<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 11 Aug 2026 12:19:26 +0000</lastBuildDate><item><title>தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றம்: ”இந்த ஒற்றுமைப்போக்கு தொடரவேண்டும்” - கமல்ஹாசன் எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolutions-passed-unanimously-this-spirit-of-unity-must-continue-kamal-haasan-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolutions-passed-unanimously-this-spirit-of-unity-must-continue-kamal-haasan-mp#comments</comments><guid isPermaLink="false">36764e7c-f30b-4e92-88f5-67471db139d5</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:19:02.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,கமல்ஹாசன்,தமிழக சட்டசபை,தமிழக அரசு,TN govt,TN Assembly,Kamal Haasan,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Makkal Needhi Maiam,மக்கள் நீதி மய்யம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/msf00j7k/mi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/msf00j7k/mi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட், FCRA என இரு தீர்மானங்கள் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது மகிழ்வளிப்பதாக ம.நீ.ம .தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/kamal-haasan">கமல்ஹாசன்</a> எம்.பி. தெரிவித்துள்ளார்.</p><h2>நீட் நுழைவுத் தேர்வு</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரு தீர்மானங்கள் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை மகிழ்வளிக்கிறது. </p><p>நீட் நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதும், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதுமே அத்தீர்மானங்கள். </p><h2>அரசுக்கு பாராட்டுகள்</h2><p>பா.ஜ.க. நீங்கலாக, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடும் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது  வரவேற்கப்பட வேண்டிய விஷயம். தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டுகள். </p><p>தமிழ்நாட்டின் நலனுக்கான இந்த ஒற்றுமைப் போக்கு தொடரவேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு; ஈரோட்டில் பரிதாபம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-dies-of-electrocution-tragic-incident-in-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-dies-of-electrocution-tragic-incident-in-erode#comments</comments><guid isPermaLink="false">d999f3ba-ff7f-4531-9f71-5f3ba0ab1900</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:04:17 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:04:17.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,மின்சாரம் தாக்கி,school student,பள்ளி மாணவன் பலி,electrocution death</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/tppq6p4g/201.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பள்ளியை முற்றுகையிட்ட ஊர்மக்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/tppq6p4g/201.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அரசுப் பள்ளியில், மதிய உணவு இடைவேளையின் போது அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த பள்ளி மாணவன் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்சாரம் தாக்கி </a>பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>அரசு உயர்நிலைப்பள்ளி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஈரோடு மாவட்டம்</a> பவானி அடுத்த குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் யோகேஷ் (வயது 11). அந்த சிறுவன் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதிய உணவு இடைவேளையின் போது,<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> மாணவன்</a> யோகேஷ் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்ததான்.</p><h2>மின்சாரம் தாக்கி மாணவன் பலி</h2><p>அப்போது, பள்ளி வளாகத்தில் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சார ஒயரை சிறுவன் யோகேஷ் மிதித்தான். இதில் பலத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவலறிந்து வந்த போலீசாரும், அதிகாரிகளும் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி வளாகத்திற்குள் மின்சாரக் கம்பி அறுந்து கிடந்தது குறித்து பள்ளி நிர்வாகமும், மின்வாரியமும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததே இந்த துயர சம்பவத்திற்குக் காரணம் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு - சென்னையில் ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-teachers-students-take-pledge-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-teachers-students-take-pledge-in-chennai#comments</comments><guid isPermaLink="false">740897d2-2d15-4799-8d4b-5d1b7d69dcbb</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:03:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:03:34.802Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Chennai,சென்னை,உறுதிமொழி ஏற்பு,மாணவர்கள்,students,ஆசிரியர்கள்,school teachers,Pledge,Drug free Tamil Nadu,போதை பொருள்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/xtub1wri/pledge.jpg" width="749"><media:title type="html"><![CDATA[ ஆசிரியர்கள், மாணவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/xtub1wri/pledge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பணியாளர்கள், சென்னை பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் “<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">போதைப்பொருள்கள்</a> இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழியினை இன்று ஏற்றனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-</p><h2>“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு”</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.</p> <h2>அலுவலர்கள், பணியாளர்கள்</h2><p>இதன் தொடர்ச்சியாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் இணை ஆணையாளர்கள் ஸ்ரேயா பி. சிங், (சுகாதாரம்), செ.சரவணன், (பணிகள்) உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள், சென்னை பள்ளிகளின் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழியினை ஏற்றனர்.</p><h2>உறுதிமொழி</h2><p>மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்த அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 81 சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் இன்று “போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.</p> <h2>அறிவுரை</h2><p>போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.</p><h2>தடுப்பு நடவடிக்கை</h2><p> போதை பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-fever-cases-in-tamil-nadu-health-department-issues-advisory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-fever-cases-in-tamil-nadu-health-department-issues-advisory#comments</comments><guid isPermaLink="false">abccf324-72ed-4260-addb-cc728e9395f4</guid><pubDate>Tue, 11 Aug 2026 11:59:05 +0000</pubDate><atom:updated>2026-08-11T11:59:05.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>hospital,மருத்துவமனை,Fever,காய்ச்சல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/rkzi0mc0/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/rkzi0mc0/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பருவமழை காலம் என்பதால் தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. </p><h2>காய்ச்சல் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்</h2><p>அதன்படி, குறையாத <a href="https://www.dailythanthi.com/">காய்ச்சல்</a>, வயிற்று வலி, திடீர் அதிக காய்ச்சல், கடுமையான தசைவலி, கண்கள் சிவத்தல்,  கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, மூட்டு வலி, தோலில் சிவப்பு தடிப்புகள், முதுகு வலி, உடல் சோர்வு,  பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் அருகில் உள்ள மருந்தகத்தில் மாத்திரை வாங்கி சாப்பிடாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்களை அணுகி பரிசோதனை செய்ய வேண்டுமென பொதுமக்களுக்கு  சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>பருவ மழை நோய் அதிகரிப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான வார்டு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு  ஏற்ப தனித்தனி பரிசோதனை செய்து நோயின் தீவிரத்தை தீவிர காய்ச்சல், நடுத்தர காய்ச்சல், லேசான காய்ச்சல் என பகுப்பாய்வு செய்து அதற்கு ஏற்ப நோயாளிக்கு மருந்து கொடுக்க வேண்டும் என மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  </p><p>மழைக்காலம் என்பதால் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா, டைபாய்டு உள்ளிட்ட பருவமழை நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதாகவும் வீட்டையும் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பொது சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அதேபோல் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மாவட்ட அளவிலான மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட நிர்வாக அமைப்போடு ஒருங்கிணைந்து நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிர படுத்தவும் அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: எந்த பகுதிகளில் தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-public-power-outage-in-chennai-the-day-after-tomorrowdo-you-know-which-areas-are-affected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-public-power-outage-in-chennai-the-day-after-tomorrowdo-you-know-which-areas-are-affected#comments</comments><guid isPermaLink="false">a08eaebb-d71e-41db-9ca2-01f39c78548c</guid><pubDate>Tue, 11 Aug 2026 11:21:23 +0000</pubDate><atom:updated>2026-08-11T11:21:23.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,மின் தடை,power cut</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/71l40x2r/minthad.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/71l40x2r/minthad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் முக்கிய இடங்களில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>மின் விநியோகம் நிறுத்தம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் நாளை மறுநாள் (13.08.2026) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>கே.கே. நகர்: </h2><p>காவேரி ரங்கன் நகர், கே.கே.சாலை, லோகையா காலனி, தசரதபுரம், ஆற்காடு சாலை, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மதியழகன் நகர், அருணாச்சலம் சாலை, குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் சாலை, பரணி காலனி, காவேரி மருத்துவமனை தெரு, சூர்யா தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்கரபாணி தெரு, பிக் பஜார், பாஸ்போர்ட் அலுவலகம், என்.எஸ்.கே. லேன், சியாமளா டவர், முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, விநாயகம் தெரு, காமராஜர் சாலை, வெங்கடேச நகர்.</p><h2>பாலவாக்கம்: </h2><p>காமராஜர் சாலை பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1வது மற்றும் 2வது தெரு, கந்தசாமி நகர் 1 வது முதல் 7வது தெரு வரை, மணியம்மை தெரு, திருவான்மியூர் அவ்வை நகர், வெங்கடேசபுரம், கண்ணப்பன் நகர், பாரதி நகர்.</p><h2>பல்லாவரம்: </h2><p>பம்மல் பிரதான சாலை, ஆடுத்தொட்டி, கிருஷ்ணா நகர், முத்தமிழ் நகர், என்.எஸ்.கே. தெரு, நடராஜன் தெரு, பிருந்தாவன் காலனி, கென்னடி தெரு, மூங்கலேரி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யை கவர்ந்த குட்டி போலீஸ் - யார் அவர்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-little-police-officer-who-impressed-chief-minister-vijay-who-is-he</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-little-police-officer-who-impressed-chief-minister-vijay-who-is-he#comments</comments><guid isPermaLink="false">60dafb74-388b-4856-ac52-cc8ad41de177</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:59:58 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:59:58.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக அரசு,TN govt,TN Police,போலீஸ் அதிகாரிகள்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/i87ma68x/maria.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்யை கவர்ந்த குட்டி போலீஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/i87ma68x/maria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற பெயரில் மாநில அளவில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. </p><h2>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</h2><p>மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> கலந்துகொண்டு, அனைவரையும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்கச் செய்தார். </p><p>அதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை தடுத்து ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீஸ் அதிகாரிகளுக்கு 2026-ம் ஆண்டுக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்பட்டன. </p><h2>போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்</h2><p>அதில், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யான  சந்தீஷ் ஐ.பி.எஸ்.-ம் ஒருவர். பதக்கம் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். பள்ளி செல்லும் அவருடைய மகன் ஷன் முக் (4) உடன் வந்திருந்தார். போலீஸ் சீருடையில் வந்த அந்த சிறுவன், முதல்-அமைச்சர் விஜயை பார்த்தவுடன், தானும் மேடைக்கு வருவதாக தந்தையிடம் அடம்பிடித்தார். </p><h2>முதல்-அமைச்சருக்கு சிறுவன் சல்யூட்</h2><p>மகனுடன் மேடை ஏறிய எஸ்.பி.சந்தீஷிடம் விசாரித்த முதல்-அமைச்சர் விஜய், அவருடைய மகனை கையில் தூக்கிக் கொண்டார். சில வினாடிகள் சிறுவனிடம் பேசிய அவர், பின்னர் கீழே இறக்கிவிட்டார். அந்த சிறுவனும் ஏனைய போலீஸ் அதிகாரிகள் போல், முதல்-அமைச்சர் விஜய்க்கு நேர் எதிரில் நின்று அவருக்கு சல்யூட் அடித்தார். பதிலுக்கு சிரித்துக்கொண்டே முதல்-அமைச்சர் விஜய்யும் சல்யூட் அடித்தார். அதன்பின்னர், சிறுவன் உற்சாகமாக தனது தந்தையுடன் மேடையை விட்டு கீழே இறங்கினார். </p><p>குட்டி போலீஸ் மேடை ஏறிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>திமுக - பாஜக கூட்டணி? வானதி சீனிவாசன் பதில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-bjp-alliance-vanathi-srinivasans-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-bjp-alliance-vanathi-srinivasans-response#comments</comments><guid isPermaLink="false">38ce1145-6eb9-4530-94ff-7ab4798c2744</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:48:23 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:48:23.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,திமுக,DMK,வானதி சீனிவாசன்,பாஜக.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/671okizl/vanathi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
திமுக - பாஜக கூட்டணி?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/671okizl/vanathi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் திமுக - பாஜக கூட்டணி  உருவாகிறதா? என்ற கேள்வி பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.</p><p>தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தபிறகு தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலரும் தவெகவில் இணைந்தனர். மேலும் திமுகவும் பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இணையும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக தரப்பில் பலர் கூறி வருகின்றனர்.</a></p><p>இந்நிலையில் அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது. தமிழகத்துக்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் நாங்கள் அதை கண்டிப்பாக ஆமோதிப்போம், வரவேற்போம்" என்று திமுக எம்.பி. கனிமொழி சோமு கூறியிருந்தார்.</p><p>தொடர்ந்து இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், 'அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை' என்றார்.</p><p>மேலும், "திமுக - பாஜக கூட்டணி உருவாகும்போது சொல்வார்கள். உருவாகும் முன்பே நீங்களே கூட்டணியை உருவாக்கிவிடுவீர்கள்போல" என்று தெரிவித்துவிட்டு சென்றார்/ </p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் கிறிஸ்தவ மயமாக்க முயற்சி: நிதியமைச்சருக்கு இந்துமுன்னணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-christianize-the-tamil-nadu-legislative-assembly-hindu-munnani-condemns-finance-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-christianize-the-tamil-nadu-legislative-assembly-hindu-munnani-condemns-finance-minister#comments</comments><guid isPermaLink="false">14d24efa-7dd8-42a6-968d-b4018e2c1679</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:47:27 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:47:27.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,இந்து முன்னணி,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Finance Minister,Hindu Munani,நிதி அமைச்சர்,Mariawilson</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/sfjpkt5j/maria.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/sfjpkt5j/maria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ் மொழியின் மாண்பினை இழிவுபடுத்திய <a href="https://www.dailythanthi.com/topic/mariawilson">நிதியமைச்சர் மரியவில்சனுக்கு</a> இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>அரசியல் பண்பாடு</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் நா.மரிய வில்சன் அவர்கள் வெளிப்படுத்திய கோபமும், அதனுடன் இணைந்த மதச்சார்புடைய கருத்துக்களும் மாநிலத்தின் அரசியல் பண்பாட்டிற்கே அவமானமாக ஆகும்.</p><p>பட்ஜெட் விவாதத்தின் போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதியமைச்சர் தமிழில் பிழையின்றி பேச முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தமிழ் ஆர்வலர் என்ற முறையில் எழுப்பப்பட்ட நியாயமான விமர்சனமே. ஆனால் அதற்கு பதிலளித்த அமைச்சர், "நான் பிறப்பால் கிறிஸ்தவன். எனக்கு கிறிஸ்தவம் அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழியை கற்றுக்கொடுத்திருக்கிறது என பேசியிருக்கிறார். </p> <h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>கிறிஸ்துவ மொழி அன்பு கருணை இரக்கம் சொல்லித் தந்தது என்றால், தமிழ் மொழி எதுவும் சொல்லித் தரவில்லை என்பதே பொருளாக அமையும். சனாதன தர்மமும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வழிமுறைகளை போதிக்கிறது. ஒவ்வொரு மதமும் அன்பை, இரக்கத்தை, பொறுமையை வலியுறுத்துகிறது. ஆனால் தன் மதம் மட்டும் தான் இவற்றை கற்றுக்கொடுத்தது என்ற உணர்வை உருவாக்குவது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது.</p><p>கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்பதை உலகே அறியும். கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்னாலேயே தமிழ் மொழி தோன்றியது. தான் சார்ந்த கிறிஸ்தவ மதத்தை உயர்த்திப் பிடிக்கிறேன் என்ற நோக்கில் தமிழ் மொழியை சிறுமைப்படுத்தி இருக்கிறார் அமைச்சர் மரிய வில்சன்.</p> <h2>தமிழ் மொழி</h2><p>எனக்கு தமிழ் சரியாக வராது அதை பேச முயற்சிக்கிறேன் எனும் பொருள்படும்படி பேசி இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து அமைச்சர் என்பதே அவையில் மறந்து காட்டுக்கூச்சல் போட்டிருக்கிறார்.</p><p>சட்டசபை கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கையை கொண்டு வரும் பொழுது ஜெபமாலையை கொண்டு வந்தார். அது மத நம்பிக்கை என்பதாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் தமிழில் பிழை இல்லாமல் பேசுங்கள் என சட்டமன்ற உறுப்பினர் கூற உடனடியாக கிறிஸ்துவத்தை அவர் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றி கேள்வி எழுகிறது.</p><p>இதிகாசங்களும், காப்பியங்களும், தேவாரமும், திருவாசகமும், திருவருட்பாவும், திருவெம்பாவையும் இன்னும் பல இலக்கியங்கள் பக்தியை உள்ளடக்கியது தமிழ் மொழி. தமிழ்மொழி தெரியாத ஒரு தலைமுறை உருவாகி வந்துள்ளது தான் திராவிட அரசியல் ஆட்சி செய்ததன் சாதனை எனும் வேதனை என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.</p> <h2>ஆணவத்தின் உச்சம்</h2><p>தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் மொழியின் அருமை தெரியாமல் நிதியமைச்சர் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.</p><p>பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது என்று கூறியது மட்டுமல்லாமல், தனது பேச்சு நடையை யாருக்காகவும் மாற்ற மாட்டேன் என்று ஆவேசமாக அறிவித்ததோடு, சபை மாண்பு என்பதே சிறிதும் இன்றி ஒலிபெருக்கியை தள்ளி விடுவது அவர் ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சரின் பொறுப்புக்கு அழகல்ல. </p><p>சபாநாயகரே அவரை அமைதிப்படுத்த வேண்டிய நிலை உருவானது. தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பதவி வகிப்பவர். தமிழை இழிவுபடுத்தி தனது மதத்தை உயர்த்திப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கல்வித்துறையில் 25 முதல் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் என்று அவரே கூறியிருக்கிறார். ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பழக்கப்பட்டவர் என்பதால் தமிழில் சில பிழைகள் ஏற்படலாம். ஆனால் அதை ஒப்புக்கொண்டு சரி செய்ய முயற்சி செய்வதற்குப் பதிலாக, தமிழ் படித்தவர்களுக்கே அன்பு தெரியாது என்று சொல்வது ஆணவத்தின் உச்சம்.</p> <h2>அன்பு மொழி</h2><p>மேலும், சொத்து தகராறில் தனது சொந்த அண்ணன் குடும்பத்தினரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், "அன்பு மொழி" பற்றி பேசுவது இரட்டை வேடமாகவே தென்படுகிறது.</p><p>சட்டப்பேரவை என்பது அனைத்து மக்களின் பிரதிநிதித்துவ அரங்கம். அங்கு மதத்தை முன்னிறுத்தி தமிழை இழிவுபடுத்துவது மாநிலத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தானது. நிதியமைச்சர் பதவி என்பது பொறுப்பானது. கோபத்தைக் கட்டுப்படுத்தி, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதே அந்தப் பதவிக்கு அழகு. தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை மதிக்கும் மனப்பான்மையை அமைச்சர் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற நிகழ்வுகள் அரசியல் விவாதங்களை மதரீதியாக மாற்றி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்.</p> <h2>கிறிஸ்துவ தாஜா அரசியல்</h2><p>தமிழுக்காக எதையும் செய்வோம், தமிழ் எங்கள் உயிர் எனவெல்லாம் போலி அறிக்கைகளை விடும் தி.மு.கவினரும், போலி தமிழ் ஆர்வலர்களும் அமைச்சரின் இந்த பேச்சுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காததன் காரணம் சிறுபான்மை கிறிஸ்துவ தாஜா அரசியல் தான். இதனை உணர்ந்துதான் யாரும் எதிர்த்து குரல் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே உரையில் கிறிஸ்துவத்தை இடைச்செருகலாக அமைச்சர் கொண்டு வந்தாரோ என மக்கள் சந்தேகிக்கிறார்கள்.</p><p>உலகம் போற்றும் தமிழ் மொழியை குறைத்து மதிப்பிட்டதற்காக நிதி அமைச்சர் மரியவில்சன் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இனிமேல் இது போன்று ஆணவ பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நவோதயா பள்ளிகளை தடுக்கும் தவெக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-condemns-tvk-government-for-blocking-navodaya-schools</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-condemns-tvk-government-for-blocking-navodaya-schools#comments</comments><guid isPermaLink="false">d3504b10-2d3c-441b-9f61-366c32f8941f</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:42:14 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:42:14.805Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,கண்டனம்,condemns,CBSE school,தவெக அரசு,TVK Government,நவோதயா பள்ளிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/8pf1fp9y/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/8pf1fp9y/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நவோதயா பள்ளிகளை தடுக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசுக்கு கண்டனம் என தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நவோதயா பள்ளிகள்</h2><p>தமிழகத்தை தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா பள்ளிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. ஊரக பகுதி மாணவர்களுக்கு உயர்தரமான சிபிஎஸ்இ  கல்வியை முற்றிலும் இலவசமாக வழங்கும் நவோதயா பள்ளிகளை தடுக்கும் நோக்கில், விஜய் தலைமையிலான <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க அரசு</a> உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p> <h2>பி-டீமாக</h2><p>நவோதயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தங்குமிடம், சத்தான உணவு, சீருடை மற்றும் புத்தகங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அத்தகைய பள்ளிகளை தடுப்பதன் மூலம், தவெக அரசு திமுகவின் அதே மாணவர் விரோத பாதையையே பின்பற்றி, அதன் ‘பி-டீமாக’ செயல்படுவது ஏமாற்றமளிக்கிறது.</p><h2>பிடிவாத போக்கு</h2><p>எனவே, மாநில உரிமை என்ற பெயரில் அரசியல் செய்யாமல், மாணவர் நலனை கருதி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நவோதயா பள்ளிகளுக்கு தேவையான நிலங்களை தவெக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் இந்த பிடிவாத போக்கை அரசு கைவிடாவிட்டால், பாரதிய ஜனதா கட்சி மாணவர்களுக்காக தொடர்ந்து வீதிக்கு வந்து போராடும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை...வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-new-schemes-in-budget-no-measures-to-boost-revenue-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-new-schemes-in-budget-no-measures-to-boost-revenue-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">1f648522-a272-4ca0-9ab2-fd5642b4935f</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:32:18 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:32:18.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,தமிழக சட்டசபை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mkbpk53t/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/mkbpk53t/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,</p> <p>புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாட்கள் தான். 100 நாள் செயல்திட்டங்களை புதிய அரசு வெளியிடுவது வழக்கம், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதலீடுகள் கிடைக்கும். தவெகவை போல் ஏற்கெனவே வெள்ளை அறிக்கையை அதிமுக, திமுகவும் வெளியிட்டுள்ளது.</p><p>பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி. ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும். வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை, வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை. நிதி மேலாண்மைக்கு சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது. 3 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக உயர்த்திவிடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.</p><p>பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் உள்ள 40,000 அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன், 40,000 பள்ளிகளுக்கு தேவையான நிதியை கேட்டுப் பெறுவார் என நம்புகிறேன்.</p> <p>பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்.தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்.</p> <p>தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது.காலி பணியிடங்களை படிப்படியாக நிரப்பினால்தான் அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.</p> <p>ஆட்சிக்கு வந்த உடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறினீர்கள், அதனை செயல்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை நிறுவனங்களில் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடம், மின்சாரத்துறையிலும் பல காலிப்பணியிடங்கள் உள்ளன.மின்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதன் காரணமாகத்தான் அதிக மின்தடைகள் ஏற்படுகிறது.</p> <p>கொரோனா காலத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசு அதிமுக. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்திய அதிமுக ஆட்சி காலத்தில் கடன் சுமை குறைவாக இருந்தது. சொத்து வரி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <p>அதிமுக கொண்டு வந்த உழவன் செயலி திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.விவசாயிகள் நலன் கருதி ஓசூரில் உள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ விளைச்சல் அதிகம், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்பு, தேவையான நிவாரணம் தரப்பட வேண்டும்.தட்கல் முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் 65,000 விவசாயிகளுக்கு உடனடியாக பம்பு செட் தரப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ஈரோடு: பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-school-campus-electrocution-student-death-shocking-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-school-campus-electrocution-student-death-shocking-incident#comments</comments><guid isPermaLink="false">6e50728a-41ff-4dae-9256-9b12773c4bef</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:30:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:30:07.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,School,பள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/wjis10gy/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/wjis10gy/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஈரோடு,</p><p><a href="https://www.dailythanthi.com/">ஈரோடு </a>மாவட்டம் பவானி அருகே குப்பிச்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் யோகேஷ் (வயது 11) என்ற மாணவன் 6ம் வகுப்பு படித்து வந்தான்.</p><h2>மின்சாரம் தாக்கி மாணவன் பலி</h2><p>இந்நிலையில், மாணவன் யோகேஷ் இன்று மதிய உணவு இடைவேளையின்போது  பள்ளி வளாகத்தில் நடந்து சென்றுள்ளான். அப்போது, வளாகத்தின் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மாணவன் யோகேஷ் மிதித்துள்ளான். இதில் மின்சாரம் பாய்ந்த மாணவன் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தான். </p><p>உடனடியாக மாணவனை மீட்ட பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் யோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். </p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   </p> ]]></content:encoded></item><item><title>கோவை: 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலையால் பாதிப்பு- பொதுமக்கள் புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-public-complain-about-the-impact-of-a-cement-plant-operating-for-70-years</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-public-complain-about-the-impact-of-a-cement-plant-operating-for-70-years#comments</comments><guid isPermaLink="false">215370c1-ca56-4d60-817d-247cdae56610</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:27:15 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:27:15.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Air pollution,பொதுமக்கள் புகார்,public complaint,சிமெண்டு ஆலை</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6am6m52g/200.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஏ.சி.சி சிமெண்ட் ஆலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் ஏ.சி.சி சிமெண்ட் ஆலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6am6m52g/200.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை மாவட்டம்</a> மதுக்கரையில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் ஏ.சி.சி சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் சாம்பல் துகள்களால் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.</p><h2>பொதுமக்கள் குமுறல்</h2><p>கோவை மாவட்டம் மதுக்கரை அருகே குரும்பபாளையம் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஏ.சி.சி சிமெண்ட் ஆலை </a>கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. மதுக்கரை மற்றும் மேட்டாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மரங்களின் இலைகளில் சிமெண்ட் துகள்கள் தடிமனாகப் படிந்திருப்பதை ஆதாரமாகக் காட்டி கலெக்டரிடம் முறையிட்டனர்.</p><p>இதனால் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு மூச்சுத்திணறல், தொடர் இருமல், கண் எரிச்சல் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், காற்றின் தரம் முற்றிலும் சீர்கெட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.</p><h2>அதிகாரிகளின் அதிரடி உத்தரவு</h2><p>மக்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் சாம்பல் துகள்களின் அளவைக் கட்டுப்படுத்தும் வரை ஆலை இயங்கக் கூடாது என்றும், மாசு கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் ஆலை நிர்வாகத்திற்கு அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.</p><h2>தொழிலாளர்கள் போராட்டம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சுற்றுச்சூழல் </a>மாசுப் பிரச்சினை ஒருபுறமிருக்க, இந்த ஆலையின் தற்போதைய நிர்வாகமான அதானி குழுமம், உள்ளூர் தொழிலாளர்களைப் புறக்கணிப்பதாகக் கூறி ஆலைத் தொழிலாளர்களும் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மதுக்கரை பகுதியில் தற்பொழுது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கரும்பு விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லையா..?  த.வெ.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-dmk-government-done-nothing-for-sugarcane-farmers-former-minister-questions-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-dmk-government-done-nothing-for-sugarcane-farmers-former-minister-questions-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">08d2f6bb-e8d4-4fb0-a793-bfb839673ed1</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:11:19 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:11:19.650Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,கரும்பு விவசாயிகள்,sugarcane farmers</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/dgrd66qp/rr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/dgrd66qp/rr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர்</a> நேற்றைய தினம் (10.08.2026) சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யாதது போன்ற தோற்றத்தினை உருவாக்கும் வகையில் சட்டமன்றத்தில் படிக்கப்பட்டு செய்திகுறிப்பாக வெளியிடப்பட்டுள்ளது உண்மைக்கு மாறான தகவல் என்று முன்னாள் அமைச்சர்  ரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். </p><h2>தவறான செய்தி </h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- </p><p>முன்னாள் முதல்-அமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் கரும்பு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றையதினம் 10.08.2026ல் சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் முதல்-அமைச்சர் அவர்கள் அறிவித்ததை நாளிதழ்களில் த.வெ.க அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது :-</p><p>கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.156 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாநில அரசால் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஓராண்டில் 134 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.</p> <h2>திராவிட மாடல் ஆட்சி</h2><p>கரும்பு விவசாயிகளின் நலன்மீது மிகுந்த அக்கறை கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750லிருந்து ரூ.750 உயர்த்தி டன் ஒன்றுக்கு ரூ.3,500ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.</p><p>மாநில அரசால் கரும்புக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகையாக    2020–2021 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.192.50 எனவும், 2021–2022 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.195 எனவும், 2022–2023 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.195 எனவும், 2023–2024 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.215 எனவும், 2024–2025 அரவைப்பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.349 எனவும் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.156 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்பதும், சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஓராண்டில் 134 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் முற்றிலும் தவறான செய்தி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <h2>கடந்த 5 ஆண்டுகளில் மட்டும்</h2><p>2021 முதல் 2026 வரையிலான கழக ஆட்சியில் 5,77,755 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,094.27 கோடி வழங்கப்பட்டுள்ளது, மேலும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு கரும்பு கிரையத் தொகையை உடனடியாக வழங்குவதற்காக ஆண்டுதோறும் வழிவகைக் கடனாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.937.20 கோடி கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்படுள்ளது.</p><h2>விவசாயிகளின் நலன்காத்தவர்</h2><p>இவ்வாறாக கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை மற்றும் கரும்பு கிரையத் தொகையை தாமதமின்றி வழங்குவதற்காக மட்டுமே ரூ.2,031.47 கோடி கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டும் மற்றும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கரும்பு விவசாயிகளின் நலன்காத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் ஆவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுடன் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் திரையுலகினர் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-with-mk-stalin-by-pepsi-chief-rk-selvamani-and-film-fraternity</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-with-mk-stalin-by-pepsi-chief-rk-selvamani-and-film-fraternity#comments</comments><guid isPermaLink="false">a040bda2-f115-41d8-897e-219293b0877d</guid><pubDate>Tue, 11 Aug 2026 10:11:01 +0000</pubDate><atom:updated>2026-08-11T10:11:01.528Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,சந்திப்பு,ஆர்கே செல்வமணி,Meet,திரையுலகினர்,M.K. Stalin</media:keywords><media:content height="904" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/56snan22/PEPSI.jpg" width="1600"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலினுடன் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் திரையுலகினர் திடீர் சந்திப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/56snan22/PEPSI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மு.க.ஸ்டாலினை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் திரையுலகினர் சந்தித்தனர்.இது தொடர்பாக, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>திரையுலகினர் நேரில் சந்தித்தனர்</h2><p>இன்று தி.மு.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க. ஸ்டாலின்</a>, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகி சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் சந்தித்தனர்.</p><h2>விழா அழைப்பிதழ்</h2><p>அப்போது, தமிழ் திரையுலகில் இயக்கம் மற்றும் திரைக்கதை துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் ஆகியோரின் கலைப்பயணத்தையும் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்” விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>  கிராமசபை கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-grama-sabha-to-pass-resolution-against-mekedatu-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-grama-sabha-to-pass-resolution-against-mekedatu-dam#comments</comments><guid isPermaLink="false">a22bcac1-5173-4f85-9bb6-c63fa52fa562</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:33:28 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:33:28.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,Gram Sabha Meeting,கிராமசபை கூட்டம்,தீர்மானம்,மேகதாது அணை,அன்புமணி ராமதஸ்,நிறைவேற்ற வேண்டும்,Mekedatu Dam Issue</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1toqj0yw/anbumani.20.gif" width="750"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1toqj0yw/anbumani.20.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆகஸ்ட் 15 விடுதலை நாள் கிராமசபை கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மேகதாது அணை திட்டம்</h2><p>காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும்  எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை  கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில், மொழி&amp;இனவெறி அமைப்புகளால் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களையும் கர்நாடக அரசு ஊக்குவித்து வருகிறது. இரு மாநிலங்களுக்கு  எதிரான நல்லுறவை சிதைக்கும் வகையிலான கர்நாடக அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.</p><h2>குடிநீர் தேவை</h2><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு நியாயமான காரணத்தை கூட கர்நாடக அரசால் கூற முடியாது. கர்நாடக தலைநகர் பெங்களூரின் குடிநீர் தேவையை நிறைவேற்றவே  மேகதாது அணையை கட்ட முடிவு செய்திருப்பதாக கர்நாடக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. </p><h2>கிருஷ்ணராஜசாகர் அணை</h2><p>மேகதாது அணைக்காக கர்நாடக அரசின் முன்வைக்கப்படும் ஒரே வாதம் இது மட்டும் தான். ஆனால், இந்த வாதம் தவறு என்பதற்கு பல காரணங்களை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே முன்வைத்துள்ளது. பெங்களூருக்கு தேவையான அளவு குடிநீரை இப்போதுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து எடுத்துக் கொள்ள முடியும்.</p><h2>கர்நாடக அதிகாரி</h2><p>மேகதாது அணை கட்டப்பட்டால், அதிலிருந்து 4 டி.எம்.சி நீரை பெங்களூருக்கு எடுத்து கொள்ளலாம் என்பது தான் கர்நாடக அரசின் திட்டமாகும். ஆனால், அதுவே தேவையில்லை என்ற குரல்கள் கர்நாடக  அதிகாரிகள் மத்தியிலேயே எழுந்துள்ளன. மேகதாது அணை கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">பெங்களூர் </a>நகரத்திலிருந்து 90 கி.மீ  தொலைவில் உள்ளது. </p><h2>கர்நாடக அரசின் திட்டம்</h2><p>பெங்களூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள டி.ஜி.ஹள்ளி எனப்படும் திப்பகன்டன ஹள்ளி அணையில் இன்றைய நிலையில் 2.2 டி.எம்.சி நீர் உள்ளது. 74 அடி உயரம் கொண்ட இந்த அணையில் அதிகபட்சமாக 3.4 டி.எம்.சி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த நீரை பெங்களூருக்கு கொண்டு செல்ல ஏற்கனவே குழாய் பாதைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணையின் நீரை பயன்படுத்திக் கொள்ள கூடுதலாக எந்த செலவும் செய்யத் தேவையில்லை.</p><h2>முறியடிக்கப்பட்டு விட்டது</h2><p>அதனால், மேகதாது அணை கட்டுவதை கைவிட்டு, டி.ஜி. அள்ளி அணையின் நீரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அம்மாநில அதிகாரிகளே தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் மேகதாது அணையை கட்டுவதற்காக  கர்நாடக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒற்றை வாதமும் முறியடிக்கப்பட்டு விட்டது. ஆனால், மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாட்டின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து நியாயங்களும் அப்படியே உள்ளன.</p><h2>பாலைவனமாகி விடும்</h2><p>மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டுள்ள  அணைகளின் கொள்ளளவான 114.57 டி.எம்.சியுடன், புதிய அணையின் 70 டி.எம்.சி கொள்ளளவையும்  சேர்த்து மொத்தம் 184.57 டி.எம்.சி நீரை கர்நாடகத்தில் தேக்கி வைக்க முடியும். அவ்வளவு நீர் தேக்கி வைக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு துளி நீர் கூட வராது. அப்போது காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலுமாக அழிந்து விடும்.</p><h2> 5 கோடி தமிழக மக்கள்</h2><p>அதுமட்டுமின்றி, மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் 12500 ஏக்கர் பரப்பளவிலான வனப் பகுதிகள் மூழ்கி விடும்; இதனால் அந்த பகுதிகளில் வாழும் வனவிலங்குகள், மீன்கள், பறவைகள் உள்ளிட்ட அரிய விலங்குகள் அனைத்து அழிந்து விடும். 5 கோடி தமிழக மக்களையும், பெருமளவிலான அரியவகை உயிரினங்களையும் பாதிக்க கூடிய மேகதாது அணையை கட்ட ஒருபோதும் அனுமதிக்க கூடாது.</p><h2>உச்சநீதிமன்றத்தில் வழக்கு</h2><p>மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக மத்திய அரசிடமும், கர்நாடக அரசிடமும்  தமிழக அரசு இன்னும் வலிமையாக வாதாட வேண்டும். மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக அரசுடன் ஒருபோதும்  பேச்சு நடத்தக்கூடாது. மேகதாது அணைக்கு எதிராகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி புதிய அணை கட்டும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கான வலிமையான அவை   அடித்தட்டு மக்களும் பங்கேற்க கூடிய கிராம அவைகள் தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.</p> <h2>கிராமசபை கூட்டங்கள்</h2><p>இந்தியாவின் 80-ம் ஆண்டு விடுதலை நாள் விழா வரும் ஆகஸ்ட் 15-ம் நாள் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அந்த நாளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.அந்தக்  கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பெருமளவில் கலந்து கொண்டு,‘‘ காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தையும், தமிழ்நாடு முழுவதும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கக் கூடிய மேகதாது அணையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். </p> <h2>தீர்மானம்</h2><p>மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசால் தாக்கல் செய்யப்படவுள்ள திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு ஏற்று கொள்ளக்கூடாது. மாறாக, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசால் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்’’ என்ற தீர்மானத்தை மக்கள் ஆதரவுடன் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>அமைச்சர் விஸ்வநாதன் பேச்சால் எழுந்த சலசலப்பு.. உடனே சபாநாயகர் சொன்ன வார்த்தை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-stir-caused-by-minister-viswanathans-remarks-and-the-immediate-words-spoken-by-the-speaker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-stir-caused-by-minister-viswanathans-remarks-and-the-immediate-words-spoken-by-the-speaker#comments</comments><guid isPermaLink="false">6fd2c93f-27da-425f-8cdd-ee2bf156052d</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:11:20 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:11:20.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,காங்கிரஸ்,Congress,தமிழக சட்டசபை,TN Assembly,சட்டசபை கூட்டத்தொடர்,TN Assembly session</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6n88tjtg/skoer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6n88tjtg/skoer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,.</p><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. அப்போது நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர்.</p><h2>அமைச்சர் விஸ்வநாதன்</h2><p>நீட் தேர்வு விலக்கு தீர்மானம் தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசிக் கொண்டிருந்தபோது தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்; அதன் எதிர்வினையாக த.வெ.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆவேசமாக முழக்கமிட்டனர். </p><p>அப்போது குறுக்கீட்ட சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் "ஒழுங்கீனமாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் நின்றால் நடவடிக்கை எடுப்பேன்" என தி.மு.க. மற்றும் த.வெ.க. எம்.எல்.ஏக்களை எச்சரித்தார்.</p><h2>ராகுல் காந்தி</h2><p>தொடர்ந்து அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், நீட் எதிர்ப்பு போராட்டக்களத்தில் ராகுல் காந்தி நிற்கிறார் என புகழ்ந்து பேசினார். மீண்டும் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. </p><p>தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று ஆவேசமாக பேசியதை அடுத்து (என்ன அவரோடு அமைச்சர்) சண்டைக்கு வர்றீங்களா என்று கேட்டு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அமரச் சொன்னார். இதனையடுத்து அனைவரும் அவர்களது இருக்கையில் அமர்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-incentive-for-paddy-and-sugarcane-marxist-communist-party-welcomes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-incentive-for-paddy-and-sugarcane-marxist-communist-party-welcomes#comments</comments><guid isPermaLink="false">d1d86dde-faac-4176-abe5-6638734ba46f</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:07:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:07:24.198Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊக்கத்தொகை,Paddy,நெல்,வரவேற்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,sugarcane,கரும்பு,CPI(M),welcomes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/w36ehlay/communist.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/w36ehlay/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு ! இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2> வரவேற்பு</h2><p> தமிழ்நாடு அரசு 2026-27 ஆம் ஆண்டுக்கு நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது. குறிப்பாக, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 710 உயர்த்தி 4000 ரூபாயாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.</p> <h2>சன்ன ரக நெல்</h2><p>மத்திய அரசு இந்த ஆண்டு சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2461, பொது ரக நெல்லுக்கு ரூ.2441 என்று விலை அறிவித்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர்  சட்டப்பேரவையில் சன்ன ரக நெல்லுக்கு ரூ.289 மற்றும் பொது ரக நெல்லுக்கு ரூ.159 உயர்த்தி முறையே ரூ.2750, ரூ.2600 என்று உயர்த்தப்பட்டுள்ளதை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி </a>வரவேற்கிறது.</p><h2>விலை வித்தியாசம் </h2><p>அதே நேரத்தில், சன்ன ரகத்துக்கும், பொது ரகத்துக்குமான ஊக்கத்தொகை வித்தியாசம் என்பது மிகவும் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறோம். தமிழ்நாட்டில் பொதுவான ரக நெல் தான் அதிகமாக உற்பத்தியாகிறது. கடந்த ஆண்டு இரண்டு ரகத்துக்குமான விலை வித்தியாசம் ரூ. 45 ஆக இருந்தது. மத்திய அரசு அறிவித்துள்ள விலை வித்தியாசம் ரூ. 20 ஆக இருக்கிறது என்பதையும், வருங்காலத்தில் இந்த விலை வித்தியாசம் தவறான முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டு, பொது ரகத்துக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><h2>சேமிப்பு கிடங்குகள் </h2><p> கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கு போதுமான சேமிப்பு கிடங்குகள் துரிதமாக உருவாக்கப்பட வேண்டும்; அதற்குரிய திட்டமிடுதலையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், தவெக தேர்தல் வாக்குறுதிப்படி நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4500 என்பதையும் படிப்படியாக உயர்த்தி வழங்க முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி - சென்னை மாநகராட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabies-vaccination-for-2-lakh-stray-dogs-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabies-vaccination-for-2-lakh-stray-dogs-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">07e113ba-2e6b-44be-9629-cc78485c5022</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:31:42 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:31:42.214Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தெருநாய்கள்,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,வெறிநாய் கடி,event,தடுப்பூசி Vaccine</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/bp5zgdjg/125.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தடுப்பூசி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/bp5zgdjg/125.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் முகாம் இன்று தொடங்கியது.</p><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை மாநகராட்சியின் சார்பில் 2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் முதற்கட்டமாக திருவொற்றியூர், மணலி மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் இன்று தொடங்கியது. </p><h2>பங்கேற்பு</h2><p>இதன் ஒரு பகுதியாக, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF">தடுப்பூசி </a>மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் பணிக்கான வாகனத்தினை இணை ஆணையாளர் (சுகாதாரம்) ஸ்ரேயா பி. சிங், வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வி.சிவா ஆகியோர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்புற பகுதியில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மனைவியுடன் பேசியதால் ஆத்திரம்: பால் பண்ணை உரிமையாளர் வெட்டிக்கொலை - விவசாயி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anger-over-talking-to-wife-dairy-farm-owner-hacked-to-death-farmer-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anger-over-talking-to-wife-dairy-farm-owner-hacked-to-death-farmer-arrested#comments</comments><guid isPermaLink="false">24ccb988-b61c-47c0-85b3-361370201f15</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:30:53 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:30:53.268Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,murder,கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4xeaqxly/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4xeaqxly/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி அருகே உப்புக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் நாகபாண்டி (45 வயது). இவர் சொந்தமாக அப்பகுதியில் பால்பண்ணை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45 வயது). விவசாயி. இந்த நிலையில் ரமேசின் மனைவியிடம், நாகபாண்டி அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த ரமேஷ் தனது மனைவி மற்றும் நாகபாண்டியை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்கள் கேட்காமல் தங்களது பேச்சை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் நாகபாண்டி டீக்கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ரமேஷ், தனது மனைவியுடன் பேசி வருவது தொடர்பாக தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நாகபாண்டியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.</p><p>இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து நாகபாண்டியை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்த ரமேசை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>எப்.சி.ஆர்.ஏ மசோதா; பாஜக ஆதரவு இல்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fcra-bill-bjp-does-not-support-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fcra-bill-bjp-does-not-support-it#comments</comments><guid isPermaLink="false">fc7d15fd-6496-421e-b2a3-4a2f11a886f0</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:28:22 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:28:22.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,பாஜக,தமிழக சட்டசபை,TNAssembly,CMVijay,CMJosephVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/gp4tks1h/bjp33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
எப்.சி.ஆர்.ஏ மசோதா; பாஜக ஆதரவு இல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/gp4tks1h/bjp33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>`எப்.சி.ஆர்.ஏ  மசோதாவிற்கு பாஜக ஆதரவு இல்லை என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பாஜக </a>எம்எல்ஏ போஜராஜன் கூறினார்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், தமிழக சட்டசபையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். </p><p>மத்திய அரசு கொண்டுவரும் எப்.சி.ஆர்.ஏ திருத்தங்கள் வெளிநாட்டு நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, அறக்கட்டளைகளை முறையாக நிர்வகிக்கவே உதவுகிறது. சமூக நலத் திட்டங்களுக்காகப் பெறப்படும் நிதி சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் மிகவும் அவசியமானது. எனவே மாநில அரசு கொண்டுவரும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை.</p><p>தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காக <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">எப்.சி.ஆர்.ஏ  மசோதா</a>வில்  சில திருத்தங்களை தான் மத்திய அரசு செய்கிறது. அறக்கட்டளை சரியாக நிர்வகிக்க வேண்டும். சமூக திட்டங்களுக்கு பெறும் நிதி சரியாக பயன்படுத்த வேண்டும் என்று தான் மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த திருத்தம் அவசியம் என்று தான் பா.ஜ.க நினைக்கிறது. மாநில அரசு கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை என  மசோதாவுக்கு எதிரான தமிழக அரசின் தனி தீர்மானத்தின் மீது பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் கூறினார்.</p><h2>வெளிநடப்பு செய்து திரும்பி வந்த பாஜக எம்.எல்.ஏ</h2><p>"பாஜக எம்எல்ஏ போஜராஜன் வெளிநடப்பு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் பேரவைக்கு வந்துள்ளார்.. முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?" என சபாநாயகர் கேள்வி எழுப்பியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>சிகரெட் வாங்க ரூ.50 தர மறுத்ததால் ஆத்திரம்: 2 பேருக்கு கத்திக்குத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-over-refusal-to-give-50-for-cigarettes-two-stabbed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-over-refusal-to-give-50-for-cigarettes-two-stabbed#comments</comments><guid isPermaLink="false">550e0d86-d29f-4518-aa95-dd6f1ac21af9</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:18:27 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:18:27.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கிரைம் செய்தி,மும்பை,Mumbai</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ips217uk/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ips217uk/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை,</p><p>மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மும்ராவில் உள்ள அம்ருத் நகர் தர்கா சாலையில் கடந்த 5-ந்தேதி மாலை ஜிப்ரான் இம்ரான் கான் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பர்தாம் இப்ராகிம் மன் சூரி(வயது24) என்ற வாலிபர், தனக்கு சிகரெட் வாங்கவேண்டும் என்றும், அதற்கு 50 ரூபாய் பணம் தருமாறும் ஜிப்ரானிடம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு ஜிப்ரான் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மன்சூரி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஜிப்ரானை சரமாரியாக குத்தினார். </p><p>அப்போது அதை தடுக்க வந்த எஸ்கலென் நிசார் காசி(19) என்ற மற்றொரு வாலிபரையும் அவர் கத்தியால் குத்தினார். இந்த பயங்கர தாக்குதலில் 2 பேரின் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மும்ரா போலீசார், மன்சூரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள வாலிபர் மன்சூரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-20</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-20#comments</comments><guid isPermaLink="false">ab6b925c-d94b-424f-97e7-63a26dfe101f</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:18:09 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:18:09.413Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/u83vr9x3/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/u83vr9x3/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், வள்ளியூர் கோட்டம், திசையன்விளை, களக்காடு, கோட்டைகருங்குளம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் நடைபெற உள்ளதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>திசையன்விளை, களக்காடு மற்றும் கோட்டைகருங்குளம் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (13.8.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம 2 மணி வரை</h2><p>திசையன்விளை, மகாதேவன்குளம், கரைச்சுத்துஉவரி, கூட்டப்பனை, கூடுதாலை, குட்டம், விமனங்குடி. </p><p>களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில். </p><p>கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.3 உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chicken-eggs-increase-by-rs-3-per-kg-in-namakkal-region</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chicken-eggs-increase-by-rs-3-per-kg-in-namakkal-region#comments</comments><guid isPermaLink="false">b9a03834-6f1c-43e8-ae79-f036eb3a1bfe</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:09:46 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:09:46.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,Price,விலை,உயர்வு,Chicken,egg,முட்டைக்கோழி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1x1g7i6s/124.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1x1g7i6s/124.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.</p> <h2>விலை உயர்வு</h2><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். </p><p>எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88">முட்டை</a> கொள்முதல் விலை 540 காசுகளாகவும் நீடித்து வருகிறது என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-light-to-moderate-rain-in-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-light-to-moderate-rain-in-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">f798d418-5433-4c0a-9e2d-17fb500cfcf0</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:03:31 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:03:31.130Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/psgkernk/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/psgkernk/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>11-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>12-08-2026:</strong> மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>11-08-2026 முதல் 14-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong>15-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>11-08-2026 முதல் 14-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட சற்று அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>15-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கண்ணியம், கவுரவத்தை காப்பாற்றுங்கள்... தவெக எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் அறிவுரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uphold-dignity-and-honor-speaker-advises-tvk-mla</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uphold-dignity-and-honor-speaker-advises-tvk-mla#comments</comments><guid isPermaLink="false">1c3efcb2-ee91-45ca-b1de-8cb5e10a62f0</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:02:36 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:02:36.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,சட்டசபை,TN Assembly,JCD Prabhakar,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,tvk mla,தவெக எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/k0vt59tj/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/k0vt59tj/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தவெக எம்.எல்.ஏ. சுகுமார்</h2><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது கன்னிப்பேச்சில் பேசிய சூலூர் தவெக எம்.எல்.ஏ. சுகுமார், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மனதில் இருந்திருந்தால் சட்டசபைக்குள் வந்திருப்பார் என்றார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "தவெக எம்.எல்.ஏ., கடந்த ஆட்சியில் எங்களின் அமைச்சர் ஐ. பெரியசாமியுடன் சுற்றிக் கொண்டிருந்தார். 1.31 கோடி பெண்கள் மனதில் மு.க. ஸ்டாலின் குடியிருக்கிறார்" என்றார்.</p><h2>கண்ணியத்தை காப்பாற்றுங்கள்...</h2><p>இதையடுத்து திமுக கொறடா எ.வ.வேலு பேசியதாவது; “சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்புவதற்கு முன்பாக கண்ணியத்திற்கு எதிராக பேசப்படும். வார்த்தைகள் சபாநாயகர் அறைக்கு சென்ற பின்பாக ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டு நீக்கப்படும். தற்போது எல்லாமே நேரலை செய்யப்படுவதால் சபாநாயகர் அவ்வப்போதே ஆலோசித்து கண்ணியத்திற்கு எதிராக பேசப்படும் வார்த்தைகளை நீக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.</p><p>தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ. சுகுமாரை நோக்கி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், "பேசும்போது சர்ச்சை கருத்துகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் மிகப்பெரிய திராவிட பின்புலம் கொண்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். அந்த கண்ணியத்தையும் கவுரவத்தையும் காப்பாற்றும் வகையில் நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும்" என அறிவுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>திரும்ப திரும்ப பேசிய தவெக எம்.எல்.ஏ.. டென்ஷன் ஆன சபாநாயகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mla-tvk-who-spoke-repeatedly-became-tense-with-the-speaker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mla-tvk-who-spoke-repeatedly-became-tense-with-the-speaker#comments</comments><guid isPermaLink="false">6377829a-a1f7-41a3-a149-e63037addd8f</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:59:08 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:59:08.664Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,தமிழக சட்டசபை,TNAssembly,சபாநாயகர்,CMVijay,TNBudget,ஜே.சி.டி பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ad3ol42r/prbhaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
திரும்ப திரும்ப பேசிய தவெக எம்.எல்.ஏ.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ad3ol42r/prbhaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.</p><p>இதில், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ. விஜி பேசுகையில், "எனது தொகுதியில் கொடுக்கப்பட்ட பட்டாவுக்கான இடங்கள் கிடையாது. தேர்தலுக்காக போலி பட்டா கொடுத்துள்ளார்கள். வேண்டுமென்றால் ஆய்வு செய்து பாருங்கள்" எனத் தெரிவித்தார்.</p><p>அவரின் பேச்சுக்கு திமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகளை நோக்கி அனைவரும் உட்காருங்கள், உண்மையைதான் பேசுகிறேன் என்றார்.</p><p>இதனால் டென்ஷன் ஆன பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், முதலில் நீங்கள் உட்காருங்கள் என்று கடிந்து கொண்டார்.</p><p>இதனிடையே வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஆட்சியில் ஒரு இடத்தை தேர்வு செய்து பட்டா வழங்கியிருக்க கூடும். அந்த பட்டாவை லே-அவுட் செய்யப்பட்டு வழங்கப்படும். பல இடங்களில் குறைபாடுகள் இருப்பது கவனத்துக்கு வந்துள்ளது என்றார்.</p> <h2>எம்.எல்.ஏக்களை எச்சரித்த சபாநாயகர்</h2><p>நீட் தேர்வு விலக்கு தீர்மானம் தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசிக் கொண்டிருந்த போது திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் எதிர்வினையாக தவெக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆவேசமாக முழக்கமிட்டனர் "ஒழுங்கீனமாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் நின்றால் நடவடிக்கை எடுப்பேன்" என திமுக மற்றும் தவெக எம்.எல்.ஏக்களை<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20">  சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்</a> எச்சரித்தார்.</p><p>முன்னதாக, திமுகவை விமர்சித்து சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் பேசும்போது எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை பேச வேண்டாம் என்று பேரவைத் தலைவர் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: பைக்கில் வந்து ஆடு திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-goat-theft-on-bike-police-net-mysterious-persons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-goat-theft-on-bike-police-net-mysterious-persons#comments</comments><guid isPermaLink="false">d5d8c01b-b378-46c1-83c6-da04ab004bd3</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:54:53 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:54:53.791Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,திருட்டு,mysterious persons,மர்ம நபர்கள்,போலீஸ் வலைவீச்சு,bike,பைக்,Theft,goat,ஆடு,police net sweep</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ttzttadj/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆடு திருட்டு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ttzttadj/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் பகல் நேரத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பைக்கில் வந்து ஆட்டை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருடிச்</a> சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>ஆடு திருட்டு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே, பகல் நேரத்தில் மேய்ச்சலுக்காக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81">ஆடு </a>ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த ஆட்டை தூக்கிக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.</p><h2>மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆட்டை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு 20-ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-general-body-meeting-of-tamil-nadu-congress-on-august-20-ahead-of-rajiv-gandhi-birthday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-general-body-meeting-of-tamil-nadu-congress-on-august-20-ahead-of-rajiv-gandhi-birthday#comments</comments><guid isPermaLink="false">1c057012-b1d0-470b-bc5b-18ab12ad5466</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:42:32 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:42:32.495Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,பொதுக்குழு கூட்டம்,மாணிக்கம் தாகூர்,Rajiv Gandhi,ராஜீவ்காந்தி,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/fu6kyd2i/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் கட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/fu6kyd2i/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 20-ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் பாரத ரத்னா ராஜீவ்காந்தியின் 82-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. </p><p>இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கி, லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுகிற சூழலை ஏற்படுத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் ராஜீவ்காந்தி. அவர் பிரதமராக இருந்த காலத்தில் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தில், தேர்தலில் வாக்களிக்கும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தை நிறைவேற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நிலையாக நடப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியவர். தேசிய கல்விக் கொள்கையை வகுத்தவர். நாடு முழுவதும் கிராமப்புறங்களில் நவோதயா பள்ளிகளை தொடங்கியவர். அசாம், பஞ்சாப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டவர். </p><p>நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு அடுத்த நிலையில், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுகிற பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா அமைப்புகளை அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் உருவாக்கி, மக்களுக்கே அதிகாரம் என்ற கோட்பாட்டை உருவாக்கியவர். இதன் மூலம் அதிகாரத்தை பரவலாக்கி மக்கள் பங்கேற்கிற ஜனநாயகத்தை உருவாக்கிய பெருமை திரு. ராஜீவ்காந்தி அவர்களுக்கு உண்டு. தமிழக மக்களை அதிகமாக நேசித்த அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுகிற நோக்கத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடத்த திட்டமிட்டுள்ள இக்கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் அவசியம் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் குலாம் அகமது மிர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா, அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர், கே.எஸ். அழகிரி, எம். கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ். ராஜேஷ்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், இந்நாள் - முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர். </p><p>தமிழ்நாடு அரசியலில் ராஜீவ்காந்தி கண்ட கனவை நினைவாக்கும் வகையில் எதிர்கால செயல் திட்டங்களை வகுத்து காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துகிற வகையில் பல்வேறு கருத்துகளை விவாதிப்பதற்காக இக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுகிற வகையில் அனைவரும் தவறாமல் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல்: கேரள சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kerala-chips-company-owner-arrested-for-attacking-mother-and-son-and-threatening-to-kill-them</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kerala-chips-company-owner-arrested-for-attacking-mother-and-son-and-threatening-to-kill-them#comments</comments><guid isPermaLink="false">75bd0a99-6628-4f63-b975-501a391707b2</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:32:09 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:32:09.862Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,கேரளா,Kerala,கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,son,மகன்,attack,Death threat,கொலை மிரட்டல்,Mother,தாய்,உரிமையாளர்,owner,company,chips</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/s5i2lz33/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கேரள சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/s5i2lz33/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் நிலுவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">சம்பள </a>பணத்தை திருப்பித் தருமாறு கூறி தாய் மற்றும் மகனை தாக்கி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">கொலை மிரட்டல்</a> விடுத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE">கேரள</a> சிப்ஸ் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். </p><h2>கேரளாவில் உள்ள சிப்ஸ் நிறுவனத்தில் வேலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஆறுமுகனேரி ராஜமணியபுரத்தைச் சேர்ந்த ஜெயநாதன்- மோகனா (வயது 43) தம்பதியின் மகன் பாலமுருகன், ஆறுமுகனேரி காணியாளர் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமாகக் கேரளாவில் இயங்கி வரும் சிப்ஸ் நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்துள்ளார். </p><h2>சம்பள பிரச்சினை</h2><p>மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்ட நிலையில், அங்கு வேலை கடினமாக இருந்ததால் பாலமுருகன் 40 நாட்கள் மட்டும் பணியாற்றிவிட்டு ரூ.19 ஆயிரம் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கருப்பசாமி, மோகனாவின் வீட்டிற்குச் சென்று, "பாலமுருகன் செய்த வேலைக்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே தர முடியும்; மீதி ரூ.7 ஆயிரத்தை திருப்பிக் கொடு" எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணம் தர மறுத்துவிட்டனர். </p><h2>தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல்</h2><p>இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, கருப்பசாமி தனது தாய் இசக்கியம்மாளுடன் மீண்டும் மோகனாவின் வீட்டிற்குச் சென்று பாலமுருகனின் கைபேசியை பறித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே, அங்கிருந்த அலுமினிய வாளியால் மோகனா மற்றும் பாலமுருகனை தாக்கி, இரவுக்குள் பணம் தரவில்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். </p><h2>சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கைது</h2><p>இந்த தாக்குதலில் காயமடைந்த மோகனா மற்றும் பாலமுருகன் ஆகிய 2 பேரும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து மோகனா அளித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளியோருக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்க: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-quality-treatment-for-the-poor-and-needy-in-government-hospitals-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-quality-treatment-for-the-poor-and-needy-in-government-hospitals-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">76aee9dd-2b6f-4873-92f4-335a9064caf9</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:26:22 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:26:22.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,அரசு மருத்துவமனை,Government Hospitals</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/tduqrli0/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/tduqrli0/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் பேசியிருப்பது, தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.</p><p>தேர்தலுக்கு முன்பாக மருத்துவத்துறையில் உள்ள அவலங்களை சரி செய்து மாற்றத்தைத் தருவோம் என ஆட்சிக்கு வந்த தவெக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்தும் “மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எலித்தொல்லை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள், கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை உள்ளிட்ட அவலங்களை சரி செய்யாமல், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவோ, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை வழங்கவோ எந்தவித ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பையும் எடுக்காமல், தமிழகத் தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் போதும் அவர்கள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருவார்கள் என்ற தொனியில் அத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>எனவே, “ஆட்சிக்கு வந்துவிட்டோம்; மக்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம், எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்” என்ற அதிகாரத் தொனியை ஓரம்கட்டிவைத்துவிட்டு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>திமுக ஆட்சியில் கொடுத்தவை போலி பட்டா - தவெக எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dmk-government-issued-fake-certificates-thaveka-mla-bageer-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dmk-government-issued-fake-certificates-thaveka-mla-bageer-alleges#comments</comments><guid isPermaLink="false">47d1ea84-9171-4174-a3bf-c98f0b2d99d0</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:23:44.705Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,பட்டா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/whn4zupn/tvk33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/whn4zupn/tvk33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.</p><p>இந்தநிலையில்,  திருவெறும்பூர் தொகுதியில் பட்டா கொடுத்த இடத்தை காணவில்லை. கொடுத்தவை அனைத்தும் போலி பட்டா; இது மாவட்ட கலெக்டருக்கும்  தெரியும்; தேர்தலை மனதில் வைத்து ஓட்டுக்காக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE">போலி பட்டா</a> கொடுக்கப்பட்டுள்ளது; இதனை ஆய்வு செய்ய வேண்டும் என நவல்பட்டு விஜி தவெக கூறினார்.</p><p>இதற்கு பதில் அளித்த  திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,</p><p>கடந்த திமுக ஆட்சியில் 73 லட்சம் பேருக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.வரலாற்றிலேயே இதுவே அதிகம்; தகுதியான நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.</p><p>இதுகுறித்த புகார்கள் என்னிடமும் வந்துள்ளது. பொது மக்கள் கொடுத்த புகார் மனுக்களை நிச்சயம் அவையில் சமர்பிப்பேன் என கால்நடைத்துறை அமைச்சர் கமலி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-passed-in-tamil-nadu-assembly-urging-the-central-government-to-withdraw-the-foreign-contribution-amendment-bill</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-passed-in-tamil-nadu-assembly-urging-the-central-government-to-withdraw-the-foreign-contribution-amendment-bill#comments</comments><guid isPermaLink="false">35832b41-a464-4cec-955d-9578a8913c3e</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:23:08 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:23:08.783Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,தமிழக சட்டசபை,TN Assembly,மத்திய அரசு,Central Govt,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ig4g0e0f/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ig4g0e0f/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><h2>தீர்மானம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a>யில் இன்று பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026, தற்போதைய வடிவில், எப்.சி.ஆர்.ஏ. பதிவு காலாவதியாகுதல், புதுப்பிக்கப்படாமை, புதுப்பிப்பு மறுக்கப்படுதல், பதிவு ரத்து அல்லது ஒப்படைக்கப்படுதல் போன்ற காரணங்களால் தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை அரசிடம் ஒப்படைத்தல், நிர்வகித்தல், மாற்றுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான விதிகள் குறித்து இம்மன்றம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. இவ்விதிகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியையும், குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.</p><h2>விரிவான ஆலோசனை</h2><p>எனவே, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப்பெற்று, மாநில அரசுகள், தொண்டு, மத, கல்வி, மருத்துவ மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனை நடத்துமாறு மத்திய அரசை இம்மன்றம் வலியுறுத்துகிறது.</p><p>எந்தவொரு திருத்த மசோதாவும் இயற்கை நீதி, விகிதாசாரம், சொத்துரிமைப் பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். வெளிநாட்டு பங்களிப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன், சட்டப்பூர்வமாக செயல்படும் தொண்டு, கல்வி, மருத்துவ, மத, கலாசார மற்றும் சமூகநல அமைப்புகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.</p><h2>திரும்ப பெற வேண்டும்</h2><p>எனவே, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-exam-system-must-be-abolished-government-special-resolution-in-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-exam-system-must-be-abolished-government-special-resolution-in-assembly#comments</comments><guid isPermaLink="false">fd647139-877c-47f2-9a3c-e57bd18ee750</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:38:49 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:18:46.051Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,நீட் தேர்வு,NEET Exam,தனித்தீர்மானம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/xqx19buu/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/xqx19buu/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><h2>அரசினர் தனித் தீர்மானம்</h2><p>தமிழக சட்டசபையில் இன்று 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.க.அருண்ராஜ், அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- </p><h2>பயிற்சி மையங்கள் பெருக வழிவகுக்கும்</h2><p>தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முறை சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஆகியோரின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இத்தேர்வு முறை பெரிதும் பாதிக்கிறது.</p><p>நீட் தேர்வானது வரம்பின்றி அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது. மாணவர்களின் கவனத்தை பள்ளிப் பாடத்திட்டத்தைப் பயில்வதில் இருந்து திசைதிருப்பி, நீட் பயிற்சியில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்த கட்டாயப்படுத்துகிறது.</p><h2>ஜனாதிபதி நிறுத்திவைப்பு </h2><p>12 ஆண்டுகால பள்ளிக் கல்வியை புறந்தள்ளி ஒரு நாள் நுழைவுத் தேர்வே மாணவர்களின் உயர் கல்வியைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டமுன்வடிவை (சட்ட முன்வடிவு எண் 43/2021) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றியிருந்தும், ஜனாதிபதியால் அச்சட்ட முன்வடிவுக்கு ஏற்பிசைவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. </p><h2>நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் </h2><p>தொடர் வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகளால் நீட் (இளநிலை) 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மாணவர்களுக்குச் சொல்லொணாத் துயரமும், இளம் மாணவர்கள் உயிரிழப்பும் ஏற்பட்டு, நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இத்தேர்வு முறை முற்றிலும் இழந்துள்ளது. எனவே, இத்தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.</p><p>நீட் தேர்வுகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, நீட் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யும் வகையில், 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் (மையச் சட்டம் 30/2019), 2020-ம் ஆண்டு இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையச் சட்டம் (மையச் சட்டம் 14/2020) 2020-ம் ஆண்டு ஹோமியோபதிக்கான தேசிய ஆணையச் சட்டம், (மையச் சட்டம் 15/2020) மற்றும் தொடர்புடைய பிற மையச் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இதன் மூலம் மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள இயலும். இவ்வாறு அவர் கூறினார். </p><p>இந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்தார். மற்ற கட்சிகள் இந்த அரசினர் தனித்தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து நீட் தேர்வு எதிராக கொண்டு வரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையின் முடிவுக்கு விடப்பட்டது. மறுப்போரே இல்லை என்பதால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நூல் விலை உயரும் என்ற அச்சத்தால் தீபாவளி பண்டிகைக்கான ஆடை தயாரிப்பு மும்முரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/garment-production-for-the-diwali-festival-intensifies-amid-fears-of-rising-yarn-prices</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/garment-production-for-the-diwali-festival-intensifies-amid-fears-of-rising-yarn-prices#comments</comments><guid isPermaLink="false">ce61e445-967f-4769-baaa-125b6e3b9f95</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:12:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:12:45.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,Diwali festival,தீபாவளி பண்டிகை,நூல் விலை,garment production,Yarn price,ஆடை தயாரிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6huiw7uh/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6huiw7uh/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><h2>தீபாவளி பண்டிகை</h2><p>பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிநாட்டு ஆடை வர்த்தகத்துக்கு இணையாக உள்நாட்டு ஆடை உற்பத்தியும் நடந்து வருகிறது. பண்டிகை காலங்களில் உள்நாட்டு ஆடைகளுக்கான ஆர்டர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வருவது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஆடை உற்பத்தி அதிகரிக்கும்.</p><p>புதுடெல்லி, மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆடைகளை முன்கூட்டியே தயாரித்து அனுப்பிவைக்கப்படும். டி-சர்ட், உள்ளாடை, பெண்கள், சிறுவர்களுக்கான ஆடைகள் உள்ளிட்டவை நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. நூல் விலை உயர்வு காரணமாக ஆடைகளின் விலையையும் உயர்த்தும் கட்டாயத்தில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.</p><h2>உற்பத்தி தொடக்கம்</h2><p>இதன்காரணமாக தீபாவளி பண்டிகை காலத்தில் ஆடைகளின் விலை உயரும் என்ற அச்சம் காரணமாக திருப்பூரில் உள்ள பல பனியன் உற்பத்தி நிறுவனங்கள் தீபாவளி விற்பனைக்கான ஆடை உற்பத்தியை முன்கூட்டியே தொடங்கியுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டுகளில் அதிகம் விற்பனையான ஆடைகளின் அடிப்படையில் உள்ளாடை உற்பத்தி பணி வேகமெடுத்துள்ளன. திருப்பூரில் மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.2 ஆயிரத்து 800 கோடி வரை உள்நாட்டு ஆடை உற்பத்தி நடக்கிறது.</p><p>இதுகுறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறும்போது, 'நவம்பர் மாதம் 8-ந் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் செப்டம்பர் மாதம் கடைசியில் இருந்து ஆடைகளை அனுப்ப வேண்டியுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை, நூல் விலை உயர்வு காரணமாக இப்போதே நூலை கொள்முதல் செய்து பனியன் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.</p><p>பெரிய நிறுவனங்கள் இந்த பணி ஏற்கனவே தொடங்கிவிட்டன' என்றனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான உள்நாட்டு ஆர்டர், திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு கைகொடுத்தது. அதுபோல் இந்த ஆண்டும் புதிய ஆர்டர்கள் வருகை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் ஆடை தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-take-steps-to-release-boats-of-tamil-nadu-fishermen-seized-in-andhra-pradesh-gk-vasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-take-steps-to-release-boats-of-tamil-nadu-fishermen-seized-in-andhra-pradesh-gk-vasan#comments</comments><guid isPermaLink="false">21ecca2e-da2f-4f82-8346-923fb969790b</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:04:30 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:04:30.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,G.K. Vasan,சென்னை,fishermen,Andhra,ஆந்திரா,boat,பறிமுதல்,படகுகள்,ஜி.கே.வாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/s637uk1j/123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/s637uk1j/123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஆந்திர மாநில அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் தமிழக அரசு, ஆந்திர அரசுடன் சுமூகமாக பேசி உரிய தீர்வு காண வேண்டும்.</p><h2>படகுகள் பறிமுதல்</h2><p>இலங்கை கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்தும் படகுகளை பறிமுதல் செய்தும் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை இழைத்து வருகிறார்கள். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் துயரத்திற்கு உள்ளாகின்றார்கள். அதோடு துரதிஷ்டவசமாக தற்பொழுது நமது அண்டை மாநிலமான ஆந்திர அரசும், எல்லைக்கு அருகே கடலில் மீன் பிடிக்க வரும் மீனவர்களை கைது செய்தும், மீன்பிடி விசைப்படகுகளை கைப்பற்றியும் காணொன்னா துயரத்தை ஏற்படுத்துவது மிகுந்த வருத்ததை அளிக்கிறது.</p><h2>கைது</h2><p>கடந்த 16.06.2026 ஆம் தேதியன்று மீன்பிடித்து கொண்டு இருந்து சென்னையை சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்தும் 7 மீன்பிடி விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இதுவரை விடுவிக்காமல் இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீனவர்கள்</a> மிகுந்த மனவேதனையில் உள்ளார்கள்.</p><p>தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் காக்கும் வகையில் தமிழக அரசு, ஆந்திர அரசுடன் சுமூகமாக பேசி நிரந்தர தீர்வை காண வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்று ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 7 மீன்பிடி விசைப் படகுளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>நீட் ரத்து தீர்மானத்துக்கு எதிர்ப்பு: பாஜக எம்.எல்.ஏ., வெளிநடப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-resolution-seeking-neets-abolition-bjp-mla-stages-walkout</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-resolution-seeking-neets-abolition-bjp-mla-stages-walkout#comments</comments><guid isPermaLink="false">0fea5598-f261-498c-a703-125ffd7edf0c</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:58:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:58:45.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நீட் தேர்வு,NEET Exam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/bc4hwbpv/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/bc4hwbpv/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தனித் தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் மொழிந்தார். இந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாமக, திமுக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். இதற்கிடையே, நீட் ரத்து தீர்மானத்துக்கு பாஜக எம்எல்ஏ போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். </p><p>இது தொடர்பாக சட்டசபையில் போகராஜன் பேசியபோது, ”நீட் தேர்வுக்கு தயாராகும் படி மாணவர்களுக்கு தரமான பயிற்சி மையங்களை அரசு உருவாக்க வேண்டும். மாணவர்களை உற்சாகப்படுத்தும் திட்டத்தை கொண்டு வாருங்கள். இந்த தீர்மானத்திற்கு உடன்படாமல், வெளிநடப்பு செய்கிறேன்.” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>பல்லடத்தில் வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-and-daughter-murdered-after-breaking-into-house-in-palladam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-and-daughter-murdered-after-breaking-into-house-in-palladam#comments</comments><guid isPermaLink="false">d5c809d8-fe42-488a-9cf0-439636696dc7</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:41:14 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:41:14.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,Youth arrested,இன்ஸ்டாகிராம் காதல்,police enquiry,இளைஞர் கைது,இரட்டைக்கொலை,2 people murdered</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ch2ydg4g/6.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ அக்ஷய்]]></media:title><media:description type="html"><![CDATA[ பல்லடத்தில் வீடு புகுந்து காதலி மற்றும் அவரது தாய் வெட்டிக் கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ch2ydg4g/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீடு புகுந்து காதலி மற்றும் அவரது தாயை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ரகசிய திருமணம்- எதிர்ப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்பூர் மாவட்டம் பல்லடம்</a> அடுத்த பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசி. அவரும் அக்ஷய் என்ற இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இன்ஸ்டாகிராம்</a> மூலம் பழகி காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். இந்த விவகாரம் பூவரசியின் குடும்பத்திற்குத் தெரியவந்தபோது, அவரது தாய் தனலட்சுமி இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.</p><h2>அரிவாள் வெட்டு- உயிரிழப்பு</h2><p>தாயின் எதிர்ப்பு காரணமாக, பூவரசி தனது காதலனுடன் செல்ல மறுத்து காதலைத் துண்டித்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அக்ஷய், இன்று (செவ்வாய்க்கிழமை) பூவரசியின் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்தார். அங்கு அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, அக்ஷய் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பூவரசி மற்றும் அவரது தாய் தனலட்சுமி ஆகிய இருவரையும் கொடூரமாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>இளைஞர் கைது</h2><p>அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற கொலையாளி அக்ஷயைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இரட்டைக் கொலை</a> சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கம்: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/medals-given-to-police-officers-who-worked-well-in-drug-eradication-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/medals-given-to-police-officers-who-worked-well-in-drug-eradication-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">9a7183ad-f12b-4757-9029-0279e9b89f9f</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:40:16 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:40:16.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பதக்கம்,உறுதிமொழி,drug eradication,போதைப்பொருள் ஒழிப்பு,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/d8ee192j/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/d8ee192j/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநில கல்லூரியில் இன்று போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். விழாவில் முதல்-அமைச்சர் விஜய் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.  </p><p>இதன் பின்னர் தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போலீசார் பறிமுதல் செய்த போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது. செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப் பொருட்களை அழிக்கும் பணிகளை முதல்வர் விஜய் வீடியோ வாயிலாக பார்வையிட்டார்.</p> ]]></content:encoded></item><item><title>சிபிஐ, வருமான வரி வழக்கு... உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் என்.ஆனந்த் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-and-income-tax-cases-minister-n-anand-responds-to-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-and-income-tax-cases-minister-n-anand-responds-to-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">5a8bf18e-bd2a-4f29-8cbe-f2cf9177c8b8</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:27:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:27:39.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,CBI,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,TN Assembly,N Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/cmmxpjb0/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/cmmxpjb0/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ரிலாக்சா இருக்கிறீர்கள்</h2><p>நேற்றைய சட்டசபையில் விவாதத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசும்போது, 'நாங்களெல்லாம் அமைச்சர்களாக இருக்கும்போது ஒரு பதற்றம் இருக்கும். முதல்-அமைச்சராக இருந்த கலைஞரோ, மு.க.ஸ்டாலினோ உடனே எங்களை தொடர்பு கொண்டு அதில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுவார்கள். அப்படி 5 ஆண்டுகாலமும் டென்ஷனிலேயே இருப்போம். நீங்கள் (புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அமைச்சர்கள்) எல்லாம் ரிலாக்சா இருக்கிறீர்கள்' என்றார்.</p><p>அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ஆனந்த், 'சின்ன வாய்க்கால் பிரச்சினைக்குகூட எங்களை தொடர்பு கொண்டு சரிசெய்து விட்டீர்களா? என்று கேட்கும் முதல்-அமைச்சராகத்தான் எங்கள் முதல்-அமைச்சர் இருக்கிறார். நாங்கள் தினந்தோறும் டென்ஷனோடு தான் இருக்கிறோம். சின்ன விஷயமாக இருந்தாலும் பயத்தோடு அதை அணுகுகிறோம்' என்றார்.</p><h2>சிபிஐ வழக்கு</h2><p>இந்த நிலையில், இன்று நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தின்போது எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் பேச்சை விமர்சித்து பேசிய தவெக எம்.எல்.ஏ. சுகுமார், “எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் கூலாகதான் இருக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் போதும் கூலாகதான் இருப்போம்" என்றார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "நேற்று எங்கள் உறுப்பினர் பேசும்போது கடந்த 5 ஆண்டுகளாக டென்ஷனாக இருந்தோம் என்று. அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், நாங்களும் தினமும் நிம்மதியாக உறங்க முடியவில்லை; ஒவ்வொரு நிமிடமும் டென்ஷனாகதான் இருக்கிறோம் என்றார். மீண்டும் அதை திருப்பி சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனென்றால் உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கிறது; வருமான வரி வழக்கும் இருக்கிறது என்று கூறினார்.</p><h2>வேறு எந்த அர்த்தமும் இல்லை</h2><p>இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என். ஆனந்த், "சிபிஐ வழக்கு இருக்கிறது என்பதெல்லாம் சரிதான். எங்களுடைய டென்ஷன், எங்களுடைய முதல்-அமைச்சர் தொகுதியில் மக்கள் பிரச்சினை உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறதா? என கேட்பார் என்பதைதான் நேற்று குறிப்பிட்டேனே தவிர; வேறு எந்த அர்த்தத்திலும் இல்லை. எங்களை பயமுறுத்தியோ, டென்ஷனாகவோ குறிப்பிடவில்லை. </p><p>எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது நமது முதல்-அமைச்சர் பேசுவார் என்று எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் இப்போது போன் வந்தாலே பயம் இருக்கிறது; தொகுதியில் எதாவது ஒரு சிறிய பிரச்சினை இருந்தால் கூட ஏன் சரிசெய்யவில்லை என கேட்கும் முதல்-அமைச்சர் தான் எங்கள் முதல்-அமைச்சர் என்று பதிலளித்தார்.</p><p>அதே எண்ணத்தில்தான் எங்களின் சட்டமன்ற உறுப்பினரும் பேசினார் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். இவ்வாறு இருவரிடையே விவாதம் நடந்தது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Z7pKL3UX-Yo"></iframe></figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் 44 இடங்களில் இலவச வைபை வசதி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wifi-at-44-locations-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wifi-at-44-locations-in-chennai#comments</comments><guid isPermaLink="false">afbfd153-39d5-4edc-a240-dff1c715bd04</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:22:48 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:22:48.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Free Wi-Fi,இலவச வைபை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4zo5bwe4/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ இலவச வைபை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4zo5bwe4/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதலமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் 44 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச வைபை (WiFi) வசதி 10.08.2026 முதல் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.</p><p>இதன் ஒரு பகுதியாக, முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரைப் பகுதிகளான மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் முதற்கட்டமாக மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை (WiFi) வசதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் 44 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச வைபை வசதி 10.08.2026 முதல் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரைப் பகுதியில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் 5 இடங்களிலும், தலைமைச் செயலகப் பூங்காவில் 12 இடங்களிலும் என மொத்தம் 44 இடங்களிலும் 10.08.2026 முதல் இலவச வைபை (WiFi) வசதி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வைபை வசதியினைப் பயன்படுத்துவதற்கு மக்கள் தங்கள் செல்பேசியில் வைபையினை ஆன் செய்து அதனை கிளிக் செய்தவுடன் வரும் QR Codeனை மீண்டும் கிளிக் செய்தவுடன், செல்பேசி எண்ணிற்கு வரும் OTP எண்ணை இதில் பதிவு செய்தவுடன் வைபை இணைப்பு ஏற்படும். மக்கள் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.</p><p>இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான இதர கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் பயன்பாட்டில் இல்லாத வைபை வசதியினை மீண்டும் பயன்பாட்டிக்குக் கொண்டு வருதல் மற்றும் புதிதாக வைபை (WiFi) வசதியினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>