<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 15 Jul 2026 16:41:35 +0000</lastBuildDate><item><title>கிருஷ்ணகிரியில் ரிக்டர் 3.0 அளவில் லேசான நில அதிர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mild-earthquake-measuring-30-on-the-richter-scale-in-krishnagiri-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mild-earthquake-measuring-30-on-the-richter-scale-in-krishnagiri-2#comments</comments><guid isPermaLink="false">ab8c577e-8906-41f4-97cb-034684c316cf</guid><pubDate>Wed, 15 Jul 2026 16:30:31 +0000</pubDate><atom:updated>2026-07-15T16:30:31.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>earthquake,கிருஷ்ணகிரி,Krishnagiri,நில அதிர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/dudm2g31/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/dudm2g31/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7.52 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி இருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இந்த நில அதிர்வின் மையமானது பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வால் கட்டிடங்கள் லேசாக குலுங்கிய நிலையில், அங்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அணை பாதுகாப்பு மதிப்பீடு - நிபுணர் குழு அமைக்க தமிழக அரசு ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dam-safety-assessment-tamil-nadu-government-approves-formation-of-expert-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dam-safety-assessment-tamil-nadu-government-approves-formation-of-expert-committee#comments</comments><guid isPermaLink="false">adf821ab-af1a-4b5c-9bf5-238f4c668327</guid><pubDate>Wed, 15 Jul 2026 16:16:08 +0000</pubDate><atom:updated>2026-07-15T16:16:08.176Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,நிபுணர் குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ai4d239d/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ai4d239d/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அணைகளுக்கு விரிவான அணை பாதுகாப்பு மதிப்பீடு மேற்கொள்வதற்காக நிபுணர் குழு அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. </p><p>இந்த மதிப்பீட்டு பணிக்கான மொத்த செலவு ரூ.1.20 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பாதுகாப்பு மதிப்பீடு நடைபெற இருக்கிறது. மொத்தம் 86 அணைகளுக்கு விரைவான அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக்காக நிபுணர் குழு அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-venkataramanan-issued-new-electronic-ration-cards-to-608-beneficiaries-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-venkataramanan-issued-new-electronic-ration-cards-to-608-beneficiaries-in-chennai#comments</comments><guid isPermaLink="false">29ae15ee-2974-42d6-a24e-98116fcb4412</guid><pubDate>Wed, 15 Jul 2026 16:10:00 +0000</pubDate><atom:updated>2026-07-15T16:10:00.352Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Electronic,Ration card,குடும்ப அட்டை,அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/fof30rn9/239.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கடரமணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/fof30rn9/239.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் வெங்கடரமணன்</a> வழங்கினார். </p><h2>மின்னணு குடும்ப அட்டைகள்</h2><p>இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கண்ணதாசன் நகர், கொடுங்கையூரில் உள்ள எஸ்.கே. மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் பெரம்பூர் பகுதிக்குட்பட்ட 300 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை, பெருநகர சென்னை மாநகராட்சி நெய்தல் திருமண மாளிகைளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர், இராயபுரம் மற்றும் திருவெற்றியூர் பகுதிகளுக்குட்பட்ட 308 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைவரையும் விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.</p><p>இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தங்களுக்குத் தேவையான பொருட்களை முறையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். </p><h2>மானிய விலையில்</h2><p>மேலும், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை மற்றும் தனியார் அரிசி அரவை ஆலையிலிருந்து அரிசியாக பெறப்படுகிறது. மேலும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வியாபாரிகளிடமிருந்து வெளிச்சந்தை விலையில் பெறப்பட்டு, தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, விலையில்லா மற்றும் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.</p><h2>ரசீது</h2><p>மேலும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்கும் ஒவ்வொரு முறையும் கட்டாயமாக ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் வெளிச்சந்தைக்கு முறைகேடாக விற்கப்படுவதை பொதுமக்களின் பங்களிப்புடன் திறம்பட தடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-sivakarthikeyan-meets-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-sivakarthikeyan-meets-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">9ffc222b-364c-43ce-b9cc-85da434c869a</guid><pubDate>Wed, 15 Jul 2026 16:07:07 +0000</pubDate><atom:updated>2026-07-15T16:07:07.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivakarthikeyan,சிவகார்த்திகேயன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/wc8d4fqf/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/wc8d4fqf/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று நேரில் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவரை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தையே வழிநடத்துவது வரை, சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை. தமிழகத்தின் மாண்புமிகு முதல்-அமைச்சர் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது ஒரு பெருமைக்குரிய தருணம்.</p><p>'ரசிகன் எக்ஸ்பிரஸ்' முதல் 'விஜய் அவார்ட்ஸ்' மேடை வரை, 'GOAT' திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல், இப்போது உங்களுடன் இந்தத் தருணம் வரை; இது எப்போதும் மிகவும் சிறப்பானதாகவே இருக்கும். அந்த சகோதரத்துவமும், அந்த பிணைப்பும், எப்போதும் தொடர்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெருங்குடி, சோழிங்கநல்லூரில் ரூ. 58.46 கோடியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-worth-5846-crore-in-perungudi-and-sholinganallur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-worth-5846-crore-in-perungudi-and-sholinganallur#comments</comments><guid isPermaLink="false">a0689cae-d2b3-4f6b-9750-3dbb053097b9</guid><pubDate>Wed, 15 Jul 2026 16:05:56 +0000</pubDate><atom:updated>2026-07-15T16:05:56.283Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பருவமழை,பெருங்குடி,Perungudi,சோழிங்கநல்லூர்,Sholinganallur,பணிகள்works,Monsoon Rain</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/555btj5n/inspection.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன்,  ஆய்வு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/555btj5n/inspection.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ரூ. 58.46 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் மற்றும் ஏரி மேம்பாட்டுப் பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ரூ.58.46 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் மற்றும் ஏரி மேம்பாட்டு பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>மேம்பாட்டு பணிகள் ஆய்வு </h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">மாநகராட்சி இணை ஆணையாளர்</a> (பணிகள்) பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட மயிலை பாலாஜி நகர் 4ஆவது பிளாக் பகுதி கால்வாயில் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் 207 மீ. நீளம் மற்றும் 14.40 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், 1ஆவது பிளாக் கால்வாயில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் 235 மீ. நீளம் மற்றும் 13 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், ரூ.10.95 கோடி மதிப்பீட்டில் அணை ஏரியில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், உள்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேற்ற கால்வாய் சீரமைப்பு பணிகள், ஆக்கிரமிப்பு மற்றும் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகளை அகற்றுதல், மழைநீர் வடிகால்வாய் இணைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள், நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைப் பணிகள் ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p> <h2>வால்வெட்டி தாங்கல் குளம்</h2><p>இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-195க்குட்பட்ட தலைமை செயலக அலுவலர் குடியிருப்பு பகுதியில் ரூ.12.42 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறு பாலம் மற்றும் கால்வாய் மேம்பாட்டு பணிகள், செம்மஞ்சேரி-தாழம்பூர் பகுதியில் அமைந்துள்ள வால்வெட்டி தாங்கல் குளத்தினை ரூ.19.93 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p> <p>இந்த ஆய்வின்போது, மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) நடைபெற்று வரும் பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மற்றும் அலுவலர் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கடும் வெயில் எதிரொலி: நாகை மாவட்டத்தில் தீவிரமடையும் உப்பு உற்பத்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/impact-of-intense-heat-salt-production-intensifies-in-nagapattinam-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/impact-of-intense-heat-salt-production-intensifies-in-nagapattinam-district#comments</comments><guid isPermaLink="false">8e57a81e-2b1b-4c26-8c39-c91b5d4a6efe</guid><pubDate>Wed, 15 Jul 2026 15:52:58 +0000</pubDate><atom:updated>2026-07-15T15:52:58.441Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagapattinam,உப்பு உற்பத்தி,நாகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/f6vek9rr/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/f6vek9rr/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகை,</p><p>நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக, உப்பு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட 6 லட்சம் டன் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, தொழிலாளர்கள் அதிகாலை மூன்று மணி முதலே உப்பு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ள நிலையில், உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளதால் இந்த பகுதிகள் முழுவதும் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காட்சியளித்து வருகின்றன. </p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில் கைதி மரணம்; கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார் உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-prisoners-death-minister-nirmal-kumar-assures-strict-action-will-be-taken</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-prisoners-death-minister-nirmal-kumar-assures-strict-action-will-be-taken#comments</comments><guid isPermaLink="false">15af5c0c-1b14-4914-8c33-fe13091bcb32</guid><pubDate>Wed, 15 Jul 2026 15:40:45 +0000</pubDate><atom:updated>2026-07-15T15:40:45.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,Minister Nirmalkumar,அமைச்சர் நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/o042wdtv/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/o042wdtv/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>நாகர்கோவில்ல நீதிமன்ற காவலில் கைதி மரணம் அடைந்த சம்பவத்தில தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-</p><p>“நாகர்கோவிலில் கைதி உயிரிழந்த சம்பவத்தில், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>அதிகார அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. </p><p>சிறைத்துறையில் காவலர்கள் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை. காவல்துறைக்கு ஈடாக ஊதியமும் வழங்கப்படவில்லை. அனைத்தையும் சரிசெய்வதற்கான வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முட்டை விலை மீண்டும் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-rise-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-rise-again#comments</comments><guid isPermaLink="false">f300830e-a21f-4fe0-b47e-5b2a9854d92f</guid><pubDate>Wed, 15 Jul 2026 15:21:59 +0000</pubDate><atom:updated>2026-07-15T15:21:59.061Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டை விலை,egg price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/2s98chnt/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/2s98chnt/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>5 காசுகள் உயர்வு</h2><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 675 காசுகளாக (ரூ.6.75) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 680 காசுகளாக (ரூ.6.80) அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் மூலம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் முட்டை விலை ரூ.7.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>மூலப்பொருட்களின் விலை உயர்வு</h2><p>விற்பனை அதிகரிப்பு, கோழித்தீவன மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலையேற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெரும்பாலான கடைகளில் சில்லறை விற்பனையில் தற்போது ரூ.8 என்றிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக் குஞ்சுகள் இறந்தன</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/600-chickens-died-after-being-bitten-by-stray-dogs-near-modakurichi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/600-chickens-died-after-being-bitten-by-stray-dogs-near-modakurichi#comments</comments><guid isPermaLink="false">f036952d-a06a-4703-a030-f82a41866507</guid><pubDate>Wed, 15 Jul 2026 15:21:10 +0000</pubDate><atom:updated>2026-07-15T15:21:10.803Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>stray dogs,தெருநாய்கள்,கடித்து,chickens,கோழிக்குஞ்சு,Bitter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/jqg3gqvc/chicken.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோழிக் குஞ்சுகள் இறந்தன]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/jqg3gqvc/chicken.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p> மொடக்குறிச்சி அருகே நள்ளிரவில் கோழிப்பண்ணைக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில் ஏராளமான கோழிக்குஞ்சுகள் இறந்தன.</p><h2>நாட்டுக்கோழிப்பண்ணை</h2><p>ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொமரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 64). விவசாயியான இவர், தனது வீட்டின் முன்பாக 3 பெரிய ஷெட்டுகள் அமைத்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88">நாட்டுக்கோழிப்பண்ணை</a> நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் வளர்ப்பிற்காகப் பொறிக்கப்பட்டு 2 மாதங்களே ஆன 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிக்குஞ்சுகள் அடைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தன.</p><h2>நள்ளிரவில் நடந்த பயங்கரம்</h2><p>வழக்கம் போல் பண்ணை பணிகளை முடித்துவிட்டு கணேசன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கோழிப்பண்ணையில் இருந்து கோழிக்குஞ்சுகள் பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்த கணேசன், பதறியடித்துக் கொண்டு ஓடிவந்து பண்ணைக்குள் சென்று பார்த்தார்.</p><p>அப்போது, அப்பகுதியில் சுற்றித் திரியும் 4 தெருநாய்கள் பண்ணையின் பாதுகாப்பு வேலியைத் தாண்டி உள்ளே புகுந்து, கோழிக்குஞ்சுகளைக் கடித்துக் குதறி அட்டகாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><h2>தெருநாய்களை அடித்து விரட்டினர் </h2><p>நாய்களைக் கண்ட கணேசன், உடனடியாக பண்ணைக்குள் சென்று அந்த தெருநாய்களைத் துரத்த முயன்றார். ஆனால், வெறிகொண்ட நிலையில் இருந்த நாய்களை அவரால் தனியாகத் துரத்த முடியவில்லை. இதையடுத்து, அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்து உதவிக்கு அழைத்தார்.சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தடி மற்றும் கம்புகளுடன் பண்ணைக்குள் புகுந்து, அட்டகாசம் செய்த தெருநாய்களை அடித்து விரட்டினர். </p> <h2>மக்கள் கோரிக்கை</h2><p>இருப்பினும், நாய்கள் கடித்ததில் ஏராளமான கோழிக்குஞ்சுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.இச்சம்பவம் விவசாயி கணேசனுக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொமரம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காமராஜர் பிறந்தநாளையொட்டி &apos;கல்வியைக் கொண்டாடுவோம்&apos; என்ற தலைப்பில் போட்டிகள் - தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/competitions-on-the-theme-lets-celebrate-education-on-the-occasion-of-kamarajs-birthday-tamil-nadu-government-notification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/competitions-on-the-theme-lets-celebrate-education-on-the-occasion-of-kamarajs-birthday-tamil-nadu-government-notification#comments</comments><guid isPermaLink="false">4c00990f-cd8f-4264-88f8-fc37f72ab30b</guid><pubDate>Wed, 15 Jul 2026 15:10:53 +0000</pubDate><atom:updated>2026-07-15T15:10:53.452Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>birthday,Tamil Nadu Government,பிறந்தநாள்,தமிழக அரசு அறிவிப்பு,காமராஜர்,Competitions,போட்டிகள்,Kamaraj</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/qd37lsrw/govt.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/qd37lsrw/govt.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காமராஜரின் பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.</p><h2>கல்வியின் கதவுகளை திறந்தார்</h2><p>"ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும்" என்ற உயரிய கனவை நனவாக்க, தனது வாழ்நாளையே கல்விக்காக அர்ப்பணித்து ஆயிரக்கணக்கான புதிய பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி, ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வியின் கதவுகளை திறந்தார். அதன் விளைவாக பள்ளிகளில் மாணவர்சேர்க்கை உயர்ந்து, இடைநிற்றல் விகிதம் குறைந்தது. </p><h2>கல்வியைக் கொண்டாடுவோம்</h2><p>அத்தகைய கல்வி புரட்சியை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவின்படி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு</a>, கல்வியின் முக்கியத்துவத்தைப் பரப்பவும், மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், செய்தி மக்கள் தொடர்புத் துறை "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் பல்வேறு சிறப்பு போட்டிகளை நடத்தவுள்ளது.</p><h2>போட்டிகளின் விவரம்</h2><p><strong>1. வினாடி வினாப் போட்டி (Quiz Competition)</strong></p><p>பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அளித்த பங்களிப்புகளைப் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்கள் அறியும் நோக்குடன் இப்போட்டி</p><p>பிரிவுகள்:</p><p>5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை</p><p>9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு வரை</p><p>11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை</p> <p><strong>2. இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போட்டி (Instagram Story)</strong></p><p>தற்போதைய சூழலில் சமூக வலைதளத்தின் ஆதிக்கம் மற்றும் பலம் அதிகரித்துள்ளதால் "மக்களை உருவாக்கிய மாமனிதர்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, படைப்பாற்றல் மிக்க ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போட்டியை (Instagram Story) உருவாக்கி பகிரவும். (பகிரப்பட்ட ஸ்டோரியின் ஸ்கிரீன்ஷாட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்).</p><p>பிரிவு: அனைவருக்கும் பொதுவானது</p><p><strong>3. காட்சிப் பலகை / ஓவியம் / புகைப்படப் போட்டி</strong></p><p>எல்லையற்ற கல்வி என்ற கருப்பொருளில், தொழில்நுட்பத்தின் துணையுடன் குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் எதிர்காலக் கல்வியை கற்பனை செய்து, அதை ஓவியமாகவோ, புகைப்படமாகவோ அல்லது Al (Artificial Intelligence) தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட காட்சிப் பலகையாகவோ அனுப்ப வேண்டும்.</p><p>பிரிவு: அனைவருக்கும் பொதுவானது.</p><p><strong>4. ஏஐ தொழில்நுட்ப படைப்பு 2 Al Prompt 2 (Al Prompt Creation)</strong></p><p>பள்ளி மாணவர்களுக்கு: பெருந்தலைவர் காமராஜரை நேரில் சந்தித்தது போன்ற ஒரு தத்ரூபமான படத்தை ஏஐ (AI) மூலம் உருவாக்கி, அந்தப் படைப்புக்கான படைப்புடன் ('Prompt') சமர்ப்பிக்க வேண்டும். இப்படம் அவரது எளிமை மற்றும் கல்விப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.</p><p>பொதுமக்களுக்கு: பெருந்தலைவர் காமராஜரின் தொலைநோக்குப் பார்வை அல்லது</p><p>தலைமைத்துவத்தைப் போற்றும் வகையில் ஒரு கவிதை அல்லது பொன்மொழியுடன் கூடிய ஒரு படைப்பை ஏஐ (Al) மூலம் வடிவமைத்து, அதற்கான படைப்புடன் ('Prompt') அனுப்ப வேண்டும்.</p><p>குறிப்பு : சிறந்த படைப்பு மற்றும் சிறந்தபடைப்புக்கு ('Prompt') பரிசுகள் வழங்கப்படும்.</p><p><strong>5. தனித்திறமைப் போட்டி (Special Talent Short Video)</strong></p><p>பெருந்தலைவர் காமராஜர் குறித்த தங்களது தனித்திறமைகளை 1.30 நிமிட காணொளியாக எடுத்து அனுப்ப வேண்டும்.</p><p>தலைப்புகள்:</p><p>காமராஜருக்கு ஒரு கடிதம்,</p><p>நான் ஒரு நாள் கல்வி அமைச்சர்,</p><p>கல்வியே சிறந்த செல்வம்,</p><p>ஒரு புத்தகம் என் வாழ்க்கையை மாற்றியது,</p><p>காமராஜரும் கல்விப் புரட்சியும்.</p><p>பிரிவு: பள்ளி மாணவர்கள் (PRE-KG முதல் 5-ஆம் வகுப்பு வரை).</p><p><strong>6. குறும்படப் போட்டி (Short Film)</strong> </p><p>கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் குறும்படம் உருவாக்க வேண்டும்:</p><p>தலைப்புகள்:</p><p>1. படிப்போம்... படைப்போம்: கற்றல், சமத்துவம், நட்பு மற்றும் கனவுகளைப் போற்றும் வகையில் அமைய வேண்டும்.</p><p>2. முதல் பட்டதாரி: முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும் குழந்தையின் தாக்கம், குடும்பம் மற்றும் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்க வேண்டும்.</p><p>3. கல்வி புத்தகத்தில் அல்ல, பண்பில் தெரியும்: கல்வியின் உண்மையான அர்த்தம் நம் நடத்தையிலும், பிறரை மதிப்பதிலும் உள்ளது என்பதை உணர்த்த வேண்டும்.</p><p>(குறிப்பு : குறும்படம் 3 முதல் 7 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்)</p><p>பிரிவு: அனைவருக்கும் பொதுவானது.</p> <p>பின்குறிப்பு</p><p>போட்டிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு kalviyaikondaduvom@gmail.com என்ற மின்னஞ்சலை அணுகலாம்.</p><p>போட்டியில் கலந்து கொள்பவர்கள் கீழ்க்கண்ட விரைவு துலங்கள் குறியீடு (QR code) வாயிலாக தங்களது படைப்புகளை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><figure><img alt="குறியீடு (QR code) " src="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/zf8pohej/qr-code.jpg" /></figure><p><strong>விதிமுறைகள்</strong></p><p>1. வினாடி வினாப் போட்டி</p><p>1. 5-8, 9-10 மற்றும் 11-12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கான பிரிவில் மட்டுமே பங்கேற்க வேண்டும்.</p><p>2. ஒவ்வொரு மாணவரும் ஒருமுறை மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.</p><p>3. ஒரே மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்தால், முதல் பதிவு மட்டுமே பரிசீலிக்கப்படும்.</p><p>2. இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிடுவது</p><p>1. "மக்களை உருவாக்கிய மாமனிதர்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி  உருவாக்கப்பட வேண்டும்.</p><p>2. ஸ்டோரியை தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி கணக்கில் பதிவிட்டு, அதன் ஸ்கிரீன்ஷாட்டை போட்டிக்காக சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>3. ஸ்டோரி 24 மணி நேரம் பொதுப் பார்வைக்கு (Public) இருக்க வேண்டும்.</p><p>4. பிறரின் படைப்புகளை நகலெடுத்து (அ) பதிப்புரிமையை மீறும் (Copyright) உள்ளடக்கங்களைப் பயன்படுத்தக் கூடாது.</p><p>5.  ஸ்டோரி (Story-யில்) போட்டி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக் (Hashtag) )#kalviyaikondaduvom, #TNOfficial Updates)  Instagram Handle-  குறிப்பிட வேண்டும்.</p><p>3. காட்சிப் பலகை / ஓவியம் / புகைப்படப் போட்டி</p><p>1. "எல்லையற்ற கல்வி" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு காட்சிப் பலகை / ஓவியம் / புகைப்படம் உருவாக்கப்பட வேண்டும்.</p><p>2. போட்டிக்கான படைப்பு JPG, JPEG அல்லது PNG வடிவில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p><p>3. பதிவேற்றும் கோப்பின் அளவு அதிகபட்சம் 2 எம்பிக்குள் (MB-க்குள்) இருக்க வேண்டும்.</p><p>4. படைப்பு முழுமையாக பங்கேற்பாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.</p><p>5. படைப்பில் நீர்முத்திரை, சின்னம், கையொப்பம் (Watermark, Logo, Signature) அல்லது பெயர் இடம்பெறக் கூடாது.</p><p>6. கருப்பொருளுக்கு தொடர்பில்லாத படைப்புகள் மதிப்பீட்டிற்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.</p><p><strong>4. ஏஐ தொழில்நுட்ப படைப்பு (Al Prompt Creation)</strong></p><p>பள்ளி மாணவர்களுக்கு</p><p>1. "பள்ளி மாணவர்களுக்கான பிரிவில், பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்."</p><p>2. படைப்புடன், அதனை உருவாக்க பயன்படுத்திய ஏஐ தொழில்நுட்பம் (Al Prompt) கட்டாயம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>3. படைப்பும்  ஏஐ தொழில்நுட்பம்  (Al Prompt) பங்கேற்பாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.</p><p>4. சமர்ப்பிக்கப்படும் படைப்பு கோப்பு (PDF) வடிவில் இருக்க வேண்டும். அதில் முதலில்  ஏஐ (Al) மூலம் உருவாக்கப்பட்ட படம் இடம்பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து, அந்தப் படத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்ட முழுமையான Prompt கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும்.</p><p>5. ஒவ்வொரு மாணவரும் ஒரு படைப்பை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.</p><p><strong>பொதுமக்களுக்கு:</strong></p><p>1. இப்போட்டியில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்கலாம்.</p><p>2. படைப்புடன், அதனை உருவாக்க பயன்படுத்திய செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பம் (Al Prompt) கட்டாயம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>3. படைப்பும் ஏஐ தொழில்நுட்பம் (Al Prompt) பங்கேற்பாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.</p><p>4. ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒரு படைப்பை மட்டுமே சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்.</p><p>5. படைப்பில் வன்முறை, ஆபாசம், வெறுப்புணர்வைத் தூண்டும், மத அல்லது சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளடக்கங்கள் இடம்பெறக் கூடாது.</p><p>6. சமர்ப்பிக்கப்படும் படைப்பு பிடி கோப்பு (PDF) வடிவில் இருக்க வேண்டும். அதில் முதலில் ஏஐ (Al) மூலம் உருவாக்கப்பட்ட படம் இடம்பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து, அந்தப் படத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்ட முழுமையான தொழில்நுட்பம்  (Prompt) கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும்.</p><p><strong>5. Special Talent (Short video)</strong></p><p>1. போட்டியில் ப்ரீ-கேஜி (Pre-KG) முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.</p><p>2. குறும்படத்தின் அதிகபட்ச கால அளவு 1 நிமிடம் 30 விநாடிகள் மட்டுமே இருக்க வேண்டும்.</p><p>3. "வீடியோவின் அளவு அதிகபட்சம் 100 எம்.பி (MB) ஆக இருத்தல் வேண்டும்."</p><p>4. "பேச்சு, நடிப்பு, கவிதை, கதை சொல்லல் உள்ளிட்ட எந்தவொரு படைப்பாற்றல் வடிவிலும் வீடியோவை உருவாக்கலாம்."</p><p>5. வீடியோ தமிழ் மொழியில் மட்டுமே இருக்க வேண்டும்.</p><p>6. மாணவரின் முகம் தெளிவாக தெரிவதுடன், அவரின் குரலிலேயே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.</p> <p><strong>குறும்படப் போட்டி (Short Film)</strong></p><p>1. இப்போட்டியில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்கலாம்.</p><p>2. குறும்படத்தின் கால அளவு குறைந்தபட்சம் 3 நிமிடத்திலிருந்து 7 நிமிடம் இருக்க வேண்டும்.</p><p>3. குறும்படத்தின் அளவு அதிகபட்சம் 100 எம்.பி (MB) ஆக இருத்தல் வேண்டும்.</p><p>4. குறும்படம் பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்.</p><p>* படிப்போம்... படைப்போம்</p><p>* முதல் பட்டதாரி (The First Graduate)</p><p>* கல்வி புத்தகத்தில் அல்ல, பண்பில் தெரியும்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் அத்துமீறல்: ஜிம் பயிற்சியாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gym-trainer-arrested-for-raping-woman-on-the-pretext-of-getting-her-a-job</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gym-trainer-arrested-for-raping-woman-on-the-pretext-of-getting-her-a-job#comments</comments><guid isPermaLink="false">f86f4675-95d0-4316-bea7-f9c15d68b4a7</guid><pubDate>Wed, 15 Jul 2026 14:57:33 +0000</pubDate><atom:updated>2026-07-15T14:57:33.624Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,arrest,Complaint,புகார்,போலீஸ்Police,Sexual harassment- பாலியல் தொல்லை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/9mhtaswu/226.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/9mhtaswu/226.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் திருமணமான 22 வயது அண்ணாநகர், பெண் 5 வது அவென்யூவில் உள்ள ஓட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அந்த பெண்னை வழிமறித்து வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது, விருப்பம் உள்ளதா? என கேட்பார். அதற்கு அந்த பெண் சம்மதித்தார். </p><p>உடனே அவரை அண்ணா நகர், 2-வது அவென்யூவில் உள்ள ஒரு கடைக்கு மேல் அழைத்துச்சென்று மாடி மற்றும் மாடிப்படிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் மாடியை காட்டுகிறேன் என சென்று, அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பெண் சத்தம்போடவே, அந்த நபர் தப்பிச் சென்றார்.</p><h2>கைது</h2><p>பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார், அண்ணாநகர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார்</a> பி. என்.எஸ். மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து பாலியல் தொல்லை கொடுத்த திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் கன்னடபாளையத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 37) என்பவரை கைது செய்தனர். கைதான ஆனந்தன் ஜிம் பயிற்சியாளர் மற்றும் பகுதி நேர கார் டிரைவராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title> கிருஷ்ணகிரி: பாரூர் பெரிய ஏரியிலிருந்து  130 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-tamil-nadu-government-orders-the-release-of-water-from-barur-big-lake-for-130-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-tamil-nadu-government-orders-the-release-of-water-from-barur-big-lake-for-130-days#comments</comments><guid isPermaLink="false">6e49742b-d80f-43cb-ae53-83dc0a5c5d6e</guid><pubDate>Wed, 15 Jul 2026 14:20:25 +0000</pubDate><atom:updated>2026-07-15T14:20:25.231Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,Krishnagiri,தமிழக அரசு உத்தரவு,in the lake,பெரிய ஏரி,தண்ணீர்water,Tamil Nadu Government Order</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ejb1et16/Barur-Big-Lake.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாரூர் பெரிய ஏரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ejb1et16/Barur-Big-Lake.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> கிருஷ்ணகிரி,</p><p> கிருஷ்ணகிரி பாரூர் பெரிய ஏரியிலிருந்து  130 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>தண்ணீர் திறந்து விட உத்தரவு</h2><p> தமிழ்நாடு முதல்-அமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் ஐந்து நாட்களுக்கு நாற்றுவிட தண்ணீர் விட்டும் பிறகு முறைப்பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறந்துவிட்டும்.</p> <h2>130 நாட்கள்</h2><p> 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6.00 மி.க.அடி வீதம் 16.07.2026 முதல் 22.11.2026 வரை 130 நாட்களுக்கு மொத்தம் 361.00 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து முதல் போக சாகுபடிக்கு 2397 ஏக்கருக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81">தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது</a>.</p> <p> இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி துப்பாக்கி முனையில் கைது - ஓட்டேரி போலீசார் அதிரடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-wanted-in-murder-case-arrested-at-gunpoint-otteri-polices-swift-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-wanted-in-murder-case-arrested-at-gunpoint-otteri-polices-swift-action#comments</comments><guid isPermaLink="false">94c4c5be-6333-472c-81f8-bfb678a61620</guid><pubDate>Wed, 15 Jul 2026 14:02:19 +0000</pubDate><atom:updated>2026-07-15T14:02:19.228Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,police,போலீஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/oiaobcii/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/oiaobcii/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையின் புறநகர் பகுதியான ஓட்டேரியை சேர்ந்த சிலம்பு என்ற சிலம்பரசன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஏ பிளஸ் ரவுடியாக கருதப்படும் சிலம்பராசன், கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அவரது இருப்பிடத்தை கண்டறிய போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். </p><p>இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை பள்ளிக்கரணையில் இன்று துப்பாக்கி முனையில் ஓட்டேரி போலீசாரால் சிலம்பரசன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சிலம்பரசனிடம் இருந்து 2 செல்போன்கள், நாட்டுத் துப்பாக்கி, ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். </p><p>கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டின் அடிப்படையில் சிலம்பரசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஓட்டேரி காவல் நிலையத்தில் வைத்து சிலம்பரசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>குற்றச் செயல்களை தடுக்க தமிழக போலீஸ் அதிரடி: 822 ரவுடிகள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-police-action-to-prevent-crime-822-rowdies-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-police-action-to-prevent-crime-822-rowdies-arrested#comments</comments><guid isPermaLink="false">670776fe-c859-4b0f-a754-df75dcaa2d45</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:59:54 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:59:54.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Criminal,கைதுArrest,போலீஸ்Police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/xbwkabfh/237.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மகேஷ் குமார் அகர்வால்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/xbwkabfh/237.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குற்றச்செயல்களை தடுக்க தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர். </p><p>இது தொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக. காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D#google_vignette">மகேஷ் குமார் அகர்வால்</a>, உத்தரப்படி மாநிலம் முழுவதும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் (History Sheet Rowdies), குற்ற குணத்தார் (Bad Characters). மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>சோதனை</h2><p>கடந்த 08.07.2026 முதல் 14.07.2026 வரை. சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் மீது மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளின் போது 22,519 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர். அவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 822 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.</p><h2>கைது</h2><p>பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையில் 08.07.2026 முதல் 14.07.2026 வரை மொத்தம் 2,648 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் (NBW) நிறைவேற்றுதல் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதற்கான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>மாநிலம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு, சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்ற குணத்தார், தொடர் குற்றவாளிகள், மற்றும் சமூக விரோதிகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும், வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நெருக்கமான கண்காணிப்புகள் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகள் கண்காணிப்பு பணிக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்தியுள்ளதுடன், தடுப்பு காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பிடியாணைகள் நிறைவேற்றுதலை அதிகரித்து, தொடர் குற்றவாளிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு எதிராக இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்க உதவியுள்ளன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கை உயர்தரத்தில் பராமரிப்பதற்கும், பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 108 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-tamil-nadu-government-orders-the-release-of-water-from-kodumudiaru-reservoir-for-108-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-tamil-nadu-government-orders-the-release-of-water-from-kodumudiaru-reservoir-for-108-days#comments</comments><guid isPermaLink="false">f8700b4d-d951-4174-aacf-60907586cc4b</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:55:21 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:55:21.527Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,கொடுமுடியாறு அணை,தமிழக அரசு உத்தரவு,தண்ணீர்water,Tamil Nadu Government Order</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/xy5qu4pk/Kodumudiaru-Dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொடுமுடியாறு நீர்த்தேக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/xy5qu4pk/Kodumudiaru-Dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>திருநெல்வேலி கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 108 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தண்ணீர் திறந்து விட உத்தரவு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருக்குறுங்குடி கிராமத்தில், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகளான 2,548.94 ஏக்கர் நிலங்களுக்கு கார் பருவ சாகுபடி செய்வதற்கு 16.07.2026 முதல் 31.10.2026 முடிய 108 நாட்களுக்கு, வினாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81">தண்ணீர் திறந்து விட உத்தரவு</a>.</p> <h2>வடமலையான்கால்</h2><p> நீர்த்தேக்கத்திலிருந்து கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3231.97 ஏக்கர் நிலங்களுக்கும் சேர்த்து வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.</p><p>இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டத்தில் உள்ள 5,780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-release-of-water-from-krishnagiri-reservoir-for-120-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-release-of-water-from-krishnagiri-reservoir-for-120-days#comments</comments><guid isPermaLink="false">6d444edd-49c0-46d3-91ba-2d473b8309cd</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:41:50 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:41:50.103Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,கிருஷ்ணகிரி,Krishnagiri</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/t6ni4m5m/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/t6ni4m5m/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து 16-ந்தேதி(நாளை) முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p> <p>“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து 2026-27 ஆம் ஆண்டின் முதல் போக பாசனத்திற்கு வலது மற்றும் இடதுபுறக்கால்வாய்களில் 16.07.2026 முதல் 12.11.2026 வரை 120 நாட்களுக்கு மொத்தம் 1563 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டம் மற்றும் மாவட்டத்திலுள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி, ஒரத்தநாடு கால்நடை கல்லூரிகளுக்கு புதிய மாணவியர் விடுதிகள்: திறந்து வைத்த அமைச்சர் கமலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-hostels-for-veterinary-colleges-in-tirunelveli-and-orathanadu-minister-kamali-inaugurates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-hostels-for-veterinary-colleges-in-tirunelveli-and-orathanadu-minister-kamali-inaugurates#comments</comments><guid isPermaLink="false">785c2c6b-20ea-4bed-89f6-a119c41f957e</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:21:56 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:21:56.020Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கால்நடை மருத்துவம்,hostel,விடுதிகள்,Veterinary College,அமைச்சர் கமலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/co31s27h/236.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் கமலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/co31s27h/236.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நல்லாசியுடன், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  கமலி, இன்று காலை 10.00 மணிக்கு, சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS), திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றிற்காக புதிதாக கட்டப்பட்ட மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.</p><h2>மாணவியர் விடுதி</h2><p>திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.475.00 லட்சம் மதிப்பீட்டிலும், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.456.00 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் மாணவியர் விடுதிகள், இளங்கலை மற்றும் முதுகலை கால்நடை மருத்துவ மாணவியர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் தங்கி கல்வி பயிலும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>விடுதிக் கட்டடங்களைத் திறந்து வைத்ததை தொடர்ந்து, அமைச்சர் மாதவரம் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கப்பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்தார். மேலும், தரமான கல்வி மற்றும் மாணவர் நலனை மேம்படுத்தும் நோக்கில் உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், பல்கலைக்கழகம் மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளை பாராட்டினார்.</p><h2>பெருந்தலைவர் காமராஜர்</h2><p>மேலும், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு செயலாளர் அனு ஜார்ஜ், மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) டாக்டர் ஆர். நரேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பல்கலைக்கழக அலுவலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.</p><p>திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் எஸ்.சி.எட்வின், அக்கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்களுடன், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் டி. ஏ. கண்ணன், அக்கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்களுடன் தங்களது கல்லூரி வளாகங்களிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultative-meeting-of-aiadmk-district-functionaries-led-by-edappadi-palaniswami-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultative-meeting-of-aiadmk-district-functionaries-led-by-edappadi-palaniswami-2#comments</comments><guid isPermaLink="false">f6f32c95-810f-403c-a0aa-653e99f4dfdf</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:11:34 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:11:34.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,AIADMK,Consultative meeting,ஆலோசனை கூட்டம்,மாவட்ட நிர்வாகிகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/dy42lrgm/eps.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/dy42lrgm/eps.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கலந்தாலோசனை கூட்டம்</h2><p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி கே. பழனிசாமி</a> தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு, மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.</p><p><strong>கூட்டம் நடைபெறும் தேதி,கிழமை,நேரம் மற்றும் பங்குபெறும் மாவட்டங்களின் விவரங்கள்:-</strong></p><p><strong>20.7.2026 -  திங்கள்</strong></p><p>காலை 10 மணி மதுரை மாநகர்</p><p>காலை 11.30 மணி ராமநாதபுரம்</p><p>மாலை 4.30 மணி மதுரை புறநகர் கிழக்கு மதுரை புறநகர் மேற்கு</p><p><strong>21.7.2026 –  செவ்வாய்</strong></p><p>காலை 10 மணி தென்காசி வடக்கு தென்காசி தெற்கு</p><p>காலை 11.30 மணி கன்னியாகுமரி கிழக்கு கன்னியாகுமரி மேற்கு</p><p>மாலை 4.30 மணி தூத்துக்குடி வடக்கு தூத்துக்குடி தெற்கு</p> <p> <strong>22.7.2026 - புதன்</strong></p><p>காலை 10 மணி திருப்பூர் மாநகர் திருப்பூர் புறநகர் மேற்கு</p><p>காலை 11.30 மணி திருப்பூர் புறநகர் கிழக்கு</p><p>மாலை 4 மணி நாமக்கல்</p><p>மாலை 5.30 மணி வட சென்னை தெற்கு (கிழக்கு) வட சென்னை தெற்கு (மேற்கு)</p> <p><strong>23.7.2026 - வியாழன்</strong></p><p>காலை 10 மணி கோவை மாநகர் கோவை புறநகர் வடக்கு</p><p>காலை 11.30 மணி கோவை புறநகர் தெற்கு கோவை புறநகர் மத்தியம்</p><p>மாலை 4 மணி திண்டுக்கல் கிழக்கு திண்டுக்கல் மேற்கு</p><p>மாலை 5.30 மணி வட சென்னை வடக்கு (கிழக்கு) வட சென்னை வடக்கு (மேற்கு)</p><p><strong>24.7.2026 - வெள்ளி</strong></p><p>காலை 10 மணி விழுப்புரம்</p><p>காலை 11.30 மணி திருவாரூர்</p><p>மாலை 4.30 மணி சேலம் மாநகர் சேலம் புறநகர்</p> <p><strong>25.7.2026 - சனி</strong></p><p>காலை 10 மணி கள்ளக்குறிச்சி</p><p>காலை 11.30 மணி தென் சென்னை வடக்கு (கிழக்கு) தென் சென்னை தெற்கு (கிழக்கு)</p><p>மாலை 4 மணி தென் சென்னை வடக்கு (மேற்கு) தென் சென்னை தெற்கு (மேற்கு)</p><p>மாலை 5.30 மணி சென்னை புறநகர் திருவள்ளூர் தெற்கு</p> <p>இந்த ஆலோசனை கூட்டங்களில், நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகள் குறித்தும்; கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘காவல்துறையே மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறும் அவலம் இனிமேலும் தொடரக் கூடாது’ - எஸ்.டி.பி.ஐ. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-deplorable-situation-where-the-police-force-itself-becomes-a-threat-to-peoples-lives-must-not-continue-any-longer-sdpi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-deplorable-situation-where-the-police-force-itself-becomes-a-threat-to-peoples-lives-must-not-continue-any-longer-sdpi#comments</comments><guid isPermaLink="false">8299612f-8582-4c65-bb08-2ae17721c780</guid><pubDate>Wed, 15 Jul 2026 12:37:25 +0000</pubDate><atom:updated>2026-07-15T12:37:25.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>sdpi,எஸ்.டி.பி.ஐ.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/xki03yhz/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/xki03yhz/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கிளைச் சிறையில், குட்கா புகையிலை விற்பனை தொடர்பான புகாரில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன், சிறைத்துறையினரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. </p><p>அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதும், அவர் சித்ரவதை செய்து படுகொலை செய்யப்பட்டிருப்பதும் உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது. மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த கொடூர அராஜகப் போக்கை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>தமிழகத்தில் தொடரும் காவல் நிலைய மற்றும் சிறை மரணங்கள், காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம், முறையற்ற விசாரணை முறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் இன்மையையே மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கின்றன. காவல்துறையில் மனிதாபிமானமற்ற செயல்களுக்கும், இத்தகைய முறையற்ற காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளுக்கும் எவ்வித இடமும் அளிக்கக் கூடாது. காவல்துறை என்பது மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறும் அவலம் இனிமேலும் தொடரக் கூடாது. தமிழகத்தில் இனி ஒரு காவல் மரணம் கூட நிகழாத நிலையை உருவாக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>உயிரிழந்த சபரிவர்மனின் குடும்பம் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், தமிழக அரசு உடனடியாக அக்குடும்பத்திற்கு உரிய அரசு வேலை மற்றும் தகுந்த நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். இச்சம்பவத்தை அரசு மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, தவறு செய்த காவலர்கள் மற்றும் சிறைத்துறை ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். </p><p>அப்பாவிகள் மீது தாக்குதல், சித்ரவதை மற்றும் காவல் மரணங்களுக்கு காரணமான அனைத்து காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தப்பவிடாமல் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு காவல் மற்றும் சிறை மரணங்கள் குறித்தும் முறையான, வெளிப்படையான நீதித்துறை விசாரணை கட்டாயமாக்கப்பட வேண்டும்.</p><p>இத்தகைய மரணங்களைத் தடுக்கவும், தமிழக காவல்துறையின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் களையவும் அவசர அவசியமாக உறுதியான காவல்துறை சீர்திருத்தங்களை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். காவல்துறை மக்களின் பாதுகாவலராகச் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு உடனடியாக இது குறித்து ஆலோசித்து, காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கீரனூர்: 2 கார்களுக்கு இடையே சிக்கி மாமியார், மருமகள் பலி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/keeranur-mother-in-law-and-daughter-in-law-killed-after-being-caught-between-two-cars</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/keeranur-mother-in-law-and-daughter-in-law-killed-after-being-caught-between-two-cars#comments</comments><guid isPermaLink="false">4a997cbd-9c96-4d96-916f-0f4507a6ad20</guid><pubDate>Wed, 15 Jul 2026 12:12:55 +0000</pubDate><atom:updated>2026-07-15T12:12:55.271Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,புதுக்கோட்டை,உயிரிழப்பு,மாமியார்-மருமகள்,Keeranur,Mother-in-law and daughter-in-law</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/clh3qt05/keeranur-accident.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ விபத்தில் சிக்கிய வாகனங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கீரனூரில் 2 கார்களுக்கு இடையே சிக்கி மாமியார்- மருமகள் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/clh3qt05/keeranur-accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 2 கார்களுக்கு இடையே சிக்கி மாமியார், மருமகள் பலியாகினர்.</p><h2>விபத்தும், உயிரிழப்பும்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">புதுக்கோட்டை மாவட்டம் </a>கீரனூர் அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரு கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது, எதிர்பாராதவிதமாக அந்த இரு கார்களுக்கும் இடையே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இரண்டு பெண்கள்</a> சிக்கிக் கொண்டனர். </p><p>கார்களுக்கு இடையில்  சிக்கிய ஸ்கூட்டர் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் ஸ்கூட்டரில் பயணித்த மருமகள் சாந்தி மற்றும் அவரது மாமியார் வீராயி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். </p><p>மேலும், விபத்துக்கு காரணமான கார்களின் ஓட்டுநர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/150-additional-medical-seats-allocated-to-tamil-nadu-government-medical-colleges-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/150-additional-medical-seats-allocated-to-tamil-nadu-government-medical-colleges-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">36a1d4cb-9135-449d-a384-f80fb07ef39c</guid><pubDate>Wed, 15 Jul 2026 12:10:10 +0000</pubDate><atom:updated>2026-07-15T12:10:10.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,தமிழக அரசு,Medical Colleges,மருத்துவ கல்லூரிகள்,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/l1ocy3cs/arunraj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/l1ocy3cs/arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 150 இளங்கலை மருத்துவ இடங்களைப் பெற்று, மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளதாக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தகவல்.</p><h2>கூடுதல் இளங்கலை மருத்துவ இடங்கள்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம், நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்கனவே உள்ள மருத்துவ இடங்களுடன் தலா 50 இளங்கலை மருத்துவ இடங்களைக் கூடுதலாக வழங்கியுள்ளது. அதன்படி, இந்த மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைத் திறன் தலா 100-லிருந்து 150 இடங்களாக உயர்ந்துள்ளது.</p><h2>அறிக்கை</h2><p>மாநில சுகாதாரத்துறையின் தீவிர உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விதிமுறை இணக்க அறிக்கைகள் ஆகியவற்றின் மூலம், தமிழ்நாடு அரசு இதுவரை மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,200 இடங்களாக வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது.</p><h2>உறுதியாக உள்ளது</h2><p>மருத்துவ உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான நமது தொடர்ச்சியான முயற்சிகளை இந்த விரிவாக்கம் பிரதிபலிக்கிறது. நாட்டின் முதன்மை சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி மையமாக நமது மாநிலத்தின் நிலையைத் தக்கவைத்துக்கொள்வதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.</p><p>நடப்பு 2026-27 கல்வியாண்டில் வரவிருக்கும் மாநில கலந்தாய்வு செயல்முறையில் இந்த 150 கூடுதல் இடங்களை சுமூகமாக ஒருங்கிணைக்க மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையானது இறுதி செய்யப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய இட ஒதுக்கீட்டுப் பட்டியலை கண்டிப்பாகப் பின்பற்றி நடைபெறும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலம் நீட்டிப்பு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tn-chief-secretary-m-sai-kumars-service-extended-extension-sought</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tn-chief-secretary-m-sai-kumars-service-extended-extension-sought#comments</comments><guid isPermaLink="false">5330ded9-0198-4d1a-b663-dd5a6d1ad7d1</guid><pubDate>Wed, 15 Jul 2026 11:29:57 +0000</pubDate><atom:updated>2026-07-15T11:29:57.206Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக தலைமை செயலாளர்,Chief Secretary,தலைமை செயலாளர்,சாய்குமார்,Saikumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/jzpk2qlu/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/jzpk2qlu/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் தலைமை செயலாளர் <a href="https://www.dailythanthi.com/">சாய்குமார்</a>. இவரை கடந்த ஏப்ரல் 23ம் தேதி தலைமை செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்தது. சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு முன்னாள் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.</p><p>1990ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சாய்குமார் மதுரை, தர்மபுரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். மேலும், தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.</p><h2>பதவி காலம் நீட்டிப்பு</h2><p>இதனிடையே, தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவிகாலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய இருந்தது. ஆனால், சாய்குமாரின் பதவி காலத்தை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.</p><p>இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவடைய இருந்த தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலம் ( 6 மாதங்கள் நீட்டிப்பு) அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>ஓய்வூதியம் என்பது சலுகையல்ல; அது உரிமை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pension-is-not-a-privilege-it-is-a-right-communist-party-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pension-is-not-a-privilege-it-is-a-right-communist-party-of-india#comments</comments><guid isPermaLink="false">d37c1fdf-b7b7-4c91-975f-232182b29063</guid><pubDate>Wed, 15 Jul 2026 11:03:19 +0000</pubDate><atom:updated>2026-07-15T11:03:19.506Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,pension,ஓய்வூதியம்,RIGHT,சலுகை,Retirees,உரிமை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/s3k35twj/M.-Veerapandian.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/s3k35twj/M.-Veerapandian.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஓய்வூதியம் என்பது சலுகையல்ல; அது உரிமை. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்.</p><p>இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி.</p><h2>ஓய்வூதியம் வழங்கப்படவில்லை</h2><p>தமிழ்நாட்டில் 2003 ஏப்ரல் 1 முதல் பணியில் சேர்ந்து, 31.12.2025 வரை ஓய்வு பெற்ற,  உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் (சிறிஷி) வரக்கூடிய ஊழியர்கள் 46 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20">இடைக்கால ஓய்வூதியம் </a>வழங்குவதற்காக 16.06.2026 அன்று அரசாணை 111  பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 01.01.2026 முதல் இடைக்கால ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.</p><h2> இடைக்கால ஓய்வூதியம்</h2><p>ஆனால் 31.12.2025 வரை ஓய்வு பெற்ற 46 ஆயிரம் பேருக்கு இந்த இடைக்கால ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு, 01.04.2003 முதல் பணியில் சேர்ந்து, 31.12.2025 வரை ஓய்வு பெற்ற அனைவருக்கும், இந்த இடைக்கால ஓய்வூதியம் ரூ.10,000-த்தை மாதம்தோறும் வழங்கிட வேண்டும்.</p> <h2>சமூகத்தின் கடமை</h2><p>ஓய்வூதியம் என்பது சலுகையல்ல; அது உரிமை. சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தங்களது கடந்த கால உழைப்புச் சக்தியை இச்சமூகத்திற்கு வழங்கியவர்களுக்கு, சமூகப் பொருளாதார பாதுகாப்பை வழங்க வேண்டியது இச் சமூகத்தின் கடமையாகும். ஊழியர்களின் கண்ணியமான வாழ்விற்கு ஓய்வூதியம் அவசியம் என உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது. எனவே, இடைக்கால ஓய்வூதியத்தை, இவ்வூழியர்களுக்கு வழங்குவதோடு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.</p> <h2>7864 பேர் மரணம்</h2><p>அது மட்டுமின்றி இந்த பணியாளர்களில் ஏறத்தாழ 7864 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவ்வாறு மரணமடைந்தவர்களின் இணையர்களுக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கிட வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலப் பத்திரப்பதிவு மோசடி: உடந்தையாக இருந்த மேலிடப் புள்ளிகள் யார்? - கிருஷ்ணசாமி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-deed-registration-scam-who-were-the-top-brass-involved-krishnasamy-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-deed-registration-scam-who-were-the-top-brass-involved-krishnasamy-questions#comments</comments><guid isPermaLink="false">9b8277cb-2fa4-442f-9f9e-55cc1ad4f867</guid><pubDate>Wed, 15 Jul 2026 10:57:13 +0000</pubDate><atom:updated>2026-07-15T10:57:13.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாக்டர் கிருஷ்ணசாமி,Dr. Krishnasamy,பத்திரப்பதிவு,Registration,Palani temple,பழனி கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/wxkmbnov/234.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிருஷ்ணசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/wxkmbnov/234.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதிய தமிழகம் கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20">கிருஷ்ணசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான, பழனியின் மையப்பகுதியில் கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்த ரூ. 100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை சட்ட விதிமுறைகளுக்கு மாறாக மூன்று தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்தது எப்படி?</p><h2>நில மோசடி</h2><p>இரவுகளில் கன்னக்கோல் போடுவதைப் பற்றியும், வீடு புகுந்து திருடுவதைப் பற்றியும், பிக்பாக்கெட் அடிப்பதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று?</p><p>பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில், பழனி நகராட்சியின் 3-ஆவது வார்டு, 25-ஆவது பிளாக்கில், சர்வே எண்கள் 998 மற்றும் 999-இல் உள்ள 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை, கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ், பழனி அருகே உள்ள பாப்பாங்குளம் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி அருகே உள்ள டி.கே.என் புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய மூவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும்; இதற்கு உடந்தையாகச் சார்பதிவாளர் மணிகண்டன் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவருகிறது. இந்த நிலம் ஆட்சேபனைக்குரியது என அறநிலையத்துறை ஆணை  இருப்பது தெரிந்தும், யாருடைய தூண்டுதலின் பேரில் அல்லது ஆதரவின் பேரில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.</p><h2>குற்றச்சாட்டு</h2><p>இந்த குற்றச்சாட்டு வெளியானவுடன், அடிமட்ட அளவில் சார்பதிவாளர் உள்ளிட்ட ஒருசிலர் பெயரைக் குறிப்பிட்டு வெறுமனே ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மை வெளிவராது. ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு மாதத்தில், சட்டமன்றத்திற்கு உள்ளும், பொதுவெளியிலும் விஜய் தூய ஆட்சியைப் பற்றி வலியுறுத்தி வருகிறார். ஆனால், பழனி முருகன் கோவில் சொந்தமான நிலம் சட்டவிரோதமாக சில தனிநபர்களின் பெயரில் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலிடப் புள்ளிகளின் ஆதரவு இல்லாமல் இந்த குற்றம் நடைபெற வாய்ப்பில்லை. தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆட்சி வந்த பிறகு எழுப்பப்பட்டிருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுவாகும். ஒரு அரசை வீழ்த்த 100 குற்றச்சாட்டுகள் தேவையில்லை; வலுவான ஒரு குற்றச்சாட்டே போதுமானது. </p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, விஜய் அரசு பழனி முருகன் கோவில் மோசடி நிலப்பத்திரபதிவு உண்மைத்தன்மையை நடுநிலையான, நேர்மையான, சுதந்திரமான விசாரணை, குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதியின் கீழ் நடத்தப்பட்டு, அந்த மேலிடப்புள்ளி யார் என்பது ஆன்மீகப் பெரியோர்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டு சமந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் கல்வி சூழல் கடும் கவலையை ஏற்படுத்துகிறது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-educational-landscape-is-a-cause-for-grave-concern-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-educational-landscape-is-a-cause-for-grave-concern-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">01628511-0b57-41bc-bcde-f60f0d52778a</guid><pubDate>Wed, 15 Jul 2026 10:35:36 +0000</pubDate><atom:updated>2026-07-15T10:35:36.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,கல்வி,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Educational,கவலை,In Tamil Nadu,சூழல்,grave</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/6shj7xfh/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/6shj7xfh/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் கல்வி சூழல் கடும் கவலையை ஏற்படுத்துவதாக பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறி உள்ளார்,.</p><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கவலை</h2><p>சிவகங்கை மாவட்டம் மல்லல் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களுக்கிடையேயான தகராறில் சகமாணவர் கத்தியால் தாக்கப்பட்டதாகவும், அதேபோல் நேற்றைய தினம் திருச்சி திருவெறும்பூர் அரசன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டதாகவும் வெளியான செய்திகள் தவெக அரசில் தமிழகத்தின் கல்வி சூழல் குறித்து கடும் கவலையை ஏற்படுத்துகின்றன.</p><h2>அலட்சிய போக்கே காரணம்</h2><p>அரசு பள்ளிகள் என்றாலே சாதனை மாணவர்கள் என்ற நிலை மாறி சமீப காலங்களாக தொடர்ந்து அவப்பெயரை பெற்று வருவதற்கு பள்ளி கல்வித் துறை மாணவர்கள் நலனில் காட்டும் அலட்சிய போக்கே காரணமாகும். கல்விக்கூடங்கள் அறிவை வளர்க்கும் இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, ஆயுதங்களும் வன்முறையும் நுழையும் இடங்களாக மாற கூடாது. செல்லும் பள்ளிகளிெலெல்லாம் ரீல்ஸ் எடுக்கும் தவெக-வினர் அதில் காட்டும் அக்கறையை மாணவர்கள் நலனில் காட்டியிருந்தாலே இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம்.</p><h2>துரித நடவடிக்கை</h2><p>எனவே அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பள்ளிகளில் மனநல ஆலோசனை, நன்னெறிக்கல்வி, மாணவர்களிடையே நட்பு மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கும் சிறப்பு விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் விதமாக துரித நடவடிக்கைகளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">பள்ளி கல்வித்துறை</a> செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை அருகே மரத்தில் மோதிய லாரி: டிரைவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/truck-crashes-into-a-tree-near-tiruvannamalai-driver-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/truck-crashes-into-a-tree-near-tiruvannamalai-driver-killed#comments</comments><guid isPermaLink="false">9019bc75-2e10-42b3-ae31-e3b3177bcc42</guid><pubDate>Wed, 15 Jul 2026 10:17:36 +0000</pubDate><atom:updated>2026-07-15T10:17:36.756Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,உயிரிழப்பு,injured,லாரிlorry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/kkh6ghql/233.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரத்தில் மோதிய லாரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/kkh6ghql/233.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கலசபாக்கம்,</p><p>ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி, கலசபாக்கம் அருகே சாலை ஓர மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். கிளீனர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>விபத்து</h2><p>ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரியை, செங்கம் அருகே பாய்ச்சல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (42) ஓட்டினார். அவருடன் திருவண்ணாமலை பாலாஜி நகரைச் சேர்ந்த சேகரன் (42) கிளீனராக பயணித்தார்.</p> <p>நேற்று அதிகாலை கலசபாக்கம் அருகே கொண்டம் காரியந்தல் பகுதியில் வந்தபோது, லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர், கலசபாக்கம் போலீசார் ஆகியோர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.</p><p>இந்த விபத்தில் டிரைவர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கிளீனர் சேகரன், சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘காமராஜரின் புகழை பாடக்கூடிய தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு’ - ராஜேந்திர பாலாஜி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-the-aiadmk-has-the-standing-to-sing-the-praises-of-kamarajar-rajendra-balaji</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-the-aiadmk-has-the-standing-to-sing-the-praises-of-kamarajar-rajendra-balaji#comments</comments><guid isPermaLink="false">428b5ee5-a414-45ab-8e5c-69b33975af6a</guid><pubDate>Wed, 15 Jul 2026 10:04:13 +0000</pubDate><atom:updated>2026-07-15T10:04:13.327Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kamarajar,காமராஜர்,ராஜேந்திர பாலாஜி,Rajendra Balaji</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/mtltctz0/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/mtltctz0/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ‘த.வெ.க.வின் கொள்கை தலைவர்களில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரும் ஒருவர். தற்போது தமிழ்நாட்டில் காமராஜரின் ஆட்சி நடைபெறுகிறதா?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்தபோது ராஜேந்திர பாலாஜி கூறியதாவது;-</p><p>“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பெருந்தலைவர் காமராஜர் ஒரு கவுரவ தலைவராகவும், வழிகாட்டியாகவும் உள்ளார். அவர் இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் இல்லை. அந்த அளவிற்கு, விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் கர்மவீரர் காமராஜர். அவரை த.வெ.க. மட்டுமே சொந்தம் கொண்டாடுவது என்பது பொருத்தமில்லாதது. </p><p>பெருந்தலைவர் காமராஜரின் உயர்வும், பண்பும் மிகப்பெரியது. அ.தி.மு.க.வை உருவாக்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ‘எனது தலைவர் பெருந்தலைவர் காமராஜர், எனது வழிகாட்டி அறிஞர் அண்ணா’ என்று கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு காமராஜரை மதிக்கின்ற கட்சி அ.தி.மு.க. இன்றைக்கும் காமராஜரின் பிறந்தநாள் விழாவை பெரிய அளவில் கொண்டாடக்கூடிய கட்சி அ.தி.மு.க.தான். </p><p>காமராஜரின் நூற்றாண்டு விழாவை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்பாக கொண்டாடினார். அதே போல் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்றும், பாசமும் கொண்டவர். எனவே காமராஜரின் புகழை பாடக்கூடிய முழு தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>குன்னூர்: ரெயில் நிலையத்திற்குள் புகுந்த கரடி.. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-enters-coonoor-railway-station-public-flee-in-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-enters-coonoor-railway-station-public-flee-in-panic#comments</comments><guid isPermaLink="false">acdebdc1-40f7-4a85-bf64-c379dd579413</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:49:10 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:49:10.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,people,ரெயில் நிலையம்,Railway Stations,bear,கரடிகள் நடமாட்டம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/5m00t3v7/coonur-bear.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ குன்னூர் ரெயில் நிலையத்தில் புகுந்த கரடி]]></media:title><media:description type="html"><![CDATA[ குன்னூர் ரெயில் நிலையத்தில் கரடி புகுந்ததால் மக்கள் அலறியடித்து ஓடினர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/5m00t3v7/coonur-bear.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீலகிரி மாவட்டம்</a> குன்னூர் அருகே ரெயில் நிலையத்திற்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.</p><h2>ரெயில் நிலையத்தில் புகுந்த கரடி</h2><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே  பழைய அருவங்காடு ரெயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்திற்குள் சமீபத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கரடி</a> ஒன்று புகுந்தது. அந்த கரடி, அங்கிருந்த பயணிகளையும் பொதுமக்களையும் தாக்குவது போல ஆக்ரோஷமாக பாய்ந்தது. இதனால் பீதியடைந்த  மக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>எனினும், அதிர்ஷ்டவசமாக கரடி யாரையும் தாக்காமல், அருகில் இருந்த அடர்ந்த புதருக்குள் ஓடி மறைந்தது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வந்தது.</p><p>அதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-medical-camp-at-kasimedu-fishing-harbour-minister-srinath-inaugurated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-medical-camp-at-kasimedu-fishing-harbour-minister-srinath-inaugurated#comments</comments><guid isPermaLink="false">a814accd-1918-45c8-ba1d-1cf30a15f3a7</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:46:39 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:46:39.806Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,medical camp,மருத்துவ முகாம்,அமைச்சர் ஸ்ரீநாத்,Minister Srinath</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/iumvwny0/232.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஸ்ரீநாத்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/iumvwny0/232.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காசிமேடு மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் மீனவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் ஸ்ரீநாத்</a> இன்று தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சிறப்பு மருத்துவ முகாம்</h2><p>மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் இன்று நடைபெற்ற மீனவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.</p><p>இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், தொற்று நோய்கள், இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் காசிமேடு பகுதியில் உள்ள காசிமாநகர், காசிபுரம், நாகூரார் தோட்டம், சிங்காரவேலன் நகர், அண்ணாநகர், திடீர் நகர், பல்லவன் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்</p><p>இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் விஜயகார்த்திகேயன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: பத்திரப்பதிவை ரத்து செய்தது மதுரை ஐகோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/justices-who-cancelled-the-deed-registration-in-the-temple-land-land-misappropriation-case-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/justices-who-cancelled-the-deed-registration-in-the-temple-land-land-misappropriation-case-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">61ced768-fe4e-4fad-8c47-6d2e59f7a726</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:32:57 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:32:57.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Case,வழக்கு,ரத்து,cancelled,பத்திரப்பதிவு,Registration,நில முறைகேடு,temple land,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/wn9h6pt9/high-court-madurai-bench.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஐகோர்ட் மதுரை கிளை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட் மதுரை கிளை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/wn9h6pt9/high-court-madurai-bench.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழனி கோவில் மடத்திற்கு சொந்தமான நில முறைகேடு வழக்கில் பத்திரப்பதிவை  ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்துள்ளது.</p><p>இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மேல்முறையீட்டு மனு</h2><p>பழனி அடிவாரம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">தண்டபாணி சுவாமி</a> மடத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி, கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக உள்ள வழக்குகளை மறைத்து, தக்காரை வழக்கில் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் பெற்ற உத்தரவுக்கு எதிராக, கடந்த ஜூன் 30 அன்று தண்டபாணி சுவாமிகள் மடம் சார்பில் பழனி திருக்கோவில் இணை ஆணையர் மூலம் மேல்முறையீட்டு மனுவை (WA(MD)1010/2026) தாக்கல் செய்திருந்தோம். </p> <figure><img alt="இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/yimndzy5/minister-ramesh.jpg" /><figcaption>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்</figcaption></figure><h2>கடிதம் எழுதப்பட்டது</h2><p>மேலும் இந்த மடத்தின் நிலத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று இந்த வழக்குகளை மேற்கோள் காட்டி, கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று பழனி கோவில் இணை ஆணையர் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது. </p> <h2>குற்றவியல் விசாரணை</h2><p>இந்த சூழலில் கடந்த ஜூலை 6ஆம் தேதியன்று நீதிமன்ற வழக்கு மற்றும் இணை ஆணையர் கடிதத்தையும் பரிசீலனை செய்யாமல் நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது. </p> <h2>பத்திரப்பதிவு ரத்து</h2><p>இந்நிலையில் இன்று ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரித்ததில், மடத்தின் நிலமானது முறைகேடாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை நீதியரசர்கள் உறுதி செய்து பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளனர். மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். </p><h2>பொய் கதைகள்</h2><p>அரசின் மீதும், என் மீதும் சில தீய சக்திகள் எப்படியெல்லாம் பொய் கதைகளை பரப்ப முயற்சித்தாலும் அதையல்லாம் தாண்டி, உண்மையை நிலைநாட்டி கோவில் நிலங்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு என்றும் உறுதியாக நிற்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கட்சியின் நற்பெயருக்கு களங்கம்: நெல்லை காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tarnishing-the-partys-reputation-notice-to-senior-nellai-congress-leaders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tarnishing-the-partys-reputation-notice-to-senior-nellai-congress-leaders#comments</comments><guid isPermaLink="false">07fb1e6b-9f1b-43eb-baf9-2a7f31ea9fba</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:24:22 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:24:22.110Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,காங்கிரஸ்,Congress,Notice,நோட்டீஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/5x5r2hgv/231.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/5x5r2hgv/231.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஆ. கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் இன்று காலை 11.00 மணியளவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சங்கரலிங்கம் மற்றும்  உபதி சிவன் ஆகியோர் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், பொதுவெளியிலும் ஊடகங்களிலும் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாகப் புகார்கள் எழுந்தன.</p><h2>நோட்டீஸ்</h2><p>இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">தமிழ்நாடு காங்கிரஸ்</a> ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி சார்பில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>இந்தக் கடிதம் கிடைத்த 10 நாட்களுக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் நடைபெற இருந்த அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-we-the-leaders-conference-scheduled-to-be-held-in-tiruchendur-has-been-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-we-the-leaders-conference-scheduled-to-be-held-in-tiruchendur-has-been-cancelled#comments</comments><guid isPermaLink="false">5da4c1f0-d4e9-48af-bfa5-2234cfbd80a2</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:05:01 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:05:01.271Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,வி த லீடர்ஸ்,we the leaders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/y6dyzuj0/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/y6dyzuj0/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அவர், பா.ஜ.க.வில் இருந்து விலகி 'வீ த லீடர்ஸ்' என்ற இயக்கத்தை நிறுவினார். அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் உள்ளவர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி உள்ளார்.</p><p>இந்த இயக்கத்தின் முதல் மாநாடு கடந்த 12-ந்தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. ‘போதையில்லா தமிழகம்’ என்ற பெயரில் நடைபெற்ற விழிப்புணர்வு மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் 2-வது மாநாடு வரும் 26-ந்தேதி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. </p> <p>இந்த நிலையில், திருச்செந்தூரில் நடைபெற இருந்த மாநாடு ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, இயற்கை மற்றும் சுற்றுப்புற விழிப்புணர்வு சார்ந்த மாபெரும் சமூகநல நிகழ்வு வரும் ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் நடைபெறும் எனவும், இந்த சுற்றுச்சூழல் நிகழ்வு குறித்த தேதி, இடம் உள்ளிட்ட தகவலக்ள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ‘வீ த லீடர்’அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டாம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு - கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-partys-stance-is-not-to-raise-a-voice-against-the-central-government-mp-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-partys-stance-is-not-to-raise-a-voice-against-the-central-government-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">e019e4bc-80ab-46a9-87a8-b77c85ad9a06</guid><pubDate>Wed, 15 Jul 2026 08:59:33 +0000</pubDate><atom:updated>2026-07-15T08:59:33.350Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,மத்திய அரசு,கனிமொழி எம்.பி.,Central Government,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/qkeapljk/kanimozhi-mp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/qkeapljk/kanimozhi-mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டாம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு என்று கனிமொழி தெரிவித்தார். இது தொடர்பாக தூத்துக்குடியில் இன்று, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20">கனிமொழி கருணாநிதி </a>செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:-</p><h2>இருமொழி கொள்கை</h2><p>திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் தெளிவாக சொல்லி வருவது இருமொழி கொள்கைதான். ஏனெனில், மொழி கொள்கை எந்த குழந்தைகள் மீதும் பாரமாக மாறிவிடக்கூடாது, பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கக்கூடிய மாணவ மாணவிகள் நிச்சயமாக கற்றுக்கொள்ள இன்றைய உலகில் அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது.</p><h2>மும்மொழி கொள்கை கட்டாயம்</h2><p>மேலும், பல மொழிகளை கற்றுக்கொள்ள வழிமுறைகள் இருக்கிறது. ஆனால் பாடத்திட்டத்தோடு குழந்தைகள்  மீது சுமையாக மொழியை சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்து மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு மும்மொழி கொள்கையை அமல்படுத்த அனைத்து வழிமுறையையும் கையாண்டு வருகிறது.  </p><p>மும்மொழி கொள்கை கட்டாயம் என்று வலியுறுத்தி குழந்தைகள் மனதிலே ஒரு அவநம்பிக்கையை உருவாக்க கூடாது என்பதுதான் திராவிட முன்னேற்ற கழகம் சொல்கிறது. இது குழந்தைகளுக்கு கற்றலில் மனச்சோர்வை அளிக்கக்கூடிய வகையில் அமைந்துவிடும்.</p><h2>எதிர்பார்ப்பதே தவறு</h2><p>முன்னதாக த.வெ.க அரசு  ஒன்றிய அரசாங்கத்தை எதிர்த்து பேசவேண்டாம்  என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்களிடம்  இருந்து நாம் எதிர்பார்ப்பதே தவறு என்றார்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில நபர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-man-dies-after-being-hit-by-unidentified-vehicle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-man-dies-after-being-hit-by-unidentified-vehicle#comments</comments><guid isPermaLink="false">8b085c71-6c27-42f8-b22d-5d16be03d6fa</guid><pubDate>Wed, 15 Jul 2026 08:33:53 +0000</pubDate><atom:updated>2026-07-15T08:33:53.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,பலி,Northern state,வடமாநில,killed,Police investigating,நபர்,போலீசார் விசாரணை,Person,vehicle collision,வாகனம் மோதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/s85ds0m2/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்தில் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/s85ds0m2/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வட மாநில நபர் உயிரிழந்தார்</a>. </p><h2>வாகனம் மோதி வடமாநில நபர் பலி</h2><p>தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்பாண்டியாபுரம் பாலத்தின் மீது நடந்து சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அவர் யார் என்பது அடையாளம் தெரியவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த நபர் மற்றும் மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஊழலற்ற ஆட்சி&quot; வெற்று முழக்கமா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-corruption-free-government-an-empty-slogan-nainar-nagenthran-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-corruption-free-government-an-empty-slogan-nainar-nagenthran-questions#comments</comments><guid isPermaLink="false">8e93c437-f11c-4e48-b85d-a5086f1e186d</guid><pubDate>Wed, 15 Jul 2026 08:14:04 +0000</pubDate><atom:updated>2026-07-15T08:14:04.078Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Chengalpattu,செங்கல்பட்டு,ஊழல்,bribe,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/422e8lah/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/422e8lah/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>உதட்டளவில் நேர்மை பேசி, உள்ளுக்குள் ஊழல் செய்யும் தவெகவின் நிஜ முகம் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது. மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீரா, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகித் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. முதல்வர் ஒருபுறம் நேர்மை பேச, அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மறுபுறம் லஞ்ச வேட்டையாடி வருவது தவெக அரசின் இரட்டை வேடத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.</p><p>தன் கட்சியினரின் ஊழலையே தட்டிக்கேட்க முடியாத முதல்வர் விஜய்யால் எப்படி மாநிலத்தை நேர்மையாக வழிநடத்த முடியும்? என்ற கேள்வி எழுகிறது. ஒப்பந்ததாரர்களை மிரட்டி, லஞ்சப் பணத்தை வெளிப்படையாக வாங்கும் தவெக நிர்வாகி வீராவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 'லஞ்சம் இல்லாத தமிழகம்' என்பது வெறும் விளம்பர வாசகம் மட்டுமே என்பதை தவெக அரசு நிரூபித்துள்ளது.</p><p>எனவே, தவெக நிர்வாகி லஞ்சம் வாங்கியது உண்மையா? என்பதை தீர விசாரித்து, புகார் உண்மையெனில் உடனடியாக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் பன்றி இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-in-thoothukudi-pork-vendor-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-in-thoothukudi-pork-vendor-murder-case#comments</comments><guid isPermaLink="false">72859049-1469-4b63-adf8-1f55a18cd4d6</guid><pubDate>Wed, 15 Jul 2026 08:07:55 +0000</pubDate><atom:updated>2026-07-15T08:07:55.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,bike,பைக்,murder,கொலை,youths,வாலிபர்கள்,தகராறு,5 பேர் கைது,Speed,வேகம்,Pig,பன்றி,5 arrested,இறைச்சி வியாபாரி,meat seller</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/1od9abvw/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வியாபாரி கொலை, 5 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/1od9abvw/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை</a> செய்யப்பட்ட வழக்கில் 5 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். </p><h2>பைக்கில் வேகமாக சென்றது குறித்து தகராறு</h2><p>தூத்துக்குடி தாளமுத்துநகர், திரேஸ்நகரைச் சேர்ந்த மணி மகன் சேகர் (வயது 40). இவர் மாதாநகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். கடந்த 13-ம் தேதி இரவு, மாதாநகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்கள் 2 பேருடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்துள்ளனர். குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் என சேகர் அவர்களை வழிமறித்துக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் அந்த வாலிபர்களில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.</p><h2>பன்றி இறைச்சி வியாபாரி கொலை</h2><p>தாக்குதலுக்குள்ளான வாலிபர், சிறிது நேரத்தில் தனது நண்பர்களுடன் பத்ரகாளியம்மன் கோவில் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த சேகரை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். பலத்த காயமடைந்த சேகர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சேகர் உயிரிழந்தார்.</p><p>இந்த கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில், ஏட்டுகள் கோவிந்தராஜ், ரவிகுமார், வேல்முருகன் மற்றும் முதல் நிலை காவலர் சரவணகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த கொலையில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். </p><h2>5 பேர் கைது</h2><p>இந்த நிலையில், கொலை தொடர்பாக தாளமுத்துநகர் விவேகானந்தா நகரைச் சேர்ந்த முருகன் மகன் சச்சின்(24), தாளமுத்துநகர் மேல அழகாபுரியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அஜய்(19), மாதாநகரைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் நாகராஜ்(19), சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் சுதன்(18), தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமுத்து(30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தவெக மீதான குதிரை பேர குற்றச்சாட்டு - பெ.சண்முகம் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-allegations-against-tvk-p-shanmugam-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-allegations-against-tvk-p-shanmugam-responds#comments</comments><guid isPermaLink="false">4857f2ca-2186-465d-8968-435aa30b1c76</guid><pubDate>Wed, 15 Jul 2026 08:04:37 +0000</pubDate><atom:updated>2026-07-15T08:04:37.783Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Communist Party of India,பெ.சண்முகம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,குதிரை பேரம்,P.Shanmugam,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/e77ukgfy/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/e77ukgfy/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று சந்தித்து பேசினார். </p><p><strong>அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பெ.சண்முகம் கூறியதாவது:-</strong></p><p>மேகமலை, கரூர் இனாம் நிலத்திற்கான தடை உத்தரவு குறித்து முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினேன். நிலப்பிரச்சினைகளை தீர்வு காண தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். மேகமலையில் கிராம மக்களை வெளியேற்றக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை என சொல்வதை ஏற்க முடியாது. தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். வன உரிமை, நில உரிமை வழங்கப்பட வேண்டும்.</p><p>இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதை இடதுசாரிகள் சேர்ந்து தீர்மானிப்போம். குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டாலும் அது கடுமையான கண்டனத்துக்குரிய விஷயம். குதிரை பேரம் விவகாரத்தில் மக்களுக்குதான் கோபம் வரவேண்டும்.</p><p>தொகுதி மக்கள் குதிரை பேரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். 20 நாட்கள் அல்லது ஒரு மாதத்தில் ஏன் ராஜினாமா செய்கிறீர்கள் என மக்கள் கேள்வி எழுப்பினால் எம்.எல்.ஏ.க்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள். குதிரை பேரம் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இதை திமுக, தவெக என அனைவருக்கும் தான் சொல்கிறோம்.</p><p>எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வளைத்து கட்சிகளை உடைத்து பாஜக தனது பலத்தை அதிகரித்துக் கொள்கிறது. ஆனால், இங்கே இவர்கள் (அதிமுக) ராஜினாமா செய்துவிட்டுத்தான் வேறு கட்சியில் இணைந்துள்ளனர். அதோடு, அதிமுகவில் உட்கட்சி பிரச்சினையும் உள்ளது. அதையும் இதையும் சம்பந்தப்படுத்தக் கூடாது.</p><p>தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கட்டாயம் இடம்பெறாது. கிருஷ்ணகிரி மண்ணிலிருந்து ஒருவர் அமைச்சராக வருவார் என இந்திய கம்யூ. மாநிலச் செயலர் வீரபாண்டியன் நேற்று கூறினார்; எதன் அடிப்படையில் கூறினார் என அவரிடம் இன்று கேட்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்தது ஏன்..? - கேரள உள்துறை மந்திரி பதில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-the-chief-minister-meet-vijay-kerala-home-minister-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-the-chief-minister-meet-vijay-kerala-home-minister-responds#comments</comments><guid isPermaLink="false">06024d7a-4d6a-4619-8e9d-05945f4ab1b3</guid><pubDate>Wed, 15 Jul 2026 07:52:49 +0000</pubDate><atom:updated>2026-07-15T07:52:49.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,உள்துறை மந்திரி,கேரளம்,keralam,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,ரமேஷ் சென்னித்தலா,Ramesh Chennithala</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/fadr9rat/misher.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/fadr9rat/misher.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை, கேரள மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா இன்று சென்னையில் நேரில் சந்தித்து பேசினார். </p><p>இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-</p><p>போதை ஒழிப்பு சம்பந்தமாக முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்தேன். போதைப்பொருள் ஒழிப்பு கேரள தூதுவராக மோகன்லால் இருக்கிறார்.</p><p>கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் கும்பல் செயல்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய் கேரளம் வர அழைப்பு விடுத்து இருக்கிறேன்.</p> <p>தமிழ்நாடு கேரள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்து இருக்கிறார். போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விரைவில் 5 மாநில டிஜிபிக்கள் சந்திப்பு நடக்க இருக்கிறது. இளைஞர்கள், மாணவர்களிடம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை விஜய் ஏற்படுத்த வேண்டும்.</p><p>போதைப்பொருள் ஒழிப்புக்கு அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆப்ரேசன் டூபான் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக முதல்-அமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>முன்னதாக கேரள உள்துறை மந்திரி ரமேஷ் சென்னித்தலா கொச்சியில் நிருபர்களிடம் கூறுகையில், “கேரளத்தில் போதைப்பொருளுக்கு எதிராக, அதன் உறைவிடங்களை கண்டறிந்து வேரோடு களைய அரசு உறுதி கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆபரேஷன் டூபான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பொதுமக்கள் பங்களிப்பு மூலம் வெற்றி பெற்றுள்ளது.</p><p>மேலும் போதைப்பொருளை ஒழிக்க கேரளம் போலீஸ் டி.ஜி.பி., தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநில டி.ஜி.பி.க்கள் உடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) நான் முதல்-அமைச்சர் விஜய்யை தொடர்பு கொண்டு பேச உள்ளேன்.</p><p>இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு எங்களுடன் ஒத்துழைக்கும். ஏற்கனவே, இதுகுறித்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருடன் கலந்துரையாடினேன். ஆபரேஷன் டூபான் திட்டத்தின் கீழ். போலீசார் நடத்திய சோதனையில் ரூ.70 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது” என்று அவர் கூறி இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பள்ளியில் பயங்கரம்.. 12-ம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-at-government-school-12th-grade-student-stabbed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-at-government-school-12th-grade-student-stabbed#comments</comments><guid isPermaLink="false">2de32394-38d3-411b-9eb3-d9b94008e41b</guid><pubDate>Wed, 15 Jul 2026 07:38:27 +0000</pubDate><atom:updated>2026-07-15T07:38:27.379Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,plus-2 student,கிரைம் செய்திகள்,சிவகங்கை,Sivagangai,Govt school,அரசுப் பள்ளி,12-ம் வகுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/k6krky7x/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/k6krky7x/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே மல்லல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் பள்ளி வகுப்பறைக்குள் வைத்து 2 மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவரும் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. உடனே ஆசிரியர்கள் இருவரையும் சமாதானம் செய்து கண்டித்து அனுப்பி வைத்தனர்.</p><p>இந்த நிலையில், மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்தபோது, 2 மாணவர்களுக்குள் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக மாணவனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சக மாணவனுக்கு முதுகு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.</p><p>கத்திக்குத்தில் காயமடைந்த மாணவனை மீட்ட ஆசிரியர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 12-ம் வகுப்பு மாணவர் மீது சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில்: யுனெஸ்கோ அந்தஸ்தின் 21-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettupalayam-ooty-mountain-railway-21st-anniversary-celebration-of-unesco-status</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettupalayam-ooty-mountain-railway-21st-anniversary-celebration-of-unesco-status#comments</comments><guid isPermaLink="false">c0b44a9a-cf6b-4099-ae78-36973bff5a0a</guid><pubDate>Wed, 15 Jul 2026 07:37:13 +0000</pubDate><atom:updated>2026-07-15T07:37:13.058Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,ஊட்டி மலை ரெயில்,Ooty Hill Train,கொண்டாட்டம்,மேட்டுப்பாளையம்,Nilgiri,யுனெஸ்கோ,UNESCO,Hill Train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/7xcaerk4/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/7xcaerk4/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை ரெயிலுக்கு (NMR) யுனெஸ்கோ (UNESCO) அந்தஸ்து வழங்கப்பட்டதன் 21-ம் ஆண்டு தொடக்க விழா இன்று மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. ​இவ்விழாவை முன்னிட்டு, இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த மலை ரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு, ரெயில்வே அதிகாரிகள் முன்னிலையில் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/qpyk2wq5/Untitled-11-1.jpg" /><figcaption>கோப்புப்படம்</figcaption></figure><p>​மலை ரெயிலின் வரலாற்றுச் சிறப்புகள், அதன் தனித்துவமான பல்சக்கர அமைப்பு (Rack and Pinion System) மற்றும் இந்த பாரம்பரியச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் பயணிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.</p><p>​விழாவிற்கு நீலகிரி மலை ரெயில் உதவி இயக்குநர் திருமலையான் தலைமை தாங்கினார். ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசாரின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பயணிகளின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காலை 7:10 மணிக்கு மலை ரெயில் ஊட்டி நோக்கித் தன் பாரம்பரியப் பயணத்தைத் தொடங்கியது.</p><h2>​யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து என்றால் என்ன?</h2><p>​யுனெஸ்கோ அந்தஸ்து (World Heritage Site): உலக அளவில் மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட மிக அரிய கட்டடக்கலை, பொறியியல் சாதனைகள் அல்லது இயற்கையான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பாதுகாக்கும் நோக்கில், ஐநா சபையின் அங்கமான யுனெஸ்கோ வழங்கும் உயரிய அங்கீகாரமே 'உலக பாரம்பரிய அந்தஸ்து' ஆகும்.</p><h2>​கிடைக்கும் பயன்கள்</h2><p>​<strong>சர்வதேசப் பாதுகாப்பு:</strong> இந்த அந்தஸ்து பெற்ற பின், குறிப்பிட்ட தளம் சர்வதேசச் சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்படும்.</p><p><strong>​சுற்றுலா மேம்பாடு:</strong> உலக சுற்றுலா வரைபடத்தில் இந்த இடம் முக்கியத்துவம் பெறுவதால், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரிக்கும்.</p><p>​<strong>நிதியுதவி மற்றும் தொழில்நுட்பம்:</strong> இந்த கட்டமைப்பைப் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் சர்வதேச அளவிலான நிதியுதவிகளும், நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளும் கிடைக்கப் பெறும்.</p><h2>யாருக்கெல்லாம் பெருமை?</h2><p>​இந்தியாவில் டார்ஜிலிங், கால்கா-சிம்லா ஆகிய மலை ரெயில்களுடன் இணைந்து நீலகிரி மலை ரெயிலும் "இந்தியாவின் மலை ரெயில்கள்" என்ற கூட்டுப் பெயரின் கீழ் இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனை பல தரப்பினருக்குப் பெருமிதத்தைத் தேடித்தந்துள்ளது.</p><p>உலக அளவில் இந்தியாவின் பொறியியல் வியக்கத்தக்க தொழில்நுட்பத்திற்கு கிடைத்த சர்வதேச மகுடம் இது. நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் சுற்றுலாத்துறையையும் உலக அரங்கில் உயர்த்திய பெருமை உள்ளூர் மக்களையே சாரும். </p><p>செங்குத்தான மலைப்பாதையில், அடர்ந்த காடுகளையும், இக்கட்டான நிலப்பரப்பையும் கடந்து இந்த ரெயில் பாதையை அமைத்த அன்றைய பொறியாளர்களுக்கும், இன்றுவரை இதனைத் தொய்வின்றி இயக்கி வரும் தற்போதைய ரெயில்வே தொழிலாளர்களின் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த ஆகச்சிறந்த கவுரவம் இதுவாகும்.</p>]]></content:encoded></item></channel></rss>