<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 11 Aug 2026 06:28:57 +0000</lastBuildDate><item><title>சிபிஐ, வருமான வரி வழக்கு... உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் என்.ஆனந்த் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-and-income-tax-cases-minister-n-anand-responds-to-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cbi-and-income-tax-cases-minister-n-anand-responds-to-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">5a8bf18e-bd2a-4f29-8cbe-f2cf9177c8b8</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:27:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:27:39.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,CBI,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,TN Assembly,N Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/cmmxpjb0/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/cmmxpjb0/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ரிலாக்சா இருக்கிறீர்கள்</h2><p>நேற்றைய சட்டசபையில் விவாதத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசும்போது, 'நாங்களெல்லாம் அமைச்சர்களாக இருக்கும்போது ஒரு பதற்றம் இருக்கும். முதல்-அமைச்சராக இருந்த கலைஞரோ, மு.க.ஸ்டாலினோ உடனே எங்களை தொடர்பு கொண்டு அதில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுவார்கள். அப்படி 5 ஆண்டுகாலமும் டென்ஷனிலேயே இருப்போம். நீங்கள் (புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அமைச்சர்கள்) எல்லாம் ரிலாக்சா இருக்கிறீர்கள்' என்றார்.</p><p>அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ஆனந்த், 'சின்ன வாய்க்கால் பிரச்சினைக்குகூட எங்களை தொடர்பு கொண்டு சரிசெய்து விட்டீர்களா? என்று கேட்கும் முதல்-அமைச்சராகத்தான் எங்கள் முதல்-அமைச்சர் இருக்கிறார். நாங்கள் தினந்தோறும் டென்ஷனோடு தான் இருக்கிறோம். சின்ன விஷயமாக இருந்தாலும் பயத்தோடு அதை அணுகுகிறோம்' என்றார்.</p><h2>சிபிஐ வழக்கு</h2><p>இந்த நிலையில், இன்று நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தின்போது எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் பேச்சை விமர்சித்து பேசிய தவெக எம்.எல்.ஏ. சுகுமார், “எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் கூலாகதான் இருக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் போதும் கூலாகதான் இருப்போம்" என்றார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "நேற்று எங்கள் உறுப்பினர் பேசும்போது கடந்த 5 ஆண்டுகளாக டென்ஷனாக இருந்தோம் என்று. அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், நாங்களும் தினமும் நிம்மதியாக உறங்க முடியவில்லை; ஒவ்வொரு நிமிடமும் டென்ஷனாகதான் இருக்கிறோம் என்றார். மீண்டும் அதை திருப்பி சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனென்றால் உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கிறது; வருமான வரி வழக்கும் இருக்கிறது என்று கூறினார்.</p><h2>வேறு எந்த அர்த்தமும் இல்லை</h2><p>இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என். ஆனந்த், "சிபிஐ வழக்கு இருக்கிறது என்பதெல்லாம் சரிதான். எங்களுடைய டென்ஷன், எங்களுடைய முதல்-அமைச்சர் தொகுதியில் மக்கள் பிரச்சினை உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறதா? என கேட்பார் என்பதைதான் நேற்று குறிப்பிட்டேனே தவிர; வேறு எந்த அர்த்தத்திலும் இல்லை. எங்களை பயமுறுத்தியோ, டென்ஷனாகவோ குறிப்பிடவில்லை. </p><p>எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது நமது முதல்-அமைச்சர் பேசுவார் என்று எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் இப்போது போன் வந்தாலே பயம் இருக்கிறது; தொகுதியில் எதாவது ஒரு சிறிய பிரச்சினை இருந்தால் கூட ஏன் சரிசெய்யவில்லை என கேட்கும் முதல்-அமைச்சர் தான் எங்கள் முதல்-அமைச்சர் என்று பதிலளித்தார்.</p><p>அதே எண்ணத்தில்தான் எங்களின் சட்டமன்ற உறுப்பினரும் பேசினார் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். இவ்வாறு இருவரிடையே விவாதம் நடந்தது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Z7pKL3UX-Yo"></iframe></figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் 44 இடங்களில் இலவச வைபை வசதி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wifi-at-44-locations-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wifi-at-44-locations-in-chennai#comments</comments><guid isPermaLink="false">afbfd153-39d5-4edc-a240-dff1c715bd04</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:22:48 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:22:48.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Free Wi-Fi,இலவச வைபை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4zo5bwe4/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ இலவச வைபை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4zo5bwe4/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதலமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் 44 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச வைபை (WiFi) வசதி 10.08.2026 முதல் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.</p><p>இதன் ஒரு பகுதியாக, முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரைப் பகுதிகளான மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் முதற்கட்டமாக மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை (WiFi) வசதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா பகுதிகளில் 44 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச வைபை வசதி 10.08.2026 முதல் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரைப் பகுதியில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் 5 இடங்களிலும், தலைமைச் செயலகப் பூங்காவில் 12 இடங்களிலும் என மொத்தம் 44 இடங்களிலும் 10.08.2026 முதல் இலவச வைபை (WiFi) வசதி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வைபை வசதியினைப் பயன்படுத்துவதற்கு மக்கள் தங்கள் செல்பேசியில் வைபையினை ஆன் செய்து அதனை கிளிக் செய்தவுடன் வரும் QR Codeனை மீண்டும் கிளிக் செய்தவுடன், செல்பேசி எண்ணிற்கு வரும் OTP எண்ணை இதில் பதிவு செய்தவுடன் வைபை இணைப்பு ஏற்படும். மக்கள் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.</p><p>இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான இதர கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் பயன்பாட்டில் இல்லாத வைபை வசதியினை மீண்டும் பயன்பாட்டிக்குக் கொண்டு வருதல் மற்றும் புதிதாக வைபை (WiFi) வசதியினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-increases-in-cauvery-river-at-hogenakkal-ferry-operation-banned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-increases-in-cauvery-river-at-hogenakkal-ferry-operation-banned#comments</comments><guid isPermaLink="false">1b47205a-e435-4da4-85a1-215a90f73ea9</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:16:14 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:16:14.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,Increase,தர்மபுரி,நீர்வரத்து அதிகரிப்பு,Cauvery water,காவிரி ஆறுCauvery river</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/8wqhzjcn/122.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரிசல் இயக்க தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/8wqhzjcn/122.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம், </p><p>தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. </p><h2>ஒகேனக்கல்</h2><p>இந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நேற்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடியாகவும், 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.</p><h2>தடை</h2><p>மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.</p><h2>நீர்மட்டம்</h2><p>இதே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணைக்கு</a> நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 543 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 311 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 78.69 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>முன்விரோதத்தில் வடமாநில தொழிலாளர்கள் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-northern-workers-house-in-enmity-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-northern-workers-house-in-enmity-2-arrested#comments</comments><guid isPermaLink="false">ba400a86-8b9e-44ed-8c65-ae3a7ec9e38a</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:10:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:10:07.453Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,House,வீடு,வடமாநில தொழிலாளர்கள்,Northern State workers,petrol bomb attack,பெட்ரோல் குண்டு வீச்சு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/wjqzzqyj/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீச்சு; 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/wjqzzqyj/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வடமாநிலத் தொழிலாளர்கள்</a> தங்கியிருந்த வீட்டின் மீது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்</a> நடத்திய சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். </p><h2>வடமாநில தொழிலாளர்கள் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> திரு.வி.க. நகரில் உள்ள ஒரு வீட்டில் வடமாநிலங்களைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் தங்கி வசித்து வருகின்றனர். இவர்கள் தூத்துக்குடியில் அமைந்துள்ள மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தொழிலாளர்கள் வீட்டின் உள் தூங்கிக் கொண்டிருந்தபோது, 4 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது. </p><p>இந்த தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. வீட்டின் வெளிப்புறத்தில் உலர்த்தப்பட்டிருந்த துணிகள் தீப்பற்றி எரிந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். </p><h2>2 பேர் கைது</h2><p>முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. மேலும் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த சரத் (வயது 20) மற்றும் ஹரிகார்த்திக்(19) ஆகிய 2 பேரை போலீசார் உடனடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>நெல் குவிண்டால் ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 விலை அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கருத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-rs-3500-per-quintal-for-paddy-and-rs-4500-per-tonne-for-sugarcane-must-be-announced-farmers-view</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-rs-3500-per-quintal-for-paddy-and-rs-4500-per-tonne-for-sugarcane-must-be-announced-farmers-view#comments</comments><guid isPermaLink="false">a5702ae6-dd2a-4663-b066-6d5f3dd76629</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:59:40 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:59:40.893Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,விவசாயிகள்,crops,நெல்,sugarcane,கரும்பு,agricultural crops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/0azedpz9/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/0azedpz9/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை</h2><p>தமிழக சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், சன்னரக நெல்லுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ.289 ஆகவும், பொது ரக நெல்லுக்கு ரூ.159 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,750-க்கும். பொது ரக நெல் ரூ.2,600-க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேபோல், 2025-26 கரும்பு அரவை பருவத்தில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள டன்னுக்கு ரூ.3,290.50 விலையுடன் தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.709.50 வழங்கப்படுவதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.4,000 கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விவசாயிகள் சங்கம் வரவேற்பு</h2><p><strong>இது குறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு-</strong></p><p><strong>தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன்:-</strong> தமிழக அரசு நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கியதை வரவேற்கிறோம். கடந்த ஆண்டு சன்னரக நெல்லுக்கு வழங்கப்பட்ட ரூ.156 ஊக்கத்தொகை தற்போது ரூ.289 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.</p><p>உரம் மற்றும் வேளாண் இடுபொருட்களின் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில் இந்த உயர்வு விவசாயிகளுக்கு ஓரளவு உதவியாக இருக்கும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்துள்ள தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியின்படி மேலும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><h2>திருப்தி இல்லை</h2><p><strong>தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம்:-</strong> தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு விவசாயிகளுக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த மன வேதனையை தருகிறது. ஏமாற்றத்தை தருகிறது. தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500-ம் வழங்க வேண்டும்.</p><p>எனவே, தற்போதைய விலை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி மேற்கொண்டு வருவதால், உற்பத்திச் செலவு மற்றும் கடன் சுமையை கருத்தில் கொண்டு அரசு கூடுதல் விலை வழங்க வேண்டும்.</p><h2>வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்</h2><p><strong>தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன்:-</strong> கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங் கப்படும் என்ற அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், தேர்தல் வாக்குறுதியான ரூ.4,500-ஐ வழங்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தற்போதைய ரூ.2,750 மற்றும் ரூ.2,600 விலை அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.</p><p>சன்னரகம், பொது ரகம் என விலை வேறுபாடு இல்லாமல் ஒரே கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும். அரசு நிதிச்சுமையை கருத்தில் கொண் டால், குறைந்தபட்சம் இந்த ஆண்டுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,100 வழங்கி, மீதமுள்ள தொகையை அடுத்த ஆண்டு வழங்குவதாக சட்டசபையில் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.</p><h2>கூடுதல் கோரிக்கை</h2><p><strong>தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன்:-</strong>நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஓராண்டில் நெல்லுக்கான மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.156 வரை உயர்த்தப்பட்டிருப்பது முக்கியமான நடவடிக்கை. கரும்பு டன்னுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுவதன் மூலம் ரூ.4,000 கிடைப்பதும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.</p><p>இருப்பினும், த.வெ.க. தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500-ம் வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடியை விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம்; சவுமியா அன்புமணி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/disappointment-over-not-waiving-crop-loans-soumya-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/disappointment-over-not-waiving-crop-loans-soumya-anbumani#comments</comments><guid isPermaLink="false">5d5857e6-d8e2-46d5-ab14-d762eec27191</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:56:41 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:56:41.357Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,தமிழக சட்டசபை,TNAssembly,சவுமியா அன்புமணி,பயிர்க்கடன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/vfys7qfb/mani33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம்; சவுமியா அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/vfys7qfb/mani33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாப்பாடு போடக்கூடிய விவசாயத் துறைக்கு மிக குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எதிர்பார்த்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை என சவுமியா அன்புமணி கூறினார்.</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் சவுமியா அன்புமணி உரையாற்றினார்.</p><p>பாமகவின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தி அமல்படுத்திய தவெக அரசுக்கு வாழ்த்துகள்.</p><p>பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச்சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி.</p><p>பட்ஜெட்டில் ப<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">யிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி</a> செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.  5 கோடி விவசாய மக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ததும் மிகக்குறைவான தொகை.மகளிர்,விவசாயிகளுக்கான திட்டங்கள், இயற்கை விஞ்ஞானி விருது அறிவிப்பை வரவேற்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் உள்ள 27,000 குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். 42,000 ஏரிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை 1 மீட்டர் அளவு தூர்வார வேண்டும்.</p><p>குறைந்தது 100 டிஎம்சி நீரை சேமிப்பதன் மூலம், அண்டை மாநிலங்களில் கையேந்த வேண்டாம். காவிரியில் தடுப்பணைகள் கட்டுவதன்மூலம் கடலில் கலக்கும் தண்ணீரை சேகரிக்க முடியும்.  ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 10 கிமீ ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம் நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.</p><p>ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை</p><h2>தவெக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கீடு</h2><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் புஸ்சி ஆனந்த்,</p><p>நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட தவெக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் தான் மாவட்டம். விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். முதல்-அமைச்சருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.</p><p>மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும்-கால்நடைத்துறை அமைச்சர் கமலி உறுதி அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரெயிலில் தவறவிட்ட 6.5 சவரன் தங்க நகைகள் மீட்பு: உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/65-sovereigns-of-gold-jewelry-lost-on-train-recovered-police-hand-over-to-owner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/65-sovereigns-of-gold-jewelry-lost-on-train-recovered-police-hand-over-to-owner#comments</comments><guid isPermaLink="false">8e69f921-513d-4432-8a84-1b8977b86bb7</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:47:19 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:47:19.353Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,ரெயில்,Thoothukudi,தூத்துக்குடி,பயணி,passenger,Kovilpatti,கோவில்பட்டி,ஒப்படைப்பு,Handover,உரிமையாளர்,owner,பை,bag</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/0hf0g4q5/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 6.5 சவரன் தங்க நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/0hf0g4q5/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>ரெயிலில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட 6.5 சவரன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தங்க நகைகளை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> இருப்புப்பாதை போலீசார் கண்டுபிடித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">உரிமையாளரிடம் </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஒப்படைத்தனர்</a>. </p><h2>கோவில்பட்டி ரெயில் நிலையம்</h2><p>விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த குருசாமி மனைவி மாரிஸ்வரி. இவர் தற்போது சென்னை முடிச்சூர், மேற்கு லட்சுமி நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்தபோது தாம்பரம் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரெயிலில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் பயணித்துள்ளார். அப்போது அவர் அவசரத்தில் மற்றொரு பயணி வைத்திருந்த அதே போன்ற கருப்பு நிற டிராவல் பையைத் தவறாக மாற்றி எடுத்துக்கொண்டு கோவில்பட்டியில் இறங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோதுதான் அது தனது பை இல்லை என்பது தெரியவந்தது. உடனடியாக ஆனந்தகுமார் அந்தப் பையைக் கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடை அலுவலகத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்தார். </p><h2>பையில் இருந்த நகைகள்</h2><p>அந்தப் பை தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அந்த பையின் உள்ளே 2 நெக்லஸ், 1 ஜோடி ஜிமிக்கி கம்மல், 1 ஜோடி காது மாட்டால் ஆகியவை இருந்தன. மேலும் அதில் ஒரு பிரபல நகைக் கடையின் ரசீதும் இருந்தது. </p><h2>6.5 சவரன் நகைகள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பு</h2><p>அதைத் தொடர்ந்து, இருப்புப்பாதை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டு, நகையின் உரிமையாளர், சென்னை முடிச்சூரைச் சேர்ந்த மாரிஸ்வரி என்பதைக் கண்டறிந்து அவருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரின் தகவலின் பேரில் தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையம் வந்த மாரிஸ்வரி, உரிய அத்தாட்சிகளைக் காண்பித்தார். பின்னர் 6.5 சவரன் எடை கொண்ட தங்க நகைகள் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன. உரிய நேரத்தில் நகைகளைக் கண்டறிந்து ஒப்படைத்த தூத்துக்குடி இருப்புப்பாதை போலீசாருக்கு பயணியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடக்கோரும் தமிழகச் சட்டமன்றத் தீர்மானம் வரவேற்புக்குரியது - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vaalthai-muthalavathaga-paada-korum-tamilaga-sattamandra-theermaanam-varaverpukkuriyathu-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vaalthai-muthalavathaga-paada-korum-tamilaga-sattamandra-theermaanam-varaverpukkuriyathu-seeman#comments</comments><guid isPermaLink="false">0551db31-ebe1-406a-825c-3e4f7d162687</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:37:11 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:37:11.647Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,தனித்தீர்மானம்,தமிழ்த்தாய் வாழ்த்து,TamilThai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/2sqsdb9h/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/2sqsdb9h/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றிய ஆளும் தவெக அரசுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன்.</p><p>மொழியை ஏற்றிருக்கிற நிலம்தான் தேசமாகவும், மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ள மக்கள் கூட்டம்தான் தேசிய இனமாகவும் வரையறுக்கப்படுகிறது. ஒரு இனத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபாடு, வாழ்வியல், அரசியல் எல்லாம் மொழியிலிருந்துதான் பிறக்கிறது. அதனால்தான், மொழியைத் தாயென்று போற்றுகிறோம். மொழியே ஒரு இனத்தின் முகம், முகவரி, அடையாளம் என எல்லாவுமாகத் திகழ்கிறது. தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப்படுத்தப்பட வேண்டியது தமிழர் நிலத்தை ஆளுகை செய்யும் ஆட்சியாளர்களின் தார்மீகக் கடமையாகும். அந்த வகையில், தமிழர் தாய்நிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்படுவதை உறுதிசெய்ய முன்வர வேண்டும். அதுவே தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையையும், தமிழர்களின் தன்மான உணர்வையும் மதித்துப் போற்றுவதாக அமையும். அதுபோல, ஒவ்வொரு தேசிய இனத்தின் தாயகத்திலும் அந்தந்த இனத்தின் தாய்மொழியைப் போற்றும் பாடலே முதன்மையாக இடம்பெற வேண்டும்.</p><p>வேறுபட்ட மொழி, பண்பாடு, வாழ்வியல் கொண்ட வெவ்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபட்டு, ஒரே நாட்டுக்குள் வாழ்வதால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டின் பன்மைத்துவம் போற்றப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளைவிட அதிக மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், இந்நாட்டில் பல்வேறு மொழிவழித் தேசிய இனங்கள் ஒரே நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழ்வதைக் கண்டு, உலக நாடுகள் வியக்கின்றன. அத்தகைய தேசிய இனங்களின் தன்னுரிமையையும், தனித்துவ அடையாளத்தையும் பாதுகாப்பதே இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஏற்றதாகும். மாறாக, தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து ஒற்றை மொழியையும், ஆதிக்கத்தையும் திணிக்க முற்பட்டால், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உணர வேண்டும். </p><p>ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே வரி, ஒரே ராணுவத்தளபதி, ஒரே உணவுச்சந்தை என எல்லாவற்றையும் ஒற்றைமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, நாட்டுப்பண்ணை மட்டும் இரண்டாகத் திணிப்பது கேலிக்கூத்தாகும். மதச்சார்பு கொண்ட ‘வந்தே மாதரம்’ எனும் பாடலை வலியத் திணிப்பதும், தேசிய இனங்களின் மொழியைப் போற்றும் பாடலை பின்னுக்குத் தள்ளுவதுமானப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தே தமிழ்நாட்டில் முதன்மைப்பாடலாகப் பாடப்பட வேண்டும் எனும் தமிழர்களின் ஒருமித்தக் கருத்தோட்டத்தின் விளைவாக, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றிய ஆளும் தவெக அரசுக்கும், தமிழ்நாட்டு முதல்வர் விஜய்க்கும், தீர்மானத்தை ஆதரித்துத் துணைநின்ற அனைத்துக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுடன் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-took-an-anti-drug-pledge-with-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-took-an-anti-drug-pledge-with-students#comments</comments><guid isPermaLink="false">c0dcd78c-191a-4475-bb22-599ecfee41df</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:31:02 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:31:02.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,போதைப்பொருள் ஒழிப்பு,CM Vijay,drug pledge</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ohwfcjfo/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ohwfcjfo/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>போதைப் பொருள் இல்லாத தமிழகம்</h2><p>போதைப் பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. </p><p>இந்த நிலையில், போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட மரியாதையை சல்யூட் அடித்து ஏற்றுக்கொண்டார்.</p><h2>மாணவர்களுடன் உறுதிமொழி</h2><p>பின்னர் விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் விஜய் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை மற்றும் புகையிலை இல்லா வளாகம் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதல்வர் விஜய் முன்னிலையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. செங்கல்பட்டு, நெல்லை, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களை அழிக்கும் பணிகளை காணொளி வாயிலாக முதல்-அமைச்சர் பார்த்தார்.</p><p>பின்னர் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பெயரில் இயக்கத்தை முதல்-அமைச்சர் விஜய் துவக்கி வைத்து மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். 'நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்'... போதைப்பொருள் ஒழிப்பிற்கு எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்..' என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்</p><p>தொடர்ந்து மதுவிலக்கு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு முதல்-அமைச்சர் விஜய் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் போதைப்பொருள் தடுப்பு மன்றங்களில் சிறந்து விளங்கிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.</p><h2>மாரத்தான் ஓட்டம்</h2><p>சென்னையில் கடந்த ஜூன் 26-ந்தேதி நடந்த சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட் டத்தை, மெரினா கடற்கரையில் தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் விஜய் அதில் பொதுமக்களுடன் இணைந்து ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-coimbatore-express-diverted-to-an-alternate-route</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-coimbatore-express-diverted-to-an-alternate-route#comments</comments><guid isPermaLink="false">af905fe6-940a-4a64-867d-8709aa978fba</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:26:03 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:26:03.805Z</atom:updated><atom:author><atom:name>Muthu Pandian K</atom:name><atom:uri>/api/author/2401539</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/py3ambm8/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/py3ambm8/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,  </p><p>மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வரும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.</p><h2>மாற்றுப்பாதையில் இயக்கம்</h2><p>மதுரை கோட்டத்தில் தண்டவாளத்தில் பொறியியல் பணி மேற்கொள்ளப் பட இருப்பதால் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. அதன்படி நாகர்கோவிலில் இருந்து வருகிற 17-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் (எண்: 16321) விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக கரூர் சென்று கோவைக்கு புறப்படும். அன்று இந்த ரெயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, அம்பா துரை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் வழியாக செல்லாது. </p><p>இதேபோல் நாகர்கோவிலில் இருந்து வருகிற 13-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16352) மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து மும்பை செல்லும். அந்த நாட்களில் திண்டுக்கல் வழியாக வராது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 5 ஆண்டுகளில் செய்தோம் - சேகர்பாபு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-did-in-5-years-what-should-have-been-done-in-50-years-shekar-babu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-did-in-5-years-what-should-have-been-done-in-50-years-shekar-babu#comments</comments><guid isPermaLink="false">f6a5b148-320e-4b37-8c90-b6e5c7a4af89</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:16:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:16:07.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சேகர்பாபு,அறநிலையத்துறை,Recovered,தி.மு.க,5 years,Shekar Babu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/whya9nka/sakarbabu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சேகர்பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/whya9nka/sakarbabu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.</p><p>முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>அறநிலையத்துறை சொத்துகள்</h2><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சொத்துகளை தி.மு.க. ஆட்சி பாதுகாத்தது. எங்களை பார்த்து தூங்கிக் கொண்டிருந்தீர்களா? என்று அமைச்சர் ரமேஷ் கேட்கிறார். நாங்கள் தூக்கத்தைக் கலைத்து முழுமையாக களத்தில் நின்றதால் தான். 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">இந்து சமய அறநிலையத்துறை</a> சொத்துகளை மீட்டிருக்கின்றோம்.</p><p>பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். எனவே, கும்பகர்ணத் தூக்கம் கொண்டிருக்கின்ற ஆட்சி, இந்த ஆட்சி என்பதை நான் பதிவு செய்கிறேன். இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற கோபுரங்கள், சமயபுரம் முதற்கொண்டு எடுத்துக்கொண்டால், மு.க.ஸ்டாலின் பெயரை உச்சரிக்கும்.</p><h2>தி.மு.க. ஆட்சி</h2><p>இந்த ஆட்சியினர் அதிகாரிகளை மிரட்டுவது. “எடுத்தேன், கவிழ்த்தேன்" என்று பேசுவது மட்டுமே கையில் வைத்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றோம். அதை ஒரு கணம் அவர்கள் திருப்பிப் பார்த்தாலே. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி என்பது தெரியும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா... உருண்டை சோறுடன் கிடாக்கறி விருந்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-unique-festival-where-only-men-participated-a-feast-of-meat-served-with-balls-of-rice</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-unique-festival-where-only-men-participated-a-feast-of-meat-served-with-balls-of-rice#comments</comments><guid isPermaLink="false">a8e24091-e079-4e61-9be0-45cff3286a9f</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:58:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:58:45.877Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,திருவிழா,Temple festival,ஆண்கள்,கறி விருந்து,mens</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/cx0tjnzi/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/cx0tjnzi/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><h2>பொன்னர் சங்கர் சுவாமி கோவில்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாதசிறுகுடியில் பொன்னர் சங்கர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டைச் சோறுடன் கூடிய கறி விருந்து திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் பல நூறு ஆண்டுகளாக இத்திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.</p><p>இந்த ஆண்டுக்காண இந்த திருவிழா இன்று நள்ளிரவு தொடங்கியது. இதில் ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகளை சாமிக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது பின்னர் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆடுகளை உரித்து சுத்தம் செய்து பெரிய பெரிய அண்டாக்களில் போட்டு சமைத்தனர்.</p><h2>உருண்டை சாதம், கிடாக்கறி குழம்பு</h2><p>பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு பொன்னர் சங்கர் சாமிக்கு உருண்டை சாதம் படைக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் கருவறையில் மின் விளக்கை அணைத்த பின்னர் அந்த உருண்டை சாதத்தை வானை நோக்கி எரிந்தனர். இது இந்த கோவிலின் மரபாகும். பின்னர் திருவிழாவில் பங்கேறே்ற ஆண்களுக்கு இலை போட்டு உருண்டை சாதமும், கிடாக்கறி குழம்பும் பரிமாறப்பட்டது.</p><p>நள்ளிரவில் நடைபெற்ற இந்த வினோத திருவிழாவில் நத்தம்,குட்டுபட்டி, பாதசிறுகுடி, குமரபட்டி, புதூர்,குட்டூர்,மாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பாக்கெட்டில் யார் படம்?  ஓபிஎஸ் - செங்கோட்டையன் இடையே காராசார விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whose-picture-is-in-the-pocket-a-heated-debate-between-ops-and-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whose-picture-is-in-the-pocket-a-heated-debate-between-ops-and-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">0228d21f-d19d-492c-aa77-71d4c7a553fc</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:54:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:54:24.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,செங்கோட்டையன்,OPS,TNAssembly,ஒ.பன்னீர் செல்வம்,Tamilnadu ​,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/usw96mu3/ops3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ஓபிஎஸ் - செங்கோட்டையன் இடையே காராசார விவாதம்|]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/usw96mu3/ops3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தவெக அரசின் பட்ஜெட்டில் திருப்புகிற பக்கங்கள் எல்லாம் திராவிட மாடல் அரசின் சாதனைகளே ஜொலிக்கின்றது என பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று தொடங்கியது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க.</p><p>எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசின் நிதிநிலை அறிக்கையானது ஏமாற்றின் வடிவமாக ஜொலிக்கும் பட்ஜெட். செய்வதை மட்டும் தான் சொல்வோம் எனக்கூறி அள்ளித்தெளித்த வாக்குறுதிகளை த.வெ.க. அரசு மறந்துவிட்டது. துறை ரீதியான கூட்டம் நடத்தி அமைச்சரவை கூட்டம் நடத்திய பின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வெற்றிக்கழக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை பெயர் மாற்றப்பட்டியல் போல் உள்ளது.</p><p>உரிமைத் தொகை உயரவில்லை, 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம். மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க நிதி ஒதுக்கீடு திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை.</p><p>திருப்புகின்ற பக்கமெல்லாம் தி.மு.க. ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன. புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன் என்று கூறினார்.</p><p>ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%20-%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் செங்கோட்டையன்</a> பதில் கூறுகையில், 5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை போல் 3 மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது. நீங்கள் இடம் மாறி இருக்குறீர்கள் பரவாயில்லை.. அதற்காக இவ்வளவு துதி பாட வேண்டிய அவசியமில்லை. அம்மாவால் 3 முறை முதல்-அமைச்சராக்கப்பட்ட ஓ.பி.எஸ் பேச்சை பார்த்து நாடே சிரித்து கொண்டிருக்கிறது.</p><p>இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் தான் என்றார்.</p><p>மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், </p><p>இடத்தை மாற்றியபோது அவரின் இதயத்தின் அருகே வைத்துள்ள நிழல் படத்தை மாற்றவேண்டாம் என கூறினார் முதல்-அமைச்சர் விஜய். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் யார் படத்தை தற்போது வைத்துள்ளார் என்றார்.</p><h2>இடமும் மாறியது, படமும் மாறியது - ராஜ்மோகன்</h2><p>ஓ.பன்னீர்செல்வம் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார் என அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தற்போது சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் நான் இருப்பதற்கு காரணம் ஸ்டாலின், எனவே அவர் படத்தை வைத்துள்ளேன்.</p><p>திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.</p><p>கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர். தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதல்-அமைச்சருக்கு  இப்போது தெரிந்திருக்கும் என்றார். </p><p>சட்டசபையில் படம் வைப்பது தொடர்பான நகைச்சுவை பேச்சு சலசலப்பாக மாறியது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து மசோதா சட்டமாக இயற்றப்பட வேண்டும்: கவிஞர் வைரமுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-thai-vazhthu-bill-must-be-enacted-into-law-poet-vairamuthu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-thai-vazhthu-bill-must-be-enacted-into-law-poet-vairamuthu#comments</comments><guid isPermaLink="false">4190aa39-f9e5-425e-afb5-143144eedc79</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:21:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:21:34.770Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,கவிஞர் வைரமுத்து,Poet Vairamuthu,தமிழ்த்தாய் வாழ்த்து,TamilThai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/rpdr7trv/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/rpdr7trv/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் பொது அமைப்பு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அது அனைவரின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.</p><p><strong>இந்த நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தனித் தீர்மானம் இயற்றிய தமிழ்நாட்டரசையும் ஒருதுளி மறுப்புமின்றி ஒருமனதாக நிறைவேற்றிக்கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பரந்துபட்ட தமிழ் உலகம் பாராட்டுகிறது; எழுந்து நின்று நன்றி சொல்கிறது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் சொற்கூட்டமல்ல; அது புவியியல், வரலாறு, பீடு, பெருமிதம் அனைத்தும் கொண்ட இனத்தின் குறியீடாகும். தேசிய கீதத்தின் அளவுக்குத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழர்கள் அனைவரும் மனப்பாடம் செய்யவில்லை.</p><p>பள்ளியிலிருந்தே அது மனப்பாடப் பொருளாக மாற்றப்பட வேண்டும். மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர் முன்மொழிந்ததைப் போலவே அது சட்டமாகவும் இயற்றப்பட வேண்டும்.. தமிழ்த்தாயே...! உன்னைச் செயல் மறந்து மட்டுமல்ல செயல் புரிந்தும் வாழ்த்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாகன சோதனையில் நிற்காத வாலிபரை லத்தியால் தாக்கிய போலீசார்: 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-beat-up-a-young-man-with-a-lathi-for-not-stopping-at-a-vehicle-check-2-transferred-to-the-armed-forces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-beat-up-a-young-man-with-a-lathi-for-not-stopping-at-a-vehicle-check-2-transferred-to-the-armed-forces#comments</comments><guid isPermaLink="false">6e6fa0af-3b95-496d-91b1-225ad1123065</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:14:30 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:14:30.362Z</atom:updated><atom:author><atom:name>S.Mariappan</atom:name><atom:uri>/api/author/2422435</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,மோட்டார் சைக்கிள்,Armed Forces,ஆயுதப்படை,போலீசார்,இடமாற்றம்Transfer,Police vehicle check</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1l6a70ky/120.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆயுதப்படைக்கு மாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1l6a70ky/120.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆறுமுகநேரி,</p><p>ஆறுமுகநேரியில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற வாலிபரை லத்தியால் போலீசார் தாக்கினர். இதுதொடர்பாக 2 போலீசார் அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.</p> <h2>வாகன சோதனை</h2><p>தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி - அடைக்கலாபுரம் மெயின் ரோட்டில் ஆறுமுகநேரி போலீசார் நேற்று முன்தினம் மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி மேல தெருவை சேர்ந்த அரசகுமார் மகன் விக்னேஷ் (வயது 25), அவருடைய நண்பர் சூரியா ஆகிய 2 பேரும் திருச்செந்தூர் நோக்கி சென்றனர். அவர்களிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். இதனை கவனிக்காமல் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.</p><h2>லத்தியால் தாக்குதல்</h2><p>உடனே போலீசார் லத்தியால் விக்னேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் விக்னேஷின் முகத்தில் கண் இமையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அவரை ஆட்டோவில் ஏற்றி நண்பருடன் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரது கண் இமையில் 9 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது பார்வைத்திறனும் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>இடமாற்றம்</h2><p>வாகன சோதனையில் நிற்காமல் சென்ற வாலிபரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>லத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் ஆறுமுகநேரி போலீஸ் ஏட்டு கஜேந்திரன் (43). போலீஸ்காரர் காளி (31) ஆகிய 2 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து சூப்பிரண்டு சிவபிரசாத் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-to-mettur-dam-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-to-mettur-dam-2#comments</comments><guid isPermaLink="false">0ef7ccc6-6a8f-442c-a567-cdda6446c487</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:12:04 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:12:04.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர்வரத்து,Water inflow</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/2xk6sml2/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/2xk6sml2/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சேலம், </p><p>கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இதையடுத்து கடந்த 1-ந்தேதியில் இருந்து கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. </p><p>அதிகபட்சமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டது. அதே நேரம் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்தும் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வீதம் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. </p><p>இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சற்று மழை குறைந்தது. இதனால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. இதனால் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.</p><p>தற்போது கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 5,760 கனஅடியில் இருந்து 7,151 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. </p> ]]></content:encoded></item><item><title>விளைச்சல் அதிகரிப்பு: முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-yield-drought-in-drumstick-prices-farmers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-yield-drought-in-drumstick-prices-farmers-concerned#comments</comments><guid isPermaLink="false">ccdd5491-b43c-403a-9fb1-3307a39a6541</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:00:40 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:00:40.844Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Increase,அதிகரிப்பு,திசையன்விளை,முருங்கைக்காய்,Drumstick,விளைச்சல்,விவசாயிகள் கவலை,yield,விலை வீழ்ச்சி,farmers worried,price drop</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1tz5bbme/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முருங்கைக்காய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1tz5bbme/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">முருங்கைக்காய்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">விலை கடும் வீழ்ச்சி</a> அடைந்துள்ளது. </p><h2>முருங்கைக்காய் விலை வீழ்ச்சி, விவசாயிகள் கவலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88">திசையன்விளை</a> மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது முருங்கைக்காய் விலை கிலோ ரூ.8 முதல் ரூ.12 வரை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பறிப்பு கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். </p><h2>குளிர்பதன கிடங்கு அமைக்க கோரிக்கை</h2><p>திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் முருங்கைக்காய் போன்ற காய்கறிகளை சேமித்து வைக்க அப்பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். மேலும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் ஆலை தொடங்குவதோடு, ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் முருங்கைக்காய் கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம்: கமல்ஹாசன் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-salutation-special-resolution-kamal-haasan-welcome</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-salutation-special-resolution-kamal-haasan-welcome#comments</comments><guid isPermaLink="false">7e704794-f02d-45dd-959e-a046d57100c4</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:47:01 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:47:01.146Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கமல்ஹாசன்,Makkal Needhi Maiam,மக்கள் நீதி மய்யம்,KamalHaasan,தனித்தீர்மானம்,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4wz0a3a7/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கமல்ஹாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/4wz0a3a7/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் விஜய், அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.</p><p>இந்த நிலையில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது; வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தலையில் முடி கொட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-commits-suicide-by-hanging-herself-due-to-hair-loss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-commits-suicide-by-hanging-herself-due-to-hair-loss#comments</comments><guid isPermaLink="false">6a8cae4d-9b8f-44ae-b615-dde782a68838</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:19:48 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:19:48.312Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>young woman,இளம்பெண்,Theni,தேனி,problem,பிரச்சினை,hanging,தலைமுடி,hair,Young woman commits suicide,இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/u2ap5d90/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/u2ap5d90/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF">தேனி </a>மாவட்டத்தில் தலையில் முடி கொட்டியதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">இளம்பெண்</a> ஒருவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டார். </p><h2>புழுவெட்டு நோய் பாதிப்பு</h2><p>தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. அவருடைய மகள் அஞ்சலி (வயது 19). இவர் கடந்த ஒரு மாதமாக புழுவெட்டு நோயால் பாதிக்கப்பட்டார். </p><h2>இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>அப்போது அவருக்கு முடிகள் அனைத்தும் கொட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அஞ்சலி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். </p>]]></content:encoded></item><item><title>கோவையில் எச்.ஐ.வி. பாதித்தவரின் ரத்தம் சிறுமிக்கு செலுத்தப்பட்டதா? - கலெக்டரிடம் புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/was-hiv-infected-blood-transfused-to-a-young-girl-in-coimbatore-complaint-lodged-with-the-collector</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/was-hiv-infected-blood-transfused-to-a-young-girl-in-coimbatore-complaint-lodged-with-the-collector#comments</comments><guid isPermaLink="false">16881191-6ada-442f-85ed-c02de539bd28</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:15:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:15:39.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,சிறுமி,HIV,எச்.ஐ.வி.,small girl,எச்.ஐ.வி. ரத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1a160vm9/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1a160vm9/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>நெசவு தொழிலாளி</h2><p>கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பவன்குமார் தலைமை யில் நடைபெற்றது. இதில் சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயது நெசவு தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தார். </p><p><strong>அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</strong></p><p>எங்களுக்கு முதலில் ஒரு மகன், மகள் என இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இதன்பின்னர் ஒரு மகன் பிறந்தான். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு எனது மகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தம் குறைவாக உள்ளது என்றனர்.</p><h2>எச்.ஐ.வி. பாதிப்பு</h2><p>இதன்பின்னர் எனது மகளை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அங்கு எனது மகளுக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினோம். இதனிடையே எனது மகளின் காது அருகே கட்டிகள் ஏற்பட்டன. இதனால் நாங்கள் டாக்டரி டம் எனது மகளை அழைத்து சென்றோம். பின்னர் எனது மகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.</p><p>இதையடுத்து எனக்கும், எனது மனைவிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எங்கள் இருவரில் யாருக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் தான் எச்.ஐ.வி. பாதித்தவரின் ரத்தம் தவறுதலாக செலுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நாங்கள் ஆஸ்பத்திரிக்கு நேரிடையாக சென்று இதுகுறித்து கேட்டோம்.</p><p>அப்போது நிர்வாகம் இதுகுறித்து வெளியே யாரிடமும் கூற வேண்டாம் என்று எங்களிடம் கூறினர். ஆனால் எங்களுக்கு எவ்வித நியாயமும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு உரிய இழப்பீடு அல்லது இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>ரத்த தானம்</h2><p>இதனிடையே கலெக்டர். பாதிக்கப்பட்ட சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிப்பதுடன், அது குறித்த அறிக்கையை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறும்போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரத்த சிவப்பு அணுக்கள் மட்டுமே செலுத்தப்பட்டது சம்பந்தப்பட்ட நபரிடம் பெறப்பட்ட ரத்தத்தை பிளாஸ்மா, ரத்த சிவப்பு அணு, வெள்ளை அணு என பிரிக்கப்பட்டு 3 நபர்களுக்கு செலுத்தப்பட்டது.</p><p>மீதம் உள்ள 2 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை. இதேபோல் ரத்தத்தை தானம் வழங்கிய நபரை பரிசோதனை செய்தபோது அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என தெரியவந்தது. எனவே அரசு ஆஸ்பத்திரி மூலம் அந்த சிறுமிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படவில்லை. அவர்கள் வேறு எங்காவது அந்த சிறுமிக்கு ஊசி போட்டு இருக்கலாம். அதன்மூலம் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளோம் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை: ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடைதிறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-rameswaram-temple-to-remain-open-throughout-the-day-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-rameswaram-temple-to-remain-open-throughout-the-day-tomorrow#comments</comments><guid isPermaLink="false">b2fd09a3-6752-4b09-8407-760c01002c62</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:10:45 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:10:45.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமேசுவரம் கோவில்,Rameswaram Temple,aadi amavasai,ஆடி அமாவாசை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/kzlbmasl/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/kzlbmasl/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,  </p><p>ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்.</p><h2>ஆடி அமாவாசை</h2><p>ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 6-ம் நாளான நேற்று காலையில் அம்பாள் தங்கப்பல்லக்கிலும், இரவில் தங்க ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.</p><p>7-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு அம்பாள் தங்கக்குதிரை வாகனத்தில் திட்டக்குடி மேலதெருவில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனால் இன்று மாலை 5 மணி முதல் இரவு வரையிலும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.</p><p>ஆடி அமாவாசையான நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் அக்னிதீர்த்த கடற்கரைக்கு ராமபிரான், தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது.</p><h2>நடை சாத்தப்படாது</h2><p>வழக்கமாக அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், நாளை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் நடையானது பகல் 1 மணிக்கு சாத்தப்படாமல் இரவு 8 மணிக்குத்தான் சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவிழாவின் 9-ம் நாளான நாளை மறுநாள் காலை 9 மணிக்கு அம்பாள் தேரோட்டம் நடக்கிறது.</p><p>விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஆடி அமாவாசையன்று பக்தர்கள் கூட்டநெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யவும், தீர்த்தம் நீராடவும் கோவிலின் உள்பகுதி பிரகாரங்களில் பல்வேறு இடங்களில் தடுப்புக்கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க வசதியாக அக்னிதீர்த்த கடற்கரையில் தற்காலிக கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மழலையர் பள்ளி வகுப்பறையில் பெண் நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-administrator-dies-by-suicide-in-kindergarten-classroom</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-administrator-dies-by-suicide-in-kindergarten-classroom#comments</comments><guid isPermaLink="false">ff62cf53-c297-4bd1-aeec-aa644ef00093</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:03:23 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:03:23.102Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/7my0desk/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/7my0desk/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை கண்ணனேந்தல் சந்தனம் நகரை சேர்ந்தவர் முகுந்தன். இவருடைய மனைவி அஜிதாகுமாரி (50 வயது). மழலையர் பள்ளி நடத்தி வந்தார். இவர்களுக்கு சுவேதா, கீர்த்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் சுவேதாவுக்கு திருமணமாகி அவர் குடும்பத்துடன் தேனியில் வசித்து வருகிறார். அஜிதாகுமாரி நடத்தி வந்த பள்ளியின் மாடியில் அவரது வீடு உள்ளது. அவருடைய கணவர் முகுந்தன் இறந்துவிட்டதால், 2-வது மகளுடன் வசித்து வந்தார்.</p><p>சில நாட்களுக்கு முன்பு, மதுரையில் சுவேதாவுக்கு குழந்தை பிறந்தது. பிரசவ செலவு மற்றும் தன்னை சரியாக கவனிக்கவில்லை என தாயாரிடம் சுவேதா கோபித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவில் இளைய மகள் கீர்த்தி, தனது தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவருத்தம் அடைந்த அஜிதாகுமாரி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.</p><p>இந்த நிலையில் நேற்று காலையில் அஜிதாகுமாரி பள்ளி வகுப்பறையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: தொழிலாளியை கொன்ற புலியை பிடிக்கும் பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-efforts-to-catch-tiger-that-killed-worker-intensify</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-efforts-to-catch-tiger-that-killed-worker-intensify#comments</comments><guid isPermaLink="false">a3e09538-2222-41a9-8a83-931bc992269d</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:57:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:57:24.916Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Forest Department,Nilgiris,நீலகிரி,வனத்துறையினர்,Tiger,புலி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/8lgum9cc/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/8lgum9cc/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நீலகிரி,</p><h2>தொழிலாளி பலி</h2><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் 4-ம் நெம்பர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 63). தொழிலாளி. இவர் வீட்டில் இருந்த நிலையில், கடந்த 8-ந் தேதி மாயமானார். நேற்று முன்தினம் காலையில் வனத்துறையினர், பொதுமக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதி எல்லையில் பாலகிருஷ்ணன் இறந்து கிடந்தார். அவரது உடலை புலி கடித்து தின்றது தெரிய வந்தது.</p><p>இதுதொடர்பாக போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ஊற்று நீரை தடுத்து குழாய் மூலம் வீட்டு தேவைக்காக தண்ணீர் கொண்டு வருவதற்கான பணியில் ஈடுபடும் போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த புலி பாலகிருஷ்ணனை தாக்கி கொன்றது தெரிய வந்தது. மேலும் உடலை நீண்ட தூரம் இழுத்து சென்று உடற்பாகங்களை சாப்பிட்டது தெரியவந்தது.</p><h2>கண்காணிப்பு கேமராக்கள்</h2><p>இதனிடையே பாலகிருஷ்ணனை கடித்துக்கொன்ற புலியை பிடிக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இல்லையெனில், தொடர் ஆபத்து ஏற்படும் என்ற அபாயம் உள்ளதாக போலீசார், வனத்துறையினரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கூடலூர் வன அலுவலர் தேவராஜ் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் சீனிவாசன், வனச்சரகர்கள் மற்றும் வனத்துறையினர் தொழிலாளியை தாக்கிய புலி நடமாட்டம் உள்ள இடத்தில் 16 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். </p><p>தொடர்ந்து நவீன டிரோன் மூலம் புலி அப்பகுதியில் பதுங்கி உள்ளதா? என கண்காணித்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் வனத்துறையினர் ரோந்து பணியும் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தொழிலாளியை கொன்ற புலியை அடையாளம் காணும் பணி நடைபெற்று வரு கிறது. இதனால் 16 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தனியாக எங்கும் நடந்து செல்லக்கூடாது, என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காட்டுத்தீ: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-fire-ban-on-devotees-visiting-sathuragiri-hill</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-fire-ban-on-devotees-visiting-sathuragiri-hill#comments</comments><guid isPermaLink="false">e09a7a00-4bce-47d7-bfe4-0f70f8f962ec</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:42:05 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:42:05.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சதுரகிரி கோவில்,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்,Sathuragiri Temple,sathuragiri hills,காட்டுத்தீ,forest fire,சதுரகிரி மலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/kmoym7o2/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/kmoym7o2/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><h2>காட்டுத்தீ</h2><p>விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மலையின் கீழ் பகுதியை நோக்கி பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் காற்றின் வேகம் திசை மற்றும் சூழலை கண்காணிக்கும் பணியிலும் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>தற்போது நிலவும் தீ பரவும் சூழல் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக்கூடியதை கருத்தில் கொண்டு நிலைமை பாதுகாப்பானதாகவும், இயல்பானதாகவும் மாறும் வரை இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுமக்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>அனுமதி இல்லை</h2><p>மேலும் தொடர்ந்து எரியும் தீ மற்றும் களநிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று காலை 8 மணிக்கு முன்னதாக பக்தர்கள் அல்லது பார்வையாளர்கள் சதுரகிரி மலைப்பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. நுழைவு நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை அப்பகுதியில் நிலவும் தீ மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையை பொருத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் இன்று சதுரகிரிக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். காட்டுத்தீயின் தன்மையைப் பொறுத்து நாளை ஆடி அமாவாசை அன்று பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-guruvayur-express-train-service-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-guruvayur-express-train-service-2#comments</comments><guid isPermaLink="false">5ceae703-53e1-4ff3-afa3-664b020d44cf</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:40:33 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:40:33.194Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,train service,குருவாயூர் எக்ஸ்பிரஸ்,Guruvayur Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6t7fweyk/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/6t7fweyk/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>மதுரை கோட்டத்தில் தண்டவாளத்தில் பொறியியல் பணி மேற்கொள்ளப் பட இருப்பதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குருவாயூரில் இருந்து நாளை (புதன்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16128) விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, சோழவந் தான், கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், மணப்பாறை வழியாக வராது.</p><p>அதேபோல, செங்கோட்டையில் இருந்து வருகிற 13-ந்தேதி காலை 7 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16848) மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவ கோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வந்து மயிலாடுதுறைக்கு செல்லும். அந்த நாட்களில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக வராது.</p><p>இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: வெறிநாய்கள் கடித்து 15 ஆடுகள் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-15-sheep-die-after-being-bitten-by-rabid-dogs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-15-sheep-die-after-being-bitten-by-rabid-dogs#comments</comments><guid isPermaLink="false">97e262a4-9b87-412b-961b-722cd6f9165d</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:35:50 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:35:50.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,கடித்து,sheep,rabid dog,kill,bite,ஆடுகள் பலி,வெறிநாய்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/p97lwikq/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/p97lwikq/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">விருதுநகர்</a> மாவட்டத்தில் ஒருவருடைய ஆட்டு தொழுவத்திற்குள் புகுந்த 3 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வெறிநாய்கள் </a>ஆடுகளை கடித்துக்குதறியதில் 15 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">ஆடுகள் பலி</a>யாகின. </p><h2>ஆடுகளை கடித்த வெறிநாய்கள்</h2><p>விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் மகாலிங்கம் என்பவர் 35-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவரது ஆட்டு தொழுவத்திற்குள் புகுந்த 3 வெறிநாய்கள் ஆடுகளை கடித்துக்குதறின. </p><h2>15 ஆடுகள் பலி</h2><p>இதில் 15 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 10 ஆடுகள் காயம் அடைந்தன. உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மகாலிங்கம் கோரிக்கை விடுத்தார். </p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிக்க ஈரோடு மாணவருக்கு ரூ.3.55 கோடி உதவித்தொகை!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-student-gets-rs-355-crore-scholarship-to-study-at-brown-university-in-the-us</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-student-gets-rs-355-crore-scholarship-to-study-at-brown-university-in-the-us#comments</comments><guid isPermaLink="false">683802d3-e085-4f63-b1c1-485f17ae9c7a</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:23:38 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:23:38.910Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,student,Erode,ஈரோடு,Scholarship,பல்கலைக்கழகம்,Study,மாணவர்,உதவித்தொகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ztmbe5jc/119.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரவுன் பல்கலைக்கழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ztmbe5jc/119.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம், திண்டல் பவளத்தாம்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோ - புவனேஸ்வரி தம்பதியின் மகன் பிரணவ் (17). இளங்கோ, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் டெக்ஸ்டைல் பிராசசிங் துறை தலைவராகவும், அவரது மனைவி புவனேஸ்வரி ஈரோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் ஐ.டி. பிரிவு பேராசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.</p><h2>உதவித்தொகை</h2><p>இவருக்கு, அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலை, நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு, உதவித்தொகை மற்றும் தங்கி படிக்க வசதியாக, 3.55 கோடி ரூபாய் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF">நிதி உதவியை</a> வழங்கியுள்ளது. இதனால், பொது சுகாதாரம், பயன்பாட்டு கணிதம் குறித்து அவர் பயிலவுள்ளார். அமெரிக்காவின் மிக பழமையான பயன்பாட்டு கணித பாடத்திட்டமும், ஐவி லீக் பல்கலையில் மிக பழமையான பொறியியல் திட்டமும் இந்த பல்கலையில் உள்ளன.</p><p>ஈரோடு சி.எஸ்., அகாடமியில் க0ம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1, பிளஸ் 2வை, கோவை சி.எஸ்., அகாடமியிலும் பிரணவ் படித்தார். எட்டாம் வகுப்பு படித்த போது, தேசிய அமைப்பான டெக்ஸ்டிரிட்டி குளோபல் மூலம் அடையாளம் காணப்பட்டு, வழிகாட்டுதலும், பயிற்சியும் பெற்றார். </p><p>பிரணவ் கூறுகையில், "டெக்ஸ்டிரிட்டி என் சிந்தனை, கற்றல் மற்றும் தலைமைத்துவ அணுகுமுறையை மாற்றியுள்ளது. பிரவுன் பல்கலையில் படிக்கும் வாய்ப்பை பெறுவது மிகப்பெரிய கவுரவம். வரும், 27ல் அமெரிக்கா செல்கிறேன்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;எல்நினோ&apos; தாக்கம் எதிரொலி: தமிழகத்தில் உச்சம் தொட்ட கருப்பட்டி விலை</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/el-nino-impact-echoes-blackcurrant-prices-hit-record-high-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/el-nino-impact-echoes-blackcurrant-prices-hit-record-high-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">2a18bbb7-3c88-4ae1-b709-e598af83a736</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:46:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:46:34.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,தமிழகம்,impact,விலை உயர்வு,price hike,கருப்பட்டி,தாக்கம்,எதிரொலி,Echo,El Nino,எல் நினோ,Blackcurrant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/32a0px77/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாயல்குடி அருகே பூபாண்டியபுரம் கிராமத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்ட கருப்பட்டிகள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/32a0px77/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>'<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B">எல்நினோ</a>' தாக்கம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">பனைத்தொழிலையும்</a> விட்டு வைக்கவில்லை. மழை குறைவால் பதநீர் குறைந்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கருப்பட்டி </a>விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. </p><h2>'எல்நினோ' தாக்கம்</h2><p>இந்த ஆண்டு பருவகால நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் 'எல்நினோ' பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தென்மாவட்டங்களில்தான் பனைத்தொழில் அதிக அளவில் நடைபெறுகிறது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களை குறிப்பிட்டு கூறலாம். </p><h2>அதிக பனை மரங்களை கொண்ட ராமநாதபுரம்</h2><p>தமிழகத்தில் அதிக பனை மரங்களை கொண்ட மாவட்டமாக ராமநாதபுரம் விளங்குகிறது. அங்கு சாயல்குடி, நரிப்பையூர், மாரியூர், கன்னிராஜபுரம், மேலச்செல்வனூர், மலட்டாறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான பனைத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பதநீர் சீசன் தொடங்கிவிடும். பதநீரை காய்ச்சி கருப்பட்டியாக தயார் செய்கின்றனர். தொழிலாளர்களிடம் இருந்து கருப்பட்டிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி விற்பனை செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் கருப்பட்டிகள் அளவில் பெரிதாக இருக்கும். இந்த ஆண்டு தயார் செய்த கருப்பட்டிகளைவிட, கடந்த ஆண்டுக்குரிய கருப்பட்டிக்கு விலையும். சுவையும் அதிகம்.</p><h2>தனி சிறப்பு பெற்ற உடன்குடி கருப்பட்டி</h2><p>இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருப்பட்டி தனி சிறப்பு பெற்றது. அளவில் சிறியதாக இருக்கும். சாயல்குடி கருப்பட்டிகளைவிட, உடன்குடி கருப்பட்டிக்கு விலை அதிகம். இதுபோல் பனங்கற்கண்டு. பனஞ்சுக்கு, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்டவற்றையும் பனைத் தொழிலாளர்கள் தயார் செய்கிறார்கள். மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். </p><h2>உற்பத்தி பாதிப்பு</h2><p>இந்த ஆண்டு மழை குறைவால் கருப்பட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு பருவமழை சீசனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை இல்லை. அதேபோல கோடையிலும் மழை பெய்யாததால் இந்த ஆண்டு பனைகளில் பதநீர் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை. இதனால் கருப்பட்டி தயாரிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த ஆண்டுக்கான கருப்பட்டி சீசன் முடிவடைந்துவிடும்' என்றனர். </p><h2>போதிய மழை பெய்யவில்லை</h2><p>இதுகுறித்து கருப்பட்டி வியாபாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த மாதம் சாயல்குடி பகுதியில் ஒரு கிலோ கருப்பட்டி ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பதநீர் சீசன் முடிவடைய உள்ளதால் இன்னும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விலை உயர வாய்ப்பு </a>உள்ளது. அதிலும் பருவமழை, குளிர்காலத்தில் விலை அதிகமாகவே இருக்கும். இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தால் ஏற்பட்ட மழை குறைவு, கருப்பட்டி தொழிலையும் விட்டுவைக்கவில்லை' என்றார். </p><h2>உடன்குடி விலை விவரம்</h2><p>உடன்குடி ரக கருப்பட்டி பழையது ஒரு கிலோ ரூ.600, புதியது ரூ.500, பனங்கற்கண்டு கிலோ ரூ.800, சில்லுக்கருப்பட்டி ரூ.600 என விற்கப்பட்டு வருவதாக அப்பகுதி வியாபாரி ஒருவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>நெல்லை: இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை கடத்திய டிரைவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-driver-arrested-for-abducting-minor-girl-he-met-on-instagram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-driver-arrested-for-abducting-minor-girl-he-met-on-instagram#comments</comments><guid isPermaLink="false">c1881fe3-7474-41b2-b93f-152daf814474</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:38:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:38:24.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,சிறுமி,இன்ஸ்டாகிராம்,Instagram,Minor girl</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/5mi4wnqw/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/5mi4wnqw/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,  </p><p>நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.</p><h2>இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்</h2><p>நெல்லையில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 17 வயதில் சிறுமி இருக்கிறார். இவர் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு, ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.</p><p>இந்த நிலையில் அவர் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்கும் நிலையில், அவருடன் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங் கண்ணியை சேர்ந்த முனியப்பன் மகன் டிரைவரான செல்வராஜ் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி சிறுமியுடன் அடிக்கடி செல்போனில் பேச தொடங்கி உள் ளார். தொடர்ந்து அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>கடத்தல்-கைது</h2><p>இதற்கிடையே சம்பவத்தன்று சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், தச்சநல்லூர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாயம் என வழக்குப்பதிவு செய்து தேடியபோது, அந்த சிறுமியை செல்வராஜ் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.</p><p>இதையடுத்து போலீசார் வேளாங்கண்ணிக்கு சென்று சிறுமி மற்றும் செல்வ ராஜை பிடித்து வந்தனர். பின்னர் செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-stabbed-his-wife-to-death-in-a-family-dispute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-man-stabbed-his-wife-to-death-in-a-family-dispute#comments</comments><guid isPermaLink="false">2e76351b-4ec2-4371-ab3d-4155c5f83adc</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:34:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:34:34.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Death,wife,stabbed,குடும்பத் தகராறு,Dispute,பெரம்பூர்,கத்தியால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/5cn7eh6e/118.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/5cn7eh6e/118.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பூர், </p><p>குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.</p><p>சென்னை வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சிவா (வயது 30), காசிமேட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா (23). இவர்களுக்கு 2 மகள்கள். ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர்.</p><p>சிவாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிவா, குடிபோதையில் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><h2>தகராறு</h2><p>கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் வெண்ணிலா, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது 3 குழந்தைகளுடன் வியாசர்பாடியில் உள்ள தனது தாய் தேவி வீட்டுக்கு சென்றார். அங்கு மூர்த்திங்கர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் நேற்று மதியம் வெண்ணிலா, அதே குடியிருப்பில் சி.பிளாக்கில் 3-வது மாடியில் உள்ள தனது அக்காள் மோகனா வீட்டில் இருந்தார். அப்போது மனைவியை பார்க்க சிவா அங்கு வந்தார். இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>உயிரிழப்பு</h2><p>இதில் ஆத்திரமடைந்த சிவா, வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் வெண்ணிலாவின் கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். வெண்ணிலாவின் அலறல் சத்தம் கேட்டு வெளியே இருந்த அவரது தாய் தேவி மற்றும் அக்காள் மோகனா ஆகியோர் வீட்டுக்குள் ஓடி சென்று பார்த்தனர். அப்போது அவர்களது கண் முன்னே ரத்த வெள்ளத்தில் வெண்ணிலா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார்</h2><p>இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் எம்.கே.பி. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிவாவை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லஞ்சப் புகாரில் தவெகவில் இருந்து நீக்கப்பட்டவரின் மனைவிக்கு பதவி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-of-tvk-member-expelled-over-bribery-complaint-gets-a-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-of-tvk-member-expelled-over-bribery-complaint-gets-a-post#comments</comments><guid isPermaLink="false">ae933b1d-231b-4e77-af63-c95bdfc82216</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:27:37 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:27:37.803Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,செங்கல்பட்டு,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1zu90sd3/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1zu90sd3/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட த.வெ.க. இணை செயலாளராகவும், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தவர் வீரா என்ற வீராசாமி. இவர் மீது எழுந்த லஞ்சப் புகாரால் அவரிடம் இருந்து கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது. கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கான நடவடிக்கை செங்கல்பட்டு மாவட்ட த.வெ.க. தலைமை எடுத்தது. </p><p>இந்த நிலையில்,, கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் அறிவித்தார். இதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பொறுப்பில் ஹேமாவதி நியமிக்கப்பட்டார். இவர் வீராசாமியின் மனைவி ஆவார்.</p><p>வீராசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட அதே பதவி அவரது மனைவிக்கு தற்போது வழங்கப்பட்டு இருப்பது, செங்கல்பட்டு மாவட்ட த.வெ.க.வில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கடைசியில்தான் பாடவேண்டும் என்று வலியுறுத்தவில்லை - ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-did-not-insist-tamil-thai-vazhthu-be-sung-last</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-did-not-insist-tamil-thai-vazhthu-be-sung-last#comments</comments><guid isPermaLink="false">4899a025-9eb3-473c-bcad-d9c6dd9f9294</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:22:05 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:22:05.027Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,மத்திய அரசு,தமிழ்த்தாய் வாழ்த்து,TamilThai Vazhthu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ij1fxzi4/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/ij1fxzi4/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கடைசியில்தான் பாட வேண்டும் என்று மத்திய அரசின் அறிவிப்பாணை வலியுறுத்தவில்லை என்று ஐகோர்ட்டில் கூடுதல் சொலிசிட் டர் ஜெனரல் விளக்கம் அளித்தார்.</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>சென்னை ஐகோர்ட்டில், அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடங்குவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுகிறது.</p><p>அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே தொடங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ந்தேதி சுற்றறிக்கை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாநில பாடலைப் பாடி அரசு நிகழ்ச்சியைத் தொடங்க தடை எதுவும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது வெறும் சடங்கு அல்ல. அது தமிழர்களின் உணர்வு, கலாசாரம். அடையாளமாகும்.</p><h2>தவறான புரிதல்</h2><p>எனவே, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாசார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.</p><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, "மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பாணையை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல.</p><p>மேலும், மத்திய அரசின் அறிவிப்பாணையை தவறாக புரிந்துகொண்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பாணையின்படி, அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாட வேண்டும். அதை தொடர்ந்து தேசிய கீதம் பாடல் பாட வேண்டும்.</p><h2>முன்னுரிமை</h2><p>இந்த 2 பாடல்களுக்கு இடையே வேறு எந்த பாடல்களும் பாடக்கூடாது. இந்த 2 பாடல்களும் அடுத்தடுத்துப் பாட வேண்டும் என்று கூறியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று கூறவில்லை. கடைசியில்தான் பாட வேண்டும் என்றும் கூறவில்லை. மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இறுதியில் பாட வேண்டும் என அறிவிப்பாணையில் வலியுறுத்தவில்லை" என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி போலீசில் தவெக நிர்வாகி புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-rp-udayakumars-speech-tvk-executive-files-complaint-with-thoothukudi-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-rp-udayakumars-speech-tvk-executive-files-complaint-with-thoothukudi-police#comments</comments><guid isPermaLink="false">f8cd386b-7cf0-41cf-b53a-ff7ad32a71ba</guid><pubDate>Tue, 11 Aug 2026 01:17:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T01:17:07.437Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,தூத்துக்குடி,R.P. Udayakumar,புகார் complaint,முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,தவெக நிர்வாகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1f0r56q6/uthayakumar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.பி. உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/1f0r56q6/uthayakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் நடந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். </p><p>அவர் பேசுகையில், "அ.தி.மு.கவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க, அழிக்க நினைக்கிறான். அ.தி.மு.க.வை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாக போகும். மேலும் காவிரி தண்ணீரை பற்றி பேசினால், காவிரியாவது, தண்ணீராவது, எங்க அண்ணி திரிஷா பற்றி யார் பேசியது? என்று அக்கட்சியினர் கேட்கிறார்கள்" என்றார்.</p><h2>புகார் மனு</h2><p>இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம், த.வெ.க. புறநகர் மாவட்ட பொருளாளர் அருண்குமார் புகார் மனு அளித்தார். அதில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ்நாடு முதல்-அமைச்சர் குறித்து தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசி உள்ளார். </p><p>மேலும் பெண்கள் குறித்தும் அவதூறு பரப்பி வருகிறார். இதுபோன்று எதிர்காலத்தில் பொதுவெளியில் எந்தவொரு அவதூறு கருத்துகளையும், தனிநபர் விமர்சனங்களையும் தெரிவிக்காத வகையில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை:  தமிழக அரசுக்கு நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-minerals-to-foreign-states-notice-to-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-minerals-to-foreign-states-notice-to-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">4e03dbb7-d5e5-48d9-b49f-ba56ca2a7db1</guid><pubDate>Tue, 11 Aug 2026 00:55:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T00:55:07.900Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Transport,ban,தடை,Notice,கனிமங்கள்,நோட்டீஸ்,தமிழக அரசின்,mineral</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/pm2ljpyb/chennai-high-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/pm2ljpyb/chennai-high-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தமிழகத்தில் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்யவும். செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும் தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9-ந்தேதி திருத்தம் செய்யப்பட்டது. </p><h2>சென்னை ஐகோர்ட்</h2><p>இதன் அடிப்படையில், காரைக்கால், புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மது பிரேமநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><h2>தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்</h2><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள திருத்த விதிகளுக்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டும். உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் எங்களுக்கு சொந்தமானது. அவற்றை எங்கு விற்க வேண்டும் என் பதை முடிவெடுக்க உரிமம் பெற்றவர்களுக்கு உரிமை உள்ளது. </p><p>அதனால், வெளிமாநிலங்களுக்கு கற்களை கொண்டு செல்ல <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">தடை </a>விதித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தடை விதிக்கவேண்டும்" என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>‘நீட்&apos; தேர்வில் ஜொலித்த தமிழக மாணவர்கள்</title><link>https://www.dailythanthi.com/others/thalayangam/tamil-nadu-students-shine-in-neet-exam</link><comments>https://www.dailythanthi.com/others/thalayangam/tamil-nadu-students-shine-in-neet-exam#comments</comments><guid isPermaLink="false">7eb3befd-577a-44a3-9670-5b0541a84db3</guid><pubDate>Tue, 11 Aug 2026 00:43:21 +0000</pubDate><atom:updated>2026-08-11T00:43:21.468Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,NEET Exam,தமிழக மாணவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/txv1fwea/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/txv1fwea/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலையங்கம் (Thalayangam)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு செல்ல வேண்டுமென்றால் தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்று கூறப்படும் 'நீட்' தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். 2016-ம் ஆண்டு முதல் இந்த தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி நடைமுறைக்கு வந்தது. நீட் தேர்வு ரத்து என்பது கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. மாணவர்களும் இதை புரிந்துகொண்டு அந்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டார்கள். அரசு பள்ளிகளில்கூட இதற்கென தனிபயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு மே மாதம் நடந்த நீட் தேர்வு வினாத்தாள்கள் ராஜஸ்தானில் கசிந்ததால், 20 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் எழுதிய தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது.</p><p>இதனால் மாணவர்களுக்கு சொல்லொண்ணா துயரம் ஏற்பட்டது. கஷ்டப்பட்டு படித்து தயார்படுத்திக் கொண்டதெல்லாம் ‘விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதே' என்று வருந்தினர். மீண்டும் மறுதேர்வை தேர்வு கட்டணம் இல்லாமல் எழுதலாம் என்று அறிவித்தும், மாணவர்கள் மனநிறைவு அடையவில்லை. அதன்படி, ஜூன் 21-ந்தேதி மறுதேர்வும் நடந்தது. அப்போதும் மாணவர்கள் சற்றும் தளராமல் அதே ஏறத்தாழ 20 லட்சம் பேர் நீட் தேர்வை ஆர்வத்தோடு எழுதியிருந்தனர். அவ்வாறு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை கடந்த மாதம் 16-ந்தேதி வெளியிட்டது. அதில், 11.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையைவிட குறைவு ஆகும். கடந்த ஆண்டில் 22 லட்சத்து 9 ஆயிரத்து 318 பேர் எழுதினர். அவர்களில் 12 லட்சத்து 36 ஆயிரத்து 531 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>தேர்வு முடிவில் தமிழக மாணவர்கள் ஜொலித்திருக்கிறார்கள். அதிக மதிப்பெண் பெற்ற முதல் 17 பேரில், 12-வது இடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல, நாடு முழுவதும் 720-க்கு 690-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 138 பேரில் தமிழ்நாட்டைச்சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம், ஸ்ரீநிகா, சுடர், வனிஷா சதீஷ், சபரி, ஜெய்கிருஷ்ணா, சம்விதா, நவிதானா, நிகில்சிவநாதன், ஜனனி ஸ்வேதா, ரோகித் மாத்யூ ரவீந்திரராஜன், ஜெயகிருஷ்ணா ஆகிய 12 பேர் இடம்பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண் எடுத்த முதல் 100 பேரில் தமிழ்நாட்டைச்சேர்ந்த 9 பேர் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களில் 7 மாணவர்கள், 2 மாணவிகள் ஆவார்கள். வழக்கமாக தமிழ்நாட்டில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களின் பட்டியலில் மாணவிகள்தான் அதிகம்பேர் கோலோச்சுவார்கள். ஆனால் இந்த தேர்வு முடிவில் அந்த நிலை மாறிவிட்டது.</p><p>அகில இந்திய அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் மாணவிகளே சாதித்திருந்தாலும், 690-க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களில் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டு மாணவ - மாணவிகளுக்கான மருத்துவப்படிப்பு கலந்தாய்வு நாளை மறுதினம் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவப்படிப்பு இடங்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக தமிழகத்தில் இருந்து நிறைய டாக்டர்கள் சேவை மனப்பான்மையோடு வெளிவரப்போகிறார்கள். வரும் ஆண்டில் அதிகமானோர் நீட் தேர்வை எழுத வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்போதில் இருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்படியும் நீட் தேர்வு இருக்கத்தான் போகிறது. அதற்கேற்ற வகையில் மாணவர்களும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-46</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-46#comments</comments><guid isPermaLink="false">fc1dcaac-b787-4e6a-984d-0ce553b942cc</guid><pubDate>Tue, 11 Aug 2026 00:32:05 +0000</pubDate><atom:updated>2026-08-11T00:32:05.873Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/3qcu36zx/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/3qcu36zx/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (11.08.2026 செவ்வாய்க்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சிவகங்கையில் 16 மழலையர் பள்ளிகளை மூட உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/order-issued-to-close-16-preschools-in-sivaganga</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/order-issued-to-close-16-preschools-in-sivaganga#comments</comments><guid isPermaLink="false">0ec94526-0241-4912-b4fe-d9cde5159023</guid><pubDate>Mon, 10 Aug 2026 22:32:45 +0000</pubDate><atom:updated>2026-08-10T22:32:45.119Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,மழலையர் பள்ளி,preschools</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/5e71vpzf/mala.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 16 தனியார் மழலையர் பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/5e71vpzf/mala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 16 தனியார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">மழலையர் </a>பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>அனுமதியின்றி செயல்பட்ட பள்ளிகள்</h2><p>மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உரிய அனுமதி பெறாமல் விதிகளை மீறி 16 தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>கடும் நடவடிக்கை எடுக்கப்படும்</h2><p>இதையடுத்து, அந்த 16 பள்ளிகளையும் உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உத்தரவை மீறி தொடர்ந்து பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால், பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று தொடங்குகிறது மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-rabies-vaccination-camp-begins-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-massive-rabies-vaccination-camp-begins-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">199b6fcc-42c7-469a-9806-97d8079c5859</guid><pubDate>Mon, 10 Aug 2026 19:40:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T19:40:27.160Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ரேபிஸ் தடுப்பூசி,rabies vaccination</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/1ibunr4n/re.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் முகாம் இன்று (ஆக. 11) தொடங்குகிறது. சென்னை முழுவதும் சுமார் 2 லட்சம் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/1ibunr4n/re.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்களுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D">ரேபிஸ் </a>தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் முகாம் இன்று (ஆக. 11) தொடங்குகிறது. </p><h2>30 குழுக்கள் நியமனம்</h2><p>மண்டலம் மற்றும் கோட்டம் வாரியாக தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்களால் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்படும். பின்னர் வண்ண சாயம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு, அவை பிடிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் விடுவிக்கப்படும். இதற்காக 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு சுமார் 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>1.47 லட்சம் நாய்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி</h2><p>கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு முகாமில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1,47,545 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டது. இந்த ஆண்டும் வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>75 நாட்களில் 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி</h2><p>இந்த ஆண்டுக்கான முகாம் முதற்கட்டமாக மண்டலம் 1, 2 மற்றும் 4-ல் தொடங்குகிறது. தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் முகாம் நடத்தப்பட்டு, 75 வேலை நாட்களுக்குள் சுமார் 2 லட்சம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட உள்ளது.</p><h2>“ரேபிஸ் இல்லா சென்னை” இலக்கு</h2><p>தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், Worldwide Veterinary Services (WVS) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இம்முகாம் செயல்படுத்தப்பட உள்ளது. “வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை” என்ற இலக்கை அடைய பொதுமக்கள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் ஒத்துழைக்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக இன்று சட்டசபையில் தனித்தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-resolution-against-neet-in-the-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-resolution-against-neet-in-the-assembly-today#comments</comments><guid isPermaLink="false">de017061-1ec3-4af7-85b9-28695cabdfba</guid><pubDate>Mon, 10 Aug 2026 18:31:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T18:31:07.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,நீட் தேர்வு,NEET,தனித்தீர்மானம்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/vxpxhx72/nee.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வுக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/vxpxhx72/nee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீட் தேர்வுக்கு எதிராக இன்று தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை</a>யில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. </p><h2>2 அரசினர் தனித் தீர்மானங்கள்</h2><p>இன்று சட்டசபையில் நடைபெறும் நடவடிக்கைகளில் 2 அரசினர் தனித் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமும், எப்.சி.ஆர்.ஏ. சட்டத் திருத்தத்துக்கு எதிரான தீர்மானமும் இடம்பெறுகின்றன. இந்த அரசினர் தனித் தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர். </p><h2>வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா</h2><p>அதேபோல் மத்திய அரசின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராகவும் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி நாளை திறக்கப்படும் - வனத்துறை அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-kutralam-falls-closed-for-over-10-days-will-reopen-tomorrow-forest-department-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kovai-kutralam-falls-closed-for-over-10-days-will-reopen-tomorrow-forest-department-announcement#comments</comments><guid isPermaLink="false">4937ece8-8342-436c-a959-f26738484920</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:44:37 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:44:37.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை குற்றாலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/mv9fniky/STate-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-10/mv9fniky/STate-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி பிற பகுதிகளை சேர்ந்த பொது மக்களும் அதிகளவு வருகின்றனர். கோவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது.</p><p>கோவை குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீர்வீழ்ச்சி நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்படுகிறது. அங்கிருந்து வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் குளித்து முடித்ததும், வனத்துறை வாகனத்தில் மீண்டும் நுழைவு வாயில் பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.</p><p>இதனிடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பாதுகாப்பு கருதி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதன்படி கடந்த 10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி 11-ந்தேதி(நாளை) முதல் திறக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item></channel></rss>