<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 07 Aug 2026 11:24:48 +0000</lastBuildDate><item><title>கருணாநிதி நினைவு நாள்: &apos;திட்டங்களிலிருந்து பெயரை நீக்கலாம்; வரலாற்றை மாற்ற முடியாது&apos; – கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karunanidhis-death-anniversary-name-can-be-removed-from-projects-history-cannot-be-changed-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karunanidhis-death-anniversary-name-can-be-removed-from-projects-history-cannot-be-changed-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">9da99e65-3cef-437d-9e0c-ad5b82620cae</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:20:03 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:20:03.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karunanidhi,Memorial Day,Kanimozhi,கனிமொழி எம்பி,கருணாநிதி நினைவு தினம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/coida86y/73.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/coida86y/73.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாள் இன்று கட்சித் தொண்டர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தையின் நினைவு நாளன்று திமுக எம்.பி.<a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி</a> தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-</p><h2>வரலாற்றை மாற்ற முடியாது</h2><p>“திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது. அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!" </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கருணாநிதி கொண்டு வந்த சில முக்கியத் திட்டங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.<br>ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.<br><br>அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, &quot;இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்&quot; என்று எழுதப்பட்டிருக்கிறது!<a href="https://x.com/hashtag/KalaignarForever?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KalaignarForever</a> <a href="https://t.co/ATYAtJ86MY">pic.twitter.com/ATYAtJ86MY</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2085587231260262611?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா: திமுகவின் நிலைப்பாடு என்ன? ஆர்.எஸ்.பாரதி பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-decide-stance-on-delimitation-bill-only-after-it-is-tabled-in-parliament-r-s-bharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-decide-stance-on-delimitation-bill-only-after-it-is-tabled-in-parliament-r-s-bharathi#comments</comments><guid isPermaLink="false">8306086c-d43f-4f40-91ce-1d9b65367ebd</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:18:51 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:18:51.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,ஆர்.எஸ்.பாரதி,RSBharathi,தொகுதி மறுவரையறை மசோதா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5mbmxbua/RS-bharathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.எஸ்.பாரதி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5mbmxbua/RS-bharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதற்கு ஆதரவு அளிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து தி.மு.க. முடிவு செய்யும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- தொகுதி மறுவரையறை தொடர்பாக தற்போது முடிவு எடுப்பது முன்கூட்டிய நடவடிக்கையாகும். மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்து கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். கடந்த முறை தொகுதி மறுவரையறை தொடர்பாக தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்ததுடன், சில பரிந்துரைகளையும் மத்திய அரசிடம் வழங்கியிருந்தது. </p><h2>மசோதா பார்த்த பிறகே</h2><p>அந்த பரிந்துரைகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.<a href="https://www.dailythanthi.com/news/india">மசோதா</a>வின் ஒவ்வொரு அம்சத்தையும் வரி வரியாக ஆய்வு செய்து, அதன் சாதக-பாதகங்களை விரிவாக விவாதித்த பிறகே ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.மசோதாவை முழுமையாக பார்த்த பிறகே கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்” என்று கூறினார். </p> <h2>பிரதிநிதித்துவ விகிதம்</h2><p>குறிப்பாக, 2026-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள  தொகுதி மறுவரையறை மசோதாவில், தற்போதுள்ள 543 மக்களவை தொகுதிகளை சுமார் 50 சதவீதம் உயர்த்தி 816 தொகுதிகளாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முறையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என்றும், தமிழ்நாட்டின்<a href="https://www.dailythanthi.com/news/india"> மக்களவை தொகுதி</a>கள் 39-ல் இருந்து 59 ஆக உயர்ந்தாலும், அதன் பிரதிநிதித்துவ விகிதம் சுமார் 7.2 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் ஆதரவற்றோர் தங்குமிட ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பு பயிற்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-training-for-homeless-shelter-coordinators-in-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-training-for-homeless-shelter-coordinators-in-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">9b36ca93-6a85-4537-ab0b-d0ed9a816788</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:00:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:00:31.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,volunteers,தன்னார்வலர்கள்,சிறப்பு பயிற்சி,special training</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/59jgcbvo/chennai-corporation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/59jgcbvo/chennai-corporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற ஆதரவற்றோர் தங்குமிடங்களுக்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி இன்று நடைபெற்றது.</p><h2>தன்னார்வலர்களுக்கு பயிற்சி</h2><p>மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற ஆதரவற்றோர் தங்குமிடங்களுக்கான (Shelter for Urban Homeless) நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedures – SOP) குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி இன்று (06.08.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இப்பயிற்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (NGOs) இயக்குநர்கள், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் (CCDO), கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டு அலுவலர்கள் (CDOs), தங்குமிட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தங்குமிட மேலாண்மையுடன் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.</p><h2>பாதுகாப்பான மற்றும் தரமான சேவை</h2><p>இப்பயிற்சியின் போது, நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) திறம்பட செயல்படுத்துவது குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக பயனாளிகள் சேர்க்கை மற்றும் மறுவாழ்வு, தங்குமிட மேலாண்மை, பதிவேடுகள் பராமரித்தல், சுகாதாரம் மற்றும் தூய்மை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள், குறைதீர் அமைப்பு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் நகர்ப்புற ஆதரவற்றோருக்கு கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.</p><p>மேலும், தங்குமிடங்களின் செயல்பாட்டில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சிறந்த நடைமுறைகள் பகிரப்பட்டு, அனைத்து பங்குதாரர்களிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.</p><p>இப்பயிற்சியானது, பெருநகர<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"> சென்னை மாநகராட்சி</a>, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, நகர்ப்புற ஆதரவற்றோருக்கு பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் கண்ணியமான தங்குமிட வசதிகளை உறுதி செய்வதற்கும், தொடர்ச்சியான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலின்  ரூ.900 கோடி ஏன் வாங்கினார்? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - உதயநிதி இடையே காரசார வாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-mk-stalin-receive-900-crore-heated-exchange-between-minister-aadav-arjuna-and-udhayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-mk-stalin-receive-900-crore-heated-exchange-between-minister-aadav-arjuna-and-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">a286a0d2-76a9-4da7-ace2-8e8538422d8d</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:55:25 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:55:25.078Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜுனா,சட்டசபை,TN Assembly,உதயநிதி,லாட்டரி,ஸ்டாலின்,MK Stalin&apos;,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wzwvwy0o/Udhayanidhi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா - உதயநிதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wzwvwy0o/Udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா  பேசியதாவது:  மது விலக்கு கொள்கை என்பது எங்களுடைய கொள்கை; போதையில்லா தமிழகம் எங்களுடைய கொள்கை, ஆட்சிக்கு வந்த பின்பும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், இங்கு இருக்கும் எம்,எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் எந்த தொழிலிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது.</p><p>திமுகவின் நாடாளுமன்ற  எம்.பி ஜெகத்ரட்சகன் சாராய ஆலை நடத்துகிறாரா இல்லையா, சாராய ஆலை நடத்தி கொண்டு டாஸ்மாக் நிறுவனம் மூலம் ஆர்டர் வந்து யார் வாங்கியது; திமுகவே அரசு, திமுகவில் இருக்கும்  எம்பிக்கள் சாராய ஆலைகள் நடத்துகிறார்கள்.</p><p>திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறார். திமுகவின் ஐடி அமைச்சர் சாராய ஆலை நடத்துகிறார். இதுக்கு மேல் என்ன ஆதாயம் வேண்டும், என்றார். </p> <h2>வாங்கியது ஏன்?</h2><p>இதனால்  கோபம் அடைந்த திமுக எம்.எல்.ஏக்கள் லாட்டரி  குறித்து பேசினார். இதையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, லாட்டரி என கூறுகிறார்கள்; லாட்டரி நிறுவனத்திடம் ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன், தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள், அப்பொழுது சொல்லுங்கள். நான் எந்த தொழிலும் இல்லை. எந்த நிறுவனமும் நடத்தவில்லை’ என்றார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">உதயநிதி</a>  உடனே பதில்  கொடுத்தார். </p> <h2>அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும்</h2><p>உதயநிதி கூறும் போது,  திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கினார்கள் என்று கேட்கிறார். அதனை கொடுத்தது அவருடைய மாமனார் தான். ஏன் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மாமனாரிடம் கேட்டு விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்” என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆதவ் அர்ஜுனா, </a>அவர் அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். அது அவர் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு அது எதுவும் தெரியாது. அப்பாவை இங்கே காணும். வீட்டிற்கு போய் உங்கள் அப்பாவிடம் கேளுங்கள். உங்கள் அப்பா கரெக்டா சொல்லுவார். ஏன் வாங்கினார் என்று உங்கள் அப்பா சொல்லுவார்” என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்: வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-saplings-distributed-to-farmers-assistant-director-of-agriculture-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-saplings-distributed-to-farmers-assistant-director-of-agriculture-information#comments</comments><guid isPermaLink="false">434b5655-3ee4-48d6-a275-6be099a41a38</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:50:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:50:28.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Thoothukudi,தூத்துக்குடி,விவசாயிகள்,Information,தகவல்,agriculture,Distribution,விநியோகம்,vilathikulam,விளாத்திகுளம்,Assistant Director,வேளாண்மை,saplings,மரக்கன்றுகள்,உதவி இயக்குநர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/32rbdgco/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் விநியோகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/32rbdgco/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">விளாத்திகுளம்</a> வட்டார <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">விவசாயிகளுக்கு</a> வனத்துறை நாற்றுப்பண்ணை சார்பில் இலவசமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மரக்கன்றுகள் </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">விநியோகம்</a> செய்யப்பட உள்ளதாக வேளாண்மை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D">உதவி இயக்குநர்</a> சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>2026-27-ம் நிதியாண்டில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு, 'காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம்' மற்றும் 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' ஆகிய திட்டங்களின் கீழ் விளாத்திகுளம் வனத்துறை நாற்றுப்பண்ணையில் பின்வரும் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.</p><h2>ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 மரக்கன்றுகள் இலவசம்</h2><p>தேக்கு, மலைவேம்பு, மகாகனி, ஈட்டி, வேங்கை மரக்கன்றுகள் அனைத்தும் விளாத்திகுளம் வட்டார விவசாயிகளுக்கு முழுமையாக இலவசமாக வழங்கப்படும். விவசாய நிலத்தில் முழுமையாக நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 மரக்கன்றுகள் வரையிலும், நிலத்தின் வரப்புகளைச் சுற்றி மட்டும் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 150 மரக்கன்றுகள் வரையிலும் வழங்கப்படும். </p><p>இந்த வகை மரங்கள் அதிகப் பராமரிப்பு இன்றி எளிதாக வளரக்கூடியவை. எதிர்காலத்தில் விவசாயிகளுக்குச் சிறந்த பொருளாதார வருவாயைத் தருவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும். </p><h2>மரக்கன்றுகள் முன்பதிவு செய்து பெறலாம் </h2><p>விருப்பமுள்ள விளாத்திகுளம் வட்டார விவசாயிகள் உடனடியாக முன்பதிவு செய்து கொண்டு, செப்டம்பர் மாத இறுதியிலிருந்து மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.  கூடுதல் விவரங்களுக்கும் முன்பதிவிற்கும் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை: பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/admission-to-veterinary-course-based-on-school-marks-chief-ministers-letter-to-prime-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/admission-to-veterinary-course-based-on-school-marks-chief-ministers-letter-to-prime-minister#comments</comments><guid isPermaLink="false">43e3f7a9-87fe-4663-97b0-8662cf3cffa2</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:45:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:45:12.555Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,PM Modi,கால்நடை மருத்துவ படிப்பு,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/v5kavt71/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/v5kavt71/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &amp; AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் அல்லாமல், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் மாணவர் சேர்க்கை அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>அக்கடிதத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &amp; AH) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மிக முக்கியமான பொருண்மை குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை (Centralized Counselling Process) மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதோடு, அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG-2026) தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முன்மொழிவு, தமிழ்நாடு மாநிலத்திற்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>கால்நடை மருத்துவக் கல்வியானது தமிழகத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல, மாறாக, மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குமான நமது முயற்சிகளின் அடித்தளமாகும் என்றும், இன்று கால்நடை மருத்துவக் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களே, வரும் ஆண்டுகளில் நமது விவசாயிகளுக்கும், கிராமங்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாகவும் உருவெடுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இந்த முறையானது (Model), திறமையான தொழில்முறை வல்லுநர்களைத் தொடர்ந்து உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு, உயர்கல்வியைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இத்தேர்வு முறை, சமூக நீதி, பிராந்திய சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்பட்டுள்ளது என்றும் முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>2007-2008ம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது என்றும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு நுழைவு நிலையில் பெரும் தடைகளை நீட் (NEET) உள்ளிட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்துகின்றன என்பதை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தேசியத் தேர்வுகள் முகமை (NTA), நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதையும், அண்மையில் சில முறைகேடுகள் காரணமாக, தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு மேற்படி முகமை ஆளான நிலையில், 2024-ம் ஆண்டில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கும் வழிவகுத்தன என்பதையும் கருத்தில்கொண்டு, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>பள்ளிப் படிப்பின் மூலம் வெளிப்படும் தகுதியை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பலமுறை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் பெறப்படும் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்ற எண்ணத்தை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன என்று தெரிவித்து, இத்தகைய நடைமுறையைக் கால்நடை மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் விரிவுபடுத்துவது என்பது, அதைப் போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும் என முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், கால்நடை மருத்துவக் கல்வியானது ஒவ்வொரு மாநிலத்தின் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்துடன் இயல்பாகப் பிணைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், கால்நடை மருத்துவ வல்லுநர்களுக்கான தேவை, இத்துறையில் சேரும் மாணவர்களின் பின்புலம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் ஆகியவை நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக மாறுபடுகின்றன என்றும், இந்தச் சூழலில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அளவுகோல்களைத் தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிடுவதுதான் சரியானதாக இருக்கும் என்றும், இத்தகைய அணுகுமுறையே, நமது கூட்டாட்சி அமைப்பை மதிப்பதாக அமைவதோடு, கல்வித் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தவும், தகுதியான கால்நடை மருத்துவர்கள் உருவாவதை உறுதிசெய்யவும் உதவும் என்றும், அதேவேளையில், மாநிலங்கள் தங்களது சமூக-பொருளாதார நிலைகளுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் ஏற்புடைய மாணவர் சேர்க்கைக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>எனவே, இப்பொருண்மை குறித்து பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர், இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துமாறும், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கையைத் தொடரவோ அல்லது மாணவர் சேர்க்கை அளவுகோல்களை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானிக்கவோ அனுமதிக்க வேண்டுமென்றும் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>மேலும், இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, கால்நடை மருத்துவக் கல்வியை அனைவரும் சமமாகப் பெறுவதை உறுதி செய்யுமாறும், கிராமப்புற மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளைப் பாதுகாக்குமாறும், நமது கூட்டாட்சி அமைப்பிற்குள் மாநிலங்களின் தங்களுக்கான சட்டபூர்வ கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலையை உறுதிசெய்யுமாறும் பிரதமரை, முதல்-அமைச்சர்  தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பேஸ் பேஸ் பில்டர் காபி... ருசித்துக் குடித்த ராமேஸ்வரம் கோவில் யானை ராமலட்சுமி! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delicious-filter-coffee-ramalakshmi-the-rameswaram-temple-elephant-savoured-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delicious-filter-coffee-ramalakshmi-the-rameswaram-temple-elephant-savoured-it#comments</comments><guid isPermaLink="false">6796c1ba-a5d2-4f10-a9b3-81bf43f608ca</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:32:43 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:32:43.336Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>elephant,யானை,காபி,coffee,ராமேஸ்வரம் கோவில்,Rameshwaram Temple</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dkp06f0n/97.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ராமேஸ்வரம் கோவில் யானை ராமலட்சுமி]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமநாதசுவாமி திருக்கோயில் யானை ராமலட்சுமி, வீதியுலாவின் போது சுடச்சுட பில்டர் காபியை ருசித்துக் குடித்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dkp06f0n/97.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராமேஸ்வரம்</a> ராமநாதசுவாமி திருக்கோயில் யானை ராமலட்சுமி, வீதியுலாவின் போது சுடச்சுட பில்டர் காபியை ருசித்துக் குடித்த சுவாரஸ்யமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2>காபி குடித்த யானை</h2><p>ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி, அம்பாள் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் முன்னணியில் கோயில் யானையான ராமலட்சுமி கம்பீரமாக நடந்து சென்றது. யானை தெற்கு ரத வீதி வழியாகச் சென்றபோது, அங்கிருந்த உணவகத்தில் இருந்து பக்தர் ஒருவர் யானைக்காக பிரத்யேகமாக ஒரு பெரிய டம்பளரில் சுடச்சுட பில்டர் காபியை வாங்கிக் கொடுத்தார்.</p><h2>ரசித்து குடித்த ராமலட்சுமி</h2><p>பக்தர் கொடுத்த அந்த காபியை, யானைப் பாகன் ராமு பெற்று ராமலட்சுமியிடம் வழங்கினார். வழக்கமாகப் பழங்கள், கரும்புகளைச் சாப்பிடும் ராமலட்சுமி, அன்று பில்டர் காபியைக் கண்டதும் உற்சாகமடைந்தது. தன் தும்பிக்கையால் டம்பளரை லாவகமாக வாங்கி, காபியை வாயில் ஊற்றி மிகவும் ரசித்து ருசித்துக் குடித்தது.</p><h2>வைரல் வீடியோ</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">யானை </a>மனிதர்களைப் போல ரசித்துக் காபி குடித்த இந்த விநோதக் காட்சியைக் கண்ட அங்கிருந்த பக்தர்களும் பொதுமக்களும் வியப்படைந்தனர். பலர் இதனைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்ய, தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளைக் குவித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதித்த பிடிவாரண்ட் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-warrant-issued-against-former-minister-ponmudi-revoked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arrest-warrant-issued-against-former-minister-ponmudi-revoked#comments</comments><guid isPermaLink="false">f82568e2-6c7d-44a7-8578-baaf8ec629d5</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:30:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:30:28.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொன்முடி,Ponmudi,Court,பிடிவாரண்ட்,சென்னை கோர்ட்டு,Arrestwarrant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/rhx9f6ec/ponmudi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
முன்னாள் அமைச்சர் பொன்முடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/rhx9f6ec/ponmudi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.</p><p>இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டது.</p><p>இந்த புகார் மனு,  எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றபட்டு  நிலுவையில் உள்ளது. </p><p>தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அனுப்பிய சம்மன் மற்றும் வழக்கை ரத்து செய்யக் கோரி <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">பொன்முடி</a> தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த வழக்கை விசாரித்த  சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் , திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டார்.</p><p>இந்த வழக்கு நேற்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் உமா ஆனந்த தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை  சென்னை ஐகோர்ட்டு நீக்கி இருப்பதாகவும் ஆறு மாதத்தில் விசாரணை முடிக்க  சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் வழக்கில் நேற்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்ட நீதிபதி</p><p>சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது.  பொன்முடியை செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டு உத்தரவிடுகிறது என கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 2 தேதிக்கு தள்ளிவைத்தார்.</p><p>இந்தநிலையில்,  சைவ, வைணவ சமயம், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதித்த பிடிவாரண்ட் ரத்து  செய்யப்பட்டுள்ளது. சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜரானதால் பிடிவாரண்ட் திரும்பப் பெறப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>&apos;திமுக காலத்து ஊழல் தொடரக் கூடாது&apos; - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-era-corruption-should-not-continue-nayinar-nagendran-urges-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-era-corruption-should-not-continue-nayinar-nagendran-urges-tvk-government#comments</comments><guid isPermaLink="false">14aa85f9-f413-499d-b455-893a72da2520</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:22:29 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:22:29.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,நயினார் நாகேந்திரன்,Corruption,ஊழல்,Nayinar Nagendran,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dqcc9r7g/8.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dqcc9r7g/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு செங்கல் கூட நடாமல், அண்டை வீடுகளைக் காட்டி 21 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து தமிழக பாஜக தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D"> நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>திமுக ஆட்சிக் காலத்தில்  ஊழல்</h2><p>மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு செங்கல் கூட நடாமல், அண்டை வீடுகளைக் காட்டி 21 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய ஊழல் கலாசாரமும், அதிகாரிகளின் மெத்தனப்போக்குமே இத்தகைய முறைகேடுகள் துணிச்சலாக நடைபெறக் காரணமாக இருந்துள்ளன. மத்திய அரசு ஏழை மக்களுக்காக வழங்கும் நிதியைச் சுரண்டுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><h2>தவெக அரசில் தொடரக்கூடாது</h2><p>திமுக காலத்து இந்த ஊழல் முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், ஆட்சியில் இருக்கும் தவெக அரசு, வெறும் 'ரீல்ஸ்' மோகத்திலும், வெற்று விளம்பர அரசியலிலும் மட்டுமே மூழ்கிக் கிடக்காமல், நிர்வாகத்தில் போதிய கவனம் செலுத்தி, அதே தவறுகள் மீண்டும் தொடராமல் தடுக்க வேண்டும்.</p><p>மத்திய அரசின் திட்டங்கள் தகுதியுள்ள ஏழைப் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் தகுதியற்றவர்கள் நிதி பெறுவதைத் தடுக்க, தவெக அரசு மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-6#comments</comments><guid isPermaLink="false">05b75a58-2548-426c-835c-f6d046604d25</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:14:01 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:14:01.439Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/zbdyzvko/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/zbdyzvko/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> ஊரக உட்கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி துணை மின் நிலையங்களில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை </a>செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக தூத்துக்குடி ஊரக கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி ஊரகக் கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (8.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். </p><h2>விளாத்திகுளம்</h2><p>விளாத்திகுளம், மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள். </p><h2>குளத்தூர்</h2><p>குளத்தூர், கீழவைப்பார், வைப்பார், வேப்ப‌லோடை, மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள். </p><h2>சூரங்குடி</h2><p>மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மின் விநியோகம் இருக்காது. </p><p>எனவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த மின்நிறுத்த அறிவிப்பைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sangeetha-withdrew-the-divorce-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sangeetha-withdrew-the-divorce-case#comments</comments><guid isPermaLink="false">a7554930-c805-47cd-b126-71fdf11bdab8</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:11:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:11:52.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,விவாகரத்து,சங்கீதா,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/00j1e0tk/san.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக முதல்-அமைச்சரும், தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார். லண்டனில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் ஆஜரான அவர், வழக்கை தொடர விருப்பமில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து, கோர்ட்டு வழக்கை முடித்து வைத்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/00j1e0tk/san.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக முதல்-அமைச்சரும், தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE">சங்கீதா </a>வாபஸ் பெற்றுள்ளார். லண்டனில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் ஆஜரான அவர், வழக்கை தொடர விருப்பமில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து, கோர்ட்டு வழக்கை முடித்து வைத்தது.</p><h2>விவாகரத்து வழக்கின் பின்னணி</h2><p>விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாமல், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பிரபலமானவர்கள் என்பதால், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு தரப்புகள் கோரிக்கை வைத்திருந்தன.</p><h2>சமரச முயற்சிக்கு பிறகு திருப்பம்</h2><p>பின்னர் கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி சில நடைமுறை கேள்விகளை எழுப்பியதுடன், இருவரையும் சமரச மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். பின்னர் வழக்கு ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா</h2><p>அதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையின்போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். </p><p>அதே நேரத்தில், லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. </p>]]></content:encoded></item><item><title>ஒப்பந்த காவலாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி பெண் அதிகாரி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/block-development-officer-arrested-rs-10k-bribe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/block-development-officer-arrested-rs-10k-bribe#comments</comments><guid isPermaLink="false">5c91a210-90da-48a5-ac9f-cafd76672beb</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:09:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:09:05.135Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,லஞ்சம்,Bribery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/87l0luhy/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/87l0luhy/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (55 வயது). இவர் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். வட்டார வளர்ச்சி அதிகாரியால் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட இந்த பணிக்கு தினக்கூலியாக ரூ.762 பெற்று வந்துள்ளார்.</p><p>இதற்கிடையில் மாதந்தோறும் ஊதியம் பெறவும், பணியில் தொடர்ந்து நீடிக்கவும் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என, வட்டார வளர்ச்சி அதிகாரி லதா கூறியதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் கடந்த 1½ ஆண்டுகளாக சண்முகசுந்தரம், தான் வாங்கிய சம்பளத்தில் மாதந்தோறும் ரூ.10 ஆயிரத்தை, வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.</p><p>இந்த நிலையில் இந்த மாதத்துக்கான ஊதியம் சண்முகசுந்தரத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதத்துக்கான லஞ்சம் ரூ.10 ஆயிரத்தை வழங்குமாறு லதா கேட்டுள்ளார். ஆனால் நண்பர்கள் சிலரின் அறிவுறுத்தலால், லஞ்ச பணம் கொடுப்பதற்கு விரும்பாத சண்முகசுந்தரம் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.</p><p>அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சாந்தி, இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர், சண்முகசுந்தரத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து சண்முகசுந்தரம் லஞ்சமாக ரூ.10 ஆயிரம் ரசாயனம் தடவிய நோட்டுகளை வட்டார வளர்ச்சி அதிகாரி லதாவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டார வளர்ச்சி அதிகாரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கடலூர் அருகே ஒரேநாளில் 25 பேரை கடித்த தெரு நாய்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stray-dog-bites-25-people-in-a-single-day-near-cuddalore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stray-dog-bites-25-people-in-a-single-day-near-cuddalore#comments</comments><guid isPermaLink="false">eb689910-98e1-4880-b6ae-a33a53941e6a</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:04:23 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:04:23.256Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கடலூர்,attack,Street dog,வெறிநாய் கடி,Cuddalore district,25 பேர் காயம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/oymhfini/96.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ வெறிபிடித்த நாய்]]></media:title><media:description type="html"><![CDATA[ கடலூர் அருகே ஒரேநாளில் 25 பேரை ஒரு தெரு நாய் கடித்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/oymhfini/96.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கடலூர் மாவட்டம்</a> புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே ஒரு தெருநாய், ஒரே நாளில் 25 பேரைக் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நாயின் அடுத்தடுத்த தாக்குதல்</h2><p>கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெரு நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. அப்போது திடீரென வெறிபிடித்த அந்த நாய் சாலையில் சென்றவர்களைத் தாக்கத் தொடங்கியது.</p><p>மேலும், கண்ணில் பட்டவர்களையெல்லாம் துரத்தித் துரத்திக் கடித்தது. அந்த வெறிநாயிடமிருந்து தப்பிக்க பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 25 பேர் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தனர்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு புவனகிரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, ரேபிஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி வருகின்றனர்.</p><h2>மக்கள் கோரிக்கை</h2><p>ஒரே நாளில் இத்தனை பேரை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நாய்</a> கடித்த சம்பவம் புவனகிரி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி முடங்கியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த வெறிநாயைப் பிடிக்க வேண்டும் என்றும், நகரில் உள்ள மற்ற தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழாவையொட்டி கோவை விமான நிலையத்துக்கு பார்வையாளர்கள் செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/visitors-banned-from-entering-coimbatore-airport-for-independence-day-celebrations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/visitors-banned-from-entering-coimbatore-airport-for-independence-day-celebrations#comments</comments><guid isPermaLink="false">e5f738aa-a234-4bb8-8a1c-008d19d15d34</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:54:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:54:12.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை விமான நிலையம்,Coimbatore Airport,சுதந்திர தின விழா,Independence Day Celebration,banned,பார்வையாளர்கள்,visitors,செல்ல தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/csqzx5q7/covai-airport.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/csqzx5q7/covai-airport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>சுதந்திர தின விழாவையொட்டி கோவை விமான நிலையத்துக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.</p><h2>கோவை விமான நிலையம்</h2><p>நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>அதன் ஒரு பகுதியாக விமான நிலையங்களுக்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது.</p><h2>பார்வையாளர்கள் செல்ல தடை</h2><p>இதன் காரணமாக தினமும் ஏராளமான பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். அவர்களை அழைத்துச்செல்லவும், அனுப்பி வைக்கவும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் வருகிறார்கள். அவர்கள் டிக்கெட் எடுத்து பார்வையாளர்கள் வசதி உள்ள பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருவதால், கோவை விமான நிலையத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>முழு ஒத்துழைப்பு</h2><p>இது குறித்து கோவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">விமான நிலைய</a> அதிகாரிகள் கூறும்போது, சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மறு உத்தரவு வரும் வரை கோவை விமான நிலையத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கான நுழைவு சீட்டு, பிரத்யேக பாஸ் வழங்கப்பட மாட்டாது. இந்த அறிவிப்புக்கு பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 9 முதல் சீரான குடிநீர் விநியோகம்: தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/regular-drinking-water-supply-from-august-9-thoothukudi-mayor-jagan-periyasamy-assures</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/regular-drinking-water-supply-from-august-9-thoothukudi-mayor-jagan-periyasamy-assures#comments</comments><guid isPermaLink="false">604a510f-6b10-4a46-8d97-b3bff7f691bc</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:51:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:51:12.708Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Corporation,மாநகராட்சி,ஆய்வு,Renovation work,சீரமைப்பு பணி,Mayor,மேயர்,inspection,water pipe,குடிநீர் குழாய்,ஜெகன்,Jagan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/djfkl22e/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஆய்வு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/djfkl22e/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தூத்துக்குடி மாநகராட்சி</a>ப் பகுதிகள் முழுவதும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.</p><h2>தூத்துக்குடி மேயர் ஆய்வு</h2><p>தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் அருகில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">மேயர்</a> ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு</a> செய்தார்.</p><h2>ஆகஸ்ட் 9 முதல் சீரான குடிநீர் விநியோகம்</h2><p>இந்த ஆய்வின் போது மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:  வல்லநாடு பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணிகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை தூத்துக்குடி மாநகர பகுதி மக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். சீரமைப்புப் பணிகள் முடிந்து வரும் 9.8.2026, ஞாயிற்றுக்கிழமை முதல் மாநகராட்சிப் பகுதிகள் முழுமைக்கும் மீண்டும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p><p>இந்த ஆய்வின் போது தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சி.எஸ். ராஜா, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், கனகராஜ், முத்துவேல், மண்டல தலைவர் நிர்மல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டில் புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி - மாந்திரீக பூஜை செய்த இருவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-cheated-1-54-lakh-treasure-ritual-scam-two-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-cheated-1-54-lakh-treasure-ritual-scam-two-arrested#comments</comments><guid isPermaLink="false">1cf7b829-4cc9-4420-ad9b-69bf5fa96ed4</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:43:17 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:43:17.106Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tenkasi,தென்காசி,arrest,மோசடி,Duping,மாந்திரீக பூஜை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/7h0v9die/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/7h0v9die/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசியில் வீட்டில் புதையல் இருப்பதாக கூறி மாந்திரீக பூஜை செய்து பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>வீட்டில் புதையல்</h2><p>தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (54 வயது). ஆய்க்குடி அருகே உள்ள விந்தன்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமார் (47 வயது). நண்பர்களான இவர்கள் இருவரும் தங்களுக்கு மாந்திரீகம் தெரியும் எனக்கூறி ஒவ்வொரு ஊராக சுற்றி வந்தனர்.</p><p>கடந்த சில மாதங்களுக்கு முன் தென்காசி பகுதிக்கு சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம் உங்களது வீட்டில் புதையல், விலை மதிப்புள்ள பொருட்கள் இருக்கிறது. இதற்காக மாந்திரீக பூஜை, பரிகாரம் செய்தால் அவை கிடைத்துவிடும் என்று நம்பிக்கை கூறினர். இதற்கு பணம் தேவைப்படும் என்றும் தெரிவித்தனர்.</p><h2>பணம் மோசடி</h2><p>இதை உண்மை என்று நம்பிய அந்த பெண், 'கூகுள்பே' மூலம் சுமார் ரூ.1.54 லட்சத்தை கொடுத்துள்ளார். மேலும் ரொக்கமாகவும் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்காக அந்த பெண்ணின் வீட்டில் பல்வேறு மாந்திரீக பூஜைகளையும் செய்தனர். ஒரு கட்டத்தில் புதையலை எடுத்து தருவதாக கூறிய விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து 2 பேரிடம் கேள்வி எழுப்பினார்.</p><h2>போலீசில் புகார்</h2><p>அப்போது அவர்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. பாதியில் நிறுத்தினால் உங்களது குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டினார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் இதுகுறித்து கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இதுதொடர்பாக நேற்று முன்தினம் அவர்கள் தென்காசி போலீசில் புகார் செய்தனர்.</p><h2>2 பேர் அதிரடி கைது</h2><p>அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், குமார் ஆகிய இருவரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை; எம்.பிக்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-thirumavalavan-urges-dmk-to-participate-in-mps-meeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-thirumavalavan-urges-dmk-to-participate-in-mps-meeting#comments</comments><guid isPermaLink="false">15f9c967-71e0-452f-9a40-4f2daeacd31c</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:34:38 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:34:38.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,திருமாவளவன்,Thirumavalavan,தொகுதி மறுவரையறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/jjph2p11/Thirumavalavan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/jjph2p11/Thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பா.ஜனதா அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடாளுமன்ற கூட் டத்தொடரில் நிறைவேற்ற உத்தேசித்துள்ளது.இந்தநிலையில் தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மத்திய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. </p><h2>நாளை எம்பிக்கள் கூட்டம்</h2><p>இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில், மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை </a>பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந் தாய்வுக் கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>திமுக நிபந்தனை</h2><p>தமிழக எம்.பி.க்களுக்கு தவெக அரசு அழைப்பு விடுத்த நிலையில், இதில் திமுக பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திமுக</a> பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்,  தவெக அரசு ஆகஸ்ட் 8 அன்று அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை.ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழகத்தில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழக அரசிடம் திமுக முன்வைக்கிறது. </p><h2>திருமாவளவன் வலியுறுத்தல்</h2><p>புதுக் கூட்டாளியான காங்கிரஸின் மனம் புண்படும் என்பதால் மேகேதாட்டு விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> தொடர்பான எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டும் என்று திருமாவளவன்  வலியுறுத்தியுள்ளார். மேலும்,  தொகுதி மறுசீரமைப்பு, மேகதாது போன்ற பிரச்னைகளில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஆடுகள், புறாக்கள், படகு பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/goats-pigeons-boat-seized-while-trying-to-smuggle-them-from-thoothukudi-to-sri-lanka</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/goats-pigeons-boat-seized-while-trying-to-smuggle-them-from-thoothukudi-to-sri-lanka#comments</comments><guid isPermaLink="false">6771fd8c-cea5-400f-b2eb-47bc56e45386</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:29:20 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:29:20.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>boat,படகு,Thoothukudi,தூத்துக்குடி,பறிமுதல்,seized,Sri Lanka,இலங்கை,attempted smuggling,ஆடுகள்,கடத்தல் முயற்சி,goats,pigeon,புறா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/xd2a9q78/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆடுகள், புறாக்கள், படகு பறிமுதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/xd2a9q78/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> கடற்கரை பகுதியில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">இலங்கை</a>க்கு கடத்த முயன்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆடுகள்</a>, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE">புறா</a>க்கள் மற்றும் பைபர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81">படகு </a>ஆகியவற்றை தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல் </a>செய்தனர்.</p><h2>கியூ பிரிவு போலீசார் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் வெள்ளாடுகள் மற்றும் புறாக்கள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சுராஜா ஆகியோர் அடங்கிய கியூ பிரிவு போலீசார் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நேற்று இரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.</p><h2>ஆடுகள், புறாக்கள், படகு பறிமுதல்</h2><p>அப்போது அந்த கடற்கரை பகுதியில் பதிவு எண் இல்லாத இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பைபர் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக வெள்ளாடுகளையும் புறாக்களையும் ஏற்றிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரட்டை எஞ்சின் பைபர் படகு, அதிலிருந்த 8 வெள்ளாடுகள் மற்றும் 3 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த புறாக்களைக் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கடத்தல்காரர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாட்டை தன்னிறைவு நோக்கி வழிநடத்தியவர் எம்.எஸ். சுவாமிநாதன்; எல். முருகன் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ms-swaminathan-led-the-country-towards-self-sufficiency-l-murugan-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ms-swaminathan-led-the-country-towards-self-sufficiency-l-murugan-praises#comments</comments><guid isPermaLink="false">c91663aa-feca-40db-a3ad-c96831c0d6d3</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:23:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:23:31.124Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>L. Murugan,எம்.எஸ். சுவாமிநாதன்,M.S. Swaminathan,எல். முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/94wyd6wl/72.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/94wyd6wl/72.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய இணை மந்திரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">எல்.முருகன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பசுமைப் புரட்சியின் தந்தை</h2><p>இந்தியாவின் தலைசிறந்த வேளாண் அறிவியலாளரும், ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எனப் போற்றப்படும் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் பிறந்த நாளில் மரியாதைமிகு நினைவஞ்சலியை செலுத்துகிறேன்.</p><h2>எம்.எஸ். சுவாமிநாதன் பிறந்த நாள்</h2><p>1960-களில் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், சக அறிவியலாளர்களுடன் இணைந்து முன்னெடுத்த ஆய்வுகள் மற்றும் வேளாண் கொள்கைகள் மூலம் நாட்டை தன்னிறைவு நோக்கி வழிநடத்தியவர் அவர்.</p><p>விவசாயிகளின் முன்னேற்றம், நிலையான வேளாண் வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் மகத்தான சேவையை, அவரது பிறந்த நாளில் நன்றியுடன் போற்றி வணங்குகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான திருப்பூர் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-college-student-arrested-tiruppur-policeman-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-college-student-arrested-tiruppur-policeman-suspended#comments</comments><guid isPermaLink="false">10c0e784-8278-4d88-b7fe-a0bf6f206e05</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:23:26 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:23:26.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,police,Tiruppur,திருப்பூர்,கல்லூரி மாணவி,suspend,பாலியல் தொல்லை,பணியிடை நீக்கம்,sexual abuse,Kovai,போலீஸ்காரர்,collage student</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/41xzmlrm/mani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/41xzmlrm/mani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைதான திருப்பூர் போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். </p><h2>மாணவிக்கு உதவி</h2><p>திருப்பூரை சேர்ந்தவர் மணிவேந்தன்(வயது 32). போலீஸ்காரரான இவர் கோவை போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர் பொள்ளாச்சி சென்றார். அங்கிருந்து தனியார் பஸ் மூலம் கோவை திரும்பினார். அப்போது கிணத்துக்கடவில் இருந்து 19 வயதான கல்லூரி மாணவி அந்த பஸ்சில் ஏறினார். படிக்கட்டில் நின்றிருந்த அந்த மாணவிக்கு பஸ்சில் ஏற சீருடையில் இருந்த போலீஸ்காரரான மணிவேந்தன் உதவி செய்தார்.</p><h2>பாலியல் தொல்லை</h2><p>பின்னர் அந்த மாணவியின் அருகே நின்றிருந்த மணிவேந்தன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் மணிவேந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்தது.</p><h2>அதிகாரிகள் விசாரணை</h2><p>இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கையை கமிஷனருக்கு சமர்ப்பித்தனர். இதையடுத்து அவர், போலீஸ்காரர் மணிவேந்தனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farm-loan-waiver-announcement-must-be-issued-tdv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farm-loan-waiver-announcement-must-be-issued-tdv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">d97ab9b9-f2bf-4704-a1a6-d75570691d6f</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:03:51 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:03:51.278Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Crop loans,பயிர்க்கடன் தள்ளுபடி,சட்டமன்ற கூட்டத்தொடர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/zk2bwpev/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/zk2bwpev/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அளித்த தேர்தல் அறிக்கையின்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக போராட முயன்ற விவசாயிகள், காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>காவிரி நீர் நமது உயிர் ஆதாரம் என்றும் அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளியளவும் இல்லை என தன்னை விவசாயிகளின் காவலர் என காட்டிக் கொள்வது போல முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சட்டமன்றத்திற்கு வெளியே ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரை வைத்து அடக்கி ஒடுக்கியிருப்பது, விவசாயிகள் நலனில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p>பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு, அரசின் கவனத்தை ஈர்க்க சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்பு இல்லாமல் ஏமாற்றப்பட்ட விவசாயிகள், வாழ்வாதாரத்திற்கு வேறு வழியின்றி தலைமைச் செயலகத்தையே முற்றுகையிட்டு போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.</p><p>எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தனிநபர் கடன் விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் - கே.என். நேரு காரசார விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/personal-loan-issue-minister-maria-wilson-kn-nehru-heated-debate-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/personal-loan-issue-minister-maria-wilson-kn-nehru-heated-debate-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">cae9999f-844c-4e7d-89e4-15a1752989c3</guid><pubDate>Fri, 07 Aug 2026 09:02:58 +0000</pubDate><atom:updated>2026-08-07T09:02:58.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சட்டசபை,கே.என்.நேரு,CMVijay,மரிய வில்சன்,Mariawilson,TNBudget2026,TamilnaduAssembly2026</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/qr4xyuc8/assambly33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் மரிய வில்சன் - கே.என். நேரு காரசார விவாதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/qr4xyuc8/assambly33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனை சுமத்தியது திமுக என அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.</p><p>சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, "அப்பாவைக் காணோம் எனப் பேசுகிறீர்களே... மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், நான் முதல்வன் என திட்டங்களில் பலனடைந்த மக்களின் மனங்களில் எங்களின் தலைவர் வாழ்கிறார்.</p><p>அண்ணன் சீர் திட்டத்துக்கு 812 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறீர்கள். மூவலூர் ராமாமிர்தம் அம்மையர் திட்டத்தின் கீழ் மட்டுமே ஆண்டுக்கு 1 லட்சம் பெண்கள் எங்கள் ஆட்சியில் பயனடைந்தார்கள்.</p><p>இப்போது எல்லா திருமணமாகும் பெண்களுக்கும் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை என்றால் தலைக்கு 1 லட்சம் ரூபாய் செலவாகும். ஆக, ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் இல்லாமல் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது" என்று கூறினார்.</p><p>அதற்கு பதில் கொடுத்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">நிதி அமைச்சர் மரிய வில்சன்</a>, "மகளிர் உரிமைத் தொகையில் உங்கள் தலைவர் இருக்கிறார் என்கிறீர்கள். </p><p>ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனை சுமத்தியது திமுக. ஒவ்வொருவர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் வைத்து சென்றுள்ளார்கள். ஒவ்வொருவர் மீதுள்ள கடனிலும் உங்கள் தலைவர் உள்ளாரா?</p><p>கடனை விட்டுச் சென்றவர் யார்? உரிமை தொகையில் தலைவரை தேடுவது போல கடனிலும் தேட வேண்டுமே.. நிர்வாக குளறுபடிக்கு திமுகவே காரணம் என்றார்.</p><p>இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,</p><p>ஒவ்வொரு அரசும் கடன் வாங்கிதான் செலவு செய்கிறது. ஆர்.பி.ஐ அனுமதியுடன்தான் கடன் பெறப்பட்ட‌து.</p><p>கடனை அடைக்க 50 ஆண்டுகள் ஆனாலும் வாய்ப்பில்லை என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசும் கடன் வாங்கி தான் செலவு செய்கிறது. ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் கடன் பெற முடியாது என திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மக்களின் பாக்கெட்டை கொள்ளையடிக்கும் இந்த அநீதியை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/injustice-robbing-peoples-pockets-wont-be-forgiven-by-indians-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/injustice-robbing-peoples-pockets-wont-be-forgiven-by-indians-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">90a0225b-c133-4853-9501-b1be4037f366</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:56:23 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:56:23.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi,Amit Shah,people,கொள்ளை,அமித் ஷா,மாணிக்கம் தாகூர்,மக்கள்,மோடி,Manickam Thakur MP</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/h7k35skr/manickam-tagore.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/h7k35skr/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களின் பாக்கெட்டை கொள்ளையடிக்கும் இந்த அநீதியை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர் </a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>தன்னிச்சை</h2><p>நாடாளுமன்ற வணிக ஆலோசனை குழுவில் (BAC) இந்த மசோதா குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு, எந்தவித விவாதமும் இன்றி தன்னிச்சையாக இந்த மசோதாவைத் திணித்துள்ளது மோடி அரசு.</p><h2>குரல் எழுப்பினோம்</h2><p>கடந்த ஜூலை 20 அன்று அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது ஏவப்பட்ட தாக்குதல்கள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என நாங்கள் குரல் எழுப்பினோம். ஆனால், எங்கள் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்கத் துணிவின்றி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் பொருட்படுத்தாமல் மசோதாவை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளனர்.</p><h2>கல்லாப்பெட்டி</h2><p>அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு அடிபணியும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF"> மோடி</a> அரசு, இந்திய ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் யு.பி.ஐ. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் அதிகாரத்தை பெறுகிறது. இதன் மூலம் இந்தியர்களின் உழைப்பில் வரும் ஒவ்வொரு பணமும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் கல்லாப்பெட்டிக்குச் செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது!</p> <h2>மன்னிக்க மாட்டார்கள்</h2><p>மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE">அமித் ஷா</a> உடனடியாக பதிலளிக்க வேண்டும்! டிஜிட்டல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக சாமானிய மக்களின் பணத்தில் மோடி அரசு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மக்களின் பாக்கெட்டைக் கொள்ளையடிக்கும் இந்த அநீதியை இந்திய மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய கைத்தறி தினம் - வானதி சீனிவாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-handloom-day-greetings-from-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-handloom-day-greetings-from-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">60136acd-148d-40b5-ad98-e1d8d49d67a5</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:54:08 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:54:08.865Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,தேசிய கைத்தறி தினம்,National Handloom Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ee0mzbe4/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ee0mzbe4/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இந்தியாவின் சுதேசி உணர்வையும், நமது பாரம்பரியத்தின் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைப்பது கைத்தறி. உடுத்தும் ஒவ்வொரு கைத்தறி ஆடையின் பின்னாலும் ஒரு நெசவாளரின் வியர்வை, உழைப்பு, குடும்பத்தின் நம்பிக்கை ஆகியவை பின்னிப் பிணைந்துள்ளன.</p><p>சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 7-ஆம் நாளை நினைவுகூரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு 2015 முதல் தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடி, நெசவாளர்களின் திறமைக்கும், கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.</p><h2>தேசிய கைத்தறி தினம்</h2><p>கைத்தறி என்பது வெறும் ஆடை அல்ல; அது நமது கலாசாரம், அடையாளம், தன்னிறைவு மற்றும் உழைப்பின் பெருமை. இந்த தேசிய கைத்தறி தினத்தில், "கைத்தறியை வாங்குவோம்... நெசவாளர்களை வாழ வைப்போம். பாரம்பரியத்தை தலைமுறைகளுக்கு பாதுகாப்போம்!" அனைவருக்கும் தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்கள்!.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.12-ல் உள்ளூர் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-kanyakumari-district-on-august-12</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/local-holiday-for-kanyakumari-district-on-august-12#comments</comments><guid isPermaLink="false">06a65e3f-f784-4d5c-9d18-2b4cac735f15</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:44:34 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:44:34.631Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,Local Holiday,உள்ளூர் விடுமுறை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/faiktwqz/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/faiktwqz/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 22-ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.  </p>]]></content:encoded></item><item><title>தலைமைச்செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-protesting-in-front-of-the-secretariat-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-protesting-in-front-of-the-secretariat-arrested#comments</comments><guid isPermaLink="false">23331ef4-ff63-4970-b6b5-0bb360855e24</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:20:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:20:12.938Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,விவசாயிகள் போராட்டம்,Secretariat,தலைமைச் செயலகம்,Farmers protest,Farmers arrested,விவசாயிகள் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/4pnc5dg1/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/4pnc5dg1/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><h2>திடீர் போராட்டம்</h2><p>தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 45 விவசாயிகள் இன்று காலை தலைமைச் செயலகம் முன்பு கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அரசு உடனடியாக பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.</p><h2>விவசாயிகள் கைது</h2><p>சட்டப்பேரவைக்குள் விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெற்று வந்த நிலையில், பேரவைக்கு வெளியே விவசாயிகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காவல்துறையினர் </a>கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் தலைமைச் செயலகம் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>“ஒவ்வொரு திட்டங்களின் மூலம் பயன்பெறும் அனைவரின் உள்ளத்திலும் இருக்கிறார் ஸ்டாலின்” - தி.மு.க. எம்.எல்.ஏ.ரகுபதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-resides-in-the-hearts-of-everyone-who-benefits-from-the-various-schemes-dmk-mla-raghupathy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-resides-in-the-hearts-of-everyone-who-benefits-from-the-various-schemes-dmk-mla-raghupathy#comments</comments><guid isPermaLink="false">3b276a2a-82a4-48ef-9314-cf2cbec5f35d</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:14:10 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:14:10.046Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Minister Ragupathi,பட்ஜெட்,Budget,ரகுபதி,தமிழக பட்ஜெட்,பட்ஜெட் 2026,Budget 2026</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dnloumv8/rahu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dnloumv8/rahu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>த.வெ.க. அரசின் முதல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்</a>டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன்தினம் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><h2>தி.மு.க. எம்.எல்.ஏ ரகுபதி</h2><p>இந்நிலையில் சட்டசபையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ ரகுபதி, "நிதியமைச்சர் கையில் ஜெபமாலையோடு வந்து பட்ஜெட்டை அறிவித்தார். வேளாண் அமைச்சர் திருப்பதி லட்டோடு வந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஒன்றே குலம் ஒருவன் தேவன் என்கிற கொள்கையை கொண்டது திமுக. தகவல் உரிமை ஆணையத்தின் பொறுப்புகள் ஏன் நிரப்பப்படவில்லை? தகவல் ஆணையத்திடம் தகவல் கேட்டால் பதிலளிக்க ஆணையர்கள் இல்லை என்கிறார்கள். எதிலும் வெளிப்படைத்தன்மையாக இருக்கிறோம் எனக் கூறும் அரசு தகவல் உரிமை ஆணையத்தின் பொறுப்புகளை நிரப்பாமல் இருப்பது ஏன்? </p><p>காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டு அரசின் கொள்கைகளை வடிவமைப்பதிலும், ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவதாக ஒரு ஆங்கில செய்திநாளிதழில் வந்துள்ளது அது உண்மையா..?” என கேள்வி எழுப்பினார்.</p><h2>பிரவீன் சக்கரவர்த்தி</h2><p>அதற்கு பதில் அளித்த அமைச்சர் விஸ்வநாதன், “பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அவையில் அங்கத்தினர் அல்லாதவரை பற்றி பேசுவது என்பது வழக்கத்திற்கு மீறிய செயலாகும். நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் தமிழக அரசின் சார்பாகவோ, அங்கீகாரம் பெற்ற குழுக்களின் சார்பாகவோ எந்த அமைப்பிலும் அங்கத்தினராக இல்லாதவர்.</p><p>ஊடகங்கள் சமீப காலங்களில் ஒரு செய்தியை பல்வேறு செய்தியாக எழுதிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையில் வரும் செய்தியை வைத்துக் கொண்டு தி.மு.க. முன்னாள் அமைச்சர் சம்பந்தமில்லாத அவையில் இல்லாத நபரை பற்றி கருத்துக்களை சொல்வதை ஏற்புடையதல்ல” என்று கூறினார்.</p><h2>நிதியமைச்சர் மரிய வில்சன்</h2><p>தொடர்ந்து பேசிய ரகுபதி, " நிதிநிலை அறிக்கையில் கசிவு...கசிவு என புது வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள். அது என்ன கசிவு? என்று கேட்டார்.</p><p>அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், " ஒவ்வொரு துறையிலும் எப்படி நிதிக் கசிவு நடந்திருக்கிறது என்பதை தணிக்கை செய்து வருகிறோம். மூன்று துறைகளுக்கான தணிக்கை முடிந்துவிட்டது. நீங்கள் இப்படி கேட்பீர்கள் என்று தெரிந்தே முதல்-அமைச்சர் எங்களை அழைத்து தணிக்கை பற்றி கேட்டிருக்கிறார். கடந்த முறை பார்ட்டி பண்ட் என்றவுடன் அவையை விட்டு வெளியேறினீர்கள். இனி அப்படி இருக்காது. எல்லாவற்றையும் தணிக்கை செய்து கோப்புகளோடு அவையில் நிரூபிப்போம்" என்று கூறினார். </p> <h2>அமைச்சர் ஆனந்த்</h2><p>தொடர்ந்து பேசிய ரகுபதி, “இப்போது பில் வாங்க ஒவ்வொரு அலுவலகத்திற்கும் போய் பாருங்கள். நீர்வளத்துறையில் 3 சதவீதம் கொடுத்தால்தான் பில் என்று சொல்கிறார்கள். பொதுப்பணித்துறையில் 5 சதவீதம் கொடுத்தால்தான் பில் என்று சொல்கிறார்கள்" என்றார்.</p><p>அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆனந்த், " ஆதாரத்துடன் பேச வேண்டும். அது பழைய காலம்... இந்தக் காலத்தில் ஒத்த ரூபாய் நாங்கள் வாங்கினால், நாளைக்கே எங்களை இங்கே உட்கார வைக்க மாட்டார் எங்களுடைய முதல்-அமைச்சர். வாயால் பேசுவது எல்லாம் சரிதான். நீங்கள் நிரூபியுங்கள் ...எதுமே இல்லாமல் நீங்கள் பாட்டுக்கு பேசினால் எப்படி?" என்று கேள்வி எழுப்பினார். </p> <h2>மீண்டும் விடியல்</h2><p>தொடர்ந்து பேசிய ரகுபதி, “மக்கள் பணத்தை தொட மாட்டோம், இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம் எனச் சொல்கிறீர்கள். ஆனால் இதுக்கு முன்னாடி தொட்டவங்க எல்லாருமே அங்கே வந்துகிட்டேதான் இருக்காங்க. அண்ணன் சீர், தாய்மாமன் சீர் திட்டங்களை அரசால் நிறைவேற்ற முடியாது. </p><p>எங்கே இருக்கிறார் எங்கள் தலைவர் என்று கேட்டவர்களுக்கு சொல்கிறோம். மகளிர் உரிமை தொகை வாங்குகிற ஒவ்வொருவரது உள்ளத்திலும் இருக்கிறார். விடியலை நீங்கள் எடுத்துவிட்டீர்கள்... பரவாயில்லை. எங்களால் தமிழ்நாட்டிற்கு மீண்டும் விடியல் கிடைக்கும். அந்த விடியல் பயணத்தில் அவர் இருக்கிறார்” என்று கூறினார். </p><p>அப்போது பேசிய நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், “மகளிர் உரிமை தொகை பற்றி கேட்டால் உங்கள் தலைவர் பெயர்தான் வரும் என்று சொல்கிறீர்கள். ஒன்றை மறந்துவிட்டீர்கள்... தமிழ்நாட்டில் ஒவ்வொருவர் மீதும் ஒரு லட்சத்து 28 ஆயிரம் கடன் விட்டுவிட்டு சென்றதும் நீங்கள்தான். அங்குதான் அவரை தேட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை யாரிடம் விட்டுவிட்டு சென்றீர்கள்..?” என்று அவர் கேள்வி எழுப்பினார். </p> ]]></content:encoded></item><item><title>நெல்லை: விவசாயியை கொன்ற கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-bear-that-killed-a-farmer-caught-in-a-cage-set-by-the-forest-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-bear-that-killed-a-farmer-caught-in-a-cage-set-by-the-forest-department#comments</comments><guid isPermaLink="false">bc1b76ac-16f3-4e9d-8c0f-103331a2c2b1</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:51:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:51:57.462Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Tirunelveli,கரடி,bear</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/291z81oy/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/291z81oy/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள வடமலை சமுத்திரம் பகுதியில் கடந்த வாரம் கரடி ஒன்று சுற்றி வந்தது. அந்த கரடியை விரட்டுவதற்கு விவசாயிகள் முயற்சி மேற்கொண்டபோது அது அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர் இரவு நேரத்தில் கரடி திரும்பி வந்து தோட்டத்தில் பாதுகாப்புக்கு இருந்த விவசாயி ஒருவரை தாக்கி கொடூரமாக கொலை செய்தது.</p><p>கிராம மக்கள் அந்த கரடியை விரட்டிவிட்டு விவசாயியின் உடலை மீட்பதற்கு பல மணி நேரம் போராட வேண்டியிருந்தது. இதனை தொடர்ந்து கரடியை தேடிப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். டிரோன் கேமராவின் உதவியோடு கரடியை தேடும் பணி நடைபெற்றது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டனர். </p><p>அங்குள்ள மலை முகடுகள், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் டிரோன் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படது. கரடியை பார்த்தவுடன் அதனை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். மேலும் 4 இடங்களில் கரடியை பிடிப்பதற்கு கூண்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.</p><p>இந்த நிலையில், விவசாயியை தாக்கிக் கொன்ற கரடி, வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. 8 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் கரடியை வனத்துறையினர் மீட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக்கில் கூடுதல் வசூல்; புகாரளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-orders-to-report-additional-collection-from-tasmac</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-orders-to-report-additional-collection-from-tasmac#comments</comments><guid isPermaLink="false">a884c089-7279-4e7a-b4d8-04cb654884b2</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:45:56 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:45:56.402Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,காவல்துறை,டாஸ்மாக்,Madrashighcourt,DVAC,TASMAC Case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/cudevj9a/wine33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு உத்தரவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/cudevj9a/wine33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் போலீசில் புகாரளிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.</p><p>சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக்  கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி  தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p>இதுபோல, 2022ம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.</p><h2>இனி ரசிது கட்டாயம்</h2><p>இந்த வழக்கை விசாரித்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20">சென்னை ஐகோர்ட்டு</a>  தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.</p><p>இந்தநிலையில்,  இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என மதுபான கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், மது வாங்குவோரின் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரசீது வழங்குவதில் சிரமங்கள் இருப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>ஆனால், நேற்று கூட மது வாங்கிய போது ரசீது வழங்கப்படவில்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.</p><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சூப்பர் மார்க்கெட்களில் டூத் பேஸ்ட் வாங்கினால் கூட ரசீது கொடுக்கும் நிலையில், மாநிலத்துக்கு பெரும் வருவாயை தரும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது எனவும், கூட்டத்தை முறைப்படுத்த ஏன் காவலர்களை பணியமர்த்தக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் நுகர்வோர் புகார் அளிக்கலாம்.அரசு சுற்றறிக்கையை பின்பற்றாமல், கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீசிடம் புகார் அளிக்க வேண்டும். மனுதாரர் புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர் மேம்பால பகுதியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து சீரமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-reorganization-at-the-tiruppur-flyover-area-through-the-installation-of-barricades</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-reorganization-at-the-tiruppur-flyover-area-through-the-installation-of-barricades#comments</comments><guid isPermaLink="false">da821a4d-c34a-4f6a-aed6-a8e48baf644e</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:16:34 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:16:34.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,Traffic,போக்குவரத்து</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/a2z6rcqq/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/a2z6rcqq/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருப்பூர் மாநகர பகுதியில் யுனிவர்சல் சாலையையும், ஈஸ்வரன்கோவில் சாலையையும் இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி செலவில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை கடந்த 4-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். ஆனால் சரியான திட்டமிடுதல் இல்லாமல் மேம்பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் தாறுமாறாக சென்ற வாகனங்களால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது.  </p><p>இந்தநிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி புதிய பாலப்பகுதிக்கு நேற்று காலை வந்தார். சிறிதுநேரம் அவர் அங்கு போக்குவரத்து நடைபெறுவதை பார்வையிட்டார். இதையடுத்து போக்குவரத்தை முறைப்படுத்த அங்கு தடுப்புகளை (பேரிகார்டுகள்) அமைக்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஈஸ்வரன் கோவில் செல்லும் பகுதியிலும், ஸ்ரீசக்தி தியேட்டர் பகுதியிலும் போக்குவரத்தை முறைப்படுத்த சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. </p><p>இதன் காரணமாக தற்போது பாலத்தின் இருபகுதிகளிலும் போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தடுப்புகள் உயரமாக இருப்பதால் எதிரேயும், வலது, இடது புறத்திலும் இருந்து வரும் வாகனங்களை இருசக்கர வாகன ஓட்டிகளால் பார்க்க முடியவில்லை. எனவே கூடிய விரைவில் இந்த தடுப்புகளை அகற்றிவிட்டு உயரம் குறைந்த கான்கிரீட் தடுப்புகளை அமைக்கவேண்டும். மேலும் பாலத்துக்கு சற்று நெருக்கமாக வேகத்தடைகள் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவோம் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-strengthen-the-livelihood-of-weavers-nayanar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-strengthen-the-livelihood-of-weavers-nayanar-nagendran#comments</comments><guid isPermaLink="false">f49ddc97-0280-471b-a34e-82dcf50d559d</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:13:15 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:13:15.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Weavers,நெசவாளர்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ofny48xs/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ofny48xs/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“நம் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கைவினைக் கலையையும் தலைமுறைகள் தாண்டி பாதுகாத்து வரும் கைத்தறி நெசவாளர்களின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் மனமார்ந்த தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துகள்!</p><p>கைத்தறியில் உருவாகும் ஒவ்வொரு ஆடையும் நம் மண்ணின் அடையாளத்தையும், நம் கலாச்சாரத்தின் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைக்கிறது.</p><p>கைத்தறி பொருட்களை ஆதரிப்போம். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவோம். நம் பாரம்பரியத்தைப் போற்றி, அடுத்த தலைமுறைக்கும் பெருமையுடன் கொண்டு சேர்ப்போம்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ் மோகம், போதைப் பொருள் புழக்கத்தால் பெருகும் வன்முறைக் கலாசாரம்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/violence-culture-fueled-by-the-obsession-with-reels-and-the-prevalence-of-drugs-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/violence-culture-fueled-by-the-obsession-with-reels-and-the-prevalence-of-drugs-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">3b6b21fc-19ff-4c39-bfcb-a0c9e05c0174</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:07:35 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:07:35.273Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/8v5hjiot/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/8v5hjiot/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>‘ரீல்ஸ்’ அரசியலில் கவனம் செலுத்துவதை விடுத்து, போதைப் பொருள் புழக்கத்தையும் இந்த வன்முறைக் கலாசாரத்தையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சடலத்துடன் செல்பி </h2><p>கோவை கிணத்துக்கடவு சுலபம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இருவர், ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் சடலத்துடன் செல்பி எடுத்து அவற்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள கொடூரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் சீர்குலைந்து கிடக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் அமைச்சர்கள் எப்போதும் 'ரீல்ஸ்' மோகத்தில் மூழ்கிக் கிடப்பது போலவே, இன்று தமிழக இளைஞர்களும் வன்முறையை ஒரு 'மாஸ்' (Mass) செயலாகக் கருதி, கொலை செய்துவிட்டு ரீல்ஸ் எடுக்கும் அளவிற்குச் சீரழிந்து போயிருப்பது வேதனைக்குரியது.</p><h2>இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்</h2><p>தமிழகத்தில் தடையின்றி கிடைக்கும் போதைப் பொருட்களும், மதுவுமே இதுபோன்ற மிருகத்தனமான வன்முறைகளுக்கு முக்கியக் காரணமாகும். இளைஞர்களை நல்வழிப்படுத்தத் தவறிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, வெறும் ‘ரீல்ஸ்’ அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதை விடுத்து, போதைப் பொருள் புழக்கத்தையும் இந்த வன்முறைக் கலாசாரத்தையும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இரும்புக்கரம் </a>கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வரக்கூடாது என்றுதான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர்: சவுமியா அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dam-is-being-planned-with-the-specific-intention-of-preventing-water-from-reaching-tamil-nadu-sowmiya-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dam-is-being-planned-with-the-specific-intention-of-preventing-water-from-reaching-tamil-nadu-sowmiya-anbumani#comments</comments><guid isPermaLink="false">926b3d85-6d54-434a-ab0a-0b4a4db26a86</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:29:14 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:29:14.876Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேகதாது அணை,Mekedatu dam,Sowmiya Anbumani</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/j8u6cuks/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/j8u6cuks/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசியதாவது;</p><p>”கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை. காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சட்ட முன்னெடுப்புகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில்தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்று தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அணை கட்ட வேண்டும், அல்லது கூடாது. அவ்வளவு தான். நடுவில் என்ன முயற்சி என்ன இருக்கு? நடுவில் முயற்சி செய்வது எல்லாம் தேவையில்லை." </p><p>என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஊசி மூலம் உடலில் போதை மருந்து செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-in-chennai-after-injecting-drugs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-in-chennai-after-injecting-drugs#comments</comments><guid isPermaLink="false">c0cc09a7-9a50-47c8-88e2-f2f80154959b</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:27:38 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:27:38.622Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ஊசி,போதை மருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/330754fn/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/330754fn/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்ளும் பழக்கம் கொண்டவராகவும் இருந்து வந்துள்ளார். </p><p>இவ்வாறு அடிக்கடி போதையை ஊசி மூலம் அவர் உடலில் செலுத்திக் கொண்ட காரணத்தினால், உடல்நிலை பாதிக்கப்பட்டு வெகு நாட்களாக சென்னை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் ஆகாஷ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் போதை ஊசியின் பழக்கத்தினால் நரம்புகள் அனைத்தும் தளர்வடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகாஷ் மருத்துவமனையில் உயிரிழந்தார். </p><p>இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, போதை ஊசிகள் எங்கு கிடைக்கிறது? யாரெல்லாம் இதை பயன்படுத்துகிறார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத முதல்-அமைச்சர் விஜய்... விசாரணை ஒத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/divorce-case-chief-minister-vijay-fails-to-appear-in-court-hearing-adjourned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/divorce-case-chief-minister-vijay-fails-to-appear-in-court-hearing-adjourned#comments</comments><guid isPermaLink="false">cd972a88-bb19-4ed3-b68f-6ae08ed932c8</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:16:03 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:16:03.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விவாகரத்து வழக்கு,சங்கீதா,divorce case,செங்கல்பட்டு கோர்ட்டு,Chengalpattu Court,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/i4m1qcr4/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/i4m1qcr4/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.</p><h2>விவாகரத்து கோரி மனு</h2><p>த.வெ.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p>சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><h2>முந்தைய விசாரணையில் என்ன நடந்தது?</h2><p>இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்று தரப்புகள் கோரிக்கை வைத்தன.</p><h2>இன்று விசாரணை</h2><p>அதனை தொடர்ந்து இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். </p> <h2>விசாரணை ஒத்திவைப்பு</h2><p>முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றிருந்ததால், அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>அதேவேளையில், லண்டனில் இருக்கும் சங்கீதா, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>‘சுற்றுச் சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’: மதுபானங்கள் மீது புதிய வரியை விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/environmental-and-social-welfare-levy-tamil-nadu-government-decides-to-impose-a-new-tax-on-alcoholic-beverages</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/environmental-and-social-welfare-levy-tamil-nadu-government-decides-to-impose-a-new-tax-on-alcoholic-beverages#comments</comments><guid isPermaLink="false">1cfd4bb5-dd13-4aa2-b4f1-d81293286655</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:11:19 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:11:19.225Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு அரசு,TN government,மதுபானம்,Liquor</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/4m7kyrrf/tnner.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/4m7kyrrf/tnner.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அளித்த விளக்க உரையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மதுபான நுகர்வினாலும், அதிலிருந்து உருவாகும் கண்ணாடி மற்றும் நெகிழி கழிவுகளினாலும் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து அரசு மிகுந்த கவலை கொண்டுள்ளது. </p><p>மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததும், போதிய அளவில் மறுசுழற்சி செய்யாததும், வனவிலங்குகள் மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிப்பதுடன், சூழலியல் சீரழிவிற்கும் பெரும் காரணமாக அமைகிறது என்பதும் அறியப்பட்டுள்ளது.</p> <h2>சமூக பாதிப்பு</h2><p>2. மேலும், அத்தகைய மோசமான பாதிப்புகளைக் குறைப்பதற்கு மாநில அரசுக்கு உள்ள கடமையை பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்த மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான நடைமுறைகளை வாக்குவிப்பதற்கும் தகுந்த நிதி மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் அரசு கருதுகிறது.</p><h2>'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை'</h2><p>3. அதற்கிணங்க, மதுபான விற்பனையின் மீது 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை' எனும் தீர்வையை விதிக்க அரசு முன்மொழிந்துள்ளது. இந்தத் தீர்வை மூலம் கிடைக்கும் நிதி வருவாய், பின்வரும் நோக்கங்களுக்காக அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றிற்காகப் பயன்படுத்தப்படும், அவையாவன, (a) மதுபானக் கொள்கலன்களை முறையாக மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் மற்றும் மறுபயன்பாடு ஆகியவற்றை எளிதாக்குதல்; (b) மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மதுப் பழக்க மீட்புத் திட்டங்கள்: (c) மதுப் பழக்க அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குதல்; (d) மது அருந்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் மற்றும் மதுபான அலகு கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் அபாயங்களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு மற்றும் கல்விப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல்; (e) சூழலியல், காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல்; மற்றும் (1) விதிகளின் மூலம் வகுத்துரைக்கப்படலாகிற சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் தொடர்புடைய ஏதேனும் பிற நோக்கங்கள்.</p> <p>4. எனவே, அரசானது, கூறப்பட்ட நோக்கத்திற்காக, 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தை தகுந்தவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.</p><p>5. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>மத்திய வரிகள் பகிர்வுக்கான அளவுகோல் எந்த மாநிலத்தையும் பாதிக்கக்கூடாது: சட்டசபையில் தனித்தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-tax-sharing-criteria-should-not-affect-any-state-separate-resolution-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-tax-sharing-criteria-should-not-affect-any-state-separate-resolution-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">c32759d9-04ab-4190-94e0-f558d3e53f7c</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:02:10 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:02:10.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,சட்டசபை,மத்திய அரசு,TNAssembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/xpw53y2u/mariyam33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/xpw53y2u/mariyam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய வரிகள் பகிர்வுக்கான அளவுகோல் எந்த மாநிலத்தையும் பாதிக்கக்கூடாது என்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><h2>அரசினர் தனித் தீர்மானம்</h2><p>தமிழக சட்டசபையில் இன்று, மத்திய அரசின் வரிப் பகிர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை உறுதி செய்யக் கோரி தனித் தீர்மானத்தை அரசு கொண்டு வந்தது. இந்த தனித் தீர்மானத்தை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">நிதி அமைச்சர் மரிய வில்சன்</a> கொண்டுவந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பு </h2><p>இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகளை நினைவுகூர்ந்தும், மாநிலங்கள் தங்களது அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது என்பதை அரசு உணர்ந்துள்ளது. </p><p>தமிழ்நாடு மாநிலம் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. </p><h2>கொள்கை அடிப்படையில் அமைய வேண்டும்</h2><p>மேலும், மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும், மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்தவித பாதகமான நிலையிலும் வைக்கப்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டும், இப்பேரவையில் இந்திய அரசை பின்வருமாறு வலியுறுத்தித் தீர்மானிக்கிறது:- </p><h2>உரிய நிதிப் பகிர்வு</h2><p>இந்திய அரசியலமைப்பின் நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகள், சமத்துவம் மற்றும் நியாயம் ஆகியவற்றிற்கு இணங்க, மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிய நிதிப் பகிர்வினை உறுதி செய்ய வேண்டும். </p><p>மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை உரிய முறையில் அங்கீகரிக்கும் வகையில், மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான, புறநிலையற்ற மற்றும் சமமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். </p><p>எந்த மாநிலத்தையும் பாதிக்கக்கூடாது</p><p>மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக, மத்திய வரிகளின் பகிர்விற்கான அளவுகோல்கள் எந்த மாநிலத்தையும் பாதகமான நிலையில் வைக்காதவாறு அமைக்கப்பட வேண்டும். </p><p>எதிர்காலத்தில் மத்திய  வரிகளின் பகிர்வு தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது, தமிழ்நாடு மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். </p><p>இவ்வாறு அவர் பேசினார். </p><p>இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு,  இந்த தீர்மானம் பொதுப்படையாக உள்ளது. இதில் முக்கியமான திருத்தம் செய்ய வேண்டும்.நிதி பகிர்வில் 50 சதவீத மாநிலங்களுக்கு இருக்க வேண்டும் அதை குறிப்பிட்டு தீர்மானத்தை மாற்ற வேண்டும் .மாநில அரசுகளின் வலிமைதான் மத்திய அரசின் வலிமை என பேரறிஞர் அண்ணா கூறினார்.   நிதி ஆயோக் கூட்டங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கருத்தை வலிமையாக குறிப்பிட்டார் என்றார்.</p><p>அதனை தொடர்ந்து தீர்மானத்தை முழு மனதாக அரசின் தனித்தீர்மானத்துக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் , நிதி பகிர்வை அதிகரிக்க அதிமுக வலியுறுத்தியது. நிதி பகிர்வில் தமிழகம் பாதிக்க கூடாது என  அவை தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.  அனைத்து கட்சிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது என சபாநாயகர் கூறினார். </p><p>அமைச்சர் மரிய வில்சன் கொண்டுவந்த அரசினர் தனித்திர்மானம் குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது. </p>]]></content:encoded></item><item><title>கோவிலுக்கு வந்த சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்... என்ன நடந்தது திருத்தணியில்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sekar-babus-car-stopped-upon-arrival-at-the-temple-what-happened-in-tiruttani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sekar-babus-car-stopped-upon-arrival-at-the-temple-what-happened-in-tiruttani#comments</comments><guid isPermaLink="false">ca4c82c1-643b-4195-b4ef-12e357bb6dfa</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:58:01 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:58:01.374Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Thiruvallur,திருவள்ளூர்,Sekar Babu,P. K. Sekar Babu,சேகர்பாபு,பி.கே.சேகர்பாபு,Tiruttani Murugan temple,திருத்தணி,tiruttani,Tiruttani Murugan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wo6tawy8/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wo6tawy8/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி,</p><p>ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சுவாமி தரிசனத்திற்கு வந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பி.கே. சேகர்பாபுவின் கார், மலை அடிவாரத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>கோவிலில் பலத்த பாதுகாப்பு</h2><p>ஆடி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இந்த நிலையில், சேகர்பாபு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரது வாகனத்தை மலை அடிவாரத்திலேயே நிறுத்தினர். தனது வாகனத்திற்கு கார் பாஸ் இருப்பதுடன், தாம் எம்.எல்.ஏ. என்பதையும் சுட்டிக்காட்டி மேலே செல்ல அனுமதிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.</p><h2>போலீசாருடன் வாக்குவாதம் </h2><p>ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அனுமதி கிடைத்தால் மட்டுமே வாகனத்தை மேலே அனுமதிக்க முடியும் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போலீசார் </a>தெரிவித்தார். இதையடுத்து சேகர்பாபு மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>கார் பாஸ் வைத்திருந்த பிற வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், சேகர்பாபுவின் வாகனம் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோவில் அறங்காவலர்கள் எடுத்துக்கூறியும் உடனடியாக அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><h2>பரபரப்பு நிலவியது</h2><p>சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக மலை அடிவாரத்தில் காத்திருந்த பின்னர், மாவட்ட எஸ்.பி. சாய் பிரணீத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து சேகர்பாபுவின் வாகனம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ap-tamim-ansari-appointed-as-chairman-of-the-tamil-nadu-minorities-economic-development-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ap-tamim-ansari-appointed-as-chairman-of-the-tamil-nadu-minorities-economic-development-corporation#comments</comments><guid isPermaLink="false">2701a793-9fea-4cb0-b15e-d031b6e3386e</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:28:30 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:28:30.206Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,TN govt,சிறுபான்மையினர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/cwoifvdd/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/cwoifvdd/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி,  ஏ.பி.தமீம் அன்சாரி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) தலைவராக (Chairman) நியமிக்கப்பட்டுள்ளார். இன்று 07.08.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 4.15 மணிக்கு, சென்னை TAMCO தலைவர் அறையில், அமைச்சர்கள் தலைமையிலும், IAS அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையிலும், புதிய தலைவர் பொறுப்பேற்க உள்ளார்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி விவாகத்தில் தவெக அரசு சமரசம் செய்யாது - அமைச்சர் ஆனந்த் உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-anand-affirms-that-the-tvk-government-will-not-compromise-on-the-cauvery-issue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-anand-affirms-that-the-tvk-government-will-not-compromise-on-the-cauvery-issue#comments</comments><guid isPermaLink="false">89848c46-13fb-4076-8f8c-b152dbd067e6</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:24:47 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:24:47.810Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery issue,காவிரி விவகாரம்,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dpnetsfy/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dpnetsfy/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசியதாவது;</p><p>மாதந்தோறும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கான  உரிய நீரை பெறுவதில் சாவாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக இரு மாநில முதல்-அமைச்சர்கள் இடையே கடந்த 3-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கர்நாடக முதல் மந்திரி அதை மறுத்துவிட்டார். தகுந்த நேரம் வரும்போது நேரில் சந்தித்து பேசுவோம் என தெரிவித்து விட்டார்.</p><p>மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. குடிநீர் தேவைக்கு மட்டும் அணை திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததன் காரணமாக காவிரியில் தண்ணீர் வரவில்லை. சூழலுக்கு தகுந்தபடி மேட்டூர் அணை திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். </p><p>தவெக அரசு காவிரி விவாகத்தில்  சமரசத்தில் ஈடுபடாது. சட்ட, நிர்வாக, தொழில்நுட்பரீதியாகநடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் முதல்-அமைச்சர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் நலன், மற்றும் காவிரி உரிமையை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item></channel></rss>