<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 08 Aug 2026 21:19:33 +0000</lastBuildDate><item><title>கூடுதல் தொகை வசூலை தடுக்கவே ஆன்லைன் முறையில் மது விற்பனை - அமைச்சர் விக்னேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-to-prevent-extra-charges-minister-vignesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-to-prevent-extra-charges-minister-vignesh#comments</comments><guid isPermaLink="false">f0a01a47-a611-49d3-98ce-818bd3a43c38</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:29:44 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:29:44.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,Minister Vignesh,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/wctza5lh/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/wctza5lh/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்கவே ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது:-</p><p>வெளிநாட்டு மதுபானங்கள், ஏற்கெனவே மதுக்கடைகளில் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகின்றனரோ அதை கொடுக்க வேண்டியது கடமை. சட்டப்பேரவையிலேயே ஆன்லைன் முறை குறித்து விளக்கமாக பேசியிருக்கிறேன். டாஸ்மாக் கடைகளில் பணப் பரிவர்த்தனை இருக்கக் கூடாது என்பதற்காகவும், கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்கவும் ஆன்லைன் விற்பனை நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>சில மதுக் கடைகளில் சில பிராண்ட் மது வகைகள் மட்டுமே விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. ஆன்லைன் மூலம் எந்தெந்த கடையில் என்னென்ன மது வகைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் ஆர்டர் அமலுக்கு வந்த பிறகு 700 பேர் வரை ஆர்டர் செய்து மதுபானங்கள் பெற்றுள்ளனர். இதில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதையும் கவனித்து வருகிறோம். கடந்த காலங்களில் இந்த துறையை சீர்படுத்த முயற்சி எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சில எதிர்க்கட்சிகள் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க திட்டம்; துரை வைகோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/some-opposition-parties-plan-to-support-the-constituency-delimitation-bill-durai-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/some-opposition-parties-plan-to-support-the-constituency-delimitation-bill-durai-vaiko#comments</comments><guid isPermaLink="false">63cf631b-3aba-4c1b-8677-2273a35f3888</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:28:06 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:28:06.537Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,Durai Vaiko,துரை வைகோ,தொகுதி மறுவரையறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/34ygr0yc/Durai-vaiko.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துரை வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/34ygr0yc/Durai-vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மதிமுக எம்பி துரைவைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: </p><p> 39 எம்.பி.க்களை வைத்துக் கொண்டே நமது உரிமைகளை பேச முடியவில்லை. ஏற்கனவே உள்ள எண்ணிக்கை தொடர வேண்டும் என்பதுதான் இந்த கூட்டத்தின் முடிவு. சில எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. இப்போதுள்ள நிலைப்பாடுதான் தொடர வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.</p> <p>சிறுபான்மையினருக்கும் இந்த மறுவரையறையினால் ஆபத்து வரும். அதற்கு அசாம் உதாரணம். அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்ற முனைப்பு காட்டுகின்றனர். இதில் பா.ஜனதாவின் கருத்தைதான் தி.மு.க. கூறி வருகிறது. சமூகவலைதளத்தில் அதை காண முடிகிறது. 50 சதவீத உயர்வு ஏற்கக்கூடியதுதான் என்று கருத்து கூறி வருகின்றனர். மறுவரையறைக்கான ஆணையம் அமைத்துவிட்டால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நினைத்ததை செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் கஞ்சா விற்றவர் கைது: 880 கிராம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganja-seller-arrested-in-tiruchendur-880-grams-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganja-seller-arrested-in-tiruchendur-880-grams-seized#comments</comments><guid isPermaLink="false">4bf38ea1-ca4e-42c2-864f-6a2485951967</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:27:18 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:27:18.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,திருச்செந்தூர்,Thoothukudi,தூத்துக்குடி,arrest,Seizure,பறிமுதல்,Tiruchendur,sale of ganja,கஞ்சா விற்பனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8lmfm6bx/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா விற்றவர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8lmfm6bx/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்செந்தூர்</a> பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a> வைத்திருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>போலீஸ் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். </p><h2>கஞ்சா விற்பனை</h2><p>விசாரணையில் அவர் தூத்துக்குடி, தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன்(எ) மொட்டை மணி (வயது 37) என்பதும்,  அவர் விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. </p><h2>880 கிராம் கஞ்சா பறிமுதல், கைது</h2><p>அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன நபரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்த 880 கிராம் கஞ்சாவை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல் </a>செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-of-the-idol-theft-prevention-unit-conduct-a-thorough-inspection-at-the-thoothukudi-shiva-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-of-the-idol-theft-prevention-unit-conduct-a-thorough-inspection-at-the-thoothukudi-shiva-temple#comments</comments><guid isPermaLink="false">f5e63c49-3d42-4fd1-bab1-0608ca29e607</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:07:33 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:07:33.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>raid,police,போலீஸ்,பக்தர்கள்,Devotees,Thoothukudi,தூத்துக்குடி,ஆய்வு,Theft,Excitement,பரபரப்பு,statue,shiva temple,சிவன் கோவில்,சிலைகள் திருட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/zttk5iuw/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/zttk5iuw/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சிவன் கோவிலில்</a> நெல்லை மண்டல <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சிலை திருட்டு</a> தடுப்புப் பிரிவு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">போலீஸ் இன்ஸ்பெக்டர் </a>தலைமையிலான  போலீசார் அதிரடி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு </a>செய்தனர்.</p><h2>சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு</h2><p>தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின், கோவில் சிலைகளை பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மண்டல சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ராணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திருவளவன் மற்றும் தலைமைக் காவலர் செல்லப்பா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை தூத்துக்குடியில் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.</p><h2>மொத்தம் 34 உலோகச் சிலைகள்</h2><p>ஆய்வின் முதற்கட்டமாக கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்களிடம் கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் மற்றும் அதன் விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கோவிலில் மொத்தம் 34 உலோகச் சிலைகள் இருப்பதும், அதற்கான முறையான ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அந்த சிலைகள் சேதமின்றி பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. </p><h2>சிலைகள் சேதம் குறித்து ஆய்வு</h2><p>மேலும் கடந்த 2002-ம் ஆண்டு மூக்குப் பகுதியில் சேதமடைந்ததால் தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்த முருகன் சிலையை இன்ஸ்பெக்டர் வனிதா ராணி பார்வையிட்டு சோதனை செய்தார். அந்த சிலை எதிர்பாராத விதமாகக் கீழே தவறி விழுந்ததால் சேதமடைந்தது சோதனையில் தெரியவந்தது. இதன்பின் கோவிலில் உள்ள அனைத்துக் கற்சிலைகளையும் ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் சேதமன்றி சரியாக இருப்பது கண்டறியப்பட்டது. </p><h2>பக்தர்களிடம் விசாரணை</h2><p>ஆய்வின் ஒரு பகுதியாக, கோவிலுக்கு வருகை தந்த சுமார் 25 பக்தர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். "தினமும் கோவிலுக்கு வரும் உங்களுக்குச் சிலைகளில் ஏதேனும் மாற்றம் அல்லது சேதம் ஏற்பட்டிருப்பது தெரியுமா?" என கேட்டறிந்தனர். அதற்கு பக்தர்கள், "நாங்கள் பல வருடங்களாக பார்த்து வரும் அதே சிலைகள்தான் எந்த மாற்றமுமின்றி உள்ளன" என தெரிவித்தனர்.</p><h2>பக்தர்களிடையே பரபரப்பு</h2><p>நேற்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நீண்ட இந்த விரிவான ஆய்வின் முடிவில், கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் அதற்கான ஆவணங்களும் சரியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிவன் கோவிலில் நாள் முழுவதும் நடைபெற்ற இந்த ஆய்வுப் பணி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>புதிய எம்.பி.பி.எஸ். இடங்களில் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம் அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-colleges-dominance-in-new-mbbs-seats-increases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-colleges-dominance-in-new-mbbs-seats-increases#comments</comments><guid isPermaLink="false">c41d7474-75b4-4f9e-b7df-468b873554b8</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:03:11 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:03:11.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிகரிப்பு,MBBS,Private College,தனியார் கல்லூரி,எம்.பி.பி.எஸ். படிப்பு,ஆதிக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/nmrjdrpj/mbbs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/nmrjdrpj/mbbs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை ஒட்டுமொத்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த நிலையில் தற்போது அவ்வாறு உயர்த்தப்பட்டு வரும் இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சதவீதம் குறைந்து வருவதாக ஒரு புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, 2023-ல் 1 லட்சத்து 7 ஆயிரத்து 948 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D">எம்.பி.பி.எஸ். </a>இடங்கள் இருந்தது. அதில் அரசு கல்லூரிகளில் 52 சதவீதமும், தனியார் மற்றும் நிகர்நிலை கல்லூரிகளில் 48 சதவீதமும் இடங்கள் இருந்தன.</p><h2>தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம்</h2><p>2024-ல் 1 லட்சத்து 17 ஆயிரத்து 750 இடங்கள் இருந்த நிலையில், அரசு கல்லூரிகளில் 51 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 49 சதவீதமும் இருந்தன. 2025-ல் 1 லட்சத்து 23 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்த சூழலில், அரசு கல்லூரிகளில் 51 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 49 சதவீதமும் என இருந்தன. 2026-ல் 1 லட்சத்து 36 ஆயிரத்து 939 இடங்களாக உயர்ந்திருந்த நிலையிலும், அரசு கல்லூரிகளில் 46 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 54 சதவீதமும் என உள்ளன.அதாவது. ஒட்டுமொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரித்தாலும் அதில் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கமே இருக்கிறது. புதிய எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படுவதில் அரசுத்துறையைவிட தனியார் துறை மிகவேகமாக செயல்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை தொகுதி மறுவரையறை பாதிக்கும்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delimitation-to-affect-tamil-nadus-representation-says-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delimitation-to-affect-tamil-nadus-representation-says-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f225d245-ad1f-4001-bb6b-b0a69ddcc80b</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:59:58 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:59:58.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தொகுதி மறுவரையறை,Delimitation,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/w9bi58ze/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/w9bi58ze/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (8.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.</p><p>இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் (57) அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் (11), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1) மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p><p>இந்தக் கூட்டத்தில் மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கப்படாமல் காப்பது குறித்தும், தமிழ்நாட்டின் தற்போதைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்ந்து நீடிப்பது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக இருக்கும்போதே, ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாராளுமன்றத்தில் பேசக் கிடைக்கும் நேரம் குறைவாக உள்ளது எனவும், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தங்களது கருத்துக்களை முழுமையாக எடுத்துக்கூறுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி கூறினர். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மக்கள்தொகைக்கேற்ப அதிகப்படுத்தப்படவில்லை எனவும் கூறினர்.</p><p>தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் இந்த மத்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை இப்போதுள்ள எண்ணிக்கையிலேயே நிரந்தரமாக நிலைநிறுத்திடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை பாராளுமன்றத்தில் நிலை நிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை குறித்த மத்திய அரசின் அரசமைப்பு சட்டத் திருத்தம் மற்றும் புதிய மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>மேலும், 2026-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பின் அரசமைப்பு பிரிவு 81(2)(a)-ன் கீழ் தென் மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், சட்ட முன்மொழிவை பாராளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும். சர்வ வல்லமை பெற்றதாக தொகுதி மறுவரையறை ஆணையம் உள்ளது. இந்த அதிகாரத்தை குறித்து பாராளுமன்றத்திற்கே இறுதிசெய்யும் அதிகாரம் இருக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.</p><p>அனைத்து மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 50% வரை உயர்த்தலாம் என்ற கருத்து மக்களை திசைதிருப்பும் ஆசை வார்த்தை (50% increase of existing Lok Sabha seats is an illusion to sweeten the pill) என்ற கருத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்து வைத்தனர்.</p><p>இந்தக் கூட்டத்தின்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை முன்மொழிவு செயல்படுத்தப்பட்டால், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படுமென்பதால், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், அதற்குத் தேவையான மற்றும் உரிய சட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்கள்.</p><p>மேலும், தற்போது மக்களவை, மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், இதில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்கள்.</p><p>இதனைத் தொடர்ந்து இறுதியாக தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாத்திட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.</p><p>கூட்டத்தின் இறுதியில், முதல்-அமைச்சர், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை கைவிடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை: சைக்கிளை பற்களால் தூக்கியபடி 100 அடி நடந்து சென்று ராணுவ வீரர் சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-ex-soldier-sets-record-carrying-35kg-cycle-with-teeth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-ex-soldier-sets-record-carrying-35kg-cycle-with-teeth#comments</comments><guid isPermaLink="false">2cbe1146-efe6-4276-b7f8-06c5dac1f2c2</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:38:36 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:38:36.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,சைக்கிள்,Bicycle,Ex-Servicemen&apos;s-முன்னாள் ராணுவ வீரர்கள்,Achievement - சாதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/f8b3znyu/miltary.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ராணுவ வீரர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சைக்கிளை பற்களால் தூக்கியபடி 100 அடி நடந்து சென்று ராணுவ வீரர் சாதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/f8b3znyu/miltary.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p> பற்களால் சைக்கிளை கவ்வி பிடித்து முன்னாள் ராணுவ வீரர் செய்த சாதனை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D">முன்னாள் ராணுவ வீரர் </a>ஒருவர், தனது அசாத்திய உடல் பலத்தை நிரூபிக்கும் வகையில் விநோத சாதனை முயற்சி ஒன்றில் ஈடுபட்டார். </p> <h2>35 கிலோ எடை</h2><p>பொதுவாக மனிதர்கள் கைகளால் தூக்குவதற்கே திணறும் 35 கிலோ எடை கொண்ட இரும்பு சைக்கிளை, அவர் கைகளைப் பயன்படுத்தாமல் தனது பற்களால் மட்டுமே கவ்விப் பிடித்தார். சைக்கிளை பற்களால் கவ்வித் தூக்கியவாறே, சற்றும் தடுமாறாமல் 100 அடி தூரத்திற்கு நேராக நடந்து சென்று அவர் சாதனை படைத்தார்.</p> <h2>பாராட்டு மழை</h2><p>முன்னாள் ராணுவ வீரரின் இந்த அசாத்தியமான பற்களின் உறுதியையும், உடல் வலிமையையும் நேரில் பார்த்த திருமங்கலம் பொதுமக்கள் கைதட்டி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த வியத்தகு சாதனை வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>காங்கோவில் மேலாளர் வேலை செய்பவரிடம் ரூ.75.2 லட்சம் மோசடி: தூத்துக்குடி வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-youth-arrested-for-defrauding-a-manager-working-in-congo-of-rs752-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-youth-arrested-for-defrauding-a-manager-working-in-congo-of-rs752-lakh#comments</comments><guid isPermaLink="false">1598a0ed-8756-4b27-87ac-b256623089ba</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:33:06 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:33:06.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>South Africa,தென் ஆப்பிரிக்கா,கைது,Thoothukudi,தூத்துக்குடி,Online,ஆன்லைன்,பணம் மோசடி,arrest,money laundering,சைபர் கிரைம்,Complaint,புகார்,cybercrimes,Congo,காங்கோ,manager,மேலாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/tum39elf/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் மோசடி, கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/tum39elf/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தென்ஆப்பிரிக்க நாடான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B">காங்கோ</a>வில் வேலை பார்த்து வரும் தனியார் நிறுவன மேலாளரிடம் ஆன்லைன் முதலீட்டு மோசடி மூலம் ரூ.75.2 லட்சம் சுருட்டிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வாலிபர் கைது </a>செய்யப்பட்டுள்ளார். </p><h2>காங்கோவில் தனியார் நிறுவன மேலாளர்</h2><p>தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் தென்ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டின் இறுதியில் இவரது பேஸ்புக் பக்கத்திற்கு வந்த விளம்பர லிங்க் ஒன்றில், "குறைந்த முதலீட்டில் 200 சதவீதம் அதிக லாபம் பெறலாம்" என கவர்ச்சிகரமான விளம்பரம் வந்துள்ளது. </p><h2>ரூ.75 லட்சத்து 25 ஆயிரம்</h2><p>இதனை நம்பி அவர் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அவரை ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைத்துள்ளனர். அக்குழுவில் பலர் ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலம் அதிக லாபம் பெற்றது போன்ற போலி தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். இதனை உண்மையென நம்பிய, அந்த பாதிக்கப்பட்ட மேலாளர் சிறுகச் சிறுக மொத்தம் ரூ.75 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். </p><h2>சைபர் கிரைம் பிரிவில் புகார்</h2><p>சில நாட்களுக்கு பிறகு லாபத் தொகை எதுவும் வராததால், தனது கணக்கிலிருந்த பணத்தை எடுக்க முயன்றபோது, பணம் எதுவும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக சைபர் கிரைம் பிரிவில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். </p><h2>வாலிபர் கைது</h2><p>இந்த புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாகவும், வங்கி கணக்குகளைச் செயல்படுத்த உதவியாகவும் இருந்த ஏரல் அருகே பள்ளிப்பத்து பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். </p><h2>வடமாநில நபர்கள் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>மேலும் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பண மோசடி</a> வழக்கில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்: “ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சி” – இன்பதுரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-redelineation-consultation-meeting-a-futile-attempt-to-cast-a-shadow-on-running-water-inbadurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-redelineation-consultation-meeting-a-futile-attempt-to-cast-a-shadow-on-running-water-inbadurai#comments</comments><guid isPermaLink="false">655d33b6-bbbf-4a35-b381-067e41946a8f</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:10:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:10:25.743Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இன்பதுரை,consultation meeting,ஆலோசனைக் கூட்டம்,admk அ.தி.மு.க.,தொகுதி மறுவரையறை,Constituency redelineation,Inpadurai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/7qrybqb9/inpadurai-mp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/7qrybqb9/inpadurai-mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம் “ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சி” என்று அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சித்துள்ளார்.</p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>தொகுதி மறுவரையறை மசோதாவை விரைவில் மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று பேசப்படும் நிலையில், இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல் அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தை திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில், இது குறித்து அதிமுக எம்.பி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88">இன்பதுரை</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வீண் முயற்சி</h2><p>உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வருடா வருடம் தமிழ்நாடு பெற்றுவரும் காவிரி உரிமை நீரை, இந்த ஆண்டு பெற்றுத் தரும் திறன் இல்லாத முதல்-அமைச்சர் விஜய்யால் கூட்டப்பட்ட, தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்  என்பது ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சியாகும். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி வழக்கில் கைதானவர் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-death-in-jail-raises-questions-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-death-in-jail-raises-questions-velmurugan#comments</comments><guid isPermaLink="false">5e21320a-2fe6-4fe0-b2e8-bf1f8ffcb5b8</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:32:54 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:32:54.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Question,சிறை,Velmurugan,வேல்முருகன்,நில மோசடி வழக்கு,Prison,கேள்வி,Land fraud case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/lq9u18xb/velmurugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/lq9u18xb/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/velmurugan">வேல்முருகன் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பழனி நில மோசடி</a> வழக்கில் கைதானவர் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்? சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பது யார்?</p> <h2>சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.</h2><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாகப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பொறுப்புடன் அணுக வேண்டும்</h2><p>பெரும் சொத்து முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர், நீதிமன்ற காவலில் இருந்தபோதே சிறைக்குள் உயிரிழந்திருப்பது சாதாரண நிகழ்வாக கடந்து செல்லக்கூடியதல்ல. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரு நிகழ்வுகளையும் அரசு மிகுந்த பொறுப்புடன் அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.</p><h2>தீர்மானிக்க முடியாது</h2><p>அன்வர்தீனின் மரணத்திற்கான காரணத்தை விசாரணை முடிவதற்கு முன்பே எவரும் தீர்மானிக்க முடியாது. ஆனால், சிறைக் காவலில் நிகழ்ந்த மரணம் என்பதால், அரசு கூறும் விளக்கம் மட்டுமே இறுதியான உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.</p><h2>தமிழக அரசின் கடமை</h2><p>மரணத்திற்கு முன்பு அவரது உடல்நிலை எப்படி இருந்தது? சிறையில் அவருக்கு முறையான மருத்துவக் கண்காணிப்பு இருந்ததா? உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதா? சிறை வளாகத்தின் கண்காணிப்பு காட்சிகள் என்ன சொல்கின்றன? அவருடன் இருந்தவர்கள் யார்? அவரது இறுதி நேரங்களில் நடந்தது என்ன? இந்தக் கேள்விகளுக்கு பொதுமக்களுக்கு தெளிவான பதில் அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.</p><h2>அதிகார சங்கிலி</h2><p>அதேவேளையில், இந்த மரணத்தை மட்டும் முன்னிறுத்தி பழனி கோவில் நில மோசடியின் அடிப்படை குற்றச்சாட்டை மறந்துவிடவும் கூடாது. கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் எவ்வாறு முறைகேடான ஆவணங்களின் மூலம் கைமாறியது? அதற்கு துணை நின்ற அதிகாரிகள் யார்?</p><p>பத்திரப்பதிவு நடைமுறையில் விதிமீறல்கள் எவ்வாறு நடைபெற்றன? இதன் பின்னணியில் அதிகார மையங்களின் தலையீடு இருந்ததா? ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களை மட்டும் விசாரிப்பது போதாது. அந்த ஆவணத்தின் பின்னால் இருந்த முழு அதிகார சங்கிலியையும் விசாரணை சென்றடைய வேண்டும்.</p> <h2>வன்மையாக கண்டிக்கிறது</h2><p>சிறை காவலில் இருந்த ஒருவரின் உயிரிழப்பை சுற்றி எழும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பதையும், கோவில் சொத்து முறைகேட்டின் பின்னணியில் உள்ள பெரிய வலையமைப்பை தொடாமல் இருப்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.</p><h2>பிரேதப்பரிசோதனை அறிக்கை</h2><p>எனவே தமிழக அரசு, அன்வர்தீன் மரணம் குறித்து சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். பிரேதப்பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும். சிறை மருத்துவப் பதிவுகள் மற்றும் கண்காணிப்பு காட்சிகளைப் பாதுகாத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் உடல்நிலை குறித்த முழுமையான மருத்துவத் தகவல்களையும் உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும்.</p><h2>சட்டப்படி நடவடிக்கை</h2><p>பழனி கோவில் நில முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். அரசியல் அல்லது அதிகார பின்னணி எதுவாக இருந்தாலும், குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>கொள்ளை பொருள் அல்ல</h2><p>கோவில் சொத்து என்பது தனிநபர்களின் கொள்ளை பொருள் அல்ல. அது மக்களின் நம்பிக்கையால் ஒப்படைக்கப்பட்ட பொதுச்சொத்து. அந்த சொத்தின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள முறைகேட்டையும், சிறைக் காவலில் நிகழ்ந்துள்ள மரணத்தையும் தனித்தனி சம்பவங்களாக பார்க்காமல், இரண்டின் பின்னணியிலும் உள்ள உண்மையை முழுமையாக வெளிக்கொணர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-people-who-sold-liquor-were-jailed-under-the-detention-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-people-who-sold-liquor-were-jailed-under-the-detention-act#comments</comments><guid isPermaLink="false">c9193916-5dc3-4597-9af3-4b0b0c812079</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:26:58 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:26:58.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,விற்பனை,Sale,imprisonment,சிறையில் அடைப்பு,Liquor,சாராயம்,2 பேர்,2 people,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/dm8tf6jb/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/dm8tf6jb/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டத்தில் சட்ட விரோதமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சாராயம்</a> காய்ச்சி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">விற்பனை</a> செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் தமிழ்நாடு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். </p><h2>சாராயம் காய்ச்சிய 2 பேர்</h2><p>தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ வல்லநாடு பகுதியில், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வழக்கில் வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த காசி மகன் இசக்கிபாண்டி (வயது 42) மற்றும் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் வேல்துரை(27) ஆகிய 2 பேரையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.</p><h2>தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு</h2><p>அதைத் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த மேற்சொன்ன 2 பேரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்</a> 2 பேரையும் கைது செய்ய தூத்துக்குடி மாவட்டக் எஸ்.பி. பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவின் பேரில், அந்த 2 பேர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க.வில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு பதவிகள்; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-announces-roles-for-c-vijayabaskar-mr-vijayabaskar-in-tvka</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-announces-roles-for-c-vijayabaskar-mr-vijayabaskar-in-tvka#comments</comments><guid isPermaLink="false">b3e0d632-c009-4a44-8ea9-de8a72130b4f</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:08:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:08:57.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/gs3bxd33/tpfap.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/gs3bxd33/tpfap.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு, <a href="https://www.dailythanthi.com/news/world">முதல்-அமைச்சர் விஜய் </a>கட்சியில் பதவிகளை அறிவித்து உள்ளார்.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை த.வெ.க. கைப்பற்றியது.  தி.மு.க.வுக்கு 59 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 47 இடங்களும், கிடைத்தன.  இதனால், ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.  அப்போது, தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகியவற்றின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்தது.</p> <h2>த.வெ.க.வுக்கு ஆதரவு</h2><p>இதனை தொடர்ந்து, கடந்த மே மாதம் 10-ந் தேதி, தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார்.  இந்த சூழலில், தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அ.தி.மு.க.வை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.</p><p>இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதற்கிடையே 4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் ஐக்கியமானார்கள்.  நீண்ட இழுபறிக்கு பின்னர் மற்ற 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தனர்.  இதனால் அவர்கள் மீதான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற நடவடிக்கை எடுத்தார். </p> <h2>எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா</h2><p>எனினும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர், அடுத்தடுத்து தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.</p> <h2>முக்கிய பொறுப்புகள்</h2><p>அவர்களுக்கு த.வெ.க.வில் பெரிய அளவில் கட்சி பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்தது.  இந்த நிலையில், அவர்களில் சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.  இதன்படி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளராக சி.விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  கரூர் மாவட்ட அமைப்பு செயலாளராக எம்.ஆர். விஜயபாஸ்கர், தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளராக இசக்கி சுப்பையா நியமிக்கப்பட்டு உள்ளனர்.</p><p>இதேபோன்று, மதுராந்தகம் மரகதம் குமரவேலுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது.  எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கூடுதலாக துணை பொதுச்செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டு உள்ளது.  அவர் இரட்டை பதவிகளை வகிப்பார்.</p><p>இதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்பட அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் த.வெ.க.வில் ஐக்கியமானார்கள். முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தி.மு.க.வில் இணைந்தார். இதுபோக, அ.தி.மு.க.வுக்குள்ளேயே இன்னும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளனர்.  இதனால், தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-21-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-21-districts#comments</comments><guid isPermaLink="false">d7cbf142-bf64-4467-bfab-7f2dd553a7a2</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:06:11 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:06:11.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/mqj5i24h/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/mqj5i24h/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்; கணவர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-over-not-being-given-money-to-drink-alcohol-husband-commits-suicide-by-hanging-himself</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/angry-over-not-being-given-money-to-drink-alcohol-husband-commits-suicide-by-hanging-himself#comments</comments><guid isPermaLink="false">a763a443-facc-4479-9e61-3d75e632398b</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:51:51 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:51:51.520Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,Thoothukudi,husband,தூத்துக்குடி,தூக்குப்போட்டு தற்கொலை,money,commits suicide by hanging,மதுகுடிக்க பணம் தராததால்,Anger,ஆத்திரம்,Drinking alcohol</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/yngumd7p/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூக்குப்போட்டு தற்கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/yngumd7p/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95">மது குடிக்க</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">பணம்</a> தராததால் மனைவியுடன் தகராறு செய்து, வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு வாலிபர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டார். </p><h2>மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் சண்டை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> முத்துக்கிருஷ்ணாபுரம், அய்யாதுரை காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 40). வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்த இவர், தீவிர குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் தனது மனைவி முத்துலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டு சண்டையிட்டுள்ளார். </p><p>அதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, மனைவியையும் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு உள்ளே கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் கணவர் கதவைத் திறக்காததால், முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார். மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோதும் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டே இருந்தது. </p><h2>கணவர் தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>சந்தேகமடைந்து அருகிலிருந்த ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, இசக்கிமுத்து வீட்டில் உள்ள சீலிங் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டின் பின்பக்க கதவைத் தள்ளி உள்ளே சென்று பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. </p><p>இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>நியாயமான தொகுதி மறுவரையறை தேவை: கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fair-delimitation-of-constituencies-is-needed-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fair-delimitation-of-constituencies-is-needed-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">37465d75-6a7d-4159-8c45-c18451904e02</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:51:35 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:51:35.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Kanimozhi,கனிமொழி எம்பி,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/lk37zmnk/kanimozhi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/lk37zmnk/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிக்க,  முதல் அமைச்சர்  விஜய் இன்று அனைத்துக்கட்சி எம்பிக்களின் கூட்டத்தை கூட்டியிருந்தார். இதில் திமுக பங்கேற்கவில்லை. இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்துள்ள திமுக எம்பி கனிமொழி நியாயமான தொகுதி மறுவரையறை நடத்த வேண்டும் என திமுக கோரியது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறை குறித்து கூட்டம் நடத்தியதற்கான காரணம் தெளிவாக இல்லை தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதே திமுகவின் எண்ணம்.</p><p>பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு, நியாயமான தொகுதி மறுவரையறையை கொண்டுவர வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை. தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு எட்டப்பர்கள் யார் என்பது தெரிந்தது” என்றார். </p>]]></content:encoded></item><item><title>அம்ரித் பாரத் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பழனி ரெயில் நிலையம் விரைவில் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-railway-station-renovated-under-amrit-bharat-scheme-to-open-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-railway-station-renovated-under-amrit-bharat-scheme-to-open-soon#comments</comments><guid isPermaLink="false">83f3a62c-3677-40ee-8227-7596690c218d</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:36:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:36:10.753Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,railway station,ரெயில் நிலையம்,Palani,விரைவில் திறக்கப்படும்,Amrit Bharat scheme,அம்ரித் பாரத் திட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/9sop6pk9/palani-railstation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/9sop6pk9/palani-railstation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><p>பழனி ரெயில்நிலையத்தில் அம்ரித் பாரத் திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதால் விரைவில் திறப்பு விழா காண்கிறது.</p><h2>அம்ரித் பாரத் திட்ட பணிகள்</h2><p>பழனி ரெயில்நிலையத்தை 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் புதுப்பித்து நவீனப்படுத்தும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் ரெயில்நிலைய நடைமேடை, பயணிகள் காத்திருப்பு அறைகள், வாகன நிறுத்தம், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான நகரும் படிக்கட்டு, உணவக வசதி, ரெயில்கள் குறித்த அறிவிப்பு பலகை, நவீன மயமாக்கப்பட்ட வளாகம், கழிப்பறைகள், நுழைவு வாயில் என சுமார் ரூ.20 கோடியில் கட்டுமான பணிகள் நடந்தன. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றன.</p><p>எனினும் திட்ட பணிகளை பொறியாளர் குழு, அதிகாரிகள் குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர். இதனிடையே புதுப்பிக்கப்பட்ட ரெயில்நிலைய பணிகள் ஏறக்குறைய முடிவடைந்ததால் எப்போது திறக்கப்படும் என்று பயணிகள் எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்நிலையில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா சிறப்பு வசதிகளுடன் கூடிய ரெயிலில் நேற்று இரவு பழனி வந்தார்.</p><h2>கோட்ட மேலாளர் ஆய்வு</h2><p>பின்னர் பழனி ரெயில் நிலையத்தில் நிறைவு பெற்ற 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் நடந்து முடிந்த பணிகளை பார்வையிட்டார். குறிப்பாக நடை மேடைகள், ரெயில்நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட பூங்கா, நுழைவு வாயில், கழிப்பிட கட்டிடம் உள்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முடியும் தருவாயில் உள்ள பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பொறியாளர்கள் குழுவினர், ரெயில்வே பாதுகாப்பு படையினர் உடனிருந்தனர்.</p><p>இந்த ஆய்வு குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, மதுரை கோட்டத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> உள்பட சில ரெயில்நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு பணிகள் முழுமை பெற்றதா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வு குறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு தெரியப்படுத்தி திறப்பு விழாவுக்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/need-central-help-to-rescue-tamil-nadu-fishermen-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/need-central-help-to-rescue-tamil-nadu-fishermen-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">ada7d6a9-14b4-4ecd-8570-96d3c49d68ab</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:14:47 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:14:47.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தமிழக மீனவர்கள்,மத்திய அரசு,Central Government,Tamilnadu fishermen</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/20prlgq1/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/20prlgq1/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தமிழக மீனவர்களை</a> மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- </p> <h2> 11 மீனவர்கள் கைது</h2><p>கடந்த 5 ஆம் தேதி, வானிலை மாற்றங்களாலும், படகுகளின் என்ஜின்கள் பழுதான காரணத்தினாலும் எதிர்பாரா விதமாக நெடுந்தீவு கடற்பகுதிக்குள் சென்று விட்ட, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது. </p><h2>கைது நடவடிக்கை</h2><p>தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலையே சார்ந்துள்ள அவர்களது குடும்பங்களுக்கு, இந்த கைது நடவடிக்கை கடும் துயரத்தையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. </p><h2>இலங்கை கடற்படை</h2><p>எனவே, மீனவ சமுதாயத்தை என்றும் தாயுள்ளத்துடன் அணுகும் நமது மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பாக கடிதம் எழுதியுள்ளோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: சாலையோரம் நடந்து சென்ற வடமாநில வாலிபர் கார் மோதி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-a-northern-state-youth-walking-along-the-road-was-hit-by-a-car-and-died</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-a-northern-state-youth-walking-along-the-road-was-hit-by-a-car-and-died#comments</comments><guid isPermaLink="false">8bdc9237-3b76-4724-8e66-4518ee9cb276</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:09:55 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:09:55.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Walking,dies,road,சாலை,Car,hit,வடமாநில வாலிபர்,கார் மோதி பலி,northern state youth,நடந்து சென்றவர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/w7aedosy/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடமாநில வாலிபர் கார் விபத்தில் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/w7aedosy/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே சாலையில் நடந்து சென்ற போது கார் மோதிய விபத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வடமாநில வாலிபர்</a> சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">பலி</a>யானார். </p><h2>உத்தரப்பிரதேச மாநில வாலிபர்</h2><p>உத்தரப்பிரதேச மாநிலம், பீச்சபூர், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த மாயராம் மகன் போலநாத் (வயது 30). இவர் தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவர் பணி முடிந்து சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். </p><h2>கார் மோதி பலி</h2><p>அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு கார், போலநாத் மீது மோதியது. இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்தில்</a> பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்கோட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற கார் மற்றும் ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அண்ணாமலையார் கோவிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/union-home-minister-amit-shah-offers-prayers-at-the-annamalaiyar-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/union-home-minister-amit-shah-offers-prayers-at-the-annamalaiyar-temple#comments</comments><guid isPermaLink="false">22295051-d84c-4d57-afde-0ef23992a326</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:43:06 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:43:06.457Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,Amit Shah,அண்ணாமலையார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/i01mv7y5/amit-sha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித்ஷா ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/i01mv7y5/amit-sha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> திருவண்ணாமலை: </p><p>2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அருணாச்சலேசுவரர் அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட அமித்ஷா, இன்று தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. </p> <p>இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலை புறப்பட்டார். மாலை 5 மணியளவில் அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வந்தடைந்தார். திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக ரமண மகரிஷி ஆசிரமம் வந்தடைந்தார்.  </p><p>ரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெற்ற பூஜையில் அமித்ஷா கலந்துகொண்டார். இதன்பின்ன மாலை 5.40 மணியளவில் அருணாச்சலேசுவரர் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் நடைபெற்ற அபிஷேக பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.</p> ]]></content:encoded></item><item><title>தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-national-flags-at-post-offices-special-arrangements-made-on-the-occasion-of-independence-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-national-flags-at-post-offices-special-arrangements-made-on-the-occasion-of-independence-day#comments</comments><guid isPermaLink="false">ce2a40f9-b755-4ecd-b1d9-7c636e9ff05f</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:35:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:35:29.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,விற்பனை,Indian national flag,சுதந்திர தினம்,Independence Day,sales,தபால் அலுவலகங்கள்,Post Offices,சிறப்பு ஏற்பாடு,இந்திய தேசியக் கொடி,Special arrangement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/a9yglfig/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/a9yglfig/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தபால் அலுவலகங்களில்</a> தேசியக் கொடி விற்பனை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>இந்திய நாட்டின் 80-வது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழா</a> வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. </p><h2>ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.25</h2><p>ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF">தேசியக் கொடி</a>யின் விலை ரூ.25 ஆகும். பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களும், வணிகர்களும் எளிதாக மூவர்ணக்கொடியை வாங்கி பயன் பெறும் வகையில் கிராமப்புற தபால் அலுவலகங்கள் உள்பட அனைத்து தபால் அலுவலகங்களிலும் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். </p><h2>தபால் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு</h2><p>கிராமப்புற தபால் அலுவலகங்கள் உள்பட தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் ஒரு தேசியக் கொடி ரூ.25 என்ற விலையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">விற்பனை</a> செய்யப்படுகிறது. தேசியக் கொடிகளுக்கான மொத்தத் தேவை ஏதேனும் இருப்பின், 9841875710, 9791655030 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம். </p><p>எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு ஏற்பாட்டைப் பயன்படுத்தி தேசியக் கொடிகளை வாங்கி தங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடுங்கள். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>செம்மஞ்சேரி முதல் பக்கிங்ஹாம் கால்வாய் வரை மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-commissioner-inspects-stormwater-drainage-works-from-chemmancherry-to-buckingham-canal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-commissioner-inspects-stormwater-drainage-works-from-chemmancherry-to-buckingham-canal#comments</comments><guid isPermaLink="false">c147f96d-fab6-4fe6-b9de-76684d273498</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:29:07 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:29:07.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,மழைநீர் வடிகால் பணிகள்,Rainwater Drainage Works,Commissioner inspection,ஆணையர் ஆய்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/h332z859/81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/h332z859/81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செம்மஞ்சேரி முதல் பக்கிங்ஹாம் கால்வாய் வரை மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். </p><p>இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் செம்மஞ்சேரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க KfW நிதியின் கீழ், செம்மஞ்சேரி-அரசன் கழனி கால்வாயிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வரை ரூ.184.88 கோடி மதிப்பீட்டில் 4,235 மீட்டர் நீளத்தில் OMR மற்றும் TNHB பிரதான சாலை வழியாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2>மழைநீர் வடிகால் பணி</h2><p>செம்மஞ்சேரி-அரசன் கழனி கால்வாயிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வரை ரூ.184.88 கோடி மதிப்பீட்டில் 4,235 மீட்டர் நீளத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியின் ஒரு பகுதியாக, நூக்கம்பாளையம் இணைப்புச் சாலை மற்றும் டி.என்.எச்.பி “ஏ” சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், ஐ.ஏ.எஸ்.,  இன்று (08.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>நவீன ஒப்பனை அறை</h2><p>இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஈ.சி.ஆர். ப. சரவணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், ஐ.ஏ.எஸ்., ஆகியோர் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192க்குட்பட்ட நீலாங்கரை கடற்கரைப் பகுதியில் பொது-தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட நவீன ஒப்பனை அறையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டனர். இந்த நவீன கழிப்பறையில் ஆண்களுக்கான 4 கழிப்பறை இருக்கைகளும், பெண்களுக்கான 4 கழிப்பறை இருக்கைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான 1 கழிப்பறை இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>தொடர்ச்சியாக, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையாளர், நீலாங்கரை கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ஆணையாளர் நீலாங்கரை சாலையில் உள்ள சாலை மையத்தடுப்பில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் நடப்பட்டுள்ள செடிகளைப் பார்வையிட்டு, தொடர்ந்து பசுமையாக பராமரித்திட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, தலைமைப் பொறியாளர் (மழைநீர் வடிகால்) டி.ஞானவேல், மேற்பார்வைப் பொறியாளர் (மழைநீர் வடிகால்) ஆர்.ஏ.பிரபாகர், மண்டல அலுவலர் ஜி.லோகேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது விவகாரம்: த.வெ.க. அரசைக் கண்டித்து 14-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farm-loan-waiver-mekedatu-issue-aiadmk-protest-august-14-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farm-loan-waiver-mekedatu-issue-aiadmk-protest-august-14-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">722705fd-0992-4230-a7c6-6d118bd495d5</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:25:02 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:25:02.432Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,protest,ஆர்ப்பாட்டம்,Crop loan,மேகதாது விவகாரம்,பயிர்க்கடன் தள்ளுபடி,Mekedatu Dam Issue,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/owgign8l/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/owgign8l/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் வருகிற 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>2026, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ.75,000-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.</p><p>மேற்கண்டவாறு, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும்; மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.</p><p>த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும்; அப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்நிலையில், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை.</p><p>எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 - வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.</p><p>சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் தலைமையில் நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? திருமாவளவன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-was-discussed-at-the-meeting-of-mps-led-by-vijay-thirumavalavan-speaks-to-the-press</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-was-discussed-at-the-meeting-of-mps-led-by-vijay-thirumavalavan-speaks-to-the-press#comments</comments><guid isPermaLink="false">e49cde3d-9e97-4cdd-bfe1-0f3d29cc13c4</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:10:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:10:57.421Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/h8uzc0ki/Thirumalvanv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/h8uzc0ki/Thirumalvanv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை மசோதாவை விரைவில் மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று பேசப்படும் நிலையில், இதற்கு   தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.  இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல் அமைச்சர்  விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.இந்த கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.  சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் முதல் அமைச்சர்  விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. </p><p> இந்தக் கூட்டத்தில், தவெகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுகவைச் சேர்ந்த  எம்பிக்கள் 19 பேர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்பி சுதா, கர்நாடகாவில் கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் சுதெரிவித்துள்ளார். </p><p>சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே தொடர வேண்டும். அதாவது 543 ஆகவே தொடர வேண்டும். எம்பிக்கள் அனைவரும் ஒரே குரலில் வலியுறுத்தினோம்” என்றார். மாணிக்கம் தாகூர் கூருகையில், தொகுதி மறுவரையறை தமிழகத்தை பாதிக்கும். இது பாஜக, ஆர்.எஸ்.எஸ்சின் சதி” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-2-student-immolates-self-police-investigate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-2-student-immolates-self-police-investigate#comments</comments><guid isPermaLink="false">0f1873c0-4003-4e3e-80bb-a885c34075cb</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:56:41 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:56:41.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,தற்கொலை,திட்டக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/douolg5s/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/douolg5s/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பிளஸ்-2 மாணவி</h2><p>கடலூர் மாவட்டம் திட்டக்குடி கோழியூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகள் துர்கா (16 வயது). திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் துர்கா, நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிச் சென்றார். பின்னர் அவர், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.</p><h2>தீக்குளித்து தற்கொலை</h2><p>இதனால் பெற்றோர், உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, உடல் கருகிய நிலையில் துர்கா இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து திட்டக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துர்காவின் உடலை பார்வையிட்டனர். அப்போது துர்கா உறவினர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.</p><h2>சோகம்</h2><p>இதையடுத்து போலீசார், துர்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துர்கா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் சீண்டல்- பள்ளி வேன் டிரைவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-school-van-driver-arrested-for-entering-house-and-sexually-assaulting-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-school-van-driver-arrested-for-entering-house-and-sexually-assaulting-woman#comments</comments><guid isPermaLink="false">0e502954-1582-46cb-817b-7ba06672f7f2</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:25:53 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:25:53.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,Sexual harassment,Woman,பாலியல் சீண்டல்,பெண்ணிடம்,வீடு புகுந்து,Van driver arrested,வேன் டிரைவர்,house breaking</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/292vn0hq/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேன் டிரைவர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/292vn0hq/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், கயத்தாறு அருகே தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">பாலியல் சீண்டலில்</a> ஈடுபட்ட பள்ளி வேன் டிரைவரை, அந்தப் பெண்ணே தைரியமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>பெண்ணிடம் பாலியல் சீண்டல்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா, மூர்த்தீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் குமார் (வயது 23). இவர் கயத்தாறில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேன் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் 35 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கையைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். </p><p>இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக சுதாரித்துக் கொண்டு அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளார். தன்னை காப்பாற்றிக் கொண்டதுடன், அந்த வாலிபரை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து, உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். </p><h2>வேன் டிரைவர் கைது</h2><p>இச்சம்பவம் குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேன் டிரைவர் குமாரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>78 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்;  நீர்வரத்து சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-crosses-78-feet-inflow-drops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-crosses-78-feet-inflow-drops#comments</comments><guid isPermaLink="false">bc6465d7-dadc-4749-bdd2-e6ad03b3ba45</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:13:46 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:13:46.979Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர்மட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8fnphala/mettur-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8fnphala/mettur-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது. இதையடுத்து கடந்த 1-ந்தேதியில் இருந்து கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டது. அதே நேரம் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்தும் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வீதம் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சற்று மழை குறைந்தது. இதனால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. இதனால் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.</p><h2>அணை நீர் மட்டம் உயர்வு</h2><p>கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82.71 அடியாக உள்ளது, அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 820 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 9 ஆயிரத்து 583 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதே போல் கிருஷ்ண ராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 106.37 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 8064 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக கால்வாய் மற்றும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2049 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகத்துக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.</p><h2>மேட்டூர் அணை நீர்மட்டம்</h2><p>கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க மற்றும் பரிசல் இயக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது..மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 78.034 அடியாக உயர்ந்து காணப்பட்டது.</p><p>அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 808 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 40.02 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 4-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. அப்போது அணையின் நீர்மட்டம் 73.02 அடியாக இருந்த நிலையில் கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை குறித்து எதுவும் தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா? - ஆ.ராசா கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-people-who-know-nothing-about-constituency-redelineation-hold-a-meeting-a-raza-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-people-who-know-nothing-about-constituency-redelineation-hold-a-meeting-a-raza-questions#comments</comments><guid isPermaLink="false">29b0a82b-ae01-4400-9c61-e3c0cdea4d56</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:07:32 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:07:32.190Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,பெரம்பலூர்,ஆ ராசா,A.Rasa,தொகுதி மறுவரையறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/17ud28vf/rasa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/17ud28vf/rasa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலூர்,</p><p>தொகுதி மறுவரையறை குறித்து எதுவும் தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா? என திமுக எம்.பி. ஆ ராசா கேள்வி எழுப்பி உள்ளார்.</p><p>மேகதாது விவகாரம் தொடர்பாக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. ஆனால் திடீரென தவெக அரசு தரப்பில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக அனைத்து கட்சி எம்பிக்களின் கூட்டத்தை இன்று கூட்டி உள்ளார்.இந்தக் கூட்டம் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை மொத்தமுள்ள 57 தமிழ்நாடு எம்.பி.க்களில் 37 பேர் புறக்கணித்துள்ளன.</p><p>திமுக, தேமுதிக, மநீம, அதிமுக, பாமக கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ், விசிக, சிபிஐ, உள்ளிட்ட கட்சிகளின்19 எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். காங்., எம்.பி.சுதாவும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.</p><p>இந்தநிலையில்,   <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20">திமுக எம்பி ஆ.ராசா</a>விடம் பெரம்பலூரில் செய்தியாளர்கள், தவெகவின் அனைத்து எம்பிக்கள் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஆ.ராசா, நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் இல்லாத கட்சி கூட கூட்டத்தை நடத்தலாம். ஆனால் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதுவுமே தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா.. என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்துள்ளார். ஆ.ராசாவின் இந்த பதில் திமுக தொண்டர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-association-representatives-meet-with-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-association-representatives-meet-with-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">8ca4c725-7ca6-4aad-adb4-f60a9c2664e7</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:01:55 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:01:55.016Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,விவசாய சங்கம்,சந்திப்பு,பிரதிநிதிகள்,Representatives,Farmers&apos; Associations-விவசாயிகள் சங்கத்தினர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ro6o6pyx/80.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ro6o6pyx/80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலினை</a> சந்தித்தனர்.</p><p> இந்த சந்திப்பின்போது, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் - பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சையில் தி.மு.கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காகவும் சட்டமன்றத்தில் குரல்கொடுத்ததற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.</p><p>மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடியதற்காக, த.வெ.க. அரசின் காவல் துறை, எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்தது, மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். இந்தக் கூட்டு இயக்கத்தில் உள்ள 84 விவசாய அமைப்புகளும், த.வெ.க. அரசு பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதைக் கண்டித்து, பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்த வகையில், தங்களுடைய போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கமாறும், சட்டமன்றத்தில் குரல் எழுப்புமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். </p><p>முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், கழகத் தலைவரின் வழிகாட்டுதலில், சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும், விவசாயிகளுக்கு என்றும் உற்றத்துணையாக இருப்போம் என்றும், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுக்கு உறுதி அளித்தார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் கிரைண்டர் ஆப் மூலம் அழைத்து பணம் பறிக்க முயற்சி: 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-extort-money-through-grindr-app-in-nellai-3-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-extort-money-through-grindr-app-in-nellai-3-arrested#comments</comments><guid isPermaLink="false">80ab913a-8401-4b52-83da-84c912f7e266</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:56:18 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:56:18.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,3 arrested,3 பேர் கைது,பணம் பறிக்க முயற்சி,attempt to extort money,கிரைண்டர் ஆப்,grinder app</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ydnifdni/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ydnifdni/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,  </p><p>நெல்லை பெருமாள்புரம் பகுதியில் ஒரு நபரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D">கிரைண்டர் ஆப்</a> மூலம் அழைத்து, மிரட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பணம் பறிக்க முயன்ற</a> 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.</p><h2>கிரைண்டர் ஆப் மூலம் அழைத்து பணம் பறிக்க முயற்சி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சேலம் பகுதியை சேர்ந்த ஒரு நபரை, மர்ம நபர்கள் சிலர் Grindr (கே-Gay) செயலி மூலம் அழைத்து, மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். </p><h2>3 வாலிபர்கள் கைது</h2><p>அதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னாக்குடியைச் சேர்ந்த முருகன் மகன் பூபதிராஜா (வயது 20), முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர்களான பெருமாள் மகன் அருண்(20), பாலமுருகன் மகன் விஷ்ணுசுப்பு(21) ஆகிய 3 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்த போலீசார், அவர்களிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதலை காட்டிக்கொடுத்த கேமரா: மனைவி, கள்ளகாதலன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/camera-reveals-fake-lover-wife-fake-lover-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/camera-reveals-fake-lover-wife-fake-lover-arrested#comments</comments><guid isPermaLink="false">90bc470e-c4e8-4589-b950-eedd38c6a705</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:47:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:47:19.786Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,கள்ளக்காதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/khhvqpju/lover33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கள்ளக்காதலை காட்டிக்கொடுத்த கேமரா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/khhvqpju/lover33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சூளகிரி, </p><p>சூளகிரி அருகே விவசாயி சாவில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலை கண்டித்ததால் இரும்பு கம்பியால் அடித்து கொன்றது அம்பலமானது. இதுதொடர்பாக மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><p>கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிரா மத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது40). விவசாயி. இவர் கடந்த மாதம் 25-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சூளகிரியில் இருந்து குண்டு குறுக்கி நோக்கி சென்றார். பவர் கிரீட் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><p>இதுகுறித்து அவரது மனைவி ரூபா சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு ' பதிவு செய்து விசாரணை நடத்தினர். விவசாயி ராஜகோபால், விபத்தில் சாகவில்லை, கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டதாக சிலர் போலீசுக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ராஜகோபால் இரும்பு கம்பியால் தாக்கி கொல்லப்பட்டது தெரியவந்தது.</p><p>இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-</p><p>ராஜகோபால்-ரூபா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ரூபா. குண்டுகுறுக்கியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஒட்டையனூரை சேர்ந்த நந்தகுமார் (34) என்பவருக்கும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கள்ளத்தொடர்பு</a> ஏற்பட்டது. இதை அறிந்த ராஜகோபால் மனைவியை கண்டித்துள்ளார்.</p><p>கடந்த 25-ந்தேதி இரவு உடல் நிலை சரியில்லாத மனைவியை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார் பின்னர் அவரை வீட்டில் இறக்கிவிட்டு, உணவு வாங்க மீண்டும் ராஜகோபால் வெளியே வந்தார். இந்த தகவலை, ரூபா கள்ளக்காதலன் நந்தகுமாருக்கு தெரிவித்தார்.</p><p>2 பேர் கைது</p><p>இதையடுத்து. அவர் ராஜகோபாலை பின்தொடர்ந்து வந்து பவர் கிரீடு அருகே வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு நந்தகுமார், ரூபா ஆகிய இருவரும் எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளனர். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அனைத்து உண்மையும் வெளியே வந்துவிட்டது.</p><p>இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து நந்தகுமார் கொலைக்கு உடந்தையாக இருந்த ரூபா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.</p><p>நந்தகுமாருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கைதான ரூபாவும் நந்த குமாரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது குழந்தைகள் தவித்து வருகின்றனர். அதிலும் ராஜகோபால் கொலை செய்யப்பட்டுவிட்ட நிலையில் ரூபா சிறையில் அடைக்கப்பட்டதால் இவர்களது 2 குழந்தைகள் ஆதரவின்றி பரிதாப நிலையில் உள்ளனர். அவர்களை தற்போது குடும்பத்தினர் கவனித்து வருகிறார்கள்.</p><p>கள்ளக்காதல் விவகாரம் காரணமாக விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் சூளகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10-ந்தேதி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்: தமிழக அரசு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-to-provide-deworming-tablets-on-the-10th-tamil-nadu-government-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-to-provide-deworming-tablets-on-the-10th-tamil-nadu-government-information#comments</comments><guid isPermaLink="false">1ca5dff8-2951-468e-b0ce-53b9e2a90e5a</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:44:42 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:44:42.367Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tamil Nadu Government,Information,Special camp,சிறப்பு முகாம்,தமிழக அரசு தகவல்,குடற்புழு நீக்க மாத்திரை,Deworming tablets</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/u78gopsz/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு தகவல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/u78gopsz/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">தமிழ்நாடு</a> முழுவதும் வருகிற 10 மற்றும் 17-ம் தேதிகளில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. </p><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D">தமிழக அரசின்</a> மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்</h2><p>தமிழ்நாடு முழுவதும் 10.8.2026 மற்றும் 17.8.2026 ஆகிய நாட்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88">குடற்புழு நீக்க மாத்திரை</a> வழங்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">சிறப்பு முகாம்</a>கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இம்முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. </p><h2>குடற்புழு தொற்று தடுப்பு நாள்</h2><p>ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடற்புழு தொற்று தடுப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தின் சார்பில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தற்பொழுது தேசிய குடற்புழு தொற்று தடுப்பு நாளை முன்னிட்டு 10.8.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>10.8.2026 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம்முகாம்களில் 1 வயது முதல் 19 வயது வரையிலான 2.06 கோடி குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கும், 20 வயது முதல் 30 வயது வரையிலான 52.44 லட்சம் பெண்களுக்கும் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், இம்முகாம்களில் விடுபட்டவர்களுக்கு வருகின்ற 17.8.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கப்படவுள்ளது. </p><h2>அல்பெண்டசோல் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை</h2><p>இம்முகாம்களில் 1 வயது முதல் 2 வயதிலான குழந்தைகளுக்கு 1/2 மாத்திரையும் (200மிகி), 2 வயது முதல் 19 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கு ஒரு மாத்திரையும் (400மிகி) வழங்கப்படும். இந்த அல்பெண்டசோல் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது. </p><h2>நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு</h2><p>குடற்புழு தொற்று தடுப்பு நாள் முகாம்களில் வழங்கப்படும் அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதினால் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ரத்தச் சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. </p><h2>54,481 அங்கன்வாடி மையங்கள்</h2><p>தமிழ்நாட்டில் 10.8.2026 திங்கட்கிழமை அன்று 54,481 அங்கன்வாடி மையங்கள், 11,723 துணை சுகாதார நிலையங்கள், 56,483 பள்ளிகளில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்களில் 54,481 அங்கன்வாடி பணியாளர்களும், 59,700 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும், 6,543 மருத்துவர்களும், 12,456 கிராம சுகாதார செவிலியர்களும், 2,650 ஆஷா பணியாளர்கள் மற்றும் அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களும் இச்சிறப்பு முகாமில் பணியில் ஈடுபட உள்ளனர். </p><p>எனவே அனைத்து பெற்றோர்களும் 10.8.2026 மற்றும் 17.8.2026 ஆகிய நாட்களில் நடைபெறும் குடற்புழு தொற்று தடுப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. </p><p>“குடற்புழு தொற்றை குறைத்து வளமான எதிர்காலத்திற்கு வித்திடுவோம்”. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக புறக்கணிப்பது முறையற்றது - அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-boycott-of-all-party-mps-meet-improper-says-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-boycott-of-all-party-mps-meet-improper-says-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">81d606cf-ecd0-40cc-8ee1-b65c79ce239b</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:42:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:42:26.580Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,அனைத்துக்கட்சி கூட்டம்,all-party meeting,boycott புறக்கணிப்பு,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/qcazvsn1/minister-rajmohan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக புறக்கணிப்பது முறையற்றது - அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/qcazvsn1/minister-rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை</a> திமுக புறக்கணிப்பது முற்றிலும் முறையற்றது" என்று அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.</p> <h2>அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்</h2><p>தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் தொகுதி மறுவரையறை குறித்த முக்கிய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.</p> <p>இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>மாநில நலனில் அக்கறை இல்லை</h2><p>தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உரிமை மற்றும் மாநில நலன் சார்ந்த மிக முக்கிய பிரச்சனையாகும். இத்தகைய முக்கியமான கூட்டத்தில் பங்கேற்காமல் திமுகவும், அதிமுகவும் புறக்கணிப்பது முறையல்ல. இதன் மூலம் அவர்களுக்கு மாநில நலனில் சிறிதும் அக்கறை இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p> <h2>திமுகவின் இரட்டை வேடம்</h2><p>நாங்கள் ஆரம்பம் முதலே தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இந்த விஷயத்தில் எங்களுக்கு எப்போதுமே இரட்டை நிலைப்பாடு கிடையாது. ஆனால், ஆரம்பத்தில் இந்த வரைவு நகல்களை எரித்து நாடகமாடிய திமுகவினர், இப்போது கூட்டத்தில் கலந்து கொண்டு பேச தைரியமில்லாமல் பதுங்குவது ஏன்? </p><h2>பிரச்சனை</h2><p>தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி விவகாரத்தை கையில் எடுத்து திமுகவினர் சுயநல அரசியல் செய்ய பார்க்கிறார்கள். அரசின் இந்த ஆக்கப்பூர்வமான கூட்டத்தை கொச்சைப்படுத்தவும், மக்களின் கவனத்தை திசைதிருப்பவுமே கனிமொழி எம்.பி முயல்கிறார். காவிரி விவகாரத்தை யாராலும் திசை திருப்ப முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். </p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>மழைநீர் தேங்குவதை தடுக்க மாதவரத்தில் ரூ.22.88 கோடியில் புதிய வடிகால் அமைப்பு பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-a-new-drainage-system-at-a-cost-of-rs-2288-crore-in-madhavaram-to-prevent-rainwater-from-accumulating-is-in-full-swing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-a-new-drainage-system-at-a-cost-of-rs-2288-crore-in-madhavaram-to-prevent-rainwater-from-accumulating-is-in-full-swing#comments</comments><guid isPermaLink="false">ce4846e9-89a7-4756-a075-f1b0b22e50c8</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:37:09 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:37:09.868Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhavaram,மாதவரம்,Rainwater Drainage Works,தீவிரம்,மழைநீர் கால்வாய் பணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/3vl3ijna/79.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/3vl3ijna/79.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாதவரம் ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலையில் ரூ.22.88 கோடி மதிப்பீட்டில் 1,450 மீட்டர் நீளத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மழைநீர் சீராகச் செல்லும் வகையில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>மழைநீர் வடிகால் கட்டும் பணி</h2><p>இதன் ஒரு பகுதியாக, மாதவரம் மண்டலம், வார்டு-23க்குட்பட்ட மாதவரம் ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலையில் உள்ள பழைய மழைநீர் வடிகாலுக்கு மாற்றாக ரூபாய் 22.88 கோடி மதிப்பீட்டில் 1,450 மீட்டர் நீளத்தில் 2 மீ. x 2 மீ. இரண்டு துளைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகாலின் அடிப்பகுதி மட்டம் சீராக இல்லாமல், நீரோட்டம் தடைபட்டதாலும், ரெட்டேரி வடக்குப் பகுதியின் உபரிநீரை வெளியேற்ற ஏற்கனவே இருந்த வடிகாலின் அளவு போதுமானதாக இல்லாத காரணத்தினாலும் பழைய மழைநீர் வடிகால் இடித்து அகற்றப்பட்டு புதிய மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இந்த மழைநீர் வடிகாலானது வி.எஸ். மணி நகரிலிருந்து புழல் உபரிநீர் வெளியேறும் இடம் வரை கட்டப்படுகிறது. இதனால் எம்.ஆர்.எச். சாலை, பாலாஜி நகர், வெஜிடேரியன் நகர் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-7-pm-in-18-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-7-pm-in-18-districts#comments</comments><guid isPermaLink="false">2a37459c-d36b-44fe-9052-be68a6223217</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:36:48 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:36:48.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/m11q4upz/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/m11q4upz/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் ஊழலை அம்பலப்படுத்திய குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி வரும்? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-only-the-accused-who-exposed-dmk-govt-corruption-suddenly-get-chest-pain-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-only-the-accused-who-exposed-dmk-govt-corruption-suddenly-get-chest-pain-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">1c1e335e-b140-4dcd-aee4-81c4654196fd</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:23:28 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:23:28.230Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,ஊழல்,தவெக அரசு,TVK Government,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/k59q5x9h/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/k59q5x9h/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் என்பவர் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென உயிரிழந்துவிட்டதாகவும், சார்பதிவாளர் மணிகண்டன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகின்றன. </p><p>முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில், தவெக அரசின் மிகப்பெரும் ஊழலை அம்பலப்படுத்திய இவ்வழக்கின் குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி வரும்? அதிலும் இவ்வழக்கின் முக்கிய சாட்சியங்களாக கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி உடல்நலக்குறைவு ஏற்படும்?</p><p>ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் இருக்கும் குற்றவாளிகள் எல்லாம் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணத்தை இயற்கையான நிகழ்வு என்று கடந்து போக முடியவில்லை.</p><p>எனவே, அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக் காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்! இம்மரணத்தின் உண்மையான பின்னணி குறித்த முறையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்! மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார்பதிவாளர் மணிகண்டனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி, அவரை அரசு பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை; த.வெ.க.வின் நிலைப்பாடு என்னவென தெளிவாக கூறவில்லை:  தி.மு.க. செய்தி தொடர்பாளர் பேட்டி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tmcs-stand-on-constituency-redelineation-is-not-clear-dmk-spokesperson-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tmcs-stand-on-constituency-redelineation-is-not-clear-dmk-spokesperson-interview#comments</comments><guid isPermaLink="false">b3d99fb4-9b1b-47b9-8639-52fc8f312889</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:22:44 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:22:44.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,த.வெ.க.,தி.மு.க.,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ac0xdlk9/tksip.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ac0xdlk9/tksip.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தொகுதி மறுவரையறையில் த.வெ.க.வின் நிலைப்பாடு என்னவென தெளிவாக கூறவில்லை என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் பேட்டியளித்து உள்ளார்.</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் திருத்தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிக்கிறது என தகவல்கள் வெளி​யாகி​ இருந்தன.</p>  <h2>தமிழக எம்​.பி.க்​கள் கூட்டம்</h2><p>இந்த சூழலில், தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான அனைத்​து கட்​சிகளின் எம்​.பி.க்​கள் கலந்​தாய்​வு கூட்​டம் முதல்​-அமைச்சர் விஜய் தலை​மை​யில் சென்​னை​யில் இன்று நடை​பெறுகிறது.  இதுகுறித்து விவா​திப்​ப​தற்​காக தமிழக எம்​.பி.க்​கள் ஆலோ​சனை கூட்​டத்​துக்கு முதல்​-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்​திருந்தார்.</p><p>இந்த கலந்தாய்வு கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்கு முதல்​-அமைச்சர் விஜய் தலைமை வகிப்​பார். இதற்​கான அழைப்​பிதழ் டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லத்​தின் மூலம் அனைத்து மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை உறுப்​பினர்​களுக்கும் அனுப்​பப்​பட்டு இருந்தது.</p>  <h2>தி.மு.க.-அ.தி.மு.க. புறக்கணிப்பு</h2><p>எனினும், இந்த கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகியவை பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன.  அ.தி.மு.க.வும் கூட்டத்தில் பங்கேற்காது என தெரிவித்து உள்ளது.</p><p>இந்த நிலையில், தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான அனைத்​து கட்​சிகளின் எம்​.பி.க்​கள் கூட்ட புறக்கணிப்பு பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் இன்று பேட்டி அளித்துள்ளார்.</p>  <h2>த.வெ.க. நிலைப்பாடு</h2><p>அவர் கூறும்போது, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அவர்களுடைய நிலைப்பாடு என்னவென்று தெளிவாக கூறவில்லை.  தொகுதி மறுவரையறையில் த.வெ.க.வின் நிலைப்பாடு என்ன என்பதே? எங்களுடைய கேள்வி.  அதனை அவர்கள் தெளிவுப்படுத்தவில்லை.</p><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் த.வெ.க.வின் பார்வை என்ன? இந்த கூட்டத்தின் செயல்பாட்டு திட்டம் என்ன? எதனையும் அவர்கள் கூறவில்லை.</p>  <h2>மசோதா தோற்கடிப்பு</h2><p>இந்த விவகாரம் பற்றி நாங்கள் ஆலோசிக்க போகிறோம் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும்.  எங்களிடம் அவர்கள் எதுவும் கூறவில்லை.  தொகுதி மறுவரையறை பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை.  அதுபற்றி தெரியாமல் நாங்கள் எப்படி கூட்டத்தில் பங்கேற்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.</p><p>கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, அந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதனை நாங்கள் எதிர்த்தோம்.  அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.  அதன் மீதுள்ள எங்களுடைய பார்வையை நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம்.</p> ]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது – கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-not-participate-in-the-political-drama-being-conducted-by-the-tvk-government-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-not-participate-in-the-political-drama-being-conducted-by-the-tvk-government-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">f0b22376-1f20-48d4-b3d1-bae9e6bbc8da</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:19:23 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:19:23.716Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Kanimozhi,தி.மு.க,திமுக எம்பி கனிமொழி,TVK Government,த.வெ.க. அரசு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/a58v133w/kanimozhi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/a58v133w/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் எம்.பி.க்களுடன் இணைந்து மத்திய ஜல் சக்தி மந்திரியை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வருவார்களா?</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் மற்றும் கட்சித் தலைவர்களைஅழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில் நடத்திக் காட்டினார். ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் எங்கள் கழகத் தலைவர் ஓரணியில் திரட்டிக் காட்டினார்.</p><p>அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டமுன்வரைவை பா.ஜ.க. கொண்டுவந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்கு இடையிலும் இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலைக் கொளுத்தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச் செய்தார். </p><h2>திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு</h2><p>தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் - அது இன்னும் கையில் கிடைக்கப்பெறாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் நிபந்தனைகளை ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்வரும் தீர்மானங்கள் வாயிலாகத் தெரிவித்துவிட்டோம்:</p><h2>சட்டத் திருத்தம்</h2><p>1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.   </p><h2>தொகுதிகளின் எண்ணிக்கை</h2><p>மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>7.18 சதவீதம் </h2><p>தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றம் செய்யக் கூடாது. தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. </p><h2>அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம்</h2><p>அந்த நிலைப்பாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் இப்போதும் உறுதியாக நிற்கிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இப்போதும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கும்போது இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர்களை மாற்றுவதற்குத்தான் இந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறதா?</p><h2>த.வெ.க. அரசு கள்ள மவுனம்</h2><p>தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரான, நமது பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறையைத் தி.மு.க. நிச்சயம் எதிர்க்கும். அதில் எள்ளளவும் எங்களிடம் மாற்றம் இல்லை. ஆனால், காவிரிப் பிரச்சினைக்காகத் தமிழ்நாடு முழுவதும் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. மேகதாது அணை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அனைவரும் கேட்கும் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், அதுகுறித்து வாயும் திறக்காமல் த.வெ.க. அரசு கள்ள மவுனம் காக்கிறது. யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தைத் த.வெ.க. அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை. </p><h2>திமுக பங்கேற்காது</h2><p>தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக தமிழ்நாட்டின் உயிர்ப்பிரச்சினையான மேகதாது அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95dmk">தி.மு.க.</a>வின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது. </p><p>தமிழ்நாட்டின் காவிரி உரிமையிலும் டெல்டா உழவர்கள் மீதும் இந்த அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறதென்றால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று மத்திய ஜல் சக்தி மந்திரியிடம் நேரில் வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும்.  தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப  தமிழ்நாடு முதலமைச்சர் தயாரா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செங்கல் சூளைக்கு மண் எடுக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் கோட்டாட்சியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/revenue-officer-arrested-for-rs-50k-bribe-for-brick-kiln-soil</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/revenue-officer-arrested-for-rs-50k-bribe-for-brick-kiln-soil#comments</comments><guid isPermaLink="false">f7d66f8c-d3ac-4ba0-a29f-5be1c0d1a58d</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:14:23 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:14:23.150Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,லஞ்சம்,soil,வருவாய் கோட்டாட்சியர்,Brick Kiln,செங்கல் சூளை,மண்,revenue officer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/70qcr63v/cor.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆர்.டி.ஓ. கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/70qcr63v/cor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பரமக்குடி,</p><p>மானாமதுரையில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைக்கு மண் எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்க ரூ.50 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> பெற்ற பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவணபெருமாள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது.</p><h2>லஞ்ச வேட்டை</h2><p>ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வருபவர் சரவண பெருமாள். மானாமதுரை பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் ஒருவர், தனது சூளைக்கு சவுடு மண் எடுத்து செல்வதற்காக முறைப்படி அனுமதி கோரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். </p><h2>ரூ.50 ஆயிரம்</h2><p>இந்த அனுமதி ஆணையை வழங்குவதற்கு ஆர்.டி.ஓ. சரவண பெருமாள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.  லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். </p><h2>கையும் களவுமாக சிக்கினார்</h2><p>போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயனப் பொடி தடவிய ரூ.50 ஆயிரம் நோட்டுகளை அந்த நபர் ஆர்.டி.ஓ. சரவண பெருமாளிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்தை வாங்கிய ஆர்.டி.ஓ.வை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். </p> <p>அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை:  எம்.பி.க்களுடன் விஜய் ஆலோசனை- யார் யார் பங்கேற்பு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-vijay-consults-with-mps-who-participated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-vijay-consults-with-mps-who-participated#comments</comments><guid isPermaLink="false">3b60a466-934e-446c-b82f-9d7cdabae390</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:42:31 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:42:31.635Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,திமுக,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/pj9kkuik/vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/pj9kkuik/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய பா.ஜனதா அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம்  அனுப்பியிருந்தார்.  இந்த கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணித்துள்ளது. பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சியும் புறக்கணித்துள்ளது.  </p> <h2>யார் யார் பங்கேற்பு</h2><p>காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர்,விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, விஜய் வசந்த், பிரவீன் சக்கரவர்த்தி,ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் மற்றும் அக்கட்சி எம்பி ரவிக்குமார்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்பி நவாஸ் கனி,  கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா இரண்டு எம்பிக்கள், மதிமுக எம்பி துரை வைகோ ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  தமிழகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் மொத்தம் 57 பேர் உள்ள நிலையில், 19 எம்.பிக்கள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். 37 எம்.பிக்கள் கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.  காங்கிரஸ் எம்பி சுதா இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 2.2 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/22-kg-of-ganja-2-bikes-seized-in-nellai-2-youths-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/22-kg-of-ganja-2-bikes-seized-in-nellai-2-youths-arrested#comments</comments><guid isPermaLink="false">09d9a516-ef5f-456d-90a9-eb38e11643c1</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:27:37 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:27:37.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Ganja,கஞ்சா,பறிமுதல்,bike,seized,பைக்,vehicle check,வாகன சோதனை,2 வாலிபர்கள் கைது,2 youths arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/id62bk2x/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 வாலிபர்கள் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/id62bk2x/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,  </p><p>நெல்லை மாநகரம் பெருமாள்புரம், மேலப்பாளையம் பகுதிகளில் 2 கிலோ 250 கிராம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a>, 2 செல்போன்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>வாகன சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாநகரம், பெருமாள்புரம் மற்றும் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியான 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. </p><h2>2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன், 2 பைக் பறிமுதல், 2 பேர் கைது</h2><p>இதனையடுத்து உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய போதை பொருளான கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர்களான பெருமாள்புரத்தைச் சேர்ந்த சுகுமார் (வயது 23), மேலப்பாளையத்தைச் சேர்ந்த திவான்மைதீன்(22) ஆகிய 2 பேரிடமும் இருந்து மொத்தம் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் 2 பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>