<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 06 Sep 2026 08:45:27 +0000</lastBuildDate><item><title>வார விடுமுறையை முறையாக அமல்படுத்த வேண்டும்: அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மகளிர் காவலர்கள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-police-officers-request-minister-srinath-to-implement-weekly-holidays-properly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-police-officers-request-minister-srinath-to-implement-weekly-holidays-properly#comments</comments><guid isPermaLink="false">3a917cfd-41d1-42d0-ae26-7a2085f00f40</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:43:05 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:43:05.226Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Thoothukudi,தூத்துக்குடி,கோரிக்கை,women,Request,காவலர்கள்,speech,பேச்சு,மகளிர்,வாரவிடுமுறை,அமைச்சர் ஸ்ரீநாத்,Minister Srinath,weekly leave</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/00aurfrv/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வார விடுமுறையை முறையாக அமல்படுத்த வேண்டும்: அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மகளிர் காவலர்கள் கோரிக்கை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/00aurfrv/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D">மகளிர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">காவலர்கள்</a>, தங்களுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">வார விடுமுறை</a>யை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் ஸ்ரீநாத்</a>திடம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கோரிக்கை</a> விடுத்தனர். </p><h2>வ.உ.சி. சிலைக்கு அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை</h2><p>சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் உருவ சிலைக்கு தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><h2>வாரவிடுமுறையை முறையாக அமல்படுத்த மகளிர் காவலர்கள் கோரிக்கை</h2><p>மரியாதை செலுத்திய பிறகு, அங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் காவலர்களிடம், "உங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா?" என அமைச்சர் ஸ்ரீநாத் கேட்டறிந்தார். அதற்கு பதிலளித்த மகளிர் காவலர்கள், "பெண் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறையை எந்தவிதத் தடங்கலுமின்றி முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர். </p><h2>காவல்துறைக்கான மானியக் கோரிக்கையில் புதிய திட்டங்கள்</h2><p>மகளிர் காவலர்களின் கோரிக்கையைக் கேட்ட அமைச்சர் ஸ்ரீநாத், "உங்களது கோரிக்கை உடனடியாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். திங்கள்கிழமை நடைபெற உள்ள காவல்துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, முதல்-அமைச்சர் காவல்துறையினருக்காக மேலும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார்" என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>புளியங்குடியில் வரத்து குறைவு.. எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு.. கிலோ ரூ.225-க்கு விற்பனை..</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/low-supply-in-puliyangudi-lemon-prices-skyrocket-selling-for-rs225-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/low-supply-in-puliyangudi-lemon-prices-skyrocket-selling-for-rs225-per-kg#comments</comments><guid isPermaLink="false">ca489ccc-b9e2-40b4-b708-4fb34f25f5c3</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:05:53 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:05:53.016Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,விலை உயர்வு,price hike,lemon,விவசாயிகள் கோரிக்கை,Low,Farmers demand,வரத்து குறைவு,Supply,எலுமிச்சை,Puliyangudi,புளியங்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1zfg5v4j/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81.-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%82.225-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ புளியங்குடி சந்தையில் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1zfg5v4j/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81.-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%82.225-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>சுட்டெரிக்கும் வெயிலால் வரத்து குறைவு காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">புளியங்குடி</a> சந்தையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88">எலுமிச்சை</a> விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.225 வரை விற்பனையானது. </p><h2>எலுமிச்சை சாகுபடி; விற்பனை</h2><p>தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சொக்கம்பட்டி, புன்னையாபுரம், சிங்கிலிபட்டி, குமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் எலுமிச்சை பழங்கள் புளியங்குடி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் என தினமும் சுமார் 15 முதல் 20 டன் வரை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. </p><h2>விலை கிடுகிடு உயர்வு</h2><p>தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயில், பலத்த காற்று காரணமாக செடிகளில் இருந்து பழங்கள் உதிர்ந்துவிடுவதால் அதன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81">வரத்து குறைந்துள்ளது</a>. இதனால் எலுமிச்சை பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. புளியங்குடி சந்தையில் கிலோ ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் நேற்று கிலோ ரூ.225 வரை விற்பனை ஆனது. தரத்தை பொறுத்து ஒரு எலுமிச்சை பழம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விலை உயர்வால்</a> விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். </p><h2>காரணம் என்ன?</h2><p>எலுமிச்சை பழத்தின் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறியதாவது:</p><p>சுபமுகூர்த்தங்கள், அம்மன் கோவில் திருவிழாக்கள் மற்றும் கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் அடுத்தடுத்து வந்ததால் எலுமிச்சைக்கான தேவை அதிகரித்ததாலும் விலை உயர்ந்துள்ளது. கடும் வெயில், பலத்த காற்று வீசுவதும் மற்றொரு காரணமாகும். இனிவரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. </p><h2>மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை</h2><p>விலை வீழ்ச்சி மற்றும் விலை ஏற்றம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், எலுமிச்சை பழங்களை மூலதனமாக கொண்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இப்பகுதியில் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>வீடு புகுந்து புதுமாப்பிள்ளையை அரிவாளால் வெட்டியது ஏன்? - கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-they-break-into-the-house-and-hack-the-newlywed-groom-with-a-sickle-arrested-youths-give-sensational-confession</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-they-break-into-the-house-and-hack-the-newlywed-groom-with-a-sickle-arrested-youths-give-sensational-confession#comments</comments><guid isPermaLink="false">3bc15d30-7221-45f0-8623-afd7f7af0ebe</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:03:01 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:03:01.942Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Thoothukudi,தூத்துக்குடி,கிரைம் செய்திகள்,Ettayapuram,எட்டயபுரம்,புதுமாப்பிள்ளை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/rr66366y/gure.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/rr66366y/gure.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>எட்டயபுரம், </p><p>வீடு புகுந்து புது மாப்பிள்ளையை அரிவாளால் வெட்டியது ஏன்? என்பது குறித்து கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.</p><h2>அரிவாள் வெட்டு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/தூத்துக்குடி">தூத்துக்குடி</a> மாவட்டம் எட்டயபுரம் தெப்பக்குளம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் முத்து கணேசன் (வயது 29). இவர் தனியார் சோலார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.</p><p>கடந்த 2-ந்தேதி மதியம் முத்து கணேசன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று முத்து கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதனைப் பார்த்த மனைவி கதறி அழுதார்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>படுகாயமடைந்த முத்து கணேசனுக்கு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். </p><p>பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.</p><h2>பரபரப்பு வாக்குமூலம்</h2><p>இதில், அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் விஷ்வா (23), அவருடைய சித்தப்பா மகன் கருப்பசாமி (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து, வீடுபுகுந்து முத்து கணேசனை அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது. </p><p>மதுரையில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதில், முத்து கணேசனின் தம்பி மாரிசெல்வம் ஒரு சிறுமியுடன் சேர்ந்து இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், மாரிசெல்வத்தை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமியை மாரிசெல்வம் அவமானப்படுத்திய ஆத்திரத்தில் அவரது அண்ணன் முத்து கணேசனை அரிவாளால் வெட்டியதாக தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>குளறுபடியின்றி சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - மு.க. ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-wise-population-census-should-be-conducted-without-any-irregularities-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-wise-population-census-should-be-conducted-without-any-irregularities-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">1ff88d16-2407-4c95-8beb-c5456801f6cc</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:33:55 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:33:55.008Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு,மு.க. ஸ்டாலின்,caste-wise census,M.K. Stalin</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/ucv5ntnt/stalin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/ucv5ntnt/stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க. ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>ஓபிசி மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும். தற்போது எடுக்கப்பட்டு வரும்  கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தோரைக் கணக்கிட ‘open-ended format to record caste details without a pre-determined drop-down list or standardized menu’ முறையை மத்திய அரசு பயன்படுத்தும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை சாதிகள் அல்ல என்று மத்திய அரசு தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல!</p><p>மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியலைப் பெற்று, தொகுத்து, பதிவேற்றி, அதில் இடம்பெற்றுள்ள சாதிகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் வழிமுறையே குழப்பங்களுக்கு இடம் தராது. மாறாக, பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.</p><h2>ஓபிசி பட்டியல்</h2><p>இதனால் இந்தியாவில் 46 லட்சம் சாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு வரும் என்ற ஆபத்தைச் சமூகநீதியில் அக்கறை கொண்ட பலரும் சுட்டிக்காட்டுவதை அரசு புறந்தள்ளிவிடக் கூடாது. சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நோக்கமே பட்டியலினச் சமூக மக்களின் எண்ணிக்கையைப் போல, ஓபிசி மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவர்களது கல்வி, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்துகொள்வதுதான். அப்போதுதான் அவர்கள் அதிகாரம் பெறுவதற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்கவும், அவர்தம் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டவும் அரசுகளால் இயலும். அப்படி இருக்கையில், மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி சாதிகளின் பட்டியலை வைத்து, அதிலிருந்து மக்கள் சாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றினால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும்.</p><h2>திருத்த நடவடிக்கை</h2><p>தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் ரூ.12 ஆயிரம் கோடியும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணடிக்கப்படும். இதனால் எந்தப் பயனும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்துவிடும் ஆபத்தைப் புறந்தள்ளக் கூடாது. பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறி, ஒரு தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p><h2>சிறப்புத் தீர்மானம்</h2><p>கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்து, நீதி வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி, உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-a-young-man-died-after-his-auto-overturned-after-a-wild-boar-ran-across-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-a-young-man-died-after-his-auto-overturned-after-a-wild-boar-ran-across-him#comments</comments><guid isPermaLink="false">6ccf5ff2-e789-4019-a655-b0ce1233d0e9</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:20:30 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:20:30.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,வாலிபர் பலி,wild boar,youth killed,ஆட்டோ கவிழ்ந்து விபத்து,Auto overturned,காட்டுப்பன்றி,குறுக்கே வந்தது,came across</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/c8ixkck0/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்தில் பலியான ராஜகுரு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/c8ixkck0/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், இலத்தூர் பகுதியில் கார், வேன் மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதால், அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88">மாற்றுப்பாதையில்</a> சென்றபோது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF">காட்டுப்பன்றி</a> குறுக்கே பாய்ந்ததால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">ஆட்டோ கவிழ்ந்த விபத்தில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">வாலிபர் உடல் நசுங்கி பலி</a>யானார்.</p><h2>குற்றாலத்துக்கு சென்றவர்கள்</h2><p>தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள ஆவுடையாள்புரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜகுரு (வயது 26). இவருக்கு திருமணமாகி துரைச்செல்வி என்ற மனைவி உள்ளார். ராஜகுரு நேற்று முன்தினம் கடையநல்லூர் அருகே மங்களாபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் தனது மனைவி துரைச்செல்வி, மாமியார் உள்பட சிலருடன் குற்றாலத்திற்கு குளிக்க சென்றார். அங்கு குளித்துவிட்டு அனைவரும் ஒரு ஆட்டோவில் நேற்று அதிகாலையில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். </p><h2>கார், வேன் மோதி தீப்பிடித்து விபத்து; மாற்றுப்பாதையில் சென்ற வாகனங்கள்</h2><p>இலத்தூர் விலக்கு பகுதியில் ஆட்டோ வந்தபோது அங்கு ஏற்கனவே கார், வேன் மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதால் மாற்றுப்பாதையில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். எனவே ராஜகுரு பயணித்த ஆட்டோ டிரைவரும், ஆய்க்குடி வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தார். </p><h2>காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலி</h2><p>ஆய்குடி தனியார் கல்லூரி அருகே சென்றபோது திடீரென காட்டுப்பன்றி ஒன்று ஆட்டோவின் குறுக்கே பாய்ந்தது. இதனால் ஆட்டோ கவிழ்ந்தது. அப்போது ஆட்டோவின் முன்பகுதியில் அமர்ந்திருந்த ராஜகுரு மீது ஆட்டோ விழுந்ததில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் மற்றும் ராஜகுருவின் குடும்பத்தினர் காயமின்றி தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் இலத்தூர் போலீசார் விரைந்து வந்து ராஜகுருவின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>&quot;மதிப்பூதிய உயர்வு முதல் டாஸ்மாக் கட்டுப்பாடு வரை...&quot; - முதல்-அமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-honorarium-hikes-to-tasmac-regulation-kamal-haasan-writes-to-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-honorarium-hikes-to-tasmac-regulation-kamal-haasan-writes-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">9ecd21b8-8319-46fd-b45a-4c7cb8178ad2</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:07:25 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:07:25.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,தமிழ்நாடு,விஜய்,தமிழக அரசு,TN govt,டாஸ்மாக்,Tasmac,Kamal Haasan,மக்கள் நீதி மய்யம்,MNM,கமல் ஹாசன்,grama saba meeting,கிராம சபை,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/57co561g/kannam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/57co561g/kannam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒரு கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு முன்பாக கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். </p><p>இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மாண்புமிகு முதல்-அமைச்சர் அவர்களே,</p><p>தமிழ்நாடு தங்கள் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து, மாநிலத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பொறுப்பைத் தங்களிடம் ஒப்படைத்துள்ளது. அரசின் சேவைகளை மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் ஜனநாயக மற்றும் நிர்வாக அமைப்புகளை மேலும் வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் தங்கள் தலைமையின் கீழ் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.</p><p>தமிழ்நாடு முழுவதும் அடுத்த கிராம சபைக் கூட்டங்கள் 2 அக்டோபர் 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், கிராம சபையை அடித்தள ஜனநாயகத்தின் மிகவும் அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள அமைப்பாக மாற்றுவதற்கான சில ஆலோசனைகளைத் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.</p><p>அரசியலமைப்பின் 243A பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கிராம சபையானது, பங்கேற்பு ஜனநாயகத்தின் மிக நேரடியான வெளிப்பாடாகும். இங்குதான் குடிமக்கள் ஒன்றுகூடி, தங்கள் குறைகளை வெளிப்படுத்தவும், தங்கள் சமூகத்தைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், உள்ளாட்சி நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்கவும் முடிகிறது.</p><p>பஞ்சாயத்து ராஜ் கட்டமைப்பின் கீழ் கிராம சபைகள் செயல்படுவதில் தமிழ்நாடு மூன்று தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ளது. இக்காலகட்டத்தில், அடித்தள ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தத் தொடர்ந்து வந்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அந்த அடித்தளத்தின் மீது மேலும் கட்டமைத்து, கிராம சபையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவும், அதை அதிக பங்கேற்புத்தன்மை கொண்டதாகவும், மக்களின் தேவைகளுக்கு விரைந்து பதிலளிப்பதாகவும், ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாற்றியமைக்கத் தங்கள் தலைமையின் கீழ் இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக நான் நம்புகிறேன்.</p> <p>இது தொடர்பாக, பின்வரும் ஆலோசனைகளை நான் முன்வைக்கிறேன்:</p><h2>1. பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கான மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்துதல்.</h2><p>கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் மக்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆவர்; மேலும் அவர்கள் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை வகிக்கின்றனர்.</p><p>தற்போது வழங்கப்படும் மதிப்பூதியம் முற்றிலும் போதுமானதாக இல்லை. உதாரணமாக, கிராம ஊராட்சித் தலைவர்களின் மாத மதிப்பூதியம் 2021-ஆம் ஆண்டில் ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆக மாற்றியமைக்கப்பட்டது.</p><p>எனவே, அரசு இந்த மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்தி பின்வருமாறு நிர்ணயிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்:</p><p>கிராம ஊராட்சித் தலைவர் - மாதம் ரூ.16,000</p><p>கிராம ஊராட்சித் துணைத் தலைவர் - மாதம் ரூ.10,000</p><p>கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - மாதம் ரூ.8,000</p><p>இந்த உயர்வு, உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள நேரம், பொறுப்பு மற்றும் பொதுச் சேவை ஆகியவற்றை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும்.</p> <h2>2. உள்ளூர் டாஸ்மாக் (TASMAC) கடைகள் குறித்து கிராம சபைக்குத் தீர்க்கமான அதிகாரத்தை அளித்தல்</h2><p>கிராமங்களில் உள்ள மதுபானக் கடைகள் தொடர்பான முடிவுகளில் உள்ளூர் மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.</p><p>முறையாகக் கூட்டப்பட்ட கிராம சபை, ஏற்கனவே செயல்படும் டாஸ்மாக் கடைக்கு எதிராகத் தெளிவான மற்றும் உறுதியான எதிர்ப்பைத் தெரிவிக்கும் பட்சத்தில், அத்தீர்மானத்தின் மூலம் அந்தக் கடையின் செயல்பாட்டைத் தடுப்பதற்கான (veto) நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும்; இதற்கான தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளும் நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.</p><p>அதேபோல, ஒரு கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு முன்பாக கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.</p><p>வருவாய் குறித்த காரணங்கள், சமூக அக்கறைகள் மற்றும் உள்ளூர் மக்களின் கூட்டுக்குரல் ஆகியவற்றை முழுமையாக மீறுவதாக இருக்கக்கூடாது.</p><h2>3. விழிப்புணர்வையும் பங்கேற்பையும் அதிகரித்தல்; முன்மாதிரி கிராம சபைகளை முன்னிலைப்படுத்துதல்</h2><p>கிராம சபையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் அரசு தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.</p><p>ஒரு முன்னோடி முயற்சியாக, தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சிறந்த கிராம சபைக் கூட்டங்களை, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நேரலையாக ஒளிபரப்பலாம். துடிப்பான மற்றும் மக்கள் பங்கேற்பு மிக்க கிராம சபை எவ்வாறு செயல்பட முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுவதுடன், மாநிலம் முழுவதும் மக்கள் பங்கேற்பை அதிகரிக்கவும் உதவும்.</p><p>மேலும், கிராம சபைக் கூட்டங்களுக்கு முன்னதாகவே செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் பிற பொருத்தமான ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வுச் செய்திகளை வெளியிடுவதையும் அரசு பரிசீலிக்கலாம்.</p><h2>4. கிராம சபைத் தீர்மானங்களைச் திறம்படச் செயல்படுத்துவதை உறுதி செய்தல்</h2><p>கிராம சபையின் நம்பகத்தன்மை என்பது கூட்டத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதிலேயே தங்கியுள்ளது. கிராம சபைத் தீர்மானங்கள் மீது காலக்கெடுவுடன் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; அத்தீர்மானங்களின் செயல்பாட்டு நிலை குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். முந்தைய தீர்மானங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, அடுத்தடுத்த கிராம சபைக் கூட்டங்களின் முக்கிய அங்கமாக அமைய வேண்டும்.</p><p>தங்கள் தீர்மானங்கள் நடைமுறை நடவடிக்கைகளாக மாறுவதைக் காணும்போது, ​​இம்முறையின் மீதான மக்களின் பங்கேற்பும் நம்பிக்கையும் இயல்பாகவே அதிகரிக்கும்.</p><h2>5. கிராம சபை நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதில் குடிமக்களுக்கு அதிகப் பங்களிப்பை அளித்தல்</h2><p>கிராம சபையைக் கூட்டுவதற்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னதாகவே நிகழ்ச்சி நிரலுடன் கூடிய பொது அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற தற்போதைய அரசு விதிமுறை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். </p><p>மேலும், கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களை முன்மொழிய குடிமக்களுக்குத் தெளிவான மற்றும் எளிமையான வழிமுறை இருக்க வேண்டும். நியாயமான நடைமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டு, குடிமக்கள் முன்மொழிந்த இத்தகைய விஷயங்கள் கிராம சபையில் விவாதத்திற்காக வைக்கப்பட வேண்டும்.</p><p>டெங்கு தடுப்பு, பேரிடர் தயார்நிலை, நீர் பாதுகாப்பு அல்லது பிற பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை மாநிலம் தழுவிய அளவில் அனைத்து கிராம சபைகளிலும் விவாதிக்க அரசு முன்வைக்கலாம்; ஆனால், உள்ளூர் சமூகத்தினர் எழுப்பும் விஷயங்களுக்கு மாற்றாக இவை அமையாமல், அவற்றுக்குத் துணையாகவே இவை இருக்க வேண்டும்.</p><h2>6. உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துதல்</h2><p>தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான நிறுவனக் கட்டமைப்பு, 'மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம்' (SIRD) மூலம் தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ளது.</p><p>இருப்பினும், உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த திறன் மேம்பாடு, பயிற்சி, ஆவணப்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி ஆகிய அமைப்புகளை நாம் கணிசமாக வலுப்படுத்த வேண்டியுள்ளது.</p><p>உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக வலுவானதொரு நிறுவனத்தை அரசு உருவாக்க வேண்டும். இந்நிறுவனம் அதிக தன்னாட்சி அதிகாரம் மற்றும் விரிவான செயல்பாட்டுத் திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும்; அத்துடன் கிராம சபையின் செயல்பாடு, பங்கேற்பு நிர்வாகம், பரவலாக்கப்பட்ட திட்டமிடல் மற்றும் புதுமையான பஞ்சாயத்து நடைமுறைகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</p><h2>7. கிராம மேம்பாட்டில் பங்கேற்பு சார்ந்த திட்டமிடலை நோக்கி நகர்தல்</h2><p>கிராமங்கள் தங்கள் சொந்த மேம்பாட்டுத் தேவைகளைத் தாங்களே கண்டறிந்து முன்னுரிமைப்படுத்தும் ஒரு களமாக 'கிராம சபை' படிப்படியாக மாற வேண்டும்.</p><p>அரசாங்கத்தால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டங்களைப் பற்றி குடிமக்களுக்குத் தெரிவிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், நீர், சுகாதாரம், சாலைகள், வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான தங்கள் முன்னுரிமைகளை வெளிப்படுத்தவும், தங்கள் கிராம ஊராட்சி மேம்பாட்டுத் திட்டத்தை (VPDP) வடிவமைப்பதில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்கவும் இச்செயல்முறை சமூகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.</p><h2>8. அடித்தள நிலையில் பொறுப்புக்கூறும் கலாச்சாரத்தை உருவாக்குதல்</h2><p>இறுதியில், பொது நிறுவனங்களை குடிமக்கள் எவ்வளவு திறம்படப் பொறுப்புக்கூற வைக்கிறார்கள் என்பதைக் கொண்டே ஒரு ஜனநாயகத்தின் வலிமை அளவிடப்படுகிறது.</p><p>எனவே, கிராம சபையானது வெறும் சட்டப்பூர்வமான கூட்டமாக மட்டும் இல்லாமல், குடிமக்கள் கேள்வி கேட்கவும், விவாதிக்கவும், முன்னுரிமைப்படுத்தவும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தைப் பொறுப்புக்கூற வைக்கவும் கூடிய ஒரு உண்மையான தளமாக உருவெடுக்க வேண்டும்.</p><p>வரவிருக்கும் 2 அக்டோபர் 2026 கிராம சபைக் கூட்டங்கள், இச்செயல்முறையை வலுப்படுத்தவும், அடித்தள ஜனநாயகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன.</p><p>தாங்கள் இக்குறிப்புகளைப் பரிசீலித்து, தங்கள் தலைமையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம சபைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு விரிவான முயற்சியைத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன்; இதன் மூலம் அவை அதிக பங்கேற்புத்தன்மை, தன்னாட்சி, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் பயன்-சார்ந்த செயல்பாடுகளைக் கொண்டவையாக அமையும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பூண்டு விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/garlic-prices-have-skyrocketed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/garlic-prices-have-skyrocketed#comments</comments><guid isPermaLink="false">ef538904-6f19-4447-ab7c-2b85c16c6f0d</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:59:31 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:59:31.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,Villupuram,பூண்டு விலை,Garlic</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/dl8zmffj/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/dl8zmffj/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><h2>பூண்டு விலை உயர்வு</h2><p>எல்நினோ காலநிலை மாற்றத்தினால் மளிகைப் பொருட்களின் விலை உயரத்தொடங்கி இருக் கிறது. ஏற்கனவே மளிகை பொருட்களில் பருப்பு வகைகளின் விலை உயர்ந்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக மளிகை பொருட்களில் வரும் பூண்டு விலையும் தற்போது கிடுகிடுவென உயர்ந்து இருக்கிறது.</p><p>மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பூண்டின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் நாளொன்றுக்கு விழுப்புரம் மார்க்கெட் டுக்கு மட்டும் சுமார் 10 டன் முதல் 15 டன் வரை பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில வாரமாக பூண்டு வரத்து குறைந்து விட்டதாகவும், தற்போது நாள் ஒன்றுக்கு 5 டன் பூண்டு வரத்து வருவதாகவும், இதன் காரணமாக விலை அதிரடியாக உயர்ந்து இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.</p><h2>ரூ.300 வரை விற்பனை</h2><p>கடந்த மாதத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.80 முதல் ரூ.100 வரை கிடைத் தது. நல்ல தரமான உயர்ரக பூண்டு ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140-க்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது. ஒரு கிலோ பூண்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>அதாவது நாட்டுப்பூண்டு சிறிய ரகம் கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை யும், நடுத்தரம் கிலோ ரூ.180 முதல் ரூ.220 வரையும், பெரிய அளவிலான நல்ல தரமான உயர்ரக பூண்டு கிலோ ரூ.280 முதல் ரூ.300 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் ஒரு கிலோ மலைப்பூண்டு கடந்த மாதம் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>இல்லத்தரசிகள் அதிர்ச்சி</h2><p>விளைச்சல் பாதிப்பு ஒரு பக்கம் கூறப்பட்டாலும், மராட்டிய மாநிலத்தில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு பூண்டு ஏற்றுமதி செய்யப்படுவதும் வரத்து குறைவுக்கு ஒரு காரணம் என்றும், இனி வரும் நாட்களில் மேலும் பூண்டு விலை சற்று உயரக்கூடும் என்று உணவு தானிய மொத்த சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பூண்டு விலை உயர்வினால் இல்லத்தரசிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>“விஞ்ஞானிகளை பகடைக்காயாக்கும் பாஜக” – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு   </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-is-making-scientists-look-like-dice-manickam-thakur-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-is-making-scientists-look-like-dice-manickam-thakur-alleges#comments</comments><guid isPermaLink="false">6672eb7c-5e7a-4ba5-96e3-7076dd89cd8d</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:53:48 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:53:48.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Scientists,விஞ்ஞானிகள்,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/t4s1215m/manikam-takore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/t4s1215m/manikam-takore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>“விஞ்ஞானிகளை பாஜக பகடைக்காயாக்குகிறது” என  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர் </a>எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-   </p><p>விண்வெளி சாதனைகளின் பின்னணியில் உள்ள சொல்லொணா வலியை மறந்துவிட முடியுமா? ஒருபுறம் வானத்தை முட்டும் ராக்கெட்டுகள், நிலவையும் சூரியனையும் எட்டும் பெருமிதம், விரைவில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் பிரம்மாண்டத் திட்டங்கள்... ஆனால், தேசமே கொண்டாடும் இந்த வெற்றிகளின் மறுபக்கம் என்ன? ​இரவு பகல் பாராமல் குடும்பங்களை மறந்து உழைத்த நமது விஞ்ஞானிகளின் தியாகம், தோல்விகளைக் கடந்து சிந்திய கண்ணீர், அவர்களின் கடுமையான பணிச்சுமை மற்றும் மன அழுத்தம்.</p><h2>அவல நிலை</h2><p>இதைவிடப் பெருங்கொடுமை என்னவென்றால் - ஒருபுறம் உலகமே வியக்கும் ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் அதே கைகள், மறுபுறம் தங்கள் வேலைப் பாதுகாப்புக்காகவும், முறையான ஊதியத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் அதிகார வர்க்கத்திடம் கோரிக்கை மனுக்களையும் கண்ணீர்க் கடிதங்களையும் அனுப்ப வேண்டிய அவல நிலை நிலவுகிறது!நினைவிருக்கட்டும்! 1969 ஆகஸ்ட் 15 அன்று, தொலைநோக்குப் பார்வையோடு பண்டித நேருவும், அன்னை இந்திரா காந்தியும், விக்ரம் சாராபாய் போன்ற மேதைகளும் இணைந்து, பொதுத்துறையின் வலிமையான அரணாக இஸ்ரோவுக்கு (ISRO) அடித்தளமிட்டது காங்கிரஸ் பேரியக்கம்.</p><h2>சிதைக்கத் துடிக்கிறது பாஜக அரசு</h2><p>கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம் தன்னிறைவுக்காகக் கட்டியெழுப்பப்பட்ட நமது விஞ்ஞானிகளின் மாபெரும் உழைப்பையும் லட்சியத்தையும், இன்று கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்த்து, ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி சிதைக்கத் துடிக்கிறது பாஜக அரசு! விஞ்ஞானிகள் சாதனை படைக்கும்போது மட்டும் ஓடிவந்து கேமரா வெளிச்சத்தில் நின்று போட்டோஷூட் நடத்தும் பிரதமர் மோடி, அதே விஞ்ஞானிகள் தங்கள் பணிக்காகவும் உரிமைக்காகவும் கடிதம் எழுதித் தவிக்கும்போது கண்களை மூடிக்கொள்வது ஏன்? </p><p>சாதனைக்கு சொந்தம் கொண்டாடும் மோடி அரசுக்கு, அந்த சாதனையை நிகழ்த்தும் உழைக்கும் கைகளின் வலி ஏன் புரிவதில்லை? விளம்பர அரசியலுக்காக விஞ்ஞானிகளைப் பகடைக் காயாக்கும் பாஜகவின் துரோகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இஸ்ரோ என்பது இந்தியாவின் அடையாளம். அதைத் தனியாருக்குத் தாரைவார்த்து அழிக்க விடமாட்டோம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் மாவட்ட எல்லையை வந்தடைந்த அமராவதி தண்ணீர்: விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/amaravathi-water-reaches-karur-district-border-farmers-rejoice</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/amaravathi-water-reaches-karur-district-border-farmers-rejoice#comments</comments><guid isPermaLink="false">4dd53898-92ce-4537-a821-1add20c51f09</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:53:26 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:53:26.103Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,அமராவதி அணை,amaravathi dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/rj74n3h7/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/rj74n3h7/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p>அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையை வந்தடைந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>அமராவதி அணை</h2><p>திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 90 அடியாகும். இந்த அணையின் தண்ணீர் திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் மஞ்சள் தென்னை, நெல், வாழை, கரும்பு, பருத்தி, சேனைக்கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.</p><p>அமராவதி அணையில் இருந்து கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் திறக்கப்படாததால் கரூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. மேலும் தென்னை மரங்கள் காய்ந்து வந்தன. இந்தநிலையில் தமிழக அரசு கடந்த 31-ந் தேதி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வீதம் 8 நாட்களுக்கு திறந்து விட உத்தரவு பிறப்பித்தது.</p><h2>விவசாயிகள் மகிழ்ச்சி</h2><p>அதன்படி அமராவதி அணையில் இருந்து 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் கரூர் மாவட்ட எல்லைக்கு வந்து சேராது. எனவே உயர் நீதிமன்ற ஆணைப்படி 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும், தி.மு.க.. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து கடந்த 1-ந் தேதி சின்னதா ராபுரம் அருகே உள்ள கரூர் மாவட்ட எல்லையான ஒத்தமாந்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கரூர் மாவட்ட கடைமடை பகுதி வரை தண்ணீர் வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.</p><p>இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கரூர் மாவட்ட எல்லையான கோடந்தூர் ஊராட்சி வடகரை பகுதிக்கு அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நேற்று மாலை 6 மணிக்கு சின்னதாராபுரம் அருகே சாலை மறியல் நடந்த ஒத்தமாந்துறை எனும் இடத்திற்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. இதேயளவு தண்ணீர் வந்தால் நாளை (திங்கட்கிழமை) இரவு கரூர் நகருக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>நீர்மட்டம்</h2><p>90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 48.76 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 93 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது ஆயிரத்து 114 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 87.90 அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் தவெக நிர்வாகி படுகொலை... 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-in-chennai-tvk-functionary-murdered-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-in-chennai-tvk-functionary-murdered-case#comments</comments><guid isPermaLink="false">c3cab239-5c6b-4614-8b6d-53159b58ee48</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:42:09 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:42:09.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Crime News,Chennai,சென்னை,கிரைம் செய்திகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/n5hz75em/chennai-murder.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக நிர்வாகி கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் ஆளுங்கட்சியான தவெக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/n5hz75em/chennai-murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை: </p><p>சென்னையில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். சமீபத்தில் தவெகவில் இணைந்த இவர், நேற்று இரவு வண்ணாந்துறை பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>பழிக்குப் பழியா?</h2><p>அடையாறில் கடந்த 2009 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிவா என்பவர் கொலை</a> செய்யப்பட்டார். இந்த கண்ணனுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படும் நிலையில், சிவா தரப்பினர் நேற்றிரவு கண்ணனை கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>போலீசாரின் B பிரிவு சரித்திர பதிவேறு குற்றவாளிகள் பட்டியலில் இருந்தார் கண்ணன். அவர் மீது 2 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கொலை வழக்கு</a>, 2 கொலை முயற்சி வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. </p>]]></content:encoded></item><item><title>தவெகவில் இணைந்த குற்றவாளி கொலை: ’இதுதான் வெற்றி சட்டம்-ஒழுங்கு நிலை’ - உதயநிதி தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-a-criminal-who-joined-tvk-this-is-the-state-of-law-and-order-udhayanidhi-lashes-out</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-a-criminal-who-joined-tvk-this-is-the-state-of-law-and-order-udhayanidhi-lashes-out#comments</comments><guid isPermaLink="false">406992aa-4b67-4624-9080-442e8eef1418</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:27:58 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:27:58.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/bjw8gf7x/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/bjw8gf7x/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.</p><p>அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!</p><p>தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?</p><p>இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?</p><p>இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கூடலூர்: வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிய புலி - டிரோன் மூலம் தேடும் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gudalur-tiger-escapes-forest-department-custody-intensive-search-using-drones-underway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gudalur-tiger-escapes-forest-department-custody-intensive-search-using-drones-underway#comments</comments><guid isPermaLink="false">b41ae28c-11c1-4c10-803a-e0d38ead815d</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:27:12 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:27:12.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Forest Department,வனத்துறை,Tiger,புலி,Gudalur,கூடலூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/7oix38zp/velrain.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/7oix38zp/velrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>கூடலூர் அருகே நள்ளிரவில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து புலி தப்பியது. அதை டிரோன் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.</p><h2>2 பேரை கொன்ற புலி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/gudalur">கூடலூர்</a> அருகே ஓவேலி லாரஸ்டன் 4-ம் நெம்பர் பகுதியில் கடந்த மாதம் 2 பேரை புலி கடித்து கொன்றது. இதைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் புலியை பிடிக்கும் பணி தொடங்கியது. புலி அடர்ந்த காடுகளிலும், பாறைகளிலும் மறைந்து வாழ்வதால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 2 வாரங்களாக தேடி வருகின்றனர்.</p><h2>130 தானியங்கி கேமராக்கள்</h2><p>முதுமலை, கோவை, தேனி மற்றும் பல்வேறு கோட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 90-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், வன எலைட் படையினர் மற்றும் 3 கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி துப்பாக்கிகளுடன் மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இது தவிர புலியை கண்டறிந்து பிடிக்க 3 அதிநவீன தெர்மல் டிரோன்கள் மூலம் தேடப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் குடியிருப்புகள், தேயிலை தோட்டங்கள், வனம் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் 130 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 13 இரும்பு கூண்டுகளையும் வைத்துள்ளனர்.</p><h2>வனத்துறை</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில் கூடலூர் கெவிப்பாரா பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் பாறை மீது புலி ஒன்று நடமாடுவதை அப்பகுதி மக்கள் கண்டனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்தனர். மேலும் புலியும் அங்கிருந்து இடம் பெயர்ந்து லாரஸ்டன் வனத்துக்குள் செல்வதை டிரோன்கள் மூலம் வனத்துறையினர் கண்காணித்தபடி சுற்றி வளைத்தனர்.</p><h2>தொடர் கண்காணிப்பு</h2><p>இந்த நிலையில் லாரஸ்டனில் இருந்த புலி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி பாரம் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றதை நள்ளிரவில் வனத்துறையினர் உறுதி செய்தனர். இருப்பினும் விடிய விடிய அப்பகுதியில் முகாமிட்டு புலி வேறு இடத்துக்கு சென்று விடாமல் இருக்க வனத்துறையினர் இன்று 17-வது நாளாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் இதுவரை உறுதி செய்யவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். </p><h2>2 கும்கி யானைகள்</h2><p>இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறும்போது, டிரோன்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சுமார் 8 முதல் 10 வயது வரையிலான ஆண் புலி என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து டிரோனில் புலியை தேடி வருகிறார்கள்.</p><p>இதனிடையே 2 கும்கி யானைகளும் புலியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: வேன்-கார் தீப்பிடித்து எரிந்து வங்கி உதவி மேலாளர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-bank-assistant-manager-dies-in-van-car-fire</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-bank-assistant-manager-dies-in-van-car-fire#comments</comments><guid isPermaLink="false">a429db56-cc9a-414a-b802-fe71e483142c</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:11:55 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:11:55.399Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Virudhunagar,Fire,விருதுநகர்,Tenkasi,தென்காசி,Car,van,கார்,வேன்,பலி,bank,dead,வங்கி உதவி மேலாளர்,தீப்பிடித்தது,assistant manager</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/vf04wn0a/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேன்-கார் தீப்பிடித்து எரிந்து வங்கி உதவி மேலாளர் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/vf04wn0a/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம் இலத்தூர் பகுதியில் வேனும் காரும் நேருக்குநேர் மோதி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81">தீப்பிடித்து எரிந்த விபத்தில்</a> விருதுநகரைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">வங்கி உதவி மேலாளர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">பலி</a>யானார்.</p><h2>வங்கி உதவி மேலாளர்</h2><p>விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் குமாரசாமி ராஜா நகரை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 34), சிவகாசியில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவில் இவர் தனது காரில் குற்றாலம் சென்று விட்டு சிவகாசி நோக்கி சென்று கொண்டி ருந்தார். எதிர்திசையில் சிவகாசியில் இருந்து குற்றாலத்தை நோக்கி 13 பேர் கொண்ட குழுவினர் ஒரு வேனில் சுற்றுலாவுக்காக வந்து கொண்டிருந்தனர். </p><h2>விபத்தில் வேன்-கார் தீப்பிடித்து எரிந்தது</h2><p>நேற்று அதிகாலை இலத்தூர் விலக்கு அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக விஜய் ஆனந்த் ஓட்டி வந்த காரும், சுற்றுலா வேனும் நேருக்குநேர் மோதின. அதில் 2 வாகனங்களும் அப்பளம்போல் நொறுங்கியதோடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கின. வேனில் இருந்த 13 பேரும் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி உயிர் தப்பினர். </p><h2>வங்கி உதவி மேலாளர் பலி</h2><p>அவர்களில் சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த காசிஅலி மகள் நர்கீஸ்பானு(18), அதே பகுதியை சேர்ந்த ரியாஸ்தீன் மனைவி பல்கீஸ்பானு(21), சைபுல்லா மனைவி ஹசீனாபானு(42) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த விஜய் ஆனந்த் காருக்கு உள்ளேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்பு படையினர், மாவட்ட எஸ்.பி. அசோக்குமார், இலத்தூர் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><h2>மாற்றுப்பாதையில்</h2><p>தீயணைப்பு படை வீரர்கள் 2 வாகனங்களிலும் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அவை தீயில் கருகி நாசமாகின. விபத்து காரணமாக திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. </p><p>விபத்து குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரும், வேனும் மோதி தீப்பிடித்த விபத்தில் வங்கி அதிகாரி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-released-at-kallanai-for-delta-irrigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-released-at-kallanai-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">ee5b5dbf-cab2-413e-9c92-adba4fe5c4f3</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:57:28 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:57:28.003Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>water release,நீர் திறப்பு,Kallanai,கல்லணை,டெல்டா பாசனம்,Delta irrigation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/n0d9itwe/105.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்லணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/n0d9itwe/105.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. </p><p>மேட்டூர் அணையை கடந்த 1-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையை தாண்டி நேற்று காலை கல்லணையை எட்டியது. திறக்கப்பட்ட தண்ணீர் குறைவான அளவிலேயே வந்ததால் நேற்று மாலை வரை கல்லணை நிரம்பவில்லை. கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளின் மதகுகளின் ஓரமாக தண்ணீர் தேங்கி நின்றது. </p><h2>தண்ணீர் திறப்பு</h2><p>இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் வினோத் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்துள்ளனர்.</p><h2>பாசன வசதி</h2><p>இந்த நிகழ்ச்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.</p>]]></content:encoded></item><item><title>மூக்கையாத்தேவரின் பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-celebrate-the-great-renown-of-mookkaiya-thevar-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-celebrate-the-great-renown-of-mookkaiya-thevar-seeman#comments</comments><guid isPermaLink="false">f269f1fa-a6ab-4d53-a1d7-c9751c6270ae</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:47:10 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:47:10.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,மூக்கையாத்தேவர்,Mookkaiya Thevar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/t9vmhfmo/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/t9vmhfmo/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>“தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்சத்தீவை எங்கள் அனுமதி இல்லாமல் இலங்கைக்குத் தாரைவார்க்க நீங்கள் யார்?  பல்லாயிரம் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பலநூறு மீன்பிடி படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சனநாயகம் பேசிக் கொண்டு சர்வாதிகாரி போல் நடக்கிறீர்கள்" என்று இந்திராகாந்தி அரசைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில்  முழங்கியபோது, இடைமறித்த காங்கிரசாரை நோக்கி,  'நீங்கள் எங்களின் துரோகிகள்' என்று அன்றே அடையாளப்படுத்தி வெளிநடப்பு செய்த  உறங்காப்புலி..!</p><p>களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் தொகுதி மாறாது வென்று சரித்திர சாதனை படைத்த ஒப்பற்ற தலைவர்..!</p><p>உசிலம்பட்டி, நீலித்தநல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கல்லூரிகளை நிறுவி சாதி, மதம் பாராது ஏழை குழந்தைகளுக்கு இலவச தங்குமிடமும், உணவும், கல்வியும் தந்த வள்ளல்..!</p><p>வட இந்தியாவில் குடியேறும் அகதிகளைவிட  தமிழ்நாட்டு மக்களுக்கு குறைவான நிதி ஒதுக்குவதாக அன்றே இந்திய அரசை  கண்டித்து தமிழர் உரிமைக்கு குரல் கொடுத்த பெருந்தகை..!</p><p>இந்திய கட்சிக்குத் தலைமையேற்றபோதிலும், இந்தியைத் திணித்தால் இந்நாட்டின் ஒருமைப்பாடு உடைபடும் என்று இந்திய அரசை துணிவுடன் எச்சரித்த தீரர்..!</p><p>முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை  உயர்த்தி தென்மாவட்ட வறட்சியைப் போக்க வேண்டும்(1965), கிருஷ்ணா நதிநீரைக் கொண்டுவந்து சென்னையின் குடிநீர் தேவை தீர்க்க வேண்டும் (1969),  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் (1975), நதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க நதிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் (1969) என்று தமிழ்நாட்டின் தீர்க்க முடியா சிக்கல்களுக்கு தீர்க்கத்தரிசனத்தோடு தீர்வு சொன்ன தேவர் தந்த தேவர் நம்முடைய தாத்தா மூக்கையாத்தேவரின் நினைவைப்போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே உண்மையும், நேர்மையுமாக நின்று மண்ணுக்கும், மக்களுக்கும் பாடுபடுவோம் என்று உறுதியேற்போம்!</p><p>'தேவர் தந்த தேவர்' உறங்காப்புலி தாத்தா மூக்கையாத்தேவர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மூக்கையா தேவரின் சேவை என்றும் போற்றத்தக்கது - நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-service-of-mookkaiah-thevar-is-also-commendable-nainar-nagendran-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-service-of-mookkaiah-thevar-is-also-commendable-nainar-nagendran-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">29027d47-ab1e-40ef-8b63-e6382a491339</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:28:44 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:28:44.962Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/psc0nvf5/102.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/psc0nvf5/102.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மூக்கையா தேவரின் நினைவு நாளையொட்டி தமிழக பாஜக தலைவர் <a href="https://dailythanthi.com/topic/nainar-nagendran">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மூக்கையா தேவர் நினைவு நாள்</h2><p>அகில இந்திய பார்வர்டு பிளாக் இயக்கத்தின் முக்கியத் தலைவர், தென் தமிழக மக்களின் உரிமைகளுக்காக உறுதியான குரலாக விளங்கிய “உறங்காப்புலி” பி. கே. மூக்கையா தேவர் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>அரசியலைத் தாண்டி, கல்வியே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்பதை உணர்ந்து செயல்பட்டவர் மூக்கையா தேவர். குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய மக்களிடையே உயர்கல்வி வளர வேண்டும் என்ற நோக்கில் கள்ளர் கல்விக் கழகத்தை உருவாக்கியதோடு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் உசிலம்பட்டி, கமுதி, மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் கல்லூரிகள் உருவாக முக்கியப் பங்காற்றினார்.</p><h2>உறங்காப்புலி</h2><p>இந்த நாளில் “உறங்காப்புலி” என்று போற்றப்பட்ட பி. கே. மூக்கையா தேவர் அவர்களின் பொதுவாழ்க்கை, மக்களுக்காகவும், கல்விக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர் செய்த பணிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவலர் தினம்:  “அரச காவல்” ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-day-royal-police-helmet-awareness-short-film-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-day-royal-police-helmet-awareness-short-film-released#comments</comments><guid isPermaLink="false">d1a38790-3fa9-4af3-840c-e12a36ba7677</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:07:43 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:07:43.146Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,Release,கலெக்டர்,collector,DIG,வெளியீடு,short film,குறும்படம்,helmet awareness,ஹெல்மெட் விழிப்புணர்வு,திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.,காவலர் தினம்,Police Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/olezdsef/%E2%80%9C%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “அரச காவல்” ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/olezdsef/%E2%80%9C%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>செப்டம்பர் 6-ம் தேதி காவலர் தினத்தை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாநகரம் மேலப்பாளையத்தில் “அரச காவல்” என்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஹெல்மெட் விழிப்புணர்வு</a> குறித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">குறும்படம்</a> வெளியிடப்பட்டது. </p><h2>தமிழ்நாடு காவலர் தினம்</h2><p>செப்டம்பர் 6-ம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு காவலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கிய “அரச காவல்” என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. </p><h2>போலீசாரின் அர்ப்பணிப்பு, அன்றாட வாழ்க்கை</h2><p>ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரன் எழுதி, தயாரித்து, இயக்கிய இந்த குறும்படம் காவல்துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையை எடுத்துரைக்கிறது. </p><h2>திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., கலெக்டர் பங்கேற்பு</h2><p>இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி சரக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9C%E0%AE%BF">டி.ஐ.ஜி</a>. திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">கலெக்டர்</a> ஆனந்த் மோகன் ஆகியோர் குறும்படத்தை வெளியிட்டு, படக்குழுவினரைப் பாராட்டினர். தயாரிப்பாளர்-இயக்குநர் சுபாஷ் சந்திரன், ஒளிப்பதிவாளர்கள் ராஜா, மாரியப்பன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. </p>]]></content:encoded></item><item><title>தீபாவளி முன்பதிவு; தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/diwali-bookings-tickets-sold-out-within-minutes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/diwali-bookings-tickets-sold-out-within-minutes#comments</comments><guid isPermaLink="false">de0b8918-a088-4b2f-a8e3-5cada1ff9cb5</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:59:21 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:59:21.196Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ticket Booking,Diwali,தீபாவளி,முன்பதிவு டிக்கெட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/gvucprlt/101.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/gvucprlt/101.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. </p><p>தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் வகையில், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரெயில்வே வாரியம் வழங்குகிறது.</p><p>அதன்படி, தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. அதாவது, நவம்பர் 5-ந்தேதி (வியாழக்கிழமை) சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">டிக்கெட் முன்பதிவு </a>இன்று தொடங்கியது. </p><h2>விற்று தீர்ந்தன</h2><p>அதன்படி பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், செல்போன் செயலி மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.  இந்நிலையில், டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விற்றுத் தீர்ந்துள்ளன. இதில் தென்மாவட்ட ரெயில்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று  தீர்ந்தன. இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் மற்ற தேதிகளுக்கான முன்பதிவு நடைபெற உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 13-ந்தேதி சென்னையில் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-thirukkudai-procession-to-begin-in-chennai-on-the-13th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-thirukkudai-procession-to-begin-in-chennai-on-the-13th#comments</comments><guid isPermaLink="false">1f5847b6-f960-4910-af45-bf25e523a72c</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:34:15 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:34:15.036Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,திருப்பதி ஏழுமலையான் கோவில்,begins,தொடக்கம்,Tirupati Thirukkudai procession,திருக்குடை ஊர்வலம்,Tirumala Tirupati Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/96zioag8/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி திருக்குடை ஊர்வலம்-கோப்புப்படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/96zioag8/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்து தர்மார்த்த சமிதி சார்பில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">திருமலை திருப்பதி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">திருக்குடை ஊர்வலம் </a>வரும் 13-ம் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் காலை 10 மணிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தொடங்க</a> உள்ளது. </p><h2>திருப்பதி ஏழுமலையான் கோவில் புரட்டாசி மாத பிரம்மோத்சவம்</h2><p>ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், புரட்டாசி மாத பிரம்மோத்சவத்தின்போது ஏழுமலையான் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில், வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து வெண்பட்டு குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.</p><h2>திருப்பதி திருக்குடை ஊர்வலம் 13-ம் தேதி தொடக்கம்</h2><p>நடப்பாண்டு இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 13-ம் தேதி, சென்னை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. மதியம் 12:30 மணிக்கு பைராகி மடத்தை அடைகிறது. பின் மாலை 4 மணிக்கு திருக்குடைகள் வால்டாக்ஸ் சாலை வழியாக கவுனி தாண்டுகின்றன. பின் சூளை நெடுஞ்சாலை, ஓட்டேரி மேம்பாலம் வழியாக அயனாவரம் காசி விசுவநாதர் கோவிலுக்கு செல்கிறது. </p><h2>சவுமிய தாமோதர பெருமாள் கோவில்</h2><p>மறுநாள் அதாவது செப்டம்பர் 14-ம் தேதி காலை 6 மணிக்கு திருக்குடை ஊர்வலம் தொடங்கி, பெரம்பூர், திரு.வி.க.நகர் வழியாக வில்லிவாக்கம் சென்று, சவுமிய தாமோதர பெருமாள் கோவில் அடைகிறது. செப்டம்பர் 15-ம் தேதி பாடி, முகப்பேர், அம்பத்துார் வழியாக இரவு திருமுல்லைவாயல் செல்கிறது. செப்டம்பர் 16-ம் தேதி ஆவடி இந்து கல்லுாரி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் செல்கிறது.</p><h2>ஊர்வலத்தில் பங்கேற்க அழைப்பு</h2><p>செப்டம்பர் 17-ம் தேதி திருப்பாச்சூர், கனகம்மாள்சத்திரம் வழியாக, கீழ்த்திருப்பதி எஸ்.எம்.எஸ்.ஓ., சபா கல்யாண மண்டபம் செல்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பதி அடைந்து, மாலை 3 மணிக்கு பெருமாளுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த திருக்குடை ஊர்வலத்தில் பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையான் அருள் பெற இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி  அழைப்பு விடுத்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காவல்துறையின் வீரமும் தியாகமும் என்றும் மறக்க முடியாது; முதல்-அமைச்சர் விஜய் காவலர் தின வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-bravery-and-sacrifice-of-the-police-will-never-be-forgotten-chief-minister-vijay-extends-police-day-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-bravery-and-sacrifice-of-the-police-will-never-be-forgotten-chief-minister-vijay-extends-police-day-greetings#comments</comments><guid isPermaLink="false">8d1af00b-5424-4e1a-a2a6-4aaeb6cb52f4</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:33:35 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:33:35.275Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,காவலர்,தினம்,day,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/zyyjd81d/cm-vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/zyyjd81d/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் காவலர் தினத்தையொட்டி காவல்துறையினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>காவலர் தினம்</h2><p>1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் காவலர் நாளை முன்னிட்டு, சமூகத்தில் அமைதி நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றிவரும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>என்றும் போற்றத்தக்கவை</h2><p>நமது மாநிலத்தில், குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன், ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று களப்பணி ஆற்றிவரும் காவல்துறையினரின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கவை. </p><p>காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி, காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை உறுதிசெய்வதற்கும் நமது அரசு முன்னுரிமை அளிக்கும். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் உயர்கிறது அகவிலைப்படி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dearness-allowance-for-central-government-employees-to-increase-by-3-percent</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dearness-allowance-for-central-government-employees-to-increase-by-3-percent#comments</comments><guid isPermaLink="false">d0343e10-a1f2-4b05-8aa4-a40063e518de</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:03:20 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:03:20.860Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,அரசு ஊழியர்கள்,மத்திய அரசு,Central Govt,அகவிலைப்படி உயர்வு,அகவிலைப்படி,Central Government Employees,ஓய்வூதியதாரர்கள்,Pensioners</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/vauznub2/amimi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/vauznub2/amimi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p><p>ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்காக அரசு அகவிலைப்படி உயர்வை 2 - 3 மாதங்கள் தாமதமாக அறிவிப்பது வழக்கம். விதிகளின்படி அகவிலைப்படி 50 சதவீதத்தைக் கடக்கும் போது அது அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும். கடந்த 2024 ஜனவரி 1ம் தேதி அன்றே அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியது. ஆனாலும் அது அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படவில்லை.</p><p>இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய மந்திரிசபை செயலருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இத்தகைய இணைப்பை அரசு செயல்படுத்தாது என்று மத்திய நிதித்துறை இணை மந் திரி பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தார்.</p><p>இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அகவிலைப்படி உயர்வானது 3 சதவீதம் வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் 49 லட்சம் அரசு ஊழியர்களும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் என்று கூறப்படுகிறது.</p><p>மத்திய அமைச்சரவை விரைவில் கூட உள்ளநிலையில், அங்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நிலுவையுடன் கூடிய நிதிச் சலுகைகள் கிடைக்கும். தற்போது வரை 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி விகிதம், இந்த 3 சதவீத உயர்விற்குப் பின் 63 சதவீதத்தை எட்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-15</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-15#comments</comments><guid isPermaLink="false">79759e78-9880-4174-ac0b-fde8768b79ef</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:58:13 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:58:13.337Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/yczz1sv1/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/yczz1sv1/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். </p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.  </p> ]]></content:encoded></item><item><title>மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு... தூத்துக்குடியில் குவிந்த மீன் பிரியர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prices-fall-due-to-increased-fish-arrival-fish-lovers-flocked-to-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prices-fall-due-to-increased-fish-arrival-fish-lovers-flocked-to-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">3380e31a-f970-4b73-b9ea-fad2c5b74a68</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:57:09 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:57:09.286Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீன்கள்,Fish,Thoothukudi,தூத்துக்குடி,விலை சரிவு,prices fall,வரத்து அதிகரிப்பு,மீன் பிரியர்கள்,Fish Lovers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qd9j76ic/99.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீன்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qd9j76ic/99.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. எனவே பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றனர்.</p><h2>பெரிய மீன்கள்</h2><p>தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான நாட்டு படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.</p><p>கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு மீன்பாடு நன்றாக இருந்ததால் அவர்கள் பெரிய அளவிலான மீன்களை அதிகம் கொண்டு வந்தனர். இதனால் தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அதிகளவில் மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது.</p><h2>விலை குறைந்தது</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீன்கள்</a> வரத்து அதிகம் காணப்பட்டதாலும், தசரா திருவிழா தொடங்கியதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவிற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வருவதாலும் நேற்று குறைந்த அளவு பொதுமக்களை மீன்கள் வாங்க வந்திருந்தனர். இதனால் மீன்கள் விலையும் சற்று குறைந்தது.</p><h2>பொதுமக்கள் மகிழ்ச்சி</h2><p>தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று சீலா மீன் கிலோ ரூ.1000 வரையும், விளை மீன் கிலோ ரூ.600 வரையும், பாறை மீன் கிலோ ரூ.350 வரையும், ஊளி மீன் கிலோ ரூ.400 வரையும், நண்டு கிலோ ரூ.700 வரையும்</p><p>தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை குறைந்து வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதுபோல் மீன்பாடு நன்றாக இருப்பதால் மீனவர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கீழடி அகழாய்வில் 8 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/eight-tiered-ring-well-discovered-at-the-keeladi-excavation-site</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/eight-tiered-ring-well-discovered-at-the-keeladi-excavation-site#comments</comments><guid isPermaLink="false">6d33d09f-5b48-47ca-b9d7-9b67dd47b621</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:29:43 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:29:43.796Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Excavation,Excavation work,கீழடி அகழாய்வு,உறைகிணறு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/ylgf40g2/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/ylgf40g2/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டம், கீழடியில் வாழ்ந்த மக்கள், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்கு சான்றாக ஒவ்வொரு கட்ட அகழாய்விலும், இரண்டு முதல், ஏழு அடுக்குகள் வரையுள்ள உறைகிணறுகள் கிடைத்து வருகின்றன. குடிநீர்,பாசனம் மற் றும் சாயத்தொழிலுக்கு உறைகிணறுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p>கீழடி, 11ம் கட்ட அகழாய்வில், ஒரே குழியில் அடுத்தடுத்து மூன்றுவித வடிகால் அமைப்புகள் கண்டறியப்பட்டன. ஏற்கனவே, இரண்டு அடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டது. இரண்டாவதாக கண்டறியப்பட்ட உறைகிணறில், எட்டு அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளன. சேதமடையாமல் உள்ள அந்த உறைகிணற்றில், மேலும் சில அடுக்குகள் இருக்க வாய்ப்புள்ளதால், தொடர்ச்சியாக அகழாய்வு பணி நடக்கிறது. </p>]]></content:encoded></item><item><title>கோவை: திருடிய வீட்டில் 5 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்டு தூங்கிய கொள்ளையர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-robbers-stayed-in-the-house-they-robbed-for-5-days-cooking-eating-and-sleeping</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-robbers-stayed-in-the-house-they-robbed-for-5-days-cooking-eating-and-sleeping#comments</comments><guid isPermaLink="false">b5bbfec4-0c7a-4745-8480-a1a5d6c8234a</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:18:06 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:18:06.512Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,திருட்டு,House,வீடு,robbers,கொள்ளையர்கள்,Theft,6 பேர் கைது,Auditor,ஆடிட்டர்,6 arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/sa3s31du/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/sa3s31du/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">ஆடிட்டர் </a>வீட்டில் ரூ.15 லட்சம் பொருட்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">கொள்ளை</a>யடித்த வழக்கில் 6 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். அவர்கள் திருடிய வீட்டில் 5 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்டு தூங்கிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><h2>ஆடிட்டர் வீடு</h2><p>கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்த சேஷகிரி (வயது 70), ஆடிட்டர். இவருடைய மகன் பெங்களூருவில் உள்ளார். எனவே அவர் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடந்த மாதம் பெங்களூரு சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் கோவை திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் கீழே சிதறி கிடந்தன. </p><h2>ரூ.15 லட்சம் நகை கொள்ளை</h2><p>பூஜை அறையில் இருந்த வெள்ளித்தட்டு, வெள்ளி பூஜை பொருட்கள், சமையல் அறையில் பயன்படுத்தும் வெள்ளி பொருட்கள் என 9 கிலோ வெள்ளி பொருட்களும், 7 கிலோ பித்தளை பொருட்களும் திருடப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு ரூ.15 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. </p><h2>6 பேர் கைது</h2><p>இது குறித்த புகாரின்பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவையை சேர்ந்த வெங்கடேஷ்(45), ராஜசேகர்(37), டேவிட் லிவிங்ஸ்டன்(56), மணிகண்டன்(எ) விக்கி(26), மணிகண்டன்(எ) சிறுத்தைமணி(27), ஜமீசா(45) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி, பித்தளை பொருட்கள் மீட்கப்பட்டன. </p><h2>திருடிய வீட்டில் 5 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்டு தூங்கிய கொள்ளையர்கள்</h2><p>இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஆடிட்டர் வீட்டை பூட்டிச்சென்றதை நோட்டமிட்ட 6 பேரும் கதவை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி உள்ளனர். அத்துடன் அவர்கள் திருடிய வீட்டில் 5 நாட்கள் வரை தங்கி இருந்து சமையல் செய்து சாப்பிட்டு, தூங்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்து 24 மணி நேரத்துக்குள் 6 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்... இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-bus-passes-for-students-to-be-given-by-the-end-of-this-month</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-bus-passes-for-students-to-be-given-by-the-end-of-this-month#comments</comments><guid isPermaLink="false">05740cf4-804f-44c8-8f9f-6fd51c07da98</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:09:05 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:09:05.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள்,students,Free bus pass,இலவச பஸ் பாஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/c1tnnbfg/98.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/c1tnnbfg/98.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸிற்காக, பள்ளிக்கல்வித்துறையின் ‘எமிஸ்’ தளம் மூலம் 70 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஸ்மார்ட் பஸ் பாஸ் அச்சிடும் பணிகள் இந்த வாரம் தொடங்க உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, 30 கிலோமீட்டர் தூரம் வரை இலவசமாக பயணம் செய்வதற்கான பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான மாணவர்களின் விவரங்கள் பள்ளிக்கல்வித்துறையின் ‘எமிஸ்’ தளம் வாயிலாக போக்குவரத்துக்கழகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.</p><p>மதுரை, கோவை, விழுப்புரம், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 8 போக்குவரத்துக்கழக கோட்டங்களில் இருந்து 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான பஸ் பாஸ் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் மட்டும் 9.13 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.</p><h2>செப்டம்பர் மாத இறுதிக்குள்...</h2><p>ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் பஸ் பாஸ் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால், பஸ் பாஸ் அச்சிடும் பணிகள் தள்ளிப்போனது. தற்போது இந்த வாரம் அச்சிடும் பணி தொடங்கப்பட்டு, செப்டம்பர் மாத இறுதிக்குள் பஸ் பாஸ்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையே, புதிய <a href="https://www.dailythanthi.com/topic/free-bus-pass">பஸ் பாஸ்</a> கிடைக்கும் வரை மாணவர்கள் தங்களிடம் உள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை பஸ் பாஸ் வைத்திருப்பவர்களாக கருதி பயணம் செய்ய அனுமதிக்குமாறு நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பன்றியை பிடிக்க புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-2nd-grade-student-was-seriously-injured-when-a-landmine-buried-to-catch-a-pig-exploded</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-2nd-grade-student-was-seriously-injured-when-a-landmine-buried-to-catch-a-pig-exploded#comments</comments><guid isPermaLink="false">ce67c4e9-fbec-498d-b34b-3874e7d17bb3</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:18:13 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:18:13.642Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,Cuddalore,கடலூர்,police investigation,படுகாயம்,பள்ளி மாணவி,seriously injured,Schoolgirl,landmine,கண்ணிவெடி,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1uhf8au5/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கண்ணிவெடி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1uhf8au5/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கள்ளக்குறிச்சி</a> மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF">பன்றி</a>யை பிடிக்க புதைத்து வைத்திருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF">கண்ணிவெடி</a> வெடித்து 2-ம் வகுப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மாணவி படுகாயம் </a>அடைந்தார்.</p><h2>2-ம் வகுப்பு மாணவி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கடலூர்</a> மாவட்டம், வேப்பூர் அருகே ஜா.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் (வயது 34) மகள் நிஷாந்தனா(7). இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். </p><h2>கண்ணிவெடி வெடித்து மாணவி படுகாயம்</h2><p>இந்த நிலையில் ஜா.ஏந்தல் கிராமத்தையொட்டி உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் தனிநபர் நிலத்திற்கு நேற்று முன்தினம் மாலை நிஷாந்தனா இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பன்றிகளை பிடிக்க புதைத்து வைத்திருந்த கன்னிவெடியை நிஷாந்தனா மிதித்துள்ளார். இதில் அந்த வெடி வெடித்து சிதறியது. இதில் நிஷாந்தனாவின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் வலியால் அலறி துடித்தாள். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சத்தம் கேட்டதும் ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனே அவளை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிஷாந்தனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>கூடலூர் நகருக்குள் உலா வரும் காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-into-gudalur-town-public-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-into-gudalur-town-public-alarmed#comments</comments><guid isPermaLink="false">b94966dc-b62a-4eb4-a669-bcad23907535</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:13:04 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:13:04.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,காட்டு யானை,wild elephant,Nilgiri</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/snemylca/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/snemylca/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>கூடலூர் நகருக்குள் உலா வரும் காட்டு யானையால் நிம்மதியை இழந்த மக்கள் தீப்பந்தம் மூலம் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.</p><h2>ஊருக்குள் உலா வரும் காட்டு யானை</h2><p>நீலகிரி காவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று முகாமிட்டு வருகிறது. மேல் கூடலூர், கெவிப்பாரா, அரசு மேல்நிலைப்பள்ளி, செம்பாலா, கோத்தர்வயல், மார்த்தோமா நகர், புத்தூர்வயல் என நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளை தினமும் முற்றுகையிட்டு வருகிறது.</p> <p>இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதேபோல் வீடுகளில் பராமரிக்கப் பட்டு வரும் வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும் தின்று பழகி விட்டதால் காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினாலும் தொடர்ந்து ஊருக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் மரப்பாலம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை நுழைந்தது. </p><h2>தீப்பந்தம் மூலம் விரட்டும் மக்கள்</h2><p>நாள்தோறும் காட்டு யானையால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதாக பொதுமக்கள் தங்களது வேதனையை தெரிவித்தனர்.  மேலும் அதை விரட்டினாலும் தொடர்ந்து ஊருக்குள் வருவதால் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை தீப்பந்தம் மூலம் பொதுமக்கள் விரட்டினர். இதனால் யானை அங்கிருந்து சென்றது.</p> <p>இதேபோல் செம்பாலாவிலும் காட்டு யானை நுழைந்து பொதுமக்கள் வீடுகளை சுற்றி அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து சேதப்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது. தினமும் குடியிருப்பு பகுதியில் வளைந்து பாதுகாப்பு சுற்றுச்சுவர் மற்றும் தடுப்புகளை காட்டு யானை சேதப்படுத்துகிறது. எனவே வனத்துறையினர் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>நைனாமலை பக்தர்களுக்கு சூப்பர் வசதி! ரூ.30 கோடியில் மலைச்சாலை பணி நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/super-facilities-for-nainamalai-devotees-hill-road-work-completed-at-a-cost-of-rs-30-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/super-facilities-for-nainamalai-devotees-hill-road-work-completed-at-a-cost-of-rs-30-crore#comments</comments><guid isPermaLink="false">f3798135-fabb-478a-a49b-086db3ba3104</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:08:49 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:08:49.686Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,சேந்தமங்கலம்,Completed,road work,நிறைவு,சாலை பணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/b4kbw96b/97.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நைனாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/b4kbw96b/97.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேந்தமங்கலம், </p><p>சேந்தமங்கலம் நைனாமலை கோவிலுக்கு ரூ.30 கோடியில் மலைச்சாலை அமைக்கும் பணி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று வாகனங்களில் பக்தர்கள் ஆர்வமாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.</p><h2>நைனாமலை கோவில்</h2><p>நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் வழியில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் வரலாற்று புகழ்வாய்ந்த நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அந்த மலை கோவிலுக்கு பக்தர்கள் வழக்கமாக சுமார் 2 ஆயிரத்து 500 படிக்கட்டுகளை கடந்து சென்று பெருமாள் மற்றும் குவலயவல்லி தாயாரை வணங்கிவிட்டு திரும்புவார்கள்.</p><p>மலைமேல் ஏற முடியாத பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள பெருமாளை வணங்கி நிற்கும் பக்த ஆஞ்சநேயரை வணங்கி விட்டு திரும்புவார்கள். இந்த நிலையில் மலைக்கோவிலில் உள்ள பெருமாளை தரிசிக்க மலைச்சாலை அமைத்து அங்கு பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.</p><h2>ரூ.30 கோடியில் தார்சாலை</h2><p>இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலை துறை மூலமாக ரூ.30 கோடி செலவில் அடிவாரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலைச்சாலை அமைக்கும் பணி முடிவுற்றது. அதைத் தொடர்ந்து அந்த மலைச்சாலை வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் சமீபத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலனை சந்தித்து முறையிட்டனர். அதைத் தொடர்ந்து அவர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த மலைச்சாலையை ஆய்வு செய்த பின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பக்தர்கள்</a> பஸ்சில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.</p><p>இந்தநிலையில் நேற்று பக்தர்கள் ஆர்வமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அந்த மலைக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கினர். வருகிற 11-ந் தேதி முதல் 5 வாரங்களுக்கு அந்த கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கோவை-சொரனூர் பயணிகள் ரெயில் 20-ந்தேதி ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-shoranur-passenger-train-cancelled-on-the-20th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-shoranur-passenger-train-cancelled-on-the-20th#comments</comments><guid isPermaLink="false">c3c81679-a191-4d01-bc00-cd81eab9034b</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:01:17 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:01:17.699Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,passenger train,பயணிகள் ரெயில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/k6bkocjm/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/k6bkocjm/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பாலக்காடு,  </p><p>பாலக்காடு ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நாட்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில ரெயில் சேவைகள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக சொரனூர்-கோவை பயணிகள் ரெயில் வருகிற 20, 29-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. </p><p>22-ந் தேதி வழக்கமாக 8.20 மணிக்கு பதிலாக காலை 8.50 மணிக்கு சொரணூரில் இருந்து புறப்படும்.</p><p>கோவை-சொரனூர் பயணிகள் ரெயில் 20-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். பயணிகள் தங்கள் பயணத்தின் போது ரெயில்வே கால அட்டவ ணையை சரிபார்த்து கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள் ளது.</p>]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணியாளர்களுக்கு பாதுகாப்பு அரண்... காவிரி ரெயில்வே பாலத்தில் புதிய நடைபாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/safety-barrier-for-maintenance-workers-new-footpath-on-cauvery-railway-bridge</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/safety-barrier-for-maintenance-workers-new-footpath-on-cauvery-railway-bridge#comments</comments><guid isPermaLink="false">62401d1e-5d08-4d31-89c9-a19ed0b915aa</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:44:38 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:44:38.762Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பணியாளர்கள்,maintenance work,பராமரிப்பு பணி,ரெயில்வே பாலம்,Railway Bridge,நடைபாதை,footpath</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/6m74em6x/96.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  நடைபாதை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/6m74em6x/96.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு காவிரி ரெயில்வே மேம்பாலத்தில் புதிய நடைபாதைகள் அமைக்கப்பட்டதால், ஆபத்தான பணிக்கு விடிவுகாலம் பிறந்து உள்ளது.</p><h2>காவிரி ரெயில்வே மேம்பாலம்</h2><p>ஈரோடு வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. ஈரோடு காவிரி ஆற்று ரெயில்வே மேம்பாலத்தில் இரு மார்க்கமாக செல்லும் ரெயில்கள் தடையின்றி செல்வதற்காக 2 ரெயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.</p><p>பயணிகள் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் என அதிகமான ரெயில்கள் கடந்து செல்வதால் அடிக்கடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது தண்டவாளத்தில் விரிசல்கள் உள்ளதா? போல்ட், நட்டுகள் சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா? 2 தண்டவாளங்களுக்கு இடையே உள்ள தூரம் சரியாக உள்ளதா? என்று நவீன எந்திரங்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது.</p><h2>ஆபத்தான பணி</h2><p>காவிரி ரெயில்வே மேம்பாலம் சுமார் 500 மீட்டர் நீளம் கொண்டது. 50 அடிகள் வரை உயரமுடையது. இதனால் ரெயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் ஊழியர்களுக்கு பெரும் சவால் ஏற்படுகிறது. குறிப்பாக 300 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டுமென்றாலும் ஊழியர்கள், தொழிலாளர்கள் ரெயில்வே தண்டவாளத்தின் மையப்பகுதியில் நடந்து செல்ல வேண்டி இருந்தது. அப்போது ரெயில் வந்துவிட்டால் உடனடியாக ஒதுங்குவதற்கு இடம் கிடையாது. இதனால் ஆங்காங்கே குறிப்பிட்ட தொலைவில் அமைக்கப்பட்டு உள்ள மேடையில் மட்டுமே விரைந்து ஓடிச்சென்று ஒதுங்கி நிற்க வேண்டும். எனவே ஆபத்தான முறையில் பணியாற்றி வந்தனர்.</p><h2>நடைபாதை </h2><p>இந்தநிலையில் ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் சென்று வரும் வகையில் இருபுறங்களிலும் புதிதாக நடைபாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்ட தூண்களில் நடைபாதை அமைக்கப்பட்டது. மேலும், பாலம் தொடங்கும் பகுதியில் புதிதாக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88">நடைபாதை</a> அமைக்கப்பட்டதால் ஊழியர்களின் ஆபத்தான பயணத்துக்கு விடிவுகாலம் பிறந்து உள்ளது.</p><p>இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, "காவிரி ஆற்று ரெயில்வே தண்டவாளத்தில் செல்ல வேண்டும் என்றால் தண்டவாளத்தின் நடுப்பகுதியில் மட்டுமே நடந்து செல்ல வேண்டி இருந்தது. ரெயில்கள் வரும்போது அவசர அவசரமாக ஒதுங்க வேண்டி இருக்கும். புதிதாக நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இனிமேல் ஊழியர்கள் ரெயில்வே தண்டவாளத்தின் வழியாக நடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டிய இடத்துக்கு நடைபாதை வழியாக நடந்து செல்லலாம். புதிய நடைபாதை அமைக்கும் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன", என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்ததா காகங்கள்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-crows-curl-up-and-die-in-the-scorching-sun</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-crows-curl-up-and-die-in-the-scorching-sun#comments</comments><guid isPermaLink="false">9c4d4234-b72a-406e-9a83-43c10f9cccc1</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:40:39 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:40:39.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Action,நடவடிக்கை,heat,Death,கோரிக்கை,இறப்பு,Request,பாளையங்கோட்டை,Palayankottai,எஸ்.டி.பி.ஐ. கட்சி,காகங்கள்,crows,Intense,SDPI Party,கடும் வெயில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/97dzfqbx/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்ததா காகங்கள்?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/97dzfqbx/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>நெல்லையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சுட்டெரிக்கும் வெயிலுக்கு</a> சுருண்டு விழுந்து இறந்ததா <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">காகங்கள்</a>? என்பது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மாவட்ட நிர்வாகம்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">நடவடிக்கை</a> எடுக்க வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">எஸ்.டி.பி.ஐ. கட்சி</a> சார்பில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கோரிக்கை</a> வைக்கப்பட்டுள்ளது. </p><h2>கடும் வெயிலால் தண்ணீர் தேடி அலையும் உயிரினங்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் சமீபகாலமாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெப்ப அலை வீசுவதால் வெயிலின் தாக்கத்துக்கு பறவைகள், விலங்குகள் என எதுவும் தப்பவில்லை. குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக வற்றிக்கொண்டே வருவதால் நாய், ஆடு, மாடுகள், காகங்கள் என ஏராளமான மற்ற உயிரினங்களும் தாகத்தால் தண்ணீர் தேடி அலைவதை பார்க்க முடிகிறது. </p><h2>காகங்கள் சுருண்டு விழுந்து இறக்கும் சம்பவம்</h2><p>இந்த நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகரில் கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே அதிகளவில் சுருண்டு விழுந்து இறக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. </p><h2>எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை</h2><p>இது தொடர்பாக எஸ்.டி.பி.ஜ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் கூறுகையில், "நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே இறந்து கிடக்கிறது. இது வெயிலின் தாக்கத்தால் நடைபெறும் நிகழ்வா? அல்லது ஏதேனும் வைரஸ் பாதிப்பா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பணிக்கு திரும்பாத டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 33 பேர் பணியிடை நீக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/33-tasmac-supervisors-suspended-for-failing-to-return-to-work</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/33-tasmac-supervisors-suspended-for-failing-to-return-to-work#comments</comments><guid isPermaLink="false">0189c1de-d754-48a0-8173-0a9c172507a2</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:38:53 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:38:53.004Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,டாஸ்மாக்,Tasmac,பணியிடை நீக்கம்,suspended,டாஸ்மாக் மேற்பார்வையாளர்,Tasmac employee</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/8drsgyph/mac.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/8drsgyph/mac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் <a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> மேற்பார்வையாளர்கள் 33 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.</p><h2>போராட்டம்</h2><p>காஞ்சீபுரம் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் 83 <a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்கத்தினருடன் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.</p><h2>33 பேர்</h2><p>இதை தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> கடைகளை பணியாளர்கள் படிப்படியாக திறந்து மது விற்பனையை தொடங்கினார்கள்.</p><p>இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைக்கும் உடன்படாமல் 33 டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் கடைகளை திறக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> நிர்வாகத்தின் உத்தரவை தொடர்ந்து பிற பணியாளர்கள் கடைகளை திறந்தனர். டாஸ்மாக் கடைகளை திறக்காத 33 மேற்பார்வையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து உரிய பதில் வராததால் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாக மண்டல மேலாளர், 33 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.</p><p>கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 33 மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மற்ற டாஸ்மாக் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-pocso-for-impregnating-minor-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-pocso-for-impregnating-minor-girl#comments</comments><guid isPermaLink="false">6bf5aa43-56f2-42c3-879c-16000b45a3c9</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:22:34 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:22:34.801Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்சோ சட்டம்,POCSO act,சிறுமி கர்ப்பம்,Girl Pregnant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/s16b1x8g/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/s16b1x8g/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும், ஒமாந்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வாலிபர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். </p><p>இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சிறுமியின் தாயார் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி -பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-trichy-palakkad-train-service-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-trichy-palakkad-train-service-3#comments</comments><guid isPermaLink="false">215cd259-23dd-42c3-81ad-ba782a995aac</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:21:07 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:21:07.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,train service,Palakkad,பாலக்காடு,Change,மாற்றம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/48kxuok4/train-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/48kxuok4/train-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஈரோடு மற்றும் திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஊத்துக்குளி ரெயில்வே பணிமனையில், ரெயில்வே பாலம் தொடர்பான என்ஜினீயரிங் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ஈரோடு வழியாக செல்லும் திருச்சி -பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16843) இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 11, 12-ந்தேதிகளில் திருச்சி சந்திப்பில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ஊத்துக்குளி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஈங்கூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். </p><h2>சிறப்பு ரெயில்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பணிகள்</a> முடிந்ததும் இந்த ரெயில் ஈங்கூரில் இருந்து போத்தனூர் வழியாக பாலக்காடு வரை மாற்றுப்பாதையில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இருசக்கர வாகனம் வாங்குவது போல் நடித்து திருடிச்சென்ற வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-stealing-a-bullet-motorcycle-after-pretending-to-buy-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-stealing-a-bullet-motorcycle-after-pretending-to-buy-it#comments</comments><guid isPermaLink="false">dc4c9904-8e67-4942-a95a-e3a92183b5a0</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:15:59 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:15:59.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருட்டு,Theft,&apos;Bullet&apos; Motorcycle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/xfqert0y/arrest.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/xfqert0y/arrest.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை நிலையம் உள்ளது. இங்கு டிப் -டாப்பாக உடை அணிந்த வாலிபர் ஒருவர் வந்தார். அவர், அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் புல்லட் மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கேட்டார். மேலும், எவ்வளவு மைலேஜ் கிடைக்கும். ஒட்டி பார்க்கலாமா என கேட்டு உள்ளார். இதையடுத்து உரிமையாளரிடம் அனுமதி பெற்று புல்லட் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்க்க ஊழியர் அனுமதித்தார். அப்போது அவர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.</p><h2>வாகன சோதனையில் சிக்கினார். </h2><p>இதற்கிடையே நேற்று பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில் சின்னக்கரை சோதனை சாவடியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புல்லட் மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கும்பகோணத்தைச் சேர்ந்த சங்கர பாண்டியன் (வயது 32) என்பதும், திருப்பூர் அருகே உள்ள முருங்கம்பாளையத்தில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை செய்து வந்ததும், அவர் ஓட்டி வந்த புல்லட் மோட்டார் சைக்கிள் பல்லடம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் இருந்து நூதன முறையில் திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சங்கர பாண்டியனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புல்லட் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>மருதமலை கோவிலில் ரூ.10 கோடியில் படிக்கட்டுகள் புனரமைப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stairs-to-be-renovated-at-maruthamalai-temple-at-a-cost-of-rs-10-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stairs-to-be-renovated-at-maruthamalai-temple-at-a-cost-of-rs-10-crore#comments</comments><guid isPermaLink="false">6daec9f8-432f-4c19-9888-5d9b5f325d06</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:00:54 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:00:54.518Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மருதமலை முருகன் கோவில்,படிக்கட்டு,stairs,புனரமைப்பு பணிகள்,renovated,Maruthamalai Murugan Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/bby11999/95.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/bby11999/95.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் ரூ.10 கோடியில் படிக்கட்டுகளை புனரமைக்கும் பணி நடைபெறுகிறது.</p><h2>7-வது படை வீடு</h2><p>கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7-வது படைவீடு என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் லிப்ட், தங்கும் மண்டபம் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.</p><p>மலை மேல் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மருதமலை சுப்பிரமணிய சுவாமி</a>யை தரிசிக்க அடி வாரத்தில் இருந்து படிக்கட்டு பாதை மற்றும் வாகனங்கள் செல்லும் வகையில் மலைப்பாதை உள்ளது. இதில், மலைக்கு மேல் உள்ள வாகன நிறுத்தம் வரை செல்ல முடியும். ஆனால் வாரவிடுமுறை. முக்கிய பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்போது கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவது இல்லை.இதனால் பக்தர்கள் கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் மலைக்கு மேல் செல்கின்றனர். ஆனாலும் பலர் படிக்கட்டு பாதை வழியாக கோவிலுக்கு செல்கின்றனர்.</p><h2>புனரமைக்கும் பணி</h2><p>ஆனால் இந்த படிக்கட்டுகள் செங்குத்தாக உள்ளது. இதனால் வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே பழனி கோவிலில் யானைப்பாதையில் உள்ளது போன்று பக்தர்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் படிக்கட்டுகளை மாற்றி அமைக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. அதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இதுதவிர கோவிலுக்கு பின்புறத்தில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">dbc3aca4-0944-48df-ac69-ff78e848fa58</guid><pubDate>Sun, 06 Sep 2026 00:55:08 +0000</pubDate><atom:updated>2026-09-06T00:55:08.954Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/7s4wczx8/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/7s4wczx8/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (06.09.2026 ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் விஷம் குடித்து தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-aiadmk-mlas-son-commits-suicide-by-consuming-poison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-aiadmk-mlas-son-commits-suicide-by-consuming-poison#comments</comments><guid isPermaLink="false">89fc37bc-5b3b-49ef-a798-55a40b62e619</guid><pubDate>Sun, 06 Sep 2026 00:51:41 +0000</pubDate><atom:updated>2026-09-06T00:51:41.190Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,விழுப்புரம்,Villupuram,son,மகன்,குடும்ப பிரச்சினை,former mla,முன்னாள் எம்.எல்.ஏ.,family issue,Suicide by consuming poison</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/opqbydts/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஷம் குடித்து தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/opqbydts/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">விழுப்புரம்</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">முன்னாள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F">அ.தி.மு.க. எம்.எல்.ஏ.</a>வின <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">மகன்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">விஷம் குடித்து தற்கொலை</a> செய்து கொண்டார். </p><h2>அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன்</h2><p>விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவரது மகன் பரத்குமார் (வயது 30). இவர் அதே ஊரை சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் மகள் மகாலட்சுமி என்பவரை காதலித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கெண்டார். </p><h2>விஷம் குடித்து தற்கொலை</h2><p>இந்த தம்பதியிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்டேரிப்பட்டில் மயிலம் சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்த பரத்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-tamil-nadu-for-6-days-meteorological-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-tamil-nadu-for-6-days-meteorological-department-update#comments</comments><guid isPermaLink="false">569e548a-7306-4a9d-ace9-2dae3d6a2735</guid><pubDate>Sun, 06 Sep 2026 00:49:47 +0000</pubDate><atom:updated>2026-09-06T00:49:47.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,weather forecast,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain,TN weather,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/xvg0mouz/kushi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/xvg0mouz/kushi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>06-09-2026 முதல் 09-09-2026 வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (06-09-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும்.</p><p><strong>07-09-2026 மற்றும் 08-09-2026 வரை:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும்.</p><p><strong>09-09-2026 மற்றும் 10-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>11-09-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>06-09-2026 முதல் 09-09-2026 வரை:</strong> கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>06-09-2026 முதல் 09-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (06-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong><ins>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</ins></strong></p><p><strong>தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் &amp; அரபிக்கடல் பகுதிகள்:</strong></p><p><strong>06-09-2026 முதல் 09-09-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>