<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 22 Aug 2026 07:35:44 +0000</lastBuildDate><item><title>சமயோஜித புத்தியால்...பெரும் விபத்தை தடுத்த ஓட்டுநர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-prevents-major-accident-through-quick-thinking</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-prevents-major-accident-through-quick-thinking#comments</comments><guid isPermaLink="false">1c3b3812-a44a-410d-8f36-230ce1ae18fc</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:34:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:34:17.528Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Fire,lorry,லாரி,திருத்தணி,தீப்பற்றி</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/b9pie770/37.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தீப்பற்றிய லாரி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஓட்டுநரால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/b9pie770/37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி,</p><p>ஓடிக்கொண்டிருந்த லாரியில் தீ வேகமாகப் பரவிய நிலையில், ஓட்டுநர் மேற்கொண்ட சமயோஜித நடவடிக்கையால் பெரும் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.</p><h2>திடீர் தீ விபத்து</h2><p>திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல்  லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீப்பிடித்து</a> குபு குபுவென எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், என்ஜின் பகுதியில் பற்றிய தீ மிக வேகமாக வாகனத்தின் மற்ற பகுதிகளுக்கும், பின்னால் இருந்த சரக்கு பெட்டகத்திற்கும் பரவத் தொடங்கியது.</p><h2>ஓட்டுநரின் சாதுரிய செயல்</h2><p>தீப்பற்றியதை உணர்ந்த ஓட்டுநர், சற்றும் பதற்றமடையாமல் உடனடியாக வாகனத்தை சாலையோரமாக நிறுத்தினார். தீ மற்ற பகுதிகளுக்குப் பரவினால் முழு வாகனமும் எரிந்து சாம்பலாகிவிடும் என்பதையும், பின்னால் இருக்கும் பகுதிக்குத் தீ பரவினால் ஆபத்து அதிகம் என்பதையும் அவர் நொடிப்பொழுதில் உணர்ந்தார். உடனே துணிச்சலுடன் செயல்பட்ட அவர், லாரியின் கேபின் மற்றும் என்ஜின் பகுதியை, பின்னால் இருந்த சரக்கு ஏற்றிச் செல்லும் பகுதியிலிருந்து தனியாகப் பிரித்துவிட்டார்.</p><h2>தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து</h2><p>ஓட்டுநர் என்ஜின் பகுதியை தனியாகப் பிரித்து அப்புறப்படுத்தியதால், பின்னால் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்களும், வாகனத்தின் பெரும் பகுதியும் தீயில் கருகாமல் முழுமையாகக் காப்பாற்றப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D"> தீயணைப்புத் துறையினர்</a>, என்ஜின் பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>ஓட்டுநரின் இந்த விரைவான மற்றும் சமயோஜிதமான செயலால் எவ்வித உயிர்ச்சேதமும் இன்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு காரணமாக இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்து</a> ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நெருக்கடியான நேரத்தில் பதற்றப்படாமல் சாதுரியமாகச் செயல்பட்டு பெரும் விபத்தைத் தடுத்த ஓட்டுநருக்கு பொதுமக்களும், அதிகாரிகளும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இளம்பெண்ணை ஏமாற்றியதாக இன்ஸ்பெக்டர் மீது புகார்: 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-against-inspector-for-deceiving-a-young-woman-case-registered-under-five-sections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-against-inspector-for-deceiving-a-young-woman-case-registered-under-five-sections#comments</comments><guid isPermaLink="false">82d899e2-5bcc-46b3-a5b1-cf0657b85766</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:29:16 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:29:16.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,young woman,வழக்குப்பதிவு,டி.ஐ.ஜி,Inspector,இன்ஸ்பெக்டர்,Complaint,பணியிடை நீக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3mual0u1/143.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணியிடை நீக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3mual0u1/143.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த அருண்குமார் (40), மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய புகாரில் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>மதுரையைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுடன் இன்ஸ்பெக்டர் அருண்குமாருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவர் தன்னை ஏமாற்றியதாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இந்தப் புகாரின் அடிப்படையில், வீரவநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருண்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இளம்பெண்ணை ஏமாற்றியது மற்றும் அச்சுறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், அவர் மீது மொத்தம் 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">இன்ஸ்பெக்டர்</a> அருண்குமாரைப் பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கிராமப்புற மாணவர்களின் கல்விச் சேவைக்கு தேசிய விருது - ஆசிரியர் தங்கராஜுக்கு  நயினார் நாகேந்திரன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-award-for-educational-service-to-rural-students-nainar-nagendran-praises-teacher-thangaraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-award-for-educational-service-to-rural-students-nainar-nagendran-praises-teacher-thangaraj#comments</comments><guid isPermaLink="false">69a01e21-97c1-48c6-87fd-cab2739565c5</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:28:02 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:28:02.333Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பாராட்டு,praises,தேசிய நல்லாசிரியர் விருது,National Award for Teachers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/njej90d3/81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/njej90d3/81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தேசிய நல்லாசிரியர் விருது</h2><p>தமிழகத்தின் தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் , மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81">தேசிய நல்லாசிரியர் விருது</a>க்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டின் கல்விப் பெருமைக்கு கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரம்! வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான ஆசிரியர் தினத்தன்று, குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு அவர்களின் கரங்களால் விருது பெறவிருப்பது, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வு!</p><h2>மனமார்ந்த பாராட்டு</h2><p>கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, ஆசிரியர் பணியின் மகத்துவத்தை நாடறியச் செய்துள்ள தங்கராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!</p><p>தேசிய அளவில் தமிழகத்தின் கல்வித் தொண்டை அங்கீகரித்து, நல்லாசிரியர்களை கௌரவிக்கும் மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும்,  மத்திய கல்வி மந்திரி பிரகலாத் ஜோஷி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 7 மாநகரங்களில் ‘டவுன் ஹால்’ கூட்டங்கள்: மாணிக்கம் தாகூர் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/town-hall-meetings-in-7-cities-across-tamil-nadu-manickam-tagore-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/town-hall-meetings-in-7-cities-across-tamil-nadu-manickam-tagore-announces#comments</comments><guid isPermaLink="false">ba4291c4-9d12-4042-b289-44681b70e84a</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:26:31 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:26:31.511Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,தமிழ்நாடு காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,tamilnadu congress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/ph8tjeku/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/ph8tjeku/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி கட்சியினர் எழுப்பிய பிரச்சினைகள் குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்தும் தமிழக மக்களிடையே விளக்குவதற்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தில் </a>7 மாநகரங்களில் ‘டவுன் ஹால்’ கூட்டங்கள் நடைபெற உள்ளதாக மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>7 மாநகரங்களில் கூட்டம்</h2><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெற்ற போது, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ பதில் தர முன்வரவில்லை. குறிப்பாக, தலைநகர் டெல்லியில், நீட் வினாத்தாள் கசிவு குறித்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் பெல்லட் துப்பாக்கி குண்டுகளை ஏவி, தடியடி நடத்திட யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்விக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ பதில் தர முன்வரவில்லை.</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி கட்சியினர் எழுப்பிய பிரச்சினைகள் குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்தும் தமிழக மக்களிடையே விளக்குவதற்கு, மாநகரங்களில் ‘டவுன் ஹால்” என்ற தலைப்பில் விளக்க கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 7 மாநகரங்களில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கீழ்க்கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.</p><h2>நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு</h2><p>22.08.2026 அன்று காலை 11.00 மணிக்கு கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கே. சுப்பராயன், செல்வி எஸ். ஜோதிமணி, விஜய் வசந்த்</p><p>23.08.2026 அன்று மாலை 3.00 மணிக்கு திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் துரை வைகோ, செல்வராஜ், கிறிஸ்டோபர் திலக்</p><p>24.08.2026 அன்று காலை 11.00 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறும் கூட்டத்தில் கார்த்தி ப. சிதம்பரம், துரை வைகோ, சி. ராபர்ட் புரூஸ்</p><p>27.08.2026 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் ப. சிதம்பரம், எஸ். ரவிக்குமார், பிரவீன் சக்கரவர்த்தி</p><p>28.08.2026 அன்று காலை 11.00 மணிக்கு வேலூரில் நடைபெறும் கூட்டத்தில் சசிகாந்த் செந்தில், வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன்</p><p>29.08.2026 அன்று காலை 11.00 மணிக்கு சேலத்தில் நடைபெறும் கூட்டத்தில் சச்சிதானந்தம், டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத்</p><p>29.08.2026 அன்று காலை 11.00 மணிக்கு மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் ப. சிதம்பரம், சு. வெங்கடேசன், நவாஸ்கனி</p><p>மாநகரங்களில் நடைபெறும் டவுன் ஹால் கூட்டங்களை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இந்தியா கூட்டணி கட்சியினரோடு இணைந்து கூட்டம் சிறப்பாக நடத்திட ஒருங்கிணைப்புப் பணிகளை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் நாட்டின் நலனிலும், மக்கள் பிரச்சினைகளிலும் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் எந்த அளவிற்கு சர்வாதிகார, ஜனநாயக உணர்வில்லாத பா.ஜ.க.வினரோடு எத்தகைய போராட்டங்களை நடத்தினார்கள் என்பதை தமிழக மக்கள் அறிவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இக்கூட்டங்கள் அமைய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் குறைந்தது - விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-water-level-in-varattupallam-dam-drops-farmers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-water-level-in-varattupallam-dam-drops-farmers-concerned#comments</comments><guid isPermaLink="false">2d824e6f-6608-41fe-8b03-99bc663c81e0</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:17:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:17:03.375Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,வரட்டுப்பள்ளம் அணை,Varattupallam Dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/0z4bllug/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/0z4bllug/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. 33.46 அடி நீர்மட்டம் உயரம் கொண்ட இந்த அணைக்கு பர்கூர் மலைப்பகுதியே நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணை நிரம்பும்போது அதன் உபரி தண்ணீர் கெட்டி சமுத்திரம் ஏரி, அந் தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்லும். இதன் மூலம் ஏராளமான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக அமைந்துள்ளது. </p><p>இது தவிர வரட்டுப்பள்ளம் வனப்பகுதியில் உள்ள விலங்குகளும் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதிக்கு வந்தே தண்ணீர் குடித்து செல்லும். இந்தநிலையில் இந்த ஆண்டு பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 33.46அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 14.96 அடியே உள்ளது. பருவமழை பெய்யுமா? வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வருமா? என்று விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தையூரில் இளைஞர் ஆணவக் கொலை: நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/honor-killing-of-a-young-man-in-thaiyur-neelam-cultural-centre-condemns-the-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/honor-killing-of-a-young-man-in-thaiyur-neelam-cultural-centre-condemns-the-incident#comments</comments><guid isPermaLink="false">a3ec09cb-b3c8-4698-b165-8ff4e404daf7</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:10:38 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:10:38.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இளைஞர்,ஆணவக் கொலை,Honor Killing,சாதி வெறி,incident,A young man- வாலிபர்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3ewy088l/36.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பிரவீன் குமார் -  பா.இரஞ்சித்தின்]]></media:title><media:description type="html"><![CDATA[ நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3ewy088l/36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தையூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் பிரவீன் குமார் கூலிப்படையால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ‘நீலம் பண்பாட்டு மையம்’ தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><h2>இளைஞர் படுகொலை</h2><p>தையூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். அதற்கு அப்பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவீன் குமார் ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டப்பட்டார். ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>4 பேர் கைது</h2><p>அக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருப்போரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தொடர்புடைய தையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, மணிகண்டன், நந்தீஸ், கவுதம் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரைத் தேடி வருகின்றனர்.</p><h2>முற்றுகைப் போராட்டமும் போக்குவரத்து பாதிப்பும்</h2><p>பிரவீன் குமாரின் மரணச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் திரண்டனர். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரியும், ஆணவக் கொலைக்கு நீதி கேட்டும் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டம் </a>தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.</p><h2>நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்</h2><p>இச்சம்பவம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">நீலம் பண்பாட்டு மையம்</a>’ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவக் கொலைகள் சமூகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தையூர் பிரவீன் கொலைக்குக் காரணமான பின்னணியில் உள்ள அனைவரையும் தப்பவிடாமல் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், இதுபோன்ற சாதி வெறிப் படுகொலைகளைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாக ‘<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">ஆணவக் கொலை </a>தடுப்பு தனிச்சட்டம்’ இயற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;கம்பேக் கொடுப்பதில் நாம் ஸ்பெஷலிஸ்ட்..! அதை சிறப்பாக கொடுப்போம்!&quot;  - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-specialists-in-making-a-comeback-we-will-do-it-in-grand-style-dmk-president-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-specialists-in-making-a-comeback-we-will-do-it-in-grand-style-dmk-president-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">02730b37-0551-49d0-826e-2f1d7c83792b</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:09:00 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:09:00.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,Chennai,சென்னை,தமிழகம்,செயற்குழு கூட்டம்,Anna Arivalayam,அண்ணா அறிவாலயம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/9ed4hdx1/dmkmkm.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/9ed4hdx1/dmkmkm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. கழகத்தின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக எடுத்துக் கொள்வோம் என்று தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">தலைவர் மு.க.ஸ்டாலின்</a> தெரிவித்தார். </p><h2>75 ஆண்டுகள் கடந்த பிறகும்</h2><p>தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. </p><p>பின்னர் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-</p><p>நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பாரக்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. கழகத்தின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக எடுத்துக் கொள்வோம். </p><p>கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது. உங்களின் ஒப்புதலுடன் கழகத்தின் அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த பிறகும், கழகம் வலிமையோட இருப்பதற்கான காரணம், நம் அமைப்புமுறை தான்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/qz1ovx1x/aman.jpg" /></figure><h2>திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்வு முடியாது</h2><p>கலைவர் கலைஞரின் வரிகளை நீங்க மறந்திருக்க மாட்டீர்கள். “இந்த கருணாநிதியின் வாழ்வு முடிந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்வு முடியாது! அதனை, அதன் அமைப்புமுறை காப்பாற்றும்!”. இதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது. அப்படிப்பட்ட அந்த அமைப்பு முறையின் வலிமையாலதான், நாம் நிற்கிறோம்.</p><p>நாம் தோல்வியடைய பல காரணங்கள் இருப்பினும் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று. அதையும் நாம் மறைக்கத் தேவையில்லை. நம் தவறுகளை முதலில் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டும். எந்தத் தனிமனிதரின் தவறாக இருந்தாலும் - அதனால் பாதிக்கப்படுவது எழுபத்தைந்தாண்டு காலக் கழகம்.</p><h2>சுய பரிசோதனை</h2><p>தோல்விக்கு பிறகு, எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியாக பார்த்து குறைகளைக் கண்டறிந்து ஆளை மாற்றுவதைவிட முழுமையான ஒரு சுய பரிசோதனை வேண்டும் என முடிவெடுத்தேன். அந்த வகையில் கழகத்தின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம். கடுமையானதாகத்தான் இருக்கும்; சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும். கசப்புதான் உடலுக்கு நன்மை செய்யும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். </p><p>இந்த மாறுதல்கள் அடுத்த நூறாண்டுக்கு கழகம் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்யும். தேர்தல் தோல்விக்கு பிறகு, 38 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை அமைத்தேன்.  தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்டு அதை அறிக்கையாக கொடுத்திருக்கிறார்கள். அது தவிர, தனியாக இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலமும் பல்லாயிரக்கணக்கான கருத்துகள் பெறப்பட்டு, இவை அனைத்தையும் தொகுத்து நான் முழுமையாக வாசித்து உள் வாங்கியிருக்கிறேன்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/au33iygf/dlsjrjwe.jpg" /></figure><h2>புதிய உறுப்பினர் சேர்க்கை</h2><p>ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம். இந்தக் கருத்துகளின் அடிப்படையில - திட்டங்களை வகுக்க, தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில, மறுசீரமைப்புக் குழுவை அமைத்தேன்.</p><p>அந்தக்குழு அறிவாலயத்தில்  பல நாள் கூடி, ஒவ்வொரு பிரச்சனையாக ஆய்வு செய்து, இடைக்கால அறிக்கையை என்னிடம் கொடுத்தார்கள். முக்கியமான தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தீர்மானமாக உருவாக்கியுள்ளோம். இளைஞர்கள், பெண்கள் நம்பிக்கையை மீண்டும் நமக்கு  பெற்றுத் தருவது போல நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.</p><p>இனி வரும் நிர்வாகிகளுக்கு,  அந்தந்த பொறுப்புகளுக்கு ஏற்ப வயது வரம்பையும், பதவிக்காலத்தையும் அறிமுகப்படுத்த போகிறோம். புதுமுகங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் பொறுப்புகளை வழங்கப் போகிறோம். விரைவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நாம் தொடங்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கை நேர்மையானதாக - உண்மையானதாக அமைய வேண்டும். </p><h2>கட்சி மறுசீரமைப்பு</h2><p>உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு அனைத்து மட்டத்திலும் உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்துவோம். தகுதி வாய்ந்த புதிய நிர்வாகிகள் வெற்றி பெற்று வருவார்கள். நியமனங்களாக இல்லாமல் தேர்தல் மூலமாக வெல்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. கட்சியை மறுசீரமைப்பு செய்வது மூலமாக மட்டும்தான், நாம் மீண்டும் அரசியல் வெற்றியை பெற முடியும்.</p><p>எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக கட்சி சீரமைப்புகளைச் செய்ய வேண்டும். அதற்கு முதலில் நமக்கு மனமாற்றம் வர வேண்டியது அவசியம். மாறுதலுக்குத் தயார் ஆகாமல் வெற்றி பெற முடியாது. என்னுடைய வருத்தமெல்லாம், கொள்கை – கோட்பாட்டில், உழைப்பில் – உறுதியில், போராட்டக் குணத்தில் வலிமையாக இருக்கிறவர்கள் கூட  நிர்வாகிகளை அரவணைப்பதில் சறுக்கிவிடுகிறார்கள். </p><p>இன்னும் சிலர் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிக்காரர்களைப் பாத்தால் மலரும் முகம், நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலர்வது இல்லை. எதிர்க்கட்சிக்காரர்களைப் பாத்தால் வணங்கும் கை, நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் வணங்குவது இல்லை. தனக்கு இணையாக யாரும் வளரக் கூடாது என நினைத்தால் அந்த மாவட்டத்தில அவர்கள் மட்டும்தான் இருப்பார்கள்.</p><h2>Bore அடிக்கிறது என அரசியலுக்கு வரவில்லை</h2><p>ஒரு மாவட்டச் செயலாளரை மட்டும் வைத்து அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிட முடியாது. ஒரு MLA மட்டுமே வலிமையாக இருந்தால் அந்தத் தொகுதியில் வென்றுவிட முடியாது. ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாக செயல்படும் போதுதான் இயக்கம் வளரும்; இயக்கம் வாழும்! </p><p>படைக்கு இளையோர் வரும்போது, அவர்களை மூத்தோர் வரவேற்று வழி நடத்துவதுதான் வலுவான படைக்கு  அடையாளம். இப்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? மக்களுக்காக உழைக்காமல் - போராட்டம் நடத்தாமல் - கொள்கை இல்லாமல் - நிர்வாகக் கட்டமைப்பு இல்லாமல் - ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதை பார்த்து நாமும் அப்படி ஆக முடியாது - ஆகிடவும் கூடாது! அது போன்று நாமும் கட்சியை நடத்தலாம் என்று நினைக்கவே கூடாது. </p><p>நாம் நிரந்தரம்! நாம் Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்கள இல்லை – போராட வந்தவர்கள்! வெற்றி தோல்வியில் நம் இயக்கத்தின் வாழ்க்கை அடங்கி இருக்கப் போவது இல்லை. ஒரு தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தல் வரும் வரை தூங்கி வழிவதுதான் மற்ற கட்சிகளின் வழக்கம். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/npygu0nu/ererer.jpg" /></figure><h2>Comeback கொடுப்பதில் நாம் Specialist</h2><p>எதிர்கட்சியாக இருந்தாலும் சுணங்கிடாமல், மக்கள் நலனுக்காக சிறப்பாகச் செயல்படும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என நம் எதிரிகளே சொல்வார்கள். Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! </p><p>கடந் முறை வென்ற பிறகு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நல்லாட்சி கொடுப்போம் எனச் சொன்னோம்; அதைச் செய்தும் காட்டினோம். இப்போது தோற்ற பிறகும் நான் சொல்கிறேன், நமக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் போராட போகிறோம். அவர்களின்  நலனுக்கும் துணைநிக்க போகிறோம். </p><p>நம் கட்சிக்காரர்கள் முதலில் அவர்கள் வீட்டில் அரசியல் பேச வேண்டும். நம் பிள்ளைகள், நம் உறவினர்களிடம் முதலில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். நம் உறவினர்கள், அக்கம்பத்தினர் வாக்குகளை முழுமையாக வாங்க வேண்டும். இப்போதைய முதலமைச்சர் நாம் கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிசியாக இருக்கிறார்.</p><h2>கருப்பு சிவப்புக் கொடி</h2><p>சட்டப்பேரவையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். நம்மை பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ, மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவர்கள் நாம். இனமும் - மொழியும் - நாடும் இருக்கும் வரை கருப்பு சிவப்புக் கொடி . பறக்க வேண்டும் என்ற நினைப்புடன் நாம் உழைக்க வேண்டும்.</p><p>அப்படி, உழைக்கத் தேவையான உடன்பிறப்புகளைக் கழகத்தில் அதிகம் சேர்க்க வேண்டும். எல்லாரும் சேர்ந்து உழைப்போம்!. பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தை - தமிழினத் தலைவர் கலைஞர் வளர்த்த இயக்கத்தை இன்னும் வலிமை கொண்டதாக வளர்த்தெடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தவெகவின் 100 நாள் ஆட்சியை விசிக பாராட்டுகிறது: திருமாவளவன் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-praises-tvks-100-day-governance-thirumavalavans-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-praises-tvks-100-day-governance-thirumavalavans-remarks#comments</comments><guid isPermaLink="false">dbce97c5-8aaa-44a7-b5dd-2e4e15478c72</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:04:36 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:04:36.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திருமாவளவன்,Thirumavalavan,விசிக,VCK</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/r32781ja/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/r32781ja/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p>திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>தேர்தலுக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கரைந்துவிட்டது என சிலர் வதந்திகளை பரப்பினர். வதந்திகளை பொய்யாக்கும் வகையில் ஜென்சி தலைமுறையினர் இந்த மாநாட்டில் லட்சக்கணக்கில் கலந்து கொண்டனர். மாநாட்டில் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது, உயிர் சேதம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் தான் எனது உரையை 2 நிமிடத்தில் முடித்துக்கொண்டேன். வி.சி.க.வினர் ஒழுங்கீனமானவர்கள் என சமூக ஊடகங்களில் சித்தரிக்க தொடங்கினர். தமிழக அரசியல் களத்தில் ஒழுக்கம் நிறைந்த இளைஞர்களை கொண்ட கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. மாநாடு வெற்றி பெற வாழ்த்து செய்தியை அனுப்பிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது இந்த மாநாடு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது என பாராட்டினார். வருகிற 29-ந் தேதி மாநாட்டு மலர் சென்னையில் வெளியிடப்படும். மாநில சுயாட்சி என்ற கோரிக்கை முழக்கத்தை உரக்க பேசவே இந்த மாநாடு நடைபெற்றது. மாநில சுயாட்சி என்பது தி.மு.க.வால் முன் நிறுத்தப்பட்ட ஒரு மகத்தான கோட்பாடு. இதை வி.சி.க. உரக்க பேசி வருகிறது. மாநில சுயாட்சி கோரிக்கை அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.</p><p>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பது வி.சி.க.வின் நிலைப்பாடு. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை வி.சி.க. வரவேற்கிறது. தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க.விடம் தனித்து நில்லுங்கள், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டாம். தனித்து நின்றாலே உங்கள் செல்வாக்கு நிலைத்து நிற்கும் என கூறினேன். அந்த நேரத்தில் எங்களுக்கு புத்திமதி சொல்ல நீங்கள் யார் என்ற கேள்வியை எழுப்பினார்கள். த.வெ.க.வின் 100 நாள் ஆட்சியை வி.சி.க. பாராட்டுகிறது. இந்த 100 நாள் என்பது த.வெ.க.விற்கு கற்று கொள்ளும் காலம். 100 நாள் த.வெ.க. ஆட்சியில் எந்த துறையிலும் லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை என்ற பெயரை சம்பாதித்து சாதித்துள்ளார்கள். பலர் மனம் திறந்து இந்த நிலைப்பாட்டை பாராட்டுகிறார்கள். இதே நிலை நீடிக்க வேண்டும், ஊழல் இல்லாத அரசாக 5 ஆண்டுகள் செயல்பட்டு த.வெ.க. சாதனை படைக்க வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். சௌகார் ஜானகி மறைவு எனக்கு துயரம் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>திமுகவில் 13 மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்க வாய்ப்பு? யார் யார் தெரியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/likelihood-of-13-dmk-district-secretaries-losing-their-posts-do-you-know-who-they-are</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/likelihood-of-13-dmk-district-secretaries-losing-their-posts-do-you-know-who-they-are#comments</comments><guid isPermaLink="false">90130a8b-11c9-4cab-b6e2-e50f2fdfa85a</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:04:32 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:04:32.469Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,District Secretaries,மாவட்ட செயலாளர்கள்,mk stalin,தமிழக அரசியல்,tn politics,திமுக மாவட்ட செயலாளர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/josixzki/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/josixzki/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><h2>பதவி இழக்க வாய்ப்பு</h2><p>குறிப்பாக, கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பதவி வகிப்போருக்கு வயது வரம்பும் விதிக்கப்பட்டது. அதன்படி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-number-of-district-secretaries-increased-to-110-resolution-in-the-executive-committee">மாவட்ட செயலாளர்</a> பதவிக்கு 70 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>இதை வைத்து பார்த்தால், 13 தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் பதவி பறிபோகும் என்று தெரிகிறது. ஏனென்றால், இவர்கள் 13 பேரும் 70 வயதை கடந்தவர்கள் ஆவார்கள். இதேபோல், மாவட்ட செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறைக்கு மேல் அந்தப் பதவியில் இருக்க முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>13 பேர் யார்?</h2><p>செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அடுத்த 15 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில், தற்போது திமுகவில் 70 வயதிற்கு மேற்பட்ட மாவட்ட செயலாளர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி,</p><ol><li><p>காஞ்சிபுரம் தெற்கு: சுந்தர் - 72</p></li><li><p>ராணிப்பேட்டை: ஆர் காந்தி - 80</p></li><li><p>திருவண்ணாமலை தெற்கு: ஏவா வேலு - 75</p></li><li><p>விழுப்புரம் வடக்கு: செஞ்சி மஸ்தான் - 71</p></li><li><p>சேலம் கிழக்கு: எஸ் ஆர் சிவலிங்கம் - 75</p></li><li><p>ஈரோடு தெற்கு: முத்துசாமி - 77</p></li><li><p>தஞ்சாவூர் வடக்கு: சாக்கோட்டை அன்பழகன் - 72</p></li><li><p>புதுக்கோட்டை தெற்கு: ரகுபதி - 76</p></li><li><p>மதுரை மாநகர்: கோ தளபதி - 70</p></li><li><p>தேனி தெற்கு: ராமகிருஷ்ணன் - 77</p></li><li><p>விருதுநகர்: கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் - 77</p></li><li><p>தூத்துக்குடி தெற்கு: அனிதா ராதாகிருஷ்ணன் - 74</p></li><li><p>திருநெல்வேலி மேற்கு: ஆவுடையப்பன் - 81</p></li></ol>]]></content:encoded></item><item><title>உடுமலை பஸ் நிலையத்தில் புதிய இருக்கைகள் அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-seating-arrangement-at-udumalai-bus-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-seating-arrangement-at-udumalai-bus-station#comments</comments><guid isPermaLink="false">31e70d38-30fe-42ff-99c6-6965d285c3ec</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:02:01 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:02:01.500Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உடுமலை,Udumalai,பஸ் நிலையம்,Seats,bus station,அமைப்பு,இருக்கைகள்,arrangement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/pm9k7vwv/80.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/pm9k7vwv/80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போடிப்பட்டி,       </p><p>உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில், அதன் அருகிலேயே புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இந்த பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.</p><h2>கால் கடுக்க காத்திருக்கும் நிலை</h2><p>குறிப்பாக, பழனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், இருக்கை வசதி இல்லாமல் கால் கடுக்க காத்திருக்கும் நிலை இருந்தது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால், பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.</p><h2>பயணிகள் மகிழ்ச்சி</h2><p>இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி பிரசுரமானது. அதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/bus">பஸ் </a>நிலையத்தில் பயணிகள் இருக்கை வசதி அமைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை தினம் - பிரேமலதா வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-day-premalatha-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-day-premalatha-greetings#comments</comments><guid isPermaLink="false">079b130f-f57b-4e95-8865-40a9ed1af8df</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:42:30 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:42:30.087Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா,Chennai Day,சென்னை தினம்,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/fuw8eqc8/premalatha1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/fuw8eqc8/premalatha1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளை, இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகிறது. இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>சென்னை தினம்</h2><p>உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், நவீன வளர்ச்சியும் கொண்ட நமது அன்புச் சென்னை மாநகருக்கு என் இனிய<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D"> சென்னை தின </a>நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>சென்னையின் பெருமையும், வளர்ச்சியும் மேலும் உயர்ந்து, அனைவரும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு: செயற்குழுவில் தீர்மானம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-number-of-district-secretaries-increased-to-110-resolution-in-the-executive-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-number-of-district-secretaries-increased-to-110-resolution-in-the-executive-committee#comments</comments><guid isPermaLink="false">da07a93a-5c3e-4866-ba9c-e7a65fc97175</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:33:41 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:33:41.896Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,District Secretaries,மாவட்ட செயலாளர்கள்,தி.மு.க</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/nkyzvs6x/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/nkyzvs6x/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. </p><p>சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். முதியவர்களை விடுவித்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. </p><p>குறிப்பாக, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார்.  இந்த பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. </p><p>குறிப்பாக, தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 75-ல் இருந்து 110 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பதவி வகிப்போருக்கு வயது வரம்பும் விதிக்கப்பட்டது. </p><p>அதன்படி, கிளை செயலாளர் பதவிக்கு 45 வயது என்றும், வட்டச் செயலாளர் பதவிக்கு 50 வயது என்றும், மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>இதை வைத்து பார்த்தால், 13 தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் பதவி பறிபோகும் என்று தெரிகிறது. ஏனென்றால், இவர்கள் 13 பேரும் 70 வயதை கடந்தவர்கள் ஆவார்கள். இதேபோல், கட்சியில் எந்த பதவியாக இருந்தாலும், ஒருவர் 2 முறைக்கு மேல் அந்தப் பதவியில் இருக்க முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அடுத்த 15 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்பு? - அமைச்சர் நிர்மல்குமார் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-chief-minister-participate-in-the-consecration-of-meenakshi-amman-temple-minister-nirmal-kumar-replies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-chief-minister-participate-in-the-consecration-of-meenakshi-amman-temple-minister-nirmal-kumar-replies#comments</comments><guid isPermaLink="false">7fb01cbd-22d6-45fa-a482-2dd75d4f241e</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:32:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:32:18.579Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,Nirmalkumar,அமைச்சர் நிர்மல்குமார்,CMVijay‌,Madurai  temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/gctmjxkz/nirmalkumar33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்பு?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/gctmjxkz/nirmalkumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பாரா? என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார்.</p><p>மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் கோவில் கும்பாபிஷேகத்தை அருகில் காண அனுமதிக்கப்படுவார்கள். </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மீனாட்சி அம்மன் கோவில்</a> கும்பாபிஷேகத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்பது குறித்து இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய இடத்தில், முதல்-அமைச்சர் வருவது இன்னும் கூட்டத்தை அதிகரிக்கும்; அதற்கான சாத்தியக்கூறு இப்போது வரைக்கும் இல்லை.</p><h2>வட்டாட்சியர் மீது நடவடிக்கை </h2><p>கலெக்டருக்கு தெரியாமல் குஜிலியம்பாறை வட்டாட்சியர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரி விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு தேவையான வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.</p><h2>வட்டாட்சியர் மீது நடவடிக்கை </h2><p>கலெக்டருக்கு தெரியாமல் குஜிலியம்பாறை வட்டாட்சியர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரி விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு தேவையான வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திமுக கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள்.. 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/major-organizational-changes-in-the-dmk-9-key-resolutions-passed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/major-organizational-changes-in-the-dmk-9-key-resolutions-passed#comments</comments><guid isPermaLink="false">eaac6f43-de34-487a-abd0-1e87ba7fe026</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:20:10 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:20:10.567Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,செயற்குழு கூட்டம்,தீர்மானங்கள்,Resolutions,Executive Committee Meeting</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/g897j8ay/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/g897j8ay/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Breaking-News</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;</p><p>பவள விழா கண்டு நூற்றாண்டை நோக்கி நடைபோடும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் புத்தெழுச்சியைப் பெற - அடுத்தகட்டப் பயணத்தில் வெற்றிகளை அடைய, கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட கழக மறுசீரமைப்புக் குழுவானது பல்வேறு பரிந்துரைகளைத் தலைமைக் கழகத்துக்கு வழங்கியிருக்கிறது. அவற்றைக் கழகத் தலைவர் தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களைத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானமாக முன்மொழிய இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.</p><p>கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரையில் 15 முறை கழக அமைப்பு ரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலை நடத்தி நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட பின்வரும் தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் முன் வைக்கப்படுகிறது. இந்த தீர்மானங்கள் இயக்கத்தை வலிமையாக்கும். தொண்டர்களை உற்சாகம் அடைய வைக்கும்.</p><h2>தீர்மானம் : 1</h2><p>கிளைக் கழகங்கள்தான் நமது கழகத்தின் வலுவான கட்டமைப்புக்கு ஆணிவேர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள். கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.</p><h2>தீர்மானம் : 2</h2><p>தற்போது மாநகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பாகத் திகழ்வது வட்டக் கழகங்கள். அதனை மேலும் வலிமைப்படுத்திட புதிய அமைப்பு ஒன்றின் தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில், புதிய நிர்வாக அமைப்பாக மாநகர பகுதிகளில் கிளைக் கழகம் எனும் பிரிவு தொடங்கப்பட்டு, கிளைச் செயலாளர் எனும் பொறுப்பு உருவாக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர், அப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.</p><p>சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் இந்த கிளை அமைப்பானது ஏற்படுத்தப்படும். பிற மாநகராட்சிகளில் நிர்வாகச் சூழலுக்கேற்ப இதேபோன்ற கிளை அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.</p><h2>தீர்மானம் : 3</h2><p>நகர்ப்புறங்களில் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பானது மாநகரம் - நகரம் - பேரூர்க் கழகம் என்று இயங்கி வருகின்றன. மாநகர - நகர மற்றும் பேரூர்க் கழகக் கட்டமைப்புகளின் வலிமை மிக்க தூணாக விளங்குபவை வட்டக் கழகங்கள். சென்னை மாநகராட்சியில் இனி உருவாக்கப்படும் வட்டக் கழகங்கள் சராசரியாக பத்தாயிரம் வாக்குகள் கொண்டதாக இருக்க வேண்டும். மற்ற மாநகரங்களில் சராசரியாக ஐந்தாயிரம் வாக்குகள் கொண்டதாக அமைய வேண்டும். அதுமட்டுமின்றி, மாநகர - நகர - பேரூர் உள்பட்ட கழகங்களுக்கு வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒருவர் அப்பொறுப்பை அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.</p><h2></h2><h2>தீர்மானம் : 4</h2><p>கிராமபுறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடைப்பட்ட அமைப்பு பேரூராட்சிகள். அந்தப் பேரூர்க் கழகங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பேரூர்க் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் பேரூர்க் கழகச் செயலாளராக அதிகபட்சமாக, இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.</p><h2>தீர்மானம் : 5</h2><p>மாநகரங்களில் கழகத்தின் செயல்பாடுகளுக்கு அச்சாணியாக விளங்குவது பகுதிக் கழகங்கள். சென்னை மாநகராட்சியில் இனி அமையும் பகுதிக் கழகங்கள் 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், மற்ற மாநகரங்களுக்குச் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட பகுதி கழகங்களாகவும் அமைய வேண்டும். அப்படி உருவாக்கப்படும் பகுதிக் கழகங்களுக்கான செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் அதிகபட்ச வயது 60 என்றும், அவர்கள் அதிகபட்சமாக இரு முறை அப்பொறுப்பில் பணியாற்ற முடியும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.</p><h2>தீர்மானம் : 6</h2><p>இந்தியாவிலேயே வேகமாக நகரமயமாகிவரும் மாநிலம் தமிழ்நாடு. நிர்வாக வசதிக்காக மக்கள்தொகை அடிப்படையில் நகரக் கழகங்களைப் பிரிப்பது இன்றியமையாததாகிறது. அதன் அடிப்படையில், சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய ஒரு நகரக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். நகரக் கழகங்களின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என்று நிர்ணயிக்கப்படுவதுடன், நகரச் செயலாளராக ஒருவர் இரு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது.</p><h2>தீர்மானம் : 7</h2><p>மாவட்டக் கழகங்கள் எனும் வலிமைமிக்க அமைப்புகளைத் தாங்கி நிற்கும் தூணாக விளங்குபவை ஒன்றியக் கழகங்கள். அவற்றை மேலும் வலிமை பொருந்திய அமைப்பாக மாற்றிட சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் என்ற அடிப்படையில் ஒன்றிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.</p><p>ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுவதுடன், ஒருவர் ஒன்றியக் கழகச் செயலாளராக அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது.</p><p>ஊராட்சி ஒன்றியத்தை அடிப்படை அலகாகக் கொண்டு கழக ஒன்றியங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். எந்தச் சூழலிலும் ஒரு ஊராட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு கழக ஒன்றியங்களுடன் இணைக்கப்படக் கூடாது.</p><p>ஒவ்வொரு கழக ஒன்றியமும் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் அமைந்திருக்க வேண்டும். ஒரு கழக ஒன்றியம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்குள் இடம்பெறும் நிலை தொடரக் கூடாது என்று தீர்மானிக்கப்படுகிறது.</p><h2></h2><h2>தீர்மானம் : 8</h2><p>திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் பேரியக்கத்தின் இரத்தநாளங்களாக விளங்குபவை மாவட்டக் கழகங்கள். தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை இதுவரை 77 ஆக வைத்துள்ளோம்.</p><p>வருவாய் மாவட்டங்களை அடிப்படை அலகாகக் கொண்டு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு பிரித்த பிறகு, ஒரு வருவாய் மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதி மட்டும் எஞ்சும் நிலை ஏற்பட்டால், அந்தத் தொகுதி அதே வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்பட வேண்டும்.</p><p>கழகத்தின் நிர்வாகத்தில் வாய்ப்புகளை விரிவுபடுத்த மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல், மாவட்டக் கழகச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.</p><p>இதனடிப்படையில், தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்கள், 110-ஆக அதிகம் ஆகும். மாவட்டக் கழகங்கள் அதிகரிக்கின்ற காரணத்தால் மாநகரச் செயலாளர்கள் எனும் பொறுப்பின் தேவை எழவில்லை என்பதை இக்கூட்டம் கருத்தில் கொள்கிறது.</p><p>அமையவுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் இடம்பெறவுள்ள தொகுதிகளைக் கழகத் தலைவர் அவர்களே முடிவெடுத்து அறிவிக்க இந்தத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.</p><h2>தீர்மானம்: 9</h2><p>கழகத் தலைவர் புதிதாக அமையவுள்ள 110 மாவட்டக் கழகங்களை அறிவித்தவுடன், அனைத்து மாவட்டக் கழகங்களிலும் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். அந்தக் கூட்டத்தில், தலைமைக் கழகத்திலிருந்து கழக மறுசீரமைப்புக் குழுவால் அளிக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டு மாவட்டத்தின் ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்ட - கிளைக் கழக அமைப்புகளை 15 நாட்கள் என்ற காலவரையறைக்குள் உருவாக்க வேண்டும். அதன் பின்னர், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில், மீண்டும் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, ஒப்புதலைப் பெற்று, இறுதிப் பட்டியலைத் தலைமைக் கழகத்துக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என இந்தத் தலைமைச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது.</p><p>அதோடு, மேற்சொன்ன தீர்மானங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகமலை பகுதியில் உயர்மட்டக்குழு அமைத்து நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்: அண்ணாமலை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-high-level-committee-must-be-constituted-to-re-examine-land-in-the-meghamalai-area-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-high-level-committee-must-be-constituted-to-re-examine-land-in-the-meghamalai-area-annamalai#comments</comments><guid isPermaLink="false">28dd82e2-5b0b-42af-835a-d1fdf98b38d2</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:11:41 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:11:41.128Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,Committee,உயர்மட்ட குழு,மறுஆய்வு,மேகமலை,Meghamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/62b481os/142.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/62b481os/142.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேகமலை பகுதியில் உயர்மட்டக்குழு அமைத்து நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>மேகமலை</h2><p>தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள 14 ஊராட்சிகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். விவசாயம், தோட்டத் தொழில், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இவர்களின் வாழ்க்கை, வனப்பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது.</p><p>பட்டா வைத்துள்ள விவசாயிகளுக்குக் கூட தங்கள் நிலங்களில் விவசாயம் செய்வதில் தடைகள் ஏற்படுவதாகவும், தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் விவசாய விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லும்போது சோதனைச் சாவடிகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.</p><h2>வணிக ரீதியான ஆக்கிரமிப்பு</h2><p>பல ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள், விவசாயிகள், வனத்தை சார்ந்து வாழும் மக்கள், பட்டா வைத்திருப்பவர்கள் மற்றும் வணிக ரீதியான ஆக்கிரமிப்பாளர்கள் என அனைவரையும் ஒரே பிரிவாகக் கருதி நடவடிக்கை எடுப்பது நியாயமான அணுகுமுறை அல்ல.</p><p>கடந்த 2026 மே மாதம், சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் தேவையான இடங்களில் பொதுமக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து நடைபெற வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை ஒரே நாளில் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலாக, மாற்றுக்குடியிருப்பு, மாற்று வாழ்வாதாரம் மற்றும் உரிய கால அவகாசத்துடன் மனிதாபிமான அடிப்படையில் இதனை தமிழக அரசு அணுக வேண்டும்.</p><h2>உயர்மட்டக்குழு</h2><p>தமிழக அரசு, வனத்துறை, வருவாய்த்துறை, நிலஅளவைத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்து, செயற்கைக்கோள்/DGPS அடிப்படையில் ஒவ்வொரு நிலத்தையும் மறு ஆய்வு செய்து, உண்மையான வனநிலம், சட்டப்பூர்வமான பட்டா நிலம், நீண்டகால குடியிருப்பு, உண்மையான ஆக்கிரமிப்பு மற்றும் விவசாயப்பகுதி ஆகியவற்றைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.</p><h2>நிரந்தரத் தீர்வு</h2><p>மேகமலை விவகாரத்தில் வனங்களையும், புலிகள் காப்பகத்தையும் பாதுகாப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மனிதாபிமானத்துடன் பாதுகாப்பது அரசின் கடமை. சட்டத்தின் அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">மேகமலை </a>மக்களுக்கு நிரந்தரத் தீர்வை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.</p><p>வனத்தையும் காப்போம், வனவிலங்குகளையும் காப்போம். அதே நேரத்தில், பல தலைமுறைகளாக அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குன்றத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை: 3 நண்பர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-rickshaw-driver-hacked-to-death-near-kundrathur-3-friends-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-rickshaw-driver-hacked-to-death-near-kundrathur-3-friends-arrested#comments</comments><guid isPermaLink="false">6e974478-a679-4128-b4d1-e560668ae6d4</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:11:22 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:11:22.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கைது,arrest,murder,கொலை,Auto driver,ஆட்டோ ஓட்டுநர்,மது போதை</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/xqoajqwp/35.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ ரத்தக்கறை படிந்த ஆட்டோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ 3 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/xqoajqwp/35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குன்றத்தூர் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அவரது நண்பர்களே அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லைப்போட்டும் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>முன்விரோதத்தால் வெட்டிக்கொலை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை</a>, குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகேஷ் (வயது 27). மற்றும் அவரது நண்பர்களான ஹரிகிருஷ்ணன் (வயது 27), வெங்கடேசன் (வயது 21), லலித்குமார் (வயது 21) ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பூந்தண்டலம் பகுதியில் மது அருந்தியுள்ளனர்.</p><p>அப்போது மீண்டும் அவர்களுக்குள் பழைய பகை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த 3 பேரும், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அவர் உயிர் பிழைக்கக் கூடாது என்பதற்காக அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுவிட்டு, தங்களது ஆட்டோவில் தப்பியோடினர். பலத்த காயமடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.</p><h2>நள்ளிரவில் மாட்டிய கொலையாளிகள்</h2><p>இதையடுத்து, திருமுடிவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து திருமுடிவாக்கம் பகுதியில் நேற்று நள்ளிரவு போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p><p>அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு ஆட்டோவை போலீசார் சந்தேகத்தின் பேரில் மறித்து நிறுத்தினர். அந்த ஆட்டோவில் 3 இளைஞர்கள் மதுபோதையில் இருந்தனர். மேலும், அவர்களின் உடைகளிலும் ஆட்டோவிலும் ரத்தக்கறைகள் படிந்திருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.</p><h2>போலீஸ் நடவடிக்கை</h2><p>மகேஷின் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்த 3 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மகேஷை முன்விரோதம் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக்கொலை </a>செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. </p><p>இதையடுத்து ஹரிகிருஷ்ணன், வெங்கடேசன், லலித்குமார் ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து அவர்களிடம் குன்றத்தூர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Chennai | குன்றத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை – 3 நண்பர்கள் கைது <a href="https://t.co/H97W2YFRMP">https://t.co/H97W2YFRMP</a> <a href="https://x.com/hashtag/chennai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#chennai</a> <a href="https://x.com/hashtag/kundrathur?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#kundrathur</a> <a href="https://x.com/hashtag/crime?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#crime</a> <a href="https://x.com/hashtag/tnpolice?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#tnpolice</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2090995745898053803?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-trains-to-run-via-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-trains-to-run-via-erode#comments</comments><guid isPermaLink="false">25c8cb34-4563-4442-b991-781bf6f65c92</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:08:30 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:08:30.268Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Special trains,Erode,ஈரோடு,சிறப்பு ரெயில்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/r3eags8b/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/r3eags8b/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி எஸ்.எம்.வி.டி. பெங்களூரு -திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06575) இன்று (சனிக்கிழமை) மாலை 4.40 மணிக்கு எஸ்.எம்.வி.டி. பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, இரவு 9.25 மணிக்கு சேலத்துக்கும், 10.30 மணிக்கு ஈரோட்டுக்கும் வருகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு திருப்பூர், போத்தனூர் வழியாக நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.</p><p>இதேபோல் திருவனந்தபுரம் வடக்கு -பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06576) நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு, போத்தனூருக்கு இரவு 9.30 மணிக்கும், திருப்பூருக்கு 10.28 மணிக்கும், ஈரோட்டுக்கு 11.10 மணிக்கும் வருகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சேலம் வழியாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை சென்றடையும்.</p>]]></content:encoded></item><item><title>மனைவி அளித்த புகார்: பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-filed-by-wife-paramakudi-deputy-superintendent-of-police-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-filed-by-wife-paramakudi-deputy-superintendent-of-police-suspended#comments</comments><guid isPermaLink="false">9f65bcab-c534-49ce-ab6d-669e1bc6866a</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:00:15 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:00:15.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சஸ்பெண்ட்,suspend,wife complaint,மனைவி புகார்,பரமக்குடி,paramakudi,போலீஸ் சூப்பிரண்ட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/t8k50b04/jafre.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/t8k50b04/jafre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பரமக்குடி, </p><p>மனைவி அளித்த புகாரில் பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.</p><h2>மனைவி புகார்</h2><p>ராமநாதபுரம் மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/paramakudi">பரமக்குடி</a> துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக். இவருடைய மனைவி ஷோபனா. இவர் கடந்த 4-ந்தேதி வேலூர் போலீசில் தன்னை கணவர் தாக்கியதாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையில் வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><h2>சஸ்பெண்ட்</h2><p>இந்நிலையில் நேற்று வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார், பரமக்குடி வந்து துணை சூப்பிரண்டு ஜாபர் சித்திக்கிடம் விசாரணை நடத்தி அவரது அலுவலகத்தையும் சோதனை செய்தனர். இதற்கிடையே ஜாபர் சித்திக்கை தமிழக உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழர்கள் இருவர் தேர்வு: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-tamils-selected-for-the-national-award-for-teachers-chief-minister-vijay-extends-congratulations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-tamils-selected-for-the-national-award-for-teachers-chief-minister-vijay-extends-congratulations#comments</comments><guid isPermaLink="false">8c193fc1-b7f4-49af-a78d-7498ac447736</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:54:59 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:54:59.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,தேசிய நல்லாசிரியர் விருது,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,விஜய் வாழ்த்து,National Award for Teachers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/fn5hoj7k/vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/fn5hoj7k/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆசிரியர் தங்கராஜ் மற்றும் ஆசிரியை அமுதா ஆகியோருக்கு முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>தமிழர்கள் இருவர் தேர்வு</h2><p>ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.</p><h2>நல்வாழ்த்துகள்</h2><p>இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!</p><p>நல்வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால்... - எச்சரிக்கை விடுத்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-remarks-expunged-from-the-house-records-are-released-as-reels-speaker-jcd-prabhakar-issues-a-warning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-remarks-expunged-from-the-house-records-are-released-as-reels-speaker-jcd-prabhakar-issues-a-warning#comments</comments><guid isPermaLink="false">26cdbcdd-eddd-4a3f-95e8-aeadb3c16ea4</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:43:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:43:17.224Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,ரீல்ஸ்,Speaker,சபாநாயகர்,Assembly Session,தமிழக சட்டசபை கூட்டம்,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,ஜே.சி.டி.பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7ccmjy5f/prebh.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7ccmjy5f/prebh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபை நிகழ்வுகளை முதலில் நேரலையில் ஒளிபரப்பியது யார்? என்பது பற்றி <a href="https://www.dailythanthi.com/topic/tn-assembly">சட்டசபையில்</a> எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் இடையே விவாதம் அனல் பறந்தது.</p><h2>'ரீல்ஸ்' ஆக பகிரப்படுகிறது</h2><p>சட்டசபையில், சட்டசபை நேரலை நிகழ்வுகள் குறித்த விவகாரம் அனல் பறந்தது. </p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p><strong>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்:-</strong>  </p><p>சட்டசபையை மிகச்சிறப்பாக வழி நடத்தி செல்கிறீர்கள். எங்களுக்கும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகளை கொடுக்கிறீர்கள். எங்களைவிட அதிகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கிறீர்கள்.</p><p><strong>சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்:</strong>- </p><p>எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக கொடுக்கிறேன்.</p><h2>சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி</h2><p><strong>எதிர்க்கட்சி தலைவர்:-</strong></p><p>நான் குறை சொல்லவில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் பதில் சொல்லும் போது ஆதாரம் இல்லாமல் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதைவிட ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேசுவதையெல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியிருக்கிறீர்கள். அவை நிகழ்ச்சிகள் நேரலையில் செல்கின்றன. </p><p>கேள்விகள் நாங்கள் கேட்டால், அதற்கு நாங்களே ஆச்சரியப்படுவதற்கும், அதிசயப்படும் அளவுக்கும் பதில்கள் கொடுக்கிறார்கள். கேள்விகள் கேட்டால் பதில் சொல்லலாம். இப்போது பாட்டாக பாட ஆரம்பித்துவிட்டார்கள். எங்களுக்கே சில நேரம் சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறோமா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா? என சட்டசபையில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினாலும் நேரலையில் போய், யூ-டியூப் மற்றும் சமூகவலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆக கட் செய்யப்பட்டு அதிகமாக பகிரப்படுகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதில் அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே இதை மீண்டும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.</p><h2>ஏன் செய்யவில்லை?</h2><p><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:-</strong> </p><p>கடந்த 5 ஆண்டுகளில் என்ன ரீல்ஸ் விட்டார்கள்? பாட்டு பாடினார்கள்? நாடாளுமன்றத்தில் இவர்கள் பதவி ஏற்கும்போது பெரியார், அண்ணாவை பற்றி பேசாமல், யார் பெயரை சொல்லி பதவி ஏற்றார்கள் என்பது மக்களுக்கு தெரியும். 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள். ஏன் சட்டசபை நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பவில்லை.</p><p><strong>அமைச்சர் ஆனந்த்:-</strong> </p><p>"இப்போது நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை. சட்டசபையில் நேரலையில் என்ன நடக்கிறது என்றுதான் பார்க்கிறோம் என்று மார்க்கெட்டில் 70 வயது முதியவர் ஒருவர் என்னிடம் சொன்னார்.</p><h2>அவைக்குறிப்பில் நீக்கினாலும்...</h2><p><strong>சபாநாயகர்:-</strong> கருத்துகளையொட்டி பாட்டு பாடுவதில் எந்த தவறும் இல்லை. எனவே அந்த சூப்பர் சிங்கர் என்ற வார்த்தை அவசியமா?</p><p><strong>எதிர்க்கட்சி தலைவர்:-</strong> </p><p>சட்டசபையில் தி.மு.க. ஆட்சியில் வினா-விடை நேரத்தை முதன்முறையாக நேரலையில் ஒளிபரப்பு செய்தோம். ஆனால் இந்த வினா-விடை நேரத்தை எடுக்க முடியாத நிலையில்தான் இப்போது அரசு இருக்கிறது.</p><p><strong>சபாநாயகர்:</strong> வினா-விடை நேரத்தை எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் அரசு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வினா-விடை நேரத்தை நடத்த முடியாத நேரத்திலும் உறுப்பினர்களை 55 விதியின் கீழ் கொடுத்திருக்கும் தீர்மானங்களை பேச அனுமதித்து அதற்கு பதிலையும் வழங்குகிறோம்.</p><p><strong>எதிர்க்கட்சி தலைவர்:-</strong> நான் உங்களை குறைசொல்லவே இல்லை. சட்டசபை வரலாற்றில் நேரலையை செய்தது தி.மு.க. அரசு. இப்போது முழுவதுமாக நேரலை செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படுவதால் என்னென்ன பிரச்சினை ஏற்படுகிறது என்பதைத்தான் சொல்கிறேன். நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து சிலவற்றை நீக்குகிறீர்கள். ஆனால் அவையெல்லாம் 'ரீல்ஸ்' ஆக போய்க்கொண்டு இருக்கிறது.</p><h2>முழுமையான நேரலை</h2><p><strong>சபாநாயகர்:-</strong> அவைக்குறிப்பில் நீக்கியதை ஒரு ஊடகம் வெளியிட்டதை தி.மு.க. சார்பில் உரிமைக்குழுவுக்கு அனுப்ப கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அப்படி நீக்கப்பட்ட பிரச்சினை குறித்து எந்தெந்த ஊடகத்தில் வருகிறது என்பதை என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். உரிமைக்குழுவுக்கு அதை அனுப்பி நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.</p><p><strong>அமைச்சர் ராஜ்மோகன்:-</strong> சட்டசபையில் நடப்பதெல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்றுதான் நேரலை தருகிறோம். எதிர்க்கட்சி வரிசை தொடர்ந்து கமாண்ட் அடிப்பது, ஒருமையில் பேசுவதை காட்டவேண்டும். நேரலையை தி.மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். ஆளுங்கட்சிக்கு சாதகமாக மட்டுமல்லாது, முழுமையான நேரலை என்பது வெற்றி தலைவர் ஆட்சியில் தான் தொடர்ந்து கொடுக்கிறோம். எதிர்க்கட்சி தலைவர் காட்டு... காட்டு... என்று கேட்கிறார். அவருடைய கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார்.</p><p><strong>எதிர்க்கட்சி தலைவர்:-</strong> நான் உங்கள் சார்பில்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நான் பேசியதை நீக்கிவிட்டீர்கள். ஆனால் நேரலையில் சென்றுவிட்டது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?. அவைக்குறிப்பில் இருந்து நீங்கள் எவ்வளவு நீக்கினாலும், அது சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகி கொண்டே இருக்கிறது.</p><h2>உரிமைக்குழுவுக்கு அனுப்பியுள்ளேன்</h2><p><strong>சபாநாயகர்:-</strong> ஆதாரம் இல்லாமல் சொல்வதை நீக்குவது நியாயமான மரபு. அதை நீக்குகிறேன். ஆனால் அதை எடுத்து பல்வேறு ஊடகங்களில் வெளியிடுகிறார்கள் என்பதை கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். உரிமைக்குழுவுக்கு அனுப்பி இருக்கிறேன். </p><p>இனி வருங்காலத்தில் நீக்குவது என்பது என்னுடைய தனிப்பட்ட உரிமை. நீக்காமல் பேச முயற்சிப்பதும், ஆதாரங்கள் இல்லாமல் பேசாமல் இருப்பதும் நல்லது. ஆதாரங்களை வைத்துதான் இருதரப்பினரும் பேசவேண்டும். போகிற போக்கில் அள்ளித்தெளித்துவிட்டு போகிற இடம் இல்லை. அரசியல் மேடைகளில் பேசக்கூடிய பேச்சும் அல்ல. அவையின் கண்ணியத்தையும், மக்கள் எதை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்து அனுப்பி இருக்கிறார்களோ அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிற விதத்தில் பேச்சு அமைய வேண்டும்.</p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p><h2>ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை</h2><p>இந்நிலையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அவை குறிப்பில் நீக்கியதை எந்த வகையில் பயன்படுத்தினாலும், அவையின் மாண்பை குறைப்பதாகவும், சட்டத்தை மீறுவதாகவும் இருக்கும். அது குறித்து உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கடிதம் வழங்கியுள்ளனர். அந்த கடிதங்கள் என்னுடைய ஆய்வில் உள்ளது. அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>மாறுவோம், மாற்றுவோம்! - அண்ணாமலை பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-change-lets-change-annamalai-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-change-lets-change-annamalai-post#comments</comments><guid isPermaLink="false">a7dc6781-fe61-4880-86f2-c5d5a2b0010b</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:34:01 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:34:01.777Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,வி த லீடர்ஸ்,&apos;We the Leaders&apos;</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/pz710qh5/annamalai1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/pz710qh5/annamalai1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி 'வி த லீடர்ஸ்’ என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். முதலில் இயக்கமாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.</p><h2>மாறுவோம், மாற்றுவோம்!</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/annamalai">அண்ணாமலை</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- எங்கள் வலைத்தளம் குறித்த தகவலை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம், 'வி த லீடர்ஸ்’ புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள புதிய அம்சங்களை ஆராய்ந்து, தொடர்ந்து இணைந்திருங்கள், மேலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாறுவோம், மாற்றுவோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையின் வரங்களை  பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-today-to-protect-chennais-blessings-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-today-to-protect-chennais-blessings-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">194ab4f1-fe00-430a-8a70-3af588240e2d</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:29:37 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:29:37.193Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Chennai Day</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/uv8yetst/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/uv8yetst/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை நாளை முன்னிட்டு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் தலைநகராக வளர்ந்து நிற்கும் சென்னை மாநகரம் அதன் 387-ஆம் உருவாக்க நாளைக் கொண்டாடும் நிலையில், சென்னை மாநகர மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>சென்னை மாநகரமாக பிறக்கவில்லை. பாட்டாளிகள் மற்றும் பூர்வகுடி மக்களின் கிராமங்கள் இணைக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு தான் இன்றைய சென்னையை உருவாக்கியிருக்கிறது. சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.</p><p>ஆனால், சென்னையின் வரமாக கிடைத்தவற்றையெல்லாம் பாதுகாக்காமல் சாபமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இயற்கையின் கொடையான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அதன் பரப்பளவை பத்தில் ஒன்றாக குறைத்து விட்டார்கள்.  ஆங்கிலேயர்கள்  படகு சவாரி சென்ற அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவற்றை சாக்கடைகளாக மாற்றி விட்டோம்.  ஏரிகளையும் அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். இதை விட மோசமாக இயற்கையை சூறையாட முடியாது.</p><p>இந்த நிலையை மாற்றி சென்னையின் வரங்களான  பள்ளிக்கரணை சதுப்பு நிலம்,  ஆறுகள்  ஆகியவற்றை மீட்டெடுப்பது தான்   சென்னை மாநகர மக்களின் இன்றைய தலையாயக் கடமையாகும். இந்தப் பணியை நிறைவேற்றி முடிப்பதற்காக கடுமையாக உழைக்க சென்னை நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சேலம் அரசுப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு எப்படி அனுமதித்தது? - சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-tamil-nadu-government-grant-permission-to-appoint-teachers-from-north-indian-states-in-a-government-school-in-salem-seeman-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-did-the-tamil-nadu-government-grant-permission-to-appoint-teachers-from-north-indian-states-in-a-government-school-in-salem-seeman-questions#comments</comments><guid isPermaLink="false">2623bc6a-64e9-4722-b411-4ffb00ed0a87</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:55:22 +0000</pubDate><atom:updated>2026-08-22T04:55:22.459Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,Salem,சேலம்,Government Schools,அரசுப்பள்ளிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/23gu6dv5/seeman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/23gu6dv5/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சேலம் அரசுப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு எப்படி அனுமதித்தது? இதுதான் தவெக அரசு மாநில உரிமைகளைக் காக்கும் முறையா? என நாம் தமிழகர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வடமாநில ஆசிரியர்கள் நியமனம்</h2><p>சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள குப்பூரில் அரசு மேல்நிலை மாதிரிப் பள்ளியில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை ஆசிரியர்களாக நியமனம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.</p><p>தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?</p><p>யாருடைய உத்தரவின் பேரில் அரசுப் பள்ளியில் வட மாநிலத்தவர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்?</p><h2>புரிதல் குறைபாடு ஏற்படும்</h2><p>தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்களை ஆசிரியர்களாக நியமித்தால் மாணவர்களுக்குப் புரிதல் குறைபாடு ஏற்பட்டு அவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படாதா?</p><p>நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தபோதே நம் நாட்டில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டுமென்று அமெரிக்க முதலாளிக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது? என்ற கேள்வியை நான் எழுப்பினேன். அதைப்போலவே தமிழ்நாட்டு மாணவர்கள் இந்திய அளவிலான போட்டித் தேர்வில் வெல்ல வேண்டும் என்று வடமாநிலத்தவருக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது?</p><p>அண்மையில் இப்பள்ளியில் பயின்ற 5 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நிலையில், அதனைக் கெடுப்பதற்காகவே வட மாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா?</p><h2>அரசுத்துறைகளின் வேலைதான் என்ன?</h2><p>வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை இப்பொழுது அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக நடத்துநர்கள் நியமனம் தொடங்கி ஆசிரியர் பணி நியமனம் வரை வெளிமாநிலத்தவர்களுக்குக் கொடுத்துப் பறிப்பது என்ன நியாயம்?</p><p>தமிழ்நாட்டில் இத்தகைய தேர்வு பயிற்சிகளை வழங்குவதற்கான அறிவும், திறனும் வாய்ந்த ஆசிரியர் பெருமக்களே இல்லையா? பல லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று, பல ஆண்டுகளாக வேலையின்றி வீதியில் போராடிக் கொண்டிருக்கும்போது, வட மாநிலத்தவரை தமிழ்நாட்டில் ஆசிரியர்களாக நியமிப்பது ஏன்?</p><p>தூய்மைப்பணியாளர்கள், நடத்துநர்கள், ஆசிரியர்கள் என்று அடுத்தடுத்து அரசுப் பணியிடங்கள் அனைத்துமே தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்படுவார்கள் என்றால் அரசுத்துறைகளின் வேலைதான் என்ன? அனைத்துமே தனியார் முதலாளிகள்தான் தீர்மானிப்பார்கள் எனில், அரசுக்கு பொதுப்பணி, போக்குவரத்து, உயர்கல்வி, பள்ளிக்கல்வி என்று தனித்தனி துறைகள் எதற்கு? தனித்தனி அமைச்சர்கள் எதற்கு? இது என்ன மாதிரியான மாற்று?</p><h2>முதல்-அமைச்சரின் வேலை என்ன?</h2><p>ஏற்கனவே, முதல்-அமைச்சரிடம் முதன்மையாக எந்தத் துறைகளும் இல்லை. அனைத்து முக்கியத் துறைகளும் மற்ற அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சரும் மூன்று நான்கு முதன்மையான துறைகளை வைத்துள்ளார்கள். எல்லாத் துறைகளையும் அமைச்சர்களிடம் அளித்துவிட்டால் முதல்-அமைச்சரின் வேலை என்ன? ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வெளியிடுவது மட்டும்தானா?</p><p>வேளாண்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் விளையாட்டுத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். நீர்வளத்துறைப் பற்றிக் கேள்வி கேட்டால் அறநிலையத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். சுற்றுலா குறித்த கேள்விக்குச் சுற்றுச்சூழல் அமைச்சர் பதில் சொல்கிறார். யாருக்கு எந்த அமைச்சகம்? யார் எந்தத்துறையின் அமைச்சர் என்பதே இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்படவில்லை. இப்போது அமைச்சர்களுக்கும் எந்த வேலை இல்லை என்ற அளவிற்கு, அனைத்து துறைகளின் பணிகளுமே தனியார் நிறுவனம் மூலம் வடமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.</p><p>தவெக ஆட்சியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>பணிநியமனங்கள் அனைத்தும் வடமாநிலத்தவரைக் கொண்டு நிரப்பப்படுவதை, தமிழிளம் தலைமுறைப்பிள்ளைகள் இனியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இத்தகைய கொடுமைகள் தொடர்ந்தால் விரைவில் நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-take-pride-and-happiness-in-having-developed-chennai-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-take-pride-and-happiness-in-having-developed-chennai-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">c830622a-6699-4d34-ac83-56ca9ebc009e</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:40:00 +0000</pubDate><atom:updated>2026-08-22T04:40:00.860Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,Chennai,சென்னை,Chennai Day,சென்னை தினம்,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7ganl12o/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7ganl12o/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>சென்னை தினம்</h2><p>இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!</p><p>101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!</p><h2>பெருமை கொள்கிறேன்</h2><p>மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>வரலாற்றை ரசித்து ரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.</p><p>சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதல்-அமைச்சராக, முதல்-அமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!</p><p>தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் எதிரொலி.. விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-echo-airfare-has-increased-several-times</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-echo-airfare-has-increased-several-times#comments</comments><guid isPermaLink="false">eb1106b7-a788-4ea4-b965-90cee6d5f26d</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:39:08 +0000</pubDate><atom:updated>2026-08-22T04:39:08.196Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Onam festival,ஓணம் பண்டிகை,Airfares,விமானக் கட்டணம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/b0omzizl/plane.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/b0omzizl/plane.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கேரளாவின் மிக முக்கிய விழாவான ஓணம் பண்டிகை10 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு (2026) ஓணத்தின் முக்கிய நாளான திருவோணம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. இதனை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் கேரள மக்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>இதற்கிடையே, ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை - கொச்சி வழக்கமான விமான கட்டணம் ரூ.5,336 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.14,843 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, சென்னை- திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.5,853 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.14,700 ஆக உயர்ந்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் - கனிமொழி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-cherish-and-preserve-the-history-of-chennai-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-cherish-and-preserve-the-history-of-chennai-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">d9acfd04-4bd5-4545-a9d8-eee6f8bf81f7</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:15:32 +0000</pubDate><atom:updated>2026-08-22T04:15:32.005Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கனிமொழி,Kanimozhi,Chennai Day,சென்னை தினம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/pqdiuuff/79.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/pqdiuuff/79.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளை, இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகிறது. இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>சென்னை நாள் </h2><p>எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த  மெட்ராஸ் மாநகரம், இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.</p><p>வந்தவர் அனைவருக்கும் இடமளிக்கும் சகோதரத்துவமும், பேதங்கள் கடந்த பன்மைத்துவமும் நிறைந்த சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சென்னை நாள் </a>வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal-2#comments</comments><guid isPermaLink="false">ae4d3e64-09d4-4bca-820a-7a443960bc25</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:03:14 +0000</pubDate><atom:updated>2026-08-22T04:03:14.914Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,ஒகேனக்கல்,Karnataka,கர்நாடகா,hokenakkal,காவிரி ஆறு,நீர்வரத்து அதிகரிப்பு,Cauvery,பரிசல் இயக்க தடை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7mcpb15d/jhoge.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7mcpb15d/jhoge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம், </p><p>கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து மட்டும் கடந்த 9 நாட்களில் தமிழகத்துக்கு காவிரியில் 4.95 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டு உள்ளது.</p><h2>கே.ஆர்.எஸ். அணை</h2><p>கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 108.95 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,551 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு இருந்தது.</p><h2>கபினி அணை</h2><p>இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,275.56 அடியாக இருந்தது.</p><p>அதாவது கடந்த 13-ந் தேதி இந்த அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக இருந்தது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 13-ந் தேதியில் இருந்து நேற்று வரை 9 நாட்கள் தொடர்ந்து இந்த அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இதனால் இந்த அணையில் இருந்து மட்டும் தமிழகத்துக்கு 9 நாட்களில் 4.95 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது.</p><h2>காவிரியில் நீர் திறப்பு</h2><p>கடந்த 9 நாட்களில் இந்த அணையின் நீர்மட்டம் 7 அடி குறைந்துள்ளது. 19.52 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நேற்று 14.57 டி.எம்.சி. நீர் இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7,184 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 940 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு இருந்தது. அந்த வகையில் 2 அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 940 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.</p><h2>தொடரும் தடை</h2><p>காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக -கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது. </p><p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஆக.22) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. தற்போது காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைக்கேடு வழக்கு: செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-corruption-case-anti-corruption-department-summons-senthil-balaji</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-corruption-case-anti-corruption-department-summons-senthil-balaji#comments</comments><guid isPermaLink="false">ab6e40d6-9a05-4807-abe3-33118657ea07</guid><pubDate>Sat, 22 Aug 2026 03:58:33 +0000</pubDate><atom:updated>2026-08-22T03:58:33.999Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Liquor,Senthil Balaji,செந்தில் பாலாஜி,லஞ்ச ஒழிப்புத்துறை,டாஸ்மாக் ஊழல்,tenderscam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/kd8jonhh/balaji33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
டாஸ்மாக் முறைக்கேடு]]></media:title><media:description type="html"><![CDATA[ செந்தில்பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/kd8jonhh/balaji33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பட்டது.</p><p>கடந்த திமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக் டெண்டர் மதுபான கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்திருந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதிதாக வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.</p><p>இந்த வழக்கின் அடிப்படையில் முன்னாள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">அமைச்சர் செந்தில் பாலாஜி</a>யின் வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் அதிகாரிகளில் இடங்கள், மதுபான ஆலைகள் உள்ளிட்ட 41 இடங்களில் தமிழ்நாடு முழுவதும் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.</p><p>இதில் டாஸ்மாக் டெண்டர், மதுபான கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முறைகேடு நடந்ததற்கான முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.</p><p>மேலும், சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டு, அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தனர்.</p><p>அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமம் வழங்குதல், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் புகாரில், செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன், முன்னாள் முதுநிலை மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ள ரத்தீஷ்ராஜ், சண்முகவேல், கார்த்திக் ஆகிய ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p> <p>இந்தநிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மதுபான கொள்முதல் மற்றும் பார் டெண்டர்  முறைகேடு தொடர்பாக, இன்று காலை 11 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 + ஜிஎஸ்டி கட்டணம்: மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fee-of-rs-15-gst-for-cash-withdrawals-exceeding-four-times-manickam-tagore-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fee-of-rs-15-gst-for-cash-withdrawals-exceeding-four-times-manickam-tagore-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">c378e296-42e1-49cd-aedf-3ef9186306ea</guid><pubDate>Sat, 22 Aug 2026 03:57:57 +0000</pubDate><atom:updated>2026-08-22T03:57:57.083Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/zvfibgz4/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/zvfibgz4/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த கட்டணக் கொள்ளையை மத்திய மோடி அரசும் எஸ்.பி.ஐ.  நிர்வாகமும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்</h2><p>காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு 2005 -ல் 'No-frills' கணக்குகளாக அறிமுகப்படுத்தி, ஆகஸ்ட் 2012-ல் வழிகாட்டுதல்களை மேம்படுத்தி உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி கட்டமைப்புதான் 'BSBDA' ஜீரோ பேலன்ஸ் கணக்குகள். ஏழை எளிய சாமானிய மக்கள் நவீன வங்கிச் சேவையைப் பெற காங்கிரஸ் அடித்தளமிட்டது.</p><p>இந்த BSBDA அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு இருக்காது;</p><p>நம் நாட்டின் ஏழை மக்கள் பயன்படுத்தும் இந்த BSBDA கணக்கில்தான் மோடி அரசு கைவைக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்குப் பல லட்சம் கோடிகளைத் தள்ளுபடி செய்யும் பாஜக அரசு, ஏழை மக்கள் பயன்படுத்தும் இந்த BSBDA கணக்கில் 4 முறைக்கு மேல் ரொக்கம் எடுத்தாலே ரூ.15 + GST கட்டணம் வசூலிக்கிறது.</p><p>மக்கள் பணப் பயன்பாட்டை விட்டுவிட்டதாக ஆட்சியாளர்கள் பகல்கனவு காண்கிறார்களா?</p><h2>ரொக்கப் பணம் பயன்பாடு உயர்வு</h2><p>கிராமப்புற மக்கள் இன்றும் ரொக்கப் பணத்தையே நம்பியுள்ளனர். பொதுமக்களிடம் புழங்கும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரொக்கப் பணம்</a> 2024-25ல் 6.5%, 2025-26ல் 12.0%, தற்போது 2026-27ல் 12.9% என மீண்டும் தீவிரமாக உயர்ந்து வருகிறது. உண்மை நிலவரம் இப்படியிருக்க, ஒருபுறம் வரவிருக்கும் UPI மறைமுகக் கட்டணங்கள், மறுபுறம் ஏழை மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே அபராதம் விதிப்பது அப்பட்டமான பகல்கொள்ளை.</p><p>ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த கட்டணக் கொள்ளையை மத்திய மோடி அரசும் எஸ்.பி.ஐ. நிர்வாகமும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! மக்கள் பணம் மக்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்; அதில் கட்டணம் என்ற பெயரில் கை வைத்து நீங்கள் அபகரிக்காதீர்கள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/pxeki7l7/Untitled-9.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>போத்தனூர் வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-to-bengaluru-via-podanur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-to-bengaluru-via-podanur#comments</comments><guid isPermaLink="false">64fdabce-4002-4bf9-aa1c-c56a1e9b5bdd</guid><pubDate>Sat, 22 Aug 2026 03:32:21 +0000</pubDate><atom:updated>2026-08-22T03:32:21.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Onam festival,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/a0k8f66g/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/a0k8f66g/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,  </p><p>ஓணம் பண்டிகையையொட்டி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது குறித்து பாலக்காடு ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-</p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) பெங்களூருவில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (எண் 06575) மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயில் இரவு 12.58 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையம் வரும்.</p><p>மறுமார்க்கமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் பெங்களூரு சிறப்பு ரெயில் (எண் 06576) மறுநாள் காலை 5.15 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடையும். இந்த ரெயில் போத்தனூருக்கு இரவு 9.30 மணிக்கு வரும்.</p><p>இதேபோல், ஆகஸ்டு 28-ந் தேதி மாலை 4.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பெங்களூரு -திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (எண் 06579) மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக 29-ந் தேதி தேதி மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் - பெங்களூரு சிறப்பு ரெயில் (எண் 06580) மறுநாள் காலை 5.15 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடையும்.</p><p>இந்த ரெயில் வர்கலா, கொல்லம், சாஸ்தான்கோட்டை, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி: ஓய்வு பெற்ற சார்பதிவாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-property-fraud-retired-sub-registrar-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-property-fraud-retired-sub-registrar-arrested#comments</comments><guid isPermaLink="false">ac66c3a2-a935-45d2-a504-f4bc83e98db0</guid><pubDate>Sat, 22 Aug 2026 03:30:37 +0000</pubDate><atom:updated>2026-08-22T03:30:37.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Madurai,மதுரை,arrested,மோசடி,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,சார்பதிவாளர்,Sub-Registrar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/ieno4e79/139.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/ieno4e79/139.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ.60 கோடி சொத்து மோசடியில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார்.</p><p>மதுரை தல்லாகுளம் அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகாவிலாஸ் பங் களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் சுமார் 2 ஏக்கர் நிலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது. இதன் மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய். </p><p>ஆனால் அந்த சொத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்ததாக மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>அதன்பேரில் ராமாயி ஆயியார், செந்தமிழ்செல்வி. பிரேமா, ராஜ்குமார், முத்து ராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், முன்னாள் தாசில்தார் அன்பழகன், இளையராஜா, அனிஷ். அனந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தானகருப்பன் ஆகிய 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.</p><p>மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காளிக்குமார், சப்-கலெக்டர் அன்பழகன், வருவாய் அதிகாரி அரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.</p><p>இந்த வழக்கு குறித்து மதுரை நகர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் ராமாயி ஆயியார் தரப்பினர் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் அனந்தராமன் மூலம் உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திருவள்ளூர் மாவட்டம் அனிஷ் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணம் பதிவு செய்துள்ளனர்.</p><h2>கைது</h2><p>அது தொடர்பாக போலீசார் விசாரித்த போது அனந்தராமன் நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் என்றும், அவர் தற்போது ஓய்வு பெற்றதும் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று இரவு அனந்தராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில், மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் திடீர் ஆய்வு: மேகதாதுவை இன்று பார்வையிட உள்ளதாக பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-water-commission-member-conducts-surprise-inspection-at-mettur-dam-buzz-surrounds-planned-visit-to-mekedatu-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-water-commission-member-conducts-surprise-inspection-at-mettur-dam-buzz-surrounds-planned-visit-to-mekedatu-today#comments</comments><guid isPermaLink="false">7fa3ccb5-afe4-4816-9fbd-dc1999efbb42</guid><pubDate>Sat, 22 Aug 2026 03:24:19 +0000</pubDate><atom:updated>2026-08-22T03:24:19.436Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,தமிழகம்,மேட்டூர் அணை,Mettur dam,Karnataka,கர்நாடகா,TamilNadu Govt,மேகதாது அணை,மத்திய நீர்வள ஆணையம்,Mekedadu Dam</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/g3etzf6p/klerer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/g3etzf6p/klerer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/mettur-dam">மேட்டூர் அணை</a>யில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாதுவை இன்று (சனிக்கிழமை) பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>முதல்-மந்திரிகள் கூட்டம்</h2><p>சென்னை மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென்மண்டல குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. </p><p>மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழக முதல்-அமைச்சர் விஜய்</a>, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட தென் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p><p>இந்த கூட்டத்தில் காவிரி நீர் பங்கீடு விவகாரம் மற்றும் மேகதாதுவில் அணை கட்டுவதில் தமிழகம், கர்நாடகாவில் நிலவும் இருமாநில பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>மேட்டூர் அணையில் ஆய்வு</h2><p>இந்நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கூடுதல் செயலாளரும், மத்திய நீர்வள ஆணைய உறுப்பினருமான யோகேஷ் பைத்தங்கர் நேற்று மாலை <a href="https://www.dailythanthi.com/topic/mettur-dam">மேட்டூர் அணை</a>க்கு திடீரென வந்தார். பின்னர் அவர் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்தின் மீது சென்று அணையை பார்வையிட்டார்.</p><h2>நீர்மட்டம் எவ்வளவு?</h2><p>இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீர்மட்டம் எவ்வளவு? அணைக்கு வரும் நீரின் அளவு மற்றும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் உள்ளிட்டவை குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.</p><p>இதையடுத்து மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் யோகேஷ் பைத்தங்கர் தமிழக காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவுக்கு புறப்பட்டு சென்றார்.</p><h2>இன்று மேகதாது செல்கிறாரா?</h2><p>தொடர்ந்து அவர் இன்று (சனிக்கிழமை) காலை கர்நாடக மாநிலம் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு வரும் இடத்தை பார்வையிடலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றிய விவரத்தை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தனர்.</p><p>முன்னதாக மேட்டூர் அணையில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் யோகேஷ் பைத்தங்கர் ஆய்வு செய்தபோது, மேட்டூர் அணை செயற்பொறியாளர் வெங்கடாஜலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தலைமைச் செயலாளருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்று ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-communist-party-protests-against-the-chief-secretary-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-communist-party-protests-against-the-chief-secretary-today#comments</comments><guid isPermaLink="false">39359ed3-3c47-4b9e-8813-71050ec88fd8</guid><pubDate>Sat, 22 Aug 2026 03:23:00 +0000</pubDate><atom:updated>2026-08-22T03:23:00.304Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,ஆர்ப்பாட்டம்,Marxist Communist Party,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/qtwjbrm4/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/qtwjbrm4/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறி வைத்த தலைமை செயலாளரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டுள்ளது. அரசு எந்திரத்தை அவரது நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தும் எல்லைக்கு அவர் சென்றுள்ளார். இது மிகவும் ஆபத்தானது. மத்திய அரசின் பாணியை அடியொற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. கல்லூரி கல்வி இயக்ககம் மட்டுமே தவறு செய்தது என்பது உண்மையல்ல. இடதுசாரிகள் குறி வைக்கப்படுவதை தற்செயலானது என எடுத்துக்கொள்ள முடியாது.</p><p>கல்வி வளாக அமைதி என்பது மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதில்தான் இருக்கிறதா என அவர் விளக்க வேண்டும். எனவே, தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் தேர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-award-for-teachers-teacher-from-tamil-nadu-selected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-award-for-teachers-teacher-from-tamil-nadu-selected#comments</comments><guid isPermaLink="false">6a0c4f46-91c7-4712-a530-6d15a706d1f6</guid><pubDate>Sat, 22 Aug 2026 03:14:40 +0000</pubDate><atom:updated>2026-08-22T03:14:40.406Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தென்காசி,Central Government,தேசிய நல்லாசிரியர் விருது,Award விருது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/2gpf8uck/138.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய நல்லாசிரியர் விருது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/2gpf8uck/138.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 48 ஆசிரியர்களில் தேர்வாகியுள்ளனர்.</p><h2>தேசிய நல்லாசிரியர் விருது</h2><p>ஆசிரியர் தினத்தையொட்டி வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் தேர்வான 48 ஆசிரியர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. </p><p>இதில் தமிழகத்தில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">ஆசிரியர்</a> தங்கராஜ் தேர்வாகியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபைக்கு 2 நாட்கள் விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-assembly-2-days-holiday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-assembly-2-days-holiday#comments</comments><guid isPermaLink="false">ab782a72-b7bf-416b-a1c1-f9b8c47590ea</guid><pubDate>Sat, 22 Aug 2026 03:14:39 +0000</pubDate><atom:updated>2026-08-22T03:14:39.806Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விடுமுறை,Holiday,தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/gfu2x9w3/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/gfu2x9w3/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தற்போது மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சட்டசபைக்கு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை ஆகும். 24-ந்தேதி அன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது. </p><p>அன்றைய தினம் நகராட்சி நிர்வாகம் மற் றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, எழுதுப்பொருள் மற்றும் அச்சுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, உயர்கல்வித்துறை ஆகிய மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள் ளது.</p>]]></content:encoded></item><item><title>பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை: அழுகிய நிலையில் உடல் மீட்பு : நள்ளிரவில் மாணவர்கள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-student-commits-suicide-in-university-hostel-body-recovered-in-decomposed-state-students-stage-midnight-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-student-commits-suicide-in-university-hostel-body-recovered-in-decomposed-state-students-stage-midnight-protest#comments</comments><guid isPermaLink="false">fc864667-9da7-4799-a79d-2cbc7e9e038c</guid><pubDate>Sat, 22 Aug 2026 02:58:43 +0000</pubDate><atom:updated>2026-08-22T02:58:43.976Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,police investigation,போலீஸ் விசாரணை,காஞ்சிபுரம்,மாணவி தற்கொலை,Kancheepuram,Student suicide,மாணவர்கள் போராட்டம்,Students protest</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/bu20lwhf/stu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/bu20lwhf/stu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம், </p><p>சங்கரா பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலைசெய்து கொண்டார். நள்ளிரவில் மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி </h2><p><a href="https://www.dailythanthi.com/topic/காஞ்சிபுரம்">காஞ்சிபுரம்</a> அருகே உள்ள ஏனாத்தூரில் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா வித்யாலயம் எனும் சங்கரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழக கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் என்ஜினீயரிங் படிப்புகளில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.</p><p>வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் தங்கி படிக்க பல்கலைக்கழக வளாகத்தில் விடுதிகளும் செயல்படுகிறது. மாணவிகள் விடுதி தனி அறையில் இ.சி.இ என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த நிகிதா (வயது 19) தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாணவியின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் பொன்னேரிகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.</p><p>போலீசார் பல்கலைக்கழக விடுதிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். மாணவி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.</p><h2>சிக்கிய கடிதம்</h2><p>தற்கொலை செய்து 3 நாட்கள் வரை ஆனதால் துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. நிகிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி நிகிதாவின் அறையில் தீவிர சோதனை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர். போலீசாரின் சோதனையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.</p><h2>மாணவர்கள் போராட்டம்</h2><p>அதில் தான் ஆசையாக காதலித்த காதலன் கடந்த சில நாட்களாக பேசாததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்தார். மாணவி நிகிதா உயிரிழந்த சம்பவத்தை அறிந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் சக மாணவ- மாணவிகள் நள்ளிரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நிகிதா எழுதிய கடிதம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.</p><h2>கல்லூரி நிர்வாகம் அலட்சியம்</h2><p>கடந்த 3 நாட்களாக அறையில் இருந்து மாணவி வெளியே வராத நிலையில், விடுதி நிர்வாகமோ, வகுப்புக்கு மாணவி வராததை கவனிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.</p><p>விடுதியில் தங்கி பாதுகாப்புடன் பயில பெற்றோர் கட்டணம் செலுத்தி வரும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவ- மாணவிகளை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டி வருவது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.</p><h2>பெற்றோர்கள் கோரிக்கை</h2><p>கட்டணம் செலுத்தி கல்வி பயிலும் மாணவ- மாணவிகளை பாதுகாக்க அலட் சியம் காட்டியுள்ள பல்கலைக்கழக கல்லூரி நிர்வாகம் மற்றும் விடுதி நிர்வாகம் மீது போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட உயர்கல்வி துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காரையாறு பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karaiyaru-bridge-construction-work-resumes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karaiyaru-bridge-construction-work-resumes#comments</comments><guid isPermaLink="false">ff3754cc-6cc6-4f59-b12a-05f03b26e021</guid><pubDate>Sat, 22 Aug 2026 02:43:31 +0000</pubDate><atom:updated>2026-08-22T02:43:31.715Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தொடக்கம்,bridge,Construction work,Karaiyar Dam,பாலம் அமைக்கும் பணி,காரையாறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/u7o5kb3s/77.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/u7o5kb3s/77.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விக்கிரமசிங்கபுரம்,</p><p>கிடப்பில் போடப்பட்ட காரையாறு பாலம் பணி மீண்டும் தொடங்கியதால் காணி பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p><h2>காணி பழங்குடியின மக்கள்</h2><p>பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை அடிவாரத்தில் சின்ன மயிலாறு பகுதியில் காணி பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காரையாறு அணை அடி வாரத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றைக் கடந்துதான் சின்ன மயிலாறு பகுதிக்கு செல்ல வேண்டும். இதனால் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் பொதுமக்கள் சின்ன மயிலாறு பகுதியை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். அவ்வப் போது கயிறு கட்டியும், தற்காலிக தொங்கு பாலம் அமைத்தும் ஆற்றை கடந்து சென்றனர்.</p><h2>இரும்பு பாலம்</h2><p>தொடர்ந்து பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் ரூ.99 லட்சத்தில் காரையாறு- மயிலாறு இடையே இரும்பு பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. எனவே வருகிற மழைக்காலத்துக்கு முன்பாக காரையாறு- மயிலாறு இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 18-ந்தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.</p><h2>மீண்டும் தொடங்கியது</h2><p>இதையடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">காரையாறு</a>- மயிலாறு இடையே இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் காணி பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தக்க சமயத்தில் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழையும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளையும் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஆக. 31-ந் தேதி வரை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-enrollment-in-government-primary-schools-extended-until-august-31</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-enrollment-in-government-primary-schools-extended-until-august-31#comments</comments><guid isPermaLink="false">c9cb431c-7a8f-4531-a6c1-703cb45b8dae</guid><pubDate>Sat, 22 Aug 2026 02:29:51 +0000</pubDate><atom:updated>2026-08-22T02:29:51.923Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மாணவர் சேர்க்கை,Education Department,நீட்டிப்பு,Primary School,அரசு தொடக்கப்பள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/qzwjqd7e/137.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர் சேர்க்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/qzwjqd7e/137.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநிலம் முழுவதும் உள்ள 31,336 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் 4-ந் தேதி தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில் 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.</p><h2>மாணவர் சேர்க்கை</h2><p>ஜூலை 31-ந் தேதி நிலவரப்படி, 4.27 லட்சம் மாணவர்கள் அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதில், ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2.95 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><p>ஆகஸ்ட் 1-ந் தேதியுடன் மாணவர் சேர்க்கை நிறைவடைய இருந்த நிலையில், எந்தக் குழந்தையும் கல்வி வாய்ப்பை இழக்கக்கூடாது என்பதற்காக சேர்க்கை காலத்தை நீட்டிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.</p><p>அதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">மாணவர் சேர்க்கை </a>வரும் 31-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒரு மாதத்தில் ரூ.12 ஆயிரம் கோடி கடன் வாங்கிய தமிழ்நாடு அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-borrowed-12000-crore-in-a-single-month</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-borrowed-12000-crore-in-a-single-month#comments</comments><guid isPermaLink="false">02a61d12-a5ae-4e8d-8c26-9027c1d2d960</guid><pubDate>Sat, 22 Aug 2026 02:26:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T02:26:34.172Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு அரசு,TN govt,loan,revenue,கடன்,கடன் பத்திரங்கள்,கடன் அளவு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/22hsbbsv/toun.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/22hsbbsv/toun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'ஆட்சி' மாறினால் 'காட்சி' மாறும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே வாக்களித்த மக்களிடம் உண்டு. அதுபோன்ற எதிர்பார்ப்பில்தான் த.வெ.க. கையில் ஆட்சியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை தாண்டி உள்ளநிலையில், தங்களுடைய அரசின் முதல் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்திருக்கிறது. </p><h2>தமிழ்நாடு அரசு கடன்</h2><p>இந்நிலையில் கடன் பத்திரங்கள் வெளியீடு வாயிலாக, கடந்த ஜூலையில் மட்டும் ரூ.12,044 கோடி, <a href="https://www.dailythanthi.com/topic/tn-govt">தமிழ்நாடு அரசு</a> கடன் வாங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>தமிழ்நாடு அரசுக்கு வரி வாயிலாகவும், வரி அல்லாத பிற வகையிலும் வருவாய் கிடைக்கிறது. அதன்படி மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், நிலம் விற்பனை, விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி, மாநில ஆயத்தீர்வை, மத்திய அரசின் வரி பகிர்வு, இதர வரிகள் மற்றும் தீர்வை வாயிலாக, வரி வருவாயும், மத்திய அரசின் மானியம் போன்ற வகையில் வரி அல்லாத வருவாயும் கிடைக்கின்றன.</p><h2>வருவாய் பற்றாக்குறை</h2><p>நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரை அரசின் மொத்த வருவாய் ரூ.89,718 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் வரி விதிப்புகள் வாயிலாக கிடைத்த வருவாய் ரூ.82,566 கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.4,070 கோடி, மத்திய மானியம் ரூ.3,082 கோடியாக உள்ளது.</p><p>கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை மொத்த செலவு ரூ.1.23 லட்சம் கோடியாக உள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ.25,267 கோடி. மொத்த செலவில் அதிக அளவாக ஏற்கனவே வாங்கப்பட்ட கடன்களுக்கு செலுத்தப்பட்ட வட்டி செலவு ரூ.21,176 கோடியாகவும், ஓய்வூதியத்திற்கான செலவு ரூ.17,237 கோடியாகவும் உள்ளன.</p><h2>ரூ.12,044 கோடி கடன்</h2><p>வரவை விட செலவு அதிகம் இருப்பதால் அரசு பல்வேறு திட்டங்களுக்கு செலவை மேற்கொள்ள கடன் வாங்குகிறது. அதன்படி, கடன் பத்திரங்களை வெளியிட்டும், பல்வேறு வங்கிகளிடம் இருந்தும் கடன் வாங்கப்படுகின்றன. </p><p>இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் வாங்கப்பட்ட கடன் ரூ.32,925 கோடியாக உள்ளது. இது ஜூன் மாத நிலவரப்படி ரூ.20,881 கோடியாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.12,044 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த 2025 - 26ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை அரசின் மொத்த வருவாய் ரூ.85,876 கோடியாகவும், மொத்த செலவு ரூ.1.09 லட்சம் கோடியாகவும் இருந்தன. இந்த காலத்தில் வாங்கப்பட்ட கடன் ரூ.30,956 கோடியாக இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>சக போலீசாரிடம் ரூ. 15 ஆயிரம் திருடிய போலீஸ்காரர் - அதிர்ச்சி சம்பவம் 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/policeman-steals-rs-15000-from-colleagues-shocking-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/policeman-steals-rs-15000-from-colleagues-shocking-incident#comments</comments><guid isPermaLink="false">dadbe838-3fda-43e6-b163-b96d201f1074</guid><pubDate>Sat, 22 Aug 2026 02:11:16 +0000</pubDate><atom:updated>2026-08-22T02:11:16.082Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கிரைம் செய்தி,Chengalpattu,செங்கல்பட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/pg47d4nz/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/pg47d4nz/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>செங்கல்பட்டு,</p><p><a href="https://www.dailythanthi.com/">செங்கல்பட்டு </a>மாவட்டம் அனைக்கட்டு காவல் நிலையத்தில் சக போலீசாரிடம் இருந்து ரூ. 15 ஆயிரத்தை போலீஸ்காரர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>திருட்டு</h2><p>பணிநிமித்தமாக அனைக்கட்டு காவல் நிலையத்திற்கு சென்ற போலீஸ்காரர் செல்வகுமார், அங்கு ஓய்வு அறையில் பெண் போலீஸ்காரர் வைத்திருந்த ரூ. 5 ஆயிரம், எஸ்.ஐ . வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 15 ஆயிரம் பணத்தை திருடியுள்ளார்.</p><p>இந்த திருட்டு தொடர்பாக விசாரணை நடத்திய அனைக்கட்டு போலீசார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, போலீஸ்காரர் செல்வகுமார், சக போலீசாரின் பணம் ரூ. 15 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது.</p><p>இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட போலீஸ்காரர் செல்வகுமாரை ஆயுதப்படைக்கு மாற்றி செங்கல்பட்டு எஸ்.பி. உத்தரவிட்டார். </p>  ]]></content:encoded></item></channel></rss>