<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 05 Aug 2026 03:46:04 +0000</lastBuildDate><item><title>&apos;சுதேசி&apos;, &apos;மேக் இன் இந்தியா&apos; என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/swadeshi-and-make-in-india-are-nothing-but-modis-publicity-stunts-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/swadeshi-and-make-in-india-are-nothing-but-modis-publicity-stunts-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">1c0e54cf-2ecb-4eb6-be49-31ba1d505b02</guid><pubDate>Wed, 05 Aug 2026 03:43:34 +0000</pubDate><atom:updated>2026-08-05T03:43:34.930Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/uw9ta9xu/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/uw9ta9xu/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'சுதேசி', 'மேக் இன் இந்தியா' என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>'சுதேசி', 'மேக் இன் இந்தியா' என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்!. செப்டம்பர் 19, 2025 அன்று DGTR பரிந்துரைத்தும், 11 மாதங்களாக (Customs Notification) சுங்க அறிவிப்பு தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிப்பு.</p><p>சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Heavy Cranes மீது Anti-Dumping Duty விதிக்க DGTR பரிந்துரைத்தும், சுங்க அறிவிப்பு தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிக்கிறது.</p><p>இதன் விளைவு? </p><p>5 முன்னணி உள்நாட்டு கிரேன் (Crane) உற்பத்தியாளர்கள் தொழிலை மூடும் அவலநிலை!</p><p>மோடி அரசாங்கம் யாருக்காக செயல்படுகிறது? </p><p>இந்திய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உற்பத்தியாளர்களுக்காகவா </a>அல்லது சீன நிறுவனங்களுக்காகவா?</p><p>அனைத்து துறைகளிலும் பாஜகவின் இந்த போலித்தனம் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது! </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு - டி.ஜி.பி. பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-denied-for-dravidar-kazhagams-two-wheeler-rally-high-court-orders-dgp-to-respond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-denied-for-dravidar-kazhagams-two-wheeler-rally-high-court-orders-dgp-to-respond#comments</comments><guid isPermaLink="false">b1f3e7d2-1c8b-464e-bd02-aa5ed22570e5</guid><pubDate>Wed, 05 Aug 2026 03:27:21 +0000</pubDate><atom:updated>2026-08-05T03:27:21.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,Chennai High Court,Dravidar Kazhagam,திராவிடர் கழகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/m7kkodyh/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/m7kkodyh/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்துள்ள மனுவில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவப் படிப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 30-ந்தேதி முதல் கடந்த 2-ந்தேதி வரை இருசக்கர வாகனத்தில் மாநிலம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்ள முடிவு செய்தோம். </p><p>இதற்காக அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தோம். அவர், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் மனு அளித்து அனுமதி பெற்றுக்கொள்ளும்படி கடந்த மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டார். இதன்படி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். ஆனால், அனுமதி மறுத்து ஜூலை 29-ந்தேதி போலீசார் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகளை ரத்து செய்து, பிரசாரத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடவேண்டும்" என்று கூறியிருந்தார்.</p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுவுக்கு பதில் அளிக்கும்படி டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-mettur-dam-has-increased-to-12000-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-mettur-dam-has-increased-to-12000-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">e8e030b6-042c-4aed-9b8c-a6d5acadf161</guid><pubDate>Wed, 05 Aug 2026 03:16:25 +0000</pubDate><atom:updated>2026-08-05T03:16:25.872Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/qptnh01e/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/qptnh01e/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கேரளம் மாநிலத்தில் வயநாடு, கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி (சனிக்கிழமை) கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. </p><h2>நேற்றைய நிலவரம்</h2><p>நேற்றைய நிலவரப்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கன அடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் கரைபுரண்டு ஓடி, நேற்று அதிகாலை 5 மணிக்கு தமிழக எல்லையான பிலிகுண்டுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது.</p><h2>இரவு 8 மணி நிலவரம்</h2><p>இதனையடுத்து கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர். பிலிகுண்டுலு ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணை நோக்கி வந்தது. நேற்று மதியம் பாலாறு வந்தடைந்த தண்ணீர் கோட்டையூர், பண்ணவாடி, சேத்துக்குளி ஆகிய பகுதிகளைக் கடந்து நேற்று இரவு 8 மணி அளவில் மேட்டூர் அணையை வந்தடைந்தது. அப்போது வினாடிக்கு 4 ஆயிரத்து 923 கனஅடி தண்ணீர் மேட்டூர் வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர தொடங்கியது. நேற்று இரவு நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 73.18 அடியாக இருந்தது.</p><h2>காலை 8 மணி நிலவரம்</h2><p>இந்த நிலையில், மேட்டூர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அணையின் </a>நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி, வினாடிக்கு 4,923 கன அடியில் இருந்து 11,998 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 35.244 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: கலெக்டரிடம் மனு அளித்தவர் மீது வழக்குப்பதிவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-case-registered-against-person-who-submitted-a-petition-to-the-collector</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-case-registered-against-person-who-submitted-a-petition-to-the-collector#comments</comments><guid isPermaLink="false">88723b48-5a99-4977-ae2a-d4f9c793d4d2</guid><pubDate>Wed, 05 Aug 2026 03:12:58 +0000</pubDate><atom:updated>2026-08-05T03:12:58.034Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,வழக்குப்பதிவு,கலெக்டர் அலுவலகம்,Collector Office,Petition - மனு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/bci7wjru/74.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மனு அளிக்க வந்த மாணவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுடன் கலெக்டரிடம் மனு அளித்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/bci7wjru/74.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுடன் கலெக்டரிடம் மனு அளித்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>மனு அளிக்க முடிவு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராமநாதபுரம் மாவட்டம்</a> கமுதி அருகே திருச்சிலுவைபுரம் உள்ளது. அங்கு பள்ளி செல்லும் நேரத்தில், போதிய அரசுப் பேருந்து வசதி இல்லை. எனவே, கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நீண்ட நாட்களாகப் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து தங்களின் கிராமத்திற்குப் பேருந்து இயக்கக் கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க பொதுமக்கள் முடிவு செய்தனர்.</p><h2>கலெக்டரிடம் மனு அளிப்பு</h2><p>இதன்படி, கமுதி அருகே உள்ள திருச்சிலுவைபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர், பள்ளிச் சீருடையில் இருந்த மாணவ, மாணவிகளைத் திரட்டிக் கொண்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மனு</a> அளித்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் ஊருக்கு முறையான பேருந்து வசதி இல்லை என்றும், இதனால் கமுதியில் உள்ள பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் தினமும் ஆட்டோக்களுக்கு மாதம் ரூ.1,000 வரை செலவிட வேண்டியுள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.</p><h2>மனு அளித்தவர் மீது வழக்குப்பதிவு</h2><p>பொதுமக்களின் கோரிக்கையைக் கேட்டறிந்த மாவட்ட கலெக்டர், சில நாட்களில் பேருந்து வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தார். இருப்பினும், பள்ளி வேலைநாளில் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல், சீருடையுடன் மனு அளிக்க அழைத்து வந்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>தொடர்ந்து, பள்ளி நேரத்தில் மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பாமல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்த குற்றச்சாட்டின் கீழ், மனு அளிக்க ஏற்பாடு செய்த ஸ்டீபன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை விழா; திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruthani-murugan-temple-aadi-krithigai-festival-local-holiday-announcement-for-thiruvallur-district-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruthani-murugan-temple-aadi-krithigai-festival-local-holiday-announcement-for-thiruvallur-district-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a6c3009b-c345-4364-a669-09c6c651ec32</guid><pubDate>Wed, 05 Aug 2026 02:45:09 +0000</pubDate><atom:updated>2026-08-05T02:45:09.603Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Local Holiday,திருத்தணி முருகன் கோவில்,உள்ளூர் விடுமுறை,Thiruthani Murugan Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/qx4b2vte/lcatf.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/qx4b2vte/lcatf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருவள்ளூர்</p><p>திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.</p>  <h2>ஆடி கிருத்திகை திருவிழா</h2><p>திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நாளை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.  இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் கவிதா அறிவித்து உள்ளார்.</p>  <h2>உள்ளூர் விடுமுறை</h2><p>இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் இந்த மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார் நிலை கருவூலங்களும், பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு நாளை (6-ந்தேதியன்று) அரசு செயல்பட வேண்டும். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு 8-ந்தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.</p><p>எனவே இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து கொண்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இல்லாத ஊழியர்களுக்கு சம்பளம்; மராட்டிய மாநில காவல்துறையில் ரூ.6.5 கோடி மோசடி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salaries-paid-to-non-existent-employees-rs-65-crore-fraud-in-maharashtra-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salaries-paid-to-non-existent-employees-rs-65-crore-fraud-in-maharashtra-police#comments</comments><guid isPermaLink="false">c68b4c9f-032a-449f-81e1-2bf21c36b428</guid><pubDate>Wed, 05 Aug 2026 02:43:58 +0000</pubDate><atom:updated>2026-08-05T02:43:58.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,police,காவல்துறை,மராட்டிய மாநிலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/aqjk61j8/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/aqjk61j8/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை, </p><p>மராட்டிய மாநில காவல்துறையில் கடந்த 2019-20 காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட, 'சேவார்த்' சம்பள மென்பொருளில் பதிவான தகவல்களை, புதிய தளத்துக்கு மாற்றும் பணிகள் சமீபத்தில் நடைபெற்றன. அப்போது, காவல்துறையில் இல்லாத ஊழியர்களின் பெயர்களுக்கு சம்பளமாக 6.5 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது </p><p>இந்த குறித்து, வடக்கு மண்டல போலீஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. அதில், காவல்துறையுடன் தொடர்பில்லாத 10 பேரின் பெயர்கள், ஊழியர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 2019 டிசம்பர் முதல், 2020 பிப்ரவரி வரையிலும், பின்னர் 2020 ஜூன் முதல் 2020 செப்டம்பர் வரையிலும் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. அதோடு, போலியாக வருகைப் பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு மோசடிகள் நடந்திருப்பதும் அம்பலமானது. </p><p>இதன் மூலம், ரூ.6.5 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மும்பை போலீஸ் துறையில் அப்போதைய நிர்வாக அதிகாரிகளாக பணியாற்றிய ராம்கிஷன் கோஸ்வாமி, நாகேஷ் தல்வாடேகர், விஜயா சவான், தலைமை எழுத்தர் அஜெய் ரத்தோட் மற்றும் மூத்த எழுத்தர் அமோல் மேஷ்ராம் ஆகியோர் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றச்சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இதில் விஜய் சவான், அமோல் மேஷ்ராம் இருவரும் சேர்ந்து போலீசாருக்கான போலி சேவை எண், ஓய்வூதிய திட்ட எண்களை உருவாக்கி, 10 போலி ஊழியர்களின் பெயர்களை சேர்த்து, இந்த மோசடிக்கு உதவியுள்ளனர். இதனால், அவர்கள் இருவரும் பணியில் இருந்து சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளனர். போலி ஊழியர்களின் பெயர்களில் திறக்கப்பட்ட வங்கி கணக்குகளை இயக்கியது யார்? அதன் மூலம் யார், யாருக்கெல்லாம் பணம் சென்றது என்ற விவரங்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>விரல் ரேகை பதிய ரேஷன் கடையில் 8, 9ல் சிறப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-at-ration-shops-on-the-8th-and-9th-for-fingerprint-registration</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-at-ration-shops-on-the-8th-and-9th-for-fingerprint-registration#comments</comments><guid isPermaLink="false">7bef1f98-ba34-4372-b262-bea3b0d3023c</guid><pubDate>Wed, 05 Aug 2026 01:33:27 +0000</pubDate><atom:updated>2026-08-05T01:33:27.018Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடைகள்,ration card holders,ரேஷன் அட்டைதாரர்கள்,Ration card,ration shops,ரேஷன் அட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/0af27pxf/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/0af27pxf/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக ரேஷன் கடைகளில் முன்னுரிமை, அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களின், 'ஆதார்' சரிபார்ப்பு வாயிலாக, உண்மை தன்மையை உறுதி செய்வதற்கான விரல் ரேகை பதிவு செய்யும் பணி நடக்கிறது.</p><p>இன்னும் எட்டு லட்சம் உறுப்பினர்கள் விரல் ரேகை பதிவு செய்யவில்லை. அவர்களுக்காக, வரும், 8, 9ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. </p><p>இதை பயன்படுத்தி, இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பதிவு செய்து கொள்ளுமாறு, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘பெண்கள் குறித்து இழிவாக பேசுவதற்கு சில கட்சிகளில் தனி படையே வைத்திருக்கிறார்கள்’ - பெ.சண்முகம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/some-parties-maintain-dedicated-squads-to-speak-disparagingly-about-women-p-shanmugam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/some-parties-maintain-dedicated-squads-to-speak-disparagingly-about-women-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">2d198942-c92e-49e8-a828-6c3dbf8b7ad6</guid><pubDate>Wed, 05 Aug 2026 01:19:49 +0000</pubDate><atom:updated>2026-08-05T01:19:49.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெ.சண்முகம்,P.Shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/1kst3x4y/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/1kst3x4y/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மார்கசிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பொதுவெளியில் பேசும்போது, அதுவும் அரசியல் கட்சி தலைவர்கள் பேசும்போது நாகரிகத்துடன் பேச வேண்டும். யாராக இருந்தாலும் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்.</p><p>இத்தகைய முறையில் யார் பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது. எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் அவருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து அவர் பேசியிருக்க வேண்டும். அதை நாங்கள் அனைவருமே கண்டித்திருக்கிறோம்.</p><p>பெண்களை இழிவுபடுத்துவது, பெண்களை இழிவாக பேசுவது என்பது நீண்ட காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இடதுசாரிகளை பொறுத்தவரை பெண்களின் உரிமை தொடர்பான பிரச்சினைகளை மிகவும் எச்சரிக்கையோடு அணுகுகிறோம். ஆனால் சில கட்சிகளில் பொதுக்கூட்டங்களில், பொது இடங்களில் பெண்களை இழிவாக பேசுவதற்கு தனி படையே வைத்திருக்கிறார்கள்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-to-be-tabled-today-key-announcements-expected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-to-be-tabled-today-key-announcements-expected#comments</comments><guid isPermaLink="false">d85cf168-9498-4f7f-a0a0-c4770304606e</guid><pubDate>Wed, 05 Aug 2026 01:19:27 +0000</pubDate><atom:updated>2026-08-05T01:19:27.150Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,தமிழக சட்டசபை,TN Assembly,Budget,தமிழக பட்ஜெட்,TN Budget,பட்ஜெட் கூட்டத்தொடர்,பட்ஜெட் 2026,Budget 2026</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/tmotgpnr/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/tmotgpnr/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,  </p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் <a href="https://www.dailythanthi.com/">பட்ஜெட் </a>இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.  </p>  <h2>தமிழக பட்ஜெட்</h2><p>2026-27ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>இந்த பட்ஜெட் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். பட்ஜெட் தொடர்பாக கடந்த ஜூலை மாதத்தில், அரசின் அனைத்துத் துறை அமைச்சர்கள், செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.</p><p>பின்னர், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், துறை ரீதியாக தவெக அறிவித்துள்ள வாக்குறுதிகள் போன்றவற்றை அந்தந்த துறை அமைச்சர்கள் தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.</p> <h2>எதிர்பார்ப்பு</h2><p>அதன் பின்னர் அதுபற்றி ஆய்வு மேற்கொண்டும், தமிழக அரசின் நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டும், பட்ஜெட்டில் அறிவிப்பதற்கான முக்கிய திட்டங்களை முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.</p><p>அதில் ஒரு சிறப்பம்சமாக, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையில் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம் என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>மேலும், ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்பட தேர்தலுக்கு முன்பு தவெக தரப்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளன? புதிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p> <h2>திமுக புறக்கணிப்பு?</h2><p>சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்திலும் பேசிய விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அதேவேளை உதயநிதியின் கைதை கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் தங்களை எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தை திமுக புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p> <h2>அலுவல் ஆய்வு கூட்டம்</h2><p>பட்ஜெட் தாக்கல் நிகழ்வு முடிந்தவுடன் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவெ டுத்து அறிவிக்கப்படும். தமிழக சட்டசபையில் நாளை (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.</p><h2>நேரலை</h2><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரபப்பட உள்ளது. <a href="https://www.youtube.com/@tamilnaduassembly">tamilnaduassembly</a> என்ற யூடியூப் பக்கத்தில் பட்ஜெட் நேரலையில் ஒளிபரபப்பாக உள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-12</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-12#comments</comments><guid isPermaLink="false">8eca5cd7-5c85-48c5-87f3-2ba674d93ab3</guid><pubDate>Wed, 05 Aug 2026 00:52:23 +0000</pubDate><atom:updated>2026-08-05T00:52:23.053Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/9oczmsce/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-05/9oczmsce/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 05.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p><strong>பெரம்பூர்</strong>: திருமலை நகர் பிரதான சாலை, திருமலை நகர் 1 வது முதல் 3வது தெரு வரை மற்றும் விரிவாக்கம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடித்தால் சிறை தண்டனை- தமிழக அரசு பரிசீலனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-considering-jail-term-for-smoking-in-public-places</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-considering-jail-term-for-smoking-in-public-places#comments</comments><guid isPermaLink="false">f271759e-cc52-404d-8a6c-3baed01027b1</guid><pubDate>Tue, 04 Aug 2026 22:47:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T22:47:56.396Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,சிறை தண்டனை,imprisonment,TN government,புகைப்பிடித்தல்,Smoking ban</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/otdctgip/11a.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/otdctgip/11a.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.</p><h2>சட்டம்</h2><p>பஸ் நிலையம், ரெயில் நிலையம், ஆஸ்பத்திரி, சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடிப்பதால், அவர்கள் மட்டுமின்றி அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மற்றவர்கள் விடும் சிகரெட் புகையை சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.</p><p>பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க ஏற்கனவே சட்டம் இருக் கிறது. தடையை மீறி புகைப்பிடித்தால் தற்போது அபராதம் விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை முழுமையாக கட்டுப்ப டுத்த முடியாத நிலை தொடர்கிறது. இதனால் அபராதம் மட்டும் போதாது, தண்டனையை கடுமையாக்கினால்தான் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த முடியும் என்று தமிழக அரசு கருதுகிறது.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><h2>இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-</h2><p>தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது ஏற்கனவே தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2025-26-ம் நிதி யாண்டில் மட்டும் பொது இடங்களில் புகைப்பிடித்ததாக 47 ஆயிரத்து 941 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.69 லட்சத்து 57 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-area-development-officer-arrested-for-accepting-a-bribe-of-rs-20-thousand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-area-development-officer-arrested-for-accepting-a-bribe-of-rs-20-thousand#comments</comments><guid isPermaLink="false">420c98e3-20ae-4acb-9df7-c32b93ad2cf8</guid><pubDate>Tue, 04 Aug 2026 16:28:51 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:28:51.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,லஞ்சம்,Court,bribe,கைதுArrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lyunysom/183.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lyunysom/183.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) செந்தில்குமார், ரூ.20 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கியதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.</p> <p>கோவில்பாளையம், காங்கேயம் தாலுகாவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறார். அவர் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்து உட்பட்ட குவாலிபாளையம் மற்றும் சேனாதிபாளையம் சி.எஸ்.ஐ. அரசு உதவி பெறும் பள்ளிகளில் சமையலறை கட்டுமானப் பணிகள் மற்றும் சேனாதிபாளையம்  பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தார். </p><p>இந்த பணிகளுக்கான பில் தொகையை அனுமதித்து வழங்கியதற்காக, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) செந்தில்குமார் ரூ.20 ஆயிரம் கமிஷன் வழங்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.</p><h2>கைது</h2><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவிச்சந்திரன், இதுகுறித்து திருப்பூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில், அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இன்று பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, புகார்தாரரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் செந்தில்குமாரை, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஊழல் தடுப்பு</a> மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.</p><p>பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை -  ரூ.3.36 லட்சம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raid-at-transport-checkpost-krishnagiri</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raid-at-transport-checkpost-krishnagiri#comments</comments><guid isPermaLink="false">1b5990de-4f2c-4ad6-a624-e4f51246a6d0</guid><pubDate>Tue, 04 Aug 2026 16:19:48 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:19:48.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பறிமுதல்,கிருஷ்ணகிரி,Krishnagiri,சோதனை சாவடி,சோதனை,லஞ்ச ஒழிப்பு துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/46urtffo/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/46urtffo/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>ஓசூர் ஜுஜுவாடி போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3,36,200 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கிருஷ்ணகிரி பிரிவு அலுவலர்கள் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து இன்று ஜுஜுவாடி போக்குவரத்து சோதனை சாவடியில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுமதியிடம், கணக்கில் வராத பணம் ரூ.1,52,800, அலுவலகத்தில் தனிநபரிடமிருந்து கணக்கில் வராத பணம் ரூ.50,000, மோட்டார் வாகன ஆய்வாளர் மகாலட்சுமியிடம் கணக்கில் வராத பணம் ரூ.50,000 கைப்பற்றப்பட்டது.</p><p>மேலும் மோட்டார் வாகன ஆய்வாளரின் அலுவலக அறையில் உள்ள கணினி மேஜையில் கணக்கில் வராத பணம் ரூ.83,400 இருந்தது. ஆகமொத்தம் இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3,36,200 கைப்பற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-commits-suicide-by-poison-after-wife-criticises-drinking-habit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-commits-suicide-by-poison-after-wife-criticises-drinking-habit#comments</comments><guid isPermaLink="false">22b26f44-ffa0-4f2e-b142-9e0b461d1260</guid><pubDate>Tue, 04 Aug 2026 16:17:12 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:17:12.232Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தொழிலாளி,wife,தற்கொலை,Suicide,மது பழக்கம்,Labour,Drinking alcohol,மனைவி கண்டித்ததால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/b8u7wlw7/sucide.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/b8u7wlw7/sucide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே, ஒரு வயது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே, மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">விஷம் குடித்து தற்கொலை</a> செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>தொழிலாளி</h2><p>நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியை அடுத்த கீரன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சங்கர் (வயது 23). தொழிலாளி. இவருக்கும் நந்தினி (21) என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இலங்கேஸ்வரன் என்ற ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.</p><h2>பிறந்தநாள் கொண்டாட்டம்</h2><p>இந்த நிலையில், சங்கர் கடந்த 1-ந் தேதி தனது மகன் இலங்கேஸ்வரனின் முதலாவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது சங்கர், தனது நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்துவிட்டு, அவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின்னரும் சங்கர் நேற்று முன்தினமும் தொடர்ந்து மது அருந்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி நந்தினி, கணவரின் குடிப்பழக்கத்தை கடுமையாகக் கண்டித்ததாக தெரிகிறது.</p><h2>விஷம் குடித்த  சங்கர் </h2><p> இதனால் கடும் மனவேதனையில் இருந்த சங்கர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலிபாசானம் (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். </p> <h2>போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு வயது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீவிரவாதி போல் என்னை அழைத்து சென்று விசாரணை - உதயநிதி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-took-me-away-and-interrogated-me-like-a-terrorist-udhayanidhi-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-took-me-away-and-interrogated-me-like-a-terrorist-udhayanidhi-interview#comments</comments><guid isPermaLink="false">d32a5844-18e8-478a-bc59-89c9077fbb97</guid><pubDate>Tue, 04 Aug 2026 16:12:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:12:56.329Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,உதயநிதி ஸ்டாலின்,கர்நாடகா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xwoy4qz6/dmkydaione33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/xwoy4qz6/dmkydaione33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் யாரையும் நான் தவறாக பேசவில்லை; காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு டைவர்ட் செய்துள்ளது என  உதயநிதி ஸ்டாலின் கூறினார்.</p><h2>தவெக அரசு</h2><p>திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:-</p><p>திமுக தலைவரின் உத்தரவை ஏற்று தஞ்சையில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம். </p><p>விவசாயிகளுக்கு தவெக அரசு செய்த துரோகங்கள், பொய் வாக்குறுதிகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.</p><p>நான் யாரையும் தவறாக பேசவில்லை, பேசாத ஒன்றை கட் காபி செய்து பரப்பி உள்ளனர்.  திசை திருப்பும் முயற்சியாக, நான் பேசாத ஒன்றை பேசியதாக திரித்து வீடியோவை பரப்பி உள்ளனர். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">காவிரி பிரச்சினை</a>யை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு டைவர்ட் செய்துள்ளது.</p><h2>இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை</h2><p>தீவிரவாதியை போல், என்னை 400 கி.மீ.க்கு அழைத்து சென்று செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை நடத்தினர். </p><p>விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு தரம்கெட்ட அரசு கைது செய்துள்ளது. இதற்கு நான் அஞ்சவில்லை. </p><p>எனக்கு மனைவி, மகள் உள்ளனர்.  தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களையும் எனது தாயாக, சகோதரிகளாக நான் பார்க்கிறேன்.எந்த தவறான எண்ணத்திலும் பெண்களை தரம் தாழ்த்தி பேச வேண்டும் என்று நான் எண்ணவில்லை. ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் நான் பேசவில்லை, சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன். பேசுவேன். ஒருசில தலைவர்கள் நான் பேசியதை ஆராயாமல் கண்டனம் தெரிவித்தது எனக்கு வருத்தம் தருகிறது. </p><h2>நான் முதல்-அமைச்சரை போல ஓடுகாலி அல்ல </h2><p>அரசின் பொய் வழக்கு போட்டு பயமுறுத்து பார்க்கின்றனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. இதே திருச்சி விமான நிலையத்தில் புறமுதுகு காட்டினார் முதல்-அமைச்சர் விஜய். வழக்கு போட்டால் தன்னை போல பயப்படுவேன் என நினைத்துவிட்டார்.  பொய் வழக்கை சட்டமுறைப்படி எதிர்கொள்வேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்; சிசு இறந்தது - காதலன் மீது போக்சோ வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenth-grade-girl-delivery-after-fall-baby-dies-pocso-case-on-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenth-grade-girl-delivery-after-fall-baby-dies-pocso-case-on-lover#comments</comments><guid isPermaLink="false">2f10d62e-dcaa-4be8-8e20-181351ef11ed</guid><pubDate>Tue, 04 Aug 2026 15:57:41 +0000</pubDate><atom:updated>2026-08-04T15:57:41.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>POCSO case,போக்சோ,Sivakasi,சிவகாசி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/m3piyzwu/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/m3piyzwu/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி,</p><p>கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்தது. அந்த மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>10-ம் வகுப்பு மாணவி</h2><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அங்கு ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகாசி போஸ் காலனியை சேர்ந்த விஸ்வமணி (25 வயது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. வாலிபரும், மாணவியும் பலமுறை தனிமையில் சந்தித்துள்ளனர். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார்.</p><h2>தடுமாறி விழுந்தார்</h2><p>சம்பவத்தன்று பள்ளியில் இருந்து மாணவி வீடு திரும்பியபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மாணவியின் வயிற்றில் கடும் வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரது பாட்டி அழைத்து சென்றார். மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.</p><p>வீட்டில் வைத்து மாணவிக்கு குறைபிரசவம் ஆனதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மாணவியையும், சிசுவையும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிசுவை பரிசோதனை செய்தபோது இறந்துவிட்டது தெரிய வந்தது.</p><h2>போக்சோ சட்டத்தில் வழக்கு</h2><p>இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் காதலனான விஸ்வமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>விசாரணை நிறைவு - உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/investigation-complete-udhayanidhi-stalin-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/investigation-complete-udhayanidhi-stalin-released#comments</comments><guid isPermaLink="false">58f1e7ec-2707-4c5e-9687-437b68c88c21</guid><pubDate>Tue, 04 Aug 2026 15:16:05 +0000</pubDate><atom:updated>2026-08-04T15:16:05.286Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,police,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,arrest,தஞ்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/mqs4tgas/udaitwo33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/mqs4tgas/udaitwo33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை</p><p>விசாரணை நிறைவடைந்த நிலையில் காவல் நிலைய ஜாமீனில் உதயநிதி விடுவிக்கப்பட்டார். </p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தவெக மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p><p>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. அதாவது, பகைமை, கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>நீலங்கரையில் கைது</h2><p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து உதயநிதியை தஞ்சை மாவட்ட போலீசார் இன்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூருக்கு அழைத்து செல்ல புறப்பட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து  தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சென்னை ஐகோர்ட்டு</a> அறிவுறுத்தியது.</p><h2>திமுக தொண்டர்கள் போராட்டம்</h2><p>இதனிடையே உதயநிதி ஸ்டாலினின் கைதை தொடர்ந்து திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை எனப் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பல இடங்களில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டது. தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டது.</p><p>இந்நிலையில் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் திமுகவினர் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF">உதயநிதி</a> செங்கிப்பட்டி அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் உதயநிதி வர மறுப்பு தெரிவித்தார். மேலும் என் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு போடப்பட்டுள்ளதால் அங்கு தான் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.</p><p>இதனைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின், செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.</p><p>உதயநிதியை போலீசார் செங்கிப்பட்டி காவல் நிலையம் அழைத்து வருவதற்கு முன்பு திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் ஏராளமான தொண்டர்கள் செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் குவிந்தனர்.</p><h2>தஞ்சை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை</h2><p>விசாரணைக்காக காவல் வாகனத்தில் இருந்து இறங்கிய உதயநிதி, அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே கையசைத்தார். தொடர்ந்து விசாரணைக்காக காவல்நிலையம் உள்ளே சென்றார். </p><p>தஞ்சை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் ஆய்வாளர் மணிகண்டன் உதயநிதியிடம் விசாரணை நடத்தினார்.</p><h2>ஜாமீனில் விடுவிப்பு </h2><p>காலை 11 மணிக்கு கைது செய்யப்பட்ட உதயநிதியிடம் மாலை 6.45 முதல் விசாரணை நடைபெற்றது.செங்கிப்பட்டியில் வைத்து உதயநிதியிடம் மாலை 6.45 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8.10 மணி வரை நடைபெற்றது.</p><p>விசாரணை முடிவடைந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.</p><p>சென்னையில் இருந்து காவல் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட உதயநிதி தற்போது காரில் புறப்பட்டார். காவல்நிலையம் முன்பு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். காரில் இருந்து திருச்சி செல்லும் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். நாளை பட்ஜெட் கூட்டத்தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>விசாரணையை இன்றே முடித்து உதயநிதியை விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 8,9 தேதிகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-ekyc-camp-at-all-ration-shops-in-tamil-nadu-on-8th-and-9th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-ekyc-camp-at-all-ration-shops-in-tamil-nadu-on-8th-and-9th#comments</comments><guid isPermaLink="false">ab17d50b-9f89-4381-974e-e439d6db72ba</guid><pubDate>Tue, 04 Aug 2026 15:06:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T15:06:39.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Special camp,சிறப்பு முகாம்,ரேசன் கடை,ration shops,கைவிரல் ரேகை பதிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/hsvk0ptg/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/hsvk0ptg/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வருகிற 8, 9 தேதிகளில் இகேஒய்சி (eKYC) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய நாட்களில் தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>ஆகவே, நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் (eKYC) பதிவு செய்ய வருகின்ற 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவர் - ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/critics-of-women-will-be-arrested-under-chief-minister-vijay-rule-aadav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/critics-of-women-will-be-arrested-under-chief-minister-vijay-rule-aadav-arjuna#comments</comments><guid isPermaLink="false">5e5363f8-28b0-494b-8aaa-034b0a668702</guid><pubDate>Tue, 04 Aug 2026 14:35:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T14:44:37.660Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/bs95yr2w/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/bs95yr2w/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவர் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். பனையூரில் நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:-</p><p>திமுகவுக்கு பாடம் எடுத்துள்ளார் முதல்-அமைச்சர் விஜய். தவெக ஆட்சி அமைத்த கடந்த 80 நாட்களில் திமுகவின் ஒரே கொள்கையே தவெக ஆட்சியை எப்படி கவிழ்ப்பது என்பதுதான். தவெக எம்எல்ஏக்களிடம் ரூ.50 கோடி, ரூ.100 கோடி தருவதாக செந்தில் பாலாஜி தரப்பு விலை பேசியது. எதிர்காலமே இல்லாத திமுக எங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலை பேச முயற்சித்து மாட்டிக் கொண்டது. </p><p>கொளத்தூர் மக்கள் தன்னை ஏன் தூக்கி எறிந்தார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. கொளத்தூர் சென்ற முதல் அமைச்சர் விஜய்யால் அன்று சேப்பாக்கம் செல்ல முடியாமல் போனது. அதனால் சேப்பாக்கம் மிஸ் ஆகி விட்டது. மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து இனி ஒருவர் முதல்-அமைச்சர் ஆக முடியாது. திமுகவின் சாம்ராஜ்யம் முடிந்து விட்டது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு 6 மாதம் எடுத்துக் கொள்ளும். </p><p>சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் பேசத் தொடங்கி பார்ட்டி பண்ட் என்று கூறியவுடன் திமுகவினர் ஓடிவிட்டனர். சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தார். திமுகவினர் அம்பலப்பட்டு விட்டனர். ஆட்சியில் இருந்த திமுக 2028 வரை பொதுப்பணித்துறையில் டெண்டர் போட்டுள்ளனர்.</p><p>வாய்ப்புகள் இல்லாதபோது இருப்பது நேர்மை அல்ல. வாய்ப்புகள் இருக்கும்போதும் தவெகவினர் நேர்மையாக உள்ளனர். இன்று கூட ரூ.10 ஆயிரம் கோடி கலெக்சன் செய்ய முடியும்; ஆனால் அதை நாங்கள் செய்ய மாட்டோம்.</p><p>பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதை வழக்கமாக வைத்திருந்தவர் கருணாநிதி. பெண்களை சக மனுஷியாக உதயநிதி நினைக்க வேண்டும். பெண்களை சம மனுஷியாக பார்க்கும் சிந்தனை உதயநிதிக்கு இல்லை. தான் பேசியது தவறு என்று தற்போது வரை உதயநிதி உணரவில்லை.</p><p>ஆட்சியில் இருந்தபோது துணை முதல்-அமைச்சர் என உதயநிதிக்கு பட்டாபிஷேகம், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் என பட்டாபிஷேகம். முன்னாள் முதல்-அமைச்சரின் பேரன், மகன் என்ற திமிர் உதயநிதியிடம் உள்ளது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் திமிர் தான் தற்போது திமுகவை எதிர்க்கட்சியாக மாற்றியுள்ளது. </p><p>ஒரு முறை கூட மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சர் விஜய் ஒருமையில் பேசியதில்லை. அங்கிள் என கூறியதற்கு கூட வருந்தினார். ஒரு இடத்திலாவது ஒரு பெண்ணை முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்து பேசியிருக்கிறாரா?  தவெகவுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது பெண்கள் தான். விஜய் ஆட்சியில் பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவர். ஜோசப் விஜய் முதல்-அமைச்சராக இருக்கும் இந்த ஆட்சியில் பெண்கள் குறித்து அவதுறாக பேசினால் சும்மா இருக்க முடியாது.</p><p>கூட்டணி பலத்தால் தான் திமுகவுக்கு 57 தொகுதிகள் கிடைத்தது. கூட்டணி இல்லையென்றால் திமுகவால் 10 தொகுதிகளை கூட வெல்ல முடியாது. நாங்கள் ஏன் உதயநிதியை பழிவாங்க வேண்டும். விஜய்க்கு எதிரியாக இருக்க ஒரு தகுதி வேண்டும். சேப்பாக்கத்தில் உதயநிதி மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க மாட்டார். சேப்பாக்கம் தொகுதியில் சாமானிய பெண் ஒருவரை நிறுத்துவோம். உதயநிதியால் டெபாசிட் கூட வாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/el-nino-precautionary-measures-first-meeting-of-expert-committee-led-by-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/el-nino-precautionary-measures-first-meeting-of-expert-committee-led-by-minister#comments</comments><guid isPermaLink="false">6302cd26-3c0d-4904-8540-bd32c1dd7477</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:46:57 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:46:57.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் செங்கோட்டையன்,Minister Sengottaiyan,El Nino,எல் நினோ,ஆலோசனைக் குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gms176o7/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gms176o7/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எல் நினோ தாக்கத்தை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கிட அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>எல் நினோ எனும் காரணியால் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து அவ்வப்பொழுது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கிட, முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் ஆலோசனைக்குழு, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையரின் தலைமையில் 28.07.2026 அன்று அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>இதனைத் தொடர்ந்து, மேற்படி குழுவின் முதல்கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர், நா.முருகானந்தம் முன்னிலையில், இன்று (04.08.2026) சென்னை, எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.</p><p>தென்மேற்குப் பருவமழை காலக்கட்டங்களான ஜூன், ஜூலை மாதங்களில், வழக்கமாக 133.75 மி.மீ. மழை பொழியும். இந்தாண்டு (2025-2026) மழைப் பொழிவு 111.19 மி.மீ. மட்டுமே பெய்து, வழக்கத்தை விட 16.68% குறைவாக உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சுமார் 24 மாவட்டங்களில், வழக்கத்தை விட குறைவாகவே தென்மேற்கு பருவமழைப் பொழிந்துள்ளது. இதில், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பைவிட 60% மேல் குறைவாக தென்மேற்கு பருவமழைப் பொழிந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அணைகளின் கொள்ளளவும், இக்காலக்கட்டத்தில் வழக்கமாக 85% நிரம்பியிருக்கும். ஆனால், இந்தாண்டு வழக்கத்தை விட குறைவான மழைப் பொழிவால், சுமார் 31% மட்டுமே நிரம்பி உள்ளது.</p><p>மேலும், தமிழ்நாட்டில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளைத் துரிதமாகச் செயல்படுத்திட, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்திட மற்றும் லாரிகள் மூலமாகக் குடிநீர் விநியோகம் செய்திட, 330 கோடி ரூபாயும், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் - மீனவர் நலத் துறைக்கு 10 கோடி ரூபாயும் என ஆக மொத்தம் 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திட, முதல்-அமைச்சர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.</p><p>இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களிடம் இருந்து, முன்மொழிவுகள் வரப்பெற்று, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாவண்ணமும், அதிக வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக, கால்நடைகளுக்கு தீவனம் உடனடியாக கிடைக்கும் வண்ணமும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர், கே.எஸ். பழனிசாமி, பேரிடர் மேலாண்மை ஆணையர் அ. சிவஞானம், நிபுணர் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பேராசிரியர் எஸ். கண்மணி, முனைவர் பாலாஜி நரசிம்மன், முனைவர் அறிவுடை நம்பி அப்பாதுரை, முனைவர். ரமேஷ் ராமச்சந்திரன், முனைவர். ஆர். வெங்கடேசன், முனைவர். ஜா. க. பேட்டர்சன் எட்வர்ட், ஆர். பிரதீப் ஜான் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-chairs-adidravidar-tribal-development-council-meeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-chairs-adidravidar-tribal-development-council-meeting#comments</comments><guid isPermaLink="false">87694700-bad6-48d0-b6eb-063df263964f</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:38:51 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:38:51.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திட்டம்,Development,பழங்குடியினர்,ஆதிதிராவிடர்,action plan,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lg5rasuj/cm.04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lg5rasuj/cm.04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p> <p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம்</a> நடைபெற்றது.</p> <h2>மாநில மன்றம்</h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியானது முழுமையாகச் சென்றடைவதை உறுதிசெய்ய மேம்பாட்டுச் செயல்திட்டச் சட்டம் (தமிழ்நாடு அரசு சட்டம் 20/2024) 29.05.2024 அன்று இயற்றப்பட்டது. அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதி முறையாக சென்றடைகிறதா என்பதை கண்காணித்திட  தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் மாநில மன்றம் அமைக்கப்பட்டது.</p><h2>வெற்றி தமிழகம்</h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியானது அவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவேண்டும் என்ற அரசின் "வெற்றித் தமிழகம்" தொலைநோக்கு திட்டத்தின்படி, அம்மாநில மன்றத்தின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான முதல் கூட்டம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%20">தமிழ்நாடு முதல்-அமைச்சர்  </a>தலைமையில் இன்று நடைபெற்றது.</p><h2>நலத்திட்டங்கள்</h2><p>2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு மதிப்பீட்டில் அரசின் 23 துறைகள் மூலம் 48 துறைத் தலைமையகத்தால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், ஆதிதிராவிடர் நலத்திட்டத்திற்காக 5,903.51 கோடி ரூபாய் செலவினமும், பழங்குடியினர் நலத்திட்டத்தற்காக 349 கோடி ரூபாய் செலவினமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பயனாளிகளின் விவரம், பயன்படுத்தப்பட்ட தொகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.</p><h2>செயல்திட்டத்திற்கு ஒப்புதல்</h2><p>நிதியாண்டிற்கான இம்மாநில மன்ற கூட்டத்தில், 2026-27ஆம் மேம்பாட்டு செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், மேம்பாட்டுச் செயல்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியானது அவர்களின் பயன்பாட்டிற்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், திட்டத்தின் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணித்திட வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.</p><h2>வளர்ச்சி செயல் திட்டம்</h2><p>மற்றும் பழங்குடியினரின் ஆதிதிராவிடர் செயல்திட்டத்தின்கீழ், குறித்தொதுக்கப்பட்ட நிதியை மேம்பாட்டுச் செயல்படுத்தும் துறைகளின் மாதாந்திர செலவின விவரம், பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் பயனாளர்களின் விவரம் போன்றவற்றை வளர்ச்சி செயல் திட்டம் (Development Action Plan) வலைதளத்தில் என்ற (https://www.adtwdap.tn.gov.in) தவறாமல் பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதிபடுத்தப்பட வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.</p><h2>உரிய பரிந்துரைகள்</h2><p>மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு இடையூறாகவுள்ள தடைகளை கண்டறிந்து அவற்றை களைந்திட உரிய பரிந்துரைகளை தெரிவிக்கவும், அதற்குரிய திட்டங்களை விரைந்து தீட்டவும் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர்  அறிவுறுத்தப்பட்டது.</p><h2>அலுவலர்கள் கலந்து கொண்டனர்</h2><p>இம்மாநில மன்றக் கூட்டத்தில், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், வனத்துறை அமைச்சர் ஆர்.வி. இரஞ்சித்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்  து.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் த. லதா, க. மாரிமுத்து, பொ. சந்திரசேகர், வி.பி. தமிழ்ச்செல்வி, தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ. சித்திக், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தியா வேணுகோபால் சர்மா, சமூக நீதித்துறை செயலாளர் டாக்டர் என். சுப்பையன், மாநில மன்ற உறுப்பினர்கள் டாக்டர் வி.ஏ. ரமேஷ்நாதன், டி. நவநீத சிவக்குமார்,  ம. ஷோபா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடலூர்: நிலத்தகராறில் 2 சகோதரர்கள் வெட்டிக்கொலை: 5 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-2-brothers-hacked-to-death-over-land-dispute-5-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-2-brothers-hacked-to-death-over-land-dispute-5-arrested#comments</comments><guid isPermaLink="false">9ef786da-1dcc-4b34-8e8e-9181fef6fffc</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:32:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:32:39.801Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,கொலை,brother,Land dispute,நிலத்தகராறில்,கைது Arrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kd1q8jcy/182.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kd1q8jcy/182.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர், </p><p>கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பால்வார்த்துண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 44). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.</p><p>இவரது சித்தப்பா மகன் ராமகிருஷ்ணன்(36). விவசாயி. இவர்கள் 2 பேரும் நேற்று இரவு வீட்டிற்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சியான ராமகிருஷ்ணன் அவர்களை தடுக்க முயன்றார். அந்த கும்பல் அவரையும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பல இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ராமகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து பலத்த காயத்துடன் கிடந்த ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகர் அரசு கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார்.</p><p>இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேரின் 2 குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்களை போலீசார் உள்ளே விட மறுத்ததால், உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சகோதரர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட இடம், அவர்களது வீடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லாவும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் வழக்குப்பதிவு போலீசார் செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சகோதரர்களை வெட்டிக்கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், சகோதரர்களை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.</p><h2>விசாரணை</h2><p>போலீசாரின் விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளன. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்யப்பட்டவர்களுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கனகசபை என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.</p><p>நேற்றிரவு சகோதரர்கள் வயலுக்கு மோட்டார் போடுவதற்காக செல்வதை அறிந்ததும், கனகசபை, அவரது மகன் பாண்டியன் என்ற கனகராஜ் ஆகியோர் 8 பேர் கும்பலுடன் அங்கு சென்று சகோதரர்களை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. </p><h2>கைது</h2><p>இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கனகசபையின் மகன் பாண்டியன் என்ற கனகராஜ்(30), தேவராஜ்(30), துரை என்ற யுவராஜ், மணிக்கொல்லையை சேர்ந்த யுவராஜ்(30), வில்லியனூரை சேர்ந்த ராமஜெயம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கனகசபை உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சை: செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalin-refuses-to-come-to-chengipatti-police-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-stalin-refuses-to-come-to-chengipatti-police-station#comments</comments><guid isPermaLink="false">d5425d7e-03e5-4b8a-8c0f-cdd787dae027</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:23:34 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:23:34.688Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Thanjavur,தஞ்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kawwdtcr/one33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/kawwdtcr/one33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை, </p><p>தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் இன்று காலை கைது செய்தனர்.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>காலை 11 மணியளவில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF">உதயநிதி ஸ்டாலினை </a>கைது செய்த போலீசார், அங்கிருந்து தஞ்சாவூர் அழைத்து செல்ல புறப்பட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.</p><h2>மதிய உணவு சாப்பிட்ட உதயநிதி</h2><p>2 மணியளவில் விழுப்புரம் அருகே ஒலப்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை போலீசார் வாகனம் கடந்து சென்றது. திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டனர். தஞ்சையில் ஏராளமானோர் திரண்டு கூட்டம் அதிகமானதால் செங்கிப்பட்டியில் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உதயநிதி ஸ்டாலின் வேனிலேயே பயணம் செய்தார்.</p><p>இந்தநிலையில்,  சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் திருச்சி வழியாக செங்கிப்பட்டியை தாண்டி சென்றபோது திடீரென யூடர்ன் எடுத்து கந்தர்வகோட்டை அருகே உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதியை போலீசார் அழைத்து சென்றனர். </p><h2>வாகனத்தை விட்டு இறங்க மறுப்பு</h2><p>தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் திமுகவினர் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் உதயநிதி செங்கிப்பட்டி அழைத்தனர்.  விசாரணைக்காக அழைத்துவரப்பட்டுள்ள காவல் வாகனத்தை விட்டு இறங்க எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மறுப்பு தெரிவித்தார். </p><p>செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க கூடாது. வழக்கு பதியப்பட்டுள்ள தஞ்சை கிழக்கு காவல்நிலையத்தில் தான் விசாரிக்க வேண்டும் என கூறினார். </p><h2>ஐஜி பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை</h2><p>செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட உதயநிதி போலீஸ் வாகனத்தை விட்டு இறங்க மறுப்பு தெரிவித்ததால் சம்பவ இடத்திற்கு ஐஜி பாலகிருஷ்ணன் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உதயநிதி தெரிவித்தார்.</p><p>சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதியிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  காலை 11 மணிக்கு கைது செய்யப்பட்ட உதயநிதியிடம் மாலை 6.45 மணி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. </p><h2>தஞ்சை எஸ்.பி. சுந்தரவதனம் முன்னிலையில் விசாரணை </h2><p>தஞ்சை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் ஆய்வாளர் மணிகண்டன் உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>முன்னதாக, செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட உதயநிதி ஸ்டாலின் போலீஸ் வாகனத்தை விட்டு இறங்கி தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.</p><p>உதயநிதியை அழைத்துவந்த நிலையில் செங்கிபட்டி காவல் நிலையம் முன்பு போலீசாரோடு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. </p><p>முன்னதாக,திட்டத்தை மாற்றி வேறொரு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வது ஏற்புடையதல்ல. தஞ்சை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டுமென்பதுதான் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது என மா.சுப்பிரமணியன் கூறினார்.  தஞ்சை நகர காவல் நிலையம் மற்றும் வாகனங்கள் மீது திமுகவினர் கல்வீச்சு தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜயை சந்தித்த தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-tennis-association-executives-met-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-tennis-association-executives-met-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">7f827e5d-524d-4a4f-9d62-930dfa2add93</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:03:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:03:37.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Tennis,டென்னிஸ்,சந்திப்பு,Association,முதல்-அமைச்சர்Chief Minister,சங்க நிர்வாகி,Chief Minister Vijay,</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/qzmvxafj/181.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/qzmvxafj/181.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜயை தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.</p><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, 2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA-250) போட்டியை சென்னை நகரில் நடத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><h2>பங்கேற்பு</h2><p>இந்த சந்திப்பில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ், முதன்மைச் செயல் அலுவலர்  ஹில்டன் ஜோஷி, போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் மற்றும் கௌரவ செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் தமிழக அரசின் ஒத்துழைப்பு குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் தீயணைப்பு வீரர் தற்கொலை - போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/firefighter-dies-by-suicide-one-and-a-half-months-after-love-marriage-police-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/firefighter-dies-by-suicide-one-and-a-half-months-after-love-marriage-police-investigation#comments</comments><guid isPermaLink="false">e921d289-dd40-49fe-9a7b-c74abaaf46e3</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:55:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:55:37.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Theni,தேனி,காதல் திருமணம்,தற்கொலை,கோயம்புத்தூர்,தீயணைப்பு வீரர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/310sh30b/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/310sh30b/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் தீயணைப்பு வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>காதல் திருமணம்</h2><p>தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் அழகேசன் (25 வயது). கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. தான் காதலித்து வந்த இளம்பெண்ணை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.</p><h2>வாடகை வீடு</h2><p>பின்னர் தனது மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு கோவைக்கு பணிக்காக திரும்பினார். மேலும் தனது மனைவியுடன் வசிக்க வாடகைக்கு வீடு பார்த்து வந்தார். கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே வாடகைக்கு ஒரு வீடு கிடைத்தது. அந்த வீட்டில் அழகேசன் தங்கி இருந்தார். ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு சென்று மனைவியை கோவைக்கு அழைத்து வர திட்டமிட்டு இருந்தார்.</p><h2>செல்போன் சுவிட்ச்-ஆப்</h2><p>இந்த நிலையில் நேற்று காலை அழகேசன் தங்கி இருந்த வீடு நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. அத்துடன் அழகேசனின் மனைவி அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவருடன் வேலை செய்து வரும் சக ஊழியர்கள் அந்த வீட்டுக்கு வந்து கதவை தட்டினர். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அப்போது மின்விசிறியில் அழகேசன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீயணைப்பு வீரர் தற்கொலை செய்ய குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் நில முறைகேடு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-land-scam-case-main-accused-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-land-scam-case-main-accused-arrested#comments</comments><guid isPermaLink="false">b18ab6d0-823f-4f74-8221-41e604364fb6</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:44:42 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:44:42.560Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,குற்றவாளி,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,நில முறைகேடு,land scam,கைதுArrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/pz1qa9o4/180.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/pz1qa9o4/180.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.100 கோடி நிலம் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரித்து வரும் நிலையில் அதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>நில முறைகேடு</h2><p>இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோலிலுக்கு சொந்தமான சுமார் ரூ.60 கோடி கோடி மதிப்பிலான 179 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு, பத்திரப்பதிவு மூலம் ஆக்கிரமித்துள்ளது அரங்கேறியுள்ளது. அறநிலையத்துறையையை அதிரவைக்கும் அளவுக்கு நடந்துள்ள இந்த மோசடி தொடர்பாக விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. </p><p>இந்த வழக்கில், முனனாள் தாசில்தார் அன்பழகள், முன்னாள் கிராமி நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) அரசன், சார்பதிவாளர்கள் பிரகாஷ். அனந்தராமன், தங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்த ராமாயி ஆயியார், செந்தமிழ்ச் செல்வி உள்ளிட்ட 19 பேர் மீது, கோவில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.</p><h2>முக்கிய நபர் கைது</h2><p>விசாரணையில், போலிஆவணங்கள் தாக்கல் செய்து பட்டா பெற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 40) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், நில மோசடிக்கு மூளையாக செயல்பட்ட தாகக் கூறப்படும் இளையராஜா (52) என்பவரை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் பெங்களுருவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று இளையராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்யும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருவதாக மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பாட்டி: வீடியோவில் வசமாக சிக்கினார்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-who-faked-a-seizure-to-extort-money-caught-red-handed-on-video</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-who-faked-a-seizure-to-extort-money-caught-red-handed-on-video#comments</comments><guid isPermaLink="false">db78cc09-4ea0-4ad1-9bc8-c46ed1cb2d69</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:34:06 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:34:06.371Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Elderly woman,பணம் பறிப்பு,grandmother,பாட்டி,Kovai</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/eossvln9/73.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மர்ம பாட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ நடுரோட்டில் திடீரென வலிப்பு வந்தது போல் நடித்து பொதுமக்களிடம் நூதன முறையில் பாட்டி பணம் பறித்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/eossvln9/73.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவையில் நடுரோட்டில் திடீரென வலிப்பு வந்தது போல் நடித்து பொதுமக்களிடம் நூதன முறையில் பணம் பறித்து வந்த பாட்டி குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>நடுரோட்டில் நாடகம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை மாவட்டம் </a>ரத்தினபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு பாட்டி சுற்றித் திரிந்தார். அவர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலைகளில் செல்லும்போது, திடீரென தரையில் விழுந்து தனக்குக் கடுமையான வலிப்பு ஏற்பட்டது போலக் கைகால்களை உதறி நடித்துள்ளார்.</p><h2>பரிதாபப்பட்டுப் பணம் கொடுத்த மக்கள்</h2><p>இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மனிதாபிமான அடிப்படையில் ஓடிவந்து அவருக்கு முதலுதவி செய்துள்ளனர். பின்னர், மருத்துவச் செலவிற்காகப் பரிதாபப்பட்டுத் தங்களால் இயன்ற பணத்தையும் அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.</p><h2>கையும் களவுமாகச் சிக்கிய வீடியோ</h2><p>இந்நிலையில், அந்தப் பாட்டி இதே பாணியில் வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து நாடகமாடிப் பணம் பறிப்பதைச் சில பொதுமக்கள் கவனித்துள்ளனர். திரைப்படப் பாணியில் மக்களை ஏமாற்றி வந்த அந்தப் பாட்டியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வரும் வகையில், அவர் வலிப்பு வருவது போல் நடிக்கும் காட்சிகளைப் பொதுமக்கள் தங்களது மொபைல் போனில் ரகசியமாகப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்தப் பாட்டியின் "ஆக்டிங்" வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/LFi0DdSGG9o"></iframe></figure><h2>போலீசார் விசாரணை</h2><p>பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறித்த அந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மர்ம பாட்டி </a>யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார், வைரல் வீடியோ ஆதாரங்களை வைத்துக் கொண்டு அந்தப் பாட்டியை தேடி வருகின்றனர். சாலையில் யாராவது ஆபத்தில் இருந்தால் உதவுவது நல்லது என்றாலும், இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலினை விசாரிக்கும் இடத்தை மாற்றிய காவல்துறை..என்ன காரணம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-banned-in-thanjavur-south-5-district-sps-summoned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-banned-in-thanjavur-south-5-district-sps-summoned#comments</comments><guid isPermaLink="false">706f7253-ed96-4eb8-9514-958d7244d240</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:10:58 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:10:58.441Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,arrest,தஞ்சை,காவல் நிலையம்,போக்குவரத்து தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/5cvh5duy/police33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
தஞ்சை தெற்கில் போக்குவரத்துக்கு தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/5cvh5duy/police33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை </p><p>தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் தஞ்சைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் இன்று காலை கைது செய்தனர்.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>காலை 11 மணியளவில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலினை</a> கைது செய்த போலீசார், அங்கிருந்து தஞ்சாவூர் அழைத்து செல்ல புறப்பட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.</p><h2>மதிய உணவு சாப்பிட்ட உதயநிதி</h2><p>2 மணியளவில் விழுப்புரம் அருகே ஒலப்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை போலீசார் வாகனம் கடந்து சென்றது. திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உதயநிதி ஸ்டாலின் வேனிலேயே பயணம் செய்து வருகிறார். </p><p>பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பிளாஸ்க்கில்  முன்னாள் அமைச்சர் சி.வி.கணேசன் தேனீர் வழங்கினர்.</p><h2>போலீஸ் குவிப்பு</h2><p>இந்தநிலையில்,  உதயநிதி விசாரணைக்காக தஞ்சை தெற்கு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதி மீது தஞ்சை கிழக்கு சரக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.</p><p>திமுகவினர் அதிகளவு கூடாத வண்ணம் தஞ்சை தெற்கில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரியகோவில் மேம்பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.  சாலை இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தஞ்சை தெற்கு காவல் நிலைய பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>5 மாவட்ட எஸ்.பி.க்கள் வருகை</h2><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு அழைத்து வரப்பட இருக்கும் நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் தஞ்சை வருகை தந்துள்ளனர். தஞ்சை தெற்கு காவல் நிலையத்தைச் சுற்றியும் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>என்ன காரணம்</h2><p>தஞ்சை கிழக்கு காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், உதயநிதி ஸ்டாலினை தஞ்சை மணிமண்டபம் உள்ள தெற்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு, எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-birthday-to-puducherry-chief-minister-rangasamy-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-birthday-to-puducherry-chief-minister-rangasamy-l-murugan#comments</comments><guid isPermaLink="false">dd1c83b1-8c7c-41fc-b1a3-82e515a7096c</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:09:32 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:09:32.928Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,சென்னை,L. Murugan,புதுச்சேரி,puducherry,வாழ்த்து,பிறந்தநாள்,புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/v1alvp23/179.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எல்.முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/v1alvp23/179.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு, எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>புதுச்சேரி முதல்-அமைச்சர் என். ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><h2>வாழ்த்து</h2><p>அந்த வகையில் மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D"> எல்.முருகன்</a>, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவரது பொதுவாழ்க்கைப் பணி மேலும் சிறக்கவும், அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tavega-mla-meeting-begins</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tavega-mla-meeting-begins#comments</comments><guid isPermaLink="false">5b652bd3-bee8-4a8e-8762-141de64f597b</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:02:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:02:43.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,எம்.எல்.ஏ.,MLA,தமிழக சட்டசபை,TN Assembly,தமிழக பட்ஜெட்,TN Budget,TN Assembly session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/q475nop8/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/q475nop8/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான <a href="https://www.dailythanthi.com/">தவெக </a>அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த  ஜூன் 18ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை நாளை கூட உள்ளது.</p><p>சட்டசபையில்  2026-27ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தவெக அரசு  நாளை தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்</h2><p>இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>இந்த கூட்டத்தில் நாளை தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் சட்டசபையில் எவ்வாறு  செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>நத்தம் அருகே தென்னை நார் குடோனில் பயங்கர தீ விபத்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-at-a-coir-warehouse-near-natham</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-at-a-coir-warehouse-near-natham#comments</comments><guid isPermaLink="false">e587d395-7e14-4119-94ed-8ec60c95b85c</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:54:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:54:37.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திண்டுக்கல்,Fire accident,தீ விபத்து,தீயணைப்பு வீரர்கள்,police enquiry,Dindugal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/sxiabs18/natham-fire-accident.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தீ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் தென்னை நார் குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/sxiabs18/natham-fire-accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தென்னை நார் குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.</p><h2>தீ விபத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திண்டுக்கல் மாவட்டம்</a> நத்தம் அருகே உள்ள உலுப்பகுடி பகுதியில் தனியார் தென்னை நார் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் இன்று (செவ்வாய்க்கிழமை) குடோனில் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது.</p><h2>தொழிலாளர்கள் அலறல்</h2><p>நார் கழிவுகள் அதிகம் இருந்ததால், மளமளவென தீ குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த, தொழிலாளர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.</p><h2>தீயணைப்புத் துறை நடவடிக்கை</h2><p>இது குறித்து உடனடியாக நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தீயணைப்பு வீரர்கள்</a>, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் கடுமையாகப் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.</p><h2>சேத விவரங்கள்</h2><p>அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை. ஆனால், குடோனில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான தேங்காய் நார் கழிவுகள் மற்றும் அங்கிருந்த 2 எந்திரங்கள் தீயில் கருகின. சேதமதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என தெரிகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>கரூர்: காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-kaveri-river-drowning-3-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-kaveri-river-drowning-3-killed#comments</comments><guid isPermaLink="false">424bbd03-76ea-4b4e-a999-97a1dc133daa</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:44:30 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:44:30.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,Cauvery River,காவிரி ஆறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/q0w3ly7u/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/q0w3ly7u/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>கரூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/">கரூர் </a>மாவட்டம் நெரூரில் காவிரி ஆற்றில் இன்று முன்னோருக்கு திதி கொடுக்க பலர் குவித்திருந்தனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த 3 அர்ச்சகர்கள் திதி கொடுப்பதற்காக காவிரி ஆற்றில் இறங்கியுள்ளனர்.</p><h2>3 பேர் பலி</h2><p>ஆற்றில் இறங்கி சடங்குகளில் ஈடுபட்டிருந்தபோது 3 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ruling-and-opposition-parties-must-pursue-constructive-politics-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ruling-and-opposition-parties-must-pursue-constructive-politics-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">5ec98a1e-23eb-4749-997b-d73731be8481</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:26:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:26:37.179Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/o17b1888/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/o17b1888/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதல்-அமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார்.  உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைது  நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p>தஞ்சாவூர் போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும்.  இது கண்டிக்கத்தக்கது. துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.</p><p>அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலினை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. நண்பகல் 12 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி ஐகோர்ட்டே அறிவுறுத்திய பிறகும்  எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை. தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும்தான்.</p><p>தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத்  தீர்ப்பதில்தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் அல்ல. இனியாவது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் - ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க திமுக தொண்டர்கள் தயார் -  திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-workers-ready-to-visit-a-thousand-prisons-dmk-mla-markandeyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-workers-ready-to-visit-a-thousand-prisons-dmk-mla-markandeyan#comments</comments><guid isPermaLink="false">dbbeae47-600d-453e-b6c3-4c54399a93ec</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:20:06 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:20:06.080Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,முதல்-அமைச்சர் விஜய்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/k2i6dmhi/mla22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திமுக தொண்டர்கள் தயார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/k2i6dmhi/mla22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க திமுக தொண்டர்கள் தயாராக உள்ளனர் என திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார்.</p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசியதாக திமுகவை சார்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயன் முதல்-அமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.</p> <p>இந்தநிலையில்,  பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியே வந்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக தொண்டர்கள் </a>தயாராகவே உள்ளனர். சிறையில் அடைப்பதால் என்னை ஒடுக்கிவிட முடியாது. எத்தனை வருடங்கள் சிறையில் இருந்தாலும் ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்.</p><p>சட்டப்பேரவையில் கடுமையான எதிர்வினைகளை திமுக கொடுக்கும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;போராட்டம் என்கிற பெயரில் திமுக அராஜகம்&quot; - வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-anarchy-in-the-name-of-protest-vanathi-srinivasan-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-anarchy-in-the-name-of-protest-vanathi-srinivasan-condemns#comments</comments><guid isPermaLink="false">64180f25-d2d3-49a4-b49d-a10cecb872a9</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:10:55 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:10:55.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,திமுக,protest,உதயநிதி ஸ்டாலின்,Vanathi Srinivasan,Condemn,கைதுArrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gjncba3o/vanathi-srinivasan-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/gjncba3o/vanathi-srinivasan-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து போராட்டம் என்ற பெயரில் இன்று திமுகவினர் அரங்கேற்றும் அராஜகங்கள் கடும் கண்டனத்திற்குரியவை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.</p><p>இது தொடர்பாக, தேசிய பாஜக மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>கண்டனம்</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து போராட்டம் என்ற பெயரில் இன்று திமுகவினர் அரங்கேற்றும் அராஜகங்கள் கடும் கண்டனத்திற்குரியவை. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், காவல்துறையினரையே அச்சுறுத்தும் வகையில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் இந்த செயல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை.</p><p>சட்டம் தனது கடமையைச் செய்யும் போது அதற்கு மதிப்பளிக்காமல் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் அரசியலை முன்னிறுத்துவது திமுக இன்னும் திருந்தவில்லை என்பதற்கே சான்று. பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசும் தங்களது கட்சியினரைக் கண்டிக்காமல் மௌனம் காக்கும் திமுக மகளிர் அணி, பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் தார்மீக உரிமையையே இழந்து விட்டது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vilaathikulam-dmk-mla-markandeyan-released-on-bail</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vilaathikulam-dmk-mla-markandeyan-released-on-bail#comments</comments><guid isPermaLink="false">434c1879-afa8-44f8-97db-fe45d81c6216</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:07:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:07:59.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,எம்.எல்.ஏ.,MLA,மார்க்கண்டேயன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ompaingj/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/ompaingj/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை,</p> <p><a href="https://www.dailythanthi.com/">தூத்துக்குடி </a>மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு  மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார். </p><p>இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.  </p><h2>ஜாமீன் மனு தள்ளுபடி</h2><p>இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை 30ம் தேதி விசாரித்த கோர்ட்டு அந்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.</p><h2>மீண்டும் மனு</h2><p>இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். </p><p>இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.</p><h2>விடுதலை</h2><p>இந்நிலையில், ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் விடுதலை செய்யப்பட்டார்.  சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட மார்க்கண்டேயனை திமுகவினர் வரவேற்றனர். </p><h2>மார்க்கண்டேயன் பேசியது என்ன?</h2><p>மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதல் அமைச்சர்.. உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துகுறோம்.. நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை என மார்க்கண்டேயன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>கைதுக்கு முன் மகனை பார்த்ததும்   கட்டி தழுவிய உதயநிதி ஸ்டாலின் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-stalin-hugs-son-ahead-of-arrest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-stalin-hugs-son-ahead-of-arrest#comments</comments><guid isPermaLink="false">2065034d-a0bc-4336-8a83-6daea78fb363</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:59:41 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:59:41.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,கைது,arrest,son,கிருத்திகா உதயநிதி,மகனை,Kiruthiga Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/89sig1xz/stalinson.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/89sig1xz/stalinson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கைதுக்கு முன் தனது மகன் இன்பநிதியை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்</a> பாசத்தோடு  கட்டி தழுவினார்.</p><h2>கைது செய்யப்பட்டார்</h2><p>தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக, தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தஞ்சாவூர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.</p><h2>கட்டி தழுவினார்</h2><p>போலீசார் அவரது வீட்டு வாசலில் குவிக்கப்பட்டு, கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்த வேளையில் வீட்டில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது, வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் வாகனத்தில் ஏறுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக, தனது மகன் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%20">இன்பநிதியை</a> உதயநிதி ஸ்டாலின் பாசத்தோடு  கட்டி தழுவினார். மகனை அனைத்துவிட்டு இன்முகத்தோடு போலீசாருடன் சென்ற காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில்  பரவி வருகிறது.</p><h2>காரசார விவாதம்</h2><p> உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய போலீசார் வீட்டுக்குள்ளே நுழைய முயன்றபோது, அவரது மனைவி கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எவ்வித முகாந்திரமும் இன்றி இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அரங்கேற்றப்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.</p><h2>தொண்டர்கள் திரண்டதால் பதற்றம்</h2><p>கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை போலீசார் காரில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றபோது, நீலாங்கரை இல்லத்தின் முன்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் குதித்தனர். இதனால் அந்த பகுதியே ஸ்தம்பித்தது. </p><p>தொண்டர்களை கலைத்துவிட்டு போலீசார் தற்பொழுது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் கைதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தற்பொழுது உச்சகட்ட பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எல்எல்ஏவாக இருக்கக்கூட உதயநிதிக்கு தகுதியில்லை
- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-is-not-even-qualified-to-be-an-lla-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhi-is-not-even-qualified-to-be-an-lla-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">dc030d3c-ce16-4d0f-9c9a-652c536944c0</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:59:06 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:59:06.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Nirmalkumar,அமைச்சர் நிர்மல் குமார்,CMVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lwofk86u/nirmal33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்|]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/lwofk86u/nirmal33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, ஒரு எல்எல்ஏவாக நிற்கக்கூட உதயநிதிக்கு தகுதியில்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.</p><h2>ஜெயலலிதா இருந்திருந்தால்...</h2><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா  உயிருடன் இருந்திருந்தால் இத்தகைய சூழலில் என்ன நடவடிக்கை எடுத்திருப்பாரோ, அதைத்தான் இன்று முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் துணிச்சலாகச் செய்திருக்கிறார்.</p><h2>இபிஎஸ் வேடிக்கை</h2><p>தான் ஆட்சியில் இருக்கும்போதே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து உதயநிதி ஸ்டாலின் கொச்சையாகப் பேசியபோதும், அன்றைய முதல்-அமைச்சராக இருந்த இபிஎஸ் அவர் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.</p><p>ண்களுக்கு எதிராக இன்று யார் அநாகரீகமாகப் பேசினாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி, அவர்கள் மீது இந்தத் தவெக அரசு எந்தவித தயவுதாட்சண்யமும் இன்றிச் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கையைத் தொடர்ந்து எடுக்கும்.</p><h2>திமுகவினர் வீடுகளில் போட்டுக் காட்டவேண்டும்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</a> பேசியதில் ஏதாவது ஒரு வார்த்தை ஏற்புடையதாக இருக்கிறதா? என்பதை திமுகவினர் தங்கள் வீடுகளில் போட்டுக் காட்டவேண்டும்.  இவ்வளவு கீழ்த்தரமாக, கேவலமாக பேச உதயநிதிக்கு என்ன அவசியம் இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, ஒரு எல்எல்ஏவாக இருக்கக்கூட உதயநிதிக்கு தகுதியில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘டிஜிட்டல் கைது’ மிரட்டல்: முதிய தம்பதியிடம் ரூ.1.53 கோடி மோசடி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-arrest-threat-elderly-couple-defrauded-of-153-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-arrest-threat-elderly-couple-defrauded-of-153-crore#comments</comments><guid isPermaLink="false">bea51f82-5555-46ce-83a8-9c3b25bd61f7</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:46:49 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:46:49.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Money fraud,elderly couple,வயதான தம்பதி,Kovai,மிரட்டி பணம் பறிப்பு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/adzsfuc2/71.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ முதிய தம்பதி]]></media:title><media:description type="html"><![CDATA[  70 வயது முதிய தம்பதியை, மர்ம நபர்கள் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்வதாக மிரட்டி ரூ.1.53 கோடி பறித்துள்ளனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/adzsfuc2/71.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை </a>மாவட்டத்தில் 70 வயது முதிய தம்பதியை, மர்ம நபர்கள் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்வதாக மிரட்டி ரூ.1.53 கோடி பறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>முதிய தம்பதி</h2><p>கோவையில் உள்ள முதியோருக்கான பிரத்யேக அடுக்குமாடி குடியிருப்பில் 70 வயது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதிய தம்பதி </a>வசித்து வந்தனர். அந்த தம்பதியின் 2 மகள்களும் வெளிநாட்டில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மர்ம நபர்கள் தொலைபேசி வாயிலாக அந்த தம்பதியினரை தொடர்பு கொண்டனர். அவர்கள் மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.</p><h2>மர்ம நபர்களின் மிரட்டல்</h2><p>முதியவர்களின் வங்கி கணக்குகள் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளதாகக் கூறி மிரட்டியுள்ளனர். வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை விசாரணைக்காகக் கூறப்படும் கணக்கிற்கு மாற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தினர். மேலும், ஆன்லைன் வீடியோ அழைப்பு மூலம் அவர்களைக் கண்காணித்து, 'டிஜிட்டல் முறையில் கைது' செய்து வைப்பதாகக் கூறி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மர்ம நபர்கள் </a>பயமுறுத்தினர்.</p><h2>ரூ.1.53 கோடி பறிப்பு</h2><p>அவர்களின் மிரட்டலுக்கு பயந்த முதிய தம்பதியினர், தங்கள் வாழ்நாள் சேமிப்பான ரூ.1.53 கோடியை மோசடி கும்பல் தெரிவித்த குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்குப் பிரித்து அனுப்பியுள்ளனர். பணம் அனுப்பிய பிறகு, தங்களை ஏமாற்றியதை உணர்ந்த தம்பதியினர் இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>போலீசார் முக்கிய எச்சரிக்கை</h2><p>எந்தவொரு அரசு விசாரணை அமைப்பும் ஆன்லைன் வீடியோ அழைப்பு மூலம் யாரையும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்யாது. இது போன்ற மிரட்டல் அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். பணத்தை உடனடியாக அனுப்பாமல், குடும்பத்தினரிடமோ அல்லது காவல்துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.</p><p>சைபர் மோசடிக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ள வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது நியாயமான நடவடிக்கையே: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhis-arrest-is-a-fair-move-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udhayanidhis-arrest-is-a-fair-move-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">43a84999-aaf5-4a81-9772-3d3fe0b1d278</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:35:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:35:43.604Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,TNPolice,UdhayanidhiStalin,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/biqm8zzw/arun33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-04/biqm8zzw/arun33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,  முதல்-அமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.</p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து சென்றுள்ளனர்.  உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்தநிலையில்,  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>சட்டமன்றத்துக்கு வரக்கூடாது என நினைத்து உதயநிதி அப்படி பேசியிருப்பார்.பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தவெக அரசு பார்த்துக்கொண்டிருக்காது. அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். பெண்கள் குறித்து தவறாக பேசக்கூடாது என்றார்.</p>]]></content:encoded></item></channel></rss>