<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 08 Aug 2026 12:36:23 +0000</lastBuildDate><item><title>தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-national-flags-at-post-offices-special-arrangements-made-on-the-occasion-of-independence-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-national-flags-at-post-offices-special-arrangements-made-on-the-occasion-of-independence-day#comments</comments><guid isPermaLink="false">ce2a40f9-b755-4ecd-b1d9-7c636e9ff05f</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:35:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:35:29.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,விற்பனை,Indian national flag,சுதந்திர தினம்,Independence Day,sales,தபால் அலுவலகங்கள்,Post Offices,சிறப்பு ஏற்பாடு,இந்திய தேசியக் கொடி,Special arrangement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/a9yglfig/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/a9yglfig/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தபால் அலுவலகங்களில்</a> தேசியக் கொடி விற்பனை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>இந்திய நாட்டின் 80-வது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழா</a> வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. </p><h2>ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.25</h2><p>ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF">தேசியக் கொடி</a>யின் விலை ரூ.25 ஆகும். பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களும், வணிகர்களும் எளிதாக மூவர்ணக்கொடியை வாங்கி பயன் பெறும் வகையில் கிராமப்புற தபால் அலுவலகங்கள் உள்பட அனைத்து தபால் அலுவலகங்களிலும் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். </p><h2>தபால் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு</h2><p>கிராமப்புற தபால் அலுவலகங்கள் உள்பட தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் ஒரு தேசியக் கொடி ரூ.25 என்ற விலையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">விற்பனை</a> செய்யப்படுகிறது. தேசியக் கொடிகளுக்கான மொத்தத் தேவை ஏதேனும் இருப்பின், 9841875710, 9791655030 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம். </p><p>எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு ஏற்பாட்டைப் பயன்படுத்தி தேசியக் கொடிகளை வாங்கி தங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடுங்கள். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>செம்மஞ்சேரி முதல் பக்கிங்ஹாம் கால்வாய் வரை மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-commissioner-inspects-stormwater-drainage-works-from-chemmancherry-to-buckingham-canal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-commissioner-inspects-stormwater-drainage-works-from-chemmancherry-to-buckingham-canal#comments</comments><guid isPermaLink="false">c147f96d-fab6-4fe6-b9de-76684d273498</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:29:07 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:29:07.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,மழைநீர் வடிகால் பணிகள்,Rainwater Drainage Works,Commissioner inspection,ஆணையர் ஆய்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/h332z859/81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/h332z859/81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செம்மஞ்சேரி முதல் பக்கிங்ஹாம் கால்வாய் வரை மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். </p><p>இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் செம்மஞ்சேரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க KfW நிதியின் கீழ், செம்மஞ்சேரி-அரசன் கழனி கால்வாயிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வரை ரூ.184.88 கோடி மதிப்பீட்டில் 4,235 மீட்டர் நீளத்தில் OMR மற்றும் TNHB பிரதான சாலை வழியாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2>மழைநீர் வடிகால் பணி</h2><p>செம்மஞ்சேரி-அரசன் கழனி கால்வாயிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வரை ரூ.184.88 கோடி மதிப்பீட்டில் 4,235 மீட்டர் நீளத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியின் ஒரு பகுதியாக, நூக்கம்பாளையம் இணைப்புச் சாலை மற்றும் டி.என்.எச்.பி “ஏ” சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், ஐ.ஏ.எஸ்.,  இன்று (08.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>நவீன ஒப்பனை அறை</h2><p>இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஈ.சி.ஆர். ப. சரவணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், ஐ.ஏ.எஸ்., ஆகியோர் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192க்குட்பட்ட நீலாங்கரை கடற்கரைப் பகுதியில் பொது-தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட நவீன ஒப்பனை அறையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டனர். இந்த நவீன கழிப்பறையில் ஆண்களுக்கான 4 கழிப்பறை இருக்கைகளும், பெண்களுக்கான 4 கழிப்பறை இருக்கைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான 1 கழிப்பறை இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>தொடர்ச்சியாக, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையாளர், நீலாங்கரை கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ஆணையாளர் நீலாங்கரை சாலையில் உள்ள சாலை மையத்தடுப்பில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் நடப்பட்டுள்ள செடிகளைப் பார்வையிட்டு, தொடர்ந்து பசுமையாக பராமரித்திட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, தலைமைப் பொறியாளர் (மழைநீர் வடிகால்) டி.ஞானவேல், மேற்பார்வைப் பொறியாளர் (மழைநீர் வடிகால்) ஆர்.ஏ.பிரபாகர், மண்டல அலுவலர் ஜி.லோகேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது விவகாரம்: த.வெ.க. அரசைக் கண்டித்து 14-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farm-loan-waiver-mekedatu-issue-aiadmk-protest-august-14-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farm-loan-waiver-mekedatu-issue-aiadmk-protest-august-14-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">722705fd-0992-4230-a7c6-6d118bd495d5</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:25:02 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:25:02.432Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,protest,ஆர்ப்பாட்டம்,Crop loan,மேகதாது விவகாரம்,பயிர்க்கடன் தள்ளுபடி,Mekedatu Dam Issue,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/owgign8l/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/owgign8l/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் வருகிற 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>2026, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ.75,000-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.</p><p>மேற்கண்டவாறு, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும்; மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.</p><p>த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும்; அப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்நிலையில், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை.</p><p>எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 - வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.</p><p>சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் தலைமையில் நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? திருமாவளவன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-was-discussed-at-the-meeting-of-mps-led-by-vijay-thirumavalavan-speaks-to-the-press</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-was-discussed-at-the-meeting-of-mps-led-by-vijay-thirumavalavan-speaks-to-the-press#comments</comments><guid isPermaLink="false">e49cde3d-9e97-4cdd-bfe1-0f3d29cc13c4</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:10:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:10:57.421Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/h8uzc0ki/Thirumalvanv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/h8uzc0ki/Thirumalvanv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை மசோதாவை விரைவில் மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று பேசப்படும் நிலையில், இதற்கு   தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.  இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல் அமைச்சர்  விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.இந்த கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.  சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் முதல் அமைச்சர்  விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. </p><p> இந்தக் கூட்டத்தில், தவெகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுகவைச் சேர்ந்த  எம்பிக்கள் 19 பேர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்பி சுதா, கர்நாடகாவில் கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் சுதெரிவித்துள்ளார். </p><p>சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே தொடர வேண்டும். அதாவது 543 ஆகவே தொடர வேண்டும். எம்பிக்கள் அனைவரும் ஒரே குரலில் வலியுறுத்தினோம்” என்றார். மாணிக்கம் தாகூர் கூருகையில், தொகுதி மறுவரையறை தமிழகத்தை பாதிக்கும். இது பாஜக, ஆர்.எஸ்.எஸ்சின் சதி” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-2-student-immolates-self-police-investigate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-2-student-immolates-self-police-investigate#comments</comments><guid isPermaLink="false">0f1873c0-4003-4e3e-80bb-a885c34075cb</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:56:41 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:56:41.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,தற்கொலை,திட்டக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/douolg5s/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/douolg5s/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பிளஸ்-2 மாணவி</h2><p>கடலூர் மாவட்டம் திட்டக்குடி கோழியூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகள் துர்கா (16 வயது). திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் துர்கா, நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிச் சென்றார். பின்னர் அவர், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.</p><h2>தீக்குளித்து தற்கொலை</h2><p>இதனால் பெற்றோர், உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, உடல் கருகிய நிலையில் துர்கா இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து திட்டக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துர்காவின் உடலை பார்வையிட்டனர். அப்போது துர்கா உறவினர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.</p><h2>சோகம்</h2><p>இதையடுத்து போலீசார், துர்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துர்கா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் சீண்டல்- பள்ளி வேன் டிரைவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-school-van-driver-arrested-for-entering-house-and-sexually-assaulting-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-school-van-driver-arrested-for-entering-house-and-sexually-assaulting-woman#comments</comments><guid isPermaLink="false">0e502954-1582-46cb-817b-7ba06672f7f2</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:25:53 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:25:53.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,Sexual harassment,Woman,பாலியல் சீண்டல்,பெண்ணிடம்,வீடு புகுந்து,Van driver arrested,வேன் டிரைவர்,house breaking</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/292vn0hq/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேன் டிரைவர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/292vn0hq/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், கயத்தாறு அருகே தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">பாலியல் சீண்டலில்</a> ஈடுபட்ட பள்ளி வேன் டிரைவரை, அந்தப் பெண்ணே தைரியமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>பெண்ணிடம் பாலியல் சீண்டல்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா, மூர்த்தீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் குமார் (வயது 23). இவர் கயத்தாறில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேன் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் 35 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கையைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். </p><p>இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக சுதாரித்துக் கொண்டு அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளார். தன்னை காப்பாற்றிக் கொண்டதுடன், அந்த வாலிபரை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து, உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். </p><h2>வேன் டிரைவர் கைது</h2><p>இச்சம்பவம் குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேன் டிரைவர் குமாரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>78 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்;  நீர்வரத்து சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-crosses-78-feet-inflow-drops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-crosses-78-feet-inflow-drops#comments</comments><guid isPermaLink="false">bc6465d7-dadc-4749-bdd2-e6ad03b3ba45</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:13:46 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:13:46.979Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர்மட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8fnphala/mettur-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8fnphala/mettur-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது. இதையடுத்து கடந்த 1-ந்தேதியில் இருந்து கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டது. அதே நேரம் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்தும் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வீதம் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சற்று மழை குறைந்தது. இதனால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. இதனால் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.</p><h2>அணை நீர் மட்டம் உயர்வு</h2><p>கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82.71 அடியாக உள்ளது, அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 820 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 9 ஆயிரத்து 583 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதே போல் கிருஷ்ண ராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 106.37 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 8064 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக கால்வாய் மற்றும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2049 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகத்துக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.</p><h2>மேட்டூர் அணை நீர்மட்டம்</h2><p>கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க மற்றும் பரிசல் இயக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது..மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 78.034 அடியாக உயர்ந்து காணப்பட்டது.</p><p>அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 808 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 40.02 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 4-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. அப்போது அணையின் நீர்மட்டம் 73.02 அடியாக இருந்த நிலையில் கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை குறித்து எதுவும் தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா? - ஆ.ராசா கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-people-who-know-nothing-about-constituency-redelineation-hold-a-meeting-a-raza-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-people-who-know-nothing-about-constituency-redelineation-hold-a-meeting-a-raza-questions#comments</comments><guid isPermaLink="false">29b0a82b-ae01-4400-9c61-e3c0cdea4d56</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:07:32 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:07:32.190Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,பெரம்பலூர்,ஆ ராசா,A.Rasa,தொகுதி மறுவரையறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/17ud28vf/rasa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/17ud28vf/rasa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலூர்,</p><p>தொகுதி மறுவரையறை குறித்து எதுவும் தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா? என திமுக எம்.பி. ஆ ராசா கேள்வி எழுப்பி உள்ளார்.</p><p>மேகதாது விவகாரம் தொடர்பாக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. ஆனால் திடீரென தவெக அரசு தரப்பில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக அனைத்து கட்சி எம்பிக்களின் கூட்டத்தை இன்று கூட்டி உள்ளார்.இந்தக் கூட்டம் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை மொத்தமுள்ள 57 தமிழ்நாடு எம்.பி.க்களில் 37 பேர் புறக்கணித்துள்ளன.</p><p>திமுக, தேமுதிக, மநீம, அதிமுக, பாமக கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ், விசிக, சிபிஐ, உள்ளிட்ட கட்சிகளின்19 எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். காங்., எம்.பி.சுதாவும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.</p><p>இந்தநிலையில்,   <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20">திமுக எம்பி ஆ.ராசா</a>விடம் பெரம்பலூரில் செய்தியாளர்கள், தவெகவின் அனைத்து எம்பிக்கள் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஆ.ராசா, நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் இல்லாத கட்சி கூட கூட்டத்தை நடத்தலாம். ஆனால் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதுவுமே தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா.. என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்துள்ளார். ஆ.ராசாவின் இந்த பதில் திமுக தொண்டர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-association-representatives-meet-with-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-association-representatives-meet-with-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">8ca4c725-7ca6-4aad-adb4-f60a9c2664e7</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:01:55 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:01:55.016Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,விவசாய சங்கம்,சந்திப்பு,பிரதிநிதிகள்,Representatives,Farmers&apos; Associations-விவசாயிகள் சங்கத்தினர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ro6o6pyx/80.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ro6o6pyx/80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலினை</a> சந்தித்தனர்.</p><p> இந்த சந்திப்பின்போது, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் - பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சையில் தி.மு.கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காகவும் சட்டமன்றத்தில் குரல்கொடுத்ததற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.</p><p>மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடியதற்காக, த.வெ.க. அரசின் காவல் துறை, எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்தது, மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். இந்தக் கூட்டு இயக்கத்தில் உள்ள 84 விவசாய அமைப்புகளும், த.வெ.க. அரசு பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதைக் கண்டித்து, பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்த வகையில், தங்களுடைய போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கமாறும், சட்டமன்றத்தில் குரல் எழுப்புமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். </p><p>முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், கழகத் தலைவரின் வழிகாட்டுதலில், சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும், விவசாயிகளுக்கு என்றும் உற்றத்துணையாக இருப்போம் என்றும், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுக்கு உறுதி அளித்தார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் கிரைண்டர் ஆப் மூலம் அழைத்து பணம் பறிக்க முயற்சி: 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-extort-money-through-grindr-app-in-nellai-3-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-extort-money-through-grindr-app-in-nellai-3-arrested#comments</comments><guid isPermaLink="false">80ab913a-8401-4b52-83da-84c912f7e266</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:56:18 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:56:18.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,3 arrested,3 பேர் கைது,பணம் பறிக்க முயற்சி,attempt to extort money,கிரைண்டர் ஆப்,grinder app</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ydnifdni/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ydnifdni/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,  </p><p>நெல்லை பெருமாள்புரம் பகுதியில் ஒரு நபரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D">கிரைண்டர் ஆப்</a> மூலம் அழைத்து, மிரட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பணம் பறிக்க முயன்ற</a> 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.</p><h2>கிரைண்டர் ஆப் மூலம் அழைத்து பணம் பறிக்க முயற்சி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சேலம் பகுதியை சேர்ந்த ஒரு நபரை, மர்ம நபர்கள் சிலர் Grindr (கே-Gay) செயலி மூலம் அழைத்து, மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். </p><h2>3 வாலிபர்கள் கைது</h2><p>அதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னாக்குடியைச் சேர்ந்த முருகன் மகன் பூபதிராஜா (வயது 20), முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர்களான பெருமாள் மகன் அருண்(20), பாலமுருகன் மகன் விஷ்ணுசுப்பு(21) ஆகிய 3 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்த போலீசார், அவர்களிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதலை காட்டிக்கொடுத்த கேமரா: மனைவி, கள்ளகாதலன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/camera-reveals-fake-lover-wife-fake-lover-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/camera-reveals-fake-lover-wife-fake-lover-arrested#comments</comments><guid isPermaLink="false">90bc470e-c4e8-4589-b950-eedd38c6a705</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:47:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:47:19.786Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,கள்ளக்காதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/khhvqpju/lover33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கள்ளக்காதலை காட்டிக்கொடுத்த கேமரா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/khhvqpju/lover33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சூளகிரி, </p><p>சூளகிரி அருகே விவசாயி சாவில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலை கண்டித்ததால் இரும்பு கம்பியால் அடித்து கொன்றது அம்பலமானது. இதுதொடர்பாக மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><p>கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிரா மத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது40). விவசாயி. இவர் கடந்த மாதம் 25-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சூளகிரியில் இருந்து குண்டு குறுக்கி நோக்கி சென்றார். பவர் கிரீட் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><p>இதுகுறித்து அவரது மனைவி ரூபா சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு ' பதிவு செய்து விசாரணை நடத்தினர். விவசாயி ராஜகோபால், விபத்தில் சாகவில்லை, கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டதாக சிலர் போலீசுக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ராஜகோபால் இரும்பு கம்பியால் தாக்கி கொல்லப்பட்டது தெரியவந்தது.</p><p>இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-</p><p>ராஜகோபால்-ரூபா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ரூபா. குண்டுகுறுக்கியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஒட்டையனூரை சேர்ந்த நந்தகுமார் (34) என்பவருக்கும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கள்ளத்தொடர்பு</a> ஏற்பட்டது. இதை அறிந்த ராஜகோபால் மனைவியை கண்டித்துள்ளார்.</p><p>கடந்த 25-ந்தேதி இரவு உடல் நிலை சரியில்லாத மனைவியை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார் பின்னர் அவரை வீட்டில் இறக்கிவிட்டு, உணவு வாங்க மீண்டும் ராஜகோபால் வெளியே வந்தார். இந்த தகவலை, ரூபா கள்ளக்காதலன் நந்தகுமாருக்கு தெரிவித்தார்.</p><p>2 பேர் கைது</p><p>இதையடுத்து. அவர் ராஜகோபாலை பின்தொடர்ந்து வந்து பவர் கிரீடு அருகே வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு நந்தகுமார், ரூபா ஆகிய இருவரும் எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளனர். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அனைத்து உண்மையும் வெளியே வந்துவிட்டது.</p><p>இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து நந்தகுமார் கொலைக்கு உடந்தையாக இருந்த ரூபா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.</p><p>நந்தகுமாருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கைதான ரூபாவும் நந்த குமாரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது குழந்தைகள் தவித்து வருகின்றனர். அதிலும் ராஜகோபால் கொலை செய்யப்பட்டுவிட்ட நிலையில் ரூபா சிறையில் அடைக்கப்பட்டதால் இவர்களது 2 குழந்தைகள் ஆதரவின்றி பரிதாப நிலையில் உள்ளனர். அவர்களை தற்போது குடும்பத்தினர் கவனித்து வருகிறார்கள்.</p><p>கள்ளக்காதல் விவகாரம் காரணமாக விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் சூளகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10-ந்தேதி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்: தமிழக அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-to-provide-deworming-tablets-on-the-10th-tamil-nadu-government-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-to-provide-deworming-tablets-on-the-10th-tamil-nadu-government-information#comments</comments><guid isPermaLink="false">1ca5dff8-2951-468e-b0ce-53b9e2a90e5a</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:44:42 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:44:42.367Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tamil Nadu Government,Information,Special camp,சிறப்பு முகாம்,தமிழக அரசு தகவல்,குடற்புழு நீக்க மாத்திரை,Deworming tablets</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/u78gopsz/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு தகவல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/u78gopsz/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">தமிழ்நாடு</a> முழுவதும் வருகிற 10 மற்றும் 17-ம் தேதிகளில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. </p><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D">தமிழக அரசின்</a> மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்</h2><p>தமிழ்நாடு முழுவதும் 10.8.2026 மற்றும் 17.8.2026 ஆகிய நாட்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88">குடற்புழு நீக்க மாத்திரை</a> வழங்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">சிறப்பு முகாம்</a>கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இம்முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. </p><h2>குடற்புழு தொற்று தடுப்பு நாள்</h2><p>ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடற்புழு தொற்று தடுப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தின் சார்பில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தற்பொழுது தேசிய குடற்புழு தொற்று தடுப்பு நாளை முன்னிட்டு 10.8.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>10.8.2026 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம்முகாம்களில் 1 வயது முதல் 19 வயது வரையிலான 2.06 கோடி குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கும், 20 வயது முதல் 30 வயது வரையிலான 52.44 லட்சம் பெண்களுக்கும் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், இம்முகாம்களில் விடுபட்டவர்களுக்கு வருகின்ற 17.8.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கப்படவுள்ளது. </p><h2>அல்பெண்டசோல் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை</h2><p>இம்முகாம்களில் 1 வயது முதல் 2 வயதிலான குழந்தைகளுக்கு 1/2 மாத்திரையும் (200மிகி), 2 வயது முதல் 19 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கு ஒரு மாத்திரையும் (400மிகி) வழங்கப்படும். இந்த அல்பெண்டசோல் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது. </p><h2>நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு</h2><p>குடற்புழு தொற்று தடுப்பு நாள் முகாம்களில் வழங்கப்படும் அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதினால் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ரத்தச் சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. </p><h2>54,481 அங்கன்வாடி மையங்கள்</h2><p>தமிழ்நாட்டில் 10.8.2026 திங்கட்கிழமை அன்று 54,481 அங்கன்வாடி மையங்கள், 11,723 துணை சுகாதார நிலையங்கள், 56,483 பள்ளிகளில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்களில் 54,481 அங்கன்வாடி பணியாளர்களும், 59,700 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும், 6,543 மருத்துவர்களும், 12,456 கிராம சுகாதார செவிலியர்களும், 2,650 ஆஷா பணியாளர்கள் மற்றும் அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களும் இச்சிறப்பு முகாமில் பணியில் ஈடுபட உள்ளனர். </p><p>எனவே அனைத்து பெற்றோர்களும் 10.8.2026 மற்றும் 17.8.2026 ஆகிய நாட்களில் நடைபெறும் குடற்புழு தொற்று தடுப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. </p><p>“குடற்புழு தொற்றை குறைத்து வளமான எதிர்காலத்திற்கு வித்திடுவோம்”. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக புறக்கணிப்பது முறையற்றது - அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-boycott-of-all-party-mps-meet-improper-says-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-boycott-of-all-party-mps-meet-improper-says-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">81d606cf-ecd0-40cc-8ee1-b65c79ce239b</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:42:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:42:26.580Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,அனைத்துக்கட்சி கூட்டம்,all-party meeting,boycott புறக்கணிப்பு,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/qcazvsn1/minister-rajmohan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக புறக்கணிப்பது முறையற்றது - அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/qcazvsn1/minister-rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை</a> திமுக புறக்கணிப்பது முற்றிலும் முறையற்றது" என்று அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.</p> <h2>அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்</h2><p>தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் தொகுதி மறுவரையறை குறித்த முக்கிய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.</p> <p>இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>மாநில நலனில் அக்கறை இல்லை</h2><p>தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உரிமை மற்றும் மாநில நலன் சார்ந்த மிக முக்கிய பிரச்சனையாகும். இத்தகைய முக்கியமான கூட்டத்தில் பங்கேற்காமல் திமுகவும், அதிமுகவும் புறக்கணிப்பது முறையல்ல. இதன் மூலம் அவர்களுக்கு மாநில நலனில் சிறிதும் அக்கறை இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p> <h2>திமுகவின் இரட்டை வேடம்</h2><p>நாங்கள் ஆரம்பம் முதலே தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இந்த விஷயத்தில் எங்களுக்கு எப்போதுமே இரட்டை நிலைப்பாடு கிடையாது. ஆனால், ஆரம்பத்தில் இந்த வரைவு நகல்களை எரித்து நாடகமாடிய திமுகவினர், இப்போது கூட்டத்தில் கலந்து கொண்டு பேச தைரியமில்லாமல் பதுங்குவது ஏன்? </p><h2>பிரச்சனை</h2><p>தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி விவகாரத்தை கையில் எடுத்து திமுகவினர் சுயநல அரசியல் செய்ய பார்க்கிறார்கள். அரசின் இந்த ஆக்கப்பூர்வமான கூட்டத்தை கொச்சைப்படுத்தவும், மக்களின் கவனத்தை திசைதிருப்பவுமே கனிமொழி எம்.பி முயல்கிறார். காவிரி விவகாரத்தை யாராலும் திசை திருப்ப முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். </p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>மழைநீர் தேங்குவதை தடுக்க மாதவரத்தில் ரூ.22.88 கோடியில் புதிய வடிகால் அமைப்பு பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-a-new-drainage-system-at-a-cost-of-rs-2288-crore-in-madhavaram-to-prevent-rainwater-from-accumulating-is-in-full-swing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-a-new-drainage-system-at-a-cost-of-rs-2288-crore-in-madhavaram-to-prevent-rainwater-from-accumulating-is-in-full-swing#comments</comments><guid isPermaLink="false">ce4846e9-89a7-4756-a075-f1b0b22e50c8</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:37:09 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:37:09.868Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhavaram,மாதவரம்,Rainwater Drainage Works,தீவிரம்,மழைநீர் கால்வாய் பணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/3vl3ijna/79.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/3vl3ijna/79.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாதவரம் ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலையில் ரூ.22.88 கோடி மதிப்பீட்டில் 1,450 மீட்டர் நீளத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மழைநீர் சீராகச் செல்லும் வகையில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>மழைநீர் வடிகால் கட்டும் பணி</h2><p>இதன் ஒரு பகுதியாக, மாதவரம் மண்டலம், வார்டு-23க்குட்பட்ட மாதவரம் ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலையில் உள்ள பழைய மழைநீர் வடிகாலுக்கு மாற்றாக ரூபாய் 22.88 கோடி மதிப்பீட்டில் 1,450 மீட்டர் நீளத்தில் 2 மீ. x 2 மீ. இரண்டு துளைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகாலின் அடிப்பகுதி மட்டம் சீராக இல்லாமல், நீரோட்டம் தடைபட்டதாலும், ரெட்டேரி வடக்குப் பகுதியின் உபரிநீரை வெளியேற்ற ஏற்கனவே இருந்த வடிகாலின் அளவு போதுமானதாக இல்லாத காரணத்தினாலும் பழைய மழைநீர் வடிகால் இடித்து அகற்றப்பட்டு புதிய மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இந்த மழைநீர் வடிகாலானது வி.எஸ். மணி நகரிலிருந்து புழல் உபரிநீர் வெளியேறும் இடம் வரை கட்டப்படுகிறது. இதனால் எம்.ஆர்.எச். சாலை, பாலாஜி நகர், வெஜிடேரியன் நகர் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-7-pm-in-18-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-7-pm-in-18-districts#comments</comments><guid isPermaLink="false">2a37459c-d36b-44fe-9052-be68a6223217</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:36:48 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:36:48.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/m11q4upz/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/m11q4upz/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் ஊழலை அம்பலப்படுத்திய குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி வரும்? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-only-the-accused-who-exposed-dmk-govt-corruption-suddenly-get-chest-pain-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-only-the-accused-who-exposed-dmk-govt-corruption-suddenly-get-chest-pain-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">1c1e335e-b140-4dcd-aee4-81c4654196fd</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:23:28 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:23:28.230Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,ஊழல்,தவெக அரசு,TVK Government,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/k59q5x9h/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/k59q5x9h/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் என்பவர் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென உயிரிழந்துவிட்டதாகவும், சார்பதிவாளர் மணிகண்டன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகின்றன. </p><p>முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில், தவெக அரசின் மிகப்பெரும் ஊழலை அம்பலப்படுத்திய இவ்வழக்கின் குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி வரும்? அதிலும் இவ்வழக்கின் முக்கிய சாட்சியங்களாக கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி உடல்நலக்குறைவு ஏற்படும்?</p><p>ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் இருக்கும் குற்றவாளிகள் எல்லாம் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணத்தை இயற்கையான நிகழ்வு என்று கடந்து போக முடியவில்லை.</p><p>எனவே, அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக் காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்! இம்மரணத்தின் உண்மையான பின்னணி குறித்த முறையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்! மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார்பதிவாளர் மணிகண்டனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி, அவரை அரசு பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை; த.வெ.க.வின் நிலைப்பாடு என்னவென தெளிவாக கூறவில்லை:  தி.மு.க. செய்தி தொடர்பாளர் பேட்டி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tmcs-stand-on-constituency-redelineation-is-not-clear-dmk-spokesperson-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tmcs-stand-on-constituency-redelineation-is-not-clear-dmk-spokesperson-interview#comments</comments><guid isPermaLink="false">b3d99fb4-9b1b-47b9-8639-52fc8f312889</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:22:44 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:22:44.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,த.வெ.க.,தி.மு.க.,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ac0xdlk9/tksip.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ac0xdlk9/tksip.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தொகுதி மறுவரையறையில் த.வெ.க.வின் நிலைப்பாடு என்னவென தெளிவாக கூறவில்லை என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் பேட்டியளித்து உள்ளார்.</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் திருத்தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிக்கிறது என தகவல்கள் வெளி​யாகி​ இருந்தன.</p>  <h2>தமிழக எம்​.பி.க்​கள் கூட்டம்</h2><p>இந்த சூழலில், தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான அனைத்​து கட்​சிகளின் எம்​.பி.க்​கள் கலந்​தாய்​வு கூட்​டம் முதல்​-அமைச்சர் விஜய் தலை​மை​யில் சென்​னை​யில் இன்று நடை​பெறுகிறது.  இதுகுறித்து விவா​திப்​ப​தற்​காக தமிழக எம்​.பி.க்​கள் ஆலோ​சனை கூட்​டத்​துக்கு முதல்​-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்​திருந்தார்.</p><p>இந்த கலந்தாய்வு கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்கு முதல்​-அமைச்சர் விஜய் தலைமை வகிப்​பார். இதற்​கான அழைப்​பிதழ் டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லத்​தின் மூலம் அனைத்து மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை உறுப்​பினர்​களுக்கும் அனுப்​பப்​பட்டு இருந்தது.</p>  <h2>தி.மு.க.-அ.தி.மு.க. புறக்கணிப்பு</h2><p>எனினும், இந்த கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகியவை பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன.  அ.தி.மு.க.வும் கூட்டத்தில் பங்கேற்காது என தெரிவித்து உள்ளது.</p><p>இந்த நிலையில், தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான அனைத்​து கட்​சிகளின் எம்​.பி.க்​கள் கூட்ட புறக்கணிப்பு பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் இன்று பேட்டி அளித்துள்ளார்.</p>  <h2>த.வெ.க. நிலைப்பாடு</h2><p>அவர் கூறும்போது, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அவர்களுடைய நிலைப்பாடு என்னவென்று தெளிவாக கூறவில்லை.  தொகுதி மறுவரையறையில் த.வெ.க.வின் நிலைப்பாடு என்ன என்பதே? எங்களுடைய கேள்வி.  அதனை அவர்கள் தெளிவுப்படுத்தவில்லை.</p><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் த.வெ.க.வின் பார்வை என்ன? இந்த கூட்டத்தின் செயல்பாட்டு திட்டம் என்ன? எதனையும் அவர்கள் கூறவில்லை.</p>  <h2>மசோதா தோற்கடிப்பு</h2><p>இந்த விவகாரம் பற்றி நாங்கள் ஆலோசிக்க போகிறோம் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும்.  எங்களிடம் அவர்கள் எதுவும் கூறவில்லை.  தொகுதி மறுவரையறை பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை.  அதுபற்றி தெரியாமல் நாங்கள் எப்படி கூட்டத்தில் பங்கேற்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.</p><p>கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, அந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதனை நாங்கள் எதிர்த்தோம்.  அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.  அதன் மீதுள்ள எங்களுடைய பார்வையை நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம்.</p> ]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது – கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-not-participate-in-the-political-drama-being-conducted-by-the-tvk-government-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-not-participate-in-the-political-drama-being-conducted-by-the-tvk-government-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">f0b22376-1f20-48d4-b3d1-bae9e6bbc8da</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:19:23 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:19:23.716Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Kanimozhi,தி.மு.க,திமுக எம்பி கனிமொழி,TVK Government,த.வெ.க. அரசு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/a58v133w/kanimozhi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/a58v133w/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் எம்.பி.க்களுடன் இணைந்து மத்திய ஜல் சக்தி மந்திரியை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வருவார்களா?</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் மற்றும் கட்சித் தலைவர்களைஅழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில் நடத்திக் காட்டினார். ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் எங்கள் கழகத் தலைவர் ஓரணியில் திரட்டிக் காட்டினார்.</p><p>அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டமுன்வரைவை பா.ஜ.க. கொண்டுவந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்கு இடையிலும் இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலைக் கொளுத்தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச் செய்தார். </p><h2>திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு</h2><p>தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் - அது இன்னும் கையில் கிடைக்கப்பெறாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் நிபந்தனைகளை ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்வரும் தீர்மானங்கள் வாயிலாகத் தெரிவித்துவிட்டோம்:</p><h2>சட்டத் திருத்தம்</h2><p>1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.   </p><h2>தொகுதிகளின் எண்ணிக்கை</h2><p>மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>7.18 சதவீதம் </h2><p>தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றம் செய்யக் கூடாது. தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. </p><h2>அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம்</h2><p>அந்த நிலைப்பாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் இப்போதும் உறுதியாக நிற்கிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இப்போதும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கும்போது இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர்களை மாற்றுவதற்குத்தான் இந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறதா?</p><h2>த.வெ.க. அரசு கள்ள மவுனம்</h2><p>தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரான, நமது பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறையைத் தி.மு.க. நிச்சயம் எதிர்க்கும். அதில் எள்ளளவும் எங்களிடம் மாற்றம் இல்லை. ஆனால், காவிரிப் பிரச்சினைக்காகத் தமிழ்நாடு முழுவதும் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. மேகதாது அணை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அனைவரும் கேட்கும் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், அதுகுறித்து வாயும் திறக்காமல் த.வெ.க. அரசு கள்ள மவுனம் காக்கிறது. யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தைத் த.வெ.க. அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை. </p><h2>திமுக பங்கேற்காது</h2><p>தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக தமிழ்நாட்டின் உயிர்ப்பிரச்சினையான மேகதாது அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95dmk">தி.மு.க.</a>வின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது. </p><p>தமிழ்நாட்டின் காவிரி உரிமையிலும் டெல்டா உழவர்கள் மீதும் இந்த அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறதென்றால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று மத்திய ஜல் சக்தி மந்திரியிடம் நேரில் வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும்.  தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப  தமிழ்நாடு முதலமைச்சர் தயாரா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செங்கல் சூளைக்கு மண் எடுக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் கோட்டாட்சியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/revenue-officer-arrested-for-rs-50k-bribe-for-brick-kiln-soil</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/revenue-officer-arrested-for-rs-50k-bribe-for-brick-kiln-soil#comments</comments><guid isPermaLink="false">f7d66f8c-d3ac-4ba0-a29f-5be1c0d1a58d</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:14:23 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:14:23.150Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,லஞ்சம்,soil,வருவாய் கோட்டாட்சியர்,Brick Kiln,செங்கல் சூளை,மண்,revenue officer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/70qcr63v/cor.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆர்.டி.ஓ. கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/70qcr63v/cor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பரமக்குடி,</p><p>மானாமதுரையில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைக்கு மண் எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்க ரூ.50 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> பெற்ற பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவணபெருமாள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது.</p><h2>லஞ்ச வேட்டை</h2><p>ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வருபவர் சரவண பெருமாள். மானாமதுரை பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் ஒருவர், தனது சூளைக்கு சவுடு மண் எடுத்து செல்வதற்காக முறைப்படி அனுமதி கோரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். </p><h2>ரூ.50 ஆயிரம்</h2><p>இந்த அனுமதி ஆணையை வழங்குவதற்கு ஆர்.டி.ஓ. சரவண பெருமாள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.  லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். </p><h2>கையும் களவுமாக சிக்கினார்</h2><p>போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயனப் பொடி தடவிய ரூ.50 ஆயிரம் நோட்டுகளை அந்த நபர் ஆர்.டி.ஓ. சரவண பெருமாளிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்தை வாங்கிய ஆர்.டி.ஓ.வை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். </p> <p>அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை:  எம்.பி.க்களுடன் விஜய் ஆலோசனை- யார் யார் பங்கேற்பு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-vijay-consults-with-mps-who-participated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-vijay-consults-with-mps-who-participated#comments</comments><guid isPermaLink="false">3b60a466-934e-446c-b82f-9d7cdabae390</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:42:31 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:42:31.635Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,திமுக,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/pj9kkuik/vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/pj9kkuik/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய பா.ஜனதா அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம்  அனுப்பியிருந்தார்.  இந்த கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணித்துள்ளது. பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சியும் புறக்கணித்துள்ளது.  </p> <h2>யார் யார் பங்கேற்பு</h2><p>காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர்,விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, விஜய் வசந்த், பிரவீன் சக்கரவர்த்தி,ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் மற்றும் அக்கட்சி எம்பி ரவிக்குமார்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்பி நவாஸ் கனி,  கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா இரண்டு எம்பிக்கள், மதிமுக எம்பி துரை வைகோ ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  தமிழகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் மொத்தம் 57 பேர் உள்ள நிலையில், 19 எம்.பிக்கள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். 37 எம்.பிக்கள் கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.  காங்கிரஸ் எம்பி சுதா இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 2.2 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/22-kg-of-ganja-2-bikes-seized-in-nellai-2-youths-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/22-kg-of-ganja-2-bikes-seized-in-nellai-2-youths-arrested#comments</comments><guid isPermaLink="false">09d9a516-ef5f-456d-90a9-eb38e11643c1</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:27:37 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:27:37.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Ganja,கஞ்சா,பறிமுதல்,bike,seized,பைக்,vehicle check,வாகன சோதனை,2 வாலிபர்கள் கைது,2 youths arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/id62bk2x/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 வாலிபர்கள் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/id62bk2x/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,  </p><p>நெல்லை மாநகரம் பெருமாள்புரம், மேலப்பாளையம் பகுதிகளில் 2 கிலோ 250 கிராம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a>, 2 செல்போன்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>வாகன சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாநகரம், பெருமாள்புரம் மற்றும் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியான 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. </p><h2>2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன், 2 பைக் பறிமுதல், 2 பேர் கைது</h2><p>இதனையடுத்து உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய போதை பொருளான கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர்களான பெருமாள்புரத்தைச் சேர்ந்த சுகுமார் (வயது 23), மேலப்பாளையத்தைச் சேர்ந்த திவான்மைதீன்(22) ஆகிய 2 பேரிடமும் இருந்து மொத்தம் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் 2 பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghat-districts-of-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghat-districts-of-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">63c40b93-7bac-4a7e-a685-b35519a81daa</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:25:55 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:25:55.214Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/vxzjx8sp/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/vxzjx8sp/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p><strong>08-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p><strong>09-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p><strong>10-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p><strong>11-08-2026 முதல் 14-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>08-08-2026 மற்றும் 09-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>10-08-2026 முதல் 12-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>08-08-2026 மற்றும் 09-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>10-08-2026 முதல் 12-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடி வழக்கு: விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-case-investigation-should-be-handed-over-to-cbi-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-case-investigation-should-be-handed-over-to-cbi-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">0f863790-9fba-41d6-b9b4-b0c415817d30</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:57:31 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:57:31.870Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,சிபிஐ விசாரணை,Palani temple,நில மோசடி,பழனி கோவில்,CBI Inquiry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/czpjdzol/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/czpjdzol/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பழனி முருகன் திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல, இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.</p><p>பழனி திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அன்றைய தினமே, கோவிலுக்கு சொந்தமான மற்றொரு நிலம் தனிநபருக்கு பத்திரப்பதிவு, மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் ஒருவர் கைது என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் சூழலில், பழனி திருக்கோவில் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய நபர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.</p><p>ஏற்கனவே, தவெக ஆட்சியமைந்த பின் அடுத்தடுத்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கோவில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நபர் சிபிசிஐடி காவல் விசாரணையை முடித்து சிறை திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்திருப்பதன் பின்னணியில், காவல்துறையினர் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது ஏற்கனவே அவருக்கு இருந்த உடல் உபாதைகளால் உயிரிழந்தாரா? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறது. </p><p>எனவே, தமிழகத்தில் திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..பின்னணி என்ன?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/enforcement-directorate-raids-locations-linked-to-lottery-martin-what-is-the-background</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/enforcement-directorate-raids-locations-linked-to-lottery-martin-what-is-the-background#comments</comments><guid isPermaLink="false">4ec892f7-1f7d-46bc-b3fd-595ae4d011cd</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:55:18 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:55:18.160Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,ஆய்வு,inspection,lottery,Kovai,அமலாக்கத்துறை அதிகாரிகள்,லாட்டரி அதிபர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/qs3pzaeu/91.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமலாக்கத்துறை ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/qs3pzaeu/91.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை :</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை</a> மாவட்டத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.</p><h2>அமலாக்கத்துறை ஆய்வு</h2><p>பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) கீழ் நடைபெறும் இந்த சோதனைகள், மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.</p><p>கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய சில நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அமலாக்கத்துறை</a> அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மேலும், அவருடன் தொடர்புடைய அரசியல் கட்சி நிர்வாகிகளின் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சோதனை நடைபெறும் இடங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">லாட்டரி மார்ட்டின்</a> தொடர்பான பணப்பரிமாற்ற விவகாரம் குறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. சோதனை முடிவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த நிலையில், சட்டசபையில்  மார்ட்டின் தொடர்பாக விவாதம் நடைபெற்ற மறுநாளே, அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்வழியில் படித்த காவலர்களுக்கு நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-should-take-steps-to-ensure-justice-for-tamil-educated-police-officers-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-should-take-steps-to-ensure-justice-for-tamil-educated-police-officers-annamalai#comments</comments><guid isPermaLink="false">c3ae1da2-2f5e-437b-8da4-fe6f66bbd40d</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:54:12 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:54:12.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,காவலர்கள்,police officers,தமிழ்வழிக் கல்வி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/wvc1zktw/annamalai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/wvc1zktw/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> “வி த லீடர்ஸ்” அமைப்பின் நிறுவனர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு "தமிழ்நாடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமைச் சட்டம்" (PSTM Act) கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தமிழ் வழியில் பயின்ற இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில், 20% முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.</p><h2>20% துறை ஒதுக்கீடு</h2><p>அரசு ஊழியர்களும், இந்தச் சட்டத்தின்படி,TNPSC மூலம் Group-I போன்ற உயர்பதவிகளுக்கு, இந்த முன்னுரிமையைப் பயன்படுத்த முடிகிறது. ஆனால்,TNUSRB மூலம் நடைபெறும் உதவி ஆய்வாளர் பணியிட நியமனங்களுக்கு, காவல்துறையில் ஏற்கனவே 5 ஆண்டுகள் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் 20% துறை ஒதுக்கீட்டில், இந்த முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.</p><h2>நேரடி நியமனம்</h2><p>உதவி ஆய்வாளர் (SI) பதவிக்கான ஆட்சேர்ப்பு என்பது நேரடி நியமனமாகவே நடைபெறுகிறது. ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த காவலர்களுக்கு துறை ஒதுக்கீட்டின் கீழ் 20% முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், அந்தத் துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும் தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்களுக்கு, PSTM சட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய தமிழ் வழி முன்னுரிமை வழங்கப்படாதது ஒரு முரண்பாடாக உள்ளது. </p> <p>கடந்த ஆண்டு, TNUSRB-ன் அறிவிப்பு எண் 01/2025-ன் கீழ் நடைபெற்ற 1352 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பில், 20% துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவலர்களுக்கு PSTM முன்னுரிமை வழங்கப்படவில்லை. காரணம், "ஏற்கனவே அரசு ஊழியர்கள்" என்பதே. ஆனால், PSTM சட்டத்தில்,  அரசு ஊழியர்களுக்கு இந்த முன்னுரிமை மறுக்கப்பட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.</p><h2>முன்னுரிமை</h2><p>இந்தச் சட்ட முரண்பாட்டை நீக்க, கடந்த ஆட்சிக் காலத்தில், 23.01.2026 அன்று, தமிழக அரசு "Tamil Nadu Bill No.4 of 2026" என்ற திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவில், தமிழ் வழியில் படித்த அரசு ஊழியர்களுக்கும், உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் PSTM முன்னுரிமை வழங்குவதே அரசின் நோக்கம் என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த முன்னுரிமையை ஒருமுறை பெற்றவர்கள், அதைவிட உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கு அதனை மீண்டும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>காவலர்கள் பாதிப்பு</h2><p>ஆனால், அந்த மசோதா இன்னும் சட்டமாகாத காரணத்தால், அறிவிப்பு எண் 01/2025-ன் கீழ் உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கேற்ற தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள W.P. No.11362/2026 (Vijay &amp; Others) வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, 28.08.2026 அன்று நடைபெறவுள்ளது.</p><h2>நடவடிக்கை</h2><p>எனவே, தவெக அரசு, தமிழ்நாடு சட்ட முன்வடிவு எண் 4/2026 மீது உடனடியாக முடிவெடுத்து, தமிழ் வழியில் கல்வி பயின்று,  தமிழகக் காவல்துறையில் உண்மையாகப் பணியாற்றும் காவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை கிடைக்கும்படி, PSTM முன்னுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>
காவிரி துரோகத்தை மறைக்கத் தவெக அரசு நடத்தும் திசைதிருப்பல் நாடகமே எம்.பி.க்கள் கூட்டம் - திமுக</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mps-meeting-is-a-diversionary-drama-by-the-tvk-government-to-cover-up-the-cauvery-betrayal-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mps-meeting-is-a-diversionary-drama-by-the-tvk-government-to-cover-up-the-cauvery-betrayal-dmk#comments</comments><guid isPermaLink="false">27aa11ec-59ed-4736-adfe-156f5703b5ba</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:28:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:28:26.506Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,சென்னை,எம்.பி,காவிரிCauvery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/sby7uvo2/107.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/sby7uvo2/107.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி துரோகத்தை மறைக்கத் தவெக அரசு நடத்தும் திசைதிருப்பல் நாடகமே எம்.பி.க்கள் கூட்டம் என்று திமுக ஐடி விங் கூறியுள்ளது. இதுதொடர்பாக, திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>திமுக தலைவர்</h2><p>பாஜகவை எதிர்த்து பேசப் பயந்து, கடந்த ஆண்டு திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமுறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தவர் இந்த விஜய். தொகுதி மறுவரையறை ஆபத்தை முதன்முதலில் எதிர்த்து, மாநாடுகள் நடத்தி, நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவைத் தோற்கடித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்!</p><p>இதில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு, தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றம் செய்யக்கூடாது என்று ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இப்போது இந்த எம்.பி.க்கள் கூட்டத்திற்கான தேவை என்ன?</p><p>காவிரி விவகாரத்தில் கர்நாடகக் காங்கிரஸிடம் உரிமையை அடகு வைத்துவிட்டு, டெல்டா விவசாயிகளின் போராட்டத்திலிருந்து தப்பிக்கவே இந்த அவசரத் தொகுதி மறுவரையறை நாடகத்தை அரங்கேற்றுகிறார் இந்த முதல்-அமைச்சர்.</p><p>மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்; சட்டமன்றத் தீர்மானத்தை நமது எம்.பி.க்களுடன் சென்று மத்திய ஜல் சக்தி மந்திரிடம் நேரில் வழங்கத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் தயாரா? விவசாயிகளின் உரிமையை விற்றுவிட்டு, தவெக அரசு நடத்தும் எந்தக் கபட நாடகத்திலும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95">தி.மு.க</a>. பங்கேற்காது. தமிழ்நாட்டின் நலனில் எங்களின் நிலைப்பாட்டில் எள்ளளவும் மாற்றமில்லை!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எர்ணாகுளம்-பெங்களூரு இடையே திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-ernakulam-and-bengaluru-via-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-ernakulam-and-bengaluru-via-tiruppur#comments</comments><guid isPermaLink="false">38ed24ec-e6e9-4058-9d62-a46a68e3b2a6</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:27:02 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:27:02.481Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,சிறப்பு ரெயில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/pa8llyec/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/pa8llyec/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் செப்டம்பர் மாதம் 6-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. </p><p>எர்ணாகுளத்தில் இந்த ரெயில் இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 3.18 மணிக்கு போத்தனூருக்கும், 4.13 மணிக்கு திருப்பூருக்கும். 5.10 மணிக்கு ஈரோட்டுக்கும், 6.25 மணிக்கு சேலத்துக்கும், அடுத்தநாள் மதியம் 12.45 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும். இதுபோல் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் நாளைமறுநாள் (திங்கட்கிழமை) முதல் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது. </p><p>இந்த ரெயில் பெங்களூருவில் திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 5.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரெயில் திங்கட்கிழமை இரவு 9.25 மணிக்கு சேலத்துக்கும், 10.35 மணிக்கு ஈரோட்டுக்கும், 11.23 மணிக்கு திருப்பூருக்கும், 12.40 மணிக்கு போத்தனூருக்கும் சென்று சேரும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரத்தில் சம்பள உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-protest-in-tambaram-demanding-a-salary-hike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-protest-in-tambaram-demanding-a-salary-hike#comments</comments><guid isPermaLink="false">db125850-b331-45ae-8c3d-a74311d50bf5</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:11:54 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:11:54.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போராட்டம்,தூய்மைப் பணியாளர்கள்,Tambaram Corporation,Sanitation workers protest</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/vri99r7n/04.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தாம்பரம் - தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை தாம்பரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் முன்பு  தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/vri99r7n/04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை</a> தாம்பரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>மண்டல அலுவலக முற்றுகை</h2><p>தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டல அலுவலக வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தூய்மைப் பணியாளர்கள் </a>திரண்டனர். அவர்கள் தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென வளாகத்தின் முன்பு அமர்ந்து போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>முக்கிய கோரிக்கைகள்- குற்றச்சாட்டுகள்</h2><p>தங்களுக்கு தற்போது ஒரு நாளுக்கு வெறும் ரூ. 350 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக பணியாளர்கள் குற்றம் சாட்டினர். இதனை உடனடியாக ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் தங்களுக்கு முறையான வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என்றும், விடுப்பு எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். </p><p>இந்த நியாயமான கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பரிசீலித்து, உரிய தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கல்விக்கான ஒதுக்கீடு குறைப்பு; அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reduction-in-education-allocation-a-calculated-plot-to-destroy-government-schools-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reduction-in-education-allocation-a-calculated-plot-to-destroy-government-schools-anbumani#comments</comments><guid isPermaLink="false">b65871be-1e85-4891-9782-4403db14a8b9</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:11:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:11:00.720Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,PMK,அன்புமணி,Anbumani,Anbumani Ramadas</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/vol70mva/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/vol70mva/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கல்விக்கான ஒதுக்கீடு குறைப்பு அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நிதி ஒதுக்கீடு குறைப்பு</h2><p>தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறதா, உயர்த்தப்பட்டுள்ளதா? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தக் கல்வித்துறைக்கும் ஒதுக்கப்படும் நிதியின் அளவு கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டிருக்கிறது. அரசின் தேவையற்ற செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் நிலையில், கல்வித்துறைக்கான நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.</p><p>இந்தியாவில் கல்வித்துறை சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட தவுலத் சிங் கோத்தாரி தலைமையில் 1964-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஆணையம், 1966-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியாவில் கல்விக்கான அரசின் செலவு அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6% என்ற அளவை எட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போது இந்தியாவில் கல்விக்கான அரசின் செலவு சுமார் 3% என்ற அளவிலும், தமிழ்நாட்டில் அதை விட சற்றுக் கூடுதலாகவும் இருந்தது.</p><p>கோத்தாரி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில்,   கல்விக்கான அரசின் செலவுகள் குறித்த இலக்கு இன்று வரை எட்டப்படவில்லை. மாறாக, கல்விக்கான அரசின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றன. கல்வியில் சிறந்த மாநிலம் என போற்றப்படும் தமிழ்நாட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.</p><h2>ஒதுக்கீடு படிப்படியாக குறைப்பு</h2><p>புத்தாயிரமாண்டின் தொடக்கமான 2000-01 ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு பார்த்தால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது. 2000-01 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு அமைச்சகங்களும் ஒன்றாக இருந்தன. அப்போது கல்வித்துறைக்கு ரூ.4,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது அன்றைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.1,26,099 கோடியில் 3.92% ஆகும்.</p><p>அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2010-11ஆம் ஆண்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில்  இரு பங்காக குறைக்கப்பட்டு விட்டது. 2010ஆம் ஆண்டில் கல்வித்துறை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றுக்கு முறையே ரூ.10,148 கோடி, ரூ.1751 கோடி என மொத்தம்  ரூ.11,899 கோடி ஒதுக்கப்பட்டது. இது அந்த ஆண்டின் மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.4,50,474 கோடியில் 2.64% ஆகும்.</p><p>மேலும் 10 ஆண்டுகள் கழித்து 2020-21ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.34,181.73 கோடி, உயர்கல்விக்கு ரூ.5052.84 கோடி என மொத்தம் ரூ.39,233 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ரூ.17,88,074 கோடியாக தமிழகத்தின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொருளாதாரம் </a>அப்போது வளர்ச்சியடைந்திருந்த நிலையில், அதில் கல்விக்கு 2.19% மட்டுமே ஒதுக்கப்பட்டது.</p><h2>3.92% நிதி ஒதுக்கப்பட்டிருந்தால்..</h2><p>புத்தாயிரமாண்டின் கால் நூற்றாண்டு முடிவடைந்து விட்ட நிலையில், 2026-27ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.44,527 கோடி, உயர்கல்விக்கு ரூ.8393 கோடி என மொத்தம் ரூ.52,920 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார உற்பத்தி ரூ.40,67,312 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பள்ளிக்கல்விக்கு 1.09%, உயர்கல்விக்கு 0.21% என மொத்தம் 1.30%  மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இந்த ஒதுக்கீடு மிக மிகக் குறைவு ஆகும்.</p><p>2000-ஆம் ஆண்டில் 3.92% ஆக இருந்த கல்விக்கான ஒதுக்கீடு இப்போது 1.30% ஆக, அதாவது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 3.92% அளவுக்கு நடப்பாண்டில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தால், கல்வித்துறைக்கு மட்டும் ரூ.1,59,439 கோடி நிதி கிடைத்திருக்கும். ஆனால், இப்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அதை விட ரூ.1,06,519 கோடி குறைவு ஆகும். பரிந்துரை வழங்கிய கோத்தாரியோ, ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனோ இப்போது இருந்திருந்தால், இந்த நிலையைக் கண்டு வெட்கித் தலைகுனிந்திருப்பார்கள். இந்த அவல நிலைக்கு தமிழ்நாட்டை கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த, ஆட்சி செய்யும் அனைத்துக் கட்சிகளும் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.</p><p>ஓர் அரசோ, ஒரு சமூகமோ அதன் முதல் கடமை குழந்தைகளுக்கு தரமான, இலவசக் கல்வியை வழங்குவது தான். அதற்காகத் தான் காமராசர் காலத்தில் அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். அதற்கேற்ற வகையில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் அரசு பள்ளிகள் அறிவுத் திருக்கோவில்களாக திகழ்ந்தன.</p><h2>மாணவர்கள் எண்ணிக்கை குறைவு</h2><p>ஆனால், காலப்போக்கில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டதன் வாயிலாக, அரசாங்க பள்ளிகளில் ஆசிரியர்களும், அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது. மத்திய அரசு வெளியிட்ட புள்ளி  விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 2015-16 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது.  அதாவது, 11 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 32 லட்சத்து 49 ஆயிரம் குறைந்திருக்கிறது.</p><p>கல்வித்துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கும், அரசு பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதை இந்த புள்ளி விவரங்களின் மூலம் அறிய முடியும். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்; பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்; அதனால் கல்வித்தரம் உயரும்; அதன் காரணமாக மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். ஆனால், கல்விக்கான நிதி குறைக்கப்படுவதால் தான் அரசு பள்ளிகள் மிக வேகமாக சீரழிந்து வருகின்றன.</p><h2>தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவா?</h2><p>இதே காலகட்டத்தில் பார்த்தால், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது 62.03 லட்சமாக அதிகரித்து விட்டது. அரசு பள்ளிகளின் வீழ்ச்சியில் தான் தனியார் பள்ளிகள் வளருகின்றன. தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவே அரசு பள்ளிகளின் வீழ்ச்சி உருவாக்கப்படுகிறதோ, அதற்காகத் தான் கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்படுகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.</p><p>அரசு பள்ளிகள் தான் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கான கருவிகள். அவற்றை வீழ விடாமல், வளர்த்தெடுக்க வேண்டும்; அரசு பள்ளிகளில் குறைந்தது வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.  இதற்காக கலவித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில்  குறைந்தது 3% என்ற அளவுக்காவது அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘பொன்னாடை போர்த்துவதை தவிர்த்து புத்தகங்களை கொடுக்கலாம்’ - நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/instead-of-draping-a-ceremonial-shawl-books-can-be-presented-minister-rajmohan-speaks-at-a-book-launch-event</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/instead-of-draping-a-ceremonial-shawl-books-can-be-presented-minister-rajmohan-speaks-at-a-book-launch-event#comments</comments><guid isPermaLink="false">f88a08ea-e10c-43e1-a39b-d46e4c5224d7</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:10:48 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:10:48.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புத்தகங்கள்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/rjbjb749/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/rjbjb749/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-</p><p>“விழாக்களில் மரியாதை செய்யும்போது பொன்னாடை போர்த்துகிறார்கள். என்னுடைய வீட்டில் இப்போது மூட்டை மூட்டையாக பொன்னாடைகள் இருக்கின்றன. அவற்றை என்ன செய்வதென்று தெரியவில்லை. பொன்னாடைக்கு போர்த்துவதற்கு பதிலாக புத்தகங்களை பரிசாக கொடுக்க நாம் முயற்சி செய்யலாம். </p><p>என்னுடைய வீட்டிலும், அலுவலகங்களிலும் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. ஏழை, எளிய வீட்டுப் பிள்ளையாக பிறந்த நான், பள்ளியில் ஒரு மக்கு மாணவனாகவே இருந்தேன். மெல்ல கற்கும் குழந்தையாக, தன் வேகத்தில் கற்கும் குழந்தையாக இருந்தேன். ஆனால் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தினேன். 50 பேர் முன்னால் பேசுவது மட்டும்தானா பேச்சு? 5 பேர் முன்னிலையில் கூட பேசினேன். சிறிய மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். </p><p>நான் அமைச்சராவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. ஆனால் என்னைப் பார்த்தவுடன் ஒருவர் என்னால் முடியும் என்று நம்பினார். தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் என்ற மாமனிதரால் இன்று நான் அமைச்சராகி இருக்கிறேன். கிடைத்த எல்லா வாய்ப்பிலும் எனக்கு வழித்துணையாக வந்தது புத்தகங்கள்தான். என் வீட்டில் பதக்கங்களோ, கோப்பைகளோ இருக்காது. ஆனால் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் இருக்கும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நாளை விழிப்புணர்வு பேரணி - மாணிக்கம் தாகூர் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-announces-an-awareness-rally-by-the-congress-on-the-9th-against-the-constituency-delimitation-bill</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manickam-tagore-announces-an-awareness-rally-by-the-congress-on-the-9th-against-the-constituency-delimitation-bill#comments</comments><guid isPermaLink="false">9b190c17-f9ec-4cb1-877e-44376a0ec620</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:37:14 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:37:14.542Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Delimitation of Constituencies,Manickam Tagore,தொகுதி மறுவரையறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/7u102ylj/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/7u102ylj/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் 9-ந்தேதி(நாளை) விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“இந்தியாவின் இறையாண்மையையும், கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 12-ந்தேதி கொண்டு வந்த மசோதாவை இந்தியா கூட்டணி கட்சிகள் மக்களவையில் தோற்கடித்தன. மீண்டும் தற்போதுள்ள எண்ணிக்கையோடு 50 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என ஆசைகாட்டி புதிய மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. </p><p>இதன்படி பார்த்தால் உத்தர பிரதேச மாநிலத்தில் 80 எம்.பி.க்கள் உள்ளனர். புதிய திட்டத்தின்படி இது 120 ஆக உயரும். அதேபோல, தமிழ்நாடு 39 இல் இருந்து 58 ஆக உயரும்.  உத்தர பிரதேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் உண்டான இடைவெளி 41-ல் இருந்து 62 ஆக உயரும். ஒரு பன்முக கூட்டாட்சியில் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை வெறும் எண்களின் விகிதாச்சாரத்தை கொண்டு மட்டும் தீர்மானிக்க முடியாது என்பதை கடந்த காலங்களில்  1976 இல் இந்திரா காந்தியும், 2001-ல் ஏ.பி. வாஜ்பாயும் கொண்டு வந்த திருத்தங்களின் மூலமாக மக்களவை எண்ணிக்கை விரிவாக்கம் முடக்கப்பட்டது. </p><p>அந்த முடக்கத்தை நீக்குவதற்கான முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பு தொகுதி மறுவரையறை செய்தால் பட்டியலின, பழங்குடியின பெண்கள் இடஒதுக்கீட்டு தொகுதிகளை சரியாக தீர்மானிக்க முடியாது. ஒட்டுமொத்தத்தில் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை பறித்து விடும். </p><p>கூட்டாட்சி, ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய நம் இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களை குழிதோண்டிப் புதைத்துவிடும். தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால் அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் துரோகமாகும். அப்படிப்பட்ட கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். </p> <p>தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில், விடுதலைப் போராட்ட காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று, தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபயணம் மேற்கொள்வதென மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>அன்றைய தினம் தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு பலூன்களுடன் அமைதிப் பேரணி நடத்தப்படும். பேரணியின் இறுதியில் காந்தி சிலை அருகில் இரண்டு பலூன் காட்சி பதாகைகள் அமைக்க வேண்டும். தொகுதி மறுவரையறைக்கு முன் என்ற பதாகையும், தொகுதி மறுவரையறைக்குப் பின் என்று மற்றொரு பதாகையும் அங்கே அமைக்கப்பட்டிருக்கும். </p><p>இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அல்லது மூத்த நிர்வாகி, 50 சதவிகித உயர்வு அனைவருக்கும் சமநீதியை வழங்காது, ஏற்கனவே உள்ள இடைவெளியை மேலும் அதிகரிக்கும் என்ற கருத்தை விளக்கி பதாகைகளில் உள்ள விவரங்களை மேற்கோள் காட்டி உரை நிகழ்த்தப்படும்.</p><p>அதேபோல, ஆகஸ்ட் 12 அன்று மாணவர்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போக்குவரத்து பாதைகளில் கண்பார்வைக்குத் தெரியும் உயரத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்படும். அதிக மக்களை சென்றடைய பலூன் உருவகத்தை மையமாக கொண்டு குறும் படங்கள் மற்றும் போஸ்டர்களை வலைதளங்களில் ஒரே நேரத்தில் பதிவிட வேண்டும். </p><p>விடுதலைப் போராட்ட உணர்வுகளை எழுப்புகிற வகையில் ஆகஸ்ட் 9 அன்று தொடங்கி நடைபெறுகிற தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி வெற்றி பெற தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தவெக அமைச்சரவையில் காங்கிரசிற்கு இடம்: ஜி.கே.வாசன் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-to-have-place-in-tvk-cabinet-gk-vasan-welcomes-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-to-have-place-in-tvk-cabinet-gk-vasan-welcomes-it#comments</comments><guid isPermaLink="false">ee3f58be-78df-4f21-a9d5-6d7c6836c02d</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:29:30 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:29:30.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை,காங்கிரஸ்,Congress,G.K.Vasan,cabinet,ஜி.கே.வாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/d5qvxb3v/105.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/d5qvxb3v/105.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் வழங்கப்பட்டதை வரவேற்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.</p><h2>ஜி.கே.வாசன்</h2><p>இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், காங்கிரஸ் இருந்தால் நேர்மையாக இருக்கும். கடந்த 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தற்போது அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் வழங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்” என்றார்.</p><p>மேலும், காங்கிரஸ் உடன் இணைந்து தமாகா செயல்படும் என்றும், அதே நேரத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">தமிழ் மாநில காங்கிரஸ்</a> தனது தனித்தன்மையுடன் இயங்கும் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.</p><p>வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் வகையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் கூடும் இடங்களில் இலவச வைபை வசதி: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wi-fi-facility-in-public-gathering-places-chennai-corporation-commissioner-discusses-proposal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wi-fi-facility-in-public-gathering-places-chennai-corporation-commissioner-discusses-proposal#comments</comments><guid isPermaLink="false">cf9cb1dd-13ca-47eb-83fa-798839c46183</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:16:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:16:43.443Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சென்னை மாநகராட்சி ஆணையர்,இலவச வைபை வசதி,Chennai Corporation Commissioner,இலவச வைபை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/xq6kwwq2/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/xq6kwwq2/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்களுக்கு இலவச வைஃபை (WIFI) வசதி ஏற்படுத்துவது குறித்து இணைய சேவை வழங்குநர்களுடனான (Internet Service Providers) ஆலோசணைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஆய்வுக்கூட்டம்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்களுக்கு இலவச வைபை (WIFI) வசதி ஏற்படுத்துவது குறித்து இணைய சேவை வழங்குநர்களுடனான (Internet Service Providers) ஆலோசணைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் இன்று (07.08.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன் மற்றும் ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி (ACT) ஆகிய இணைய சேவை வழங்குநர்கள், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>இலவச வைபை (WIFI)</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகள், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகளிலும், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை (WIFI) வசதியினை ஏற்படுத்திட இதற்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களான ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி (ACT) ஆகிய இணைய சேவை வழங்குநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆலோசனை </a>மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்கி கணக்கை கொடுத்து கமிஷன்.. ஆன்லைன் மோசடி கும்பலுக்கு உதவிய வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-aiding-online-fraud-gang-by-providing-bank-account-for-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-aiding-online-fraud-gang-by-providing-bank-account-for-commission#comments</comments><guid isPermaLink="false">cffaa9e5-b7d3-4824-a3eb-43806dd065a0</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:13:05 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:13:05.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,கைது,arrest,வங்கி கணக்கு,ராமநாதபுரம்,Ramanathapuram,Bank account,ஆன்லைன் மோசடி,Online fraud</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/xx3oqdt0/dhna.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/xx3oqdt0/dhna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>மாவட்ட செய்திகள்</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p>ராமநாதபுரம் அருகே வங்கி கணக்கை கொடுத்து கமிஷன் பெற்று ஆன்லைன் மோசடி கும்பலுக்கு உதவிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.</p><h2>ஆன்லைன் மோசடி</h2><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/ஆன்லைன்-மோசடி">ஆன்லைன் மோசடி</a> குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மோசடியில் ஈடுபடும் கும்பல் போலீசாரிடம் இருந்து தப்பிக்க தங்கள் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாங்கி மோசடிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><h2>கிரிப்டோ கரன்சி</h2><p>இவ்வாறு பலர் மோசடி நபர்களின் பணத்தினை தங்களது வங்கி ஏ.டி.எம். மூலம் எடுத்து அவற்றை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பும் செயலில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது. இதனை கண்டறிந்த போலீசார் இதுபோன்ற குற்றவாளிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின்பேரில் சென்னை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>சொகுசு வாழ்க்கை</h2><p>அப்போது ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் அமைந்துள்ள வங்கியில் ஒரு கணக்கில் இணைய மோசடியில் பெறப்பட்ட சட்டவிரோத பணத்தை பெற்று அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றி மோசடி நபர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருவதாக புகார் வந்தது. </p><p>இதுகுறித்து கேணிக்கரை போலீசார் அந்த வங்கி கணக்கிற்கான நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வங்கி கணக்கு சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 25) என்பவருடையது என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் தனது வங்கி கணக்கு மூலம் ஆன்லைன் மோசடி பணத்தை பெற்று அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றி கொடுத்து கமிஷன் பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்காக பெருந்தொகையை கமிஷனாக பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.</p><h2>சிறையில் அடைப்பு</h2><p>இதைத்தொடர்ந்து தனசேகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மோசடி நபர்களின் குற்றச்செயலுக்கு தனது வங்கி கணக்கை பயன்படுத்தி கமிஷன் பெற்றதும், மோசடி பணத்தை குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் கணக்கிற்கு கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்புவதையும் வாடிக்கையாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட தனசேகரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நிலையில் வருகிற 19-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>மீனவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நிரந்தர நடவடிக்கை தேவை : டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-measures-needed-to-ensure-the-safety-of-fishermen-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-measures-needed-to-ensure-the-safety-of-fishermen-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">a573814e-a708-4cda-9c67-c41933a5e0bb</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:56:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:56:45.515Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,fishermen</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/vqluzp3g/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/vqluzp3g/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“இலங்கை கடற்படையினரின் அத்துமீறலையும், அராஜகத்தையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் - தேர்தலுக்கு முன்பாக கடந்த திராவிட ஆட்சியாளர்களை குறைகூறி வீரவசனங்களைப் பேசிய ஜோசப் விஜய், முதலமைச்சரான பின்பு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசிற்கு அதே கடிதம் எழுதும் நடைமுறையை தாண்டி, வேறு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் ?  </p><p>இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தைச் சார்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று ஒருநாள் முழு அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் மீனவ குடும்பங்கள் மன ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.   </p><p>ஒவ்வொரு மீனவர் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்றுவிடுவதாக கடந்த திராவிட ஆட்சியாளர்கள் மீது தேர்தலுக்கு முன்பாக குற்றம் சாட்டிய  ஜோசப் விஜய், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் மீனவர்களின் கைதின் போது கடிதம் மட்டுமே எழுதியதை தவிர என்ன செய்திருக்கிறார் என்பதை விளக்க முடியுமா ? </p><p>எனவே, பல்வேறு இன்னல்களுக்கு இடையே தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும்  மீனவர்களை, அரசியல் செய்வதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்திடும் வகையில் நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆடி மாதத்தில் வீசும் பலத்த காற்று; குமரியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/strong-winds-blowing-during-the-month-of-aadi-wind-power-generation-increases-in-kanyakumari</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/strong-winds-blowing-during-the-month-of-aadi-wind-power-generation-increases-in-kanyakumari#comments</comments><guid isPermaLink="false">7fe09491-3af6-4945-8724-4def3fcf333b</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:55:41 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:55:41.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanyakumari,குமரி,Windmill,ஆடி மாதம்,Aadi,காற்றாலை மின் உற்பத்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/bjr9jr8c/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/bjr9jr8c/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி மாதத்தையொட்டி பலத்த சூரைக்காற்று வீசி வருவதால் ஆரல்வாய்மொழி மற்றும் முப்பந்தல் பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது. </p><p>வழக்கமான மாதங்களை விட காற்று தீவிரமாகவும், அதிக வேகமாகவும் வீசுவதால் 250 முதல் 750 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலைகளில் மின் உற்பத்தி 3 ஆயிரம் முதல் 8 ஆயிரம் யூனிட் வரை உயர்ந்துள்ளது. எனினும், அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக மின் உற்பத்தியில் சிறு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>பேச மறுத்ததால் ஆத்திரம்.. வீடுபுகுந்து கள்ளக்காதலியை குத்திக்கொன்ற வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-by-refusal-to-speak-young-man-breaks-into-home-and-stabs-illicit-lover-to-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-by-refusal-to-speak-young-man-breaks-into-home-and-stabs-illicit-lover-to-death#comments</comments><guid isPermaLink="false">a3624b51-9358-4b6c-8311-d7c416000928</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:53:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:53:49.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Madurai,மதுரை,கள்ளக்காதல்,வாலிபர்,கிரைம் செய்திகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/rzgr1rg7/kallak.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/rzgr1rg7/kallak.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>பேச மறுத்த கள்ளக்காதலி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.</p><h2>மலர்ந்த கள்ளக்காதல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> புதுராமநாதபுரம் ரோடு கணபதி மில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். கீழமாசி வீதியில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தா (வயது 33). ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள்.</p><p>சாந்தா வேலை பார்த்த கடையில் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண்ணும் வேலை பார்த்துள்ளார். இதன் காரணமாக அவரது வீட்டுக்கு சாந்தா சென்று வந்தார். அப்போது பஞ்சவர்ணத்தின் மகன் சரவண பிரபு (25), சாந்தாவிடம் நெருங்கி பழகி உள்ளார்.</p><p>இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அதை அறிந்த செல்வகுமார், மனைவியை கண்டித்தார். அதன் காரணமாக சரவணபிரபுவுடன் பேசுவதை சாந்தா தவிர்த்துள்ளார். ஆனால் அவர் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.</p><h2>வாக்குவாதம்</h2><p>நேற்று முன்தினம் இரவு செல்வகுமார் அவசர வேலை காரணமாக கடைக்கு சென்று விட்டார். சாந்தா தனது குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சரவணபிரபு மது போதையில் திடீரென்று சாந்தா வீட்டுக்குள் நுழைந்தார். மேலும் தன்னுடன் பேசாமல் இருப்பது குறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><h2>கொலை</h2><p>அதனால் ஆத்திரம் அடைந்த சரவணபிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தாவின் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். </p><p>கழுத்தில் ரத்தம் வழிந்தநிலையில் சத்தம் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவந்து சாந்தா மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் இந்த சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது, சாந்தா உயிருக்கு போராடியதை கண்டனர். </p><p>உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சாந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பிச்சென்ற சரவணபிரபுவை தேடி வருகின்றனர். கள்ளக்காதலனால் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களுக்குள் இனி செல்போன் கொண்டு செல்ல தடை: செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-taking-mobile-phones-into-temples-comes-into-effect-from-september-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-taking-mobile-phones-into-temples-comes-into-effect-from-september-1st#comments</comments><guid isPermaLink="false">080d4d69-9ae3-44da-8967-4edb541c4b6f</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:44:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:44:26.900Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,கோவில்,செல்போன்,அறநிலையத்துறை,HRCE,cellphone</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/93levuh4/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/93levuh4/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை செப்டம்பர் 1-ந்தேதி முதல் முழுமையாக அமலுக்கு வர உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. </p><h2>தடை உத்தரவு</h2><p>கோவில்களின் ஆன்மீக சூழல் மற்றும் அமைதியை பேணிக்காக்கும் வகையிலும், விதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் கோவிலுக்குள் செல்போன்களை பயன்படுத்த ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த தடை உத்தரவு வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது. </p><h2>சுற்றறிக்கை</h2><p>இது தொடர்பாக அனைத்துக் கோவில் நிர்வாகங்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, இனி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>காவல்துறையில் புகார்</h2><p>இதனை மீறி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லப்பட்டு, அதன் மூலம் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>அதே போல், வி.ஐ.பி.க்கள், சினிமா பிரபலங்கள் கோவில்களுக்கு வரும்போது அவர்களுடன் ஊடகத்தினர் அல்லது தனிப்பட்ட நபர்கள் சென்று வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து சரிவு; சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-inflow-drops-at-hogenakkal-permission-granted-for-tourists-to-bathe-and-for-coracle-operations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-inflow-drops-at-hogenakkal-permission-granted-for-tourists-to-bathe-and-for-coracle-operations#comments</comments><guid isPermaLink="false">d020fa3c-4219-4f55-abb0-5eb1e8d964fe</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:42:05 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:42:05.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery River,Boat ride,தருமபுரி,சுற்றுலாப் பயணிகள்,குளிக்க அனுமதி,Bathing allowed</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/3dctgvg2/02.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ஒகேனக்கல் காவிரி ஆறு- படகு சவாரி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் பரிசல் இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/3dctgvg2/02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி,</p><p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராகக் குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் பரிசல் இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.</p><h2>தடை நீக்கம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தருமபுரி மாவட்டம்</a> ஒகேனக்கல்லில், காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.</p><h2>பரிசல் இயக்க அனுமதி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஒகேனக்கல்</a> காவிரி ஆற்றில் இன்று (சனிக்கிழமை) நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு பரிசல் இயக்கவும், குறிப்பிட்ட பாதுகாப்பான பகுதிகளில் குளிக்கவும் அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.</p><h2>மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்</h2><p>விடுமுறை தினமான சனிக்கிழமை, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் ஓட்டிகளும், உள்ளூர் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பாதுகாப்புப் பணியில் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-new-judges-to-the-madras-high-court-chief-minister-vijay-extends-congratulations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-new-judges-to-the-madras-high-court-chief-minister-vijay-extends-congratulations#comments</comments><guid isPermaLink="false">5fda7532-6056-4ffc-b591-c9a0d4a4b463</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:22:20 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:22:20.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,சென்னை,வாழ்த்து,Madras High Court,சென்னை ஐகோர்டு,நீதிபதிகள் நியமனம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,New judges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/qgkxqz4b/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/qgkxqz4b/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 51 நீதிபதிகள் உள்ளனர். 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள் என்று 19 பேருடைய பெயரை சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது. </p><h2>ஜனாதிபதி உத்தரவு</h2><p>இந்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் ஏற்றுக் கொண்டது. அந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரை பரிசீலித்த மத்திய அரசு, 15 பேரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.</p><p>இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முதல்-அமைச்சர் வாழ்த்து</h2><p>இந்திய ஜனாதிபதியால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவிந்தராஜன் </a>கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் மாண்பமை சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவீக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், பி. முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என்.குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p><h2>பணி சிறக்கட்டும்</h2><p>நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>