<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 26 Aug 2026 06:39:44 +0000</lastBuildDate><item><title>கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு... விழுப்புரம் அருகே சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-dies-after-collapsing-while-playing-cricket-tragedy-near-villupuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-dies-after-collapsing-while-playing-cricket-tragedy-near-villupuram#comments</comments><guid isPermaLink="false">96cf28a7-4b0c-4fbd-bb64-0afaed6433cd</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:34:52 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:34:52.689Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரிக்கெட்,Cricket,விழுப்புரம்,Heart attack,Viluppuram,மாரடைப்பால் மரணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/uqqrrza0/56.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அஜிஸ்கான்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாரடைப்பால் மரணம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/uqqrrza0/56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>விழுப்புரம் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கிரிக்கெட் விளையாட்டு</h2><p>விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஜிஸ்கான் (வயது 40). அவர் இன்று (புதன்கிழமை) தனது நண்பர்களுடன் இணைந்து அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">கிரிக்கெட்</a> விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விளையாட்டின் நடுவே அவருக்கு திடீரென கடுமையான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81"> நெஞ்சுவலி</a> ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.</p><h2>மாரடைப்பால் உயிரிழப்பு</h2><p>பதற்றமடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அஜிஸ்கான் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><p>இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு மைதானத்தில் அஜிஸ்கான் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதா; கவர்னர் ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bill-granting-priority-in-government-jobs-to-those-educated-in-the-tamil-medium-receives-governors-assent</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bill-granting-priority-in-government-jobs-to-those-educated-in-the-tamil-medium-receives-governors-assent#comments</comments><guid isPermaLink="false">ea35e113-5ab7-44d3-ac8d-4177ac5d6369</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:27:46 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:27:46.791Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Govt job,மசோதா,தமிழ்,அரசுப் பணி,bill,tamil,கவர்னர் அர்லேகர்,Governor Arlekar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/69omdyz4/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/69omdyz4/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><h2>சட்ட திருத்த மசோதா</h2><p>தமிழக அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே நிரப்பப்படும் அனைத்து காலியிடங்களிலும் 20 சதவீதம் இடங்களை தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2010-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ஒரு பணிக்கு விண்ணப்பித்தவர் அரசு பணியில் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராயாமல் இதுநாள் வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு முன்னுரிமை வழங்கி வந்தது.</p><p>இந்த சூழ்நிலையில் சென்னை ஐகோர்ட்டு, ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் முன்னுரிமைக்கு தகுதியற்றவர்கள் என தீர்ப்பளித்தது. இதை தெளிவுப்படுத்தவும் கடந்த 2010 செப்டம்பர் 7-ம் தேதிக்கு பின் இதுநாள் வரை தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பணியில் சேர்ந்தது செல்லும் என்பதை உறுதிப்படுத்தவும், புதிதாக சேருவோருக்கு மட்டும், அச்சலுகையை பயன்படுத்தவும், புதிய சட்ட திருத்த மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><h2>கவர்னர் ஒப்புதல்</h2><p>இந்த நிலையில், தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 20% ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இனிமேல் புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே இந்த திருத்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>அதன்விரவம்:-</h2><p>* 1-ம் வகுப்பு வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள். இதர மொழிகளைப் பயிற்று மொழியாக கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.</p><p>* 1-ம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.</p><p>* பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி: சொத்துத் தகராறில் கொழுந்தனைக் கொன்று பெண் தலைமறைவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-sister-in-law-absconding-after-killing-brother-in-law-over-property-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-sister-in-law-absconding-after-killing-brother-in-law-over-property-dispute#comments</comments><guid isPermaLink="false">538b367d-2c16-459b-b505-aa9913afb15b</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:23:06 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:23:06.127Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,absconding,தலைமறைவு,Kanyakumari,கொலை,property dispute,சொத்துத்தகராறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/wgh4wsxm/55.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நதியா- பாலகிருஷ்ணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சொத்துத் தகராறில் கொழுந்தன் அடித்துக்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/wgh4wsxm/55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் குடும்பத் தகராறு முற்றியதில், கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">அடித்துக் கொலை</a> செய்த அண்ணி தலைமறைவாகினார். இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சொத்துத் தகராறு</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் வசித்து வருபவர் நதியா. அவருக்கும் அவரது கொழுந்தன் பாலகிருஷ்ணன் (வயது 66) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">சொத்துத் தகராறு</a> காரணமாக கடுமையான மோதல் நிலவி வந்தது. உறவினர்கள் சமாதானம் செய்தும் இருவருக்கும் இடையேயான சண்டை ஓயவில்லை.</p><h2>சப்பாத்திக் கட்டையால் தாக்குதல்</h2><p>வழக்கம் போல் இன்று (புதன்கிழமை) அதிகாலை நேரத்திலும் இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அண்ணி நதியா, சமையலறையில் இருந்த சப்பாத்திக் கட்டையை எடுத்து தன் கொழுந்தனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கொழுந்தன் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். கொழுந்தன் இறந்ததை உணர்ந்த நதியா, உடனடியாக வீட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவானார்.</p><h2>தனிப்படை அமைத்து போலீஸ் தீவிர தேடுதல்</h2><p>அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அண்ணி நதியாவைப் பிடிப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மிலாடி நபி திருநாள்: இஸ்லாமிய சொந்தங்களுக்கு சீமான் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milad-un-nabi-warm-%E0%AE%9A%E0%AF%8Dgs-to-muslim-relatives</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milad-un-nabi-warm-%E0%AE%9A%E0%AF%8Dgs-to-muslim-relatives#comments</comments><guid isPermaLink="false">3b639070-d3e6-4bc8-8cfb-1c807b1aa1a0</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:20:21 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:20:21.079Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,சென்னை,Greetings,வாழ்த்து,muslim,Milad-un-Nabi,மிலாடி நபி,இஸ்லாமியர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/obw7lg2n/218.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/obw7lg2n/218.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இஸ்லாமிய சொந்தங்களுக்கு மிலாடி நபி வாழ்த்துகள் தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். </p><p>இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வாழ்த்து</h2><p>இறைவன் திருப்பெயரால் அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் கற்பித்த  மகத்தான வழிகாட்டி!</p><p>போற்றுதற்குரிய பெருமகனார் இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்திட்ட 'மீலாடி நபி' திருநாளில் என்னுயிர் இஸ்லாமியச் சொந்தங்களுக்கு அளவற்ற அன்பாளனும், நிகரற்ற அருளாளனுமாகிய எல்லாம்வல்ல ஏக இறைவன் அல்லாவின் பேரருள் கிடைக்கப்பெற அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rapidly-spreading-swine-flu-in-tamil-nadu-health-department-advisory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rapidly-spreading-swine-flu-in-tamil-nadu-health-department-advisory#comments</comments><guid isPermaLink="false">d8591bee-a385-4135-9852-2a9df0b413d7</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:11:21 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:11:21.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,swine flu,பன்றிக்காய்ச்சல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/91sd6gms/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/91sd6gms/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>இன்புளுவென்சா என்ற வைரசால் ஏற்பட்டுள்ள சுவாச தொற்று நோய் பன்றிக்காய்ச்சல் ஆகும். முதலில் பன்றிகளில் இருந்து பரவிய இந்த பன்றிக்காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. </p><p>பன்றிக்காய்ச்சல் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான், டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது.</p><h2>தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல்</h2><p>இந்நிலையில்,  தமிழ்நாட்டிலும் <a href="https://www.dailythanthi.com/">பன்றிக்காய்ச்சல் </a>வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் தமிழகத்தில் 19 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளான  திடீர் உயர் காய்ச்சல், இருமல்,  </p><p>தொண்டை வலி, உடல் வலி , தசை வலி , மூட்டு வலி, தலைவலி,  கடுமையான சோர்வு , குளிர்  நடுக்கம், மூச்சுத் திணறல்,  சுவாசிப்பதில் சிரமம் ,   நெஞ்சு வலி  போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>இஸ்லாமிய மக்களுக்கு இதயம் கனிந்த மிலாடி நபி வாழ்த்துகள்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heartfelt-milad-e-nabi-greetings-to-the-muslim-people-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heartfelt-milad-e-nabi-greetings-to-the-muslim-people-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b7a53423-1d7a-49f9-b24c-ef19e1fd3f11</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:56:04 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:56:04.633Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,வாழ்த்து,muslim,மிலாடி நபி,milad-e-nabi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/lcu1wz8d/217.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/lcu1wz8d/217.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இஸ்லாமிய மக்களுக்கு இதயம் கனிந்த மிலாடி நபி வாழ்த்துகளை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>மிலாடி நபி திருநாளை முன்னிட்டு, நம் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>நபிகள் நாயகம் அவர்களின் அன்பு, அமைதி, கருணை, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயப் பாதையை நம் வாழ்வில் பின்பற்றி, ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வோம்.</p><p>இந்த இனிய திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, நிம்மதி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை பெருக்கட்டும். அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிறைந்து, நம் சமூகத்தில் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் என்றும் நிலைத்திடட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மிலாடி நபி திருநாளை முன்னிட்டு, நம் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். <br><br>நபிகள் நாயகம் அவர்களின் அன்பு, அமைதி, கருணை, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயப் பாதையை நம் வாழ்வில் பின்பற்றி, ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும்… <a href="https://t.co/QdWIRqc8PZ">pic.twitter.com/QdWIRqc8PZ</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2092449830840959282?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடுவதில் தகராறு; வாலிபர் வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-dancing-at-funeral-procession-youth-hacked-to-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-dancing-at-funeral-procession-youth-hacked-to-death#comments</comments><guid isPermaLink="false">44563ac1-29c1-403f-8c68-e6778a56d36a</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:49:37 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:49:37.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,திருவள்ளூர்,வாலிபர்,கிரைம் செய்திகள்,Tiruvallur,இறுதி ஊர்வலம்,funeral procession</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/3f1inwgy/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/3f1inwgy/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்து போனார். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தனர். அப்போது அகரம் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>வாய்ப்பேச்சு முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அதனை தடுத்து நிறுத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உடல் தகனம் செய்வதற்காக அகரம் சுடுகாடு பகுதிக்கு எடுத்து சென்றபோது இளைஞர்கள் ஒரு புறமாக மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.</p><p>அப்போது அவர்களுக்கிடையே ஒரு தரப்பினர் அகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரை கத்தியால் கழுத்தில் வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு சுடுகாடு பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் சரிந்து கிடந்த மணிகண்டனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.</p><p>இந்த நிலையில், வெட்டுக் காயம் அடைந்து உயிருக்கான ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணிகண்டனை வெட்டிக்கொன்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் படுகொலை: சிபிஐ விசாரணை வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-3-tamils-cbi-probe-needed-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-3-tamils-cbi-probe-needed-anbumani#comments</comments><guid isPermaLink="false">d7074583-5021-48cd-b269-7b5e138ed0ca</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:42:16 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:42:16.651Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,சென்னை,CBI,வனத்துறை,படுகொலை,தமிழர்கள்,kill,கர்நாடகம்,Tamils,Gun shot,Need</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/16lu1qgq/31.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/16lu1qgq/31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலமானது. சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். </p> <h2>3 தமிழர்கள் சுட்டுக்கொலை</h2><p>இதுதொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது இது தரப்பு மோதலில் அல்ல; அவர்களை கர்நாடக வனத்துறை திட்டமிட்டே கொடூரமாக படுகொலை செய்திருக்கிறது என்பது அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. இவ்வளவுக்கு பிறகும் சுட்டுக்கொல்லப்பட்ட  தமிழர் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் வட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த வனத் துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை  கூறிய நிலையில், அது அப்பட்டமான பொய் என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.</p><h2>வனத்துறை</h2><p>ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை செவிமடுக்காத கர்நாடக அரசு, கொல்லப்பட்ட 3 தமிழர்களும் மான் வேட்டைக்காரர்கள் என்று அவதூறு பரப்பியது. அதுமட்டுமின்றி, அவர்கள் மூவரும் வனத்துறையினரை  துப்பாக்கிகளால் சுட்டதால் தான் பாதுகாப்புக்காக அவர்களை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும்  பொய் கூறியது. இந்த நிலையில் தான் அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை கசிந்து, கர்நாடக அரசின் பொய் முகமூடியை கிழித்தெறிந்து, நடந்த உண்மை என்பதை ஒட்டுமொத்த உலகிற்கும் உணர்த்தியுள்ளது.</p><p>கர்நாடக வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட 3 தமிழர்களில் குமாரின் இடது மார்பிலும், இடுப்புக்கு கீழும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அந்தோணி சாமியின் வலது மார்பிலும், அடி வயிற்றிலும் குண்டு பாய்ந்த காயங்கள் உள்ளன. அவரது விலா எலும்புகளும் நொறுங்கியுள்ளன. இருவரின் உடல் முழுவதும்  துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் நெருக்கமாக இருந்து சுடப்பட்டவை என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மூன்றாமவரான  ஜான்ரோஸ் பீட்டரின் உடற்கூராய்வு அறிக்கை கசியவில்லை என்பதால் அது குறித்த விவரங்கள் தெரியவில்லை.</p><h2>வனத்துறை</h2><p>கர்நாடக காட்டு பகுதியில் வனத்துறைக்கும், தமிழர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், அதில் தான் மூவரும் கொல்லப்பட்டதாகவும் கர்நாடக அரசு கூறியிருந்தது. அது உண்மை என்றால், தமிழர்கள் மூவரின் உடல்களிலும் வெகு தொலைவில் இருந்து தான் குண்டுகள் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால்,  மிகவும் நெருக்கமாக இருந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதால், அவர்களை வனத்துறையினர் பிடித்து அருகில் நிற்க வைத்து கொடூரமாக சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறது. நடுநிலையான விசாரணை நேர்மையாக நடந்தால் மட்டும் தான் இந்த விஷயத்தில் உண்மைகள் வெளிவரும்.</p><h2>பாட்டாளி மக்கள் கட்சி</h2><p>கர்நாடகத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து அங்கு சென்று விசாரித்த பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மை கண்டறியும் குழு, ‘‘3 தமிழர்களும் கர்நாடக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, மிகவும் அருகில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தது. இது தொடர்பாக பாமகவின்  உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை  தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.</p><h2>உடற்கூறாய்வு அறிக்கை</h2><p>இவ்வளவுக்குப் பிறகும் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தை மூடி மறைப்பதில் தான் கர்நாடக அரசு தீவிரம் காட்டுகிறதே தவிர, உண்மையை ஒப்புக்கொண்டு கொல்லப்பட்டவர்களின்  குடும்பங்களுக்கு  நீதி வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையைக் கூட கர்நாடக அரசு வெளியிட மறுக்கிறது. இந்த விவகாரம் பற்றி அதிகாரம் இல்லாத மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதன் மூலம் உண்மையை மூடி மறைப்பதற்கு கர்நாடக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.</p><p>கர்நாடக அரசின் இந்த சதித்திட்டத்தை அறிந்திருந்ததால் தான் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர்  வி. இராமசுப்பிரமணியன், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும்  கடிதம் எழுதினேன். இதன் பிறகாவது கர்நாடக அரசு அதன் தவறை உணர்ந்து கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்.</p><h2>சிபிஐ விசாரணை</h2><p>3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த  விவகாரத்தில் தமிழக அரசு இனியும் விலகி நிற்காமல், 3 தமிழர்கள் படுகொலை குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">சிபிஐ </a>விசாரணைக்கு ஆணையிடும்படி கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விவகாரம்: சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது- சிபிஎம்  விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-issue-tamil-nadu-government-must-not-act-unlawfully-cpm-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-issue-tamil-nadu-government-must-not-act-unlawfully-cpm-criticizes#comments</comments><guid isPermaLink="false">108e057f-657e-4357-b542-e08ac2bf8205</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:24:00 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:24:00.866Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,பரந்தூர்,சிபிஎம்,CPM</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/cw3cdl6u/Shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/cw3cdl6u/Shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் நேற்று முன்தினம் அறிவித் தார். தமிழக அரசின் இந்த அதிரடி முடிவுக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபையில் இருந்து அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர். இதற்கிடையே மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பரந்தூர் விமான நிலையத்திட்டம் தொடர்பான விவாதம் நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.  உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கூறியதாவது;  </p><h2>2-வது விமான நிலையம்</h2><p>மாற்றுத்தொழில் திட்டங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களை பாதிக்காதவாறு செயல்படுத்தப்படும். இதன் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். விமான நிலையம் வரவில்லையென்றால் தொழிலே பாதிக்கப்படும் என்கிறார்கள். 49 சதவீதம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பரந்தூர்</a> விமான நிலையத்தை நம்பிதான் போய்க்கொண்டிருக்கிறதா?. 2-வது விமான நிலையம் வேண்டும். மக்கள் பாதிக்கப்படாமல், விவசாய நிலம் பாதிக்கப்படாமல் அது அமைக்கப்படும். சிப்காட்டுக்கும் மக்கள், விவசாயம் பாதிக்கப்படாத வகையில்தான் இருக்கும்” என்று கூறினார். </p><h2> கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு</h2><p>இந்த நிலையில், அரசின் அறிவிப்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; -  பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சட்டமன்ற உறுப்பினர்கள் </a>இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-ramesh-inspection-at-the-tiruvannamalai-annamalaiyar-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-ramesh-inspection-at-the-tiruvannamalai-annamalaiyar-temple#comments</comments><guid isPermaLink="false">07dc6738-018b-4a3a-a0bf-26633f476e83</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:21:09 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:21:09.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,திருவண்ணாமலை கோவில்,Arunachaleshwarar Temple,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்,Tiruvannamalai temple,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/negwwaud/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/negwwaud/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.</p><p>கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசன வழியில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 முதல் 5 மணி நேரம் வரை ஆகும் என பக்தர்கள் மேலானதாக தெரிவிக்கின்றனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர், பிஸ்கட், மோர் வழங்கப்படுகிறது.</p><p>இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விஐபிக்கள் தொடர்ந்து தரிசனம் செய்வதால் சாமியை பார்க்க நீண்ட நேரம் ஆவதாக பொதுமக்கள் அமைச்சரிடம் முறையிட்டனர். "முதன்முறையாக ஆய்வுக்கு வந்துள்ளேன். அனைத்தையும் சரிபார்த்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்" என்று அமைச்சர் ரமேஷ் உறுதி அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கைவிரல் ரேகை பதிவு: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 29-ந் தேதி சிறப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fingerprint-registration-special-camp-at-ration-shops-across-tamil-nadu-on-the-29th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fingerprint-registration-special-camp-at-ration-shops-across-tamil-nadu-on-the-29th#comments</comments><guid isPermaLink="false">5a94080f-35e7-435e-9e5a-ca07026a2735</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:53:38 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:53:38.651Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,ரேஷன் கடை,ration shops,Fingerprint,கைவிரல் ரேகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/8j512ak8/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/8j512ak8/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முன்னுரிமை மற் றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு ரேஷன் அட் டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.</p><p>அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இந்த கைவிரல் ரேகை பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும்பொருட்டு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>எனவே, இதுவரை, ரேஷன் கடைகள் மூலம் கைவிரல் ரேகைப்பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் 29-ந் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைவிரல் ரேகைப் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“அரசியலில் பெரும்பான்மை - சிறுபான்மை என்ற பேதம் இருக்கக்கூடாது” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-should-be-no-distinction-between-majority-and-minority-in-politics-minister-adhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-should-be-no-distinction-between-majority-and-minority-in-politics-minister-adhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">346b392b-0281-4597-a3fa-5f1de8301089</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:52:06 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:52:06.600Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சென்னை,அரசியல்,political,Minority,Adhav Arjuna,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/3wkem3i2/215.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/3wkem3i2/215.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதாயி கல்விக் குழுமம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மீலாதுன் நபி விழா மற்றும் சமய நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், உலகிற்கு நபிகள் நாயகம் வழங்கிய முக்கிய செய்தி அன்பு, கருணை மற்றும் நம்பிக்கை எனக் குறிப்பிட்டார். இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி இருப்பதாவது:-</p><h2>மீலாது நபி வாழ்த்து</h2><p>எல்லோருக்கும் என்னுடைய மீலாது நபி வாழ்த்துகள். ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறார்கள்; வாழ்கிறார்கள். சிலர் தன் குடும்பத்திற்காக வாழ்கிறார்கள்; சிலர் ஊருக்காக வாழ்கிறார்கள். சிலர் மட்டும்தான் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். அப்படி மனிதராகப் பிறந்து இறைத்தூதராக வாழ்ந்து ஒரு சமுகத்திற்கு மட்டுமல்ல... உலகத்திற்கே செய்தியைக் கொடுத்துவிட்டுப் போவார்கள். அப்படிப்பட்ட ஒரு இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் இன்று. நபிகள் நாயகம் இந்த உலகத்திற்கு கொடுத்த செய்தி அன்பும் கருணையும் நம்பிக்கையும் தான் அதனால்தான் அவர் இறைத்தூதர். </p><h2>இஸ்லாமிய மார்க்கம்</h2><p>எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. அவர்கள்தான் இந்த மார்க்கத்தைப் பற்றி எனக்கு நிறைய அறிவைக் கொடுத்தார்கள். அதில் முக்கியமானவர், உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற  நீதியரசர் அக்பர் அலி சார், அவர்தான் இஸ்லாமிய மார்க்கம் பற்றி எனக்கு நிறைய சொன்னவர்.  </p><p>நபிகள் நாயகம் பிறந்த நல்ல நாளில்... ஒரு சந்தோஷமான - மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால்,  கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் கனவு  60 வருடம் கழித்து நிறைவேறி உள்ளது. அது சாதரண கனவு அல்ல. அம்பேத்கர் சொல்வார், ஒரு உண்மையான விடுதலை யாதெனில், பிறப்பால் ஒருவருடைய உயர்வை நிர்ணயம் செய்யக்கூடாது. ஒரு சாதியில் பிறந்தால், இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும்; இவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும்; இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை தீர்மானிக்கக்கூடாது. </p><h2>அம்பேத்கர்</h2><p>அதனால்தான், அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய அம்பேத்கர், இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னார். அதுபோல், சாதி சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றார். எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டை முன்வைத்து அரசியலமைப்பை எழுதினார். அண்ணா சொன்னதுபோல், சிறுபான்மை சமூகம், இஸ்லாமிய சமூகம்-கிறிஸ்தவ சமூகம். </p><p>2026 தேர்தலின் வெற்றி, எங்கள் தலைவர் விஜயின் வெற்றி சாதரண வெற்றி அல்ல. பெண்களாலும், இளைஞர்களாலும் உருவாக்கப்பட்ட வெற்றி என்பதை நான் திரும்பத் திரும்ப பதிவு செய்வேன். அதோடு நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு வேலூர், ராணிப்பேட்டை வழியாக வரும்போது, இஸ்லாமிய சகோதரிகள் வரிசையாக நின்று வரவேற்பு கொடுத்தனர். அப்போது பலர் நம்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுமா? என்று. இந்த மாற்றத்தை கொண்டுவந்ததில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள், இளைஞர்கள் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தனர். </p><p>இந்த மாற்றத்தின் மூலம் அம்பேத்கர் கண்ட கனவு நிறைவேறி உள்ளது. பெரியார் கண்ட கனவு நிறைவேறி உள்ளது. எங்கள் தலைவர் தேர்தல் பிரச்சாரம் போன போதெல்லலாம் விஜய்... விஜய் என்றுதான் சொல்வார்கள்... எழுதுவார்கள்... ஆனால், அவர் வேட்பாளரை அறிவித்தபோது, பெரம்பூர் ஜோசப் விஜய் என்று தைரியமாக அறிவித்தார். அதில் உள்ள செய்தி என்னவென்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கை இந்தியாவில் சவாலாக இருக்கும் நேரத்தில், நான் பிறப்பால் கிறிஸ்தவன் என்றாலும், வளர்ப்பால் அனைவருக்குமானவன். எல்லா மக்களுக்குமானவன் என்பதுதான் அவர் கொடுத்த செய்தி. </p><p>2026 தேர்தல் சாதித்த மிகப்பெரிய வெற்றி என்னவென்றால், இந்த முறை வாக்களித்த தமிழக மக்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> முதல் அனைத்து வேட்பாளர்களையும் எந்த மதம் என்று பார்க்கவில்லை; எந்த சாதி என்று பார்க்கவில்லை. எந்தப் பாகுபாடும் இன்றி வாக்களித்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அதுவும் குறிப்பாக பெண்கள் அந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அதுதான் இந்தத் தேர்தலின் மிகப்பெரிய வெற்றி. </p><p>அரசியலில் பெரும்பான்மை-சிறுபான்மை என்பது இருக்கக்கூடாது. அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கம். கடந்த 60 ஆண்டுகளாக பொதுவாக அரசியலில், இஸ்லாமியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று பல கட்சிகள் சொல்வார்கள். அதில் எனக்கு ஒரு கேள்வி உண்டு. பாதுகாப்புக் கொடுப்பதுதான் அரசியலா? அதிகாரத்தைக் கொடுப்பதுதான் உண்மையான சமத்துவ அரசியல். </p><h2>ஏ.பி.ஜே. அப்துல்கலாம்</h2><p>ஏ.பி.ஜே. அப்துல்கலாமை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்தவர். தமிழ் வழிப்பள்ளியில் படித்து, அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி, நியூக்ளியர் சோதனையில் இந்தியாவை வெற்றியடைய வைத்தவர். இந்தியாவின் பாதுகாப்பு அந்த நியூக்ளியர்  அணு சக்திதான். அப்படி இந்தியாவின் பாதுகாப்பை உருவாக்கியவர் ஒரு இஸ்லாமியர். அவருடைய அக்னி சிறகுகள் புத்தகத்தைப் படித்து வளர்ந்தவன்தான் நான். </p><p>காயிதே மில்லத்தின் செய்தி... மிலாது நபியின் செய்தி... நபிகள் நாயகத்தின் செய்தி... நன்றாகப் படிப்போம்... விளையாட்டுத்துறையில் சாதிப்போம்.. பொருளாதாரத்தில் மிகப்பெரிய வலிமையான இடத்திற்கு வரவேண்டும். ஒரு சாதரண குடிசை வீட்டில் இருந்து கோட்டைக்கு வர வேண்டும். அப்படி வருவதுதான் உண்மையான அரசியல் வெற்றி. அப்படி வருபவர்களால்தான் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். </p><h2>அமைச்சரவை</h2><p>ஐ.யூ.எம்.எல் தலைவர்கள் எங்களிடம் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று கேட்கவே இல்லை. அவ்வளவு நல்லவர்களாக இருந்தார்கள், அப்படி இருக்கக்கூடாது. நம் அதிகாரத்திற்காக நாம்தான் முயற்சிக்க வேண்டும். ஏனென்றால், அப்படி நம்மில் ஒருவர் பெறும் அதிகாரம், அது அவருக்கான அதிகாரம் மட்டுமல்ல; அது அவருடைய குடும்பத்திற்கான அதிகாரம் கிடையாது. அது ஒட்டுமொத்த சமூகத்திற்கான அதிகாரம். இந்த அதிகாரம்தான் எதிர்காலத் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும். நாமும் படிக்க வேண்டும். உயர வேண்டும்; சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் வரும். எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் என்ற நிலை மாறி, எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாமே உருவாக்கும் சட்டமன்றம் - நாடாளுமன்ற பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும். அந்த அதிகாரம்தான், நமக்கு பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கும். </p><p>நான் ஏழையாக இருந்தேன். என் அம்மா 5 வயதில் இறந்துவிட்டார். தற்கொலை செய்து கொண்டு என் கண் முன்னால் இறந்துவிட்டார். அப்பா இல்லை. 15 வயதில் அரசியல் படிக்கும்போது, எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. ஏன் என் அம்மா இறந்தார்? என்ற கேள்வி எழுந்தது. அதற்கான காரணம், என் அம்மா ஒரு ஏழை விவசாயி. அப்போது முடிவு செய்தேன். என்னிடம் அதிகாரம் வரும் போது, எந்த ஊழலும் இருக்கக்கூடாது என்று நினைத்தேன். அதை நினைத்துத்தான் ஒவ்வொரு நாளும் கையெழுத்துப்போடுகிறேன். அதுபோல், நீங்கள் அனைவரும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்கம் கையெழுத்தைப் போடும் அதிகாரத்திற்கு வர வேண்டும். </p><h2>அரசியலமைப்பு</h2><p>அம்பேத்கர் சொல்வார், எந்த இடத்தில் புறக்கணிக்கப்பட்டோமோ, அந்த இடத்தில் உங்கள் உழைப்பால் உயர்ந்து நிற்க வேண்டும் என்று. அவர் அப்படித்தான் உயர்ந்து நின்றார். அவர் படித்த இடங்களில் எல்லாம் ஒதுக்கப்பட்டாரோ... பிறகு அவருடைய அரசியலமைப்புதான் அந்த இடங்களில் எல்லாம் நின்றது. இன்றைக்கு இந்தியாவின் பெரிய சட்ட மேதைகள் எல்லாம், அந்த அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். </p><p>அதைத்தான் எங்கள் கட்சியில் உள்ள தாஹிரா அக்கா சாதித்தார். தைரியமாக அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, தைரியமாக செயல்பட்டு, பெரிய பெரிய அமைச்சர் வேட்பார்களை எல்லாம் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்று, இன்று சட்டமன்றத்தில் தைரியமாக நின்று பேசுகிறார். அதைத்தான் நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும். </p><p>என் அம்மா கொஞ்சம் இதுபோல் தைரியமாக இருந்திருந்தால், அப்படி தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டார். ஆனால், தைரியமாக இருந்த என் பெரியம்மா... நான் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த என் பெரியம்மா, படித்து முதல் ஐ.பி.எஸ் அதிகாரியானர். அவர்தான் திலகவதி ஐ.பி.எஸ். அதுபோல், நீங்களும் சுதந்திரமாக செயல்பட்டு... தைரியமாக படித்து முன்னேறி சாதிக்க வேண்டும். </p><p>இவ்வாறு தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கரூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் பலி

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-head-on-collision-between-lorries-2-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-head-on-collision-between-lorries-2-killed#comments</comments><guid isPermaLink="false">ce94cde0-fb29-4f79-87a2-044a49585f6b</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:24:22 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:24:22.674Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,கரூர்,Karur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/l138446z/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/l138446z/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கரூர்,</p><p>திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது. </p><h2>விபத்து - 2 பேர் பலி</h2><p>கரூர் மாவட்டம் குளித்தலை <a href="https://www.dailythanthi.com/">குமாரமங்கலம் </a>அருகே சென்றபோது நெடுஞ்சாலையில்  எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரி மீது நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி நேருக்குநேர் மோதியது. இந்த கோர விபத்தில் 2 லாரிகளின் 2 டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. </p> ]]></content:encoded></item><item><title>உலகெங்கும் வாழும் மலையாள சொந்தங்களுக்கு ஓணம் வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-onam-to-malayali-people-across-the-world-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-onam-to-malayali-people-across-the-world-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">5201f283-fd54-4859-a37c-45228125d422</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:09:13 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:09:13.134Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Malayalam,வாழ்த்து,Onam,ஓணம்,happy,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/m78v6t1e/214.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/m78v6t1e/214.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழக முதல் - அமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக, முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வாழ்த்துகள்</h2><p>உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்.</p><p>கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">ஓணம்</a> திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!</p><p>அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சைபர் குற்ற பட்டியலில் தமிழகத்திற்கு 7-வது இடம்; நிதியிழப்பு மாநிலத்தில் 4-வது இடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-ranks-7th-in-cyber-crime-list-4th-in-financial-loss-state</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-ranks-7th-in-cyber-crime-list-4th-in-financial-loss-state#comments</comments><guid isPermaLink="false">5c7d3b63-c5c8-4920-9867-ec07e8da8d82</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:05:13 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:05:13.375Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,Cyber Fraud,சைபர் மோசடி,cyber crime,சைபர் குற்றம்,7-வது இடம்,7-th place</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/30kvt40d/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் குற்றங்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/30kvt40d/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சைபர் குற்றங்கள்</a> அதிகம் நடைபெறும் மாநிலங்களின் 'ஹாட்ஸ்பாட்' பட்டியலில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தமிழகம்</a> 7-வது இடத்திலும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">சைபர் மோசடிகளால்</a> அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களில் 4-வது இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது. </p><h2>மாதந்தோறும் 'பிரகதி' கூட்டம்</h2><p>நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் முக்கிய திட்டங்களை விரைவுபடுத்தவும், முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பிரதமர் தலைமையில் மாதந்தோறும் 'பிரகதி' என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கடந்த 2 மாதங்களாக சைபர் குற்றங்கள் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.</p><h2>ஜூன் மாதம் நடந்த 52-வது பிரகதி கூட்டம்</h2><p>கடந்த ஜூன் மாதம் நடந்த 52-வது பிரகதி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரிவுகளில் சைபர் குற்றமும் இடம்பெற்றது. சைபர் குற்றங்களை தடுக்கவும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து, தேசிய அளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் ஹாட்ஸ்பாட் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இம்மாதம் நடக்கவுள்ள பிரகதி கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. </p><h2>சைபர் குற்றங்களில் தமிழகம் 7-வது இடம்</h2><p>அதில் கூறப்பட்ட தகவலின்படி சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் மேற்குவங்கம் முதல் இடத்திலும், உத்தரபிரதேசம் 2-வது இடத்திலும், மராட்டியம் 3-வது இடத்திலும் உள்ளன. இதில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. அதேபோல் சைபர் குற்றங்களால் அதிகளவில் பணத்தை இழக்கும் மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்திலும், கர்நாடகா 2-வது இடத்திலும், உத்தரபிரதேசம் 3-வது இடத்திலும் உள்ளன. இதில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. </p><h2>தமிழகத்தில் 88,385 சைபர் குற்ற புகார்கள்</h2><p>தமிழகத்தில் மட்டும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 88,385 சைபர் குற்ற புகார்கள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து தமிழக சைபர் கிரைம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில் "கடந்த 2 மாதங்களாக பிரகதி கூட்டத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் சைபர் குற்றங்களால் அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்திலும், தமிழக அளவில் கோவை முதல் இடத்திலும் உள்ளன. 53-வது கூட்டத்தில் சைபர் குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார். </p>]]></content:encoded></item><item><title>கிணற்றில் பிணமாக மிதந்த காதலி; அதிர்ச்சியில் காதலன் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/girlfriend-found-dead-floating-in-a-well-boyfriend-commits-suicide</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/girlfriend-found-dead-floating-in-a-well-boyfriend-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">ba7d0441-fc73-420b-ae3c-0376f0d53d80</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:04:36 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:04:36.711Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Cuddalore,கடலூர்,கிரைம் செய்திகள்,தற்கொலை,காதலி,காதலன்,lovers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/h5h82362/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/h5h82362/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><h2>பிணமாக மிதந்தாள்...</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தை சேர்ந்தவர் தனக்கண்ணு மகன் கவிதாஸ் (வயது 26). ஐ.டி.ஐ. படித்துவிட்டு டிராக்டர் ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகள் கிருஷ்ணவேணி (23). இவர் பி.எஸ்சி., பி.எட்., படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரும், கவிதாசும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில் கடந்த 23-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருஷ்ணவேணி, பின்னர் திரும்பி வரவில்லை. இதுபற்றி அவரது தாய் சாந்தி, எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் கிருஷ்ணவேணி நேற்று பாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினரின் கிணற்றில் பிணமாக மிதந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.</p><h2>காதலன் தற்கொலை</h2><p>இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டனர். அங்கு வந்த அவரது குடும்பத்தினர் கிருஷ் ணவேணியின் உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து, கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்தும் தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>இதனிடையே, தனது காதலியின் பிரிவை கவிதாசின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம் பேட்டை காட்டுப்பரூர் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள விவசாய நிலத்தில் சோகத்துடன் காணப்பட்ட அவர், திடீரென அங்கு இருந்த மரத்தில் நேற்று காலை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>தீவிர விசாரணை</h2><p>இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று, பிரேதத்தை கைப்பற்றி விருத்தாச லம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இந்த தற்கொலை முடிவை அவர்கள் எடுத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சி னையா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.61 கோடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-day-bankroll-donation-at-tirupati-temple-worth-rs-461-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-day-bankroll-donation-at-tirupati-temple-worth-rs-461-crore#comments</comments><guid isPermaLink="false">6174a0e4-3b4a-4578-bdc7-1c6bf31e0b7d</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:04:26 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:04:26.345Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமலை,திருப்பதி ஏழுமலையான் கோவிலில்,உண்டியல் காணிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/09escfvd/187.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/09escfvd/187.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருமலை,</p><p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.</p><h2>சாமி தரிசனம்</h2><p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 77 ஆயிரத்து 085 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 766 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒரு உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 61 லட்சம் ஆகும்.</p><p>அன்று 3 லட்சத்து 84 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 1 லட்சத்து 96 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். அஸ்வினி மருத்து வமனையில் 3 ஆயிரத்து 058 பேர் மருத்துவச் சிகிச்சை பெற்றனர்.</p><p>நேற்று முன்தினம் நிலவரப்படி திருமலையில் 14 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சாமி தரிசனம்</a> செய்ய சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6kg-hydroponic-cannabis-seized-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6kg-hydroponic-cannabis-seized-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">67b2d5db-02ba-4a29-a359-d6ceac2c104b</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:50:49 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:50:49.544Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Ganja,கஞ்சா,airport,விமான நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/xz6yggax/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/xz6yggax/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தாய்லாந்தில் சென்னைக்கு வரும் விமானத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.</p><h2>6 கிலோ கஞ்சா</h2><p>தகவலின் அடிப்படையில் நேற்று தாய்லாந்தில் இருந்து <a href="https://www.dailythanthi.com/">சென்னை </a>வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 2 வடமாநில பெண்கள் 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. </p><p>இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பெண்களையும் போலீசிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 6 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 2 பெண்களும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. </p>  ]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையம் ரத்து: மெட்ரோ ரெயில் திட்டத்திலும் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/paranthur-airport-cancelled-changes-in-metro-rail-project-as-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/paranthur-airport-cancelled-changes-in-metro-rail-project-as-well#comments</comments><guid isPermaLink="false">779fbe85-7e1a-4a2c-8155-63cbe880319c</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:35:44 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:35:44.018Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Metro Rail,ரத்து,மெட்ரோ,Paranthur Airport,பரந்தூர் விமானநிலையம்,Cancel</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/9v30igby/213.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெட்ரோ ரெயில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/9v30igby/213.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதனை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரெயில் திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>மெட்ரோ</h2><p>சென்னையில் இரண்டாம் கட்டமாக 116 கி.மீ. தூரத்துக்கு மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பணிமனை, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.</p><p>இதனிடையே, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை 53 கி.மீ. தூரத்துக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">மெட்ரோ </a>ரெயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கின.</p><h2>விமான நிலையத்திட்டம் ரத்து</h2><p>தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மெட்ரோ ரெயில் திட்டத்தின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி, முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை 28 கி.மீ. தூரத்துக்கு ரூ.8,779 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-shot-and-apprehended-a-rowdy-who-had-been-absconding-in-a-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-shot-and-apprehended-a-rowdy-who-had-been-absconding-in-a-murder-case#comments</comments><guid isPermaLink="false">8b95ae32-4447-4bdc-b1a2-c28457142db5</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:29:36 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:29:36.560Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,police,Cuddalore,கடலூர்,கிரைம் செய்திகள்,Encounter,என்கவுண்ட்டர்,Crime News in Tamil,போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/8n9l2rwg/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/8n9l2rwg/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரவுடி ஆனந்தராஜ் (36). இவருக்கும், கீழ்வடக்குத்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரௌடி கோபி (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கோபி மீது ஏற்கெனவே 2 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 29 வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p>கடந்த 16-ம் தேதி கோபி தனது கூட்டாளிகள் 16 பேருடன் சென்று ஆனந்தராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், இந்திரா நகரைச் சேர்ந்த நரேஷ்குமார் (26) சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.</p><p>இதுகுறித்து உயிரிழந்த நரேஷ்குமாரின் தாய் அம்மு (47) அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய 16 பேரில் 14 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ரவுடி கோபியை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர்.</p><p>இதற்கிடையே, முத்தாண்டிக்குப்பம் பகுதியில் ரவுடி கோபி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெய்வேலி நகர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட புலவன்குப்பம் சாலையில் உள்ள ஒதியடிவீரன் கோயில் அருகே விரைந்து சென்றனர்.</p><p>அங்கு பதுங்கியிருந்த கோபியை போலீசார் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது, அங்கிருந்து தப்பியோட முயன்ற கோபி, தன்னிடம் இருந்த அரிவாளால் போலீசாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலைமைக் காவலர் பாண்டியராஜன் (33) இடது கையிலும், மற்றொரு தலைமைக் காவலரான விஜயலாதசோழன் (36) இடது முழங்கையிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது.</p><p>இதையடுத்து கோபியைத் தாக்குதலை நிறுத்தும் வகையிலும், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தனது கைத்துப்பாக்கியால் கோபியின் வலது முழங்காலி இரண்டு முறை சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்து கீழே விழுந்த கோபியை போலீஸார் மடக்கிப் பிடித்து நெய்வேலி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.</p><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கோபிக்கு நெய்வேலி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த தலைமைக் காவலர்கள் பாண்டியராஜ் மற்றும் விஜயலாதசோழன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மிலாடி நபி நன்னாளில், மகிழ்ச்சியும், வளமும் நிறைந்திடட்டும்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-this-auspicious-milad-un-nabi-bring-happiness-and-prosperity-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-this-auspicious-milad-un-nabi-bring-happiness-and-prosperity-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">6a889df0-5c17-4cbf-a9b4-d468fd5f3615</guid><pubDate>Wed, 26 Aug 2026 02:48:56 +0000</pubDate><atom:updated>2026-08-26T02:48:56.756Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Milad-un-Nabi,மிலாடி நபி,Miladu Nabi,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/vug1y69y/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/vug1y69y/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாடி நபி பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள், பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர்.</p><p><strong>இந்த நிலையில், மிலாடி நபி பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாடி நபி நல்வாழ்த்துகள். </p><p>மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம். இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்: சென்னையில் நாளை 2-வது முத்தரப்பு கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-fares-for-autos-to-be-fixed-2nd-tripartite-meeting-to-be-held-in-chennai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-fares-for-autos-to-be-fixed-2nd-tripartite-meeting-to-be-held-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">49fa2fd4-1c3a-44a1-be70-9a944567cf39</guid><pubDate>Wed, 26 Aug 2026 02:45:12 +0000</pubDate><atom:updated>2026-08-26T02:45:12.188Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Meeting,கூட்டம்,autos,கட்டணம் நிர்ணயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/7qdlf7xv/212.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆட்டோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/7qdlf7xv/212.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை இறுதி செய்யும் நோக்கில், சென்னையில் நாளை இரண்டாவது முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது.</p><h2>புதிய கட்டணம்</h2><p>தமிழகத்தில் இயக்கப்படும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, சென்னையில் கடந்த ஜூலை 9-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும், பயணியர் அமைப்புகளில் இருந்து 90 பேரும் பங்கேற்றனர். </p><p>தொழிற்சங்கங்கள் தரப்பில் குறைந்தபட்ச கட்டணத்தை, 70 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தினர். பயணியர் அமைப்புகளின் நிர்வாகிகள் தரப்பில், குறைந்தபட்ச <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">கட்டணம்</a> 50 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தினர்.</p><h2>முத்தரப்பு கூட்டம்</h2><p>இதையடுத்து, புதிய கட்டணம் தொடர்பான இறுதி அறிக்கையை அரசு தயாரித்துள்ளது. இதனை இறுதி செய்து, புதிய கட்டணத்தை அறிவிப்பதற்காக சென்னையில் நாளை இரண்டாவது முறையாக முத்தரப்பு கூட்டம் நடைபெற உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச வீடியோ இருப்பதாக  மர்ம நபர் மிரட்டல்:  இளம்பெண் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stranger-threatened-with-obscene-video-teen-commits-suicide</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stranger-threatened-with-obscene-video-teen-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">cf30e68f-8c9e-41fb-ae00-331c4682da3e</guid><pubDate>Wed, 26 Aug 2026 02:08:03 +0000</pubDate><atom:updated>2026-08-26T02:08:03.675Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Video,இளம்பெண்,ஆபாச வீடியோ,மிரட்டல்,தற்கொலை,Suicide,threatened</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/393olotj/116.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளம்பெண் தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/393olotj/116.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருகம்பாக்கம்,</p><p>ஆபாச வீடியோ இருப்பதாக மர்ம நபர் மிரட்டிய நிலையில், அதிர்ச்சியடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>மர்ம நபர்</h2><p>சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், மதியழகன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 30). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரட்சிதா (27). நேற்று முன்தினம் ரட்சிதாவை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர். "தன்னிடம் உனது ஆபாச வீடியோ இருப்பதாகவும். அதனை உனது கணவருக்கு அனுப்பிவிடுவதாகவும் கூறி மிரட்டியதாக தெரிகிறது. </p><p>இதனால் அதிர்ச்சியடைந்த ரட்சிதா, இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். ரவிச்சந்திரன் தனது மனைவியிடம் கவலைப்பட வேண்டாம் என கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.</p><p>இதனால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரன், வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது. வீட்டின் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர். கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது ரட்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><h2>போலீசார்</h2><p>இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து ரட்சிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வீடியோ இருப்பதாக மிரட்டிய மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வரலாற்றில் முதன்முறையாக 10 மணிநேரம் தொடர்ந்து நடந்த தமிழக சட்டசபை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/for-the-first-time-in-history-the-tamil-nadu-legislative-assembly-session-continued-uninterrupted-for-10-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/for-the-first-time-in-history-the-tamil-nadu-legislative-assembly-session-continued-uninterrupted-for-10-hours#comments</comments><guid isPermaLink="false">177c3402-922a-4dc4-ab28-9fcc1f698fc4</guid><pubDate>Wed, 26 Aug 2026 02:07:56 +0000</pubDate><atom:updated>2026-08-26T02:07:56.645Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,தமிழக சட்டசபை,TN Assembly,JCD Prabhakar,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/nez80auf/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/nez80auf/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வரலாற்றில் முதன்முறையாக தமிழக சட்டசபை 10 மணிநேரம் தொடர்ந்து நடந்தது. இரவு 7 மணியையும் தாண்டியது.</p><h2>சட்டசபை நிகழ்வுகள்</h2><p>தமிழக சட்டசபை நிகழ்வுகள் கடந்த காலங்களில் பொதுவாக காலையில் தொடங்கி அதிகபட்சமாக பிற்பகல் 3 அல்லது 4 மணி வரை நீடிப்பது உண்டு. இதையே நீண்ட நேரம் நடை பெற்றதாக எம்.எல்.ஏ.க்கள் கூறுவதுண்டு. ஆனால் தற்போது த.வெ.க. ஆட்சியில், சட்டசபையில் கேள்வி நேரம் இல்லாத சூழ்நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த சில தினங்களாக புதிய முயற்சியை மேற்கொண்டார்.</p><p>அதன்படி, அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளின் போது, வெட்டுத் தீர்மானத்தில் பெயர் கொடுத்திருந்த எம்.எல்.ஏ.க்கள் விவாதித்த பிறகு வேறு எம்.எல்.ஏ.க்களையும் அவர்களின் கோரிக்கைகளை கூற அழைப்பு விடுத்தார். அந்த வகையில் தினமும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அவையில் பேசி, அவர்களது தொகுதியின் மிக முக்கியமான கோரிக்கைகளை கூற வாய்ப்பு கிடைத்தது. அதில் சில கோரிக்கைகளுக்கு பதிலும் கிடைத்தது.</p><h2>சபாநாயகர் பாராட்டு</h2><p>நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், காலையில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை, அரசு அதிகாரிகளிடம் இருந்து பெற்று, அவற்றை மாலை நேரத் தில் அறிவிப்புகளாக வெளியிட்டார். இதை சபாநாயகர் வெகுவாக பாராட்டினார். இதுதான் ஒரு அமைச்சரின் பொறுப்புக்கான உதாரணம் என்று குறிப்பிட்டார்.</p><p>எம்.எல்.ஏ.க்கள் பலரையும் கேள்விகள் கேட்க அனுமதிப்பதை அடுத்து அவை நடைபெறும் நேரம் கடந்த சில நாட்களாக மாலை 6 மணியை தாண்டிச் சென்றது. அதன் உச்சமாக நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய அவை இரவு 7.13 மணிவரை நீடித்தது. அந்த வகையில் சுமார் 10 மணி நேரம் அவை அலுவல்கள் நேற்று நடைபெற்றன. இதுதான் தமிழக சட்டசபை வரலாற்றில் இடைவெளி விடாமல் தொடர்ந்து அவை அதிகபட்சமாக நடைபெற்ற நேரமாக கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.65-க்கு விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-kilo-of-sugar-is-being-sold-for-rs65-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/one-kilo-of-sugar-is-being-sold-for-rs65-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">97a6afae-4733-457a-b2ea-a589356ec4d6</guid><pubDate>Wed, 26 Aug 2026 01:50:41 +0000</pubDate><atom:updated>2026-08-26T01:50:41.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,Action,நடவடிக்கை,மத்திய அரசு,Central Government,Sugar,சர்க்கரை,விலை குறைவு,price drop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/31d6b9vb/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்க்கரை விலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/31d6b9vb/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தமிழகத்தில்</a> சர்க்கரை விலை 9.7 சதவீதம் குறைந்து ஒரு கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">சர்க்கரை</a> ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>வரலாறு காணாத விலையேற்றம்</h2><p>தமிழகத்திற்கு சர்க்கரை வழங்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மராட்டிய மாநிலங்களில் முறையற்ற பருவமழை காரணமாக கரும்பு உற்பத்தி பெருமளவு குறைந்ததால் தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு சர்க்கரை விலையேற்றம் ஏற்பட்டது. இந்த சர்க்கரை விலையேற்றத்தை பயன்படுத்தி, மராட்டிய மாநிலத்தில் உள்ள சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் சர்க்கரை பதுக்கல்களும் நடைபெற்று வந்தது. </p><p>இதுபோக, இ-20 பெட்ரோல் தயாரிக்க கரும்பில் இருந்து எத்தனால் எடுக்கப்பட்டதாலும் சர்க்கரை விலை உயர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால், இதற்கு மத்திய அரசு சார்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டு, சர்க்கரை விலை உயர்வுக்கும் இ-20 பெட்ரோல் தயாரிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்பட்டது. எனினும், சர்க்கரை விலை படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் வரை கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p><h2>மத்திய அரசு அனுமதி</h2><p>இந்த நிலையில், சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டு சர்க்கரை பதுக்கலை தடுத்து வருகிறது. </p><h2>9.7 சதவீதம் விலை குறைவு</h2><p>இதுபோன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் சர்க்கரை கையிருப்பு சீராகி அதன் விலை குறையத் தொடங்கி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை நேற்று ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது சதவீதத்தில் கணக்கிடும்போது, 9.7 சதவீதம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81">விலை குறைவாகும்</a>. இன்னும் வரும் காலங்களில் சர்க்கரை விலை மேலும் குறையும் என்று சர்க்கரை ஆலைகளின் உயரிய அமைப்பான இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத் தலைவர் நீரஜ் ஷிர்கோகர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>
 புதுவையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட அமைச்சர் மரிய வில்சன்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilson-set-out-on-a-pilgrimage-on-foot-from-puducherry-to-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilson-set-out-on-a-pilgrimage-on-foot-from-puducherry-to-velankanni#comments</comments><guid isPermaLink="false">e16913d6-934d-4bae-af9a-ab9b0fdd9cd7</guid><pubDate>Wed, 26 Aug 2026 01:39:22 +0000</pubDate><atom:updated>2026-08-26T01:39:22.076Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுவை,Velankanni,வேளாங்கண்ணி,puduvai,maria wilson,அமைச்சர் மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/p2qj4r6y/velenganni.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/p2qj4r6y/velenganni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட அமைச்சர் மரியவில்சன்பக்தர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படும் என்று உறுதிகடலூர், ஆக.26-நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.அந்த வகையில் தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் புதுச்சேரியில் இருந்து நேற்று காலை வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். </p> <p>மாலை 5 மணி அளவில் கடலூர் வருகை தந்த அவர், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சென்னையில் இருந்து கடந்த 27 ஆண்டுகளாக வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்கிறேன். இந்த வருடம் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளதால், வேளாங்கண்ணி மாதாவிற்கு நன்றி கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனக்கு மட்டுமின்றி, தமிழகத்தி்ற்கும் நல்லது நடந்துள்ளது.அதனால் இந்தாண்டு தொடர்ந்து 28-வது முறையாக சென்று நன்றி சொல்ல பாதயாத்திரை செல்கிறேன். </p> <p>பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பதால் சென்னைக்கு பதிலாக, புதுச்சேரியில் இருந்து புறப்படுகிறேன்.ஏற்கனவே சாதாரணமானவனாக இருந்தேன். ஆனால் தற்போது அமைச்சராக இருப்பதால், ஒவ்வொரு மாவட்டத்தையும் கடந்து செல்லும் போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் மனு அளிக்கின்றனர். இதுதொடர்பாக துறை சார்ந்த அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், கழிவறை, முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக மேற்கொள்ளவும், அடுத்தாண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பிரசவம்: ஆம்புலன்சிலேயே பிறந்த ஆண் குழந்தை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delivery-on-the-way-to-the-hospital-baby-boy-born-in-the-ambulance</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delivery-on-the-way-to-the-hospital-baby-boy-born-in-the-ambulance#comments</comments><guid isPermaLink="false">24dc5818-2d10-4a50-a930-67893f18e355</guid><pubDate>Wed, 26 Aug 2026 01:35:57 +0000</pubDate><atom:updated>2026-08-26T01:35:57.906Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ambulance,ஆம்புலன்ஸ்,ஆண் குழந்தை,Baby Boy,hospital,ஆஸ்பத்திரி,பிரசவம்,Born</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/p47op77b/211.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குழந்தை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/p47op77b/211.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவருடைய மனைவி வாணிப்ரியா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.</p><h2>ஆம்புலன்ஸ்</h2><p>இதனையடுத்து, அவருடைய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த உடனே அருகாமையில் இருந்த வேளச்சேரி பகுதி ஆம்புலன்ஸ் குழுவினர் வாணிப்ரியாவின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரை ஆம்புலன்சில் ஏற்றி, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.</p><p>ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் வாணிப்ரியாவிற்கு பிரசவவலி அதிகமானது. குழந்தை பிறக்கும் அறிகுறி தெரிந்ததால், ஆம்புலன்சை ஊழியர்கள் ஓரமாக நிறுத்தினர். தொடர்ந்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">ஆம்புலன்சில்</a> இருந்த அவசர மருத்துவ சிகிச்சை நிபுணர் யுவராஜாவின் துரித முயற்சியால் வாணிப்ரியாவிற்கு ஆம்புலன்சிலேயே சுகப்பிரசவம் நடந்தது. </p><p>அவருக்கு 2.4 கிலோ எடையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் மேல் சிகிச்சைக்காக சேப்பாக்கத்தில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூரில் இருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இன்று முதல் வழக்கம் போல் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-express-trains-from-egmore-will-operate-as-usual-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/all-express-trains-from-egmore-will-operate-as-usual-starting-today#comments</comments><guid isPermaLink="false">cf312c37-e87e-4452-9444-0e5522438e6e</guid><pubDate>Wed, 26 Aug 2026 01:15:33 +0000</pubDate><atom:updated>2026-08-26T01:15:33.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Express train,எக்ஸ்பிரஸ் ரெயில்,Egmore,எழும்பூர்,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/shb297s5/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/shb297s5/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எழும்பூரில் இருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>மறுசீரமைப்பு பணி</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.</p><p>இதன் காரணமாக, எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. அதேபோல், தென்மாவட்டங்களிலிருந்து எழும்பூர் வரும் ரெயில்கள் தாம்பரம் மற்றும் மாம்பலம் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வந்தன. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே முறையான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.</p><h2>வழக்கம்போல் இயக்கம்</h2><p>இந்தநிலையில், தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம் போல் இன்று (புதன்கிழமை) முதல் எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. அதேபோல, பிற பகுதிகளில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கே வந்தடையும்.</p><p>இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரெயில்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது. எனவே, தற்போது அனைத்து ரெயில்களும் வழக்கம் போல் எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். அடுத்தகட்டமாக ரெயில் மாற்றங்கள் குறித்த புதிய அறிவிப்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வரும் வரையில் இதே நடை முறை தொடரும்' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெயிண்டர் ஓட, ஓட வெட்டிக்கொலை- 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-painter-hacked-to-death-in-illegal-communication-case-5-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-painter-hacked-to-death-in-illegal-communication-case-5-arrested#comments</comments><guid isPermaLink="false">f0e043df-d876-4313-b4d4-dd6754ad68d8</guid><pubDate>Wed, 26 Aug 2026 01:10:44 +0000</pubDate><atom:updated>2026-08-26T01:10:44.672Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,வெட்டிக்கொலை,Painter,பெயிண்டர்,5 people arrested,5 பேர் கைது,கள்ளத்தொடர்பு விவகாரம்,hacked to death,Fake communication issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/eq16cfzs/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை செய்யப்பட்ட மாரி மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திய கார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/eq16cfzs/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">கள்ளத்தொடர்பு விவகாரத்தில்</a> மோட்டார்சைக்கிள் மீது காரை மோதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">பெயிண்டர்</a> ஓட, ஓட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக்கொலை</a> செய்யப்பட்டது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">5 பேர் கைது</a> செய்யப்பட்டனர். </p><h2>பைக் மீது கார் மோதல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவள்ளூர்</a> அருகே உள்ள சிற்றத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி(எ) ரூபன் (வயது 32). பெயிண்டரான இவர் மீது அடிதடி குற்ற வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்தது தொடர்பாக மாரியை போலீசார் கைது செய்திருந்தனர். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர் வெங்கல் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். வழக்கம் போல் நேற்று காலை 11 மணியளவில் மாரி தனது நண்பர் வெங்கடேசனுடன் மோட்டார் சைக்கிளில் வெங்கல் போலீஸ் நிலையத்தில் வந்து கையெழுத்து போட்டார். பின்னர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். வெங்கடேசன் மோட்டார் சைக்கிளை ஓட்ட பின்னால் மாரி அமர்ந்து சென்றார். பாகல்மேடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. </p><h2>வெட்டிக்கொலை</h2><p>இதில், நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளோடு இருவரும் கீழே விழுந்தனர். உடனே காரில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மாரியை சுற்றி வளைத்தனர். இதனால் பதற்றம் அடைந்த மாரி அவர்களிடம் இருந்து உயிர் தப்பிப்பதற்காக தப்பி ஓட முயன்றார். இருப்பினும் கொலை வெறி கும்பல் மாரியை பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த மாரி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். </p><h2>3 பேரை பிடித்த பொதுமக்கள்</h2><p>அவரது கையின் மணிக்கட்டு பகுதி துண்டாகி தனியாக கிடந்தது. மேலும் மாரியின் முகம் முழுவதும் வெட்டி சிதைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலை திட்டத்தை அரங்கேற்றிய கும்பல் மீண்டும் காரில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். பதற்றத்தில் அவர்கள் காரை ஓட்டி சென்றபோது அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவரின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டு நின்றது. இதையடுத்து திரண்டு வந்த பொதுமக்கள் 3 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து வெங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். </p><h2>5 பேர் கைது</h2><p>கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய கார், அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் கீழானூர் பகுதியைச் சேர்ந்த தீனா(25), நரேஷ்(20), விக்கி(எ) கலாநிதி(23) என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய மேலானூர் பகுதியைச் சேர்ந்த பேரரசு(19), ராஜ்குமார்(20) ஆகிய 2 பேரை ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.</p><h2>கள்ளத்தொடர்பு</h2><p>போலீஸ் விசாரணையில் தீனாவின் திருமணம் ஆன சகோதரி தீபாவுடன் மாரி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் தீபாவின் கணவர் தனது மனைவியை அடித்து உதைத்து அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பழி தீர்க்கும் வகையில் தீனா இந்த கொலையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெயிண்டர் மாரிக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையை 28-ம் தேதி திறக்க திட்டம்? - விஜய் பயண ஏற்பாடுகள் தீவிரம்   </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-reaches-90-feet-plan-to-open-on-the-28th-vijays-travel-arrangements-in-full-swing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-reaches-90-feet-plan-to-open-on-the-28th-vijays-travel-arrangements-in-full-swing#comments</comments><guid isPermaLink="false">d4384aae-fac9-4b9e-b429-22ec6f046cab</guid><pubDate>Wed, 26 Aug 2026 00:56:11 +0000</pubDate><atom:updated>2026-08-26T00:56:11.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,மேட்டூர் அணை,Mettur dam,நீர் மட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/ahor93xe/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/ahor93xe/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்</p><p>மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். நீர் இருப்பை பொறுத்து குறித்த நேரத்திலோ அல்லது கால தாமதமாகவோ அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் உட்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. &nbsp; அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் சுமார் 70 நாட்கள் ஆகிய நிலையிலும் அணையில் இருந்து குறுவை சாகுபடி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். &nbsp; </p> <h2>90 அடியை எட்டும் போது... &nbsp; </h2><p>நேற்று அணையின் நீர்மட்டம் 88.43 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 807 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. வழக்கமாக ஜூன் 12-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படாதபட்சத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும்போது தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி விடும் என தெரிகிறது. &nbsp; நேற்று காலை சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், விரைவில் நல்ல பதில் வரும் என்று கூறி இருந்தார். &nbsp; இதற்கிடையே நேற்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மேட்டூர் அணைக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. &nbsp; </p><h2>நாளை மறுநாள் &nbsp; </h2><p>இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் 28-ந் தேதி (நாளை மறுநாள்) மேட்டூர் அணையை திறக்க இருப்பதாக நேற்று மாலை தகவல் வெளியாகி உள்ளது. அவர், விமானம் மூலம் சேலம் கமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் மேட்டூர் செல்கிறார். அப்போது டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க 10-வது நாளாக தடை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-in-hogenakkal-cauvery-river-increases-ban-on-parisal-operation-for-10th-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-in-hogenakkal-cauvery-river-increases-ban-on-parisal-operation-for-10th-day#comments</comments><guid isPermaLink="false">fe5c1005-fafa-42c7-b708-0cf197de01e3</guid><pubDate>Wed, 26 Aug 2026 00:53:18 +0000</pubDate><atom:updated>2026-08-26T00:53:18.713Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,waterfall,பென்னாகரம்,காவிரி ஆறுCauvery river,Increase in water flow - நீர்வரத்து அதிகரிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/a0jgictg/216.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒகேனக்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/a0jgictg/216.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம்,</p><p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பரிசல் இயக்க 10-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">ஒகேனக்கல்</a> காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீடிப்பதால், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. </p><h2>பரிசல் இயக்க தடை</h2><p>கரையோரப் பகுதிகளில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 10-வது நாளாக தொடர்கிறது. </p><p>இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். எனினும் அருவிகளில் குளிக்கத் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
தமிழகத்தில் பெண்கள் கட்டணமின்றி எத்தனை பஸ்களில் பயணிக்கலாம் தெரியுமா?
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-many-buses-can-women-travel-free-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-many-buses-can-women-travel-free-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">0b7a8d5f-387d-4494-9662-50b8c04fb1a7</guid><pubDate>Wed, 26 Aug 2026 00:41:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T00:41:45.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>women,பெண்கள்,பஸ்கள்,buses</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/xa10xj6x/tnwha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/xa10xj6x/tnwha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழகத்தில் பெண்கள் கட்டணமின்றி எத்தனை பஸ்களில் பயணிக்கலாம் என்ற விவரம் வெளியாகி உள்ளது.</p><p>தமிழகத்தில் <a href="https://www.dailythanthi.com/">முதல்-அமைச்சர் விஜய்</a>, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தை விரிவாக்கம் செய்து காந்தி பிறந்தநாளான வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் 'வெற்றி பயணம்' திட்டத்தை செயல்படுத்த உள்ளார்.</p><p>அதன்படி, முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரண பஸ்கள் மட்டுமின்றி, மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பஸ்களிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பஸ்களில் மகளிர் கட்டணமில்லா பயணங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>72 லட்சம் பெண்கள்</h2><p>அதாவது, இதுவரை நடைமுறையில் இருந்த மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தில், தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 710 சாதாரண மாநகர பஸ்களில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்து வந்தனர். அதன்படி தினசரி 72 லட்சம் பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்து வந்தனர்.</p><p>இந்த நிலையில், தற்போது புதிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ள 'வெற்றி பயணம்' திட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பஸ்கள் என கூடுதலாக 2 ஆயிரத்து 302 பஸ்களில் வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க உள்ளனர். இது தவிர, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக 2 ஆயிரத்து 47 சாதாரண கட்டண புறநகர் பஸ்களிலும், 275 சாதாரண கட்டண மலைப்பகுதி பஸ்களிலும் வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.</p> <h2>1.15 கோடி</h2><p>அதன்படி, தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 334 பஸ்களில் வெற்றி பயண திட்டத்தின் மூலம் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். மொத்தமாக புதிய வெற்றி பயணம் திட்டத்தின்படி, ஏற்கனவே பயணித்த பஸ்களைவிட கூடுதலாக 4 ஆயிரத்து 624 பஸ்கள் பெண்களின் கட்டணமில்லா பயணத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இதன் மூலம் தினசரி ஒரு கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் தினசரி பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>தஞ்சையில் உலக தமிழ் மாநாடு:  அ.ம.மு.க. உறுப்பினர் காமராஜ் கோரிக்கை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-tamil-conference-in-thanjavur-ammk-member-kamaraj-request</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-tamil-conference-in-thanjavur-ammk-member-kamaraj-request#comments</comments><guid isPermaLink="false">0e6aeae1-6911-4021-9659-85310408e46b</guid><pubDate>Wed, 26 Aug 2026 00:24:59 +0000</pubDate><atom:updated>2026-08-26T00:24:59.659Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சை,AMMK,அ.ம.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/xs2yvkx4/aplda.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அ.ம.மு.க.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-26/xs2yvkx4/aplda.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தஞ்சையில் உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என்று அ.ம.மு.க. உறுப்பினர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.</p><h2>உலக தமிழ் மாநாடு</h2><p>அப்போது அ.ம.மு.க. உறுப்பினர் காமராஜ் (மன்னார்குடி) பேசும்போது, எனது தொகுதியில் 100 ஆண்டு கால பிரச்சினையான நீடாமங்கலம் பேரூராட்சிக்கு பஸ் நிலையம் கட்டப்படும் என்ற அறிவிப்பை (நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை) வெளியிட்ட முதல்-அமைச்சருக்கு மன்னார்குடி தொகுதி மக்கள் சார்பிலும், நீடாமங்கலம் பேரூராட்சி மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் ராஜ்மோகன், த.வெ.க. அரசு விரைவில் உலக தமிழ் மாநாட்டை நடத்தும் என்று அறிவித்தார். அவ்வாறு உலக தமிழ் மாநாட்டை நடத்தினால் அதனை தஞ்சையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.</p> ]]></content:encoded></item><item><title>
எனது கணவரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்:  எம்.எல்.ஏ. லீமா ரோஸ்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-drag-my-husband-unnecessarily-mla-leema-rose</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-drag-my-husband-unnecessarily-mla-leema-rose#comments</comments><guid isPermaLink="false">fa615736-13b9-4a72-a0ce-42b6cbd60b43</guid><pubDate>Tue, 25 Aug 2026 23:12:22 +0000</pubDate><atom:updated>2026-08-25T23:12:22.470Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எம்.எல்.ஏ.,MLA,லீமா ரோஸ்,Leema Rose Martin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/en9oh2sr/lcllr.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/en9oh2sr/lcllr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>எனது கணவரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் என லால்குடி எம்.எல்.ஏ. <a href="https://www.dailythanthi.com/news/india">லீமா ரோஸ் </a>கூறியுள்ளார்.</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.</p> <h2>சட்டரீதியாக தொழில்</h2><p>அப்போது, தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவையில் லாட்டரி குறித்து பேசினார்.  இதுபற்றி லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கூறும்போது, சட்டசபையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட சிலர் லாட்டரி குறித்து பேசி அவர்கள் செய்த தவறை  மறைக்கின்றனர்.  அதற்காக லாட்டரி என தொடர்ந்து பேசி வருகின்றனர்.</p><p>என் கணவர் வேறு மாநிலத்தில் தொழில் செய்து வருகிறார். எந்த அரசு வந்தாலும் நாங்கள் வரி செலுத்தி வியாபரம் செய்து வருகிறோம்.  அண்ணா ஆட்சியில் லாட்டரி தொழில் கொண்டு வரப்பட்டது. லாட்டரி விற்பனையை கொச்சைப்படுத்துவது போன்று பேசுகிறார்.  நாங்கள் சட்டரீதியாக உரிமம் பெற்று தொழில் செய்கிறோம்.</p><p>சட்டவிரோத வகையில் லாட்டரி தொழில் எதுவும் செய்யவில்லை.  எந்த அமைச்சர் கேள்வி கேட்டாரோ அவருக்கு பதில் அளிக்க வேண்டும். தேவையில்லாமல் எனது கணவரை இழுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>
தூத்துக்குடி - சில்லாநத்தம் பகுதியில் ரூ.774 கோடியில் மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா:  தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-sillanatham-ev-manufacturing-park-774-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-sillanatham-ev-manufacturing-park-774-crore#comments</comments><guid isPermaLink="false">3f3a62bb-7d46-4424-ab44-3bdc3fd806f3</guid><pubDate>Tue, 25 Aug 2026 19:40:10 +0000</pubDate><atom:updated>2026-08-25T19:40:10.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana,electric vehicle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/y49njklo/tnlka.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/y49njklo/tnlka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தூத்துக்குடி - சில்லாநத்தம் பகுதியில் ரூ.774 கோடியில் மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார்.</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.</p> <h2>மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா</h2><p>இதில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பேசும்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  இதன்படி, தூத்துக்குடி - சில்லாநத்தம் பகுதியில் சுமார் 1,294 ஏக்கர் நிலப்பரப்பில் "மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா" சிப்காட் நிறுவனத்தால் ரூ.774 கோடியில் அமைக்கப்படும். இதன்மூலம் ரூ.7,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதுடன், 10,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.</p><p>இப்பூங்காவில் அடிப்படை, சமூக மற்றும் சிறப்பு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார்.</p> <h2>நிவாரண தொகை உயர்வு</h2><p>இதேபோன்று உப்பள தொழிலாளர் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரண தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.  இத்திட்டத்தின் மூலம் சுமார் 23,000 தொழிலாளர் குடும்பங்கள் பயனடையும். இதற்கான ரூ.16.78 கோடி செலவினை அரசே ஏற்கும் என்றும் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.</p><p>தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இருவித செறிவூட்டப்பட்ட உப்பு, வெற்றி செறிவூட்டப்பட்ட உப்பு நியாய விலைக்கடைகளிலும் வெளிச்சந்தைகளிலும் விற்பனை செய்யப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விஜய் நீக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mariya-vilsonai-amanicharavaiyil-irundu-muthalvar-vijay-neekka-venum-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mariya-vilsonai-amanicharavaiyil-irundu-muthalvar-vijay-neekka-venum-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">0123b72b-cca8-4ee0-ac7f-a11778db69ef</guid><pubDate>Tue, 25 Aug 2026 16:13:52 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:13:52.458Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,நயினார் நாகேந்திரன்,லஞ்சம்,Bribery,Nainar Nagenthran,மரிய வில்சன்,Minister Maria Wilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/jf31cxff/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/jf31cxff/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்! இரு தரப்பினர் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேசுக்கு லஞ்சம் கொடுத்ததை பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் மீதும் முன்னாள் கல்வியமைச்சர் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.</p><p>லஞ்சம் கேட்டவர் மீது மரிய வில்சன் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி எவ்வித புகாரும் அளிக்காமல், இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கூறி விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன? குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கும் வகையில் மரிய வில்சனின் கல்வி நிறுவனத்தில் என்ன சட்டரீதியான குறைபாடுகள் உள்ளன? தனது தனிப்பட்ட நலனுக்காக லஞ்சம் கொடுத்து, தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் குணநலன் கொண்ட மரிய வில்சனை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால், அரசு இயந்திரம் எப்படி நேர்மையாக இயங்கும்?</p><p>எனவே, ஒப்புதல்கள் அல்லது அனுமதிகளைப் பெற ஒரு அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8, ஊழல் செயலுக்குத் துணை போனதற்காக பிரிவு 12, சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் வழங்கியதற்காக BNS-ன் பிரிவு 61 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சமரசமின்றி முறையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை, மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விஜய் நீக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம், மீலாது நபி விடுமுறை: நாளை மறுநாள் மீண்டும் கூடும் சட்டசபை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-and-milad-un-nabi-holidays-assembly-to-reconvene-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-and-milad-un-nabi-holidays-assembly-to-reconvene-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">6e7f5437-f15b-49ad-a17d-be01902a7a5d</guid><pubDate>Tue, 25 Aug 2026 16:10:14 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:10:14.361Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,விடுமுறை,Holiday,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Milad-un-Nabi,Onam,ஓணம்,மீலாது நபி,தமிழக சட்டசபை கூட்டம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/enlda3oi/tomorrow.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/enlda3oi/tomorrow.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நாளை (26.08.2026) மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி <a href="https://www.dailythanthi.com/topic/tn-assembly">தமிழக சட்டசபை</a>க்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>பட்ஜெட்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/tn-assembly">சட்டசபையில்</a> த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.</p><h2>புதிய அறிவிப்புகள்</h2><p>பின்னர் சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் சட்டசபை கடந்த 17-ந்தேதி மீண்டும் கூடியது. அது முதற்கொண்டு, பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. பின்னர், இந்த துறைகளின் சார்பில் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.</p><p>இந்நிலையில் சட்டசபையில் இயற்கை வளங்கள்துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது.</p><h2>மானியக் கோரிக்கைகள்</h2><p>எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்கினார்கள். மேலும் அவர்கள் துறையின் சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. </p><p>காரசார விவாதங்கள், பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தொழில்துறை, சுற்றுசூழல் துறை கனிவனத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. </p><h2>நாளை மறுநாள்</h2><p>இதனைத்தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/tn-assembly">தமிழக சட்டசபையின்</a> இன்றைய நிகழச்சிகள் சரியாக இரவு 7.13 மணிக்கு நிறைவுக்கு வந்தது. காலை 9.30 மணிக்கு கூடிய சபை இடைவிடாமல் சுமார் 10 மணி நேரம் நடந்தது. </p><p>இந்த சூழலில் நாளை மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சட்டசபை நாளை மறுநாள் (27-ந் தேதி) கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அதிகாரிகள் தாமதத்துக்கு மாணவி பொறுப்பல்ல... மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்க ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-delay-not-students-fault-madras-hc-medical-counselling</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-delay-not-students-fault-madras-hc-medical-counselling#comments</comments><guid isPermaLink="false">aa7cddef-bf72-4123-9dc8-2a61372ea1c3</guid><pubDate>Tue, 25 Aug 2026 16:04:40 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:04:40.676Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,Counseling,மருத்துவ கலந்தாய்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/s8yymtl5/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/s8yymtl5/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாதிச்சான்றிதழ் வழங்க அதிகாரி ஏற்படுத்திய தாமதத்துக்காக, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவியை பொறுப்பாக்க முடியாது. மாணவி மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>மருத்துவ படிப்பு</h2><p>மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்னை அம்பத்தூரை சேர்ந்த வி.கீர்த்தி விண்ணப்பித்தபோது, அவரிடம் இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, கிறிஸ்துவ சிறுபான்மை சான்று ஆகியவை இல்லாததால், அவை கிடைத்த பின்னர் சமர்ப்பிப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தார்.</p><p>கீர்த்திக்கு கடந்த 4-ந்தேதி கிறிஸ்துவ சிறுபான்மை சான்று, 11-ந்தேதி இருப்பிடச்சான்று, 15-ந்தேதி சாதிச்சான்று ஆகியவை கிடைத்த பின்னர், அவற்றை பதிவேற்றம் செய்தபோது, அதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டதாக கூறி, அவை ஏற்க மறுக்கப்பட்டுள்ளது.</p><h2>அதிகாரி வழங்க தாமதம்</h2><p>இதனை எதிர்த்து கீர்த்தி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு 12-ந்தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், சாதிச்சான்று 15-ந்தேதிதான் வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி, அந்த தாமதத்துக்கு மாணவியை பொறுப்பாக்க முடியாது என தெரிவித்துள்ளார்.</p><p>சான்றிதழை வழங்கும் அதிகாரியால் ஏற்பட்ட தாமதத்துக்காக மனுதாரரை குறைகூற முடியாது என்றும், நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சான்றிதழை சமர்ப்பிக்காததை மட்டுமே காரணமாக கொண்டு விண்ணப்பத்தை நிராகரித்ததை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>அனுமதிக்க உத்தரவு</h2><p>அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, தகுதி, தரவரிசை மற்றும் இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு உட்பட்டு, கீர்த்தியை கலந்தாய்வு நடைமுறையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துவிட்டால், அடுத்தடுத்த சுற்றுகளில் அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சை பேச்சு விவகாரம்... உதயநிதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversial-remarks-during-farmers-protest-national-commission-for-women-recommends-action-against-udhayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversial-remarks-during-farmers-protest-national-commission-for-women-recommends-action-against-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">4df943e6-fa6d-4c4e-be00-3176680d7be2</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:49:56 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:49:56.868Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,உதயநிதி ஸ்டாலின்,தஞ்சாவூர்,விவசாயிகள் போராட்டம்,தேசிய மகளிர் ஆணையம்,Udhayanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/u6zt1x6j/ud.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/u6zt1x6j/ud.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.</p><h2>சர்ச்சை பேச்சு</h2><p>தஞ்சாவூரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக உதயநிதி மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தஞ்சாவூர் போலீசார், அவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.</p><h2>தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்</h2><p>இதனைத் தொடர்ந்து, தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் செல்வகுமார், உதயநிதியின் பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.</p><p>அந்த புகார் மனுவில், தெரிவித்த கருத்துக்கு உதயநிதியிடம் விளக்கம் கேட்கவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், உதயநிதி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.</p><h2>மாநில மகளிர் ஆணையத்துக்கு பரிந்துரை</h2><p>இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2: வழித்தடம்-5-ல் கடைசி தூண் வார்ப்புப் பணி நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-rail-project-phase-2-casting-of-the-final-pillar-on-corridor-5-completed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-rail-project-phase-2-casting-of-the-final-pillar-on-corridor-5-completed#comments</comments><guid isPermaLink="false">fd8d37e0-6fdd-4f82-a750-0994fe27db4c</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:26:27 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:26:27.193Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,சென்னை மெட்ரோ,chennai metro,சென்னை மெட்ரோ ரெயில்,Metro train</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/si3zxrui/nirai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/si3zxrui/nirai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai-metro">சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்</a> கட்டம்-2, வழித்தடம்-5-ல் ECV-03 திட்டத்தின் கீழ் கடைசி தூண் வார்ப்புப் பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சென்னை மெட்ரோ</h2><p>இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இந்திய உள்கட்டமைப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகரான AEON Consortium மற்றும் ஒப்பந்த நிறுவனமான HCC-KEC Consortium ஆகியவற்றுடன் இணைந்து, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2, வழித்தடம்-5-ல் ECV-03 திட்டத்தின் கீழ் மேடவாக்கம்-1 மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 25 மீட்டர் உயரமுள்ள கடைசி தூணின் (தூண் P814) வார்ப்புப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.</p><h2>சவாலானப் பகுதிகள்</h2><p>உள்ளகரம் மெட்ரோ நிலையத்திலிருந்து எல்காட் மெட்ரோ நிலையம் வரை உள்ள இந்த 11.3 கி.மீ. நீளமுள்ள இப்பகுதியில் மொத்தம் 513 பெரிய அடித்தளத் தூண்கள் (piers) அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 2351 தூண்கள் (Piles) அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மிகவும் சவாலானப் பகுதிகளில் ஒன்று, மேடவாக்கம் கூட்டுச் சாலை அருகிலுள்ள தூண் P879 முதல் செம்மொழிச் சாலையில் உள்ள தூண் P868 வரையிலான பகுதியாகும். இப்பகுதியில் அமைக்கப்பட்ட தூண்கள் இந்தப் பிரிவிலேயே மிக உயரமானவை ஆகும்; இவற்றின் அதிகபட்ச உயரம் சுமார் 29 மீட்டர். </p><h2>இரும்பு இணைப்புப் பாலம்</h2><p>இந்தப் பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ வழித்தடமானது, ஏற்கனவே உள்ள மேடவாக்கம் மேம்பாலத்திற்கு மேலே சுமார் 29 மீட்டர் உயரத்தில் கடந்து செல்கிறது. மேலும், 125 மீட்டர் ஆரம் கொண்ட கூர்மையான வளைவுப் பாதையில் 57 மீட்டர் நீளமுள்ள இரும்பு இணைப்புப் பாலம் (Steel Girder Span) அமைக்கப்பட்டுள்ளது. பொறியியல் ரீதியான சவாலை மேலும் அதிகரிக்கும் விதமாக, மேடவாக்கம்-1 மற்றும் மேடவாக்கம்-2 ஆகிய மெட்ரோ நிலையங்களும் இந்தப் பகுதியில் சாலை மட்டத்திலிருந்து சுமார் 29 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ycz8y0iy/metrrr.jpg" /></figure><h2>முக்கியமான மைல்கல்</h2><p>அதிக மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதிகளில் இத்தகைய சிக்கலான கட்டுமானங்களை மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. குறிப்பாக, போக்குவரத்தை மாற்றி அமைப்பது, பயன்பாட்டில் உள்ள மேம்பாலத்திற்கு மிக அருகிலும் அதற்கு மேலேயும் பணிகளைப் பாதுகாப்பாக நிறைவேற்றுவது ஆகியவை பிரதான சவால்களாக இருந்தன. துல்லியமான திட்டமிடல், சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் சீரான செயல்பாடுகளின் மூலம் இந்தச் சவால்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டன. தற்போது 513-வது மற்றும் கடைசித் தூணான P814-ன் கான்கிரீட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்திருப்பது, இத்திட்டத்தின் முக்கியமான ஒரு மைல்கல்லாகும்.</p><h2>மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம்</h2><p>இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், இணைப் பொது மேலாளர்  ஆர். சீனிவாசன், AEON Consortium நிறுவனத்தின் குழுத் தலைவர் சி. முருகமூர்த்தி, குடியிருப்புப் பொறியாளர்  ஜி. சுரேஷ் கண்ணன், HCC-KEC கூட்டமைப்பின் திட்ட மேலாளர்  லாலிச்சன் ஆண்டனி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், AEON மற்றும் HCC-KEC ஆகிய நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.</p><p>தூண் அமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தை உரிய நேரத்தில் முடிக்கும் வகையில், U-girder அமைத்தல் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>