<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 20 Sep 2026 12:53:55 +0000</lastBuildDate><item><title>எடப்பாடி பழனிசாமியின் மதுராந்தகம் பிரசாரம்... 2 நாள் பயணத் திட்டம் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-palaniswamis-madhurantakam-campaign-2-day-itinerary-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-palaniswamis-madhurantakam-campaign-2-day-itinerary-released#comments</comments><guid isPermaLink="false">376a5891-50b1-4abc-9091-a0025ec67264</guid><pubDate>Sun, 20 Sep 2026 12:39:44 +0000</pubDate><atom:updated>2026-09-20T12:39:44.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>campaign,எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami ​,பிரசாரம்,மதுராந்தகம்,Madhurandakam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/b4hye57q/admk.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/b4hye57q/admk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எடப்பாடி பழனிசாமியின் மதுராந்தகம் பிரசாரத்திற்கு 2 நாள் பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palaniswami">எடப்பாடி பழனிசாமி</a> மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் 24.9.2026, 26.9.2026 ஆகிய தேதிகளில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.</p><p>இதன்படி, செப்டம்பர் 24-ந்தேதி மாமண்டூரில் பிற்பகல் 3 மணிக்கும், பூதூரில் மாலை 4.30 மணிக்கும், தேவத்தூரில் மாலை 6 மணிக்கும், சரவம்பாக்கத்தில் இரவு 7 மணிக்கும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.</p><p>அதேபோல், செப்டம்பர் 26-ந்தேதி எல். எண்டத்தூரில் பிற்பகல் 3 மணிக்கும், ராமாபுரத்தில் மாலை 4.30 மணிக்கும், எலப்பாக்கத்தில் மாலை 6 மணிக்கும், ஒரத்தியில் இரவு 7 மணிக்கும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.</p><p>சுற்றுப் பயணத் திட்டத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், சிறப்பான முறையில் செய்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் லண்டனுக்கு சென்றது தேவையற்றது - அண்ணாமலை விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-visit-to-london-was-unnecessary-annamalai-criticises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-visit-to-london-was-unnecessary-annamalai-criticises#comments</comments><guid isPermaLink="false">d5d74f4a-3927-4dd4-969b-ef2dc6a140fa</guid><pubDate>Sun, 20 Sep 2026 12:09:48 +0000</pubDate><atom:updated>2026-09-20T12:09:48.856Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,Annamalai,அண்ணாமலை,தொழில் முதலீடு,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/tiacm44y/malai33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  அண்ணாமலை விமர்சனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
முதல்-அமைச்சர் லண்டனுக்கு சென்றது தேவையற்றது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/tiacm44y/malai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>முதல்-அமைச்சரின் லண்டன் பயணம் தேவையில்லாதது என அண்ணாமலை கூறியுள்ளார்.</p> <p>மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி மகா சுசீந்திரன் தலைமையில் நடந்தது. ஜி.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-</p><p>தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> லண்டன் சென்று முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு பதிலாக கோவை, மதுரை உள்ளிட்ட மாணவர்களுக்கு வந்து இங்கு இங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தொழிலை விரிவு படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்காக அரசு 50 சதவீதம் மானியம் வழங்கும் என்றெல்லாம் உறுதி அளித்தாலே தொழில் மேம்படும். பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக நம் நாடு உருவெடுக்கும்.</p><p>முதல்-அமைச்சர் லண்டனுக்கு சென்றது தேவையற்றது. மேலும் நாம் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலைத்துறையை  எடுப்போம். மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா சினிமா தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பது போன்று நிலையில் இருந்தது. பச்சை டோக்கன் வைத்திருப்பவர்கள் அங்கே அமருங்கள். சிவப்பு டோக்கன் வைத்திருப்பவர்கள் இங்கே அமருங்கள் என்று நிலை இருந்தது. மாட வீதிகள் வி.ஐ.பி.க்களின் வாகன காப்பகமாக தான் இருந்தது. ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை என்றெல்லாம் வாசகம் இருக்கிறது. இதை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே நமது குரல், நாம் இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் லீடரே. இது தான் உண்மையான புரட்சி.</p><p>'வீ த லீடர்ஸ்' அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். ஜல்லிக்கட்டு தொடர்பாக எம்.எல்.ஏ. பேசிய விவகாரத்தில் முதல்-அமைச்சர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். விரைவில் மகளிருக்காண பாதுகாப்பு குறித்து மகளிர் மாநாடு நமது இயக்கத்தின் சார்பில் நடைபெற இருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-power-outage-due-to-monthly-maintenance</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-power-outage-due-to-monthly-maintenance#comments</comments><guid isPermaLink="false">65de69e8-6df9-47e2-88e6-5eba513d1844</guid><pubDate>Sun, 20 Sep 2026 12:06:30 +0000</pubDate><atom:updated>2026-09-20T12:06:30.416Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,நாளை மறுநாள்,மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9yvowqvg/powercutnellai.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பராமரிப்பு பணிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9yvowqvg/powercutnellai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள்  மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.</p><p>இதுகுறித்து கடையநல்லூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பா.கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை</h2><p>விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணிகள்</a> நடைபெற உள்ளது. இதனால் இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்க்கண்ட இடங்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்சாரம் இருக்காது.</p> <h2>மின்தடை படும் இடங்கள்</h2><p>சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிக்குளம், மேல கரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் மற்றும் வடுகப்பட்டி.</p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>இதேபோல், சங்கரன்கோவில் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் வரும் நாளை மறுநாள் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளது. இதனால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.</p><p><strong>மின்தடை படும் இடங்கள்</strong></p><h2>மலையாங்குளம் உபமின் நிலையம்</h2><p>மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி.கலிங்கப்பட்டி உபமின் நிலையம்: கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம்.</p><h2>திருவேங்கடம் உபமின் நிலையம்</h2><p>திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம் மற்றும் குண்டம்பட்டி.</p><h2>நக்கலமுத்தன்பட்டி உபமின் நிலையம்</h2><p>நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி மற்றும் மைப்பாறை.</p><p>இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை: இடத்தகராறில் பெண் அடித்துக் கொலை - 5 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-woman-beaten-to-death-in-land-dispute-5-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-woman-beaten-to-death-in-land-dispute-5-arrested#comments</comments><guid isPermaLink="false">2cd29af1-53dc-4745-9ba5-f9d06b1a7b8e</guid><pubDate>Sun, 20 Sep 2026 12:02:01 +0000</pubDate><atom:updated>2026-09-20T12:02:01.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/epv3f3m5/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/epv3f3m5/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் திருமோகூர் அருகே பெருங்குடியை சேர்ந்தவர் 49 வயதான அன்னமயில். கணவர் உயிரிழந்த நிலையில் மகனுடன் வசித்து வந்துள்ளார். அன்னமயிலுக்கும், அவரது கொழுந்தன் மற்றும் நாத்தனார் குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக இடத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அன்னமயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் இருதரப்பினரிடையே தகராறு மேலும் அதிகரித்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 18-ந்தேதி அன்னமயிலுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் அன்னமயிலை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில் நேற்று தனது சகோதரியுடன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அன்னமயிலை ஒரு கும்பல் கல்லால் தாக்கியுள்ளது. அன்னமயில் தப்பி ஓட முயன்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்று கடப்பாறையால் தாக்கி உள்ளனர். அன்னமயிலை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரியிடம், கடப்பாறையை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். </p> <p>அடுத்த சில நிமிடங்களில் கம்பி மற்றும் செங்கற்களால் அன்னமயிலின் தலையில் பலமாக தாக்கி அவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஒத்தக்கடை காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பஸ்சில் சொந்த ஊருக்கு போக அமர்ந்திருந்த வாலிபர்.. உல்லாசத்திற்கு அழைத்த 3 இளம்பெண்கள்...அடுத்து நடந்த சம்பவம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-who-was-about-to-go-to-town-invited-3-young-women-for-fun</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-who-was-about-to-go-to-town-invited-3-young-women-for-fun#comments</comments><guid isPermaLink="false">b218edda-ccb8-45f3-8aee-002943886525</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:56:31 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:56:31.300Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வாலிபர்,உல்லாசம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/xtu71ljn/womneone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உல்லாசத்திற்கு அழைத்த 3 இளம்பெண்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ அடுத்து நடந்த சம்பவம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/xtu71ljn/womneone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழிலாளி ஒருவர் சென்னை கோயம்பேட்டில் பஸ்சில் சொந்த ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தபோது அங்கு வந்த 3 அழகிகள் அவரை உல்லாசத்திற்கு அழைத்தனர். </p><h2>கோயம்பேடு மார்க்கெட்</h2><p>விருத்தாசலத்தை சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர் சென்னை தரமணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊரில் உள்ள தோட்டத்தில் உற்பத்தியான கரும்பு கட்டுகளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து தந்தையுடன் சேர்ந்து விற்பனை செய்தார். பின்னர் அவரது தந்தை வாரி மூலம் சொந்த ஊருக்கு திரும்பி சென்று விட்டார்.</p><h2>உல்லாசத்திற்கு அழைத்த இளம்பெண்</h2><p>தொழிலாளி போதையில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சில் சொந்த ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர் வாலிபரிடம் பேச்சு கொடுத்து உல்லாசமாக இருக்கலாம் என்று  ஆசைவார்த்தை கூறி அழைத்துள்ளார். வாலிபர் பேச்சில் மயங்கி உள்ளார். மேலும் 2 பெண்களும் இருப்பதாக கூறி உள்ளார். அவர்களும் வாலிபரை பார்த்து அழைத்துள்ளனர். செம குஷியான தொழிலாளி  சம்மதித்து ஆட்டோவில் இளம்பெண்ணுடன் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள லாட்ஜிக்கு சென்றார். ஏற்கனவே அந்த ஆட்டோவின் உள்ளே 2 இளம் பெண்கள் இருந்தனர்.</p><h2>பணம் கேட்டு தகராறு</h2><p>லாட்ஜிக்கு சென்றபோது இளம்பெண்ணையும் அந்த  2 பெண்களையும் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தொழிலாளி வெளியே வந்த போது இளம்பெண் அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.</p><p>மேலும் அந்த பெண்ணுடன் வந்த ஆட்டோ டிரைவர் மற்றும் 2 இளம்பெண்களும் சேர்ந்து தொழிலாளி மீது பாய்ந்து அடித்து உதைத்து கல்லால் தாக்கினர். அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து விட்டு இளம்பெண்களும், ஆட்டோ டிரைவரும் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் தொழிலாளியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. </p><h2>உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டு அடிவாங்கிய சம்பவம்</h2><p>அழகிகளுடன்  உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டு அடிவாங்கியதுடன் பணம், செல்போனை இழந்து நொந்துபோன தொழிலாளி இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார். இன்ஸ் பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். </p><p>இதில் உல்லாசத்துக்கு அழைத்து தொழிலாளியிடம் பணம், செல்போனை பறித்து தப்பியது எம்.ஜி. ஆர்.நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரவீன் மற்றும் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் 3 பேர் என்பது தெரிந்தது. இதையடுத்து பிரவீன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இதேபோல் உல்லாசத்துக்கு அழைத்து மேலும் பலரிடம் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறையில் பயங்கர சத்தத்துடன் வீட்டில் விழுந்த இடி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thunder-struck-a-house-in-mayiladuthurai-with-a-terrifying-sound</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thunder-struck-a-house-in-mayiladuthurai-with-a-terrifying-sound#comments</comments><guid isPermaLink="false">db092e0f-23b9-4808-a382-24fcd4f0da1b</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:49:22 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:49:22.646Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,மயிலாடுதுறை,பொருட்கள் சேதம்,Thunder,இடி மின்னலுடன் பலத்த மழை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/jlto1j6l/20.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடியின் தாக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/jlto1j6l/20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை,</p><p>நேற்று இரவு பெய்த கனமழையில் பயங்கர சத்தத்துடன் கூடிய இடி வீட்டின் வாசலில் விழுந்து தூண்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளது.</p><h2>இடியின் தாக்கம்</h2><p>மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அருகே பெருஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. இவர் மின்வாரியத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் பார்த்தசாரதியின் வீட்டின் வாசல் பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதன் தாக்கத்தால், அவரது வீட்டில் இருந்த மின்சார சர்வீஸ் லைனின் இரும்பு கம்பி இரண்டு துண்டுகளாக உடைந்து கீழே விழுந்தது</p><p>மேலும், வீட்டின் வாசலில் இருந்த கான்கிரீட் தூண் பெயர்ந்து நாலாபுறமும் சிதறியது. இந்த இடியின் வீரியம் பார்த்தசாரதியின் வீட்டை மட்டுமன்றி, அவருக்கு எதிர் வரிசையில் உள்ள வீடுகளையும் பதம் பார்த்துள்ளது. இடி தாக்கிய வேகத்தில் எதிரே உள்ள வீட்டின் சுவர்களில் பலத்த விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.</p><h2>ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்</h2><p>இந்த திடீர் இடி விபத்தினால், பார்த்தசாரதியின் வீட்டில் இருந்த மின்சார மீட்டர் பாக்ஸ், எல்.இ.டி தொலைக்காட்சி, ஏசி , வாஷிங் மெஷின் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட அனைத்து மின்சாதனப் பொருட்களும், வீட்டிற்கான சர்வீஸ் வயரிங் அமைப்புகளும் முற்றிலுமாக கருகி சேதமடைந்தன. </p><p>இதேபோல், அந்த வடக்கு வீதியில் உள்ள மற்ற சில வீடுகளிலும் மின்சாதனப் பொருட்கள் பெருமளவில் பழுதடைந்துள்ளதாக அப்பகுதி<a href="https://www.dailythanthi.com/topic/மக்கள்-வேதனை"> மக்கள் வேதனை</a>யுடன் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.</p><h2>கோரிக்கை</h2><p>நள்ளிரவில் நேர்ந்த இந்த இடி விபத்தால் பெருஞ்சேரி கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் வந்து <a href="https://www.dailythanthi.com/topic/ஆய்வு">ஆய்வு</a> நடத்த வேண்டும் என்றும், இடி விழுந்து வாழ்வாதாரப் பொருட்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-drug-awareness-rally-in-theni-mla-jaganath-mishra-flags-it-off</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-drug-awareness-rally-in-theni-mla-jaganath-mishra-flags-it-off#comments</comments><guid isPermaLink="false">7dcaffab-5d6b-4b8d-8b86-38e962121e94</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:43:14 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:43:14.522Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,பேரணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/v9a7l2dg/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/v9a7l2dg/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் ‘போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி’ இன்று நடைபெற்றது. இதனை கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்ததோடு, பேரணியிலும் பங்கேற்றார்.  </p><p>உத்தமப்பாளையம் நகர் முழுவதும் நடைபெற்ற இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில், பள்ளி மாணவர்கள், ஸ்கேட்டிங் மாணவர்கள், ரோட்டரி கிளப் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். </p><p>பேரணியில் பங்கேற்றவர்கள், இளைஞர்கள் போதை பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும், போதைக்கு அடிமையாக கூடாது, சிறுவர்கள் செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும், விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மோசமான வானிலை... அமைச்சர் வன்னி அரசு பயணித்த விமானம் மதுரையில் தரையிறக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bad-weather-minister-vannis-plane-lands-in-madurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bad-weather-minister-vannis-plane-lands-in-madurai#comments</comments><guid isPermaLink="false">c0f7a3b6-d764-4fcf-97a0-4d02f43981c8</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:39:42 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:39:42.299Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>plane,விமானம்,Madurai,மதுரை,தரையிறக்கம்,மோசமான வானிலை,Bad weather,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/piox5maf/32.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/piox5maf/32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>கோவையில் மோசமான வானிலை  காரணமாக வானில் வட்டமடித்த விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது.</p><p> அமைச்சர் வன்னிஅரசு உட்பட 165 பயணிகளுடன் பயணித்த சென்னை - கோவை இண்டிகோ விமானம் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வந்தது. அதன்பின்பு கோவையில் தரையிறங்குவதற்கு சாதகமான சூழல் இல்லாததால் மதுரைக்கு திருப்பி விடப்பட்டு அங்கு தரையிறங்கியது.</p><h2>45 நிமிடங்களுக்கும் மேலாக...</h2><p>இதேபோல மும்பையில் இருந்து மதுரை வந்த மற்றொரு இண்டிகோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">விமானம்</a> 45 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடித்து வருகிறது. அந்த வகையில் மானாமதுரை அருகே 3 முறைக்கு மேலும், தற்போது மேலூர் அருகே 2 முறைக்கு மேலும் வட்டமடித்து கொண்டிருக்கிறது. அதில் 125 பயணிகள் பயணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-power-cut-tirunelveli</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-power-cut-tirunelveli#comments</comments><guid isPermaLink="false">813e6bfc-2fa1-4b1c-b699-59c53f68f12f</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:38:15 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:38:15.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,நாளை,மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/7fw5gkf8/powercutnellai.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பராமரிப்பு பணி]]></media:title><media:description type="html"><![CDATA[ மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/7fw5gkf8/powercutnellai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீதபற்பநல்லூர் துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும்.</p><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் ஜி.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை </h2><p>சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணிகள்</a> செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையத்தில்  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.</p><p> புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன் குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>”தமக” என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய அஜித் ரசிகர்கள்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ajith-fans-have-started-a-new-political-party-called-tmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ajith-fans-have-started-a-new-political-party-called-tmk#comments</comments><guid isPermaLink="false">c792e9b7-4489-4bff-84d5-86429728358d</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:09:11 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:09:11.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Kallakurichi,அஜித்,நடிகர் அஜித்குமார்,Actor Ajithkumar,புதிய அரசியல் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/0nuk3cbg/ajithone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ புதிய அரசியல் கட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ அஜித் ரசிகர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/0nuk3cbg/ajithone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உளுந்தூர்பேட்டை அருகே தமிழக மக்கள் கழகம் என்ற புதிய கட்சியைத்  நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் தொடங்கி உள்ளனர்.</p><h2>அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளியளவும் இல்லை </h2><p>நடிகரும் ரேஸருமான<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"> அஜித் குமார்</a>, திரைப்படங்களில் நடித்துக் கொண்டும், இடையில் கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார்.  நடிகர் அஜித் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும், தமக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளியளவும் இல்லை என்றும் பல முறை பொதுவெளியில் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும் அவரது அரசியல் பிரவேசம் குறித்தான விவாதங்கள் தமிழ்நாட்டில் அவ்வபோது எதிரொலித்து வருகிறது.  ஆனால் இதுவரை அஜித் எந்தவொரு அரசியல் சார்ந்த கருத்தையும் வெளிப்படுத்தியதில்லை. </p><h2>அஜித் - விஜய் சந்திப்பு </h2><p>சினிமாவில், ஒரு கால கட்டத்தில் அஜித் குமாருக்கு பரம எதிரியாக இருந்த விஜய், கடந்த 2024ல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது.  அஜித் ரசிகர்கள் பலரும், தங்கள் அபிமான நடிகரான அஜித்தும் அரசியலில் களமிறங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>சமீபத்தில், முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்று அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்த நிகழ்வு மற்றும் அவர்களின் சந்திப்பு அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளானது. முன்னதாக, முதல்-அமைச்சர் விஜய், மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையின் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கு குறித்து பாராட்டி இருந்தார் அஜித். </p><h2>புதிய கட்சி உதயம்</h2><p>இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ஒருங்கிணைந்து 'தமிழக மக்கள் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கி, கட்சிக்கு புதிய கொடியையும் அறிமுகம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரங்கேறியுள்ளது.</p><p>தமிழக மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவராக ஆபித், மாநில செயலாளராக ராம்குமார், மாநில பொருளாளராக முகம்மது ஷா மற்றும், மாநில அமைப்புச் செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். </p><h2>அஜித்திற்காக பொதுச்செயலாளர் பதவி காலி </h2><p>அஜித் ரசிகர்கள் தொடங்கியுள்ள தமிழக மக்கள் கழகம் கட்சி கொடி மஞ்சள், வெள்ளை, சிவப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கொடியில் இரண்டு புறமும் சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன. தவெக கொடியில் இரட்டை யானை இடம்பெற்றிருக்கும். கிட்டத்தட்ட தவெக கொடியைப் போலவே இந்தக் கட்சிக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் இதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>கட்சி தொடங்கி செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகிகள்,</p><p> "அஜித் சார் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்து தமிழக மக்கள் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளோம். அஜித் சார் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புகிறோம். மாநில பொது செயலாளர் என்ற பதவியை அவருக்காக நாங்கள் காலியாக வைத்துள்ளோம்." எனத் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி மறைவு:  பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-of-sivaji-ganesans-elder-daughter-santhi-premalatha-vijayakanth-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-of-sivaji-ganesans-elder-daughter-santhi-premalatha-vijayakanth-condoles#comments</comments><guid isPermaLink="false">031b9d79-5fbf-4806-922b-9749f29c4a6d</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:06:55 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:06:55.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,சிவாஜி கணேசன்,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,condolences,மகள்,Actor Sivaji Ganesan,daughter,மறைவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hm2oei10/prema.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சாந்தி, பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி மறைவு:  பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hm2oei10/prema.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி மறைவிற்கு  பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வருத்தம்</h2><p>மறைந்த நடிகர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D"> சிவாஜி கணேசனின்</a> மூத்த மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி (71)  காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைந்தேன்.</p> <h2>இனிமையானவர்</h2><p>நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய மூத்த மகள் சாந்தி பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவரது மறைவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>அன்பு சகோதரி சாந்தி நாராயணசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>அவரது ஆன்மா சாந்தியடையவும், இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் வழங்கிடவும் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பண்ருட்டியை அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல்... மருத்துவமனையில் குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mysterious-fever-threatening-panruti-hundreds-of-people-gathered-at-the-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mysterious-fever-threatening-panruti-hundreds-of-people-gathered-at-the-hospital#comments</comments><guid isPermaLink="false">88f3fb5e-5778-4ce1-817f-77f9b627ff9a</guid><pubDate>Sun, 20 Sep 2026 11:04:57 +0000</pubDate><atom:updated>2026-09-20T11:04:57.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>doctor,hospital,மருத்துவமனை,மர்ம காய்ச்சல்,Nurse,Fever,பண்ருட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/osus6a6u/19.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் சூழ்ந்தனர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/osus6a6u/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>மர்ம காய்ச்சலால் இன்று பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான மக்கள் வந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>மர்ம காய்ச்சல்</h2><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் தீவிர பருவநிலை மாற்றம் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p>காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்ததால், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். இதனால் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதில் அங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் திணறும் சூழ்நிலை ஏற்பட்டது.</p><p>இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-</p><p>தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் மற்றும் பெய்த மழையினால் குடியிருப்புப் பகுதிகளில் பெருமளவில் மழைநீர் தேங்கியுள்ளது.</p><p>இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி, அவை கடிப்பதன் மூலமே இந்த மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>கோரிக்கை</h2><p>மேலும், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து தடையற்ற சிகிச்சை வழங்க <a href="https://www.dailythanthi.com/topic/தமிழக-அரசு">தமிழக அரசு</a> ஏற்பாடு செய்ய வேண்டும்.</p><p>பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த <a href="https://www.dailythanthi.com/topic/மர்ம-காய்ச்சல்">மர்ம காய்ச்சல்</a> மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் தமிழக அரசு உடனடியாக தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூரில் கனமழை: ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-tirupattur-water-cascading-vigorously-at-jalagamparai-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-tirupattur-water-cascading-vigorously-at-jalagamparai-falls#comments</comments><guid isPermaLink="false">bb972b5f-1c76-4dc3-aa02-d9b20e40ef17</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:46:32 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:46:32.594Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்,நீர்வீழ்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/u3lfmwdg/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/u3lfmwdg/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>ஜவ்வாது மலையை ஒரு பகுதியாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை மறுபகுதியாகவும் எல்லையாக கொண்டு அமைந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாக உள்ளன. </p> <p>ஏலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக இயற்கை மூலிகைகளுடன் தண்ணீர் கலந்து ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அருவியாய் கொட்டுறது. இந்த அருவியில் குளித்து விட்டு சென்றால் தீராத நோயும் தீர்ந்துவிடும் என்று நம்பப்படுகிறது. வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில், விடுமுறை நாட்களின்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். </p> <p>இதனிடையே கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி வறட்சியாக காணப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு திருப்பத்தூரில் கனமழை பெய்ததை தொடர்ந்து, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் இன்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையும் இன்று அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தருமபுரி: பாறை உருண்டு விழுந்து, ரெயிலின் சக்கர பகுதி சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-rock-fall-damages-train-wheel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-rock-fall-damages-train-wheel#comments</comments><guid isPermaLink="false">942bcd0c-81ac-4237-921b-6dcfdf5ff52b</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:43:00.576Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,ரெயில்,Dharmapuri,Damage,சேதம்,தருமபுரி,பாறை,fall,giant rock</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/v5jk5av4/traindharmapuri.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ரெயிலின் சக்கர பகுதி சேதம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தருமபுரி: பாறை உருண்டு விழுந்து, ரெயிலின் சக்கர பகுதி சேதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/v5jk5av4/traindharmapuri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி, </p><p> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF">தருமபுரி</a> மாவட்டம் தொப்பூர் - முத்தம்பட்டி இடையே இன்று காலை பெய்த கனமழை காரணமாகத் திடீரெனப் பலத்த மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறை உருண்டு விழுந்ததில் ரயிலின் சக்கரம் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p> <h2>கனமழை </h2><p>நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">எக்ஸ்பிரஸ் ரெயில்</a> சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் இன்று காலை தொப்பூர் - முத்தம்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மலைப்பாதையில் கடந்து சென்றபோது, அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக திடீரென பலத்த மண் சரிவு ஏற்பட்டது. </p> <h2>ரெயிலில் மோதிய பாறை</h2><p>மண் சரிவின் வேகம் தாங்காமல் மலையின் உச்சியிலிருந்து ஒரு ராட்சத பாறை பயங்கர சத்தத்துடன் தண்டவாளத்தை நோக்கி உருண்டு வந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த பெரிய பாறை, வேகமாகச் சென்று கொண்டிருந்த நாகர்கோவில் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பக்கவாட்டு பகுதியிலும், சக்கரத்திலும் பயங்கரமாக மோதியது.</p><h2>பயணிகள் அலறல் </h2><p>பாறை மோதிய வேகத்தில் ரெயிலின் சக்கர பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. பயங்கர சத்தம் கேட்டு ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர். எனினும், லோகோ பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை உடனடியாக நிறுத்தினார். இதனால் ரெயில் தடம் புரளாமல் பெரும் விபத்து  தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை; அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர்.</p><h2> பழுது நீக்கம்</h2><p>இதனை தொடர்ந்து, விபத்துக்குள்ளான ரெயில் மிக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு அருகில் உள்ள தருமபுரி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த ரெயில்வே தொழில்நுட்பக் குழுவினர், சேதமடைந்த சக்கர பகுதியை முழுமையாக பழுது நீக்கி சரிசெய்தனர்.ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ரெயிலை முழுமையாக ஆய்வு செய்து அனுமதி அளித்த பின், ரெயில் மீண்டும் பெங்களூரு நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது. </p> <p>மலைப்பாதையில் ஓடும் ரெயில் மீது பாறை உருண்டு விழுந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/facilities-for-differently-abled-persons-will-soon-be-provided-in-temples-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/facilities-for-differently-abled-persons-will-soon-be-provided-in-temples-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">fdbd32ee-2b3f-4622-a524-6273ddb14941</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:40:56 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:40:56.796Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,temples,கோவில்,இந்து சமய அறநிலைத்துறை,Ramesh,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்,அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/f42r5dhe/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/f42r5dhe/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாற்றுத்திறனாளிகள் கோவில்களில் தடையின்றி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.</p><h2>விரைவில் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்</h2><p>இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-a-5-fee-charged-at-temples-minister-ramesh-explains">அமைச்சர் ரமேஷ்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்புச் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கையை அரசு சார்பில் உரிய முறையில் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரைவாக ஆலோசனை மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி கோவில்களுக்குள் சென்று இறைவனை சுமுகமாக தரிசனம் செய்து திரும்புவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மேலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, ஏற்கனவே நமது மானியக் கோரிக்கையின் அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்பாட்டிற்காக தானியங்கி மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட தேவையான வசதிகள் கோவில்களில் மிக விரைவில் ஏற்படுத்தித் தரப்படும்.</p><h2>எவ்வித தடையுமின்றி தரிசனம்</h2><p>மாற்றுத்திறனாளிகளும் அனைத்து பக்தர்களைப் போலவே எவ்வித தடையுமின்றி, பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னுரிமையுடன் மேற்கொள்ளப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சுடுகாட்டுக்கு வழியில்லாத அவலம்: சடலத்துடன் சாலை மறியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-way-to-the-crematorium-road-blocked-with-corpse</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-way-to-the-crematorium-road-blocked-with-corpse#comments</comments><guid isPermaLink="false">6e2f9d99-db86-4fdf-80ac-bb774dae8282</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:38:50 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:38:50.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,சாலை,பாதை,மறியல்,தர்மபுரி,Dharmapuri,குறித்து,Road block,சுடுகாடு,Crematorium</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/l57wydcm/18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொதுமக்கள் சாலை மறியல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/l57wydcm/18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>சுடுகாட்டிற்குச் செல்ல வழிப்பாதை இல்லாததைக் கண்டித்து, முதியவரின் சடலத்தை நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் தீவிர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>சாலை மறியல்</h2><p>தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் (வயது 85) என்ற முதியவர் நேற்று இரவு வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்களும் பொதுமக்களும் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.</p><p>ஆனால், மயானத்திற்குச் செல்லும் பாதையைத் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து பட்டா வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இறந்தவரின் உடலைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.</p><p>இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயானத்திற்குச் செல்ல முறையான வழிப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்று அரூர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மனு அளித்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அதிகாரிகள் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உயிரிழந்த வேடியப்பனின் சடலத்தை மாநில நெடுஞ்சாலை செங்கம் செல்லும் சாலையில் நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.</p><p>இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த <a href="https://www.dailythanthi.com/topic/காவல்-துறை">காவல் துறை</a>யினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். </p><p>இருப்பினும், "அரூர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் நேரில் வந்து உடனடியாக மயானப் பாதையை மீட்டுத் தர வேண்டும்; அதுவரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" எனக் கூறி பொதுமக்கள் தொடர்ந்து சடலத்துடன் <a href="https://www.dailythanthi.com/topic/சாலை-மறியல்">சாலை மறியலி</a>ல் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அம்மாப்பேட்டை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>“இளவேனிலின் சாதனை தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம்” - ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ilavenils-achievement-is-an-example-for-the-youth-of-tamil-nadu-adhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ilavenils-achievement-is-an-example-for-the-youth-of-tamil-nadu-adhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">378704b9-d927-49f5-95f1-646a45e80327</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:30:19 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:30:19.617Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Achievement,இளவேனில் வாலறிவன்,Elavenil Valarivan,சாதனை,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/lzc99uej/31.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/lzc99uej/31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் மற்றும் இந்திய மகளிர் அணி பிரிவுகளில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/aadhav-arjuna">ஆதவ் அர்ஜுனா</a> வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மனமார்ந்த வாழ்த்துகள்</h2><p>ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி - '10m Air Rifle' தனிநபர் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீராங்கனையர் இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><h2>நாட்டிற்குப் பெருமை</h2><p>ஏற்கனவே, இவர் மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் குழுப் போட்டியில் இடம்பெற்று பதக்கம் வென்ற நிலையில், தற்போது ஒரே நாளில் இரண்டாவது பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, தொடர் உழைப்பு ஆகியவற்றின் மூலம் நிச்சயம் வெற்றி பெற முடியும் என இவரது சாதனை தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“மக்களின் தயவில்தான் ஆட்சி நடக்கிறது” - அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-is-done-with-the-grace-of-the-people-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-is-done-with-the-grace-of-the-people-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">aae49bc4-c776-4514-b842-d2147e365606</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:13:20 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:13:20.770Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,MK Stalin&apos;,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/7zb73zb0/30.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/7zb73zb0/30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>“தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்குத்தான் போட்டி... ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.</p><p>இதுகுறித்து அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">ராஜ்மோகனிடம்</a> செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-</p><p>“பட்டிமன்ற பேச்சாளரான நான் சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்துவிட்டேன். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டிமன்ற பேச்சாளரைப் போல் எதுகை, மோனையில் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த போட்டியில் கூட தி.மு.க. இல்லை.</p><h2>மெஜாரிட்டி</h2><p>பெண்கள், வாக்காளர்கள், மக்கள், சாமானியர்கள் தயவில்தான் ஆட்சி அமைத்துள்ளோம். எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி இல்லை. 96 இடங்களில் வெற்றி பெற்றபோதுகூட தி.மு.க. ஆட்சி அமைத்தது. யார் தயவு?</p><p>யாருடைய தயவும் எங்களுக்கு தேவை இல்லை. தி.மு.க. கூட்டணிக் கட்சியினரிடம் பண்ணையார் மனப்பான்மையுடன்தான் இருந்தது.</p><h2>மக்களின் தயவில் ஆட்சி</h2><p>‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று முதலமைச்சர் கூறினார். அதைச் செய்துள்ளார். மக்களின் தயவில்தான் ஆட்சி நடக்கிறது. வேறு யாருடைய தயவிலும் ஆட்சி நடக்கவில்லை. இந்த ஆட்சி தொடரும்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>களக்காடு அருகே முன் விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை -  ஒருவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-near-kalakkadu-over-previous-enmity-one-held</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-near-kalakkadu-over-previous-enmity-one-held#comments</comments><guid isPermaLink="false">b0ee0335-df81-4d3c-9809-1c8ec13cc87a</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:06:28 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:06:28.388Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர்,வெட்டிக்கொலை,முன் விரோதம்,களக்காடு,One arrested,A young man,previous enmity</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hhewpnoo/muthuraja.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முத்துராஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ களக்காடு அருகே முன் விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை -  ஒருவர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/hhewpnoo/muthuraja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p> திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டி<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88"> படுகொலை</a> செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விரைந்து செயல்பட்டு ஒருவரை கைது செய்துள்ளனர்.</p> <h2>முன்விரோதம்</h2><p>நெல்லை மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">களக்காடு</a> காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழதேவநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் ராம் (33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.</p><h2>அரிவாள் வெட்டு</h2><p>சம்பவத்தன்று இரவு, ரமேஷ் ராமை முத்துராஜா என்பவர் போன் செய்து வரவழைத்துள்ளார். இதையடுத்து ரமேஷ் ராம் தனது உறவினர்கள் இருவருடன் கீழதேவநல்லூர் மணிமுத்தாறு கால்வாய் கரைக்கு சென்றுள்ளார். அங்கு இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கும்பல், ரமேஷ் ராமை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் களக்காடு காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். </p><h2>ஒருவர் கைது</h2><p>கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே களக்காடு போலீஸார் துரிதமாக நடவடிக்கை எடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக தற்போது ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><p>இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை உண்ணி காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும் - சுகாதாரத்துறை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tick-borne-encephalitis-outbreak-likely-to-continue-until-january-health-ministry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tick-borne-encephalitis-outbreak-likely-to-continue-until-january-health-ministry#comments</comments><guid isPermaLink="false">dd940141-bbf8-4858-bfd5-957bb8a05558</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:55:35 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:55:35.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுகாதாரத்துறை,Fever,உண்ணி காய்ச்சல்,Tick Fever</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/s1031af6/feaver33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  உண்ணி காய்ச்சல்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுகாதாரத்துறை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/s1031af6/feaver33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை உண்ணி காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும் தமிழக சுகாதார துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில் இதுகுறித்து<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88"> தமிழக சுகாதாரத்துறை</a> இயக்குநர் சோமசுந்தரம் கூறுகையில், பருவமழை காரணங்களால் பல்வேறு வகையான நோய் பாதிப்புகள் மக்களிடையே பரவலாக கண்டறியப்பட்டு வருகிறது.</p><h2>உண்ணி காய்ச்சல் அதிகரிப்பு </h2><p>தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாமல், பலவிதமான காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதில் ஒருவகையான காய்ச்சலாக, தற்போது ‘ஸ்க்ரம் டைபஸ்’ (scrub typhus) என்று அழைக்கப்படும் உண்ணி காய்ச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது.</p><p>இந்த வகையான காய்ச்சல் ’ஓரியண்டியா சுட்சுகாமுஷி’ என்ற பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. இந்தவகையான பாக்டீரியாக்கள் புல் மற்றும் புதர்களில் காணப்படும் ஒட்டுண்ணியாக வாழ்கிறது.</p><h2>அறிகுறிகள் என்ன?</h2><p>இந்த பாக்டீரியா முன்பு காட்டுப் பகுதிகளில் இருந்து பரவியது; ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக அனைத்து இடங்களிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.</p><p>* இந்த காய்ச்சல் பாதிப்பின் போது, பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு உடல்வழி, சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும்.</p><p>*  இந்த வகையான ஏதாவது ஒரு அறிகுறிகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.</p><p>*  மேலும் இந்த காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, ஆனால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓடும் ரெயிலில் ஏறிய போது விபரீதம்...மின்னல் வேகத்தில் மீட்ட காவலர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/disaster-struck-while-boarding-a-moving-train-a-police-officer-rescued-the-person-with-lightning-speed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/disaster-struck-while-boarding-a-moving-train-a-police-officer-rescued-the-person-with-lightning-speed#comments</comments><guid isPermaLink="false">c280d570-7c53-40db-8a82-531a849ec898</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:46:42 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:46:42.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பயணி,Egmore,Railway,எழும்பூர் ரயில் நிலையம்,station,தவறி விழுந்த</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/im23mla4/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரயிலில் தவறி விழுந்த பயணி மீட்ட காவலர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/im23mla4/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>எழும்பூர்,</p><p>ஓடும் ரெயிலில் ஏறிய போது தவறி விழுந்த பயணியை மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய காவலரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.</p> <h2>உயிர் காப்பாற்றிய காவலர்</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 8 மணியளவில் 7-வது நடைமேடையில் இருந்து திருச்சி நோக்கி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது, ஆண் பயணி ஒருவர் ரெயிலின் பின்புறத்தில் இருந்த முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் அவசரமாக ஏற முயன்றார். </p><p>அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் தவறி, நடைமேடைக்கும் ரெயிலுக்கும் இடையேயான இடைவெளியில் விழுந்தார். <a href="https://www.dailythanthi.com/topic/ரெயில்">ரெயிலுடன்</a> இழுத்துச் செல்லப்பட்ட அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிக்கொண்டார்.</p><h2>பாராட்டு</h2><p>அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் 12-வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் தீபக், இதனை கவனித்ததும் உடனடியாக ஓடிச்சென்று, சிறிதும் தாமதிக்காமல் பயணியைப் பிடித்து மேலே இழுத்து பத்திரமாக மீட்டார். காவலர் </p><p>தீபக்கின் துரிதமான மற்றும் துணிச்சலான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டது. அவரது துணிச்சலான செயலுக்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/பாராட்டு">பாராட்டு</a> தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
த.வெ.க. ஆட்சி சரியில்லை என்றால், நான் கேள்வி கேட்பேன்:  நடிகர் பிரகாஷ் ராஜ்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-dmk-rule-is-not-right-i-will-question-prakash-raj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-dmk-rule-is-not-right-i-will-question-prakash-raj#comments</comments><guid isPermaLink="false">71a3152f-4d28-4795-a6a3-0054ec974b59</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:28:48 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:28:48.820Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>த.வெ.க.,actor Prakash Raj,நடிகர் பிரகாஷ் ராஜ்,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/f5u7x6bc/tpgap.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/f5u7x6bc/tpgap.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி</p><p>த.வெ.க. ஆட்சி சரியில்லை என்றால், நான் கேள்வி கேட்பேன் என <a href="https://www.dailythanthi.com/news/india">நடிகர் பிரகாஷ் ராஜ்</a> கூறியுள்ளார்.</p><p>தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து உள்ளது.  முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று உள்ளார்.  இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் திருச்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.</p> <p>அப்போது அவரிடம் தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.  இதற்கு பதிலளித்து பேசிய அவர், முதல்-அமைச்சர் விஜய், அவருக்கு வாக்களித்தவர்கள் மட்டுமின்றி, வாக்களிக்காதவர்களுக்கும் முதல்-அமைச்சராக இருக்கிறார்.  அவருக்கு காலஅவகாசம் தர வேண்டும்.  அவருடைய அரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சிக்கும் முன்பு, ஓராண்டாவது அவர்களுக்கு நேரம் தர வேண்டும் என்றார்.</p><h2>பிடிக்கவில்லை என்பதற்காக..</h2><p>எனக்கு விஜய் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளன.  நான், தேர்தலுக்கு முன்பு கூட அதுபற்றி பேசியிருக்கிறேன்.  ஆனால், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து உள்ளனர்.  அதன்பின், 120 நாட்களே ஆகியுள்ளன.</p>  <p>அதனால், அதற்குள் எந்த முடிவுக்கும் நாம் வந்து விட முடியாது.  அவர்களுக்கு நாம் நேரம் அளிக்க வேண்டும்.  ஓராண்டுக்கு பின்னரும் அவர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்றால், அவர்களை நான் கேள்வி கேட்பேன் என்றார்.</p><p>அவர்களை உடனடியாக நாம் விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது.  ஆட்சியில் இருப்பவர்களை நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, உடனே போய் நாம் விமர்சிக்க கூடாது.  ஜனநாயகம் மற்றும் வாக்களித்த மக்களை நாம் மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை அருகே காலை உணவு திட்ட கூடத்தில் லட்சக்கணக்கில் முறைகேடு? தவெக எம்.எல்.ஏ.  ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-breakfast-program-funds-scam-allegations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-breakfast-program-funds-scam-allegations#comments</comments><guid isPermaLink="false">203e6fd2-f5b6-4d7f-93e3-34409e66bf7d</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:26:26 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:26:26.954Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,ஆய்வு,inspection,முறைகேடு,காலை உணவு திட்டம்,tvk mla,Chief Minister Breakfast Scheme,தவெக எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="360" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/m222w2xn/karupaaiah.jpg" width="640"><media:title type="html"><![CDATA[ தவெக எம்.எல்.ஏ. கருப்பையா]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை அருகே காலை உணவு திட்ட கூடத்தில் லட்சக்கணக்கில் முறைகேடு? தவெக எம்.எல்.ஏ.  ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/m222w2xn/karupaaiah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முதல்-அமைச்சரின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்ட</a> விரிவாக்க கூட பணிகளில் லட்சக்கணக்கில் நிதியை கையாடல் செய்து பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.</p><h2>அதிர்ச்சி தரும் பில்!</h2><p>தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்காக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவசேரி அரசு பள்ளி வளாகத்தில் காலை உணவு திட்டத்திற்காக சமையல் கூடம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் மின்சார வசதிகள் செய்வதற்காக போடப்பட்ட பில்கள் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.</p><p>அங்கு புதிதாக வெறும் 4 மின் விளக்குகள் மற்றும் 1 எக்சாஸ்ட் பேன் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தரப்பில் ரூ.33,000 பில் போட்டு மோசடி செய்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><h2>ரூ.10.63 லட்சம் கையாடல்?</h2><p>தேவசேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மொத்தம் 19 மையங்களில் இந்த உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 19 மையங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொமாக வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே உண்மையாக செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கணக்கு காட்டும் போது ரூ.10.63 லட்சம் வரை போலி பில்கள் தயாரித்து அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><h2>எம்.எல்.ஏ. ஆய்வு</h2><p>மாணவர்களின் உணவு திட்ட பணியில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த தகவலையடுத்து, சோழவந்தான் தொகுதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தமிழக வெற்றி கழகத்தின் </a>சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மின் விளக்குகள், பேன் மற்றும் கட்டுமான பணிகளின் தரத்தை பார்த்து அதிர்ந்து போன அவர், அதற்குரிய பில்களையும் அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு செய்தார். </p><p>இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டில் இரட்டை வெள்ளி பதக்கம் வென்ற இளவேனில்: வானதி சீனிவாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-congratulates-elavenil-on-winning-double-silver-medal-at-asian-games</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-congratulates-elavenil-on-winning-double-silver-medal-at-asian-games#comments</comments><guid isPermaLink="false">55a63411-9c8f-42d0-87ba-20741eb4f2a9</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:24:29 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:24:29.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Asian Games,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Silver medal,ஆசிய விளையாட்டு,வெள்ளி பதக்கம்,இரட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/kou6rntd/29.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/kou6rntd/29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆசிய விளையாட்டில் இரட்டை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">வெள்ளி பதக்கம்</a> வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>2 வெள்ளிப் பதக்கம்</h2><p>ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் மற்றும் இந்திய மகளிர் அணி பிரிவுகளில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று, இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>பதக்க வேட்டை</h2><p>தங்களின் அசாத்திய திறமை, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பால் இந்தியாவின் பதக்க வேட்டையை வெற்றிகரமாகத் தொடங்கி வைத்திருப்பது பெருமிதம் அளிக்கிறது.</p><p>தாங்கள் இன்னும் பல உயரங்களைத் தொட்டு, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி, எண்ணற்ற சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டு, ரேக்ளாவில் கலக்கும் பாரம்பரிய மலைமாடுகள்!..</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/traditional-mountain-cows-mingle-in-jallikattu-and-rekla</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/traditional-mountain-cows-mingle-in-jallikattu-and-rekla#comments</comments><guid isPermaLink="false">5e056512-28bb-42db-9d49-4c9ab7fdd547</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:24:04 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:24:04.550Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,தமிழகம்,jallikattu,ஜல்லிக்கட்டு,Theni,தேனி,Rekla races,ரேக்ளா,மலைமாடுகள்,Mountain Cattle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/kw5gtemz/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜல்லிக்கட்டு, ரேக்ளாவில் கலக்கும் பாரம்பரிய மலைமாடுகள்!...]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/kw5gtemz/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF">தேனி</a> மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான மலைமாடுகள், தமிழகத்தின் தொன்மைமிகு நாட்டு மாட்டு இனங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும்.</p><h2>'தேனி மலை மாடுகள்'</h2><p>மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மடியில், இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது 'மலை மாடுகள்' எனப்படும் பாரம்பரிய நாட்டு மாட்டு இனம். பல நூற்றாண்டுகளாக இம்மண்ணின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாடுகள்</a>, வெறும் கால்நடைகள் மட்டுமல்ல. அவை அந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத் தூண்கள். இவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">தமிழகத்தின்</a> தொன்மைமிகு நாட்டு மாட்டு இனங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவை.</p><figure><img alt="மலைமாடுகள்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9vrcouua/மலைமாடுகள்.jpg" /></figure><h2>நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகம்</h2><p>தேனி மலைமாடுகள் மற்ற சாதாரண மாடுகளைப் போன்றவை அல்ல. கடுமையான மலைப் பாதைகளிலும், செங்குத்தான பாறைகளிலும் மிக லாவகமாக ஏறிச் செல்லும் அசாத்திய உடலமைப்பு கொண்டவை. வறட்சி மற்றும் கடுமையான காலநிலையைத் தாங்கி வளரக்கூடியவை. காடுகளில் கிடைக்கும் மூலிகைகளையும், இயற்கையான புற்களையும் மட்டுமே உண்டு வாழ்வதால், இவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகம்.</p><h2>சாணம் மிகச்சிறந்த இயற்கை உரம்</h2><p>இந்த மாடுகளின் சாணம் மற்றும் கோமியம் ஆகியவை விவசாய நிலங்களுக்கு மிகச்சிறந்த இயற்கை உரமாகும். ஓடி ஆடி மேயும் சுறுசுறுப்பும், கூர்மையான கொம்புகளும் இவற்றின் முக்கிய குணாதிசயமாகும். பகலில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் மாடுகள், மாலையில் பட்டியில் அடைக்கப்படும். அவற்றின் சாணம், பட்டியில் இருந்து சேமிக்கப்பட்டு இயற்கை உரமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு என்று தனி கிராக்கி உள்ளது. இதனை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயிகள்</a> போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். </p><h2>காடு 6 மாதம், நாடு 6 மாதம்</h2><p>காடு 6 மாதம், நாடு 6 மாதம் என்பார்களே, அது இந்த மலைமாடுகளுக்கு சரியாகப் பொருந்தும். இவை 6 மாத காலம் மலைப்பகுதிகளிலும், 6 மாத காலம் ஊர்ப்புற பகுதிகளிலும் வாழ்பவை. தலைமுறை தலைமுறையாக இந்த மலை மாடுகளை வளர்க்கும் கால்நடை வளர்ப்போர், தங்களின் மாடுகளைக் கூட்டமாக மலைக் காடுகளுக்குள் ஓட்டிச் செல்வது வழக்கம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதலே வனத்துறையினரிடம் முறையான கட்டணம் செலுத்தி 'மேய்ச்சல் அனுமதி' பெற்று, மாடுகளைக் காடுகளுக்குள் கொண்டு சென்று மேய்த்து வந்தனர். மழைக் காலங்களில் ஊர்ப்புற பகுதிகளிலும், கோடை காலங்களில் மலைப்பகுதிகளிலும் இவை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படும். மலைப்பகுதியில் பட்டி அமைத்து மாடுகளை மேய்த்து வந்த காலங்களும் உண்டு. </p><h2>ஜல்லிக்கட்டு, ரேக்ளா</h2><p>தேனி மலைமாடுகளில் இருந்து பெறப்படும் கன்றுகள், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">ஜல்லிக்கட்டு</a>, ரேக்ளா பந்தயங்களில் முத்திரை பதித்து வருகின்றன. இதன் வலிமை, வேகம், ஆக்ரோஷம் போன்றவை ஜல்லிக்கட்டு களத்தை அனல் பறக்க விடுகின்றன. வாடிவாசலில் இருந்து வெளியேறும் முன்பே களத்தையும், வீரர்களையும் இவை கூர்ந்து கவனிக்கும். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறும் இதன் அழகும், கம்பீரமும் தனித்துவம் வாய்ந்தவை. </p><p>இந்த கன்றுகளை வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தய பிரியர்கள் தேனிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களுக்கு பிடித்த கன்றுகளை நேரில் வந்து பார்த்து வாங்கிச் செல்கின்றனர். சிலர் கன்றுகளை வாங்கி சில ஆண்டுகள் வளர்த்து விற்பனை செய்வதும் உண்டு. தேனி மாவட்ட கால்நடை வர்த்தகத்தில் மலைமாடுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. </p><h2>அழிவின் விளிம்பில்...</h2><p>பாரம்பரிய மலைமாடுகள் தற்போது அழிவின் விளிம்பில் நிற்கின்றன. இந்த மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில் வனத்துறைக்கும், மாடுகளை வளர்ப்போருக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்குவதில் வனத்துறை கெடுபிடி காட்டி வந்தது. வன விலங்குகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை முன்னிறுத்தி மலைமாடுகளுக்கான மேய்ச்சல் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. </p><h2>ஐகோர்ட்டின் மதுரை கிளை தீர்ப்பு</h2><p>மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கும் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88">ஐகோர்ட்டின் மதுரை கிளை</a>யில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தடை, மலைமாடுகள் வளர்ப்போரின் தலையில் பேரிடியாக இறங்கியது. மலைப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு மாடுகளை அழைத்துச் சென்றால், வனத்துறையின் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர். </p><h2>மேய்ச்சல் நிலம் தேடி...</h2><p>இதன் விளைவாக, மலைமாடுகளின் எண்ணிக்கை வேகமாக சரியத் தொடங்கியதாக மாடுகளை வளர்ப்போர் வேதனை தெரிவிக்கின்றனர். மேய்ச்சல் நிலம் தேடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மாடுகள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தனியார் நிலங்களிலும், மலையடிவார பகுதிகளிலும் தற்போது மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தார்ச்சாலைகளில் அழைத்துச் செல்லும்போது வாகன விபத்துகளில் சிக்கி மாடுகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. </p><p>காடும், ஊருமாய் வாழ்ந்த மலைமாடுகள், சில ஆண்டுகளாக மேய்ச்சலுக்காக நாடோடிகளாக ஊர், ஊராய் இடம் பெயரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த மாடுகளின் மேய்ச்சலுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்கும் இடங்களே சிறந்தவை. பட்டியில் இருந்து காலையில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது நீர்நிலையில் தண்ணீர் குடிக்க அழைத்துச் செல்வார்கள். பின்னர் மாலையில் பட்டியில் அடைக்கும் போது மீண்டும் நீர்நிலைக்கு அழைத்துச் செல்வார்கள். இதனால், மலையடிவாரத்தை ஒட்டிய நீர்நிலைகள் சார்ந்து, சில மாதங்களுக்கு ஓரிடம் என்ற வகையில் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன. அவ்வாறு இடம் பெயரும்போது விபத்திலும், புதுப்புது சூழலில் நோய் தாக்கியும் மாடுகள் பலியாவது தொடர்கதையாக உள்ளது. </p><figure><img alt="போடி முந்தல் பகுதியில் மேய்ச்சல் இடம் தேடி மலைமாடுகள் சாலையில் அணிவகுத்துச் சென்ற காட்சி." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/v5g4a9b7/போடி-முந்தல்-பகுதியில்-மேய்ச்சல்-இடம்-தேடி-மலைமாடுகள்-சாலையில்-அணிவகுத்துச்-சென்ற-காட்சி.jpg" /></figure><h2>மலைகளில் மேய்ச்சலுக்கு தடை</h2><p>ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் இருந்த இனம் தற்போது, சில ஆயிரங்களாக குறைந்து அழிவின் விளிம்பில் நிற்கின்றன. மலைகளில் மேய்ச்சலுக்கு தடை உள்ளதால் அந்த தடையை விலக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதும், மாவட்டம் முழுவதும் மேய்ச்சல் தரிசு நிலங்களை மீட்டெடுத்து அவற்றை மேய்ச்சலுக்கு ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்பதும் கால்நடை வளர்ப்போரின் கோரிக்கையாக உள்ளது. அரசு இந்த மாடுகளை பாதுகாக்க துணை நிற்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். </p><h2>நிறங்கள் சூட்டும் பெயர்கள்</h2><p>மலைமாடுகளில், அவற்றின் தோலின் நிறம் மற்றும் உடலில் அமைந்திருக்கும் புள்ளிகள், கோடுகளின் வடிவத்தை வைத்து அவை 'போர்' கன்றுகளாக வகை பிரிக்கப்படுகின்றன. கன்றாக இருக்கும்போது லேசான புள்ளிகளாகத் தொடங்கி, வளர வளர உடலின் 'போர்' நிறம் தெளிவுபெற்று அடர்த்தியாக மாறும். அதன் விவரம் வருமாறு: </p><figure><img alt="பல வண்ணங்கள், பல வடிவங்களில் உள்ள தேனி மலைமாடுகள்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/alwnf4bu/பல-வண்ணங்கள்-பல-வடிவங்களில்-உள்ள-தேனி-மலைமாடுகள்.jpg" /></figure><p>செம்போர்: வெள்ளைப் பின்னணி உடலில் அடர்ந்த சிவப்பு அல்லது செவலை நிறத்துடன் ஆங்காங்கே புள்ளிகள் அல்லது வரிகள் கலந்து காணப்படும். </p><p>கரும்போர்: வெள்ளைப் பின்னணி உடலில் ஆங்காங்கே கருப்பு நிற புள்ளிகள் அல்லது வரிகள் கலந்து காணப்படும். </p><p>கருமறை: உடலில் புள்ளிகளாக இல்லாமல், வரைபடம் போலவோ, புள்ளி திட்டுகளாகவோ அமைந்திருக்கும் தோல் வண்ணம் ஆகும். வெள்ளைப் பின்னணி கருப்பு நிறத் திட்டுகள் அமைந்திருந்தால் அது கருமறை. </p><p>செம்மறை: வெள்ளை பின்னணியில் சிவப்பு அல்லது செவலை நிறத் திட்டுகள் அமைந்திருக்கும். </p><p>மைனாப்போர்: உடலில் வெள்ளை புள்ளிகளுடன் சாம்பல் நிறத்தில் இருக்கும். </p><p>வெண்போர்: உடலில் பெரும்பகுதி வெண்மையாகவும் அதில் லேசான சாம்பல் அல்லது சிவப்பு அல்லது கருப்பு புள்ளிகள் பரவி காணப்படும். </p><p>செவலை: உடல் முழுவதும் புள்ளிகள் இல்லாமல் அடர் சிவப்பு அல்லது செம்பட்டை நிறத்தில் இருப்பவை. </p><p>பால்வெள்ளை: உடல் முழுவதும் வெள்ளையாக இருக்கும். அதே பால் வெள்ளையில், உடலின் முன் பகுதியில் சந்தனம் பூசியது போல் லேசான மஞ்சள் நிறம் இருந்தால் அது சந்தனப்பிள்ளை என்று அழைக்கப்படுகிறது. </p><p>காரி: உடல் முழுவதும் ஒரே சீராக அடர் கருப்பு நிறத்தில் இருந்தால் அது காரி. அதுவே, முன்னாடியும், பின்னாடியும் கருப்பாகவும், நடுவில் லேசான செவலை நிறத்திலும் இருந்தால் அது பனங்காரி. </p><p>சாம்பல்: புகை போன்ற மங்கலான சாம்பல் நிறத்தில் இருக்கும். இது மயிலை வகையின் உட்பிரிவு ஆகும். இந்த நிறங்கள் தவிர்த்து முகம் மற்றும் உடல் குறியீடுகளை வைத்தும் வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில், நெற்றியில் மட்டும் தனியாக ஒரு வட்டமான வெள்ளைப் பொட்டு போன்ற அடையாளம் இருந்தால் அது பொட்டு என்றும், முகம் மற்றும் கொம்புப் பகுதியில் தனித்துவமான வரிகள் இருந்தால் அது கொம்பன் என்றும் அழைக்கப்படுகிறது. </p><h2>தனித்துவமிக்க செம்போர், கரும்போர்</h2><p>தேனி மலைமாடுகளில் பல வண்ணங்கள் உள்ள போதிலும், செம்போர், கரும்போர் கன்றுகளுக்கே மவுசு அதிகம். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், ரேக்ளா பந்தய காளை வளர்ப்போர் இந்த கன்றுகளைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தய களங்களில் தனித்துவம் பெற்றது செம்போர் கன்றுகள். இதன் கம்பீர தோற்றம் களத்தில் மிக எடுப்பாக தெரியும். ஜல்லிக்கட்டு வாடிவாசலிலும், ரேக்ளா பந்தயங்களிலும் இந்த காளைகள் சீறிப்பாயும் வீரியம் கொண்டவையாக கருதப்படுகின்றன. அதுபோல், கரும்போர் என்பது அதிக சேட்டைக்கார காளை என பெயர் எடுத்தது. கருப்பும், சாம்பலும் கலந்த மிரட்டலான தோற்றம் கொண்டதோடு, அதிக சுறுசுறுப்பும் முரட்டுத்தனமும் கொண்டவை. இதனால், செம்போரை விடவும் கரும்போருக்கு கிராக்கியும் அதிகம், விலையும் அதிகம். </p><h2>கன்றுகளின் விலை</h2><p>ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களுக்கு தேனி மலைமாடுகளில் இருந்து கன்றுகள் தேர்வு செய்யப்படுகின்றன. கன்றுகளின் வயது, போர் வகைக்கு ஏற்ப அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. சுமார் ஒரு வயதுள்ள கரும்போர் கன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், செம்போர் கன்று ரூ.14 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. 1 முதல் 3 வயது வரையிலான கன்றுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செல்கிறது. 5 வயது பூர்த்தி அடைந்த காளைக்கு அதன் கொம்பு, முகம் மற்றும் உடல் அமைப்பு, ஆக்ரோஷம், வேகத்தை பொறுத்து அவை விலைபோகிறது. அதிலும் கரும்போர், செம்போருக்கு தான் கிராக்கி. தனித்துவமான சில காளைகளை, சில லட்சம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை கொடுத்து வாங்குவதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போட்டி போடும் நிலைமையும் உள்ளது. </p><figure><img alt="கரும்போர், செம்போர் கன்றுகள்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/efzh4jid/கரும்போர்-செம்போர்-கன்றுகள்.jpg" /></figure><h2>இயற்கை தந்த பலம்!</h2><p>தேனி மலைமாடுகள் தினமும் மேய்ச்சலுக்காக 6 முதல் 12 கி.மீ. வரை நடந்து செல்கின்றன. மலைப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்வதாலும், இயற்கையான புற்கள், மூலிகைகளை தின்பதாலும் அவற்றுக்கு உடல், மன வலிமை அதிகம். மேய்ச்சலுக்கு சென்ற இடத்திலேயே மாடுகள் கன்றுகளை ஈன்றிவிடும். பிறந்த ஒரு மணி நேரத்தில் கன்றுகள் எழுந்து, நடந்து மாடுகளுடன் சேர்ந்து பட்டிக்கு வந்து விடும். பிறந்த முதல் நாளிலேயே 5 கி.மீ. தூரத்துக்கு நடந்து வரும் இயற்கையான வலிமை இதற்கு உண்டு. சில மாடுகள், கன்றுகள் ஈன்றினால் கன்றுகளை மலைப்பகுதியில் அல்லது புதருக்குள் மறைத்து வைத்துக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு. சில நாட்கள் வரை அவ்வாறு கன்றுகளை மறைத்து வைத்துக் கொண்டு, தானும் மறைந்து கொண்டு கன்றுகளை பாதுகாக்கும் குணம் கொண்டது. அவை, காடுகளில் உள்ள வேட்டை விலங்குகளில் இருந்து கன்றுகளை பாதுகாக்கும் இயற்கையான தற்காப்பு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. </p><h2>மாடுகள் கழுத்தில் மணி</h2><p>மனிதர்களிடம் அவ்வளவு எளிதில் இணக்கமாக பழகாது. அதை கன்றுகளில் இருந்து பிடித்து வந்து அதனோடு பழகுவதற்கே மாதக் கணக்கில் காலம் எடுக்கும். பட்டியில் அடைக்கப்பட்ட மாடுகளில் இருந்து விற்பனைக்காக ஒருபோதும் பால் கறக்கப்படாது. பசுக்களின் பால் முழுவதும் கன்றுகளுக்கு தான். மற்ற மாடுகளை போல் பால் அதிகம் இருக்காது. அதே நேரத்தில் அதிக சத்து நிறைந்தது. இதனால். கன்றுகள் நோய் எதிர்ப்பு சக்தியுடனும், பலமிக்கதாகவும் இருக்கும். கிராமங்களில், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமானதாக இல்லாத பட்சத்தில், இங்கிருந்து பால் மாடுகளை வாங்கிச் சென்று தாய்ப்பாலுக்கு நிகராக பயன்படுத்துவதும் உண்டு. மேய்ச்சலுக்கு செல்லும் இடங்களில் மாடுகள் தொலைந்து விடாமல் தடுக்கவும், அவை இருக்கும் இடத்தை அடையாளம் காணவும் அவற்றின் கழுத்தில் மணியை கட்டித் தொங்கவிடுவதும் வழக்கம். </p><figure><img alt="கன்றுகளுக்கு பாலூட்டும் மலைமாடுகள்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/3pdmd2iz/கன்றுகளுக்கு-பாலூட்டும்-மலைமாடுகள்.jpg" /></figure><h2>மீண்டும் வேண்டும் மேய்ச்சல் உரிமை</h2><p>ஜான் பென்னிகுயிக் மலைமாடுகள் வளர்ப்போர் சங்க தலைவர் கென்னடி கூறுகையில், 'தேனி மலைமாடுகளை பல தலைமுறையாக வளர்த்து வருகிறோம். ஜமீன் காலத்திலேயே மாடுகளை மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல அனுமதி பெறப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேய்ச்சல் அனுமதிக்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தப்பட்டது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, மேய்ச்சல் அனுமதியை இலவசமாக்கினார். காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என்பது போல், 6 மாத காலம் மலைப்பகுதியிலும், மீதம் 6 மாத காலம் விவசாய நிலம், தரைப்பகுதியிலும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்தோம். பின்னர் வனத்துறை கெடுபிடி காரணமாக மேய்ச்சல் அனுமதி சீட்டு வழங்கும் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2022-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு, மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்கு சரணாலயப் பகுதிகளில் மேய்ச்சலுக்குத் தடை விதித்தது. கால்நடைத் துறையின் மேய்ச்சல் தரிசு நிலங்களும் மேய்ச்சலுக்கு பயன்படுத்தும் நிலையில் இல்லை. இந்த தடை உத்தரவில் இருந்து விதிவிலக்கு பெற்றுத் தர அரசு முன்வர வேண்டும். </p><h2>கன்றுகள் விற்பனை</h2><p>வன உரிமைகள் சட்டம் 2006-ன்படி, வனப் பகுதியை நம்பி வாழும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியச் சமூகத்தினருக்கு வனங்களில் மேய்ச்சல் உரிமை உண்டு. வனத்துறை இந்தச் சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி. மலைமாடு வளர்ப்போரின் பாரம்பரிய மேய்ச்சல் உரிமையை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். போதிய மேய்ச்சல் நிலமின்றி மாடுகள் அழிவின் விளிம்பில் உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு காளைகள் வளர்ப்பில் தமிழகம் முழுவதும் ஆர்வம் அதிகரித்துள்ளதால், கன்றுகள் வாங்க பலர் வருகின்றனர். கன்றுகள் விற்பனை தான் ஓரளவு வாழ்வாதாரமாக உள்ளது' என்றார். </p><figure><img alt="கென்னடி, கண்ணன்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/tcn3smmx/கென்னடி-கண்ணன்.jpg" /></figure><p>தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், 'காடுகளுக்குள் சென்று வரும் இந்த மாடுகள், அங்குள்ள அடர்ந்த புற்களை உண்பதால் காடுகளில் காட்டுத்தீ பரவுவது இயற்கையாகவே தடுக்கப்பட்டது. மேலும், மாடுகளின் கொம்புகள் பட்டு மண்ணின் தரம் உயர்ந்து, காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலை பாதுகாக்கப்பட்டது. வன உரிமைச் சட்டம் 2006, மேய்ச்சல் உரிமையை அங்கீகரிக்கிறது. அந்த சட்டத்தின்படி மேய்ச்சல் அனுமதி பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். மேய்ச்சல் உரிமையை மீட்க பல போராட்டங்கள் நடத்தியும் தீர்வு இல்லை. </p><p>வனப்பகுதிக்குள் செல்ல தடை இருப்பதால், மாடுகள் பட்டினியால் இறப்பதை தடுக்க மலையடிவாரங்கள், அரசு தரிசு நிலங்கள், மேய்ச்சல் தரிசு நிலங்கள் ஆகியவற்றை உடனடியாக மீட்டு மலைமாடுகளின் மேய்ச்சலுக்கு ஒதுக்கித்தர வேண்டும். தேனி மலைமாடுகளை அழியும் நிலையில் உள்ள பாரம்பரிய நாட்டுமாடு என்று அறிவித்து அவற்றை வளர்ப்போருக்கு மாதாந்திர பராமரிப்பு மானியம், தீவன உதவி வழங்க வேண்டும். இந்த பாரம்பரிய இனம் அழிந்தால், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்த மலைமாடுகளில் இருந்து வலிமையான காளைகள் கிடைக்காமல் போய்விடும்' என்றார். </p><h2>வன அதிகாரிகள்</h2><p>வன அதிகாரிகள் கூறுகையில், 'மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவதற்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள், வன விலங்குகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே வனத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமானது' என்றனர். </p>]]></content:encoded></item><item><title>அச்சம் தேவையில்லை: தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது - அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-for-alarm-dengue-cases-have-been-declining-for-three-consecutive-years-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-for-alarm-dengue-cases-have-been-declining-for-three-consecutive-years-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">e1107556-d1b6-4cb1-be1e-fb76a038b6ba</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:17:57 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:17:57.106Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>டெங்கு,Dengue,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,அருண்ராஜ்,Arunraj,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/0hnsvsmi/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/0hnsvsmi/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகுங்கள் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.</p><h2>காய்ச்சல் பாதிப்பு</h2><p>இது தொடர்பாக, அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அருண்ராஜ் </a>வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாட்டில் டெங்கு நிலவரம்: தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது: 56,863 (2023) → 46,971 (2024) → 25,585 (2025) → 17,049 (2026, இதுவரை).</p><p>ஒவ்வொரு காய்ச்சல் பாதிப்பும் கண்காணிக்கப்படுகிறது; காய்ச்சல் முகாம்கள், கொசு ஒழிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.</p><h2>அலட்சியம் கூடாது</h2><p>அச்சம் தேவையில்லை - ஆனால் அலட்சியமும் கூடாது. வீடுகளில் தேங்கிய நீரை அகற்றுங்கள்; காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகுங்கள். இணைந்து செயல்படுவோம், தமிழ்நாட்டை பாதுகாப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: பாக்கு, நெற்பயிரை சேதப்படுத்திய காட்டு யானைகள் - விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephants-damage-areca-nut-and-paddy-crops-farmers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephants-damage-areca-nut-and-paddy-crops-farmers-concerned#comments</comments><guid isPermaLink="false">8fc09a1a-66da-4036-a019-8556f8f456bd</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:13:57 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:13:57.601Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானைகள்,Wild elephants</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/m2q91gdd/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/m2q91gdd/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர் வயலில் இரவில் காட்டு யானைகள் பாக்கு மரங்களை யும், நெற்பயிர்களையும் சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p><h2>காட்டு யானைகள் அட்டகாசம்</h2><p>கூடலூர் புத்தூர்வயல்,மாக்க மூலா, கோடமூலா உள்பட பல பகுதிகளில் 7 காட்டு யானைகள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக முகாமிட்டு வருகிறது. அங்குள்ள வீடுகளையும் இரவில் முற்றுகையிட்டு வருகிறது. இதேபோல் பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களையும் நாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.</p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவில் அருகே 3 காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் நுழைந்தது. பின்னர் முகமது என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை முறித்து சேதப்படுத்தியது. இதில் குலைக ளுடன் கூடிய வாழைகள் சரிந்து விழுந்தது. சில வாரங்களில் அறுவடை செய்ய வேண்டிய குலைகள் சேதமடைந்து இருப்பதை கண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர்.</p><h2></h2><h2>நெல் நாற்றுகளை மிதித்து</h2><p>இதேபோல் சைலஜா என்பவரது வயலுக்குள் புகுந்த காட்டு யானைகள் நடவு செய்திருந்த நெல் நாற்றுகளை மிதித்து நாசம் செய்தது. இதனால் நஷ்டம் அடைந்திருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புலம்பினர். எனவே சேதமடைந்த பயிர்களுக்கு ஏற்ற இழப்பீடு தொகையை வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-</h2><p>பாக்கு, நெல் நாற்றுகள் மட்டுமின்றி வாழைகளை அடிக்கடி காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வனவிலங்குகள் அட்டகா சத்தால் விவசாயத்தை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். தற்போது விவசாய பயிர் மட்டுமின்றி நீர்ப்பாசன குழாய்கள், மோட்டாரை யும் காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன. எனவே சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-a-minor-girl-young-man-arrested-under-pocso-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-a-minor-girl-young-man-arrested-under-pocso-act#comments</comments><guid isPermaLink="false">817434da-8a32-4b5d-aebd-035b09e8bffd</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:05:00 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:05:00.054Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,போக்சோ சட்டம்,POCSO case</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/sz0o61qg/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/sz0o61qg/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை, </p><p>தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஆச்சாம் பட்டி மேலத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (33) சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. </p> <p>இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அச்சத்தில் அலறினாள். உடனே மணிகண்டன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>  ]]></content:encoded></item><item><title>சிப்காட், என்.எல்.சி சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்த துடிப்பதா? - அன்புமணி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-sipcot-rushing-to-acquire-more-land-for-nlc-mine-anbumani-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-sipcot-rushing-to-acquire-more-land-for-nlc-mine-anbumani-asks#comments</comments><guid isPermaLink="false">5d4ef270-5d49-4d95-ba66-6193bb1828d0</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:03:42 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:03:42.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,என்.எல்.சி,சுரங்கம்,சிப்காட்,கேள்வி,NLC,Sipcot,நிலங்கள்</media:keywords><media:content height="360" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/6ms4lwfd/anubumani.jpg" width="640"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/6ms4lwfd/anubumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிப்காட், என்.எல்.சி சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்த துடிப்பதா? மக்களை பாதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2> புதிய சிப்காட் வளாகம்</h2><p>கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக தியாகவல்லி, குடிக்காடு பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்ட 1097 ஏக்கருடன் மேலும் 164 ஏக்கர் நிலங்களையும், என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலப்பறிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும். மீண்டும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D">சிப்காட்</a> வளாகங்களையும், நிலக்கரி சுரங்கங்களையும் திணிப்பதும், நிலங்களை பறிப்பதும் கண்டிக்கத்தக்கவை.</p><h2>மக்கள் தொடர் போராட்டங்கள்</h2><p>கடலூர் மாவட்டத்தின் தலைநகரமான கடலூரில் 2625 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு அருகிலேயே குடிக்காடு மற்றும் தியாகவல்லி பகுதிகளில் 1119 ஏக்கரில் இன்னொரு சிப்காட் வளாகத்தை உருவாக்க முடிவு செய்த திமுக அரசு அப்பகுதிகளில், 1097 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவகான அரசாணையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி பிறப்பித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களை நிகழ்த்தி வரும் நிலையில், இப்போது குடிக்காடு, தியாகவல்லி கிராமங்களில் மொத்தம் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு கடந்த ஒன்றாம் தேதி வெளியிட்டுள்ளது.</p><h2>தவெக அரசு </h2><p> இந்த நிலங்கள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கடந்த காலங்களில் இரு தனியார் பெரு நிறுவனங்களால் குறைந்த விலையில் பறிக்கப்பட்டவை ஆகும். அந்த நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவற்றை அரசே பறிக்க துடிப்பதை ஏற்க முடியாது.</p> <p>புதிய அறிவிக்கையின் மூலம் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 75 சதவீதம் பெரு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றாலும், இதன் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1119 ஏக்கர் பரப்புடன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 164.20 ஏக்கரையும் சேர்த்து, மொத்தம் 1,283 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்படவுள்ளதை தவெக அரசு உறுதி செய்துள்ளது.</p><h2> 3,968 ஏக்கர்</h2><p> தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் ஓரகடத்தில் 3157 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செய்யாறில் 2937 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பெரிய சிப்காட் அமைந்துள்ளது. இந்த இரண்டுக்கும் அடுத்த நிலையில் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சிப்காட் 2625 ஏக்கரில் கடலூரில் தான் உள்ளது. அத்துடன் 1283 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்கப்பட்டால் 3,968 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் கடலூரில் தான் செயல்படும். </p><h2>வளர்ச்சி அல்ல</h2><p>இது கடலூர் மாவட்டத்திற்கான வளர்ச்சி அல்ல.... மாறாக பேரழிவு ஆகும். இது கடலூருக்குத் தேவையில்லை. அதேபோல், என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காக கங்கைகொண்டான் கிராமத்தில் 12.60 ஏக்கர் பரப்பளவிலான 68 துண்டு நிலங்களும், சுரங்கம் 1ஏ விரிவாக்கத்திற்காக வானதிராயபுரம் கிராமத்தில் 3.21 ஏக்கர் பரப்பளவிலான 77 துண்டு நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. </p><p>இவை அனைத்தும் வீட்டுமனை நிலங்களாகும். இவை கையகப்படுத்தப்பட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு இடமில்லாத நிலை ஏற்படக்கூடும்.</p> <h2>ரசாயன ஆலைகள்</h2><p>கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் மாசுபடுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் நீரிலும், நிலத்திலும் கலந்ததால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களின் தாய்ப்பாலிலும், அங்கு விளையும் இளநீரிலும் டையாக்சின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள்கள் அதிகமாக கலந்திருக்கின்றன. </p><p>இன்னொருபக்கம், கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் மேலும் 1.283 ஏக்கரில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பட்டால் கடலூர் மாவட்டம் முழுவதும் நச்சுக்காடாக மாறிவிடும்.</p><h2>மக்கள் வாழ்வாதாரம் </h2><p>அதுமட்டுமின்றி, சிப்காட் வளாகம் அமைக்கப்படுவதால் உழவர்கள் மற்றும் பொதுமக்களால் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. குடிக்காடு. தியாகவல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வளம் மிகுந்தவை. அவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டப்படுகிறது. ஆனால், சில இடங்களில் அடிப்படையான வழிகாட்டி மதிப்பாக ஏக்கருக்கு ரூ.3.31 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு. அதனடிப்படையில் தான் இழப்பீடு கணக்கிடப்படுகிறது. </p> <h2>கூடுதல் தொகை இழப்பீடு</h2><p>வழிகாட்டி மதிப்பை விட சுமார் 3 முதல் 4 மடங்கு வரை கூடுதல் தொகை இழப்பீடாக வழங்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும், இழப்பீடாக வழங்கப்படும் தொகை அப்பகுதியின் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்பது தான் உண்மையாகும். அதையும் தாண்டி. குடிக்காடு, தியாகவல்லி பகுதியில் உள்ள மக்களின் ஒற்றை ஆதாரம் விவசாயம் மட்டும் தான். இந்த நிலங்களை குறைந்த விலை கொடுத்து அரசு பறிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடுகிறது. இதனால், நிலத்தை இழக்கும் மக்கள் சொந்த மண்ணிலேயே கூலிகளாக மாறி விடுவார்கள்.</p><h2>வாய்மூடி மவுனமாகிவிடுவார்</h2><p>முந்தைய திமுக ஆட்சியில் காவிரி பாசன மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படுவதற்காவும், மதுரை பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காகவும் நிலங்கள் கையகப்படுத்துவதாக இருந்தால், அதை தடுப்பதற்காக பதவி விலகவும் தயங்க மாட்டேன் என்று அப்போதைய முதல்-அமைச்சர் வீர வசனம் பேசினார். கடலூர் மாவட்ட மக்களின் நிலம் பறிக்கப்படுவதாக இருந்தால் மட்டும் வாய்மூடி மவுனமாகிவிடுவார். இப்போதைய முதலமைச்சரோ பரந்தூர் மக்களுக்காக விமான நிலையத் திட்டத்தையே கைவிடுவார்; ஆனால், கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும். மீண்டும் நிலம் எடுக்க ஆணையிடுகிறார்.</p><h2>திமுக அரசின் நீட்சியா?</h2><p>இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா. திமுக அரசின் நீட்சியா? என்று தமிழ்நாட்டு மக்கள் ஐயம் எழுப்புகிறார்கள். தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கும் திட்டம். என்.எல்.சி சுரங்கம் 1. 1ஏ விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவற்றையும், அவற்றுக்காக மொத்தம் 1277 ஏக்கர் நிலங்களை கையகப் படுத்துவதற்கான அறிவிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பிரதமரை இழிவுபடுத்தும் ‘பார்ட் டைம்’ அரசியல்வாதி - ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/part-time-politician-who-insults-the-prime-minister-nainar-nagendran-condemns-rahul-gandhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/part-time-politician-who-insults-the-prime-minister-nainar-nagendran-condemns-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">9441db68-2884-464c-9df4-ae8bfd369cd3</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:48:15 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:48:15.887Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,ராகுல் காந்தி,Rahul Gandhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ggxndz92/nainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ggxndz92/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தன்னைத்தானே ஒரு கேலிப்பொருளாக மாற்றிக்கொண்டுள்ள ராகுல் காந்தி, இனியாவது தனது நாடக அரசியலைக் கைவிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.</p><h2>'பார்ட் டைம் அரசியல்வாதி'</h2><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, நேற்று ஒரு பொது மேடையில் கேலி, கிண்டல் செய்து, மிமிக்ரி நடிகரைப் போலக் கேலிக்கூத்துகளை அரங்கேற்றியிருக்கும் அரசியல் கோமாளி ராகுல் காந்தியின் செயலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ராகுல் காந்தி இதுபோல் பொது மேடைகளில் நடந்துகொள்வது முதல் முறையல்ல; தொடர் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட கடுமையான விரக்தியின் வெளிப்பாடாகத் தொடர்ச்சியாக இவ்வாறு செய்து வருகிறார். உண்மையில் ராகுல் காந்தி என்பவர் ஒரு முழுநேர மக்கள் தலைவரே கிடையாது; அவர் ஒரு 'பார்ட் டைம் அரசியல்வாதி'. ஒவ்வொரு தேர்தல் முடிவின்போதும் வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசப் பயணம் மேற்கொள்வதையே வழக்கமாகக் கொண்டவர்.</p><h2>நாடக அரசியலைக் கைவிட வேண்டும்</h2><p>எப்போதாவது அரசியல் மேடைகளுக்கு வந்து இதுபோன்று மலிவான நாடகங்களை அரங்கேற்றிவிட்டு, அடுத்த நாளே தனது உல்லாச வாழ்க்கைக்குத் திரும்பிவிடும் ஒருவரை இந்திய மக்கள் எப்படித் தங்கள் தலைவராக ஏற்பார்கள்? அதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாமல், அந்த விரக்தியையும் வெறுப்பையும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது இம்முறையில் காட்டிக்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.</p><p>நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கண்ணியத்தை மறந்து, தன்னைத்தானே ஒரு கேலிப்பொருளாக மாற்றிக்கொண்டுள்ள ராகுல் காந்தி, இனியாவது தனது நாடக அரசியலைக் கைவிட வேண்டும். மேடைகளில் அரங்கேற்றும் மலிவான கேலிக்கூத்துகள் மூலம் மக்களைத் திசைதிருப்பிவிடலாம் என்ற அவரின் பகற்கனவு ஒருபோதும் பலிக்காது. எனவே இனியாவது சுயபரிசோதனை செய்துகொண்டு அவர் பொறுப்புடன் செயல்படத் தவறினால், அவரது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற கோமாளி வேடங்களே மிஞ்சும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை: திருவண்ணாமலையில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-devotees-wait-for-three-hours-for-darshan-in-tiruvannamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-devotees-wait-for-three-hours-for-darshan-in-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">4dbb8517-d997-4521-b618-f6e0f4bc27c5</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:45:57 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:45:57.018Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,பக்தர்கள்,Devotees,Tiruvannamalai</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/w0spj8ac/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/w0spj8ac/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.</p><h2></h2> <h2>வாரவிடுமுறை நாள்</h2><p>அந்த வகையில், இன்று வார விடுமுறை நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர்.</p><h2>பக்தர்கள் சாமி தரிசனம்</h2><p>இன்று அதிகாலை முதல் திருவண்ணாலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அதிர்ச்சி சம்பவம்: டிஜிட்டல் கைது செய்ததாக கூறி என்ஜினீயரிடம் ரூ.45 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-incident-engineer-defrauded-of-45-lakh-in-digital-arrest-scam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-incident-engineer-defrauded-of-45-lakh-in-digital-arrest-scam#comments</comments><guid isPermaLink="false">7a2b2be6-7c78-4a03-a4a5-970243ba389b</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:30:03 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:30:03.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மோசடி,Erode,ஈரோடு,fraud,Digital arrest,டிஜிட்டல் கைது,சைபர் கிரைம்,cyber crime</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/qbufwad6/kler.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/qbufwad6/kler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>கோபியில் டிஜிட்டல் கைது செய்ததாக கூறி என்ஜினீயரிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.</p><h2>டிஜிட்டல் கைது</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/erode">ஈரோடு</a> மாவட்டம் கோபியை சேர்ந்த 65 வயதான ஓய்வு பெற்ற என்ஜினீயர் ஒருவரின் செல்போனுக்கு ஒரு வாட்ஸ்-அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய வர், தன்னை மும்பை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும், ஓய்வு பெற்ற என்ஜினீயரது அடையாள அட்டைகளை வைத்து செல்போன் சிம் கார்டு வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் அவரை டிஜிட்டல் கைது செய்து வைத்திருப்பதாக கூறி உள்ளார். </p><h2>மும்பை போலீசார்</h2><p>இதனால் பதற்றம் அடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். மேலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். </p><p>அவர் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது செல்போனுக்கு ஒரு 'லிங்க்' வந்தது. பின்னர் அவர் அதை திறந்து பார்த்தார். மீண்டும் மும்பை போலீசார் என அறிமுகம் செய்து அவருக்கு வாட்ஸ்-அப் அழைப்பு வந்தது. அவர் அவர்கள் கூறியபடி லிங்கில் விவரங்கள் பதிவு செய்துள்ளார். </p><p>அப்போது வந்த ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (ஓ.டி.பி.) அவர் பதிவு செய்தார். சிறிது நேரத்தில் ஓய்வு பெற்ற என்ஜினீயரின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.45 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. மேலும் அவர் கணக்கை சோதனை செய்தபோது பணம் மாயமாகி இருந்தது. </p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டபோது அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் <a href="https://www.dailythanthi.com/topic/erode">ஈரோடு</a> போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>ஈரோடு மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 72 சைபர் கிரைம் வழக்குகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/erode">ஈரோடு</a> மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வடிவங்களில் மோசடியாளர்கள் பொதுமக்களுக்கு வலை விரிக்கிறார்கள். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தொடர்ந்து பொதுமக்கள் ஏமாந்து வருகிறார்கள். </p><p>இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-</p><p>தற்போது ரூ.1 லட்சத்துக்கு மேல் மோசடி செய்யப்பட்டால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 72 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். போலி செயலிகளை திறக்க வேண்டாம். இணையதளம் மூலமாக யாருடனும் தங்கள் விவரங்களை பகிர வேண்டாம். டிஜிட்டல் கைது என்று யாராவது மிரட்டினால் பயப்படாமல் உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: குடிபோதையில் அலுவலகத்துக்கு வந்த ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-panchayat-secretary-suspended-for-reporting-to-work-drunk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-panchayat-secretary-suspended-for-reporting-to-work-drunk#comments</comments><guid isPermaLink="false">924d0823-e397-4ee5-a39d-73f13d52dee8</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:25:41 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:25:41.374Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,குடிபோதை,Drunk,Panchayat Secretary,ஊராட்சி செயலர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/99432and/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/99432and/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட் டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). இவர், பல்லடம் ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட மல்லேகவுண்டம்பாளையம் கிராம ஊராட்சியின் செயலராக உள்ளார். நேற்று இவர், ஊராட்சி அலுவலகத்துக்கு பணிக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.</p><p>ஊராட்சி அலுவலகத்தில் வரி செலுத்த வந்த பொதுமக்கள் சிலர் இதை கவனித்தனர். இதையடுத்து அவர்கள் ஊராட்சி செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.</p><p>மேலும் இது தொடர்பாகவட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரசீதா பேகத்தை அனுப்பி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். அவர் நடத்திய விசாரணையில், ஊராட்சி செயலர் ராஜேந்திரன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையிலும் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊராட்சி செயலர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இருக்கிற அரசியல் குப்பைகளை அள்ளிதான் ஆக வேண்டும்: அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-political-filth-in-tamil-nadu-must-be-cleared-away-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-political-filth-in-tamil-nadu-must-be-cleared-away-annamalai#comments</comments><guid isPermaLink="false">e766a598-8914-4091-871b-2c58b9ca74df</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:09:40 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:09:40.894Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,அரசியல்,politics</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/tqgy3edg/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/tqgy3edg/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையில் வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-</p><p>“ஜூன் 5-ம் தேதி ஆரம்பித்து 15-வது நாளில் 20 லட்சம் உறுப்பினர்களை வீ த லீடர்ஸ் அமைப்பு நடவு செய்துள்ளது. தமிழகத்தில் 5 கோடி 60 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். ஒன்றரை கோடிக்கு மேல் மக்கள் எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினராக இல்லை. தமிழகத்தில் இருக்கிற அரசியல் குப்பைகளை அள்ளிதான் ஆக வேண்டும் அதற்கான காலம் வந்து கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் மொழியையும் பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டும்.</p><p>நாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்போது இந்து சமய அறநிலையத்துறை எனும் அமைப்பை எடுப்போம். உதாரணத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் நிகழ்வைப் பற்றி சொல்லலாம். தவெக அரசு சினிமாவில் ப்ளாக் டிக்கெட் விற்பது போல, கும்பாபிஷேக டிக்கெட்டுகளை விற்றார்கள்.</p><p>தான் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை சட்டமன்றத்தில் சபாநாயகர் முதல் ஒவ்வொரு உறுப்பினர்களும் காண்பித்துக் கொள்கிறார்கள். சட்டமன்றத்தில் பேசக்கூடிய விசயமா அது, இங்கு எல்லா மதமும் சமம் தான். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையையும், பிராமண துவேஷத்தையும் நான் ஏற்கமாட்டேன்; பெரியாரின் பெண் இன விடுதலை, சாதி ஒழிப்பை ஏற்கிறேன்.</p><p>முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வது பழைய காலத்து அரசியல். லண்டன்லேயே பொருளாதாரம் இல்ல, அவன் எப்படி நம்மகிட்ட போடுவான்?. இந்திய நிறுவனங்கள் தான் இங்கிலாந்தில் முதலீடு செய்கின்றன. இந்தியாவில் தொழிலதிபர்களிடம் பேசி முதலீட்டை ஈர்க்கலாம்.. உள்ளூர் தொழிலதிபர்களே தயாரா இருக்காங்க. முதல்-அமைச்சர் லண்டனுக்கே போயிருக்க வேண்டாம். முதல்-அமைச்சர் இங்கு இருக்கக்கூடிய நிறுவனங்களை அணுக வேண்டும். உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த முதல்-அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஓட்டுநர் உரிமம் பணியாளர்கள் 280 பேர் பணி நீக்கம்... மீண்டும் வழங்க இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/280-driving-license-employees-dismissed-communist-party-of-india-insists-on-reinstatement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/280-driving-license-employees-dismissed-communist-party-of-india-insists-on-reinstatement#comments</comments><guid isPermaLink="false">9c862c56-7da1-4365-80fb-2e93c456d239</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:05:01 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:05:01.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பணி நீக்கம்,சென்னை,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,Driving License,Dismissed,வாகன ஓட்டுநர் உரிமம்,மு.வீரபாண்டியன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/on0zan8g/251.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/on0zan8g/251.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் எடுக்கும் பணியில்  ஈடுபட்ட பணியாளர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>1998 முதல் எல்கார்ட் மூலம் பணியாளர்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் எடுக்கும் பணியில் சுமார் 280 பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். 2019 முதல் பாண்டன் நிறுவனம் மூலம் தொடர்ந்து ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், எடுக்கும் பணி மற்றும் ஓட்டுநர் உரிமம் பதிவுச்சான்று, ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் எடுக்கும் பணி போன்றவற்றில் குறைவான ஊதியத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><h2>பணி நீக்கம்</h2><p>இந்நிலையில், 15.09.2026 முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச்சான்று  இணையதளம் மற்றும் எண்ம முறையில் பதிவிறக்கம் செய்யும் முறை கொண்டுவரப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த  12.09.2026 அன்று இந்த 280 பணியாளர்களும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணி நீக்கம்</a> செய்யப்பட்டுள்ளனர்.</p><p>ஐந்து வருடங்கள் முதல் இருபத்தெட்டு வருடங்கள் வரை போக்குவரத்து துறையில் பணிபுரிந்து வந்த இப்பணியாளர்களுக்கு  பணிநிரந்தரம் வழங்குவோம் என கடந்த ஆட்சியில் உறுதி வழங்கப்பட்டது. கருணை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென நீதிமன்றமும் பரிந்துரை செய்தது. ஆனாலும், பணிநிரந்தரம் வழங்கப்படவில்லை. தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுளனர். இது கடும் கண்டனத்திற்குரியது. இது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்காகும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>பணி நீக்கம் செய்யப்பட்ட இப்பணியாளர்களுக்கு, போக்குவரத்துத் துறையில் பொறுத்தமான வேறு பணியை மீண்டும் வழங்கிட வேண்டும் எனவும், 5 ஆண்டுகள் பணியை முடித்தவர்களுக்கு, தவெக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் எனவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குலசை தசரா திருவிழா: வேடம் அணியும் பக்தர்கள் இரும்பு ஆயுதங்கள் எடுத்து வரக்கூடாது.. ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasei-dasara-2026-devotees-donning-costumes-must-not-bring-iron-weapons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasei-dasara-2026-devotees-donning-costumes-must-not-bring-iron-weapons#comments</comments><guid isPermaLink="false">82f21563-b70f-4429-81d2-4b87188d3f9e</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:47:00 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:47:00.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாதுகாப்பு ஏற்பாடுகள்,குலசை தசரா திருவிழா,Kulasai Dasara,Kulasai Mutharamman Temple,குலசை முத்தாரம்மன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/l6n5ok6w/tirupati-meeting.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தசரா திருவிழா ஆலோசனை கூட்டத்தில் பேசிய உதவி கலெக்டர் கவுதமன்]]></media:title><media:description type="html"><![CDATA[ குலசை தசரா திருவிழா, பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், வேடம் அணியும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/l6n5ok6w/tirupati-meeting.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>குலசேகரன்பட்டினம்,</p><p>குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின்பாது, வேடம் அணியும் பக்தர்கள் இரும்பாலான ஆயுதங்கள் எடுத்து வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>தசரா திருவிழா ஆலோசனை கூட்டம்</h2><p>உலக புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் <a href="https://www.dailythanthi.com/topic/kulasai-dasara">தசரா திருவிழா</a> அடுத்த மாதம் (அக்டோபர்) மாதம் 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 20-ந்தேதி சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் நடக்கிறது. </p><p>இந்நிலையில், தசரா குழுக்கள் திருவிழா நாட்களில் கடைபிடிக்கும் முறைகள் குறித்தும், பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்படும் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை கூட்டம், கோவில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.</p><p>திருச்செந்தூர் உதவி கலெக்டர் கவுதமன் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் வரவேற்று பேசினார்.</p><p>கூட்டத்தில் சிவலூர், கொட்டங்காடு, சந்தையடியூர், சோமநாதபுரம், கரிசல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.</p><h2>இரும்பு ஆயுதங்கள்</h2><p>கூட்டத்தில் உதவி கலெக்டர் கவுதமன் பேசுகையில், "கடந்த ஆண்டை விட கூடுதலாக கழிப்பறைகள், குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள், வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வேடம் அணியும் பக்தர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள், சாதி அடையாளம் கொண்ட கொடிகள் கொண்டு வரக்கூடாது. இவ்வாறு கொண்டு வரும் <a href="https://www.dailythanthi.com/topic/kulasai-dasara">தசரா</a> குழுவினர் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அக்டோபர் 21-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.</p><h2>4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு</h2><p>கூட்டத்தில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பேசுகையில், "பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக, கடந்த ஆண்டை விட கூடுதலாக இந்த ஆண்டு 250 ஏக்கர் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. <a href="https://www.dailythanthi.com/topic/பாதுகாப்பு-ஏற்பாடுகள்">பாதுகாப்பு பணியில்</a> 3 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்கள் என 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கருங்காளி அம்மன் கோவில் அருகில் சிறிய நடைபாலம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 3 மாவட்ட எல்லையிலும் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்.</p><p>போலீஸ் வேடம் அணியும் பக்தர்கள் கண்டிப்பாக முகத்தில் பவுடர் பூச வேண்டும். சாதி அடையாள கொடி, பனியன் போன்றவற்றை கோவிலுக்கு கொண்டு வரக்கூடாது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்டும்" என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>23-ம் தேதி வரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/paid-darshan-at-madurai-meenakshi-amman-temple-cancelled-until-the-23rd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/paid-darshan-at-madurai-meenakshi-amman-temple-cancelled-until-the-23rd#comments</comments><guid isPermaLink="false">1b8ea8b9-37e5-448a-9d72-8b7360decf3c</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:46:25 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:46:25.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Kumbabhishekam,கும்பாபிஷேகம்,தமிழகம்,Madurai,மதுரை,TN govt,Madurai Meenakshi Amman Temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,கட்டண தரிசனம்,Paid darshan</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ymj9w8ij/amman.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ymj9w8ij/amman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 23ம்தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>கும்பாபிஷேகம்</h2><p>உலகப் புகழ் பெற்ற <a href="https://www.dailythanthi.com/topic/மதுரை">மதுரை</a> மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கடந்த 17ம் தேதி நடந்தது. கடந்த 6-ந்தேதி மகா கணபதி ஹோமத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. தினமும் ஒரு மங்கல நிகழ்ச்சி நடைபெற்றது. 17ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் 4 ராஜகோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, சடங்குகளின்படி 7.40 மணிக்கு கோபுரங்களுக்கும், 8.10 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்கு சுந்தரேசுவரருக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது.</p><h2>பக்தர்கள் கூட்டம்</h2><p>கும்பாபிஷேகத்தின்போது மேல்தளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனும திக்கப்பட்டனர். கோவிலின் சுற்றுப்பகுதியில் உள்ள வீதிகளில் ஏராளமானவர்கள் திரண்டு தரிசித்தனர். சுவாமி, அம்மன் சன்னதிகளில் தரிசன அனுமதி தொடங்கியபின்பு, வீதிகள் எங்கும் அலைகடலாக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.</p><h2>கட்டண தரிசனம் ரத்து</h2><p>மகா கும்பாபிஷேக நிகழ்வுக்காக கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து விரிவான முன்னேற்பாடுகளை செய்திருந்தன. பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதன்படி செப்டம்பர் 17ம் தேதி முதல் 20-ம் தேதி (இன்று) வரை அனைத்து வரிசைகளிலும் இலவச தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் மீனாட்சி அம்மனையும், சுந்தரேசுவரரையும் தரிசித்து வருகின்றனர். </p><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/மதுரை">மதுரை</a> மீனாட்சியம்மன் கோவிலில் வரும் புதன்கிழமை (செப்.23ம்தேதி) வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம்: பேனரை அகற்றும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-youth-dies-after-being-electrocuted-while-removing-banner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-youth-dies-after-being-electrocuted-while-removing-banner#comments</comments><guid isPermaLink="false">9ca7ca5e-99c5-4d0b-9173-cd1f1eaf8c6b</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:32:32 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:32:32.646Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,விழுப்புரம்,மின்சாரம் தாக்கி,Viluppuram,இளைஞர் பலி,youth death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iyi6kj5r/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iyi6kj5r/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரத்தில் பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>பிறந்தநாள் விழா</h2><p>விழுப்புரம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சரண் என்பவரது மகனுக்கு தனியார் திருமண மண்டபத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதற்காக, கே.கே. சாலை பகுதியில் பிறந்தநாள் பேனர் வைக்கும் பணியில் சரண் மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டு வந்தனர். ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த மதன் குமார், பூவரசன், வாஞ்சிநாதன் உள்ளிட்ட 4 பேர், பேனர் வைப்பதற்காகச் சென்றுள்ளனர்.</p><p>பேனர் வைக்க திட்டமிட்டிருந்த இடத்தில், ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று இருந்துள்ளது. புதிய பேனரை வைப்பதற்காக, அங்கிருந்த விநாயகர் சதுர்த்தி பேனரை 4 பேரும் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பேனர் மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் உரசியது.</p><h2>மின்சாரம் தாக்கி பலி</h2><p>இதில் பேனரில் மின்சாரம் பாய்ந்து, 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த கொடூர விபத்தில், மதன் குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/மின்சாரம்-தாக்கி">மின்சாரம் தாக்கி</a> பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு, உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி <a href="https://www.dailythanthi.com/topic/மருத்துவமனை">மருத்துவமனைக்கு</a> கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>விசாரணை </h2><p>இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரிச்சல்முனைக்கு சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல விரைவில் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-soon-on-tourist-vehicles-and-government-buses-going-to-arichal-munai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-soon-on-tourist-vehicles-and-government-buses-going-to-arichal-munai#comments</comments><guid isPermaLink="false">fa823afd-3181-459a-bedb-46e7451c6b33</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:26:04 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:26:04.844Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,ராமேசுவரம்,சுற்றுலா வாகனங்கள்,தனுஷ்கோடி,Dhanushkodi,அரிச்சல்முனை,tourist vehicles,Arichal Munai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9bgt6n0t/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/9bgt6n0t/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,</p><h2>அரிச்சல் முனை</h2><p>இந்தியாவில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் கோவில் விளங்குகிறது. தனுஷ்கோடி அரிச்சல் முனையானது சிறந்த சுற்றுலா தலமாகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ராமேசுவரம். தனுஷ்கோடி வந்து செல்கின்றனர். சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தனுஷ்கோடியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.</p><p>அத்துடன் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பை, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை கடற்கரையில் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் கடல் மாசுபடுவதுடன், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதி யில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.</p><h2>வாகனங்களுக்கு தடை</h2><p>எனவே தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுற்றுலா வாகனங்கள் செல்வதற்கு விரைவில் தடை விதிக்கப்படுகிறது. அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், புயலால் அழிந்துபோன கட்டிட சிதிலங்கள் உள்ள கம்பிப்பாடு வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அதிலிருந்து வனத்துறை மூலம் இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் சுற்றுலா பயணிகள் 5 கிலோ மீட்டர் தூரமுடைய கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை வரை அழைத்து செல்லப்பட்டு மீண்டும் அதே பஸ்சில் கம் பிப்பாடுக்கு அழைத்து வரப்படுவார்கள்.</p><h2>விரைவில் அமல்</h2><p>இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகை யிலும், கடற்கரை பகுதியை தூய்மையாக வைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த 7 பஸ்களும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும். சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்களுக்கு அரிச்சல்முனை வரை அனுமதிஇல்லை.</p><p>அதேநேரம் அனுமதி உள்ள எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்கள் மட்டும் சுற்றுலா பயணிகளுடன் அரிச்சல்முனை வரை செல்ல அனுமதிக்கப்படும். வனத்துறை பஸ்களில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பய ணிகளுக்கான கட்டணம் விரைவில் நிர்ணயம் செய்யப்படும். ஒரு பஸ்சில் 35 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். சுற்றுலா வாகனங்களை நிறுத்தும் வகையில் கம்பிப்பாடு பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவியை அடித்துக்கொன்ற வாலிபர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-beats-class-12-student-to-death-sensational-confession-during-police-interrogation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-beats-class-12-student-to-death-sensational-confession-during-police-interrogation#comments</comments><guid isPermaLink="false">9a2ba6e5-37a5-4b0a-b03e-b0d6c55df8cd</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:12:40 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:12:40.549Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Tamilnadu,Crime News,தமிழகம்,Karur,கிரைம் செய்திகள்,police investigation,போலீஸ் விசாரணை,பிளஸ் 2 மாணவி,Plus 2 student</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/q63pjdwl/kloer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/q63pjdwl/kloer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p>கரூரில் பிளஸ்-2 மாணவியை அடித்துக்கொன்றது ஏன்? என்பது குறித்து வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><h2>அடித்துக்கொலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/karur">கரூர்</a> வெங்கமேடு திட்டசாலை பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மகள் தர்ஷினி (வயது 17). இவர் கரூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 25 நாட்களுக்கு முன்பு தர்ஷினி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் கீதா அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை வலைவீசி தேடி வந்தனர். </p><p>இந்தநிலையில், மாணவியின் சகோதரியுடன் பழகி வந்த கரூர் மாவட்டம் நெரூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (32) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்ஷினியை அடித்துக்கொலை செய்து உடலை கரூர் வெங்கமேட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வீசியதாக கூறினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>திருமணமானதை மறைத்து காதல்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக மோகன்ராஜ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-</p><p>மோகன்ராஜ் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து தர்ஷினியின் சகோதரியை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மோகன்ராஜூக்கு திருமணமானதை அறிந்த தர்ஷினியின் சகோதரி, அவருடன் பழகுவதை நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் சம்பவத்தன்று தர்ஷினியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது மோகன்ராஜை தர்ஷினி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் தர்ஷினியை சரமாரியாக தாக்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை மோகன்ராஜ் பாயில் சுருட்டிக்கொண்டு காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்றுள்ளார். </p><p>இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>இதையடுத்து உடல் வீசப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தர்ஷினியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு அவரது உடலை கண்டறிந்தனர். இதில் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் உடல் வீசப்பட்ட இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 2 மணியளவில் டாக்டர் மகேஷ்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அங்கு வந்தனர்.</p><p>பின்னர் <a href="https://www.dailythanthi.com/topic/karur">கரூர்</a> போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜராஜன் உள்ளிட்ட போலீசார் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து தர்ஷினியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது தர்ஷினியின் பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது.</p>]]></content:encoded></item></channel></rss>