<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 01 Aug 2026 10:32:53 +0000</lastBuildDate><item><title>விளைநிலங்களில் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கைவிட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bharat-petroleum-corporation-should-abandon-the-plan-to-lay-pipelines-through-agricultural-lands-communist-party-of-india-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bharat-petroleum-corporation-should-abandon-the-plan-to-lay-pipelines-through-agricultural-lands-communist-party-of-india-insists#comments</comments><guid isPermaLink="false">cd7598b9-a969-4664-b5fa-3307dfd1e5ff</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:27:31 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:27:31.749Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,pipeline,விளைநிலங்கள்,குழாய்கள் பதிக்கும் பணி,திருப்பூர் மாவட்டத்தில்,பாரத் பெட்ரோலியம்,Bharat Petroleum</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/57s8z9o8/152.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/57s8z9o8/152.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவன குந்தி வரையில் 340 கிலோ மீட்டர் தொலைவிற்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.</p><h2>விவசாய விளைநிலங்கள்</h2><p>திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கப்படுகிறது. ஆனால், இருகூரிலிருந்து முத்தூர் வரையிலான 70 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது. </p><p>இதற்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல்  போலீஸ் பாதுகாப்புடன் நேற்று விவசாய நிலங்களில் குழாய்பதிக்கும் பணிகள் நடந்துள்ளன.</p><h2>போராட்டம்</h2><p>இதை கண்டித்தும், இந்தப் பணிகளை கைவிடக்கோரியும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் விவசாயிகள் திரண்டு, விளை நிலங்களில் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம் , நெடுஞ்சாலை வழியாக குழாய்களை பதிக்கவேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் - தாராபுரம் பிரதான சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கைவிட வேண்டும்.நெடுஞ்சாலை வழியாக குழாய்  பதிக்கும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் . அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுக்க வேண்டுமென, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐசிஎப் நிறுவனத்தின் புதிய பொது மேலாளராக மனிஷ் அகர்வால் பொறுப்பேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/manish-agarwal-takes-over-as-the-new-general-manager-of-icf</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/manish-agarwal-takes-over-as-the-new-general-manager-of-icf#comments</comments><guid isPermaLink="false">45be1e72-1899-4a3e-90e5-ad10eb48cb41</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:07:10 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:07:10.297Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பொது மேலாளர்,General Manager,ரெயில் பெட்டிகள்,New,Responsibility பொறுப்பேற்பு,ICF factory</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/13sdyiso/151.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐசிஎப் நிறுவனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/13sdyiso/151.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையின் (Integral Coach Factory – ICF) புதிய பொது மேலாளராக மனிஷ் அகர்வால் இன்று பொறுப்பேற்றுள்ளார்.</p><p>இதற்கு முன்பு ஐசிஎப் பொது மேலாளராக பணியாற்றிய யு. சுப்பா ராவ், தற்போது தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளராக பொறுப்பேற்றுள்ளதை அடுத்து மனிஷ் அகர்வால் இந்த புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.</p><h2>35 ஆண்டுகள் அனுபவம்</h2><p>மனிஷ் அகர்வால் 1989-ஆம் ஆண்டு பேட்ச் இந்திய ரெயில்வே மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (IRSME) பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரி ஆவார். ரெயில்வே துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D">ஐசிஎப்</a> பொது மேலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்தில் முதன்மை செயல் இயக்குநராக (மெக்கானிக்கல்) பணியாற்றி வந்தார். மேலும், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளராகவும் (DRM) அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் விவகாரம்: ஆகஸ்ட் 7-ல் தமிழக கட்சிகள் ஓரணியில் ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-united-parties-august-7-cauvery-mega-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-united-parties-august-7-cauvery-mega-protest#comments</comments><guid isPermaLink="false">8bb9d804-6939-429a-80d6-e39f079317f0</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:53:48 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:53:48.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காவிரி நீர்,அனைத்து கட்சிகள் கூட்டம்,விவகாரம்,ஆர்ப்பாட்டம்protest,Cauvery Water Issue,All Parties</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/goqng11u/krishnasamy.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/goqng11u/krishnasamy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்படுகிறது.</p><h2>அரசியல் கட்சிகளின் கூட்டம்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">புதிய தமிழகம் கட்சியின்</a> முன்னெடுப்பில், மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்திடவும், ஆண்டுதோறும் காவிரி நதிநீர் பங்கீட்டை தடையின்றி பெற்றிடவும், அனைத்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">அரசியல் கட்சிகளின் கூட்டம்</a> இன்று காலை 11 மணிக்குச் சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டு மெட்ரோபாலிட்டன் அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.</p><p><strong>கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:</strong></p><p><strong>தீர்மானம் : 1</strong></p><h2>கண்டனம்</h2><p> காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாக, தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் "கர்நாடக அரசின் பிடிவாதப் போக்குிற்கு" தமிழக அரசியல் கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.</p><h2><strong>தீர்மானம் : 2</strong></h2><h2>போராடும் அவல நிலை</h2><p>மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 40 டி.எம்.சி அளவு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுத்துள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையும்; தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, தினமும் பொதுமக்கள் சாலைக்கு வந்து போராடும் அவல நிலையும் உருவாகியுள்ளது.</p><h2>மெத்தனப்போக்கு</h2><p> 3.5 டி.எம்.சி நீரை 15 தினங்களுக்கு திறந்துவிட இரண்டு தினங்களுக்கு முன் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையம் பரிந்துரைத்தும், "ஒரு சொட்டு நீரைக் கூட திறந்துவிட முடியாது; இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம்" என கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் அறிவித்துள்ள நிலையை அறிந்தும், உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு பதிலாக, கர்நாடக முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை, பிரதமருக்கு கடிதம் என இன்றைய தமிழக அரசு நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தைக்கூட்டிட தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதை உதாசீனப்படுத்திவிட்டு மெத்தனப்போக்குடன் செயல்படும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை அனைத்துக் கட்சிக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.</p><h2><strong>தீர்மானம் : 3</strong></h2><h2>தலைகுனிவு</h2><p>தமிழக முதல்-அமைச்சர் ஆர்வம் காட்டியும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் "இன்னொரு சந்திப்பில் சந்திக்கலாம்" எனக் கூறியுள்ளது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவாகவே இக்கூட்டம் கருதுகிறது.</p><h2><strong>தீர்மானம் : 4</strong></h2><h2>காவிரி நதிநீர் உரிமை</h2><p>ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் உச்சநீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி பெற்ற காவிரி உரிமையை தமிழகத்தில் யார் ஆட்சியில் அமர்ந்தாலும் விட்டுத்தரக்கூடாது. "மேல்மடையில் உட்கார்ந்திருக்கிறோம்" என்ற தைரியத்தில் "ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிட முடியாது" என கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது; பந்த் நடத்தப்படுகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையில்கூட இன்றைய தவெக அரசு விழித்து கொள்ளவில்லையெனில், எட்டு கோடி தமிழக மக்களின் காவிரி நதிநீர் உரிமை பறிபோய்விடும் அவலநிலை ஏற்படும். எனவே, இனி சிறிதும் காலம் தாழ்த்தாமல் செயல்படுமாறு இவ்வாரசை வலியுறுத்துவதுடன்; இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு டெல்லி சென்று, பாரத பிரதமரை சந்தித்து, மேகதாது அணை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காவிரி நதிநீர் பங்கீடு அனைத்து காலகட்டங்களிலும் எந்தவித இடர்ப்பாடும் இன்றி முறையாக கிடைத்திடவும் உரிய அழுத்தம் கொடுக்க முதல்வர் விஜய் அவர்களை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.</p><h2><strong>தீர்மானம் : 5</strong></h2><h2>மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்</h2><p>காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீரவை கண்டிட அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-is-likely-in-7-districts-till-4-pm</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-is-likely-in-7-districts-till-4-pm#comments</comments><guid isPermaLink="false">fab011b9-9edc-4213-ba55-67d04fe60a94</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:37:17 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:37:17.620Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வானிலை ஆய்வு மையம்,district,வாய்ப்பு,மழைrain,the Meteorological Department said</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8mzbdd02/150.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8mzbdd02/150.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.</p><h2>7 மாவட்டங்களில் மழை</h2><p>இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர்  ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>200 யூனிட் இலவசம் என்று சொல்லிட்டு 4 மடங்கு வரை மின் கட்டணம் உயர்ந்தது எப்படி? - சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-electricity-bill-increase-by-4-times-after-being-told-that-200-units-were-free-seemans-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-electricity-bill-increase-by-4-times-after-being-told-that-200-units-were-free-seemans-question#comments</comments><guid isPermaLink="false">07a84ffc-8db2-4c46-b031-1515a8ab14d9</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:20:29 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:20:29.797Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,சென்னை,electricity bill,உயர்வு,இலவசம்,Electricity bill மின் கட்டணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ja21udx5/149.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ja21udx5/149.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2>தவெக அரசு</h2><p>தமிழ்நாட்டில் நடப்பு மாதம் தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளுக்கான மின்சார கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தவெக அரசு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்த நிலையில், அதற்கு நேர் எதிராகப் பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தைவிடப் பல மடங்கு மின்கட்டணம் அதிகரித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.</p><p>மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதும், பழுதான மின் அளவீட்டுக் கருவிகள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுமே மின்கட்டண உயர்வுக்கு காரணம் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 200 யூனிட் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்கப்பெறாமல் இருக்க வேண்டுமென்றே திட்டமிட்டு தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ? என்ற சந்தேகமும் எழுகின்றது. தாமதிக்கப்பட்ட மின் அளவீட்டினால், மின்பயன்பாடு 500 யூனிட்டிற்கு மேல் அதிகமானதால், 200 யூனிட் இலவச மின்சாரத்தின் பலன் கிடைக்காததோடு, ஓர்  அலகிற்கான மின் கட்டண விகிதமும் அதிகரித்துள்ளது. மின்கட்டண அமைப்பில் உள்ள நடைமுறை மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகளும், தாமதமான மின்கணக்கீடும்தான் தற்போதைய தாறுமாறான கட்டண உயர்வுக்கு அடிப்படை காரணமாகும். </p><h2>மின் கட்டணம்</h2><p>தவெக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என்றும், அதுவும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே என்றும் அறிவித்து மக்களை ஏமாற்றியது போதாதென்று தற்போது, மின்கணக்கீட்டில் குளறுபடிகள் செய்து வழக்கத்தை விட பன்மடங்கு மின்கட்டணம் உயரவும் காரணமாகியுள்ளது பெருங்கொடுமையாகும். மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்துவதும், மின்னிலக்க அளவீட்டுக் கருவியை விரைந்து பொருத்துவதும் மட்டுமே இது போன்ற குளறுபடிகள் இனி வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் பயன்படுத்தும் அளவிற்கான உண்மையான மின்கட்டணத்தை செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>ஆகவே, தமிழ்நாடு அரசு மின் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பன்மடங்கு தற்போது அதிகரித்துள்ள மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோவின் புதிய சாதனை: ஜூலை மாதத்தில் 1.06 கோடி பேர் பயணம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metros-new-record-106-crore-people-travelled-in-july</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metros-new-record-106-crore-people-travelled-in-july#comments</comments><guid isPermaLink="false">9f5f4bcb-57f1-4026-a03f-fb90f679ce48</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:57:43 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:57:43.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,chennai metro,பயணம்,Travel,மெட்ரோ,சாதனை achievement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/cy1awwpm/148.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெட்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/cy1awwpm/148.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில்பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.</p><p>அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,06,37,647 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பயணம்</h2><p>அதிகபட்சமாக 24.07.2026 அன்று 3,84,412 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 2026, ஜூலை மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 55,87,494 பயணிகள், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி (Single Journey Paper QR 19,66,202, Online QR – 1,47,760, Static QR 2,24,701, Whatsapp - 4,51,715, Paytm 2,99,228, ONDC – 12,68,411, PhonePe – 2,84,121, CMRL Mobile App(SVP) 95,430, Chennai One App – 2,98,702, HCL 50 Year Celebration Music Concert Event QR – 13,883) பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.</p><h2>தள்ளுபடி</h2><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியைவழங்குகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப்பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடிகிடையாது.</p><p>மெட்ரோ ரெயில்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">மெட்ரோ</a> ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையின் உதவியோடு விளைநிலங்களை பறிக்கும் தவெக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-seizing-agricultural-lands-with-police-assistance-ttv-dhinakaran-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-seizing-agricultural-lands-with-police-assistance-ttv-dhinakaran-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">e34ad1c4-e617-46c6-a7a1-d487ddc56462</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:45:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:45:37.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/y77jra8j/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/y77jra8j/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது –  காவல்துறையின் உதவியோடு விளைநிலங்களை பறிக்கும் தவெக அரசின் விவசாய விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. </p><p>பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் கோவையிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவனஹொந்தி வரை 340 கி.மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வரும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரின் மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்த தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. </p><p>விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் அமைக்கப்படுவதால், நிலத்தின் பயன்பாடு, நிலத்தடி நீர்,  விவசாய உற்பத்தி என பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்க மறுத்து, அவர்களின் போராட்டத்தை ஒடுக்க தவெக அரசு கையாண்டிருக்கும் அடக்குமுறை, ஆணவம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும். </p><p>கடந்த ஆட்சிக்காலங்களில் இதே திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போரட்டங்களின் விளைவாக  எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், காவல்துறை உதவியுடன் விளைநிலங்களை வலுக்கட்டாயமாக  பறிக்க முற்படுவது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் தவெக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். </p><p>எனவே, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளை  அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையின் படி சாலையோரமாகவோ அல்லது நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ எண்ணெய் குழாய்களை பதிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வழக்கை சட்டப்படி சந்திப்பேன் - காவல் நிலையத்தில் ஆஜரான பின் செந்தில் பாலாஜி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-face-the-case-legally-senthil-balaji-speaks-to-the-press-after-appearing-at-the-police-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-face-the-case-legally-senthil-balaji-speaks-to-the-press-after-appearing-at-the-police-station#comments</comments><guid isPermaLink="false">d8141734-fd66-4637-8b3c-a65bcb871961</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:25:21 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:25:21.086Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,முன்னாள் அமைச்சர்,காவல் நிலையம்,செந்தில் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ln4qcoi1/senthil-balaji.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செந்தில் பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ln4qcoi1/senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: </p><p> சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் புகாரிலும் பெயர் இல்லை. எப்.ஐ.ஆரிலும் பெயர் இல்லாத நிலையிலும்  என் பெயர்  சேர்க்கப்பட்டு அதற்காக முன் ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் தொடர்ந்து காலையும் மாலையும் கையெழுத்திட்டு வருகிறேன்.  லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதலாக ஒருவழக்கு பதிவு செய்து, நான் தங்கியிருந்த அறைகளிலும் பல்வேறு இடங்களிலும் சோதனை செய்து வழக்கை பதிவு செய்து உள்ள்னர். அந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்காக  மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்தேன். </p> <p>இதனால், கையெழுத்திடுவதில் இருந்து  விலக்கு அளிக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். சென்னை உயர் நீதிமன்றத்திலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.  அதற்கான அனுமதிவேண்டும் என்று தாக்கல் செய்து இருந்தோம்.  உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கிய நிலையில், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறேன்.  </p> <p>இருவர் கைது செய்யப்பட்டதில் ஒருவர் பெயர் எப்.ஐ.ஆரில் உள்ளது. இன்னொருவர் பெயர் எப்.ஐஆரிலேயே இல்லை. அவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள தயாராகி இருக்கிறோம். வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆக்கப்பூர்வமான அரசு என்றால் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை , தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் கவனம் செலுத்தும். ஆனால்,  தவெக அரசு வழக்கு  போடுவதில்  முனைப்பு காட்டி வருகிறது. நீதிமன்றம் இருக்கிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபித்து காட்டுவோம்” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-schoolgirl-in-chennai-youth-sentenced-to-20-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-schoolgirl-in-chennai-youth-sentenced-to-20-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">fee10307-5dbd-405b-8a48-b56fa90fa168</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:24:31 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:24:31.644Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Sexual harassment,வாலிபர்,Verdict,தீர்ப்பு,சிறை தண்டனை,Prison sentence,பாலியல் தொந்தரவு,பள்ளி மாணவி,Schoolgirl,teenager</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/zdo3nx24/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவிக்கு பாலியல் தொல்லை, வாலிபருக்கு சிறை தண்டனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/zdo3nx24/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>17 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">பள்ளி மாணவி</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81">பாலியல் தொந்தரவு</a> கொடுத்த வழக்கில் தொடர்புடைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபரு</a>க்கு 20 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.</p><h2>பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை</h2><p>சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பாண்டியராஜன்(எ) ஜான் ஒபெத் (வயது 24) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பாண்டியராஜன் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை</h2><p>இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாண்டியராஜன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கனிம வளங்களை எடுத்துச் செல்ல தடை; விவசாய நிலங்களை அழிப்பதற்கு அனுமதியா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-mineral-resources-yet-permission-to-destroy-agricultural-lands-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-mineral-resources-yet-permission-to-destroy-agricultural-lands-velmurugan#comments</comments><guid isPermaLink="false">cf89b298-0f9c-4a3e-97f9-f0264869c08a</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:13:36 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:13:36.638Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/c1xbw1yh/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/c1xbw1yh/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு அரசே இரட்டை நிலைப்பாடு ஏன்? நெடுஞ்சாலை வழியாக கர்நாடகாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல முடியும் என்றால், விவசாய நிலங்களை ஏன் சிதைக்க வேண்டும்? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அனுமதிக்க முடியாது</h2><p>தமிழ்நாட்டின் உரிமையான காவிரி நீரைக் கூட திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு, தமிழ்நாட்டின் வளமான விவசாய நிலங்களை அழித்து எண்ணெய் குழாய் அமைத்துக் கொடுக்கும் அநீதியைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.</p><p>தமிழகத்தின் உரிமைகளை மதிக்காத மாநிலங்களின் தேவைகளுக்காக, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும், விவசாய வளங்களையும் பலியிடும் போக்கு இனியும் தொடர அனுமதிக்க முடியாது.</p><h2>நிலங்களை பாதுகாத்திட வேண்டும்</h2><p>தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் கனிம வளங்கள் கட்டுப்பாடின்றி பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுத்து, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதே கொள்கை, அதே உறுதி, அதே பாதுகாப்பு விவசாய நிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.</p><p>பிற மாநிலங்களுக்காகத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>கனிம வளங்களைச் சுரண்ட அனுமதிக்கக் கூடாதென்றால், பிற மாநிலங்களின் தேவைக்காக தமிழ்நாட்டின் விவசாய நிலங்களையும் அழிக்க அனுமதிக்கக் கூடாது. இதுவே சரியானது. கனிம வளங்களைப் பாதுகாக்க சட்டம் இருந்தால், விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும், அதைவிட வலுவான பாதுகாப்பு இருக்க வேண்டும்.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி</h2><p>பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் முத்தூரிலிருந்து கர்நாடக எல்லை வரை நெடுஞ்சாலை ஓரமாக குழாய்கள் பதிக்கப்படுகின்றன. ஆனால், இருகூரிலிருந்து முத்தூர் வரையிலான சுமார் 70 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டும் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களைத் தோண்டி குழாய் பதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.</p> <ul><li><p>நெடுஞ்சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியும் என்றால், விவசாய நிலங்களை ஏன் சிதைக்க வேண்டும்? </p></li><li><p>கர்நாடகாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல, தமிழனின் வயல்தான் பாதையா? </p></li><li><p>நாளை எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டால், அந்த நிறுவனம் இழப்பீடு கொடுக்கலாம். ஆனால் நஞ்சான மண்ணை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? </p></li><li><p>மாசடைந்த நிலத்தடி நீரை மீட்டெடுக்க முடியுமா? </p></li><li><p>பல தலைமுறைகள் உழைத்து உருவாக்கிய விளைநிலத்தை மீண்டும் உருவாக்க முடியுமா?</p></li></ul><h2>நிலங்களை அழிக்கக் கூடாது</h2><p>கேரளாவுக்காக தமிழ்நாட்டின் கனிம வளங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அதேபோல், கர்நாடகாவுக்காகத் தமிழ்நாட்டின் விவசாய நிலங்களையும் அழிக்கக் கூடாது என்பதும் எங்கள் உறுதியான கொள்கை.</p><p>எனவே, தமிழ்நாடு அரசு கனிம வளங்களைப் பாதுகாக்க எடுத்துள்ள கொள்கையைப் போலவே, பிற மாநிலங்களின் திட்டங்களுக்காக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>விவசாய நிலங்களை கையகப்படுத்தவோ, சேதப்படுத்தவோ கூடாது என்ற, தெளிவான கொள்கை முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்.</p><h2>அரசு உத்தரவிட வேண்டும்</h2><p>பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக மேற்கொள்ளும் பணிகளை உடனடியாக நிறுத்தி, ஏற்கனவே பயன்படுத்தப்படும் நெடுஞ்சாலை வழித்தடத்திலேயே முழு திட்டத்தையும் மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணி நிறுத்தம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/silt-removal-work-at-thirumurthy-dam-halted-officials-take-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/silt-removal-work-at-thirumurthy-dam-halted-officials-take-action#comments</comments><guid isPermaLink="false">cd28cf93-c647-4d5b-bc55-54ec40bc3103</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:07:19 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:07:19.894Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dam,திருமூர்த்தி அணை,வண்டல் மண்,Alluvial soil</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/yobtu1an/99.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/yobtu1an/99.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உடுமலை, </p><p>‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக, அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து, திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணியை நிறுத்தினர்.</p><h2>திருமூர்த்தி அணை</h2><p>உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பாலாற்றை தடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">திருமூர்த்தி அணை </a>கட்டப்பட்டது. இந்த அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள் நீராதாரமாக உள்ளன.</p><p>இந்த அணை மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையை ஆதாரமாக கொண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2>வண்டல் மண் எடுக்க அனுமதி</h2><p>இந்த நிலையில் கோடை காலத்தையொட்டி, அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுப்பதற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண் அள்ளிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கடந்த 27-ந் தேதியில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணி தொடங்கியது. ஆனால் ஒரு சிலர் விவசாயிகள், போர்வையில் வண்டல் மண்ணை எடுத்து சென்று விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.</p><h2>மண் அள்ளுவது நிறுத்தம்</h2><p>இது குறித்த செய்தி ‘தினத்தந்தி’யில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் திருமூர்த்தி அணைக்கு சென்று, மண் அள்ளிக்கொண்டு வரும் வாகனங்களை சோதனை செய்தனர். இதையடுத்து முறைகேடாக வண்டல்மண் எடுத்து செல்வது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்,  வண்டல் மண் அள்ளுவதை நிறுத்தி வைத்தனர்.</p><p>ஆனாலும் இதுவரையிலும் எடுக்கப்பட்ட வண்டல் மண் விற்பனைக்கு எங்கு கொண்டு செல்லப்பட்டது?அது எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது? யார் யாருக்கு விற்பனை செய்தனர்?என்பது குறித்து விரிவான விசாரணை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அதிக விலைக்கு உரம் விற்கும் கடைகளுக்கு விற்பனை தடை: வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-sales-to-shops-selling-fertilizer-at-high-prices-agriculture-official-warns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-sales-to-shops-selling-fertilizer-at-high-prices-agriculture-official-warns#comments</comments><guid isPermaLink="false">bca4052f-bbf2-4c9f-b12d-4b372be5b611</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:50:42 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:50:42.159Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,agriculture,Sale,warning,எச்சரிக்கை,ban,Fertilizer,உரம்,Assistant Director,வேளாண்மை,விற்பனைக்கு தடை,அதிக விலை,high price,உதவி இயக்குநர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/0v5qmd2s/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணன் உரக்கடைகளில் திடீர் ஆய்வு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/0v5qmd2s/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>அரசு நிர்ணயித்த விலையை விட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">அதிக விலை</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">உரங்களை விற்பனை</a> செய்யும் உரக்கடைகளுக்கு உடனடியாக '<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">விற்பனை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">தடை</a>' விதிக்கப்படும் என தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">எச்சரிக்கை</a> விடுத்துள்ளார்.</p><h2>உரக்கடைகளில் திடீர் ஆய்வு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாரத்தில் இயங்கி வரும் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உரக்கடைகளில், தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். </p><h2>ஆய்வின் முக்கிய அம்சங்கள், அறிவுறுத்தல்கள்</h2><h3>விலை மற்றும் இருப்பு விவரம்</h3><p>ஆய்வின் போது உரங்களின் இருப்பு நிலை மற்றும் விற்பனை விலைக் குறிப்புகளைக் கேட்டறிந்த அதிகாரி, உரங்களை விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். </p><h3>கடும் நடவடிக்கை எச்சரிக்கை</h3><p>அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்யும் உரக்கடைகளுக்கு உடனடியாக 'விற்பனைத் தடை' விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. </p><h3>அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே அனுமதி</h3><p>அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் பூச்சி மருந்துகள் மற்றும் உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் பூச்சி மருந்துகள் மற்றும் இயற்கை உரங்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்து, இதுகுறித்துத் தொடர்ந்து கண்காணிக்க வட்டார உர ஆய்வாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. </p><h3>யூரியா விற்பனை</h3><p>யூரியா உரத்தினை விவசாயிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனைத்துத் தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன: திமுக</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-evidence-that-the-election-in-the-kolathur-constituency-was-not-conducted-properly-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-evidence-that-the-election-in-the-kolathur-constituency-was-not-conducted-properly-dmk#comments</comments><guid isPermaLink="false">93096fb0-1422-48d0-b0a1-143529f878c9</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:11:39 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:11:39.062Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,கொளத்தூர்,Kolathur,ஸ்டாலின்,MK Stalin&apos;</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/wltpgn05/NR-Elango.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ என்.ஆர். இளங்கோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/wltpgn05/NR-Elango.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து இவிஎம் எந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி கடந்த 29 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.  நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். </p><h2>ஸ்டாலின் தோல்வி</h2><p>இவரை எதிர்த்து தவெக சார்பில் விஎஸ் பாபு களம் இறங்கினார். தேர்தல் ரிசல்டில் மு.க ஸ்டாலினை, விஎஸ் பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த கொளத்தூர் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த 29 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டது. </p> <h2>வழக்கு தொடர முடிவு?</h2><p>மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் இவிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோரும் தவெக சார்பில் விஎஸ் பாபுவின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்று இருந்தனர். ஒரு நாளைக்கு 2 வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 14 வாக்குச்சாவடிகளுக்கு 7 நாட்களாக இந்த வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 4-வது நாளாக வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.</p><p>இந்நிலையில் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என கூறியுள்ளார். மேலும் ஆய்வு செய்த 8 எந்திரங்களில் 3 எந்திரங்கள் சரியாக இல்லை. இது தொடர்பாக மு.க ஸ்டாலினின் அறிவுறைப்படி நீதிமன்றத்தை நாடுவோம்” என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் நாளை சிறப்பு பயோமெட்ரிக் முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-biometric-camp-at-ration-shops-tomorrow-thoothukudi-collector-informs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-biometric-camp-at-ration-shops-tomorrow-thoothukudi-collector-informs#comments</comments><guid isPermaLink="false">104385d4-7a10-404a-aa5a-701f614a20cb</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:07:16 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:07:16.149Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Collector information,கலெக்டர் தகவல்,Special camp,சிறப்பு முகாம்,ரேஷன் கடைகள்,ration shops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/se98lq1r/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரேஷன் கடைகளில் சிறப்பு பயோமெட்ரிக் முகாம்; தூத்துக்குடி கலெக்டர் தகவல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/se98lq1r/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">ரேஷன் கடை</a>களில் நாளை சிறப்பு பயோமெட்ரிக்  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">முகாம் </a>நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.</p><p>தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகள்), குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்களது கைரேகை மற்றும் கண்கருவிழி (Biometric) பதிவுகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நாளை (ஆகஸ்ட் 2) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. </p><h2>கைரேகை பதிவு</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்களில், இதுவரையிலும் கைரேகை அல்லது கண்கருவிழி பதிவு செய்யாத உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><h2>அருகாமையிலுள்ள ரேஷன் கடைகளில் பதிவு செய்யலாம்</h2><p>வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கிப் பணியாற்றி வருபவர்கள், மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் தாங்கள் தற்போது வசிக்கும் ஊர் அல்லது மாவட்டத்தில் உள்ள அருகாமையிலுள்ள நியாயவிலை கடைகளுக்கே நேரில் சென்று தங்களது ரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம்.</p><h2>பொதுமக்கள் ஒத்துழைப்பு</h2><p>பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரசின் சலுகைகளைத் தொடர்ந்து பெறவும், இந்தச் சிறப்பு வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவு செய்யவும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இரவில் மதுப்பிரியர்கள் கூடாரம்: திருப்பூர் மார்க்கெட் கடைகள் தகடுகளால் அடைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/liquor-enthusiasts-camp-out-at-night-tiruppur-market-shops-barricaded-with-metal-sheets</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/liquor-enthusiasts-camp-out-at-night-tiruppur-market-shops-barricaded-with-metal-sheets#comments</comments><guid isPermaLink="false">cfae825a-874a-4af4-93a6-2dc3f496a660</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:05:08 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:05:08.790Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,திருப்பூர் மார்க்கெட்,Tiruppur market</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8hltuwmq/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/8hltuwmq/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இன்னும் திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. இந்த கடைகளை ஏலம் விடுவதில் குளறுபடி நிலவுவதால் திறப்பு விழா தள்ளிப்போவதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. </p><h2>தினத்தந்தி செய்தி எதிரொலி</h2><p>இதன்காரணமாக இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் கூடாரமாக இந்த தினசரி மார்க்கெட் கடைகள் மாறிப்போனது. மார்க்கெட்டின் முன்புறம் உள்ள கடைகளுக்கு கதவுகள் எதுவும் இல்லாததால் இரவு நேரங்களில் சாலையோரவாசிகள், மதுப்பிரியர்கள் இந்த கடைகளுக்குள் சென்று தங்குவது, தகாத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்தது. </p><p>எனவே இதுகுறித்து `<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தினத்தந்தி'யில் </a>செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக தினசரி மார்க்கெட் முன்புறம் உள்ள கடைகளில் இரும்பு தகடுகளை கொண்டு யாரும் உள்ளே செல்லாத வகையில் அடைக்கப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை மக்கள் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்-அமைச்சர் விஜய் - மு.க. ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-standing-in-isolation-thinking-of-doing-a-solo-act-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-standing-in-isolation-thinking-of-doing-a-solo-act-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">4600ea57-edfe-4536-8bdf-b885c729d477</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:58:06 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:58:06.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க. ஸ்டாலின்,M.K. Stalin,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ppte9gul/stalin-vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ppte9gul/stalin-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் <a href="https://www.dailythanthi.com/topic/megadadu-dam">மேகதாது அணை</a> விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்தோம்.</p><p>தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.</p><h2>கர்நாடகம் செல்வதற்கு தூது</h2><p>ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்கு தூது அனுப்பினார்.  தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.</p><p>இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதல்-அமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.</p><h2>அனைத்துக் கட்சிக் கூட்டம்</h2><p>நமது முதல்-அமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்-மந்திரி அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.</p><p>முதல்-அமைச்சர் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: அன்புமணி வரவேற்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-decides-to-move-the-supreme-court-to-secure-cauvery-water-anbumani-welcomes-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-decides-to-move-the-supreme-court-to-secure-cauvery-water-anbumani-welcomes-the-move#comments</comments><guid isPermaLink="false">f33aed63-4642-462e-af25-3ad1e373c151</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:36:04 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:36:04.308Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani,காவிரி விவகாரம்,மேகதாது அணை விவகாரம்,மேகதாது அணை பிரச்சினை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5t945cw9/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5t945cw9/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரியில் நீர் பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழகம் முடிவு தாமதமாக எடுக்கப்பட்டாலும் சரியான நடவடிக்கை! என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு</h2><p>காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைப் பெறுவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடைபெறவிருந்த இரு தரப்பு பேச்சுகள்ளுக்கான கதவுகளை கர்நாடக அரசு மூடியதற்கு பிறகு மிகவும் தாமதமாகத் தான் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது என்றாலும், காவிரி சிக்கலில் இது தான் சரியான நடவடிக்கையாகும்.</p><p>காவிரி நீர்ப் பகிர்வு, மேகதாது அணை சிக்கல் ஆகியவை குறித்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை  தமிழக முதல்-அமைச்சர் விஜய் நாளை மறுநாள் பெங்களூரில் சந்தித்து பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கர்நாடகத்திலும் வெடித்துள்ள போராட்டங்களைக் காரணம் காட்டி, இரு தரப்பு பேச்சுகளுக்கு உகந்த சூழல் நிலவவில்லை என்று கர்நாடக முதல்-மந்திரி நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு செல்லும் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் கைவிட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக, காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார். ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சட்டப்படி எதிர்கொள்வது சரி</h2><p>தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுக்கும் சிக்கலாக இருந்தாலும், மேகதாது அணையை கட்ட கர்நாடகம் சதி செய்யும் சிக்கலாக இருந்தாலும் அதை சட்டப்படியாக எதிர்கொள்வது தான் சரியானதாக இருக்கும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கு மாறாக இந்த விவகாரத்தில் தவறான பாதையில் பயணித்த தமிழக அரசு, இப்போதாவது சரியான பாதைக்கு திரும்பி இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இனிவரும் காலத்திலும் கூட காவிரி நீர்ப்பகிர்வு, மேகதாது விவகாரம்  ஆகியவற்றில் கர்நாடக அரசுடன் எந்த வகையிலும் பேசுவதில்லை என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியலுக்கு புதிது என்பதால், புதுமையாக எதையாவது செய்து தமிழகத்திற்கு தண்ணீரை பெற வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், கர்நாடகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில முதல்-மந்திரிகள் முன்வர மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். 1995-ஆம் ஆண்டில் கடுமையான வறட்சி நிலவிய சூழலில் சுப்ரீம் கோர்ட்டே ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் வழங்கவில்லை.  அதன்பின் இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்ட பிறகு, அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதல்-மந்திரி தேவகவுடா ஆகியோரை அழைத்து பேச்சு நடத்தினார். அதன்பயனாக நடுவர் மன்றம் ஆணையிட்ட 11 டி.எம்.சிக்கு பதிலாக 6 டிஎம்சி நீரை மட்டும் கர்நாடகம் திறந்து விட்டது.</p><h2>கோர்ட்டு அவமதிப்பு</h2><p>அதன்பின், 2002-ஆம் ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு கடுமையான வறட்சி நிலவியது. அப்போது சம்பா பயிர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையம் ஆணையிட்டது. ஆனால், கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்து விட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்திற்கு  தினமும் 0.8 டி.எம்.சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. ஆனால், அதையும் மதிக்காத கர்நாடக காங்கிரஸ் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தண்ணீர்  திறக்க முடியாது என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தமிழகம் தொடர்ந்தது.</p><p>அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும்; கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை வழங்கவும் தயங்க மாட்டோம் என்று 26.10.2002-ஆம் நாள் ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து தான் கர்நாடகம் தமிழகத்திற்கு  காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. அதன்பிறகும் எஸ்.எம். கிருஷ்ணா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்காமல் நிலுவையில் வைத்துக் கொண்டே நவம்பர் 15-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டது. மிதவாதிகள் என்று அறியப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவும்,  எச்.டி.தேவகவுடாவுமே சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முன்வராத நிலையில், காவிரி சிக்கலை தீவிரமாக்கியே அடுத்த தேர்தலிலும் முதல்-மந்திரியாக பதவியைத் தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் டி.கே.சிவக்குமார் கேட்டவுடன் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவார் என்று எதிர்பார்ப்பது அரசியல் அறியாமையாகவே இருக்கும். இந்த அணுகுமுறையை அரசு கைவிட வேண்டும்.</p><h2>தடைவிதிக்க வேண்டும்</h2><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடும்படி சுப்ரீம் கோர்ட்டில் விரைந்து வழக்கு தொடர்ந்து நீரைப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது அணை விவகாரத்திலும் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்யும் கூட்டுச் சதியை உரிய தரவுகளுடன் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு சென்று மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா நேரில் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-keerthana-personally-inspects-the-construction-of-a-new-fire-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-keerthana-personally-inspects-the-construction-of-a-new-fire-station#comments</comments><guid isPermaLink="false">49a86358-e5f5-45be-b5df-73ea1bea03d9</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:33:49 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:33:49.292Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆய்வு,தீயணைப்பு நிலையம்,fire station,அமைக்கும் பணி,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/qb27uwuk/miniser-keerthana.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/qb27uwuk/miniser-keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி,</p><p>தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>இடங்கள் தேர்வு</h2><p>மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக இரண்டு இடங்களை நேரில் ஆய்வு செய்தேன்.</p><p>1. பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியின் அபாய நிலை</p><p>2. மக்கள் அடர்த்தி மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, மிகவும் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.</p><h2>புதிய தீயணைப்பு நிலையம்</h2><p>பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது எனது முதன்மை பொறுப்பு. அதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தீயணைப்பு நிலையம் </a>விரைவில் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.</p><p>மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வெறும் வார்த்தைகளாக அல்லாமல், செயலாக்கமாக மாற்றுவதே எங்கள் அரசின் நோக்கம். மக்கள் நலனும், பாதுகாப்பும் எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 3.4 கிலோ கஞ்சா, கார், பைக் பறிமுதல்: 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/34-kg-of-ganja-car-bike-seized-in-nellai-3-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/34-kg-of-ganja-car-bike-seized-in-nellai-3-arrested#comments</comments><guid isPermaLink="false">12c629ea-884f-4d02-abd4-137969f5d825</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:27:46 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:27:46.727Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Ganja,கஞ்சா,பறிமுதல்,Car,கார்,bike,seized,பைக்,3 arrested,3 பேர் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/rrr2qqyv/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/rrr2qqyv/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் வாகன சோதனையில் 3 கிலோ 450 கிராம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a>, ஒரு கார், ஒரு பைக்கை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்த போலீசார் 3 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>போலீசார் வாகன சோதனை</h2><p>திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நான்கு சக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.</p><h2>3 கிலோ 450 கிராம் கஞ்சா</h2><p>அந்த சோதனையில், பெருமாள்புரம், ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தினேஷ் (வயது 28), தச்சநல்லூர், சத்திரம்புதுகுளத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி மணி(எ) எஸ்டேட் மணி(44) மற்றும் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரபாண்டியன்(எ) தமிழ் சிங்கம்(25) ஆகிய 3 பேரும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் 3 கிலோ 450 கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது.</p><h2>கஞ்சா, கார், பைக் பறிமுதல், 3 பேர் கைது</h2><p>அதைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து 3 கிலோ 450 கிராம் எடையுள்ள கஞ்சா, ஒரு கார் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டு, பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, அந்த 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே தீர்வு: அமைச்சர் நிர்மல்  குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/approaching-the-supreme-court-is-the-only-solution-regarding-the-mekedatu-dam-issue-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/approaching-the-supreme-court-is-the-only-solution-regarding-the-mekedatu-dam-issue-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">b3ef71c8-4bea-4e2e-883c-b29b05dc4693</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:21:17 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:21:17.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,மேகதாது அணை,நிர்மல்  குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/l9xjgwgr/Nirmal.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/l9xjgwgr/Nirmal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நமக்கு இருக்கின்ற ஒரே ஒரு வாய்ப்பு உச்ச நீதிமன்றம் தான்.. மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கே இது பற்றி தெளிவு இல்லை. புரியவில்லை. தமிழகத்திற்கு விரோதி போல் பேசுகிறார். தமிழக அரசுக்கு எதிராக அவர் செயல்படுகிறார். கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக பேசுகிறார். மாநிலங்கள் இதில் எதுவும் செய்ய முடியாது. ஒன்றிய அரசு தான் இதில் செய்ய முடியும். கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், பாஜக இருந்தாலும், காங்கிரஸ் இருந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்பது தான் அவர்களுடைய நோக்கம். கர்நாடக விவகாரத்தில் தண்ணீர் பெற ஒரே ஒரு தீர்வாக உச்ச நீதிமன்றம் தான் உள்ளது. இதில் என்ன செய்ய முடியுமோ அதனை இந்த அரசு செய்யும்" என்றார். </p><p>அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் ஆட்சி தான் கர்நாடகாவில் நடக்கிறது. ராகுல் காந்தி ஒரு வார்த்தை கூறினால் அவர் திறந்துவிட போகிறார். ஏன் ராகுல் காந்தி பேசவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நிர்மல் குமார், இதே அன்புமணி தான் காங்கிரஸோடு கூட்டணியில் இருந்தார். அப்போது கெஜட்டில் நோட்டிபிகேஷன் வரும் போது என்ன செய்துகொண்டு இருந்தார்.. இப்போது இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினை என்றால் உச்ச நீதிமன்றத்தை நாடுவது தான் ஒரே தீர்வு.. அனைத்துக் கட்சி கூட்டம் எப்போது விஜய் நடத்துவார் என்று கேட்கிறீர்கள். அனைத்து கட்சி கூட்டம் குறித்து முதல்வர் விஜய் முடிவெடுப்பார்"என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balaji-appeared-at-the-triplicane-police-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balaji-appeared-at-the-triplicane-police-station#comments</comments><guid isPermaLink="false">af99b85f-339c-4d9d-9529-e6f1018fa329</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:54:04 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:54:04.735Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Senthil Balaji,செந்தில் பாலாஜி,திருவல்லிக்கேணி,செந்தில் பாலாஜி வழக்கு,Thiruvallikkeni,முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,காவல் நிலையத்தில் ஆஜர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/7y9uqlz1/Untitled-7.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/7y9uqlz1/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு</h2><p>த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 'மேகாலயா புராஜக்ட்' என்ற பெயரில் அரங்கேறிய மிகப்பெரிய சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அளித்த புகார் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.</p><p>இளையராஜா எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட தாகவும் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செய்யப்பட்டுள்ளனர்</a>. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.</p><h2>செந்தில் பாலாஜி ஆஜர்</h2><p>இதனையடுத்து, சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்கள். முறைப்படி, முன்ஜாமீனை செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் பெற்றுக்கொண்டனர். முன்ஜாமீன் நிபந்தனையில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் ஆஜராகி, கையெழுத்திடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.</p><p>அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். அவர்கள் இருவரிடமும், திருவல்லிக்கேணி போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். வழக்குதொடர்பாக போலீசார் கைப்பற்றியுள்ள ஆவணங்களை காட்டி, 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டது.</p><h2>2 நாட்கள் தலைமறைவு</h2><p>இந்த நிலையில் தான், டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இதன் காரணமாக காவல்துறையினர் கைது செய்வதற்கு வாய்ப்பிருப்பதால், கடந்த 2 நாட்களாக செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.</p><p>இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.</p><h2>முன்ஜாமீன் தள்ளுபடி</h2><p>இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><h2>சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு</h2><p>முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக பழைய வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறார்கள். அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவரை கைதுசெய்யக் கூடாது.’ என வாதிட்டார்.</p><p>அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘டாஸ்மாக் வழக்கில் 100 கோடி ஊழல் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் வழக்கின் விசாரணைக்கு பல்வேறு வழிகளில் தடையை ஏற்படுத்தினார். அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை உள்ளது.’ என வாதிட்டார்.</p><h2>கைது செய்ய தடை</h2><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதை உறுதி செய்கிறோம். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்.? என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கூறினர். அத்துடன், செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அவரை கைது செய்யவும் தடை விதித்த நீதிபதிகள், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.</p><p>மேலும், பாஸ்போர்ட்டை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஒப்படைக்க </a>வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை செந்தில் பாலாஜிக்கு வழங்கிய நீதிபதிகள், நிபந்தனைகளை மீறினால் முன் ஜாமீனை ரத்துசெய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.</p><h2>மீண்டும் ஆஜர்</h2><p>செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து அவர் இன்று காலை திருவல்லிக்கேனி காவல் நிலையத்தில் ஆஜரானார். அவருடன் அவரது சகோதரர் அசோக்குமாரும் கையெழுத்திட ஆஜராகி உள்ளார்.  இதனையடுத்து, திருவல்லிக்கேனி போலீசார் செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைய திட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoppu-venkatachalam-stripped-of-party-post-in-dmk-plans-to-join-tvk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoppu-venkatachalam-stripped-of-party-post-in-dmk-plans-to-join-tvk#comments</comments><guid isPermaLink="false">3d6a70e5-55c6-4dea-9456-b872d08c3703</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:47:17 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:47:17.716Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,பதவி பறிப்பு,தி.மு.க.,தோப்பு வெங்கடாசலம்,Venkatachalam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/szk5qtlc/98.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/szk5qtlc/98.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவர் த.வெ.க.வில் இணைய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாலசம், பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் அவருக்கு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவருக்கும், முன்னாள் தி.மு.க. அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலத்தின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. </p><h2>பதவி பறிப்பு</h2><p>இது தொடர்பாக, தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலத்தை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வகிப்பார்கள். </p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p><p>விரைவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">தோப்பு வெங்கடாசலம்</a> தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, த.வெ.க.வில் இணைவார் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஆவின் பால் பாக்கெட் பிலிம்களில் ரசாயன நெடி... 160 ரோல்களை திருப்பி அனுப்பிய மதுரை ஆவின்!&quot; </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chemical-odor-in-aavin-milk-packet-film-madurai-aavin-returns-160-rolls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chemical-odor-in-aavin-milk-packet-film-madurai-aavin-returns-160-rolls#comments</comments><guid isPermaLink="false">bfd6562b-4401-497d-8407-65a7c783b29f</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:40:33 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:40:33.713Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Aavin Milk,ஆவின் பால்,Aavin Company,ஆவின் நிர்வாகம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/el83qdlx/47.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ மதுரை ஆவின் பால் பண்ணை]]></media:title><media:description type="html"><![CDATA[ "ஆவின் பால் பாக்கெட் பிலிம்களில் ரசாயன நெடி... 160 ரோல்களை மதுரை ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியது”. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/el83qdlx/47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுரை</a> மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி வீசியதால் 160 ரோல்களை ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியது. </p><p>மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட ஆவின் நீல நிறப் பால் பாக்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற ரசாயன நெடி வீசியது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்களிடமிருந்து பரவலான புகார்கள் எழுந்தன. குழந்தைகள் மற்றும் நோயாளிகள் தினமும் பயன்படுத்தும் பாலில் இத்தகைய நெடி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.</p><h2>உடனடி சோதனை -காரணம்</h2><p>இந்தப் புகாரைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சாத்தமங்கலம்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> ஆவின் பால் பண்ணை </a>மற்றும் பல்வேறு விநியோக மையங்களில் அதிரடி சோதனை நடத்தி பால் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், பால் பாக்கெட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலித்தீன் பிலிம் பேப்பர் ரோல்களில் ஏற்பட்ட தரம் மற்றும் குறைபாடே இந்த ரசாயன நெடிக்குக் காரணம் என மதுரை ஆவின் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.</p><h2>அதிரடி நடவடிக்கை</h2><p>இதனைத் தொடர்ந்து, தரமற்ற பிலிம்களை சப்ளை செய்த ஒப்பந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் மற்றும் பால்வளத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், பண்ணையில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த ரசாயன நெடி கொண்ட 160 பாலித்தீன் பிலிம் ரோல்களை ஆவின் நிர்வாகம் உடனடியாக ஒப்பந்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பியது.</p><h2>தடையற்ற விநியோகம்</h2><p>தற்போது அந்த தரமற்ற பிலிம்கள் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டு, தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கான ஆவின் பால் விநியோகம் எவ்வித பாதிப்புமின்றி தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நகை கொள்ளை வழக்கில் 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-people-sentenced-to-7-years-in-prison-in-jewelry-robbery-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-people-sentenced-to-7-years-in-prison-in-jewelry-robbery-case#comments</comments><guid isPermaLink="false">690ee37e-ed1e-4daa-9762-3c0b0a589179</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:32:15 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:32:15.742Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Verdict,தீர்ப்பு,சிறை தண்டனை,Prison sentence,robbery case,கொள்ளை வழக்கு,5 பேர்,5 people</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/o2ewriat/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/o2ewriat/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஏரல் பகுதியில் நடந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88">நகை கொள்ளை</a> வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து ஸ்ரீவைகுண்டம் சார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><h2>நகை கொள்ளை வழக்கில் 5 பேர் கைது</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஏரல், இடையற்காடு பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த (8 சவரன் தங்க நகை) கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்களான குணசிங் மகன் டேவிட் (வயது 38), முபாரக் மகன் அப்பாஸ்(30), அப்பாஸ் மகன் முகமதுரபிக்(31), மற்றொரு குணசிங் மகன் சஞ்சய்(44) மற்றும் ஏரல் கோவங்காடு பகுதியைச் சேர்ந்த லிங்கபாண்டியன் மகன் மகேஸ்வரன்(41) ஆகிய 5 பேரையும் ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><h2>7 ஆண்டுகள் சிறை தண்டனை</h2><p>இது தொடர்பான வழக்கின் விசாரணை ஸ்ரீவைகுண்டம் சார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி பர்ஷாத் பேகம் நேற்று மேற்சொன்ன டேவிட், சஞ்சய், அப்பாஸ், முகமதுரபிக் மற்றும் மகேஸ்வரன் ஆகிய 5 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, அவர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில்  காங்கிரஸ் பயிற்சி முகாம்: சென்னை வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-training-camp-in-mamallapuram-enthusiastic-welcome-for-rahul-gandhi-upon-his-arrival-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-training-camp-in-mamallapuram-enthusiastic-welcome-for-rahul-gandhi-upon-his-arrival-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a8e7a84a-49d3-482b-9bfd-eea6e05f092d</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:09:33 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:09:33.672Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi,சென்னை மாமல்லபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5d3bpofx/Rahul-gandhi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/5d3bpofx/Rahul-gandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமின் நிறைவுநாளான இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.  சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ்  தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளித்தனர்.  தொண்டர்களும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். </p><h2>நிர்வாகிகளை சந்திக்கிறார்</h2><p>பின்னர் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க மாமல்லபுரத்திற்கு ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார்.  பயிற்சி முகாமில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.  பின்னர், மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார். </p><p>அதேபோன்று, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. பின்னர் சென்னை வந்து இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம்: ஈரோட்டில் 13 டாஸ்மாக் கடைகள் நாளை மறுநாள் மூடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-13-tasmac-shops-in-erode-to-be-closed-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-13-tasmac-shops-in-erode-to-be-closed-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">5260ff4c-5149-4a47-8476-01aa2888ceca</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:08:49 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:08:49.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,Tasmac Shops,Memorial Day,closed,நினைவு தினம்,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai,டாஸ்மாக் கடைகள் மூடல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/4ow5he2h/96.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/4ow5he2h/96.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு. </p><p>அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி விழா நடைபெறும் பகுதியில் 3 கி.மீ. சுற்றளவில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் விழாவுக்கு ஊர்வலமாக செல்லும் வழியில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் கடைகள் </a>மற்றும் அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் அன்று மூடப்பட்டிருக்க வேண்டும். அதன்படி ஈரோடு மூலப்பாளையம், அசோகபுரம், ஈரோடு ரெயில் நிலையம் எதிரில் உள்ள எலைட் மதுபான கடைகள் நாளை மறுநாள் மாலை 6 மணி வரை செயல்படாது.</p><h2>மதுபானக்கடைகள் மூடல்</h2><p>மேலும் வடபழனி, அறச்சலூர், வாங்கலாம்வலசு, அவல்பூந்துறை, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு, கந்தசாமிபாளையம், முத்தூர்ரோடு மாரப்பம்பாளையம், சோலார், ஆனைக்கல்பாளையம், பச்சப்பாளி, ஈரோடு நாடார்மேடு, பெருந்துறை ஆர்.எஸ். ஆகிய பகுதிகளில் செயல்படும் 13 மதுபானக்கடைகளும் அன்று மூடப்பட்டு இருக்கும். அன்றைய தினம் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனத்துக்கு திடீர் நேரக்கட்டுப்பாடு: பக்தர்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-time-restriction-for-darshan-at-tiruchendur-murugan-temple-devotees-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-time-restriction-for-darshan-at-tiruchendur-murugan-temple-devotees-shocked#comments</comments><guid isPermaLink="false">ae6117e8-29ed-4917-9d4f-76076c4d4384</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:07:14 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:07:14.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Devotees,Thoothukudi,தூத்துக்குடி,திருச்செந்தூர் முருகன் கோவில்,shock,Thiruchendur Murugan Temple,Darshan,தரிசனம்,பக்தர்கள் அதிர்ச்சி,நேரக்கட்டுப்பாடு,Time control</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/wh2kar9z/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் முருகன் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/wh2kar9z/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூர் முருகன் கோவிலில் </a>தரிசனத்துக்கு திடீர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">நேரக்கட்டுப்பாடு</a> விதிக்கப்பட்டுள்ளதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பக்தர்கள் அதிர்ச்சி</a> அடைந்தனர்.</p><h2>திருச்செந்தூர் கோவில்</h2><p>திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு திடீரென நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்தின்படி, இரவு 9 மணிக்கு நடை சாற்றப்பட வேண்டும். பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் நாட்களில், கட்டண தரிசன வரிசையில் மாலை 6.30 மணிக்கு பின்னரும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணிக்கு பின்னரும் பக்தர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவதால், சாமி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தரிசனம் </a>செய்து முடித்த பின்னர் நடை சாற்றுவதற்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது.</p><h2>நேரக்கட்டுப்பாடு</h2><p>கோவிலின் நடை இரவு 9 மணிக்கு சாற்றப்படும் என அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், இரவு 9 மணி வரை கோவில் கிரிப்பிரகாரங்களில் காத்திருக்கும் பக்தர்கள் தங்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கக்கோரி அவ்வப்போது வாக்குவாதங்களில் ஈடுபடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. எனவே, பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நுழைவு வாயில் வழியாக கட்டண தரிசனத்திற்கு இனிமேல் மாலை 6.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், பொது தரிசனத்திற்கு இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">நேரம் </a>மாறுதலுக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><h2>நோக்கம் என்ன?</h2><p>உண்மையில், இதன் நோக்கம், கூட்ட நெரிசலான நாட்களில் கட்டண தரிசன வரிசையில் மாலை 6.30 மணியளவிலும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணியளவிலும் உள்நுழையும் பக்தர்கள், இரவுநேர அபிஷேகத்தின்போது கருவறை திரையிடப்படுவதால் ஏற்படும் தாமதத்தை கடந்து தரிசனம் செய்வார்கள். அவர்கள் தரிசனம் முடிந்து திரும்புவதற்கு குறைந்தபட்சம் இரவு 9 மணி ஆகிவிடும் என்பதையும், அதன் பின்னரே பள்ளியறை பூஜை நடைபெற்று கோவிலின் நடையை திருக்காப்பிட இயலும் என்பதையும் கருத்தில் கொண்டுதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தரிசன வரிசைகளில் பக்தர்களின் உள்நுழைவை முறைப்படுத்துவதற்கான நிர்வாக நடைமுறை குறித்து பக்தர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. </p><h2>பக்தர்கள் அதிர்ச்சி</h2><p>திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்-அமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-pay-special-attention-to-attracting-investments-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-pay-special-attention-to-attracting-investments-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">2c6d5e58-cd54-4d66-ac29-65dc1fb12de3</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:03:31 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:03:31.154Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/4ua6a0b8/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/4ua6a0b8/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்ட அனுமதிகள் ஆகியவற்றை எளிதாக்கி, மேம்படுத்தி புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>டாப் 10 மாநிலங்கள்</h2><p>தற்போதைய 2025-2026 ஆம் ஆண்டிற்கான அதிக புதிய முதலீடுகளை ஈர்த்த டாப் 10 மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. நமது மாநிலத்தின் தொழில் முதலீடுகள் எந்தளவிற்கு நலிவடைந்துள்ளன என்பதற்கான சான்றாக விளங்கும் இந்த தகவலை, தற்போதைய தவெக அரசாவது சற்று தீவிரமாகக் கையாள வேண்டும். </p><p>“ஒரு காலத்தில் நாங்கள் இப்படி இருந்தோம், அப்படி இருந்தோம்” என்ற கடந்த கால வெற்றியையே பேசிக் கொண்டிருந்தால், நிகழ்கால வளர்ச்சியும் எதிர்கால லட்சியமும் கேள்விக்குறியாகிவிடும் என்பதைத் தான் தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. புதிய தொழில் முதலீடுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தாமல், பழங்கதைகளைப் பேசியும், வெற்று பேப்பரில் மட்டுமே பதிவாகிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மட்டுமே வைத்து, தங்களது ஐந்து ஆண்டுகளையும் ஒப்பேற்றி விட்டது திமுக. அதன் விளைவால் தான், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் சோடை போயுள்ளது. பெரிய பெரிய நிறுவனங்களும் பிற மாநிலங்களை நோக்கி படையெடுக்கின்றனர். </p><h2>கவனம் செலுத்த வேண்டும்</h2><p>எனவே, முந்தைய திமுக ஆட்சியில் இருந்தாவது தற்போதைய தவெக அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் போக்கை கைவிட வேண்டும்! இணைப்பு வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், கடன் வசதிகள், மானியங்கள், சட்ட அனுமதிகள் ஆகியவற்றை எளிதாக்கி, மேம்படுத்தி புதிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதலீடுகளை </a>ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
எம்.எல்.ஏ. மகனை போல பேசியதற்கு எதிர்ப்பு... சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிய பரிதாபங்கள் குழு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/backlash-over-imitating-an-mlas-son-parithabangal-team-removes-controversial-scene</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/backlash-over-imitating-an-mlas-son-parithabangal-team-removes-controversial-scene#comments</comments><guid isPermaLink="false">431a3a32-8e59-4769-9037-33a2d77c7d22</guid><pubDate>Sat, 01 Aug 2026 04:49:51 +0000</pubDate><atom:updated>2026-08-01T04:49:51.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Gopi,suthakar,கோபி,சுதாகர்,YouTube channel,DMK MLA,திமுக எம்.எல்.ஏ.,மார்க்கண்டேயன்,பரிதாபங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/hdj61ef6/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/hdj61ef6/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகனை கிண்டல் செய்யும் வகையில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபி, சுதாகர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் உருக்கமாக பேசிய வீடியோவை நகைச்சுவை வடிவில் மாற்றி வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p> <h2>கலைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது</h2><p>இந்த விவகாரம் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா, "வேதனையில் இருந்த ஒரு சிறுவனை கேலி செய்வது ஏற்க முடியாதது. திறமையான கலைஞர்களாக அறியப்படும் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது" என்று தனது சமூக வலைதள பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் சிறுவனின் உணர்வுகளை நகைச்சுவைக்காக பயன்படுத்தியதை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><h2>யாரையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல</h2><p>இந்த நிலையில், பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் அதற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில், சமீபத்தில் எங்களது சேனலில் வெளியான "ஆடி மாச பாவங்கள்" வீடியோவில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி, சமூக வலைதளங்களில் சிலரின் மனதை புண்படுத்தியதாக அறிகிறோம். அந்தக் காட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இருப்பினும், அது சிலரின் மனதை காயப்படுத்தியிருப்பதால், அந்தக் காட்சிகளை வீடியோவிலிருந்து நீக்கியுள்ளோம். பரிதாபங்களின் நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல. என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பயங்கரம்:  சொத்து தகராறில் பல் டாக்டர்-தாய் கொலை; சகோதரர்களே தீர்த்து கட்டிய கொடூரம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-in-chennai-dentist-and-mother-killed-over-property-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-in-chennai-dentist-and-mother-killed-over-property-dispute#comments</comments><guid isPermaLink="false">7d4b4ec4-b1d4-4f69-bd63-8792f8ec1d4e</guid><pubDate>Sat, 01 Aug 2026 04:06:47 +0000</pubDate><atom:updated>2026-08-01T04:06:47.197Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,சொத்து தகராறு,property dispute</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ximkxw4m/rocpc.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அஷ்ரப் அகமது]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ximkxw4m/rocpc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சென்னையில் சொத்து தகராறில் பல் டாக்டர் மற்றும் தாய் என இருவரையும், 2 சகோதரர்கள் திட்டமிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/">சென்னை அண்ணாநகர் கிழக்கு</a>, முதல் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப் நிஷா (வயது 68). கடந்த சில ஆண்டுகளாக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் அப்ரார் அகமது (வயது 50). இவருக்கு திருமணமாகி பாத்திமா என்ற மனைவி உள்ளார். 2-வது மகன் அஸ்ரார் அகமது (வயது 48).  திருமணம் ஆகி கருத்துவேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.</p><p>3-வது மகன் அஷ்ரப் அகமது (வயது 42). பல் டாக்டரான இவர், அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.  நேற்று முன்தினம் இரவு அப்ரார் அகமது, தனது மனைவியுடன் வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அஸ்ரார் அகமதுவும் வெளியே சென்று விட்டார். வீட்டில் இவர்களது தாய் மற்றும் தம்பி மட்டும் தனியாக இருந்தனர்.</p>  <p>சொத்து தகராறு</p><p>நேற்று அதிகாலையில் வெளியே சென்றிருந்த சகோதரர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் உள்ளே தாய் அஷ்ரப் நிஷா மற்றும் தம்பி அஷ்ரப் அகமது இருவரும் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அண்ணா நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தாய்-மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.</p><p>மர்மநபர்கள் யாராவது நகை, பணத்துக்காக வீடு புகுந்து இருவரையும் கொலை செய்து இருக்கலாம் என போலீசாரிடம் சகோதரர்கள் இருவரும் கூறினர். ஆனால் போலீசாரின் விசாரணையில் வெளி நபர்கள் யாரும் வீட்டுக்குள் வந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் இல்லை.  எனவே சகோதரர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சொத்து தகராறில் தாய் மற்றும் தம்பியை சகோதரர்களே குடும்பத்துடன் சேர்ந்து அடித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.</p>  <p>ரூ.1 கோடி சொத்து</p><p>இதுபற்றி போலீசார் கூறும்போது, அஷ்ரப் நிஷா தனது மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. அந்த வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்துக்கு செல்லலாம் என முதல் 2 மகன்களும் அடிக்கடி தங்களது தாயாரிடம் கூறி வந்தனர். அதற்கு அஷ்ரப் நிஷா மறுத்து வந்தார்.</p><p>சமீபத்தில் கட்டுமான நிறுவனர் ஒருவரை அணுகியபோது, அவர் அந்த இடத்தை வாங்கிக்கொள்வதாகவும், அந்த இடத்தில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டி அதில் 2 வீடுகளை உரிமையாளருக்கு கொடுத்துவிட்டு கூடுதலாக பணமும் தருவதாகவும், மீதம் உள்ள வீட்டை கட்டி விற்பனை செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார்.</p>  <p>தாய் மறுப்பு</p><p>இதுகுறித்து அப்ரார் அகமது, அஸ்ரார் அகமது இருவரும் தங்கள் தாய் அஷ்ரப் நிஷாவிடம் தெரிவித்தனர். ஆனால் அதற்கு அவர்களது தாய், இடத்தை விற்றால் வீடுகள் மட்டுமே கிடைக்கும். அதில் 2 மகன்கள் அந்த வீட்டுக்கு சென்றாலும் 3-வது மகனுக்கு சொத்தில் பங்கு அல்லது இடம் கிடைக்காது. மேலும் தனது கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை விற்கக்கூடாது என மறுத்துவிட்டார்.</p><p>அவர்களது தம்பியான பல் டாக்டர் அஷ்ரப் அகமதுவும் தாய்க்கு ஆதரவாக சகோதரர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சொத்து தொடர்பாக தாய் மற்றும் மகன்கள் இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.</p>  <p>மருமகள் உடந்தை</p><p>இந்த நிலையில், நேற்று முன்தினம் சொத்தை விற்பதற்கு அனுமதி கேட்டு மகன்கள் இருவரும் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  வாக்குவாதம் முற்றியதால் தாய் என்றும் பாராமல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அஷ்ரப் நிஷாவை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது கை. கால்களை பிடித்துக்கொண்டு தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்தனர். இதற்கு மூத்த மகன் அப்ரார் அகமதுமின் மனைவி உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>பின்னர் பல் டாக்டரான தம்பி அஷ்ரப் அகமதுவையும் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். அதன்பிறகு யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க தாய்-தம்பியின் உடல்களை வீட்டில் போட்டுவிட்டு சகோதரர்கள் இருவரும் வெளியே சென்றுவிட்டு மறுநான் அதிகாலையில் வந்து, நகை, பணத்துக்காக தங்களது தாய் மற்றும் தம்பியை மர்மநபர்கள் கொலை செய்து விட்டதாக போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.</p>  <p>5 பேர் கைது</p><p>இதுபற்றி கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்ரார் அகமது, அவரது மனைவி பாத்திமா மற்றும் 2-வது மகன் அஸ்ரார் அகமது உள்பட 5 பேரை கைது செய்தனர்.  அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-banned-from-bathing-at-suruli-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-banned-from-bathing-at-suruli-falls#comments</comments><guid isPermaLink="false">bc466e83-a7d6-43ae-9c65-cbff72fe5e9e</guid><pubDate>Sat, 01 Aug 2026 03:37:32 +0000</pubDate><atom:updated>2026-08-01T03:37:32.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குளிக்க தடை,Suruli Falls,சுருளி அருவி,banned</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/9hjkk1jq/suruli-falls.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/9hjkk1jq/suruli-falls.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உத்தமபாளையம், </p><p> தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுருளி அருவியும் ஒன்றாகும். இது, புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக வந்து அருவியாக கொட்டுகிறது. இதுதவிர சுருளி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரும் வருகிறது. இந்த அருவியில் குளித்தால் நோய் தீரும் என்பது ஐதீகம். இங்குள்ள மலைக்குகைகளில் முப்பத்து முக்கோடி தேவர்களும், என்பத்து மூன்றாயிரம் ரிஷிகளும் தங்கியிருந்ததாக கருதப்படுகிறது. இதனால் இங்கு புண்ணியாதானம் செய்தால் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய அவர்கள் உதவுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இதன் எதிரொலியாக சுருளி அருவி அடிவாரப்பகுதியில் புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகிறது.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>குறிப்பாக சித்திரை முதல் நாள், தைப்பூசம், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதேபோல் அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருவர். குறிப்பாக திண்டுக்கல், மதுரை மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்தமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வெள்ளியை உருக்கியது போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.</p><h2>சுற்றுலா பயணிகள் குளிக்க தடை</h2><p>இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்யும் பலத்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">சுற்றுலா பயணிகள் குளிக்க தடை </a>விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சோதனைச்சாவடி அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாக குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flash-floods-at-courtallam-falls-bathing-banned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flash-floods-at-courtallam-falls-bathing-banned#comments</comments><guid isPermaLink="false">32f12879-80dc-4ed8-b68f-76100c975950</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:58:20 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:58:20.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,குற்றால அருவி,குற்றாலம்,Courtallam,Courtallam Falls,Courtallam fivefalls,குற்றால அருவிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/spo7grt1/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/spo7grt1/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>குற்றால அருவிகளில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. </p><h2>குற்றாலம்</h2><p>இதனால் நேற்று முன்தினம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து அன்று மாலையில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.</p><h2>குளிக்க தடை</h2><p>இதனையடுத்து, குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஏமாற்றம்</h2><p>இந்த நிலையில், தொடர்மழை காரணமாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெள்ளப்பெருக்கு </a>ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க 2வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான என்பதால் ஆவலுடன் நீராட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி மாவட்டத்தில் 2 புலிகள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-tigers-killed-in-nilgiris-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-tigers-killed-in-nilgiris-district#comments</comments><guid isPermaLink="false">80efb837-7496-4115-8d7f-df44cf920a03</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:44:59 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:44:59.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Forest Department,வனத்துறை,arson,உயிரிழப்பு,Nilgiris,நீலகிரி,loss of life,புலிகள்,Tigers,தீ வைத்து எரிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/9hawpxka/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 புலிகள் உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/9hawpxka/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டத்தில் உயிரிழந்த 2 புலிகளின் உடல்களை வனத்துறையினர் தீ வைத்து எரித்தனர்.</p><h2>2 புலிகள் உயிரிழப்பு</h2><p>நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மார்லிமந்து அணை காப்புக்காடு பகுதியில் உடல் அழுகிய நிலையில் புலி ஒன்று நேற்று இறந்து கிடந்தது. இதே போல், பைக்காரா வனச்சரகம் நடுவட்டம் காப்புக்காடு பகுதியில் மற்றொரு பெண் புலியும் இறந்து கிடந்தது. இந்த 2 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">புலிகளின் இறப்பு</a>க்கான காரணம் தெரியவில்லை. </p><h2>உடல்கள் தீ வைத்து எரிப்பு</h2><p>இறந்த 2 புலிகளின் உடல் பாகங்களும் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட நிலையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழி காட்டுதலின்படி அவற்றின் உடல்களை வனத்துறையினர் தீ வைத்து எரித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு விரைவு பஸ் செயலியில் நிறம் மாற்றம்... த.வெ.க. கொடி வண்ணத்தில் புதிய வடிவமைப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/color-change-in-the-government-express-bus-app-new-design-in-the-colors-of-the-tvk-flag</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/color-change-in-the-government-express-bus-app-new-design-in-the-colors-of-the-tvk-flag#comments</comments><guid isPermaLink="false">03a8bdf4-9894-4fc8-a410-b040edad69da</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:32:42 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:32:42.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாற்றம்,செயலி,app,government express buses,அரசு விரைவு பஸ்,நிறம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/6r92hl3t/tnstc.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/6r92hl3t/tnstc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அரசு விரைவு பஸ் டிக்கெட் முன்பதிவுக்கான மொபைல் போன் செயலியின் வடிவமைப்பு. சிவப்பு, மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p>அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 1,100க்கும் மேற்பட்ட சொகுசு மற்றும் 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதர போக்குவரத்து கழகங்களும், 1,500க்கும் மேற்பட்ட விரைவு பஸ்களை இயக்குகின்றன.</p><h2>மொபைல் போன் செயலி</h2><p>இந்த விரைவு பஸ்களுக்கு, 90 நாட்களுக்கு முன்பே www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/cell-phone-app">மொபைல் போன் செயலி </a>வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியை, மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து, முன் பதிவு வசதியை பயன்படுத்தலாம்.</p><h2>சிவப்பு, மஞ்சள் நிறத்தில் மாற்றம்</h2><p>த.வெ.க., அரசு வந்த பின், புதிதாக தயாராகி வரும் அரசு பஸ்களுக்கு, த.வெ.க., கொடி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு வருகிறது. தற்போது, அரசு விரைவு பஸ் டிக்கெட் முன்பதிவுக்கான மொபைல் போன் செயலியின் வடிவமைப்பும். சிவப்பு, மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொதுமக்கள் தரும் மனு மீது 30 நாட்களுக்குள் தீர்வு - அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-order-no-petition-submitted-by-the-public-should-remain-pending-for-more-than-30-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-order-no-petition-submitted-by-the-public-should-remain-pending-for-more-than-30-days#comments</comments><guid isPermaLink="false">c63435ff-bc28-4243-b69c-13caa2cba310</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:21:41 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:21:41.299Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Government Order,Petition,TamilNadu Goverment,பொதுமக்கள் மனு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ja16pcbu/tamilnadu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/ja16pcbu/tamilnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து மனுக்களும், 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக்கூடாது. தங்களது துறை சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து, அமைச்சர்களுக்கு அவ்வப்போது தகவல்கள் வழங்க வேண்டும்' என, அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறைகளின் தலைவர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:</p><p>ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக, அனைத்து துறை செயலர்களுடன், தலைமை செயலர் சாய்குமார் சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில், பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். </p><h2>அதன் விபரம்</h2><p>பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் உரிய முறையில் தீர்வு காண வேண்டும். மனுக்களின் தீர்வு நிலை குறித்து, துறை தலைவர்கள் வாரம் தோறும் ஆய்வு செய்ய வேண்டும். எந்த மனுவும், 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக் கூடாது.</p><p>ஏற்கனவே, அரசால் வழங்கப்பட்டுள்ள வழி துறை காட்டுதலின்படி, தலைவர்கள் ஒவ்வொரு மாதமும் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதுடன், ஆய்வு அறிக்கைகளை உடனுக்குடன் அனுப்ப வேண்டும். கண்காணிப்பு அதிகாரிகள் மாதம்தோறும் களப்பணிகளை மேற்கொண்டு, தங்களது அறிக்கைகளை, பொதுத்துறை வாயிலாக, தலைமை செயலருக்கு அனுப்ப வேண்டும். அனைத்து அரசாணைகளும் எந்தவித தாமதமும் இன்றி, சம்பந்தப்பட்ட துறைகளின் இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.</p><p>கவர்னர் உரை அறிவிப்புகளுக்கான அரசாணைகள் உடனே வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு துறை தலைவரும், 'உங்கள் அரசை தெரிந்து கொள்ளுங்கள்' திட்டத்திற்காக தகவல் தொழில் நுட்ப துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட, ஒரு தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.</p><p>'எல் நினோ' என்ற காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய வறட்சி நிலையை எதிர்கொள்ள தேவையான, அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இதுதொடர்பாக, மாவட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.</p><h2>தகவல்கள்</h2><p>மத்திய அரசிடம் இருந்து பெறப்பட வேண்டிய மானியங்கள் மற்றும் நிலுவை தொகைகளை பெறுவதற்கான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நடவடிக்கைகளை</a>, செயலர்கள் மற்றும் துறை தலைவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.</p><p>துறை தலைவர்கள், செயலர்கள் தங்களது துறை சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு, அவ்வப்போது தகவல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக, அந்த உயரதிகாரி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தேனி: மாணவர்களுக்கான உதவித்தொகை மோசடி- 12 பேருக்கு ஓராண்டு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-student-scholarship-scam-12-people-jailed-for-one-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-student-scholarship-scam-12-people-jailed-for-one-year#comments</comments><guid isPermaLink="false">1840f22f-d2c0-4aab-b9cc-0ed54c546e2c</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:19:32 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:19:32.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,மோசடி,Verdict,தீர்ப்பு,சிறை தண்டனை,Prison sentence,fraud,Scholarship,மாணவர்கள்,students,உதவித்தொகை,12 பேர்,12 people</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/mp929am4/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 12 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/mp929am4/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF">தேனி</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர்களுக்கான</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88">உதவித்தொகை </a>மோசடி தொடர்பான வழக்கில் 12 பேருக்கு ஓராண்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.</p><h2>மாணவர்களுக்கான உதவித்தொகையில் ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் மோசடி</h2><p>தேனி மாவட்டத்தில் கடந்த 1989 முதல் 1992 வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதில் போலி சான்றிதழ்கள் மூலம் ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.</p><h2>12 பேர் மீது வழக்குப்பதிவு</h2><p>இது தொடர்பான வழக்கில் அப்போதைய வருவாய் ஆய்வாளர் சுருளிராஜ், போடிநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜன், விவேகானந்தன், ஆசிரியை அமராவதி உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>12 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை</h2><p>இந்த வழக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில் 12 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாரதிராஜா தீர்ப்பளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: மின் இணைப்பு வழங்க லஞ்சம்- பெண் உதவி பொறியாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-female-assistant-engineer-arrested-for-accepting-bribe-to-provide-electricity-connection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-female-assistant-engineer-arrested-for-accepting-bribe-to-provide-electricity-connection#comments</comments><guid isPermaLink="false">1ed08948-4c30-45a0-b47b-f6986afa6858</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:56:24 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:56:24.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,Salem,லஞ்சம்,பெண்,சேலம்,Female,bribe,மின் இணைப்பு,Electricity connection,Assistant Engineer,உதவி பொறியாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/v945phxo/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதவி பொறியாளர் கவிதா ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/v945phxo/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>சேலத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மின் இணைப்பு</a> வழங்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> கேட்ட பெண் உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர்</h2><p>சேலத்தை சேர்ந்த ஒருவர் தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு கொடுக்கும்படி சேலம் கே.ஆர்.தோப்பூரில் உள்ள மின்சார வாரிய அலுவலக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">உதவி பொறியாளர்</a> கவிதா (வயது 43) என்பவரிடம் விண்ணப்பித்தார். அப்போது அவர் மின் இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.</p><h2>கைது</h2><p>இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.7 ஆயிரத்தை உதவி பொறியாளர் கவிதாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார் கவிதாவை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் எப்போது? அமைச்சர் காந்திராஜ் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-elections-for-cooperative-societies-be-held-minister-gandhiraj-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-elections-for-cooperative-societies-be-held-minister-gandhiraj-responds#comments</comments><guid isPermaLink="false">2dc1a0f1-7ad6-489b-9abc-e7a39c337b26</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:44:51 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:44:51.342Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Govt of Tamil Nadu,கூட்டுறவு சங்கம்,Co operative banks,அமைச்சர் காந்திராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/39dy3qmk/Minister-Gandhi-raj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் காந்திராஜ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/39dy3qmk/Minister-Gandhi-raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 2023-ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்கான முன்னெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டது. ஆனால் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகிகள் இல்லாத நிலை நிலவுகிறது. அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.</p><p>இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- த.வெ.க. அரசு அமைந்த பிறகு கூட்டுறவு சங்கங்களில் உள்ள போலி உறுப்பினர்கள், மறைந்த உறுப்பினர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்ட பிறகு இந்த மாதம் (ஆகஸ்டு) கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.கூட்டுறவு சங்க தேர்தலை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையோடு நடத்த தயாராக உள்ளது.</p> <p>தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கம், வேளாண் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கம், மாவட்ட மத் திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு மொத்த விற்பனை சங்கம், வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சங்கங்கள் மூலம் 2 லட்சம் பேர் தேர்வாகி பணியாற்றுவார் கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது - எவ்வளவு தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-commercial-cylinders-reduced-do-you-know-by-how-much</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-commercial-cylinders-reduced-do-you-know-by-how-much#comments</comments><guid isPermaLink="false">359285f3-5fda-49d4-84f8-a5061e1048b1</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:32:52 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:32:52.350Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சிலிண்டர் விலை,Commercial Cylinder,வணிக சிலிண்டர் விலை,Cylinders,சிலிண்டர் விலை குறைப்பு,கியாஸ் சிலிண்டர் விலை,LPG Cylinder,LPG,Commercial cylinder price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/uxcvgz9a/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/uxcvgz9a/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.</p><h2>கியாஸ் சிலிண்டர்</h2><p>பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.</p><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.</p><h2>விலை குறைவு</h2><p>இந்த நிலையில், இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட சமையில் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.957.50-க்கு விற்பனையாகிறது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: ஆசிரியைக்கு பாலியல் தொல்லை; உதவி தலைமை ஆசிரியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-teacher-sexually-harassed-assistant-principal-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-teacher-sexually-harassed-assistant-principal-arrested#comments</comments><guid isPermaLink="false">14c98c75-6d12-4764-9750-52ddaf86d117</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:29:58 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:29:58.031Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tenkasi,தென்காசி,arrest,Sexual harassment,பாலியல் தொல்லை,Teacher,ஆசிரியை,Complaint,புகார்,உதவி தலைமை ஆசிரியர்,Assistant Headmaster</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/6q9zc3z8/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் தொல்லை, கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-01/6q9zc3z8/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,  </p><p>தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88">பள்ளி ஆசிரியை</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> கொடுத்த புகாரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">உதவி தலைமை ஆசிரியரை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை </h2><p>தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பஞ்சராஜா (வயது 56). இவர் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.</p><h2>உதவி தலைமை ஆசிரியர் கைது</h2><p>இதையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி தலைமை ஆசிரியர் பஞ்சராஜாவை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>