<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 18 Sep 2026 02:31:14 +0000</lastBuildDate><item><title>மாணவர் பாரதிதாசனுக்கு உடனடியாக அரசு நிதி வழங்க வேண்டும் - நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-immediately-provide-financial-assistance-to-student-bharathidasan-neelam-cultural-centre-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-immediately-provide-financial-assistance-to-student-bharathidasan-neelam-cultural-centre-urges#comments</comments><guid isPermaLink="false">f80f51e9-2ef8-4d35-b8de-3b4a121f772e</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:30:04 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:30:04.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Malaysia,மலேசியா,மாணவன்,student,தமிழக அரசு,கல்வி நிதி,நீலம் பண்பாட்டு மையம்,pa.ranjith,பா. இரஞ்சித்,Neelam Culture Center,education fund</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/eemg44n8/santha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/eemg44n8/santha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுடன் ஒரு மாணவர் வீடியோ வெளியிடும் நிலைக்கு இந்தச் சூழலை அரசு அனுமதித்திருக்கக் கூடாது என்று நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>பல்வேறு நெருக்கடி</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/tamilnadu">தமிழ்நாடு </a>அரசின் அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசன் ராமன் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய Research Expenses மற்றும் அடுத்த ஆறு மாதங்களுக்கான Living Expenses உள்ளிட்ட நிதி நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. இதனால் தனது கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு மத்தியில் அவர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.</p><p>இந்தப் பிரச்சனை தொடங்கியதிலிருந்தே பல்வேறு ஜனநாயக சக்திகளும், சமூகநீதியில் அக்கறை கொண்ட இயக்கங்களும் மாணவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, அரசுக்கு எழுத்துப்பூர்வமாகவும். தனிப்பட்ட முறையிலும் கோரிக்கைகளை முன்வைத்து, இப்பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.</p><h2>விரைவில் தீர்வு</h2><p>அதன் தொடர்ச்சியாக, நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனத் தலைவர் பா.இரஞ்சித் அவர்கள் சமூகநீதி துறை அமைச்சர் வன்னியரசு அவர்களையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் இணை இயக்குநர் அவர்களையும் தொடர்புகொண்டு, மாணவரின் நிலைமை குறித்தும், அவரது ஆய்வுப் பணிகள் பாதிக்கப்படாத வகையில் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். </p><p>இதனைத் தொடர்ந்து, மாணவரைத் தொடர்புகொண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிதியை அவருக்கு எவ்வாறு வழங்குவது என்பதற்கான நடைமுறையை வகுத்து, அதன் அடிப்படையில் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளனர்.</p><h2>மாணவர் வீடியோ</h2><p>ஒரு மாணவர் தனது கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு மத்தியில் பல மாதங்கள் தொடர்ந்து போராடி, பல்வேறு தரப்பினரிடம் முறையிட்ட பின்னர்தான் ஒரு நடைமுறையை உருவாக்கி தீர்வு காணும் நிலை ஏற்பட்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. இத்தகைய பிரச்சனைகள் உருவாகாமல் இருப்பதற்கான வழிமுறைகளை அரசு முன்கூட்டியே வகுத்திருக்க வேண்டும்.</p><p>இந்தப் பிரச்சனையின் இறுதிக்கட்டமாக, தனது கல்வி மற்றும் ஆய்வின் எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுடன் ஒரு மாணவர் வீடியோ வெளியிடும் நிலைக்கு இந்தச் சூழலை அரசு அனுமதித்திருக்கக் கூடாது.</p><h2>நிரந்தரத் தீர்வு</h2><p>மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை எந்த மாணவருக்கும் ஏற்படாத வகையில், அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உரிய காலத்தில், எவ்விதத் தடையுமின்றி மாணவர்களைச் சென்றடைவதற்கான முறையான மற்றும் நிலையான நடைமுறையை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். பாரதிதாசன் ராமனுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக வழங்குவதோடு, இனி எந்த மாணவரும் இதற்காக அலைக்கழிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது.</p><p>ஜெய் பீம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் அன்பில் மகேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-anbil-mahesh-to-appear-for-inquiry-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-anbil-mahesh-to-appear-for-inquiry-today#comments</comments><guid isPermaLink="false">203cb4e6-a0bf-44c5-b2bc-cddbb2390429</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:20:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:20:21.320Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Anbil Mahesh Poyyamozhi,அன்பில் மகேஷ்,லஞ்ச வழக்கு,bribery case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/wd7283v5/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/wd7283v5/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ரூ.100 கோடி சுருட்டல்</h2><p>சென்னை தியாகராயநகரில் செயல்படும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுதருவதாக கூறி, ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி நடந்துள்ளது என்றும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.</p><p>இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தி.மு.க. பிரமுகரான பி.டி.அரசகுமாரும், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்தும், போரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தும் சந்தித்து, பணம் வசூலித்ததாக தெரியவந்தது.</p><h2>அன்பில் மகேஷ் மீது வழக்கு</h2><p>அதன் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அவர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை 177 பேர் புகார் கொடுத்துள்ளனர். 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 61 வங்கிக்கணக் குகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் தி.மு.க. முன் னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள்.</p><p>அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக் கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது, லஞ்ச ஊழல் வழக்காக மாற்றப்பட் டுள்ளது. திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>போலீசார் சோதனை</h2><p>இதனையடுத்து நேற்று முன்தினம் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, திருச்சியில் 9 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 18 செல்போன்கள், 3 மடிக்கணி னிகள், 8 பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.</p><h2>சம்மன்</h2><p>சோதனை முடிவில் 18-ந்தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கி சென்றனர். போலீசாரின் சம்மனின்படி வழக்கு விசாரணைக்காக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஷ் இன்று ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி: கோவில்களில் ரூ.7 லட்சம் நகைகள் திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-jewellery-worth-rs-7-lakh-stolen-from-temples</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-jewellery-worth-rs-7-lakh-stolen-from-temples#comments</comments><guid isPermaLink="false">12a1cb08-a861-4b0b-9a9d-c988d5cdb17a</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:10:15 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:10:15.327Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,கோவில்கள்,திருட்டு,திருச்சி,Trichy,jewelry,piggy bank,உண்டியல்,நகை,Theft</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/0z7kkr9j/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவில்களில் ரூ.7 லட்சம் நகைகள் திருட்டு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/0z7kkr9j/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">திருச்சி</a> மாவட்டத்தில் உள்ள இரண்டு கோவில்களில் மர்ம நபர்கள் மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடிச் சென்றனர்.  </p><h2>அம்மன் தாலி, உண்டியல் திருட்டு</h2><p>திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி தெற்கு தெருவில் முத்துமாரியம்மன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">கோவில்</a> உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 2 சவரன் தாலி மற்றும் உண்டியலை திருடிச் சென்றனர். </p><h2>மர்ம நபர்கள் கைவரிசை</h2><p>இதேபோல் சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கியூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 5½ சவரன் தாலி, தங்க காசு மற்றும் உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். கோவில்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருட்டு</a> போன நகைகள் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களின் பேரில் சம்பந்தப்பட்ட போலீசார், இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை: வட்டாட்சியர் பெயரை சொல்லி ரூ.3.50 லட்சம் லஞ்சம் - கிராம உதவியாளர் கைது 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayiladuthurai-vattatchiyar-peyarai-solli-ru-3-50-latcham-lanjam-kiram-uthaviyalar-kaithu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayiladuthurai-vattatchiyar-peyarai-solli-ru-3-50-latcham-lanjam-kiram-uthaviyalar-kaithu#comments</comments><guid isPermaLink="false">c3f8e667-2c06-44df-ac33-af66d4a386cd</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:07:57 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:07:57.478Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரைம் செய்தி,Mayiladuthurai,மயிலாடுதுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/wcqqat1f/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/wcqqat1f/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மயிலாடுதுறை,</p><p>மயிலாடுதுறையில் வட்டாட்சியர் பெயரை சொல்லி ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.</p> <h2>கிராம உதவியாளர் கைது</h2> <p><a href="https://www.dailythanthi.com/topic/மயிலாடுதுறை">மயிலாடுதுறை </a>மாவட்டம் குத்தாலம் அருகே மருத்தூர் கிராமத்தில் வண்டல் மண் எடுக்கச்செல்ல வட்டாட்சியர் பெயரை சொல்லி கிராம உதவியாளர் முகமது என்பவர் ரூ. 3.50 லட்சம் லஞ்சம் வசூலித்துள்ளார். இது குறித்து அறிந்த வட்டாட்சியர் ரவிச்சந்திரன் போலீசில் புகார் அளித்தார்.</p> <p>புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிராம உதவியாளர் முகமதுவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை-பிரயாக்ராஜ் இடையே நாளை சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-nellai-and-prayagraj-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-nellai-and-prayagraj-tomorrow#comments</comments><guid isPermaLink="false">cb5f91fd-9a69-4aaa-a139-186ee0a56c0c</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:04:36 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:04:36.048Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,சிறப்பு ரெயில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/cuq9v33k/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/cuq9v33k/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை,  </p><p>சேலம், காட்பாடி வழியாக நெல்லை-பிரயாக்ராஜ் இடையே சிறப்பு ரெயில் நாளை (சனிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. </p><h2>சிறப்பு ரெயில்</h2><p>உத்தரபிரதேச மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க பிரயாக்ராஜ் நகரம் அமைந்துள்ளது. வடக்கு மத்திய ரெயில்வே சார்பில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் நெல்லை-பிரயாக்ராஜ் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.</p><p>பிரயாக்ராஜ் பகுதியில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 04171) வருகிற நாளை (சனிக்கிழமை), 26-ந்தேதி, அக்டோபர் 3-ந்தேதி, 10-ந்தேதி ஆகிய சனிக்கிழமைகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்ப டுகிறது.</p><p>மறுமார்க்கத்தில் நெல்லை-பிரயாக்ராஜ் சிறப்பு ரெயில் (04172) நெல்லையில் இருந்து வருகிற 21-ந்தேதி, 28-ந்தேதி, அக்டோபர் மாதம் 5-ந்தேதி. 12-ந்தேதி ஆகிய திங்கட்கிழமைகளில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்படுகிறது.</p><h2></h2><h2>எத்தனை பெட்டிகள்?</h2><p>இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், ஜபல்பூர் வழி யாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஒரு ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 12 தூங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 6 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். </p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ஏற்றுமதி சரக்குகள் தேக்கம்: காரணம் என்ன.?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/backlog-of-export-cargo-at-chennai-airport-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/backlog-of-export-cargo-at-chennai-airport-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">3ff569f0-c419-40c0-b59f-394da27e5aba</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:01:08 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:01:08.349Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Airport,சென்னை விமான நிலையம்,Cargo,சரக்குகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/4b3l5dja/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/4b3l5dja/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புது டெல்லி, </p><p>சென்னை விமான நிலைய சரக்கு மையங்களில் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாக, ஏற்றுமதி சரக்குகள் கிட் டத்தட்ட ஐந்து நாட்கள் வரை தேங்குகின்றன. இதனால், ஏற்றுமதியாளர்கள் பெங்களூரு மற்றும் பிற நகரங்களின் விமான சரக்கு மையங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இது குறித்து துறை சார்ந்தவர்கள் கூறியதாவது;</p><p>கிடங்கு வசதி குறைவு, ஆட்கள் பற்றாக்குறை, போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் விமான சரக்கு போக்குவரத்து தேவை அதிகரித்திருப்பது ஆகியவை இந்த நெரிசலுக்கு காரணமாக உள்ளன. குறிப்பாக, சரக்குகள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த தாமதம், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி, விரைவில் கெடும் பொருட்கள் போன்ற துறைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. உற்பத்தி தொடர் பான சரக்குகள் தாமதமடைவதால், ஏற்றுமதி திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. </p> <p>கடந்த இரண்டு மாதங்களில், வளைகுடா பதற்றத்தால் விமான சரக்கு போக்குவரத்து தேவை அதிகரித்திருப்பதும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. விமான நிறுவனங்கள், திட்டமிட்ட புறப்பாட்டுக்கு முன் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு முன்பே சரக்குகளை ஏற்க தொடங்கியுள்ளன. இது கிடங்கு இடத்தை முன் கூட்டியே நிரப்பி, நெரிசலை மேலும் மோசமாக்குகிறது. இதற்கு தீர்வாக, 24 - 36 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து லாரி நுழைவுக்கு டிஜிட்டல் டோக்கன் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என தொழில் அமைப்புகள் கோரியுள்ளன. நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஏற்றுமதி சரக்குகள் அனைத்தும் பெங்களூரு உள்ளிட்ட மாற்று மையங்களுக்கு மாறி விடும்.”</p><p>இவ்வாறு எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நிலவில் மிகப்பெரிய புதிய பள்ளம்: நாசா விண்கலம் கண்டுபிடித்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/huge-new-crater-on-the-moon-nasa-spacecraft-discovers-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/huge-new-crater-on-the-moon-nasa-spacecraft-discovers-it#comments</comments><guid isPermaLink="false">64eda00b-5453-4db3-95b1-a2d779a49013</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:59:27 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:59:27.826Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நிலவு,Moon,நாசா,NASA,நாசா விண்கலம்,NASA spacecraft</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/qjhbirxt/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/qjhbirxt/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>132 ஆண்டுகளுக்கு ஒருமுறை..</h2><p>அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவின் 'லூனார் ரீகனை சன்ஸ் ஆர்பிட்டர்' என்ற விண்கலம் நிலவின் முன்பக்கத்தில் மிகப்பெரிய பள்ளம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், 'கண்டுபிடிக்கப்பட்டுள்ள பள்ளம் சிறுகோள் அல்லது வால்நட்சத்திரத்தின் ஒரு பகுதி மோதியதால் உருவானது. </p><p>இது 728 அடி அகலமும், 141 அடி ஆழமும் கொண்ட செங்குத்தான பள்ளமாகும். இதன் அருகில் 7 கி.மீ. அகலமான குளிர்ச்சியான பகுதி ஒன்றும் கண்டறியப்பட்டு உள்ளது. இது நிலவின் மேல் மண் தளர்வடைந்திருப்பதை காட்டுகிறது. இத்தகைய பெரிய அளவிலான நிகழ்வு 132 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது.</p><h2>கவலைப்பட வேண்டியதில்லை..</h2><p>இந்த நிலவு மோதல் பூமியில் உள்ள தொலைநோக்கிகளுக்கோ அல்லது விண்வெளியில் உள்ள கருவிகளுக்கோ நிகழ்நேரத்தில் தெரியவில்லை. பழங்காலத்திலிருந்தே பள்ளங்களால் நிறைந்த நிலவு சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய மோதல் பள்ளங்களைக் கொண்டுள்ளது. இதில் 2,400 கிலோ மீட்டருக்கு மேல் பரந்து விரிந்த பள்ளமும் அடங்கும்.</p><p>சமீபத்திய மோதலால் நிலவின் மேற்பரப்பு 100 கிலோமீட்டருக்கு மேல் கிளறப்பட்டுள்ளது. இந்த பள்ளத்திலிருந்து வெளியேறிய பொருட்கள் நாசாவின் திட்டமிடப்பட்ட நிலவுத் தளத்தை தாக்கும் அபாயத்தைக் கணக்கிட முடியும். எனவே கட்டமைப்புகளை வலுப்படுத்த பொறியாளர்களுக்கு இது உதவும். இதனால் சேதத்தை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>திருமணத்திற்கு ஆர்டர் செய்த லெஹங்காவில் குறைபாடு: மணப்பெண் அதிர்ச்சி; ஆடை வடிவமைப்பு நிறுவனத்திற்கு ரூ.3.46 லட்சம் அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/defect-in-ordered-wedding-lehenga-bride-shocked-fashion-house-fined-346-lakh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/defect-in-ordered-wedding-lehenga-bride-shocked-fashion-house-fined-346-lakh#comments</comments><guid isPermaLink="false">079bd560-2804-4d16-88a6-3f7743aad9c6</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:57:30 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:57:30.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திருமணம்,தமிழகம்,Marriage,அபராதம்,bride,fined,மணப்பெண் ஆடை,லெஹங்கா</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/o7irarzf/redf.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/o7irarzf/redf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>குறைபாடுள்ள திருமண ஆடையை விற்பனை செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 3.46 லட்சம் ரூபாய் இழப்பீ டு வழங்க ஆடை வடிவமைப்பு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> அண்ணாநகரைச் சேர்ந்தவர் அழகு சஞ்சனா. </p><p>இவர், சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2024-ம் ஆண்டு தாய்லாந்தில் எனது திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதற்காக டெல்லியில் உள்ள 'ஓம் பை பாரதி அண்ட் ஆஷ்னா' என்ற ஆடை வடிவமைப்பகத்தில் ரூ.1.15 லட்சத்திற்கு முத்துக்களால் ஆன லெஹங்கா ஆடைக்கு ஆர்டர் செய்தேன். குறிப்பிட்ட தேதியில் ஆடை வழங்கப்படாததோடு, கூடுதல் கட்டணமாக ரூ.6,850-ம் கட்டாயப்படுத்தி வசூலித்தனர். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் அந்த ஆடை வழங்கப்பட்டது. அதுவும் தையல் மற்றும் வடிவமைப்பு குறைபாடுகளுடன் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது, உள்ளூர் தையல்காரரிடம் கொடுத்து சரி செய்து கொள்ளுமாறு அலட்சியமாக பதிலளித்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நான், வேறு வழியின்றி அவசரமாக மாற்று ஆடையை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். எனவே, உரிய இழப்பீடு வழங்க ஆடை வடிவமைப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.</p><p>இந்த வழக்கு விசாரணை ஆணையத்தின் தலைவர் டி.கோபிநாத் மற்றும் உறுப்பினர் கவிதா கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஆடை வடிவமைப்பு நிறுவனம் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை.</p><p>வழக்கை விசாரித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-</p><p>புகார்தாரர் சமர்ப்பித்த ஆதாரங்களின்படி, ஆடை வடிவமைப்பாளர்கள் உரிய நேரத்தில் ஆடையை வழங்காததும், குறைபாடுள்ள ஆடையை வழங்கிவிட்டு அதை உள்ளூர் தையல்காரரிடம் சரி செய்து கொள்ளுமாறு கூறியதும் சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வணிக நடைமுறையாகும். எனவே, புகார்தாரர் மாற்று ஆடை வாங்க செலவிட்ட தொகை ரூ.1,69,215 மற்றும் டெல்லி சென்று வந்ததற்கான போக்குவரத்து செலவு உள்ளிட்ட இதர செலவுகள் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை 9 சதவீத வட்டியுடன் ஆடை வடிவமைப்பு நிறுவனம் வழங்க வேண்டும். மேலும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: கூண்டில் சிக்கிய கரடி வனப்பகுதியில் விடுவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-bear-caught-in-a-cage-released-into-the-forest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-bear-caught-in-a-cage-released-into-the-forest#comments</comments><guid isPermaLink="false">531b2d3f-64d5-4c32-b538-e75b486be514</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:43:36 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:43:36.816Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,கரடி,bear,caught,Cage,கூண்டில் சிக்கியது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/79a2rpbm/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கூண்டில் சிக்கிய கரடி வனப்பகுதியில் விடுவிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/79a2rpbm/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பு பகுதியில் வனத்துறையினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் கரடி சிக்கியது. </p><h2>வனத்துறையினர் கண்காணிப்பு பணி</h2><p>திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரடிகள் நடமாட்டம்</a> இருந்து வருகிறது. அதன்படி அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கூண்டு வைத்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். </p><h2>கரடி கூண்டில் சிக்கியது</h2><p>நேற்று முன்தினம் இரவில் அந்த கூண்டில் ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81">கரடி சிக்கியது</a>. தொடர்ந்து கரடியை கூண்டோடு வாகனத்தில் ஏற்றி பாபநாசம் அருகே கொடமாடி பீட் வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். அங்கு கூண்டை திறந்ததும் கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடியது. </p> ]]></content:encoded></item><item><title>பிரதமர் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 25 ஆயிரம் வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-approves-25000-houses-for-tamil-nadu-under-the-prime-ministers-scheme</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-approves-25000-houses-for-tamil-nadu-under-the-prime-ministers-scheme#comments</comments><guid isPermaLink="false">264a0c91-b78e-48f6-b010-3368ee0bba5b</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:34:20 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:34:20.689Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,தமிழகம்,Narendra Modi,மத்திய அரசு,prime minister,Central Government,Houses,பிரதமர் வீடு கட்டும் திட்டம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/drx19z8z/akier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/drx19z8z/akier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/narendra-modi">பிரதமர் நரேந்திர மோடி</a> தலைமையிலான மத்திய அரசால் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ பயன் பெறுவார்கள். மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படுகிறது.</p><p>இதில் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் முதல் கட்டம் முடிவடைந்தநிலையில், 2024ம் ஆண்டு பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. </p><p>இதில் நாடு முழுவதும் 5 ஆயிரத்து 206 நகரங்களில், 71.55 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “மத்திய அரசு அறிவித்துள்ள பிரதமரின் வீட்டுவசதி திட்ட இரண்டாம் கட்டத்தில், தமிழகத்தில் 722 நகரங்களில், 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில் 300 சதுரடி பரப்பளவில் வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கான மொத்த செலவில் 2.50 லட்சம் ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்கும் மீதித் தொகையை தமிழக அரசு வழங்கும். திட்டத்தின் இரண்டாம் பாகத்தில், வழக்கமான முறைக்கு பதிலாக, புதிய தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-to-be-released-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-to-be-released-tomorrow#comments</comments><guid isPermaLink="false">99821fb3-6506-4140-8972-05c9f7225fe8</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:27:28 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:27:28.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,வேட்பாளர் பட்டியல்,Candidate list,மதுராந்தகம்,தாராபுரம்,By-election,Madhuranthakam,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/n2g4l4qs/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/n2g4l4qs/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மதுராந்தகம் தொகுதி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது. இங்கு த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். </p><p>வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. பரிசீலனை முடிவில் த.வெ.க, தி.மு.க., அ.தி.மு.க. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது 20 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.</p><h2>தாராபுரம் தொகுதி</h2><p>அதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள் ளது. இதனை முன்னிட்டு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத் தில், கடந்த 9-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினத்தோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை, ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதன்படி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் வக்கீல் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.</p><h2>இறுதி வேட்பாளர் பட்டியல்</h2><p>13 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மொத்தம் தாக்கலான 51 மனுக்களில், 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. நாளை (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை மையம் அப்டேட் </title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-warning-for-2-districts-weather-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-warning-for-2-districts-weather-department-update#comments</comments><guid isPermaLink="false">621119a9-945d-4422-910d-59c8761d1ccd</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:06:47 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:06:47.544Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,weather information,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain,TN weather,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/7676ojrp/sat.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/7676ojrp/sat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் மராத்வாடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை, உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (18-09-2026):</strong> நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <strong>மழை</strong> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (19-09-2026):</strong> நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <strong>மழை</strong> பெய்யக்கூடும்.</p><p><strong>20-09-2026 மற்றும் 21-09-2026:</strong> நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong>கனமழை</strong> பெய்யக்கூடும்.</p><p>ஏனைய வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <strong>மழை</strong> பெய்யக்கூடும்.</p><p><strong>22-09-2026 மற்றும் 23-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong>மழை</strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>18-09-2026 முதல் 21-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>18-09-2026 முதல் 21-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>(18-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>18-09-2026:</strong> அந்தமான் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இதர அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>19-09-2026 மற்றும் 20-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>21-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் அந்தமான் கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள் &amp; அரபிக்கடல் பகுதிகள்:</ins></strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-60</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-60#comments</comments><guid isPermaLink="false">0305c347-c25f-4028-8c08-aa2b7ca6f867</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:00:44 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:00:44.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/1xj9q4i0/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/1xj9q4i0/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (18.09.2026 வெள்ளிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறை; தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 655 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-transport-corporation-decides-to-operate-2655-special-buses-across-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-transport-corporation-decides-to-operate-2655-special-buses-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">aed239e4-85c9-450c-b1b9-fc655b62c6c1</guid><pubDate>Thu, 17 Sep 2026 22:35:45 +0000</pubDate><atom:updated>2026-09-17T22:35:45.942Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Special Bus,வார விடுமுறை,போக்குவரத்து கழகம்,weekly leave</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/fkds4lg8/BUS.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/fkds4lg8/BUS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர் கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அன்று 760 பஸ் களும், நாளை (சனிக்கிழமை) 520 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள் ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங் கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 115 பஸ்களும், நாளை 115 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>மேலும், பெங்களூரு. திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல் வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோ ணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 18 மற்றும் 19-ந் தேதிகளில் தலா 70 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடட் பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக் கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒரு எம்.பி சீட்டுக்காக திமுக கூட்டணிக்கு வந்த கட்சி தேமுதிக: வன்னி அரசு கடும் தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmdk-joined-the-dmk-alliance-for-the-sake-of-a-single-mp-seat-vanni-arasu-launches-a-scathing-attack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmdk-joined-the-dmk-alliance-for-the-sake-of-a-single-mp-seat-vanni-arasu-launches-a-scathing-attack#comments</comments><guid isPermaLink="false">854b7edc-f87b-44f3-aa84-8b13f6d57767</guid><pubDate>Thu, 17 Sep 2026 22:01:27 +0000</pubDate><atom:updated>2026-09-17T22:01:27.754Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,DMDK,தேமுதிக,வன்னி அரசு,Vanni Arasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/tpwduokn/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/tpwduokn/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை வேப்பேரியில் அமைச்சர் வன்னி அரசு நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்கள் நிறுத்துவது முன்பே தெரிந்திருந்தால், நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருக்க மாட்டோம் என சீமான் தெரிவித்த கருத்தைப் பொறுத்தவரையில், அவர் கூறிய பல பொய்களில் இதுவும் ஒன்று.மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு என்ன காரணம்? என்ற உண்மையை அறிய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். எங்களுக்கும் அதே கோரிக்கைதான் உள்ளது. அப்போதுதான் நீதி கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.</p><h2>இருபக்கமும் பேரம்</h2><p>தே.மு.தி.க. கடந்த காலங்களில் பா.ஜனதாவோடு இணைந்து செயல்பட்டவர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அந்த கூட்டணியா அல்லது இந்த கூட்டணியா என்று இரு பக்கமும் பேரம் பேசியவர்கள்தான் தே.மு.தி.க. தலைவர்கள்.கடைசியாக ஒரு மேல்-சபை எம்.பி. சீட்டுக்காக தி.மு.க. கூட்டணிக்கு வந்தனர். இத்தகைய பின்னணி கொண்டவர்கள், எங்களைப் பார்த்து அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறியதாக கூறுவது ஏற்புடையதல்ல. திருமாவளவன் கூறிய கருத்தை அவர்கள் சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை.</p><h2>எம்.பி. சீட்டுக்காக...</h2><p>நாங்கள் தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக பயணம் செய்து வந்தோம். இந்தப் பயணத்தில் திடீரென புதிதாக ஒரு கட்சி வருகிறது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை விட அவர்களுக்கு அதிகமாக கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் தி.மு.க.வோடு எங்களுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளில் முக்கியமான ஒன்று. இது எங்களை தி.மு.க. எப்படி நடத்தியது என்று சொல்லப்பட்ட உண்மை சம்பவமாகும். இதில் தே.மு.தி.க.வை நாங்கள் குற்றம்சாட்டவில்லை. அதை புரிந்து கொள்ளாமல் பிரேமலதா பேசியது, அவரின் அறியாமையைக் காட்டுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் பதவிக்காக செல்பவர்கள் இல்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு கூட்டணியில் எங்களுக்கான எண்ணிக்கை மற்றும் மதிப்பீடு எவ்வளவு என்று சொல்லும்போது ஏற்பட்ட கசப்பைதான் நாங்கள் வெளிப்படுத்தினோம். அது தே.மு.தி.க. மீதான குற்றச்சாட்டு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்</p> ]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சி அற்புதமான ஆட்சி: இடைத்தேர்தலில் வெற்றி பெறும்- மதுரை ஆதீனம் பேட்டி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-governance-will-be-magnificent-it-will-win-the-by-election-madurai-adheenams-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-governance-will-be-magnificent-it-will-win-the-by-election-madurai-adheenams-interview#comments</comments><guid isPermaLink="false">4d4c3492-6333-43bf-9fcf-36ce12a5bf30</guid><pubDate>Thu, 17 Sep 2026 20:34:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T20:34:00.021Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,இடைத்தேர்தல்,Madurai Adeenam,மதுரை ஆதீனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qbwyrnl7/adeenam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஆதீனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/qbwyrnl7/adeenam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம், </p><p>காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் சமேத வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனத்தின் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதுரை ஆதீனம் கூறியதாவது:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. மதுரை ஆதீனம் கோவிலுக்கு சென்றால் அவரை பின்தொடர்ந்து ஏராளமானோர் வரக்கூடும் என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவில்லை. </p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்கும்பாபிஷேக ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் ஆண்டவன் பெயரில் பதவி ஏற்றிருப்பதும் லஞ்சம் கொடுக்கக்கூடாது என்றும், லஞ்சம் கேட்டால் முதலமைச்சர் பெயரை சொல்லுங்கள் என்று விஜய் கூறியிருப்பது தனக்கு பிடித்துள்ளது. </p><p>தவெக ஆட்சி அற்புதமான ஆட்சி. எனது ஆசி தவெகவுக்கே. இதுவரை இருந்த முதலமைச்சர்களைவிட விஜய் போன்ற அற்புதமான முதலமைச்சரை நான் பார்த்ததில்லை . வருகிற இடைத்தேர்தல் மட்டுமின்றி, அடுத்த 100 ஆண்டுகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும்”என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/governor-grants-assent-to-amendment-bills-tabled-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/governor-grants-assent-to-amendment-bills-tabled-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">dca9513d-4b8b-4752-a40f-52582a635f00</guid><pubDate>Thu, 17 Sep 2026 20:28:27 +0000</pubDate><atom:updated>2026-09-17T20:28:27.859Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Governor,கவர்னர்,சட்ட திருத்தம்,Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/26hhy368/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/26hhy368/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த கூட்டத் தொடரின் போது பல்வேறு சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒரு சில மசோதாக்கள் தவிர மற்ற மசோதாக்களுக்கு கவர்னர் அர்லேகர் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.</p> <p> அந்த வகையில் தமிழ்நாடு ஊரமைப்பு சட்ட திருத்த மசோதா,தீயணைப்புத் துறை சட்ட திருத்த மசோதா, சம்பளம் வழங்கல் சட்ட திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ம் சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணி) சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சட்டத் திருத்த மசோதா உள்பட 11 சட்ட மசோதாக்களுக்கு கவர்னரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. எனவே அந்த மசோதாக்கள், தற்போது சட்டங்களாகிவிட்டன. அவை அனைத்தும் கடந்த 15-ந் தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.</p> <p>தமிழகத்தில் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான நிலப்பரப்பை குறைத்து, சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம் தொடர்பான மசோதா, கவர்னரிடம் இருந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை;  ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-the-cauvery-catchment-areas-water-inflow-to-hogenakkal-increases-to-14000-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-the-cauvery-catchment-areas-water-inflow-to-hogenakkal-increases-to-14000-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">160f7465-3355-4b30-8349-d7e36527caa6</guid><pubDate>Thu, 17 Sep 2026 18:23:29 +0000</pubDate><atom:updated>2026-09-17T18:23:29.066Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,கனமழை,Hogenakkal,ஒகேனக்கல்,காவிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/v6kx59po/Hogenakkal.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/v6kx59po/Hogenakkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல், அஞ்செட்டி, கேரட்டி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. </p><h2>நீர்வரத்து</h2><p>இதனுடைய நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து. நேற்று பிற்பகல் மதியம் 2மணி நிலவரப்படி 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 4 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது</p><h2>ஆர்ப்பரித்துக் கொட்டியது</h2><p>இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செந்நிறத்தில் கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் கடந்த 12ஆம் தேதி முதல் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 6-வது நாளாக நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசனின் காணொலி உண்மைக்கு புறம்பானது: சமூக நீதித்துறை விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-bharathidasans-video-is-contrary-to-the-truth-social-justice-departments-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-bharathidasans-video-is-contrary-to-the-truth-social-justice-departments-clarification#comments</comments><guid isPermaLink="false">b9b04a25-de13-4768-9e71-77e21d43ca7a</guid><pubDate>Thu, 17 Sep 2026 17:53:08 +0000</pubDate><atom:updated>2026-09-17T17:53:08.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாரதிதாசன்,காணொலி,சமூக நீதித்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/cz5vajzl/bharadi-dasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/cz5vajzl/bharadi-dasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>மலேசியாவில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் பாரதிதாசன், தனது 2-ம் ஆண்டு படிப்பிற்கு கல்வி உதவித்தொகையை அரசு வழங்கவில்லை என்று சமூகவலைதளத்தில் காணொளி வெளியிட்டார். அதற்கு தமிழக சமூகநீதி துறை  விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-பாரதிதாசனின் செலவின கோரிக்கை ரூ.19.50 லட்சம் தொடர்பாக, பரிந்துரைத்து அனுப்பும்படி தெரிவித்து, அவர் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் கடிதம் 17-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் நகல் அந்த மாணவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்ததும் கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும். இந்தத் தகவலும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஆனால் மாணவர் பாரதிதாசன் சமூகவலைதளத்தில் காணொளி ஒன்றை பதிவுசெய்து, உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளார். மாணவருக்கு இதுவரையில் முதலாமாண்டு படிப்பிற்கு ரூ.36 லட்சம் மற்றும் 2-ம் ஆண்டிற்கு ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாணவரின் காணொளியில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் உள்ளது.</p> <p>கல்வி உதவித்தொகை திட்டங்களை பொறுத்தவரை, சமூக நீதி துறை இதுவரை இல்லாத அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மாணவரின் இந்த காணொளியானது உண்மைக்கு மாறான தகவல்களுடன் பல்வேறு மாணவர்கள் பயன்பெற்று வரும் இத்திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற வாய்ப்பு - வானிலை மையம் தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/likelihood-of-low-pressure-area-intensifying-in-the-bay-of-bengal-meteorological-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/likelihood-of-low-pressure-area-intensifying-in-the-bay-of-bengal-meteorological-department#comments</comments><guid isPermaLink="false">cd8b26d3-b6b0-40e8-bbc8-5c76e8d6fd21</guid><pubDate>Thu, 17 Sep 2026 16:33:13 +0000</pubDate><atom:updated>2026-09-17T16:33:13.170Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை மையம்,Chennai Meteorological department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/2qjqas1g/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/2qjqas1g/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. </p><p>இந்த நிலையில், நாளை மறுநாள் வடக்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 21, 22-ந்தேதிகளில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மக்கள் வாக்கு செலுத்தியது த.வெ.க.வுக்குதான்; கூட்டணி கட்சிகள் அடக்கி வாசிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-people-voted-for-tvk-alliance-parties-should-adopt-a-low-profile-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-people-voted-for-tvk-alliance-parties-should-adopt-a-low-profile-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">f896fbf6-4199-4123-83d8-f408972e2f0c</guid><pubDate>Thu, 17 Sep 2026 16:17:31 +0000</pubDate><atom:updated>2026-09-17T16:17:31.332Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,த.வெ.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/27kczyy8/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/27kczyy8/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கோ, வி.சி.க.வுக்கோ, கம்யூனிஸ்டுகளுக்கோ, ஐ.யூ.எம்.எல். கட்சிக்கோ ஆதரவு கொடுக்கவில்லை. மக்கள் வாக்கு செலுத்தியது த.வெ.க.வுக்குதான். விஜய்யை மட்டும்தான் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். </p><p>எனவே மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்று த.வெ.க.வினர் மட்டும்தான் சொல்ல முடியும். த.வெ.க.வுடன் கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு, தி.மு.க.வின் தயவால்தான் வெற்றி பெற்றார்கள். தற்போது அணி மாறிவிட்டார்கள் அவ்வளவுதான். அப்படி இருக்கும்போது வீரவசனம் பேசுவதில் அர்த்தமில்லை. எனவே கூட்டணி கட்சிகள் அடக்கி வாசிக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>திமுகவுடன் வந்துவிடுகிறேன் என்று கூறியவர் துரை வைகோ - கே.என்.நேரு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/durai-vaiko-who-said-he-would-join-the-dmk-kn-nehru-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/durai-vaiko-who-said-he-would-join-the-dmk-kn-nehru-interview#comments</comments><guid isPermaLink="false">2f98ccff-006c-45a3-a76d-6fa3fb98ed38</guid><pubDate>Thu, 17 Sep 2026 16:10:19 +0000</pubDate><atom:updated>2026-09-17T16:10:19.217Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,துரை வைகோ,கே.என்.நேரு,Stalin,KNNehru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/8knfjsfi/nehru33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  துரை வைகோ]]></media:title><media:description type="html"><![CDATA[ கே.என்.நேரு பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/8knfjsfi/nehru33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>'என்னால் கட்சியை நடத்த முடியாது, நான் தி.மு.க.விற்கு வந்து விடுகிறேன் என்று கூறியவர் துரை வைகோ' என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.</p><h2>உரிமை கிடையாது</h2><p>தி.மு.க. முதன்மை செயலாளரும். முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தி.மு.க. பற்றி துரை வைகோ எம்.பி. கடுமையாக விமர்சனம் செய்து வருவதாக கூறுகிறார்கள். அவர் என்ன பேசினார் என எனக்கு தெரியாது. ஆனால் அவர் பிறப்பதற்கு முன் நடந்த மிசா பற்றி எல்லாம் பேசுகிறார். தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசுவதற்கு துரை வைகோவிற்கு உரிமை கிடையாது.</p><p> ‘எனது தந்தை கோபக்காரர். கட்சிக்கு வளர்ச்சி இல்லை. என்னால் கட்சியை நடத்த முடியாது. நான் தி.மு.க.விற்கு வந்து விடுகிறேன்' என என்னிடம் கூறியவர் தான் துரை வைகோ. அவர் சிறுபிள்ளையாக இருந்து கொண்டு அதிகமாக பேசுவதற்கு எல்லாம் நான் பதில் அளிக்க முடியாது.</p><h2>மறைமுக உறவு</h2><p>பா.ஜனதாவுடன் தி.மு.க. மறைமுக கூட்டணியில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. தி.மு.க. சனாதனத்திற்கு எதிராகவும், சமூக நீதிக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறது. பா.ஜனதாவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%20"> தி.மு.க. </a>கடுமையாக எதிர்த்து வருகிறது.</p><p>பா.ஜனதா கொள்கையை தி.மு.க. ஒருபோதும் ஏற்றது இல்லை. த.வெ.க. கூட்டணியில் இருப்பவர்கள் தான் உண்மையில் பா.ஜனதாவுடன் மறைமுக உறவில் உள்ளனர்.</p><p>த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக தருவோம் என்றார்கள். ஆனால் ரூ.1,000 மின் கட்டணம் செலுத்தியவர்கள் இந்த ஆட்சியில் ரூ.5 ஆயிரம் முதல் 37 ஆயிரம் வரை கட்ட வேண்டிய நிலை உள்ளது. கிராமங்களில் தொடர் மின்வெட்டு இருப்ப தால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயத்திற்கு மும் முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயிகளும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஒப்பந்த புள்ளி நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் - பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-procedures-must-be-strictly-followed-public-works-department-directive</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-procedures-must-be-strictly-followed-public-works-department-directive#comments</comments><guid isPermaLink="false">1849adff-b42d-4ac6-bce4-03415d6e3d4e</guid><pubDate>Thu, 17 Sep 2026 15:57:02 +0000</pubDate><atom:updated>2026-09-17T15:57:02.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>tender,பொதுப்பணித்துறை,Public Works Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/wh366c7k/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/wh366c7k/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளிலும் உரிய ஒப்பந்த புள்ளி நடைமுறைகள் மற்றும் துறைசார் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பொறியாளர்களுக்கு தமிழக பொதுப்பணித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஒப்பந்த புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டத்தின்படி டெண்டர் கோரப்பட வேண்டு என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. </p><p>எந்த ஒரு பணியை தொடங்குவதற்கு முன்பாகவும் நிர்வாக ஒப்புதல், தொழில்நுட்ப அனுமதி, போதுமான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் இந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்தேதியிட்டு அனுமதி, பணி முடிந்த பின்னர் ஒப்பந்த புள்ளி கோருவது உள்ளிட்ட விவகாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>விதிகளை மீறினால் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் ஒப்பந்த புள்ளி விவகாரம் தொடர்பாக ஒரு சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில் தற்பொழுது தமிழக பொதுப்பணித்துறை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசன் கண்ணீர் நெஞ்சை கனக்கச் செய்கிறது - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-bharathidasans-tears-make-my-heart-heavy-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-bharathidasans-tears-make-my-heart-heavy-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">d2fb4fd2-eb95-4386-93da-66300d68c9ee</guid><pubDate>Thu, 17 Sep 2026 15:44:15 +0000</pubDate><atom:updated>2026-09-17T15:44:15.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,student,மாணவர் student,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/3ndpxy59/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/3ndpxy59/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் என்ன அடிமையா இரு படிக்காதன்னு சொல்லிவிடுங்கள் என்று வீடியோ வெளியிட்டு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசுக்கு கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க. ஸ்டாலின்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>உயர்கல்விக் கனவு</h2><p>“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதல்-அமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. அவர் கேட்பது உதவியில்லை, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது. </p><p>ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதல்-அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குடமுழுக்கு விழா சிறப்பாக நிறைவேறியது தமிழ்நாட்டிற்கே பெருமை - அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-successful-conduct-of-the-consecration-ceremony-is-a-matter-of-pride-for-tamil-nadu-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-successful-conduct-of-the-consecration-ceremony-is-a-matter-of-pride-for-tamil-nadu-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">95e8856c-e01f-4ab0-8081-45a4106d24a0</guid><pubDate>Thu, 17 Sep 2026 15:43:13 +0000</pubDate><atom:updated>2026-09-17T15:43:13.666Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Madurai Meenakshi Amman Temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,குடமுழுக்கு விழா,Consecration ceremony,Ramesh,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்,அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/oj31ptkn/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/oj31ptkn/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வரலாற்றுப் பெருமைமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நிறைவேறியது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.</p><h2>குடமுழுக்கு விழா</h2><p>இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் நல்லாட்சியில், உலகத் தமிழர்களின் பெருமையாகத் திகழும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.</p><p>லட்சகணக்கான பக்தர்களும், அனைத்துத் தரப்பு மக்களும் மனநிறைவுடன் பங்கேற்று, இறைவனை தரிசித்து மகிழ்ந்து வருகின்றனர் என்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.</p><h2>அனைவருக்கும் நன்றிகள்</h2><p>வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருப்பணியை சிறப்பாக நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அனைத்து துறை அலுவலர்கள், அறங்காவலர்கள், திருப்பணிக்கு பங்களித்த நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>கடந்த ஒரு வாரமாக தமிழ் பக்திப் பதிகங்களை இசைத்து, ஒவ்வொரு கோபுரத்தின் உச்சியிலும் தமிழின் இனிமையை முழங்கச் செய்து, குடமுழுக்கு விழாவில் சிறப்பாகப் பங்கேற்ற ஓதுவார்கள் மற்றும் சைவ ஆதீனங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>தமிழ்நாட்டிற்கே பெருமை</h2><p>வரலாற்றுப் பெருமைமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நிறைவேறியது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டிற்கே </a>பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.</p><p>இறையருளால் அனைவரது வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி, வளம் பெருகட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்: திருமண ஆசை காட்டி 12-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-youth-arrested-for-impregnating-class-12-student-after-promising-marriage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-youth-arrested-for-impregnating-class-12-student-after-promising-marriage#comments</comments><guid isPermaLink="false">ed33f203-8d1c-4e8d-b632-cff27e62839f</guid><pubDate>Thu, 17 Sep 2026 15:27:57 +0000</pubDate><atom:updated>2026-09-17T15:27:57.592Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/do19f9iq/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/do19f9iq/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவியை கர்ப்பமாக்கியதாக 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் பலமுறை உறவில் இருந்துள்ளார். </p><p>இதில் அந்த மாணவி கர்ப்பமான நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை கைது செய்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் யாருக்கானது? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-is-the-madurai-meenakshi-amman-kumbabhishekam-for-nainar-nagendran-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-is-the-madurai-meenakshi-amman-kumbabhishekam-for-nainar-nagendran-question#comments</comments><guid isPermaLink="false">87c04c79-be66-4e5c-9c08-4fa981f2938e</guid><pubDate>Thu, 17 Sep 2026 15:12:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T15:12:49.408Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kumbabhishekam,கும்பாபிஷேகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Madurai Meenakshi Amman Temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/ekr511cu/nainarnagendran-twitter.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/ekr511cu/nainarnagendran-twitter.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் மகா <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">கும்பாபிஷேகம்</a> யாருக்கானது? வெறும் பணக்காரர்களுக்கு மட்டுமானதா முதல்-அமைச்சரே? 17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மாநகரில் நடக்கும் இந்த மகா கும்பாபிஷேகத்தை கண்டுகளிக்க சாமானிய மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது உங்கள் அரசின் ஆணவத்திற்கான மற்றுமொரு சான்று.</p><h2>9000 பாஸ்கள் எங்கே...</h2><p>இந்த கும்பாபிஷேகத்தை மக்கள் நேரில் கண்டு களிப்பதற்கென அச்சடிக்கப்பட்ட சுமார் 9000 பாஸ்கள் எங்கே போயின முதல்-அமைச்சரே? உங்கள் அமைச்சர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பாஸ்களை வழங்கி, அவர்களை முதல் வரிசையில் அமர வைப்பதற்கா அரசு செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. நேற்று மாலை முதல் கால்கடுக்க காத்திருப்பவர்களை, கும்பாபிஷேகம் நடக்கும் கோவிலின் அருகில் கூட நெருங்க விடாமல் உங்கள் அரசு தடுப்பதற்கு பக்தகோடிகள் என்ன பயங்கரவாதிகளா? பணம் படைத்தவர்களுக்கும், விஐபி-களுக்கும் மட்டும் தான் கோவிலுக்குள் அனுமதி என்று நீங்களே ஒரு நவீன தீண்டாமையை அரங்கேற்றுவது, என்ன மாதிரியான மனநிலை?</p><h2>முட்டுக்கட்டை</h2><p>பொதுவாக கும்பாபிஷேகம் நடைபெறும் கோவில்களில், தனி குழாய் ட்ரோன் மூலம் கோவிலைச் சுற்றியுள்ள பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்படும் நிலையில், பாட்டில் தண்ணீரை வாளி பக்கெட்டில் கலந்து அப்பாவி மக்களை உங்கள் அரசு ஏமாற்றுவது எத்தனை பெரிய பாவம்? கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அச்சடிப்பதில் இதுநாள் வரையிலும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றினீர்கள், கோவில் அறங்காவலர்களின் பெயர்களை உங்கள் இஷ்டத்திற்கு அழைப்பிதழில் இருந்து நீக்கினீர்கள், தற்போது பொதுமக்களுக்கு புண்ணியம் கிடைக்கக் கூடாது என முட்டுக்கட்டை போட்டுள்ளீர்கள்.  </p><p>மொத்தத்தில், மதுரை பொறுப்பு அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோரின் அதீத தலையீட்டினாலும், உங்கள் அலட்சியத்தாலும் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் ஏதோ உங்கள் அமைச்சர்களின் குடும்ப விழாவினை போல நடந்து முடிந்துள்ளது. இவை உங்கள் ஆட்சியின் மீது விழுந்த கரும்புள்ளிகள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘பா.ஜ.க.வின் ஆதரவு கட்சி தி.மு.க.’ - துரை வைகோ ஆவேசம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-is-a-party-that-supports-the-bjp-durai-vaiko-fumes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-is-a-party-that-supports-the-bjp-durai-vaiko-fumes#comments</comments><guid isPermaLink="false">a060b065-fe80-4846-a344-ff39e69096f2</guid><pubDate>Thu, 17 Sep 2026 15:06:16 +0000</pubDate><atom:updated>2026-09-17T15:06:16.815Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,DMK,பா.ஜ.க.,Durai Vaiko,துரை வைகோ,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/ceygbevf/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/ceygbevf/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“பா.ஜ.க.வுக்கு மறைமுகமான ஒரு ஆதரவு அல்லது, இனி வரும் காலங்களில் நேரடி ஆதரவைக் கூட தி.மு.க. கொடுக்கலாம். பா.ஜ.க.வை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் இன்று தி.மு.க. இறங்கியுள்ளது. பா.ஜ.க.வின் ஆதரவு கட்சி தி.மு.க.</p><p>தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் தொகுதி மறுவரையறைக்கு தி.மு.க. ஆதரவு கொடுக்கப் போகிறது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் காங்கிரஸ் இல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்கி, பா.ஜ.க.வை வலுவாக எதிர்க்கும் ‘இந்தியா’ கூட்டணியை வலுவிழக்கச் செய்வதற்கான ஒரு சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபவிழாவுக்கு பந்தல்கால் நடப்பட்டது; பக்தர்கள் தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-pavilion-was-erected-for-the-karthigai-deepa-festival-at-the-tiruvannamalai-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-pavilion-was-erected-for-the-karthigai-deepa-festival-at-the-tiruvannamalai-temple#comments</comments><guid isPermaLink="false">0e596e7c-6862-47ff-9b67-ac77190d5ded</guid><pubDate>Thu, 17 Sep 2026 14:54:30 +0000</pubDate><atom:updated>2026-09-17T14:54:30.058Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,Temple,அண்ணாமலையார் கோவில்,கார்த்திகை திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/l9u6uj6r/pandathacal33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
திருவண்ணாமலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ கார்த்திகை தீபவிழாவுக்கு பந்தல்கால் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/l9u6uj6r/pandathacal33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான பந்தல்கால் முகூர்த்த விழா இன்று காலை நடை பெற்றது. அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு பந்தல்கால் நடப்பட்டது.</p><p>மலையே சிவன்</p><p>உலக புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையே சிவனாக அனைவரும் வணங்குகின்றனர். தென்னாடுடைய சிவனாய் எந்நாட்டவர்க்கும் இறைவனாய் சிவபெருமான் உள்ளதால் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை வலம் வருவதற்கும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் வெளிநாடு, வெளிமாநிலங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். </p><h2>கார்த்திகை தீபத்திருவிழா </h2><p>திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.</p><p>10-ம் நாளில் நடைபெறும் தீப தரிசன விழாவில் சுமார் 40 முதல் 50 லட்சம் பக்தர்கல் அண்ணாமலையை வலம் வந்து தீபதரிசனத்தை பார்த்து வணங்கி செல்வார்கள். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 12-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி நிறைவு பெறுகிறது.</p><h2>பந்தல்கால் நடும் முகூர்த்த விழா</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">கார்த்திகை தீபத் திருவிழா</a>வை முன்னிட்டு பூர் வாங்க பணிகளுக்கான பந்தல்கால் நடும் முகூர்த்த விழா இன்று காலை நடைபெற்றது. பந்தல்கால் முகூர்த்த விழாவை முன்னிட்டு இன்று காலை அண்ணாமலையார் கோவி லில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தல் காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க பந்தல் கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பஞ்ச மூர்த்திகளின் தேர்களின் முன்பாகவும், முனீஸ்வரன் கோவில் முன்பாகவும் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.</p><p>பின்னர் அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை உச்சரிக்க பந்தல்கால் நடப்பட் டது. இதில் மாவட்ட  கலெக்டர் வந்தனா கார்க், போளூர் எம்.எல்.ஏ. அபிஷேக், த.வெ.க. தெற்கு மாவட்ட செயலாளர் சு.பாரதிதாசன், சீத்தா சீனுவாசன், மாமன்ற உறுப்பினர் டாக்டர் பழனி, அண்ணாமலையார் கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், இணை ஆணையர் ஜெ.பரணிதரன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன், ரேடியோ ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் இடைத்தேர்தல் எதிரொலி; செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் தற்காலிக நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/impact-of-maduranthakam-by-election-chengalpattu-district-public-grievance-redressal-camp-temporarily-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/impact-of-maduranthakam-by-election-chengalpattu-district-public-grievance-redressal-camp-temporarily-suspended#comments</comments><guid isPermaLink="false">a77df762-ff03-44f6-a5ba-47a94ac0a2ce</guid><pubDate>Thu, 17 Sep 2026 14:37:52 +0000</pubDate><atom:updated>2026-09-17T14:37:52.964Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,Madhurandakam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/drodpqsw/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/drodpqsw/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதிக்கு வரும் அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வந்து அமலுக்கு வந்திருக்கிறது. </p><p>தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நடைபெற்று வந்த மாவட்ட கலெக்டர் தலைமையிலான மக்கள் குறைதீர் கூட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த கூட்டம் வழக்கமாக ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். அப்போது பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை நேரடியாக சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளிப்பார்கள். இந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>இதற்கு மாற்று ஏற்பாடாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெரும் பெட்டி வைக்கப்பட உள்ளது. அதில் பொதுமக்கள் தங்களுடைய புகார்களை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>பாத்ரூமில் வழுக்கி விழுந்த மாமியார்...சாதகமாக பயன்படுத்தி மருமகள் செய்த செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-in-law-slips-and-falls-in-the-bathroom</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-in-law-slips-and-falls-in-the-bathroom#comments</comments><guid isPermaLink="false">98647c99-bbb8-42a4-83dc-70d4400acb1a</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:56:43 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:56:43.078Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாமியார்,Chennai,arrest,செங்கல்பட்டு,மருமகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zccvztz4/womenone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வழுக்கி விழுந்த மாமியார்]]></media:title><media:description type="html"><![CDATA[ சாதமாக பயன்படுத்தி மருமகள் செய்த செயல்|]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/zccvztz4/womenone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>செங்கல்பட்டு பெரிய நத்தம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பெருந்தேவி(61). இவர் தனது மகன் வெங்க டேசன்(34), மருமகள் இந்துஜா (28) மற்றும் பேரன், பேத்திகளோடு வசித்து வந்துள்ளார்.</p><p>இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பெருந்தேவி, தனது வீட்டின் குளியல் அறையில் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்துவிட்டதாகக்கூறப்பட்டது.</p><p>உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று பெருந்தேவி பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>இந்த இறப்பினை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் இயற்கை மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து பெருந் தேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பெருந்தேவியின் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.</p><p>சந்தேகமடைந்த போலீ சார்,அவரது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20">மருமகள் </a>இந்துஜாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாமியார் -மருமகள் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும், திடீரென எதிர்பாராத விதமாக குளியலறையில் வழுக்கி விழுந்த மாமியார் சுயநினைவு இழந்ததை பயன்படுத்திக் கொண்டு அவரை கழுத்தை நெரித்து ஆத்திரம் தீர அடித்ததாகவும் இந்துஜா தெரிவித்துள்ளார்.</p><p>குடும்பப் பிரச்சினைகாரணமாக மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த இந்துஜா ஒப்புக்கொண்டதின் அதனடிப்படையில் இந்துஜாவை கைது செய்து செங்கல்பட்டு நகர போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர். பிறகு அவரை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறைச் சாலையில் அடைத்தனர். </p><p>பாத்ரூமில் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்து சுயதினை இழந்து உயிருக்கு போராடிய தனது சொந்த மாமியாரை கொஞ்சம் கூட ஈவிரமின்றி கழுத்தை நெறி கொலை செய்த சம்ப உறவினர்கள் மற்றும் அப்பகுதிமக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்ப்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; பவானி ஆற்றில் தீயணைப்புத்துறையினர் வெள்ள மீட்பு ஒத்திகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-fire-and-rescue-services-personnel-conduct-flood-rescue-drill-in-the-bhavani-river</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-fire-and-rescue-services-personnel-conduct-flood-rescue-drill-in-the-bhavani-river#comments</comments><guid isPermaLink="false">27985716-ee57-40c4-a577-140ccbe7715a</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:54:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:54:49.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தீயணைப்புத்துறை,Fire Department,பவானி ஆறு,Bhavani River,ஒத்திகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/mxy0mtk7/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/mxy0mtk7/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பருவமழை முன்னெச்சரிக்கையாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது. </p><p>இந்த ஒத்திகையின்போது தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி, நீரில் மூழ்கியவர்களை பிளாஸ்டிக் கேன், ரப்பர் டியூப் போன்றவற்றின் உதவியுடன் எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, மீட்கப்பட்டவருக்கு முதலுதவி அளிப்பது மற்றும் பேரிடர் கால மீட்புப் பணி குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  </p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,500 கன அடியாக உயர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-in-the-cauvery-river-in-hogenakkal-rises-to-14500-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-in-the-cauvery-river-in-hogenakkal-rises-to-14500-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">27480f29-b171-45d1-9e20-8612fea5512e</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:13:03 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:13:03.370Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிகரிப்பு,நீர்வரத்து,Hogenakkal Cauvery river,Increase in water flow,ஒகேனக்கல் காவிரி ஆறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/9dg10fdd/okenakkal.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒகேனக்கல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/9dg10fdd/okenakkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஒகேனக்கல்,</p><p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,500 கன அடியாக உயர்ந்துள்ளது.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகள் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 6,500 கன அடியிலிருந்து  திடீரென 14,500 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 86.78 அடியாக சரிந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">ஒகேனக்கல்</a>லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால், தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கொடைக்கானலில் மதியத்திற்கு பின் திடீர் கனமழை: பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் திணறல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-heavy-afternoon-rain-in-kodaikanal-motorists-struggle-due-to-fog</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-heavy-afternoon-rain-in-kodaikanal-motorists-struggle-due-to-fog#comments</comments><guid isPermaLink="false">d1ce4eb8-b2ed-42e0-8a55-62ae7c4d0bfd</guid><pubDate>Thu, 17 Sep 2026 12:34:20 +0000</pubDate><atom:updated>2026-09-17T12:34:20.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>India Meteorological Department,கொடைக்கானல்,Kodaikanal,tourist,பனிமூட்டம்,வாகன ஓட்டிகள் அவதி,கனமழை heavy rain</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2023/02/05/1129691-gng-pani.webp" width="750"><media:title type="html"><![CDATA[ பனிமூட்டத்துடன் கொடைக்கானல்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொடைக்கானலில் மதியத்திற்கு பின் திடீர் கனமழை: பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் திணறல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2023/02/05/1129691-gng-pani.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D">கொடைக்கானல் </a>மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில், இன்றைய தினமும் நீடித்த இந்த திடீர் மழையினால் மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.</p><h2>வெள்ளப்பெருக்கும் பனிமூட்டமும்</h2><p>திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இன்று (வியாழக்கிழமை) பெய்த மிதமான மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">கனமழை </a>காரணமாக நகரின் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், வளிமண்டல மேகமூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக ஏரிச்சாலை, மூஞ்சிக்கல் மற்றும் பிரகாசபுரம் ஆகிய பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு புகைமண்டலமாக காட்சியளிப்பதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் மிக மெதுவாக வாகனங்களை இயக்கி வருகின்றனர்.</p><h2>குறைந்த வெப்பநிலை</h2><p>மழை காரணமாக கொடைக்கானலில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 22°C ஆகவும், இரவு நேரக் குறைந்தபட்ச வெப்பநிலை 18°C ஆகவும் குறைய வாய்ப்புள்ளது. காற்றில் ஈரப்பதம் 77 சதவீதமாக உயர்ந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் குளிர்கால உடைகளுடன் தங்களை பாதுகாத்துக் கொண்டுள்ளனர்.</p><h2>சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி – வானிலை எச்சரிக்கை</h2><p>திடீரென தரையிறங்கிய மேகக்கூட்டங்கள் மற்றும் இதமான குளிரால், கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுற்றுலாப் பயணிகள் </a>பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களும் கொடைக்கானலில் இடியுடன் கூடிய பலத்த கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாட்ஸ் அப் மூலம் மூளைச்சலவை; கோவையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/brainwashing-through-whatsapp-isis-supporter-arrested-in-coimbatore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/brainwashing-through-whatsapp-isis-supporter-arrested-in-coimbatore#comments</comments><guid isPermaLink="false">98828a37-3130-4512-a1e1-9aa8967ba0c4</guid><pubDate>Thu, 17 Sep 2026 12:32:42 +0000</pubDate><atom:updated>2026-09-17T12:32:42.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கைது,arrested,whatsapp,ஆதரவாளர்,வாட்ஸ் அப்,ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு,supporter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/md8ffse0/arrest.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/md8ffse0/arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>இந்தியாவில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும்  வகையில் தீவிரவாத இயக்கங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.</p><p>சமீபத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் வாட்ஸ்- அப் குழுவைத் தொடங்கி வெளிநாட்டில் செயல்படும் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ஆட்களை திரட்டியது தெரியவந்தது. அந்த அமைப்பின் சித்தாத்தங்களால் ஈர்க்கப்பட்ட அவர்கள் வாட்ஸ்-அப் குழு மூலமாக குண்டு தயாரிக்கும் வீடியோக்களை பகிர்ந்ததும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஹேக்கர்களுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து அவர்களை தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாளர்களாக மாற்றியதும் தெரியவந்தது.</p><p>இதையடுத்து அதில் தொடர்புடையவர்களை பிடிக்க தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி கடந்த 12-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஆசம்காத் என்ற இடத்தைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை அந்த மாநில தீவிரவாத தடுப்பு படை பிரிவு போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். அவர் அளித்த தகவலில் உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்குத்தூஸ் என்பவரின் மகன் மக்சூத் அலி (வயது 19) என்ற வாலிபருக்கு இதில் முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது. மக்சூத் அலியை பற்றி விசாரித்தபோது அவர் பெங்களூரில் தங்கியிருந்து அங்குள்ள மனிதவள முகமை நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரியவந்தது. உத்தரபிரதேச போலீசார் பெங்களூர் விரைந்து சென்றனர். விசாரித்தபோது மகசூத்அலி அங்கு இல்லை. அவர் கோவையில் நடைபெறும் ஒரு கண்காட்சியில் பங்கேற்பதற்காக சக ஊழியர்களுடன் சென்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.</p><h2>போலீசார் மடக்கி பிடித்தனர்...</h2><p>இதையடுத்து உத்தர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், கோவை போலீசாரின் உதவியை நாடினர். போலீசார் தேடி வந்த மக்சூத் அலி, கோவை ஹோப்கல்லூரி அருகே உள்ள ஓட்டலில் நண்பர்களுடன் தங்கியிருப்பதை கோவை போலீசார்' அறிந்தனர். தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், கோவை போலீசாரும் இணைந்து அதிரடியாக அந்த ஓட்டலுக்கு சென்று மக்சூத் அலியை கைது செய்தனர். பெங்களூருக்கு புறப்படுவதற்காக அவர் தயார்நிலையில் இருந்துள்ளார். அதற்குள் போலீசார் அவரை மடக்கி பிடித்து விட்டனர்.</p><p>மக்சூத் அலியை தமிழக போலீசார், உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மக்சூத் அலி லக்னோ அழைத்துச் செல்லப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் வாட்ஸ்- அப் குழு மூலம் தீவிரவாத இயக்கத்தில் சேர இளைஞர்களை தூண்டியது மட்டுமல்லாமல் தனியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கி ஆள் சேர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெருநிறுவனங்கள் லாபம் குவிக்க சாமானியர்களை வதைப்பதா? - மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-corporations-tormenting-the-common-people-to-amass-profits-marxist-party-condemns-this</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-corporations-tormenting-the-common-people-to-amass-profits-marxist-party-condemns-this#comments</comments><guid isPermaLink="false">c6a5dbbd-095d-409b-8ff8-25983ac80d1f</guid><pubDate>Thu, 17 Sep 2026 12:28:52 +0000</pubDate><atom:updated>2026-09-17T12:28:52.412Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>யுபிஐ,யுபிஐ பரிவர்த்தனை,UPI,UPI Service,பெ.சண்முகம்,p shanmugam,Marxist Party,யுபிஐ கட்டணம்,மார்க்சிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/nrgoc5m6/shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/nrgoc5m6/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடர வேண்டுமென பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>யு.பி.ஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்</h2><p>செல்லா நோட்டு அறிவிப்பின் மூலம் பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற்ற மோடி அரசு இந்திய மக்களை பணமில்லா பரிவர்த்தனைகளுக்குள் வலுக்கட்டாயமாக தள்ளிய பின்புலத்தில் தற்போது யு.பி.ஐ கட்டமைப்பில் கோடிக்கணக்கான வணிகர்களும், பொதுமக்களும் இணைந்துள்ளனர். இந்த நிலையில், சட்டப்படி யு.பி.ஐ பரிவர்த்தனைகள் இலவசம் என்பதை மாற்றி கட்டணம் விதிக்கப்பட்டு இருப்பது எளிய, நடுத்தர மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும்.</p><p>இது விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கிறது. ஏற்கனவே வரிச் சுமைகள், பல்வேறு சேவைகளுக்கு கட்டணங்கள் என்பதால் அல்லலுறும் மக்கள் மீது இன்னொரு சுமை ஏற்றப்பட்டுள்ளது. சொந்த பணத்தை மக்கள் கையாளவே கட்டணம் செலுத்தும் நிலையை உருவாக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>கட்டணக் கொள்ளையில் யு.பி.ஐ</h2><p>மோடி அரசாங்கம் மேற்கொண்ட சட்ட திருத்தத்தை தொடர்ந்து இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, வரும் அக்டோபர் 15, 2026 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.300 வரை MDR கட்டணம் விதிக்கப்படும். மேலும், ரெயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள், வேளாண் உள்ளீடுகள் போன்ற துறைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 நிலையான கட்டணம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>NPCI-யின் அறிவிப்பின்படி, MDR தொகை வங்கிகளுக்கும், <a href="https://www.dailythanthi.com/news/india/no-charges-for-upi-transactions-up-to-rs-2000-central-government">யு.பி.ஐ. செயலி </a>நிறுவனங்களுக்கும் செல்லும். ஏற்கனவே வங்கி பரிவர்த்தனை சார்ந்து பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காததற்கான அபராதம் வழியாகவும் தனியார் வங்கிகள் கோடிக் கணக்கில் பணத்தை குவிக்கின்றன. இப்போது கட்டணக் கொள்ளையில் யு.பி.ஐ நிறுவனங்களும் கூடுதலாக இணைந்து கொள்கின்றன.</p><h2>அனைத்து தரப்பினரும் பாதிப்பு</h2><p>வணிகர்களுக்கான கட்டணம் என்று கூறப்பட்டாலும், இந்தச் சுமை சரக்கு, சேவைகளின் விலையில் ஏற்றப்பட்டு விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே, பொருளாதார சுமையால் அவதிப்படும் சாதாரண மக்கள், சிறு வணிகர்கள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.</p><p>ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் எண்ணிக்கையில் குறைவாக தெரிந்தாலும், மொத்த யு.பி.ஐ. பரிவர்த்தனை மதிப்பில் அவை கணிசமான அளவாகும். ரூ.1 லட்சம் வரை மாதாந்திர யு.பி.ஐ. வரவு உள்ள சிறு வணிகர்களுக்கு தொடர்ந்து மூன்று மாதங்கள் சற்று கூடுதலாக பரிவர்த்தனை நடந்தால், அவர்களும் கட்டண வரம்புக்குள் வருவார்கள் என NPCI தெரிவித்துள்ளது. சில ஆயிரங்கள் மாதம் சம்பாதிக்கும் சிறு வியாபாரிகள் கூட இந்தக் கட்டண வலைக்குள் இழுக்கப்படுகிறார்கள்.</p><h2>மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</h2><p>இது அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி சபையின் நிர்ப்பந்தத்திற்கு மோடி அரசு பணிந்து கொண்டு வந்திருக்கிற கட்டண விதிப்பே ஆகும். UPI பரிவர்த்தனையில், 53 சதவிகிதம் சந்தைப் பங்கை வைத்துள்ள போன்.பே, 35 சதவிகிதம் வைத்துள்ள ஜி.பே நிறுவனங்கள் இரண்டும் அமெரிக்காவை சார்ந்தவை. ஆகவே, இந்திய எளிய, நடுத்தர மக்களின் கைகளில் இருந்து பறித்து பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு மடை மாற்றம் செய்கிற முடிவே இது.</p><p>எனவே, யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு <a href="https://www.dailythanthi.com/news/india/no-charges-for-upi-transactions-up-to-rs-2000-central-government">கட்டணம் </a>விதிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும், மக்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில், யு.பிஐ. கட்டமைப்பை லாப நோக்கில் ஏகபோக பெருநிறுவனங்களுக்கு சாதகமானதாக மாற்றக் கூடாது என்றும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சொத்து, தொழில் வரி செலுத்த வேண்டும்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/property-and-professional-taxes-in-the-chennai-corporation-must-be-paid-by-september-30</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/property-and-professional-taxes-in-the-chennai-corporation-must-be-paid-by-september-30#comments</comments><guid isPermaLink="false">4bbdaf11-b3cd-4bb5-b87f-d0d791faf30f</guid><pubDate>Thu, 17 Sep 2026 12:01:54 +0000</pubDate><atom:updated>2026-09-17T12:01:54.606Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சொத்து வரி,Property Tax,tax,தொழில் வரி,சென்னை மாநகராட்சி ஆணையர்,Chennai Corporation Commissioner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/fbyxb1sy/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/fbyxb1sy/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியினையும், அரசு அலுவலகங்கள் உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பணியாளர்களின் தொழில் வரியினையும் மாநகராட்சிக்கு 30.09.2026க்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>30ம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும்</h2><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998ன் பிரிவு 117 - ன் படி, பணியாளர்களின் ஊதியத்திலிருந்து தொழில் வரியினை பிடித்தம் செய்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்துவது அந்நிறுவனங்களின் சட்டபூர்வ கடமையாகும். அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரியினை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும்.</p><p>மேலும், சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரியினை வரும் 30.09.2026க்குள் நிலுவையின்றி செலுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 268 (3)ன் படி தனி வட்டி விதிக்கப்பட வேண்டும்.</p><h2>வார விடுமுறை நாட்களிலும் வரி செலுத்தலாம்</h2><p>எனவே, வரி செலுத்துவோரின் சிரமத்தினை குறைக்கும் முகமாக சொத்து வரி, தொழில் வரி, நிறும வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகியவற்றிற்கான கட்டணங்களை செலுத்துவதற்கு ஏதுவாக 19.09.2026, 20.09.2026, 26.09.2026 மற்றும் 27.09.2026 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில்) ஆகிய நாட்களில் மண்டல அலுவலகங்கள் மற்றும் ரிப்பன் கட்டடம் தலைமையிடத்தில் உள்ள வருவாய்த்துறை பொது வசூல் மையம் (Common Collection Centre) செயல்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன்
மறைவு - அன்புமணி ராமதாஸ் இரங்கல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/senior-congress-leader-sudarshana-nachiyappan-death-anbumani-ramadoss-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/senior-congress-leader-sudarshana-nachiyappan-death-anbumani-ramadoss-condoles#comments</comments><guid isPermaLink="false">21dc9ee7-e383-4834-8c4a-183b4bde6fd5</guid><pubDate>Thu, 17 Sep 2026 12:01:50 +0000</pubDate><atom:updated>2026-09-17T12:01:50.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,dies,இரங்கல்,மறைவு,சுதர்சன நாச்சியப்பன்,Sudarshana Nachiyappan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/r5mxukkx/110.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/r5mxukkx/110.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadass">அன்புமணி ராமதாஸ் </a>இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.</p><p>சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் இளம் வயதில் இருந்தே காங்கிரஸ்  கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அக்கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையான உழைத்தவர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அவர், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியாகவும் சிறப்பாக பணியாற்றியவர். சட்டத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்த போது சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான முக்கிய பரிந்துரைகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>சமூகநீதியில் அக்கறை கொண்ட சுதர்சன நாச்சியப்பன் அவர்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை தொடர்ந்து ஆதரித்து வந்தார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் அவர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மீதும், என் மீதும் மிகுந்த பற்று கொண்ட அவர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.</p><p>சுதர்சன நாச்சியப்பன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் 2-வது ஏர்போர்ட் எங்கே அமைகிறது? புதிய இடம் குறித்து அரசு ஆலோசனை...!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-will-chennais-2nd-airport-be-located-government-consultation-on-new-location</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-will-chennais-2nd-airport-be-located-government-consultation-on-new-location#comments</comments><guid isPermaLink="false">b1cbecca-2090-49e7-8bb7-d40be849f883</guid><pubDate>Thu, 17 Sep 2026 11:57:36 +0000</pubDate><atom:updated>2026-09-17T11:57:36.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,airport,விமான நிலையம்,தமிழக அரசு,TamilNadu Goverment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qya9x2qv/Airport.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qya9x2qv/Airport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூரை முதன்மை இடமாக தேர்வு செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>முன்னதாக அறிவிக்கப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அந்தத் திட்டத்துக்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைப்பது குறித்தும் தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p>சென்னையிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செய்யூரில், மின் திட்டத்துக்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 623 ஏக்கர் நிலமும், 300 ஏக்கர் புறம்போக்கு நிலமும் உள்ளன. இதனால் விமான நிலையம் அமைப்பதற்கான இடமாக செய்யூர் முதன்மையாக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>மாற்று இடம் மணலூர்</h2><p>இதற்கு மாற்று இடமாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணலூர் பகுதியும் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பகுதி பழவேற்காடு அருகே அமைந்துள்ளதால், <a href="https://www.dailythanthi.com/topic/சுற்றுச்சூழல்">சுற்றுச்சூழல்</a> தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மேற்கொள்ளும் சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, இரண்டாவது <a href="https://www.dailythanthi.com/topic/விமான-நிலையம்">விமான நிலையம்</a> அமைப்பதற்கான இடம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் உள்ள 3,11,285 தெரு மின் விளக்குகளும் ஒளிர்கிறதா? - அலுவலர்கள் கள ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-311285-street-lights-in-chennai-lit-officers-field-survey</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-311285-street-lights-in-chennai-lit-officers-field-survey#comments</comments><guid isPermaLink="false">db6f5c91-a0ab-4196-9d9e-44c9bb537e93</guid><pubDate>Thu, 17 Sep 2026 11:49:08 +0000</pubDate><atom:updated>2026-09-17T11:49:08.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Street lights,மின் விளக்குகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/9zip56sg/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-17/9zip56sg/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 3,11,285 தெரு மின் விளக்குகள் 100% ஒளிர்வதை உறுதி செய்யும் வகையில் நேற்று (16.09.2026) இரவு மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் ஏரியாத 2,079 தெரு மின் விளக்குகள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாக ஒளிரச் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மாநகராட்சி அலுவலர்கள் கள ஆய்வு</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள், தெருக்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதிகளில், மயான பூமிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மின் விளக்குகளும் உயர் கோபுர மின் விளக்குகளும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,11,285 மின் விளக்குகள் அனைத்தும் 100% ஒளிர்வதை உறுதி செய்திடும் வகையில், அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரனால் உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், வடக்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இணை ஆணையாளர் (கல்வி), மத்திய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இணை ஆணையாளர் (சுகாதாரம்), தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இணை ஆணையாளர் (பணிகள்) ஆகியோர் வட்டார பொறுப்பு அலுவலர்களும், 1 முதல் 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அலுவலர்களாக உயர் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு நேற்று 16.09.2026 இரவு முழுவதும் தெருவிளக்குகள் 100% ஒளிர்வது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.</p><h2>2,079 மின் விளக்குகள் எரியவில்லை</h2><p>இந்த கள ஆய்வில் மொத்தமுள்ள 3,11,285 தெரு மின் விளக்குகளில் 2,079 தெரு மின் விளக்குகள் ஏரியாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில், மழைநீர் வடிகால் பணி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பணி, சென்னை குடிநீர் மற்றும் கழிவு வாரியப் பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் 850 தெரு மின் விளக்குகளும், புதை மின்வட பழுதினால் 230 தெரு மின் விளக்குகளும், 999 எண்ணிக்கையிலான எல்இடி (LED) மின் விளக்குகள் ஏரியாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 2,079 தெரு மின் விளக்குகளையும் எரிய வைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>24 மணி நேரத்திற்குள் சரிசெய்யப்படும்</h2><p>இவற்றில் சேவைத்துறைகளின் பணிகள் நடைபெறும் இடங்களில் தற்காலிக தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. எரியாமல் உள்ள 999 எல்இடி (LED) மின் விளக்குகளை 24 மணி நேரத்திற்குள் சரிசெய்தும், புதை மின்வடம் பழுது தொடர்பான 230 மின்விளக்குகளை 48 மணி நேரத்திற்குள் சரிசெய்தும் ஏரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், மாநகராட்சி ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மரக்கிளைகளால் விளக்குகளின் வெளிச்சம் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து, வாரந்தோறும் மரக்கிளைகளை அகற்றி தெரு மின் விளக்குகள் நன்கு ஒளிர்வதை உறுதி செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தெரு விளக்குகள் பழுது பார்க்கும் சமயத்திலும் மற்ற நேரத்திலும் மரக்கிளைகள் அகற்றப்பட்டு வருகிறது.</p><h2>100% ஒளிர்வதை உறுதி செய்திட உத்தரவு</h2><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>மாநகராட்சிப் பகுதிகளில் மின் விளக்குகள் அனைத்தும் ஒளிர்வதைத் தொடர்ந்து கண்காணித்து அனைத்து மின் விளக்குகளும் நூறு சதவீதம் ஒளிர்வதை உறுதி செய்திட மாநகராட்சி ஆணையாளரால் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஒளிராத மின் விளக்குகள் தொடர்பாக பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>