<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 17 Jul 2026 10:48:39 +0000</lastBuildDate><item><title>பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-bjp-chief-nainar-nagendran-criticizes-liquor-shops-plan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-bjp-chief-nainar-nagendran-criticizes-liquor-shops-plan#comments</comments><guid isPermaLink="false">185e85c7-a5d3-410d-b498-c5392dd8b339</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:28:41 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:28:41.612Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,விமர்சனம்,Tasmac Shops,Criticism,டாஸ்மாக் கடைகள்,முதல்-அமைச்சர்Chief Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bzusi315/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bzusi315/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு! </p><h2>சுய விளம்பரம்</h2><p>டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள ஊடக செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. </p> <h2>ஆளும் அரசு உணர வேண்டும்</h2><p>கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்களின் பின்னணியில், பெரும்பாலும் போதை பழக்கமே ஒளிந்திருக்கையில், மது உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்துவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அதை விட்டு விட்டு, மதுபான வகைகளை கூட்டி, மக்களை போதைக்கு அடிமையாக்குவது அல்ல. </p><h2>அதிக தேர்வுகள், அதிக வாய்ப்புகள்</h2><p>எப்போவாவது வெளியூர்களுக்கு டூர் சென்றால் மட்டும் தான் குறிப்பிட்ட வகை மதுபானம் கிடைக்கும் என்றிருக்கும் நிலையை மாற்றி, கைக்கு எட்டும் தூரத்திலேயே எல்லா வகை மதுபானங்களையும் கொண்டு வருவது, இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். அதிக தேர்வுகள், அதிக வாய்ப்புகள் (“More Choices, More chances”)</p><h2>கைவிட வேண்டும்!</h2><p>எனவே, ஒருவேளை முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு, அதிகளவிலான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தால் அதை உடனடியாக கைவிட வேண்டும்! முடிந்தவரையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20">டாஸ்மாக் கடைகளை குறைத்து </a>தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குக! - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/provide-financial-aid-to-families-of-road-accident-victims</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/provide-financial-aid-to-families-of-road-accident-victims#comments</comments><guid isPermaLink="false">2e4ee3c2-20d5-4986-a33d-16811cbcf405</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:04:29 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:04:29.850Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,நிதி உதவி,வேண்டுகோள்,Financial Assistance,Appeal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/u79l2jvg/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/u79l2jvg/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- </p> <h2>3 பேர் உயிரிழந்தனர்</h2><p>விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள நத்தம்பட்டி நான்கு வழி சாலையில் கடந்த 12.07.2026 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் வத்திராயிருப்பு, மேலப்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பூபதி, கார்த்திக், அங்காள ஈஸ்வரி, ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><h2>சிகிச்சை</h2><p>இவர்கள் தவிர சேர்வை, அவரது மனைவி வீரலட்சுமி, மகள்கள் காவியா, தனலட்சுமி, மகன் அஸ்வின், உறவினர் லட்சுமி ஆகிய ஆறு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.</p> <h2>நிதியுதவி செய்ய வேண்டும் </h2><p>இதில் சேர்வை சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு விரைந்து நிதியுதவி செய்ய வேண்டும். </p><h2>மருத்துவ சிகிச்சை</h2><p>சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளுக்கான உதவிகள் வழங்க வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">இந்தியக் கம்யூனிஸ்டு</a> கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் புதிய சிகிச்சை மையம்: அமைச்சர் அருண் ராஜ் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-treatment-centre-at-omanthurar-government-hospital-minister-arun-raj-inaugurates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-treatment-centre-at-omanthurar-government-hospital-minister-arun-raj-inaugurates#comments</comments><guid isPermaLink="false">e02ebd93-0132-4900-9d56-d07f5578ef10</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:52:22 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:52:22.986Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஓமந்தூரார் அரசு மருத்துவமனை,Specialized treatment center சிறப்பு சிகிச்சை மையம்,Chennai Government Hospital,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்,inaugurates</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/hfe4t0ep/minister-arun-raj-omanthur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க.அருண் ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/hfe4t0ep/minister-arun-raj-omanthur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் அதிஅழுத்த பிராண வாயு சிகிச்சை மையத்தை  மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க.அருண் ராஜ் பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- </p><h2>அதிஅழுத்த பிராண வாயு சிகிச்சை மையம்</h2><p> மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.க.அருண் ராஜ் இன்று (17.07.2026) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் கை சீரமைப்பு மற்றும் நுண் அறுவை சிகிச்சை பிரிவில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான அதிஅழுத்த பிராண வாயு சிகிச்சை மையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.</p> <h2>உயர்சிறப்பு மருத்துவமனை</h2><p>சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரே இடத்தில் முழுமையான மற்றும் கட்டணமில்லா அதிஅழுத்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88">பிராணவாயு சிகிச்சை</a> வழங்கும் நோக்கத்துடன் அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. </p> <p>அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தற்பொழுது 1978 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்கள் நீண்ட கால புண்கள், சிரை சார்ந்தப் புண்கள் மற்றும் நீரிழிவு பாத புண்கள் போன்ற சிகிச்சைகள் பெற்று வருகின்றனர். இதுபோன்ற புண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை வசதி அவசியமாக உள்ளது.</p><h2>ரோட்டரி சங்கம்</h2><p>சென்னை ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சைக்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களும் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின்கீழ் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.</p> <h2>கட்டணமில்லாமல் சிகிச்சை</h2><p>கடந்த காலங்களில் அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை வசதி இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரும் பயனாளர்கள் மேல்சிகிச்சைக்காக பிற மேம்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயனாளர்களுக்கு சிகிச்சை தாமதம், நீண்ட தூர பயணம், கூடுதல் பொருளாதார சுமையும் ஏற்பட்டது. அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வரை செலவாகும்.</p> <p>தற்போது அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் சிகிச்சை தேவைப்படும் பொதுமக்கள் கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுப் பயனடையலாம்.</p><p>இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஆர்.சுகந்தி ராஜகுமாரி, அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி, நிலைய மருத்துவ அலுவலர் தளவாய் சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திமுக ஆட்சியின் மற்றொரு ஊழல் முறைகேடு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-says-new-dmk-corruption-case-comes-to-light</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-says-new-dmk-corruption-case-comes-to-light#comments</comments><guid isPermaLink="false">3468a110-c3b1-47aa-8c10-b9e5cf9fad7a</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:34:38 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:34:38.122Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Corruption,ஊழல்,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,DMK Government,முறைகேடு,திமுக ஆட்சி,Malpractice</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sbnqn8yn/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sbnqn8yn/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக ஆட்சியின் மற்றொரு ஊழல் முறைகேடு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அதிர்ச்சி அளிக்கிறது</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">கோவை செம்மொழி பூங்கா</a> திட்டப்பணிகளில் சுமார் ரூ.40 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் அளித்துள்ளதாக கூறப்படும் செய்தியானது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.</p><h2> போலி பில்கள்</h2><p>எந்த திட்டங்களில் எவ்வளவு கமிஷன் கிடைக்கும், எவ்வளவு ஊழல் செய்யலாம் என்று நாடி நரம்பெல்லாம் ஊழல் ஊறிப்போன கடந்த கால திமுக ஆட்சியின் மற்றொரு ஊழல் முறைகேடு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் 40 கோடி ரூபாய் அளவிற்கு போலி பில்கள் தயாரித்து கோவை மாநகராட்சி நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுவது மக்கள் வரிப்பணம் எந்த அளவிற்கு குறிப்பிட்ட சிலரால் சூறையாடப்பட்டிருக்கிறது என்பதற்கான சாட்சி.</p> <h2>பேரதிர்ச்சி</h2><p>மேலும் அதே புகாரில் தேர்தல் செலவுக்காக 5 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலைகளை தேர்வு செய்து மீண்டும் அதில் பணிகள் மேற்கொண்டு அதிலும் முறைகேடு செய்திருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சி. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..‘ என்னும் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.</p><p>இந்த முறைகேடு குறித்து இன்றைய கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் விவாதம் எழுப்பப்பட்டு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. </p> <h2>வழக்குப் பதிவு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் ஊழல் கறைபடியாத ஆட்சி அமைப்பேன் என்று உறுதி கூறி பதவியேற்றிருக்கும் உங்கள் அரசு இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார் என கண்டறிந்து, அதற்கு துணைபோன அதிகாரிகள், ஒப்பந்தகாரர்கள் ஆகியோரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து, முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மக்களின் வரிப்பணத்தினை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு - விசாரணை விரைவாக நடைபெறும் வகையில் நீதிமன்றம் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madapuram-ajithkumar-murder-case-court-changed-to-expedite-the-trial</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madapuram-ajithkumar-murder-case-court-changed-to-expedite-the-trial#comments</comments><guid isPermaLink="false">a95653e5-7229-417e-a938-5e51a5ff018e</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:13:17 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:13:17.919Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,நீதிமன்றம்,மடப்புரம் அஜித்குமார்,Madapuram Ajithkumar</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/taauzf10/State-01.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/taauzf10/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மீது மதுரையை சேர்ந்த நிகிதா என்ற பெண், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நகை திருட்டு புகார்  அளித்தார். அந்த புகாரின்பேரில் அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையின்போது போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். </p> <p>இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், மற்றொரு போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய் யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சம்பவத்தின்போது மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ்காரர் இளையராஜா ஆகியோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இந்நிலையில், அஜித்குமார் கொலைவழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஜூலை 29-ந்தேதியில் இருந்து மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <p>இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இனி இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு விசாரணை விரைவாக நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தியாகிகள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் மாலை அணிவித்து அமைச்சர்கள் மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/on-martyrs-day-ministers-pay-respects-on-behalf-of-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/on-martyrs-day-ministers-pay-respects-on-behalf-of-government#comments</comments><guid isPermaLink="false">2805da8d-4233-4055-841a-bae79d9c8135</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:10:56 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:10:56.658Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tribute,தியாகிகள் தினம்,மாலை அணிவித்து மரியாதை,அரசு சார்பில்,On behalf of the government,Martyrs&apos; Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0r0b6rxf/Martyrs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தியாகிகள் தினம்,அமைச்சர்கள் மரியாதை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0r0b6rxf/Martyrs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச்சிலைகளுக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இது தொடர்பாக இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p>  <h2>மலர் தூவி மரியாதை</h2><p>தமிழ்நாடு அரசின் சார்பில்,<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88"> தியாகிகள் தினத்தை</a> முன்னிட்டு, இன்று சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.</p><h2>பாஷ்யம்</h2><p>தியாகி ஆர்யாவின் இயற்பெயர் பாஷ்யம். தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளத்தில் 1907-ஆம் ஆண்டு பிறந்தார். மன்னார்குடியில் பள்ளிப்படிப்பையும் திருச்சி நேஷனல் கல்லூரியில் பட்டப்படிப்பையும் படித்தார். இந்திய சுதந்திர போராட்டத்தில் அதிக அக்கறை கொண்டவராக திகழ்ந்தார்.</p><h2>சைமனே திரும்பி போ</h2><p>நீடாமங்கலத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சொற்பொழிவை கேட்டு, இந்திய தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தவும் தன்னை தயார்ப்படுத்தி கொண்டார். நீடாமங்கலத்தில் நடைபெற்ற ‘சைமனே திரும்பி போ’ போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார்.</p> <h2>தேசிய கொடி</h2><p>மேலும், சென்னை தலைமை செயலகம் அமைந்திருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் கொடிக்கம்பத்தில் உள்ள பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கி விட்டு, இந்திய தேசிய கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம் ஆவார்.</p> <h2>சிறந்த ஓவியர்</h2><p>ஓவிய கலையில் சிறந்து விளங்கியதால் அரசியல் கருத்து படங்கள், கதைகளுக்கான சித்திரங்கள், ஏடுகளுக்கான முகப்புப் படங்கள் போன்றவற்றை வரைந்த மிகச்சிறந்த ஓவியர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாகவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இவரால் வரையப்பட்டவையாகும்.</p><p>தியாகி சங்கரலிங்கனார் விருதுநகரில் உள்ள மண்மலைமேடு கிராமத்தில் பெரிய கருப்பசாமி நாடார் – வள்ளியம்மை தம்பதியினருக்கு 1895-ஆம் ஆண்டு மகனாக பிறந்தார்.</p><h2> சத்தியாகிரகம்</h2><p>1914-ஆம் ஆண்டு பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட சங்கத்தின் செயலாளராக பணியாற்றினார், கதர் இயக்கத்தில் சேர்ந்து கதர் வளர்ச்சி பணியையும் மேற்கொண்டார். 1917-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து திருச்சியில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாதம் சிறை தண்டனை பெற்றார்.</p> <h2>தமிழ்நாடு</h2><p>1920-ஆம் ஆண்டு ராஜாஜியை சந்தித்து அவரது சீடரானார். இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்தபோது, அப்பெயரை மாற்றி ‘தமிழ்நாடு’என பெயரிட வேண்டுமென கோரி தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தனது 58-ஆவது வயதில் உயிர் துறந்தார்.</p> <h2>ஜெய்ஹிந்த்</h2><p>தியாகி செண்பகராமன் திருவனந்தபுரத்தில் 15.9.1891 அன்று பிறந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். தாய்நாட்டை வணங்கி ‘ஜெய்ஹிந்த்’ எனும் கோஷத்தை முழங்கியவர் தியாகி செண்பகராமன் அவர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு முன்னோடியாக இருந்த இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.</p><p>26.5.1934 அன்று தியாகி செண்பகராமன் உயிர் நீத்தார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள தியாகிகள் மணிமண்டபம் 2.10.1998 அன்று திறந்து வைக்கப்பட்டது.</p> <h2>சிலைகள்</h2><p>இதனை தொடர்ந்து அம்மண்டபத்தின் முகப்பில் அமைந்துள்ள தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் மார்பளவு சிலைகள் 17.7.1999 அன்றும், தியாகி செண்பகராமன்திருவுருவச்சிலை 17.7.2008 அன்றும் திறந்து வைக்கப்பட்டன.</p><h2>தியாகிகள் தினம்</h2><p>இந்திய நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு இன்னுயிர் நீத்த விடுதலை போராட்ட தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா (எ) பாஷ்யம், செண்பகராமன் ஆகியோரின் பெரும் தொண்டினை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூலை 17-ஆம் தேதி தியாகிகள் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.அருள்பிரகாசம், ஆர்.அபிஷேக், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அ.அருண் தம்புராஜ். மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி - பாலக்காடு: பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 20-ந் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lhb-coaches-to-be-attached-to-the-thoothukudipalakkad-palaruvi-express-starting-from-the-20th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lhb-coaches-to-be-attached-to-the-thoothukudipalakkad-palaruvi-express-starting-from-the-20th#comments</comments><guid isPermaLink="false">62259a8b-79c9-444b-a015-e96599fcfe9c</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:55:27 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:55:27.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,பாலக்காடு,பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில்,Palaruvi Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/wwm7apb5/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/wwm7apb5/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தூத்துக்குடி - பாலக்காடு இடையே இயக்கப்பட்டு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புத்தம் புதிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>”தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16791) ரெயிலில் ஜூலை 20-ந் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடி வரும் ரெயிலில் ஜூலை 21-ந் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது. </p><p>அதாவது, 1 மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டி, 5 தூங்கும் வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 1 சரக்கு பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்க செயல் திட்டம் உருவாக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/statewide-plan-to-boost-women-employment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/statewide-plan-to-boost-women-employment#comments</comments><guid isPermaLink="false">f824e123-b7e4-4d0f-bdbd-e3541897971c</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:29:45 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:29:45.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வேலைவாய்ப்பு,job opportunities,தமிழக அரசு,TN govt,பெண்கள்,Jobs,womens</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/y1b0qtaq/CHENNAI-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/y1b0qtaq/CHENNAI-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இம்மாத இறுதியில் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது.  தற்போது, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><p>இந்த நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க WOMEN'S QUALITY EMPLOYMENT PLAN என்ற மாநில அளவிலான செயல் திட்டத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.</p><p>மாவட்ட வாரியாக எந்தெந்த துறைகளில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்? என்பதை கண்டறிய முடிவு செய்துள்ளது. பெண்கள் வேலைக்குச் செல்வதில் உள்ள சவால்களை கண்டறிந்து களையவும், குழந்தை பராமரிப்புக்கு இடையே பெண்கள் வேலைக்குச் செல்வதில் உள்ள சவாலை கண்டறிந்து களையவும் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.</p><p>குழந்தை பராமரிப்பு, போக்குவரத்து மற்றும் இதர சமூக காரணங்களையும் கண்டறிந்து களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் ஆலோசனை நிறுவனம் 6 வாரங்களுக்குள் ஆய்வு மற்றும் செயல்திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயணிகளுக்கு குட்நியூஸ்.. நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக தூங்கும் வசதி பெட்டி ஒன்று இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-additional-sleeper-coach-has-been-attached-to-the-nagercoil-coimbatore-express-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-additional-sleeper-coach-has-been-attached-to-the-nagercoil-coimbatore-express-train#comments</comments><guid isPermaLink="false">a3bcfae3-ab98-4b74-a293-dcb7ca946616</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:22:50 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:22:50.732Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,Covai,தமிழகம்,Express train,Nagercoil,நாகர்கோவில்,எக்ஸ்பிரஸ் ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,கூடுதல் பெட்டி இணைப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/9k7gdw3c/expre.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/9k7gdw3c/expre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுவதாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> தெரிவித்துள்ளது. </p><p>இதனால், காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 72 பேருக்கு ரெயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும்.</p><h2>தெற்கு ரெயில்வே</h2><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜூலை 17-ந் தேதி (இன்று) முதல் ஜூலை 30-ந் தேதி வரை தற்காலிகமாக ஒரு தூங்கும் வசதி முன்பதிவு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.</p><h2>சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்</h2><p>மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இதே நடைமுறை ஜூலை 17-ந் தேதி (இன்று) முதல் ஜூலை 31-ந் தேதி வரை தொடரும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/western-ghats-north-coastal-tamil-nadu-rain-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/western-ghats-north-coastal-tamil-nadu-rain-today#comments</comments><guid isPermaLink="false">f5e1318c-ca8f-4cd9-82f7-bd69e8b9859a</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:07:13 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:07:13.599Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/hnfjci25/Untitled-13.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/hnfjci25/Untitled-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சுமார் 7.6 கி.மீ. உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>17-07-2026 மற்றும் 18-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>19-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>17-07-2026 முதல் 21-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>17-07-2026 முதல் 21-07-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>17-07-2026:</strong> அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் (Hot and Humid) இருக்கும் நிலையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-power-cut-tirunelveli-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-power-cut-tirunelveli-tomorrow#comments</comments><guid isPermaLink="false">235e076e-0131-4010-8a56-e9ada7e015a3</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:04:07 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:04:07.124Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/3byj4xld/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/3byj4xld/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் நேரங்களில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானுர் மற்றும் மூலைக்கரைப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால்  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.</p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம்,</p><p>சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானாங்குளம்.  மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், நரியூத்து.   அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம். </p><p>பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்ப்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம். </p><p>வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி, மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம்,முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>இதேபோல் கங்கைகொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. </p><p>சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  </p><h2>வள்ளியூர் கோட்டம்</h2><p>வள்ளியூர் மின் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நவலடி, சங்கனான்குளம் மற்றும் களக்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், பரதர் உவரி, பெட்டைகுளம், உறுமன்குளம். </p><p>மன்னார்புரம், வடக்கு விஜயநாராயண், தெற்கு விஜயநாராயண், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி. </p><p>களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலை சமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கல்லிடைக்குறிச்சி கோட்டம்</h2><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்குட்பட்ட மேலக்கல்லுர் துணை மின் நிலையத்தில் நாளை (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில்</p><p>மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.</p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>மேலக்கல்லுர், சுத்தமல்லி, சங்கன்திரடு கொண்டாநகரம், நடுக்கல்லுர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஹைட்ரஜன் ரெயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nayinar-nagendran-congratulates-prime-minister-modi-on-launching-hydrogen-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nayinar-nagendran-congratulates-prime-minister-modi-on-launching-hydrogen-train-service#comments</comments><guid isPermaLink="false">e6337ee3-1cc5-49b0-8c1c-6dc70b84d296</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:01:29 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:01:29.618Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Modi,Nayinar Nagendran,Hydrogen Train,ஹைட்ரஜன் ரெயில்,மோடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/8nacn9qx/8.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/8nacn9qx/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் மற்றும் சோனிபட் ஆகிய நகரங்களுக்கு இடையேயான இந்தியாவின் முதல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">ஹைட்ரஜன் ரெயிலை</a> இன்று நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. </p><h2>வரலாற்று பெருமை</h2><p>ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலானது, முழுக்க முழுக்க சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் -இல் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது தமிழகத்திற்கான வரலாற்று பெருமை. “சுயசார்பு இந்தியா” எனும் நமது இலக்கை மேலும் வலுவாக்கும் வகையிலான, நமது பாரதப் பிரதமரின் இத்தகைய முன்னெடுப்பு, நமது நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் புத்தி மைல்கல்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>ஆடி முதல் வார வெள்ளி; அம்மன் கோவில்களில் குவிந்த பெண்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-flock-to-amman-temples</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-flock-to-amman-temples#comments</comments><guid isPermaLink="false">d3f11800-1348-4683-bf13-66803b4179dc</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:55:07 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:55:07.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவில்கள்,அம்மன் கோவில்கள்,ஆடி வெள்ளி,Aadi,ஆடி வெள்ளி வழிபாடு,Samayapuram,crowds of devotees</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/pcxmpon3/sakthi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/pcxmpon3/sakthi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆடி மாத பிறப்பையொட்டி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்மன் கோவில்களில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.</p><h2>ஆடி வெள்ளி</h2><p>தமிழ் மாதங்களில் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுவது ஆடி மாதமாகும். ஆடி மாதங்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் அதில் ஆலயங்களில் கூழ்வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் பாலபிஷேகம் செய்து வழிபட்டால் சுக்கிரன் அருள் கிடைக்கும் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக இந்த மாதத்தில் உள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.  இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின் ஆலயங்களில் திருவிழாக்கோலம் பூண்டு இருக்கும்.</p><h2>அம்மன் கோவில்கள்</h2><p>இந்தநிலையில், இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலையில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். </p><p>திருச்சியில் சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, உறையூர் வெக்காளியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவிலில்களிலும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆடி வெள்ளிக்கிழமை</a>களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றடு.  இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் அம்மன் ஆலயங்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.</p><p>திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், காஞ்சிபுரம் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்,  திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவில் உள்ளிட்ட  ஆலயங்களில் அம்ம னுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.</p><p>பக்தர்கள் வழிபாடு</p><p>மயிலாப்பூரில் அருள்பாலிக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன், முண்டகக் கண்ணி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதலே பாலபிஷேகம் நடத்தி வழிபாடு செய்தனர். பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வழிபட்டனர். அம்மனுக்கு மா விளக்கேற்றியும் வழிபாடு நடத்தினர். </p><p>ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து, வீட்டில் பால்பாயாசம் செய்து அம்மனை வழிபட செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.</p>]]></content:encoded></item><item><title>புகைப்படத்தை காட்டி மிரட்டல்: பெண்ணை கத்தியால் குத்திவிட்டு வடமாநில வாலிபர் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/threatened-with-photo-northern-state-youth-stabs-woman-commits-suicide</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/threatened-with-photo-northern-state-youth-stabs-woman-commits-suicide#comments</comments><guid isPermaLink="false">7351c0c4-9a5f-46a4-b304-c57d18fac90c</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:54:21 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:54:21.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>stabbing,கத்திக்குத்து,Thoothukudi,தூத்துக்குடி,அசாம்,Youth,வாலிபர்,Threat,பெண்,Woman,மிரட்டல்,தற்கொலை,Suicide,Assam,புகைப்படம்,photo</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/3qslb3r0/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடமாநில வாலிபர் தற்கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/3qslb3r0/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வடமாநில வாலிபர், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சக பெண் தொழிலாளியை கத்தியால் குத்திவிட்டு தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை</a> செய்து கொண்டார்.</p><h2>இணைந்து எடுத்த புகைப்படத்தை காட்டி மிரட்டல்</h2><p>அசாம் மாநிலம் டின்சுகியா பகுதியைச் சேர்ந்த அலபிச் ஹேமராம் (வயது 35), மேலஅரசரடி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாதுரி குவாலா(33) என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை செல்போனில் காட்டி மாதுரி குவாலாவை அலபிச் ஹேமராம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.</p><h2>பெண்ணுக்கு கத்திக்குத்து; வாலிபர் தற்கொலை</h2><p>இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை சக ஊழியர்கள் சமாதானம் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மீண்டும் ஏற்பட்ட மோதலில், அலபிச் ஹேமராம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாதுரி குவாலாவை குத்தியுள்ளார். சத்தம் கேட்டு தடுக்க வந்த சக தொழிலாளர்களான இத்வார்சுரேன், சோனு பிரியா ஆகியோரையும் கத்தியால் குத்தியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அலபிச் ஹேமராம் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>படுகாயமடைந்த அலபிச் ஹேமராம் மற்றும் மாதுரி குவாலா ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அலபிச் ஹேமராமை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாதுரி குவாலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாநகராட்சி கூட்டத்தில் அமளி: 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/riot-at-coimbatore-corporation-meeting-5-councilors-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/riot-at-coimbatore-corporation-meeting-5-councilors-suspended#comments</comments><guid isPermaLink="false">1a024ab1-8013-4fb0-830b-d8e8ba0f1994</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:52:25 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:52:25.478Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,காங்கிரஸ்,Congress,Councilors,கோவை மாநகராட்சி,கவுன்சிலர்கள்,மாநகராட்சி கூட்டம்,Coimbatore Corporation,Corporation meeting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/fx4acjl3/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/fx4acjl3/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>மாநகராட்சி கூட்டம்</h2><p>கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மற்றும் துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். </p><p>கூட்டம் தொடங்கியதும் மண்டல அலுவலகங்களில் மனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறுவது குறித்த முறையான அறிவிப்பை மாநகராட்சி அதிகாரிகள் மண்டல தலைவர்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கவில்லை என கூறி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கேள்வி எழுப்பினார். </p><h2>காரசார வாக்குவாதம்</h2><p>தொடர்ந்து வார்டுகளில் மாநகராட்சி முகாம்கள் நடப்பது பற்றி தங்களுக்குத் தகவல் அளிப்பதில்லை என்றும், அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும் கூறி ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் இருதரப்பும் இணைந்து மேயர் மற்றும் ஆணையரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றால் மாமன்றத்தை புறக்கணிப்போம் என வாக்குவாதம் செய்தனர்.</p><p>அதே நேரத்தில், செம்மொழி பூங்கா அமைப்பதில் 40 கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கூறி, அது குறித்து மேயர் பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மேயர் ரங்கநாயகியை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தார். இதனால் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.</p><h2>காங்கிரஸ் கவுன்சிலர் வாக்குவாதம்</h2><p>இந்த தள்ளுமுள்ளுவின் போது திமுக பெண் கவுன்சிலர்கள், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியின் சேலையை பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. அதனையும் மீறி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மேடையில் ஏறி நின்று மாநகராட்சி ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர் காயத்ரி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.</p><p>மற்றொரு புறம், சிபிஐ மற்றும் சிபிஎம் கவுன்சிலர்கள் சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி அவர்களும் தனியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு பல்வேறு தரப்பிலும் நடைபெற்ற முற்றுகை, கடுமையான கூச்சல் குழப்பம் மற்றும் அமளி காரணமாக, கூட்டம் ஒரு மணி நேரம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>5 கவுன்சிலர்கள் சஸ்பெண்டு</h2><p>இதனைத் தொடர்ந்து, மாமன்ற கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சாந்தி, பிரபா ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காயத்ரி ஆகிய 5 பேரை 2 மாத காலத்திற்கு சஸ்பெண்டு செய்வதாக மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார். மாநகராட்சி கூட்டத்தில் ஏற்பட்ட அமளியால் 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காதல் கணவன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-commits-suicide-in-grief-over-death-of-beloved-husband-shocking-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-commits-suicide-in-grief-over-death-of-beloved-husband-shocking-incident#comments</comments><guid isPermaLink="false">659fc223-4caf-478a-b8fb-7188c7b894f9</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:40:09 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:40:09.389Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,தற்கொலை,Katpadi,காட்பாடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/v3ue6qpm/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/v3ue6qpm/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி இ.பி. காலனியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் மேல்பாடியில் காய்கறி மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சஞ்சய் (25 வயது) கடந்த 9-ந்தேதி இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சஞ்சய் மேல்பாடி பகுதியைச் சேர்ந்த அனிதா (22 வயது) என்பவரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.</p><p>குடும்ப பிரச்சினை காரணமாக சஞ்சய் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அனிதா காதல் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><p>இதனை அறிந்த மேல்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தனித்தனியாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 23-ந் தேதி கடைசி நாள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/july-23rd-is-the-last-day-to-apply-for-mbbs-and-bds-courses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/july-23rd-is-the-last-day-to-apply-for-mbbs-and-bds-courses#comments</comments><guid isPermaLink="false">21693783-b29d-4bd7-b428-24bcfdaab945</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:39:51 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:39:51.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>apply,விண்ணப்பம்,MBBS,BDS,எம்பிபிஎஸ்,பிடிஎஸ்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/x4lsi2q8/dr.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/x4lsi2q8/dr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜுன் 29-ந் தேதி தொடங்கியது. மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.</p><h2>கால அவகாசம் நீட்டிக்கப்படாது</h2><p>மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை இணையவழியில் செலுத்திய பிறகு, தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவக்கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D"> எம்பிபிஎஸ், </a>பிடிஎஸ் படிப்புகளுக்கு   ஜுலை 23-ந் தேதி  மாலை 5 மணி வரை விண்ணபிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக வழக்கு - பொன்ராஜ் மனு தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-of-derogatory-remarks-against-female-thaweka-volunteers-ponrajs-petition-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-of-derogatory-remarks-against-female-thaweka-volunteers-ponrajs-petition-dismissed#comments</comments><guid isPermaLink="false">7de216fd-e4ee-4f1a-bcbf-edcff575ef27</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:28:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:28:16.161Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை ஐகோர்ட்டு,MadrasHC,tvk vijay,பொன்ராஜ்,Ponraj</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/mib786ve/ponrajaguru33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பொன்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/mib786ve/ponrajaguru33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக பெண் தொண்டர்களை இழிவாகப் ஏசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.</p><p>தவெக தலைவர் விஜய்-க்கு ஆதரவாக பேட்டியளித்த பெண் தொண்டர்களை இழிவாக விமர்சித்ததாக, அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆலோசகருமான பொன்ராஜ்-க்கு எதிராக, கடந்த மார்ச் 26ஆம் தேதி தற்போதைய அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்குமார் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில், மே 12ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், கடலூர் போலீசாரும் வழக்குகள் பதிவு செய்திருந்தனர். இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.</p><p>பொன்ராஜ் தரப்பில், யு டியூப் சேனல் பேட்டியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டுமே மனுதாரர் பதிலளித்தார். மற்றபடி பெண்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் எந்த  கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்போது அமைச்சர்களாக உள்ள இருவர், தேர்தலுக்கு முன் அளித்த புகார்கள் மீது புதிய அரசு பொறுப்பேற்ற பின், எந்தவித ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.</p><p>காவல் துறை தரப்பில், மறைந்த முன்னாள் ஜனாதிபதியின் தனி செயலாளராக பணியாற்றியவர், இதுபோல பேசியிருக்க கூடாது. அவரது பேச்சு ஒட்டுமொத்த பெண்களை குறிக்கும் வகையில் பொதுப்படையாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு அடங்கிய வீடியோக்கள், இன்னும் இணையதளத்தில் உள்ளன. வழக்கு முதல் தகவல் அறிக்கை என்ற நிலையில் மட்டுமே உள்ளதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதம் முன் வைக்கப்பட்டது.</p><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொன்ராஜின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.  இந்தநிலையில், இன்று, இந்த மனுக்கள் மீது தீர்ப்பளித்த நீதிபதி,<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> பொன்ராஜ்</a> தரப்பு வாதங்களை ஏற்க மறுத்து, அவரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-8</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-8#comments</comments><guid isPermaLink="false">718b4a94-19e0-4ead-83e5-a4130d81dc51</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:27:23 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:27:23.868Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0cfjny5l/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0cfjny5l/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் நேரங்களில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (18.7.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும்,  கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் ஆகிய ஊர்களுக்கும், </p><p>திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கர்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையாள்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் நாளை (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வரும் இடங்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் இருக்காது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடி: “மிகப்பெரிய சதி..குற்றவாளியை மறைக்க முயற்சி” - தி.மு.க. குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-a-massive-conspiracy-an-attempt-to-shield-the-culprit-dmks-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-a-massive-conspiracy-an-attempt-to-shield-the-culprit-dmks-allegation#comments</comments><guid isPermaLink="false">30a459d5-011d-4b0f-9c34-eedd7201aaad</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:21:54 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:21:54.879Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,பழனி,Palani,நில மோசடி,Land fraud case,கோவில் நிலம்,temple land</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bctx4thy/vijay.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bctx4thy/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.</p><p>ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனி யார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சம் பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இந்த முறைகேடு பதிவு குறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அதனை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி என 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>தி.மு.க. குற்றச்சாட்டு</h2><p>இதனிடையே ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.</p><p>இந்நிலையில் பழனி கோவில் நில மோசடி தொடர்பாக மிகப்பெரிய சதி நடந்துள்ளது என்றும் குற்றவாளியை மறைக்க முயற்சி நடப்பதாகவும் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டி உள்ளார். </p><h2>திட்டமிட்ட சதி</h2><p>இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-</p><p>பழனி நில மோசடி விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் விளக்கம் ஏற்புடையதல்ல. திட்டமிட்ட சதி நடந்துள்ளது. தனிநபர்களை காப்பாற்ற, குற்றவாளிகளை மறைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதன் நோக்கம் என்ன?</p><p>பழனிக்கு வந்துதான் எல்லோரும் மொட்டை போடுவார்கள். ஆனால், பழனிக்கே மொட்டை போட்டுள்ளது தவெக ஆட்சி. முறைகேடான அந்த நிலப்பதிவைக் கூட நீதிமன்றம்தான் ரத்து செய்தது, தவெக அரசு செய்யவில்லை.</p><p>சமூக வலைதளத்தில் பேசியவர்களை இரவோடு இரவாக கைது செய்த போலீசார், நிலத்தை விற்றவர்களை, வாங்கியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? </p> <h2>முதல்-அமைச்சர் விஜய்</h2><p>பழனி கோயில் நில விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற அறநிலையத் துறை அமைச்சர் முயற்சிக்கிறார். இதில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பழனிக்கு அருகே உள்ள சார்பதிவாளரை அழைக்காமல் 67 கி.மீ. தொலைவில் உள்ள சார்பதிவாளரை வரவைத்து முறைகேடு செய்துள்ளனர்.</p><p>முதல்-அமைச்சர் விஜய்க்கு தெரிந்துதான் இந்த நிலம் சட்ட விரோதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு தெரியவில்லை என்றால் முதல்-அமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை?</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p> ]]></content:encoded></item><item><title>கோவையில் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-sub-inspector-arrested-for-rs-70k-bribe-in-coimbatore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-sub-inspector-arrested-for-rs-70k-bribe-in-coimbatore#comments</comments><guid isPermaLink="false">9e72d0e5-3b33-41b5-a948-69fcb5e067d5</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:16:22 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:16:22.994Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கைது,arrest,லஞ்சம்,Bribery,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/tnlculbl/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/tnlculbl/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவை காட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் பூபதி. இவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த ஒருவரிடம் ரூ.70 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். புகார் அளிக்க வந்தவர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.</p><p>அந்த தகவலின் பேரில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.70 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.</p><p>அதன்பேரில், உக்கடம் பேருந்து நிலையம் அருகே வரவழைக்கப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் புகார்தாரர் ரூ.70 ஆயிரம் வழங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி: திமுக விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-vijay-regime-that-shaved-palaniks-head-dmk-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-vijay-regime-that-shaved-palaniks-head-dmk-criticism#comments</comments><guid isPermaLink="false">0c3da8e7-b7b5-4194-84f4-d15dd3353972</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:15:45 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:15:45.601Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,பழனி,நில மோசடி வழக்கு,Palani,Palani temple,land dispute case,பழனி கோவில்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/c7x268xl/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/c7x268xl/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழனி நில மோசடி தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் ஏற்புடையதல்ல; திட்டமிட்ட சதி நடந்துள்ளது: தனிநபர்களை காப்பாற்ற, குற்றவாளிகளை மறைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதன் நோக்கம் என்ன?.</p><p>பழனி நில விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற அறநிலையத்துறை அமைச்சர் முயற்சிக்கிறார். இதில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பழனிக்கு அருகே உள்ள சார் பதிவாளரை அழைக்காமல் 67 கி.மீ. தொலைவில் உள்ள சார் பதிவாளரை வரவைத்து முறைகேடு செய்துள்ளனர். கொடைக்கானல் சார் பதிவாளர் ஏன்?. ஒரே ஒரு நாள் டூட்டிக்கு வந்த பதிவாளர் அவசர அவசரமாக ரூ.100 கோடி நிலத்தை பதிவு செய்தது ஏன்?. </p><p>பழனி மடத்தின் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாது என சார்பதிவாளர் பாலகிருஷ்ணன் விடுப்பில் சென்றுவிடுகிறார். பழனிக்கு அருகே உள்ள சத்திரபட்டி, கீரனூர் சார் பதிவாளர்களை ஏன் பழனியில் டூட்டி போடவில்லை. பழனி நிலத்தை முறைகேடாக பதிவு செய்த பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நிலப்பத்திரப்பதிவை கவனிப்பவர் அல்ல. பழனி நில முறைகேடு தொடர்பாக அமைச்சர்கள் ரமேஷ், லோகேஷ் கூறிய கருத்துகளுக்கு மாறாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>பழனி நில மோசடி விவகாரத்தில் கிரயம் செய்திருக்கக்கூடிய 2 பேர் யாரென்று போலீஸ் தரப்பில் வெளிக்காட்டவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்ட 2 பேரும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சொத்து வாங்கக்கூடிய அளவிற்குக் கூட பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்தவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி ரூ.2 கோடியில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்?.</p><p>பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடைய நிலமும், கோவில்களும், கடந்த திராவிட மாடல் ஆட்சியில் பாதுகாக்கப்பட்டன. பழனிக்கு வந்துதான் எல்லோரும் மொட்டை போட்டு பார்த்திருப்போம்; ஆனால் விஜய் ஆட்சி பழனிக்கே மொட்டை போட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் விபூதி அடித்துள்ளது தவெக. முறைகேடான அந்த நிலப்பதிவைக் கூட நீதிமன்றம்தான் ரத்து செய்தது, தவெக அரசு செய்யவில்லை.</p><p>சமூக வலைதளங்களில் இந்த அரசையும், அரசு செய்யக்கூடிய குற்றங்களையும், முதல்-அமைச்சரையும் விமர்சித்தால், இரவோடு இரவாக கைது செய்கிறது போலீஸ். ஆனால் பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடைய துணை சார்பதிவாளரை இன்னும் ஏன் தவெக போலீஸ் கைது செய்யவில்லை?. நிலத்தை விற்றவர்களை, வாங்கியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் ஒழிப்புக்கான டெல்லி போராட்டம் வெல்லட்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-delhi-struggle-for-the-abolition-of-neet-win-tamil-nadu-vazhuvrimai-party-fully-supports</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-delhi-struggle-for-the-abolition-of-neet-win-tamil-nadu-vazhuvrimai-party-fully-supports#comments</comments><guid isPermaLink="false">24551351-faf4-4403-8c08-effab221ca4a</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:14:03 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:14:03.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,NEET,நீட்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,டெல்லி போராட்டம்,Delhi struggle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/w9pg18ga/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/w9pg18ga/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வு முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கும், அதற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><h2>அநீதியான தேர்வு முறை</h2><p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொடக்கக் காலம் முதலான உறுதியான கொள்கையாகும். நீட் என்பது சமூகநீதிக்கு எதிரானதும், ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவைப் பறிக்கும் அநீதியான தேர்வு முறையுமாகும்.</p><p>தேர்வு முறைகேடுகளும், வினாத்தாள் கசிவுகளும்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D"> நீட் தேர்வின் </a>நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், ஒன்றிய அரசு நீட்டை முழுமையாக ரத்து செய்து, மாநிலங்களின் கல்வி உரிமையை மதிக்கும் வகையில் மாணவர் சேர்க்கை முறையை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரெஸ்டோ பார் திட்டம் தேவையில்லை: கைவிடாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-for-resto-bar-plan-if-not-dropped-pmk-will-protest-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-need-for-resto-bar-plan-if-not-dropped-pmk-will-protest-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">840eb607-fa17-46a6-bc28-7d3f618f4dce</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:00:17 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:00:17.510Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,தமிழக அரசு,TN govt,ரெஸ்டோ பார்,resto bar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/98myxqhy/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/98myxqhy/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டிலும் உணவங்களுடன் குடிப்பகங்களும் இணைக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை அமைக்க உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெரும் கேட்டை விளைவிக்கும் திட்டம் குறித்த இந்த செய்திகள் உண்மையா? என்பதை அரசு விளக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் தற்போது 3 நிலைகளில் மது குடிப்பகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் HL 1 என்ற உரிமத்துடனும், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரிலான குடிப்பகங்கள் HL2 என்ற உரிமத்துடனும், நட்சத்திர விடுதிகளில் உள்ள குடிப்பகங்கள் HL3 என்ற உரிமத்துடனும் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் கடுமையான விதிமீறல்களும், சட்டவிரோத மது விற்பனையும் நடைபெற்று வருவதால் அவற்றை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், நலவாழ்வு ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கூடுதலாக ரெஸ்டோ பார்களை அனுமதிக்கவும்,  அவற்றுக்காக HL3A என்ற உரிமத்தை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதும் பிற்போக்குத்தனமான செயல்களாகும்.</p><p>ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக அரசுத் தரப்பின் வாதங்களாக கூறப்படுபவை ஏற்றுக்கொள்ளவே முடியாதவை ஆகும். அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் சுகாதாரமானவையாக இல்லை;  மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களுக்கு மட்டும்தான் மது வழங்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி அனைவருக்கும் மது மற்றும் உணவு வகைகள் வழங்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது; இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகத்தான் ரெஸ்டோ பார்கள் திறக்கப்படவுள்ளதாக அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வாதங்கள் அபத்தமானவையாகும்.</p><p>மது மிகவும் கேடானது; மது சாத்தானுக்கு ஒப்பானது. அதன் வணிகம் தடை செய்யப்பட வேண்டுமே தவிர, அதை ஒழுங்குபடுத்தத் தேவையில்லை. அதையும் மீறி படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் அரசின் கொள்கை முடிவு என்றால் சட்டவிரோதமாக செயல்படும் குடிப்பகங்கள் எந்த வகையை சேர்ந்தவையாக இருந்தாலும் கருணை காட்டாமல் அவற்றை மூட ஆணையிடுவதுதான் சரியான, மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை ஆகும். அதற்கு மாறாக புதிய வகை குடிப்பகங்களை திறக்க முனைவது மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். இந்த வரலாற்றுத் தவறை த.வெ.க அரசு செய்யக் கூடாது.</p><p>அரசு மதுக்கடைகளுடன் கூடிய குடிப்பகங்கள், மனமகிழ்மன்ற குடிப்பகங்கள் ஆகியவற்றுக்கு எதிரான மனநிலை எப்போதும் மக்களிடம் உண்டு. அங்கு சென்று வந்தால், தங்களை சமூகத்தில் தவறாக நினைப்பார்கள் என்று அஞ்சுவார்கள். அந்த அச்சமே அவர்களை அவற்றின் பக்கம் செல்லாமல் தடுத்து விடும். ஆனால், ரெஸ்டோ பார்கள் உணவகங்களாகவும் கருதப்படும் என்பதால், அவற்றின் மீது அந்த தவறான முத்திரை இருக்காது. அதனால், மாணவர்கள், இளம்பெண்கள் போன்றவர்களும் ரெஸ்டோ பார்களுக்கு தயக்கமின்றி செல்லும் நிலை ஏற்பட்டு விடும். இது மிகவும் ஆபத்தானதும், சமூகக் கேடானதும் ஆகும்.</p><p>அதுமட்டுமின்றி, ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக கூறப்படும்  காரணங்கள் என்னவாக இருந்தாலும், அதன் முதன்மை நோக்கம் அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டுவதுதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வருவாய்க்காக மதுவணிகம் செய்வது மக்கள் நல அரசுக்கு அழகல்ல. கடந்த ஆட்சியில் மது வணிகத்தைப் பெருக்குவதற்காக வணிக வளாகங்களில் தானியங்கி மது வழங்கும் எந்திரங்களை அமைத்தல், 90 மி.லி காகிதக் குடுவையில் (டெட்ரா பேக்) மது வணிகம் செய்தல், விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், திருமணம் போன்ற சமூக ஒன்று கூடல்கள் ஆகியவற்றில் மது வினியோகம் செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தையும் சட்டப் போராட்டம் நடத்தியும், அரசியல் அழுத்தங்களின் வாயிலாகவும் பாட்டாளி மக்கள் கட்சி முறியடித்தது. அதன்பின் தங்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்தது. கடந்த ஆட்சியில் மட்டும் 1200-க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டன.</p><p>ஆட்சியாளர்களின் நோக்கம் மதுவை ஒழிப்பதாகத் தான் இருக்க வேண்டும். மதுவிலக்குத் துறையில் செய்யப்படும் சீர்திருத்தங்களும் அவற்றை நோக்கியதாகவே இருக்க வேண்டும். மாறாக, அதிக வசதிகளுடன் ரெஸ்டொ பார்களை திறப்பது, வெளிமாநிலங்களில் இருந்து புதிய மது வகைகளை வாங்கி வினியோகம் செய்வது தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.</p><p>ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தந்தை  பெரியார், பெருந்தலைவர் காமராசர், தென்னாட்டு ஜான்சி ராணி கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோர்    மதுவை கடுமையாக எதிர்த்தார்கள். தந்தை பெரியார் கள்ளுக்கடைகள் தேவையில்லை என்பதற்காக தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்; காமராசர் அவரது ஆட்சியில் மதுவிலக்கை தீவிரமாக கடைபிடித்தார். அவர்களின் வழியில் வந்ததாக பெருமிதப்பட்டுக் கொள்ளும் தவெக அரசு ரெஸ்டோ பார் எனும் புதிய வகை மதுக்குடிப்பங்களை அறிமுகம் செய்தால் அது அரசுக்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்தி விடும்.</p><p>ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டு, அதன் காரணமாக மதுப்புழக்கம் அதிகரித்தால் சட்டம் &amp; ஒழுங்கு மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்.  முந்தைய திமுக அரசு மக்களால் தூக்கி எறியப்பட்டதற்கு காரணமே மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும், அதனால் பெருகிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் கட்டுப்படுத்தத் தவறியதுதான். திமுக அரசு செய்த அதே தவறை த.வெ.க. அரசும் செய்யக் கூடாது.</p><p>சமூகக் கேடுகளையும், புதிய குடிகாரர்களையும் உருவாக்கும் ரெஸ்டொ பார்களை அமைப்பதற்கு உரிமம்  வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மக்களுக்கு கேடான இந்தத் திட்டத்திற்கு எதிராக சட்ட மற்றும் அரசியல் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் மாநகராட்சியில் ரூ.1.10 கோடியில் புதுப்பொலிவு பெறும் 11 அம்மா உணவகங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-amma-unavagam-in-salem-corporation-to-get-a-facelift-at-a-cost-of-rs-110-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-amma-unavagam-in-salem-corporation-to-get-a-facelift-at-a-cost-of-rs-110-crore#comments</comments><guid isPermaLink="false">c2b99c61-3e74-487d-a00b-18dd54290d31</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:59:20 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:59:20.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,அம்மா உணவகம்,Amma Restaurants,Amma Unavagam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/gz28aqlu/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/gz28aqlu/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><h2>அம்மா உணவகங்கள்</h2><p>சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, வின்சென்ட், அரசு ஆஸ்பத்திரி, சூரமங்கலம், மணியனூர், சத்திரம், பழைய சூர மங்கலம், அம்மாப்பேட்டை, கருங்கல்பட்டி, ஆற்றோரம் காய்கறி மார்க்கெட், வெங்கடப்பன் சாலை ஆகிய 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. </p><p>இந்த ஒவ்வொரு உணவகங்களிலும் தினமும் காலையில் 1,200 இட்லிகள், மதியம் 300 சாம்பார் சாதம், 300 தயிர் சாதம் தயார் செய்யப்பட்டு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இட்லி ஒன்று ரூ.1-க்கும், சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் கொடுக்கப்படுகிறது. 11 அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 10 ஆயிரம் பேர் வந்து சாப்பிட்டு செல்வதாக அங்கு வேலை செய்து வரும் பெண் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>ரூ.1.10 கோடியில் சீரமைப்பு</h2><p>இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 11 அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த நிதியை வைத்து அனைத்து அம்மா உணவகங்களிலும் வர்ணம் பூசுதல் (பெயிண்டு அடித்தல்), பழுதடைந்த மின்விசிறிகளை மாற்றி புதிய மின்விசிறிகள் மாட்டுதல், தேவையான அம்மா உணவகங்களில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வைத்தல், புதிய சமையல் உபகரணங்களை வாங்குதல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள அம்மா உணவகங்கள் தற்போது புதுப்பொலிவு பெறுகிறது.</p><p>குறிப்பாக மணியனூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு ரூ.20½ லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் அறைகள் கட்டுவதோடு தேவையான சமையல் பாத்திரங்கள் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்திலும் ரூ.20 லட்சத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது.</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>அதேசமயம் அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் பருப்பு, அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவு மட்டும் வழங்குவதாகவும், இதனால் உணவு தரமான முறையில் தயாரித்து வழங்க முடியாத சிரமம் உள்ளதாகவும் அம்மா உணவகத்தில் வேலை செய்து வரும் பெண்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.</p><p>ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் அம்மா உணவகங்களுக்கு தேவையான அளவு பொருட்கள் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அம்மா உணவகங்களுக்கு சாப்பிட வந்துசெல்லும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறுமியை ஆணவக்கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை: தஞ்சை மகிளா கோர்ட்டு தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/life-imprisonment-for-father-who-murdered-girl-thanjavur-mahila-court-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/life-imprisonment-for-father-who-murdered-girl-thanjavur-mahila-court-verdict#comments</comments><guid isPermaLink="false">19a575f5-a61f-48c3-aaa6-6c21c910a776</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:50:22 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:50:22.574Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,life imprisonment,ஆயுள் தண்டனை,சிறுமி,girl,Father,தந்தை,ஆணவக்கொலை,Manslaughter,மகிளா நீதிமன்றம் தீர்ப்பு,women&apos;s court verdict</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ixlws4vb/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமியின் தந்தைக்கு ஆயுள் தண்டனை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ixlws4vb/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிறுமியை ஆணவக்கொலை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை</a> விதித்து தஞ்சை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. </p><h2>17 வயது சிறுமி காதல்</h2><p>தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை அருகே உள்ள நெம்மேலி குடியானத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 60). இவருடைய மகள் சோபி(17). இவர் மாற்று சமூகத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு சோபியின் தந்தை தியாகராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் சோபி தனது முடிவை மாற்ற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தியாகராஜன், கடந்த 26-1-2016 அன்று அம்மாப்பேட்டை அருகே உள்ள சர்க்கரைப்பாளையம் வெண்ணாற்று பகுதியில் சோபியின் கை, கால்களை கட்டி, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். </p><h2>ஆணவக்கொலை</h2><p>இதுகுறித்து அம்மாப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் காசிநாதன் அளித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ஆணவக்கொலை என வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 12-6-2017 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. </p><h2>ஆயுள் தண்டனை</h2><p>வழக்கை விசாரித்த நீதிபதி தீபா, குற்றம் சாட்டப்பட்ட தியாகராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 1½ ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வக்கீல் சுகன்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியவன் மற்றும் கோர்ட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் பாராட்டினார். </p>]]></content:encoded></item><item><title>தென்காசி அருகே அகழாய்வில் தொல்பொருட்கள் கண்டெடுப்பு - அமைச்சர் ராஜ்மோகன் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/archaeological-artifacts-unearthed-during-excavation-near-tenkasi-minister-rajmohan-shares-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/archaeological-artifacts-unearthed-during-excavation-near-tenkasi-minister-rajmohan-shares-details#comments</comments><guid isPermaLink="false">86f488e8-73f4-40aa-913c-9535083a1c95</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:43:04 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:43:04.123Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,அகழாய்வு பணிகள்,தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு,Archaeological Excavation,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ffflrvhw/mini.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/ffflrvhw/mini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/ராஜ்மோகன்">ராஜ்மோகன்</a> தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள மலையடிப்பட்டியில் அமைந்துள்ள தொல்லியல் தளத்தில் அகழாய்வு கடந்த மூன்று மாதங்களாக  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. </p><h2>தங்கத்திலான மணி</h2><p>இந்த அகழாய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் நுண்கற்கால கற்கருவிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணாலான தக்களிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் மணிகள், சூதுபவள மணிகள், ஆடி மணிகள், தங்கத்திலான மணி, செவ்வக பகடைக்காய், இரும்பு பொருட்கள் மற்றும் செப்பு நாணயங்கள் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன. </p><h2>இரும்புக் கருவிகள்</h2><p>இவை தவிர சங்க கால சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம், முழுமையான பானைகள், மூடியுடன் கூடிய கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், துளையிடப்பட்ட கிண்ணங்கள் போன்றவைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. </p><p>சங்க காலத்தில் இரும்புக் கருவிகள், ஆடி மணிகள், சங்கு வளையல்கள் மற்றும் நெசவு தொழிற்கூடங்கள் சிறப்புற செயல்பட்டதற்கான கட்டமைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன‌. </p><p>தொடர் தொல்லியல் பணிகளும், அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளும் தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும் என நம்புகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள மலையடிப்பட்டியில் அமைந்துள்ள தொல்லியல் தளத்தில் அகழாய்வு கடந்த மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. <br><br>இந்த அகழாய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் நுண்கற்கால கற்கருவிகள், சங்கு… <a href="https://t.co/I1c8WXAH9D">pic.twitter.com/I1c8WXAH9D</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2077984649926574142?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மைசூரு - கண்ணூர் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-mysore-kannur-via-salem-erode-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-mysore-kannur-via-salem-erode-tiruppur#comments</comments><guid isPermaLink="false">68bdb0e9-9d20-4d8b-bbdb-a7ebdc59cce2</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:29:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:29:11.457Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tiruppur,திருப்பூர்,சிறப்பு ரெயில்,mysore,மைசூரு,Special train,Salem,Erode,ஈரோடு,சேலம்,Kannur,கண்ணூர்,தெற்கு ரெயில்வே தகவல்,Southern Railway Information</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/c2que1ac/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில் இயக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/c2que1ac/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மைசூரு - கேரள மாநிலம் கண்ணூர் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிறப்பு ரெயில் </a>இயக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:</p><h2>மைசூரு - கண்ணூர் இடையே சிறப்பு ரெயில்</h2><p>மைசூருவில் இருந்து ஆகஸ்டு 25-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06227) மறுநாள் மதியம் 2 மணிக்கு கண்ணூரை சென்றடையும். மறுமார்க்கத்தில், கண்ணூரில் இருந்து ஆகஸ்டு 26-ந்தேதி மாலை 6.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06228) மறுநாள் காலை 8.35 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை சென்றடையும். </p><p>இதேபோல், மைசூருவில் இருந்து ஆகஸ்டு 29-ந்தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06229) மறுநாள் மாலை 5.50 மணிக்கு கண்ணூர் ரெயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், கண்ணூரில் இருந்து ஆகஸ்டு 30-ந்தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06230) மறுநாள் காலை 10 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்டை சென்றடையும்.</p><h2>20 பெட்டிகள்</h2><p>20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில்கள் தமிழகத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழலால் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கும் பாலிலும் நஞ்சு கலப்பு - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-bjp-ruled-states-milk-substitutes-are-also-contaminated-due-to-corruption-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-bjp-ruled-states-milk-substitutes-are-also-contaminated-due-to-corruption-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">e7a07e97-2faa-4150-bfc9-b87916939747</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:26:41 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:26:41.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,Corruption,பாஜக அரசு,மாணிக்கம் தாகூர் எம்.பி.,ஊழல் புகார்,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/lv13elv2/manikam-takore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/lv13elv2/manikam-takore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பாஜக ஆளும் மகாராஷ்டிராவில், 'டிடர்ஜென்ட், பாமாயில், யூரியா" ஆகியவற்றை பயன்படுத்தி செயற்கையாக பால் தயாரித்துள்ளனர்.  100 லிட்டர் தூய பாலுடன், 10 லிட்டர்  செயற்கை நச்சுப் பால் கலந்து விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் மட்டும், சுமார் 2 லட்சத்து 30 ஆயிரத்து 470 கிலோ ஆபத்தான செயற்கை பால் பவுடர் விற்பனை செய்யப்பட்டுள்ளது  அதிர்ச்சி அளிக்கிறது.  </p><p>மகாராஷ்டிராவில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்  கட்சிகளை உடைத்து, குறுக்கு வழியில்  பாஜக அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. அதிகாரத்திற்காக எதையும் செய்யும்    பாஜகவின்  குறுக்கு வழியில், பணத்திற்காக எதையும் செய்யும் கொடூர மனம் படைத்தவர்கள், பச்சிளம் குழந்தைகளின் முக்கிய உணவான பாலில், ஆபத்தான ரசாயனங்களை கலந்திருப்பது, குற்றங்களிலேயே கொடிய குற்றம். இதற்கு மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.</p><h2>பாலில் கலப்படம்</h2><p>கடந்த ஆண்டு டிசம்பரில், பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கலப்பட இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இப்போது, 'பாலில் கலப்படம்” என்ற அதிர்ச்சியான தகவல் வந்திருக்கிறது. பாஜக அரசுகளின் நிர்வாகத் திறமையின்மையும், லஞ்சம், ஊழல் மலிந்து கிடப்பதுமே காரணம். </p><h2>பூஜ்ய குரு</h2><p>ஒரு பக்கம், நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, எது நடந்தாலும்,  'விஸ்வகுரு' என்று, தனக்குத்தானே விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். மறுபக்கம், மோடியால் நியமிக்கப்பட்ட மத்திய மந்திரிகளும், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் நிர்வாகத்தில் 'பூஜ்ய குரு”வாக இருக்கின்றனர். அதனால்தான் பச்சிளம் குழந்தைகளின் உணவான தாய்ப்பாலுக்கு மாற்றாக கொடுக்கப்படும் பாலில் கூட  நஞ்சை கலக்கும் கொடூரம் நடக்கிறது.  </p><h2>கடும் தண்டனை</h2><p>நஞ்சு கலந்த பாலால், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே, மகாராஷ்டிராவில் நச்சுப்பால் விற்பனை செய்யப்பட்ட பகுதிகளில், சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்குக் காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.</p><p>மகாராஷ்டிரா பாஜக அரசின் மற்றொரு ஊழலும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,500 வழங்கும்  திட்டத்தில் நடந்த முறைகேடுகளை, கணக்கு தணிக்கை குழு சி.ஏ.ஜி.  அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. தகுதியான 92 லட்சம் குடும்பத் தலைவிகள் நீக்கப்பட்டுள்ளனர்.</p><h2>மிகப்பெரிய ஊழல்</h2><p>இத்திட்டத்திற்கு, 2024-25ம் நிதியாண்டில் ரூ.29,693.09 கோடி  ஒதுக்கப்பட்டது. ஆனால்,  ரூ.33,237.24 கோடி செலவிட்டுள்ளது. இதனால் ரூ.3,541.16 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. 2025 ஜனவரி முதல் மார்ச் வரை 15,586 கோடி ரூபாய், 'விர்ச்சுவல் தனிநபர்  வைப்பு கணக்கிற்கு” (Virtual Personal Deposit Account -VPDA)   மாற்றப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய  ஊழல். </p><p>நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவருக்கு மாதம் ரூ. 2100 வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்த பாஜக, 92 லட்சம் பயனாளிகளை நீக்கியுள்ளது. இப்படி குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் நிதியிலும் ஊழல் செய்துவிட்டு 'உத்தமர்” வேடம் போடும் பாஜகவின் உண்மை முகம் இப்போது அம்பலமாகி இருக்கிறது. இந்த மெகா<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D"> ஊழல்</a> குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் </p><h2>பாஜக அரசுகள்</h2><p>எதிர்க்கட்சி எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் வீடுகளில் சோதனை நடத்தி அவர்களை பாஜகவில் சேர்க்க உதவும், அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள்,  பால் கலப்படம், பெண்கள் நிலையில் ஊழல் போன்றவற்றை கண்டு பிடிக்காமல் எங்கே சென்றன? மக்களின் உயிரோடு விளையாடுவதை பாஜக அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். திறமையான நிர்வாகத்தை கொடுக்க முடியாவிட்டால், பதவியை விட்டு விலகி விட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-process-for-the-current-year-should-begin-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-recruitment-process-for-the-current-year-should-begin-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">a6e225b4-bd83-4d5f-aed3-dc4914f7dcb7</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:25:28 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:25:28.986Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Police Exam,காவலர் தேர்வு,காவலர் ஆட்சேர்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1a07b777/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1a07b777/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>2026-ம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பை 2027-ம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணை, காவல்துறை பணியில் இணைய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடும், லட்சியத்தோடும், பல ஆண்டுகளாக இரவு, பகலாக மனதளவிலும், உடலளவிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தவெக அரசின் இந்த ஆட்சேர்ப்பு தள்ளி வைப்பு நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, வயது வரம்பு அடிப்படையில் இறுதி வாய்ப்புள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் வீணாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. </p><p>காவல்துறையில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிலவும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணி ஓய்வுபெறுவதால் காலிப்பணியிடங்கள் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தொய்வு ஏற்படுத்தக் கூடும்.</p><p>கொலை, கொள்ளை, போதைப்பொருள் தாராளப்புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்புமிக்க துறையாக திகழும் காவல்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தள்ளி வைப்பதும் பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்போடு விளையாடும் செயலாகும்.</p><p>எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி கோவில் நிலம் மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-temple-land-fraud-case-cb-cid-police-question-hindu-religiouscharitable-department-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-temple-land-fraud-case-cb-cid-police-question-hindu-religiouscharitable-department-officials#comments</comments><guid isPermaLink="false">0e7d25bf-3195-4704-9ea4-ad176070a49f</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:17:52 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:17:52.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Dindigul,பழனி,தமிழகம்,Palani,CBCID,சிபிசிஐடி போலீசார்,Land fraud case,temple land,நிலம் மோசடி,அறநிலையத்துறை அதிகாரிகள்,கோவில் நிலம் ஆக்கிரமிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/b2xjwjwb/palaal.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/b2xjwjwb/palaal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p>ரூ.100 கோடி கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார், விசாரணையை தொடங்கி உள்ளனர்.</p><h2>தண்டபாணி சுவாமி மடம்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.</p><h2>முறைகேடாக பதிவு</h2><p>ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>பதிவாளர் சஸ்பெண்ட்</h2><p>இந்த முறைகேடு பதிவு குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அதனை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி என 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>பத்திரப்பதிவு செல்லாது</h2><p>இதனிடையே ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து முறைகேடு பதிவை ரத்து செய்ய கோரி பழனி கோவில் இணை ஆணையர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>அதை விசாரித்த ஐகோர்ட்டு தண்டபாணி சுவாமி மடத்தின் சொத்து தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.</p><h2>சி.பி.சி.ஐ.டி. விசாரணை</h2><p>அதையடுத்து சி.பி.சி.ஐ.டி. மதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் தலைமையிலான 15 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் நேற்று பழனி வந்தனர். பின்பு முறைகேடு பதிவு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். </p><p>முதற்கட்டமாக <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> கோவில் அலுவலகம் சென்று, நிலத்தின் ஆவணங்களை சேகரித்தனர். பின்னர் அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்து நிலத்தை பார்வையிட்டனர். அப்போது, நிலத்தின் வரைபடத்தை ஆய்வு செய்து அதன் எல்லைகளையும் பார்வையிட்டனர்.</p><h2>ரூ.100 கோடி நிலம் முறைகேடு</h2><p>தொடர்ந்து பழனி கோவில் அலுவலகம் சென்று, நிலம் தொடர்பான ஆவணங்கள், பதிவு செய்த விவரங்கள், கோவில் அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் பழனியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, தண்டபாணி சுவாமி மடம் தொடர்பாக ஏற்கனவே பதிவான ஆவணங்களை சேகரித்தனர். பழனியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையை தொடங்கியது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.</p><h2>அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விசாரணை</h2><p>இந்நிலையில் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நிலம் முறைகேடு வழக்கு தொடர்ந்த முருகானந்தம் உள்பட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஜிதா விசாரணை நடத்தி வருகிறார். மேலும் வருவாய்த்துறை மற்றும் பத்திரபதிவுத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-than-50-tenders-cancelled-in-the-municipal-administration-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-than-50-tenders-cancelled-in-the-municipal-administration-department#comments</comments><guid isPermaLink="false">cf389de9-5ed2-4c74-b2e0-5cd5f5c9f5d2</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:07:47 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:07:47.340Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நகராட்சி நிர்வாகம்,municipal administration,டெண்டர்,Municipal Administration Department,Tenders,நகராட்சி நிர்வாகத்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/wxt36njj/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/wxt36njj/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்கள், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்கள், உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்கள், மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளிலும் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணி, புதிய போர்வெல், வாரச்சந்தை கடைகள் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர்கள் வெளியிடப்பட்டன. டெண்டர் கோரி டெண்டர் சமர்ப்பிப்பதற்கு ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>அரசின் இந்த நடவடிக்கை நகராட்சி நிர்வாக வட்டாரங்களிலும் ஒப்பந்ததாரர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-banned-from-entering-akaya-ganga-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-banned-from-entering-akaya-ganga-falls#comments</comments><guid isPermaLink="false">c8bff414-798c-426d-986e-c0016525ae8c</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:01:44 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:01:44.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,Namakkal,நாமக்கல்,Falls,நீர்வீழ்ச்சி,tourists ban</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/e2a9e50b/kollimalai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/e2a9e50b/kollimalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல், </p><p>நாமக்கல்லின் முக்கியமான அடையாளம் கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகளின் பயணத்தை அனுபவிக்க, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா  பயணிகள் இங்கு குவிகின்றனர்.</p><h2>சுற்றுலா பயணிகள் </h2><p>சுற்றுலா பயணிகள் வரும்போது சோளக்காடு அருகே உள்ள நம் அருவி, எட்டுக்கை அம்மன், வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். அத்துடன் மாசிலா அருவி மற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள்.</p><h2>சுற்றுலா பயணிகள் செல்ல தடை</h2><p>போதிய மழைப்பொழிவு இல்லாததால் நீர்வீழ்ச்சி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. மிகவும் குறைந்தளவு தண்ணீர் மட்டுமே கொட்டி வருகிறது. இதனால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">ஆகாய கங்கை நீர்விழ்ச்சிக்கு</a> சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு ஆபாச சைகை.. சிங்கப்பெண் அதிரடிப்படையிடம் சிக்கிய வாலிபர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/obscene-gesture-made-to-college-student-on-a-moving-bus-youth-nabbed-by-the-singappen-lioness-squad</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/obscene-gesture-made-to-college-student-on-a-moving-bus-youth-nabbed-by-the-singappen-lioness-squad#comments</comments><guid isPermaLink="false">67e7b548-115b-4bdf-bf59-fe0864427991</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:37:28 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:37:28.844Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,College student,கல்லூரி மாணவி,வாலிபர் கைது,Youth Arrest,Singapen Athiradi Padai,சிங்கப்பெண் அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/gnr1ewi9/dkierer.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/gnr1ewi9/dkierer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/nellai">நெல்லை</a> டவுன் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் சந்திப்பு பகுதியில் இருந்து டவுன் நோக்கி சென்ற பஸ்சில் பயணம் செய்தார். அதே பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், அந்த மாணவிக்கு ஆபாசமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது. </p><h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</h2><p>இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, உடனடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் 5 நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><h2>ஆபாச சைகை</h2><p>அவர்கள் பஸ்சை மறித்து நிறுத்தி அதில் ஏறி விசாரணை நடத்தினர். அப்போது, கல்லூரி மாணவிக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபர் நெல்லை அருகே உள்ள வெள்ளாளன்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் செல்வ மணிகண்டன் (வயது 24) என்பதும், அவர் சந்திப்பு பகுதியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.</p><h2>கைது</h2><p>உடனே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் செல்வ மணிகண்டனை பிடித்து நெல்லை சந்திப்பு போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-travel-dangerously-hanging-from-stairs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-travel-dangerously-hanging-from-stairs#comments</comments><guid isPermaLink="false">189a219b-1b99-44a2-9124-9c439e220c87</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:29:43 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:29:43.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,பள்ளி மாணவர்கள்,GovtBus,SchoolStudents</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/am04ct5t/bus33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/am04ct5t/bus33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி</p><p>தமிழகத்தில் ஒரு சில் இடங்களில்  பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால், உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ் படிகட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.</p><h2>பள்ளி மாணவர்கள்</h2><p>அந்தவகையில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கள்ளக்குறிச்சி</a> மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள்</p><p>பேருந்தில் ஏற்கனவே அதிகளவில் கூட்டம் இருந்ததால், மாணவர்கள் பலர் உள்ளே ஏற முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், களமருதூர் அரசு பள்ளிக்குச் செல்லும் சில மாணவர்கள், பேருந்தின் பின்புற டேஞ்சர் லைட்டைப் பிடித்தபடி தொங்கியவாறு உயிரை பணயம் வைத்து .பஸ் படிக்கட்டில் பயணம் செய்தனர். </p><p>கூடுதல் பேருந்துகள்</p><p>பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், இதுபோன்ற ஆபத்தான பயணங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சபரிமலையில் தமிழக பக்தர்களுக்கு தங்கும் வசதி: அரசுக்கு ஐயப்ப சேவா சங்கம் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accommodation-facilities-for-tamil-nadu-devotees-at-sabarimala-ayyappa-seva-sangam-requests-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accommodation-facilities-for-tamil-nadu-devotees-at-sabarimala-ayyappa-seva-sangam-requests-government#comments</comments><guid isPermaLink="false">8a39289f-2268-48a7-889a-5c3e270a1c6e</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:29:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:29:16.967Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சபரிமலை கோவில்,Sabarimalai,Sabarimalai Ayyappan Temple,சபரிமலை ஐயப்பன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/83isqxyt/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபரிமலை கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/83isqxyt/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாக, தமிழக அரசுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-</p><p>சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் பெருமளவில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தமிழக அரசு சார்பாக தேவையான உதவிகள் கிடைப்பதில்லை என்ற குறை பக்தர்கள் மனதில் உள்ளது. எனவே, தமிழக அரசு பக்தர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மூலம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் பார்வைக்கு சில பரிந்துரைகளை வைக்கிறது.</p><p>அகில பாரத ஐயப்ப சங்கம் கடந்த 80 ஆண்டுகளாக சபரிமலை சன்னிதானம், பம்பா, கரிமலை, பெரியானைவட்டம் போன்ற இடங்களில் அன்னதானம் மூலிகை குடிநீர் வழங்குல் போன்ற சேவைகளை செய்து வருகிறது. மேலும், பம்பை முதல் சன்னிதானம் வரை சுகவீனமடைந்த பக்தர்களை உடனடி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஸ்டெச்சர் சர்வீஸ் மூலம் எடுத்து செல்கின்றனர்.</p><p>மேலும், மண்டல மகர விளக்கு காலங்களில் தமிழ் மாநில அமைப்பின் மூலமாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனைத்து மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் முகாம் அமைத்து அன்னதானம், தங்க இடம், முதல் உதவிகள் சேவை மனப்பான்மையுடன் செய்யப்படுகின்றன. இந்த முகாம்கள் தமிழக அரசின் ஆதரவுடன் செயல்படும்போது மேலும் பல பக்தர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.</p><p>கடந்த 2 ஆண்டுகளாக கேரள அரசின் சில தடைகளால் நிலக்கல், பம்பா, சன்னிதானம் பகுதிகளில் சேவை செய்ய இயலவில்லை. சபரிமலையில் தென் மாநில ஐயப்ப பக்தர்கள் தமிழக உணவு கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்கு தனியே தங்கும் வசதியும், அன்னதான வசதியும் செய்து கொடுக்க தமிழக அரசு கேரளா அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி அனுமதி பெற்றுத்தர வேண்டும்.</p><p>அவ்வாறு அனுமதி பெற்றுத்தரும் பட்சத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சபரிமலை சீசன் முழுவதும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கடந்த ஆண்டுகளைப் போலவே சங்கத்தின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மூலம் சேவை செய்ய தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி விவகாரம்: நிலத்தை விற்பனை செய்த மற்றும் வாங்கிய 3 பேர் தலைமறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-affair-3-people-who-sold-and-bought-land-are-absconding</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-affair-3-people-who-sold-and-bought-land-are-absconding#comments</comments><guid isPermaLink="false">1bfc680f-5690-486a-b31c-c36e7c5c590a</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:20:38 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:20:38.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Palani Murugan Temple,Palani,CBCID Police,சிபிசிஐடி போலீசார்,Palani temple,land dispute case,பழனி கோவில்,நிலம் மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bzwiikwy/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/bzwiikwy/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><h2>தண்டபாணி சுவாமி மடம்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.</p><p>ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>ரூ.100 கோடி முறைகேடு</h2><p>இந்த முறைகேடு பதிவு குறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அதனை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி என 4 பேர் மீதும் 5 பிரி வுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இதனிடையே ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து முறைகேடு பதிவை ரத்து செய்யக்கோரி பழனி கோவில் இணை ஆணையர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு தண்டபாணி சுவாமி மடத்தின் சொத்து தனியாருக்கு பத்திரப்ப திவு செய்தது செல்லாது என உத்தரவிட்டது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.</p><h2>தலைமறைவு</h2><p>அதன்படி, ரூ.100 கோடி கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நிலத்தை விற்பனை செய்த பழனி கோவில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் பத்திரப்பதிவு நடந்த நாள் முதல் தலைமறைவாகியுள்ளார். அவரை தொடர்ந்து நிலத்தை வாங்கிய உடுமலை வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோரும் தலைமறைவாகியுள்ளனர். 3 பேரையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.</p><p>இதற்கிடையில், பழனி கோவில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பணியிடை நீக்க நடவடிக்கைக்கு உள்ளான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என கோவில் நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாயுமானவர் திட்டத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவாக ரேஷன் பொருள் விநியோகித்ததால் &apos;மெமோ&apos;: பணியாளர்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/memo-issued-for-distributing-less-than-70-of-ration-supplies-under-the-thayumanavar-scheme-staff-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/memo-issued-for-distributing-less-than-70-of-ration-supplies-under-the-thayumanavar-scheme-staff-shocked#comments</comments><guid isPermaLink="false">fdac9a65-c9b4-43dc-9b9c-a09484c0787f</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:11:46 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:11:46.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Ration items,ரேஷன் பொருட்கள்,தாயுமானவர் திட்டம்,Thayumanavar Scheme</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/khpqrh0s/puthi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/khpqrh0s/puthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தாயுமானவர் திட்டத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவாக <a href="https://www.dailythanthi.com/topic/ரேஷன்-பொருள்">ரேஷன் பொருள்</a> விநியோகித்த பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு 'மெமோ' அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>தாயுமானவர் திட்டம்</h2><p>தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தாயுமானவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 70 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. </p><p>ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் 21 லட்சத்து 70 ஆயிரம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். </p><h2>நடைமுறை சிக்கல்கள் என்ன?</h2><p>ஆனால், தாயுமானவர் திட்டத்தில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டி ரேஷன் கடை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீடுகளுக்கு தேடிச்சென்று பொருட்கள் வழங்க செல்லும்போது, சிலர் இருப்பதில்லை. போன் மூலம் தொடர்புகொண்டால், மகன் அல்லது மகள் வீட்டில் இருப்பதாகவும், அல்லது ஆஸ்பத்திரிக்கு சென்றிருப்பதாகவும் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. </p><p>மேலும், குறுகிய சாலைப்பகுதியில் இருப்பவர்களை தேடிச்சென்று பொருட்கள் வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும் ரேஷன் கடை பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, கைரேகை பதிவு செய்யும் பி.ஓ.எஸ். கருவியும் 'சார்ஜ்' இல்லாமல் 'ஆப்' ஆகிவிடுவதாகவும் கூறுகின்றனர். </p><h2>விளக்கம் கேட்டு நோட்டீஸ் </h2><p>இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளர் மற்றும் உதவி செயலாளர் ஆகியோர் விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. </p><p>அதாவது, தாயுமானவர் திட்டத்தின் மூலம் 70 சதவீதத்திற்கும் குறைவாக பொருட்கள் விநியோகித்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடை பணியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். </p><h2>அமைச்சர் தலையிட வேண்டுகோள் </h2><p>ஏற்கனவே, தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தும் போது இருக்கும் நடைமுறைச் சிக்கலால் கடும் அதிருப்தியில் உள்ள ரேஷன் கடை பணியாளர்களுக்கு இவ்வாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். </p><p>எனவே, துறை சார்ந்த அமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதே ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்; கொள்முதலை துரிதப்படுத்த அன்புமணி கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/piling-up-bundles-of-paddy-anbumani-requests-to-expedite-procurement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/piling-up-bundles-of-paddy-anbumani-requests-to-expedite-procurement#comments</comments><guid isPermaLink="false">6724b6db-4090-4859-bb10-905563943774</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:59:13 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:59:13.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,நெல் மூட்டைகள்,கொள்முதல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/h6x3k2fy/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/h6x3k2fy/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் கோடைப்பருவ நெல் அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் குவிந்து கிடப்பது தான் இதற்கு காரணம். இதில் அரசின் அலட்சியம் கவலையளிக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்  உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில்  ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடை பருவ நெல் சாகுபடி தொடங்கப்பட்டது. நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணி ஜூன் இறுதியில்  தொடங்கியது. பாதிக்கும் மேற்பட்ட பரப்பில் அறுவடை முடிவடைந்து விட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் வரை இந்தப் பணி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய காவிரி பாசன மாவட்டங்கள் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் பணி முடங்கிக் கிடக்கிறது.</p><h2>சரியான திட்டமிடல்</h2><p>இதற்கு காரணம் அரசு நிர்வாகத்தின் சரியான திட்டமிடல் இல்லாமை தான் என்று உழவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும்  நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும்,  கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. போதிய இடவசதி இல்லாததைக் காரணம் காட்டி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர்கள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.</p><h2>நெல் கொள்முதல் நிலையங்கள்</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> நிலையங்களில் பெரும்பாலானவை  திறந்த வெளியில் அமைக்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவமழை காவிரி பாசன மாவட்டங்களில் தீவிரமடைந்தால் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் முழுமையும்  வீணாகி விடும். ஆனால், இது குறித்த கவலை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.</p><p>கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்காதது ஏன்? என்பது குறித்து அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளில் மலை போல குவிந்து கிடப்பதாகவும், அரவை ஆலைகளும் அளவுக்கு அதிகமான நெல் மூட்டைகளை கையாள முடியாத நிலையில் இருப்பதும் தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் உழவர் அமைப்புகள் கூறுகின்றன.</p><h2>தற்காலிக கிடங்கு</h2><p>ஒருவேளை இது தான் உண்மை என்றால், உழவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டதால் கிடங்குகள் நிரம்பி விட்டன என்றால், கோடைப்பருவ கொள்முதல் மூலம் கிடைக்கும் நெல் மூட்டைகளை எவ்வாறு கையாள்வது? அவற்றை எங்கு அடுக்கி வைப்பது என்பதற்கான திட்டங்களை அரசு வகுத்திருக்க வேண்டும். ஆடி மாதம் பிறந்து விட்ட நிலையில், திருமண அரங்குகள் போன்றவற்றையாவது வாடகைக்கு எடுத்து தற்காலிக கிடங்குகளாக மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாததால் தான் உழவர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.</p><h2>நெல் மூட்டைகள் வீணானது</h2><p>கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சரியான தருணத்தில்  கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடந்ததையும்,   கொள்முதல் நடக்காததால் உழவர்களும் தங்களின் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு அருகில் திறந்த வெளிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்ததையும், அவை அனைத்தும் வடகிழக்கு பருவ மழையில் நனைந்து வீணானதையும் எவரும் மறந்திருக்க முடியாது. அதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்தே காவிரி பாசன மாவட்ட உழவர்கள் இன்னும் மீளாத நிலையில், மீண்டும் அதே போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது.</p><p>எனவே, கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>1993-ல் ஏப்ரல் 14, 15-ம் தேதிகளில் நடந்தது என்ன..? - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பரபரப்பு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-happened-on-april-14-and-15-1993-mdmk-general-secretary-vaiko-gives-a-sensational-explanation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-happened-on-april-14-and-15-1993-mdmk-general-secretary-vaiko-gives-a-sensational-explanation#comments</comments><guid isPermaLink="false">5791484e-c520-4765-9195-685b8bc8c836</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:49:06 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:49:06.774Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Tamilnadu,அதிமுக,திமுக,DMK,தமிழகம்,Vaiko,வைகோ,மதிமுக,அரசியல் களம்,tn politics,MDMK |</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/mhaayh8g/vaiko.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/mhaayh8g/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பொதிகைமலை உறுதியாக இருப்பதை போல சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் செய்துள்ளோம் என்றும், இனி நமக்கு எவ்வித கேடும் யாரும் செய்ய முடியாது என்றும் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> தெரிவித்துள்ளார்.</p><h2>கலைஞர் பொதுக்கூட்டம்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>1993 ஏப்ரல் 14ம் தேதி, சித்திரை திருநாளுக்கு முதல் நாள் அன்று நாகர்கோவிலில் கலைஞர் பொதுக்கூட்டம். என் பெயரையும் சேர்த்துப் போட்டிருக்கிறார்கள். முதல் நாளுக்கு முதல் நாள் ஆற்க்காடு வீராச்சாமி தொலைபேசியில் அழைத்து, “என்னங்க உங்க படம்தான் கன்னியாகுமரி, நாகர்கோவில் முழுவதும் ஒட்டியிருக்கிறார்களாம்! உங்களைப் புகழ்ந்து அதிகமாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார்களாமே! அதனால் கலைஞர் கூட்டத்தை ரத்து செய்யச் சொல்லி விட்டார்” என்றார். </p><h2>என் படம் போட்ட போஸ்டர்</h2><p>“எனக்கு தெரியாது அண்ணே. என்னை புகழ்ந்து போஸ்டர் ஒட்டச் சொல்லி நான் தூண்டிவிட்டது இல்லை. ஆட்களை உடனே அனுப்பி அதை நான் கிழித்துப் போடச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு, இளைஞர் அணிச் செயலாளராக இருந்த ஷேக் தாவூத் மிகப் பெரிய தைரியசாலி. அவருடன் பத்துப் பேரை இரண்டு வண்டிகளில் அனுப்பி, நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் எங்கெல்லாம் என் போஸ்டர் இருக்கிறதோ, அதைக் கிழித்துப் போட்டு வாருங்கள் என்று கூறினேன்.</p><p>இவர்கள் போய் கிழித்தவுடன், “வைகோ படத்தை நாங்கள் ஒட்டுகிறோம். நீங்கள் ஏண்டா வந்து கிழிக்கிறீர்கள்?” என்று நாகர்கோவில்காரர்கள் சண்டை போட்டிருக்கிறார்கள். அதையும் மீறி கிழித்துப் போட்டுவிட்டார்கள். என் படம் போட்ட போஸ்டர் எதுவும் கிடையாது. கூட்டத்தில் நான் பத்து நிமிடம் பேசினேன். </p><h2>தலைவர் வருத்தம்</h2><p>கூட்டம் முடிந்து கலைஞர் கேரளா அரசுக்கு உரிய விருந்தினர் இல்லத்திற்குச் சென்று விட்டார். நான் தமிழ்நாடு அரசு விடுதிக்குச் சென்றேன். நான் அறைக்குச் சென்ற அரை மணி நேரத்திட்றகுள் அன்புச் சகோதரர் துரைமுருகன் அவர்களும், அண்ணன் ஆற்க்காடு வீராச்சாமி அவர்களும் என் அறைக்கு வந்து, “உனக்கு என்னப்பா பிரச்சினை? தலைவர் வருத்தப்படும்படி ஏன் நடந்துகொள்கிறாய்?” என்று கேட்டார்கள். “நான் தலைவருக்கு விசுவாசமாகத்தானே இருக்கிறேன். கட்சியில் நான் பெரிய பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேனா? ஒருக்காலும் கிடையாது. தலைவர்தான் என்னை ஒதுக்கி வைக்கப் பார்க்கிறார். நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்  விரும்புகிறாரோ, அவ்விதமே நடந்துகொள்வேன்” என்றேன். “சரி, நீ ஒன்றும் கவலைப்படாதே எல்லாம் சரியாகிப் போய்விடும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.</p><h2>தலைவர் நடந்துகொண்ட விதம்</h2><p>மறுநாள் தூத்துக்குடிக்கு தலைவர் அவர்களோடு நாங்கள் பயணமானோம். தூத்துக்குடியில் முன்னிரவில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். அக்கூட்டத்தில் பேசும்போது, என் மனம் திறந்து பேசினேன். கம்ப ராமாயணத்தில்,</p><p>அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி</p><p>அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி</p><p>அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்</p><p>அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்</p><p>என் நெஞ்சை பிளந்து பார்த்தால் அங்கு ராமபிரான்தான் இருக்கிறார் என்று அனுமன் கூறியதாக கம்பர் வர்ணித்தார்.</p><p>என்னுடைய மார்பை பிளந்து பார்த்தால் அங்கே டாக்டர் கலைஞர்தான் கொலு வீற்றிருக்கிறார் என்று சொன்ன கணத்தில் கூட்டம் ஆரவாரம் செய்தது. கரவொலி பலமாக எழுந்தது.</p><p>நான் என் விசுவாசத்தைச் சுட்டிக் காட்டி இவ்வளவு பேசியபோதிலும், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, “என் பெயரைச் சொல்லி, தம்பி இங்கே உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார். மூன்று மாதத்திற்கு முன்பே இதைச் சொல்லியிருக்கலாமே?” என்றார்.</p><p>ஆனால் மூன்று மாதத்திற்கு முன்பு அருப்புக்கோட்டை கூட்டத்தில் இதே விதத்தில்தான் பேசினேன். அதற்குப் பிறகும் என்னிடம் தலைவர் நடந்துகொண்ட விதம் மாறவே இல்லை.</p><h2>பேர் சொல்ல விரும்பாத பெருமைமிகு தம்பி</h2><p>இது நடந்தது 1993, ஏப்ரல் 14, 15 தேதிகளில். ஆனால் 16 வருடம் கழித்து 2009 மார்ச் 29 ஆம் நாள் பிரசுரமான முரசொலி உடன் பிறப்புக்கு எழுதிய கவிதையில், தன் கற்பனை வளத்தை எல்லாம் காட்டி கலைஞர் எழுதியிருந்தார். பராசக்திக்கும், மந்திரகுமாரிக்கும், மனோகராவுக்கும் வசனம் எழுதியவர்தானே! காட்சியை நாடக நிகழ்ச்சி போல காட்டுவதில் அவருக்கு நிகர் எவரும் இல்லை..</p><p>இந்தக் கவிதை கடிதத்தில் நடக்காத ஒன்றை படித்தால் உண்மைதான் என்று நம்புகிற அளவுக்கு ஆற்க்காட்டாரையும், துரைமுருகனையும் குறிப்பிட்டு, அவரது புதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களை பேராசிரியர் பாராட்டியது பற்றி குறிப்பிட்டு,</p><p>“கலைஞரே இப்போது உம்மைத்தானே “போர்வாள்” என்று புகழ்கிறார் - போற்றுகிறார் - மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உமக்கு வழங்கியது போல வேறு யாருக்கு இப்படித் தொடர்ந்து வழங்கியிருக்கிறார்; கவலைப்படாமல் இருந்திடுக! என்றார்கள்.</p><p>கலைஞர் அவர்கள் தனக்குப் பிறகு உங்களைத்தான் தலைவராக்குவார் இயக்கத்திற்கு” என்று நம்பிக்கை தெரிவித்து அந்த நள்ளிரவிலும் தமது பேர் சொல்ல விரும்பாத பெருமைமிகு தம்பியின் முகத்தில் ஒளி பிறக்கச் செய்திருக்கிறார்கள்.</p><p>புன்னகை தவழ்ந்த அந்தத் தம்பியின் முகத்தில் புதியதோர் சிந்தனை - அது ஒரு கேள்வியாகவும் மாறியது”</p><p>“ஏன் துரைமுருகன்; நான் கலைஞருக்குப் பிறகு தலைவனாவேன் என்கிறீர்களே? ஒரு வேளை நமது கலைஞர், பெரியார் போல - ராஜாஜி போல - தொண்ணூறு வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டால்; நான் தலைவனாவதற்கு எத்தனை வருடம் காத்திருப்பது?"</p><p>இதைக் கேள்வியாகக் கருதாமல்; மற்ற இரு தம்பியரும் தேன் பிலிற்றும் விஷமாக எண்ணிக் கலங்கி - இருவரும் இரகசியமாக சத்தியம் செய்து கொண்டார்களாம். இந்தச் செய்தியை இருவரும் தலைவரிடம் எப்போதும் சொல்வதில்லையென்று !</p><p>ஆனால் - துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி! ஆற்காட்டாரோ - அசல்; கண்ணாடிப் பேழை - எனினும் - ஆண்டுகள் சில பல கடந்த பிறகே; அன்றைய குமரி முனையில் குமுறிய எரிமலையின் குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு! குறளின் அமுத மொழியாம்; </p><p>"செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி"</p><p>(செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித் தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகை உள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்!</p><p>உடன்பிறப்பே,</p><p>“குறளோவியம்” நூல் தொகுப்பில் நான்</p><p>குறிப்பிடாமல் விட்டுப் போன இந்தக் குறட்பா;</p><p>இந்த நேரத்தில் நினைவுக்கு வந்ததே;</p><p>அந்த நினைவுக்கு ஒரு நன்றி!</p><p>அன்புள்ள,</p><p>மு.க. (29.3.2009)</p><h2>கோயபல்ஸ் பொய்</h2><p>என் மனதில் விசுவரூபம் எடுக்கின்ற கேள்வி யாதெனில்? அண்ணன் ஆற்க்காட்டாரும், சகோதரர் துரைமுருகனும் என் மீது அடாத பழியைப் போட்டு, கலைஞர் என்னை வெறுக்க வேண்டும் என்று இப்படி பொய் சொன்னார்களா? அல்லது தனக்கே உள்ள கற்பனை ஆற்றல், எழுத்தாற்றலால் இப்படி அப்பட்டமான ஒரு பொய்யை ஒரு காட்சியாக புனைந்து கலைஞர் எழுதினாரா?</p><p>இப்பொழுது சங்கரன்கோவில் செயல்வீரர்கள் கூட்டத்தில், நடந்ததை சுட்டிக் காட்டி நான் பேசியதால், இந்த 2026 ஜூலை 11 ஆம் நாள் பிரசுரமான முரசொலியில் 17 ஆண்டுகள் கழித்து முரசொலியில் “அந்த நினைவுக்கு நன்றி” என்று முன்பு அவிழ்த்துவிட்ட கோயபல்ஸ் பொய்யை தி.மு.கழக தோழர்களிடம், நடுநிலையாளர்களிடம், தொலைக்காட்சி செய்தி ஏடுகள் மூலம் 1993 எப்படி கொலைப்பழிக்கு என்னை ஆளாக்கி, தி.மு.கழகத்தை விட்டு நீக்கினாரோ, அதே பாணியில் திமுகவினர், மற்ற அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள், செய்தியாளர்கள், அதிகாரிகள் என்னைக் குறித்து வெறுப்பும், கசப்பும் ஏற்பட வேண்டும் என்பதற்காக 17 வருடம் கழித்து அதே முரசொலியில் வெளியிட்டார்களா? </p><p>அப்படியானால் 2005 இல் திண்டுக்கல் திமுக மாநாட்டில் என் உரைக்குப் பிறகு கலைஞர் உரையாற்றுகையில், “நீ உரையாற்றும் போது என் முகத்தை நீ கவனித்திருக்க முடியாது. நீ உரையாற்றும்போது என் கண்கள் நீர் பொழிந்துகொண்டிருந்தன. தம்பி, உன்னை நான் இழந்தேனா? என்னை நீ இழந்தாயா?” என்று பேசியது உண்மயா? அல்லது 1993 ஏப்ரலில் நடந்த நிகழ்வை 2009 முரசொலியில் எழுதியதை, இப்போது திரும்ப 2026 ஜூலை 11 இல் கொட்டை எழுத்துக்களில் முரசொலியில் தி.மு.கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்கள் பிரசுரிக்க என்ன காரணம்? தி.மு.கழக கூட்டணியிலிருந்து எமது இயக்கம் வெளியேறியதால் ஏற்பட்ட வெறுப்பில் என்னைக் களங்கப்படுத்துவதற்காக இதை வெளியிட்டார்களா?</p><p>எனவே இந்தப் பழி சுமத்தும் கவிதையை இன்றைய திமுக தலைமை திட்டமிட்டு இப்போது இப்படி வெளியிட்டிருக்கிறது என்று நான் உணர்ந்து கொண்டேன்.</p><p>பழிச் சொற்களையும், குற்றச்சாட்டுக்களையும் இப்போது பிரசுரிப்பதில் என்ன நோக்கம்?</p><p>கொலைப்பழியை என் மீது 1993 இல் திட்டமிட்டு ஏவியது, மீண்டும் அதே பழியை - குற்றச்சாட்டை தற்போதைய தலைமையினர் தொடுத்திருக்கிறார்கள்.</p><p>பொய்யும், அபாண்டமான குற்றச்சாட்டும் நிலை நிற்காது. மெய்தான் நிலைத்து நிற்கும்; என்னைக் காக்கும்.</p><h2>இரண்டு பெருந்தவறு</h2><p>ஆனால் இத்தகைய தாக்குதல்களை எல்லாம் என் இதயம் தாங்கி அனுபவப்பட்டுவிட்டேன். தெளிந்த நீரோடையைப் போல என் மனம் தூய்மையாக இருக்கிறது. பொய்மை தோற்கும்; மெய்மை இறுதியில் வெல்லும்.</p><p>எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற அண்ணாவின் மணிவவாசகத்தை எண்ணி நான் இதை எல்லாம் தாங்கி பழக்கப்பட்டுவிட்டேன்.</p><p>நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு. அது மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தித் திணித்தார்கள்.</p><p>கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, திமுகவையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியிலிருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள்.</p><p>என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006 இல் அண்ணா திமுகவுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய மதிமுக தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்க வைத்தார்களே, நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், அதிமுகவுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் நமது இயக்கம் வலிவும் பொலிவும் பெற்றிருக்கும்.</p><p>2017 இல் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழையாகும்.</p><h2>பீனிக்ஸ் பறவை</h2><p>பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது.</p><p>வைரம் பாய்ந்த வஜ்ரம் போன்ற கண்மணிகளே நீங்கள் இலட்சோப இலட்சம் பேர் இருக்கிறீர்கள். கிரேக்க புராணத்தில் பீனிக்ஸ் பறவை என்று குறிபிடப்பட்டது கற்பனைதான். நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு, ஓங்கி உயர்ந்து தலைநிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. இனி நமக்குத் தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிமயமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது.</p><p>உங்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம் அல்ல, நடுநிலையாளர்களும், பொதுவாழ்வில் இருப்போரும், பொதுமக்களும், ஊடகத்தில் இருப்போரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மடலாக சங்கொலியின் வாயிலாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன். </p><p>நிறைந்த நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்வோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item></channel></rss>