<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 27 Aug 2026 09:57:48 +0000</lastBuildDate><item><title>நேபாளத்தில் வெள்ள பாதிப்பு: டெல்லி செல்லும் தமிழக அமைச்சர்கள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flood-impact-in-nepal-tamil-nadu-ministers-heading-to-delhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flood-impact-in-nepal-tamil-nadu-ministers-heading-to-delhi#comments</comments><guid isPermaLink="false">a7de067c-065a-4cfb-8121-85a69777ed86</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:52:50 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:52:50.897Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,TN govt,Ministers,தமிழக அமைச்சர்கள்,Flood,வெள்ள பாதிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cz564fhv/STate-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cz564fhv/STate-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. </p> <p>இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காணாமல் போனவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே நேபாளத்தில் தமிழர்கள் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>அதோடு, நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்ப முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்பேரில், நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோரை டெல்லி செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்! - டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/effective-measures-must-be-taken-to-curb-sand-mining-ttv-dhinakaran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/effective-measures-must-be-taken-to-curb-sand-mining-ttv-dhinakaran-urges#comments</comments><guid isPermaLink="false">9f7842cc-61e7-4ee4-89a8-118533dc42fb</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:51:50 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:51:50.314Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக,மணல் கொள்ளை,Sand Mining</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/kyrtjvbj/ttv.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/kyrtjvbj/ttv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும் நடைபெறும் மணல் கொள்ளைக்கு கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மணல் கொள்ளை</h2><p>திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன. அதிலும், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையே, பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் புகார்கள் மீது அலட்சியம் காட்டி வருவதன் பின்னணியில், ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரின் தலையீடு இருப்பதாகவும், மணல் கொள்ளையில் சில சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாக ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p><h2>இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்</h2><p>எனவே, கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தின் </a>பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை அரசியல் பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghats-districts-today-2</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghats-districts-today-2#comments</comments><guid isPermaLink="false">d825f9e9-7724-4f19-ad77-159508573c5d</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:42:59 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:42:59.227Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/i40dwwut/Untitled-2.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/i40dwwut/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:</h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>27-08-2026 மற்றும் 28-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p><strong>29-08-2026 முதல் 31-08-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>01-09-2026 மற்றும் 02-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>27-08-2026 முதல் 31-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>27-08-2026 முதல் 31-08-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p>இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் – சு.வெங்கடேசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-including-indians-trapped-in-nepal-floods-must-be-rescued-quickly-su-venkatesan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-including-indians-trapped-in-nepal-floods-must-be-rescued-quickly-su-venkatesan#comments</comments><guid isPermaLink="false">4845e76a-14a0-4d66-bac3-b685f9f882ae</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:41:25 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:41:25.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வெள்ளம்,floods,தமிழர்கள்,சு.வெங்கடேசன் எம்பி,Tamils,Su. Venkatesan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/aw3yoqp8/su.-vengatesan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/aw3yoqp8/su.-vengatesan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">சு.வெங்கடேசன்</a> 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><h2>முன்னெச்சரிக்கை கட்டமைப்பு</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது உயிரைப் பறித்து உடைமைகளை அழித்துள்ளது.  வெள்ளப்பெருக்கு ஓய்ந்த பிறகு வெளியான பேரழிவின் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. இயற்கைப் பேரிடர்கள் தீவிரமடைந்த காலத்தில் நாம் உள்ளோம். நமது முன்னெச்சரிக்கை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது.</p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குவாரிகளின் லாபத்திற்காக, கூடங்குளம் மக்களின் உயிரோடு விளையாடுவதா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-lives-of-the-people-of-kudankulam-being-gambled-with-for-the-sake-of-quarry-profits-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-lives-of-the-people-of-kudankulam-being-gambled-with-for-the-sake-of-quarry-profits-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">61d55817-703c-42f2-8743-dce633f528ee</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:31:42 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:31:42.963Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,கூடங்குளம்,Kudankulam,கூடங்குளம் அணுமின் நிலையம்,Kudankulam Nuclear Power Plant,தி.வேல்முருகன்,கூடங்குளம் அணு உலை,Kudankulam Nuclear Reactor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3czgjd07/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3czgjd07/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அணுமின் நிலையத்திற்கு அருகாமையில் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதும், வெடிமருந்து பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதும் மிகவும் பொறுப்பற்ற நிர்வாக அணுகுமுறை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வெடிமருந்து பயன்படுத்த அனுமதி</h2><p>நாட்டின் அணுப் பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புடைய கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் குவாரிகளில் வெடிமருந்து பயன்படுத்தும் வெடிப்பு முறை இடம்பெற்றிருப்பது குறித்தத் தகவல்கள் கடும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகின்றன.</p><p>இது வெறும் செய்தி அல்ல. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரப்பூர்வ EIA ஆவணமே, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம், இருக்கன்துறை Part-II பகுதியில் 4.87.80 ஹெக்டேர் பரப்பிலான குவாரித் திட்டத்தில் துளையிடுதல் மற்றும் வெடிமருந்து மூலம் பாறைகளை உடைக்கும் வெடிப்பு முறை திட்டமிடப்பட்டிருப்பதைப் பதிவு செய்துள்ளது. மேலும், கூடங்குளம், இருக்கன்துறை,எருக்கந்துறை பகுதிகளில் குவாரி விதிமீறல்கள் மற்றும் அனுமதியற்ற வெடிப்பு முறை குறித்தப் புகார்களும் வெளியாகியுள்ளன.</p><p>இத்தகைய சூழலில் அணுமின் நிலையத்திற்கு அருகாமையில் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதும், வெடிமருந்து பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதும் மிகவும் பொறுப்பற்ற நிர்வாக அணுகுமுறையாகும். தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியப் போக்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.</p><h2>அணுமின் நிலையத்திற்கு பாதிப்பு?</h2><p>அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு என்பது ஒரு துறை சார்ந்த அலுவல் பிரச்சினை மட்டுமல்ல. அப்பகுதியில் வாழும் மக்களின் உயிர், உடைமை, எதிர்காலம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய மிகப்பெரிய பொறுப்பு. ஒரு குவாரியில் வெடிக்கப்படும் வெடி பாறையைச் சிதைக்கலாம். ஆனால் அதன் அதிர்வு அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து முழுமையான அறிவியல் மதிப்பீடு செய்யாமல் நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. குவாரி முதலாளிகளின் கல் வியாபாரத்திற்காக மக்களின் உயிரைப் பணயம் வைக்கக் கூடாது.</p><p>எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள அனைத்து குவாரிகளின் செயல்பாடுகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக அணுமின் நிலையத்திலிருந்து ஒவ்வொரு குவாரியும் எவ்வளவு தொலைவில் உள்ளது, அதன் சுற்றுச்சூழல் மற்றும் சுரங்க அனுமதிகள் என்ன, வெடிமருந்து பயன்படுத்துவதற்கான சட்டபூர்வ அனுமதி உள்ளதா?, வெடிப்பு முறை அதிர்வுகள் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை பாதிக்காது என்பதை உறுதி செய்யும் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் வெளிப்படையாக வெளியிட வேண்டும். அணு உலைக்கு அருகில் உள்ள பாதுகாப்பு மண்டல எல்லையை (Buffer / Sterile Zone) மீறி எந்தவொரு குவாரிக்கும் அனுமதி வழங்கப்படக் கூடாது என்பதோடு, இதில் ஒன்றிய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB) மற்றும் சுரங்கப் பாதுகாப்பு இயக்குநரகம் (DGMS) ஆகியவற்றின் முன் அனுமதி பெறப்பட்டதா? என்பதையும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>அரசு தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக ஆபத்து இல்லையென்று அர்த்தமல்ல. கூடங்குளம் மக்களின் பாதுகாப்பு குறித்து எந்தச் சமரசத்திற்கும் இடமில்லை. குவாரி லாபத்தைவிட மக்களின் உயிர் மேலானது என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும். அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விதிமீறல் அல்லது அனுமதியற்ற வெடிப்பு முறை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட குவாரிகளை உடனடியாக மூடி, அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும், விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>மறுஆய்வு செய்ய வேண்டும்</h2><p>கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள குவாரி நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக முழுமையாக மறுஆய்வு செய்து, ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வெடிப்பு முறை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மானியக் கோரிக்கை: சபாநாயகரின் கருத்துக்கு நகைச்சுவையாக பதிலளித்த தங்கம் தென்னரசு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-for-grants-thangam-thennarasu-responds-humorously-to-the-speakers-remark</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-for-grants-thangam-thennarasu-responds-humorously-to-the-speakers-remark#comments</comments><guid isPermaLink="false">cdda2c92-a325-425d-8659-38c739d2ead1</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:28:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:28:20.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,Thangam thennarasu,மானியக் கோரிக்கை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hbycsd3v/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hbycsd3v/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதம் சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தார். மேலும், முதன்முறையாக 9 மணி 43 நிமிடங்கள் தொடர்ந்து அவை நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார். எனினும், அவை நேரத்தை கருத்தில்கொண்டு, அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர்கள் இனி முதலில் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து பதிலுரை வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தார்.</p><p>இதற்கு பதிலளித்த திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். தவெகவின் க்ளைமாக்ஸை அனைவரும் நிச்சயமாகப் பார்ப்போம். உங்களுடைய க்ளைமாக்ஸையும் கட்டாயம் காத்திருந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், இன்று காலையிலிருந்தே எதை முதலில் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்பதில் தொடர்ந்து மாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள். காலையில் வந்தவுடனே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்லட்டும்; அதற்குப் பிறகு நீங்கள் பேசுங்கள் என்று சொன்னீர்கள். இப்போது அறிவிப்புகளை எல்லாம் முன்னதாக வெளியிட்டுவிட்டு, பின்னர் அதுகுறித்து பேசுங்கள் என்கிறீர்கள்.</p><p>மொத்தத்தில் பேரவைத் தலைவர் படுத்துக்கட்டும், போர்த்திக்கலாம்; போர்த்திவிட்டும் படுத்துக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டாரா என்பதை நான் அறிய விரும்புகிறேன் என நகைச்சுவையாகக் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>விலைவாசி  உயர்வை கட்டுப்படுத்தக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-on-behalf-of-the-communist-party-of-india-demanding-control-over-price-hikes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-on-behalf-of-the-communist-party-of-india-demanding-control-over-price-hikes#comments</comments><guid isPermaLink="false">136f3f8d-ff0e-43d1-b1dc-ddf852318c9d</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:26:05 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:26:05.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,ஆர்ப்பாட்டம்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,price hike,விலைவாசி உயர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/megwgn4b/83.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/megwgn4b/83.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விலைவாசி  உயர்வை கட்டுப்படுத்தக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (27.08.2026) நடைபெற்றது</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ 48 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது  ரூபாய் 70 வரை விலை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால்  விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம். சர்க்கரை விலை உயர்வால் டீ ,காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>விலைவாசி உயர்வு</h2><p>ஏற்கனவே,  வணிக நிறுவனங்களுக்கான  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக  உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ விலை ரூ. 15 வரை உயர்ந்தது. காபி விலை ரூ. 20 வரை உயர்ந்தது. தற்போது மீண்டும் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.  கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொன்னி அரிசி ரூ. 80க்கு விற்பனை ஆகிறது. இட்லி அரிசி ரூ. 35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் உளுத்தம் பருப்பு கிலோ ரூ.120 லிருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.80 லிருந்து 100 ஆகவும், தனியா 160 லிருந்து ரூ. 250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.</p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய - மாநில அரசுகள் தவறிவிட்டன. விலைவாசியை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (27.08.2026) காலை நடைபெற்றது. தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மு.வரதன், வடசென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி முன்னிலை வகித்தனர்.</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார். அரிசி, கரும்பு போன்றவற்றை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்திடக் கூடாது. உணவுப் பொருட்களின் பதுக்கலையும், ஆன்லைன் வர்த்தகத்தையும் தடுத்திட வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கிட வேண்டும். ஏழைகளுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்குத்தான் கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பை உணர்ந்து மத்திய பாஜக அரசு செயல்பட வேண்டும் என்று மு.வீரபாண்டியன் கூறினார்.</p><p>ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர்கள் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், மு .கண்ணகி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த.லெனின், மாநிலக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர். சாந்தி, லி.உதயகுமார், இரா.திருமலை, பா.தினேஷ், க.இப்ராஹிம், மற்றும் மாணவர்மன்ற நிர்வாகிகள் மணிகண்டன், சௌமியா உட்பட 150க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விராலிமலை: வெறிநாய் கடித்ததில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 10 பேர் காயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/viralimalai-10-people-including-a-one-and-a-half-year-old-child-injured-in-a-rabid-dog-attack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/viralimalai-10-people-including-a-one-and-a-half-year-old-child-injured-in-a-rabid-dog-attack#comments</comments><guid isPermaLink="false">6c98aeef-e2ba-4c42-8697-9a73b633ed6f</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:13:15 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:13:15.914Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>street dogs,புதுக்கோட்டை,injured,நாய் கடி,Viralimalai,ஆஸ்பத்திரியில் அனுமதி</media:keywords><media:content height="176" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2023/10/17/1572582-download.webp" width="286"><media:title type="html"><![CDATA[ வெறிநாய்க்கடி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒன்றரை வயது குழந்தை உட்பட 10 பேர் காயம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2023/10/17/1572582-download.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">புதுக்கோட்டை மாவட்டம் </a>விராலிமலையில் தெருநாய் ஒன்று பொதுமக்களை ஓட ஓட விரட்டி கடித்ததில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். </p><h2>வெறிநாய் கடியால் படுகாயம்</h2><p>புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D">வெறி பிடித்த நாய் </a>ஒன்று சுற்றித் திரிந்தது. அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது சிறு குழந்தையை, அந்த நாய் கடித்து தாக்கியது. மேலும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை திடீரெனத் தாக்கியது. </p><p>நாயின் கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும், அந்த நாய் பலரைக் கடித்துக் குதறியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 7 பேர் விராலிமலை அரசு ஆஸ்பத்திரியில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>விராலிமலை பகுதியில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஆபத்தான முறையில் சுற்றும் தெருநாய்களைப் பிடித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81">பொதுமக்கள் கோரிக்கை </a>விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வீரதீரச் செயலுக்கான விருது: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gallantry-award-announced-by-union-government-chief-minister-vijay-presents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gallantry-award-announced-by-union-government-chief-minister-vijay-presents#comments</comments><guid isPermaLink="false">fa82151d-b4c4-40f0-b95e-26ae7e5c3641</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:10:15 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:10:15.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விருது,Award,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,வீரதீரச் செயலுக்கான விருது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ex9zg86v/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ex9zg86v/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வீரதீரச் செயலுக்கான சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருதை முதல்-அமைச்சர் விஜய் இன்று வழங்கிச் சிறப்பித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>முதல்-அமைச்சர் விஜய் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், மத்திய அரசின் 2025-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதினைப் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் காலஞ்சென்ற தலைமை ஆசிரியர் பி.எஸ். கெளரிசங்கர் ராஜாவின் மனைவியிடம் ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ (மிகச்சிறந்த உயிர்ப் பாதுகாப்பு) விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார்.</p><p>ஆண்டுதோறும் வீரதீரச் செயலுக்கான ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதுக்கான பரிந்துரைகள் அனைத்து மாநில அரசுகளிடமிருந்தும் மத்திய அரசால் பெறப்பட்டு, ஜனாதிபதியால் விருதாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்படுவர்.</p><p>கடந்த 5.3.2025 அன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மதிய உணவு இடைவேளையின்போது, மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயதான சிறுவன் நிதின், பள்ளி வளாகத்திற்கு அருகில் அமைந்திருந்த விவசாயப் பண்ணைக் குட்டையில் தற்செயலாக வழுக்கி விழுந்தான். அச்சிறுவன் ஆபத்தான நிலையில் தத்தளித்து, நீரில் மிதக்கப் போராடுவதைக்கண்ட பி.எஸ்.கெளரிசங்கர் ராஜா, அச்சிறுவனைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், இருவரும் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர்.</p><p>மறைந்த பி.எஸ்.கௌரிசங்கர் ராஜாவின் வீரதீரச் செயல், அசாதாரண துணிச்சல், உன்னத தியாகம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அவர் மரணத்திற்குப் பிந்தைய ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி கொ. சிரிஷாவிடம், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், வீரதீரச் செயலுக்கான மத்திய அரசின் ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதிற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விடுதி மாணாக்கர்களுக்கான உணவுக் கட்டணம் உயர்வு - அமைச்சர் சம்பத்குமார் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-mess-fees-for-hostel-students-minister-sampathkumar-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-mess-fees-for-hostel-students-minister-sampathkumar-announces#comments</comments><guid isPermaLink="false">aa79b3ae-1b51-4547-8e84-aa97d94a7008</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:06:55 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:06:55.296Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள்,students,அமைச்சர் சம்பத்குமார்,Minister Sampathkumar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/suy287kv/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/suy287kv/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு;</p><p>”மாணவர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சமூகநீதி விடுதிகளில் பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணம் ரூ.1,400/-லிருந்து ரூ.1,800/-ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணம் ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்திற்காக கூடுதலாக ரூ.32.53 கோடி செலவாகும்.</p><p>தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த, சென்னையில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவியர்களுக்காக, 100 கல்லூரி மாணவியர்கள் பயன்பெறும் வகையில் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் சென்னையில் ஒரு சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி ரூ. 54 இலட்சம் செலவில் புதிதாக தொடங்கப்படும்.</p><p>பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,238 சமூகநீதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் சுகாதாரமான வாழ்விடச் சூழலை உறுதி செய்யும் நோக்கில், விடுதிகளில் உள்ள அனைத்து ஜன்னல்களுக்கும் ரூ.26.85 கோடியில் தரமான கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>காரணங்களைச் சொல்லி தப்பிக்க வேண்டாம்… விலைவாசியை கட்டுப்படுத்துங்கள் – வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-failed-to-control-price-hikes-velmurugan-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-failed-to-control-price-hikes-velmurugan-questions#comments</comments><guid isPermaLink="false">f3882502-e76c-4d51-8062-78054f8b2f34</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:55:55 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:55:55.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,price hike,விலைவாசி உயர்வு,தமிழக வாழ்வுரிமைக் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/2afwbdxd/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/2afwbdxd/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D"> வேல்முருகன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்? மக்கள் தலையில் பொருளாதாரச் சுமைகளை, சுமத்துவது யார்?</p><p>தமிழ்நாட்டில் சமையல் எண்ணெய், தனியா, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நிலைகுலைய வைத்துள்ளது. இது வெறும் அரசியல் குற்றச்சாட்டு அல்ல. மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறையின் (Price Monitoring Division) அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.</p><p>2024 ஆகஸ்ட் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், சூரியகாந்தி எண்ணெய் கிலோ ரூ.115.71-லிருந்து ரூ.193.58 ஆக உயர்வு (67.3%). மல்லி (தனியா) கிலோ ரூ.23.82-லிருந்து ரூ. 46.11 ஆக உயர்வு (93.6%). சர்க்கரை கிலோ ரூ.44.28-லிருந்து ரூ.53.58 ஆக உயர்வு (21%). அரிசி கிலோ ரூ.55.75-லிருந்து ரூ.60.25 ஆக உயர்வு (8.1%). உப்பு விலை 11% வரை அதிகரித்துள்ளது. அதேவேளையில், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்ற சில பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.</p><h2>செயற்கை தட்டுப்பாடு</h2><p>ஆனால், எளிய மக்களுக்கு கையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, மறுகையில் கட்டுக்கடங்காத விலைவாசி மூலம் அவர்களின் சேமிப்பைப் பறிக்கும் சூழல் நீடிக்கக் கூடாது. வெளிச்சந்தை விலை உயர்வுக்கு காரணங்களை அடுக்கித் தட்டிக்கழிக்காமல், இடைத்தரகர்களின் ஆதிக்கம், பதுக்கல் மற்றும் செயற்கை தட்டுப்பாடுகளைத் தகர்க்க வேண்டும். </p><h2>விலை நிலைப்படுத்தும் நிதி</h2><p>ஏற்கனவே உள்ள ‘விலை நிலைப்படுத்தும் நிதியை’ (Price Stabilisation Fund) மத்திய அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும்.  அதேபோல் தமிழ்நாடு அரசும் வெளிப்படையான சந்தைத் தலையீடுகளை முன்னெடுத்து, சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வரலாற்றை திரித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மாண்பை கொச்சைப்படுத்துவதா? -  நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/distorting-history-to-disparage-the-dignity-of-former-prime-minister-vajpayee-nainar-nagendran-condemns-the-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/distorting-history-to-disparage-the-dignity-of-former-prime-minister-vajpayee-nainar-nagendran-condemns-the-act#comments</comments><guid isPermaLink="false">8e5a0960-a59d-4225-8a10-40353254c2f4</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:48:11 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:48:11.117Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,கீர்த்தனா,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana,Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/6gv5cie5/Untitled-18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/6gv5cie5/Untitled-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அன்னை சின்னப்பிள்ளையின் வரலாறு மற்றும் வாஜ்பாயின் மாண்பு குறித்துத் தனது முந்தைய பேச்சில் இருந்த பிழைகளை வெளிப்படையாக சபையில் ஒப்புக்கொண்டு, தவறான தகவல்களைப் பதிவு செய்த அமைச்சர் கீர்த்தனா உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அமைச்சரின் கற்பனைக் கதை</h2><p>மதுரையைச் சேர்ந்த அன்னை சின்னப்பிள்ளை, 'களஞ்சியம்' சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். இவரது உன்னதப் பணியைப் பாராட்டி, அன்றைய பாரதப் பிரதமர், பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய், கடந்த 2001-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற 'ஸ்த்ரீ சக்தி' விருது வழங்கும் மேடையில், அன்னை சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கிக் கவுரவித்தார். இது இந்தியாவே வியந்த ஒரு பண்பாட்டுத் தருணம்.</p><p>ஆனால், நேற்று சட்டமன்றத்தில் பேசிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழில்துறை </a>அமைச்சர் கீர்த்தனா, அன்னை சின்னப்பிள்ளையை ஹைட்ராலிக் அமைப்பில் (Hydraulic System) ஆயில் கசியாமல் இருக்க 'O-Ring' கண்டுபிடித்தார் என்றும், அதற்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அன்னை சின்னப்பிள்ளையின் வீட்டிற்கே சென்று காலில் விழுந்தார் என்றும் ஒரு கற்பனைக் கதையைக் கூறியுள்ளார். வாஜ்பாய் மற்றும் அன்னை சின்னப்பிள்ளை ஆகியோர் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் நகைப்பிற்குரியவை மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>மன்னிப்புக் கோர வேண்டும்</h2><p>இந்நிலையில், நேற்று சட்டமன்றத்தில் ஒரு தவறான தகவலைப் பதிவு செய்துவிட்டு, அது சமூக வலைதளங்களில் அம்பலமானவுடன், "நேரம் கருதி சுருக்கமாகச் சொன்னேன்" என்று அமைச்சர் கீர்த்தனா இன்று அளித்துள்ள விளக்கம், "முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும்" முயற்சியாகும்.</p><p>எனவே, அன்னை சின்னப்பிள்ளையின் வரலாறு மற்றும் வாஜ்பாயின் மாண்பு குறித்துத் தனது முந்தைய பேச்சில் இருந்த பிழைகளை வெளிப்படையாக சபையில் ஒப்புக்கொண்டு, தவறான தகவல்களைப் பதிவு செய்த அமைச்சர் கீர்த்தனா உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும். இனி இதுபோல் ஆதாரமற்ற தகவல்களை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: அறநிலையத்துறை அலுவலகத்தில் புகுந்த சுருட்டை விரியன் பாம்பு பிடிபட்டது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-a-coiled-viper-snake-was-caught-after-entering-the-charities-department-office</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-a-coiled-viper-snake-was-caught-after-entering-the-charities-department-office#comments</comments><guid isPermaLink="false">584ac153-9878-4f21-8966-6bbd46ff1a76</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:28:45 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:28:45.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Snake,Charities Department,அறநிலையத்துறை,அலுவலகம்,caught,Office,பாம்பு பிடிபட்டது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/nut6ni59/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் சுருட்டை விரியன் பாம்பு பிடிபட்டது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/nut6ni59/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் இந்து சமய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">அறநிலையத் துறை</a>க்குச் சொந்தமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அலுவலகத்தில்</a> கொடிய விஷம் கொண்ட சுருட்டை விரியன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81">பாம்பு ஒன்று பிடிபட்டது</a>.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> 2-ஆவது கேட் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அலுவலக வளாகத்தில் பாம்பு ஒன்று இருப்பதாகத் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. </p><h2>சுருட்டை விரியன் பாம்பு பிடிபட்டது</h2><p>அந்த தகவலை தொடர்ந்து, தூத்துக்குடி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் கோமதி அமுதா தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அலுவலகத்தில் புகுந்த கொடிய விஷம் உள்ள சுருட்டை விரியன் பாம்பைத் தீயணைப்புப் பணியாளர்கள் பாதுகாப்பாக பிடித்து, பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nammalvar-award-for-farmers-chief-minister-vijay-presented-the-award</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nammalvar-award-for-farmers-chief-minister-vijay-presented-the-award#comments</comments><guid isPermaLink="false">6d6b789d-1828-4dd3-ade2-0e74fe6cd049</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:23:54 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:23:54.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,Farmers,தமிழக அரசு,விவசாயிகள்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,நம்மாழ்வார் விருது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ijd1t83h/namma.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ijd1t83h/namma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உயிர்ம வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் மூன்று உழவர்களுக்கு 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> அவர்கள் வழங்கினார்.</p><h2>நம்மாழ்வார் விருதுகள்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை செ.நல்லசிவம், அ.சுப்பிரமணியன் மற்றும் சாதனா ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார்.</p><p>உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையிலும், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அதில் சிறப்பாகச் செயல்பட்டு இதர உழவர்களையும் உத்வேகத்துடன் ஈடுபடச்செய்யும் உழவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>அந்த வகையில் 2025-2026ஆம் ஆண்டில், உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செ.நல்லசிவம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ.சுப்பிரமணியன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சாதனா ஆகியோருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வார் விருதுகளை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர்</a> அவர்கள் இன்று வழங்கிச் சிறப்பித்தார்.</p><p>நம்மாழ்வார் விருது பெற்றுள்ள செ. நல்லசிவம் அவர்கள் கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக இயற்கை இடுபொருட்களைக் கொண்டு சோளம், கரும்பு, மா, தென்னை மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்தும், இயற்கை வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தும் வருவதோடு, 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் வகையில் விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கியுள்ளார்.</p><p>அ.சுப்பிரமணியன் அவர்கள் கடந்த 10 ஆண்டு காலமாக உயிர்ம வேளாண்மை முறையில் நெல் வகைகள், நிலக்கடலை, குறுமிளகு, தென்னை, வால்நட் போன்றவற்றைச் சாகுபடி செய்தும், அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தும் வருகிறார். மேலும், 675-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை மற்றும் மதிப்புக்கூட்டுதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.</p><p>சாதனா அவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக உயிர்ம வேளாண்மை முறையில் கம்பு, கேழ்வரகு, உளுந்து, நிலக்கடலை, பச்சைப்பயிறு, வாழை, தென்னை, மா, பலா, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருவதுடன், சிறுதானியம் மற்றும் எண்ணெய் வகைகள் போன்றவற்றை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து வருகிறார். மேலும், 472-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கியுள்ளார்.</p><p>இந்நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் முனைவர் பொ.சங்கர்,  இ.ஆ.ப., வேளாண்மைத்துறை இயக்குநர் முனைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சினிமா கிளைமாக்ஸ் விவாதம்: சட்டசபையில் கலகலப்பான உரையாடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-cinema-climaxe-lively-discussion-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/debate-on-cinema-climaxe-lively-discussion-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">8a4dad6d-ebc5-4f77-8357-9def2e78cda8</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:13:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:13:26.901Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,சினிமா,TN Assembly,Cinema,கிளைமாக்ஸ்,climax</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vhxa1vkn/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vhxa1vkn/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் இன்றைய அவை நடவடிக்கையின்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. இருப்பினும், நேரம் காரணமாக அறிவிப்பவர்களுக்கு, அவையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தைப் போக்கும் வகையில், இனி அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு அமைச்சர்கள் பேசும் நடைமுறை கொண்டுவரப்படும்” என அறிவித்தார்.</p><p>இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு பேசுகையில், "அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். அது சரியா? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த சபாநாயகர்"என்னுடைய கருத்து, க்ளைமாக்ஸை மக்கள் பார்க்காமல் போய்விடுவார்களோ என்கிற கவலை" என தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தப் படம் ஓடாது, நன்றாக இருக்காது. எனவே, முன்பே க்ளைமாக்ஸ் போட்டுவிடுவோம் என்பது போல இருக்கிறது" என்றார்.</p><p>இதற்கு பதிலளித்த் அமைச்சர் வன்னி அரசு, “இப்போதெல்லாம் படத்திற்கு இரு க்ளைமாக்ஸ் இருக்கிறது. படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் அவை வருகிறது. மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை” என்றார். இவ்வாறு சட்டசபையில் கலகலப்பான உரையாடல் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை என்ன? முதல் அமைச்சர் விஜய் அவசர ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-situation-of-tamils-stranded-in-nepal-chief-minister-vijay-holds-an-urgent-consultation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-situation-of-tamils-stranded-in-nepal-chief-minister-vijay-holds-an-urgent-consultation#comments</comments><guid isPermaLink="false">b6eeed2c-4acd-4faa-ab49-1c7e363d53ca</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:11:44 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:11:44.735Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Nepal,நேபாளம்,Flood,வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ngnsv0j6/cmone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ngnsv0j6/cmone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.</p><p>நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை குறித்து சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்தார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் நேபாளம் சென்றிருந்தனர். இவர்களில், கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.</p><p>நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழு நேபாளம் செல்ல விஜய் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு காத்மாண்டு சென்று, தமிழர்களின் நிலை குறித்து அறிந்து, நேபாள அரசுடன் இணைந்து மீட்புப் பணியை ஒருங்கிணைக்கும் என்று விஜய் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-delta-areas-should-be-declared-drought-affected-districts-mveerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-delta-areas-should-be-declared-drought-affected-districts-mveerapandian#comments</comments><guid isPermaLink="false">e8c65ce1-427f-40ff-baac-67f7a57a232e</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:01:15 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:01:15.462Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,காவிரி,impact,பாதிப்பு,blockade protest,முற்றுகை போராட்டம்,Cauvery Delta,டெல்டா மாவட்டங்கள்,Drought,வறட்சி,மு.வீரபாண்டியன்,M.Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/8bot9tc1/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/8bot9tc1/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE">காவிரி டெல்டா</a> பகுதிகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">வறட்சி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பாதித்த </a>மாவட்டங்களாக அறிவிக்க கோரி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">முற்றுகை போராட்டம்</a> நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன்</a> தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: </p><h2>கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை முற்றுகை போராட்டம்</h2><p>காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி நாளை (28.08.2026) காலை 10 மணிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சி</a>யின் சார்பில் முற்றுகைப் போராட்டம் டெல்டா மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பாக நடைபெறுகிறது.</p><h2>முற்றுகை போராட்டத்திற்கான கோரிக்கைகள்</h2><p>1. காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். </p><p>2. தேவையான தண்ணீர் காவிரி நதியில் வராத காரணத்தால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. எனவே, விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கிட வேண்டும். </p><p>3. விவசாய வேலைகள் இல்லாததால் விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்கிட வேண்டும். </p><p>4. விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.</p><p>5. டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. எனவே, அதை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>6. அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எனவே வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் வழங்கிடவேண்டும். </p><h2>முற்றுகைப் போராட்டங்களில் கலந்து கொள்ளும் தலைவர்கள்</h2><p>திருவாரூர்- மு.வீரபாண்டியன், வை.செல்வராஜ் எம்.பி., க.மாரிமுத்து எம்.எல்.ஏ., எஸ். கேசவராஜ். </p><p>நாகப்பட்டினம்- ரா.முத்தரசன், சிவகுரு, பாண்டியன். </p><p>தஞ்சாவூர்- பி.எஸ்.மாசிலாமணி, மு.அ.பாரதி, கோ.சக்திவேல். </p><p>மயிலாடுதுறை- வை.சிவபுண்ணியம் முன்னாள் எம்.எல்.ஏ., கோ.பழனிச்சாமி முன்னாள் எம்.எல்.ஏ., அ.சீனிவாசன். </p><p>கடலூர்- டி.எம்.மூர்த்தி, பி.துரை. </p><p>திருச்சி- பி.பத்மாவதி முன்னாள் எம்.எல்.ஏ., எம்.செல்வராஜ், எஸ்.சிவா, செ.ராஜ்குமார். </p><p>புதுக்கோட்டை- அ.பாஸ்கர், முத்து உத்திராபதி, த.செங்கோடன். </p><p>இந்த முற்றுகைப் போராட்டங்களுக்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மதுரவாயலில் போதை மாத்திரைகள் விற்ற பெண் ரவுடி உட்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-people-including-a-female-rowdy-arrested-for-selling-narcotic-pills-in-maduravoyal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-people-including-a-female-rowdy-arrested-for-selling-narcotic-pills-in-maduravoyal#comments</comments><guid isPermaLink="false">17d0bc28-404f-4eab-8d9c-7dbc0fcfdaea</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:49:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:49:04.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,arrest,police enquiry,Drugs Case,போதை மாத்திரைகள் விற்பனை,3 ரவுடிகள் கைது,Popular rowdy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/492qpfca/65.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ரவுடி கோகுல்ராஜ், நாராயணமூர்த்தி மற்றும்  தாரணி]]></media:title><media:description type="html"><![CDATA[ 3 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/492qpfca/65.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மதுரவாயல் பகுதியில் சுடுகாட்டில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF"> ரவுடி </a>உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.</p><h2>போலீசார் சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>மதுரவாயல் ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். இதையடுத்து, அவர்களை போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2>ரவுடிகள் கைது</h2><p>இதனைத் தொடர்ந்து, மதுரவாயலைச் சேர்ந்த ரவுடி கோகுல்ராஜ், நாராயணமூர்த்தி மற்றும் பெண் ரவுடி தாரணி ஆகிய மூன்று பேரையும் போலீசார் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து மொத்தம் 1,020 போதை மாத்திரைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மாத்திரைகளை அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்ய முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>பல்வேறு வழக்குகள் நிலுவை</h2><p>கைதானவர்களில் பெண் ரவுடியான தாரணி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது கொலை முயற்சி, அடிதடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள மதுரவாயல் போலீசார், அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காவல், தீயணைப்பு துறைகளுக்கு ரூ.164.64 கோடியில் புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-inaugurates-new-buildings-for-police-and-fire-departments-at-a-cost-of-rs-16464-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-inaugurates-new-buildings-for-police-and-fire-departments-at-a-cost-of-rs-16464-crore#comments</comments><guid isPermaLink="false">c75b7100-a7ef-4839-80b8-80a2163a7d5c</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:47:16 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:47:16.704Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,police,inaugurated,காவல்,Fire Department,தீயணைப்பு துறை,கட்டடங்கள்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/h1t96txm/226.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/h1t96txm/226.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல், தீயணைப்பு துறைகளுக்கு ரூ.164.64 கோடியில் புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்  இன்று தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 127 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 36 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 164 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.</p><p>மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்கவும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் செயல்திறன் மேம்படவும், அத்துறைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.</p><h2>காவல்துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கத்தில் 121 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 400 காவலர் மற்றும் தலைமைக் காவலர் குடியிருப்புகள்.</p><p>சென்னை மாவட்டம், துறைமுகத்தில் 2 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்;</p><p>சென்னை மாவட்டம், ஆவடி, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 5-ஆம் அணி வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி மற்றும் புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி.</p><p>காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஆயுதப்படை வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி, என மொத்தம் 127 கோடியே 76 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறைக் கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.</p><h2>தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்</h2><p>சேலம் மாவட்டம் - செவ்வாய்பேட்டையில் 6 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - சமயபுரத்தில் 3 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம் - வெப்படையில் 2 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவிலும், பெரம்பலூர் மாவட்டம் - பெரம்பலூரில் 4 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிலும், மதுரை மாவட்டம் - தே. கல்லுப்பட்டியில் 2 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் வாடிப்பட்டியில் 2 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவிலும், சிவகங்கை மாவட்டம் - சிங்கம்புணரியில் 2 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்.</p><p>கோயம்புத்தூர் மாவட்டம் - பீளமேட்டில் 6 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 15 குடியிருப்புகள் மற்றும் நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோட்டில் 4 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 14 குடியிருப்புகள்.</p><p>கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையத்தில் 2 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான படைக் குடியிருப்பு, என மொத்தம் 36 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கட்டடங்களை தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர்</a> திறந்து வைத்தார்.</p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் வெங்கடராமன், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வினித் தேவ் வான்கேடே, சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakars-appeal-to-ministers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-jcd-prabhakars-appeal-to-ministers#comments</comments><guid isPermaLink="false">32f0fe96-e928-4e4b-9912-11f074317037</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:27:24 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:27:24.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,Ministers,அமைச்சர்கள்,ஜே.சி.டி.பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/z3ry05jz/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/z3ry05jz/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மிலாடி நபி என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.</p><p>இதனை தொடர்ந்து சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.  இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.</p><p>முன்னதாக அவை நடவடிக்கையின்போது அமைச்சர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. அறிவிப்புகளில் தான் அரசினுடைய உயிர்நாடி, திட்டங்களெல்லாம் இருக்கிறது; புதிதாக அறிவிப்புகளை வெளியிடுகிறோம் என்று சொல்லும்போது அதை முழுமையாக அமைச்சர்களால் வெளியிட முடியவில்லை என்பது என்னுடைய கவனத்திற்கு வந்தது.</p><p>நேற்று இரவு இதைப் பற்றி யோசித்தபோது ஏறத்தாழ 2 மணியளவில் எனக்கு ஒரு யோசனை வந்தது; அமைச்சர்கள் பேசுகிறபோது முன்னுரை ஏதேனும் கூற விரும்புகிறீர்களா என்று நான் கேட்கும்போதே அறிவிப்புகளை முழுமையாக படித்துவிடுங்கள்; அதை பொறுத்து நேரம் கருதி பதிலுரையைக் குறைத்து கொள்ளலாம் இனிமேல் இந்த நடைமுறையைதான் மானியக் கோரிக்கைகளின்போது அமைச்சர்கள் பின்பற்ற வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>“நேபாள வெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க நடவடிக்கை” - அமைச்சர் ராஜ்மோகன் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-underway-to-rescue-103-tamils-stranded-in-nepal-floods-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-underway-to-rescue-103-tamils-stranded-in-nepal-floods-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">901550f2-81ad-49ab-b65b-eda4ec22c813</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:08:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:08:26.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Nepal,நேபாளம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,தமிழர்கள்,Tamils,TN Assembly session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்,nepal flood,நேபாளம் வெள்ளம்,மீட்பு நடவடிக்கை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/1921cs76/minister.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/1921cs76/minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இதுவரை கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்று முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இந்நிலையில் நேபாளத்தில் பெரு வெள்ளத்தில் சிக்கி தமிழர்கள் எத்தனை பேரை நாம் மீட்டுள்ளோம்? என்று பேரவையின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. </p><h2>எத்தனை தமிழர்கள்</h2><p>நேபாள சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளதா? தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு அரசு அறிவித்த உதவி எண்களுக்கு எத்தனை அழைப்புகள் வந்துள்ளன? எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை தொடர்புகொள்ள முடியாததால் உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.</p><h2>103 பேர்</h2><p>இந்நிலையில் இதற்கு சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்து பேசுகையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 பேர் நேபாளத்திற்கு சென்று உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.நேபாள பெருவெள்ளத்தில் தப்பி அங்குள்ள திமுரே முகாமில் தஞ்சமடைந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பேரை, சாலை வழியாக காத்மாண்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><h2>தகவல் கிடைக்கவில்லை</h2><p>நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். 34 தமிழர்கள் தொடர்பான தகவல் கிடைக்கவில்லை. நேபாள போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளுடனும் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பெரு வெள்ளத்தில் 80 பாலங்கள், 40 கி.மீ சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்பாக இதுவரை 937 அழைப்புகள் வந்துள்ளன” என்று கூறினார்.</p><h2>ஆய்வுக் கூட்டம்</h2><p>தொடர்ந்து பேசிய அவர், “அரசு நிகழ்வை முடித்துவிட்டு, <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது” என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-23</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-23#comments</comments><guid isPermaLink="false">f084cc0e-3ff4-4822-93df-048ca20df3a8</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:07:24 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:07:24.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/7dca72m8/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/7dca72m8/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், திருநெல்வேலி நகர்ப்புறம், திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பாளையங்கோட்டை மற்றும் சமாதானபுரம் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். </p><p>இதன் காரணமாக வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன்நகர், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹமத்நகர், நீதிமன்றபகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கம் பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானுர் மற்றும் மூலைக்கரைப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. </p><p>இதன் காரணமாக மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானாங்குளம். மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், நரியூத்து. அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம். </p><p>பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்ப்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம். </p><p>வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இதேபோல் கங்கைகொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. </p><p>சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நவலடி மற்றும் சங்கனான்குளம் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்குபுளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டபணை, குட்டம், பெட்டைகுளம், உறுமன்குளம்.</p><p>மன்னார்புரம், வடக்கு விஜயநாராயண், தெற்கு விஜயநாராயண், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்குட்பட்ட மேலக்கல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><p>இதன் காரணமாக மேலக்கல்லுர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லுர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்.. மேலும் 49 தமிழர்கள் குறித்த தகவல் இல்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-no-information-on-another-49-tamils</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-no-information-on-another-49-tamils#comments</comments><guid isPermaLink="false">6e79f60a-ba6d-443f-9ce7-57e8791624f2</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:57:03 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:57:03.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,flood damage,வெள்ள சேதம்,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/c8duz5mu/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/c8duz5mu/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடக்கு நேபாளத்தில், ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக எல்லை நதி ஒன்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இத்துயரச் சம்பவத்தில் இதுவரை 162 பேர் உயிரிழந்ததுடன், சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. </p><p>வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ளப்பெருக்கில் சிக்கி இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p><p>நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களை பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில், குரோம்பேட்டை மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் கடந்த 14-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 49 பேர் நேபாளம் பயணம் மேற்கொண்டுள்ளனர். யாத்திரையை முடித்துவிட்டு தாயகம் திரும்ப நேற்று குடியுரிமை அலுவலகம் சென்ற 49 பேர் குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை. இதனால் 49 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது.</p><p>தேனியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இந்த பயணத்தில் இருந்த நிலையில், அவர்களும் காணாமல் போயிருக்கிறார்கள். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தீனதயால், ஈக்காட்டுத் தாங்கல் பகுதியிலிருந்து விக்ரமன், மஞ்சுளா, குரோம்பேட்டையிலிருந்து 6 பேர், காஞ்சிபுரத்திலிருந்து 6 பேர் என 49 பேர் நேபாளம் சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளனர்.</p><p>மேலும் நாமக்கல்லிலிருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேரும் நேபாளம் சென்று காணாமல் போயிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவர்கள் சென்னையிலிருந்து நேபாளம் சென்று, அங்கு வெள்ளப்பெருக்கில் காணாமல் போயிருப்பது அவர்களது உறவினர்களுக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது. மகாதேவ் கைலாஷ் ஏஜென்சிஅலுவலகத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>நேபாளம் சென்றவர்கள் விவரங்கள், அவர்களை கடைசியாக தொடர்பு கொண்டது எப்போது? என்பது விவரங்களை திரட்டி வருகிறார்கள்.மேலும் மாயமானோர் குறித்து அரசு சார்பில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கும்பகோணத்தில் இருந்து நேபாளம் சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: விவசாயி முகத்தில் ஸ்பிரே அடித்து 60 ஆடுகள் திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-farmer-sprayed-in-the-face-60-goats-stolen</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-farmer-sprayed-in-the-face-60-goats-stolen#comments</comments><guid isPermaLink="false">608e3ab7-8571-4b81-a4f0-e4f12e598ca1</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:56:42 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:56:42.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,farmer,விவசாயி,வழக்குப்பதிவு,case registered,goat theft,ஆடுகள் திருட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/535w0sui/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆடுகள் திருட்டு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/535w0sui/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயி </a>முகத்தில் ஸ்பிரே அடித்து 60 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆடுகளை</a> 2 பேர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருடிச்</a> சென்றது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p><h2>ஆடு வாங்க வந்த 2 பேர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், எட்டயபுரத்தை சேர்ந்த விவசாயிகளான செல்வம், சண்முகம் ஆகியோர் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இவர்களிடம் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இருந்து வருவதாக கூறிய 2 பேர், 60 ஆடுகளை ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்துக்கு வாங்க முன்பணம் ரூ.1,000 வழங்கினர். </p><h2>விவசாயி முகத்தில் ஸ்பிரே அடித்து 60 ஆடுகள் திருட்டு</h2><p>இதையடுத்து செல்வம் 60 ஆடுகளுடன் சேத்தியாத்தோப்பு வந்தார். அங்கு ஆடுகளை வாகனத்தில் ஏற்றிய பின்னர் பணம் கேட்டபோது, முகத்தில் ஸ்பிரே அடித்து அவரை மயக்கமடையச் செய்த அந்த நபர்கள் ஆடுகளுடன் தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பவுர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3,710 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3710-special-buses-to-operate-across-tamil-nadu-for-pournami-and-weekend-holidays</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3710-special-buses-to-operate-across-tamil-nadu-for-pournami-and-weekend-holidays#comments</comments><guid isPermaLink="false">8cd28efa-b5bc-4cfb-bb99-637170dc462f</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:55:50 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:55:50.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Holiday,Special Bus,வார விடுமுறை,Pournami,பவுர்ணமி,சிறப்பு பஸ்கள் இயக்கம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/j8ijpy3z/35.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள் இயக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/j8ijpy3z/35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பவுர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3,710 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.</p><h2>சிறப்பு பஸ்கள் இயக்கம்</h2><p>இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>பவுர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 1,140 பஸ்களும், 29-ந் தேதி (சனிக்கிழமை) 1,020 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் 29-ந் தேதி (சனிக்கிழமை) வரை ஒவ்வொரு நாளும் தலா 130 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 27 முதல் 29-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் 90 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 690 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிறப்பு பஸ்கள்</a> இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை: 4 பேர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-2-day-old-baby-girl-near-chennai-case-registered-against-four-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-2-day-old-baby-girl-near-chennai-case-registered-against-four-people#comments</comments><guid isPermaLink="false">bc92dad9-c2f2-4658-9c71-79ff6a841f1b</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:51:41 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:51:41.725Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வழக்குப்பதிவு,குழந்தை விற்பனை,police enquiry,baby girl,இடைத்தரகர்கள்,Case against 4 people</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/q5hegqbz/64.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வில்லிவாக்கம் போலீஸ் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/q5hegqbz/64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">மருத்துவர் </a>உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>வறுமையால் நேர்ந்த அவலம்</h2><p>சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் பவித்ரா. அந்த பெண்ணிற்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவரை பிரிந்து வறுமையில் வாடி வந்த பவித்ராவால், ஆஸ்பத்திரியின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ஆண்டாள், தனலட்சுமி ஆகிய இடைத்தரகர்கள் மற்றும் மருத்துவர் ஆகியோர் குழந்தையை விற்கும்படி பவித்ராவை வற்புறுத்தியுள்ளனர்.</p><h2>6 பிரிவுகளின் கீழ் வழக்கு</h2><p>இடைத்தரகர்களின் ஆசை வார்த்தைகளில் விழுந்த தாய், பிறந்து 2 நாட்களே ஆன தனது பச்சிளம் குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். இந்த சட்டவிரோத செயலுக்கு அந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவரும் உடந்தையாக இருந்ததாகத் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ரகசிய தகவல் அறிந்த வில்லிவாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><p>விசாரணையின் முடிவில், குழந்தை கடத்தல் மற்றும் சட்டவிரோத தத்தெடுப்பு தடுப்புச் சட்டங்களின் கீழ், குழந்தையின் தாய் பவித்ரா, இடைத்தரகர்கள் 2 பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர் என 4 பேர் மீது 6 முக்கிய பிரிவுகளின் கீழ் இன்று (வியாழக்கிழமை) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><h2>போலீஸ் நடவடிக்கை - குழந்தையின் நிலை</h2><p>இந்த சட்டவிரோத<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88"> குழந்தை விற்பனை</a> நெட்வொர்க்கில் வேறு பெரிய கும்பலுக்குத் தொடர்பு உள்ளதா, குழந்தை தற்பொழுது யாரிடம் விற்கப்பட்டுள்ளது? என்பது குறித்து வில்லிவாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீட்கப்படும் குழந்தையைக் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்து, காப்பக பாதுகாப்பில் வளர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Chennai Baby | வில்லிவாக்கம் ஹாஸ்பிடலில் பிறந்த பெண் குழந்தை விற்பனை - 4 பேரை பிடித்தது போலீஸ் <a href="https://t.co/6n8xzWSwTU">https://t.co/6n8xzWSwTU</a> <a href="https://x.com/hashtag/chennai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#chennai</a> <a href="https://x.com/hashtag/policearrest?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#policearrest</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2092829017661665375?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-15</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-15#comments</comments><guid isPermaLink="false">a6515685-6171-40a3-85ad-b8f4bb1a591c</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:37:34 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:37:34.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vs4qesfo/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vs4qesfo/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>இதன் காரணமாக மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும், கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் ஆகிய ஊர்களுக்கும், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி. ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  </p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? எத்தனை பேரை மீட்டுள்ளோம்? -  உதயநிதி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-what-measures-are-being-taken-to-rescue-tamils-how-many-have-been-rescued-udhayanidhi-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-what-measures-are-being-taken-to-rescue-tamils-how-many-have-been-rescued-udhayanidhi-asks#comments</comments><guid isPermaLink="false">d3f55ca2-ab8d-45d2-93d0-6d9a0df16807</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:37:27 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:37:27.252Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,M.K.Stalin,தமிழகம்,Nepal,நேபாளம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,தமிழக அரசு,TN govt,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,TN Assembly session,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/dd53ea7n/must.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/dd53ea7n/must.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.</p><p>இந்த நிலையில், 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.</p><p>நேற்று மிலாது நபி என்பதால் அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இதுவரை கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்று முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இந்நிலையில் நேபாளத்தில் பெரு வெள்ளத்தில் சிக்கி தமிழர்கள் எத்தனை பேரை நாம் மீட்டுள்ளோம்? என்று பேரவையின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி</a> கேள்வி எழுப்பினார். </p><p>இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a>, “நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. </p><h2>ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி</h2><p>நேபாள சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளதா? தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு அரசு அறிவித்த உதவி எண்களுக்கு எத்தனை அழைப்புகள் வந்துள்ளன? எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை தொடர்புகொள்ள முடியாததால் உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்" என்று அவர் கூறினார். </p><h2>37 பேரின் கதி என்ன..?</h2><p>முன்னதாக நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுற்றுலா பயணிகள் 500 பேர் வெள்ளத்துக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் 291 பேர் வெளிநாட்டினரும், 32 பேர் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர். வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இநதியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.</p><p>இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரும் இருப்பதாக கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த கைலாஷ் மானசரோவர் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த 57 பேரும் சென்றிருந்தனர். இவர்களில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 37 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் இலவச பஸ்களில் &apos;வெற்றி பயணம்&apos; பெயர் பலகை - அதிகாரிகள் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/journey-of-success-signage-on-free-buses-for-women-officials-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/journey-of-success-signage-on-free-buses-for-women-officials-statement#comments</comments><guid isPermaLink="false">45bebd4e-fcba-459f-986d-a7ac3c8b1984</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:20:14 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:20:14.771Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,Free Bus,இலவச பஸ்கள்,மகளிர் பஸ்,வெற்றி பயணம்,woman bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ybxvoksu/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ybxvoksu/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மகளிர் இலவச பயண திட்டத்தின் விரிவாக்கத்தின்படி, மாநகர, நகர பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண, சொகுசு பஸ்களிலும், மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரண கட்டண பஸ்களிலும், வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் மகளிர் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், மகளிர் இலவச பயண பஸ்களை அடையாளம் காணும் வகையில், 'வெற்றி 'பயணம்' என்ற 'டிஜிட்டல்' பலகை அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>மகளிர் இலவச பயண திட்டத்தின்படி, சென்னையில் 3,633 பஸ்களிலும், மாவட்டங்களில் 9,000-க்கும் மேற்பட்ட பஸ்களிலும் பயணம் செய்யலாம். இதற்கான வழிகாட்டு முறைகளை, தமிழக அரசு விரைவில் வெளியிடும். மகளிர் இலவச பயண பஸ்களை அடையாளம் காணும் வகையில் மாநகரங்களில், 'வெற்றி பயணம்' என பெயரிட்டு, டிஜிட்டல் பலகையுடன் பஸ்கள் இயக்கப்படும்.</p><p>மாவட்ட பஸ்களில், 'மகளிர் கட்டணம் இல்லா பயணம்" என, குறிப்பிட முடிவு செய்துள்ளோம். இந்த பஸ்களுக்கு பிரத்யேக வண்ணம் பூசுவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் இயற்கை பேரிடர்: இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயார் - எச்.ராஜா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/natural-disaster-in-nepal-india-ready-to-provide-all-assistance-h-raja</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/natural-disaster-in-nepal-india-ready-to-provide-all-assistance-h-raja#comments</comments><guid isPermaLink="false">31f852f3-f069-4b30-bf40-386e445a1008</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:18:08 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:18:08.816Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,எச்.ராஜா,H. Raja,Natural Disaster,இயற்கை பேரிடர்,Provide,நேபாளத்தில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ergvob5j/225.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எச்.ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/ergvob5j/225.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய அரசு நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இயற்கை பேரிடர்</h2><p>நேபாளத்தில் பனிமலை உருகி அந்நாட்டின் கண்டகி, திரிசூலி, கோஷி உள்ளிட்ட அனைத்து ஜீவநதிகளிலும் வரலாறு காணாத பெருவெள்ளம் வந்து மிகப்பெரிய இயற்கை பேரிடர் உருவாகி அது நேபாளம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள பேரழிவு உலகெங்கும் வாழும் அனைவருக்கும் வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. </p><p>வீடுகள், வர்த்தக கட்டிடங்கள், மிகப்பெரிய மேம்பாலங்கள், பிரதான சாலைகள், வாகனங்கள் அனைத்தும் பெருத்த சேதமடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகளை பார்க்கும் போது அதிர்ச்சியிலும், அச்சத்திலும் நெஞ்சம் பதைபதைக்கிறது. இந்த பெரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">வெள்ளத்தில்</a> சிக்கி பலர் இறந்துள்ளனர். </p><p>மேலும் இந்த பெரு வெள்ளத்தில் நேபாள மக்களும், அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த இந்நிய மக்களில் பலரும் காணாமல் போயுள்ளனர். தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு 57 பேர் சென்றுள்ளனர். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும். </p><h2>உதவிகள்</h2><p>இந்திய அரசு நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரைத் தொடர்ந்து உலக நாடுகள் தங்கள் கவலையையும், ஆதரவையும் தெரிவித்துள்ளன. நேபாளில் ஏற்பட்டுள்ள இந்த பெருவெள்ளம் எல்லையோர இந்திய மாநிலமான பீகாரையும் தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கை வந்திருப்பதால் மத்திய அரசு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. </p><p>நெருக்கடியான நேரங்களில் நாடு, மொழி, எல்லைகளை கடந்து இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்கள் இந்த பேரழிவில் இருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்திப்போம்.  மேலும் நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் பிரார்த்திப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நேபாளத்தில் பனிமலை உருகி அந்நாட்டின் கண்டகி, திரிசூலி, கோஷி உள்ளிட்ட அனைத்து ஜீவநதிகளிலும் வரலாறு காணாத பெருவெள்ளம் வந்து மிகப்பெரிய இயற்கை பேரிடர் உருவாகி அது நேபாளம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள பேரழிவு உலகெங்கும் வாழும் அனைவருக்கும் வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.… <a href="https://t.co/x1wzVK3KX3">pic.twitter.com/x1wzVK3KX3</a></p>&mdash; H Raja (@HRajaBJP) <a href="https://x.com/HRajaBJP/status/2092816178473545798?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பரவி வரும் பன்றிக் காய்ச்சல் - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/spreading-swine-flu-minister-arunraj-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/spreading-swine-flu-minister-arunraj-clarifies#comments</comments><guid isPermaLink="false">b826bf18-8888-49d2-a183-3957aa369b99</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:41:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:41:26.558Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,swine flu,பன்றி காய்ச்சல்,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/x920wiv3/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/x920wiv3/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மிலாடி நபி என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.</p><p><strong>அப்போது திமுக எம்.எல்.ஏ. லட்சுமணன் பேசுகையில்,</strong> “தமிழகத்தில் பரவி வரும் எச்1,என்1 (பன்றி) காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது; முதியவர், கர்ப்பிணி பெண்களுக்காவது தடுப்பூசி போடும் திட்டம் அரசிடம் உள்ளதா?” என கேள்வி எழுப்பினார்.</p><p><strong>இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்,</strong> “பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1,என்1 ப்ளூ காய்ச்சல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்ற ஆண்டில் முதல் 4 மாதம் (ஜனவரி - ஏப்ரல்) தான் தாக்கம் அதிகமாக இருந்தது, இந்த ஆண்டு மே -ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்; முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் அதிகமாக பாதிக்கும் என்பதால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.</p><p><strong>தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-</strong> “கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்"</p><p><strong>இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ்,</strong> “உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. முதல் முறையாக 284 மருத்துவர்களுக்கான பணியிடங்களை உருவாக்கியுள்ளோம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவையை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்”என்றார்.</p><p><strong>தொடர்ந்து சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசுகையில்,</strong> “செஞ்சி மருத்துவமனையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மகப்பேறுக்கான தனிக் கட்டடம் கட்டப்பட்டு ஆபரேஷன் தியேட்டர் நடைமுறைக்கு வராமல் இருந்தது அமைச்சர் ஆனந்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் வைத்தேன்; மறுநொடியே முதல்வரை அழைத்து சொன்னதன் விளைவாக 10 நாட்களுக்கு முன்பாக ஆபரேஷன் தியேட்டர் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது; சிசேரியன் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதற்கு நீர்வளத்துறை அமைச்சருக்கும்(ஆனந்த்) சுகாதாரத்துறை அமைச்சருக்கும்(அருண்ராஜ்) நன்றிக்கடனுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்டங்கள் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/road-projects-worth-rs-2-lakh-crore-minister-adhav-arjuna-shares-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/road-projects-worth-rs-2-lakh-crore-minister-adhav-arjuna-shares-details#comments</comments><guid isPermaLink="false">6a3ab5ab-4b5a-409b-b5ab-6ca1a23af36b</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:19:44 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:19:44.574Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,சட்டசபை,TN Assembly,நெடுஞ்சாலை திட்டங்கள்,சாலை பணிகள்,Road project</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3d2ule9e/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/3d2ule9e/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மிலாடி நபி என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.</p><p>அப்போது பேசிய உறுப்பினர் மாரிமுத்து, திருத்துறைப்பூண்டியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எனவே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ரெயில்வே மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அங்கு மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் ரெயில்வே கிராசிங் உள்ள சில இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் இல்லை.</p><p>எனவே, முதலில் செய்ய வேண்டிய பணிகளாக ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும். பல ரெயில்வே கிராசிங் பகுதிகளில் ஒரு மணி நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் இந்த பிரச்சினை உள்ளது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் பணியாக ரெயில்வே மேம்பாலங்கள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வரப்படும். அதுபோல ரிங் ரோடு பிரச்னை உள்ளது. அதுவும் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.</p><p>தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை உயர்நிலை மேம்பாலம் அமைக்குப் பணிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கவிருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்த்தால் கிடப்பில் போடப்பட்டதாக கூறினார். கிடப்பில் போடப்பட்ட உயர்நிலைப் பாலப் பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை எட்டுவழிச் சாலையாக மாற்றும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். மத்திய மந்திரியுடன் சந்திப்பின்போதும் இது குறித்து வலியுறுத்தியிருக்கிறோம். சென்னை-கன்னியாகுமரி வரை எட்டு வழிச் சாலையாக மாற்றுவதுதான், அடுத்த 30 வருடத்துக்கான போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும்.</p><p>சென்னை நோக்கி வரும்போது, திருச்சி செங்கல்பட்டு வர 4 மணி நேரம் ஆகும். ஆனால், அதே செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது. அதுபோலவே பெங்களூரிலிருந்து திருவள்ளுர் 3 மணி நேரம் வந்துவிடுவோம், ஆனால் திருவள்ளூரிலிருந்து சென்னைக்குள் வர 3 மணி நேரம் ஆகிறது. மகாபலிபுரத்திலிருந்தும் சென்னை வர மூன்று மணி நேரம் ஆகிறது. எனவே, சென்னையை சுற்றியுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். இது குறித்து மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும்.</p><p>மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடைப்பெற்று வரும் சாலை திட்டங்களின் தொய்வு குறித்தும் தமிழ்நாட்டிற்கு தேவையான சாலை திட்டம் குறித்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரியிடம் நேரில் வலியுறுத்தினேன்; வரும் ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டிலான சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், மத்திய சாலை நிதி ரூ.1,000 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியின் இடர்பாடுகளால் தமிழகத்திற்கு திட்டங்கள் வரவில்லை.. இடர்பாடுகளை நீக்கினால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.2 லட்சம் கோடி கிடைக்கும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு ரூ.5,109 கோடி கல்வி நிதியை விடுவிக்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசு: மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-is-deceiving-tamil-nadu-by-not-releasing-rs-5109-crore-education-fund-manickam-thakur-mp-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-is-deceiving-tamil-nadu-by-not-releasing-rs-5109-crore-education-fund-manickam-thakur-mp-condemns#comments</comments><guid isPermaLink="false">6d2b4c46-b314-42c1-ba19-837bfba81798</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:18:23 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:18:23.002Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,காங்கிரஸ்,Congress,condemnation,கண்டனம்,மத்திய அரசு,education,Central Government,கல்வி நிதி,fund,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/lgq3wgen/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/lgq3wgen/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்திற்கு ரூ.5,109 கோடி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF">கல்வி நிதி</a>யை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">கண்டிக்கிறேன்</a> என்று தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">மாணிக்கம் தாகூர் எம்.பி. </a>தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: </p><p>தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளை நசுக்கி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது.</p><h2>மத்திய அரசுக்கு கண்டனம்</h2><p>தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><h2>கல்வி நிதி தடுத்து நிறுத்தம்</h2><p>தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-26-ல் ரூ.1,496 கோடி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பெயரளவில் RTE திட்டத்திற்கு ரூ.714 கோடியை மட்டும் பெயரளவுக்கு விடுவித்துவிட்டு, பள்ளிக் கல்விக்கான ஒட்டுமொத்த நிதியையும் பிடித்து வைத்துப் பிளாக்மெயில் செய்வது வெட்கக்கேடானது.</p><h2>கடுமையான நெருக்கடி</h2><p>மத்திய அரசின் நிதியுதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கிப் பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால், மோடி அரசின் இந்த அதிகார மமதையால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்புப் பணிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகின்றன.</p><h2>மோடி அரசின் பிடிவாதம்</h2><p>மும்மொழிக் கொள்கை விலக்கு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான குரலை நசுக்கி, PM-SHRI மற்றும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கும் மோடி அரசின் அரசியல் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா? இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.</p><h2>ரூ.5,109 கோடி கல்வி நிதியை விடுவிக்க கோரிக்கை</h2><p>தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அநீதியை உடனடியாகக் கைவிட வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதியுள்ளேன். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்? வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-failed-to-control-price-increases-velmurugan-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-failed-to-control-price-increases-velmurugan-question#comments</comments><guid isPermaLink="false">28513772-eabd-4c09-9126-8763d596f8b8</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:01:44 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:01:44.698Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Question,Velmurugan,வேல்முருகன்,விலைவாசி உயர்வு,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,increases</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vzrs3tug/224.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vzrs3tug/224.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது யார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">வேல்முருகன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் சமையல் எண்ணெய், தனியா, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நிலைகுலைய வைத்துள்ளது. இது வெறும் அரசியல் குற்றச்சாட்டு அல்ல. மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறையின் (Price Monitoring Division) அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே இதை உறுதிப்படுத்துகின்றன. 2024 ஆகஸ்ட் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில்,</p><h2>விலை உயர்வு</h2><p>சூரியகாந்தி எண்ணெய் கிலோ ரூ.115.71-லிருந்து ரூ.193.58 ஆக உயர்வு (67.3 சதவீதம்)., மல்லி (தனியா) கிலோ ரூ.23.82-லிருந்து ரூ.46.11 ஆக உயர்வு (93.6 சதவீதம்)., சர்க்கரை கிலோ ரூ.44.28-லிருந்து ரூ.53.58 ஆக உயர்வு (21 சதவீதம்)., அரிசி கிலோ ரூ.55.75-லிருந்து ரூ.60.25 ஆக உயர்வு (8.1 சதவீதம்)., உப்பு விலை 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.</p><p>அதேவேளையில், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்ற சில பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.</p><h2>நலத்திட்ட உதவிகள்</h2><p>ஆனால், எளிய மக்களுக்கு கையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, மறுகையில் கட்டுக்கடங்காத விலைவாசி மூலம் அவர்களின் சேமிப்பைப் பறிக்கும் சூழல் நீடிக்கக்கூடாது.</p><p>வெளிச்சந்தை விலை உயர்வுக்குக் காரணங்களை அடுக்கித் தட்டிக்கழிக்காமல், இடைத்தரகர்களின் ஆதிக்கம், பதுக்கல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடுகளைத் தகர்க்க வேண்டும்.  ஏற்கனவே உள்ள ‘விலை நிலைப்படுத்தும் நிதியை’ (Price Stabilisation Fund) ஒன்றிய அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும். </p><h2>வலியுறுத்தல்</h2><p>அதேபோல் தமிழ்நாடு அரசும் வெளிப்படையான சந்தைத் தலையீடுகளை முன்னெடுத்து, சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப்பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்-அமைச்சருக்கு பெ.சண்முகம் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/p-shanmugam-writes-to-the-chief-minister-seeking-action-against-the-chief-secretary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/p-shanmugam-writes-to-the-chief-minister-seeking-action-against-the-chief-secretary#comments</comments><guid isPermaLink="false">78e680f3-d77f-418f-a9ba-b1d42bad9ff0</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:50:58 +0000</pubDate><atom:updated>2026-08-27T04:50:58.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Chief Secretary,தமிழக அரசு,TN govt,பெ.சண்முகம்,தலைமைச் செயலாளர்,சிபிஎம்,CPM,P.Shanmugam</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/t59ll6vj/siier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/t59ll6vj/siier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இடதுசாரி இயக்கங்களை ஒடுக்கும் நோக்கில் செயல்பட்ட தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு</a> சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம் கடிதம் எழுதி உள்ளார். </p><h2>சுற்றறிக்கை</h2><p>இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாக, இடதுசாரி இயக்கங்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினரின் போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பதைத் தடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. </p><h2>விளக்கம் அவசியம்</h2><p>இது உரிய முன்னுரிமை என்றும் மிக அவசரம் என்றும் வகைப்படுத்தப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை (action taken report) கோரப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டவிரோதமானதும், அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை மறுப்பதும் ஆகும். இது திட்டமிட்டு இடதுசாரி அமைப்புகளைக் குறி வைக்கிற செயல் என்கிற முறையில் எங்களது கடும் கண்டனத்தைத் தெரியப்படுத்துகிறோம். அரசின் அதிகார கட்டமைப்பில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் எடுக்கும் முடிவு அரசின் முடிவாகவே கருதப்படும். எனவே, இதுகுறித்து தாங்கள் விளக்கம் அளிப்பது அவசியம்.</p><h2>தலைமை செயலாளர் மீது நடவடிக்கை</h2><p>இடதுசாரி அமைப்புகள் மட்டுமல்ல, எந்தவொரு அமைப்பும் போராடுவதற்கு உரிமை உண்டு. அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஒடுக்குவதற்கு, பல்துறை ஒருங்கிணைப்பை செயல்படுத்துவது அரசமைப்பு சட்டத்திற்கு முரணானதாகும். காவல்துறை உட்பட கல்வி வளாகங்களுக்குள் சென்று நடவடிக்கை எடுக்கும் சட்டவிரோத செயலை அங்கீகரிப்பதாகும். எனவேதான், தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.</p><p>ஆனால், உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவர்களின் முடிவை கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்த இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்டுவிட்டோம் என்று சொல்வது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல; பொருத்தமானதும் அல்ல.</p> <h2>அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது</h2><p>உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் மன்னிப்பு கோரியிருக்கிறார். நாங்கள் யாரிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. மாறாக, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை என்பதையே வலியுறுத்தியிருக்கிறோம்; இப்போதும் வலியுறுத்துகிறோம். இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து இதுவரையிலும் பொறுப்பான பதில் ஏதும் சொல்லப்படவில்லை.</p><p>திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்த வட்டத்திற்குட்பட்ட CPI(M), CPI கட்சிகளின் உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இது நேரடியான அச்சுறுத்தல் மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், தனது பதவியை தவறாக பயன்படுத்துவதும் ஆகும். </p><p>இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவரது பயிற்சி காலம் முடிந்ததால் இடமாறுதல் செய்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். பிறகு அவருக்கு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 17 A-யின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதாவது இது சிறு குற்றமாக மட்டுமே அரசால் கருதப்பட்டு மென்மையாக அணுகப்படுகிறது.</p><h2>பாதுகாப்பதற்கான முயற்சி</h2><p>சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அவர்கள், வட்டாட்சியரின் கடிதத்திற்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை; சொந்த விருப்பு, வெறுப்பு அடிப்படையில் அவர் அந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். வட்டாட்சியரின் சட்டவிரோதமான இந்த செயலுக்கு அமைச்சரின் பதிலும், துறையின் நடவடிக்கையும் எந்தவகையிலும் பொருத்தமானதல்ல. அரசுப் பதவியில் உள்ள ஒருவர் தனிப்பட்ட நோக்கத்திற்காக செய்தார் (abuse of power) என்றால் அது கடுமையான குற்றமாகும். </p><p>ஆனால், இதற்குமேல் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்கிற முறையில் அமைச்சர் பதிலளித்திருப்பதும், 17 A பிரிவின் கீழ் விளக்கம் கேட்டிருப்பதும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை அவருடைய தவறுக்கு தண்டிப்பதற்கு பதிலாக, அவரை பாதுகாப்பதற்கான முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.</p><h2>தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை</h2><p>எனவே, முதல்-அமைச்சர் அவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் உட்பட தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தலைமைச் செயலாளர் பங்கேற்ற கூட்டத்தின் முடிவு ரத்து செய்யப்பட்டு, அந்த சுற்றறிக்கை முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டெல்டா விவசாயிகள் பாசனப் பணிகளை தொடங்க அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delta-farmers-advised-to-commence-irrigation-activities</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delta-farmers-advised-to-commence-irrigation-activities#comments</comments><guid isPermaLink="false">4720eacf-5cea-4a8d-b3a3-1bf160005fcc</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:33:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T04:33:13.793Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,விவசாய பணி,டெல்டா விவசாயிகள்,Delta farmers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/96jkqsz9/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/96jkqsz9/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மேட்டூர் அணை திறப்பு</h2><p>கர்நாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப் பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும், டெல்டா பாசனத்திற்கு தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவைகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தேவையான அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து வருகிற 1-ந் தேதி முதல் 45 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 1-ந் தேதி முதல்-அமைச்சர் விஜய், மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்க உள்ளார்.</p><h2>பாசனப் பணி</h2><p>இதனையொட்டி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும், திட்டமிட்டும் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன் சாகுபடி பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதையும், கிடைக்கும் ஒவ்வொரு துளிநீரும் அதிகபட்ச பாசன பயனை அளிப்பதையும் 'ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்' கிடைப்பதையும் உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்&apos; தூத்துக்குடியில் த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-chief-minister-tomorrows-prime-minister-vijay-tv-poster-creates-stir-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-chief-minister-tomorrows-prime-minister-vijay-tv-poster-creates-stir-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">d63eca3f-5e9a-4a4f-8da0-d7e4da613d67</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:50:07 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:50:07.921Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,த.வெ.க.,Thoothukudi,தூத்துக்குடி,T.V.K.,போஸ்டர்,prime minister,பிரதமர்,பரபரப்பு,Poster,sensation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/lujeuydk/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4.%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%95.-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/lujeuydk/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4.%E0%AE%B5%E0%AF%86.%E0%AE%95.-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>'இன்றைய முதல்வர், நாளைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D">பிரதமர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a>' என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் ஒட்டப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">த.வெ.க.</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">போஸ்டரால் பரபரப்பு</a> ஏற்பட்டுள்ளது.</p><h2>அடுத்த பிரதமர் விஜய்</h2><p>த.வெ.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பின்னர் பல்வேறு கட்சிகளில் இருந்தும் முக்கிய பிரபலங்கள் மற்றும் பலர் த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள். இதற்கிடையே த.வெ.க.வினர் சமீபகாலமாக அடுத்த பிரதமர் விஜய் என்று கூறி வருகின்றனர். </p><h2>காங்கிரசார் விமர்சனம்</h2><p>இது த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் த.வெ.க.வினர் ரசிகர் மன்ற மனநிலையில் இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று உறுதியாக கூறி உள்ளார்.</p><h2>த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு</h2><p>இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் முதல்-அமைச்சர் விஜய்யை வாழ்த்தி, அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சுதாகர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த போஸ்டரில், 'இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்' என்றும், தூத்துக்குடி மத்திய மாவட்ட த.வெ.க. என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கள ஆய்வு இல்லாமல் நாளை முதல் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-electricity-connections-for-homes-starting-tomorrow-without-on-site-inspection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-electricity-connections-for-homes-starting-tomorrow-without-on-site-inspection#comments</comments><guid isPermaLink="false">ce67008c-2fa9-4d0c-a8eb-c118b7556813</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:06:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:06:20.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity Board,மின்சார வாரியம்,மின் இணைப்பு,Electricity connection</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hs9hbyq5/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hs9hbyq5/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைத்து தலைமை என்ஜினீயர்கள், மேற்பார்வை என்ஜினீயர்களுக்கு தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களுடன், மின்சார இணைப்பு வழங்க வேண்டிய இடத்தின் ஜி.பி.எஸ். இருப்பிட குறியீடுகளை விண்ணப்பதாரரே பதிவு செய்ய வேண்டும். ஆவணங்களின் அச்சு நகல்களை கட்டாயமாக சமர்ப்பிக்கக் கூடாது. </p><p>விண்ணப்பதாரர் அளிக்கும் ஜி.பி.எஸ். தகவல்கள் (செயற்கைக்கோள்கள் மூலம் பூமியில் எங்கு இருக் கிறோம் என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் வழிகாட்டு அமைப்பு) புவியிட அமைப்பு வரைபடங்களுக்கான ஜி.ஐ.எஸ். செயலி மூலம் சரிபார்க்கப்படும். தகவல்கள் சரியாக இருந்தால் கள ஆய்வு இல்லாமல் விண்ணப்பம் அடுத்தகட்டத்துக்கு அனுப்பப்படும்.</p><p>சரிபார்ப்பில் தோல்வி ஏற்பட்டால், வழக்கமான கள ஆய்வு நடைமுறை மேற்கொள்ளப்படும். ஜி.பி.எஸ். சரிபார்ப்பு முடிந்ததும், மதிப்பீடு செய்யப்பட்டு, மின்சார இணைப்பு வழங்கும் பணியின்போது மீட்டர் பொருத்தப்படும் இடத்தின் உண்மையான ஜி.பி.எஸ். தகவலும் பதிவு செய்து சரிபார்க்கப்படும். பின்னர் மீட்டர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இணைப்பு வழங்கப்படும்.</p><p>விண்ணப்பத்தின் நிலை மற்றும் மாற்றங்கள் குறித்த தகவல்களும் விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படும். இந்தப் புதிய நடைமுறை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இது புதிய விண்ணப்பங்களுக்கு மட்டும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கூடலூரில் இன்றும் நாளையும் வேலை நிறுத்தம், கடைகள் அடைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/strike-and-shop-closures-in-gudalur-today-and-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/strike-and-shop-closures-in-gudalur-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">f5ebb1fa-2d15-4fc7-af33-ee65e7befa7c</guid><pubDate>Thu, 27 Aug 2026 02:36:33 +0000</pubDate><atom:updated>2026-08-27T02:36:33.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Forest Department,வனத்துறை,வேலைநிறுத்தம்,Tiger,புலி,Shops closed,Gudalur,கூடலூர்,கடைகள் அடைப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/5r631ok8/koop.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/5r631ok8/koop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>கூடலூர் அருகே போக்கு காட்டும் புலியை பிடிக்க கோவை, தேனியில் இருந்து வன உயர் அடுக்குப்படையினர் வரவழைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.</p><h2>மோசமான வானிலை</h2><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரை புலி கடித்து கொன்றது. இதைத் தொடர்ந்து தமிழக தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவின் பேரில், கூடலூர் வன அலுவலர் தேவராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதற்காக 3 தெர்மல் டிரோன்கள், 130 தானியங்கி கேமராக்கள், 11 கூண்டுகளை பயன்படுத்தி புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், மோசமான வானிலை காரணமாக புலியின் நடமாட்டத்தை கண்டறிய முடியாமல் வனத்துறையினர் சிரமம் அடைந்து வருகின்றனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/v1dq3hss/kier.jpg" /></figure><h2>போக்கு காட்டும் புலி</h2><p>இதனால் 5 நாட்கள் ஆகியும் வனத்துறையினருக்கு ஆட்கொல்லி புலி போக்கு காட்டி வருகிறது. நேற்று 6-வது நாளாக கோவையில் இருந்து வரவழைக்கப்பட்ட 12-வது ராட்சத கூண்டை வனத்துறையினர் பொருத்தினர். இதுதவிர மொத்தம் 130 தானியங்கி கேமராக்களையும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால், அதில் புலியின் நடமாட்டம் பதிவாகவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.</p><h2>வன உயர் அடுக்குப்படையினர்</h2><p>இந்தநிலையில் ஏற்கனவே கோவை உள்பட முக்கிய இடங்களில் இருந்து கூடுதலாக வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இதேபோல் தேனியில் இருந்து வனச்சரகர் தலைமையிலான வன உயர் அடுக்குபடையி னர் 10-க்கும் மேற்பட்டோர் ஓவேலிக்கு வரவழைக்கப்பட்டு, புலியை பிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணி மற்றும் அதிநவீன தெர்மல் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>வனத்துறையினர் தடை</h2><p>இதேபோல் புலி நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல் உள்ள கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு, பொதுமக்கள் வெளியே நடமாட வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். தெய்வமலை, மேட்டூர், குறிஞ்சி நகர், முல்லை நகர், காந்தி நகர், வளப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.</p><h2>வேலை நிறுத்தம்</h2><p>இந்நிலையில் கூடலூரில் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஓவேலி  லாரஸ்டன்  பகுதியில் 2 பேரை தாக்கிக்கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி 10 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக கோத்தகிரி தாலுகாவில் அதிகரித்து வரும் மனித-வனவிலங்கு மோதலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. </p><p>கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொறுப்பாளர் குருமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், கூடலூரில் 2 பேரை கடித்து கொன்ற புலியை பிடிக்க கோரி 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. </p><p>இதற்கு ஆதரவாகவும், கோத்தகிரி பகுதியில் மனித-வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நாளை கோத்தகிரி மார்க்கெட் திடலில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வனவிலங்கு தாக்குதலால் உயிரிழந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>
நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பேரழிவு: நடிகர் சிம்பு வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devastation-caused-by-massive-floods-in-nepal-actor-simbu-expresses-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devastation-caused-by-massive-floods-in-nepal-actor-simbu-expresses-anguish#comments</comments><guid isPermaLink="false">fae090ae-635f-49e1-ad03-0e052696382d</guid><pubDate>Thu, 27 Aug 2026 02:33:52 +0000</pubDate><atom:updated>2026-08-27T02:33:52.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal,நேபாளம்,Flood,வெள்ளப்பெருக்கு,Simbu,நடிகர் சிம்பு,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/yg8f0dgb/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/yg8f0dgb/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளம், ரசுவா மாவட்டத்தில் உள்ள போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவைக் காண்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என நடிகர் <a href="https://www.dailythanthi.com/topic/simbu">சிம்பு</a> பதிவிட்டுள்ளார். </p> <p>நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் வடக்கே ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள ரசுவாகடி பகுதியில் லெண்டே கோலா உள்ளிட்ட ஆறுகள் ஒன்றிணைந்து போடேகோஷி ஆறாக பாய்கின்றன.</p><h2>திடீர் வெள்ளப்பெருக்கு</h2><p>இந்த ஆற்றில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் அருகில் உள்ள நுவாகோட் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆற்றின் இருபுறங்களிலும் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 93 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p>  <h2>தமிழகத்தை சேர்ந்த 37 பேர் மாயம்</h2><p>நேபாள சுற்றுலா வாரிய தகவலின்படி, வெள்ளத்துக்கு பிறகு 750 சுற்றுலா பயணிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்களில் 133 பேர் இந்தியர்கள். தமிழகத்தை சேர்ந்த 57 பேரில் 20 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 37 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால், பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>  <h2>நடிகர் சிம்பு வேதனை</h2><p>இந்த நிலையில், நடிகர் சிம்பு நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவால் மனவேதனை அடைவதாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவைக் காண்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள், பாதிக்கப்பட்ட அனைவரும் மற்றும் இன்னும் மீட்கப்படக் காத்திருப்பவர்கள் ஆகியோருக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவர்களின் பாதுகாப்பு மற்றும் மனவலிமைக்காகப் பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>