<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 15 Sep 2026 18:17:54 +0000</lastBuildDate><item><title>இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட கட்டுப்பாடு-தேர்தல் கமிஷன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/restriction-on-publishing-by-election-opinion-poll-results-election-commission-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/restriction-on-publishing-by-election-opinion-poll-results-election-commission-announcement#comments</comments><guid isPermaLink="false">955aa05f-9645-43db-8c07-b73782790158</guid><pubDate>Tue, 15 Sep 2026 18:14:25 +0000</pubDate><atom:updated>2026-09-15T18:14:25.745Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் அதிகாரி,தேர்தல் கமிஷன்,By election,election campaign,அர்ச்சனா பட்நாயக்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/b8jl625p/Election-comission.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/b8jl625p/Election-comission.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 06.10.2026 அன்று நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்த இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் இந்திய தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தல்களின் போது, வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் முதல் வாக்குப்பதிவு முடிவடைந்து அரை மணி நேரம் வரை இந்த தடை அமலில் இருக்கும்.</p> <p>அதன்படி, வாக்குப்பதிவு நாளான 6.10.2026 காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை (எக்சிட் போல்) நடத்துவது மற்றும் அதை அச்சு அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது தடை செய்யப்படுகிறது</p> <p>வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகிற 48 மணி நேர கால அளவில், (அதாவது, அக்டோபர் 6-ந் தேதி மாலை 6 மணிக்கு, 48 மணிநேரத்திற்கு முன்பு) எந்தவொரு கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட தேர்தல் விவகாரங்களை மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசு மாநில உரிமைகள் குறித்து பேச பயப்படுகிறது-உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-afraid-to-speak-about-state-rights-udhayanidhi-stalin-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-afraid-to-speak-about-state-rights-udhayanidhi-stalin-criticizes#comments</comments><guid isPermaLink="false">8e874d1d-6010-428d-b268-a420948de674</guid><pubDate>Tue, 15 Sep 2026 17:47:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T17:47:31.037Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,த.வெ.க,மாநில உரிமைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/rvaowaea/udhayanidithi-stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/rvaowaea/udhayanidithi-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,  </p><p>தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மத்திய– மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நம் தலைவர் (மு.க.ஸ்டாலின்) தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தக்குழு தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், மாநில சுயாட்சி குறித்த குழுவின் 2-ஆவது ஆய்வு அறிக்கையை தயார் செய்து வந்த ஆய்வாளர்களும் – ஆராய்ச்சி மாணவர்களும் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலை இந்த டம்மி அரசு உருவாக்கி இருக்கிறது.மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் பயப்படும் த.வெ.க அரசு, அது குறித்து ஆய்வு செய்யவே பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது.</p><p>ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, மத்திய – மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: தமிழில் வேள்வி நடத்த அனுமதி கோரி மேல்முறையீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-appeal-seeking-permission-to-conduct-the-sacrifice-in-tamil</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-appeal-seeking-permission-to-conduct-the-sacrifice-in-tamil#comments</comments><guid isPermaLink="false">b07344bb-c447-448a-961f-34777a3474da</guid><pubDate>Tue, 15 Sep 2026 16:15:05 +0000</pubDate><atom:updated>2026-09-15T16:15:05.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Meenakshi Amman Temple,தமிழ்,மீனாட்சி அம்மன் கோவில்,குடமுழுக்கு,Appeal,Consecration,வேள்வி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zq6zc51w/madurai-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zq6zc51w/madurai-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் குடமுழுக்கு நிகழ்வுகளில் சமஸ்கிருத யாகசாலைகளுக்கு இணையாகத் தமிழிலும் வேள்வி நடத்த அனுமதிக்கக் கோரி, தெய்வத் தமிழ் வழிபாட்டு ஆசிரியர் த.சுரேஷ்பாபு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.</p><p>குடமுழுக்குக்கு முன்பும், குடமுழுக்கின்போதும், அதற்குப் பிந்தைய மண்டல பூஜையிலும் தமிழ் மந்திரங்கள் மற்றும் திருமுறைகளைக் கொண்டு வேள்விக் குண்ட வழிபாடு நடத்தத் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தார். இதனை கோவில் நிர்வாகம் கடந்த மார்ச் 11-ஆம் தேதி நிராகரித்தது.</p><h2>மேல்முறையீடு</h2><p>அந்த உத்தரவை எதிர்த்து சுரேஷ்பாபு தாக்கல் செய்த ரிட் மனுவை, தொடர்புடைய விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக் கூறி தனி நீதிபதி கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி தள்ளுபடி செய்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தற்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">மேல்முறையீடு</a> செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழில் மந்திரங்கள் ஓதுவதற்கு ஆகமங்களிலோ, சமய நூல்களிலோ தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருப்பதைத் தனி நீதிபதி உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என்று மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.</p><h2>சாதி அடிப்படையிலான பாகுபாடு</h2><p>கோவில் பணியாளர்கள் அல்லாத சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளில் அனுமதிக்கப்படும் நிலையில், தமிழ் வேள்விப் பயிற்சி பெற்ற தனக்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப்படுவது மொழி மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு என்றும் மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>மேலும், ஓதுவார்கள் தனியாகத் தேவாரப் பாடல்களைப் பாட அனுமதிப்பது மட்டும் தமிழுக்கு வழங்கப்படும் சம உரிமையாகாது; வேள்விக் குண்டங்களிலேயே தமிழ் மந்திரங்களைப் பயன்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>எனவே, தனது கோரிக்கையை நிராகரித்த கோவில் நிர்வாகத்தின் உத்தரவையும், அதனை எதிர்த்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வரவிருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்: ரெயிலில் ஏற முயன்றபோது பிளாட்பார இடையே சிக்கிய நபரால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tambaram-man-trapped-between-platforms-causes-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tambaram-man-trapped-between-platforms-causes-panic#comments</comments><guid isPermaLink="false">d5c67d92-1846-4f1a-873e-b8abddabd610</guid><pubDate>Tue, 15 Sep 2026 15:22:53 +0000</pubDate><atom:updated>2026-09-15T15:22:53.083Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,train,ரெயில்,நபர்,man,stuck,பிளாட்பாரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vrwmqnse/tabaram-train.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வாலிபர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தாம்பரம்: ரெயிலில் ஏற முயன்றபோது பிளாட்பார இடையே சிக்கிய நபரால் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vrwmqnse/tabaram-train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தாம்பரம் ரெயில் நிலையத்தில்</a>, ரெயிலில் ஏற முயன்றபோது கால் தவறி தண்டவாள இடுக்கில் விழுந்த பயணியை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பத்திரமாக மீட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நெரிசலில் சிக்கிய ரெயில் நிலையம்</h2><p>தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில்கள் மூலம் பயணித்து வருகின்றனர். இதனால் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. ரெயில்களில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.</p><h2>தண்டவாள இடையே சிக்கிய நபர்</h2><p>தாம்பரத்தில் இருந்து அசாம் மாநிலத்தின் சில்காட் டவுன் வரை செல்லும் நாகோன் விரைவு ரெயில் மேற்கு வங்க மாநிலம் வழியாக வாரந்தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த போது ஏராளமான வட மாநிலத்தினர் ரெயிலில் இடம். பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறினர்.</p> <p>அப்போது வடமாநில தொழிலாளி ஒருவர் கூட்டநெரிசலில் ரெயில் இருந்து தவறி நடைமேடைக்கும். ரெயிலுக்கும் இடையே இருந்த மிக குறுகிய தண்டவாள பகுதியில் விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள் அலறினர்.</p><h2>பயணியை மீட்ட போலீஸ்</h2><p>அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர், ரெயிலின் அடியில் இருந்த அந்த பயணியின் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டு, அவரை முழு பலத்துடன் பிளாட்பாரத்தின் மேல் நோக்கி இழுத்து தூக்கினார். </p> <h2>பாராட்டு மழை</h2><p>மரணத்தின் விளிம்பிற்கு சென்ற பயணியை காப்பாற்றிய போலீஸ்காரரின் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. போலீசாரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>“21-ம் நூற்றாண்டிலும் சாதி தகராறா?” - சிதம்பரம் அருகே மோதலால் கிராம மக்கள் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-caste-conflict-still-present-in-the-21st-century-villagers-anguished-by-clash-near-chidambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-caste-conflict-still-present-in-the-21st-century-villagers-anguished-by-clash-near-chidambaram#comments</comments><guid isPermaLink="false">3cfef5f4-8e2c-4880-b841-ca4ec45d18b0</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:58:27 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:58:27.634Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chidambaram,Caste,clash,மோதல்,சிதம்பரம்,சாதி பாகுபாடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/0egukc76/123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/0egukc76/123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>21-ம் நூற்றாண்டிலும் சாதி ரீதியாக தகராறு செய்த மக்களால் மற்றொரு தரப்பினர் கடும் வேதனையில் உள்ளனர். </p><p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஊர்வலத்தில் ஆடல், பாடல் நடத்தக்கூடாது என மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விநாயகர் சிலையை அந்த வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி, பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் சாலையில் ஒரு தரப்பினர் 3 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று பள்ளிக்கு சென்ற மாணவர்களை ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தி அவர்கள்   “தலை மீது செருப்பு வைத்து” செல்லுமாறும் இந்த பாதை வழியே சென்றால் ”சாணியால் அடிப்போம்” என்று கூறியதாக மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், 5 வீடுகளுக்குள் புகுந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்குதல் </a>நடத்தி, வீடுகளை அடித்து நொறுக்கியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.</p><h2>21-ம் நூற்றாண்டிலும் சாதி தகராறு...</h2><p>இதில் ஒரு தரப்பை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் கரிக்குப்பம் கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில், கடலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, “21-ம் நூற்றாண்டிலும் இதுபோன்ற சாதி தகராறு எதற்காக?” என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மான நஷ்டஈடு வழக்கு: மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க 21-ந்தேதி வரை அவகாசம்- ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-response-deadline-extended-to-21st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-response-deadline-extended-to-21st#comments</comments><guid isPermaLink="false">5d9a1d5f-7eff-4f02-8dcf-169a4bd4179b</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:34:52 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:34:52.877Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,ஐகோர்ட்டு,வழக்கு,Defamation case,அவகாசம்,Chennai High Court order,DMK leader MK Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/1mjj22j1/chennaihighcourt.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஐகோர்ட்டு ]]></media:title><media:description type="html"><![CDATA[ மானநஷ்டஈடு வழக்கு: மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க 21-ந்தேதி வரை அவகாசம்- ஐகோர்ட்டு உத்தரவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/1mjj22j1/chennaihighcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜான் பிரிட்டோ என்பவருடன் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்  பதில் அளிக்க 21-ந்தேதி வரை அவகாசம்கொடுத்து சென்னை ஐகோர்ட்டு  உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><h2>அவதூறு பதிவு</h2><p>மத்திய அமலாக்கத்துறை அண்மையில் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி,  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் </a>தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜூனாவின் நெருங்கிய உறவினர் என்ற உண்மை அம்பலமாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.</p><h2>ரூ.1 கோடி மான நஷ்டஈடு</h2><p>அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்த கொடுங்கையூரை சேர்ந்த ஜான் பிரிட்டோவிற்கும், தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திட்டவட்டமாக மறுத்தார். பெயர் குழப்பத்தை சாதகமாக்கி கொண்டு, அரசியல் பழிவாங்கும் நோக்குடன் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் இந்த அவதூறு பதிவை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, தனது பெயருக்கு ஏற்பட்ட அவதூறுக்காக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரியும், அந்த பதிவுகளை உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிட கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.</p> <h2>கோரிக்கை</h2><p>இந்த வழக்கு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சென்னை ஐகோர்ட்டு</a> நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி. வில்சன், நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். </p> <h2>உத்தரவு</h2><p>இந்த அவதூறு வழக்கில் தங்களது தரப்பு விளக்கத்தை விரிவாக தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், பதில் மனு தாக்கல் செய்ய 21-ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதை எற்றுக்கொண்ட நீதிபதி அவகாசம் வழங்கி விசாரணையை செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நண்பர்... ரஷியா சென்ற வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-friend-he-met-through-instagram-the-shock-that-befell-a-young-man-who-went-to-russia</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-friend-he-met-through-instagram-the-shock-that-befell-a-young-man-who-went-to-russia#comments</comments><guid isPermaLink="false">caf8b795-7245-41fd-a7ca-dbc5c2ebb18d</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:05:13 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:05:13.831Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இன்ஸ்டாகிராம்,Instagram,young man,வாலிபருக்கு,அதிர்ச்சி,நண்பர்,friend</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/mfn7cnxt/122.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/mfn7cnxt/122.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அருப்புக்கோட்டை, </p><p>விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ். கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி லலிதா என்ற மனைவியும், விக்னேஷ் (வயது 32), அபினேஷ் குமார் (28) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவர்கள் இருவரும் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.</p><h2>இன்ஸ்டாகிராம் நண்பர்</h2><p>இதில் அபினேஷ் குமாருக்கு இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆர்வம் உண்டு. அதன் மூலம் ஏராளமான நண்பர்களை சேர்த்து வைத்திருந்தார். அந்த வகையில், பகிரதன் என்பவர் நெருங்கிய நண்பராக கடந்த சில மாதங்களாக இருந்து வந்துள்ளார்.</p><p>இதற்கிடையே சமீபத்தில் அவர் அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் போதும், ரஷ்யாவில் மருத்துவ படிப்புக்கு சேர விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்காக தான் ஏஜெண்டாக செயல்படுவதாகவும் பகிரதன் பொதுவான ஒரு தகவலை தெரிவித்து இருந்தார். இதைப் பார்த்த அபினேஷ் குமாருக்கு மருத்துவம் படிக்கும் ஆர்வம் வந்தது.</p><h2>பெற்றோர் கவலை</h2><p>மேலும் இன்ஸ்டாகிராமில் அவரது நண்பர் அனுப்பியிருந்த விளம்பரத்தை அபினேஷ் குமார் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்களும் மகனின் ஆசையை நிறைவேற்ற தயாராகினர். இதையடுத்து அபினேஷ் குமார் ரஷியாவில் மருத்துவம் படிப்பதற்கு விண்ணப்பித்து தனது நண்பர் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி மாணவர் விசா எடுத்து ரஷியாவிற்கு மருத்துவம் படிக்க சென்றுள்ளார். மூன்று மாதங்கள் வரை குடும்பத்தாருடன் பேசி வந்த நிலையில் அதன் பின்னர் எந்தவித தொடர்பும் இல்லாமல் போனதால் அபினேஷ் குமாரின் பெற்றோர் கவலை அடைந்தனர். பல்வேறு இடங்களில் பேசி தன்னுடையை மகனின் நிலை குறித்து கேட்டு வந்தனர்.</p><p>இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷியா ராணுவத்தில் தான் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டது குறித்து அபினேஷ் குமார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது. இதற்கிடையே மருத்துவ படிப்புக்கு ரஷியா சென்ற என் மகன் அங்கு ராணுவத்தில் சேர்த்து விடப்பட்டதாக அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். என் மகனை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை தமிழக முதல்-அமைச்சர் மீட்டுத் தர வேண்டும் என அவரது தாய் லலிதா தமிழக அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கோரிக்கை </a>விடுத்துள்ளார். ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு படிக்க சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.</p><p>இதற்கிடையே அவ்வாறு படிக்கவும், வேலைக்காகவும் சென்றவர்கள் ரஷியாவின் ராணுவத்தில் சேர்த்து விடப்படுவதாக தகவல் வந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு பலரை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்தது. இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ரஷியாவுக்கு மருத்துவம் படிக்க சென்றவர் ராணுவத்தில் சேர்த்து விடப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி மறுக்க வேண்டும் - எஸ்டிபிஐ வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-approval-for-oil-gas-wells-in-mayiladuthurai-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-approval-for-oil-gas-wells-in-mayiladuthurai-sea#comments</comments><guid isPermaLink="false">93638444-0961-4d03-ba82-b002b9897867</guid><pubDate>Tue, 15 Sep 2026 13:51:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T13:51:16.440Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>sea,Oil,எண்ணெய்,Gas,insists,wells,அனுமதி அளிக்கக்கூடாது,கடற்பகுதி,SDPI Party,கிணறுகள்,எஸ்டிபிஐ வலியுறுத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/jwhj4ypx/sdpi.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நெல்லை முபாரக் ]]></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/jwhj4ypx/sdpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மயிலாடுதுறை கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி மறுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">எஸ்டிபிஐ</a> கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>தனியார் நிறுவனம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">மயிலாடுதுறைக்கு</a> கிழக்கே வங்கக்கடலில் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ‘ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்‌ஷன் இந்தியா’ என்ற தனியார் நிறுவனம் 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்க மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. </p> <h2>மீனவர்களை வஞ்சிக்கும் செயல்</h2><p>ஏற்கனவே தமிழக கடற்கரையில் வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மயிலாடுதுறை கடற்பரப்பிலும் கிணறுகள் அமைக்க முயல்வது மீனவர்களை வஞ்சிக்கும் செயலாகும்.</p><h2>மீனவ குடும்பங்களின் உயிர்நாடி</h2><p>கடல் என்பது வெறும் கச்சா எண்ணெய் எடுக்கும் களம் அல்ல; அது லட்சக்கணக்கான மீனவ குடும்பங்களின் உயிர்நாடியாகும். கடலுக்குள் தொடர்ந்து கிணறுகள் தோண்டுவதால் கடல் சூழலியல், பவளப்பாறைகள் மற்றும் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு, மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கவே முடியாத சூழல் உருவாகும்.</p> <p>பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களின் சூழலை கெடுக்கும் நோக்கில், அதன் எல்லைக்கு மிக அருகில் இத்திட்டத்தை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் சதி செய்கின்றன.</p><h2>பேரபாயம் ஏற்படும்</h2><p> எண்ணெய் மற்றும் எரிவாயுவை உறிஞ்சும்போது நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நிலமட்டம் தாழ்ந்துபோகும் ஆபத்து உள்ளது. தற்போது கடல் மட்டத்திற்கும் காவிரி படுகையின் நிலமட்டத்திற்கும் இடையே வெறும் 1 மீட்டர் மட்டுமே வேறுபாடு உள்ள நிலையில், இத்தகைய ஆய்வுகளால் வரும் காலத்தில் காவிரி படுகையின் பெரும்பகுதியே கடலுக்குள் காணாமல் போகும் பேரபாயம் ஏற்படும்.</p><p>எனவே, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ள இந்த அனுமதி விண்ணப்பத்தை நிராகரிக்க தேவையான உறுதியான அழுத்தத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்திடம் இந்நிறுவனம் அனுமதி கோரும்போது, அந்த விண்ணப்பத்தை ஆணையம் உடனடியாக நிராகரிக்க வேண்டும். தமிழக அரசு இத்திட்டத்திற்கு எவ்வித இசைவும் தராமல், கடல் சூழலியலையும் மீனவர்-விவசாயிகளின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க உடனடியாக தலையிட்டு இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>தமிழக கட்சிகள் தங்களின் பிரசார தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்; தேர்தல் ஆணையம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-parties-face-deadline-to-submit-campaign-leader-lists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-parties-face-deadline-to-submit-campaign-leader-lists#comments</comments><guid isPermaLink="false">87e1e3b3-ab83-43c5-b5cb-903d240f379f</guid><pubDate>Tue, 15 Sep 2026 13:31:17 +0000</pubDate><atom:updated>2026-09-15T13:31:17.062Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>campaign,தேர்தல் ஆணையம்,Election Commission,பட்டியல்,பிரசாரம்,தமிழக,political leaders,அரசியல் கட்சி தலைவர்கள்,கட்சிகள்,All Parties,In Tamil Nadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/uiv5n44z/election-comission.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தேர்தல் ஆணையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக கட்சிகள் தங்களின் பிரசார தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்; தேர்தல் ஆணையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/uiv5n44z/election-comission.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கட்சிகள் தங்களின் பிரசார தலைவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தேர்தல் ஆணையம் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>தேர்தல் ஆணையம்</h2><p>மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951, பிரிவு 77-ல் செய்யப்பட்ட வழிவகைகளின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பிரசாரம்</a> செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையை பெற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் ,தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். </p><h2>தலைவர்கள் பட்டியல்</h2><p>தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்த தலைவர்கள் பட்டியலை, மேற்கண்ட சட்டப்பிரிவின் விளக்கம் 2-ன் உட்பிரிவு 1-ன்படி, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 35. மதுராந்தகம் (தனி) மற்றும் 101. தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கை 09.09.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்</h2><p> செலவு தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையம் / தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு 16.09.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். </p><h2>நட்சத்திர தலைவர்</h2><p>இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயண செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திர தலைவர் பிரசாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது.</p><h2>தகவல்</h2><p>இது தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள், மாநில அரசியல் கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட/ அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு, இவ்வலுவலகத்தின் 08.09.2026 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஆம்னி பேருந்துகளில் விதிமீறல் - 5 நாட்களில் ரூ.59.02 லட்சம் வசூல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-violations-rs5902-lakh-collected-in-5-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-violations-rs5902-lakh-collected-in-5-days#comments</comments><guid isPermaLink="false">7cdc81c4-ef34-445e-83ef-0482322291b1</guid><pubDate>Tue, 15 Sep 2026 13:30:24 +0000</pubDate><atom:updated>2026-09-15T13:30:24.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வசூல்,Omni buses,ஆம்னி பேருந்து,Violations,collected,விதிமீறல்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/l8xl6pe5/omni-bus.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/l8xl6pe5/omni-bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து சுமார் 3000 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆம்னி பேருந்துகள் </a>தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்காக இயக்கப்பட்டு வருகின்றன.</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து நடைமுறையில் உள்ள கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஐந்து தினங்களாக, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>அதன்படி, கடந்த ஐந்து தினங்களில் தமிழ்நாடு முழுவதும் ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>அபராதம் வசூல்</h2><p>இந்த சிறப்பு தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக இணக்க கட்டணம் (Compounding fee) ரூ.24,44,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் அபராதமாக வாகன உரிமையாளாரிடமிருந்து உடனடியாக (Spot fine) ரூ.5,40,000  வசூலிக்கப்பட்டது. மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.53,62,074 வசூலிக்கப்பட்டது. இதன் மூலம், கடந்த ஐந்து தினங்களில் மட்டும் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.59,02,074 வசூலிக்கப்பட்டுள்ளது.</p><p>மேற்கண்ட தணிக்கையின் போது, 15.09.2026 வரை, அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் (Fitness Certificate) மற்றும் உரிய சாலை வரி செலுத்தப்படாமல் இயக்கப்பட்ட 6 பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில், அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>40 சிறப்பு தணிக்கை குழுக்கள்</h2><p>பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும். இதனை உறுதிசெய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 40 சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண் : 9384808333. புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் பாகுபாடுகளை மறந்து... அண்ணா பிறந்தநாளில் இனிப்பு பரிமாறிய தி.மு.க.-அ.தி.மு.க. நிர்வாகிகள்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/forgetting-political-differences-dmk-aiadmk-executives-served-sweets-on-annas-birthday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/forgetting-political-differences-dmk-aiadmk-executives-served-sweets-on-annas-birthday#comments</comments><guid isPermaLink="false">719a35d9-3707-461f-9123-982f71793a62</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:50:10 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:50:10.612Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,DMK,தி.மு.க,அ.தி.மு.க.,அண்ணா பிறந்தநாள்,Anna&apos;s birthday,இனிப்பு வழங்கி கொண்டாட்டம்,Celebration with sweets</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/077rv95c/121.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/077rv95c/121.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள், ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர்.</p><h2>மாலை அணிவித்து மரியாதை</h2><p>அதே நேரத்தில், ரெயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் வேல்குமார் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p><p>இரு நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில், அருகருகே நடைபெற்றதால் தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒரே இடத்தில் திரண்டனர். இரு தரப்பினரும் போட்டிப்போட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.</p><h2>இனிப்பு பரிமாற்றம்</h2><p>அப்போது எதிர்பாராத விதமாக, இரு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்ததுடன், நேருக்கு நேர் கை கொடுத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து தாங்கள் வைத்திருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">இனிப்பு</a>களையும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.</p><h2>பொதுமக்கள் நெகிழ்ச்சி</h2><p>பொதுவாக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக செயல்படும் தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள், அண்ணாவின் பிறந்தநாளில் அரசியல் வேறுபாடுகளை மறந்து இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சுவாரஸ்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title> பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-meeting-led-by-minister-vijay-tamilan-parthiban</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-meeting-led-by-minister-vijay-tamilan-parthiban#comments</comments><guid isPermaLink="false">725883eb-df70-4624-9b94-b06808194966</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:23:10 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:23:10.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>monsoon,முன்னெச்சரிக்கை நடவடிக்கை,Consultative meeting,பருவமழை,ஆலோசனைக் கூட்டம்,அமைச்சர் தமிழன் பார்த்திபன்,Minister Tamilan Parthiban</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/1yl1svr4/minister-partiban.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்]]></media:title><media:description type="html"><![CDATA[  பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/1yl1svr4/minister-partiban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p> <h2>கண்காணிப்பு நடவடிக்கை</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">வடகிழக்கு பருவமழையினை </a>முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்திட மண்டல வாரியாக  அமைச்சர் பெருமக்களும், மண்டல கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆலோசனைக் கூட்டம்</a> தலைமைச் செயலகத்தில் இன்று  நடைபெற்றது.</p><h2>போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வு</h2><p>இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடவும், நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றுதல் மற்றும் தூர்வாரும் பணிகளை முழுமையாக மேற்கொண்டு, மழைநீர் சீராக செல்லும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றிடும் வகையில் மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திடவும் மழைக்காலத்தில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகள் மற்றும் மைய சமையலறைகளில் உணவு பொருட்களின் இருப்பு ஆகியவற்றினை உறுதி செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்</h2><p> சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சாரத்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட சேவைத்துறைகள் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, இம்மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இக்கூட்டத்தில், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் வாகே சங்கேத் பல்வந்த், (ஆலந்தூர்), செந்தில் ராஜ், (அடையாறு), மண்டல அலுவலர்கள், மாநகராட்சி உள்ளிட்ட சேவைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-tarapuram-by-election-cpm-cpi-candidates-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-tarapuram-by-election-cpm-cpi-candidates-announced#comments</comments><guid isPermaLink="false">ec30b8bf-9701-42b9-abcb-763886d3f889</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:06:04 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:06:04.299Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,இடைத்தேர்தல்,CPI,மதுராந்தகம்,Tarapuram,தாராபுரம்,சிபிஎம்,CPM,By-election,Madhurandakam,வேட்பாளர்கள் அறிவிப்பு,Candidates notice - வேட்பாளர்கள் அறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/hslzypd4/120.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/hslzypd4/120.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம் - தாராபுரம் தொகுதியின் இடைத்தேர்தலில் சிபிஎம், சிபிஐ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பெ.சண்முகம் மற்றும் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளனர்</p><h2>5 முனை போட்டி</h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுகின்றனர். மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிடுகிறது.</p><h2>வேட்பாளர்கள் அறிவிப்பு</h2><p>சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் வேட்பாளர்களை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூட்டாக அறிவித்துள்ளனர். அதன்படி தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ப. லட்சுமணனும், மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக  மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சுகந்தியும்  போட்டியிடுவார் என தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி மலைகளில் வரலாற்றுப் பொக்கிஷம்! 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாட்டில் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/historical-treasure-in-palani-hills-2000-year-old-burial-ground-under-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/historical-treasure-in-palani-hills-2000-year-old-burial-ground-under-investigation#comments</comments><guid isPermaLink="false">da772f8c-f992-4be9-9a70-84a38f89827f</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:54:45 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:54:45.133Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Palani,சுடுகாடு,பழமை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/s2ort7tn/118.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/s2ort7tn/118.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைப்பகுதியில் உள்ள குண்டாடி (மாச்சூர்) என்ற இடத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">அகழாய்வு </a>செய்து ஆராய்ச்சி மேற்கொள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.) மும்பை சார்பில் இந்திய தொல்லியல் ஆய்வகத்திடம் அனுமதி கோரப்பட்டது.</p><p>இதனைத் தொடர்ந்து, நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பிறகு கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி அகழாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது.</p><h2>25 சதுர மீட்டரில் ஆய்வு</h2><p>இதன்படி, ஐ.ஐ.டி. மும்பை சார்பில் 5 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம் கொண்ட மொத்தம் 25 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு ‘தென்னிந்திய இடுகாடுகளின் நிலப்பரப்பு’ என பெயரிடப்பட்டுள்ளது.</p><p>இந்த ஆய்வின் மூலம் தென்னிந்திய மக்கள் இறந்தவர்களை எவ்வாறு அடக்கம் செய்தனர், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் இறுதிச்சடங்குகள், கலாசாரம், சமூக வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுத் தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என ஆய்வின் தலைவர் ஸ்மிரிதி ஹரிச்சரன் தெரிவித்துள்ளார். இவர், ஐ.ஐ.டி. மும்பையின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் இணை பேராசிரியராக உள்ளார்.</p><h2>ஆய்வுப் பொருட்களை முறையாக ஒப்படைக்க உத்தரவு</h2><p>இந்த ஆய்வின்போது, ஆய்வுத் தலைவர் ஸ்மிரிதி ஹரிச்சரன் ஆய்வு நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் இருக்க வேண்டும் என இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் தலைவர் ஹேமசாகர் நாயக் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், அகழாய்வில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் முறையாகப் பட்டியலிடப்பட்டு, தொல்லியல் ஆய்வகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி சரக தொல்லியல் கண்காணிப்பாளர் ஆய்வு நடைபெறும் இடத்துக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்பார்வையிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகளைக் கேலி செய்ததால் ஆத்திரம்.. வாலிபரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய தந்தை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-at-being-made-fun-of-by-his-daughter-father-kills-youth-and-throws-him-into-a-water-tank</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-at-being-made-fun-of-by-his-daughter-father-kills-youth-and-throws-him-into-a-water-tank#comments</comments><guid isPermaLink="false">8ad31d6c-57fc-4389-943c-1a43c4991cc0</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:49:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:49:55.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,police,போலீஸ்,murder,கொலை,தண்ணீர் தொட்டி,water tank</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/wxhrkdt9/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/wxhrkdt9/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>மகளை கேலி செய்த வாலிபரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>கொலை</h2><p>திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் சங்கிலி முருகன் (38). கடந்த 10-ந்தேதி சங்கிலி முருகன் காணாமல் போனதாக செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, சங்கிலி முருகனின் உறவினர்கள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சங்கிலி முருகன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் மறைக்கப்பட்டிருப்பது தொடர்பான அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்தது.</p><h2>குற்றவாளிகளிடம் விசாரணை</h2><p>இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் சாலையில் சங்கிலி முருகனை காரில் அழைத்துச் சென்று அவரது கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, உடலை மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடிநீர் தொட்டியில் வீசியதாக தெரியவந்தது.</p><p>இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a>யை செய்ததாக ஒப்புக்கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பாக்கிய செல்வம், முருகன், மருதுபாண்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், குடிநீர் தொட்டியில் இருந்து சங்கிலி முருகனின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.</p><p>தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> நடத்திய விசாரணையில், பாக்கிய செல்வத்தின் மகளை சங்கிலி முருகன் கேலி செய்ததும், இதுதொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilnadu-temples-mobile-ban-relaxation-talks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilnadu-temples-mobile-ban-relaxation-talks#comments</comments><guid isPermaLink="false">217a330a-6408-475b-9d3c-b16e6ca72e7f</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:41:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:41:36.406Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,செல்போன்,அனுமதி,தமிழக கோவில்கள்,Tamil Nadu temples,Mobile Phones Ban</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8a8j28x6/cell-phone-ban.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ செல்போன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8a8j28x6/cell-phone-ban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் உள்ள முக்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">கோவில்களில்</a> ஆன்மிக புனிதத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில்,  செல்போன்களை எடுத்து செல்ல இந்து சமய அறநிலையத் துறை தடை விதித்திருந்தது. இதற்காக கோவில் வாசல்களில் செல்போன்லாக்கர்கள் அமைக்கப்பட்டு, கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. </p><p>ஆனால், இத்திட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்தே பல்வேறு கோவில்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">செல்போன்</a> தடை திட்டம் சத்தமில்லாமல் முடங்கி வருகிறதா? என்ற பலத்த கேள்வி தற்போது ஆன்மிக பக்தர்களிடையே எழுந்துள்ளது.</p><h2>பக்தர்கள் கடும் அவதி</h2><p> கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது விலையுயர்ந்த செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்கவும், தரிசனம் முடிந்து மீண்டும் அவற்றை பெற்றுக்கொள்ளவும் டோக்கன் பெற்றுக்கொண்டு பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அவசர தேவைகளுக்கு குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடியாமல் முதியவர்களும், பெண்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.</p><h2>தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்?</h2><p>இதன் காரணமாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட சில முக்கிய தலங்களில் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், தீவிர கண்காணிப்பும் சற்றே தளர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைப்பறை செயல்படாததால், வழக்கம்போல பக்தர்கள் எவ்வித தடையுமின்றி தங்களது செல்போன்களை கோவிலுக்குள் எடுத்து செல்லும் நிலையும் அரங்கேறி வருகிறது.</p><h2>அதிகாரிகள் ஆலோசனை</h2><p>இதுகுறித்து அறநிலைய துறை வட்டாரங்கள் கூறுகையில், "பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் அவசர தேவைகளை கருத்தில்கொண்டு, போன்களை 'சுவிட்ச் ஆப்' அல்லது 'சைலண்ட்' செய்த நிலையில் உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனால் இத்திட்டத்தை தொடர்ந்து தீவிரமாக அமல்படுத்துவதா அல்லது சில தளர்வுகளை அறிவிப்பதா என்பது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>முதல் - அமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/investment-agreements-worth-rs-15300-crore-signed-in-the-presence-of-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/investment-agreements-worth-rs-15300-crore-signed-in-the-presence-of-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">26f87952-6658-4120-b927-1e14e46589e0</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:53:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:53:15.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கையெழுத்து,புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்,MoU signed,Chief Minister Vijay,முதல் - அமைச்சர் விஜய்,Investment Agreement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/lo1e7wra/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/lo1e7wra/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லண்டனில் முதல் - அமைச்சர் விஜய் முன்னிலையில்  ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>ரூ.15,300 கோடி முதலீடு</h2><p>ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முதல-அமைச்சர் விஜய் முன்னிலையில் (14.9.2026) நேற்று  இங்கிலாந்து, லண்டனில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி (Guidance TamilNadu) நிறுவனத்திற்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஒரு உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து அக்குழுமத்தினர் தமிழ்நாடு முதல்-அமைச்சரை சந்தித்து விளக்கிக் கூறினர்.</p><p>45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் முன்னணி பன்னாட்டு நிறுவனமான 'சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்' (Samvardhana Motherson International Limited), தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் (D.E.M.A.L.) சார்ந்த வசதிகளை நிறுவுவதன்மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.</p><h2>ரூ.11,000 கோடி முதலீடு</h2><p>இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகள், மதர்சன் குழுமத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையர்களுடன் (Joint Venture &amp; Technical Partners) இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளன.</p><h2>ரூ.300 கோடி முதலீடு</h2><p>பிரிட்டனைத் (UK) தலைமையிடமாகக் கொண்ட, திறன்மிக்க மின்மாற்றிகளைத் தயாரிக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்தகட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த ஆலை, மேம்பட்ட மின் மற்றும் விநியோக மின்மாற்றி உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மதிப்புக் கூட்டலையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம், தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் உற்பத்திக்கான ஒரு முன்னணி மையமாகத் தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தும்.</p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</h2><p>தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குழுமம், எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres), தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் (Guidance TamilNadu) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் ஏர்ன்ஸ்ட் &amp; யங் நிறுவனம் (Ernst &amp; Young) ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. 'கட்டு-இயக்கு-மாற்றியமை-மாற்று' (Build-Operate-Transform-Transfer - BOTT) ஏற்பாட்டின் கீழ், இந்த மையத்தை நிறுவுவதற்கும், அதன் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கும் ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனம் ஆதரவளிக்கும். பின்னர், அம்மையம் அச்சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த உலகளாவிய திறன் மையம் (GCC) சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மையம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலைப் பகுதியிலுள்ள GCC வழித்தடத்தில் அமையும்.</p><h2>ரூ.3,000 கோடி முதலீடு செய்திட விருப்பக் கடிதம்</h2><p>ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில், தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து,  தமிழ்நாடு முதல்-அமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் தனது விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்தது. முன்மொழியப்பட்ட இந்த முதலீட்டைச் சாத்தியமாக்கவும், மாநிலத்தில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்திற்கு உறுதியளித்தது.</p><h2>ஹிந்துஜா குழுமத்தின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு</h2><p>அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா, ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் லண்டனில் தமிழ்நாடு முதல்-அமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.</p><p>இச்சந்திப்பின்போது, ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற 'வெற்றி' (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையில், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உட்பட, தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமம் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து ஹிந்துஜா அவர்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் விளக்கினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதிலும், வணிகத்தை விரிவுபடுத்துவதிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>அரசின் முழு ஆதரவு</h2><p>பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தமிழ்நாட்டுடன் வர்த்தக மற்றும் வணிகத் தொடர்புகளை ஆழப்படுத்தவும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய முன்னணி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் அழைப்பு விடுத்ததோடு, முதலீடுகளை எளிதாக்குவதிலும், மாநிலத்தில் அவர்களின் வணிகங்களை வெற்றிகரமாக நிறுவி இயக்குவதற்குத் தேவையான தமிழ்நாடு அரசின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தார்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் சந்திப்புகளுடன், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் (Guidance TamilNadu) மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, இரசாயனங்கள், தளவாடங்கள், கட்டுமானம், நிதிச் சேவைகள், சில்லறை வர்த்தகம் மற்றும் சட்ட சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 10 முன்னணி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தினர். இந்தக் கலந்துரையாடல்களின் சாத்தியமான விளைவுகளில், பிரிட்டன் வர்த்தக நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான மூலப்பொருட்கள் கொள்முதல் ஒப்பந்தங்கள்; ஓசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் குழு வருகை புரிவதற்கான வாய்ப்பு; அக்டோபர் மாதம் சென்னைக்கு இங்கிலாந்து மேயர் ஆணையத்தின் (NEMSA) பிரதிநிதிகள் குழுவின் வருகை; நிதிச் சேவைத் துறைக்கான திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மைகள்; இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிப் பயிலரங்கம்; பிரிட்டன் - இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காட்டும் அறிக்கை தயாரித்தல் ஆகியவை அடங்கும்.</p><p>இந்நிகழ்வுகளில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, I.F.S., நிதி மணி திரிபாதி, இ.ஆ.ப., Minister (Economic), High Commission of India, London, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
ஆவின் பால் விற்பனை 10 சதவீதம் குறைப்பு: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-sales-down-by-10-milk-agents-association-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-sales-down-by-10-milk-agents-association-alleges#comments</comments><guid isPermaLink="false">f0159adc-d22f-4226-a6ca-be019290771b</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:34:21 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:34:21.769Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aavin,ஆவின்,Aavin Milk,ஆவின் பால்,பால் விற்பனை,Milk Distribution,பால் முகவர்கள் சங்கம்,சு.ஆ.பொன்னுசாமி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/u5uzc5hj/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆவின் பால்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/u5uzc5hj/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/aavin">ஆவின்</a> பால் விற்பனை 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- </p>  <p>தமிழ்நாடு அரசு ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை கடந்த வாரம் உயர்த்திய நிலையில், அதற்கேற்ற வகையில் விற்பனை விலையை உயர்த்தாமல் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் திமுக செய்த அதே தவறை தற்போதைய தவெக அரசும் செய்திருப்பதால் ஆவினுக்கான நிதியிழப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. காரணம் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும் ஆவினுக்கான பால் வரத்து அதிகரிக்காததால் அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினியிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து பால் கொள்முதல் செய்தும், வடமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெண்ணெய், பால் பவுடர் கொண்டு பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் நிலை தொடர்வதாலும் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கடுமையான நிதியிழப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விற்பனையை குறைக்க இணையத்தில் நிர்வாக இயக்குநரும், மாவட்ட ஒன்றியங்களில் பொது மேலாளர்களும் வாய்மொழி உத்தரவுகளை பிறப்பித்து ஆவின் பாலுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி வருகின்றனர்.</p><p>குறிப்பாக குமரி மாவட்டத்தில் ஆவின் நிறை கொழுப்பு பால் (Full Gream Milk) உற்பத்தி மற்றும் விற்பனை கடந்த சில வாரங்களுக்கு முன் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதோடு, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே ஆவின் பால் விநியோகம் பலமடங்கு திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பால் முகவர்கள் பொதுமக்களுக்கு தேவையான பாலினை தொடர்ந்து விநியோகம் செய்ய முடியாமல் திணறி வருவதோடு, குறைந்த வருவாயில் வாழ்க்கையை ஓட்டி வரும் பால் முகவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பால் விநியோகத்திற்கான வாகன எரிபொருள், பணியாளர்கள் சம்பளம், கடை வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.</p> <p>மேலும் சென்னை பெருநகரில் தினசரி ஆவின் பால் விற்பனை சுமார் 16.5 லட்சம் லிட்டருக்கு மேல் இருந்த நிலையில் பால் முகவர்களுக்கான ஆவின் பால் விநியோகத்தை கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 25% க்கும் மேல் ஆவின் நிர்வாகத்தால் குறைக்கப்பட்ட சூழலில் இன்று (15.09.2026) 10% வரை ஆவின் பால் விநியோகத்தை குறைக்க ஆவின் நிர்வாகத்தால் மீண்டும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சென்னை பெருநகர் முழுவதும் அந்த உத்தரவு இன்று (15.09.2026) அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரில் பொதுமக்களுக்கு தேவையான ஆவின் பால் பாக்கெட் விநியோகத்தை செய்ய முடியாமல் பால் முகவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். ஆவின் நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகள் என்பது "உடலுக்கேற்ற வகையில் ஆடைகளை வடிவமைத்து வெட்டி, தைக்காமல், ஆடைகளுக்கேற்ற வகையில் உடலை வெட்டி, காயப்படுத்துவதைப் போல் உள்ளது.”</p><p>ஏற்கனவே கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் இதுவரை ஆவினை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் புதிதாக ஆட்சியமைத்த ஜோசப் விஜய் அவர்களாவது ஆவினில் மாற்றத்தை கொண்டு வருவார் என்கிற எண்ணத்தில் ஆவினை மீட்டெடுப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை செயல்படுத்த பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி அவர்களை கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அதற்கான தரவுகளை அளித்து பேசியும், முதலமைச்சர் அவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக பலமுறை கடிதங்கள் அனுப்பியும் கூட எந்த ஒரு மாற்றத்திற்கான முயற்சியும் இதுவரை முன்னெடுக்கப்படாததோடு, "கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஆவினை அழிவை நோக்கி கொண்டு செல்வது பால் முகவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.”</p> <p>மேலும், சுமார் 4 ஆண்டுகள் கழித்து ஆவினுக்கான பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6.00 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரம் கோடி ருபாய் ஆவின் நிறுவனம் நிதி இழப்பில் சென்றாலும் அந்த இழப்பு ஆவினை முடக்கி விடாது. காரணம் மாநில அரசின் நிதி பங்களிப்போடு செயல்படும் கூட்டுறவு நிறுவனம் என்பதால் அந்த இழப்பு பொதுமக்கள் தலையில் வேறு வகை வரியாக திணிக்கப்படும். அதே சமயம் ஆவினுக்கான பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6.00 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் தற்போது தனியார் பால் நிறுவனங்களும் விவசாய பெருமக்களுக்கான கொள்முதல் விலையை அதே அளவு உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆனால் அவ்வாறு தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கினால் அந்நிறுவனங்களுக்கு ஏற்படும் கடுமையான நிதியிழப்பை அந்நிறுவனங்களே ஈடுசெய்து கொள்ள வேண்டும் என்பதால் வேறு வழியின்றி அந்த பால் கொள்முதல் விலை உயர்விற்கேற்ப "தனியார் பால் நிறுவனங்களும் விற்பனை விலையை உயர்த்தும்” வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ஆவின் மற்றும் தனியார் பாலுக்குமான விற்பனை விலை என்பது மலைக்கும், மடுவிற்குமானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குறைந்தபட்சம் லிட்டருக்கு 19.00 ரூபாய் முதல் 24.00 ரூபாய் வரை விற்பனை வித்தியாசம் இருக்கும் நிலையில் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலை மேலும் உயர்த்தப்படும்பட்சத்தில் பொதுமக்கள் விற்பனை விலை குறைவாக உள்ள ஆவினை நோக்கி திரும்பும் நிலை ஏற்படும், ஆனால் ஏற்கனவே ஆவினில் கடுமையான பால் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆவின் பாலுக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்பட்டு புதிய அரசுக்கு அவப்பெயரே பரிசாக கிடைக்கும்.</p> <p>எனவே, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் காப்பற்றப்பட வேண்டும், பொதுமக்களுக்கு தங்குதடையற்ற பால் விநியோகம் தொடர வேண்டுமானால் ஆவினுக்கான பால் கொள்முதல் விலை உயர்விற்கேற்ற வகையில் விற்பனை விலையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால் ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தினால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியதிருக்கும் என்பதை விட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியதிருக்கும் என்பதை மனதில் கொண்டு ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமல் காலம் தாழ்த்துவது என்பது பொதுமக்கள் மத்தியில் தவெக அரசுக்கு மேலும், மேலும் அவப்பெயரையே ஏற்படுத்தும் என்பதால் இனியும் காலம் தாழ்த்தாமல் ஆவின் பால் விற்பனை விலையை மற்ற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களைப் போல விற்பனை விலையில் சீர்திருத்தம் செய்து தட்டுப்பாடற்ற பால் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும், அமுல், நந்தினி போன்று அரசியல் தலையீடற்ற, சுயசார்போடு இயங்குகின்ற வகையில் ஆவின் நிறுவனத்தை தன்னாட்சி பெற்ற நிறுவனமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதைக்குரிய ச.ஜோசப் விஜய் அவர்களையும், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  சி.விஜயலட்சுமி அவர்களையும் மற்றும் தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக உரிமை மீறல் புகார் - சபாநாயகரை சந்தித்த திமுக எம்.எல்.ஏ.க்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-of-violation-of-rights-against-minister-nirmal-kumar-dmk-mlas-who-met-the-speaker</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-of-violation-of-rights-against-minister-nirmal-kumar-dmk-mlas-who-met-the-speaker#comments</comments><guid isPermaLink="false">0c6534fd-0326-4489-b650-982a9511c6b9</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:21:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:21:15.729Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>rights,உரிமை,மீறல்,DMK MLAs,திமுக எம்.எல்.ஏக்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/epis97t5/117.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/epis97t5/117.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தலைமைச்செயலகத்தில் சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை திமுக சட்டமன்ற கொறடா எ.வ.வேலு உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.</p><h2>உரிமை மீறல் புகார்</h2><p>மிசா தொடர்பாக முதல்-அமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவின் நிலை குறித்து அவர்கள் சபாநாயகரிடம் கேட்டறிந்தனர். மேலும், சட்டசபையில் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டது.</p><p>பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">திமுக எம்.எல்.ஏ.க்கள்</a>, சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமானவரை அவதூறாக பேசுவது விதிமீறல் என்றும், சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து பேசுவதும் விதிப்படி தவறு என்றும் தெரிவித்தனர். மிசா தொடர்பான முதல்-அமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி ஏற்கனவே மனு அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.</p><h2>அடுத்தகட்ட நடவடிக்கை</h2><p>உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், புகார் குறித்து ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்த அவர்கள், சட்டசபையில் தவறான தகவல்களை பகிர்ந்துகொள்வது விதிமீறல் என்றும் குற்றம்சாட்டினர். மேலும், “இல்லாதது பொல்லாதவற்றை பேசி திசை திருப்பும் அரசியலில் தவெக அமைச்சரவை ஈடுபடுகிறது” என்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெட்ரோல் பங்கில் பயங்கரம்... வாலிபர் வெட்டிக்கொலை - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-at-petrol-station-youth-hacked-to-death-police-launch-net-to-nab-mysterious-gang</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-at-petrol-station-youth-hacked-to-death-police-launch-net-to-nab-mysterious-gang#comments</comments><guid isPermaLink="false">ef6ccb2f-9c03-4016-a964-8ac7ce7bab3c</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:18:08 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:18:08.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,விசாரணை,Chengalpattu,செங்கல்பட்டு,murder,கொலை,investigation,போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/asu39ooo/9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/asu39ooo/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>பெட்ரோல் போட வந்த இளைஞரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>வெட்டிக் கொலை</h2><p>செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த வீரா என்ற வீரமுத்துகிருஷ்ணன் (வயது 26). இவர் அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.</p><p>அப்போது 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், வீரமுத்துகிருஷ்ணனை வழிமறித்து கையில் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த வீரமுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>மர்ம கும்பலுக்கு வலைவீச்சு</h2><p>இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஆகாஷ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வீரமுத்துகிருஷ்ணன் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனால், முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன் போராடியவர்கள் மீது தாக்குதல் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-protesters-in-front-of-madurai-police-commissioners-office-communist-party-of-india-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attack-on-protesters-in-front-of-madurai-police-commissioners-office-communist-party-of-india-condemns#comments</comments><guid isPermaLink="false">38fe82b9-5892-421f-ae00-9811b93459ec</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:00:23 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:00:23.895Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,Madurai,மதுரை,attack,M Veerapandian,மு. வீரபாண்டியன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/f7qc0dyt/veerapandian.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/f7qc0dyt/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகம் முன் போராடியவர்கள் மீது காவல் துறையினர் கொடூர தாக்குதல் நடத்தியதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு. வீரபாண்டியன் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>மதுரை ஆனையூர் கூடல் புதூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் கடந்த ஏழாம் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார். 11 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த  மாணவரின் உடல்  முட்புதர்கள் நிறைந்த குட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது கொலையாக இருக்கலாம் எனவும் உறவினர்கள் கூறிவருகின்றனர். மாணவர் இறந்து ஒரு வார காலம் ஆகியும், அவரது உடலை வாங்க தாயார் யோகலட்சுமி மறுத்து வருகிறார். அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், மகன் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.</p><h2>கொடூரமான காட்சி</h2><p>இது தொடர்பாக காவல்துறை எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்காத நிலையில், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பாக  போராட்டம் உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை காவல்துறையினர் மிக மோசமான முறையில் தாக்கியுள்ளனர். சாலையில் தவறி விழுந்த பெண்ணின் கழுத்தை பெண் காவலர்கள்  காலால் மிதிக்கின்ற கொடூரமான காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.</p><h2>நடவடிக்கை</h2><p>காவல்துறையினரின் இத்தகைய கொடூரமான தாக்குதல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் முதல்-அமைச்சர் பொறுப்பில் உள்ள காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளே, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. போராடிய  மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் துறையினர்  மீது நடவடிக்கை எடுப்பதோடு, மாணவரின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அரசு அனுமதிக்க கூடாது - வைகோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-not-approve-5-hydrocarbon-wells-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-not-approve-5-hydrocarbon-wells-vaiko#comments</comments><guid isPermaLink="false">202f7584-da18-407a-b4e2-f116927ce484</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:52:17 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:52:17.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,அரசு,Hydro Carbon,TamilNadu Goverment,ஹைட்ரோ கார்பன் கிணறுகள்,அனுமதிக்க கூடாது,wells</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vja4nuyn/vaiko.gif" width="768"><media:title type="html"><![CDATA[  வைகோ]]></media:title><media:description type="html"><![CDATA[ ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vja4nuyn/vaiko.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி படுகையில் புதிதாக 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது என்று வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>இந்தியா நிறுவனம்</h2><p>தமிழகத்தின் கடலோர பகுதியில் உள்ள காவிரி படுகையில் CY-OS/90/1 என்ற பிளாக்கில் PY-3 என்ற எண்ணெய் பகுதியின் ஆபரேட்டராக ஹார்டி எக்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.</p> <h2>ஒப்பந்தம்</h2><p>CY-OS/90/1 பிளாக் சுமார் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இவை அனைத்தும் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் பிஎஸ்சி எனப்படும் உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.</p><h2>5 கிணறுகள்</h2><p>இந்நிலையில் ,ஹார்டி எக்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம்  மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகத்திற்கு எழுதி உள்ள கடிதத்தில், PY-3 பகுதியில் தற்போது முழு வீச்சில் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை பெருக்குவதற்கு புதிதாக 5 கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்.</p> <h2>கடல்வழி குழாய்கள்</h2><p>இவற்றில் உற்பத்தி செய்யப்படும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D">ஹைட்ரோ கார்பன்</a> கடல்வழி குழாய்கள் மூலம் FPSOக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சுத்திகரிப்பு, சேகரிப்பு ஆகியவற்றை தொடர்ந்து  கப்பல் மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படும்.</p><h2>நிராகரிக்க வேண்டும் </h2><p>இந்த திட்டத்திற்காக புதிதாக எந்த ஒரு நிலத்தையும் கையகப்படுத்த வேண்டியது இல்லை. கடற்கரையோர வசதிகள் தேவைப்படாது” என்று குறிப்பிட்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி படுகையில், ஹார்டி எக்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கேட்டுள்ள அனுமதியை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><h2>மத்திய அரசு உரிமம்</h2><p>தமிழ்நாட்டை ஒட்டிய கடலோர பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும், வேளாண் நிலங்களிலும் ஏராளமான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு உரிமம் வழங்கியும் கூட மறுமலர்ச்சி திமுக  உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் எதிர்ப்பால் அத்திட்டங்களுக்கு கடந்த காலத்தில் மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. </p><p>அதே நிலையே தொடர வேண்டும். சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் எந்தத் திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடல்வளத்தை சீரழிக்கும் திட்டங்களுக்கு அரசு அனுமதிக்க கூடாது - டி.டி.வி. தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-not-allow-projects-that-degrade-marine-resources-ttv-dinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-not-allow-projects-that-degrade-marine-resources-ttv-dinakaran#comments</comments><guid isPermaLink="false">f7757309-aea4-48a2-b242-5ebf0dd5eb8d</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:39:33 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:39:33.509Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,Mayiladuthurai,மயிலாடுதுறை,டி.டி.வி. தினகரன்,Oil well,எண்ணெய் கிணறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/nqrkbx8d/ttv1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/nqrkbx8d/ttv1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை,</p><p>மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடல் பகுதியில் 5 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க அமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி. தினகரன்</a> கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>எண்ணெய் கிணறுகள்</h2><p>மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க தனியார் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. கடல்வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது.</p><p>மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் புதிதாக 5 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி Hardy Exploration &amp; Production India Limited என்ற நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2>சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை</h2><p>கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கும் இயற்கை வளம் நிறைந்த கடல் பகுதிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எண்ணெய் கிணறுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கே இதுவரை உரிய தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது கூடுதலாக எண்ணெய் கிணறுகளை அமைக்க முயற்சிப்பது மீனவ மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் சூழலை உருவாக்கக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><h2>அனுமதிக்க முடியாது...</h2><p>காவிரி டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் செயல்படுத்த முடியாத எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டங்களை அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்த முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.</p><p>எனவே, கடல் வளத்தையும், மீன்வளத்தையும், மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் எண்ணெய் கிணறுகளை அமைக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதோடு இத்திட்டத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை உள்ளிட்ட எவ்வித அனுமதிகளையும் மாநில அரசு வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை எம்.ஜி.ஆர். பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் - நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mgr-university-convocation-nirmala-sitharaman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mgr-university-convocation-nirmala-sitharaman#comments</comments><guid isPermaLink="false">14a3b34c-a0be-45aa-970e-dc414221219b</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:18:59 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:18:59.306Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பட்டமளிப்பு விழா,ceremony,மகிழ்ச்சி,convocation,மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்,Union Minister Nirmala Sitharaman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/ny69n8wr/n.nwithniramla.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நிர்மலா சீதாராமன், நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் - நயினார் நாகேந்திரன் மகிழச்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/ny69n8wr/n.nwithniramla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்</a> கலந்து கொண்டது மகிழ்ச்சி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது:-</p> <h2>பட்டமளிப்பு விழா</h2><p>இன்றைய தினம் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36-ஆவது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">பட்டமளிப்பு விழாவில்</a>, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சிதாராமன் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் பெரும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தேன்.</p><h2>பாராட்டுகள்</h2><p>இந்நிறுவனத்தின் தலைவரும், புதிய நீதிக் கட்சியின் நிறுவன தலைவருமான ஏ.சி. சண்முகம், தொடர்ந்து பல ஆண்டுகளாக கல்வி சேவையில் ஈடுபட்டு, எளிய குடும்பங்களை சேர்ந்த பல மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கி வருவதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>புதிய பொறுப்பு</h2><p>தங்களது கல்வி பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டி, பட்டம் பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இன்று அவர்கள் பெற்றுள்ள இந்த பட்டம், தங்களது அறிவையும் திறமையையும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் அர்ப்பணிக்கும் புதிய பொறுப்பிற்கான தொடக்கமாக அமையட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இன்றைய தினம் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36-ஆவது பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி. <a href="https://x.com/nsitharaman?ref_src=twsrc%5Etfw">@nsitharaman</a> அவர்களுடன் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் பெரும்… <a href="https://t.co/7aHtIbRDLX">pic.twitter.com/7aHtIbRDLX</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2099771089245413720?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமைச்சர் - பூட்டிய பூங்காவால் நீண்ட நேரம் காத்திருப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-arrives-to-garland-anna-statue-long-wait-due-to-closed-park</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-arrives-to-garland-anna-statue-long-wait-due-to-closed-park#comments</comments><guid isPermaLink="false">9829350a-e948-4c87-be11-9f2770705f5c</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:03:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:03:55.890Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணா சிலை,Anna statue,அமைச்சர் மரிய வில்சன்,minister mariya wilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/rv0ury1c/116.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/rv0ury1c/116.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கொடைக்கானல் </p><p>கொடைகானலில் அமைச்சர் மரிய வில்சன் பூட்டி கிடந்த அண்ணா பூங்காவால் நீண்ட நேரம் காத்திருந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><h2>நீண்ட நேரம் காத்திருப்பு</h2><p>பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, கொடைக்கானல் அண்ணா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் மரிய வில்சன்</a> அங்கு சென்றார். ஆனால், பூங்கா பூட்டப்பட்டிருந்ததால் அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.</p><h2>பூட்டை உடைக்க வேண்டாம்</h2><p>இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர், நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முறையாக செய்யாதது குறித்து உள்ளூர் நிர்வாகிகளை கடிந்துகொண்டார். இதற்கிடையில், ஊழியர் ஒருவர் பூட்டை உடைத்து திறக்க முயன்றார். அப்போது, “பூட்டை உடைக்க வேண்டாம். திண்டுக்கல் அல்லது மதுரையில் மாலை அணிவித்து கொள்கிறேன்” என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து, சில நிமிடங்களில் பூங்காவின் பூட்டு திறக்கப்பட்டது. பின்னர் அண்ணா சிலைக்கு அமைச்சர் மரிய வில்சன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title> “மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக நின்றவர் அண்ணா” - அண்ணாமலை புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-stood-firm-on-the-policy-of-prohibition-annamalai-pugazharam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-stood-firm-on-the-policy-of-prohibition-annamalai-pugazharam#comments</comments><guid isPermaLink="false">92a37fdd-3577-443d-85b5-7ffa33d44662</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:42:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:42:06.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,Anna,அண்ணா பிறந்தநாள் விழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/9wobu4zz/115.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/9wobu4zz/115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில்  ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88"> அண்ணாமலை </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>அண்ணா பிறந்தநாள்</h2><p>திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினம் இன்று.</p><h2>எளிமையான தலைவர்</h2><p>மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக நின்றவர். ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிராக வாழ்ந்தவர். எளிமையையும் நேர்மையையும் தனது அரசியல் வாழ்வில் கடைப்பிடித்தவர். </p><p>தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-month-old-baby-dies-after-being-electrocuted-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-month-old-baby-dies-after-being-electrocuted-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">b56f3f4b-6334-4885-86a3-d0542dee4ff0</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:28:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:28:36.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,குழந்தை பலி,மின்சாரம் தாக்கி,Child dies,electrocution</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/3kytpzs9/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குழந்தை பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/3kytpzs9/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">ஆண் குழந்தை</a>, எதிர்பாராதவிதமாக மின் மோட்டாரைத் தொட்டதில் மின்சாரம் தாக்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்த</a> சம்பவம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சோகத்தை</a> ஏற்படுத்தியது. </p><h2>11 மாத ஆண்குழந்தை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> திரேஸ்புரம் சங்குமால் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் - பாஸ்டினா தம்பதியரின் 11 மாதக் குழந்தை மகிழன். தாய் பாஸ்டினா குழந்தையை அழைத்துக்கொண்டு திரேஸ்புரம் தீர்த்தக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் முன்புறம் குழந்தை மகிழன் விளையாடிக் கொண்டிருந்தான். </p><h2>மின்சாரம் தாக்கி பலி</h2><p>அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இயங்கிக் கொண்டிருந்த நீரேற்றும் மின் மோட்டாரை குழந்தை மகிழன் தொட்டுள்ளான். இதில் பலத்த மின்சாரம் தாக்கியதில் குழந்தை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. </p><h2>சோகம்</h2><p>குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>“தமிழ் சமூகத்திற்கு புதிய அடையாளம் தந்தவர் அண்ணா” - செல்வப்பெருந்தகை புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-gave-a-new-identity-to-tamil-society-selvapperunthakai-pugazharam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-gave-a-new-identity-to-tamil-society-selvapperunthakai-pugazharam#comments</comments><guid isPermaLink="false">5b3e9f66-3a21-4392-b1f3-a8ce6c83b82d</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:26:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:26:36.252Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,செல்வப்பெருந்தகை,பிறந்தநாள்,Annadurai,Revolution,அண்ணாதுரை,Selvapperunthakai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/5m5130vp/343.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செல்வப்பெருந்தகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/5m5130vp/343.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ் சமூகத்திற்கு புதிய அடையாளம் தந்தவர் அண்ணா என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செல்வபெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழாரம்</h2><p>தமிழ் சமூகத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை அமைத்த மாபெரும் ஆளுமை, எளிய மக்களுக்கும் அதிகாரம் சாத்தியம் என்பதை நிரூபித்த தொலைநோக்குச் சிந்தனையாளர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்.</p><p>கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அரசியல் வாழ்விலும் தனிமனித வாழ்விலும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய உயரிய தாரக மந்திரமாக இதை அமைத்து தந்தார். சாதி, மத எல்லைகளைக் கடந்து, மனித நேயத்தையும் சுயமரியாதையையும் முன்னிறுத்தும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தினார்.</p><h2>'தமிழ்நாடு'</h2><p>'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற கொள்கை முழக்கம் மூலம் மாநில உரிமைகளுக்கான அடித்தளமிட்டார். நம் தாய் நிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டி, வரலாற்றுச் சாதனையின் மூலம் தமிழ் மொழியின் பெருமையையும் அடையாளத்தையும் உலகறியச் செய்தார்.</p><p>'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்ற அண்ணாவின் வாக்கிற்கேற்ப, துணிவு, இன்சொல், மற்றும் தொலைநோக்குப் பார்வையோடு சமூகத்தைச் செப்பனிட இந்நாளில் உறுதியேற்போம். தமிழ் மண்ணிற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE">பேரறிஞர் அண்ணா</a> புகழும், கொள்கைகளும் என்றும் நிலைத்து வாழ்க.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன்.. கோவிலுக்கு சென்று திரும்பிய மனைவி அதிர்ச்சி..</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-found-dead-inside-locked-house-wife-shocked-after-returning-from-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-found-dead-inside-locked-house-wife-shocked-after-returning-from-temple#comments</comments><guid isPermaLink="false">701924c6-7ca0-4376-b400-33425a549085</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:06:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:06:55.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,Thoothukudi,husband,தூத்துக்குடி,Family dispute,குடும்ப தகராறு,உயிரிழப்பு,police investigation,loss of life,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/nevrm813/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/nevrm813/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்திருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">கணவர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தது</a> குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><h2>குடும்ப பிரச்சினை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், புதியம்புத்தூர் வட்டத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் ஜெயசங்கர் (வயது 54). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை நேரம் குடிபோதையில் இருந்த ஜெயசங்கர் தனது மனைவியுடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88">குடும்ப பிரச்சினை</a> காரணமாக தகராறில் ஈடுபட்டுள்ளார். </p><h2>கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்</h2><p>பின்னர் வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டார். அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஜெயசங்கரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கோவிலுக்குச் சென்றுவிட்டனர். பின்னர் இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.</p><h2>பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன்</h2><p>நீண்ட நேரம் தட்டியும் கதவைத் திறக்காததால், சந்தேகமடைந்த அவரது மூத்த மகன் ஜெயபாரத் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஜெயசங்கர் பாயில் சலனமற்று இறந்த நிலையில் படுத்துக் கிடப்பத்தைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதியம்புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸ்லின், ஜெயசங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணாவின் கொள்கை வழியில் அர்ப்பணிப்புடன் பயணிப்போம்: ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-travel-with-dedication-along-the-path-of-annas-principles-aadhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-travel-with-dedication-along-the-path-of-annas-principles-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">cacbcacd-309d-413c-9255-ea6a925497ee</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:05:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:05:15.347Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/wz70io8v/16.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/wz70io8v/16.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”அண்ணா! இந்த மூன்றெழுத்து தமிழ் நிலத்தில் புது சரித்திரம் படைத்தது. மாநிலக் கட்சிகள் ஆட்சியமைத்து ஜனநாயகத்தைப் பரவலாக்க முடியும் என்று இந்திய அரசியலுக்கு புதிய அத்தியாயத்தை எழுதியது. கூட்டாட்சி தத்துவமே இந்திய நாட்டின் அடையாளம் என்று அரசியலமைப்பு சிறப்பை முழுமைப்படுத்தியது. சாமானியர்களும் ஆட்சியாளர்கள் ஆகலாம் என்ற மக்களாட்சி புரட்சியை நிலைநாட்டியது.</p><p>சமத்துவத்தை முன்னிறுத்திய தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தேர்தல் அரசியலில் வென்றெடுத்தார்; சமூகநீதியை அரசின் திட்டங்களில் அமல்படுத்தினார்; 'மாநில சுயாட்சி' என்ற வலிமையான அரசியலின் மூலம் 'தமிழ்நாடு' தனித்துவத்தோடு தலைநிமிர வழிகாட்டினார்.</p> <p>'மக்களிடம் செல்', 'உன்னால் முடியும் தம்பி', 'அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாள்' ஆகிய அண்ணாவின் பிரசாரங்களே என்னைத் தேர்தல் அரசியல் சிந்தனை நோக்கிப் பயணிக்க வைத்தன. அரசியல் அறிவியல் மாணவனான எனது ஆசிரியர்களில் மூத்தவரான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவே எப்பொழுதும் எனது வழிகாட்டி.</p><p>'அண்ணாவின் கொள்கை வழியில் அர்ப்பணிப்புடன் பயணிப்போம். அண்ணாவின் மாபெரும் கனவுகளை மீட்டுருவாக்குவோம்' என்று அவரது பிறந்தநாளான இன்று உறுதியேற்போம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-4-pm-in-5-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-4-pm-in-5-districts#comments</comments><guid isPermaLink="false">fa76f9a9-afbd-4b26-abba-de4ff987729a</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:00:12 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:00:12.664Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/gan8srrd/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/gan8srrd/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-birthday-tribute-by-the-government-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-birthday-tribute-by-the-government-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">11c53c1f-979d-4ecd-9b6c-ce63b4ca76ce</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:59:03 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:59:03.974Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Government of Tamil Nadu,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xugqujro/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xugqujro/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.</p><h2>பேரறிஞர் அண்ணா</h2><p>பேரறிஞர் அண்ணா அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர். கோ.க.. அருண்ராஜ், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார். ரா ஆகியோர் இன்று (15.9.2026) சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அருகில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.</p> <h2>தமிழ்நாடு</h2><p>பேரறிஞர் அண்ணா, காஞ்சிபுரத்தில் நடராஜர் – பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு 15.09.1909 அன்று மகனாகப் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து சிறந்த மாணவராகவும், எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், பண்பட்ட அரசியல் வாதியாகவும், சீரிய தலைவராகவும் திகழ்ந்தார். தனது பேச்சாற்றல் மூலம் மக்களிடையே அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியதுடன், “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்கின்ற கோட்பாட்டை மக்களிடையே கொண்டு சென்றார். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத்தந்த மாபெரும் தலைவர் ஆவார்.</p><p>பேரறிஞர் அண்ணா அவர்கள், தனது ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்கள் முன்னேற்றம் அடையும் வகையில் சிறப்பான பல திட்டங்களை வழங்கி ”ஏழையின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்” என்ற கூற்றுக்கு ஏற்ப தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். தாய் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக, ”சென்னை மாகாணம்” என்று அழைக்கப்பட்டு வந்ததை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தார்.</p><p>1967-ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை என்ற பெயரை ‘தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம்’ என மாற்றம் செய்தார். 1968-ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியதுடன் கல்வியில் தமிழுக்கு முதலிடம் வழங்கினார்.</p> <h2>வாய்மையே வெல்லும்</h2><p>தமிழ்நாடு அரசின் முத்திரையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்மெண்ட் ஆப் மெட்ராஸ்’ என்ற ஆங்கில வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழ்நாடு அரசு’ என மாற்றினார். தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் அரசு முத்திரையில் ‘வாய்மையே வெல்லும்’ என்ற சொல்லை இடம் பெறச் செய்தார். சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் பேரறிஞர் அண்ணா மறைந்தும், மக்கள் மனதில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.</p><p>பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணாவின் கொள்கைத் தெளிவு,  உறுதியை  போற்றுவோம்: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-cherish-annas-clarity-of-principles-and-steadfastness-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-cherish-annas-clarity-of-principles-and-steadfastness-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">217e6aed-0d3a-4580-b1c8-623360925074</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:19:56 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:19:56.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,அண்ணா</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/akg7bqqz/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/akg7bqqz/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; </p><p>”தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 118ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கையும்,  சமூகநீதியையும்  ஆதரித்தவர்;  அவை தொடர்பான கொள்கைகளில் தெளிவாகவும், உறுதியாகவும்  இருந்தவர்  என்ற வகையில் அவருக்கு எனது வணக்கங்களையும், மரியாதைகளையும் செலுத்துகிறேன்.</p><p>செண்பகம் துரைராஜன் வழக்கில்  தமிழகத்தில் நடைமுறையில் இருந்த  இட ஒதுக்கீடு செல்லாது என்று  சென்னை உயர்நீதிமன்றமும்,  உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்ததைத்  தொடர்ந்து,  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முழங்கி தந்தைப் பெரியார்  போராடிய நிலையில் அறிஞர் அண்ணாவும்  திமுக சார்பில் தொடர் போராட்டங்களை நடத்தி  சமூகநீதி கோரிக்கைக்கு வலு சேர்த்தார். அப்போராட்டங்களின் பயனாகத் தான்  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.</p><p>மாநில சுயாட்சி கொள்கையில் உறுதியாக இருந்தவர்.  மதுவிலக்கை நீக்கினால் வருவாய் கொட்டும் என அதிகாரிகள் ஆசை காட்டிய போதும், மக்கள் நலனே முக்கியம் என்று கூறு மதுக்கடைகளை திறக்க மறுத்தவர். அவரது இந்த கொள்கை துணிவையும், மக்கள் நலனையும் இந்த நாளில் போற்றி வணங்குவோம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: பைக் வழுக்கி விழுந்து கார் கம்பெனி சூப்பர்வைசர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-car-company-supervisor-dies-after-falling-off-bike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-car-company-supervisor-dies-after-falling-off-bike#comments</comments><guid isPermaLink="false">90af4545-dcb8-43f4-8528-4c6311a47ff6</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:14:48 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:14:48.079Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Thoothukudi,தூத்துக்குடி,கார்,பலி,bike,பைக்,கம்பெனி,killed,car company,Supervisor,சூப்பர்வைசர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/m25to2vf/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து, பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/m25to2vf/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஏரல் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பைக்கிலிருந்து வழுக்கி விழுந்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">கார்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF">கம்பெனி</a> சூப்பர்வைசர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. </p><h2>கார் கம்பெனி சூப்பர்வைசர்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளையை சேர்ந்த ராமசாமி மகன் சொரிமுத்து (வயது 30), தூத்துக்குடியில் உள்ள தனியார் பேட்டரி கார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்செந்தூருக்கு பைக்கில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.</p><h2>பைக் வழுக்கி விழுந்து பலி</h2><p>குரும்பூர் அடுத்த சேதுக்குவாய்த்தான் புதுநகர் பகுதியில் வளைவில் திரும்பும்போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சென்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக பைக் வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரும்பூர் போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்: நிவேதா மீது தாக்குதல்? - வேல்முருகன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-demanding-justice-for-students-death-attack-on-nivetha-velmurugan-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-demanding-justice-for-students-death-attack-on-nivetha-velmurugan-condemns#comments</comments><guid isPermaLink="false">cb460eaf-7a0f-42c5-9620-8aced92861e7</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:14:02 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:14:02.779Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,police,student,Death,கண்டனம்,Velmurugan,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/tew5irue/342.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/tew5irue/342.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிவேதா மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குறியது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>காவல்துறையினர் தாக்குதல்</h2><p>மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு நீதி கேட்டு, மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்தின் போது, தோழர் நிவேதா மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>மாணவரின் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விடை கேட்டு ஜனநாயக வழியில் போராடியவர்களை, காவல்துறையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பெண் மீது காவல்துறையினர் வன்முறையை ஏவுவது, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.</p><h2>விசாரணை</h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் நிவேதா மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உடனடியாக உரிய விசாரணை நடத்தி, தவறு உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் அத்துமீறல் குறித்த குற்றச்சாட்டுகளை மூடிமறைக்காமல், வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்.</p><h2>சிபிசிஐடி</h2><p>அதேவேளையில், மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணம் தொடர்பான உண்மை முழுமையாக வெளிச்சத்திற்கு வர வேண்டும். இந்த வழக்கில் தற்போதைய விசாரணை குறித்து குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரை நேரடியாகத் தலையிட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.</p><h2>அரசின் கடமை</h2><p>மரணத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு உண்மையும் கண்டறியப்பட வேண்டும். குற்றம் நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரியவருமானால், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும். </p><p>மக்களின் கேள்விக்கு அதிகாரத்தின் அடக்குமுறை பதிலாக இருக்கக்கூடாது. உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதே அரசின் கடமை.</p><h2>வலியுறுத்தல்</h2><p>மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு முழுமையான நீதியைப் பெற்றுத்தரவும், போராட்டத்தின்போது காவல்துறையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்</a> சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஏர்வாடி அருகே பயங்கரம்! 2 பேர் வெட்டிப் படுகொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-near-airwadi-2-people-hacked-to-death-police-launch-a-net-to-track-down-the-suspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-near-airwadi-2-people-hacked-to-death-police-launch-a-net-to-track-down-the-suspects#comments</comments><guid isPermaLink="false">0227e0d4-560e-48cc-92e3-c5b94ecdbf9b</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:13:48 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:13:48.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,hospital,ramanadhapuram,2 பேர் கொலை,மர்ம நபர்களுக்கு வலைவீச்சு,ஏர்வாடி அருகே</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/lneoyry5/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இரட்டை கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/lneoyry5/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ஏர்வாடி அருகே இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>இரட்டை கொலை</h2><p>ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த கீழக்கரை காட்டுப்பகுதியில் உள்ள புதருக்குள் 2 பேரின் சடலங்கள் கிடந்துள்ளன. அவற்றை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 2 சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் கோபி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">மருத்துவமனைக்கு</a> அனுப்பி வைக்கப்பட்டன.</p> <h2>மர்ம நபர்களுக்கு வலைவீச்சு</h2><p>மேலும், இந்த கொலையை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">b994428e-34a2-448e-bc3e-d4ed495a46f8</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:13:10 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:13:10.513Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கோட்டையன்,Sengottaiyan,சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/2lk88set/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/2lk88set/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். இதனையடுத்து செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p>அதில், செங்கோட்டையனின் வேட்பு மனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்பு மனுவை ஏற்றதே தவறு எனக் கூறியிருந்தார். இதேபோல், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.</p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார். இன்று இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சாதிவாரிக் கணக்கெடுப்பு: வெறும் எண்ணிக்கைக்காக அல்ல; சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-wise-census-not-just-numbers-rights-ledger-for-social-justice-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-wise-census-not-just-numbers-rights-ledger-for-social-justice-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">108bcbe0-7508-4966-a4a8-3f27f8698719</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:00:29 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:00:29.368Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,சாதிவாரி கணக்கெடுப்பு,மாணிக்கம் தாகூர்,Caste Census,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/45lu76co/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/45lu76co/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாதிவாரிக் கணக்கெடுப்பு வெறும் எண்ணிக்கைக்காக அல்ல; சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பெருநிறுவனங்களின் வாராக்கடன் விவரங்களை வெளியிட மோடி அரசு தொடர்ந்து தயங்குவது, ஆதிக்கச் சலுகைகளை பொதுவெளியில் மறைக்கும் அவர்களின் வர்க்க மற்றும் சாதிய இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது. சுப்ரீம் கோர்ட்டு 2015-லேயே தீர்ப்பளித்தும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா போன்ற பொதுத்துறை வங்கிகள் 28 சதவிகிதம் மட்டுமே வசூலான ரூபாய் 35,716 கோடி பெருநிறுவனக் கடன்களைத் தள்ளுபடி செய்து வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் (Willful Defaulters) பெயர்களை வெளியிட மறுக்கின்றன.</p><p>அதேபோல, தொகுதி மறுவரையறை காரணங்களுக்காகக் கணக்கெடுப்பைத் தள்ளிப்போட்ட மோடி அரசு, சமூக நீதி அமைச்சகம் எஸ்.சி. / ஓ.பி.சி. பட்டியல்களைத் தரத் தயாராக இருந்தும் 'பட்டியல் இல்லை' எனப் பொய் சொல்லி, சாதிவாரி கணக்கெடுப்பை முடக்க 'திறந்தவெளிக் கேள்வி' (Open-ended question) என்ற சதியை அரங்கேற்றியுள்ளது.</p><p>பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு கிடைத்துவிடக் கூடாது என்பதும், உண்மையான ஓ.பி.சி. எண்ணிக்கை வெளிவந்துவிடக் கூடாது என்பதும் ஆர்.எஸ்.எஸ்.-ன் திட்டமிட்ட சதி! ஆர்.எஸ்.எஸ்.-ன் உள்நோக்கத்தை நிறைவேற்ற, தன்னை பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லிக்கொள்ளும் மோடி வெறும் முகமூடியாக இருந்து, அமித்ஷாவுடன் சேர்ந்து இந்த வஞ்சகத்தை அரங்கேற்றுகிறார்.</p><p>2-ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் தலையாய நோக்கமே சாதி விவரங்களைச் சேகரிப்பதுதான்; அது சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான விவகாரம் என்பது அனைவரும் அறிந்தது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தெளிவான பட்டியல் இருக்கும் போது, ஓ.பி.சி. சாதி விவரங்களை மட்டும் முன்பே வரையறுக்கப்பட்ட பட்டியல் இன்றி open-ended முறையில் சேகரிப்பது ஏன்?</p><p>ஒன்றிய அரசின் பட்டியலிலேயே தமிழ்நாட்டில் மட்டும் 220-க்கும் மேற்பட்ட ஓ.பி.சி. சாதிகள் இருக்கும்போது, துல்லியமான பட்டியலைத் தராமல் பொதுவான கேள்வியாக வைப்பது மோடி அரசின் திட்டமிட்ட நாடகம்! 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடும் ஒரு நடைமுறையில், முன்வரையறுக்கப்பட்ட பட்டியல் எதுவும் இல்லாமல் தவறுகளின் அளவைக் கட்டுப்படுத்திவிடலாம் என நினைப்பது வடிகட்டிய பகல்கனவு!</p><p>ஒரு சிறிய எழுத்துப் பிழை கூட ஒரு சமுதாயத்தை வேறொரு சமூகப் பிரிவாக மாற்றிவிடும் பேராபத்து இதில் உள்ளது. தெளிவான Drop-down பட்டியலைத் தவிர்த்துவிட்டு இப்படி ஒரு குளறுபடியான முறையைக் கையாள்வது மொத்தக் கணக்கெடுப்பையும் படுதோல்வியிலேயே முடிக்கும்.</p><p>இது வெறும் நிர்வாகக் குளறுபடி அல்ல உண்மையான ஓ.பி.சி. எண்ணிக்கையைத் திட்டமிட்டே குறைத்துக்காட்டி, எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டையே அடியோடு சிதைத்துவிடும் பேராபத்து! பிற்படுத்தப்பட்ட மக்களை அதிகாரமற்றவர்களாகவே முடக்கி வைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.-ன் நூற்றாண்டு கால சித்தாந்தம். ஆர்.எஸ்.எஸ்.-ன் சமூக நீதி எதிர்ப்பு அஜெண்டாவைச் செயல்படுத்தும் முகமூடிகளாகத்தான் மோடியும் அமித்ஷாவும் இந்த துரோகத்தை அரங்கேற்றுகிறார்கள்.</p><p>ஒரே சமூகப் பெயர் பலவித எழுத்துப் பிழைகளுடன் சிதறிப்போய், துல்லியமற்ற தரவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 69 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமையையே கேள்விக்குறியாக்கும் மோடி அரசின் ஆபத்தான சூழ்ச்சியை அம்பலப்படுத்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவு மாநிலத் தலைவர் டி.ஏ. நவீன் ஒருங்கிணைப்பில் மாநிலம் தழுவிய களப் பிரசாரக் கலந்துரையாடல் நிகழ்வுகளை முன்னெடுக்கிறது !</p><p>செப்டம்பர் 17 அன்று சென்னையில் எனது தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் முன்னிலையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் தொடங்கி வைக்கப்படும் இப்பயணம், தமிழகத்தின் முக்கிய 10 நகரங்களில் விரிவான மக்கள் சந்திப்பு மற்றும் நேரடிச் செயல்விளக்கக் கலந்துரையாடல்களாக நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பாளர்கள் முன்னிலையில், 'Open-ended' முறையினால் உருவாகும் குளறுபடிகளையும், காங்கிரஸ் முன்வைக்கும் சரிபார்க்கப்பட்ட Dropdown முறை மூலமே நம்பகமான சமூகநீதித் தரவுகளைப் பெற முடியும் என்பதையும் நேரடிச் செயல்விளக்கம் மூலம் மெய்ப்பித்துக் காட்டுவோம்.</p><p>கலந்துரையாடல் நிகழ்வு அட்டவணை:</p><p>24.09.2026, தூத்துக்குடி - சி. ராபர்ட் புரூஸ், எம்.பி.</p><p>27.09.2026, கள்ளக்குறிச்சி - கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்</p><p>30.09.2026, சிவகாசி - எஸ். பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி.</p><p>11.10.2026, திண்டுக்கல் - இ.எம். சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் மத்திய அமைச்சர்</p><p>14.10.2026, ராணிப்பேட்டை - ஏ. செல்லக்குமார், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்</p><p>18.10.2026, தஞ்சாவூர் - வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், எம்.பி.</p><p>22.10.2026, விழுப்புரம் - எம்.கே. விஷ்ணு பிரசாத், எம்.பி.</p><p>25.10.2026, திருப்பூர் - கே.வீ. தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்</p><p>28.10.2026, புதுக்கோட்டை - சு. திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்</p><p>01.11.2026, ஈரோடு - விஜய் வசந்த், எம்.பி.</p><p>நமது தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து முழங்குவது போல, சாதிவாரிக் கணக்கெடுப்பு பெயரளவில் கண்துடைப்பாக நடத்தப்படக் கூடாது; அது நேர்மையாகவும் முறையாகவும் நடத்தப்பட வேண்டும்! சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யப் பார்க்கும் மோடி அரசின் வஞ்சக சதியை ஒருபோதும் ஏற்க முடியாது. பின்தங்கிய மக்களின் உரிமைகளை முடக்கும் நோக்கிலான குறைபாடுள்ள வினாத்தாளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஏமாற்று வேலைகளை நிறுத்திவிட்டு, அங்கீகரிக்கப்பட்ட சாதிப் பட்டியலுடன் அரசியல் கட்சிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆலோசனைகளைப் பெற்று சரியான வினாத்தாளை ஒன்றிய மோடி அரசு உடனே உருவாக்க வேண்டும்! சாதிவாரிக் கணக்கெடுப்பு - வெறும் எண்ணிக்கைக்காக அல்ல; சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மின்வெட்டு இருப்பது உண்மைதான்: தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-true-that-there-are-power-cuts-the-tvk-government-needs-to-pay-closer-attention-to-this-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-true-that-there-are-power-cuts-the-tvk-government-needs-to-pay-closer-attention-to-this-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">5110d03d-f7d9-48f1-ac06-af65579ae3ca</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:47:20 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:47:20.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,மின்வெட்டு,மின்வெட்டு பிரச்சினை,power cut - மின்தடை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/jo1i2k2h/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/jo1i2k2h/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>”தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான்.  மின்வெட்டு பிரச்சனையை சீர்செய்ய தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் கூறுவதை கேட்டு தான் அமைச்சர்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் உண்மை தகவலை கூற வேண்டும்.</p><p> திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு. விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்கின்றனர். பதவிக்காக விசிக கூட்டணி மாறியதாக திமுக ஆதரவாளர்கள் பேசுகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியாக வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார்</p>]]></content:encoded></item><item><title>“தமிழக அரசியல் வரலாற்றில் தனியிடம் பதித்தவர் அண்ணா” - டிடிவி தினகரன் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-has-carved-a-unique-place-in-the-history-of-tamil-nadu-politics-ttv-dhinakaran-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-has-carved-a-unique-place-in-the-history-of-tamil-nadu-politics-ttv-dhinakaran-praises#comments</comments><guid isPermaLink="false">5d9ea656-0b73-4fe8-9334-6d2827e67d53</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:32:59 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:32:59.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,political,அண்ணா,புகழாரம்,Anna birthday</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/utzq56oj/341.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/utzq56oj/341.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>புகழாரம்</h2><p>தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்த தமிழ் தாயின் தலைமகன், ஏழை எளிய மக்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த மாபெரும் தலைவர், அறிவால் அரசியலையும் அன்பால் மக்களின் இதயங்களையும் வென்று, தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனியிடத்தைப் பதித்த அரசியல் ஆசான், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE">பேரறிஞர் அண்ணா</a> பிறந்த நாள் இன்று.</p><h2>பேரறிஞர் அண்ணா</h2><p>"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்ற கொள்கையை வாழ்வின் நெறியாக ஏற்று, பேச்சில் நயம், எழுத்தில் வலிமை, செயல்பாட்டில் நேர்மை ஆகியவற்றைத் தனது அடையாளமாகக் கொண்டு, தமிழக அரசியலுக்கு புதிய பாதையை அமைத்து மக்கள் ஆட்சியை நிலைநாட்டிய மகத்துவமிக்க தலைவர் பேரறிஞர் அண்ணா பிறந்த இந்நாளில், மக்கள் நலனுக்காக அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி நினைவுகூர்ந்து கொண்டாடுவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>