<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 14 Aug 2026 10:24:24 +0000</lastBuildDate><item><title>ஸ்டான்லி மருத்துவமனை முட்டை விவகாரம்: வைரலாகும் காணொலி பழையது என விளக்கம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stanley-hospital-egg-controversy-clarification-issued-that-the-viral-video-is-old</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stanley-hospital-egg-controversy-clarification-issued-that-the-viral-video-is-old#comments</comments><guid isPermaLink="false">d48a8b92-6b90-476b-a5be-6db4d887a316</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:00:27.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு அரசு,Government Hospital,Fact Check Unit,Fact check,TamilNadu Goverment,ஸ்டான்லி மருத்துவமனை,Stanley Hospital,Govt Stanley Hospital,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,அரசு மருத்துமனை,தகவல் நம்பகத்தன்மை,தகவல் நம்பகத்தன்மை பிரிவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/fa82yt7f/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்டான்லி மருத்துவமனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/fa82yt7f/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டையை ஊழியர் ஒருவர் அலட்சியமாக படுக்கையில் வைத்துவிட்டு சென்றதாக காணொலி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும் இது குறித்து தங்களின் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். </p><h2>மருத்துவமனை விளக்கம்</h2><p>இந்த நிலையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை தொடர்பாக பரவும் காணொலி ஐந்து மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என ஸ்டான்லி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டையை ஊழியர் ஒருவர் அலட்சியமாக படுக்கையில் வைத்துவிட்டு சென்றதாக காணொலிகள் வெளியாகியுள்ளன.</p><h2>இது முற்றிலும் தவறான தகவல்</h2><p>ஐந்து மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காணொலி </a>தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அரசின் நற்பெயரை கெடுக்கும் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என ஸ்டான்லி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திமுகவிற்கு வாக்களிக்காத வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” - ஆர்.எஸ். பாரதி பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-condemns-rs-bharathis-remark-that-voters-who-did-not-vote-for-the-dmk-will-not-have-a-good-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-condemns-rs-bharathis-remark-that-voters-who-did-not-vote-for-the-dmk-will-not-have-a-good-death#comments</comments><guid isPermaLink="false">e9c874ca-542c-4bc0-bed1-c986c01f5e74</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:34:51 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:34:51.288Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,திமுக,DMK,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,ஆர்.எஸ். பாரதி,R.S. Bharathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/2cd55dsd/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/2cd55dsd/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்பிரமணியண் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தால் கூட வெற்றி பெற்று இருப்போம். அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வானதி சீனிவாசன் கண்டனம்</h2><p>இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் இந்த சர்ச்சைக்குறிய பேச்சுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுகவிற்கு வாக்களிக்காத சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” என்று சாபம் விடும் தொனியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை இழிவுபடுத்துவதுதான் திமுகவின் அரசியல் நாகரீகமா?</p><h2>இது என்ன மனநிலை</h2><p>எதிர்க்கட்சியினர், திட்டங்களின் பயனாளிகள், பெண்கள் என தொடர்ந்து பல்வேறு தரப்பினரை இழிவுபடுத்திப் பேசிய திமுகவினர், இப்போது தங்களுக்கு வாக்களிக்காத மக்களையே சாபமிடும் நிலைக்குச் செல்வது என்ன மனநிலை என்று தெரியவில்லை.</p><p>மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்பியதற்கான காரணங்களில் இதுபோன்ற அகங்காரப் பேச்சுகளும் ஒன்று என்பதை திமுக-வினர் மறக்கக் கூடாது. இனியாவது மேடைகள் உங்கள் வீடுகள் அல்ல என்பதை உணர்ந்து, மக்களின் வாக்குரிமையை மதித்து, அரசியல் நாகரீகத்துடன் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“கோவை நகரம் பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா?” - தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-city-of-coimbatore-in-pakistan-or-afghanistan-high-court-questions-the-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-city-of-coimbatore-in-pakistan-or-afghanistan-high-court-questions-the-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">a6b5b698-7d6b-494a-8d56-cabc24c47f52</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:22:26 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:22:26.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Tamilnadu,கோவை,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,தமிழ்நாடு அரசு,Chennai High Court,TN government,national flag,பேரணி,Kovai,தேசியக் கொடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/y5u2lj7v/chn.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/y5u2lj7v/chn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பேரணி நடத்த தி.க., பாஜகவிற்கு அனுமதியில்லை, த.வெ.க.விற்கு மட்டும் அனுமதியா? என்று தமிழ்நாடு அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/சென்னை-ஐகோர்ட்டு">சென்னை ஐகோர்ட்டு</a> கேள்வி எழுப்பி உள்ளது.</p><h2>அவசர வழக்கு</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட தேசியக் கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார். </p><p>இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தேசியக் கொடி பேரணி</h2><p>சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக் கொடி பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. கடந்த 6-ஆம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாக பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது.</p><h2>ஜனநாயக விரோத நடவடிக்கை</h2><p>அதன் பிறகு சிவானந்தா காலனி முதல் பவர்ஹவுஸ் வரை மற்றும் தெப்பக்குளம் மைதானம் முதல் காமராஜர்புரம் வரை என இரு மாற்று வழிகளை பரிந்துரைத்தோம். அதிகாரிகளுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வழித்தடத்துக்கு அனுமதி தருவதாகக் கூறிய நிலையில், மாலையில் திடீரென எந்த வழித்தடத்துக்கும் அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது. </p><p>காந்திபுரத்தில் அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டணி அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கு தடையின்றி அனுமதி வழங்கிய மாநகர காவல் ஆணையர், தேசியக் கொடி பேரணிக்கு மட்டும் அனுமதி மறுத்து ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். காவல் துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியிருந்தார்.</p><h2>த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</h2><p>இந்நிலையில் இன்று நடந்த இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். </p><p>இதன்படி, “பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி இல்லை, பாஜகவுக்கு அனுமதி இல்லை, த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</p><p>கோவை நகரம் என்ன பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா? தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்வது பாவச் செயலா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல் துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். </p> ]]></content:encoded></item><item><title>80ஆவது சுதந்திர தினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-greetings-from-marxist-communist-party</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-greetings-from-marxist-communist-party#comments</comments><guid isPermaLink="false">760de529-61c9-425f-9c14-b65d2e2f72b7</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:12:54 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:12:54.196Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,சுதந்திர தினம்,Independence Day,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,CPI(M)</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/7etn6spb/communist.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/7etn6spb/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>80ஆவது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தினம்</a> ! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து !! இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><h2>நல்வாழ்த்து</h2><p>நமது இந்திய திருநாடு 80ஆவது விடுதலை திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய பொழுதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</a> கட்சியின் சார்பில் சுதந்திர தின புரட்சிகா நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.</p><h2>வீரவணக்கம்</h2><p>'தண்ணீர்விட்டோ வளர்த்தோம் ? இப்பயிரை கண்ணீராற் காத்தோம்' என்ற மகாகவியின் பாட்டு வரிகளுக்கேற்ப நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தோர், சிறைக்கொட்டடியையும், சித்ரவதைகளையும் இன்முகத்தோடு எதிர்கொண்ட தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கத்தை உரித்தாக்குகிறோம்.</p><h2>கம்யூனிஸ்ட் இயக்கம்</h2><p>விடுதலைக்கான நெடிய போராட்டத்தில் முழு விடுதலை என முதலில் முழங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்தியாவின் ஒருமைப்பாடும், பன்முகத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மொழிவழி மாநிலங்களே தீர்வு என முன்பின் முரணின்றி முன்மொழிந்தது கம்யூனிஸ்ட் இயக்கம்.</p> <h2>போராட்டம்</h2><p>விடுதலைப் போரில் வீரம் செறிந்த பங்களிப்பை செய்த கம்யூனிஸ்டுகள், சுதந்திர போராட்டத்தோடு மண்ணுரிமை, பெண்ணுரிமை, தொழிலாளர் வர்க்க உரிமைகள், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம், சமூக நீதி, சம நீதி போன்றவற்றை இணைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.</p><h2>மத வெறி சக்திகள்</h2><p>விடுதலை போராட்டத்திலிருந்து விலகி நின்ற மத வெறி சக்திகளின் வாரிசுகளிடம் மத்திய மற்றும் பல மாநிலங்களின் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத இந்த கூட்டம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை திட்டமிட்டு சிதைத்து வருகிறது. அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்படுகின்றன.</p><h2>அயல்துறை கொள்கை</h2><p>பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றி தரப்படுகிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி விடுதலை பெற்ற நமது நாட்டின் சுயேட்சையான அயல்துறை கொள்கை கைகழுவப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடிபணிவதாக அயல்துறை கொள்கை மாற்றப்பட்டுள்ளது.</p> <h2>மோடி அரசு</h2><p>உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள் அன்று நம் முன்னோர்கள். இன்று விவசாயிகளின் விதை உரிமையை கூட பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கிறது மோடி அரசு. வேலையின்மை, வறுமை, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு முடிவு காணப்படவில்லை. தேசத்தின் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவை முடக்க மோடி அரசு சதி செய்கிறது.</p> <p>ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்ற விழுமியங்களை கொண்ட அரசியல் சட்டத்தை பாதுகாக்க விடுதலை நாளில் உறுதியேற்போம்.</p><h2>இளைஞர் - மாணவர் போராட்டம்</h2><p>போராட்டங்களின் வழியாகவே சாதிக்க முடியும் என்பதற்கு சமீபத்திய சாட்சியமாக டெல்லி துவங்கி நாடு முழுவதும் நடந்த இளைஞர் - மாணவர் போராட்டம் திகழ்கிறது. விடுதலை போராட்ட தியாகிகளின் கனவுகளை நனவாக்கவும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற சமத்துவ சமூகத்தை உருவாக்கிடவும் விடுதலை நாளில் உறுதியேற்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மூன்று நாள் ‘மீடியா ட்ரோன் பயிற்சி’</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-day-media-drone-training-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-day-media-drone-training-in-chennai#comments</comments><guid isPermaLink="false">52cdaced-b74e-498c-959e-302564eec159</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:10:00 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:10:00.603Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Drone,Training,Drone Camera,பயிற்சி வகுப்பு,ட்ரோன்,ட்ரோன் கேமரா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/h7i8s8gw/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/h7i8s8gw/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ‘மீடியா ட்ரோன் பயிற்சி’ வரும் 18.08.2026 முதல் 20.08.2026 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.</p><h2>பயிற்சி நோக்கம் / சிறப்பம்சங்கள்:</h2><p>• ட்ரோன் தொழில்நுட்பம் – அறிமுகம் • ட்ரோன் சினிமாடோகிராஃபி நுட்பங்கள் • வானிலிருந்து(Aerial Photography) புகைப்படம் – அறிமுகம் • FPV சினிமாடோகிராஃபி • DGCA விதிமுறைகள் மற்றும் விமான பாதுகாப்பு</p><h3>மீடியா ட்ரோன் பைலட்டுகளுக்கான தொழில் வாய்ப்புகள்:</h3><p><strong>· திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு.</strong></p><p><strong>· செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள்.</strong></p><p><strong>· ஆவணப்பட தயாரித்தல்.</strong></p><p><strong>· விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங்.</strong></p><p><strong>· கார்ப்பரேட் திரைப்படங்கள்.</strong></p><p><strong>· யூடியூப் மற்றும் சமூக ஊடக உள்ளடக்க உருவாக்கம்.</strong></p><p><strong>· காவல் மற்றும் ராணுவ கண்காணிப்பு.</strong></p><p><strong>· நிகழ்ச்சி செய்தி களிப்பு.</strong></p><p><strong>· சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை.</strong></p><p><strong>· ரியல் எஸ்டேட் புகைப்படம் / வீடியோ தயாரித்தல்.</strong></p><p><strong>· தொழிற்துறை புகைப்படம்.</strong></p><p><strong>· காடு மற்றும் விலங்கியல் புகைப்படம்.</strong></p><p><strong>· தீ மற்றும் மீட்பு பணிகள்.</strong></p><p><strong>· அரசுத் திட்டங்கள்.</strong></p><p>மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.</p><h2>முன்பதிவு அவசியம்</h2><p>இப் பயிற்சியில் ஆர்வமுள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழில் முனைவோர்கள்</a> (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்/ தொழில்முனைவோர்கள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.</p><p>மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 8668100181 / 9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.</p><p>தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர், ஒசூர் விமான நிலையங்கள் அமைப்பதில் த.வெ.க. அரசின் முடிவு என்ன.? டி.ஆர்.பி.ராஜா கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-tvk-governments-decision-regarding-the-establishment-of-airports-at-parandur-and-hosur-trb-rajaa-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-tvk-governments-decision-regarding-the-establishment-of-airports-at-parandur-and-hosur-trb-rajaa-asks#comments</comments><guid isPermaLink="false">b1070256-db7a-4be6-8969-b802ae74dd1d</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:47:20 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:47:20.872Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,TRB Raja,டி.ஆர்.பி. ராஜா</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/97jo690p/klier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/97jo690p/klier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>75 சதவீத MoU-கள் தி.மு.க. ஆட்சியில் தயார் செய்தவை. இந்த 100 நாட்கள்ல பெரிய புதிய திட்டங்கள் ஏன் வரவில்லை? என்று முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, த.வெ.க. அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். </p><h2>தி.மு.க. ஆட்சியில்..</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p><a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> அரசு நடத்திய முதலீட்டாளர்கள் கூட்டம் தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எழுப்பிய கேள்விகள்.</p><p>75 சதவீத MoU கள் தி.மு.க. ஆட்சியில் தயார் செய்தவை. இந்த 100 நாட்கள்ல பெரிய புதிய திட்டங்கள் ஏன் வரவில்லை?..  </p><p>வளர்ச்சிக்கு முக்கியமான பரந்தூர், ஒசூர் விமான நிலையங்கள் அமைப்பதில் இந்த அரசின் முடிவு என்ன.?</p><h2>நம்பர் 1:</h2><p>இந்த Conclave விற்கு ஊடகங்களை ஏன் அனுமதிக்கவில்லை.? ஏன் இவ்வளவு Secrecy? ஏன், இதுல வர திட்டங்கள் எல்லாமே சென்ற திராவிட மாடல் ஆட்சில நாங்க ரெடி பண்ணினது தான் என்பது ஊடகங்களுக்கு தெரிஞ்சிடும் என்ற எண்ணமா.? எதுவாக இருந்தாலும் முதலீடுகளை ஈர்க்கவும் அதை Promotion செய்யவும் Press மிக முக்கியமான ஒன்று. </p><h2>நம்பர் 2:</h2><p>இதுல வந்த MOU-ஸ் களில் கிட்டத்தட்ட ஒரு 75 சதவீதம் திராவிட மாடல் ஆட்சில ரெடி பண்ணி வச்சிருந்த அந்த திட்டங்கள்தான் அப்படின்னு எல்லாருக்கும் தெரியுது. அது உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன். </p><h2>நம்பர் 3:</h2><p>நம்ம "Bullish on TN" லோகோவே மாத்திருக்கீங்கன்னு சொல்றாங்க. எல்லாத்துலயும் ஸ்டிக்கர் ஒட்ட தேவையில்ல. இதெல்லாம் வந்து நாங்க மார்க்கெட் பண்ணி, இவ்ளோ தூரம் Project செய்து, Publicity கொண்டுவந்து வச்சிருக்கோம் . அத நம்ம அப்படியே தொடர்ச்சியா நம்ம தமிழ்நாட்டுக்கு யூஸ் பண்றதுல என்ன தவறுன்னு எனக்கு தெரியல. </p><p>அதுல ஒன்னும் தி.மு.க. பிராண்டிங் எல்லாம் ஒன்றும் நாங்க ஒட்டல. அது தமிழ்நாட்டுக்கான பிராண்டிங். அந்த தமிழ்நாட்டோட பிராண்டிங்க திருப்பி ரீபிராண்ட் (Re-brand) பண்ணி, திருப்பி ரீ-ஸ்டார்ட் (Re-start) பண்ண வைக்காதீங்க. இத்தனை நாள் செய்திருக்கும் அந்த பணிய யூட்டிலைஸ் (Utilize) பண்ணிக்கோங்க. அது அடுத்த கட்டத்துக்கு தமிழ்நாட்ட உயர்த்துறதுக்கு உதவியா இருக்கும். </p><h2>நம்பர் 4:</h2><p>ஆந்திர பிரதேஷ்  CM சந்திரபாபு நாயுடு அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு State Investment Promotion Bureau மீட்டிங்க அவரே நடத்தினார். அதுல ரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை கிளியர் பண்றாரு. </p><p>ஆனா இங்க இன்னும் சென்ற தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தப்பட்டு முடிக்கப்பட்ட அந்த திட்டங்களோட MOU-ஸ் மட்டும்தான் இன்னைக்கு நீங்க சைன் பண்றீங்க. அதுதான்  Predominantly சைன் பண்றீங்க அப்படின்னு சொல்றாங்க. கிட்டத்தட்ட 75% of those MOUs signed today are from... or an outcome of the DMK regime's good work அப்படின்னு சொல்றாங்களே... </p><p>அப்போ புதிய திட்டங்கள் ஏன் வரல? இந்த 100 நாட்கள்ல ஏன் பெரிய புதிய திட்டங்கள் இன்னும் வரல? </p><h2>நம்பர் 5:</h2><p>ரொம்ப முக்கியமான ஒன்று Infrastructure. இவ்வளோ திட்டங்களும் இங்க வரணும், இன்னும் பெரிய திட்டங்கள்லாம் இங்க வரணும்னா, இன்வெஸ்ட்மென்ட் ரேஸ்ல நமக்கு இன்ப்ராஸ்ட்ரக்சர் ரொம்ப ரொம்ப முக்கியம். ஓசூர் அண்ட் பரந்தூர் ஏர்போர்ட்ஸ்  very very critical for Tamil Nadu's industrial growth. இதுல இன்றைய ஆட்சியாளருக்கு என்ன ஸ்டாண்ட் (Stand)ன்றது கிளாரிட்டி இன்னும் வரல. </p><p>எனவே, திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி காலத்துல தமிழ்நாடு பெற்றிருந்த அந்த வளர்ச்சி தொடர வேண்டுமென்றால், Investment promotion நாம இன்னும் கவனம் செலுத்தணும். நிச்சயமாக மிகப்பெரிய அளவுல புதிய நிறுவனங்கள், புதிய வெளிநாட்டு முதலீடுகள் நம்ம தமிழ்நாட்டுக்கு புதிய இடங்களில் வருவதை நாம் உறுதி செய்வது மிக மிக அவசியம். தற்போதைய முதல்-அமைச்சர் இதுல நிச்சயமாக கவனம் செலுத்தணும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நெருக்கடியை சமாளிக்க மக்கள் மீது சுமையை ஏற்ற முயல்வதா? - டி.டி.வி. தினகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-government-shifting-crisis-burden-onto-people-ttv-dhinakaran-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-government-shifting-crisis-burden-onto-people-ttv-dhinakaran-questions#comments</comments><guid isPermaLink="false">23a5b464-6373-49d7-90c3-4abc0db3c143</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:45:17 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:45:17.114Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,சொத்துவரி,Public,மக்கள்,டி.டி.வி. தினகரன்,நெருக்கடி,debt burden,asks</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ic1e2bk5/ttv-dinakaran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ic1e2bk5/ttv-dinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெருக்கடியை சமாளிக்க மக்கள் மீது சுமையை ஏற்ற முயல்வதா? என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/ttv-dhinakaran">டி.டி.வி. தினகரன் </a>கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <p>சென்னை மாநகராட்சியில் திடீரென உயர்த்தப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">சொத்துவரி</a>; பொதுமக்களிடம் எழுந்த கடும் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு – நிதி நெருக்கடியை சமாளிக்க மக்கள் மீது சுமையை ஏற்ற முயல்வதா?</p> <h2>சொத்துவரி உயர்வு</h2><p>சென்னை மாநகராட்சியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரிக்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆட்சேபனை தெரிவிக்க முகாம்கள் அமைக்கப்படும் என அறிவித்த சென்னை மாநகராட்சி, தற்போது சொத்துவரி உயர்வை நிறுத்திவைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p> <h2>எங்கிருந்து வந்தது?</h2><p>மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, வரிவிதிப்பு நிலைக்குழுவின் வழிமுறைகளின்படி உயர்த்தப்பட வேண்டிய சொத்துவரி, எந்தவித முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்டது எப்படி? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே தெரியாமல் சொத்துவரியை உயர்த்துவதற்கான அதிகாரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்கிருந்து வந்தது?</p><h2>மறைமுக மின்கட்டணம்</h2><p>ஏற்கனவே, மறைமுக மின்கட்டண உயர்வால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது சென்னை மாநகரில் சாதாரண நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு வணிக நிறுவனங்களுக்கு இணையாக வரி மதிப்பீடு செய்து, அவர்களுக்கு கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த முயல்வது எந்த வகையில் நியாயம்?</p> <h2>15 ஆயிரம் கோடி</h2><p>தவெக ஆட்சி பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கருவூலத்திற்கு வந்திருப்பதாக நிதியமைச்சர் கூறியிருக்கும் நிலையில், இதுபோன்ற மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட மின்கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வு ஆகியவையும் அந்த தொகையில் அடங்குமா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p> <h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, சொத்துவரி விதிப்பில் சென்னை மாநகராட்சியில் ஏற்பட்டிருக்கும் நிர்வாகக் குளறுபடிகளை உடனடியாக சரிசெய்திடவும், கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த தொகையை உடனடியாக திருப்பி வழங்கிடவும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கல்லால் தாக்கி கொலை மிரட்டல்- சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-4-people-including-children-arrested-for-threatening-to-kill-by-attacking-with-stones</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-4-people-including-children-arrested-for-threatening-to-kill-by-attacking-with-stones#comments</comments><guid isPermaLink="false">61b86c7f-17c1-475a-bb83-de4308f0c48f</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:33:59 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:33:59.226Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Youth,வாலிபர்,4 arrested,4 பேர் கைது,Death threat,கொலை மிரட்டல்,Stone attack,கல்லால் தாக்குதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/iybagb5u/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 4 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/iybagb5u/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், கயத்தாறு மற்றும் கோவில்பட்டி அருகே தொழிலாளர்களைத் தாக்கி, சாதிப் பெயரைச் சொல்லி அவதூறாகப் பேசியது மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கல்லால் தாக்கியது</a> தொடர்பாக 4 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>கயத்தாறு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வடக்குக்கோனார் கோட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்த வேல்சாமி மகன் சண்முகராஜ் (வயது 20). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் பைக்கில் வீட்டுக்குச் சென்றபோது, சாலையில் நின்று கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த சிலர் உள்பட 6 பேரிடம் ஓரமாக நிற்குமாறு கூறியுள்ளார். </p><h2>2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது</h2><p>இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர் சண்முகராஜின் சாதிப் பெயரைச் சொல்லி அவதூறாகப் பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் காயமடைந்த சண்முகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 16 வயதுடைய 2 பேர் மற்றும் 17 வயதுடைய ஒருவர் என 3 சிறுவர்களை கைது செய்தனர்.</p><h2>கோவில்பட்டியில் தொழிலாளி மீது கல்லால் தாக்குதல்</h2><p>கோவில்பட்டி அருகே வி.நாச்சியார்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விக்னேஷ்(26), விவசாயத் தொழிலாளி ஆவார். இவர் தனது நண்பர் ரமேஷுடன் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தபோது, காளாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் கூசாலிப்பட்டியைச் சேர்ந்த அஜித்(எ)சூர்யா ஆகியோர் விக்னேஷை அவதூறாகப் பேசி கல்லால் தாக்கினர். </p><h2>வாலிபர் கைது</h2><p>அதை தட்டிக்கேட்ட ரமேஷுக்கும் கொலை மிரட்டல் விடுத்து அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த விக்னேஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்(எ) சூர்யாவை(30) கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உழவர் அங்காடியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/panic-ensued-following-a-fire-outbreak-at-the-farmers-market-operating-within-the-ramanathapuram-collectors-office-complex</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/panic-ensued-following-a-fire-outbreak-at-the-farmers-market-operating-within-the-ramanathapuram-collectors-office-complex#comments</comments><guid isPermaLink="false">9c6e937c-25ec-4e9d-a052-ba5fde92a086</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:32:25 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:32:25.666Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தீ விபத்து,ராமநாதபுரம்,Ramanathapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/o95bks1l/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/o95bks1l/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுய உதவிக்குழுவினரின் உழவர் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் அங்காடியில் இன்று எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதும் உழவர் அங்காடியில் பணிபுரிந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.</p><p>இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், சமையல் பணிகளை செய்து கொண்டிருந்தபோது சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து தீப்பிடித்ததாக தகவல் தெரியவந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் உரிய நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், உழவர் அங்காடியில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை 91 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/91-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/91-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">60238a69-eca2-4cec-a04b-f10b6820f25b</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:26:57 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:26:57.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கைது,Tirunelveli,திருநெல்வேலி,காவல்துறை,arrest,murder,கொலை,Information,தகவல்,attempted murder,கொலை முயற்சி,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/elamdr9x/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/elamdr9x/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 91 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்தில் கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 8 பேர் மீது ஏற்கனவே தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த வழக்குகளில் தொடர்புடைய மேலும் 3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h2>கொலை, கொலை முயற்சி வழக்குகள்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்தில் கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்து சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 8 பேர் மீது ஏற்கனவே தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மூலச்சி பகுதியைச் சேர்ந்த சுடலை(எ) அருள் (வயது 22), விஜயகுமார்(22) மற்றும் சுப்பையா(எ) தங்கதுரை(27) ஆகிய 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். </p><p>இந்த நிலையில் மேற்சொன்ன நபர்கள் 3 பேரும் தொடர் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் சேரன்மகாதேவி டி.எஸ்.பி., மேற்சொன்ன 3 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். </p><h2>3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 3 பேரும் நேற்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>இதுவரை 91 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 91 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து பணம், நகைகள் கொள்ளை - திருவண்ணாமலையில் பதுங்கிய 2 பேர் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-cash-and-jewelry-looted-after-breaking-into-locked-houses-two-individuals-hiding-in-tiruvannamalai-arrested-in-a-swift-operation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-cash-and-jewelry-looted-after-breaking-into-locked-houses-two-individuals-hiding-in-tiruvannamalai-arrested-in-a-swift-operation#comments</comments><guid isPermaLink="false">2523bf95-6b95-4bd4-b9c0-f4578d1207fe</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:23:16 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:23:16.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/wxatpmbo/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/wxatpmbo/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அடுத்த அயப்பாக்கத்தில் பூட்டப்பட்டு கிடந்த 2 வீடுகளின் கதவுகளை உடைத்து சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><p>வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், கதவுகளை உடைத்து, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். </p><p>இந்த விசாரணையில், தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்வம், கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாலுராஜ் ஆகிய 2 பேர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்களை தேடி கண்டுபிடித்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். </p><p>அவர்களிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், செல்போன், ஆப்பிள் லேப்டாப் மற்றும் பித்தளை, செம்பு பூஜை பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-near-gummidipoondi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-near-gummidipoondi#comments</comments><guid isPermaLink="false">e0e0474c-6fbc-4a11-a40f-a6cf6df7f640</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:21:40 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:21:40.092Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,Gummidipoondi,police enquiry,வெட்டிக் கொலை,இளைஞர் கொலை,youth death</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/4zpz73lo/a1.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ரஞ்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் வெட்டிக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/4zpz73lo/a1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவள்ளூர் மாவட்டம்</a>, கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சானாபுத்தூர் கிராமத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.</p><h2>கல்லறையின் மேல் வீசப்பட்ட சடலம்</h2><p>திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சானாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன் (வயது 17) . அந்த இளைஞர், பிளஸ்-2 படிப்பை முடித்துவிட்டு மேல் படிப்பிற்காக கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை விவசாய நிலப் பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டின் கல்லறையின் மீது, ரத்த காயங்களுடன் ரஞ்சன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.</p><h2>முன்விரோதக் கொலை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கும்மிடிப்பூண்டி போலீசார், ரஞ்சனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இருதரப்பினரிடையே நிலவி வந்த முன்விரோதம் மற்றும் கோஷ்டி மோதல் காரணமாகவே இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">படுகொலை</a> நடந்திருப்பது தெரியவந்தது.</p><h2>தப்பி ஓட்டம்- போலீசார் விசாரணை</h2><p>கொலைக்குப் பின் குற்றவாளிகள் சடலத்தை சுடுகாட்டில் உள்ள ஒரு கல்லறையின் மேல் தூக்கிப் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலைச் சம்பவம் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/take-action-to-free-ramanathapuram-fishermen-premalatha-vijayakanth-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/take-action-to-free-ramanathapuram-fishermen-premalatha-vijayakanth-insists#comments</comments><guid isPermaLink="false">b4a3564f-1de4-49d1-8eeb-f229f96e103c</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:12:57 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:12:57.369Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/vvb6qtle/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/vvb6qtle/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் இனியும் காலதாமதம் செய்யாமல், இலங்கை அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>"முந்தைய ஆட்சிகளில் கடிதம் எழுதுவதோடு பணி முடிந்துவிட்டது. ஆனால், நமது அரசு அப்படி கிடையாது" என்று கூறிய முதல்வர் விஜய், தற்போது அதே பாணியில் கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?</p><p>மேலும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை வருகை தர உள்ள நிலையில், அவர் வருவதற்கு முன்பாகவே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த மீனவர் சமுதாயத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். எனவே 'மீனவ நண்பன்" என்று வார்த்தைகளால் முதல்வர் விஜய் சொல்வதை காட்டிலும், செயலில் அதை நிரூபித்து மீனவர்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தினம்: 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-chief-ministers-police-medals-announced-for-15-police-officers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-chief-ministers-police-medals-announced-for-15-police-officers#comments</comments><guid isPermaLink="false">c78bcbd8-affa-4572-87d6-47f2b652290f</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:07:59 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:07:59.804Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police officers,போலீஸ் அதிகாரிகள்,medal,பதக்கம்,சுதந்திர தினம்,Independence Day,காவல் பதக்கம்,Police Medal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/39adnk9s/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/39adnk9s/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><strong>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல்துறை அதிகாரிகள்/சார்நிலை அலுவலர்களுக்கு 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><h2>போலீஸ் அதிகாரிகள் விவரம்:-</h2><p>1. சி.ஜெயஸ்ரீ, காவல் துணை கண்காணிப்பாளர், கும்மிடிபூண்டி உட்கோட்டம், திருவள்ளுர் மாவட்டம்.</p><p>2. நா.தமிழரசி, காவல் துணை கண்காணிப்பாளர், திருவள்ளுர் உட்கோட்டம், திருவள்ளுர் மாவட்டம்.</p><p>3. கொ.அழகுராஜ், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், கோவை மாநகரம்.</p><p>4. ந.தனுசியா, காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, திருச்சி மாநகரம்.</p><p>5. சே.லதா, காவல் ஆய்வாளர், தனி சிறுவர் காவல் உதவி பிரிவு, கோவை மாநகரம்.</p><p>6. வி.கோமதி காவல்துறை உதவி தலைவர், நிர்வாகம், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.</p><p>7. மா.சித்ரா, காவல் ஆய்வாளர், கைகளத்தூர் காவல் நிலையம், பெரம்பலூர் மாவட்டம்.</p><p>8. ரா.வினதா, காவல் ஆய்வாளர், மேல்மலையனூர் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்.</p><p>9. கோ.மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்ற பதிவேட்டு கூடம், சிவகங்கை மாவட்டம்.</p><p>10. ச.விஜயகுமார், காவல் துணை ஆணையர், மேற்கு, திருநெல்வேலி மாநகரம்.</p><p>இதே போன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல் அதிகாரிகள்/சார்நிலை அலுவலர்களுக்கு 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான முதல்-அமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.</p><p>1. டாக்டர் வி.சசி மோகன், இ.கா.ப, காவல்துறை துணைத்தலைவர், திண்டுக்கல் சரகம்.</p><p>2. தெ.சண்முக பிரியா, இ.கா.ப, காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், மேற்கு சரகம், சென்னை.</p><p>3. சி.எம்.ஆர்.மணிமொழியன், துணை காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.</p><p>4. க.மதன் மோகன், காவல் ஆய்வாளர் (தொழில்நுட்பம்), மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை.</p><p>5. மு.ரவிக்குமார், தலைமை காவலர்-1618, கரூர் நகர காவல் நிலையம், கரூர் மாவட்டம்.</p><p>விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் வெகுமதியும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்குகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை: தமிழகம் முழுவதும் இன்று 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-2120-special-buses-are-operating-across-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-2120-special-buses-are-operating-across-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">521a5933-cdcb-462e-b064-e8d92aeb5007</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:02:23 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:02:23.975Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,special buses,Weekend,வார விடுமுறை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/1mbj04k1/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/1mbj04k1/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சென்னையில் உள்ள முக்கியப் பேருந்து முனையங்கள் மற்றும் பிற நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:-</p><p>கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 505 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 570 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.</p><p>கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.</p><p>மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 14 மற்றும் 15-ந் தேதிகளில் நாள் ஒன்றுக்கு தலா 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. </p><p>வெளி மாவட்டங்கள் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.</p> <p>வார விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவைகேற்ப பல்வேறு இடங்களில் இருந்து 465 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>மன்னார்குடியில் சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை: 10 பேர் அதிரடி கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-online-lottery-ticket-sales-in-mannargudi-10-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-online-lottery-ticket-sales-in-mannargudi-10-people-arrested#comments</comments><guid isPermaLink="false">f65709c3-7eea-4b99-8ac8-39ef9fa9fcd1</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:45:48 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:45:48.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவாரூர்,கைது,arrest,police enquiry,லாட்டரி சீட்டுகள் விற்பனை,lottery sales</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/yixy1bv7/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை-10 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/yixy1bv7/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவாரூர் மாவட்டம்</a> மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்டபோலீஸ் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், மன்னார்குடி நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.</p><h2>10 பேர் கைது -பறிமுதல்</h2><p>இந்த அதிரடி சோதனையின் போது, அரசு தடை செய்த ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த முருகேசன், பரமசிவம், கதிரவன், சத்தியமூர்த்தி, கார்த்திகேயன், அருளானந்தம், ஐயப்பன், சசி ஜெஸ்டின், அன்புக்கரசு மற்றும் சுரேஷ் ஆகிய 10 பேரை போலீசார் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/top[ic/கைது">கைது</a> செய்தனர்.</p><p>மேலும், அவர்களிடமிருந்து 2 லேப்டாப், 1 ஐபோன், 12 ஆண்ட்ராய்டு செல்போன்கள், 4 ஆட்டோக்கள், 4 பைக்குகள் மற்றும் ரூ. 63,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.</p><h2>இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை</h2><p>மன்னார்குடி நகர போலீஸ் நிலைய எல்லைக்குள் இவ்வளவு பெரிய அளவில் சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி விற்பனை நடந்தும், அதைத் தடுக்கத் தவறியதாக மன்னார்குடி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் அவலம் தொடர்கிறது: எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pallikalil-manavikal-mathu-arundhum-avalam-thodarkirathu-elithaga-kidappaithai-thadai-seiya-vendum-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pallikalil-manavikal-mathu-arundhum-avalam-thodarkirathu-elithaga-kidappaithai-thadai-seiya-vendum-anbumani#comments</comments><guid isPermaLink="false">beadb678-7a17-4aad-8bb0-c5a8bd6c50cf</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:32:32 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:32:32.562Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,கன்னியாகுமரி,Kanyakumari,தக்கலை,மது,Thuckalay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/vjtupmos/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/vjtupmos/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களுக்கும், மாணவர்களுக்கும் மது எளிதாகக் கிடைப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கன்னியாகுமரி மாவட்டம்  தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில்  நீட், ஜே.இ.இ., கியூட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்ற மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து துணை உணவுகளுடன் மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள் மதுக்கூடங்களாக மாறி வருவது மிகவும் கவலையளிக்கிறது.</p><p>அரசு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்துவது இப்போதுதான் புதிதாக நடக்கும் ஒன்றல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இத்தகைய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வொருமுறையும் வெளிவரும் போதெல்லாம் இளைய சமுதாயம் எங்கே செல்கிறது? என்ற கவலையும், அதை விட அதிகமாக, எதிர்காலத் தூண்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய குழந்தைகளை அரசும், சமூகமும்  சீரழிக்கின்றனவே என்ற ஆத்திரமும்தான் ஏற்படுகின்றன.</p><p>இத்தகைய நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இளைய தலைமுறையினருக்கான பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் இத்தகையக் கொடுமைகள் தொடர்கின்றன. அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்தியதைத் தடுக்கத் தவறியதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மிகவும் எளிதாக மது கிடைக்கும் சூழலை உருவாக்கிய ஆட்சியாளர்களையும், வகுப்பறையில் அமர்ந்து மது அருந்துவதை ஒரு சாகசமாகக் கருதும் மனநிலையை மாணவர்களிடம் ஏற்படுத்தியவர்களுக்கும் என்ன தண்டனை?</p><p>ஒரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு வெளியிலும், சுடுகாடுகளுக்கு அருகிலும்தான் விற்பனை செய்யப்படும். அங்கு மது அருந்துவதற்காக செல்பவர்கள், யார் கண்களிலும் படாமல் பதுங்கி, பதுங்கி தான் செல்வார்கள். அந்த நிலையை மாற்றி பள்ளிகளுக்கும் மக்கள் கூடும் இடங்களுக்கும் அருகில் மதுக்கடைகளை அமைத்து அவற்றுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யும் நிலையை உருவாக்கியது யார்? பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதாக ஆட்சியாளர்கள் அறிவித்த பிறகும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குறைந்தது இரு மதுக்கடைகளையாவது கடந்து செல்ல வேண்டிய சூழல் இப்போதும் நிலவுவது யாருடைய தவறு?</p><p>ஒழிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவ்வளவு இருக்கும்போது, ஆன்லைனில் முன்பதிவு செய்து, வரிசையில் நிற்காமல் எளிதாக மது வாங்குவதற்கான இணையதளத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கியதுதான் சீர்திருத்தமா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு எல்லாம் ஆட்சியாளர்கள் விடையளித்து தீர்வு காண வேண்டும். மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும்.</p><p>எனவே, மக்களுக்கும், மாணவர்களுக்கும் மது எளிதாகக் கிடைப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு 1,000 மதுக்கடைகளை மூடி, அடுத்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த முதல்-அமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மா.சுப்ரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது - ஆர்.எஸ்.பாரதி சாபம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/saidapet-voters-who-defeated-ma-subramanian-will-meet-a-miserable-end-rs-bharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/saidapet-voters-who-defeated-ma-subramanian-will-meet-a-miserable-end-rs-bharathi#comments</comments><guid isPermaLink="false">0f10db36-0397-4194-b9c0-58e47dc231b0</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:22:13 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:22:13.600Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,திமுக,DMK,ஆர்.எஸ்.பாரதி,RS Bharathi,சைதாப்பேட்டை,சர்ச்சை பேச்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ed957wn6/RS-bharathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.எஸ்.பாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ed957wn6/RS-bharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்பிரமணியண் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தால் கூட வெற்றி பெற்று இருப்போம். அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்று  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>வாய்க்கால் வெட்டிக்கொண்டு இருக்கிறோம்</h2><p>திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை காரப்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:1996-ல் இருந்து 2001 வரை இவ்வளவு சாதனையை செய்தீர்களே.. தோற்று விட்டீர்களே என்று கருணாநிதியிடம் சொன்னபோது, அவர் மிகுந்த உற்சாகத்தோடு சொன்னார். அடுத்த தேர்தல் வருகிறது. அதில் வெற்றி பெறுவதற்கு இப்போதுதான் வாய்க்கால் வெட்டிக்கொண்டு இருக்கிறோம். வாய்க்கால் வெட்டி விட்டால் தண்ணீர் தானாக வரும். 5 ஆண்டு காலம் கழித்து தண்ணீர் வரும். நாங்கள் வெட்டுகிற பாதையில் வரும் என்று கருணாநிதி அன்றைக்கு சொன்னார்.</p> <h2>சும்மா இருங்கள்</h2><p>அதையேத்தான் இன்று நானும் சொல்கிறேன். வீட்டு வரி எல்லாம் உயர்ந்துவிட்டது என்று பேசினார். அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை? ரொம்ப அக்கறையாக பேசுகிறீர்கள். வாயை மூடிவிட்டு சும்மா இருங்கள்.. எதுவாக இருந்தால் நமக்கு என்ன?ஏசி பஸ் ஸ்டாப் கட்டினீர்களே.. எல்லாம் விசிலுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு கஞ்சா அடித்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். இனிமேலாவது கட்சி, கட்சி வரலாறு என்ன? எல்லாரும் சமமாக உட்கார்ந்து இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் யார்? என்று எல்லாம் சொல்லிக்கொடுங்கள்.</p><h2>நல்ல சாவே வராது</h2><p>சைதாப்பேட்டை தொகுதிக்கு மா. சுப்பிரமணியன் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தால்கூட வெற்றி பெற்று இருப்போம். அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது வெளிப்படையாக சொல்கிறேன். காரணம் உயிர் காப்பது என்பது அவ்வளவு கஷ்டமான காரியம். எத்தனை பேர் உயிரைக் காப்பாற்றியிருப்பார். மக்கள் தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர். சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்பிரமணியன் போல யாரும் செய்யவில்லை. இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். இனி கட்சிக்காரர்களுக்கு செய்யுங்கள், அது போதும். இனி ஒரு 5 ஆண்டுகளுக்கு ஓய்வு எடுப்போம்” என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 11 மதுபான வகைகளை விற்கத் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-the-sale-of-11-types-of-liquor-at-tasmac-shops-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-the-sale-of-11-types-of-liquor-at-tasmac-shops-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">77db985e-7399-482e-adda-af813b95a246</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:19:44 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:19:44.034Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மதுபானம்,Liquor,மதுபான கடை,டாஸ்மாக் கடை,Tasmac shop,tasmac bar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0bhoz5zc/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0bhoz5zc/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் கடைகளில் 10 பிராந்தி வகைகள், ஒரு ரம் வகை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சோதனையில் உறுதியான நிலையில் என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>மறுஉத்தரவு வரும் வரை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் இத்தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துமாறும், தயாரிப்புகளை நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று விநியோகஸ்தர்கள்/ மொத்த விற்பனையாளர்கள்/ சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.</p><p>என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்டின் மேற்கூறிய 11 வகை மதுபானங்களை குடோனிலிருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் FL2 மற்றும் FL3 உரிமம் பெற்றவர்களுக்கு விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>தடை செய்யப்பட்ட மதுபானங்கள்:-</h2><p>1.VSOP EXSHAW GOLD BRANDY</p><p>2.LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY</p><p>3.Mc Dowells VSOP Brandy (Blended Brandy)</p><p>4.NO.1 McDowells Fine Brandy (Indian Brandy)</p><p>5.MENSCLUB Deluxe Brandy (Indian Brandy)</p><p>6.HONEY BEE FINE Brandy (Indian Brandy)</p><p>7.ENRICA VSOP SELECT BRANDY</p><p>8. ENRICA PLATINUM RESERVE XO BRANDY</p><p>9.ENRICA PREMIUM FRENCH BRANDY</p><p>10.VEERAN SPECIAL BRANDY</p><p>11.ENRICA OLD INDIE CLASSIC DARK RUM</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந்தேதி திமுக தலைமைச் செயற்குழு கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-executive-committee-meeting-on-22nd-under-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-executive-committee-meeting-on-22nd-under-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">6b7505a4-712d-4247-a1fb-90b1ebc7f71b</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:14:37 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:14:37.272Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,செயற்குழு கூட்டம்,Executive Committee Meeting,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/x6qyq2rt/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/x6qyq2rt/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந்தேதி திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22-08-2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சொத்து வரிகளை உயர்த்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-must-abandon-the-move-to-hike-property-taxes-communist-party-of-india-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-must-abandon-the-move-to-hike-property-taxes-communist-party-of-india-urges#comments</comments><guid isPermaLink="false">5bb3a268-b9f5-46d1-9ed5-6bcb995e08a9</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:08:23 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:08:23.274Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hi13rb68/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hi13rb68/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னை பெரு மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் நகராட்சிப் பகுதிகளில் சொத்துவரியை கடுமையாக உயர்த்துவதற்கு  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாமன்றக் கூட்டங்கள் காலமுறைப்படி நடத்துவதற்கு நகராட்சித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.</p><p>இந்த நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் நிர்வாக உத்தரவு மூலம் சொத்துவரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்படிதான் நடைபெறுகிறதா? என்கிற வினாவும் எழுந்துள்ளது.</p><p>ஆண்டுதோறும் 6 சதவீதம் வரி உயர்வு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாது என்ற உறுதியான அரசியல் நிலை தொடர வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் 600 சதுர அடிக்கும் குறைவாக உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 25 சதவீதம், 601 முதல் 1200 சதுர அடி வரை உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 1201 சதுர அடி முதல் 1800 சதுர அடி வரை உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1800 சதுர அடிக்கும் கூடுதலாக உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100 சதவீதம் என சொத்துவரி உயர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>வணிக நிறுவனங்கள், அது தொடர்புடைய கட்டிடங்களுக்கும், காலி மனைகளுக்கும் தற்போதுள்ள அடிப்படை மதிப்பில் 100 சதவீதம் என சொத்து வரி உயர்த்தப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, சொத்துவரி உயர்வு தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என தடுத்து வைத்துள்ளனர்.</p><p>நகராட்சி நிர்வாகத்துறையின் சொத்துவரி உயர்வுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வரி உயர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், வாழ்க்கைச் செலவு பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் சொத்துவரிகளை உயர்த்துவதை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதல்-அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலியில் 34 போதையில்லா கிராமங்கள்: காவல்துறை தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/34-drug-free-villages-in-tirunelveli-police-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/34-drug-free-villages-in-tirunelveli-police-information#comments</comments><guid isPermaLink="false">cd9f5586-f697-4d8e-888d-aa5b517bc76d</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:52:53 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:52:53.175Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Tirunelveli,திருநெல்வேலி,காவல்துறை,Information,தகவல்,Announcement,அறிவிப்பு,villages,கிராமங்கள்,Drug Free,போதையில்லா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/w15lqrty/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.-jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தகவல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/w15lqrty/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.-jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D">போதைப் பொருள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">எதிர்ப்பு</a> நடவடிக்கையின் விளைவாக 34 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கிராமங்கள் </a>போதையில்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. </p><h2>34 போதையில்லா கிராமங்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் ஒரு மாத கால போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் விளைவு குறித்து மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">காவல்துறை</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது: </p><p>திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட Anti-Drug Drive (போதைப் பொருள் எதிர்ப்பு) நடவடிக்கையின் விளைவாக 34 கிராமங்கள் போதையில்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. </p><h2>23.7 கிலோ கஞ்சா பறிமுதல்</h2><p>மேலும் கடந்த ஒரு மாதத்தில் 23 கிலோ 715 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 111 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 133 கிலோ 904 கிராம் கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது. மேலும் 92 கிலோ 140 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 112 கிலோ 843 கிராம் புகையிலைப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது. </p><h2>219 கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் விழிப்புணர்வு</h2><p>மேலும் 11.8.2026 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 204 பள்ளிகள் மற்றும் 15 கல்லூரிகள் என மொத்தம் 219 கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்.பி., டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் விழிப்புணர்வு பேரணி, மாரத்தான் போட்டி, உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: ஓடும் பேருந்தில் நூதன முறையில்  2 செல்போன்கள் திருட்டு - பெண் பயணி வெளியிட்ட வீடியோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-2-cell-phones-stolen-in-a-unique-way-on-a-speeding-bus-video-released-by-a-female-passenger</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-2-cell-phones-stolen-in-a-unique-way-on-a-speeding-bus-video-released-by-a-female-passenger#comments</comments><guid isPermaLink="false">f9df6456-a147-4e65-bf5e-0fff1c33c765</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:49:34 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:49:34.905Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பஸ்,Theft,செல்போன் திருட்டு,news,திருட்டு Theft,வீடியோ காட்சிகள்,பெண்பயணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/13j78fy0/mobile-snatching.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வீடியோ வெளியிட்ட பெண்]]></media:title><media:description type="html"><![CDATA[ 2 செல்போன் திருட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/13j78fy0/mobile-snatching.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை </p><p>ஓடும் பேருந்தில் பெண் பயணியின் கைப்பையை கிழித்து 2 செல்போன்களை  நூதன முறையில் மர்ம நபர்கள் திருடியுள்ளனர். பறிகொடுத்த பெண் பயணி வேதனையுடன்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த வீடியோவில் அவர் கூறியது,</p><p> நான் கேகே நகர் இஎஸ்ஐ என்ற இடத்தில் இருந்து  எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகம் வரை (17B)பேருந்தில் பயணம் செய்தேன். என்னிடம்,  வயதான பாட்டி ஒருவர் பேச்சுகொடுத்தார். அவர் என்னிடம் செல்போனை வாங்கி பேசினார், கடலை வேண்டுமா?, தண்ணி இருக்கிறதா?, பவர் பேங்க் இருக்கிறதா?, எங்கே இறங்குவீர்கள்? என்று கேள்வி கேட்டார்.  எப்பொழுதும் நான் பாடல் கேட்டுக்கொண்டு தான் பயணம் செய்வேன் .  அந்த பாட்டிக்கு 60 வயதிற்கு மேல் இருக்கும். அவர் மனது விட்டு பேசுவதாக தெரிந்ததால் நானும் பேசினேன். </p> <h2>எழும்பூர் நிறுத்தம்</h2><p>எழும்பூர் குழந்தை மருத்துவமனை நிறுத்தத்திற்கு அருகில் வரும்போது கூட என்னிடம் செல்போன் இருந்தது. அதற்கு அடுத்த நிறுத்தத்தில் நான் இறங்க வேண்டும். இந்த இடைப்பட்ட இடத்தில் தான் என் கண்களில் ஏதோ ஒன்று விழுந்தது. நான் கண்ணை மூடிக்கொண்டு என் தோழியின் கையை பிடித்து கொண்டேன். குறைந்தது 30 முதல் 40 விநாடிகளுக்குள் இந்த திருட்டு அரங்கேறியுள்ளது.</p> <h2>செல்போன் பறிப்பு</h2><p>அந்த பாட்டி டபில்யூ.சி.சி என்ற இடத்தில் இறங்கினார். எனக்கு தெரிந்து அந்த பாட்டி இறங்கும்போது என் பையை கிழித்துவிட்டு இறங்கியுள்ளார். பின்பு நான் இறங்குவதற்குள்  அவருடன் வந்த நபர்கள் தான் செல்போனை திருடியிருப்பார்கள். நான் படத்தில் இந்த மாதிரி சம்பவம் பார்த்துள்ளேன், முதல் முறையாக எனக்கு நடந்தது.  என்னிடம் இருந்து மொத்தம் ரூ.60,000 மதிப்புள்ள 2 செல்போன்கள் திருடு போய்விட்டது. தயவு செய்து ரொம்ப ரொம்ப எச்சரிக்கையாக  இருங்கள். குறிப்பாக எம்.டி.சி பேருந்தில் பயணிக்கும் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகரத்தில் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு தன் வேதனையை தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>வகுப்பறை முன்பு மாணவிகள் மது அருந்தியதாக கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vakupparai-munbu-manavikal-mathu-arunthiyathaga-kurappadum-seithi-pera-thirchi-alikkirathu-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vakupparai-munbu-manavikal-mathu-arunthiyathaga-kurappadum-seithi-pera-thirchi-alikkirathu-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">9bec7498-52b9-455f-a375-df98555f1ff3</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:17:04 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:17:04.436Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,தக்கலை,Thuckalay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/o5399x8w/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/o5399x8w/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வகுப்பறை முன்பு மாணவிகள் மது அருந்தியதாக கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பு மது அருந்தியதாக கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. கடந்த மாதமே இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் தற்போது வீடியோ வெளியாகி பெற்றோர்களிடத்திலும், கல்வியாளர்களிடமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் மதுரை விரகனூர் அரசு பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவரை ஆசிரியர்கள் முன்னிலையில் தாக்குவதும், தரக்குறைவாக பேசியதுமான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவமும் கல்வித்துறையின் ஒட்டுமொத்த மாண்பையே சீர்குலைத்துள்ளது.</p><p>மாற்றம் தருவோம்... மாற்றம் தருவோம் என்று மேடைக்கு மேடை முழங்கி அரியணை ஏறிய தவெக ஆட்சியின் சூப்பரான மாற்றம் இதுதானா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே..? மாணவர்கள் வகுப்பறையில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதும், ஆயுதங்ளைக் கொண்டு வருவதும், ஒழுங்கீனமாக நடந்து கொள்வதும் பெருகி வருவது கவலை அளிக்கும் செயல்.</p><p>எத்தனையோ அரசு பள்ளி மாணவர்கள் பல துறைகளில் சாதித்து வரும் வேளையில் இது போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது ஒட்டுமொத்த அரசு பள்ளிகளின் பெயரையே அவமதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.</p><p>தவெக ஆட்சியில் பள்ளிகளில் என்றைக்கு ரீல்ஸ் மோகங்களும், சினிமா பாடல்களும் வளர ஆரம்பித்ததோ அன்றே அறநெறி வகுப்புகளும், கடும் கட்டுப்பாடுகளும் காற்றில் பறந்து விட்டது என்பதுதான் உண்மை.</p><p>பள்ளிகளில் மாணவர்களுக்கு முதலில் போதிக்க வேண்டியது ஒழுக்கமும், கீழ்படிதலும்தான் என்பதை நினைவில் நிறுத்தி இனி இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டது: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-has-buried-parliamentary-democracy-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-has-buried-parliamentary-democracy-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">ef00653c-8906-498d-ba16-bab33f294ba7</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:12:11 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:12:11.186Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,காங்கிரஸ்,Congress,X Page,மத்திய அரசு,Central Government,எக்ஸ் பக்கம்,Indian Democracy,இந்திய ஜனநாயகம்,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/sp125g2y/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/sp125g2y/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>அரசியல் களம் (Politics)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீட் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து அவையில் விவாதிக்க அஞ்சி நடுங்கும் மத்திய அரசு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">நாடாளுமன்ற</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">ஜனநாயகத்தையே</a> குழிதோண்டிப் புதைத்துவிட்டது என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி</a> தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">மாணிக்கம் தாகூர் எம்.பி. </a>தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: </p><p>ஜனநாயகத்தின் மாண்பைச் சீர்குலைத்து, நாடாளுமன்றச் செயல்பாட்டை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது மோடி அரசு! </p><p>19 அமர்வுகள் கொண்ட இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவை வெறும் 15 சதவீத நேரமும் (22 ஆண்டுகளில் இல்லாத சரிவு), மாநிலங்களவை 33 சதவீத நேரமும் மட்டுமே செயல்பட்டுள்ளது.</p><h2>மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கு</h2><p>அறிமுகம் செய்யப்பட்ட மசோதாக்களில் 92 சதவீத மசோதாக்களை நிறைவேற்றியதாக மார்தட்டிக்கொள்ளும் மத்திய அரசு, அதில் 11 மசோதாக்களில் 9 மசோதாக்களை மக்களவையில் அமைச்சரைத் தவிர வேறு எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் விவாதத்தில் பங்கேற்கவிடாமல், வெறும் சில நிமிடங்களில் (பிறப்பு-இறப்பு பதிவு மசோதா 2 நிமிடங்களிலும், வரி திருத்த மசோதா 3 நிமிடங்களிலும்) சர்வாதிகாரப் போக்கில் புல்டோசர் செய்து நிறைவேற்றியுள்ளது. </p><h2>நாடாளுமன்ற கேள்வி நேரம் முடக்கம்</h2><p>கேள்வி நேரத்தை முற்றிலுமாக முடக்கியதன் விளைவாக, மக்களவையில் எழுப்பப்பட்ட 380 கேள்விகளில் வெறும் 2 கேள்விகளுக்கு மட்டுமே வாய்மொழிப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை கேள்வி நேரம் வெறும் 9 நிமிடங்களோடு சுருக்கப்பட்டது. 1952-க்குப் பிறகு முதல்முறையாகத் தொடரின் முதல் நாள் தேசிய கீதம் மற்றும் கடைசி நாள் வந்தே மாதரம் பாடலின் போது தவிர முழு தொடரிலும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவைக்கு வராமல் ஓடி ஒளிந்து நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து ஓடி ஒளிந்துள்ளனர். </p><h2>ஜனநாயகம் குழிதோண்டி புதைப்பு</h2><p>நீதிக்காகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தடியடி மற்றும் அத்துமீறல்கள் குறித்தும், நீட் வினாத்தாள் முறைகேடுகள் குறித்தும் அவையில் விவாதிக்க அஞ்சி நடுங்கும் மத்திய அரசு, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டது. </p><h2>ஓடி ஒளியும் மோடி அரசு</h2><p>மக்களின் பிரச்சினைகளுக்கும், மாணவர்களின் போராட்டக் குரல்களுக்கும் பதிலளிக்காமல் ஓடி ஒளியும் மோடி அரசே... விவாதங்களை முடக்கி, நாடாளுமன்றத்தை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மாற்ற நினைத்தால், நீங்கள் மக்களின் மன்றத்தில் தப்பவே முடியாது! மாணவர்களும் மக்களும் உங்கள் சர்வாதிகாரத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்- கண்டிப்பாகத் தட்டிக்கேட்பார்கள், கேள்விக்குள்ளாக்குவார்கள்!. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பைக் மீது லாரி மோதி விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-killed-in-motorcycle-lorry-collision</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-killed-in-motorcycle-lorry-collision#comments</comments><guid isPermaLink="false">7083c299-153c-4009-88ca-b8bd8ff795fd</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:11:43 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:11:43.123Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,bike,விழுப்புரம்,police enquiry,2 பேர் உயிரிழப்பு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ahlo4hlj/i.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ அருண் - நரேஷ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பைக் மீது லாரி மோதி விபத்தில் 2 இளைஞர்கள் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ahlo4hlj/i.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் மாவட்டம் முத்தாம்பாளையம் - அண்ணாமலை ஹோட்டல் புறவழிச்சாலையில் பைக் மீது லாரி மோதியதில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். </p><h2>விபத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விழுப்புரம் மாவட்டம்</a> முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள அண்ணாமலை ஹோட்டல் புறவழிச்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் 2 இளைஞர்கள் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். புறவழிச்சாலையில் திடீரென யு-டர்ன் எடுத்து திரும்ப முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.</p><h2>2 பேர் உயிரிழப்பு</h2><p>இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த அருண் மற்றும் நரேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த விழுப்புரம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு: பஞ்சர் போடும்போது லாரி டயர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-worker-dies-after-lorry-tire-bursts-while-patching</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-worker-dies-after-lorry-tire-bursts-while-patching#comments</comments><guid isPermaLink="false">3f6f44d8-adce-4fde-982f-5f514f686009</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:58:47 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:58:47.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,lorry,லாரி,Worker dies,தொழிலாளி உயிரிழப்பு,டயர் வெடித்து விபத்து,tire burst</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/pz3w6x7i/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.-jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லாலி டயர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/pz3w6x7i/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.-jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">செங்கல்பட்டு </a>மாவட்டம், பல்லாவரம் அருகே பஞ்சர் போடும்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">லாரி</a> டயர் வெடித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்தில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">தொழிலாளி </a>சிகிச்சை பலனின்றி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. </p><h2>பஞ்சர் கடை தொழிலாளி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அருகே உள்ள பம்மல் மூங்கில் ஏரி மசூதி தெருவைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது உறவினர் காதர் பாஷா என்பவருக்கு திருநீர்மலை சர்வீஸ் சாலையில் பஞ்சர் கடை உள்ளது. அங்கு அஷ்ரப் அலி வேலை பார்த்து வந்தார். </p><h2>லாலி டயர் வெடித்து தொழிலாளி காயம்</h2><p>நேற்று முன்தினம் மாலை அஷ்ரப் அலி, லாரி டயர் ஒன்றுக்கு பஞ்சர் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அஷ்ரப் அலியின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். </p><h2>தொலிலாளி உயிரிழப்பு</h2><p>அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அஷ்ரப் அலி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு அழுத்தம் தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-must-be-pressured-to-release-water-in-the-cauvery-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-must-be-pressured-to-release-water-in-the-cauvery-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">9a15ece2-2cdd-4584-9007-ce167fdb1f68</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:51:52 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:51:52.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,protest,ஆர்ப்பாட்டம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/elb3ifhq/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/elb3ifhq/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><h2>அதிமுக ஆர்ப்பாட்டம்</h2><p>மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு மெத்தனம் காட்டுவதாக கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;</p><p>"தலைமைச் செயலகத்தில் தனக்கான அறை மாற்றம்தான் முதல்வர் விஜய்க்கு முக்கியம், மக்கள் முக்கியமில்லை. நானும் அங்கு இருந்தேன், முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் அங்குதான் இருந்தார், ஆனால் தற்போதைய முதல்வர் அதனை மாற்றுகிறார். நடிகர் என்பதால் நவீனமயமாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்து முதலமைச்சர் விஜய் அறையை மாற்றுகிறார்கள். விவசாயிகள் உணவுக்கு வழியின்றி உள்ள நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அறை மாற்றம்தான் முக்கியமா?</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக. அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தவெக அரசு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகள் மீது அரசுக்கு கவலையில்லை. ரீல்ஸ் போடுவதில்தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. காவிரி நீரை பெற முயற்சிக்கவில்லை. </p><p>5 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படும் நிலையில், 2 லட்சம் ஏக்கரில்தான் பாசனம் செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிகப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். </p><p>அரசு விழிப்போடு செயல்பட்டு, சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை கர்நாடகாவிடன் பெற்றுத்தர வேண்டும். காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு அழுத்த தர வேண்டும். மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு உடனடியாக கூட்ட வேண்டும்”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினத்தில் தேசிய கொடியேற்றும் முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் - நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vande-mataram-must-be-sung-before-hoisting-the-national-flag-on-independence-day-high-court-registrys-directive-to-courts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vande-mataram-must-be-sung-before-hoisting-the-national-flag-on-independence-day-high-court-registrys-directive-to-courts#comments</comments><guid isPermaLink="false">da610c34-a108-441f-995b-850662fab3e5</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:50:32 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:50:32.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court,ஐகோர்ட்டு,சுதந்திர தினம்,Independence Day,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hte1xzwo/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hte1xzwo/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியேற்றும் முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முந்தையநாள் சென்னை ஐகோர்ட்டில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கப்பட்டது.</p><h2>வந்தே மாதரம்</h2><p>இந்நிலையில், நாளை நடக்க உள்ள சுதந்திர தின விழாவின்போது, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் எனவும், தேசியக் கொடி ஏற்றிய பின் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் எனவும், உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு, கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு, மத்திய அரசின் அறிவுரைப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-year-old-girl-sexually-assaulted-in-krishnagiri-3-special-forces-formed-to-arrest-mysterious-persons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-year-old-girl-sexually-assaulted-in-krishnagiri-3-special-forces-formed-to-arrest-mysterious-persons#comments</comments><guid isPermaLink="false">628ecc63-432e-47e1-bed4-2aaa39462603</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:27:03 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:27:03.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,mysterious persons,கிருஷ்ணகிரி,police enquiry,8 வயது சிறுமி,girl sexually harassed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-06-26/42ss3yur/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-06-26/42ss3yur/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமியைக் கடத்திச் சென்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a> செய்த மர்ம நபர்களைப் பிடிக்கக் போலீசார் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2>பாலியல் வன்கொடுமை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கிருஷ்ணகிரி மாவட்டம்</a> தேன்கனிக்கோட்டை அடுத்த மலை கிராமத்தைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை மாலையில் பள்ளி வகுப்பு முடிந்து மற்ற குழந்தைகளுடன் நடந்து வீடு திரும்பினார். மற்ற குழந்தைகள் முன்னதாகவே தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட, அந்தச் சிறுமி மட்டும் தனியாக வந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அச்சிறுமியை அருகில் உள்ள புதர் மற்றும் வனப்பகுதிக்குத் தூக்கிச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.</p><h2>ஆஸ்பத்திரியில் சிகிச்சை</h2><p>வீடு திரும்பிய சிறுமி நடந்த கொடூரத்தை அழுதுகொண்டே தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் குழந்தைகளுக்கான உதவி எண் 1098-க்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அன்று இரவில் 108 அவசர ஊர்தி மூலம் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வியாழக்கிழமை காலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>3 தனிப்படை அமைப்பு</h2><p>இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமானி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா மற்றும் மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறையில் அடைக்க, 3 தனிப்படை போலீஸ் அதிகாரிகள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பட்டாசு ஆலைகளை முறையாக கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-must-monitor-firework-factories-to-ensure-worker-safety-gk-vasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-must-monitor-firework-factories-to-ensure-worker-safety-gk-vasan#comments</comments><guid isPermaLink="false">cd8ac9f1-e7a9-4314-bb81-5f91bb991743</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:14:57 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:15:55.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விருதுநகர்,தமாகா,GK Vasan,பட்டாசு ஆலை,ஜி.கே.வாசன்,TMC</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/vb3v92fw/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/vb3v92fw/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறையாக, சரியாக கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், ஒருவர் படுகாயமடைந்திருப்பதும் வேதனைக்குரியது. தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து குணமடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><p>பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து வெடி விபத்து ஏற்படுவது மிகவும் கவலைக்குரியது. பட்டாசு ஆலைகளில் அன்றாடம் வேலை செய்து சம்பாதிக்கும் தொழிலாளிகளின் உயிருக்கு எப்போது ஆபத்து நேரும் என்று தெரியாமலேயே உழைக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தினருக்கு பாதுகாப்பு என்பது மிக மிக அவசியம். அப்படியென்றால் பட்டாசு ஆலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் வகையில் அரசின் கோட்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.</p><p>தமிழக அரசும் பட்டாசு ஆலைகளை தொடர் கண்காணிப்பின் மூலம் ஆய்வு செய்து முறையாக, சரியாக இயக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி&apos;: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-in-direct-alliance-with-bjp-minister-nirmal-kumars-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-in-direct-alliance-with-bjp-minister-nirmal-kumars-statement#comments</comments><guid isPermaLink="false">4b4adf1f-2caf-4a61-b400-270fc9195e3d</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:06:36 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:06:36.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,அமைச்சர் நிர்மல் குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0q1zz9jk/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0q1zz9jk/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தலைமை செயலக வளாகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>“பாஜக உடன் திமுக தற்போது நேரடிக் கூட்டணி வைத்துள்ளது. அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என கனிமொழி சோமு, வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி சிவா மத்திய மந்திரி ஆவார் என கூறப்பட்டதை  திமுக தரப்பில் இருந்து யாரும் மறுக்கவில்லை. டெல்லியில் யாருடன் பேசினாலும் மக்கள் நலனுக்காக இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். </p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிப்போம் என திமுக ஒரு வார்த்தை கூறவில்லை. பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி வைத்திருப்பது இதன் மூலம் தற்போது நிரூபணமாகியுள்ளது. இருக்கை மாற்றத்துக்காக தேநீர் விருந்தில் கலந்துகொண்டேன் என கனிமொழி கூறுவது நம்பும்படி இல்லை. </p><p>காவிரியில் நீர் திறப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. காவிரி உரிமையை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஊடகங்களை அழைக்காததற்கு இடப்பற்றாக்குறையே காரணம். சுதந்திர தினத்தை ஒட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>ஈரோடு: ஆற்றங்கரையில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-rs10-lakh-worth-of-ganja-seized-on-riverbank-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-rs10-lakh-worth-of-ganja-seized-on-riverbank-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">3d7754cc-dfa2-426e-a747-601c3029944c</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:50:44 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:50:44.852Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Youth arrested,வாலிபர் கைது,Erode,ஈரோடு,கஞ்சா பறிமுதல்,Ganja seized,ஆற்றங்கரை,Riverbank</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/y2bmle7o/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/y2bmle7o/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81">ஈரோடு</a> மாவட்டம், பவானி ரிங்ரோடு ஆற்றங்கரை பகுதியில் ரூ.10 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்த போலீசார், இது தொடர்பாக ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வாலிபரை கைது</a> செய்தனர்.</p><h2>கஞ்சா பதுக்கல்</h2><p>ஈரோடு மாவட்டம், பவானி ரிங்ரோடு ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அங்கு சந்தேகப்படும்படி நின்ற புதுச்சேரியைச் சேர்ந்த பல்லா வெங்கட் சிவராம் (வயது 24) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். </p><h2> 20 கிலோ கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது</h2><p>அதில் அவர் மொத்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து ஆற்றுப்பகுதியில் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 20 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>“ஆபாசம்” தான் உங்கள் அரசியல் ஆயுதமா ராகுல்காந்தி? - நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-obscenity-your-political-weapon-rahul-gandhi-nainar-nagendran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-obscenity-your-political-weapon-rahul-gandhi-nainar-nagendran-condemns#comments</comments><guid isPermaLink="false">dd13e4c9-30bd-4934-9585-ee79146d6043</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:48:50 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:48:50.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,PM Modi,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Rahul Gandhi,ராகுல்காந்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qgxdkgpe/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qgxdkgpe/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>நாட்டு மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையை அலங்கரிக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, கொள்கை ரீதியாகவும், சித்தாந்தத்தின் அடிப்படையிலும் எதிர்க்க முடியாத நீங்கள், ஆபாச அரசியலை முன்னெடுத்திருப்பது அருவருக்கத்தக்கது.</p><p>வெளிநாட்டு தலைவர்களுடனான நமது நாட்டு பிரதமரின் பரிசுத்த நட்பை இத்தனை கொச்சையாக வர்ணிக்கும் மனநிலை கொண்ட நீங்கள், நிச்சயம் உளவியல் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் தான்.  </p><p>அரசியலில் 75 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு தேசியக் கட்சியின் வாரிசாக இருந்த போதிலும், பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும், உங்களால் ஏன் அரியணையின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை என்பதை தற்போது நீங்களே நிரூபித்துவிட்டீர்கள். உங்களைப் போன்ற அரசியல் முதிர்ச்சியற்ற ஒருவரால், காங்கிரசின் முடிவுரை எழுதப்படும் என்பதை இந்திரா காந்தி அம்மையார் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.59 கோடி ஒதுக்கீடு: தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தாமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/allocation-of-59-crore-beautifying-the-banks-without-cleaning-the-thamirabarani-river-anbumani-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/allocation-of-59-crore-beautifying-the-banks-without-cleaning-the-thamirabarani-river-anbumani-questions#comments</comments><guid isPermaLink="false">4e4a4ce5-3061-4ef1-95a3-dbbeba924efd</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:34:29 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:34:29.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,தாமிரபரணி ஆறு,Thamirabarani River</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/grjo47pp/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/grjo47pp/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;</p><p>“தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை மேம்படுத்துவதற்காக ஜெர்மனி வங்கியிலிருந்து கடனாகப் பெறப்பட்ட ரூ.59.05 கோடியை நெல்லை மாநகரத்தில் 7 கி.மீ தொலைவுக்கு தாமிரபரணி ஆற்றின் கரைகளை அழகுபடுத்தும் பணிகளுக்காக செலவிட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தி காப்பாற்றுவதற்காக செலவிடப்பட வேண்டிய நிதியை, தேவையில்லாத ஆடம்பர செலவுகளுக்காக பயன்படுத்துவதற்கு அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியில், நெல்லை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட  கருப்பந்துறை முதல் மணிமூர்த்தீஸ்வரம் வரை சுமார் 7 கிலோமீட்டர் நீளமுள்ள ஆற்றங்கரை பகுதி ஐந்து தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் படித்துறைகள், பூங்காக்கள், நடைபாதைகள், மக்கள் அமரும் இடங்கள், உணவகம் ஆகியவை ரூ.59.05 கோடியில் அமைக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஜெர்மனியின் KfW வளர்ச்சி வங்கியிலிருந்து கடனாகப் பெறப்படுகிறது.</p><p>உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தாய்க்கு உடனடியாக மருத்துவம் தேவைப்படும் சூழலில், பக்கத்து வீட்டுக்காரரிடம் கடன் வாங்கி பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தால், அது எவ்வளவு அபத்தமான செயலாக இருக்குமோ, அதேபோல் தான் தாமிரபரணியைக் காக்கும் விவகாரத்தில் அரசின் அணுகுமுறையும் உள்ளது.</p><p>மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான பொதிகை மலையில் பிறக்கும் தாமிரபரணி ஆறு, மூலிகை வனங்களைக் கடந்து பயணிப்பதால் அது நோய்களைப் போக்கும் ஆறாக திகழ்ந்தது. ஆனால், இப்போது  நோய்களை பரப்பும் நோயாக மாறி விட்டது. இதற்கு காரணம் கழிவுகளைக் கலக்கச் செய்வதில் தொடங்கி, அனைத்துச் சீரழிவுத் தாக்குதல்களும் தாமிரபரணி ஆற்றின் மீது தொடர்ந்து நடத்தப்படுவது தான். தாமிரபரணி ஆற்றைக் காக்க வேண்டும் என்பதற்காக முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர், 2018-ஆண்டில்  தொடர்ந்த வழக்கில்  2024-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் தீர்ப்பளித்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதியரசர் புகழேந்தி ஆகியோர் ‘‘தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக தடை செய்ய வேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்தார்கள். ஆனால், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னெற்றமும் ஏற்படவில்லை.</p><p>சீரழிவை எதிர்கொண்டு வரும் தாமிரபரணி ஆற்றை கடந்த ஆண்டு ஆய்வு செய்த நீதிபதிகள், திருநெல்வேலி மாநகரில் உருவாகும் கழிவுகள் எதுவும் ஆற்றில் கலக்கக் கூடாது; அதற்கு வசதியாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆணையிட்டனர். ஆனால், அதற்கும் எந்த பயனும் இல்லை. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு கட்டமாக தாமிரபரணி  ஆற்றை நேரில் ஆய்வு செய்த நான், தாமிரபரணியை காக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனாலும் பயனில்லை. இந்த விவகாரத்தில் அரசின் அலட்சியத்திற்கு கண்டனம் தெரிவித்த மதுரை உயர்நீதிமன்றம், தாமிரபரணி  ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி,  இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று போற்றப்படுபவரான இராஜேந்திர சிங் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அவரும் சில மாதங்களுக்கு முன்  தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்து விரைவில் வரைவு அறிக்கை தயாரித்துத் தருவதாக உறுதி அளித்துள்ளார்.</p><p>இத்தகைய சூழலில், தாமிரபரணி ஆற்றை மேம்படுத்துவதற்காக ஜெர்மனி வங்கியிடமிருந்து கடனாக பெறப்பட்ட தொகையை தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தடுப்பதற்காக மட்டும் தான் அரசு பயன்படுத்த வேண்டும். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் மொத்தம் 23 இடங்களில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடைகள் கலக்கின்றன. அதுமட்டுமின்றி, நெல்லை மாநகரத்தில் இருந்து தாமிரபரணியில் சங்கமமாகும் 4 பெரிய கால்வாய்களில் வீடுகள் மற்றும்  தொழிற்சாலைகளின் திடக்கழிவுகள் கலக்கவிடப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும் 200 டன் திடக்கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலக்கின்றன. இதைத் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள நிதி தான் பெருந்தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது நிதி கிடைத்துள்ள நிலையில், அந்த நிதியை ஆற்றை தூய்மைப்படுத்துபதற்கு பயன்படுத்தாமல் அழகுபடுத்த பயன்படுத்துவதை ஏற்க முடியாது.</p><p>தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுகளைத் தடுத்து, அந்த ஆற்றை தூய்மைப்படுத்தாமல், அதன் கரைகளை அழகுபடுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. ஆற்றை தூய்மைப்படுத்தாமல், அதன் கரைகளை ரூ.59 கோடி அல்ல.... ரூ.590 கோடியில் அழகுபடுத்தினாலும் அங்கு யாரும் செல்ல மாட்டார்கள். நெல்லை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில் ஆற்றின் படித்துறைகள் சேதமடைந்திருப்பது உண்மை தான். அவற்றை மட்டும் இடிந்து கற்களைக் கொண்டு சில லட்சங்களில் மாநகராட்சியே சரி செய்ய வேண்டும். ஜெர்மனி வங்கியிடமிருந்து கடனாக பெறப்பட்ட ரூ.59.05 கோடியையும் தாமிரபரணி ஆற்றில் சாக்கடைகளை கலப்பதை தடுத்து, தூய்மைப்படுத்துவதற்காக மட்டும் தான் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்.</p><p>நெல்லை நகருக்கு வெளியில், பாபநாசத்தைக் கடக்கும் போது, அங்கு திதி என்ற பெயரில் ஆண்டுதோறும் 100 டன் பழைய துணிகள் வீசப்படுதல், சேரன்மாதேவி பகுதியில் 25 லட்சம் லிட்டர் தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கவிடப்படுதல் உள்ளிட்ட சீரழிவுகளைத் தடுக்கவும் தனித் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>திருவாரூர்: வனச்சரக அலுவலகத்தில் ரூ.48 லட்சம் மோசடி; கணக்காளர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvarur-rs48-lakh-fraud-at-forest-department-office-case-registered-against-accountant</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvarur-rs48-lakh-fraud-at-forest-department-office-case-registered-against-accountant#comments</comments><guid isPermaLink="false">00a8aad7-d8c8-435d-aae8-cf9f50e070f9</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:28:50 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:28:50.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvarur,திருவாரூர்,பணம் மோசடி,money laundering,வழக்குப்பதிவு,case registration,forest department office</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/zs03f9wo/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/zs03f9wo/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவாரூர்</a> மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் ரூ.48 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடி</a> செய்த கணக்காளர் மீது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">வழக்குப்பதிவு</a> செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>திருவாரூர் வனச்சரக அலுவலக கணக்காளர்</h2><p>திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றியவர் சிவக்குமார். இவர் பணி மாறுதல் பெற்று தேனி மாவட்டத்திற்கு சென்றார். </p><h2>ரூ.48 லட்சம் மோசடி</h2><p>திருவாரூரில் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்ததில், போலியான ஆவணங்கள் மற்றும் வங்கி முத்திரைகளை பயன்படுத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.48 லட்சத்து 12 ஆயிரத்து 426 மோசடி செய்தது தெரிந்தது. </p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூர் குற்றப்பிரிவு போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>‘மது, வேலைவாய்ப்பின்மை, சமூக அநீதியில் இருந்து விடுதலை பெற  உறுதியேற்போம்’ - அன்புமணி சுதந்திர தின வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-break-free-from-alcohol-unemployment-and-social-injustice-anbumanis-independence-day-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-break-free-from-alcohol-unemployment-and-social-injustice-anbumanis-independence-day-greetings#comments</comments><guid isPermaLink="false">e9e8984e-ddd0-438b-b4e7-8283b46b02dd</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:28:39 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:28:39.302Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,சுதந்திர தினம்,Independence Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0qllxl08/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0qllxl08/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-</p><p>“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதன் 80 ஆம் விடுதலை நாளை கொண்டாடும் வேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வரம் என்பது விடுதலை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 400 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா, 78 ஆண்டுகளுக்கு முன் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டபோது ஒட்டுமொத்த இந்திய மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விடுதலை என்ற அந்த ஒற்றை வார்த்தையின் மூலமாகத்தான் ஆங்கிலேயர்களின் பொருளாதார, சமூக, கல்விச் சுரண்டல்களில் இருந்து நாம் தப்பித்து வந்தோம். அந்த வகையில் ஒவ்வொரு விடுதலை நாளும் பெருமகிழ்ச்சி அளிக்கும் நாள்தான் என்பதில் ஐயமில்லை.</p><p>ஆனால், ஆங்கிலேயர்களின் அடிமைத்தளையில் இருந்து மட்டும் விடுதலை பெற்றால் மட்டும் போதுமா? நம்மை சுரண்டும் சக்திகள், மது, போதை, வேலைவாய்ப்பின்மை, சமூக அநீதி, பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமை, சுற்றுச்சூழல் சீரழிவு, கனிமக் கொள்ளை என நாம் விடுதலை பெற வேண்டிய அடிமைத்தளைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை வென்றெடுத்தால் மட்டும் தான் நாம் உண்மையான விடுதலையை பெற முடியும். இந்த இலக்குகளை எட்டும் நாள்தான் நமக்கு உண்மையான விடுதலை நாள். </p><p>கடந்த ஆண்டு இதே நாளில் விடுதலை நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தபோது, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிகழ்ந்ததை விட அதிகமான சுரண்டல்களும், அத்துமீறல்களும் நடைபெறும் ஆட்சியை அகற்றுவதே நமது இரண்டாவது விடுதலை என்று தெரிவித்திருந்தேன். அந்த இலக்கை நாம் வென்றெடுத்து விட்டோம். எனினும் அதுமட்டுமே போதுமானதல்ல. நாம் வென்றெடுக்க வேண்டிய இலக்குகள் இன்னும் உள்ளன.</p><p>ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மதுவும் போதையும் இன்னும் ஒழியவில்லை; சமூகநீதி தழைக்கவில்லை; வேலைவாய்ப்பு கனவுகள் நனவாகவில்லை. அவற்றையும் நாம் வென்றெடுக்க வேண்டும். அதை நோக்கிய பயணத்தின் முதல் அடியாக, நாட்டிற்கு விடுதலை தேடித் தந்த தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளில் மது இல்லா தமிழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கவிருக்கிறோம். </p><p>இந்த பயணத்தின் நிறைவில் நமது அனைத்து இலக்குகளையும் வென்றெடுத்து உண்மையான விடுதலையைப் பெற முடியும் என்ற நம்பிக்கை என் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறது. அந்த நம்பிக்கையை நனவாக்குவதற்காக இன்று முதல் கடுமையாக உழைக்க நாம் அனைவரும் இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-drop-sharply-today-whats-the-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-drop-sharply-today-whats-the-status#comments</comments><guid isPermaLink="false">644611c4-ed4a-4058-83b5-d1ffe0ecd4a7</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:24:00 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:24:00.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/28v870bt/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/28v870bt/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையானது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160-ம், கிராமுக்கு ரூ.20-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும், ஒரு கிராம் ரூ.14,220-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மக்களவை சபாநாயகர் தேநீர் விருந்தில் பங்கேற்றது ஏன்? கனிமொழி விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-she-attend-the-lok-sabha-speakers-tea-party-kanimozhi-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-she-attend-the-lok-sabha-speakers-tea-party-kanimozhi-explains#comments</comments><guid isPermaLink="false">befa8b56-a8bc-4306-9bdb-c72c1bffea93</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:17:41 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:17:41.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,தேநீர் விருந்து,tea party</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ratm3a3m/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ratm3a3m/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து நீட் தேர்வு முறைகேடு விவகாரம், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை பணம் திருட்டு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.</p><p>இதனால் எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்தது. இருப்பினும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளிக்கு இடையே முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.</p><p>இதனால், மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அமளி தொடர்ந்து நீடித்ததால், மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. அதனை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு 20-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.</p><p>இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் வழக்கம்போல் சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சபாநாயகரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.</p><p>அரசியல் களத்தில் பரபரப்பு...</p><p>ஆனால், தேநீர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டி வருவதாகவும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை திமுக உதவியுடன் பாஜக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பையும் விவாதத்தையும் எற்படுத்தியது. </p><p>இந்த நிலையில், தேநீர் விருந்தில் கலந்துகொண்டது குறித்து கனிமொழி எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது;</p><p>“நாங்கள் காங்கிரசின் இந்தியாகூட்டணியில் இல்லை. நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களின் இடம் மாற்றுவது குறித்து சபாநாயகருடன் பேசுவதற்காக தேநீர் விருந்தில் கலந்துகொண்டேன். தேநீர் விருந்தில் கலந்துகொண்டதில் சரச்சையாக என்ன இருக்கிறது? ”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படுமா? அமைச்சர் அருண்ராஜ் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-reservation-for-government-school-students-be-raised-to-10-percent-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-reservation-for-government-school-students-be-raised-to-10-percent-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">df9ec296-cfa8-43fc-92f4-d73575742724</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:17:40 +0000</pubDate><atom:updated>2026-08-14T04:17:40.056Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடஒதுக்கீடு,அரசு பள்ளி மாணவர்,Arun Raj,அமைச்சர் அருண்ராஜ்,govtschool</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/dxpe9rhv/Arun-raj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/dxpe9rhv/Arun-raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டசபை யில் நிறைவேற்றியுள்ளோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான விருது பெறுவதற்காக நான் டெல்லி சென்றிருந்த போது கூட மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்ததில் கூட நீட் குறித்தும் கோரிக்கை வைத்தோம். அரசு சார்பிலும், சட்டப்போராட்டத்திலும் நாம் அதை முன்வைக்கிறோம். </p><h2>கூடுதல் மருத்துவ இடங்கள்</h2><p>நிச்சயமாக நம்முடைய மாநில உரிமையை பெற்றுக்கொள்வோம்.அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சத வீதமாக உயர்த்துவது தொடர்பாக முதல்-அமைச்சருடன் பேசி குழு அமைத்து அந்த குழு எப்படி சொல்கிறார்களோ? அதன்படி செய்வோம். 5 கல்லூரிகளுக்கு கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைத்திருக்கிறது. </p><h2>சட்டப்படி நடவடிக்கை</h2><p>இன்னும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அதற்கான ஆய்வை நடத்தி அனுமதி கொடுக்க இருக்கிறது. அதன் பிறகு அந்த இடங்களில் வரும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான இடங்களும் 2-வது சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும்.மருத்துவப் படிப்புக்கான கட்டணங்களை அதிகமாக கல்வி நிறுவனங்கள் பெறுவதாக புகார்கள் வருகின்றன. கட்டண நிர்ணயம் செய்வதை மட்டுமே கல்வி நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும். தவறு செய்யும் கல்வி நிறுவனங் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>