<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 16 Aug 2026 06:33:19 +0000</lastBuildDate><item><title>தவெக அரசு கடந்து வந்த 100 நாட்கள்..! - வெற்றி பயணமா..?, வெற்று பயணமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-governments-first-100-days-a-journey-to-success-or-an-empty-journey</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-governments-first-100-days-a-journey-to-success-or-an-empty-journey#comments</comments><guid isPermaLink="false">7c0b1514-e1de-43fb-82c6-61fc5f7a6425</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:12:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:12:30.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Government,Tamil Nadu Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iyz837is/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/iyz837is/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று நாளையுடன் (ஆகஸ்டு 17) 100 நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்கள் கடந்து வந்த பாதை வெற்றிப் பயணமாக அமைந்ததா?, வெற்றுப் பயணமாக இருந்ததா? என்பது தொடர்பான அலசல் இது.</p><h2>திராவிட கட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட த.வெ.க.</h2><p>தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகளே மாறி.. மாறி.. ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தன. இருபெரும் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு, அரசியலில் 2½ வயது குழந்தையான த.வெ.க. முட்டுக்கட்டை போட்டது.</p><p>கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய், மே மாதம் 10-ந் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் அன்றைய தினம் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். தொடர்ந்து, மே 21-ந் தேதி நடைபெற்ற 2-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், மே 22-ந் தேதி நடைபெற்ற 3-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/v7cqro4y/Untitled-7.jpg" /></figure><h2>த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி?</h2><p>இந்த நிலையில், தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று நாளையுடன் (திங்கட்கிழமை) 100 நாட்கள் ஆகிறது. பதவியேற்ற அந்த நாள் (மே 10) முதல் இந்த நாள் (100-வது நாள்) வரை த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி? என்பதை பற்றி தொடர்ந்து பார்க்கப்போகிறோம்.</p><p>முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற மே 10-ந் தேதி 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். "2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். </p><p>பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க, 65 போதைப்பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்படும்" என்பவைதான் அவை. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/rh7fapx2/CHENNAI-01.jpg" /></figure><h2>717 டாஸ்மாக் கடைகள் அடைப்பு</h2><p>அதன்பிறகு, குறுகிய நாட்கள் இடைவெளியில், புதிய புதிய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே செயல்பட்ட 717 டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதன் மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்ந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/8i4w66wl/Untitled-1.jpg" /></figure><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>அதன்பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைத்து சுவையுடன் கூடிய தரமான உணவுகளை விநியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். தொடர்ந்து, குறு விவசாயிகள் வாங்கிய ரூ.50 ஆயிரம் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அவர் உத்தரவிட்டார். </p><p>அதன்பிறகு, மே 27-ந் தேதி டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை, தமிழக மீனவர் பிரச்சினை உள்பட 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/uui6m36p/Untitled-5.jpg" /></figure><h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்</h2><p>ஜூன் 9-ந் தேதி குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். அதன்பிறகு, அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அறிவித்தார். </p><p>தொடர்ந்து, கடந்த 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், "திருமணமாகும் பெண்களுக்கு திருமண நாளில் அண்ணனின் சீர் என்ற திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்படவையும் வழங்கப்படும். குடிசை வீடுகளுக்கு பதிலாக 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். பிளஸ்-1 மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும். அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்படும்" என்பது உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2gu3pidi/Untitled-2.jpg" /></figure><h2>பட்ஜெட்டில் 125 வாக்குறுதிகள் </h2><p>பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், "த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் 125 பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது" என்றார். </p><p>இதற்கு மத்தியில், சத்தம் இல்லாமல் ஒரு சாதனையை தமிழக தொழில் துறை செய்துள்ளது. அதாவது, 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேர் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2o8pgrn4/Untitled-5.jpg" /></figure><h2>தொழில் முதலீடுகள் ஈர்ப்பு</h2><p>குறிப்பாக, கடந்த 13-ந் தேதி நடைபெற்ற, வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் போடப்பட்ட 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க உள்ளன.  அதுவும், தொழில் முதலீடுகள் அனைத்தும் ஒரே பகுதியில் குவிந்துவிடாமல், 23 மாவட்டங்களுக்கு பரவலாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக தொழில் நிறுவனம் அமைய இருக்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/jqvcqxem/Untitled-7.jpg" /></figure><h2>முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்</h2><p>இப்படி, சத்தம் இல்லாமல் தொழில் புரட்சியை த.வெ.க. அரசு ஏற்படுத்தினாலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, மின் தடை பிரச்சினை, குப்பைகள் சரியாக அகற்றப்படாதது உள்ளிட்டவை புதிய அரசின் மீது குற்றச்சாட்டுகளாக வைக்கப்படுகின்றன. </p><p>கடந்த கால ஆட்சிகளில், தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால், அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். அல்லது அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். ஆனால், இப்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகள் எதிர்க்கட்சிகளாக உள்ளன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/39xmkibq/Untitled-4.jpg" /></figure><h2>100 நாள் ஆட்சி எப்படி?</h2><p>இதனால், சட்டசபையில் இரு எதிர் கட்சிகளின் கேள்விக் கணைகளை த.வெ.க. அமைச்சர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. எதிரில் இருப்பவர்கள் சட்டசபை அனுபவத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றாலும், ஆளும் தரப்பினரும் அதைவொரு சவாலாக ஏற்று சமாளித்து வருகின்றனர். </p><p>மொத்தத்தில், கடந்த 100 நாள் த.வெ.க. ஆட்சி, ஊழலுக்கு எதிராக தனது பார்வையை கழுகுப்பார்வையாக அதிகரித்துள்ளதுடன், ஒவ்வொரு தடைகளையும் தாண்டி வெற்றி பெற்று வருவதாகவே தெரிகிறது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5i4uk29j/Untitled-7.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/500-cubic-feet-of-water-per-second-released-into-the-lower-bhavani-canal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/500-cubic-feet-of-water-per-second-released-into-the-lower-bhavani-canal#comments</comments><guid isPermaLink="false">a0b1e968-f14c-497a-9cde-403191551537</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:27:46 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:27:46.880Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தண்ணீர் திறப்பு,water release,Bhavanisagar Dam,பவானிசாகர் அணை</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ys5li2xv/9.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ys5li2xv/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக் கம். தற்போது பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 60 அடிக்கு கீழ் இருப்பதாலும் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதாலும் தமிழக அரசு கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பை நேற்று மாலை வரை தெரிவிக்கவில்லை.</p><p>இந்த நிலையில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சார்பாக ஈரோடு அருகே உயிர் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தண்ணீர் திறப்பு</p><p>இந்த நிலையில் கலெக்டர் கந்தசாமி ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள் ளார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:-</p><p>நீர்வளத்துறையினர் அறிக்கையின்படி அணையில் இருந்து கீழ்பவானி பிர தான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர் மான கால்வாய் மதகுகளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்க ளுக்கு சிறப்பு நனைப்பிற்காக இன்று (அதாவது நேற்று) முதல் 15 நாட்க ளுக்கு தண்ணீர் திறக்கப்படும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.</p> ]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/crimes-against-women-have-increased-under-the-tvk-government-mp-kanimozhi-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/crimes-against-women-have-increased-under-the-tvk-government-mp-kanimozhi-alleges#comments</comments><guid isPermaLink="false">7962d96d-12ec-45a0-b9fd-a4d11a254a39</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:17:52 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:17:52.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,AIADMK,த.வெ.க.,Thoothukudi,தூத்துக்குடி,allegation,MP Kanimozhi,தி.மு.க.,அ.தி.மு.க.,கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2plthd96/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2plthd96/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தமிழகத்தில் </a>த.வெ.க. ஆட்சியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பெண்களுக்கு எதிரான குற்றங்கள்</a> தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அதிகரித்து</a> வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">குற்றம் சாட்டியுள்ளார்</a>. </p><p>தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">கனிமொழி எம்.பி.</a> அளித்த பேட்டி: </p><p>தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது, அவர்களை பாதுகாப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி மறுக்கப்படுகிறது. </p><h2>பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை</h2><p>பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இத்தகைய குற்றங்களைத் தடுக்க அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட கனிம வளம் தொடர்பான மசோதா, தமிழகத்தின் உரிமைகளையும் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாயையும் பெரிதும் பாதிக்கக்கூடியது.</p><h2>வரவேற்பு</h2><p>எந்தவித நாடாளுமன்ற விவாதமும் இன்றி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து த.வெ.க. அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்யாமல் மவுனம் சாதித்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை த,வெ.க. அரசு நீட்டித்துச் செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது.</p><h2>தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி என்பது த.வெ.க.வின் கனவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">தி.மு.க. </a>- <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.</a> கூட்டணி என்பது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">த.வெ.க.</a>வின் வெறும் கனவாக மட்டுமே இருக்க முடியும்; நிச்சயமாக அத்தகைய கூட்டணி அமைவதற்கு வாய்ப்பே இல்லை. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/surging-crowds-of-devotees-at-tiruchendur-7-hour-wait-for-darshan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/surging-crowds-of-devotees-at-tiruchendur-7-hour-wait-for-darshan#comments</comments><guid isPermaLink="false">0e2cc99a-3b12-49e9-815b-58b843e3b7fe</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:16:35 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:16:35.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruchendur Murugan Temple,திருச்செந்தூர் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/8m04irir/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/8m04irir/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. </p><p>சுதந்திர தின விடுமுறை மற்றும் வார விடுமுறை இணைந்து வருவதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர். பொது தரிசன பாதையில் நீண்ட வரிசையில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போல் முடி காணிக்கை செலுத்தவும், நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடவும் சுமார் 2 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். </p><p>பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் திருச்செந்தூர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் களைகட்டியுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருச்செந்தூர் நகர் பகுதிக்கு வந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதல் விவகாரம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-love-affair-woman-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-love-affair-woman-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">278d4327-eff3-4d80-8b97-1d42a6690dd2</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:00:05 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:00:05.259Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கள்ளக்காதல்,கிரைம் செய்திகள்,பெண்,fake love,Woman,Nilgiris,நீலகிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/25hh4jnu/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/25hh4jnu/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 48). இவர் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சுஜாதா(40) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவரது நண்பரான காம்பாய்கடை பகுதியை சேர்ந்த அச்சு (எ) அச்சுதானந்தன் என்பவருக்கும் சுஜாதாவிற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் அச்சுவின் மனைவி பரிமளா, சிவகுமாரை அழைத்து அவரது மனைவியை கண்டிக்குமாறும், தானும் தனது கணவரை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சுஜாதா தனது கணவரை செல்போனில் அழைத்து அவசரமாக வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.</p><p>உடனே கடையிலிருந்து வீட்டிற்கு சென்ற சிவகுமார் கதவைத் தட்டியும் திறக்காததால் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு சுஜாதா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.</p><p>அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சுஜாதா இறந்ததால் மனவேதனை அடைந்த அச்சுவும் விஷம் குடித்துள்ளார். அவருக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: சார்லபள்ளி-கோட்டயம் இடையே சிறப்பு ரெயில்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-between-charlapalli-and-kottayam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-between-charlapalli-and-kottayam#comments</comments><guid isPermaLink="false">cf861b20-70d7-4a90-bc53-7981e83bb913</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:54:03 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:54:03.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/717dolfq/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/717dolfq/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சார்ல பள்ளி-கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சார்லபள்ளி-கோட்டயம் (வண்டி எண்.07197) வாராந்திர சிறப்பு ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை (3 சேவைகள்) ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.15 மணிக்கு சார்லபள்ளியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமைகளில் மதியம் 12.25 மணிக்கு கோட்ட யத்தை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு திங்கட்கிழமைகளில் நள்ளிரவு 2.25 மணிக்கு வந்து 2.30 மணிக்கு புறப்படும். </p><p>கோட்டயம்-சார்ல பள்ளி (07198) வாராந்திர சிறப்பு ரெயில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை (3 சேவைகள்) திங்கட்கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் நள்ளி ரவு 12.30 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூ ருக்கு திங்கட்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு வந்து 11.55 மணிக்கு புறப்படும்.</p><p>மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொழிலாளியை டைல்ஸ் கல்லால் அடித்து கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-people-including-the-wife-arrested-for-beating-a-worker-to-death-with-a-tile</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-people-including-the-wife-arrested-for-beating-a-worker-to-death-with-a-tile#comments</comments><guid isPermaLink="false">564950c6-d3de-4d5a-a863-a1f34db86bab</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:49:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:49:24.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,murder,Worker,தொழிலாளி,attack,wife,மனைவி,3 arrested,3 பேர் கைது,stone,கல்லால் தாக்கி கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2o9r0nn8/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி கொலை, 3 பேர் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2o9r0nn8/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே மரக்கடைத் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">தொழிலாளி</a> கொடூரமான முறையில் டைல்ஸ் கற்களால் தாக்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். </p><h2>மரக்கடை தொழிலாளி</h2><p>தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜின் மகன் ஞானப்பிரகாசம் (வயது 47). இவர் மாப்பிள்ளையூரணியில் உள்ள ஒரு மரக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் அத்திமரப்பட்டியைச் சேர்ந்த கிளின்டன் என்பவரும் பணியாற்றி வந்தார்.</p><h2>டைல்ஸ் கல்லால் அடித்து கொலை</h2><p>கருத்து வேறுபாடு காரணமாக ஞானப்பிரகாசத்தைப் பிரிந்த அவரது மனைவி பாரதி, தனது 2 குழந்தைகளுடன் கூட்டாம்புளியில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று கூட்டாம்புளி வீட்டிற்குச் சென்ற ஞானப்பிரகாசம், மனைவி பாரதியிடம் தகராறு செய்துவிட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஞானப்பிரகாசத்தை மர்ம நபர்கள் டைல்ஸ் கற்களால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்தனர்.</p><h2>அதிர்ச்சி தகவல்</h2><p>இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய புதுக்கோட்டை போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.  ஞானப்பிரகாசத்தின் மனைவியான பாரதிக்கும், மரக்கடையில் ஞானப்பிரகாசத்துடன் வேலை பார்த்து வந்த கிளின்டனுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.</p><h2>மகள் திருமணத்திற்கு எதிர்ப்பு</h2><p>இதனால் கிளின்டனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க பாரதி முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு ஞானப்பிரகாசம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று இரவிலும் இதுதொடர்பாக ஞானப்பிரகாசத்திற்கும், பாரதிக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. </p><h2>மனைவி உள்பட 3 பேர் கைது</h2><p>பாரதியின் தூண்டுதலின் பேரில், கிளின்டன் தனது நண்பரான வினோத் என்பவருடன் இணைந்து ஞானப்பிரகாசத்தை டைல்ஸ் கல்லால் அடித்து, தலையில் தாக்கி கொலை செய்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, கொலைக்குக் காரணமான மனைவி பாரதி, மரக்கடை ஊழியர் கிளின்டன் மற்றும் அவரது நண்பர் வினோத் ஆகிய 3 பேரையும் புதுக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரனும், அன்புமணியும் எங்கே போனீர்கள்? - மாணிக்கம் தாகூர் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-anbumaniwhere-have-you-gone-manickam-tagore-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-anbumaniwhere-have-you-gone-manickam-tagore-asks#comments</comments><guid isPermaLink="false">ecc0fc08-e58b-4b07-9523-1c642eab13c5</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:27:49 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:27:49.052Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5dla6yh7/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5dla6yh7/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால், முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்தக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (நாளை) விசாரணைக்கு வரவுள்ள நிலையை உணர்ந்து, தனது நிலையைப் புரிந்துகொண்ட கர்நாடக அரசு தற்போது கபினியிலிருந்து முறைப்படி தண்ணீரைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.</p><p>இந்த மாதத் தொடக்கத்திலேயே கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என்று போராட்டங்களை முன்னெடுத்தனர்; தற்போது சட்டப்படி தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையிலும், அதைத் தடுத்து நிறுத்த அணை முற்றுகை நாடகங்களை அறிவித்துப் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமையைத் தடுத்து நிறுத்தத் துடிக்கும் பாஜகவின் இந்த வன்மமும் தமிழர்களுக்கு எதிரான துரோகமும் மன்னிக்க முடியாதது.</p><p>பாஜகவின் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது பழி போடுவதற்கு முன் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்; கர்நாடகத்தில் காங்கிரஸ் முதல்-மந்திரியோ இருந்தாலும் தவறு செய்தால் தமிழகத்தின் உரிமைக்காகத் தட்டிக்கேட்க நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. ஆனால், கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு எதிராகச் செய்யும் இந்த அப்பட்டமான துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் நயினார் நாகேந்திரன் எங்கே போனீர்கள்?. கூட்டணி கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எங்கே இருக்கிறார்?. ஏன் கூனிக் குறுகி மவுனம் காக்கிறீர்கள்?.</p><p>தமிழ்நாட்டைப் பற்றியும் நமது விவசாயிகளைப் பற்றியும் இவர்களுக்குக் கவலையே இல்லையா?. தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் உங்கள் கட்சியினரைக் கண்டிக்க வக்கில்லாமல் இங்கு வந்து அரசியல் நாடகம் நடத்துவதுதான் பாஜகவின் லட்சணமா?. பாஜகவின் இந்த நயவஞ்சகக் கொல்லைப்புற அரசியலும், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிவிட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-assaulting-a-young-woman-and-issuing-death-threats</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-assaulting-a-young-woman-and-issuing-death-threats#comments</comments><guid isPermaLink="false">38a2e470-9ca4-4f49-ab13-ba9ce0d1afc6</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:24:21 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:24:21.501Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Chennai,சென்னை,young woman,இளம்பெண்,Youth arrested,வாலிபர் கைது,கொலை மிரட்டல்,Death threats,assaulting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ci2r8n2m/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ci2r8n2m/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">இளம்பெண்</a>ணை தாக்கி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">கொலை மிரட்டல்</a> விடுத்த வாலிபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>இளம்பெண்ணுக்கு சமூகவலைதளம் மூலம் அறிமுகமான வாலிபர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> ஐ.சி.எப். பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">சமூக வலைதளம் </a>மூலம் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 20) என்பவருக்கு அறிமுகமாகியுள்ளார். 2 பேரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கணேஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்தப் பெண் அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>இளம்பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல்; வாலிபர் கைது</h2><p>இந்த நிலையில், அந்தப் பெண்ணை சந்தித்து பேச வேண்டும் என கணேஷ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்கு அந்த பெண் சென்றார். அங்கு கணேஷ், தன்னுடன் தொடர்ந்து பேசிப் பழக வேண்டும் எனக் கூறி அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசி, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-worth-3-crore-seized-at-chennai-airport-two-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-worth-3-crore-seized-at-chennai-airport-two-arrested#comments</comments><guid isPermaLink="false">ee1f4a98-2754-4a40-a0ac-210f5605dc9f</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:04:47 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:04:47.314Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,airport,Seizure,விமான நிலையம்,பறிமுதல்,2 arrested,2 பேர் கைது,gold smuggling,தங்கம் கடத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2zg6wzn0/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்க கட்டிகள் பறிமுதல், 2 பேர் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/2zg6wzn0/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வந்த ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் சிக்கியது. இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">2 பேர் கைது </a>செய்யப்பட்டனர். </p><h2>தங்கம் கடத்தல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> மீனம்பாக்கம் சர்வதேச <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">விமான நிலையத்திற்கு</a> வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தங்கம் கடத்தி</a> வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். </p><p>அப்போது மியான்மர் நாட்டை சேர்ந்த இளம்பெண் மற்றும் 30 வயது வாலிபர் ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.</p><h2>ரூ.3 கோடி தங்கம் பறிமுதல், 2 பேர் கைது</h2><p>இதையடுத்து வாலிபரின் உடைமைகளை அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்தனர். பின்னர் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்திய தங்க கட்டிகள் சிக்கியது. </p><p>2 பேரிடமிருந்து மொத்தம் 1 கிலோ 967 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டிக்கெட் இன்றி பயணம்: திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நேற்று ஒரே நாளில் 408 பேரிடம் ரூ.7.38 லட்சம் வசூல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ticketless-travel-rs-738-lakh-collected-from-408-people-in-a-single-day-yesterday-in-the-trichy-railway-division</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ticketless-travel-rs-738-lakh-collected-from-408-people-in-a-single-day-yesterday-in-the-trichy-railway-division#comments</comments><guid isPermaLink="false">1178aeda-bc5a-4754-bc3e-4c06fa5fc0bd</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:48:10 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:48:10.892Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,railway station,டிக்கெட் பரிசோதனை,Ticket Examiner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/9y1eysgv/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/9y1eysgv/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டன. </p><p>அந்த வகையில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், டிக்கெட் இன்றி பயணித்த 408 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.7.38 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஒரே நாளில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-yercaud-for-the-holidays</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-yercaud-for-the-holidays#comments</comments><guid isPermaLink="false">afe05fa3-7b92-4e56-aaaf-4482acca183c</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:40:48 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:40:48.642Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,ஏற்காடு,Yercaud</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/oygjeuc3/8.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/oygjeuc3/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஏற்காடு,  </p><p>ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷன நிலை நிலவியது. இதனிடையே விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். அவர்கள் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏற்காடு ஏரி, லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட் மற்றும் பக்கோடா பாயிண்ட் போன்ற அனைத்து முக்கிய இடங்களை சுற்றி பார்த்தனர்.</p><p>இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட் டது. குறிப்பாக, ஏரிப்பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் படகு இல்லத்தில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>மேலும், தாவரவியல் பூங்கா மற்றும் குகை கோவில் போன்ற பகுதிகளி லும் இயற்கை அழகை ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அவர் கள் ஏற்காட்டின் சிறப்புகளான வீட்டு முறை தயாரிப்பு சாக்லேட்டுகள் காபி, மிளகு போன்ற பொருட்களை வாங்குவதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.</p><p>ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் ஹோம்ஸ்டேக்களில் பெரும்பாலான அறைகள் நிரம்பின. மேலும், கார், சுற்றுலா வாகனங்கள் சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தப் பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.</p>]]></content:encoded></item><item><title>மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய மந்திரியை சந்திக்க அமைச்சர் ஸ்ரீநாத் நாளை மறுநாள் டெல்லி பயணம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-arrest-issue-minister-srinath-to-travel-to-delhi-the-day-after-tomorrow-to-meet-the-union-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-arrest-issue-minister-srinath-to-travel-to-delhi-the-day-after-tomorrow-to-meet-the-union-minister#comments</comments><guid isPermaLink="false">29083676-c55d-4601-a0c5-2524f6d00d90</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:38:00.040Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,அமைச்சர் ஸ்ரீநாத்,Minister Srinath</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/lasvp20n/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/lasvp20n/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சிந்தாதிரிபேட்டையில் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நேற்று சுதந்திர தின விழாவையொட்டி நடைபெற்ற சமபந்தி விருந்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்றார். அவரிடம், இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல், உணர்வுப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேட்டிருப்பது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.</p><p>அதற்கு அமைச்சர் ஸ்ரீநாத் பதில் அளிக்கையில், "இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நான் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்கிறேன். அங்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும். மீனவர்கள் பிரச்சினையில் த.வெ.க. அரசு எடுக்கும் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை என்ன என்பதை செயலில் காட்டுவோம்" என்றார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-two-juveniles-arrested-for-stabbing-a-transgender-woman-and-snatching-her-mobile-phone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-two-juveniles-arrested-for-stabbing-a-transgender-woman-and-snatching-her-mobile-phone#comments</comments><guid isPermaLink="false">57fe384b-629b-4d8d-b57a-7f98419b4506</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:26:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:26:30.166Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>stabbing,கத்திக்குத்து,Thoothukudi,arrested,தூத்துக்குடி,செல்போன் பறிப்பு,transgender,திருநங்கை,mobile phone,சிறுவர்கள் கைது,snatching,minors</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/lt9ek2ey/2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 சிறுவர்கள் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/lt9ek2ey/2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே திருநங்கையைக் கத்தியால் குத்தி, அவரிடமிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">செல்போனைப் பறித்துச்</a> சென்ற 2 சிறுவர்களை போலீசார் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>திருநங்கையிடம் செல்போனை கேட்டு மிரட்டல்</h2><p>தூத்துக்குடி சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த திருநங்கை சித்ரா (வயது 47). இவர் புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று சித்ரா உணவகம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்த 2 சிறுவர்கள் அவரிடம் இருந்த செல்போனைக் கேட்டு மிரட்டியுள்ளனர். </p><h2>கத்திக்குத்து, செல்போன் பறிப்பு</h2><p>அதற்கு அவர் செல்போனைத் தர மறுத்துள்ளார். செல்போனைத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவின் வயிறு மற்றும் இடது முழங்கை ஆகிய இடங்களில் சரமாரியாகக் குத்தினர். பின்னர் அவரிடமிருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். </p><h2>மருத்துவ சிகிச்சை</h2><p>ரத்த வெள்ளத்தில் கிடந்த சித்ராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். </p><h2>2 சிறுவர்கள் கைது</h2><p>பறிமுதல் செய்யப்பட்ட சித்ராவின் செல்போன் டவர் சிக்னலை ஆய்வு செய்தபோது, அந்தச் சிறுவர்கள் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கே சென்ற புதியம்புத்தூர் போலீசார், தப்பியோடிய 2 சிறுவர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான 2 சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை: குற்றாலத்தில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-time-for-gas-cylinder-verification-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-time-for-gas-cylinder-verification-2#comments</comments><guid isPermaLink="false">b3f18c4d-653a-4f7f-9f2e-e9406959f711</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:14:45 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:14:45.026Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,குற்றாலம்,Courtallam,சுற்றூலா பயணிகள்</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/wqljkj34/6.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/wqljkj34/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகள், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.</p><p>முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.</p><p>இன்று விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி பழைய குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.</p><p>அருவிகளில் குளித்த சுற்றுலா பயணிகள் அருவிக்கரை பகுதியில் உள்ள கடைகளில் தேநீர், தின்பண்டங்களை வாங்கி ருசித்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-water-release-from-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-water-release-from-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">2054277d-bdd5-4f77-a272-f27d9bbc7abd</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:10:18.342Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/agvpxm8w/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/agvpxm8w/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடகா, கேரளம் உள்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட் டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடியானது.</p><p>இதற்கிடையே மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து மீண்டும் குறைந்தது. நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 4 ஆயிரத்து 385 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 80.31 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 80.93 அடியாக உயர்ந்தது.</p><p>இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,385 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 80.93 அடியிலிருந்து 81.31 அடியாக அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 42.27 டிஎம்சியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலியில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-kg-of-ganja-seized-in-tirunelveli-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-kg-of-ganja-seized-in-tirunelveli-2-arrested#comments</comments><guid isPermaLink="false">e93bac65-5e29-4347-b88d-38b9370d44aa</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:39:34 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:39:34.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Tirunelveli,திருநெல்வேலி,arrested,patrol,ரோந்து பணி,2 பேர் கைது,கஞ்சா பறிமுதல்,Ganja seized</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/sys5w8p4/7-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 7 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/sys5w8p4/7-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் போலீசாரின் துரித நடவடிக்கையால் 7 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட <a href="https://www.dailythanthi.com/topic/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">2 பேர் கைது</a> செய்யப்பட்டுள்னர். </p><h2>கஞ்சா விற்பனை</h2><p>திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலடிப்பட்டி ரெயில்வே நிலையம் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம், டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அந்தோணிராஜ் (வயது 25) மற்றும் பாரதிகண்ணன்(23) ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 7 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. </p><p>மேலும் விசாரணையில், முக்கூடல் காவல் நிலைய கஞ்சா வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த மாஜி(எ) ராகுல் என்பவர் தற்போது ஒடிசா மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து தமிழகத்திற்கு கஞ்சா சப்ளை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரது தொலைபேசி எண்ணை நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்ததில், மேற்சொன்ன நபர்கள் அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. </p><h2>7 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது</h2><p>இதனையடுத்து மேற்சொன்ன நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் ஆலடிப்பட்டி ரெயில்வே நிலையம் அருகே 7 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேரும் கைது செய்யப்பட்டனர். </p><p>இதுகுறித்து கங்கைகொண்டான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காஸ் சிலிண்டர் உண்மை சரிபார்ப்பு பணிக்கு அவகாசம் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-time-for-gas-cylinder-verification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-time-for-gas-cylinder-verification#comments</comments><guid isPermaLink="false">9a067841-9555-41aa-97b3-7a4d121840da</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:32:08 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:32:08.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Gas Cylinder,காஸ் சிலிண்டர்,கேஒய்சி,KYC</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/0dlhinfi/5.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/0dlhinfi/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழகத்தில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின், இ.கே.ஒய்.சி., எனப்படும் உண்மை சரிபார்ப்பு பணிக்கு, இன்றுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலி பெட்ரோலியம், எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கின்றன.</p><p>சிலிண்டர் வாங்கிய பின், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில், மத்திய அரசின் மானிய தொகை செலுத்தப்படுகிறது. இதற்காக, தமிழகம் உட்பட நாடு முழுதும் சிலிண்டர் பயனாளிகளில் உண்மை சரிபார்ப்பு பணி நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attacks-on-non-resident-indians-nris-have-increased-over-the-past-five-years-central-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attacks-on-non-resident-indians-nris-have-increased-over-the-past-five-years-central-government#comments</comments><guid isPermaLink="false">0aab3174-57d7-483a-8c14-f43670a157e7</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:28:36 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:28:36.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central Govt,Indians,வெளிநாடு வாழ் இந்தியர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/qi940mcc/National-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/qi940mcc/National-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி, </p><p>கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வாழ்ந்து வரும் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. </p><p>இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் 7 மடங்கு உயர்ந்துள்ளது. 2021-ல் வெறும் 15 ஆக பதிவான தாக்குதல் சம்பவங்கள் 2025-ல் 104 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 33, ஐக்கிய அரபு அமீரகத்தில் 32, இங்கிலாந்தில் 31, கனடாவில் 30 தாக்குதல் சம்பவங்கள் பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/publication-of-list-of-crop-loan-waivers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/publication-of-list-of-crop-loan-waivers#comments</comments><guid isPermaLink="false">e8b799d5-2fdc-42e8-ae1e-5274fa967da9</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:24:08 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:24:08.821Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டியல்,Crop loan,பயிர்க்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/8p79uu35/4.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/8p79uu35/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை, தமிழக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில், பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு, 2025 மே முதல், இந்த ஆண்டு பிப்ரவரி வரை, கூட்டுறவு நிறுவனங்களில், பயிர்க்கடன் பெற்ற, 14.43 லட்சம் விவசாயிகளின், 5,932 கோடி ரூபாய் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்தது.</p><p>மாவட்ட வாரியாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகள், அவர்களின் தள்ளுபடி தொகை விபரம் ஆகியவை, இணையதளத்தில் 'www.kooturavu.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள வி.ஏ.ஓ., அலுவல கங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில், பயிர்க் கடன் தள் ளுபடி திட்ட பயனாளிகள் பட்டியல் வழங்கப் பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-13</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-13#comments</comments><guid isPermaLink="false">66fdbaf5-074f-41f3-99ee-b27b9695b4e8</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:19:57 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:19:57.927Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,Holiday,விடுமுறை தினம்</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/u1n34r0j/2.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/u1n34r0j/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். </p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.   </p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-14#comments</comments><guid isPermaLink="false">6affd059-2bbf-4e20-b930-88d949e4746d</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:16:37 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:16:37.045Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/awn5wojo/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/awn5wojo/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> கோட்டத்தில் கீழப்பாவூர், அச்சன்புதூர் துணை மின் நிலையங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்பபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தென்காசி கோட்டம்</h2><p>தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீ வனஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (18.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர். </p><p>வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளைப்பூண்டு கிலோ ரூ.500-க்கு கொள்முதல்: அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/garlic-procured-at-500-per-kg-farmers-busy-with-harvest-operations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/garlic-procured-at-500-per-kg-farmers-busy-with-harvest-operations#comments</comments><guid isPermaLink="false">eb4651b0-ac60-440d-b9c6-a644bef0f8d7</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:12:23 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:12:23.149Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,Nilgiris,நீலகிரி,Garlic,Ooty garlic,வெள்ளைப்பூண்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/e82xgx6d/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/e82xgx6d/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோத்தகிரி,</p><p>மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் வெள்ளைப்பூண்டு கிலோ ரூ.500 -க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் வெள்ளைப்பூண்டை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.</p><h2>காய்கறிகள் சாகுபடி</h2><p>நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. </p><p>விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இதே போன்று ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக் கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்து, கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.</p><h2>வெள்ளைப்பூண்டு</h2><p>நீலகிரியில் விளையும் வெள்ளைப்பூண்டு அதிககாரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கிறது. இதனால் நீலகிரி பூண்டுக்கு எப்பொழுதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. </p><p>இதன் காரணமாக கோத்தகிரி சுற்று வட்டாரப்பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில் லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், ஈளாடா உள்பட பகுதிகளில் விவசாயிகள் பலர் மருத்துவ குணம் கொண்ட நீலகிரி பூண்டை தங்களது தோட்டங்களில் பயிரிட்டு வருகின்றனர். ஆனால் நடப்பாண்டு பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடவில்லை. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளது.</p><h2>ரூ.500-க்கு விற்பனை</h2><p>எனவே வெள்ளைப்பூண்டின் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த சில மாதங்களாக பூண்டு கிலோ ஒன்றுக்கு 500 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பூண்டு பயிரிட ஆர்வம் காண்பித்து வருவதுடன், விளைந்த பூண்டை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.</p><p><strong>இது குறித்து பூண்டு பயிரிட்டுள்ள ஈளாடா கிராம விவசாயி கூறியதாவது:-</strong></p><p>முதல் போகத்தில் அறுவடை செய்யப்படும் நீலகிரி பூண்டு சமையல் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2-ம் போகத்தில் அறுவடை செய்யும் பூண்டு விதைக்காக பயன்படுத்தப்படுகிறது. விதைக்காக நீலகிரி பூண்டுகளே பெரிதும் பயன்படுத்தப்படுவதால், 2-ம் போகத்தில் அறுவடை செய்யப்படும் பூண்டு விதைகளை இந்தியா முழுவதிலும் இருந்து வந்து விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.</p><p>தற்போது வரத்து குறைந்துள்ளதாலும், தேவை அதிகரித்து உள்ளதாலும், பூண்டின் கொள்முதல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டி யில் பூண்டு கிலோவுக்கு ரூ.500 வரை கொள்முதல் விலை 1 கிடைத்து வருகிறது. எனவே தற்போது பூண்டு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வருவதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஒக்கேனக்கல் ஆற்றில் நீர் வரத்து மீண்டும் அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">42b30018-85b3-4f92-88f6-f61329021c83</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:11:55 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:11:55.458Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,காவிரி,ஒக்கேனக்கல்,நீர் வரத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/s4zrs5g5/Cavuty.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒக்கேனக்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/s4zrs5g5/Cavuty.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகா, கேரளம் உள்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அதன்பிறகு நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடியானது.  </p><p>இந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரியில் 4.500 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. 3 நாட்களாக நீர் வரத்து சரிந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. மேட்டூர் அணையிலும் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீர் 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 81.3 அடியாக உயர்ந்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திருநெல்வேலியில் 17½ சவரன் தங்க நகைகள் மீட்பு; 8 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">a59ecc7b-73ec-483c-8dc2-a62980d7eb9b</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:10:32 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:10:32.712Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrest,திருட்டு,House,மீட்பு,recovery,வீட்டின் கதவை உடைத்து,Theft,gold jewelry,தங்க நகைகள்,door broken</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/e7a6yb5f/17%C2%BD-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 17½ சவரன் நகை பறிமுதல், 8 பேர் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/e7a6yb5f/17%C2%BD-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், ராதாபுரம் அருகே வீட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88">நகை</a> மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">பணம் </a>திருடிய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு மீட்கப்பட்ட 17½ சவரன் தங்க நகைகள் உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டது. </p><h2>முதியவர் புகார்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌந்தரபாண்டியபுரம் பகுதியில், கடந்த 6.8.2026 அன்று இரவு வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருடப்பட்ட</a> சம்பவம் தொடர்பாக, சிலுவைதாசன் (வயது 83) என்பவர் அளித்த புகாரின் பேரில் ராதாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. </p><h2>18½ சவரன் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் பணம் திருட்டு</h2><p>சம்பவத்தன்று வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதியினர் இரவு வீட்டை பூட்டிவிட்டு உறங்கச் சென்றுள்ளனர். மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த 18½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. </p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், இதேபோன்ற முந்தைய குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் விவரங்களும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப விசாரணையின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய நபர்களின் தொடர்பு எண்கள் மற்றும் சம்பவ நேரத்தில் அவர்களது செல்போன்களின் இருப்பிடத் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டன.</p><p>இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக சுரேஷ் (வயது 34), மாரிமுத்து(24), பாலகிருஷ்ணன்(25), முத்துராஜ்(22), மாசானம்(46), மணிகண்டன்(34), மைக்கேல் அந்தோணி பிரகாஷ்(36) மற்றும் முத்துமாரி(39) ஆகிய 8 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் சுரேஷ், மாரிமுத்து மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முத்துராஜ், மணிகண்டன் மற்றும் மைக்கேல் அந்தோணி பிரகாஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த மாசானம் மற்றும் முத்துமாரி ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். </p><h2>17½ சவரன் தங்க நகைகள் மீட்பு, 8 பேர் கைது</h2><p>கைது செய்யப்பட்ட மாசானம் மற்றும் முத்துமாரியிடமிருந்து, இந்த வழக்கில் திருடப்பட்ட தங்க நகைகளில் 17½ சவரன் தங்க நகைகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மீட்கப்பட்டன</a>. மீட்கப்பட்ட தங்க நகைகளை அதன் உரிமையாளர்கள் அடையாளம் கண்டு உறுதி செய்தனர். தொழில்நுட்ப உதவியுடன் துரிதமாக புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து 8 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து, திருடப்பட்ட தங்க நகைகளை மீட்ட ராதாபுரம் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார். </p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்த போலீஸ்காரர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-officer-who-fainted-at-independence-day-celebration-passes-away</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-officer-who-fainted-at-independence-day-celebration-passes-away#comments</comments><guid isPermaLink="false">f77f3b00-2362-4797-a247-b8b8450cbcb7</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:45:25 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:45:25.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,police,போலீஸ்,Chennai police,சுதந்திர தினம்,Independence Day,சுதந்திர தின விழா,Independence Day Celebration</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/lek2232i/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/lek2232i/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்த போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><h2>திடீர் நெஞ்சுவலி</h2><p>நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நேற்று நாடுமுழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற விழாவில், முதல்-அமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு காவல்துறையின் இசைக்குழுவினர் தேசபக்தி மற்றும் பாரம்பரிய இசையை வாசித்துக் கொண்டிருந்தனர்.</p><p>இந்த இசைக்குழுவில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பயிற்சி மையத்தின் வாத்திய இசை காவலர் தர்மராஜ் (வயது 53) பங்கேற்று வாத்தியம் வாசித்து வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியை தாங்க முடியாமல் அவர் மயங்கிய நிலையிலேயே சுருண்டு விழுந்தார்.</p><p>இதனால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக போலீசார் அவரை உடனடியாகத் தூக்கிக்கொண்டு அங்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்குக் கொண்டு சென்றனர்.</p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் தர்மராஜுக்கு சி.பி.ஆர். எனப்படும் இதயம் மீட்புச் சிகிச்சையை உடனடியாக வழங்கினர். பின்னர் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 3 மணியளவில் அவர் உயிரிழந்தார்.</p><p>உயிரிழந்த காவலர் தர்மராஜுக்கு ராணிமங்கலவள்ளி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், முடி வைத்தானேந்தல் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் உயிரிழந்த சம்பவம் தமிழக காவல்துறை வட்டாரத்திலும், அவரது குடும்பத்தினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-21</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-21#comments</comments><guid isPermaLink="false">b9eedd76-fd84-4b05-a901-d0547159761b</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:35:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:35:18.705Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/x6bvkxpz/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/x6bvkxpz/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்டத்தில் நாங்குநேரி, விஜயாபதி துணை மின் நிலையங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்பபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நாங்குநேரி (AMRL) மற்றும் விஜயாபதி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (18.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பினவருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம். </p><p>நாங்குநேரி, ராஜக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ் ஊர், பெருமளஞ்சி மேல் ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு: சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு - பொதுமக்கள் கவலை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-rise-in-dengue-fever-cases-among-children-public-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-rise-in-dengue-fever-cases-among-children-public-concerned#comments</comments><guid isPermaLink="false">a921724e-d218-4869-ab6c-b3af709e43fa</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:29:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:29:24.889Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,டெங்கு,Dengue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/vpay0oqi/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/vpay0oqi/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களிடையே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.  </p><p>காய்ச்சலால் பாதிக்கப்பட சிறுவர்கள் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>கும்பகோணம் டிகிரி காபி உள்ளிட்ட 5 உணவு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற தமிழக அரசு விண்ணப்பம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-applies-for-geographical-indication-gi-tags-for-five-food-products-including-kumbakonam-degree-coffee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-applies-for-geographical-indication-gi-tags-for-five-food-products-including-kumbakonam-degree-coffee#comments</comments><guid isPermaLink="false">6fb00cda-11c2-40bc-81f1-1b6fc4c3b40d</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:11:51 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:11:51.076Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,புவிசார் குறியீடு,coffee,கும்பகோணம்,Kumbakonam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/wpxguj8i/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/wpxguj8i/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பது, வேளாண் விளைபொருட்கள் மற்றும் அவை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பணிகளை, டி.என்.எபெக்ஸ் எனப்படும், தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் செய்து வருகிறது.</p><p>மேலும், தமிழகத்தின் தனித்துவமான, பாரம்பரியமிக்க பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தரும் பணியையும் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட புவியியல் அமைப்பு, ஒரு பகுதி, நகரம் போன்றவற்றுடன் தொடர்புடைய பாரம்பரிய தயாரிப்புக்கு, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதற்கு, இந்திய அறிவு அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.</p><p>அதன்படி தற்போது, திண்டுக்கல் மாவட்டம் - கொடைக்கானல் பன்றிமலை காபி, கடலுார் - காராமணிக்குப்பம் கருவாடு, தஞ்சை - கும்பகோணம் டிகிரி காபி, நீலகிரி நெய், மதுரை- பாலமேடு பால்கோவா ஆகிய ஐந்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக, டி.என்.எபெக்ஸ் நிறுவனம், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் வாயிலாக விண்ணப்பித்துள்ளது. </p><p>ஏற்கனவே, செட்டிநாடு கைமுறுக்கு மற்றும் சீடை, ராமநாதபுரம் பனை கருப்பட்டி, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டரை கருவாடு போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களுக்கு, வெளிநாடுகளில் தேவை அதிகரிக்கும். இது, ஏற்றுமதி அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. எனவே, தமிழகத்தில் தனித்துவமான பாரம்பரியமிக்க பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பெறுவதன் வாயிலாக, அவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும். இதனால், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்' என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>குற்றாலத்தில்  குவிந்த சுற்றுலா பயணிகள்-அருவிகளில் உற்சாக குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-courtallam-enthusiastic-bathing-in-the-waterfalls-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-courtallam-enthusiastic-bathing-in-the-waterfalls-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">6d3c7269-9e38-4047-a70a-edb344641b19</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:56:51 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:56:51.723Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,குற்றால அருவி,அருவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/6ya2aewb/Coutralam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/6ya2aewb/Coutralam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அருவிகளில் உற்சாக குளியல்</p><p>மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயின் அருவி யில் தண்ணீர் மனதை குளிர்விக்கும் வகையில் கொட்டுகிறது. ஐந்தருவி யில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. பழைய குற் றாலம், புலி அருவியில் தண்ணீர் மிதமாக விழுகிறதுநேற்று சுதந்திர தினம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை என 2 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால், வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர். அவர்கள், அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்</p><p>.</p><h2>அலைமோதிய சுற்றுலா பயணிகள்</h2><p>எனவே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிப் பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக இருந்தபோது, சுற்றுலா பயணிகளை வரிசையில் நின்று குளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தி கண்காணித்தனர். குற்றாலத்தில் நேற்று காலையில் வெயில் அடித்த நிலையில், மாலையில் இதமான காற்று வீசியதால் ரம்மியமான சூழல் நிலவியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை மாநகரில் 3.7 கிலோ கஞ்சா, பைக், கார் பறிமுதல்: 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/37-kg-of-ganja-a-motorcycle-and-a-car-seized-in-nellai-city-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/37-kg-of-ganja-a-motorcycle-and-a-car-seized-in-nellai-city-4-arrested#comments</comments><guid isPermaLink="false">dba0ca0a-242d-433b-baf5-1bff95e42a8b</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:54:49 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:54:49.272Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Ganja,கஞ்சா,பறிமுதல்,Car,கார்,bike,seized,பைக்,4 arrested,4 பேர் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/psi7brbb/3.7-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3.7 கிலோ கஞ்சா, பைக், கார் பறிமுதல்; 4 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/psi7brbb/3.7-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாநகரில் டவுண், பெருமாள்புரம் பகுதிகளில்சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3.7 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a>, பைக், கார் ஆகியவற்றை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்தனர். </p><h2>போலீஸ் ரோந்து பணி</h2><p>திருநெல்வேலி மாநகரம் டவுண் மற்றும் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய போதைப் பொருளான கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. </p><h2>3.7 கிலோ கஞ்சா, பைக், கார் பறிமுதல்; 4 பேர் கைது</h2><p>இதனையடுத்து சீவலப்பேரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுடலைக்கண்ணு(எ) சுதாகர் (வயது 22), ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் மகேஷ்(20), பெருமாள்புரத்தைச் சேர்ந்த ரவி மகன் செல்வராஜ்(39), தியாகராஜநகரைச் சேர்ந்த போத்திராஜ் மகன் விஜயகுமார்(34) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 கிலோ 700 கிராம் கஞ்சா, பைக், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/four-people-arrested-under-the-goondas-act-in-nellai-in-a-single-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/four-people-arrested-under-the-goondas-act-in-nellai-in-a-single-day#comments</comments><guid isPermaLink="false">aa6f1a83-2077-4191-b35b-b2413b33a0f9</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:30:00.980Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Goondas act,குண்டர் சட்டம்,4 arrested,4 பேர் கைது,attempted murder,கொலை முயற்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5sda338m/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/5sda338m/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>நெல்லை மாநகரம், பேட்டை பகுதியில் நேற்று ஒரே நாளில் 4 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</a> செய்யப்பட்டனர். </p><h2>கொலை முயற்சி வழக்குகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாநகரம், பேட்டை சத்யா நகர், முத்துராமலிங்க நகரைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் சிவா (வயது 26), தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த சுந்தரசேகர் மகன் காளிதாஸ்(26) ஆகிய 2 பேர் நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குத்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். </p><h2>2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</h2><p>இதனையடுத்து பேட்டை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று மேற்சொன்ன 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். </p><h2>கஞ்சா போதை பொருள் விற்பனை</h2><p>திருநெல்வேலி மாநகரம், பேட்டையைச் சேர்ந்த சபூர்அலி மகன் சித்தர்பாதுஷா(23), துரைராஜ் மகன் மகாராஜன்(24) ஆகிய 2 பேர், நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த மருந்து சரக்கு குற்றவாளிகள் ஆவர். </p><h2>2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</h2><p>இதனையடுத்து பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று மேற்சொன்ன 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளைங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். </p>]]></content:encoded></item><item><title>ஆவணி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavani-month-puja-sabarimala-ayyappan-temple-portals-open-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavani-month-puja-sabarimala-ayyappan-temple-portals-open-today#comments</comments><guid isPermaLink="false">7b8ddd04-5a8b-4aef-be6d-50c13b5a6979</guid><pubDate>Sun, 16 Aug 2026 00:31:23 +0000</pubDate><atom:updated>2026-08-16T00:31:23.929Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சபரிமலை,Sabarimala,Ayyappan Temple,ஐயப்பன் கோவில்</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/blx22jdx/1.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/blx22jdx/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சபரிமலை</p><p>சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி. மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.</p><p>அதன்படி ஆவணி மாத பூஜைகளுக்காக இன்று (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவிலின் தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி, நடையை திறக்கிறார்.</p><h2>21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்</h2><p>இன்று மாலை நடை திறக்கப்பட்ட பிறகு சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்காது. நாளை (17-ந்தேதி) மாதாந்திர பூஜை தொடங்குகிறது. அன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.</p><p>தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப் பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், அதனைத்தெடர்ந்து நெய் அஷ்டாபிஷேகம், உச்ச அபிஷேகம், பூஜை. தீபா தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப்படும்.</p><h2>முன்பதிவு அவசியம்</h2><p>இந்த பூஜைகள் அனைத்திலும் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் என்பதால் மாதாந்திர பூஜையின் போதும், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.sabarima-laonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.</p><p>முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே மாதாந்திர பூஜையில் பங்கேற்க முடியும். ஆவணி மாத மாதாந்திர பூஜை 21-ந்தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் நிறைவ டைந்ததும் அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-todays-petrol-and-diesel-prices-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-todays-petrol-and-diesel-prices-in-chennai#comments</comments><guid isPermaLink="false">c424ca4e-9bb4-4904-9e29-a3f0bc993b25</guid><pubDate>Sun, 16 Aug 2026 00:20:29 +0000</pubDate><atom:updated>2026-08-16T00:20:29.042Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ohvlhq27/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-16/ohvlhq27/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (16.08.2026 ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>உறக்கத்தில் சார்ஜர் வயரை பிடித்த பிளஸ் 1 மாணவன்... மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-1-student-holding-charger-wire-while-asleep-dies-of-electrocution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-1-student-holding-charger-wire-while-asleep-dies-of-electrocution#comments</comments><guid isPermaLink="false">c0800bb6-1e48-42bf-abc0-e8277337232d</guid><pubDate>Sat, 15 Aug 2026 20:31:20 +0000</pubDate><atom:updated>2026-08-15T20:31:20.238Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,பிளஸ் 1</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/87ingdju/min.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூரில் மடிகணினி சார்ஜர் வயரில் கசிந்த மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/87ingdju/min.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருவள்ளூரில் மடிகணினி சார்ஜர் வயரில் கசிந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">மின்சாரம் </a>தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பள்ளி விடுமுறை</h2><p>திருவள்ளூர், பெரியகுப்பம்- கற்குழாய் தெருவைச் சேர்ந்தவர் செந்தில். பெயிண்டரான இவரது மகன் சீனிவாசன்(17), திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி விடுமுறை நாள் என்பதால் நேற்று மதியம் சீனிவாசன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.</p><h2>மின்சாரம் தாக்கி</h2><p>அப்போது, பக்கத்து வீட்டு சிறுவன், சீனிவாசன் வீட்டில் மடிகணினிக்கு சார்ஜ் போட்டதாக கூறப்படுகிறது. உறக்கத்தில் இருந்த சீனிவாசன், சார்ஜர் போட்டிருந்ததை கவனிக்காமல் சார்ஜர் வயரை பிடித்த போது, அதில் கசிந்த மின்சாரம் தாக்கி மயங்கியதாக தெரிகிறது. </p><h2>வழக்குப் பதிவு </h2><p>இதையடுத்து, சீனிவாசன், சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சீனிவாசன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>80-ஆவது சுதந்திர தினம் : தேசிய கொடிக்கு துதிக்கை உயர்த்தி வீர வணக்கம் செலுத்திய கோவில் யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-temple-elephant-salutes-national-flag</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-temple-elephant-salutes-national-flag#comments</comments><guid isPermaLink="false">8fc28ad6-dfb7-4f29-a7ac-02176d601246</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:28:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:28:35.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>salute,வீரவணக்கம்,கோவில் யானை,சுதந்திர தினம்,Independence Day,national flag,Temple Elephant,தேசிய கொடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/1e8wxivk/flagele.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோவில் யானை]]></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய கொடிக்கு துதிக்கை தூக்கி வீர வணக்கம் செலுத்திய கோவில் யானை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/1e8wxivk/flagele.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம், </p><p>தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ‘மங்களம்’ என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானை, தமிழகத்தின் சிறந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">கோவில் யானைகளில் </a>ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்ற பெருமைக்குரியது ஆகும்.</p> <h2>80-ஆவது சுதந்திர தின விழா</h2><p>மூவர்ண அலங்காரம்நாட்டின் 80-ஆவது<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9"> சுதந்திர தின</a> விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, ஆதி கும்பேஸ்வரர் கோவில் வளாகத்திலும் சுதந்திர தின விழா சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. விழாவையொட்டி, மங்களம் யானைக்கும் தேசபக்தி வண்ணம் பூசப்பட்டது. அதன் உடம்பில் பிரம்மாண்ட மூவர்ண தேசிய கொடி போர்த்தப்பட்டது. மேலும், அதன் நெற்றியில் அசோக சக்கரம் மற்றும் மூவர்ண மலர்களால் ஆன சிறப்பு மாலை அணிவிக்கப்பட்டு, கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டது.</p><h2>கம்பீர நடை</h2><p>இதனைத் தொடர்ந்து, பாகன்கள் துணையோடு யானை மங்களம் கோவில் பிரகாரத்தில் கம்பீர நடைபோட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யானையின் அழகை கண்டு மெய்சிலிர்த்தனர். ஊர்வலத்தின் நிறைவாக, கோவில் வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடி கம்பத்தின் அருகே மங்களம் யானை வந்து நின்றது.</p><h2>துதிக்கை உயர்த்தி வீர வணக்கம்</h2><p> அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், தனது துதிக்கையை உயர்த்தி, தேசிய கொடிக்கு கம்பீரமாக வீர வணக்கம் செலுத்தியது. இந்த அரிய காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து மகிழ்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அண்டை மாநிலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லையா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-no-safety-for-tamils-in-neighboring-states-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-no-safety-for-tamils-in-neighboring-states-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">ac83bcae-3dfc-40b7-80be-2c3feb864cf1</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:20:09 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:20:09.609Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/p2cnxsiv/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/p2cnxsiv/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய கட்டாயம் உண்மையிலேயே இருந்ததா? என கர்நாடக அரசு ஆதாரங்களுடன் பதில் சொல்ல வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஏன் சுட்டுக்கொல்ல வேண்டும்?</h2><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், அனூர் தாலுகா வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழக மக்களின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>வனத்துறை அவர்கள் வேட்டையாடச் சென்றதாகக் கூறுகிறது. அதேவேளையில், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் அவர்கள் திரும்பி வராத மாடுகளைத் தேடிக் காட்டுக்குள் சென்றவர்கள் என்று தெரிவிக்கின்றனர். இரு தரப்பின் கூற்றுகளிலும் உண்மை என்ன? என்பதை வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு உள்ளது.</p><p>ஆனால் எத்தகைய குற்றச்சாட்டு இருந்தாலும், கைது செய்ய முடிந்தவர்களை ஏன் சுட்டுக்கொல்ல வேண்டும்?</p><p>மடக்கிப் பிடிக்க முடியாத அளவுக்கு என்ன நடந்தது?</p><p>துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய கட்டாயம் உண்மையிலேயே இருந்ததா?</p><p>இந்தக் கேள்விகளுக்கு, கர்நாடக அரசு ஆதாரங்களுடன் பதில் வேண்டும். தமிழர்களின் உயிரை துப்பாக்கிக் குண்டுகளால் தீர்மானிக்கும் நிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><h2>3 தமிழர்கள் படுகொலை</h2><p>2015 இல் ஆந்திரக் காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் காயமே இன்னும் முழுமையாக ஆறாத நிலையில், கர்நாடகாவில் மேலும் மூன்று தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.</p><p>20 தமிழர்களின் மரணத்திலிருந்து எந்தப் பாடமும் கற்கவில்லையா?</p><p>ஒரு மனிதன் குற்றவாளி என்றால் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.</p><p>குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி தண்டிக்க வேண்டும். கையில் துப்பாக்கியை வைத்திருக்கிறோம் என்பதற்காக, அதை எளிய மக்கள் மீது பயன்படுத்தக் கூடாது.</p><h2>அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது?</h2><p>தமிழ்நாடு அரசே, கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்.</p><p>தமிழ்நாடு அரசு இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?</p><p>கர்நாடக அரசிடம் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும்.</p><p>சம்பவத்தின் முழு உண்மையையும் கண்டறியச் சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும்.</p><p>விசாரணை முடியும் வரை ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>உயிரிழந்தவர்களின் குடும்பங்களைத் தமிழக அரசு நேரடியாகச் சந்தித்து, உரிய நிவாரணம் மற்றும் சட்ட உதவியை வழங்க வேண்டும்.</p><p>உயிர் பிழைத்த நபரின் வாக்குமூலம் எந்த அழுத்தமும் இல்லாமல் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><h2>பாதுகாப்பு வேண்டும்</h2><p>இந்த மூன்று உயிர்களின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை, தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><p>சுட்டுக்கொல்லப்பட்டு உயிரிழந்த அந்த மூன்று தமிழர்களும் வேறு யாருமல்ல. மேட்டூர் அணை உருவாக்கப்பட்டபோது தங்களின் பூர்வீக வாழ்விடங்களையும் நிலங்களையும் இழந்து, அங்கிருந்து இடம்பெயர்ந்து கர்நாடக எல்லைப் பகுதிகளில் குடியேறிய மக்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.</p><p>அந்த மக்களின் தலைமுறைகள் இன்று கர்நாடக மண்ணில் வாழ்கின்றன.</p><p>அவர்கள் அந்நியர்கள் அல்ல.</p><p>அவர்கள் காவிரியின் வரலாற்றோடு வாழும் தமிழர்கள்.</p><p>காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம்.</p><p>ஆனால் அந்த முரண்பாடுகள் எல்லைப் பகுதிகளில் வாழும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் சூழலாக மாறக்கூடாது.</p><p>தமிழ்நாடு அரசு இதையும் தெளிவாக வலியுறுத்த வேண்டும்.</p><p>காவிரி நீருக்கான உரிமையைப் போலவே, காவிரிக் கரையில் வாழும் தமிழர்களின் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டும்.</p><h2>உரிய இழப்பீடு வழங்க வேண்டும்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர், கர்நாடக முதல்-மந்தியிடம் உடனடியாகப் பேசி, இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணையை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற விசாரணையுடன் நின்றுவிடாமல், சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் சட்ட உதவியும் தமிழக அரசு வழங்க வேண்டும்.</p><p>உயிர் பிழைத்த நபரின் பாதுகாப்பையும் மருத்துவ சிகிச்சையையும் உறுதி செய்ய வேண்டும்.</p><p>சம்பவத்தில் தவறு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செய்தவர்கள் </a>யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p>கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிர், உடைமை, வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.</p><p>ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையும் கருத்தில் கொண்டு, எல்லை மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நிரந்தரமானப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கார் விபத்தில் கல்லூரி முதல்வர் பலி: போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-principal-killed-in-car-accident-police-conducting-intensive-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-principal-killed-in-car-accident-police-conducting-intensive-investigation#comments</comments><guid isPermaLink="false">65309b89-4045-440c-afb9-d7da838e4031</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:14:04 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:14:04.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சாலை விபத்து,road accident,தமிழகம்,Erode,ஈரோடு,car accident,கார் விபத்து,college principal,கல்லூரி முதல்வர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xvqzivl1/vier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/xvqzivl1/vier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உளுந்தூர்பேட்டை,</p><p>உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்தில் கல்லூரி முதல்வர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.</p><h2>கல்லூரி முதல்வர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/erode">ஈரோடு</a> ராயல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 49). இவர் குமாரபாளையத்தில் உள்ள ஒரு பிசியோதெரபி கல்லூரியில் இயன்முறை மருத்துவப்பிரிவின் முதல்வராக பணியாற்றி வந்தார். </p><p>இவரது மனைவி கிருஸ்டினா (48). இவர் பவானி அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் அஸ்வின் (18). </p><p>இந்நிலையில் அஸ்வினை, சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக அய்யப்பன், கிருஸ்டினா மற்றும் அஸ்வின் ஆகியோர் தங்களது காரில் சென்னைக்கு சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். </p><h2>கட்டுப்பாட்டை இழந்த கார்</h2><p>காரை அய்யப்பன் ஓட்டினார். நேற்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது.</p><h2>கார்கள் மோதல்</h2><p>மோதிய வேகத்தில் சாலையின் மறுமார்க்கத்தில் திருச்சி- சென்னை செல்லும் சாலையில் பாய்ந்த கார், அவ்வழியாக சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ்சின் பக்கவாட்டில் உரசியதோடு, அதன் பின்னால் உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு காரின் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.</p><p>இந்த விபத்தில் அய்யப்பன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஸ்வின், கிருஸ்டினா மற்றும் பள்ளத்தில் கவிழ்ந்த காரில் பயணித்த உளுந்தூர்பேட்டை சக்தி நகரை சேர்ந்த மோகனவேல் (50), அவரது மனைவி அன்பரசி (48), மகன் சதீஷ் (23) ஆகியோர் படுகாயமடைந்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் படுகாயமடைந்த அஸ்வின் உள்பட 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டோருக்கு தனிப் பிரிவு வேண்டும் - பிரதமருக்கு ஜோதிமணி எம்.பி. கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-separate-category-needed-for-backward-classes-mp-jothimani-writes-to-the-prime-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-separate-category-needed-for-backward-classes-mp-jothimani-writes-to-the-prime-minister#comments</comments><guid isPermaLink="false">d0fe17dd-1b75-4c1f-ab3b-909726841ed7</guid><pubDate>Sat, 15 Aug 2026 16:05:18 +0000</pubDate><atom:updated>2026-08-15T16:05:18.513Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜோதிமணி,ஜோதிமணி எம்.பி.,Jothimani,jothimani mp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/jn03gmc3/jothimani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/jn03gmc3/jothimani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தனிப் பிரிவு வேண்டும்</h2><p>2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC/SEBC) தெளிவான தனிப் பிரிவு உடனடியாகச் சேர்க்கப்பட வேண்டும்!</p><p>​மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், இந்திய தேசிய காங்கிரஸும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதி வாரிக் கணக்கெடுப்பின் முதன்மை நோக்கமே உண்மையான சமூக நீதியை நிலைநாட்டி, அனைவருக்குமான உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Development) சாத்தியப்படுத்துவதுதான்.</p><h2>உரிய திருத்தம் செய்க</h2><p>​தற்போது வெளியிடப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கணக்கெடுப்பு </a>படிவத்தில் OBC பிரிவினருக்குத் தனிப் பிரிவு மறுக்கப்பட்டிருப்பது சமூக நீதிக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட மக்களின் துல்லியமான எண்ணிக்கையும், அவர்களின் சமூக-பொருளாதார நிலையும் வெளிவந்தால் மட்டுமே அவர்களின் உரிமைகளும் நலத்திட்டங்களும் முழுமையாகச் சென்றடையும்.</p><p>​தெலங்கானா மாநில அரசு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய கணக்கெடுப்பு மாதிரியைப் பின்பற்றி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை மந்திரியும் உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம் அருகே சோகம்: லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-villupuram-two-private-company-employees-killed-after-being-hit-by-a-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-villupuram-two-private-company-employees-killed-after-being-hit-by-a-lorry#comments</comments><guid isPermaLink="false">0531802f-4af0-485a-bd4a-1900baa5e585</guid><pubDate>Sat, 15 Aug 2026 15:59:36 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:59:36.398Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,விழுப்புரம்,Villupuram</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/sezj7mwh/adkie.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-15/sezj7mwh/adkie.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம், </p><p>விழுப்புரம் அருகே லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.</p><h2>நண்பர்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/villupuram">விழுப்புரம்</a> அருகே உள்ள சிந்தாமணி மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் தர்மன் மகன் நரேஷ் (வயது 22). இவரும் சிந்தாமணி கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் அருண்குமார் (23) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தனர். </p><h2>லாரி மோதியது</h2><p>இந்நிலையில் அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் முத்தாம்பாளையம் புறவழிச்சாலையில் இருந்து சிந்தாமணி நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டிச்சென்றார்.</p><p>முத்தாம்பாளையம் முருகன் கோவில் பாலம் அருகே சென்றபோது பின்னால் சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி நோக்கி இரும்பு பிளேட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.</p><h2>சிகிச்சை</h2><p>இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். </p><h2>வழக்குப்பதிவு</h2><p>விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான அரியலூர் மாவட்டம் கல்லூர் பகுதியை சேர்ந்த வினோத் (35) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>