<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 19 Sep 2026 16:56:05 +0000</lastBuildDate><item><title>சென்னையில் 20-வது ரோஜ்கார் மேளா - பணி நியமன ஆணைகளை வழங்கிய எல்.முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/20th-rozgar-mela-in-chennai-l-murugan-hands-over-appointment-letters</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/20th-rozgar-mela-in-chennai-l-murugan-hands-over-appointment-letters#comments</comments><guid isPermaLink="false">ab7e8dbd-5802-45f5-85b5-d113a0b9eaf0</guid><pubDate>Sat, 19 Sep 2026 16:33:01 +0000</pubDate><atom:updated>2026-09-19T16:33:01.306Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L.Murugan,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/53ih8mx7/State-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/53ih8mx7/State-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற 20-வது ரோஜ்கார் மேளா நிகழ்வில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு, இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற 20-வது ரோஜ்கார் மேளா நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று, 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிதாக அரசுப் பணியில் இணையவுள்ள இளைஞர்களிடம் உரையாற்றினார்.</p><p>சென்னையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற 20-வது ரோஜ்கார் மேளா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினேன்.</p> <p>இந்நிகழ்வில் பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்ட இளைஞர்கள், வருமான வரித் துறை, ESIC, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், பாதுகாப்புத் துறை, அஞ்சல் துறை, ஜிப்மர் (JIPMER), தெற்கு ரயில்வே உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் தங்களது பணியைத் தொடங்க உள்ளனர்.</p><p>புதிய பொறுப்புடன் அரசுப் பணியில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தங்களது அறிவு, திறமை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிட வாழ்த்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-in-high-court-seeking-to-halt-the-construction-of-the-new-secretariat-at-pattinapakkam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-in-high-court-seeking-to-halt-the-construction-of-the-new-secretariat-at-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">89ad827f-f6c2-468f-a9aa-7417284cf0dd</guid><pubDate>Sat, 19 Sep 2026 16:23:53 +0000</pubDate><atom:updated>2026-09-19T16:23:53.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court,பட்டினப்பாக்கம்,தலைமை செயலகம்,ஐகோர்ட்,Pattinapakkam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0t8sqln7/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0t8sqln7/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பட்டினம்பாக்கத்தில வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றுக்கு சொந்தமான 25 ஏக்கர் பரப்பிலான இடத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட இருப்பதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.</p><p>இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் வேந்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். </p><p>அந்த மனுவில், நிதி நெருக்கடியில் இருப்பதாக அரசு அறிவித்திருக்கக்கூடிய சூழலில், 1,200 கோடி ரூபாய் செலவு செய்து புதிய தலைமை செயலகம், கட்டுவதற்கு பதிலாக ஜார்ஜ் கோட்டையில் தற்போது இயங்கி வரும் தலைமை செயலக கட்டிடத்தை புதுப்பித்து பயன்படுத்தினால் மக்களுடைய வரிப்பணம் சேமிக்கப்படும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். </p> <p>மேலும் சென்ட்ரல் ரெயில் நிலையம், ஐகோர்ட்டு, பேருந்து நிலையம், அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்தால் பொதுமக்கள் வந்து செல்வது கடினமாக இருக்கும் எனவும், பட்டினப்பாக்கத்தில் புதிய வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் புதிய தலைமை செயலகத்தை கட்டினால், ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கக்கூடிய திட்டம் பாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். </p><p>அதோடு மீனவர்களின் நலனும் பாதிக்கப்படும் என்பதால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த வழக்கின் முடிவு வரும் வரை தலைமை செயலக கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தேசியவாதத்தை தேர்ந்தெடுத்த இளைய தலைமுறையினர்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-younger-generation-has-chosen-nationalism-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-younger-generation-has-chosen-nationalism-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b475d0ad-4683-4a4a-b5f2-90854dec80ab</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:49:53 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:49:53.864Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/rof5f7mu/Untitled-18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/rof5f7mu/Untitled-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் இனியாவது தனது வெறுப்பரசியலை நிறுத்தி விட்டு, ஆரோக்கியமான அரசியலின் அடிப்படையை கற்றுக் கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.</p><h2>மாணவர் சங்கத் தேர்தல்</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில், மாணவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அமோக வெற்றி பெற்றுள்ள அகில பாரத வித்தியார்த்தி பரிசத்(ABVP) மாணவர் அமைப்பின் வேட்பாளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.</p><p>சமூக விரோதிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த அனைத்து திசை திருப்பு நாடகங்களையும் முறியடித்து, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையும், டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள 4 முக்கியப் பதவிகளில் 3 பதவிகளையும் ABVP அமைப்பு வென்றுள்ளது, தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கான பாடம். ஆயிரம் நவீன உத்திகளைக் கொண்டு நமது இளைஞர்களை யார் Influence செய்ய நினைத்தாலும், இறுதியில் தேசியமும் தெய்வீகமுமே வெல்லும்.</p><h2>தோல்வியை மட்டுமே சந்திக்கும் காங்கிரஸ்</h2><p>எனவே, “சேற்றிலும் அடிவாங்கியாச்சு, சோற்றிலும் அடிவாங்கியாச்சு” என்ற பிரபல நகைச்சுவை வசனத்தைப் போல, பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கல்லூரியின் மாணவர் சங்கம் என கால் பாதிக்கும் அத்தனை தேர்தல்களிலும், தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ், இனியாவது தனது வெறுப்பரசியலை நிறுத்தி விட்டு, ஆரோக்கியமான அரசியலின் அடிப்படையை கற்றுக் கொள்ள வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள் - இபிஎஸ் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-spend-one-rupee-and-advertise-for-one-lakh-rupees-eps-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-spend-one-rupee-and-advertise-for-one-lakh-rupees-eps-review#comments</comments><guid isPermaLink="false">26aab16c-6834-4238-961d-51021f8bb295</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:43:00.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,EPS</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9awtasmf/eps.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9awtasmf/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கு தவெக அரசு விளம்பரம் செய்கிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.</p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palanisamy">எடப்பாடி பழனிசாமி</a> சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இன்றைக்கு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். விபத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைகால் புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.</p><p>ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி வைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களுக்கு வேறு பெயர் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சிதான்.</p><p>ஏழை பெண்களின் திருமணத்திற்காக அதிமுக ஆட்சியில் அம்மாவின் சிந்தனையில் உதித்த அருமையான திட்டம் தாலிக்கு தங்கம் திட்டம்.  அந்த திட்டத்தின் பெயரையும் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் அந்த திட்டம் தொடங்கப்படவில்லை.</p><h2>மூலதனமே ரீல்ஸ்... ரீல்...</h2><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை பொறுத்தவரை, ஏழைகளுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்குவதில் தவறு இல்லை. ஆனால், அந்த திட்டத்திற்கு எவ்வளவு பெரிய வடிவமைப்பு கொடுக்கிறார்கள் பாருங்கள். அதிமுக ஆட்சியில் தொடங்கபட்ட திட்டங்களுக்கு விளம்பரம் செய்ததில்லை. ஆனால் தற்போது ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள். த.வெ.க. கட்சியின் மூலதனமே ரீல்ஸ்... ரீல்... இதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>திரைப்பட தணிக்கை சான்றிதழுக்கான புதிய வழிகாட்டுதல்கள் - வானதி சீனிவாசன் வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-guidelines-for-film-certification-vanathi-srinivasan-welcomes-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-guidelines-for-film-certification-vanathi-srinivasan-welcomes-the-move#comments</comments><guid isPermaLink="false">62de0d1d-c422-4875-9810-90ec9b787eac</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:37:28 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:37:28.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/2xftuyjf/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/2xftuyjf/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், போதைப்பொருள் தடுப்பு எச்சரிக்கை மற்றும் வயது சார்ந்த புதிய UA (7+, 13+, 16+) சான்றிதழ் பிரிவுகள் உட்பட, வன்முறை, ஆபாசம் மற்றும் சமூக விரோத காட்சிகளைத் தவிர்க்கும் வகையிலான புதிய திரைப்படச் சான்றிதழ் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதை முன்னாள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய உறுப்பினர்  என்ற வகையில் வரவேற்கிறேன்.</p><p>ஆயிரம் கூட்டங்கள் போட்டு சொல்லும் ஒரு கருத்தை இரண்டரை மணி நேர சினிமா பல லட்சக்கணக்கான மக்களுக்கு மனதில் ஆழமாக பதிய வைத்துவிடும் என்பதாலேயே எப்போதும் வெகுஜன ஊடகங்களுக்கு கருத்துரிமையைக் கூறும் சுதந்திரம் அதிகம். ஆனால் சமீப காலங்களாக முரண்பாடான கருத்துக்களும், ஆபாசங்கள் நிறைந்த காட்சிகளும், வன்முறையைத் தூண்டும் வகையில் இறையான்மைக்கு எதிரான பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருவது சமுதாய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.</p><p>எனவே இதனை தவிர்க்கும் நோக்கிலும், தரமான நல்ல படைப்புகள் வர வேண்டும் என்ற நோக்கிலும் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தரமான நல்ல கருத்துள்ள, குடும்பத்துடன் அமர்ந்து காணும் வகையில் புதிய திரைப்படங்கள் வெளியாவதை உறுதி செய்துள்ளது.</p> <p>இதுமட்டுமன்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் வீடியோக்கள், குறும்படங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவும், விதிகளை மீறி உருவாக்கப்படும் ஐடிகளை நீக்கம் செய்தும் அவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை  கேட்டுக் கொள்கிறேன். கருத்து சுதந்திரம் என்பது சமூகத்தின் மீதான பொறுப்புடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். பொழுதுபோக்கையும், உத்வேகத்தையும் அளித்து, சமூகத்திற்கு நேர்மறையாகப் பங்களிக்கும் சினிமா மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை நாம் ஊக்குவிப்போம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>நீதி கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் ஒடுக்கி கைது செய்வதா? -  தவெக அரசிற்கு கனிமொழி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-right-to-arrest-victims-fighting-for-justice</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-right-to-arrest-victims-fighting-for-justice#comments</comments><guid isPermaLink="false">b16a9539-1359-45b4-9719-ce8ef2c81cbe</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:32:56 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:32:56.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,கண்டனம்,கனிமொழி எம்பி,condemns,MP Kanimozhi,நீதி கேட்டு,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zgrib2l8/kani.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:title><media:description type="html"><![CDATA[ நீதி கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் ஒடுக்கி கைது செய்வதா? -  தவெக அரசிற்கு கனிமொழி கண்டனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zgrib2l8/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் தினமும் தொடரும் கொலைகளைத் தடுக்க வக்கற்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசு</a>, கொலைகளுக்கு நீதி கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வதா என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">கனிமொழி எம்.பி.</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவில் தெரிவித்ததாவது:-</p> <h2>மாணவர் தமிழ்ச்செல்வன் </h2><p>நேற்றைய தினம் மதுரையில்  மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு உரிய நீதி கேட்டு போராடியவர்களை கடுமையாக தாக்கி கைது செய்துள்ளது. இன்று சிவகங்கையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">இரட்டை கொலை</a> செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி கைது செய்திருக்கிறது.</p> <h2>திறனற்ற அரசு?</h2><p>குற்றவாளிகளை ஒடுக்க சொன்னால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறதா இந்த திறனற்ற அரசு?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் 100 நாள் சாதனைகள் என்ன? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-100-day-achievements-of-the-singappenn-special-task-force</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-100-day-achievements-of-the-singappenn-special-task-force#comments</comments><guid isPermaLink="false">d790ddcb-be64-431c-a12e-88cf9e44eba3</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:28:20 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:28:20.280Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாதனைகள்,Lioness Special Task Force,சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,சிங்கப்பெண் போலீஸ் படை,சிங்கப்பெண் அதிரடிப்படை,சிங்கப்பெண் சிறப்புப்படை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/iq6eiyzp/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/iq6eiyzp/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, முதல் 100 நாட்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.</p><h2>100 நாள் சாதனை</h2><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ளது. 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்னென்ன செய்தது என்பது பின்வருமாறு:</p><ul><li><p>4,231 புகார்களுக்கு சம்பவ இடத்திற்கே சென்று நடவடிக்கை.</p></li><li><p>58 பெண்கள், 94 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்பு.</p></li><li><p>111 பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் மீட்பு.</p></li><li><p>54 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.</p></li><li><p>636 பள்ளி இடைநிறுத்த மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர உதவி.</p></li><li><p>334 குற்ற வழக்குகள் பதிவு செய்ய முக்கியப் பங்களிப்பு.</p></li><li><p>கல்வி நிறுவனங்களில் 14,231 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.</p></li><li><p>பிற பொது இடங்களில் 34,632 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.</p></li><li><p>புலம்பெயர் தொழிலாளர்களிடையே 2,236 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.</p></li><li><p>மாநிலம் முழுவதும் 15,77,460 பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் தொடர்ந்து கண்காணிப்பு.</p></li><li><p>70 களப்பிரிவுகள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p></li><li><p>பெண்களுக்கு உதவ 1091 சிங்கப்பெண் உதவி எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது.</p></li></ul><h2>அதிரடிப்படை எடுத்த நடவடிக்கைகள்</h2><p>இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய், புதிதாக அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை (Singappen Special Force SSF) 09.06.2026 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், இச்சிறப்புப்படை 10.06.2026 முதல் செயல்படத் தொடங்கியது.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதற்கு முன்பே குற்றம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் அதற்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே கணித்து அதை தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு காவல் அமைப்பாகும். காவல் இருப்பு, தீவிர ரோந்துப்பணி, கண்காணிப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உடனடி தலையீடு ஆகியவற்றின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பாதுகாப்பு உணர்வை இச்சிறப்புப்படை மேம்படுத்தியுள்ளது.</p><p>செயல்படத் தொடங்கிய முதல் 100 நாட்களுக்குள், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் 70 களப்பிரிவுகளை ரோந்து பணியில் ஈடுபடுத்தி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு அவசர காலங்களில் விரைவாகவும் எளிதாகவும் உதவி கிடைக்கச் செய்யும் வகையில், 22.06.2026 9 1091, சிங்கப்பெண் உதவி எண்ணாக (Singappen Helpline) அறிவிக்கப்பட்டது. இவ்வுதவி எண், 112 அவசரகால உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டு புகார்களுக்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி எண் பயிற்சி பெற்ற காவல் ஆளிநர்களால் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.</p><p>களத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 70 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் களப்பணியாளர்கள் அனைவருக்கும், அவர்களது நுண்திறன் மற்றும் பணித்திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 79 கூடுதல் குழுக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, களப்பணிகளுக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை களப் பிரிவினர்களின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்காக இணையவழிப் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அவைகளில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை கையாளுதல், பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளுதல், சமூக ஊடகங்களை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துதல், இணையவழிப் பாதுகாப்பு மற்றும் இணையவழிக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.</p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் சமூக பங்களிப்பை வலுப்படுத்தும் முன்னெடுப்பாக, 38 அரசு சாரா தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் 19.06.2026 அன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்தால் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் மூலம் கள அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு சேவைகள் மற்றும் பயனுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அணுகு முறைகள் குறித்து கருத்துகள் மற்றும் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் பிற துறைகளான உயர்கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளுடனும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலைமையகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.</p> <p>இதன் மூலம் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதுடன், தகவல்களை உரிய நேரத்தில் பகிர்ந்து உதவி தேவைப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரைவான ஆதரவை முனைப்புடன் வழங்கி வருகிறது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பட தொடங்கிய முதல் 100 நாட்களில் பல முக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 4,231 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அறிவுசார் குறைபாடுகளுடன் காணப்பட்ட 111 நபர்களை மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 58 பெண்களையும், 94 குழந்தைகளையும் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்புள்ள சூழல்கள் உருவாகாமல் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் 54 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளனர். பள்ளிப்படிப்பை இடை நிறுத்திய 636 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவியுள்ளனர்.</p><p>சிங்கப்பெண் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பல்வேறு குற்றச் சம்பவங்களில் சிறப்பு அதிரடிப்படை களப்பிரிவினர் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கியதுடன், 334 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர். குற்றத்தடுப்பு மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கல்வி நிறுவனங்களில் 14,231 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன, பிற பொது இடங்களில் 34,632 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களிடையே 2,236 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 1,577,460 பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் (vulnerable hotspots), சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் முறையாக கண்காணிப்பு மேற்கொண்டு தொடர்ந்து ரோந்து மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் தாங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை எவ்வித தயக்கமும் அச்ச உணர்வுமின்றி தானாக முன்வந்து தெரிவித்துள்ளனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை களப் பிரிவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் போது மேற்கொண்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, 20 சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்கனவே நிகழ்ந்த குற்றங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காவல்துறை உதவி கிடைக்கச் செய்யப்பட்டதுடன், உரிய நேரத்தில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.</p><p>பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிக்க அவர்களை ஊக்குவிப்பதிலும், தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு குற்றச் சம்பவத்தில், ஏப்ரல் 2026-ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், குடும்பத்தினரால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த அச்சத்தின் காரணமாக, ஆரம்பத்தில் சம்பவத்தை மறைத்து, நகைகள் திருடப்பட்டதாக மட்டுமே தெரிவித்தார் பின்னர், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் நம்பிக்கை பெற்ற அவர், தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்தும் வெளிப்படையாகத் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் புதிதாக வழக்குப் பதிவு செய்து, பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஏற்கனவே சரித்திரப் பதிவேடு (History Sheet) பராமரிக்கப்பட்டு வந்த குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் மதுரை மாநகரிலுள்ள ஒரு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 7ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி, ஒரு வருடத்திற்கும் மேலாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த, 55 வயது நபர், பற்றி தகவல் தெரிவித்தார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு, சிறுமியின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p><p>திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய போது, 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஏப்ரல் 2024-ம் வருடம் தனது மாமா தனது வீட்டிற்கு வந்த போது, தகாத முறையில் தொட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் தெரிவித்தார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p><p>இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக மாணவிகள் தெரிவித்தனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, போக்சோ சட்டம் மற்றும் SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p><p>மற்றொரு சம்பவத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 11 வயது சிறுமி ஒருவர், கடந்த நவம்பர் 2024-ம் வருடம் 66 வயது நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். சிங்கப்பெண் சிறப்பு உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அதிரடிப்படையினர்</p><p>சேலம் மாவட்டத்தில், உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய போது, டிசம்பர் 2025-ம் வருடம் தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, உறவினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஒரு மாணவி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய உதவி வழங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரால் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவர் ஒருவர் தாமாக முன்வந்து, 20 மற்றும் 30 வயது மதிக்கதக்க இரு ஆண்கள் கடந்த மூன்று மாதங்களாக தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி, மிரட்டி வந்ததாக தெரிவித்தார். அம்மாணவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p><p>மதுரை மாநகரில் அடையாளம் தெரியாத ஷேர் ஆட்டோ ஓட்டுநரால் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை மேற்கொண்டு, மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலம் அந்நபரை அடையாளம் காண சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதுடன், தீவிர தொடர் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் மூலம் அந்நபரை கண்டறிந்து கைது செய்தனர். காவல்துறை விசாரணையை திசை திருப்பவும், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு உதவவும் முயன்ற மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தயக்கமின்றி உதவியை நாடவும், குற்றங்களுக்கு எதிராக புகாரளிக்கவும் ஏதுவான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்ட முதல் 100 நாட்களில், தொடர் ரோந்துப் பணிகள் மூலம் காவல் இருப்பை உறுதி செய்து சமூகப் பங்களிப்புடன் கூடிய முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பணித்திறனை மேம்படுத்தி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், இச்சிறப்பு அதிரடிப்படை தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும் நோக்குடன் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உதவித்தொகை வழங்குவதாக கூறி தச்சு தொழிலாளியிடம் ரூ.58,000 மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-carpenter-defrauded-of-58000-by-someone-claiming-to-offer-a-scholarship-on-behalf-of-the-school-education-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-carpenter-defrauded-of-58000-by-someone-claiming-to-offer-a-scholarship-on-behalf-of-the-school-education-department#comments</comments><guid isPermaLink="false">0a850248-fb94-46d9-a46f-43ae0bc41a67</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:20:54 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:20:54.651Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/99suopcz/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/99suopcz/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த தச்சு தொழிலாளியான ரமேஷ் என்பவரின் மகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மர்ம நபர்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர். மேலும் அவர்கள் அரசு அதிகாரிகள் போல் நடித்து காணொலி அழைப்பும் மேற்கொண்டுள்ளனர். </p><p>இதையடுத்து அவர்கள் உதவித்தொகையை அனுப்புவதற்காக வங்கி விவரங்களை தருமாறு கேட்டுள்ளனர். இதனை நம்பி ரமேஷ் தனது வங்கி விவரங்களை கொடுத்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து 58 ஆயிரம் ரூபாயை அந்த நபர்கள் தங்களது கணக்கிற்கு மாற்றிவிட்டு, தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளனர். </p><p>தனது பணம் பறிபோனதை அறிந்த ரமேஷ், இது குறித்து சேலம் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு உதவித்தொகை அல்லது கடன் வழங்குவதாக வரும் போலி அழைப்புகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வேங்கைவயல் விவகாரத்தில் வன்னிஅரசு பேச்சு கபடநாடகம்; கோவி.செழியன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vengaivayal-issue-vanniarasu-speech-drama-kovi-seliyan-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vengaivayal-issue-vanniarasu-speech-drama-kovi-seliyan-criticism#comments</comments><guid isPermaLink="false">acdfcb9a-e975-4e88-8d98-b2977e0783cb</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:17:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:17:11.234Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமர்சனம்,கோவி.செழியன்,Public,Vanni Arasu,Vengaivayal Case,வேங்கைவயல் விவகாரம்,வன்னியரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/h2s93zy7/cheliyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோவி.செழியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேங்கைவயல் விவகாரத்தில் வன்னிஅரசு பேச்சு கபடநாடகம்; கோவி.செழியன் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/h2s93zy7/cheliyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேங்கைவயல் விவகாரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">வன்னியரசு</a> பேச்சு கபடநாடகம் என்று கோவி.செழியன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, திமுக அதிகாரப்பூர்வ எகஸ் தள பதிவில் தெரிவித்ததாவது:-</p><h2>அமைச்சர் வன்னி அரசு</h2><p>பண்ணையார் ஆட்சியில் மந்திரி ஆகியிருக்கும் வன்னி அரசு மன்னிப்பு கேட்பாரா? -திமுக எம்.எல்.ஏ கோவி.செழியன் கேள்வி மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அக்கறை காட்டுவது ஒரு நாடகம். முதலில், வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என சொல்லியிருக்கிறார் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு.</p><h2>வேங்கைவயல் </h2><p>தனக்கு நேர்ந்த அவலத்தை ரோஹித் வெமுலாவோடு ஒப்பிட்டு, கதறினார் பாரதிதாசன். ரோஹித் வெமுலாவுக்கு நடந்தது போன்ற துன்புறுத்தலை பாரதிதாசனுக்கு செய்துவிட்டு, வேங்கைவயலுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் வன்னி அரசு. அன்றைக்கு ரோஹித் வெமுலாவுக்கு ஆர்.எஸ்.எஸ் நடத்தியதை மறைமுக பாஜக ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிற விஜய் அரசு பாரதிதாசனுக்கு இன்றைக்கு நடத்தியிருக்கிறது. இவையெல்லாம் அம்பலப்பட்டு போனதாலேயே  வேங்கைவயல் என்ற விவகாரத்தை தூக்கி கொண்டு வருகிறார்.</p><h2>அதை யார் தடுத்தது?  </h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D">வேங்கைவயல்</a> விவகாரத்தில் அறிவியல்பூர்வ விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகளை கண்டறிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என்று தவெக அரசு கருதினால், அந்த குற்ற பத்திரிகையை திரும்ப பெற்று - மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன்னிஅரசு குற்றஞ்சாட்டும் நபர்களை கைது செய்து விசாரிக்கட்டும்! அதை யார் தடுத்தது?  </p><h2>சந்தர்ப்பவாதம்!</h2><p>அமைச்சராக இருந்து கொண்டு, அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு, தவெக பாணி பழிபோடும் அரசியலை வன்னிஅரசு செய்வது சந்தர்ப்பவாதம்!  மறுவிசாரணைக்கு உத்தரவிட முதல்-அமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைக்கும் அரசியல் நேர்மை வன்னி அரசிடம் இருக்கிறதா?</p> <h2> எப்படி தொடர்ந்தது?</h2><p>வேங்கைவயல் விவகாரத்தில் திமுக ஒருதலைபட்சமாக செயல்பட்டது என்றால், எப்படி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் வன்னி அரசுக்கு அது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை? விசிக, திமுக கூட்டணியில் எப்படி தொடர்ந்தது? என வன்னி அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.</p> <h2>பாராட்டு பத்திரம் </h2><p>“திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர் மு.க.ஸ்டாலின்தான். ஆட்சியில் இருந்துகொண்டே சனாதனத்திற்கு எதிராக செயல்படுகிறார்’’ எனப் பாராட்டு பத்திரம் வாசித்தவர்தான் வன்னி அரசு. </p><h2>மன்னிப்பு கேட்பாரா?  </h2><p>இன்று அமைச்சராக வன்னி அரசு சட்டமன்றத்தில் மோடி, அமித்ஷா பெயரை உச்சரித்த போது அவையெல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் கட்சி யாரென்று வன்னி அரசுக்கு இப்போது தெரிந்திருக்குமே! ’கொள்கை எதிரி’ என சொல்லிக் கொண்டே அந்த எதிரியோடு மறைமுக கூட்டு வைத்திருக்கும் விஜய் அரசுக்கு வெண்சாமரம் வீசும் வன்னி அரசு மந்திரி பதவியை ஏற்று கொண்டதற்காக மன்னிப்பு கேட்பாரா?  </p><h2>அருவருப்பின் உச்சம்</h2><p>விஜய் பங்கேற்ற கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் துள்ள துடிக்க இறந்தார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சென்னைக்கு அழைத்து சந்தித்ததை “அருவருப்பின் உச்சம். கவர்ச்சி திமிர். பண்ணையார்கள் கூட இந்த அருவருப்பைச் செய்ததில்லை’’ என வன்னி அரசு கடுமையாக விமர்சித்தார். அந்த பண்ணையார்கள் ஆட்சியில்தானே மந்திரியாக வலம் வருகிறோமே என வெட்கப்பட மாட்டீர்களா? அப்படி பேசியதற்காக எங்காவது நீங்கள் மன்னிப்பு கேட்டிருக்கிறீர்களா?  மந்திரி நாற்காலிக்காக தனது கொள்கைகளையும் பேச்சுகளையும் இவ்வளவு சீக்கிரமாக மாற்றி கொள்ள முடியுமா? என்ற கேள்வியை வன்னி அரசை பார்த்துத்தான் மக்கள் கேட்பார்கள்.</p><h2>அடகு வைக்க துணிந்துவிட்டார்</h2><p>’சந்தர்ப்பவாத அரசியல்’ ’பிழைப்புவாத அரசியல்’ எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதைவிடக் கேவலமான 'அரசியல் வியாபாரவாதம்' என்ற புதுத் தியரியை அல்லவா உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். பட்டியலின மக்களின் உரிமைகளை இன்றைக்கு அதிகாரத்திற்காகவும், அமைச்சர் பதவிக்காகவும், சுயநலத்திற்காகவும் அடகு வைக்க துணிந்துவிட்டார் வன்னி அரசு.</p><h2>மாற்றி சுழல்கிறது</h2><p>விஜய் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச பாடல்கள் அதிகம் என்றெல்லாம் முழங்கிய நாக்கு, இன்று அதிகாரத்தின் மடியில் அமர்ந்து கொண்டு மாற்றி சுழல்கிறது! “தொட்டபட்ட ரோட்டு மேல முட்டை பரோட்டா…” என்ற விஜய் பாடலை விவாத நிகழ்ச்சி ஒன்றில் விமர்சித்த வன்னி அரசுதான், அமைச்சர் நாற்காலி கிடைத்ததும் “சேரி இல்லா ஊருக்குள்ள.. பொறக்க வேணும் பேர புள்ள’’ என மாற்றி பாடுகிறார். விஜயை விட பிரமாதமான நடிப்பை வெளிக்காட்டுகிறார் வன்னி அரசு.  </p><h2>மன்னிப்பு கேளுங்கள்</h2><p>சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் வென்று எம்.எல்.ஏ ஆகி, ஆள் காட்டி விரலின் அடையாள மை அழிவதற்கு முன்பே விஜய் ஆட்சியில் போய் ஒட்டிக் கொண்டு அமைச்சர் ஆனீர்களே. அதற்காக நீங்கள் முதலில் மன்னிப்பு கேளுங்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களின் பெயரை மாற்றியுள்ளது த.வெ.க. அரசு:  மு.க. ஸ்டாலின் பேச்சு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-schemes-renamed-by-dmk-govt-mk-stalin-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-schemes-renamed-by-dmk-govt-mk-stalin-speech#comments</comments><guid isPermaLink="false">8339d652-a1cd-490b-864e-0a03c13286e1</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:10:38 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:10:38.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,த.வெ.க.,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/2s215lxp/tnfcst.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/2s215lxp/tnfcst.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களின் பெயரை த.வெ.க. அரசு மாற்றியுள்ளது என மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.</p><p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா கடந்த 15-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.  விழா நடைபெற இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.</p> <p>இதனையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கி நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது மற்றும் முரசொலி செல்வம் விருது ஆகியவை வழங்கப்பட்டன.</p><p>விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 7 பேருக்கும் விருதுகளை வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார்.  அவர்களுடன் ஒன்றாக புகைப்படமும் எடுத்து கொண்டார்.</p> <h2>பெரிய அலை</h2><p>அவர் கூட்டத்தில் பேசும்போது, ஜனநாயகம் மரணமடைந்து இடைத்தேர்தல் வந்துள்ளது.  விரலில் வைத்த மை காய்வதற்குள் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை திணித்திருக்கிறார்கள்.  குதிரை பேரம் நடத்தி இடைத்தேர்தலை திணித்ததுதான் மாற்றமா? மானங்கெட்ட மாற்றமா? இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என பேசியுள்ளார்.</p><p>தொடர்ந்து அவர், பரந்தூர் விமான நிலையம் முடக்கப்பட்டு உள்ளது.  இதனால் தமிழகம், 25 ஆண்டுகள் பின் தங்கி சென்று விட்டது.  தமிழகத்தில், ஆட்சியமைத்த கட்சிக்கு பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்கவில்லை.  ஆனால், பெரிய அலை அடித்தது போன்றும், தமிழ்நாடே அவர்களுக்கு ஆதரவளித்தது போன்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.</p> <h2>குதிரை பேரம்</h2><p>உண்மையில் நம்முடைய கூட்டணி கட்சிகள் அளித்த ஆதரவில்தான் ஆட்சியமைத்து உள்ளனர்.  ஆனால், அதனையும் நம்பாமல் குதிரை பேரம் நடத்தும் கட்சியாக நடந்து கொண்டிருக்கிறது.  தி.மு.க.விற்கு கொள்கையும், லட்சியமும் தான் முக்கியம்.  தி.மு.க. பார்க்காத தோல்வி இல்லை.  தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் த.வெ.க. ஆட்சி நடக்கிறது.</p><p>தொடர்ந்து அவர், என் மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை; என் தியாகத்திற்கு மார்க் போட யாருக்கும் தகுதி இல்லை.  தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களின் பெயரை மாற்றியுள்ளது த.வெ.க. அரசு.  தமிழகத்தில் தற்போது, நம்முடைய ஆட்சி இருந்திருந்தால், பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் கிடைத்திருக்கும்.  ரூ.8 ஆயிரம் தொகையும் கிடைத்திருக்கும் என பேசினார்.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்: 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-2-days-of-chief-minister-vijays-campaign</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-2-days-of-chief-minister-vijays-campaign#comments</comments><guid isPermaLink="false">4556fac4-7667-42e7-98d3-cdfd6d8bcdec</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:05:09 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:05:09.979Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVKVijay,தவெக,விஜய்,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,CMVijay,TVK Alliance</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ufyraiqw/cmvijayone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மதுராந்தகம்:]]></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ufyraiqw/cmvijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகத்தில் செப்.25, அக்.2 ஆகிய 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>.</p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், முதல்வரின் மதுராந்தகம் தொகுதி பிரசார தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மது​ராந்​தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகு​தி​களுக்கும் வருகிற அக். 6 ஆம் தேதியில் இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்​ளது.</p><p>தொடர்ந்து, அக். 9 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த செப். 9 ஆம் தேதியில் தொடங்கி செப். 16 ஆம் தேதி​யுடன் முடிவடைந்​தது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.</p><p>இந்தநிலையில், முதல்-அமைச்சரும், தவெக தலைவருமான விஜய், மதுராந்தகத்தில் செப்.25 மற்றும் அக்.2ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.</p><p>செப்.25இல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். அக்.2ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் செல்லும் முதல்-அமைச்சர் விஜய் வாகனத்தில் இருந்தபடியே பிரசாரம் மேற்கொள்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18,500 போலீசார் பாதுகாப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-in-chennai-tomorrow-18500-police-personnel-deployed-for-security</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-in-chennai-tomorrow-18500-police-personnel-deployed-for-security#comments</comments><guid isPermaLink="false">0382e939-4c7f-4b56-9c31-d1102b2d2baf</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:54:51 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:54:51.343Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/7so2ipa2/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/7so2ipa2/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 14-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வந்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. </p><p>இந்த சிலை கரைப்புக்காக சென்னையில பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் மட்டும் நாளை விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 16,500 காவல் துறையினர், 2,000 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சிலைகளை கரைக்கக்கூடிய இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கண்காணிப்பு கோபுரங்கள், டிரோன்கள் மூலமாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் சென்னை காவல்துறை தரப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்க கூடாது எனவும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>சர்வதேச கடற்கரை தூய்மை தினம்; பாலவாக்கம் கடற்கரையில் 2.40 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-2-4-metric-tons-waste-removed-palavakkam-beach</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-2-4-metric-tons-waste-removed-palavakkam-beach#comments</comments><guid isPermaLink="false">c3f23f1a-4895-491e-945a-d83a91926dcf</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:40:32 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:40:32.918Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கடற்கரை,beach,கழிவுகள் அகற்றம்,Waste disposal,International,தூய்மை,Palavakkam,சர்வதேச,Coastal,Cleanup</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/1imvdqd2/beach.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பாலவாக்கம் கடற்கரை]]></media:title><media:description type="html"><![CDATA[ சர்வதேச கடற்கரை தூய்மை தினம்; பாலவாக்கம் கடற்கரையில் 2.40 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/1imvdqd2/beach.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சர்வதேச <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">கடற்கரை</a> தூய்மை தினத்தினை முன்னிட்டு, பாலவாக்கம் கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">தூய்மை பணியில்</a> 300க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று 2.40 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றினர். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>சர்வதேச கடற்கரை தூய்மை தினம்</h2><p>ஸ்வச்ச் சாகர் சுரக்ஷித் சாகர் 5.0 என்பது சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை  முன்னிட்டு, கடற்கரைப் பகுதிகளை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், நெகிழி பொருட்கள் இல்லாத பகுதிகளாகவும் பராமரிப்பதையும், கடல் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலைப்பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படும் கடற்கரை தூய்மை மற்றும் விழிப்புணர்வு இயக்கமாகும்.</p><h2>பாலவாக்கம் கடற்கரை</h2><p>இதன் ஒரு பகுதியாக,  சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டு, மாநகராட்சி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற ஆணையத்துடன் ஒருங்கிணைந்து பாலவாக்கம் கடற்கரையில் இன்று சிறப்பு கடற்கரை தூய்மை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, கடற்கரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில், நெகிழி கழிவுகள் மற்றும் கடல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிற கழிவுகள் அகற்றப்பட்டது.</p> <h2>சிறப்பு விருந்தினர்கள்</h2><p>இந்நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற ஆணைய இயக்குநர் ஆஷா அஜித், தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், தமிழ்நாடு கடலோர பகுதிகள் பாதுகாப்பு திட்ட இயக்குநர் சுமீஷ் சோமன், ஆகியோர் தலைமை தாங்கினர். சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற ஆணையத்தின் துணைச் செயலாளர் பட்டாச்சாரியா மற்றும் சார்பு செயலாளர் பாஸ்கர் சீல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.</p><h2>தூய்மை பணியில் 300-க்கும் மேற்பட்டோர்</h2><p>இதில் ஜெருசலம் பொறியியல் கல்லூரி, கே.ஆர்.எம்.எம்.சி. கல்லூரி மாணவர்கள், மந்தன் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள். இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள், தேசிய கடலியல் தொழில்நுட்ப நிறுவனம், ஆரோக்கிய பாரத் தன்னார்வ அமைப்பு, ரோட்டரி கிளப் சென்னை கேலக்ஸி, தேசிய மாணவர் படை, பல்வேறு குடியிருப்போர் நலச் சங்கங்கள், உர்பாசர் சுமீத் நிறுவனத்தின் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பாலவாக்கம் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.</p><h2>விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது</h2><p>இந்நிகழ்ச்சியில் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது, கழிவுகளை முறையாக தரம் பிரித்து அகற்றுவது மற்றும் கடல் வளங்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. </p><h2>2.4 மெட்ரிக் டன் குப்பைகள்</h2><p>மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை தூய்மையாக பராமரிப்போம், பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்ப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என உறுதிமொழியினை ஏற்று, உறுதிமொழி கையெழுத்து பதாகையில் கையொப்பமிட்டனர். இதன் மூலம் 2.4 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, முறையாக அப்புறப்படுத்தப்பட்டன.</p> <p>இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் முறையாக பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு இணையவழி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் ரூ.10,000 கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது - ஆதவ் அர்ஜுனா பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-cannot-win-by-election-even-if-rs-10000-is-given-adhav-arjunas-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-cannot-win-by-election-even-if-rs-10000-is-given-adhav-arjunas-speech#comments</comments><guid isPermaLink="false">9a67b7d9-d4ab-4662-ac4f-004ef3a3c372</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:36:42 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:36:42.398Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,இடைத்தேர்தல்,actorVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/cm0fwl7x/adav33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ திமுக ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா பேச்சு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/cm0fwl7x/adav33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>இடைத்தேர்தலில் ரூ.10,000 கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது  என மதுராந்தகம் தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%20%20"> ஆதவ் அர்ஜுனா </a> பேசி உள்ளார்.</p><p>மதுராந்தகம் தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-</p><h2>மூச்சுகூட விட முடியாது போல</h2><p>ஒரு அமைச்சராப் பேசுவதைவிட, ஒரு தவெக தொண்டனாகப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி. நான் சட்டமன்றத்தில் பேசினாலே, ‘ப்ரோட்டோகால், ப்ரோட்டோகால்' என்று சொல்லி பேசவிட மாட்டிக்கிறார்கள். அது என்னவோ தெரியவில்லை; நான் எழுந்து நின்றாலே பேசவிட மாட்டிக்கிறார்கள். அடுத்த முறை மூச்சுகூட விட முடியாது போல. மூச்சுவிட்டாலே கத்த ஆரம்பித்துவிடுவார்கள்.</p><h2>ஆலமரம்.. முருங்கை மரம்..</h2><p>சட்டமன்றத்தில் எல்லாத்தையும் பேக் பண்ணி அனுப்பிவிட்டோமா? 75 வருட கட்சி, ஒரு ஆலமரம், முருங்கை மரம் என்று எல்லாம் சொன்னார்கள். சட்டமன்றம் வரும்போது, இவர்களுக்குத்தான் அரசியல் தெரியும் என்பது போல எல்லோரும் கிளம்பி வந்தார்கள். ஆனால், முடியும் போது யாருமே சட்டமன்றத்தில் இல்லை.அதுவும் முதல்வர் வரும்போது சுத்தமாக இருக்க மாட்டார்கள். அவர பேசு, பேசு என்று சொல்வார்கள். பேச ஆரம்பித்தால் வெளியே போய்விடுவார்கள்.</p><h2>தீபாவளி பணம் வருது</h2><p>"திமுக இங்கே டிபாசிட் இழக்கும்; கடந்த முறை எப்படி ரூ.5 ஆயிரம் வாங்கினீர்களோ, அதே போல இந்த முறையும் ரூ.5 ஆயிரத்தோடு திமுக வருவாங்க. தீபாவளிக்கு டிரஸ் வாங்கித் தர பணத்தோடு வருவார்கள். அனைத்தையும் வாங்கிக் கொண்டு, போன முறை போல இந்தமுறையும் விசிலுக்கு போட்டுவிடுங்கள்.</p><h2>ஓட்டுக்கு பணம் கிடையாது</h2><p>"எழுதி வெச்சுக்கோங்க, இடைத்தேர்தலில் தவெக ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம், இத்தனை காலமாக பாரம்பரியமாக இருந்த இந்த கலாச்சாரத்தை உடைப்போம். நீர்வளத்துறை அமைச்சர் வந்திருக்கார், பொதுப்பணித்துறை அமைச்சர் நான் வந்திருக்கேன், குடிநீர் இல்லை, ரோடு இல்லைனு இனி சொல்லாதீங்க'</p><h2>எடப்பாடியில் ஈபிஎஸ்-யை தோற்கடிப்போம்</h2><p>தவெகவிடம் பணம் வாங்கிவிட்டு ராஜினாமா செய்ததாக ஈபிஎஸ் சொல்கிறார். எடப்பாடி தொகுதியில் ஏன் தவெக வேட்பாளர் வாபஸ் வாங்கினார்? விசில் சின்னம் அங்கு நின்றிருந்தால், அவரும் தோற்றிருப்பார். மதுராந்தகத்திற்கு ஈபிஎஸ் 4 நாள்கள் பிரசாரத்திற்கு வருகிறாராம். அங்கே ரிசைன் பண்ணிவிட்டு, எடப்பாடியில் அவர் நிக்கட்டும். ஒரு கல்லூரி பெண்ணை நிறுத்தி, அவரை தோற்கடிப்போம். அப்படி தான் இன்றைய அதிமுக உள்ளது.</p><h2>இரட்டை இலை முடிந்துவிட்டது</h2><p>"கடந்த தேர்தலில் அதிமுக வாங்கிய ஓட்டு, இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள். இரட்டை இலையும், விசிலும் ஒன்றாகிவிட்டது. பெரிய வித்தியாசம் இல்லை; மக்கள் உணர்ந்துவிட்டார்கள். திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் வலிமை, விஜய்க்கு மட்டும் தான் உள்ளது. தற்போது இருப்பது எடப்பாடி அதிமுக தான், இரட்டை இலை முடிந்துவிட்டது. எம்ஜிஆர், ஜெ., ஆத்மா விசில் சின்னத்தில் இருக்கிறது.</p><h2>நெஞ்சை நிமிர்த்தி கம்யூ., சொல்லுமா?</h2><p>கம்யூ., தோழர்களைக் கேட்கிறேன்... கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில், பொதுப்பணித் துறையில் ஊழல் நடந்ததா இல்லையா? குடும்ப நிதி, கட்சி நிதி வாங்கினார்களா இல்லையா? நெஞ்சை நிமிர்த்தி கம்யூ.,னிஸ்ட்கள் சொல்ல முடியுமா? திமுக ஊழல் செய்யவில்லை என்று சொல்ல முடியுமா?</p> <h2>அதிமுக ஆதரவு கேட்டு முதல்வர் ஆகியிருக்கலாம்</h2><p>"எங்கள் தலைவர் நினைத்திருந்தால், அதிமுகவிடம் ஆதரவு கேட்டு, அவர்களுக்கு 15 மினிஸ்டர் கொடுத்து முதல்வர் ஆகியிருக்க முடியும். எதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உடன் கூட்டணி சேர்ந்தார். சமூகநிதியில் அவர் உறுதியாக இருந்தார்."</p><h2> விஜய் இன்னும் முடிவெடுக்கவில்லை</h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் அமைப்பதற்கான ஆய்வுதான் மேற்கொண்டு வருகிறோம். இதுவரை அங்கு அமைப்பதற்கான எந்த முடிவையும் முதல்வர் விஜய் எடுக்கவில்லை. உடனே அதில் அரசியல் செய்து, மீனவர்களை ஏமாற்றுகிறார்கள். தலைமைச் செயலகமா, மீனவர்களின் வாழ்வா என்றால், தலைமைச் செயலகத்தைவிட மீனவர்கள் பக்கம்தான் எங்கள் தலைவர் இருப்பார். கம்யூ., தோழர்கள் பேசுவதுதான் வருத்தமாக இருக்கிறது.</p><h2>எம்.ஜி.ஆர்.ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்</h2><p>அதிமுக உடையக்கூடாது என்பது தான் எம்ஜிஆர்.,யின் ஆசை. ஈபிஎஸ் அதை சுக்குசுக்காக உடைத்துவிட்டார். அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் ஆகியோருக்கு இரு கோரிக்கை, தவெகவின் 5 கொள்கை தலைவர்களுடன் எம்ஜிஆர்.,யும் கொள்கை தலைவராக சேர்த்துக் கொள்ள வேண்டும், எனக்கு நீங்கள் இருவரும் தவெக துண்டு அணிவிக்க வேண்டும். தவெக ஜெயிச்சது எப்படினு இன்னமும் ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்காங்க. தீபாவளிக்கு திமுக ரூ.5 ஆயிரம் பணத்துடன் வரும். இடைத்தேர்தலில் ரூ.10,000 கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் 3,597 பணியாளர்கள் தீவிரம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3597-workers-intensify-mosquito-eradication-efforts-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3597-workers-intensify-mosquito-eradication-efforts-in-chennai#comments</comments><guid isPermaLink="false">f39536d2-aa47-4320-897f-927ec718c853</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:35:18 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:35:18.694Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ina0xzkh/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ina0xzkh/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3,597 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p><h2>சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு</h2><p>இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இன்று (19.09.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் கொசு ஒழிப்பு, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுகம் ஞானதேவராவ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்</h2><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பேசும்போது தெரிவித்ததாவது :-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இப்பணிகளை மேற்கொண்டு தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ள வேண்டும். மக்களை பாதுகாப்பதில் அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>வணிக வளாகங்களுக்கு அபராதம்</h2><p>கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்புப் பணியில் மொத்தம் 3,597 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் செயல்பாட்டை மேலும் தீவிரப்படுத்த உள்நாட்டுக் கொசு உற்பத்தி தடுப்பாளர்கள் (Domestic Breeding Checkers) உட்பட அனைத்து பொது சுகாதாரத் துறை ஊழியர்களும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களது களப்பணி நடவடிக்கைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது. மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சிகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் தினமும் 80 முதல் 100 வீடுகளைப் பார்வையிடுகின்றனர்.</p><p>மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் வார்டு வாரியாக அனைத்து இடங்களிலும் காலியாக உள்ள நிலங்கள், வணிக வளாகங்கள், புதிய கட்டுமான இடங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், மருத்துவமனைகள், அரசு கட்டடங்கள், வீட்டிற்குள்ளும் மற்றும் சுற்றப்புறப் பகுதிகளிலும் கொசு உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் தேங்காய் மட்டை, ஓடுகள், கண்ணாடிப் பொருட்கள், டயர் உள்ளிட்ட கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்கள் மாநகராட்சிப் பணியாளர்கள் மூலம் கண்டறியப்பட்டு அவற்றை அழிக்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு உற்பத்தி கண்டறியப்படும் வணிக வளாகங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.</p><h2>புகைப் பரப்பும் பணி தீவிரம்</h2><p>தண்ணீர் தொட்டிகள் மற்றும் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் அபேட் (Abate) எனும் கொசுப்புழு நாசினி மருந்து தெளிக்கப்பட்டும், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொசு லார்வாக்களை அழிக்கும் (MLO) எண்ணெய் பயன்படுத்தி கொசுப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. கொசுப் புழுக்களை அழிக்கும் பணியும், வளர்ந்த கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தெரு வாரியாக வீட்டிற்குள்ளும், வெளியிலும் புகைப் பரப்பும் பணியும் (Fogging) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC), நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையங்கள் (UCHC) மற்றும் சுகாதார மையங்களின் (HWC) மருத்துவ அலுவலர்களுக்கு காய்ச்சல் மேலாண்மை குறித்த மறுபயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ மையங்களிலும் காய்ச்சல் மேலாண்மைக்கான மருந்துகள் இருப்பு உள்ளது.</p><h2>48 சிறப்பு மருத்துவ முகாம்</h2><p>மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வகங்கள், பயிற்சி மையங்கள், வீடுகள் மற்றும் அரசு மையங்களில் இருந்து புகாரளிக்கப்பட்ட காய்ச்சல் விவரங்களை சேகரிப்பதன் மூலம் காய்ச்சல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பிய அனைத்து காய்ச்சல் நோயாளிகளும் 3 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.</p><p>காய்ச்சல் அதிக பாதிப்புள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் சுகாதாரம் குறித்த சுகாதாரக் கல்வியும் வழங்கப்படுகிறது. இன்று (19.09.2026) 15 மண்டலங்களிலும் 48 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 1,108 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் 3 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 161 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்.</p><h2>பொதுமக்களுக்கு விழிப்புணர்வு</h2><p>மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கு வருகைதரும் பொதுமக்களுக்கும், வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உரிமையாளர்கள் ஆகியோருக்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தெலங்கானா பட்டு விவசாயிகளுடன் அமைச்சர் மதன் ராஜா நவீன முறைகள் குறித்து ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-madan-raja-reviews-modern-methods-with-telangana-silk-farmers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-madan-raja-reviews-modern-methods-with-telangana-silk-farmers#comments</comments><guid isPermaLink="false">91b30f4f-5440-4987-98e3-7681a2ee5924</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:31:32 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:31:32.149Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,minister,அமைச்சர்,தெலங்கானா,மதன் ராஜா,mathan raja,பட்டு விவசாயிகள்,Silk Farmers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/sykru7ai/46.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/sykru7ai/46.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அறிவுசார் கண்டுணர்வு பயணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 பட்டு விவசாயிகள் மற்றும் பட்டுவளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரின் 2026–27 நிதிநிலை அறிவிப்பின் கீழ், பட்டு வளர்ச்சித் துறையில் அறிவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை முன்னோடி மாநிலங்களிலிருந்து அறிந்து, தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்காக “அறிவுசார் கண்டுணர்வு பயணம்” திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. </p><h2>அறிவுசார் கண்டுணர்வு பயணம்</h2><p>இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தெலங்கானா மாநிலத்தில் முதல் அறிவுசார் பயணம் 18.09.2026 மற்றும் 19.09.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த அறிவுசார் கண்டுணர்வு பயணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 பட்டு விவசாயிகள் மற்றும் பட்டுவளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.</p><p>இப்பயணத்தில் திருமலகிரி இளம்புழு வளர்ப்பு மையம், சித்திபேட் பகுதிகளில் களப்பார்வை மற்றும் தொழில்நுட்ப கலந்துரையாடல் நடைபெற்றது. விவசாயிகள் அறிவியல் நீர்ப்பாசன முறைகள், பல்வேறு கம்போஸ்டிங் தொழில்நுட்பங்கள், Rain Gun பயன்பாடு, இயந்திரமயமாக்கப்பட்ட பட்டுவளர்ப்பு நடைமுறைகளின் செயல்திறன் மற்றும் விவசாயி–விவசாயி அறிவுப் பரிமாற்ற (Farmer-to-Farmer Extension) முறைகள் குறித்து நேரடியாக அறிந்து கொண்டனர்.</p><p>அதனை தொடர்ந்து, இன்று (19.09.2026), குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">அமைச்சர் மதன்ராஜா </a>இந்த அறிவுசார் பயணத்தில் பங்கேற்று தெலங்கானா மாநிலத்திற்குட்பட்ட தலகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள பட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி, கள ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>புதிய தொழில்நுட்ப முறை</h2><p>பின்னர், அமைச்சர் விவசாயிகளிடம் பேசுகையில், இப்பயணத்தில் கற்றுக்கொள்ளப்படும் சிறந்த நடைமுறைகளையும், நவீன முறையைப் பின்பற்றி பட்டு வளர்ப்பதும், புதிய தொழில்நுட்ப முறைகளையும், பிற விவசாயிகளிடமும் பகிர்ந்து, தமிழ்நாட்டில் பட்டுவளர்ச்சித் துறையின் வளர்ச்சிக்கு முன்னோடி விவசாயிகளாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். தெலங்கானாவில் நடைபெற்ற அறிவுசார் கண்டுணர்வு பயணத்திற்கான அனைத்து ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளும் தெலங்கானா பட்டுவளர்ச்சித் துறையின் இணை இயக்குநர் லதா தலைமையிலான குழுவால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.</p><p>இப்பயணம் களப்பார்வையாக மட்டுமல்லாமல், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களின் பட்டுவளர்ச்சி தொழில்நுட்பங்கள், சாகுபடி மேலாண்மை மற்றும் விவசாயி மையப்படுத்தப்பட்ட விரிவாக்கப் பணிமுறைகளை ஒப்பிட்டு அறியும் அறிவுப் பரிமாற்ற தளமாகவும் அமைந்தது. இதன்மூலம் முன்னோடி விவசாயிகள் தங்கள் பகுதிகளில் சிறந்த நடைமுறைகளை பரப்பும் வகையில் செயல்பட வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பட்டுவளர்ச்சித் துறை இணை இயக்குநர், பொன்மாரி, மண்டல இணை இயக்குநர்,  இளையராஜா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநில பட்டுவளர்ச்சித் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொதுச்சொத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் மக்கள் நல அரசா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-handing-over-public-assets-to-private-entities-a-government-that-prioritizes-public-welfare-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-handing-over-public-assets-to-private-entities-a-government-that-prioritizes-public-welfare-velmurugan#comments</comments><guid isPermaLink="false">533c0ce2-9bd9-40ea-b11f-e83561e5e937</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:20:49 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:20:49.709Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/o7dxhqsl/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/o7dxhqsl/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொதுச்சொத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் மக்கள் நல அரசா? முதல்-அமைச்சர் விஜய்க்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>நிர்வாகத்தை மாற்ற கோரி கடிதம்</h2><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னை விமான நிலையத்தை தற்போது இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) என்ற ஒன்றிய அரசின் பொதுத்துறை அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், AAI-க்குப் பதிலாக மாற்று ஆபரேட்டரை நியமிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>இது சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான அடித்தளமாக அமையுமோ என்ற தீவிர ஐயத்தை ஏற்படுத்துகிறது. பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டிய காலகட்டத்தில், நிர்வாகத்தை மாற்ற முனையும் இந்த அணுகுமுறையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.</p><h2>யாருடைய நலனுக்காக?</h2><p>பயணிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, சரக்கு கையாளும் திறன் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதற்கான தீர்வு அரசு நிர்வாகத்தை மாற்றுவதுதானா? AAI நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பின், அவற்றைச் சுட்டிக்காட்டி தேவையான நிதி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மனிதவள கட்டமைப்புகளை பெற்றுத் தந்து திறம்பட செயல்பட வைப்பதே மக்கள் நல அரசின் பொறுப்பாகும்.</p><p>சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தி, ஐந்தாவது முனையம் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் ஆண்டுக்கு 5.5 கோடி பயணிகளைக் கையாளும் இலக்கை நோக்கி நகரும் வேளையில், நிர்வாகத்தை மாற்றத் துடிப்பது யாருடைய நலனுக்காக?</p><h2>த.வா.க. சார்பில் வலியுறுத்தல்</h2><p>தமிழ்நாடு அரசு, AAI நிர்வாகத்தில் உள்ள இடர்பாடுகளை வெளிப்படையாக ஆராய்ந்து, அவற்றை மத்திய அரசுடன் இணைந்து களைய முன்வர வேண்டும். விமான நிலைய நிர்வாகம் மற்றும் விரிவாக்கம் தொடர்பான அனைத்து முடிவுகள், ஒப்பந்த விதிகள் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களை மக்களிடம் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்.</p><p>சென்னை விமான நிலையம் என்பது போக்குவரத்து தளம் மட்டுமல்ல. அது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதன்மை நுழைவாயில். அதன் எதிர்காலம் சார்ந்த முடிவுகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை முன்னிறுத்தாமல், தமிழ்நாட்டு மக்களின் நலனையும் பொதுச் சொத்து பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் அமைய வேண்டும். எனவே, தனியார்மய எண்ணத்தை முதல்-அமைச்சர் விஜய் முற்றிலுமாகக் கைவிட்டு, அரசின் நேரடி கண்காணிப்பிலேயே விமான நிலைய உள்கட்டமைப்பை தரம் உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விரலில் வைத்த மை காய்வதற்குள் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை திணித்திருக்கிறார்கள்:  மு.க. ஸ்டாலின் பேச்சு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-two-competitions-in-tamil-nadu-one-power-cut-another-machete-attack-mk-stalin-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-two-competitions-in-tamil-nadu-one-power-cut-another-machete-attack-mk-stalin-speech#comments</comments><guid isPermaLink="false">e0801c92-8ee0-49ef-8f37-0f96092f9bef</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:10:49 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:10:49.071Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,மு.க. ஸ்டாலின்,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/sas9jix8/tnfcs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/sas9jix8/tnfcs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குதான் போட்டி என்றும், ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு என்றும் மு.க. ஸ்டாலின் பேசினார்.</p><p>தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 15-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.  விழா நடைபெற இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.</p> <p>இதனையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கி நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது மற்றும் முரசொலி செல்வம் விருது ஆகியவை வழங்கப்பட்டன.</p><h2>7 பேருக்கு விருது</h2><p>1. பெரியார் விருது - விவசாய அணி துணைச்செயலாளர் கு.செல்லப்பா.</p><p>2. அண்ணா விருது = சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே. சுபாஷ்.</p><p>3. கலைஞர் விருது திருச்சி சிவா.</p><p>4. பாவேந்தர் விருது - கனிமொழி என் வி.என். சோமு</p><p>5. பேராசிரியர் விருது -மிசா எஸ். அகமது தம்பி.</p><p>6. மு.க.ஸ்டாலின் விருது நா. இளையராஜா.</p><p>7. முரசொலி செல்வம் விருது -ஊடகவியலாளர் ப. திருமாவேலன்</p><p>ஆகிய 7 பேருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார்.</p> <p>தொடர்ந்து அவர் கூட்டத்தின் முன் உரையாற்றினார்.  அப்போது அவர், விரலில் வைத்த மை காய்வதற்குள் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை திணித்திருக்கிறார்கள்.  குதிரை பேரம் நடத்தி இடைத்தேர்தலை திணித்ததுதான் மாற்றமா? மானங்கெட்ட மாற்றமா? என பேசியுள்ளார்.</p><h2>தக்க பாடம்</h2><p>இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.  எதிரி யார் என்று சரியாக கணித்து பணியாற்றி இருந்தால் இந்த தோல்வியே வந்திருக்காது.  தி.மு.க. தன்னை மாற்றிக்கொண்டு கடுமையாக உழைக்கும் என்றார்.</p> <p>சட்டசபையில் உதயநிதியின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்கல்லை.  நல்ல வேளை சட்டப்பேரவை கொடுமைகளை பார்க்க நான் அங்கு இல்லை.  கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி என்று கூறினார்.</p><h2>ரீல்ஸ் கழகம்</h2><p>தொடர்ந்து அவர், தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குதான் போட்டி.  நன்றாக கவனியுங்கள்.  ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு.  மக்கள், மின்வெட்டால் அவதியடைந்து வருகின்றனர்.</p><p>முதல்-அமைச்சர் தனது வாயால் சாப்பிட்டார் என த.வெ.க.வினர் ட்ரெண்ட் செய்கின்றனர்.  கோட் போட்டார் என்பதுதான் இப்போது ட்ரெண்டாக வருகிறது.  தமிழக வெற்றிக்கழகம் என பெயர் வைத்ததற்கு பதிலாக அவர்கள் தமிழக ரீல்ஸ் கழகம் என பெயர் வைத்திருக்கலாம்.  விஜய் மக்கள் முன்பு நடிக்கிறார்.  சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது மக்கள் முன்பு விஜய் நடித்து கொண்டிருக்கிறார்.</p> <h2>ஜென் சி இளைஞர்கள்</h2><p>தி.மு.க.வை பலவீனப்படுத்தும் முயற்சியை 78 ஆண்டுகளுக்கு மேலாக பார்த்து கொண்டிருக்கிறோம்.  வட்டியும் முதலுமாக திருப்பி தருவோம்.  அதற்காக தான் காத்திருக்கிறோம்.  த.வெ.க.வின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.</p><p>ஜென் சி இளைஞர்களை கவர, அவர்களது மொழியிலேயே பேச வேண்டும்.  தமிழ்நாட்டைக்காப்போம், தமிழ்நாட்டை மீட்போம் என பேசியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>புதுக்கோட்டையில் அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-hit-by-government-bus-in-pudukkottai-relatives-stage-road-blockade</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-hit-by-government-bus-in-pudukkottai-relatives-stage-road-blockade#comments</comments><guid isPermaLink="false">63b682cf-bce1-4a31-99dc-594943116bb9</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:09:59 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:09:59.060Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,புதுக்கோட்டை,Pudukottai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/rc0tiqa4/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/rc0tiqa4/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை, </p><p>புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று பிரேக் பிடிக்காமல் சென்று கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கவுதம் என்ற இளைஞர் உயிரிழந்தார். </p><p>இதனிடையே விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த கவுதமின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். </p> <p>விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்ய வேண்டும், குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை கவுதமின் உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான சேவை தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-international-airport-passenger-service-launch</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-international-airport-passenger-service-launch#comments</comments><guid isPermaLink="false">c37e9a20-969c-46ae-b56b-19084cd7b3a3</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:09:37 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:09:37.362Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,பயணிகள்,services,சர்வதேச விமான நிலையம்,Air passengers,International Airport,Launched,சேவை தொடக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/hhuhfm6u/maduraiairport.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மதுரை சர்வதேச விமான நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான சேவை தொடக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/hhuhfm6u/maduraiairport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88">மதுரை</a> சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவையின் தரம் மற்றும் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில், 21 நாட்கள் நீடிக்கும் "சிறப்பு பயண சேவை இயக்கம்" கடந்த 17-ஆம் தேதி முதல்  தொடங்கப்பட்டுள்ளது.</p><h2>வந்தே மாதரம் </h2><p>இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையால் இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">விமான நிலையத்தில்</a> நடைபெற்ற தொடக்க விழாவில், விமான நிலைய இயக்குநர் குத்துவிளக்கு ஏற்றி இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். </p><p>அதனை தொடர்ந்து, முனைய கட்டடத்தில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடல் உணர்வுபூர்வமாகப் பாடப்பட்டது. முதலாம் நாள் நிகழ்ச்சிகளில் பயணிகள் அனைவரும் திரளாகவும், ஆர்வத்துடனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.</p><h2>மத்திய மந்திரி ஆய்வு</h2><p>பயணிகளுக்கு நம்பகமான, திறன் வாய்ந்த மற்றும் கனிவான சேவைகளை வழங்குவதை முதன்மை நோக்கமாக கொண்டு இந்த இயக்கம் செயல்படுகிறது. இதற்காக, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி நாட்டின் பல்வேறு விமான நிலையங்களுக்கு நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.</p> <h2>2-ஆம் நாள் தூய்மை பணி ஆய்வு</h2><p>இயக்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் முற்றிலும் தூய்மையை மையமாக கொண்டு அமைந்தன. ‘தூய்மையான, சிறந்த வெளிப்பகுதி’ என்ற கருப்பொருளின் கீழ், விமான நிலைய இயக்குநர், முனைய மேலாளர்கள் மற்றும் தூய்மை பராமரிப்பு குழுவினர் இணைந்து விமான நிலைய வளாகம் முழுவதும் கூட்டு ஆய்வு நடத்தினர். அப்போது, பயணிகள் அதிகம் நடமாடும் முக்கிய பகுதிகள் அனைத்தும் சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. </p><p>மேலும், ஒரு சிறப்பு பணியாக விமான நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குப்பை தொட்டிகளும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்டன. பயணிகளுக்கு இனிமையான மற்றும் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்க மதுரை சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்குதான் போட்டி... ஒன்று மின்வெட்டு... மற்றொன்று அரிவாள் வெட்டு&quot;  மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-is-a-power-cut-the-other-is-a-sickle-cut-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-is-a-power-cut-the-other-is-a-sickle-cut-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">7154ff20-0a49-4fb5-b460-def6195eb589</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:05:07 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:05:07.345Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pbt6pfk8/stalinone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக ஆட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pbt6pfk8/stalinone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்குதான் போட்டி... ஒன்று மின்வெட்டு... மற்றொன்று அரிவாள் வெட்டு... இதுதான் உங்க மானங்கெட்ட மாற்றமா என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவால யத்தில்கடந்த 15ம் தேதிநடை பெறுவதாக இருந்தது., விழா நடைபெற இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் செப்டம்பர் 15ம் தேதி நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கியது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட்டன.</p><p>முப்பெரும் விழாவில் திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20">மு.க.ஸ்டாலின் </a>பேசியதாவது:-</p><p>முதல்-அமைச்சர் தினமும் SHOOTING MODEல்தான் இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு, சொல்லிவிட்டு, மக்கள் முன் நடிக்கிறார். திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவது இதுதான் தவெக ஆட்சியின் வேலை.</p><h2>“அவங்க பாஷையில் சொல்லணும்னா..</h2><p>தவெக ஆட்சியில் ரெண்டே ரெண்டுக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்னு மின்வெட்டு, இன்னொன்னு அரிவாள் வெட்டு. “பெரிய அலை அடிச்ச மாதிரியும், தமிழ்நாடே அவங்க வருகைக்காக காத்திருந்த மாதிரியும் இமேஜ் பில்ட் பண்ணிட்டு இருக்காங்க. </p><p>தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்கூட கிடைக்கவில்லை ஆனால் ஏதோ பெரிய அலை அடித்த மாதிரியும்... தமிழ்நாடே அவர்கள் வருகைக்காக காத்திருந்த மாதிரியும் இமேஜ் பில்டப் பண்ணிட்டு இருக்காங்க.</p><p>அதிக தொகுதிகளை வென்ற கட்சிக்கும் நமக்கும் வெறும் 17 லட்சம் வாக்குகள் தான் வித்தியாசம். சரியா கணிச்சு செயல்பட்டிருந்தா இந்த தோல்வியே வந்திருக்காது. பெரும்பான்மை இல்லாமல், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தான் இந்த அரசு அமைந்துள்ளது.</p><h2>திருப்பி கொடுப்போம்..</h2><p>“நாங்க வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம்.. சீக்கிரமா வரோம்.. திமிர் தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்”</p><h2>'எவனுக்கும் தகுதியில்லை'</h2><p>“என்னுடைய மிசா கைதை இங்கு எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை; என்னுடைய தியாகத்துக்கு மார்க் போட எவனுக்கும் தகுதி இல்லை. பேரவையில் எதிர்க்கட்சி கேட்கும் கேள்விகளை  டைவர்ட் செய்ய அவதூறுகளை பரப்புகிறது தவெக அரசு"  </p> <h2>கொளத்தூர் மக்களுக்குக் கோடான கோடி நன்றி</h2><p>கொளத்தூர் மக்களுக்கு நான் நன்றி சொல்கிறேன்; நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரை பார்த்திருப்பீர்கள்; நல்லவேளை இந்த கொடுமையை எல்லாமல் பார்க்காமல் இருந்ததற்கு... கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>நெய்வேலி: பணிநீக்கம் செய்யப்பட்ட என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neyveli-protest-by-retrenched-nlc-contract-workers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neyveli-protest-by-retrenched-nlc-contract-workers#comments</comments><guid isPermaLink="false">1ccf5814-9434-4f30-a046-7204df9e6895</guid><pubDate>Sat, 19 Sep 2026 13:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-19T13:43:00.049Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போராட்டம்,நெய்வேலி,Neyveli</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/cf1wspm6/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/cf1wspm6/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம்-1, சுரங்கம்-2, சுரங்கம்-1ஏ ஆகியவற்றில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் படிப்படியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்ததால் பணி நீக்கம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள், நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம்-2 வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழகம் கொலைகளின் கூடாரமாக மாறிவிட்டது - நயினார் நாகேந்திரன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-has-become-a-hotbed-of-murders-nainar-nagendrans-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-has-become-a-hotbed-of-murders-nainar-nagendrans-review#comments</comments><guid isPermaLink="false">1d175930-f473-4d74-9264-0fb386256fe7</guid><pubDate>Sat, 19 Sep 2026 13:38:37 +0000</pubDate><atom:updated>2026-09-19T13:38:37.954Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,கொலை,விமர்சனம்,murders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pnaozony/nainarnagendran.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pnaozony/nainarnagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் கொலைகளின் கூடாரமாக மாறிவிட்டது என தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> விமர்சனம் செய்துள்ளார்,</p><p>இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 படுகொலைகள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள், விஜய் தலைமையின் கீழ் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கிற்கான அவலச் சான்று. </p><h2>குற்றச் செயல்கள்</h2><p>தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 200 -க்கும் மேற்பட்ட கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள், 6 -க்கும் மேற்பட்ட லாக்-அப் மரணங்கள் என இதுவரை 500-க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் தமிழகத்தில் நடந்துள்ளன, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன, 16 வயதுக்குட்பட்ட சிறார்களின் கரங்களில் பயங்கர ஆயுதங்கள் படு சாதாரணமாகப் புழங்குகின்றன. சட்டம் ஒழுங்கை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்-அமைச்சரோ, மக்கள் வரிப்பணத்தில் வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா, நவீன வசதிகளுடன் கூடிய புதிய சொகுசு தலைமைச் செயலகம் என ஆடம்பரங்களில் புரண்டு கொண்டிருக்கிறார்.  </p><p>தேர்தலின் போது “மாற்றம்” என்ற பெயரில் மக்களிடம் மன்றாடி ஓட்டு கேட்ட விஜய், முதல்-அமைச்சர் அரியணையில் அமர்ந்த பிறகு அந்த மக்களை தினந்தினம் இப்படி உயிர் பயத்தில் செத்துப் பிழைக்க வைத்துக் கொண்டிருப்பது அநியாயம். அப்பட்டமான நம்பிக்கை துரோகம். எனவே, சட்டமன்றத்தில் சினிமா வசனங்கள் பேசுவதை நிறுத்தி விட்டு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென முதல்-அமைச்சர்  விஜய்யை வலியுறுத்துகிறேன்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சியில் கூட்டுறவுத்துறை ஆலோசனைக் கூட்டம்... அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cooperative-department-consultative-meeting-in-trichy-officials-inspect-under-the-leadership-of-the-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cooperative-department-consultative-meeting-in-trichy-officials-inspect-under-the-leadership-of-the-minister#comments</comments><guid isPermaLink="false">545ef34d-3eb4-47d2-bd31-859131537702</guid><pubDate>Sat, 19 Sep 2026 13:10:08 +0000</pubDate><atom:updated>2026-09-19T13:10:08.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,Consultative meeting,ஆலோசனைக் கூட்டம்,அமைச்சர் காந்திராஜ்,Minister Gandhiraj</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/120m2esg/45.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/120m2esg/45.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் கூட்டுறவுத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் காந்திராஜ் </a>தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் இன்று (19.09.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் துறை சார்ந்த பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:</p><h2>விவசாயிகளுக்கு கடன் வசதி:</h2><p>பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் 2026-ன் கீழ், 100% முழுமையாகக் கடன் தள்ளுபடி பெற்ற 20,192 விவசாயிகளுக்கு பயிர்க்கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.</p><h2>மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி:</h2><p>'சிங்கப்பெண்கள் கடன் உதவித் திட்டம்' மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு உரிய காலத்தில் அதிக அளவில் கடன் உதவிகளை வழங்கி, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.</p><h2>நியாயவிலைக் கடைகளில் ஆய்வு:</h2><p>பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்களில் எடையளவில் எவ்விதக் குறைபாடும் ஏற்படக் கூடாது என்றும், விநியோக முறையைத் துல்லியமாகக் கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.</p><h2>வணிக மேம்பாடு &amp; உள்கட்டமைப்பு:</h2><p>அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய 'சுயசேவைப் பிரிவு' (Self-service section) ஒன்றைத் தொடங்குவதற்கும், பண்டகசாலையில் இயங்கி வரும் திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்குப் புதிய கட்டிடம் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாய்வுக் கூட்டத்தில், மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் அரசு, அமராவதி நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, லால்குடி துணைப்பதிவாளர் சாய்நந்தினி, முசிறி துணைப்பதிவாளர் குமார், துணைப்பதிவாளர் / பணியாளர் அலுவலர் பிரேமலதா, டான்பெட் துணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் ஹபிபுல்லா மற்றும் பாரத மிகுமின் ஊழியர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குலசை தசரா: சினிமா பிரபலங்களை அழைத்து வர தடை - கோட்டாட்சியர் உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasai-dasara-ban-on-inviting-film-celebrities-sub-collectors-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasai-dasara-ban-on-inviting-film-celebrities-sub-collectors-order#comments</comments><guid isPermaLink="false">310ff1a4-317e-40f6-9d04-04ac984d2df7</guid><pubDate>Sat, 19 Sep 2026 13:07:45 +0000</pubDate><atom:updated>2026-09-19T13:07:45.733Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kulasekaranpattinam,Dussehra,குலசை தசரா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/6bmji7c5/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/6bmji7c5/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10-ம் திருநாளான 20-ந்தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள். </p><p>காளி வேடம் அணியும் பக்தர்கள் 61 நாட்கள், 41 நாட்கள், 21 நாட்கள், 11 நாட்கள் என பல்வேறு நாட்கள் விரதம் கடைபிடிக்கின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி, துளசிமாலை வாங்கி, கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். பல்வேறு ஊர்களிலும் விரதம் இருக்கும் பக்தர்கள் அங்குள்ள கோவில்களில் பிறை அமைத்து தங்கியிருந்து வழிபடுகின்றனர்.</p><p>இந்நிலையில், குலசை தசரா திருவிழாவிற்கு சினிமா பிரபலங்களை அழைத்து வர தடை விதித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் குலசை தசரா திருவிழாவின்போது சினிமா பிரபலங்களை அழைத்து வந்து நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் இந்த முறை சினிமா பிரபலங்களை அழைத்து வர தடை விதிக்கப்படுவதாகவும், மீறி அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>அதே போல், குலசை தசரா திருவிழாவிற்கு உலோகத்தால் ஆன ஆயுதங்களை கொண்டு வர தடை விதிக்கப்படுவதாகவும், திருவிழாவில் பக்தர்கள் தங்கள் சாதி அடையாளங்களுடன் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. முப்பெரும் விழா: 7 பேருக்கு விருதுகள் வழங்கினார் மு.க.ஸ்டாலின்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmks-grand-tripartite-event-mk-stalin-presented-awards-to-seven-individuals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmks-grand-tripartite-event-mk-stalin-presented-awards-to-seven-individuals#comments</comments><guid isPermaLink="false">8afcea42-d767-40b0-9e56-eb8c52c676b7</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:53:23 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:53:23.122Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,Chennai,சென்னை,awards,திமுக முப்பெரும் விழா,விருதுகள்,mk stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/us7tza7v/dmk33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/us7tza7v/dmk33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் 7 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. </p><h2>தி.மு.க. முப்பெரும் விழா</h2><p>இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவால யத்தில்கடந்த 15ம் தேதிநடை பெறுவதாக இருந்தது., விழா நடைபெற இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் செப்டம்பர் 15ம் தேதி நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கியது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட்டன.</p><h2>7 பேருக்கு விருது</h2><ol><li><p>பெரியார் விருது - விவசாய அணி துணைச்செயலாளர் கு.செல்லப்பா,</p></li><li><p>அண்ணா விருது = சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே. சுபாஷ்,</p></li><li><p>கலைஞர் விருது - திருச்சி சிவா,</p></li><li><p>பாவேந்தர் விருது - கனிமொழி என் வி.என். சோமு</p></li><li><p>பேராசிரியர் விருது -மிசா எஸ். அகமது தம்பி,</p></li><li><p>மு.க.ஸ்டாலின் விருது - நா. இளையராஜா,</p></li><li><p>முரசொலி செல்வம் விருது - ஊடகவியலாளர் ப. திருமாவேலன்</p></li></ol><p>ஆகிய 7 பேருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்; அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/political-leaders-urge-the-repeal-of-the-uapa-act-and-the-release-of-political-prisoners</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/political-leaders-urge-the-repeal-of-the-uapa-act-and-the-release-of-political-prisoners#comments</comments><guid isPermaLink="false">91de3cbf-9003-4db6-a71e-d1d68420c88e</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:52:01 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:52:01.073Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>cases,Release,அரசியல்,ரத்து,விடுதலை,political,கைதிகள்,prisoners,சட்டம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/mdvufhy9/meet.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அரசியல் தலைவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்; அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/mdvufhy9/meet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p> <h2>ரத்து செய்ய வேண்டும்</h2><p>அரசியலமைப்பு மற்றும் நீதி பரிபாலன முறைக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு  சட்டத்தை (யுஏபிஏ) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a> உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள உழைக்கும் மக்கள் கல்வி மாமன்றத்தில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.</p><h2>அரசியல் தலைவர்கள்</h2><p>பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான யா.அருள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன்</a>, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி, சென்னை ஐகோர்ட்டு கிளை மூத்த வழக்கறிஞர் மோகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எழுத்தாளர் வ.கீதா, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p> <h2>மனித உரிமை மீறல்</h2><p>நிகழ்வில் பங்கேற்ற பேச்சாளர்கள் பேசுகையில், "நாட்டின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், தற்போது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் அடக்குமுறை கருவியாகவும், அரசியல் பழிவாங்கும் ஆயுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி' என்ற அடிப்படை நீதித்துறை கோட்பாட்டை தலைகீழாக மாற்றி, இயல்பான பிணை ஜாமீன் உரிமையை தடுப்பதன் மூலம் இச்சட்டம் மிகப்பெரிய மனித உரிமை மீறலுக்கு வழிவகுக்கிறது.</p> <h2>காலக்கெடு</h2><p>ஜனநாயக ரீதியாக குரல் எழுப்புபவர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஒடுக்கப்பட்ட பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போரை ஒடுக்குவதற்காகவே இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. முந்தைய 'தடா', 'பொடா' போன்ற சட்டங்களுக்கு காலக்கெடு இருந்த நிலையில், யுஏபிஏ சட்டத்திற்கு எந்த காலக்கெடுவும் இன்றி நீடித்து வருகிறது.</p> <figure><img alt="விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/3qiw4y6f/meet.1.jpg" /><figcaption>திருமாவளவன்</figcaption></figure><h2>8,719 வழக்குகள்</h2><p>பீமா கோரேகான் வழக்கு உட்பட தற்போதைய பாஜக ஆட்சியில் இச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட 8,719 வழக்குகளில், வெறும் 2.25 சதவீதம் வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் கைது செய்யப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் எந்தவொரு விசாரணையுமின்றி 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையிலேயே வாடும் அநீதி தொடர்கிறது. இது முறையான சட்ட நடைமுறைகளுக்கு அப்பால், விசாரணையின்றி தண்டனை வழங்கும் 'கருப்பு சட்டமாக' விளங்குகிறது.</p> <h2>ரத்து செய்ய வேண்டும்</h2><p>எனவே, அரசியலமைப்பு உரிமைக்கும், நீதிக்கும், மனிதநேயத்திற்கும் பெரும் சவாலாக விளங்கும் யுஏபிஏ சட்டத்தை உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; இச்சட்டத்தின் கீழ் எவ்வித ஆதாரமுமின்றி சிறையில் வாடுபவர்களை மனிதநேய அடிப்படையில் விரைந்து விடுதலை செய்ய வேண்டும்" என்று மத்திய அரசை வலியுறுத்தினர்.</p><p>இந்த கருத்தரங்கில் வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-aiims-hospital-director-change</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-aiims-hospital-director-change#comments</comments><guid isPermaLink="false">3a7f8c7f-f275-4977-9e89-af60c602f99a</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:49:54 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:49:54.571Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Director,இயக்குனர்,Change,மாற்றம்,எய்ம்ஸ் மருத்துவமனை,AIIMS Hospital</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ubjve249/44.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ubjve249/44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய இயக்குனராக ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் பேராசிரியர் டாக்டர் விர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>மதுரை தோப்பூரில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில், வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் வெளிநோயாளிகளுக்கு மருத்துவ சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.</p><h2>புதிய இயக்குனர் நியமனம்</h2><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/madurai-aiims-hospital">மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை</a>யின் ராக ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் பேராசிரியர் டாக்டர் விர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இதுவரை மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய டாக்டர் மங்கு ஹனுமந்த ராவுக்கு பதிலாக விர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான மருத்துவ சேவைகளை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது நிர்வாகத் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி முடிந்து சென்ற மாணவிகளிடம் ஆபாச சைகை; வாலிபருக்கு தர்ம அடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-thrashed-by-public-for-making-obscene-gestures-at-schoolgirls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-thrashed-by-public-for-making-obscene-gestures-at-schoolgirls#comments</comments><guid isPermaLink="false">bb560da9-e52f-4a2a-9121-039ec4512505</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:32:26 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:32:26.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,people,கும்மிடிப்பூண்டி,attack,Kummidipoondi,வடமாநில இளைஞர்,ஆபாச செய்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/60tha51q/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடமாநில இளைஞர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/60tha51q/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை காட்டிய வடமாநில நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.</p><h2>ஆபாச சைகை</h2><p>திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள், நேற்று மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, கரும்புக்குப்பம் பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த ஒருவர், மாணவிகளை நோக்கி ஆபாச சைகை காட்டியுள்ளார்.</p><p>இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அங்கிருந்த பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர், கும்மிடிப்பூண்டி <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசாருக்கு</a> தகவல் தெரிவித்தனர்.</p><h2>விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை கைது செய்து <a href="https://www.dailythanthi.com/topic/விசாரணை">விசாரணை</a> நடத்தினர். </p><p>போலீசார் நடத்திய விசாரணையில், ஆபாச சைகை காட்டியது பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.தனது சகோதரி வீட்டிற்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: பெட்ரோல் கேன் வெடித்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-petrol-can-explodes-2-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-petrol-can-explodes-2-dead#comments</comments><guid isPermaLink="false">e78c9c6f-a707-4e4e-887c-1cee307f5ac6</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:27:54 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:27:54.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ee0sbw6b/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ee0sbw6b/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, கடந்த 15-ந்தேதி விநாயகர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றபோது, இசை வாத்தியக் குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளை சூடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் கேன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. </p><p>இந்த சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவனேசன்(வயது 58) மற்றும் சஞ்சய் ஹரிஹரன்(வயது 19) ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ராகுல் என்ற இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த இரண்டு பேரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>2027-ல் அண்ணாமலை புதிய கட்சி தொடக்கம்? 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிரடி வியூகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-new-party-in-2027-strategy-for-2029-lok-sabha-polls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-new-party-in-2027-strategy-for-2029-lok-sabha-polls#comments</comments><guid isPermaLink="false">70a0e9f9-b782-4b0f-8c5e-3c4bfeeeb456</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:15:58 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:15:58.326Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,நாடாளுமன்ற தேர்தல்,தொடக்கம்,Launch,New Party,புதிய கட்சி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/fkedg1z5/annamalai.21.06.2026.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:title><media:description type="html"><![CDATA[ 2027-ல் அண்ணாமலை புதிய கட்சி தொடக்கம்? 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிரடி வியூகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/fkedg1z5/annamalai.21.06.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ஜனதாவில் இருந்து விலகி, ‘வி த லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a>, 2027-ம் ஆண்டில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2029 நாடளுமன்ற தேர்தலை குறிவைத்து, தனது கட்சியின் பலத்தை நிரூபிக்க அவர் இப்போதே வியூகம் வகுத்து வருகிறார்.</p><h2>மக்கள் சேவை</h2><p>‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் மூலம் ‘போதையில்லா தமிழகம்’ என்ற முழக்கத்துடன், தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்களை அண்ணாமலை முன்னெடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, நீர்நிலைகள் தூர்வாருதல், கடற்கரை தூய்மை பணி போன்றவற்றிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். </p><p>கன்னியாகுமரி கடற்கரை தூய்மை பணி மற்றும் மதுரை வைகை ஆற்று தூய்மை பணியில் அவரே நேரடியாக களமிறங்கி செயல்பட்டார்.</p> <h2>20 லட்சம் உறுப்பினர்கள்</h2><p>அண்ணாமலையின் தலைமையில் இந்த அமைப்பில் இதுவரை 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இணையதளம் மூலம் ஓ.டி.பி. பெற்று உறுப்பினராகும் முறை உள்ளதால், சாதாரண மக்களுக்காக ‘மிஸ்டு கால்’ மூலம் இணையும் புதிய வசதியை அண்ணாமலை விரைவில் அறிவிக்கவுள்ளார்.</p> <h2>நிர்வாகிகள் தேர்வு மும்முரம்</h2><p>அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளாக, அமைப்பின் பொது செயலாளராக கரு.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற முக்கிய பதவிகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியில் அண்ணாமலை தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.</p><h2>2029 நாடளுமன்ற தேர்தலே இலக்கு</h2><p>தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, வரும் 2027-ஆம் ஆண்டில் அண்ணாமலை முறைப்படி புதிய அரசியல் கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. 2029<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D"> நாடளுமன்ற </a>தேர்தலில் தனது கட்சியின் அரசியல் பலத்தை காட்டுவதே இதற்கு காரணம் என தெரிகிறது. அதேநேரம், விரைவில் வரவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அண்ணாமலை இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>தருமபுரி: கவரமலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-decomposed-body-of-a-man-recovered-in-the-kavaramalai-forest-area</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-decomposed-body-of-a-man-recovered-in-the-kavaramalai-forest-area#comments</comments><guid isPermaLink="false">711a6020-b503-41e0-b880-9d5b8546f7c5</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:14:06 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:14:06.611Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரோந்து பணி,police enquiry,Forest area,தருமபுரி,dead body recovery,ஆண் உடல் மீட்பு,Dharmapuri District</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/42y0vhkn/19.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தடயவியல் நிபுணர்கள் சடலத்தை ஆய்வு செய்யும் காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ கவரமலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/42y0vhkn/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி,</p><p>தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>வனப்பகுதியில் ஆண் சடலம் கண்டுபிடிப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தருமபுரி மாவட்டம்</a> பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கதிரிபுரம் கவரமலை வனப்பகுதியில் இன்று (சனிக்கிழமை) வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வனக்காப்பாளர்கள், துர்நாற்றம் வீசிய திசையை நோக்கிச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள அடர்ந்த காட்டின் ஒரு மரக்கிளையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">ஆண் சடலம் </a>ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த உடல் முற்றிலும் அழுகி, சிதைந்த நிலையில் காணப்பட்டது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த உடலை கீழே இறக்கி மீட்டனர். உடல் மிகவும் சிதைந்து போயிருந்ததால், அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்களை உடனடியாக கண்டறிய முடியவில்லை. அவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை</a> செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p><p>இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் அண்மைக் காலங்களில் காணாமல் போன நபர்களின் பட்டியலை சேகரித்து, சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது குறித்த அடையாளத்தைக் காணும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு <a href="https://t.co/jedMtXn0eu">https://t.co/jedMtXn0eu</a><a href="https://x.com/hashtag/dharmapuri?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#dharmapuri</a> <a href="https://x.com/hashtag/forest?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#forest</a> <a href="https://x.com/hashtag/body?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#body</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2101226863561728095?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தொழில் முதலீடு மாநாட்டில் பங்கேற்பு; முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-travels-abroad-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-travels-abroad-again#comments</comments><guid isPermaLink="false">3fea35e3-2333-4b4d-8e8d-3dd3ca7170ba</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:57:18 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:57:18.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,சென்னை,வெளிநாடு பயணம்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/98kzone1/cmo44.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ 

தொழில் முதலீடு மாநாட்டில் பங்கேற்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/98kzone1/cmo44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு செல்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் தொழில் முதலீடு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு </h2><p>முதல்-அமைச்சர் விஜய், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் கிளோஸ்டர்ஸ் நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 22ம் தேதி வரைநடை பெறவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட் டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள், கொமில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பதன் மூலம், தமிழகத்தின் முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளுக்கு மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அலோய்ஸ் ஸ்விங்ஜி, நிர்வாக இயக்குநர் மாரோன் கைரூஸ் ஆகியோரின் அழைப்பை ஏற்று  முதல்-அமைச்சர் விஜய் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 100 க்கும்மேற்பட்டநாடுகளைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகள், 1,000க்கும் மேற்பட்ட முன்னணி உலகளாவிய நிறுவனங்கள், சர்வ தேச அமைப்புகள், சிவில் சமூகபிரதிநிதிகள்,கல்வியாளர்கள் மற்றும் ஊடகங்க ளைச்சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள்.</p><h2>டாவோஸ் பயணம் </h2><p>உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் ஒரே இடத்தில் கூடும் இந்த மாநாட்டில், பொருளாதாரம், முதலீடு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படுவதுடன் உலகளாவிய பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகளை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்படும்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>யின் டாவோஸ் பயணம் தமிழக அரசின் முதலீடு மற்றும் தொழில் கொள்கை தொடர்பான அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, முதலீட்டை ஈர்ப்பது மற்றும் தொழில் கொள்கைகள் தொடர்பான விவாதங்களில் அரசியல் தலைமை நேரடியாகவும் அதிக அளவிலும் பங்கேற்கும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>அரசின் அணுகு முறையில் மாற்றம்</h2><p>இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர்கூறுகையில், டாவோஸ் மாநாட்டில் முதல்-அமைச்சர் பங்கேற்பதன் மூலம் அரசின் அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது. முதலீட்டு வசக்குவிப்பு மற்றும் தொழில் கொள்கை தொடர்பானவிவாதங்களில் அரசியல் தலைமை அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பை இது ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.</p><p>உலகின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே முதலீடுகளை ஈர்ப்பதற்கான போட்டி அதிகரித்து வரும் நிலையில், தமிழகமும் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதிலும், வளர்ந்து வரும் தொழில் துறைகளுக்கான முக்கிய மையமாக தன்னை நிலைதிறுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகிறது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் நேரடியாக விஜய் நேரடியாக பங்கேற்பு </h2><p>குறிப்பாக, எதிர்காலத்தில் வேகமாக வளரக்கூடிய தொழில் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், டாவோஸ் உலக பொருளா தார மன்றத்தில் முதல-மைச்சர் விஜய் பங்கேற்பது தமிழகத்தின் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதுவரை டாவோஸ் உலக பொருளாதார மாநாட் டில் முன்னாள் தொழில்துறை அமைச்சர்கள் மட்டுமே பெருமளவில் பங்கேற்று வந்த நிலையில், தற்போது, முதல்-அமைச்சர் விஜய் நேரடியாக இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவது பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுபோதையில் பணிக்கு வந்த ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/panchayat-secretary-suspended-for-reporting-to-work-under-the-influence-of-alcohol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/panchayat-secretary-suspended-for-reporting-to-work-under-the-influence-of-alcohol#comments</comments><guid isPermaLink="false">feeb6664-7f01-4c65-a479-392527ae1b59</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:56:28 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:56:28.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,Tirupur,alcohol,Panchayat Secretary,மது,ஊராட்சி செயலர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9axnffke/2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுபோதையில் வந்த ஊராட்சி செயலர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9axnffke/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>மதுபோதையில் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றிய ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.</p><h2>மது போதையில் ஊராட்சி செயலர்</h2><p>திருப்பூர் மாவட்டம் மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலராக ராஜேந்திரன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் மதுபோதையில் அலுவலகத்திற்கு வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டி அவரிடம் விளக்கம் கேட்டனர். </p><p>அப்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரால் அதிக பணிச்சுமை அளிக்கப்படுவதாகவும், அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும் அவர் கண்ணீருடன் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><h2>சஸ்பெண்ட்</h2><p>இதையடுத்து, பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஆய்வுக்காக அதிகாரி ஒருவர் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டார். அவர் மேற்கொண்ட ஆய்வில், ஊராட்சி செயலர் <a href="https://www.dailythanthi.com/topic/மது">மது</a>போதையில் இருந்தது உறுதியானது. </p><p>இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி செயலர் ராஜேந்திரனை உடனடியாக <a href="https://www.dailythanthi.com/topic/சஸ்பெண்ட்">சஸ்பெண்ட் </a>செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் தீவிர கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நிறைவேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-coast-guard-conducts-intensive-beach-cleanup-mission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-coast-guard-conducts-intensive-beach-cleanup-mission#comments</comments><guid isPermaLink="false">a3c121f3-d1ef-4a97-a339-e3b329b8c198</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:47:50 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:47:50.486Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian Coast Guard,இந்திய கடலோர காவல் படை,நிறைவேற்றம்,mission,தூய்மைப்படுத்தும் பணி,Cleanup</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/jlebzq15/42.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/jlebzq15/42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் தீவிர கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியக் கடலோரக் காவல் படையின் (ICG) கிழக்கு மண்டலத் தலைமையகம், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள 17 கடற்கரைகளில் மாபெரும் தூய்மைப்பணியை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தியது. சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. "தூய கடல், பாதுகாப்பான கடற்கரை, நமது அடையாளம்" என்ற கருப்பொருளின் கீழ் இப்பணி நடைபெற்றது.</p><h2>அசைக்க முடியாத அர்ப்பணிப்பு</h2><p>இக்கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியின் மூலம் 8,200 கிலோவிற்கும் அதிகமான கடல்சார் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டன. கடல்சார் சூழல் மண்டலங்களைப் பாதுகாத்தல், கடல் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல் மற்றும் இந்தியாவின் கடற்கரைப் பகுதியின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">இந்தியக் கடலோரக் காவல் படை</a>யின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இப்பணி உறுதிப்படுத்தியது.</p><h2>தன்னார்வலர்கள் பங்கேற்பு</h2><p>மாநில அரசுத் துறைகள், இந்திய ராணுவம், சிஐஎஸ்எஃப் (CISF), என்எஸ்எஸ் (NSS), என்சிசி (NCC) கேடட்டுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசு சாரா அமைப்புகளைச் (NGOs) சேர்ந்த சுமார் 7,700 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர். இத்தகைய பங்கேற்பானது, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மீது பொதுமக்களிடையே அதிகரித்து வரும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்த தன்னார்வலர்கள் கடற்கரைகளைச் சுத்தப்படுத்தினர்; அப்போது பிளாஸ்டிக் கழிவுகள், கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மட்காத கழிவுகள் ஆகியவற்றை கவனமாகப் பிரித்தெடுத்தனர்.</p><p>சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் புதுச்சேரி ராக் பீச் (Rock Beach) கடற்கரையில் புதுச்சேரி துணைநிலை கவர்னர் கே. கைலாஷ்நாதன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் "தூய கடற்கரை, பாதுகாப்பான கடல்" என்ற இயக்கத்தின் ஐந்தாவது பதிப்புடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு வாயிலாக, இந்தியப் பெருங்கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதைக் குறைக்கும் வகையில், இந்நிகழ்ச்சியின்போது சேகரிக்கப்பட்ட கழிவுகளின் வகைகள் மற்றும் அளவுகள் குறித்த தரவுகள் அறிவியல் பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தலைமை செயலகம் முன்பு 24-ந்தேதி முற்றுகைப் போராட்டம் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-associations-announce-a-siege-protest-in-front-of-the-secretariat-on-the-24th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-associations-announce-a-siege-protest-in-front-of-the-secretariat-on-the-24th#comments</comments><guid isPermaLink="false">8dd74725-221d-4cc6-9330-ce16c6597aaf</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:46:34 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:46:34.079Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,protest,போராட்டம்,விவசாய சங்கங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/65w4t9mp/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/65w4t9mp/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><h2>வாக்குறுதி </h2><p>“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.</p><p>ஆனால் தற்போது ஒரு லட்சத்திற்கும் கீழ் விவசாய கடன் பெற்றிருந்தால் ரூபாய் 75 ஆயிரம் விவசாய கடன் தள்ளுபடி என்றும், ஒரு லட்சத்திற்கும் மேல் விவசாய கடன் பெற்றிருந்தால் ரூபாய் 35 ஆயிரம் விவசாய கடன் தள்ளுபடி என்றும் அறிவித்து 17 நிபந்தனைகளை விதித்து விவசாய கடன் வசூலில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.</p><h2>கண்டனம்</h2><p>குறிப்பாக விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் கடும் மழை மற்றும் வெயிலிலும், பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட் டம் நடத்தி வருகிறார்கள். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஒடுக்கும் விதமாக காவல்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனை வேடிக்கை பார்க்கும் மாநில அரசுக்கு விவசாயிகள் சங்கங்கள் சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>மேலும் தேர்தல் வாக்குறுதியின்படிஉடனடியாக விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மாநில அரசு விவசாயிகளை ஒடுக்கும் முற்றுகைப் போராட்டம்விதமாகவும், நசுக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறது.</p><h2>முற்றுகைப் போராட்டம்</h2><p>ஆகையால் இத்தகைய போக்கை கண்டித்து வரும் 24-ந்தேதி சென்னை தலைமை செயலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து முற்றுகை போராட் டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.</p><p>மேலும் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தும்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குறிப்பிட்ட விவசாயசங்கங்களை அழைத்து மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. எனவே, அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களை அழைத்து உடனடியாக மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>காலை உணவு திட்ட விரிவாக்கம்: திருவான்மியூரில் 22-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-cm-vijay-launches-on-22nd-in-thiruvanmiyur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-cm-vijay-launches-on-22nd-in-thiruvanmiyur#comments</comments><guid isPermaLink="false">6121a4cc-ca30-4c3b-b88f-d83668943443</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:44:30 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:44:30.865Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>breakfast scheme,காலை உணவு திட்டம்,திருவான்மியூர்,Thiruvanmiyur,விரிவாக்கம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,inaugurates</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ksa1vycj/cm-vijay.03.jpg" width="682"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காலை உணவு திட்ட விரிவாக்கம்: திருவான்மியூரில் 22-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ksa1vycj/cm-vijay.03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்ட</a> விரிவாக்க தொடக்க விழா, வருகிற 22-ந்தேதி சென்னை திருவான்மியூரில் 22-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.</p><h2>காமராஜர் காலை உணவு திட்டம்</h2><p>தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் பசியை போக்கி, கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு மட்டுமே காலை உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். </p><h2>திருவான்மியூர்</h2><p>காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதல்-அமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்</h2><p>இந்த காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா, வருகிற 22-ந்தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளது. திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்</a> நேரில் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களுக்கு  இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.</p> <h2>15 லட்சம் மாணவர்கள் பயன்</h2><p>இந்த திட்ட விரிவாக்கத்தின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் கூடுதலாக பயனடைவார்கள். இதற்காக நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழக அரசு கூடுதலாக ரூ. 217.63 கோடி நிதியை வழங்கியுள்ளது. </p> <h2>வரவேற்பு</h2><p>இதன் மூலம் ஒட்டுமொத்த திட்ட மதிப்பு ரூ. 724 கோடியாக உயர்ந்துள்ளது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியின்றி பாடம் படிக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் இந்த முயற்சி, அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை: பைக்கில் சாவி போட முயன்றபோது எட்டிப்பார்த்த நாகப்பாம்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-cobra-peeks-out-while-attempting-to-insert-key-into-motorcycle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-cobra-peeks-out-while-attempting-to-insert-key-into-motorcycle#comments</comments><guid isPermaLink="false">eadfcd9f-63e4-4e5b-afa3-42cbd0577078</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:41:31 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:41:31.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,பைக்,firefighters,மீட்பு,recovery,Motorcycle,நாகப்பாம்பு,cobra</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0g93kqju/18.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பைக் சாவி துளையிலிருந்து நாகப்பாம்பு தலையை வெளியே நீட்டிய காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவையில் பைக்கில் சாவி போட முயன்றபோது எட்டிப்பார்த்த நாகப்பாம்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0g93kqju/18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் பைக்கில் சாவி போட முயன்றபோது, சாவி துளையிலிருந்து திடீரென நாகப்பாம்பு ஒன்று எட்டிப்பார்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பைக் சாவி துளையிலிருந்து எட்டிப்பார்த்த நாகப்பாம்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை மாவட்டம்</a> சூலூர் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், இன்று (சனிக்கிழமை) அதிகாலை தனது பைக்கை ஓட்டுவதற்காக வந்துள்ளார். அவர் பைக்கை ஸ்டார்ட் செய்வதற்காக அதன் சாவி துளையில் சாவியை நுழைக்க முயன்றார்.</p><p>அப்போது, சாவி துளையின் உள்ளே பதுங்கியிருந்த சிறிய அளவிலான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">நாகப்பாம்பு </a>ஒன்று திடீரென தலையை நீட்டி வெளியே எட்டிப்பார்த்தது. இதைக் கண்டு நிலைகுலைந்து போன பைக் ஓட்டுநர், அலறியடித்துக் கொண்டு பைக்கிலிருந்து இறங்கினார். சாவியை நுழைத்திருந்தால் பாம்பு கடித்திருக்கக்கூடும் என்பதால், அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.</p><h2>பாம்பு மீட்பு</h2><p>இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பைக்கின் முன் பகுதியை லாவகமாகப் பிரித்து, உள்ளே மறைந்திருந்த நாகப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர். </p><h2>பாம்பை காட்டில் விடுவித்தல்</h2><p>பின்னர், மீட்கப்பட்ட அந்த நாகப்பாம்பு எந்தவித காயமுமின்றி, மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இக்காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தீயணைப்பு துறையினரின் எச்சரிக்கை</h2><p>மழை மற்றும் குளிர் காலங்களில் வெப்பத்தைத் தேடி பாம்புகள் வாகனங்களின் எஞ்சின், சீட்டின் அடிப்பகுதி மற்றும் சிறிய துளைகளுக்குள் தஞ்சமடைவது வழக்கம். எனவே, வாகனங்களை எடுப்பதற்கு முன், அவற்றை நன்கு தட்டிப் பார்த்துவிட்டு, கவனமாக சோதித்த பின்பே பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Kovai | Snake | பைக்கில் சாவி போட முயன்றபோது எட்டிப்பார்த்த நாகப்பாம்பு..பதறிப்போன டிரைவர் <a href="https://t.co/84XlLmchmH">https://t.co/84XlLmchmH</a> <a href="https://x.com/hashtag/kovai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#kovai</a> <a href="https://x.com/hashtag/snake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#snake</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2101227428618395926?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>‘20 ஆண்டுகளில் இந்தியாவின் ஜி.டி.பி. ரூ.3.65 லட்சம் கோடியாக உயரும்’ - அஜித் தோவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indias-gdp-will-rise-to-rs-365-lakh-crore-in-20-years-ajit-doval</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indias-gdp-will-rise-to-rs-365-lakh-crore-in-20-years-ajit-doval#comments</comments><guid isPermaLink="false">dc365966-e5c7-42c6-b5be-6e9177ff3717</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:13:24 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:13:24.586Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,அஜித் தோவல்,Ajit Doval,GDP,ஜி.டி.பி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/6ti91a3z/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/6ti91a3z/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>டேராடூன்,</p><p>உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள ஐ.ஐ.டி. கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-</p><p>“மாணவர்களாகிய நீங்கள், மாற்றத்தை உருவாக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வருவது உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பாகும். உங்கள் எதிர்காலம் மிகுந்த நம்பிக்கைக்குரியதாக அமைந்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன; நாடு ஒரு சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்கிறது.</p><p>மாணவர்கள் தங்கள் வாழ்வில் பகவான் ராமரைப் போல் துணிச்சலுடன் திகழ வேண்டும். பகவான் ராமரின் துணிச்சலான குணத்தை கருத்தில் கொண்டே, அரக்கர்களை அழிப்பதற்காக முனிவர் விஸ்வாமித்திரர் அவரை தேர்ந்தெடுத்தார்.</p><p>2047-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை 'அம்ரித் கால்' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள நிலையில், இது உண்மையிலேயே ஒரு அற்புதமான காலம் ஆகும். இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) என்பது, 4.015 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. இது அடுத்த 20 ஆண்டுகளில் 38 டிரில்லியன் டாலராக(ரூ.3.65 லட்சம் கோடியாக) உயரும். </p><p>நான் ஆரம்பக் காலங்களில் சிக்கிமில் பணியாற்றியபோது, ​​வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான மூன்று மந்திரங்களை ஒரு பழங்குடியினத்தவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். முதல் மந்திரம் - நாம் தற்போது எங்கே இருக்கிறோம் என்பதை அறிவது; இரண்டாவது - நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதை அறிவது; மூன்றாவது - அங்கு சென்று திரும்புவதற்கான பாதையை அறிவது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>உசிலம்பட்டியில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம்... அதிகாரிகள் நேரில் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/usilampattis-maternal-uncle-gold-ring-scheme-officials-inspect-in-person</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/usilampattis-maternal-uncle-gold-ring-scheme-officials-inspect-in-person#comments</comments><guid isPermaLink="false">1affcfc8-a381-4498-acd5-54f718dba89b</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:10:11.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Usilampatti,உசிலம்பட்டி,அதிகாரிகள் ஆய்வு,Officials inspect,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,Thai Maman Gold Ring Scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/v58jvcps/41.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/v58jvcps/41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உசிலம்பட்டி,</p><p>உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட  தலைமை மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.</p><h2>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.</p><h2>ஆய்வு</h2><p>தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை  மதுரை, உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட  தலைமை மருத்துவமனையில் வரும் 28-ஆம் தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கும் நிலையில் அங்கு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் திட்ட இயக்குநர் உமா தலைமையிலான அதிகாரிகள் நேரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு</a> செய்தனர்,</p>]]></content:encoded></item></channel></rss>