<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 10 Aug 2026 07:49:30 +0000</lastBuildDate><item><title>முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க: மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-murasolis-journey-continue-beyond-a-hundred-years-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-murasolis-journey-continue-beyond-a-hundred-years-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">03d1f247-4d09-42ac-b6d6-a4af989f49c8</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:43:32 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:43:32.142Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,முரசொலி,Murasoli</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/72yx4wpr/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/72yx4wpr/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!</p><p>தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன்.</p><p>அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு, விவசாயிகளை ஏமாற்றும் வேலை: டிடிவி தினகரன்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hike-in-support-prices-for-paddy-and-sugarcane-is-a-move-to-deceive-farmers-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hike-in-support-prices-for-paddy-and-sugarcane-is-a-move-to-deceive-farmers-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">8f525c47-5e2d-47ac-a413-9501a3dd0176</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:35:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:35:18.777Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தவெக அரசு,tvk govt</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/zqvnn172/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/zqvnn172/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடங்கி நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு வரை அனைத்து அறிவிப்புகளுமே விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றும் வேலை - தேர்தல் வாக்குறுதியில் சொல்வது ஒன்று ஆட்சிக்கு வந்த பின்பு செய்வது வேறு என்பதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. </p><p>தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், சன்னரக நெல் குவிண்டாலுக்கு 2,750 ரூபாயாகவும், பொதுரக நெல் 2,600 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும், கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். </p><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில், நெல் குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 4,500 ரூபாயும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற மறுப்பது நம்பி வாக்களித்த விவசாயப் பெருமக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும். </p><p>ஏற்கனவே, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை முழுமையாக நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் விவசாயப் பெருமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்திருக்கும் இன்றைய அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறியா ? என்று கேட்கும் வகையில் அமைந்திருக்கிறது. </p><p>60 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் 2500 ரூபாய், ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் , வேலை தேடும் பட்டதாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் இளைஞர் நல நிதி என தவெக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று கூட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத நிலையில், 110 விதியின் கீழான முதலமைச்சரின் இன்றைய அரைகுறையான அறிவிப்பு தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது வேறு என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. </p><p>எனவே, கொடுத்த வாக்குறுதியின் படி நெல் குவிண்டாலுக்கு 3,500 ரூபாயாகவும், கரும்பு டன்னுக்கு 4,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிடுவதோடு, தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை அறைகுறையாக அறிவித்து மக்களை ஏமாற்றாமல் முழுமையாக நிறைவேற்றிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>  ]]></content:encoded></item><item><title>மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் அரசு உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-immediately-inspect-mettur-reservoir-areas-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-immediately-inspect-mettur-reservoir-areas-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">f740f71f-b727-4d3f-af63-874e0abcab33</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:30:11.107Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,மேட்டூர்,Mettur,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jxak5r8v/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jxak5r8v/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் அரசு உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>தருமபுரி மாவட்டம் எரியூர் அருகேயுள்ள மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியானது, ரசாயனக் கழிவுகள் கலந்து நிறம் மாறி பச்சை பசேலென்று காட்சியளிப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வைரல் காய்ச்சல் பரவி வருவதாகவும் வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீராகவும், விளை நிலங்களுக்கு பாசன நீராகவும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இத்தகைய சுகாதார சீர்கேடு அப்பகுதி மக்களின் வாழ்வாரத்தை பெருமளவில் பாதிக்கும். அதுமட்டுமன்றி, ஏற்கனவே சரியான நேரத்திற்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்துவிடாததால், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எல்லாம் வறண்டு வருகின்றன. விளைநிலங்கள் எல்லாம் பாளம் பாளமாக வெடித்து நிற்கின்றன. பயிர்கள் காய்ந்து, சருகாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கைவசம் இருக்கும் தண்ணீரை பத்திரப்படுத்தி பாதுகாப்பதுதான் ஒரு நல்ல அரசுக்கு அழகு.</p><p>எனவே, மேட்டூர் நீர்த்தேக்கப் பகுதிகளில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு, தண்ணீர் அசுத்தம் அடைதலுக்கான காரணங்களை கண்டறிவதோடு, தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் முறையாகப் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எம்.ஜி.ஆருடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொண்ட சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-shared-his-memories-with-mgr</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-shared-his-memories-with-mgr#comments</comments><guid isPermaLink="false">564f231b-ee76-4c32-849d-4ade9d6e20b8</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:23:32 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:23:32.294Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,MGR,எம்.ஜி.ஆர்.,ஜேசிடி பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/18xcjsz2/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/18xcjsz2/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்யுடனான தனது நினைவுகளை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் சட்டசபையில் பகிர்ந்துகொண்டார்.</p><p><strong>அவர் கூறியதாவது:-</strong></p><p>"ஒரு சுவையான, மனதில் என்றும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. இங்கு இப்போது சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 1984-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 12-ம் தேதி எம்.ஜி.ஆருடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். மேற்கு கே.கே.நகர் பக்கம் கார் சென்று கொண்டிருந்தபோது ஓரு இடத்தில் கூட்டம் அதிகம் இருந்தது. என்ன என்று கேட்டார். இது ரேஷன் கடை, வில்லிவாக்கம் தொகுதியின்கீழ் வருகிறது என்று சொன்னேன். </p><p>உடனே காரை நிறுத்துங்கள் என்று எம்.ஜி.ஆர். சொன்னார்; காரை விட்டு இறங்கி ரேஷன் கடைக்குச் சென்றார். அங்கு ஒரு சாதாரண ஸ்டூல் இருந்தது. அதில் அவரே உட்கார்ந்து கொண்டார். அரிசியை காண்பிக்கச் சொன்னார். அரிசியை கையில் வைத்து ஆய்வு செய்தார். பின்னர் எடையை பின்பக்கமாக திரும்பி பார்த்தார்; எதற்கு பார்த்தார் என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். அங்கு வரிசையில் இருந்தவர்களிடம் அனைத்து பொருட்களும் கிடைக்கிறதா? எடை சரியாக இருக்கிறதா..? கடையை ஒழுங்காக திறக்கிறார்களா?' என்று கேட்டார். ஒழுங்காகத் திறக்கிறார்கள் என்று மக்கள் சொன்னார்கள்.</p><p>பின்னர் சிரித்துக்கொண்டே காரின் அருகில் வரும்போது என் கையை பிடித்து சொன்னார். 'இது ஒழுங்காக இருக்கும் வரைக்கும் நாம் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருவோம்' என்று சொன்னார். நீங்கள் எல்லாம் இதுபற்றி பேசும்போது எனக்கு நினைவு பின்னோக்கி சென்றது" என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உடுமலை நான்குவழிச்சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு சீரமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-of-high-tower-lighting-at-udumalai-four-lane-intersection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-of-high-tower-lighting-at-udumalai-four-lane-intersection#comments</comments><guid isPermaLink="false">304c5ecd-3520-4810-b5a2-dc7cc39f77ef</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:20:47 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:20:47.271Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொள்ளாச்சி,மின்விளக்கு,உயர் கோபுர மின்விளக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/98zjhua5/light33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயர் கோபுர மின்விளக்கு சீரமைப்பு
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/98zjhua5/light33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போடிப்பட்டி, </p><p>உடுமலை-பொள்ளாச்சி சாலையில் நான்குவழிச்சாலை சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்விளக்கு ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல அச்சப்பட்டனர். இதனால் அதை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். </p><p>மேலும் இதுதொடர்பான செய்தி தினத்தந்தியில் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, மின்வாரிய அதிகாரிகள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20">உயர் கோபுர மின்விளக்கை </a>சீரமைத்தனர். </p><p>இதனால் செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தனியார் ஆஸ்பத்திரியில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-employee-at-private-hospital-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-employee-at-private-hospital-2-arrested#comments</comments><guid isPermaLink="false">9b7dcf1c-7a1f-4fa9-b20e-61c9c59529bb</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:15:59 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:15:59.563Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,கைது,Sexual harassment,பாலியல் தொல்லை,female employee,பெண் ஊழியர்,private hospital,arreste</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/thcjednf/40.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் தொல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/thcjednf/40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அசாம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><p>அசாம் மாநிலம் காம்ருப் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிபார் ரகுமான், இவரின் மகன் ஹபிபர் ரகுமான் (வயது 28). இவர்கள் இவரும் அசாம் மாநிலம் சர்பரி மாவட்டத்தை சேர்ந்த அன்வர் அலி மகன் அஸிமுல் அலி (22) என்பவருடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்கள்.</p><h2>ஆஸ்பத்திரி</h2><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸிமுல் அலியின் உறவினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக நேற்று மாலையில் அஸிமுல் அலி மற்றும் ஹபிபர் ரகுமான் ஆகியோர் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். </p><h2>பாலியல் தொல்லை</h2><p>அங்கு அவர்கள் இருவரும் சேர்ந்து ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த 22 வயது பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஸிமுல் அலி, ஹபிபர் ரகுமான் ஆகியோரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரையில் மதுப்பிரியர்களின் புகலிடமாக மாறிய மயானத்தை மீட்டெடுத்த ‘வீ தி லீடர்ஸ்’ தன்னார்வலர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-the-leaders-volunteers-restore-a-graveyard-in-madurai-that-had-become-a-haven-for-alcoholics</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-the-leaders-volunteers-restore-a-graveyard-in-madurai-that-had-become-a-haven-for-alcoholics#comments</comments><guid isPermaLink="false">580a3c9f-23c0-4afe-8f66-1d5edbb4921e</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:12:56 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:12:56.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,மது பிரியர்கள்,மயானம்,alcoholics,we the leaders,வீ தி லீடர்ஸ் அமைப்பு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/wanx262d/2.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ வீ தி லீடர்ஸ் அமைப்பின் தன்னார்வாலர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ துப்பிரியர்களின் புகலிடமாக மாறிய மயானத்தை ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தன்னார்வாலர்கள் மீட்டெடுத்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/wanx262d/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையில் மதுப்பிரியர்களின் புகலிடமாக மாறிய மயானத்தை ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தன்னார்வாலர்கள் மீட்டெடுத்தனர்.</p><h2>மதுப்பிரியர்கள் கூடாரம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுரை மாவட்டம்</a> பாப்பாக்குடி பகுதியில் அமைந்துள்ள பொது<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> </a>மயான வளாகம், கடந்த சில மாதங்களாகப் பராமரிப்பின்றி புதர்கள் மண்டி வந்தன. இதனால், சமூக விரோதிகள் மற்றும் மதுப்பிரியர்களின் கூடாரமாக அப்பகுதி மாறி, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருந்தது.</p><h2>சுற்றுச்சூழல் மாத விழிப்புணர்வுப் பணி</h2><p>இந்நிலையில், சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ‘சுத்தமான, வளமான தமிழகம்’ இயக்கத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகளை ‘<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வீ தி லீடர்ஸ்</a>’அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாப்பாக்குடி மயானத்தை முற்றிலும் தூய்மைப்படுத்த அந்த அமைப்பினர் திட்டமிட்டனர்.</p><h2>அகற்றப்பட்ட டன் கணக்கிலான குப்பைகள்</h2><p>இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த தூய்மைப் பணிக்கு, கே.கே. பில்டர்ஸ் கண்ணன் தலைமை தாங்கி, முன்னிலை வகித்தார். இதில் திரளான அந்த அமைப்பின் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். </p><p>மயான வளாகத்தில் பல வருடங்களாகக் கிடந்த நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள் நெகிழி (பிளாஸ்டிக்) குப்பைகள், கழிவுகள், அடர்ந்து வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் ஆகியவை நவீன உபகரணங்கள் மற்றும் அவர்களால் முழுமையாக அகற்றப்பட்டு, வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது.</p><h2>பொதுமக்கள் பாராட்டு</h2><p>மயானங்கள் போன்ற பொது இடங்கள் சுகாதாரமற்றுப் போவதைத் தடுத்து, அவற்றை அமைதியான சூழலாக மாற்றும் நோக்கில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மேற்கொண்டு வரும் இந்த தூய்மைப் பணி, மதுரை பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், சமூக வலைத்தளங்களில் பரவலான பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் களை கட்டிய வண்டி வேடிக்கை... கடவுள் வேடம் அணிந்து வந்த பக்தர்களால் பரவசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vandi-vedikkai-comes-alive-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vandi-vedikkai-comes-alive-in-salem#comments</comments><guid isPermaLink="false">bea694c9-e870-4a18-a735-45d669a1ce78</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:41:21 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:41:21.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,god,கடவுள்,mariamman temple,மாரியம்மன் கோவில்,வண்டி வேடிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/nigz6mbc/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/nigz6mbc/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><h2>வண்டி வேடிக்கை</h2><p>சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல், கொடியேற்றம், அலகு குத்துதல், சக்தி அழைப்பு, பொங்கல் வைத்தல், தேரோட்டம் நடை பெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான வண்டி வேடிக்கை நேற்று இரவு நடந்தது. இதில், வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர். </p><p>செவ்வாய்பேட்டை வைஸ்ய நண்பர்கள் குழு சார்பில் கேரள மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை உருவான வரலாறு கதையை விளக்கும் வகையில் பக்தர்கள் ஆதி சங்கரன், மூகாம்பிகை, சொர்ணாம்பிகை, லட் சுமி, சரஸ்வதி, பராசக்தி, முனிவர் மற்றும் அரக்கன் ஆகியோர் வேடங்களை தத்ரூபமாக அணிந்து வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/5lwmsmy4/CHENNAI-11.jpg" /></figure><h2>மதுரை வீரன்-கருப்பசாமி</h2><p>இதேபோல், மற்றொரு வண்டியில் அமர்நாத் பனிலிங்கத்தில் சிவன், பார்வதி, விநாயகர், சந்திரன் ஆகிய கடவுள் வேடங்க ளையும், அப்புசெட்டி தெரு நண்பர்கள் குழு சார்பில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் என நால்வர் போன்று பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.</p><p>குறிப்பாக புராண கதைகளில் வரும் கடவுள்களை போன்று பக்தர்கள் வேடமாக அணிந்து வந்தனர். இதுதவிர, மதுரை வீரன், எல்லையை காக்கும் கருப்பசாமி போன்றும் பக்தர்கள் வேடம் அணிந்து அதற்கு ஏற்ற பாடலுக்கு ஆக்ரோஷமாக ஆடியவாறு வந்தனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/6cxc1jgf/Untitled-1.jpg" /></figure><h2>ராவணின் வரலாறு</h2><p>இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மற்றொரு வண்டியில் கைலாய மலையை தூக்க முயன்று தோல்வி அடைந்த ராவணின் வரலாறு நாடகத்தை அதற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் பக்தர்கள் வேடம் அணிந்து மிகவும் தத்ரூபமாக பொதுமக்கள் மத்தியில் நடித்து காட்டியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதேபோல், செவ்வாய்பேட்டையில் வசிக்கும் ராஜஸ்தான் வியாபாரிகள் சார்பில் பாபா ராம்தேவ் வேடமணிந்து வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/bof0y1i5/Untitled-2.jpg" /></figure><h2>ஆட்டம், பாட்டம்</h2><p>ஒவ்வொரு அலங்கார வண்டி முன்பும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் மேளதாளத்திற்கு ஏற்ப ஆட்டம், பாட்டத் துடன் ஊர்வலமாக வந்தனர். மேலும், குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் சிலர் முயல், கரடி, சிங்கம் போன்ற கார்ட்டூன் பொம்மை வேடம் அணிந்து ஆடியவாறு வந்தனர். இந்த கார்ட்டூன் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அலங்கரிக்கப்பட்ட அனைத்து வண்டிகளும் வண்டிப்பேட்டை பகுதியில் இருந்து செவ்வாய்பேட்டை மெயின்ரோடு வழியாக தேர் நிலையம் வந்து தீயணைப்பு நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றது.</p><p>இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, சூரமங்கலம், குகை, நெத்தி மேடு, டவுன் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் செவ்வாய்பேட்டை மெயின்ரோட்டில எங்கு பார்த்தாலும் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முடிவில், சிறப்பாக அலங்கரித்து ஊர்வலமாக வந்த வண்டிகளுக்கு கோவில் விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>ராஜேந்திர சோழனின் வீரமும் வெற்றியும் வரலாற்றுப் பக்கங்களில் கர்ஜிக்கிறது: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-valor-and-victory-of-rajendra-chola-roar-across-the-pages-of-history-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-valor-and-victory-of-rajendra-chola-roar-across-the-pages-of-history-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">a5add3ac-0570-487c-ad9b-9a4ea54fac45</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:21:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:21:41.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,ராஜேந்திர சோழன்,Rajendra Chola</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/vgqwc70i/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/vgqwc70i/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாமன்னர் ராஜேந்திரன் சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”கடல் கடந்து கொடி நாட்டிய மாமன்னர்! கங்கை கொண்ட சோழபுரம் படைத்த பேரரசர், தமிழரின் வீரத்தையும் ஆட்சித்திறனையும் உலகறியச் செய்த மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இன்று!</p><p>நீர்வளம், நிர்வாகம், கலை, கட்டிடக்கலை என அனைத்திலும் தொலைநோக்குப் பார்வையுடன் தடம் பதித்த மாமன்னர் ராஜேந்திர சோழன், வெறும் வரலாற்றின் மன்னர் அல்ல தமிழர் பெருமையின் அழியாத அடையாளம்! ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவரது வீரமும் வெற்றியும் வரலாற்றுப் பக்கங்களில் கர்ஜிக்கிறது!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது சோகம்: பாம்பு கடித்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-year-old-boy-dies-after-snake-bite-at-home-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-year-old-boy-dies-after-snake-bite-at-home-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">7f99b8b3-d187-4bef-981c-92cbbb5e9167</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:19:08 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:19:08.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,Snake,ஆவடி,பாம்பு,Aavadi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/oxep76eg/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/oxep76eg/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நிச்சிஷ் (8 வயது). இவர், ஆவடி கவுரி பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் நிச்சிஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் இல்லாததால் இருட்டாக இருந்துள்ளது.</p><p>இந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்த பூனை பயங்கரமாக சத்தமிட்டு கத்தியது. இதையடுத்து நிச்சிஷ் பூனையை தூக்குவதற்காக அருகில் சென்றார். அப்போது பூனையை கடிக்க வந்த விஷப்பாம்பு திடீரென நிச்சிசை கடித்தது. இதில் அலறித்துடித்த சிறுவனை அவரது பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.</p><p>அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-cauvery-water-regulation-committee-is-set-to-meet-in-delhi-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-cauvery-water-regulation-committee-is-set-to-meet-in-delhi-tomorrow#comments</comments><guid isPermaLink="false">54a0c3e3-a0f0-4b88-bcfb-a467e33e9c55</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:13:35 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:13:35.090Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery issue,காவிரி விவகாரம்,காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்,Cauvery Water Regulation Committee</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/tka8cm3n/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/tka8cm3n/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>புதுடெல்லி,</p><p>சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மாதம் ஒருமுறை கூடி வருகிறது. அதன் துணை அமைப்பான காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு மாதம் இத்தனை முறை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இல்லை. எப்போது வேண்டுமானாலும் அது கூடும். </p><p>அந்த வகையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139ஆவது கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. </p><p>காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் திறந்துவிடப்படும் தண்ணீர் குறித்து விவாதிப்பதற்காக கூடுகிறது. </p><p>தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். </p><p>கர்நாடக அரசு ஆகஸ்ட் மாதம் 45.5 டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டிய நிலையில் ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 88 டிஎம்சி திறக்க வேண்டிய நிலையில் 10 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>நாங்கள் தினம் தினம் டென்ஷனாக இருக்கிறோம்... அமைச்சர் ஆனந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-under-tension-every-single-day-minister-anand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-under-tension-every-single-day-minister-anand#comments</comments><guid isPermaLink="false">9041de27-a5e9-4ece-9698-46c167989c46</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:45:04 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:45:04.791Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,MRK Panneerselvam,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jt5q24e0/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jt5q24e0/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடந்து வருகிறது.  இந்தநிலையில், 2 நாள் விடுமுறை முடிந்து தமிழக சட்டசபை  காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் இரங்கல் குறிப்புவாசிக்கப்பட்டது.</p><p>தொடர்ந்து பட்ஜெட் பொது விவாதத்தின் போது "நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்; நாங்கள் அனைவரும் டென்ஷனாக இருக்கிறோம் என்று சட்டமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். இதற்கு  நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதில் அளித்து கூறுகையில்,</p><h2>தினம் தினம் டென்ஷன்</h2><p>“சின்ன வாய்க்கால் பிரச்சினைதான்... இன்று காலையில்கூட போன்செய்து சரியாகிவிட்டாதா என்று கேட்கக்கூடிய முதல்-அமைச்சர்தான் இருக்கிறார்; நீங்களாவது. 5 வருஷம் டென்ஷனாக இருந்தீங்க. நாங்கள் தினம் தினம் டென்ஷனாக இருக்கிறோம்; சின்ன விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு அப்படியொரு பயம் இருக்கிறது. என்று அவர் கூறினார்.</p><p>தொடர்ந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், “அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் எப்போதும் பிசி ஆனந்தாக வலம் வருகிறார்... அனைத்து கட்சித் தொண்டர்களும் அவரை பார்த்து வருகின்றனர்; புதிதாக வந்த இயக்கம்.. இனிமேல் தான் உங்களுக்கு தெரியபோகிறது. பேசுவது எளிது; அதை செயல்படுத்தும்போது தான் கஷ்டங்கள் தெரியும்” என்று பேசினார். இதனால் அவையில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் தனித்தீர்மானம் மீதான விவாதம்;  அமைச்சர் வன்னி அரசு பேச்சால்  அவையில் சலசலப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-the-tamil-thai-special-resolution-minister-vanni-arasus-remarks-cause-a-stir-in-the-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-the-tamil-thai-special-resolution-minister-vanni-arasus-remarks-cause-a-stir-in-the-house#comments</comments><guid isPermaLink="false">61fb97db-85c3-469c-bf0a-611b96b99fb4</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:31:42 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:31:42.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Assembly,வன்னி அரசு,Vanni Arasu,தனித்தீர்மானம்,தமிழ்த்தாய்,tamil thai valthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/7eqbffvt/assembly.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/7eqbffvt/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கவர்னர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என தொடர்ச்சியாக சர்ச்சை எழுந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பின்னுக்கு தள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.  முதல் அமைச்சராக  விஜய் பதவியேற்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதனை தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பதவியேற்பு விழாவில் கூட அதே போல் பாடப்பட்டது.  </p><h2>கவர்னர் மாளிகை</h2><p>சமீபத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மனியம் சுந்தரனார் பெயர் கொண்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் மாளிகை உத்தரவிட்டிருந்ததாக பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்</h2><p>இந்நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தனித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இன்று கொண்டு வந்துள்ளார். கல்வி நிறுவனம், அரசு அலுவலகம் என அனைத்து பொதுத்துறை நிறுவனம் நிறுவனங்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக பாட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை  முதல் அமைச்சர் விஜய் கொண்டு வந்து உரையாற்றினார்.  இந்த தீர்மானம் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் பேசினர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த  தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. </p> <h2>அவையில் சலசலப்பு</h2><p>முன்னதாக இந்த தீர்மானம் மீது பேசிய அமைச்சர் வன்னி அரசு கூறிய கருத்தால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. வன்னி அரசு கூறும் போது, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு ஆளும் கட்சி வரிசையில் தான் கைத்தட்டி வரவேற்றார்கள்; எல்லோரும் வரவேற்க வேண்டும்; இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான தீர்மானம்” என்றார். இதற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேசிய வன்னி அரசு எல்லோரும் வரவேற்றால் மகிழ்ச்சி..நான் குறையாக சொல்லவில்லை என்றார்.</p>]]></content:encoded></item><item><title>’தமிழ்த்தாய் வாழ்த்து ’ பாடலுக்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-explained-the-significance-of-the-invocation-to-tamil-thai-vazhthu-tamil-thai-vazhthu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-explained-the-significance-of-the-invocation-to-tamil-thai-vazhthu-tamil-thai-vazhthu#comments</comments><guid isPermaLink="false">7ab03b0a-3153-4026-b08e-4351b3f1626b</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:29:21 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:29:21.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்த்தாய் வாழ்த்து,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/kap8id3r/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/kap8id3r/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;</p><p>”உலகில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் பெயர் வைப்பார்கள். ஆனால் தாய் மொழியையே பெயராக வைக்கக்கூடிய கூட்டம் இந்த தமிழ் கூட்டம். தமிழரசன், தமிழழகன், தமிழழகி என மொழியின் பெயரையே தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகுப் பார்க்கக்கூடிய கூட்டம் நம் தமிழ்க்கூட்டம். இந்த கூட்டம் தமிழ் தாயை வாழ்த்தும் பாடல் தான் தமிழ்த்தாய் வாழ்த்து.</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>ஆனால் இது தமிழ்த்தாய்க்கான வாழ்த்து மட்டுமல்ல. இந்த பூமித்தாயை வாழ்த்தும் வாழ்த்து. இந்த நிலம், நிலத்தை சுற்றி கடல், அந்த நீல நிற கடலை புடவையாக சுற்றியிருக்கிறாளாம் பூமித்தாய். 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தை'. அந்த பூமித்தாய்க்கு ஒரு அழகான முகம். 'சீராரும் வதனமென' வதனம் என்றால் முகம். அந்த சீராரும் வதனம் எதுவென்று பார்த்தால் அது 'திகழ்பரத கண்டமெனில்' இந்த பூமித்தாயின் முகம் பாரதத்தாய், அவளுக்கு சிறு பிறை போன்ற நெற்றி, அது தென்னிந்தியா, அந்த நெற்றிக்கு அழகு அதில் வைக்கிற ஒரு பொட்டு. அது தமிழ்நாடு என்கிற தாய். அந்த பொட்டு நெற்றிக்கு மட்டுமா வாசம் தருகிறது. எட்டுத் திக்கும் மணமாக வீசுகிறது. அப்படி எட்டுத் திக்கும் புகழோடு இருப்பவள் தமிழ்த் தாய். இத்தனை காலங்கள் இருந்தால் தாய்க்கு வயதாகும் தானே.</p><h2>உலகத் தாய் வாழ்த்து</h2><p>ஆனால் இத்தனாயிரம் ஆண்டுகள் வளர்ந்த பின்னும் நீ எப்படி இன்னும் இளமையாக இருக்கிறாய்! உன் இளமையை வாழ்த்துகிறேன் என்று, தமிழை, தமிழ்நாட்டை வாழ்த்தி, தென்னிந்தியாவை சொல்லி, பாரத்தாயை வாழ்த்தி, உலகத் தாயையே வாழ்த்தும் இந்த தமிழ்த்தாய் வாழ்த்தை உலகத் தாய் வாழ்த்து என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன். </p><p>இனி பொது நிகழ்ச்சிகளில், கல்வி நிலையங்களில், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும். அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும். அவரை வாழ்த்தி இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்." </p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>கூடுவாஞ்சேரியில் 2 சிறுவர்களை கடித்த குரங்கு - கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monkey-bites-two-boys-in-guduvancheri-forest-department-sets-trap</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monkey-bites-two-boys-in-guduvancheri-forest-department-sets-trap#comments</comments><guid isPermaLink="false">4d2434bf-a074-4d42-a937-a40431a588bd</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:25:14 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:25:14.897Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,வனத்துறை,குரங்கு,monkey,கூடுவாஞ்சேரி,Guduvanchery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/4n9unhzs/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/4n9unhzs/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வண்டலூர்,</p><p>கூடுவாஞ்சேரியில் 2 சிறுவர்களை கடித்த குரங்கை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>சிறுவர்களை கடித்த குரங்கு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செங்கல்பட்டு </a>மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் 2-வது தெருவில், நேற்று காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு திடீரென கடித்துக் குதறியது. இதில் சிறுவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து, சிறுவர்களை அவர்களது பெற்றோர், அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.</p><h2>வனத்துறைக்கு தகவல்</h2><p>இதுகுறித்து அப்பகுதி நகராட்சி கவுன்சிலர் கவுசல்யா பிரகாஷ், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குரங்கை பிடிப்பதற்காக அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு, அதற்குள் வாழைப்பழத்தை வைத்து குரங்கை பிடிக்க வனத்துறை ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர். அந்த குரங்கு அங்கிருந்து திடீரென மாயமானது. தொடர்ந்து குரங்கை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.</p><h2>தொடர்ந்து அட்டகாசம்</h2><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு நந்திவரம் பகுதியில் உள்ள புதுப்பாளையத்தம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த 5 பக்தர்களை குரங்கு கடித்துக் குதறியது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு நந்திவரம் அங்கன்வாடி மையம் அருகே தெருவில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை குரங்கு கடித்தது.</p><p>இந்த நிலையில், மீண்டும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பகுதிகளில் குரங்குகள் சுற்றித்திரிந்து குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை கடித்து அட்டகாசம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><h2>பொதுமக்களுக்கு வேண்டுகோள்</h2><p>இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "தெருக்களில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவு மற்றும் தின்பண்டங்களை வழங்கக்கூடாது. குரங்குகளுக்கு தொடர்ந்து உணவு வழங்கினால், அந்தப் பகுதியில் உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவை மீண்டும் மீண்டும் அங்கு வரத் தொடங்கும். ஒரு கட்டத்தில் உணவு கிடைக்காதபோது, பொதுமக்களை அச்சுறுத்துவதுடன், கடிக்கவும் தொடங்குகின்றன. எனவே, குரங்குகளுக்கு உணவு வழங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incentive-for-paddy-sugarcane-purchase-hike-chief-minister-vijays-announcement-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incentive-for-paddy-sugarcane-purchase-hike-chief-minister-vijays-announcement-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">65af624b-4c8e-40c8-8632-915891e64cc6</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:14:46 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:14:46.565Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊக்கத்தொகை,Paddy,நெல்,Incentive,sugarcane,கரும்பு,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/hhgb2ty5/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/hhgb2ty5/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ் நெல் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்து முதல்-அமைச்சர் விஜய் கூறியதாவது;</p><h2>ஊக்கத்தொகை</h2><p>விவசாயிகளில் நலனை பாதுகாக்கும் நோக்கில் நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம். சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.289, பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.150ம் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு  ரூ.2,750, பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 கிடைக்கும். </p><p>சர்க்கரை ஆலைகளில் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.3290.50வழங்குகிறது. அத்துடன்  கரும்புக்கான ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.709.50 தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4,000 விலையாக கிடைக்கும். </p><h2>வரலாற்றிலேயே முதல் முறை</h2><p>நெல்லுக்கு ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. அதேபோல, கரும்பு டன் 134க்கு மேல் வழங்குவதும் இதுதான் முதல் முறையாகும். நமது அரசு விவசாயிகளை விட்டுவிடாமல் தோளோடு தோல் கொடுத்து, விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பிறந்தநாள்: வானதி சீனிவாசன் வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-master-praggnanandhas-birthday-vanathi-srinivasan-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-master-praggnanandhas-birthday-vanathi-srinivasan-wishes#comments</comments><guid isPermaLink="false">f5dfa7c1-0657-4d0f-b5b4-30af89e0e4ed</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:05:36 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:05:36.026Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Birthday Wish,வாழ்த்து,வானதி சீனிவாசன்,பிறந்தநாள்,பிரக்ஞானந்தா,செஸ் கிராண்ட் மாஸ்டர்,Grand Master,Praggnanandha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/e9r24kxk/38.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/e9r24kxk/38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வானதி சீனிவாசன் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.</p><h2>வாழ்த்து</h2><p>இது தொடர்பாக, தேசிய பாஜக மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இந்தியாவின் சதுரங்க நாயகன், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். </p><p>உங்களது அர்ப்பணிப்பு, அபாரத் திறமை, விடாமுயற்சி ஆகியவை இந்தியாவின் இளம் சதுரங்க வீரர்களுக்கு மிகப்பெரும் உத்வேகமாகத் திகழ்கின்றன. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தி, பல வெற்றிகளைப் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-resolution-moved-by-chief-minister-vijay-passed-unanimously</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-resolution-moved-by-chief-minister-vijay-passed-unanimously#comments</comments><guid isPermaLink="false">f6b49299-032e-419d-be72-47c4e3d2f577</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:01:00 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:01:00.703Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,TN Assembly,தமிழ்த்தாய் வாழ்த்து,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,TamilThai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/2hkwp7a7/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/2hkwp7a7/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>தமிழ் என்றால் கெத்து</h2><p>இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றால் கெத்து; தமிழ் என்றால் அது தனி பவர். ஒரு பெயரே, ஒரு சொல்லே மிகப்பெரிய வரலாறுன்னா அது தமிழ்தான். தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல; நம் உயிர்; பேசினால் ஓசை மட்டும் இல்லை, உணர்வும் வரும்; நம் தாய்மொழி குறித்த உணர்வை புரியவைக்க தாய் மொழி, தமிழ் மொழி என்று சொல்வதே போதும்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. உணர்வோடு கலந்திருக்கக்கூடிய தமிழை பின்னுக்குத் தள்ளினால் எப்படி பொறுத்துக்கொள்வது?; தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலிடத்தில் இருக்க வேண்டும்; அது நம் உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.</p><h2>திமுக ஆதரவு</h2><p>இதனையடுத்து முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக சார்பில் எம்.எல்.ஏ. கோவி.செழியன் பேசுகையில், “அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என முதலில் அரசாணை வெளியிட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர். தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் பாட வேண்டும் என 2021 டிச. 17இல் அரசாணை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரின் பெயரில் உள்ள பல்கலைகழகத்திலேயே 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது அடிக்கடி மாறுபடும் இந்த சூழலை மாற்றிட இதனை சட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.</p><h2>அதிமுக ஆதரவு</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் பாடல் அல்ல..! அது நம் பண்பாட்டின் அடையாளம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரானது அல்ல; தேசப்பற்றும் மொழிப்பற்றும் வேறு வேறானது அல்ல.. அரசியலில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால் தமிழ் என்று வரும்போது நாம் அனைவரும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்” என்று கூறினார்.</p><h2>ஒருமனதாக நிறைவேற்றம்</h2><p>தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமான அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் - சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தனித்தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilthai-vazhthu-mandatory-at-government-events-chief-minister-vijay-resolution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilthai-vazhthu-mandatory-at-government-events-chief-minister-vijay-resolution#comments</comments><guid isPermaLink="false">94f24607-f564-4ffc-b6d2-45e3b25cc042</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:10:26 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:12:00.728Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,தனித்தீர்மானம்,தமிழ்த்தாய் வாழ்த்து,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/8jje0xje/Untitled-6-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/8jje0xje/Untitled-6-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். </p><h2>முதல்-அமைச்சர் விஜய் பேச்சு </h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக</a> சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் என்ற கோமுகி மணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசினர் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- </p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-ம் ஆண்டு எழுதப்பட்ட மனோன்மணியம் என்ற நாடக நூலின் பாயிரத்தில் இருந்து எடுக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து 1970-ம் ஆண்டு நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/7iw1gddc/Untitled-6.jpg" /></figure><h2>அதிகாரபூர்வ அங்கீகாரம்</h2><p>2021-ம் ஆண்டு டிசம்பர் 12 முதல் மாநில பாடலாக அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டது. </p><p>இந்த நிலையில், மத்திய அரசின் உள்துறை  அமைச்சகத்தால் 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதிய கடிதத்தில், மாநில பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1970-ம் ஆண்டில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்படுவது மரபுத்தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது. </p><h2>முதலில் பாடப்படுவது கட்டாயம்</h2><p>ஆகவே, தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து  கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கொண்டுவந்த இந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பட்ஜெட் மீதான 2-வது நாள்; தமிழக சட்டசபை கூடியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-assembly-convenes-for-2nd-day-on-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-assembly-convenes-for-2nd-day-on-budget#comments</comments><guid isPermaLink="false">3c9977f8-3de1-40c9-a0e7-8611dcab489f</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:11:32 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:11:32.455Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,தமிழக சட்டசபை,பட்ஜெட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/tlj983zl/tvk33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/tlj983zl/tvk33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடந்து வருகிறது.  இந்தநிலையில், 2 நாள் விடுமுறை முடிந்து தமிழக சட்டசபை  காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் இரங்கல் குறிப்புவாசிக்கப்பட்டது. </p> <p>அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழ கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதாவது, </p><p>நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில் அரசு தனித்தீர்மானம்</a> கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்து பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளில் கரை ஒதுங்கிய திமிங்கலம் பாதுகாப்பாக மீட்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whale-that-washed-ashore-in-the-forests-of-muthupettai-has-been-safely-rescued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whale-that-washed-ashore-in-the-forests-of-muthupettai-has-been-safely-rescued#comments</comments><guid isPermaLink="false">d5c020e8-b25b-4de2-baed-0ba512431f57</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:07:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:07:07.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவாரூர்,அலையாத்தி காடுகள்,Alaiyathi Forest,rescued,திமிங்கலம்,Whale,Muthupettai,கரை ஒதுங்கியது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/n974d5gd/37.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரை ஒதுங்கிய திமிங்கலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/n974d5gd/37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் பகுதியில் கரை ஒதுங்கிய சுமார் 3 டன் எடை கொண்ட பிரைடி இன திமிங்கலத்தை, வனத்துறையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து பாதுகாப்பாக மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.</p><h2>திமிங்கலம்</h2><p>திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உலகப் புகழ்பெற்ற அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இதன் லகூன் (Lagoon) எனப்படும் ஆழமற்ற கடல் பகுதியில், சுமார் 30 அடி நீளமும், 3 டன் எடையும் கொண்ட பிரைடி  இனத்தைச் சேர்ந்த பிரம்மாண்ட திமிங்கலம் ஒன்று திடீரென கரைஒதுங்கியது. இதைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். </p><h2>மீட்பு பணி</h2><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து கூட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த ராட்சத <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">திமிங்கலம் </a>எவ்வித காயமும் இன்றி பத்திரமாக ஆழ்கடலுக்குள் திருப்பி அனுப்பப்பட்டது. </p><p>இதுகுறித்து தகவல் தெரிவித்த வனத்துறையினர், "கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அதன் உடல்நலமும் ஆரோக்கியமாகவே காணப்பட்டது" என்று உறுதிபடுத்தியுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என கூறி வாலிபரிடம் ரூ.7.50 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-cheated-of-rs-7-5-lakh-in-share-market-investment-scam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-cheated-of-rs-7-5-lakh-in-share-market-investment-scam#comments</comments><guid isPermaLink="false">44b6bb91-8df0-4035-88b9-c9c05f43a9a6</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:58:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:58:43.504Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மோசடி,Erode,ஈரோடு,Duping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/fuxerezh/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/fuxerezh/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறி வாலிபரிடம் ரூ.7.50 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><p>ஈரோடு அத்தப்பம்பாளையத்தை சேர்ந்த 35 வயது வாலிபரை சமூகவலைதளம் மூலமாக பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்று ஆசை வார்த்தை கூறினார். அவர் கூறியதைபோல ஒரு செயலியை பதிவிறக்கம் செய்த வாலிபர், அதில் ரூ.10 ஆயிரத்தை முதலீடு செய்தார். அப்போது லாபத்துடன் சேர்த்து பணம் திரும்ப வந்தது. </p><p>இதனால் மகிழ்ச்சி அடைந்த வாலிபர், கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மொத்தம் ரூ.7 லட்சத்து 95 ஆயிரத்தை முதலீடு செய்து உள்ளார். ஆனால் அதில் அவருக்கு ரூ.45 ஆயிரம் மட்டுமே திரும்ப கிடைத்தது. மீதமுள்ள தொகை கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் அந்த செயலியை பயன்படுத்தியபோது, திடீரென அது செயலிழந்தது.</p><p>அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal#comments</comments><guid isPermaLink="false">359ff1bd-9148-4036-b71f-b4f05195b26b</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:53:14 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:53:14.035Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,காவிரி ஆறு,Hogenakkal Cauvery river,ஒகேனக்கல் காவிரி ஆறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jp234z9r/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/jp234z9r/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஒகேனக்கல்</h2><p>கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக கபினி அணையில் இருந்து கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குறிப்பாக மழையின் தீவிரத்தை பொறுத்து அந்த மாநில அரசு தண்ணீரை அதிகரித்தும், குறைத்தும் திறந்து விட்டு வருகிறது.</p><p>இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி செய்தும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி தடை செய்ய வாய்ப்பு உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>விஜய்யின் அரசியல் கேரளத்தில் எடுபடாது -எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் எம்.கே.பைஜி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-politics-will-not-gain-traction-in-kerala</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-politics-will-not-gain-traction-in-kerala#comments</comments><guid isPermaLink="false">cbeeaa9c-ea95-4add-a9f0-be8060e31a12</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:37:54 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:37:54.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,கேரளம்,keralam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/04dmoolr/Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/04dmoolr/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டலம் சார்பாக தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி, உத்தங்குடி பகுதியில் நடந்தது. மண்டல செயலாளர் முஜிபூர் ரகு மான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி கலந்து கொண்டு பேசினார். தேசிய பொதுச்செய லாளர் மஜித் பைஜி, மாநில தலைவர் நெல்லை முபாரக், தேசிய பொரு ளாளர் அப்துல்சத்தார் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, எம்.கே. பைஜி நிரு பர்களிடம் கூறுகையில், பா.ஜனதா கட்சி மக்களின் முன்பாக மிகப்பெரிய தோல்வி கண்ட அரசாக தற்போது இருக்கிறது. நீட் வினாத்தாள் கசிவு உள்பட அனைத்து துறைகளிலும் தோல்வியை கண்டுள்ளது. இந்து சமுதாய மக்களே பா.ஜனதாவால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.</p> <h2>பிரித்து பார்க்க தெரிந்தவர்கள்</h2><p>டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது இந்த ஆட்சியின் முதல் விக்கெட். 2029-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவின் அனைத்து விக்கெட்டும் விழும். முதல்-அமைச்சர் விஜய்யின் திரைப்படத்தை கேரளாவில் அனைவரும் ரசித்து பார்ப்பார்கள். ஆனால், அவரது அரசியல் அங்கு எடுபடாது. கேரள மக்கள் சினிமாவையும், அரசியலையும் பிரித்து பார்க்க தெரிந்தவர்கள்” என்றார். </p> <p>கூட்டத்தில், காவிரி நீர் உரிமை மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும், தென் மாநிலங்களில் உரிமைகளை பறிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து கட்சிகளும் முறியடிக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கான தனி பட்ஜெட்டை தமிழக அரசு வெளியிட வேண்டும் உள்பட 7 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன</p>]]></content:encoded></item><item><title>கோதையாற்றில் முதலை நடமாட்டம்: வனத்துறையினர் கண்காணிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/supplementary-counseling-for-engineering-courses-applications-open-from-the-17th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/supplementary-counseling-for-engineering-courses-applications-open-from-the-17th#comments</comments><guid isPermaLink="false">b9ca55cf-b6b9-4507-bd9e-acb09aacd7f5</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:29:50 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:29:50.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Crocodile,முதலை,கோதையாறு,Kothaiyar River</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/6rpmah43/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/6rpmah43/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குமரி,</p><h2>ஆற்றில் முதலை நடமாட்டம்</h2><p>கோதையாற்றில் கடையாலுமூடு, களியல் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனை பலர் செல்போன் களில் படம்பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும், முதலையை பிடித்து அகற்றிட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதனை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக ஆற்றில் முதலை காணப்பட்ட உறைகிணற்றின் அருகில் மிதவை கூண்டு வைத்தனர். ஆனாலும் முதலை அதில் சிக்கவில்லை. அந்த முதலையானது சில நாட்கள் தென்படுவதும், பின்னர் மாயமாவதுமாக இருந்து வருகிறது.</p><h2>வல்லுனர் குழு வருகை</h2><p>ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் தென்படுகிறது. மேலும், ஆற்றுப்பகுதியில் பல கி.மீ தூரம் மிக நீண்ட பகுதியாகவும், கரையோரங்களில் செடிகள் மற்றும் புதர்கள் மண்டிக்கிடப்பதால் அந்த வழியாக வனத்துறையினர் நடந்து சென்று முதலையை கண்காணிப்பது எளிதான செயலாக இல்லை.</p><p>இந்தநிலையில் முதலை குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருவதால், அதனை பிடித்து அகற்ற வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதனால் வனத்துறை மற்றும் முதலை ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய வல்லுனர் குழு களத்தில் இறங்கியுள்ளது. இந்த குழு கடந்த 2 நாட்களுக்கு மேலாக ஆற்றுப்பகுதியில் படகிலும், நடந்து சென்றும் முதலையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை தேடி வருகின்றனர். அதன்படி நேற்றும் இந்த குழுவினர் ஆற்றில் படகில் சென்றவாறு முதலையை தேடினர்.</p><h2>ஆற்றில் குளிக்க...</h2><p>இந்தநிலையில் முதலையை பிடிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து களியல் வனச்சரக அலுவலர் யோகஸ்வரன் கூறுகையில், முதலையை பிடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் வனத்துறை தீவிரமாக உள்ளது. தற்போது ஆற்றுப்பகுதி முழுவதும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி வருகிறோம். மழை காரணமாக தற்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக பாய்கிறது. வனத்துறையினர் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.</p><p>குறிப்பாக ஆற்றின் கரையோரம் உள்ள படித்துறைகளில் மக்கள் குளிப்பதையும், தூண்டில் போட்டு மீன்பிடிப்பதையும் தவிர்த்தால் முதலையின் நடமாட்டத்தை உடனுக்குடன் கண்காணித்து அதனை பிடிக்க முடியும். என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை காசிமேட்டில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-strike-in-chennais-kasimedu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-strike-in-chennais-kasimedu#comments</comments><guid isPermaLink="false">48cb9d15-05ce-4226-8c6a-bbcdde0640e4</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:27:00 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:27:00.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,காசிமேடு,Kasimedu,Kasimedu Fish Market,Fishermen protest,மீனவர்கள் போராட்டம்,காசிமேடு மீனவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/3q2591d8/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/3q2591d8/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த விசைபடகு உரிமையாளர்கள் கணேசன் மற்றும் கர்ணன் என்பவருக்கு சொந்தமான 2 விசைபடகுகளில், மீன்பிடி தடை காலம் நிறைவு பெற்ற கடந்த 15-ம் தேதி 19 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்ற இவர்களை, ஆந்திர கடல்சார் (மரைன்) போலீசார் சிறைபிடித்துள்ளனர். மேலும் அவர்கள் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.</p><p>பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத் தரக்கோரி மீனவர்கள் காசிமேட்டிலும், சென்னை மீன்வளத்துறை அலுவலகத்திலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆந்திர அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இந்த நிலையில், ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்கக் கோரி சென்னை காசிமேட்டில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுதால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஓசூரில் பரபரப்பு சம்பவம்; பயணிக்கு உயிர் பயம் காட்டிய பஸ் டிரைவர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sensational-incident-in-hosur-bus-driver-shows-fear-for-passengers-life</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sensational-incident-in-hosur-bus-driver-shows-fear-for-passengers-life#comments</comments><guid isPermaLink="false">12806c74-628f-4ae8-9287-8c4c88b40885</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:21:04 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:21:04.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bus,driver,Hosur,பஸ் டிரைவர்,Hosur - ஓசூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/h75zqh78/bus33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பயணிக்கு உயிர் பயம் காட்டிய பஸ் டிரைவர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/h75zqh78/bus33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஓசூர்,</p><p>ஒசூரில் இருந்து பாகலூர் வழியாக பேரிகைக்கு டவுன் பஸ் சென்றது.இதனை டிரைவர் ரமேஷ் ஓட்டிச்சென்றார். இதில் பயணித்த பயணி ஒருவர், பாகலூர் அருகே அச்சந்திரம் என்ற கிராமத்தில் இறங்க வேண்டிய நிலையில், டிரைவர் அங்கு நிறுத்தாமல் அதனை கடந்து தும்மனப்பள்ளி என்ற கிராமத்தில் பஸ்சை நிறுத்தி அந்த பயணியை இறக்கி விட்ட தாக கூறப்படுகிறது.</p><p>இதனால் ஆத்திரமடைந்த பயணி,<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D"> பஸ்சின் முன்புறமாக சென்று டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். </a>ஆனால், அதனை பொருட்படுத்தாத அந்த டிரைவர், பஸ்சின் முன்புறத்தில் அந்த பயணி நிற்பதை கூட கண்டுகொள்ளாமல் பஸ்சை இயக்கினார்.</p><h2>வீடியோ வைரல்</h2><p>இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த அந்த பயணி உயிரை காப்பாற்றி கொள்ள பஸ் சின் முன்பக்க கண்ணாடிக்கு கீழே கைகளால் இறுகப்பிடித்து தொங்கியவாறே சென்றார். ஆனாலும் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் இயக்கினார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்ற உடன் டிரைவர் பஸ்சை நிறுத்தியதாக தெரிகிறது.</p><p>இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பஸ் டிரைவர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானை உலா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-on-the-coonoor-mettupalayam-hill-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-on-the-coonoor-mettupalayam-hill-road#comments</comments><guid isPermaLink="false">dbb0ee1f-4b59-46f2-b89b-a2bf67adb90d</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:19:50 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:19:50.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானை,wild elephant,குன்னூர்,Coonoor</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/yo0iy3pf/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/yo0iy3pf/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பலாப்பழ சீசன் நிலவுகிறது. இதனால் பலாப்பழங்களை ருசிப்பதற்கு சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் குன்னூர் மரப்பாலம், பர்லியார் பகுதிகளில் சாலை நடுவே காட்டு யானை ஒன்று உலா வந்தது. அதோடு வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். </p><p>தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். குன்னூர் வனச்சரகர் வீரமணி தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானை அருகே சென்று வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காட்டு யானை சாலையை கடந்து செல்லும் போது வாகனங்களை நிறுத்தி யானை கடந்து செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர் சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continued-decline-in-water-inflow-to-hogenakkal-and-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continued-decline-in-water-inflow-to-hogenakkal-and-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">d7eef340-061b-47d8-9728-00681dda52a7</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:18:26 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:18:26.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mettur dam,Hogenakkal,ஒகேனக்கல்,நீர்வரத்து,மேட்டூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/za9y2erl/Mettur-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/za9y2erl/Mettur-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஒகேனக்கல்,</p><p>கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவி ரத்தை பொறுத்து அந்த மாநில அரசு தண்ணீரை அதிகரித்தும், குறைத் தும் திறந்து விட்டு வருகிறது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வ ரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினா டிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.</p><h2>தொடர் சரிவு</h2><p>தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி செய்தும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரத்து 808 அடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 543 கனஅடியாக குறைந்தது.</p><h2>தண்ணீர் திறப்பு அதிகரிப்பு</h2><p> நேற்று முன்தினம் 78.03 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 78.37 அடியாக மட்டுமே உயர்ந்துள்ளது.இதனிடையே கர்நாடகாவில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் மழை அந்த பகுதியில் நீடித்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வ ரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது குறிப் பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-ganja-worth-4-crore-seized-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-ganja-worth-4-crore-seized-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">bb14f3e6-d009-42a7-92f2-fcb01b04a9f4</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:29:20 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:29:20.472Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Airport,சென்னை விமான நிலையம்,Ganja,கஞ்சா</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/odqigbe9/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/odqigbe9/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பய ணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சுமார் 25 வயதுடைய மலேசிய நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒரு வரது உடைமைகளை சோதனை செய்தபோது, சூட்கேசுக்குள் துணிகளுக்கு மத்தியில் 4 பாக்கெட்டுகள் இருந்தது. அந்த பாக்கெட்டுகளை திறந்து சோதனை செய்தபோது, அதில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. </p><p>மொத்தம் 4 கிலோ 33 கிராம் உயர்ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.4 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், மலேசிய வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பட்டதாரி என்பதும், வேலை இல்லாததால் பணத்துக்காக கஞ்சா கடத்தல் கும்பலுக்கு துணையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rank-list-for-medical-courses-released-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rank-list-for-medical-courses-released-today#comments</comments><guid isPermaLink="false">18cc622d-1c22-4064-a209-b7a3ddcad325</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:28:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:28:09.426Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தரவரிசை,Medical course,மருத்துவ படிப்பு,வெளியீடு,Rank List,Released</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m81bo1dd/35.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவ படிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/m81bo1dd/35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.</p><h2>மருத்துவ கல்லூரி</h2><p>தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 13,999 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அந்தவகையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்துகிறது. </p><h2>தரவரிசை பட்டியல்</h2><p>அதன்படி, நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவு பெற்றது. அதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்தனர். மொத்தம் 72,627 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. </p><p>தரவரிசை பட்டியல் எப்போது வெளியிடப்படும்? கலந்தாய்வு எப்போது தொடங்கும்? என மாணவ-மாணவிகள், அவர்களுடைய பெற்றோர் எதிர்பார்த்த நிலையில் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88">தரவரிசை</a> பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்பட உள்ளது. மேலும், கலந்தாய்வு குறித்த அட்டவணையும் வெளியாக இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஓடும் லாரியில் பூட்டை உடைத்து 10 மடிக்கணினிகள் திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-laptops-stolen-after-breaking-lock-on-moving-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-laptops-stolen-after-breaking-lock-on-moving-lorry#comments</comments><guid isPermaLink="false">62608c6f-5a31-4fc8-bfdc-2c48404838b7</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:08:05 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:08:05.923Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,lorry,லாரி,Breaking the lock,பூட்டை உடைத்து,Laptop,போலீசார்,மடிக்கணினி,திருட்டுtheft</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/h25q692i/34.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மடிக்கணினிகள் திருட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/h25q692i/34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கள்ளக்குறிச்சி, </p><p>கள்ளக்குறிச்சியில் ஓடும் லாரியில் 10 மடிக்கணினிகள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>சென்னையில் இருந்து தனியார் கூரியர் நிறுவனம் மூலம், செல்போன்கள், மடிக்கணினிகள், டி.வி.க்கள், கார் மற்றும் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொச்சி நோக்கி கன்டெய்னருடன் கூடிய மினிலாரி ஒன்று புறப்பட் டது. இந்த மினிலாரியை திண்டுக்கல்லை சேர்ந்த கோட்டை பெருமாள் மகன் தங்கராசு (வயது 26) என்பவர் ஓட்டினார். </p><h2>சென்சார்</h2><p>இந்த மினிலாரி கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூர் சுங்கச்சாவடியை கடந்து வந்து கொண்டிருந்தபோது, லாரியின் கன்டெய்னர் பூட்டு உடைக்கப்பட்டதாக சென்சார் மூலம் மினிலாரி உரிமையாளர் செல்போனுக்கு தகவல் சென்றது.</p><p>இதையடுத்து மினிலாரி உரிமையாளர் டிரைவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். உடனே டிரைவர் தங்கராசு, மினிலாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்று பார்த்துள்ளார். அப்போது கன்டெய்னர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுடன், உள்ளே வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.</p><h2>விசாரணை</h2><p>இதையடுத்து டிரைவர் தங்கராசு, தன்னிடம் இருந்த மற்றொரு பூட்டை எடுத்து கன்டெய்னரை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு மினிலாரியை எடுத்து வந்தார். பின்னர் போலீஸ் நிலையம் வந்து பார்த்தபோது. தங்கராசு போட்டிருந்த பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் மற்றும் தனியார் கூரியர் நிறுவனத்தினர் மினிலாரியில் இருந்த பொருட்களை கீழே இறக்கி சோதனை செய்தனர். </p><p>அதில் 10 மடிக்கணினிகளை காணவில்லை. மாடூர் சுங்கச்சாவடியை கடந்து மினிலாரி வந்த போது, அதில் மர்ம நபர்கள் ஏறி மடிக்கணினிகளை திருடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருப்பினும் இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருட்டு </a>சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசு பஸ்கள் இன்று கர்நாடகத்துக்கு செல்லுமா? - எல்லையில் பதற்றம்; போலீஸ் குவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-tamil-nadu-government-buses-run-to-karnataka-today-tension-at-the-border-heavy-police-deployment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-tamil-nadu-government-buses-run-to-karnataka-today-tension-at-the-border-heavy-police-deployment#comments</comments><guid isPermaLink="false">75b4d334-ea33-464d-9e6d-7c2b487f8fa6</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:04:51 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:04:51.009Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Karnataka,தமிழக அரசு,TN govt,Govt Buses,மேகதாது அணை,Mekedatu dam,கர்நாடகம்,Mekedatu Dam Issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/ayl0n3sl/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/ayl0n3sl/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தென்மேற்கு பருவமழை</h2><p>கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணை நிரம்பி விட்டதால் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><p>இதற்கிடையே காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னட கூட்டமைப்பு சார்பில் வருகிற 13-ந்தேதி கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2>அத்திப்பள்ளியில் போராட்டம்</h2><p>அந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட கூட்ட மைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-</p><p>காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்பட வேண்டும். அதுபோல் கர்நாடக விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லாதபோது காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது. இதை கர்நாடக அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (அதாவது இன்று) அத்திப் பள்ளியில் உள்ள கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். காலை 11 மணிக்கு போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.</p><h2>எல்லையில் பதற்றம்</h2><p>அப்போது நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வரும் தமிழக அரசு பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்த உள்ளோம். தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை கர்நாடகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.</p><p>கன்னட கூட்டமைப்பினரின் இந்த போராட்ட அறிவிப்பால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருமாநில எல்லையிலும் போலீசாரும் குவிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இன்று (திங்கட்கிழமை) தமிழக அரசு பஸ்கள் உள் பட தமிழ்நாட்டில் இருந்து அத்திப்பள்ளி வழியாக அனைத்து வாகனங்களும் கர்நாடகத்துக்குள் அனுமதிக்கப்படுமா?, இல்லை எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்படுமா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாக்கு மட்டைக்கு தட்டுப்பாடு: தட்டு உற்பத்தியாளர்கள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shortage-of-areca-plates-large-plate-makers-worried</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shortage-of-areca-plates-large-plate-makers-worried#comments</comments><guid isPermaLink="false">51415d8d-dfce-4e51-bd7b-192747dd3fc1</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:02:45 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:02:45.893Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,shortage,தட்டுப்பாடு,பாக்கு மட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/fkkzf31z/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாக்கு மட்டை தட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/fkkzf31z/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>பாக்கு காய் சீசன் துவங்கியதால், பெரிய பாக்கு மட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தட்டு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பாக்கு மரத்தில் இருந்து காய்ந்து விழும் மட்டைகளை பயன்படுத்தி தட்டுகள் தயாரிக்கும் தொழில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பாக்கு மட்டைகளை கொண்டு 8, 10 மற்றும் 12 இன்ச் அளவுகளில் தட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக பல்வேறு வடிவங்களில் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.</p><p>தற்போது மூலப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாக்கு மட்டை தட்டு உற்பத்தியாளர் கூறியதாவது:-</p><p>சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்தும், கர்நாடகா மாநிலம் தும்கூரில் இருந்தும், பாக்கு மட்டை கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக வைகாசி, ஆனி, ஆடி, மாதங்களில் பாக்கு காய் உற்பத்தி துவங்கும். இதனால் பெரிய அளவிலான மட்டை விற்பனைக்கு கிடைக்காது. சிறிய மட்டைதான் விற்பனைக்கு வரும்.</p><p>கடந்த மாதம் எட்டு ரூபாய்க்கு விற்ற மட்டை தற்போது, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் எட்டு இன்ச் தட்டு, மூன்று ரூபாயில் இருந்து நான்கு ரூபாய்க்கும், 10 இன்ச் தட்டு, ஐந்து ரூபாயில் இருந்து ஆறு ரூபாய்க்கும், 12 இன்ச் தட்டு, ஐந்து ரூபாயில் இருந்து, 6.50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவ்வாறு கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் குடிநீர் ஏரிகளில் மழை: நீர் இருப்பு நிலவரம் என்ன?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-in-chennais-drinking-water-lakes-what-is-the-water-balance</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-in-chennais-drinking-water-lakes-what-is-the-water-balance#comments</comments><guid isPermaLink="false">d649d584-1806-4593-b48e-afde9b769b01</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:45:25 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:45:25.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Rain,மழை,குடிநீர்,drinking water,Need</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/uc0paeyk/33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பூண்டி ஏரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/uc0paeyk/33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் வழங்கும். பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. </p><h2>மழை</h2><p>அந்தவகையில் நேற்று முன்தினம் காலை 8 மணியிலிருந்து, நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் 10 மி.மீ. என்ற அளவில் மழை பதிவானது. அதேபோல் சோழவரம் 13, புழல் 5, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை 13, செம்பரம்பாக்கம் 15 என்ற அளவில் மழை பதிவானது. </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF">பூண்டி ஏரிக்கு</a> கிருஷ்ணா நதி நீர் கால்வாய் மூலம் 400 கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதுதவிர, சோழவரம் 30, புழல் 240, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை 36, செம்பரம்பாக்கம் 154 கன அடி தண்ணீர் வந்துள்ளது.</p><h2>நீர் இருப்பு</h2><p>குடிநீர் தேவைக்காக பூண்டியிலிருந்து 286 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதேபோல் சோழவரம் 8, புழல் 203, கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை 19. செம்பரம்பாக்கம் 205 கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது.</p><p>பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் மொத்த இருப்பு 5.56 டி.எம்.சி. ஆகும். இது 42.09 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7.84 டி.எம்.சி. கையிருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் ஒப்படைப்பா? - விஞ்ஞானிகள் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-kulasekarapattinam-rocket-launch-site-be-handed-over-to-the-private-sector-scientists-explain</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-kulasekarapattinam-rocket-launch-site-be-handed-over-to-the-private-sector-scientists-explain#comments</comments><guid isPermaLink="false">b9860ae2-5b07-4241-942f-bda804aa12a2</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:32:06 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:32:06.079Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rocket,விஞ்ஞானிகள்,குலசேகரன்பட்டினம்,ராக்கெட் ஏவுதளம்,Kulasekaranpatnam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/mvmk9kjj/kulasekaran-pattinam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குலசேகரன்பட்டினம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/mvmk9kjj/kulasekaran-pattinam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராக்கெட் ஏவுதளம்</p><p>ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. தொடர்ந்து நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம், தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இப்பகுதி அமைந்துள்ளதால் குறைந்த எரிபொருளில் ராக்கெட்டுகளை செலுத்தி, செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த முடியும். இதற்காக குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.986 கோடியில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்துக்குள் கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, இங்கிருந்து சிறியரக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இங்கு இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவுதளகட்டிடம், பராமரிப்பு பணி மனை மற்றும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வகையிலான ஹெலிபேடு போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன.</p><h2>தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை</h2><p>ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இதன் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஏவுதளத்தின் செயல்பாடு, மேலாண்மை பணிகளை மேற்கொள்ள இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருப்பம் கோருவதற்கான நடவடிக்கையை இந்திய தேசிய விண் வெளி அங்கீகார மற்றும் மேம்பாட்டு மையம் (இன்-ஸ்பேஸ்) மேற் கொண்டுள்ளது.தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனமானது, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் தனியார் விண்வெளி நிறுவனங்கள் தங்களது ராக்கெட்டு கள், செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான வசதியை அதிகளவில் பயன் படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>விஞ்ஞானிகள் விளக்கம்</h2><p>இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், "குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாருக்கு விற்பனை செய்யப்படவில்லை. ஏவுதளத்தின் உரிமையை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை. மாறாக, ஏவுதளத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கான நடவடிக்கையே தற்போது மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கை இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும்" என்றனர்.</p><h2>பொதுமக்கள் எதிர்ப்பு</h2><p>எனினும் ராக்கெட் ஏவுதள செயல்பாடுகள், நிர்வாகம் தனியார்மயமாவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைப்பது ஏற்புடையது அல்ல. இஸ்ரோவுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இங்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்றனர். இதனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி வந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-released-from-mettur-dam-has-reached-trichy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-released-from-mettur-dam-has-reached-trichy#comments</comments><guid isPermaLink="false">562ffa6b-29b4-42c2-b953-812b5b74efa3</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:28:11 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:28:11.147Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,காவிரி நீர்,Cauvery water</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/rc9ve324/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/rc9ve324/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p> மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சிக்கு வந்தது. கம்பரசம்பேட்டை தடுப்பணையில் சுற்றலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.</p><h2>மேட்டூர் அணை</h2><p>மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 78.37 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி மட்டும் திறந்து விடப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்கிருந்து மேட்டூர் அணைக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.</p><p>இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.</p><h2>காவிரி நீர் வந்தது</h2><p>அந்த தண்ணீர் தற்போது மாயனூர் தடுப்பணை, முக்கொம்பு மேலணையை தாண்டி திருச்சிக்கு நேற்று வந்து சேர்ந்தது. திருச்சி கம்பரசம் பேட்டை தடுப்பணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் குளிப்பதற்காக தடுப்பணையில் குவிந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே ஆன்லைன் மதுவிற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-account-for-less-than-one-percent-of-total-sales-at-tasmac-outlets</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-account-for-less-than-one-percent-of-total-sales-at-tasmac-outlets#comments</comments><guid isPermaLink="false">f593a184-0a60-43c8-8ae1-2fc19b9af07d</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:25:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:25:18.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆன்லைன்,டாஸ்மாக்,Tasmac,liquor sales,Tasmac Shops,டாஸ்மாக் கடை,மதுவிற்பனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/22kzesps/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/22kzesps/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஆன்லைன் மதுவிற்பனை</h2><p>தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் சார்பில், கடைகளில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மதுவிற்பனை முறை கடந்த 7-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வீடு தேடி மதுபாட்டில்கள் விநியோகிக்கும் திட்டம் அல்ல. tasmac.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கடைகளில் பெற்றுக்கொள்ளும் வசதியாகும்.</p><p>ஆனால் இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் சில கடைகளில் மதுப்பிரியர்கள்-கடை ஊழியர்கள் இடையே வாக்குவாதமும் ஏற்படுவதாக சொல்லப்பட்டது. </p><h2>குறைவாகவே பதிவு</h2><p>இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் ரூ.11.62 லட்சமும், இரண்டாவது நாளான நேற்றுமுன்தினம் 3 ஆயிரம் முன்பதிவுகள் வாயிலாக ரூ.9 லட்சம் மதிப்பிலுமான மதுபாட்டில்களே ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.</p><p>அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளின் மொத்த மதுவிற்பனை ரூ.162 கோடியே 37 லட்சமாக இருந்த நிலையில், ஆன்லைன் விற்பனை ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. இதனால், ஆன்லைன் மதுவிற்பனைக்கு மதுப்பிரியர்கள் வரவேற்பு காட்டவில்லையோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மாரத்தான்: 91 வயது முதியவர் 21 கி.மீ. ஓடி அசத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/marathon-to-protect-fireworks-industry-91-year-old-runs-21-km</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/marathon-to-protect-fireworks-industry-91-year-old-runs-21-km#comments</comments><guid isPermaLink="false">3b1ef196-1a8e-43a2-accf-6debef53229b</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:20:46 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:23:04.421Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivakasi,சிவகாசி,marathon,மாரத்தான்,பட்டாசு தொழில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/znnlgkym/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/znnlgkym/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 91 வயது முதியவர் 21 கி.மீ. ஓடி அசத்தினார்.</p><h2>விழிப்புணர்வு மாரத்தான்</h2><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சிவகாசியில் நேற்று காலை நடைபெற்றது.</p><p>இந்த மாரத்தான் ஓட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கு 42 மற்றும் 21 கி.மீ. தூரமும், பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு 10 கி.மீ. தூரமும், பள்ளி மாணவிகளுக்கு 5 கி.மீ. தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு 5 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.</p><h2>91 வயது முதியவர்</h2><p>இவர்களுடன் இணைந்து 91 வயது ராஜேந்திரன் 21 கி.மீ. பிரிவில் ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் சர்வதேச முதியோர் தடகள போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்காக ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 10 இடங்களை பிடித்த அனைவருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>முத்ரா கடன் வழங்குவதில் தமிழகம் 2-ம் இடம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-ranks-2nd-in-mudra-loans</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-ranks-2nd-in-mudra-loans#comments</comments><guid isPermaLink="false">d9521298-8453-4baa-a6a4-b874d52ae801</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:02:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:02:18.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழகம்,Loans,Place,முத்ரா யோஜனா திட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/kigjkhz5/32.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/kigjkhz5/32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில், மத்திய அரசால் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. பிணையம் அல்லது சொத்து அடமானம் ஏதுமின்றி இத்திட்டத்தில் எளிய முறையில் கடன் வழங்கப்படுகிறது.</p><h2>தமிழ்நாடு</h2><p>இந்நிலையில், 2015 முதல் நடப்பாண்டு ஜூன் வரையிலான நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பீகாரில் 4.78 கோடி பெண் தொழில் முனைவோருக்கு ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 863 கோடியே 3 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் அந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்தபடியாக, தமிழ்நாட்டில் 4.33 கோடி பெண் தொழில் முனைவோர்கள் ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 537 கோடியே 79 லட்சம் கடன் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.</p><p>இந்த பட்டியலில் மேற்கு வங்காளம் 3-ம் இடத்திலும், கர்நாடகம் 4-ம் இடத்திலும் உள்ளன. முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் தென் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகியவை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் பெண் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">தொழில் முனைவோர்களின்</a> எண்ணிக்கை சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>