<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 24 Aug 2026 13:30:59 +0000</lastBuildDate><item><title>சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-thanks-minister-rajmohan-for-raising-her-plea-in-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-thanks-minister-rajmohan-for-raising-her-plea-in-assembly#comments</comments><guid isPermaLink="false">65715878-fcb8-4d4f-a87d-e4a097c2e62a</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:13:42 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:13:42.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோரிக்கை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Legislative Assembly,Request,நன்றி,சட்டமன்றம்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dtu53pnj/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி - வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dtu53pnj/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கன்னிப்பேச்சு</h2><p>சட்டமன்றத்தில் இனி ‘கன்னிப் பேச்சு’ என்ற வார்த்தை இடம்பெறக் கூடாது. கடந்த 2021-ஆம் ஆண்டு கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று, முதல் முறையாக நான் எம்.எல்.ஏ. ஆனபோது, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட பலரும் அதை ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிட்டனர்.</p> <h2> நாகரிகமாக இருக்கும்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சட்டமன்றத்தில்</a> முதல் முறையாக எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தபோது, “வழக்கமாக சட்டமன்றத்தில் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுகிறீர்கள். ‘கன்னி’ என்ற வார்த்தை இளம் வயது பெண்ணை குறிக்கும் வார்த்தை. என்னை பொறுத்தவரை, இந்த முதல் பேச்சை ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுகப்பேச்சு’, ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிட்டால் நாகரிகமாக இருக்கும்” என்றேன்.</p><h2>சட்டப்பேரவை தலைவர் அப்பாவு</h2><p>அதற்கு பதிலளித்த அன்றைய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாக கூறினார். ஆனால், இப்போது புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் ‘கன்னிப்பேச்சு’ என்றே குறிப்பிடுகின்றனர்.</p> <h2>அறிக்கை</h2><p>இதை மாற்றி, ‘அறிமுக பேச்சு’ அல்லது ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிடுமாறு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் தெரிவிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தேன். அது பரவலாக கவனம் பெற்றிருந்தது. பலரும் என்னை தொடர்புகொண்டு, “முக்கியமான ஒரு விஷயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று பாராட்டினர்.</p><h2>எதிர்ப்பு</h2><p>அதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இன்று பாமக சட்டமன்ற கட்சி தலைவர் சௌமியா அன்புமணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. லதாவும், ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடுவதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.</p><h2>அறிமுக உரை</h2><p>அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a>, “கடந்த சட்டப்பேரவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘கன்னிப்பேச்சு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக ‘அறிமுக உரை’ என்று பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கியிருந்தார். </p><p>அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் இதைப் பரிசீலிப்பதாக கூறியிருந்தார். சட்டப்பேரவை தலைவர் இதை பரிசீலித்து, ‘அறிமுக உரை’ என்று குறிப்பிடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.</p><h2>நன்றி</h2><p>எனது கோரிக்கையை ஏற்று, அதை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இனி சட்டமன்றத்தில் பேசும் எந்த உறுப்பினரும், ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுக உரை’ அல்லது ‘முதல் உரை’ என்றே குறிப்பிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை மாற்றக்கூடாது’ - அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/physical-education-classes-in-schools-must-not-be-changed-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/physical-education-classes-in-schools-must-not-be-changed-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">2cd928a3-c09c-47ac-bc72-06a64684da54</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:55:29 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:55:29.197Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/mdxpj5oo/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/mdxpj5oo/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற மானியக்கோரிக்கை உரையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;-</p><p>“எந்த சமூகத்தை பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயே வரகூடாது என்று சொன்னார்களோ, அந்த சமூகத்தில் இருந்து வந்த என்னை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கிய நமது முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரால் மட்டுமே இது சாத்தியம். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஒரு சபாநாயகருக்கு ரசிகர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்றால், அவர் நமது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்தான். அவரிடாம் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். </p><h2>புதிய வெற்றிக் கல்வி</h2><p>எது கல்வி? புத்தகத்தில் இருப்பது எல்லாம் அறிவை கொடுத்துவிடும் என்றால், அடுத்தவர்கள் எழுதியதை அச்செடுத்து எழுதுபவர்கள் அறிவாளிகள் ஆகிவிடுவார்களா? இல்லை. சுயமாக சிந்திக்கக் கூடிய மனிதர்களை உருவாக்குவதுதான் உண்மையான கல்வி. அதுதான் நமது புதிய வெற்றிக் கல்வி. </p><p>இதை பாடத்திட்டத்தில் இருந்து நாம் தொடங்க முடிவு செய்துள்ளோம். இத்தனை நாட்கள் நாம் படித்து வந்த பாடத்திட்டம் நமக்கு இதுவரை உதவி செய்துள்ளது. அதில் சிறிய மாற்றங்களை செய்ய உள்ளோம். </p><h2>தன் வேகத்தில் கற்கும் குழந்தை</h2><p>புத்தகங்களில் இருப்பது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக புரிவது இல்லை. இதில் சராசரி மாணவர்கள்(Average Student) என்று யாரும் கிடையாது. நமது த.வெ.க. அரசின் பள்ளிக்கல்வித்துறை இனி யாரையும் சராசரி மாணவர் என்று சொல்லக் கூடாது என்று தீர்மானித்துள்ளது. </p><p>மெல்ல கற்கும் குழந்தை என்று கூட சொல்ல வேண்டாம், ‘தன் வேகத்தில் கற்கும் குழந்தை’ என்றுதான் அவர்களை குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு தேவையான, சரியான கல்விச் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம் என்பதை விட, எப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம் என்பதைதான் எங்கள் மானியக் கோரிக்கை யோசிக்கிறது. </p><h2>உடற்கல்வி வகுப்புகள்</h2><p>சமீபத்தில் ஒரு பள்ளி சார்ந்த பிரச்சினையின்போது முதல்-அமைச்சர் விஜய் என்னை அழைத்து பேசினார். அந்த பிரச்சினை குறித்து நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை அவரிடம் விளக்கினேன். அவர் என்னை நிறுத்தி, ஒரு மாணவர் தவறு செய்கிறார் என்றால், அந்த மாணவரை குற்றவாளியாக பார்க்காமல், பாதிக்கப்பட்டவராக பார்க்க வேண்டும் என்று கூறினார். </p><p>மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் எப்படி தடுப்பது? இதற்கு நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் உடற்கல்வி வகுப்புகள்தான். தமிழ்நாட்டில் எந்தவொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி வகுப்பைக் கூட மாற்றம் செய்யக் கூடாது என த.வெ.க. அரசு முடிவெடுத்திருக்கிறது. உடற்கல்வி வகுப்பை மாற்றிவிட்டு, கணிதம் அல்லது அறிவியல் வகுப்பு எடுக்கிறார்கள். என்றைக்காவது கணித வகுப்பை மாற்றிவிட்டு உடற்கல்வி வகுப்பிற்கு அனுப்பியிருக்கிறார்களா? </p><h2>ஆசிரியர்கள் பிரச்சினை</h2><p>இந்த சூழலை மாற்றுவதற்காக, உடலை உறுதி செய்வதற்காக, மாணவர்களின் சிந்தனையை செதுக்குவதற்காக பல்வேறு அறிவிப்புகளை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆசிரியர்கள் பிரச்சினையை பேசி தீர்ப்பதற்காக உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு, ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>புதிய ஐபோன் மாடல்களின் விலையை 9% வரை உயர்த்தும் ஆப்பிள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/apple-to-raise-prices-of-new-iphone-models-by-up-to-9</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/apple-to-raise-prices-of-new-iphone-models-by-up-to-9#comments</comments><guid isPermaLink="false">a97652e8-f4a4-44b7-a66c-61324296bbe1</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:45:54 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:45:54.084Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>America,Apple iPhones,அமெரிக்க டாலர்,பங்குச் சந்தை,ஐபோன் தொழிற்சாலை,விலை  உயர்வு,iphone price hike</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/05/04/43771378-3a.webp" width="750"><media:title type="html"><![CDATA[ ஆப்பிள் நிறுவனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்க டாலர் அடிப்படையில் சுமார் 9 சதவீதம் வரை உயர்த்த திட்டம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/05/04/43771378-3a.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம், தனது வரவிருக்கும் புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">ஐபோன்</a> (18 புரோ) மாடல்களின் விலையை <a href="https://www.dailythanthi.com/news/world">அமெரிக்க டாலர் </a>அடிப்படையில் சுமார் 9 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சந்தையில் நிலவும் கடுமையான உதிரிபாகங்கள் பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2>விலை உயர்வுக்கான காரணம்</h2><p>ஆப்பிள் நிறுவனம் தனது அடிப்படை ப்ரோ மாடலின் விலையை 100 அமெரிக்க டாலர் வரை உயர்த்த உள்ளது. இதன் மூலம் இதன் ஆரம்ப விலை சுமார் $1,199 (இந்திய ரூபாய் மதிப்பு சுமார் ரூ.1,14,663) ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் மெமரி சிப்கள் மற்றும் சிலிக்கான் செயலிகளின் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி செலவு பெருமளவு அதிகரித்துள்ளது. ஆப்பிளின் முதன்மை போட்டியாளர்களான சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது புதிய தயாரிப்புகளின் விலையை 100 டாலர் வரை உயர்த்தியுள்ளன.</p><h2>சந்தையில் ஏற்படும் மாற்றங்கள்</h2><p>ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தனது ஐபேட் மற்றும் மேக்புக் சாதனங்களின் விலையை உலக சந்தையில் கணிசமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலர் மதிப்பிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி வரிகள் காரணமாக, இந்தியாவில் இதன் விலை உயர்வு இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.</p><p>எனினும், இந்த விலை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ஆப்பிள் நிறுவனம்</a> இன்னும் வெளியிடவில்லை. வழக்கமாக செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆப்பிளின் மெகா வெளியீட்டு விழாவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்க்கரை விலை உயர்வு: ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விலை கிலோவுக்கு ரூ.80 அதிகரிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sugar-price-hike-palcoa-price-hiked-by-rs-80-per-kg-in-srivilliputhur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sugar-price-hike-palcoa-price-hiked-by-rs-80-per-kg-in-srivilliputhur#comments</comments><guid isPermaLink="false">c6bba82d-10c7-43fe-ba1a-42d10eaaa315</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:36:36 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:36:36.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்ரீவில்லிபுத்தூர்,Srivilliputhur,Sugar,விலை அதிகரிப்பு,சீனி,பால்கோவா,sugar price hike</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/x2t2agkm/46.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பால்கோவா]]></media:title><media:description type="html"><![CDATA[ பால்கோவா விலை கிலோவுக்கு ரூ.80 அதிகரிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/x2t2agkm/46.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>தமிழகத்தில் சர்க்கரை விலை அதிரடியாக உயர்ந்துள்ளதை அடுத்து, உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் விலையும் கிலோவுக்கு ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">இனிப்பு</a> பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>கிலோ ரூ.400-க்கு விற்பனை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விருதுநகர் மாவட்டம் </a>ஸ்ரீவில்லிபுத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட பால்கோவா தயாரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு தயாரிக்கப்படும் பால்கோவாக்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.320-க்கு விற்கப்பட்ட பால்கோவா, தற்போது ரூ.80 உயர்ந்து ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரை கிலோ பால்கோவா ரூ.160-லிருந்து ரூ.200 ஆகவும், கால் கிலோ ரூ.80-லிருந்து ரூ.100 ஆகவும் அதிகரித்துள்ளது.</p><h2>விலை உயர்வுக்கான காரணங்கள்</h2><p>தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:-</p><p>"பால்கோவா தயாரிப்பிற்கு பால் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டும் முக்கிய மூலப்பொருட்களாகும். கடந்த சில நாட்களாக சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.25 வரை உயர்ந்து, தற்போது ரூ.72-க்கு விற்கப்படுகிறது. அத்துடன் பால் தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவுகளும் அதிகரித்துள்ளன. இந்த கடுமையான விலை உயர்வால் பால்கோவா விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் விலை உயர்வு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை சற்று சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>19 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/19-month-baby-organ-donation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/19-month-baby-organ-donation#comments</comments><guid isPermaLink="false">bf9d8db7-9fba-4f40-93c4-e1d0ebce1af5</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:35:18 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:35:18.758Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குழந்தை,child,brain death,மூளைச்சாவு,உடல் உறுப்புகள் தானம்,organs donated</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9dqisfc3/hospital.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 19 மாத குழந்தை]]></media:title><media:description type="html"><![CDATA[ 19 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9dqisfc3/hospital.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெற்ற பிள்ளையை இழந்த துயரத்திலும், பிற உயிர்களை காக்க முன்வந்த பெற்றோரின் நெகிழ்ச்சியான செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ செய்துள்ளது. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, மிகக் குறைந்த வயதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">உறுப்பு தானம்</a> செய்த பெருமையை இந்த 19 மாத  குழந்தை பெற்றுள்ளது.</p> <h2>தீவிர சிகிச்சை</h2><p>சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 'தலைநீர் கோர்வை' எனப்படும் மூளை பாதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த 19 மாதக் குழந்தை  ஒன்று அனுமதிக்கப்பட்டது. அந்த பிஞ்சு குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 6 நாட்களாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.</p><h2>உடல் உறுப்புகள் தானம்</h2><p>இருப்பினும், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81">மூளைச்சாவு</a> அடைந்தது. தங்களின் செல்ல குழந்தை இனி மீண்டு வரமாட்டான் என்ற அதிர்ச்சி தகவலை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர். இந்த துயரமான சூழ்நிலையிலும், தங்களின் குழந்தை மற்றவர்களின் உடலாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில், குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.</p> <h2>பெற்றோரின் சம்மதம்</h2><p>பெற்றோரின் சம்மதத்தை தொடர்ந்து, 19 மாத குழந்தையிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. குழந்தையின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு, உறுப்புகள் தேவைப்படும் மற்ற குழந்தைகளுக்கு பொருத்தப்பட உள்ளன. சோகத்திலும் துணிச்சலான முடிவெடுத்து, பல உயிர்களுக்கு மறுவாழ்வு தந்துள்ள அந்த பெற்றோரின் தியாகத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.</p> ]]></content:encoded></item><item><title>‘அரிசி பருப்பு, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-must-be-taken-to-curb-the-rise-in-prices-of-rice-lentils-and-sugar-communist-party-of-india-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-must-be-taken-to-curb-the-rise-in-prices-of-rice-lentils-and-sugar-communist-party-of-india-urges#comments</comments><guid isPermaLink="false">b4c38a7a-56ab-417c-9c6e-7ab9508a1b21</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:22:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:22:52.008Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jfygrzlq/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jfygrzlq/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.48 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது ரூபாய் 70 வரை விலை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால்  விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p>பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்றவை நெருங்கி வரும் காலத்தில் சர்க்கரை தேவை அதிகரிக்கும். இந்நிலையில் அதன் விலை ஏற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும்.</p><p>சர்க்கரை விலை உயர்வால் டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, வணிக நிறுவனங்களுக்கான  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக  உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ விலை  15 ரூபாய் வரை உயர்ந்தது. காபி விலை ரூ 20 வரை உயர்ந்தது. தற்போது அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.</p><p>கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொன்னி அரிசி ரூபாய் 80க்கு விற்பனை ஆகிறது. இட்லி அரிசி ரூபாய் 35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பருப்பு வகைகளும் விலை உயர்ந்துள்ளன.</p><p>உளுத்தம் பருப்பு கிலோ ரூபாய் 120 லிருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு 80 லிருந்து 100 ஆகவும், தனியா 160 லிருந்து ரூ250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. அதனால் ஏழை, எளிய  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <p>அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது துரதிஷ்டவசமானது: ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-to-drop-parandur-greenfield-airport-a-setback-for-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-to-drop-parandur-greenfield-airport-a-setback-for-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">0f630ad7-e6ff-45c7-a50d-4818b075fe1e</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:18:00 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:18:00.804Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>report,அறிக்கை,பரந்தூர் விமான நிலையம்,Paranthur Airport,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Easwaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5jm39ie5/e.r.eswaran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஈ.ஆர்.ஈஸ்வரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது துரதிஷ்டவசமானது: ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5jm39ie5/e.r.eswaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தமிழ்நாடு சட்டமன்றத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது என்று முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது துரதிஷ்டவசமானது என்று ஈஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்</a> பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p> <h2>எதிர்கால தேவை</h2><p> புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பசுமை விமான நிலையமாக பரந்தூரில் அமைப்பதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயலாக்கத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.</p> <h2>கடந்த கால அரசு </h2><p> ஐந்து ஆண்டு காலமாக இடத்தை தேடி நான்கு இடங்களை மத்திய அரசின் ஒப்புதலுக்கு கடந்த கால அரசு கொடுத்தது. அதிலே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">பரந்தூர்</a> தான் தகுதியான இடமென்று இந்திய விமான போக்குவரத்து துறை ஒப்புதல் கொடுத்தது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக முடியும் தருவாயில் இருந்தது. </p><h2>மெட்ரோ ரெயில் திட்டம்</h2><p>விமான நிலையத்திற்கான ஏற்பாடுகள் மட்டுமில்லாமல் விமான நிலையத்தை சென்னை மாநகரத்தோடு இணைக்கும் மெட்ரோ ரெயில் திட்டம், சென்னை - பெங்களூர் விரைவு வழி தடத்தோடு இணைக்கும் திட்டம், செய்யாறு மற்றும் ஒரகடம் போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியை நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கும் திட்டம், சென்னை மாநகரத்தோடு இணைக்க விரைவுச்சாலை வசதி என்று பல்வேறு ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டன. </p><h2> பின்னடைவு</h2><p>இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்தை கைவிட்டு விட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வோம் என்று அறிவித்திருப்பது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.</p> <h2>அறவே இல்லை</h2><p>வேறு பல இடங்களை பார்த்து இந்திய விமான போக்குவரத்து துறையின் ஒப்புதலை பெற்று தேவையான நிலங்களை கையகப்படுத்தி புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால் இன்னும் 15 ஆண்டுகள் ஆகி போகும். அரசினுடைய அறிவிப்பை பார்க்கும் பொழுது இரண்டாவது விமான நிலையம் சென்னைக்கு கொண்டு வரும் திட்டமே இந்த அரசுக்கு அறவே இல்லை என்று தோன்றுகிறது.</p><h2>சர்வதேச விமான நிலையம்</h2><p> பெங்களூர் மற்றும் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையங்கள் தற்போது சென்னை விமான நிலையத்தோடு ஒப்பிடுகையில் மிக பெரும் வளர்ச்சியை பெற்றிருக்கின்றன. பரந்தூர் விமான நிலையத்தை தடுத்திருப்பது தமிழக எல்லை பகுதியில் ஆந்திர அரசு திட்டமிடுகின்ற விமான நிலைய கோரிக்கைக்கு வலு சேர்க்கும். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் இருப்பவர்கள் கர்நாடகாவில் இருக்கின்ற பெங்களூர் விமான நிலையத்தை பயன்படுத்துவது போல சென்னை பகுதியிலும், வட மாவட்டங்களிலும் உள்ள மக்கள் உருவாக போகும் ஆந்திர சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள். </p><h2>மறுபரிசீலனை</h2><p>அதன்மூலம் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களுடைய பொருளாதார வளர்ச்சிக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை விட்டு கொடுப்பதாக அமையும். தமிழகத்தினுடைய தொழில்துறையினரை தமிழக அரசு கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் பரந்தூர் விமான நிலைய விசயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உங்களின் அரசியல் வீம்பிற்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்காதீர்கள் முதல்வரே - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-block-tamil-nadu-growth-for-political-grandstanding-chief-minister-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-block-tamil-nadu-growth-for-political-grandstanding-chief-minister-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">c9e4e3d0-e49f-4b02-aeb1-9e04f6c75364</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:15:35 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:15:35.199Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport,புதிய விமான நிலையம்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/o9mhrc9c/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/o9mhrc9c/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்திற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்யாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக நீங்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு. பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு? விமான நிலையத்திற்கான இடத்தை புதிதாக தேர்வு செய்வது என்பது அத்தனை எளிதா?</p><p>சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, பயணப் போக்குவரத்து, மணலின் தன்மை, Need &amp; Demand மற்றும் பல அம்சங்களையும் கோணங்களையும் ஆராய்ந்ததன் அடிப்படையில்தான் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலின்போது பரந்தூரை நீங்கள் தேர்தல் பரப்புரைக் களமாக பயன்படுத்திக் கொண்ட ஒரே காரணத்திற்காக, விமான நிலையம் அமைப்பதற்கான மிகப்பெரிய “Process”- ஐயும் மீண்டும் முதலில் இருந்து துவங்க நீங்கள் முடிவு செய்திருப்பது, நேர விரயம், பண விரயம், மற்றும் வளங்களின் விரயம். உங்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் தடை போடுவது கண்டனத்திற்குரியது.</p><p>அதுமட்டுமன்றி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட1,700 ஏக்கர் நிலங்களை உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது? நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்படி, இந்த நிலங்களை விமான நிலையம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா? மேலும் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுத்த மக்களுக்கு உங்கள் அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?</p><p>எனவே ஆரம்பம் முதலே எங்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்திற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? பதிலளியுங்கள் ஜோசப் விஜய் அவர்களே! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் மரியவில்சனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிப்போம் - அன்பில் மகேஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-lodge-a-complaint-with-the-directorate-of-vigilance-and-anti-corruption-against-minister-maria-wilson-anbil-mahesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-lodge-a-complaint-with-the-directorate-of-vigilance-and-anti-corruption-against-minister-maria-wilson-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">385fa427-75bd-41e8-8d2f-6dc74b9ab2ac</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:12:38 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:12:38.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,TN govt,Anbil Mahesh,அன்பில் மகேஸ்,மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/146dsz5y/Anbil-mahesh.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்பில் மகேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/146dsz5y/Anbil-mahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று அவையில் பேசிய  நிதி அமைச்சர் மரிய வில்சன் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கடந்த திமுக ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்   நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், திமுக ஆட்சியில் பல இடங்களில் கட்டாயப்படுத்திதான் லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது. அதில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஒரு ஆள் நான். என்னுடைய பள்ளிக்கே லஞ்சம் வாங்கப்பட்டது. அதற்கு நானே சாட்சி. சென்னை தியாகராய நகரில் வைத்து யார் மூலமாக பணம் பெற்றார்கள் என்பதை பற்றி என்னால் சொல்ல முடியும். இது பற்றி என்மீது என்ன வழக்கு போட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன்." எனக் கூறியிருந்தார். </p> <p>அமைச்சர் மரிய வில்சனின் இந்த குற்றச்சாட்டிற்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் மரிய வில்சன் லஞ்சம் கொடுத்தேன் என்று கூறுவதே முதலில் தவறு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு என்மீது முன்வைக்கப்பட்டது. அவர்களிடம் ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டேன். பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கியவரிடமும் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>அதன் அடிப்படையில் இன்று அமைச்சர் பேசினாரா எனத் தெரியவில்லை. ஒரு அமைச்சர் லஞ்சம் கொடுத்தேன் என்று கூறுவதே தவறு. முதலில் அவரிடம் விசாரணை நடத்தவேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் கண்டிப்பாக இதுகுறித்து புகார் அளிப்போம். உடனடியாக அமைச்சரை அழைத்து விசாரிக்கவேண்டும். அன்பு மொழி, கருணை மொழி தான் தெரியும் என பேசிய அமைச்சர் மரிய வில்சன், என் மீது அவதூறு கூறுகிறார். அவர்கள் செய்வது அனைத்தும் மடைமாற்றம்." எனத் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் முடங்கிய டாஸ்மாக் கடைகள்; மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-shut-in-nellai-employees-lay-siege-to-manager-office</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-shut-in-nellai-employees-lay-siege-to-manager-office#comments</comments><guid isPermaLink="false">180f689b-8be5-4069-98be-7c2e7fded2a7</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:17:03 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:17:03.268Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tasmac Shops,ஊழியர்கள் போராட்டம்,Employees protest,டாஸ்மாக் கடைகள் மூடல்,நெல்லை அணி,In Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/kp7zcs84/tasmac.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ டாஸ்மாக் கடைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் முடங்கிய டாஸ்மாக் கடைகள்; மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/kp7zcs84/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக்</a> கடைகளும் இன்று மூடப்பட்டன. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>திடீர் மூடல் அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை வழக்கம் போல் திறக்கப்பட வேண்டிய அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் திடீரென பூட்டப்பட்டுக் கிடந்தன. கடைகள் திறக்கப்படாததை கண்டு அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர்கள், கடைகளின் முன்பு நீண்ட நேரம் ஏமாற்றத்துடன் தவித்து நின்று அலைமோதினர். மாவட்டம் முழுவதும் மது விற்பனை முற்றிலும் முடங்கியது.</p><h2> முற்றுகை போராட்டம் தீவிரம்</h2><p>நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாதிக்கப்பட்ட தங்களது சக ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்ட அவர்கள், உள்ளே புகுந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2> போலீஸ் குவிப்பு</h2><p>ஊழியர்களின் இந்த திடீர் முற்றுகைப் போராட்டத்தால் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலக வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க, சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த திடீர் கடைகள் மூடல் மற்றும் ஊழியர்களின் முற்றுகைப் போராட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் இன்று பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-7-pm-in-21-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-7-pm-in-21-districts#comments</comments><guid isPermaLink="false">b6af7f78-d70f-4354-b9db-0430778e4418</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:57:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:57:40.060Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/68ar0dtm/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/68ar0dtm/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி அரியலூர், கடலூர், ஈரோடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவாரூர், திருச்சி, கோயம்புத்தூர், திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் சாலை மறியல்; 250 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/temporary-sanitation-workers-road-blockade-in-chennai-250-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/temporary-sanitation-workers-road-blockade-in-chennai-250-arrested#comments</comments><guid isPermaLink="false">175f2fce-3077-4377-bbf9-e02dcf49f576</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:36:45 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:36:45.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrested,சாலை மறியல்,தூய்மைப்பணியாளர்கள்,Sanitation workers protest,Road Blockades</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/vrhb80pa/protest.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தூய்மைப்பணியாளர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் சாலை மறியல்; 250 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/vrhb80pa/protest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை பாரிமுனையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தூய்மைப்பணியாளர்கள்</a> இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளர்களாக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த தி.மு.க. ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.</p><h2>தேர்தல் வாக்குறுதி</h2><p>"தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது</p><h2>தூய்மைப்பணியாளர்கள் அதிருப்தி</h2><p>தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னரும், இந்த தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர் தங்களின் வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 4 நாட்களாக சென்னையில்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.</p> <h2>முக்கிய கோரிக்கை</h2><p> இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திரண்டு திடீர் பேரணியாக சென்றனர். "முதல்-அமைச்சர் விஜய் எங்களை நேரடியாக சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும்" என போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.</p><h2>மறியலால் பரபரப்பு</h2><p> பேரணியாக முன்னேற முயன்ற தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள், காவல்துறையை கண்டித்து அங்கேயே சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.</p><h2>250 பேர் கைது</h2><p>அப்போது தங்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவாறு சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பணி நிரந்தரம்</a> என்ற கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>மகனின் காதல் விவகாரத்தால் விபரீதம்: விஷம் குடித்து பெண் தற்கொலை - கணவன், மகளுக்கு தீவிர சிகிச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-over-sons-love-affair-woman-dies-by-suicide-after-consuming-poison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-over-sons-love-affair-woman-dies-by-suicide-after-consuming-poison#comments</comments><guid isPermaLink="false">ab3283da-7f73-4240-94f9-6bcd763601f5</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:34:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:34:52.417Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,தற்கொலை,Suicide,Kambam,கம்பம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/a4ip5o07/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/a4ip5o07/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், பெண் உயிரிழந்துள்ளார். அவரது கணவன் மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>தேனி மாவட்டம் கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (47 வயது). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி (40 வயது). இவர்களுக்கு பால்பாண்டி (22 வயது) என்ற மகனும், யோகலட்சுமி (18 வயது) என்ற மகளும் உள்ளனர். பால்பாண்டி பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.</p><h2>மகனின் காதல்</h2><p>இந்த நிலையில் தேனியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாண்டீஸ்வரன் வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பால்பாண்டிக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தெரிய வந்ததும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அவர்களை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.</p><h2>தகராறு</h2><p>இதையடுத்து அவரது உறவினர்கள், பெண்ணின் சாவுக்கு பால்பாண்டிதான் காரணம் எனக்கூறி, கம்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று பாண்டீஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாண்டீஸ்வரன், அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள அரளி விதையை அரைத்து (விஷம்) குடித்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டீஸ்வரன் மற்றும் யோகலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>2031-ல் தமிழக அரசியலில் தவெக  மிகப்பெரிய சக்தியாக இருக்கும் -  கவுண்டபாளையம் கனிமொழி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-will-be-the-biggest-force-in-tamil-nadu-politics-in-2031-kaundapalayam-kanimozhi-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-will-be-the-biggest-force-in-tamil-nadu-politics-in-2031-kaundapalayam-kanimozhi-speech#comments</comments><guid isPermaLink="false">25fcf76d-054c-4064-ab35-eafb11844710</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:20:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:20:34.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Coimbatore,கோவை,விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/6mqffzj7/kanimozi33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக]]></media:title><media:description type="html"><![CDATA[ கவுண்டபாளையம் கனிமொழி பேச்சு 
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/6mqffzj7/kanimozi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>2031-ல் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சக்தியாக இருக்கும் என கவுண்டபாளையம்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF"> தவெக எம்.எல்.ஏ கனிமொழி</a> கூறியுள்ளார்.</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் மக்கள் பணி மற்றும் சாதனை விளக்க நிகழ்ச்சி கோவை கவுண்டம்பாளையதில்  நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், திமுக தரப்பிலிருந்து தமக்கு வந்ததாகக் கூறப்படும் ரூ.15 லட்சம் பேக்கேஜ் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>அவர் பேசியதாவது:</p><p>“கடந்த 2025 நவம்பர் மாதம் முதல், திமுகவின் கரூர் கம்பெனி என்று நான் குறிப்பிடும் தரப்பிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான ஒரு பேக்கேஜ் என்னிடம் வந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்று ஜோதிட ரீதியாக யூடியூப் சேனலில் பேச வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது.</p><h2>மக்களின் தீர்ப்புதான் இறுதி தீர்ப்பு</h2><p>அப்போது நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இல்லை. எங்கள் தலைவரிடமிருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை. இருந்தபோதிலும், அப்போதே ‘திமுக ஆட்சிக்கு வராது’ என்று நான் தெளிவாகக் கூறினேன். ஆனால், திமுகதான் வெற்றி பெறும் என்று சொல்ல வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.</p><p>இன்று இதை நான் வெளிப்படையாகச் சொல்வதற்கு காரணம், மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அரசியலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பணம் கொடுத்து ஜோசியம் மூலம் உருவாக்க முடியாது. மக்களின் தீர்ப்புதான் இறுதி தீர்ப்பு.</p><p>சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எதைப் பேசினாலும் நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். மக்கள் குரலை எழுப்புவதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.</p><h2> ‘அழகான பொம்மை’ </h2><p>சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி பேசுபவர்கள், தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசலாம். என்னைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. ‘அழகான பொம்மை’ என்று சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்த அழகான பொம்மை தேவைப்பட்டால் ஆபத்தான பொம்மையாகவும் மாறும்.</p><p>நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்த தேர்தல்களில் தனது வலிமையை நிரூபிக்கும். 2031-ல் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சக்தியாக இருக்கும்.</p><h2>உள்ளாட்சி தேர்தல்</h2><p>கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஒரு குடும்பத்தில் இருப்பதைப் போல நமக்குள் சிறிய சண்டைகள் இருக்கலாம். ஆனால் வெளியில் இருந்து யாரும் நம்முடைய ஒற்றுமையைப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.</p><p>சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு உறுப்பினரும் கேள்விகளை எழுப்புகின்றனர். இதனால் சபாநாயகருக்கும் தொடர்ந்து பணிச்சுமை ஏற்படுகிறது.</p><p>வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் இடங்களில் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். ஒரு இடத்தையும் பாக்கி வைக்காமல் வெற்றி பெறும் அளவுக்கு மக்கள் நமக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.</p><p>மக்களுக்காக பேசுவதற்கும், மக்களுக்காக நிற்பதற்கும் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அரசியலில் பணம், பொய் பிரசாரம், போலியான கணிப்புகள் ஆகியவற்றை விட மக்களின் நம்பிக்கையும் தீர்ப்புமே முக்கியம்” என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால் புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் - உதயநிதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-halt-will-deter-new-companies-from-coming-to-chennai-udayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-halt-will-deter-new-companies-from-coming-to-chennai-udayanidhi#comments</comments><guid isPermaLink="false">57204753-58b9-458f-9401-3f4263d643a6</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:49:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:49:15.625Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,Chennai,சென்னை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport,new airport,புதிய விமான நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/68fxws0c/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/68fxws0c/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால் புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழல் எழுந்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் சோபா மாடல் (Sofa Model) அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.</p><p>இத்திட்டத்திற்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airports Authority of India), இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Union Civil Aviation Ministry) உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.</p><p>இத்தகைய கடினமான  அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.</p><p>இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.</p><p>பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன. </p><p>ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விமான நிலையம்  திட்டம்  ரத்து: பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பரந்தூர் மக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/airport-project-cancelled-parandur-residents-celebrate-by-bursting-firecrackers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/airport-project-cancelled-parandur-residents-celebrate-by-bursting-firecrackers#comments</comments><guid isPermaLink="false">66b3533c-1ec0-495c-b75e-3a44bc9d87f8</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:39:42 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:39:42.567Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Chennai,airport,விமான நிலையம்,பட்டாசு,Parandur,பரந்தூர் விமானநிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/18e6c4es/pardndur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/18e6c4es/pardndur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் அதிரடி அறிவிப்புக்கு பரந்தூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். </p><p>சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். வருடத்துக்கு 3 சிலிண்டர்கள் மற்றும் மாநகர, நகராட்சிப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம்  என்ற திட்டத்தை அறிவித்ததோடு,  பரந்தூர் விமான நிலையத் திட்டம்  அரசால் அதிகாரப்பூர்வமாக கைவிடப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து முதல் அமைச்சர் விஜய் கூறும் போது,  பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கெனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.</p><h2>‘டர்மினல் 5</h2><p>துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் உடன் கலந்துரையாடி விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும். சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட ‘டர்மினல் 5’ ஐந்தாவது பயணிகள் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><h2>புதிய விமான நிலையம் அமைக்கப்படும்</h2><p>அதேபோல தற்போது நடைபெறும் ‘டர்மினல் 3’ கட்டுமான பணிகள் முடிவுற்ற பின் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் இருக்கும். டர்மினல் 5 பணிகள் நிறைவடைந்து, அது செயலாக்கத்துக்கு வந்த பிறகு ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையம் மேம்படுத்த படுவதோடு, பயணிகளின் போக்குவரத்து தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை உறுதி செய்யப்படும்’என்று தெரிவித்தார். தவெக அரசின் அதிரடி அறிவிப்புக்கு பரந்தூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். </p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-forecast-coimbatore-nilgiris-today-and-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-forecast-coimbatore-nilgiris-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">91e849a5-f88c-4f57-925f-c449f2b5b45e</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:25:21 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:25:21.794Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,TN weather</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/t4lgxp5m/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/t4lgxp5m/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>24-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>25-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>26-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>24-08-2026 முதல் 26-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>27-08-2026 மற்றும் 28-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>24-08-2026 முதல் 26-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>27-08-2026 மற்றும் 28-08-2026:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-mudumalai-elephant-camp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-mudumalai-elephant-camp#comments</comments><guid isPermaLink="false">46605c49-b223-4b6e-bd33-7bb5750c640f</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:14:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:14:14.346Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,Elephant Camp,யானைகள் முகாம்,Mudumalai,முதுமலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jngd1iyb/touristin-muthumalai.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முதுமலை யானைகள் முகாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jngd1iyb/touristin-muthumalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற முதுமலை யானைகள் முகாமில், வார இறுதி விடுமுறை நாளான நேற்று வழக்கத்தை விட அதிகமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுற்றுலாப்பயணிகள்</a> திரண்டனர்.</p><h2>யானைகள் முகாம்</h2><p>நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உலக புகழ்பெற்ற முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியான தெப்பக்காட்டில் ஆசியாவின் பழமையான வளர்ப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">யானைகள் முகாம்</a> செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கமாகவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இந்த நிலையில், வார விடுமுறை நாளான நேற்று காப்பகத்தில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.</p><h2>ஆற்றில் குளித்த யானைகள்</h2><p>அங்கு நிலவிய இதமான தட்பவெப்ப நிலை மற்றும் சாரல் மழையை பயணிகள் வெகுவாக ரசித்தனர். முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் அங்குள்ள மாயாற்றில் குதூகலமாக குளிப்பாட்டப்பட்டன.யானைகள் ஆற்றில் தண்ணீரை உறிஞ்சி அடித்துக் கொண்டும், ஒன்றுக்கொன்று விளையாடி கொண்டும் செய்த நளினமான குறும்புகளை கண்டு பயணிகள் வியந்தனர்.</p><h2>ஊட்டச்சத்து உணவுமுகாம்</h2><p> யானைகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காகத் தனி சமையல் கூடத்தில் ராகி, கொள்ளு போன்ற தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு உருண்டைகள் தயார் செய்யப்பட்டன.அவற்றைப் பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் ஒவ்வொரு யானையின் பெயரைக் கூப்பிட்டு வழங்கினர். யானைகள் வரிசையாக நின்று கம்பீரமாக உணவு உட்கொள்ளும் இந்த கண்கொள்ளா காட்சியை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>வழக்குகள்  முடியும் வரை இடைத்தேர்தல் கிடையாது: தேர்தல் ஆணையம் பதில் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-by-elections-until-cases-are-concluded-election-commissions-counter-affidavit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-by-elections-until-cases-are-concluded-election-commissions-counter-affidavit#comments</comments><guid isPermaLink="false">a232da28-457f-4b69-894e-e078462556cd</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:07:17 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:07:17.942Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,வழக்குகள்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/7d4lnav0/Election-Comission.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேர்தல் ஆணையம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/7d4lnav0/Election-Comission.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில் பெரம்பூர் தொகுதியை வைத்து கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார்.  அது போல் கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர். விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுவிட்டு அவர்கள் ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்துவிட்டு இவர்கள் தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலையில் உள்ள போது இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><h2>இடைத்தேர்தல் அறிவிக்க தடை</h2><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன் ஒரே தொகுதிக்கு இரு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும் என கூறி 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து, இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டசபை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.  தொடர்ந்து மனு மீதான உத்தரவு இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது.  </p><h2>அறிவிக்க வாய்ப்பு இல்லை</h2><p>அப்போது சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 8ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையே தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போதைக்கு தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது</p> ]]></content:encoded></item><item><title>புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/identify-and-announce-site-for-new-airport-urgently-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/identify-and-announce-site-for-new-airport-urgently-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">cc3a3f15-30f0-4e0c-bd4d-679bd6a35baf</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:01:44 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:01:44.431Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,சென்னை,Parandur Airport,new airport,புதிய விமான நிலையம்,பரந்தூர் விமானநிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/71td3iq6/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/71td3iq6/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னைக்கு அருகில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக வளர்ச்சிக்கு சென்னையில் இரண்டாம் விமான நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், அதற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும்.</p><p>சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதே நேரத்தில் வேளாண் விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்து விமான நிலையம் அமைப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தவுடனேயே, 4 ஆண்டுகளுக்கு முன் 2022-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி பாதிக்கப்படும் மக்களை எனது தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி குழு சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்து நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்தது.</p><p>அதே நேரத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சென்னைக்கு அருகில் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் 2031-ம் ஆண்டில் அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என்பதால், அதற்கு முன்பாக புதிய விமான நிலையம் கட்டப்பட வேண்டியது அவசியமாகும். சென்னை மாநகருக்கான இரண்டாவது விமான நிலையம் 2007-08ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு தடைகளைக் கடந்து 2022-ம் ஆண்டில் தான் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்பட்டது. இப்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளன.</p><p>பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லி, மும்பை ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய விமான நிலையமாக திகழ்ந்து வந்தது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததாலும், விரிவாக்கப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாகவும் அந்த இடத்தை இழந்துவிட்ட சென்னை விமான நிலையம் இப்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு கொல்கத்தா விமான நிலையத்தை விட பின்தங்கி ஆறாம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் ஜூலை மாதத்தில்தான் மீண்டும் ஐந்தாம் இடத்தை பிடித்தது. எந்த நேரமும் சென்னை விமான நிலையம் மீண்டும் ஆறாம் இடத்திற்கு தள்ளப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் 380 ஆகும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 853 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானங்களை இயக்குவது விமான நிலையங்களின் கவுரவமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து மட்டும்தான் இந்த வகை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இந்த வகை விமானங்களை இயக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த விமானங்களை இயக்க 60 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதைகள்  தேவை; ஆனால், சென்னை விமான நிலைய ஓடுபாதையின் அகலம் 45 மீட்டர் தான். அதேபோல், ஏர்பஸ் 350, போயிங் 777 வகை விமானங்களில் வரும் பயணிகளை கையாளுவதற்கான வசதிகள் மட்டும் தான் சென்னை விமான நிலையத்தில் உள்ளது. அதனால், ஏர்பஸ் 380 விமானங்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்க முடியாது. புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் மட்டும்தான் இந்த வகை விமானங்கள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படக் கூடிய புதிய வகை விமானங்களை சென்னையிலிருந்து இயக்க முடியும்.</p><p>2031-ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் கட்டப்படவில்லை என்றால், சென்னைக்கு புதிய விமானங்கள் வராது. அவை பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களுக்கு சென்றால், அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடுத்த ஐந்தாண்டுகளில் புதிய விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரவேண்டும். இப்போதே பணிகளைத்  தொடங்கினால் கூட, அது சாத்தியமாக இன்னும் 8 ஆண்டுகள் ஆகக்கூடும். எனவே, அவசர நிலையைக் கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை அரசு விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.</p><p>சென்னை விமான நிலையம் அமைக்கும் விஷயத்தில் இத்தனைக் குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணம்  நிலங்களை கையகப்படுத்தும் கொள்கையில் தெளிவு இல்லாததுதான். வேளாண்மை சாராத எந்தப் பணிக்கும் நிலங்களை கையகப்படுத்துவதில்லை என்பதை கொள்கை முடிவாத தமிழ்நாடு அரசு எடுத்திருந்தால், பரந்தூர் விமான நிலையத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்காது. எனவே, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாட்டில் எந்தவொரு திட்டத்திற்காவும் வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும்.</p><p>அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக ஒரு கைப்பிடி மண்ணை கூட கையகப்படுத்திக் கொடுக்க மாட்டோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாக்குறுதி அளிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பரந்தூர் விமான நிலையத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட எந்த திட்டத்துக்காகவும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-acceptance-of-aiadmk-mlas-resignations-dismissed-high-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-acceptance-of-aiadmk-mlas-resignations-dismissed-high-court-order#comments</comments><guid isPermaLink="false">6c737a54-5b43-44d2-8977-516ee562b5c1</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:43:45 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:43:45.941Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,High Court,ஐகோர்ட்டு,அ.தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hp444oj1/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hp444oj1/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதை எதிர்த்து அ.தி.மு.க. கொறடாஅ அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த நிலையில 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்து மதுரையை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. </p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ஒரே காரணத்துக்காக ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன? ஏற்கனவே சம்பந்தப்பட்ட கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர்கள் வாதம் துவங்கியுள்ளது. ஒரு பிரச்சனைக்கு ஒரு வழக்கு போதும். நிலுவையில் இருக்கக்கூடிய வழக்கை நீர்த்துப் போக செய்யக்கூடிய வகையில ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன?” என்று கேள்வி எழுப்பினர்.</p><p>அது மட்டுமின்றி, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-after-falling-into-rainwater-drainage-ditch-in-anna-nagar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-after-falling-into-rainwater-drainage-ditch-in-anna-nagar#comments</comments><guid isPermaLink="false">4e279689-8dab-4011-b020-1b62b9b14c54</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:33:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:33:27.796Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai City,Annanagar,மழைநீர் வடிகால்,அண்ணா நகர்,StormWaterDrain</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8rm4tc4q/women33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெண் உயிரிழப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/8rm4tc4q/women33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கலாவதி என்ற பெண் உயிரிழந்தார்.</p><p>சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. நேற்று பெய்த கனமழையால் பள்ளத்தில் தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது.</p><p>இந்நிலையில் அந்த வழியாக வந்த பெண் ஒருவர் கவனிக்காத நிலையில், தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவர் பெயர் கலாவதி என்று தெரிய வந்துள்ளது.</p><p>அவர் பள்ளத்தில் விழுந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளத்தின் அடியில் மின் வயர்கள் சென்றதால் மின்சாரத்தைத் துண்டித்த பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.</p><p>பள்ளத்தில் மின்கசிவு ஏற்பட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20">மின்சாரம் தாக்கி </a>இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இந்தநிலையில் இது குறித்து அரசின் அலட்சியத்தால் தாய் உயிரிழந்துவிட்டதாக கண்ணீருடன் மகள் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், </p><p>பள்ளத்தை சுற்றி தடுப்புகள் இல்லை. மின்வாரிய பண் இநடப்பது குறித்து எச்சரிக்கை இல்லை. அரசின் அலட்சியத்தால் எனது தாய் கலாவதி உயிரிழந்துள்ளார் என கண்ணீர் மல்க கூறினார். </p><p>பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என மக்கள் வேதனை தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதி தோல்வியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-files-case-challenging-kolathur-constituency-defeat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-files-case-challenging-kolathur-constituency-defeat#comments</comments><guid isPermaLink="false">14f7931c-815f-48f5-8aeb-0407d6024c4b</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:29:59 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:29:59.743Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,கொளத்தூர்,Kolathur,கொளத்தூர் தொகுதி,Kolathur Constituency,வி.எஸ்.பாபு,VS Babu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/v6lxiyt1/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/v6lxiyt1/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கொளத்தூர் தொகுதி தோல்வியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.</p><p>சென்னை,</p><h2>மு.க.ஸ்டாலின் தோல்வி</h2><p>தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்றும் மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்றும் திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.</p><h2>மின்னணு எந்திரங்கள் ஆய்வு</h2><p>நீதிமன்ற உத்தரவுப்படி, கொளத்தூரில் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கின. சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநாராட்சி ஆணையருமான சமீரன் முன்னிலையில் 3 நாட்கள் ஆய்வுப் பணிகள் நடைபெற்றன.</p><p>இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆய்வு, சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவின் முடிவுகள் மற்றும் விவிபேட் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில், எந்தவித முரண்பாடும் இல்லாமல் அனைத்தும் சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.</p><p>சரிபார்ப்பு பணியின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் முழுமையாக விளக்கிக் காண்பிக்கப்பட்டன. விண்ணப்பதாரர் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிற போட்டியிட்ட வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்கள் உடனுக்குடன் அளிக்கப்பட்டன.</p><p>ஆய்வு மற்றும் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள சரிபார்ப்பு நடைமுறைகளின்படி முறையாக செயல்படுகின்றன என்று பெல் நிறுவன பொறியாளர்களால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழின் நகல் விண்ணப்பதாரர் வேட்பாளருக்கு வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார்.</p><h2>மு.க.ஸ்டாலின் வழக்கு</h2><p>இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். </p><p>சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கில்,</p><p>நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்தனர்.</p><h2>பல்வேறு முறைகேடுகள்...</h2><p>குறிப்பாக வாக்கு பதிவு மையங்களான 1, 17,28,32,75,78, 79,84,87,112,122 157,170 உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவி பேட், வாக்கு பதிவு எந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பெல் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட என்ஜினீயர் உடன் இருந்தார். நூறு சதவீத விவி பேட் மற்றும் வாக்கு பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.</p><p>இதில் ஆறு வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேடுகளை ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>தேர்தல் எந்திரம் தொடர்பாக புகார் செய்வது தொடர்பான வெளிப்படையான ஒரு நடை முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். பல வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக பல வாக்குப்பதிவு எந்திரங்களில் ஹார்டுவேர் என்று சொல்லக்கூடிய மென்பொருள் கோளாறு ஏற்பட்டது.</p><h2>வி.எஸ்.பாபு வெற்றி செல்லாது என அறிவிக்க...</h2><p>தொழில்நுட்ப கோளாறுகளை சுட்டிக்காட்டிய பின்பும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரிபார்த்தல் நடைபெற்றுள்ளது.</p><p>எனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேடுகளை சரிபார்க்க வேண்டும். மேலும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும், நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் - மு.க. ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandoning-paranthur-airport-will-push-tamil-nadus-development-into-an-abyss-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandoning-paranthur-airport-will-push-tamil-nadus-development-into-an-abyss-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">acfefa2e-3733-4d68-95f4-9d3b26de561f</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:27:28 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:27:28.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,சென்னை,Development,வளர்ச்சி,பரந்தூர் விமான நிலையம்,Paranthur Airport,மு.க. ஸ்டாலின்,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/h0ubpyhe/m.k.stailn.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/h0ubpyhe/m.k.stailn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். </p><p>அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண் 110-ன் கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.</p><h2>ஏமாற்றம்</h2><p>மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!</p><p>சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர்</a> தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக குறைந்துவிடும்.</p><h2>தொழில் வளர்ச்சி</h2><p>முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக திராவிட மாடல் ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதல்-அமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட். தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு 26-ந்தேதி இயங்காது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-outpatient-department-of-jipmer-hospital-puducherry-will-not-function-on-the-26th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-outpatient-department-of-jipmer-hospital-puducherry-will-not-function-on-the-26th#comments</comments><guid isPermaLink="false">7652d780-2adc-4503-9c00-5eb7e2371bc9</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:21:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:21:27.881Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Jipmer Hospital,Milad-un-Nabi,மிலாடி நபி,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/bw3gc7as/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/bw3gc7as/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி,</p><p>மிலாடி நபியை முன்னிட்டு, வரும் 26-ந்தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அரசு விடுமுறை தினமான 26.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாடி நபியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்."</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதை காங்கிரஸ் ஏன் ஆதரிக்கிறது? - மாணிக்கம் தாகூர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-does-congress-support-cancellation-of-parantur-airport-project-explanation-by-manikam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-does-congress-support-cancellation-of-parantur-airport-project-explanation-by-manikam-tagore#comments</comments><guid isPermaLink="false">178ae287-5c53-47c6-9087-80a54bb8bf26</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:14:30 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:14:30.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport,Manickam Tagore</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/pkdr1b15/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/pkdr1b15/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>ஏழு ஆண்டுகளாக ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கப் போராடி வந்தனர். இன்று பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இது ஒரு கட்சியின் வெற்றியா, மற்றொரு கட்சியின் தோல்வியா என்பதல்ல கேள்வி. இந்தத் திட்டம் தொடக்கத்திலேயே நியாயப்படுத்தக்கூடியதாக இருந்ததா என்பதே கேள்வி. அரசின் சொந்த ஆய்வுகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த ரத்துக்கு ஆதரவு அளிப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:</p><p>1. அரசின் சொந்த ஆய்வே இதை 2022-ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியது.</p><p>இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மார்ச் 2022-ல் சமர்ப்பித்த சாத்தியக்கூறு அறிக்கையிலேயே, பரந்தூர் நீர்நிலைகளால் சூழப்பட்ட பகுதி என்றும், தேர்வு செய்யப்பட்ட நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பகுதி பாசனக் குளங்களைக் கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 201 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட செயற்கை ஏரி ஒன்று திட்ட எல்லையிலிருந்து வெறும் 1.4 கி.மீ. தொலைவில் இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2026-ல் TVK  அரசு திட்டத்தை ரத்து செய்யக் கூறிய காரணமான தாழ்வான நிலப்பரப்பு மற்றும் நீர் தேங்கும் தன்மை ஆகியவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அரசின் பதிவில் இருந்தன.</p><p>2. தேர்வு செய்யப்பட்ட இடம், அரசே வகுத்திருந்த அளவுகோல்களில்கூட நிலைத்து நிற்கவில்லை.</p><p>மாற்று இடமான பன்னூருடன் ஒப்பிடும்போது, பரந்தூர் சென்னையிலிருந்து கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு தொலைவில் இருந்தது - 62 கி.மீ.க்கு எதிராக 27.6 கி.மீ. மேலும், பன்னூரில் சுமார் 250 குடும்பங்கள் இடம்பெயர வேண்டியிருந்த நிலையில், பரந்தூரில் சுமார் 1,005 குடும்பங்கள் பாதிக்கப்பட வேண்டியிருந்தது. அதேபோல், நிலத்தை நிரப்பி சமன்படுத்துவதற்கான பணியும் பரந்தூரில் சுமார் இருமடங்கு அதிகமாக இருந்தது. அரசு முக்கியமானதாகக் கருதிய பெரும்பாலான அளவுகோல்களிலும் பன்னூரே வலுவான மாற்றாக இருந்தது.</p><p>3. ஏழு ஆண்டுகாலப் போராட்டம் உண்மையான, நியாயமான குறையை வெளிப்படுத்தியது.</p><p>ஏகனாபுரம் மக்கள் 1,000 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடினர். இது வளர்ச்சிக்கு எதிரான போராட்டமல்ல ! தங்களது நிலம், நீர், வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க ஒரு சமூகமே நடத்திய நியாயமான போராட்டம். இன்று அரசின் சொந்த ஆவணங்களே அவர்களின் அச்சங்களை உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>4. ரத்துக்கான காரணங்கள் மூன்று ஆண்டுகளாகவே அரசின் பதிவில் இருந்தன.</p><p>TVK அரசு ரத்துக்கான தொழில்நுட்ப காரணங்களாக முன்வைத்த அம்சங்கள் அனைத்தும் 2022-ஆம் ஆண்டின் ஆய்விலேயே இருந்தன. ஆனால் அவை மூன்று ஆண்டுகளாக நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. இது எந்த ஒரு கட்சி அல்லது ஆட்சியையும் மட்டும் சார்ந்த தோல்வி அல்ல் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல ஆண்டுகளைக் கடந்து செல்லும் ஒரு தவறாகும்.</p><p>5. இது காங்கிரஸ் கட்சியின் நீண்டகால தேசிய நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது.</p><p>பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு முன், பாதிக்கப்படும் மக்களின் உண்மையான ஒப்புதலும், சுயாதீனமான சமூக தாக்க மதிப்பீடும் அவசியம் என்பதே காங்கிரஸின் நீண்டகால நிலைப்பாடு. 2013-ஆம் Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act சட்டத்தில் இந்தக் கொள்கைகள் சட்டரீதியாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளன. எனவே, பரந்தூர் ரத்து முடிவுக்கு எங்களது ஆதரவு அந்த அடிப்படைக் கொள்கையிலிருந்தே வருகிறது.</p><p>6. நிலம் கையகப்படுத்தப்பட்ட சட்ட நடைமுறையிலும் தீவிரமான குறைபாடுகள் இருந்தன.</p><p>தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்கள் சட்டம், 2023 (Tamil Nadu Land Consolidation for Special Projects Act - 2023) மூலமாக, ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட நிலங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டம் சட்டப்பேரவையில் ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பாதிக்கப்படும் குடும்பங்களின் உண்மையான ஒப்புதல் பெறும் நடைமுறை இல்லாத நிலையில், ஐந்து பேர் கொண்ட குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதிகள், முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (NOC), மாநில ஈரநில ஆணையத்தின் தடையின்மைச் சான்று (EIA) ஆகியவை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் நிலுவையில் இருந்தன.</p><p>7. எங்களது நிலைப்பாடு ஒரு அரசியல் அறிவிப்புக்கான எதிர்வினையல்ல் ஆதாரங்களின் அடிப்படையிலானது.</p><p>முந்தைய ஆளும் கட்சியின் அரசியல் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் எங்களது நிலைப்பாடு உருவாக்கப்படவில்லை. அரசே நியமித்த ஆய்வு மற்றும் அரசின் ஆவணங்களில் பதிவாகியுள்ள உண்மைகளின் அடிப்படையிலேயே எங்களது ஆதரவு உள்ளது. எனவே, இது கட்சி அரசியலைத் தாண்டிய, கொள்கை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான நிலைப்பாடாகும்.</p><p>8. மாற்றுத் திட்டத்திற்கும் அரசு தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.</p><p>சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை முறையான சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment) மற்றும் பாதிக்கப்படும் மக்களின் உண்மையான ஒப்புதல் பெறும் நடைமுறை மூலம் கண்டறிந்து, ஆய்வு செய்து, இறுதி அனுமதிகளைப் பெறுவதற்கான தெளிவான காலக்கெடுவை அரசு பொதுவெளியில் அறிவிக்க வேண்டும். ஒரு தவறான முடிவைத் திருத்துவது, சென்னையின் விமான நிலையம் அதன் முழுத் திறனை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மாற்றுத் திட்டத்தை முடிவில்லாமல் தாமதப்படுத்தும் புதிய காரணமாக மாறக்கூடாது. ஆனால், எங்களது ஆதரவு திட்டம் ரத்து செய்யப்பட்டதுடன் முடிவடையாது.</p><p>நெல்வாய், நாகப்பட்டு, தண்டலம், போடவூர், வாலத்தூர் மற்றும் அக்கம்மாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பக்கமும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதியாக நிற்கிறது.</p><p>அவர்களின் நிலம் தொடர்பான நிலைப்பாட்டை மூன்று மாதங்களுக்குள் அரசு தெளிவுபடுத்த வேண்டும். இன்னும் வழங்கப்பட வேண்டியுள்ள சுமார் 30  இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அடிப்படை குடிமை வசதிகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். மேலும், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக எதிர்காலத்தில் எந்த இடம் தேர்வு செய்யப்பட்டாலும், பாதிக்கப்படும் மக்களுடன் உண்மையான, வெளிப்படையான ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.</p><p>சென்னைக்கு கூடுதல் விமானப் போக்குவரத்து திறன் தேவை என்பது உண்மை. ஆனால், எந்த ஒரு நகரத்தின் வளர்ச்சியும் ஒரு சமூகத்தின் நிலம், நீர், வாழ்வாதாரம் மற்றும் கண்ணியத்தை - அவர்களின் உண்மையான ஒப்புதலின்றி - பலிகொடுத்து உருவாகக் கூடாது.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் தவெக அரசு: மு.வீரபாண்டியன் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-fulfilling-election-promises-m-veerapandian-welcomes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-fulfilling-election-promises-m-veerapandian-welcomes#comments</comments><guid isPermaLink="false">9de3281b-ca65-4bd8-bcf6-4804d03d609c</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:12:25 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:12:25.825Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,CPI,தேர்தல் வாக்குறுதிகள்,election promises,மு.வீரபாண்டியன்,M. Veerapandian,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/r9p74wnm/veerapandian.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/r9p74wnm/veerapandian.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>விமான போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு புதிய கூடுதலான விமான நிலையம் ஒன்றை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. அதற்கான முறையில் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக நிலமும் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், இத்திட்டத்தை எதிர்த்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்தனர். இத்திட்டதால் விவசாய நிலங்கள் நீர் நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர் .</p><h2>110 விதி</h2><p>இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில்  முதல்-அமைச்சர் விஜய்  சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது. புதிய விமான நிலையத்தை அதிக அளவில் சுற்றுச்சூழலுக்கும் விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் பாதிப்பில்லாமல் உருவாக்கிட தகுந்த இடத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய வேண்டும் . விமான நிலையம் அமைக்கும் பணியை துரிதப் படுத்திட வேண்டும் .</p><h2>6 சமையல் எரிவாயு சிலிண்டர்</h2><p>ஆண்டு தோறும் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தவெக தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்பொழுது முதற்கட்டமாக ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் வரை வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வரும் பொங்கல் நாளிலிருந்து மூன்று சிலிண்டருக்கான பணம் வங்கியில் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது. இருப்பினும் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் 6 சிலிண்டர்களை வழங்கிட வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ 5 லட்சம் வரை உள்ள குடும்பங்களுக்கும் இத்திட்டத்தின் பயன் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.</p><h2>வெற்றிப் பயணத் திட்டம்</h2><p>தேர்தல் வாக்குறுதிபடி, மகளிர் கட்டணமில்லா பயண திட்டம் வரும் அக்.2 முதல், விரிவாக்கம் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள, புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும், கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். “இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளோ இல்லை, ‘வெற்றிப் பயணத் திட்டம்’, இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்” என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</a>யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையம் ரத்து! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/paranthur-airport-cancelled-a-victory-for-the-peoples-struggle-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/paranthur-airport-cancelled-a-victory-for-the-peoples-struggle-velmurugan#comments</comments><guid isPermaLink="false">021acd57-29be-4864-bf16-73e9f5d52312</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:09:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:09:52.242Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,போராட்டம்,cancelled,வெற்றி,Velmurugan,பரந்தூர் விமான நிலையம்,Paranthur Airport,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,Cancel. ரத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ov0ifria/159.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ov0ifria/159.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலையம் ரத்து! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்  அறிவித்திருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன். ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் விடாப்பிடியான போராட்டம், அவர்களின் மண்ணையும் வாழ்வாதாரத்தையும் காப்பதற்கான நீண்ட நெடிய போராட்டம் இன்று வெற்றியைப் பெற்றிருக்கிறது.</p><h2>வாழ்த்துகள்</h2><p>வீடுகளையும், விளைநிலங்களையும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த வாழ்விடங்களையும் இழக்க மறுத்து, அதிகாரத்தின் அழுத்தங்களுக்கு அஞ்சாமல் களத்தில் நின்ற அந்த மக்களின் உறுதிதான் இந்த வெற்றியின் அடித்தளம். </p><p>அதேபோல், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">பரந்தூர் </a>மக்களின் நியாயமான கோரிக்கைக்கு துணைநின்று, களத்தில் குரல் கொடுத்து, போராட்டங்களுக்கு ஆதரவாக நின்ற அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டத் தோழர்களுக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இது ஒரு விமான நிலையத்திட்டம் கைவிடப்பட்ட வெற்றி மட்டுமல்ல. மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்தத் திட்டத்தையும் திணிக்க முடியாது என்பதையும், மண்ணுக்காக மக்கள் ஒன்றுபட்டால் அதிகாரத்தையே பணிய வைக்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ள வெற்றி.</p><h2>திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும்</h2><p>இந்த அறிவிப்போடு அரசின் பொறுப்பு முடிந்துவிடவில்லை. விமான நிலையம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், இனி வேறு எந்தத் திட்டத்திற்காகவும், குறிப்பாக சிப்காட் அமைக்கும் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படக் கூடாது. அந்த நிலங்கள் அவற்றின் உண்மையான உரிமையாளர்களான விவசாயிகளிடமே உடனடியாகவும் முழுமையாகவும் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும்.</p><p>பல ஆண்டுகளாக தங்களது நிலத்திற்காகப் போராடிய மக்களிடம், திட்டம் கைவிடப்பட்டது என்ற அறிவிப்பை மட்டும் கொடுத்துவிட்டு அரசு நின்றுவிடக்கூடாது. நிலத்தைப் பறிப்பது எவ்வளவு வேகமாக நடந்ததோ, அதே வேகத்தில் நிலத்தை மக்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையும் நடைபெற வேண்டும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>தமிழ்நாடு அரசு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு எந்தத் திட்டத்திற்கும் மாற்றாமல், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து முடித்து, உரிய உரிமையாளர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். </p><p>அத்துடன், கையகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இது நாள் வரையிலும் இந்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாய்லாந்து சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழக இளைஞர்கள்: ஏஜெண்டுகள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-youths-trapped-by-thai-cyber-scam-gang-agents-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-youths-trapped-by-thai-cyber-scam-gang-agents-arrested#comments</comments><guid isPermaLink="false">f5aae2c6-59d8-4854-987d-089cd287e19d</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:02:48 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:02:48.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thailand,தாய்லாந்து,சைபர் கிரைம் மோசடி,இளைஞர்கள்,Alert,cyber crime</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ym68a0va/101.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஏஜெண்டுகள் கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் குற்ற கும்பலிடம் சிக்கிய, தமிழக இளைஞர்கள் மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ym68a0va/101.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாய்லாந்து நாட்டில் அதிக சம்பளத்தில் கணினி வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட தமிழக இளைஞர்கள், மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள சர்வதேச<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D"> சைபர் </a>குற்ற கும்பல்களிடம் சிக்கி தவித்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்களை மீட்கக் கோரி அனுப்பிய ரகசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><h2>வேலை மோசடி</h2><p>சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் வழியாக "தாய்லாந்தில் டேட்டா என்ட்ரி மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு ஆட்கள் தேவை என்றும் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்" என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அந்த விளம்பரங்களை நம்பி அணுகும் பட்டதாரி இளைஞர்களிடம், வேலைக்கான<a href="https://www.dailythanthi.com/topic/visa"> விசா</a> பெற தாமதமாகும் எனக் கூறி, அவசரமாக சுற்றுலா விசாவில் தாய்லாந்திற்கு ஏஜெண்டுகள் அழைத்துச் செல்கின்றனர்.</p><h2>தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கடத்தல்</h2><p>பாங்காக் விமான நிலையத்தில் இறங்கும் இளைஞர்களை வரவேற்கும் உள்ளூர் ஏஜெண்டுகள், அவர்களை காரில் அழைத்துச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் வேலை செய்யும் இடத்திற்குச் செல்லாமல், <a href="https://www.dailythanthi.com/news/world">தாய்லாந்து-மியான்மர்</a> எல்லையைக் கடந்து, ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 'கே.கே. பார்க்' மற்றும் 'மயாவடி' போன்ற மிக அபாயகரமான முகாம்களுக்குள் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்படுகின்றனர்.</p><h2>'சைபர் அடிமைகளாக' அனுபவிக்கும் சித்திரவதைகள்</h2><p>முகாமிற்குள் நுழைந்தவுடன் இளைஞர்களின் பாஸ்போர்ட், செல்போன் மற்றும் அடையாள அட்டைகள் பறிக்கப்படுகின்றன. மேலும் இந்தியர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களை குறிவைத்து 'கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி', 'டேட்டிங் ஆப் மோசடி' மற்றும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' போன்ற ஆன்லைன் ஏமாற்று வேலைகளை செய்ய அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.</p><p>தினசரி நிர்ணயிக்கப்படும் இலக்குகளை முடிக்கத் தவறினால் அல்லது இந்த வேலைகளை செய்ய மறுத்தால், இளைஞர்கள் கொடூரமான உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பட்டினியாக போடுதல், இரும்பு கம்பிகளால் தாக்குதல் மற்றும் மின்சார அதிர்வு கொடுப்பது போன்ற அத்துமீறல்கள் அங்கு தினசரி நடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.</p><h2>தமிழக போலீஸ் மற்றும் அரசின் அதிரடி நடவடிக்கை</h2><p>பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தமிழக சைபர் கிரைம் போலீசாரும் மத்திய அரசும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் இளைஞர்களை ஏமாற்றி அனுப்பிய ஏஜெண்டுகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி மணவாளன் (35 வயது), ராஜ்குமார் (36 வயது), தீபக் டோனா (27 வயது) மற்றும் ஜோவின் அபிஷேக் ராஜன் (28 வயது) ஆகியோரை கைது செய்தனர்.</p><p>இவர்களுக்கு பின்னணியில் செயல்படும் சர்வதேச கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை உடைக்க விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகங்கள் வழியாக, அந்த நாட்டு ராணுவ மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து முகாம்களில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><h2>வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் முக்கிய எச்சரிக்கை</h2><p>வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்பும் இளைஞர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு எச்சரித்துள்ளது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது சட்டவிரோதமானது. கண்டிப்பாக 'வேலை விசா' மூலமாக மட்டுமே செல்ல வேண்டும். மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் மட்டுமே வேலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.</p><p>இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தகவல்களைப் பகிர விரும்புபவர்கள், தமிழக அரசின் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உடனே தொடர்பு கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பூந்தமல்லி: அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/poonamallee-students-suffer-vomiting-and-dizziness-after-eating-breakfast-at-a-government-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/poonamallee-students-suffer-vomiting-and-dizziness-after-eating-breakfast-at-a-government-school#comments</comments><guid isPermaLink="false">53ab4fd6-0b2b-44e7-8b6a-c4818c6c6d2d</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:01:25 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:01:25.530Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Breakfast,மாணவர்கள்,Government School,Lizard,பல்லி விழுந்த உணவு,காலை உணவுத்திட்டம்,வாந்தி மயக்கம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/kvehiab1/42.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஆஸ்பத்திரியில் மாணவர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/kvehiab1/42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பூந்தமல்லி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் காலை வழங்கப்பட்ட பொங்கல் உணவைச் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு திடீரென<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"> வாந்தி, மயக்கம் </a>மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதால், அவர்கள் அவசரமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>காலை உணவில் பல்லி</h2><p>சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழக்கம் போல பொங்கல் வழங்கப்பட்டது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர்கள்</a> அந்த உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவனின் தட்டில் இருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">பொங்கலில் பல்லி</a> ஒன்று கிடப்பதைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.</p><p>இதையடுத்து உடனடியாக உணவு விநியோகம் நிறுத்தப்பட்டது. அதற்குள் உணவைச் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>ஆஸ்பத்திரியில் அனுமதி</h2><p>ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தை அறிந்த பெற்றோர்கள் பதற்றத்துடன் ஆஸ்பத்திரியில் குவிந்து வருகின்றனர்.</p><h2>அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை</h2><p>இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த குறிப்பிட்ட மைய சமையல் கூடத்திலிருந்து மற்ற பள்ளிகளுக்கு அனுப்பவிருந்த காலை உணவுகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.</p><p>சமையல் கூடத்தில் இருந்த உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாகச் செயல்பட்ட சமையல் ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Chennai | Students | காலை உணவில் பல்லி.. மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் <a href="https://x.com/hashtag/middaymeal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#middaymeal</a> <a href="https://x.com/hashtag/cmvijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#cmvijay</a> <a href="https://x.com/hashtag/school?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#school</a> <a href="https://x.com/hashtag/students?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#students</a> <a href="https://x.com/hashtag/chennai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#chennai</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a><a href="https://t.co/pIiVZ1IlYu">https://t.co/pIiVZ1IlYu</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2091777281094226014?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த எஸ்.பி.வேலுமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sp-velumani-thanked-annamalai-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sp-velumani-thanked-annamalai-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">902c63f2-0a8f-49a8-9506-04cb064e7bda</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:57:44 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:57:44.624Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,சட்டசபை,TN Assembly,எஸ்.பி.வேலுமணி,SP Velumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ckprwsaj/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ckprwsaj/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் 6 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-</p><p>மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு எஸ்.பி.வேலுமணி தனது உரையை தொடங்கினார். மேலும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களை குறிப்பிட்டு நன்றி கூறினார். உட்கட்சி பூசலில் இபிஎஸ் மீது எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது இன்றைய பேச்சு பேசுபொருளாகியுள்ளது.</p><p>தொடர்ந்து அவர் கூறியதாவது, “அம்மா உணவகம் உட்பட அம்மாவின் திட்டங்களை தொடர் திட்டங்களாக அறிவித்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். திமுக ஆட்சியில் யாரெல்லாம் பவரில் இருந்தார்களோ, அவர்களும் இன்று பவரில் தொடர்கிறார்கள். அவர்கள் நல்ல அதிகாரிகளுக்கு உரிய பணியை வழங்கவில்லை என்றார்.</p><p>அப்போது "அவர் எந்த கட்சி சார்பில் பேசியுள்ளார்?" என்று திமுக எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்ப, "அவர் அதிமுக என்று தான் பட்டியலில் குறிப்பிட்டுள்ளேன், வீணான குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்" என சபாநாயகர் பதிலளித்தார். வேலுமணி பதிலளிக்க எழுந்த போது, "வேண்டாம்... நான் கூறிவிட்டேன்" என்று அவரை சபாநாயகர் அமர வைத்தார்.</p><p>திமுக ஆட்சியில் நாங்கள் வாய்ப்பு கேட்கும் போது கொடுக்கமாட்டார்கள், நீங்கள் மிகவும் பெருந்தன்மையாக இருக்கிறீர்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச, அதை கேட்டு முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.</p><p>தொடர்ந்து என் வெற்றிக்காக பணியாற்றிய கூட்டணி கட்சி தலைவர்களான பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் தம்பி அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.</p><p>கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அனைத்து முக்கியத் திட்டங்களையும் கொண்டு வந்ததாகவும். மேலும், கோவையில் மனித, வனவிலங்கு மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும், காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதாகவும் கூறினார். ஊருக்குள் வரும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு உரிய அனுமதி பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினார். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வரவும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் ஸ்பெஷல்: மங்களூரு - கொல்லம் இடையே நாளை சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-special-special-train-between-mangaluru-and-kollam-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-special-special-train-between-mangaluru-and-kollam-tomorrow#comments</comments><guid isPermaLink="false">de3a10e0-114f-4c34-b4e2-d8280b3dbe01</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:22:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:22:14.733Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mangaluru,மங்களூரு,சிறப்பு ரெயில்,Kollam,Special train,கொல்லம்,Onam festival,ஓணம் பண்டிகை,Onam,ஓணம்,சிறப்பு ரெயில் சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ctj0tb5h/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/ctj0tb5h/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஓணம் பண்டிகையையொட்டி, மங்களூரு - கொல்லம் இடையே நாளை (செவ்வாய்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>மங்களூரு - கொல்லம்</h2><p>மங்களூரு ஜங்ஷனில் இருந்து நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06052) மாலை 6.45 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.</p><h2>கொல்லம் - மங்களூரு</h2><p>மறுமார்க்கத்தில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கொல்லத்தில </a>இருந்து நாளை இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06051) மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு ஜங்ஷனை சென்றடையும்.</p><p>20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (24-ந் தேதி) பகல் 12 மணிக்கு தொடங்கிவிட்டது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சில உறுப்பினர்கள் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-do-not-wish-to-mention-the-names-of-certain-members-speaker-jcd-prabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-do-not-wish-to-mention-the-names-of-certain-members-speaker-jcd-prabhakar#comments</comments><guid isPermaLink="false">cf931074-73a0-4dd9-b35a-98ccfdcbaa6b</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:18:37 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:18:37.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,ஜே.சி.டி.பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5n3lrgto/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5n3lrgto/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது:-</p><p>பேரவைக்கு ஒரு அறிவிப்பை வெளியிட நான் விரும்புகிறேன். சட்டப்பேரவை விதி எண் 55, 56 போன்ற அறிவிப்புகள் பேரவையின் செயலாளர் அல்லது சபாநாயகர் அனுமதித்து பிறகு விவாதிக்கலாம். ஆனால், சில உறுப்பினர்கள் பெயரை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை. அறிவிப்புகளை எழுதி உடனடியாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>பேரவை உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட பெயரில் உள்ள சமூக வலைத்தளத்தில் அவற்றை வெளியிடுகிறார்கள். பேரவைத் தலைவரை அனுமதிக்கப்படும் வரை அவற்றை வெளியிடுவது விதிகளுக்கு முரணானது. அது குறித்து பேரவை விதி எண் 36 உள்பிரிவு 5 தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதன்படி, சபாநாயகர் அனுமதித்து உறுப்பினர்களுக்கு அனுப்பாத வரை அதனை உறுப்பினரோ, வேறு யாரும் வெளியிடக்கூடாது.</p><p>எனவே இன்று முதல் தொலைக்காட்சி, ஊடகங்கள் உள்பட அனைத்துக்கும் சேர்த்தே சொல்கிறேன், அவ்வாறு இதில் பேரவை உறுப்பினர்கள் யாராவது இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டால் பிரசுரிக்கவும் கூடாது, வெளியிடவும் கூடாது. எனவே அனைவரும் பேரவை விதிக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் அரசியல்வாதிகளை விமர்சிக்கலாம்... ஆனால் தனிப்பட்ட தாக்குதல் கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-politicians-can-be-criticized-but-personal-attacks-should-not-be-made-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-politicians-can-be-criticized-but-personal-attacks-should-not-be-made-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">dff286b6-2f87-4e15-8c5b-975887278b9d</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:02:08 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:02:08.751Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,பெண்,Woman,Politicians,அரசியல்வாதிகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dla1finq/tamizhisai.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழிசை சவுந்தரராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dla1finq/tamizhisai.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முன்னாள் பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/tamilisai-soundararajan">தமிழிசை சவுந்தரராஜன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>ஒரு இளம் பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலும், தனிப்பட்ட முறையிலும் குறிவைத்து நடத்தப்படும் ட்ரோல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகளும், கொள்கை முரண்பாடுகளும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை காயப்படுத்துவதற்கான காரணமாக ஒருபோதும் மாறக்கூடாது.</p><h2>தனிப்பட்ட தாக்குதல்</h2><p>தன்னைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் சொல்லவும், தன்னை தற்காத்துக் கொள்ளவும் ஒரு பெண் அமைச்சர் தனது பொன்னான நேரத்தை செலவிட வேண்டிய நிலை மிகவும் வேதனையானது. இத்தகைய ட்ரோல்கள் ஒரு பெண்ணின் மன அமைதியையும், தன்னம்பிக்கையையும், கவனத்தையும் பாதிக்கலாம். அவர் தனது பொறுப்பில் கவனம் செலுத்தி மக்களுக்காக பணியாற்ற வேண்டிய நேரத்தையும் சக்தியையும் இவை பறித்துவிடுகின்றன. அதே நேரத்தில், நான் ஒன்றை மிகத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.</p><h2>ட்ரோல்கள்</h2><p>நான் ஒரு அசைக்க முடியாத பாஜக பெண் தலைவர். என் கொள்கையிலும், என் கட்சியிலும் நான் உறுதியாக நிற்கிறேன். இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக நான் குரல் கொடுத்தால், உடனே என்னை “ஏ டீம்”, “பி டீம்” என்று கூறி ட்ரோல் செய்ய வேண்டாம். நானும் இத்தகைய ட்ரோல்களை எதிர்கொண்டிருக்கிறேன். அந்த வார்த்தைகள் ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு பாதிக்கக்கூடும் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால் அவற்றால் நான் அசைந்து போகவில்லை. இன்னும் உறுதியுடன், இன்னும் நம்பிக்கையுடன் நிற்கிறேன்.</p><h2>மனிதநேயத்தின் அடையாளம்</h2><p>ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக குரல் கொடுப்பது எந்த “டீம்”-ஐச் சேர்ந்தது என்பதல்ல. அது மனிதநேயத்தின் அடையாளம். ஒரு பெண் அரசியல்வாதியை எதிர்க்க விரும்பினால் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள். அவரது கொள்கைகளை கேள்வி கேளுங்கள். அவரது செயல்பாடுகளை விமர்சியுங்கள். அவரது கருத்துகளுக்கு உண்மையான தரவுகளாலும், வலுவான வாதங்களாலும் பதிலளியுங்கள். அரசியலை அரசியலால் எதிர்கொள்ளுங்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். உண்மைக்கு உண்மையால் பதிலளியுங்கள். ஆனால் ஒரு பெண்ணின் கண்ணியத்தை மட்டும் காயப்படுத்தாதீர்கள். </p><p>ட்ரோல்கள் எத்தனை வந்தாலும், நாங்கள் பெண்கள் அசைந்து போக மாட்டோம். அஞ்ச மாட்டோம். அமைதியாக பின்வாங்க மாட்டோம். உறுதியுடன் நிற்போம். மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம், என்ற உறுதிப்பாட்டை பெண் தலைவர்கள் பெற வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உடனடித் தேவை ‘கார்&apos; அல்ல - டாக்டர் கிருஷ்ணசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mlas-immediate-need-is-not-a-car-krishnasamy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mlas-immediate-need-is-not-a-car-krishnasamy#comments</comments><guid isPermaLink="false">6e90d548-dba2-4010-aaa6-214f01efdf1e</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:50:31 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:50:31.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Car,கார்,டாக்டர் கிருஷ்ணசாமி,புதிய தமிழகம்,Office,கிராம நிர்வாக அலுவலகம்,சட்டமன்ற உறுப்பினர்,Krishnasamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/lruvd62q/Krishnasamy.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிருஷ்ணசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/lruvd62q/Krishnasamy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உடனடித் தேவை 'கார்' அல்ல, காரியாலயம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கார் வழங்கும் திட்டம்</h2><p>சில சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் கார் வழங்கும் திட்டம் ’110 விதியின் கீழ்’ சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இத்திட்டத்திற்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன. எதையும் ஆராயாமல் திட்டங்களை அறிவிக்கும்போது இவ்வாறே நிகழும்.</p><p>தொகுதி முழுக்க பயணம் செய்து மக்கள் குறைகளைக் கேட்க இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் வாகனம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த வசதி கூட இல்லாதவர்கள் எத்தனை பேர் என்பதே முக்கியம்.</p><h2>நிர்வாக அலுவலகம்</h2><p>தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள பொழுது, இத்திட்டம் ஆடம்பரமானது அல்லது ஊதாரித்தனமானது என்றே விமர்சிக்கப்படுகிறது. ஆனால், 200 முதல் 300 கிராமங்கள் உள்ள தங்கள் தொகுதி மக்களின் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க “ஒரு நிர்வாக அலுவலகம்” தேவை என்பதை ஏன் எந்த சட்டமன்ற உறுப்பினரும் வலியுறுத்தவில்லை எனத் தெரியவில்லை.</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சராகிவிட்டால் அவர்களின் அதிகாரம் தமிழக அளவில் பரவுகிறது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஒவ்வொரு அலுவலகப் படிக்கட்டுகளிலும் ஏறி இறங்கும் நிலையே உள்ளது.</p><p>எனவே, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சட்டமன்ற உறுப்பினர்கள்</a> மதிப்பும் மரியாதையோடும் சுதந்திரமாகவும் தங்களது சட்டமன்றத் தொகுதிக்குள் கடமையாற்ற தேவைப்படுவது குறைந்தபட்சம் ஒரு தட்டச்சர், உதவி பி.டி.ஓ, துணை வட்டாட்சியர், ஒரு பொறியாளர் உள்ளடங்கிய தனிக் காரியாலயம் - நிர்வாக அலுவலகமே! - கார் அல்ல.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தவறு செய்துவிட்டனர்; திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-have-made-a-mistake-mk-stalin-speech-at-wedding-event</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-have-made-a-mistake-mk-stalin-speech-at-wedding-event#comments</comments><guid isPermaLink="false">81f6fde2-267d-4a67-aac5-830606b569f0</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:36:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:36:52.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hkd2ahkj/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/hkd2ahkj/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாநில முதல்-அமைச்சராக <a href="https://www.dailythanthi.com/">விஜய் </a>செயல்பட்டு வருகிறார்.</p><p>அதேவேளை, தேர்தலில் தோல்வியடைந்த திமுக 59 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்தார்.  </p><h2>மக்கள் தவறு செய்துவிட்டனர்</h2><p>இந்நிலையில், சென்னை திருவான்மையூரில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.</p><p>திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,</p><p>ஒருகாலத்தில் ஒரு குடும்பத்தின் படித்தவர்கள், பட்டதாரிகள் அத்திப்பூ பூத்தார் போல் இருப்பார்கள். ஆனால் தற்போது ஊருக்கு ஊர் கிராமத்திற்கு கிராமம் பட்டதாரிகள், டாக்டர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கங்கள் தான். இந்த நிலைக்கு வருவதற்கு யார் காரணம் என்பதை இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு அது புரியவுமில்லை, தெரியவுமில்லை.</p><p>ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு அது ஏமாற்றமாக மாறியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தவறு செய்துவிட்டனர். அது கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மணமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக தவெக அரசு செயல்படுகிறதா? - முத்தரசன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-acting-against-communist-parties-mutharasan-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-acting-against-communist-parties-mutharasan-questions#comments</comments><guid isPermaLink="false">f13cb568-a456-49c9-afca-371d705b7c00</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:28:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:28:40.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,Communist Party of India,முத்தரசன்,Mutharasan,கம்யூனிஸ்டு கட்சி,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/835kknho/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/835kknho/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்,</p><p>தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்திய கம்யூனிஸ்டு கட்சி. தொடங்கப்பட்டபோதே தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு 2 முறை தடை விதிக்கப்பட்டது. தற்போது 4-வது முறையும் தடை விதிக்கப்படுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் செப்டம்பர் 1 பேரணியில் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரெயில்களை ரத்து செய்துள்ளனர். பேரணியை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.</p><h2>முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்</h2><p>தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரை கணக்கெடுக்க வேண்டும் என தாசில்தார் சுற்றறிக்கை அனுப்ப உள்ளார். அதற்கான நகல்கள் மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்தவுடன் தாசில்தார் இடமாற்றப்படுகிறார்.</p><p>இதுதொடர்பாக சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பின்பு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட் டையன் போகிற போக்கில் அந்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது என்கிறார். தமிழகத்தில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி நடக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக குறி வைத்து மோடி செயல்படுகிறார். அதேபோல தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியும் அவ்வாறு செயல்படுகிறதா? என்கிற கேள்விக்கு முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.</p><h2>மோசடி இருக்க கூடாது</h2><p>குறுவை தொகுப்பு மற்றும் பயிர்க்காப்பீட்டு தொகையை உட னடியாக வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முற்றுகை போராட்டம் நடத்தும். தாய்மாமன் திட்டத்தில் தங்க மோதிரம் வழங்குவதற்கான அரசின் டெண்டரில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். தாய்மாமன் விஷயத்தில் மோசடி இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/development-works-at-erode-railway-station-are-in-full-swing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/development-works-at-erode-railway-station-are-in-full-swing#comments</comments><guid isPermaLink="false">75ca8a7c-6423-4a2d-9829-607192f4c0e5</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:28:18 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:28:18.880Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Development Works,Erode Railway Station,மேம்பாட்டு பணிகள்,ஈரோடு ரெயில் நிலையம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/229tq6lw/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/229tq6lw/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>ஈரோடு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>ஈரோடு ரெயில் நிலையம்</h2><p>ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இங்கு 4 நடைமேடைகள் உள்ளன. சுரங்கப் பாதை வழியாக பயணிகள் சென்று நகரும் படிக்கட்டில் ஏறி நடைமேடைக்கு சென்று வருகின்றனர். இதனால் ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் இருந்து அனைத்து நடைமேடைகளுக்கும் செல்லும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.</p><p>இதற்கிடையில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஈரோடு ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.38 கோடியே 9 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம், நிலைய விரிவாக்க பணி, நடைமேடை சீரமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டது.</p><h2>பயணிகள் அச்சம்</h2><p>இதில் வாகன நிறுத்துமிடம் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. புதிதாக நுழைவாயில் வளைவும் அமைக்கப்பட்டு உள்ளன. நடைமேம்பாலம் அமைக்கும் பணி தற்போது 80 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளது. மேலும் நடைமேம்பாலத்தில் ஏறி செல்வதற்கு வசதியாக படிக்கட்டு, 'லிப்ட்' மற்றும் நகரும் படிக்கட்டு போன்றவை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கான எந்திரங்கள் ரெயில் நிலைய வளாக பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>இதற்கிடையில் ரெயில் நிலையத்தின் முன்புள்ள பழைய கட்டிடம் இடிக்கும் பணியும் தற்போது வேகமாக நடந்து வருகிறது. பாதுகாப்பாக இந்த பணிகள் நடைபெற்றாலும், ரெயில் நிலையத்துக்குள் செல்லும் பயணிகள் ஒருவித அச்சத்துடன் உள்ளே சென்று வருகின்றனர். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக காத்திருப்போர் அறை, டிக்கெட் கவுன்டர், அதிகாரிகள் அலுவலகங்கள் போன்றவை கட்டப்பட உள்ளதாகவும், அனைத்து பணிகளும் 8 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>“6 சிலிண்டர் வாக்குறுதி... 3 ஆக குறைப்பா?” - தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-6-cylinder-promise-will-it-be-reduced-to-3-ttv-dhinakaran-criticizes-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-6-cylinder-promise-will-it-be-reduced-to-3-ttv-dhinakaran-criticizes-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">2c5f3e5e-240a-42f3-90ae-c5f3757057cb</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:23:17 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:23:17.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,cylinder,சிலிண்டர்,வாக்குறுதி,promise</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/zpu71r9y/ttv-dhinakaran.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/zpu71r9y/ttv-dhinakaran.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்துஅமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/ttv-dhinakaran">டிடிவி தினகரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்</h2><p>தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஆறு சிலிண்டர்கள் மூன்றாக குறைப்பா? முதல்-அமைச்சர் மூன்று சிலிண்டர்கள் அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கேள்விக்குறிதானா?</p><p>அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் எனும் தலைப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த தவெக, ஆட்சிக்கு வந்தபின்பு முதற்கட்டம் எனக்கூறி லாவகமாக மக்களை ஏமாற்ற முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>ஆண்டு வருமானம் 2.5 லட்சம் என்ற கட்டுப்பாடு</h2><p>ஏற்கனவே, பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, விவசாயிகளின் போராட்டங்களின் வீரியத்திற்கு ஏற்ப படிப்படியாகத் தள்ளுபடித் தொகையை அதிகரித்துக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைப் பாதியாகக் குறைத்ததோடு, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருப்பதும், மீதி எப்போது கிடைக்கும் என்ற தகவலை அறிவிக்காததும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வாழைப்பழ காமெடி</h2><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்தபின்பு எந்தவொரு வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், அரைகுறையாக நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது, பிரபல வாழைப்பழ காமெடியைப் போல, மூன்று வந்துவிட்டது, மீதமுள்ள மூன்று எங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.</p><p>எனவே, தவெக கொடுத்த வாக்குறுதியின்படி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை கட்டணமில்லாமல் வழங்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்திட முன்வர வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் 10,000 ஏரிகளில் நீர் இல்லை: வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்! -  அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10000-lakes-in-tamil-nadu-are-dry-state-must-be-declared-drought-hit-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10000-lakes-in-tamil-nadu-are-dry-state-must-be-declared-drought-hit-anbumani#comments</comments><guid isPermaLink="false">fef13c7c-d319-4c3c-983c-bde9a403ff44</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:18:09 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:18:09.807Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/rwdhgmmi/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/rwdhgmmi/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>டெல்டாவில் 95% நீர்நிலைகள் வறண்டனதாகவும், தமிழ்நாட்டில் 10,000 ஏரிகளில் நீர் இல்லை எனவும் குறிப்பிட்டு தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>95 சதவீத நீர்நிலைகள் வறட்சி</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் மூலம் காவிரி நீரைப் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 14,141 நீர்நிலைகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவற்றில் தண்ணீரே இல்லை. மிக மோசமான இச்சூழலில் இருந்து தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்காக தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.</p><p>தமிழ்நாடு நீர்வளத்துறையின் புள்ளிவிவரங்கள்படி, தமிழகத்தில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள மொத்தம் உள்ள 14,141 நீர்நிலைகளில், 4208 நீர்நிலைகள், அதாவது 29.25% நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. மேலும், 5,814 நீர்நிலைகளில் 1% முதல் 25% வரை மட்டுமே நீர் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை. இதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவை காவிரி பாசன மாவட்டங்கள் தான். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இவை தவிர ஆறுகள் மூலம் தண்ணீர் பெறாத 27 தனித்த நீர்நிலைகளில் 26 நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. ஒட்டுமொத்தமாக காவிரி பாசன மாவட்டங்களில் 764 நீர்நிலைகளில் 720 நீர்நிலைகளில் ஒரே ஒரு சொட்டு நீர் கூட இல்லை.</p><h2>பயிர்கள் நீரின்றி கருகி விட்டன</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருக்கும் நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவு 6.7 டி.எம்.சி ஆகும். அதில் வெறும் 0.17 டி.எம்.சி, அதாவது 2.62% அளவுக்கு மட்டுமே நீர் உள்ளது. தென்மேற்கு பருமழை பொய்தது, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாதது ஆகியவை தான் இந்த நிலைக்கு காரணமாகும். ஆனால், இதன் விளைவுகள் மிகக் கொடுமையானவை. காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் 100 அடி ஆழத்திற்குள்ளாக நிலத்தடி நீர் கிடைத்து வந்த நிலையில், இப்போது நிலத்தடி நீர்மட்டம் 200 அடிக்கும் கீழாக சென்று விட்டது. அதனால், நிலத்தடி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை; அதுமட்டுமின்றி, போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறுகளை மேலும் ஆழப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கான ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தது ஒரு லட்சம் முதல் பல லட்சம் ரூபாய் வரை செலவாவதாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உழவர்கள் </a>கவலை தெரிவிக்கின்றனர்.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் அது சுமார் 2 லட்சம் ஏக்கர் என்ற நிலையில் குறுகி விட்டது. அவற்றிலும் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் நீரின்றி கருகி விட்டன. சம்பா பருவத்திலும் இதே நிலை தான் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா சாகுபடிக்காக விதைக்கும் பணிகள் ஆகஸ்ட் மத்தியில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், நெல் விதைப்புக்கான அறிகுறிகள் கூட இன்று வரை தென்படவில்லை.</p><h2>70 சதவீத விவசாயம் பாதிப்பு</h2><p>மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டால் தான் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். ஆனால், மேட்டூர் அணையில் சுமார் 85 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கும் நிலையில், அதைக் கொண்டு அணையை திறப்பதோ, தொடர்ந்து தண்ணீர் விடுவதோ சாத்தியமல்ல. அணை திறக்கப்படுமா? என்பதைக் கணிக்கவே இன்னும் சில வாரங்கள் ஆகும் எனும் நிலையில் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் வினாக்குறியாகியுள்ளது.</p><p>கடந்த ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 14 லட்சம் ஏக்கர் உள்பட தமிழ்நாடு முழுவதும் 26.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் இந்த அளவு 4 முதல் 5 லட்சம் ஏக்கர் என்ற அளவுக்கு குறைந்து விடும் என அஞ்சப்படுகிறது. இதனால், 16 முதல் 17 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும். 60 முதல் 70% அளவுக்கு விவசாயம் பாதிக்கப்படுவதால் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாவார்கள். அதுமட்டுமின்றி, வேளாண் கூலித் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி வருவாய் இழப்புக்கு ஆளாவார்கள்.</p><h2>வறட்சி பாதித்த மாநிலம்</h2><p>பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இந்த பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முதல் நடவடிக்கை தமிழ்நாட்டு வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பது தான். அதன்படி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டை </a>வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.</p><p>அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதமும், குறுவை சாகுபடி செய்து நீரின்றி பயிர்கள் வாடியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். சம்பா சாகுபடி செய்யமுடியாத நிலை உருவாகும் சூழலில் அதனால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10000 உதவி வழங்க வேண்டும். நிலமில்லா தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>