<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 08 Sep 2026 14:22:34 +0000</lastBuildDate><item><title>தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது</title><link>https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-9-locations-in-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-9-locations-in-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">d5401f58-b8a6-4574-bee6-008889fc63b1</guid><pubDate>Tue, 08 Sep 2026 14:21:57 +0000</pubDate><atom:updated>2026-09-08T14:21:57.114Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,வெயில்,heat,வானிலை தகவல்,வெப்பம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/4lbo7z8t/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/4lbo7z8t/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-</p><p>வேலூர் - 104.72° பாரன்ஹீட் (40.4° செல்சியஸ்)</p><p>திருச்சி - 104.18° பாரன்ஹீட் (40.1° செல்சியஸ்)</p><p>ஈரோடு - 103.28° பாரன்ஹீட் (39.6° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)</p><p>தஞ்சாவூர் - 102.2° பாரன்ஹீட் (39.0° செல்சியஸ்)</p><p>கரூர் பரமத்தி - 101.66° பாரன்ஹீட் (38.7° செல்சியஸ்)</p><p>நாமக்கல் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)</p><p>மதுரை விமான நிலையம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>திருத்தணி - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையின் மதிப்பீட்டுக் குழுவை அறிவித்தார் ஜே.சி.டி. பிரபாகர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jcd-prabhakar-announced-the-legislative-assemblys-estimates-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jcd-prabhakar-announced-the-legislative-assemblys-estimates-committee#comments</comments><guid isPermaLink="false">2089018b-6450-4ee5-8dd4-4a9fb2cdf75c</guid><pubDate>Tue, 08 Sep 2026 14:14:58 +0000</pubDate><atom:updated>2026-09-08T14:14:58.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,JCD Prabhakar,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,Speaker J.C.D. Prabhakar,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/iq8j2i44/kliere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/iq8j2i44/kliere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு சட்டசபையின் 14 பேர் கொண்ட மதிப்பீட்டுக் குழுவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று (செவ்வாய் கிழமை) அறிவித்தார். </p><p>இதன்படி மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக அருள்பிரகாசம், அவை உரிமை குழு தலைவராக துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். </p><p>மேலும் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவராக ஐ.யூ.எம்.எல். (IUML) சட்டமன்ற உறுப்பினர் சையத் பாரூக் பாஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவைக்குழு தலைவராக பத்மநாபபுரம் தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ஆர்.செல்லசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நூலகக்குழுத் தலைவராக காட்டுமன்னார்கோவில் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>மேலும் சிந்து, முகுந்தன், இளையராஜா, ரகுபதி, தியாகராஜன், செல்வம், ரேவந்த் சரண், ஜெகந்நாத் மிஸ்ரா, தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் உரிமை குழுவில் இடம் பெற்றுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>  காற்று  தூய்மையாக உள்ள நகரங்களின் பட்டியல்; லக்னோ முதலிடம்; சென்னை 35-வது இடம் - சமூக ஆர்வலர்கள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/list-of-cities-with-clean-air-lucknow-ranks-first-chennai-35th-social-activists-express-concern</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/list-of-cities-with-clean-air-lucknow-ranks-first-chennai-35th-social-activists-express-concern#comments</comments><guid isPermaLink="false">e5806856-7f04-40a9-8c7e-41de12da5e29</guid><pubDate>Tue, 08 Sep 2026 14:09:41 +0000</pubDate><atom:updated>2026-09-08T14:09:41.911Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,முதலிடம்,லக்னோ,Lucknow,காற்று,Clean air,In Chennai,Cities</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/sd9ho95o/fresh-city.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ தூய்மையான நகரங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[  காற்று  தூய்மையாக உள்ள நகரங்களின் பட்டியல்; லக்னோ முதலிடம்; சென்னை 35-வது இடம் - சமூக ஆர்வலர்கள் கவலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/sd9ho95o/fresh-city.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய அரசு வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88">காற்று தூய்மையாக</a> உள்ள நகரங்களின் தேசிய தரவரிசை பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டின் 48 முக்கிய நகரங்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><h2>முதல் முன்று இடம்</h2><p>தேசிய அளவில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பிரிவில், லக்னோ 198 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அதை தொடர்ந்து இந்தூர் (197) மற்றும் ஜபல்பூர் (195) ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இடம்பெற்றன.</p><h2>சென்னைக்கு 35-வது இடம்</h2><p>தமிழ்நாட்டை பொறுத்தவரை, மூன்று நகரங்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. திருச்சி சிறப்பாக செயல்பட்டு, 183 புள்ளிகளுடன் தேசிய அளவில் 12-வது இடத்தை பிடித்தது. தமிழகத்தின் தலைநகரான சென்னை 35-வது இடத்தை பிடித்துள்ளது. மதுரை, 132.1 புள்ளிகளுடன் 39-வது இடத்தை பிடித்தது. </p> <h2>மூன்று லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை</h2><p>மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நகரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆய்வின் வகைப்பாட்டின்படி மூன்று லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட தூத்துக்குடி நகரம், 142.2 புள்ளிகளை பெற்று, அப்பிரிவில் உள்ள 40 நகரங்களுக்குள் 35-வது இடத்தை பிடித்தது.</p> <h2>மக்களின் பங்களிப்பு அவசியம்</h2><p>தமிழக நகரங்களின் இந்த பின்னடைவு குறித்து சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நகரங்களை</a> தூய்மையாக வைத்திருக்க அரசு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும், என்னதான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும் அது மட்டுமே முழுமையான பலனை தராது. பொதுமக்களாகிய நாமும் முழு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். </p><p>வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, பொது இடங்களில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசாமல் இருப்பது போன்ற சுயக்கட்டுப்பாட்டை மக்கள் கடைப்பிடித்தால் மட்டுமே, தமிழக நகரங்கள் இப்பட்டியலில் முன்னணி இடத்தை பிடிக்க முடியும்" என தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு: தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் தொடங்கப்படுகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nadagakkalaiyil-mudugalai-pattapadippu-tamilnadu-arasin-saarbil-chennaiyil-thodangapadugirathu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nadagakkalaiyil-mudugalai-pattapadippu-tamilnadu-arasin-saarbil-chennaiyil-thodangapadugirathu#comments</comments><guid isPermaLink="false">c44e3234-8499-4585-81b7-291725e054d6</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:54:41 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:54:41.304Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தமிழக அரசு,விண்ணப்பம்,Admission,நாடகக்கலை,முதுகலை பட்டப்படிப்பு,Theatre Art</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/iq137ejg/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/iq137ejg/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு “இளைஞர்களுக்கு நடிப்பு திறனை மேம்படுத்தி நாடக கலையினை வளர்த்திடும் நோக்கில்” தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்க உள்ளது. தமிழை முத்தமிழாக வகைப்படுத்தி வளர்த்தனர் தமிழர்கள். முத்தமிழில் மூன்றாம் தமிழாக உள்ள நாடக்கலையின் வரலாறு கூத்து, இசை நாடகம், வரலாற்று நாடகம், புராண இதிகாச நாடகம், சமூக நாடகம், மௌன நாடகம் என பல பரிமாணங்கள் கண்டுள்ளது.</p><p>நாடகக்கலையின் முதுகலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படுவதன் மூலம் நடிப்பின் பல பரிமாணங்களை இளைஞர்கள் பெற முடியும் என்ற அடிப்படையில் கலை பண்பாட்டுத்துறை நாடகப்படிப்பில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்க அரசிடம் அனுமதி பெற்றது. இதன் அடிப்படையில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு 2026-2027ம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.</p><p>இப்பட்டப்படிப்புக்கான ஆசிரியர் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மாதம் ரூ.25,000/- தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நாடகக்கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி, இதர தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.09.2026 அன்று மாலை 5 மணிக்குள் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வந்து சேர வேண்டும்.</p><p>முதுகலை பட்டப்படிப்பு (MTA – Master of Theatre Arts) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கடைசி நாள் 21.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பில் சேர ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. இப்படிப்பிற்கான விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் (இணையதள முகவரி www.tnjjmfau.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் விதிகளை மீறியதாக முதல்-அமைச்சர் விஜய் மீது தி.மு.க. உரிமை மீறல் புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-files-breach-of-privilege-complaint-against-chief-minister-vijay-for-violating-assembly-rules</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-files-breach-of-privilege-complaint-against-chief-minister-vijay-for-violating-assembly-rules#comments</comments><guid isPermaLink="false">5415237d-4270-4bb8-b053-d6fcdf9267e6</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:48:04 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:48:04.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,திமுக,DMK,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,உரிமை மீறல் பிரச்சினை,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ydt3t2qy/budget.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ydt3t2qy/budget.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டப்பேரவையில் விதிகளை மீறியதாக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> மீது தி.மு.க.வின் துணைக் கொறடா கோவி. செழியன் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.</p><h2>முதல்-அமைச்சர் விஜய்</h2><p>காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரையாற்றிய <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதையடுத்து இன்றைய பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “என்னுடைய சட்டமன்ற அனுபத்தில் எத்தனையோ முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளேன்..! அவர்கள் எல்லாரும் கண்ணியமாக தான் பேசினார்கள். நேற்று 26 நிமிடங்கள் அமைதியாக காத்திருந்தோம். ஆனால், நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார். பலமுறை இதே மன்றத்தில் பேசப்பட்ட சர்க்காரிய அறிக்கை குறித்தும் அவதூறாக பேசியிருக்கார். முதல்-அமைச்சர் ஆதாரமில்லாமல் பேசி இருக்கிறார். காவல்துறை மானியம் தொடர்பான தகவல் தவிர்த்து, மிசா, மாறன் குறித்து அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/u4pbrj94/2025.jpg" /></figure><h2>நீக்க முடியாது - சபாநாயகர் திட்டவட்டம்</h2><p>இருப்பினும் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய் </a>பேசியதில் இருந்து எந்த பகுதியையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திட்டவட்டமாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகர் முன்பு முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், சட்டப்பேரவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடும் திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/23vg5c6h/dmmk.jpg" /></figure><h2>தி.மு.க.வினர் வெளியேற்றம்</h2><p>இந்த சூழலில் தி.மு.க.வினர் இருக்கைக்கு சென்று அமருமாறு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையில் இருந்து அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார். இதனையடுத்து தி.மு.க.வினரை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.</p><h2>உரிமை மீறல் புகார்</h2><p>இந்நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை அவருடைய அறையில் சந்தித்த திமுக துணை கொறடா கோவி.செழியன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> நேற்று காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பதில் உரையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது, அவையில் இல்லாதவர்களான முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் பற்றி பேசியது, நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பேசியது ஆகியவை சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானது எனவே தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவை உரிமை மீறல் புகார் அளித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தாம்பரம் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களின் எண்ணிக்கையை 15 ஆக அதிகரிக்க திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-increase-the-number-of-railway-tracks-at-tambaram-railway-station-to-15</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-increase-the-number-of-railway-tracks-at-tambaram-railway-station-to-15#comments</comments><guid isPermaLink="false">db568b9a-c394-4fa7-a34b-5fe318d69255</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:39:35 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:39:35.822Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Tambaram,தாம்பரம்,Track,ரெயில் நிலையம்,Railway,திட்டம்,தண்டவாளங்கள்,station,அதிகரிக்க</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ar0jzgzv/199.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாம்பரம் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ar0jzgzv/199.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எழும்பூர் நிலையத்தின் நெரிசலைக்குறைக்க தாம்பரம் ரெயில் நிலைய தண்ட வாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்த தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</p><h2>தாம்பரம் ரெயில் நிலையம்</h2><p>சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள ரெயில் நிலையம் இரண்டாவது பெரிய முனையமாக உள்ளது. தாம்பரம் ரெயில் நிலையம் ஆண்டுக்கு 3.50 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாளுகிறது. இருப்பினும், இந்த நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள், தொலைதூர ரெயில்கள் இயக்கப்படும் நடைமேடைகளை அடைவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 உயர்த்த நீட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தற்போது, தண்டவாள மேம்பாடு மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. மேலும் அவை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு ரெயில் நிலையத்தில் நீண்ட தூர ரெயில்களை இயக்குவதற்காக தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10லிருந்து 15ஆக அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் இது முக்கிய நிலையமாகச் செயல்பட தொடங்கும். இந்த நிலையத்தின் வடக்குப்பகுதியில் உள்ள பாலம் மற்றும் வழித்தட நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்து, இரு புறங்களிலும் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கப்படும்.</p><p>மேலும் காத்திருப்பு அரங்குகள் கட்டுதல், நகரும் படிக்கட்டுகள் பொருத்துதல் மற்றும் அனைத்து நடைமேடைகளுடனும் இணைக்கும் படிக்கட்டுகள் அமைத்தல்.</p><h2>எழும்பூர் ரெயில் நிலையம்</h2><p>இந்த அனைத்து உள்வேலைகளும் நடத்தப்படுகின்றன. புதிய நிலையத்தில், பயணச்சீட்டுகளுக்காக ஒரு மேம்படுத்தப்பட்ட முன்பதிவு மையம் மற்றும் ஒரு தங்கும் வசதி கொண்ட அறை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் நிலையத்தின் நெரிசலைக் குறைக்கவும்,  தாம்பரத்திலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் வட பகுதி நகரங்களுக்குச் செல்லும் தொலைதூரம் செல்லும் ரெயில்களை கூடுதலாக இயக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும்.</p><p>இத்திட்டம் நிறைவேறினால், சென்னை எழும்பூரை விடப் பெரிய போக்குவரத்து மையமாகவும் உருவெடுக்கும். ரூ.19 கோடி செலவில் புதிய நடை மேம்பாலம், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் காத்திருப்போர் அறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>வடக்கு பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய நடை மேம்பாலத்தில் நவீன பயணச்சீட்டு வழங்கும் மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில் நில மேம்பாட்டு ஆணையம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">தாம்பரம்</a> முனையத்தை முழுமையாக மறுசீரமைப்பதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது என அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்-யின் இங்கிலாந்து பயணம் தள்ளிவைப்பு?

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-uk-trip-postponed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-uk-trip-postponed#comments</comments><guid isPermaLink="false">2791fd3b-5c9e-44de-8f08-23b470e2a47a</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:21:05 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:21:05.585Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,இங்கிலாந்து,முதல்-அமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/62wo6uaj/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/62wo6uaj/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p> <p>முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>  <h2>இங்கிலாந்து பயணம்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இங்கிலாந்து செல்ல <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>திட்டமிட்டிருந்தார். வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.</p><p>இங்கிலாந்தில் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துரைப்பதுடன், புதிய முதலீடுகளை ஈர்க்கும் பணிகளையும் ஒப்பந்தங்களையும் நேரில் கண்காணிக்க முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டிருந்தார்.</p> <h2>மலேசிய பிரதமர் வருகை</h2><p>இதனிடையே, வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பங்கேற்க உள்ளார். பிரிக்ஸ் மாநாட்டிற்குப்பின் அன்வர் இப்ராஹிம் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சென்னை வருவதால் அவரை சந்திப்பதை முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>தவிர்ப்பது சரியாக இருக்காது என கவர்னர் அர்லேகர் தரப்பில் அறுவுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p> <h2>முதல்-அமைச்சர் விஜய் பயணம் தள்ளிவைப்பு</h2><p>இதையடுத்து, சென்னை வரும் மலேசிய பிரதமர் இப்ராஹிமை சந்திக்கும் வகையில் கவர்னரின் அறுவுத்தலின்பெயரில் முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>மலேசிய பிரதமர் இப்ராஹிம் சென்னையில் இருந்து மீண்டும் மலேசியா புறப்பட்டப்பின் முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணத்தை மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய்-யின் இங்கிலாந்து பயண தேதி விவரம் விரைவில் அறிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>21 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு: 11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/21-day-assembly-session-concludes-11-bills-passed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/21-day-assembly-session-concludes-11-bills-passed#comments</comments><guid isPermaLink="false">8ca5a121-ca86-4843-a5e4-c0d85803292e</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:02:09 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:02:09.033Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN Assembly,சபாநாயகர்,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,மசோதாக்கள்,bills,CM Vijay,ஜேசிடி பிரபாகர்,JCD Prabhakar,Speaker J.C.D. Prabhakar,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/k693oem9/gaja.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/k693oem9/gaja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>21 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. 11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/gi7fqabc/uruva.jpg" /></figure><h2>பட்ஜெட் தாக்கல்</h2><p>தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. </p><p>தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரியவில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/18jmyusq/udhay.jpg" /></figure><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>இதனைத் தொடர்ந்து, ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மொத்தம் 55 துறைகள் இருப்பதால், தினமும் 3, 4 துறைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. </p><p>முக்கியமாக, கடந்த 3-ந் தேதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கைவசம் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதால், சட்டசபையில் அனல் பறந்தது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/p5hl0u43/2025.jpg" /></figure><h2>11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம் </h2><p>இந்த நிலையில், நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். </p><p>இந்த நிலையில், சட்டசபையில் இன்று 11 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 21 நாட்களாக நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது. பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>அடுத்து, நவம்பர் மாதம் மழைக்கால கூட்டத் தொடர் சுமார் 3 நாட்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கும் என தெரிகிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/mwm4jkho/budget.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>பஞ்சமி நிலங்களை கண்டறிய ஆணையம்: மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commission-to-identify-panchami-lands-cpi-m-welcomes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commission-to-identify-panchami-lands-cpi-m-welcomes#comments</comments><guid isPermaLink="false">9cfe6bb2-736c-4f77-8d2f-8ad3d0e1908f</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:01:15 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:01:15.455Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பெ.சண்முகம்,பஞ்சமி நிலங்கள்,CPM,p shanmugam,மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ne0xrt3w/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ne0xrt3w/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பஞ்சமி நிலங்களை உடனடியாக பட்டியல் சாதி மக்களுக்கு மறு விநியோகம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பஞ்சமி நிலங்களை கண்டறிய தனியாக ஆணையம் அமைக்கப்படும் என்ற சமூக நீதித்துறை அமைச்சரின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஏற்கனவே, பல்வேறு காலக்கட்டத்தில் அரசால் ஆணையங்கள், கமிட்டிகள் அமைக்கப்பட்ட பிறகும் பஞ்சமி நில மீட்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.</p><p>12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களில் தற்போது 1.86 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சமி நிலம் என்று கண்டறியப்பட்ட நிலங்களை உடனடியாக பட்டியல் சாதி மக்களுக்கு மறு விநியோகம் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p><p>புதிதாக அமைக்கப்பட இருக்கும் ஆணையம், பஞ்சமி நிலங்களை கண்டறிவதுடன், அதை மீட்டு தகுதியான குடும்பங்களுக்கு ஒப்படைக்கச் செய்வது உள்ளிட்ட பணிகளை முழுமையாக செய்வதற்கான அதிகாரம் கொண்டதாக அமைக்கப்பட வேண்டுமென்றும் இப்பணிகளை நிறைவேற்ற காலவரையறை தீர்மானிக்கப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் காற்று மாசுபடுதலை அரசு கட்டுப்படுத்த வேண்டும்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-curb-air-pollution-in-tamil-nadu-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-curb-air-pollution-in-tamil-nadu-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">9f9e8a10-b22e-4379-90bf-a6c9ba59d066</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:41:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:41:00.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காற்று மாசு,Air pollution,Chennai,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ansff8c8/47.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ansff8c8/47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் காற்று மாசுபடுதலை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>காற்று மாசுபாடு</h2><p>தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின் கீழ், முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி, காற்றின் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யும் “ஸ்வச் வாயு சர்வேக்ஷன்” என்ற தேசிய மதிப்பீட்டில், தமிழகத்தின் தலைநகரான சென்னை 35-ஆவது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. </p><p>இந்தியாவிலேயே மக்கள் நெருக்கமும், போக்குவரத்து நெரிசலும் அதிகமுள்ள முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான சென்னையில், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றின் தரம் ஆண்டுக்கு ஆண்டு மாசடைந்து வருவதை தற்போது ஆட்சியில் உள்ள தவெக அரசாவது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நுரையீரல் நோய்கள், இதய நோய்கள் உள்ளிட்ட ஆரோக்கியக் குறைபாடுகளையும், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவமழை மாற்றத்தையும் தூண்டிவிடும் இந்த காற்று மாசடைதல் தொடர்வது, ஆரோக்கியமான சமூகத்திற்கு நல்லதல்ல.</p><h2>ஆய்வு</h2><p>எனவே, தமிழகம் முழுவதிலுமுள்ள தொழிற்சாலைகளிலும் மக்கள் பயன்படுத்தும் வாகனங்களிலும் நச்சு புகையைக் கட்டுப்படுத்தும் “மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள்" பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை ஆளும் அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமென <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல் -அமைச்சரை</a> கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எனது உடல்மொழி உள்நோக்கம் கொண்டதில்லை: முதல்-அமைச்சர் விஜய் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/my-body-language-was-not-intentional-says-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/my-body-language-was-not-intentional-says-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">1feda47f-323d-4445-bd94-4f1e5dae153b</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:28:55 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:29:39.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,தமிழக சட்டசபை,TN Assembly,விளக்கம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,சைகை மொழி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/tnm8c40h/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/tnm8c40h/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் காவல்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் உரையாற்றிய முதல்-அமைச்சர் விஜய், "திமுகவினர் என்ன பேசினாலும், மிசாவைப் பார்த்தவர்கள், மிசாவைப் பார்த்தவர்கள் என்று கூறுகிறார்கள். எல்லாருக்கும் அந்த மிசாவைப் பற்றிய வரலாறு நன்றாக தெரியும்" என்று கூறி ஒரு சைகையை காட்டினார். இந்த சைகை கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>முதல்-அமைச்சரின் இந்த சைகைக்கு கண்டனம் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம், "அவசரநிலை காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதல்-அமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்" என்று தெரிவித்திருந்தார்.</p><p>இந்த நிலையில் எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது உள்நோக்கம் கொண்டதில்லை என்று முதல்-அமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை…</p>&mdash; TVK Vijay (@TVKVijayHQ) <a href="https://x.com/TVKVijayHQ/status/2097291431081877776?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>எட்டயபுரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/100-pounds-of-jewelry-stolen-from-the-principals-house-in-ettayapuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/100-pounds-of-jewelry-stolen-from-the-principals-house-in-ettayapuram#comments</comments><guid isPermaLink="false">338da3e1-42d3-48a4-9f0a-24d26a7e771b</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:27:16 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:27:16.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>jewelry stolen,bike,எட்டயபுரம்,நகை கொள்ளை,police enquiry,தலைமை ஆசிரியர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/qj1uimv1/000000001.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தலைமை ஆசிரியரின் வீடு]]></media:title><media:description type="html"><![CDATA[ எட்டயபுரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/qj1uimv1/000000001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேல ரத வீதியில், பூட்டியிருந்த அரசுப் பள்ளி<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D"> தலைமை ஆசிரியர்</a> வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 100 பவுன் தங்க நகைகள் மற்றும் பைக்கை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.</p><h2>வெளியூர் சென்ற குடும்பம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தூத்துக்குடி மாவட்டம்</a> எட்டயபுரம் மேல ரத வீதியைச் சேர்ந்தவர் முத்துமாரி (வயது 50). இவரது மனைவி தேன்மொழி (வயது 46). இந்த தம்பதியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 5-ந்தேதியன்று குடும்பத்துடன், ராமநாதபுரத்திலுள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.</p><h2>100 பவுன் நகை கொள்ளை</h2><p>இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்கப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தங்க நகைகள்</a> மற்றும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.</p><h2>போலீசில் புகார்</h2><p>முத்துமாரி குடும்பத்தினர் நேற்று (திங்கட்கிழமை) வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">கொள்ளையடிக்கப்பட்டது</a> தெரியவந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக எட்டயபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>சாலையோரத்தில் மீட்கப்பட்ட பைக்</h2><p>இதற்கிடையே, கொள்ளையடிக்கப்பட்ட பைக் மட்டும் பிதப்புரம் பகுதி சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/iNf-AfkCRLU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>தி.மு.க. ஆட்சியில் மின் வாரியத்துக்கு ரூ.342 கோடி இழப்பு;  சட்டசபையில் ஆய்வறிக்கை தாக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-audit-report-rs-342-crore-loss-tangedco</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-audit-report-rs-342-crore-loss-tangedco#comments</comments><guid isPermaLink="false">094fd069-edd8-4068-b722-9f0b02909f8a</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:39:25 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:39:25.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,மின் வாரியம்,இழப்பு,தி.மு.க.,ஆய்வறிக்கை,தாக்கல்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/37pyv8k0/eb.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ மின் வாரியம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. ஆட்சியில் மின் வாரியத்துக்கு ரூ.342 கோடி இழப்பு;  சட்டசபையில் ஆய்வறிக்கை தாக்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/37pyv8k0/eb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் இன்று எரிசக்தி துறை சம்பந்தமாக, இந்திய தணிக்கை தலைவரின் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மின் உற்பத்தி நிலையங்களின் உண்மையான மின் உற்பத்தியை கணக்கிடாமல், அவற்றின் 'நிறுவுதிறன்' அடிப்படையில் டான்ஜெட்கோ கட்டணம் செலுத்தியதால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மின் வாரியத்துக்கு</a> ரூ.342 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–</strong></p><h2>ரூ.342 கோடி இழப்பு</h2><p>மின் உற்பத்தி நிலையங்கள் உற்பத்தி செய்யும் உண்மையான மின்சார அளவை கணக்கில் கொள்ளாமல், அவற்றின் நிறுவுதிறன் அடிப்படையில் டான்ஜெட்கோ கட்டணம் செலுத்தி உள்ளது.உண்மையான உற்பத்தி திறனுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தாமல், நிறுவு திறன் அடிப்படையில்  கட்டணம் செலுத்தியதால் மின் வாரியத்துக்கு ரூ.342 கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>மேலும், மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 'மின் இணைப்புகள்' வழியே கொண்டு செல்வதற்கும் டான்ஜெட்கோ தனியாக கட்டணம் செலுத்தியுள்ளது.</p> <h2>வேலை செய்யாததற்கு கட்டணமா?</h2><p>தமிழகத்தில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் அவற்றின் மொத்த உற்பத்தி திறனில் 26 சதவீதம் முதல் அதிகபட்சமாக 87 சதவீதம் வரை மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன. ஆனால், மின் உற்பத்தி மிக குறைவாகவே இருந்தபோதும், 100 சதவீத முழு உற்பத்தி திறனும் நடந்தது போன்ற  டான்ஜெட்கோ  கட்டணம் செலுத்தி உள்ளது.இப்படி வெறும் 4 மின் உற்பத்தி நிலையங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.342 கோடி அளவுக்கு இமாலய கட்டண இழப்பு ஏற்பட்டு உள்ளது. </p><h2>தனியாரிடம் கூடுதல் விலைக்கு கொள்முதல்</h2><p>கடந்த ஆட்சி காலங்களில் மாநிலத்தின் மின் தேவை அதிகரித்தது. ஆனால், அதற்கு ஏற்ப தமிழக அரசின் சொந்த மின் உற்பத்தி திறன் தொடர்ந்து குறைந்தபடியே இருந்துள்ளது. இந்த மின்தேவை இடைவெளியை பூர்த்தி செய்ய, தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரசின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">மின் உற்பத்தி</a> நிலையங்களை முறையாக பராமரித்து, முழு உற்பத்தி திறனை பயன்படுத்த தவறியதே இதற்கு காரணம் என தணிக்கையில் சாடப்பட்டுள்ளது. </p><p>சொந்த நிலையங்களை பராமரிக்காமல், தனியாருக்கு சாதகமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">கூடுதல் விலைக்கு</a> கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2018 முதல் 2023 மார்ச் வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மிசா வரலாற்றை மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது! - தமிழச்சி தங்கபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-history-of-misa-cannot-be-concealed-nor-can-it-be-denied-thamizhachi-thangapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-history-of-misa-cannot-be-concealed-nor-can-it-be-denied-thamizhachi-thangapandian#comments</comments><guid isPermaLink="false">5abf7864-4946-415b-8e87-e1daef21456d</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:17:05 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:17:05.908Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,history,தமிழச்சி தங்கபாண்டியன்,மு.க. ஸ்டாலின்,MISA,முதல் - அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/u3owkl0j/197.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழச்சி தங்கபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/u3owkl0j/197.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மிசா வரலாற்றை மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>முதல் - அமைச்சர்</h2><p>சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், சட்டம் - ஒழுங்கு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்து, எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு ஆதாரத்தோடு பதிலளித்து, காவல்துறை நிர்வாகம் - காவல்துறையினருக்கு ஆற்றப்போகும் புதிய திட்டங்களை எடுத்துரைத்து, மக்கள் பணியாற்றிட வேண்டிய இடத்தில், முதல்-அமைச்சர், வெற்று அரசியல் மேடை போல் பேசியிருப்பது வருந்தத்தக்கது.</p><h2>மிசா</h2><p>ஜனநாயகத்தை காப்பாற்ற மிசாவில் ஆயிரக்க்கணக்கான திமுக - தோழமை இயக்கத்தினர் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் எங்கே இருக்கின்றார்கள், எப்படி இருக்கின்றார்கள், உயிரோடுதான் இருக்கின்றார்களா? என்பது கூட தெரியாமல், பதைபதைப்போடும் தவிப்போடும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், நாள் கணக்கில் குடும்பம் குடும்பமாக காத்துக்கிடந்த வரலாறு , நாடறியும்.  ஜனநாயகத்திற்காக சிறை சென்று அடக்குமுறையை, அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட வரலாறு அது.</p><h2>மிசா வரலாறு நாடறியும்</h2><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றிருப்பது வெறும் தழும்பல்ல; ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில், அவர் ஏற்றுக்கொண்ட வலியின் வீர அடையாளம்;  'தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே !' என்ற புறநானூற்றுத் தாயின் வீரவரிகளுக்கு, வாழும் இலக்கணமான வரலாறு. அந்த வீரவரலாற்றைக் கேலி செய்வது,  ஜனநாயகம் காக்கப் போராடிய ஒரு தலைமுறையின் தியாகத்தையே கேலி செய்வதாகும். மிசா வரலாறு நாடறியும், வரலாறு ஒருபோதும் மறக்காது; மறுக்காது; மறைக்காது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காட்பாடி அருகே பூட்டிய வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை: தம்பதி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-arrested-for-stealing-36-sovereigns-of-jewellery-from-locked-house-near-katpadi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-arrested-for-stealing-36-sovereigns-of-jewellery-from-locked-house-near-katpadi#comments</comments><guid isPermaLink="false">fac06d73-051a-4b3e-b970-1d2bbeb3b2c4</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:10:44 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:10:44.262Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வேலூர்,நகை கொள்ளை,police enquiry,Couple arrested,தம்பதி கைது,Jewellery robbery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/yai9p43m/-01.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முத்துவேல் கார்த்திக் - பிரபாவதி ]]></media:title><media:description type="html"><![CDATA[ காட்பாடி அருகே பூட்டிய வீட்டில் 36 சவரன் நகையை கொள்ளையடித்த தம்பதி கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/yai9p43m/-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் மாவட்டம் காட்பாடியில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், முத்துவேல் கார்த்திக் - பிரபாவதி தம்பதியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். </p><h2>நகைகள் கொள்ளை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வேலூர் மாவட்டம்</a> காட்பாடி திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் பக்கத்து தெருவில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 36 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர்.</p><h2>தனிப்படை அமைப்பு</h2><p>வீடு திரும்பிய ராஜ்குமார், கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வேலூர் எஸ்பி பழனி உத்தரவின் பேரில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.</p><h2>தம்பதி கைது</h2><p>அப்போது, கொள்ளையர்கள் சொகுசு காரில் வந்து இறங்கி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முத்துவேல் கார்த்திக் மற்றும் அவரது மனைவி பிரபாவதி ஆகிய 2 பேரை இன்று (செவ்வாய்க்கிழமை) போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த தம்பதியினர் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி, பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>நகைகள் மீட்பு</h2><p>கைது செய்யப்பட்ட தம்பதியிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 36 சவரன் தங்க நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சொகுசு கார் கொள்ளைத் தம்பதியின் பின்னணி குறித்தும், இவர்களுக்கு வேறு ஏதேனும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">கொள்ளை</a> சம்பவங்களில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் காட்பாடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>போத்தனூர் - சென்னை சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-attached-to-the-podanurchennai-special-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-attached-to-the-podanurchennai-special-train#comments</comments><guid isPermaLink="false">294c547f-4175-4d11-b569-76545541202c</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:08:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:08:18.644Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சிறப்பு ரெயில்,Special train,ஏ.சி. பெட்டி,போத்தனூர்,Additional coach,கூடுதல் பெட்டி இணைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/svyhj33p/train.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/svyhj33p/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போத்தனூர் - சென்னை சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. </p><h2>கூடுதல் பெட்டி இணைப்பு</h2><p>பயணிகள் எண்ணிக்கை உயர்வை கருத்தி கொண்டு போத்தனூர் - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் சிறப்பு ரெயிலில் வரும் 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல், கூடுதலாக ஒரு ஏ.சி. இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. </p><p>மேற்கண்ட தகவலை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே </a>தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-constituency-bypoll-dmk-chief-stalin-consultation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-constituency-bypoll-dmk-chief-stalin-consultation#comments</comments><guid isPermaLink="false">d4e4cf49-84be-4a72-8cf5-ed7bd9eef3c1</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:03:08 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:03:08.387Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,இடைத்தேர்தல்,By election,ஆலோசனை,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/vrw0ryl2/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/vrw0ryl2/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால், அந்த 6 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><p>அதே நேரத்தில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><p>இதனால் தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. இதில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>இதனிடையே தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்க உள்ளது.</p><p>இந்த நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>அம்பத்தூர் பாடி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stormwater-drain-works-ambattur-padi-inspected-by-corporation-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stormwater-drain-works-ambattur-padi-inspected-by-corporation-commissioner#comments</comments><guid isPermaLink="false">799462fd-a5d7-4098-b3f8-74ee74b9fb32</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:37:44 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:37:44.357Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Northeast Monsoon,ஆய்வு,inspection,முன்னெச்சரிக்கை நடவடிக்கை,வடகிழக்குப் பருவமழை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/gijlb2lx/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/gijlb2lx/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்பத்தூர் பாடி பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாடி பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகர்களுடன் இன்று (08.09.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் அம்பத்தூர் மண்டலம், கொரட்டூர் கிழக்கு அவென்யூவில் தொடங்கும் இந்த மழைநீர் வடிகால் பணியானது 2.50 கிலோ மீட்டர் நீளத்தில் சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை, பாடி மேம்பாலம் பகுதி வழியாக அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயில் சென்றடைகிறது.</p><p>இதில் 1.90 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணி முடிக்கப்பட்டுள்ளது. 600 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாடி மேம்பாலம் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு, பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் எம்.பி.தணிகைவேலன், மேற்பார்வைப் பொறியாளர்கள் திருமுருகன், பிரபாகரன், ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலை சந்திக்கும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள்: கள நிலவரம் எப்படி?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituencies-facing-by-elections-what-is-the-ground-situation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituencies-facing-by-elections-what-is-the-ground-situation#comments</comments><guid isPermaLink="false">8e05679a-b216-4563-bb42-f408e7944a45</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:32:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:32:26.052Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Election,இடைத்தேர்தல்,தேர்தல் களம்,மதுராந்தகம்,தாராபுரம்,Madurantakam,tharapuram,byelection,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/2liuynbt/madu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/2liuynbt/madu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் கள நிலவரம் எப்படி இருக்கிறது? என்பதை பற்றி பார்ப்போம். </p><h2>தேர்தல் அரசியல் நகர்வு</h2><p>'ஆட்சி' மாறினால் 'காட்சி'யும் மாறும் என்று பொதுவாக அரசியலில் சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே இந்தத் தேர்தலின்போது அரசியல் நகர்வுகளும் இருந்தன. </p><p>புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காததால், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் அரியணை ஏறியது.</p><h2>7 தொகுதிகள் காலியானது </h2><p>இதைத் தாண்டி, அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலரும் த.வெ.க. ஆட்சியமைக்க வெளிப்படையாக ஆதரவு அளித்தனர். இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால், அந்த 6 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. </p><p>அதே நேரத்தில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ui60l6jp/voiter.jpg" /></figure><h2>2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் </h2><p>இதனால், தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியானது. இதில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. </p><p>இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது. </p><p>இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ந் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்க உள்ள நிலையில், மேற்கண்ட 2 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.</p><h2>மதுராந்தகம் தொகுதி</h2><p>கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது, 4 முனைப்போட்டி நிலவியது. மதுராந்தம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் அமுலு பொன்மலர், அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல், த.வெ.க. சார்பில் எழில் கேத்தரின், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர். </p><p>மொத்தம் பதிவான 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 7,194 வாக்குகள் ஆகும். தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 4,950 வாக்குகள் பெற்றார்.   </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/q56czvno/pal.jpg" /></figure><h2>தாராபுரம் தொகுதி</h2><p>இதேபோல், தாராபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் இந்திராணி, அ.தி.மு.க. சார்பில் சத்யபாமா, த.வெ.க. சார்பில் கவுரி சித்ரா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிட்டனர். </p><p>மொத்தம் பதிவான 1 லட்சத்து 99 ஆயிரத்து 944 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், தி.மு.க. வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 16,727 வாக்குகள் ஆகும். த.வெ.க. வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகள் பெற்றார்.  </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/utzfaqj7/525.jpg" /></figure><h2>யாருக்கு வெற்றி வாய்ப்பு?</h2><p>கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தலை</a> எதிர்க்கட்சியான தி.மு.க. புறக்கணிக்கும் என்று கூறப்படும் நிலையில், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண இருக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு முன்பு இருந்ததைவிட த.வெ.க.வுக்கு தற்போது செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோக, இரு பெண் வேட்பாளர்களுக்கும் தொகுதியில் சொந்த செல்வாக்கு அதிகம் இருப்பதால், நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.  </p><h2>பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தேர்தல் முடிவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> வெற்றி என்பது கூட்டணி ஆட்சி நடத்தி வரும் த.வெ.க.வுக்கு முக்கிய தேவை என்பதால், தேர்தல் முடிவு இப்போதே பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-permanent-solution-must-be-found-for-the-attacks-on-tamil-nadu-fishermen-by-the-sri-lankan-navy-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-permanent-solution-must-be-found-for-the-attacks-on-tamil-nadu-fishermen-by-the-sri-lankan-navy-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">8df5dba5-6889-49ee-8544-8a212bb2a2fd</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:25:08 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:25:08.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழக மீனவர்கள்,Sri Lankan Navy,fishermen,இலங்கை,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/fx71bw9d/37.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/fx71bw9d/37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-</p><h2>மந்திரி ராஜ்நாத்சிங்</h2><p>இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் செப்டம்பர் 8 முதல் 10 வரை 3 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் என்ற நோக்கத்தோடு இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என அரசுத்தரப்பு செய்திகள் கூறுகின்றன.</p><h2>தமிழ்நாடு மீனவர்கள்</h2><p>இலங்கை தலைவர்களைச் சந்தித்து முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனத் தெரிகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும், சிறையில் அடைக்கப்படுவதற்கும் அவர்களது படகுகள் உட்பட தனிப்பட்ட உடைமைகள் பறிக்கப்படுவதற்கும், கைப்பற்றப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை: முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-chief-minister-vijay-consultation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-chief-minister-vijay-consultation#comments</comments><guid isPermaLink="false">65d4f827-84b0-49c3-96a5-1a6cc1541843</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:12:33 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:12:33.332Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,முதல்-அமைச்சர்,வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon,Chief Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/et4goa08/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/et4goa08/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.</p>  <h2>வடகிழக்கு பருவமழை</h2><p>தமிழகத்திற்கு அதிக மழை தரும் காலமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">வடகிழக்கு பருவமழை</a> காலம் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நிலவுகிறது. இந்த பருவமழை காலத்தின் புயலால் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆண்டுதோறும் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துவருகிறது.</p> <h2>முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை</h2><p>இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bypollil-2-thoguthigalilum-adimuka-vetri-perum-edappadi-palanisami-petti</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bypollil-2-thoguthigalilum-adimuka-vetri-perum-edappadi-palanisami-petti#comments</comments><guid isPermaLink="false">f9e97176-bd9a-4333-bd47-367e357a0552</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:53:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:53:21.046Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,தமிழக சட்டசபை,TN Assembly,இடைத்தேர்தல்,By election</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/0xakf1j7/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/0xakf1j7/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-</p><p>மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம். அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை தக்க வைக்க தவெக நாடகம் நடத்துகிறது. அரசு அமைக்க போதிய பலமில்லாததால் அதிமுகவை சேர்ந்தவர்களை தவெக தாஜா செய்கிறது. தவெக அரசை ஆதரித்த கட்சிகள் எதிரப்பு மனநிலைக்கு வந்துவிட்டதால் அதிமுகவினரிடம் பேசுகின்றனர். 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவோம்.</p><p>தவெக ஆட்சியில் நடந்துள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் அவர்கள் பதிலளிப்பது இல்லை. பட்ஜெட் தாக்கலானது முதல் மானியக் கோரிக்கை வரை, ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மாறி மாறி பேசி அவையின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் சொல்வது இல்லை. எந்த கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள்.</p><p>45 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் நடந்த சம்பவத்தை தற்போது பேசி அவையின் நேரம் வீணடிக்கப்படுகிறது. எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை பேசுகின்றனர். நான் கேட்ட எந்த கேள்விக்கும் முதல்-அமைச்சர் பதில் சொல்லவில்லை. ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மோசடி தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு முதல்வரிடம் பதில் இல்லை. காவலர்களின் கோரிக்கைகள் குறித்த என் கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை.</p><p>தவெகவின் ஆட்சி செயலிழந்த ஆட்சியாகத்தான் உள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என தவெக ஆதரவு கட்சியான இடதுசாரி கட்சியே கூறுகிறது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த இடதுசாரிகள் குறைகூறும் அளவுக்குத்தான் அரசு உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொல்லும் காட்சிகள் செய்திகளில் வருகிறது.</p><p>ஊழலை ஒழிப்பதாக கூறுகின்றனர். இந்த ஆட்சி வந்த பிறகு தான் ஊழல் அதிகமாகிவிட்டது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பணத்தை பறிமுதல் செய்யும் அளவுக்கு ஊழல் அதிகரித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை எல்லா ஆட்சியிலும் செயல்பட்டுத்தான் வந்தது. ஆனால் தவெக ஆட்சியில் மட்டும்தான் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பது போல ரீல்ஸ் போடுகின்றனர்.</p><p>முதல்வர் வசம் உள்ள துறை மீது மற்றொரு அமைச்சர் பதிலுரை தருகிறார். இனியாவது முதல்-அமைச்சர் தனது துறையை கண்காணித்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். தவெக ஆட்சி அமைத்தபின் அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. காவிரி படுகை மாவட்டங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. நெல் கொள்முதல் செய்யாததால் மழையில் நெல்மணிகள் நனைந்து சேதம் அடையும் அளவுக்கு சூழல் உள்ளது. விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்யவில்லை.</p><p>இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் தற்போதுள்ள ரூ.10 லட்சம் கோடி கடன், ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இவ்வளவு கடன் இருக்கும்போது இவ்வளவு திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஏற்கனெவே கடன் இருக்கும்போது புதிய திட்டங்களுக்கு எங்கிருந்து வருவாய் வரும்? மீண்டும் யார் கடனை அடைப்பது? மக்களின் வரிப்பணம் தானே கடனாக செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக்குடன் தமிழக அமைச்சர் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-minister-meets-union-minister-of-state-shripad-naik</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-minister-meets-union-minister-of-state-shripad-naik#comments</comments><guid isPermaLink="false">d9167f18-6b9d-4f5c-b915-812c9000abea</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:51:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:51:18.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மத்திய இணை மந்திரி,சந்திப்பு,தமிழக அமைச்சர்,Meet,The Union Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/vp8nfyra/196.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/vp8nfyra/196.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக்கை இன்று சென்னையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் </a>வி.கே. ராஜீவ் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். </p><h2>சந்திப்பு</h2><p>இந்த சந்திப்பின்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>இந்நிகழ்வில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய தலைவர் அனுராக்மிஸ்ரா, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ஆஷா அஜித், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் அலர்மேல்மங்கை ஆகியோர் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-light-to-moderate-rain-in-four-districts-of-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-light-to-moderate-rain-in-four-districts-of-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">f8d2b900-a623-466d-b410-c1483ea8f095</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:45:08 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:45:08.801Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/5rizh7as/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/5rizh7as/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p><strong>08-09-2026:</strong> சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>09-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>08-09-2026 முதல் 12-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>08-09-2026 முதல் 12-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சத்தியமங்கலம் அருகே பழுதாகி நின்ற லாரியை முற்றுகையிட்டு கரும்புகளை ருசித்த யானைகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephants-enjoy-sugarcane-from-stranded-truck-near-sathyamangalam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephants-enjoy-sugarcane-from-stranded-truck-near-sathyamangalam#comments</comments><guid isPermaLink="false">8ea39d86-e9b2-4ccf-b836-7a436e82d76c</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:43:42 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:43:42.448Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Truck,லாரி,Elephants,யானைகள்,sugarcane,சத்தியமங்கலம்,Sathyamangalam,முற்றுகையிட்டு,கரும்புகள்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/o1i5r8ak/repair-lorry.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ யானைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சத்தியமங்கலம் அருகே பழுதாகி நின்ற லாரியை முற்றுகையிட்டு கரும்புகளை ருசித்த யானைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/o1i5r8ak/repair-lorry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சத்தியமங்கலம், </p><p>காட்டு யானைகள்சத்தியமங்கலம் அருகே ஆசனூர் சாலையில் பழுதாகி நின்ற லாரியை காட்டு யானைகள் முற்றுகையிட்டு கரும்புகளை ருசித்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்</h2><p>ஈரோடு மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">சத்தியமங்கலம் </a>புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. </p>  <h2>சர்க்கரை ஆலைகள்</h2><p>தற்போது தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கிருந்து லாரிகள் மூலம் கரும்புகள் ஏற்றப்பட்டு, இந்த வனப்பாதை வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். </p><h2>காட்டு யானைகள்</h2><p>லாரிகளில் செல்லும் கரும்பின் வாசனை பிடித்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">காட்டு யானைகள்</a> அடிக்கடி சாலைக்கு வந்து லாரிகளை வழிமறித்து கரும்புகளை பறித்து சுவைப்பது தொடர்கதையாகி வருகிறது.</p><h2>பழுதாகி நின்ற கரும்பு லாரி</h2><p>இந்த நிலையில், நேற்று அதிகாலை ஆசனூர் அருகே தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி திடீரென பழுதாகி சாலையோரம் நின்றது.</p> <h2>யானைகள் முற்றுகை </h2><p>அப்போது வனப்பகுதியில் இருந்து பிளிறியபடி வந்த காட்டு யானைகள் கூட்டம், பழுதாகி நின்ற லாரியை முற்றுகையிட்டன. பின்னர் லாரியின் அருகே சென்ற யானைகள், தங்களது தும்பிக்கையை நீட்டி, லாரியில் இருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கரும்பு</a> கட்டுகளை ஒவ்வொன்றாக பறித்து ஆவலோடு ருசிக்க தொடங்கின. </p> <h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>நெடுஞ்சாலையின் ஓரம் லாரியை யானைகள் சூழ்ந்து கொண்டு கரும்புகளை காலி செய்ததால், அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><h2>கரும்புகளை ருசித்து யானைகள் </h2><p>வயிற்று பசி தீர கரும்புகளை ருசித்து தின்ற காட்டு யானைகள், நீண்ட நேரத்திற்கு பிறகு மெதுவாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றன. அதன் பின்னரே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.75 கோடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-temples-single-day-hundi-offering-stands-at-475-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-temples-single-day-hundi-offering-stands-at-475-crore#comments</comments><guid isPermaLink="false">2b0749aa-5397-4175-a0c8-9caee8dd45a5</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:31:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:31:06.562Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupati Temple,திருமலை,உண்டியல்,சாமி தரிசனம்,devotee,திருப்பதி ஏழுமலையான் கோயில்,Hundi offerings</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/iocc9asy/102.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/iocc9asy/102.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருமலை,</p><p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.</p><h2>சாமி தரிசனம்</h2><p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 69 ஆயிரத்து 440 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 255 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒரு உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 75 லட்சம் ஆகும். அன்று 4 லட்சத்து 3 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 69 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். அஸ்வினி மருத்துவமனையில் 4 ஆயிரத்து 171 பேர் மருத்துவச் சிகிச்சை பெற்றனர்.</p><p>தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சாமி தரிசனம்</a> செய்ய சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுவுக்கு அடிமை: மனைவி பிரிந்து சென்ற வேதனையில்.. காவலாளி எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/addicted-to-alcohol-watchman-takes-drastic-step-in-anguish-over-wife-leaving-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/addicted-to-alcohol-watchman-takes-drastic-step-in-anguish-over-wife-leaving-him#comments</comments><guid isPermaLink="false">48e363fb-668b-49a8-b2ec-88d9083fb757</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:04:39 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:04:39.844Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,நெல்லை,Nellai,தமிழகம்,Valliyur,வள்ளியூர்,காவலாளி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/zpd9z4pd/ibc.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/zpd9z4pd/ibc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில்,</p><p>வள்ளியூர் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் ரெயில் முன்பாய்ந்து காவலாளி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/nellai">நெல்லை</a> மாவட்டம் வள்ளியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் காலையில் ஒரு வாலிபர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.</p><p>இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.</p><h2>மது குடிக்கும் பழக்கம்</h2><p>இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், காயங்களுடன் மீட்கப்பட்டவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த ரெனால்டு (வயது 38) என்பதும், அவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.</p><p>ரெனால்டுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ரெனால்டுவிடம் இருந்து அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மன வேதனையில் இருந்த ரெனால்டு, சம்பவத்தன்று ரெயில் முன்பாய்ந்துள்ளார்.</p> <h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது தெரியவந்தது. இந்தநிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரெனால்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் உயிரிழந்தார்.</p><p>மேலும் இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் முன்பாய்ந்து காவலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம்; திமுக பங்கேற்காதது மிகுந்த ஏமாற்றம் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-survey-resolution-dmk-boycott-deep-disappointment-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-survey-resolution-dmk-boycott-deep-disappointment-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">ca9f35e7-637d-4f81-9496-0b8665d00f6d</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:02:10 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:02:10.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,சாதிவாரி கணக்கெடுப்பு,மாணிக்கம் தாகூர்,தீர்மானம்,ஏமாற்றம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/lmv0e17h/tagore.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/lmv0e17h/tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய உரிமைகள் சார்ந்த பிரச்சினையில் திமுக பங்கேற்காமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>தனித்தீர்மானம்</h2><p>2027 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகை கணக்கெடுப்பின்</a> இரண்டாம் கட்ட பணியில், மாநில-மத்திய அரசுகளால் அறிவிக்கை செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களைக் கணக்கெடுப்பு செயலியில் முன்னரே பதிவேற்றம் செய்து துல்லியமான விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றும், குழப்பத்தை ஏற்படுத்தும் 'திறந்தவெளிப் பதிவு முறையை' கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்! </p><h2>மகிழ்ச்சியளிக்கிறது</h2><p>சமூகநீதியை உறுதிசெய்யும் இத்தீர்மானத்தை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக ஆதரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.</p><h2>திமுகவினர் வெளிநடப்பு</h2><p>ஆனால், சில நாட்களுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேசி, சட்டப்பேரவையில் உடனடியாக தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். ஆனால் இன்று சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் இத்தீர்மானம் முன்கூட்டியே தெளிவாக இடம்பெற்றிருந்தும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்கு வராததோடு, நேற்றைய நிகழ்வுகளை காரணம் காட்டி திமுகவினர் வெளிநடப்பு செய்து, இன்று இந்த தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவையில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது!</p> <h2>ஏமாற்றம் அளிக்கிறது</h2><p>​இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் இத்தீர்மானம் முன்னரே இடம்பெற்றிருந்தும், அதை நன்கு அறிந்திருந்தும் நேற்றைய விவகாரத்தை சாக்காக வைத்து வெளிநடப்பு செய்ததன் மூலம், ஓபிசி இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய உரிமைகள் சார்ந்த பிரச்சினையில் திமுக பங்கேற்காமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது! </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பி.எஸ்.என்.எல் 5ஜி சேவையை உடனே தொடங்க காலக்கெடு அறிவிக்க வேண்டும் - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-deadline-must-be-announced-for-the-immediate-launch-of-bsnls-5g-service-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-deadline-must-be-announced-for-the-immediate-launch-of-bsnls-5g-service-velmurugan#comments</comments><guid isPermaLink="false">713215c7-9a6f-4e6c-8c50-70067d589dc9</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:57:32 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:57:32.647Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சென்னை,Velmurugan,வேல்முருகன்,BSNL,பி.எஸ்.என்.எல்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,5G,மோடி அரசு,5ஜி அலைக்கற்றை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/1sey5wu4/195.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/1sey5wu4/195.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பி.எஸ்.என்.எல் 5ஜி சேவையை உடனே தொடங்க காலக்கெடு அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பி.எஸ்.என்.எல்</h2><p>இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்(BSNL)-ஐத் திட்டமிட்டுப் பின்தள்ளி, தனியார் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் மத்திய பாஜக அரசின் வஞ்சகப் போக்கைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>5ஜி அலைக்கற்றை என்பது இன்றைய காலகட்டத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதார உரிமை. மாணவர்களின் உயர்கல்வி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கிராமப்புறச் சிறுவணிகம் மற்றும் உழவர் பெருமக்களின் அன்றாட அரசு சேவைகளுக்கு அதிவேக இணையம் இன்றியமையாதது. </p><p>தனியார் நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலித்துக் கொள்ளையடிக்கும் வேளையில், கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களின் ஒரே புகலிடமாக விளங்கும் பி.எஸ்.என்.எல்-ன் 5ஜி சேவையைத் திட்டமிட்டே முடக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்?</p><h2>தொழில்நுட்ப உரிமங்கள்</h2><p>கார்ப்பரேட் நிறுவனங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவையைத் தடையின்றி விரிவுபடுத்த அனுமதிக்கும் மத்திய அரசு, மக்களின் வரிப்பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனத்திற்குத் தேவையான நவீனக் கருவிகள், நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்ப உரிமங்களை உரிய நேரத்தில் வழங்காமல் முட்டுக்கட்டை போடுகிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/bsnl">பி.எஸ்.என்.எல்</a> நிறுவனத்தை வலுப்படுத்துவதாக வாய்ச்சவலாகக் கூறிக்கொண்டே, சந்தைப் போட்டியில் இருந்து அதை அப்புறப்படுத்த முயல்வது பிரதமர் நரேந்திர மோடி அரசின் பச்சைத் துரோகம்.</p><p>தனியார் பெருமுதலாளிகளின் இலாபத்திற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைப் பலவீனப்படுத்தும் சதித்திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் டிஜிட்டல் அநீதிக்கு ஒன்றிய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.</p><h2>காலக்கெடு</h2><p>பி.எஸ்.என்.எல் 5ஜி சேவை தாமதத்திற்கான காரணங்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி, நாடு தழுவிய அளவிலும் குறிப்பாகத் தமிழகக் கிராமப்புறங்களிலும் தரமான அதிவேகச் சேவையைத் தொடங்க உறுதியான காலக்கெடுவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-7</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-7#comments</comments><guid isPermaLink="false">e0bbcb9d-f817-49d0-a3d8-6f894fe92fd5</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:49:07 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:49:07.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/3hdhndyf/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/3hdhndyf/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> சிப்காட் துணைமின் நிலையத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் நடைபெற உள்ளதால் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை (9.9.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோகச் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தினநகர், அசோக்நகர், ஆசிரியர்காலனி, ராஜீவ்நகர், சின்னமணிநகர், 3-வது மைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, ஈ.பி. காலனி, ஏழுமலையான்நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புக் குடியிருப்புகள், ராஜகோபால்நகர், </p><p>பத்திநாதபுரம், சங்கர் காலனி, எஃப்.சி.ஐ. குடோன் பகுதிகள், நிகிலேசன்நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாதநகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்காபரமேஸ்வரி காலனி, லாசர்நகர், ராஜரத்தினநகர், பாலையாபுரம், வி.எம்.எஸ்.நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜிநகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதிநகர், பால்பாண்டிநகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ்நகர், என்.ஜி.ஓ. காலனி, அன்னைதெரசாநகர், பர்மா காலனி, டி.எம்.பி. காலனி, </p><p>அண்ணாநகர் 2-வது மற்றும் 3-வது தெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகர், புதூர்பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபைநகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், கல்லூரிநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டிமார்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் போட்டியிடும் நா.த.க.: யார் வேட்பாளர்கள்? - 13ம் தேதி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ntk-to-contest-by-election-who-are-the-candidates-buzz-worthy-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ntk-to-contest-by-election-who-are-the-candidates-buzz-worthy-details#comments</comments><guid isPermaLink="false">aad24cb0-4075-4548-8396-597f10cc9231</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:48:28 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:48:28.640Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,நாதக,சீமான்,NTK,Seeman,தமிழகம்,இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,candidates,வேட்பாளர்கள்,Madurantakam,tharapuram</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ocgoei0e/ele.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ocgoei0e/ele.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் நாளை தொடங்குகிறது.</p><h2>த.வெ.க. ஆட்சி</h2><p>தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தல் களத்தை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய் </a>தலைமையிலான த.வெ.க. முதல் முறையாக சந்தித்தது. 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற்று த.வெ.க. ஆட்சியை அமைத்தது. <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சராக விஜய்</a> பதவியேற்றார்.</p><h2>தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் களம் கண்டிருந்தார். இதில் 2 தொகுதிகளிலும் முத்திரை பதித்து வெற்றி மகுடம் சூடினார். இதைத்தொடர்ந்து அவர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். </p><p>சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p><h2>7 தொகுதிகள் காலி</h2><p>இந்த முடிவுக்கு உடன்படாமல் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்), ஜெயக்குமார் (ஈரோடு மாவட்டம் பெருந்துறை), சத்யபாமா (திருப்பூர் மாவட்டம் தாராபுரம்), இசக்கி சுப்பையா (நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தங்களை த.வெ.க.வில் இணைத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><h2>இடைத்தேர்தல் தேர்தல் நடத்த தடை</h2><p>இதற்கிடையில்,  திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது.</p><p>ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். தற்போது ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து 5 தொகுதிகளைத் தவிர்த்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் 9-ந்தேதி (நாளை) தொடங்குகிறது. வாக்குப்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.</p><h2>தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்</h2><p>தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், இந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. எனவே, இந்த 2 தொகுதிகளுக்கும் அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது. அரசு சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது.</p><p>பொதுவாக தேர்தல் காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால், அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அந்த நடைமுறை 2 தொகுதிகளிலும் அமல்படுத்தப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்படும். இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவ வீரர்கள் வருகை தர உள்ளனர். டெல்லியில் இருந்து தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் வருகை தருவார்கள். </p><h2>விருப்ப மனுக்கள்</h2><p>இந்த 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளன. தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் அந்தந்த கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.</p><h2>நா.த.க. வேட்பாளர்கள்</h2><p>இந்நிலையில் 2 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி வரும் 13-ஆம் தேதி அறிவிக்க உள்ளது. தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் நா.த.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன்படி இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/mM4P4YrA9-g"></iframe></figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் 34 மின் மோட்டார்கள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/34-electric-motors-seized-in-chennai-officials-take-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/34-electric-motors-seized-in-chennai-officials-take-action#comments</comments><guid isPermaLink="false">1f891778-72cd-44e1-a18a-bd20a04ca3dd</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:39:09 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:39:09.979Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Action,நடவடிக்கை,seized,அதிகாரிகள்,corporation officials,electric motors,மின் மோட்டார்கள் பறிமுதல்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ylbqpn9n/chennai-water.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ சென்னை குடிநீர் வாரியம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் 34 மின் மோட்டார்கள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ylbqpn9n/chennai-water.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தண்டையார்பேட்டை , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களில் உள்ள விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 34 குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பறிமுதல். இதுதொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை குடிநீர் வாரியம் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p> மின் மோட்டார்கள் பறிமுதல்</p><p>நேற்று தண்டையார்பேட்டை , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களில் உள்ள விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 34 குடிநீர் உறிஞ்சும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> மின் மோட்டார்கள்</a> பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>சிறப்பு கண்காணிப்பு குழு</p><p>குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் அழுத்த குறைபாடு தவிர்க்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் சீரான மற்றும் சமமான குடிநீர் விநியோகம் உறுதி செய்யும் வகையில் மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்து பகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.</p> <p> நடவடிக்கைகள்</p><p> இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும்போது, குடிநீர் இணைப்புகள் மற்றும் பொது குழாய்களில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு உரிய சட்டவிதிகளின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏற்கனவே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>ஆய்வு </p><p>இந்நிலையில் நேற்று சிறப்பு கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது தண்டையார் பேட்டை மண்டலம் வார்டு எண் -37 எம்.கே.பி நகர், அம்பத்தூர் மண்டலம் வார்டு எண்-81, ஒ.டி பஸ் நிலையம், வார்டு-91 முகப்பேர், அண்ணா நகர் மண்டலம் வார்டு எண்-106 சூளை மேடு, தேனாம்பேட்டை மண்டலம் வார்டு எண் -110 வள்ளுவர் கோட்டம், வார்டு -111-கிரீம்ஸ் ரோடு, வார்டு-112 டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம் மண்டலம் வார்டுஎண் -138 எம்.ஜி.ஆர் நகர், அடையாறு மண்டலம் வார்டு எண்-178 தரமணி, பெருங்குடி மண்டலம் வார்டு-181 கொட்டிவாக்கம், மற்றும் வார்டு எண் -182 கந்தன்சாவடி ஆகிய இடங்களில் குடிநீர் குழாய்களில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு 34 மின்மோட்டார்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, ஏற்கனவே அடையாறு மண்டலத்தில் மட்டும் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 55 குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் பறிமுதல்.</p><h2> 89 மின்மோட்டார்கள் பறிமுதல் </h2><p>செய்யப்பட்டதுடன், இதுவரை 89 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேற்கூறிய இடங்களில் உள்ள குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு இனிவரும் காலங்களில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்களை பயன்படுத்த கூடாது எனவும், மீறுவோரின் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கை (நோட்டீஸ்) வழங்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழங்கால நாணயங்கள், சிலைகளை வழங்கி வெகுமதி பெறலாம்: அரசு அருங்காட்சியகம் அழைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-museum-invites-applications-for-rewards-by-donating-ancient-coins-and-statues</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-museum-invites-applications-for-rewards-by-donating-ancient-coins-and-statues#comments</comments><guid isPermaLink="false">1b401cd6-b1de-481c-946b-2818bbad3fb3</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:37:01 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:37:01.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>statues,Tirunelveli,திருநெல்வேலி,அருங்காட்சியகம்,Collector information,கலெக்டர்,தகவல்,ancient,Reward,சிலைகள்,வெகுமதி,பழங்கால பொருட்கள்,Coins,நாணயங்கள்,Government Museum</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ucz0apw8/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழங்கால நாணயங்கள், சிலைகளை வழங்கி வெகுமதி பெறலாம்: அரசு அருங்காட்சியகம் அழைப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ucz0apw8/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9">பழமையான</a> அரும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பொருட்களை</a> அரசு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அருங்காட்சியகத்திற்கு</a> வழங்கினால் தகுந்த வெகுமதி வழங்கப்படும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> அரசு அருங்காட்சியகம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அறிவிப்பு</a> வெளியிட்டுள்ளது. </p><h2>திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம்</h2><p>திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தை மேலும் மேம்படுத்தவும், பழமையான பண்பாட்டுச் சான்றுகளைப் பாதுகாக்கவும் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வசமுள்ள பழங்கால அரும்பொருட்களை வழங்க முன்வருமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">கலெக்டர்</a> ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>பழங்கால நாணயங்கள், சிலைகளை வழங்கி வெகுமதி பெறலாம்</h2><p>திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் வரலாற்றுச் சான்றுகளையும் முன்னோர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாக்கும் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வருகிறது. வரும் தலைமுறையினர் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்துகொள்ளும் வகையில், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் உள்ள அரிய வகை பழங்கால நாணயங்கள், சிலைகள், ஓலைச்சுவடிகள், ஆயுதங்கள், இசைக்கருவிகள் மற்றும் பழங்கால வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை அருங்காட்சியகத்திற்கு வழங்கலாம். </p><h2>தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி</h2><p>இவ்வாறு அரும்பொருட்களை வழங்க விரும்புவோருக்கு தகுந்த வெகுமதி (மதிப்பூதியம்) வழங்க அரசு அருங்காட்சியகம் முன்வந்துள்ளது. இதற்கு பின்வரும் முகவரியை தொடர்பு கொள்ளலாம். </p><p>பழமையான அரும்பொருட்களை வைத்துள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள், தாமாக முன்வந்து அவற்றை அன்பளிப்பாகவோ அல்லது உரிய வெகுமதி பெற்றுக் கொண்டோ "காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி" என்ற முகவரியில் ஒப்படைக்கலாம். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/13-million-bales-of-paddy-damaged-in-rain-in-chengalpattu-and-cuddalore-districts-anbumani-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/13-million-bales-of-paddy-damaged-in-rain-in-chengalpattu-and-cuddalore-districts-anbumani-condemns#comments</comments><guid isPermaLink="false">955a5faa-4db4-4754-bf4b-a69b24d19cd4</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:23:54 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:23:54.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,PMK,Chennai,சென்னை,நெல் மூட்டைகள்,Paddy,insistence,வலியுறுத்தல்,Damage,சேதம்,permanent,bundles,பாமக அன்புமணி ராமதாஸ்,கிடங்குகள்,Warehouses</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/qie6riwp/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AE.%E0%AE%95.-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/qie6riwp/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AE.%E0%AE%95.-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">செங்கல்பட்டு</a>, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கடலூ</a>ர் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 13 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நெல் மூட்டைகள்</a> கடந்த சில நாள்களில் பெய்த மழையில் நனைந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">சேதமடைந்திருக்கின்றன</a> என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">கண்டனம்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>அன்புமணி கண்டனம்</h2><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 13 லட்சம் நெல் மூட்டைகள் கடந்த சில நாள்களில் பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருக்கின்றன. அவற்றில் பல்லாயிரம் நெல் மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுகி விட்டன. பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை அரசு நிர்வாகம் பொறுப்பின்றி மழையில் நனைய விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. </p><h2>நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சமத்துவபுரத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள  திறந்தவெளிக் கிடங்கில் 50 ஆயிரம் டன், (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ) அதாவது 12.50 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டன. அதே செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த புள்ளேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிடங்கிலும் பல்லாயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்டன. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரன்பட்டினம் பகுதியில் உள்ள திறந்தவெளிக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டன. </p><h2>அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்</h2><p>மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நேற்றோ அதற்கு முதல் நாளோ கொள்முதல் செய்யப்பட்டவை அல்ல. பல வாரங்களுக்கு முன் கொள்முதல் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டவை தான். அவை உரிய காலத்தில் கிடங்குகளுக்கோ, அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உரிய காலத்தில் அங்கிருந்து  அகற்றாத அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். </p><p>வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைகின்றன. </p><h2>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்ளளவு</h2><p>இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தான். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 80 லட்சம் டன் நெல் உள்பட மொத்தம் 120 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் அதிகபட்சமாக 2025-26-ம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  நெல் கொள்முதலை மேற்கொள்ளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் தான் உள்ளன. இது தமிழ்நாட்டில் விளையும் உணவு தானியங்களில் வெறும் 15 சதவீதம் மட்டும் தான். இது போதுமானதல்ல. </p><h2>நிரந்தர கிடங்குகள் வேண்டும்</h2><p>மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை பயன்படுத்த முடியாது. அவற்றை அரவை செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்கினால் துர்நாற்றம் எடுத்து பயன்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கும். இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகும். நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சேலம் வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-passing-through-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-passing-through-salem#comments</comments><guid isPermaLink="false">ada1d7fe-9ef2-4a5c-b497-f62b0c96ad06</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:20:42 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:20:42.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,ரெயில் சேவை,சேலம்,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/nxgt4qms/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/nxgt4qms/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சேலம்,</p><p>ஈரோடு- திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஊத்துக்குளி ரெயில் நிலைய யார்டு பகுதியில் ரெயில்வே பாலம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக நாளை (புதன்கிழமை) 3 ரெயில்கள் வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தாமதப்படுத்தி இயக்கப்பட உள்ளன. </p><p>அதன்படி எர்ணாகுளம்- டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (18190) வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 1 மணி 10 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும். ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 50 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும். இதேபோல் எர்ணாகுளம்- பெங்களூரு இன் டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (16378) வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 15 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி விழா: உறியடி பானை பொருட்கள் ரூ.8 லட்சத்துக்கு ஏலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-uriyadi-pot-items-auctioned-for-8-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-uriyadi-pot-items-auctioned-for-8-lakh#comments</comments><guid isPermaLink="false">7341675d-27d0-44a9-af24-2ddfac0884d8</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:13:47 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:13:47.205Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,Uriyadi Festival,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,உறியடி பானை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/7o05usxy/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/7o05usxy/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா இதில் நடைபெற்றது. உறியடி நடந்தது. உறியடி பானையில் தேங்காய், 5 எலுமிச்சம் பழங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டன. உறியடி பானையில் இருந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டன.</p><p>புளியங்குடி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் ஒரு தேங்காயை ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். அதேபோல 5 எலுமிச்சம் பழங்கள் ரூ.3.70 லட்சத்துக்கும், மஞ்சள் கயிறு ரூ.70 ஆயிரத்துக்கும், வடக்கயிறு ரூ.65 ஆயிரத்துக்கும் உள்பட மொத்தமாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது. ஏலம் விடும் நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>

“யார் உழைக்கிறார்கள், யார் இடையூறு செய்கிறார்கள்?” - சிபி சத்யராஜ் அதிரடி பதிவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-is-working-hard-and-who-is-causing-hindrances-sibirajs-hard-hitting-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-is-working-hard-and-who-is-causing-hindrances-sibirajs-hard-hitting-post#comments</comments><guid isPermaLink="false">d9f58cb7-acd3-4ee2-8fc1-6d67203d7f08</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:07:20 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:07:20.568Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Assembly,சிபி சத்யராஜ்,Sibi Sathyaraj,சட்டமன்ற நிகழ்வு,ஜேசிடி பிரபாகர்,JCD Prabhakar,சட்டமன்ற நேரலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/yuiib3hx/11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/yuiib3hx/11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, யார் மாநிலத்திற்காக உழைக்கிறார்கள், யார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள் என்பதை மக்கள் தாங்களே நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். என சிபி சத்யராஜ் பதிவிட்டுள்ளார். </p><h2>தமிழக சட்டமன்ற நேரலை</h2><p>தமிழக சட்டமன்றத்தில் தற்போது நேரலை ஒளிபரப்பின் மூலம் அவையில் நடைபெறும் விவாதங்கள், ஆளும் கட்சி–எதிர்க்கட்சி மோதல்கள், கேள்வி–பதில்கள் மற்றும் அமளி போன்றவை மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகின்றன. சமீபத்திய அமர்வுகளிலும் காவல்துறை மானியக் கோரிக்கை உள்ளிட்ட விவாதங்களின்போது ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் வெளிநடப்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.</p><p>இந்த நிலையில், நேற்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். </p><p>தனது இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு தொடர்ந்து முழக்கமிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ளே வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். </p> <h2>சிபி சத்யராஜின் பதிவு</h2><p>இந்த நிலையில், நடிகர் சிபி சத்யராஜ், சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்தும், நேரலை ஒளிபரப்பு குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாகரிகமான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை எழுப்புவதற்குப் பதிலாக, யார் மாநிலத்திற்காக உழைக்கிறார்கள், யார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள் என்பதை மக்கள் தாங்களே நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அவையை ஒழுங்குடன் வழிநடத்தியதோடு, உறுதியுடனும் நியாயத்துடனும் சூழ்நிலையைக் கையாண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்  அவர்களுக்குப் பாராட்டுகள்." என பதிவிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>‘முடிந்த வழக்கை பேசுவது முட்டாள்தனம்’ - துரைமுருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-foolish-to-talk-about-a-closed-case-duraimurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-foolish-to-talk-about-a-closed-case-duraimurugan#comments</comments><guid isPermaLink="false">be6b43dd-3ccc-461d-95e0-b14cb382a1b3</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:51:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:51:00.049Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Duraimurugan,துரைமுருகன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/7qby7k8w/thu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/7qby7k8w/thu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முடிந்துபோன வழக்கை எடுத்துப் பேசுவது முட்டாள்தனம் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>யை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.</p><h2>சட்டசபையில் பரபரப்பு</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்துப் பேசினார்.</p><p>அப்போது, கட்சி நிதி பெற்ற விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது முதல்-அமைச்சர் விஜய் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார்.</p><h2>திமுக உறுப்பினர்கள் அமளி</h2><p>இதற்கிடையில், முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி தி.மு.க. உறுப்பினர்கள் இன்று சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>இதற்கு சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர், மறுப்பு தெரிவித்த்நிலையில், தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர்.</p><p>தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, தி.மு.க. உறுப்பினர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். உடனடியாக அவைக் காவலர்கள் வந்து சில தி.மு.க. உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>துரைமுருகன் கருத்து</h2><p>இந்த நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்-அமைச்சர் விஜய்யின் நேற்றைய சட்டசபை பேச்சு குறித்து அவர் விமர்சனம் செய்தார்.</p><p>அவர் கூறுகையில், “கம்யூனிஸ்ட் கட்சிகளே முதல்-அமைச்சரின் பேச்சை வெளுத்து வாங்கிவிட்டன. சர்க்காரியா ஆணைய வழக்கில் நீதிமன்றமே எங்களை நிரபராதிகள் என கூறிவிட்டது. முடிந்துபோன வழக்கை எடுத்துப் பேசுவது முட்டாள்தனம். முதல்-அமைச்சரின் பேச்சு அநாகரிகமானது” என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையை நடத்திய அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mla-thalavai-sundaram-presided-over-the-assembly-session</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mla-thalavai-sundaram-presided-over-the-assembly-session#comments</comments><guid isPermaLink="false">ebdc45df-329e-484d-9336-e815b4fbe5e3</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:32:01 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:32:01.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சட்டசபை,TN Assembly,Thalavai Sundaram,தளவாய் சுந்தரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/c37gmcsi/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/c37gmcsi/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறது. பொதுவாக, சட்டசபையை சபாநாயகர் நடத்துவார். அவர் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். இருவரும் அவையில் இல்லாத நேரத்தில் மாற்றுத் தலைவர்களில் ஒருவர் அவையை நடத்துவார்கள்.</p><p>அந்த வகையில், புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசில், சட்டசபை மாற்றுத் தலைவர்கள் பட்டியலில் எதிர்க்கட்சியினருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில், கூட்டணி கட்சிகளுக்கு மாற்றுத் தலைவர்கள் பொறுப்பு வழங்கப்பட்டதே தவிர, எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படுவதில்லை.</p><p>த.வெ.க. அரசு இந்த நடைமுறையை மாற்றியமைத்த நிலையில், சட்டசபை நிறைவு நாளான இன்று சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் மாற்றுத் தலைவரான அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் அவையை நடத்தினார். உறுப்பினர் இருக்கையில் இருக்கும் காரசார விவாதங்களில் தளவாய் சுந்தரம் பங்கேற்றாலும், சபாநாயகர் இருக்கைக்கு வந்ததும் நடுநிலையோடு நடத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகும் வகையில் மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dignity-of-the-legislative-assembly-has-been-compromised-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dignity-of-the-legislative-assembly-has-been-compromised-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">350993a5-26cb-4cf9-829d-20e4e494d961</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:20:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:20:13.212Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,சட்டசபை,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/xi8e0lx0/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/xi8e0lx0/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை மானியக்கோரிக்கையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கட்சி நிதி வாங்கிய விவகாரத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி மீது முதல்-அமைச்சர் விஜய் பகிரங்கமாக குற்றம் சாட்டி ஆவேசமாக பேசினார்.</p><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். உடனே தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தனது இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு தொடர்ந்து முழக்கமிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ள வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகும் வகையில் மாறிவிட்டது” என்று கூறினார். தொடர்ந்து 2 தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளிக்காமல் காரில் புறப்பட்டு சென்றார்.</p>]]></content:encoded></item></channel></rss>