<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 14 Jul 2026 08:42:06 +0000</lastBuildDate><item><title>கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது - சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sewage-pumping-stations-will-not-operate-important-information-released-by-the-chennai-water-board</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sewage-pumping-stations-will-not-operate-important-information-released-by-the-chennai-water-board#comments</comments><guid isPermaLink="false">25a2caf3-af0c-4873-b4b4-674e48deebf8</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:33:55 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:33:55.845Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,கழிவுநீர்,சென்னை குடிநீர் வாரியம்,Chennai Water Board</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/gbkc3lll/mathi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை குடிநீர் வாரியம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/gbkc3lll/mathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/சென்னை-குடிநீர்-வாரியம்">சென்னை குடிநீர் வாரியம்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (CMRL) சார்பில், அடையாறு மண்டலம், தரமணி சரிவு (Ramp Metro Station) மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 16.07.2026 அன்று இரவு 10 மணி முதல் 17.07.2026 இரவு 10 மணி வரை மண்டலம் -9 மற்றும் 13- க்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.</p><p><strong>சென்னை குடிநீர் வாரியம் தகவல்</strong></p><p>சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) சார்பில், அடையாறு மண்டலம், தரமணி சரிவு (Ramp Metro Station) மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 16.07.2026 அன்று இரவு 10 மணி முதல் 17.07.2026 இரவு 10 மணி வரை மண்டலம் -9 (தேனாம்பேட்டை) –க்குட்பட்ட வடக்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், தெற்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், ஐஸ் ஹவுஸ் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் மண்டலம் - 13 (அடையாறு) - க்குட்பட்ட பட்டினப்பாக்கம் கழிவுநீர் உந்து நிலையம், ராஜா அண்ணாமலை புரம் கழிவுநீர் உந்து நிலையம், பக்தவச்சலம் நகர் கழிவுநீர் உந்து நிலையம். அடையாறு கழிவுநீர் உந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது.</p><p>எனவே, தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களுக்குட்பட்ட கீழ்கண்ட இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு கீழ்க்காணும் பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.</p><p><strong><ins>1. மண்டலம் - 9 (தேனாம்பேட்டை)</ins></strong></p><p><strong>கைபேசி எண்</strong></p><p>8144930909 </p><p><strong>பகுதிகள்</strong></p><p>ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலை, ஆழ்வார்பேட்டை, சாமியர்ஸ் சாலை, ஆஸ்டின் நகர், மந்தைவெளி, சீத்தம்மாள் காலனி மற்றும் இராயப்பேட்டை</p> <p><strong><ins>2. மண்டலம் - 13 (அடையாறு)</ins></strong> </p><p><strong>கைபேசி எண்</strong></p><p>8144930913 </p><p><strong>பகுதிகள்</strong></p><p>பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம், ராஜா அண்ணாமலை புரம் அடையாறு, கஸ்தூரிபாய் நகர் காந்தி நகர், இந்திரா நகர், சாஸ்திரி நகர், பரமேஸ்வரி நகர், பத்மநாபன் நகர், அருணாச்சலபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ஜீவரத்தினம் நகர், லட்சுமிபுரம், பெசன்ட் நகர், ஓடை குப்பம், உரூர் குப்பம், காமராஜர் நகர், பாலகிருஷ்ணன் நகர், திருவள்ளுவர் நகர், பத்திரிகையாளர் குடியிருப்பு, பி.டி.சி காலனி மற்றும் திருவான்மியூர்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருச்சியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-trichy-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-trichy-tomorrow#comments</comments><guid isPermaLink="false">5a04543b-207d-4cf9-b9c2-e6a0616a3f21</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:31:51 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:31:51.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>monthly maintenance work,மாதாந்திர பராமரிப்பு பணி,திருச்சி,Trichy,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jskbn9bp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jskbn9bp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி நகர்ப்புற கோட்டம் E.B. ரோடு துணை மின் நிலையத்தில் நாளை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருச்சி நகர்ப்புறம்</h2><p>தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், திருச்சி நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>திருச்சி நகர்ப்புற கோட்டத்திற்குட்பட்ட E.B. ரோடு துணை மின் நிலையத்தில் நாளை (15.7.2026, புதன் கிழமை) காலை 9.45 மணி முதல் மணி மாலை 4 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பின்வரும் இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><h2>காலை 9.45 மணி முதல் மணி மாலை 4 வரை</h2><p>அதன்படி மேற்சொன்ன துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மர்ந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோகநாதர் கோவில் தெரு, பெரிய சொராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், வில்வாஸ் நகர், வேதாத்திரி நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பட்டமளிப்பு விழா: பேரன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduation-ceremony-mkstalin-hugs-grandson-inbanidhi-and-congratulates-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduation-ceremony-mkstalin-hugs-grandson-inbanidhi-and-congratulates-him#comments</comments><guid isPermaLink="false">5010cafd-cd52-4d6f-9f70-baac86ecd631</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:26:55 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:26:55.076Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,பட்டமளிப்பு விழா,Graduation Ceremony,இன்பநிதி,Inbanidhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1vrjr3x2/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1vrjr3x2/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர் படிப்பை முடித்துள்ளார்.</p><p>இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கடந்த 4-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனில் 15 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ள அவர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார். பேரனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு, 18-ந்தேதி அவர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இன்பநிதியை மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைபோல தந்தை உதயநிதி ஸ்டாலினும் மகன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/9a5l7uo4/Untitled-1.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villagers-blockade-demanding-arrest-of-culprits-in-attempted-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villagers-blockade-demanding-arrest-of-culprits-in-attempted-murder-case#comments</comments><guid isPermaLink="false">1ae727b4-36e2-45b1-84ea-cd2cb83af9c8</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:12:45 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:12:45.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,Thoothukudi,தூத்துக்குடி,Attempt to murder case,கொலை முயற்சி வழக்கு,Public,முற்றுகை,Collector&apos;s Office,கலெக்டர் அலுவலகம்,Petition,Siege</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/v8eyg1ry/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/v8eyg1ry/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்யக் கோரி ஆழ்வார்கற்குளம் கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முற்றுகையிட்டு கலெக்டரிடம் மனு</a> அளித்தனர்.</p><h2>கிராம மக்கள் குற்றச்சாட்டு</h2><p>தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பா என்பவரை 9.7.2026 அன்று கொலை செய்ய முயன்ற சம்பவம் நடைபெற்றது. இந்த கொலை முயற்சி வழக்கில், ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். எனினும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்களை குற்றப் பட்டியலில் சேர்க்காமல் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு</h2><p>இந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆழ்வார்கற்குளம் பகுதியில் மீண்டும் ஜாதி மோதல்கள் ஏதும் நிகழாத வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிராம மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>கரூர் கோவில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-high-court-refuses-to-stay-the-order-allowing-the-registration-of-karur-temple-land</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-high-court-refuses-to-stay-the-order-allowing-the-registration-of-karur-temple-land#comments</comments><guid isPermaLink="false">7a71c5e2-28d9-49ca-9e85-a150a8b85d00</guid><pubDate>Tue, 14 Jul 2026 08:12:06 +0000</pubDate><atom:updated>2026-07-14T08:12:06.404Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,temples,கோவில்கள்,Karur,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,பத்திரப்பதிவு,Registration,கோவில் நிலம்,temple land</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/ndldfq9l/vino.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/ndldfq9l/vino.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>கோவில்களின் 3,084 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்ய அனுமதி அளித்த கலெக்டரின் உத்தரவை ரத்து செய்யும்படி மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.</p><h2>3,084 ஏக்கர் நிலங்கள்</h2><p>திருத்தொண்டர் சபை அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-</p><p>கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவில்களுக்கு கரூர் மாவட்டத்தில் 15 கிராமங்களில் 3,084 ஏக்கர் நிலங்கள் உள்பட ஏராளமான நிலங்கள் உள்ளன. இவை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உடையவை.</p><h2>அரசாணை</h2><p>இந்த நிலங்களை ஆக்கிரமித்த தனிநபர்கள் 3,390 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து இருந்தது.</p><p>அதன்விளைவாக மேற்கண்ட 3,084 ஏக்கர் நிலங்களையும் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.</p><h2>தடை நீக்கம்</h2><p>இந்தநிலையில் மேற்கண்ட கோவில்களுக்கு சொந்தமான 3,084 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட கலெக்டர் கடந்த 9-ந்தேதி உத்தரவிட்டு இருக்கிறார். இந்த உத்தரவின் மூலம் அறநிலையத்துறையும் தடை உத்தரவுகளை நீக்குவதற்கான நட வடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது.</p><p>உயர் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கோவில் நிலங்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே மேற்கண்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய ஏற்கனவே விதித்த தடையை நீக்கிய கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.</p><h2>அவசர வழக்கு</h2><p>இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று ஆஜரான ராதாகிருஷ்ணன் முறையிட்டார்.அதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கு நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர்.</p><h2>உத்தரவுக்கு தடை</h2><p>இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, கரூர் கோவில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் எந்த விதியின் அடிப்படையில் தடை நீக்கப்பட்டது என இந்துசமய அறநிலையத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடக்கிறது: மு.வீரபாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-is-taking-place-in-tamil-nadu-m-veerapandian-alleges-sensationalism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-is-taking-place-in-tamil-nadu-m-veerapandian-alleges-sensationalism#comments</comments><guid isPermaLink="false">7cd60211-db28-45e4-b2c8-bd1126969725</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:55:56 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:55:56.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,குதிரை பேரம்,மு.வீரபாண்டியன்,M.Veerapandian,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/tthjrcl1/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/tthjrcl1/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>உள்ளாட்சித் தேர்தல்</h2><p>சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுமா என்பதை, தேர்தலின் போதே முடிவு செய்வோம். இப்போது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம். அது தேர்தலுக்கான குழு அல்ல. தமிழக நலனுக்காக போராடுவதற்காக உருவாக்கப்பட்ட குழு. தேர்தல் வருகிற நேரங்களில் இடதுசாரி கட்சிகள் அவரவர் கட்சியில் கூடி முடிவெடுப்போம். தேவை ஏற்படுகிறபோது ஒருங்கிணைந்து முடிவெடுப்போம். </p><p>நாட்டை இடதுசாரிகள் பக்கம் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ஒருங்கிணைப்புக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். ஒரு வேளை தனித்துப் போட்டியிடக் கூடிய சூழல் உருவாகும் எனில், தனித்துக்கூட கம்யூனிஸ்டுகளால் நிற்க முடியும்.</p><h2>குதிரை பேரம்</h2><p>கம்யூனிஸ்டுகளுக்கு நாடு முழுவதும் அமைப்பு இருக்கிறது, எங்களின் பணியை மக்கள் அறிந்துள்ளனர். எனவே அத்தகைய சூழல் ஏற்பட்டால் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே நிற்போம். அதனை கட்சியே முடிவு செய்யும். தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகளின் பலத்தை அறிய வேண்டியது அவசியம்.</p><p>தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் நடக்கிறது. இதனைத் தடுப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது. இந்த கலாசாரம் வட மாநிலங்களிலிருந்து இங்குப் பரவியுள்ளது. கட்சித் தாவல் மற்றும் குதிரை பேரம் ஏற்புடையதல்ல. அது நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் பல கட்சிகள் இயங்குமுறையை நெருக்கடிக்கு உள்ளாக்கும். அரசியல் மீதே ஒரு வெறுப்புணர்வை உருவாக்கும். அவரவர் கொள்கைவழி நின்று அரசியல் செய்வதே கடமை என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-8</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-8#comments</comments><guid isPermaLink="false">977c2932-b759-43fe-9919-628cab1cdff3</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:46:06 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:46:06.098Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/4vm42zkw/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மறுநாள் மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/4vm42zkw/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட கடைநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகர சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில்  நாளை மறுநாள் (16.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>அதன்படி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெண் வெட்டிக்கொலை; 10 சவரன் நகை கொள்ளை: கபடி வீரர் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-hacked-to-death-10-sovereigns-of-jewellery-stolen-kabaddi-player-arrested-in-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-hacked-to-death-10-sovereigns-of-jewellery-stolen-kabaddi-player-arrested-in-action#comments</comments><guid isPermaLink="false">57d2985d-54de-4078-89de-d5d521957921</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:20:10 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:20:10.406Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கபடி வீரர்,கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,murder,பெண்,Woman,Kabaddi player,வெட்டிக்கொலை,நகை கொள்ளை,Jewelry robbery,vilathikulam,விளாத்திகுளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/qduq41sd/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கபடி வீரர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/qduq41sd/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பெண்ணைக் கொலை செய்து 10 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த கபடி வீரரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அதிரடியாக கைது</a> செய்தனர்.</p><h2>பெண் கொலை, 10 சவரன் நகை கொள்ளை</h2><p>தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடி மிட்டா வடமலாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த திருக்கண்ணன் மனைவி கலாவதி (வயது 62). ஓய்வு பெற்ற சத்துணவு மேற்பார்வையாளரான இவர், ஜூலை 6-ம் தேதி இரவு காற்றுக்காக வீட்டுக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கலாவதியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயின் மற்றும் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>காலையில் எழுந்த கணவர் திருக்கண்ணன், மனைவி கொலையுண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்காத நிலையில், அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து உள்ளூர் நபர்தான் இந்த கொலையைச் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர். </p><p>அதன் அடிப்படையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கபடி வீரர் திருமணிமுருகன்(26) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திருமணிமுருகன் கலாவதியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த பின், தன் வீட்டின் முன் கட்டிலில் சர்வ சாதாரணமாகத் தூங்கியுள்ளார்.</p><h2>கபடி வீரர் கைது</h2><p>காலையில் கலாவதியின் உடலை பார்த்து அழுது நாடகமாடியதுடன், இறப்பு குறித்து போலீசாருக்க தகவல் தெரிவித்து, உடல் அடக்கம் முடியும் வரை கூடவே இருந்துள்ளார். போலீசார் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில், திருடப்பட்ட தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான கபடி வீரர் திருமணிமுருகன் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>12 மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-drop-plan-to-open-12-sand-quarries-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-drop-plan-to-open-12-sand-quarries-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">c54198d2-8d8f-4cd3-b3ee-ad3605bad76c</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:16:57 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:16:57.029Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,மணல் குவாரிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/203rbkw5/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/203rbkw5/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு, அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து மூடப்பட்ட மணல் குவாரிகளில் 10 முதல் 12 குவாரிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது  குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சுற்றுச்சூழலை சீர்குலைப்பது, மணல் கொள்ளையை ஊக்குவிப்பது என இரட்டைத் தீமைகளை இழைப்பவை மணல் குவாரிகள் என்பதை அறிந்தும் அவற்றைத் திறக்க அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் 48 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. பெருந்தொற்று காலத்தில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2023-ம் ஆண்டு மே மாதத்தில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குவாரிகள் திறக்கப்பட்டன. அவற்றில் 23 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அடுத்த ஓராண்டுக்குள்ளாகவே மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமாக பரிமாற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 10-க்கும் மேற்பட்ட குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன்பின் அனைத்து குவாரிகளும் மூடப்பட்டன.</p><p>திமுக ஆட்சியின் பல்வேறு காலகட்டங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, பாட்டாளி மக்கள் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இத்தகைய சூழலில்தான் 10 முதல் 12 மணல் குவாரிகளை திறக்க அரசு தீர்மானித்து இருப்பதாகவும், அவை பெரும்பாலும் காவிரி பாசன மாவட்டங்களிலும், அதையொட்டிய பகுதிகளிலும் அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு முழுவதும் கட்டுமான மணலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அதை சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அளவுக்கு அதிகமாக மணல் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்கும் வகையில், குஜராத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பாஸ்கராச்சாரியா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் ஜியோ இன்பார்மாடிக்ஸ் நிறுவனத்தின் (Bhaskaracharya National Institute for Space Applications and Geo-informatics) மூலம்  செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பதற்காக கூறப்படும் இந்த சாக்குகளை ஏற்க முடியாது.</p><p>முதலாவதாக கட்டுமான மணலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் போக்க காவிரி பாசன மாவட்டங்களில்  மணல் குவாரிகளை திறப்பதுதான் ஒரே வாய்ப்பு அல்ல. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட ஏராளமான மாற்றுவழிகள் உள்ளன. இரண்டாவதாக செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிப்பதன் மூலம் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவது தடுக்கப்படும் என்பது சாத்தியமல்ல.</p><p>தமிழ்நாடு அரசே தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தினமும் 60 ஆயிரம் சரக்குந்து மணல் தேவைப்படுகிறது. அதில் செயற்கை மணல் ஆதாரங்கள் மூலம் 35 ஆயிரம் சரக்குந்து மணல் பெறப்படும் நிலையில், மீதமுள்ள மணல், குவாரிகள் மூலம் பெறப்படும். ஒவ்வொரு சரக்குந்திலும் தலா 100 கனஅடி கொண்ட 3 யூனிட் மணலை சராசரியாக ஏற்ற முடியும். அதன்படி   புதிதாக திறக்கப்படும் ஒவ்வொரு மணல் குவாரியிலிருந்தும் ஒரு நாளைக்கு சராசரியாக 2,083 சரக்குந்துகளில் மணல் அள்ளப்படும். ஓராண்டுக்கு சுமார் 2.74 கோடி யூனிட் மணல் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>2023-ம் ஆண்டில் 25 புதிய மணல் குவாரிகளைத் திறக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்தபோது, அவற்றிலிருந்து அதிகபட்சமாக 7.51 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே மணல் வெட்டி  எடுக்கப்பட வேண்டும் என்றும், அதன்பின் மணல் குவாரிகள் மூடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.  ஆனால், வெறும் இரு ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட குவாரிகளில் மட்டுமே 27.70 லட்சம் யூனிட் மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை ஆய்வில் தெரியவந்ததுதான் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தின் ஆற்று மணல் தேவையை சமாளிக்க, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதித்த அளவை விட 36.40 மடங்கு மணலும், திமுக ஆட்சியில் இரு ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு மணலும் ஒரே ஆண்டில் கொள்ளையடிக்கப்படும் நிலை உருவாகும். அதிகாரபூர்வமாகவே இவ்வளவு மணல் எடுக்கப்பட்டால் காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு, ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களும் பாலைவனமாகி விடும். இந்த சூழலியல் சீரழிவை சரி செய்யவே முடியாது.</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதன் மூலம் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் கிடைப்பதைத் தடுத்து காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்ற கர்நாடக அரசு துடிக்கிறது. தமிழக அரசு திட்டமிட்டுள்ள மணல் குவாரிகள் திறக்கப்பட்டாலும் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாப்பதற்கு பதிலாக அதை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன்  தமிழக அரசு போட்டி போடக் கூடாது. 12 மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் குறைந்தது 5 கி.மீட்டருக்கு ஓரிடத்தில் தடுப்பணைகளைக் கட்டவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தந்தை தற்கொலை: சேலத்தில் பயங்கரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-commits-suicide-by-hanging-2-children-horror-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-commits-suicide-by-hanging-2-children-horror-in-salem#comments</comments><guid isPermaLink="false">9f1174ed-5b3d-4cd2-9f0b-36478b4b5409</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:14:35 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:14:35.044Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Salem,கிரைம் செய்திகள்,தற்கொலை,Suicide,சேலம்,Father,தந்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xx6duxvz/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xx6duxvz/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஆண்டிக்கரையைச் சேர்ந்தவர் வல்லரசு (26) கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா (22). இவர்களுக்கு மைவிழி (4) தர்ஷன் (2) என்ற குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீபிரியாவுக்கும் அவரது மாமியாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்தாக கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீபிரியா கணவருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துவிட்டு மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.</p><p>இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வல்லரசு மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர தனது மாமியார் வீட்டிற்கு நேற்று சென்றார். அங்கு ஸ்ரீபிரியாவிடம் வல்லரசு சமாதானம் பேசியுள்ளார். இருப்பினும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வல்லரசு தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்க சென்றார். </p><p>இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாத மனைவி ஸ்ரீபிரியா மற்றும் அவரின் தாயார் வெண்ணிலா ஆகியோர் கதவை பலமாக தட்டிப் பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது இரண்டு குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர்.</p><p>வல்லரசு தனது மனைவியின் சேலையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். 3 பேரின் சடலங்களை பார்த்து ஸ்ரீபிரியா கதறி துடித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் மூன்று சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் தவெக அரசும் தொடர வேண்டும் - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-should-continue-the-excavation-work-started-by-the-dmk-government-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-should-continue-the-excavation-work-started-by-the-dmk-government-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">76fca6c9-2d0b-48f2-88a4-df50cc600242</guid><pubDate>Tue, 14 Jul 2026 07:04:30 +0000</pubDate><atom:updated>2026-07-14T07:04:30.184Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,Excavation,அகழாய்வு,mk stalin,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/9f30eq3i/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/9f30eq3i/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்! திராவிட மாடல் அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.</p><p>தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!</p><p>மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்! வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-writes-to-the-chennai-corporation-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-writes-to-the-chennai-corporation-commissioner#comments</comments><guid isPermaLink="false">e4b879bd-1e0b-4929-a957-a03044bca4d3</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:47:12 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:47:12.121Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக அரசு,TN govt,கடிதம்,letter,Tamilnadu government,மாநகராட்சி ஆணையர்,Chennai Corporation Commissioner,பெரம்பூர் தொகுதி,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,Tamil Nadu Chief Minister Vijay,Perambur constituency</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/dwbnfxtz/jk-viiaj.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் கடிதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/dwbnfxtz/jk-viiaj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு முதல்-அமைச்சரும், பெரம்பூர் எம்.எல்.ஏ.வுமான விஜய் கடிதம் எழுதி உள்ளார்.</p><h2>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</h2><p>பெரம்பூர் பகுதி மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களுக்காக, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு, <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>விளையாட்டு வளாகம்</h2><p>அதில்,</p><p>* எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர், எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலச் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில், சிசிடிவி (CCTV), வைபை (Wi-Fi) மற்றும் 24 மணி நேரக் கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய 6 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படுவதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது.</p><p>* மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.</p><p>* கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி விளையாட்டு வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை மேம்படுத்த அம்பேத்கர் கலைக் கல்லூரிக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/cqzr3am7/peram.jpg" /></figure><h2>டயாலிசிஸ் மையம்</h2><p>* சத்தியமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் (சிறுநீரகச் சுத்திகரிப்பு) மையம் அமைக்கப்படும்.</p><p>* எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 'தற்காலிகப் பணியாளர்களுக்கான' (Gig Workers) ஓய்வறை அமைக்கப்படும்.</p><p>* அம்பேத்கர் கல்லூரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் பயிலரங்கம் (Study Centre) உருவாக்கப்படும்.</p> <h2>அங்கன்வாடி மையங்கள்</h2><p>* அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படும்.</p><p>மேற்கூறிய அனைத்துப் பணிகளையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் பரிந்துரைத்துள்ளார்.</p><p>இந்ததிட்டங்கள் அனைத்தும் உடனடியாக தொடங்கப்பட உள்ளநிலையில், பெரம்பூர் பகுதி விரைவான வளர்ச்சியையும், மேம்பட்ட பொது வசதிகளையும் பெறும்.</p> ]]></content:encoded></item><item><title>பழனி கோவில் விடுதிக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-accommodation-fee-hike-should-be-withdrawn-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-accommodation-fee-hike-should-be-withdrawn-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">51e20166-1c01-4261-9c3a-406a04765efa</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:42:30 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:42:30.866Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Palani Murugan Temple,பழனி கோவில்,விடுதிக் கட்டணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/rnc4nd5o/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/rnc4nd5o/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தின் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக திகழும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>தொலைதூரங்களில் இருந்து பழனி முருகனை தரிசிக்க வரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் குறைந்த செலவிலும், பாதுகாப்பாக தங்குவதற்காகவும், கோவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட விடுதிகளின் கட்டணம், தனியார் விடுதிகளுக்கு இணையாக திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பது அவ்விடுதிகள் கட்டப்பட்ட அடிப்படை நோக்கத்தையே அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. </p><p>எனவே, பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்கும் இத்தகைய விடுதிக் கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்பப்பெறுவதோடு, பக்தர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எத்தகைய முடிவுகளையும் இதுபோன்று அவசரகதியில் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pork-vendor-hacked-to-death-after-being-criticized-for-speeding-on-a-bike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pork-vendor-hacked-to-death-after-being-criticized-for-speeding-on-a-bike#comments</comments><guid isPermaLink="false">f85cf9a4-2d71-493d-9cdc-95bba0def8cb</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:41:17 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:41:17.119Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,bike,பைக்,murder,வெட்டிக்கொலை,youths,வாலிபர்கள்,கண்டிப்பு,meat,Speed,வேகம்,Pig,பன்றி,இறைச்சி வியாபாரி,vendor,strictness</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jf9phnj7/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jf9phnj7/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் தெருவுக்குள் வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பன்றி இறைச்சி வியாபாரியை வெட்டிக்கொலை</a> செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி</h2><p>தூத்துக்குடி தாளமுத்துநகர் திரேஸ்நகரைச் சேர்ந்த மணி மகன் சேகர் (வயது 40), மாதாநகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று இரவு மாதாநகர் பத்திரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்கள் 2 பேருடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்துள்ளனர். சேகர் அவர்களை வழிமறித்து, குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் எனக் கண்டித்துள்ளார். </p><h2>வியாபாரிக்கு அரிவாள் வெட்டு</h2><p>இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் அந்த வாலிபர்களில் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அந்த 3 பேரையும் அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில், தாக்குதலுக்குள்ளான வாலிபர் தனது நண்பர் ஒருவருடன் பைக்கில் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த சேகரை 2 பேரும் சேர்ந்து அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.</p><h2>வியாபாரி உயிரிழப்பு</h2><p>இதில் பலத்த காயமடைந்த சேகர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கு: விசாரணையை கையில் எடுத்த அமலாக்கத்துறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-mlas-bargaining-case-enforcement-directorate-takes-over-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-mlas-bargaining-case-enforcement-directorate-takes-over-investigation#comments</comments><guid isPermaLink="false">c0f9d315-a27a-4202-8cb9-505ab367bdc7</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:17:14 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:17:14.032Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Enforcement Directorate,அமலாக்கத்துறை,Enforcement Directorate Investigation,CM Vijay,tvk mla,தவெக எம்.எல்.ஏ.க்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jlzmxmop/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/jlzmxmop/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசை கவிழ்ப்பதற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம், ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எம்.எல்.ஏ. இளையராஜா கொடுத்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தை சேர்ந்த தியா கராஜன், பெசன்ட் நகரை சேர்ந்த நரேஷ், கரூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய 5 பேர் இந்த வழக்கில் மிக முக்கியமான குற்றவாளிகளாக கருதப்பட்டனர். அவர்கள் 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>சிங்கப்பூர் தொழில் அதிபர்</h2><p>கைதானவர்களுடன் சிங்கப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், அடிக்கடி செல்போனில் பேசியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோத ஹவாலா பண பரிமாற்றமும் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிங்கப்பூர் தொழில் அதிபர் யார் என்று தெரியவந்துள்ளது. அவரது பெயர் லட்சுமண பெருமாள். சிங்கப்பூரில் நீண்ட காலமாக வசித்து வரும் இவர், சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.</p><p>இந்த தொடர்பின் மூலமாகவே குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த சிலர், லட்சுமண பெருமாளை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்களது ஆலோசனையின் பேரிலேயே த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்காக சிங்கப்பூரில் இருந்தபடியே லட்சுமண பெருமாள் சென்னையை சேர்ந்த நபர்களோடு போனில் பேசி இருக்கிறார். இவர் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பினாமியாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>லட்சுமண பெருமாள் சிங்கப்பூரில் இருந்தபடியே இந்த வழக்கு தொடர்பான முக்கியமான ஆதாரங்களை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்தபோது அரசு வக்கீல் தெரிவித்துள்ளார். இந்த சிங்கப்பூர் தொழில் அதிபரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவரை பற்றி 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுத்து, விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>செந்தில்பாலாஜி ஆஜராவாரா..?</h2><p>இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்குமா ருக்கும் சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அவருக்கு பல்வேறு நிபந்தனைகளையும், சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது. அவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் செந்தில்பாலாஜியும், அவரது தம்பியும் இன்று வரை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை என கூறப்படுகிறது.</p><h2>அமலாக்கத்துறை விசாரணை</h2><p>இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் ஹவாலா பணம் கைமாறி இருப்பதாகக் காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை அமலாக்கத்துறை தாமாக முன்வந்து விசாரணையைக் கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கில் கணக்கில் காட்டப்படாத ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.</p><p>மேலும், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் இருவரும் முன் ஜாமின் பெற்றுள்ள நிலையில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை கையில் எடுத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் மதுரையை சேர்ந்த 4 பேரிடம் திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆர்.என்.ரவி காட்டிய பாதையிலேயே அர்லேகரும் செல்வது சரியல்ல - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-right-for-arlekar-to-follow-the-same-path-as-rn-ravi-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-right-for-arlekar-to-follow-the-same-path-as-rn-ravi-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">a3e336a4-de75-420f-a4aa-9f4acd53885f</guid><pubDate>Tue, 14 Jul 2026 06:07:53 +0000</pubDate><atom:updated>2026-07-14T06:07:53.346Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Tamilnadu,தமிழகம்,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,R.N.Ravi,ஆர்.என்.ரவி,Manickam Tagore,கவர்னர் அர்லேகர்,Governor Arlekar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/myga6txq/gover.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/myga6txq/gover.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஆர்.எஸ்.எஸ்.-ன் வெறுப்பு அரசியலை திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை கவர்னர் உணர வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>தேசிய கல்விக் கொள்கை</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய, தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ‘தேசிய கல்விக் கொள்கை என்பது காலனித்துவ சிந்தனையில் இருந்து, இந்திய கல்வியை விடுவிக்கும் முயற்சி. இதில் திருத்தங்கள் கோரலாம். செயல்படுத்தாமல் இருப்பது சரியல்ல" என கூறியுள்ளார்.</p><h2>பாகுபாடும், பாசிசமும்</h2><p>அதுமட்டுமல்லாது, ‘பாரம்பரிய குருகுலக் கல்வி முறையை செயல்படுத்த முடியவில்லை" என தனது ஆதங்கத்தையும்  வெளிப்படுத்தியுள்ளார். மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதல், பண்டிட் நேரு காலம் முதல் காங்கிரஸ் ஆட்சியில் கட்டமைக்கப்பட்ட கல்வி முறையை சிதைத்து, சின்னாபின்னமாக்கி வருகிறது.</p><p>'அனைவருக்கும் கல்வி” என்பதே காங்கிரஸ் அரசின் நோக்கமாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில், 'தகுதி, தரம், தேசியம், தேசபக்தி” என்ற பெயரில் ஒருசாராருக்கு மட்டுமே கல்வியை சொந்தமாக்க நினைக்கிறது. 'பாகுபாடும், பாசிசமும்” பாஜகவின் அடிப்படை கொள்கையாக இருப்பதே இதற்கு காரணம்.</p><h2>கவர்னர் அர்லேகர்</h2><p>கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. மாநில அரசுகள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. ஆனால், மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக தனது வெறுப்பையும் அடிப்படைவாதத்தை திணிக்கும் நோக்கில் தேசிய கல்விக் கொள்கையையும் உருவாக்கியுள்ளது.</p><p>இதை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என கவர்னர் அர்லேகர் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் மூக்கை நுழைப்பதை கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும். கவர்னர் என்பவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகளைத் தான் பேச வேண்டும்.</p><h2>அதிகார அத்துமீறல்</h2><p>முந்தைய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டு சுப்ரீம்கோர்ட்டு வரை 'குட்டு” வாங்கியவர். அதிலிருந்து பாடம் கற்காமல் ஆர்.என்.ரவி காட்டிய பாதையிலேயே அர்லேகரும் செல்வது சரியல்ல. அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துவது, சந்தடி சாக்கில் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கப் பார்ப்பது போன்ற 'அதிகார அத்துமீறல்களை” கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும். </p><h2>மன்னிப்பு கோர வேண்டும்</h2><p>தமிழ்நாட்டிற்கு எந்த கல்விக் கொள்கை தேவையோ அதை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ளும். அதுபற்றி கவர்னரும், தமிழ்நாடு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பா.ஜ.க.வும் கவலைப்படத் தேவையில்லை.</p><p>குருகுல கல்வி என்பது வர்ணாசிரம தர்மத்தின் ஓர் அங்கம். அதை வலியுறுத்தி கவர்னர் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வேலைக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த மனைவி: மதுவில் திராவகத்தை கலந்து குடித்து டிரைவர் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-scolds-him-for-not-going-to-work-driver-commits-suicide-by-mixing-alcohol-with-liquor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-scolds-him-for-not-going-to-work-driver-commits-suicide-by-mixing-alcohol-with-liquor#comments</comments><guid isPermaLink="false">da704376-6eb5-4bec-b9cc-029c8d0a0e42</guid><pubDate>Tue, 14 Jul 2026 05:55:37 +0000</pubDate><atom:updated>2026-07-14T05:55:37.879Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/v8wd4db1/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/v8wd4db1/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சந்தைதோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி (53 வயது). இவரது மனைவி சாந்தி (42 வயது). டிரைவரான செல்வகணபதி, சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். கடந்த 2 மாதமாக அவர், சரிவர ஆட்டோ ஓட்டாமல், மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாந்தி, வேலைக்கு செல்லாமல் இருந்தால் மகன் படிப்பு செலவுக்கு என்ன செய்வது என்று கேட்டு, அவருடன் சண்டை போட்டுள்ளார்.</p><p>இதனால் மனமுடைந்த செல்வகணபதி, மதுவில் திராவகத்தை கலந்து குடித்து விட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று செல்வகணபதி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு செல்லாமல் இருந்ததை மனைவி கண்டித்ததால் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடியில் முறைகேடு: கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-in-crop-loan-waiver-cooperative-credit-union-secretary-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-in-crop-loan-waiver-cooperative-credit-union-secretary-dismissed#comments</comments><guid isPermaLink="false">86053011-5849-47ca-90c3-f04001cec550</guid><pubDate>Tue, 14 Jul 2026 05:45:59 +0000</pubDate><atom:updated>2026-07-14T05:45:59.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,Cooperative Society,கூட்டுறவு சங்கம்,Crop loan,crop insurance,Cooperative Department,பயிர்க்கடன்,பயிர்க்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/duysd6e1/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/duysd6e1/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><h2>ரூ.83 லட்சம்...</h2><p>திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றியவர் சண்முகவேலு. இவர் கடந்த மாதம் 30-ந் தேதி வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு பெற இருந்தார். இதையொட்டி பொதுப்பணி நிலைத்திறன் அடிப்படையில் அவர் பணியாற்றிய சங்கத்தின் கணக்குகள், மேலும் அவர் செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்த நாகையகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கணக்குகள் ஆகியவற்றை சரிபார்க்க முடிவு செய்யப்பட்டது.</p><p>தொடர்ந்து வேடசந்தூர் வட்டார கள அலுவலர், எரியோடு சரக மேற்பார்வையாளர், வடமதுரை கள மேலாளர் மற்றும் அதிகாரிகள் அந்த கணக்குகளை சரிபார்த்து ஆய்வு செய்தனர். அப்போது அவர் பணியாற்றிய 2 சங்கங்களிலும் கடந்த 2021-ம் ஆண்டு 55 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததில் ரூ.83 லட்சத்து 13 ஆயிரத்து 342 வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>இதையடுத்து முறைகேடு தொடர்பான அறிக்கையை பழனி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கனகராஜிடம் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையை ஆய்வு செய்த துணை பதிவாளர், மேல்நடவடிக்கைக்காக திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஸ்ரீ ராகவ் பாலாஜிக்கு அனுப்பி வைத்தார்.</p><p>அதன் அடிப்படையில் மண்டல இணை பதிவாளர் விசாரணை நடத்தினார். விசாரணையில் வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சண்முகவேலு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததில் முறைகேடு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு பணி ஓய்வு வழங்காமல் பணியிடை நீக்கம் செய்து மண்டல இணை பதிவாளர் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகள் உரச் செலவை குறைத்து மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை அவசியம்</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/soil-testing-is-essential-for-farmers-to-reduce-fertilizer-costs-and-increase-yields</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/soil-testing-is-essential-for-farmers-to-reduce-fertilizer-costs-and-increase-yields#comments</comments><guid isPermaLink="false">65625c4d-1acc-4004-b09c-e4adf7578e94</guid><pubDate>Tue, 14 Jul 2026 05:28:55 +0000</pubDate><atom:updated>2026-07-14T05:28:55.417Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Tirunelveli,திருநெல்வேலி,விவசாயிகள்,Information,தகவல்,crops,Fertilizer,உரம்,பயன்பாடு,High yield,பயிர்கள்,வேளாண்மை இணை இயக்குனர்,Soil testing,மண் பரிசோதனை,Joint Director of Agriculture,use,அதிக மகசூல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1ks6gby4/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்-கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/1ks6gby4/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>விவசாயிகள் உரச் செலவை குறைத்து <a href="https://www.dailythanthi.com/news/sirappukatturaigal">பயிர்களின் மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை மிகவும் அவசியம்</a> என்று திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன் தெரிவித்துள்ளார்.</p><p>திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் மண் பரிசோதனை ஆய்வகம் பாளையங்கோட்டை, அண்ணாநகரில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக மாடியில் இயங்கி வருகிறது. இங்கு விவசாய நிலங்களின் மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு மண்வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.</p><h2>மண்வள அட்டை</h2><p>மண்வள அட்டையில் மண் பரிசோதனைக்கு கொடுக்கக்கூடிய விவசாயி குறித்த தகவல்கள், அந்த விவசாயி கொடுத்த மண் மாதிரியில் உள்ள பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் குறித்த தகவல்கள், மண்ணின் தன்மைக்கேற்ப தேவைப்படக்கூடிய விவசாயத்துறை அதிகாரிகள் மூலம் பரிந்துரை செய்யக்கூடிய உரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும் அட்டையே மண்வள அட்டை ஆகும்.</p><figure><img alt="மண் பரிசோதனை" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/wbz6bkv2/Untitled-1.jpg" /></figure><h2>மண் பரிசோதனை</h2><p>மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் தன்மைகளை ஆய்வகத்தில் அதற்குரிய முறைகளில் கண்டறிவதை மண் பரிசோதனை என்கிறோம். பயிர் விளைச்சலைப் பெருக்க பல்வேறு தொழில் நுட்பங்களைப் பின்பற்றினாலும் அவற்றின் வெற்றி மண்வளத்தைப் பொறுத்ததாகும். மனிதனின் உடல்நலம் அறிய ரத்தப் பரிசோதனை செய்வது போல மண்வளம் அறிய மண் பரிசோதனை செய்ய வேண்டும். சாகுபடிச் செலவைக் குறைத்து, மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை ஒரு எளிய அறிவியல் தொழில் நுட்பமாகும்.</p><h2>மண் பரிசோதனையின் அவசியம்</h2><p>மண்ணின் தன்மைகளை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு பயிர்களைத் தேர்ந்தெடுத்து பயிரிடலாம். பயிருக்கு தீங்கு விளைவிக்கும் களர், உவர், அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளைக் கண்டறிந்து நிலத்தை சீர்திருத்தம் செய்யலாம். மண்ணிலுள்ள தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவைத் துல்லியமாக அறிந்து அதற்கேற்றவாறு சமச்சீராக உரமிட்டு அதிக மகசூல் பெறலாம். மண்ணின் தன்மைக்கு ஏற்ற உரங்களை, பயிருக்குத் தேவையான அளவு மட்டும் இட்டு, உரச் செலவை குறைத்திட மண் பரிசோதனை மிகவும் அவசியம் ஆகும்.</p><h2>மண் மாதிரி எடுக்கும் முறை</h2><p>ஒரு பயிர் அறுவடை செய்த பின்பும், அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைப்பட்ட காலத்தில் மண் மாதிரி எடுக்க வேண்டும். ஒரு வயலுக்கு ஒரு மண் மாதிரி எடுக்கவும், ஒரே நிலத்தில் மண்ணின் தன்மை மாறுபட்டால் தனித்தனியாக மாதிரி எடுக்கலாம். ஒரே நிலத்தில் இரண்டு அல்லது மூன்று பயிர்கள் பயிரிட்டிருந்தால் ஒவ்வொரு பயிர் செய்த இடத்திலும் தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும்.  வரப்பு, வாய்க்கால் அருகில், எரு குவித்த இடம் மற்றும் மர நிழலிலும் மண் மாதிரி எடுக்கக் கூடாது.</p><p>மண் வெட்டி மூலம் ‘V’ போன்ற வடிவத்தில் பயிருக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட ஆழத்திற்கு வெட்டி இருபக்க சரிவுகளிலும் ஒரு செ.மீ கனத்திற்கு மண்ணை செதுக்கி எடுக்க வேண்டும். நெல், சோளம் போன்ற தானியப் பயிர்களுக்கு சுமார் ½ அடி ஆழம் தோண்டி மண் மாதிரி எடுக்க வேண்டும். ஆழமாக வேர்விடும் பருத்தி, கரும்பு, வாழை, கிழங்கு மற்றும் காய்கறி பயிர்களுக்கு சுமார் ¾ அடி ஆழத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் பரவலாக மண் மாதிரிகள் எடுத்து நன்றாக கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பரிசோதனைக்கு சுமார் ½ கிலோ முதல் 1 கிலோ மண் போதுமானது.</p><p>மண் மாதிரியை சுத்தமான பிளாஸ்டிக் பை அல்லது துணிப்பையில் போட்டு, அதில் விவசாயியின் பெயர் மற்றும் முகவரி, வயலுக்கான அடையாளம், அல்லது சர்வே எண், பாசன வசதி மற்றும் அடுத்து பயிரிடப்போகும் பயிர் முதலிய விபரங்களைக் குறித்து அனுப்ப வேண்டும். தென்னை, மா, கொய்யா, போன்ற மரப்பயிர்களுக்கு ( 3x3x3)  அடி நீள, அகல ஆழ குழி எடுத்து, அதில் ஒரு அடிக்கு ஒரு மண்மாதிரி வீதம் 3 மண் மாதிரிகள் தனித்தனியாக எடுக்க வேண்டும்.</p><h2>மண் மாதிரி ஆய்வுக் கட்டணம்</h2><p>மண் மாதிரி எடுத்திட உகந்த தருணமான இச்சமயத்தில் விவசாயிகள் தங்களது மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வகதத்தில் நேரடியாக கொடுத்து ஆய்வறிக்கை 3 நாட்களுக்குள் பெற்றிடலாம். மண் மாதிரி ஒன்றிற்கு ரூ.30 மற்றும் தண்ணீர் மாதிரி ஒன்றிற்கு ரூ.30 என்ற அளவில் ஆய்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><h2>மண் வளம்</h2><p>மண்ணில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் பயிருக்கு உரமிடுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். விவசாயிகள் பயிரின் தேவைக்கு அதிகமாக உரம் பயன்படுத்தும்போது பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு வழிவகுப்பதுடன் பயிரினால் எடுத்துக் கொண்ட உரம் போக மீதமுள்ளவை மண்ணின் வளத்தை பாதிக்கிறது. எனவே விவசாயிகள் மண் மாதிரி பரிசோதனை செய்வது மட்டுமல்லாமல் மண்வள அட்டையின் உர பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே ரசாயன உரங்களை பயன்படுத்தி பயிர் விளைச்சல் செய்வதனால் அதிக மகசூல் பெறுவதுடன் மண்வளத்தையும் பாதுகாத்திடலாம்.</p><h2>உரச் செலவை குறைத்து அதிக மகசூல் பெறலாம்</h2><p>நேரடியாகவோ அல்லது நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலமாகவோ மண் மற்றும் நீர் மாதிரிகளை கொடுத்து பரிசோதனை முடிவுகளை பெற்று அதன் பிறகு உரிய முறையில் விவசாயம் செய்வதன் மூலம் உரச் செலவை குறைத்து அதிக மகசூலைப் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என்கிறார் திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stanley-government-hospital-should-be-provided-with-basic-facilities-nainar-nagenthran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stanley-government-hospital-should-be-provided-with-basic-facilities-nainar-nagenthran#comments</comments><guid isPermaLink="false">baa73b28-83c2-4d37-a6f6-98240a78ec50</guid><pubDate>Tue, 14 Jul 2026 05:04:59 +0000</pubDate><atom:updated>2026-07-14T05:04:59.705Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,ஸ்டான்லி மருத்துவமனை,Stanley Hospital,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/gsjl8u7v/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/gsjl8u7v/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தின் மிக முக்கியமான அரசு மருத்துவமனையான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், இடநெருக்கடியின் காரணமாக ஒரே படுக்கையில் கிட்டத்தட்ட 3 நோயாளிகள் வரை அனுமதிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி கடும் கண்டனத்திற்குரியது.</p><p>மருத்துவமனையில் நடைபெறும் புனரமைப்பு பணிகளின் காரணமாக, நோயாளிகள் அனைவரையும் ஒரே பிளாக்கில் இடம் மாற்றியதன் விளைவு தான், இந்த இட நெருக்கடிக்கு காரணம் என்று சொல்லப்படுவது , தமிழக சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் குளறுபடிக்கான சான்று. தலைமைச் செயலகத்தில் ஏதாவது புனரமைப்பு பணிகள் நடந்தால், அரசு அமைச்சர்களை எல்லாம் இப்படித்தான் ஒரே அறையில் அடைத்து, ஒரே சீட்டில் இடித்துக் கொண்டு அமர வைப்பார்களா? </p><p>உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு நல்ல காற்றோட்டமான, வசதியான படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற அடிப்படை கூட  ஜோசப் விஜய் அரசுக்கு தெரியவில்லையா? அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எல்லாம் விளிம்புநிலை மக்கள் தானே என்ற இளக்காரமா? முந்தைய திமுக அரசைப் போலவே, தற்போதைய தவெக அரசும், அரசு மருத்துவமனைகளையும், அதை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் அலட்சியப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. </p><p>எனவே, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தரமான படுக்கைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போதிய அளவில் ஏற்பாடு செய்து தர வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜையும், முதல்வர் விஜய்யையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘நலம் TN’ புதிய இணையதளம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nalam-tn-new-website-chief-minister-vijay-launches-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nalam-tn-new-website-chief-minister-vijay-launches-it#comments</comments><guid isPermaLink="false">81357cb8-0595-45e5-a905-c0b8d7da2fbf</guid><pubDate>Tue, 14 Jul 2026 05:03:18 +0000</pubDate><atom:updated>2026-07-14T05:03:18.523Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சுகாதாரத்துறை,மருத்துவத்துறை,Tamil Nadu Health Department,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/cav0gwsg/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/cav0gwsg/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். </p><p>அதனை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1, 393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆனைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.</p><p>தொடர்ந்து அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில் ‘நலம் TN’ (Nalam TN) புதிய ஒருங்கிணைந்த இணையதளம் மற்றும் ‘நலம் ஏ.ஐ.’ வாட்ஸ்-அப் செயலியை  முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மூலம் கார்ப்பரேட்கள் முதல் பொதுமக்கள் என நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை&nbsp;மருத்துவமனைகளுக்கு&nbsp;எளிமையாக வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய், முதலில் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்  - கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-should-first-teach-party-members-a-lesson-on-self-discipline-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-should-first-teach-party-members-a-lesson-on-self-discipline-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">a0e5c140-0acf-408f-b4e4-62c608472a03</guid><pubDate>Tue, 14 Jul 2026 04:44:54 +0000</pubDate><atom:updated>2026-07-14T04:44:54.509Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,திமுக,DMK,தமிழகம்,Kanimozhi M.P.,கனிமொழி எம்.பி.,Kanimozhi,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/8rajlpa0/nan.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/8rajlpa0/nan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான <a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி</a>, தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:</p><p>குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?</p><p>காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? <br><br>காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> அவர்கள், குற்றம்…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2076872475343012339?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை மேலும் குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-by-rs-400-per-sovereign</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-by-rs-400-per-sovereign#comments</comments><guid isPermaLink="false">5b4ab03e-9969-4dd0-840a-c6e7cc6fa0ef</guid><pubDate>Tue, 14 Jul 2026 04:38:32 +0000</pubDate><atom:updated>2026-07-14T04:38:32.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xv28b9a5/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/xv28b9a5/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 7-ந்தேதி வரை குறைந்து வந்த தங்கம் விலை 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த வார இறுதியில் மீண்டும் விலை குறைந்தது.</p><p>அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை குறைந்தது. சவரனுக்கு ரூ.800-ம், கிராமுக்கு ரூ.100-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,200-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.</p><p>அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு&nbsp;வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பா..? - சிங்கப்பெண் போலீசாரிடம் மதுபோதையில் வக்கீல் வாக்குவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-lawyer-argues-with-police-in-singapen</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-lawyer-argues-with-police-in-singapen#comments</comments><guid isPermaLink="false">b44ed86a-e6f8-494d-b042-e62afc5a62d9</guid><pubDate>Tue, 14 Jul 2026 04:26:02 +0000</pubDate><atom:updated>2026-07-14T04:26:02.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,மதுபோதை,Liquor,வக்கீல்,lawyer,Singapen Athiradi Padai,சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/bktep569/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/bktep569/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையத்தில் சிங்கப் பெண் சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா, போலீஸ் சவுமியா ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது காட்டுப்பரமக்குடி மேலத்தெருவை சேர்ந்த வக்கீல் வினோத் மிஸ்ரா (வயது 25) என்பவர் மது போதையில் அங்கு வந்துள்ளார். </p><p>அப்போது அவர்  “பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பா? ஆண்களுக்கு இல்லையா?. உங்கள் வாகனத்தில் என்னை ஏற்றி வீட்டில் கொண்டு போய் இறக்கி விடுங்கள்" என்று கேட்டுள்ளார். அதற்கு சிங்கப்பெண் படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா, தள்ளி நில்லுங்கள் என்று கூறியுள்ளார். உடனே வினோத் மிஸ்ரா, 'உதவி செய்யத்தானே சிங்கப்பெண் படையில் இருக்கீங்க' எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.</p><p>மேலும் பெண் போலீசாரை அவதூறாக பேசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், அந்த வழியாக வந்தார். உடனே வினோத் மிஸ்ராவை பிடித்து பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். இதுகுறித்து சிங்கப்பெண் படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா கொடுத்த புகாரின்பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் வினோத் மிஸ்ராவை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாள்: திமுகவின் வரலாற்றுத் திரிபை தவெக அரசு பின்பற்றக் கூடாது - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/november-1-is-tamil-nadu-day-the-government-should-not-follow-dmks-historical-twist-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/november-1-is-tamil-nadu-day-the-government-should-not-follow-dmks-historical-twist-anbumani#comments</comments><guid isPermaLink="false">8145d107-f61c-463c-8321-5b3687424823</guid><pubDate>Tue, 14 Jul 2026 04:16:37 +0000</pubDate><atom:updated>2026-07-14T04:16:37.370Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,தமிழ்நாடு நாள்,Tamilnadu Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/pe4gvg62/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/pe4gvg62/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும்  பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழ்மொழியின் பெருமை, தமிழ்நாட்டின் வரலாறு ஆகியவை குறித்து பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும் என்றும், போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு முறையே ரூ.50,000, ரூ.30,000, ரூ.20,000 வீதம் பரிசுகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.  தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அதன் பெருமைகளை பரப்புவதற்கான இத்தகைய பணிகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், இவற்றின் மூலம் வரலாற்றைத் திரிக்கும் முயற்சி தொடர்வதை அனுமதிக்க முடியாது.</p><p>இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்கக் கோரி  போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.  அதுவரை இந்தியாவில் 6 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே இருந்த நிலையில், அவை பிரிக்கப்பட்டு 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன. அதுவரை ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணத்தின் பெரும்பகுதிகள் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் பிரித்து, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு என்ற பெயரில் இப்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு புதிய சென்னை மாகாணமாக  அறிவிக்கப்பட்டது.</p><p>அதன் அடிப்படையில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும்  நவம்பர் ஒன்றாம் தேதியைத்தான் முறையே கர்நாடகம் நாள், கேரளம் நாள், ஆந்திரம் நாள், புதுச்சேரி நாள் என்று கொண்டாடி வருகின்றன. அதேபோல், நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் போன்றோரின் கோரிக்கையும் இதுவாகவே இருந்தது. அதையேற்று நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று 2019-ம் ஆண்டில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால்,  2021-ம் ஆண்டில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின்  சம்பந்தமே இல்லாமல் ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.</p><p>தமிழ்நாட்டின் வரலாற்றில் ஜூலை 18-ம் தேதிக்கு பல சிறப்புகள் உண்டு. ஆனால், தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் தகுதி அந்த நாளுக்கு இல்லை. இன்றைய நிலப்பரப்பைக் கொண்ட மாநிலம் 1956-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி பிரிக்கப்பட்ட பின்னர், பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னை மாகாணம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. 1967-ம் ஆண்டில் அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அதே ஆண்டில் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவதற்கான தீர்மானம்  தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு ஜூலை 18-ம் நாள் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாட்டின் நில எல்லைகள் வரையறுக்கப்பட்டது முதல் பெயர் சூட்டப்பட்டது வரையிலான வரலாறு இதுதான். இதன்படி பார்த்தால் ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட என்ன நியாயம் உள்ளது?</p><p>ஜூலை 18 என்பது தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்ட நாள்தான். ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அம்மாநில நாளாகக் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்த நாளாகக் கொண்டாட முடியாது. இது வரலாற்றைத் திரிக்கும் அபத்தமான செயல் ஆகும். திமுக ஆட்சியில் தவறான வழிகாட்டுதல் அல்லது  உள்நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக இப்போது ஆட்சிக்கு வந்த பின்னும் அதே வரலாற்றுத் திரிபை பின்பற்றுவதும், நியாயப்படுத்துவதும் தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு செய்யப்படும்  துரோகம்.</p><p>தமிழ்நாடு நாள் என்றால் அது நவம்பர் ஒன்றாம் நாள்தான். அது தான் மக்கள் மனதில் நிலைநிறுத்தப்பட வேண்டும். மாறாக, ஜூலை 18-ம் நாளை தமிழ்நாடு என்று அழைப்பதும், அதை நிலைநிறுத்தும் வகையில் தவறான வரலாற்றின் அடிப்படையில் பேச்சுப் போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்துவதும் ஏற்க முடியாதவை. இந்த அபத்தத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும். தேவைப்பட்டால் தமிழ் அறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், எல்லைப் போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரை அழைத்து பேசி தமிழ்நாடு நாள் எது? என்பதை தீர்மானிக்க வேண்டும்; மாணவச் செல்வங்களுக்கு பெருமைமிக்க உண்மை வரலாற்றை போதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் 3,600 ஆண்டுகள் பழமையான மனித புதைகுழிகள் கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3600-year-old-human-burials-discovered-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3600-year-old-human-burials-discovered-in-salem#comments</comments><guid isPermaLink="false">2108f98c-f4c6-4ac9-a328-d05f43275bc1</guid><pubDate>Tue, 14 Jul 2026 04:12:52 +0000</pubDate><atom:updated>2026-07-14T04:12:52.105Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,Excavation,அகழாய்வு,தொல்லியல் துறை,Department of Archaeology,மனித புதைகுழி,human burials</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/nx3f953e/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/nx3f953e/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் தெலுங்கனூர் உள்ளது. இந்தப் இடம் 1990-ம் ஆண்டு வரை அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பின்னர், வனப்குதி அழிந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேட்டூர் அணை நீர்மட்டம் சரியும் போது, அப்பகுதியில் ஏராளமான புதைகுழிகள் இருப்பதை காண முடியும். தெலுங்கனூரை சுற்றி அதிகளவில் கல் வட்டங்கள் உள்ளன.</p><p>இந்த கல் வட்டங்களை உள்ளூர் மக்களால் பாண்டியன் திட்டுகள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில் வாள், அம்பு, முதுமக்கள் தாழி, பெரிய மற்றும் சிறிய அளவிலான பானை மற்றும் கருவிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளித்தன் பேரில் தமிழக அரசின் அனுமதியையடுத்து முறையான அகழாய்வு செய்யப்படுகிறது.</p><p>இந்த நிலையில், தெலுங்கனூர் மற்றும் மாங்காடு காவிரி கரையோரப் பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வில் சுமார் 3,600 ஆண்டுகள் பழமையான மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வின்போது முழுமையான நிலையில் மனித எலும்புக்கூடுகள் அவற்றுடன் அடக்கம் செய்யப்பட்ட ஹை கார்பன் எக்கு உலோகத்தால் செய்யப்பட்ட தற்காப்பு வாள், தாலிகள், சுண்ணாம்பு மணிகள், மண்பானைகள் மற்றும் பல்வேறு ஈமப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த ஆய்வின்போது, கிடைத்த பொருட்களை வைத்து பரிசோதனை செய்ததன் மூலம் அப்பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் மற்றும் இரும்பு கால மனிதர்கள் வாழ்ந்ததும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டிற்குள் புகுந்து நடனமாடிய பாம்புகள் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/snakes-enter-house-and-dance-a-sensation-in-krishnagiri</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/snakes-enter-house-and-dance-a-sensation-in-krishnagiri#comments</comments><guid isPermaLink="false">7df64e0a-88c2-4ef7-89ee-7a84b7e7756a</guid><pubDate>Tue, 14 Jul 2026 04:01:43 +0000</pubDate><atom:updated>2026-07-14T04:01:43.122Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Snake,கிருஷ்ணகிரி,Krishnagiri,பாம்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/6yzd5cbm/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/6yzd5cbm/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி சத்யசாய்நகர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரது வீட்டிற்குள் நேற்று திடீரென 2 சாரை பாம்புகள் புகுந்தன. சிறிது நேரத்தில் 2 சாரை பாம்புகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு நடனமாட தொடங்கின. இதை கண்ட சாகுல் ஹமீது குடும்பத்தினர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி விட்டனர். பின்னர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><p>தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 7 அடி நீளம் கொண்ட பாம்புகளில் ஒரு பாம்பை லாவகமாக பிடித்தனர். ஒரு பாம்பு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. பின்னர் அதே வீட்டு வாசலின் அருகே பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்றையும் தீயணைப்புத்துறை வீரர்கள் பிடித்தனர். தொடர்ந்து பிடிபட்ட 2 பாம்புகளையும் அடர்ந்த காட்டு பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.</p><p>பொதுவாக காட்டு பகுதியில்தான் பாம்புகள் நடனமாடும் காட்சிகளை நாம் காண முடியும். ஆனால் பொதுமக்கள் குடியிருக்கும் வீட்டிற்குள் புகுந்த பாம்புகள் நடனமாடிய சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்தில் பலியான 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தன</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bodies-of-10-people-killed-in-vietnam-boat-accident-arrive-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bodies-of-10-people-killed-in-vietnam-boat-accident-arrive-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">083d4257-007e-47ab-a5ad-e10295094abf</guid><pubDate>Tue, 14 Jul 2026 03:25:29 +0000</pubDate><atom:updated>2026-07-14T03:25:29.250Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/k2qo89mi/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/k2qo89mi/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் இருந்து வியட்நாமுக்கு சுற்றுலா சென்றவர்கள். கடந்த 11-ந்தேதி அங்கு படகு சவாரியில் ஈடுபட்டனர். இதில் 3 பேருடன் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p>இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர், கேரளத்தில் இருந்து 2 பேர், ஆந்திராவில் இருந்து 3 பேர் என 15 பேர் உயிரிழந்தனர் அவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக மேற்கொண்டது. </p><p>இதற்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு அதிகாரி ஒருவரும் அனுப்பி வைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 15 பேரின் உடல்களும் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்றிரவு மும்பை வந்தன.</p><p>இந்த நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் பலியான 10 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டன. மும்பையில் இருந்து விமானம் மூலம் 4 பேரின் உடல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. மீதம் 6 பேரின் உடல்கள் கோவை சென்றடைந்தது. அயலகத் தமிழர் நல வாரிய அதிகாரிகள் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரவர்களின் சொந்த ஊருக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-issued-a-tender-notification-for-the-thaimaman-thanga-mothiram-maternal-uncles-gold-ring-scheme</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-issued-a-tender-notification-for-the-thaimaman-thanga-mothiram-maternal-uncles-gold-ring-scheme#comments</comments><guid isPermaLink="false">b6de0ec9-3ca8-40e0-a963-5f2e133adf2a</guid><pubDate>Tue, 14 Jul 2026 03:22:46 +0000</pubDate><atom:updated>2026-07-14T03:22:46.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக அரசு,TN govt,ஒப்பந்தம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Tamil Nadu Chief Minister Vijay,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,Thaimaman Gold Ring Project</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/054j57zc/satta.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/054j57zc/satta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. </p><p>அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15ஆம் தேதி தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> தொடங்கி வைக்க உள்ளார். </p><p>இந்நிலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,725-க்கு கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 14ம் தேதி) முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை வாங்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முதல்-அமைச்ர் விஜய்</h2><p>முன்னதாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” தொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த அரசாணையில் கூறப்பட்டிருந்ததாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய் </a>தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு (Vetri Thamizhagam vision document) தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்".</p><p>அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கவுரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/0l7wlwhf/sakihi.jpg" /></figure><h2>கர்ப்பிணிப் பெண்கள்</h2><p>தமிழ்நாடு அரசு தாய் சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையை திட்டமிடும் முறை மற்றும் கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இம்முயற்சிகள் மாநிலத்தில் தாய் சேய் நலக் குறியீடுகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளன.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/00l7mw84/bahar.jpg" /></figure><h2>ஒரு கிராம் தங்க மோதிரம்:-</h2><p>அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.</p><p>தமிழர் பாரம்பரியத்தில், "தாய்மாமன் சீர்" என்ற மரபின்படி, தமிழ்நாடு முதல்-அமைச்சர், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.</p> <h2>அரசு மருத்துவமனை</h2><p>தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்" [Thaaimaaman Thanga Mothira Thittam] செயல்படுத்தப்பட உள்ளது.</p><h2>ரூ.755.83 கோடி ஒதுக்கீடு:-</h2><p>இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>செப்டம்பர் 15-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்:</p><p>இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சரால் துவக்கி வைக்கப்படும்.</p><p>இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.</p> ]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க., தி.மு.க.தான் பலமான கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் - ராஜேந்திர பாலாஜி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-dmk-are-the-movements-with-the-strongest-structure-rajendra-balajis-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-dmk-are-the-movements-with-the-strongest-structure-rajendra-balajis-speech#comments</comments><guid isPermaLink="false">f45a9cdf-8e77-4b09-92ba-592ca384043c</guid><pubDate>Tue, 14 Jul 2026 03:13:03 +0000</pubDate><atom:updated>2026-07-14T03:13:03.530Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,தவெக,விஜய்,அதிமுக,ராஜேந்திர பாலாஜி,Rajendra Balaji</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/bpl1fza3/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/bpl1fza3/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் விருதுநகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>அ.தி.மு.க. என்பது பல துரோகங்களை கடந்து வந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க பேரியக்கம். அன்றைக்கு தன்னுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சென்றவர், அடுத்த நாள் கருணாநிதியுடன் கைகோர்த்து பேட்டி கொடுத்த துரோகத்தை எம்.ஜி.ஆர் சந்தித்தார். அத்தனையையும் தாங்கிக்கொண்டு, மக்களின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியை பிடித்தார். அ.தி.மு.க. தொடங்கி 53 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்றும் இளைஞர்கள் பட்டாளம் நிறைந்த கட்சியாகவே திகழ்கிறது.</p><p>விஜய் ஒரு நடிகர் என்ற காரணத்திற்காக கொஞ்சம் கூடுதலாக வாக்குகள் அவருக்கு சென்றுள்ளன. தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மாற்று அலை வீசுவதாக கூறுவது முற்றிலும் தவறு. அப்படி ஒரு அலை இருந்திருந்தால், 1977-ல் எம்.ஜி.ஆர். பெற்றதை போல மிகப்பெரிய மெஜாரிட்டி வெற்றியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி பெறவில்லை.</p><p>த.வெ.க. ஆட்சிக்கு வந்து 60 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் தமிழகத்தில் எவ்வளவு பிரச்சினைகள்? தேர்தல் நேரத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்தவர் விஜய். த.வெ.க. ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது; நிலைக்காது.</p><p>அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மட்டும்தான் தமிழ்நாட்டில் பலமான கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள். அதிலும் கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்ட ஒரே பேரியக்கம் என்பது அ.தி.மு.க. மட்டும்தான். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த இயக்கம் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சியை அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் இன்று மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-today-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-today-2#comments</comments><guid isPermaLink="false">a20ae3e7-95b4-4b35-88a9-51c1633ed919</guid><pubDate>Tue, 14 Jul 2026 02:56:32 +0000</pubDate><atom:updated>2026-07-14T02:56:32.868Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5ucczcw1/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5ucczcw1/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி, புதிய பேருந்து நிலையம் துணைமின் நிலையங்களில் இன்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  </p><p>மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பேருந்து நிலையம் துணைமின் நிலையங்களில் இன்று (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி.</p><p>ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி. </p><p>பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என்.ஜி.ஓ. காலனி, மகிழ்ச்சிநகர், திருநகர், திருமால்நகர், ராமச்சந்திரா கார்டன், ராமச்சந்திராநகர், பரணி பார்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/crude-oil-prices-rise-10-percent</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/crude-oil-prices-rise-10-percent#comments</comments><guid isPermaLink="false">4a96e112-14ac-4d50-88f6-d6f87bad6127</guid><pubDate>Tue, 14 Jul 2026 02:50:16 +0000</pubDate><atom:updated>2026-07-14T02:50:16.593Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கச்சா எண்ணெய்,Crude oil,கச்சா எண்ணெய் விலை,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை,Crude oil price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/z1s3sd7u/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/z1s3sd7u/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>ஹார்முஸ் நீரிணை</h2><p>உலக எண்ணெய் வர்த்தகத்தின் இதயமாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்போர் தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி 3 மாதங்களுக்கு ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. </p><p>இதனால் உலகநாடுகளில் எரி பொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டது. பல நாடுகளில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>இதனால் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2020-ம் ஆண்டுக்கு பிறகு இன்று ஒரே நாளில் சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 9.62 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 83.32 டாலராகவும் , WTI கச்சா எண்ணெய் விலை 9.4 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 78.14 டாலர் ஆகவும் வர்த்தகமாகிறது.</p><p>மேலும் ஈரான்-அமெரிக்க போரால் பெட்ரோல், டீசல் விலை நேற்று கணிசமாக உயர்ந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 1.69 ரூபாய் உயர்ந்து, லிட்டர் ரூ.109.46-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 1.71 ரூபாய் உயர்ந்து ரூ.101.26-க்கும் விற்பனையானது. பெட்ரோல், டீசல் விலை ஒரே நேரத்தில் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வு தொடரும் என்றே கணிக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு.. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கிடைக்கும் வசதிகள் என்னென்ன தெரியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-you-know-what-facilities-are-available-at-chennai-egmore-railway-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-you-know-what-facilities-are-available-at-chennai-egmore-railway-station#comments</comments><guid isPermaLink="false">5c363817-125a-405e-8781-e3323ed3574e</guid><pubDate>Tue, 14 Jul 2026 02:39:25 +0000</pubDate><atom:updated>2026-07-14T02:39:25.687Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Chennai Egmore,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,சென்னை எழும்பூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5pbpkelu/chennai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை எழும்பூர் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/5pbpkelu/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக மக்களுக்கு சென்னையில் உள்ள சென்டிரல் ரெயில் நிலையத்தை வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், <a href="https://www.dailythanthi.com/topic/egmore">எழும்பூர்</a> ரெயில் நிலையத்தை தெரியாமல் இருக்க முடியாது. </p><h2>சென்னை எழும்பூர்</h2><p>காரணம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்தே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு மட்டும் சென்டிரலில் இருந்து சில ரெயில்கள் செல்கின்றன. </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து சென்றாலும், பல பேருக்கு இன்னும் ரெயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பது தெரியாமலேயே இருக்கிறது. அதைப்பற்றி இங்கே பார்ப்போம். </p><p>ரெயிலில் இருந்து ரெயில் நிலையத்திற்கு வெளியே பயணிகளின் உடைமைகளை எடுத்துச் செல்லும் சுமை தூக்கிகளுக்கு (போர்ட்டர்) 45 கிலோ எடை வரை எடுத்து செல்ல கட்டணம் ரூ.70 ஆகும். </p><p>டிராலி மூலம் 120 கிலோ வரை பொருட்களை இழுத்து செல்ல ரூ.125 கட்டணம் ஆகும். இதேபோல், சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சருக்கான கட்டணம் ரூ.65 ஆகும். </p><h2>பேட்டரி கார்</h2><p>சக்கர நாற்காலி தேவைக்கு பிளாட்பாரம் 4-ல் உள்ள துணை ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை தொடர்பு கொள்ளவும். ஏதாவது, புகார்கள் அளிக்க வேண்டும் என்றால், 9003061958 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். </p><p>இதுபோக, பேட்டரி கார் பயணத்திற்கு பயணி ஒருவருக்கு ரூ.20 கட்டணம் ஆகும். மேலும், ரெயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் உடைமைகளை வைத்துக்கொள்ள ஒரு நாள் வரை கட்டணம் ரூ.20 வசூலிக்கப்படுகிறது. அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.30 கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-surveyor-arrested-for-accepting-a-bribe-of-rs5000</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-surveyor-arrested-for-accepting-a-bribe-of-rs5000#comments</comments><guid isPermaLink="false">e47d74bc-0412-4e8f-8fe4-1e72c335da06</guid><pubDate>Tue, 14 Jul 2026 02:19:02 +0000</pubDate><atom:updated>2026-07-14T02:19:02.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,ராமேசுவரம்,கைது,arrest,ராமநாதபுரம்,Ramanathapuram,லஞ்சம்,bribe,தாலுகா அலுவலகம்,Taluk office,Surveyor,சர்வேயர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/0pbeg5gx/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமேசுவரம் தாலுகா அலுவலக சர்வேயர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/0pbeg5gx/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நபரிடம், பட்டா நிலத்தை அளந்து கணினியில் பதிவேற்றம் செய்ய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை</a> லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். </p><h2>ராமேசுவரம் தாலுகா அலுவலக சர்வேயர்</h2><p>ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 34). இவர் ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். இந்த தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஒருவர், தனது பட்டா நிலத்தை அளந்து அதனை கணினியில் பதிவேற்றம் செய்யுமாறு சத்யராஜிடம் கூறியுள்ளார். </p><h2>ரூ.5 ஆயிரம் லஞ்சம், கைது</h2><p>அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என கூறியுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரகசியமாக கண்காணித்து சர்வேயர் சத்யராஜை லஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-pours-petrol-on-wife-2-daughters-sets-them-on-fire-after-being-refused-money-for-expenses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-pours-petrol-on-wife-2-daughters-sets-them-on-fire-after-being-refused-money-for-expenses#comments</comments><guid isPermaLink="false">8e2bc4f2-510b-4959-9302-ebc242e590bc</guid><pubDate>Tue, 14 Jul 2026 02:00:40 +0000</pubDate><atom:updated>2026-07-14T02:00:40.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,Thanjavur,தஞ்சாவூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/64b3olih/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/64b3olih/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (65 வயது) கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயலெட்சுமி (60 வயது). இவர்களது மகள்கள் மேனகா (38 வயது), மவுனிகா (25 வயது). மேனகா திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் தாய் வீட்டில் வசித்து வந்தார். மவுனிகாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.</p><h2>அடிக்கடி தகராறு</h2><p>செல்வராஜ் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.</p><h2>மனைவி, மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு</h2><p>நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் மகள்களிடம் பணம் கேட்டு செல்வராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் பணம் தர விஜயலெட்சுமி மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் 2 மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.</p><h2>3 பேரும் படுகாயம்</h2><p>அவர்கள் 3 பேரும் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது விஜயலெட்சுமி மற்றும் அவரது மகள்கள் மீது தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீது எரிந்த தீயை அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.</p><h2>கைது</h2><p>இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி தனது மனைவி மற்றும் மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்றைய அரசியலை 36 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்ன சோ! - அப்படி என்ன கூறினார்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cho-predicted-todays-politics-36-years-ago-what-exactly-did-he-say</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cho-predicted-todays-politics-36-years-ago-what-exactly-did-he-say#comments</comments><guid isPermaLink="false">e35236da-f344-45cb-8149-71cf9dbfc42f</guid><pubDate>Tue, 14 Jul 2026 01:45:48 +0000</pubDate><atom:updated>2026-07-14T01:45:48.976Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,தமிழகம்,அரசியல் களம்,MKstalin,தமிழக அரசியல்,Edappadi Palaniasamy,tn politics,சோ ராமசாமி,cho ramasamy</media:keywords><media:content height="720" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/2hk5e6qk/vali.jpg" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/2hk5e6qk/vali.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், 59 ஆண்டுகளாக கோலோற்றிய திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. </p><p>தி.மு.க., அ.தி.மு.க. என்ற இருபெரும் கட்சிகள், மாறி.. மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், கட்சி தொடங்கிய 2½ ஆண்டுகளில், தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே வெற்றி பெற்று <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க. </a>ஆட்சி அமைத்துள்ளது. </p><p>நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களில் வெற்றி பெற்ற <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a>, கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றது. </p><h2>தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணியா?  </h2><p>அதே நேரத்தில், இரு துருவங்களாக இருந்த <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> - <a href="https://www.dailythanthi.com/topic/admk">அ.தி.மு.க.</a> ஆகிய இரு கட்சிகள் பகைமையை மறந்து கைகோர்த்து ஆட்சி அமைக்க முயன்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. </p><p>இதை தி.மு.க. கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் உறுதிப்படுத்தினார்கள். </p><h2>அன்றே சொன்னார், சோ!</h2><p>இது எப்படி சாத்தியமாகும் என்று பொதுமக்கள் இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், 36 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் விமர்சகரும், 'துக்ளக்' ஆசிரியருமான சோ, இந்தக் கருத்தை கூறியிருக்கிறார். </p><p>1990-ம் ஆண்டில் 'துக்ளக்' இதழில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு சோ இவ்வாறு பதில் அளித்து இருந்தார்.</p><h2>அரசியல் தீர்க்கதரிசி</h2><p>அதாவது, வாசகர் ஒருவர், "<strong>தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி சேருவார்களா?</strong>" என்று கேள்வி எழுப்பி இருந்தார். </p><p>அதற்கு பதில் அளித்த சோ, "நிச்சயமாக வரும் காலத்தில் 2 கட்சிகளும் ஜெயிக்க முடியாத சூழல் உருவாகும். அப்போது கூட்டணி அமைப்பார்கள்" என்று கூறியிருந்தார். </p><p>தற்போது, தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கவில்லை என்றாலும், அதுபோன்ற சூழ்நிலை உருவானதை பார்க்கும்போது, சோ ஒரு அரசியல் தீர்க்கதரிசி என்றுதான் சொல்ல வேண்டும். </p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்:  தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி; 4 பேர் காயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-one-dead-4-injured-in-boiler-explosion-at-factory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-one-dead-4-injured-in-boiler-explosion-at-factory#comments</comments><guid isPermaLink="false">96f95a03-db38-49ab-84bd-a44b2485a72c</guid><pubDate>Tue, 14 Jul 2026 01:18:30 +0000</pubDate><atom:updated>2026-07-14T01:18:30.282Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,பாய்லர்,Boiler</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/miy569ip/tpeop.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/miy569ip/tpeop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருவள்ளூர்</p><p>திருவள்ளூரில் உள்ள தொழிற்சாலையில் <a href="https://www.dailythanthi.com/news/world">பாய்லர் </a>வெடித்ததில் ஒருவர் பலியாகி உள்ளார்.  4 பேர் காயம் அடைந்தனர்.</p> <h2>பாய்லர் வெடித்தது</h2><p>திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, ராட்சத பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது.</p><p>இந்த சம்பவத்தில், ஆலையில் வேலை செய்து வந்த ரவி என்பவர் பலியாகி உள்ளார். அவர் வடமாநில தொழிலாளி என தெரிய வந்துள்ளது. இதுதவிர 4 பேர் படுகாயம் அடைந்தனர்.</p>  <h2>தீயணைப்பு வீரர்கள்</h2><p>அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p><p>ஆலையில், பாய்லர் வெடித்ததில் தீ மளமளவென பரவியது.  தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  பாய்லர் வெடித்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.  அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-today-in-western-ghats-districts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-today-in-western-ghats-districts#comments</comments><guid isPermaLink="false">9f5107b4-c134-48c3-9e13-c3c7beeea4aa</guid><pubDate>Tue, 14 Jul 2026 01:14:51 +0000</pubDate><atom:updated>2026-07-14T01:14:51.269Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,TN weather</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/bmqm0rd9/we.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain, tn rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/bmqm0rd9/we.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (14-07-2026) மற்றும் நாளை (15-07-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p>16-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>17-07-2026 முதல் 19-07-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>14-07-2026 முதல் 16-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும்.</p><p><strong>17-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>14-07-2026 முதல் 16-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><strong>17-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>14-07-2026 முதல் 15-07-2026 வரை:</strong> அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (14-07-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நடப்பு நிதியாண்டில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் 670 ரெயில் பெட்டிகள் தயாரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-the-current-financial-year-670-railway-coaches-were-produced-at-the-icf-factory</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-the-current-financial-year-670-railway-coaches-were-produced-at-the-icf-factory#comments</comments><guid isPermaLink="false">ec9617da-cf30-45a7-918d-d4841a50bac3</guid><pubDate>Tue, 14 Jul 2026 01:01:23 +0000</pubDate><atom:updated>2026-07-14T01:01:23.688Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் பெட்டி,ICF,train coaches,ஐ.சி.எப். தொழிற்சாலை,ICF factory</media:keywords><media:content height="675" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/tv43b9k2/CHENNAI-01.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/tv43b9k2/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் 2025-26-ம் நிதியாண்டில் 4,300 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில் நடப்பு நிதியாண்டில் (2026-27) 4,500 ரெயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு கொடுக்கப்பட்டது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது.</p><p>இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியபோது, 'ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகளில் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் பணிகள் நடைபெறுகிறது. இந்த நிதியாண்டில் இலக்கை விரைந்து முடித் திடும் வகையில் தற்போது ரெயில் பெட்டி தயாரிக்கப்பட்டு வருகிறது.</p><p>நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரையில் 670 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமாக எல்.எச்.பி. பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய பெட்டிகள் தேவைக்கு ஏற்ப தயாரிக்கும் பணிகள் நடைபெ றுகிறது' என்றார்கள்.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: பெண்ணை கொடூரமாக கொன்று 15 சவரன் நகை கொள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-woman-brutally-murdered-15-sovereigns-of-jewellery-stolen</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-woman-brutally-murdered-15-sovereigns-of-jewellery-stolen#comments</comments><guid isPermaLink="false">20c1070f-208f-4012-b360-ab5ef758e89a</guid><pubDate>Tue, 14 Jul 2026 00:59:55 +0000</pubDate><atom:updated>2026-07-14T00:59:55.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,பெண்,Woman,நகை கொள்ளை,Jewelry robbery,கொடூர கொலை,Brutal murder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/z3j9w4my/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் கத்தியால் குத்திக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-14/z3j9w4my/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்து 15 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.</p><h2>மளிகை கடைக்காரர் மனைவி</h2><p>திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வனஜா (வயது 55) வீட்டில் இட்லி மாவு விற்பனை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், ராதாகிருஷ்ணன் மற்றும் வனஜா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.</p><h2>கழுத்தில் கத்திக்குத்து</h2><p>நேற்று காலை ராதாகிருஷ்ணன் வழக்கம்போல் தனது மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வனஜா, கடைக்கு சென்று கணவருக்கு டீ கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். மதிய உணவு இடைவேளையின்போது ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டை திறந்து உள்ளே சென்றபோது, வனஜா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><h2>15 சவரன் நகை கொள்ளை</h2><p>அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்து, திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இட்லி மாவு வாங்குவது போல் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வனஜாவை கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கத்தாலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட சுமார் 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்தனர். பின்னர், வனஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>பொதுமக்கள் அச்சம்</h2><p>மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக பெண் கொலை</a> செய்யப்பட்ட சம்பவம் பழவேற்காடு பகுதியில் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>