<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 29 Aug 2026 12:27:24 +0000</lastBuildDate><item><title>மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாரும் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-can-even-think-of-another-prime-minister-on-par-with-modi-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-can-even-think-of-another-prime-minister-on-par-with-modi-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">aa6d9009-7db6-4458-bf2a-93efd6d5fb6f</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:23:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:23:05.687Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi,தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,மோடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/v383tz5e/34.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/v383tz5e/34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக மூத்த தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88">தமிழிசை சவுந்தரராஜன்</a> சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது:- </p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்கள் தற்போது மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், அந்த வாய்ப்பை அவர் தலைமையிலான அரசும், அவரது கட்சியும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக நாட்டின் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை தற்போது யாராலும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.</p><h2>நீண்ட அரசியல் அனுபவம்</h2><p>நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று முறை நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டதுடன், அதற்கு முன்பு 12 ஆண்டுகள் மாநில முதல்-மந்திரியாகவும் பணியாற்றியவர். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அரசியல் அனுபவத்தை அவர் பெற்றுள்ளார். எனவே, அவரது அரசியல் அனுபவத்துக்கு இணையாக வேறு யாரையும் ஒப்பிட முடியாது.</p><h2>எளிதான விஷயம் அல்ல...</h2><p>ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும், எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும் உரிமை உள்ளது. இருப்பினும், பிரதமர் மோடிக்கு இணையாக செயல்படுவது கூட எளிதான விஷயம் அல்ல என்றும் அவர் கூறினார். தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என பிரதமர் மோடி எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை என்றும், குறிப்பாக தென் மாநிலங்களின் வளர்ச்சியில் அவர் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.</p><h2>ஆரோக்கியமான விவாதங்கள்</h2><p>தமிழர்களின் பெருமையான திருக்குறளை உலக அளவில் பிரதமர் மோடி எடுத்துச் சென்ற அளவுக்கு வேறு யாரும் செயல்பட்டதாகக் கூற முடியாது. மேலும், சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும். சட்டப்பேரவை சண்டை மன்றமாக மாறக்கூடாது.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாவட்டத்தில் இருந்து நேபாளம் சென்ற 12 பேரில்  4 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-out-of-12-people-who-went-to-nepal-from-coimbatore-district-are-reported-to-be-safe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-out-of-12-people-who-went-to-nepal-from-coimbatore-district-are-reported-to-be-safe#comments</comments><guid isPermaLink="false">def66a3a-a3be-4df0-aa3a-6401ca82ea51</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:07:45 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:07:45.088Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Nepal,நேபாளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/q1lumksv/kovai33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
கோவை ]]></media:title><media:description type="html"><![CDATA[  4 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/q1lumksv/kovai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>நேபாளம் சென்ற 4 பேர் பாதுகாப்பாக உள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D">திபெத்தின் இமயமலை</a> பகுதியில் கடந்த 26-ம் தேதி மிகப்பெரிய பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நேபாளத்தை தாக்கியது. அங்குள்ள ஆறுகளில் கடு ம்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 8 மத்திய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. வெள்ளத்துடன் பாறைகள், மண் மரங்கள் உள்ளிட்டவைகள் கலந்து அசுர வேகத்தில் பாய்ந்ததில் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாயமனார்கள்.</p><p>இதனையடுத்து நேபாள ராணுவம், போலீசார், தேசிய பேரிடர் படையினர் மீட்புபடையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேறும் - சகதிகள் முழுவதும் பரவி உள்ள நிலையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் பலரது உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது.</p><p>நேபாளத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேபாளம் - திபெத்தில் மொத்தம் 2,400க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். நேபாளத்தில் மீட்பு பணிகள் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது.</p><p>இந்தநிலையில், கோவை மாவட்டத்தில் இருந்து நேபாளம் சென்ற 12 பேர் காணாமல்போனநிலையில், 4 பேர் பாதுகாப்பாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவையைச் சேர்ந்த ஐடிஎல் டூர் அண்ட் ட்ரெக்கிங் நிறுவனம் மூலம் கைலாஷ் யாத்திரை சென்ற தேவராஜ், லோகநாதன், சுவாமிநாதன், வேல்முருகன் நலமாக இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது,.</p>]]></content:encoded></item><item><title>யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம்; குன்னூர் மலை ரெயிலின் 128-வது ஆண்டு விழா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/unesco-heritage-nilgiri-mountain-railway-128th-anniversary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/unesco-heritage-nilgiri-mountain-railway-128th-anniversary#comments</comments><guid isPermaLink="false">ea7ded67-e9f3-4685-8ac9-8719f244d982</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:07:17 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:07:17.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மலை ரெயில்,குன்னூர்,Coonoor,யுனெஸ்கோ,UNESCO,Mountain Railway</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fmi6rvzl/mountain-train.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ குன்னூர் மலை ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம்; குன்னூர் மலை ரெயிலின் 128-வது ஆண்டு விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fmi6rvzl/mountain-train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குன்னூர், </p><p>உலக புகழ்பெற்ற நீலகிரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மலை ரெயில்</a>, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, தற்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்து பெற்றுள்ள இந்த மலை ரெயிலின் 128-வது ஆண்டு விழா இன்று குன்னூர் ரெயில் நிலையத்தில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.</p> <h2>ஆங்கிலேயர் காலத்துத்தொடக்கம்</h2><p> மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான முதல் மலை ரெயில் பாதை 1899-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குன்னூரில் இருந்து உதகமண்டலம்  வரையிலான மலை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு 1898 ஆகஸ்ட் 29 அன்று முறைப்படி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இன்றுடன் இந்த தடம் 128 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.</p><h2>தேசியக்கொடி ஏற்றி மரியாதை</h2><p>128-வது ஆண்டு விழாவை முன்னிட்டு,  தேசப்பற்றை போற்றும் வகையில் ரெயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.</p><h2>வண்ண பலூன்கள் பறந்தன</h2><p>பாரம்பரியமிக்க மலை ரெயில் என்ஜின் மற்றும் அதன் பெட்டிகள் அனைத்தும் விதவிதமான வண்ண மலர்களாலும், தோரணங்களாலும் அடுக்கடுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில், நூற்றுக்கணக்கான வண்ண வண்ண பலூன்கள் விண்ணில் பறக்கவிடப்பட்டு விழா விறுவிறுப்பாக தொடங்கியது.</p><h2>சுற்றுலாப் பயணிகள் நெகிழ்ச்சி</h2><p>நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் இதயத்தை கவர்ந்த இந்த மலை ரெயிலின் 128-வது பிறந்தநாளை, தாங்கள் பயணம் செய்யும் அதே நாளில் கொண்டாடுவதில் பெரும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவதாக பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலை ரெயில் ஊட்டி நோக்கி தனது எழில்மிகு பயணத்தை தொடங்கியது.</p>]]></content:encoded></item><item><title>உயர்கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி நிறுத்தப்பட்டதா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-special-coaching-for-higher-education-entrance-exams-been-discontinued-clarification-from-the-information-verification-wing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-special-coaching-for-higher-education-entrance-exams-been-discontinued-clarification-from-the-information-verification-wing#comments</comments><guid isPermaLink="false">d94b46ce-0ee6-4e3d-9cdc-e68152a9af93</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:02:30 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:02:30.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fact Check Unit,Fact check,சிறப்பு பயிற்சி,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,தகவல் நம்பகத்தன்மை,தகவல் நம்பகத்தன்மை பிரிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/j12z4rdo/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/j12z4rdo/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உயர்கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி நிறுத்தம் என பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>சமூக நீதித்துறையின் கீழ் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி நிறுத்தப்பட்டதாக திமுக நிர்வாகி ஒருவர் பேசியுள்ளார்.</p><h2>உண்மை என்ன ?</h2><p>இது முற்றிலும் தவறான தகவலாகும்.</p><p>இது தொடர்பாக சமூக நீதித்துறை அளித்துள்ள விளக்கத்தில், "மாணவ - மாணவிகளுக்கு அளிக்கப்படும் IIT, JEE, NEET உள்ளிட்ட 19 வகை உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி நிறுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு 187 பேர் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற நிலையில், நடப்பு ஆண்டில் IITTM - நொய்டா, NIT - ஆந்திரா, NIFT - சென்னை மற்றும் பெங்களூரு, FDDI - சென்னை உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இதுவரை 357 மாணவ - மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த பயிற்சி தொடர்ந்து நடைபெறுவதோடு, அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர் !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அவசரமாக முடிப்பதைவிட முழுமையாக நிறைவேற்றுவதே நோக்கம்; சுற்றுச்சூழல் பணிகள் நீட்டிப்பு-அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-aim-is-to-complete-rather-than-rush-extension-of-environmental-work-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-aim-is-to-complete-rather-than-rush-extension-of-environmental-work-annamalai#comments</comments><guid isPermaLink="false">ae4c269e-ca5d-4ff2-9ac5-2557cda92fa3</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:57:49 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:57:49.167Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,work,சுற்றுச்சூழல்,பணிகள்,Extension,நீட்டிப்பு,Environmental</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fq456r8z/33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fq456r8z/33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் <a href="https://www.dailythanthi.com/topic/annamalai">அண்ணாமலை </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>எதிர்காலத் சமூகத்தின் நலனுக்காகவும் நமது தலைமுறைகளின் நலனுக்காகவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னலமற்ற முறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் நமது வி தி லீடர்ஸ் அமைப்பின் அனைத்து தலைவர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றம் என்பது ஒரு நாளில் நடக்கக் கூடியது அல்ல. அது ஒரு தொடர்ச்சியான பயணம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், உங்கள் விடுமுறை நாட்கள் ஓய்வு நேரங்களை எல்லாம். நமது அமைப்பின் பணிகளுக்காக நீங்கள் செலவிட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது.</p><h2>பசுமைப் பணிகள்</h2><p>தூய்மையான மற்றும் சூரிய ஒளி நிறைந்த தமிழ்நாடு என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதம் என்ற நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 1400 க்கும் மேற்பட்ட Major Iivean அதாவது பெரிய நிகழ்ச்சிகளை நாம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம். பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள் கழிவுகளை முறையாகப் பிரித்தல், மரக்கன்றுகள் நடுதல் பசுமைப் பணிகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம் அனைத்து மாவட்டங்களிலும், நமது சகோதர, சகோதரிகள் தொடர்ந்து இந்தப் பணிகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.</p><h2>கூடுதல் கால அவகாசம்</h2><p>இன்று வரை தமிழகம் முழுவதுமாக 175 டன் குப்பைகளை அகற்றியுள்ளோம். லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாநிலம் முழுவதும் நட்டுள்ளோம் பல இடங்களில் ஆரம்பித்த பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதும், மேலும் இவை தொடர்பாக மக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் மூலம் புதிதாகக் கண்டறிந்துள்ள பணிகளையும் நிறைவேற்றுவதும் அவசியம். சில திட்டங்களுக்கு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிகளைப் பெறுவதில் எதிர்பாராத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்யவும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது</p><p>இந்தப் பணிகளை அவசர அவசரமாக முடிப்பதைவிட அவை திட்டமிட்டபடி முழுமையாக நிறைவேற்றப்பட்டு, அதன் பலன் அந்தப் பகுதிகளுக்கும், மக்களுக்கும் நீண்ட காலத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். சமீபத்தில் நேபாளில் பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் இயற்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் எத்தகைய பேரிடர்களை உருவாக்கக்கூடும் என்பதையும். அவற்றின் தீவிரத்தையும் நமக்கு உணர்த்தியுள்ளது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது சிறந்த எதிர்காலத்திற்கான முன்னெடுப்பு மட்டுமல்ல. </p><h2>தொடர்ந்து நடைபெறும்...</h2><p>எதிர்காலத் தலைமுறைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நமது தலையாய பொறுப்பும்கூட. எனவே, நமது வி தி லீடர்ஸ் அமைப்பின் ஒவ்வொரு தலைவரும் மேற்கொண்ட தன்னலமற்ற உழைப்பிற்கும் முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தூய்மையான மற்றும் சூரிய ஒளி நிறைந்த தமிழ்நாடு பிரச்சாரத்தை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறோம். ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய பணிகளை முழுமையாக நிறைவேற்றி, நாம் எடுத்துக்கொண்ட இலக்கை தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வதே நமது உழைப்பின் உண்மையான வெற்றியாகும். எனவே செப்டம்பர் மாத இறுதி வரை, நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும். செப்டம்பர் மாதத்திற்கான, பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த நமது சமூகப் பணிகள் அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திர பெண் கொலையில் வாலிபர் சிக்கினார்; பரபரப்பு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-caught-in-andhra-pradesh-womans-murder-sensational-news</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-caught-in-andhra-pradesh-womans-murder-sensational-news#comments</comments><guid isPermaLink="false">926cdc78-a524-40e7-bfa3-988b81b45c68</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:46:11 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:46:11.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Andhra,ஆந்திரா,பெண் கொலை,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/6szd506h/andhra33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெண் கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ 

ஆந்திர பெண் கொலையில் வாலிபர் சிக்கினார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/6szd506h/andhra33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நகரி அருகே உள்ள நின்றறை சவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் மனைவி அருணா (வயது 43). இவர் சம்பவத்தன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகிலுள்ள தாமரைப் பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள வதட்டூர் கண்டிகை கிராமத்தில் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள வந்தார்.</p><h2>வயல்வெளியில் கொலை</h2><p>பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டார். இந்த நிலையில் அவர் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம் அருகே வயல்வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றி சிதைக் கப்பட்டிருந்தது.</p><p>தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அருணாவின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப் பட்டன. அவர் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் அப்படியே இருந்தன.</p><h2>திருட்டுக்காக நடந்த கொலை அல்ல</h2><p>இதனால் இது திருட்டுக்காக நடந்த கொலை அல்ல என்பது தெரியவந்தது.  மேலும், இது பாலியல் வன்கொடுமையால் நடந்த கொலையும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கொலையாளிகள்  அருணாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, அவரது அடையாளங்களை அழிப்பதற்காக முகத்தில் ஆசிட் அல்லது சிதைவை ஏற்படுத்தும் வேதிப்பொருளை ஊற்றி உள்ளனர்.</p><h2>கொலைக்கான காரணம் என்ன?</h2><p>அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட அருணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p><h2>தனிப்படைகள் அமைப்பு</h2><p>கொலையாளிகளை பிடிக்கவும், கொலை பற்றி துப்பு துலக்கவும் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி வினோத் தலைமையில்  தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அருணாவின் பிணத்திற்கு அருகில் ஒரு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">செல்போன்</a> கிடந்தது. அதில் பதிவான அழைப்ப விவரங்கள் மற்றும் தகவல்களை கொண்டு அவரது உறவினர்கள் மற்றும் சில முக்கிய சந்தேக நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அருணா கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் தொட்டாரெட்டி குப்பம்,வெள்ளக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவில் கேமரா காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><h2>தடய அறிவியல் துறையினர் ஆய்வு</h2><p>அருணா திருமணம் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் கொலை நடக்கும் வரை யார் யாரை சந்தித்தார் என்பதை இதன் மூலம் கண்டறிய முயல்கின்றனர்.</p><p>அருணாவின் முகத்தில் ஊற்றப்பட்டது ஆசிட் மட்டும்தானா அல்லது அடையாளம் தெரியாமல் இருக்க கல் உப்பு மற்றும் பிற வேதிப்பொருட்களைக் கலந்து ஊற்றினார்களா என்பது குறித்தும், அவர் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே உடல் வீசப்பட்டதா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து இங்கு கொண்டு வரப்பட்டாரா? என்றும் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.</p><p>அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதால், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே அவரது செல்போன் அழைப்பு பதி வான விவரங்களை வைத்து ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p><p>அவரிடம் இருந்து கொலைக்கான காரணங்கள் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண் கொலையில் வாலிபர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் செல்போன் வைப்பு மையம் அமைக்கும் பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-is-in-full-swing-to-set-up-a-mobile-phone-drop-off-center-for-devotees-at-the-tiruvannamalai-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-is-in-full-swing-to-set-up-a-mobile-phone-drop-off-center-for-devotees-at-the-tiruvannamalai-temple#comments</comments><guid isPermaLink="false">9174ae2d-3f9a-416c-a304-5b787eef41d1</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:21:19 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:21:19.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,செல்போன்,கட்டுப்பாட்டு மையம்,mobile phone,தீவிரம்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்,அமைக்கும் பணிகள்,Tiruvannamalai temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/bk1yqtg1/32.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/bk1yqtg1/32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாக விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.</p><h2>கைபேசி வைப்பு மையம்</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/thiruvannamalai">திருவண்ணாமலை</a> அண்ணாமலையார் கோவிலில் வருகின்ற செப்டம்பர் 1-ந் தேதி  முதல் பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பிரதான கோபுரங்களின் அருகிலும் 5 இடங்களில் கைபேசி வைப்பு மையம் (mobile phone deposit centre) அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமானநிலையம்: &quot;வளர்ச்சித் திட்டங்களை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம்&quot; - டி.ஆர்.பி. ராஜா வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-please-do-not-politicize-development-projects-trb-raajas-appeal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-please-do-not-politicize-development-projects-trb-raajas-appeal#comments</comments><guid isPermaLink="false">a73142a2-e931-4539-b736-8b07e8fe9101</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:08:49 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:08:49.510Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,முன்னாள் அமைச்சர்,தமிழக அரசு,TRB Raja,டி.ஆர்.பி.ராஜா,Paranthur Airport,பரந்தூர் விமானநிலையம்,TamilNadu Goverment</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/zsoobezn/srier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/zsoobezn/srier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒவ்வொரு முறையும் திட்டத்தை ஆரம்ப நிலையிலிருந்தே மீண்டும் வடிவமைக்க தொடங்கும் நிலையை தமிழ்நாடு தாங்கிக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/trb-raja">டி.ஆர்.பி. ராஜா</a> தெரிவித்துள்ளார். </p><h2>உள்கட்டமைப்பு எதிர்காலம்</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>இந்த வாரத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு எதிர்காலம் குறித்த ஒரு செய்தியை உணர்த்துகின்றன.</p><p>✈️ பரந்தூர் விமான நிலையம்: ஒப்புதல்கள் பெறப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இத்திட்டம் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் புதிய இடத்தைத் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>️ உலகளாவிய விளையாட்டு நகரம் (Global Sports City): அடிக்கல் நாட்டப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகளைத் தொடங்கத் தயாராக இருந்த நிலையில், இப்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மீண்டும் வடிவமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.</p><h2>மறுபரிசீலனை</h2><p>திட்டங்களை மறுபரிசீலனை செய்ய அரசுகளுக்கு முழு உரிமை உண்டு என்பதை மறுக்க முடியாது; ஆனால், அவற்றை மீண்டும் புதிதாகத் தொடங்குவது என்பது எவ்விதச் செலவும் இல்லாத ஒன்றல்ல.</p><p>ஒவ்வொரு முறை திட்டத்தை மாற்றியமைப்பதும் கால விரயம், ஒப்பந்தச் சிக்கல்கள், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளில் தாமதம் ஆகியவற்றுக்கே வழிவகுக்கும்.</p><p>தேவைக்கு முன்பே திட்டமிட்டு, விரைவாகச் செயல்படுத்தக் கற்றுக்கொண்டதால்தான் தமிழ்நாடு இந்தியாவின் உற்பத்தித் துறையின் மையமாகத் திகழ்கிறது.</p><h2>அரசியலாக்காதீர்கள்</h2><p>பெரிய கனவுகளைக் காண்பதும், திட்டங்களை மேம்படுத்துவதும், பிரம்மாண்டமாக உருவாக்குவதும் வரவேற்கத்தக்கதே; ஆனால், ஒவ்வொரு முறையும் திட்டத்தை ஆரம்ப நிலையிலிருந்தே மீண்டும் வடிவமைக்கத் தொடங்கும் நிலையைத் தமிழ்நாடு தாங்கிக்கொள்ள முடியாது.</p><p>தயவுசெய்து வளர்ச்சியை அரசியலாக்காதீர்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மனித கறி சமைக்கப்பட்ட சம்பவம்: தம்பதி கைது - போலீசார் வெளியிட்ட தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-cooking-of-human-flesh-couple-arrested-police-release-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-cooking-of-human-flesh-couple-arrested-police-release-details#comments</comments><guid isPermaLink="false">31f332fc-fb56-4648-bae8-6a8f018aa4f1</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:46:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:46:05.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,கிரைம் செய்திகள்,TN Police,போலீசார்,கூடுவாஞ்சேரி,Guduvancheri</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/l3lu8x52/arrest.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/l3lu8x52/arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தம்பதி, மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.</p><h2>எக்ஸ்பிரஸ் ரெயில்</h2><p>இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p><a href="https://www.dailythanthi.com/topic/guduvancheri">கூடுவாஞ்சேரி</a> காவல் நிலைய போலீசார், இம்மாத தொடக்கத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மாணிக் உத்தீன் லஸ்கர் (22) மற்றும் பகாபதி மாஜி ஆகிய இருவரும் மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இருவரும் மணிப்பூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, Transit Warrant பெறப்பட்ட பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.</p><h2>பெண்ணின் உடல்</h2><p>கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, ரெயில் எண் 12621-ன் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், ரெயில் ஆக்ராவை சென்றடைந்தபோது சிவப்பு நிற சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசியதை பயணிகள் கவனித்தனர். இதையடுத்து, அரசு ரெயில்வே போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது, தலை துண்டிக்கப்பட்டு பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>பின்னர், உயிரிழந்த பெண் ஹயாத்துன் நிஷா (38) என்பதும், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பதிவான CCTV காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், அந்த சூட்கேஸை எடுத்துச் சென்ற ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.</p> <h2>வழக்குப் பதிவு</h2><p>தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வாடகை வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு ஒரு பெரிய சமையல் பாத்திரத்தில் பெண்ணின் உடலின் மேலும் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><p>இச்சம்பவம் தொடர்பாக T8 கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் முதலில் பெண் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.</p><p>விசாரணையில், மாணிக் உத்தீன் லஸ்கர், த/பெ. மோனிருதீன் லஸ்கர், தக்ஷிண் கிருஷ்ணபூர், சோனாபரிகாட், கச்சார் மாவட்டம், அசாம் மாநிலம் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி, த/பெ. சோட்ரே மாஜி, ராத்பூர், கேந்துஜார், ஒடிசா 758016 ஆகியோர் சந்தேக நபர்களாக போலீசாரால் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த தம்பதியரை கைது செய்ய போலீஸ் தனிப்படைகள் பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்டனர்.</p> <h2>கைது</h2><p>29.08.2026 இன்று, குற்றம்சாட்டப்பட்ட மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி ஆகிய இருவரும் மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களை Transit Warrant பெற்று தாம்பரத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில் தகாத உறவின் காரணமாக கொலை நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிஷா உடனான தொடர்பை மனைவி பகமதி மாஜி கண்டித்ததால் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: மெட்ரோ பணியாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-special-safety-awareness-program-for-metro-staff</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-special-safety-awareness-program-for-metro-staff#comments</comments><guid isPermaLink="false">92b052d3-20f2-4ccb-8cd7-0ba73f3169b3</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:27:21 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:27:21.850Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சென்னை மெட்ரோ,chennai metro,சென்னை மெட்ரோ ரெயில்,Chennai Metro Rail,விழிப்புணர்வு நிகழ்ச்சி,safety awareness</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/iemtx0d0/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/iemtx0d0/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-II கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 28.08.2026 அன்று நந்தனத்தில் உள்ள மெட்ரோஸ் அரங்கில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>விழிப்புணர்வு நிகழ்ச்சி</h2><p>தமிழ்நாடு அரசின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் (DISH - Directorate of Industrial Safety and Health) சார்பில், கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் (BOCW - Building and Other Construction Workers Welfare Board) இணை இயக்குநர் ராஜ்குமார் தலைமையில், துணை இயக்குநர்கள் மணிசங்கர் மற்றும் சுவேதா ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினர்.</p><p>இந்த நிகழ்ச்சி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் குழுவின் பாதுகாப்பு அணியினரால் கூட்டாக நடத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இணை பொது மேலாளர் கவுண்டின்ய போஸ் (பாதுகாப்பு மற்றும் தரம்), பொது ஆலோசகர் குழுவின் தலைவர் முருகமூர்த்தி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p><h2>முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்</h2><p>கட்டுமானப் பணிகளின்போது விபத்துகளைத் தடுப்பது, பாதுகாப்பற்ற செயல்கள் மற்றும் சூழ்நிலைகளை கண்டறிந்து தடுப்பது, பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்வது, சட்டபூர்வமான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் பணியாளர்களை திறம்படக் கண்காணிப்பது உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.</p><p>இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பொது ஆலோசகர்கள் மற்றும் கட்டம்-II-ன் ஒப்பந்ததாரர் நிறுவனங்களைச் சேர்ந்த பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் மேஸ்திரிகள் உள்ளிட்ட சுமார் 200 பேர் பங்கேற்றனர்.</p><h2>பாதுகாப்பே முதன்மை</h2><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-II கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், அனைத்து நிலைகளிலும் “பாதுகாப்பே முதன்மை” என்ற பணிச்சூழலை உருவாக்குவதன் அவசியம் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.</p><p>கட்டம்-II திட்டப் பணிகளில் பாதுகாப்புத் தரங்களை மேலும் மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க வழிகாட்டுதல்கள் மற்றும் ஆதரவை வழங்கிய தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்திற்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை மெட்ரோ</a> ரெயில் நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வீடுகளுக்கான கியாஸ் சிலிண்டர் விநியோகம் சீரடைந்ததா..? - இந்தியன் ஆயில் அதிகாரி விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-distribution-of-domestic-gas-cylinders-normalized-indian-oil-official-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/has-the-distribution-of-domestic-gas-cylinders-normalized-indian-oil-official-explains#comments</comments><guid isPermaLink="false">fd2a385f-c1a2-4ace-85cf-e2f6fd7d07d5</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:18:57 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:18:57.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சமையல் எரிவாயு,Gas Cylinder,கியாஸ் சிலிண்டர்,சமையல் எரிவாயு சிலிண்டர்,cooking gas cylinder,இந்தியன் ஆயில்,Indian Oil</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/5hi24dp5/india.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/5hi24dp5/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>வீடுகளுக்கான கியாஸ் சிலிண்டர் விநியோகம் சீரடைந்தா? என்பது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/இந்தியன்-ஆயில்">இந்தியன் ஆயில்</a> அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். </p><h2>சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு </h2><p>ஈரான் - இஸ்ரேல் இடையே தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், ஹார்மூஸ் நீரிணை வழியாக வரும் சரக்கு கப்பல்கள் சேவை தடைபட்டது. இதனால், சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. </p><p>மாதங்கள் கடந்தாலும் தற்போது வரை சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் சீரடையவில்லை. இந்த நிலையில், கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாஷா என்பவர், சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் எப்போது சீரடையும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/இந்தியன்-ஆயில்">இந்தியன் ஆயில்</a> நிறுவன அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார். </p><p>அதற்கு அவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-​</p><h2>புவிசார் அரசியல் சூழல்</h2><p>பெட்ரோலியத் துறையைப் பாதித்துள்ள தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, வீட்டு உபயோக நுகர்வோருக்குத் தடையின்றி சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதை உறுதிசெய்ய எண்ணெய் நிறுவனங்கள் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. </p><p>விநியோக தளவாடங்களை உன்னிப்பாகக் கண்காணித்தல், சுத்திகரிப்பு நிலைய உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு உள்ளிருப்புகளை சரியாகப் பகிர்ந்தளித்தல் ஆகியவை இதில் அடங்கும். </p><h2>சமமான முறையில் சிலிண்டர் விநியோகம்</h2><p>இதன் காரணமாக, தற்போது வீட்டு உபயோக நுகர்வோருக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது.  ​மேலும், வீட்டு உபயோக நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்து தடையின்றியும் சரியான நேரத்திலும் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>​கூடுதலாக, அனைத்து நுகர்வோருக்கும் சமமான முறையில் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யவும், உண்மையான தேவையை பூர்த்தி செய்யவும், வீட்டு உபயோக எல்.பி.ஜி. முன்பதிவுக்கான கால இடைவெளியில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>கியாஸ் சிலிண்டர் முன்பதிவு</h2><p>தற்போதைய நிலவரப்படி, நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்குப் பிறகும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்குப் பிறகும் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம். பொதுமக்கள் பதற்றத்தில் தேவையின்றி முன்பதிவு செய்வதைத் தடுப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும். நிலவி வரும் சர்வதேச அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த முன்பதிவுக் கட்டுப்பாடுகள் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.</p><p>​சிலிண்டர் விநியோகத்திற்கும் அடுத்த முன்பதிவுக்கும் இடையே 25 மற்றும் 45 நாட்கள் இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்கான காரணம், பொதுமக்களின் சராசரி பயன்பாட்டு முறை மற்றும் சமச்சீரான விநியோகத் தேவையின் அடிப்படையில் அமைந்தது.</p><h2>8 சிலிண்டர்கள் பெற முடியும்</h2><p>அ) கிராமப்புறங்களைப் பொறுத்தவரை, நிர்ணயிக்கப்பட்டுள்ள 45 நாட்கள் முன்பதிவு இடைவெளியின்படி, ஒரு நுகர்வோர் ஆண்டிற்கு அதிகபட்சமாக சுமார் 8 சிலிண்டர்கள் வரை பெற முடியும். எனினும், 2025–26 நிதியாண்டில் கிராமப்புற நுகர்வோரின் உண்மையான தனிநபர் பயன்பாடு (14.2 கிலோ சிலிண்டர் கணக்கீட்டின்படி) ஆண்டிற்குச் சராசரியாக 5.07 சிலிண்டர்களாக மட்டுமே இருந்தது. இது அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேயே உள்ளது.</p><p>​ஆ) நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை, நிர்ணயிக்கப்பட்டுள்ள 25 நாட்கள் முன்பதிவு இடைவெளியின்படி, ஒரு நுகர்வோர் ஆண்டிற்கு அதிகபட்சமாக சுமார் 14 சிலிண்டர்கள் வரை பெற முடியும். 2025–26 நிதியாண்டில் நகர்ப்புற நுகர்வோரின் உண்மையான தனிநபர் பயன்பாடு ஆண்டிற்குச் சராசரியாக 6.41 சிலிண்டர்களாக மட்டுமே இருந்தது. இதுவும் அனுமதிக்கப்பட்ட வரம்பை விடக் கணிசமாகக் குறைவாகும்.</p><p>​எனவே, நுகர்வோரின் தற்போதைய பயன்பாட்டு முறைகள், சமச்சீரான விநியோகம், நிறுவனத்தின் செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் முறையற்ற அல்லது அளவுக்கு அதிகமான முன்பதிவுகளைத் தடுப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த மறுபதிவு இடைவெளிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>​இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவையில் அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து விபத்து..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-involving-a-series-of-20-cylinder-explosions-in-coimbatore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-involving-a-series-of-20-cylinder-explosions-in-coimbatore#comments</comments><guid isPermaLink="false">a9392c8e-ef5d-47d3-9554-b0bde5998cd1</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:12:41 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:12:41.477Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கோவை செய்திகள்,சிலிண்டர் வெடிப்பு,cylinder explosion,Gyas cylinder explodes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/w86o2rj3/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/w86o2rj3/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை நவஇந்தியா அருகே உள்ள பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அடுத்தடுத்து சுமார் 20 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்ட தகர வீடுகள் உடைந்து சேதமடைந்தன.</p><h2>உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை</h2><p>சம்பவம் நடைபெற்றபோது அப்பகுதியில் வசித்து வந்த வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், தொழிலாளர்களின் வீடுகளில் இருந்த உடமைகள் மற்றும் பொருட்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன.</p><h2>அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடிப்பு</h2><p>தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த சிலிண்டர்களில் இருந்து எரிவாயு வெளியேறி, அடுத்தடுத்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிலிண்டர்கள் </a>வெடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.</p><h2>தீயணைப்பு வீரர்கள் போராட்டம்</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 30-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><p>மேலும், தீப்பற்றாமல் இருந்த சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி மீட்டனர். இதன் மூலம் மேலும் விபத்து ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>தொழிலாளர்களின் உடமைகள் தீயில் நாசம்</h2><p>இந்த தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களின் உடமைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 50-க்கும் மேற்பட்ட தகர வீடுகள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>கோவையில் பெரும் பரபரப்பு</h2><p>20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததுடன், ஆபத்தான நிலையில் இருந்த சிலிண்டர்களையும் பாதுகாப்பாக மீட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கடையநல்லூர்: மூதாட்டியிடம் நகையை திருடிய 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kadayanallur-2-arrested-for-stealing-jewellery-from-an-elderly-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kadayanallur-2-arrested-for-stealing-jewellery-from-an-elderly-woman#comments</comments><guid isPermaLink="false">4540b06e-78da-47b8-aa8b-62bcdb7e675e</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:55:34 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:55:34.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ்,மூதாட்டி,Elderly woman,Police action,தென்காசி மாவட்டம்,Tenkasi District</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/xnghcshe/3.jpeg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மூதாட்டியும் அவரிடமிருந்து நகை  திருடிய கோகுல கண்ணன் மற்றும் வேலம்மாள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/xnghcshe/3.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடையநல்லூர்,</p><p>கடையநல்லூர் அருகே மூதாட்டியிடம் இருந்து 44 கிராம் தங்க நகைகளை வீடு புகுந்து திருடிய வழக்கில் பக்கத்து வீட்டு பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>நகை திருட்டு</h2><p>தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூர் அருகே மூதாட்டி கணபதி அம்மாள் (வயது 73) வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் ஓட்டைபிறித்து வீட்டிற்குள் குதித்தனர். பின்னர், அங்கிருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை கழத்தி கொடுக்குமாறு கத்தியைக் காட்டி மிரட்டினர். இதற்கு பயந்த அவர் தனது காதில் இருந்த கம்மல் மற்றும் கழுத்தில் இருந்த 44 கிராம் தங்க நகைகளை கழத்தி கொடுத்துள்ளார். இது குறித்து கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் ஆய்வாளர் திரு.கிறிஸ்டி என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விசாரணையின்போது அந்த பகுதியில் உள்ள தோப்பில் ஆரங்சு நிற பைக் ஒன்று ஒரே இடத்தில் நீண்ட நேரமாக இருந்தது. பைக் உரிமையாளர் வராததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த பைக்கின் நம்பர் பிளேட் எண்ணை வைத்து விசாரணை செய்து வந்தனர். அப்போது, அந்த பைக்கின் உரிமையாளர் காஞ்சிபுரத்தை சேர்ந்த கோகுல் கண்ணன் (வயது 36) என்பது தெரியவந்தது. அதன் மூலமாக கோகுல கண்ணனின் மொபைல் சிக்னலை வைத்து அவரது இருப்பிடத்தை கண்காணித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> அவர் சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு சென்று அதிரடியாக அவரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.</p><h2>கைது</h2><p>மூதாட்டியின் வீட்டின் அருகில் வசிக்கும் வேலம்மாள் (வயது 48) என்பவர் மற்றும் தனது ஆண் நண்பர் சுரேஷ் என்பவருடன் இணைந்து இந்த திருட்டு சம்பவத்தை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. கோகுல கண்ணன் திருடுவதற்கு தனது பைக்கை கொடுத்ததும், கூட்டாளியாக செயல்பட்டதையும் தெரிவித்தார். இதையடுத்து வேலம்மாள் மற்றும் கோகுல கண்ணனை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து, அவர்கள் திருடிய  44 கிராம் நகையையும் மீட்டு மூதாட்டியிடம் கொடுத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.. - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-rise-in-prices-of-essential-commodities-must-be-curbed-premalatha-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-rise-in-prices-of-essential-commodities-must-be-curbed-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">497bb9ae-9490-41a5-914b-b727da30a877</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:38:45 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:38:45.678Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,பிரேமலதா,Premalatha Vijayakand,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/1hwhmzqy/premalatha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/1hwhmzqy/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பொருட்களின் விலை உயர்வு</h2><p>தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது அன்றாட குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வருமானம் அதிகரிக்காத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்களின் குடும்பப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர வருமானத்தில் பெரும்பகுதி உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கே செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இதனை வெறும் விலை உயர்வாக பார்க்காமல், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியப் பிரச்சினையாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்</h2><p>அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்களும் எந்தவித பொருளாதார நெருக்கடியும் இல்லாமல், நிம்மதியாகவும் கண்ணியமாகவும் நம் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்ற நிலையை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக அரசு</a> உருவாக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பா..? வானிலை மையம் கூறுவதென்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/weather/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-what-does-the-meteorological-centre-say</link><comments>https://www.dailythanthi.com/news/weather/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-what-does-the-meteorological-centre-say#comments</comments><guid isPermaLink="false">c3777edb-3d1a-4a05-a498-7a8a0dc2f3b8</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:15:30 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:15:30.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,Weather update,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/6woeaqp8/patt.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/6woeaqp8/patt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>29-08-2026 மற்றும் 30-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>31-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>01-09-2026 மற்றும் 02-09-2026:</strong> வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>03-09-2026:</strong> வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>04-09-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>29-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>29-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (29-08-2026) மற்றும் நாளை (30-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 ° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>29-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>29-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>30-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>31-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>01-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>02-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>29-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்! - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-must-be-completely-scrapped-out-of-respect-for-the-sentiments-of-tamil-nadu-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-must-be-completely-scrapped-out-of-respect-for-the-sentiments-of-tamil-nadu-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">7fdb8b8a-2a93-4b24-823a-49f40d25a872</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:07:43 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:07:43.429Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,நீட் தேர்வு,NEET,நீட்,Manickam Tagore MP,நீட் தேர்வு ரத்து,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2cbijxxr/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2cbijxxr/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மாணவி தற்கொலை</h2><p>நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி நெஞ்சை உலுக்குகிறது. மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு கடினமாக உழைத்த ஒரு இளம் மகளை நாம் இழந்திருப்பது தாங்க முடியாத வேதனையளிக்கிறது. மாணவி ஸ்ருதிலயாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்சும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவர்.</p><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்; அதில் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கனவோடு நீட் தேர்வெழுதுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மொத்த மருத்துவ இடங்களோ வெறும் 13,999 மட்டுமே. தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 2025-இல் 76,181 ஆக இருந்து, 2026-இல் 61,306 ஆகக் குறைந்து 19.5% கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சுமார் 15,000 தகுதியுடைய மாணவர்கள் குறைந்து போயிருப்பது, இந்த முறைகேடான தேர்வு முறையின் மீது மாணவர்களுக்குத் துளியும் நம்பிக்கையற்றுப் போய்விட்டதையே காட்டுகிறது.</p><h2>எந்த உயிரும் பறிபோகக் கூடாது</h2><p>நீட் தேர்வு என்ற கொடூரமான முறை தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் தொடர்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும்?</p><p>நீட் கொடுமையால் இனி எந்தவொரு மாணவரின் உயிரும் பறிபோகக் கூடாது. தமிழ்நாடு தொடர்ந்து போராடியும் மாணவர்களின் மரணங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் மோடி அரசின் கல் நெஞ்சமும் பிடிவாதமுமே இந்த தொடர் துயரங்களுக்குக் காரணம். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மோடி அரசும், மத்திய கல்வி மந்திரி பிரஹலாத் ஜோஷியும் உடனடியாக நிறுத்திவிட்டு, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் முதலீட்டு மோசடிகளை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும் - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-investment-scams-should-be-investigated-across-tamil-nadu-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-investment-scams-should-be-investigated-across-tamil-nadu-velmurugan#comments</comments><guid isPermaLink="false">455f8b42-4da4-45a5-91a5-3182f6013999</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:06:39 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:06:39.609Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,ஆன்லைன் மோசடி,online scam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/lhg4tcni/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/lhg4tcni/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/velmurugan">வேல்முருகன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘FQL’ என்ற ஆன்லைன் செயலி மூலம் அதிக லாபம், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகள் பெறப்பட்டு, தற்போது பெரும் மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>இந்த மோசடி தொடர்பாக இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது உழைப்பால் ஈட்டிய பணத்தை இழந்திருக்கக்கூடும் என்ற நிலையில், இந்த மோசடியின் உண்மையான அளவு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை முழுமையான விசாரணையின் மூலம் அரசு உடனடியாகக் கண்டறிய வேண்டும். இந்த மோசடியின் பின்னணியில் செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டப்படி கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>முதலீட்டு மோசடி புகார்</h2><p>மேலும், இந்தச் சம்பவம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் மட்டுமே தொடர்புடையதா? அல்லது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் வெவ்வேறு செயலிகள், முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களில் இதேபோன்ற மோசடிகள் நடைபெற்று வருகின்றனவா? என்பதையும் அரசு விரிவாக விசாரிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பதிவாகியுள்ள இணையவழி மற்றும் முதலீட்டு மோசடி புகார்களை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, ஒரே மாதிரியான செயல்முறைகள், வங்கிக் கணக்குகள், பணப் பரிமாற்றங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் முகவர் வலையமைப்புகள் ஏதேனும் தொடர்புடையவையா? என்பதை புலனாய்வு செய்ய வேண்டும்.</p><h2>உரிய சட்ட உதவி</h2><p>குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் வங்கிக் கணக்குகள், சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கண்டறியப்படும் சொத்துகள் மற்றும் பணப் பரிமாற்றங்களை சட்டப்படி உடனடியாக முடக்கி, மோசடியில் பறிபோன பொதுமக்களின் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். அதேபோல், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரிடமிருந்தும் முறையாக புகார் பெற்று, அவர்களின் பண இழப்பு குறித்த முழுமையான ஆவணங்களைச் சேகரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சட்ட உதவியும் வழங்க வேண்டும்.</p><p>எளிய மக்களின் பல ஆண்டுகால உழைப்பையும் சேமிப்பையும் ஆசை வார்த்தைகளைக் கூறிச் சுரண்டும் இத்தகைய இணையவழி மற்றும் முதலீட்டு மோசடிகளை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. மேலூர் FQL மோசடி தொடர்பாக உண்மையான இழப்புத் தொகை, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, மோசடியில் ஈடுபட்டவர்களின் முழு வலையமைப்பு ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை விரைந்து மீட்டுத்தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம்: மு.க.ஸ்டாலின் அதிரடி திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/introduction-of-110-district-in-charges-at-the-dmks-grand-tripartite-event-mk-stalins-bold-plan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/introduction-of-110-district-in-charges-at-the-dmks-grand-tripartite-event-mk-stalins-bold-plan#comments</comments><guid isPermaLink="false">c6d58f2d-a94c-4966-9f1d-a8d0967019dd</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:51:33 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:51:33.992Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,முப்பெரும் விழா,தமிழக அரசியல்,tn politics</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/ecf3ohn6/jiki.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/ecf3ohn6/jiki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிமுகம் செய்ய,<a href="https://www.dailythanthi.com/topic/mkstalin"> கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்</a> திட்டமிட்டுள்ளார். </p><h2>மாவட்ட செயலாளர்கள் 110 ஆக உயர்வு</h2><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு காரணங்கள் குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க.வை வலுப்படுத்த 77 ஆக இருந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> முடிவு செய்தார். </p><p>அதன்படி, நேற்று கட்சி ரீதியாக தி.மு.க.வில் பிரிக்கப்பட்ட 110 மாவட்டங்கள் எவை? என்பதும், அதில் என்னென்ன சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன? என்பதுவும் வெளியானது. </p><h2>மாவட்ட செயற்குழு கூட்டம்</h2><p>தற்போதுள்ள 77 மாவட்ட செயலாளர்கள், புதிதாக உதயமாகும் 110 மாவட்டங்களில், எந்தெந்த ஒன்றியம், நகரம், பேரூர் பகுதிகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து மாவட்ட செயற்குழுவை கூட்டி, அதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் கட்சித் தலைமைக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>பொதுவாக, தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்கள், கட்சி தேர்தல் நடத்தியே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு முன்பாக குறிப்பிட்ட மாவட்டத்தை கவனிக்க பொறுப்பாளர்கள் தான் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் மூலம் மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை பொறுப்பாளர்களே நிர்வகிப்பார்கள். </p><h2>தி.மு.க. முப்பெரும் விழாவில் அறிமுகம்</h2><p>அந்த வகையில், தி.மு.க.வில் புதிதாக உதயமாகியுள்ள 110 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்கள் அனைவரையும் செப்டம்பர் 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் அறிமுகம் செய்து வைக்க, கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> திட்டமிட்டுள்ளார். முப்பெரும் விழா நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>விளையாட்டில் வளர்வோம்.. வெற்றியில் மிளிர்வோம்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-grow-in-sports-let-us-shine-in-victory-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-grow-in-sports-let-us-shine-in-victory-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f034389d-a717-42d2-8542-57b3749b8245</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:47:31 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:47:31.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/4l0tbq94/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/4l0tbq94/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தேசிய விளையாட்டு தினம்</h2><p>இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனை படைத்தவருமான மேஜர் தியான் சந்த்தின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.</p><p>விளையாட்டு, பதக்கங்களை வெல்வதற்கு மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, குழு உணர்வு, ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த களமாகவும் திகழ்கிறது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு உடல்தகுதி மிக அவசியம். இளம்தலைமுறையினர் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வளர்த்துக் கொள்ளவேண்டும்.</p><h2>முதல்-அமைச்சர் வாழ்த்து</h2><p>சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி, வெற்றிகளைக் குவித்து, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இந்தியாவின் </a>மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன்.</p><p>விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய விளையாட்டு தினம் - நயினார் நாகேந்திரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-sports-day-greetings-from-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-sports-day-greetings-from-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">87c6849a-c7de-4a02-a657-d8fccf7ecaac</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:46:20.824Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/6q44tns1/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/6q44tns1/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தேசிய விளையாட்டு தினம்</h2><p>அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின நல்வாழ்த்துகள்! <br>விளையாட்டு என்பது வெற்றிக்கான பாதை மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை வளர்க்கும் சிறந்த களம்.</p><p>பாரத இளைஞர்கள் அனைவரும் விளையாட்டில் ஆர்வம் கொண்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணி, தங்கள் திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இருக்கும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.</p><p>விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி, ஆரோக்கியமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய விளையாட்டு நாள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-sports-day-minister-athav-arjuna-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-sports-day-minister-athav-arjuna-greetings#comments</comments><guid isPermaLink="false">eb24ed97-1944-48bd-8787-3fc59c01be5f</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:22:37 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:22:37.995Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,Greetings,வாழ்த்து,National Sports Day,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,தேசிய விளையாட்டு நாள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/wupyinre/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/wupyinre/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாள் (ஆகஸ்ட் 29) ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு, விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>விளையாட்டு என்பது ஒருவருக்கு வெற்றியையோ, தோல்வியையோ தருவதில்லை. மாறாக, விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது; உடல் வலிமையை உறுதிப்படுத்துகிறது; மகிழ்வான பொழுதுகளை வழங்குகிறது; போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீங்கான வழிகளிலிருந்து பாதுகாக்கிறது; இறுதியாக, ஒவ்வொரு மனிதர்க்கும் அவர்கள் யார் என்கிற சிறப்பை அடையாளம் காட்டுகிறது.</p><p>ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்குத் தொடர் தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மேஜர். தியான் சந்த் பிறந்தநாள், தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டைப் போற்றுவோம்.</p><p>தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விளையாட்டைச் சென்றடையச் செய்வதும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதுமே தமிழ்நாடு அரசின் முதன்மை நோக்கமாகும்; இதற்காக 8-18 திட்டம், 10 ஒலிம்பிக் சிறப்புப் பயிற்சி மையங்கள், வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள், குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவித்துள்ளோம்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலில் விரைவில் ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்ப்போம். அனைவருக்கும் தேசிய விளையாட்டு நாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விளையாட்டு என்பது ஒருவருக்கு வெற்றியையோ, தோல்வியையோ தருவதில்லை. மாறாக, விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது; உடல் வலிமையை உறுதிப்படுத்துகிறது; மகிழ்வான பொழுதுகளை வழங்குகிறது; போதைப் பொருள் பயன்பாடு போன்ற தீங்கான வழிகளிலிருந்து பாதுகாக்கிறது; இறுதியாக, ஒவ்வொரு… <a href="https://t.co/BcVKnu3xia">pic.twitter.com/BcVKnu3xia</a></p>&mdash; Aadhav Arjuna (@AadhavArjuna) <a href="https://x.com/AadhavArjuna/status/2093592630827565472?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதிக்கு &apos;ஜோசப் விஜய்&apos; புத்தகம்: அமைச்சர் சம்பத்குமார் வழங்கி வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/joseph-vijay-book-presented-to-the-vice-president-minister-sampath-kumar-extends-a-welcome</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/joseph-vijay-book-presented-to-the-vice-president-minister-sampath-kumar-extends-a-welcome#comments</comments><guid isPermaLink="false">e9f051ac-b6ac-4636-915b-d6da0f0f1131</guid><pubDate>Sat, 29 Aug 2026 07:56:00 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:56:00.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சி.பி.ராதாகிருஷ்ணன்,C.P. Radhakrishnan,அமைச்சர் சம்பத்குமார்,Minister Sampath Kumar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2n7lyhyt/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2n7lyhyt/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக  இன்று தமிழகம் வந்துள்ளார். இன்று கோவை வருகை தந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, விமான நிலையத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். </p><p>அவரைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது, 'ஜோசப் விஜய் உன் பேரே வரலாறு' என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.  </p> ]]></content:encoded></item><item><title>&quot;45 நாட்கள் நீர் திறப்பை வைத்து ஒருபோக சாகுபடி கூட செய்ய முடியாது&quot; - பெ. சண்முகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-possible-to-carry-out-even-a-single-crop-cultivation-with-a-water-release-of-just-45-days-p-shanmugam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-possible-to-carry-out-even-a-single-crop-cultivation-with-a-water-release-of-just-45-days-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">d3a52d0f-66bd-48df-8be5-963b4a99666f</guid><pubDate>Sat, 29 Aug 2026 07:19:52 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:19:52.452Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீர் திறப்பு,Cauvery,காவிரி,CPM,பெ. சண்முகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/y9cqex7n/P-shangmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/y9cqex7n/P-shangmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர்  சண்முகம் இன்று சென்னையில் செய்தியாளரக்ளுக்குப்பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;   மேட்டூர் அணையில் இருந்து வரும் 1 ஆம் தேதி முதல்வர் விஜய் தண்ணீர் திறந்துவிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  45 நாட்களுக்கு மட்டுமே நீர் திறக்கப்படும் என்ற நீர்வளத்துறை அமைச்சரின் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 நாட்களில் எந்த பயிருமே பயிரிட முடியாது.  120 முதல் 150 நாட்கள் நீர் கிடைத்தால் மட்டுமே சம்பா சாகுபடியை மேற்கொள்ள முடியும்.  90 அடியாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.  சம்பா சாகுபடியாவது முழுமையாக நடைபெறுவதற்கு உரிய உத்தரவாதமான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்ய வேண்டும். 45 நாட்கள் தண்ணீர் திறப்பதால் நெற்பயிரிடவே முடியாத நிலை ஏற்படும். </p><p>உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு மாதவாரியாக உரிய நீரை வழங்காமல், அணைகள் நிரம்பும்போது உபரி நீரை மட்டுமே வழங்கி ஏமாற்றுகிறது . தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றார். </p><p>பரந்தூர் விமான நிலையத் திட்டம் மற்றும் ஓசூர் விமான  நிலைய விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சண்முகம் கூறியதாவது: , முப்போகம் விளையும் விளைநிலங்களை வேறு திட்டங்களுக்குக் கையகப்படுத்தக் கூடாது. தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன. விவசாயத்திற்கு பயன்படாத அத்தகைய நிலங்களைக் கண்டறிந்து திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.  விவசாய நிலத்தை கையகப்படுத்துவோம் என்று செங்கோட்டையன் கூறியது ஏற்புடையது அல்ல. செங்கோட்டையனின் கருத்து விவசாயிகள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கல்லூரிகளில் இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளின் போராட்டங்களைக் கண்காணிக்கச் சொல்லி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு முழு காரணம் தலைமைச் செயலாளர்தான். எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்” என்றார். </p>]]></content:encoded></item><item><title>ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/addition-of-an-extra-coach-to-humsafar-express-trains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/addition-of-an-extra-coach-to-humsafar-express-trains#comments</comments><guid isPermaLink="false">3b2e6542-e201-49ab-a83b-568a65aff8b5</guid><pubDate>Sat, 29 Aug 2026 07:11:20 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:11:20.398Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கூடுதல் பெட்டிகள்,extra coaches,ஹம்சபர் எக்ஸ்பிரஸ்,Humsafar Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/p7filha4/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/p7filha4/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>திருச்சி ஸ்ரீகங்காநகர் இடையே ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:22497/22498) இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிகள் வசதிக் காக ஸ்ரீகங்காநகரில் இருந்து வருகிற 7-ந்தேதி முதல் வருகிற 28-ந்தேதி வரையும், திருச்சியில் இருந்து வருகிற 11-ந்தேதி முதல் வருகிற அக்டோபர் 2-ந்தேதி வரையும் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி ஒன்று கூடுதலாக இணைத்து இயக்கப்படுகிறது. </p><p>அதுபோல் திருச்சி - ஜோத்பூர் இடையே ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:20481/20482) இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிகள் வசதிக்காக ஜோத்பூரில் இருந்து வருகிற 2-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும், திருச்சியில் இருந்து வருகிற 5-ந்தேதி முதல் வருகிற அக்டோபர் மாதம் 3-ந் தேதி வரையும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று கூடுதலாக இணைத்து இயக்கப்படுகிறது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்; ஆண்கள் லிஸ்டில் இல்லையா.? நிருபரின் கேள்விக்கு அமைச்சர் நகைச்சுவை பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-travel-for-women-on-government-buses-are-men-not-on-the-list-minister-gives-a-humorous-reply-to-a-reporters-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-travel-for-women-on-government-buses-are-men-not-on-the-list-minister-gives-a-humorous-reply-to-a-reporters-question#comments</comments><guid isPermaLink="false">6172263d-67f7-4dec-9d99-88d5043de8e2</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:55:28 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:55:28.950Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,govt bus,இலவச பயணம்,Free Travel,அமைச்சர் தமிழன் பார்த்திபன்,Minister Tamilan Parthiban</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/q4mqqr8d/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/q4mqqr8d/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல், </p><p>அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்; ஆண்கள் லிஸ்டில் இல்லையா? என்ற நிருபரின் கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் நகைச்சுவையாக பதில் அளித்தார். </p><p>நாமக்கல் சென்றிருந்த போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம், நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அமைச்சரும் அதற்கு பதில் அளித்து கொண்டிருந்தார். </p><p>அப்போது ஒரு நிருபர், "அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறீர்கள். ஆண்கள் அந்த லிஸ்டில் இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார். </p><p>இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் தமிழன் பார்த்திபன், சுதாரித்துக்கொண்டு நகைச்சுவையாக பதில் அளித்தார். அதாவது, "நீங்கள் என் அண்ணன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். என் தங்கையை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன் (திருமணம் செய்து வைத்திருக்கிறேன்) என்றால், என் மச்சான் கிட்ட தங்கச்சி பணம் கேட்கக்கூடாது என்பதற்காக, உங்களை தொந்தரவு பண்ணக்கூடாது என்பதற்காக இலவசமாக விட்டுள்ளோம். உங்கள் பணத்தைதான் மிச்சம் பண்ணி கொடுத்திருக்கிறோம்" என்றார். </p><p>அமைச்சரின் இந்த வித்தியாசமான பதில், நிருபரை சற்று குழப்பம் அடையச் செய்தாலும், அங்கிருந்தவர்கள் சிரிக்கும் வகையில் அமைந்தது. </p> ]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? - டிடிவி தினகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-dmk-government-trying-to-ban-jallikattu-competitions-ttv-dhinakaran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-dmk-government-trying-to-ban-jallikattu-competitions-ttv-dhinakaran-asks#comments</comments><guid isPermaLink="false">363c0580-18e1-4032-a741-040e87237982</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:54:53 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:54:53.982Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,ஜல்லிக்கட்டு,Madurai,மதுரை,அமமுக,Jallikkattu,தவெக எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fuvs58sj/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fuvs58sj/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்ற சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.</p><p>சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் வரிப் பணத்திலிருந்தே கார் வழங்கலாம் என்று முடிவெடுத்த தவெக, அதனை தனது இரு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தே எப்படி அவையில் முன்மொழிந்ததோ அதே போல ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டமன்றத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம், வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது.</p><p>அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா வரை, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் வெகுண்டெழுந்து, ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவாகப் பெற்ற நமது பாரம்பரிய உரிமையை கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதன் மூலம், இது முன்கூட்டியே திட்டமிட்ட செயலா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.</p><p>தமிழர்களின் வீரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாகவும், விவசாய வாழ்வியலின் அங்கமாகவும் திகழும் ஜல்லிக்கட்டு குறித்த சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் இழிவான பேச்சுதான் தவெகவின் நிலைப்பாடா? என்பதை அக்கட்சித் தலைமை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.</p><p>எனவே, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளையும், அதற்காகப் போராடிய மக்களின் உணர்வையும், பங்களிப்பையும் கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை சட்டப் பேரவைத் தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதோடு, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அப்பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என தவெகவின் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோடியக்காடு பகுதியில் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் புள்ளிமான்கள்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/spotted-deer-crossing-the-road-in-herds-in-the-kodiyakadu-area-forest-department-issues-warning-to-motorists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/spotted-deer-crossing-the-road-in-herds-in-the-kodiyakadu-area-forest-department-issues-warning-to-motorists#comments</comments><guid isPermaLink="false">a887f62e-ecbe-4dc0-b0a8-635646bfba09</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:52:36 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:52:36.890Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagapattinam,வாகன ஓட்டிகள்,Forest Department,நாகப்பட்டினம்,spotted deer,புள்ளிமான்கள்,வனத்துறை எச்சரிக்கை</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2021/Jun/202106010217254461_deers_SECVPF.gif" width="794"><media:title type="html"><![CDATA[ சாலையை கடக்கும் புள்ளிமான்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2021/Jun/202106010217254461_deers_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகப்பட்டினம்,</p><p>நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு மற்றும் கோடியக்கரை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">புள்ளிமான்கள்</a>, கூட்டம் கூட்டமாக சாலையைக் கடந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டுமென வனத்துறை எச்சரித்துள்ளது.</p><h2>உணவு தேடி இடப்பெயர்ச்சி</h2><p>கோடியக்கரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">வனவிலங்கு</a> சரணாலயப் பகுதியில் ஆயிரக்கணக்கான புள்ளிமான்கள், வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் மற்றும் காடுகளுக்குள் நிலவும் தண்ணீர், உணவுத் தட்டுப்பாடு காரணமாக, மான்கள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கோடியக்காடு முக்கியச் சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான புள்ளிமான்கள் கூட்டம் கூட்டமாக சாலையைக் கடந்து செல்கின்றன.</p><h2>வனத்துறை அறிவுறுத்தல்கள்</h2><p>கோடியக்காடு - கோடியக்கரை சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை குறைவான வேகத்தில் இயக்க வேண்டும். மான்கள் சாலையைக் கடக்கும் போது ஹாரன் ஒலிப்பதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சத்தத்தைக் கேட்டு மான்கள் மிரண்டு ஓடி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.</p><p>வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதைத் தடுக்க<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D"> வனத்துறையினர்</a> அப்பகுதியில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் சாலையைக் கடக்கும் மான்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒத்துழைக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கூடலூரில் சாலையில் உலா வந்த காட்டு யானை: மக்கள் அலறியடித்து ஓட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-onto-the-road-in-gudalur-people-scatter-in-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-onto-the-road-in-gudalur-people-scatter-in-panic#comments</comments><guid isPermaLink="false">e2a3cb2f-7522-4ecb-9c1a-7eccb157e64e</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:13:33 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:13:33.547Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானை,wild elephant,கூடலூர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/g1ilps5z/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/g1ilps5z/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p>கூடலூரில் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை உலா வந்ததால் நடைபயிற்சிக்கு வந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.</p><h2>சாலையில் காட்டு யானை</h2><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் காட்டு யானைகள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் கூட லூர் கோத்தர் வயல் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை ஒன்று 1 பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. அந்த காட்டு யானையை வனத்து றையினர் விரட்டியடித்தனர்.</p><p>இதன் காரணமாக நடுகூடலூர் வழியாக கெவிப்பாரா எஸ்டேட்டுக்குள் காட்டு யானை நுழைந்தது. பின்னர் அங்கிருந்து கூடலூர் அரசு மேல் நிலைப்பள்ளியின் பின்புறம் முகாமிட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்தனர். பின்னர் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காட்டு யானை அங்கிருந்து சென்றது.</p><p>இந்த நிலையில் ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை கூடலூர் ராஜகோபாலபுரம் நகருக்குள் உலா வந்தது.</p><h2>நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் ஓட்டம்</h2><p>மேலும் நெடுஞ்சாலையின் நடுவே கம்பீரமாக நடைபோட்டபடி அந்த யானை உலா வந்தது. அப்போது சாலையில் நடைபயிற்சிக்காக வந்த பொதுமக்கள் காட்டு யானை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஊட்டியில் இருந்து வெளிமாநிலத்துக்கு சென்ற சுற்றுலா வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் ஆபத்தை உணர்ந்து வாகனங்களை அங்கேயே போட்டு விட்டு பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர். பொதுமக்களும் வந்த வழியாக திரும்பி ஓடினர். பின்னர் காட்டு யானை ராஜகோபாலபுரம் வழியாக கோத்தர் வயலுக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.</p><p>இதுகுறித்து அவர்கள் கூறும் போது, காட்டு யானை பொதுமக்கள் வளர்த்து வரும் பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை தின்று பழகிவிட்டது. இதனால் வனத்துறையினர் விரட்டினாலும் ஒவ்வொரு பகுதிக்கு தினமும் இடம் பெயர்ந்து அனைவரையும் சிரமம் அடைய வைத்து வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>கோவை அருகே பயங்கரம்: முகத்தில் மிளகாய்ப்பொடி வீசி திமுக பிரமுகர் குத்திக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-near-coimbatore-dmk-functionary-killed-with-chilli-powder-attack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-near-coimbatore-dmk-functionary-killed-with-chilli-powder-attack#comments</comments><guid isPermaLink="false">5166af67-4114-490c-bc6f-1680ea39fe34</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:59:09 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:59:09.176Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,murder,கொலை,கோயம்புத்தூர்,திமுக பிரமுகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/lvbjjrms/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/lvbjjrms/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை அருகே முகத்தில் மிளகாய்ப்பொடி வீசி திமுக பிரமுகரை அவரது நண்பர் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (62 வயது). பாக்குமட்டை வியாபாரியான இவர், திமுக பிரமுகர். அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (65 வயது). இவரும் திமுக பிரமுகர்தான். இவர்கள் இருவரும் நண்பர்கள்.</p><h2>மிளகாய்ப்பொடி வீச்சு</h2><p>இதனிடையே நாகராஜூக்கும், தனது மனைவிக்கும் இடையே தொடர்பு இருக்குமோ? என கந்தசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை நாகராஜ் டீ வாங்குவதற்காக பைக்கில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். நரசீபுரம் தெற்கு ரத வீதியில் சென்றபோது, திடீரென அவரை கந்தசாமி வழிமறித்தார். நாகராஜ் பைக்கை நிறுத்துவதற்குள் அவரது முகத்தில் மிளகாய்ப்பொடியை எடுத்து வீசினார்.</p><h2>சம்பவ இடத்திலேயே இறந்தார்</h2><p>இதில் நிலைகுலைந்த நாகராஜ் தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் கந்தசாமி தான் மறைத்து வைத்திருந்த ஆடு அறுக்கும் கத்தியால் நாகராஜை சரமாரியாக குத்தினார். இதில் நாகராஜின் கழுத்து, தலையின் பின்பகுதி, வயிறு உள்பட 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.</p><h2>தற்கொலை முயற்சி</h2><p>இதையடுத்து கந்தசாமி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கந்தசாமியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் கந்தசாமி கத்தியால் தனது வலது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். </p><p>இதைக் கண்ட போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்.எல்.ஏ பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் - அதிமுக</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-must-apologise-for-dmk-mla-jallikattu-remarks-aiadmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-must-apologise-for-dmk-mla-jallikattu-remarks-aiadmk#comments</comments><guid isPermaLink="false">5cde8bd7-5496-4931-9cd8-795d1cba8012</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:04:47 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:04:47.766Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,ஜல்லிக்கட்டு,Madurai,மதுரை,Jallikkattu,tvk mla,தவெக எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/e3pbdj0z/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/e3pbdj0z/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்.எல்.ஏ பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு குறித்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அதிமுக வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.</p><p>சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்? மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?</p><p>ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது எம்.எல்.ஏவை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது. தனது எம்.எல்.ஏ. பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில் செப்.1-ந் தேதி தண்ணீர் திறக்க அரசு ஏற்பாடு: டெல்டா விவசாயிகள் சொல்வது என்ன? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-arranges-to-release-water-from-mettur-dam-on-september-1-what-do-delta-farmers-say</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-arranges-to-release-water-from-mettur-dam-on-september-1-what-do-delta-farmers-say#comments</comments><guid isPermaLink="false">2120f48e-10e8-4d14-9def-6d22c9717b50</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:56:34 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:56:34.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,Delta,டெல்டா விவசாயிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/vgses2za/Metttur-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/vgses2za/Metttur-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>13 டெல்டா மாவட்ட விவசாயம்</h2><p> தமிழ்நாட்டின் 'நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்பட 13 டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு மேட்டூர் அணையையே நம்பியுள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியை மேற்கொள்ள ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.ஆனால், அவ்வாறு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட நாளில், அணையின் நீர் மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடி என்ற நிலையிலேயே இருந்ததால், குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. </p> <h2>குறுவை சாகுபடி பரப்பு குறைந்தது</h2><p>இதனால், காவிரி தண்ணீரை நம்பியிருந்த டெல்டா விவசாயிகளால் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியவில்லை. நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளே <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குறுவை சாகுபடி</a>யில் ஈடுபட்டனர்.  இதனால், கடந்த ஆண்டு 5.66 லட்சம் ஏக்கராக இருந்த குறுவை சாகுபடி, இந்த ஆண்டு 3.78 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. அடுத்து சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறந்துவிடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். </p> <h2>செப்டம்பர் 1-ந் தேதி திறப்பு</h2><p> இந்த நிலையில், சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் 1-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யே நேரடியாக சென்று அணையை திறந்துவைக்க இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 45 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேட்டூர் அணையில் நேற்று மாலை நிலவரப்படி 89.72 அடி தண்ணீரே இருப்பு உள்ளது. அதாவது, 52.33 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளதால், இது 45 நாட்களுக்கு போதுமானதாக இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.</p> <h2>தண்ணீர் தேவை என்ன?</h2><p> அதாவது, பாசனப் பகுதியின் கடைமடை வரை காவிரி நீர் செல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண்டிய நிலை உள்ளது. தற்போது, மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு அதற்கு சாத்தியமானதாக இல்லை என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">விவசாயிகள்</a> தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. அடுத்து அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு மழையை கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><h2>விவசாயிகள் சொல்வது என்ன?</h2><p>டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு செப்டம்பர் 15-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை 12 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 268.47 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது.  தண்ணீர் தேவை இவ்வாறு இருக்க, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை</a>யிலோ நீர் இருப்பு 89.72 அடியாக இருக்கிறது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பை செப்டம்பர் 1-ந் தேதி என்பதற்கு பதில், செப்டம்பர் 15-ந் தேதி என்று மாற்றினால், அணையில் தண்ணீர் குறையும் நேரத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.</p>]]></content:encoded></item><item><title>சாதி, மத விஷயங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வருவதை தவெகவினர் தவிர்க்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-members-should-avoid-bringing-caste-and-religious-issues-into-the-legislative-assembly-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-members-should-avoid-bringing-caste-and-religious-issues-into-the-legislative-assembly-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">9cf25dc1-9427-45fc-a94f-9cb6cb6dbee2</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:45:50 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:45:50.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,சட்டசபை,Legislative Assembly</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/53a5f7ss/nainar.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/53a5f7ss/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறும் மத அரசியல் - திரு. ஜோசப் விஜய் ஆட்சியில் சீர்குலையும் சட்டமன்ற மாண்பு!</p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டிய ஒரு மிக உன்னதமான அரசியல் சாசனப் பதவியாகும். ஆனால், தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் கண்ணியத்தை மறந்து, தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக பகிரங்கமாக தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வதோடு, தான் சார்ந்த மதத்தின் ஒரு பிரிவுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துகொண்டே வெளிப்படையாகக் கோரிக்கை விடுக்கிறார். இது முதல்-அமைச்சர் விஜய்க்கு கட்டளையிடுவது போலவே அமைந்திருக்கிறது.</p><p>இந்த சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதற்கு முன்பு பல சபாநாயகர்கள் இந்தப் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் தான் சார்ந்த மதத்தையோ அல்லது சாதியையோ முன்னிலைப்படுத்திப் பேசியது கிடையாது. ஆனால், தவெக அரசு அமைந்த முதல் நாளிலிருந்தே முதல்வர் ஜோசப் விஜய் இது சிறுபான்மையினருக்கான அரசு என்று முன்னிலைப்படுத்திப் பேசுகிறார். அமைச்சர் மரிய வில்சனோ கையில் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அத்துடன் நில்லாமல், தான் ஒரு கிறிஸ்தவர் என்று சட்டசபையில் குறிப்பிடுவதோடு, தமிழ் மொழியை விடத் தனது மதமே உயர்ந்தது என்கிறார். சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களைக் குறிப்பிட்டுப் பேசி வருகிறார்.</p><p>அவர்களின் மத நம்பிக்கைகளைத் தவறு என்று கூறவில்லை. ஆனால், தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை சட்டமன்றத்திற்குள் பேசுவதும், செயல்படுத்துவதும் சட்டமன்றத்தின் மாண்பைக் குலைப்பதோடு, இந்த சட்டமன்றத்தையே ஒரு குறிப்பிட்ட மதம் நோக்கி நகர்த்துவது போல் உள்ளது. இது நல்லதல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, சபாநாயகர் பதவியில் இருப்பவர் இதைப் பற்றிப் பேசுவது முற்றிலும் தவறான விஷயமாகும். எனவே, இனியாவது சபாநாயகர் அவர்களும் மற்றும் தவெகவின் அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட சாதி, மத விஷயங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல், அதன் மாண்பைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 சரிவு.... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-rs-2360-per-sovereign-todays-rates</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-rs-2360-per-sovereign-todays-rates#comments</comments><guid isPermaLink="false">c08d2d83-8195-473e-b5e9-784bcf68443c</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:37:23 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:37:23.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/10heaqsb/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/10heaqsb/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14,725-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><p>நேற்று காலையில் கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. இதற்கிடையில் மாலையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது. கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்தது. அந்த வகையில் ஒரு கிராம் ரூ.14,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.295 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>செங்கோட்டை செல்லும் ரெயில்கள் இன்று முதல் பகுதியாக ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trains-to-sengottai-partially-cancelled-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trains-to-sengottai-partially-cancelled-starting-today#comments</comments><guid isPermaLink="false">7070c3b1-206e-4b5d-b4a0-d4a4dfd6b639</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:30:11.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Sengottai,செங்கோட்டை,ரெயில்கள்,ரெயில்வே மேம்பாலம்,Railway Overbridge</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/r2qkuktf/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/r2qkuktf/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை,  </p><p>தென்காசி மாவட்டம் இலஞ்சி ரெயில்வே மேம்பாலத்துக்கான தூண்கள் பொருத்தும் பணி இன்று (சனிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி செங்கோட்டை ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><h2>ரெயில்வே மேம்பாலம்</h2><p>தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் இருந்து குற்றாலம் செல்லும் ரோட்டின் குறுக்கே தென்காசி -செங்கோட்டை ரெயில்வே பாதையும், கேட்டும் அமைந்திருந்தது. இங்கு கேட் அடைக்கும் போது நிலவிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் ரெயில்வே துறை இணைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்கு பணிகளை தொடங்கியது. இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை பாலத்தை கட்டி முடித்து விட்டது. ஆனால் தண்டவாளத்துக்கு மேல் உள்ள பகுதியில் மட்டும் ரெயில்வே துறையால் பாலம் இணைக்கப்படாமல் உள்ளது.</p><h2>கிர்டர்கள் இணைக்கும் பணி</h2><p>இதற்காக ரெயில்வே ஒப்பந்த நிறுவனம் இரும்பு தூண்கள் (கிர்டர்கள்) கொண்டு வந்து பாலத்தின் அருகே வரிசையாக இறக்கி போட்டிருந்தது. பகுதி, பகுதியாக இருந்த கிர்டர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இந்த கிர்டர்களை கான்கிரீட் தூண்கள் மீது தூக்கி வைத்து இணைத்து, கான்கிரீட் போடும் பணி இன்று (சனிக்கிழமை) தொடங்கி 31-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.</p><h2>ரெயில்கள் பகுதியாக ரத்து</h2><p>இந்த பணிக்காக தென்காசி -செங்கோட்டை இடையே 3 நாட்களுக்கு சில ரெயில்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் (வண்டிஎண் 56776) செங்கோட்டை- நெல்லை பாசஞ்சர் ரெயில், செங்கோட்டை- தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>இந்த ரெயில் தென்காசியில் இருந்து புறப்படும். நெல்லையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 56773) நெல்லை- செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் தென்காசி-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும்.</p><p>மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் (56771) ரெயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்டும். செங்கோட்டையில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர் ரெயில் (56772) செங்கோட்டை-தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. தென்காசியில் இருந்து வழக்கமான 12.33 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும்.</p><p>இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்து உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விரும்பிய கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்காததால் விரக்தி: மாணவி எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mbbs-seat-denial-leads-to-tragic-decision</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mbbs-seat-denial-leads-to-tragic-decision#comments</comments><guid isPermaLink="false">56739b86-6bc3-4e2b-bc26-59ca90a9b5b2</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:08:55 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:08:55.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,தற்கொலை,Suicide,மாணவி தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/t4dwspa4/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/t4dwspa4/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லையில் விரும்பிய கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைக்காததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நீட் தேர்வில் வெற்றி</h2><p>நெல்லை பெருமாள்புரம் அன்புநகர் சித்தார்தர் நகரைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். தனியார் ஐ.டி. நிறுவன ஊழியரான இவர் தற்போது வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலம் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பமில்தா. இவர்களுடைய மூத்த மகள் சுருதிலயா (21 வயது). பிளஸ்-2 படித்து விட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இவர் சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 7 கல்லூரிகளில் சேருவதற்காக கலந்தாய்வில் விண்ணப்பித்து இருந்தார்.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>அதற்கான கலந்தாய்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில், மாணவி சுருதிலயாவின் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தான் விரும்பிய கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைக்கவில்லையே என்று மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகள் சுருதிலயாவை பல இடங்களிலும் தேடிப் பார்த்தனர். அவரை எங்கும் காணாததால் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்கு பின்னால் இருந்த குடோனில் மாணவி சுருதிலயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதையடுத்து மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு அருகே கார் டயர் வெடித்து விபத்து: 3 கல்லூரி மாணவர்கள் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-near-chengalpattu-caused-by-a-burst-car-tyre-3-college-students-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-near-chengalpattu-caused-by-a-burst-car-tyre-3-college-students-killed#comments</comments><guid isPermaLink="false">545edd00-fc34-42a1-9ea7-390bfbdad0df</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:27:58 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:27:58.051Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Chengalpattu,செங்கல்பட்டு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/dbnayjc7/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/dbnayjc7/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் நேற்று கார் மூலம் புதுச்சேரி சென்றனர். அதன் பின்னர் மீண்டும் சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்தனர். செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது.</p><p>இதனால் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தரிகெட்டு ஓடி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் மனைவிக்கு பணியிட மாற்றம்: மாற்று ஆசிரியர் நியமிக்கப்படாததால் கற்றல் பாதிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/job-transfer-for-ministers-wife-learning-hit-as-no-replacement-teacher</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/job-transfer-for-ministers-wife-learning-hit-as-no-replacement-teacher#comments</comments><guid isPermaLink="false">22e43b45-8aa2-4d03-a054-8f0503bf9947</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:17:10 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:17:10.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Transfer,பணியிட மாற்றம்,Govt school,பல்லாவரம்,அரசுப் பள்ளி,Minister Nirmalkumar,அமைச்சர் நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/ac14xnit/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/ac14xnit/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பல்லாவரம் அரசு பள்ளியில் இருந்து, அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவி, திருவல்லிக்கேணி அரசு பள்ளிக்கு மாற்றப்பட்ட நிலையில், அவருக்கு மாற்றாக புதிய ஆசிரியர் நியமிக்கப்படாததால், கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><h2>கலந்தாய்வு பணிகள் நிறுத்தம்</h2><p>அரசு தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, 'எமிஸ்' தளம் வழியாக, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வுகள், ஜூன் மாதம் நடப்பதாக இருந்தன. கோர்ட்டு உத்தரவுகளால், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன.</p><h2>விமர்சனம்</h2><p>இந்த சூழலில், சென்னையை அடுத்த பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் ஆசிரியையாக பணியாற்றிய, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு மட்டும், திருவல்லிக்கேணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது. இது ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சரின் அரசு இல்லம், சென்னை பசுமை வழிச்சாலையில் இருப்பதால், இந்த பணிமாறுதல் வழங்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.</p><h2>கூடுதல் சுமைகள்</h2><p>இந்த நிலையில், அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவி, ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில், அவருக்கு மாற்றாக ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால், அப்பள்ளியில் கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:-</p><h2>கற்றல் பாதிப்பு</h2><p>மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். மாணவர் ஆசிரியர் விகிதாசாரம் இந்த பள்ளியில் குறைவாகவே உள்ளது. ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமைகள் உள்ளன. இந்த சூழலில், அமைச்சரின் மனைவிக்கு மாற்றாக புதிய ஆசிரியரை, அந்த பணியிடத்தில் இரண்டு மாதங்களாக நியமிக்காமல் உள்ளனர். இதனால், மாணவர்களின் கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மந்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/slow-enrolment-in-government-arts-and-science-colleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/slow-enrolment-in-government-arts-and-science-colleges#comments</comments><guid isPermaLink="false">3f768d1e-8a4e-4ab6-90ec-9c5bff6ebe9e</guid><pubDate>Sat, 29 Aug 2026 02:57:15 +0000</pubDate><atom:updated>2026-08-29T02:57:15.302Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர் சேர்க்கை,Counseling,கலந்தாய்வு,Arts and Science College,students Admission,கலை அறிவியல் கல்லூரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/0bc6ju2m/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர் சேர்க்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/0bc6ju2m/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் மந்தமான நிலை நீடித்து வருகிறது. இதனால் ஒரு லட்சம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><h2>கலந்தாய்வு</h2><p>தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 181 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு இடங்களுக்கான, 2026-27ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. </p><h2>73.74 சதவீத இடங்கள்</h2><p>இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில், இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி, இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 1 லட்சத்து 29 ஆயிரத்து 929 இடங்களில், மாணவர்கள் 40 ஆயிரத்து 261 பேர்; மாணவியர் 55 ஆயிரத்து 174 பேர்; மூன்றாம் பாலினத்தவர்கள் 26 பேர் என, மொத்தம் 95 ஆயிரத்து 461 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதாவது, 73.74 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.</p><h2>மாணவர் சேர்க்கை மந்தம்</h2><p>பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள், கடந்த 30-ம்தேதி வெளியான நிலையிலும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் மந்தமான நிலை நீடித்து வருகிறது. ஒரு லட்சம் இடங்களை நிரப்ப வேண்டும் என்ற இலக்கை அடைவதில், உயர்கல்வித் துறைக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.</p><h2>ஆண்டு வாரியாக மாணவர் சேர்க்கை விபரம்:</h2><p><strong>கல்வியாண்டு - கல்லுாரி எண்ணிக்கை - மொத்த இடம் - நிரம்பிய இடம்</strong></p><p>2024-25 - 172 - 1,07,299 - 98,885</p><p>2025-26 - 181 - 1,31,034 - 1,03,280</p><p>2026-27 - 181 - 1,29,929 - 95,461</p>]]></content:encoded></item><item><title>&apos;அப்பா யாரென தெரிந்து பேசுங்கள்&apos;- திமுக மேயர் சர்ச்சை பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/know-who-my-father-is-before-you-speak-dmk-mayors-controversial-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/know-who-my-father-is-before-you-speak-dmk-mayors-controversial-remarks#comments</comments><guid isPermaLink="false">2f6449ee-1934-408f-9ba7-4ceccf3ec4f3</guid><pubDate>Sat, 29 Aug 2026 02:17:57 +0000</pubDate><atom:updated>2026-08-29T02:17:57.512Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Mayor,மேயர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/te4m3nd8/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/te4m3nd8/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,  </p><p>தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் நேற்று நடந்தது. சமீ பத்தில் த.வெ.க.,வில் இணைந்த தி.மு.க., கவுன்சிலர் ராமர்,அ.தி. மு.க., கவுன்சிலர் மந்திர மூர்த்தி ஆகியோர், 'மாநகராட்சி பகுதியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா திறந்து வைத்த கட்டட கல்வெட்டில், அவரது பெயரை இடம் பெற செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர்.</p><p>மேயர் ஜெகன் பேசுகையில், "தி.மு.க., முன்னாள் சண்முகையா எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கல்வெட்டில், அமைச்சர் மதன் ராஜா பெயரை போட முடியாது. அடுத்தவர் பெயரில் உள்ளதற்கு பெயர் வைக்க அலைகிறீர்கள்.</p><p>'அதற்கு அப்பா யாரென தெரிந்து கொள்ளுங்கள் கடந்த ஆட்சியில் சி.எஸ். ஆர்., நிதியில் நாங்கள் கட்டிய கட்டடங்களை தற்போதைய அமைச்சர்கள் திறந்து வைக்கின்றனர். என் பெயரை மறைக்க நினைத்தவர்கள் அவர்களாகவே முடிந்துவிடுவார்கள்," என்றார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>‘வெள்ளத்தில் இருந்து உயிரை காப்பாற்ற ஓடினோம்’-நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-ran-to-save-our-lives-from-the-floods-interviews-with-those-who-returned-to-chennai-from-nepal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-ran-to-save-our-lives-from-the-floods-interviews-with-those-who-returned-to-chennai-from-nepal#comments</comments><guid isPermaLink="false">77bc8539-a091-438e-8568-e84e2d5a931c</guid><pubDate>Sat, 29 Aug 2026 02:15:41 +0000</pubDate><atom:updated>2026-08-29T02:15:41.887Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nepal,நேபாளம்,Flood,வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/tclpmrtv/Nepal-flood.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/tclpmrtv/Nepal-flood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு சென்னை திரும்பிய தமிழகத்தை சேர்ந்தவர்கள், 'சுனாமி போல் வந்த வெள்ளத்தில் இருந்து உயிரை காப்பாற்ற ஓடினோம்' என தாங்கள் உயிர் தப்பிய அனுபவத்தை உருக்கமாக தெரிவித்தனர்.</p><h2>செல்போனில் வீடியோ</h2><p>காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த சத்யா கூறியதாவது:- கைலாஷ் யாத்திரைக்காக சென்னை,மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 57 பேர் சென்றிருந்தோம். புனித பயணமாக சென்ற நாங்கள் சீனாவில் இருந்தபோது சம்பவத்தன்று காலை 8 மணியளவில்  சோதனை நடைபெற்றது.  நாங்கள் 3 பஸ்களில் பயணம் செய்து கொண்டிருந்தோம். பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏதோ புழுதி கிளம்புவது போல் தெரிந்தது. அதை நாங்கள் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந் தோம். ஆனால், சிறிது நேரத்தில் அது சுனாமி போல் பிரமாண்டமாக எழுந்து வந்தது. அதன் தாக்கம் எங்களுக்கு உடனடியாக தெரியவில்லை. நாங்கள் சாதாரணமாகத்தான் இருந்தோம். வெள்ளம் வேகமாக வருவதை பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் ஓட ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் நாங்களும் பஸ்சில் இருந்து இறங்கி உயிரைக் காப்பாற்ற ஓடினோம்.</p><h2>தமிழக அரசு உதவி</h2><p>நேபாளத்தில் எங்களை மீட்புக்குழுவினர் மீட்டு உதவி செய்தனர். சுமார் 3 மணி நேரம் மரங்களை பிடித்தபடியே நடந்து சென்றோம். அந்த நேரத்தில் எங்களது கைகள் முழுவதும் முட்கள் குத்தி காயமடைந்தன. தமிழ்நாடு அரசு எங்களுக்கு அளித்த உதவி மிகப்பெரியது. தங்கத்தட்டில் வைத்து காப்பாற்றி அழைத்து வந்தது போல் தமிழக அரசு எங்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்துள்ளது. அந்த அளவுக்கு தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்துள்ளது. இவ்வாறு சத்யா கூறினார்.</p> <h2>4 அமைச்சர்கள் டெல்லியில் முகாம்</h2><p>இதுகுறித்து அமைச்சர் ஆனந்த் கூறியதாவது:- அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். அவர்கள் டெல்லியில் இருந்து உடனுக்குடன் முதல்-அமைச்சர் விஜய்க்கு தகவல்களை தெரிவித்தனர். முதல்-அமைச்சரும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு அறிவுறுத்தி னார். 4 அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டு இருப்பதால், அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரும் நலமுடன் தாயகம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அமைச்சர் ஆனந்த் கூறினார். </p> ]]></content:encoded></item></channel></rss>