<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 25 Jul 2026 13:31:57 +0000</lastBuildDate><item><title>திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சியில் ஆய்வுக் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-on-solid-waste-management-works-at-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-on-solid-waste-management-works-at-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">e3a589b9-59d9-4c26-a73d-3c9321a05e6c</guid><pubDate>Sat, 25 Jul 2026 13:15:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T13:15:00.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,ஆய்வுக் கூட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/c8uareo8/Untitled-7.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/c8uareo8/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இன்று (25.07.2026) மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><h2>அபராதம் விதித்து நடவடிக்கை</h2><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பணிகளை ஆய்வு செய்து பேசும்போது தெரிவித்ததாவது:</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகளை தனித்தனியே பிரித்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதைப்போல. குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதற்கு உரிய விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், கட்டட இடிபாட்டுக் கழிவுகளை முறையாக அகற்றி மறுசுழற்சிக்குட்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.</p><p>சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனத்தினர் பின்பற்றிடவும், மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும். சாலைகள், தெருக்கள், பேருந்து நிறுத்தங்கள், மயானபூமி, பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் தூய்மைப் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் இரவு நேரங்களில் இயந்திரப் பெருக்கிகளைப் பயன்படுத்தி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>பணிகளை விரைவுபடுத்த வேண்டும்</h2><p>கொடுங்கையூர்,பெருங்குடி குப்பை கிடங்குகளில் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணியினை தொடர்ந்து கண்காணித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பெருநகர சென்னை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநகராட்சிப் </a>பகுதிகளில் திடக்கழிவுப் பணிகளை அலுவலர்கள் கண்காணித்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.</p><p>இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், காணொலி காட்சியின் வாயிலாக வட்டார துணை ஆணையாளர்கள் ஸ்வேதா சுமன், (வடக்கு), எச்.ஆர்.கௌஷிக், (மத்தியம்), அதாப் ரசூல்,  (தெற்கு), தலைமைப் பொறியாளர் பாலமுரளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் சிக்காதீர்: முதல்-அமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-get-caught-in-the-trap-of-negotiations-mk-stalins-request-to-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-get-caught-in-the-trap-of-negotiations-mk-stalins-request-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">ad65ae14-a521-4c0f-90e4-558d63fe920f</guid><pubDate>Sat, 25 Jul 2026 13:01:31 +0000</pubDate><atom:updated>2026-07-25T13:01:31.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,மு.க.ஸ்டாலின்,Karnataka,கர்நாடகா,காவிரி விவகாரம்,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/n3dzyy3s/staline33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/n3dzyy3s/staline33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் முதல்-அமைச்சர் சிக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நாம் எடுத்த முயற்சிகளின் வரலாறு மிக நீண்டது.  1960-களில் தொடங்கி 1990 வரை பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்காததால்தான் அது கைவிடப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ஆட்சிக்காலத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன்பிறகும் தமிழ்நாட்டுக்கான தண்ணீரை வழங்குவதில் அநீதி இழைத்து வந்தது கர்நாடக மாநில அரசு.</p><p>கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்டபோதெல்லாம், அதனை உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிராகரித்தது. ஏனென்றால், பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே கர்நாடக மாநில அரசு செயல்படும். உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்சினையை இழுப்பதாகவே அப்பேச்சுவார்த்தைகள் அமையும்.</p><p>அதிலும் குறிப்பாக, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலுமாக நிராகரிப்பதாகும். எனவே, இதுகுறித்து கர்நாடக அரசுடன் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்துவதால் பயனில்லை என்பதே நமது நிலைப்பாடாகும்.</p><p>மேகதாது குறித்து பேசுவதற்காக, கர்நாடக முதல்-மந்திரி. எடியூரப்பா அவர்கள் அழைப்பு விடுத்தபோது, முதல்-அமைச்சராக இருந்த நான், “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” என மறுத்தேன். அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த  துரைமுருகன் அவர்களும், “பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” எனத் திட்டவட்டமாக அறிவித்தார். முற்றிலும் தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் உழவர் பெருமக்களுக்கும் விரோதமானது அந்தத் திட்டம். அதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்பதே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம்.</p><p>இந்நிலையில், கர்நாடகம் சென்று அம்மாநில முதல்-மந்திரியுடன் முதல்-அமைச்சர் விஜய் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என  வேளாண்துறை அமைச்சரே தெரிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கர்நாடக அரசிடம், தமிழ்நாடு பணிந்து போகும் நிலையாகும்.</p><p>மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்றும், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்றும், யார் எதிர்த்தாலும் கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக மாநில அரசு வெளிப்படையாக, தொடர்ச்சியாகச் சொல்லும் போது, அவர்களிடம் பேசி என்ன ஆகப் போகிறது? அவர்களது பிடிவாதக் குணத்தை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறோமா?</p> <p>காவிரி நீர் திறக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே ஒரு “ஸ்கீம்” உருவாக்கப்பட்டு, எந்தெந்த மாதம் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்து வெளியிடப்பட்டு விட்டது. அதைச் செயல்படுத்தக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குச் செல்வது என்பது  தமிழ்நாடு அரசின் 30 ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்தைச் சிதைப்பதாக அமைந்துவிடும். பேச்சுவார்த்தைக்குத் முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகம் செல்வது, தமிழ்நாட்டின் நிலையைக் குறைப்பதாகவும் அமைந்துவிடும்.</p><p>ஏற்கெனவே உள்ள சட்டப்பூர்வ உரிமையைச் சிதைக்க “பேச்சுவார்த்தை” எனக் கர்நாடகம் தற்போது விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று <a href="https://www.dailythanthi.com/search?q=m.k.stalin">தமிழ்நாடு முதல்-அமைச்சர் </a>சிக்குவது ஏன்? தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் விதமாக முதலமைச்சர் செய்யும் இந்தச் செயலைப் பார்த்துக் காவிரி டெல்டா விவசாயிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.</p><p>கர்நாடக மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ் கட்சி அரசாகும். தமிழ்நாடு அரசிலும் காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது. எனவே கண்துடைப்புக்காக இதுபோன்ற பேச்சுவார்த்தை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. 'நாங்கள் நேரிலேயே போய்ப் பேச்சுவார்த்தை நடத்தினோமே' என்று கணக்குக் காட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்படலாமே தவிர, வேறு எந்தப் பயனும் ஏற்படப் போவது இல்லை.</p><p>காவிரி நீர் உரிமைப் பங்கீட்டுப் போராட்டம் நீண்ட நெடியது. தமிழ்நாட்டின் காவிரி உரிமை சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்ட ஒன்று. காவிரி நீர் உரிமையின் ஆழ அகலங்களைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தரக் கர்நாடகம் மறுத்தால், அது நீதிமன்ற அவமதிப்பு; சட்ட மீறல்! மேகதாது அணை கட்ட முயற்சிப்பது உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை மீறுவது. காவிரி போன்ற தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையையும் - விவசாயச் சங்கங்களின் கருத்துகளையும் பெற்ற பின்பே செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி உரிமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்குக் கர்நாடகம் செல்லும் தவறான முயற்சியை  முதல்-அமைச்சர்கைவிட வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் சார்பாகவும் - தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் இளைஞர்களுடைய போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி - கனிமொழி எம்.பி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-victory-for-the-youths-protests-across-the-country-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-victory-for-the-youths-protests-across-the-country-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">0c75769d-b38f-41c6-b870-392acd6d3a6a</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:51:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:51:45.320Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்.பி,தூத்துக்குடி விமான நிலையம்,நீட் வினாத்தாள் கசிவு,Kanimozhi Karunanidhi,Thoothukkudi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2024/12/17/28367098-untitled-1.webp" width="750"><media:title type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2024/12/17/28367098-untitled-1.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தூத்துக்குடி</a> விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியதாவது:-</p><p>நாடு முழுவதும் இளைஞர்களுடைய போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி, மத்திய அரசாங்கம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீட் வினாத்தாள் கசிவுக்கு </a> பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று  தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுருந்தார்கள்.</p><p>எனினும் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்று பிம்பத்தை பரப்ப கூடிய சூழலில் ,</p><p>இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தைக் கையில் எடுத்து மத்திய அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.</p><p>மத்திய அரசாங்கம் எந்தக் கேள்விக்குமே பதில் சொல்லாது என்ற சூழ்நிலையில் இருந்ததை, நாட்டு மக்களுக்கு நீங்கள் பதில் சொல்லி ஆக வேண்டும் என்று பெற்றிருக்கக்கூடிய வெற்றி.</p><p>மேலும் அடுத்த கோரிக்கையாக, மாநிலப் பட்டியலுக்கு கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முன்வைக்கக்கூடிய கோரிக்கை அதுவே. இதில் வெற்றி பெற்றால் நிச்சயமாக நாங்களும் வெற்றி அடைவோம்.</p><p>மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால் நிச்சயமாக நீட் ரத்து செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது.</p><p>அருணாச்சலத்தின் குடும்பத்தைதான் சந்திப்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் காவல் மரணம் குறித்து பலமுறை பேசியிருக்கிறார்கள். முதல்-அமைச்சர் காவல் நிலைய கொலைகளைப் பற்றி வாய் திறப்பதே கிடையாது என்ற குற்றச்சாட்டை எங்களுடைய தலைவர் நேற்று முன்வைத்திருக்கிறார். </p><p>தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறையைப் பயன்படுத்தாமல், தங்களுக்கு யாரெல்லாம் எதிரியாக நினைக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது, தமிழ்நாட்டில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினுடைய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறியிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-that-will-experience-power-outages-tomorrow%E0%AE%9F%E0%AF%8D</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-that-will-experience-power-outages-tomorrow%E0%AE%9F%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">e332d97a-92e1-4aa7-95fa-b9a5bdeaa196</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:47:59 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:47:59.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தாம்பரம்,maintenance work,வேளச்சேரி,மின் தடை power cut,இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/df0wj95v/82.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/df0wj95v/82.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னையில் 27.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">பராமரிப்பு பணி</a> காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>வேளச்சேரி:</strong> விஜயா நகர் 3 வது, 6 வது, 9 வது முதல் 11வது தெருக்கள் வரை, ராம் நகர் 4 வது முதல் 7 வது தெருக்கள் வரை, கோமதி நகர் 8 வது தெரு, வேளச்சேரி பிரதான சாலை.</p><p><strong>கொட்டிவாக்கம்:</strong> சாஸ்திரி நகர், வால்மீகி நகர், 2வது சீவார்டு சாலை முதல் 4வது சீவார்டு சாலை வரை, பாலகிருஷ்ணன் சாலை, கே.கே. சாலை, ராஜா ரங்கசாமி அவென்யூ, சுப்பிரமணியம் அவென்யூ, திருவள்ளுவர் நகர் 7வது முதல் 33வது குறுக்குத் தெருக்கள் வரை, திருவள்ளுவர் நகர் 1 மற்றும் 3 முதல் 6வது பிரதான சாலைகள் வரை, 1 மற்றும் 3வது அவென்யூ, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.</p><p><strong>சித்தாலப்பாக்கம்:</strong> பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு, நற்குணம் அவென்யூ, ஸ்ரீ சாய் கார்டன், நூக்கம்பாளையம் பிரதான சாலை, இந்திரா நகர் பிரதான சாலை , காமராஜ் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ரோஸ் கார்டன் சாலை, டி.என்.யு.எச்.டி.பி. ஏ பிளாக் முதல் யூ வரை, ஏஏ முதல் எச் , மற்றும் 209 முதல் 212 பிளாக் வரை.</p><p><strong>தாம்பரம் :</strong> இரும்புலியூர் சர்வீஸ் சாலை, இன்விகான் பிளாட், TTK நகர், ஜெருசீலம் நகர், சர்ச் சாலை, ரத்தின குமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ்.ராஜன் நகர், ஜி.கே.மூப்பனார் அவென்யூ.</p><p><strong>திருமுல்லைவாயல்:</strong> கிரீன் ஃபீல்ட், சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர், மாசிலாமணீஸ்வரர் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஒரகடம் சொசைட்டி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம் அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் துணிகர கொள்ளை: பொதுமக்கள்- வியாபாரிகள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/daring-burglaries-at-four-consecutive-shops-near-villupuram-public-and-traders-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/daring-burglaries-at-four-consecutive-shops-near-villupuram-public-and-traders-alarmed#comments</comments><guid isPermaLink="false">b9580b77-e3cb-4283-a674-430da93d45c6</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:43:06 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:43:06.874Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழுப்புரம்,Villupuram,கொள்ளை,Robbery,public panic,பொதுமக்கள் அச்சம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q7dbmqxb/19.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கொள்ளையடிக்கப்பட்ட கடை -மோப்பநாய்]]></media:title><media:description type="html"><![CDATA[ விழுப்புரம் அருகே 4 கடைகளில் கொள்ளை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q7dbmqxb/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விழுப்புரம் மாவட்டம்</a> அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் நடந்த கொள்ளையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்தனர். </p><h2>நள்ளிரவில் துணிகர கொள்ளை</h2><p>விழுப்புரம் அடுத்த பிடாகம் பகுதியில் பல்வேறு வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இயங்கி வருகின்றன. நேற்று இரவு வியாபாரிகள் தங்களது கடைகளைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றனர். இன்று காலை வழக்கம் போல் கடைகளைத் திறக்க வந்தபோது, அடுத்தடுத்து நான்கு கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p><h2>ரூ.25,000 -பொருட்கள் திருட்டு</h2><p>மர்ம நபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 25,000 ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும், கடையிலிருந்த விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் இதர பொருட்களையும் அள்ளிச் சென்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">துணிகர கொள்ளை</a> அரங்கேறியது.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மோப்ப நாய் </a>வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.</p><h2>பொதுமக்கள் அச்சம்</h2><p>நெருக்கடி மிகுந்த பகுதியில் ஒரே நள்ளிரவில் 4 கடைகளில் கொள்ளை போயிருப்பது அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காதலுக்கு மறுப்பு;  காதலி வேறு  நபருடன் திருமணம் - முன்னாள் காதலன் செய்த விபரீத செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rejection-of-love-ex-girlfriend-marries-another-man-ex-boyfriend-commits-a-drastic-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rejection-of-love-ex-girlfriend-marries-another-man-ex-boyfriend-commits-a-drastic-act#comments</comments><guid isPermaLink="false">b6d61e31-62f7-4220-8ac3-5f3362c0f6e6</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:39:46 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:39:46.936Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,கத்தி குத்து,ex-boyfriend,woman injured,முன்னாள் காதலன் கைது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/12/13/44538026-national-04.webp" width="750"><media:title type="html"><![CDATA[ கத்தி குத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமணமான இளம்பெண்ணை முன்னாள் காதலன் கத்தியால் குத்தினார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/12/13/44538026-national-04.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான இளம்பெண் ஒருவரை அவரது முன்னாள் காதலன் கத்தியால் கொடூரமாக குத்தினார். </p><h2>காதலும் திருமணமும்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கரூர் </a>மாவட்டத்தின் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் காதலித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் இவர்களது காதல் தடைபட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் முன்னாள் காதலன் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.</p><h2>பொதுவெளியில் கொடூர தாக்குதல்</h2><p>இன்று (சனிக்கிழமை) குளித்தலை பகுதியில் அந்தப் பெண் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் காதலன் திடீரென அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே, ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தப் பெண்ணை சரமாரியாகக் குத்தினார். அதனால் அந்த பெண் வலியில் அலறிக் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு சுற்றியிருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொது மக்கள்</a> ஓடி வந்தனர்.</p><h2>குற்றவாளிக்கு தர்மஅடி</h2><p>பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண்ணை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், தப்பியோட முயன்ற முன்னாள் காதலனை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தர்மஅடி </a>கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இதுகுறித்து கரூர் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் பஸ் மோதி தந்தை கண்முன்னே கல்லூரி மாணவி உயிரிழப்பு  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-after-being-hit-by-a-private-bus-right-before-her-fathers-eyes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-after-being-hit-by-a-private-bus-right-before-her-fathers-eyes#comments</comments><guid isPermaLink="false">2e22b42a-4323-4492-9d0f-ec7045f14ed5</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:39:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:39:45.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,திருவண்ணாமலை,Thiruvannamalai,தனியார் பஸ்,மாணவி பலி,College student dies</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/3nkf2iua/22.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ துர்கா தேவி ]]></media:title><media:description type="html"><![CDATA[ விபத்தில் துர்கா தேவி உயிரிழந்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/3nkf2iua/22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவண்ணாமலை</a> செய்யாறு சாலையில் பைக் மீது தனியார் பஸ் மோதி தந்தை கண்முன்னே கல்லூரி மாணவி உயிரிழந்தார்.</p><h2>விபத்து</h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் துர்கா தேவி . இவர் செய்யாறு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். வழக்கம்போல இன்று (சனிக்கிழமை) காலை அவர் தனது தந்தையுடன் பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செய்யாறு அருகே உள்ள ஒரு சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக அவர்களது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பைக்</a> மீது பலமாக மோதியது.</p><h2>தந்தை கண்முன்னே நேர்ந்த சோகம்</h2><p>அந்த பயங்கர விபத்தில் துர்கா தேவி பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும், தனது கண்முன்னே மகள் உயிரிழந்ததைக் கண்டு அவர் கதறி அழுதது அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் ஓட்டுநரை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைது</a> செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 5-வது மாடியிலிருந்து விழுந்த தள்ளுவண்டி: கீழே குளித்த வடமாநில தொழிலாளி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pushcart-falls-from-5th-floor-in-chennai-north-indian-worker-bathing-below-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pushcart-falls-from-5th-floor-in-chennai-north-indian-worker-bathing-below-killed#comments</comments><guid isPermaLink="false">625a5213-733f-4395-b6aa-ffa66f91f86b</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:38:32 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:38:32.314Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,Chennai,சென்னை,பலி,வடமாநில தொழிலாளி,North Indian worker</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2dmcne8f/18.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தள்ளுவண்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை 5-வது மாடியில் இருந்து தள்ளுவண்டி கீழே விழுந்ததில் கீழே குளித்துக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2dmcne8f/18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தரமணியில் 5-வது மாடியிலிருந்த தள்ளுவண்டி, கீழே குளித்துக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியின் மீது விழுந்ததில் அவர் பலியாகினார்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>தரமணி பகுதியில் அடுக்குமாடி கட்டிட கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று (சனிக்கிழமை) காலை, கட்டிடத்தின் 5-வது தளத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் 'வீல் பாரோ' எனப்படும் தள்ளுவண்டி நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்தது. </p><h2>வடமாநில தொழிலாளி பலி</h2><p>அந்த சமயத்தில், கட்டிடத்தின் கீழே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பகுதியில் அஸ்ரபுல் ஆலம் (வயது 31) என்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வடமாநில தொழிலாளி</a> குளித்துக் கொண்டிருந்தார். 5-வது மாடியில் இருந்து அதிவேகமாக வந்த அந்த இரும்பு வண்டி, அஸ்ரபுல் ஆலம் மீது பலமாக விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை</h2><p>இந்த விபத்தின் போது அஸ்ரபுல் ஆலம் அருகில் நின்று கொண்டிருந்த முகமது ஸ்ரேல் என்ற மற்றொரு தொழிலாளி மீதும் வண்டி மோதியதில், அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த தரமணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அஸ்ரபுல் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டுமான தளத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வலைகள் பொருத்தப்படாததே இந்த விபத்திற்கு காரணமா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய அளவில் முதலிடம்: தமிழகத்தில் 15 ஆயிரத்தை கடந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-in-india-tamil-nadu-has-over-15000-startups</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-in-india-tamil-nadu-has-over-15000-startups#comments</comments><guid isPermaLink="false">865dd5ef-69d2-47b0-bf98-15b7c01f7ebf</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:23:44 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:23:44.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,சென்னை,பெண்கள்,தொழில் முனைவோர்,StartUp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/wukyugae/81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்டார்ட் அப்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/wukyugae/81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தொழில் மற்றும் உள்புற வர்த்தக மேம்பாட்டுத்துறையால்  அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 15,037 ஆக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.</p><h2>ஸ்டார்ட் அப்</h2><p>சமீபத்திய தரவுகளின் படி, தமிழ்நாட்டில் பெண்கள் தொழில் முனைவோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7,572 ஆக பதிவாகியுள்ள நிலையில், ஆண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் 7,465 ஆக உள்ளன. இதன் மூலம், பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆண்களை விட சற்றே அதிகமாக இருப்பது பாலின சமத்துவத்தின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.</p><p>மாநிலத்தின் ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் சென்னை தொடர்ந்து முன்னணியில் உள்ளது. தலைநகரில் மட்டும் 5,134 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இது மாநிலத்தின் மொத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாகும்.</p><p>சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2,011 நிறுவனங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,318 நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. மேலும், திருவள்ளூர் (916), செங்கல்பட்டு (815), மதுரை (497), திருச்சி (446), சேலம் (403) ஆகிய மாவட்டங்களும் ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன.</p><p>தமிழ்நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் அரசின் பல்வேறு திட்டங்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் புதுமை சார்ந்த சூழல் காரணமாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D">ஸ்டார்ட் அப்</a> நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>129 அரசு கலைக்கல்லூரிகளுக்கு விரைவில் புதிய முதல்வர்கள் நியமனம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-principals-to-be-appointed-soon-for-129-government-arts-colleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-principals-to-be-appointed-soon-for-129-government-arts-colleges#comments</comments><guid isPermaLink="false">6b8e327f-5eb1-4cb7-88db-e865ebd99e92</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:21:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:21:45.201Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Higher Education Department,உயர்கல்வித்துறை,அரசு கலைக்கல்லூரி,Government Colleges,கல்லூரி முதல்வர்,Government Arts Colleges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xr6idsup/Untitled-6.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xr6idsup/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>129 அரசு கலைக்கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள். இரண்டாம் நிலை கல்லூரிகளின் முதல்வர்களாகப் பணியாற்ற இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு அளிப்பதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:</p><h2>அரசாணை வெளியீடு</h2><p>நீண்ட காலமாக நிரந்தர முதல்வர்கள் இல்லாமல் தவித்து வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரு முக்கிய நிவாரணமாக, 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் நிலை கல்லூரி முதல்வர்களாகப் பதவி உயர்வு பெறுவதற்கான 129 இணைப் பேராசிரியர்கள் அடங்கிய பட்டியலுக்கு உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை ஜூலை21 அன்று வெளியிடப்பட்டது.</p><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாம் நிலை முதல்வர் பணியிடங்களுக்கான 129 காலி இடங்களை அரசு ஏற்கனவே நிர்ணயித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவுக்கு உட்பட்டே இந்தப் பட்டியல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கல்வி இயக்குநரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இப்பதவி உயர்வுக்கான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்தவர்கள், அது குறித்து முறையீடுகளைச் சமர்ப்பிக்க இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணை குறிப்பிடுகிறது.</p><h2>ஆகஸ்ட் மாத இறுதிக்குள்..</h2><p>நிரந்தர முதல்வர்கள் இல்லாமல் செயல்படும் அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பணி நியமன நடைமுறைகளைத் துறை நிறைவு செய்யும். இந்தப்பட்டியல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெளியிடப்பட்டதைத் </a>தொடர்ந்து, புதிய கல்வியாண்டு முழுவீச்சில் தொடங்குவதற்கு முன்னதாகவே, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த நியமன நடைமுறை வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>பட்டியல் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு மற்றும் பணி இடங்களுக்கான கலந்தாய்வு நடைமுறைகளை நாங்கள் மேற்கொள்வோம்; ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிரந்தர முதல்வர்களை நியமிக்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;நீட் வேண்டாம்: மாணவர்களின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது&quot; -  கனிமொழி எம்.பி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-to-neet-students-voices-echo-across-the-country-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-to-neet-students-voices-echo-across-the-country-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">bd408bac-0c0f-43b9-8d8c-90cdcfe8ea2e</guid><pubDate>Sat, 25 Jul 2026 11:27:43 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:27:43.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கனிமொழி எம்பி,MP Kanimozhi,நீட்,போராட்டம்protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q3khgz9h/80.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q3khgz9h/80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 6-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இதில் பல்வேறு மாணவர் அமைப்புகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், போராட்டக் களம் மேலும் வலுப்பெற்றுள்ளது.</p><h2>கனிமொழி </h2><p>இந்நிலையில், சென்னை பாலன் இல்லத்தில்  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D">நீட் தேர்வுக்கு</a> எதிராகப் போராடி வரும் மாணவர்களை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>ஒன்றிய அரசாங்கத்தை யாருமே எதிர்க்க முடியாது என்று நம்பிய ஒரு ஆட்சியை எதிர்த்துப்போராடிக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை இளைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றி, இந்த நாட்டுக்கே நீங்கள் அனைவரும் வழிகாட்டியாக மாறி உள்ளீர்கள். எந்த இடத்தில் போராட்டம் நடந்தாலும், அவர்களை ஒன்னும் பண்ண முடியாது, அவர்களை யாரும் அசைக்க முடியாது, அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. நாங்களே நாடாளுமன்றத்தில் பல நாட்கள் வெளியில் தூக்கி எறியப்பட்டிருப்போம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட வாசலில்  உட்கார்ந்து இருக்க வேண்டிய நிலைமை எல்லாம் சந்தித்துள்ளோம். </p><h2>போராட்டம்</h2><p>எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்திருக்கக்கூடிய ஒரு ஆட்சி இருக்கும் என்றால், அது  ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜகவின் ஆட்சிதான். நாங்கள் எல்லோரும் கேட்க முடியாதது, நாங்க எல்லோரும் செய்ய முடியாதது, அவர்களின் இடத்துக்கு போய் பார்க்க முடியாத சூழல் இருந்தது ஆனால் நேற்று டெல்லியிலே ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்களைப் பார்ப்பதற்காக பாஜக அரசு முன்வந்து பார்த்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அது உங்களுடைய மிகப்பெரிய வெற்றி. உங்கள் அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும், நீட் வேண்டாம் என்று முதன் முதலில் வந்த எதிர்ப்பு குரல் தமிழகத்திலிருந்து வந்த குரல்தான். நீட் இருக்கக்கூடாது என நீதிமன்றத்திற்குப் போனவர் நமது சகோதரி அனிதா என்ற மாணவி. அதன்படி நாம் ஆரம்பித்த போராட்டம், இன்றைக்கு நாடு முழுவதும் எதிரொலிக்க துவங்கி இருக்கிறது. மாணவர்கள் டெல்லியில் மட்டுமின்றி, நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலேயும் நீட்டுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். </p><h2>தலைசிறந்த மருத்துவர்கள்</h2><p>நாங்க படித்துவிட்டு செல்கிறோம், ஆனால் வினாத்தாள் வெளியாகிறது என்றால் நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை. இந்த தேர்வு அப்படின்னு போராடிக் கொண்டிருக்கக்கூடிய சூழலைத் தாண்டி, இங்கே பேசிய மாணவர் சொன்னது போல, நம்ம படிக்கிற பாடம் வேற, நம்ம பள்ளியில படிக்கக்கூடிய விஷயங்கள் வேற, நீங்க பரீட்சை வெச்சு எங்களை கேட்கிற கேள்விகள் வேறயாக உள்ளது. ஆனால் இதுவரைக்கும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பல நாடுகளில், பல பெரிய மருத்துவமனைகளில்  தமிழ்நாட்டிலிருந்து பயின்று சென்ற மருத்துவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மருத்துவர்கள் எல்லாரும் கொண்டாடக்கூடிய இடத்தில் இருக்காங்க. அவர்கள் எந்த நீட் தேர்வையும் எழுதி பாஸ் செய்து மருத்துவராகவில்லை. இன்றைக்கு நாடு முழுவதும் இருக்கக்கூடிய மிகச்சிறந்த, தலைசிறந்த மருத்துவர்கள் வந்து தமிழ்நாட்டிலிருந்து கல்வி பயின்றவர்கள். அவர்கள் யாரும் நீட்டெல்லாம் தாண்டி வரவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அப்போது மருத்துவத்துறை மீது ஆர்வம் இருந்தவர்கள் படித்தார்கள். </p><p>நீட் வருவதற்கு முன்பு யாருக்கெல்லாம் மருத்துவர்கள் ஆக வேண்டுமோ, மக்களைச் சந்திக்க வேண்டுமோ, உதவி செய்ய வேண்டுமோ, அவர்கள் ஆர்வத்துடன் படித்தார்கள். ஆனால் இப்போது யாருக்கெல்லாம் வசதி வாய்ப்பு இருக்கிறதோ, யாரெல்லாம் கோச்சிங் சென்டருக்குப் போக முடியுமோ, அவர்கள்மட்டும் இன்னைக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D">நீட் தேர்வில் தேர்ச்சி</a> பெற்று மருத்துவராக போகக்கூடிய ஒரு சூழலை இந்த நீட் தேர்வு முறை உருவாக்கியுள்ளது. அதனாலதான் தொடர்ந்து, நீட்டை தடை செய்யுங்கள், நீட் வேண்டாம் என்கிறோம்.</p><p>டெல்லியில் நடக்கக்கூடிய போராட்டத்துக்கும், நமக்கும் இருக்கக்கூடிய ஒரு சின்ன இடைவெளி அதுதான். நாம் நீட் தேர்வே வேண்டாம் என்கிறோம், அவர்கள் நீட் தேர்வை ஒழுங்கா நடத்துங்கள் என்கிறார்கள். நீட்டை நடத்தக்கூடிய அமைச்சரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். நேற்று வரைக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசாங்கம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, இன்றைக்கு மறுபடியும் வந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நிச்சயமாக வழிக்கு வருவார்கள் என்கிற நம்பிக்கை இங்கே இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் இருக்கிறது.</p><h2>ஆளுநர் கையெழுத்து</h2><p>தொடர்ந்து நீட்டை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். எப்பொழுதுமே தமிழ்நாடு ஹிந்தியை திணிக்காதீர்கள் என சொல்ல நினைத்தால் யாரும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். தமிழ்நாடு ஏதோ தனியாக பேசுவதாக எண்ணுவார்கள்.  சிறிது காலத்தில், தன்னுடைய மொழி தன்னிடம் இருந்து பறிக்கப்படும் பொழுது அதை உணர்ந்து கொண்டு ஹிந்தி வேண்டாம் என நாடு முழுவதும் நமது கருத்தை எதிரொலிக்கும். அதேபோல தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், இன்றைக்கு வரைக்கும் நீட் வேண்டாம் என்று நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபொழுது சட்டமன்றத்தில் இதற்காக சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அதனை ஏற்று ஆளுநர் கையெழுத்து போடவில்லை. நம் மாநிலத்தின் நலம் சார்ந்து எதை அனுப்பினாலும் கையெழுத்து போட மாட்டார்கள். அதன் பின் பெரிய போராட்டத்திற்குப் பிறகு கையெழுத்து போட்டு இப்போது டெல்லியில் தூங்குகிறது.</p><p>இந்தப் போராட்டத்திற்குப் பிறகாவது அங்கே இருக்கக்கூடியவர்கள், மாணவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D">நீட்</a> வேண்டாம் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.  அவ்வாறு உணரவில்லை என்றால் தமிழ்நாடு அதை உணர வைக்கும். டெல்லியில போராட கூடிய மாணவர்கள் தடியடியை எதிர்கொள்கிறார்கள். பெண்கள் பலபேர் இன்றைக்கு சோசியல் மீடியாவில் பேசும்போது பார்க்கிறோம். நாங்க சக போராட்டக்காரர்களுடன் இருக்கும்போது தான் பாதுகாப்பாக உணர்கிறோம். அங்கே இருக்கக்கூடிய காவல்துறையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. எங்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடிய ஒரு சூழல் உள்ளது என கூறுகிறார்கள்.  </p><p>மேலும், எங்களை பாதுகாக்க வேண்டியவர்களை பார்த்தால் எங்களுக்குப் பயமாக இருக்கிறது என்று அங்கே போராடக்கூடிய பெண்கள் சொல்லக்கூடிய ஒரு நிலை மிகவும் கவலை அளிக்கிறது. மாணவர்கள் எந்த அளவுக்குத் தாக்கப்பட்டார்கள் என்பதை நம்ம பார்த்தோம். ஆனால் அதையும் அசால்ட்டாக டீல் செய்யக்கூடிய மாணவர்களை நாம் அங்கு தான் சந்தித்தோம். நீங்கள் மாணவர்களை விரட்ட தண்ணீரை பாய்ச்சினால், அதில் நடனம் ஆடுகிறார்கள். அதனால் இந்த இளைஞர்கள் கூட்டத்தை யாராலும் வெற்றி பெற முடியாது.   அதை இன்று ஒன்றிய அரசாங்கம் உணர்ந்து இருக்கும். யாருக்காகவும் இறங்கி வரமாட்டோம், யாருடைய கோரிக்கைக்கும் செவி சாய்க்க மாட்டோம் என்ற மமதையில் இருந்த பாஜகவை இறங்கி வர வைத்ததே உங்களுடைய பெரிய வெற்றி எங்களுக்குக் காது கிடையாது என கூறிய ஒன்றிய அரசாங்கம்,  உங்களோடு பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய நிலைக்குக் கொண்டு வந்திருக்கக்கூடியதே பெரிய வெற்றி. அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.</p><p>இங்கே நிறைய கோரிக்கைகள் தற்போது இருக்கக்கூடிய ஆட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. மெரினாவைத் திறந்து விடுங்கள், போராட விடுங்கள். தமிழ்நாட்டிலும் நீட் வேண்டாம் என்று தொடர்ந்து போராடக்கூடிய சூழலில் மாணவர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள், மதுரையில் போராடிய மாணவர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். டெல்லியில் இருக்கிறோமா தமிழ்நாட்டுல இருக்கிறோமா என தெரியாத அளவிற்கு மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இங்க கைதுகள், அச்சுறுத்தல்கள், போராடுறதுக்கு இடம் இல்லாம இந்த இடத்துல எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் இங்கேயே போராட வேண்டும் என்ற நிலையுள்ளது.</p><h2>வாழ்த்துக்கள்</h2><p>அதனால் மாணவர்களுடைய நியாயமான போராட்டம், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலை எதிரொலிக்கக்கூடிய இந்தப் போராட்டத்திற்கு, அரசு துணை நிற்க வேண்டும். அதை இங்கே இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.</p><p>யார் உங்களோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் உங்களோடு நிற்போம். நீங்கள் இங்க போராடினாலும் நிற்போம், வேறு எந்த இடத்தில் போராடினாலும் உடன் நிற்போம். எந்த அச்சுறுத்தல் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகமும், நானும் உங்களோடு எப்பொழுதும் நிற்போம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இங்கே போராடிக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை இளைஞர்களுக்கு, இளம் பெண்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும் என்றார்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் ராஜினாமா: &apos;இந்திய இளைஞர்களின் மகத்தான வெற்றி!&apos;  - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhan-resignation-great-victory-of-indian-youth-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhan-resignation-great-victory-of-indian-youth-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">b1ae1319-e748-4d5f-b90e-7e8504277876</guid><pubDate>Sat, 25 Jul 2026 11:05:30 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:05:30.718Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,காங்கிரஸ்,Congress,NEET Exam,மாணிக்கம் தாகூர்,தர்மேந்திர பிரதான்,NEET,மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்,Manickam Tagore MP,தமிழ்நாடு காங்கிரஸ்,மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்,டெல்லி போராட்டம்,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,tamilnadu congress,delhi protest,Neet Protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/e9g9dxli/Untitled-5.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/e9g9dxli/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மக்களின் வெற்றி</h2><p>உங்கள் எழுச்சியும், உறுதியும், போராட்டமும் தான் திறமையற்ற, ஊழல் கறைபடிந்த, பொறுப்பற்ற மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளது!. இது இந்திய மக்களின் வெற்றி. கல்வி அமைப்பில் பொறுப்புணர்வையும், நீதி நிலைநாட்டலையும் கோரி போராடிய ஒவ்வொருவரின் வெற்றி.</p><p>நீட் வினாத்தாள் கசிவு வெளிச்சத்துக்கு வந்த முதல் நாளிலிருந்தே, இந்திய தேசிய காங்கிரஸும், குறிப்பாக மாணவர்களின் குரலாக இடைவிடாது போராடிய ராகுல் காந்தியும், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு, பொறுப்புக்கூறலைக் கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.</p><h2>மன்னிப்பு கேட்க வேண்டும்</h2><p>ஆனால், எங்கள் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமைதியான முறையில் தங்கள் உரிமைக்காக போராடிய மாணவர்கள் சந்தித்த கொடுமைகளுக்காக பிரதமர் நாட்டின் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>அதையும் தாண்டி, கல்வித் துறையில் அடிப்படை சீர்திருத்தங்கள் நடைபெறும் வரை, மாணவர்களுக்கு நீதியும் சமத்துவமும் கிடைக்கும் வரை, அவர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற அழுத்தங்கள் குறைக்கப்படும் வரை, கல்வித் தரம் உயர்த்தப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.</p><h2>வீர வணக்கம்!</h2><p>இந்த அரசை தலைகுனிய வைத்த இந்தியாவின் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு எனது வீர வணக்கம்!</p><p>இந்தப் போராட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை மாணவர்களின் உண்மையான, உறுதியான, அசைக்க முடியாத குரலாக இருந்த மக்கள் தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ராகுல் காந்திக்கும்</a> எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்-அமைச்சர் கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-should-drop-decision-to-go-to-karnataka-for-talks-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-should-drop-decision-to-go-to-karnataka-for-talks-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">ff2b5517-f8ae-499e-bdde-7c55d333e11a</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:57:12 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:57:12.730Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Meeting,கர்நாடகம்,முதல்-அமைச்சர்Chief Minister,மு.க.ஸ்டாலின் MK Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/3v6w9g9c/79.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/3v6w9g9c/79.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை.</p><p>நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.</p><h2>கர்நாடகம் செல்லும் முடிவை கைவிட வேண்டும்</h2><p>கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக்கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல். அனைத்து கட்சிக்கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதல்-அமைச்சர் விஜய் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!<br><br>நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை… <a href="https://t.co/0hSlApqHU0">pic.twitter.com/0hSlApqHU0</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2080964180614828359?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் விட்ட மு.க.அழகிரி மகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-alagiris-daughter-slapped-the-bank-manager-on-the-cheek</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-alagiris-daughter-slapped-the-bank-manager-on-the-cheek#comments</comments><guid isPermaLink="false">b8f01e81-47c8-4d52-8787-93dea6329428</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:52:02 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:52:02.531Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,SBI,எஸ்.பி.ஐ,மு.க.அழகிரி,கயல்விழி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q2tb5srh/kayalvizi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/q2tb5srh/kayalvizi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் </p><p>அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி, தி.மு.க.,வில் தென்மண்டல அமைப்பு செயலராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதால், கட்சி பணிகளில் இருந்து, அவர் ஒதுங்கி இருக்கிறார்.</p><p>சமீபத்திய சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்து, த.வெ.க., ஆட்சி அமைந்துள்ளது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற விஜய்க்கு, அழகிரியின் மகள் கயல்விழி, ஏற்கனவே வாழ்த்து தெரிவித்து இருந்தார்.</p><p>சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் விஜயை, கயல்விழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.</p><p>இந்தநிலையில் கயல்விழிக்கு அடையாறில் சொந்தமாக ஒரு கட்டிட வளாகம் உள்ளது. இதில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது.   எஸ்.பி.ஐ வங்கி செயல்படும் கட்டிடத்தின் லிப்ட் செயல்படாததாதால் உரிமையாளரான கயல்விழியிடம் புகார் அளித்துள்ளனர். </p><p>இந்தநிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அப்போது </p><p>கயல்விழி கோபமாக பேசுவதை வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு  ஆசுவாசுமாக கேட்டிருந்ததால்  நான் பேசும் போது கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாயா என கூறி ஆவேசமாக கன்னத்தில் பளார் என்று விட்டார். உடன் கயல்விழியுடன் இருந்தவர் எழுந்து அவரை சமாதானம் செய்துள்ளார். </p><p>இந்த சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் என அறைந்த கயல்விழி மீது காவல் நிலையத்தில்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-cm-vijay-wishes-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-cm-vijay-wishes-him#comments</comments><guid isPermaLink="false">2250cf1f-1635-4e34-9dfc-25a54bb27835</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:10:20 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:10:20.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பா.ம.க,வாழ்த்து,பாமக நிறுவனர் ராமதாஸ்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ma8ezuq0/77.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ma8ezuq0/77.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து,  தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வாழ்த்துகள்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.<br><br>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> <a href="https://x.com/drramadoss?ref_src=twsrc%5Etfw">@drramadoss</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2080955969237135772?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டு சிறை: கோர்ட் அதிரடி தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-involved-in-robbery-sentenced-to-7-years-in-prison-courts-dramatic-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-involved-in-robbery-sentenced-to-7-years-in-prison-courts-dramatic-verdict#comments</comments><guid isPermaLink="false">c86b1acd-d6c5-40d9-92d0-8d1c538da0bb</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:00:31 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:00:31.295Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,கைது,arrest,கொள்ளை,robbery case,thiruvanamalai,கோர்ட் உத்தரவு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2tvjy9x4/21.jpg" width="753"><media:title type="html"><![CDATA[  குற்றவாளி பிரேம்குமார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேம்குமாருக்கு 7 ஆண்டு சிறை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2tvjy9x4/21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவண்ணாமலை</a> நகரில் வசித்து வரும் தனியார் பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர், பணி முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டினார். </p><h2>தங்கச் சங்கிலி கொள்ளை</h2><p>மேலும், அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><h2>குற்றவாளி கைது</h2><p>போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், வழிப்பறியில் ஈடுபட்டது திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரேம்குமார் (வயது 35) என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாகக்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது </a>செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்யதனர்.</p><h2>கோர்ட் உத்தரவு</h2><p>இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் விசாரணை செய்யப்பட்டு, பிரேம்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.</p><p>இதனைத் தொடர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்ட பிரேம்குமாருக்கு 7 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி இன்று (சனிக்கிழமை) தீர்ப்பளித்தார். அந்த அதிரடி தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-phase-2-expansion-work-intensifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-phase-2-expansion-work-intensifies#comments</comments><guid isPermaLink="false">2ea031e8-6cc0-4ea9-bd63-30c5eeb7182b</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:41:20 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:41:20.824Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai Airport,விமான நிலையம்,Infrastructure,உள்கட்டமைப்பு,பணிwork</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hi9z4t5e/76.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/hi9z4t5e/76.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் 2023-ல் நிறைவடைந்து, ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகளை கையாளும் புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது 2-ம் கட்டமாக, ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. </p><h2>சென்னை விமான நிலையம்</h2><p>இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி முரளிதர மகாலி, கடந்த 5 ஆண்டுகளில் சென்னை விமான நிலைய உள்கட்டமைப்புக்காக ரூ.236.75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>மேலும், 2022-23 முதல் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை விமான நிலையம்</a> தொடர்ந்து நாட்டின் 5-வது பரபரப்பான விமான நிலையமாக இருப்பதாகவும், விமான நேர ஒதுக்கீட்டில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்றும் அவர் கூறினார்.</p><p>அதேபோல், திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 கோடியில் கட்டப்படும் புதிய ஏ.டி.சி. கோபுரப் பணிகள் 76 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், கோவை விமான நிலையத்தில் ரூ.51 கோடியில் எல்லைச் சுவர் மற்றும் ரூ.14 கோடியில் முனையக் கட்டிட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் ராமதாஸ் 37 ஆண்டுகள் கடந்து வந்த அரசியல் பாதை: சற்று பின்நோக்கி பார்ப்போமா?</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/dr-ramadosss-political-journey-spanning-37-years-shall-we-take-a-look-back</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/dr-ramadosss-political-journey-spanning-37-years-shall-we-take-a-look-back#comments</comments><guid isPermaLink="false">0a711b7a-8d46-40e3-83d0-03d8fb48896a</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:26:02 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:26:02.161Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,ராமதாஸ்,பாமக,Ramadoss,PMK,தமிழகம்,டாக்டர் ராமதாஸ்,Dr Ramadoss,Pattali Makkal Katchi,பாட்டாளி மக்கள் கட்சி,DrRAMADOSS,Doctor Ramadoss,தமிழக அரசியல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/r4w5e6z3/aathier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/r4w5e6z3/aathier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>சிறப்பு செய்திகள்</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தனது 88-வது பிறந்த நாளை இன்று கொண்டாடிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் <a href="https://www.dailythanthi.com/topic/drramadoss">ராமதாஸ்</a>, அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நேரத்தில், அவர் கடந்து வந்த 37 ஆண்டு கால அரசியல் பாதையை சற்று பின்நோக்கி பார்ப்போம். </p><h2>கீழ்சிவிரி கிராமம்</h2><p>பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 1939-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி, விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கிய அவர், 1959-1965-ம் ஆண்டு காலத்தில், சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை மேற்கொண்டார். பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்ட அவர், உறவினர்கள், ஆசிரியர்களின் உதவியுடனேயே மருத்துவம் படித்து முடித்தார்.</p><h2>3 ரூபாய் டாக்டர்</h2><p>1965-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் ராமதாஸ் மருத்துவராக பணிபுரிந்தார். பின்னர், தனியாக ஆஸ்பத்திரி தொடங்கிய அவர் 3 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்தார். இதனால், அவரை 3 ரூபாய் டாக்டர் என்றே மக்கள் அழைத்தனர். </p><p>தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் ஏழை நோயாளிகள், பணம் இல்லை என்று கூறினால், இலவசமாகவே மருத்துவம் பார்த்து மருந்து, மாத்திரைகள் கொடுத்து அனுப்பினார். 10 ஆண்டுகளுக்கு பிறகே 5 ரூபாயாக சிகிச்சை கட்டணத்தை உயர்த்தினார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/n6irkw1t/ayya.jpg" /></figure><h2>வன்னியர் இடஒதுக்கீடு</h2><p>திண்டிவனம் வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், அவர்களுக்கு டாக்டராக சிகிச்சை அளித்தபோதே, கல்வி-வேலை வாய்ப்பில் அவர்கள் பின்தங்கியிருப்பதை உணர்ந்தார். இதனால், 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கத்தை டாக்டர் ராமதாஸ் தொடங்கினார். அன்று முதல், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து போராடத் தொடங்கினார். </p><p>1987-ம் ஆண்டு வன்னியர்கள் இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்தது. அந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியானார்கள். அப்போது, முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை டாக்டர் ராமதாஸ் சந்தித்து, வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தார். மேலும், பல தலைவர்களிடமும் இதே கோரிக்கையை முன்வைத்தபோதும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. </p> <h2>பா.ம.க. தொடக்கம்</h2><p>1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, வன்னியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார். இது டாக்டர் ராமதாசின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது. வன்னியர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கையும் பெற்றுத்தந்தது. </p><p>அதனைத் தொடர்ந்து, 1989-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி பா.ம.க.வை டாக்டர் ராமதாஸ் தொடங்கினார். கட்சியின் பொதுச் செயலாளராக பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர்தான் வர முடியும் என்று கொள்கையை வகுத்தார். இளைஞரணி தலைவர் பொறுப்பிலும் இஸ்லாமியரையே வைத்தார்.</p><h2>வாக்கு வங்கி</h2><p>1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முதன் முதலாக பா.ம.க. எதிர்கொண்டது. 199 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த பா.ம.க., 116 இடங்களில் போட்டியிட்டு, அதில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. என்றாலும், 6 சதவீதம் அளவுக்கு வாக்கு வங்கியை வைத்திருந்தது. </p><p>1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிட்டது. 5 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்றது. மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தது. பட்டியலின சமூகத்தை சேர்ந்த தலித் எழில்மலை மந்திரியானார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ux1inosc/dmk.jpg" /></figure><p>1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க., 7 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது. </p><p>2004 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. 6 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றது. மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக டாக்டர் அன்புமணி பதவி வகித்தார். </p><h2>தி.மு.க. கூட்டணி</h2><p>2006 சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த பா.ம.க., தமிழகத்தில் 6, புதுச்சேரியில் 1 இடம் என 7 இடங்களில் போட்டியிட்டும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. </p><p>2011 சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. 30 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்ற நிலையில், 8 இடங்களில் போட்டியிட்டு தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் மட்டும் வெற்றி பெற்றார். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/71vhsq9e/karape.jpg" /></figure><h2>அ.தி.மு.க. கூட்டணி</h2><p>2016 சட்டசபை தேர்தலின்போது, "இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை.  தனியாக ஆட்சி அமைப்பதே இலக்கு" என்று, "மாற்றம்.. முன்னேற்றம்.. அன்புமணி" என்ற முழக்கத்துடன் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெற்றி பெற முடியவில்லை. முதல்-அமைச்சர் வேட்பாளரான அன்புமணி ராமதாசே தோல்வியடைந்தார். </p><p>2019 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க., 7 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. 2021 சட்டசபை தேர்தலில், அதே அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்த பா.ம.க., 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/j4az4t5q/modi.jpg" /></figure><h2>சமச்சீர் கல்வி</h2><p>2012-2014 காலக்கட்டத்தில் டாக்டர் ராமதாஸ் உருவாக்கிய அனைத்து சமுதாய பேரமைப்பு மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்தது. அவருக்கு கெட்டப் பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தது.  </p><p>தேர்தலை தாண்டி, பா.ம.க.வின் சாதனை என்று பார்த்தால், தமிழகத்தில் அதிகமான அம்பேத்கர் சிலைகளை திறந்தது, மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களை நடத்தியது, சமச்சீர் கல்வி அமல்படுத்த காரணமாக இருந்தது ஆகியவற்றை சொல்லலாம். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/k4k361og/kier.jpg" /></figure><h2>மகன் அன்புமணி இடையே பிரச்சினை</h2><p>மக்களுக்கான பிரச்சினைகள், ஆட்சியாளர்களின் நடவடிக்கை குறித்து உடனுக்குடன் அறிக்கை வெளியிட்டு சுட்டிக்காட்டிய டாக்டர் ராமதாஸ், பா.ம.க. சார்பில் 2002-ம் ஆண்டு முதல் நிழல் பட்ஜெட்டையும், 2008-ம் ஆண்டு முதல் வேளாண் நிழல் பட்ஜெட்டையும் வெளியிட்டு வருகிறார். </p><p>சட்டசபை தேர்தலுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே பிரச்சினை ஏற்பட்ட போதிலும், தேர்தலுக்கு பிறகு அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இனி டாக்டர் அன்புமணியை கட்சியை நடத்துவார் என்று டாக்டர் ராமதாசே கூறிவிட்டார். </p><p>ஆனாலும், தனது 37 ஆண்டு கால அரசியல் வாழ்வில், கடைசி வரை, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/drramadoss">டாக்டர் ராமதாஸ்</a> மாறவே இல்லை.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/4pmtownk/image.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>தலைமை செயலகத்தில் புதிய இடத்திற்கு மாறும் முதல்-அமைச்சரின் அலுவலகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-office-will-move-to-a-new-location-in-the-secretariat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-office-will-move-to-a-new-location-in-the-secretariat#comments</comments><guid isPermaLink="false">5744ce98-de71-4d3a-aa54-84647aeb6d5e</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:08:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:08:34.941Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,அலுவலகம்,tngovt,CMVijay,தலைமைசெயலகம்,CMO</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/8xon49gp/vijay33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சரின் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/8xon49gp/vijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில், புதிய இடத்திற்கு முதல்-அமைச்சர் விஜயின் அலுவலகம் மாறுகிறது</p><p>சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில்தான் முதல்-அமைச்சரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இட நெருக்கடி காரணமாக, முதல்-அமைச்சரின் அலுவலகம் இட மாற்றம் செய்யப்படவுள்ளது.</p><p>தற்போது, தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில் இயங்கி வரும் முதல்-அமைச்சர் அலுவலக அறையை, அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி காரணமாகவும், பொது மக்களின் வருகை அதிகரிப்பைக் கருத்தில்கொண்டும் முதல்-அமைச்சரின் அலுவலக அறையை இட மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, 10 அடுக்குமாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் விஜய்யின் அலுவலக அறை, அவரது செயலாளர்கள் 4 பேரின் அறைகள் அனைத்தும் 10-ஆவது மாடியில் அமைய விருக்கிறது. இந்தத் தளத்திலிருந்து கடலின் அழகை ரசிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளது.</p><p>நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்தில் பெரிய மாநாடு கூடம் மற்றும் உணவகப் பகுதியை முதல்-அமைச்சரின் அலுவலகமாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.</p><p>முதல்-அமைச்சரின் அலுவலக அறை மாற்றப்படும் இந்தத் தளத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, வணிக வரித் துறையின் சில பிரிவுகளும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளன. ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் முதல்-அமைச்சரின் அலுவலக அறை இட மாற்றம் முடிவடைந்து விடும் எனக் கூறப்படுகிறது.</p><p>தமிழக முதல்-அமைச்சர்களிலேயே பாரம்பரிய அலுவலகக் கட்டடத்திலிருந்து புதிய இடத்துக்கு அலுவலகத்தை மாற்றும் முதல் <a href="https://www.dailythanthi.com/search?q=vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-mk-stalin-wishes-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-mk-stalin-wishes-him#comments</comments><guid isPermaLink="false">82d6561d-7ae7-42db-8fc7-2098e1705186</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:03:55 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:03:55.370Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமதாஸ்,சென்னை,பா.ம.க,PMK.,Doctor Ramadoss,மு.க.ஸ்டாலின் MK Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xdwxkv9r/75.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xdwxkv9r/75.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின் </a>வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வாழ்த்துகள்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து, முக்கியக் குரலாக ஒலித்து வந்த தாங்கள் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், தங்களது ஓய்வுக்காலம் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் திகழ்ந்திட விழைகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய போராட்டம் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்கிறது’ - கனிமொழி எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-protest-against-the-neet-exam-that-began-in-tamil-nadu-is-now-resonating-across-the-country-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-protest-against-the-neet-exam-that-began-in-tamil-nadu-is-now-resonating-across-the-country-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">5cbe9b70-e106-46f9-bd49-919d1d5dca86</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:41:41 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:41:41.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,நீட் தேர்வு,NEET</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1qnjjz6s/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1qnjjz6s/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இதற்கிடையில், கடந்த 20-ந்தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது.</p><p>போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. </p><p>டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதலை கண்டித்தும், நீட் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர் தற்போது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சென்னை தியாகராய நகரில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இந்த போராட்டத்திற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களாகிய நாங்களே பல நாட்கள் தூக்கி வெளியே எறியப்பட்டுள்ளோம். எதிர்க்கட்சிகளில் இருக்கும் அத்தனை எம்.பி.க்களையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசுதான் மத்திய பா.ஜ.க. அரசு. </p><p>ஆனால் எங்களால் கூட செய்ய முடியாததை, மாணவர்கள் செய்துள்ளனர். டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களை பார்த்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசே முன்வந்துள்ளது. இது மாணவர்களின் மிகப்பெரிய வெற்றி. </p><p>நீட் தேர்வுக்கு எதிராக வந்த முதல் குரல், தமிழ்நாட்டில் இருந்து வந்ததுதான். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய போராட்டம் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. நாடு முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் மட்டும் முறைகேடு நடக்கவில்லை, நீட் தேர்வே முறைகேடுதான்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>தேனியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகை-பணம் திருட்டு; வானதி சீனிவாசன் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-old-woman-was-murdered-in-theni-and-jewellery-and-money-were-stolen-vanathi-srinivasan-is-in-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-old-woman-was-murdered-in-theni-and-jewellery-and-money-were-stolen-vanathi-srinivasan-is-in-anguish#comments</comments><guid isPermaLink="false">42ba500b-5654-44da-9eda-a4765c81a598</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:33:57 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:33:57.307Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Theni,தேனி,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,தேனி மாவட்டம்,THENI DISTRICT</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ndosxgus/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ndosxgus/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மூத்தாட்டி கொலை</h2><p>தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் இன்று அதிகாலை 60 வயது பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.</p><p>முந்தைய திமுக ஆட்சியில்கூட தனியாக வீட்டில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்தன. ஆனால் தற்போதைய தவெக ஆட்சியிலோ குற்றச் சம்பவங்கள் ஒருபடி மேலே சென்று தனியாக வசிக்கும் முதியவர்களை கொலை செய்து பணம், நகைகளைத் திருடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.</p><h2>குற்றங்கள் பெருகி வருவதே நிஜம்</h2><p>தவெக ஆட்சி சிறப்பாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தபோதும், மாற்றாக தொடர்ந்து குற்றங்கள் பெருகி வருவதே நிஜம். பொதுவாக சிங்கங்கள் அதிக நேரம் தூங்கும் இயல்புடையவை; பசித்தால் மட்டுமே இரை தேடும். அதுபோலத்தான் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆரம்பித்து வைத்த சிங்கப் பெண் படையும் கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது போலும். கணக்கு காட்ட வேண்டுமே என்பதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக வழக்குகளைப் பதிந்து “நாங்களும் இருக்கிறோம்” என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காட்டிக்கொள்ளும் </a>அளவில்தான் அவர்களின் செயல்பாடு உள்ளதாகத் தெரிகிறது.</p><p>எனவே சிங்கப் பெண் படையை முழுவீச்சில் களமிறக்கி, சுறுசுறுப்புடன் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்து குற்றங்களைத் தடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘கோவில் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளை அனுமதிக்க கூடாது’ - அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempts-to-usurp-temple-properties-must-not-be-allowed-hrce-minister-ramesh-orders-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempts-to-usurp-temple-properties-must-not-be-allowed-hrce-minister-ramesh-orders-officials#comments</comments><guid isPermaLink="false">7e95d20c-cc29-4922-b76c-7231d40bdcb0</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:27:01 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:27:01.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1m2qxo7d/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/1m2qxo7d/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களின் நிர்வாகம், கோவில் சொத்துகள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-</p><p>“கோவில்களில் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். கோவில் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளை அனுமதிக்க கூடாது. கோவில் நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்ய வேண்டும். </p><p>மேலும் இதுகுறித்து அமைச்சர், ஆணையரின் கவனத்திற்கு அதிகாரிகள் உடனடியாக கொண்டு வர வேண்டும். கோவில்களில் பக்தர்கள் சீரான தரிசனத்தை உறுதி செய்ய வேண்டும். அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கல்லூரி அருகே கஞ்சா விற்ற 2 வடமாநில தொழிலாளர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-northern-state-workers-arrested-for-selling-ganja-near-college</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-northern-state-workers-arrested-for-selling-ganja-near-college#comments</comments><guid isPermaLink="false">812fc002-37ac-4204-b5b0-5b133fb282bd</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:26:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:26:40.547Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,2 arrested,2 பேர் கைது,sale of ganja,கஞ்சா விற்பனை,வடமாநில தொழிலாளர்கள்,Northern State workers,Private College,தனியார் கல்லூரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/smvd6fgi/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா விற்பனை, கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/smvd6fgi/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகம், மருதகுளம் அருகே தனியார் கல்லூரி பகுதியில் 130 கிராம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்த போலீசார் 2 வடமாநில தொழிலாளர்களை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>போலீசார் சோதனை</h2><p>திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மருதகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரி பகுதியில் 23.7.2026 அன்று மதியம் 1.30 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான ஸ்ரவன்பஸ்வான் (வயது 37), ஷேக்சமீர்(26) ஆகிய 2 பேரை சோதனை செய்தனர்.</p><h2>வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது, கஞ்சா பறிமுதல்</h2><p>அப்போது அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 130 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அவர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மூன்றடைப்பு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ஸ்ரவன்பஸ்வான், ஷேக்சமீர் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் கார் டயர் வெடித்து விபத்து - இருவர் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-killed-in-accident-caused-by-a-burst-car-tyre-on-the-virudhunagar-thirumangalam-four-lane-highway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-killed-in-accident-caused-by-a-burst-car-tyre-on-the-virudhunagar-thirumangalam-four-lane-highway#comments</comments><guid isPermaLink="false">8e47060f-28b8-49a2-9498-40d8b6f968cd</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:16:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:16:45.950Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Madurai,மதுரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/lpefvkx2/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/lpefvkx2/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் திருமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்கள் காரில் மற்றொரு நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு, திருமங்கலம் திரும்பியுள்ளனர். அவர்கள் விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, காரின் முன் பக்க டயர் வெடித்ததில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழுந்துள்ளது.</p> <p>இதில் மின்வாரிய ஊழியர் பாரதிராஜா, ஐ.டி. ஊழியர் சரண் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். </p>]]></content:encoded></item><item><title>குடும்ப தகராறில் விஷ மாத்திரை சாப்பிட்டவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-dies-after-consuming-poison-pill-in-family-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-dies-after-consuming-poison-pill-in-family-dispute#comments</comments><guid isPermaLink="false">509a18f5-baf7-4bcb-8f00-1ee6a4fd32b6</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:14:41 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:14:41.708Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Family dispute,குடும்ப தகராறு,Death,உயிரிழப்பு,Eaten,விஷ மாத்திரை,சாப்பிட்டு,poison pill</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/fprbz54r/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஷ மாத்திரை சாப்பிட்டவர் உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/fprbz54r/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88">விஷ மாத்திரை</a>யை சாப்பிட்ட நபர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">உயிரிழந்தார்</a>.</p><h2>குடும்ப தகராறில் விஷ மாத்திரை சாப்பிட்டவர்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (வயது 42). மனைவியுடன் ஏற்பட்ட <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">குடும்ப தகராறு </a>காரணமாக மன உளைச்சலில் இருந்த சுரேஷ், கடந்த 20-ம் தேதி பன்றிக்கு வைக்கும் விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.</p><h2>உயிரிழப்பு</h2><p>அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சி கிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு மாற்று விடுப்பு கோரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-union-demands-alternative-leave-for-census-work</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-union-demands-alternative-leave-for-census-work#comments</comments><guid isPermaLink="false">33e2d0fc-93f2-47f5-8813-090b098550e8</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:56:55 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:56:55.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,ஆசிரியர் சங்கம்,school teacher,Union</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/rze0emju/74.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/rze0emju/74.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி</p><p>2027 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20">மக்கள்தொகை கணக்கெடுப்பு</a> பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகையாக 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை. பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் தலைவர் மலைக்கொழுந்தன் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக அரசு ஆசிரியர்கள் பயிற்சி ' மற்றும் களப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணியானது பள்ளி நேரத்திற்கு அப்பாலும், விடுமுறை நாட்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.</p><h2>20 நாட்கள் மாற்று விடுப்பு</h2><p>இதனால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், உடல், மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஆசிரியர்கள் கல்விப் பணியையும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியையும் ஒரே நேரத்தில் சிறப்பாக மேற்கொண்டு வருவதால், அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் உரிய நலச்சலுகைகள் வழங்கப்படுவது அவசியமாகும். எனவே 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு சலுகையாக 20 நாட்கள் மாற்று விடுப்பு வழங்கிட வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/light-to-moderate-rain-possible-in-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/light-to-moderate-rain-possible-in-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">b9282b7d-b5e7-4dc7-839a-d16e7995c2f3</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:56:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:56:34.137Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/08m7kyd7/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/08m7kyd7/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>25-07-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>26-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>27-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>25-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><p><strong>26-07-2026 முதல் 29-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>25-07-2026:</strong> அதிகபட்ச வெப்பநிலை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.</p><p><strong>26-07-2026 முதல் 29-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘நீட் தேர்வு கூடாது என்பதற்கான அவசியம் இந்தியாவில் தற்போது அதிகமாக உணரப்படுகிறது’ - ஜி.கே.வாசன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-need-to-oppose-the-neet-exam-is-being-strongly-felt-in-india-right-now-gk-vasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-need-to-oppose-the-neet-exam-is-being-strongly-felt-in-india-right-now-gk-vasan#comments</comments><guid isPermaLink="false">7d4101bf-8c9d-4fe2-ae21-a9d572728837</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:48:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:48:53.054Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>G.K.Vasan,ஜி.கே.வாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/m4ppbil4/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/m4ppbil4/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“இன்று நாட்டில் நடக்கும் மாணவர் பிரச்சினைகள், தேர்வு சம்பந்தமான பிரச்சனைகள், குறிப்பாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து தேர்வு ரத்தானதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், இதையெல்லாம் பார்க்கும்போது நீட் தேர்வு கூடாது என்பதற்கான அவசியம் இந்தியாவில் தற்போது அதிக அளவில் உணரப்படுகிறது.</p><p>இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நீட் தேர்வு வேண்டும் என்று சொல்பவர்கள் கூட, நீட் தேர்வு வேண்டாம் என்று யோசிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களுடைய பிரச்சனைகளை மத்திய அரசு பொறுப்போடு அணுகவில்லை என்பதுதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கருத்து. </p><p>குறிப்பாக மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை மத்திய அரசின் பொறுப்பற்ற செயலாகவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. எதிர்கட்சிகளின் தலைவர்கள் மாணவர்களுக்காக போராட்டம் நடத்தும்போது அவர்களை கைது செய்வதெல்லாம் அச்சுறுத்துவது போல இருக்கிறது.</p><p>மாணவர்களிடம் காவல்துறையினர் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்பதற்கு பத்திரிகை செய்திகளும், தொலைக்காட்சி செய்திகளும் சான்றாக உள்ளன.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு கல்லூரி மாணவிக்கு மிரட்டல்: ஓட்டுநர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-arrested-for-threatening-college-student-by-opening-cooking-gas-cylinder</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-arrested-for-threatening-college-student-by-opening-cooking-gas-cylinder#comments</comments><guid isPermaLink="false">21b1b1e0-fd7c-4512-8a90-1a2dde6dbcec</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:36:58 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:36:58.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,College student,கல்லூரி மாணவி,Thoothukudi,தூத்துக்குடி,Threat,மிரட்டல்,Kayalpattinam,காயல்பட்டினம்,assault,சமையல் எரிவாயு சிலிண்டர்,driver arrested,cooking gas cylinder,ஓட்டுநர் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7ms4bswv/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு மிரட்டல்; கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7ms4bswv/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">கல்லூரி மாணவி</a>யை அவதூறாக பேசி தாக்கியதுடன், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">சமையல் எரிவாயு சிலிண்டரை</a> திறந்து விட்டு அச்சுறுத்திய தாயின் 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர். </p><h2>2-வது திருமணம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சேர்ந்த ஒரு மாணவி தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது தந்தை இறந்துவிட்டதால், தாய் கைபயார் என்பவர் குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த ஓட்டுநரான முகம்மது அபுபக்கர் சித்திக் (34) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். </p><h2>கல்லூரி மாணவியை தாக்கிய ஓட்டுநர்</h2><p>முகம்மது அபுபக்கர் சித்திக் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியையும், அவரது மகளையும் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கைபயார் தனது மகளுக்கு புதிதாக செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதையறிந்த முகம்மது அபுபக்கர் சித்திக் ஆத்திரமடைந்து, மாணவியை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். </p><h2>சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு மிரட்டல்</h2><p>மேலும் ஆத்திரத்தின் உச்சத்தில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு 2 பேரையும் மிரட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாயும், மகளும் அலறி சத்தமிட்டனர். இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, முகம்மது அபுபக்கர் சித்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். </p><h2>கைது, சிறையில் அடைப்பு</h2><p>இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த முகம்மது அபுபக்கர் சித்திக்கைக் காவல்துறையினர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>கூடலூரில் வீட்டின் முன் உலா வந்த சிறுத்தை - சி.சி.டி.வி.யில் பதிவான காட்சியால் மக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-wanders-in-front-of-a-house-in-gudalur-residents-alarmed-by-cctv-footage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-wanders-in-front-of-a-house-in-gudalur-residents-alarmed-by-cctv-footage#comments</comments><guid isPermaLink="false">4f93b46b-6210-4fe9-8abb-84cfd3407cc2</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:29:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:29:53.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>leopard,சிறுத்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/109594jw/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/109594jw/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில், நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சிகள் அப்பகுதிகள் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>கடந்த சில நாட்களாகவே அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வனத்துறையினர் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி பக்தர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotee-dies-stuck-in-idukku-pillaiyar-temple-cave</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotee-dies-stuck-in-idukku-pillaiyar-temple-cave#comments</comments><guid isPermaLink="false">4ac8c4cd-d7d1-4f29-a246-b9b25d631afd</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:19:22 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:19:22.244Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,பக்தர்,devotee,கிரிவலப் பாதை,மூச்சு திணறல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/uiw2tqsm/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/uiw2tqsm/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர்.</p><p>பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (36 வயது) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்த மணிக்குமார், குகை  வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார்.</p><p>உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் போராடி அவரை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><p>இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் நுழைந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;இனி அரசியல் பேச மாட்டேன்.. தலையிட மாட்டேன்&quot; - ராமதாஸ் அதிரடி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-not-talk-about-politics-from-today-i-will-not-interfere-ramadoss-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-not-talk-about-politics-from-today-i-will-not-interfere-ramadoss-announced#comments</comments><guid isPermaLink="false">fc0b61ad-6d1d-4b9c-90b7-b1ef1b041467</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:10:45 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:10:45.689Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமதாஸ்,பாமக,Ramadoss,PMK,அரசியல்,politics</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/5ymv32pc/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/5ymv32pc/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Breaking-News</category><content:encoded><![CDATA[ <p>திண்டிவனம்,</p><p> 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். </p><h2>88-வது பிறந்தநாள்</h2><p>பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராமதாசின் பிறந்தநாளையொட்டி, பாமக தலைவரும், ராமதாசின் மகனுமான அன்புமணி ராமதாஸ், திண்டிவனத்தில் உள்ள தைலப்புரம் தோட்டத்துக்கு வருகை தந்து தந்தையை சந்தித்து ஆசி பெற்றார். </p><p>இதன் பின்னர் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் ராமதாஸ் பேசினார். அப்போது, அரசியலில் இருந்து விலகுவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு;</p><h2>அரசியலில் இருந்து விலகுறேன்..</h2><p>”எனது 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், இன்று முதல் அரசியல் பேச மாட்டேன். அரசியலில் தலையிட மாட்டேன். இனி அரசியலை அன்புமணி பார்த்துக் கொள்வார். என்னை காண வரும் அனைவரையும் பார்ப்பேன். வருபவர்கள் என்னிடம் நலம் விசாரிக்கலாம். நானும் நலம் விசாரிப்பேன். அரசியல் பேச வேண்டாம். என்னை இனி தொந்தரவு செய்ய வேண்டாம்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>  ]]></content:encoded></item><item><title>சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-chennai-central-gummidipundi-electric-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-chennai-central-gummidipundi-electric-train-service#comments</comments><guid isPermaLink="false">136ebcff-ef12-4fd7-8d9e-b9a01ebd01dd</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:01:04 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:01:04.651Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,electric train,மின்சார ரெயில்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/wn8nyg14/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/wn8nyg14/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சென்ட்ரல்- கூடூர் பிரிவில் கும்மிடிப்பூண்டி யார்டில் நேற்று முதல் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் இன்றும், நாளையும் நடக்கிறது. இதையொட்டி கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><h2>மின்சார ரெயில் ரத்து</h2><p>இரவு 9.45 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது. இரவு 11.20 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது.</p><p>இரவு 10.35 மணிக்கு புறப்படும். மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்மிப்பூண்டி- மூர் மார்க்கெட் இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடைய ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>அதிகாலை 3.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்பட்டு மூர் மார்க்கெட்டுக்கு வரும் மின்சார ரெயில் கும்மிப்பூண்டி- மீஞ்சூர் இடையே இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>அதிகாலை 4.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க தேசிய ஆணையம் தேவை - கமல்ஹாசன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-commission-needed-to-restore-confidence-in-exams-kamal-haasan-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-commission-needed-to-restore-confidence-in-exams-kamal-haasan-insists#comments</comments><guid isPermaLink="false">c72f1b7e-9da6-4a2a-b46b-1eb310f6d858</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:55:16 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:55:16.178Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கமல்ஹாசன்,Kamal Haasan,ஆணையம்,மக்கள் நீதி மய்யம்,National Commission</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iwf1kf83/kamalhasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கமல்ஹாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iwf1kf83/kamalhasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">கமல்ஹாசன்</a> தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; </p><p>மோதலுக்குப் பதிலாக உரையாடல் இடம்பெறுவதைக் கண்டு மகிழ்ச்சி. கருத்து வேறுபாட்டிற்கு உரையாடல் அவசியம். இதுவே ஜனநாயகத்தின் செயல் வடிவம். பெல்லட் துப்பாக்கிகள், மின் அதிர்ச்சித் தடியடிகள் மற்றும் ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை. அதேபோல், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுச் சொத்துக்கள் மீதான தாக்குதல்களும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறல் பாரபட்சமாக இருக்க முடியாது. இந்தத் தருணமும் வாய்ப்பும் வெறும் தாள் கசிவுகளை விடப் பெரியது. </p><h2>தேசிய ஆணையம்</h2><p>தேர்வுகளின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், கல்வி சார்ந்த மன அழுத்தத்தைக் குறைக்கவும், கல்வியை நவீனமயமாக்கவும் மூன்று மாத கால செயல் திட்டத்துடன் கூடிய, கல்வி மற்றும் தேர்வு சீர்திருத்தத்திற்கான ஒரு தேசிய ஆணையத்தை அமைக்க நான் வலியுறுத்துகிறேன். மேலும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்வினால் ஏற்படும் மனித இழப்புகளை இளம் அனிதாவின் மரணம் முதன்முதலில் வெளிப்படுத்திய தமிழ்நாட்டின் குரலையும் அந்த ஆணையம் கேட்க வேண்டும். இதில் ஈடுபட அரசு காட்டும் விருப்பம் வரவேற்கத்தக்கது. இப்போது, ​​உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகக் கடக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabbed-with-sickle-over-previous-enmity-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabbed-with-sickle-over-previous-enmity-2-arrested#comments</comments><guid isPermaLink="false">24ec6489-8d19-4596-b0db-9d430313a798</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:52:01 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:52:01.841Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,அரிவாள் வெட்டு,Youth,வாலிபர்,2 arrested,2 பேர் கைது,Kovilpatti,கோவில்பட்டி,முன்விரோதம்,previous enmity,slashed with sickle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/x9meu3r0/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/x9meu3r0/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் தாக்கி, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கொலை முயற்சி</a>யில் ஈடுபட்ட 2 பேரை மேற்கு காவல் நிலைய போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>முன்விரோதம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகரைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (வயது 30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>வாலிபருக்கு அரிவாள் வெட்டு</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரதிநகர் பகுதியில் வைத்து ஞானதிரவியத்தை வழிமறித்த கும்பல், அவருடன் தகராறில் ஈடுபட்டு, திடீரென அரிவாளால் வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். </p><h2>2 பேர் கைது</h2><p>போலீசாரின் விசாரணையில் கொலை முயற்சியில் ஈடுபட்டது பாரதிநகரைச் சேர்ந்த செல்லபாண்டி மகன் மகாராஜன்(33) மற்றும் முத்து மகன் முத்துராஜ்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த மகாராஜன், முத்துராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>காவிரிப் பாசன நீரைப் பெற்றுத்தருவது ஒன்றே விவசாயிகளின் வேதனை துடைக்கும் அருமருந்து - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/providing-cauvery-irrigation-water-is-the-only-remedy-to-ease-farmers-pain-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/providing-cauvery-irrigation-water-is-the-only-remedy-to-ease-farmers-pain-seeman#comments</comments><guid isPermaLink="false">344db5ff-b7f7-40ba-847b-4d72af6900d7</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:48:25 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:48:25.139Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,சீமான்,Seeman,Karnataka,கர்நாடகா,விவசாயிகள்,Cauvery,காவிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/bk7fgcq5/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/bk7fgcq5/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வறண்டு கிடக்கும் காவிரி நதிப் பார்த்தும், வாடிக் கிடக்கும் நெற்பயிர்கள் பார்த்தும், நாளும் தமிழ்நாட்டு விவசாயிகள் கவலையில் உழன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அது குறித்து அணுவளவும் கவலையின்றி, தவெக அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துத் திரையரங்கில் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது! வன்மையான கண்டனத்துக்குரியது.</p><p>குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை போதிய நீர் இல்லாததால் இதுநாள் வரை திறக்கப்படாததால் வேதனையில் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடிதான் பொய்த்துப்போனது, குறைந்தபட்சம் சம்பா சாகுபடிக்காவது காவிரி பாசன நீர் திறக்கப்படுமா என்று டெல்டா விவசாயிகள் கண்ணீரோடு காத்திருக்கும் நிலையில், ஒரு சொட்டு நீர்கூடத் தரமுடியாது என்று கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு கை விரித்துவிட்டது. காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கி, ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்துள்ள தவெக அரசு, கர்நாடக அரசின் அடாவடித்தனத்திற்கு இதுவரை ஒரு சிறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசிடம் சுமூகமாக பேசி காவிரி நீரைப்பெற்றுத் தரத்தான் தவெக அரசிற்கு திராணி இல்லை. குறைந்தபட்சம் கண்டனம் தெரிவிக்கக் கூடத் துணிவு இல்லையா? </p><p>அண்மையில் காவிரி நீர் இருப்பு குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டம் முடிந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் முதல் வாரம் கூடி ஆலோசிக்கப்படும் என்று அறிவித்தது கண்டு, வேளாண் பெருங்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆலோசனை நடத்துவதற்கு ஏன் ஆகஸ்ட் முதல் வாரம் வரை காத்திருக்க வேண்டும்? பேச்சுவார்த்தையோ, சட்டப்போராட்டமோ விரைந்து நடவடிக்கை எடுத்து, காவிரிப் பாசன நீரைப் பெற்றுத்தருவது ஒன்றே விவசாயிகளின் வேதனை துடைக்கும் அருமருந்தாகும். அதைவிடுத்து கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவே ஆகஸ்ட் மாதம் வரை இழுத்தடிப்பது காவிரிப் பாசன விவசாயிகளைக் கண்ணீர் கடலில் தவிக்கவிடும் கொடுஞ்செயலாகும்.</p><p>ஏற்கனவே, தமிழ்நாட்டில் அரிசி விலை நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை 25 ரூபாய் வரை அதிகரித்து, கடைகளில் கிலோ 85 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இந்நிலையில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பொய்த்து, நெல் உற்பத்தி மேலும் பாதிக்கப்படுமாயின், தமிழ்நாட்டில் அரிசியின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பன்மடங்கு உயரும். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். அப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டால், அதற்கு காவிரி நீரைப் பெற்றுத்தராத தவெக அரசின் அலட்சிய செயல்பாடே முழுமுதற் காரணமாகும்.</p><p>ஆகவே, கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் மாதம் வரை காத்திராமல், அடுத்தகட்ட நடவடிக்கையை உடனடியாகத் தொடங்கி, விரைந்து காவிரிப்படுகை விவசாயிகளின் கண்ணீர் துடைத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குதிரை பேர வழக்கில் ஜாமீன்: காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balaji-appeared-at-the-triplicane-police-station-and-signed-the-register</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balaji-appeared-at-the-triplicane-police-station-and-signed-the-register#comments</comments><guid isPermaLink="false">62efdb1e-1e0f-4c04-961c-6156466ddfdd</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:47:52 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:47:52.452Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Senthil Balaji,செந்தில் பாலாஜி,குதிரை பேர வழக்கு,Horse-trading case</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2kozobt0/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/2kozobt0/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக எம்.எல்.ஏ.வை பேரம் பேசி ஆட்சி கவிழ்க்க முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. 25 ஆயிரம் ரூபாய் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும், மறு உத்தரவு வரும் வரை காலையும், மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.</p><p>இதற்கிடையே, போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையின்போது, “முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை. சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். </p><p>இந்த நிலையில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நேற்று வந்து பிணைத்தொகை செலுத்தினார். அதனை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி இன்று சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் அவரது சகோதரர் அசோக்குமாரும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். </p> ]]></content:encoded></item><item><title>நண்பர்களுடன் கடலில் குளித்தபோது சோகம்: ராட்சத அலையில் சிக்கி மாணவி உயிரிழப்பு, மாணவர் மாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-while-swimming-with-friends-student-dies-another-missing-in-giant-wave</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-while-swimming-with-friends-student-dies-another-missing-in-giant-wave#comments</comments><guid isPermaLink="false">17a66246-991a-4d34-b262-5463127916cf</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:18:35 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:18:35.248Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Ennore,எண்ணூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ry3fx3dk/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/ry3fx3dk/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 5 பேர், இன்று சென்னை எண்ணூர் கடற்கரை பகுதிக்கு சென்றனர். இந்த நிலையில் அவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை எழுந்தது. இந்த ராட்சத அலையில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் சிக்கினர்.</p><p>அலை அவர்களை கடலுக்குள் அடித்துச் சென்ற நிலையில், அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் நண்பர்கள் 2 மாணவிகளை மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாண்டிச்சேரியை சேர்ந்த கிருத்திகா (18 வயது) என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>மேலும் ஆவடியைச் சேர்ந்த ஆகாஷ் (20 வயது) என்ற மாணவர் மாயமான நிலையில், அவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடல் அலையில் சிக்கி மாணவி உயிரிழந்த நிலையில், மாணவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு; தூத்துக்குடியில் பரிதாபம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-dies-of-electrocution-tragedy-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirl-dies-of-electrocution-tragedy-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">8bb1e513-f3be-4982-a2e7-d9de4e990c9a</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:13:37 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:13:37.021Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,House,வீடு,motor,பள்ளி மாணவி,மின்சாரம் தாக்கி உயிரிழப்பு,Schoolgirl,மோட்டார்,electrocuted to death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iyi6kj5r/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/iyi6kj5r/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் மோட்டார் சுவிட்சை அணைக்க முயன்ற 11 வயது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">பள்ளி மாணவி</a> மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>மேல்நிலை நீர் தொட்டி நிரம்பியது</h2><p>தூத்துக்குடி காதர்மீரான் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சுப்புலட்சுமி(41). இவர்களது இரண்டாவது மகள் பிரியதர்ஷினி(11). இவர் புதிய துறைமுகப் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரியதர்ஷினி மேல்நிலை நீர் தொட்டி நிரம்பியதை கண்டுள்ளார். </p><h2>மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு</h2><p>இதையடுத்து வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த வாட்டர் மோட்டாரை அணைப்பதற்காக சென்று சுவிட்சை அணைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மாணவியை பதறியடித்துக் கொண்டு மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.</p><p>இதையடுத்து மாணவி பிரியதர்ஷினியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்</a> அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>