<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 31 Aug 2026 13:34:28 +0000</lastBuildDate><item><title>அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இனி பெண்ணாடம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-ananthapuri-express-will-now-halt-at-pennadam-railway-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-ananthapuri-express-will-now-halt-at-pennadam-railway-station#comments</comments><guid isPermaLink="false">35c99bd2-ba0a-4127-a016-775c8ceaba66</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:31:56 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:31:56.254Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Cuddalore,கடலூர்,Kollam-Chennai,Chennai - Kollam,கொல்லம்-சென்னை,கொல்லம்,Ananthapuri Express,பெண்ணாடம்,Ananthapuri,Pennadam,Pennadam Railway Station,சென்னை-கொல்லம்,பெண்ணாடம் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/afjlsh5w/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்ணாடம் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/afjlsh5w/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எழும்பூர்-கொல்லம்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், பெண்ணாடம் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இதன்படி, 20635/20636 என்ற எண் கொண்ட அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பெண்ணாடம் நிலையத்தில் சோதனை அடிப்படையில் ஒரு நிமிட தற்காலிக நிறுத்தம் வழங்கப்படுகிறது.</p><h2>செப்டம்பர் 2-ந் தேதி முதல் அமல்</h2><p>20635 சென்னை எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்ணாடம் நிலையத்தில் இரவு 11.23 மணிக்கு வந்து, 11.24 மணிக்கு புறப்படும். இந்த புதிய நிறுத்தம் 2.9.2026 முதல் அமலுக்கு வருகிறது.</p><p>அதேபோல், 20636 கொல்லம்-சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்ணாடம் நிலையத்தில் காலை 1.07 மணிக்கு வந்து, 1.08 மணிக்கு புறப்படும். இந்த நிறுத்தம் 2.9.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.</p><p>பெண்ணாடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளின் வசதிக்காக, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அனந்தபுரி எக்ஸ்பிரஸ்</a> ரெயிலுக்கு இந்த ஒரு நிமிட தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மார்த்தாண்டத்தில் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-plus-one-student-in-marthandam-youth-gets-10-years-jail</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-plus-one-student-in-marthandam-youth-gets-10-years-jail#comments</comments><guid isPermaLink="false">d63e7ed2-024e-4a17-a1b8-8ae3bfac89c6</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:31:56 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:31:56.219Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual harassment,பாலியல் தொல்லை,வாலிபர்,பிளஸ்-1 மாணவி,Marthandam,மார்த்தாண்டம்,10 ஆண்டு சிறை,10 years in prison</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ybkog83l/jeslin-rajkumar.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜெஸ்லின் ராஜ்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்த்தாண்டத்தில் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ybkog83l/jeslin-rajkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில், </p><p>குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், அவருக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.</p> <h2>பாலியல் தொல்லை</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்லின் ராஜ்குமார் என்பவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><h2>போக்சோ</h2><p>போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜெஸ்லின் ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சுந்தரையா இன்று தீர்ப்பு வழங்கினார்.</p> <h2>சிறை தண்டனை</h2><p>மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், அவருக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.</p> ]]></content:encoded></item><item><title>திருக்குறளின் சிறப்பை உலக அரங்கில் எடுத்துரைத்த பிரதமர் மோடி – எல்.முருகன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-highlights-the-importance-of-thirukkural-on-the-world-stage-l-murugan-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-highlights-the-importance-of-thirukkural-on-the-world-stage-l-murugan-praises#comments</comments><guid isPermaLink="false">688923aa-e4ab-4f2c-97ac-81bf7acde607</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:31:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:31:55.705Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,பிரதமர் மோடி,PM Modi,L. Murugan ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n0472uu1/54.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எல்.முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n0472uu1/54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருக்குறளின் சிறப்பை உலக அரங்கில் எடுத்துரைத்த பிரதமர் மோடிக்கு மத்திய இணை மந்திரி <a href="https://www.dailythanthi.com/topic/l-murugan">எல்.முருகன் </a>பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானில் திருக்குறளின் சிறப்பையும், அதன் உலகளாவிய முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை தரும் தருணம்.</p><p>“பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், இன்றும் ஆன்மிகம், தத்துவம் மற்றும் நடைமுறை வாழ்க்கை என அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த உத்வேகத்தை அளிக்கிறது” என்று பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்.</p><h2>மகத்தான முயற்சி</h2><p>மேலும், திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பு, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் செழுமையையும், திருவள்ளுவரின் பேரறிவையும் உலகெங்கும் கொண்டு செல்லும் மகத்தான முயற்சியாகும். திருக்குறள் உலகப் பொதுமறை என்பதை பிரதமரின் இந்த வார்த்தைகள் மீண்டும் உலகிற்கு எடுத்துரைக்கின்றன.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தென்னிந்திய பகுதி தலைமை கட்டளையிலிருந்து லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி பணி ஓய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lieutenant-general-v-srihari-retires-from-the-south-india-area-headquarters</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lieutenant-general-v-srihari-retires-from-the-south-india-area-headquarters#comments</comments><guid isPermaLink="false">3fbd30bb-6d8f-48a1-aebf-f75066475bd4</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:19:30 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:19:30.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,இந்திய ராணுவம்,indian army,ராணுவ தளபதி,லெப்டினன்ட் ஜெனரல்,வி. ஸ்ரீஹரி,Lieutenant General</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/7vqy7g0z/Untitled-2.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/7vqy7g0z/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்திய ராணுவத்தின் தெற்குப்பகுதி தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி, தனது நாற்பதாண்டுகால சேவைக்குப்பின் இன்று பணி நிறைவு பெற்றார். தனது பிரியாவிடை நிகழ்வின் ஒரு பகுதியாக, தேச சேவைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் சென்னை போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.</p><h2>பல்வேறு பதக்கங்கள் பெற்றவர்</h2><p>ஜூன் 1987-ல் 16 சீக்கிய இலகு காலாட்படையில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, பின்னர் பாராசூட் சிறப்புப் படைபிரிவில் இணைந்தார். தனது பணிக்காலத்தில், அவர் பல்வேறு நிலப்பரப்புகளிலும் களங்களிலும் செயல்பட்டார். அவரது சிறப்பான சேவைக்காக ஷவ்ரிய சக்ரா, சேனா பதக்கம், அதி விசிஷ்ட சேவா பதக்கம் உள்ளிட்ட பல கவுரவங்கள் வழங்கப்பட்டன.</p><p>1977-ல் அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் ஒரு இளம் மாணவராக இருந்து, ராணுவ தென் பகுதியின் தலைவராக உயர்ந்த அவரது பயணம், ஒழுக்கம், விடாமுயற்சி, தொழில்திறன், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சான்றாகும்.</p><p>ராணுவ தென் பகுதியின் தளபதியாக இருந்த காலத்தில், லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, பாதுகாப்புப் படைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தார்.</p><h2>ஒலி-ஒளிக்காட்சி நிகழ்ச்சிகள்</h2><p>சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் பொதுமக்களின் ஈடுபாட்டை அதிகரிபதில் அவர் சிறப்பு கவனம் செலுத்தினார். டி-55 பீரங்கி மற்றும் ஐ.என்.எஸ் விக்ராந்த், ஐ.என்.எஸ் அஞ்சதீப் ஆகிய கடற்படைக்கப்பல்களின் மாதிரிகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. குடிமை நிர்வாகத்திற்கும் ஆயுதப் படைகளுக்கும் உள்ள ஆழமான உறவை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் தீவிர ஒத்துழைப்பு மற்றும் ஆதரவால் இந்த முன்னெடுப்புகள் மேலும் வலுப்பெற்றன.</p><p>சென்னை போர் நினைவிடத்தில் தமிழ் தலைப்புகளுடன் கூடிய ஒலி-ஒளிக்காட்சி நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலையில் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன. இந்த முயற்சி குடிமக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர், இந்திய வீரர்களின் தியாகங்களைப் புரிந்துகொள்ளவும், ஆயுதப் படைகளின் மீது ஆழ்ந்த மதிப்பை வளர்த்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.</p><p>லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, அவசரகாலத் தயார்நிலை, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) போன்ற துறைகளில் பாதுகாப்புப்படைகள், அரசு, தனியார் துறை போன்றவற்றுடன் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார். முன்னாள் ராணுவ வீரர்களின் நலன், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர் சிறப்பு கவனம் செலுத்தினார்.</p><h2>வாழ்த்துகள் தெரிவிப்பு</h2><p>இந்திய ராணுவ தென்பகுதி தலைமையக அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், இதர நிலையினர், சிவில் பணியாளர்கள் ஆகியோர், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/lieutenant-general-v-srihari-takes-charge-as-new-army-commander-for-southern-region-1171668">லெப்டினன்ட் ஜெனரல்</a> ஸ்ரீஹரிக்கு அவரது அர்ப்பணிப்புடன் கூடிய நாற்பதாண்டு சேவைக்கு மரியாதை செலுத்தியதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நிறைவான பணிக்குப் பிந்தைய வாழ்க்கை அமைய தங்கள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>எப்.கியூ..எல் முதலீட்டு மோசடி; பணம் போச்சே... மன உளைச்சலில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-made-a-tragic-decision-in-a-state-of-depression</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-made-a-tragic-decision-in-a-state-of-depression#comments</comments><guid isPermaLink="false">74b3d237-a413-4108-8f95-6ec31a5ef1ce</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:52:17.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,பண மோசடி,FinancialScam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/xwk5gvt8/money33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
எப்.கியூ..எல் முதலீட்டு மோசடி]]></media:title><media:description type="html"><![CDATA[ மன உளைச்சலில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/xwk5gvt8/money33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>எப்.கியூ..எல் முதலீட்டு மோசடியில் பணத்தை இழந்த இளைஞர் ராசு என்பவர் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>செல்போன் செயலிகள்</h2><p>மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொது மக்களிடம் பலர், எப்.கியூ..எல். நிறுவனம் என்ற நிதி நிறுவனம் சார்பில் செல்போன் செயலிகள் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக நேரில் வந்து ஆசைவார்த்தை கூறியுள்ளனர். குறிப்பாக பெண்களிடம் பேசினர். இதற்காக ஏஜெண்டுகள் செயல்பட்டனர். </p><p>இந்த செயலிகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">கடன் வாங்கி முதலீடு</a> செய்தனர். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பணத்தை இரட்டிப்பு செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மேலூர், சிவகங்கையில் தொடர்ந்து போலீசாரிடம் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.</p><h2>17 பேர் கைது</h2><p>எப்.கியூ..எல். முதலீட்டு மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>மன உளைச்சலில் </h2><p>இந்தநிலையில், பணத்தை இரட்டிப்பாக்குவதாக நடந்த ஆன்லைன் மோசடியில் பாதிக்கப்பட்ட நத்தம் பகுதியைச் சேர்ந்த ராசு (வயது 26) என்ற இளைஞர்  உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என நினைத்திருந்த நிலையில் மோசடியால் பணம் போச்சே என்ற நிலையில் ராசு சில நாட்களாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.</p><p>மோசடி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இளைஞர் மரணத்துக்கு நீதி வேண்டியும் திண்டுக்கல் - மதுரை சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வாணியம்பாடி அருகே கபடி விளையாடியபோது திடீரென மயங்கி விழுந்த பள்ளி மாணவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-dies-after-suddenly-collapsing-while-playing-kabaddi-near-vaniyambadi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-dies-after-suddenly-collapsing-while-playing-kabaddi-near-vaniyambadi#comments</comments><guid isPermaLink="false">6ad10ebf-852c-4bad-a477-3f7aea0b336c</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:50:16 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:50:16.433Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>kabadi,திருப்பத்தூர்,கபடி,Student death,police enquiry,மாணவன் பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ifcwy9yh/-.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மாணவன் முகேஷ்- நண்பர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவன் திடீரென மரணம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ifcwy9yh/-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்பத்தூர் மாவட்டம்</a> வாணியம்பாடி அருகே பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டியின் போது, விளையாடிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். </p><h2>விளையாட்டு மைதானத்தில் நேர்ந்த விபரீதம்</h2><p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு விளையாடினர். அப்போது, போட்டியில் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்த அரசுப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">பள்ளி மாணவர் முகேஷ்</a> (வயது 17) என்பவர், எதிர்பாராத விதமாக மைதானத்திலேயே திடீரென சுருண்டு விழுந்து மயங்கினார்.</p><h2>ஆஸ்பத்திரியில் ஏமாற்றம்</h2><p>அதிர்ச்சியடைந்த சக மாணவர்களும் ஆசிரியர்களும் உடனடியாக முகேஷை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விளையாடிக்கொண்டிருந்த போதே மாணவனின் மூச்சு நின்றுபோனது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.</p><h2>நண்பர்கள் கதறல்</h2><p>துடிப்போடு தங்களுடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF">கபடி </a>விளையாடிய நண்பன், கண் இமைக்கும் நேரத்தில் பிணமாக கிடப்பதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள், அவரது உடலைப் பார்த்து ஆஸ்பத்திரியில் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களைக் கலங்க செய்தது.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாட்டு மைதானத்தில் மாணவர் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">BREAKING || கபடி விளையாடும் போதே நின்றுபோன மூச்சு... நண்பனின் உடலை பார்த்து கதறி அழும் மாணவர்கள் <a href="https://t.co/iq0ec3Dlhe">https://t.co/iq0ec3Dlhe</a><a href="https://x.com/hashtag/kabaddi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#kabaddi</a> <a href="https://x.com/hashtag/student?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#student</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2094387709326561510?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கோவையில் ரூ.400 கோடியில் டிஜிட்டல் நிதி மையம் ; முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு  தவெக எம்.எல்.ஏ. கனிமொழி  வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-400-crore-digital-finance-hub-in-coimbatore-mla-kanimozhi-welcomes-cms-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-400-crore-digital-finance-hub-in-coimbatore-mla-kanimozhi-welcomes-cms-announcement#comments</comments><guid isPermaLink="false">08ce60a5-b70f-46d6-9dd1-1d1fcddf98a6</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:49:31 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:49:31.815Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,முதல்-அமைச்சர்,அறிவிப்பு,கனிமொழி,வரவேற்பு,Digital,kanimozhi santhosh,tvk mla,தவெக எம்.எல்.ஏ.,டிஜிட்டல் நிதி மையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/1k65cihh/kanimozhi-santhosh.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கனிமொழி சந்தோஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/1k65cihh/kanimozhi-santhosh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோயம்புத்தூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் “கோயம்புத்தூர் டிஜிட்டல் நிதி மையம்” எனும் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D">கனிமொழி சந்தோஷ்</a> வரவேற்பு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>மகிழ்ச்சியளிக்கிறது</h2><p>“கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.</p><h2>டிஜிட்டல் நிதி மையம்</h2><p>உலகத் தரத்திலான அலுவலகங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான வசதிகள், நவீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வக வசதிகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த டிஜிட்டல் நிதி மையம் உருவாக்கப்பட உள்ளது.</p><h2> வேலைவாய்ப்பு</h2><p>இந்த திட்டம் உலகளாவிய முதலீடுகளை கோவைக்கு ஈர்ப்பதற்கும், நிதிநுட்ப துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.</p> <h2>கோயம்புத்தூர்</h2><p>தொழில், தொழில்முனைவு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் ஏற்கனவே முன்னணி நகரமாக திகழும் கோயம்புத்தூர், இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் நிதி மையங்களில் ஒன்றாகவும், சர்வதேச அளவில் கவனம் பெறும் தொழில்நுட்ப நகரமாகவும் மேலும் உயர்வடையும்.</p><h2>மனதார வரவேற்கிறேன்</h2><p>கோவை மக்களின் நீண்டகால வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கான பொருளாதார வாய்ப்புகளை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்புமிக்க திட்டத்தை கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் சார்பிலும், கோவை மக்களின் சார்பிலும் மனதார வரவேற்கிறேன்.</p> <h2>தமிழ்நாடு அரசு</h2><p>கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வரும் தமிழ்நாடு அரசுக்கும், இந்த முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சருக்கும்</a> எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு;  முதல்-அமைச்சருக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் நன்றி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs3-er-eswaran-thanks-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs3-er-eswaran-thanks-chief-minister#comments</comments><guid isPermaLink="false">95d731d5-62ec-4bec-ad6c-a3ebba4fd1b4</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:35:45 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:35:45.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Price,Milk procurement,பால் கொள்முதல் விலை,ஈ.ஆர்.ஈஸ்வரன்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,E.R. Eswaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/lcnuixbe/53.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈ.ஆர்.ஈஸ்வரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/lcnuixbe/53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி லிட்டருக்கு ரூ.44 என அறிவித்ததற்கு விவசாயிகள் சார்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/er-eswaran">ஈ.ஆர்.ஈஸ்வரன்</a> நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இன்று தமிழக சட்டமன்ற பேரவையில் பால் கொள்முதல் விலையை மேலும் மூன்று ரூபாய் உயர்த்தி லிட்டருக்கு ரூ.44 என அறிவித்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தீவனங்களின் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ள சூழலில், பால் உற்பத்தியாளர்களின் சிரமங்களைப் புரிந்து கொண்டு அரசு இந்த அறிவிப்பை அறிவித்தது வரவேற்கத்தக்கது. </p><h2>விவசாயிகள் சார்பாக நன்றி</h2><p>இந்தாண்டு விவசாயத்திற்கு காவிரியில் நீர் திறக்காதது, முழுமையாக பயிர்கடன் தள்ளுபடி செய்யாதது போன்ற பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பால் கொள்முதல் விலை உயர்வு என்பது அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். இந்த அறிவிப்பை அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் அவர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாகவும், விவசாயிகள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.               </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குடிநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் அவதி...!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-suffering-due-to-broken-water-pipe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-suffering-due-to-broken-water-pipe#comments</comments><guid isPermaLink="false">dd6ae982-a936-4f00-b4a1-b9e5a60b3c4a</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:17:47 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:17:47.448Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,People are suffering,water pipe,பொதுமக்கள் அவதி,குடிநீர் குழாயில் உடைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8ha84p9g/4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குடிநீர் குழாய் உடைந்தது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8ha84p9g/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>குடிநீர் குழாய் உடைந்து சாலையில் சூழ்ந்ததால் பொதுமக்களும் வாகன ஓட்டுநர்களும் பெரும் அவதியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேங்கடம் பள்ளிவாசல் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த குடிநீர் குழாய் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் வழியே செல்கிறது. இது கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் பெருகி கொண்டிருக்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் <a href="https://www.dailythanthi.com/topic/பொதுமக்கள்">பொதுமக்களும்</a> வாகனஓட்டிகளும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கின்றனர்.</p><h2>பொதுமக்கள் குற்றச்சாட்டு</h2><p>இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் வேதனையில் ஈடுபட்டு வருகின்றனர். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">குடிநீர் குழாய்</a> உடைந்தது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதனை சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>‘ராகுல் காந்தியின் குரலை எப்.ஐ.ஆரால் நசுக்க முடியாது’ - ஜோதிமணி எம்.பி. ஆவேசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhis-voice-cannot-be-stifled-by-an-fir-mp-jothimani-speaks-vehemently</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhis-voice-cannot-be-stifled-by-an-fir-mp-jothimani-speaks-vehemently#comments</comments><guid isPermaLink="false">d334158b-2a2c-4d34-bd10-053049eafa74</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:15:37 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:15:37.551Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi,ஜோதிமணி,ஜோதிமணி எம்.பி.,Jothimani,jothimani mp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/u85q21lz/jothimani-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜோதிமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/u85q21lz/jothimani-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ராகுல் காந்தியின் சமூக நீதிக்கான சமரசமற்ற குரலை உங்களின் எந்தக் கோழைத்தனமான எப்.ஐ.ஆர்-களாலும் நசுக்கிவிட முடியாது என காங்கிரஸ் எம்.பி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">ஜோதிமணி </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர்.</h2><p>அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அண்ணன் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கும், சமூகப் பாகுபாட்டிற்கும் எதிராகக் குரல் கொடுத்ததற்காக எங்கள் தலைவர் ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்திருப்பது பாஜக-வின் அப்பட்டமான மனுவாத, சாதிய ஆதிக்க மனநிலையின் உச்சக்கட்டம்! வெட்கக்கேடானது!</p><p>இந்த நாட்டின் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் குரலாக நின்று தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது குற்றமா? சாதியப் பாகுபாட்டிற்கு எதிராகப் பேசுபவர்களைக் குற்றவாளிகளாக்குவதும், சாதிய அநீதிகளைக் காப்பாற்றுபவர்களுக்கு அரசு ஆதரவு தருவதும்தான் மோடி அரசின் 'வளர்ச்சி மாடலா'?</p><p>அண்ணல் அம்பேத்கர் தந்த அரசமைப்புச் சட்டத்தையும், சமத்துவக் கோட்பாடுகளையும் காலில் போட்டு மிதிக்கும் இந்த மனுவாதக் கூட்டத்தைப் பார்த்து நான் கேட்க விரும்புவது:</p><p>ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக்காக நீங்கள் எப்போதாவது ஒரு துரும்பையாவது அசைத்தது உண்டா?</p><p>சமத்துவத்திற்காகப் போராடிய ஒரு வரலாற்றுத் தியாகத்தையாவது உங்களால் காட்ட முடியுமா? முடியாது!</p><h2>நாங்கள் ஒன்றும் அடிமைகள் அல்ல</h2><p>ஏனென்றால் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்துவதே உங்கள் சித்தாந்தம்.</p><p>பாஜக அரசுக்கு நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்கிறோம், எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், மிரட்டல்களுக்குப் பயந்து பின்வாங்குவதற்கு நாங்கள் ஒன்றும் உங்கள் அடிமைகள் அல்ல;</p><p>பெரியாரும் அம்பேத்கரும் காந்தியும் விதைத்த சமத்துவக் களத்தில் நிற்பவர்கள்!</p><p>ராகுல் காந்தியின் சமூக நீதிக்கான சமரசமற்ற குரலை உங்களின் எந்தக் கோழைத்தனமான எப்.ஐ.ஆர்.-களாலும் நசுக்கிவிட முடியாது. சமூக நீதி வெல்லும் வரை எங்கள் போராட்டம் தொடரும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டப்பேரவை கண்ணியத்தை காக்கும் வகையில் உறுப்பினர்கள் பேச வேண்டும் - ஜேசிடி பிரபாகர் அறிவுரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/members-should-speak-in-a-manner-that-preserves-the-dignity-of-the-legislative-assembly-jct-prabhakar-advises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/members-should-speak-in-a-manner-that-preserves-the-dignity-of-the-legislative-assembly-jct-prabhakar-advises#comments</comments><guid isPermaLink="false">74e47f40-73b7-4a97-a447-1d8e68967496</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:13:43 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:13:43.681Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Assembly,members,உறுப்பினர்கள்,சட்டப்பேரவை,ஜேசிடி பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/qz08oqx0/speaker.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜேசிடி பிரபாகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/qz08oqx0/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சட்டப்பேரவையில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் அளவுக்கு இல்லாமல், அவையின் கண்ணியத்தையும் மாண்பையும் காக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தினார். இது குறித்து சட்டப்பேரவையில் அவர் கூறியதாவது:-</p><p>அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கடந்த வாரம் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இந்த நிலையில், திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாத இளைஞர்கள் சிலர் தன்னை சந்தித்ததாக சபாநாயகர் தெரிவித்தார். அரசியல் குறித்து அறிந்துகொண்டு, அதில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த இளைஞர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.</p><h2>தவிர்க்க வேண்டும்...</h2><p>அப்போது, சட்டப்பேரவையில் இருந்து நீக்கப்படும் அளவுக்கு ஏன் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும், உறுப்பினர்கள் பேசும்போதே அவைக் குறிப்பில் இடம்பெறாத வகையிலான கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த இளைஞர்கள் தன்னிடம் கூறியதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.</p><p>சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர்கள் தங்களை கட்டுப்படுத்தி, முறையாகவும் நெறிமுறையுடனும் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். அவையின் கண்ணியம், உறுப்பினர்களின் கௌரவம் மற்றும் வாக்காளர்களின் மதிப்பு ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் பேச்சு இருக்க வேண்டும்.</p><h2>விரிவான முடிவு</h2><p>அவ்வாறு செயல்பட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது. அதையும் மீறி அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பாடுகள் இருந்தால், அவற்றை வெளிக்கொண்டு வருவதில் தவறில்லை என மக்கள் கருதுகின்றனர். எனவே, இந்த விவகாரம் குறித்து அனைத்து உறுப்பினர்களிடமும் ஆலோசனை நடத்தி விரிவான முடிவு எடுக்கப்படும்.</p><p>இவ்வாறு சபாநாயகர் <a href="https://www.dailythanthi.com/topic/jcd-prabhakar">ஜேசிடி பிரபாகர்</a> தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லைச் சுமக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதிக்குமா தமிழக அரசு? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-tamil-nadu-government-value-the-labor-of-workers-who-transport-paddy-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-tamil-nadu-government-value-the-labor-of-workers-who-transport-paddy-velmurugan#comments</comments><guid isPermaLink="false">997ff84f-7177-4874-8a01-0d2946fc4adc</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:02:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:02:34.271Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/0yr5bzsy/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/0yr5bzsy/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெல்லைச் சுமக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதிக்குமா தமிழக அரசு? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உழைப்புக்கு உரிய கூலி</h2><p>திருவாரூர் மாவட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளைக் கையாளும் கடினமான பணியைத் தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் உடல் உழைப்புக்கு உரிய கூலி கிடைக்க வேண்டும் என்பது முற்றிலும் நியாயமான கோரிக்கையாகும்.</p><p>இவர்கள் சுமப்பது வெறும் நெல் மூட்டைகள் மட்டுமல்ல. விவசாயியின் பல மாத உழைப்பின் பயனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் முக்கியப் பொறுப்பையும் சுமக்கின்றனர்.</p><p>நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது. அந்த அரிசிதான் மக்களின் அன்றாட உணவின் அடிப்படை. எனவே, நெல் கொள்முதல் சங்கிலியில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியது.</p><h2>விவசாயிகள் பரிதவிப்பு</h2><p>தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி ஒரு வாரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அறுவடை செய்த நெல்லை உடனுக்குடன் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>எனவே, சுமை தூக்கும் தொழிலாளர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். நெல் கொள்முதல் பணிகளைத் தடையின்றி நடத்தி, விவசாயிகளின் விளைபொருள்கள் மழையிலோ, வெயிலிலோ வீணாகாமல் பாதுகாக்கத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக அரசு</a> போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சவுமியா அன்புமணியின் பேச்சுக்கு துணை சபாநாயகர்  பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-speaker-praises-soumya-anbumanis-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-speaker-praises-soumya-anbumanis-speech#comments</comments><guid isPermaLink="false">a60b6911-b18c-4bd7-a566-fdfea7c2ce70</guid><pubDate>Mon, 31 Aug 2026 11:56:25 +0000</pubDate><atom:updated>2026-08-31T11:56:25.945Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சவுமியா அன்புமணி,Deputy Speaker,Soumya Anbumani,துணை சபாநாயகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ya7hn1zp/52.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சவுமியா அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ya7hn1zp/52.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சவுமியா அன்புமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என துணை சபாநாயகர் ரவிசங்கர் தெரிவித்தார்.</p><p>சட்டப்பேரவையில் மதுவிலக்கு தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/soumya-anbumani">சவுமியா அன்புமணி</a> எம்.எல்.ஏ. பேசுகையில், குடும்பங்களின் பொருளாதாரத்தை டாஸ்மாக் மதுபான விற்பனை பாதிப்பதாக குற்றம் சாட்டி அவர் கூறியதாவது:-</p><p>பெண்களின் சுதந்திரத்தையும், குடும்பங்களின் பொருளாதார நிலையையும் டாஸ்மாக் பாதிக்கிறது. 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் ரூ.789.95 கோடிக்கும், 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரூ.725.56 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.</p><p>குழந்தைகளின் கல்வி, மகள்களின் திருமணம், வீடு கட்டுதல் போன்றவற்றுக்காக குடும்பங்கள் சேமிக்க வேண்டிய பணம் மதுபானத்துக்காக செலவிடப்படுகிறது. எனவே, மதுவிலக்கை குறைந்தபட்சம் கொள்கையாகவாவது அரசு அறிவிக்க வேண்டும்.</p><h2>மிகப்பெரிய சாதனை</h2><p>மேலும், மதுவிலக்குக்காக பா.ம.க. மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் மூலம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தவெக அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே 717 மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது மிகப்பெரிய சாதனை என்றும் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.</p><h2>துணைசபாநாயகர் பாராட்டு</h2><p>இதைத்தொடர்ந்து பேசிய பேரவை துணைசபாநாயகர் ரவிசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சவுமியா அன்புமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அவர்  சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக பேசுவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் கூறுகையில், மதுவிலக்கு தொடர்பாக கையெழுத்திட கடந்த கால அரசுகள் தயக்கம் காட்டின. தவெக அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள்தான் கடந்துள்ளன. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், அது தவெக அரசால்தான் சாத்தியமாகும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>புதிய டிசைனில் வேட்டி, சேலை வழங்க முடிவு - அமைச்சர் விஜய் பாலாஜி விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-to-provide-dhoti-and-saree-in-new-design-minister-vijay-balaji-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-to-provide-dhoti-and-saree-in-new-design-minister-vijay-balaji-explains#comments</comments><guid isPermaLink="false">4ad92bdd-ac87-4c73-8679-9d4ec8484f3f</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:36:05 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:36:05.591Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Saree,இலவச வேட்டி சேலை,Dhoti,Vijay Balaji,அமைச்சர் விஜய் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8uafal4q/minister-vijay-balaji.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஜய் பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8uafal4q/minister-vijay-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>தமிழ்நாட்டில் 4-ல் 3 பங்கு மக்கள் 4 முழ வேட்டியையே விரும்புவதால், 2027-ம் ஆண்டு பொங்கல் திருநாளில் 4 முழ வேட்டி வழங்கப்படும் என்று கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.</p><p>சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின், பொங்கல் திருநாளில் வழங்கப்படும் விலையில்லா வேட்டியின் அளவை 8 முழத்தில் இருந்து 4 முழமாக குறைத்திருப்பதால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">அமைச்சர் விஜய் பாலாஜி </a>கூறியதாவது:-</p><p>தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில், பல ஆண்டுகளாக ஒரே ரகத்தில் வேட்டி, சேலைகள் வழங்கப்படுவதாகவும், இந்த முறை புதிய வடிவமைப்பில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன.</p><h2>4 முழ வேட்டி, ஜரிகை தைத்த சேலை</h2><p>இதையடுத்து முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் துறைச் செயலாளர்கள் மற்றும் சரக அதிகாரிகள் மூலம் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் பெரும்பாலானோர் வெளுக்கப்படாத 8 முழ வேட்டிக்கு பதிலாக வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டியே விருப்பம் என தெரிவித்தனர். அதன் அடிப்படையில்தான் 4 முழ வேட்டியும், ஜரிகை தைத்த சேலையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>மேலும், திருவள்ளூர் சரகத்தில் பெடல் தறிகளில் தொடர் வேலைவாய்ப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 5 லட்சத்து 25 ஆயிரம் சேலைகளையும் அரசு கொள்முதல் செய்யும். நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக அரசு வழங்கிய மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலைகளும் முழுமையாக கொள்முதல் செய்யப்படும்.</p><p>இவ்வாறு அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகள் எதிர்க்கும் வெளிமாநில மக்காச்சோள விதைகளை திணிக்கக்கூடாது - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-oppose-import-of-foreign-maize-seeds-tamil-nadu-farmers-association</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-oppose-import-of-foreign-maize-seeds-tamil-nadu-farmers-association#comments</comments><guid isPermaLink="false">e3eeec0d-7120-46ee-b54f-a2c03c25fc45</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:15:30 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:15:30.180Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,Tamil Nadu Farmers Association,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,maize,மக்காச்சோளம்,விதைகள்,seeds,Foreign,வெளிமாநிலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/9izks8wg/14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/9izks8wg/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>விவசாயிகள் எதிர்த்தும், அண்டை மாநில மக்காச்சோள விதைகளை திணிப்பதை தமிழ்நாடு வேளாண் துறை நிறுத்திட வேண்டும்.. விதைகள், விவசாயிகளின் உரிமை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">பி.எஸ்.மாசிலாமணி </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வேளாண் துறையால் திணிக்கப்படும், விவசாயிகள் விரும்பாத மக்காச்சோள விதைகளால் மகசூல் பேரிழப்பு. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமாகி வருகிறது. மக்காச்சோளம் என்பது கோழி உள்ளிட்ட கால்நடைகள் தீவனத்திற்கும், எத்தனால் தயாரிப்பிற்கும் பெருமளவு தேவைப்படுகிறது. எதிர் வரும் காலங்களில் இதன் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறையும், மகசூலை உயர்த்திட விவசாயிகளும் விரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.</p><h2>மாநில அளவிலான ஒப்பந்தம்</h2><p>இதை பயன்படுத்தி வேளாண் உயர் அலுவலர்கள், வீரிய ரகம், உயர் விளைச்சல் எனக்கூறி கர்நாடகம் மற்றும் ஆந்திராவிலிருந்து, அட்லாண்டா -752 எனும் வெளி மாநில புதிய மக்காச்சோள விதைகளை கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவிலான ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரே நபர் மூலம் தமிழ்நாட்டில் வேளாண் துறையின் மூலம் விற்பனை செய்யப்ப்பட்டு வருகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் மூலம் இவ்விதைகளை  கிலோ 100 ரூபாய் மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>விவசாயிகள் ஏமாற்றம்</h2><p>உயர்விளைச்சல், என வேளாண்துறை பிரசாரம் செய்த நிலையில் விவசாயிகள் அனைவரும் இந்த விதைகளை வாங்கி விதைத்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை என்பதுடன் கடந்த காலத்தில் விதைக்கப்பட்ட உள்ளூர் ரக விதைகளின் மகசூலில் 50 சதம் மட்டுமே கிடைத்த சூழலில் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தொடர்ந்து ஏற்படும் இழப்பால் பல விவசாயிகள், அரசு வழங்கும் மானியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை தனியார் கடைகளிடம் வாங்கி விதைக்கலாம் என மாறிவருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து வேளாண்துறை வெளி மாநில விதைகளை வாங்கிட விவசாயிகளை நிர்பந்தித்து வருகிறது. ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை தேவை. 4 கிலோவுக்கு ரூ.400 அரசு மானியம் போக, ரூ.1600 உடன் விவசாயிகள் செலுத்தி இவ்விதைகளை வாங்கிட வேண்டும்.  </p><h2>குறைவான மகசூல்</h2><p>தமிழ்நாட்டில் பெரம்பலூர், சேலம், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. மாநிலம் அளவில் சுமார் 5  லட்சம் ஏக்கர் பாசனம் மற்றும் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. இதனுடைய தேவை அதிகரிப்பில் சாகுபடி பரப்பு கூடுதலாகி வருகிறது. தமிழ்நாடு அளவில் கடந்த ஆட்சியிலும், நடப்பு ஆட்சியிலும் ஹில் என்ற ஒரே ஒப்பந்தகாரருக்கு டெண்டர் கொடுத்து, ஒவ்வொரு ஆண்டும் 1000 மெட்ரிக் டன்னுக்கும் மேல் விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது. 2023-ல் இவ்விதைகளை வாங்கி விதைத்ததில் சோளக்கதிர்கள் வரவே இல்லை. 2024-ஆம் ஆண்டு விவசாயிகள் வாங்க மறுக்கவே, இது வேறு ரகம் எனக்கூறி விவசாயிகளின்  தலையில் கட்டப்பட்டது. அது மிகக் குறைவான மகசூல் கொடுத்துள்ளது. முளைப்பு திறனும் 20 சதம் இல்லை. 2025-ம் ஆண்டு இதே எதிர்ப்பு இருந்தும் தற்போதும் இது வேளாண் டெப்போவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதர ஊட்டச்சத்து பொருட்கள் வேண்டுமென்றால் இதை வாங்கியாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்க படுகிறார்கள். இதை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.</p><h2>எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்</h2><p>தனியார் விதை விற்பனை கடைகளில் ஒரு ஏக்கருக்கான விதைகள் ரூ. 3000. கூடுதலாக இருந்தாலும் நாங்கள் அதை வாங்கி விதைக்கிறோம். ஏனெனில் இது ஒரு ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டைகள் மகசூல் கிடைக்கும். வேளாண் துறை வழங்கும் விதைகள் மூலம் 20 மூட்டைகள் கூட கிடைக்காது, என விவசாயிகள் கூறுகின்றனர்.  இந்த நிலையில் நடப்பு பருவத்திற்கான விதைகளை கோவை மாவட்டத்தில் இருந்து லாரிகளில்  சேலம் மாவட்ட கிடங்குகளில் இறக்கி வைக்க வந்தபோது, பெத்தநாயக்கன் பாளையம், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய வட்டார கிடங்குகளில் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.        </p><h2>தரமற்றவிதைகள்</h2><p>இந்தநிலையில், விவசாயிகள் தனியார் விற்பனை கடைகளின் விதைகளை வாங்கி விதைக்கிறோம், வேளாண் துறையினர் பார்வையிட்ட பின், கிலோ ஒன்றுக்கு  ரூ.100 அரசு பின்னேற்பு மானியமாக கொடுத்தால் போதும் என்று விவசாயிகள் வற்புறுத்தியும் வேளாண் துறை மறுத்து, வேளாண் துறை கொடுக்கும் விதைகளை வாங்கினால் தான் மானியம் என்று வற்புறுத்துவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். டெண்டர் எடுத்தவரின் பங்கீட்டை ஈடு செய்ய, தரமற்றவிதைகள், முளைப்பு திறன் குறைந்த விதைகளை  விவசாயிகள்  பலர் வாங்காததால் கடந்த ஆண்டு ஒரு பகுதி விதை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. விற்பனை இல்லாமல் போனால் வேளாண்துறையின் கள அலுவலர்கள் தான் இதற்கான தொகையை செலுத்த வேண்டும். தமிழகத்தில் சுமார் 1000 மெ.டன் மேல் ஐந்து ரக விதைகள் ஒவ்வொரு ஆண்டும் இப்படி வருகிறது.</p><h2>அவசர நடவடிக்கை</h2><p>தமிழகத்தின் மண், நீர், மற்றும் சுற்றுச்சூழலுக்கு  இவ்விதைகள் பொருத்தமில்லை. பராமரிப்பு செலவு கூடுதல் ஆகிறது. மண் விரும்பும் விதையைத் தான் விவசாயிகள் விரும்புவர், விநியோகஸ்தரின் விருப்பத்திற்கு வேளாண் துறை செல்லலாமா...?விதைகளை தேர்வு செய்யும் உரிமை, சுதந்திரம் விவசாயிகளுக்கே... எதிர்வினையாற்றும் வேளாண் துறைக்கு அல்ல..!!! வேளாண்துறை அமைச்சர் அவர்கள் உடன் தலையிட்டு, விவசாயிகள் விரும்பும் மக்காச்சோள உள்ளூர் ரக விதைகளை, மானியத்தை உயர்த்தி தேவையான அளவு வழங்கிட அவசர நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரம் தேவை! -  சவுமியா அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-need-freedom-of-transport-soumya-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-need-freedom-of-transport-soumya-anbumani#comments</comments><guid isPermaLink="false">dd20c3c7-87b6-46d4-8e1e-e1a2e16ac904</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:48:20.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து,பெண்கள்,சுதந்திரம்,freedom,சவுமியா அன்புமணி,Soumya Anbumani,woman bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/l31td27b/51.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சவுமியா அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/l31td27b/51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை. சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.</p><h2>போக்குவரத்து சுதந்திரம்</h2><p>இந்நிலையில் சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. <a href="https://www.dailythanthi.com/topic/soumya-anbumani">சவுமியா அன்புமணி</a> பேசுகையில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், கிராமப்புறங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மினி பேருந்து சேவைகளையும் அதிகரித்து, பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரத்தை வழங்க வேண்டும்.</p><h2>அரசின் கடமை</h2><p>பெண்கள் வேலைக்குச் செல்லவும், சொந்தமாகத் தொழில் தொடங்கவும் தடையற்ற, பாதுகாப்பான போக்குவரத்து வசதி முதன்மைத் தேவையாகும். உயர்கல்வி கற்க விரும்பும் மாணவிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் படிப்பைப் பாதியில் நிறுத்தும் நிலை மாற வேண்டும். பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அரசின் கடமையாகும். </p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உஸ்பெகிஸ்தான் இதயங்களில் திருக்குறளை விதைத்த பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heartfelt-thanks-to-the-prime-minister-for-sowing-the-seeds-of-the-thirukkural-in-the-hearts-of-the-people-of-uzbekistan-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heartfelt-thanks-to-the-prime-minister-for-sowing-the-seeds-of-the-thirukkural-in-the-hearts-of-the-people-of-uzbekistan-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">37688f8f-ac29-4e72-a577-d05b7d73eb3b</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:42:03 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:42:03.982Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,பிரதமர் மோடி,PM Modi,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,திருக்குறள்,Thirukkural,உஸ்பெகிஸ்தான்,Uzbekistan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/j3w6arzj/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/j3w6arzj/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உஸ்பெகிஸ்தான் இதயங்களில் திருக்குறளை விதைத்த பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி</h2><p>கடல் கடந்து செல்லும் தமிழின் நறுமணமாய், திசை எட்டும் பரவும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழை, உஸ்பெகிஸ்தான் மண்ணில் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.</p><p>தாஷ்கண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “திருக்குறள் இன்றும் வாழ்வியலின் அனைத்துத் துறைகளுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்வதாகப் பேசிய பிரதமர் மோடி, ஆன்மிகம், தத்துவம் மற்றும் நடைமுறை அறிவு பொதிந்த திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்க விடுத்த வேண்டுகோள், தமிழின் ஞானச்செறிவை மத்திய ஆசிய நாடுகளின் இதயங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும்.</p><h2>நெஞ்சார்ந்த நன்றிகள்</h2><p>காசி தமிழ்ச் சங்கமம் முதல் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது வரை, தமிழுக்கு புகழ் சேர்த்து வரும் பிரதமரின் செயல் போற்றுதலுக்குரியது. ஏற்கனவே பல இந்திய மற்றும் உலக மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளதோடு, வள்ளுவத்தின் வாய்மையை வையகமெங்கும் கொண்டு செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முயற்சிகளுக்குத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக மக்கள்</a> சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அம்பேத்கரை தன்னுடைய  தலைவர் என்று போற்றியவர் பெரியார் - அமைச்சர் வன்னியரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyar-hailed-ambedkar-as-his-leader-minister-vanniarasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyar-hailed-ambedkar-as-his-leader-minister-vanniarasu#comments</comments><guid isPermaLink="false">b3fe851a-f2f2-4209-a68b-b9bcea08ee15</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:27:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:27:55.368Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>leader,தலைவர்,பெரியார்,Periyar,அம்பேத்கர்,அமைச்சர் வன்னியரசு,minister vanni arasu</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n363v5er/vanni-arasu.gif" width="750"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வன்னியரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ அம்பேத்கரை தன்னுடைய  தலைவர் என்று போற்றியவர் பெரியார் - அமைச்சர் வன்னியரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n363v5er/vanni-arasu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அம்பேத்கரை தன்னுடைய  தலைவர் என்று போற்றியவர் பெரியார் என்று வன்னியரசு தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக சமூக நீதித்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னியரசு </a>பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>நன்றி</h2><p> சட்டப்பேரவையில் கடந்த 28.8.2026 அன்று சமூக நீதித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு விடையளித்து நான் உரையாற்றியபோது, திண்டிவனம் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகளின் வெற்றிக்கு பாடாற்றிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> உள்ளிட்ட தோழமை கட்சியினருக்கு நன்றி கூறினேன்.</p><h2>அரசியல் ஆசான் திருமாவளவன்</h2><p>அப்போது, "நாங்கள் மட்டுமே நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறோம்; திமுக தரப்பிலிருந்து நன்றி சொல்லவே இல்லை" என்று சொன்னேன். அது ஒரு விளையாட்டாக சொன்னது தான்.  ஆனால், எதிர்க்கட்சி தலைவர்  உதயநிதி ஸ்டாலின் சட்டென எழுந்து பேசினார். "எங்களுடைய தலைவருக்கும் திருமாவளவனுக்கும் இருப்பது தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; அது கொள்கை கூட்டணி. என்னுடைய அரசியல் ஆசான் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன்</a> என முன்பும் சொன்னேன்.</p><h2>உதயநிதிக்கு நன்றி</h2><p>இப்போதும் சொல்கிறேன்” -என்றார். அப்படி அவர் மனம் திறந்து பேசியதற்கு உடனே நன்றி கூறினேன். இப்போதும் லட்சக்கணக்கான சிறுத்தைகளின் சார்பில் உதயநிதிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.</p><h2>கரிசனம் வந்துவிட்டது?..</h2><p>ஆனால், பெரியாரை ஆசான் என சொல்லும் உதயநிதி, திருமாவளவனை ஆசான் என சொல்வதா? என சிலர் நஞ்சை கக்குகின்றனர். பெரியாருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சனாதனக்கும்பலோடு கொஞ்சி குலவியவர்களுக்கு  திடீரென பெரியார் மீது கரிசனம் வந்துவிட்டது?..</p> <h2> தந்தை பெரியார்</h2><p>புரட்சியாளர் அம்பேத்கரை தன்னுடைய  தலைவர் என்று போற்றியவர் தந்தை பெரியார். அவரை போல இன்று  உதயநிதி எழுச்சித்தமிழரை தனது அரசியல் ஆசான் என வெளிப்படையாக பேசும் பக்குவத்தையும் துணிச்சலையும் பெற்றுள்ளார். பெரியாரை கன்னடர் என்று திராவிட இயக்கத்துக்கு எதிராக வெறுப்பைக்கக்கும் கும்பலோடு கைகோர்த்து கொண்டு பெரியார் மீது கரிசனம் காட்டுவது வியப்பாக உள்ளது.</p> <h2>கொள்கை உறவு </h2><p>விசிக இன்று தவெகவுடன் இணைந்து நின்றாலும் திராவிட இயக்கங்களுடன் உள்ள கொள்கை உறவு மாறாது என்பதை தான் உதயநிதிஸ்டாலின் கூற்று தெளிவுபடுத்துகிறது. இதனை ஏற்கவும் சகிக்கவும் இயலாதவர்கள் பொறுமை இழந்து புலம்புகின்றனர். இந்நிலையில் அய்யன் திருவள்ளுவர் சொல்லுவது தான் நினைவுக்கு வருகிறது.</p><p>அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது. (அழுக்காறாமை)</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக புதிய திட்டங்கள்; சட்டசபையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-schemes-for-the-welfare-of-the-differently-abled-minister-jagatheeswari-announces-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-schemes-for-the-welfare-of-the-differently-abled-minister-jagatheeswari-announces-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">c7c8c8e2-acd8-4d4c-aadf-d41762e27a53</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:22:58 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:22:58.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Assembly,மாற்றுத்திறனாளிகள்,new schemes,புதிய திட்டங்கள்,differently-abled,அமைச்சர் ஜெகதீஸ்வரி,Minister Jagatheeswari</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ori56s3m/50.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ori56s3m/50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 புதிய அறிவிப்புகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">அமைச்சர் ஜெகதீஸ்வரி</a> வெளியிட்டார்.</p><p>அதன்படி, உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><h2>மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள்</h2><p>மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.82 கோடியும், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.77 கோடியும் ஒதுக்கப்படும்.</p><p>மேலும், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 இல்லங்கள் ரூ.49 லட்சம் செலவில் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக அறிவுசார், செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுகளுக்கு ஏற்ப மொத்தம் 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் அமைக்க ரூ.97 லட்சம் ஒதுக்கப்படும்.</p><p>கடலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் என 100 பேர் பயன்பெறும் வகையில் 1.5 ஏக்கர் பரப்பளவில் 2 இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.</p><h2>இலவச பேருந்து பயணம்</h2><p>தனித்து பயணம் செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகள், UDID அட்டையை பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் மாநகர, நகர தாழ்தள, விரைவு, டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும்.</p><p>செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மெய்நிகர் கற்றல் முறையை அறிமுகப்படுத்த ரூ.64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.</p><h2>உதவித்தொகை</h2><p>மேலும், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விக்கு உதவும் வாசிப்பாளர்களுக்கான உதவித்தொகையும் 2026-27-ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட உள்ளது.</p><p>இவ்வாறு மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, பயணம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 9 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கணவன், மனைவியை கட்டிப் போட்டு 40 பவுன் நகை, ரூ.40 லட்சம் பணம் கொள்ளை.. முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/namakkal-masked-robbers-looted-40-sovereigns-gold-and-40-lakh-cash-after-tied-up-gusband-and-wife</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/namakkal-masked-robbers-looted-40-sovereigns-gold-and-40-lakh-cash-after-tied-up-gusband-and-wife#comments</comments><guid isPermaLink="false">97b86ffd-a1e7-4307-b5a1-a1c0f59469a0</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:10:11 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:10:11.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,நகை திருட்டு,கொள்ளை,முகமூடி கொள்ளையர்கள்,Robbery,Jewellery theft</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/elkr1ghy/house.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கொள்ளை நடந்த வீடு]]></media:title><media:description type="html"><![CDATA[ நாமக்கல் மாவட்டம் பிலிக்கல் பாளையம் அருகே முகமூடி கொள்ளையர்கள் 40 பவுன் நகை, 40 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/elkr1ghy/house.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல், </p><p>நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே வீடு புகுந்து கணவன், மனைவியை கட்டிப் போட்டு 40 பவுன் நகை, 40 லட்சம் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே சினிமா கொட்டகை மேடு பகுதியில் இருந்து சின்னமருதூர் செல்லும் சாலையின் அருகே குடியிருந்து வருபவர் வைரவன் (60). இவர் கடந்த 20 வருடங்களாக வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி(55). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. வீட்டில் கணவன்-மனைவி மட்டும் வசித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், வைரவனின் வீட்டு காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். முதலில் மேல் மாடியில் உள்ள அறைகளை பார்த்து விட்டு மேலே ஒன்றும் இல்லாததால் கீழ்பகுதியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து உள்ளனர். </p><h2>துணிகர கொள்ளை</h2><p>அப்போது வைரவன் மனைவி சுமதி எழுந்து வந்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">முகமூடி கொள்ளையர்கள்</a>, கணவன், மனைவி இருவரையும் கட்டிப் போட்டனர். பின்னர் பணம், நகை எங்கே உள்ளது? என்று கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு பதில் கூறாதால் வைரவனை கத்தியால் கிழித்துள்ளனர். அதன்பின் இருவரையும் நன்றாக கட்டி வைத்துவிட்டு வீட்டில் உள்ள பீரோவை உடைத்து பீரோவுக்குள் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் பணம் ஆகியவற்றை <a href="https://www.dailythanthi.com/topic/robbery">திருடிக் கொண்டு</a> மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.</p><p>இது குறித்து உடனடியாக வைரவன் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன், பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். </p><h2>விசாரணை தீவிரம்</h2><p>பின்னர் இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஸ் அசோக் மற்றும் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துணைப் போலீஸ் சூப்பிரண்டு வெண்ணிலா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து இரு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். </p><p>அதனை தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வீட்டில் இருந்து புறப்பட்டு சின்ன மருதூர் செல்லும் சாலைக்கு ஓடிச் சென்று, அந்த வழியில் சிறிது தூரம் ஓடிச் சென்றது. கைரேகை நிபுணர்கள், வீட்டின் பல்வேறு இடங்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். </p><p>இந்த <a href="https://www.dailythanthi.com/topic/robbery">கொள்ளை சம்பவம்</a> குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் நள்ளிரவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது குற்றமல்ல; தீண்டாமையைப் பாதுகாப்பதே குற்றம் - செல்வப்பெருந்தகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaking-out-against-untouchability-is-not-a-crime-upholding-untouchability-is-the-crime-selvaperunthagai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaking-out-against-untouchability-is-not-a-crime-upholding-untouchability-is-the-crime-selvaperunthagai#comments</comments><guid isPermaLink="false">b0afdcc6-e0f4-4dbb-8493-2b8a99392352</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:04:40 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:04:40.848Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>செல்வப்பெருந்தகை,காங்கிரஸ்,Congress,Selvaperunthagai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/zwyumxbp/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செல்வப்பெருந்தகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/zwyumxbp/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ராகுல்காந்தி மீது எப்.ஐ.ஆர்.</h2><p>காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் தீண்டாமை மற்றும் அவமதிப்பு குறித்து குரல் எழுப்பியதற்காக அவர் மீது எப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்பதே குற்றம் என்ற நிலையை பாஜக அரசு உருவாக்க முயல்வது, அதன் எதேச்சதிகாரப் போக்கையும், பழிவாங்கும் அரசியலையும் வெளிப்படுத்துகிறது.</p><p>நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் தீண்டாமையைத் தெளிவாக ஒழித்திருக்கிறது. சாதியின் பெயரால் ஒரு மனிதர் அவமதிக்கப்படுவதையோ, பாகுபாடு காட்டப்படுவதையோ இந்திய அரசியலமைப்பு ஒருபோதும் அனுமதிப்பதில்லை. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய சமத்துவம், சமூகநீதி, மனித கண்ணியம் ஆகிய கொள்கைகளே இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.</p><h2>எந்த வகையான ஜனநாயகம்?</h2><p>அத்தகைய சமூகநீதிக் கொள்கைகளுக்காகப் போராடிய வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. தீண்டாமையை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஒழித்ததும், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க SC/ST (Prevention of Atrocities) Act போன்ற சட்டப் பாதுகாப்புகளை உருவாக்கியதும் சமூகநீதிக்கான காங்கிரஸ் கட்சியின் உறுதியான பங்களிப்புகளாகும்.</p><p>ஆனால், இன்று தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாட்டுக்கு எதிராக ஒருவர் குரல் எழுப்பும்போது, அந்தக் குரலை ஒடுக்க எப்.ஐ.ஆர்.-ஐ ஆயுதமாகப் பயன்படுத்துவது எந்த வகையான ஜனநாயகம்?</p><p>பாதிக்கப்பட்டவருக்காகக் குரல் கொடுப்பவரையே குற்றவாளியாக்குவது என்பது நீதியின் அடிப்படைக் கொள்கைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது. பாஜக அரசு தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தவும், அவர்களின் குரலை ஒடுக்கவும் முயல்வதை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.</p><h2>காங்கிரஸ் தொடர்ந்து போராடும்</h2><p>ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பதிலளிக்க வேண்டிய பாஜக, எப்.ஐ.ஆர். மற்றும் அதிகார அமைப்புகளைப் பயன்படுத்தி அவரை மிரட்ட முயல்வது கண்டிக்கத்தக்கது.</p><p>தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது குற்றமல்ல; தீண்டாமையைப் பாதுகாப்பதே குற்றம்.</p><p>சாதிய பாகுபாடு மற்றும் சமூக அநீதிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், ராகுல்காந்திக்கும் எதிராக எடுக்கப்படும் எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கைக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/congress">காங்கிரஸ் </a>கட்சி அஞ்சாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருக்குறளின் பெருமையை உலகமெங்கும் பறைசாற்றும் பிரதமருக்கு வானதி சீனிவாசன் நன்றி...!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-thanks-the-prime-minister-for-spreading-the-glory-of-thirukkural-all-over-the-world</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-thanks-the-prime-minister-for-spreading-the-glory-of-thirukkural-all-over-the-world#comments</comments><guid isPermaLink="false">4e29b7af-db42-4e08-b0af-ce285ff16705</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:49:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:49:20.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,திருக்குறள்,Thirukkural,மோடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/29vr0c66/49.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/29vr0c66/49.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி  அவர்கள் அங்குள்ள தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தின் ஆண்டுவிழாவில் பங்கேற்று உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையைக் குறிப்பிட்டுப் பேசியதுடன் அதனை உஸ்பெக் மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் ஆலோசனை விடுத்தது, திருக்குறளின் பெருமையை உலகமெங்கும் பறைசாற்றும் பிரதமரின் முயற்சி பெருமை அளிக்கும் நிகழ்வாகும்.</p><h2>உலகப் பொதுமறைக்கு மணிமகுடம்</h2><p>பிரதமர் அவர்கள் திருக்குறள் குறித்து பேசும் போது, “தமிழ் நூல்களில் உன்னதப் படைப்பான திருக்குறளை மொழிமாற்றம் செய்து படிப்பதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையேயான கலாசார உறவுகள் மற்றும், பரஸ்பர புரிதல்கள் மேலும் வலுவடையும் என்பதையும், மேலும் திருக்குறளின் ஆழ்ந்த கருத்துக்களுடன் உஸ்பெக் மக்கள் எளிதாகத் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்” என்றும் கூறி உலகப் பொதுமறைக்கு மணிமகுடம் சூட்டியிருக்கிறார்.</p><p>தான் செல்லும் இடங்களிளெல்லாம் தமிழ் மொழியின் பெருமை, தமிழ் அறிஞர்களின் பெருமை, தமிழர்களின் வரலாறு உள்ளிட்டவற்றை தொடர்ந்து பறைசாற்றி வரும் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம்.. நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-of-seating-in-the-assembly-is-merely-part-of-administrative-procedure-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-of-seating-in-the-assembly-is-merely-part-of-administrative-procedure-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">e25564ce-5fbf-4f91-b433-6ba7c864eff2</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:41:11 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:41:11.636Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/2ecjs7j9/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/2ecjs7j9/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இருக்கை மாற்றம்</h2><p>சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாக, இருக்கை மாற்றப்பட்டுள்ளது.</p><p>மேலும், கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் அமர்வை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்களும் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர்.</p><h2>வரவேற்கத்தக்கது</h2><p>பேரவைத் தலைவர் இந்த மாற்றத்தை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு வழக்கமான இருக்கை மாற்றத்தை வைத்து, இல்லாத அரசியல் அர்த்தங்களை கற்பனை செய்து பரப்ப வேண்டாம்.</p><p>செய்தியை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செய்தியாகவே </a>பாருங்கள்;</p><p>அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வருவாய் ஆய்வாளரை கண்டுபிடித்து தரக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகள்கள் தர்ணா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-and-daughters-stage-a-sit-in-protest-at-the-villupuram-collectors-office-demanding-that-the-revenue-inspector-be-found</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-and-daughters-stage-a-sit-in-protest-at-the-villupuram-collectors-office-demanding-that-the-revenue-inspector-be-found#comments</comments><guid isPermaLink="false">1b1a7acd-c837-4b4e-9374-efe2bfdd18b7</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:40:03 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:40:03.570Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,Viluppuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/4k1n8fe3/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/4k1n8fe3/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காணாமல் சென்றதாகக் கூறப்படும் வருவாய் ஆய்வாளரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவியும் இரு மகள்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>விழுப்புரம் அருகே செஞ்சி பகுதியில் வருவாய்த்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், கடந்த சில நாட்களாக குடும்பத்தினரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அவர் தன்னுடன் பணியாற்றிய மற்றொரு வருவாய் ஆய்வாளருடன் பழகி வந்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் குடும்பத்தினர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><p>ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கணவர் குடும்பத்தினரை விட்டு சென்றுவிட்டதாக அவரது மனைவி வேதனையுடன் தெரிவித்தார். கணவரை கண்டுபிடித்து, தங்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து, மனைவியும் அவரது மகள்களும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>கடல் கடந்து மலர்ந்த காதல்: வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த மயிலாப்பூர் வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/love-blossoms-across-borders-mylapore-man-marries-woman-from-abroad</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/love-blossoms-across-borders-mylapore-man-marries-woman-from-abroad#comments</comments><guid isPermaLink="false">8811e513-42be-4570-9b5f-f8d167b93f47</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:23:54 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:23:54.126Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,Youth,Love,திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்,காதல்,ரஷ்யா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/bfb7aipb/.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உதயசங்கர்-மரியா]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/bfb7aipb/.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரஷ்ய நாட்டுப் பெண்ணை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருச்செந்தூர் முருகன் கோவிலில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"> திருமணம்</a> செய்துகொண்டார்.</p><h2>காதல் டூ கல்யாணம்</h2><p>சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் உதயசங்கர். அவர் சீனாவில் உள்ள ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றி வரும் அதே நிறுவனத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மரியா என்ற பெண்ணும் பணியாற்றி வந்தார். இதையடுத்து அவர்கள் இவருக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மலர்ந்தது. அவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டினர்.</p><h2>திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த திருமணம்</h2><p>இதனைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி</a> கோவிலில் இவர்களது திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தமிழ் கலாச்சார முறைப்படி, மணமகள் பட்டுப்புடவை உடுத்தியும், மணமகன் பட்டு வேட்டி-சட்டை அணிந்து பாரம்பரிய உடைகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலுக்கு வந்தனர்.</p><p>அங்கு இருவீட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க, கெட்டிமேள சத்தத்துடன் உதயசங்கர், ரஷ்யப் பெண்ணிற்கு தாலி கட்டினார். மேலும் மணப்பெண் மரியா தனது பெயரை கீர்த்தனா என்றும் மாற்றிக்கொண்டார். சர்வதேச எல்லைகளைக் கடந்து, தமிழ்நாட்டுப் பாரம்பரியத்தை மதித்து திருச்செந்தூர் முருகன் சாட்சியாக நடந்துள்ள இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">காதல்</a> திருமணத்திற்கு இணையவாசிகள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள நிவாரண நிதிக்கு ஈஷா சார்பில் ரூ.1 கோடி: சத்குரு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sadhguru-announces-1-crore-from-isha-for-nepal-relief-fund</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sadhguru-announces-1-crore-from-isha-for-nepal-relief-fund#comments</comments><guid isPermaLink="false">b77d7334-7a7f-4747-8177-3a5969f15690</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:20:13 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:20:13.040Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,சத்குரு,Sadhguru,Isha,ஈஷா,நேபாளம் வெள்ளம்,Nepal Floods</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/34tsfzdh/sadhguru2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சத்குரு]]></media:title><media:description type="html"><![CDATA[ 'நேபாளத்திற்குத் துணை நிற்போம்' என்ற நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/34tsfzdh/sadhguru2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>"இமயமலைப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய 'இமயமலை வாரியம் அமைக்க வேண்டும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கோரிக்கை விடுத்தார். மேலும், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு 'ஈஷா நேபாளம்' சார்பில் ₹1 கோடி வழங்குவதாகவும் உறுதியளித்தார்.</p><p>நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று (30/08/2026) நடைபெற்ற 'நேபாளத்திற்குத் துணை நிற்போம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற <a href="https://www.dailythanthi.com/topic/sadhguru">சத்குரு</a> பேசுகையில், "இமயமலைத் தொடர்கள் பரவியுள்ள அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். அரசியல் நிர்வாகங்கள் தனித்தனியாக இருந்தாலும், இந்த மலைத் தொடர்கள் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டும். இதை நாம் செய்யாமல், 'சரி, இது நேபாளத்தின் பிரச்சினை, அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்' என்று நினைத்துக் கொண்டிருந்தால், இதற்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.</p><p>மலைகளுக்கு உங்களது அரசியல் தொடர்புகள் தெரியாது. நீங்கள் பேசும் மொழியோ அல்லது செய்யும் அபத்தமான காரியங்களோ தெரியாது. இதை ஒரே அமைப்பாக உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கலந்தாலோசனை செய்வதாவது ஒரே அமைப்பாக நடக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களில் ஒரு ஒத்திசைவு இருக்க வேண்டும். ஏனெனில் இமயமலை, பூமியின் மிகவும் அற்புதமான மற்றும் கம்பீரமான அமைப்பாகும். அதே நேரத்தில், அது மிக உறுதியானதும் அல்ல.</p><figure><img alt="நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/2lpmgl9g/sadhguru1.jpg" /><figcaption>வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி</figcaption></figure><p>ஒரு பெரிய பனிப்பாறையின் முக்கால்வாசி பகுதி, சிகரத்திலிருந்து 4,000 அடி கீழே திடீரென விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதை யாரும் கணித்திருக்க முடியாது. ஆனால் இப்போது இது நடந்துவிட்டது என்பதால், <a href="https://www.dailythanthi.com/topic/nepal">நேபாளம்</a> போன்ற ஒரு சிறிய நாடு தனியாக இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.</p><p>இந்தப் பேரழிவிற்கு தெய்வீக காரணங்களை கூறுவதோ அல்லது 'நம்ப முடியாத மாய சக்தி' என்று சித்தரிக்கவோ வேண்டாம். வாழ்க்கையின் ஆன்மீகப் பரிமாணங்களுக்கும், இயற்கை நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் பௌதிக விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். எனவே தத்துவங்கள், கருத்தியல்கள் அல்லது ஆன்மீக விளக்கங்களை அளித்து மனித துயரத்தை நாம் கொச்சைப்படுத்தக் கூடாது.</p><p>மிகப்பெரும் பேரிடரைச் சந்தித்திருக்கும் நேபாளத்திற்கு உதவும் வகையில், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ₹1 கோடி வழங்கப்படும். மேலும் கோவை ஈஷா யோக மையத்தில், <a href="https://www.dailythanthi.com/topic/nepal-floods">நேபாள பெருவெள்ள பாதிப்பில்</a> உயிரிழந்தவர்களுக்காக 'கால பைரவ கர்மா செய்யப்படும்" எனக் கூறினார்.</p><p>இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மனிஷா கொய்ராலா, இதுபோன்ற பேரழிவில் இருந்து மக்கள் என்ன படிப்பினையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டார். </p><p>அதற்குப் பதிலளித்த சத்குரு, "ஒரு மனிதனாக, <a href="https://www.dailythanthi.com/topic/nepal-floods">பேரிடர்கள்</a> வரும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. மனிதனாக வாழ்வதைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டிய முதன்மையான விஷயம் என்னவென்றால், நாம் அனைவரும் நிலையற்றவர்கள் என்பதை ஒவ்வொரு கணமும் அறிந்திருக்க வேண்டும். இதை நாம் தொடர்ந்து விழிப்புணர்வுடன் உணர்ந்திருந்தால், நமது வாழ்க்கையை மிகவும் புத்திசாலித்தனமான முறையில் திட்டமிட்டு வாழ்வோம். "எனக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghats-districts-today-3</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghats-districts-today-3#comments</comments><guid isPermaLink="false">de71b475-25a7-4c55-9f3e-f4bdeac2beb4</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:18:35 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:18:35.916Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/26oshqb0/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/26oshqb0/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>31-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். </p><p><strong>01-09-2026 மற்றும் 02-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>31-08-2026 முதல் 04-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>31-08-2026 முதல் 04-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மனைவியுடன் தகராறு: மனவேதனையில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-wife-quarrel-groom-takes-tragic-decision</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-wife-quarrel-groom-takes-tragic-decision#comments</comments><guid isPermaLink="false">9c912115-d382-482f-976a-177ed1c2dab1</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:09:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:09:34.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagapattinam,நாகப்பட்டினம்,தற்கொலை,புதுமாப்பிள்ளை,Nagore,நாகூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/6hkg0rc8/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/6hkg0rc8/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தங்கைக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், மனவேதனை அடைந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தங்கைக்கு திருமணம்</h2><p>நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த தெற்கு பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவரது மகன் கஜேந்திரன் (26 வயது) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த நான்கரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஜேந்திரனின் தங்கைக்கு நேற்று திருமணம் நடக்க இருந்தது.</p><h2>மனைவியுடன் வாக்குவாதம்</h2><p>சம்பவத்தன்று இரவு கஜேந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் மனவேதனை அடைந்த கஜேந்திரன் வீட்டில் இருந்த அறைக்குள் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அதன்பின்னர் மறுநாள் காலையில் அவரது மனைவி சென்று பார்த்தபோது கஜேந்திரன் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி இறந்தநிலையில் கிடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் பரந்தூருக்கு இடமாற்றமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-army-officers-training-centre-being-relocated-to-parandur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-army-officers-training-centre-being-relocated-to-parandur#comments</comments><guid isPermaLink="false">aa54c180-1dbf-4600-82c8-8c90d81cdb2a</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:57:57 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:57:57.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Army,Parandur,பரந்தூர்,ராணுவ அதிகாரிகள்,பயிற்சிமையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/du6y8os8/parandur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/du6y8os8/parandur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம்</h2><p>காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க இருந்த சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. மாற்று இடத்தை உடனடியாக கண்டுபிடித்து திட்டத்தை செயல்படுத்த தொழில் துறையி னர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து விமான நிலை யத் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாக தொழில் துறை மற்றும் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.அப்போது, விமான நிலையம் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தை (ஓ.டி.ஏ.) பரந்தூருக்கு இடமாற்றம் செய்துவிட்டு, அந்த இடத்தை ராணுவ அமைச்சகத்திடம் கேட்டுப் பெற்று அதில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தாம்பரம்- மதுரவாயல்</h2><p>இதுகுறித்து தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:-சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் 5-வது முனையம் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதை தாம்பரம்- மதுரவாயல் சாலையுடன் இணைக்கும் வகையில் அணுகு சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் பணிகள் ஆய்வுக்கான அனுமதிகளை நெடுஞ்சாலை, நீர்வளம் உள்ளிட்ட துறைகள் விரைவாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, ஜி.எஸ்.டி. சாலை மட்டுமின்றி தாம்பரம்-மதுரவாயல் சாலையில் இருந்தும், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து வருவோரும் பயன்படுத்தி நேரடியாக விமான நிலையம் வர முடியும்.</p><h2>750 ஏக்கர் நிலம்</h2><p>சென்னை விமான நிலையம் அருகே பரங்கிமலையில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி, 650 முதல் 750 ஏக்கரில் அமைந் துள்ளது. இந்த இடத்தை தமிழக அரசு, ராணுவ அமைச்சகத்திடம் இருந்து கேட்டுப் பெற்று, சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து பயன்படுத்தலாம். பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக இது வரை 1,800 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு ஆயிரம் ஏக்க ரில் ராணுவ அதிகாரிகள், பயிற்சி அகாடமியை அதிநவீன உள்கட்ட மைப்பு வசதிகளுடன் தமிழக அரசு அமைத்து தரும் திட்டமும் பரிசீல னையில் உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தின் 2-வது ஓடு பாதையை முழுவதுமாக பயன்படுத்தும் சூழல் ஏற்படும். விமானங்களின் இயக்கமும் 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து ஆலோ சனை நடந்து வருகிறது.இவ்வாறு தொழில் துறை அதிகாரிகள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்தின் துரோகத்தை தமிழக அரசு எடுத்துரைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-highlight-karnatakas-betrayal-in-the-supreme-court-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-highlight-karnatakas-betrayal-in-the-supreme-court-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">2cf5824f-5f11-4c00-aad8-8a98255fcf13</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:46:48 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:46:48.479Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,தமிழக அரசு,TN govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/pz2rem91/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/pz2rem91/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“தமிழ்நாட்டிற்கு காவிரியில் தினமும் வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடும்படி, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதைவிட குறைவான நீரையே கர்நாடகம் வழங்கியுள்ளது. ஜூன் மாதம் முதல் காவிரியில் வழங்க வேண்டிய நீரில் இதுவரை 55 டி.எம்.சி. நீரை பாக்கி வைத்துள்ள கர்நாடக அரசு, ஆணையம் அறிவுறுத்திய குறைந்த அளவு நீரைக் கூட வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>காவிரி பாசன மாவட்டங்களின் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி பல நாள்கள் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அடுத்த 15 நாள்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க மேலாண்மை ஆணையம் ஆணையிட்டது. ஆனால் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையிலான 4 நாள்களில் அதற்கும் குறைவான அளவு தண்ணீர்தான் பிலிகுண்டுலு அளவை நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.</p> <p>ஆகஸ்ட் 26 ஆம் தேதி வினாடிக்கு 12,000 கனஅடி நீர் வரவேண்டிய நிலையில், 10,405 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்துள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் வினாடிக்கு 9,000 கனஅடி நீர் வர வேண்டிய நிலையில், 27ஆம் தேதி 7,454 கனஅடி, 28 ஆம் தேதி 7,094 கனஅடி, 29 ஆம் தேதி 6,702 கனஅடி, 30 ஆம் தேதி 6,887 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் வந்துள்ளது. இந்த நாள்களில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 13,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதாக கர்நாடக அரசு கூறிவருகிறது. </p><p>ஆனால், அதில் பாதியளவு மட்டும் தான் பிலிகுண்டுலு பகுதிக்கு தண்ணீர் வந்திருக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து பிலிகுண்டுலு வரும் வரை பயணப் பாதையில் 1% முதல் 2% வரை நீர் இழப்பு ஏற்படவாய்ப்புள்ளது. ஆனால் தினமும் 20% முதல் 25% வரை குறைவாகவே தண்ணீர் வந்திருப்பதை ஏற்க முடியாது. தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதாக கணக்குக் காட்டிவிட்டு, அந்த நீரை வேறு பயன்பாட்டுக்கு கர்நாடகம் திருப்பிவிட்டு விட்டதோ? என்ற ஐயம் எழுகிறது.</p><p>காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் ஆணைப்படி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி., ஆகஸ்ட் மாதத்தில் 27ஆம் தேதி வரை 40.10 டி.எம்.சி. என மொத்தம் 80.50 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஜூன் மாதம் 2.91 டி.எம்.சி., ஜூலை மாதம் 0.71 டி.எம்.சி., ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி வரை 21.9 டிஎம்சி என மொத்தம் 25.58 டி.எம்.சி. நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. ஜூன் மாதம் முதல் இதுவரை கர்நாடகம் 55 டிஎம்சி நீரை பாக்கி வைத்துள்ளது.</p><p>இன்றைய நிலையில், கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் 82 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு மனம் இல்லை. இப்போதே இத்தகைய அணுகுமுறையைக் கடைபிடிக்கும் கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டிய பிறகு எத்தகைய அணுகுமுறையை கடைபிடிக்கும் என்பதை யூகித்து பார்த்தாலே கர்நாடகத்தின் சதித்திட்டங்களை புரிந்துகொள்ளலாம். இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து தான் மேகதாது அணை கட்டப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை செப்டம்பர் 1 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இப்போதுள்ள 52 டி.எம்.சி. நீரைக் கொண்டு 40 நாள்களுக்குக் கூட தண்ணீர் வழங்க முடியாது. கர்நாடகத்திடம் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரைப் பெறாவிட்டால், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்களை காப்பாற்ற முடியாது.</p><p>எனவே, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே தொடரப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்கச் செய்து, கர்நாடகத்தின் துரோகத்தை எடுத்துரைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை:  சட்டசபையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/paid-weekly-holiday-for-tasmac-employees-minister-vignesh-announces-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/paid-weekly-holiday-for-tasmac-employees-minister-vignesh-announces-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">6accd4c5-283a-459a-a357-a8cbfe563ca9</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:38:31 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:38:31.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,டாஸ்மாக்,Tasmac,Assembly,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/w4iprisi/vignesh.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/w4iprisi/vignesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழக சட்டப்பேரவையில்  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்ந்த ஆறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பும் இடம் பெற்றது. அதன் விவரம் வருமாறு: டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் 23 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றார். </p><h2>எவ்வளவு உயர்வு?</h2><p>அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது: டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் எம்ஆர்பி விதிமீறல்கள் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுப்பதற்கும், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு 33 ஆயிரத்து 23 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 30 ஆயிரத்து 284 ரூபாய், உதவி விற்பனையாளர்களுக்கு 28 ஆயிரத்து 689 ரூபாய் என உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும்.</p><h2>பண்டிகை முன்பணம் மற்றும் பணி நேர சலுகைகள்</h2><p>டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும், ஆண்டுதோறும் மூன்று சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.அத்துடன், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் எட்டு மணி நேர பணி ஒதுக்கீடு, மாதத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்தில் இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும். என்ற அறிவிப்பும் இடம் பெற்றது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றால் ஊழியர்கள் முதலில் இடைநீக்கமும், மீண்டும் தவறு  செய்தால் நிரந்தரமாக பணி நீக்கமும் செய்யப்படுவார்கள்  என்றும் அமைச்சர் விக்னேஷ் கூறினார். </p> ]]></content:encoded></item><item><title>புதிய துணை மின் நிலையங்கள், டிஜிட்டல் நிதி மையம்: 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-substation-digital-finance-hub-tn-rule-110-announcements</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-substation-digital-finance-hub-tn-rule-110-announcements#comments</comments><guid isPermaLink="false">327f80ec-918a-4a84-9d46-be2cf523c344</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:37:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:37:17.653Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,அறிவிப்புகள்,துணை மின் நிலையங்கள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,டிஜிட்டல் நிதி மையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/0ik5q04v/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/0ik5q04v/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய், எரிசக்தித் துறை சார்பில் புதிய மின்கட்டமைப்புகள் அமைப்பது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டின் வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்துவரும் மின் நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோகத் துறைகளில் விரிவான மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மின்கட்டமைப்பு அவசியமாகிறது.</p><h2>தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு (Transmission) மேம்பாட்டுத் திட்டம்:</h2><p>மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சென்னை போன்ற முக்கிய மின் நுகர்வு மையங்களுக்குத் திறம்படக் கொண்டு செல்வதற்கான மின் தொடரமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. இதற்காக, அரசு தொலைநோக்குடன் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” (Tamil Nadu Transmission Improvement Scheme) செயல்படுத்தப்பட உள்ளது.</p><p>இத்திட்டத்தின் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள மின் பாதைகள் வலுப்படுத்தப்படும்.</p><h2>தூத்துக்குடியில் New Supercritical Thermal Power Station அமைத்தல்:</h2><p>தூத்துக்குடி அனல் மின் நிலையம் தமிழ்நாட்டின் முக்கிய அனல் மின் நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையத்தில் தற்போது தலா 210 மெகாவாட் திறன்கொண்ட ஐந்து நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி அலகுகள் உள்ளன. இவற்றின் மொத்த நிறுவு திறன் 1,050 மெகாவாட் ஆகும். இந்த அலகுகள் 1979-ம் ஆண்டு முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களுக்குப் பொருந்தக்கூடிய சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க, தற்போதுள்ள அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தற்போதுள்ள ஐந்து, 210 மெகாவாட் அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைத்து, தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில், தலா 800 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அலகுகளுடன், மொத்தமாக 1,600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு New Supercritical Thermal Power Station 20 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.</p><h2>மின் பகிர்மானக் கட்டமைப்பு (Distribution) மேம்பாட்டுப் பணிகள்:</h2><p>சென்னை மாநகரின் மின்தேவையைப் பூர்த்தி செய்ய வலுவான மின் பகிர்மானக் கட்டமைப்பு அவசியமாகும். சென்னையில் பருவ மழைக்காலங்களில் வெள்ளம் தொடர்பாக ஏற்படும் மின்தடைகளையும், கோடைக்காலங்களில் அதிக மின் தேவை காரணமாக ஏற்படும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.</p><p>இதனைக் கருத்தில் கொண்டு, 36 புதிய 33 By 11 (33/11) கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின் பகிர்மான மின்மாற்றிகளை நிறுவுதல், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின்கடத்திகள், Pillar Box, Circuit Breakers உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுதல் போன்ற பணிகள் 1,762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.</p><h2>செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா:</h2><p>தமிழ்நாட்டில் செமிகண்டெக்டர் துறையில் (Semiconductor Sector) அதிக அளவு முதலீட்டினை ஈர்க்கவும், இத்துறையில் நமது மாநிலத்தின் பங்கினை கணிசமான அளவு உயர்த்திடவும், காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா (Semiconductor &amp; Electronics Manufacturing Park) 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.</p><p>இப்பூங்காவில், Semiconductor துறையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த, R&amp;D – Research and Development வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இத்துறையில் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும். மேலும், சுமார் 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><h2>டிஜிட்டல் நிதி மையம்</h2><p>நிதித் தொழில்நுட்ப (FinTech) புதுமைகளுடன் டிஜிட்டல் நிதிச் சேவைகளை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் (Coimbatore FinTech Hub) பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.</p><p>உலகத் தரத்திலான வசதிகள், அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற அதிநவீன வசதிகள் இம்மையத்தில் இடம்பெறும். இதன்மூலம், கோயம்புத்தூர் மாவட்டத்தில், நிதி மற்றும் நிதிநுட்பத் துறையில் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.</p><h2>பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்</h2><p>2026-27ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் (Multi Model Logistics Parks), உலர் துறைமுகங்கள் (Dry Ports) அமைத்து முதலீட்டை ஈர்க்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மாவட்டப் பகுதிகளில் முக்கிய உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் ஆய்வு மேற்கொண்டு, திட்ட அறிக்கை தயார்செய்து அதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் “பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் (Multi Model Logistics Hub)” ஒன்று அமைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் பங்கீடு வழக்கு வரும் 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-sharing-case-adjourned-to-the-15th-supreme-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-sharing-case-adjourned-to-the-15th-supreme-court-order#comments</comments><guid isPermaLink="false">ae6be36e-a926-4266-abd3-d3eca04d08fa</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:31:46 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:31:46.964Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,Cauvery,காவிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/u6fmw654/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/u6fmw654/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடக அரசு காவிரி நீரை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நிலை அறிக்கை தாக்கல் செய்தது.</p><p>அந்த அறிக்கையில், விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான 17.604 டி.எம்.சி. நீரை கர்நாடகா அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்ற உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், அடுத்த 15 நாட்களுக்கு 9,000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடக அரசு தற்போது வரை வெறும் 20 டி.எம்.சி. நீரை மட்டுமே திறந்து விட்டுள்ளதாகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் நீர் திறப்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நீர் பங்கீடு வழக்கை வரும் செப்டம்பர் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், தற்போதைய நிலவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய இரு மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான  நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-urges-tamil-nadu-government-to-increase-financial-allocation-for-msmes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-urges-tamil-nadu-government-to-increase-financial-allocation-for-msmes#comments</comments><guid isPermaLink="false">80f6ab58-2d7e-43d6-866b-18f87cd716db</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:13:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:13:52.872Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/qh5j0sr3/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/qh5j0sr3/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழகத்தின் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பில் முக்கிய பங்காற்றுவது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்&nbsp;நிறுவனங்களாகும். தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, ரூபாய் 32 லட்சம் கோடியாகும்.&nbsp;அதில் 30 முதல் 35 விழுக்காடு அளவிற்கு&nbsp;பங்களிப்பு செலுத்துவது இந்நிறுவனங்களாகும்.</p><p>இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்நிறுவனங்களின் பங்களிப்பு 8 விழுக்காடாகும். இந்திய ஏற்றுமதியில் இவற்றின் பங்களிப்பு 40 விழுக்காடாகும். தமிழ்நாட்டில் 6.89 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் 15.07 விழுக்காடு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் உற்பத்திப் பொருள்களில் சுமார் 49 விழுக்காடு இந்நிறுவனங்கள் உற்பத்திச் செய்பவையாகும்.</p><p>எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்நிறுவனங்களை தமிழ்நாடு அரசு பாதுகாத்திட வேண்டும். ஊக்கப்படுத்திட வேண்டும். இந்தியாவில் உற்பத்தித் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு பெருநிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அவை செயற்கை நுண்ணறிவு, தானியங்கி எந்திரங்கள் போன்றவற்றை உற்பத்தித்துறையில் வேகமாக புகுத்துகின்றன. இதனால் அவை புதிய வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதில்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலை இழப்பிற்கும் உள்ளாக்குகின்றன. அவர்களை கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்குவதோடு, அதீதமான லாபத்தை அடைகின்றன. </p><p>வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் நமது நாட்டின் செல்வாதாரங்களை கொள்ளையடிப்பதுடன், உற்பத்தித்துறையில் நாட்டின் தன்னிறைவை, தற்சார்பு பொருளாதாரத்தை ஒழித்துக்கட்ட முனைகின்றன. உள்நாட்டு - வெளிநாட்டு பெரு நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக மாறி அவற்றை ஒழித்துக் கட்ட முயல்கின்றன. </p><p>இந்நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களையும், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டியதும், அந்நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் அரசின் கடமையாகும். எனவே, இந்நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு அதிகரிக்க வேண்டும்.</p><p>2026-27 பட்ஜெட்டில் இத்துறைக்கு ரூபாய் 2,142 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை ரூபாய் 3,000 கோடியாக உயர்த்த வேண்டுமென தமிழக&nbsp;சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு அதை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். இந்நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். </p><p>அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும். பேரிடர் காலத்தில் இந்நிறுவனங்கள் பாதிக்கப்படும் பொழுது, உரிய இழப்பீட்டை பெறும் வகையில் பேரிடர் காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs3-per-litre-cm-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs3-per-litre-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">42603c59-b6d0-44ee-a1a0-cc31fd06b977</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:33:40 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:12:39.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,milk price,பால் கொள்முதல் விலை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tzybxg0c/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tzybxg0c/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பால் கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, ரூ.44 ஆக வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ், முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-</p><p>பால் உற்பத்தி, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கியப் பங்கு வதிப்பதை கருத்தில் கொண்டு கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக ரூ.1 உயர்த்தவும், மேலும், அரசு ஊக்கத்தொகை ரூ.3-லிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்து ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை ரூ.38-லிருந்து ரூ.41 உயர்த்தி 19.08.2026 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவித்தோம்.</p><p>இந்தச் சூழ்நிலையில், கறவை மாடுகளுக்கான பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் விலை ஆகியவை மிகவும் உயர்ந்துள்ளதைத் தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித்தர வேண்டும் என்று பல்வேறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்குக் கோரிக்கையை வைத்துள்ளனர்.</p><p>எனவே, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலனை செய்து அரசு, பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மேலும் ரூ.3 உயர்த்தி 44 ரூபாயாக வழங்க தற்போது முடிவு செய்துள்ளது.</p><p>அரசு, பால் உற்பத்தியாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளது. மேலும், பால் கொள்முதல் விலை உயர்வினால் ஏற்படும் செலவினத்தை ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஈடு செய்து வழங்கும். இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக மொத்தம் ஒரு மாதத்திற்கு ரூ.60 கோடியும், ஒரு ஆண்டிற்கு ரூ.720 கோடியும் செலவாகும். இவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரத்தில் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-hurling-petrol-bomb-at-a-hotel-in-villupuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-hurling-petrol-bomb-at-a-hotel-in-villupuram#comments</comments><guid isPermaLink="false">0995ac18-6b02-4f22-aafa-723f238d631d</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:03:25 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:03:25.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,police enquiry,Youth Arrest,இளைஞர் கைது,ஹோட்டல்,பெட்ரோல் குண்டுவீச்சு,petrol bomb thrown</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tt09c3sr/-.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட தனுஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ இளைஞர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tt09c3sr/-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பணம் கேட்டதால் தகராறு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விழுப்புரம்</a> நகர போலீஸ் நிலையத்திற்கு மிக அருகில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை), தனுஷ் (வயது 23) என்ற இளைஞர் அங்கு உணவு சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பின், ஹோட்டல் ஊழியர்கள் அவரிடம் சாப்பிட்டதற்கான பணத்தைக் கேட்டனர். அதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றார்.</p><h2>பூட்டிய உணவகம் மீது குண்டுவீச்சு</h2><p>இதற்கிடையே, நேற்றிரவு வியாபாரம் முடிந்த பிறகு உணவகம் பூட்டப்பட்டது. நள்ளிரவில் அங்கு வந்த அந்த வாலிபர், தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை பூட்டியிருந்த உணவகத்தின் மீது வீசிவிட்டு தப்பியோடினார். போலீஸ் நிலையம் அருகிலேயே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>வாலிபர் கைது</h2><p>இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில்,<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81"> பெட்ரோல் குண்டு</a> வீசிய நபர் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.</p><p>தலைமறைவாக இருந்த தனுஷை இன்று (திங்கட்கிழமை) காலை போலீசார் அதிரடியாக<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது </a>செய்தனர். விசாரணையின் போது, உணவகத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே பூட்டியிருந்த கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு? - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tamil-nadu-turning-into-killing-field</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-tamil-nadu-turning-into-killing-field#comments</comments><guid isPermaLink="false">d1618fad-37f7-4865-93ee-40a714b75e5c</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:36:47 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:36:47.794Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,கண்டனம்,AMMK,அமமுக,சட்டம் ஒழுங்கு,Law and order</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/g75dwtnh/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/g75dwtnh/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுறியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை என, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுறியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.</p><p>மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு  நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.</p><p>தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம்-ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.</p><p>எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி: 90 சதவீத நிலக்கடலை பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-90-percent-of-groundnut-crops-damaged-farmers-in-distress</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-90-percent-of-groundnut-crops-damaged-farmers-in-distress#comments</comments><guid isPermaLink="false">7403e5f0-c534-43a6-8e5e-9857610e5061</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:35:48 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:35:48.458Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள்,கிருஷ்ணகிரி,formers,Krishnagiri district,நிலக்கடலை,Groundnut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/g6cm0x6i/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிலக்கடலை பயிர்கள் சேதம் விவசாயி கவலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/g6cm0x6i/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>சுமார் 90 சதவீத நிலக்கடலை பயிர்கள் வறட்சியால் சேதமடைந்ததால் பயிரிட்ட விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.</p><p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் பருவமழையை நம்பி விவசாயிகள் 30,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டனர். அதற்கு மாறாக ஏற்படுகின்ற வானிலை மாற்றத்தால் பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. கோடை காலத்தில் மழையும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">பருவமழை</a> காலத்தில் வெயிலும் நிலவி வருகிறது. இதனால் பருவமழையை நம்பி பயிரிட்ட 90 சதவீத நிலக்கடலை பயிர்கள் வறட்சியால் சேதமடைந்துள்ளன.</p><h2>விவசாயிகள் கவலை</h2><p>கஷ்டப்பட்டு சாகுபடி செய்து அறுவடை செய்யும் நேரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">வறட்சியால்</a> சேதமடைந்ததால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இதனால் வேளாண் துறை அதிகாரிகளும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் நேரில் சென்று ஆய்வு செய்து வறட்சியால் வாடிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்வர் விஜய்யின் கற்பனையில் கூட பிரதமர் ஆகும் எண்ணம் இருக்காது - வைகோ!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-would-never-even-dream-of-becoming-prime-minister-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-would-never-even-dream-of-becoming-prime-minister-vaiko#comments</comments><guid isPermaLink="false">d23ed993-4786-4e5e-b108-cd58d7336786</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:34:21 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:34:21.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,காங்கிரஸ்,Congress,Rahul Gandhi,ராகுல்காந்தி,முதல் -அமைச்சர்,வைகோ பேச்சு,Vaiko Talk,முதல் அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/g5erz5yk/vaiko-rahul-vijay.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வைகோ - விஜய் - ராகுல் காந்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ வைகோ பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/g5erz5yk/vaiko-rahul-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி </p><p>தமிழக<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D"> முதல்வர்</a> விஜய்யின் கற்பனையில் கூட பிரதமர் ஆகும் இந்த எண்ணம் இருக்காது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.</p><h2>விலகுவோம்</h2><p>சமீபத்தில் குமரியில் <a href="https://www.dailythanthi.com/topic/congress">காங்கிரஸ்</a> கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என கூறியிருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டணியிலும் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.</p><h2>வைகோ-வின் பதில்</h2><p>இந்நிலையில் இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம் செய்தியாளர் ஒருவர் இதுக்குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு வைகோ கூறியதாவது:-</p><p>இதுபோன்ற எண்ணங்கள் கற்பனையில் கூட முதல்வர் விஜய்க்கோ அமைச்சர்களுக்கோ இருக்காது. ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது தவறு. அமைச்சர்கள் பேசும்போது இதுகுறித்து நகைச்சுவையாக பேசக்கூடாது. வரப்போகும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் <a href="http://dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல் காந்தி</a>தான். வேறு யாரும் இருக்கவும் முடியாது. இதுகுறித்து இனிமேல் பேசக்கூடாது என்று முதல் அமைச்சர் வலியுறுத்த வேண்டும். </p><p>இவ்வாறு கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பத்தூர்: விவசாய கிணற்றில் 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்பு - போலீஸ் தீவிர விசாரணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-bodies-of-two-boys-recovered-from-an-agricultural-well-police-conducting-intensive-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-bodies-of-two-boys-recovered-from-an-agricultural-well-police-conducting-intensive-investigation#comments</comments><guid isPermaLink="false">b6345ed6-e6ed-42c0-be69-dc271a467d19</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:27:22 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:27:22.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ghu0y44j/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ghu0y44j/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பெத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவளர் பிரகாசத்திற்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் பிரகாசம் இருக்கும் கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதந்ததை கண்டு பிரகாசம் அதிர்ச்சி அடைந்துள்ளார். </p><p>இது குறித்து அவர் ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிணற்றுக்குள் கிடந்த 2 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு சுமார் 9 மற்றும் 15 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். </p> <p>தொடர்ந்து 2 சிறுவர்களின் சடலங்களையும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். சிறுவர்களின் அடையாளம் தெரியாத நிலையில், அப்பகுதியில் உள்ள விடுதிகளில் மாணவர்கள் யாரேனும் காணாமல் போயுள்ளனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் கிணற்றில் தவறி விழுந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>