<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 06 Aug 2026 18:13:33 +0000</lastBuildDate><item><title>நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை 86 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/86-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/86-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">23af57e9-5627-4c4f-80e5-49f52645daf5</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:33:26 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:33:26.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கைது,Tirunelveli,திருநெல்வேலி,காவல்துறை,arrest,இந்த ஆண்டு,This year,இதுவரை,so far,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/3x1ziz6y/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/3x1ziz6y/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல், குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டனர். </p><h2>2 பேருக்கு நீதிமன்ற காவல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கொலை முயற்சி</a>, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மூலச்சி பகுதியைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் மகன் மணிமாறன்(எ) மணி (வயது 20), ராஜையா மகன் சுபாஷ்(26) ஆகிய 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். </p><h2>கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல்</h2><p>இந்த நிலையில் மேற்சொன்ன 2 பேரும் கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். </p><h2>2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 2 பேரும் இன்று (6.8.2026) தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். </p><h2>இந்த ஆண்டு இதுவரை 86 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 86 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத் திட்டம்: மக்களவையில் மத்திய அரசு முக்கியத் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-central-government-shares-key-information-in-the-lok-sabha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-central-government-shares-key-information-in-the-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">0b70e867-7491-4f61-928d-84b051984765</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:22:38 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:22:38.168Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,airport,விமான நிலையம்,Parandur Airport,பரந்தூர் விமானநிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qb97yk2t/Parandur-airport.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தூர் விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qb97yk2t/Parandur-airport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை:</p><p>சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,750 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முந்தைய தி.மு.க. அரசு தீவிரமாக முன்னெடுத்து வந்தது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த திட்டத்துக்காக வளத்தூர், தண்டலூர், சிங்கிலிப்பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் வருவாய்த்துறை ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் பகுதி விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர். </p> <h2>விஜய் எதிர்ப்பு</h2><p>அப்போது, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டார். தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரசாரத்தின்போதும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.</p><h2>திமுக எம்பி கேள்வி</h2><p>இந்தநிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார். "பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடருகிறதா அல்லது கைவிடப்படுகிறதா? இது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் அல்லது தகவல் வந்துள்ளதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், "பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்த திட்டத்தை கைவிடுவது தொடர்பாக 2026-ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு தமிழக அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.</p><h2>மேம்பாட்டு நிறுவனம்</h2><p>விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து பொறுப்புகளும் சம்பந்தப்பட்ட விமான நிலைய மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில அரசைச் சார்ந்தவை. நிலம் கையகப்படுத்துதல், தேவையான அனுமதிகளைப் பெறுதல், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே திட்டம் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் நலனில் அரசு சமரசம் செய்யக் கூடாது: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-not-compromise-on-the-welfare-of-students-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-not-compromise-on-the-welfare-of-students-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">74c39b81-03bc-4f91-bfae-3b98643836fe</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:15:22 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:15:22.984Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nainar Nagendran,student,மாணவர்கள்,Government School,Welfare,தருமபுரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/z4022rvi/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/z4022rvi/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>மாணவர்களின் நலனில் அரசு சமரசம் செய்யக் கூடாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.</p><p>இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2>மின்சாரம் தாக்கி</h2><p>தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் கழிவறையின் இரும்புக் கதவை திறக்கச் சென்ற 9 மாணவர்கள் மீது மின்சாரம் தாக்கியதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. தெய்வாதீனமாக அக்குழந்தைகளுக்கு பெரிதளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது சற்று மன ஆறுதல் அளித்தாலும் கூட, அரசுப் பள்ளிகளில் தொடரும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் உங்கள் அரசின் நிர்வாகக் குளறுபடிகளைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. </p><p>இந்த நிலையில் கடந்த இடைக்கால பட்ஜெட்டை விட, இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதியை சுமார் ரூ. 4000 கோடி வரை குறைத்துள்ளீர்கள். அதிலும், தமிழகத்தில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், பள்ளிக்கு வெறும் ரூ.1,39,000 என்ற கணக்கில் 10,000 பள்ளிகளை மட்டும் தேர்ந்தெடுத்து “சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்” என்ற திட்டத்தை நீங்கள் அறிமுகப்படுத்தியிருப்பது முழுக்க முழுக்க விளம்பர அறிவிப்பு மட்டுமே. </p> <p>காரணம், தமிழகத்தின் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. ஒரு பள்ளியில் இரண்டு கழிவறைகளை கட்டுவதற்கே சில லட்சங்கள் செலவாகும், தூய்மைப் பணியாளர்கள், வாட்ச்மேன் உள்ளிட்டோருக்கு ஊதியமே குறைந்தது  ரூ.10000 வழங்க வேண்டியிருக்கும், Drinking water station அமைக்க குறைந்தது ரூ.25,000 செலவாகும். அப்படியிருக்கையில் நீங்கள் ஒதுக்கியுள்ள நிதி, கடலில் போட்ட உப்புக்கல் போன்றது.  </p><h2>பள்ளிகளின் தரம்</h2><p>எனவே, அசம்பாவிதம் நடந்த பிறகு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு, அவற்றை மேம்படுத்துவதற்கான பிரத்யேக திட்டத்தை அரசு முன்மொழிய வேண்டும்! “Money leakage”ஐ கட்டுப்படுத்துகிறோம் என்ற பேர்வழியில் மாணவர்களின் நலனில் அரசு சமரசம் செய்யக் கூடாது!</p><p>இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை... அனைவருக்கும் ஏற்ற அவகோடா பழம்</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/from-children-to-pregnant-women-avocado-is-suitable-for-everyone</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/from-children-to-pregnant-women-avocado-is-suitable-for-everyone#comments</comments><guid isPermaLink="false">449a9974-2f9d-4021-b129-96769084b2ae</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:09:49 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:09:49.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குழந்தைகள்,கர்ப்பிணிகள்,Fruits,Avocado,அவகோடா பழம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ajrlkp76/21.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ajrlkp76/21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அவகோடாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் குறைந்த அளவே பயிர் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அவகோடா ‘வெண்ணை பழம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் போதுமான அளவு அவகோடாவை விளைவிக்காததால், இதன் விலையும் இங்கே அதிகமாகவே இருக்கிறது.</p><h2>பேசியல் கிரீம்</h2><p>கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அடுக்கம், பெருமாள்மலை. குண்டுப்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் மருத்துவம் குணம் கொண்ட பட்டர் புரூட் எனப்படும் அவகோடா பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பழம் வயிற்று புண்ணை ஆற்றுவதுடன், உடல்சூட்டை தணிக்க வல்லது. மேலும் முகத்திற்கு பூசும் 'பேசியல் கிரீம்' செய்வதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. </p><h2>வெண்ணெய்ப்பழம்</h2><p>அவகோடா பழம் ஆனைக்கொய்யா, வெண்ணெய்ப்பழம், பால்டா என்று பல விதமான பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது முட்டை வடிவம் அல்லது கோள வடிவமாகக் காணப்படும். அவகோடா பழுத்த பிறகு தங்க பச்சை நிறத்துடனும், வெண்ணை போன்று மிருதுவான சதை பகுதியை கொண்டிருக்கும். விற்பனை நோக்கத்திற்காக அவகோடா பழம் காயாக இருக்கும்போதே பறிக்கப்பட்டு பிறகு பழமாக்கப்படுகிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/mcgksguh/20.jpg" /></figure><h2>ஆன்டிஆக்ஸிடன்ட்கள்</h2><p>அவகோடா பழங்கள் பல கூறுகளால் ஆனவை, மேலும் அவற்றில் ஒவ்வொரு கூறுக்கும் அதற்கே உரிய சிறப்பு உண்டு. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அவகோடா பழங்களின் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றாகும் – குறிப்பாக, மிகவும் செயல்திறன் மிக்க மற்றும் வலிமையான ஆன்டிஆக்ஸிடன்ட்களான புரோஆந்தோசயனிடின்கள். புற்றுநோய்க்கு காரணமான ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம்பப்படுகின்றன.</p><h2>சரும எரிச்சல்களைக் குணப்படுத்தும்</h2><p>அவகோடா, சருமம் மற்றும் முடியின் வறட்சியை எதிர்த்துப் போராடுகிறது. அதன் சாறு, வெயிலினால் ஏற்படும் சரும எரிச்சல்களைக் குணப்படுத்தவும், சுருக்கங்களை நிரப்பவும் பயனுள்ளதாக இருக்கிறது. எப்படி? இதில் வைட்டமின் E, K மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளன. வைட்டமின் E சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது, அதே சமயம் வைட்டமின் K மற்றும் துத்தநாகம் ஆகியவை சருமத்தைக் குணப்படுத்துவதில் பங்கு வகிக்கின்றன.</p><p>அவகோடா ஒரு சிறந்த கண்டிஷனர் மற்றும் கூந்தல் ஈரப்பதமூட்டி என்பதும் உங்களுக்குத் தெரியுமா? எண்ணெய் வடிவில், அவகேடோ உடையக்கூடிய முடியின் நுனிகளைச் சரிசெய்து, அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், பல்வேறு வகையான சரும மாஸ்க்குகள் மற்றும் முக மாஸ்க்குகளைத் தயாரிக்க அவகேடோ ஒரு சிறந்த தேர்வாகும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/yywcqcuv/22.jpg" /></figure><h2>கண் ஆரோக்கியம்</h2><p>கண் ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசும்போது நம் நினைவுக்கு வரும் முதல் உணவு கேரட் தான். ஆனால், கேரட் மட்டுமல்ல,  அவகோடா பழங்களும் கண் பார்வையை அல்லது கண் நிலையை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த தேர்வு என்பது உங்களுக்குத் தெரியுமா? அவகோடா பழங்களில் உள்ள வைட்டமின் ஏ, கண்புரை மற்றும் கண் வயதாவதைத் தடுப்பதால் (வைட்டமின் ஏ-யின் பல நன்மைகளில் இதுவும் ஒன்று), கண் பார்வையைப் பராமரிக்க உதவுகிறது.</p><h2>கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் சிறந்தவை </h2><p>அவகோடா பழம் கொழுப்புச்சத்து நிறைந்த பழமாக இருந்தாலும், அதிலுள்ள பொட்டாசியம் சத்து காரணமாக அது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் இந்தப்பழத்தை சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பொட்டாசியம், நல்ல செரிமானத்திற்குத் தேவையான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மேலும், இது இரத்தத்தின் pH சமநிலையைப் பராமரித்து, நரம்புத் தூண்டல்களின் கடத்தலை ஊக்குவிக்கிறது.  வைட்டமின் குறைபாடுகளால் அவதிப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பொட்டாசியமும் மெக்னீசியமும் மிகவும் சிறந்தவை. மேலும், பொட்டாசியம் திரவச் சமநிலையைப் பராமரிக்கிறது. எனவே, உடல் முழுவதும் திரவம் மற்றும் நச்சுகளின் இயக்கத்தைக் கையாளும் சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு இது இன்றியமையாதது.</p><h2>பெண்களின் ஆரோக்கியம்</h2><p>அவகோடா பழத்திற்கும், குழந்தை பிறப்பிற்கும் தொடர்பு உள்ளது. ஒரு அவகேடோ பழம் முழுமையாக உருவாக ஆறு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். சில வகைகள் 12 மாதங்கள் வரை பழுக்காது என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் அவை பெண்களின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய கைத்தறி நாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-handloom-day-chief-minister-vijay-greeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-handloom-day-chief-minister-vijay-greeting#comments</comments><guid isPermaLink="false">71343481-0369-47b3-aed4-57c802c96a4b</guid><pubDate>Thu, 06 Aug 2026 15:49:25 +0000</pubDate><atom:updated>2026-08-06T15:49:25.743Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தேசிய கைத்தறி நாள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fa7f1zug/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fa7f1zug/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>12-வது தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாளன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக, கைத்தறித் தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வருவாயை அதிகரிக்கவும், நெசவாளர்களுக்கென உயரிய கவுரவத்தை ஏற்படுத்தவும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுச் சிறப்பையும் உலகறியச் செய்யும் கைத்தறித் தொழிலின் பெருமையைப் போற்றும் வகையிலும், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் நாள் தேசிய கைத்தறி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் கைத்தறி நெசவாளர்களைப் போற்றும் வகையில், 7.08.2026 அன்று 12-வது தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்படுகிறது.</p><p>தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் தலைமுறை தலைமுறையாகப் பேணிக்காத்துவரும் நெசவுக்கலை, நமது மாநிலத்தின் வளமான பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கிறது. பட்டு மற்றும் பருத்தி இழைகளால் உருவாக்கப்படும் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கைத்தறி ரகங்கள், நமது நெசவாளர்களின் திறமைக்கும், கைவினை நுட்பத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.</p><p>இத்தொழில் மூலம் மகளிர் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பைப் பெறுவதால், மகளிர் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு கைத்தறித்துறை பெரும்பங்கு வகிக்கிறது. மேலும், தமிழ்நாடு அரசு, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யவும், கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நெசவாளர்களின் உழைப்பிற்குரிய அங்கீகாரமும், அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான சந்தை வாய்ப்பும் கிடைப்பதற்கு அரசு தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>விலையில்லா மின்சாரம், தள்ளுபடி மானியம், தொடர் வேலைவாய்ப்புத் திட்டம், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், முதியோர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், வீட்டுவசதி திட்டம், கைத்தறி ஆதரவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நெசவாளர் நலத்திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>மேலும், தமிழ்நாடு நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் நேரடியாக விற்பனை செய்வதற்காக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள "வெற்றித் தறி" விற்பனை நிலையங்களை இத்தேசிய கைத்தறி நாளில் தொடங்கி வைக்கிறேன். இவற்றை நாட்டின் முக்கிய நகரங்களில் விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இத்திட்டமானது, தமிழக நெசவாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட பிரீமியம் தர நிலை, சிறந்த கைவினைத் திறன் மற்றும் நவீன வண்ணங்களுடன் நேர்த்தியாக ஆடை நெய்து, இளம் தலைமுறையினரைக் கவரக்கூடிய வகையில் நவீன காட்சிப்படுத்துதல் வழியே சிறந்த விற்பனை அனுபவத்தை வழங்கிடும்.</p><p>இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இந்த அரசு, கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுவரும் இளம்தலைமுறை நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன். "கைத்தறி நெசவாளர்களின் உழைப்பை மதிப்போம்; கைத்தறிப் பொருட்களை வாங்கி ஆதரிப்போம்” என்ற உணர்வுடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கைத்தறிப் பொருட்களைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய நெசவுக் கலையைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இந்த இனிய நாளில், தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கைத்தறித் தொழில் மேலும் வளர்ச்சியடைந்து, நமது நெசவாளர்களின் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெருகிடவும், தமிழ்நாட்டின் பாரம்பரிய கைத்தறி இரகங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மேலும் புகழ்பெறவும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு: மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-3-cows-die-due-to-electrocution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-3-cows-die-due-to-electrocution#comments</comments><guid isPermaLink="false">95742811-d76a-45dc-95a2-8a60593c16bb</guid><pubDate>Thu, 06 Aug 2026 15:26:42 +0000</pubDate><atom:updated>2026-08-06T15:26:42.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,பலி,மின்சாரம் தாக்கி,killed,Cows,திருப்போரூர்,Thiruporur,electrocution,பசு மாடுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/81ac0f0x/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள் பலி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/81ac0f0x/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு, </p><p>செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">மின்சாரம் தாக்கி</a> 3 பசு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">மாடுகள் பலி</a>யாகின.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">செங்கல்பட்டு</a> மாவட்டம், திருப்போரூரை அடுத்த வெண்பேடு கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன், மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல தனது பசு மாடுகளை வீட்டுக்கு வெளியே சாலையோரத்தில் கட்டி வைத்திருந்தார். </p><h2>3 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி பலி</h2><p>இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தபோது வீட்டின் அருகே இருந்த மின் ஒயர் அறுந்து விழுந்தது. மின்ஒயரில் இருந்த மின்சாரம் தாக்கியதில் 3 பசு மாடுகளும் துடிதுடித்து உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்போரூர் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். </p><h2>பிரேத பரிசோதனை</h2><p>இதுகுறித்து ஜானகிராமன் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வருவாய்த்துறையினர் கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை மருத்துவ குழுவினர் 3 மாடுகளையும் பிரேத பரிசோதனை செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ராணுவ பொறியியல் சேவை பிரிவின் தலைவராக ஈஸ்வர் தத் பொறுப்பேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ishwar-dutt-takes-over-as-the-head-of-the-chennai-military-engineering-service-division</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ishwar-dutt-takes-over-as-the-head-of-the-chennai-military-engineering-service-division#comments</comments><guid isPermaLink="false">d69a854d-0b7d-4008-932c-5a88d3809417</guid><pubDate>Thu, 06 Aug 2026 15:01:00 +0000</pubDate><atom:updated>2026-08-06T15:01:00.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Army,Chennai,சென்னை,இந்திய ராணுவம்,Engineering,பொறியியல்,பதவி ஏற்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/p3b2ow6d/202.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈஸ்வர் தத்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/p3b2ow6d/202.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய ராணுவத்தின் ராணுவ பொறியியல் சேவை சென்னை அலுவலகத்தின் புதிய தலைவராக இந்திய பொறியியல் சேவை அதிகாரி ஈஸ்வர் தத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.</p><p>இதுகுறித்து இந்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-</p><h2>பதவியேற்பு</h2><p>இந்திய ராணுவத்தின் பொறியியல் சேவை பிரிவு சென்னை அலுவலக தலைவராக ஈஸ்வர் தத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். </p><p>1992 ஆம் ஆண்டு தொகுப்பை சேர்ந்த இந்திய பொறியியல் சேவை அதிகாரியான இவர், ராணுவம் கடற்படை, விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்துள்ளார். இதற்கு முன் போபால் மண்டல தலைமை பொறியாளராக பணியாற்றிய போது ஜான்சி நகரில் இந்திய ராணுவத்தின் சார்பில் நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்பட்ட புவி வெப்ப மின்சார பயன்பாட்டுடன் கூடிய கார்பன் உமிழ்வற்ற கட்டிடம் அமைப்பதில் பெரும் பங்கு வகித்தார். </p><p>தற்போது சென்னை ராணுவ பொறியியல் பிரிவு அலுவலகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளதன் மூலம் அவர் தென்னிந்திய பகுதிகளில் உள்ள அனைத்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5">ராணுவ</a> பொறியியல் பணிகளுக்கும், கடலோர காவல் படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் பணிகளுக்கும் பொறுப்பு வகிக்க உள்ளார். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற ஆதரவற்றோர் தங்குமிடங்களை திறம்பட நிர்வகிக்க தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/training-for-voluntary-organizations-to-effectively-manage-urban-homeless-shelters-in-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/training-for-voluntary-organizations-to-effectively-manage-urban-homeless-shelters-in-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">a3477a94-7c78-48f3-b089-085013f2c922</guid><pubDate>Thu, 06 Aug 2026 14:54:58 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:54:58.345Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Training,volunteers,தன்னார்வலர்களுக்கு பயிற்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/q0tropor/19.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/q0tropor/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்).செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற ஆதரவற்றோர் தங்குமிடங்களுக்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி இன்று நடைபெற்றது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி</h2><p>மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்.,  தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற ஆதரவற்றோர் தங்குமிடங்களுக்கான (Shelter for Urban Homeless) நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedures – SOP) குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி இன்று (06.08.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இப்பயிற்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின்  இயக்குநர்கள், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் , கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டு அலுவலர்கள், தங்குமிட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தங்குமிட மேலாண்மையுடன் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.</p><h2>தரமான சேவை</h2><p>இப்பயிற்சியின் போது, நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) திறம்பட செயல்படுத்துவது குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக பயனாளிகள் சேர்க்கை மற்றும் மறுவாழ்வு, தங்குமிட மேலாண்மை, பதிவேடுகள் பராமரித்தல், சுகாதாரம் மற்றும் தூய்மை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள், குறைதீர் அமைப்பு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் நகர்ப்புற ஆதரவற்றோருக்கு கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், தங்குமிடங்களின் செயல்பாட்டில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சிறந்த நடைமுறைகள் பகிரப்பட்டு, அனைத்து பங்குதாரர்களிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.</p><p>இப்பயிற்சியானது, பெருநகர சென்னை மாநகராட்சி, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, நகர்ப்புற ஆதரவற்றோருக்கு பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் கண்ணியமான தங்குமிட வசதிகளை உறுதி செய்வதற்கும், தொடர்ச்சியான திறன் மேம்பாட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பயிற்சிகள் </a>மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>11 மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-fishermen-arrested-chief-minister-vijay-writes-to-foreign-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-fishermen-arrested-chief-minister-vijay-writes-to-foreign-minister#comments</comments><guid isPermaLink="false">b708ec9b-4be7-4367-a1ac-41dabc83502c</guid><pubDate>Thu, 06 Aug 2026 14:47:48 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:47:48.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள் கைது,ஜெய்சங்கர்,Jaishankar,மத்திய மந்திரி,TN Fishermen,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/q2gmipgz/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/q2gmipgz/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று கடிதம் எழுதியுள்ளார்.</p><p>ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது இன்று (6.8.2026) இலங்கைக் கடற்படையினர், மீனவர்களையும் அவர்களின் விசைப்படகையும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டுவரவே தாம் இக்கடிதத்தை எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இச்சம்பவத்தில், இயந்திரக் கோளாறு காரணமாக அப்படகு நெடுந்தீவு கரையை ஒட்டித் தரைதட்டி நின்ற நிலையில், சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் (IMBL) தாண்டியதாகக் கூறி, அப்படகையும் அதில் இருந்த மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைதுசெய்து வருவது மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து, பாக் ஜலசந்தியை நம்பி வாழும் மீனவர்களின் மத்தியில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>எனவே, உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கெனவே சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்து, பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தாம் அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும், இப்பிரச்சனை குறித்து கூட்டு செயல்பாட்டுக் குழு (JWG) மூலமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்துவது மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் நிகழாவண்ணம் தீர்வுகாண உதவும் என்பதையும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.</p><p>நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் தனிப்பட்ட தலையீட்டையும் விரைவான பதிலையும் எதிர்பார்ப்பதாகத் தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாநிலங்களுக்கு நியாயமான நிதிப்பகிர்வு கோரி நாளை சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-resolution-seeking-fair-financial-allocation-for-the-states-will-be-moved-in-the-legislative-assembly-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-resolution-seeking-fair-financial-allocation-for-the-states-will-be-moved-in-the-legislative-assembly-tomorrow#comments</comments><guid isPermaLink="false">1558ade0-5f40-4528-827e-fd5f82c9a8f5</guid><pubDate>Thu, 06 Aug 2026 14:31:41 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:31:41.912Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Assembly,மாநிலங்கள்,தனித்தீர்மானம்,சட்டமன்றம்,நிதி பகிர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/t2hu78s4/assembl.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/t2hu78s4/assembl.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் நாளை அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. தமிழக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிய உள்ளார். அதன் விவரம் வருமாறு:- மாநிலங்கள் தங்களது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாததாகும். தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. </p><h2>மக்கள் தொகை கட்டுப்பாடு</h2><p>மேலும், மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், எந்தவித பாதகமான நிலையிலும் வைக்கப்படக் கூடாது.</p><h2>நியாயமான நிதி நலன்கள்</h2><p>இந்த அம்சங்களையெல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை இந்த அவை கொண்டு வந்துள்ளது. அதன்படி, மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும். மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான, சமமான நடைமுறையை பின்பற்ற வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக, மத்திய வரிகளின் பகிர்விற்கான அளவுகோல்கள், எந்த மாநிலத்தையும் பாதகமான நிலையில் வைக்காதவாறு அமைக்கப்பட வேண்டும். மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <p>இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் விவாதிப்பார்கள். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்படும். அதிக வாக்கு கிடைக்கும்பட்சத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வளர்ச்சித் திட்டப் பணிகளை துணை ஆணையாளர்கள் நேரில் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-commissioners-personally-inspect-development-project-works-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-commissioners-personally-inspect-development-project-works-in-chennai#comments</comments><guid isPermaLink="false">f81ea15b-f3fa-4f1d-95ea-b7d55350cd94</guid><pubDate>Thu, 06 Aug 2026 14:30:07 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:30:07.051Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஆய்வு,Deputy Commissioner,புதிய திட்டப் பணிகள்,Development project works,inspect,ஆணையாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ik7sljrz/18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/ik7sljrz/18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடக்கு மற்றும் மத்திய வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடக்கு மற்றும் மத்திய வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் ஸ்வேதா சுமன், ஐ.ஏ.எஸ்.,  (வடக்கு), எச்.ஆர்.கௌஷிக், ஐ.ஏ.எஸ்.,  (மத்திய) இன்று (06.08.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.</p><p>இராயபுரம் மண்டலம், வார்டு-63க்குட்பட்ட பாரதி சாலையில் உள்ள அம்மா உணவகம், வார்டு-57க்குட்பட்ட பிரகாசம் சாலையில் உள்ள ஶ்ரீராமுலு பூங்காவில் மேம்படுத்தும் பணி, அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறை கட்டுமானப் பணி ஆகியவற்றை வடக்கு வட்டார துணை ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசணைகளை வழங்கினார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/emmjpusv/17.jpg" /></figure><p>கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127க்குட்பட்ட எஸ்.ஏ.எஃப் கேம்ஸ் வில்லேஜ் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்கா, அப்பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, கோயம்பேடு வட்டச் சாலையில் சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணி, வார்டு-135க்குட்பட்ட அசோக் பில்லர் பகுதியில் சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணி, பாஷ்யம் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் குப்பைக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பணி, அப்பகுதியில் உள்ள திறந்த வெளி இடம், வார்டு-136க்குட்பட்ட ஏ.பி. பட்ரோ சாலையில் உள்ள அம்மா உணவகம், அப்பகுதியில் உள்ள இலவச ஒப்பனை அறை, தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறை உள்ளிட்டவற்றைப் மத்திய வட்டார துணை ஆணையாளர் பார்வையிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு </a>செய்து, பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசணைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-the-day-after-tomorrow-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-the-day-after-tomorrow-3#comments</comments><guid isPermaLink="false">96dddf1b-b357-46c5-970a-4d6793a0096b</guid><pubDate>Thu, 06 Aug 2026 13:55:41 +0000</pubDate><atom:updated>2026-08-06T13:55:41.928Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rnlc7ldl/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rnlc7ldl/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> ஊரக உட்கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக தூத்துக்குடி ஊரக கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி ஊரகக் கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி துணை மின் நிலையங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்புப் பணி</a>கள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (8.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். </p><h2>விளாத்திகுளம்</h2><p>விளாத்திகுளம், மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள். </p><h2>குளத்தூர்</h2><p>குளத்தூர், கீழவைப்பார், வைப்பார், வேப்ப‌லோடை, மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள்.</p><h2>சூரங்குடி</h2><p>மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மின் விநியோகம் இருக்காது. </p><p>எனவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த மின்நிறுத்த அறிவிப்பைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: எம்.பி.க்கள் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delimitation-issue-cm-vijay-invites-mps-meeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delimitation-issue-cm-vijay-invites-mps-meeting#comments</comments><guid isPermaLink="false">826fbaec-00f3-49eb-bbbe-8c0175c8f680</guid><pubDate>Thu, 06 Aug 2026 13:48:47 +0000</pubDate><atom:updated>2026-08-06T13:48:47.867Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எம்.பி.க்கள் கூட்டம்,தொகுதி மறுவரையறை,Delimitation,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/t8jesge5/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/t8jesge5/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிக்க வருகிற 8-ந்தேதி தமிழக எம்பிக்களின் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்ய உத்தேசித்துள்ள நிலையில், எம்பிக்கள் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>மத்திய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் 8.8.2026 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ம் தளம்) நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் புதுடெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் நிதி நிலை அறிக்கை: விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும் - சிபிஎம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/agricultural-finance-report-should-have-been-satisfactory-to-farmers-cpm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/agricultural-finance-report-should-have-been-satisfactory-to-farmers-cpm#comments</comments><guid isPermaLink="false">8cd996f9-bab8-47e9-b2d1-8927d80ce648</guid><pubDate>Thu, 06 Aug 2026 13:30:38 +0000</pubDate><atom:updated>2026-08-06T13:30:38.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பெ.சண்முகம்,Agricultural,சிபிஎம்,வேளாண் நிதிநிலை அறிக்கை,CPM,விவசாயிfarmer</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/mbuffe7i/pe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிபிஎம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/mbuffe7i/pe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாண் நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து உள்ளது.</p><p>இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"> பெ.சண்முகம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும், சிறுதானிய உற்பத்தி மற்றும் கொள்முதல் ஊக்கப்படுத்தும் அறிவிப்பு, பனை பாதுகாப்பு இயக்கம், வாழைக்கு முட்டுக் கொடுக்கும் திட்டம், பூச்சி மற்றும் நோய் பாதிப்பிலிருந்து தென்னையை பாதுகாக்க தென்னை டானிக் வழங்குவதுடன் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது, வாழை, மஞ்சள், வெங்காயம், தக்காளி, மா, மிளகாய் ஆகிய விளைபொருட்கள் சேமிப்புக்கான குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்கப்படும், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 1000 விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கப்படும், உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும் என்றும் வாரத்திற்கு ஒரு நாள் இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனைக்கு ஒதுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.</p><h2>விவசாய தொழிலாளர்</h2><p>நிதிநிலை அறிக்கையில், விவசாயத்தில் இயந்திரமயம் என்பதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்ற கருத்தின் அடிப்படையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, விவசாய தொழிலாளர்களுக்கு விவசாயத்தில் வேலை கிடைக்காமல் புலம்பெயர்ந்து செல்லும் அவலநிலை உள்ளது. இந்த நிலையில், விவசாயத்தை முழுமையாக இயந்திரமயமாக்குவது, மனித உழைப்பை முற்றிலும் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டு விவசாய தொழிலாளர்களுக்கு விவசாயத்தில் வேலையே கிடைக்காது என்ற நிலையை உருவாக்கும் என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.</p><p>விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்பது தமிழ்நாடு விவசாயிகள் போராடிப் பெற்ற உரிமை ஆகும். மின் இணைப்பு கோரி பல ஆண்டுகளாக சில லட்சம் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ஏற்கனவே அரசு அறிவித்துள்ள விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி போதுமானது அல்ல என்று விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். </p><h2>விவசாயிகளுக்கு இழப்பீடு</h2><p>விவசாயத்திற்கு முக்கியம் தரமான விதை, உரம், பாசன உத்தரவாதம், சந்தை வாய்ப்பு, கொள்முதல் உத்தரவாதம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கான குடோன் வசதிகள் இல்லாமல் திறந்தவெளியில் வைக்கப்படுவதும், மழையில் நனைந்து வீணாவதும் தொடர்கதையாக உள்ளது. ஆனால், இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமே குறிப்பிடாமல் இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். மேலும், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்.</p><p>காட்டுப்பன்றி மட்டுமல்லாமல் பலவிதமான வன விலங்குகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது. மனித உயிரிழப்புகள் உட்பட ஏற்படுகிறது. நிதி நிலை அறிக்கையில் காட்டுப்பன்றிகளை தடுப்பதற்கு யோசனை சொல்லப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>சட்டப்போவை தேர்தலின்போது தவெகவால் விவசாமிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிதிநிலை அறிக்கை அக்கறை செலுத்தவில்லை. குறிப்பாக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3500ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4500ம், சந்தை விலையில் சரிவு ஏற்படும்போது அதை அரசு ஈடுசெய்யும் என்பதும், விதைப்பு கால உதவியாக ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ரூ.15000 வழங்கப்படும் என்பதும். 100 சதவிகிதம் பயிர்க்காப்பீடு உத்தரவாதப்படுத்த தமிழ்நாடு அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை ஏற்படுத்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை உள்ளாக்கியிருக்கிறது. பெரும்பகுதியான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மை துறைக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டுமென <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a> வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
இலங்கை கடல் எல்லையில் படகு விபத்தில் சிக்கிய 11 தமிழக மீனவர்கள்  பத்திரமாக மீட்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-indian-fishermen-rescued-safely-after-boat-accident-in-sri-lankan-waters</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-indian-fishermen-rescued-safely-after-boat-accident-in-sri-lankan-waters#comments</comments><guid isPermaLink="false">9f7319d0-c02e-4ef9-b16d-02f0987a7eb7</guid><pubDate>Thu, 06 Aug 2026 13:22:54 +0000</pubDate><atom:updated>2026-08-06T13:22:54.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கடல்,Sri Lanka,இலங்கை,இந்திய மீனவர்கள்,fisher</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fr3x5mx0/Fisher-boat.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோப்பு படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/fr3x5mx0/Fisher-boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது படகு விபத்தில் சிக்கிய 11  தமிழக  மீனவர்களை இலங்கை கடற்படை இன்று பத்திரமாக மீட்டது.இலங்கையின் வடக்கு கடற்கரை பகுதியில், பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள நெடுந்தீவு அருகே கடலுக்கடியில் உள்ள பாறையில் மீன்பிடி படகு மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p><h2>இலங்கை கடற்படை</h2><p>இந்த தகவல் கிடைத்ததும் இலங்கை கடற்படை விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு, படகில் இருந்த 11  மீனவர்களையும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தது. அவர்கள் அனைவரும் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ   தெரிவிக்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இலங்கை மீன்வள மற்றும் நீர்வாழ் வளத் துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.பாறையில் மோதியதால் மீன்பிடி படகு சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p><h2>பாக் ஜலசந்தி</h2><p>இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கைக்கு நேற்று  பயணம் மேற்கொண்டார்.  இந்த பயணத்தின்போது,  இலங்கை கடற்படையால்  கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விரைவில் விடுவிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தியிருந்தார்.  இந்த கோரிக்கை வைத்து இருந்த  மறுநாளே படகு விபத்தில் சிக்கிய மீனவர்களை இலங்கை கடற்படை மீட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாக் ஜலசந்தி பகுதியில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் கடல் எல்லையை தவறுதலாகக் கடந்து செல்வது தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் முக்கிய  பிரச்சினையாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி பிரதமருக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-urges-pm-to-fast-track-river-linking-project</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-urges-pm-to-fast-track-river-linking-project#comments</comments><guid isPermaLink="false">18d91634-abee-4dc9-9626-c37ba24958ea</guid><pubDate>Thu, 06 Aug 2026 13:16:40 +0000</pubDate><atom:updated>2026-08-06T13:16:40.314Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,PM Modi,கடிதம்,நதிநீர் இணைப்பு திட்டம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/47sy20xz/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/47sy20xz/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட மத்திய ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஆகியவற்றிற்கு உத்திரவிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>அக்கடிதத்தில் தமிழ்நாடு மாநிலம் இயல்பாகவே மேற்பரப்புநீர் வளங்களில் பற்றாக்குறை கொண்டதாகவும், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களைச் சார்ந்தே உள்ளது. மாநில அரசினால் தொடர்ச்சியான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டும் அளவிற்குப் பயன்படுத்தப்பட்டு, பல பகுதிகளில் அது அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நிலை தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், தமிழ்நாட்டின் மேற்பரப்புநீர் வளங்களைப் பெருக்குவதற்கான மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாகக் கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் திகழ்கிறது என்றும், தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான அதிகரித்துவரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களான, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை தொடர்ந்து கடுமையான நீர்ப் பற்றாக்குறையுடனும், வறட்சியாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகவும் அம்மாவட்டங்களின் அதிகரித்துவரும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மிகச்சிறந்த நிரந்தரமானத் தீர்வாக கோதாவரி - காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியமென்றும், இத்திட்டத்தினால் வெள்ள உபரிநீரை நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் திருப்பிவிட வழிவகுப்பதாய் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இப்பெரிய திட்டத்தின் முதற்கட்டமாக, தேசிய நீர் மேம்பாட்டு முகமை (NWDA), கோதாவரி – பெண்ணாறு – பாலாறு – வெள்ளாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்-அமைச்சர், இத்திட்டத்தினால் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குப் பயனளிக்கும் என்றாலும், தற்போது தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் உள்ள சீரமைப்பு வழியானது, காவிரி ஆற்றிற்கு சில கிலோமீட்டர் முன்னதாகவே முடிவதால் அதற்குப் பதிலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி – காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளுமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆகவே, தேசிய நலனைக் கருத்தில்கொண்டு, ஆக்கப்பூர்வமான கலந்தாலோசனை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதில் தாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகப்பொருளாதார நன்மைகளைக் கருத்தில்கொண்டு, கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக (fast-track) செயல்படுத்திட, அதற்கு "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்" என்ற அந்தஸ்தை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>ஒருங்கிணைந்து செயல்படுத்துதல், உத்திரவாதமான நிதி ஒதுக்கீடு மற்றும் குறித்த காலத்தில் திட்டத்தை முடிப்பது ஆகிய நோக்கத்திற்காக மத்திய அரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்களின் பங்கேற்புடன் ஒரு பிரத்யேக 'சிறப்பு நோக்கு அமைப்பை' (Special Purpose Vehicle) உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும் என்றும், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை விரைவாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு அர்ப்பணிப்புடன் அனைத்து ஒத்துழைப்பும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>எனவே, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கும் (NWDA) பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.</p><p>i. தொடர்புடைய பயன்பெறும் மாநிலங்களுடன் ஆலோனைகளை விரைவுபடுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளில் விரைவான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும்;</p><p>ii. காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளைக் கதவணை வரை இந்த இணைப்பை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) இறுதி செய்யவேண்டும்;</p><p>iii. இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக விரைவான முறையில் (Fast Track Method) அமல்படுத்த நடவடிக்கை எடுத்தல்; மற்றும்</p><p>iv. இத்திட்டத்தை ஒருங்கிணைந்த மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்திட ஒரு சிறப்பு நோக்கு அமைப்பை நிறுவுவது குறித்துப் பரிசீலிப்பது மற்றும் இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்தல்.</p><p>இத்திட்டம் தொடர்பாக பிரதமர் தனிப்பட்ட கவனம் செலுத்தி, தென்னிந்தியாவின் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நமது சிறப்பான நீர் வளங்களைச் சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவது என்ற தேசிய குறிக்கோளை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி மாணவர்களிடம் 17 ஆண்டுகளில் நீரிழிவு நோய் அறிகுறி அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/diabetes-symptoms-increase-in-school-students-over-17-years-study-reveals-shocking-findings</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/diabetes-symptoms-increase-in-school-students-over-17-years-study-reveals-shocking-findings#comments</comments><guid isPermaLink="false">7c6d8d4b-fae4-4176-961d-78aa5d5b81d6</guid><pubDate>Thu, 06 Aug 2026 13:12:48 +0000</pubDate><atom:updated>2026-08-06T13:12:48.866Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Increase,அதிகரிப்பு,School students,பள்ளி மாணவர்கள்,Study,Shocking information,நீரிழிவு நோய்,Diabetes,அறிகுறி,Symptoms,ஆய்வில் அதிர்ச்சி தகவல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8zrychss/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளி மாணவர்களிடம் நீரிழிவு நோய் அறிகுறிகள் அதிகரிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8zrychss/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 17 ஆண்டுகளில் பல மடங்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D">நீரிழிவு நோய் </a>அறிகுறி அதிகரித்துள்ளது என்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D">அதிர்ச்சி தகவல்</a> வந்துள்ளது.</p><h2>954 மாணவர்கள்</h2><p>சென்னை கிண்டியில் உள்ள இந்திய நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் நந்திதா ராமச்சந்திரன், பிரிசில்லா சூசைராஜ், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, வினிதா ராமச்சந்திரன், சினேகலதா சாமுகுட்டன், அம்பாடி ராமச்சந்திரன் ஆகியோர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளி மாணவர்களிடம்</a> 2023-ம் ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டனர். </p><p>அதில் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 954 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 587 பேர் மாணவிகள், 367 பேர் மாணவர்கள். இந்த ஆய்வு முடிவுகள், கடந்த 2006-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளுடன் ஒப்பிடப்பட்டன. தற்போது இந்த ஆய்வு முடிவுகள் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது: </p><h2>26.4 சதவீதம் அதிகம்</h2><p>2006-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 3.1 சதவீத மாணவிகளிடம் நீரிழிவு நோய் பாதிப்பு காணப்பட்டது. ஆனால் 2023-ம் ஆண்டில் அது 28.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே போன்று 2006-ம் ஆண்டில் 3.5 சதவீத மாணவர்களிடம் காணப்பட்ட இந்த பாதிப்பு, 2023-ம் ஆண்டில் 26.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2006-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் மாணவர்களின் உடல் நிறை குறியீடு, இடுப்புச் சுற்றளவு, 'சிஸ்டாலிக்' ரத்த அழுத்தம் மற்றும் வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரையின் சராசரி அளவு அதிகரித்துள்ளது. மாணவிகளை பொறுத்தவரை ரத்த சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களின் உடல் நிறை குறியீடும், இடுப்பு சுற்றளவும் பாதிப்பு இல்லாத மாணவிகளைவிட அதிகமாக இருந்தது.</p><h2>77.4 சதவீதம் பேரிடம்...</h2><p>இதுதவிர நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் எச்.டி.எல். கொழுப்பு குறைவாக இருப்பது, டிரைகிளிசரைடு அதிகமாக இருப்பது, வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அதிகமாக இருப்பது, ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது ஆகிய இதயம் மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான அபாய காரணிகள் ஆய்வு செய்யப்பட்டன. 2023-ம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்ட மாணவர்களில் 77.4 சதவீதம் பேரிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அபாய காரணிகள் காணப்பட்டன. 2006-ம் ஆண்டில் இது 74.4 சதவீதமாக இருந்தது. 3 அல்லது அதற்கு மேற்பட்ட அபாய காரணிகள் இருந்த மாணவிகளின் எண்ணிக்கை 2006-ம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த நிலையில், 2023-ம் ஆண்டில் 9 சதவீதமாக உயர்ந்தது. மாணவர்களிடம் இது 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரித்தது.</p><h2>நீரிழிவு அபாயம்</h2><p>கடந்த 17 ஆண்டுகளில் இளம் பருவ பள்ளி மாணவர்களிடம் உடல் பருமன் அதிகரித்ததுடன், வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் பாதிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது. மாணவர்களைவிட மாணவிகள் அதிக அபாயத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இளம் பருவத்திலேயே ஏற்படும் இதுபோன்ற வளர்சிதை மாற்ற பாதிப்புகள், எதிர்காலத்தில் அவர்கள் பெரியவர்களாகும்போது நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம். </p><p>குறிப்பாக இளம் வயதினரிடையே ‘டைப்-2' நீரிழிவு நோய் மேலும் அதிகரிப்பதற்கான ஆரம்ப அறிகுறியாக தற்போதைய நிலை இருக்கக்கூடும். எனவே பள்ளிகளிலேயே ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். </p><p>இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட்: நவீன வேளாண்மைக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-lays-strong-foundation-for-modern-farming-says-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-lays-strong-foundation-for-modern-farming-says-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">1692ab47-ad8d-40aa-b863-41cb84194925</guid><pubDate>Thu, 06 Aug 2026 13:02:58 +0000</pubDate><atom:updated>2026-08-06T13:02:58.737Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,வேளாண் பட்ஜெட்,agriculture budget,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/1v9scfea/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/1v9scfea/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் நவீன வேளாண்மைக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங்கும் வேளாண்மை வலுவாக இருந்தால்தான் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் உறுதியாகும். அந்த வகையில், 2026-27ம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண் வரவு-செலவுத் திட்டம், பாரம்பரிய வேளாண்மையை தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் நிலைத்தன்மையுடன் இணைத்து எதிர்காலத்தை நோக்கி நகர்த்தும் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.</p><p>காவிரி நீரை உரிய காலத்தில் பெற முடியாததால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,509 கிலோமீட்டர் நீளமுள்ள சி மற்றும் டி கால்வாய்களை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 8.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருவதும் வரவேற்கத்தக்க நடவடிக்கைகளாகும். மேலும், பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.648 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், இலவச மும்முனை மின்சாரத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதற்கான நிதி ஒதுக்கீடும் விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கிறது.</p><p>இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையின் மிகப்பெரிய சிறப்பு, தொழில்நுட்பத்தை விவசாயிகளின் கைகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். செயற்கை நுண்ணறிவு (யுஐ) அடிப்படையிலான “உழவர் யுஐ” சேவை மூலம் வானிலை, மண் வளம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சந்தை நிலவரம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் எதிர்கால வேளாண்மைக்கு மிக முக்கியமான முன்னேற்றமாகும்.</p><p>தஞ்சையில் இயற்கை வேளாண்மையின் முன்னோடியான நம்மாழ்வாரின் பெயரில் உயிர்ப் பண்ணை வேளாண் கல்லூரி அமைப்பது, ‘வெற்றி வான்மகள்” திட்டத்தின் மூலம் பெண்களுக்கு டிரோன் பயிற்சியும் 50 சதவீத மானியத்தில் டிரோன்களும் வழங்குவது, மகசூல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ‘மக்கள்தொண்டர் அஞ்சலை அம்மாள்” விருதுகளை அறிவித்திருப்பது ஆகியவை மிகவும் பாராட்டத்தக்க முன்னெடுப்புகளாகும்.</p><p>அதேபோல், ரூ.600 கோடியில் ஐந்தாண்டு தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம், இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மைக்கு ஊக்கம், பருத்தி மறுமலர்ச்சி இயக்கம், வேளாண் காடுகள் திட்டம், கார்பன் வர்த்தகத்தின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள், சிறுதானியங்கள், பயறு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்தும் திட்டங்கள் ஆகியவை தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கு புதிய திசையைக் காட்டுகின்றன.</p><p>வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்கும் தனித்திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலுக்கு உகந்த காட்டுப்பன்றி விரட்டி, சூரிய சக்தி மின்வேலி, சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.</p><p>மேலும், மானிய விலையில் விதை விநியோகம், சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கு உயர்ந்த மானியம், அறுவடைக்குப் பிந்தைய தானியப் பாதுகாப்பு, பயிர் விளைச்சல் போட்டிகள் போன்ற பல்வேறு அறிவிப்புகள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, வேளாண்மையை லாபகரமான தொழிலாக மாற்றும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.</p><p>அதே நேரத்தில், நீர் மேலாண்மை, புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள், ஏரிகள் மற்றும் கால்வாய்களின் நீண்டகால மறுசீரமைப்பு, மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட துறைகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணமும் உள்ளது.</p><p>மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் 2026-27 வேளாண் வரவு-செலவுத் திட்டம், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட நவீன வேளாண்மைக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் விரைந்து, முழுமையாக செயல்படுத்தப்பட்டு ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.</p><p>இந்த முன்னோக்கிய சிந்தனையுடன் கூடிய வேளாண் நிதிநிலை அறிக்கையை வழங்கிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-6#comments</comments><guid isPermaLink="false">dd9275ac-a33f-4cfd-8814-0a23f79eb6c5</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:53:31 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:53:31.834Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,maintenance work,power cut,பராமரிப்பு பணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rdlw1kl0/pwer-cut.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rdlw1kl0/pwer-cut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மின்சாரம் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-</p><p>08.08.2026 சனிக்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்.</p><p>சென்னையில் 08.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின் விநியோகம்</a> நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>பெரம்பூர்:</strong> திருமலை நகர் பிரதான சாலை, திருமலை நகர் 1 வது முதல் 3வது தெரு வரை மற்றும் விரிவாக்கம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்: பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/container-lorry-strike-in-thoothukudi-business-worth-crores-of-rupees-affected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/container-lorry-strike-in-thoothukudi-business-worth-crores-of-rupees-affected#comments</comments><guid isPermaLink="false">dd9c6f59-22f0-4893-8dfd-5f8b94811afe</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:53:13 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:53:13.767Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Business,Association,strike,வேலைநிறுத்தம்,affected,lorry owners,Container,வர்த்தகம் பாதிப்பு,லாரி உரிமையாளர்கள் சங்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8y0rdf2h/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மதியழகன் பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/8y0rdf2h/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளதால் துறைமுகத்திற்குள் லாரிகள் செல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்</h2><p>புதிய வாடகை ஒப்பந்தம், வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கண்டெய்னர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">லாரி உரிமையாளர்கள் சங்கம்</a> சார்பில் இன்று முதல் காலவரையற்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">வேலைநிறுத்தப் போராட்டம் </a>தொடங்கப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்திற்குள் லாரிகள் செல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும்</h2><p>புதிய வாடகை ஒப்பந்த அடிப்படையில் வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும். வெளியூர்களுக்கு லோடு ஏற்றிச் செல்லும்போது வாடகைத் தொகையில் 30 சதவீதம் முன்பணமாக வழங்கப்பட வேண்டும். வாடகை பில் சமர்ப்பித்த 15 நாட்களுக்குள் தொகை பட்டுவாடா செய்யப்பட வேண்டும். கண்டெய்னர் யார்டுகளுக்கு லாரிகள் வந்தவுடன் உடனடியாக சரக்குகளை இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>மாமூல் வசூலிப்பதை தடுக்க வேண்டும்</h2><p>CFS குடோன்களில் கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றவும் இறக்கவும் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்திற்குள் நுழையும் லாரிகள், 2 மணி நேரத்திற்குள் 8 மற்றும் 9-வது கப்பல் தளங்களில் கண்டெய்னர்களை ஏற்றி/இறக்கி முடித்து வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.</p><h2>2 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள்</h2><p>கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், இன்று காலை முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரண நாட்களில் தினமும் சுமார் 2,000 கண்டெய்னர் லாரிகள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி இறக்கச் சென்று வரும். ஆனால், இந்த வேலைநிறுத்தம் காரணமாக இன்று ஒரு லாரி கூட துறைமுகத்திற்குள் செல்லவில்லை.</p><h2>பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு</h2><p>இதன் காரணமாகத் துறைமுகத்தில் சரக்குக் கையாளும் பணிகள் முடங்கி, நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம்</h2><p>இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் மதியழகன் கூறுகையில், "எங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகமும், தூத்துக்குடி துறைமுக சபை நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி சார்பில் ஆசிரியர்களுக்கான பாலின மன்ற திறன் மேம்பாட்டு முகாம் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-launches-gender-forum-skill-development-camp-for-teachers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-launches-gender-forum-skill-development-camp-for-teachers#comments</comments><guid isPermaLink="false">93e7645e-6d0b-4485-b590-25fdf6cf884e</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:51:27 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:51:27.016Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Camp,முகாம்,தொடக்கம்,ஆசிரியர்கள்,Teachers,Launch</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/whsqy023/15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/whsqy023/15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பள்ளிகளில் உள்ள பாலின மன்றங்களின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமினை மாநகராட்சி ஆணையாளர்  ஜி.எஸ்.சமீரன், ஐ.ஏ.எஸ்., இன்று தொடங்கி வைத்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் சார்பில் சென்னை பள்ளிகளில் உள்ள பாலின மன்றங்களின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்,  ஐ.ஏ.எஸ்.,  இன்று (06.08.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்துப் பேசினார்.</p><h2>பயிற்சி முகாம்</h2><p>இந்தப் பயிற்சி முகாமானது, இன்றும் (06.08.2026), நாளையும் (07.08.2026) இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 211 சென்னை பள்ளிகளில் பாலின மன்றத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்குப் பாலின உணர்திறன், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்குவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் நடைமுறை உத்திகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.</p><p>சென்னை பள்ளிகளில் மாணவர்களுக்கு வழிகாட்டுவதிலும், பாலின மன்றச் செயல்பாடுகளை முன்னெடுப்பதிலும் முக்கியப் பங்காற்றும் 211 பாலின மன்ற ஆசிரியர்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றனர். பாலினச் சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கம், குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள், பள்ளிப் பாதுகாப்பு, துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல் தடுப்பு, இணையப் பாதுகாப்பு, பதின்ம வயதினரின் மனநலம், வாழ்க்கைத் திறன், கல்வி, பாலின உணர்திறன் சார்ந்த கற்பித்தல் முறைகள், அரசின் நலத்திட்டங்கள், பரிந்துரை வழிமுறைகள் மற்றும் பள்ளி வாரியான பாலின மன்ற ஆண்டு செயல் திட்டங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் கலந்துரையாடல் மூலம் விளக்கினார்கள்.</p><h2>ஒருங்கிணைப்புத் திறன்</h2><p>நிபுணர்களின் உரை, குழு விவாதங்கள், செயல்முறை விளக்கங்கள், பாத்திரமேற்று நடித்தல் மற்றும் செயல் திட்டமிடல் ஆகியவற்றின் மூலம் பங்கேற்பு அடிப்படையிலான அணுகுமுறையை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இது ஆசிரியர்களின் தலைமைத்துவம் மற்றும் ஒருங்கிணைப்புத் திறன்களை வலுப்படுத்துவதோடு, மாணவர்களிடையே நேர்மறையான நடத்தை மாற்றங்களை ஊக்குவிக்கவும் உதவும்.</p><h2>பாலின உணர்திறன்</h2><p>அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும், பாலின மன்றத் திட்டத்தை ஒரே சீராகவும், திறம்படவும் செயல்படுத்துவதையும், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலின உணர்திறன் சார்ந்த நடைமுறைகளை வலுப்படுத்துவதையும், ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான பள்ளிச் சூழலை உருவாக்க ஆசிரியர்களை மேம்படுத்துவதையும் பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி </a>நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.</p><p>இந்தப் பயிற்சி முகாமில், இணை ஆணையாளர் (கல்வி) கற்பகம்,  ஐ.ஏ.எஸ்., கல்வி அலுவலர் வசந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் முத்துச்செல்வி, லயோலா கல்லூரியின் சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சக்தி தேவி, மாநிலக் கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வெங்கட சுப்ரமணியம், மாநகராட்சி பாலின மற்றும் கொள்கை ஆய்வகத்தின் குழுத் தலைவர் முனைவர் லெஜிஸ், பாலின கொள்கை வல்லுநர்கள், சென்னை பள்ளிகளின் பாலின மன்றங்களின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரியலூர் மாவட்டத்திற்கு ஆக. 10-ந் தேதி உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ariyalur-district-has-declared-a-local-holiday-on-aug-10</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ariyalur-district-has-declared-a-local-holiday-on-aug-10#comments</comments><guid isPermaLink="false">caff8572-0809-450b-a235-b54d1d15136a</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:42:22 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:42:22.479Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ariyalur,அரியலூர்,Local Holiday,உள்ளூர் விடுமுறை,மாவட்ட ஆட்சியர்,working</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/huj7qako/200.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரியலூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/huj7qako/200.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>அரியலூர்,</p><p>அரியலூர் மாவட்டத்துக்கு, வருகின்ற ஆக.10-ந் தேதி திங்கள்கிழமை ஆடி திருவாதிரை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">உள்ளூர் விடுமுறை</a> விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>ஆடி திருவாதிரை</h2><p>அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப்புகழ் வாய்ந்த ஒன்றாகும். அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.</p><h2>உள்ளூர் விடுமுறை</h2><p>இந்த நிலையில் ஆக.10-ந் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 22-ந்தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மதுபோதையில் தகராறு: சுத்தியலால் அடித்து வாலிபர் கொலை - நண்பர்களுக்கு வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunken-brawl-young-man-beaten-to-death-with-a-hammer-manhunt-launched-for-friends</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunken-brawl-young-man-beaten-to-death-with-a-hammer-manhunt-launched-for-friends#comments</comments><guid isPermaLink="false">c0bcf13e-68ca-467c-84f6-9fe044de365f</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:41:04 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:41:04.098Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,தலைமறைவு,வாலிபர் கொலை,drunken brawl,Kovai,youth killed,மது போதை</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/lliw31b4/92.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கொலை செய்யப்பட்ட அஸ்வின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், 22 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/lliw31b4/92.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை மாவட்டம்</a> கிணத்துக்கடவு அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், 22 வயது இளைஞர் சுத்தியல் மற்றும் கத்தியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.</p><p>கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (வயது 22). இவரும் இவருடைய நண்பரான அதே பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 22) மற்றும் மற்றொரு 16 வயது சிறுவனும் இணைந்து, கிணத்துக்கடவு பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.</p><h2>வாலிபர் கொலை</h2><p>அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியது. இதில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும், தங்களது கைவசம் வைத்திருந்த சுத்தியல் மற்றும் கத்தியை எடுத்து அஸ்வினை கொடூரமாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அஸ்வின் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>தனிப்படை அமைப்பு</h2><p>இந்த கொலைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அஸ்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக உள்ள மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவனைப் பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>நண்பர்களுக்குள் ஏற்பட்ட<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> மதுபோதை</a> தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டிஜிட்டல் கைது எனக்கூறி முதியவரிடம் ரூ.46.50 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-arrest-scam-elderly-man-loses-46-5-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/digital-arrest-scam-elderly-man-loses-46-5-lakh#comments</comments><guid isPermaLink="false">9dd0d4c5-0372-44fb-b37c-3a0ad1851964</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:22:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:22:43.139Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மோசடி,Digital arrest,டிஜிட்டல் கைது,சிவகங்கை,Sivagangai,Duping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/t47x7muv/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிஜிட்டல் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/t47x7muv/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>டிஜிட்டல் கைது எனக்கூறி முதியவரிடம் ரூ.46.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை அடுத்த கட்டுக்குடிபட்டியை சேர்ந்தவர் சுகநந்தன் (88 வயது). சம்பவத்தன்று செல்போனில் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பெங்களூரு போலீஸ் அதிகாரி என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். பின்னர் சுகநந்தன் ஆதார் அட்டையை சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாகவும், அதனால் அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும் கூறி மிரட்டி உள்ளார்.</p><p>பின்னர் அந்த மர்ம நபர் ரூ.46 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். அதை நம்பிய சுகநந்தனும் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அந்த தொகையை செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுகநந்தன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர் மாவட்டத்துக்கு 14-ந் தேதி உள்ளூர் விடுமுறை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-virudhunagar-district-on-the-14th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-virudhunagar-district-on-the-14th#comments</comments><guid isPermaLink="false">0497369c-9908-4cf1-849d-44caf3b79fb0</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:20:10 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:20:10.366Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Local Holiday,உள்ளூர் விடுமுறை,விருதுநகர் மாவட்டம்,Virudhunagar District</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/930j8crf/viruthunagar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/930j8crf/viruthunagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வரும் 14-ந் தேதி நடைபெற இருப்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>உள்ளூர் விடுமுறை</h2><p>ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 14) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">உள்ளூர் விடுமுறை </a>அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 29-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் ஏற்கெனவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் வராது என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரோந்து போலீஸ் மீது தாக்குதல்: சங்கிலி பறித்துச் சென்ற மர்ம கும்பல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-patrol-police-mysterious-gang-snatches-chain</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-patrol-police-mysterious-gang-snatches-chain#comments</comments><guid isPermaLink="false">2b532462-5979-4a72-a67a-3af7ae65c099</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:03:47 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:03:47.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,தேனி,patrol,Chain,Mysterious gang,மர்ம கும்பல்,ரோந்து,போலீஸ்Police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vtil9mxj/199.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/vtil9mxj/199.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>பெரியகுளம் அருகே நள்ளிரவு ரோந்து சென்ற போலீஸ் ஏட்டை தாக்கி நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>ரோந்து சென்ற போலீஸ்</h2><p>தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேலகாமாக்காப்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 37). இவர் தென்கரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு திருட்டை தடுக்கும் வகையில் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவில் பகுதியில் ஏட்டு சசிக்குமார் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது கோவில் அடிவாரத்தில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த சசிக்குமார், அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினார். அவர்கள் கடப்பாரை மற்றும் கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை தரையில் உட்காரும்படி கூறினார்.</p><p>அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த மேலும் 3 பேர் திடீரென்று வந்து கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சசிக்குமாரை தாக்கினர். அவர்களுடன் சசிக்குமார் போராடினார். பின்னர் அனைவரும் சேர்ந்து ஆயுதங்களால் சசிக்குமாரை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலில் அவர் நிலைகுலைந்து போனார். இதனைத்தொடர்ந்து அந்த மர்ம கும்பல் சசிக்குமார் கழுத்தில் அணிந்திருந்த 1.5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். அவர் சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டதால் பாதி சங்கிலி மட்டும் கொள்ளையர்களின் கையில் சிக்கியது. அதனுடன் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.</p> <h2>தனிப்படையினர் வலைவீச்சு</h2><p>இதுகுறித்து தென்கரை போலீஸ் நிலையத்திற்கு சசிக்குமார் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு சென்ற போலீசார் சசிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.</p><p>திருட்டை தடுக்க ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவையே தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-13</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-13#comments</comments><guid isPermaLink="false">466d9615-a13f-4688-ae3e-2c61c01a1e53</guid><pubDate>Thu, 06 Aug 2026 12:01:04 +0000</pubDate><atom:updated>2026-08-06T12:01:04.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rar3xp6x/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rar3xp6x/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள பகுதிகளில் நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>இது தொடர்பாக கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  </p><p>கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில்  நாளை மறுநாள் (8.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படும்.</p><p>அதன்படி கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் அருகே 4 பேருடன் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-with-4-occupants-overturns-into-a-ditch-near-dindigul-miraculously-they-survived</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-with-4-occupants-overturns-into-a-ditch-near-dindigul-miraculously-they-survived#comments</comments><guid isPermaLink="false">e9a061c2-3062-45be-b633-b5c5d2a31bd1</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:54:53 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:54:53.603Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,திண்டுக்கல்,Car,கார்,police enquiry,உயிர் தப்பினர்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pafdndf4/91.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பள்ளத்தில் கவிழ்ந்த கார்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/pafdndf4/91.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திண்டுக்கல் மாவட்டம் </a>வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரில் இருந்த 4 பேரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.</p><h2>பள்ளத்தில் கவிழ்ந்த கார்</h2><p>கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பு பிரிவு பகுதியில் தற்போது புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்தது.</p><p>இன்று (வியாழக்கிழமை) அந்த வழியாக வந்த கார் ஒன்று, மேம்பாலப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்து தலைகுப்புற கவிழ்ந்தது. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விபத்து </a>நடந்த இடத்தில் உரிய எச்சரிக்கைப் பலகைகளோ அல்லது பாதுகாப்புத் தடுப்பு அரண்களோ அமைக்கப்படாததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.</p><h2>அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்</h2><p>விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும் வாகன ஓட்டிகளும், பள்ளத்தில் கவிழ்ந்த காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 4 பேரும் எவ்விதப் பெரிய காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காக்காதோப்பு </a>பிரிவு பகுதி அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதியாக மாறி வருவதாகத் தெரிவிக்கும் வாகன ஓட்டிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக தலையிட்டு, கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் போதிய பாதுகாப்புத் தடுப்புகளையும், ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளையும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைனில்  மதுபானம் விற்பனை என்பது தவறானது: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-sale-of-liquor-is-wrong-minister-vignesh-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-sale-of-liquor-is-wrong-minister-vignesh-clarifies#comments</comments><guid isPermaLink="false">cabd7f65-b036-4e27-b76c-c162381b803f</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:54:38 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:54:38.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tasmac,மதுபானம் விற்பனை,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/0udgdgrs/vignesh.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/0udgdgrs/vignesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை தலைமை செயலகத்தில் மது விலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  ஆன்லைனில்  மதுபானம் விற்பனை என்பது தவறானது. ஆன்லைனில் மதுவை பெற முடியாது: முன்பதிவு மட்டுமே செய்ய  முடியும். கடைகளில் போய்தான் மதுபானம் வாங்க முடியும். ஆன்லைன் முன்பதிவு சோதனை நிலையில்தான் உள்ளது.எல்லா நிறுவனத்தின் மது பானங்களும்  தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 பெறுவதை தடுக்கவே புதிய திட்டம் கொண்டுவரப்படுகிறது. மதுபானம் மூலம் அரசுக்கு வருவாய் பெருக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. மதுபானம் விலை உயராது. ஊழலை தடுத்ததால் வருமானம் அதிகரித்துள்ளது. மதுக்கூடங்களின் அவல நிலை மாற்றப்படும். இடையூறான மதுக்கடைகள் இடமாற்றப்படும். பாட்டிலுக்கு 10 ரூபாய் என்பது 2011 முதலே உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilaga-meenavargal-meethana-ilangai-kadarpadaiyin-kaithu-nadavaikkaigalai-thaduthu-niruththa-ven-dum-manikkam-thagur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilaga-meenavargal-meethana-ilangai-kadarpadaiyin-kaithu-nadavaikkaigalai-thaduthu-niruththa-ven-dum-manikkam-thagur#comments</comments><guid isPermaLink="false">953de516-6bc5-4273-b472-ff6bc7fb8709</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:50:00 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:50:00.020Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள் கைது,தமிழக மீனவர்கள்,இலங்கை கடற்படை,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,TN Fishermen,SriLanka Navy,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qut4ra7n/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qut4ra7n/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக மீனவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் உரிய விளக்கம் தர வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.</p><p>சர்வதேச கடல் எல்லையை கடப்பதாக கூறி இத்தகைய நடவடிக்கைகள் எடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். தங்களது தொழிலை செய்ய விடாமல் தடுத்து வருகிற இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டுமென ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையிலிருந்து தமிழக மீனவர்கள் நிரந்தரமாக பாதுகாப்பினை பெறுகிற வகையில் இந்திய - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்த கூட்டு நடவடிக்கைக்குழு அமைத்து இத்தகைய கைது நடவடிக்கைகளை கண்காணித்து உரிய தீர்வினை காண வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த 2023-ம் ஆண்டு வரை 1,306 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு, 179 படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு அலட்சியப் போக்குடன் தட்டிக் கழித்து வருவது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.</p><p>எனவே, கடலில் மீன்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிற அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாக்க, இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை உடனடியாக விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய பா.ஜக. அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிவாரண அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது - மு. வீரபாண்டியன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-lack-of-relief-announcement-for-farmers-in-the-agriculture-budget-is-disappointing-m-veerapandians-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-lack-of-relief-announcement-for-farmers-in-the-agriculture-budget-is-disappointing-m-veerapandians-criticism#comments</comments><guid isPermaLink="false">aff5979b-3610-4350-9764-bbe85d30051f</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:42:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:42:32.502Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,CPI,agriculture budget,வேளாண்மை பட்ஜெட்,மு. வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/cn02zfon/veerapandian.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/cn02zfon/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இன்று சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு. வீரபாண்டியன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சார மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம், பருத்தி மறுமலர்ச்சி இயக்கம், மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ஏஐ உழவர் செயலி’ போன்ற புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றாலும், எல்நினோ தாக்குதல் தமிழ்நாட்டில் பாதிப்பை உருவாக்கும் என வானிலை ஆய்வுகள் கூறியுள்ள நிலையில் அதை எதிர்கொள்ள எந்த திட்ட அறிவிப்பும் இல்லை. </p><h2>பொறியியல் பயிற்சி மையங்கள்</h2><p>மழை நீர் சேமிப்பு திட்டம், தடுப்பணைகள் அமைக்கும் திட்டம் குறித்த அறிவிப்புகளும் இல்லை. குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. வருமானம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. நெல் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடம் உள்ளது. அது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. ஐந்து இடங்களில் வேளாண்மை பொறியியல் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது.</p><h2>பெருத்த ஏமாற்றம்</h2><p>பட்ஜெட்டில்,  விவசாய தொழிலாளர் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிப்புகள் இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, 5 ஏக்கர் நிலம் வரை உள்ள விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வது, மற்ற விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி என்பதை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வரும் நிலையில், அது பற்றிய அறிவிப்பு இல்லாதது, விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் அருகே வேன் மீது கார் மோதி ஒருவர் பலி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-killed-as-car-hits-van-near-tiruchendur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-killed-as-car-hits-van-near-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">719acb50-4e14-4681-a392-3f0b22289bae</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:37:51 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:37:51.005Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,van,வேன்,பலி,Tiruchendur,kill,கார்car</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/bdhurhzm/198.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார் மோதி ஒருவர் பலி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/bdhurhzm/198.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>திருச்செந்தூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><h2>விபத்து</h2><p>காஞ்சிப்புரம் மாவட்டம், நாயக்கன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் கண்ணன் என்பவர் நேற்று குலசேகரபட்டினம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர், ஆறுமுகநேரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். நேற்று மாலையில் வினோத் கண்ணன், லெட்சுமணன், சுதாகர் ஆகிய மூவரும் குறும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது அந்த கார் ஆறுமுகநேரியை தாண்டியதும் கட்டுபாடின்றி மின்னல் வேகத்தில் சாலையோரம் இருந்த டீக்கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது மோதி விட்டு  நிற்காமல் சென்றுள்ளது. பைக்  உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வண்டியை மடக்கி பிடிக்க பின்னாடி வீடியோ எடுத்தப்படி சென்றனர். </p><p>இதில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேன் மீது மோதியது. இந்த சம்வத்தில் கார் ஒட்டிய லட்சுமணன் அருகில் இருந்த வினோத் கண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><h2>விசாரணை</h2><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> உயிரிழந்தவரின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மூவரும் மது போதையில்  இருந்தது தெரிய வந்தது. </p><p>கார் வேகமாக சென்று நின்றுக்கொண்டிருந்த பைக் மீது மோதி நிற்காமல் செல்லுவதை அந்த டீக்கடையில் உள்ள கண்கானிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது, மேலும் கார் மோதிய காட்சி மற்றும் பைக் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் கார் பின் சென்று எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-7-pm-in-22-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-7-pm-in-22-districts#comments</comments><guid isPermaLink="false">48e705f9-75e1-4bd2-a832-1e9fdbcb9587</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:17:52 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:17:52.211Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/a6b4n6y5/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/a6b4n6y5/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளா வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, கரூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட் மாற்றம் அல்ல; ஏமாற்றம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-not-change-but-deception-former-minister-mrk-panneerselvam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-not-change-but-deception-former-minister-mrk-panneerselvam#comments</comments><guid isPermaLink="false">789ae7b3-c3d7-45b2-89bd-2c4dbf0eb244</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:09:19 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:09:19.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>MRK Panneerselvam,வேளாண் பட்ஜெட்,agriculture budget,எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/jlsexbcs/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/jlsexbcs/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>வேளாண் பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வரும் என்று தமிழக விவசாயிகள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எங்கள் பட்ஜெட்டை திரும்ப படித்தது போல் இருந்தது. நான் 6 முறை வேளாண் பட்ஜெட் மீது உரையாற்றியிருக்கிறேன். இன்று சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கும்போது 7-வது முறையாக படிக்கிறோமோ என்ற எண்ணம் வந்தது. </p><p>மாற்றம் என்று சொல்லி வந்தவர்கள் அளித்த பட்ஜெட்டில் மாற்றம் இல்லை. புதிய அறிவிப்புகள் ஏதாவது வரும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நாங்கள் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகள் வரி பிசகாமல் அப்படியே உள்ளன. திமுக ஆட்சியில் அறிவித்த அனைத்தும் தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்க திட்டமிட்டு இருந்தோம்; அதை அப்படியே அறிவித்து விட்டனர். 2 லட்சம் விசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மானாவாரி நில விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர்: வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-vao-arrested-for-accepting-a-bribe-of-rs1000-to-issue-a-succession-certificate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-vao-arrested-for-accepting-a-bribe-of-rs1000-to-issue-a-succession-certificate#comments</comments><guid isPermaLink="false">9514acd2-8f60-4386-82d3-24ed7f3101b4</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:02:29 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:02:29.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,லஞ்சம்,Bribery,வாரிசு சான்றிதழ்,Certificate,வி.ஏ.ஓ. கைது,VAO arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/elugptrx/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/elugptrx/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கரூர்</a> மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D">வாரிசு சான்றிதழ் </a>வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%93-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வி.ஏ.ஓ. கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1.000 லஞ்சம் </h2><p>கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலுார் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (வயது 36), ராஜபுரம் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) உள்ளார். இவரிடம் ராஜபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் விபிலன்(28) என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த வி.ஏ.ஓ., விபிலனிடம் ரூ.1,000 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம் </a>கேட்டுள்ளார்.</p><h2>வி.ஏ.ஓ. கைது</h2><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத விபிலன் இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் சென்று வி.ஏ.ஓ. அன்புராஜை கையும் களவுமாக பிடித்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி ரூ.100 கோடி நில மோசடி - சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-rs-100-crore-land-scam-sub-registrar-justin-manikandan-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-rs-100-crore-land-scam-sub-registrar-justin-manikandan-arrested#comments</comments><guid isPermaLink="false">5b7be077-836a-4dfb-b674-203a32685e82</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:00:27.462Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Murugan Temple,Palani,சார்பதிவாளர்,நில மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rt51so48/justin-Manikandan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rt51so48/justin-Manikandan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழனி தண்டாயுத பாணி சுவாமி மடத்திற்கு சொந்தமாக 1.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த மாதம் 6ஆம் தேதி தனிநபர்கள் பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ 2 கோடிக்கு வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக பழனி மலையடிவார போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் பத்திரப்பதிவை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பழனி சார்பதிவாளர்கள் இந்த நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய மறுத்து அவர்கள் விடுப்பில் சென்றனர். இதனால் கொடைக்கானலில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டினை பழனி அலுவலகத்திற்கு அழைத்து வந்து முறைகேடான பத்திரப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.</p><h2>முன் ஜாமீன் கோரி மனு</h2><p>இதையடுத்து ஜஸ்டின்  மணிகண்டன் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவருக்கு  இடைக்கால ஜாமீன் அளித்திருந்த நிலையில்,  ஜாமீன் மனு மீதான இறுதி தீர்ப்பை நேற்று உயர் நீதிமன்றம்  வழங்கியது. அதில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பழனி முருகன் கோவில் கட் டுப்பாட்டில் உள்ள ஒரு மடத்துக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என்று கூறப்பட்டு உள்ளது. அந்த சொத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். அதன்பேரில் பதிவான வழக்கை திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர். இதில் இந்த சொத்தின் ஆவணங்களை போலியாக தயாரிப்பதில் அன்வர்தீன் என்பவர் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததும், 1998-ம் ஆண்டு முதலே சம்பந்தப்பட்ட சொத்தை அபகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததும் தெரியவந்தது.</p><h2>விசாரணையை பாதிக்கும்</h2><p>இந்த வழக்கில் அன்வர்தீன் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சொத்தை முறைகேடாக பதிவு செய்வதற்கு பழனி சார்பதிவாளர் பாலசுந்தருக்கு, அன்வர்தீன் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.விற்பனையாளர் அவசர, அவசரமாக அந்த சொத்தை மொத்தம் ரூ.2 கோடிக்கு விற்றுள்ளார். இதுவும் அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது. இதுவும் மனுதாரருக்கு எதிராக அமைகிறது.மேலும் இந்த ஆவண பதிவில் ஈடுபட்ட அதிகாரிகள், அறங்காவலர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டு குறித்தும் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை பாதிக்கும்.</p><h2>அதிரடி கைது</h2><p>பழனி சார்பதிவாளர் பாலசுந்தரால் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளுக்கு எவ்வித மதிப்பும் அளிக்காமல் கொடைக்கானலில் இருந்து பொறுப்பு சார் பதிவாளராக வந்திருந்த ஜஸ்டின் மணிகண்டன் நேரடியாக செயல்பட்டு பதிவு நடவடிக்கையை முடித்து இருக்கிறார். இது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு உதவும் நோக்கில், அவர் வேண்டுமென்றே அந்த ஆவணத்தை பதிவு செய்துள்ளார் என்பதை காட்டுகிறது. எனவே அவரிடம் காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகிறது.எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஜஸ்டின் மணி கண்டனுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.” என்று உத்தரவிட்டது.  முன் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடியான நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜஸ்டின் மணிகண்டன் ஐந்தாவதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. </p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு குறைபாடுகள்; பதிலுரையில் அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/various-shortcomings-in-the-agricultural-budget-farmers-association-insists-on-announcing-them-in-the-reply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/various-shortcomings-in-the-agricultural-budget-farmers-association-insists-on-announcing-them-in-the-reply#comments</comments><guid isPermaLink="false">e8481697-bb34-47bb-9f4c-b71d0d2f5878</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:50:06 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:50:06.942Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள் சங்கம்,வேளாண் பட்ஜெட்,Agricultural Budget,குறைபாடு,Farmers&apos; Associations-விவசாயிகள் சங்கத்தினர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5kjdv9ud/14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5kjdv9ud/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இன்று சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்  பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-  </p><p> தமிழக வேளாண் துறை அமைச்சர் 2.30 மணி நேரத்திற்கு மேலாக வேளாண் நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். வேளாண் துறையின் உட்பிரிவுத்துறைகளையும்   எடுத்துக்கொண்டதால் இது நீண்ட உரையானதே தவிர, எங்கள் சங்கம் சார்பிலும் மற்ற சங்கங்களும்,, சென்னையில் நடந்த மாநில கருத்து கேட்பு கூட்டத்தில் பேசி மனுவாக கொடுத்த உடனடி மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் பல இதில் இல்லை. தற்போதைய விவசாயிகளின் எதிர்பார்ப்பு, தேவை ஆகியவற்றை முழுமையாக கவனத்தில் கொண்டு இந்த அறிக்கை இல்லை. </p><h2>அரசு பொதுத்துறை காப்பீடு  திட்டம்</h2><p>பயிர் காப்பீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யபபட்டுள்ளது. ஆனால் நாங்கள் கோரிய அரசு பொதுத்துறை காப்பீடு  அமல்படுத்துவதற்கான திட்டம் இல்லை. நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை அமல்படுத்த  வலியுறுத்தியது இல்லை. மேலும் தென்னக நதி இணைப்பு திட்டத்தை நாங்கள் வலியுறுத்திய சூழலில் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். மாநில உள்ளூர் நதி  இணைப்பு என்கிற வகையில் காவேரி குண்டாறு திட்டத்திற்கு 143 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்ததை கூடுதல் படுத்தி காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.</p><h2>உரிய பாதுகாப்பு நிதி</h2><p>வெங்காய சேமிப்பு கிடங்குகள் அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது. சிறுதானியங்கள், குறுதானியங்கள்,, மானாவரி பயிர்களுக்கான சிறப்புத் திட்டம் நல்லது. உள்ளூர் அளவில் இதன் விற்பனைக்கான உத்தரவாதம், அரசு கொள்முதல், மானியத் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமே.  மலை அடிவார வேளாண் பயிர்களை, மனித உயிர்களை காடுவாழ் உயிரினங்களிலிருந்து பாதுகாப்பதற்கு சூரிய மின்வெளி திட்டம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனில்லை. காடு விலங்குகளை அப்புறப்படுத்த விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கிட வேண்டும். உயிரிழப்பு, பயிரிழப்பிற்கு உரிய பாதுகாப்பு நிதி வழங்கிட அறிவிப்பு வேண்டும். </p><h2>தனி சிறப்பு ஆய்வு திட்டங்கள்</h2><p>கரும்பு உயர் விளைச்சலுக்கு வீரிய கரணைகள் அரசு விவசாயிகளுக்கு வழங்கிட உள்ளதாம். ஆனால் விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. கரும்பு டன்னுக்கு ரூபாய் 4500 வழங்கிட வேண்டும். மூடிய மற்றும் நலிவடைந்த ஆலைகளை செயல்படுத்துவதற்கான தனி சிறப்பு ஆய்வு  திட்டங்கள் இல்லை. வாழைக்காக, விவசாயிகளுக்கு உகந்த காப்பீடு திட்டம் இல்லை. வாழை மரங்களுக்கான முட்டு மரத்திற்கு 6 கோடி ரூபாய் ஒதுக்கீடாம். தென்னை சாகுபடி குறித்து வலியுறுத்தப்பட்டாலும், விலை உயர்வு மற்றும் தமிழக அரசே உரி தேங்காய்களாக  கொள்முதல் செய்வது மற்றும் தேங்காய் எண்ணெய் விற்பனை திட்டங்கள் அறிவிக்க இல்லை.</p><p>எல்நினோ தாக்குதல் 12 மாவட்டங்களில்  சொல்லப்பட்டாலும், இதன் பாதுகாப்பு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. மழை நீர் சேமிப்பு திட்டம், தடுப்பணைகள் அமைக்கும் திட்டம் என்பது இல்லாதது பெரிய ஏமாற்றம். நெல் பருவம் கொள்முதல்  தொடங்க உள்ள நேரத்தில் தமிழக அரசின் ஊக்கத்தொகை உயர்வு அறிவிப்பு இல்லை. குறுவை சாகுபடி வருமானம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, குறுவை பயிரிட்டு காய்ந்து இழப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான அறிவிப்புகள்  இல்லை. நெல் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும். இந்த நிலையில் பதிலுரை நிகழ்த்தும்  பொழுது இவைகளையும் சேர்த்து தமிழக அரசின் திட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">விவசாயிகள் சங்கம்</a> கேட்டுக்கொள்கிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முந்தைய அரசுகளின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளதா? - அமைச்சர் நிர்மல் குமார் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-stickers-been-pasted-over-schemes-from-previous-governments-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-stickers-been-pasted-over-schemes-from-previous-governments-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">a5286476-b5ea-4a36-ba6d-b682be3cf45c</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:32:17 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:32:17.188Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சபாநாயகர்,நிர்மல் குமார்,Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/9tejzclm/Nirmal-kumar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிர்மல் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/9tejzclm/Nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திமுக அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி&nbsp;விட்டு புதிய பெயரில் திட்டங்களை  தவெக அரசு அறிவிப்பதாகவும், வெறும் ஸ்டிக்கர் மட்டுமே  ஒட்டுவதாகவும்  எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இது குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், . திட்டங்களுக்கு பொதுவான பெயர்கள் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். "ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடர்வது வழக்கம்தான்; ஒவ்வொரு ஆட்சியிலும் சில திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன" என்றார். </p><p>சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  நிதி ஆதாரத்தை பெருக்க அதிமுகவும், திமுகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நல்ல திட்டங்களை புதிய அரசு தொடர்வது வழக்கமான ஒன்றுதான். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக நிதி நிலமை</a> எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.மின்சாரம், போக்குவர்த்து கழகம், ஆவின் என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மூடும் நிலையில்தான் இவர்கள் விட்டு சென்று இருக்கிறார்கள். புதிய ஆதாரத்திற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அவர் என்ன செய்தார். எடப்பாடி எதுவும் செய்யவில்லை. ஸ்டாலினும் எதுவும் செய்யவில்லை. ஆனால், முதல்வர் விஜய் இதை சீரமைக்கும் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்.  </p><h2>சிறப்பாக இருக்கும்</h2><p> விவசாய கடன் விவகாரத்தில் தெளிவாக கூறியுள்ளோம்.விவசாய கடன்கள் 75 ஆயிரம் ரூபாய் வரை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> விவசாயிகள்</a> பலன் அடைந்துள்ளனர். இருக்கிற நிதி நிலையில், இருக்கிற ஆதாரங்களை வைத்து எவ்வளவு தூரம் மக்களுக்கு பயன் அளிக்க முடியுமோ அதை முதல் அமைச்சர்  செய்துள்ளார். கண்டிப்பாக வரும் காலங்களில் மக்களுக்கான அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும்.</p> <h2> ஆட்சேபமான கருத்துகள்</h2><p>தங்க மோதிரம். தாலிக்கு தங்க திட்டம் எல்லாம் இருக்கட்டும், இவை எல்லாம் நல்ல திட்டம். ஏழை பெண்களுக்கு பயன் அளிக்க கூடிய திட்டம். அதை மீண்டும் செயல்படுத்தி இருக்கிறோம். முதல் அமைச்சரை புகழ்ந்து பேசுவதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தேவையில்லாமல் இருந்தால் நீக்குவேன் என்று தான் சொன்னார். சபாநாயகர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆட்சேபமான கருத்துகள் இருந்தால் நீக்குகிறேன் என்று சொன்னார். ஆட்சேபமான கருத்துகள் எதுவும் இல்லை. அமைச்சர் வினோத் பேசியதில் தவறும் எதுவும் இல்லை. திட்டங்களுக்கு பொதுவான பெயர்கள் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். காவிரி விவகாரத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறோம். உரிமைகளை மீட்க எல்லா வழிகளையும் செய்வோம்" என்று கூறினார்.  </p>]]></content:encoded></item><item><title>கழிவறைக்கு சென்ற மாணவர்களை மின்சாரம் தாக்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-were-electrocuted-while-going-to-the-restroom</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-were-electrocuted-while-going-to-the-restroom#comments</comments><guid isPermaLink="false">9d5fbfef-aa9c-4d92-938f-7ab079c4926b</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:30:11.703Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>suspend,தர்மபுரி,Dharmapuri,மாணவர்கள்,மின்சாரம் தாக்கி,காயம்,police enquiry</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/1q6z57mz/90.jpg" width="735"><media:title type="html"><![CDATA[ அரசுப் பள்ளி]]></media:title><media:description type="html"><![CDATA[ தருமபுரி அரசுப் பள்ளி ஒன்றில் கழிவறையைப் பயன்படுத்தச் சென்ற 9 மாணவர்கள் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/1q6z57mz/90.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி,</p><p>தருமபுரி மாவட்டத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அரசுப் பள்ளி</a> ஒன்றில் கழிவறையைப் பயன்படுத்தச் சென்ற 9 மாணவர்கள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்சாரம் தாக்கி</a> மயக்கமடைந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விபத்து நடந்தது எப்படி?</h2><p>சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், பணியாளர்கள் தங்குவதற்காக தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பறை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்த பின்னரும் அந்த தற்காலிக மின் வயர் அகற்றப்படாமல் அலட்சியமாக விடப்பட்டது.</p><p>மேலும் பலத்த காற்றின் காரணமாக அந்த மின் வயர் சேதமடைந்து, கழிவறையின் இரும்பு மின் கதவில் உரசியபடி இருந்துள்ளது. இதனால் கதவு முழுவதும் மின்சாரம் பாய்ந்திருந்த நிலையில், கழிவறையைப் பயன்படுத்த வந்த 9 மாணவர்கள் கதவைத் தொட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர்.</p><h2>ஆஸ்பத்திரியில் அனுமதி</h2><p>மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்கள், அவர்களை மீட்டு உடனடியாக தொப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.</p><h2>கலெக்டர் அதிரடி நடவடிக்கை</h2><p>தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் ஆபத்தான மின் இணைப்பை அகற்றாமல் இருந்ததே விபத்துக்குக் காரணம் என ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி முன்பாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், இந்த விபத்தை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மறைக்க தலைமையாசிரியர் முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தருமபுரி மாவட்ட கலெக்டர்</a> சரவணன் நேரடியாக பள்ளிக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையின் அடிப்படையில், கடும் அலட்சியத்துடன் செயல்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் செந்தாமரையை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அங்குள்ள மற்ற 3 ஆசிரியர்களிடமும் விளக்கக் கடிதம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>அகஸ்தியர் அருவிக்கு நாளை முதல் 10 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-banned-from-visiting-agasthiyar-falls-for-10-days-from-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-banned-from-visiting-agasthiyar-falls-for-10-days-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">29d57123-3622-468f-aa3c-1223c72314b6</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:28:14 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:28:14.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,அகஸ்தியர் அருவி,agasthiyar falls,banned,செல்ல தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2c5qqd91/agasthiyar-falls.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/2c5qqd91/agasthiyar-falls.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை</p><p>ஆடி அமாவாசையை முன்னிட்டு அகஸ்தியர் அருவிக்கு நாளை முதல் 10 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர்  தடை விதித்துள்ளனர்.</p><h2>அகஸ்தியர் அருவி</h2><p>நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை செழிப்படைய செய்கிறது. மேலும் சில மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஆறு விளங்குகிறது. இந்த ஆறு மலைகளுக்கு நடுவே தவழ்ந்து வரும் இடத்தில் அகஸ்தியர் கோவில் அருகில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.</p><p>குற்றாலம், மணிமுத்தாறு போன்ற அருவிகள் இருந்தாலும் அங்கு மழை பெய்யும் காலத்தில் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால், பாபநாசம் காரையாறு அணையில் இருந்து சீராக திறந்து விடப்படும் தண்ணீரால், அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் 365 நாட்களும் தண்ணீர் விழும். இங்கு குளிக்க வருபவர்கள், தண்ணீர் இல்லை என்று திரும்பி சென்றது கிடையாது. இதே போல் பாபநாசத்தில் உள்ள கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு பக்தர்கள், தாமிரபரணி ஆற்றில் நீராடி பாபநாச சுவாமி உலகம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். தங்களது பாவங்கள் போக்க வேண்டி செல்வார்கள்.</p><h2>ஆடி அமாவாசை திருவிழா</h2><p>இந்நிலையில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வரும் 12-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோவிலுக்கு  அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பொதுமக்களின் நலன் கருதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF">அகஸ்தியர் அருவி</a>க்கு நாளை முதல் 10 நாட்கள் சுற்றுலா பயணிகள்  செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>