<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 20 Jul 2026 07:44:49 +0000</lastBuildDate><item><title>பழனி முருகன் கோவில் செல்வோர்
கவனத்திற்கு...வெளியான முக்கிய அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-goersattentionimportant-announcement-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-goersattentionimportant-announcement-released#comments</comments><guid isPermaLink="false">22335508-43e7-447a-a013-79f2c21e69e0</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:38:10 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:38:10.540Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி முருகன் கோவில்,Palani,ரோப் கார் சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/lcvmewjs/palani33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி முருகன் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/lcvmewjs/palani33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி கோயில் ரோப் கார் சேவை இன்று (ஜூலை 20ஆம் தேதி) முதல் 45 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ரோப்கார் சேவை </p><p>உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் ரோப்கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப்காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த ரோப்கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது.</p><h2>பராமரிப்பு பணி</h2><p>பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பராமரிப்பு பணி </a>நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூலை 20) முதல் செப்டம்பர் 14 வரை  45 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலையேறுவதற்கு படிவழிப் பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரெயில், கம்பிவட ஊர்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட்ள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலம் அபகரிக்கப்பட்டது எப்படி? - வெளியானது பத்திரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-was-palani-temple-land-seized-deeds-leaked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-was-palani-temple-land-seized-deeds-leaked#comments</comments><guid isPermaLink="false">cdcb6d3f-25e9-4c5e-9d22-276868133b2b</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:38:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:38:05.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,land issue,Palani,CBCID Police,சிபிசிஐடி போலீஸ்,Palani temple,பத்திரம்,பழனி கோவில்,நிலம் மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/antm83ea/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/antm83ea/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><h2>ரூ.100 கோடி நிலமோசடி</h2><p>பழனி அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.100 கோடி என்று கூறப்படுகிறது. பழனி முருகன் கோவில் நிர்வாகம், அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், ரூ.2 கோடிக்கு கிரையமாக அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இதுகுறித்து அறிந்ததும் கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளர் ஜஸ் டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் முருகதாஸ், திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீது முதற்கட்டமாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>சிபிசிஐடி விசாரணை</h2><p>தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்யும் வகையில் நடந்த சம்பவத்தின் எதிரொலியாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக் கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே அந்த நிலத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. அதோடு நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.</p><p>அதன்படி. நில மோசடி தொடர்பாக திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு சஜிதா, துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் மற்றும் 5 மாவட்டங்களை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பத்திரம் வெளியானது</h2><p>இந்த நிலையில், பழனி கோவில் நிலம் அபகரிக்கப்பட்டது எப்படி? என்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><p><strong>பத்திரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் தண்டபாணி மடம் தனியார் அறக்கட்டளை என குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டபாணி மடத்திற்கு சொந்தமான நிலங்கள் மூலம் வருவாய் ஈட்டி தர்மகாரியங்கள் செய்வது வழக்கம் என பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத காரணத்தினால் விற்பனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ரூ.100 கோடி நிலத்தை ரூ.2 கோடிக்கு கேட்டுள்ளதே அதிக விலை எனவும் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 27-ம் தேதி கையெழுத்தான விற்பனை பத்திரம் ஜூன் 6-ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/tp3znozt/Untitled-3.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/k5un4dd9/Untitled-2.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/pol1opak/Untitled-4.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜயுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ford-high-level-delegation-meets-chief-minister-vijayford-high-level-delegation-meets-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ford-high-level-delegation-meets-chief-minister-vijayford-high-level-delegation-meets-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">ac9150b4-57a5-4afc-bd83-2eb1861725cf</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:37:26 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:37:26.047Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ford,ஃபோர்டு ஆலை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/uwi7qfx9/65.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/uwi7qfx9/65.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p> முதல்-அமைச்சர் விஜய்யை இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி (Thiru. Mathew Godleweski) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.</p><p>இந்தச் சந்திப்பின்போது, இந்நிறுவனம், தமிழ்நாட்டில் தனது உற்பத்தி திட்டத்தை மீண்டும் தொடங்குவது பற்றியும், தற்போது நிறுவியுள்ள உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம் தொடர்பாகவும், இனிவரும் காலங்களில், உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்க திட்டங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>ஃபோர்டு நிறுவனம்</h2><p>ஃபோர்டு நிறுவனம், சென்னையில், ஒரு மிகப்பெரிய உலகளாவிய திறன் மையம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது. 12,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில்தான், இந்நிறுவனம், கோயம்புத்தூரில் ஒரு உலகளாவிய திறன் மையம் நிறுவியுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது உள்ள மறைமலை நகர் உற்பத்திச் சாலையில், 3250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இன்ஜின்கள் உற்பத்தி தொடங்க உள்ளது.</p><h2>விரிவாக்க திட்டங்கள்</h2><p>இச்சந்திப்பின்போது, ஃபோர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான 30 வருட உறவை நினைவுகூர்ந்த முதல்-அமைச்சர், விரைவில் இந்நிறுவனம் மேற்கொள்ளப்பட உள்ள உற்பத்தித் திட்டத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று முதல்-அமைச்சர் உறுதியளித்தார்கள். மேலும், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழு அளவிற்கும் பயன்படுத்திடும் வகையில், ஃபோர்டு நிறுவனம், மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்க திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> கேட்டுக் கொண்டார்கள்.</p><p>இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், ஐ.ஏ.எஸ்., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், ஐ.ஏ.எஸ்., ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிமோனெட்டா வெர்டி (Ms. Simonetta Verdi), ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநர் தீரஜ் தீக்ஷித், Country Director முனைவர் ஸ்ரீபாத் பட், இயக்குநர்  வி. ராஜா விமல குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆக.5-ல் உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-thoothukudi-district-on-august-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-thoothukudi-district-on-august-5#comments</comments><guid isPermaLink="false">6b1c4344-9cf3-4890-b17d-c26f0ee876c2</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:06:54 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:06:54.281Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Local Holiday,உள்ளூர் விடுமுறை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/mm1ecnnq/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/mm1ecnnq/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி, தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற 5.8.2026 (புதன் கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.</p><p>இந்த விடுமுறை மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த விடுமுறைக்கு மாற்றாக மற்றொரு சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-3-youths-arrested-for-selling-narcotic-pills</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-3-youths-arrested-for-selling-narcotic-pills#comments</comments><guid isPermaLink="false">6737ed9c-1ea7-4509-a8a9-87242f33dc1a</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:57:50 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:57:50.548Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Erode,போதை மாத்திரை,அந்தியூர்,3 youths arrested,Narcotic Pills</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/7pwd49eo/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/7pwd49eo/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><h2>அதிரடி சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஈரோடு மாவட்டம்</a> அந்தியூர் போலிசாருக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் குந்துபாயூர், தவிட்டுப்பாளையம், மற்றும் புதுப்பாளையம் போன்ற இடங்களில் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். </p><h2>3 பேர் கைது</h2><p>அப்போது குந்துபாயூரை சேர்ந்த ஜாபர் அலி (வயது 21), தவிட்டுப்பாளையம் வேங்கையன் வீதி விக்னேஷ்(வயது 26), மற்றும் புதுப்பாளையம் வ.உ.சி. நகர் ஞானராஜ் (வயது31), ஆகியோர் வீட்டில் சோதனையிட்டபோது, போதை மாத்திரை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. </p><p>எனவே மூவரையும் போலீசார்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது </a>செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆவினுக்கு பால் வழங்க தயக்கம் காட்டும் விவசாயிகள்... காரணம் என்ன...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-are-reluctant-to-provide-milk-to-aavin-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-are-reluctant-to-provide-milk-to-aavin-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">d00792ee-a7f8-44da-9192-c299cfcf2c35</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:54:33 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:54:33.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,Aavin,ஆவின்,ஆவின் நிறுவனம்,Aavin Milk,ஆவின் பால்,Aavin Company,ஆவின் பால் பண்ணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/ieq3ip3k/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/ieq3ip3k/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஆவின் பால்</h2><p>தமிழகத்தின் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆரம்ப காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் இந்த பால் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று பால் விற்பனை செய்து வந்தனர்.</p><p>ஆனால் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை அதிகரிக்கவில்லை. இதனால் ஆவினுக்கு பால் வழங்குவதை தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு விவசாயிகள் பால் விற்பனை செய்து வருகின்றனர்.</p><p>ஆவின் நிறுவனம் சராசரியாக 1 லிட்டர் பாலை ரூ.34-க்கு கொள்முதல் செய்கிறது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் பாலை ரூ.50 வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பதற்கே விவசாயிகள் முன்னுரிமை அளிக்கின்றனர்.</p><h2>மேய்ச்சல் நிலங்கள் குறைந்தன</h2><p>கடந்த காலங்களில் கிராமங்களில் வீடுகள்தோறும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கப்படும். இந்த கால்நடைகள் காலையில் மேய்ச்சல் நிலங்களுக்கு சென்றால் மாலையில் வீடு திரும்பும். இதனால் அந்த கால்நடைகளுக்கு பசுந்தீவனங்களை விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை. தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை குறைந்த அளவில் மட்டும் வாங்கினால் போதும். வறட்சி காலங்களில் தங்களது வீடுகளில் இருப்பில் உள்ள வைக்கோலை மாடுகளுக்கு உணவாக வழங்குவர். மேலும் சோளத்தட்டை வளர்க்கப்பட்டு, அவையும் கால்நடைகளுக்கு உணவாக வழங்கப்படும்.</p><h2>இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-</h2><p>தற்போது மேய்ச்சல் நிலங்கள் குறைந்து விட்டன. இதனால் மாடுகளுக்கு பெரும்பாலும் பசுந்தீவனங்களை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. அது கிடைக்காத பட்சத்தில் தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை அதிகமாக வாங்க வேண்டி உள்ளது. ஆனால் அந்த தீவனங்களின் விலையும் அதிகரித்து வரு கிறது. புண்ணாக்கு 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.1,800-க்கு விற்பனையாகிறது. இவ்வாறு செலவு அதிகரிப்பதால் 1 லிட்டர் பாலை ரூ.34-க்கு விற்பதில் எந்த லாபமும் கிடைப்பது இல்லை.</p><h2>பால் வினியோகம்</h2><p>இதனால் பெரும்பாலானவர்கள் மாடுகள் வளர்ப்பதை தவிர்த்து வருகின்றனர். அத்துடன் தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் பாலுக்கு ரூ.50 வரை கொள்முதல் விலை கொடுப்பதால் பலரும் அங்கேயே பால் விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இது தவிர வீடுகளுக்கு நேரடியாக பால் வினியோகம் செய்யும்போது 1 லிட்டர் பாலை ரூ.62 வரை விற்க முடிகிறது. இதுபோன்ற காரணங்களால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வினியோகம் செய்வது குறைந்து உள்ளது.</p><p>இது தவிர நோய் பாதிப்பால் மாடுகள் இறப்பது. பால் உற்பத்தி குறைவது உள்ளிட்டவையும் மற்றொரு காரணமாக உள்ளது. எனவே தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனமும் கொள்முதல் விலையை உயர்த்தினால் விவசாயிகள் தடை யின்றி பால் வினியோகிக்க முன்வருவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? - மு.க. ஸ்டாலின் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-what-is-happening-in-tamil-nadu-the-rule-of-law-or-the-rule-of-satan-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-what-is-happening-in-tamil-nadu-the-rule-of-law-or-the-rule-of-satan-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">8d91e7c1-35ed-4e93-ac2a-2d3597a4c6ff</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:45:29 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:45:29.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,திமுக,DMK,மு.க. ஸ்டாலின்,M.K. Stalin</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/1e3ecq8r/stalin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/1e3ecq8r/stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>கடும் கண்டனம்</h2><p>ஜனநாயக பண்புகள் அறவே இன்றி செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%20">தி.மு.க. </a>முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு. "அவதூறு வழக்குகளில் கூட எதற்கு தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?</p><p>கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படை சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.</p><h2>சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?</h2><p>தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், பின்விளைவுகள் ஏற்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மின் கணக்கீட்டில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/discrepancies-in-electricity-billing-must-be-rectified-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/discrepancies-in-electricity-billing-must-be-rectified-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">faf27a6e-8e57-4c43-9d95-7a1d02097d32</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:29:03 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:29:03.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,மின்சாரம்,electricity</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/xbtggqny/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/xbtggqny/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், வணிகர்கள், சிறு,குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மின்கட்டணமும் இருமடங்காக அதிகரித்திருப்பதாக மின் நுகர்வோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. </p><p>ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு இரு மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்து மக்களை ஏமாற்றிய கையேடு, இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்கான தொகையையும் மக்களிடமே மறைமுகமாக மின்கட்டணத்தின் மூலம் வசூல் செய்ய முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.  </p><p>ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், தமிழக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் நடப்பாண்டில் உயர்த்தப்படாது  என பத்திரிகையாளர்கள் முன்னிலையில்  பொய் வாக்குறுதி அளித்துவிட்டு, பொதுமக்களின் கண்களில் மண்ணை தூவி மறைமுகமாக மின்கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கியிருக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. </p><p>மின் கணக்கீட்டு முறையில் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதால் தவறான மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் விதிக்கப்பட்டிருப்பதாக மின்வாரிய தலைமைப் பொறியாளர்களே ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், மின் நுகர்வோர்களிடம் இருந்து இதுவரை அதிகமாக பெறப்பட்ட மின்கட்டணங்களை  திருப்பியளிப்பதோடு, தமிழகம் முழுவதும் குளறுபடிகள் குறித்த முறையான விசாரணை மேற்கொண்டு, அவை சரிசெய்யப்படும் வரை மின்கட்டணம்  வசூலிக்கப்பட மாட்டாது என மின்வாரியம் அறிவிக்கவேண்டும்.  </p><p>பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டிய பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர், தன் துறையில் நடைபெறும் சாதனத் திருட்டுகளையும், நிர்வாகக் குளறுபடிகளையும்  களைய உருப்படியான சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்,  காலை - மாலை என இரு வேளைகளிலும் தன் குறைகளை மறைப்பதற்காகவும், பிரச்சனைகளை மடைமாற்றுவதற்காகவும்,  எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படி இழிவாக விமர்சிக்கலாம் என்பதிலேயே முழு கவனத்தை செலுத்தி வருவதே மின்சாரத்துறையில் நடைபெற்றிருக்கும் இத்தகைய குளறுபடிகளுக்கு முக்கிய காரணமாக அமைத்திருக்கிறது. </p><p>எனவே, மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, குழப்பமான, குளறுபடிகள் நிறைந்த கணக்கீடுகளின் மூலம் மக்களை சுரண்டும் அமைப்பாக செயல்படக்கூடாது என்பதை இனியாவது உணர்ந்து, தடையற்ற மின்சாரத்தை எந்தவித குளறுபடிகளுமின்றி விநியோகம் செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வன்னியர் சங்கத்தின் 47-ம் ஆண்டு: &apos;சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்&apos; - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/47th-anniversary-of-the-vanniyar-sangam-let-us-pledge-to-secure-social-justice-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/47th-anniversary-of-the-vanniyar-sangam-let-us-pledge-to-secure-social-justice-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">7826c59d-e065-4aa7-b30e-801625a82a5a</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:09:08 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:09:08.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/muxx1nlr/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/muxx1nlr/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை சமூகங்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்கும் நோக்கத்துடன்  46 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் இன்று.  சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் 47-ஆம் தொடக்க நாளில் பாட்டாளி சொந்தங்களுக்கும், சமூகநீதிக்காக போராடி வருபவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் தான் தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த நாளில் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சாதிக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்;  தமிழ்நாட்டில் 2 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய சமுதாயமாக இருக்கிற வன்னியர்களுக்கு மாநிலத்தில் இருபது சதவிகிதமும் மத்தியில் இரண்டு சதவிகிதமும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் ; தமிழ்நாட்டில்  தாழ்த்தப்பட்டவர்களுக்கான  18  விழுக்காடு இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் ஆகிய 3 புரட்சிகரமான தீர்மானங்களை மருத்துவர் அய்யா நிறைவேற்றச் செய்தார்.</p><p>மருத்துவர் அய்யாவால் அப்போது  தொடங்கப்பட்ட சமூகநீதி போராட்டம் இப்போது முக்கியக் கட்டத்தை அடைந்திருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும்  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  இவை நமது சமூகநீதி போராட்டத்தில்  எட்டப்பட்ட முதல் மைல்கல் தான்.  அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>உலக சதுரங்க நாள் - முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-chess-day-greetings-from-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-chess-day-greetings-from-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">21588628-ee2f-4e94-93a7-20d6afbdc923</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:55:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:55:05.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chess,வாழ்த்து,நாள்,சதுரங்கம்,முதல்-அமைச்சர் விஜய்,Tamil Nadu Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/xggmet42/63.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/xggmet42/63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது.</p><h2>உலக சதுரங்க நாள்</h2><p>உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 1988-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">சதுரங்கப் போட்டிகளில் </a>வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள்.</p><h2>இளைய தலைமுறையினர்</h2><p>உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறிவரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களை கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி: கல் குவாரி பள்ளத்தில் விழுந்த 2 இளைஞர்கள் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-2-youths-die-after-falling-into-quarry-pit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-2-youths-die-after-falling-into-quarry-pit#comments</comments><guid isPermaLink="false">7bd63b6a-7408-4855-8620-eca810abd1dc</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:37:43 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:37:43.046Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,கன்னியாகுமரி,Kanyakumari,2 பேர் உயிரிழப்பு,2 youths death,quarry pit</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/j7u9gff2/kanyakumari-kal-kuvaari-acc.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கல்குவாரி]]></media:title><media:description type="html"><![CDATA[ கன்னியாகுமரி அருகே கல்குவாரியில் விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/j7u9gff2/kanyakumari-kal-kuvaari-acc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி அருகே கல் குவாரி பள்ளத்தில் விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.</p><h2>விபத்து- உயிரிழப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கன்னியாகுமரி, மாவட்டம் </a>விருசடி பகுதியில் நாகராஜ், டிராவிட் ஆகியோர் அதிவேகமாக பைக்கில் சென்றனர். அப்போது பைக் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து  பாழடைந்த கல் குவாரி பள்ளத்தில் விழுந்தது. இதில் கல் குவாரியில் இருந்த தண்ணீரில் மூழ்கி அந்த 2 இளைஞர்களும் உயிரிழந்தனர். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அஞ்சுகிராமம் </a>போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-than-500-supporters-of-cv-shanmugam-quit-aiadmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-than-500-supporters-of-cv-shanmugam-quit-aiadmk#comments</comments><guid isPermaLink="false">8630f094-206e-4a4e-90ba-34878c7a138e</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:17:57 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:17:57.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,விழுப்புரம்,Villupuram,சி.வி.சண்முகம்,CV Shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/dez2fpfv/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/dez2fpfv/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>போர்க்கொடி</h2><p>தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்வியால் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் அ.தி.மு.க. 2-ஆக உடைந்து மீண்டும் ஒன்றிணைந்தது. இருப்பினும் சி.வி.சண்முகம் மட்டும் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே சி.வி.சண்முகத்திற்கு பதில் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பசுபதியை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.</p><p>இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும், மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. மேலும் இருதரப்பி னர் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டார்மங்கலத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் சி.வி.சண்முகம் தரப்பினருக்கும், பசுபதி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>நிர்வாகிகள் நீக்கம்</h2><p>இந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. இணைச்செய லாளர் ஆனந்தி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட 11 பேர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அடுத்தடுத்து அ.தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>கூண்டோடு விலகல்</h2><p>இந்நிலையில், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விலகல் கடிதம் அளிக்க சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலக முடிவெடுத்து பேருந்துகள் மற்றும் கார்களில் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.</p><p>சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 300 பேர் தங்களது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பணியில் இருக்கும் நிலையில், தற்போது 3 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p>விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு விலக முடிவெடுத்துள்ளதால், அக்கட்சி அங்கு வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு தோல்வியை தட்டிக் கேட்ட தாயை அடித்துக் கொன்ற மகன் கைது  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-arrested-for-beating-mother-to-death-after-she-complained-about-failing-exams</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-arrested-for-beating-mother-to-death-after-she-complained-about-failing-exams#comments</comments><guid isPermaLink="false">864111e4-06aa-4498-ad0a-f59d799f7a36</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:13:12 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:13:12.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrest,mother death,மாணவன் கைது,தாய் அடித்துக்கொலை,தேர்வு தோல்வி,exam failure</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2018/Aug/201808300238500426_The-driver-who-hit-the-lover--Arrested-with-brother_SECVPF.gif" width="794"><media:title type="html"><![CDATA[ மகன் கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ தாயை அடித்துக் கொன்ற மகன் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2018/Aug/201808300238500426_The-driver-who-hit-the-lover--Arrested-with-brother_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பெருங்குடியில் தேர்வு தோல்வியை தட்டிக் கேட்ட தாயை அடித்துக் கொன்ற பிளஸ் 2 மாணவனை போலீசார் கைது செய்தனர். </p><h2>தேர்வில் தோல்வி</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை பெருங்குடி </a>பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர் சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், மகனைத் தொடர்ந்து கண்டித்து வந்தார். தேர்வு எழுதாமல் சரியாகப் படிக்காதது குறித்தும், எதிர்காலம் குறித்தும் தாய் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><h2>நள்ளிரவில் கொடூரம்</h2><p>இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் தந்தை வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, தூங்கிக் கொண்டிருந்த தாயின் மீது மகன் திடீரென தாக்குதல் நடத்தினார். ஆத்திரத்தில் தாயின் கழுத்தை நெரித்ததோடு மட்டுமன்றி, கத்தியால் குத்தியும், வீட்டிலிருந்த கல்லால் தலையில் அடித்தும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.</p><h2>கைது</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாயைக் கொலை செய்த மகனைக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைது</a> செய்து விசாரணை நடத்தினர். </p><p>முதற்கட்ட விசாரணையில், கொலை செய்த இளைஞர் கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகி, அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.</p><p>இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் பொருட்காட்சியில் தகராறு: தவெகவினர் 10 பேர் மீது வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-at-an-exhibition-in-thoothukudi-case-filed-against-10-tvks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-at-an-exhibition-in-thoothukudi-case-filed-against-10-tvks#comments</comments><guid isPermaLink="false">60259a83-f15c-4715-abbb-62abcdcc164a</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:56:09 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:56:09.177Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Thoothukudi,தூத்துக்குடி,Exhibition,பொருட்காட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/073s3f8x/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/073s3f8x/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆலயம் அருகே உள்ள மைதானத்தில் பொருட்காட்சிக்கான பணிகள் நடந்து வருகின்றன. </p><p>இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு பொருட்காட்சி அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருந்தன. அப்போது, அங்கு வந்த த.வெ.க.வை சேர்ந்த திவாகர் உள்ளிட்ட 10 பேர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு இருந்த நாற்காலி, டியூப் லைட் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்களாம். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. </p><p>இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து பொருட்காட்சி ஏற்பாட்டாளர் டென்சிங் கொடுத்த புகாரின் பேரில் த.வெ.க.வை சேர்ந்த திவாகர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா...! - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shall-we-start-the-next-innings-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shall-we-start-the-next-innings-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">efb65330-e5de-47e3-a925-435a26dc736c</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:48:54 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:48:54.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/eefn622e/uthayanithistalin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/eefn622e/uthayanithistalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>47-வது ஆண்டு</h2><p>திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைப் பிரிவுகளில் ஒன்றான தி.மு.க. இளைஞர் அணி இன்று தனது 47-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி,<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95."> தி.மு.க. </a>இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-</p><h2>அடுத்த இன்னிங்ஸ்</h2><p>கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மிசா Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் திமுக இளைஞரணி  இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த  இன்னிங்ஸை  ஆரம்பிக்கலாமா..!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>100 சேவல்கள் பலியிட்டு அன்னதானம்... ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடி படையல் திருவிழா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/100-roosters-sacrificed-for-charity-aadi-badayal-festival-where-only-men-participated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/100-roosters-sacrificed-for-charity-aadi-badayal-festival-where-only-men-participated#comments</comments><guid isPermaLink="false">12874f5c-379c-4547-a094-895af03df6f8</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:39:16 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:39:16.248Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Aadi festival,ஆடி திருவிழா,ஆண்கள்,Rooster,சேவல்,mens</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/p9opyh1o/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/p9opyh1o/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடி படையல் திருவிழா நேற்று நடைபெற்றது. </p><p>இதையொட்டி கிரா மத்தினர் பலரும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மதுரைவீரன் சுவாமிக்கு சேவல்களை பலியிட்டு வழிபாடு நடத்தினர். அதன்படி 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு வழிபட்டனர். </p><p>தொடர்ந்து பலியிடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பெரிய, பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்டன. சேவல் கறியுடன், மொச்சைப்பயறு கலந்து உணவு சமைக்கப்பட்டது. இந்த உணவுகளை ஆண்கள் மட்டுமே சமைத்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் வாழை இலை போட்டு பக்தர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சாப்பிட்டனர். </p><p>பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பெண்களுக்கு அன்னதானம் சாப்பிட அனுமதி இல்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும். இதற்கிடையே நேற்று விழா நடக்கும்போது திடீரென அப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி மாதம் பிறந்தும் குறையாத மீன் விலை: என்ன காரணம்? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fish-prices-remain-high-despite-the-onset-of-the-aadi-month-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fish-prices-remain-high-despite-the-onset-of-the-aadi-month-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">50a47e4c-51b0-4b9c-a282-cb337b0e624f</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:29:49 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:29:49.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மீன்கள்,Aadi Month,ஆடி மாதம்,மீன் விலை,Fish prices rise,மீன் விலை உயர்வு,fish prices</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/3z039cpi/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/3z039cpi/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><h2>அதிகரித்து வரும் மீன் விலை</h2><p>தமிழ் மாதமான ஆடி மாதம் பிறந்து 3 நாட்கள் ஆகிறது. அம்மன் மற்றும் முருகனுக்கு இது உகந்த மாதம் என்பதால், அசைவப் பிரியர்களில் பெரும்பாலானோர் ஆடி மாதத்தில் இறைச்சி சாப்பிடுவதில்லை. </p><p>இதனால், ஆடி மாதத்தில் மீன் விலை வழக்கமாக குறையும். ஆனால், இந்த ஆண்டு குறைவதற்கு பதில் அதிகரித்து வருவது அசைவப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>காசிமேட்டில் அலைமோதிய கூட்டம்</h2><p>சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 6 மாதங்களாக மீன் விலை குறையவே இல்லை. மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகாவது மீன் விலை குறையும் என்று எதிர்பார்த்தால், மீன் பிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. </p><p>தடைக்காலம் முடிந்து ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில், ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் விலை குறைந்திருக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான மீன் பிரியர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தனர். </p><h2>மீன்களுக்கு தட்டுப்பாடு</h2><p>கடலுக்கு சென்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரைக்கு திரும்பின. ஆனாலும், மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் மீன் விலை குறையவில்லை. கடுமையாக உயர்ந்திருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அசைவப் பிரியர்கள் வேறு வழியில்லாமல் சிறிய வகை மீன்களையே வாங்கிச் சென்றனர். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/av7eeams/8.gif" /></figure><h2>என்ன காரணம்.?</h2><p>இதுகுறித்து மீன் வாங்க வந்த சிலர் கூறியதாவது:-</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மீன் வரத்து குறைவாகவே உள்ளது. ஆனாலும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மீன்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால், உள்ளூர் மக்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் விலை அதிகமாக இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், மீன்பிடி துறைமுகத்திலேயே மீன்கள் கிடைக்காமல் போகும். எனவே, மீன்வளத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p><h2>விலை பட்டியல்</h2><p>இந்த நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று வஞ்சிரம் (ஒரு கிலோ) ரூ.1,300-க்கும், ஐ வவ்வால் ரூ.1,900-க்கும், வெள்ளை வவ்வால் ரூ.1,400-க்கும், கறுப்பு வவ்வால் ரூ.1,100-க்கும், பாறை ரூ.700-க்கும், கடல் விரால் ரூ.600-க்கும், சீலா ரூ.600-க்கும், சங்கரா ரூ.400-க்கும், கடம்பா ரூ.400-க்கும், நெத்திலி ரூ.250-க்கும், கானாங்கத்தை ரூ.300-க்கும் விற்பனை ஆனது.</p> ]]></content:encoded></item><item><title>தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-will-be-taught-a-lesson-through-democratic-means-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-will-be-taught-a-lesson-through-democratic-means-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">77841ced-1200-4234-a5ac-f513a1478ed6</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:41:50 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:41:50.368Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,திமுக,DMK,கைது,arrest,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/m59bjd6i/kanimozi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/m59bjd6i/kanimozi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசிய புகாரில் </p><p>திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது காவல்துறை.  மிரட்டல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்தநிலையில், திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p><p>விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  அவர்களை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அராஜகமான முறையில் கைது</a> செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.  உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. <a href="https://x.com/mlavilathikulam?ref_src=twsrc%5Etfw">@mlavilathikulam</a> அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.<br><br>விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2079041444044771512?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூரில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/idol-making-work-intensifies-in-vellore-ahead-of-vinayagar-chaturthi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/idol-making-work-intensifies-in-vellore-ahead-of-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">b5ae54d5-27e7-41a1-a91b-e680ea31e7f1</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:39:55 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:39:55.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,சிலைகள்,Idols</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/2epqvqal/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/2epqvqal/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூரில் சிறிய விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.</p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபடுவார்கள். 1 அடி சிலை முதல் 10 அடிக்கும் மேலான பிரம்மாண்ட சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும்.</p><p>அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும். பின்னர் ஆங்காங்கே வைக்கப்பட்ட 2 நாட்கள் கழித்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலை களில் கரைப்பார்கள்.</p><p>பக்தர்கள் பலர் தங்கள் வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடுவார்கள். அப்போது களிமண்ணால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து அருகம்புல் சாத்தி, கொழுக்கட்டை படைத்து வழிபடுவார்கள். இதையொட்டி வேலூரில் சிறிய சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.</p><h2>பணிகள் தீவிரம்</h2><p>இதுகுறித்து விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி கைகளால் சிலைகள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். ஆண்டு தோறும் எங்களுக்கு மண் தட்டுப் பாடு ஏற்படும்.</p><p>ஏரியில் களிமண் எடுக்க உரிய காலத்துக்குள் விரைந்து அனுமதி அளிக்கப்பட வேண்டும். கைகளால் தயாரிக்கும் சிலைகளை பொதுமக்களும் பலர் ஆர்வமுடன் வாங்கி செல்வார்கள். தற்போது வெயில் தாக்கம் உள் ளதால் தற்போதே நாங்கள் சிலை தயாரிப்பு பணியை தொடங்கி விட் டோம். சிலை அளவுக்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்கிறோம், என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுகவின் கட்டப்பா நான் - நடிகர் சத்யராஜ் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-dmks-kattappa-actor-sathyaraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-dmks-kattappa-actor-sathyaraj#comments</comments><guid isPermaLink="false">b31111da-a089-4ba9-a2af-14f974ae9bcb</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:27:52 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:27:52.379Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,நடிகர் சத்யராஜ்,Actor Sathyaraj,கட்டப்பா,kattappa</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/p4ktho69/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/p4ktho69/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் கணினி கல்வியகம், மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் கணினி, தையல் மற்றும் அழகுக் கலை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சி முடித்த 250 மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்.</p><p><strong>இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-</strong></p><p>திமுக தேர்தலில் பங்கேற்க தொடங்கப்பட்ட கட்சி அல்ல, சமூகத் தொண்டு, சமூக சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மக்களுக்கு செய்கின்ற சேவைதான், தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் என்றும் முக்கியமானதாக இருக்கும், சமூகத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களை மேல்நிலைக்கு கொண்டு வருவதுதான் இவர்களின் முக்கியமான நோக்கம். </p><p>ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இதுதான் அவர்களின் முக்கிய குறிக்கோள். கிண்டி ரேஸ் கோர்ஸில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வந்து திறக்க வாய்ப்பு இருக்கிறது என நான் நம்புகிறேன். யார் கட்சி தொடங்கினாலும் ஆட்சி நடத்தினாலும் கொள்கைத் தலைவர்களாக பெரியாரையும் அம்பேத்கரையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி திட்டம், நலத்திட்டம் ஆகியவற்றில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உருவானது மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான். அதனை தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் திட்டங்களின் பெயரை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளுங்கள்.</p><p>ஆனால் திட்டங்களை மாற்றாதீர்கள். ஏனெனில் மக்கள் நலன் முக்கியம். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், திமுக வகுத்த பாதையில் செல்வதுதான் நாட்டுக்கு நல்லது‌. இன்னைக்கு யார் அமைச்சர்னு தெரியல.. ஆனா என்னைக்கும் என் அன்புத்தம்பி மா.சுப்பிரமணியன்தான் சுகாதாரத்துறை அமைச்சர்.</p><p>இந்த இயக்கம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நிச்சயம் அதற்கு உறுதுணையாக இருப்பேன், ஆளுங்கட்சியாக இருக்கும்போது அட்டையாக ஒட்டிக் கொள்பவன் நான் அல்ல, திமுகவின் கட்டப்பா நான் என்று கூட சொல்லி கொள்ளுங்கள். எங்களுக்கு சினிமாவில் நான்கு காசு கிடைக்கிறது என்றால், அதற்கு தமிழ்நாடு நன்றாக இருப்பதுதான் காரணம். திமுக இயக்கம், தமிழ்நாட்டிற்கு எப்போதும் காவலனாக இருக்கும்.</p><p>நாம வாங்கி கொடுத்த ஆட்டோவில் வேறு ஏதோ கொடி பறக்குதே என சொன்னார்கள். எவ்வளவு நாள் பறக்கிறது என்று பார்க்கலாம். அவசரப்பட்டு மாற்றம் மாற்றம் என சொல்லி ஓட்டு போட்டு விட்டோம். குழந்தைகள், நண்பா, நண்பீஸ் எல்லாம் பெரியவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தேயிலை விற்பனையில் புதிய சாதனை... தென் மாநில ஏலத்தில் ரூ. 53 கோடி வருவாய்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-record-in-tea-sales-rs-53-crore-revenue-in-southern-state-auction</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-record-in-tea-sales-rs-53-crore-revenue-in-southern-state-auction#comments</comments><guid isPermaLink="false">4566566f-7427-4e84-a4ef-a04fa9c78673</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:47:04 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:47:04.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விற்பனை,Sale,revenue,வருவாய்,Tea,தேயிலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/x5b79rc5/tea.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/x5b79rc5/tea.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குன்னூர்</p><p>தென் மாநில அளவில் நடைபெற்ற, 29வது வார தேயிலை ஏலத்தில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வர்த்தகம் வளர்ச்சியை கண்டு உள்ளது.</p><p>குன்னுார், டீசர்வ், கோவை, கொச்சி என நான்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20">தேயிலை</a> ஏல மையங்களில் வாரந்தோறும் இரு நாட்கள் ஏலம் நடக்கிறது.</p><h2>வருவாய் உயர்வு</h2><p>தென் மாநில அளவில் நடந்த 29வது ஏலத்தில், 47.02 லட்சம் கிலோ தேயிலை வரத்து இருந்த நிலையில், 41.69 லட்சம் கிலோ விற்று,  ரூ.52.96 கோடி வருவாய் கிடைத்தது. கடந்தாண்டு, இதே காலக்கட்டத்தில் 43.65 லட்சம் கிலோவந்ததில், 32.95 லட்சம் கிலோ விற்பனையாகி,  ரூ.36.31 கோடி  மொத்த வருவாய் கிடைத்தது. இதை ஒப்பிடுகையில், நடப்பாண்டு  ரூ.16.65 கோடி வருவாய் உயர்ந்துள்ளது.</p><h2>அபார வளர்ச்சி</h2><p>குன்னுார் ஏல மையத்தில் விற்பனையும், சராசரி விலையும் அதிகரித்து அபார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. கொச்சி மற்றும் கோவை மையங்களும் விற்பனையளவில் வளர்ச்சியை எட்டின.  ‘டீசர்வ்’ மையம் மட்டும் விற்பனை வருவாயில் கடந்த ஆண்டை விட சற்று சரிவை சந்தித்தது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரியில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-the-nilgiris-experiencing-power-outages-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-the-nilgiris-experiencing-power-outages-today#comments</comments><guid isPermaLink="false">c027f07d-bff0-4228-89a2-8a04bc2820a2</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:25:16 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:25:16.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>power outage,மின் தடை,Nilgiris,நீலகிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/h529xrvj/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/h529xrvj/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>கூடலூர், சேரம்பாடி மற்றும் உப்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோ கம் இருக்காது. இதன்படி கூடலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1-வது மைல், 2-வது மைல், காந்திநகர், முதுமலை, அத்திபள்ளி, தொரப்பள்ளி, பாடாந் தொரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக் கோட்டை, கார்குடி, தேவர்சோலை ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.</p><p>இதேபோல் சேரம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சேரம்பாடி டவுன், எருமாடு, சோலாடி, கன்னம்வயல், தாளூர், நாயக்கன்சோலை, பொன்னச்சேரர், கையுன்னி, கக்குண்டி ஆகிய பகுதிகளிலும், உப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உப்பட்டி, அத்திகுன்னா, குந்தலாடி. பொன்னானி, கொளப்பள்ளி, ராக்வுட், தேவாலா, எல்லமாலா, அய்யன் கொல்லி, பந்தலூர், நாடுகாணி மற்றும் வுட் பிரேர் நம்பர் 3 டிவிஷன் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.</p><p>இதேபோல் குந்தா துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் குந்தா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சூர், கீழ்குந்தா, தோட்ட கம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், கரியமலை, தாய்சோலை, கோரகுந்தா, கிண்ணக்கொரை, இரிய சீகை, மஞ்சக்கொம்பை, குந்தா பாலம், பெங்கால் மட்டம். முக்கிமலை, எடக்காடு, காயகண்டி, எமரால்டு, அண்ணாநகர், தூனேரி, மட்ட கண்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ரூ.38 கோடி அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-udangudi-karupatti-traders-fined-rs-38-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-udangudi-karupatti-traders-fined-rs-38-crore#comments</comments><guid isPermaLink="false">81e47c48-1d6f-4742-a78b-96196bfe37bc</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:24:34 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:24:34.518Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,GST,ஜி.எஸ்.டி.,Udangudi,உடன்குடி,உடன்குடி கருப்பட்டி,Udangudi karupatti</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/a7v10x6o/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/a7v10x6o/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>குலசேகரன்பட்டினம்,</p><h2>கருப்பட்டிக்கு வரி விலக்கு</h2><p>'கற்பகத்தரு' என்று அழைக்கப்படும் பனையில் இருந்து கிடைக்கப்பெறும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கின்றனர். பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் உடன்குடி பகுதியில் பலரும் பனைத்தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு கருப்பட்டி தயாரித்து விற்கின்றனர்.</p><p>பனை தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்துள்ளது. எனினும் அவற்றை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.</p><h2>சீனி மூட்டைகள் விற்பனை அதிகம்</h2><p>ஆனால் பதநீரில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக சீனி கலந்து கருப்பட்டி, கற்கண்டு போன்றவை தயாரித்தால், அவற்றுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பனை பொருட்களை சில்லறையில் விற்பனை செய்தால் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் சீனி மூட்டைகளை வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்ததாக நெல்லை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் உடன்குடி பகுதியில் ஆய்வு செய்தனர்.</p><h2>ஜி.எஸ்.டி. மோசடி</h2><p>இதில், உடன்குடி பகுதியில் கடந்த சில வாரங்களில் ரூ.5 கோடிக்கு சீனி மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்ததும், பதநீரில் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி ரூ.6 கோடி வரை விற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.</p><p>மேலும் சீனி கலந்து தயாரித்த கருப்பட்டிகளை அசல் கருப் பட்டி என்று கூறி கடைகளில் விற்றதால் 5 சதவீத ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரையிலும் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து விற்றுள்ளனர். இதன் மூலம் சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படாமல், 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது.</p><h2>ரூ.38 கோடி அபராதம்</h2><p>இவ்வாறு கடந்த 6 ஆண்டுகளில் கருப்பட்டி வியாபாரிகள் சிலர் பல்வேறு முறைகேடுகள் செய்தது கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக உடன்குடி பகுதியைச் சேர்ந்த 5 கருப்பட்டி வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா: திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆக. 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-krithigai-festival-at-tiruttani-murugan-temple-holiday-for-tiruvallur-district-on-aug-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-krithigai-festival-at-tiruttani-murugan-temple-holiday-for-tiruvallur-district-on-aug-6#comments</comments><guid isPermaLink="false">fa3aabe1-a168-4f29-9c1e-def75d34db71</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:11:22 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:11:22.371Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Local Holiday,Tiruttani Murugan temple,திருத்தணி முருகன் கோவில்,உள்ளூர் விடுமுறை,Aadi Krithigai,ஆடி கிருத்திகை விழா,Tiruvallur - திருவள்ளூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/qtg8ycg9/tirutani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/qtg8ycg9/tirutani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>உள்ளூர் விடுமுறை </h2><p>திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அடுத்த மாதம் 6-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் நடைபெற இருக்கும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">உள்ளூர் விடுமுறை</a> நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் இந்த மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார் நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு அடுத்த மாதம் 6-ந்தேதியன்று செயல்பட வேண்டும். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு அடுத்த மாதம் 8-ந்தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. எனவே இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவித்து கொள்ளப்படுகிறது. </p><p>இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக எம்.எல்.ஏ. கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-arrested-for-threatening-cm-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-arrested-for-threatening-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">0326c0f6-6c3d-49da-857d-2567050c7cd1</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:00:49 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:00:49.923Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,vilathikulam,விளாத்திகுளம்,DMK MLA,திமுக எம்.எல்.ஏ.,CM Vijay,மார்க்கண்டேயன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/vr59x9p1/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/vr59x9p1/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவில்பட்டி,</p><h2>தி.மு.க. பொதுக்கூட்டம்</h2><p>கோவில்பட்டியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன்கோவில் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கருணாநிதி எம். எல். ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெயக்கண்ணன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</p><h2>எலும்புகள் இருக்காது...</h2><p>கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசும்போது, “மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் உன்னை (விஜய்) சட்டமன்றத்துக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம். எங்களை என்ன கோமாளி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்... சட்டமன்றத்தை பூட்டுவோம் என நீ கூறுகிறாய்... சட்டமன்றத்தை பூட்டினால் உன் எலும்புகள் இருக்காது; எலும்பை உடைத்துதான் அனுப்பி விடுவோம் என்று முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசினார்.</p><p>முதல்-அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், சட்டமன்றத்திற்கு வாருங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மிரட்டும் தொனியிலும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்ண்டேயன் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திமுக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><h2>கைது</h2><p>இந்த நிலையில், முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.</p><p>விளத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-counseling-for-engineering-courses-begins-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-counseling-for-engineering-courses-begins-today#comments</comments><guid isPermaLink="false">cccc8b6a-62c8-4859-b22d-4575e0603815</guid><pubDate>Mon, 20 Jul 2026 01:16:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T01:16:05.505Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>என்ஜினீயரிங் கல்லூரி,என்ஜினீயரிங் படிப்பு,Engineering Colleges,Engineering courses,என்ஜினீயரிங் கலந்தாய்வு,Engineering Admissions,engineering counseling</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/amvz2ezc/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ என்ஜினீயரிங் கலந்தாய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/amvz2ezc/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.</p><h2>என்ஜினீயரிங் படிப்பு</h2><p>என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் விளையாட்டு பிரிவில் 3 ஆயிரத்து 210 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 500 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவில் 1,176 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.</p><p>அவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 258 பேரும், விளையாட்டுப் பிரிவில் 416 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவில் 139 பேரும் என மொத்தம் 813 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.</p><h2>பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்</h2><p>இதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. ஆன்லைன் மூலம் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. மொத்தம் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடக்க இருக்கும் நிலையில், முதல் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பொது தரவரிசையில் 1 முதல் 37,976 வரையிலான இடங்களில் உள்ள மாணவ-மாணவிகள் பங்கேற்க இருக்கின்றனர்.</p><p>2-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரையில் நடக்கிறது. அதில் பொது தரவரிசையில் இடம்பெற்ற 37,977 முதல் 1,31,093 வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள். 3-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்கி 31-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதில் பொது தரவரிசையில் 1,31,094 முதல் 2,33,812 வரையில் இடம்பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்.</p><h2>31-ந் தேதியுடன் நிறைவு</h2><p>அதேபோல், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடக்கிறது. அந்த கலந்தாய்வும் இன்று தொடங்கி அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் பட்சத்தில் அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி-பாலக்காடு ரெயில் பகுதியாக ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-palakkad-train-partially-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-palakkad-train-partially-cancelled#comments</comments><guid isPermaLink="false">8d43becf-2589-442a-874e-40fc168bf1bb</guid><pubDate>Mon, 20 Jul 2026 01:02:12 +0000</pubDate><atom:updated>2026-07-20T01:02:12.708Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/mcmvq3ac/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/mcmvq3ac/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,  </p><p>சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-</p><p>கரூர் அருகே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய திருச்சி-பாலக்காடு விரைவு ரெயில் (எண் 16843) கரூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு பாலக்காடு ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரெயிலானது, அன்றைய தினம் திருச்சி -கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு விமான கட்டணம் குறைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reduction-in-airfare-from-trichy-to-bengaluru</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reduction-in-airfare-from-trichy-to-bengaluru#comments</comments><guid isPermaLink="false">95fe6d58-ed4b-41b2-a5f4-acc560038635</guid><pubDate>Mon, 20 Jul 2026 00:56:01 +0000</pubDate><atom:updated>2026-07-20T00:56:01.550Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,விமான கட்டணம்,Airfare</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/jjy9jguh/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/jjy9jguh/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான சேவைகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு ஒரு வழிப்பாதை சேவை கட்டணத்தை ரூ.3000 ஆக நிர்ணயம் செய்துள்ளது.</p><p>இந்த கட்டணமானது இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை தொடரும் என்று அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் குறைந்த செலவில் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு ஒரு வழி கட்டணமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: பெண் வியாபாரியிடம் தாலிச்சங்கிலி பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-thali-chain-snatched-from-a-female-trader</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-thali-chain-snatched-from-a-female-trader#comments</comments><guid isPermaLink="false">1c3c5bc6-e924-4203-b48a-87609bf1191b</guid><pubDate>Mon, 20 Jul 2026 00:42:37 +0000</pubDate><atom:updated>2026-07-20T00:42:37.015Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,நகை பறிப்பு,சேலம்,chain snatched</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/pu5whsgs/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/pu5whsgs/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>சேலம் அருகே கருப்பூர் திடீர் பட்டினத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாரதா (வயது 51). இவர், அங்குள்ள ஒரு முருகன் கோவில் அருகே காய்கறி கடை வைத்துள்ளார். நேற்று காலை அவர் கடையை திறந்து வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர். வண்டியை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றார். இதையடுத்து அந்த வாலிபர், சில காய்கறிகளை வாங்கிக்கொண்டு தேங்காய் கேட்டுள்ளார். </p><p>இதையடுத்து சாரதா 2 தேங்காய்களை எடுத்து கொடுத்தபோது, அவர் கழுத்தில் அணிந் திருந்த 22 கிராம் எடை கொண்ட தாலிச்சங்கிலியை அந்த வாலிபர் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இது குறித்த புகாரின்பேரில் கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சாரதாவிடம் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.</p><p>&lt;</p>]]></content:encoded></item><item><title>கீழடியின் பெருமையை உலக அளவில் பறைசாற்றுவோம் - அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-proclaim-the-glory-of-keeladi-to-the-world-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-proclaim-the-glory-of-keeladi-to-the-world-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">5bad7899-6396-4786-b627-e155329ba18c</guid><pubDate>Sun, 19 Jul 2026 19:59:52 +0000</pubDate><atom:updated>2026-07-19T19:59:52.341Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜ்மோகன்,Minister Rajmohan,பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan inspects</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/ko7dzwes/rajmohan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/ko7dzwes/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் அகழாய்வு நடை பெற்ற இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள திறந்தவெளி அருங்காட்சிய கத்தை அமைச்சர் ராஜ்மோகன் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். தற்போது நடந்து வரும் 11-ம் கட்ட அகழாய்வு தளத்தையும் பார்வை யிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>இதற்கு முந்தைய அரசுகள் செய்த நல்ல திட்டங்களை எந்த துறையாக இருந்தாலும் ஒருபோதும் நிறுத்தப்படாது.</p><h2>மாணவர் சேர்க்கை</h2><p>கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் மற்றும் அறிவியல் சான்றுகளை முறையாக தொகுத்து, மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து உலக அளவில் கீழடியின் பெருமையை பறைசாற்ற அரசு தொடர்ந்து பாடுபடும். மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தாலும் எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது. 10 மாணவர்கள் இருந்தாலும் வீடுவீடாக சென்றாவது மாணவர்களை சேர்த்து பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படும்.</p><p>முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. த.வெ.க. அரசின் லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு பள்ளி களில் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படும். அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் த.வெ.க.வை நோக்கி வருகின்றனர். கட்சியில் இணையும் அனைவரையும் அரவணைத்து செல்வோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>மலை குகைகளில் ஆய்வு</h2><p>இதேபோல் மதுரை மாவட்டம் மாங்குளம் மீனாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இருவகை மலைக்குகைகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வை யிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அந்த படுகைகளில் படுத்தும், அமர்ந்தும் ஆய்வு செய்தார்.</p><p>தொடர்ந்து அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராஜ்மோகன்</a> நிருபர்களிடம் கூறுகையில், "கீழடி அகழாய்வு என்பது தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், உலக நாகரிகத்திற்கே மிகப்பெரிய தாய்மடி போன்றதாகும். எனவே, அறிவியல் பூர்வமாக, இன்னும் கூடுதல் ஆதாரங்களுடன் முறையான வழிகளில் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து அது நிரூபிக்கப்பட உள்ளது. சரியான தருணத்தில், நாம் எல்லோரும் பெருமைப்படத்தக்க வகையில் இன்னும் ஒரு மாபெரும் விஷயம் துல்லியமான ஆதாரங்களோடு முறைப்படி விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல்லில் கோர விபத்து: மேல்நிலை குடிநீர் தொட்டி விழுந்து 2 பேர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-in-namakkal-2-killed-as-overhead-water-tank-collapses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-in-namakkal-2-killed-as-overhead-water-tank-collapses#comments</comments><guid isPermaLink="false">ffb1e302-4be3-4629-aff9-fe9674140608</guid><pubDate>Sun, 19 Jul 2026 19:11:21 +0000</pubDate><atom:updated>2026-07-19T19:11:21.340Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/eo0ftv3e/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/eo0ftv3e/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே சரக்கு வாகனம் மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூணில் மோதியதில், தொட்டி வாகனத்தின் மீது சரிந்து விழுந்து டிரைவர் மற்றும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>குடிநீர் தொட்டியில் மோதியது</h2><p>திருச்செங்கோடு தாலுகா வையப்பமலையில் இருந்து முட்டைகள் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை நோக்கி நேற்று மாலை சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. அந்த வாகனத்தை திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (23) ஓட்டிச் சென்றார். அவருடன் மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலாளி குமார் (29) பயணம் செய்தார்.</p><p>மல்லசமுத்திரம் அருகே மேட்டுப்பாளையம் சத்யாநகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூண்களில் பலத்த வேகத்தில் மோதியது.</p><h2>2 பேர் பலி</h2><p>இதன் தாக்கத்தில் குடிநீர் தொட்டியின் தூண்கள் முறிந்து, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி முழுவதுமாக சரக்கு வாகனத்தின் மீது சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் டிரைவர் சுபாஷ் மற்றும் தொழிலாளி குமார் ஆகியோர் வாகனத்துக்குள் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் பணியினர், ராட்சத குடிநீர் தொட்டி வாகனத்தின் மீது விழுந்திருந்ததால் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டதையடுத்து இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் <a href="https://www.dailythanthi.com/news/india">பரிசோதனைக்காக </a>அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.</p><p>இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-7</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-7#comments</comments><guid isPermaLink="false">ab379855-a07e-4f2a-b0a2-17995a5173a9</guid><pubDate>Sun, 19 Jul 2026 18:46:08 +0000</pubDate><atom:updated>2026-07-19T18:46:08.850Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/kjxobebk/min.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/kjxobebk/min.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 20.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>ஆவடி</strong>: வைஷ்ணவி நகர் 1 முதல் 10வது தெருக்கள் வரை, சாந்திபுரம், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர் எ மற்றும் பி தெருக்கள், இந்திரா காந்தி நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டி.ஆர்.ஆர். தெரு, நேதாஜி நகர்.</p><p><strong>தாம்பரம்</strong>: கிருஷ்ணா நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், கிருஷ்ணா நகர் 1வது முதல் 8வது தெருக்கள் வரை, ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாலகிருஷ்ணன் நகர், முடிச்சூர் சாலை, பழைய பெருங்களத்தூர்.</p><p><strong>பெரும்பாக்கம்</strong>: பெருமாள் கோவில் ஆர்ச், அப்பர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, லட்சுமி அப்பாதுரை தெரு, சாய் ஆயுஷா அடுக்குமாடி குடியிருப்பு, ராக அமிர்தா அடுக்குமாடி குடியிருப்பு, முருகன் கோவில் ஆர்ச், மந்தவெளி தெரு, சூரியா நகர், ஜெயா நகர், சைதன்யா பள்ளி, தபால் அலுவலகம், சத்ய சாய் நகர்.</p><p><strong>பல்லாவரம்</strong>: சாரா நகர், யூனியன் கார்பைடு காலனி, பார்த்தசாரதி தெரு, சாஸ்தா நகர், திருவேங்கடமுடையான் தெரு, ரங்கசாமி தெரு.</p><p><strong>அனகாபுத்தூர்</strong>: பால்சன் கம்பெனி, அண்ணா சாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, அப்துல்கலாம் சாலை, தென்னவன் தெரு, சௌந்தரம்மன் தெரு, ஸ்ரீபுரம், சரஸ்வதிபுரம், ஈஸ்வரி நகர், கண்ணாயிரம் தெரு, துளசிங்கம் தெரு, அப்பு தெரு.</p><p><strong>மாத்தூர்</strong> :மாத்தூர் எம்எம்டிஏ,பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, சின்னசாமி நகர், காமராஜர் சாலை, காமராஜ் சாலை-மஞ்சம்பாக்கம் அனைத்து தெருக்கள், அசிஸ் நகர், அகர்சன் கல்லூரி சாலை, மேற்குத் தோட்டம், காத்தாக்குழி, திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமாரராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர் பகுதி, தீயப்பாக்கம் முழு பகுதி, சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம் பகுதி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வடபெரும்பாக்கம் </a>தொழில் பூங்கா, பார்வதிபுரம், ஸ்ரீனிவாசா மாடர்ன் டவுன் , கன்னி அம்மன் நகர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலி மது பாட்டிலுக்கு ரூ.10-க்கு பதிலாக ரூ.8 வழங்கியதால் தகராறு: தட்டி கேட்டவருக்கு மண்டை உடைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-paying-8-instead-of-10-for-an-empty-liquor-bottle-man-who-questioned-it-suffers-a-head-injury</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-paying-8-instead-of-10-for-an-empty-liquor-bottle-man-who-questioned-it-suffers-a-head-injury#comments</comments><guid isPermaLink="false">dd731b7c-f9e0-46c8-ba77-828b963f3535</guid><pubDate>Sun, 19 Jul 2026 17:45:31 +0000</pubDate><atom:updated>2026-07-19T17:45:31.797Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,டாஸ்மாக்,Tasmac,thiruvanamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/i0wdrmtx/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/i0wdrmtx/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை ,</p><p>திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளில் ஒன்று மூடப்பட்டதைத் தொடர்ந்து, புதுப்பட்டு சாலையில் உள்ள இந்த கடைக்கு மதுபிரியர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் மது வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>பாட்டிலுக்கு ரூ.10</h2><p>இந்த நிலையில், செ. நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், தனது திருமண நாளையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் காலி பாட்டில்களை திருப்பி ஒப்படைக்க டாஸ்மாக் கடைக்கு சென்றார்.</p><p>அப்போது, ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 வழங்க வேண்டிய நிலையில், ரூ.8 மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவிந்தராஜ் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள், பீர் பாட்டிலால் அவரை தாக்கியதாக தகவல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெளியாகியுள்ளது</a>.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த தாக்குதலில் கோவிந்தராஜ் தலையில் பலத்த காயமடைந்து ரத்தக் காயத்துடன் கீழே சரிந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்வர் கோளாறு காரணமாக நுழைவுச்சீட்டு பெறுவதில் சிக்கல்; களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/issues-in-obtaining-entry-tickets-due-to-a-server-glitch-tourists-face-hardship-at-kalakkad-thalaiyanai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/issues-in-obtaining-entry-tickets-due-to-a-server-glitch-tourists-face-hardship-at-kalakkad-thalaiyanai#comments</comments><guid isPermaLink="false">6b0918c4-d22e-43b5-a8c7-671a811e41bf</guid><pubDate>Sun, 19 Jul 2026 16:44:56 +0000</pubDate><atom:updated>2026-07-19T16:44:56.586Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,களக்காடு,Kalakkadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/juber5j3/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/juber5j3/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஞாயிறு வார விடுமுறை என்பதால் தலையணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். </p><p>இந்நிலையில், சர்வர் கோளாறு காரணமாக நுழைவுச்சீட்டு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சுற்றலா பயணிகளை வனத்துறை சோதனை சாவடியில் அனுமதிக்க மறுத்துள்ளனர். விடுமுறையையொட்டி அதிகமான சுற்றலா பயணிகள் வருகை தந்த நிலையில், குளிப்பதற்கு அனுமதி கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். </p> ]]></content:encoded></item><item><title>கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி தற்காலிக மூடல் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolli-hills-agaya-gangai-waterfalls-temporarily-closed-tourists-disappointed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolli-hills-agaya-gangai-waterfalls-temporarily-closed-tourists-disappointed#comments</comments><guid isPermaLink="false">1afc7796-b913-4380-8b2b-9e74d89f3828</guid><pubDate>Sun, 19 Jul 2026 16:24:59 +0000</pubDate><atom:updated>2026-07-19T16:24:59.066Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,கொல்லிமலை,kollimalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8x833ov6/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8x833ov6/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல்லின் முக்கியமான அடையாளம் கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகளின் பயணத்தை அனுபவிக்க, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு குவிகின்றனர்.</p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>சுற்றுலா பயணிகள் வரும்போது சோளக்காடு அருகே உள்ள நம் அருவி, எட்டுக்கை அம்மன், வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். அத்துடன் மாசிலா அருவி மற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள்.</p><h2>தற்காலிக மூடல்</h2><p>இந்த நிலையில் ஆகாயங்கை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து இல்லாத காரணத்தால் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. சிறுவர் பூங்காவும் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிறுக்கிழமை விடுமுறை நாளான இன்று கொல்லிமலைக்கு வந்த சுற்றுழா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இஸ்கான் கோவில் ரத யாத்திரை கோலாகலம் - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-iskcon-temple-rath-yatra-in-chennai-hundreds-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-iskcon-temple-rath-yatra-in-chennai-hundreds-participate#comments</comments><guid isPermaLink="false">054ed4aa-287c-4a14-9414-b66c16012100</guid><pubDate>Sun, 19 Jul 2026 16:08:21 +0000</pubDate><atom:updated>2026-07-19T16:08:21.327Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ISKCON,இஸ்கான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/pk3i4s82/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/pk3i4s82/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இஸ்கான் கோவில் சார்பில் ரத யாத்திரை விமரிசையாக நடைபெற்றது. ஜெகன்னாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்கள் சிறப்பு அலங்காரங்களோடு தீப ஆராதனை காட்டப்பட்டு ரதத்தில் எழுந்தருளினர். பாலவாக்கத்தில் இருந்து ரத யாத்திரை முறைப்படி துவங்கியது. </p><p>அங்கிருந்து புறப்பட்ட ரதம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்து அக்கரையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலை வந்தடைந்தது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலதாளங்கள் முழங்க, ‘ஹரே கிருஷ்ணா ஹரே ராமா’ என கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் நடனமாடி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோத்தகிரியில் நிலையான விலை: கொடி பீன்ஸ் பயிரிட விவசாயிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stable-prices-for-creeper-beans-in-kothagiri</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stable-prices-for-creeper-beans-in-kothagiri#comments</comments><guid isPermaLink="false">93ea2d2e-2352-46ac-a371-36166f6ab237</guid><pubDate>Sun, 19 Jul 2026 16:07:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T16:07:12.469Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Price,விலை,தேயிலை,கோத்தகிரி,Kotagiri,பீன்ஸ்,விவசாயிகள் Farmers,Intensity தீவிரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/tiozggyt/beans.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பீன்ஸ் தோட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/tiozggyt/beans.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோத்தகிரி,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">கோத்தகிரி </a>மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக, குறுகிய காலப் பயிரான பீன்ஸ் பயிரிடுவதில் விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதியில் தேயிலை பிரதான தொழிலாக இருந்தாலும், ஏராளமான விவசாயிகள் காய்கறி விவசாயத்தையும் நம்பியுள்ளனர். </p><p>தற்போது நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை, விதை, உரம் மற்றும் இடுபொருட்களின் கடுமையான விலை ஏற்றம் போன்ற காரணங்களால் விவசாயம் செய்ய பெரும் செலவு ஏற்படுகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று இந்த காய்கறி விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>நிலையான விலை</h2><p>மலை காய்கறிகளுக்கு கடந்த சில மாதங்களாக காய்கறி மண்டிகளில் கொள்முதல் விலை நிலையாக உள்ளது. மேலும் இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக உள்ளது. இந்நிலையில் கொடி பீன்ஸ் விலை கிலோவுக்கு 90 ரூபாய் வரை கிடைக்கிறது. மேலும் முத்திய அவரை (சோடகை) கிலோ 140 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருவ தால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் கொடி பீன்ஸ் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><p>தற்போது விவசாயிகள் பயிரிட்டுள்ள பீன்ஸ் தோட்டங்களில் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. இவை இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். </p> ]]></content:encoded></item><item><title>லண்டன் பயணம் நிறைவு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை வருகை- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-trip-concludes-dmk-leader-mk-stalin-arrives-in-chennai-enthusiastic-welcome-by-party-cadres</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-trip-concludes-dmk-leader-mk-stalin-arrives-in-chennai-enthusiastic-welcome-by-party-cadres#comments</comments><guid isPermaLink="false">debe134f-8cca-4fcb-90c5-2b50dfd24318</guid><pubDate>Sun, 19 Jul 2026 16:03:44 +0000</pubDate><atom:updated>2026-07-19T16:03:44.208Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Stalin,ஸ்டாலின்,Chennai,</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/2eu5v9mo/Stalin-mk.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/2eu5v9mo/Stalin-mk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p> தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு தொடர்பான பட்டப்படிப்பை படித்து முடித்தார். இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கடந்த 4-ந்தேதி சென்று சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். அப்போது அவர், 2 வாரங்கள் லண்டனில் தங்கி இருப்பேன் என்று தி.மு.க.வினருக்கு எழுதிய கடித வடிவிலான அறிக்கையில் தெரிவித்தார்.</p><h2>உற்சாக வரவேற்பு</h2><p>லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் கடந்த 14-ந்தேதி அன்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். பட்டம் பெற்ற பேரன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்தினார்.  இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் 2 வார கால லண்டன் பயணத்தை முடித்துகொண்டு  இன்று இரவு சென்னை திரும்பினார் அப்போது அவருக்கு பொன்னாடை, புத்தகங்கள் வழங்கி முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர். தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு கோஷங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>‘அதிகாரிகளை கவுன்சிலர்கள் வேலை செய்ய விடுவதில்லை; மாநகராட்சி தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்’ - அமைச்சர் சரத்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/councilors-do-not-let-officials-do-their-work-a-lesson-must-be-taught-in-the-municipal-corporation-elections-minister-sarathkumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/councilors-do-not-let-officials-do-their-work-a-lesson-must-be-taught-in-the-municipal-corporation-elections-minister-sarathkumar#comments</comments><guid isPermaLink="false">ee17b35e-504d-4d7d-995b-b7da86d60c11</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:52:58 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:52:58.653Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Sarathkumar,அமைச்சர் சரத்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/3l4k81zn/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/3l4k81zn/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார், தனது தொகுதியில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், எங்கள் தலைவர் எனக்கு அமைச்சர் பதவியை கொடுத்திருந்தாலும் தாம்பரம் மாநகராட்சியில் எனது தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்யவே முடியவில்லை. அதிகாரிகளை கவுன்சிலர்கள் வேலை செய்யவிடாமல் தடுக்கின்றனர். த.வெ.க.வினர் சென்று நியாயம் கேட்டால் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். </p><p>சட்டமன்ற உறுப்பினராக இருந்து எனது பணிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழ இருப்பவர்கள் அந்த பணிகளை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, மாநகராட்சி தேர்தல் வரும்போது அவர்களுக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டும். எல்லாமே உங்க கையில் மட்டும்தான் இருக்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>காவலர் ஆட்சேர்ப்பைத் தாமதப்படுத்துவது ஏன் ? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-delay-police-recruitment-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-delay-police-recruitment-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">5ebd9b0b-2fdf-4d6b-9230-0b6b8d1daf4d</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:23:31 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:23:31.403Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,கேள்வி,தாமதம்,delayed,ஏன்,Asked,Police Recruitment,காவலர் ஆட்சேர்ப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/1cwiiawv/velmurugan.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/1cwiiawv/velmurugan.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-காவலர் ஆட்சேர்ப்பைத் தாமதப்படுத்துவது ஏன் ? இளைஞர்களின் எதிர்காலத்தை , அரசே சிதைப்பது சரியா?</p><h2>நிர்வாக திறனின்மை</h2><p>தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டிய காவல்துறையிலேயே ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. இதை சரிசெய்ய வேண்டிய அரசு, புதிய காவலர் ஆட்சேர்ப்பு அறிவிப்பைக் கூட காலத்திற்குள் வெளியிட முடியாமல் இருப்பது நிர்வாக திறனின்மையின் வெளிப்பாடாகும்.</p> <h2>அரசு மதிக்கவில்லை</h2><p>காவலர் பணியை நம்பி பல மாதங்களாக உடற்தகுதி பயிற்சியும், எழுத்து தேர்வுக்கான தயாரிப்பும் மேற்கொண்டு வரும் இளைஞர்களின் உழைப்பை, இந்த அரசு மதிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்களின் கனவுகளை, அரசின் மெத்தனமான செயல்பாடு சிதைத்து கொண்டிருக்கிறது.</p> <h2>தார்மீக உரிமையும் இல்லை</h2><p>குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கும் சூழலில், காவல்துறையை வலுப்படுத்த வேண்டிய அரசு, காலிப்பணியிடங்களை நிரப்புவதில்கூட அக்கறை காட்டாதது ஏன்? காவல்துறைக்கு தேவையான மனிதவளத்தை உருவாக்காமல் பாதுகாப்பான தமிழ்நாட்டை பற்றி பேசுவதற்கு அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.</p><h2>அவமானகரமானது</h2><p>ஆட்சேர்ப்பு நடைமுறையை விரைந்து முடிக்க முடிந்தும், அதை இழுத்தடிப்பதால் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களே பாதிக்கப்படுகின்றனர். வயது வரம்பை காரணமாக கொண்டு, பலர் தங்களுக்குரிய வாய்ப்புகளை இழக்கும் நிலையை அரசே உருவாக்கியுள்ளது வேதனைக்குரியது.</p><p>இளைஞர்கள் அதிகம் கொண்ட ஆட்சி நிர்வாகத்தில், இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்பது அவமானகரமானது.</p><h2>வயது வரம்பு</h2><p>எனவே, நிலுவையில் உள்ள காவலர் ஆட்சேர்ப்பின் அனைத்து நடைமுறைகளையும் உடனடியாக நிறைவு செய்து முடிவுகளை வெளியிட வேண்டும். அதேநேரத்தில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">புதிய காவலர் ஆட்சேர்ப்பு</a> அறிவிப்பை தாமதமின்றி வெளியிட வேண்டும். அதற்கு இயலாத சூழல் இருப்பின், அரசின் அலட்சியத்திற்காக இளைஞர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக, வயது வரம்பில் உரிய தளர்வை அறிவிக்க வேண்டும்.</p> <h2>மெத்தனப்போக்கு</h2><p>வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் நம்பிக்கையை சிதைக்கும் மெத்தனப்போக்கை தமிழக அரசு கைவிட்டு, இளைஞர்களின் எதிர்காலத்திற்குரிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காவலர் ஆட்சேர்ப்பைத் தாமதப்படுத்துவது ஏன் ?இளைஞர்களின் எதிர்காலத்தை , <br>அரசே சிதைப்பது சரியா?<br><br>தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டிய காவல்துறையிலேயே ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. இதை சரிசெய்ய வேண்டிய அரசு, புதிய காவலர் ஆட்சேர்ப்பு அறிவிப்பைக் கூட… <a href="https://t.co/uyDeHg59XR">pic.twitter.com/uyDeHg59XR</a></p>&mdash; Velmurugan.T (@VelmuruganTVK) <a href="https://x.com/VelmuruganTVK/status/2078836819593138563?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item></channel></rss>