<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 13 Sep 2026 10:28:35 +0000</lastBuildDate><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் யார்..யார்..? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-who-are-the-naam-tamilar-katchi-candidates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-who-are-the-naam-tamilar-katchi-candidates#comments</comments><guid isPermaLink="false">c34f0ed8-8cb8-43db-a05d-2c841c555a01</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:23:33 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:23:33.111Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,NTK,Seeman,தமிழகம்,புதுச்சேரி,puducherry,நாம் தமிழர் கட்சி,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,Madhurandakam,தட்டாஞ்சாவடி,byelection,Dharapuram</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d9j34a20/madu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d9j34a20/madu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/byelection">இடைத்தேர்தல்</a> நடக்கிறது. </p><p>இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத். தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர்.</p><h2>நாம் தமிழர் கட்சி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/byelection">இடைத்தேர்தலில்</a> நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மதுராந்தகத்தில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கார்த்திக் குமாரி  என்பவர் போட்டியிடுகிறார். </p><p>இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தனது எக்ஸ்வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.  </p><h2>வேட்புமனு தாக்கல்</h2><p>இரண்டு தொகுதி <a href="https://www.dailythanthi.com/topic/byelection">இடைத்தேர்தலில்</a> 4 முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. </p><p>சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026<br>நாம் தமிழர் கட்சி<br>வேட்பாளர்கள் அறிவிப்பு<br><br>வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர்… <a href="https://t.co/WP7fa0ymW2">pic.twitter.com/WP7fa0ymW2</a></p>&mdash; செந்தமிழன் சீமான் (@Seeman4TN) <a href="https://x.com/Seeman4TN/status/2099077160283803977?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் 512 செவிலியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/512-nursing-posts-in-chennai-corporation-hospitals-applications-welcome</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/512-nursing-posts-in-chennai-corporation-hospitals-applications-welcome#comments</comments><guid isPermaLink="false">b6e80277-6ab8-4f5c-b4fd-69c786367477</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:22:01 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:22:01.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,செவிலியர்கள்,பணியிடங்கள்,விண்ணப்பங்கள் வரவேற்பு,Applications welcome,Nursing Jobs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/x9d5bcin/nurse.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/x9d5bcin/nurse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு: 512 செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்</p><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தற்காலிக செவிலியர் பணியிடங்கள்</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மாநகர நலச் சங்கம் மூலமாக சென்னையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 512 தற்காலிக செவிலியர் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலிதன்படி தற்காலிக செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு 50 வயத்திற்கும் மிகாமல் கீழ்காணும் கல்வித் தகுதியுள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.</p><h2>விண்ணப்பப் படிவங்கள்</h2><p>செவிலியர் பட்டயப் படிப்பு (GNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) – அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரி (இந்திய செவிலியர் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டது). தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவு கட்டாயம். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் (www.chennaicorporation.gov.in) மற்றும் தேசிய நலக் குழுமம் / தமிழ்நாடு இணையதளம் (https://nhm.tn.gov.in/) ஆகியவற்றிவிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p>முறையான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சுய கையொப்பமிட்ட சான்று ஆவணங்களுடன் மாநகர நல அலுவலர் / உறுப்பினர் செயலர், சென்னை மாநகர நலச் சங்கம், பொது சுகாதாரத்துறை, ரிப்பன் கட்டடம், 3ஆம் தளம், அம்மா மாளிகை, EVR பெரியார் சாலை, சென்னை-600 003 என்ற முகவரிக்கு 25.09.2026 மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ / தபாலிலோ அளிக்கலாம். இது குறித்து கூடுதல் விளக்கங்கள் / விவரங்கள் தேவைப்படின் 044 – 2561 9330, 94451 90744, 94459 10934, என்ற எண்களுக்கு அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இந்தப் பணிக்குத் தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நள்ளிரவில் வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கி மர்ம கும்பல் அட்டகாசம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-mysterious-gang-is-wreaking-havoc-by-smashing-houses-and-vehicles-in-the-middle-of-the-night</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-mysterious-gang-is-wreaking-havoc-by-smashing-houses-and-vehicles-in-the-middle-of-the-night#comments</comments><guid isPermaLink="false">bb3a0a31-1234-4f99-9fba-9d282ab9b2d4</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:20:57 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:20:57.143Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,மானாமதுரை,Manamadurai,two wheeler,போலீசார்,மர்ம கும்பலுக்கு வலைவீச்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/9ckrwdea/12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாகனங்கள் சேதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/9ckrwdea/12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மானாமதுரை,</p><p>நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தனர்.</p><h2>மர்ம கும்பல் அட்டகாசம்</h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த<a href="https://www.dailythanthi.com/topic/மர்மகும்பல்"> மர்ம கும்பல்</a> அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகளை கைகளில் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கி சேதப்படுத்தினர். இந்த சத்தம் கேட்டு கண் விழித்த பொது மக்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் சென்ற பெண் ஒருவரை கீழே தள்ளியதில் அவர் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்த மானாமதுரை <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்</a> சம்பவ இடத்திற்கு விரைந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பதி திருக்குடை ஊர்வலம் - சென்னையில் கோலாகலமாக தொடங்கியது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-sacred-umbrella-procession-grandly-flagged-off-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-sacred-umbrella-procession-grandly-flagged-off-in-chennai#comments</comments><guid isPermaLink="false">67bd6141-53a3-46c7-bd77-6c868b643f06</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:20:28 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:20:28.633Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,திருப்பதி,Tirupathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/awjlp8z1/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/awjlp8z1/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி,</p><p>திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ காலத்தில கருடை சேவைக்காக தமிழகத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மலர்மாலை, வெண்பட்டு திருக்குடைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இதில் சென்னை பூக்கடையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து 11 வெண்பட்டு திருக்குடைகளை திருப்பதி ஏழுமலையானுக்கு எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.</p><p>இதன்படி திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து இன்று தொடங்கியுள்ளது. பாரிமுனையில் தொடங்கிய திருக்கொடை ஊர்வலம், என்.எஸ்.சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மண்டபம், வால்டாக் சாலை வழியாக செல்கிறது. மாலை 4 மணிக்கு பிரசித்தி பெற்ற அந்த கவுனி தாண்டுதல் நிகழ்வு என்பது நடைபெற இருக்கிறது. </p><p>இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவிலில் இந்த திருக்குடைகள் அனைத்தும் காத்திருப்பில் வைக்கப்பட்டு, அங்கிருந்து வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருவள்ளூர் வழியாக திருக்குடைகள் ஊரோலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. பின்னர் 18-ந்தேதி காலை திருமலை சென்றடையக்கூடிய வகையில் பயண நிகழ்வு வரையறுக்கப்பட்டுள்ளது. </p><p>18-ந்தேதி காலை திருமலை சென்ற பிறகு அங்கு மாட வீதியில வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்களோடு, திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை திருக்குடை ஊர்வலம் என்பது ஒரு பிரசித்தி பெற்ற நிகழ்வாக பார்க்கப்படுகிறது. புரட்டாசி பிரம்மோற்சவத்திற்கு முன்னதாக இந்த திருக்குடை ஊர்வல நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கமாகும். </p><p>திருப்பதி திருக்குடை ஊரவலத்தையொட்டி வால்டாக் சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழி நெடுகிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னை உதவி கமிஷனர்கள் உள்பட 46 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அதிரடி மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/46-deputy-superintendents-of-police-dspsincluding-assistant-commissioners-in-chennaihave-been-transferred-in-a-major-reshuffle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/46-deputy-superintendents-of-police-dspsincluding-assistant-commissioners-in-chennaihave-been-transferred-in-a-major-reshuffle#comments</comments><guid isPermaLink="false">8a23818b-4461-440e-a04d-353bcc0a28bc</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:17:32 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:17:32.282Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Transfer,மாற்றம்,போலீஸ் சூப்பிரண்டு,Assistant Commissioner of Police,போலீஸ் உதவி கமிஷனர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d9ay8lah/dgp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d9ay8lah/dgp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு முழுவதும் 46 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை பணியிட மாற்றம் செய்து. டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அவர் பிறப்பித்த மாறுதல் பட்டியலில், சென்னை உதவி கமிஷனர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர்.</p><h2>பணியிட மாற்றம்</h2><p>தாம்பரம் மற்றும் ஆவடி கமிஷனரகத்திலும் உதவி கமிஷனர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் மகேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். ஆவடி கமிஷனரகத்தில் குற்ற ஆவண காப்பகத்தில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் முத்துராஜா, லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்பார்.</p><p>ஆவடி கமிஷனரகத்தில் உளவுப்பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மணிவண்ணன், காஞ்சீபுரம் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D">போலீஸ்</a> கமிஷனரகத்தில், பொன்னேரி உதவி கமிஷனராக தமிழ்வாணன் பொறுப்பேற்பார்.</p><p>காத்திருப்போர் பட்டியலில் இருந்த முகமது நாசர். சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. பொறுப்பை கவனிப்பார்.</p><p>சென்னை ஐகோர்ட்டு உதவி கமிஷனராக பாலாஜி பதவியேற்பார். சென்னை தாம்பரம் கமிஷனரகத்தில் மக்கள் தொடர்பு உதவி கமிஷனராக மகேஷ் பொறுப்பேற்பார். ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் நலப்பிரிவு உதவி கமிஷனராக சஞ்சீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>ஆவடி உதவி போலீஸ் கமிஷனராக சம்பத் பதவியேற்பார். சென்னை அயனாவரம் உதவி கமிஷனராக பணியாற்றும் வேலு, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. 'சைபர் கிரைம்' பிரிவில் டி.எஸ்.பி.யாக ராஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் கமிஷனரகத்தில் நலப்பிரிவு உதவி கமிஷனராக ஹரிசங்கரி பொறுப்பேற்பார்.</p> ]]></content:encoded></item><item><title>கோத்தகிரியில் பரவலாக மழை: உயிலட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது - சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rains-in-kotagiri-floods-swell-uyilatti-waterfalls-forest-department-bans-tourist-bathing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rains-in-kotagiri-floods-swell-uyilatti-waterfalls-forest-department-bans-tourist-bathing#comments</comments><guid isPermaLink="false">8ceb2b22-1be2-4628-835c-39226cac31ce</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:13:11 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:13:11.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மழை,சுற்றுலா பயணிகள்,Forest Department,வனத்துறை,வெள்ளம்,தடை,bathing prohibited,நீர்வீழ்ச்சி,கோத்தகிரி,Kotagiri,Heavy rains and floods</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f1gsys3d/kothagiri-falls.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உயிலட்டி நீர்வீழ்ச்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ கோத்தகிரியில் பரவலாக மழை: உயிலட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது - சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f1gsys3d/kothagiri-falls.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோத்தகிரி, </p><p>நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.</p><h2>வறண்ட நீர்வீழ்ச்சி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">கோத்தகிரியில் </a>இருந்து கூக்கல்தொரை செல்லும் சாலையில் உயிலட்டி கிராமப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சி ஒன்று அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி நீரை நம்பி, இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மலைக்காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். </p><h2>நீர்வரத்து வெகுவாக குறைந்து</h2><p>இந்த நிலையில், கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டன. இதனால் உயிலட்டி நீர்வீழ்ச்சிக்கும் நீர்வரத்து வெகுவாக குறைந்து, பாறைகளாக காட்சியளித்தது.</p> <h2>விவசாயிகள்</h2><p> இதனால் கவலையடைந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயிகள்</a> போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், தங்களது விளைநிலங்களில் புதிய கிணறுகள் அமைத்தும், லாரிகள் மூலம் பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கியும் பயிர்களுக்கு பாய்ச்சி வந்தனர்.</p><h2></h2><h2>வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது</h2><p> இந்நிலையில், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.</p><h2>நீர்வரத்து உயர்வு</h2><p>இந்த தொடர் மழையின் காரணமாக, நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர்வரத்து உயர்ந்து, தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. வறண்டு கிடந்த நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது காண்போரின் கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.</p><h2>சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை</h2><p>வார இறுதி விடுமுறை நாட்களைக் கழிக்க கோத்தகிரி பகுதிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் தொலைவில் நின்றபடி நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு களித்து, ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர். </p> <p>இருப்பினும், இந்த நீர்வீழ்ச்சி பகுதியில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததாலும், பாறைகளில் வழுக்கல் ஏற்படும் அபாயம் இருப்பதாலும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுற்றுலா பயணிகள்</a> யாரும் நீர்வீழ்ச்சிக்கு அருகே சென்று குளிக்கவோ, இறங்கவோ முயற்சிக்கக் கூடாது என வனத்துறையினர் பலத்த எச்சரிக்கை விடுத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிக்குழுவை அமைத்தது காங்கிரஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-has-formed-an-election-campaign-committee-to-support-tvk-alliance-candidates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-has-formed-an-election-campaign-committee-to-support-tvk-alliance-candidates#comments</comments><guid isPermaLink="false">f676629d-9cfe-41bd-882e-c92c6da29c73</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:05:55 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:05:55.570Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,காங்கிரஸ்,Congress,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,Madhurandakam,தேர்தல் பணிக்குழு,தமிழக அரசியல்,byelection,Dharapuram,tn politics</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/g81d6nab/congr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/g81d6nab/congr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. </p><p>இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத். தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர்.</p><h2>வேட்புமனு தாக்கல்</h2><p>தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.</p><p>வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். முதல்-அமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த மாதம் 25-ந்தேதி மதுராந்தகத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 27-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வார். பின்னர் அக்டோபர் 2, 3-ந்தேதிகளில் மதுராந்தகம், தாராபுரத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.</p><h2>தேர்தல் பணிக்குழு</h2><p>இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்காக அதிகாரப்பூர்வ தேர்தல் பணிக்குழுக்களை த.வெ.க.வின் கூட்டணி கட்சியான தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/காங்கிரஸ்">காங்கிரஸ்</a> கமிட்டி அமைத்துள்ளது. </p><p>கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் களப் பணிகளை ஒருங்கிணைப்பது, வாக்குச் சாவடி வாரியாக வியூகங்களை வகுப்பது மற்றும் பிரச்சாரங்களை மேற்கொள்வது ஆகிய முக்கியப் பொறுப்புகளை இந்தத் தேர்தல் பணிக்குழுக்கள் கவனிக்கும் என்று கூறப்படுகிறது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/0u26e1ei/madhu.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d1kjdhwd/dhara.jpg" /></figure><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">101 - தாராபுரம் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தல் 2026<br>தேர்தல் பணிக்குழு அறிவிப்பு<br><br>நடைபெறவுள்ள 101 - தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் திருமதி பி. சத்யபாமா அவர்களின் வெற்றிக்காக தமிழ்நாடு… <a href="https://t.co/kmPPnzLkKq">pic.twitter.com/kmPPnzLkKq</a></p>&mdash; Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) <a href="https://x.com/INCTamilNadu/status/2099049722623259088?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>“முதல் - அமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!”; நடிகை கஸ்தூரி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-i-have-faith-in-minister-vijay-actress-kasthuri</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-i-have-faith-in-minister-vijay-actress-kasthuri#comments</comments><guid isPermaLink="false">27234e5f-6df5-4cb5-a3f4-f7debe24ea02</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:04:34 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:04:34.912Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகை கஸ்தூரி,Actress Kasthuri,CM Vijay,முதல் - அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/uk8ha1gn/actress-kasturi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகை கஸ்தூரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/uk8ha1gn/actress-kasturi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>"முதல்-அமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!" என்று <a href="https://www.dailythanthi.com/topic/actress-kasturi">நடிகை கஸ்தூரி </a>தெரிவித்துள்ளார்.</p><p>'ஆஃப் தி ரெக்கார்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில்  நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:- </p><p>தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரிக்கமுடியாது, இரண்டும் சேர்ந்து தான் பயணம் செய்யும். அதில் இன்னொரு ஜனநாயக புரட்சியை சினிமா பயணம் உருவாக்கி கொடுத்திருக்கிறது.</p><h2>நம்பிக்கை</h2><p>"தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்ற நம்பிக்கையை முதல்-அமைச்சர் விஜய் கொடுத்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன்" அதே வேளையில், அரசியல் பழிவாங்கல்களுக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ யாரோ ஒருவர் மீது பொய்யான எஃப்.ஐ.ஆர் (FIR) போடும் நிலைக்கு அரசு சென்றுவிடக்கூடாது என்றும் அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கூடத்தில் முட்டிப்போட வைத்து மாணவரை கம்பால் தாக்கிய ஆசிரியர்: போலீசில் தந்தை புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-makes-student-kneel-and-beats-him-with-a-cane-father-files-police-complaint</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-makes-student-kneel-and-beats-him-with-a-cane-father-files-police-complaint#comments</comments><guid isPermaLink="false">e7145bd8-85de-4bbe-af8f-2d5b42adf457</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:17:37 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:17:37.878Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,ஆசிரியர்,Teacher,புகார்,ஸ்ரீவைகுண்டம்,மாணவர்,போலீசார்,பள்ளிக்கூடம்,Complain</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/m4bpl2te/319.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளிக்கூடம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/m4bpl2te/319.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஸ்ரீவைகுண்டம், </p><p>நெல்லை அருகே பள்ளிக்கூடத்தில் மாணவரை முட்டிப்போட வைத்து வேப்பங்கம்பால் சரமாரியாக ஆசிரியர் தாக்கினார். இதில் காயமடைந்த மாணவரின் தந்தை போலீசில் புகார் செய்தார்.</p><h2>அரசு உயர்நிலைப்பள்ளி</h2><p>நெல்லை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் பவின்(வயது 12). இவர் அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.</p><p>நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் வகுப்பறை நடைபெற்றபோது பவின் இயற்கை உபாதை கழிக்க ஆசிரியரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். பின்னர் வகுப்பு முடிந்ததும் பவின் அவசரமாக கழிவறைக்கு புறப்பட்டார்.</p><h2>போலீஸ் நிலையம்</h2><p>இதனை பார்த்த ஆசிரியர், மாணவனை அழைத்து முட்டிப்போட வைத்ததுடன் வேப்பங்கம்பால் பின்னங்கால், கை மற்றும் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவனுக்கு உடலின் பல்வேறு பகுதிகளில் வீக்கம் உருவாகி வலி ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன், நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறினார். இதையடுத்து அவர், முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் மீது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">புகார்</a> அளித்தார். பின்னர் காயமடைந்த தனது மகனை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்.</p><p>இதுகுறித்து மாரியப்பன் கூறியதாவது:-</p><p>பள்ளிக்கூடத்தில் இயற்கை உபாதை கழிக்க செல்வது குற்றமா? எனது மகன் வகுப்பறை முடிந்த பிறகுதான் கழிவறைக்கு சென்றார். இருந்தபோதும் ஆசிரியர் அனைத்து மாணவர்கள் முன்னிலையில், முட்டிப்போட வைத்து கடுமையாக தாக்கி உள்ளார். இதனால் கை, கால், தொடை உள்ளிட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் எனது மகன் அவதிப்பட்டு வருகிறார். </p><p>மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு வந்து புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்துகின்றனர். ஆனால் நான் புகாரை வாபஸ் பெறப்போவதில்லை. எனது மகனை தாக்கிய ஆசிரியர் மீதும், சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய தலைமை ஆசிரியர் மீதும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கவர்னர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சந்திப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-meets-governor-arlekar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-meets-governor-arlekar#comments</comments><guid isPermaLink="false">71afc420-1b6e-4c05-855e-3a43ec4d9b41</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:12:56 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:12:56.099Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கவர்னர் அர்லேகர்,Governor Arlekar,JCD Prabhakar,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zjqobfer/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zjqobfer/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 28 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. 17-வது தமிழக சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று நடந்து முடிந்துள்ளன. தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. </p><p>இந்த நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழக கவர்னர் அர்லேகரை சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் இன்று சந்தித்து பேசினார். கவர்னர் உரையுடன் தமிழக சட்டப்பரவை கூட்டத்தொடர் தொடங்கி, அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரும் நடந்து முடிந்த நிலையில், மரியாதை நிமித்தமாக கவர்னர் அர்லேகரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று சந்தித்துள்ளார். </p><p>இந்த சந்திப்பின்போது தமிழக சட்டமன்றத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைந்தது என்பது குறித்தும், ஜனநாயக செயல்முறைகள் குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவு தொடருமா..? - என்ன சொல்கிறது சி.பி.எம்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-support-extended-to-the-tvk-government-continue-what-does-the-cpm-say</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-support-extended-to-the-tvk-government-continue-what-does-the-cpm-say#comments</comments><guid isPermaLink="false">aaa37a36-de7f-4db8-9fed-029c9b70d6fa</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:10:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:10:59.147Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,தவெக,Tamilnadu,திமுக,தமிழகம்,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,இடைத்தேர்தல்,Marxist Communist,CPI,மதுராந்தகம்,தாராபுரம்,சிபிஎம்,CPM,Madhurandakam,byelection,Dharapuram,மார்க்சிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/3fuxuvyq/tomoer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/3fuxuvyq/tomoer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்த நிலையில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.</p><h2>சிபிஎம், சிபிஐ போட்டி</h2><p>இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து அக்கட்சிகளின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><p>பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) போட்டியிடும். தாராபுரம் இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போட்டியிடும். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை மறுதினம் (15-ந்தேதி) அறிவிக்கப்படுவார்கள்.</p><p>இந்த இடைத்தேர்தல் இயல்பானது அல்ல; திணிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை; கவர்னர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம். மதச்சார்பின்மைக்கு எதிராக தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும். தவெக ஆட்சிக்கான ஆதரவு தொடரும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>பாதிப்பு வராது</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவு தொடருமா..? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>இடதுசாரிகள் இணைந்து இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். இதன்படி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிட உள்ளது. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி போட்டியிடும். தாராபுரத்தில் இந்திய கம்யூ. கட்சி போட்டியிடும். த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை என்பதால் தி.மு.க.வுக்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. இடைத்தேர்தலில் இடதுசாரிகளுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். வேட்பாளர்கள் குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்படும்</p><p>த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும். தனித்து போட்டி என்ற எங்கள் முடிவால் த.வெ.க. ஆட்சிக்கு பாதிப்பு வராது.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-extended-holiday-tourists-flock-to-nilgiris</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-extended-holiday-tourists-flock-to-nilgiris#comments</comments><guid isPermaLink="false">54ca185e-e159-4bff-82f7-1d91f6b4c78b</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:06:50 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:06:50.518Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Holiday,நீலகிரி,தொடர் விடுமுறை,Nilgiri,குவிந்த சுற்றுலா பயணிகள்,Tourists flocked</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/92fm4h9b/106.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/92fm4h9b/106.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>வார விடுமுறை, விநாயகர் சதுர்த்தியையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது. இதையொட்டி நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து வந்தன.</p><h2>தொடர் விடுமுறை</h2><p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக வார இறுதி நாட்களும் வந்ததால் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்கள் ஆனது. இதனால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகாவில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் இரவு முதலே கார்கள், வேன்கள் மற்றும் சொகுசு பஸ்களில் நீலகிரி நோக்கி வர தொடங்கினர்.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>இதன் காரணமாக குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்தது. குறிப்பாக ஊட்டி நகரின் மையப்பகுதியான சேரிங்கிராஸ், ஏரிச்சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்ல சாலை ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><p>சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் மிக மெதுவாக, ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன. முக்கிய சந்திப்புகளில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி சென்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.</p><h2>தற்காலிக போக்குவரத்து மாற்றம்</h2><p>சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெரிசலை கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, தற்காலிக போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. கர்நாடகா மற்றும் கேரளத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடி வழியாக கல்லட்டி மலைப்பாதையில் செல்வதற்கு கோர்ட்டு உத்தரவுபடி 200 வாகனங்களை மட்டும் வனத்துறையினர் மாவனல்லாவில் புதிதாக அமைத்த சோதனைச்சாவடி வழியாக அனுமதித்தனர். அதன்பின்னர் மற்ற வாகனங்களை கூடலூர் வழியாக செல்லும்படி திருப்பி அனுப்பினர். இதனால் வெளிமாநில <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3">சுற்றுலா பயணிகள் </a>அவதி அடைந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகத்தில் சிபிஎம், தாராபுரத்தில் சிபிஐ போட்டி... மூ.வீரபாண்டியன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpm-to-contest-in-maduranthakam-cpi-in-dharapuram-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpm-to-contest-in-maduranthakam-cpi-in-dharapuram-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">85493623-5f40-46a3-823b-194f08439208</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:35:51 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:35:51.297Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,இடைத்தேர்தல்,CPI,Marxist Communist Party,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,மதுராந்தகம்,தாராபுரம்,Maduranthakam,CPM,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/jmz7boxm/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/jmz7boxm/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்த நிலையில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.</p> <p>இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து அக்கட்சிகளின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><p><strong>பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</strong></p><p>இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) போட்டியிடும். தாராபுரம் இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போட்டியிடும். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை மறுதினம் (15-ந்தேதி) அறிவிக்கப்படுவார்கள்.</p> <p>இந்த இடைத்தேர்தல் இயல்பானது அல்ல; திணிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை; கவர்னர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம். மதச்சார்பின்மைக்கு எதிராக தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும். தவெக ஆட்சிக்கான ஆதரவு தொடரும்.</p><p> இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>18-ந்தேதி செவிலியர்கள் பணி நிரந்தரத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nurses-protest-across-tamil-nadu-on-the-18th-demanding-permanent-employment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nurses-protest-across-tamil-nadu-on-the-18th-demanding-permanent-employment#comments</comments><guid isPermaLink="false">9b4a0869-90a3-4695-a5ac-277b32d13d21</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:35:18 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:35:18.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,Chennai,சென்னை,protest,ஆர்ப்பாட்டம்,செவிலியர்கள்,nurses,Announcement,அறிவிப்பு,Association,பணி நிரந்தரம்,சங்கம்,permanent,employment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/otuq6qof/18-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 18-ந்தேதி செவிலியர்கள் பணி நிரந்தரத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/otuq6qof/18-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">செவிலியர்கள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பணி நிரந்தரம்</a> உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D">தமிழகம் முழுவதும்</a> அனைத்து மாவட்டங்களிலும் வரும் 18-ந்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்பாட்டம்</a> நடத்தப்படும் என தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.</p><h2>4,724 செவிலியர் பணியிடங்கள்</h2><p>தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுபின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><p>தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் கடந்த காலங்களில் செவிலியர் பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு நிரப்பப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி தமிழ்நாடு அரசு தற்போது மாவட்ட நிர்வாகம் மூலம் 11 மாத ஒப்பந்த முறையில் ரூ.21 ஆயிரம் மாத ஊதியத்தில் தற்காலிகமாக செவிலியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 4,724 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><h2>தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசாணை</h2><p>கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதை தவிர்க்க இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக எம்.ஆர்.பி. தேர்வு மூலம் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 2,500 செவிலியர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி 31.12.2026 அன்று பணி நீக்கம் செய்தது. பணி நீக்கம் செய்த போது எம்.ஆர்.பி. மூலம் நிரப்பப்பட வேண்டிய சுமார் 2,000 பணியிடங்கள் காலியாகவே இருந்தது. இதனை தொடர்ந்து 10.1.2026 அன்று எம்.ஆர்.பி. மூலம் நிரப்பப்பட வேண்டிய அந்த  பணியிடங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டது. செவிலியர்களை நிரந்தரம் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அரசு இந்த முடிவை மேற்கொண்டது. </p><h2>நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு</h2><p>கொரோனா காலத்தில் பணி அமர்த்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும் நிரந்தர முறையில் செவிலியர்களை பணியமர்த்தவும் சங்கம் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தியது. அதனை தொடர்ந்து தற்காலிக பணியமர்வு அரசாணையை ரத்து செய்து ஏற்கனவே இருந்த நடைமுறையை பின்பற்ற கோரி வேலைக்காக காத்துக்கொண்டிருந்த செவிலியர்கள் நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடை உத்தரவை பெற்றனர். </p><h2>மருத்துவ துறை அறிவிப்பு</h2><p>எனினும் அரசு விடாப்பிடியாக தற்காலிக முறையில் மட்டுமே பணியமர்வு செய்ய முடியும் என கோரி வழக்கை நடத்தியது. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்பாமல் வழக்கை மட்டுமே நடத்தி வந்தது. இந்த காலகட்டத்தில் காலியாக 4,700 பணியிடங்கள் வரை இருந்தும் பொதுமக்கள் மீது எந்த அக்கரையும் இல்லாத இந்த அரசு, பணியிடங்களை நிரப்பாமலே இருந்து வந்துள்ளது. கடந்த 10.9.2026 அன்று நடைமுறைக்கு மாறாக தற்காலிக பணியமர்வு செய்யும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையினை நீதிமன்றம் விலக்கிய நிலையில் அதற்கு மறுநாளே 4,724 செவிலியர்களை தற்காலிகமாக பணியமர்த்தும் அறிவிப்பை மருத்துவ துறை வெளியிட்டுள்ளது. </p><h2>அரசுக்கு அக்கறை இல்லை</h2><p>இந்த நிகழ்வுகளை பார்க்கும்போது அரசின் கொள்கை முடிவுகள் பொது மக்கள் மீதோ, படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் மீதோ சிறிதும் அக்கரை இல்லாமலும், ஊழியர்களின் உழைப்பை சுரண்டுவதுடன் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட பறிக்கும் நோக்கிலும் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்கள் எண்ணிக்கை இல்லாமல் 4 பேர் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே இருந்து மருத்துவ பயனாளர்களை கவனிக்க வேண்டிய நிலை ஒரு புறம் இருக்க, அரசின் இந்த ஊழியர் விரோத கொள்கையை நிறைவேற்ற பல ஆயிரம் காலி பணியிடங்களை கிட்டத்தட்ட 3.5 ஆண்டுகள் நிரப்பாமலே இருந்து வந்தது என்பது ஏழை எளிய மக்கள் மீது துளி அளவும் அரசுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. </p><h2>ஊழியர்கள் நிரந்தர தன்மையுடன் பணியமர்வு</h2><p>சேவை துறையாக இருக்கும் மருத்துவ துறையை நம்பி பல கோடி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறை நிரந்தர தன்மையுடன் தொடர்ந்து செயல்பட வேண்டுமானால் துறையில் அனைத்து ஊழியர்களும் நிரந்தர தன்மையுடன் பணியமர்த்தப்பட வேண்டும்.</p><h2>தமிழகம் முழுவதும் 18-ந்தேதி ஆர்ப்பாட்டம்</h2><p>ஆகவே இந்த துறையை காப்பாற்ற வேண்டிய கடமை துறையில் பணி செய்யும் ஊழியர்களுக்கு உள்ளது என்ற அடிப்படையில் வருகிற 18.9.2026 அன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகங்கள் முன்பும் பெருந்திரள் ஆர்பாட்டம் நடத்துவது என்று நேற்று (12.9.2026) காணொலி மூலம் நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி திருநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-festival-ttv-dhinakaran-extends-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-festival-ttv-dhinakaran-extends-greetings#comments</comments><guid isPermaLink="false">1cd7dd33-f1a8-432d-89d4-89e8a60bcc5a</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:27:15 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:27:15.390Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி விழா,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi Festival</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/cuyfkb95/ttv-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/cuyfkb95/ttv-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>வினைதீர்க்கும் விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>தடைகள் அனைத்தையும் தகர்த்து, வெற்றிப் பாதையை வகுத்துத் தரும் விக்னேஸ்வரனை வணங்கி தொடங்கும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் வெற்றி நிச்சயம் என்ற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு ஏற்ப, இத்திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நிம்மதியும், வளமும் பன்மடங்கு பெருக விநாயகப் பெருமான் அருள் புரியட்டும்.</p><h2>டிடிவி தினகரன் வாழ்த்து</h2><p>வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை வழங்கும் வேழமுகத்தோனை பக்தியுடன் வணங்கும் இந்த புனித நாளில், அவரது அருளால் மக்கள் அனைவரின் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி, ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை, உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விநாயகர் சதூர்த்தி</a> நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முழுவதும் நேற்றிரவு எங்கும் மின்தடையில்லை: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-power-outages-anywhere-across-tamil-nadu-last-night-electricity-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-power-outages-anywhere-across-tamil-nadu-last-night-electricity-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">3e23efad-d100-44d0-9c74-4dc3a4e20ac5</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:26:26 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:26:26.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மின் தடை,தமிழ்நாடு அரசு,TN govt,power cut,மின் விநியோகம்,அமைச்சர் நிர்மல்குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/1omwbh8d/nirmal.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/1omwbh8d/nirmal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மாநிலம் முழுவதும் தற்போது சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/tamilnadu">தமிழ்நாடு</a> முழுவதும் நேற்று காலை முதல் சீரான மற்றும் தடையற்றமின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு மின் தடை(unplanned outage ) ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது மின்வாரியம்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/tamilnadu">தமிழ்நாடு</a> முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சாரவிநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறுஉடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும்தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையைதொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியதலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையானநடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன்வழங்கி வருகிறது.</p><p>மேலும், களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>மின்சாரத் துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணிநேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவைமையத்தை 94987 94987 என்ற எண்ணில்தொடர்புகொள்ளுமாறு மின் நுகர்வோர்கள் மற்றும்பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-wait-for-three-hours-for-darshan-at-tiruvannamalai-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-wait-for-three-hours-for-darshan-at-tiruvannamalai-temple#comments</comments><guid isPermaLink="false">025ff5db-a4ba-46e4-bcff-c91d8d4134bb</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:24:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:24:00.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,திருவண்ணாமலை கோவில்,Tiruvannamalai temple</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/y5ywph91/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/y5ywph91/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.</p><h2>வாரவிடுமுறை நாள்</h2><p>அந்த வகையில், இன்று வார விடுமுறை நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர்.</p><h2></h2><h2>பக்தர்கள் சாமி தரிசனம்</h2><p>இன்று அதிகாலை முதல் திருவண்ணாலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தந்தை பெரியாரின் 148வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tributes-paid-by-offering-flowers-on-behalf-of-the-aiadmk-to-mark-the-148th-birth-anniversary-of-thanthai-periyar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tributes-paid-by-offering-flowers-on-behalf-of-the-aiadmk-to-mark-the-148th-birth-anniversary-of-thanthai-periyar#comments</comments><guid isPermaLink="false">579f21c7-63fb-4bf1-9234-0828d6337b46</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:07:47 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:07:47.518Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,Periyar,பெரியார் பிறந்தநாள்,Periyar birthday,தந்தை பெரியார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/z6m4kj7i/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தந்தை பெரியார் பிறந்த நாள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/z6m4kj7i/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கழகத்தின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துத உள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.</p><h2>மலர் தூவி மரியாதை</h2><p>இது தொடர்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>17.9.2026 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-ஆவது பிறந்த நாளான வியாழக் கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாருடைய திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.</p><h2>நிர்வாகிகளுக்கு அழைப்பு</h2><p>இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செயலாளர்கள்</a>, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர் மின்வெட்டு - மின்சார வாரியம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/frequent-power-outages-across-tamil-nadu-electricity-board-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/frequent-power-outages-across-tamil-nadu-electricity-board-explains#comments</comments><guid isPermaLink="false">c94406ae-c9f6-440f-9925-eabf3d747fba</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:01:25 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:01:25.878Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>power outage,தமிழ்நாடு மின்சார வாரியம்,மின்சார வாரியம்,power cut,TNEB,மின்வெட்டு,Tamilnadu Electricity Board</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/c0bnia9c/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/c0bnia9c/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கி வருகிறது.</p><p>மேலும், களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் செயல்படும் 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
லண்டனுக்கு அரசு செலவில் முதல்-அமைச்சர் விஜய் உடன் பயணம் செய்தவர்கள்... நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-traveled-with-chief-minister-vijay-at-government-expense-to-london-nainar-nagendran-sensational-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-traveled-with-chief-minister-vijay-at-government-expense-to-london-nainar-nagendran-sensational-interview#comments</comments><guid isPermaLink="false">7ec21f25-e12d-4492-9086-8a4218d06d15</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:34:49 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:34:49.844Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,London,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/sprs7zmu/tnspl.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/sprs7zmu/tnspl.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை</p><p>லண்டனுக்கு அரசு செலவில் முதல்-அமைச்சர் விஜய் கூட யாரெல்லாம் சென்றிருக்கிறார்கள் என தெரியாது நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டியின்போது கூறினார்.</p><p>தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.  அவர் பேசும்போது, இன்றைய சூழலில் 2 இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன.  அடுத்து, 4 இடைத்தேர்தல்கள் வரவுள்ளன.  சட்டசபை தேர்தல் நடந்து 2, 3 மாதங்களுக்குள் இடைத்தேர்தல்கள் வருகிறது என்றால் அதற்கு காரணம் குதிரை பேரம் நடைபெற்று இருக்கிறது என எல்லோரும் கூறுகிறார்கள்.</p>  <h2>குதிரை பேரம்</h2><p>இந்த குதிரை பேரம் எதற்காக? என்பது உங்களுக்கே தெரியும் என்றார்.  தொடர்ந்து அவர் பேசும்போது, நம்முடைய முதல்-அமைச்சர் லண்டன் சென்றிருக்கிறார்.  சொந்த வேலையாக சென்றிருக்கிறாரா... அவருடன் யாரெல்லாமோ சென்றிருக்கிறார்கள் என கூறுகின்றனர்.</p><p>ஆனால், அவருடன் யாரெல்லாம் சென்றிருக்கிறார்கள் என்பது தெரியாது.  யாரை எல்லாம் கூட்டி சென்றிருக்கிறார் என்பதெல்லாம் தெரியாது.  அரசு செலவில் யார் எல்லாம் அழைத்து செல்லப்பட்டனர்.  உண்மையில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்றிருக்கிறாரா? இல்லையா?</p>  <h2>சொந்த வேலை</h2><p>இந்த 3, 4 நாட்களில் அவர் எத்தனை பேரை சந்திக்க முடியும் என்பது ஒரு கேள்விக்குறி.. அதற்கெல்லாம் லண்டனில் இருந்து திரும்ப வந்த பின்னர் அவர் பதில் கூற வேண்டும்.</p><p>சொந்த வேலையாக சென்றிருக்கிறார் என்றால் நாம் எதுவும் கூற முடியாது.  ஆனால், முதலீட்டாளர்களை ஈர்க்க சென்றிருக்கிறார் என்றால், யார் யாருடன் சந்திப்பு நடந்தது? எவ்வளவு கோடி முதலீடு வருகிறது? என்ற பதிலை வந்தவுடன் அவர் அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது தலைமை அல்ல.. ஏமாத்துவேலை! - வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/talking-without-knowing-what-a-leader-is-is-not-leadership-its-cheating-vijay-sethupathis-speech-goes-viral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/talking-without-knowing-what-a-leader-is-is-not-leadership-its-cheating-vijay-sethupathis-speech-goes-viral#comments</comments><guid isPermaLink="false">c75eef4f-1bec-4c29-b5e7-c62962617bda</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:31:36 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:31:36.195Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chief Minister,பிக்பாஸ்,முதல் அமைச்சர்,விஜய் சேதுபதி,Big Boss,vijay sethupathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/64aje143/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாத்திகா தலைமை குறித்து விஜய் சேதுபதி பேச்சு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/64aje143/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>‘லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது தலைமை அல்ல ஏமாத்துவேலை’ என்று போட்டியாளர் ஒருவருக்கு விஜய் சேதுபதி அறிவுறுத்தினார்.</p><h2>பிக்பாஸ்</h2><p>‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 10-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் மொத்தம் 29 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பிளாக் பாண்டி தலைவராக செயல்பட்டு வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து சாத்திகா, <a href="https://www.dailythanthi.com/topic/பிக்பாஸ்">பிக்பாஸ் </a>வீட்டின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சாத்திகாவிடம் தலைமை குறித்து விஜய் சேதுபதி கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><h2>அப்போது அவர் கூறியதாவது:-</h2><p>“லீடர் மற்றும் லீடர்ஷிப் என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்த மாதிரி <a href="https://www.dailythanthi.com/topic/வாக்குறுதிகள்">வாக்குறுதிகளை</a> கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப்போட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை. அதற்கு பெயர் ஏமாற்றுவேலை” என்று தெரிவித்தார்.</p><p>தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கின்றனர். விஜய் சேதுபதி மறைமுகமாக முதலமைச்சரை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் பதிவிட்டுள்ளதால் சர்ச்சை உருவாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம்: திமுகவினர் 700 பேர் மீது வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/demonstration-against-chief-minister-vijay-dmk-files-case-against-700-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/demonstration-against-chief-minister-vijay-dmk-files-case-against-700-people#comments</comments><guid isPermaLink="false">98e6bf15-7ab2-4571-8f3d-125360dd0872</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:26:56 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:26:56.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d6q4legu/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d6q4legu/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பற்றி பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில், சென்னை தெற்கு, தென்மேற்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக கையில் பதாகைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.</p><p>இதேபோல, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் 700-க்கும் மேற்பட்டோர் மீது 3 பிரிவுகளில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விளாத்திகுளத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-saplings-distributed-to-farmers-in-vilathikulam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-saplings-distributed-to-farmers-in-vilathikulam#comments</comments><guid isPermaLink="false">1e86aa06-27a3-47d8-bab2-6cc307f43921</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:25:56 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:25:56.748Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Thoothukudi,தூத்துக்குடி,Forest Department,வனத்துறை,விவசாயிகள்,Distribution,விநியோகம்,vilathikulam,விளாத்திகுளம்,Free,saplings,இலவச,மரக்கன்றுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/k1bikdqy/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விளாத்திகுளத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/k1bikdqy/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F">மாவட்ட</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">வனத்துறை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D">அலுவலர்</a> இளையராஜா உத்தரவின்படி, விவசாய நிலங்களைச் சுற்றி வேலி மற்றும் தண்ணீர் வசதி கொண்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">விவசாயிகளுக்கு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A">இலவச</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மரக்கன்றுகள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">விநியோகம் </a>செய்யப்படுகின்றன. </p><h2>இலவச மரக்கன்றுகள் வழங்கல்</h2><p>இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><p>விளாத்திகுளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விளாத்திகுளம் ஆற்றுப் பாலத்திற்குக் கீழே உள்ள வனத்துறை நர்சரியில் வைத்து தேக்கு, மகாகனி, குமிழ்தேக்கு, வேங்கை, கொய்யா, வேம்பு, ஈட்டி, மலைவேம்பு, எலுமிச்சை, சந்தனமரம், செம்மரம், மாதுளை, நெல்லி, கொடிக்காய், சீத்தா, பலா மற்றும் புளி ஆகிய பல்வேறு வகையான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. </p><h2>விவசாயிகள் நேரில் வர வேண்டும்</h2><p>மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், மரம் நடவு செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் பட்டா நகல், குடும்ப உறுப்பினரின் அடையாளச் சான்று நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் நிலத்தின் உரிமையாளர் புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு விளாத்திகுளம் வனச்சரகர் முகைதீன் மற்றும் வனவர் பாண்டியராஜன் ஆகியோரை தொடர்புகொண்டு இலவச மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கம்யூனிஸ்டு கட்சிகள் த.வெ.க. கூட்டணிக்கு வருவார்கள்: அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-parties-will-join-the-tvk-alliance-minister-shajahan-expresses-confidence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-parties-will-join-the-tvk-alliance-minister-shajahan-expresses-confidence#comments</comments><guid isPermaLink="false">16d9b2e4-cab6-47dc-8d1c-1d434c55b436</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:12:28 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:12:28.676Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க,கம்யூனிஸ்டு,Communist,அமைச்சர் ஷாஜகான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/5o0o4na9/Shajahan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஷாஜகான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/5o0o4na9/Shajahan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில்,  </p><p>தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கம்யூனிஸ்டு கட்சிகள் த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் வரக்கூடிய நாட்களில் எங்கள் கூட்டணிக்குள் வருவார்கள் என்று திடமாக நம்புகிறோம். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்திற்கு வருகிற எதிர்ப்புகள் முதல்-அமைச்சருடைய கவனத்திற்கு சென்றுள்ளது. அவர் தீர ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்பார்.</p> <h2>புதிய தலைமை செயலகம்</h2><p>தற்போதைய தலைமைச் செயலகம் பழமையான கட்டிடமாக இருப்பதுடன், சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரியும் சூழலில் நெருக்கடியாக உள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டவேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ஓமந்தூரார் தோட்டத்தில் தலைமை செயலகம் கட்டப்பட்டு அது இப்போது அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ராணி மேரி கல்லூரியில் கட்டுவதற்கு திட்டமிட்டனர். .</p><p>அதுவும் தடைபட் டது. எந்த இடத்தில் கட்டினாலும் இதைப்போல எதிர்ப்புகள், விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். பட்டினப்பாக்கத்தில்தான் கட்டுவதாக முடிவானாலும், அந்த இடத்தில் உள்ள மக்கள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகள் நிச்சயமாக செய்யப்படும். கம்யூனிஸ்டு கட்சிகள் ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இந்த எதிர்ப்புகளையும் கணக்கில் கொண்டு அரசு இறுதி முடிவு எடுக்கும்</p><h2>தொழுகை</h2><p>மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் சிறுபான்மையினருக்கான நிதியும் திட்டங்களும் போதுமானதாக இல்லை. ஏற்கனவே நடைமுறையில் இருந்து தற்போது தடைபட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, இந்த மாத இறுதியில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-well-being-flourish-across-the-nation-and-prosperity-abound-in-every-home-edappadi-palaniswamis-vinayagar-chaturthi-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-well-being-flourish-across-the-nation-and-prosperity-abound-in-every-home-edappadi-palaniswamis-vinayagar-chaturthi-greetings#comments</comments><guid isPermaLink="false">d039a3b8-423a-433e-a118-735e2f219e8e</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:09:35 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:09:35.936Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/943iw42k/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/943iw42k/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு;</p><p>”வினை தீர்க்கும் தெய்வமாகவும்; முழுமுதற்கடவுளாகவும், விளங்கும். விநாயகப் பெருமான் அவதரித்த 'விநாயகர் சதுர்த்தி' திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <p>சங்கடங்களையும், தடைகளையும் நீக்கவல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும் அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணர்ந்து, விநாயகர் சதுர்த்தியன்று மக்கள், களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் அலங்கரித்து வைத்து அருகம்புல். எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, அரளி மலர் வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், பழங்கள் போன்றவற்றைப் படைத்து, தொடங்கும் காரியங்களில் எல்லாம் வெற்றிபெற வேண்டி பக்திப் பரவசத்துடன் வழிபட்டு விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.</p><p>ஞானமே வடியான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் 'நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்' என்று மனதார வாழ்த்தி; அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும் வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து. மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நேற்று 33.22 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3322-tonnes-of-scrap-materials-collected-and-removed-in-chennai-yesterday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3322-tonnes-of-scrap-materials-collected-and-removed-in-chennai-yesterday#comments</comments><guid isPermaLink="false">79a5242c-0491-4e50-af4b-646aa6950d36</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:59:31 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:59:31.901Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zbo1p43e/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zbo1p43e/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று (12.09.2026) 66 இடங்களிலிருந்து 33.22 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. </p><h2>பழைய பொருட்கள் சேகரிப்பு</h2><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் பணி 11.10.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில், நேற்று (12.09.2026) மட்டும் 66 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 33.22 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இதற்காக 27 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.</p><h2>நம்ம சென்னை செயலியில் முன்பதிவு</h2><p>ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நம்ம சென்னை</a>” செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.</p><p>இதனடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சதுர்த்தி விழா: மதுரை மாவட்டத்தில் 750 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chaturthi-festival-vinayagar-idols-to-install-750-locations-in-madurai-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chaturthi-festival-vinayagar-idols-to-install-750-locations-in-madurai-district#comments</comments><guid isPermaLink="false">7db603c7-ee1e-4a81-990e-13a4666827cb</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:49:02 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:49:02.348Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aanmigam,Devotional,ஆன்மிகம்,Madurai,மதுரை,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி விழா,விநாயகர் சிலைகள்,Vinayagar Idols,Devotional News</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ve83yk4o/madurai-vinahagar-idols.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மதுரை சர்வேயர் காலனி சாலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள், விற்பனைக்கு குவிந்த விநாயகர் சிலைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ve83yk4o/madurai-vinahagar-idols.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 750 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>விநாயகர் சதுர்த்தி விழா</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி</a> விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் பா.ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது உண்டு. அதன்பின்னர் அந்த சிலைகள் அனைத்தும், கீழமாசிவீதி, விளக்குத்தூண், மொட்டை விநாயகர் கோவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக மாசி வீதியில் வலம் வந்து, பின்னர் சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றில் கரைப்பது வழக்கம்.</p><p>இதுபோல், புறநகர் பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.</p><h2>மதுரை மாநகரில் 350 இடங்களில் சிலைகள்</h2><p>அதன்படி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, விநாயகர் சிலைகள் வைப்பதற்காக அந்தந்த போலீஸ் நிலையங்களில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனை தொடர்ந்து, மாநகர பகுதிகளில் 350 இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு மாநகர போலீஸ் அனுமதி அளித்துள்ளது.</p><p>அந்த இடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-idols">விநாயகர் சிலைகள்</a> வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>புறநகரில் 400 இடங்கள்</h2><p>மதுரை புறநகர் பகுதிகளான திருமங்கலம், கள்ளிக்குடி, வாடிப்பட்டி, உசிலம்பட்டி, மேலூர், சோழவந்தான், செக்கானூரணி, ஊமச்சிகுளம், சிலைமான், கருப்பாயூரணி, ஒத்தக்கடை, சத்திரப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கேட்கப்பட்டது. அதன்படி, புறநகரில் சுமார் 400 இடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-idols">விநாயகர் சிலைகள்</a> வைக்க மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உத்தரவின்பேரில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார், புறநகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.</p><p>இதுகுறித்து போலீசார் கூறுகையில், “விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகள் நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தின்போது கடைபிடிக்கப்படவேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை சார்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு விளக்கப்பட்டு உள்ளது. </p><p>அதன்படி <a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-idols">விநாயகர் சிலைகள்</a> 10 அடிக்கும் குறைவான உயரம் கொண்டவையாக இருக்க வேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடத்திற்கான தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தீத்தடுப்பு பொருட்கள் வைக்கப்பட வேண்டும். விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில்: சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-restaurant-operating-in-an-unhygienic-manner-fined-rs10000</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-restaurant-operating-in-an-unhygienic-manner-fined-rs10000#comments</comments><guid isPermaLink="false">ea1c6f9c-eafe-4ec6-9bc1-90fa4b78a4b5</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:46:37 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:46:37.939Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Nagercoil,Kanyakumari,fine,அபராதம்,உணவு பாதுகாப்புத்துறை,food safety department,உணவகம்,restaurant,சுகாதார சீர்கேடு,Health disorder,நாகர்கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/uff2djii/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/uff2djii/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>கன்னியாகுமரி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">நாகர்கோவில்</a> பேருந்து நிலையம் அருகே விதிமுறைகளை மீறி செயல்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">உணவகத்திற்கு</a> உணவு பாதுகாப்பு துறையினர் ரூ.10 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> விதித்து நோட்டீஸ் வழங்கினர்.</p><h2>உணவகத்தால் சுகாதார சீர்கேடு</h2><p>கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், உணவகச் சமையலறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் வழிந்தோடி கடுமையான சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் தகவல் பரவியது. </p><h2>ரூ.10 ஆயிரம் அபராதம்</h2><p>இதன் எதிரொலியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சம்மந்தப்பட்ட உணவகத்தில் நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது உணவகத்தின் உணவு தயாரிப்பு முறை, பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மற்றும் சுகாதார நிலை குறித்து அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர். இதில் விதிமுறைகளை மீறியது உறுதியானதை அடுத்து, உணவகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். மேலும் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளால் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்டத்திற்கான பொறுப்பை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - நயினார் நாகேந்திரன் கண்டனம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-the-responsibility-for-the-breakfast-scheme-be-placed-on-teachers-nainar-nagendran-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/should-the-responsibility-for-the-breakfast-scheme-be-placed-on-teachers-nainar-nagendran-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">c8fecbd7-6e6e-456f-83a4-ca34a6e41d15</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:35:25 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:35:25.702Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,காலை உணவுத் திட்டம்,breakfast scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f8ebj5dl/nainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f8ebj5dl/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான பொறுப்பைத் தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? என தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>காலை உணவுத் திட்டம் நீட்டிப்பு</h2><p>பெருந்தலைவர் காமராஜரின் பெயரால் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்கான நிதித் திட்டமிடலின்றி தவெக அரசு செயல்படுவது கடும் அதிர்ச்சியளிக்கிறது. விளம்பரப் பலகை, சமையலறைச் சீரமைப்பு முதல் மாணவர்களுக்கான தட்டு, டம்ளர் வாங்குவது வரை அனைத்து ஆரம்பச் செலவுகளையும் தலைமை ஆசிரியர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனச் சுற்றறிக்கை அனுப்பி அழுத்தம் கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>பணம் ஒதுக்க மனமில்லையா?</h2><p>முதல்-அமைச்சர் அலுவலகத்தைத் தற்காலிகமாக இடமாற்றம் செய்ய ரூ.6 கோடி மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்து ஆடம்பரம் செய்யும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு, ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், உபகரணங்களுக்கும் பணம் ஒதுக்க மனமில்லையா? குழந்தைகள், மாணவர்கள் மீது அக்கறை இல்லையா? மக்கள் மீது அக்கறை இல்லையா? ஆட்சி மேலிடத்தின் சுய விளம்பரங்களுக்கும் ஆடம்பரங்களுக்கும் நிதியை வாரி வழங்கும் தவெக அரசு, கல்வி நிலையங்களின் அடிப்படை உள்கட்டமைப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல் ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது என்ன மாதிரியான நிதி மேலாண்மை?</p><h2>திரும்பப் பெற வேண்டும்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆசிரியர்கள் </a>என்பவர்கள் கல்வி புகட்டும் வழிகாட்டிகளே அன்றி, அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டும் நிதியமைப்புகள் அல்ல. எனவே, தலைமை ஆசிரியர்களைச் சொந்த நிதியைச் செலவழிக்க நிர்ப்பந்திக்கும் இந்த எதேச்சதிகார உத்தரவுகளைப் பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். திட்டத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுக்கான முழு நிதியையும் அரசே நேரடியாகப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே வழங்கி, ஆசிரியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>139 சவரன் நகைகள் மோசடி செய்த அடகுக்கடை உரிமையாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pawn-shop-owner-arrested-for-defrauding-139-sovereigns-of-jewels</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pawn-shop-owner-arrested-for-defrauding-139-sovereigns-of-jewels#comments</comments><guid isPermaLink="false">4efaeb5e-ad81-4ed5-952d-3ed26bfa5f0a</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:22:12 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:22:12.119Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நகைகள்,கைது,arrest,Theni,தேனி,மோசடி,fraud,jewelry,உரிமையாளர்,owner,அடகுக்கடை,pawnshop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/uhmgzixb/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை மோசடி, கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/uhmgzixb/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF">தேனி</a> மாவட்டத்தில் 139 சவரன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">நகைகள் மோசடி</a> செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">அடகுக்கடை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">உரிமையாளரை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>139 சவரன் நகைகள் மோசடி</h2><p>தேனி மாவட்டம், வருசநாடு தும்மக்குண்டுவைச் சேர்ந்த துரைமுருகன் (வயது 38), ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வந்தார். இவரிடம் ரமேஷ் உள்ளிட்ட 64 வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 139 சவரன் நகைகளை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு உரிமையாளர் தலைமறைவானார்.</p><h2>அடகுக்கடை உரிமையாளர் கைது</h2><p>இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கடையின் உரிமையாளர் துரைமுருகன், அவரது தந்தை முருகேசன், ஊழியர் ஸ்ரீமதி(26) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், ஏற்கனவே ஸ்ரீமதி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று உரிமையாளர் துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>அநாகரிக பேச்சு: திமுகவினரை கண்டித்த கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncivilized-speech-kanimozhi-reprimands-dmk-members</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncivilized-speech-kanimozhi-reprimands-dmk-members#comments</comments><guid isPermaLink="false">c73c8e24-c755-48c6-ae24-e6bbe52710bd</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:15:15 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:15:15.174Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f6ke6863/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f6ke6863/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.</p><p>சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், திமுக ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரின் அநாகரிக பேச்சு சர்ச்சையான நிலையில் அதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருக்குறளை பதிவிட்டுள்ளார். எதைக் காக்கத் தவறினாலும் நாவை காக்க வேண்டும் என்பதை கண்டிக்கும் வகையில் இந்த குறளை கனிமொழி பகிர்ந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குற்றால சீசன் முடிவுக்கு வந்தது.. தண்ணீர் வராததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-kutralam-season-has-come-to-an-end-tourists-are-disappointed-due-to-the-lack-of-water-flow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-kutralam-season-has-come-to-an-end-tourists-are-disappointed-due-to-the-lack-of-water-flow#comments</comments><guid isPermaLink="false">b0f2fa45-070d-418b-8812-cfcdd77c91fc</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:14:50 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:14:50.854Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குற்றால அருவி,Kutralam Falls</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f5zewhzw/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/f5zewhzw/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் பொதுவாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிகச்சிறப்பாகவும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்படியும் இருக்கும். மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் சீசன் மேலும் சில நாட்கள் வரை இருக்கும்.</p> <p>எல் நினோ காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே பெய்தது. இதனால் பல குற்றால அருவிகளில் பல நாட்களில் குறைந்த அளவே நீர்வரத்து இருந்தது. இதற்கிடையே தற்போது அருவிகளில் நீர் வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. அத்துடன், குற்றால சீசன் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம்: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-jewelry-stolen-from-a-woman-sleeping-outside-her-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-jewelry-stolen-from-a-woman-sleeping-outside-her-house#comments</comments><guid isPermaLink="false">e2fb0744-1610-4da5-b8f5-ada985b7e279</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:53:57 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:53:57.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நகை திருட்டு,விழுப்புரம்,Villupuram,jewelry theft</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/spexm7s0/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/spexm7s0/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர் சேட்டு மனைவி செல்வி (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினார். மறுநாள் காலை எழுந்தபோது கழுத்தில் அணிந்திருந்த 3.25 பவுன் தாலி சங்கிலியை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். </p><p>வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் நைசாக கழுத்தில் அணிந்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு; மருத்துவர்கள் அறிவுறுத்தல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-fever-cases-in-chennai-and-suburbs-doctors-advisory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-fever-cases-in-chennai-and-suburbs-doctors-advisory#comments</comments><guid isPermaLink="false">66f70f98-fc99-4590-8da3-856c9b193653</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:29:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:29:59.542Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Fever,காய்ச்சல் பாதிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8nbs1gjb/dfcic.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8nbs1gjb/dfcic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/">காய்ச்சல் பாதிப்புகள் </a>அதிகரித்து காணப்படுகின்றன.</p><p>சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் சமீப நாட்களாக காய்ச்சல் பாதிப்புகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  கடந்த ஆகஸ்டு மாதத்தில் காய்ச்சல் ஏற்பட்ட 4,500 பேரில் 160 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.</p> <h2>டெங்கு பாதிப்பு</h2><p>இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  காய்ச்சல் ஏற்பட்ட 2 ஆயிரம் பேரில் 140 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது, இது சற்று அதிகம் ஆகும்.  அடையாறு, அண்ணா நகர், வளசரவாக்கம் மண்டலங்களில் பாதிப்பு அதிக அளவில் பதிவாகியுள்ளது.</p> <h2>மருத்துவர்கள் அறிவுறுத்தல்</h2><p>இதனையடுத்து, இன்புளூயன்சா ஏ, ரைனோ வைரஸ், ஆர்.எஸ்.வி. உள்ளிட்ட வைரஸ்கள் பரவி வருகின்றன என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.  குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால், அது மற்றவர்களுக்கும் விரைவாக பரவக்கூடும்.  அதனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><p>கொசுக்கள் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வீடுகளில் தண்ணீர் தேங்கவிடாமல், சுற்றுப்புற தூய்மையை பேணும்படியும், வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள், கழிவுகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்கவும் மருத்துவர்கள் தீவிர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>ரெயில்வேயில் தொழில் பழகுனர் நியமனம்: பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பு வழங்கும் முயற்சி - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/railway-apprenticeship-recruitment-move-to-offer-opportunities-to-candidates-from-other-states-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/railway-apprenticeship-recruitment-move-to-offer-opportunities-to-candidates-from-other-states-anbumani#comments</comments><guid isPermaLink="false">a6951e30-305d-4ef3-872e-4a18634cd5a7</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:29:16 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:29:16.453Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8r3wwam4/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8r3wwam4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வேயில் தொழில் பழகுனர் நியமனம் தமிழர்களின் வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும்  சதியை  முறியடிக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். </p><h2>தொழில் பழகுனர்கள் நியமனம்</h2><p>இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தெற்கு ரெயில்வேயின் தமிழக எல்லைக்குபட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுனர்கள் (Apprenticeship) பயிற்சிக்காக 6,171 தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான விதிகளை புறந்தள்ளிவிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கையின் முலம் தமிழகத்தில் உள்ள தொழில் பழகுனர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க தெற்கு ரெயில்வே முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.</p><p>தெற்கு ரெயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூர் கேரஜ் மற்றும் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை, கோவை போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை ஆகிய இடங்களில் 6,171 தொழில் பழகுனர் பயிற்சி இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு இம்மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிக்கையில் தான் விதிமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.</p><h2>பணி தாரைவார்ப்பு</h2><p>22.07.2002 தேதியிட்ட ரெயில்வே வாரிய சுற்றறிக்கை மற்றும் 05.05.1984- தேதியிட்ட தொழில் பழகுனர் தேர்வு வழிகாட்டி விதிமுறைகளின்படி பணி இடங்களில் இருந்து100 கி.மீ சுற்றளவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால், இந்த விதியை மீறி வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தெற்கு ரெயில்வேயில் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என 2019-ஆம் ஆண்டில் விதிகள் மாற்றப்பட்டன.</p><p>ஆனால், இந்த விதியும் இப்போது மீறப்பட்டுள்ளது. தொழில் பழகுனர் நியமன அறிவிக்கையில், தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தட்சிண கன்னடா பகுதி, ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் பகுதி மற்றும் கேரளாவில் இருப்பவர்களும், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு போன்ற பிற மாநிலங்களில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் பழகுனர் பணி பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை அனுமதிக்க முடியாது.</p><h2>உரிமைக்கு மீண்டும் ஆபத்து</h2><p>கால் நூற்றாண்டுக்கும் கூடுதலாகவே தெற்கு தொடர்வண்டித்துறையில் உள்ள பணிகளை பிற மாநிலத்தவர் பறித்துக் கொள்கின்றனர். தொழில் பழகுனர் வாய்ப்புகளும் அதே போல் பறிக்கப்பட்டு வந்த நிலையில் தான், நீண்ட போராட்டத்தின் மூலம் 2019-ஆம் ஆண்டில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை மீட்டெடுக்கப்பட்டது. அந்த உரிமைக்கு தான் இப்போது மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.</p><p>தமிழக இளைஞர்களின் தொழில் பழகுனர் வாய்ப்புகளை பறிக்கும் நோக்கம் கொண்ட அறிவிக்கையை தெற்கு ரெயில்வே உடனடியாக ரத்து செய்ய வேண்டும். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக வேலைவாய்ப்பு</a> அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் இந்தப் பொறுப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை சேர்த்து புதிய ஆள்தேர்வு அறிவிக்கையை தெற்கு ரெயில்வே புதிதாக வெளியிட வேண்டும். இதற்காக ரெயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலை ஊர்வலம்: திருச்சியில் 16-ந்தேதி போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-traffic-diversions-in-trichy-on-the-16th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-traffic-diversions-in-trichy-on-the-16th#comments</comments><guid isPermaLink="false">7a5e0c9c-cdf9-49f4-a4aa-d854d87c054e</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:25:28 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:25:28.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து மாற்றம்,ஊர்வலம்,Ganesha procession,change of traffic</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/qh6uyhzq/traffic.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/qh6uyhzq/traffic.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,  </p><p>விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி திருச்சியில் வருகிற 16-ந்தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.</p><h2>நகர பஸ்கள்</h2><p>திருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் வருகிற 16-ந்தேதி கரைக்கப்பட உள்ளது. இதையொட்டி அன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><p>திருச்சி நெ.1 டோல்கேட்டில் இருந்து வரும் அனைத்து நகரப் பஸ்களும், மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு, அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் பெரிய கோபுரம், திருவானைக்காவல் வழியாக மீண்டும் நெ.1 டோல் கேட் செல்ல வேண்டும். இதேபோல், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வரும் அனைத்து நகரப் பஸ்களும் சத்திரம் பஸ் நிலையத்துடன் தற்காலி கமாக நிறுத்த வேண்டும். </p><p>திருவெறும்பூரில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு செல்லும் அனைத்து நகர பஸ்களும் தேவைப்பட்டால் மாலை 6 மணிக்குமேல் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாக மத்திய பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும். பஞ்சப்பூர் மற்றும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு பாலக்கரை வழியாக செல்லும் அனைத்து நகர பஸ்களும் மாலை 6 மணிக்குமேல் எம்.ஜி.ஆர். சிலை, மாணவர்கள் சாலை, சாஸ்திரி ரோடு மார்க்கமாக செல்ல வேண்டும்.</p><h2></h2><h2>புறநகர் பஸ்கள்</h2><p>மேலும், துறையூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து வரும் அனைத்து புறநகர் பஸ்களும் புறவழிச்சாலை வழியாக பால்பண்ணை டி.வி.எஸ். டோல்கேட் சென்று, மத்திய பஸ் நிலையம் வந்தடைய வேண்டும். அங்கிருந்து மீண்டும் தங்களது வழித்த டத்தில் இயக்கப்பட வேண்டும். அண்ணாசிலை முதல் ஓடத்துறை, சஞ் சீவி நகர் வழியாகவும், மாம்பழச்சாலையில் இருந்து அண்ணாசிலை வழி யாகவும் எந்த விதமான வாகன போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை.</p><h2>சிலைகள் கரைக்க செல்ல வேண்டிய வழித்தடம்</h2><p>பெரம்பலூர், அரியலூர், மண்ணச்சநல்லூர், லால்குடி சாலைகளின் வழி யாக வரும் விநாயகர் சிலைகள் நெ.1 டோல்கேட், திருவானைக்காவல், மாம்பழச்சாலை வழியாக காவிரி ஆற்றின் இடதுபுறமும், திருவெறும்பூர் சாலை வழியாக வரும் சிலைகள் பாலக்கரை, காந்திமார்க்கெட் வளைவு, பெரியகடை வீதி, அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்தின் வலதுபுற மும் கரைத்து செல்ல வேண்டும்.</p><p>புதுக்கோட்டை சாலை வழியாக வரும் சிலைகள் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், பிரபாத் ஜங்ஷன். அஞ்சுமன் சாலை, காந்தி மார்க்கெட் வளைவு, பெரியகடை வீதி, அண்ணாசிலை வழியாக காவிரி ஆற்றின் வலதுபுறமும், திண்டுக்கல் சாலை வழியாக வரும் சிலைகள் பொன்னகர், பெரியமிளகுபாறை, கலெக்டர் அலுவலகம், வெஸ்ட்ரி ரவுண்டனா, எம்.ஜி.ஆர். சிலை, ஸ்டூடன்ஸ் சாலை, சாஸ்திரி ரோடு, கரூர் பைபாஸ் ரோடு,அண்ணாசிலை வழியாக காவிரியின் வலதுபுறமும், வய லூர் சாலை வழியாக வரும் சிலைகள் புத்தூர் 4 ரோடு, தெற்கு ஆர்ச். வடக்கு ஆர்ச், கே.டி. ஜங்ஷன், கரூர் பைபாஸ் ரோடு, அண்ணாசிலை வழியாக காவிரியின் வலதுபுறமும், குழுமணி சாலை வழியாக வரும் சிலைகள் வெக்காளியம்மன் நகர், ஜங்ஷன் சாலைரோடு தெற்கு ஆர்ச், கே.டி. ஜங்ஷன், கரூர் பைபாஸ் ரோடு, அண்ணாசிலை வழியாக காவிரி யின் வலதுபுறம் சிலைகளை கரைத்து செல்ல வேண்டும்.</p><h2></h2><h2>கனரக வாகனங்கள்</h2><p>மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சி லஞ்சமேடு வழியாக மணப்பாறை, குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் வாகனங்கள் பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ், முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாக செல்ல வேண்டும்.</p><p>திண்டுக்கலில் இருந்து சென்னைக்கு மணப்பாறை ஆண்டவர் கோவில், குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்., சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும்.</p><p>கரூரில் இருந்து தஞ்சாவூருக்கு குளித்தலை சுங்கேட், முசிறி, பெரம்ப லூர், அரியலூர், திருவையாறு வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரில் இருந்து கரூருக்கு தஞ்சாவூர் பெஸ்ட் பள்ளி சந்திப்பு, திருவையாறு. அரி யலூர், பெரம்பலூர், முசிறி, குளித்தலை வழியாக செல்ல வேண்டும். நாமக்கல்லில் இருந்து தஞ்சாவூருக்கு முசிறி பெரியார்பாலம் பூங்கா, பெரம்பலூர், அரியலூர், திருவையாறு வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரில் இருந்து நாமக்கல்லுக்கு தஞ்சாவூர் பெஸ்ட் பள்ளி சந்திப்பு, திருவையாறு, அரியலூர், பெரம்பலூர், முசிறி வழியாக செல்ல வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதுக்கோட்டை சிப்காட் ரெங்கம்மாள் சத்திரம், தஞ்சாவூர், திருவையாறு, அரியலூர், பெரம்பலூர் வழி யாக செல்ல வேண்டும். சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ், அரியலூர், திருவையாறு, தஞ்சாவூர் வழியாக புதுக்கோட்டைக்கும் செல்ல வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம்: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs50-thousand-bribe-from-grocery-shopkeeper-police-report-dismissal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs50-thousand-bribe-from-grocery-shopkeeper-police-report-dismissal#comments</comments><guid isPermaLink="false">3ded4ebb-b517-4830-9666-5ee59d612ed2</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:25:01 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:25:01.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,லஞ்சம்,Bribery,மயிலாடுதுறை,பணியிடை நீக்கம்,Dismissal,Head Constable,போலீஸ் ஏட்டு,Grocery shopkeeper,மளிகை கடைக்காரர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d8u96aol/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.50-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம்: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/d8u96aol/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.50-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">மயிலாடுதுறை</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">புகையிலை பொருட்கள் பறிமுதல்</a> செய்யப்பட்ட வழக்கில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D">மளிகை கடைக்காரரிடம்</a> ரூ.50 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">போலீஸ் ஏட்டு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணியிடை நீக்கம்</a> செய்யப்பட்டார்.</p><h2>மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் ஏட்டு</h2><p>மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கடை உரிமையாளரை ஜாமீனில் விடுவிக்க இடைத்தரகர் மூலம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொறையாறு போலீஸ் ஏட்டு அன்பரசன்(45) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். </p><h2>பணியிடை நீக்கம்</h2><p>புகையிலை பொருட்கள் பறிமுதல் குறித்து கடை உரிமையாளர், வக்கீல் சங்கமித்திரனிடம் தெரிவித்தபோது லஞ்சம் கைமாறியது தெரியவந்தது. இதுகுறித்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மற்றும் எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, எஸ்.பி. சினேகாபிரியா, ஏட்டு அன்பரசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>திராணி இல்லாமல் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் ஆயுதமா? - மு.க.ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-staging-a-platform-to-make-people-speak-obscenely-your-only-weapon-nirmal-kumar-questions-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-staging-a-platform-to-make-people-speak-obscenely-your-only-weapon-nirmal-kumar-questions-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">4bda7489-0a68-4336-b7e3-ea2c1be923e5</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:22:58 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:22:58.282Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,CTR Nirmal kumar,சி.டி.ஆர்.நிர்மல்குமார்,நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8dzdiind/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8dzdiind/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.</p><p>சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வந்தனர்.</p><h2>அதிர்ச்சியில் பெண்கள்...</h2><p>இந்த நிலையில், ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்?. நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள்?.</p><p>எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு. தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா மு.க.ஸ்டாலின்?.</p><h2>திராணி இல்லாமல்...</h2><p>திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர் அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா மு.க.ஸ்டாலின்?. குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.</p><p>நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி:  ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-metro-rail-services-to-operate-tomorrow-according-to-the-sunday-schedule</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-metro-rail-services-to-operate-tomorrow-according-to-the-sunday-schedule#comments</comments><guid isPermaLink="false">f62f3ec6-f3bb-4033-a290-2bc8f9cf9177</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:09:23 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:09:23.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மெட்ரோ ரெயில்,Chennai Metro Train,Metro train,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/n7hdil3o/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/n7hdil3o/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p><strong>இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில்,</strong></p><p>காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.</p><p>* காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த அரசுப்பேருந்து; 30 பயணிகள் படுகாயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-in-river-near-tenkasi-30-passengers-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-in-river-near-tenkasi-30-passengers-injured#comments</comments><guid isPermaLink="false">e754e2c6-2c8f-4351-8b6d-f1f35c0d2a96</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:59:05 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:59:05.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government bus,Tenkasi,தென்காசி,அரசுப்பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/j9jkt4xk/tdtip.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/j9jkt4xk/tdtip.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தென்காசி</p><p>தென்காசி அருகே ஆற்றுக்குள் அரசுப்பேருந்து கவிழ்ந்ததில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.</p><p>தென்காசி அருகே வேட்டைக்காரன் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது.</p> <h2>30 பயணிகள்</h2><p>இந்த விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் பலர் அலறி கூச்சலிட்டனர்.  பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.  இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்த சம்பவத்தில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை.  அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item></channel></rss>