<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 02 Sep 2026 15:42:52 +0000</lastBuildDate><item><title>மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: அறங்காவலர் குழு பெயர் இடம்பெறாதது தவறு - மதுரை ஐகோர்ட்டு கிளை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-omission-of-board-of-trustees-names-is-a-mistake-madurai-bench-of-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-omission-of-board-of-trustees-names-is-a-mistake-madurai-bench-of-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">fa380c89-3056-4278-9e9a-f6419caaabd7</guid><pubDate>Wed, 02 Sep 2026 15:40:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T15:40:19.673Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,மீனாட்சியம்மன் கோவில்,Meenakshi Amman Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/el55529g/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/el55529g/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வரும் 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவிற்கு அச்சிடப்பட்ட பத்திரிகையில் மீனாட்சியம்மன் கோவில் அலங்காவலர் குழுவினரின் பெயர் இடம்பெறவில்லை என்று தெரிவித்திருந்தார். </p><p>மேலும், திருக்கோவிலின் நிர்வாக விவகாரங்கள் மற்றும் கும்பாபிஷேகம் தொடர்பாக மனுதாரர் மற்றும் பதவியில் இருக்கும் பிற அறங்காவலர்கள் தங்களது சட்டப்பூர்வ கடமைகளை ஆற்றுவதில் சட்ட விரோதமான தலையீடுகளை செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். </p><p>இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘மத நிகழ்வுகளில் அரசியல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. ஏனென்றால் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் அறங்காவலர் குழுவின் குழுவினரின் பெயரே போடவில்லை. அவர்களின் பெயர் இடம் பெறாதது மிகப்பெரிய தவறு’ என நீதிபதி தனது கருத்தை தெரிவித்தார். </p><p>மேலும், கும்பாபிஷேக விழா முடிந்தவுடன் கோவிலில் வைக்கக்கூடிய கல்வெட்டில் அறங்காவலர் குழு பெயர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்ற உத்தரவையும் நீதிபதி பிறப்பித்துள்ளார். அதோடு, ‘கோவில் என்பது மக்கள் அமைதி தேடி வரக்கூடிய இடம், அதில் இந்து சமய அறநிலைய துறை அரசியல் செய்தது ஏற்கத்தக்கது அல்ல” என்று தெரிவித்து வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். </p> ]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ரூ.1.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drugs-worth-rs-1-20-crore-seized-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drugs-worth-rs-1-20-crore-seized-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">0a1a4464-227b-4ee4-bf44-355b0c5664ac</guid><pubDate>Wed, 02 Sep 2026 15:13:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T15:13:36.713Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai Airport,drugs,போதைப்பொருள்,விமான நிலையம்,பறிமுதல்,seized</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/gf8pb1f1/drugs.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ போதைப்பொருள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையத்தில் ரூ.1.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/gf8pb1f1/drugs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து <a href="https://www.dailythanthi.com/topic/chennai-airport">சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு</a> கடத்தி வரப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 62 வயது மலேசிய பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ரகசிய தகவல்</h2><p>மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.அப்போது, மலேசியாவிலிருந்து வந்த 62 வயதுடைய பயணி ஒருவரின் நடத்தை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><h2>சுங்கத்துறை அதிகாரிகள்</h2><p> உடனே அவரைத் தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள், தனியறைக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.தொடர்ந்து அவர் கொண்டு வந்த உடமைகளை அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர். அப்போது, அவரது பைகளில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சந்தேகத்திற்குரிய பொட்டலங்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.</p> <h2>சுமார் 3.5 கிலோ போதைப்பொருள்</h2><p>அந்த பொட்டலங்களை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் சர்வதேச சந்தையில் அதிக மதிப்புடைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D">போதைப்பொருள் </a>இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடமைகளில் இருந்து மொத்தம் 3,452 கிராம் சுமார் 3.5 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் கள்ளச்சந்தை மதிப்பு சுமார் ரூ.1.20 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>மலேசிய பயணி கைது</h2><p>இதையடுத்து, கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்களை 1985-ம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் மனநலம் சார்ந்த பொருட்கள் சட்டத்தின் கீழ் சுங்கத்துறை அதிகாரிகள் முறைப்படி பறிமுதல் செய்தனர். மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அந்த மலேசிய பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். </p> <h2>தீவிர விசாரணை</h2><p>இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பல் யார்? சென்னையில் இந்த போதைப்பொருள் யாருக்கு கை மாறவிருந்தது? என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>  <p>விமான நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மதுபாட்டிலுக்கு கூடுதல் வசூல்; ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-charge-for-liquor-67-tasmac-employees-suspended-in-a-single-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-charge-for-liquor-67-tasmac-employees-suspended-in-a-single-day#comments</comments><guid isPermaLink="false">59ecc3c2-5a42-403f-b14d-854bab30cec7</guid><pubDate>Wed, 02 Sep 2026 15:08:53 +0000</pubDate><atom:updated>2026-09-02T15:08:53.259Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,சஸ்பெண்ட்,suspend,டாஸ்மாக்,Tasmac</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/u0hcrruq/tasmac33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
மதுபாட்டிலுக்கு கூடுதல் வசூல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/u0hcrruq/tasmac33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக ஒரே நாளில்  67 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்து  அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். </p><p>சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதலாக பணம் வசூலித்த டாஸ்மாக் விற்பனையாளர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 67 பேர் மீது அமைச்சர் விக்னேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். </p><p>சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும், கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்ந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக பணம் வசூலிப்பது தொடர்ந்தால் பாரபட்சம் இன்றி நடவடிக்கை என அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்திருந்தநிலையில்  ஒரே நாளில் 67 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்</a> செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><p>முதல் முறை தவறு செய்து கண்டறியப்பட்டால் 3 மாதங்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும். மீண்டும் அதே நபர், அடுத்த முறையும் அதே தவறு செய்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என சட்டசபையில் அமைச்சர் விக்னேஷ் அறிவித்து இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் - சென்னையில் பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-incident-in-chennai-women-lured-with-promises-of-film-opportunities-and-forced-into-the-sex-trade</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-incident-in-chennai-women-lured-with-promises-of-film-opportunities-and-forced-into-the-sex-trade#comments</comments><guid isPermaLink="false">2902bebe-a4d2-4d32-b4bd-e4bc69de7e4a</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:59:07 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:59:07.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/3sckys6f/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/3sckys6f/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமீபத்தில் சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து சிறுமியை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.</p><p>அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து ராமாபுரம் பங்களாவில் சிறை வைத்தது தெரிய வந்தது. மேலும் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் சிறுமி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. </p> <p>இதையடுத்து போலிசார் சம்பந்தப்பட்ட பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்த சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 10 பெண்களை மீட்டனர். இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலின் தலைவி என சந்தேகிக்கப்படும் ரியா என்ற பெண் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>கோவில்களில் செல்போன் தடை: தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-temples-tamil-nadu-government-should-reconsider-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-temples-tamil-nadu-government-should-reconsider-annamalai#comments</comments><guid isPermaLink="false">518b9d00-3630-45af-8090-c367ee766afc</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:56:22 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:56:22.330Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government,Annamalai,சென்னை,கோவில்,Temple,செல்போன்,தடை,phone,Should</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/r4k7gb6l/62.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/r4k7gb6l/62.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவில்களில் செல்போன் தடை செய்ததை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>டோக்கன்</h2><p>கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.</p><p>மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது. யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.</p><h2>மறுபரிசீலனை</h2><p>எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கோவில்கள்</a> மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூட திட்டமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-plan-to-shut-padalam-cooperative-sugar-mill-anbumani-ramadoss-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-plan-to-shut-padalam-cooperative-sugar-mill-anbumani-ramadoss-asks#comments</comments><guid isPermaLink="false">1f9cfa74-8fa0-4708-8803-ed341a9219c1</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:50:09 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:50:09.680Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Question,சர்க்கரை ஆலை,Sugar Mill,கேள்வி,கூட்டுறவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/o5j4z8lg/anubumani.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/o5j4z8lg/anubumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூட திட்டமா? கரும்பு சாகுபடியை பெருக்கி ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சரியானதல்ல</h2><p>தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88">சர்க்கரை ஆலைகளில் </a>அக்டோபர் 1-ம் தேதி முதல் அரவை பருவம் தொடங்கவுள்ள நிலையில், படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஒப்பந்த பணியாளர் நியமனம் உள்ளிட்ட எந்த பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் சர்க்கரைக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில், கூட்டுறவு ஆலைகள் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை தமிழக அரசின் சர்க்கரை துறை தவற விடுவது சரியானதல்ல.</p><h2>கூட்டுறவு சர்க்கரை ஆலை</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் 1961 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தமிழ்நாட்டின் பழமையான மற்றும் அதிக அரவை திறன் கொண்ட சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு 2500 டன் கரும்பு அரவை திறன் கொண்ட படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சர்க்கரை உற்பத்தி நடைபெறும். </p><h2>ஐயம் எழுந்துள்ளது</h2><p>அதற்கான முதல் நடவடிக்கையாக ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை ஜூலை மாதத்தில் தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் ஜூலைக்கு பிறகு ஆகஸ்ட் மாதமும் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் பிறந்து விட்ட நிலையில், இன்று வரை ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை தொடங்கவில்லை. அதனால் படாளம் ஆலையை மூட அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.</p><h2>30 ஆயிரம் விவசாயிகள்</h2><p>அதுமட்டுமின்றி, நிதிப்பற்றாக்குறை காரணமாக படாளம் ஆலையை நடப்பாண்டில் இயக்கும் முடிவை அரசு கைவிட்டு விட்டதாக வெளியாகியுள்ள செய்திகளும் இந்த ஆலையை நம்பியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளையும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் தொழிலாளர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. </p><h2>29,632 விவசாயிகள் உறுப்பினர்கள்</h2><p>தமிழ்நாட்டில் சர்க்கரை துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த படாளம் சர்க்கரை ஆலையை மூட அரசு முடிவு செய்திருந்தால், அதற்கு ஒரே ஒரு நியாயமான காரணம் கூட கிடையாது. அதனால், அப்படி ஏதேனும் திட்டம் இருந்தால் அதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 29,632 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.</p><h2>10 கரும்பு கோட்டங்கள்</h2><p>திண்டிவனம், வானூர், மேல்மருவத்தூர், படாளம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 10 கரும்பு கோட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 62,327 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் கரும்பு இந்த ஆலைக்கு வழங்கப்பட வேண்டும். அதன்படி, தொடக்கத்தில் ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் கரும்பு அரவையுடன் உற்பத்தியை தொடங்கிய படாளம் ஆலை, ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்து சாதனை படைத்தது. </p><p>ஒரு கட்டத்தில் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்துடன் கரும்பு அரவை படிப்படியாக குறைக்கப்பட்டு, 2001-ம் ஆண்டில் படாளம் சர்க்கரை ஆலை மூடப்பட்டது.</p><h2>போராட்டங்கள் </h2><p>அதன்பின் ஆலையை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 2008 -09-ம் ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அடுத்தடுத்து இரு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பயனாக அப்போதிருந்த அரசு ரூ.34 கோடியில் ஆலையை சீரமைத்து 2010 ஆம் ஆண்டு முதல் இயக்க தொடங்கியது. </p><h2>மூட முயற்சி</h2><p>அதன்பின் கரும்பு அரவை 2022-23-ம் ஆண்டில் 2 லட்சம் டன் என்ற அளவை கடந்தது. அதன்பின், கடந்த இரு ஆண்டுகளாக கரும்பு அரவை 69,360 டன், 53,928 டன்னாக குறைந்தது. நடப்பாண்டில் குறைந்தது 67,500 டன் கரும்பு அரவை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தான். அதை கைவிட்டு ஆலையை மூட முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.</p><h2>கரும்பு சாகுபடி</h2><p>தமிழக அரசு நினைத்தால் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளில் 60 லட்சம் டன் வரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF">கரும்பு சாகுபடி </a>செய்ய வைக்க முடியும். ஆனால், அதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகமும், அரசும் மேற்கொள்ளவில்லை. ஒரு சர்க்கரை ஆலையில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடியை அதிகரிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட ஆலையின் கரும்பு அலுவலர், துணை கரும்பு அலுவலர் ஆகியோரின் பணி ஆகும். </p> <h2>அதிகரிக்க முடியும்?</h2><p>ஆனால், இந்த இரு பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள நிலையில், கரும்பு சாகுபடியை எவ்வாறு அதிகரிக்க முடியும்? மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்தது தான் ஆலையின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் ஆகும்.</p> <h2> 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்</h2><p>மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேலாண் இயக்குனர், அலுவலக மேலாளர், தொழிலாளர் நல அதிகாரி. தலைமை பொறியாளர் ஆகிய 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆலையில் மொத்தம் 535 பணியிடங்கள் இருக்கும் போதிலும் கூட, மேற்கண்ட நால்வரைத் தவிர வேறு எவரும் பணியில் இல்லை. தேவையின் போது பயன்படுத்தி கொள்ள 381 ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். </p><p>அவர்கள் அனைவருமே ஓய்வு அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் அரவை காலத்திலும், இவர்களில் 244 பேர் அரவையில்லா காலத்திலும் பணியில் இருக்க வேண்டும். ஆனால், இவர்களில் ஒருவர் கூட நடப்பாண்டில் பணிக்கு அழைக்கப்படவில்லை. அதனால் தான் படாளம் சர்க்கரை ஆலை முடங்கி கிடக்கிறது.</p><h2>நியாயமல்ல</h2><p>தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், கடந்த ஆண்டில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலையான டன்னுக்கு 3290.50 ரூபாயுடன், ஊக்கத்தொகையாக ரூ.709.50 சேர்த்து டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நடப்பாண்டில் இது ரூ.4300 வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இனிவரும் காலங்களில் கரும்பு சாகுபடி அதிகரிக்கும். இத்தகைய சூழலில் பழமையும், பெருமையும் வாய்ந்த ஆலையை மூட நினைப்பது நியாயமல்ல.</p><h2>அரசு உறுதி செய்ய வேண்டும்	</h2><p>இந்திய சந்தையில் சர்க்கரைக்கான தேவை அதிகரித்து, 50 சதவிதம் வரை விலை உயர்ந்துள்ள நிலையில், படாளம் ஆலைக்கு புத்துயிரூட்டப்பட்டால், அது அடுத்த சில ஆண்டுகளில் லாபம் ஈட்டத் தொடங்கிவிடும். இதை கருத்தில் கொண்டு பணியாளர்களின் தேவைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் முதலில் ஒப்பந்த பணியாளர்களையும். </p><p>பின்னர் படிப்படியாக நிரந்தர பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரித்து படாளம் ஆலை தொடர்ந்து இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன் தான் நிரந்தரம் - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fireflies-are-not-permanent-the-sun-is-permanent-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fireflies-are-not-permanent-the-sun-is-permanent-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">bea2ccbe-567b-48f7-a9e2-37c8377ef229</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:40:41 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:40:41.601Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,MKstalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/dpmolvjg/stalinone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மின்மினிப் பூச்சிகள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன் தான் நிரந்தரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/dpmolvjg/stalinone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என ஆராய்ந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.</p><p>கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடந்த கூட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</a> பேசியதாவது:-</p><p>தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என ஆராய்ந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும்.  </p><p>வயது வரம்பு மற்றும் ஒருவர் அதிக முறை பதவியில் இருக்க முடியாது என்ற வரம்புகள் காரணமாக பொறுப்புகளை இழப்பவர்கள் யாரையும் கைவிடமாட்டேன். அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் முடிவெடுப்பேன்.</p><p>கொள்கையற்ற, கட்டமைப்பற்ற கட்சிகள் வரும் போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன்தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும்.</p><p>இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். திமுக மறுசீரமைப்பு பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். வயது வரம்பால் பொறுப்பிழப்பவர்களுக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்படும். சுதந்திரமான நேர்மையான தேர்தலில் புதிய நிர்வாகிகள் வருவார்கள்"</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-doll-production-work-in-full-swing-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-doll-production-work-in-full-swing-in-chennai#comments</comments><guid isPermaLink="false">8efc6cc0-fda1-4ec3-b84d-e172d8289045</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:35:31 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:35:31.256Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,work,Krishna Jayanti,கிருஷ்ண ஜெயந்தி,Production,தீவிரம்,intensity,Toys,பொம்மைகள்,தயாரிப்பு பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/jtqbq2fi/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் கிருஷ்ணர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டி மெருகூட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் கலைஞர்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/jtqbq2fi/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">கிருஷ்ண ஜெயந்தி</a>யையொட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D">கிருஷ்ணர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பொம்மைகள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">தயாரிப்பு பணி</a>கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">தீவிரமாக</a> நடந்து வருகின்றன. </p><h2>நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி</h2><p>நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை மறுநாள் 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வீடுகள் மற்றும் கோவில்களில் கிருஷ்ணர் பொம்மைகள் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ணர் பொம்மைகள் மற்றும் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. </p><h2>கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிப்பு பணி தீவிரம்</h2><p>சென்னை கொசப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பல விதமான கிருஷ்ணர் பொம்மைகள் தயார் செய்யப்பட்டு வர்ணம் பூசி உலர வைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><h2>மாம்பழ கிருஷ்ணர்</h2><p>மாம்பழ கிருஷ்ணர், மோகன கிருஷ்ணர், வெண்ணெய்த்தாழி கிருஷ்ணர், ஊஞ்சல் கிருஷ்ணர் மற்றும் கண்ணனின் விதவிதமான லீலைகளை சித்தரிக்கும் வண்ணமயமான, பல புதுமையான வடிவங்களில் இந்த ஆண்டு பொம்மைகள் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன.</p><h2>காகிதக்கூழ் பொம்மைக்கு தடை தேவையா?</h2><p>இதுகுறித்து கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிக்கும் லதா கூறியதாவது:</p><p>இங்கு 6 அங்குலம் முதல் 3 அடி உயரம் வரை பல்வேறு வடிவ கிருஷ்ணர் சிலைகள் களிமண் மூலம் தயாரிக்கப்படுகின்றன. ரூ.15-ல் இருந்து ரூ.2 ஆயிரம் வரை விலைகளில் கிடைக்கின்றன. சென்னையில் மயிலாப்பூர், ஆவடி, அம்பத்தூர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு சிலைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. நீர்நிலைகளைப் பாழ்படுத்தும் காகிதக்கூழ் மூலம் தயாரிக்கப்படும் பொம்மைகள் தயாரிப்பதற்கு அரசு தடை விதிக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - ஈ.ஆர். ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-fee-hike-must-be-rolled-back-immediately-er-easwaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-fee-hike-must-be-rolled-back-immediately-er-easwaran#comments</comments><guid isPermaLink="false">cde5151a-04af-4d20-bf1c-a945830edf3a</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:21:17 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:21:17.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>withdrawn,hike,Customs duty,சுங்க கட்டண உயர்வு,திரும்ப பெற வேண்டும்,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Eswaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/dqosajrs/191.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஈ.ஆர். ஈஸ்வரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/dqosajrs/191.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">ஈ.ஆர். ஈஸ்வரன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>கொங்கு மண்டலம்</h2><p>இந்தியாவிலேயே போக்குவரத்து நகரமாக விளங்குவது கொங்கு மண்டலம். குறிப்பாக நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் அதிக அளவில் உள்ளது. அதுவும் குறிப்பாக நாமக்கல் டாரஸ் லாரிகள், கேஸ் நிரப்பும் எல்பிஜி லாரிகள், ட்ரெய்லர் லாரிகள் நிறைந்த பகுதியாகும். கேஸ் லாரிகள் தென்மாநிலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. </p> <h2>சுங்க கட்டண உயர்வு</h2><p>நாமக்கல்லில் இதை தவிர்த்து கோழி, டெக்ஸ், பள்ளிகள் என அனைத்திற்கும் கனரக, இலகுரக வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். லாரி தொழில் பல்வேறு சிரமங்களால் தொழிலே நடத்த முடியாத இக்கட்டான நிலையில் உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">சுங்க கட்டண உயர்வு</a> அத்தொழிலின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.</p><h2>கோரிக்கை வைத்துள்ளோம்</h2><p>60 கிலோ மீட்டருக்கு குறைவான இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகளைகளையும், நகர்புற சுங்கச்சாவடிகளைகளையும், காலாவதியான சுங்கச்சாவடிகளையும் அகற்ற பலமுறை எங்கள் கட்சியின் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மந்திரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் பலன் இல்லை. இதே நிலைமை நீடித்தால் சுங்கச்சாவடியால் லாரி தொழில் முற்றிலுமாக முடக்கப்படும். </p><h2>மத்திய அரசு முன்வர வேண்டும்</h2><p>இவ்வாறு இருக்கும் காலகட்டத்தில் சுங்க கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே உடனடியாக சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறுவதுடன் காலாவதியான சுங்கச்சாவடிகள், 60 கிலோமீட்டர் குறைவான சுங்கச்சாவடிகள், நகர்ப்புற சுங்கச்சாவடிகளையும் அகற்ற உடனடியாக மத்திய அரசு முன்வர வேண்டும். </p> <h2>லாரி தொழில்</h2><p>இதனை தமிழக அரசும் கவனத்தில் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அப்பொழுதுதான் லாரி தொழில் ஓரலவுக்காவது நடத்தக்கூடிய நிலைமைக்கு வரும். மேலும் இந்த தொழிலை நம்பி பல லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது என்பதையும் நினைவு கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உல்லாசத்திற்கு வாலிபர்களையே குறி வைத்த சுஜிதாஸ்ரீ...கணவருக்கு தெரிந்த விஷயம்...சேலம் தொழில் அதிபர் கொலையில் திடுக்கிடும் சம்பவம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-who-killed-her-husband-and-went-homeless-shocking-information-revealed-during-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-who-killed-her-husband-and-went-homeless-shocking-information-revealed-during-investigation#comments</comments><guid isPermaLink="false">d7a4d4c3-5edf-4ea8-b3d4-b9d01bc37704</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:18:23 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:18:23.180Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,உல்லாசம்,சேலம்,Arrested.,businessman,தொழில் அதிபர்,மனைவி கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/rtdfjl6o/selam33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 

சேலம்
]]></media:title><media:description type="html"><![CDATA[ சேலம் தொழில் அதிபர் கொலையில் திடுக்கிடும் சம்பவம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/rtdfjl6o/selam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>ஓமலூர் அருகே தொழில் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அவருடைய மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>தொழில் அதிபர்</h2><p>தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சின்னபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 45). இவர், சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே வேலகவுண்டனூர் எஸ்.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.</p><p>இவருக்கு சுஜிதாஸ்ரீ (31) என்ற மனைவியும், ஸ்ரீராம் (12) என்ற மகனும், சாய்ஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர். தொழில் அதிபரான பூபதி. செங்கல், சிமெண்டு கற்கள் வாங்கி விற்பனை செய்து வந்தார்.</p><h2>கொலை</h2><p>இதற்கிடையே நேற்று அதிகாலையில் சுஜிதாஸ்ரீ, பூபதியின் தங்கை பூங்கொடியை செல்போ னில் தொடர்பு கொண்டு பதறியபடி பேசினார். அப்போது, மகன் ஸ்ரீராமுக்கு உடல்நிலை சரி யில்லை. எனவே ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்றுப்பகுதியில் ஒருவரிடம் மந்திரித்து கயிறு கட்டுவதற்காக வந்தோம். அப்போது சிலர் வந்து, உங்கள் அண்ணனை வெட்டிக்கொலை செய்து விட்டு என்னுடைய நகையை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர் என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.</p><p>உடனே ஓமலூர் போலீசாருக்கு பூங்கொடி தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காரின் முன் இருக்கையில் சாய்ந்த நிலையில் பூபதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பின்னர் போலீசார், பூபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக பூபதி தங்கை பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.</p><h2>மனைவி மீது சந்தேகம்</h2><p>பூபதி உடலில் இருந்த வெட்டுக்காயங்கள் அரிவாளால் வெட்டியது போன்று இல்லை. மாறாக அரிவாள்மனையால் வெட்டியது போன்று இருந்துள்ளதாக தெரிகிறது. காரில் வைத்து கொலை நடந்தது போன்ற எந்தவொரு தடயங்களும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பூபதி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் சுஜிதாஸ்ரீயின் நகை பறிக்கப்பட் டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு சுஜிதாஸ்ரீக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.</p><p>எனவே வேறு எங்காவது கொலை செய்து விட்டு அவரது உடலை இங்கே கொண்டு வந்து வைத்து சுஜிதாஸ்ரீ நாடகம் ஆடுகிறாரா? என்ற போலீசாரின் சந்தேக பார்வை சுஜிதாஸ்ரீ மீது திரும்பியது. அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் சுஜிதாஸ்ரீயிடம் விசாரணை நடத்தியதில் அவர் கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை குத்திக்கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.</p><h2>திருமணம் ஆகாத வாலிபர்களே குறி </h2><p>சுஜிதாஸ்ரீக்கு ஏற்கனவே பல்வேறு நபர்களுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சுஜிதாஸ்ரீக்கு திருமணம் ஆகாத வாலிபர்களையே பிடிக்குமாம். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர்களை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A">வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பாராம். </a></p><p>மேலும் தற்போது அவரது வீட்டிற்உ எதிர் வீட்டில் குடியிருக்கும் பெங்களூரில் பணியாற்றும் ஐடி ஊழியரான சந்தோஷ் ராஜ் என்ற திருமணம் ஆகாக வாலிபர்களுடன் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடனும் அவ்வபோது உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.</p><p>இந்த கள்ளக்காதல் விவகாரம் பற்றி தெரிந்ததும் சுஜிதாஸ்ரீயை, பூபதி கண்டித்து உள்ளார். இது தொடர்பாக அடிக்கடி கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.</p><p>இதேபோன்று நேற்று முன் தினம் இரவும் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சுஜிதாஸ்ரீ தனது கணவர் பூபதியை பிடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் அடிபட்டு பூபதி மயங்கி உள்ளார்.</p><h2>கள்ளக்காதலனை அழைத்த சுஜிதாஸ்ரீ </h2><p>இதனையடுத்து சுஜிதாஸ்ரீ கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜுவுக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் சுஜிதாஸ்ரீ மற்றும் அவரது கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜ் இருவரும் பூபதியை கத்தியால் பல்வேறு இடங்களில் குத்தி கொலை செய்தனர்.</p><p>பின்னர் கொலை செய்யப்பட்ட பூபதி உடலை காரில் முன் சீட்டில் அமர வைத்து ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் ஆட்டுக்காரனூர் என்ற இடத்தில் கிராம சாலையில் சென்று சரபங்கா ஆற்று ஓரமாக நிறுத்தி கோவிலுக்கு செல்லும்போது நகைக்காக கொலை நடந்ததாக தெரிவித்து நாடகமாடியது அம்பலமானது. இதைதொடர்ந்து சுஜிதாஸ்ரீயை போலீசார் கைது செய்தனர்.</p><p>கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை வழக்கில் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைக்க உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரியாணி அண்டாவில் மனிதக்கறியை வேகவைத்த சம்பவம் - கைதான தம்பதிக்கு 16-ந்தேதி வரை நீதிமன்ற காவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-cooking-human-flesh-in-a-biryani-cauldron-arrested-couple-remanded-to-judicial-custody-until-the-16th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-cooking-human-flesh-in-a-biryani-cauldron-arrested-couple-remanded-to-judicial-custody-until-the-16th#comments</comments><guid isPermaLink="false">1a68e781-51d3-4fba-9aec-907eed33762b</guid><pubDate>Wed, 02 Sep 2026 14:13:53 +0000</pubDate><atom:updated>2026-09-02T14:13:53.142Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,arrest,பிரியாணி,தம்பதி,நீதிமன்ற காவல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/hufjykdj/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/hufjykdj/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் பிரியாணி அண்டாவில் வேகவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதான தம்பதியை வரும் 16-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. </p><h2>ரெயிலில் மனித உடல் பாகங்கள் </h2><p>சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், மறுநாள்(5-ந்தேதி) ஆக்ரா கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்திற்கு சென்றடைந்தது. அப்போது அந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் ஒரு பையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அங்கிருந்த பயணிகள் கவனித்தனர். மேலும் அந்த பையில் இருந்து ரத்தம் கசிந்ததால் உடனடியாக ரெயில்வே போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.</p><p>இதையடுத்து ரெயில்வே போலீசார் அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் மனித உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் தலை உள்பட பல்வேறு பாகங்கள் இல்லாமல் இருந்தன. அதே சமயம், சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் பெயரைக் கொண்ட பிளாஸ்டிக் கவர் அந்த பையில் இருந்தது.</p> <h2>சென்னையில் விசாரணை</h2><p>இதன் மூலம், அதிகாரிகளின் விசாரணை சென்னையை நோக்கி திரும்பியது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் சம்பந்தப்பட்ட இந்த பையை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சென்னை புறநகர் ரெயில் நிலையங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த ஜோடி கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கி, பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2>பிரியாணி அண்டாவில் மனிதக்கறி</h2><p>இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோ டிரைவரை தேடிக் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட இருவரையும் எந்த வீட்டில் இறக்கிவிட்டார் என்பதை போலீசாருக்கு அடையாளம் காட்டினார். அந்த வீடு பூட்டப்பட்டு கிடந்ததால் போலீசார் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அந்த வீடு முழுவதும் ரத்தக்களறியாக காட்சியளித்தது. அதோடு, மனித உடல் பாகங்களை பிரியாணி அண்டாவில் போட்டு, மைதா மாவு மற்றும் காய்கறிகள் சேர்த்து வேகவைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2>கைது</h2><p>தொடர்ந்து வீட்டின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த வீட்டில் ஒடிசாவைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் ஹைதுல் நிஷா என்ற பெண் ஆகிய 3 பேர் வாடகைக்கு குடியிருந்தனர் என்பது தெரியவந்தது. சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி இருப்பது மாணிக் உத்தின் லஸ்கர்-பகமதி மாஜி தம்பதியினர்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும், போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது ஹைதுல் நிஷாவின் உடல் பாகங்கள்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. </p><p>இதையடுத்து, தலைமறைவாக இருந்த தம்பதியரை கைது செய்ய போலீஸ் தனிப்படைகள் பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்டனர். கடந்த மாதம் 29-ந்தேதி, மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி ஆகிய இருவரும் மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இருவரும் மணிப்பூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். </p><h2>நீதிமன்ற காவல்</h2><p>அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் யூடியூப் பார்த்து கொலையை அரங்கேற்றியதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் இருவரும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மாணிக் உத்தீன் லஸ்கர் - பகாபதி மாஜி தம்பதியை வரும் 16-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை; தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/regime-change-no-change-in-scenes-nainar-nagendran-slams-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/regime-change-no-change-in-scenes-nainar-nagendran-slams-tvk-government#comments</comments><guid isPermaLink="false">6472f2b7-eea5-42e2-bda5-3d299a9a84b3</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:58:22 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:58:22.576Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,குற்றச்சாட்டு,Nayinar Nagendran,Change,Scenes,காட்சிகள்,ஆட்சி,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/z5amf1xq/112.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/z5amf1xq/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை; தவெக அரசு மீது தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a>  குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p> <h2>கூட்டுப்பாலியல்</h2><p>தஞ்சை பேராவூரணி அருகே கோவில் திருவிழாவிற்கு சென்ற 16 வயது சிறுமியை நான்கு பேர் கொண்ட கும்பல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D">கூட்டுப் பாலியல்</a> வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதறச் செய்கின்றன. பாதிக்கப்பட்ட சிறுமி முழு மன மற்றும் உடல் நலத்துடன், இக்கொடுமையை கடந்து வர இறைவனிடம் பிரார்த்தித்து கொள்கிறேன். </p><h2>முடங்கிக்கிடக்கிறது</h2><p>ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல,முதல்-அமைச்சர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து பெண்களின் பாதுகாப்பிலோ, சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கிலோ, சமூக கட்டமைப்பிலோ எவ்வித முன்னேற்றமும் நிகழவில்லை. பெண்கள் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்ட “சிங்கப்பெண்கள் சிறப்பு பாதுகாப்பு படை”, முறையான வழிகாட்டுதல் இன்றி எங்கே எந்த மூலையில் முடங்கிக் கிடக்கிறது என்று தெரியவில்லை. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு தவிக்கிறார்கள்.  </p><h2> வெட்கக்கேடு</h2><p>ஆனால், அதை பற்றி எந்தக் கவலையும் இல்லாத முதல்-அமைச்சரும் அவரது அமைச்சர்களும், சாலைகள் முழுவதும் வெற்று விளம்பரங்களை நிரப்புவதிலும், சமூக வலைத்தளங்கள் முழுவதும் விதவிதமான ரீல்ஸ்களை பரப்புவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி கொண்டிருப்பது வெட்கக்கேடு.</p><h2>பதவி விலகிவிடலாம்!</h2><p>“மாற்றம்” என்ற பெயரில் மக்களுக்கு தினசரி ஏமாற்றத்தை அளித்து கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் விஜய், தனது நிர்வாக தோல்வியை ஒப்புக்கொண்டு மொத்தமாக பதவி விலகிவிடலாம்!</p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோவில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டம்: 28 புதிய ரெயில்கள் வாங்க முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-passenger-numbers-on-chennai-metro-decision-to-purchase-28-new-trains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-passenger-numbers-on-chennai-metro-decision-to-purchase-28-new-trains#comments</comments><guid isPermaLink="false">94f86db6-b849-43e3-97ae-0c537d748604</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:57:50 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:57:50.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,train,chennai metro,passenger,பயணிகள்,மெட்ரோ,புதிய</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/rfe6yd12/114.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெட்ரோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/rfe6yd12/114.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் முதல் கட்டமாக இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்து வருகிறார்கள்.</p><p>தொடக்க காலத்தில் 10 ஆயிரம், 15 ஆயிரம், 50 ஆயிரம் என இருந்த பயணிகள் எண்ணிக்கை தற்போது 3 லட்சத்தை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு படிப்படியாக மெட்ரோ ரெயில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள்.</p><h2>மெட்ரோ</h2><p>விமான நிலையத்திற்கு எளிதாக செல்ல முடிவதால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பயன்பாடு அதிகரித்தது. இப்படி கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் ஒரு கோடியே 4 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். தற்போது 45 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதிக நெரிசல் மிகுந்த நேரத்தில் 45 ரெயில்களும் இயக்கப்படுகின்றன.</p><p>நெரிசல் இல்லாத நேரத்தில் 30 ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதிகாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இணைப்பு போக்குவரத்து எளிதாக இருப்பதால் அதிகம் பயன்படுத்துகிறார்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை பெருநகரத்தில் நெரிசல் இல்வாத சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மெட்ரோ </a>ரெயிலில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூடுதல் ரெயில்களை இயக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.</p><h2>டெண்டர்</h2><p>இதற்காக கூடுதலாக 28 ரெயில்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. 6 பெட்டிகளை கொண்டது ஒரு ரெயிலாகும். மொத்தம் 168 பெட்டிகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்படுகிறது. இந்த ரெயில் பெட்டிகள் வாங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான பணிகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து வருகிறது. கூடுதலாக மெட்ரோ ரெயில் இயக்கப்படும் சூழ்நிலையில் தற்போதுள்ள கூட்ட நெரிசல் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட இன்று ஒரே நாளில் 1,500 பேர் வருகை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1500-people-visited-the-tamil-nadu-legislative-assembly-today-to-witness-the-proceedings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1500-people-visited-the-tamil-nadu-legislative-assembly-today-to-witness-the-proceedings#comments</comments><guid isPermaLink="false">72c373b8-2a14-4038-ad30-c0c3abcca30c</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:39:54 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:39:54.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Assembly,தமிழக சட்டப்பேரவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ok7clasz/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ok7clasz/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டப்பேரவையில் இன்று மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின்போது பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுவது வழக்கம். சட்டப்பேரவை நிகழ்வுகள் தற்போது நேரலை செய்யப்பட்டு வரும் சூழலில், பேரவை நிகழ்வுகளை நேரில் காண்பதற்கும் பார்வையாளர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். </p><p>வழக்கமாக சுமார் 1,000 பேர் முதல் 1,200 பேர் வரை சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்ப்பதற்காக வருகை தரும் நிலையில், இன்று ஒரே நாளில் சுமார் 1,500 பேர் சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிடுவதற்காக வருகை தந்தனர். இதில் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் காணப்பட்டனர். இதனால் சட்டப்பேரவை வளாகம் இன்று அதிகமான கூட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் அவகாசம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/armstrong-murder-case-cbi-gets-more-time-to-file-affidavit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/armstrong-murder-case-cbi-gets-more-time-to-file-affidavit#comments</comments><guid isPermaLink="false">35768707-48d7-4c06-ac8b-d728bad8f8da</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:50:25 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:50:25.332Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சி.பி.ஐ,murder,ஆம்ஸ்ட்ராங் கொலை,பிரமாண பத்திரம்,Affidavit,CBI Inquiry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/in0y72o2/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/in0y72o2/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கியிருக்கிறது.</p><h2>பிரமாணபத்திரம் </h2><p>பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 27 பேர்<a href="https://www.dailythanthi.com/topic/கைது"> கைது </a>செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் அடிப்படையில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில், இவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை தொடர்பான பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என சி.பி.ஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய <a href="https://www.dailythanthi.com/topic/சி.பி.ஐ">சி.பி.ஐ.</a>க்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை - 2,159 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-operation-against-history-sheeters-and-anti-social-elements-2159-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-operation-against-history-sheeters-and-anti-social-elements-2159-arrested#comments</comments><guid isPermaLink="false">772227ff-e02d-479d-8b33-bdbefebcbe06</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:42:03 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:42:03.292Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,absconding,arrest,நடவடிக்கை,Operation,எதிரான,சரித்திர பதிவேடு குற்றவாளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/3sk019rs/185.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மகேஷ்குமார் அகர்வால்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/3sk019rs/185.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p>இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்புகாவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால்  உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் (History Sheet Rowdies), சரித்திரப்பதிவேடு அல்லாத குற்றவாளிகள்(Non-History Sheet Offenders). குற்றகுணத்தார் (Bad Characters), மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>கண்காணிப்பு மற்றும் சோதனை</h2><p>கடந்த 12.08.2026 முதல் 01.09.2026 வரை. சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் மீது மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளின் போது 88,570 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர். அவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2,159 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டனர்.</p><h2>வெளிவர முடியாத பிடியாணைகள்</h2><p>பிணையில் வெளிவரமுடியாத பிடியாணைகள் நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையில் 12.08.2026 முதல் 01.09.2026 வரை மொத்தம் 4,706 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவரமுடியாத பிடியாணைகள் (NBW) நிறைவேற்றுதல் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதற்கான தீவிரமுயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>மாநிலம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு. சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்றகுணத்தார், தொடர் குற்றவாளிகள், மற்றும் சமூகவிரோதிகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும். வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிரமான கண்காணிப்புகள் மூலம் குற்றச்செயல்களைத் தடுக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p> <h2>சட்ட அமலாக்க நடவடிக்கை</h2><p>தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகள் கண்காணிப்பு பணிக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்தியுள்ளதுடன், தடுப்பு காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்தி. பிடியாணைகள் நிறைவேற்றுதலை அதிகரித்து. தொடர் குற்றவாளிகள் மற்றும் சட்டம் - ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு எதிராக இலக்குவைத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">நடவடிக்கை</a> எடுக்க உதவியுள்ளன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கை உயர்தரத்தில் பராமரிப்பதற்கும், பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யுடன் துணை தூதர்கள் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-high-commissioners-meet-with-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-high-commissioners-meet-with-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">2540b7a5-f566-4825-9e03-a35f2e4ba3a9</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:32:50 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:32:50.046Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ஜப்பான்,Japan,சந்திப்பு,தலைமை செயலகம்,Meeting,Chief Secretariat,தூதர்கள்,Ambassadors,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/5oeaawmc/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் மற்றும் அரசியல் பொருளாதார ஆலோசகர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/5oeaawmc/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்யை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">வெளிநாட்டு</a> துணை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தூதர்கள்</a> சந்தித்து பேசினார்கள்.</p><figure><img alt="ஜப்பான் நாட்டு துணைத்தூதர்." src="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/7m9h4izt/ஜப்பான்-நாட்டு-துணைத்தூதர்.jpg" /></figure><h2>ஜப்பான் நாட்டு துணைத்தூதர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சென்னை தலைமைச்செயலகத்தில்</a> முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சென்னையில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஜப்பான்</a> நாட்டு துணைத்தூதர் டகாஹாஷி முனியோ சந்தித்து பேசினார்.</p><h2>தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர்</h2><p>இதேபோல், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் (பொறுப்பு) டாக்டர் ஷூதாபா சௌத்ரி மற்றும் அரசியல் பொருளாதார ஆலோசகர் கிருபா ராமச்சந்திரன் ஆகியோரும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து பேசினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நகை திருட்டு வழக்கில் ஓட்டுநர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-arrested-in-chennai-jewel-theft-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-arrested-in-chennai-jewel-theft-case#comments</comments><guid isPermaLink="false">cd28c1da-d0e4-461c-947a-04144f7fdd42</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:19:56 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:19:56.970Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,திருட்டு,Case,ஓட்டுநர்,நகை,Jewellery theft,driver arrested,வழக்கில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/6kt234yi/karthickraj.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கார்த்திக் ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் நகை திருடப்பட்ட வழக்கில் ஓட்டுநர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/6kt234yi/karthickraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சங்கிலிப்பறிப்பு வழக்கில் குற்றவாளி கைது; திருட்டு நகை மீட்பு. இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">தமிழ்நாடு காவல்துறை</a> தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p> <h2>சங்கிலிப்பறிப்பு</h2><p>22.08.2026 அன்று மாலை சுமார் 04.52 மணியளவில், ஊனமாஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் புகார்தாரர் லெபனான் ரெச்சல் தேவசெல்வி, வயது 51, அவர்கள் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது, வண்டலூர் ரயில்வே பாலம் அருகே முகக்கவசம் அணிந்திருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து சங்கிலிப்பறிப்பில் ஈடுபட்டார். </p><h2>வழக்குப்பதிவு</h2><p>குற்றவாளி சுமார் 7 சவரன் எடையுள்ள தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, ரெயில் தண்டவாளம் வழியாக தப்பி சென்றார். புகாரின் அடிப்படையில், டி7 ஓட்டேரி காவல் நிலையத்தில் குற்ற எண் 202/2026-ல், சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>குற்றவாளி கைது </h2><p>தாம்பரம் மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படியும், தாம்பரம் மாவட்ட காவல் துணை ஆணையரின் மேற்பார்வையிலும்,  டி7 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் அல்பின்ராஜ் தலைமையில், குற்றவாளியை கைது செய்து திருடப்பட்ட சொத்துகளை மீட்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.</p><h2>சிசிடிவி கேமரா பதிவு</h2><p>விசாரணையின் போது, தனிப்படையினர் சிசிடிவி கேமரா பதிவுகள், பொது போக்குவரத்து விவரங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களின் மூலம் சந்தேக நபரின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிந்தனர். விசாரணையில், முகக்கவசம் அணிந்திருந்த சந்தேக நபர் முடிச்சூரிலிருந்து நடந்து வந்து, முடிச்சூர் சாலை நட்டேசன் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் சுமார் மதியம் 01.00 மணியளவில் பேருந்தில் ஏறியதும், யுபிஐ மூலம் பேருந்து பயணச்சீட்டு வாங்கியதும் தெரியவந்தது. </p> <h2>சங்கிலிப்பறிப்பு</h2><p>அவர் மதியம் சுமார் 01.45 மணியளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கினார். பின்னர் தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு சென்று, அங்கு சுமார் 02.45 மணி வரை இருந்தார். அதன்பிறகு வண்டலூர் ரெயில் நிலையம் நோக்கி சென்று, சுமார் 03.00 மணியளவில் அங்கு சென்றடைந்தார். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">சங்கிலிப்பறிப்பு </a>சம்பவம் மாலை சுமார் 04.52 மணியளவில் வண்டலூர் ரெயில்வே பாலம் அருகே நடைபெற்றது. குற்றத்தை செய்த பின்னர், குற்றவாளி அப்பகுதியிலிருந்து வெளியேறி, விருதுநகருக்கு சென்றார்.</p> <h2>தீவிர விசாரணை</h2><p>தனிப்படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் மூலம், சந்தேக நபரின் மதியம் 01.07 மணி முதல் மாலை 07.00 மணி வரையிலான நடமாட்டத்தை விரிவான விசாரணையின் மூலம் கண்டறிந்து உறுதி செய்தனர். பேருந்துகள், ரெயில் நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 40 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.</p> <h2>சிடிஆர் அறிக்கை</h2><p> பேருந்துகள் மற்றும் ரெயில்களில் பதிவான சிசிடிவி காட்சிகள், பயணச்சீட்டு பரிவர்த்தனை விவரங்கள், மொபைல் போன் பரிவர்த்தனை பதிவுகள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. மேலும், சிடிஆர் அறிக்கையும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.</p> <h2>கார்த்திக் ராஜ்</h2><p>தொடர்ச்சியான பின்தொடர்தல் நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில், தனிப்படையினர் சந்தேக நபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த, குற்றவாளி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் கார்த்திக் ராஜ், வயது 29, என்பதை அடையாளம் கண்டனர். இதையடுத்து, குற்றவாளி விருதுநகரிலிருந்து தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார். </p><h2>தங்க நகை மீட்பு</h2><p>விசாரணையின்போது, சங்கிலிப்பறிப்பு குற்றத்தில் தான் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க நகை மீட்கப்பட்டது. சிறப்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சிகள், விடாமுயற்சியுடன் மேற்கொண்ட விசாரணை, விரிவான சிசிடிவி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களைச் சேகரித்ததன் மூலம் இவ்வழக்கு கண்டுபிடிக்கப்பட்டு, திருடப்பட்ட சொத்து மீட்கப்பட்டது.</p> <h2>பாராட்டு</h2><p>காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர், மகேஷ் குமார் அகர்வால், ஐபிஎஸ், தாம்பரம் மாநகர காவல் ஆணையர்பிரேம் ஆனந்த் சின்ஹா,ஐபிஎஸ், தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தனி படையினரின் சிறப்பான பணியை வெகுவாக பாராட்டினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட ஆகஸ்ட் மாதத்தில் மின் தேவை 12 சதவீதம் அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-demand-in-tamil-nadu-increased-by-12-percent-in-august-compared-to-last-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-demand-in-tamil-nadu-increased-by-12-percent-in-august-compared-to-last-year#comments</comments><guid isPermaLink="false">48deeeed-754a-4fd0-91e0-59f47c4e3ee4</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:15:44 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:15:44.566Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,electricity,மின் தேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ekekg38l/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ekekg38l/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சராசரி வெப்பநிலை 28.01 டிகிரியாக பதிவாகி இருந்ததாக இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 1901 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் பதிவான மிக அதிக வெப்பநிலையாகும். எல்நினோ தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். </p><p>இந்நிலையில், வெப்பநிலை அதிகரித்ததன் எதிரொலியாக மின் தேவையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உச்ச மின் தேவை 21,615 மெகாவாட்டாக இருந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.14 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் உச்ச மின் தேவை 19,275 மெகாவாட் இருந்தது. </p><p>அதேபோல், ஆற்றல் நுகர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11,271 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில், அது இந்த ஆண்டு 12.66 சதவீதம் உயர்ந்து 12,699 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 2 நாட்கள் மட்டுமே 400 மில்லியன் யூனிட்டைக் கடந்த மின் நுகர்வு, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 25 நாட்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் போல் பேசி ஏஐ வீடியோ: சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cyber-crime-case-registered-over-ai-video-mimicking-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cyber-crime-case-registered-over-ai-video-mimicking-chief-minister#comments</comments><guid isPermaLink="false">ac1e6c99-e5c8-40f1-8f37-70ac615fd209</guid><pubDate>Wed, 02 Sep 2026 12:14:52 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:14:52.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,முதல்-அமைச்சர்,ஏஐ,Chief Minister,வழக்குப்பதிவு,வீடியோ,சைபர் கிரைம் போலீசார்,Cyber ​​Crime Police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/yrndx01t/184.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் கிரைம் போலீசார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/yrndx01t/184.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேசுவது போல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. </p><p>இது தொடர்பாக, தமிழக சி.பி.சி.ஐ.டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சி.பி.சி.ஐ.டி சைபர் க்ரைம் செல் ஆய்வாளர் சமூக வலைதளங்களில் சைபர் குற்றம் தொடர்பாக கண்காணித்து கொண்டிருந்தபோது, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் முகநூல் மற்றும் பிற சமூக ஊடகத்தளங்களில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேசுவதுபோல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்று இந்தி மொழியில் இருப்பது கண்டறியப்பட்டது. </p><h2>வழக்குப்பதிவு</h2><p>அந்தக் காணொளியில், பொதுமக்கள் ஏதேனும் பண உதவி தேவைப்பட்டால் ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கபட்டிருந்தது. மேற்படி சந்தேகத்திற்கிடமான மோசடி காணொளி குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வாளர் சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF">சி.பி.சி.ஐ.டி</a> சைபர் கிரைம் பிரிவில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பொய்யாக உருவாக்கப்பட்ட அந்த காணொளி தொடர்பான போலியான ஐடி மற்றும் அது தொடர்பான பதிவுகள் குறித்த தகவல்களைப் பெற மெட்டா  நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இப்போலி காணொளியை சமூக ஊடகங்களில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>முதற்கட்ட விசாரணையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல ஏஐ காணொளிகள் பேஸ்புக் மட்டுமின்றி, மற்ற சமூக ஊடக தளங்களிலும் பரப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும், இக்காணொளிகளில் பல பாகிஸ்தானைச் சேர்ந்த பேஸ்புக் ஐடிகளிலிருந்து பகிரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் இதுபோன்ற போலி காணொளிகளை அகற்றவும் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2><strong>பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் வேண்டுகோள்</strong></h2><p>இதுபோன்ற மோசடி காணொளிகளில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அவற்றில் பகிரப்படும் வாட்ஸ் அப் குழுக்களில் இணையவோ அல்லது அவற்றின் மூலம் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவோ வேண்டாம்.</p><p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டிப்பேக் காணொளிகளில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் போன்று ஆள்மாறாட்டம் செய்து வெளியிடப்படும் போலியான பதிவுகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது. மேலும், இதுபோன்ற இணையவழி மோசடிகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாதுகொள்ளும் வகையில், தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடமும் இத்தகவலை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: 272 படகுகள் கரையில் நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/motorboat-fishermen-in-thoothukudi-did-not-go-to-sea-272-boats-parked-on-the-shore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/motorboat-fishermen-in-thoothukudi-did-not-go-to-sea-272-boats-parked-on-the-shore#comments</comments><guid isPermaLink="false">90d90293-9ff2-4501-aa78-cd8078abd3f3</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:27:26 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:27:26.718Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,Thoothukudi,தூத்துக்குடி,beach,நிறுத்தம்,fishing port,boats,Parking,கடலுக்கு செல்லவில்லை,மீன்பிடி துறைமுகம்,படகுகள்,கடற்கரையில்,Fishermen did not go to sea</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/4xwcrarg/272-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 272 படகுகள் கரையில் நிறுத்தம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/4xwcrarg/272-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விசைப்படகு மீனவர்கள்</a> இன்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">மீன்பிடிக்க செல்லவில்லை</a>. இதனால் 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. </p><h2>272 படகுகள் கரையில் நிறுத்தம்</h2><p>தூத்துக்குடி மீன்பிடி துறைமுக முன்னாள் தொழிலாளர் சங்கத் தலைவர் பார்த்திபன் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையில், மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டு, மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. </p>]]></content:encoded></item><item><title>மோட்டாரை நகர்த்தியபோது மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bricklayer-dies-after-being-electrocuted-while-moving-motor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bricklayer-dies-after-being-electrocuted-while-moving-motor#comments</comments><guid isPermaLink="false">076ef8ce-ad95-46f3-9182-231c12cba304</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:11:05 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:11:05.767Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,உயிரிழப்பு,Tuticorin,கொத்தனார்,Bricklayer,மின்சாரம் பாய்ந்து,electrocuted to death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/p8fvquqq/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/p8fvquqq/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் வீட்டில் உள்ள மின்சார மோட்டாரை நகர்த்திய போது எதிர்பாராதவிதமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">மின்சாரம் பாய்ந்து</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">கொத்தனார்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் ராஜதுரை (வயது 43), கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.</p><h2>மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழப்பு</h2><p>இந்த நிலையில் இன்று அதிகாலையில் தெரு குழாயில் இருந்து வரும் தண்ணீரை உறிஞ்சுவதற்காக தன் வீட்டிலுள்ள மின்சார மோட்டாரைப் பொருத்தியுள்ளார். அப்போது அவர் மோட்டாரை நகர்த்த முயன்றபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>இதுகுறித்து தகவலறிந்து வந்த முறப்பநாடு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ராஜதுரையின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு மனநல மேம்பாட்டு மையம் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opening-of-mental-health-centre-for-chennai-corporation-staff</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opening-of-mental-health-centre-for-chennai-corporation-staff#comments</comments><guid isPermaLink="false">ab820028-5707-48d1-891b-a603f7b7c53d</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:05:50 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:05:50.136Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai Corporation,employees,பணியாளர்கள்,Center,திறப்பு,மனநல,மாநகராட்சி ஆணையர்,மையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/5nh0yu6b/samran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு மனநல மேம்பாட்டு மையம் திறப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/5nh0yu6b/samran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சென்னை மாநகராட்சி பணியாளர்களின் நலனுக்காக மனநல மேம்பாட்டிற்கான நல மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், திறந்து வைத்தார்.இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மாநகராட்சி ஆணையாளர்</h2><p> சென்னை மாநகராட்சியுடன் சென்னை கிரடாய் அறக்கட்டளை மற்றும் த்ருதி அறக்கட்டளை இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிப் பணியாளர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட மனநல மேம்பாட்டிற்கான a நல மையத்தினை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">மாநகராட்சி ஆணையாளர்</a> ஜி.எஸ்.சமீரன், இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் திறந்து வைத்தார்.</p><h2>மனநல முன்னெடுப்பு</h2><p>மைண்ட் மந்திரா என்பது சென்னை மாநகராட்சியுடன் கிரடாய் சென்னை அறக்கட்டளை மற்றும் த்ருதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து சென்னை மாநகராட்சி பணியாளர்களின் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஒரு முழுமையான மனநல முன்னெடுப்பாகும்.</p><h2>மைண்ட் மந்திரா நல மையம் </h2><p> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>, ரிப்பன் கட்டட வளாகத்தில் வருவாய்த்துறை கட்டடத்தில் மைண்ட் மந்திரா நல மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்களுக்கு மைண்ட் மந்திராவின் +91 80314 51918 என்ற உதவி எண்ணிலும், நேரிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் உளவியலாளர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் நேரில் மனநல ஆலோசனைகளை பெறலாம்.</p><h2>விழிப்புணர்வு</h2><p> பணிபுரியும் பணியாளர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">மனநலம் </a>குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல், மன அழுத்தத்தை புரிந்துகொண்டு அதை சமாளிக்க உதவுதல், உணர்வுரீதியான மன உறுதியை வளர்த்தல் மற்றும் தொழில்முறை ஆலோசனைகளை உரிய நேரத்தில் பெறுவதை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இத்திட்டம் 10.08.2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.</p><h2>மீள்திறனை</h2><p>இதன் தொடர்ச்சியாக, மைண்ட் மந்திரா நல மையம் அமைக்கப்பட்டு ஆணையாளரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மாநகராட்சி பணியாளர்கள் தொழில்முறை ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவை பெறவும், தங்கள் கவலைகளை பற்றி விவாதிக்கவும், மன அழுத்தத்தை கையாள்வதற்கும் மீள்திறனை வலுப்படுத்துவதற்குமான நடைமுறை உத்திகளை கற்றுக்கொள்ளவும் ஆதரவான இடத்தை வழங்குகிறது.</p> <p>இந்நிகழ்ச்சியில், இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், உதவி ஆணையாளர் (பொது நிர்வாகம்) உமா மகேஷ்வரி, த்ருதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்/இணை நிறுவனர் சுரேஷ் அருணாசலம், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>விடுதியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி; சினிமா வினியோகஸ்தர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/movie-distributor-arrested-for-attempting-to-rape-young-woman-in-hotel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/movie-distributor-arrested-for-attempting-to-rape-young-woman-in-hotel#comments</comments><guid isPermaLink="false">0ff5d98e-9636-4d04-9323-ae27a9dbaf28</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:05:24 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:05:24.095Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,இளம்பெண் பலாத்காரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/6eyj1x8b/arrest33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பலாத்காரம் செய்ய முயற்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ சினிமா வினியோகஸ்தர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/6eyj1x8b/arrest33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.நகர் விடுதியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சினிமா வினியோகஸ்தர் கைது செய்யப்பட்டார்.</p><p>சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த  அலெக்சாண்டர் (வயது 38 இவர் தி.நகர் திருமலை பிள்ளை சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி வந்தார். சம்பவத்தன்று அலெக்சாண்டரின் நண்பர் ஜெய் என்பவர் அந்த விடுதிக்கு வந்தார். கூடவே ஒரு இளம்பெண்ணையும் அழைத்து வந்தார்.</p><h2>பலாத்காரம் செய்ய முயற்சி</h2><p>அந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20">பெண்ணை லாட்ஜில் </a>பேசிக்கொண்டு இருக்குமாறு கூறிவிட்டு நண்பர் ஜெய் சென்றுவிட்டார். இந்த நிலையில் திடீர் என்று அலெக்சாண்டர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.</p><p>உடனே அந்த பெண் தனது தோழிக்கு போன் செய்து அழுது கொண்டே  நடந்ததை கூறி உதவிக்கு கூறினார். </p><p>பதறிப்போன தோழி உடனே லாட்ஜுக்கு வந்து அலெக்சாண்டரிடம் இதுபற்றி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அலெக்சாண்டர் 2 பெண்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக தெரிகிறது.</p><h2>சினிமா வினியோகஸ்தர் கைது</h2><p>இதுபற்றி அந்த 2 பெண்களும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு போன் செய்து நடந்ததை கூறினர். சமூக நலத்துறையினர் பாண்டி பஜார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.</p><p>அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அலெக்சாண்டரை கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.</p><h2>நண்பருக்கு வலைவீச்சு</h2><p>அவரை வருகிற 11-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதை அடுத்து அலெக்சாண்டர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே இளம்பெண்ணை அழைத்து வந்த ஜெய்யை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் சினிமா ஆசைக்காட்டி இளம்பெண்ணை அழைத்து வந்தாரா? அல்லது வேறு காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தீபாவளிக்கு சொந்த ஊர்கள் செல்பவர்கள் கவனத்திற்கு.. தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-those-traveling-to-their-hometowns-for-diwali-southern-railway-has-announced-a-pleasant-surprise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-those-traveling-to-their-hometowns-for-diwali-southern-railway-has-announced-a-pleasant-surprise#comments</comments><guid isPermaLink="false">62233141-1d07-44da-92a8-0f6d8ace992d</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:46:25 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:46:25.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,தெற்கு ரெயில்வே,Southern Railway,Diwali,தீபாவளி,முன்பதிவு,announced,hometown</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/a706snph/181.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தெற்கு ரெயில்வே]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/a706snph/181.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய தினம் சனிக்கிழமை என்பதால் இந்த 2 நாட்கள் விடுமுறையில் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வெளியிடங்களில் இருந்து நெல்லை உள்ளிட்ட தங்கள் சொந்த ஊருக்கு வர திட்டமிட்டு வருகின்றனர்.</p><h2>தீபாவளி</h2><p>தீபாவளியை ஒட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவுகள் வருகிற 6-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையின்படி, நவம்பர் 5-ந் தேதி அன்று சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்புவோர். வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நவம்பர் 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்ளை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து புறப்பட விரும்புவோர், வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.</p><h2>முன்பதிவு</h2><p>தீபாவளியை ஒட்டி ஊர்களுக்கு திரும்ப விரும்புவோர் பெரும்பாலும் வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் அதிகமாக முன்பதிவுகளை மேற்கொள்வர். எனவே தீபாவளி முன்பதிவுக்கு பயணிகள் தங்களை தயார் நிலையில் வைத்து கொள்ளுமாறு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>அதேபோல் மறுமார்க்கத்தில் தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு செல்வோர் வரும் 9-ந்தேதி முதல் முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளி முடிந்து மறுதினமே பணிக்கு செல்வோர். தீபாவளி தினமான நவம்பர் 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றே புறப்பட வேண்டும். அதற்கு வருகிற 9-ந் தேதி முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக உள்ளது.</p><p>அதன்படி 9-ந் தேதி (திங்கள் கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டால், அன்று மாலையில் பலர் நகரங்களுக்கு புறப்பட்டு செல்வர். அதன்படி நவம்பர் 9-ந் தேதி சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டு செல்வோர். வருகிற 10-ந்தேதி (வியாழக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">முன்பதிவு</a> செய்ய வேண்டும். தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதால், முக்கிய ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இருக்கைகள் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>துணி உலர்த்துவதில் தகராறு: ஹெல்மெட்டால் அடித்து பெண் கொலை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-beaten-to-death-with-helmet-over-clothes-drying-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-beaten-to-death-with-helmet-over-clothes-drying-dispute#comments</comments><guid isPermaLink="false">a549428a-d601-4f3a-9631-ca2b093da31e</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:46:11 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:46:11.316Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,police,fight,போலீசார்,பெண் அடித்துக் கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/osqytbuf/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தகராறில் மஞ்சுளா அடித்து கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/osqytbuf/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>துணி உலர்த்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் தலைக்கவசத்தால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>துணி உலர்த்துவதில் தகராறு</h2><p>சென்னை நன்மங்கலம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்புருஷோத்தமன். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 47). இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அதற்கு அருகிலுள்ள குடியிருப்பில் விஜி (வயது 45) என்ற பெண்ணும் வசித்து வருகிறார்.</p> <p>கடந்த மாதம் 21-ந்தேதி அன்று மஞ்சுளா தனது குடியிருப்பின் வாகன நிறுத்த பகுதியில் உள்ள கொடியில் துவைத்த துணிகளை காயப் போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த விஜி, மஞ்சுளா போட்டிருந்த துணிகளை எடுத்து தள்ளி போடுமாறு கூறி அவரது துணியை கீழே தள்ளிவிட்டுள்ளார்.</p><p>இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். ஒருகட்டத்தில் விஜி, அங்கிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது வைத்திருந்த தலைக்கவசத்தை எடுத்து மஞ்சுளாவின் தலையிலும் முகத்திலும் சரமாரியாக தாக்கி உள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து சரிந்து விழுந்த மஞ்சுளாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு <a href="https://www.dailythanthi.com/topic/ஆஸ்பத்திரி">ஆஸ்பத்திரிக்கு</a> கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்த மேடவாக்கம் <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்,</a> மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள விஜியை தீவிரமாக தேடி வருகின்றனர். துணி காயப்போடுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தருமபுரி: டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து -டிரைவர் பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-tanker-lorry-bus-accident-driver-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-tanker-lorry-bus-accident-driver-killed#comments</comments><guid isPermaLink="false">fb8e5e05-0bd0-4253-aad2-10c3265901c3</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:43:42 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:43:42.097Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Dharmapuri,தருமபுரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/uvu4ro2z/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/uvu4ro2z/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தருமபுரி,</p><p>தருமபுரியில் டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். </p> <p>கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி இன்று அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30 பேர் பயணம் மேற்கொண்டனர்.</p> <h2>விபத்து - டிரைவர் பலி</h2><p>இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF">தருமபுரி </a>மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது. பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் பகுதியில் சென்றபோது தேசிய நெடுஞ்சாலை நடப்பட்டுள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி நடைபெற்றது.</p> <p>இதற்காக டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, வேகமாக வந்த அரசு பஸ், நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் பஸ் டிரைவர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர்.</p> <p>இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஹால்மார்க் இல்லாத 803 கிராம் தங்க நகைகள் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/803-grams-of-non-hallmarked-gold-jewellery-seized-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/803-grams-of-non-hallmarked-gold-jewellery-seized-in-chennai#comments</comments><guid isPermaLink="false">c61368ef-9ca9-47ce-994e-257187a70d4e</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:38:09 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:38:09.076Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பறிமுதல்,seized,gold jewellery,தங்க நகைகள்,ஹால்மார்க் முத்திரை,In Chennai,Hallmark</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/6go62oqj/hallmark.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ இந்திய தர நிர்ணய அமைவனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் ஹால்மார்க் இல்லாத 803 கிராம் தங்க நகைகள் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/6go62oqj/hallmark.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் தங்க நகைக் கடையில் ஹால்மார்க் விதிமுறை மீறல்: இந்திய தர நிர்ணய  ஆணையம் நடத்திய அமலாக்க தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் மொத்தம் 803.99 கிராம் ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் பறிமுதல்.இது தொடர்பாக, மத்திய தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-</p><p>இந்திய தர நிர்ணய  ஆணையத்தின், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள், நேற்று, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சட்டம், 2016-ன் பிரிவு 28-ன் கீழ், சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள ஒரு தங்க நகை கடையில் அமலாக்க தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. </p> <h2>விதிமுறை மீறல்</h2><p>இந்த நடவடிக்கையின்போது, கட்டாய ஹால்மார்க் (பிஐஎஸ் தரநிலை முத்திரை) இல்லாத<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> தங்க நகைகள்</a> விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இது பிஐஎஸ் சட்டம், 2016-ன் விதிமுறைகளை மீறுவதாக இருந்ததால், அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.</p> <h2>நகைகள் பறிமுதல்</h2><p>சோதனை நடவடிக்கையின்போது, ஹால்மார்க் முத்திரை இல்லாத பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் அளவுகளில் தாலிகள் 175 எண்ணிக்கை (மொத்த எடை: 671.50 கிராம்), குழந்தைகள் வளையல்கள் 12 எண்ணிக்கை (மொத்த எடை: 25.02 கிராம்), காதணிகள் 40 எண்ணிக்கை (மொத்த எடை: 86.14 கிராம்) மற்றும் பதக்கங்கள் 10 எண்ணிக்கை (மொத்த எடை: 21.33 கிராம்) ஆகியவை விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.</p> <figure><img alt="நகைகள் பறிமுதல்" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/jzlwidys/hallmark.1.jpg" /><figcaption>அதிகாரிகள்</figcaption></figure><h2>803.99 கிராம் தங்க நகைகள்</h2><p>இதன் மூலம், மொத்தம் 803.99 கிராம் எடையுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D">ஹால்மார்க் </a>இல்லாத தங்க நகைகள் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சட்டம், 2016-ன் விதிமுறைகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் விசாரணை மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்டன. இந்த அமலாக்க நடவடிக்கை, பிஐஎஸ் சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் மற்றும் உதவி பணியாளர்களால், காவல் துறையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.</p> <p>இது குறித்து பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் எஸ் டி தயானந்த் தெரிவித்ததாவது:-</p> <h2>சந்தை கண்காணிப்பு</h2><p>நுகர்வோர் நலனை பாதுகாக்கவும், கட்டாய பிஐஎஸ் சான்றிதழ் மற்றும் ஹால்மார்க் வழங்கப்பட வேண்டிய தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் இந்திய தரநிலைகளுக்கு இணங்க இருப்பதை உறுதி செய்யவும் பிஐஎஸ் தொடர்ந்து சந்தை கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  </p><h2>பிஐஎஸ் சான்றிதழ்</h2><p>பிஐஎஸ் தரநிலை முத்திரை மற்றும் ஹால்மார்க் ஆகியவற்றின் தவறான பயன்பாட்டை தடுக்கவும், தரமற்ற பொருட்கள் சந்தையில் புழக்கத்தில் இருப்பதை கட்டுப்படுத்தவும், பிஐஎஸ் சான்றிதழ் மற்றும் ஹால்மார்க் அமைப்பின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்தவும் இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.</p> <p>இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சட்டம், 2016-ன் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேருந்தில் இருந்து பழங்குடியின மாணவிகளை தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது - திமுக எம்.பி.கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-incident-of-tribal-students-being-pushed-out-of-the-bus-is-shocking-dmk-mp-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-incident-of-tribal-students-being-pushed-out-of-the-bus-is-shocking-dmk-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">db00ba35-feb6-47aa-972d-7f174e5f9b0e</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:35:26 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:35:26.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,கனிமொழி எம்.பி,tngovt,பழங்குடியின மாணவி,Pudukottai district</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/4zpj6h9m/students33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ திமுக எம்.பி.கனிமொழி ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
பழங்குடியின மாணவிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/4zpj6h9m/students33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதுக்கோட்டை அருகே அரசு பேருந்திலிருந்து பழங்குடியின மாணவிகளை தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.</p><h2>பேருந்தில் அதிக கூட்டம்</h2><p>புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரங்கம்மாள் சத்திரம் பகுதியிலிருந்து 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள், இன்று <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88">புதுக்கோட்டை</a>யில் உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த எண் 8 கொண்ட அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து சற்று தூரம் சென்றவுடன், கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி அந்த 10 மாணவிகளையும் நடத்துநர் கீழே இறங்க சொன்னதாக கூறப்படுகிறது.</p><h2>கீழே தள்ளிவிட்ட நடத்துநர்</h2><p>மாணவிகள் இறங்க மறுத்த நிலையில், பேருந்தின் கதவை நடத்துநர் திடீரென திறந்ததாகவும், இதில் மாணவிகள் கீழே விழுந்ததாகவும் தெரிகிறது. ஆனால், ஒரு மாணவியை நடத்துநர் கீழே தள்ளிவிட்டதாகவும், இதையடுத்தே மற்ற மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்தாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.</p><p>இந்த சம்பவம் குறித்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், காயமடைந்த மாணவிகள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>நடத்துனர் பணிநீக்கம்</h2><p>இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் அர்ஜுனனை பணியிடை நீக்கம் செய்தும், தற்காலிக நடத்துநர் மணிகண்டனை நிரந்தர பணிநீக்கம் செய்தும் உத்தரவிட்டனர்.</p><h2>மனித நேயம் அற்ற கொடூரச் செயல்</h2><p>இந்தநிலையில்,  புதுக்கோட்டை அருகே அரசு பேருந்திலிருந்து பழங்குடியின மாணவிகளை தள்ளி விட்டது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்துவதா? பேருந்தில் கூட்டம் இருப்பதாக கூறி மாணவிகளை கீழே தள்ளி விட்டது மனித நேயம் அற்ற கொடூரச் செயல்; உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-5-people-including-2-women-sentenced-to-life-imprisonment-in-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-5-people-including-2-women-sentenced-to-life-imprisonment-in-murder-case#comments</comments><guid isPermaLink="false">a1a800b8-66dd-4cb9-83c1-b162aa3df15f</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:28:47 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:28:47.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Murder case,accused,கொலை வழக்கு,life imprisonment,ஆயுள் தண்டனை,குற்றவாளிகள்,5 பேர்,5 people</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/tp511gmi/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை வழக்கில் 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/tp511gmi/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கொலை வழக்கில்</a> சம்பந்தப்பட்ட 2 பெண்கள் உள்பட 5 குற்றவாளிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">ஆயுள் தண்டனை</a> விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><h2>கொலை வழக்கில் 5 பேர் கைது</h2><p>தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போர்ட்சிட்டி நகர் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு, திருநெல்வேலி நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் விக்ரமாதித்தன் (வயது 40) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்களான அர்ஜுனன் மகன் ராமர்(30), முருகன் மகன் சக்திவேல்(29), காட்டுராஜா மகன் முத்துக்கனிராஜ்(33), மேற்சொன்ன ராமரின் மனைவி(29) மற்றும் இறந்த விக்ரமாதித்தனின் மனைவி உள்பட 5 பேரையும் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><h2>5 பேருக்கு ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் - I (ADJ - I) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம் நேற்று மேற்சொன்ன நபர்களான ராமர், சக்திவேல், முத்துக்கனிராஜ் உள்பட 2 பெண்கள் என மொத்தம் 5 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, அவர்களுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>போலி பட்டா தயாரித்து கிராம சமுதாய சங்க நிலம் ஆக்கிரமிப்பு முயற்சி: முதியவருக்கு 2 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-encroach-on-village-community-association-land-by-preparing-fake-title-deeds-elderly-man-gets-2-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-encroach-on-village-community-association-land-by-preparing-fake-title-deeds-elderly-man-gets-2-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">8fd58f43-799b-4b38-8e4d-f539ee3cb12f</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:19:26 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:19:26.613Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,fake,போலி,முதியவர்,சிறை தண்டனை,Prison sentence,Attempt,முயற்சி,நிலம்,Elderly,Patta,பட்டா,ஆக்கிரமிப்பு,land encroachment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/4vk9lbv8/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறை தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/4vk9lbv8/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் போலி பட்டா தயாரித்து கிராம சமுதாய சங்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">நிலத்தை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஆக்கிரமிக்க</a> முயன்ற முதியவருக்கு 2 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து ஓட்டப்பிடாரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><h2>போலி லெட்டர் பேட்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், தருவைகுளம் காவல் எல்லைக்குட்பட்ட வேப்பலோடை கிராமத்தில் உள்ள 0.33 ஏக்கர் நிலமானது கிராம சமுதாய சங்கத்தின் அனுபவத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் வேப்பலோடை வடக்கு தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் செல்வம் (வயது 60) என்பவர், சமுதாய சங்கத்தின் போலியான லெட்டர் பேட் ஒன்றை சட்ட விரோதமாக தயார் செய்துள்ளார். </p><h2>போலி ஆவணம் தயாரிப்பு</h2><p>அதைப் பயன்படுத்தி, அந்த நிலத்திற்கு தனது தந்தையின் பெயரையும் இணைத்து கூட்டுப் பட்டாவாக மாற்றியுள்ளார். இந்த ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணத் தயாரிப்பு குறித்து வேப்பலோடையைச் சேர்ந்த காசி(72) என்பவர் தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அப்போதைய தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி (தற்போது மதுரை சைபர் கிரைம்) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். </p><h2>2 ஆண்டுகள் சிறை தண்டனை</h2><p>இந்த வழக்கு ஓட்டப்பிடாரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், செல்வம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், ஓட்டப்பிடாரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தரணிதரன், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். </p>]]></content:encoded></item><item><title>அடையாறு கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர்
குறைதீர்க்கும் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-consumer-grievance-redressal-meeting-tomorrow-in-adyar-division</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-consumer-grievance-redressal-meeting-tomorrow-in-adyar-division#comments</comments><guid isPermaLink="false">3543e5dc-5da4-48df-8d2d-5679e750d092</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:18:57 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:18:57.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அடையாறு,Adyar,Consumer,மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்,Electricity Consumer Grievance Redressal Meeting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/jx9d9ftz/180.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/jx9d9ftz/180.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அடையாறு கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.  இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்</h2><p>அடையாறு கோட்ட மின் நுகர்வோர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D"> குறைதீர்க்கும் கூட்டம் </a>நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு செயற்பொறியாளர்/ அடையாறு, தரைதளம், 110/33-11 கி.வோ, வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை - 42 அமைந்துள்ள விலாசத்தில் நடைபெற உள்ளது.</p><p>பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்று கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/சென்னை மின்பகிர்மான வட்டம் /அடையாறு (தெற்கு-II) கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘மேட்டூர் அணை தாமதத் திறப்பால் ஏற்படும் முக்கிய பாதிப்புகள்’ - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/major-impacts-of-the-delayed-opening-of-mettur-dam-statement-by-former-minister-mrkpanneerselvam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/major-impacts-of-the-delayed-opening-of-mettur-dam-statement-by-former-minister-mrkpanneerselvam#comments</comments><guid isPermaLink="false">b8acd8e5-b386-4fd3-a131-710a64b7adff</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:18:46 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:18:46.155Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,MRK Panneerselvam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/pzh536ai/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/pzh536ai/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க. ஆட்சியில் மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பல்வேறு முக்கிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“கடந்த தி.மு.க. ஆட்சியின் சாதனைகளுள் ஒன்றாக, வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12-ஆம் தேதிக்கு பதிலாக, இந்த நிர்வாகத் திறனற்ற த.வெ.க. ஆட்சியில் அணைகள் தாமதமாகத் திறக்கப்பட்டதால், ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் அறுவடை செய்யப்படும் குறுவைப் பருவ நெல் சாகுபடி முற்றிலுமாக குறைந்துள்ளது.</p><p>எந்தவித திட்டமும் இன்றி தற்போது தாமதமாகத் திறக்கப்பட்டுள்ள மேட்டூர் அணையினால் தங்களுக்கு என்ன பயன் என்று டெல்டா விவசாயிகள் விரக்தியோடு கேள்வி எழுப்புகின்றனர். விவசாயிகளும், விவசாய சங்கங்களும் முன்வைக்கும் நியாயமான கருத்துகளை சுட்டிக்காட்ட வேண்டியது இப்போது அவசியமாகிறது.</p> <h2>நிலத்தடி நீர்மட்டம் குறைவு:</h2><p>கால்வாய்ப் பாசனத்திற்குத் தண்ணீர் வராததால், நிலத்தடி நீரை நம்பி ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் நீரின்றிப் பயிர்களைக் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.</p><p>போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாக நேரிடுவதுடன், ஏற்கனவே கடன் தள்ளுபடியில் இந்த அரசின் குழப்பங்களால் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பில் இருக்கின்றனர். லட்சக்கணக்கான டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.</p><h2>சம்பா சாகுபடியில் நிலவும் சிக்கல்களும் சவால்களும் </h2><p>பருவகால மழை மற்றும் அணையின் நீர்வரத்தைப் பொறுத்தே அடுத்தடுத்த சாகுபடிப் பணிகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், விவசாயிகளுக்குப் பயிர் சாகுபடி குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் ஒட்டுமொத்த விவசாயச் சுழற்சிக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.</p><p>ஒரு போக சம்பா மற்றும் தாளடி சாகுபடிப் பயிர்கள் முழுமையாக வளர்ந்து அறுவடைக்கு வர 120 முதல் 140 நாட்கள் வரை தண்ணீர் தேவைப்படும். ஆனால், தற்போதைய அணை நீர் இருப்பைக் கொண்டு (சுமார் 54 டி.எம்.சி.) அரசு முதற்கட்டமாக 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கத் திட்டமிட்டுள்ளது.</p><p>டெல்டா மாவட்டங்களின் ஒட்டுமொத்த சம்பா, தாளடி சாகுபடிக்கு சுமார் 205 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும் நிலையில், அணையில் தற்போது பாதி அளவு மட்டுமே நீர் இருப்பது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பருவகால மாறுதல் ஆபத்து:</h2><p>வழக்கமாக சம்பா பயிர்கள் அக்டோபர் மாத வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் ஓரளவிற்கு வளர்ந்து, மழையைத் தாங்கும் நிலையை எட்டியிருக்கும். ஆனால், தற்போது செப்டம்பர் மாதத்தில் சாகுபடி தாமதமாகத் தொடங்குவதால், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பெய்யும் கனமழையினாலும் வெள்ளத்தினாலும் இளம் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் அதிகரித்துள்ளது.</p><h2>நெல் உற்பத்தி குறைதல்:</h2><p>மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதன் காரணமாக, தமிழக டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படலாம் என வேளாண் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p> <h2>கடைமடைப் பகுதிகளுக்கு நீர் சேர்வதில் தாமதம் - காய்ந்து கிடக்கும் ஆறுகள்:</h2><p>நீண்ட நாட்களாக ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் காய்ந்து கிடப்பதால், அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் நிலத்தில் உறிஞ்சப்பட்டு, டெல்டாவின் கடைமடைப் பகுதிகளுக்குச் (நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் இறுதிப் பகுதிகள்) சென்றடையக் கூடுதல் நாட்களாகும். இதனால், அங்குள்ள விவசாயிகளுக்குப் பாசன நீர் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும்.</p><p>வடகிழக்குப் பருவமழை மற்றும் கர்நாடகாவிலிருந்து வர வேண்டிய காவிரி உபரி நீர் ஆகியவற்றை மட்டுமே நம்பி இனி சம்பா சாகுபடியின் தலைவிதி உள்ளது. இவை இரண்டுமே இந்த ஆட்சியில் கானல் நீரான நிலையில், விவசாயம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியிருக்கிறது.</p><p>கடந்த தி.மு.கழக ஆட்சியில் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முறையாகத் தூர்வாரப்பட்டு, நிலத்தடி நீரை உயர்த்தத் தொலைநோக்குத் திட்டத்தோடு செயல்படுத்தப்பட்டதால், நீர்நிலைகள் அதிகமான தண்ணீரைச் சேமிக்கத் தயாராக இருக்கும் நிலையில், தற்போது திறக்கப்படும் தண்ணீர் அந்த நீர் சேமிப்பு ஆதாரங்களை நிறைக்குமா என்பதும் சந்தேகமே.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  </p>]]></content:encoded></item><item><title>வங்கி மேலாளரை மு.க.அழகிரி மகள் தாக்கிய வழக்கு: விசாரணை 16-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-bank-manager-attacked-by-mk-alagiri-daughter-hearing-postponed-to-16th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-bank-manager-attacked-by-mk-alagiri-daughter-hearing-postponed-to-16th#comments</comments><guid isPermaLink="false">e3934450-d22e-4ee7-bd66-6b36562f2184</guid><pubDate>Wed, 02 Sep 2026 10:14:39 +0000</pubDate><atom:updated>2026-09-02T10:14:39.209Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,அடையாறு,மு.க.அழகிரி,கயல்விழி,adaiyar,Kayalvizhi,M.K.Alagiri</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/z5yk41jf/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/z5yk41jf/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை, </p><p>வங்கி மேலாளரை மு.க.அழகிரி மகள் தாக்கிய வழக்கு விசாரணை செப்டம்பர் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. </p> <h2>வங்கி மேலாளரை தாக்கிய கயல்விழி</h2><p>சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">மு.க.அழகிரி</a>யின் மகள் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இயங்கி வந்த பாரத ஸ்டேட் வங்கி வாடகை விவகாரம் தொடர்பாக, வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங்குடன் ஏற்பட்ட தகராறில், அவரது கன்னத்தில் கயல்விழி அறைந்தார்.</p><p>இது தொடர்பான, சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி கைது செய்யப்பட்ட கயல்விழி, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.</p> <h2>வழக்கு விசாரணை தள்ளிவைப்பு</h2><p>இந்த நிலையில், வங்கி மேலாளரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கயல்விழி மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி, காவல் துறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.</p><p>வங்கி மேலாளர் தகாத வார்த்தைகளால் திட்டியதால்தான் அடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கயல்விழி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், திட்டியதை மறைத்து வங்கி மேலாளர் புகார் அளித்துள்ளதாக கயல்விழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கயல்விழி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மு.வீரபாண்டியன் நலமுடன் உள்ளார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/m-veerapandian-is-in-good-health-communist-party-of-india-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/m-veerapandian-is-in-good-health-communist-party-of-india-announces#comments</comments><guid isPermaLink="false">48b7a0e2-d4a4-4058-a1e8-3e80afddda8c</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:56:58 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:56:58.941Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,health,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/guns9tt3/179.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/guns9tt3/179.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் நலமுடன் உள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>பேரணி மற்றும் பொதுக்கூட்டம்</h2><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடந்த மாதம் 31.08.2026 அன்று மாலை டெல்லிக்கு சென்றிருந்தார். டெல்லியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திலும், இன்றும் நாளையும் நடைபெறும், கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக அவர் சென்றிருந்தார்.</p><h2>ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை</h2><p>இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தலைச்சுற்றல் மற்றும் மயக்கத்தின் காரணமாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றபின்பு, உடனடியாக சென்னை திரும்பி நேற்று மாலை 03.00 மணிக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>மருத்துவர்களின் சிகிச்சைகளுக்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் தற்பொழுது குறைந்துள்ளது. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலையோ அல்லது நாளை காலையோ அவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">மருத்துவமனையில்</a> இருந்து டிஸ்சார்ஜ் ஆக உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்: மாற்றுத்தலைவரான சத்யபாமா அவையை நடத்தினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sathyabama-first-woman-in-speaker-chair-tamil-nadu-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sathyabama-first-woman-in-speaker-chair-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">6fb82631-5a87-451f-9cf9-1bc412d857ff</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:48:41 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:48:41.356Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>minister,Speaker,சபாநாயகர்,அமைச்சர்,சத்யபாமா,இருக்கை,Chair,Sathyabama</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/7dxqn880/sathya-bama.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சத்யபாமா]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்: மாற்றுத்தலைவரான சத்யபாமா அவையை நடத்தினார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/7dxqn880/sathya-bama.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையின் மாற்று பேரவை தலைவராக (மாற்று சபாநாயகர்) தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்.எல்.ஏ. சத்யபாமா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று முதன்முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வெற்றிகரமாக வழிநடத்தினார்.</p><h2>மாற்று தலைவர்கள் குழு</h2><p>தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கமாக, சட்டசபை நிகழ்வுகளை சபாநாயகர் வழிநடத்துவார். அவர் அவையில் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகிய இருவருமே அவையில் இல்லாத சூழ்நிலை ஏற்படும்போது, அவையை தடையின்றி நடத்துவதற்காக 'மாற்று தலைவர்கள் குழுஅமைக்கப்படுவது வழக்கம்.</p> <p>அந்த வகையில், தற்போதைய சட்டசபையின் மாற்று பேரவை தலைவர்கள் பட்டியலை சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த தலைவர்கள் குழுவில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்.எல்.ஏ. சத்யபாமா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.</p> <h2>சபாநாயகர் இருக்கையில் சத்யபாமா</h2><p>இந்நிலையில், இன்று சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சபாநாயகர் </a>மற்றும் துணை சபாநாயகர் ஆகிய இருவரும் தற்காலிகமாக அவையில் இல்லை. இதனை தொடர்ந்து, மாற்று பேரவை தலைவரான தவெக எம்.எல்.ஏ. சத்யபாமா, சபாநாயகர் நாற்காலியில் சென்று அமர்ந்தார். </p><p>பின்னர் அவர், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை</a> விவாதங்களை நடுநிலையோடு திறம்பட அவையை தொடர்ந்து வழிநடத்தினார். தவெக கட்சியின் சார்பில் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><h2>அமைச்சர்கள் குழப்பமும், பாராட்டும்</h2><p>சத்யபாமா அவையை நடத்தி கொண்டிருந்தபோது, விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஒருவர், அவரை தவறுதலாக "துணை பேரவை தலைவர்" என குறிப்பிட்டு பேசினார். உடனே அவையில் இருந்த உறுப்பினர்கள், "அவர் துணை பேரவை தலைவர் இல்லை, மாற்று பேரவை தலைவர்" என்று சுட்டிக்காட்டி சரிசெய்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது.</p> <h2>பாராட்டு</h2><p>சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து மிகவும் பொறுமையாகவும், கம்பீரமாகவும் அவையை வழிநடத்திய தவெக பெண் எம்.எல்.ஏ. சத்யபாமாவின் செயல்பாட்டை, திமுகவை சேர்ந்த தங்கம் தென்னரசு பேசியதாவது, "லேடி வெல்லிங்டன் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி பேரவை தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடத்திலும் இருக்கும் எதிர்பார்ப்பு. </p><p>இன்றைக்கு மாற்று தலைவராக நீங்கள் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது உள்ளபடியே பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார். பல்வேறு கட்சி மக்கள் பிரதிநிதிகளும் மனதார பாராட்டினர்.</p><h2>மாற்று பேரவை தலைவர்கள் குழு</h2><p>இந்த மாற்று பேரவை தலைவர்கள் குழுவில் சத்யபாமாவுடன் சேர்த்து, தவெகவை சேர்ந்த விஜய் சரவணன், மதார் பதுருதீன் ஆகியோரும், திமுக தரப்பில் காதர் பாட்சா முத்துராமலிங்கம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-3-people-sentenced-to-life-imprisonment-in-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-3-people-sentenced-to-life-imprisonment-in-murder-case#comments</comments><guid isPermaLink="false">559bdebf-b796-4caa-974c-ca9bdcec6b5d</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:35:56 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:35:56.354Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Murder case,accused,கொலை வழக்கு,life imprisonment,ஆயுள் தண்டனை,குற்றவாளிகள்,3 people,3 பேர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/73bavltb/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/73bavltb/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி </a>மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கொலை வழக்கில்</a> சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">ஆயுள் தண்டனை</a> விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம்- I தீர்ப்பளித்துள்ளது. </p><h2>முன்விரோதத்தில் கொலை; 3 பேர் கைது</h2><p>தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மேலநாட்டார்குளம் பகுதியில் வைத்து செல்லையா மகன் குரு என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதே பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரது மகன்களான மாசிலாமணி (வயது 34), துரை(36) மற்றும் குருநாதன் மகன் செல்லதுரை(54) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><h2>3 பேருக்கு ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் (ADJ - I) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம் நேற்று மாசிலாமணி, துரை மற்றும் செல்லதுரை ஆகிய 3 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் வழக்கு; 4 மாதங்களில் இறுதி அறிக்கை - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-corruption-case-at-madurai-central-prison-high-court-orders-vigilance-department-to-submit-final-report-within-four-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-corruption-case-at-madurai-central-prison-high-court-orders-vigilance-department-to-submit-final-report-within-four-months#comments</comments><guid isPermaLink="false">e164f664-bbf1-46e2-a03c-97ac2cf23e4e</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:26:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:26:36.293Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court,ஐகோர்ட்டு,லஞ்ச ஒழிப்புத்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/m2scsmep/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/m2scsmep/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த தபால் கவர்கள், அட்டைகள் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், மருத்துவ உதவி பொருட்கள் போன்றவற்றை பல்வேறு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைத்து, அதற்கு கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது போல போலியாக கணக்கு தயாரித்து 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>வழக்கறிஞரும், சிறை கைதிகள் உரிமை மைய இயக்குனருமான புகழேந்தி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் அதை வந்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. </p><p>இதனிடையே மதுரை மத்திய சிறை பள்ளியில் உதவியாளராக பணியாற்றிய தன்னுடைய கணவருக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி சிறைவாசியின் மனைவி கோகிலா என்பவர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி ஜோதிராமன் அடங்கிய அமர்வில இன்று விசாரணைக்கு வந்தபோது, போலி கணக்கு காட்டி 100 கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த வழக்கு விசாரணை மந்தமாக நடைபெற்று வருவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், விரிவான விசாரணையை முடிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் எனவும், விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்காக சிறப்பு குழுவை அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. </p><p>இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து, 4 மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டனர். அவ்வாறு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் இந்த வழக்கின் விசாரணையை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்ற நேரிடும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மயிலாடும்பாறை அருகே மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற அக்காள்-தங்கை கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sisters-arrested-for-strangling-an-elderly-woman-to-death-near-mayiladumparai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sisters-arrested-for-strangling-an-elderly-woman-to-death-near-mayiladumparai#comments</comments><guid isPermaLink="false">b0a02ee9-29e8-4319-9deb-8be96138deed</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:17:43 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:17:43.189Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,கொலை,மூதாட்டி,Death,sister,rope,மயிலாடும்பாறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ljra3xx6/158.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அக்காள்-தங்கை கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ljra3xx6/158.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடும்பாறை,</p><p>மயிலாடும்பாறை அருகே மூதாட்டி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக. அவரை கழுத்தை நெரித்து கொன்ற அக்காள்-தங்கை கைது செய்யப்பட்டனர்.</p><h2>போலீசார் வழக்குப்பதிவு</h2><p>மயிலாடும்பாறை அருகே பொன்நகரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜக்கம்மாள் (வயது 70). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து பகுதியில் கயிற்றால் இறுக்கியது போன்று தழும்புகள் காணப்பட்டது. இதனால் அவரை மர்மநபர்கள் கயிற்றால் கழுத்தை நெரித்துக்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>மேலும் மர்ம நபர்களை விரைந்து பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களாக பொன்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி பல்வேறு தடயங்களை சேகரித்து வந்தனர். அப்போது ஜக்கம்மாளின் அக்காள் மகள்களான ஜங்கால்பட்டியை சேர்ந்த அய்யம்மாள் (42), நாகராணி (38) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். </p><h2>முன்விரோதம்</h2><p>அதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. அதாவது மூதாட்டியை அவர்கள் 2 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யம்மாள், நாகராணியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். அதில், அய்யம்மாள் மற்றும் நாகராணி குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்ததாகவும், ஜக்கம்மாள் குடும்ப முன்விரோதத்தில் மாந்திரீகம் செய்ததால் தான் தங்களது குடும்பத்துக்கு இந்த நிலை வந்துள்ளதாகவும் 2 பேரும் நினைத்தனர். </p><p>இதனால் மூதாட்டியை கொலை செய்ய அய்யம்மாளும், நாகராணியும் முடிவு செய்தனர். அதன்படி, சம்பவத்தன்று ஜக்கம்மாள் வீட்டுக்குள் சென்று, கயிற்றால் அவரது கழுத்தை நெரித்து 2 பேரும் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொடூர கொலை- போலீஸ்காரர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-policeman-arrested-for-brutally-murdering-woman-in-fake-love-affair</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-policeman-arrested-for-brutally-murdering-woman-in-fake-love-affair#comments</comments><guid isPermaLink="false">6ab53b25-b0ef-43c5-9b62-290a0b103a8b</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:15:51 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:15:51.423Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,arrest,பெண்,fake love,Woman,Policeman,கள்ளக்காதல் விவகாரம்,affair,போலீஸ்காரர் கைது,கொடூர கொலை,Brutal murder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/os7w92w2/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் கொடூர கொலை- போலீஸ்காரர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/os7w92w2/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">கள்ளக்காதல் விவகாரத்தில்</a> ஏற்பட்ட தகராறில், ஜெராக்ஸ் கடை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">பெண்</a> உரிமையாளரை இரும்பு கம்பியால் அடித்து முகம் சிதைத்துக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொடூரமாகக் கொலை</a> செய்த காவலரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>ஜெராக்ஸ் கடை உரிமையாளர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் வெங்கடசுப்பிரமணி. இவரது மனைவி பிரியா (வயது 40). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். </p><h2>கள்ளக்காதல் விவகாரம்</h2><p>பிரியாவின் அக்கா லட்சுமி(42), கணவர் இறந்ததால் பிரியா வீட்டோடு வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்துக்குமார்(33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரியாவுக்கு தெரியவரவே, அவர் தனது அக்காவை கண்டித்துள்ளார். இதனை லட்சுமி முத்துக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.</p><h2>இரும்பு கம்பியால் தாக்கி பெண் கொடூர கொலை</h2><p>இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார், நேற்று இரவு பிரியா தனது ஜெராக்ஸ் கடையைப் பூட்டிக் கொண்டிருந்தபோது அங்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த முத்துக்குமார் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் பிரியாவின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் முகம் சிதைந்து பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் போலீசார், பிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுகிர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து தப்பியோடிய முத்துக்குமாரை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.</p><h2>போலீஸ்காரர் கைது</h2><p>கைது செய்யப்பட்ட முத்துக்குமார், தட்டாரமடம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தவர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், ஏற்கனவே மாமனார் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே வந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item></channel></rss>