<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 05 Sep 2026 12:49:22 +0000</lastBuildDate><item><title>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தவெக அரசின் பழி வாங்கும் நடவடிக்கை - கே.என்.நேரு பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-bureau-raid-retaliatory-action-kn-nehru</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-bureau-raid-retaliatory-action-kn-nehru#comments</comments><guid isPermaLink="false">ccdcfb30-dcbc-461c-87dc-a321cce735a7</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:47:01 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:47:01.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,DMK,கே.என்.நேரு,லஞ்ச ஒழிப்புத்துறை,KNNehru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/fk38a2ej/nerhu33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[  கே.என்.நேரு பதில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/fk38a2ej/nerhu33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, அடையாறு, திருவான்மியூர் என 19 இடங்களிலும் சோதனை நடந்தது.</p><h2>லஞ்ச ஒழிப்பு துறை </h2><p>சென்னையில் ரவிச்சந்திரன் அலுவலகத்திலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி தில்லை நகரில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.</p><p>அரசு டெண்டர்களில் கட்சி நிதி என்ற பெயரில் சட்டவிரோதமாக நடந்த வசூல் தொடர்பாக சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>சோதனைக்கு முழு ஒத்துழைப்பு</h2><p>இந்தநிலையில், திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>என் வீட்டில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.</p><p>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். என்னை பொறுத்தவரை நான் எந்த தவறும் செய்யவில்லை. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி வெல்வோம்.அலுவலகத்தில் இருந்து வழக்கமான ஒரு பைல், வரவு செலவு கணக்கு எழுதி வைத்திருந்த துண்டு சீட்டை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.</p><h2>சட்டசபையில் கேள்வி எழுப்புவதால்</h2><p>சட்டசபையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால் என்னை மிரட்டுவதற்காக கூட இது போன்ற சோதனையை அவர்கள் செய்யலாம். இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான். எனது வீட்டில் 3வது முறை சோதனை நடைபெற்று உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை பணிகள்: தலைமைச்செயலாளர் நேரில் சென்று ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-works-chief-secretary-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-works-chief-secretary-inspects#comments</comments><guid isPermaLink="false">276968e5-963d-41bf-b858-e3d19df081db</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:44:25 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:44:25.168Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon,ஆய்வு,பணிகள்,தலைமைச்செயலாளர்,Preparation,Chief Secretary Inspection,நேரில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/nzzal505/sai.1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தலைமை செயலாளர் முனைவர் மு. சாய்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ வடகிழக்கு பருவமழை பணிகள்: தலைமைச்செயலாளர் நேரில் சென்று ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/nzzal505/sai.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்று தலைமை செயலாளர் மு. சாய்குமார், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>செப்டம்பர் மாதம்</h2><p>வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>இன்று  தலைமை செயலாளர் மு. சாய்குமார்,  வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  சென்னை மாநகராட்சியில் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், ஏரி மற்றும் கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றிடும் பணி உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/inspection">ஆய்வு </a>மேற்கொண்டார்.</p> <h2>மழைநீர் வடிகால் ஆய்வு</h2><p>தலைமைச் செயலாளர், அடையாறு மண்டலத்தில் ஐ.ஐ.டி. பகுதியிலிருந்து வெளிவரும் மழைநீரை பக்கிங்ஹாம் கால்வாயில் செலுத்தும் வகையில் டைடல் பார்க் பகுதியில் ரூ.13.52 கோடி மதிப்பீட்டில் 660 மீ. நீளத்தில் 3 மீ. x 3 மீ. அளவில் இரண்டு நீர்வழிப்பாதைகளாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகாலினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p> <figure><img alt="மழைநீர் வடிகாலினை பார்வையிட்டு ஆய்வு" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/zwlqm8g5/sai.2.jpg" /><figcaption>தலைமைச் செயலாளர்</figcaption></figure><h2>மேம்பாட்டு பணிகள்</h2><p>இதனை தொடர்ந்து, பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட மயிலை பாலாஜி நகர், 1ஆவது பிளாக் கால்வாயில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் 235 மீ. நீளம் மற்றும் 13 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகள், 4ஆவது பிளாக் பகுதி கால்வாயில் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் 207 மீ. நீளம் மற்றும் 14.40 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். </p> <h2>பள்ளிக்கரணை சதுப்பு நிலம்</h2><p>நிலுவையில் உள்ள 110 மீ. நீளத்திலான பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கால்வாயில் வெளியேறும் மழைநீரானது வேளச்சேரி, மேடவாக்கம் சாலைப் பகுதியில் உள்ள கால்வாயின் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு சென்றடையும். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள ராம் நகர் (தெற்கு), குபேரன் நகர், சதாசிவம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர்த் தேக்கமின்றி இக்கால்வாயின் வழியாக வெளியேறும்.</p> <h2>ஆய்வு</h2><p>பின்னர், வார்டு-189க்குட்பட்ட நாராயணபுரம் ஏரியில் நீர்வளத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியினையும், தண்ணீர் வெளியேற்றும் மதகு மற்றும் கால்வாயின் கட்டமைப்பினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>பக்கிங்ஹாம் கால்வாய்</h2><p>தொடர்ச்சியாக, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட ரேடியல் சாலை முதல் பெருங்குடி குப்பை கிடங்கு வரையிலான நெடுஞ்சாலைதுறையின் சாலை பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் உள்ள நீர் எளிதில் வெளியேறும் வகையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மற்றும் இந்த சாலையில் உள்ள 17 கல்வெர்ட்டுகளின் வழியே மழைநீர் தங்குதடையின்றி பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வண்டல்கள் தூர்வாரிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p> <h2>மழைநீர் வடிகால் பணி</h2><p>இதனை தொடர்ந்து, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-193க்குட்பட்ட துரைப்பாக்கம், ஓ.எம்.ஆர். சாலை பகுதியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பணிகள் நடைபெறும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறும் நீரை பக்கிங்ஹாம் கால்வாயுடன் சேர்ப்பதற்காக ரூபாய் 73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை பார்வையிட்டு, இப்பணியினை தொடர்ந்து மேற்கொண்டு, பக்கிங்ஹாம் கால்வாயில் இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p> <h2>ஆகாயத்தாமரை அகற்றும் பணி</h2><p>பின்னர், சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் மடுவு கால்வாயில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் தங்குதடையின்றி இந்த கால்வாயில் வெளியேறும் வகையில் பணிகளை விரைந்து முடித்திடவும், ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p> <figure><img alt="ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/1d5erlbu/sai.3.jpg" /><figcaption>ஆகாயத்தாமரை</figcaption></figure><h2>வடகிழக்கு பருவமழை பணிகள்</h2><p>வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய சேவை துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.</p><p>இந்த ஆய்வுகளின்போது, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் சுஞ்சோங்கம் ஜாதக் சிரு, நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் எம். வட்னேரே, மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன்,  மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மகேஸ்வரி ரவிக்குமார், (பெருங்குடி), டி. பாஸ்கர பாண்டியன், (சோழிங்கநல்லூர்), இணை ஆணையாளர் (பணிகள்) செ. சரவணன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மற்றும் மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்பட்டி: ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovilpatti-retired-forest-department-employee-commits-suicide-by-hanging-himself</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovilpatti-retired-forest-department-employee-commits-suicide-by-hanging-himself#comments</comments><guid isPermaLink="false">9bcd0b98-1054-411b-88ee-ecaff1dcf150</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:38:46 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:38:46.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Forest Department,வனத்துறை,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,Retired,ஓய்வு பெற்ற,Kovilpatti,கோவில்பட்டி,employee,ஊழியர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/cw7qg4nj/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூக்குப்போட்டு தற்கொலை..]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/cw7qg4nj/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1">ஓய்வுபெற்ற</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">வனத்துறை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">ஊழியர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர்</h2><p>தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பாபா நகரைச் சேர்ந்த மாடசாமி (வயது 65), வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். இவர் குடும்பத்தைப் பிரிந்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் கீழ்தளத்தில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் கழுகுமலையில் வசித்து வருகின்றனர். </p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று மாடசாமி தனது வீட்டில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>
தவெக அரசின் சாதனை: 100 நாட்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கியது தான்  - ரகுபதி குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-thaweka-governments-achievement-it-borrowed-rs-45000-crore-in-100-days-raghupathi-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-thaweka-governments-achievement-it-borrowed-rs-45000-crore-in-100-days-raghupathi-alleges#comments</comments><guid isPermaLink="false">b9905293-4722-440b-8f37-82b9cc6058ad</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:22:35 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:22:35.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,DMK,கே.என்.நேரு,ரகுபதி,KNRNehru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/pla00ubs/ragupathi33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  ரகுபதி குற்றச்சாட்டு
]]></media:title><media:description type="html"><![CDATA[  தவெக அரசின் சாதனை  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/pla00ubs/ragupathi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>விஜய் ஆட்சிக்கு வந்தால், பாலாறும் தேனாறும் ஓடும் என்றனர். ஆனால், 100 நாட்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கியதுதான் தவெக ஆட்சியின் சாதனை என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டி உள்ளார்.</p><p>புதுக்கேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ-வுமான ரகுபதி பேசியதாவது, </p><h2>விஜய் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஒடும் </h2><p>தவெகவினர் ரீல்ஸ் மூலமாகவே ஆட்சிக்கு வந்தனர். அவர்களின் எந்தச் சாதனையையும் சொல்லி, அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. இவர் (விஜய்) ஆட்சிக்கு வந்தால், பாலாறும் தேனாறும் ஓடும் என்றனர். ஆனால், 100 நாள்களில் ரூ. 45,000 கோடி கடன் வாங்கியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. இதில் ஒரு பைசாகூட மூலதனச் செலவுக்கு செலவிடப்படவில்லை.</p><h2>பட மடங்கு கடன்</h2><p>நாங்கள் (திமுக) கடன் மட்டுமே வைத்துவிட்டு சென்றதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், எங்களைவிட பல மடங்கு கடன் வாங்கப் போகிறவர்கள்தான் இந்த ஆட்சி.</p><p>ஒரு திட்டத்தை அறிவிப்பர்; ஆனால், எந்த இடம் என்று சொல்ல மாட்டார்கள். ரூ. 1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் சட்டசபை அலுவலகம் என்றார்கள். அப்படியெனில், ஒரு சதுர அடிக்கு ரூ. 6,000 வருகிறது. ஆனால், எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பது குறித்து கூற மாட்டார்கள்.</p><p>நாங்கள் செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரத்தை உருவாக்கினோம். அதற்கான அடிப்படைச் செலவுகளைச் செய்துவிட்டோம். ஆனால், அதனை ரத்து செய்து விட்டார்கள்.</p><h2>ரீல்ஸ் ஆட்சி</h2><p>ராணிப்பேட்டையில் ஜேகே டயர் தொழிற்சாலையை மூட வேண்டும் என சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ சொல்கிறார். அந்த தொழிற்சாலையை மூட முடியாது என அமைச்சர் கீர்த்தனா பதிலளிக்கிறார்.</p><p>ஆனால், அந்த இடத்தில் தொழிற்சாலையே இல்லை. இல்லாத தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும், பாதுகாப்போம் என்றும் சொல்கின்றனர். அவர்கள் ரீல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இது ரியல் ஆட்சி கிடையாது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டை ஆட்கள் வைத்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வீட்டை சுத்தம் செய்து கொடுத்துவிட்டனர்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்துவதே அரசின் இலக்கு: அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-governments-goal-is-to-upgrade-thoothukudi-to-the-level-of-singapore-minister-srinaths-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-governments-goal-is-to-upgrade-thoothukudi-to-the-level-of-singapore-minister-srinaths-speech#comments</comments><guid isPermaLink="false">085f2fd2-735a-4a46-993f-aedf188c5a80</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:15:51 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:15:51.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Tamil Nadu Government,தமிழக அரசு,speech,பேச்சு,தரம் உயர்வு,இலக்கு,Quality,Target,Improvement,அமைச்சர் ஸ்ரீநாத்,Minister Srinath</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/vbgwsrdh/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/vbgwsrdh/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>காற்றாலை உள்ளிட்ட பசுமை எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்தி தூத்துக்குடியை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">சிங்கப்பூர்</a> அளவிற்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">தரம் உயர்த்த</a> வேண்டும் என்பதே அரசின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">இலக்கு</a> என்று தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார். </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) மாநில அளவிலான தொழில் வளர்ச்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் ஸ்ரீநாத்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">பேசியதாவது</a>: </p><h2>தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி</h2><p>"தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டியது நமது அடிப்படை நோக்கமாகும். இதற்காக அரசு மற்றும் தொழில்முனைவோர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். </p><h2>குண்டூசி முதல் கப்பல் வரை தயாரிக்கும் கட்டமைப்பு வசதிகள்</h2><p>தூத்துக்குடியைச் சுற்றுலாத் துறையில் மேம்படுத்தப்பட்ட நகரமாக மாற்றத் திட்டமிட்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக பூங்காக்கள், கடற்கரைப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் நீர் விளையாட்டுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குண்டூசி முதல் கப்பல் வரை தயாரிக்கும் கட்டமைப்பு வசதிகள் தூத்துக்குடியில் உள்ளதால், இங்குள்ள வ.உ.சி. துறைமுகம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் இங்கு பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளது. மேலும் உயர்தர சிகிச்சைக்காகப் பல்நோக்கு மருத்துவமனையும் திறக்கப்பட உள்ளது.</p><h2>தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும்</h2><p>காற்றாலை உள்ளிட்ட பசுமை எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்தி, தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும் என்பதே அரசின் இலக்காகும். தொழில் வளர்ச்சியை உயர்த்த அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்; அதேபோல் தொழில் துறையினரும் தங்களின் பங்களிப்பை வழங்கி இந்தக் கனவை நனவாக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p><p>இந்த கூட்டத்தில் தொழில் வல்லுநர்கள் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்த பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைத்தனர். நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் தேவராஜன், துணை தலைவர் முருகவேல், தமிழ்நாடு தலைவர் ஜெய் கிருஷ்ணன், தூத்துக்குடி தலைவர் முரளி கணேசன், துணை தலைவர் செந்தில்குமார் சுப்ரமணியன் உள்பட பல தொழிலதிபர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். </p>]]></content:encoded></item><item><title>மதுரை - சென்னை விமான சேவை அக்.25 முதல் நிறுத்தம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-chennai-flight-service-to-be-suspended-from-october-25</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-chennai-flight-service-to-be-suspended-from-october-25#comments</comments><guid isPermaLink="false">33cdc265-130d-45fb-9b4e-5923c9cf581f</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:44:44 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:44:44.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Madurai,மதுரை,விமான சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/no77fga8/flight33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மதுரை - சென்னை]]></media:title><media:description type="html"><![CDATA[ விமான சேவை அக்.25 முதல் நிறுத்தம்?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/no77fga8/flight33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை-மதுரை-சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை அக்டோபர் 25 முதல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த விமான சேவை </h2><p>இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களால் கடந்த 68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த இந்த விமான சேவை, கட்டணம் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த சேவை நிறுத்தப்பட்டால், இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 5-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் 'இண்டிகோ' மட்டுமே ஒரே விமான சேவை நிறுவனமாக நீடிக்கும் நிலை உருவாகும்.</p><p>போதிய பயணிகள் வருகை இல்லை என்பது உள்ளிட்ட காரணங்கள் சேவை நிறுத்தத்திற்கு சொல்லப்பட்டாலும், அதனை பயண முகவர்களும் சுற்றுலா அமைப்பாளர்களும் மறுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, வெள்ளிக்கிழமை அன்று கூட சென்னையில் இருந்து மதுரைக்கு 159 பயணிகளும், மதுரையிலிருந்து சென்னைக்கு 70 பயணிகளும் இந்த விமானத்தில் பயணித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>மேலும், சென்னை-மதுரை வழித்தடமே லாபகரமாக இல்லை என்றால், மதுரை-பெங்களூரு இடையேயான சேவை மட்டும் எவ்வாறு லாபகரமாக இயங்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p><h2>சேவை தொடர வேண்டும் </h2><p>இத்தடத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரியை நேரில் சந்தித்துப் பேசி, இச்சேவையைத் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயண முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>முகவர்கள் அதிருப்தி</h2><p>திருச்சியிலிருந்து ஐதராபாத், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88"> விமான சேவை</a>களைத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று மதுரை, சிவகாசி மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த முகவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.</p><p>அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலாவுக்கான உச்சக்கட்ட காலமாகும். தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகள் வரவுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணிகள் பலர் தென் தமிழகத்திற்கு வரத் திட்டமிட்டு ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருக்கக்கூடும்.</p><h2>விமான கட்டணங்கள் உயர வாய்ப்பு </h2><p>தற்போது இந்த சேவை ரத்து செய்யப்படுவதால் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருவதைத் தவிர்க்கும் சூழல் உருவாகி, உள்ளூர் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படும் என மதுரை டிராவல்ஸ் நிர்வாகி கவலை தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: ஏ.டி.எம். இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - மோப்பநாய் உதவியுடன் போலீஸ் தீவிர விசாரணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-thieves-make-off-with-atm-police-conduct-intensive-investigation-with-the-help-of-a-sniffer-dog</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-thieves-make-off-with-atm-police-conduct-intensive-investigation-with-the-help-of-a-sniffer-dog#comments</comments><guid isPermaLink="false">4381a672-5fbe-4723-95af-ee6a2d216ed2</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:40:15 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:40:15.059Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,ATM,ஏ.டி.எம்.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/t30zckng/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/t30zckng/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து மர்ம நபர்கள் சிலர் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில், அங்கிருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து எடுத்து கொண்டு சென்றுள்ளனர். </p><p>அந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததோடு, மோப்பநாய்கள் உதவியோடு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  </p> ]]></content:encoded></item><item><title>வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் த.வெ.க. அமைச்சர்கள் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-ministers-meet-vck-leader-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-ministers-meet-vck-leader-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">dcec5655-91e2-48b6-85a4-2d943c1124eb</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:34:50 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:34:50.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,திருமாவளவன்,Thirumavalavan,VCK,வி.சி.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/aphbpywe/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/aphbpywe/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவரது கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று இன்று த.வெ.க. அமைச்சர்கள் இன்று நேரில் சந்தித்து பேசினர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: 19-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-commits-suicide-by-jumping-from-19th-floor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-commits-suicide-by-jumping-from-19th-floor#comments</comments><guid isPermaLink="false">993f3ad1-6324-44b5-8c4a-83ce5ace91c7</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:13:26 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:13:26.274Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,வாலிபர் தற்கொலை,Youth suicide,மாடியில் இருந்து குதித்து,From the floor,Jumping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/pno16sju/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/pno16sju/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அம்பத்தூர் பகுதியில் உள்ள 19-வது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">மாடியில் இருந்து குதித்து</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வாலிபர் தற்கொலை</a> செய்தார்.</p><h2>அடுக்குமாடி குடியிருப்பு</h2><p>சென்னை அருகே ஆவடி, காந்திநகர், வள்ளலார் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 23), அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றார். </p><h2>19-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை</h2><p>அங்குள்ள 19-வது மாடிக்குச் சென்ற சந்தோஷ், திடீரென அங்கிருந்து குதித்துவிட்டார். இதில் தலை மற்றும் 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை; நவம்பர் 1-ந்தேதிக்குள் மாற்ற வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shop-nameboards-must-be-in-tamil-high-court-issues-stern-order-to-make-the-change-by-november-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shop-nameboards-must-be-in-tamil-high-court-issues-stern-order-to-make-the-change-by-november-1st#comments</comments><guid isPermaLink="false">7930427d-3327-484e-9641-d9b0aa376197</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:06:25 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:06:25.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court,ஐகோர்ட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/2x7n0ix1/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/2x7n0ix1/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருக்கக்கூடிய கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பெயர் பலகைகளில் தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்றும், பெயரை மாற்றத் தவறினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையை சேர்ந்த இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கே.சுரேந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். </p><p>இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி கடைசி வாய்ப்பாக நவம்பர் 1-ந்தேதிக்குள் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் எனவும் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்: 272 படகுகள் கரையில் நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-powerboat-fishermen-go-on-a-sudden-strike-272-boats-docked-at-the-shore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-powerboat-fishermen-go-on-a-sudden-strike-272-boats-docked-at-the-shore#comments</comments><guid isPermaLink="false">c77e1d4a-d2bb-47d0-8d33-d98b90da9389</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:33:40 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:33:40.254Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>fishermen,Thoothukudi,தூத்துக்குடி,நிறுத்தம்,strike,விசைப்படகு மீனவர்கள்,வேலைநிறுத்தம்,boats,stopped,படகுகள்,கடற்கரையில்,Shore,motorboats</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/sf59vs8z/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-272-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் 272 படகுகள் கரையில் நிறுத்தம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/sf59vs8z/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-272-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விசைப்படகு மீனவர்கள்</a> இன்று கடலுக்கு செல்லாமல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">வேலைநிறுத்தப் போராட்டத்தில்</a> ஈடுபட்டதால், 272 படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. </p><p>தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 'கலசல்' வகை மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததைக் கண்டித்து, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 272 விசைப்படகுகள் துறைமுகத்திலேயே கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.</p><h2>கலசல் வகை மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை</h2><p>தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மூலம் தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபநாட்களாகக் கடலில் பிடிக்கப்பட்டு வரும் கலசல் வகை மீன்களுக்குத் துறைமுகத்தில் போதிய மற்றும் நியாயமான விலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. </p><h2>இன்று திடீர் வேலை நிறுத்தம்</h2><p>மீன்பிடிக்கச் செல்வதற்கான டீசல் மற்றும் ஆட்களுக்கான செலவைக்கூட ஈடுகட்ட முடியாத சூழல் நிலவுவதால், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து இன்று ஒருநாள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை எனத் திடீர் முடிவெடுத்தனர். </p><h2>272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்</h2><p>இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 272 விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்திலேயே வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டுள்ளன. திடீர் வேலைநிறுத்தம் காரணமாக மீன் வியாபாரம் மற்றும் ஏல நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, மீன்பிடி துறைமுகமே பரபரப்பின்றி ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுத்திறனாளிக்கான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-not-a-competition-for-the-differently-abled-it-is-a-competition-for-change-kanimozhi-santhosh-mla</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-not-a-competition-for-the-differently-abled-it-is-a-competition-for-change-kanimozhi-santhosh-mla#comments</comments><guid isPermaLink="false">a36cf746-addc-44f3-b683-f4f3fddb9324</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:49:44 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:49:44.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>MLA,competition,எம்.எல்.ஏ,மாற்றுத்திறனாளி,போட்டி,Change,மாற்றம்,Kanimozhi,differently-abled,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/fugl5jay/kanimozhisanthosh.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ ]]></media:title><media:description type="html"><![CDATA[ மாற்றுத்திறனாளிக்கான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/fugl5jay/kanimozhisanthosh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>மாற்றுத்திறனாளிகான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D">கனிமொழி சந்தோஷ்</a> எம்.எல்.ஏ தெரிவித்தார்.</p><h2> பாரா கிரிக்கெட்</h2><p>கோவை சரவணம்பட்டியில் கோயம்புத்தூர் கேலக்ஸி ரோட்டராக்ட் மன்றம் மற்றும் யாழ் ஹோம்ஸ் சார்பில் நடத்தப்பட்டஇந்திய பாரா கிரிக்கெட் லீக்  கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.</p><h2>15 மாநிலங்கள்</h2><p>இந்தியாவின் 15 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டி, தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையான உற்சாகத்துடனும், விளையாட்டு உணர்வுடனும் இந்தப் போட்டி நடைபெற்றுவருகிறது.</p><p><strong>நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:-</strong></p><h2> திறமைகள்</h2><p>“<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">மாற்றுத்திறனாளிகளுக்கான</a> ஒரு நிகழ்ச்சி என்று மட்டும் இதை பார்க்க முடியாது. அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது. இந்தியாவின் 15 மாநிலங்களில் இருந்து வீரர்கள் வந்து, மூன்று நாட்கள் போட்டியில் பங்கேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.ஐபிஎல் போட்டிகளுக்கு இணையான உற்சாகத்துடன் இந்த போட்டி நடைபெற்றது.</p><h2>கடவுளின் குழந்தைகள்</h2><p>நான் எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் நான் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.‘கடவுளின் குழந்தைகள்’ என்று இவர்களை அழைப்பது மட்டும் போதாது. அவர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளையும் உரிய தளத்தையும் உருவாக்க வேண்டும். அந்த வகையில், இவர்களுக்காக நடத்தப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் போட்டி மிகவும் பாராட்டுக்குரியது.</p> <h2>முன்னுரிமை</h2><p>தவெக அரசு விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் விளையாட்டில் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்கள் மேலும் பல உயரங்களை அடைய தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.</p><p>இத்தகைய சிறப்பான போட்டியை ஏற்பாடு செய்த ரோட்டரி கேலக்சி அமைப்பினருக்கும், இதில் பங்கேற்ற 15 மாநிலங்களை சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என  தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குழாய்கள் எரிந்து நாசம் - கரும்புகையால் பொதுமக்கள் அவதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-pipes-worth-several-lakh-rupees-destroyed-by-fire-public-distressed-by-thick-black-smoke</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-pipes-worth-several-lakh-rupees-destroyed-by-fire-public-distressed-by-thick-black-smoke#comments</comments><guid isPermaLink="false">db733ac6-504e-4981-ba74-a447a770200a</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:46:53 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:46:53.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Tirunelveli,Fire</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/w3asqrl7/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/w3asqrl7/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் பொதிகை நகர் அருகே மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெச்.டி.பி. குழாய்கள் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தன. அதில் இருந்து வெளியேறிய கரும்புகை சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. </p><p>இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். </p>]]></content:encoded></item><item><title>கோவை: ஆடிட்டர் வீட்டில் 75 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-75-kg-of-silver-items-stolen-from-auditors-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-75-kg-of-silver-items-stolen-from-auditors-house#comments</comments><guid isPermaLink="false">ed7870b9-5ccd-4200-a519-93718adb21e4</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:43:15 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:43:15.978Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,திருட்டு,House,வீடு,Theft,Auditor,ஆடிட்டர்,வெள்ளி பொருட்கள்,silver items</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/6do8v6ca/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெள்ளி பொருட்கள் திருட்டு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/6do8v6ca/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை</a> ஒப்பணக்காரவீதி பகுதியில் வசித்து வரும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1">ஓய்வு பெற்ற</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">ஆடிட்டர்</a> ஒருவரின் வீட்டில் இருந்து 75 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">வெள்ளிப் பொருட்களை திருடிச்</a> சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். </p><h2>ஓய்வு பெற்ற ஆடிட்டர்</h2><p>கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில் வசித்து வரும் சேஷகிரி (வயது70), தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பெங்களூருவில் வசித்து வரும் தனது மகனை பார்ப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றார். அங்கு ஒரு மாதம் தங்கி இருந்துவிட்டு நேற்று காலை கோவையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். </p><h2>75 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு</h2><p>அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு சுமார் 75 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள், வெள்ளித்தட்டு, வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.1 1/2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடங்களை அடையாளம் காண 3 மாதங்கள் அவகாசம் - ஐகோர்ட்டு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-three-month-timeframe-to-identify-elephant-corridors-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-three-month-timeframe-to-identify-elephant-corridors-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">80910e55-4a7b-4690-a57a-fc14de00dcf4</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:50:03 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:50:03.065Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,ஐகோர்ட்டு,Elephants,யானைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/n2wzxpmj/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/n2wzxpmj/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் உள்ள யானைகள் வழித்தடங்களை அடையாளம் கண்டு அறிவிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி கடந்த 2019-ம் ஆண்டு விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், யானைகள் வழித்தடங்களை கண்டறிய, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் இரண்டு குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.</p><p>இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார், நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு குழு அடையாளம் கண்டிருக்கக்கூடிய 41 பகுதிகளையும் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டுமா என ஆய்வு செய்து வருவதாக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் குழு தகவல் தெரிவித்தது. </p><p>இதனையடுத்து, தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் காண முதன்மை தலைமை வன பாதுகாவலர் தலைமையிலான குழுவுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கிய ஐகோர்ட்டு, இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தது. </p>]]></content:encoded></item><item><title>பழனியில் 12-ந்தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rope-car-service-in-palani-to-resume-from-the-12th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rope-car-service-in-palani-to-resume-from-the-12th#comments</comments><guid isPermaLink="false">1e17c3b9-f47b-4876-a985-3fe1867505c1</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:29:49 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:29:49.698Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,ரோப் கார் சேவை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/lkw6wez9/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/lkw6wez9/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் ரோப்கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப்காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த ரோப்கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது.</p><p>பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 20-ந்தேதி முதல் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்தது. </p><p>அதன்படி, ஜூலை 20-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர். </p><p>பராமரிப்புப் பணியின் முக்கிய பணிகளான புதிய பெட்டி பொருத்தம், சோதனை ஓட்டம் மற்றும் புனரமைப்புப் பணிகள் போன்றவை நடைபெற்றன. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றன. இந்த நிலையில், வருகிற 12-ந்தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>“தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது” - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-never-be-afraid-of-the-governments-actions-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-never-be-afraid-of-the-governments-actions-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">3fa83ad0-c6e6-4d13-8398-a75521c1931e</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:44:51 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:44:51.721Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,DMK,கனிமொழி,Kanimozhi,தி.மு.க.</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/lwiepau2/kanimozhi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/lwiepau2/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்தநிலையில் தவெக அரசின் மிரட்டல்கள் மற்றும் சோதனைகளுக்கு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்<a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi"> கனிமொழி </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>காழ்ப்புணர்ச்சியின் உச்சம்</h2><p>சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என்.நேரு அவர்களைப் பழிவாங்கப் பார்க்கிறது. </p><p>மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>11 மாத பயிற்சியை நிறைவு செய்த ராணுவ அதிகாரிகள் - உறுதிமொழி ஏற்று பணியில் இணைந்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/army-officers-complete-training-take-oath-and-assume-duty</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/army-officers-complete-training-take-oath-and-assume-duty#comments</comments><guid isPermaLink="false">828e457f-506f-44c9-9840-da9bbb99aa84</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:43:52 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:43:52.259Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Chennai,Training,இந்திய ராணுவம்,indian army,ராணுவ அதிகாரிகள்,பயிற்சி முகாம்,Army officers</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/imh9sv1e/parar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/imh9sv1e/parar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> ஆலந்தூரில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (ஓடிஏ) இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக பொறுப்பேற்க உள்ள இளம் அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்து பணியில் இணைந்தனர்</p><h2>கடுமையான பயிற்சி</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னையிலுள்ள</a> இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் (OTA) பரமேஸ்வரன் அணிவகுப்பு மைதானத்தில் இன்று (5 செப்டம்பர் 2026) 'குறுகிய கால சேவை' (SSC) 122-வது பிரிவு மற்றும் SSC (பெண்கள்) 36-வது பிரிவு மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரியமும் கண்ணியமும்  மிக்க இந்த நிகழ்வு, பயிற்சி அதிகாரிகள் மேற்கொண்ட பல மாத கால கடுமையான பயிற்சியின் நிறைவைக் குறிப்பதோடு, அவர்கள் இந்திய ராணுவத்தின் எதிர்காலத் தலைவர்களாக உருவெடுப்பதையும் பறைசாற்றியது.</p><h2>சர்வதேச எல்லைகளுக்கு அப்பால்</h2><p>கடமை மற்றும் தியாக உணர்வை வெளிப்படுத்தும் வகையில், மொத்தம் 313 ஆண் அதிகாரி பயிற்சி மாணவர்களும், 29 பெண் அதிகாரி பயிற்சி மாணவர்களும் இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் சேவைகளில் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தனர். மேலும், சீஷெல்ஸ், தான்சானியா, உகாண்டா, ஜிம்பாப்வே, எஸ்வாட்டினி, பூட்டான் மற்றும் லெசோதோ ஆகிய நட்பு நாடுகளைச் சேர்ந்த ஏழு ஆண் மற்றும் பத்து பெண் பயிற்சி அதிகாரிகளும் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இது சர்வதேச எல்லைகளுக்கு அப்பால் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் விதமாக அமைந்தது.</p> <h2>சிறப்பான சாதனை</h2><p>ராணுவ இசைக்கு ஏற்ப பயிற்சி அதிகாரி மாணவர்கள் கச்சிதமான ஒருங்கிணைப்புடன் அணிவகுத்துச் சென்றது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.</p><p>கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் இந்த அணிவகுப்பைப் பார்வையிட்டார்; புதிதாகப் பணியில் இணைந்த அதிகாரிகளுக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அணிவகுப்பைப் பார்வையிட்ட அதிகாரி, பயிற்சி மாணவர்கள் மற்றும் OTA பணியாளர்களின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டினார். </p><h2>உறுதிமொழி</h2><p>மேலும், புதிதாகப் பணியில் இணைந்த அதிகாரிகள் 'நாட்டிற்கான தன்னலமற்ற சேவை' மற்றும் அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்குதல் ஆகிய ராணுவத்தின் முக்கிய விழுமியங்களைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினார். சிறப்பான அணிவகுப்பைத் தொடர்ந்து நடைபெற்ற 'பிப்பிங்' (Pipping) விழாவில், தங்கள் தோள்களில் மின்னும் ராணுவ பிரிவுகள் மற்றும் படைவகுப்புகளின் சின்னங்களை அணிந்த புதிய அதிகாரிகள், இந்திய அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பதற்கும், எத்தகைய சூழலிலும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் உறுதியளிக்கும் வகையில் உறுதிமொழியை ஏற்றனர்.</p><h2>பயிற்சி நிறைவு அணிவகுப்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளின் (Officer Cadets) பெற்றோர்கள், முக்கிய பிரமுகர்கள், தூதரகப் பிரதிநிதிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.</p><p>மதிப்பாய்வு அதிகாரியாகப் பங்கேற்ற கடற்படைத் தளபதி, BUO குர்கீரத் சிங் ஹோராவுக்கு 'கவுரவ வாள்' (Sword of Honour) மற்றும் வெண்கலப் பதக்கத்தையும், AUO அபினப் சௌஹானுக்கு OTA தங்கப் பதக்கத்தையும், ACA நிகெட் சிங் தோமருக்கு வெள்ளிப் பதக்கத்தையும் வழங்கினார்.</p><p>சென்னை அதிகாரி பயிற்சி அகாடமியில் (OTA) நடைபெற்ற இந்தப் பயிற்சி நிறைவு அணிவகுப்பானது, இந்திய ராணுவத்தின் பெருமைமிக்க பாரம்பரியத்தையும் மரபுகளையும் தொடர்ந்து நிலைநிறுத்தவிருக்கும் எதிர்கால ராணுவத் தலைவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, வீரம் மற்றும் தளராத ஈடுபாடு ஆகியவற்றிற்குச் சான்றாகத் திகழ்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்: மாணிக்கம் தாகூர் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-prime-ministerial-candidate-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-prime-ministerial-candidate-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">330bb96a-4fd6-4e27-825e-f46331ba1854</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:32:43 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:32:43.180Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Rahul Gandhi,ராகுல்காந்தி,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/jy93lv2s/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/jy93lv2s/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக தோழமை கட்சி கூட்டத்துக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்த நிலையில், சென்னையில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>முதல்-அமைச்சர் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும். வரும் 9-ந்தேதி கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில்  தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் குறித்து முடிவு செய்யப்படும். </p><p>பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் முடிந்துபோன கதை. முடிந்துபோன விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம். ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை தவிற, சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.”</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம்: திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரில் அழைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dveg-alliance-party-leaders-meeting-ministers-invite-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dveg-alliance-party-leaders-meeting-ministers-invite-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">0b311149-b481-4126-b977-72fe0781215b</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:30:22 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:32:09.005Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,VCK,அமைச்சர்கள்,விடுதலை சிறுத்தைகள் கட்சி,ஆலோசனைக் கூட்டம்,தவெக கூட்டணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/gvgtbz8d/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/gvgtbz8d/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வருகிற 9-ந்தேதி நடைபெறும் தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு, அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.</p><h2>கூட்டணி கட்சிகள் ஆதரவுக்கரம்</h2><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தல், தமிழ்நாட்டில் அரசியல் களத்தையே புரட்டி போட்டது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தி.மு.க.வுக்கு ஏமாற்றத்தையும், கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்த த.வெ.க.வுக்கு இன்ப அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று பின்னடைவையும் இந்த தேர்தல் கொடுத்தது.</p><p>இதுமட்டுமா? தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்த கட்சிகள், தேர்தலுக்கு பிறகு இன்னொரு கூட்டணிக்கு தாவி பயணித்த நிகழ்வும் அரங்கேறின. அந்த வகையில் ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருக்க த.வெ.க.வுடன், தி.மு.க.வில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டின.</p><h2>முதல் ஆலோசனைக் கூட்டம்</h2><p>இதை தற்போது அமைந்திருக்கும் ஆட்சிக்கான கூட்டணியாக மட்டுமல்லாமல், அடுத்து வர இருக்கும் தேர்தல்களை சந்திக்க இருக்கும் அரசியல் கூட்டணியாகவும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி த.வெ.க. ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்தனர். சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்த இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமை தாங்கினார்.</p><p>இதில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முதல் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை. அந்த கூட்டத்தில், கூட்டணிக்கு ஒரு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.</p><h2>திருமாவளவனுக்கு அழைப்பு</h2><p>இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி த.வெ.க. ஆதரவு கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். சென்னை அசோக்நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணி: கோவை- நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-changes-to-coimbatorenagercoil-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-changes-to-coimbatorenagercoil-train-service#comments</comments><guid isPermaLink="false">b349ba6c-0eeb-4521-89d3-4c2bfa2bc010</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:02:22 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:02:22.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Nagercoil,நாகர்கோவில்,ரெயில் சேவை,train service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/bojpxoar/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/bojpxoar/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை, </p><p>கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 16322) காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுகிறது. தண்டவாள பராமரிப்பு காரணமாக இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 8, 10, 12 ஆகிய தேதிகளில் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.</p><p>கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பகுர், கொடுமுடி, புகலூர், கரூர் பாளையம் மற்றும் எரியோடு ஸ்டேஷன் வழியாக இந்த ரெயில் இயங்காது. மாற்று ரெயில் நிலையங்களாக போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக இந்த ரெயில் பராமரிப்பு நாட்களில் மட்டும் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம்: 3 வனச்சரகர்கள் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-people-including-3-forest-guards-suspended-for-threatening-hill-people-and-taking-bribe-of-rs-1-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-people-including-3-forest-guards-suspended-for-threatening-hill-people-and-taking-bribe-of-rs-1-crore#comments</comments><guid isPermaLink="false">452b5f3f-4402-4ceb-8ecf-18ff027e6705</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:00:02 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:00:02.318Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,லஞ்சம்,பணியிடை நீக்கம்,suspended,bribe,வனத்துறை அதிகாரிகள்,hill people,Forest Officer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/kthhja7m/0014.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வனத்துறை அதிகாரிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ லஞ்சம் வாங்கிய வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/kthhja7m/0014.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை ஜவ்வாதுமலை பகுதியில் அரசுக்கு சொந்தமான வன நிலத்தை பட்டா போட்டு தருவதாகக் கூறி, மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம் வசூலித்த புகாரில் 3 வனச்சரகர்கள் உட்பட 6 வனத்துறை ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். </p><h2>மலைவாழ் மக்களிடம் லஞ்சம்</h2><p>திருவண்ணாமலை ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறை ஊழியர்கள் சிலர், அரசுக்கு சொந்தமான வன நிலங்களை குடியிருப்பு வகைமாற்றம் செய்து வீட்டு மனைப் பட்டா வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் ரூ.1 கோடி வரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம் </a>பெற்றுள்ளனர்.</p><h2>மலைவாழ் மக்களின் புகார்</h2><p>ஆனால் அவர்களுக்கு பட்டா எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வாங்காவிட்டால் காலி செய்ய நேரிடும் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து பழங்குடி மற்றும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> மலைவாழ் மக்கள்</a> வனத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>எனவே வனத்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களின் முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து, லஞ்சம் பெற்ற வனச்சரகர்கள் மணிவண்ணன், ஆனந்தகுமார், வெங்கடேசன் மற்றும் வனத்துறை ஊழியர்கள், சரவணன், ஜெயக்குமார், சண்முகம் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) தற்காலிகமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணியிடை நீக்கம் </a>செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-congress-mla-barred-from-contesting-elections-for-3-years</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-congress-mla-barred-from-contesting-elections-for-3-years#comments</comments><guid isPermaLink="false">2f00c280-fcdf-4d0a-a108-0979172948d5</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:59:10 +0000</pubDate><atom:updated>2026-09-05T06:59:10.308Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தேர்தல் ஆணையம்,தமிழகம்,Election Commision,Congress,தேர்தல்,தேர்தல் கமிஷன்,Velachery,former mla,முன்னாள் எம்.எல்.ஏ.,வேளச்சேரி,அசன் மவுலானா</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/2mi42iyi/saam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/2mi42iyi/saam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>3 ஆண்டுகள் தேர்தலில்  போட்டியிட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானாவுக்கு தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.</p><h2>செலவுத்தொகை</h2><p>கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> சார்பில் அசன் மவுலானா போட்டியிட்டார். அப்போது, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இதுசம்பந்தமாக 10 நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. </p><p>இந்த விளம்பரங்களுக்கான செலவுத்தொகை 33 லட்சம் ரூபாயை செலவுக்கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, 2021-ம் ஆண்டு அசன் மவுலானாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விளக்கமளித்த நிலையில், தேர்தல் செலவு கணக்கை முறையாக சமர்ப்பிக்காததால், ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு, 2023-ம் ஆண்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.</p><h2>தேர்தல் கமிஷன் நோட்டீஸ்</h2><p>இதற்கும் பதிலளித்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகக் கூறி, அசன் மவுலானாவுக்கு எதிராக தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. </p><p>இந்நிலையில் 3 ஆண்டுகள் தேர்தலில்  போட்டியிட அசன் மவுலானாவுக்கு தடை விதித்து தேர்தல் கமிஷன் இன்று (சனிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 2021 தேர்தல் செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்யாத காரணத்தினால் தேர்தல் கமிஷன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அனுமதிக்கப்பட்ட ரூ.30 லட்சம் என்ற உச்சவரம்பை மீறி அசன் மவுலானா தேர்தல் செலவு செய்ததாகவும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விசாரணைகளுக்கு ஆஜராகி விளக்கம் தெரிவிக்கவில்லை என்றும் தேர்தல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-delta-farmers-water-to-be-released-from-kallanai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-delta-farmers-water-to-be-released-from-kallanai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">12b02f8e-9614-478c-a926-050c559d84ed</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:50:57 +0000</pubDate><atom:updated>2026-09-05T06:50:57.240Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தண்ணீர் திறப்பு,Kallanai,கல்லணை,டெல்டா விவசாயிகள்,Delta farmers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/2rar432c/kallanai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்லணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/2rar432c/kallanai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p> கல்லணையில் இருந்து நாளை காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. </p><h2>காவிரி நீர்</h2><p>டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நீர்</a>, இன்று காலை கல்லணையை வந்தடைந்தது.</p><p>மேட்டூர் அணையை கடந்த 1-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் வந்து இன்று கல்லணையை அடைந்தது.</p><h2>கல்லணையில் நீர் திறப்பு</h2><p>இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. வேளாண்துறை அமைச்சர் வினோத் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்கிறார்.</p><p>இந்த நிகழ்ச்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.</p>]]></content:encoded></item><item><title>வ.உ.சிதம்பரனார் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-pay-floral-tributes-to-the-portrait-of-vo-chidambaranar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-pay-floral-tributes-to-the-portrait-of-vo-chidambaranar#comments</comments><guid isPermaLink="false">646dae3a-d95f-40f3-a352-78ccc2f1bc5c</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:30:06 +0000</pubDate><atom:updated>2026-09-05T06:30:06.102Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Ministers,வ.உ.சிதம்பரனார்,அமைச்சர்கள்,VOC,VOC Birthday,மலர் தூவி மரியாதை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/04iw1fh5/plaer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/04iw1fh5/plaer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>“இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல், தாய்நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசபக்தருமான, 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ. சிதம்பரனாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.</p><p>இந்நிலையில் வ.உ.சிதம்பரனார் திருவுருவப் படத்திற்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். </p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- .</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, இன்று (05.09.2026) சனிக்கிழமை, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் MLA அவர்கள், சென்னை காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p> <p>மேலும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, நாட்டுப்பற்றின் அடையாளமாக திகழ்ந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள் இழுத்த செக்கிற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாணவர்களின் சார்பில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து, மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.</p><p>இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G.அருண்ராஜ், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் , சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் M.அருள் பிரகாசம் அவர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர்வே.ராஜாராமன், இ.ஆ.ப. அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது</p>]]></content:encoded></item><item><title>சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலர் உள்பட இருவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribe-for-property-tax-name-change-two-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribe-for-property-tax-name-change-two-arrested#comments</comments><guid isPermaLink="false">ce795fd7-48bb-4762-b8f6-0947aa2d5094</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:18:35 +0000</pubDate><atom:updated>2026-09-05T06:18:35.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,கைது,arrest,லஞ்சம்,Bribery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/41rf59l5/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/41rf59l5/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையை சேர்ந்தவர் ராஜா. விவசாயியான இவர், தனது தந்தை பெயரில் உள்ள சொத்து வரியை தனது பெயரில் மாற்றுவதற்கு பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார். அப்போது சொத்து வரி பெயரை மாற்றுவதற்கு ஊராட்சி செயலர் முருகேசன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.</p><p>அதற்கு ராஜா, தன்னால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இருப்பினும் பேரம் பேசி ரூ.4 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று ஊராட்சி செயலர் கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா, இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.</p><p>அதன்படி, விவசாயி ராஜாவிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வழங்கி, அதனை ஊராட்சி செயலரிடம் கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். போலீசார் கூறியபடி நேற்று முன்தினம் பூம்பாறை ஊராட்சி அலுவலகத்துக்கு ராஜா சென்றார். முன்னதாக அந்த அலுவலகத்துக்கு வெளியே லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து நின்று கண்காணித்தனர்.</p><p>இதற்கிடையே ஊராட்சி செயலர் முருகேசன் மற்றும் தற்காலிக கணினி ஆபரேட்டர் ராஜா சண்முகம் ஆகியோரிடம் ராஜா ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை கொடுத்தார். இதையடுத்து அங்கு மறைந்திருந்த போலீசார், லஞ்சம் வாங்கிய முருகேசன் மற்றும் ராஜா சண்முகத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>வீட்டு குழாயில் தண்ணீர் வராததால் தொழிலாளி வெறிச்செயல்: பஞ்சாயத்து தலைவருக்கு நேர்ந்த கொடூரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/workers-violent-act-over-lack-of-water-supply-from-household-tap-atrocity-committed-against-panchayat-president</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/workers-violent-act-over-lack-of-water-supply-from-household-tap-atrocity-committed-against-panchayat-president#comments</comments><guid isPermaLink="false">469e3201-084d-443d-96f0-f0964a5b4843</guid><pubDate>Sat, 05 Sep 2026 05:59:16 +0000</pubDate><atom:updated>2026-09-05T05:59:16.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,நெல்லை,Nellai,தமிழகம்,கிரைம் செய்திகள்,Valliyur,வள்ளியூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/l3mpalw6/mega.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/l3mpalw6/mega.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>வீட்டு குழாயில் தண்ணீர் வராததால் பஞ்சாயத்து தலைவரை செங்கல்லால் அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>தண்ணீர் வரவில்லை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/nellai">நெல்லை</a> மாவட்டம் வள்ளியூர் அருகே தாமரைக் குளத்தைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 68). இவர் வள்ளியூர் யூனியன் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.</p><p>தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (40). தொழிலாளி. அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது, இசக்கியப்பன் வீட்டுக்கு மட்டும் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது.</p><h2>செங்கலால் தாக்குதல்</h2><p>இதுதொடர்பாக இசக்கியப்பன் நேற்று மாலையில் பஞ்சாயத்து தலைவர் மகாராஜனின் வீட்டுக்கு சென்று முறையிட்டார். அப்போது இசக்கியப்பனுக்கும், மகாராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>ஆத்திரமடைந்த இசக்கியப்பன், அங்கு வீடு கட்டுமான பணிக்காக வைத்திருந்த செங்கலை எடுத்து மகாராஜன் மீது வீசினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மகாராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். உடனே இசக்கியப்பன் தப்பி சென்று விட்டார்.</p><h2>தலைமறைவு</h2><p>பலத்த காயமடைந்த மகாராஜனை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகாராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்ததும், வள்ளியூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த மகாராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இசக்கியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சூர் கோர விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி: வானதி சீனிவாசன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-dindigul-college-students-killed-in-thrissur-road-accident-vanathi-srinivasan-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-dindigul-college-students-killed-in-thrissur-road-accident-vanathi-srinivasan-condoles#comments</comments><guid isPermaLink="false">e1c1c542-0018-4ff0-91e5-479bfe8c7de0</guid><pubDate>Sat, 05 Sep 2026 05:56:36 +0000</pubDate><atom:updated>2026-09-05T05:56:36.013Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,road accident,dies,பலி,இரங்கல்,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,கல்லூரி மாணவர்கள்,college students,Thrissur,கோர விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/kwc7bj3f/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/kwc7bj3f/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கேரளாவில் லாரி மீது கார் மோதியதில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>கேரளம் மாநிலம் திருச்சூர், கைப்பமங்கலம் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரழந்ததாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது.</p><h2>உரிய இழப்பீடு</h2><p>உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன்  தமிழக அரசு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தர்வர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>லோக் ஆயுக்தா செயலராக நீதிபதியை நியமிப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-appointment-of-a-judge-as-lokayukta-secretary-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-appointment-of-a-judge-as-lokayukta-secretary-dismissed#comments</comments><guid isPermaLink="false">907a0dfb-ea5e-409f-af2b-aa0abc81b37d</guid><pubDate>Sat, 05 Sep 2026 05:38:29 +0000</pubDate><atom:updated>2026-09-05T05:38:29.715Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,தமிழ்நாடு அரசு,Chennai High Court,லோக் ஆயுக்தா,TamilNadu Goverment,Lok Ayukda</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/jhpyz0ls/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/jhpyz0ls/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு லோக் ஆயுக்தா செயலராக, பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வகை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.</p><h2>ஊழல் புகார்கள்</h2><p>சென்னை ஐகோர்ட்டில், ஜீவகுமார் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டு உள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. லோக் ஆயுக்தா செயலாளராக, துணை செயலர் அந்தஸ்து அதிகாரியை நியமிக்க வேண்டும்.</p><h2>அரசாணை</h2><p>ஆனால், ஓய்வுபெற்ற அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை செயலராக நியமிக்கும் வகையில், விதிகளை திருத்தி 2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது, மத்திய அரசு சட்டத்தை மீறிய செயல் என்பதால், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.</p><h2>லோக் ஆயுக்தா</h2><p>இந்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.</p><p>அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், "நீதிமன்றம் சார்ந்த பணிகளை, லோக் ஆயுக்தா மேற்கொள்வதால், நீதித்துறை பின்னணி கொண்ட நபர் செயலராக நியமிக்கப்படுவது, அதன் நிர்வாகத்துக்கு பயன் உள்ளதாக அமையும். மாவட்ட நீதிபதி பதவி, துணை செயலர் பதவியை விட மேலானவர். 2020-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை எதிர்த்து, 6 ஆண்டுகள் தாமதமாக தொடரப் பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்” என்று வாதிடப்பட்டது.</p><p> இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "லோக் ஆயுக்தா செயலராக நீதிபதியை நியமிப்ப தற்கு, எந்த தடையும் இல்லை. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை: புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சிடமாட்டோம் - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/searches-at-properties-linked-to-k-n-nehrus-we-wont-fear-new-governments-bogeymen-says-m-k-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/searches-at-properties-linked-to-k-n-nehrus-we-wont-fear-new-governments-bogeymen-says-m-k-stalin#comments</comments><guid isPermaLink="false">c5784d16-e8f5-47a1-9831-6e2447b28b21</guid><pubDate>Sat, 05 Sep 2026 05:24:25 +0000</pubDate><atom:updated>2026-09-05T05:24:49.957Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,மு.க.ஸ்டாலின்,கே.என்.நேரு,KN Nehru,சோதனை,MKstalin,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/efmquh8c/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/efmquh8c/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் கே.என்.நேருவும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிடமாட்டோம் என்று முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஐகோர்ட்டில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.</p><p>இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. கே.என்.நேருவும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.<br><br>இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.<br><br>ஆட்சி அமைக்க…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2096100963321065902?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-wise-census-should-be-conducted-along-with-caste-list-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-wise-census-should-be-conducted-along-with-caste-list-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">ab2c413f-1eb7-454b-a90a-fa83bca60268</guid><pubDate>Sat, 05 Sep 2026 05:15:42 +0000</pubDate><atom:updated>2026-09-05T05:15:42.223Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,மத்திய அரசு,சாதிவாரி கணக்கெடுப்பு,Central Government,caste-wise census</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/d3e6y44l/anubumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/d3e6y44l/anubumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஓபிசி எனப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாதி மக்களின் எண்ணிக்கையை கணக்கிட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் கடைபிடிக்கப்படும் ஓபிசி சாதிகள் பட்டியலை இணைத்து பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டதாகவும்,  ஆனால், அந்தப் பட்டியலில் இருப்பவை வகுப்புகள் தானே தவிர, சாதிகள் இல்லை என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மத்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கான கூறப்படும் பலவீனமான காரணம் தானே தவிர ஏற்றுக்கொள்ளத்தக்க வாதம் அல்ல.</p><h2>சாதிவாரி கணக்கெடுப்பு</h2><p>இந்தியாவில் கடைசியாக 1931-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட சமூகநீதி அமைப்புகளின் வலியுறுத்தல் காரணமாக 95 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக நாடு முழுவதும் வீட்டுப் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் சாதி விவரத்துடன் மக்கள்தொகையை கணக்கெடுக்கும் பணி கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் வரும் பிப்ரவரி மாதத்தில் இப்பணி தொடங்கவுள்ளது.</p><p>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் ஒதுக்கப்பட்டு,  அதில் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை எழுதும் முறை பின்பற்றப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த முறைக்கு பதிலாக சாதிவாரி கணக்கெடுப்புக்காக பயன்படுத்தப்படும் செயலியில், மத்திய அல்லது மாநில அரசுகளின் சாதிகளை பட்டியலை இணைத்து, அதிலிருந்து மக்களை அவர்களின் சாதியை தேர்ந்தெடுக்கச் செய்து, பதிவு செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் கடிதமும் எழுதினேன். அதைத் தொடர்ந்து காங்கிரசும் இப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது.</p><h2>காகா கலேல்கர் ஆணையம்</h2><p>இந்தியாவின் முதல் ஓபிசி பட்டியல் 1995-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் 837 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்டவையாக  வகைப்படுத்தப்பட்டிருந்தன. காகா கலேல்கர் உருவாக்கிய பட்டியலில் முழுக்க முழுக்க சமூகங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. அதன்பின் 1980-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி மண்டல் தலைமையிலான இரண்டாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஓபிசி பட்டியலில் இந்த எண்ணிக்கை முறையே 3743, 1937 என உயர்த்தப்பட்டிருந்தது. அதற்கு காரணம், சாதியின் அடிப்படையில் மட்டுமின்றி சில தொழில் பிரிவினரையும், நாடோடிக் குழுக்களையும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஓபிசி பட்டியலில் மண்டல் ஆணையம் இணைத்தது தான்.</p><p>ஒரு காலத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்த தாசரி, ஜங்கம் போன்ற வகுப்பினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தான், 1993-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மத்திய அரசால் சுட்டிக்காட்டப்பட்ட உள்ளூரில் பிறந்தவர்கள் என்ற வகுப்பினர் அந்தமான் தீவுகளுக்கான ஓபிசி பட்டியலில் 2011-ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டனர்.  தமிழ்நாட்டிலும் இதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டு. திருநங்கையர் என்பது சாதியின் பெயர் அல்ல. அது மூன்றாம் பாலினம் ஆகும். ஆனால், அவர்களின் சமூக, பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதால்  அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று 2012ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப் பட்டுள்ளனர்.</p> <p>அதே நேரத்தில் சில வகுப்புகளை சாதிகளாக பதிவு செய்யக் கூடாது என்பதற்காக, சாதியின் பெயரை மக்களிடமே கேட்டு பதிவு செய்யும் முறை பின்பற்றப்பட்டால், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4147 சாதிகள் மட்டுமே உள்ள நிலையில், 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவரும். இது தான் சாதிவாரி மக்கள்தொகையின் நோக்கத்தையே சிதைத்து விடும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதாக அமைந்து விடும். இது சமூகநீதிக்கு வலிமை சேர்க்காது.</p><h2>புதிய ஆணை</h2><p>எனவே, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">சாதிவாரி கணக்கெடுப்பின் </a>போது, சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு, பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, அதற்கு பதிலாக கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி சாதிகளின்  பட்டியலை இணைத்து அதிலிருந்து சாதியின் பெயரையும் எண்ணையும் தேர்வு செய்யும் முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்; இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ ஆணை S.O. 4505(E) -ஐ ரத்து செய்து விட்டு, புதிய ஆணையை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்கிடுவோம்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-honor-and-pay-tribute-to-the-valor-and-sacrifice-of-vochidambaranar-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-honor-and-pay-tribute-to-the-valor-and-sacrifice-of-vochidambaranar-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">88feab30-84eb-4cc1-b2ad-bb450348a71d</guid><pubDate>Sat, 05 Sep 2026 05:01:43 +0000</pubDate><atom:updated>2026-09-05T05:01:43.465Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>டிடிவி தினகரன்,வ.உ.சிதம்பரனார்,V.O. Chidambaranar,T.T.V. Dhinakaran</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/eaw77yg2/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/eaw77yg2/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல், தாய்நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசபக்தருமான, ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.</p><p>வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு, தனது உணர்ச்சிமிக்க உரைகளின் மூலம் மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டிய ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/guidelines-issued-for-ganesh-chaturthi-celebrations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/guidelines-issued-for-ganesh-chaturthi-celebrations#comments</comments><guid isPermaLink="false">6d7b958b-e776-4411-a012-ec3caab74f90</guid><pubDate>Sat, 05 Sep 2026 04:57:10 +0000</pubDate><atom:updated>2026-09-05T04:57:10.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Guidelines,விநாயகர் சதுர்த்தி,வழிகாட்டு நெறிமுறைகள்,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/xdw5nti7/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சதுர்த்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/xdw5nti7/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின்போது, பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>எனவே, பொதுமக்களுக்கு கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது.</p><p>1. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.</p><p>2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.</p><p>3. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும்பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.</p><p>4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.</p><p>5. சிலைகளை அழகுப்படுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.</p><p>6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.</p><p>விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பாதிக்காதவாறு மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம்.</p><p>சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/rr3x8erm/P.R.No-155-Vinayagar-Chathurthi-Press-Release-and-Guidelines-to-be-followed-Collector-Press-Release-Tamil-Date-05.09.2026page-0003.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/2ggjv431/P.R.No-155-Vinayagar-Chathurthi-Press-Release-and-Guidelines-to-be-followed-Collector-Press-Release-Tamil-Date-05.09.2026page-0004.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>“கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை போற்றுவோம்” - முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pay-tribute-to-the-sacrifice-of-the-tamil-sailor-vo-chidambaranar-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pay-tribute-to-the-sacrifice-of-the-tamil-sailor-vo-chidambaranar-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f1d80aba-69d0-47b4-8324-859a4cea5620</guid><pubDate>Sat, 05 Sep 2026 04:48:18 +0000</pubDate><atom:updated>2026-09-05T04:48:18.005Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>birthday,பிறந்தநாள்,வ.உ.சிதம்பரனார்,VOC,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/6wfcnqex/232.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/6wfcnqex/232.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி இயக்கத்தின் முன்னோடியுமான 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி, <a href="https://www.dailythanthi.com/topic/cm-vijay">முதல்-அமைச்சர் விஜய் </a>அவருக்கு புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்</h2><p>இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடனும், தியாக உணர்வுடனும் போராடி, மக்கள் மனங்களில் சுதேசி உணர்வை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><h2>புதிய எழுச்சி</h2><p>ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள்.</p><p>தாய்நாட்டின் விடுதலை, சுதேசி உணர்வு, உழைப்பாளர்களின் உரிமை ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த “செக்கிழுத்த செம்மல்”வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்களின் பெரும் பணி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/creating-a-generation-that-asks-the-right-questions-is-teachers-great-duty-m-k-stalin-greeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/creating-a-generation-that-asks-the-right-questions-is-teachers-great-duty-m-k-stalin-greeting#comments</comments><guid isPermaLink="false">622b3d1b-e7dd-4981-9f04-c00d3e0fe908</guid><pubDate>Sat, 05 Sep 2026 04:29:20 +0000</pubDate><atom:updated>2026-09-05T04:30:26.336Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,Greetings,வாழ்த்து,ஆசிரியர் தினம்,Teachers Day,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/14a991t8/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/14a991t8/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!</p><p>நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் ஏ.ஐ. காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!</p><p>அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க ஆசிரியர் தினத்தில் உறுதிகொள்வோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!<br><br>நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் AI காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி… <a href="https://t.co/4wfb5p3Lnf">pic.twitter.com/4wfb5p3Lnf</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2096048166563143827?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் வீடுகளில் சோதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/raids-conducted-at-the-residences-of-former-dmk-minister-kn-nehru</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/raids-conducted-at-the-residences-of-former-dmk-minister-kn-nehru#comments</comments><guid isPermaLink="false">24d6a943-0c69-4611-9db1-1adc2a7c4dbe</guid><pubDate>Sat, 05 Sep 2026 04:26:42 +0000</pubDate><atom:updated>2026-09-05T04:26:42.222Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,former minister,முன்னாள் அமைச்சர்,கே.என்.நேரு,Anti-Corruption Department,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,K.N.Nehru</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/5emsxauk/mkke.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/5emsxauk/mkke.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.</p><h2>19 இடங்களில் சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னையில்</a> மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட 19 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இதுபோன்று திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். </p><p>லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பான தகவல் அறிந்து தற்போது தில்லை நகர் வீட்டிற்கு கே.என். நேரு வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட தி.மு.க.-வினர், கே.என். நேருவின் இல்லம் முன்பு குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.</p><p>ஏற்கனவே கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாகச் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளது.</p><p>சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என். நேரு வீடுகளில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-teachers-day-to-all-teachers-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-teachers-day-to-all-teachers-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">8a95a4e7-9dfc-469c-9ead-e96c09fd23d5</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:53:16 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:53:16.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,ஆசிரியர் தினம்,Teachers&apos; Day</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/nuci2lcf/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/nuci2lcf/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”நம் அனைவரின் வாழ்க்கைப் பாதையில் அறிவொளி ஏற்றி, கனவுகளை நோக்கிப் பயணிக்க வழிகாட்டும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!</p><p>இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் போற்றும் சிறப்புமிக்க நாளாக இது திகழ்கிறது.</p><p>பாடங்களை மட்டுமல்ல, வாழ்க்கையையும் கற்றுத் தந்து, அறிவை விதைத்து, நம்பிக்கையை வளர்த்து, தலைமுறைகளை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை, பாலக்காடு, சரளப்பள்ளி ரெயில் சேவைகளில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-mayiladuthuraipalakkadsaralapalli-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-mayiladuthuraipalakkadsaralapalli-train-services#comments</comments><guid isPermaLink="false">d9dca312-0772-41d3-ba79-cc9603f51ffa</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:45:58 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:45:58.402Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,ரெயில் சேவை,மயிலாடுதுறை,Palakkad,பாலக்காடு,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/7o66w4hs/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/7o66w4hs/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கரூர்-மூர்த்திபாளையம் இடையே தண்டவாளத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 8-ந்தேதி ஆகிய நாட் களில் புகளூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில்கள் திருச்சிக்கு வராது. அன்று தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிந்தபிறகு திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக புகழூரில் இருந்து இயக்கப்படும்.</p><p>திருச்சி-சரளப்பள்ளி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:17078) குண்டூர், சட்டேனபள்ளி, நதிகுடே ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் நேரம் நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரெயில் குண்டூருக்கு பிற்பகல் 2.40 மணிக்கு வந்து 2.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல் சட்டேனபள்ளிக்கு மாலை 3.19 மணிக்கு வந்து 3.20 மணிக்கும், நதிகுடேக்கு மாலை 3.59 மணிக்கு வந்து மாலை 4 மணிக்கும் புறப்பட்டு செல்லும். </p><p>தஞ்சை யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி-மயிலாடுதுறை மெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும் (சனிக்கிழமை), வருகிற 8-ந்தேதியும் திருச்சியில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும் திருச்சி-மயிலாடுதுறை மெழு எக்ஸ்பிரஸ் (16834) ஆலக்குடியில் 30 நிமிடங்கள் நின்று செல்லும். </p><p>மதுரை கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவில்- கட்ச்குடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்16354) இன்று (சனிக்கிழமை) காலை 9.25 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, திண்டுக்கல் செல்வது தவிர்க்கப்படும். கூடுதலாக மானாமதுரை, காரைக்குடி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.</p> ]]></content:encoded></item><item><title>ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கட்டும்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-teachers-selfless-dedication-brighten-students-future-chief-minister-vijay-greeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-teachers-selfless-dedication-brighten-students-future-chief-minister-vijay-greeting#comments</comments><guid isPermaLink="false">ec619b08-d406-4593-8376-1372b356e9b0</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:28:24 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:28:24.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,ஆசிரியர் தினம்,Teachers Day,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/59meo9xk/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/59meo9xk/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!</p><p>மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்!</p><p>ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது… <a href="https://t.co/Gvx0TCnzPg">pic.twitter.com/Gvx0TCnzPg</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2096067257973780903?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-is-safe-under-the-tvk-regime-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-is-safe-under-the-tvk-regime-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">4f2e11c6-e7df-4153-bee2-ffc757e8af4a</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:23:13 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:23:13.468Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்பி,Kanimozhi Karunanidhi,Tvk  government,தவெக ஆட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/sg2ibsq9/kanimozhi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/sg2ibsq9/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் மர்ம நபரால் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு  திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஏற்பட்ட மோதலில், ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் அவர்கள் மர்ம நபரால் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.</p><h2>பாதுகாப்பில்லாத நிலை</h2><p>குடிநீர் பிரச்சனைக்காகப் போராடிய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்டு, கொலையாளிகள் தப்பிச் செல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குழந்தைகள், பெண்கள், மக்கள் பிரதிநிதிகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையை தவெக ஆட்சி உருவாக்கியுள்ளது.</p><p>இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ள காரணங்களை முழுமையாக விசாரித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.</p>]]></content:encoded></item></channel></rss>