<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 11 Sep 2026 13:26:49 +0000</lastBuildDate><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பா.ம.க. ஆதரவு யாருக்கு..? வெளியான பரபரப்பு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-will-the-pmk-support-in-the-maduranthakam-and-dharapuram-by-elections-sensational-information-revealed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-will-the-pmk-support-in-the-maduranthakam-and-dharapuram-by-elections-sensational-information-revealed#comments</comments><guid isPermaLink="false">49306cf1-ec4e-4df0-b288-c86dc19e77dc</guid><pubDate>Fri, 11 Sep 2026 13:26:14 +0000</pubDate><atom:updated>2026-09-11T13:26:14.428Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,பாமக,PMK,தமிழகம்,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,Madhurandakam,தமிழக அரசியல்,byelection,Dharapuram,tn politics</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/45nwszsy/thanga.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/45nwszsy/thanga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. </p><h2>6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்</h2><p>தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்தது. மே 4-ஆம் தேதி ஒட்டுகள் எண்ணப்பட்டன. மே 10-ஆம்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> பதவியேற்றார். மே 13-ஆம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.</p><p>இந்த வாக்கெடுப்பின் போது அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. வேலுமணி-சி.வி.சண்முகம் தலைமையிலான அணியினர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்யை</a> ஆதரித்தனர். அதில் 3 பேர் முதலில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்கள். </p><p>பின்னர் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து இசக்கி சுப்பையா விலகினார். அதன் பிறகு சற்று இடைவெளி விட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் விலகினர். அந்த வகையில் மொத்தம் 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டனர்.</p><h2>புதிய கூட்டணி</h2><p>இதனைத்தொடர்ந்து இவர்கள் அனைவரும் த.வெ.க.வில் இணைந்து விட்டனர். வெற்றிடம் ஏற்பட்ட தொகுதிகளில் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் போட்டியிடக்கூடிய தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர். நேற்று காலை த.வெ.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மாலையில் அ.தி.மு.க. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். </p><p>இந்த கட்சிகள் யாவும் ஆதரவு கேட்டு அதனதன் நட்பு கட்சிகளிடம் பேசி வருகின்றன. அந்தவகையில் தி.மு.க. சில கட்சிகளை தொடர்பு கொண்டுள்ளது. த.வெ.க.வும் புதிய கூட்டணி அமைத்து அந்த கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. அதைப்போல அ.தி.மு.க.வும் அதன் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ஜ.க., புதிய நீதிக்கட்சி ஆகியவற்றின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி உள்ளது. அ.ம.மு.க.வும் அ.தி.மு.க.வை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.</p><h2>ரகசிய தூது</h2><p>அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க. தலைவர்களை இன்னும் யாரும் சந்திக்கவில்லை. விரைவில் அ.தி.மு.க. தலைவர்கள் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இந்தநிலையில் த.வெ.க. சார்பிலும் ரகசிய தூது அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி கசிந்துள்ளது. தேர்தல் நடக்கக் கூடிய 2 தொகுதிகளும் தனித்தொகுதிகள் ஆகும்.</p><h2>சவுமியா அன்புமணி</h2><p>இவற்றில் மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் உள்ளனர். ஆகவே அவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் பா.ம.க.வுக்கு தூதுவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.</p><p>அன்புமணியைப் பொறுத்த வரை அ.தி. மு.க.வுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் அவரது மனைவி சவுமியா, முதல்-அமைச்சர் விஜய் மீது பரிவுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பா.ம.க. இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு: கமல்ஹாசன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiah-passes-away-kamal-haasan-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiah-passes-away-kamal-haasan-condoles#comments</comments><guid isPermaLink="false">afe8e2a9-ed1b-4c68-9299-34cad2f7c5ef</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:57:08 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:57:08.076Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கமல்ஹாசன்,Kamal Haasan,சாலமன் பாப்பையா,Solomon Papaiah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/svfdplbs/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/svfdplbs/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சாலமன் பாப்பையா மறைவுக்கு கமல்ஹாசன்   இரங்கல் தெரிவித்துள்ளார்.</p> <p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த  சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர்.திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். </p><p>தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். </p><p>90 வயதான சாலமன் பாப்பையா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். </p><h2>கமல்ஹாசன்  இரங்கல்</h2><p>இந்த நிலையில், சாலமன் பாப்பையா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். </p><p>இது குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>“பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார். நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும். அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்”</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார். <br><br>நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ்…</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://x.com/ikamalhaasan/status/2098377019902070794?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு - தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-superintendent-of-police-for-kanyakumari-district-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-superintendent-of-police-for-kanyakumari-district-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">d941795a-d956-4080-99cb-54f07433d38e</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:44:13 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:44:13.934Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,கன்னியாகுமரி,தமிழகம்,Kanniyakumari,தமிழக அரசு,போலீஸ் சூப்பிரண்டு,TamilNadu Goverment,Police Superintendent</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ihzg86oh/tn-g.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ihzg86oh/tn-g.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கே.மணிவாசன் வெளியிடட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>திருநெல்வேலி நகர (மேற்கு) துணை போலீஸ் கமிஷனர் அன்சுல் நாகர், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்படுகிறார். அந்த இடத்தில் இதற்கு முன்பு டாக்டர் ஆர்.ஸ்டாலின் இருந்தார். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அறிவிக்கப்படாத மின்வெட்டால் பண்ணையில் 1000-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/over-1000-chickens-die-on-farm-due-to-unannounced-power-outage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/over-1000-chickens-die-on-farm-due-to-unannounced-power-outage#comments</comments><guid isPermaLink="false">12079763-afe1-49c5-ba8f-dab47aab3c76</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:42:00.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,power outage,chickens,மின்வெட்டு,Die,தொழிலில் நஷ்டம்,கோழிகள் உயிரிழப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/i3rjsqml/0-0-0-0-0-0-0-0-0-0-.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உயிரிழந்த கோழிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சாத்தூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பண்ணையில் 1000-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/i3rjsqml/0-0-0-0-0-0-0-0-0-0-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு காரணமாக, கோழிப்பண்ணையில் மின்விசிறிகள் இயங்காமல் 1,000-க்கும் மேற்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கோழிகள்</a> வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><h2>2 நாட்கள் தொடர்ந்த மின்வெட்டு</h2><p>சாத்தூர் அருகேயுள்ள கொங்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் அப்பகுதியில் சொந்தமாக கோழிப்பண்ணை அமைத்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களாக அந்த பகுதியில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த அதிவேக மின்விசிறிகள் மற்றும் கோழிகளின் மீது குளிர்ந்த நீரைத் தெளிக்கும் மின் மோட்டார்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.</p><h2>மூச்சுத்திணறி மடிந்த கோழிகள்</h2><p>தற்போது நிலவி வரும் கடுமையான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D"> வெப்பம்</a> மற்றும் பண்ணைக்குள் போதிய காற்றோட்டம் இல்லாததால், கடுமையான வெப்பம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கோழிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. பண்ணையாளர்கள் அவற்றை மீட்க முயல்வதற்குள், சில மணி நேரங்களிலேயே 1,000-க்கும் மேற்பட்ட கோழிகள் பரிதாபமாக செத்து மடிந்தன.</p><h2>நிவாரணம் வழங்க கோரிக்கை</h2><p>இந்த திடீர் மின்வெட்டு பாதிப்பால் தனக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பண்ணை உரிமையாளர் கருப்பசாமி மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளார். வளர்ப்பு நிலுவையில் இருந்த கோழிகள் அனைத்தும் மடிந்துவிட்டதால், தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளதாக பண்ணையாளர் கூறினார்.</p><p>மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டினால் ஏற்பட்டுள்ள இந்த இழப்பீட்டிற்கு தமிழக அரசு உரிய நிவாரணமும் இழப்பீடும் வழங்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். மின்சார வாரிய அதிகாரிகள் இதுபோன்ற கிராமப்புறப் பகுதிகளில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீண்ட நேரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-parties-will-join-the-alliance-ahead-of-the-by-elections-sengottaiyans-sensational-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-parties-will-join-the-alliance-ahead-of-the-by-elections-sengottaiyans-sensational-statement#comments</comments><guid isPermaLink="false">29f70b2a-9d34-41c1-9ee5-ed5bd3db5b87</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:34:56 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:34:56.065Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,செங்கோட்டையன்,தமிழகம்,Alliance,கூட்டணி,இடைத்தேர்தல்,byelection,அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,Minister KA Senkottaiyan,TVK Government,தவெக ஆட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ufd4n86p/nenge.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ufd4n86p/nenge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை, </p><p>இரண்டு தனித் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில், தவெக (TVK) தலைமையிலான கூட்டணி 100 சதவீத வெற்றியைப் பெறும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். </p><h2>நாட்கள் எண்ணப்படுகின்றன</h2><p>இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று மக்கள் வாக்களித்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a>யை முதல்-அமைச்சராக்கி உள்ளனர். விஜய் இருக்கும் வரை அவர்தான் நிரந்தர முதல்-அமைச்சர். மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வரலாற்றைப் படைத்து வரும் அவர், "இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு ஆளுமை". ஆர்.எஸ்.பாரதி சொல்வது போல், தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை, அவர்களுக்கு (திமுக) தான் நாட்கள் எண்ணப்படுகின்றன.</p><h2>100 சதவீத வெற்றி</h2><p>தமிழக இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெறுவோம். தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதை தீர்ப்பதற்கு பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம். விரைவில் மின்தடை சரி செய்யப்படும். 2017-ம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் தனபால் அறையில் சேரை இழுத்து கீழே போட்டு, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அராஜகம் எல்லோருக்கும் தெரியும், முதல்-அமைச்சர் பேச்சை பற்றி எல்லாம் பேச திமுகவுக்கு அருகதை இல்லை” என்று கூறினார். </p><h2>கம்யூனிஸ்டு கட்சிகள்</h2><p>இதனையடுத்து இடதுசாரி கட்சிகள் இந்த கூட்டணியில் இணையுமா என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், “கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இணையுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். </p><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளன. காங்கிரஸ், விசிக (VCK), மதிமுக (MDMK) மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகளுடன் இணைந்து, தவெகே (TVK) தனது கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி' (Secular Social Justice Victory Alliance) என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுள்ளது.</p><p>குறிப்பிடத்தக்க வகையில், இடதுசாரி கட்சிகள் அதிகாரப்பூர்வ கூட்டணி கட்டமைப்பிற்கு வெளியே இருந்துகொண்டே, குறிப்பிட்ட விவகாரங்களின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும் - ஆர்.எஸ்.பாரதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-dmk-wins-madhurantakam-constituency-by-election-thaveka-regime-will-fall-rs-bharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-dmk-wins-madhurantakam-constituency-by-election-thaveka-regime-will-fall-rs-bharathi#comments</comments><guid isPermaLink="false">d5dc0f5b-04fe-45ec-8b11-48e86eb9fedf</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:06:36 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:06:36.825Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,ஆர்.எஸ்.பாரதி,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,By-election,Madhurandakam,R.S. Bharathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/3wvob5a7/barathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ஆர்.எஸ்.பாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/3wvob5a7/barathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், </p><p>மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக சட்டத்துறை மாநில துணை செயலாளர் பரந்தாமன் போட்டியிடுகிறார். இதையடுத்து மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/rs-bharathi">ஆர்.எஸ்.பாரதி </a>கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். இதில் காஞ்சி மாவட்ட செயலாளர் தா.மோ அன்பரசன், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p><h2>மிசாவின் கொடுமை</h2><p>அப்போது தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி பேசியதாவது:-மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவது பரந்தாமன் இல்லை, மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடுகிறார். மு.க.ஸ்டாலினுக்கும், மது சாந்தகத்திற்கும் தெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கு இருப்பவர்களை பார்க்கும் போது ஒவ்வொருவரின் முகத்திலும் கோபமும், எதிர்ப்பும் உள்ளது தெரிகிறது. நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி தி.மு.க. ஆட்சியை கலைத்தார்கள். மிசா பற்றி இப்போதைய இளைஞர்களுக்கு தெரியாது. எங்களை போன்ற 80 வயதை கடந்தவர்களுக்கு நான் மிசாவின் கொடுமை தெரியும். இப்போதைய குழலில் மிசாவை பற்றி மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.</p><h2>த.வெ.க. ஆட்சி. கவிழும்</h2><p>ஆனால் யாரோ எழுதி கொடுத்ததை சட்டமன்றத்தில் பேசுகிறார். நம் தலைவரை பற்றி பேசியவருக்கு தக்க பாடம் புகட்ட நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் தமிழகத்தில் யாருக்கும் இல்லாமல் மதுராந்தகம் தொகுதி கட்சியினருக்கு கிடைத்திருக்கிறது. மிசா வரலாறு முதல் முதலில் மதுராந்தகத்தில் தான் தொடங்கியது. நிச்சயமாக மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன் வெற்றி பெறுவார். மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றால், ஜனவரி மாதத்துக்குள் த.வெ.க. ஆட்சி. கவிழும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் பேசும்போது. மதுராந்தகத்தில் தி.மு.க. வெற்றி விழா, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு மூடு விழாவாக அமையும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>”என்னை வேட்பாளராக முன்மொழிந்து..” - சாலமன் பாப்பையா மறைவுக்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ptr-palanivel-thiagarajan-condoles-the-passing-of-solomon-pappaiah</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ptr-palanivel-thiagarajan-condoles-the-passing-of-solomon-pappaiah#comments</comments><guid isPermaLink="false">b14a191e-df6b-46e6-a696-a4861e1b72c1</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:50:55 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:50:55.380Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Madurai,மதுரை,பழனிவேல் தியாகராஜன்,சாலமன் பாப்பையா,Palanivel Thiagarajan,Solomon Pappaiah</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/dej26am4/madam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/dej26am4/madam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.</p><p>தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சாலமன் பாப்பையா, ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.</p><p>இந்நிலையில் சாலமன் பாப்பையா மறைவுக்கு திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மதுரையின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவரும், எனது தந்தையார் காலம் முதலே எங்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு பாராட்டி வந்தவருமான ஐயா பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள், நான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் என்னை வேட்பாளராக முன்மொழிந்து, படிவத்தில் கையெழுத்திட்டவர்.</p><p>அவரது மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழார்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையின் மண்ணோடும், மக்களோடும், தமிழோடும் இவ்வாளுமையின் நினைவு என்றும் நிலைத்திருக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-tawheed-jamaat-mourns-salomon-pappaiya</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-tawheed-jamaat-mourns-salomon-pappaiya#comments</comments><guid isPermaLink="false">e60cbfca-72ba-486e-891c-89c44f5c5763</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:36:10 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:36:10.909Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,passes away,மறைவு,condoles,சாலமன் பாப்பையா,Solomon Papaiah,இந்திய தவ்ஹீத் ஜமாஅத்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/psionwfn/solmonmuhamood.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா ,முஹம்மது ஷிப்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா மறைவு: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரங்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/psionwfn/solmonmuhamood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாலமன் பாப்பையா மறைவுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D">இந்திய தவ்ஹீத் ஜமாஅத்</a> இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>வேதனை</h2><p>முன்னாள் பேராசிரியரும்,புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும்,தமிழ் பேச்சுலகின் தனித்துவமான ஆளுமையுமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.</p> <h2>பெருமை அவருக்கு உண்டு</h2><p>தமிழ் மொழியின் சிறப்பையும்,இலக்கியத்தின் அழகையும் எளிமையான நகைச்சுவை கலந்த பேச்சின் மூலம் மக்களிடம் கொண்டு சென்ற பெருமை அவருக்கு உண்டு. பட்டிமன்ற மேடைகளில் தனது தனித்துவமான நடுவர் பாணியால் பல தலைமுறையினரையும் கவர்ந்தவர்.</p> <h2>பங்களிப்பு</h2><p>தமிழ் மொழிக்கும்,தமிழ் பேச்சுக் கலைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். தமிழக அரசின் 'கலைமாமணி' விருது மற்றும் மத்திய அரசின் உயரிய 'பத்மஸ்ரீ' விருது பெற்ற அவரது மறைவு தமிழ் சமூகத்திற்கும்,கலை மற்றும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.</p><h2>இரங்கல்</h2><p>அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்,உறவினர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ் இலக்கிய மாமேதை, பட்டிமன்ற சுடரொளி சாலமன் பாப்பையா மறைவு: வைகோ இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-literary-genius-and-luminary-of-the-party-solomon-papaiah-passes-away-vaiko-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-literary-genius-and-luminary-of-the-party-solomon-papaiah-passes-away-vaiko-condoles#comments</comments><guid isPermaLink="false">6de99684-6f19-4794-be52-c2088d67b416</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:33:32 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:33:32.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Vaiko,வைகோ,Death,இரங்கல்,மதிமுக,condolences,மறைவு,news,செய்தி,சாலமன் பாப்பையா,Solomon Papaiah,MDMK |</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/590ujvik/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா மறைவு: வைகோ இரங்கல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/590ujvik/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ் இலக்கிய மாமேதை, பட்டிமன்ற சுடரொளி பேராசிரியர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> மறைவையொட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">ம.தி.மு.க.</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">பொதுச் செயலாளர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> வெளியிட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">இரங்கல்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">செய்தி</a>யில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>தமிழ் இலக்கிய மாமேதை</h2><p>தமிழ் இலக்கிய மாமேதை - பட்டிமன்ற சுடரொளி பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி துன்ப இடியாக என்னை தாக்கியது.</p><p>1960களில் அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.</p><p>மதுரை வளவன் என்ற பெயரில் இலக்கிய மேடைகளில், பட்டிமன்றங்களில் நேரிடையாக காண்போர், தொலைக்காட்சிகள் வழியாக பார்ப்போர் என இலட்சோப இலட்ச தமிழ் மக்களை தமிழ் இலக்கியத்தின் பால் மந்திரச் சொல்லாக கட்டிப் போட்டவர் சாலமன் பாப்பையா அவர்கள் ஆவார்கள்.</p><h2>நகைச்சுவை பேச்சு</h2><p>1962-ம் ஆண்டு எட்டயபுரம் பாரதி விழாவில் அவர் பேச்சை கேட்டு சொக்கிப்போனேன். பாரதி பாடலை கணீர் என்ற குரலில் அற்புதமாக பாடுவார். அதன்பின்னர் அந்தப் பேச்சும் நகைச்சுவையும், கேட்போரை ஈர்க்கும் இலக்கிய புலமையும் இணைந்தே அவரது உரை அமையும். அவர் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு திருக்குறளுக்கு அற்புதமாக விளக்கம் தருவார். உரையாசிரியர்களின் உரையை உள்வாங்கி இருப்பார். ஆனால் கேட்பவர்களுக்கு கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் எனும் திருகுறள் வரிகளுக்கு ஏற்ப அவரது பேச்சு அனைவரையும் வசீகரிக்கும்.</p><h2>பட்டிமன்ற நடுவர்</h2><p>இலக்கிய புலமை பெற்றவர்களும் அதிலே ஈர்க்கப்படுவார்கள். சாதாரண பாமர மக்களும் உள்வாங்கி கேட்டுப் பயன்பெறுவார்கள்.</p><p>பட்டிமன்றத்தில் நடுவராக அவர் இருதரப்பினரின் கருத்துக்கும் இடை இடையே குறுக்கீடாக இரண்டு வாக்கியங்களைச் சொல்வார். கேட்டுக் கொண்டிருப்பவர்களும், தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் விழுந்து விழுந்து சிரித்து ரசிப்பார்கள். கருத்தும் ஆழ்மனதில் பதியும். </p><p>அவரோடு பல பட்டிமன்றங்களில் 60களில் பேசியிருக்கிறேன். என் கிராமத்திற்கு அழைத்துச் சென்று திருக்குறள் பட்டிமன்றத்திற்கு நடுவராக அவர் ஆற்றிய உரைகள் மறக்க முடியாதவை.</p><h2>65 ஆண்டுகள் பணி</h2><p>பொதுவுடமை இயக்க சிந்தனை; சமதர்ம கண்ணோட்டம், அவரது எளிமை பழகும் நண்பர்களிடத்தில் அவர் காட்டுகின்ற பரிவு, மரியாதை அவருக்கு மென்மேலும் புகழைச் சேர்த்துக் கொடுத்தது.</p><p>கடந்த இரண்டு நாட்களில்கூட அவர் நடத்தப்போகும் பட்டிமன்றத்தின் சில நிமிடங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியபோது, அவரது பாண்டித்தியத்தைக் கண்டு பெருமிதம் கொண்டேன்.</p><p>65 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்திற்கும், செந்தமிழ் மொழிக்கும் அருட்கொடையாக பெரும் சிறப்பு செய்தவர் போற்றற்குரிய சாலமன் பாப்பையா அவர்கள் ஆவார்கள்.</p><h2>அரசு மரியாதையுடன் நல்லடக்கம்</h2><p>அம்மாபெரும் இலக்கிய மாமலைக்கு தமிழக அரசு சிறப்பு செய்து, அரசு மரியாதையுடன் அவரது நல்லடக்கம் நடைபெற வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>காலத்தால் அழியாத புகழுக்கும், பெருமைக்கும் உரியவரான இலக்கியப் பேரொளி சாலமன் பாப்பையா அவர்களின் மறைவால் தாங்க முடியாத துக்கத்திலும், துயரத்திலும் ஆழ்ந்திருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அப்பெருமகனாரை நெஞ்சில் போற்றும் தமிழன்பர்களுக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியை, ஆழ்ந்த இரங்கலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/11-mavattangalil-iravu-7-mani-varai-mazhaikku-vaippu</link><comments>https://www.dailythanthi.com/news/weather/11-mavattangalil-iravu-7-mani-varai-mazhaikku-vaippu#comments</comments><guid isPermaLink="false">e57fa376-775a-4df1-86bd-ca1ed03e6ee0</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:31:36 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:31:36.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/mb2hjtlx/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/mb2hjtlx/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி அரியலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பண்டிகைகள் தோறும் தமிழர்களின் வீடுகளில் ஒலித்த குரல் மறைந்தது - சாலமன் பாப்பையாவின் வாழ்க்கைப் பயணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/voice-that-echoed-in-tamil-homes-fades-salomon-pappaiyas-life-journey</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/voice-that-echoed-in-tamil-homes-fades-salomon-pappaiyas-life-journey#comments</comments><guid isPermaLink="false">0b58328f-0da1-42bd-b3a3-9a557046dccd</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:59:49 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:19:52.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு கட்டுரைகள்,மறைவு,demise,சாலமன் பாப்பையா,Solomon Pappaiah,பட்டிமன்றம்,வாழ்க்கைப் பயணம்,Pattimandram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/iaz59qsw/Untitled-3-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/iaz59qsw/Untitled-3-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'பட்டிமன்றம்' என்ற பெயரைக் கேட்டாலே நம்முடைய நினைவுக்கு முதலில் வருபவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. பொங்கல், புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற கலந்துவிட்ட பெருமைக்குரியவர். பட்டிமன்றம் புகழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று தன்னுடைய 90 வயதில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/salmon-papaya-has-passed-away">காலமானார்</a>. அவரது வாழ்க்கைப் பயணம் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்...</p><h2>இளமைப் பருவம்</h2><p>மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி சாலமன் பாப்பையா பிறந்தார். ஆலைத்தொழிலாளியான சுந்தரம், பாக்கியம் தம்பதிக்கு 9-வது குழந்தையாக பிறந்தவர். பெரிய குடும்பம் என்பதால் பொருளாதார வசதி இல்லை. கல்வியை தொடர்வதற்கே போராட வேண்டிய சூழல் இருந்தது.</p><p>சாலமன் பாப்பையா தனது ஆரம்பக் கல்வியை மதுரை ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியிலும், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைப் பள்ளியிலும் பயின்றார். உயர்நிலைக் கல்வியை மதுரை தல்லாகுளம் அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார்.</p><h2>கல்லூரிப் படிப்பு</h2><p>பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா, மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். படித்து முடித்த பிறகு, அமெரிக்கன் கல்லூரியில் பயிற்றுநராக மூன்றாண்டுகள் பணியாற்றினார். பின்னர் தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்து, தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.</p><figure><img alt="சாலமன் பாப்பையா" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/pakjique/Untitled-3-2.jpg" /><figcaption>கோப்புப்படம்</figcaption></figure><h2>பேச்சு பயணம்</h2><p>பள்ளியில் படிக்கும்போதே பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு தனது பேச்சுத் திறனை வளர்த்துக்கொண்டார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள், முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் உள்ளிட்டோரின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டார். அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றியபோது பல்வேறு பேச்சரங்குகளை ஒருங்கிணைத்தார்.</p><p>குன்றக்குடி அடிகளார், இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன் போன்றோரின் பேச்சரங்குகளை ஒருங்கிணைத்ததன் மூலமும், சா. கணேசன், குன்றக்குடி அடிகளார் ஆகியோரின் சொற்பொழிவுகளை கேட்டும் தனது பேச்சுத் திறனை மேம்படுத்தினார். தொடர் வாசிப்புப் பயிற்சியின் மூலம் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளராகவும், நடுவராகவும் வளர்ந்தார். ஆரம்பத்தில் அவருக்கு பட்டிமன்றத்தில் பேச்சாளராக இருப்பதில்தான் அதிக விருப்பம் இருந்தது. பின்னர் நடுவர் பொறுப்பு அவரது அடையாளமாகவே மாறியது.</p><h2>பட்டிமன்றத்தின் அடையாளம்</h2><p>சாலமன் பாப்பையாவுக்கு முன்பே தமிழகத்தில் வளமான பட்டிமன்ற மரபு இருந்தது. ஆனால் பட்டிமன்றத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவரது பங்கு அளப்பரியது. ஒரு காலத்தில் இலக்கிய விழாக்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் போன்ற இடங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றம், தொலைக்காட்சியின் வளர்ச்சிக்குப் பிறகு குடும்ப நிகழ்ச்சியாக மாறியது.</p><p>அந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக சாலமன் பாப்பையா இருந்தார். பொங்கல், புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது பட்டிமன்றங்கள் தமிழகக் குடும்பங்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே மாறின. </p><h2>இயல்பான பேச்சு</h2><p>சாலமன் பாப்பையா என்ற பெயரைக் கேட்டதும் முதலில் 'அன்புப் பெரியோர்களே... அருமைத் தாய்மார்களே... இனிய குழந்தைகளே' என்று ஒவ்வொரு பட்டிமன்றத்தின் தொடக்கத்திலும் அவர் கூறும் வார்த்தைகள்தான் நம் நினைவுக்கு வரும்.</p><p>மதுரைக்கே உரிய இயல்பான தமிழும், நகைச்சுவையும் கலந்த அவரது பேச்சு மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த சாலமன் பாப்பையா, மேடையில் எப்போதுமே மிகக் கடினமான இலக்கிய மொழியை தேர்வு செய்ததில்லை. திருக்குறளையோ, சங்க இலக்கியத்தையோ எதைக் கூறினாலும், அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு சம்பவத்துடன் இணைத்து எளிமையாக விளக்குவார்.</p><figure><img alt="சாலமன் பாப்பையா" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/wec1p2fh/Untitled-3-1.jpg" /><figcaption>கோப்புப்படம்</figcaption></figure><h2>தலைப்புகளும், தீர்ப்புகளும்</h2><p>சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றங்களின் தலைப்புகளும் காலத்துக்கேற்ப மாறின. இலக்கியம் சார்ந்த தலைப்புகளைத் தாண்டி குடும்பம், கணவன் - மனைவி உறவு, பெற்றோர் - பிள்ளைகள், கல்வி, பணம், காதல், திருமணம், நவீன வாழ்க்கை, தொழில்நுட்பம், தலைமுறை மாற்றம் போன்ற சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய தலைப்புகளில் பட்டிமன்றங்கள் அரங்கேறின.</p><p>இரு அணிகளும் தங்களது வாதங்களை முன்வைத்த பிறகு நடுவராக அவர் வழங்கும் தீர்ப்புதான் நிகழ்ச்சியின் உச்சம். எந்த அணி வெற்றி பெற்றது என்று வெறுமனே அறிவிக்காமல், இரு தரப்பின் வாதங்களிலும் உள்ள உண்மைகளை எடுத்துச் சொல்லி, நகைச்சுவையுடன் தனது தீர்ப்பை சொல்லும் அவரது பாணி தனித்துவமானதாக அமைந்தது. இதுவே பட்டிமன்றத்தை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய அறிவார்ந்த பொழுதுபோக்கு வடிவமாக மாற்றியது.</p><h2>தொலைக்காட்சியில் இலக்கியப் பணி</h2><p>பட்டிமன்றம் தவிர்த்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சாலமன் பாப்பையா இலக்கியப் பணியாற்றியுள்ளார். தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் தினந்தோறும் காலையில் திருக்குறளுக்கு விளக்கமளித்தார். நாலடியார், நான்மணிக்கடிகை, அறநெறிச்சாரம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம் போன்ற இலக்கியங்கள் குறித்தும் உரையாற்றினார். 'ஔவையின் அமுதமொழி' நிகழ்ச்சியின் மூலம் ஔவையாரின் பாடல்களுக்கு விளக்கமளித்தார்.</p><h2>எழுத்துலகில் பங்களிப்பு</h2><p>சாலமன் பாப்பையா இலக்கியத் திறனாய்வும், பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதியிருக்கிறார். மேலும் மதுரை கம்பன் கழகம் ஒருங்கிணைக்கும் திங்கள் சொற்பொழிவுகளை ஆண்டுதோறும் தொகுத்து நூலாக வெளியிட்டார்.</p><p>சாலமன் பாப்பையாவின் முக்கியமான தமிழ் இலக்கியப் பணிகளில் ஒன்று திருக்குறளுக்கான அவரது உரை. மேலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - ஓர் பார்வை, உரை மலர்கள், உரைக்கொத்து, புறநானூறு புதிய வரிசை வகை உள்ளிட்ட நூல்களும் அவரது படைப்புகளாகும். </p><figure><img alt="சாலமன் பாப்பையா" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/rv7j6hqn/Untitled-3-3.jpg" /><figcaption>கோப்புப்படம்</figcaption></figure><h2>சினிமாவில் பாப்பையா</h2><p>பட்டிமன்றத்தின் முகமாக அறியப்படும் சாலமன் பாப்பையா சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' மற்றும் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.</p><h2>கலைமாமணி, பத்மஸ்ரீ</h2><p>தமிழுக்கு பல வகைகளில் தொண்டாற்றியுள்ள சாலமன் பாப்பையாவுக்கு தமிழ்நாடு அரசு 2000-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது. 2010-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ விருதை வழங்கியது. கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.</p><h2>மனைவி, மக்கள்</h2><p>சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயாபாய். இவர்களுக்கு தியாகமூர்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனர். சாலமன் பாப்பையாவின் நீண்டகால இலக்கிய மற்றும் மேடைப் பயணத்திற்கு அவரது குடும்பம் ஆதரவாக இருந்துள்ளது. அவரது மனைவி ஜெயபாய் கடந்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி மதுரையில் காலமானார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/86nfl7dk/Untitled-3-5.jpg" /></figure><h2>கடைசிப் பட்டிமன்றம்</h2><p>சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராக பங்கேற்றுள்ள சாலமன் பாப்பையா, கடந்த 5-ம்தேதி சிவகாசியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பட்டிமன்றத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளார். அதுவே அவரது கடைசிப் பட்டிமன்றமாக அமைந்துள்ளது.</p><p>தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு: தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salomon-pappaiya-death-an-irreplaceable-loss-to-tamil-and-tamil-society-says-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salomon-pappaiya-death-an-irreplaceable-loss-to-tamil-and-tamil-society-says-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">f51a6af4-102e-4822-a5ff-23d144e5edb9</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:19:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:19:34.314Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,மறைவு,demise,சாலமன் பாப்பையா,பேரிழப்பு,Solomon Papaiah,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/hbnu84d8/solmonmanick.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா, மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா மறைவு: தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/hbnu84d8/solmonmanick.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாலமன் பாப்பையா மறைவு: தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று  மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>நீங்கா இடம் பெற்றவர்</p><p>தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், நாடறிந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> உடல்நலக்குறைவால் மதுரையில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய சாலமன் பாப்பையா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் ஆழமான, அறிவுப்பூர்வமான அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.</p><p>கலைமாமணி விருது</p><p> திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதும், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.</p><p>தனி சிறப்பு</p><p> சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் என்றால் அரங்கமே ஆரவாரத்துடன் ரசித்து, மகிழ்ந்து, கைதட்டி வரவேற்கின்ற வகையில் அமைவது தனி சிறப்பாகும். மூன்று மணி நேரம் பட்டிமன்றம் நடந்தாலும், அனைவரும் மகிழ்கின்ற வகையில் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பட்டிமன்றங்களை நடத்தியவர்.</p> <p>சாலமன் பாப்பையாவின் இழப்பு தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காதல் திருமணம் செய்த மகள், மருமகனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய தந்தை: ஆணவக்கொலை முயற்சியா? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-breaks-into-daughters-house-stabs-son-in-law-with-machete-after-love-marriage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-breaks-into-daughters-house-stabs-son-in-law-with-machete-after-love-marriage#comments</comments><guid isPermaLink="false">d01ec23a-a6ae-45b9-92aa-3f0c41d27a84</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:56:44 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:56:44.102Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தென்காசி,காதல் திருமணம்,அரிவாளால் தாக்குதல்,வீடு புகுந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/byyhfb4w/000000000000000000001-0000.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தம்பதி இருந்த வீடு (உள்படம்: முருகன்)]]></media:title><media:description type="html"><![CDATA[ காதல் திருமணம் செய்த மகள், மருமகனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய தந்தை தலைமறைவு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/byyhfb4w/000000000000000000001-0000.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை கரம்பிடித்த மகளையும் அவரது கணவரையும், பெண்ணின் தந்தை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார். </p><h2>கல்லூரி காதலும் திருமணமும்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தென்காசி மாவட்டம்</a> ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 23). நெல்லை மாவட்டம் மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் சுஷ்மிதா (வயது 21). இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சுஷ்மிதாவின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.</p><p>எனினும், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர்.</p><h2>வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல்</h2><p>மகள் மாற்று சமூகத்தை சேர்ந்தவரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8Dmarried">திருமணம்</a> செய்ததால் சுஷ்மிதாவின் தந்தை முருகன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) இரவு சிவகாமிபுரத்தில் தம்பதியினர் வசித்து வந்த வீட்டிற்குள் தந்தை முருகன் திடீரென அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு, கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மருமகன் ஆகாஷை தலை மற்றும் கால்களில் சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">வெட்டியுள்ளார். </a>அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து கணவரைப் பாதுகாக்க முயன்ற தனது சொந்த மகள் சுஷ்மிதாவின் கையை, ஆத்திரம் தாங்காமல் முருகன் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார்.</p><h2>ஆஸ்பத்திரியில் அனுமதி - தந்தை தலைமறைவு</h2><p>இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட முருகன், தான் ஓட்டி வந்த பைக்கில் தப்பியோடி தலைமறைவானார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காதல் தம்பதியை மீட்ட பொதுமக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p>அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த பெண்ணின் தந்தை முருகனை போலீசார் தேடி வருகின்றனர். காதல் திருமணங்களுக்கு எதிரான சாதிய ஆணவம் மீண்டும் ஒரு குடும்பத்தில் வன்முறையாக வெடித்திருப்பது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“அன்பு பெரியோர்களே.. அருமை தாய்மார்களே..”: மறைந்த சாலமன் பாப்பையா உடல் நாளை தகனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mortal-remains-of-the-late-solomon-pappaiah-will-be-cremated-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mortal-remains-of-the-late-solomon-pappaiah-will-be-cremated-tomorrow#comments</comments><guid isPermaLink="false">7de80cc3-9faf-4337-a526-f348057f8576</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:55:36 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:55:36.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,மறைவு,உடல் தகனம்,சாலமன் பாப்பையா,Solomon Pappaiah</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/hzld586n/tomo.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/hzld586n/tomo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான <a href="https://www.dailythanthi.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a> மதுரையில் இன்று (வெள்ளிகிழமை) காலமானார். அவருக்கு வயது 90.</p><h2>தமிழ்த்துறை பேராசிரியர்</h2><p>மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு <a href="https://www.dailythanthi.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a> பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். </p><p>மதுரை அரசடியில் உள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சாலமன் பாப்பையா, தனியார் தொலைக்காட்சியின் பட்டிமன்றங்களில் நடுவராகப் பொறுப்பேற்று பேசி வந்தார். அவரது பேச்சுக்குப் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. பட்டிமன்றங்கள் மற்றும் பொது மேடைகளில் நகைச்சுவை கலந்து சாலமன் பாப்பையா பேசி வந்தார். அவரது பேச்சுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்படப் பல நாடுகளில் பட்டிமன்றங்களை நடத்தி வந்தார்.</p><h2>வரவேற்பை பெற்ற தீர்ப்புகள்</h2><p>தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் <a href="https://www.dailythanthi.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a> பெற்றுள்ளார். தமிழ் இலக்கியத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பட்டிமன்றத்தை சாலமன் பாப்பையா நடத்தி வந்தார். பட்டிமன்றங்களில் இரு தரப்பினரும் முன்வைக்கும் கருத்துகளை நகைச்சுவை கலந்து பகுப்பாய்ந்து அவர் அளிக்கும் தீர்ப்புகள் வரவேற்பைப் பெற்றன.</p><h2>பத்மஸ்ரீ விருது</h2><p>நடுவராக மட்டுமன்றி எழுத்தாளராக 'புறநானூறு புதிய வரிசை வகை', 'பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை', 'திருக்குறள் உரையுடன்' என பல்வேறு நூல்களை சாலமன் பாப்பையா எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை <a href="https://www.dailythanthi.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a> பெற்றுள்ளார். 2010ஆம் ஆண்டு முத்தமிழ்ப் பேரரறிஞர் என்ற விருதை அண்ணாமலை பல்கலைக் கழகம் வழங்கியுள்ளது.</p><p>இதுதவிர 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சாலமன் பாப்பையா, ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.</p><h2>அன்பு பெரியோர்களே..</h2><p>முன்னதாக கடந்த 5ஆம் தேதி சிவகாசியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பட்டிமன்றத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளார். தனது பேச்சை தொடங்கும்போது "அன்பு பெரியோர்களே.. அருமை தாய்மார்களே.." என்று அவர் கூறுவது அனைவரையும் மிகவும் கவர்ந்தது. </p><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையாவின்</a> உடல், மதுரை ஆரப்பாளையம் அடுத்துள்ள ஞானஒளிபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.</p><p>நாளை பிற்பகல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உலகம் முழுவதும் சாலமன் பாப்பையாவை அறியாத தமிழர்களே இல்லை: அன்புமணி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-tamilian-in-the-world-who-does-not-know-solomon-papaiah-anbumani-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-tamilian-in-the-world-who-does-not-know-solomon-papaiah-anbumani-condoles#comments</comments><guid isPermaLink="false">31baaeda-18b7-4f25-a7f7-0da9fdce96d4</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:52:12 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:52:12.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,Chennai,சென்னை,Death,இரங்கல்,condolence,மறைவு,Message,செய்தி,சாலமன் பாப்பையா,Solomon Papaiah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/lbcg91oz/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா மறைவு: அன்புமணி ராமாஸ் இரங்கல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/lbcg91oz/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழறிஞர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> மறைவையொட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95">பா.ம.க.</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">தலைவர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">இரங்கல் </a>செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: </p><p>மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். </p><h2>திருக்குறள் உரை</h2><p>மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா அவர்கள், தமிழ் இலக்கியங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களுக்கு உரைகளை எழுதியுள்ளார்.</p><h2>உலகம் முழுவதும் சாலமன் பாப்பையாவை அறியாத தமிழர்களே இல்லை</h2><p>தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சாலமன் பாப்பையா அவர்களை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களுக்கும்  அறிமுகமானவர். பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் மற்றும் தமிழ் ஆளுமைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். </p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>சாலமன் பாப்பையா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் -  கவர்னர் அர்லேகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-pappaiah-death-news-deeply-saddens-me-governor-arlekar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-pappaiah-death-news-deeply-saddens-me-governor-arlekar#comments</comments><guid isPermaLink="false">32f3e5aa-cad2-4f94-a004-7fd7816646ac</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:52:09 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:52:09.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>news,வேதனை,sad,செய்தி,சாலமன் பாப்பையா,Solomon Papaiah,கவர்னர் அர்லேகர்,Governor Arlekar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qv2nhmi7/solomon.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா, கவர்னர் அர்லேகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் -  கவர்னர் அர்லேகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qv2nhmi7/solomon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">கவர்னர் அர்லேகர்</a> தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக பொறுப்பு கவர்னர் ஆர்.வி. அர்லேகர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2> சாலமன் பாப்பையா</h2><p>பிரபல தமிழ் பட்டிமன்ற பேச்சாளரும், தமிழறிஞரும், தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் சிறந்த பேச்சாளருமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.</p> <h2>பெருமைக்குரியவர்</h2><p>தமது சிறப்பான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் ஆழ்ந்த தமிழ் அறிவின் மூலம் பொதுமக்களின் சிந்தனையை வளப்படுத்தியதுடன், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பை பல தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.</p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>அன்னாரின் மறைவு தமிழ் இலக்கிய மற்றும் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள், அபிமானிகள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <p>அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்."  </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சீரழிந்த சட்டம் ஒழுங்கை சீரமைக்கும் முதல்-அமைச்சர் விஜய்; தவெக ஐ.டி. விங்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-restore-degraded-law-and-order-tvk-it-wing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-restore-degraded-law-and-order-tvk-it-wing#comments</comments><guid isPermaLink="false">f71879f5-7af6-4c9e-b507-9cc57ba7591d</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:42:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:42:34.160Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சட்டம் ஒழுங்கு,Law and order,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qeyobdvp/cm-vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qeyobdvp/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தலைநகரில் 180-க்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளைக் குறிவைத்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக</a> ஐ.டி. விங் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், தலைநகரில் 180-க்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளைக் குறிவைத்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆட்சியில் தலைநகரில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கிடந்தது அனைவரும் அறிந்ததே!</p><h2>நடவடிக்கை</h2><p>அதனைச் சீரமைக்க, பதவியேற்ற நாள் முதலே போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படை, சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை, சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளைக் கண்காணித்தல் மற்றும் கைது செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை, காவல்துறையை காவல்துறையாக செயல்படவிட்டு, முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.</p><p>குற்றங்களைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவை நிகழ்வதற்கான காரணிகளைக் கண்டறிந்து களைவது, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு என அனைத்திலும் துரித நடவடிக்கைகளுடன், குற்றங்களை உளவியல் ரீதியாக அணுகும் முயற்சிகளையும் காவல்துறை மூலமாக முன்னெடுத்து வருகிறார். முதல்-அமைச்சர்! சட்டம்-ஒழுங்கைக் காப்பதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் எந்த சமரசமும் இல்லை என்ற உறுதியோடு செயல்பட்டு வருகிறார் </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-postal-department-customer-grievance-camp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-postal-department-customer-grievance-camp#comments</comments><guid isPermaLink="false">e7ec391d-c397-4d3d-9ed2-afeeccfd67a2</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:27:36 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:27:36.837Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Postal Department,தபால்துறை,Grievance Redressal Camp,குறைதீர்ப்பு முகாம்,வாடிக்கையாளர்,customer</media:keywords><media:content height="472" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ikku5vbg/postal.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ தபால்துறை ]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ikku5vbg/postal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தபால்துறை சார்பில் வாடிக்கையாளர்களின் தபால்துறை தொடர்பான கருத்துகளை தெரிவிக்கும் வகையில் வாடிக்கையாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">குறை தீர்க்கும் முகாம்</a> நடைபெற உள்ளது.</p><p>இதில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81"> தமிழ்நாடு</a> மற்றும் புதுச்சேரியில் உள்ள 11,745 தபால் நிலையங்களில் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் பங்கேற்கலாம்.</p> <h2>தக் அதாலத்</h2><p>சென்னையில் உள்ள தலைமை தபால்துறை அதிகாரி அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ள, இந்த முகாமில் தபால்துறை சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் சேவைகளை சிறப்பாக மேம்படுத்துவது குறித்த தங்கள் கருத்துகளை தபால்துறை குறைதீர்ப்பு முகாம் தலைப்புடன் சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை தபால்துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை -600002 என்ற முகவரிக்கு 18.09.2026 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பலாம்.</p><h2>மின்னஞ்சல்</h2><p>மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை தக் அதாலத் என்ற தலைப்புடன் pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர்: விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப்காட் ஆலைக்கு ஒரு நீதியா? - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-one-standard-for-the-airport-another-for-the-sipcot-plant-anbumani-ramadoss-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-one-standard-for-the-airport-another-for-the-sipcot-plant-anbumani-ramadoss-criticizes#comments</comments><guid isPermaLink="false">5b718eb8-220c-44b5-8a93-6dc2a70f8773</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:24:54 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:24:54.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,தமிழகம்,செமிகண்டக்டர்,பரந்தூர்,Paranthur Airport,Paranthur,Sipcot,பரந்தூர் விமானநிலையம்,சிப்காட் ஆலை,CM Vijay,semiconductor</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/sdsm7sw6/pam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/sdsm7sw6/pam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் செமிகண்டக்டர் பூங்கா  அமைப்பது உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்பதற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட தவெக அரசு, அதன் எல்லையில் அமைந்துள்ள மதுரமங்கலத்தில் நிலங்களை கையகப்படுத்தி நூற்றுக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அநீதியானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். </p><p>காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘அ’, பிரிவு ‘ஆ’ ஆகிய பகுதிகளில் 410.80 ஏக்கர் புன்செய் விளைநிலங்கள், 11.55 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 423.35 ஏக்கர் நிலங்களை புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்கு கையகப்படுத்துவதற்கான அரசாணை கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின்  பட்டியல் கடந்த 27.03.2025ஆம் நாள் நாளிதழ்களிலும், 09.03.2026ஆம் நாள் தமிழக அரசிதழிலும் வெளியிடப் பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>இது குறித்து நிலங்களின் உரிமையாளர்களை ஓரகடம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய சிப்காட் வளாகங்களின் விரிவாக்கத்திற்கான நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்திற்கு அழைத்து முந்தைய திமுக அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு நிலங்களை வழங்கும்படி கட்டாயப்படுத்துவதாக இந்த நிலம் எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அவை விதி எண் 110-இன் கீழ் அறிக்கை அளித்த <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் சிப்களை (CHIP) தயாரிப்பதற்கான செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா ரூ.175 கோடியில் அமைக்கப்படும்; இதற்காக ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவித்தார். அந்தப் பூங்கா அமைப்பதற்காக மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘ஆ’ பகுதியில் 14.25 ஹெக்டேர், அதாவது 35.20 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும், அதற்காகவே நிலம் எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>மதுரமங்கலம் பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் புன்செய் நிலங்கள் ஆகும். அவற்றில் மா, தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் உள்ளன. அவை தான் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  உழவர்களுக்கு நீடித்த வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகின்றன. அந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால்  அவற்றின்  உரிமையாளர்களான விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, அந்த நிலங்களில் பணியாற்றி வரும் வேளாண் கூலித் தொழிலாளர்களும் வேலை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகும். இந்த உண்மைகளை உணர்ந்தும் நிலங்களைப் பறிக்க தவெக அரசு துடிப்பது மனிதாபிமானமற்றது.</p><p>செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படவுள்ள மதுரமங்கலம் கிராமம், பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படவிருந்த 12 கிராமங்களுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. விமான நிலையத்தின் மையப்பகுதியாக கருதப்படும் பரந்தூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்கள் நேரில் சென்ற ஏகனாபுரத்திலிருந்து 5 கி.மீ, விமான நிலையத்தின் கிழக்கு எல்லையான சிங்கிலிப்பாடி  கிராமத்தை ஒட்டியும், வடகிழக்கு எல்லையான குணகரம்பாக்கம் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவிலும்   மதுரமங்கலம் கிராமம் அமைத்திருக்கிறது. இந்த உண்மைகள் எதுவும் அரசுக்கு தெரியாமல் இருக்க முடியாது.</p><p>அவ்வாறு இருக்கும் போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று கூறி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்ட முதல்-அமைச்சர் விஜய் அவர்கள், இப்போது மதுரமங்கலத்தில் மட்டும் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைப்பதற்காக உழவர்களின் நிலங்களை பறித்துக் கொண்டு அவர்களை துரத்தியடிப்பது எந்த வகையில் நியாயம்? விமான நிலையம் அமைப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் ஏற்படாதா? 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலம் தேவைப்படும் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியும் போது, வெறும் 35 ஏக்கர் நிலம் மட்டுமே தேவைப்படும் செமிகண்டக்டர் பூங்காவையும், 423.35 ஏக்கர் நிலம்  தேவைப்படும் ஒட்டுமொத்த சிப்காட் வளாகத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற முடியாதா? என்று அங்குள்ள மக்கள் எழுப்பும் வினாக்களுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்கள் விடையளிக்க வேண்டும்.</p><p>விவசாயிகள் தான் தமிழ்நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் தான் உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்கள்.  அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பாதிக்கப்படும் உழவர்களுக்கு நீதி வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது. பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதே நீதி, அதற்கு மிக அருகில் அமைந்துள்ள  மதுரமங்கலத்தில்  செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.</p><p>அதற்காக, மதுரமங்கலம் கிராமத்தில் 410 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். செமிகண்டக்டர் பூங்கா உள்ளிட்ட சிப்காட் வளாகத்தை ஏற்கனவே அரசால் கையகப் படுத்தப்பட்ட நிலங்களிலோ அல்லது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலோ அமைக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மேடை கலைவாணர் மறைந்துவிட்டார் - வைரமுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiah-passes-away-the-stage-artist-who-made-us-laugh-and-think-has-passed-away-vairamuthu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiah-passes-away-the-stage-artist-who-made-us-laugh-and-think-has-passed-away-vairamuthu#comments</comments><guid isPermaLink="false">f92a7634-77cc-4404-9848-5652c51407ba</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:23:09 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:23:09.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரமுத்து,Vairamuthu,சாலமன் பாப்பையா,Solomon Papaiah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/mt585aoy/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/mt585aoy/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சாலமன் பாப்பையா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து  இரங்கல் தெரிவித்துள்ளார்.</p> <p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த  சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர்.திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். </p><p>தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். </p><p>90 வயதான சாலமன் பாப்பையா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். </p><h2>வைரமுத்து இரங்கல்</h2><p>இந்த நிலையில், சாலமன் பாப்பையா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். </p><p>“பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்; செப்டம்பர் 11 தமிழுக்கு நல்ல நாள் இல்லை போலும். கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டு சேர்த்தவர். சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்த மேடைக் கலைவாணரான அவரது நாற்காலியை யாராலும் நிரப்ப முடியாது” என குறிப்பிட்டுள்ள வைரமுத்து, அவரது குடும்பத்தினருக்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சாலமன் பாப்பையாவின் <br>மறைவு<br>உள்ளத்தை உடைக்கிறது<br><br>பாரதி மறைந்தநாளில்<br>பாப்பையாவும்<br>மறைந்திருக்கிறார்<br><br>செப்டம்பர் 11<br>தமிழுக்கு நல்லநாள்<br>இல்லை போலும்<br><br>பட்டிமன்றத் தமிழ்<br>முடிந்துவிட்டதா?<br>பாமரத் தமிழ்<br>மூச்சை நிறுத்திக்கொண்டதா?<br><br>கல்லூரிகளில்<br>பயிற்றுவித்த தமிழைக் <br>கடைவீதிக்குக்… <a href="https://t.co/claeAEX91x">pic.twitter.com/claeAEX91x</a></p>&mdash; வைரமுத்து (@Vairamuthu) <a href="https://x.com/Vairamuthu/status/2098329703870521693?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தமிழுலகம் அறிந்த மூத்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைவு: கி.வீரமணி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiah-a-veteran-barrister-known-to-the-tamil-world-passes-away-k-veeramani-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiah-a-veteran-barrister-known-to-the-tamil-world-passes-away-k-veeramani-condoles#comments</comments><guid isPermaLink="false">eb45cf7e-1354-4263-bcc6-8a8fca56dc19</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:06:03 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:06:03.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Death,இரங்கல்,condolence,Dravidar Kazhagam,திராவிடர் கழகம்,மறைவு,Message,கி.வீரமணி அறிக்கை,செய்தி,சாலமன் பாப்பையா,K.Veeramani,Solomon Papaiah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/quf2fbx0/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா மறைவு: கி.வீரமணி இரங்கல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/quf2fbx0/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழுலகம் அறிந்த மூத்த பட்டிமன்ற நடுவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> மறைவையொட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">திராவிடர் கழகத்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">தலைவர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">கி.வீரமணி</a> வெளியிட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">இரங்கல்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">அறிக்கை</a>யில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>தமிழ்ப் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு</h2><p>தமிழுலகம் அறிந்த மூத்த பட்டிமன்ற நடுவரும், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (வயது 90) அவர்கள் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவின் காரணமாகவும் மருத்துவமனையில் இன்று (11.9.2026) மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சிகாகோவிலிருந்து விவேகானந்தரின் குரல் இன்றும் எதிரொலிக்கிறது - தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vivekanandas-voice-still-echoes-from-chicago-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vivekanandas-voice-still-echoes-from-chicago-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">5eedf236-a8a6-4035-bfce-9881943e874e</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:01:45 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:01:45.092Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,விவேகானந்தர்,Vivekananda</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/or2vw9ll/59.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழிசை சவுந்தரராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/or2vw9ll/59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் சிகாகோ எனுமிடத்தில் உரையாற்றினார். இது குறித்து தமிழக பாஜக மூத்த தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88">தமிழிசை</a> சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>விவேகானந்தர் உரை</h2><p>130 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் 1893 செப்டம்பர் 11 அன்று சுவாமி <em>விவேகானந்தர்</em> அமெரிக்க மக்கள் முன் நின்று, “அமெரிக்காவின் சகோதரிகளே, சகோதரர்களே” என்ற அழியாத வார்த்தைகளுடன் தனது உரையைத் தொடங்கினார். </p><p>அந்த ஒரு கணத்தில், அவர் இந்தியாவின் ஆன்மீகக் குரலை - கருணை, உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் நமது நாகரிக ஞானத்தின் காலத்தால் அழியாத செய்தியுடன் உலகிற்கு எடுத்துச் சென்றார். அவரது வார்த்தைகள் இதயங்களை வென்றது மட்டுமல்ல; அவை பாரதத்தின் சனாதனப் பாரம்பரியத்தின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தின. இன்று, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நாம் மிகுந்த பெருமையுடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் நினைவுகூர்கிறோம். </p><h2>நித்திய உத்வேகம்</h2><p>தேசத்திற்கு சேவை செய்யவும், சமூகத்தை வலுப்படுத்தவும், பாரதத்தின் ஞானத்தை மனிதகுலத்திற்கு வழிகாட்டும் ஒளியாக மாற்றவும் ஒவ்வொரு இந்தியருக்கும் சுவாமி விவேகானந்தர் ஒரு நித்திய உத்வேகமாகத் திகழ்கிறார். "சிகாகோவிலிருந்து உலகிற்கு அவரது குரல் இன்றும் எதிரொலிக்கிறது."</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் கடைகள் ஆன்லைன் ஏலம்; பெண் மீன் வியாபாரிகள் மறியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruchendur-online-auction-row-women-fish-sellers-block-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruchendur-online-auction-row-women-fish-sellers-block-road#comments</comments><guid isPermaLink="false">b664cc34-d96f-49c9-8f8e-8afd89cb7403</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:40:10 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:40:10.654Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,திருச்செந்தூர்,Online,ஆன்லைன்,பெண்,மறியல்,Tiruchendur,auction,ஏலம்,Shops,கடைகள்,மீன் வியாபாரிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/rtxecjcj/fisherwomen.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெண் மீன் வியாபாரிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூரில் கடைகள் ஆன்லைன் ஏலம்; பெண் மீன் வியாபாரிகள் மறியல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/rtxecjcj/fisherwomen.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்செந்தூர்</a> நகராட்சி பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக மீன் வியாபாரம் செய்து வந்த கடைகளை, திடீரென ஆன்லைன் மூலம் ஏலம் விட நகராட்சி நிர்வாகம் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் மீன் வியாபாரிகள் மீன்களுடன் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p> <h2>ஆன்லைன் ஏல அறிவிப்பு</h2><p>திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF">மீன் அங்காடி </a>கடைகளை ஆன்லைன் முறையில் ஏலம் விடுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தாங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதே பகுதியில் வாழ்வாதாரத்தை நம்பி மீன் வியாபாரம் செய்து வருவதாகவும், ஆன்லைன் ஏல முறையால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் பெண் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><p>சாலையில் இறங்கி போராட்டம்</p><p>இந்த ஆன்லைன் ஏல அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும், அந்த மீன் கடைகளை தங்களுக்கே வழங்கக் கோரியும், கோபமடைந்த பெண் மீன் வியாபாரிகள் தங்களின் மீன் கூடைகளுடன் திருச்செந்தூர் முக்கிய சாலைக்கு வந்தனர். </p><p>தாங்கள் கொண்டு வந்த மீன்களை நடுரோட்டில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-condoles-the-death-of-solomon-pappaiah</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-condoles-the-death-of-solomon-pappaiah#comments</comments><guid isPermaLink="false">c6a3b78a-f09c-449f-80b0-742df220f9c5</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:39:04 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:39:04.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,இந்திய கம்யூனிஸ்டு,மறைவு,சாலமன் பாப்பையா,இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/kx0ey6s0/brijk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/kx0ey6s0/brijk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. </p><h2>பத்மஸ்ரீ விருது</h2><p>மதுரையை சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/சாலைமன்-பாப்பையா">சாலமன் பப்பையா</a> பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.</p><p>தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சாலமன் பாப்பையா, ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.</p><h2>இரங்கல்</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/சாலைமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a> மரணத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு&nbsp;கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சிறந்த தமிழறிஞரும், தமிழ்நாடு நன்கறிந்த பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (வயது 90) அவர்கள் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (செப்டம்பர் 11, 2026) காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தையும், வருத்தத்தையும் தருகிறது. சாலமன் பாப்பையா, பிப்ரவரி 22, 1936 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள சாத்தான்குடியில் பிறந்தார்.</p><h2>இனிய குரல் வளம்</h2><p>சாலமன் பாப்பையா அவர்கள், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.</p><p>தனது நகைச்சுவை ததும்பும் எளிய சொற்பொழிவால், வாதத் திறமையால், இனிய குரல் வளத்தால் தலைமுறைகளைத் தாண்டி&nbsp;அனைத்து பிரிவு மக்களையும் கவர்ந்தவர். திருக்குறள் மற்றும் பல பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளார்.</p><h2>முற்போக்கு சிந்தனையாளர்</h2><p>முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’, ‘பத்ம ஸ்ரீ’ உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.</p><p>இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நினைவில் வாழும் மூத்த தலைவர்களான இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோருடன் மிகுந்த நட்பு பாராட்டியவர். தா.பாண்டியன், சாலமன் பாப்பையா அவர்களுடன் பல பட்டிமன்றங்களிலும் பங்கேற்று உரையாற்றி உள்ளார்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/சாலைமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a> அவர்கள் சிறந்த முற்போக்கு சிந்தனையாளர் ஆவார். அவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல்களின் இலக்கியச் செழுமையை அவர் தனது நூல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு: முதல் - அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiahs-death-is-an-irreparable-loss-to-the-tamil-community-first-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiahs-death-is-an-irreparable-loss-to-the-tamil-community-first-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">35082dd0-e298-494c-b0bf-343b1a43a86e</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:32:11 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:32:11.509Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Death,மறைவு,சாலமன் பாப்பையா,Solomon Papaiah,CM Vijay,முதல் - அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/apdefp3m/58.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/apdefp3m/58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>90 வயதான சாலமன் பாப்பையா. ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக முதல் - அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>சாலமன் பாப்பையா மறைவு </h2><p>தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.</p><h2>பேரிழப்பு</h2><p>தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.</p><p>அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு: அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள் - மு.க.ஸ்டாலின் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-pappaiya-demise-tamil-mother-lost-one-of-her-precious-sons-mk-stalin-condolence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-pappaiya-demise-tamil-mother-lost-one-of-her-precious-sons-mk-stalin-condolence#comments</comments><guid isPermaLink="false">52a82c06-34c1-4a36-9808-bf079b4aeb2c</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:29:21 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:29:21.480Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,இரங்கல்,condolence,மறைவு,MKstalin,சாலமன் பாப்பையா,Solomon Papaiah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/9opvw0xo/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/9opvw0xo/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் சாலமன் பாப்பையா மறைவுக்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் - மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.</p><p>திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா திகழ்ந்தார்.</p><p>பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.</p><p>தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.</p><p>கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.</p><p>தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் 7 நாட்களில் 258 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/singappen-special-rapid-force-258-complaints-7-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/singappen-special-rapid-force-258-complaints-7-days#comments</comments><guid isPermaLink="false">c70a6ad6-caba-4d22-b1fd-5889890f5f82</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:27:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:27:34.681Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நடவடிக்கை,Rescue,Complaints,புகார்கள்,சிங்கப்பெண் அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/k8b5fvui/singapen.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை]]></media:title><media:description type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் 7 நாட்களில் 258 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/k8b5fvui/singapen.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின்</a> தொடர் தீவிர நடவடிக்கைகள் மூலம் 7 நாட்களில்  258 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p> <h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</h2><p>தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை. மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தீவிர ரோந்துப்பணி. குற்றதடுப்பு நடவடிக்கைகள், சமூக விழிப்புணர்வு புகார்களுக்கு உடனடி நடவடிக்கை, மற்றும் சம்பந்தப்பட்ட அதிகார எல்லைக்குட்பட்ட காவல்துறையினருடன் சிறப்பான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.</p><p><strong>04.09.2026 முதல் 10.09.2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, களப்பிரிவினரின் செயல்பாடுகள்</strong></p><p>04.09.2026 முதல் 10.09.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் களப்பணிபிரிவுகள் 258 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே நேரடியாக சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். 14 குற்றவழக்குகள் பதிவு செய்ய உதவி புரிந்துள்ளனர். மேலும், காணாமல் போன 4 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் கண்டறியப்பட்டு. அவர்களை பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p> <h2> 3484 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்</h2><p>குற்றதடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள். பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு தொடர்பாக 3484 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் 13,581 பாதிப்புள்ளாகக்கூடிய இடங்கள் குற்றதடுப்பு ரோந்துப்பணிகளின் மூலம் இக்காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுகளை கொண்ட 6 நபர்கள் மீட்கப்பட்டு. </p> <h2>6 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது</h2><p>அவர்களுக்கு மறுவாழ்வு உதவிகள் கிடைக்க கண்காணிக்கப்பட்டன. நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 6 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பள்ளிப்படிப்பை இடை நிறுத்திய 71 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.</p> <h2> வழக்குகள்</h2><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலையீட்டின் பேரில், தென்காசி, மதுரை, தஞ்சாவூர். சேலம், நாமக்கல், திருப்பூர். கோவை, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்டபிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p> <h2> நடவடிக்கை</h2><p>மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குழுக்கள் உதவியாக இருந்தது.</p> <h2>குறிப்பிடத்தக்க களப்பணிகள்</h2><p>சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்புப்படையினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 14 வயது 9 ஆம் வகுப்பு மாணவன். 20 வயது மற்றும் 30 வயது மதிக்கதக்க நபர்கள் தன்னை ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்று பாலியல்வன்கொடுமை செய்ததாகவும். கடந்த 3 மாதங்களாக மிரட்டி துன்புறுத்தி வந்ததாகவும் தெரிவித்தான். எஸ்எஸ்எப் உடனடியாக காவல் நிலையத்திற்கும் பெற்றோருக்கும் தகவல் அளித்து புகார் அளித்து வழக்குபதிவு செய்ய உரியநடவடிக்கை மேற்கொண்டனர். ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டனர்.</p><h2>உதவி எண் 1091</h2><p>பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் சூழ்நிலையில் எவ்விததயக்கமும் இன்றி முன் வந்து. உடனடி உதவிக்காக சிங்கப்பெண் உதவி எண் (1091) என்ற எண்ணை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உதவி தேவைப்படும் நேரங்களில் தயங்க வேண்டாம் சிங்கப்பெண் உதவி எண் 1091-ஐ அழைக்கவும். </p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, குற்றத்தடுப்பு. உடனடி தலையீடு, விழிப்புணர்வு நடவடிக்கைகள். மீட்பு. மறுவாழ்வு மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இத்தகைய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவதில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: 4 முனைப்போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-who-has-the-winning-chance-in-the-four-cornered-contest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-who-has-the-winning-chance-in-the-four-cornered-contest#comments</comments><guid isPermaLink="false">791686d5-7228-4949-8da8-14b82fba9fde</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:35:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:25:15.726Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,தமிழ்நாடு,விஜய்,அதிமுக,திமுக,DMK,நாதக,NTK,இடைத்தேர்தல்,அரசியல் களம்,மதுராந்தகம்,தாராபுரம்,Madhurandakam,தமிழக அரசியல்,byelection,Dharapuram,tn politics,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/febv2wr5/amker.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/febv2wr5/amker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலையில், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p><h2>2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. </p><p>இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது. </p><h2>வேட்பாளர்கள் யார்?</h2><p>இதில், நாம் தமிழர் கட்சியை தவிர, தேர்தல் களம் காணும் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த தேர்தலில்  அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர். </p><p>பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் ஐ.பரந்தாமன் (மதுராந்தகம்), எஸ்.சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் (மதுராந்தகம்), பானுமதி (தாராபுரம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/7l4rwzl9/admk.jpg" /><figcaption>அதிமுக வேட்பாளர்கள்</figcaption></figure><h2>மதுராந்தகம் தொகுதி வரலாறு </h2><p>செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதி 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தலை சந்தித்து வருகிறது. 3 முறை (1952, 1957, 1962) காங்கிரஸ் கட்சியும், 7 முறை (1980, 1989, 1991, 2001, 2011, 2021, 2026) அ.தி.மு.க.வும், 6 முறை (1967, 1971, 1977, 1984, 1996, 2016) தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. </p><p>அ.தி.மு.க.வின் கோட்டையான மதுராந்தகம் தொகுதியில் 2026 சட்டசபை தேர்தலில் மொத்தம் பதிவான 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கிய மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 7,194 வாக்குகள் ஆகும். தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 4,950 வாக்குகளுடன் 4-வது இடத்தையும் பிடித்தனர்.    </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/92bmkmet/dmk.jpg" /><figcaption>திமுக வேட்பாளர்கள்</figcaption></figure><h2>தாராபுரம் தொகுதி வரலாறு </h2><p>திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதி 1951-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. முதல் தேர்தலில் மட்டும் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் 6 முறை (1967, 1971, 1989, 1996, 2006, 2021) தி.மு.க.வும், 6 முறை (1977, 1980, 1984, 1991, 2011, 2026) அ.தி.மு.க.வும் வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளன. </p><p>மேலும், 1957, 1962 ஆகிய தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 2016-ம் ஆண்டு தி.மு.க.வுடன் கைகோர்த்து வெற்றி பெற்றது. அதேபோல், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. வெற்றி வாகை சூடியுள்ளது. </p><h2>16,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி</h2><p>தாராபுரம் தொகுதியில், 2026 சட்டசபை தேர்தலில் மொத்தம் பதிவான 1 லட்சத்து 99 ஆயிரத்து 944 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். </p><p>அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், தி.மு.க. வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 16,727 வாக்குகள் ஆகும். த.வெ.க. வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தனர்.  </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/wiepn29i/tvkke.jpg" /></figure><h2>த.வெ.க. அரசுக்கு நெருக்கடி குறையும்</h2><p>இந்த நிலையில்தான், அக்டோபர் 6-ந் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்க இருக்கின்றன. பொதுவாக, இடைத்தேர்தலை ஆளுங்கட்சியை எடைபோடும் தேர்தல் என்று சொல்வார்கள். </p><p>அந்த வகையில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு இடைத்தேர்தல் சாதகமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஏற்கனவே, த.வெ.க. அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. 107 இடங்களையே வைத்துள்ள அக்கட்சிக்கு, தனி மெஜாரிட்டி கிடைக்க மேலும் 11 தொகுதிகள் தேவை. இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்றால், சற்று நெருக்கடி குறையும். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/sa30hbdp/vet.jpg" /></figure><h2>வெற்றி வாய்ப்பு எப்படி?</h2><p>த.வெ.க. அரசின் 4 மாத ஆட்சியில், ஊழல் ஒழிப்பு கொள்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக, கடந்த தேர்தலில் 'தனி ஒருவன்' போல் களம் இறங்கிய த.வெ.க., இந்த முறை காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. </p><p>இதனால், இவ்விரு தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இரு வேட்பாளர்களுக்கும் 45 சதவீதம் அளவுக்கு குறையாமல் வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/abe2h28h/hera.jpg" /></figure><h2>பிரசாரத்திற்கு விஜய் வருவாரா?</h2><p>இரு தொகுதிகளுக்கும் தேர்தல் பிரசாரத்திற்கு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> நேரில் சென்றால், த.வெ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சதவீதம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. </p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெற்றால், முதல் முறையாக வெற்றிக் கனியை பறித்து, சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துக்கொள்ளும்.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு: தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு- எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiahs-death-an-irreparable-loss-to-the-world-of-tamil-literature-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiahs-death-an-irreparable-loss-to-the-world-of-tamil-literature-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">7e18959d-cd5a-45ee-9b16-4414e90c5df0</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:25:12 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:25:12.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,Chennai,சென்னை,AIADMK,இரங்கல்,condolence,மறைவு,Message,செய்தி,சாலமன் பாப்பையா,Solomon Papaiah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/svuup8mq/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/svuup8mq/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81">மறைவு</a> தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">பொதுச் செயலாளர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">எக்ஸ் தள பதிவில்</a> கூறியிருப்பதாவது: </p><h2>தனித்துவமான பேச்சாற்றல்</h2><p>தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. </p><h2>ஈடு செய்ய முடியாத பேரிழப்பு</h2><p>தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். </p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salmon-papaya-has-passed-away</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salmon-papaya-has-passed-away#comments</comments><guid isPermaLink="false">641be724-aded-4b31-a8bb-375cf51c44a5</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:19:20 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:24:06.081Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலமன் பாப்பையா,பட்டிமன்ற நடுவர்,salmon papaya</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/0lbz5v6t/salaoman-papapiya.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/0lbz5v6t/salaoman-papapiya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த  சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர்.திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். </p><p>தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். </p><p>இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 90 வயதான சாலமன் பாப்பையா, ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். </p> ]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு: ரஜினிகாந்த் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-solomon-pappaiah-rajinikanth-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-solomon-pappaiah-rajinikanth-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">acf51681-e24b-4bad-951a-2fab0e6d75bf</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:19:29 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:19:29.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Rajinikanth,அஞ்சலி,நடிகர் ரஜினிகாந்த்,Actor Rajinikanth,சாலமன் பாப்பையா,Solomon Papaiah</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/tlojpa2l/slolo.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/tlojpa2l/slolo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. </p><p>மதுரையை சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/சாலைமன்-பாப்பையா">சாலமன் பப்பையா</a> பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.</p><p>தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a>, ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.</p><p>இந்நிலையில் சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-today-in-16-districts-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-today-in-16-districts-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">82e8c543-1770-492b-a4d5-a91599c835f0</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:16:19 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:16:19.487Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/1og0xypu/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/1og0xypu/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>11-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாமக்கல், விழுப்புரம், செங்கல்பட்டு, கரூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>12-09-2026 மற்றும் 13-09-2026:</strong> மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் கடலோர தமிழக மாவட்டங்கள், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>11-09-2026 முதல் 15-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>11-09-2026 முதல் 15-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு: தமிழ் உலகிற்கே பேரிழப்பு - நயினார் நாகேந்திரன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiahs-demise-a-great-loss-to-the-tamil-world-nayinar-nagendrans-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiahs-demise-a-great-loss-to-the-tamil-world-nayinar-nagendrans-condolences#comments</comments><guid isPermaLink="false">eef86637-7ea3-41b7-8969-825a0534808e</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:11:33 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:11:33.290Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nayinar Nagendran,இரங்கல்,மறைவு,demise,சாலமன் பாப்பையா,Solomon Papaiah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/en0ui3d5/57.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/en0ui3d5/57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> காலமானார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், தனது நகைச்சுவை கலந்த பேச்சாற்றலால் தலைமுறைகளை மகிழ்வித்தவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி என்னை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் மிகுந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.</p><h2>தமிழ் உலகிற்கே பேரிழப்பு</h2><p>தமிழர்களின் இல்லங்களில் எந்தப் பண்டிகை வந்தாலும், பட்டிமன்றம் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் சாலமன் பாப்பையா அவர்கள். எளிமையான தமிழ், நகைச்சுவை ததும்பும் பேச்சு, ஆழமான சிந்தனை என தனது தனித்துவமான ஆளுமையால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது குரலும், கருத்துகளும், கலகலப்பான பேச்சும் எண்ணற்ற குடும்பங்களின் பண்டிகை மகிழ்ச்சியில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகவே இருந்தன. ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த அவரது இழப்பு, தமிழ் உலகிற்கே பேரிழப்பாகும்.</p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்தாலும், அவரது தமிழும், நகைச்சுவையும், பட்டிமன்றப் பேச்சாற்றலும் என்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தென்காசியில் பெண் போலீசை தாக்கிய தலைமை காவலர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-chief-arrested-for-assaulting-female-police-officer-in-tenkasi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-chief-arrested-for-assaulting-female-police-officer-in-tenkasi#comments</comments><guid isPermaLink="false">c37b2c34-6e65-46bc-be02-20737f047c54</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:10:44 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:10:44.513Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெண் போலீஸ்,female police officer,தென்காசி,arrest,attack,பணியிடை நீக்கம்,police enquiry,ஏட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/h4dnndle/-000.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கடையநல்லூர் போலீஸ் நிலையம்- பொன்ராஜ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தென்காசியில் பெண் போலீசை தாக்கிய தலைமை காவலர் பொன்ராஜ் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/h4dnndle/-000.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தென்காசி மாவட்டம் </a>கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலரை சரமாரியாக தாக்கிய வழக்கில், தலைமை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>குடியிருப்பு பகுதியில் தகராறு</h2><p>தென்காசி மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக (ஏட்டு) பணிபுரிந்து வந்தவர் பொன்ராஜ் (வயது 40). அதே போலீஸ் நிலையத்தில் மீனா என்ற பெண் காவலரும் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நிமித்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>இதன் தொடர்ச்சியாக, போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பு அருகே கடந்த 9-ந்தேதி இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81"> தகராறு </a>ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஏட்டு பொன்ராஜ், பெண் என்றும் பாராமல் சக பெண் காவலரான மீனாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.</p><h2>வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது</h2><p>இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D"> பெண் போலீஸ் </a>மீனா, கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் ஆய்வாளர் கிறிஸ்டி தீவிர விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலை பொன்ராஜை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.</p><h2>எஸ்.பி அதிரடி நடவடிக்கை</h2><p>ஒரே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சக பெண் போலீசை, ஆண் தலைமை காவலர் தாக்கிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய போலீசே இது போன்ற செயலில் ஈடுபட்டதை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அசோக்குமார், தலைமை போலீஸ் பொன்ராஜை உடனடியாக<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"> பணியிடை நீக்கம் </a>செய்து உத்தரவிட்டார். இவர்களுக்கிடையேயான இந்த மோதலுக்குத் தனிப்பட்ட விரோதம் காரணமா அல்லது பணிச்சுமையால் ஏற்பட்ட வாக்குவாதமா என்பது குறித்து கடையநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Tenkasi | TN Police | பெண் போலீசாருடன் தகராறு | தலைமை காவலர் கைது <a href="https://x.com/hashtag/tenkasi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#tenkasi</a> <a href="https://x.com/hashtag/TNPolice?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNPolice</a> <a href="https://x.com/hashtag/arrest?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#arrest</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a><a href="https://t.co/mKcUZC3rcu">https://t.co/mKcUZC3rcu</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2098295402298790075?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் எனக்கூறி ரூ.3.30 லட்சம் பணம் பறிப்பு - தலைமைக் காவலர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/head-constable-arrested-for-extorting-330-lakh-in-chennai-by-posing-as-an-anti-narcotics-officer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/head-constable-arrested-for-extorting-330-lakh-in-chennai-by-posing-as-an-anti-narcotics-officer#comments</comments><guid isPermaLink="false">c6dc087b-2afc-4bcc-9686-ed57985048b3</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:24:02 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:24:02.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/c5dt8uha/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/c5dt8uha/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் நடத்தி வரும் கடையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி சிலர் சோதனை நடத்துவதற்காக வந்துள்ளனர். அந்த நபர்கள் பிரவீன் குமாரை மிரட்டி, கடையில் இருந்த 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு, காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.</p><p>அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு பிரவீன் குமார் கேட்டபோது, அந்த நபர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதையடுத்து பிரவீன் குமார் உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். </p><p>தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடைக்கு வந்தவர்களில் ஒருவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் ரவிவர்மன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவிவர்மனையும், அவருடன் கூட்டாக செயல்பட்ட மங்கிலால் என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்: 10 ஆண்டுகளில் புதிய இடம் தேட வேண்டியிருக்கும் -  வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-at-pattinapakkam-a-new-location-will-have-to-be-sought-in-10-years-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-at-pattinapakkam-a-new-location-will-have-to-be-sought-in-10-years-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">f9e6f300-5cdc-4be1-82c6-c783b5252ffd</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:22:06 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:22:06.116Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,பட்டினப்பாக்கம்,Secretariat,Pattinapakkam,தலைமைச் செயலகம்,புதிய தலைமைச் செயலகம்,new Secretariat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/3cvcpd4q/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/3cvcpd4q/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் எனக்கூறி அடுத்த 10 ஆண்டுகளில் தலைமைச் செயலகத்திற்கு இடம் தேட வேண்டியிருக்கும். இதையெல்லாம் உணர்ந்து, தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக முதல்-அமைச்சர் செயல்பட வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.</p><h2>மாநிலத்தின் அடையாளம்</h2><p>பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னைக்கு அருகில் குறைந்தது 3,000 ஏக்கரில் தலைமைச் செயலகம், சட்டமன்றம் கொண்ட புதிய நகரை உருவாக்க வேண்டும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் புதிய இடம் தேட வேண்டியிருக்கும்.</p><p>"சென்னை, பட்டினப்பாக்கம், கடற்கரையையொட்டி, 25.55 ஏக்கரில், ரூ. 1,200 கோடியில், தலைமைச் செயலகம், சட்டமன்றம் கட்டப்படும்" என, முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கும் முன்பு, அதே திட்டத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்து அறிவிக்க வேண்டும். கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவசர அவசரமாக தலைமைச் செயலகம், சட்டமன்றம் கட்டப்பட்டது. அதன் இன்றைய நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.</p><h2>புதிய நகரத்தை உருவாக்க வேண்டும்</h2><p>தலைமைச் செயலகம் என்பது மாநிலத்தின் அடையாளம். எனவே, புதிய தலைமைச் செயலகம் அமைத்தால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு அதை மாற்றுவதற்கான தேவை எழாத வகையில், பொருத்தமான இடத்தில், தேவையான நிலத்தில் அமைக்க வேண்டும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால், அடுத்த 10 ஆண்டுகளில், புதிய இடத்தை தேட வேண்டியிருக்கும்.</p><p>பட்டினப்பாக்கத்திற்கு வரும் சாந்தோம் நெடுஞ்சாலை மிக குறுகலானது. அதை அகலப்படுத்துவதும் சாத்தியம் இல்லாதது. கலங்கரை விளக்கத்திலிருந்து கடற்கரை வழியாக பட்டினப்பாக்கம் வரும் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்தால், அங்குள்ள மீனவர் குடியிருப்புகளை அகற்ற வேண்டும். அப்படிச் செய்தால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விடும்.</p><p>எனவே, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னைக்கு </a>அருகில், குறைந்தது 3,000 ஏக்கரில், தலைமைச் செயலகம், சட்டமன்றம், முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான வீடுகள். அரசு அலுவலர்கள் குடியிருப்புகள், பூங்காக்கள், மைதானங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், மெட்ரோ ரெயில், அகலமான பல அடுக்கு சாலைகள் போன்ற நவீன வசதிகளுடன், புதிய நகரத்தை உருவாக்க வேண்டும். அதுதான் நிரந்த தீர்வாக இருக்கும்.</p><h2>புதிய இடம் தேட வேண்டியிருக்கும்</h2><p>இதற்கான இடத்தை அடையாளம் கண்டு, அனைத்து அரசியல் கட்சிகள், பொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, புதிய தலைமைச் செயலகம், சட்டமன்றத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அது நிலைத்து நின்று தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் பெருமையைப் பேசும்.</p><p>மாறாக, நான் வைத்ததுதான் சட்டம், என் வீட்டுக்கு அருகிலேயே தலைமைச் செயலகத்தை கட்டுவேன் என பிடிவாதமாக செயல்பட்டால், அது ஆபத்தில் முடியும். இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் எனக்கூறி அடுத்த 10 ஆண்டுகளில் தலைமைச் செயலகத்திற்கு இடம் தேட வேண்டியிருக்கும். இதையெல்லாம் உணர்ந்து, தொலைநோக்குப் பார்வையுடன் முதல்-அமைச்சர் செயல்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்: சிபிஎம் கடும் எதிர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-at-pattinapakkam-cpm-strongly-opposes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-at-pattinapakkam-cpm-strongly-opposes#comments</comments><guid isPermaLink="false">436703f1-a00e-43b5-8a8d-914e588be6f9</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:07:33 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:07:33.454Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டினப்பாக்கம்,தலைமை செயலகம்,Pattinapakkam,சிபிஎம்,CPM</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/nfj22vfq/CPI.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/nfj22vfq/CPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையை அடுத்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக வெளியிட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்   கட்சி தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது: - தற்போதைய தலைமைச் செயலகத்தில் கடுமையான இட நெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் நிலவி வருவது உண்மைதான். இருப்பினும், நீண்டகாலக் கட்டுமானம் என்பதால், இதுபோன்ற விவகாரங்களில்  அரசு அவசர கதியில் எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது. பட்டினப்பாக்கம் பகுதியைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்கள்,  புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. அவர்களின் குரலுக்கும் அரசு செவி சாய்க்க வேண்டும்.</p><h2>அனைத்துக் கட்சிக் கூட்டம்</h2><p>புதிய தலைமைச் செயலகத்தை சென்னையை விட்டு மிகத் தொலைவில் அமைப்பதும் பொருத்தமாக இருக்காது. எனவே, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை அறிந்து ஒருமித்த முடிவை எட்டுவதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஒருமித்த கருத்தும் அனைவரும் ஏற்கத்தக்க பொருத்தமான இடமும் முடிவாகும் வரை, தற்போது பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் எவ்விதப் பணிகளையும் தொடங்கக் கூடாது. இது போன்ற விஷயங்களில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவது அவசியம்” என்றார்.  முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதி மீனவ அமைப்புகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது</p><h2>புதிய தலைமைச்செயலகம்</h2><p>தமிழக அரசின் புதிய தலைமைச்செயலக கட்டிடம் சென்னை பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், மீனவ அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடலும், கடல் சார்ந்த நெய்தல் இடமான அந்த இடத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டினால் அது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு பூதாகரமாக கிளம்பியுள்ளது. இது சம்பந்த மாக போராட்டக்களத்துக்கு செல்லவும் மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன.  ஆமைகள் முட்டையிடும் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவு இருந்தும், அரசு பட்டினப்பாக்கத்தை குறி வைத்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மீனவ அமைப்புகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற காரணம் இதுதான்: திருமாவளவன் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-the-reason-for-vck-leaving-the-dmk-alliance-thirumavalavan-speaks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-the-reason-for-vck-leaving-the-dmk-alliance-thirumavalavan-speaks#comments</comments><guid isPermaLink="false">d200c1e0-88d7-4178-8b32-a78f02790bd4</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:02:03 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:02:03.165Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,விசிக,VCK,திமுக கூட்டணி,DMK Alliance</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/byhfm6zm/16.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/byhfm6zm/16.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கூட்டணி உடைவதற்கு திமுகவின் அணுகுமுறைதான் காரணம் என திருமாவளவன் பேசியுள்ளார்.</p><h2>திமுகவின் தோல்விக்கு காரணம்</h2><p>விசிக தலைவர் திருமாவளவன், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது;</p><p>தவெகவை குறைத்து மதிப்பிட்டதுதான் திமுகவின் தோல்விக்கு காரணம். விஜய் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை என பேசினேன். ஆனால் அவர் அதிமுக, பாஜக, பாமகவிடம் ஆதரவு கேட்கவில்லை. நாங்கள் விமர்சித்தோம். ஆனால் விஜய் காங்கிரஸ் மற்றும் திருமாவளவனிடம் ஆதரவு கேட்டார். கவர்னர் ஆட்சி வந்துவிடக்கூடாது என இடதுசாரிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் விசிகவும் தவெகவுக்கு ஆதரவு அளித்தது.</p><h2>பதவி ஆசை இருந்திருந்தால்..</h2><p>விசிக கூடாரம் காலியாகிவிட்டதால் திருமாவளவன் விஜய்யின் பின்னால் சென்றதாக கூறுகிறார்கள். பதவிக்காக கூட்டணி மாறியதாக என் மீது வன்மத்தை கக்குகின்றனர். பதவி ஆசை இருந்திருந்தால் காங்கிரஸ் போனதுமே நானும் சென்றிருப்பேன். நான் எம்.எல்.ஏ.வாக இருந்திருந்தால் அமைச்சராக ஆசைப்பட்டு இருக்கமாட்டேன். என் நம்பகத்தன்மையை உடைக்க சிலர் முயற்சி செய்தனர். 2024ல் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற முயற்சித்தார்கள். ஆனால் கூட்டணி உடையாமல் காத்தேன்.</p><h2>திமுகவின் அணுகுமுறையே காரணம்</h2><p>திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்லிணக்கம் இல்லை. மதிமுகவை திமுக சின்னத்தில் நிற்க வைத்தீர்களே.. அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டு இருக்காதா? கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஏன் வழங்கவில்லை.? புதிதாக ஒரு கட்சியை கொண்டுவந்து கூடுதலாக சீட் கொடுத்ததால் பிரச்சினை ஏற்பட்டது. விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து விலகியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம். கூட்டணி கட்சிகளை திமுக கையாண்ட விதம்தான் தவறு என எந்த நியாயஸ்தர்களும் பேசவில்லை. திமுகதான் எங்களை கைவிட்டுவிட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை.</p><p>மதச்சார்பற்ற என்று இருந்தால்தான் பாஜக அல்லாத கூட்டணியாக இருக்கும். எனவே கூட்டணியின் பெயரில் மதச்சார்பற்ற எனும் வார்த்தையை சேர்க்க வேண்டும் விஜய்யிடம் கூறினேன்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p> ]]></content:encoded></item><item><title>கோவையில் வாலிபர் அடித்துக் கொலை.. 6 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-body-of-youth-buried-in-soil-recovered-6-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-body-of-youth-buried-in-soil-recovered-6-people-arrested#comments</comments><guid isPermaLink="false">5698acb5-b20a-4557-b3d4-050cb3ad3395</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:53:02 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:53:02.504Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,West Bengal,arrested,murder,கொலை,திரிபுரா,police enquiry,சடலம் மீட்பு,6 பேர் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/bram0m9n/000000000000001-0001-00000.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மண்ணில் புதைக்கப்பட்ட சடலம்]]></media:title><media:description type="html"><![CDATA[ இளைஞரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/bram0m9n/000000000000001-0001-00000.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை செட்டிபாளையம் அருகே மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கை மட்டும் வெளியே தெரிந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மண்ணில் தெரிந்த கை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை </a>செட்டிபாளையம் அடுத்துள்ள ஒத்தக்கால் மண்டம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காலி இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் மனித கை ஒன்று மட்டும் மண்ணிற்கு வெளியே தெரிவதைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><h2>தோண்டி எடுத்த போலீஸ்</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், அந்த இடத்தை தோண்டி பார்த்தனர். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">சடலம்</a> புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் அடித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்யப்பட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க இந்த பாழடைந்த இடத்தில் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.</p><h2>6 பேர் கைது</h2><p>இதுகுறித்து சந்தேகத்தின் பேரில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த துய்தே ரியாங் (22), சுனில் ராய் ரியாங் (24), கோதோ ராம் ரியாங் (30), சுமித் குமார் (20), ஸ்ரமித் தராங் (35), சந்தோஷ் குமார் (20) ஆகிய 6 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். </p><p>விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாதல் ஷித் (வயது 24) என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பாதலை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். எதற்காக இந்த கொலையைச் செய்தார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Kovai | Crime | வெளியே தெரிந்த கை.. தோண்டி எடுத்தவுடன் அதிர்ச்சி <a href="https://x.com/hashtag/coimbatore?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#coimbatore</a> <a href="https://x.com/hashtag/murdermystery2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#murdermystery2</a> <a href="https://x.com/hashtag/crime?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#crime</a> <a href="https://x.com/hashtag/police?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#police</a> <a href="https://x.com/hashtag/death?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#death</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a><a href="https://t.co/cAJeVqDRLg">https://t.co/cAJeVqDRLg</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2098296202131611863?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: முதல்-அமைச்சர் விஜய் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immanuel-sekaranars-memorial-day-chief-minister-vijay-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immanuel-sekaranars-memorial-day-chief-minister-vijay-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">7332a865-2dec-44e4-85c6-ee7082aa5cd9</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:44:24 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:44:24.092Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,இம்மானுவேல் சேகரனார்,Immanuel Sekaranar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/mnt276jg/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/mnt276jg/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.</p><p>முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த வீரத் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!</p><p>இளமையிலேயே நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சமூக நீதிப் போராட்டத்திலும் களம் கண்டவர் இமானுவேல் சேகரனார். சமத்துவமும், சுயமரியாதையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க அவர் காட்டிய வழியில் நடைபோட இந்நாளில் உறுதியேற்போம்!”</p><p>இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>