<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 26 Jul 2026 02:48:35 +0000</lastBuildDate><item><title>ஓசூரில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gst-officer-arrested-for-accepting-rs1-lakh-bribe-in-hosur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gst-officer-arrested-for-accepting-rs1-lakh-bribe-in-hosur#comments</comments><guid isPermaLink="false">7f8f30ac-bfe0-4688-a8f1-67fd41d939b2</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:46:57 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:46:57.275Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,Bribery,Hosur,ஓசூர்,கிருஷ்ணகிரி,Krishnagiri,GST,அலுவலகம்,Office,Commercial Tax Department,வணிக வரித்துறை,Officer arrested,ஜி.எஸ்.டி. அதிகாரி கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/asscffp0/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.எஸ்.டி. அதிகாரி கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/asscffp0/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஓசூர், </p><p>ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகில் சீதாராம் மேடு பகுதியில் வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">ஜி.எஸ்.டி. அதிகாரி</a> ரூ.1 லட்சம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கியபோது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>ரூ.1 லட்சம் லஞ்சம்</h2><p>ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகில் சீதாராம் மேடு பகுதியில் வணிக வரித்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி காலனியை சேர்ந்த கலையரசன் (வயது45) என்பவர் மாநில வரி அலுவலராக (ஒசூர் வடக்கு) பணியாற்றி வருகிறார். ஒசூர் ஜூஜூவாடி பகுதியை சேர்ந்த நம்பி(75) என்ற தொழிலதிபர், ஜி.எஸ்.டி. தொகையை பெறுவதற்காக கலையரசனை அணுகினார். அப்போது அவர் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் முடித்து தருவதாக கூறியுள்ளார்.</p><h2>ஜி.எஸ்.டி. அதிகாரி கைது</h2><p>ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத நம்பி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் அங்கு வந்தனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய பணத்தை கலையரசனிடம் நம்பி கொடுக்கும்போது அவர் கையும், களவுமாக பிடிபட்டார்.</p><p>இதனை தொடர்ந்து போலீசார் கலையரசனிடம் விசாரணை நடத்தி, பின்னர் அவரை கைது செய்தனர். தொடர்ந்து வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் ஒசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-egg-laying-hens-drops-by-rs-5-per-kg-in-the-namakkal-zone-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-egg-laying-hens-drops-by-rs-5-per-kg-in-the-namakkal-zone-2#comments</comments><guid isPermaLink="false">05669afd-7a20-4aea-9797-913ba1821df0</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:31:36 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:31:36.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டைக்கோழி,hens</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/j1h31om7/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/j1h31om7/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாமக்கல்,  </p><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர்.</p><p>எனவே முட்டை கோழி விலை கிலோ ரூ.115ஆக குறைந்து உள்ளது. கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பெருக்குக்கு காவிரியில் புனித நீராட மேட்டூர் அணை திறக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-mettur-dam-be-opened-for-holy-bathing-in-cauvery-for-aadi-perukku-peoples-expectations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-mettur-dam-be-opened-for-holy-bathing-in-cauvery-for-aadi-perukku-peoples-expectations#comments</comments><guid isPermaLink="false">e6a33e31-7ba0-4ccc-9ebe-3e7bd8dcc06e</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:28:12 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:28:12.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,Cauvery,காவிரி,ஆடிப்பெருக்கு,aadi perukku</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/3fw7i440/77.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/3fw7i440/77.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர், </p><p>அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றங்கரைகளில் புனித நீராட வசதியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.</p><h2>ஆடிப்பெருக்கு</h2><p>பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை தவிர்த்தாலும், சுப காரிய பேச்சுக்களை தொடங்கவும், புதிய முயற்சிகளை தொடங்கவும் ஏற்ற நாளாக ஆடிப்பெருக்கு கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு என்றதும், காவிரிக்கரையில் செய்யப்படும் வழிபாடுகளே நம் அனைவரின் நினைவுக்கு வரும்.</p><p>புதிதாக திருமணமான பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் தாலி பெருக்குதலைச் செய்யலாம். பிற சுமங்கலிகள் ஆற்றங்கரைக்குச் சென்று தாலிக்கயிறு மாற்றிக்கொள்வதும் உண்டு. சிலர் மஞ்சள் கயிற்றை மூத்த சுமங்கலிகள் அல்லது கணவன் கையில் கொடுத்துக் கட்டிக்கொள்வதும் உண்டு. இவ்வாறு செய்வதன் மூலம் நித்திய சுமங்கலி பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை ஆகும். பருவமழை தவறிய காலக்கட்டங்களில் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் ஆடிப்பெருக்கை காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் கொண்டாட ஏதுவாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.</p><h2>தண்ணீர் திறக்கப்படுமா?</h2><p>அதாவது ஆடி 18-ந் தேதிக்கு சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி வருகிறது. அதே நேரத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வருவதால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்து உள்ளது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 74.26 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு வெறும் 41 கனஅடி என்ற அளவில் தான் உள்ளது.</p><p>தற்போதைய சூழலில் பருவமழை தீவிரம் அடையாத பட்சத்தில் காவிரி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பதே கேள்விக்குறியாகி வருகிறது. இந்த நிலையில், ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் பொதுமக்கள் வழிபட தண்ணீர் திறக்கப்படுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும் புனித நீராட வசதியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.</p><h2>பொதுப்பணித்துறை விளக்கம்</h2><p>இது குறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்ட போது. 'வழக்கமாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை</a>யில் இருந்து ஆடிப்பெருக்கை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழக அரசு இந்த மாத இறுதிக்குள் தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கோவை விமான நிலைய விரிவாக்கம்: சாலை அமைக்க நில அளவை பணி நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-airport-expansion-land-survey-work-for-road-construction-completed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-airport-expansion-land-survey-work-for-road-construction-completed#comments</comments><guid isPermaLink="false">d09a3bc6-56c8-4cb2-9de7-9e1e94790cee</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:15:33 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:15:33.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கோவை விமான நிலையம்,Coimbatore Airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/xed2w01m/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/xed2w01m/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>விமான நிலைய விரிவாக்கம்</h2><p>கோவையின் வளர்ச்சிக்கு விமான நிலைய விரிவாக்கம் மிகவும் அவசியம். இங்குள்ள 9 ஆயிரம் அடி நீள ஓடுபாதையை 12 ஆயிரம் அடியாக நீட்டிக்க வேண்டும். இதற்காக கடந்த காலத்தில் ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்ப டுத்தப்பட்டது. ஆனால் கூடுதலாக 7 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. எனவே நிலத்தை கையகப்படுத்தும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.</p><p>கோவை விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டால் போயிங் 777, ஏர்பஸ் ஏ350 போன்ற பெரிய சர்வதேச விமானங்களை கோவையில் இருந்து நேரடியாக இயக்க முடியும். மேலும் சரக்கு விமானங்களையும் பிற நாடுகளுக்கு இயக்க முடியும். இதனால் தொழில் வளர்ச்சி மேம்படும்.</p><h2>சுற்றுச்சுவர் கட்டும்பணி</h2><p>இந்த நிலையில் கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது பயன்பாட்டிற்கு 10.5 மீட்டர் அகலமுள்ள சாலை அமைக்கும் அளவிற்கு இடம் விட்டு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று கூறினர்.</p><p>ஆனால் விமான நிலைய அதிகாரிகள் 4 மீட்டர் மட்டும் சாலைக்கு விடப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் 10.5 மீட்டர் அகல சாலைக்கு இடம் விடக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுச்சுவர் கட்டும் பணி பாதிக்கப்பட்டது.</p><h2>நில அளவை பணி</h2><p>இதைத்தொடர்ந்து கலெக்டர் பவன்குமார் அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்து அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்டார். அப்போது 10.5 மீட்டர் அகல சாலை இருந்தால் மட்டுமே தங்களது பகுதியில் கட்டுமான பணிகள் எதுவும் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும். வாகனங்கள் எளிதாக சென்று வர முடியும் என்றனர்.</p><p>அதை ஏற்று அந்த பகுதியில் 10.5 மீட்டர் அகல சாலை அமைக்க நில அளவை பணி மாவட்ட நிர்வாகத்தால் கடந்த 3 நாட்களாக நடைபெற்று நிறைவடைந்தது. இது தொடர்பாக விமான நிலைய ஆணையத்திடம் அறிக்கை மற்றும் வரைபடம் வழங்கப்பட்டு உள்ளது. ஆணையத்தின் ஒப்புதல் பெற்றதும் விமான நிலைய சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சார்லப்பள்ளி-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekly-special-train-service-between-charlapally-kollam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekly-special-train-service-between-charlapally-kollam#comments</comments><guid isPermaLink="false">1b6b5815-a1d6-46ab-a2a9-1a0f0a1da4d2</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:10:54 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:10:54.267Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Kollam,Special train,கொல்லம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/u22fdpo1/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/u22fdpo1/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருப்பூர், </p><p>அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக ஐதராபாத்தில் உள்ள சார்லப்பள்ளி-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சார்லப்பள்ளி-கொல்லம் (வண்டி எண்.07195) வாராந்திர சிறப்பு ரெயில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 14-ந்தேதி முதல் செப்டம்பர் 4-ந்தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் (4 சேவைகள்) சார்லப்பள்ளியில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு கொல்லம் சென்றடையும். </p><p>இந்த ரெயில் திருப்பூருக்கு சனிக்கிழமைகளில் நள்ளிரவு 2.25 மணிக்கு வந்து 2.30 மணிக்கு புறப்படும். கொல்லம்-சார்லப்பள்ளி (07196) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 15-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை சனிக்கிழமைகளில் (4 சேவைகள்) கொல்லத்தில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு சார்லப்பள்ளியை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 2 மணிக்கு வந்து 2.05 மணிக்கு புறப்படும்.</p><p>மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சண்டே ஸ்பெஷல்: சுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி?</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/sunday-special-how-to-make-delicious-mango-rice</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/sunday-special-how-to-make-delicious-mango-rice#comments</comments><guid isPermaLink="false">3a76d66e-660d-468e-b631-67f4af214244</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:09:15 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:09:15.116Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sunday Special,Bachelors Cooking Tips,சண்டே ஸ்பெஷல்,பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ்,make delicious,சுவையான,மாங்காய் சாதம்,செய்வது எப்படி?,Mango Rice,How to Make?</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/nv3xn80n/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுவையான மாங்காய் சாதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/nv3xn80n/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>தேவையான பொருட்கள்</h2><p>பொன்னி அரிசி - 200 கிராம்</p><p>மாங்காய் - 200 கிராம் </p><p>சீரகம் - 1 டீஸ்பூன் </p><p>மிளகு - ¾ டீஸ்பூன் </p><p>வெந்தயம் - ½ டீஸ்பூன் </p><p>கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன் </p><p>கடுகு - 1 டீஸ்பூன் </p><p>உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன் </p><p>கடலை பருப்பு - 1 டீஸ்பூன்</p><p>கறிவேப்பிலை - 2 கொத்து </p><p>வறுத்த வேர்கடலை -3 டேபிள்ஸ்பூன்</p><p>முந்திரி பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் </p><p>பச்சை மிளகாய் - 3 </p><p>காய்ந்த மிளகாய் - 3</p><p>பெருங்காயப் பொடி - 2 சிட்டிகை </p><p>மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன் </p><p>உப்பு - தேவையான அளவு. </p><h2>செய்முறை</h2><p>முதலில், அரிசியை வேகவைத்து சாதமாக வடித்து, உதிரி உதிரியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். சாதம் குழைந்துவிடக்கூடாது. அடுத்து, மாங்காயை தோல் நீக்கி, துருவி எடுத்துக்கொள்ளவும்.</p><h2>மசாலா பொடி</h2><p>தொடர்ந்து, மாங்காய் சாதத்துக்கு தேவையான மசாலா பொடியை தயார் செய்ய வேண்டும். அதற்கு கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைக்கவும். பாத்திரம் சூடாகியதும் சீரகம், வெந்தயம், மிளகு சேர்த்து நன்கு வறுக்கவும். சிவக்க வறுத்தால்போதும், கரிந்துவிடக்கூடாது. பின்னர், அதை ஆற வைத்து பொடியாக திரித்து வைத்துக்கொள்ளவும்.</p><h2>வறுத்தல்</h2><p>அடுத்து, அடுப்பில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, பாத்திரம் சூடானவுடன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடாகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொறியவிடவும். நன்கு பொறிந்த உடன் 2 கொத்து கறிவேப்பிலை, வறுத்த வேர்க்கடலை, உடைத்த முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். நன்கு வறுபட்டவுடன், பச்சை மிளகாயை இரண்டாக கீறி சேர்க்கவும். தொடர்ந்து, காய்ந்த மிளகாயையும் போடவும். நன்கு வறுத்துக் கொண்டே பெருங்காய தூளை சேர்க்கவும். அதன்பிறகு, துருவிவைத்த மாங்காயை சேர்க்கவும். ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.</p><h2>சாதத்தை சேர்த்து களந்து விட வேண்டும்</h2><p>தொடர்ந்து, வடித்து உதிரி உதிரியாக எடுத்துவைத்துள்ள சாதத்தை சேர்க்கவும். வறுத்து திரித்து வைத்த மசாலா பொடியையும் சேர்க்கவும். சாதத்தில் எல்லா இடங்களிலும் மசாலா படும் அளவுக்கு நன்கு களந்துவிடவும். உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும். சுவையான, மனமான மாங்காய் சாதம் ரெடி. பள்ளி செல்லும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/freedom-of-speech-has-been-curtailed-under-the-tvk-government-former-minister-raghupathy-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/freedom-of-speech-has-been-curtailed-under-the-tvk-government-former-minister-raghupathy-alleges#comments</comments><guid isPermaLink="false">3bbf51a0-9dda-4471-bff5-8d169a0bca72</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:06:19 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:06:19.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,ரகுபதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/gcu1oxnu/Ragupati.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் அமைச்சர் ரகுபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/gcu1oxnu/Ragupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> நெல்லை </p><p>தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.அவரை தி.மு.க முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று சிறைக்கு சென்று சந்தித்தனர்.பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>பொய் வழக்கு</h2><p>த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அரசை விமர்சித்து சாதாரண பேச்சுவாக்கில் பேசுபவர்கள் மீதெல்லாம் பொய் வழக்கு போடப்படுகிறது. த.வெ.க அரசு முழுக்க முழுக்க பா.ஜனதாவின் 'சிலீப்பர் செல்லாக' இயங்குகிறது. பா.ஜனதா மிரட்டுவதற்கு ஏற்ப செயல்படாவிட்டால் தங்களுக்கு வரும் நிதி நின்றுவிடுமோ என்ற பயத்திலேயே த.வெ.க. அரசு செயல்படுகிறது. மக்கள் மீது அரிசி விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என பொருளாதார சுமையை சுமத்தி விட்டு, சட்டமன்றத்தையே ஒரு திரைப்படக் கொட்டகை போலவும், தயாரிப்பு நிறுவனம் போலவும் மாற்றி சினிமாவை வேடிக்கை பார்க்கும் அரசாக இது உள்ளது. 'ஜனநாயகன்' படத்தில் நான்கு அமைச்சர்கள் நடித்துள்ள சூழலில், கரூர் சம்பவத்தின்போது கண்ணீர் விடாதவர்கள் இப்போது அந்த படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்.</p><h2>உரிமை மீறல் பிரச்சினை</h2><p>சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வெளிநடப்பு செய்ய முழு உரிமை உண்டு. ஆனால், 'சட்டமன்றக் கதவுகளை மூடுங்கள்' என முதல்-3 அமைச்சர் விஜய் கூறியது உறுப்பினர்களை சிறை வைப்பதற்கு சமமான ஜனநாயக உரிமை மீறலாகும். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வரும் நிலையில், இது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோ சித்து உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும். இதுமட்டுமன்றி, கோவிலுக்கு சொந்தமான நிலங்களைப் பட்டா மாற்றம் செய்து சூறையாடுவதும், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளதும் தான் த.வெ.க. அரசின் நிஜ முகமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா ஆக. 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aral-chairman-arunachalasamy-temple-aadi-amavasya-festival-begins-with-flag-hoisting-on-aug-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aral-chairman-arunachalasamy-temple-aadi-amavasya-festival-begins-with-flag-hoisting-on-aug-3#comments</comments><guid isPermaLink="false">d434c30c-ac04-4d7f-86bb-05f9f5c9ab22</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:00:16 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:00:16.584Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவில்,ஏரல்,Eral,Aadi Amavasai festival,ஆடி அமாவாசை திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/g5hzbwt4/76.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/g5hzbwt4/76.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>ஏரல், </p><p>ஏரலில் உள்ள சேர்மன் அருணாச்சலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.</p><h2>கொடியேற்றம்</h2><p>ஏரலில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சேர்மன் அருணாச்சலசாமி கோவில்</a> உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 3-ந் தேதி காலை 6.30 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருணாச்சலசாமி கோவிலில் வலம் வருதல் நடைபெறுகிறது. 4-ந் தேதி இரவு 8 மணிக்கு திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி. 5-ந் தேதி இரவு 8 மணிக்கு முல்லை சப்பரத்தில் சதாசிவ மூர்த்தி அலங்காரத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 11-ந் தேதி வரை பல்வேறு சப்பரத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந் தேதி பகல் 1.30 மணிக்கு சாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, மாலை 5 மணிக்கு இலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலம், இரவு 11 மணிக்கு சாமி கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளால் நடக்கிறது.</p><h2>வெள்ளை சாத்தி தரிசனம்</h2><p>13-ந் தேதி காலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு உள்ளிட்டவை நடக்கிறது. 14-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, பொருநை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம். மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடைபெறுகிறது. அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அத்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வறண்ட 3,488 ஏரிகள் - நீர்வளத்துறை தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3488-lakes-dry-up-in-tamil-nadu-water-resources-department-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3488-lakes-dry-up-in-tamil-nadu-water-resources-department-information#comments</comments><guid isPermaLink="false">0d11ce20-e07f-4a7f-8dc3-879b73498962</guid><pubDate>Sun, 26 Jul 2026 01:51:59 +0000</pubDate><atom:updated>2026-07-26T01:51:59.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அணைகள்,dams,குடிநீர்,drinking water,Water Resources Department,நீர்வளத்துறை,lakes,ஏரிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/n4c2j85t/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/n4c2j85t/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். இதில் மேட்டூர், பவானிசாகர், பெரி யாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட் டும் 198 டி.எம்.சி. இந்த அணைகள் பல்வேறு மாவட்டங்களின் பாசனம், குடிநீர் தேவையை மட்டுமின்றி, தொழிற்சாலைகளின் நீர் தேவையையும் பூர்த்தி செய்கின்றன.</p><p>தற்போது 90 அணைகளிலும் சேர்த்து, 70.29 டி.எம்.சி. அதா வது 31.33 சதவீதம் நீர் மட்டுமே உள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 36.47 டி.எம்.சி. ஈரோடு பவானிசாகரில் 6.25, கோவை பரம்பிக்குளத்தில் 3.65, சாத்தனூர் 2.12 டி.எம்.சி., பேச்சிப்பாறை 2 டி.எம்.சி., தண்ணீர் அதிகபட்சம் இருப்பு உள்ளது. அணைகளில் சேமிக்கப்பட்டுள்ள நீர், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக திறக்கப்பட்டு வருகிறது.</p><h2>வறண்ட ஏரிகள்</h2><p>தமிழகத்தில் 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகள் உள்ளன. அவற்றில் 419 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 579 ஏரி கள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பியுள்ளன. 1,060 ஏரிகள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. அதேபோல், 2 ஆயிரத்து 476 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 6 ஆயிரத்து 119 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. 3 ஆயிரத்து 488 ஏரிகள் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.</p><p>இதில் அதிகபட்சமாக மதுரையில் 1,340 ஏரிகளில் 1,062 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. அதேபோல், சிவகங்கையில் 1,459-ல் 523 ஏரிகளிலும், திருவண்ணாமலையில் 697-ல் 309 ஏரிகளிலும், தஞ்சாவூரில் 641-ல் 280 ஏரிகளிலும், திருவள்ளூ ரில் 578-ல் 156 ஏரிகளிலும், திண்டுக்கலில் 190-ல் 151 ஏரிகளிலும், நெல்லையில் 780-ல் 132 ஏரிகளிலும் தண்ணீர் இல்லை. இதற்கு தற்போது கடும் வெயில் கொளுத்துவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.</p><h2>வறட்சி அபாயம்</h2><p>நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையும் எந்த அளவுக்கு பெய்யும் என்று உறுதியாக கூற முடியாது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதைப் போல, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் கடுமையான அளவில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர்-மாணவி பலி: கடலில் குளித்து &apos;ரீல்ஸ்&apos; எடுத்தபோது சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-after-being-caught-in-giant-wave-tragedy-as-he-took-reels-while-bathing-in-the-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-after-being-caught-in-giant-wave-tragedy-as-he-took-reels-while-bathing-in-the-sea#comments</comments><guid isPermaLink="false">2f7638f0-9974-4661-be70-9ca0d2faf46f</guid><pubDate>Sun, 26 Jul 2026 01:17:32 +0000</pubDate><atom:updated>2026-07-26T01:17:32.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மாணவி,பலி,ரீல்ஸ்,Reels,students,sea wave,மாணவர்,Ennore,எண்ணூர்,Engineering College,என்ஜினீயரிங் கல்லூரி,killed,Giant,ராட்சத கடல் அலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/6bym8nbk/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ என்ஜினீயரிங் கல்லூரி மாணவர், மாணவி பலி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/6bym8nbk/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எண்ணூர் அருகே கடலில் குளித்தபோது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">ராட்சத அலையில் சிக்கி</a> <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்-மாணவி பலி</a>யான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்</h2><p>சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் மகன் ஆகாஷ் (வயது 20). இவர் புழல் அடுத்த சூரப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த பலராமன் மகள் கிருத்திகா(21). இவரும் அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு விடுமுறை என்பதால் கிருத்திகா, ஆகாஷ் மற்றும் அதே கல்லூரியில் படிக்கும் மேலும் 3 சக மாணவ, மாணவிகள் என மொத்தம் 5 பேர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">எண்ணூர்</a> ராமகிருஷ்ணாநகர் கடற்கரைக்கு வந்தனர். </p><h2>ராட்சத அலையில் சிக்கி பலி</h2><p>பின்னர் கிருத்திகா, ஆகாஷ் மற்றும் அவர்களது நண்பர் என 3 பேர் கடலில் குளித்தனர். மற்ற 2 பேரும் கரையில் நின்றபடி, அவர்கள் குளிப்பதை 'ரீல்ஸ்' போடுவதற்காக செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தோன்றிய ராட்சத அலை, கிருத்திகா மற்றும் ஆகாஷ் இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது நண்பர்கள் 3 பேரும் கூச்சலிட்டனர். அங்கு மீன்பிடி வலைகளை சீரமைத்து கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து போராடி, கிருத்திகாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். </p><p>பின்னர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், கிருத்திகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h2>உடல் கரை ஒதுங்கியது</h2><p>இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருத்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலில் மாயமான ஆகாசை தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் தேடி வந்தனர். இதற்கிடையில் ஆகாஷ் உடலும் அதே பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>போதை ஒழிப்பை வலியுறுத்தி மாமல்லபுரம் முதல் மெரினா வரை 60 கி.மீ தூரம் கடலில் நீச்சல் அடித்து 23 வீரர்கள் சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/23-athletes-set-a-record-by-swimming-60-km-in-the-sea-from-mamallapuram-to-marina-to-emphasize-drug-eradication</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/23-athletes-set-a-record-by-swimming-60-km-in-the-sea-from-mamallapuram-to-marina-to-emphasize-drug-eradication#comments</comments><guid isPermaLink="false">31710c75-771e-4dc6-b19b-2dfb77d61a59</guid><pubDate>Sun, 26 Jul 2026 01:13:50 +0000</pubDate><atom:updated>2026-07-26T01:13:50.712Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழிப்புணர்வு,சாதனை,போதை ஒழிப்பு,Anti-drug awareness,Swimmer,நீச்சல் வீரர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/9cefy9rs/75.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/9cefy9rs/75.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக மாமல்லபுரத்தில் இருந்து மெரினா வரை 60 கி.மீ தூரம் கடலில் நீச்சல் அடித்து 23 வீரர்கள் சாதனை படைத்தனர்.</p><h2>தொடர் நீச்சல் பயணம்</h2><p>போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக செங்கல்பட்டு மாவட்ட கடலோர பாதுகாப்பு படை மற்றும் சென்னை தனியார் நீச்சல் வீரர்கள் அமைப்பு சார்பில் மாமல்லபுரம் கடலில் இருந்து சென்னை மெரினா கடல் வரை 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு இடைவெளி இல்லாமல் நீந்தும் சாதனை போட்டி நடத்தப்பட்டது. இதில் நீச்சல் வீரர்கள் 23 பேர் கடலோர காவல் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் முன்னிலையில் மாமல்லபுரம் கடலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்களின் தொடர் நீச்சல் பயணத்தை தொடங்கினர்.</p><h2>நீச்சல் பயணம் நிறைவு</h2><p>தொடர்ந்து தேவனேரி. பட்டிபுலம், புதுஎடையூர்குப்பம். நெம்மேலிகுப்பம். புதுகல்பாக்கம், கோவளம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், பெசன்ட் நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட ஆழ்கடல் வழியாக நீந்தி சென்று மெரினா கடலில் மாலை 4.30 மணிக்கு தங்கள் தொடர் நீச்சல் பயணத்தை நிறைவு செய்தனர். அவர்களுடன் கடலில் 5 படகில் நீச்சல் வீரர்களுக்கு அருகில் மருத்துவ குழுவினர், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">நீச்சல்</a> பயிற்சியாளர்கள், உறவினர்கள் சென்றனர். மெரினா கடலில் கரை ஏறிய 23 நீச்சல் வீரர்களை உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினார்.</p>]]></content:encoded></item><item><title>கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் ‘நீட்’ ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது - கனிமொழி எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-a-possibility-that-neet-could-be-scrapped-if-education-is-moved-to-the-state-list-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-a-possibility-that-neet-could-be-scrapped-if-education-is-moved-to-the-state-list-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">b3daf1a5-2236-46b5-bf14-ed8fc05e63be</guid><pubDate>Sun, 26 Jul 2026 00:58:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T00:58:00.242Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Kanimozhi MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/daezf4st/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/daezf4st/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- </p><p>“மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்ற பிம்பத்தை பரப்பக்கூடிய சூழலில், இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை கையில் எடுத்து மத்திய அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். </p><p>அடுத்ததாக மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள். தி.மு.க. தொடர்ந்து முன்வைக்கக்கூடிய கோரிக்கையும் அதுவே. மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வந்தால் நிச்சயமாக ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.”</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/deadline-to-apply-for-medical-counseling</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/deadline-to-apply-for-medical-counseling#comments</comments><guid isPermaLink="false">5f0cf4b5-9127-4516-a3b1-860d5bac5095</guid><pubDate>Sun, 26 Jul 2026 00:54:06 +0000</pubDate><atom:updated>2026-07-26T00:54:06.998Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விண்ணப்பம்,Application,deadline,Counseling,கலந்தாய்வு,medical college student,அவகாசம்,மருத்துவப்படிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/axpnnv9p/68.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/axpnnv9p/68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு கடந்த 23-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அதில் 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. இந்த நிலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20">மருத்துவப் படிப்பு </a>கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்து இருக்கிறது.</p><h2>நாளை பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பிக்கலாம்</h2><p>அதன்படி, tnmedicalselection.org என்ற இணையதளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பிக்க முடியும். இது வரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-37</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-37#comments</comments><guid isPermaLink="false">6b3127ae-fc47-4803-ab07-59b05e9d219c</guid><pubDate>Sun, 26 Jul 2026 00:35:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T00:35:00.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/5c60lfev/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/5c60lfev/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (26.07.2026 ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாப சாவு: வீட்டிற்குள் புகுந்த மற்றொரு மான் உயிர் தப்பியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deer-dies-after-dog-attack-another-deer-survives-in-house-toilet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deer-dies-after-dog-attack-another-deer-survives-in-house-toilet#comments</comments><guid isPermaLink="false">b9d29585-2759-4217-a7e3-4b96fc0ba490</guid><pubDate>Sat, 25 Jul 2026 23:45:30 +0000</pubDate><atom:updated>2026-07-25T23:45:30.161Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Covai,உயிர்,புள்ளிமான் சாவு,survived,நாய்கள்dogs,Deer death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/kddwnk3f/deer.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/kddwnk3f/deer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை பேரூர் அருகே உள்ள கிராமப்பகுதியில், வெறிநாய்கள் கடித்ததில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">புள்ளிமான்</a> ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. நாய்களிடம் இருந்து தப்பிக்க குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, வீட்டின் கழிவறையில் தஞ்சமடைந்த மற்றொரு மான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.</p><h2>வெறிநாய்கள் கூட்டம்</h2><p>நேற்று அதிகாலை இரண்டு புள்ளிமான்கள் தண்ணீர் மற்றும் உணவு தேடி பேரூர் செட்டிபாளையம் கிராம பகுதிக்குள் நுழைந்துள்ளன. அப்போது, அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள் கூட்டம், மான்களை கண்டு குரைத்தபடி துரத்தி சென்றன .இதனால் அதிர்ச்சியடைந்த மான்கள், தங்களை காப்பாற்றி கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடின.  </p> <h2>புள்ளிமான் இறந்தது</h2><p>எனினும், ஒரு மானை விடாமல் துரத்திய நாய்க்கூட்டம், அதனை சூழ்ந்து கொண்டு உடலின் பல்வேறு இடங்களில் கொடூரமாக கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அந்த புள்ளிமான், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தது.</p><h2>வீட்டில் தஞ்சமடைந்த மான்</h2><p>இதற்கிடையே, நாய்களிடம் இருந்து தப்பிய மற்றொரு மான், அந்த பகுதியில் இருந்த ஒரு குடியிருப்பு பகுதிக்குள் அஞ்சியபடி ஓடியது. அங்கிருந்த ஒரு வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்ட அந்த மான், உள்ளே புகுந்து அங்கிருந்த கழிவறையில் தஞ்சமடைந்தது. வீட்டிற்குள் மான் புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக கழிவறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, பேரூர் போலீசாருக்கும், போளுவாம்பட்டி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.</p><h2>வனத்துறை மீட்பு</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், உயிரிழந்த மானின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டின் கழிவறையில் பத்திரமாக அடைக்கப்பட்டிருந்த மற்றொரு மானை லாவகமாக பிடித்து மீட்டனர். மீட்கப்பட்ட அந்த மானுக்கு லேசான காயங்கள் இருந்ததால், அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அந்த மான் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டது.</p><p> இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
பணம் கேட்டு மிரட்டி.. கல்குவாரியை சூறையாடிய த.வெ.க. நிர்வாகி அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-functionary-arrested-for-threatening-and-ransacking-a-stone-quarry-while-demanding-money</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-functionary-arrested-for-threatening-and-ransacking-a-stone-quarry-while-demanding-money#comments</comments><guid isPermaLink="false">e847ad8b-76d3-4f7f-99e8-6568a3fec15c</guid><pubDate>Sat, 25 Jul 2026 23:10:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T23:10:00.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கல்குவாரி,தூத்துக்குடி,arrest,Srivaikundam,ஸ்ரீவைகுண்டம்,Stone Quarry,TVK Candidate,த.வெ.க. நிர்வாகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xjswgw0h/9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xjswgw0h/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஸ்ரீவைகுண்டம், </p><p>தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டியதுடன், அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக த.வெ.க. நிர்வாகி மற்றும் அவரது அண்ணன் ஆகிய  2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p>  <h2>கம்ப்யூட்டர், டி.வி., மோட்டார் சைக்கிள் சேதம்</h2><p>சம்பவத்தன்று ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய த.வெ.க. செயலாளர் பாலமுருகன் (33) மற்றும் அவரது அண்ணன் முண்டன் என்ற முண்டசாமி (36) ஆகியோர் கல்குவாரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும், அங்கிருந்த கம்ப்யூட்டர், டி.வி., மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.</p> <h2>புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை</h2><p>இந்த சம்பவம் குறித்து கல்குவாரி மேலாளர் பூலையா, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பாலமுருகன் மற்றும் முண்டசாமி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>2 பேரும் அதிரடியாக கைது</h2><p>தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலமுருகன் மற்றும் முண்டசாமி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மனைவி நடத்தையில் சந்தேகம்: கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-behaviour-suspicion-husband-stabs-to-death-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-behaviour-suspicion-husband-stabs-to-death-arrested#comments</comments><guid isPermaLink="false">707c2726-8c31-4eaa-ad3c-9136421c0eef</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:32:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:32:28.822Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,கைது,husband,arrest,wife,மனைவி,சந்தேகம்,குத்திக்கொலை,Suspicious behavior</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zfumdo39/family-issue.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெபேக்கா,பாகபிரகாஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zfumdo39/family-issue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானிசாகர், </p><p>ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், கணவனால் இளம் தாய் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20">கத்தியால் குத்திக்கொலை </a>செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>இலங்கை தமிழர் முகாம்</h2><p>ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் லூர்துகுமார். அவருடைய மனைவி இந்திரகுமாரி. இவர்களுடைய மகள் ரெபேக்கா (வயது 24). இவருக்கும், ராமேசுவரத்தை சேர்ந்த தொழிலாளி பாகபிரகாஷ் (36) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் பாகபிரகாசும், ரெபேக்காவும் ராமேசுவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.</p><h2>பிரிந்து வந்த மனைவி</h2><p>இந்த நிலையில், ரெபேக்காவின் நடத்தையில் பாகபிரகாசுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கருத்து வேறுபாடு முற்றியதால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த ரெபேக்கா, தனது 3 குழந்தைகளுடன் தாய் வீடான பவானிசாகர் முகாமிற்கு வந்துவிட்டார்.</p><h2>சரமாரி கத்திக்குத்து</h2><p>மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரத்தில் இருந்த பாகபிரகாஷ், நேற்று காலை 10 மணி அளவில் ரெபேக்காவை பார்ப்பதற்காக பவானிசாகர் முகாமிற்கு வந்தார். அப்போது ரெபேக்காவிடம், தன்னுடன் மீண்டும் ராமேசுவரத்திற்கு குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு ரெபேக்கா மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற பாகபிரகாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரெபேக்காவை சரமாரியாக குத்தினார்.</p> <h2>பரிதாப உயிரிழப்பு</h2><p>இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரெபேக்கா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கொலையாளி பாகபிரகாஷை பிடித்து பவானிசாகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து பாகபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
சிறுமி உள்பட 9 பேரை கடித்து குதறிய வெறிநாய்.. பீதியில் பொதுமக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabid-dog-mauls-9-people-including-a-young-girl-public-in-a-state-of-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabid-dog-mauls-9-people-including-a-young-girl-public-in-a-state-of-panic#comments</comments><guid isPermaLink="false">cafdba21-02ed-4df9-8e88-664552c4f903</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:24:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:24:00.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>street dogs,தூத்துக்குடி,தெருநாய்கள்,சிறுமி,Tuticorin,வெறிநாய்,dog mauls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/vaezgddw/8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ Image credits: AI]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/vaezgddw/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்திருப்பேரை, </p><p>தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை புளியமரத்து தெரு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை அவ்வப்போது விரட்டிச் சென்று கடிக்கின்றன.</p> <p>இதில் பலரும் காயமடையும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. நேற்று காலையில் அந்த பகுதியில் வெறிநாய் ஒன்று சாலையில் சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை விரட்டிச்சென்று கடித்தது. அதன்பிறகு நாயின் கவனம் அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களின் மீது திரும்பியது. சாலையில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, மாரி (45), பேச்சியம்மாள் (25), கவிதா (17) ஆகியோரை விரட்டிச்சென்று கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே அதே நாய் தென்திருப்பேரையை சேர்ந்த பால்சாமி, சுந்தரி உள்ளிட்ட 3 பேரையும் கடித்தது.</p><p>படுகாயமடைந்த 3 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர அதே பகுதியில் வெறிநாயால் கடிபட்ட மேலும் 2 பேர் அங்கு சென்று சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர்களின் பாதுகாப்பிற்காக பதவியையே தியாகம் செய்த தர்மேந்திர பிரதான் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhan-who-sacrificed-his-post-for-students-safety-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhan-who-sacrificed-his-post-for-students-safety-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">a409c9a8-237c-4fa1-852e-6c53a3f3ef96</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:03:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:03:10.086Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,பாதுகாப்பு,மாணவர்கள்,தர்மேந்திர பிரதான்,தியாகம்,பதவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/tmkr5d9y/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/tmkr5d9y/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவர்களின் பாதுகாப்பிற்காக பதவியையே தியாகம் செய்த தர்மேந்திர பிரதான் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-எதிர்க்கட்சிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டன! இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டது!</p>  <h2>தியாகம்</h2><p>மாணவர் நலனை தவிர எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை என்பதை வார்த்தையில் மட்டுமன்றி தனது செயலிலும் செய்து காட்டியுள்ளார், நமது பிரதமர் மோடி. சமூக விரோத சக்திகளின் சூழ்ச்சிகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் உன்னத நோக்கத்திற்காக தனது பதவியையே துணிச்சலுடன் தியாகம் செய்துள்ளார், நமது முன்னாள் மத்திய கல்வி மந்திரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">தர்மேந்திர பிரதான்</a>.</p><p>சுயநலத்தை ஒதுக்கிவிட்டு, பொதுநலத்தை போற்றும் இத்தகைய தலைவர்களை பெற்றதால் தான், பாஜக ஓர் பேரியக்கமாக இன்றும் வளர்ந்து கொண்டே வருகிறது. </p> <h2>சமூக விரோத அமைப்பு</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்காக அமைதியான வழியில் முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டத்திற்குள், சமூக விரோத அமைப்புகள் ஊடுருவ தொடங்கியதையும், நமது தேச ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் எதிரான முழக்கங்கள் ஒலிக்க ஆரம்பித்ததையும் யாரும் மறுக்க முடியாது. தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாணவர்களை குறி வைத்து காய் நகர்த்த துவங்கின. அதன் விளைவாகவே, அமைதிப் போராட்டம் அலங்கோல கலவரமாக உருவெடுக்கத் துவங்கியது. ஏராளமான பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. </p><h2>போராட்டம் நீடித்தது</h2><p>வினாத்தாள் கசிவினை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய தேர்வு முகமையின் 47  அதிகாரிகள் பணிநீக்கம், வினாத்தாள் கசிவு வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 10 கோடி வரை அபராதம் மற்றும் வினாத்தாள் கசிவிற்கு எதிரான வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா 2026 உள்ளிட்ட பல கடும் நடவடிக்கைகளை நமது பிரதமர் முன்மொழிந்த பிறகும் கூட, மாணவர்கள் போராட்டம் நீடித்தது.</p><h2>மாணவர் போராட்டம்</h2><p>இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, “மாணவர் போராட்டம்” என்ற போர்வையில், பொது அமைதிக்கும், மாணவர் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்க, சில சமூக விரோத அமைப்புகள் காத்துக் கொண்டிருந்தன. </p><h2>தார்மீகம்</h2><p>எனவே, தேசத்தின் ஒற்றுமையை காக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நமது மாணவர்கள் சட்டச் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் தங்கள் படிப்பிலும், எதிர்காலத்திலும், வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டுமென்ற நோக்கத்துடனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் தர்மேந்திர பிரதான் . இதற்கு பெயர் தோல்வியல்ல, “தார்மீகம்”.</p><h2>செவிசாய்க்க தவறுவதில்லை</h2><p>இளைஞர்களின் குரலுக்கு நமது பாஜக தலைமையிலான மத்திய அரசு என்றுமே செவிசாய்க்க தவறுவதில்லை என்பதை உணர்த்தும் இந்நிகழ்வு, நமது நாட்டில் கருத்துரிமையும், அடிப்படை சுதந்திரமும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான சான்று.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
பைக்குக்கு பதில் குதிரை... அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த டெலிவரி பாய்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-horse-instead-of-a-bike-a-delivery-boy-who-made-everyone-turn-and-look</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-horse-instead-of-a-bike-a-delivery-boy-who-made-everyone-turn-and-look#comments</comments><guid isPermaLink="false">b70f4ba2-3776-4e7f-8dec-1a2ad1d92809</guid><pubDate>Sat, 25 Jul 2026 20:40:13 +0000</pubDate><atom:updated>2026-07-25T20:40:13.252Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Viral Video,ஆலந்தூர்,டெலிவரி பாய்,delivery boy,Food delivery,குதிரை,horse</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/nuoym7mf/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/nuoym7mf/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஆலந்தூர், </p><p>சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில், குதிரையில் சென்று உணவு வினியோகம் செய்த ஊழியர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில், குதிரை மீது அமர்ந்தபடி உணவு பார்சல்களை எடுத்துச் செல்லும் அந்த வினியோக ஊழியரின் காட்சிகள் பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.</p><p>வழக்கமாக இருசக்கர வாகனங்களில் உணவு வினியோகம் செய்யப்படும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குதிரையை பயன்படுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், “ஈ.சி.ஆர். ராஜா டெலிவரி பாய்”, “டிராபிக்கை தவிர்க்க சூப்பர் ஐடியா” என நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். வித்தியாசமான இந்த முயற்சி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>போடிநாயக்கனூர்: கிணற்றில் தள்ளி 2 பள்ளி மாணவர்கள் படுகொலை; வாலிபர் கைது
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bodinayakkanur-two-schoolboys-murdered-thrown-into-well-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bodinayakkanur-two-schoolboys-murdered-thrown-into-well-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">ec267392-5eb6-4bbd-b9ed-1e04ff3249ac</guid><pubDate>Sat, 25 Jul 2026 20:19:27 +0000</pubDate><atom:updated>2026-07-25T20:19:27.694Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Youth,வாலிபர்,படுகொலை,murdered,well,கிணற்றில்,கைதுArrest,மாணவர்கள் students,போடிநாயக்கனூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/nfdwf3kf/well.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளி மாணவர்கள் படுகொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/nfdwf3kf/well.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போடிநாயக்கனூர், </p><p>தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பள்ளி செல்லும் இரண்டு சிறுவர்கள், புறா பிடித்து தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்டு, கிணற்றில் தள்ளி<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88"> படுகொலை</a> செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>புறா ஆசை காட்டி கடத்தல்</h2><p>ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மாலை இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த கேசவ் பாலாஜி (வயது 19) என்ற வாலிபர் பேச்சு கொடுத்துள்ளார். சிறுவர்களிடம், "உங்களுக்கு அழகான புறாக்கள் பிடித்து தருகிறேன், என்னோடு வாருங்கள்" என்று ஆசை வார்த்தை கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.</p><h2>கிணற்றில் தள்ளி கொலை</h2><p>அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்று பகுதிக்கு சிறுவர்களை கூட்டி சென்ற கேசவ் பாலாஜி, எதிர்பாராத விதமாக இரண்டு சிறுவர்களையும் கிணற்றுக்குள் தள்ளியுள்ளார். கிணற்றில் விழுந்த சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி, பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவர்களை பல இடங்களில் தேடினர். </p> <h2>தலைமறைவு</h2><p>சிறுவர்கள் மாயமானது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, வாலிபர் கேசவ் பாலாஜியுடன் சிறுவர்கள் சென்ற அதிர்ச்சி தகவல் அவர்களுக்கு கிடைத்தது. உடனடியாக பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கேசவ் பாலாஜியை தேடி புறப்பட்டனர். ஆனால், அதற்குள் அவர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானது தெரியவந்தது.</p><h2>வாலிபர் கைது </h2><p>தகவல் கிடைத்து் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கிணற்றிலிருந்து சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையை அரங்கேற்றிவிட்டு வெளியூருக்கு தப்பியோட முயன்ற வாலிபர் கேசவ் பாலாஜியை (19), போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.</p><p>நள்ளிரவில் போடி அருகே உள்ள மறைவிடத்தில் அவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்று, தப்பியோட முயன்ற வாலிபர் கேசவ் பாலாஜியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நல்லூர் சுங்கச்சாவடியில் 4 மாதங்களில் 3வது முறையாக கட்டணம் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nallur-toll-plaza-third-hike-in-four-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nallur-toll-plaza-third-hike-in-four-months#comments</comments><guid isPermaLink="false">59bed5e4-0aaa-4b99-bfe7-d6e54467e361</guid><pubDate>Sat, 25 Jul 2026 19:49:09 +0000</pubDate><atom:updated>2026-07-25T19:49:09.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுங்கச்சாவடி,கட்டணம் உயர்வு,hike,நல்லூர்,Nallur,toll booth fare</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7d7mlnsw/toll-gate.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7d7mlnsw/toll-gate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p> சென்னை அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அடுத்தடுத்து கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், தற்போது வெறும் 4 மாத காலத்திற்குள் 3-வது முறையாக இந்த சுங்கக்கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது தினசரி பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><strong>வாகனங்கள் வாரியான புதிய கட்டண விவரங்கள்:</strong></p><h2>உள்ளூர் வாகன மாதாந்திர பாஸ் </h2><p>சுங்கச்சாவடியை சுற்றியுள்ள உள்ளூர்வாசிகளுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350-ல் இருந்து ரூ.360 ஆக (ரூ.10 உயர்வு) அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><h2>பேருந்து மற்றும் லாரிகள்</h2><p> கனரக மற்றும் வணிக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற வாகனங்கள்: இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் மல்டி-ஆக்சில் வாகனங்களுக்கும் அதற்கேற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.</p><h2>சுங்கக் கட்டண உயர்வு</h2><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்க கட்டணங்களை மாற்றியமைக்கும். ஆனால்,<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D"> நல்லூர் சுங்கச்சாவடியில்</a> கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களை தொடர்ந்து, தற்போது 4 மாதங்களுக்குள் 3-வது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.மொத்த விலை குறியீட்டு எண்  அடிப்படையிலான பணவீக்க தரவுகள் மற்றும் 'இணைப்பு காரணி' தொழில்நுட்ப மாற்றங்களின் காரணமாகவே இந்த அடுத்தடுத்த சுங்கக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 3-வது முறை</h2><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்க கட்டணங்களை மாற்றியமைக்கும். ஆனால், நல்லூர் சுங்கச்சாவடியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களை தொடர்ந்து, தற்போது 4 மாதங்களுக்குள் 3-வது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.</p> <h2>விலை உயர்வு அபாயம்</h2><p>சுங்கக் கட்டண உயர்வால் லாரிகளின் வாடகை அதிகரிக்கும் போது, வியாபாரிகள் அந்த கூடுதல் செலவை பொருட்களின் விலையில் சேர்த்துவிடுவார்கள். இதனால் சாமானிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-nainar-nagendran-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-nainar-nagendran-greetings#comments</comments><guid isPermaLink="false">40ecbc79-e538-425a-941c-ab9ee6f67ffa</guid><pubDate>Sat, 25 Jul 2026 17:53:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T17:53:40.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,birthday,வாழ்த்து,பிறந்தநாள்,best wishes,பாமக நிறுவனர் ராமதாஸ்,PMK founder Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/gboc0anl/ramdossnainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமதாஸ்,நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/gboc0anl/ramdossnainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">ராமதாஸ்</a> நல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டுமென, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>சமூகநீதிப்போராளி</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்; சமூகநீதிப்போராளி. மருத்துவர். ராமதாஸ், தான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தனக்கு பிறகு கட்சியை அன்புமணி ராமதாஸ் வழி நடத்தி  செல்வார்கள் என்றும் அறிவித்துள்ளார்.</p> <h2>சமூக நீதிக்காக போராடி சிறை சென்றவர்.</h2><p>மருத்துவர் தனது அரசியல் பணியை 40 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக தொய்வில்லாமல் நடத்தி வந்தவர். வன்னியர் சங்கம் தொடங்கி வன்னியர்களின் சமூக நீதிக்காக போராடி சிறை சென்றவர். </p><h2>உரிமைப்போராட்டம்</h2><p>சமூக நீதி, இடஒதுக்கீடு, கிராமப்புற வளர்ச்சி, தரமான கல்வி, பொதுசுகாதாரம், விவசாய முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூரண மதுவிலக்கு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற தனது கட்சியின் அடிப்படை கொள்கைகளை எந்த சமரசமும் இன்றி போராடி காத்துவருபவர் மருத்துவர் ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயக்கர் போன்ற மாபெரும் தலைவர்களுக்கு பின் அரசியல் களப்பணியாற்றி, அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக , 1980 களில் நடந்த அவரது வன்னியர் உரிமைப்போராட்டம் அரசியல் வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத காவியமாக இருக்கிறது.</p><h2>போட்டியிட மாட்டேன்</h2><p>நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ தான் போட்டியிட மாட்டேன் என்று ஆரம்ப கட்ட அரசியலில் அவர் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை காத்துவரும் பெரும் தலைவர்.  வன்னியர்கள், தலித்துகளை கொண்டு தன் அரசியல் பயணத்தை தொடங்கி அதற்கு விதையிட்டு அதை ஆலவிருட்சமாக வளர்த்தவர் ராமதாஸ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மீதும் பாரதப்பிரதமர் மோடி மீதும் அளப்பரிய பற்றும், பாசமும் கொண்டவர். </p> <h2>நம்பிக்கை</h2><p>இன்று அவரது 88 வது பிறந்தநாளையொட்டி, தனது பாட்டாளி சொந்தங்களிடம் இருந்தும், தனது 40 ஆண்டுளாக தீவிர அரசியல் களத்திலிருந்தும் அவர் விடைப்பெற்று இருப்பது, மனதிற்கு சற்று ஏற்க முடியாது என்றாலும் அவரது தீர்க்கதரிசனமான முடிவு நிச்சயம் இந்திய ஜனநாயகத்திற்கு தகுந்த பலனை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.</p><h2> வாழ்த்து</h2><p>மருத்துவர் நல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டுமென, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். </p><h2>பிராத்தனை</h2><p>கட்சியின் தலைமை பொறுப்பேற்று வழிநடத்த இருக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது தந்தையார் போல, அரசியல் களத்தில் பேரும், புகழும் பெற்று சிறப்பாக பணியாற்ற இந்நேரத்தில் எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்து அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்: தொண்டர்களுக்கு திருமாவளவன் அழைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vsk-protest-demanding-cancellation-of-neet-exam-in-chennai-thirumavalavan-calls-for-volunteers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vsk-protest-demanding-cancellation-of-neet-exam-in-chennai-thirumavalavan-calls-for-volunteers#comments</comments><guid isPermaLink="false">56e4eee9-9872-47cf-a506-6f5c21924600</guid><pubDate>Sat, 25 Jul 2026 16:24:16 +0000</pubDate><atom:updated>2026-07-25T16:24:16.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,திருமாவளவன்,நீட் தேர்வு,ஆர்ப்பாட்டம் Demonstration,ரத்து செய்யக்கோரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/yroeb3if/57.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/yroeb3if/57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இந்திய ஒன்றிய அரசு நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் 27.7.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>ஆர்ப்பாட்டம்</h2><p>தற்போது இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட  ஒரே ஆர்ப்பாட்டமாக சென்னையில் எனது தலைமையில் 27.7.2026 அன்று காலை 10 மணிக்கு ராஜரத்தினம்  விளையாட்டரங்கம் அருகே நடைபெறுகிறது. </p><p>எனவே, சட்டமன்றத் தொகுதி வாரியாக ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைப்பதை விடுத்து அனைத்து பொறுப்பாளர்களும் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி - வி.சி.க.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhans-resignation-a-massive-victory-for-the-peaceful-protest-vck</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhans-resignation-a-massive-victory-for-the-peaceful-protest-vck#comments</comments><guid isPermaLink="false">490993e7-aa0a-473c-a538-9878bf9f11bf</guid><pubDate>Sat, 25 Jul 2026 16:06:43 +0000</pubDate><atom:updated>2026-07-25T16:06:43.327Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,டெல்லி,திருமாவளவன்,Thirumavalavan,விசிக,VCK,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மாணவர்கள் போராட்டம்,Students protest</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/mnex8m6t/win.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/mnex8m6t/win.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு  அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் அதே நாளில் சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/thirumavalavan">விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>தர்மேந்திர பிரதான்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது  மாணவர்களின் சார்பில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அறவழிப் போராட்டத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். தர்மேந்திர பிரதான் விலகலையடுத்து அப்பொறுப்பில் கல்வியாளர் ஒருவரைக் கல்வி அமைச்சராக நியமிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். </p><h2>கடந்த திமுக ஆட்சியில்</h2><p>“நீட் தேர்வு தேவையில்லை, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்” எனப் பல ஆண்டுகளாக விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் அதற்காக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அன்றைய கவர்னர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார். </p><p>நீதிமன்றம் தலையிட்டதால் அதைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அது நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டது. அதை சட்டத்துக்குப் புறம்பாக ஜனாதிபதிக்கு அனுப்பினார். அங்கு அவர் கிடப்பில் போட்டிருந்தார். சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டபின் அதைத் திருப்பி அனுப்பினார். இவை யாவற்றுக்கும் பாஜக அரசே காரணம். </p><h2>ஒரே ஒரு நீதிபதியின் விருப்பம்</h2><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்குப் பிறகு ‘நீட் தேர்வே வேண்டாம்’ என்ற தமிழ்நாட்டின் நிலைபாட்டை இப்போது மேலும் பல மாநில அரசுகளும், கட்சிகளும் வழிமொழியத் தொடங்கியுள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு முறையை ரத்துசெய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். </p><p>ஏனெனில், நீட் தேர்வு என்பது அனைத்துத் தரப்பினரின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அல்ல. சுப்ரீம்கோர்ட்டில் அனில் ஆர்.தவே என்ற ஒரே ஒரு நீதிபதியின் விருப்பத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்த ஒன்றாகும். </p><h2>ஆர்ப்பாட்டம்</h2><p>மருத்துவக் கல்வியை பாதுகாக்க நீட் தேர்வை முற்றாக ஒழிப்பதுதான் ஒரே வழி. எனவே, எதிர்வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது இதற்கான சட்ட மசோதாவைக் கொண்டுவந்து சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். </p><p>கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடந்து வந்த மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும்; நீட் தேர்வை இந்தியா முழுவதும் ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாடு  அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும்  விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 27 திங்கட்கிழமையன்று  ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. </p><h2>சென்னையில் மட்டும்</h2><p>தற்போது தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பதால்,  அந்த ஆர்ப்பாட்டம் அதே நாளில் சென்னையில் மட்டும் எனது தலைமையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இயக்கத்தின் முன்னோடிகள் யாவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடம்! - மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-convocation-ceremony-tamil-thai-vazhthu-3rd-place-marxist-party-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manonmaniam-sundaranar-university-convocation-ceremony-tamil-thai-vazhthu-3rd-place-marxist-party-condemns#comments</comments><guid isPermaLink="false">5b9f88f7-715d-4b74-9d95-ca3eb5c1c777</guid><pubDate>Sat, 25 Jul 2026 16:02:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T16:02:53.349Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கவர்னர்,Marxist Communist,பட்டமளிப்பு விழா,பெ.சண்முகம்,Marxist Communist Party,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,Manonmaniam Sundaranar University,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு,Communist Party of India (Marxist),p shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xpt696zu/shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xpt696zu/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு கவர்னர் பங்கேற்கிறார். எனவே, இந்நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என்று கவர்னர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படியே இந்நிகழ்ச்சி நடைபெறும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது. இது மாநில உரிமை மற்றும் மாநில மொழியின் மீது நடைபெறுகிற அத்துமீறலாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.</p><h2>கவர்னர் தலையீடு</h2><p>கவர்னர் பங்கேற்கிறார் என்பதற்காகவே ஒரு மாநிலத்தின் மாநிலப் பாடலை பின் வரிசைக்கு தள்ளுவது ஏற்புடையதல்ல. மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரு பல்கலைக்கழகத்தில் மாநிலப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு ஆகும். இந்நிலையில் கவர்னர் அலுவலக சுற்றறிக்கை விரும்பத்தகாத சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது அநீதியானது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்குகிற ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாவது இடம் என்பது அவருக்கு இழைக்கப்படுகிற அவமரியாதையாகும்.</p><p>மேலும் வந்தே மாதரம் பாடலின் சில வரிகள் பாடப்படுவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே, வந்தே மாதரம் பாடலின் ஆட்சேபணையற்ற வரிகள் மட்டுமே பாடப்பட வேண்டும். கவர்னரின் சுற்றறிக்கை திரும்பபெறப்பட வேண்டும். கவர்னர் அலுவலக சுற்றறிக்கையின்படி நடக்காவிட்டால் தன்மீது நடவடிக்கை வரும் என்று துணைவேந்தர் கூறியிருப்பதிலிருந்தே கவர்னர் மாநில நிர்வாகத்தில் தேவையற்ற தலையீடுகள் செய்து மிரட்டலில் ஈடுபடுகிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. கவர்னர் அலுவலகத்தின் அத்துமீறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. </p><h2>முதலிடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>எனவே, எவ்வித நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். அதன் பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக வந்தே மாதரத்தின் ஆட்சேபணையற்ற வரிகள் மட்டுமே பாடப்படும் வகையில் பட்டமளிப்பு விழா நடைபெற வேண்டுமென்றும் இந்த அடிப்படையில் பட்டமளிப்பு விழா நடைபெறுவதை மாநில அரசு உறுதி செய்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p><p>மேலும், இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிற மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும், பன்முகப் பாரம்பரியத்துக்கும் எதிரான வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டுமென்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டாய சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு உரிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நடவடிக்கைகளை </a>மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 105 இடங்களிலிருந்து 36.64 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அகற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3664-metric-tons-of-old-materials-removed-from-105-locations-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3664-metric-tons-of-old-materials-removed-from-105-locations-in-chennai#comments</comments><guid isPermaLink="false">47d54bfc-d491-4605-8538-fa90a5f79027</guid><pubDate>Sat, 25 Jul 2026 15:33:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T15:33:00.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hc2mxfkz/Untitled-10.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hc2mxfkz/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (25.07.2026) 105 இடங்களிலிருந்து 36.64 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>36.64 மெட்ரிக் டன் பொருட்கள் </h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் பணி 11.10.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில், இன்று (25.07.2026) மட்டும் 105 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 36.64 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இதற்காக 43 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.</p><h2>“நம்ம சென்னை” செயலி</h2><p>ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.</p><p>இதனடிப்படையில் மாநகராட்சிப் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பணியாளர்கள் </a>பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் பதவிவிலகல்: இளம் தலைமுறையினர் போராட்டத்திற்கு  கிடைத்த மாபெரும் வெற்றி - சி.பி.ஐ.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhans-resignation-a-massive-victory-for-the-younger-generations-protest-cpi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhans-resignation-a-massive-victory-for-the-younger-generations-protest-cpi#comments</comments><guid isPermaLink="false">b322becd-8577-4ed5-b53d-9e3e55283e22</guid><pubDate>Sat, 25 Jul 2026 15:20:05 +0000</pubDate><atom:updated>2026-07-25T15:20:05.205Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,Tamilnadu,தமிழகம்,மத்திய அரசு,Central Govt,CPI,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மாணவர்கள் போராட்டம்,Students protest,M Veerapandian,மு. வீரபாண்டியன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/eribkyxq/nikkar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/eribkyxq/nikkar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அறவழியில் போராடிய இளம் போராளிகளுக்கு கிடைத்த வரலாற்று  சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியாகும் இது என்று <a href="https://www.dailythanthi.com/topic/m-veerapandian">இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>உயர் கல்விக் கனவுகள்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>மத்திய அரசு தேசிய தேர்வு முகமை மூலம் நடத்திய நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. இதனால், லட்சக்கணக்கான மாணவர்கள் உயர் கல்விக்  கனவுகள் சிதைக்கப்பட்டன.  </p><h2>தர்மேந்திர பிரதான்</h2><p>அதேபோல், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12 ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்ட தவறுகள், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தத் தவறுகளுக்கு  பொறுப்பேற்று மத்தி கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், பதவி விலக வேண்டும், நீட் தேர்வு பிரச்சினையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும், போராட்டம் தொடர்பான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயக்கத்தினர்  மற்றும் மாணவர் - இளைஞர்களோடு இணைந்து, தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். </p><h2>கடும் தாக்குதல்</h2><p>கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கிய இளைய தலைமுறையின் போராட்டத்தை  மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை, ஆர்.பி.எப்., துணை ராணுவப் படை போன்றவைகள் ஏவப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது கடும் தாக்குதலை நடத்தியது. இதில் 150-க்கும் மேற்பட்ட போராளிகள் படுகாயமடைந்தனர். இதன் விளைவாக  போராட்டம்  நாடு முழுவதும் விரிவடைந்து தீவிரமானது.</p><h2>வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி</h2><p>இளைய தலைமுறையின் போராட்டத்திற்கு அடிபணிந்து, மத்திய அரசு  அரசு தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளது. இது அறவழியில் போராடிய இளம் போராளிகளுக்கு கிடைத்த வரலாற்று  சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியாகும்.</p><p>போராட்டத்தை முன்னெடுத்த சி.ஜே.பி. இயக்கத்திற்கும், அதனுடன்  உறுதியோடு நின்று  போராடிய இளம் போராளிகளுக்கும், ஆதரித்து களம் இறங்கிய இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகளுக்கும், பொதுவாழ்வு பிரமுகர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நன்றி பாராட்டி,  வாழ்த்துகளையும்  பாராட்டுகளையும்  தெரிவித்துக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெங்களூர் செல்லும் முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-party-meeting-must-be-convened-before-visiting-bengaluru-edappadi-palaniswami-urges-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-party-meeting-must-be-convened-before-visiting-bengaluru-edappadi-palaniswami-urges-chief-minister#comments</comments><guid isPermaLink="false">084f1b76-a3f0-41c6-9e48-3e048fe5babc</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:50:14 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:50:14.454Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,தமிழகம்,காங்கிரஸ்,Congress,Karnataka,பெங்களூரு,Bengaluru,All Party Meeting,அனைத்து கட்சி கூட்டம்,கர்நாடகா,காவிரி பிரச்சினை,Edappadi Palaniasamy,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/uu0hom9k/kathu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/uu0hom9k/kathu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காவிரி மற்றும் மேகதாது பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><h2>முதல்-அமைச்சர்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அணை நிரம்பினால்தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி அவர்கள் கூறுவது சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிரானதாகும்.</p><p>சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரைப் பெற வேண்டிய த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர்</a> இன்றுவரை வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.</p> <h2>காவிரிப் பிரச்சனை</h2><p>சுப்ரீம்கோர்ட்டு, 2012-ஆம் ஆண்டு காவிரிப் பிரச்சனை குறித்து மீண்டும் ஒருமுறை கர்நாடகாவோடு தமிழகத்தின் முதல்-அமைச்சர் பேச வேண்டும் என்ற ஒரு யோசனையைத் தெரிவித்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள், கர்நாடக அரசோடு பேசிப் பயனில்லை என்றாலும், சுப்ரீம்கோர்ட்டின் ஆலோசனையை ஏற்று கர்நாடக முதல்-மந்திரியோடு ஒருமுறை பேசுகிறேன் என்று அறிவித்தார். அதன்படி 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெங்களூரு சென்று அப்போதைய கர்நாடக மாநில முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் துறை அமைச்சர்களுடன் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><h2>14 வருடங்கள்</h2><p>பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 'தமிழகத்தின் உண்மை நிலையை கர்நாடக அரசில் உள்ளவர்கள் எப்போதுமே புரிந்துகொள்வதில்லை. சுப்ரீம்கோர்ட்டு ஒரு நல்லது நடக்கும் என்ற நினைப்பில் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னதால், நான் இங்கு வந்தேன். பேசியதில் எந்தப் பயனும் இல்லை என்ற நிலையில் நான் சென்னைக்கு திரும்பிச் செல்கிறேன்' என்று கூறினார். இது நடந்து 14 வருடங்கள் ஆனபின்னரும் 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்று கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அடம் பிடிக்கிறார்கள்.</p><h2>டி.கே.சிவக்குமார்</h2><p>பிறகு, தற்போது, 'தமிழக முதல்-அமைச்சர், காவிரிப் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்காக கர்நாடக முதல்-மந்திரியை சந்திக்கப் போகிறேன்' என்று சொன்ன 'யார் வேண்டுமானாலும் வரட்டும், யாரோடும் நாங்கள் பேசத் தயார், எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை' என்று கர்நாடகாவின் காங்கிரஸ் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அவர்கள் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.</p><h2>டெல்டா மாவட்ட விவசாயிகள்</h2><p>மேலும், தமிழ் நாட்டை பாலைவனமாக்கும், 'மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் விவகாரம் குறித்து பெங்களூரு வரும் தமிழக முதல்-அமைச்சரிடம் பேசுவேன்' என்று கர்நாடக முதல்-மந்திரி கூறியதாகச் செய்திகள் வந்துள்ளன. </p><p>மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளைக் கேட்டும்; டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தும், பிறகு அனைவரது கருத்துகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.</p> <h2>த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி</h2><p>ஏற்கெனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, கர்நாடக அரசு காவிரியில் நமக்கு வழங்க வேண்டிய உரிய பங்கு நீரை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. சுப்ரீம்கோர்ட்டு அளித்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டும். காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற வேண்டும் என்று த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி பள்ளி பாலின மன்ற ஆசிரியர்களுக்கு உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/psychological-guidance-program-for-gender-forum-teachers-of-chennai-corporation-schools</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/psychological-guidance-program-for-gender-forum-teachers-of-chennai-corporation-schools#comments</comments><guid isPermaLink="false">d44d2008-467e-4ede-b462-efeb74bd2926</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:25:06 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:25:06.003Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சென்னை மாநகராட்சி பள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7hujietw/Untitled-9.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7hujietw/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரனின் உத்தரவுவின்படியும், இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகமின் வழிகாட்டுதலின்படியும் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் பாலினமன்ற ஆசிரியர்களுக்கான உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் இன்று (25.07.2026) நடைபெற்றது.</p><h2>உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி</h2><p>இந்நிகழ்ச்சியின் நோக்கமானது குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரின் உளவியல் குறித்த ஆசிரியர்களின் புரிதலை வலுப்படுத்துவதையும், மாணவர்களின் உணர்வுசார் நல்வாழ்வு மற்றும் நேர்மறையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான நடைமுறை அணுகுமுறைகளை அவர்களுக்கு வழங்குவதுமாகும்.</p><p>இந்நிகழ்ச்சியை பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார். குழந்தைகளின் தன்னம்பிக்கை, நடத்தை மற்றும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் முக்கியப் பங்கை அவர் எடுத்துரைத்தார். நேர்மறை வலுவூட்டல், ஊக்கம் மற்றும் பரிவுள்ள வழிகாட்டுதல் ஆகியவை ஒரு குழந்தையின் சுயமரியாதையை மாற்றி, அவர்களின் திறனை உணர்த்திட உதவும் என்று தெரிவித்தார்.</p><h2>ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தின் சூரிச்சைச் சேர்ந்த சர்வதேச பகுப்பாய்வு உளவியலாளரும், சூரிச் ISAP-இன் மெட்ரிகுலேட்டட் தணிக்கையாளருமான டாக்டர் அக்ஷயா ராஜா சிறப்புரையாற்றினார். ஒவ்வொரு குழந்தையின் நடத்தையும் ஒரு வகையான தகவல்தொடர்பு என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், குழந்தைகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். குழந்தைகளின் பலத்தினை அங்கீகரிக்கவும், அவர்களின் முயற்சிகளைப் பாராட்டவும், உணர்வு ரீதியாக மீள்திறன் கொண்ட மற்றும் தன்னம்பிக்கையான தனிநபர்களை வளர்க்க நேர்மறையான வழிகாட்டுதலைப் பயன்படுத்தவும் ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.</p><p>மேலும், பாலினமன்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆசிரியர்களுக்கு </a>வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், நடத்தை சார்ந்த கவலைகள், உணர்வு, நல்வாழ்வு, சக வயது உறவுகள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்கான பயனுள்ள அணுகுமுறைகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;போராடி வெற்றியை சாத்தியமாக்கிய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்! ­மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-farmers-of-india-did-it-first-the-youth-have-done-it-today-mkstalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-farmers-of-india-did-it-first-the-youth-have-done-it-today-mkstalin#comments</comments><guid isPermaLink="false">e9fe434e-6bad-4d7f-9581-e60f2c64a265</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:16:03 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:16:03.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,சென்னை,மாணவர்கள் போராட்டம்,கரப்பான் பூச்சி கட்சி,cjp,JantarMantar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/wwoaan9t/stalinone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/wwoaan9t/stalinone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் 36வது நாளை எட்டிய நிலையில், மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து<a href="https://www.dailythanthi.com/search?q=m.k.stalin">, மத்திய அரசு</a> மற்றும் சிஜேபி இயக்கத்தினர் இன்று 3வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்தர் சிங் ஆகியோருடன் சிஜேபி இயக்கத்தைச் சேர்ந்த சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் சிஜேபி இயக்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.</p> <p>கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன; போராட்டத்தில் ஈடுபடுவோர் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு அமைதியாக வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.எங்கள் எதிர்காலத் திட்டம் அல்லது பிற விஷயங்கள் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம் என கரப்பான் ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தால் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், தற்போது தங்களது போராட்டம் முடிவுக்கு வந்ததால் அங்கிருந்து கலைந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.</p> <p>இந்தநிலையில், அன்று விவசாயிகள் போராடி வென்றது போல, இன்று நாடு முழுவதும் இணையத்திலும் களத்திலும் போராடி வெற்றியைச் சாத்தியமாக்கிய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p><p>“அன்று விவசாயிகள் போராடி வென்றது போல, இன்று நாடு முழுவதும் இணையத்திலும் களத்திலும் போராடி வெற்றியைச் சாத்தியமாக்கிய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!</p><p>மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எவ்வாறு திரும்பப் பெறப்பட்டதோ, நீட் தேர்வும் நிச்சயமாக ரத்து செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என அதில் பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The farmers of India did it first.<br>The youth have done it today.<br>Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.<br><br>Just as the farm laws were repealed, we shall ensure that <a href="https://x.com/hashtag/NEET?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NEET</a> is also abolished.… <a href="https://t.co/QgxFe6thhp">pic.twitter.com/QgxFe6thhp</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2081004300311085382?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>சென்னை வெற்றிப்போர் நினைவிடம்: போர் டாங்கி, போர்க்கப்பல் மாதிரிகளுடன் ராணுவ பாரம்பரிய வளாகமாக மாற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-victory-memorial-transformed-into-a-military-heritage-complex-with-war-tank-and-warship-models</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-victory-memorial-transformed-into-a-military-heritage-complex-with-war-tank-and-warship-models#comments</comments><guid isPermaLink="false">8ab23605-a37f-4453-a9fb-f4fe6d39c0d6</guid><pubDate>Sat, 25 Jul 2026 13:53:42 +0000</pubDate><atom:updated>2026-07-25T13:53:42.881Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,போர் விமானம்,வீரம்,நினைவிடம்,ஆயுத படைகள்,போர் கப்பல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/gmsrxgc9/83.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போர் டாங்கி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/gmsrxgc9/83.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்திய அரசின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ள தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னையில் உள்ள வெற்றிப் போர் நினைவிட வளாகத்தில், பயன்பாட்டிலிருந்து ஓய்வுபெற்ற  டி-55 பிரதான போர் டாங்கி ஒன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேடையில் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய கடற்படைக் கப்பல்களான ஐ.என்.எஸ். விக்ராந்த், ஐ.என்.எஸ். அஞ்சதீப் ஆகியவற்றின் மாதிரிகளும் இவ்வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.</p><h2>இந்திய பாதுகாப்பு படை</h2><p>விரைவில், ஒரு மிக்-21 ரக போர் விமானம் உயர்பீடத்தின்மேல் நிறுவப்பட்டு இந்த நினைவிடம் மேலும் மேம்படுத்தப்படும். கூடுதலாக, இந்திய கடலோரக் காவல்படையின் கடல்சார் மற்றும் வான்சார் சொத்துக்கள், இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5">ராணுவ</a> பாரம்பரிய வளாகத்தின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிப் போர் நினைவிடத்தை ஒரு அழகிய  இராணுவ பாரம்பரிய வளாகமாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இவை அமைகின்றன. இந்திய பாதுகாப்பு படைகளின் வீரம், தியாகம் மற்றும் சிறப்பான சேவையை நினைவுகூரும் நோக்கில், கவனமாகத் திட்டமிடப்பட்ட தொடர் முயற்சிகள்  நடைபெற்று வருகின்றன.</p><p>புகழ்பெற்ற மெரினா கடற்கரை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டைப் பகுதி சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த நினைவிடம், தேச சேவைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும்  அஞ்சலி செலுத்தும் பாரம்பரிய நினைவுச்சின்னமாக திகழ்கிறது.</p><h2>வெற்றிப் போர் நினைவிடம்</h2><p>முதலாம் உலகப் போரின்போது (1914–1918) நேச நாடுகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் இது முதலில் கட்டப்பட்டது. பின்னர், இரண்டாம் உலகப் போருக்குப் (1939–1945) பிறகு, இரண்டு உலகப் போர்களின்போதும் தங்கள் உயிரைத் தியாகம் செய்த பழைய  மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களின் நினைவாக, இது வெற்றிப் போர் நினைவிடம் என அர்ப்பணிக்கப்பட்டது.</p><p>பல தசாப்தங்களாக, இந்த வெற்றிப் போர் நினைவிடம் அதன் தன்மையிலும் முக்கியத்துவத்திலும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நினைவகம் முதலில் முதலாம் உலகப் போரை நினைவுகூரும் கல்வெட்டுகளை மட்டுமே கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இந்திய ஆயுதப் படைகள் பங்கேற்ற அனைத்து முக்கியப் போர்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை உள்ளடக்கும் வகையில் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தேசத்திற்குச் சிறப்பாகப் பணியாற்றிய இந்திய ராணுவ வீரர்கள், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் துணிச்சல், வீரம் மற்றும் உன்னத தியாகத்தைப் போற்றும் ஒரு தேசிய அஞ்சலியாக இந்த நினைவகம் விளங்குகிறது.</p><p>அண்மையில் மெரினா கடற்கரையோரத்தில் இரண்டு முக்கிய இடங்களில் புகழ்பெற்ற செஞ்சுரியன் டாங்கிகளை வெற்றிகரமாக நிறுவியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் தெற்குப்பகுதி தலைமையகம் வெற்றிப் போர் நினைவகத்தை, இராணுவப் பாரம்பரியம், தேசியப் பெருமை ஆகியவற்றின் ஒரு துடிப்பான மையமாக மேம்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சி, இந்திய ஆயுதப் படைகளின் பெருமைமிக்க பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தவும் முயல்கிறது.</p><p>தமிழ்நாடு அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலமே வெற்றிப் போர் நினைவிடத்தின் உருமாற்றம் சாத்தியமாகியுள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பீடங்கள், மேடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் அவர்கள் மிகுந்த ஒத்துழைப்பை அளித்தனர்.</p><h2>கவசப்படை திறன்</h2><p>இந்தியாவின் கவசப் போர் வாகன (AFV) உற்பத்தியில் சென்னை ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. கனரக வாகனத் தொழிற்சாலை (HVF), ஆவடி இயந்திரத் தொழிற்சாலை (EFA), போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (CVRDE) மற்றும் அதனுடன் தொடர்புடைய தர உறுதி அமைப்புகளை உள்ளடக்கிய கவச வாகன நிறுவனம் சென்னையில் அமைந்திருப்பதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவடி ஆயுதக்கிடங்கும் இங்கு  அமைந்துள்ளது. 1941-ல் இந்திய ராணுவத்தின் பீரங்கிகளுக்கான முக்கிய கிடங்காக உருவாக்கப்பட்ட  இக்கிடங்கு, புதிதாகத் தயாரிக்கப்பட்ட மற்றும் சீரமைக்கப்பட்ட கவச வாகனங்கள் மற்றும் உபகரணங்களைப் பெறுதல், வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள இராணுவப் பிரிவுகளுக்கு அனுப்பி வைப்பதில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. இந்த நிறுவனங்கள் சென்னையை இந்தியாவின் கவசப்படை திறனின் தொட்டிலாக மாறியுள்ளன.</p><p>மெரினா கடற்கரையோரம் இரண்டு முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள செஞ்சுரியன் டாங்கிகள், இந்திய ராணுவத்தின் கவசப் படை வரலாற்றில் மிகச் சிறந்த அத்தியாயங்களில் ஒன்றை நினைவுகூர்கின்றன. 1965-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின்போது, ​​குறிப்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க அசல் உத்தர் போரில், செஞ்சுரியன் டாங்கிகள்,  எதிரியின் நவீன கவச வாகனங்களுக்கு பெரும் தோல்வியைப் அளிப்பதில் தீர்க்கமான பங்காற்றின. இதன் விளைவாக, அந்தப் போர்க்களம் 'பத்தான் நகர்' என்ற அழியாத புகழைப் பெற்றது.</p><p>தற்போது போர் நினைவுச்சின்னத்தில் பொருத்தப்பட்டுள்ள டி-55 போர்க் கவச வாகனம், இந்தியாவின் கவசப் போர் வரலாற்றில் மற்றொரு புகழ்பெற்ற அத்தியாயத்தைக் குறிக்கிறது. பல தசாப்தங்களாக, டி-55 டாங்கியானது இந்திய ராணுவத்தின் கவசப்படையின் முதுகெலும்பாகத் திகழ்ந்தன.</p><h2>போர்க்கப்பல்</h2><p>ஐஎன்எஸ் விக்ராந்தின் மாதிரி வடிவம், இந்தியக் கடற்படையின் புதிய, உள்நாட்டிலேயே கட்டப்பட்ட விமானம் தாங்கி கப்பலை குறிக்கிறது. இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாதுகாப்பு உற்பத்தித் துறையில் நாட்டின் வளர்ந்து வரும் தன்னிறைவையும், உலக தரம் வாய்ந்த சிக்கலான போர்க்கப்பல்களை வடிவமைத்து உருவாக்கும் அதன் குறிப்பிடத்தக்க திறனையும் அடையாளப்படுத்துகிறது. ஐஎன்எஸ் அஞ்சதீப்பின் மாதிரி வடிவம் இந்தியாவின் உற்பத்தித்திறனை எடுத்துக்காட்டுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சியில் ஆய்வுக் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-on-solid-waste-management-works-at-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-on-solid-waste-management-works-at-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">e3a589b9-59d9-4c26-a73d-3c9321a05e6c</guid><pubDate>Sat, 25 Jul 2026 13:15:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T13:15:00.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,ஆய்வுக் கூட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/c8uareo8/Untitled-7.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/c8uareo8/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இன்று (25.07.2026) மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><h2>அபராதம் விதித்து நடவடிக்கை</h2><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பணிகளை ஆய்வு செய்து பேசும்போது தெரிவித்ததாவது:</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகளை தனித்தனியே பிரித்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதைப்போல. குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதற்கு உரிய விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், கட்டட இடிபாட்டுக் கழிவுகளை முறையாக அகற்றி மறுசுழற்சிக்குட்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.</p><p>சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனத்தினர் பின்பற்றிடவும், மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும். சாலைகள், தெருக்கள், பேருந்து நிறுத்தங்கள், மயானபூமி, பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் தூய்மைப் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் இரவு நேரங்களில் இயந்திரப் பெருக்கிகளைப் பயன்படுத்தி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>பணிகளை விரைவுபடுத்த வேண்டும்</h2><p>கொடுங்கையூர்,பெருங்குடி குப்பை கிடங்குகளில் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணியினை தொடர்ந்து கண்காணித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பெருநகர சென்னை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநகராட்சிப் </a>பகுதிகளில் திடக்கழிவுப் பணிகளை அலுவலர்கள் கண்காணித்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.</p><p>இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், காணொலி காட்சியின் வாயிலாக வட்டார துணை ஆணையாளர்கள் ஸ்வேதா சுமன், (வடக்கு), எச்.ஆர்.கௌஷிக், (மத்தியம்), அதாப் ரசூல்,  (தெற்கு), தலைமைப் பொறியாளர் பாலமுரளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் சிக்காதீர்: முதல்-அமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-get-caught-in-the-trap-of-negotiations-mk-stalins-request-to-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-get-caught-in-the-trap-of-negotiations-mk-stalins-request-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">ad65ae14-a521-4c0f-90e4-558d63fe920f</guid><pubDate>Sat, 25 Jul 2026 13:01:31 +0000</pubDate><atom:updated>2026-07-25T13:01:31.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,மு.க.ஸ்டாலின்,Karnataka,கர்நாடகா,காவிரி விவகாரம்,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/n3dzyy3s/staline33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/n3dzyy3s/staline33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் முதல்-அமைச்சர் சிக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நாம் எடுத்த முயற்சிகளின் வரலாறு மிக நீண்டது.  1960-களில் தொடங்கி 1990 வரை பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்காததால்தான் அது கைவிடப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ஆட்சிக்காலத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன்பிறகும் தமிழ்நாட்டுக்கான தண்ணீரை வழங்குவதில் அநீதி இழைத்து வந்தது கர்நாடக மாநில அரசு.</p><p>கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்டபோதெல்லாம், அதனை உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிராகரித்தது. ஏனென்றால், பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே கர்நாடக மாநில அரசு செயல்படும். உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்சினையை இழுப்பதாகவே அப்பேச்சுவார்த்தைகள் அமையும்.</p><p>அதிலும் குறிப்பாக, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலுமாக நிராகரிப்பதாகும். எனவே, இதுகுறித்து கர்நாடக அரசுடன் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்துவதால் பயனில்லை என்பதே நமது நிலைப்பாடாகும்.</p><p>மேகதாது குறித்து பேசுவதற்காக, கர்நாடக முதல்-மந்திரி. எடியூரப்பா அவர்கள் அழைப்பு விடுத்தபோது, முதல்-அமைச்சராக இருந்த நான், “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” என மறுத்தேன். அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த  துரைமுருகன் அவர்களும், “பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” எனத் திட்டவட்டமாக அறிவித்தார். முற்றிலும் தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் உழவர் பெருமக்களுக்கும் விரோதமானது அந்தத் திட்டம். அதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்பதே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம்.</p><p>இந்நிலையில், கர்நாடகம் சென்று அம்மாநில முதல்-மந்திரியுடன் முதல்-அமைச்சர் விஜய் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என  வேளாண்துறை அமைச்சரே தெரிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கர்நாடக அரசிடம், தமிழ்நாடு பணிந்து போகும் நிலையாகும்.</p><p>மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்றும், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்றும், யார் எதிர்த்தாலும் கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக மாநில அரசு வெளிப்படையாக, தொடர்ச்சியாகச் சொல்லும் போது, அவர்களிடம் பேசி என்ன ஆகப் போகிறது? அவர்களது பிடிவாதக் குணத்தை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறோமா?</p> <p>காவிரி நீர் திறக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே ஒரு “ஸ்கீம்” உருவாக்கப்பட்டு, எந்தெந்த மாதம் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்து வெளியிடப்பட்டு விட்டது. அதைச் செயல்படுத்தக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குச் செல்வது என்பது  தமிழ்நாடு அரசின் 30 ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்தைச் சிதைப்பதாக அமைந்துவிடும். பேச்சுவார்த்தைக்குத் முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகம் செல்வது, தமிழ்நாட்டின் நிலையைக் குறைப்பதாகவும் அமைந்துவிடும்.</p><p>ஏற்கெனவே உள்ள சட்டப்பூர்வ உரிமையைச் சிதைக்க “பேச்சுவார்த்தை” எனக் கர்நாடகம் தற்போது விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று <a href="https://www.dailythanthi.com/search?q=m.k.stalin">தமிழ்நாடு முதல்-அமைச்சர் </a>சிக்குவது ஏன்? தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் விதமாக முதலமைச்சர் செய்யும் இந்தச் செயலைப் பார்த்துக் காவிரி டெல்டா விவசாயிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.</p><p>கர்நாடக மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ் கட்சி அரசாகும். தமிழ்நாடு அரசிலும் காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது. எனவே கண்துடைப்புக்காக இதுபோன்ற பேச்சுவார்த்தை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. 'நாங்கள் நேரிலேயே போய்ப் பேச்சுவார்த்தை நடத்தினோமே' என்று கணக்குக் காட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்படலாமே தவிர, வேறு எந்தப் பயனும் ஏற்படப் போவது இல்லை.</p><p>காவிரி நீர் உரிமைப் பங்கீட்டுப் போராட்டம் நீண்ட நெடியது. தமிழ்நாட்டின் காவிரி உரிமை சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்ட ஒன்று. காவிரி நீர் உரிமையின் ஆழ அகலங்களைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தரக் கர்நாடகம் மறுத்தால், அது நீதிமன்ற அவமதிப்பு; சட்ட மீறல்! மேகதாது அணை கட்ட முயற்சிப்பது உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை மீறுவது. காவிரி போன்ற தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையையும் - விவசாயச் சங்கங்களின் கருத்துகளையும் பெற்ற பின்பே செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி உரிமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்குக் கர்நாடகம் செல்லும் தவறான முயற்சியை  முதல்-அமைச்சர்கைவிட வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் சார்பாகவும் - தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் இளைஞர்களுடைய போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி - கனிமொழி எம்.பி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-victory-for-the-youths-protests-across-the-country-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-victory-for-the-youths-protests-across-the-country-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">0c75769d-b38f-41c6-b870-392acd6d3a6a</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:51:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:51:45.320Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்.பி,தூத்துக்குடி விமான நிலையம்,நீட் வினாத்தாள் கசிவு,Kanimozhi Karunanidhi,Thoothukkudi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2024/12/17/28367098-untitled-1.webp" width="750"><media:title type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2024/12/17/28367098-untitled-1.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தூத்துக்குடி</a> விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியதாவது:-</p><p>நாடு முழுவதும் இளைஞர்களுடைய போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி, மத்திய அரசாங்கம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீட் வினாத்தாள் கசிவுக்கு </a> பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று  தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுருந்தார்கள்.</p><p>எனினும் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்று பிம்பத்தை பரப்ப கூடிய சூழலில் ,</p><p>இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தைக் கையில் எடுத்து மத்திய அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.</p><p>மத்திய அரசாங்கம் எந்தக் கேள்விக்குமே பதில் சொல்லாது என்ற சூழ்நிலையில் இருந்ததை, நாட்டு மக்களுக்கு நீங்கள் பதில் சொல்லி ஆக வேண்டும் என்று பெற்றிருக்கக்கூடிய வெற்றி.</p><p>மேலும் அடுத்த கோரிக்கையாக, மாநிலப் பட்டியலுக்கு கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முன்வைக்கக்கூடிய கோரிக்கை அதுவே. இதில் வெற்றி பெற்றால் நிச்சயமாக நாங்களும் வெற்றி அடைவோம்.</p><p>மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால் நிச்சயமாக நீட் ரத்து செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது.</p><p>அருணாச்சலத்தின் குடும்பத்தைதான் சந்திப்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் காவல் மரணம் குறித்து பலமுறை பேசியிருக்கிறார்கள். முதல்-அமைச்சர் காவல் நிலைய கொலைகளைப் பற்றி வாய் திறப்பதே கிடையாது என்ற குற்றச்சாட்டை எங்களுடைய தலைவர் நேற்று முன்வைத்திருக்கிறார். </p><p>தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறையைப் பயன்படுத்தாமல், தங்களுக்கு யாரெல்லாம் எதிரியாக நினைக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது, தமிழ்நாட்டில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினுடைய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறியிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-that-will-experience-power-outages-tomorrow%E0%AE%9F%E0%AF%8D</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-that-will-experience-power-outages-tomorrow%E0%AE%9F%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">e332d97a-92e1-4aa7-95fa-b9a5bdeaa196</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:47:59 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:47:59.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தாம்பரம்,maintenance work,வேளச்சேரி,மின் தடை power cut,இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/df0wj95v/82.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/df0wj95v/82.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னையில் 27.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">பராமரிப்பு பணி</a> காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>வேளச்சேரி:</strong> விஜயா நகர் 3 வது, 6 வது, 9 வது முதல் 11வது தெருக்கள் வரை, ராம் நகர் 4 வது முதல் 7 வது தெருக்கள் வரை, கோமதி நகர் 8 வது தெரு, வேளச்சேரி பிரதான சாலை.</p><p><strong>கொட்டிவாக்கம்:</strong> சாஸ்திரி நகர், வால்மீகி நகர், 2வது சீவார்டு சாலை முதல் 4வது சீவார்டு சாலை வரை, பாலகிருஷ்ணன் சாலை, கே.கே. சாலை, ராஜா ரங்கசாமி அவென்யூ, சுப்பிரமணியம் அவென்யூ, திருவள்ளுவர் நகர் 7வது முதல் 33வது குறுக்குத் தெருக்கள் வரை, திருவள்ளுவர் நகர் 1 மற்றும் 3 முதல் 6வது பிரதான சாலைகள் வரை, 1 மற்றும் 3வது அவென்யூ, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.</p><p><strong>சித்தாலப்பாக்கம்:</strong> பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு, நற்குணம் அவென்யூ, ஸ்ரீ சாய் கார்டன், நூக்கம்பாளையம் பிரதான சாலை, இந்திரா நகர் பிரதான சாலை , காமராஜ் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ரோஸ் கார்டன் சாலை, டி.என்.யு.எச்.டி.பி. ஏ பிளாக் முதல் யூ வரை, ஏஏ முதல் எச் , மற்றும் 209 முதல் 212 பிளாக் வரை.</p><p><strong>தாம்பரம் :</strong> இரும்புலியூர் சர்வீஸ் சாலை, இன்விகான் பிளாட், TTK நகர், ஜெருசீலம் நகர், சர்ச் சாலை, ரத்தின குமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ்.ராஜன் நகர், ஜி.கே.மூப்பனார் அவென்யூ.</p><p><strong>திருமுல்லைவாயல்:</strong> கிரீன் ஃபீல்ட், சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர், மாசிலாமணீஸ்வரர் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஒரகடம் சொசைட்டி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம் அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் துணிகர கொள்ளை: பொதுமக்கள்- வியாபாரிகள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/daring-burglaries-at-four-consecutive-shops-near-villupuram-public-and-traders-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/daring-burglaries-at-four-consecutive-shops-near-villupuram-public-and-traders-alarmed#comments</comments><guid isPermaLink="false">b9580b77-e3cb-4283-a674-430da93d45c6</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:43:06 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:43:06.874Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,Villupuram,கொள்ளை,Robbery,public panic,பொதுமக்கள் அச்சம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q7dbmqxb/19.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கொள்ளையடிக்கப்பட்ட கடை -மோப்பநாய்]]></media:title><media:description type="html"><![CDATA[ விழுப்புரம் அருகே 4 கடைகளில் கொள்ளை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q7dbmqxb/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விழுப்புரம் மாவட்டம்</a> அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் நடந்த கொள்ளையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்தனர். </p><h2>நள்ளிரவில் துணிகர கொள்ளை</h2><p>விழுப்புரம் அடுத்த பிடாகம் பகுதியில் பல்வேறு வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இயங்கி வருகின்றன. நேற்று இரவு வியாபாரிகள் தங்களது கடைகளைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றனர். இன்று காலை வழக்கம் போல் கடைகளைத் திறக்க வந்தபோது, அடுத்தடுத்து நான்கு கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p><h2>ரூ.25,000 -பொருட்கள் திருட்டு</h2><p>மர்ம நபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 25,000 ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும், கடையிலிருந்த விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் இதர பொருட்களையும் அள்ளிச் சென்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">துணிகர கொள்ளை</a> அரங்கேறியது.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மோப்ப நாய் </a>வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.</p><h2>பொதுமக்கள் அச்சம்</h2><p>நெருக்கடி மிகுந்த பகுதியில் ஒரே நள்ளிரவில் 4 கடைகளில் கொள்ளை போயிருப்பது அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காதலுக்கு மறுப்பு;  காதலி வேறு  நபருடன் திருமணம் - முன்னாள் காதலன் செய்த விபரீத செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rejection-of-love-ex-girlfriend-marries-another-man-ex-boyfriend-commits-a-drastic-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rejection-of-love-ex-girlfriend-marries-another-man-ex-boyfriend-commits-a-drastic-act#comments</comments><guid isPermaLink="false">b6d61e31-62f7-4220-8ac3-5f3362c0f6e6</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:39:46 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:39:46.936Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,கத்தி குத்து,ex-boyfriend,woman injured,முன்னாள் காதலன் கைது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/12/13/44538026-national-04.webp" width="750"><media:title type="html"><![CDATA[ கத்தி குத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமணமான இளம்பெண்ணை முன்னாள் காதலன் கத்தியால் குத்தினார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/12/13/44538026-national-04.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான இளம்பெண் ஒருவரை அவரது முன்னாள் காதலன் கத்தியால் கொடூரமாக குத்தினார். </p><h2>காதலும் திருமணமும்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கரூர் </a>மாவட்டத்தின் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் காதலித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் இவர்களது காதல் தடைபட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் முன்னாள் காதலன் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.</p><h2>பொதுவெளியில் கொடூர தாக்குதல்</h2><p>இன்று (சனிக்கிழமை) குளித்தலை பகுதியில் அந்தப் பெண் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் காதலன் திடீரென அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே, ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தப் பெண்ணை சரமாரியாகக் குத்தினார். அதனால் அந்த பெண் வலியில் அலறிக் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு சுற்றியிருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொது மக்கள்</a> ஓடி வந்தனர்.</p><h2>குற்றவாளிக்கு தர்மஅடி</h2><p>பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண்ணை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், தப்பியோட முயன்ற முன்னாள் காதலனை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தர்மஅடி </a>கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இதுகுறித்து கரூர் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் பஸ் மோதி தந்தை கண்முன்னே கல்லூரி மாணவி உயிரிழப்பு  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-after-being-hit-by-a-private-bus-right-before-her-fathers-eyes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-after-being-hit-by-a-private-bus-right-before-her-fathers-eyes#comments</comments><guid isPermaLink="false">2e22b42a-4323-4492-9d0f-ec7045f14ed5</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:39:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:39:45.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,திருவண்ணாமலை,Thiruvannamalai,தனியார் பஸ்,மாணவி பலி,College student dies</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/3nkf2iua/22.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ துர்கா தேவி ]]></media:title><media:description type="html"><![CDATA[ விபத்தில் துர்கா தேவி உயிரிழந்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/3nkf2iua/22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவண்ணாமலை</a> செய்யாறு சாலையில் பைக் மீது தனியார் பஸ் மோதி தந்தை கண்முன்னே கல்லூரி மாணவி உயிரிழந்தார்.</p><h2>விபத்து</h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் துர்கா தேவி . இவர் செய்யாறு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். வழக்கம்போல இன்று (சனிக்கிழமை) காலை அவர் தனது தந்தையுடன் பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செய்யாறு அருகே உள்ள ஒரு சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக அவர்களது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பைக்</a> மீது பலமாக மோதியது.</p><h2>தந்தை கண்முன்னே நேர்ந்த சோகம்</h2><p>அந்த பயங்கர விபத்தில் துர்கா தேவி பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும், தனது கண்முன்னே மகள் உயிரிழந்ததைக் கண்டு அவர் கதறி அழுதது அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் ஓட்டுநரை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைது</a> செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 5-வது மாடியிலிருந்து விழுந்த தள்ளுவண்டி: கீழே குளித்த வடமாநில தொழிலாளி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pushcart-falls-from-5th-floor-in-chennai-north-indian-worker-bathing-below-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pushcart-falls-from-5th-floor-in-chennai-north-indian-worker-bathing-below-killed#comments</comments><guid isPermaLink="false">625a5213-733f-4395-b6aa-ffa66f91f86b</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:38:32 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:38:32.314Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,Chennai,சென்னை,பலி,வடமாநில தொழிலாளி,North Indian worker</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2dmcne8f/18.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தள்ளுவண்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை 5-வது மாடியில் இருந்து தள்ளுவண்டி கீழே விழுந்ததில் கீழே குளித்துக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2dmcne8f/18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தரமணியில் 5-வது மாடியிலிருந்த தள்ளுவண்டி, கீழே குளித்துக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியின் மீது விழுந்ததில் அவர் பலியாகினார்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>தரமணி பகுதியில் அடுக்குமாடி கட்டிட கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று (சனிக்கிழமை) காலை, கட்டிடத்தின் 5-வது தளத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் 'வீல் பாரோ' எனப்படும் தள்ளுவண்டி நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்தது. </p><h2>வடமாநில தொழிலாளி பலி</h2><p>அந்த சமயத்தில், கட்டிடத்தின் கீழே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பகுதியில் அஸ்ரபுல் ஆலம் (வயது 31) என்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வடமாநில தொழிலாளி</a> குளித்துக் கொண்டிருந்தார். 5-வது மாடியில் இருந்து அதிவேகமாக வந்த அந்த இரும்பு வண்டி, அஸ்ரபுல் ஆலம் மீது பலமாக விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை</h2><p>இந்த விபத்தின் போது அஸ்ரபுல் ஆலம் அருகில் நின்று கொண்டிருந்த முகமது ஸ்ரேல் என்ற மற்றொரு தொழிலாளி மீதும் வண்டி மோதியதில், அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த தரமணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அஸ்ரபுல் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டுமான தளத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வலைகள் பொருத்தப்படாததே இந்த விபத்திற்கு காரணமா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>