<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 30 Jul 2026 07:08:40 +0000</lastBuildDate><item><title>தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்:  அதிமுக சார்பில் 3ம் தேதி மலர் தூவி மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theeran-chinnamalais-221st-death-anniversary-aiadmk-to-pay-floral-tributes-on-the-3rd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theeran-chinnamalais-221st-death-anniversary-aiadmk-to-pay-floral-tributes-on-the-3rd#comments</comments><guid isPermaLink="false">31cd324a-9e5e-4a3e-9b99-35e869623c1a</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:02:26 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:02:26.503Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,AIADMK,நினைவு நாள்,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai,தீரன் சின்னமலை சிலை,Edapadi Palanisamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/7eitpf7m/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/7eitpf7m/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>221-வது நினைவு நாள்</h2><p>சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளான 3.8.2026 - திங்கட்கிழமை காலை 10 மணியளவில், சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருஉருவச் சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கும்,</p><p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். </p><p>அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><h2>ஈரோடு மணிமண்டபத்தில் மரியாதை</h2><p>ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்திருக்கும் தீரன் சின்னமலையுடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எஸ்.பி. வேலுமணி, கழக அமைப்புச் செயலாளர் கே.சி. கருப்பணன், சின்னசாமி செல்வராஜ், செ.ம. வேலுசாமி, செ. தாமோதரன், பி.சி. ராமசாமி, ஹரிபாஸ்கர், கே.சி. பழனிச்சாமி, வி.பி.சிவசுப்பிரமணி, ஆர்.மனோகரன், கே. கமலக்கண்ணன், கே.எஸ். தென்னரசு, எஸ். செல்வகுமார சின்னையன், ஆர்.என். கிட்டுசாமி, எஸ். பாலகிருஷ்ணன்,  ஆகியோர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.</p><p>இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள்; அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><h2>சேலம் நினைவுச் சின்னத்தில் மரியாதை</h2><p>சேலம் மாவட்டம், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பி. தங்கமணி, வெ. சரோஜா, ஆர். இளங்கோவன், எஸ். வெற்றிவேல், கே.பி.பி. பாஸ்கர் ஆகியோர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.</p><p>இந்நிகழ்ச்சியில், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>’எல் நினோ’ தாக்கம், பாதிப்புகள் குறித்து கண்காணிக்க 7 பேர் கொண்ட நிபுணர் குழு - தமிழ்நாடு அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-formation-of-a-seven-member-expert-committee-to-monitor-the-impact-and-effects-of-el-ni%C3%B1o</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-formation-of-a-seven-member-expert-committee-to-monitor-the-impact-and-effects-of-el-ni%C3%B1o#comments</comments><guid isPermaLink="false">cca96345-a58f-489c-9a11-78c6401274f4</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:00:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:00:06.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu Government,TN govt,பாதிப்புகள்,நிபுணர்கள் குழு,El Nino,எல் நினோ</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/62yxcamp/tn-fo.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/62yxcamp/tn-fo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>’எல் நினோ’ தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து கண்காணிக்க 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து <a href="https://www.dailythanthi.com/topic/tamil-nadu-government">தமிழ்நாடு அரசு</a> உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/yztzgcn3/first.jpg" /></figure><h2>தமிழ்நாடு பேரிடர் இடர் குறைப்பு முகமை</h2><p>மேலே முதலில் குறிப்பிடப்பட்ட அரசாணையில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (TNSDMA) உதவ ஒரு செயல்முறை முகமையை (Executive Agency) நிறுவவும், அதனை தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975-ன் கீழ் பதிவு செய்யவும் அரசு ஆணையிட்டது. </p><p>அதன்படி, மேலே இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட அரசாணையில் ஆணையிடப்பட்டவாறு, அந்த முகமையானது 'தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை' (TNSDMA) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேலே நான்காவதாகக் குறிப்பிடப்பட்ட அரசாணையில், 'தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை' (TNSDMA) என்பதன் பெயரை 'தமிழ்நாடு பேரிடர் இடர் குறைப்பு முகமை' (TNDRRA) என மாற்றி அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>தீவிர வானிலை நிகழ்வுகள்</h2><p>2. மேலே ஐந்தாவதாகக் குறிப்பிடப்பட்ட கடிதத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள், 2026-ஆம் ஆண்டில் கடுமையான 'எல் நினோ' (El Nino) நிகழ்வு உருவாக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, தென்மேற்குப் பருவமழை இயல்பு அளவைவிடக் குறைவாக இருக்கக்கூடும். </p><p>இது காவிரி ஆற்றில் நீர்வரத்து மற்றும் பாசன வசதிகளைப் பாதிக்கலாம். மேலும், வடகிழக்குப் பருவமழைக்காலத்தில் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தீவிர 'எல் நினோ'வால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் இடர் குறைப்பு முகமைக்கு (TNDRRA) ஆலோசனை வழங்க, ஒரு நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைப்பதற்கான முன்மொழிவை கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ளார்.</p> <h2>'எல் நினோ'</h2><p>3. வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளரின் மேற்கூறிய முன்மொழிவை அரசு பரிசீலித்தது. தீவிர 'எல் நினோ' நிகழ்வினால் ஏற்படக்கூடிய தாக்கங்களை அறிவியல் பூர்வமாக கண்காணிக்கவும் மதிப்பிடவும், அத்துடன் தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, 'பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005'-இன் பிரிவு 17(1)-ன் கீழ், காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், கடலோர வள மேலாண்மை, நகர்ப்புற உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் சிறப்பு அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு நிபுணர் ஆலோசனைக் குழுவை அரசு இதன் மூலம் பின்வருமாறு அமைக்கிறது:-</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/rpi82koq/char.jpg" /></figure><h2>முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள்</h2><p>4. நிபுணர் ஆலோசனைக் குழுவின் செயல்பாட்டு வரம்புகள் பின்வருமாறு இருக்க வேண்டும் என்றும் அரசு இதன் மூலம் ஆணையிடுகிறது:-</p><p>i. இக்குழு மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரத்தைக் கண்காணித்து, பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளை அடையாளம் காணுதல் மற்றும் 'தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை'யில் (TNDRRA) முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் (Early Warning Systems) குறித்த ஆலோசனைகளை வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.</p><p>ii. எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ளும் வகையில் உரிய நேரத்தில் போதுமான தயார்நிலையை உறுதிசெய்ய, பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வறட்சி மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இக்குழு ஆலோசனை வழங்கும்.</p><p>iii. இக்குழு 2026-27 மற்றும் 2027-28 ஆகிய ஆண்டுகளுக்கான காலகட்டத்தில் 'தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை'யில் (TNDRRA) செயல்படும்.</p><p>iv. இக்குழுவிற்கு எவ்விதக் கூட்டக் கட்டணமோ (sitting fees) அல்லது பயணப்படி / அகவிலைப்படியோ (TA/DA) வழங்கப்பட வேண்டியதில்லை.</p><p>v. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோரின் முன்மொழிவின் அடிப்படையில், எதிர்காலத்தில் இக்குழுவிற்கு கூட்டக் கட்டணம் அல்லது பயணப்படி/அகவிலைப்படி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>பிரதீப் ஜான்</h2><p>வறட்சி, வெள்ளத்தடுப்பு என எல்லாவற்றையும் முன்கூட்டியே கண்காணித்து முன்னெச்சரிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு இந்த குழு உதவு புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மக்களுக்கு, வானிலை குறித்த தகவல்களை மிக எளிய முறையில் அளித்து பல்வேறு விவரங்களையும் விளக்கி வந்த தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி திருநங்கையை கரம் பிடித்த ஐ.டி. ஊழியர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-employee-holds-transgender-womans-hand-despite-family-objections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-employee-holds-transgender-womans-hand-despite-family-objections#comments</comments><guid isPermaLink="false">015a09d6-c01a-4c60-8571-c68eda43ce5b</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:47:41 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:47:41.398Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,திருவள்ளூர்,Marriage,IT employee,transgender,திருநங்கை,Tiruvallur,ஐ.டி. ஊழியர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/xjx4ey2u/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/xjx4ey2u/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோபி,</p><p>திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை பகு தியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (வயது 30). இவர் சென்னையில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வருகிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வருகூராம்பட்டியைச் சேர்ந்தவர் கயல்விழி (28). திருநங்கையான இவருக்கும், பிரவீன்ராஜுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.</p><p>இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரவீன்ராஜை அவரது பெற்றோர் சென்னை யில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் அவரை அங்கிருந்து அழைத்து வந்து வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.</p><p>இதுகுறித்து அறிந்த பிரவீன்ராஜ், கயல்விழியிடம் கூறினர். இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மனித சட்ட உதவி மையத்தை அணுகினர். அங்கு அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று 2 பேரும் மாலை மாற்றி தாலி கட்டி சுயமரியாதை பதிவு திருமணம் செய்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடிக்கு போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க வேண்டும் -  மத்திய மந்திரியிடம் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boeing-and-airbus-aircraft-should-be-operated-to-thoothukudi-anitha-radhakrishnan-requests-union-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boeing-and-airbus-aircraft-should-be-operated-to-thoothukudi-anitha-radhakrishnan-requests-union-minister#comments</comments><guid isPermaLink="false">5940538f-d42f-4fb2-980f-ea5f9d5d98fd</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:32:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:32:43.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Union Minister,Anitha Radhakrishnan,அனிதா ராதாகிருஷ்ணன்,தூத்துக்குடி விமான நிலையம்,Thoothukudi Airport,விமான போக்குவரத்து துறை,விமானப் போக்குவரத்து,Civil Aviation,அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ,Civil Aviation Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/yz3alhnm/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/yz3alhnm/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி விமான நிலையத்தில் பெரிய ரக போயிங், ஏர்பஸ் விமானங்களை இயக்க வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். </p><h2>தொழில்கள் நிறைந்த மாவட்டம்</h2><p>டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இணைப்பு சேவையுடன் பெரிய விமானங்களை இயக்கினால் பயணிகளுக்கான கட்டணமும் குறையும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக  திமுக மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எல்.ஏ.வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து பெரிய ரக விமானங்களை இயக்க வலியுறுத்தி மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏராளமான தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். உப்பு உற்பத்தி, தீப்பெட்டி தயாரிப்பு போன்ற பாரம்பரிய தொழில்களுடன் அனல் மின் நிலையங்கள், ஸ்பிக் உரத் தொழிற்சாலை, கனநீர் தயாரிப்பு, சிர்கோனியம், DCW கெமிக்கல் ஆலை ஆகிய கனரக இயந்திர தொழிற்சாலைகள் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் என்ற வகையில் தொழில்வளம் பெருகியுள்ளது. </p><p>தற்போது வின் பாஸ்ட் நவீன கார் தொழிற்சாலை, உடன்குடி அனல் மின் நிலையம், குலசேகரபட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் போன்று புதிய தொழில்கள் வருகின்றன. மேலும் பல பெரிய தொழிற்சாலைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.</p><h2>போயிங் ஏர்பஸ் விமானங்கள்</h2><p>துறைமுகம், ரெயில் நிலையம், நான்கு வழிச் சாலைகள் இணைப்பு என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பெருகியுள்ளது. அண்டை மாவட்டமான திருநெல்வேலியில் கூடங்குளம் அணு மின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ திரவ எரிபொருள் நிறுவனம், விஜயநாராயணம் கட்டபொம்மன் கடற்படைத் தளம் போன்ற மத்திய அரசு நிறுவனங்களும் கங்கை கொண்டான் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன.</p><p>இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையம் நவீனப்படுத்தப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக விமான நிலையம் அமைந்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த பல துறையினர் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். தற்போது தூத்துக்குடி சென்னை 4 முறை, தூத்துக்குடி -பெங்களூரு 1 முறை என விமானம் இயக்கப்படுகிறது. சிறிய ரக விமானம் இயங்கி வரும் நிலையில் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் நிலையும் இருக்கிறது.</p><p>இந்நிலையில் தொழில் வளர்ச்சிக்கேற்ப விமானப் போக்குவரத்தை கூடுதல் படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் புது டெல்லி, கொல்கத்தா நகரங்களுக்கு சென்னை வழியாகவும், மும்பை பெரு நகருக்கு பெங்களூரு வழியாகவும், ஐதராபாத்திற்கு கோயம்புத்தூர் வழியாகவும் போயிங் ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்கிட வேண்டும். பெரிய ரக விமானங்கள் இயக்கப்படும் போது பயணிகளுக்கான கட்டணம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குறைவதற்கான </a>வாய்ப்புள்ளது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-18</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-18#comments</comments><guid isPermaLink="false">2c3e7ff1-8f6c-4b38-80f9-255e72c61a2c</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:29:58 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:29:58.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/v46ckxzc/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/v46ckxzc/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர், திருநெல்வேலி நகர்ப்புறம், கல்லிடைக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக பின்வருமாறு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பணகுடி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன் குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. </p><p>அதன்படி திருநெல்வேலி டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர் ,திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை கோட்டீஸ்வரன்நகர், சாஸ்திரிநகர், தீன்நகர், திருமங்கைநகர், செந்தமிழ்நகர், பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலி டவுன் SN ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம் ,சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழ ரத வீதி வீதி, போஸ் மார்க்கெட், A.P. மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம், மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரிநகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.</p><h2>காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை</h2><p>இதேபோல் கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். </p><p>அதன்படி திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோநகர், பரணிநகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதிநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் பின்வரும் நேரங்களில் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை. </p><p>அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி. </p><p>மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம்.  </p><p>கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி,  ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி. </p><p>கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர், கோவிந்தபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள் - நயினார் நாகேந்திரன் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dr-muthulakshmi-reddys-birthday-nainar-nagendran-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dr-muthulakshmi-reddys-birthday-nainar-nagendran-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">ae14c525-285d-4d2f-9202-76a63b34b694</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:13:19 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:13:19.106Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,birthday,பிறந்த நாள்,முத்துலட்சுமி ரெட்டி,Muthulakshmi Reddy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ks9o0nik/89.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ks9o0nik/89.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மருத்துவம், பெண்கள் கல்வி, சமூக நீதி ஆகிய துறைகளில் அழியாத தடம் பதித்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் பத்ம பூஷன் டாக்டர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">முத்துலட்சுமி ரெட்டி </a>அவர்களின் பிறந்தநாளில், அவரது உயர்ந்த சேவைகளையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்கிறோம்.</p><h2>அவ்வை இல்லம்</h2><p>ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட சிறுமிகளுக்காக அவ்வை இல்லம் தொடங்கி ஆதரவாக இருந்தவர், மேலும் 1954இல் அடையாறு புற்றுநோய் நிலையத்தை தொடங்கி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார்.</p><p>பெண்களின் உரிமைகள், குழந்தைகள் நலம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் மேற்கொண்ட முன்னோடி முயற்சிகள், தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டியாகத் திகழ்கின்றன. அவரது கனவுகளும் கொள்கைகளும் என்றும் நமக்கு ஊக்கமாக இருக்கட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வழக்குகளை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்: மாவட்ட நீதிபதிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-district-judges-to-conclude-sexual-assault-cases-within-2-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-district-judges-to-conclude-sexual-assault-cases-within-2-months#comments</comments><guid isPermaLink="false">1b36884a-c145-4443-9d98-357f16a4192d</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:07:58 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:07:58.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ஆந்திரா,Andhra Pradesh,rape,பெண்,Woman,பாலியல் பலாத்காரம்,பாலியல் வழக்கு,sexual case,ஐகோர்ட்டு உத்தரவு,Conclusion,High Court orders,முடிக்க வேண்டும்,2 மாதம்,2 months</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/bntoqjfz/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/bntoqjfz/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் 2 மாதத்துக்குள் பாலியல் வழக்குகளை விசாரித்து முடிக்க மாவட்ட கோர்ட்டு நீதிபதிகள் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81">சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது</a>.</p><h2>போலீஸ்காரர்கள் கைது</h2><p>ஆந்திராவில் இருந்து உறவினருடன் திருவண்ணாமலைக்கு சாமி கும்பிட இளம்பெண் ஒருவர் வந்தார். அவரை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் வேலை செய்யும் போலீஸ்காரர்கள் சுந்தர், சுரேஷ் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் போலீஸ்காரர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். </p><h2>சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு</h2><p>இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநில பெண், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் "பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவு 346 (1)-ன்படி பாலியல் வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து, 2 மாதத்துக்குள் அந்த பாலியல் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். போக்சோ வழக்கிலும், பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலத்தை 30 நாட்களுக்குள் பெற வேண்டும். ஆனால் இந்த 2 நடைமுறைகளும் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுவது இல்லை.  </p><p>2025-ம் ஆண்டு நவம்பர் 4-ந்தேதி என்னுடைய வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால் கடந்த ஏப்ரல் 7-ந்தேதி வரை குற்றச்சாட்டு பதிவுக்குபின் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதேபோல, ராணிப்பேட்டையில் 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கும் குறித்த நாளுக்குள் விசாரித்து முடிக்கப்படவில்லை. எனவே, என் வழக்கு உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">பாலியல் வழக்கு</a>களை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.</p><h2>தமிழ்நாட்டில் 1,920 பாலியல் பலாத்கார வழக்குகள்</h2><p>இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் இதுநாள் வரை 1,920 பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளன. அதில், ஆயிரத்து 55 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள 18 ஆயிரத்து 518 போக்சோ வழக்குகளில் 12 ஆயிரத்து 983 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன" என்பது உள்ளிட்ட விவரங்கள் கூறப்பட்டிருந்தது.</p><h2>பாலியல் வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க நடவடிக்கை</h2><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: </p><p>பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க அனைத்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிகளும், மகளிர் சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.</p><h2>வேலியே பயிரை மேய்ந்த கதை</h2><p>வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரே வேட்டைக்காரர்களாக மாறும் நிகழ்வுகள் மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதை போலீஸ் டி.ஜி.பி. உறுதி செய்யவேண்டும். அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை தேவையின்றி கீழ் கோர்ட்டுகள் தள்ளிவைக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.</p><h2>ஒரு ஆண்டுக்குள் போக்சோ வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">போக்சோ வழக்கு</a>களில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 30 நாட்களில் பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது சிறார்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, ஓராண்டுக்குள் வழக்கு விசாரணையை போக்சோ சிறப்பு கோர்ட்டுகள் முடிக்க வேண்டும்.</p><h2>6 புதிய போக்சோ சிறப்பு கோர்ட்டுகள்</h2><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மாநிலத்தில் 6 புதிய போக்சோ சிறப்பு கோர்ட்டுகளை தொடங்குவது குறித்து முடிவு எடுத்து, 2 மாதங்களில் இதுதொடர்பாக ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். </p><p>இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-water-flow-in-courtallam-waterfalls-bathing-banned-at-main-falls-and-five-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-water-flow-in-courtallam-waterfalls-bathing-banned-at-main-falls-and-five-falls#comments</comments><guid isPermaLink="false">da7e55a6-42f6-4b4d-8ed5-69be8610cff6</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:04:56 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:04:56.110Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,Courtala Falls,குற்றாலம் அருவி,குற்றாலம்,குற்றாலம் மெயின் அருவி,Courtallam fivefalls,குற்றாலம் அருவிகள்,ஐந்தருவி,Courtallam Main Falls</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/44sdn36h/patha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/44sdn36h/patha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் <a href="https://www.dailythanthi.com/topic/courtallam">குற்றாலம்</a> அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. </p><h2>குற்றாலம் அருவிகள்</h2><p>தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் முற்றிலும் குறைவாகவே விழுந்தது. புலியருவியும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது. புலியருவிக்கும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணி கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.</p><h2>குளிக்க தடை </h2><p>குற்றாலம், இலஞ்சி பகுதியில் மாலையிலும் சாரல் மழை பெய்தது. குற்றாலம், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p><p>இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவால் குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>சாரல் திருவிழா</h2><p>ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை ) தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. தற்போது அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சாரல் திருவிழாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்கபார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-orders-to-complete-metro-works-as-soon-as-possible</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-orders-to-complete-metro-works-as-soon-as-possible#comments</comments><guid isPermaLink="false">4a45f831-7ab7-4edf-a1b5-a99c5518ab2a</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:56:39 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:56:39.535Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,சென்னை,மெட்ரோ ரெயில்,சென்னை மெட்ரோ,chennai metro,Metro train,Metro Work,மெட்ரோ பணி,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/dw1whln6/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/dw1whln6/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மெட்ரோ ரெயில் பணிகள் ஆய்வு</h2><p>சென்னையில் 2-ம் கட்டமாக ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனை முதல்-அமைச்சர் விஜய் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மெட்ரோ ரெயில் மூலம் நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு விஜய் சென்றார். அங்குள்ள மெட்ரோ ரெயில் நிலைய தலைமையகத்தில் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார்.</p><p>நந்தனத்தில் ஆய்வு கூட்டத்தை முடித்துவிட்டு கார் மூலம் கிண்டி சென்றார். அங்குள்ள கத்திப்பாரா அருகே பட்ரோட்டில் இருந்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரையில் 6 தூண்களை ஒன்று சேர்க்கும் வகையில் 1,354 அடி தூரத்துக்கு 101 அடி உயரத்தில், 410 அடி ஆரத்துடன் கூடிய 'பேலன்ஸ்டு கேன்டிலீவர்' என்ற புதிய தொழில்நுட்பத்துடன் பிரமிப்பூட்டும் வகையில் மெட்ரோ வளைவு ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு</h2><p>இதனை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு, நவீன தொழில்நுட்பம் மற்றும் பணிகளின் சவால்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பணிகளை தரமாகவும், திட்டமிட்ட காலத்தில் முடிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் போரூரில் இருந்து டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் நவீன மெட்ரோ ரெயிலில் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு விஜய் சென்றார். அங்கு நடந்துள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.</p><p>இந்த நிலையில், மெட்ரோ ரெயில் திட்டங்களை குறித்த காலத்துக்குள் முடிக்க பணிகளை துரிதப்படுத்துமாறு மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கத்திப்பாராவின் மெட்ரோ கட்டுமானம், ஆளில்லா மெட்ரோ ரெயில் இயக்கம் தொடர்பான முன்னெடுப்புகள் சிறப்பாக இருப்பதாகவும் முதல்-அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் மெட்ரோ கட்டுமானப் பணியில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பகலுக்கு மாற்றாக இரவு நேர கட்டுமான பணிகளை கூடுதலாக மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு: இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyans-bail-plea-to-come-up-for-hearing-again-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyans-bail-plea-to-come-up-for-hearing-again-today#comments</comments><guid isPermaLink="false">85a1a3fc-0a8b-4512-948f-3f5de118383c</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:32:57 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:32:57.438Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,DMK,தமிழகம்,Thoothukudi,தூத்துக்குடி,ஜாமீன் மனு,bail plea,DMK MLA,திமுக எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/jgwvndco/inidae.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/jgwvndco/inidae.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி கோர்ட்டில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.</p><h2>மார்க்கண்டேயன் கைது</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/தூத்துக்குடி">தூத்துக்குடி</a> மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையில் பேசியதாகவும் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>ஜாமீன் மனு தள்ளுபடி</h2><p>இந்த வழக்கு தொடர்பாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் கடந்த 22-ந் தேதி தள்ளுபடி செய்தது.</p><h2>இடைக்கால ஜாமீன்</h2><p>இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் போடப்பட்ட வழக்கு சட்ட முரண்களுக்கு எதிரானது எனக்கூறி இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரியும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.</p><h2>இன்று விசாரணை</h2><p>இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நீதிபதி எஸ்.சுபாதேவி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, ஐகோர்ட்டில் எம்.எல்.ஏ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சில விளக்கங்களை கேட்டு ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி: நிறுவனம் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lizard-found-in-food-served-to-sanitation-workers-case-filed-against-company</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lizard-found-in-food-served-to-sanitation-workers-case-filed-against-company#comments</comments><guid isPermaLink="false">0ed8eb4b-0d0c-462a-bd88-d59b5d6bb211</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:32:22 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:32:22.012Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காலை உணவு,Sanitation workers,தூய்மை பணியாளர்கள்,Lizard,பல்லி,Aavadi,ஆவடி மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/xfldr4ia/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/xfldr4ia/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஆவடி மாநகராட்சி</h2><p>ஆவடி மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 700-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் சுமார் 21 மையங்களில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.</p><p>இந்த பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் தனியார் கேட்டரிங் நிறுவனம் மூலம் தினமும் காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உணவு சமைக்கப்பட்டு, அங்கிருந்து வாகனங்கள் மூலம் 21 மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு பணியாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.</p><h2>சாம்பாரில் பல்லி</h2><p>இந்த நிலையில், நேற்று காலை தூய்மை பணியாளர்களுக்கு சாம்பார் மற்றும் வெள்ளை சாதம் வழங்கப்பட்டது. ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா பகுதியில் பணியாற்றி வந்த சுமார் 50 தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது, சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி இருந் ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் மற்ற மையங்களில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களிடமும் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பல இடங்களில் பணியாளர்கள் உணவு சாப்பிடுவதை நிறுத்தினர்.</p><h2>வாந்தி-மயக்கம்</h2><p>இதற்கிடையில், பருத்திப்பட்டு பகுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட வசந்தா (வயது 50), எமிலி (50), விஜய லட்சுமி (50), குமார் (40) ஆகிய 4 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுடன் பணியாற்றிய மற்ற தூய்மை பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.</p><p>இதுகுறித்து ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா கூறுகையில், 'இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. ஒரு மையத்தில் சாம்பாரில் பல்லி இருந்தது தெரியவந்த உடனேயே மற்ற அனைத்து மையங்களிலும் அந்த உணவை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆய்வில் தவறு உறுதியானால், சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இந்த நிலையில், ஆவடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி இருந்த விவகாரத்தில் உணவு வழங்கிய நிறுவனத்தின் நிர்வாகி ஸ்ரீஹரி மீது ஆவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர் குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நள்ளிரவில் திடீர்  கனமழை; 15 விமானங்கள் தாமதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-heavy-rain-in-chennai-at-midnight-15-flights-delayed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-heavy-rain-in-chennai-at-midnight-15-flights-delayed#comments</comments><guid isPermaLink="false">8792f47b-1f4d-4722-8bb9-6320ccc34d51</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:08:35 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:08:35.642Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கனமழை,heavy rain,விமானங்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/kyd5ry7l/Plnae-images.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமானங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/kyd5ry7l/Plnae-images.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பாதையின் தாக்கத்தால், சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன்படி சென்னையில் நேற்று மாலையில் இருந்து பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.  </p> <h2>பரவலாக மழை</h2><p>அடையாறு, மயிலாப்பூர், தாம்பரம், பெருங்குடி, தரமணி, கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பதிவானது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p><h2>தாமதமாக இயக்கம்</h2><p>மீனம்பாக்கம் பகுதியில் கனமழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தில் 15 விமானங்களின் சேவை தாமதமானது. அபுதாபி, டெல்லி, கவுகாத்தி, கோவை, திருச்சி மற்றும் மும்பையில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பின்னர் தரையிறங்கின. அதேபோல், சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூரு, மும்பை, அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன. </p><h2>இன்றும் மழைக்கு வாய்ப்பு</h2><p>இதற்கிடையே, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது</p>]]></content:encoded></item><item><title>ஒரு மாதமாக அதிகரித்து வந்த மஞ்சள் விலை திடீர் சரிவு: என்ன காரணம்? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-drop-in-turmeric-prices-after-a-month-long-rise-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-drop-in-turmeric-prices-after-a-month-long-rise-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">461c6dab-8b84-4062-a46a-a3eff2fbc492</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:07:52 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:07:52.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Erode,ஈரோடு,மஞ்சள்,Erode Turmeric,விரலி மஞ்சள்,finger turmeric,மஞ்சள் விலை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hi9iwytj/yellow.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hi9iwytj/yellow.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வணிகம் (Business)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஒரு மாதமாக அதிகரித்து வந்த <a href="https://www.dailythanthi.com/topic/மஞ்சள்-விலை">மஞ்சள் விலை</a> திடீரென சரிவை சந்தித்துள்ளது. </p><h2>ஏலம் முறை</h2><p>ஈரோட்டில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் விளைவித்து கொண்டுவரும் பொருட்கள் ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.  அந்த வகையில், மஞ்சள், கொப்பரை, நெல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையாகின்றன. </p><h2>ரூ.2 ஆயிரம் சரிவு</h2><p>கடந்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி விரலி மஞ்சள் குவிண்டால் (100 கிலோ), தரத்திற்கு ஏற்ப ரூ.11,206 முதல் ரூ.14,269 வரையும், கிழங்கு ரூ.10,429 முதல் ரூ.13,140 வரையும் விற்பனையானது. </p><p>கடந்த 20-ந் தேதி அதிகபட்சமாக, விரலி மஞ்சள் ரூ.12,967 முதல் ரூ.19,779 வரை விற்பனை செய்யப்பட்டது. இப்படி, ஒரே மாதத்தில் ரூ.4,500 வரை விலை உயர்ந்த மஞ்சள் விலை, தற்போது ரூ.2 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. </p><h2>வரத்து அதிகரிப்பு</h2><p>தாவது, நேற்று விரலி மஞ்சள் ரூ.11,329 முதல் ரூ.18,311 வரையும், கிழங்கு ரூ.10,869 முதல் ரூ.16,616 வரையும் விற்பனை ஆனது. </p><p>மஞ்சள் விலை திடீர் சரிவு குறித்து, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, "கடந்த மாதம் மஞ்சள் தேவை அதிகரித்து, வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. இதனால், இருப்பு வைத்திருந்த மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். இந்த நிலையில், தேசிய அளவில் அனைத்து மார்க்கெட்டுகளிலும் மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை கூடுதலாக கிடைக்காமல் சரியத் தொடங்கியுள்ளது" என்றனர். </p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dr-muthulakshmi-reddys-birthday-chief-minister-vijay-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dr-muthulakshmi-reddys-birthday-chief-minister-vijay-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">3a1b3d44-311d-4a08-b41b-ae397a0b676f</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:01:37 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:01:37.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,முத்துலட்சுமி ரெட்டி,Muthulakshmi Reddy</media:keywords><media:content height="630" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/69dh9t3t/Untitled-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/69dh9t3t/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்</h2><p>தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முன்னேற்றத்திற்காகவும்</a>, ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!</p><p>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக 'அவ்வை இல்லம்', புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக 'அடையாறு புற்றுநோய் நிலையம்' போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார்.</p><h2>என்றும் நிலைத்திருக்கும்</h2><p>அவரது உயரிய லட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜாமீனில் வந்த ரவுடி.. மறுநாளே மனைவியை வெட்டிக்கொன்ற கொடூரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-released-on-bail-hacks-wife-to-death-the-very-next-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-released-on-bail-hacks-wife-to-death-the-very-next-day#comments</comments><guid isPermaLink="false">428a2053-0869-4908-8bd8-7c1de0269c76</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:56:33 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:56:33.190Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,கிரைம் செய்திகள்,சிவகங்கை,Sivagangai,கீழடி,Keeladi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/dkgtqvst/cikre.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/dkgtqvst/cikre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்புவனம், </p><p>சிறையில் இருந்து வந்த மறுநாளே தனது மனைவியை, ரவுடி வெட்டிக்கொன்றார். இதனால் தாயை இழந்து அவர்களுடைய குழந்தைகள் தவித்து வரு்கிறார்கள்.</p><h2>பல்வேறு வழக்குகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/sivagangai">சிவகங்கை</a> மாவட்டம் கீழடி அருகே சொட்டதட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோக ராஜா (வயது 29). இவருடைய மனைவி பாண்டிச்செல்வி (25). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவுடியாக வலம் வந்த யோகராஜா மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>மனைவி கொலை</h2><p>ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று நேற்று முன்தினம் மாலை யோகராஜா, சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கும், மனைவி பாண்டிச்செல்விக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.</p><p> இதில் ஆத்திரம் அடைந்த யோகராஜா அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவல் அறிந்து மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், கீழடி இன்ஸ்பெக்டர் மயில் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பாண்டிச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக யோகராஜாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>குழந்தைகள் தவிப்பு</h2><p>சிறையில் இருந்து வந்த மறுநாளே மனைவியை ரவுடி வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாண்டிச்செல்வியை இழந்து அவருடைய 2 குழந்தைகளும் தவித்து வரு்கிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி - விரைவில் கைது?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-corruption-case-senthil-balaji-files-petition-seeking-anticipatory-bail</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-corruption-case-senthil-balaji-files-petition-seeking-anticipatory-bail#comments</comments><guid isPermaLink="false">bb807bdf-afa3-4f09-9d5a-c887491413b6</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:25:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:25:15.589Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,செந்தில் பாலாஜி,டாஸ்மாக் ஊழல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/f1reql23/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/f1reql23/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>அடுக்கடுக்கான வழக்கு</h2><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.</p><p>தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.</p><h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p>இந்த நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் நேற்று முன்தினம் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர். </p><p>இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.</p><h2>செந்தில் பாலாஜியிடம் விசாரணை</h2><p>செந்தில்பாலாஜி சென்னை ஆழ்வார்பேட்டை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கிருந்துதான் அவர் தினமும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார். நேற்று காலையில் இந்த ஓட்டலுக்கும், லஞ்சஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு யுவராஜ் தலைமையில், 3 அதிகாரிகள் சென்றனர்.</p><p>அங்கு செந்தில்பாலாஜி தங்கியிருந்த அறையில், செந்தில்பாலாஜி முன்னிலையில் சோதனை நடத்தினார்கள். பிற்பகலில் சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சோதனையின்போது, செந்தில்பாலாஜியிடம் சில ஆவணங்களை காட்டி விசாரணை நடத்தப்பட்டது. லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணைக்கு, செந்தில்பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.</p><h2>முன்ஜாமின் மனு தள்ளுபடி</h2><p>இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்தவிதமான ஆதரமும் இல்லை; பொத்தம் பொதுவாக செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகிகள் செய்த குற்றத்திற்காக செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டுவது சரியல்ல என வாதிட்டார்.</p><p>இதனையடுத்து காவல் துறை தரப்பில் ஆஜரான வக்கீல், “100 கோடி முறைகேடு புகாரின் புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கினால் விசாரணை முற்றிலுமாக பாதிக்கப்படும்; வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டிய இருப்பதால் அவருக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது” என வாதிட்டார்.</p><h2>விரைவில் கைது?</h2><p>இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><p>முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியை தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத் துறை விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சமூக வலைதளங்களில் போலி தகவல் பரவுவதை தடுக்க விரைவுக் குழுக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-protests-prompt-action-rapid-response-teams-formed-to-curb-the-spread-of-fake-information-on-social-media</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-protests-prompt-action-rapid-response-teams-formed-to-curb-the-spread-of-fake-information-on-social-media#comments</comments><guid isPermaLink="false">e4492f07-bb00-4663-8a96-fbe387dc6674</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:02:35 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:02:35.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,Tamilnadu,டெல்லி,தமிழகம்,மத்திய அரசு,Central Govt,social media,சமூக வலைதளங்கள்,Fake News,மாணவர்கள் போராட்டம்,Students protest,போலி செய்திகள்,cockroach janata party,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/sm7kysel/infopr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/sm7kysel/infopr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் எதிரொலியாக சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்களை தடுக்க மத்திய அரசு தனது அமைச்சகங்கள், துறைகள் வாரியாக விரைவுக் குழுக்களை அமைக்க உள்ளது.</p><h2>தர்மேந்திர பிரதான் பதவி விலகல்</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று, மத்திய கல்வி மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து கரப்பான் ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இளைஞர்களிடம் ஆதரவு பெருகியது. போராட்டம் தீவிரம் அடைந்ததால் மந்திரி பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார்.</p><h2>'ஜென் இசட்'</h2><p>'ஜென் இசட்' தலைமுறையினரிடம் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டதே அதிகப்படியானவர்கள் டெல்லியில் ஒன்றுகூடியதற்கு காரணமாக கூறப்படுகிறது. </p><p>இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எழுத்து, வீடியோ மற்றும் புகைப்பட வடிவில் பரப்பப்படும் போலியான தகவல்களை முறியடித்து, உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><h2>விரைவுக் குழுக்கள்</h2><p>அதன்படி, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலியான தகவல்களை உடனுக்குடன் கண்டுபிடிக்க விரைவுக் குழுக்களை வேகமாக அமைக்குமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>அதன்படி, தங்களை மையப்படுத்தி வரும் போலியான தகவல்களை நிகழ்நேர அடிப்படையில் கண்டுபிடித்து, அதிகாரப்பூர்வ சமூக வலைதளபக்கத்தில் அதுபற்றிய உண்மை தகவல்களை 2 மணி நேரத்துக்குள் பதிவிட வேண்டும் என்று அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>உண்மைத்தன்மையுடன் பதிவுகள்</h2><p>போலி தகவல்களை ஒடுக்க பயன்படுத்தப்படும் பதிவுகள் 200 வார்த்தைகளை தாண்டக்கூடாது. அதேபோல அந்த பதிவுகள் துல்லியமான உண்மைத்தன்மையுடன் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஏற்படுத்த உள்ள விரைவு குழுக்களை சேர்ந்தவர்களுக்கு நிபுணர்களை கொண்டு பயிலரங்கங்கள் நடத்தி பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெற்றிலையின் மருத்துவ ரகசியங்கள்... பலருக்கும் தெரியாத ஆரோக்கிய நன்மைகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-medicinal-secrets-of-betel-leaves-health-benefits-that-many-people-dont-know-about</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-medicinal-secrets-of-betel-leaves-health-benefits-that-many-people-dont-know-about#comments</comments><guid isPermaLink="false">3b9f29ba-9f20-4be5-a40e-9d30c6d66339</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:54:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:54:28.910Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆரோக்கியம்,நன்மைகள்,வெற்றிலை,betel leaf,beneficial health</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/1cqqyz43/88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/1cqqyz43/88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>வாய் சிவப்பதற்காக பயன்படுத்தக்கூடிய வெற்றிலையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெற்றிலை கொடி வகையை சேர்ந்தது. வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.</p><h2>ஆரோக்கிய நன்மை</h2><p>இந்தியாவில், திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போது, கடவுளுக்கு வெற்றிலைப் படைக்கப்படுகிறது மற்றும் மரியாதைக்கான அடையாளமாக வயதானவர்களுக்கும் வெற்றிலைக் கட்டு கொடுக்கப்படுகிறது. இந்த பளபளப்பான, இதய வடிவிலான இலைகளில் மறைந்துள்ள பெரிய அளவிலான ஆரோக்கிய நன்மைகளை நாம் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.</p><h2>தாய்ப்பால் சுரப்பி</h2><p>2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும். உடலுக்கு வெப்பம் தரும் வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது. வெற்றிலையை போடுவதால் ஈறுகளில் இருக்கின்ற வலி, ரத்த கசிவை நீக்கி, பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. பலர் பலமான விருந்துக்குப் பிறகு வெற்றிலை போடுவர், சிலர் அடிக்கடி வெற்றிலைப் போடுவதை ஒரு பழக்கமாகவே வைத்திருப்பர். ​​​​இந்தியாவில் மத சடங்குகளின் போது வெற்றிலை குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கிறது.</p><h2>ஞாபக சக்தி</h2><p>வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது. நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும். </p><h2>முடி உதிர்வு பிரச்சினை தீர்வு</h2><p>வெற்றிலையைத் தொடர்ந்து பயன்படுத்துவது முடி வேகமாக வளர உதவுகிறது. வெற்றிலையைத் தொடர்ந்து பயன்படுத்தினால், முடி உதிர்வு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். மேலும், அவை முடியின் பொலிவை அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரவும் உதவுகிறது. வெற்றிலையின் சிகிச்சை பண்புகள் அரிப்பு, பொடுகு மற்றும் தலைமுடி வெடிப்புகளுக்குச் சிகிச்சையளிக்க உதவுகிறது.</p><h2>உடல் எடை குறையும்</h2><p>அளவோடு வெற்றிலை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும். வெற்றிலை வாய் துர்நாற்றத்தை போக்கும். வெற்றிலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும். கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.</p><h2>வலி நிவாரணி</h2><p>வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணி, இது வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. வெட்டுக்கள், சிராய்ப்புகள், சினப்புகள் காரணமாக ஏற்படும் வலியைப் போக்க இதைப் பயன்படுத்தலாம். கொழுந்து வெற்றிலையை பேஸ்ட் போல அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">வெற்றிலை</a> சாறு உடலின் உள்ளே ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி நோயாளிகளை 1 கி.மீ. தூரம் சுமந்து செல்லும் மக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-carrying-patients-on-stretchers-for-1-km-due-to-lack-of-road-facilities</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-carrying-patients-on-stretchers-for-1-km-due-to-lack-of-road-facilities#comments</comments><guid isPermaLink="false">90304751-c8a4-429d-8c2e-bc0b1e94e2ba</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:50:03 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:50:03.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,கோத்தகிரி,Kothagiri,சாலை வசதி,Road facility</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/16f9csob/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/16f9csob/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><h2>நடைபாதை</h2><p>நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட இடுகொரை அருள்நகர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியையொட்டி இந்த கிராமம் அமைந்து உள்ளதால், இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கோத்தகிரியில் இருந்து கிராமத்துக்கு செல்ல இடுகொரை ஹட்டி வரை தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. </p><p>அங்கிருந்து இடுகொரை அருள்நகர் செல்வதற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் 6 அடி அகலத்தில் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த வழியாக கிராம மக்கள் நடந்து சென்று வந்தனர். ஆனால், அந்த நடைபாதை புதுப்பிக்கப்படாததால் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதோடு, ஒற்றையடி பாதையாக மாறியது. இதனால் கிராம மக்களில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், சிகிச்சைக்காக கோத்தகிரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லை.</p><h2>தொட்டில் கட்டி...</h2><p>இதன் காரணமாக கிராம மக்கள் தொட்டில் கட்டி நோயாளிகளை தோளில் சுமந்து, 1 கி.மீ. தொலைவில் உள்ள இடுகொரை ஹட்டிக்கு சென்று அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருகின்றனர். அவ்வாறு தேயிலை தோட்டத்திற்கு நடுவே செல்லும்போது, வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, பழுதடைந்த நடைபாதையை சற்று அகலப்படுத்தி ஆம்புலன்ஸ் சென்று வரும் வகையில் தார் சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><p>இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இடுகொரை அருள்நகரை சேர்ந்த ஞானபிரகாஷ் (வயது 53) என்பவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் தொட்டில் கட்டி, அவரை சிகிச்சைக்காக கிராம இளைஞர்கள் தோளில் சுமந்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விட்டு, மீண்டும் அவரது வீட்டுக்கு சுமந்து சென்றனர். இதற்கிடையே சமீபத்தில் சிகிச்சை பலனின்றி ஞானபிரகாஷ் இறந்தார்.</p><h2>தார் சாலை</h2><p>இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வனவிலங்குகள் நட மாட்டம் அதிகம் உள்ள இடுகொரை அருள்நகர் கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. இதனால் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் தினமும் 1 கி.மீ. தொலைவிற்கு வனப்பகுதி வழியாக வனவிலங்குகள் தாக்கி விடுமோ என அச்சத்துடன் கரடு, முரடான ஒற்றையடி பாதை வழியாக நடந்து சென்று வருகின்றனர்.</p><p>அவசர சிகிச்சைக்கு நோயாளி களை தொட்டில் கட்டி சுமந்து செல்ல வேண்டிய சிரமமான நிலை உள்ளது. இவ்வாறு நோயாளிகள், வனவிலங்கு தாக்குதலுக்கு உள்ளானவர்களை தொட்டில் கட்டி சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ், வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தார் சாலை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே முறைகேடுகளும் நீட் வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன! - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-and-neet-question-paper-leaks-continue-only-in-bjp-ruled-states-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-and-neet-question-paper-leaks-continue-only-in-bjp-ruled-states-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">7fa36a21-a31a-4c41-9cd6-eee079fe23b5</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:49:57 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:49:57.197Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,NEET,நீட்,நீட் வினாத்தாள் கசிவு,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,NEET question paper leak</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/q0ll9fmx/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/q0ll9fmx/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் விவகாரத்தில் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்த அநியாயத்திற்குப் பிறகும் மவுனம் காப்பது ஏன்?  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வினாத்தாள் பேரம்</h2><p>பாஜக கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளும் நீட் வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன! </p><p>மராட்டியம் லாத்தூர் மருத்துவமனையில் ரூ.5 லட்சத்திற்கு வினாத்தாள் பேரம் பேசப்பட்டு, தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே (ஏப்ரல் 23) (Samsung Fold7) போனில் 132 கேள்விகள் புகைப்படம் எடுக்கப்பட்டு கசிந்துள்ளன. மேலும் ரூ.30,000-க்கு PhonePe மூலம் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு கேரளா முதல் ராஜஸ்தான் வரை வாட்ஸ்அப் வழியே பரவியுள்ளது என சிபிஐ அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.</p><p>பிரதமர் நரேந்திர மோடியும், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னவிஸ்சும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?</p><h2>ஒரு பயனும் இல்லை!</h2><p>இதையெல்லாம் மறைக்க நேற்று அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட "ஹேக்-ப்ரூப்/ஆண்டி-பேப்பர் லீக்" சட்டமும், சிறப்பு நீதிமன்றங்கள், 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் போன்ற காகித அறிவிப்புகளும் வெறும் கண் துடைப்பு நாடகமே அன்றி வேறில்லை! வினாத்தாள் கசிவைத் தடுக்கத் துப்பில்லாத பாஜக அரசு கொண்டு வரும் இந்த போலி சட்டங்களால் ஒரு பயனும் இல்லை!</p><p>கோடிக்கணக்கான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாணவர்களின் </a>எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்த அநியாயத்திற்குப் பிறகும் மவுனம் காப்பது ஏன்? </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமா செய்ய காரணம் என்ன? - 4 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட சபாநாயகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-reason-for-resigning-speaker-orders-4-mlas-to-provide-an-explanation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-reason-for-resigning-speaker-orders-4-mlas-to-provide-an-explanation#comments</comments><guid isPermaLink="false">0d664963-1219-4f63-9ae2-423f21a1aa0f</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:33:34 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:33:34.372Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Tamilnadu,அதிமுக,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Edappadi Palanisami,அதிமுக எம்.எல்.ஏ.க்கள்,எடப்பாடி  பழனிசாமி,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,TVK Government,AIADMK MLAs,Speaker J.C.D. Prabhakar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/i1ct95xr/addmk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/i1ct95xr/addmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அ.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களும் ஆகஸ்டு 4-ந் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/jcd-prabhakar">சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</a> அழைப்பு விடுத்துள்ளார். </p><h2>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்</h2><p>அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். </p><h2>சபாநாயகர் அழைப்பு</h2><p>இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டப்படி தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கும்படி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளித்திருந்தார். இந்த புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி 4 பேருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/jcd-prabhakar">சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</a> அழைப்பு விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளித்தனர். </p><h2>ஆகஸ்டு 4-ந் தேதி</h2><p>இந்த நிலையில் மீண்டும் விளக்கம் அளிக்க 30-ந் தேதி (இன்று) வரும்படி 4 பேருக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமியும் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார்.இந்த நிலையில் ஆஜராக வேண்டிய தேதியை வரும் ஆகஸ்டு 4-ந் தேதிக்கு மாற்றி சட்டசபை செயலகம் அறிவுறுத்தியுள்ளது. </p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அளித்த விளக்கத்தின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ளது. அந்த விளக்கங்களை சபாநாயகர் தந்த பிறகுதான் சபாநாயகர் முன்பு ஆஜராவது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே கூறியிருக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/athletes-with-record-achievements-can-apply-for-padma-awards-thoothukudi-collector-informs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/athletes-with-record-achievements-can-apply-for-padma-awards-thoothukudi-collector-informs#comments</comments><guid isPermaLink="false">0a7f0cd9-f449-442c-b994-23e0c7b0ddd2</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:20:55 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:20:55.063Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Collector information,கலெக்டர் தகவல்,விளையாட்டுத்துறை,Sports,apply,விண்ணப்பிக்கலாம்,பத்ம விருதுகள்,Padma awards,Achievements,சாதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/g4owpvht/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/g4owpvht/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விளையாட்டு வீரர்கள்</a> 2027-ம் ஆண்டிற்கான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பத்ம விருதுகள் </a>பெற வருகிற 31-ம் தேதிக்குள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">விண்ணப்பிக்கலாம்</a> என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D">தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>இந்திய அரசால் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், பொதுச்சேவை, விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த சாதனை புரிந்த தனி நபர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.</p><h2>2027-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள்</h2><p>அந்த வகையில் விளையாட்டுத் துறையில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், மலையேற்றம், விளையாட்டுத் துறையை மேம்படுத்தியவர்கள் மற்றும் ஊக்கப்படுத்தியவர்கள், பன்னாட்டு அளவிலான போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள், பன்னாட்டு அளவில் யோகா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் ஆகி சாதனையாளர்களுக்கு 2027-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.</p><h2>விளையாட்டுத்துறை</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை படைத்த தகுதியான நபர்கள், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான awards.gov.in வாயிலாக விண்ணப்பங்களைப் பெற்று, வரும் 31.7.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாளர்.</p>]]></content:encoded></item><item><title>கணவருடன் தகராறு: அடி தாங்க முடியாமல் தெருவுக்கு ஓடிய பெண்.. அடுத்து நடந்த கொடூரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-with-husband-woman-runs-onto-the-street-unable-to-bear-the-blows-the-horrific-incident-that-followed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-with-husband-woman-runs-onto-the-street-unable-to-bear-the-blows-the-horrific-incident-that-followed#comments</comments><guid isPermaLink="false">5165121c-d3d7-44d9-8da9-e3583bfd2df1</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:58:47 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:58:47.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Karaikudi,காரைக்குடி,கிரைம் செய்திகள்,சிவகங்கை,Sivagangai,குடும்ப பிரச்சினை,மனைவி கொலை,Wife murdered,family issue</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4zjzdzlm/too.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4zjzdzlm/too.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காரைக்குடி, </p><p>மனைவியின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்ததில் கல் தூணில் தலை மோதி அப்பெண் உயிரிழந்தார். இந்த கொடூர செயலை செய்த 2-வது கணவர் போலீசில் சரண் அடைந்தார்.</p><h2>திருமணம்</h2><p>சிவகங்கை மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/karaikudi">காரைக்குடி</a> அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37) இவர் கொட்டகை போடும் தொழில் செய்து வந்தார். சாக்கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் உய்யவந்தாள் (40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இவர் தென்னை ஓலை பின்னும் தொழில் செய்து வந்தார்.</p><p>பிரகாஷ் தனது தொழில் ரீதியாக தென்னை ஓலைகளை வாங்க அடிக்கடி உய்யவந்தாளை சந்தித்து வந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்த 6 மாதங்களுக்கு முன்பு பிரகாசும், உய்யவந்தாளும் திருமணம் செய்து கொண்டனர். சென்னைக்கு சென்ற இவர்கள் மீண்டும் சாக்கோட்டைக்கு வந்து தங்களது தொழிலை செய்து வந்தனர்.</p><h2>குடும்ப பிரச்சினை</h2><p>கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் பிரகாஷ் ஆத்திரம் அடைந்து மனைவி உய்யவந்தாளை கடுமையாக தாக்கினார். வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த உய்யவந்தாளை விரட்டினார்.</p><h2>கொடூர கொலை</h2><p>மனைவியின் தலைமுடியை பிடித்து தெருவில் இருந்து வீட்டுக்கு தரதரவென இழுத்துச்சென்றார். அப்போது அங்கிருந்த கல்தூணில் உய்யவந்தாளின் தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.</p><p>உடனடியாக மனைவி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷ், மனைவியின் உடலை வீட்டுக்குள் வைத்துவிட்டு, உடலின் மேலே போர்வையை போர்த்திவிட்டு நேரடியாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம்: ஈரோடு மாவட்டத்தில் ஆக. 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-local-holiday-on-aug-3-in-erode-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-local-holiday-on-aug-3-in-erode-district#comments</comments><guid isPermaLink="false">c0a881d6-abae-49b4-998f-8233b728f5b0</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:53:37 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:53:37.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரோடு,Local Holiday,உள்ளூர் விடுமுறை,மாவட்டம்,Erode District</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/vl2m2oib/87.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/vl2m2oib/87.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><h2>உள்ளூர் விடுமுறை</h2><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான வருகிற 3-ந்தேதி அன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும்.</p><h2>வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது</h2><p>இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற ஆகஸ்ட் 22-ந்தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் விடுமுறை அல்ல என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">உள்ளூர் விடுமுறை</a> நாளான வருகிற 3-ந்தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணி: 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-changes-in-the-service-of-12-express-trains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-changes-in-the-service-of-12-express-trains#comments</comments><guid isPermaLink="false">b48a3796-6c57-4a96-9b53-b011b155344a</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:52:26 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:52:26.310Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எக்ஸ்பிரஸ் ரெயில்,Southern Railway,Express trains,ரெயில்,ரெயில்வே கோட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/w3smair3/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/w3smair3/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி யஷ்வந்த்பூர் -மங்களூரு சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் (16565) வருகிற 2-ந்தேதி யும், மங்களூரு சென்ட்ரல் -யஷ்வந்த்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16566) வருகிற 3-ந்தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து அதிகாலை 5.10 மணிக்கு கிளம்ப வேண்டிய கே.எஸ்.ஆர். பெங்களூரு -எர்ணாகுளம் சந்திப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 26651) நாளை மறுநாள் (சனிக்கிழமை), 2, 3, 4-ந்தேதிகளில் பெங்களூரு கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து புறப்படும்.</p><h2>கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்</h2><p>கன்னியாகுமரியில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் 2-ந்தேதிகளில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி -கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16525) மாற்றுப்பாதையில் அதாவது பைப்பன ஹள்ளியில் இருந்து எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வரை இயக் கப்படும். இதன் காரணமாக இந்த ரெயில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையங்களில் நிற்காது.</p><p>கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய கே.எஸ்.ஆர். பெங்களூரு -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16526) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் எஸ்.எம்.வி.டி. பெங்களூருவிலிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும்.</p><p>கோவை சந்திப்பிலிருந்து நாளை மறுநாள் 2, 3-ந்தேதிகளில் காலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை -கே.எஸ்.ஆர். பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22666), கிருஷ்ணராஜபுரம் முதல் கே.எஸ்.ஆர். பெங்களூரு வரையிலான வழித்தடத்தில் பகுதிய ளவு ரத்து செய்யப்பட்டு, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு நோக்கி மாற்றியமைக்கப்படும்.</p><p>கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய கே.எஸ்.ஆர். பெங்களூரு -கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22665) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் எஸ்.எம்.வி.டி. பெங்களூருவிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும். வருகிற 3-ந்தேதி இயக்கப்படும் எர்ணாகுளம் சந்திப்பு -கே.எஸ்.ஆர். பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 26652) கிருஷ்ணராஜபுரத்துடன் நிறுத்தப்படும். கிருஷ்ணராஜபுரம் முதல் கே.எஸ்.ஆர். பெங்களூரு வரை இயக்கப்படாது.</p><h2>லோக்மான்ய திலக்</h2><p>யஸ்வந்த்பூரிலிருந்து பிற்பகல் 3.55 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ள யஸ்வந்த்பூர் -சேலம் ரெயில் (வண்டி எண் 16211) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் பனஸ்வாடியிலி ருந்து மாலை 4.22 மணிக்கு கிளம்பி சேலம் சந்திப்பு வரை இயக்கப்படும். சேலம் சந்திப்பிலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட திட்ட மிடப்பட்டுள்ள சேலம் -யஸ்வந்த்பூர் ரெயில் (வண்டி எண் 16212) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் பனஸ்வாடியுடன் நிறுத்தப்படும். பனஸ்வாடி முதல் யஸ்வந்த்பூர் வரை இயக்கப்படாது.</p><p>லோக்மான்ய திலக் முனையம் -கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 11013) இன்று (வியாழக்கிழமை) நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 1, 2-ந்தேதிகளில் யலஹங்கா ஓசூர் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதன் காரணமாக பெங்களூரு கிழக்கு. பெங்களூரு கண் டோன்மென்ட் மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது.</p><p>இதேபோல் கோவை -லோக்மான்ய திலக் முனையம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 11014) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் ஒசூர் -யலஹங்கா இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.</p><p>இதன் காரணமாக பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் எரித்துக்கொலை - வாலிபர் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-burnt-to-death-in-erode-over-fake-love-affair-youth-commits-brutal-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-burnt-to-death-in-erode-over-fake-love-affair-youth-commits-brutal-act#comments</comments><guid isPermaLink="false">196e5e20-64d3-48ce-9b41-a74278c1d08c</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:06:31 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:06:31.403Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,young woman,இளம்பெண்,கள்ளக்காதல்,Erode,ஈரோடு,கிரைம் செய்திகள்,fake love</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/n0x118v6/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/n0x118v6/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><h2>'இன்ஸ்டாகிராம்' பழக்கம்</h2><p>ஈரோடு பாரதி நகரை சேர்ந்த சென்னப் பன் என்பவரது மகள் வினோதினி (வயது 24). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனிஷ் (4) என்கிற மகன் உள்ளான். வினோதினிக்கும். சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக வினோதினி மகனுடன் தனது பெற்றோர் வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் வசித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் வினோதினிக்கு 'இன்ஸ்டாகிராம்' மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் நவீன் என்கிற நவநீதிகிருஷ்ணன் (26) என் பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் அவ்வப்போது வினோதினியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது.</p><h2>கடும் வாக்குவாதம்</h2><p>இதற்கிடையில் நவநீதகிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காததால், கடந்த சில நாட்களாக வினோதினி அவருடன் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இதனால், வினோதினி வேறு ஒரு நபருடன் பழகி வருவதாக நவநீதகிருஷ்ணன் சந்தேகம் அடைந்து, வினோதினியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதைத்தொடர்ந்து ஈரோட்டுக்கு வந்த நவநீதகிருஷ்ணன், சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் மகனுடன் வினோதினி இருப்பதை உறுதி செய்தபிறகு வீட்டுக்குள் நுழைந்து வினோதினியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><h2>உடலில் தீ வைப்பு</h2><p>இதில் ஆத்திரம் அடைந்த நவநீதகிருஷ்ணன், வீட்டில் இருந்த மண்எண் ணெயை எடுத்துவந்து வினோதினி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தீ உடலில் பற்றி எரிந்ததால் வலியால் அலறி துடித்த வினோதினி அருகில் இருந்த நவநீதகிருஷ்ணனையும் இறுக பிடித்துள்ளார். வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதைப்பார்த்த நவநீதகிருஷ்ணன் தீக்காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.</p><p>இதையடுத்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வினோதினியை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வினோதினியிடம், ஈரோடு கூடுதல் மகளிர் கோர்ட்டு நீதிபதி அன்புசெல்வி நேரில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதில், நவநீ தகிருஷ்ணன்தான் தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார் என்று வினோதினி தெரிவித்துள்ளார்.</p><h2>கொலை வழக்குப்பதிவு</h2><p>தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து நவநீதகிருஷ்ணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வந்தனர். நவநீதகிருஷ்ணன் இரு கைகள் மற்றும் முகத்தில் தீக்காயம் அடைந்து, கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போலீசாருக்கு தெரியவந்தது.</p><p>இதுகுறித்து போலீசார் கூறுகையில், நவநீதகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ததும், உடனடியாக கைது செய்யப்பட்டு கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்படுவார். தொடர்ந்து, மருத்துவமனையில் நவநீதகி ருஷ்ணனை கண்காணித்து வருகிறோம், என்றனர்.</p><p>கள்ளக்காதல் விவகாரத்தால் இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்தூணில் தலையை மோதி மனைவியை கொன்ற வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-killing-wife-by-hitting-head-on-stone-pillar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-killing-wife-by-hitting-head-on-stone-pillar#comments</comments><guid isPermaLink="false">9d6f2d76-81d3-4b94-be7c-b6eeb496bd92</guid><pubDate>Thu, 30 Jul 2026 02:04:57 +0000</pubDate><atom:updated>2026-07-30T02:04:57.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர் கைது,கொலை,சிவகங்கை,Sivagangai,மனைவி,தலை,மோதி,கல்தூண்,Stone pillar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/f6df0csy/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்தூணில் தலையை மோதி மனைவி கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/f6df0csy/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88">குடும்ப பிரச்சினை</a> காரணமாக கல்தூணில் தலையை மோதி மனைவியை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88">கொன்ற வாலிபரை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>குடும்ப பிரச்சினை</h2><p>சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் உய்யவந்தாள் (வயது 40). இவருக்கும் கொட்டகை போடும் தொழிலாளி பிரகாஷ்(37) என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், தம்பதியரிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.</p><h2>கல்தூணில் தலையை மோதி மனைவி கொலை; வாலிபர் கைது</h2><p>நேற்றும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், மனைவி உய்யவந்தாளை தாக்கியுள்ளார். மேலும் தப்பியோடிய மனைவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கல்தூணில் தலை மோதியதில் உய்யவந்தாள் பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாஷ் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/600-mw-power-generation-affected-at-north-chennai-thermal-power-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/600-mw-power-generation-affected-at-north-chennai-thermal-power-station#comments</comments><guid isPermaLink="false">67b845e5-5942-46c4-a450-a1003c48b4b6</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:50:37 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:50:37.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,வடசென்னை,North Chennai,அனல்மின் நிலையம்,மின் உற்பத்தி,thermal power station,North Chennai Thermal Power Station,வடசென்னை அனல் மின் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8k6nbzth/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8k6nbzth/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் அமைந்துள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில், முதல் அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>600 மெகாவாட் பாதிப்பு</h2><p>வடசென்னை அனல்மின் நிலையத்தில் தலா 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.</p><p>இந்நிலையில், முதல் அலகில் 'பாய்லர் டியூப் பஞ்சர்' (Boiler Tube Puncture) ஏற்பட்டதால், நேற்று அதிகாலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.</p><h2>கூடுதல் சவால்</h2><p>தற்போது கோடை வெயில் காரணமாக மாநிலம் முழுவதும் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டிருப்பது தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது. கோளாறை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உற்பத்தியை </a>விரைவில் மீண்டும் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில்
விரைவில் தீர்ப்பு - ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-verdict-soon-in-case-related-to-appointment-of-vice-chancellors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-verdict-soon-in-case-related-to-appointment-of-vice-chancellors#comments</comments><guid isPermaLink="false">472d7611-fda8-4530-a292-558a70c8f6e9</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:31:30 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:31:30.332Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,Chennai High Court,University Vice-Chancellors,Appointment,நியமனம்,துணைவேந்தர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/zo5lhhqg/highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/zo5lhhqg/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு விரைவாக பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>துணை வேந்தர்கள்</h2><p>தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த சட்டத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தடையை ரத்து செய்து, இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.</p><p>அப்போது, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, துணை வேந்தர் நியமனங்களை மேற்கொள்ள மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசும் உத்தரவாதம் அளித்தது. இந்த நிலையில், வெங்கடாஜலபதி தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.</p><h2>தீர்வு காண வேண்டும்</h2><p>அதேபோல, தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிகளை நிரப்ப <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">ஐகோர்ட்டு</a> ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகார குழுவை நியமிக்க கோரி செங்கல்பட்டைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கையும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது மனுதாரர் பாஸ்கர் தரப்பில், "மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் இல்லை. இதனால், கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்க முடியவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் பல்கலைக்கழக பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளன. இதற்கு தீர்வு காண வேண்டும்" என்று வாதிடப்பட்டது.</p><h2>சட்டம் அமலில் உள்ளது</h2><p>தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, "சுப்ரீம் கோர்ட்டில் அரசு அளித்த உத்தரவாதம் காரணமாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் முடங்கியுள்ளது, இதற்கு தீர்வு காணும் வகையில் தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்ய தமிழக அரசை அனுமதிக்க வேண்டும். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த சட்டம் இன்னும் அமலில் உள்ளதாகவே கருத வேண்டும். அந்த சட்டத்தின் அடிப்படையில் துணை வேந்தர்கள் நியமனம் மேற்கொள்ள அனுமதித்தால் மகிழ்ச்சி" என்று கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பு விரைவாக பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-10</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-10#comments</comments><guid isPermaLink="false">b60ee615-bd03-4d35-8142-75a32573a204</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:30:14 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:30:14.482Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/f4mfxvds/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/f4mfxvds/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 30.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>தாம்பரம்</strong>: நியூ ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை, பட்டேல் நகர், ஜி.எஸ்.டி. சாலை, இரும்புலியூர், மங்களாபுரம், கலைஞர் நெடுஞ்சாலை, எஸ்.வி. ராகவன் சாலை, திருவள்ளுவர் தெரு, பாலாஜி தெரு, காந்தி தெரு, சூரத்தம்மன் கோயில் தெரு, மணிமேகலை தெரு, சிலப்பதிகாரம் தெரு, குண்டலகேசி தெரு, பாரதிதாசன் தெரு, நாவலர் தெரு, லட்சுமி தெரு, உமா நகர், டி.கே.சி. தெரு, அம்மன் கோயில் தெரு, வெங்கடசாமி தெரு, மணி தெரு, பாலகிருஷ்ணன் தெரு, கலைவாணி தெரு, கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், பீர்க்கன்காரணை, ஸ்ரீராம் நகர், ஜாய் நகர், மாணிக்கம் நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜம்மாள் நகர், மாருதி நகர், சதாசிவம் நகர், தேனுபுரீஸ்வரர் கோயில், டெல்லஸ் அவென்யூ, எல்.டி.எஸ். அவென்யூ, சாந்தா நகர், அன்னை அருள் பள்ளி, மணவாள நகர், ஜெயேந்திர நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்கியம் நகர், நவநீதம் நகர், வி.ஜி.பி. பொன் நகர், கிருஷ்ணா நகர், பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம், பாரத் நகர், வெங்கடாத்ரி நகர், ஏ.எல்.எஸ். கிரீன் லேண்ட், கனகம்மன் கோவில் தெரு.</p><p><strong>மேடவாக்கம்</strong>: மல்லேஸ் மற்றும் கே.ஜி. அபார்ட்மெண்ட், நூக்கம்பாளையம் சாலை, ஆர்.சி. ப்ளாசம் அபார்ட்மெண்ட், நேசமணி நகர், வரதாபுரம், ஏரிக்கரை சாலை.</p><p><strong>திருமுல்லைவாயல்</strong>: வெள்ளானுர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளயம், பொத்தூர் ,அரிக்கமேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மதுகுளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர், டி.எச் .சாலை , எடபாளையம் சாலை,ரெட்ஹில்ஸ்.</p><p><strong>கும்மிடிப்பூண்டி</strong>: சிறுபுழல்பேட்டை, பில்லக்குப்பம், முத்து ரெட்டி கண்டிகை, சூரவாரி கண்டிகை, புது ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, பார்த்தபாளையம், கல்லூர், எருக்குவாய், ராமச்சேரி கண்டிகை, எல்லையம்மன் நகர், புதுப்பேட்டை.</p><p><strong>கொட்டிவாக்கம்</strong>: ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர் 1 வது முதல் 6வது தெரு வரை, ராஜா கார்டன், ராஜாகல்யாணி தெரு, குப்பம் சாலை, நியூ காலனி 1 வது முதல் 3வது தெரு வரை, கற்பகாம்பாள் நகர் 1 வது முதல் 3வது தெரு வரை, ஸ்ரீனிவாசபுரம் 1 வது மற்றும் 2வது தெரு, நஜீமா அவென்யூ, இ.சி.ஆர். பிரதான சாலை, திருவள்ளுவர் நகர் 39 வது முதல் 43வது குறுக்குத் தெரு வரை, திருவள்ளுவர் நகர் 2 வது மற்றும் 7வது பிரதான சாலை, காவேரி நகர் 1 வது முதல் 6வது தெரு வரை, பேவாட்ச் புல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், தென்றல் H43 முதல் H50 வரை, முல்லை H70 முதல் H78 வரை அடுக்குமாடி குடியிருப்புகள்.</p><p><strong>பல்லாவரம்</strong>: ராஜீவ் காந்தி நகர், யாதவாள் தெரு, மகாவீர் சாலை, சுபம் நகர், அம்மன் நகர்.</p><p><strong>வேளச்சேரி</strong>: விஜயா நகர் 1வது பிரதான சாலை, கோல்டன் அவென்யூ, எம்.ஜி.ஆர். நகர் 10 வது முதல் 13வது தெரு, சி.டி.இ.எஸ், வெங்கடேஸ்வரா நகர் 6வது தெரு, தேவி கருமாரியம்மன் நகர், சக்திபவுனாம்பாள் தெரு.</p><p><strong>அண்ணாசாலை</strong>: பங்காரு நாய்க்கன் தெரு, குப்பமுத்து தெரு, ஜான் முகமது தெரு, லத்தூராம் தெரு, சையத் அப்துல்லா தெரு, சையத் நூர் தெரு, அப்துல் காதர் தெரு, புராசாகிப் தெரு, பூபேகம் தெரு, வெங்கடேசன் 1வது, 2வது தெரு, ரஜாஐதர் தெரு, அமீருனிசா பேகம் தெரு, குலாம் மொய்தீன் தெரு, குமாரசாமி தெரு, குருசாமி தெரு, மாருசாகிப் தெரு, திருவல்லிக்கேனி தெரு, சுவாமி சிவானந்தா சாலை, எல்லீஸ் ரோடு, வாலாஜா ரோடு, அப்பாவு தெரு, பச்சையப்பன் தெரு, பாலமுத்து தெரு, யுன்னீஸ் சாலி மெயின் தெரு, யுன்னீஸ் சாலி 1 வது முதல் 7 வது லேன், திப்பு சாகிப் தெரு, நல்லதம்பி தெரு, முக்தரனிஸா தெரு, காமராஜர் சாலை, நேப்பியார் பாலம் முதல் பிரஸிடென்ஸி கல்லூரி வரை, தாயார்சாகிப் தெரு மற்றும் லேன், ஔலியா சாகிப் தெரு மற்றும் லேன், பாரதி சாலை, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பைகிராப்ட்ஸ் </a>சாலை, வி.ஆர். பிள்ளை தெரு, அனுமந்தராயன் தெரு, கற்பூரகன்னியம்மன் கோயில் 1 வது முதல் 4வது தெரு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை, அக்பர் சாகிப் தெரு, சைடோஜி தெரு, பெல்ஸ் சாலை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்தது எப்படி? - பரபரப்பு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-fraud-happen-in-tasmac-sensational-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-fraud-happen-in-tasmac-sensational-information#comments</comments><guid isPermaLink="false">8791638c-1818-4f4e-a4aa-4dad3d2bc912</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:28:56 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:28:56.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,Tasmac shop,டாஸ்மாக் ஊழல்,லஞ்ச ஒழிப்பு போலீசார்,கட்சி நிதி,Party fund,tasmac bar,டாஸ்மாக் நிறுவனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/6p8etho7/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/6p8etho7/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், பரபரப்பு தகவல்கள் உள்ளன.</p><p><strong>விவரங்கள் வருமாறு:-</strong></p><h2>கட்சி நிதி</h2><p>டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அரசு அனுப்பிய புகார் கடிதத்தின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதுபான ஆலைகளில் மதுபானங்கள் கொள்முதல் செய்வது, பார்கள் நடத்துவது, வாகன போக்குவரத்து, பழைய பாட்டில் களை வாங்குவது, டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளை பணி நியமனம் செய்வது உள்ளிட்டவற்றில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் கூட்டாக சேர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடுகள் நடந்துள்ளன.</p><p>கொஞ்சம் கூட விதிமுறைகளை பின்பற்றாமல், அவர்கள் இஷ்டத்துக்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதைதவிர, 'பார்ட்டி பண்ட்' (கட்சி நிதி) என்ற பெயரில் கட்சி நிதியும் முறைகே டாக வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுப்பிரியர்களிடம் இருந்தும், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.</p><p>வெளிநாட்டு மதுபாட்டில்களுக்கு ரூ.500 வரை வசூலித்துள்ளார்கள். 'கரூர் கேங்' என்ற பெயரில் செயல்பட்டவர்கள் இந்த கட்டண வசூலில் ஈடுபட்டுள்ளனர். ரத்தேஷ்ராஜ் சண்முகவேலும், மூலனூர் கார்த்திக்கும் டாஸ் மாக்கில் நடந்த முறைகேடுகளுக்கு மூல காரணமாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் சொல்படி விசாகனும், மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகனும், பன்னீர் செல்வமும் மற்றும் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் செயல்பட்டுள்ளனர்.</p><h2>பார்கள் டெண்டர் முறைகேடு</h2><p>பார்கள் டெண்டர் விட்டதிலும் முறைகேடு நடந்துள்ளது. இவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே டெண்டரில் கலந்துகொள்ள அனுமதித்திருக்கிறார்கள். இதன்மூலம் அரசுக்கு கோவை வடக்கில் ரூ.17.27 கோடியும், கோவை தெற்கில் ரூ.13.58 கோடியும், நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.95 கோடியும் வருமான இழப்பு ஏற்பட்டது. இந்த வருமான இழப்பு 2022 மற்றும் 2023-ம் ஆண்டில் மட்டும் கணக்கிடப்பட் டுள்ளது. டாஸ்மாக் நிறுவனம், வாகனங்கள் பயன்பாட்டுக்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவிட்டு வருகிறது. இதிலும் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.</p><h2>மேலோட்டமாக...</h2><p>முதல் தகவல் அறிக்கையில் மொத்தமாக அரசுக்கு எவ்வளவு வருமான இழப்பு ஏற்பட்டது என்பதை குறிப்பிடவில்லை. மேலோட்டமாக ஒவ்வொரு பிரிவு வாரியாக நடந்த, குறிப்பாக பார்களில் நடந்த முறைகேடு விவரங்கள், மதுபிரியர்களிடம் அதிகமாக நடத்திய வசூல் வேட்டை மட்டுமே கூறப்பட்டுள்ளது.</p><p>2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் மூலம் மொத்தமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து முதல் தகவல் அறிக்கையில் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கூடுதலாக பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையில், அரசுக்கு ஏற்பட்ட முழுமையான வருமான இழப்பு பற்றி தெரிவிக்கப்படும் என்று லஞ்சஒழிப்புதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p>]]></content:encoded></item><item><title>இன்று கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-set-to-lash-down-today-do-you-know-which-districts-will-be-affected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-set-to-lash-down-today-do-you-know-which-districts-will-be-affected#comments</comments><guid isPermaLink="false">afc16dea-d461-4fc3-a066-3cda59bdb151</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:15:10 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:15:10.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,heavy rain,வானிலை அறிக்கை,வானிலை தகவல்,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/3dvyk7bj/kott.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/3dvyk7bj/kott.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (30-07-2026):</strong> <ins>நீலகிரி</ins> மற்றும் <ins>கோயம்புத்தூர்</ins> மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (31-07-2026</strong>):  கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>01-08-2026:</strong> கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>02-08-2026 முதல் 04-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>30-07-2026 முதல் 31-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>01-08-2026 மற்றும் 02-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>30-07-2026 முதல் 31-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><strong>01-08-2026 மற்றும் 02-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (30-07-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong>தமிழக கடலோரப்பகுதிகள்:</strong></p><p>30-07-2026: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>31-07-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong>01-08-2026 மற்றும் 02-08-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>30-07-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும்.</p><p><strong>31-07-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong>01-08-2026 மற்றும் 02-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <h2>அரபிக்கடல் பகுதிகள் :</h2><p><strong>30-07-2026 முதல் 02-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவறுக்கப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporations-financial-deficit-rises-to-rs-1970-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporations-financial-deficit-rises-to-rs-1970-crore#comments</comments><guid isPermaLink="false">69b1c81c-baab-4c2a-8f10-cf0ab24e2959</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:14:45 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:14:45.024Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,நிதி பற்றாக்குறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/tbqt3wps/corporation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/tbqt3wps/corporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மாமன்ற கூட்டத்தில் 3 மாதங்களாக கவுன்சிலர் நிதி ஒதுக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநகராட்சி நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக உயர்ந்துள்ளதாக கமிஷனர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>மன்ற கூட்டம்</h2><p>சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று. ஜூலை மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு, துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் சமீரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் நிலைக்குழு தலைவர் சர்பஜெயதாஸ் பேசியதாவது:-</p><p>2026-27-ம் ஆண்டுக்கான கவுன்சிலர்கள் வார்டு மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. புதிய அரசு பொறுப்பேற்று 3 மாதங்களாகியும் இதுவரை கவுன்சிலர் நிதி ஒதுக்கப்படவில்லை. கவுன்சிலர் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படாமல் இருப்பதால் அடிப்படை பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>நிலைக்குழு தலைவர் சிற்றரசு:-</h2><p>உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்காததால் பல பணிகள் முடிக்கப்படாமல் இருக்கிறது. சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இந்த நிலை இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் திட்டங்கள் அறிவித்தால் 60 நாட்களில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறும். தி.மு.க. கவுன்சிலர்களை மக்களை குறை சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டே தற்போதைய ஆட்சியாளர்கள் நிதியை ஒதுக்கவில்லை.</p><h2>மேயர் பிரியா:-</h2><p>பிப்ரவரி மாதத்துடன் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிகிறது. கவுன்சிலர் மேம்பாடு நிதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி </a>மூலதன நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. விரைந்து நிதி ஒதுக்க நகராட்சி நிர்வாக செயலாளரிடம் வலியுறுத்தப்படும்.</p><h2>ரூ.1,970 கோடி பற்றாக்குறை</h2><p>இதற்கு பதில் அளித்து கமிஷனர் சமீரன் பேசுகையில், 'சென்னை மாநகராட்சியின் மொத்த நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக உள்ளது. கவுன்சிலர்கள், பொதுமக்கள், மேம்பால பணிகள், வெள்ள தடுப்பு பணிகள் ஆகியவை மிக முக்கிய பணிகள் ஆகும். 2022-23-ம் ஆண்டு நிதி பற்றாக்குறை ரூ.325 கோடியாக இருந்தது. 2025-26-ம் ஆண்டு முடியும் போது அதாவது கடந்த மார்ச் மாதம் இறுதியுடன் நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலான பணம் நிலுவையில் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் கவுன்சிலர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் நிதியை ரத்து செய்யவில்லை. அடுத்த 3 மாதங்களில் நிதி சூழலை பொறுத்து நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.7 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-who-worked-for-125-days-gets-notice-to-pay-rs27-crore-in-tax</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-who-worked-for-125-days-gets-notice-to-pay-rs27-crore-in-tax#comments</comments><guid isPermaLink="false">fede43b2-bb3b-44e1-a797-afba07dc6b02</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:07:11 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:07:11.785Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்,பெண்,Woman,ஜி.எஸ்.டி.,Notice,பரபரப்பு,stir,நோட்டீஸ்,125 நாள் வேலை திட்டம்,125 days work,G.S.T.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/3jy5ezyc/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ருக்மணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/3jy5ezyc/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர், </p><p>திருப்பத்தூர் மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=125%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88">125 நாள் வேலை</a> செய்யும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">பெண்ணுக்கு</a>, ரூ.2.7 கோடி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%BF.">ஜி.எஸ்.டி.</a> செலுத்துமாறு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D">நோட்டீஸ் </a>வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p><h2>125 நாள் வேலை</h2><p>திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த புதூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி ருக்மணி (வயது 56). இவர் 125 நாள் வேலை திட்டத்தில் ஏரி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் 125 நாள் வேலை திட்டத்தில் வந்த கூலி பணத்தை எடுப்பதற்காக நேற்று சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார்.</p><h2>ரூ.2.7 கோடி வரி ஏய்ப்பு</h2><p>அங்கு வங்கியில் இருந்த ஊழியர்கள் நீங்கள் ஆர்.எம்.டிரேடர்ஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்துவதாகவும், அதன் மூலம் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.2 கோடியே 79 லட்சத்து 19 ஆயிரத்து 420 வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் ஆம்பூர் வட்ட வணிகவரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது. அதன்பேரில் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.</p><h2>பரபரப்பு</h2><p>இதனால் அதிர்ச்சியடைந்த ருக்மணி, தான் அதுபோன்று தொழில் நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்றும், 125 நாள் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார். 125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.7 கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இனி ஆண்டுதோறும் அரசின் திரைப்பட விருது அமைச்சர் ராஜ்மோகன் உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-confirms-that-government-film-awards-will-be-presented-annually-from-now-on</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-confirms-that-government-film-awards-will-be-presented-annually-from-now-on#comments</comments><guid isPermaLink="false">0b7f815a-ce3a-4835-96d4-a0ea5af4f272</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:03:24 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:03:24.614Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சினிமா,Cinema,awards,திரைப்பட விருதுகள்,அமைச்சர் ராஜ்மோகன்,Rajmohan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/49v71y4a/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/49v71y4a/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் நடந்த ஒரு சினிமா விழாவில் தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் இயக்குனரும், நடிகருமான ரவி மரியா பேசும்போது, 'திரைத்துறையினரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் விருது வழங்கி வருகிறது. ஆனால் இந்த விருதுகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையோ, 8 ஆண்டுகளுக்கு ஒருமுறையோ சேர்த்து சேர்த்து கொடுக்கிறார்கள். சில சமயம் விருது கிடைக்கும்போது சம்பந்தப்பட்ட கலைஞர்கள் இல்லாமல்கூட போகிறார்கள். விருதுகள் உடனே கொடுத்தால் தான் மதிப்பாக இருக்கும்', என வேண்டுகோள் விடுத்தார்.</p>  <p>இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, "5 ஆண்டுக்கு ஒரு முறை கொடுத்தால் அது விருது கிடையாது. ஆண்டுதோறும் கொடுத்தால் தான் விருது. முதல்-அமைச்சர் விஜய்யின் அனுமதி பெற்று. இனி வெள்ளித்திரை, சின்னத்திரை, தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டு தோறும் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>உற்சவர் சிலை சேதமடைந்ததால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆடி கருட சேவை ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-varadaraja-perumal-aadi-garuda-service-cancelled-due-to-damage-to-the-festival-idol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-varadaraja-perumal-aadi-garuda-service-cancelled-due-to-damage-to-the-festival-idol#comments</comments><guid isPermaLink="false">c91074c4-1e69-49fb-9f26-37918450a440</guid><pubDate>Thu, 30 Jul 2026 01:00:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T01:00:15.165Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காஞ்சிபுரம்,கருட சேவை,வரதராஜ பெருமாள் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8bq1ilib/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8bq1ilib/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><h2>ஆடி கருட சேவை</h2><p>காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற இருந்த ஆடி கருட சேவை உற்சவம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. </p><p>இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த 3-ந்தேதி உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றபோது, கவசங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியின்போது பழமையான உற்சவர் சிலையில் சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.</p><h2>இந்து சமய அறநிலையத்துறை</h2><p>இதையடுத்து, சிலையை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் அனுமதி பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ஆடி கருட சேவை உற்சவத்தை நடத்த முடியவில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>மேலும், இன்னும் சில நாட்களில் தேவையான அனுமதிகள் கிடைக்கும் என்றும், அதன்பின் உற்சவர் சிலை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக பரவும் தவறான தகவல் - சரிபார்ப்பகம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/misinformation-circulating-regarding-the-kamarajar-breakfast-scheme-fact-check-units-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/misinformation-circulating-regarding-the-kamarajar-breakfast-scheme-fact-check-units-clarification#comments</comments><guid isPermaLink="false">f37619f1-67f2-4053-a44d-4ad5b7f9cc2d</guid><pubDate>Thu, 30 Jul 2026 00:59:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T00:59:15.974Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fact Check Unit,Fact check,தவறான தகவல்,misinformation,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,Fact-check,காமராஜர் காலை உணவுத் திட்டம்,Kamarajar Breakfast Scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/6pikl2gi/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/6pikl2gi/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக பரவும் தவறான தகவல்</p><h2>பரவும் செய்தி</h2><p>காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பான பணிகள், தற்பொழுது புதிதாக தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.</p><h2>உண்மை என்ன ?</h2><p>இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், "கடந்த 2022-ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் நகர்ப்புறப் பகுதிகளில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்ட சேவை வழங்குநர்கள் (Service Providers) மூலம்  உணவு தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. தற்பொழுதும் அதே நடைமுறையே <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பின்பற்றப்படுகிறது</a>" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர் !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் நேரில் ஆய்வு - மின்சார வாரியம் நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-tariff-hike-complaint-in-person-inspection-of-370-lakh-homes-electricity-board-takes-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-tariff-hike-complaint-in-person-inspection-of-370-lakh-homes-electricity-board-takes-action#comments</comments><guid isPermaLink="false">ec6c9c0c-713c-4def-9426-d1748c49c8ec</guid><pubDate>Thu, 30 Jul 2026 00:59:12 +0000</pubDate><atom:updated>2026-07-30T00:59:12.060Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity Board,inspection,மின்சார வாரியம்,Complaint,புகார்,Electricity tariff hike,மின் கட்டண உயர்வு,நேரில் ஆய்வு</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/cbgm7eoy/eb.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/cbgm7eoy/eb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.</p><h2>மின் கட்டண உயர்வு</h2><p>தமிழகத்தில் ஜூலை மாத மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்தது. இதையடுத்து. மின் நுகர்வு கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மின்சார வாரியம்</a> முடிவு செய்துள்ளது. இதற்காக மூத்த அதிகாரிகள் மூலம் மறு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் வழங்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதம் மின் நுகர்வில் அதிக மாற்றம் காணப்பட்ட 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்த ஆய்வு  மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வை ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><h2>இணைப்புகள் ஆய்வு</h2><p>இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர் 25 இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 இணைப்புகளையும், கோட்டப் பொறியாளர் 75 இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50, உதவி கோட்டப் பொறியாளர் 100, வருவாய் புலனாய்வு பிரிவு கணக்கு அலுவலர் 150, மூத்த மதிப்பீட்டு அலுவலர் 150, வருவாய் பிரிவு உதவி கணக்கு அலுவலர் 100. மதிப்பீட்டு அலுவலர் 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வி.அருண் ராய் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-trading-high-profit-claim-private-school-teacher-cheated-rs-57-45-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-trading-high-profit-claim-private-school-teacher-cheated-rs-57-45-lakh#comments</comments><guid isPermaLink="false">508b52bb-092e-422f-a059-ffb305019794</guid><pubDate>Thu, 30 Jul 2026 00:17:36 +0000</pubDate><atom:updated>2026-07-30T00:17:36.314Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,மோசடி,தஞ்சாவூர்,Duping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/1umd1e30/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/1umd1e30/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 41 வயது நிரம்பியவர் தற்போது தஞ்சையில் தங்கி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந்தேதி அவரது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.</p><p>மேலும் மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது ஆன்லைன் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திட்டம் குறித்து கூறி அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.</p><p>தொடர்ந்து அந்த மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில் 11 தவணையாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ஆசிரியர் மொத்தம் ரூ.57 லட்சத்து 45 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த மர்மநபர் கூறியது போன்று எவ்வித லாப பணமும் வரவில்லை. இதையடுத்து மர்மநபரை அவர் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது செல்போன் எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை ஆசிரியர் உணர்ந்துள்ளார்.</p><p>இது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசில் ஆசிரியர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆசிரியர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் உள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து பண மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கருணை திட்டத்துக்கு பொருத்தமான பெயர்</title><link>https://www.dailythanthi.com/others/thalayangam/a-suitable-name-for-the-compassionate-scheme</link><comments>https://www.dailythanthi.com/others/thalayangam/a-suitable-name-for-the-compassionate-scheme#comments</comments><guid isPermaLink="false">de4dc629-32ff-4655-ac0e-ab12c4f08ff4</guid><pubDate>Wed, 29 Jul 2026 23:59:30 +0000</pubDate><atom:updated>2026-07-29T23:59:30.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தலையங்கம்,Thalayangam,காலை உணவு திட்டம்,மதிய உணவு திட்டம்,காலை உணவு திட்டம் விரிவாக்கம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wl276i53/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wl276i53/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலையங்கம் (Thalayangam)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பள்ளி மாணவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் எல்லா முதல்-அமைச்சர்களின் பங்களிப்பும் இருக்கிறது. இந்த திட்டத்துக்கு பிதாமகன் பெருந்தலைவர் காமராஜர்தான் என்றாலும், அதற்கு தொடக்கவுரை எழுதியது நீதிக்கட்சிதான். 1920-ல் நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது. காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது சேரன்மகாதேவிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்ததால் கார் நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கி நின்ற காமராஜர், அங்கு ஒரு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்ததை பார்த்து அவனை அழைத்து, “நீ ஏன் பள்ளிக்கூடத்துக்குச் செல்லவில்லை?" என்று கேட்டார். அந்த நேரத்தில், அவர் முதல்-அமைச்சர் என்று தெரியாமல், "பள்ளிக்கூடத்துக்குப் போனால் யார் சோறு போடுவார்கள்?" என்று அந்த சிறுவன் அளித்த பதில் காமராஜரின் நெஞ்சை தொட்டது. "சோறு போட்டால் பள்ளிக்கூடம் போவாயா?" என்று அவர் கேட்டதற்கு, "ஓ! போவேனே" என்று சிறுவன் அளித்த பதில், மதிய உணவு திட்டத்துக்கான விதையை அவருடைய மனதில் விதைத்தது.</p><p>அந்த சிறுவனின் பதிலால் உந்தப்பட்டு, அவர் 1956-57-ம் ஆண்டு பட்ஜெட்டில் மதிய உணவு திட்டத்தை அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வந்தார். பள்ளிகளில் மாணவர் வருகை கூடியது. இதேபோல், சிறுவயதில் பசிக்கொடுமையை உணர்ந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., அனைத்து பள்ளிகளிலும் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது 'தினத்தந்தி' அதிபர் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், இந்த திட்டத்துக்காக முதல் சத்துணவு கூடத்தை தனது தந்தையார் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவாக திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில் கட்டிக்கொடுத்தார். முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு நேரில் சென்று அந்த சத்துணவு கூடத்தை திறந்து வைத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.</p><p>தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் வயிறார சத்துணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர். பின்பு, சத்துணவு சத்தான உணவாக இருக்கும் வகையில், சத்துணவோடு முட்டை வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது தினமும் முட்டை வழங்குவதையும், கலவை சாதம் வழங்குவதையும் நடைமுறைப்படுத்தினார். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்த நேரத்தில் சென்னை அசோக்நகர் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது காலை உணவு சாப்பிடாத மாணவிகள் சோர்வாக இருந்ததை பார்த்து, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார். இது மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.</p><p>முதல்-அமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த காலை உணவு திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரிவுபடுத்துவதாகவும், இந்த திட்டம் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் இனி காலை உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை 35 லட்சமாக உயரும். மாணவர்கள் வீட்டில் அவசர, அவசரமாக சாப்பிடும் நிலை மாறி பள்ளிகளுக்கு வந்து பசியாறிவிட்டு, ஏட்டு கல்வியை தொடருவார்கள். இதுமட்டுமல்லாமல், காலை உணவு திட்டத்துக்கு, பள்ளிகளில் உணவளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருந்தலைவர் காமராஜரின் பெயரையே சூட்டியுள்ளார். ஒரு உன்னத திட்டத்துக்கு அவரது கொள்கை தலைவரும், கருணைமிகு தலைவருமான காமராஜரின் பெயர் வைத்தது மிகப்பொருத்தமானது மட்டுமின்றி வரவேற்புக்குரியதும் ஆகும். காமராஜருடைய புகழுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்.</p>]]></content:encoded></item></channel></rss>