-india-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-must-take-steps-to-reopen-closed-firecracker-factories-communist-party-of-india-urges#comments</comments><guid isPermaLink="false">5bcd24e0-c6c7-4329-8737-96c33c736cac</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:38:17 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:38:17.631Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,பட்டாசு ஆலைகள்,Crackers factory</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/p0l01yse/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/p0l01yse/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மூடப்பட்டுள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகளை திறக்கவும், பட்டாசு தொழிலை பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என </p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 விழுக்காடு&nbsp;&nbsp;பங்களிப்பையும், ரூ 6,000 கோடிக்கும் அதிகமான வருடாந்திர வணிகத்தையும், 10 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பையும் வழங்கக் கூடியது&nbsp;விருதுநகர் மாவட்ட, சிவகாசி பட்டாசு தொழில். அதை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.</p><p>இம்மாவட்டத்தில் 1100 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கிவந்தன. அவற்றில் 200 ஆலைகள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற காரணங்களைக் கூறி மூடப்பட்டுள்ளன. இதனால் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். அண்மையில் நிகழ்ந்த&nbsp;விபத்துகளைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும், இப்பகுதியில் பட்டாசு விபத்துகளில் 169 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள், பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை (ஷிளிறிs) மேம்படுத்தவும், சட்டவிரோத ஆலைகளை அகற்றவும், தகுதியான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது வரவேற்பிற்குரியன.</p><p>இருப்பினும், மூடப்பட்டுள்ள ஆலைகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி, பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவு செய்துள்ள ஆலைகளை மீண்டும் திறந்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். எதிர்காலத்தில் எத்தகைய விபத்துகளும் ஏற்பட்டுவிடாமல் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும்.</p><p>தொழில் பாதுகாப்பு என்ற பெயரில் தொழிலாளரின் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவிடக் கூடாது. அதே சமயம் தொழிலும் முக்கியம். “தொழில் முக்கியம் ; தொழிலாளரின் உயிர் மிக மிக முக்கியம்“&nbsp;&nbsp;என்ற புரிந்துணர்வோடு அரசு செயல்பட வேண்டும். பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், இன்று (17.08.2026) உண்ணா நிலை அறப்போராட்டம் சிவகாசியில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.</p><p>எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக கோரிக்கைகளை ஏற்று பட்டாசு தொழிலை பாதுகாக்க, மூடிய தொழிற்சாலைகளை அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்து&nbsp;மீண்டும் திறக்க நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென,&nbsp;இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம்:  கோவில் திருவிழாவில் தகராறு; 2 பேர் படுகொலை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-conflict-at-temple-festival-2-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-conflict-at-temple-festival-2-killed#comments</comments><guid isPermaLink="false">1a8d2336-ddda-4b25-931f-4baae446fdd2</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:30:23.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanchipuram,காஞ்சிபுரம்,Temple festival,கோவில் திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/czl72kxu/lsgskt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/czl72kxu/lsgskt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்</p><p>காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் நடந்த தகராறில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p>காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடந்தது.  இதில் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.  அப்போது, ஒலிபெருக்கியில் கானா பாட்டு போட வேண்டும் என வலியுறுத்தி சிலர் தகராறில் ஈடுபட்டனர்.</p> <h2>2 பேர் படுகொலை</h2><p>இதில், தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது.  அப்போது, இரு தரப்பினர் இடையே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில், 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.  இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அவர்களுடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இதனை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து, அந்த் பகுதியில் வன்முறை பரவி விடாமல் தவிர்க்க, 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>6 ஆயிரம் டன் ரேஷன் அரிசி கடத்தல்: 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/smuggling-of-6000-tonnes-of-ration-rice-2-officials-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/smuggling-of-6000-tonnes-of-ration-rice-2-officials-suspended#comments</comments><guid isPermaLink="false">d552edfd-4705-46de-b816-4e84e0e8d94c</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:28:43 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:28:43.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anti-Corruption Police,Ration rice smuggling,ration rice,ரேஷன் அரிசி,Tamil Nadu Consumer Goods Trading Corporation,நுகர்பொருள் வாணிப கழகம்,ரேஷன் அரிசி கடத்தல்,லஞ்ச ஒழிப்பு போலீஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u0z7jl75/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u0z7jl75/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>6 ஆயிரம் டன்</h2><p>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு அரிசி அரைத்துக் கொடுக்கும் தனியார் அரிசி ஆலைகளுடன் கூட்டு சேர்ந்து, பொது வினியோக திட்டத்துக்கு வழங்கப்பட வேண்டிய புதிய அரிசிக்கு பதிலாக 6 ஆயிரம் டன் பழைய பொது வினியோகத்திட்ட அரிசியை வழங்கியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் அரைப்பதற்காக வழங்கப்பட்ட நெல்லில் இருந்து கிடைத்த புதிய அரிசியை தனியார் சந்தையில் விற்றுவிட்டு, பழைய ரேஷன் அரிசியை மீண்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>ரூ.10.82 கோடி மதிப்பிலான...</h2><p>இந்த முறைகேடு 2025-26 'காரீப்' சந்தை பருவத்தில் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையே நடந்துள்ளது. இது பல மாவட்டங்களில் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அரைக்கும் முக வர்களாக செயல்படும் 4 தனியார் அரிசி ஆலைகள், தங்களுக்கு வழங்கப்பட்ட நெல்லுக்கு பதிலாக ரூ.10.82 கோடி மதிப்புள்ள 6 ஆயிரம் டன் பழைய ரேஷன் அரிசியை வழங்கின.</p><p>சமீபத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு விசாரணையின்போது இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அரைக்கும் முகவர்களாக செயல்படும் 4 தனியார் அரிசி ஆலைகள், புதிய அரிசியை தங்கள் வளாகத்திலேயே வைத்துக்கொண்டு, மேற்கூறிய அளவிலான ரூ.10.82 கோடி மதிப்புள்ள அரிசியை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.</p><h2>2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்</h2><p>எனவே, அரைக்கும் முகவர்களிடம் இருந்து பெறப்பட்ட அரிசியின் தரத்தை சரிபார்க்க வேண்டிய பொறுப்பில் இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர், அந்த ஆலைகளுடன் கூட்டு சேர்ந்து, பழைய ரேஷன் அரிசியை பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் சேமிக்க அனுமதித்ததாக கூறப்படுகிறது.</p><p>லஞ்ச ஒழிப்பு விசாரணையின்போது இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, அந்த 2 அதிகாரிகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட 4 அரிசி ஆலை முகவர்களின் ஒப்பந்தங்களையும் ரத்து செய்து, அவர்களை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக நடைபெற்று வரும் துறை ரீதியிலான தொடர் விசாரணையில் மேலும் பலர் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஊர் ஊராக சென்று கழுதைப்பால் விற்பனை செய்யும் குடும்பம்... ஒரு சங்கு 100 ரூபாய் - ஆர்வத்துடன் வாங்கி குடிக்கும் மக்கள்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-family-travels-from-town-to-town-selling-donkey-milk-100-rupees-per-serving-people-eagerly-buy-and-drink-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-family-travels-from-town-to-town-selling-donkey-milk-100-rupees-per-serving-people-eagerly-buy-and-drink-it#comments</comments><guid isPermaLink="false">f9bbccc4-f410-4da5-a032-e1e7bebb9e3f</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:18:13 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:18:13.912Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>milk,Perambalur,donkey,கழுதைப்பால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/9d00yohk/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/9d00yohk/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலுார்,</p><p>பெரம்பலுார் மாவட்டத்தில், துறைமங்கலம், கவுல்பாளையம், நெடுவாசல், சிறுவாச்சூர், நொச்சியம் விளாமுத்துார் உட்பட பல்வேறு கிராமங்களில், ஒரு குடும்பத்தினர், நான்கு வெள்ளை நிற கழுதைகளுடன், ஊர் ஊராக சென்று கழுதைப்பால் விற்பனை செய்கின்றனர். பால் கேட்பவர்களுக்கு, அங்கேயே கறந்து தருகின்றனர். குறிப்பாக, குழந்தைகளுக்காக பலர் பால் வாங்குகின்றனர். ஒரு சங்கு பால் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. </p><p>இது குறித்து கழுதைப்பால் விற்கும் பெண் கூறுகையில், “வி. களத்துார் கிராமத்தை சேர்ந்த நாங்கள், தமிழகம் முழுதும் சென்று, கழுதைப்பால் விற்று வருகிறோம். கழுதைப்பால் மருத்துவ குணம் கொண்டது. அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் தொடர்ந்து குடித்தால் பலன் உண்டு. சிறிய குழந்தைகள் என்றால், ஒரு சங்கு போதும். பெரியவர்களுக்கு, 50 மில்லி கொடுக்க வேண்டும். நாங்கள், பால் விற்பனைக்காகவே கழுதை வளர்க்கிறோம். கழுதையை கிராம பகுதிகளுக்கு ஓட்டிச்சென்று, கலப்படம் இல்லாமல், அங்கேயே கறந்து விற்கிறோம்” என்றார்.</p><p>இருப்பினும் இது தொடர்பாக தனியார் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கருணாகரன் கூறுகையில், "கழுதைப்பால், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, மருத்துவ குணம் கொண்டது, நாள்பட்ட நோய்களை தீர்க்கும் என்பது நிரூபிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எந்த பாலும் கொடுக்கக் கூடாது,'' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நாட்டிலேயே முதல்முறையாக.. புதைப்பிடத்தில் வரிசையாக சங்குகள்: அகழாய்வில் கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-first-in-the-country-conch-shells-found-arranged-in-rows-at-a-burial-site-during-excavation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-first-in-the-country-conch-shells-found-arranged-in-rows-at-a-burial-site-during-excavation#comments</comments><guid isPermaLink="false">47b7fc21-85dc-44ca-9f13-10a7b77f1252</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:14:32 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:14:32.786Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Excavation,அகழாய்வு,சங்குகள்,Conch Shells</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/qfav4nvh/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/qfav4nvh/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஒன்றியம், ஆதிச்சனுார் -வசந்தகிருஷ்ணாபுரம் என்ற பகுதியில், தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடக்கிறது. இதில், 20 -30 மீட் டர் சுற்றளவுள்ள, 10க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் தற்போது கண்டறியப்பட்டு, அகழாய்வு இயக்குநர் பொ.கோ.லோகநாதன், உதவி இயக்குநர்கள் பரத் - குமார், சுரேஷ் ஆகியோர் தலைமையில், ஏழு கல் வட்டங்களில் அகழாய்வு பணிகள் நடக்கின்றன.</p><p>இதுவரை நடந்த அகழாய்வில் இறந்தவர்களை மண் தொட்டியான ஈமப்பேழையில் வைத்து புதைப்பது, தரையில் கிடக்கையாக புதைப்பது எனும், இரண்டு விதமான புதைக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>நாட்டில் இதுவரை கண்டறியப்படாத புதிய வகையில், புதைப்பிட பகுதியில், கல்வட்டத்தைப் போலவே வரிசையாக சங்குகள் அடுக் கப்பட்டு உள்ளன. இது, தொல்லியல் ஆய்வாளர்களை ஈர்த்துள்ளது.</p><p>இதுகுறித்து, அகழாய்வு இயக்குநர் லோகநாதன் கூறியதாவது:</p><p>வடமாவட்டங்களில், மலைப்பாங்கான பகுதிகள் அதிகம் என்பதால், இங்கு இறந்தவர்களை புதைத்த பின், அதைச்சுற்றி பல கைக்கற்களால் நான்கு புறமும் சுவர் போல எழுப்பி, அதன் மீது, மிகப்பெரிய கல்லால் மூடி, அதைச் சுற்றிலும் கற்களை வரிசை வரிசையாக வட்டவடிவில் நிரப்புவர்; இதை, கல்வட்டம் என்பர்.</p><p>ஆதிச்சனுாரில் இதே வகையிலான கல்வட்டங்களை கண்டறிந்துள்ளோம். இங்கு, 10-20 மீட் டர் சுற்றளவுள்ள மூடுகல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதைச்சுற்றி, 2-3 கல்வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. </p><p>மூடுகல்லின் மீதும் அதை நீக்கிய பின் புதை குழியை சுற்றிலும், ஒன்று அல்லது இரண்டு வரிசைகளில், சங்குகள் அடுக்கப்பட்டுள்ளன. இதுபோல, புதைப்பிடத்தில் சங்குகளை வைக்கும் பழக்கம், வேறு எங்கும் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைக் கவில்லை.</p><p>இதுவரை, மூன்று கல் வட்டங்களில் மூடுகற்கள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில், இரண்டில் ஈமப்பேழையும், ஒன்றில் தரைமட்ட புதைப்பு முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றில், ஈமப்பேழை இடுப்பு அல்லது கால் எலும்பு மட்டும், சிறிய அளவில் வெளிப்பட்டு உள்ளது. எலும்பை சுற்றிலும், சடங்கு கலையங்கள் அடுக்கப்பட்டு உள்ளன. அதன் அருகில், சில சங்கு ஆபரணங்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.</p><p>சங்காலான கழுத்தணியில், நட்சத்திர குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது. இன்னொரு புதைக்குழியில் செம்பு கிண்ணமும், மற்றொன்றில் இரும்பு வாளும் வெளிப்பட்டுள்ளன. இந்த தொல்லியல் பகுதி, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடக்கின்றன. அவை முடிந்த பின்தான், முழு விபரம் தெரியவரும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p> ]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-hogenakkal-has-increased-to-12000-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-hogenakkal-has-increased-to-12000-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">825e8d95-0693-4ab6-83b1-78ea33ca6731</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:14:04 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:14:04.181Z</atom:updated><atom:author><atom:name>Lingavel Murugan M</atom:name><atom:uri>/api/author/2401545</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,Hogenakkal Cauvery river,ஒகேனக்கல் காவிரி ஆறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vmxpt7hx/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/vmxpt7hx/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஒகேனக்கல்</h2><p>காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 298 கனஅடி தண்ணீரும் என மொத்தமாக 12 ஆயிரத்து 298 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப் படி வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியானது. இரவு 9 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் ந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் 100 நாள் ஆட்சி, ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி; முதல் அமைச்சர் விஜய் பெருமிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-100-day-rule-is-the-conscience-of-the-people-for-an-era-chief-minister-vijay-is-proud</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-100-day-rule-is-the-conscience-of-the-people-for-an-era-chief-minister-vijay-is-proud#comments</comments><guid isPermaLink="false">1ef97362-b9ec-442e-9e6c-be404ff78de1</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:59:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:59:37.184Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆட்சி,100 நாள்,Chief Minister Vijay,முதல் அமைச்சர் விஜய்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/ap0ahqoy/cm-vijay.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/ap0ahqoy/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் (ஆகஸ்டு 17) 100 நாட்கள் ஆகிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/cm-vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> தலைமையிலான தவெக அரசு 100-வது நாளில் அடியெடுத்து வைப்பதை தொடர்ந்து தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>கடந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-</p><p>ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- ரூ.560 கோடி ஒதுக்கீடு</p><p>வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 - 1 இலட்சம் கோடி முதலீடு</p><p>717 மதுபானக் கடைகள் மூடல்</p><p>வெற்றித் திறன் பயிற்சித் திட்டம் 12 இலட்சம் மாணவர்களுக்கும் 1 இலட்சம் இளைஞர்களுக்கும் திறன் பயிற்சிகள்</p><p>TN-VETTRI (கிராமப்புற மறுமலர்ச்சி) சுகாதாரம், குடிநீர், சாலைகள் மேம்படுத்த ஆண்டிற்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு</p><p>போதைப் பொருள் ஒடுக்குவதற்கான 65 சிறப்பு அதிரடிப்படைகள்</p><p>அண்ணனின் சீர் திருமண நன்னாளில் 3 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும் - ரூ.812 கோடி ஒதுக்கீடு</p><p>கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 சிறப்பு ஊக்கத்தொகை</p><p>வெற்றி வீடு திட்டம் ரூ.3,500 கோடி ஒதுக்கீடு</p><p>வெற்றி 150 - 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு</p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்</p><p>200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்</p><p>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் ரூ.710 கோடி ஒதுக்கீடு</p><p>விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி</p><p>வெற்றி மடிக்கணினித் திட்டம் ரூ.2,000 கோடி ஒதுக்கீடு</p><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் 11-ம் வகுப்புப் பயிலும் மாணாக்கர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள்</p><p>வெளிப்படையான &amp; நேர்மையான நிர்வாகம் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு CMDA அளவிலேயே திட்ட அனுமதி. நேரடி தொடர்பற்ற பத்திரப் பதிவு</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">100 நாள் ஆட்சி <br>ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி<br><br>100 Days of Governance <br>A Government for Generations<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://t.co/so1MP9Mw96">pic.twitter.com/so1MP9Mw96</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2089163922746323414?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கோவை, பாலக்காடு ரெயில் நிலைய குடிநீரில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியா - அதிர்ச்சி தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bacteria-causing-diarrhea-found-in-drinking-water-at-coimbatore-and-palakkad-railway-stations-shocking-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bacteria-causing-diarrhea-found-in-drinking-water-at-coimbatore-and-palakkad-railway-stations-shocking-information#comments</comments><guid isPermaLink="false">414332ac-c412-4b34-abb3-3f13f75bba7c</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:31:22 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:31:22.947Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>railway station,ரெயில் நிலையம்,குடிநீர்,drinking water,பாக்டீரியா,bacteria</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/p3syjkwc/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/p3syjkwc/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை, பாலக்காடு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் ‘ஈ-கோலை’ பாக்டீரியா கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இந்தியாவின் முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து மத்திய தணிக்கை குழு(சி.ஏ.ஜி.) ஆய்வு மேற்கொண்டது. இதன்படி ரெயில் நிலையங்களில் உள்ள குடிநீர் குளிரூட்டிகள், நடைமேடைகளில் உள்ள குடிநீர் குழாய்களில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. </p><p>இந்த ஆய்வின் முடிவில், பல்வேறு ரெயில் நிலையங்களின் குடிநீரில் பாக்டீரியா இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோவை, பாலக்காடு, ஐதராபாத் உளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் ‘ஈ-கோலை’(E-coli) எனப்படும் பாக்டீரியா கலந்திருப்பது தெரியவந்துள்ளது. </p><p>ரெயில்வே விதிமுறைப்படி குடிநீரின் தரத்தை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் என்ற போதிலும் பல மாதங்களாக எந்த ஒரு தர கட்டுப்பாட்டு சோதனையும் நடத்தப்படவில்லை என தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் நீர் சுத்திகரிப்பு மையங்கள் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் தென்னக ரெயில்வே உடனடியாக தலையிட்டு குடிநீர் ஆதாரங்களை சுத்திகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கால்வாய், ஏரி, குளங்கள் சீரமைப்பு பணிகள் இன்று தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/restoration-work-on-canals-lakes-and-ponds-in-tamil-nadu-begins-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/restoration-work-on-canals-lakes-and-ponds-in-tamil-nadu-begins-today#comments</comments><guid isPermaLink="false">fa5c0c93-8391-4c64-92bc-6a28e500539b</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:25:12 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:25:12.341Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சீரமைப்பு பணி,Water Resources Department,நீர்வளத்துறை,lakes,ஏரிகள்,ponds,குளங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/w6n9n7hd/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/w6n9n7hd/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 11 ஆயிரம் கால்வாய்கள், ஏரிகளை சீரமைக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.</p><h2>நீர்நிலைகள் புனரமைக்கும் பணி</h2><p>புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த பருவமழை சவாலை சமாளிக்க ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள், கூவம் ஆறு மற்றும் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை தீவிரமாக தொடங்கி உள்ளது.</p><p>இதேபோல, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தின் கிராமப்புற நீர்வளத்தை பாதுகாத்து மேம்படுத்தும் வகையிலும் மாபெரும் நீர்நிலை புனரமைப்புப் பணிகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளன.</p><p><strong>நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><h2>கால்வாய், ஏரிகள்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்படி, வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் (விபி ஜி ராம் ஜி). தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>இதன்படி, மாநிலம் முழுவதும் 10,185 நீர்வரத்துக் கால்வாய் கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள், ஊரணிகள் ஆகியவற்றை தூர்வாரி புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஒரே கட்டமாக மேற்கொள்ளப்படும் இப்பணிகள், தமிழகத்தின் கிராமப்புற நீர்வளத்தை பாதுகாத்து மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகும்.</p><h2>வெள்ள அபாயத்தை...</h2><p>வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண், கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றி, நீர்வரத்து பாதைகளைச் சீரமைப்பதன் மூலம் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை அதிகளவில் சேமிக்க முடியும். இதன் மூலம் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்த்தேக்கத்திறன் அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.</p><p>குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாய பாசனத்துக்கு தேவையான நீர்வளம் கிடைப்பதற்கும் இந்தப் பணிகள் பெரும் உதவியாக அமையும். அதீத மழைப்பொழிவு ஏற்படும் நேரங்களில் நீர்வரத்து கால் வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதன் காரணமாக மழைநீர் தேங்கி விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.</p><p>தற்போது மேற்கொள்ளப்படும் கால்வாய் தூர்வாரும் பணிகள் மூலம் மழைநீர் தடையின்றி நீர்நிலைகளை சென்றடைய வழிவகை செய்யப்படும். இதனால் மழைநீரை சேமிப்பதோடு மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நீர்த்தேக்கம் மற்றும் வெள்ள அபாயத்தையும் குறைக்க முடியும்.</p><h2>பொதுமக்களின் பங்களிப்பு</h2><p>தமிழகத்தின் கிராமப்புற நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் பணியாக மட்டுமின்றி, பொதுமக்களின் பங்களிப்பும் அவசிய மான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, இந்த புனரமைப்பு பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள், ஊர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பும் இடம்பெற உள்ளது.</p><p>முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்பேரில் நடைபெறும் இந்த மாபெரும் பணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>நீண்டகால நடவடிக்கை</h2><p>கிராமப்புற நீர்வளத்தை காக்கும் நீண்டகால நடவடிக்கையான மழைநீரை வீணாக கடலில் கலக்காமல் சேமித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், விவசாயிகளின் பாசன வசதியை மேம்படுத்துதல், வெள்ளப்பாதிப்பைத் தடுப்பது என பல்வேறு நோக்கங்களை ஒருங்கிணைத்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகள் முன்னெடுக்கப்படுவதால் வரும் மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான அடித்தளமாக உருவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>15 ஆண்டுகளுக்குப் பிறகு ரப்பர் விலையில் புதிய உச்சம் - விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rubber-prices-hit-new-high-after-15-years-farmers-happy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rubber-prices-hit-new-high-after-15-years-farmers-happy#comments</comments><guid isPermaLink="false">2b2cb397-7b98-4673-8a27-654d07b830ad</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:24:53 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:24:53.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விலை உயர்வு,விவசாயிகள் மகிழ்ச்சி,farmers happy,prices rise,இயற்கை ரப்பர் உற்பத்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/6bpa4jn8/rubber.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/6bpa4jn8/rubber.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில், </p><p>இந்தியாவில் கேரள மாநிலமும், தமிழகத்தில் குமரி மாவட்டமும் ரப்பர் சாகுபடியில் முதன்மையாக இருக்கிறது. குமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 25 ஆயிரம் ஹெக்டரில் ரப்பர் சாகுபடி நடைபெறுகிறது. பொதுவாக ரப்பரின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்துள்ளது. அதாவது கடந்த 2010-ம் ஆண்டு கிலோ ரூ.255 என்ற உச்சத்தைத் தொட்டது. பிறகு மீண்டும் 200-க்கும் கீழ் வந்தது.</p><h2>புதிய உச்சம்</h2><p>15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ரப்பரின் விலை புதிய உச்சத்தை தொட்டது. கிலோ ரூ.275 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. ரப்பரின் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விலை உயர்வுக்கு</a> உலக அளவில் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள விற்பனை புரட்சி, போர் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் மற்றும் முக்கிய ரப்பர் உற்பத்தி நாடுகளான தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தியாவில் ரப்பருக்கான உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணம் என கூறப்படுகிறது.</p><p>இந்த விலையேற்றம் விவசாயிகள் மத்தியில் தித்திப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2-ம் கட்ட கலந்தாய்வு 24-ந் தேதி தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/2nd-phase-counselling-at-tamil-nadu-agricultural-university-begins-on-the-24th</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/2nd-phase-counselling-at-tamil-nadu-agricultural-university-begins-on-the-24th#comments</comments><guid isPermaLink="false">e0660fa6-6158-400b-8c21-85e786380c32</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:09:44 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:09:44.015Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கலந்தாய்வு,Counselling,2-ம் கட்டம்,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,Tamil Nadu Agricultural University</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/qxyhlmbv/agri-university.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/qxyhlmbv/agri-university.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை 3-ந் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு வேளாண்மை படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு 9-ந் தேதி தொடங்கியது. இதேபோல் அரசுப் பள்ளிகளில் படித்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் சேர்க்கை ஆணை வழங்கும் பணி கடந்த மாதம் 20-ந் தேதி நடைபெற்றது. </p><h2>கலந்தாய்வு</h2><p>7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமுள்ள 424 இடங்களில் தற்போது வரை 202 இடங்கள் நிரம்பி உள்ளன. மீதி 222 இடங்கள் காலியாக உள்ளன. பொது கலந்தாய்வில் மொத்தம் உள்ள 5,236 இடங்களில் 4,124 இடங்கள் நிரம்பின. 1,112 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களுக்கான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81"> கலந்தாய்வு</a> வருகிற 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு மாணவ-மாணவிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கலந்தாய்வில் குறிப்பிட்ட தேதிகளில் மாணவ- மாணவிகள் தகுந்த சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடக்கம்: 3 துறைகள் மீது நடக்கிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-demands-for-grants-begins-in-the-assembly-today-covers-three-departments</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-demands-for-grants-begins-in-the-assembly-today-covers-three-departments#comments</comments><guid isPermaLink="false">e3faab9d-26f0-43dc-b7b3-0790df2253af</guid><pubDate>Mon, 17 Aug 2026 00:56:58 +0000</pubDate><atom:updated>2026-08-17T00:56:58.075Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,மானிய கோரிக்கை,பட்ஜெட் 2026,Budget 2026</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/7878kerj/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/7878kerj/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. முதல் நாளில் 3 துறைகள் மீது நடக்கிறது. </p><h2>பட்ஜெட் கூட்டத் தொடர்</h2><p>தமிழகத்தில் புதிதாக த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் இரு பட்ஜெட்டுகள் மீதும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.</p><p>அதனைத் தொடர்ந்து, கடந்த 12-ந் தேதி இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பேசினார்கள். அத்துடன் பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம் தொடக்கம்</h2><p>4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்று முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. முதல் நாளில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க.அருண்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பேசுகிறார்கள். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-50</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-50#comments</comments><guid isPermaLink="false">8368094d-2fae-469f-855f-cf03aa2c115f</guid><pubDate>Mon, 17 Aug 2026 00:36:41 +0000</pubDate><atom:updated>2026-08-17T00:36:41.331Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/i7s9wl0e/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/i7s9wl0e/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (17.08.2026 திங்கட்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடங்குகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debates-on-demands-for-grants-begin-in-the-legislative-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debates-on-demands-for-grants-begin-in-the-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">16ecbaac-5176-4c53-848b-e08ccd1ad020</guid><pubDate>Sun, 16 Aug 2026 18:57:41 +0000</pubDate><atom:updated>2026-08-16T18:57:41.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Assembly,மானிய கோரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5pacvg83/ass.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பட்ஜெட்டை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று தொடங்குகிறது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5pacvg83/ass.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக பட்ஜெட்டை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று தொடங்குகிறது.</p><h2>சட்டசபை கூட்டம்</h2><p>தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை</a>யில் கடந்த 5-ந் தேதி, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில், கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.</p><h2>4 நாட்கள் விடுமுறை</h2><p>அதனைத் தொடர்ந்து, சட்டசபையில், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.</p><p>இதனைத் தொடர்ந்து வியாழன்  (13-ந் தேதி) மற்றும் வெள்ளிக்கிழமை (14-ந் தேதி) சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் (15-ந் தேதி) சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை நாளாகும். அடுத்த நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இப்படி, தொடர்ந்து 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.</p><h2>இன்று மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>இந்நிலையில் இன்று 17-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கின்றது. அதில் முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் தொடங்குகிறது.</p><p>முதல் நாளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>“மீசை மழிக்கும் சவாலுக்கு ஆர்.எஸ்.பாரதி தயாராக இருக்க வேண்டும்” - தவெக எம்எல்ஏ இசிஆர் சரவணன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-bharathi-must-be-prepared-for-the-moustache-shaving-challenge-tvk-mla-ecr-saravanan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-bharathi-must-be-prepared-for-the-moustache-shaving-challenge-tvk-mla-ecr-saravanan#comments</comments><guid isPermaLink="false">cf849736-1748-4045-b085-8d52a0ceec71</guid><pubDate>Sun, 16 Aug 2026 17:56:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T17:56:24.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,ஆர்.எஸ்.பாரதி,எம்எல்ஏ,R.S. Bharathi,இசிஆர் சரவணன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/sfvkksfr/ec.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என கூறிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, சோழிங்கநல்லூர் தொகுதி தவெக எம்எல்ஏ இசிஆர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/sfvkksfr/ec.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என கூறிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, சோழிங்கநல்லூர் தொகுதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக </a>எம்எல்ஏ இசிஆர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2> ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம்</h2><p>இசிஆரில் நடைபெற்ற விழாவில் பேசிய இசிஆர் சரவணன், மாநகராட்சி தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் ஒருபக்க மீசையை மழித்துக்கொள்வேன் என ஆர்.எஸ்.பாரதி ஏற்கனவே சவால் விடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் முடிவுக்குப் பிறகு அந்த சவாலை நிறைவேற்றுவதற்கு ஆர்.எஸ்.பாரதி தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.</p><h2>100வது சுதந்திர தினம் </h2><p>மேலும், 100வது சுதந்திர தினத்தன்றும் முதல்-அமைச்சர் விஜய் தான் தலைமை செயலகத்தில் தேசிய கொடி ஏற்றப்போகிறார் எனவும் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: முதல்-அமைச்சர் விஜய் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-tamilar-shooting-incident-cm-vijay-condemnation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-tamilar-shooting-incident-cm-vijay-condemnation#comments</comments><guid isPermaLink="false">2a0042f2-321e-4478-8d30-52e69afa27ec</guid><pubDate>Sun, 16 Aug 2026 16:33:31 +0000</pubDate><atom:updated>2026-08-16T16:33:31.103Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,கண்டனம்,சுட்டுக்கொலை,தமிழர்கள்,shot dead,Tamils,‪Karnataka‬,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/kb9kpo4a/cmjoseph-vijay.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/kb9kpo4a/cmjoseph-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து  முதல்-அமைச்சர் விஜய் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>வேதனை அளிக்கிறது</h2><p>கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில், கர்நாடக வன துறையினரால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">சுட்டுக்கொல்லப்பட்டது</a> வேதனை அளிக்கிறது. இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன். </p> <p>இந்த சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.</p><h2>நேர்மையான விசாரணை</h2><p>இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட  விசாரணை குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.</p><h2>நடவடிக்கை</h2><p>இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கொசஸ்தலை ஆற்றையும் எண்ணூர் கழிமுகத்தையும் மீட்டெடுக்க வேண்டும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kosasthalai-river-and-ennore-estuary-should-be-restored-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kosasthalai-river-and-ennore-estuary-should-be-restored-seeman#comments</comments><guid isPermaLink="false">c3703537-a359-41fb-a431-d3fd214b0245</guid><pubDate>Sun, 16 Aug 2026 16:25:09 +0000</pubDate><atom:updated>2026-08-16T16:25:09.021Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,Kosasthalai river,கொசஸ்தலை ஆறு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/6ob8uph8/seeman.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/6ob8uph8/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/topic/seeman">சீமான்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>எண்ணூர் கழிமுகத்திலும் கொசஸ்தலை ஆற்றிலும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் வெறும் சுற்றுச்சூழல் பேரழிவு மட்டுமல்ல, எளிய மீனவ மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடி தாக்குதலாகும். </p><h2>சுற்றுச்சூழல் பேரிடர்</h2><p>இதுவரை கண்டிராத மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரிடராக, எண்ணூர் கழிமுகத்திலும் கொசஸ்தலை ஆற்றிலும் இன்று 16.08.2026, டன் கணக்கில் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் செத்து மிதந்து கரை ஒதுங்கி வரும் சீரழிவு நடந்தேறியுள்ளது. இந்த நச்சு மாசுபாட்டால் தங்களின் வாழ்வாதாரமே ஒட்டுமொத்தமாக அழிந்துபோன நிலையில், சம்பவம் நடந்து இத்தனை மணி நேரமாகியும் எந்தவொரு அரசு அதிகாரியோ அல்லது ஆட்சியாளர்களோ தங்களை நேரில் வந்து சந்திக்காதது அப்பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள், உடனடியாக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாழங்குப்பம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>உரிய இழப்பீடு</h2><p>காலம் காலமாக அனல்மின் நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் நச்சுக் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கலக்கப்பட்டு, அந்நிலப்பரப்பே சீரழிக்கப்பட்டு வருகிறது. தற்போது வேதிப்பொருள் கழிவுகளால் பல்லாயிரக்கணக்கான மீன்களும், நண்டு, இறால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் செத்து மடிந்து மிதப்பது அப்பகுதி மக்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வளவு பெரிய சூழலியல் சீரழிவு தொடர்ந்து நடப்பதற்கு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில Pollution Control Board (TNPCB) அமைப்பின் அலட்சியமும், போலி கண்காணிப்புமே முதன்மை காரணம். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை நாசமாக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து தண்டிப்பதற்குப் பதிலாக, பெரு நிறுவனங்களுக்கு துணைபோகும் கடந்த திமுக அதிமுக ஆட்சியாளர்களின் போக்கையே தற்போதைய தவெக அரசும் பின்பற்றுவது மாற்றம் என்று வாக்களித்த மக்களுக்கு செய்யும் அநீதியாகும். குற்றமிழைத்த தொழிற்சாலைகள் மீது சட்டப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவற்றின் செயல்பாடுகளை முடக்க வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை அந்த நச்சு நிறுவனங்களிடமிருந்தே பெற்றுத்தர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>'வளர்ச்சி' என்ற பெயரில் சுற்றுச்சூழல் விதிகளையும், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளையும் தளர்த்தி, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆற்றுப்படுகைகளையும் கழிமுகங்களையும் நச்சுக் கிடங்காக மாற்ற மத்திய பாஜக அரசு வழிவகுத்துள்ளது. மாநிலத்தின் இயற்கை வளங்களையும், பூர்வகுடி மக்களின் வாழ்வுரிமையையும் பலியிடும் இந்தச் சுற்றுச்சூழல் துரோகத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கை பார்க்காமல், கொசஸ்தலை ஆற்றையும் எண்ணூர் கழிமுகத்தையும் மீட்டெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எண்ணூர் கழிமுக மாசுபாட்டால் வாழ்வாதாரமிழந்து தாழங்குப்பம் நெடுஞ்சாலையில் நீதிக்காகப் போராடி வரும் மீனவ கிராம மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட எளிய மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் வரை இந்த அறப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தோளோடு தோள் நின்று இறுதிவரை களமாடும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அப்பாவி கிராம மக்கள் மீது என்கவுன்டர் நடத்த வேண்டிய அவசியம் என்ன? - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-need-to-carry-out-an-encounter-against-innocent-villagers-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-need-to-carry-out-an-encounter-against-innocent-villagers-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">7d9b61f3-4e8d-46a6-bcfc-693321e2d873</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:59:55 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:59:55.404Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/3srfndr1/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/3srfndr1/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிகாலை நேரத்தில் அப்பாவி கிராம மக்கள் மீது என்கவுன்டர் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று  காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மூவர் சுட்டுக் கொலை</h2><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்களான அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரை மான் வேட்டை என்ற பொய்க் காரணத்தைக் கூறி கர்நாடக வனத்துறை கொடூரமாகச் சுட்டுக் கொன்ற சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!</p><p>அதிகாலை நேரத்தில் அப்பாவி கிராம மக்கள் மீது என்கவுன்டர் நடத்த வேண்டிய அவசியம் என்ன?</p><h2>கைது செய்ய வேண்டும்</h2><p>கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, அப்பாவி எளிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வனத்துறை ஊழியர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!</p><p>அப்பாவித் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழர்களைக் </a>குறிவைத்துத் தாக்கப்படும் இதுபோன்ற கொடூர வன்முறைச் செயல்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்!</p><p>இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1967-grams-of-gold-seized-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1967-grams-of-gold-seized-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">0e03097b-7d1d-49cc-897b-01e32eecf418</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:42:06 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:42:06.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,airport,விமான நிலையம்,smuggled gold,கடத்தல் தங்கம் பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/om4e97a8/gold-smuggle.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கடத்தல் தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/om4e97a8/gold-smuggle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை சர்வதேச விமான நிலையம்</a> வந்த பயணிகளிடம் இருந்து 1,967 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சட்டவிரோதமாகத் தங்கம் கடத்திய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.</p> <h2>ரகசிய தகவல் </h2><p>தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் பெருமளவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> கடத்தி வரப்படுவதாக சென்னை சுங்கத்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். </p> <h2>மியான்மர் நாட்டு பயணிகள்</h2><p>அப்போது பாங்காக்கில் இருந்து சென்னை வந்து இறங்கிய விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த சமயத்தில், மியான்மர் நாட்டை சேர்ந்த ஒரு பெண் பயணியும், அவருடன் வந்த ஆண் பயணி ஆகியோரை சென்னை சுங்கத்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்கள் இருவரின் மீதும் அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை தனியறைக்கு அழைத்து சென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் நடத்தினர்.</p><h2>உடலுக்குள் தங்கம்</h2><p>அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அம்பலமாகின:ஆண் பயணி அவரது உடலுக்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பிரம்மாண்ட தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். பெண் பயணியியை சோதனையிட்டபோது, அவரும் தனது உடலுக்குள் ரகசியமாக சிறிய அளவிலான தங்க உருண்டைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய மேல் சோதனையில், அவர்கள் உடலில் மேலும் சில தங்க கட்டிகள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டு, அவை அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டன. </p> <h2>ரூ.2.65 கோடி தங்கம் பறிமுதல்</h2><p>அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 24 காரட் சுத்த தங்க கட்டிகளின் மொத்த நிகர எடை 1,967 கிராம் (சுமார் 2 கிலோ) ஆகும். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.2.65 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம் சுங்க சட்ட விதிகளின் கீழ் முறைப்படி பறிமுதல் செய்யப்பட்டது.</p> <h2>நீதிமன்ற காவலில் அடைப்பு</h2><p>கடத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சுங்க சட்ட விதிகளின் கீழ் இரு பயணிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.  மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு தேசிய இனமும் மொழிவழி அணிதிரள வேண்டும் - வன்னி அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/every-nationality-should-unite-through-language-vanniarasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/every-nationality-should-unite-through-language-vanniarasu#comments</comments><guid isPermaLink="false">c358daf1-23d3-419a-a2dc-082da1606bfe</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:29:41 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:29:41.909Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விசிக,VCK,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/dqy58g8g/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/dqy58g8g/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூக நீதித்துறை அமைச்சரும், விசிக துணை பொதுச்செயலாளருமான<a href="https://www.dailythanthi.com/topic/vanni-arasu"> வன்னி அரசு </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு</h2><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடிப்படையான ஐவகை கொள்கை முழக்கங்களுள் 'தமிழ்த் தேசியம்' என்பதுவும் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டு இயக்கத்தின் கொடியை வடிவமைத்து அறிமுகப் படுத்திய போதே "சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம், மகளிர் விடுதலை, பாட்டாளி வர்க்க விடுதலை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு" ஆகியவற்றை அறிவித்தோம். அது முதல் கடந்த முப்பைத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாம் உரத்துப் பேசிவரும் கொள்கைளுள் ஒன்று தான் தமிழ்த் தேசியம் ஆகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழீழ விடுதலை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டு பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள்  என பல்வேறு செயற்திட்டங்களைத் தீட்டி வீரியமாகக்  களமாடியிருக்கிறோம். குறிப்பாக, தமிழீழ அங்கீகார மாநாடு, எழும் தமிழீழம் மாநாடு, தமிழர் இறையாண்மை மாநாடு, மாநில சுயாட்சி மாநாடு என இலட்சக் கணக்கிலே மக்களைத் திரட்டி தமிழ்த்தேசிய அரசியலுக்கான அரசியல் உரையாடல்களைத் தீவிரப்படுத்தினோம். அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளோம். </p><p>இம்மாநாடு கடந்த மே-17, 2026 அன்று நடைபெறுவதாக மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டது. தவிர்க்கமுடியாத அரசியல் நிலைமைகளால் தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஆகஸ்ட் 17 அன்று நடைபெறவுள்ளது. </p><p>சட்டப் பேரவை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றமும் அரங்கேறியுள்ள தற்போதைய சூழலில், 'இம்மாநாடு பொருத்தமற்றதாக உள்ளதே'- என ஒருசிலர் பேசுகின்றனர். ஆனால், தேர்தல் அரசியலைக் கடந்து கருத்தியல் நோக்கில் அணுகுவோர் இதனை வெகுவாக வரவேற்கும் நிலையைக் காணமுடிகிறது. குறிப்பாக,  பாரதிய ஜனதா மற்றும் சங்கப் பரிவாரங்கள் உயர்த்திப் பிடிக்கும் 'ஹிந்து ராஷ்ட்ரா' என்னும் மதவழி தேசியவாதத்தின் விளைவுகளைப் புரிந்தோர் அதற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக நாம் முன்னிறுத்தும் தமிழ்த்தேசியம் என்னும் மொழிவழி தேசியத்தை வரவேற்கின்றனர். </p><p>புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்  'மதசார்பற்ற - சமத்துவ இந்தியா' என்னும் புரட்சிகரக் கனவைச் சிதைக்கும் உள்நோக்கம் கொண்ட சங்கப் பரிவாரங்களின் 'மதவழி தேசிய'த்துக்கு மாற்றாகக் கட்டமைக்க வேண்டிய தேசியவாத அரசியல் 'மொழிவழி தேசியமே' என்பதை ஓங்கி ஒலிக்கும் கருத்தியல் களமே இந்த மாநாடு ஆகும். </p><h2>இன்றியமையாத தேவை</h2><p>தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மொழிவழி தேசியம் என்றால் அது 'தமிழ்த் தேசியமே' ஆகும். தமிழ்த் தேசியம் என்பது மொழி அடையாளத்தை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டதல்ல என்பதைத்  தெளிவுப்படுத்தும் நோக்கில் இன்று இம்மாநாட்டை நாம் ஒருங்கிணைக்க வேண்டிய வரலாற்றுத் தேவை எழுந்துள்ளது. 'தமிழ், தமிழன் மற்றும் தமிழ்நாடு' என 'மொழி-இனம்-வாழ்நிலம்' என்கிற அலகுகளைக் கொண்டு தனித்து இயங்கும் அரசு மற்றும் ஆட்சியதிகாரத்தை வென்றெடுக்கும் நோக்கத்தை இது முதன்மைக்கூறாகப் பெற்றிருந்தாலும் அதன் பிற அடிப்படைக் கூறுகளை அடையாளப்படுத்துவதும் அவற்றைக் கூர்மைப்படுத்துவதும் தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாத தேவைகளாக உள்ளன. அந்தப் பிற அடிப்படைக் கூறுகளுள் முதனமையானவை சாதி ஒழிப்பு மற்றும் மதசார்பின்மை ஆகியவை ஆகும். அத்துடன் அவற்றின்வழியிலான 'சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்' ஆகியனவும் ஆகும். </p><h2>'ஹிந்து ராஷ்ட்ரம்'</h2><p>இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர்மூச்சுக் கோட்பாடுகளான சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை வென்றெடுக்க சாதி ஒழிப்பும் மதசார்பின்மையும் தவிர்க்கமுடியாத கட்டாயத் தேவைகளாகும். இத்தகைய சாதிஒழிப்புக்கும் மதச்சார்பின்மைக்கும் நேரெதிரான செயலதிட்டமே சங்கப்பரிவாரங்களின் மதசார்புத் தேசியவாதமான 'ஹிந்து ராஷ்ட்ரம்' என்கிற அரசியலாகும். இதற்கு எதிராக அல்லது மாற்றாக இன்னொரு மதசார்பு தேசியத்தை முன்னிறுத்த இயலாது. இந்நிலையில் தான் 'மதம் சார்ந்த அடையாள அரசியலுக்கு' எதிராக 'மதசார்பின்மை என்னும் அடையாளமற்ற அரசியல்' தேவையாகிறது. தேசிய இனம் என்னும் அடையாளமும், தேசிய இனங்களின் அய்க்கியமும், தேசிய இனங்களின் கூட்டாட்சி என்னும் அடிப்படையிலான தேசியமே மொழிவழி தேசியமாகும். அதனடிப்படையில், தமிழர்கள் தமிழ்த் தேசிய இனமாக எழுச்சிபெறவேண்டும் என்பதைப் போல ஒவ்வொரு தேசிய இனமும் மொழிவழி அடையாமாகவே அணிதிரள வேண்டும். அத்தகைய தேசிய இனங்களுக்கிடையில் நல்லிணக்கமான நட்புறவு மற்றும் ஐக்கியத்தைக் கட்டமைக்க வேண்டும். தேசிய இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலிருந்தே இந்திய அளவில் மதவாத தேசியத்திற்கு எதிரான மாற்று தேசியத்தை புதிதாகக் கட்டி எழுப்பமுடியும்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் என்கவுன்ட்டர்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-killed-in-an-encounter-in-karnataka-what-is-the-tamil-nadu-governments-stance-seeman-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-tamils-killed-in-an-encounter-in-karnataka-what-is-the-tamil-nadu-governments-stance-seeman-asks#comments</comments><guid isPermaLink="false">7852dfd2-0bb5-4f3f-850a-dd985edeee3a</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:25:54 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:25:54.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,நாதக,சீமான்,NTK,Seeman,தமிழகம்,Karnataka,கர்நாடகா,தமிழர்கள்,Tamils</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zgkt7bcr/depam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zgkt7bcr/depam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சாக்கியா அருகே காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் மரிமங்கலா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அடிக்கடி வேட்டைக்காரர்கள் புகுந்து மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறார்கள். இதனால் வனப்பகுதியில் ரோந்து பணியை வனத்துறையினர் அதிகரித்துள்ளனர். </p><p>இந்த நிலையில் சாக்கியா வனப்பகுதியில் மர்மநபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு அவர்கள் சென்றபோது வனத்துறையினர், வேட்டைக்காரர்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அந்த சமயத்தில் வேட்டைக்காரர்கள் சுட்டதில் வனக்காவலர் ஒருவர் காயம் அடைந்தார்.</p><p>பின்னர் வேட்டைக்காரர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது வனத்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதனால் அவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.</p><h2>தமிழர்கள்</h2><p>என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும்  ஹனூர் அருகே தோமியார்பாளையாவை சேர்ந்த அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் என்பதும் அவர்களின் பூர்வீக தமிழகம் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் வனத்துறையினர் 3 பேரை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றதை அறிந்து அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே சாக்கியா, தோமியார்பாளையா கிராம மக்கள், வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.</p><h2>வழக்கு தொடர வேண்டும்</h2><p>இந்நிலையில் கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்கள் மானை வேட்டையாட வந்தார்கள் என்று கர்நாடக அரசு பழிபோடுவதை தமிழ்நாடு அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா? இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கருத்து என்ன?</p><p>வனத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்குழுவை அனுப்புக. கர்நாடக வனத்துறை மீது கொலை வழக்குப்பதிந்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் குறித்து பேசும் புதிய அரசியலை முன்னெடுப்போம்: அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-champion-a-new-brand-of-politics-that-focuses-on-education-employment-technology-and-the-environment-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-champion-a-new-brand-of-politics-that-focuses-on-education-employment-technology-and-the-environment-annamalai#comments</comments><guid isPermaLink="false">3c4705e8-c42d-4eea-8fe7-a1de2c77a512</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:22:35 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:22:35.765Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,we the leaders,வீ தி லீடர்ஸ் அமைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zqhnycub/Untitled-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/zqhnycub/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி குறித்து பேசும் புதிய அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்வோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நமது இலக்கு 20 லட்சம் மரங்கள்</h2><p>இன்று மாலை, நமது வீ த லீடர்ஸ் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடியிருந்த சகோதர சகோதரிகளுடன் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி. இந்தப் பேரணியில் பங்கேற்றுச் சிறப்பித்த, சின்னக் கலைவாணர், அண்ணன் அமரர் விவேக்கின் மனைவி அருள்செல்விக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இயற்கையைப் பாதுகாப்பது என்பது வெறும் மரங்களை நடுவது மட்டும் அல்ல. நமது நீர்வளம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் தான். காவிரி நதி நீர் பிரச்சினை, மேகதாது அணைத் திட்டம் போன்ற விவகாரங்களில் தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். அதேபோல், நமது கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாத்து, மழைநீரை சேமிக்கும் வகையில் அவற்றை மேம்படுத்த வேண்டியதும் நமது கடமை.</p><p>கடந்த 16 நாட்களில் நமது வீ த லீடர்ஸ் சார்பில், 6,25,760 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கான நமது இலக்கு 20 லட்சம் மரங்கள். இன்னும் 15 நாட்களில் 14 லட்சம் மரங்களை நட்டு இந்த இலக்கை எட்ட வேண்டும். அண்ணன், சின்னக் கலைவாணர் அமரர் விவேக்கின் பசுமைப் பணியை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர் ஏற்கனவே 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உருவாக்கிய பசுமைப் பாதையை, வரும் மாதங்களில் மீதமுள்ள மரங்களை நட்டு, அவரது 1 கோடி மரங்கள் என்ற கனவை நிறைவேற்றும் பணியில் நாமும் பங்கெடுப்போம்.</p><h2>இளைஞர்கள் விரும்புவதில்லை</h2><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஒரு வேண்டுகோள். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ஆனால், உங்கள் அமைச்சரவையில் சிலர் லஞ்சம் பெறுவதாக வரும் குற்றச்சாட்டுகளை விசாரித்து, தவறு நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு.</p><p>இன்றைய இளைஞர்களின் குரலை நாம் கேட்க வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, அவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது, தனிப்பட்ட தாக்குதல்கள் செய்வது போன்ற, அநாகரிக அரசியலை, இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி குறித்து பேசும் புதிய அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.</p><p>நீர்நிலைகளை காப்போம்; மரங்களை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வளர்ப்போம்</a>; அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம். கிராமங்களை முன்னேற்றுவோம். நம் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்குவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் நாளை தொடங்குகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debates-on-demands-for-grants-begin-in-the-legislative-assembly-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debates-on-demands-for-grants-begin-in-the-legislative-assembly-tomorrow#comments</comments><guid isPermaLink="false">ce1f2047-9a78-4cde-a79f-1c6a6c8f620d</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:49:07 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:49:07.920Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,Budget,மானிய கோரிக்கை,Budget 2026,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/w8vqfukr/kolee.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/w8vqfukr/kolee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக பட்ஜெட்டை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நாளை தொடங்குகிறது.</p><h2>சட்டசபை கூட்டம்</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி, 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.dailythanthi.com/topic/budget">பொது பட்ஜெட்</a>டும், 6-ந் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/budget">வேளாண் பட்ஜெட்</a>டும் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில், கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.</p><h2>4 நாட்கள் விடுமுறை</h2><p>அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் இன்று, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.</p><p>இதனைத் தொடர்ந்து வியாழன்  (13-ந் தேதி) மற்றும் வெள்ளிக்கிழமை (14-ந் தேதி) சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. நேற்று (15-ந் தேதி) சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை நாளாகும். அடுத்த நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இப்படி, தொடர்ந்து 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது</p><h2>நாளை மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>இந்நிலையில் நாளை  17-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கின்றது. அதில் முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் தொடங்குகிறது.</p><p>முதல் நாளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-1-student-dies-after-being-electrocuted-while-charging-laptop</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-1-student-dies-after-being-electrocuted-while-charging-laptop#comments</comments><guid isPermaLink="false">2c13321f-6d69-4acd-a534-7a10636f7e0f</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:29:37 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:29:37.806Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>லேப்டாப்,மின்சாரம் தாக்கி உயிரிழப்பு,மாணவர்,Plus-1 student,Laptop,Charge,சார்ஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/27iovfw5/death.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/27iovfw5/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.</p><h2>மின்சாரம் தாக்கியது</h2><p>திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு கற்குழாய் சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில். பெயிண்டர். இவருக்கு கவிதா என்கிற மனைவியும், சீனிவாசன் (15), ஜீவா, ரித்தி என 3 மகன்களும் உள்ளனர். மூத்த மகனான சீனிவாசன் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் சீனிவாசன் தனது நண்பரின் லேப்டாப்பை வாங்கி கொண்டு வந்து வீட்டில் வைத்து கேம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து சார்ஜ் இல்லாததால் லேப்டாப்பை சார்ஜ் போடுவதற்காக சென்றார். அப்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">மின்சாரம் </a>தாக்கி அவர் மயங்கி கீழே விழுந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செந்தில் தனது மகனை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>