<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 16 Sep 2026 05:25:35 +0000</lastBuildDate><item><title>அச்சுறுத்தும் நோக்கத்துடன் சோதனை நடத்துகின்றனர்: கே.என்.நேரு குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/raids-are-being-conducted-with-the-intention-of-intimidation-kn-nehru-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/raids-are-being-conducted-with-the-intention-of-intimidation-kn-nehru-alleges#comments</comments><guid isPermaLink="false">a595d7b7-2a8a-47b9-90f4-20b477e2fb8d</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:20:51 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:20:51.450Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கே.என்.நேரு,KN Nehru,Anbil Mahesh Poyyamozhi,அன்பில் மகேஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/cz6irufu/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/cz6irufu/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனைக்கு கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p><strong>இதுதொடர்பாக அவர் கூறுகையில்,</strong></p><p>திமுகவில் சிறப்பாக செயல்படுவோரை குறிவைத்து அச்சுறுத்தும் வகையில் சோதனை நடத்துகிறார்கள். அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை நடத்தப்படுவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. திமுகவினரை அச்சுறுத்த தவெக அரசு முயற்சிக்கிறது. தவெக அரசின் சோதனைகளை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வோம். சோதனையை சட்டப்படி எதிர்கொண்டு நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபித்து வெற்றிபெறுவோம். அன்பில் மகேஸை பார்ப்பதற்கு கூட காவல்துறையினர் எங்களை அனுமதிக்கவில்லை. என்று கூறினார்.</p><p>முன்னதாக மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில் அன்பில் மகேஷ் வீட்டின் முன் ஆதரவாளர்களுடன் கே.என்.நேரு காத்திருந்தார். சிறிது நேரம் காத்திருந்த நிலையிலும் அன்பில் மகேஸை சந்திக்க கே.என்.நேருவுக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவரிடம் செல்போனில் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>ராமசாமி படையாட்சியாரின் மக்கள் நலப்பணிகளை போற்றிடுவோம்: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-cherish-the-public-welfare-initiatives-of-ramasamy-padayatchiar-chief-minister-vijay-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-cherish-the-public-welfare-initiatives-of-ramasamy-padayatchiar-chief-minister-vijay-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">1768f0c1-43fd-4f81-a1d4-fea6750ad512</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:18:15 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:18:15.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,புகழாரம்,ராமசாமி படையாட்சியார்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Ramasamy Padayatchiyar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6c5ik1n2/ramasai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6c5ik1n2/ramasai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சுதந்​திர போராட்ட வீரரரும், முன்​னாள் அமைச்​சரு​மான ராமசாமி படை​யாட்​சி​யின் 109-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்​படுகிறது. </p><p>இந்நிலையில் ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.</p><p>மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. இந்நாளில் அவரது மக்கள் நலப்பணிகளைப் போற்றிடுவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரியில் கலக்கும் கழிவுநீர்! கண்டுகொள்ளாத முதல்-அமைச்சர் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sewage-mixing-in-cauvery-chief-minister-indifferent</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sewage-mixing-in-cauvery-chief-minister-indifferent#comments</comments><guid isPermaLink="false">19dbb2d4-eb18-4c01-867a-164421a5b7bf</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:16:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:16:33.795Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,நீர்நிலைகள்,கழிவுநீர்,waste water,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/pwn7ni4e/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/pwn7ni4e/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக நீர்நிலைகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கருவிகள் பழுதடைந்து விட்டதாகவும், இதனால் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கோரையாற்றில் வெளியேற்றப்படுவதாகவும், சுத்திகரிப்பு தொட்டிகளில் நிரம்பி வழியும் கழிவுநீரானது அங்கங்கே தேங்குவதால் கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>பஞ்சப்பூர், கருமண்டபம், எடமலைப்பட்டி, உறையூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக பாய்ந்து காவிரி ஆற்றில் கலக்கும் கோரையாறு, திருச்சி மாநகரத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. அதுமட்டுமன்றி, 75 கி.மீ. நீளம் கொண்ட இந்த கோரையாற்றின் வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள ஏராளமான பாசனக் குளங்கள் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகளையும் பெறுகின்றன. கர்நாடக காங்கிரஸ் அரசின் ஆணவத்தாலும், தவெக அரசின் அலட்சியத்தாலும், தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்து குறைந்து, நமது விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரமும், மக்களின் குடிநீர் தேவையும் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், கையிருப்பு உள்ள தண்ணீரை சுகாதாரமான முறையில் பாதுகாத்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, ஏற்கனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களிடம் முதலீடுகளை ஈர்க்க, மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் ஜோசப் விஜய் வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா சென்றிருப்பது விரயச் செலவு. மேட்டூர் அணையில் நீர் திறப்பதை விளம்பரப்படுத்திக் கொள்ள ரூ.5 கோடிக்கும் அதிகமாக வெட்டி செலவு செய்த ஜோசப் விஜய், தமிழக நீர்நிலைகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்! மக்களின் ஆரோக்கியத்தையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-case-registered-against-former-minister-anbil-mahesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-case-registered-against-former-minister-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">ac3f5ba8-2b6a-43e6-8214-a56d901cbe12</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:01:38 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:01:38.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Anbil Mahesh Poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மத்திய குற்றப்பிரிவு போலீசார்,Corruption case,ஊழல் வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/z29fypic/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/z29fypic/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், தி.மு.க நிர்வாகியுமான பி.டி. அரசகுமாரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.</p><p>இந்த நிலையில், சோதனை குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட தகவலில், திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அங்கீகாரம், தர உயர்வு, டி.டி.சி.பி. அனுமதி பெற்றுத்தருவதாக கூறி திமுக ஆட்சியில் ரூ.100 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. பிடி அரசகுமார் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் சோதனை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.</p><p>சென்னை தியாகராய நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் அலுவலக பூட்டை உடைக்க மத்திய குற்றப்பிரிவு முடிவு செய்துள்ளது. சோதனைக்கு போலீசார் வந்த நிலையில் பூட்டப்பட்டுள்ளதால் அலுவலகம் முன்பு காத்திருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ராமசாமி படையாட்சியாரின் சமூக பணிகளை போற்றுவோம்: அன்புமணி புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-appreciate-the-social-work-of-ramasamy-padayatchiyar-anbumani-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-appreciate-the-social-work-of-ramasamy-padayatchiyar-anbumani-praises#comments</comments><guid isPermaLink="false">7a080197-b1d7-474e-9a52-300b66766180</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:00:36 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:00:36.776Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,PMK,Chennai,சென்னை,birthday,அறிக்கை,statement,பிறந்தநாள்,பாமக அன்புமணி ராமதாஸ்,ராமசாமி படையாட்சியார்,Ramasamy Padayatchiyar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/awfxmrai/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்: அன்புமணி புகழாரம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/awfxmrai/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ராமசாமி படையாட்சியாரின்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">பிறந்த நாளில்</a> அவரின் சமூக பணிகளை போற்றுவோம்; சமூக நீதியை வென்றெடுக்கும் வரை போராடுவோம் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95">பா.ம.க. </a>தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> தெரிவித்துள்ளார். </p><h2>ராமசாமி படையாட்சியார் 109-வது பிறந்தநாள்</h2><p>ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளையொட்டி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: </p><p>தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான  பெரியவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 109-ம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன். </p><h2>சமூக நீதியை வென்றெடுக்கும் வரை போராடுவதற்கு உறுதியேற்போம்!</h2><p>பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அவர் பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பணிகளைப் போற்றும் இந்த நாளில், சமூக நீதியை வென்றெடுக்கும் வரை போராடுவதற்கு உறுதியேற்போம்!</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை: திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/raid-on-anbil-mahes-house-diversionary-political-vengeance-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/raid-on-anbil-mahes-house-diversionary-political-vengeance-stalin#comments</comments><guid isPermaLink="false">7b10fcc8-037c-45fe-a41f-4eca4d8e06ec</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:53:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:53:13.706Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,Anbil Mahesh,சோதனை,MKstalin,அன்பில் மகேஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/adgahrwk/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/adgahrwk/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் இந்த சோதனை மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை</p><ul><li><p>தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்</p></li><li><p>பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்</p></li><li><p>நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்</p></li><li><p>ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு</p></li><li><p>ராமநாதபுரம் இரட்டைக் கொலை,</p></li><li><p>சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை,</p></li><li><p>அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல் என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர்.</p></li></ul><p>இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு. இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை<br><br>▶️ தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்<br><br>▶️ பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்<br><br>▶️ நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல்…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2100079595378864300?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/backward-and-extremely-backward-students-should-be-provided-with-tuition-assistance-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/backward-and-extremely-backward-students-should-be-provided-with-tuition-assistance-anbumani#comments</comments><guid isPermaLink="false">4d678960-4eb3-4da4-a1f2-9a76724a1303</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:53:06 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:53:06.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அரசு,உதவி,அன்புமணி ராமதஸ்,பிற்படுத்தப்பட்டோர்,Backward Classes,கல்விக் கட்டணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2yqqjyfv/350.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2yqqjyfv/350.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தனியார் கல்லூரிகளின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அன்புமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2>கல்வி கட்டணம்</h2><p>தமிழ்நாட்டில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின  மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு கல்விக் கட்டண (Annual Tution Fees) உதவித் தொகையை 4 மடங்கு முதல் 8 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை உயர்வு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கட்டண உதவி மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும்.</p><p>பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் வகையில், அரசு கலைக் கல்லூரிகளில் பயில இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கட்டணச் சுமையை ஏற்றுக் கொள்ளும் நோக்குடன் ஆண்டு கல்விக் கட்டண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படாத நிலையில், இப்போது பி.எஸ்சி, பி.காம் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவி ரூ.2850-லிருந்து, 295 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.ஏ மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.1350-லிருந்தும், எம்.எஸ்சி, எம்.காம் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2850-லிருந்து ரூ.12,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.</p><h2>தனியார் கல்வி நிறுவனம்</h2><p>பி.ஏ. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1350 உதவித் தொகை 733 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக வழங்கப்படும். பி.பி.ஏ மாணவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும். இதுதவிர மேலும் 11 இளநிலை பட்டப்படிப்பு மானவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.11,250 வீதமும், 10 முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வீதமும் கல்விக் கட்டண உதவியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதையும், பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டண உதவித் தொகை கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததையும் கனக்கில் கொண்டு பார்க்கும் போது இந்த உதவித்தொகை உயர்வு நியாயமானதும், தேவையானதும் ஆகும்.</p><p>அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள்   ஆகியோருக்கு இத்தகைய கல்விக்கட்டண உதவிகள் வழங்கப்படுவதே இல்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசு கல்லூரிகளில்  அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவதால், அவற்றில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ஒரு பிரச்சினை இல்லை. ஆனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூக மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் கல்விக்கட்டண உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.</p><h2>கல்லூரிகள்</h2><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப்படுவதில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் 8,083 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுக் கல்லூரிகளில் கல்வித் தரம் சீரழிந்திருப்பதால், பெரும்பான்மையான மாணவர்கள் அவற்றில் இடம் கிடைத்தாலும் தவிர்த்து விட்டு தனியார்  கலைக் கல்லூரிகளில் சேரும் வழக்கம் அதிகரித்து வருகிறது.</p><p>எடுத்துக்காட்டாக, 2022-23 ஆண்டில் 170 அரசுக் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில், ஒரு லட்சத்து 8,748 மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் மாணவர் சேர்க்கை 96,000 ஆக குறைந்து விட்டது. அதேநேரத்தில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 94,306 ஆக இருந்த முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, 2025-26ஆம் ஆண்டில்  2.60 லட்சத்தைக் கடந்திருக்கிறது. தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலையில், அவர்களில் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.</p><h2>தமிழக அரசு</h2><p>அவர்களிலும் கணிசமானவர்கள் கல்லூரிக் கல்விக் கட்டணம் செலுத்த வசதியற்றவர்கள். அவர்களில் பெரும்பான்மையினரின் பெற்றோர் கடன் வாங்கித் தான் கட்டணம் செலுத்துகின்றனர். இத்தகைய நிலை  ஏற்பட்டதற்கு மாணவர்களோ, பெற்றோர்களோ காரணமல்ல. </p><p>தமிழக அரசு தான் இதற்கு காரணம். அரசு கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தும்,  அவற்றில் தகுதியான உதவிப் பேராசிரியர்களை நியமித்தும் தரமானக் கல்வியை வழங்கியிருந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலைமை  ஏற்பட்டிருக்காது. அதனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கட்டண சுமையை அரசு தான் ஏற்க வேண்டும்.</p><h2>உதவித் தொகை</h2><p>அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும்  பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை வழங்க முன்வர வேண்டும். நடப்பு 2026-27ஆம் கல்வியாண்டிலிருந்தே இந்த  உதவித் தொகை வழங்கும் திட்டத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழக அரசு</a> செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செல்போன் செயலி மூலம் பண மோசடி: மேலூரை சேர்ந்த மேலும் ஒரு பெண் சரண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/money-fraud-via-mobile-app-another-woman-from-melur-surrenders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/money-fraud-via-mobile-app-another-woman-from-melur-surrenders#comments</comments><guid isPermaLink="false">661e3ba2-a5f1-46dc-a30d-94d96195609b</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:49:28 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:49:28.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Madurai,மதுரை,arrest,வழக்குப்பதிவு,case registration,Melur,மேலூர்,செல்போன் செயலி,Cellphone App</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6n849ep5/aare.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6n849ep5/aare.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>செல்போன் செயலி மூலம் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்த விவகாரத்தில், மேலூரை சேர்ந்த மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.</p><h2>பணம் வசூலித்து மோசடி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> மாவட்டம் மேலூரில் எப்.கியூ.எல். என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தின் செயலி மூலம் ஆன்லைனில் முதலீடு செய்தால், 2 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என்று கூறப்பட்டது. அதோடு பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெறுவதற்கு முகவர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த முகவர்கள், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம மக்களை குறிவைத்து, மூளைச்சலவை செய்து, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தனர். அதோடு ஒரு சிலருக்கு, முதலீட்டு தொகை இரட்டிப்பாக கிடைத்தது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தனர்.</p><h2>மதுரை மத்திய சிறை</h2><p>இந்தநிலையில், அந்த தனியார் நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால், பணத்தை முதலீடு செய்த மக்கள், முகவர்களின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் மேலூரில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதனை தொடர்ந்து இந்த வழக்கு மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.</p><p>இதற்கிடையே, மோசடி வழக்கில் மேலூர் அருகே உள்ள கட்டையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், பிரியதர்ஷினி ஆகிய தம்பதியினர் கடந்த 7-ந்தேதி திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>மேலும் ஒரு பெண் கைது</h2><p>இதற்கிடையே அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:-</p><p>கைது செய்யப்பட்ட ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் முதலீடு செய்ய கிராம மக்களிடம் பேசி உள்ளார். நம்பும் வகையில் பேசி ஏமாற்றியதால், ஏராளமானவர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அவர்கள் இருவரும் மோசடி செய்ய பயன்படுத்திய செல்போன்கள், வங்கி கணக்குகள் விவரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. </p><p>மேலும், அந்த செல்போன்களின் ஐ.பி. முகவரியை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சைபர் கிரைம் போலீசார் மூலம் கோரிக்கை வைத்துள்ளோம். அந்த முகவரிகள் கிடைத்தால், இந்த மோசடியின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவரும். அதுபோல், இவர்கள் எவ்வளவு பணம் மோசடி செய்தார்கள் என்ற விவரமும் தெரிந்துவிடும்.</p> <h2>தேவையான ஏற்பாடுகள்</h2><p>இந்த வழக்கில் இதுவரை, மதுரையில் இருந்து 3 ஆயிரம் புகார்களும், திண்டுக்கல்லில் 4 ஆயிரம் புகார்களும், விருதுநகரில் 30 புகார்களும் வந்துள்ளன. இந்த மோசடியில் போலீசாரின் மனைவிகளும் ஏமாற்றப்பட்டு உள்ளனர். யார், யார் எவ்வளவு பணம் இழந்தார்கள் என்பதை கண்டறியும் பணியும் ஒரு புறம் நடக்கிறது. கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்திருப்பதால், ரஞ்சித் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்துவதற்காக, போலீஸ் காவலில் எடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.</p><p>இதற்கிடையே ரஞ்சித்தின் உறவினரான மேலூர் கட்டையம்பட்டியை சேர்ந்த ரேவதி (35) என்பவர், இந்த வழக்கில் மதுரை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரையும் கைது செய்து விசாரிக்க இருக்கிறோம். அவரை விசாரித்தால் இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் </p><p>இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/slight-rise-in-gold-prices-todays-status-2</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/slight-rise-in-gold-prices-todays-status-2#comments</comments><guid isPermaLink="false">04d96ec6-25a0-40cd-9416-fc55d767ddeb</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:31:35 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:31:35.905Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/aig07vlw/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/aig07vlw/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.85 குறைந்து, ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையை பொறுத்தவரையில் 5-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>போலீஸ்காரரால் கற்பை இழந்து-கருவையும் சுமந்தார்... சென்னை பெண் போலீசின் கண்ணீர் கதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lost-her-chastity-to-a-policeman-and-bore-his-child-the-tearful-story-of-a-chennai-policewoman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lost-her-chastity-to-a-policeman-and-bore-his-child-the-tearful-story-of-a-chennai-policewoman#comments</comments><guid isPermaLink="false">bf35a905-d2f7-4299-a4d4-9f82c9abd801</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:15:55 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:15:55.177Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,police,போலீஸ்,பெண் போலீஸ்,rape,கிரைம் செய்திகள்,பாலியல் பலாத்காரம்,woman police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/9auz4wyd/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/9auz4wyd/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பெண் போலீஸ் ஒருவர் தன்னுடன் வேலை பார்க்கும் போலீஸ்காரரை காதலித்து கற்பையும் பறிகொடுத்து கரு வையும் சுமந்து தற்போது அந்த போலீஸ்காரர் மீது பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார்.</p><h2>ஆயுதப்படை பெண் போலீஸ்</h2><p>அந்த பெண் போலீசின் கண்ணீர் கதை வருமாறு:-</p><p>திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் போலீஸ் 24 வயது நிரம்பியவர். பட்டதாரி. சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். தேனாம்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளார். புதுப்பேட்டையில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார்.</p><p>இந்த நிலையில் தன்னுடன் ஆயுதப்படையில் பணியாற்றும் ஒரு போலீஸ்காரருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தனர்.போலீஸ்காரர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி அந்த பெண் போலீசுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தி உள்ளார். பெண் போலீசும் தனக்கு கணவராகப் போகிறார் என்ற எண்ணத்தில் அவரது இச்சைக்கு இணங்கி வந்துள்ளார்.</p><h2>கர்ப்பம்</h2><p>கடந்த 3 ஆண்டுகளாக இவர்களின் காதல் வாழ்க்கை உல்லாசமாக கடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டு தரப்பிலும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக போலீஸ்காரர் வீட்டில் அவரது பெற்றோர் இந்த காதலை ஆதரித்து திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இதற்கிடையே போலீஸ்காரருடன் வாழ்ந்த உல்லாச வாழ்க் கையால் பெண் போலீஸ் கர்ப்பமாகி இருந்தார்.</p><p>அந்த கருவை கலைக்க சொல்லி தனியார் ஆஸ்பத்திரியில் பெண் போலீசை சிகிச்சைக்கு சேர்த்ததாக தெரிகிறது. அதனால் கரு கலைக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸ்காரர் பெண் போலீசை திடீரென்று திருமணம் செய்ய மறுத்தார். அவருடனான தொடர்பையும் துண்டித்தார். விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் வேறு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.</p><h2>பரபரப்பு புகார்</h2><p>இந்த நிலையில் தனது வாழ்க்கையை சீரழித்தவர் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட பெண் போலீஸ் எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளனர்.</p><p>இதுதொடர்பாக போலீஸ் காரரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே இது போன்ற பெண் போலீஸ் ஒருவரின் புகார் மனு மீது விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது புகார் கொடுத்துள்ள பெண் போலீசின் கண்ணீர் கதையும் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: மெத்தை வியாபாரியை காரில் கடத்தி நகை பறிப்பு- பட்டப்பகலில் துணிகரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-mattress-dealer-kidnapped-in-car-and-robbed-of-jewelry-a-daring-act-in-broad-daylight</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-mattress-dealer-kidnapped-in-car-and-robbed-of-jewelry-a-daring-act-in-broad-daylight#comments</comments><guid isPermaLink="false">0e1c8920-c4ed-45f7-85fd-92d6736f1ccd</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:09:22 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:09:22.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,Car,கார்,mysterious persons,மர்ம நபர்கள்,போலீஸ் வலைவீச்சு,கடத்தல்,நகை பறிப்பு,Kidnapping,வியாபாரி,கடையநல்லூர்,dealer,Kadayanallur,மெத்தை,police net sweep,jewelry snatching,Mattress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/bv3lfkaw/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்க நகை கொள்ளை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/bv3lfkaw/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கடையநல்லூர்</a> பஜாரில் மெத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">வியாபாரி</a>யை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">காரில் கடத்தி</a> சென்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">நகை பறித்த</a> மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>மெத்தை வியாபாரி</h2><p>தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மெயின் பஜாரில் சந்தான கிருஷ்ணன் (வயது 76) என்பவர் கடை வைத்து பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் தனது கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடைக்கு வந்து தலையணை குறித்து விசாரித்துள்ளார். பின்னர், தனது உறவினர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு காரில் இருப்பதாகவும், அவரால் காரில் இருந்து இறங்கி கடைக்கு வர முடியாது என்றும் கூறியுள்ளார். </p><h2>காரில் கடத்தி நகை பறிப்பு</h2><p>மேலும், அவர் கேட்கும் தலையணையை காரின் அருகே சென்று காண்பிக்குமாறு தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சந்தான கிருஷ்ணன் அந்த வாலிபருடன், அவர் கூறிய காருக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மர்ம நபர், சந்தான கிருஷ்ணனை காருக்குள் இழுத்துப்போட்டு, கதவை அடைத்து கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே வைத்து சந்தான கிருஷ்ணன் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி மற்றும் 1 சவரன் எடையுள்ள 2 தங்க மோதிரங்களை பறித்துக் கொண்டு, அவரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். </p><h2>மர்ம நபர்களுக்கு வலைவீச்சு</h2><p>இதுகுறித்து சந்தான கிருஷ்ணன் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், சம்பவம் நடைபெற்ற மெயின் பஜார் மற்றும் கடத்திச் செல்லப்பட்ட வழித்தடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.</p><p>மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மெயின் பஜார் பகுதியில் பட்டப்பகலில் வியாபாரியை காரில் கடத்திச் சென்று நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலையை கரைக்க சென்ற வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-drowns-in-sea-after-going-to-immerse-ganesha-idol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-drowns-in-sea-after-going-to-immerse-ganesha-idol#comments</comments><guid isPermaLink="false">d7c47b56-9b71-4073-b7b2-f167064b1aeb</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:05:03 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:05:03.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>sea,வாலிபர்,திருவொற்றியூர்,Motorcycle,விநாயகர் சிலை,Ganesha idol,கடலில் மூழ்கி பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/esxsu2xn/349.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/esxsu2xn/349.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர், </p><p>திருவொற்றியூரில் விநாயகர் சிலையை கடலில் கரைக்கச் சென்ற வாலிபர் கடலில் மூழ்கி பலியானார்.</p><h2>விநாயகர் சிலை</h2><p>திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). இவர், திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காமாட்சி. நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கமலக்கண்ணன் தனது வீட்டில் சிறிய விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தார். </p><h2>பாரதியார் நகர் கடற்கரை</h2><p>பின்னர் மாலையில் தனது மோட்டார் சைக்கிளில் அந்த விநாயகர் சிலையை கொண்டு சென்று எண்ணூர் பாரதியார் நகர் அருகே கடலில் கரைத்துவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி காமாட்சி, கமலக்கண்ணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த காமாட்சி, பாரதியார் நகர் கடற்கரைக்குச் சென்று பார்த்த போது. அங்கு கமலக்கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. இதில் அவரது செல்போன் இருந்தது.</p><h2>திருவொற்றியூர் எம்.எல்.ஏ</h2><p>இதுகுறித்து காமாட்சி எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலில் இறங்கி தேடினர் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கமலக்கண்ணனின் உறவினர்கள், அவரது உடலை மீட்டுத்தரக்கோரி திருவொற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.</p><p>உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எம்.எல்.ஏ., தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்களை மீட்பு பணியில் துரிதமாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து அதே பகுதியில் சுமார் 30 மீட்டர் தொலைவில் நேற்று காலை கமலக்கண்ணனின் உடல் மீட்கப்பட்டது.</p><h2>அரசு ஆஸ்பத்திரி</h2><p>பின்னர் எண்ணூர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">விநாயகர்</a> சிலையைக் கரைக்கச் சென்ற தொழிலாளி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>வைரஸ் காய்ச்சலால் ஓய்வில் இருக்கிறேன்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-resting-due-to-viral-fever-dmk-leader-mk-stalin-posts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-resting-due-to-viral-fever-dmk-leader-mk-stalin-posts#comments</comments><guid isPermaLink="false">ac06277b-0ad5-4c44-beb9-e9a0ca287c0e</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:47:17 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:47:17.953Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,Chennai,சென்னை,தமிழகம்,முப்பெரும் விழா,வைரஸ் காய்ச்சல்,viral fever,திமுக தலைவர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2lt8crq6/kler.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2lt8crq6/kler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வைரஸ் காய்ச்சல் காரணமாக, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவதாக <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார். </p><h2>முப்பெரும் விழா</h2><p>தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க. தொடக்க நாள் ஆகிய நிகழ்வுகளை ஒன்றிணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கட்சியின் முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டும் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெறுவதாக இருந்தது. மேலும் வள்ளுவர் கோட்டத்தில் அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.</p><h2>வைரஸ் காய்ச்சல்</h2><p>இந்தநிலையில் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்களின் அறிவுரையின்பேரில் மு.க.ஸ்டாலின் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் அவர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p><p>இந்த நிகழ்ச்சிக்கு வந்த பொதுச்செயலாளர் துரைமுருகன், நிருபர்களிடம் கூறுகையில், "மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் வந்துள்ளதால், இந்த நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார். </p><h2>முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!</p><p>வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.</p><p>தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>சமூகநீதி நாள் உறுதிமொழி</h2><p>மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன். </p><p>பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்: மத்திய அரசு முடிவை கைவிட வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/charges-for-upi-transactions-above-rs-2000-central-government-should-drop-decision-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/charges-for-upi-transactions-above-rs-2000-central-government-should-drop-decision-anbumani#comments</comments><guid isPermaLink="false">a4ec65f6-f90b-47d8-9530-fd3484230ae7</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:34:21 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:34:21.553Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மத்திய அரசு,Anbumani Ramadas,Central Government,யுபிஐ பரிவர்த்தனை,UPI Service,transaction,அன்புமணி ராமதஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/07csfo6w/348.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/07csfo6w/348.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் மத்திய அரசு முடிவை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அன்புமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><h2>யு.பி.ஐ செயலி</h2><p>இந்தியாவில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பிறகு கூகுள் பே உள்ளிட்ட யு.பி.ஐ செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2000-க்கும் கூடுதலான  வணிகப் பயன்பாட்டுக்கான பரிவர்த்தனைகளுக்கு அவற்றின் மொத்த மதிப்பில் 0.40 விழுக்காடும், அதிகபட்சமாக ரூ.300-ம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.</p><p>தனிநபர்கள் இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கும், ரூ.2000-க்கும் குறைவான வணிகப் பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  யு.பி.ஐ மூலம் மாதத்திற்கு ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாக பணம் பெறும் சிறு வணிகர்களுக்கும் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. </p><h2>சிறு வணிகர்கள்</h2><p>ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கும் பொருள் வாங்கும் மக்கள் இந்தக் கட்டணத்தை  செலுத்தத் தேவையில்லை; மாறாக, இந்தக் கட்டணம் வணிகர்களிடமிருந்தே வசூலிக்கப்படும். இதனால், தனிநபர்களுக்கு எந்த வகையிலும்  நேரடியாக பாதிப்பு இல்லை. மாதம் ரூ.1 லட்சம் வரை யு.பி.ஐ மூலம் வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கும் பாதிப்பு இல்லை.</p><p>ஆனால், இந்த முறையில் பொதுமக்கள் தான் மறைமுகமாக பாதிக்கப்படுவார்கள்.  பெரு வணிகர்கள் ஒரு பரிமாற்றத்திற்கு அதிகபட்சமாக ரூ.300 வரை பரிவர்த்தனைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு இலாபம் குறைவதை அனுமதிக்க மாட்டார்கள். மாறாக, பொருள்களின் விலைகளை உயர்த்தி, இந்தக் கட்டணத்தை மறைமுகமாக பொதுமக்கள் மீது தான் சுமத்துவார்கள். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரம் இதனால் மேலும் அதிகரிக்கும்.</p><h2>பணப் பரிமாற்றம்</h2><p>பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும், கொரோனா காலத்தில் நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கவும் யுபிஐ மூலமான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டன. இப்போதும் கூட இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு பல இடங்களில் ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறை மூலம் கணிசமான அளவில் கருப்புப் பணம் உருவாவது தடுக்கப்பட்டு, வெளிப்படையான பணப் பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள இலாபத்துடன் ஒப்பிடும் போது, இந்த சேவையை இலவசமாக வழங்குவதால்  ஏற்படும்  இழப்பு பெரிதல்ல.</p><p>எனவே, ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a> கைவிட வேண்டும். வெளிப்படையான பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போதுள்ள நடைமுறையே  தொடரும் என்று அறிவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை, நெல்லை, ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-trains-to-be-operated-from-chennai-nellai-and-rameswaram-to-madurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-trains-to-be-operated-from-chennai-nellai-and-rameswaram-to-madurai#comments</comments><guid isPermaLink="false">01215601-de26-4a3e-8db3-daa5f425983c</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:17:03 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:17:03.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,நெல்லை,சிறப்பு ரெயில்,Madurai,மதுரை,Special train,Madurai Meenakshi Amman Temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/pdy0214p/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/pdy0214p/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை, நெல்லை, ராமேசுவரம், பழனி, போடியில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.</p><p><strong>இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><h2>சென்னை</h2><p>தாம்பரம்-மதுரை இடையே இன்று முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் நாளை அதிகாலை 2.20-க்கு மதுரைக்கு சென்றடையும். மறுமார்க்கமாக நாளை மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது அதேநாள் இரவு 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p><h2>நெல்லை</h2><p>நெல்லையில் இருந்து ஒரு சிறப்பு ரெயில் (வ.எண்.06001) இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 6.30 மணிக்கு கூடல்நகர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06002) நாளை மதியம் 12.15 மணிக்கு கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடை கிறது. மாலை 5.50 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.</p><p>இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும், சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில்சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 17 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.</p><h2>ராமேசுவரம்-பழனி</h2><p>இதேபோல் மற்றொரு சிறப்பு ரெயில் (வ.எண்.06780) ராமேசுவரத்தில் இருந்து இன்று மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 10.30 மணிக்கு பழனி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06779) பழனியில் இருந்து நாளை மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 8.10 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது.</p><p>இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் சத்திரப்பட்டி, ஒட்டன்சத் திரம், அக்கறைப்பட்டி, திண்டுக்கல், கொடைரோடு, சோழவந்தான், மதுரை, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் ராமேசுவரம்-திருப்பதி ரெயிலுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.</p><h2>போடி</h2><p>அதேபோல, ஒரு சிறப்பு ரெயில் (வ.எண்.06004) போடியில் இருந்து நாளை பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மதியம் 1.30 மணிக்கு கூடல்நகர் ரெயில் நிலையம் செல்கிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06003) நாளை கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 4.30 மணிக்கு போடி சென்றடைகிறது.</p><p>ரெயில் இரு மார்க்கங்களிலும் மதுரை, வடபழஞ்சி (நாகமலை புதுக்கோட்டை). உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-a-search-at-the-residence-of-former-minister-anbil-mahesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-a-search-at-the-residence-of-former-minister-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">2b1c8926-a704-4839-b56a-f7f533fac1e0</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:07:55 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:07:55.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,திருச்சி,Trichy,Anbil Mahesh Poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி,Central Crime Branch police,மத்திய குற்றப்பிரிவு போலீசார்,அன்பில் மகேஸ்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/mlt2nzw5/sior.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/mlt2nzw5/sior.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். </p><h2>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்</h2><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbil-mahesh-poiyamozhi">அன்பில் மகேஸ் பொய்யாமொழி</a>. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில் நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவியிருந்தார். </p><h2>மத்திய குற்றப்பிரிவு போலீசார்</h2><p>இந்நிலையில் முன்னாள் அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/anbil-mahesh-poiyamozhi">அன்பில் மகேஸ்</a> இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் இல்லத்தில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இதன்படி அன்பில் மகேசின் திருச்சி இல்லம் மற்றும் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடைபெற்று வருவதாக  கூறப்படுகிறது.</p><h2>மோசடி புகார்</h2><p>முன்னதாக தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், தி.மு.க நிர்வாகியுமான பி.டி. அரசகுமாரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். </p>]]></content:encoded></item><item><title>&apos;மின் இணைப்பு துண்டிக்கப்படும்&apos; என புதிய சைபர் மோசடி: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-cyber-scam-police-warn-public-about-power-disconnection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-cyber-scam-police-warn-public-about-power-disconnection#comments</comments><guid isPermaLink="false">6c52e476-be67-4cc3-9f99-26cee2296c6a</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:51:16 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:51:16.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,Chennai,சென்னை,Electricity Board,மின்சார வாரியம்,Public,Cyber Fraud,சைபர் மோசடி,Electricity connection,போலீசார் எச்சரிக்கை,police alert,disconnection,மின் இணைப்பு துண்டிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/30ooe4gp/2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 'மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என புதிய சைபர் மோசடி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/30ooe4gp/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மின் இணைப்பு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">துண்டிக்கப்படும்</a>' என மின்சார வாரியம் பெயரில் நடைபெற்றுவரும் புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">சைபர் மோசடி</a> மீது பொதுமக்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">எச்சரிக்கை</a>யாக இருக்குமாறு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வேண்டுகோள் விடுத்துள்ளனர். </p><h2>மின்சார கட்டணம்</h2><p>சைபர் குற்றவாளிகள் வெவ்வேறு வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிப்பு மற்றும் தகவல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில், சென்னை திருவான்மியூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. மின்சார வாரியம் அனுப்பியதாக குறிப்பிடப்பட்ட அந்த செய்தியில், “உங்களுடைய கடைசி மாத மின்சார கட்டணம் 'அப்டேட்' ஆகவில்லை. அதனால் இன்று இரவு 9.45 மணிக்கு பின்னர் உங்களுடைய மின்சார இணைப்பு துண்டிக்கப்படும். 8981202584 என்ற மின்சார வாரிய எண்ணை உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. </p><h2>உதவி பொறியாளரின் உதவி</h2><p>மின்சார கட்டணத்தை இறுதி தேதிக்கு முன்னதாகவே தவறாமல் கட்டி வரும் அந்த தனியார் நிறுவன ஊழியருக்கு இந்த தகவல் அதிர்ச்சியை கொடுத்தது. உடனே குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்த செல்போன் எண்ணுக்கு தான் ஏற்கனவே மின்சார கட்டணத்தை கட்டிவிட்டதாக தகவல் அனுப்பினார். மேலும் முந்தைய மாதங்களில் செலுத்திய தனது 2 மின்சார கட்டண விவரங்களையும் அனுப்பினார். அந்த எண்ணை தொடர்புகொண்டபோது மின்சார கட்டணத்தை 'அப்டேட்' செய்ய தான் உதவுவதாக எதிர்முனையில் பேசியவர் தெரிவித்தார். </p><p>மேலும் வாட்ஸ்அப் தொடர்பில் வருமாறு கூறினார். அதில், அந்த நபரின் செல்போன் எண் ஆங்கிலத்தில் 'billupdate EB' என்று சேமிக்கப்பட்டிருந்தது. இதனை மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ எண் என்று நினைத்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே, கொட்டிவாக்கம் மின்வாரிய உதவி பொறியாளர் எம்.பாலசுந்தரியை, தனியார் நிறுவன ஊழியர் தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். அப்போது. அவர் "இதுபோன்று மின்சார வாரியம் நுகர்வோருக்கு தகவல் எதுவும் அனுப்பவில்லை. சைபர் மோசடி பேர்வழிகளாக இருப்பார்கள் எனவே உடனடியாக இணைப்பை துண்டித்துவிடுங்கள்” என்று சரியான சமயத்தில் எச்சரிக்கை கொடுத்தார். இதையடுத்து செல்போன் இணைப்பை துண்டித்ததால், பணம் மட்டுமின்றி தகவல் திருடு போவதும் தவிர்க்கப்பட்டது.</p><h2>குற்றச்சாட்டு</h2><p>இந்த சூழலில் தனியார் நிறுவன ஊழியர் உடனடியாக நடந்த சம்பவம் பற்றி புகார் தெரிவிக்க 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொண்டார். அதனை எடுத்து பேசியவர். மின்சார கட்டணத்தை அப்டேட் செய்வதில் ஏமாந்ததாக நிறையபேர் புகார் தெரிவிக்கிறார்கள். மின்சார வாரிய தகவல்களை சைபர் குற்றவாளிகள் திருடி இதுபோன்று மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே சைபர்கிரைம் இணையதளத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட பின்னரும், அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைப்பதாக மிரட்டிய தந்தை வெட்டிக்கொலை - மகன், தாய் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-hacked-to-death-by-son-mother-who-threatened-to-deed-property-to-ashram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-hacked-to-death-by-son-mother-who-threatened-to-deed-property-to-ashram#comments</comments><guid isPermaLink="false">dc6172dd-7478-40b5-a34b-48ba92936c45</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:51:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:51:14.517Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Death,Father,மகன் கைது,தந்தை கொலை,காஞ்சீபுரம்,மிரட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/z1vbod78/347.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெட்டிக்கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/z1vbod78/347.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சீபுரம், </p><p>சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன் என்று மிரட்டியதால் தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்டார்.</p><p>சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் சிவபாதம் (வயது 70). அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரேணுகா (50). மகன் மதுசூதனன் (39). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் கப்பல் நிறுவனத்தில் வேலை செய்தார். மதுசூதனனுக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக பெருங்குடி பழைய மாமல்லபுரம் சாலையில் பல்வேறு இடங்களில் வீடுகள் உள்ளன. </p><p>இந்த நிலையில் மதுசூதனன் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெருங்குடியில் உள்ள வீட்டுக்கு வந்து பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். வாடகைக்கு விட்ட வீடுகளில் இருந்து வந்த வடகை பணம் மூலம் மதுசூதனன் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையே சிவபாதம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவம் உள்ளிட்ட செலவுகள் அதிகமானது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்ட நிலையில் சிவபாதம், வாலாஜாபாத் அடுத்த மருதம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்து தனியாக வசித்து வந்தார்.</p><h2>வாடகை பணம்</h2><p>சில நாட்களுக்கு முன்பு மருதம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு கிரகபிரவேசத்துக்காக ரேணுகா, மதுசூதனன் இருவரும் வந்தனர். அப்போது சிவபாதத்திடம் எதற்காக இங்கு தங்கி இருக்கிறீர்கள், தேவையில்லாமல் அதிக செலவு செய்கிறீர்கள், சென்னைக்கு வந்துவிட்டால் இது போன்ற பிரச்சினை வராது என்று அழைத்தனர். அதற்கு சிவபாதம் மறுத்து விட்டார். சென்னை வீட்டில் இருந்து வரும் வாடகை பணத்தை கொடுங்கள். எனது செலவுக்கு பயன் படுத்தி கொள்கிறேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் நீங்கள் எனக்கு செலவுக்கு பணம் தரவில்லை என்றால் எனது பெயரில் உள்ள அனைத்து சொத்துகளையும் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன் என சிவபாதம் மிரட்டினார்.</p><h2>போலீசார்</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவபாதம் மாரடைப்பால் இறந்து விட்டார் என்று கூறி இறுதி சடங்குகள் முடிந்து உடலை எரியூட்டுவதற்காக எடுத்து சென்றனர். சிவபாதத்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வாலாஜாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிவபாதத்தின் உடலில் வெட்டு காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் சந்தேகத்தின்பேரில் சிவபாதத்தின் மனைவி ரேணுகா மற்றும் மகன் மதுசூதனன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.</p><h2>கைது</h2><p>விசாரணயில் நேற்று முன்தினம் மதுசூதனன் தந்தையை கால் மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் தாய் ரேணுகா வீட்டிலும் கணவரின் மீதும் படிந்திருந்த ரத்தக்கறையை துடைத்து அப்புறப்படுத்தி விட்டு அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்று கூறி உறவினர்களை நம்ப வைத்தது தெரியவந்தது. பின்னர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> கொலை வழக்குப்பதிவு செய்து ரேணுகாவையும் மதுசூதனனையும் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கடலூர்: ஏ.சி. எந்திரம், குடைக்குள் சுருண்டு இருந்த நல்ல பாம்புகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ac-enthiram-kudaikkul-surundu-iruntha-nalla-paambugal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ac-enthiram-kudaikkul-surundu-iruntha-nalla-paambugal#comments</comments><guid isPermaLink="false">7b63a0e4-7154-404e-8d43-150349418f71</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:37:25 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:40:51.427Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,Snake,நல்ல பாம்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/1fh8hdch/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/1fh8hdch/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் முதுநகர் அருகே சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்தின் கீழ்தளத்தில் இருந்த ஏ.சி. எந்திரங்களை ஊழியர்கள் இயக்கியபோது ஒரு ஏ.சி. எந்திரத்தில் இருந்து உஷ்... உஷ்... என்று சத்தம் கேட்டது.</p><p>இதனால் சந்தேகமடைந்து உஷாரான ஊழியர்கள், அந்த ஏ.சி. எந்திரத்தின் அருகில் சென்று உற்றுப்பார்த்தனர். அதில் ஒரு பாம்பு சுருண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாம்பு பிடி வீரர் செல்லா விரைந்து சென்று, ஏ.சி. எந்திரத்தில் சுருண்டு பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார்.</p><p>இதேபோல் கடலூர் அருகே உள்ள கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி ஒருவரது வீட்டில் மடக்கி வைத்திருந்த குடைக்குள் நேற்று பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் 4 அடி நீள முள்ள நல்ல பாம்பை லாவகமாக மடக்கி பிடித்தார்.</p>]]></content:encoded></item><item><title>5 ரூபாய் குறைந்தது ஒசைரி நுால் விலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/osairi-yarn-price-dropped-by-5-rupees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/osairi-yarn-price-dropped-by-5-rupees#comments</comments><guid isPermaLink="false">d13b18ee-af6a-47df-b00f-4be1d8aa65b7</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:19:42 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:19:42.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,உற்பத்தியாளர்கள்,நூல் விலை,Manufacturers,Yarn price</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/bxrwfsxb/sairi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/bxrwfsxb/sairi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>பஞ்சு விலை குறைய வாய்ப்புள்ளதால், ஒசைரி நுால் விலை கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளதாக நுாற்பாலைகள் அறிவித்துள்ளன.</p><h2>புதிய பஞ்சு வரத்து</h2><p>பருத்தி ஆண்டு (2025 அக்டோபர் முதல் 2026 செப்டம்பர் வரை) நிறைவடைய 15 நாள் மட்டுமே உள்ள நிலையில் இருப்பு வைத்திருந்த பஞ்சு விற்பனைக்கு வருவது சற்று அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் முன்கூட்டியே அறுவடை நடந்ததால், புதிய பஞ்சு வரத்தும் துவங்கி விட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், தினசரி பஞ்சு வரத்து, 2,200 'பேல்'களாக (ஒரு பேல் 170 கிலோ) குறைந்திருந்தது. நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரம் 'பேல்'களை தொட்டுவிட்டது.</p><h2>ஒசைரி நுால் விலை</h2><p>மார்க்கெட்டில் வரத்து துவங்கியதால், பஞ்சு விலை சற்று குறைந்துள்ளது. புதிய பஞ்சு வரத்து துவங்கும் போது, மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. கடந்த 1ம் தேதி, பஞ்சு விலை உயர்வால், பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தும் ஒசைரி நுால் விலை, கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்தது. </p><p>பஞ்சு விலை குறைய துவங்கியுள்ளதால் நுால் விலை, கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்படுவதாக நுாற்பாலைகள் அறிவித்துள்ளன. அடுத்தடுத்த விலை உயர்வுக்கு பிறகு, நுால் விலை குறைக்கப்பட்டதால், உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் பலி; பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-dead-as-dengue-cases-surge-minister-urges-masks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-dead-as-dengue-cases-surge-minister-urges-masks#comments</comments><guid isPermaLink="false">ad5b0d15-2ec3-4f6a-985d-e249b55b5d6d</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:19:08 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:19:08.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெங்கு காய்ச்சல்,Dengue Fever,minister,அமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/z4f772bq/tndfr.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெங்கு காய்ச்சல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/z4f772bq/tndfr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 9 பேர் பலியாகி, பரவல் அதிகரித்துள்ள சூழலில், முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.</p><p>சென்னை மருத்துவக்கல்லூரியில், 192-வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறும்போது, தற்போது, சுவாசத்தொற்று பரவல் அதிகமாக உள்ளது. அரசு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.</p> <h2>9 பேர் பலி</h2><p>காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலும் உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு முறையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>பள்ளிகளில், காலை உணவு விரிவாக்க திட்டம் முதல்-அமைச்சர் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-to-launch-school-breakfast-expansion-scheme-on-22nd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-to-launch-school-breakfast-expansion-scheme-on-22nd#comments</comments><guid isPermaLink="false">979f8dcf-1da0-4f28-8f74-413b0b838fd2</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:08:20 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:08:20.067Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Breakfast,Launch,பள்ளிschool,காலை உணவு திட்டம் விரிவாக்கம்,Expansion,முதல்-அமைச்சர்Chief Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/8i2xezn3/346.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/8i2xezn3/346.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>த.வெ.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றப்பட்டது. </p><h2>முதல்-அமைச்சர்</h2><p>அதன்படி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தை பெரியாரின் பிறந்தநாளான நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியது. இதனை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளதால், அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே முதல்-அமைச்சர் விஜய் வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். </p><p>இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலாளர் பல்லவி பல்தேவ் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும். என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.5 வரை உயர்வு... தனியார் பேருந்துகளில் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்திய உரிமையாளர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fare-hike-up-to-rs-5-private-bus-owners-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fare-hike-up-to-rs-5-private-bus-owners-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">3159d476-44dc-4b3e-8325-22bb71f80d3a</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:02:50 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:02:50.596Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிக்கெட் கட்டணம்,price hike,private bus,கட்டணம் உயர்வு,ticket price,தனியார் பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/1nmz0n2q/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/1nmz0n2q/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் சில மாவட்டங்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள், ரூ.5 வரை தன்னிச்சையாக பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.</p><h2>தனியார் பேருந்துகள்</h2><p>தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவில், ஊட்டி தவிரத்து பிற இடங்களில் 4,600 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டுக்கு பின்னர் தனியார் பேருந்துகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. எரிபொருள் மற்றும் உதிரி பாகங்கள் விலை பல மடங்கு உயர்ந்த நிலையில், தனியார் பேருந்து தொழிலில், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.</p><h2>தன்னிச்சையாக உயர்வு</h2><p>இதையடுத்து டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, தனியார் பேருந்து உரிமையாளர்கள், அரசிடம் கடந்த சில ஆண்டுகளாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு தொடர்ந்து, மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில் சில மாவட்டங்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள், தன்னிச்சையாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.</p><h2>ரூ.2 முதல் ரூ.5 வரை...</h2><p>வேலூர், கடலுார், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சில தனியார் பேருந்து நிறுவனங்கள், ரூ.2 முதல் ரூ.5 வரை, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளன. இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சிலர் கூறும்போது, "கட்டண உயர்வு தொடர்பாக, கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, தமிழக அரசு தாமதம் செய்து வருவது கவலை அளிக்கிறது. வேறு வழியில்லாமல், ஒரு சில பேருந்துகளில் கட்டணம் உயர்த்தியதாக தகவல் வந்தது.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>அவர்களை தொடர்பு கொண்டு, 'தமிழக அரசுடன் பேச்சு நடந்து வருகிறது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்' எனக் கூறினோம். அதை ஏற்று அவர்களும் வழக்கமான கட்டணத்தையே வசூலிக்கின்றனர்" என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>லண்​டன் பயணத்தை முடித்​துக் கொண்டு நாளை சென்னை திரும்பு​கிறார் முதல்​-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-returning-to-chennai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-returning-to-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">662fcc86-27b3-4234-b48a-acf684ac0192</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:59:28 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:59:28.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,சென்னை,London,CM Vijay,லண்​டன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/dfz5dgiu/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/dfz5dgiu/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>லண்டன் பயணம்</h2><p>தமிழகத்தின் பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதற்கான இலக்கை முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அதன் ஒரு பங்காக, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பயணம் மேற்கொண்டுள்ளார். </p><p>அங்கு தமிழகத்​தில் உற்​பத்தி ஆலைகள், உலகளா​விய திறன் மையங்​கள் மற்​றும் ஆய்வு மேம்​பாட்டு வசதி​களை நிறு​வுவதற்​காக, தமிழக அரசின் வழி​காட்டி நிறு​வனத்​துக்​கும், பல்​வேறு பன்​னாட்டு நிறு​வனங்​களுக்​கும் இடையே கடந்த 14-ம் தேதி ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.</p><h2>ரூ.11,000 கோடி முதலீடு</h2><p>அதன்​படி 45-க்​கும் மேற்​பட்ட நாடு​களில் செயல்​படும் முன்​னணி பன்​னாட்டு நிறு​வன​மான ‘சம்​வர்​தனா மதர்​சன் இன்​டர்​நேஷனல் லிமிடெட்’, தனது பிரிட்​டன் மற்​றும் ஐரோப்​பிய கூட்டு நிறு​வனங்​களு​டன் இணைந்து தமிழகத்​தில் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது. இதன்​மூலம் சுமார் 7,000 பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். இது சர்​வ​தேச வாகன உற்​பத்தி சங்​கி​லி​யில் தமிழகத்​தின் இடத்தை அடுத்​தகட்​டத்​துக்கு கொண்டு செல்​லும்.</p><p>ஐரோப்​பாவைச் சேர்ந்த முன்​னணி வாகன உதிரி​பாகங்​கள் தயாரிப்பு நிறு​வன​ம், இந்​தி​யா​வில் தனது முதல் புதிய உற்​பத்தி ஆலையை அமைக்க தமிழகத்​தை தேர்வு செய்​துள்​ளது. இதற்​கான ரூ.3,000 கோடி முதலீட்​டுக்​கான விருப்​பக் கடிதத்தை முதல்​-அமைச்சரிடம் அந்​நிறு​வனம் சமர்ப்​பித்​தது. இதுத​விர, இங்கு உலகளாவிய திறன் மையத்தை அமைக்க ஏர்ன்​ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறு​வனம் ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. இந்த மையம், சுமார் ரூ.1,000 கோடி முதலீட்​டில், சென்னை மவுண்ட் - பூந்​தமல்லி சாலைப் பகு​தி​யில் அமைய​வுள்ளது. இதில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும்.</p><p>ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்​னாலஜி குழு​மம், எம்​பெடட் சிஸ்​டம்ஸ் மற்​றும் டிஜிட்​டல்​மய​மாக்​கல் துறை​களில் 600 வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் நோக்​கில், சென்னை மற்​றும் திருச்​சி​யில் உள்ள தனது திறன் மையங்​களை விரிவுபடுத்​து​வதற்​கான ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டுள்​ளது. பிரிட்​டனைத் தலை​மை​யிட​மாக கொண்ட வில்​சன் பவர் சொல்​யூஷன்ஸ் நிறு​வனம், மேம்​பட்ட மின்​மாற்​றி களை தயாரிப்​ப​தற்​காக திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ரூ.300 கோடியை முதலீடு செய்​கிறது. இதனால் 400 புதிய வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும்.</p><h2>தமிழக இளைஞர்​களின் லட்​சியம்...</h2><p>இதுத​விர அசோக் லேலண்ட் நிர்​வாகத் தலை​வர் தீரஜ் இந்​துஜா, பினோலெக்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ் நிர்​வாகத் தலை​வர் பிர​காஷ் பி.​சாப்ரி உள்​ளிட்​டோரும் முதல்​-அமைச்சர் விஜய்யை சந்​தித்​தனர். அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் நடை​பெற்ற ‘வெற்​றி’ முதலீட்​டாளர்​கள் மாநாட்​டில் செய்​யப்​பட்ட ரூ.2,500 கோடி முதலீட்​டின் முன்​னேற்​றம் குறித்து அவர்​கள் விளக்​கினர். மேலும், தமிழகத்​தில் காற்​றாலை உள்​ளிட்ட புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை​யில் முதலீடு​களை அதி​கரிப்​பது குறித்​தும், இந்த சந்​திப்​பில் ஆலோ​சிக்​கப்​பட்​டது.</p><p>தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் பேசுகையில், இந்த முதலீடு​கள் தமிழக இளைஞர்​களின் லட்சியங்​களை பிர​திபலிப்பதாகவும் பிரிட்​டன்​-இந்​தியா பொருளா​தார மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தம் வாயி​லாக உரு​வாகும் வாய்ப்​பு​களைப் பயன்​படுத்​தி, தமிழகத்​தில் முதலீடு செய்ய இங்​கிலாந்து மற்றும் ஐரோப்​பிய நிறு​வனங்​களுக்கு அழைப்பு விடுத்​தார்.</p><h2>நாளை சென்னை திரும்புகிறார்</h2><p>இதன் விளை​வாக பிரிட்​டன் வர்த்தக நிறு​வனங்​களுக்​கும், தமிழக ஜவுளி உற்​பத்​தி​யாளர்​களுக்​கும் இடையே கொள்​முதல் ஒப்​பந்​தங்​கள், ஓசூருக்கு இங்​கிலாந்து விண்​வெளி மற்​றும் பாது​காப்​புத் துறை பிர​தி​நி​தி​கள் வரு​கை, அக்​டோபரில் இங்​கிலாந்து மேயர் ஆணை​யத்​தின் பிர​தி​நி​தி​கள் சென்னை வரு​கை உள்​ளிட்ட பல்வேறு நடவடிக்​கைகள்​ முன்​னெடுக்​கப்​பட உள்​ளன. இந்த நிலையில், லண்​டன் பயணத்தை முடித்​துக் கொண்டு முதல்​-அமைச்சர் விஜய் நாளை (வியாழக்கிழமை) சென்னை திரும்​பு​கிறார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் 53-வது ஐ.கே.எப். பின்னலாடை கண்காட்சி இன்று தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/53rd-ikf-knitwear-exhibition-begins-today-in-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/53rd-ikf-knitwear-exhibition-begins-today-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">34abefb9-1f52-4cc9-9917-5ec8627d341d</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:54:18 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:54:18.401Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,today,தொடக்கம்,Exhibition,கண்காட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/lz063m6j/345.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பின்னலாடை கண்காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/lz063m6j/345.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்</p><p>இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், திருப்பூரில் ஆண்டுதோறும் ஐ.கே.எப். எனப்படும் ‘இந்தியா நிட்பேர்’ கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>கண்காட்சி</h2><p>அந்த வகையில், 53-வது ஐ.கே.எப். கண்காட்சி, அவினாசி அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் இன்று தொடங்கி தொடர்ந்து 18-ந் தேதி வரை 3 நாட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், நாட்டின் பல்வேறு ஆடை உற்பத்தி மையங்களைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்று, புதுமையான ஆயத்த ஆடை ரகங்களை காட்சிப்படுத்துகின்றன.</p><p>மேலும், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் வர்த்தக முகமைகளின் பிரதிநிதிகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கண்காட்சியில்</a> பங்கேற்க உள்ளனர். அவர்கள் காட்சிப்படுத்தப்படும் ஆயத்த ஆடை ரகங்களை பார்வையிட்டு, வர்த்தக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-6-districts-today-weather-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-heavy-rain-in-6-districts-today-weather-department-update#comments</comments><guid isPermaLink="false">77b760f1-7e2a-4410-bcd9-9bb2c0ca1361</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:49:36 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:49:36.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,TN Rains,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/jlyqhz8k/van.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 6 மாவட்டங்களில் இன்று கனமழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/jlyqhz8k/van.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன்காரணமாக <strong>இன்று (16-09-2026):</strong> நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p><strong>17-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong>கனமழை</strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர்,</p><p>ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>18-09-2026:</strong> நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong>கனமழை</strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>19-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>20-09-2026 மற்றும் 21-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>16-09-2026 முதல் 19-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>16-09-2026 முதல் 19-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>(16-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை: </h2><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>16-09-2026 மற்றும் 17-09-2026:</strong> தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>18-09-2026:</strong> தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>19-09-2026:</strong> அந்தமான் கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இதர அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><strong>தமிழக கடலோரப்பகுதிகள் &amp; அரபிக்கடல் பகுதிகள்:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இனி பெண்களும் பனை மரம் ஏறலாம்! புதிய எந்திரத்தை அறிமுகம் செய்த வேளாண் கல்லூரி</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/now-women-can-climb-palm-trees-too-agricultural-college-introduces-new-machine</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/now-women-can-climb-palm-trees-too-agricultural-college-introduces-new-machine#comments</comments><guid isPermaLink="false">1e2558c8-b610-46d8-abc0-f35201447994</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:41:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:41:02.664Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Introduction,அறிமுகம்,பனை மரம்,வேளாண்மை கல்லூரி,VOC,palm tree,வ.உ.சி.,புதிய எந்திரம்,கிள்ளிகுளம்,Killikulam,Agriculture College,New Machine</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/0scncb4d/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ [பனை மரம் ஏற புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எந்திரம். (உள்படம்: புதிய எந்திரத்தில் ஏறி பனை மர உச்சிக்கு சென்ற பெண்கள்.)] ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/0scncb4d/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>இனி பெண்களும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பனை மரம்</a> ஏறும் வகையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், கிள்ளிகுளத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BF">வ.உ.சி. </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF">வேளாண்மை கல்லூரி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">புதிய எந்திரம்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அறிமுகப்படுத்தப்பட்டு</a> உள்ளது.</p><h2>பனை மரம்</h2><p>தமிழகத்தின் மாநில மரமான பனையின் அடி முதல் நுனி வரையிலும் மக்களுக்கு பயன்படுவதால் 'கற்பகத்தரு' என்று போற்றப்படுகிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு சிறந்த இயற்கை உணவாகவும், பனை ஓலை, பனை நார் கூரை வேயவும், கூடை, கட்டில், முறம் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது. </p><h2>உயரம் அதிகம்</h2><p>பனை மரம் செங்குத்தாக அதிக உயரமாக இருப்பதால், அதில் ஏறுவது கடினமானது. பல ஆண்டுகளாக பனைத்தொழிலாளர்கள் தங்களது உடல் வலிமையையும், அனுபவத்தையும் பயன்படுத்தியே மரங்களில் ஏறி வருகின்றனர். பனை மரத்தின் உயரம் அதிகமாக இருக்கும்போது, ஏறும் தொழிலாளர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதுடன், பாதுகாப்பு குறித்த அச்சமும் உள்ளது. இதனால் இளம் தலைமுறையினர் பனை மரம் ஏறும் தொழிலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது. </p><h2>புதிய எந்திரம் கண்டுபிடிப்பு</h2><p>இதனை கருத்தில் கொண்டு பனை மரத்தில் எளிதாகவும், பாதுகாப்பாகவும் ஏறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹைட்ராலிக் முறையை பயன்படுத்தி இயங்கும் நவீன எந்திரத்தை டிராக்டருடன் இணைத்து பனை மரங்களின் அருகில் எடுத்துச் சென்று, மேலும் கீழும் செல்லுமாறு இயக்கலாம். </p><h2>45 அடி உயர பனை மரத்தில் ஏறலாம்</h2><p>இதை பயன்படுத்தி ஒருவர் எளிதாக பனை மரத்தின் உச்சி வரை சென்று விடலாம். மரம் ஏறத்தெரியாதவர்களும் எளிதில் இதை பயன்படுத்தலாம். இந்த எந்திரத்தை ஒரு மணி நேரத்திற்கு இயக்க 3 முதல் 4 லிட்டர் டீசல் செலவாகும். இந்த எந்திரம் மூலம் சுமார் 45 அடி உயரம் வரையிலான பனை மரத்தில் பாதுகாப்பாக ஏறலாம். </p><h2>பெண்களுக்கு வேலைவாய்ப்பு</h2><p>இதன் மூலம் இனி பெண்களும் பாதுகாப்பாக பனை மரங்களில் ஏறலாம். பனை சார்ந்த தொழிலில் பெண்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த எந்திரத்தின் செயல்திறன் விளக்கம் குறித்து கிள்ளிகுளம் பனை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. </p><h2>நவீன எந்திரம் குறித்து செயல்விளக்க பயிற்சி</h2><p>வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தேரடிமணி தலைமையில், பனை மரம் ஏறும் நவீன எந்திரம் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் நவீன எந்திரத்தில் பனை மரம் ஏறினர். </p><h2>புதிய அத்தியாயம்</h2><p>இதுகுறித்து கிள்ளிகுளம் பனை ஆராய்ச்சி நிலைய தலைவர் மணிவண்ணன் கூறுகையில், "பனை மரம் ஏறுவது ஆண்களுக்கு மட்டுமே என்ற நிலையை மாற்றி, முறையான பயிற்சியுடன் பெண்களும் பனை சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய எந்திரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பனை மரத்தையும், பனைத் தொழிலையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரியின் இந்த தொழில்நுட்ப முயற்சி புதிய அத்தியாயமாக அமையும்” என்றார். </p>]]></content:encoded></item><item><title>பைக்கில் சென்ற இளம்பெண் மீது கார் மோதல் - ராஜஸ்தானில் டிரைவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-woman-on-a-bike-was-hit-by-a-car-the-driver-was-arrested-in-rajasthan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-woman-on-a-bike-was-hit-by-a-car-the-driver-was-arrested-in-rajasthan#comments</comments><guid isPermaLink="false">55e41567-3622-44a4-9ff6-fb39a957c677</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:37:41 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:37:41.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜஸ்தான்,Rajasthan,கைது,Car,கார்,பைக்,புதுடெல்லி,driver,Woman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/q6hb25lr/344.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/q6hb25lr/344.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி, </p><p>சிவானி மீது காரை மோதிய டிரைவர் கல்யாண் பைஸ்லாவை ராஜஸ்தானில் நேற்று போலீசார் கைது செய்தனர்.</p><p>டெல்லியைச் சேர்ந்த சிவானி சவுகான் என்ற இளம்பெண், சம்பவத்தன்று தன் நண்பர்களடன் குருகிராமுக்கு பைக் சவாரி சென்றார். திரும்பும் வழியில் கோல்ப் கோர்ஸ் சாலையில் வந்தபோது, காரில் வந்த ஒருவர் அவரை தள்ளிப்போகும்படி சொல்லிக்கொண்டே பைக்கை இடித்து தள்ளிவிட்டு சென்றார். இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சிவானிக்கு காயம் ஏற்பட்டது.</p> <h2>வழக்குப்பதிவு</h2><p>இதை கவனித்த அவரது தோழி ஒருவர் அந்த காரை விரட்டிச் சென்று நிறுத்தினார். அப்போதும் அந்த நபர் வாக்குவாதம் செய்துவிட்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றார். பைக்கில் பொருத்தியிருந்த கேமராவில் இந்த காட்சிகள் பதிவானதால், சிவானி சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டார். இதை கவனித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.</p><h2>கைது</h2><p>இந்த நிலையில், ராஜஸ்தானில் நேற்று, சிவானி மீது காரை மோதிய டிரைவர் கல்யாண் பைஸ்லாவை கைது செய்தனர். அவர் உடற்பயிற்சி கூடம் நடத்துபவர் என்று தெரியவந்துள்ளது. கார் ராணுவ அதிகாரி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. விபத்து எதிர்பாராமல் நடந்ததாகவும், வேண்டுமென்றே மோதவில்லை என்றும் டிரைவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் இந்தியா: விஞ்ஞானிகள் பெருமிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indias-effort-to-create-an-artificial-sun-scientists-express-pride</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indias-effort-to-create-an-artificial-sun-scientists-express-pride#comments</comments><guid isPermaLink="false">67b5422f-e495-4356-9d01-437341c159d0</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:26:23 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:26:23.459Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Scientists,விஞ்ஞானிகள்,Sun,சூரியன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/drjin0pq/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/drjin0pq/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'செயற்கை சூரியனை உருவாக்கும் இந்திய விஞ்ஞானிகளின் இந்த முயற்சி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது' என்று விஞ்ஞானிகள் கூறினர்.</p><h2>செயற்கை சூரியன்</h2><p>குஜராத் மாநிலம் காந்திநகரில் இயற்பியல் துறைக்கான 'பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம்' செயல்பட்டு வருகிறது. இங்கு அணுக்கரு இணைவு ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக காந்தப்புலங்களை பயன்படுத்தும் 'டோகாமாக்கில்' ஒரு 'உயர் சக்தி வெற்றிட மின்னணு சாதனம்' மூலம் பரிசோதனைக்குரிய பிளாஸ்மா கட்டுப்பாட்டுக்கருவி அல்லது 'செயற்கை சூரியன்' உருவாக்கப்பட்டு வருகிறது. இது 82.6 ஜிகாஹெர்ட்ஸ்' மற்றும் 400 கிலோ வாட் சக்தி வாய்ந்ததாகும். இந்தியாவின் இந்த முயற்சி மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.</p><h2>மின்சாரம் உற்பத்தி?</h2><p>இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், செயற்கை சூரியன் மின்சாரம் உற்பத்தி செய்வதில்லை. எஸ்.எஸ்.டி-1 என்பது ஒரு சோதனை அணுக்கரு இணைவு ஆராய்ச்சி எந்திரம். அது ஒரு வணிக மின் உற்பத்தி நிலையம் அல்ல. இந்த புதிய ‘கைரோட்ரான் பிளாஸ்மா'வை சூடாக்கி ஆய்வு செய்வதற்கான ஒரு கருவியாகும். இந்தியா ஏற்கனவே அணுக்கரு இணைவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. தொடர்ந்து அணுக்கரு இணைவு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.</p><p>உண்மையான நட்சத்திரங்களுக்கு ஆற்றல் அளிக்கும் அணுக்கரு இணைவை பிரதிபலிப்பதே இதன் நோக்கமாகும். இது இலகுவான அணுக்கருக்களை மிகக்கடுமையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் கீழ் ஒன்றிணைய செய்கிறது. இந்திய இணைவு சோதனைகள் ஏற்கனவே 200 மில்லியன் டிகிரி செல்சியசுக்கும் அதிகமான பிளாஸ்மா வெப்பநிலையை எட்டியுள்ளன. உயர் அதிர்வெண் மைக்ரோ அலைகளைப் பயன்படுத்தி கைரோட்ரான் பிளாஸ்மாவை வெப்பப்படுத்துகிறது</p><h2>எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும்</h2><p>இது உலைக்குள் உள்ள பொருட்களை சூடாகவும் நிலையாகவும் வைத்திருக்க உதவுகிறது. நட்சத்திரங்கள் புவியீர்ப்பு விசையை கொண்டு இதை செய்கின்றன, ஆனால் பூமியில் நமக்கு காந்தங்கள் தேவைப்படுகின்றன. நாம் இதன் மூலம் இன்னும் போதிய அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை என்றாலும், இந்த மேம்பாடு தூய்மையான, நீடித்த ஆற்றலை நோக்கிய ஒரு பெரிய நகர்வா கும். எதிர்காலத்தில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்கவும் இது உதவும். இந்த முயற்சி மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>பொய்யான சாதிச் சான்றிதழ் கொடுத்து தனித் தொகுதியில் போட்டி: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-caste-certificate-reserved-constituency-contest-high-court-order-to-ec</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-caste-certificate-reserved-constituency-contest-high-court-order-to-ec#comments</comments><guid isPermaLink="false">1dff6fa3-19ba-4ca3-bacb-32e08f96c89a</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:16:08 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:16:08.713Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,Election Commission,சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,வால்பாறை,Valparai,தேர்தல் வழக்கு,election case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/cohasy40/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/cohasy40/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொய்யான சாதிச் சான்றிதழ் கொடுத்து தனித் தொகுதியில் போட்டியிட்டுள்ளதாக வால்பாறை தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிரான தேர்தல் வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>தேர்தல் வழக்கு</h2><p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வால்பாறை தனித் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட குட்டி என்ற சுதாகர் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீதரன் என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.</p><h2>தேவாலயத்தில் திருமணம்</h2><p>அந்த மனுவில், "கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வரும் சுதாகர், தன்னை இந்து பட்டியலினத்தவர் என பொய்யான சாதிச் சான்றிதழ் வழங்கி தேர்தல் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவருக்கு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அவரது மறைந்த தந்தை ஆரோக்கியத்தின் உடல் தேவாலய மயானத்தில்தான் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>சட்டவிரோதம்</h2><p>கிறிஸ்தவ மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர், இடஒதுக்கீட்டுத் தொகுதியில் போட்டியிடப் பொய்யான சாதிச் சான்றிதழைப் பயன்படுத்தியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. எனவே, வால்பாறை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சுதாகரின் விவரங்களை மாநில அளவிலான சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பு குழு மற்றும் தேர்தல் ஆணையம் உரிய காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.</p><h2>பதில் அளிக்க வேண்டும்</h2><p>அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் வெண்ணிலா ஆஜராகி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்து, சீக்கிய அல்லது பவுத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுபவர்கள் யாரும் பட்டியல் சாதியினராகக் கருதப்பட மாட்டார்கள். எனவே பொய்யான தகவல்களை வழங்கி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எம்.ஏ. சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.</p><p>இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, தேர்தல் ஆணையம், மாநில அளவிலான சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பு குழு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற அக்டோபர் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/business/todays-petrol-and-diesel-price-status-in-chennai-41</link><comments>https://www.dailythanthi.com/business/todays-petrol-and-diesel-price-status-in-chennai-41#comments</comments><guid isPermaLink="false">3d512f4e-9b21-4c2d-b6ee-9ae2bf324012</guid><pubDate>Wed, 16 Sep 2026 00:47:44 +0000</pubDate><atom:updated>2026-09-16T00:47:44.005Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Petrol and Diesel price,கச்சா எண்ணெய்,பெட்ரோல் மற்றும் டீசல் விலை,from today</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ugei2f13/177.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் மற்றும் டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ugei2f13/177.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் <a href="https://www.dailythanthi.com/topic/petrol-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D">பெட்ரோல்</a> மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (16.09.2026 புதன் கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97.50 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்:  வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-by-elections-today-is-the-last-day-to-file-nomination-papers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-by-elections-today-is-the-last-day-to-file-nomination-papers#comments</comments><guid isPermaLink="false">437de9d5-8670-4d68-9a47-cbfb1a5e9f7c</guid><pubDate>Wed, 16 Sep 2026 00:14:19 +0000</pubDate><atom:updated>2026-09-16T00:14:19.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,வேட்பு மனு,Madurantakam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/a9muchao/nomination.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/a9muchao/nomination.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>இடைத்தேர்தல்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12, 13, 14-ந் தேதி தொடர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் வேட் புமனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.</p><h2>த.வெ.க., தி.மு.க. வேட்பாளர்கள் மனு</h2><p>தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார்.தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் வந்து மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மனு தாக்கல் செய்தார். மேலும், பனைமரம் ஏறும் தொழிலாளி சதீஷ்குமார் என்பவர் தனது தொழிலைக் குறிக்கும் வகையில் பனைமரம் ஏறும் உபகரணங்களுடன் வந்து சுயேச்சையாக மனு தாக்கல் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.</p><h2>இன்று கடைசி நாள்</h2><p>தாராபுரம் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.இதில் நேற்று தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த வக்கீல் சுகன்யா தி.மு.க. வேட்பாளராக 4 மனுக்களைத் தாக்கல் செய்தார். முன்னதாக அண்ணா படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி உள்ளிட்டோருடன் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜாவிடம் மனு அளித்தார். மேலும் இவரது கணவர் மணிவாசகமும் ஒரு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால், தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்தயபாமா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், மதுராந்தகத்தில் அ.தி.மு.க.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.</p> <p>வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 09 ஆம் தேதியும் நடைபெறும். </p>]]></content:encoded></item><item><title>டெண்டர் முறைகேடு புகார்:தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்- தமிழக அரசு அதிரடி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-irregularity-allegations-tambaram-corporation-commissioner-moved-to-the-waiting-list-tamil-nadu-government-takes-swift-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-irregularity-allegations-tambaram-corporation-commissioner-moved-to-the-waiting-list-tamil-nadu-government-takes-swift-action#comments</comments><guid isPermaLink="false">d2ea9fa8-5ec3-4fea-a5fd-5c2e19381db9</guid><pubDate>Tue, 15 Sep 2026 20:59:33 +0000</pubDate><atom:updated>2026-09-15T20:59:33.750Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,மாநகராட்சி,தமிழக அரசு,TN govt,டெண்டர் முறைகேடு,Tenders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/2sghxhsl/TBM.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/2sghxhsl/TBM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதிகளை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுச்சதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா நடத்தியதாக மாநகராட்சி கமிஷனர் எஸ்.பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோருக்கு விரிவான புகார் மனு அனுப்பப்பட்டு உள்ளது.</p> <h2>டெண்டருக்கு முன்பே திறப்புவிழா</h2><p>அதில் கூறியிருப்பதாவது:-</p><p>சுமார் ரூ.45 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 2 பணிகளை, டெண்டர் செயல்முறை முடிவதற்கு முன்பே அதிகாரிகள் முடித்துள்ளனர். பெருங்க ளத்தூர் பாலம் ரவுண்டானாவில் அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிக்காக ரூ.27 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான டெண்டர் கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதி ஆகஸ்டு 24-ந் தேதி ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப் புக்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, ஜூலை 29-ந் தேதியே இப்பணி முடிக்கப்பட்டு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் திறப்பு விழா நடத்தப்பட்டு உள்ளது.</p><p>போலி டெண்டர்களை இணையதளத்தில்...</p><p>இதேபோல், சிட்லபாக்கம் ரவுண்டானாவில் தண்ணீர் சேமிப்பு விழிப்பு ணர்வு சிலை மற்றும் அழகுபடுத்தும் பணிக்காக ரூ.18 லட்சத்து 60 ஆயி ரம் மதிப்பிலான டெண்டர் ஆகஸ்டு 6-ந் தேதி வெளியிடப்பட்டது. இதற் கான டெண்டர் திறப்பு தேதி ஆகஸ்டு 24-ந் தேதி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்டு 10-ந் தேதி சிலை திறக்கப்பட்டுள்ளது.இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட் டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் கமிஷனர் எஸ்.பாலச்சந்தர் கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக அறப் போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (54.69 சதவீதம்) இணையதளத்தில் திறக்கப்படாமல் "To-be-opened" என்ற நிலையிலேயே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை அடைந்துள் ளது. இது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையின்மையை காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <h2>தமிழக அரசு உத்தரவு</h2><p>இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் எஸ்.பாலச்சந்தரை தமி ழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பதவி,</p><p>கூடுதல் பொறுப்பாக ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யாவிடம் வழங்</p><p>கப்பட்டு உள்ளக</p> ]]></content:encoded></item><item><title>காய்ச்சல் பரவல் அதிகரிப்பு:பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்- அமைச்சர் அருண்ராஜ் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-fever-cases-face-masks-must-be-worn-in-public-places-minister-arunrajs-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-fever-cases-face-masks-must-be-worn-in-public-places-minister-arunrajs-statement#comments</comments><guid isPermaLink="false">d9e79321-a69f-4aca-aca1-89714e0b0c54</guid><pubDate>Tue, 15 Sep 2026 20:50:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T20:50:00.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fever,முகக்கவசம்,காய்ச்சல்,அருண்ராஜ்,Arun Raj</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/0yi5q6fo/arun-raj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/0yi5q6fo/arun-raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மருத்துவக்கல்லூரியில், 192-வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் தொடர்பாக மீனவர்களிடம் பேசி, அதன் நோக்கம் குறித்து புரிய வைப்போம்.தற்போது, சுவாசத்தொற்று பரவல் அதிகமாக உள்ளது. அரசு தடுப்பு நடவ டிக்கை எடுத்து வருகிறது. </p><p>பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண் டும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலும் உள்ளது. இந்த ஆண்டில் இது வரை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங் குவுக்கு முறையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-aiadmk-appoints-election-task-force-coordinators</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-aiadmk-appoints-election-task-force-coordinators#comments</comments><guid isPermaLink="false">8bd895bc-7ec9-4214-8897-c99177e5a148</guid><pubDate>Tue, 15 Sep 2026 18:39:03 +0000</pubDate><atom:updated>2026-09-15T18:39:03.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,இடைத்தேர்தல்,By election,அ.தி.மு.க,தேர்தல் பணிக்குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8mv9oet5/ADMK.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அ.தி.மு.க]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8mv9oet5/ADMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு, வடசென்னை வடக்கு(கிழக்கு), (மேற்கு), தெற்கு(கிழக்கு), (மேற்கு), தென்சென்னை வடக்கு(கிழக்கு),(மேற்கு), தெற்கு(கிழக்கு), (மேற்கு), திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்தியம், கடலூர் கிழக்கு, வடக்கு, தெற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி கிழக்கு, சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் வடக்கு, மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, மேற்கு, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.</p> <p>தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக திருப்பூர் மாநகர், புறநகர் கிழக்கு, மேற்கு, சேலம் மாநகர், புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், புறநகர் கிழக்கு, மேற்கு, கோவை மாநகர், புறநகர் வடக்கு, தெற்கு, மத்தியம், நீலகிரி, திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, தெற்கு, கிழக்கு, கரூர், திருவாரூர், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.</p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட கட்டுப்பாடு-தேர்தல் கமிஷன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/restriction-on-publishing-by-election-opinion-poll-results-election-commission-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/restriction-on-publishing-by-election-opinion-poll-results-election-commission-announcement#comments</comments><guid isPermaLink="false">955aa05f-9645-43db-8c07-b73782790158</guid><pubDate>Tue, 15 Sep 2026 18:14:25 +0000</pubDate><atom:updated>2026-09-15T18:14:25.745Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் அதிகாரி,தேர்தல் கமிஷன்,By election,election campaign,அர்ச்சனா பட்நாயக்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/b8jl625p/Election-comission.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/b8jl625p/Election-comission.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 06.10.2026 அன்று நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்த இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் இந்திய தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தல்களின் போது, வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் முதல் வாக்குப்பதிவு முடிவடைந்து அரை மணி நேரம் வரை இந்த தடை அமலில் இருக்கும்.</p> <p>அதன்படி, வாக்குப்பதிவு நாளான 6.10.2026 காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை (எக்சிட் போல்) நடத்துவது மற்றும் அதை அச்சு அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது தடை செய்யப்படுகிறது</p> <p>வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகிற 48 மணி நேர கால அளவில், (அதாவது, அக்டோபர் 6-ந் தேதி மாலை 6 மணிக்கு, 48 மணிநேரத்திற்கு முன்பு) எந்தவொரு கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட தேர்தல் விவகாரங்களை மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசு மாநில உரிமைகள் குறித்து பேச பயப்படுகிறது-உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-afraid-to-speak-about-state-rights-udhayanidhi-stalin-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-afraid-to-speak-about-state-rights-udhayanidhi-stalin-criticizes#comments</comments><guid isPermaLink="false">8e874d1d-6010-428d-b268-a420948de674</guid><pubDate>Tue, 15 Sep 2026 17:47:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T17:47:31.037Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,த.வெ.க,மாநில உரிமைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/rvaowaea/udhayanidithi-stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/rvaowaea/udhayanidithi-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,  </p><p>தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மத்திய– மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நம் தலைவர் (மு.க.ஸ்டாலின்) தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தக்குழு தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், மாநில சுயாட்சி குறித்த குழுவின் 2-ஆவது ஆய்வு அறிக்கையை தயார் செய்து வந்த ஆய்வாளர்களும் – ஆராய்ச்சி மாணவர்களும் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலை இந்த டம்மி அரசு உருவாக்கி இருக்கிறது.மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் பயப்படும் த.வெ.க அரசு, அது குறித்து ஆய்வு செய்யவே பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது.</p><p>ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, மத்திய – மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: தமிழில் வேள்வி நடத்த அனுமதி கோரி மேல்முறையீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-appeal-seeking-permission-to-conduct-the-sacrifice-in-tamil</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-appeal-seeking-permission-to-conduct-the-sacrifice-in-tamil#comments</comments><guid isPermaLink="false">b07344bb-c447-448a-961f-34777a3474da</guid><pubDate>Tue, 15 Sep 2026 16:15:05 +0000</pubDate><atom:updated>2026-09-15T16:15:05.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Meenakshi Amman Temple,தமிழ்,மீனாட்சி அம்மன் கோவில்,குடமுழுக்கு,Appeal,Consecration,வேள்வி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zq6zc51w/madurai-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zq6zc51w/madurai-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் குடமுழுக்கு நிகழ்வுகளில் சமஸ்கிருத யாகசாலைகளுக்கு இணையாகத் தமிழிலும் வேள்வி நடத்த அனுமதிக்கக் கோரி, தெய்வத் தமிழ் வழிபாட்டு ஆசிரியர் த.சுரேஷ்பாபு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.</p><p>குடமுழுக்குக்கு முன்பும், குடமுழுக்கின்போதும், அதற்குப் பிந்தைய மண்டல பூஜையிலும் தமிழ் மந்திரங்கள் மற்றும் திருமுறைகளைக் கொண்டு வேள்விக் குண்ட வழிபாடு நடத்தத் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தார். இதனை கோவில் நிர்வாகம் கடந்த மார்ச் 11-ஆம் தேதி நிராகரித்தது.</p><h2>மேல்முறையீடு</h2><p>அந்த உத்தரவை எதிர்த்து சுரேஷ்பாபு தாக்கல் செய்த ரிட் மனுவை, தொடர்புடைய விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக் கூறி தனி நீதிபதி கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி தள்ளுபடி செய்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தற்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">மேல்முறையீடு</a> செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழில் மந்திரங்கள் ஓதுவதற்கு ஆகமங்களிலோ, சமய நூல்களிலோ தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருப்பதைத் தனி நீதிபதி உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என்று மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.</p><h2>சாதி அடிப்படையிலான பாகுபாடு</h2><p>கோவில் பணியாளர்கள் அல்லாத சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளில் அனுமதிக்கப்படும் நிலையில், தமிழ் வேள்விப் பயிற்சி பெற்ற தனக்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப்படுவது மொழி மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு என்றும் மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>மேலும், ஓதுவார்கள் தனியாகத் தேவாரப் பாடல்களைப் பாட அனுமதிப்பது மட்டும் தமிழுக்கு வழங்கப்படும் சம உரிமையாகாது; வேள்விக் குண்டங்களிலேயே தமிழ் மந்திரங்களைப் பயன்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>எனவே, தனது கோரிக்கையை நிராகரித்த கோவில் நிர்வாகத்தின் உத்தரவையும், அதனை எதிர்த்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வரவிருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்: ரெயிலில் ஏற முயன்றபோது பிளாட்பார இடையே சிக்கிய நபரால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tambaram-man-trapped-between-platforms-causes-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tambaram-man-trapped-between-platforms-causes-panic#comments</comments><guid isPermaLink="false">d5c67d92-1846-4f1a-873e-b8abddabd610</guid><pubDate>Tue, 15 Sep 2026 15:22:53 +0000</pubDate><atom:updated>2026-09-15T15:22:53.083Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,train,ரெயில்,நபர்,man,stuck,பிளாட்பாரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vrwmqnse/tabaram-train.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வாலிபர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தாம்பரம்: ரெயிலில் ஏற முயன்றபோது பிளாட்பார இடையே சிக்கிய நபரால் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vrwmqnse/tabaram-train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தாம்பரம் ரெயில் நிலையத்தில்</a>, ரெயிலில் ஏற முயன்றபோது கால் தவறி தண்டவாள இடுக்கில் விழுந்த பயணியை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பத்திரமாக மீட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நெரிசலில் சிக்கிய ரெயில் நிலையம்</h2><p>தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில்கள் மூலம் பயணித்து வருகின்றனர். இதனால் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. ரெயில்களில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.</p><h2>தண்டவாள இடையே சிக்கிய நபர்</h2><p>தாம்பரத்தில் இருந்து அசாம் மாநிலத்தின் சில்காட் டவுன் வரை செல்லும் நாகோன் விரைவு ரெயில் மேற்கு வங்க மாநிலம் வழியாக வாரந்தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த போது ஏராளமான வட மாநிலத்தினர் ரெயிலில் இடம். பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறினர்.</p> <p>அப்போது வடமாநில தொழிலாளி ஒருவர் கூட்டநெரிசலில் ரெயில் இருந்து தவறி நடைமேடைக்கும். ரெயிலுக்கும் இடையே இருந்த மிக குறுகிய தண்டவாள பகுதியில் விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள் அலறினர்.</p><h2>பயணியை மீட்ட போலீஸ்</h2><p>அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர், ரெயிலின் அடியில் இருந்த அந்த பயணியின் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டு, அவரை முழு பலத்துடன் பிளாட்பாரத்தின் மேல் நோக்கி இழுத்து தூக்கினார். </p> <h2>பாராட்டு மழை</h2><p>மரணத்தின் விளிம்பிற்கு சென்ற பயணியை காப்பாற்றிய போலீஸ்காரரின் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. போலீசாரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>“21-ம் நூற்றாண்டிலும் சாதி தகராறா?” - சிதம்பரம் அருகே மோதலால் கிராம மக்கள் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-caste-conflict-still-present-in-the-21st-century-villagers-anguished-by-clash-near-chidambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-caste-conflict-still-present-in-the-21st-century-villagers-anguished-by-clash-near-chidambaram#comments</comments><guid isPermaLink="false">3cfef5f4-8e2c-4880-b841-ca4ec45d18b0</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:58:27 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:58:27.634Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chidambaram,Caste,clash,மோதல்,சிதம்பரம்,சாதி பாகுபாடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/0egukc76/123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/0egukc76/123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>21-ம் நூற்றாண்டிலும் சாதி ரீதியாக தகராறு செய்த மக்களால் மற்றொரு தரப்பினர் கடும் வேதனையில் உள்ளனர். </p><p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஊர்வலத்தில் ஆடல், பாடல் நடத்தக்கூடாது என மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விநாயகர் சிலையை அந்த வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி, பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் சாலையில் ஒரு தரப்பினர் 3 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று பள்ளிக்கு சென்ற மாணவர்களை ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தி அவர்கள்   “தலை மீது செருப்பு வைத்து” செல்லுமாறும் இந்த பாதை வழியே சென்றால் ”சாணியால் அடிப்போம்” என்று கூறியதாக மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், 5 வீடுகளுக்குள் புகுந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்குதல் </a>நடத்தி, வீடுகளை அடித்து நொறுக்கியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.</p><h2>21-ம் நூற்றாண்டிலும் சாதி தகராறு...</h2><p>இதில் ஒரு தரப்பை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் கரிக்குப்பம் கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில், கடலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, “21-ம் நூற்றாண்டிலும் இதுபோன்ற சாதி தகராறு எதற்காக?” என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>