<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 29 Jul 2026 12:29:08 +0000</lastBuildDate><item><title>தவெகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு: விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/o-panneerselvam-decides-to-join-tvk-mla-will-resign-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/o-panneerselvam-decides-to-join-tvk-mla-will-resign-soon#comments</comments><guid isPermaLink="false">1371a8a0-666e-43ed-a51f-abb13b334b59</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:45:52 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:45:52.384Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,DMK,ஓ.பன்னீர்செல்வம்,O Panneer selvam,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/mxgqkl7n/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/mxgqkl7n/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க.வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.</p><h2>அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்</h2><p>தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.  அ.தி.மு.க.வை விட்டு வெளியேறிய நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் வழியில் அவரும் த.வெ.க.வில் சென்று இணைவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அவருடைய மகன் ரவீந்திரநாத்தின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது. </p><h2>தி.மு.க.வில் பதவி வழங்கப்படவில்லை</h2><p>ஆனால், சட்டசபை தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் பக்கம் இழுத்தது. சட்டசபை தேர்தலிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில், த.வெ.க. ஆட்சி அமைத்ததால், தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டியதாகிவிட்டது.</p><p>தி.மு.க.வில் கடந்த பிப்ரவரி மாதமே ஓ.பன்னீர்செல்வம் இணைந்த நிலையில், இதுவரை அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. தேர்தலில் தி.மு.க.வும் தோல்வி அடைந்ததால், அடுத்து என்ன செய்வது என்று ஓ.பன்னீர்செல்வம் யோசித்து வருகிறார்.</p><h2>த.வெ.க.வில் இணைய முடிவு</h2><p>இந்த நிலையில், தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், த.வெ.க.வில் சென்று இணைவதே சிறப்பு என்று ரவீந்திரநாத் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.</p><p>அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, த.வெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.</p><h2>த.வெ.க. சம்மதித்தது ஏன்?</h2><p>அமைச்சர்கள் இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கூற, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், தென்மாவட்டங்களில்தான் த.வெ.க. வலுகுறைந்து காணப்படுகிறது. அதற்கு, முக்கிய அரசியல் முகம் அங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, அந்தக் குறையை ஓ.பன்னீர்செல்வம் மூலம் தீர்த்துக்கொள்வதுடன், கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்று த.வெ.க. தலைமை கருதுகிறது.</p><h2>விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா</h2><p>முன்னாள் முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால், த.வெ.க.வில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.</p><h2>நாடாளுமன்ற தேர்தல்</h2><p>2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகரம்: சூப்பர் மார்க்கெட்டில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 ஆயிரம் கொள்ளை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/daring-daylight-robbery-in-tiruvallur-rs-15000-looted-from-a-supermarket-after-threatening-staff-with-a-knife</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/daring-daylight-robbery-in-tiruvallur-rs-15000-looted-from-a-supermarket-after-threatening-staff-with-a-knife#comments</comments><guid isPermaLink="false">01e1fb68-0107-481f-a6f8-1721877af18c</guid><pubDate>Wed, 29 Jul 2026 12:26:16 +0000</pubDate><atom:updated>2026-07-29T12:26:16.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,கொள்ளை,Tiruvallur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/8aximkev/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/8aximkev/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>சென்னையை அடுத்த திருவள்ளூர் வடக்கு ராஜா தெருவில் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இன்று பகல் சூப்பர் மார்க்கெட் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், கடைக்குள் கத்தியுடன் புகுந்த மர்ம ஆசாமி, காசாளரை மிரட்டி ரூ.15 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார்.  </p><p>இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கடை ஊழியர்களும், பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தொழில்துறையில் ஏ.ஐ. பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசுடன் கைகோர்த்த சென்னை ஐ.ஐ.டி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/iit-madras-partners-with-the-tamil-nadu-government-to-boost-ai-adoption-in-the-industrial-sector</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/iit-madras-partners-with-the-tamil-nadu-government-to-boost-ai-adoption-in-the-industrial-sector#comments</comments><guid isPermaLink="false">f856dfbb-d29f-401b-8f82-ae46cd25d213</guid><pubDate>Wed, 29 Jul 2026 12:23:30 +0000</pubDate><atom:updated>2026-07-29T12:23:30.368Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,Chennai IIT,சென்னை ஐ.ஐ.டி.,ஏ.ஐ.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/x6xdex8v/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/x6xdex8v/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநிலத்தின் தொழில்துறை சூழல் அமைப்பு முழுவதும் டிஜிட்டல் உருமாற்றம், செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) பயன்பாடு மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பணியகத்துடன் சென்னை ஐ.ஐ.டி. கைகோர்த்துள்ளது.</p><p>வால்மார்ட் குளோபல் டெக் சார்பில் வழங்கப்படும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) மானியத்தின் ஆதரவுடன், சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில்நுட்ப சிறப்பு மையம் இந்தக் கூட்டு முயற்சிக்குத் தலைமை தாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிககத்தில் உற்பத்தி, சில்லறை வர்த்தகம் மற்றும் அது சார்ந்த துறைகளில் செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தக் கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்படும் தீர்வுகள் குறைந்த செலவிலும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டு முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பணியகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இடையே இன்று கையெழுத்தாகியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூரில் திருடுபோன ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் அரக்கோணத்தில் மீட்பு: குடோன் உரிமையாளர் கைது, 3 பேருக்கு போலீஸ் வலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/red-sandalwood-logs-worth-50-lakh-stolen-from-tirupattur-recovered-in-arakkonam-warehouse-owner-arrested-police-on-the-lookout-for-three-others</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/red-sandalwood-logs-worth-50-lakh-stolen-from-tirupattur-recovered-in-arakkonam-warehouse-owner-arrested-police-on-the-lookout-for-three-others#comments</comments><guid isPermaLink="false">329d5917-f9b9-434c-b59a-9481db63bcd2</guid><pubDate>Wed, 29 Jul 2026 12:16:04 +0000</pubDate><atom:updated>2026-07-29T12:16:04.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்,Arakkonam,அரக்கோணம்,sandalwood,செம்மரக்கட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ztnm15uk/sem.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பத்தூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ztnm15uk/sem.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர், </p><p>திருப்பத்தூரில் திருடுபோன ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் அரக்கோணத்தில் மீட்கப்பட்டுள்ளது. குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன் 3 பேரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>வலைவீசி தேடிவருகின்றனர். </p><h2>ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு</h2><p>திருப்பத்தூரில் தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒன்று உள்ளது. செம்மர வழக்குகளில் பிடிபடும் செம்மரக்கட்டைகளும் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. </p><p>அந்த வகையில், பல்வேறு செம்மர வழக்குகளில் பிடிபட்ட 55 செம்மரக்கட்டைகள் இங்கு வைக்கப்பட்டு இருந்தன. 1,750 கிலோ எடை கொண்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். </p><h2>வன அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்டு</h2><p>இந்த செம்மரக்கட்டைகள் கடந்த 18-ந் தேதி திருடு போனது. இதுகுறித்து, திருப்பத்தூர் அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒற்றைப்பூட்டு அலுவலர் என்.ஜோதிலிங்கம், திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். </p><p>புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி ஒற்றைப்பூட்டு அலுவலர் என்.ஜோதிலிங்கம், வனக்காப்பாளர்கள் ஆர்.மோகன்குமார், பி.ராமமூர்த்தி, சி.ரேணு, வனவர் பி.பரமகுரு ஆகியோரை திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் எம்.மகேந்திரன் சஸ்பெண்ட் செய்தார். </p><h2>குடோன் உரிமையாளர் கைது</h2><p>திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்சய் அனில் வாகரே உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, செம்மரக்கட்டைகளை திருடிய கும்பலை தேடிவந்தனர். இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குடோன் ஒன்றில் இன்று செம்மரக்கட்டைகள் பிடிபட்டன. </p><p>அதனைத் தொடர்ந்து, குடோன் உரிமையாளரான நாகலம்மாள் நகரை சேர்ந்த சத்யராஜ் கைது செய்யப்பட்டார். செம்மரக் கடத்தல் கும்பல் தலைவன் திருத்தணியை சேர்ந்த பூவரசன் மற்றும் சிட்டி, அஜித் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதில், சிட்டி, அஜித் இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கோத்தகிரி அருகே பூட்டிய கடையை உடைத்து உணவு தேடிய கரடி: பொதுமக்கள் அச்சம்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-breaks-into-locked-shop-near-kotagiri-in-search-of-food-public-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-breaks-into-locked-shop-near-kotagiri-in-search-of-food-public-alarmed#comments</comments><guid isPermaLink="false">7419fffa-6ef3-4343-9912-68048d1e0ba7</guid><pubDate>Wed, 29 Jul 2026 12:13:40 +0000</pubDate><atom:updated>2026-07-29T12:13:40.542Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,food,bear,பொதுமக்கள் அச்சம்,கரடி அட்டகாசம்,public fear</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Images/Article/201703290001551462_If-the-bear-chased-the-students-of-the-school_SECVPF.gif" width="794"><media:title type="html"><![CDATA[ கரடி]]></media:title><media:description type="html"><![CDATA[ கடையை உடைத்து உணவு தேடிய கரடி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Images/Article/201703290001551462_If-the-bear-chased-the-students-of-the-school_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீலகிரி மாவட்டம்</a> கோத்தகிரி அருகே கரடி ஒன்று பூட்டிய கடையை உடைத்து உணவைத் தேடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.</p><p>கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கைக்காட்டி நகர்ப்புறப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிகக் கடை இரவு நேரத்தில் வழக்கம்போல் பூட்டப்பட்டிருந்தது. </p><h2>உணவு தேடிய கரடி</h2><p>அப்போது நள்ளிரவில் அங்கு வந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கரடி</a> ஒன்று, கடையின் முன்பக்க கதவு மற்றும் முகப்புப் பகுதியை பலமாக உடைத்து சேதப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடைக்குள் புகுந்து உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என தீவிரமாகத் தேடியது.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>வழக்கம்போல இன்று (புதன்கிழமை) காலை கடையைத் திறக்க வந்த உரிமையாளர், கடையின் முன்புறம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கரடி கடையை உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது.</p><p>மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகர்ப்புறப் பகுதியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி மக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சமடைந்தனர். மேலும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இந்த கரடியை வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்துப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடி வழக்கு; 4 பேரை ஆகஸ்டு 12 வரை சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-case-court-orders-jail-till-august-12-for-4</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-scam-case-court-orders-jail-till-august-12-for-4#comments</comments><guid isPermaLink="false">b248fbb9-6e20-4ac9-9b65-78d82ae11343</guid><pubDate>Wed, 29 Jul 2026 12:03:09 +0000</pubDate><atom:updated>2026-07-29T12:03:09.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நில மோசடி வழக்கு,Palani temple,Land scam case,பழனி கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/tq5qmap6/dptfp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/tq5qmap6/dptfp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திண்டுக்கல்</p><p>பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை ஆகஸ்டு 12-ந்தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.</p><p>திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ரூ.100 கோடி மதிப்பிலான தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் 1.35 ஏக்கர் நிலம், ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 1980-ம் ஆண்டில் நில உரிமையாளர் குப்புசாமி மணியக்காரர் குடும்பத்தார்கள், சிபிசிஐடி அலுவலகத்தில் மூலப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தனர்.</p><p>இதனை தொடர்ந்து, 2 வாரங்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்ற விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.</p>  <h2>வழக்கு விவரம்</h2><p>கடந்த 6-ந்தேதி வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய இருவரின் பெயரில் அந்த இடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த நிலம், வெறும் ரூ.2 கோடிக்கு கிரையம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.</p><p>பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் கோவில் சொத்து என்பதை மறைத்து தனிநபர்களுக்கு கிரையம் செய்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.  இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p>  <h2>டி.ஜி.பி. உத்தரவு</h2><p>மேலும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>ஏற்கனவே, பழனி கவுண்டன்குளம் ஏ.சி.சி சாலை பகுதியை சேர்ந்த அன்வர்தீன், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை, விழுப்புரம் மாவட்டம் சாலமேடு காமராஜர் நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான முருகதாஸ் ஆகியோர்  கைது செய்யப்பட்டனர்.</p>  <h2>நீதிமன்றத்தில் ஆஜர்</h2><p>இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதனை தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில், பழனி டி.கே.என் புதூர் பகுதியை சேர்ந்த சேதுபதி என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.</p><p>இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்கள் 4 பேரையும் ஆகஸ்டு 12-ந்தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-6#comments</comments><guid isPermaLink="false">f438475b-3832-4f30-95d1-6a07388cce5e</guid><pubDate>Wed, 29 Jul 2026 11:37:26 +0000</pubDate><atom:updated>2026-07-29T11:37:26.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,அடையாறு,maintenance work,பராமரிப்பு பணி,வேளச்சேரி,பல்லாவரம்,திருவான்மியூர்,நசரத்பேட்டை,மின் தடை power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/deq5y4mm/powercut.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/deq5y4mm/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னையில் 31.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின் விநியோகம்</a> நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>வேளச்சேரி:</strong> டி.ஏ. கோவில், காந்தி சாலை, கோகிலம் தெரு, நியூ காலனி, கபாலி தெரு, ஆண்டாள் அவென்யூ, சோனி நகர், புறவழி பிரதான சாலை , லட்சுமி நகர் 1 வது முதல் 8வது தெருக்கள் வரை, வடுவாம்பாள் நகர், எம்.ஜி.ஆர். நகர் 1 வது முதல் 10வது தெருக்கள் வரை.</p><p><strong>அடையாறு:</strong> வெங்கடேஸ்வரா நகர் 1 வது முதல் வது தெருக்கள் வரை, ஜீவரத்தினம் நகர் 1 வது மற்றும் 2ஆம் தெருக்கள், கற்பகம் கார்டன் 1 வது முதல் 7 வது குறுக்குத் தெருக்கள் மற்றும் 1 வது பிரதான சாலை, பெசன்ட் நகர் பென்கோ காலனி, பீச் ஹோம் அவென்யூ, சி.பி.டபிள்யூ பழைய குடியிருப்புகள், 4வது அவென்யூ, சுங்கத்துறை காலனி, தாமோதரபுரம்.</p><p><strong>பல்லாவரம்:</strong> காந்தி சாலை, காமாட்சி நகர், அலிக்விப்பா நகர், ஏ.ஆர்.ஜி. நகர், மகாலட்சுமி சாலை, ஜெயலட்சுமி நகர், பிராமின் தெரு.</p><p><strong>திருவான்மியூர்:</strong> சாஸ்திரி நகர் திருவள்ளுவர் சாலை, 1 வது முதல் 4 வது கிழக்கு தெருக்கள், வால்மீகி தெரு, சிவசுந்தரா அவென்யூ 1 வது மற்றும் 2 வது தெருக்கள், கலாக்ஷேத்ரா சாலை, பாலு அவென்யூ.</p><p><strong>நசரத்பேட்டை:</strong> மெட்ரோ வாட்டர் உயர் மின் அழுத்த மின் இணைப்பு 661, மடவிளாகம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈஷா கிராமோத்சவம்: தமிழகத்தில் முதற்கட்ட போட்டிகள் ஆக.1 முதல் தொடக்கம் - ரூ. 1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/isha-gramotsavam-preliminary-competitions-in-tamil-nadu-to-begin-from-august-1-prize-money-of-over-rs-1-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/isha-gramotsavam-preliminary-competitions-in-tamil-nadu-to-begin-from-august-1-prize-money-of-over-rs-1-crore#comments</comments><guid isPermaLink="false">0710f166-c05d-4801-aeaf-2c81f76a0697</guid><pubDate>Wed, 29 Jul 2026 11:24:24 +0000</pubDate><atom:updated>2026-07-29T11:24:24.579Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,ஈஷா,பரிசுத்தொகை,Isha Yoga Center,prize money,போட்டிcompetition</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/x6la952s/255.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈஷா கிராமோத்சவம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/x6la952s/255.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>சத்குருவின் ஈஷா அறக்கட்டளையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவான ஈ<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">ஷா கிராமோத்சவ</a> விளையாட்டு போட்டிகள், தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. </p><h2>ஈஷா கிராமோத்சவம்</h2><p>இந்தாண்டு 10 மாநிலங்களைச் சேர்ந்த 40,000 கிராமங்களில் இருந்து 80,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளுக்கு மொத்தம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. ஈஷா கிராமோத்சவம் நம் கிராமங்களில் 60 சதவீத மக்கள் உழைக்கும் வயதில் இருந்தாலும், வேலை வாய்ப்பின்மை மற்றும் நலிவடையும் விவசாயம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் வறுமைக்கும் போதைப்பழக்கத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். அதேபோல், பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு விளையாடுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது. இந்தச் சூழலை மாற்றி, “கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்ற வேண்டும் என்ற சத்குருவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 'ஈஷா கிராமோத்சவம்' தொடங்கப்பட்டது”. </p><h2>முதற்கட்ட கிளஸ்டர் அளவிலானப் போட்டிகள்</h2><p>தமிழ்நாட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் அளவிலானப் போட்டிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. குறிப்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும், 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளன. மேலும் இரண்டாம் கட்ட மண்டல அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 3-ஆவது மற்றும் 4-ஆவது வார இறுதி நாட்களில் நடைபெறும்.</p><h2>இறுதிப்போட்டி</h2><p>இந்த தொடர் கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகிய நிலைகளில் நடைபெறும். பிரம்மாண்ட இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறும்.</p><h2>பரிசுத்தொகை</h2><p> ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கு கைப்பந்து (வாலிபால்) போட்டிகளும், பெண்களுக்கு எறிபந்து (த்ரோபால்) போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு இதில் பங்கேற்க அனுமதி கிடையாது. ஈஷா கிராமோத்சவம் 2026-இன் இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ₹5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ₹3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ₹1 லட்சமும், ₹50,000-மும் வழங்கப்படும். இதுமட்டுமின்றி, கிளஸ்டர், டிவிஷனல் போட்டிகளிலும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுத் திருவிழாவில், கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் ₹1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. வட மாநிலங்களில்…</p><h2>வட மாநிலங்களிலும்</h2><p>கடந்தாண்டு வரை தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே நடைபெற்ற வந்த ஈஷா கிராமோத்சவம் இந்தாண்டு வட மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களோடு இணைந்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடத்தப்படுகின்றன.</p><p>இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில், சுமார் 7,000 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 15,000 பெண்கள் உட்பட 80,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.</p><p>இது குறித்து ஈஷா கிராமோத்சவ ஒருங்கிணைப்பாளர் சுவாமி புலகா கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் ஈஷா கிராமோத்சவம் அளவிலும் தாக்கத்திலும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. கிராமப்புறங்களில் இருக்கும் திறமையான விளையாட்டு வீரர்களை அங்கீகரித்து கொண்டாடும் வாய்ப்பை கிராமோத்சவம் வழங்குகிறது. தகுதியுள்ள ஒவ்வொரு கிராம அணியையும் இதில் பங்கேற்று விளையாட்டின் மகிழ்ச்சி, தோழமை மற்றும் மாற்றும் சக்தியை அனுபவிக்க அழைக்கிறோம்.” எனக் கூறினார்.</p><p>கடந்த 20 ஆண்டுகளில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">ஈஷா கிராமோத்சவம்</a> தொடங்கியதில் இருந்து இன்று வரை, சுமார் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2.60 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஈஷா கிராமோத்சவம், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் 'தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பாக' அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p><h2>கிராமோத்சவ திருவிழா</h2><p>பாரம்பரிய கலைகள், இசை, நடனம், கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் சுவையான கிராமப்புற உணவுக் கடைகள் எனப் பலவற்றையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து நடத்துவதன் மூலம், கிராமப்புற இந்தியாவின் செழுமையான கலாச்சாரத்தை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">ஈஷா கிராமோத்சவம்</a> கொண்டாடுகிறது. கிராமோத்சவ திருவிழாவில் வள்ளி கும்மியாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளைக் கண்டு ரசிக்கலாம். அதோடு கோ-கோ, கிட்டிப்புள், கபடி போன்ற கிராமத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம்.</p><p>தனிநபர்களையும் சமூகங்களையும் வடிவமைப்பதில் விளையாட்டின் ஆழமான பங்களிப்பு பற்றி சத்குரு கூறுகையில், “வாழ்க்கையை விளையாட்டுத்தனத்தோடு (playful) எதிர்கொள்வதே நாம் வாழ்வதற்கான ஆகச்சிறந்த பொறுப்பான வழியாகும். எப்போதும் வாடிய முகத்தோடு இந்த பூமியில் உலா வருவது முற்றிலும் பொறுப்பற்ற செயல். வாழ்க்கையில் விளையாட்டுத்தனத்தோடு இருப்பது என்பது பொறுப்பான மற்றும் சரியான செயலாற்றும் நிலையில் இருப்பதைக் குறிக்கிறது. நீங்கள் எப்போது விளையாட்டுத்தனத்தோடு இருக்கிறீர்களோ, அப்போதுதான் உங்களால் எல்லாவற்றின் மீதும் முழு கவனம் செலுத்த முடியும். இந்த குணமிருந்தால் மட்டுமே, உலகில் நடக்கும் எல்லாவற்றிற்கும் உங்களால் உண்மையாக பதில்வினை ஆற்ற முடியும். இல்லையென்றால், வாழ்க்கையின் பாரமே உங்களை அழுத்திவிடும்." எனக் கூறியுள்ளார்.</p><p>கிராமப்புற முன்னேற்றம் மற்றும் அங்குள்ள விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட முன்னணி நிறுவனங்கள், இந்த ஈஷா கிராமோத்சவம் 2026-க்கு தங்களது ஆதரவை வழங்குகின்றன. இதில் கிராஸ்ரூட் பார்ட்னராக பிரைம் வாலிபால் ‘சென்னை பிளிட்ஸ்’ அணி, மொபிலிட்டி பார்ட்னராக ‘கிராவ்டன் மோட்டார்ஸ்’, ஸ்போர்ட்ஸ் &amp; எக்விப்மென்ட் பார்ட்னராக ‘நிவியா ஸ்போர்ட்ஸ்’, ஆதரவு பார்ட்னராக ‘டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ்’, ஆன்-கிரவுண்ட் சப்போர்ட் பார்ட்னராக ‘வொண்டர் சிமெண்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. சிஎஸ்ஆர் பார்ட்னர்களாக ‘சிஜி பவர்’, ‘வரீந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’, ‘ராயல் இன்ஃப்ரா கான்ஸ்ட்ரக்ஷன்’ மற்றும் ‘அகிலிசியம் கன்சல்டிங்’ ஆகிய நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன.</p><h2>முன்பதிவு</h2><p>ஈஷா கிராமோத்சவம் 2026-க்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. தகுதியுள்ள கிராமப்புற வீரர்கள் ishagramotsavam.sadhguru.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, 83000 30999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பூர்: வரதட்சணையாக பிரேஸ்லெட் கேட்ட கணவர்; மனைவி எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-husband-demanded-a-bracelet-as-dowry-wife-took-a-drastic-step</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-husband-demanded-a-bracelet-as-dowry-wife-took-a-drastic-step#comments</comments><guid isPermaLink="false">599fdb45-5839-4c02-96f6-cba75d69e4ff</guid><pubDate>Wed, 29 Jul 2026 11:15:41 +0000</pubDate><atom:updated>2026-07-29T11:15:41.377Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,போராட்டம்,வரதட்சணை கொடுமை,dowry,police enquiry,மனைவி பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-06-13/097cyvzd/koer.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வரதட்சணை கொடுமையால் மனைவி உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-06-13/097cyvzd/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருப்பூர் மாவட்டம் </a>தாராபுரத்தில் மனைவியிடம் வரதட்சணையாக பிரேஸ்லெட் கேட்டு கணவர் தொந்தரவு செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>வரதட்சணை கொடுமை</h2><p>தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 32). இவருக்கு கந்தசாமி (வயது 36) என்பவருடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் போது உரிய சீர்வரிசைகள் செய்யப்பட்ட போதிலும், கந்தசாமி தொடர்ந்து ரஞ்சிதாவிடம் கூடுதல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வரதட்சணை</a> கேட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததார்.</p><h2>பிரேஸ்லெட் கேட்டு வற்புறுத்தல்</h2><p>சமீபகாலமாக, தனக்கு வரதட்சணையாக ஒரு தங்க பிரேஸ்லெட் வாங்கித் தருமாறு ரஞ்சிதாவை கணவர் கந்தசாமி கடுமையாக வற்புறுத்தி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. கணவரின் தொடர் வற்புறுத்தலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>ரஞ்சிதாவின் மரணச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவர்கள் தாராபுரம் பகுதியில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வரதட்சணை கொடுமை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து அவர்கள் வேதனை தெரிவித்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தாராபுரம் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவர்களை சமாதானம் செய்து ரஞ்சிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மரணம் குறித்து வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கணவர் கந்தசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுக அறக்கட்டளை சொத்து தனிப்பட்ட சொத்து ஆகாது: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BFdmk-foundation-property-is-not-personal-property-case-against-mk-stalin-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BFdmk-foundation-property-is-not-personal-property-case-against-mk-stalin-dismissed#comments</comments><guid isPermaLink="false">c5cb7c10-875f-4493-8463-0197a22c735a</guid><pubDate>Wed, 29 Jul 2026 10:51:19 +0000</pubDate><atom:updated>2026-07-29T10:51:19.471Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,High Court,ஐகோர்ட்,கொளத்தூர் தொகுதி,Dismissed,தள்ளுபடி,மு.க.ஸ்டாலின் MK Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/0iivzydh/254.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/0iivzydh/254.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்துள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.</p><h2>சென்னை ஐகோர்ட்</h2><p>கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக சென்னை ஐகோர்டில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் சிவஞானசம்பந்தம் என்பவர் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், திமுக அறக்கட்டளைக்கு வாங்கப்பட்ட நிலத்தின் விவரங்களை அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.</p><p>இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தங்களது மற்றும் தங்களைச் சார்ந்தவர்களின் தனிப்பட்ட சொத்து விவரங்களை மட்டுமே பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும். அறக்கட்டளை என்பது ஒரு தனித்துவமான அமைப்பு ஆகும். எனவே, அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துக்களை ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது என்று கூறியது. </p><h2>தள்ளுபடி</h2><p>மேலும், அறக்கட்டளை சொத்துக்களை வேட்புமனுவில் குறிப்பிடத் தேவையில்லை என்று தெளிவுபடுத்திய நீதிமன்றம், மு.க.ஸ்டாலின் சொத்து விவரங்களை மறைக்கவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், வழக்கைத் தொடர்ந்த சிவஞானசம்பந்தமும் தனது மனுவை வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>கோவை அருகே வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே புகுந்த காட்டு யானை: பொதுமக்கள் அச்சம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-opens-house-gate-and-enters-premises-near-coimbatore-residents-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-opens-house-gate-and-enters-premises-near-coimbatore-residents-alarmed#comments</comments><guid isPermaLink="false">106b62e3-a06a-4bce-bed0-02299a2b65d8</guid><pubDate>Wed, 29 Jul 2026 10:32:23 +0000</pubDate><atom:updated>2026-07-29T10:32:23.009Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,காட்டு யானை,wild elephant,பொதுமக்கள் அச்சம்,Forest Officer</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Images/Article/201703092229572445_Wild-elephant-house-near-nodelaws-Couples-Fireworks_SECVPF.gif" width="794"><media:title type="html"><![CDATA[ யானை]]></media:title><media:description type="html"><![CDATA[ வீட்டின் இரும்புக் கேட்டை லாவகமாகத் திறந்த காட்டு யானை.  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Images/Article/201703092229572445_Wild-elephant-house-near-nodelaws-Couples-Fireworks_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை</a> அருகே தடாகம் பகுதியில் வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே புகுந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.</p><h2>குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை</h2><p>கோவை மாவட்டம் பெரிய தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ளன. இதனால்  அங்கு அடிக்கடி காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பெரிய தடாகம் பகுதிக்குள் நுழைந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஒற்றைக் காட்டு யானை</a> ஒன்று, அங்குள்ள ஒரு குடியிருப்பு வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டைத் தனது தும்பிக்கையால் மிகவும் லாவகமாகத் திறந்து கொண்டு உள்ளே சென்றது.</p><h2>ஏமாற்றத்துடன் திரும்பிய யானை</h2><p>வீட்டின் வளாகத்திற்குள் சென்ற அந்த யானை, அங்கு வைக்கப்பட்டிருந்த கால்நடை தீவனங்களைத் தேடிப் பார்த்தது. ஆனால், பசியாற அங்கு உணவுப் பொருட்கள் எதுவும் கிடைக்காததால், ஏமாற்றமடைந்த அந்த யானை எவ்விதப் பொருட்களையோ அல்லது வீட்டையோ சேதப்படுத்தாமல், வந்த வழியிலேயே அதே கேட் வழியாக அமைதியாக வெளியேறியது.</p><h2>வைரலாகும் சிசிடிவி காட்சி</h2><p>யானை மனிதர்களைப் போல மிகச் சாதாரணமாகத் தனது தும்பிக்கையைப் பயன்படுத்தி வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே செல்லும் இந்த ஒட்டுமொத்த சம்பவமும், அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியது. இந்த பகீர் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை - எச்சரிக்கை</h2><p>கடந்த சில நாட்களாக பெரிய தடாகம் மற்றும் அனுபாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இரவு நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>இருப்பினும், யானைகள் இதுபோன்று குடியிருப்புப் பகுதிகளுக்குள் எளிதாக நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;மதுக்கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்: முழு மதுவிலக்கே தீர்வு&quot; - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-privatize-liquor-shops-should-be-abandoned-the-solution-is-complete-prohibition-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-privatize-liquor-shops-should-be-abandoned-the-solution-is-complete-prohibition-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">33c7d76d-f4b4-4780-9742-88e420d01298</guid><pubDate>Wed, 29 Jul 2026 10:17:03 +0000</pubDate><atom:updated>2026-07-29T10:17:03.310Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,அன்புமணி,சென்னை,பா.ம.க,வலியுறுத்தல்,மதுக்கடை,Liquor shop</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/en8w151n/19.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/en8w151n/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு மதுக்கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் எனறு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">அன்புமணி ராமதாஸ்</a> வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளில்  நகரப்பகுதிகளில் உள்ள சுமார் 2500 மதுக்கடைகளை மட்டும் தனியார் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். </p><h2>மது விற்பனை</h2><p>தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் இலக்காக இருக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் இடது புறம் திரும்புவதோ, வலதுபுறம் திரும்புவதோ அல்லது  'U' வளைவில் திரும்புவதோ மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். தமிழ்நாடு அரசே மது விற்பனை செய்கிறது என்ற அவமானத்தை போக்க வேண்டும்; மதுக்கடைகளில் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்பன போன்றவைதான் தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்துவதற்கு ஒப்பானதாகும். </p> <p>அரசே மது விற்பனை செய்கிறது என்பது மானக்கேடானது. இந்த இழுக்கை போக்குவதற்கான தீர்வு அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதுதானே தவிர மதுக்கடைகளை தனியாரிடம் தாரை வார்ப்பது அல்ல. </p><h2>தனியார் மதுக்கடை</h2><p>தமிழ்நாட்டில் தனியார் மதுக்கடைகள் செயல்பட்டு வந்த போது அவற்றில் சட்ட விரோதமாக மது வணிகம் செய்யப்பட்டது, ஓர் இடத்தில் உரிமம் பெற்றுக்கொண்டு, இப்போது செயல்படும் சந்துக்கடைகளைப் போல பல இடங்களில் கிளைகள் திறந்து மது விற்பனை செய்யப்பட்டது, மதுக்கடைகளிலேயே கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால்தான் தனியார் மதுக்கடைகள் மூடப்பட்டு 2002-03 -ம் ஆண்டில் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த முடிவை மாற்றி மீண்டும் பழைய நடைமுறைக்கே செல்வது சீர்திருத்தம் அல்ல... மாறாக சீர்கேடாகத்தான் கருதப்படும்.</p><p>தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குவதற்கும், வெளி மாநிலங்களில் இருந்து மதுவை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கும் ஒரு லாபி தீவிரமாக முயன்று வருவதாக  செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இருப்பினும் தமிழ்நாட்டின் ஒற்றை அதிகார மையம் நான்தான் என்று முதல்-அமைச்சர் விஜய்  மீண்டும் மீண்டும் கூறி வந்ததால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று மதுவிலக்கு ஆதரவாளர்கள் நம்பினார்கள். ஆனால் இப்போது வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. </p><h2>முழு மதுவிலக்கை</h2><p>தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும். சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இன்னும் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாவார்கள். அப்படியொரு நிலை ஏற்பட அரசே வழிவகுக்கக் கூடாது எனவே தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மெட்ரோ ரெயிலில் பயணித்த முதல்-அமைச்சர் விஜய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-traveled-on-the-metro-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-traveled-on-the-metro-train#comments</comments><guid isPermaLink="false">eb4d5c7e-845a-434d-80dd-d077b9dbda31</guid><pubDate>Wed, 29 Jul 2026 10:04:59 +0000</pubDate><atom:updated>2026-07-29T10:04:59.401Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro,மெட்ரோ,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ah6pvor7/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ah6pvor7/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தினமும் தலைமைச் செயலகம் வந்து அரசுப் பணிகளை கவனிப்பதும், அவ்வப்போது பிற்பகலில் சில இடங்களுக்கு சென்று ஆய்வும் நடத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டார். </p> <p>அதன்படி, இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு காரில் வந்தார். அவரை மெட்ரோ அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின்னர், அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் முதல்-அமைச்சர் விஜய் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார். </p><p>நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கும் அவர், அங்குள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். அடுத்து, கிண்டி கத்திப்பாரா செல்லும் அவர், அங்கு நடைபெறும் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, போரூர் - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரெயில் ஓட்டத்தையும் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்ய இருக்கிறார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கை: ஒரே வாரத்தில் 255 பேர் கைது - 517 கிலோ கஞ்சா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/enforcement-operation-against-drugs-in-tamil-nadu-255-people-arrested-in-a-single-week-517-kg-of-cannabis-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/enforcement-operation-against-drugs-in-tamil-nadu-255-people-arrested-in-a-single-week-517-kg-of-cannabis-seized#comments</comments><guid isPermaLink="false">ca70270d-75bd-46da-ae58-2fcf6e75f42d</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:59:34 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:59:34.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,நடவடிக்கை,seized,டிஜிபி அலுவலகம்,கைதுArrest,போதைப்பொருள் ஒழிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/i1l5cb08/253.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/i1l5cb08/253.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனையைத் தடுக்கும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D">மகேஷ் குமார் அகர்வால்</a>, அறிவுறுத்தலின்படி, 08.07.2026 முதல் 08.08.2026 வரை ஒரு மாத காலத்திற்கு மாநிலம் முழுவதும் சிறப்பு அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முறியடித்து, தடைசெய்யப்பட்ட பொருட்கள் மாநிலம் முழுவதும் கிடைப்பதை முற்றிலுமாக ஒழிப்பதாகும்.</p><p>இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிர வாகனச் சோதனைகள், திடீர் சோதனைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் நுண்ணறிவு தகவல் அடிப்படையிலான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத கடத்தல், பதுக்கல், விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடுக்க நடவடிக்கை எடுத்தனர். 20.07.2026 முதல் 25.07.2026 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முடிவுகள்:</p><h2>அமலாக்க நடவடிக்கைகளின் முடிவுகள்</h2><p>* NDPS சட்டத்தின் கீழ் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><p>* 255 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>* பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்: </p><p>கஞ்சா - 517 கிலோ, கஞ்சா சாக்லேட் -15.000 கிலோ, எம்.டி.எம்.ஏ, (MDMA) - 69 கிராம், மெத்தாம்பெட்டமைன் - 146.6 கிராம், ஹெராயின் -1.45 கிராம், அபின் - 17 கிராம், பல்வேறு வகையான போதை மாத்திரைகள் - 7,552. மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பாக 486 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 5,237.031 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>மேற்கண்ட அனைத்து வழக்குகளும் போதைப்பொருள் மற்றும் மனமயக்கும் பொருட்கள் சட்டம், 1985 (NDPS Act), சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஒழுங்குமுறை) சட்டம், 2003 (COTPA) மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க, நுண்ணறிவு தகவல் அடிப்படையிலான தொடர் அமலாக்கம் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று உறுதியளிக்கிறது. </p><h2>போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் </h2><p>போதைப்பொருட்களின் பரவலை ஆய்வு செய்யும் நோக்கில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.</p><p>கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP), Enforcement Bureau CID வியாசர்பாடி, கமலாபுரம்.</p><p>காவல்துறை தலைவர் (குற்றம்) (IGP), Crime - கண்ணகி நகர்.</p><p>காவல்துறை துணைத் தலைவர் (DIG), Enforcement குப்பம். பெசன்ட் நகர், ஊரூர்</p><p>காவல் கண்காணிப்பாளர் (SP), NIB CID - டி.பி. சத்திரம், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு.</p><p>இந்தப் பகுதிகளில் போதைப்பொருட்களின் சட்டவிரோத விற்பனை குறித்து பொதுமக்களிடம் விசாரித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தனர்.</p><h2>கண்டறியப்பட்ட முக்கிய வழக்குகள்</h2><p>21.07.2026 அன்று, திருச்சிராப்பள்ளி மாநகரம், கோட்டை காவல் நிலையத்தில், திருச்சியைச் சேர்ந்த கீழ்க்கண்ட நபர்களிடமிருந்து 988 டேபென்டடால் (Tapentadol) மாத்திரைகள் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.</p><p>1. சஞ்சய் (26), த/பெ. சக்திவேல்</p><p>2. அண்ணாமலை (22), த/பெ. துரைசிங்</p><p>3. காளிமுத்து (19), த/பெ. சண்முகம்</p><p>அதேபோல், மதுரை மாநகரம், அண்ணா நகர் காவல் நிலையத்தில் கீழ்க்கண்ட நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த 1,348 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.</p><p>1. ஆகாஷ் (24), த/பெ. முத்துராஜா</p><p>2. விஸ்வ வினித் (21), த/பெ. முருகன்</p><p>3. ராமன் (22), த/பெ. முத்துக்குமார்</p><p>4. அஜித் (20), த/பெ. முருகன்</p><p>முக்கிய கைது நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பப்பட்ட வழக்கு</p><p>23.07.2026 அன்று, சென்னை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D">போதைப்பொருள்</a> நுண்ணறிவுப் பிரிவால் மார்ச் 2026-இல் பதிவு செய்யப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்த பாரத் என்ற பரத்குமார் கைது செய்யப்பட்டார்.</p><p>24.07.2026 அன்று, கோயம்புத்தூர் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவால் டிசம்பர் 2025-இல் பதிவு செய்யப்பட்ட 235 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்த, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அல்லாபிச்சை (த/பெ. அப்துல் காதர்) கைது செய்யப்பட்டார். </p><p>மேலும், 2019-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டு நைஜீரிய நாட்டினர்கள், தங்களது சிறைத் தண்டனையை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, சட்டப்படி தேவையான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.</p><h2>பொதுமக்களுக்கு காவல்துறையின் வேண்டுகோள்</h2><p>போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில், போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத கடத்தல், பதுக்கல், விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிகளில் தமிழ்நாடு காவல்துறைக்கு தெரிவித்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>மொபைல் செயலி: Drug Free TN </p><p>இலவச உதவி எண்: 10581</p><p>வாட்ஸ்அப் எண்: 94981 10581</p><p>பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு நம்பகமான தகவலும் முழுமையான ரகசியத்துடன் கையாளப்பட்டு, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>"போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்."</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாராயணபுரம், வேளச்சேரி ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணி: அமைச்சர் என். ஆனந்த் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/narayanapuram-velachery-lake-dredging-and-restoration-work-minister-n-anand-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/narayanapuram-velachery-lake-dredging-and-restoration-work-minister-n-anand-inspects#comments</comments><guid isPermaLink="false">aedd74fe-1375-4a2b-802f-536446faaec9</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:57:08 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:57:08.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Pallikaranai Swamp,ஆய்வுInspection,Restoration works,வேளச்சேரியில்,அமைச்சர் என். ஆனந்த்,Minister N. Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/pehlei1c/2531.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் என். ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/pehlei1c/2531.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாராயணபுரம், வேளச்சேரி ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணியை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் என். ஆனந்த்</a> ஆய்வு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்து களப்பணியை ஆய்வு செய்தார்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவுப்படி இன்று காலை 9.00 மணியளவில் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பள்ளிக்கரணை நாராயணபுரம் கிராமம், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு, காலை 11.00 மணியளவில் சென்னை மாவட்டம், வேளச்சேரி வட்டம், வேளச்சேரி கிராமம், வேளச்சேரி ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கள ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்கள்.</p><h2>நாராயணபுரம் ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் – 14, வார்டு எண் 186 எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் அமைந்துள்ள நாராயணபுரம் ஏரியின் பெரும்பாலான பகுதிகள் நகரமயமாதலின் விளைவாக குடியிருப்பு பகுதிகளாக மாற்றமடைந்துள்ளதால், தற்போது இந்த ஏரியானது நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருக்கவும், சுற்று சூழல் பாதுகாக்கவும் பயன்பட்டு வருகிறது. நாராயணபுரம் ஏரியானது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள கடைகோடி ஏரியாகும். ஆகையால், இந்த ஏரிக்கு மேற்புறத்தில் அமைந்துள்ள தென் சென்னை பகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை அணை ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, பல்லாவரம் ஏரி ஆகிய ஏரிகளின் உபரிநீரானது நாராயணபுரம் ஏரியில் வடிந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு சென்றடையும் வகையில் அமைந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்த ஏரியில் ஆகாயத்தாமரைகள், மிதவைத் தாவரங்கள் மற்றும் மிதவைப் பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.</p><p>நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்ளப்படுவதால் சென்னை பெருநகராட்சிக்குட்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ள பாதிப்புகள் குறைக்கப்படும்.</p><h2>வேளச்சேரி ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி</h2><p>வேளச்சேரி ஏரியானது பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் – 13, வார்டு எண் 175 உட்பட்ட, சென்னை மாவட்டம், வேளச்சேரி வட்டம், வேளச்சேரி கிராம புல எண்: 123/1 பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் ஆயக்கட்டு பகுதிகள் அனைத்தும் நகரமயமாதலின் விளைவாக பல வருடங்களுக்கு முன்னரே அடர்ந்த குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் அடைந்துவிட்டதால், விவசாய பணிகள் ஏதுமின்றி இந்த ஏரி தற்போது நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருக்கவும், சுற்று சூழல் பாதுகாக்கவும் பயன்பட்டு வருகிறது.</p><p>தற்போது இந்த ஏரியில் 22.40.0 ஹெக்டேரில் மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இவ்விதமாய் தேக்கி வைக்கப்படும் நீர் சுற்றுப்பகுதிகளுக்கு நிலத்தடிநீரை மேம்படுத்தும் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஏரியில் ஆகாயதாமரை படர்ந்துள்ளதால் ஏரியின் கொள்ளளவு மற்றும் நீர் கடத்தும் திறன் குறைந்த நிலையில் உள்ளது.</p><p>இவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">தமிழ்நாடு முதல்-அமைச்சர்</a> உத்தரவுப்படி, நீர்வளத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் பெருநிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன், வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள, வேளச்சேரி ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருட்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி மழைக்காலங்களில் மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படவுள்ளது.</p><p>பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு முடிக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.</p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சரும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான குமார், சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.சரவணன், நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃப்தாப் ரசூல், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமை பொறியளார் ஜானகி, பாலாறு வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் மாரியப்பன்,காஞ்சிபுரம் கீழ் பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியளார் விஜயகுமார், செங்கல்பட்டு கீழ் பாலாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியளார் பாஸ்கரன், உதவி பொறியளார்கள் பிரஸ்னேவ் பிரபு, குஜராஜ், சாய்சரன், சேதுராணி மற்றும் பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பணி துவக்க விழாவை சிறப்பித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் பா.ம.க. தலைவராக பொதுக்குழுவில் தேர்வானார் அன்புமணி: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-re-elected-as-pmk-leader-at-the-general-council-meeting-key-resolutions-passed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-re-elected-as-pmk-leader-at-the-general-council-meeting-key-resolutions-passed#comments</comments><guid isPermaLink="false">3311bcb4-208d-435c-bfd7-83db68fd6089</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:48:40 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:48:40.599Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,தமிழகம்,Mamallapuram,மாமல்லபுரம்,பொதுக்குழு கூட்டம்,தீர்மானங்கள்,Pattali Makkal Katchi,பாட்டாளி மக்கள் கட்சி,பாமக தலைவர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/tu7wopoo/esmk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/tu7wopoo/esmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரம்,</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பாமக பொதுச் செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலுக்கு முன் ராமதாஸ் - அன்புமணி பிரிந்து இருந்த நிலையில், தேர்தலுக்கு பின் மீண்டும் இணைந்தனர்.</p><h2>பொதுக்குழு கூட்டம்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.</p><p>இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 31 தீர்மானங்கள் அந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.   </p><h2>நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன..?</h2><p>1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ச.வடிவேல் இராவணன், ம. திலகபாமா ஆகியோருக்கு வாழ்த்துகள்.</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் ச.வடிவேல் இராவணன், பொருளாளர் ம.திலகபாமா மற்றும் பிற நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டுமே 28-ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம்  தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அவர்களின் பதவிக்காலம்   இந்திய தேர்தல் ஆணையத்தால் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. </p><p>நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியுடன் நிறைவடைவதால், அப்பதவிகளுக்கு கட்சி அமைப்பு விதி எண்கள் 26, 27 ஆகியவற்றின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் அளவிலான தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டன. </p><p>அதைத் தொடர்ந்து மாநில பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தலைவர் பதவிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் பதவிக்கு ச.வடிவேல் இராவணன், பொருளாளர் பதவிக்கு ம.திலகபாமா ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அவர்கள் மூவரும் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பா.ம.க. அமைப்புத் தேர்தலை நடத்த அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அவர்களின் தேர்வை இப்பொதுக்குழு அங்கீகரிப்பதுடன், அவர்களின் பணி சிறக்க  நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.</p><h2>அன்புமணி ராமதாஸ்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை 25-ஆம் நாள் தொடங்கி நவம்பர் 9-ஆம் நாள் வரை மொத்தம் 109 நாள்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது. </p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வீசிய அலை பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக உள்ள மாவட்டங்களில் நுழையாமல் தடுத்ததும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் சதிக்கு எதிராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட 4 நாள் விழிப்புணர்வு பரப்புரை பயணம் உழவர்களிடம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. </p><p>இத்தகைய முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியை மேலும் வலுப்படுத்துவார்; அதிகாரத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் இந்த பொதுக்குழுக் கூட்டம், அதற்காக அவர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவளிக்க உறுதியேற்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/nq5fe05x/ysire.jpg" /></figure><h2>மருத்துவர் அய்யா</h2><p>2. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் சமூகநீதி, அரசியல் சாதனைகளை இப்பொதுக்குழு பாராட்டுகிறது; நன்றி தெரிவித்துக் கொள்கிறது!</p><p>தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அண்மையில் 88-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில் அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என இப்பொதுக்குழு வாழ்த்துகிறது.</p><p>தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் 6 வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்து, 100 கோடிக்கும் கூடுதலான மக்களுக்கு சமூகநீதி வழங்கியவர்; சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியவர்; சமச்சீர் கல்வி  கொண்டு வந்தவர்; மருத்துவம், வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்து ஏராளமான முன்னெடுப்புகளை மேற்கொண்டவர்; சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர்; ஈழத்தமிழர் நலனுக்காக எண்ணற்ற  போராட்டங்களை முன்னெடுத்தவர்; தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களாலும் மதிக்கப்பட்டவர் என ஏராளமான பெருமைகள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு உண்டு. தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளுக்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய்</h2><p>3. தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று கவர்னர் உரை வாயிலாக அறிவித்த <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்களுக்கும்,  அறிவிக்கச் செய்த பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும் - சமூகநீதி சர்வேயை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.              </p> <h2>மேகதாது அணை</h2><p>4. மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் சதித்திட்டத்தை முறியடிப்பதற்காக காவிரி பாசன மாவட்டங்களில் 4 நாள்கள் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  அவர்களுக்கு பாராட்டுகள்.            </p><p>5. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம்: புதிய நடுவர் மன்ற கோரிக்கையையும், கர்நாடக அரசுடன் நேரடியாக பேச்சு நடத்தும் முடிவையும் கைவிட்டு, தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.                </p><p>6. விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வெளிச்சந்தையில் கடன் வாங்கியாவது கூட்டுறவு வங்கிகளில் அரசு செலுத்த வேண்டும்.                </p><p>7. மாணவர்களின் உயிர்களைப் பறிக்கும் நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் சட்டத்தை மீண்டும் இயற்றி, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற அனைத்து அரசியல் கட்சிகளும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும்.  </p><h2>மாநிலப் பட்டியலில் கல்வி            </h2><p>8. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும்  மாற்ற வேண்டும்; 50 ஆண்டு கால அநீதிக்கு  இப்போதாவது மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்.           </p><p>9. தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் செலுத்த வேண்டிய  நிலவரியை முழுமையாக ரத்து செய்வதுடன், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.            </p><p>10. வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாத உழவர்களுக்கு ஏக்கருக்கு  ரூ.10 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.               </p> <h2>போதைப்பொருள் நடமாட்டம்</h2><p>11. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5000 வீதம் கொள்முதல்  விலை வழங்க வேண்டும்.               </p><p>12. பள்ளிக்கரணை உள்ளிட்ட 26,883 சதுப்பு நிலங்களையும் உடனடியாக எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும் .                </p><p>13. ரெஸ்டோ பார்களை திறக்கும் கேடான திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.                 </p><p>14. தமிழ்நாட்டில் இன்னும் கட்டுப்படுத்தப்படாத போதைப்பொருள்கள் நடமாட்டம்: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.               </p><p>15. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்: சிங்கப்பெண் சிறப்புப் படைகளை வலுப்படுத்த வேண்டும்.    </p><h2>கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை         </h2><p>16. தமிழ்நாட்டிலிருந்து கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது; கடந்த காலகனிமவளக் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.               </p><p>17. 12 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். கட்டுமானத்  தேவைகளுக்கு மணல் இறக்குமதியை ஊக்குவிக்க வேண்டும்.                 </p><p>18. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்பும் வகையில் அடுத்த ஓராண்டில் ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.                </p><p>19. தமிழ்நாட்டில் தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% பணிகளை  தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.                </p><p>20. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை  செயல்படுத்த வேண்டும்.               </p> <h2>விண்ணைத் தொடும் அரிசி விலை</h2><p>21. அரசு பள்ளிகளின் வீழ்ச்சியை தடுக்க வேண்டும்; அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.                </p><p>22. பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுக்களில் யு.ஜி.சி பிரதிநிதியைச் சேர்க்கக் கூடாது; பல்கலைக்கழக சட்டங்களில் இதற்காக திருத்தம் செய்யக் கூடாது.               </p><p>23. பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும்; தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலையை கட்டுப்படுத்த  ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்.                </p><p>24. விண்ணைத் தொடும் அரிசி விலையால்  ஏழை மக்கள் அவதி. விலையைக் கட்டுப்படுத்த  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.               </p><p>25. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயார். கிராம அளவில் மக்களை சந்தித்து ஆதரவைத் திரட்ட வேண்டும்.               </p><p>26. தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்; 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத்  தொடங்க வேண்டும்.  </p><h2>உள்இடஒதுக்கீடு              </h2><p>27. மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி.களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான ரோகிணி ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உடனடியாக செயல்படுத்த வேண்டும்.                </p><p>28. காவிரி பிரச்சினையில் புதுச்சேரியின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.               </p><p>29. புதுவையில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயல்பட்டு வரும் மதுக்கடைகள், சாராயக்கடைகளை மூட வேண்டும்.               </p><p>30. புதுவையில்  தனியார் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்பில்  75 விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும்.               </p><p>31. பாட்டாளி மக்கள் கட்சியின் கணக்குத் தணிக்கையாளர் அரங்க. சுப்புரத்தினம் மறைவுக்கு  இரங்கல்; புதிய தணிக்கையாளராக திருவாளர்கள் பி.எஸ். மூர்த்தி அசோசியேட்ஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு ஒப்புதல். </p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்ய சென்னைஅடையாறை சேர்ந்த திருவாளர்கள் பி.எஸ்.மூர்த்தி அசோசியேட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்திற்கு இந்தப் பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக உரிமையை பாதுகாக்க திமுக-கம்யூனிஸ்டுகள் கைகோர்க்கும்: உதயநிதி ஸ்டாலின்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-communists-join-hands-to-protect-tamil-nadu-rights-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-communists-join-hands-to-protect-tamil-nadu-rights-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">41b46519-f4ba-46be-8968-9cb6f2af3f78</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:47:32 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:47:32.494Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/cvo0zxvx/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/cvo0zxvx/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p>சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்வில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்<a href="https://www.dailythanthi.com/"> நல்லகண்ணு</a>வின் மார்பளவு திருவுருவச் சிலையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து “அம்மாச்சி - கற்பனையின் முதல் ஆசிரியர்” என்ற நூலை வெளியிட்டார்.</p><h2>அதன்பின்னர் விழாவில் பேசியதாவது:-</h2><p>தோழர் நல்லகண்ணுவின் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் நல்லகண்ணுவுக்கு சிலை அமைத்ததன் மூலம் யாரை நாம் கொண்டாட வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது. மக்களுக்கான களப் போராளிகளை கொண்டாடுவதை விட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுப்பவர்களை சமூகம் அதிகம் கொண்டாடுகிறது. </p><h2>கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது  தனிப்பாசம்</h2><p>2016-ஆம் ஆண்டு திமுக வெற்றி வாய்ப்பை இழந்த போதும்,  கருணாநிதி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, "திமுக ஆட்சியை இழந்ததை விட, தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத சட்டப்பேரவை அமைந்திருக்கிறது. அதுதான் எனக்கு வருத்தம்” என தெரிவித்தார். அந்தளவுக்கு கம்யூனிஸ்ட்  தலைவர்கள் மீது  கருணாநிதிக்கு தனிப்பாசம் இருந்தது.</p><p>கருணாநிதி வழியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கம்யூனிஸ்ட்  கட்சியினர் மீது தனிப் பாசம் கொண்டுள்ளார்.  தமிழ் மொழி உரிமையையும், தமிழ்நாட்டு உரிமையையும் பாதுகாக்க திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றும் ஓரணியில் கைகோர்த்து நிற்கும். தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக எது நடந்தாலும் திமுக-கம்யூனிஸ்ட் ஓரணியில் நிற்கும். </p><p>நீட் எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. நீட் நுழைவுத் தேர்வு என்று வந்ததோ அன்றிலிருந்தே திமுக எதிர்த்து வருகிறது. 2021 திமுக ஆட்சி அமைந்ததும் நீட் பாதிப்பை கண்டறிய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு அமைத்தார். அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நீட் விலக்கு வேண்டி திமுக அரசு சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை கொண்டு வந்தோம். </p><p>அதற்கு கவர்னர் ஒப்புதல் தராத நிலையில், இதற்காக சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியது திமுக தான். நீட் தேர்வு போராட்டம் முடிந்துவிட்டதாக கருதவில்லை. இப்போதுதான் இன்னும் வீரியமாக ஆரம்பித்துள்ளது. நீட் தேர்வை முற்றிலும் ஒழிப்பதற்கான தொடக்கமாகத் தான் இந்தப் போராட்டம் உள்ளது. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆவடியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட தூய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-in-avadi-hospitalized-after-eating-food-containing-a-fallen-lizard</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-in-avadi-hospitalized-after-eating-food-containing-a-fallen-lizard#comments</comments><guid isPermaLink="false">0560afd4-ecb6-44c5-86ac-c18949b95605</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:41:15 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:41:15.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sanitation workers,ஆவடி,தூய்மை பணியாளர்கள்,பல்லி,Aavadi,பல்லி விழுந்த உணவு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/8sq7mbgy/39.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ சாம்பாரில் பல்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/8sq7mbgy/39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை</a> ஆவடியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட தூய்மை பணியாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h2>சாம்பாரில் பல்லி</h2><p>சென்னை, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்கா பகுதியில் இன்று காலை தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. பணியாளர்கள் உணவை உட்கொண்டிருந்தபோது, வழங்கப்பட்ட சாம்பாரில் இறந்த நிலையில்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> பல்லி</a> ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><h2>திடீர் உடல்நலக்குறைவு</h2><p>அதற்குள் அந்த உணவை சாப்பிட்ட பல பணியாளர்களுக்கு அடுத்தடுத்து திடீர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வாந்தி</a>, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டன. </p><h2>ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை</h2><p>இதில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக  சிகிச்சைக்காக ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். </p><h2>பணியாளர்கள் குமுறல்</h2><p>"ஏற்கனவே ஒருமுறை வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தன, இன்று சாம்பாரில் பல்லி விழுந்துள்ளது; எங்களுக்கு வழங்கப்படும் உணவில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது" என பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தங்களது வேதனையைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-have-lost-151-highly-specialized-government-doctors-mk-stalin-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-have-lost-151-highly-specialized-government-doctors-mk-stalin-condemns#comments</comments><guid isPermaLink="false">160209c3-0751-4f99-a26a-e00ca545d214</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:15:50 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:15:50.020Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,government doctors,Medical study,மருத்துவ படிப்பு,அரசு மருத்துவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/aeai8p4q/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/aeai8p4q/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை மத்திய அரசுக்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, அரசின் நிர்வாக தோல்வியே காரணம் என மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அரசின் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்ய எதிர்ப்பு கூட தெரிவிக்க முடியாமல் போயுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.</p><p><strong>இதுகுறித்து முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது.  ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.</p><p>தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்</p><p>* தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?</p><p>* மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?</p><p>* நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?</p><p>* அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?</p><p> தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?</p><p>* 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?</p><p>இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது. த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் சாலையோரம் தூங்கியவர் கார் மோதி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-sleeping-on-the-roadside-dies-after-being-hit-by-car-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-sleeping-on-the-roadside-dies-after-being-hit-by-car-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">9f215a41-ff30-4b53-ac6a-3eae9b33a870</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:56:34 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:56:34.929Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Car,Death,உயிரிழப்பு,hit,sleep,தூக்கம்,man,சாலையோரம்,கார் மோதி,Road side</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/v4c574gj/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலையோரம் தூங்கியவர் கார் மோதி உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/v4c574gj/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் கிரேட் காட்டன் ரோட்டில் உள்ள கடை வாசலில் சாலையோரம் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF">கார் மோதி</a>யதில், அவர் சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>.</p><h2>மனநலம் பாதிப்பு</h2><p>தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த முத்துமாலை மகன் சேகர் (வயது 50). இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநல பாதிப்புக்குள்ளான சேகர், வீட்டை விட்டு வெளியேறி சிவன் கோவில் அருகிலும் சாலையோரங்களிலும் தங்கி உணவருந்தி வந்துள்ளார்.</p><h2>கார் மோதி உயிரிழப்பு</h2><p>இந்த நிலையில் சேகர் நேற்று இரவு கிரேட் காட்டன் ரோட்டில் உள்ள ஓர் இட்லி கடை முன்பாக படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலையில் அப்பகுதியில் வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>போலீசார் ஆய்வு</h2><p>இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.</p><h2>விசாரணை</h2><p>அதில் சேகர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த இடத்தில் வெள்ளை நிற கார் ஒன்று பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய வெள்ளை நிற கார் மற்றும் அதை ஓட்டி வந்தவர் யார் என்பது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்: மதிய உணவில் விரைவில் சிக்கன் பிரியாணி..! அமைச்சர் சொன்ன தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-government-school-students-chicken-biryani-in-the-midday-meal-soon-minister-shares-the-update</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-government-school-students-chicken-biryani-in-the-midday-meal-soon-minister-shares-the-update#comments</comments><guid isPermaLink="false">a1321761-d5db-4aa7-9f69-a88a20929a78</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:45:11 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:45:11.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,TN govt,School students,Tamilnadu government,lunch,அரசு பள்ளி மாணவர்கள்,Government Schools,Chicken Biryani,சிக்கன் பிரியாணி,மதிய உணவு,CM Vijay,தவெக அரசு,TVK Government,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="720" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ulom3m11/viji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன் பிரியாணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ulom3m11/viji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் விரைவில் சிக்கன் பிரியாணி வர இருப்பதாக அமைச்சர் ராஜ் மோகன் கூறினார்.</p><h2>மதிய உணவு திட்டம்</h2><p>தமிழ்நாட்டில் 37,595 அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில், 52 லட்சத்து 75 ஆயிரத்து 203 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 2 லட்சத்து 25 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். </p><p>இதுதவிர, 7,289 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 1,046 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளும், 65 மத்திய அரசு பள்ளிகளும் உள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் மூலம் சுமார் 46 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதில், காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் 19 லட்சத்து 34 ஆயிரம் தொடக்கப் பள்ளி மாணவர்களும் அடங்குவார்கள். </p><h2>விரைவில் சிக்கன் பிரியாணி  </h2><p>தற்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை போன்ற கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் அனைத்து நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கப்படுகிறது. </p><p>இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க. அரசு</a> மதிய உணவில் அதிரடி மாற்றம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><p>அதன்படி, விரைவில் மதிய உணவுடன் வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. </p><h2>பட்ஜெட்டில் வரும் அறிவிப்பு</h2><p>இதுகுறித்த தகவலை, சென்னையில் இன்று நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். </p><p>மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து கருத்துகள் பெறப்பட்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் முடிவை அறிவிப்பார் என்றும் அவர் கூறினார். </p><h2>வாரம் ஒருமுறை</h2><p>இதனால், சட்டசபையில் ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் அறிவிப்பும் இடம்பெறும் என்று தெரிகிறது. </p>]]></content:encoded></item><item><title>கோவில்பட்டியில் அரிவாளால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு: 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-attacked-with-a-sickle-in-kovilpatti-police-net-2-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-attacked-with-a-sickle-in-kovilpatti-police-net-2-people#comments</comments><guid isPermaLink="false">48185e44-862e-4d0f-9271-9cbe4f7e00e4</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:28:35 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:28:35.192Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,அரிவாள் வெட்டு,Youth,வாலிபர்,Death,உயிரிழப்பு,Kovilpatti,கோவில்பட்டி,2 பேர்,2 people,போலீசார் வலைவீச்சு,police net sweep,slashed with sickle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/1917tqq9/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரிவாளால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/1917tqq9/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தகராறில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">அரிவாளால் வெட்டப்பட்டு </a>பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>தகராறு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (வயது 30). கடந்த 23-ம் தேதி அன்று மாலை நேரத்தில், பாரதிநகர், அம்பேத்கர் மண்டபம் அருகே ஞானதிரவியத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜா, முத்துராஜ் ஆகிய 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.</p><h2>அரிவாள் வெட்டு; வாலிபர் படுகாயம்</h2><p>வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த மகாராஜா, முத்துராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஞானதிரவியத்தை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><h2>வாலிபர் உயிரிழப்பு; 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">வாலிபர் உயிரிழந்தார்</a>. இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மகாராஜா, முத்துராஜ் ஆகிய 2 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க இளையராஜா வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-2027-ilaiyaraaja-urges-the-public-to-participate-enthusiastically</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-2027-ilaiyaraaja-urges-the-public-to-participate-enthusiastically#comments</comments><guid isPermaLink="false">6c5ab32e-19b9-4115-b56c-26312574019f</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:27:47 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:27:47.044Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,இளையராஜா,Census,Ilaiyaraaja,மக்கள்தொகை கணக்கெடுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/vmcqzp25/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/vmcqzp25/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் பிறகு 2021-ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கணக்கெடுப்பு பணி தள்ளிவைக்கப்பட்டது.</p><h2>தமிழகத்தில் கணக்கெடுப்பு</h2><p>இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம். முதன்முறையாக டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 30 வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று விபரங்கள் சேகரிக்க உள்ளனர்.  இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 33 கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>இளையராஜா வேண்டுகோள்</h2><p>இந்த நிலையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என இளையராஜா வேண்டுகோள் விடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, </p><p>இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறுகிறது. இந்தக் காலப்பகுதியில் https://se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>அதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறும் வீட்டுப் பட்டியலிடல் (HLO) கட்டத்தில் வருகை தரும் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.</p><p>துல்லியமான மக்கள்தொகைத் தகவல்கள் நாட்டின் சிறந்த திட்டமிடல் மற்றும் வளர்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. அனைவரும் இணைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம் .</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்-அமைச்சர் விஜய்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-handed-over-appointment-orders-to-126-individuals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-handed-over-appointment-orders-to-126-individuals#comments</comments><guid isPermaLink="false">b1dde81b-4976-4d51-8bd1-cc7394e0e4da</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:27:19 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:27:19.070Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,Government job,பணி நியமன ஆணைகள்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/05b4z2jp/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/05b4z2jp/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் வழங்கினார். இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>126 நபர்களுக்கு அரசு பணி</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (29.07.2026) தலைமைச் செயலகத்தில், மனித வள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.</p><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி-I பணிகளுக்கு 28 துணை ஆட்சியர்கள், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 19 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 15 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் 6 உதவி ஆணையர்கள் (தொழிலாளர்) என மொத்தம் 78 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் (தொழிலாளர்) பணியிடம் முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-I-இல் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.</p><h2>ஆணைகளை வழங்கினார் முதல்-அமைச்சர்</h2><p>மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் மூலம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், 40 உதவி பொறியாளர்கள், 6 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் 2 நூலகர்கள் தரம்-II என மொத்தம் 48 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>இந்நிகழ்ச்சியில், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வே.க. ராஜீவ், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அனுராக் மிஷ்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறிய நகரங்களில் மெட்ரோ திட்டத்துக்கு அனுமதித்தது எப்படி? - ரெயில்வே தொழிற்சங்கம் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-was-approval-granted-for-metro-projects-in-small-cities-railway-trade-union-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-was-approval-granted-for-metro-projects-in-small-cities-railway-trade-union-questions#comments</comments><guid isPermaLink="false">bedd4dfe-83c8-4257-8500-1c7ede38e8c7</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:12:57 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:12:57.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,கோவை,தமிழகம்,Madurai,மதுரை,ரெயில் சேவை,மெட்ரோ ரெயில்,Metro Rail,MetroRail,Kovai,தொழிற்சங்கம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/bjkhchvp/small.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/bjkhchvp/small.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>வடமாநிலங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட நகரங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/metrorail">மெட்ரோ ரெயில்</a> திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது எந்த அடிப்படையில் என்று டி.ஆர்.பி.யூ. தொழிற்சங்கம் கேள்வி எழுப்பியது.</p><h2>மதுரை, கோவை</h2><p>மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டம் மக்கள் தொகை குறைவாக இருப்பதாக கூறி மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. அதற்கு பதிலாக பஸ் போக்குவரத்தை மேம்படுத்தவும் அறிவுறுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. </p><p>அதாவது, திருமங்கலம்-ஒத்தக்கடை இடையே 31 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிக்கு ரூ.11,360 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p><h2>மீண்டும் நிராகரிப்பு</h2><p>இதற்காக மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையை தமிழக அரசின் சென்னை மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் நிறுவனம் மத்திய அரசிடம் வழங்கியது. ஆனால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தமிழக அரசு இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதற்கிடையே, மீண்டும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் நிராகரித்துள்ளது.</p><h2>தமிழகத்துக்கு இழைக்கும் அநீதி</h2><p>இது குறித்து டி.ஆர்.பி.யூ. தொழிற்சங்கத்தின் பொது செயலாளர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை மக்கள் தொகையை காரணமாக காட்டி மத்திய அரசு 2-வது முறையாக நிராகரித்துள்ளது. இது தமிழகத்துக்கு இழைக்கும் அநீதி ஆகும். தொழில்நுட்பரீதியாக காரணங்களை சொல்லாமல், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து திட்டத்தை மறுப்பது ஏற்கத்தக்கது இல்லை.</p><h2>20 லட்சத்துக்கும் குறைவாக..</h2><p>மதுரையின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 20 லட்சத்தை தாண்டியுள்ளது. மெட்ரோ திட்டத்தை தொடங்கி முடிக்கும் போது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மெட்ரோ ரெயில் திட்டம் என்பது மக்கள் தொகையை கொண்டு முடிவு செய்யும் திட்டம் இல்லை. </p><p>ஒரு நகரின் எதிர்கால கட்டமைப்பு வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம், நகர்ப்புற விரிவாக்கம், மக்கள் தொகை உயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய அனைத்து அம்சங்களையும் கொண்டது. தென்தமிழகத்தின் நுழைவுவாயிலாக உள்ள மதுரைக்கு மெட்ரோ திட்டம் கட்டாயமாகும்.</p><h2>கான்பூர், நாக்பூர்</h2><p>ஆனால், உத்தரபிரதேசத்தின் கான்பூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர், மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் ஒடிசாவின் புவனேசுவர் ஆகிய நகரங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ளது. எந்த அடிப்படையில் அங்கு மட்டும் மெட்ரோ திட்டம் அனுமதிக்கப்பட்டது.</p><p>அத்துடன் மெட்ரோவுக்கு பதிலாக பி.ஆர்.டி.எஸ். எனப்படும் பஸ் போக்குவரத்து திட்டத்தை பரிந்துரைத்தது. அதற்கான சாலை கட்டமைப்பு வசதிகள் மதுரையில் இல்லை. எனவே மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. மந்திரி ஆதரவு: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-ministers-support-for-the-karnataka-government-is-like-rubbing-salt-into-the-wound-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-ministers-support-for-the-karnataka-government-is-like-rubbing-salt-into-the-wound-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">c569c28f-5b70-4b74-9bb0-e9b019f4e126</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:37:40 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:37:40.217Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,Udhayanidhi Stalin,காங்கிரஸ்,Congress,Karnataka,கர்நாடகா,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/jjokdnns/manik.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/jjokdnns/manik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a>, எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  </p><p>மத்திய நீர்வளத்துறை இணைமந்திரி ராஜ்பூஷன் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பில் எந்த தடையும் இல்லை என்று பேசியது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. </p> <h2>பா.ஜ.க. மந்திரி</h2><p>5.2.2007 இல் காவிரி நடுவர்மன்றமும், 16.2.2018 இல் சுப்ரீம்கோர்ட்டும் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி காவிரி படுகை மாநிலங்களை பாதிக்கிற வகையில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  பா.ஜ.க. மந்திரி கர்நாடக அரசுக்கு ஆதரவாக பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. </p><h2>காவிரி டெல்டா விவசாயிகள்</h2><p>நடுவர்மன்றம், சுப்ரீம்கோர்ட்டு ஆகியவற்றின் மூலம் தமிழகம் போராடிப் பெற்ற உரிமைகளின் அடிப்படையில் ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வழங்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசு இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு, வழங்க வேண்டிய தண்ணீர் மறுக்கப்படுவதால் காவிரி டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். </p><h2>ஒருமித்த குரலில் எதிர்ப்பு</h2><p>இந்நிலையில் காவிரி நீரின் அளவை நிர்ணயிக்கும் பிலிகுண்டுலுவிற்க்கு 4 கி.மீ. தூரத்திற்கு மேலே கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே ரூபாய் 9,000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தமிழ்நாடு எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளாது. மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால், காவிரிப்படுகை வறண்ட பாலைவனமாக மாற வழிகோலும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், விவசாய சங்கங்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><h2>விரிவான திட்ட அறிக்கை</h2><p>மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு 2018 இல் சுப்ரீம்கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் போது, 2019 நவம்பர் 22 ஆம் தேதி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசிடம் சமர்ப்பித்தது.  விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இது தமிழகத்திற்கு பாஜ.க. அரசு செய்த மிகப்பெரிய துரோகமாகும். இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு சட்டரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிற சூழலில் த.வெ.க.வும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழகத்தின் நலன்களை தாரை வார்த்ததாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பதை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகவே கருத வேண்டும். ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது.</p><h2>உரிமைக்குரல்</h2><p>கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டுமே தவிர, பரஸ்பர குற்றச்சாட்டுக்களை எழுப்புவது தமிழகத்தின் நிலையை பலவீனப்படுத்தும். </p><h2>உரிமை மீட்டெடுப்பு</h2><p>கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் எல்லோருமே தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே தான் கடந்த காலங்களில் பேசியிருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் மேகதாது பிரச்சினையில் அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து தமிழக அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதே நமது உரிமையை மீட்டெடுப்பதற்கு உரிய வாய்ப்பாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மாணவர்களை மிரட்டும் வகையில் பேச்சு: சிங்கப்பெண் அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/singapen-special-task-force-sub-inspector-transferred-for-threatening-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/singapen-special-task-force-sub-inspector-transferred-for-threatening-students#comments</comments><guid isPermaLink="false">9d7d1cd2-7028-4e09-b081-2c20f8314d68</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:17:52 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:17:52.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ariyalur,அரியலூர்,சப்-இன்ஸ்பெக்டர்,Sub Inspector,Singapen Athiradi Padai,சிங்கப்பெண் அதிரடிப்படை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/4tqrd8ky/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/4tqrd8ky/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>அரியலூர்,</p><h2>விழிப்புணர்வு நிகழ்ச்சி</h2><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் அறி வித்த திட்டங்களில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டமும் ஒன்றாகும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. </p><p>அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்டங்களில் தலா 4 போலீசார் கொண்ட 2 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. இதில் அரியலூர் உட்கோட்ட படையில் சிறப்பு பாதுகாப்பு அலுவலராக பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் சுமதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.</p><h2>போக்சோ சட்டம்....</h2><p>அப்போது அங்குள்ள மாணவர்களிடம் '18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந் தைகளிடம் யார் பேசினாலும், ஹாய் என குறுஞ்செய்தி அனுப்பினாலோ அல்லது அவர்களிடம் அசிங்கமாகவோ, அருவருப்பாகவோ பேசினால் போக்சோ சட்டத்தின்கீழ் சிறைக்கு செல்வீர்கள்' என்று மாணவர்களை மிரட்டும் வகையில் அவர் பேசியதாக தெரிகிறது. மேலும் இதனை அவரே வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>அதனை பார்த்த பொதுமக்கள் பலரும், '18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளிடம் பேசினாலே சிறைக்கு செல்வீர்' என பேசியது தவறு என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில், சுமதியை அரியலூர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் பிரிவுக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கோவையில் ரூ.3 கோடி தங்கம் மோசடி: நகைக்கடை உரிமையாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs3-crore-gold-scam-in-coimbatore-jewelry-shop-owner-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs3-crore-gold-scam-in-coimbatore-jewelry-shop-owner-arrested#comments</comments><guid isPermaLink="false">6cee6fab-e531-4964-8489-e4981fc7fcfe</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:04:39 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:04:39.828Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கைது,Madurai,மதுரை,arrested,gold,fraud,owner,நகைக்கடை உரிமையாளர்,jewelry shop,தங்கம் மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ca4mkqhx/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை மோசடி, கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ca4mkqhx/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவையில் ரூ.3 கோடி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">தங்கம் மோசடி </a>தொடர்பாக மதுரையைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">நகைக்கடை உரிமையாளரை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர்.</p><h2>ரூ.3 கோடி நகை மோசடி</h2><p>கோவை ராஜவீதி அசோக்நகரை சேர்ந்த ஆனந்தன் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு மதுரையில் நகைக்கடை நடத்தி வரும் சுதர்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தங்க நகைகளைக் கொடுத்தால் 20 நாட்களில் விற்று பணமாகத் தருவதாக சுதர்சன் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை ஆனந்தன் அவரிடம் வழங்கியுள்ளார்.</p><h2>நகைக்கடை உரிமையாளர் கைது</h2><p>ஆனால் அதற்குரிய பணத்தைக் கொடுக்காமல் சுதர்சன் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து ஆனந்தன் அளித்த புகாரின் பேரில், கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதர்சனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு - கர்நாடகா இடையே மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது பிரச்சினை: இதற்கு தீர்வுதான் என்ன? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mekedatu-issue-between-tamil-nadu-and-karnataka-is-escalating-once-again-what-is-the-solution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mekedatu-issue-between-tamil-nadu-and-karnataka-is-escalating-once-again-what-is-the-solution#comments</comments><guid isPermaLink="false">cd11d68e-60d6-4353-a012-7e275d4b5cb9</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:58:24 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:58:24.628Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,தமிழ்நாடு,விஜய்,தமிழகம்,Karnataka,கர்நாடகா,TN govt,D.K.Shivakumar,TN government,மேகதாது அணை,மேகதாது,Mekedatu,Mekedatu dam,மேகதாது திட்டம்,மேகதாது அணை விவகாரம்,மேகதாது விவகாரம்,மேகதாது அணை திட்டம்,மேகதாது அணை பிரச்சினை,Mekedatu Dam Issue,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,Tamil Nadu Chief Minister Vijay,Mekedadu Dam,Mekedatu Issue,MekedatuDam</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/6gk3iar1/kler.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/6gk3iar1/kler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்பு செய்திகள்</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு - கர்நாடகா இடையே <a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணை</a> பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், இதற்கு தீர்வுதான் என்ன? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். </p><h2>காவிரி நதிநீர் பிரச்சினை </h2><p>கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இருமாநிலங்களுக்கு இடையே பாயும் காவிரி ஆறு 805 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கர்நாடகாவின் தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, அம்மாநிலத்தில் 320 கி.மீ. நீளமும், தமிழ்நாட்டில் 461 கி.மீ. தூரமும், இருமாநில எல்லையில் 24 கி.மீ. நீளமும் பாய்ந்து இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வங்கக்கடலில் கலக்கிறது. </p><p>தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சினை என்பது இன்று, நேற்றல்ல, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே தொடங்கியிருக்கிறது. நதிநீர் பங்கீடு தொடர்பாக 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளிலேயே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. சென்னை மாகாணம் - மைசூர் சமஸ்தானம் இடையே 50 ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><h2>சட்டப் போராட்டம்</h2><p>ஆனால், இந்த ஒப்பந்தம் 1974-ம் ஆண்டு காலாவதியான பிறகு, நவீன கால பிரச்சினையாக மீண்டும் உருவெடுத்தது. அதன்பிறகு, தமிழக முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் சட்டப்போராட்டம் நடத்தியதன் விளைவாக, ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. </p><p>கோர்ட்டு உத்தரவுப்படி, தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>மேகதாதுவில் புதிய அணை </h2><p>இந்த ஆண்டு இதுவரை தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்துள்ள நிலையில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஜூன் மாதம் 2.915 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் 0.459 டி.எம்.சி.யும் மட்டுமே தண்ணீர் வழங்கியுள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். </p><p>இந்தப் பிரச்சினை ஒருபுறம் இருக்க, கர்நாடகா மாநிலத்தில் மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான அறிவிப்பை கடந்த 2013-ம் ஆண்டு கர்நாடக அரசு வெளியிட்டது. அது காவிரி பிரச்சினையை மேலும் பூதாகரமாக்கியது.</p><h2>காவிரியின் குறுக்கே 5-வது அணை </h2><p>ஏற்கனவே, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவில் ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகளும், தமிழ்நாட்டில் மேட்டூர், கல்லணை, முக்கொம்பு ஆகிய 3 அணைகளும் இருக்கின்றன. </p><p>தற்போது, கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமாரின் சொந்தத் தொகுதியான கனகபுராவில்தான் மேகதாது வருகிறது. எனவே, காவிரியின் குறுக்கே எப்படியும் 5-வது அணையை கட்டிவிட வேண்டும் என்று அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். </p><h2>மத்திய இணை மந்திரியின் பதில்</h2><p>இந்த நிலையில், நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் சமீபத்தில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 'மேகதாது அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலை கர்நாடகா பெற்றுள்ளதா? மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள அத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?' என்று கேள்வி எழுப்பினார்.</p><p>அதற்கு பதிலளித்த மத்திய நீர்வளத் துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி, 'காவிரி நீர் தொடர்பான வழக்கில், 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான அணையையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என, எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை' என்று கூறினார். </p><p>மத்திய இணை மந்திரியின் இந்த பதில் கர்நாடகா அரசுக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு எதிராகவும் அமைந்தது.</p><h2>மீண்டும் விஸ்வரூபம்  </h2><p>இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு - கர்நாடகா இடையே மேகதாது பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆகஸ்டு 3-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை பெங்களூருவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. </p><p>ஆனால், இந்த சந்திப்புக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் செல்லக்கூடாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக விவசாயிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/agg3v70y/kav-ver.jpg" /></figure><h2>இருமாநில எல்லையில் பதற்றம்</h2><p>பதிலுக்கு கர்நாடகாவிலும் சில எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் குதித்து இருக்கின்றன. இதனால், தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான ஓசூர் பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. </p><p>கர்நாடகாவில் 2028-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ளது. எனவே, அதை முன்வைத்தே கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மேகதாது அணை கட்டும் முயற்சியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து கூறியிருப்பதும், பா.ஜ.க. கர்நாடகாவில் தங்களுக்கான ஆதரவை பெருக்கிக்கொள்வதற்கே என்றும் தெரிகிறது. </p><h2>முந்தைய சந்திப்புகளில் சுமூக முடிவு இல்லை </h2><p>ஏற்கனவே, காவிரி பிரச்சினை தொடர்பாக, தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, கர்நாடகா முதல்-மந்திரிகள் ராமகிருஷ்ண ஹெக்டே, குண்டு ராவ் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார். </p><p>இதேபோல், 1997-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த ஜே.எச்.பட்டீலை சந்தித்து பேசினார். 2012-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, கர்நாடக முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேசினார். ஆனால், இதுபோன்ற சந்திப்புகளில் எந்தவித சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. </p><h2>என்னதான் தீர்வு..? </h2><p>இதுபோன்ற நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசுவதில் சுமூக முடிவு எட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><p>தற்போது, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்றாலும், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகுவதே சரியானதான இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதற்கு முன்னதாக, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, அதில் எடுக்கும் முடிவின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டை நாடினால் மட்டுமே மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியும். தமிழகத்தின் உரிமையும் பாதுகாக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>சாத்தான்குளத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-assaulting-government-bus-driver-in-sathankulam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-assaulting-government-bus-driver-in-sathankulam#comments</comments><guid isPermaLink="false">f8ff8984-ca2d-4c09-b960-a642bb1e788d</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:33:42 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:33:42.060Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Government bus,Thoothukudi,தூத்துக்குடி,Youth arrested,வாலிபர் கைது,Sathankulam,சாத்தான்குளம்,driver,ஓட்டுநர்,assault,அரசு பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ho1sscuh/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ho1sscuh/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">அரசு பேருந்தை</a> வழிமறித்து ஓட்டுநரைத் தாக்கிய வாலிபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20">கைது </a>செய்தனர்.</p><h2>அரசு பேருந்து</h2><p>கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பேருந்தை, கன்னியாகுமரியைச் சேர்ந்த ரவி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்தின் நடத்துநராக ஜெயகோபி என்பவர் பணியில் இருந்துள்ளார். இப்பேருந்து சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்றபோது, சாத்தான்குளம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை (வயது 31) என்பவர் மீது மோதுவது போல் சென்றதாகக் கூறப்படுகிறது. </p><h2>ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது</h2><p>இது தொடர்பாக ஓட்டுநருக்கும், சின்னத்துரைக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சின்னத்துரை, அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் ரவியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஓட்டுநர் ரவி, சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநரைத் தாக்கிய சின்னத்துரையை கைது செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு - சம்பல்பூர், ராமேஸ்வரம் - ஹூப்ளி ரெயில்களின் சேவை நீட்டிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-erodesambalpur-and-rameswaramhubli-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-erodesambalpur-and-rameswaramhubli-train-services#comments</comments><guid isPermaLink="false">ae147cc1-2a39-462e-abba-7e9251fca01e</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:28:27 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:28:27.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Rameswaram,தெற்கு ரெயில்வே,Special train,Erode,ஈரோடு,ராமேஸ்வரம்,Sambalpur,hubli,சம்பல்பூர்,ஹூப்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/bhehvig2/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/bhehvig2/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஈரோடு - சம்பல்பூர், ராமேஸ்வரம் - ஹூப்ளி ரெயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>ஈரோடு - சம்பல்பூர்</h2><p>சம்பல்பூரில் இருந்து புதன்கிழமைகளில் காலை 11.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10.50 மணிக்கு ஈரோட்டை வந்தடையும் வாராந்திர ரெயில் (வண்டி எண் 08311) ஆகஸ்டு 5, 12-ந் தேதிகளில் நீட்டிக்கப்படுகிறது.  </p><p>மறுமார்க்கத்தில், ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும் ரெயில் (08312), ஆகஸ்டு 7, 14-ந் தேதிகளில் நீட்டிக்கப்பபட்டுகிறது. </p><h2>ராமேஸ்வரம் - ஹூப்ளி</h2><p>இதேபோல், ஹூப்ளியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும் ரெயில் (07355) ஆகஸ்டு 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்படுகிறது. </p><p>மறுமார்க்கத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளியை சென்றடையும் ரெயில் (07356)  ஆகஸ்டு 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீட்டிக்கப்படுகிறது</a>. </p><p>இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/directorate-of-vigilance-and-anti-corruption-raids-41-locations-across-tamil-nadu-over-tasmac-irregularities</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/directorate-of-vigilance-and-anti-corruption-raids-41-locations-across-tamil-nadu-over-tasmac-irregularities#comments</comments><guid isPermaLink="false">c35606e1-9d4c-4d42-bf6f-d174d9f9ac0e</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:17:41 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:17:41.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,டாஸ்மாக்,Tasmac,லஞ்ச ஒழிப்புத்துறை,Anti-Corruption Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/njkwn938/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/njkwn938/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவுக்கு முறைசாரா வழிகள் மூலம் <a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> வருவாய் கட்சி நிதி என்ற பெயரில் திசை திருப்பப்பட்டு வந்ததுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மூலம் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் ரூ.3,600 கோடியை தொட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டது.</p> <h2>வருவாயில் வெளிப்படைத்தன்மை</h2><p>இது குறித்து மூத்த அரசு அதிகாரிகள் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் கூறியதையடுத்து, புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடைய செயல்பாட்டை தொடங்க உத்தரவிட்டது. மேலும், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் முறையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. </p><h2>717 மதுபான விற்பனை நிலையங்கள்</h2><p>இதனிடையே தமிழக அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பள்ளி, கல்லூரிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்கி வந்த 717 மதுபான விற்பனை நிலையங்களை தமிழக அரசு மூடியிருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வரும் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக அரசின் கருவூலத்துக்கு வந்து சேருவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகள்</h2><p>தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக்கின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதும் நீண்ட காலமாக இயங்கி வரும் அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளை கலைத்துவிடவும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><h2>41 இடங்களில் சோதனை</h2><p>இந்நிலையில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி ஈரோடு, கோவை (பீளமேடு), பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன் பாளையம், நவகரையில் உள்ள கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேட்டுப்பாளையம் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் சிவாஸ் மதுபான தயாரிப்பு ஆலை மற்றும் மன்னார்குடியில் உள்ள டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. </p><p>சிவகங்கை மாவட்டம் தொண்டி சாலையில் உள்ள டாஸ்மாக் குடோனில், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த  சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் முதல்-அமைச்சர் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-force-is-the-chief-minister-going-to-form-to-protect-women-from-tvk-functionaries-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-force-is-the-chief-minister-going-to-form-to-protect-women-from-tvk-functionaries-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">a95122ab-fe55-4bfb-bdf2-8c4bac7942ad</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:16:57 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:16:57.059Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/96ol1wvz/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/96ol1wvz/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இளம்பெண் புகார்</h2><p>கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது பெண் குழந்தையையும் பாலியல் ரீதியாக விமர்சித்ததாகவும் தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. </p><h2>கைது செய்யப்படவில்லை</h2><p>அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண் பலமுறை புகார் அளித்தும் கூட, இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள தகவல், தமிழகக் காவல்துறையின் நேர்மையின் மீதும், அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்-அமைச்சரின் நிர்வாகத் திறன் மீதும் கடும் சந்தேகத்தை எழுப்புகிறது.</p><h2>எந்தப் பயனும் இல்லை</h2><p>எனவே, தனது சொந்தக் கட்சிக்குள் இத்தனை காமுகர்களை பாதுகாத்து வைத்துக் கொண்டு, பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசுவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது உடனடியாக சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எடுக்கப்படுவதை </a>உறுதி செய்ய வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர் ரெயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/13-kg-of-ganja-seized-at-egmore-railway-station-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/13-kg-of-ganja-seized-at-egmore-railway-station-2-arrested#comments</comments><guid isPermaLink="false">0afcef9b-a215-4f4f-9fef-99c8490c70e1</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:16:56 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:16:56.580Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,2 arrested,2 பேர் கைது,railway station,ரெயில் நிலையம்,Egmore,எழும்பூர்,கஞ்சா பறிமுதல்,Ganja seized</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/swa27kkf/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/swa27kkf/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 13 கிலோ <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்தது தொடர்பாக ரெயில்வே போலீசார் 2 வடமாநிலத்து நபர்களை<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது</a> செய்துள்ளனர்.</p><h2>விசாரணை</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று, ஹவுராவிலிருந்து ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் இருந்து பயணிகள் ஒருவர் பின் ஒருவராக இறங்கி சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நடந்து சென்றனர். அவர்களை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு சிறப்புப் பிரிவினர் விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.</p><h2>2 பேர் கைது</h2><p>இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 13 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ்லென்கா (வயது 37), பூர்ணசந்திரா(35) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி சென்னையில் உள்ளவரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/verification-of-electronic-voting-machines-begins-in-kolathur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/verification-of-electronic-voting-machines-begins-in-kolathur#comments</comments><guid isPermaLink="false">e9e3e7c9-85f6-44c9-bf75-d9e525c5b3cd</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:07:31 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:07:31.358Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,தேர்தல் ஆணையம்,Election Commission,கொளத்தூர்,Kolathur,வாக்குப்பதிவு எந்திரங்கள்,Voting Machines</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/sm189ugg/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/sm189ugg/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கொளத்தூர் தொகுதி</h2><p>சட்டமன்ற தேர்தல்களில் சென்னை கொளத்தூர் தொகுதியில் (2011, 2016, 2021) 'ஹாட்ரிக்' வெற்றியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்திருந்தார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வி அடைந்தார்.</p><p>இந்த நிலையில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.</p><h2>சரிபார்க்கும் பணி</h2><p>அதனடிப்படையில் கொளத்தூர் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது. தி.மு.க. முகவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இன்று முதல் 7 நாட்களுக்கு இப்பணி நடைபெறும் என்றும் ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேபோல புகார்கள் வந்துள்ள காஞ்சீபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய தி.மு.க., அ.தி.மு.க. மனுக்களின் மீது நாளை விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-hearing-tomorrow-on-petitions-by-dmk-and-aiadmk-seeking-a-cbi-probe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-hearing-tomorrow-on-petitions-by-dmk-and-aiadmk-seeking-a-cbi-probe#comments</comments><guid isPermaLink="false">c79127ce-a05d-4efe-b775-9c8cb8da8631</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:23:20 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:23:20.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,பழனி,தமிழகம்,CBI,முருகன் கோவில்,சி.பி.ஐ. விசாரணை,Murugan Temple,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,Palani,நில மோசடி,Land fraud case</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/5rnc4jvz/sop.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/5rnc4jvz/sop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி கோவில்</a> நில மோசடி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய தி.மு.க., அ.தி.மு.க. மனுக்களின் மீது நாளை மதுரை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது.</p><h2>பழனி மலை அடிவாரம்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> மலை அடிவாரத்தில் உள்ள, முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால் சேனாதிபதி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><h2>அ.தி.மு.க., தி.மு.க.</h2><p>இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கள் ரவீந்திரன், வீரா கதிரவன் ஆகியோர், இதே விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி தங்கள் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டனர்.</p><h2>நாளை விசாரணை</h2><p>இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பழனி கோவில் நில மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் வருகிற 30-ந்தேதி (நாளை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>திருமணம் நிச்சயிக்கப்பட்ட நர்ஸ் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து கீழே விழுந்து பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engaged-nurse-dies-after-falling-from-hospital-floor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engaged-nurse-dies-after-falling-from-hospital-floor#comments</comments><guid isPermaLink="false">567e0369-ab81-4417-a737-48f12fe891b6</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:20:21 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:20:21.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Crime News,கன்னியாகுமரி,Kanyakumari,Marriage,கிரைம் செய்திகள்,Nurse,நர்ஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/dhgb7xwq/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/dhgb7xwq/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>குமரி,</p><h2>திருமணம் நிச்சயிக்கப்பட்ட நர்ஸ்</h2><p>குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் கல்லுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ராஜ். இவரது மகள் ஆஷிகா (வயது22). இவர் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு கடந்த 8 மாதங்களாக மார்த்தாண்டம் வெட்டுமணியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.</p><p>இவருக்கு கடந்த 7-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.</p><h2>மாடியில் இருந்து விழுந்து பலி</h2><p>இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் ஆஷிகா வழக்கம்போல் வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து இரவு 10.30 மணிக்கு அவர் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்ட தாக செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.</p><p>அங்கு ஆஷிகா பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆஷிகா ஆஸ்பத்திரி மாடியில் நின்று கொண்டு யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டி ருந்துள்ளார். அப்போது திடீரென அவர் மாடியில் இருந்து கீழே விழுந்த சத்தம் கேட்டுள்ளது.</p><p>உடனே ஆஸ்பத்திரி ஊழி யர்கள் விரைந்து சென்று பார்த்த போது ஆஷிகா ரத்த வெள் ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது செல்போன் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.</p><h2>தற்கொலையா?</h2><p>இதுகுறித்து ஆஷிகாவின் தாயார் சுதாராணி (51) மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படை யில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரி மாடியில் இருந்து நர்ஸ் கீழே விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியையிடம் 16 சவரன் செயின் பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-sovereign-chains-seized-from-teacher-in-government-school-premises-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-sovereign-chains-seized-from-teacher-in-government-school-premises-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">02203102-ca5b-42b2-aaee-de39f90fcc50</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:07:03 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:07:03.015Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,chain snatching,Teacher,அரசு பள்ளி,ஆசிரியை,mysterious person,செயின் பறிப்பு,Government School,வளாகம்,மர்ம நபர்,போலீசார் வலைவீச்சு,campus,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/aha7qe1x/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிரியையிடம் தங்க செயின் பறிப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/aha7qe1x/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF">அரசு நடுநிலைப்பள்ளி</a> வளாகத்தில் புகுந்து, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88">பெண் ஆசிரியை</a>யிடம் 16 சவரன் தங்கச் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">செயினை பறித்துச் சென்ற</a> மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>மாநகராட்சி நடுநிலைப்பள்ளி</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகிலுள்ள அத்திமரபட்டியில் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரத்னா தலைமை ஆசிரியராகவும், புதிய துறைமுக ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த சாந்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.</p><h2>ஆசிரியையிடம் 16 சவரன் செயின் பறிப்பு</h2><p>இந்த நிலையில் நேற்று மதிய நேரத்தில் ஆசிரியை சாந்தி கைகழுவுவதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்குள் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், திடீரெனப் பாய்ந்து வந்து ஆசிரியை சாந்தியின் கழுத்தில் இருந்த 16 சவரன் தங்க தாலிச் செயினைப் பறித்துக்கொண்டு தப்பியோடினான். </p><p>தாலிச் செயினைப் பறித்த வேகத்தில் ஆசிரியை கீழே விழுந்து அலறியுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு மற்றவர்கள் ஓடி வருவதற்குள், அந்த மர்ம நபர் கிழக்குத் திசையில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து தப்பியோடிவிட்டான். பறிகொடுக்கப்பட்ட தங்க செயினின் மதிப்பு ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. </p><h2>போலீசார் வலைவீச்சு</h2><p>இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய அந்த மர்ம நபரை பிடிக்க மோப்ப நாய் மற்றும் டிரோன் கேமராக்களின் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அரசுப் பள்ளி வளாகத்திலேயே நடைபெற்ற இந்தத் துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுக்கு காரணம் இதுதான்..! அமைச்சரை அதிர வைத்த தலைமை ஆசிரியர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-the-reason-for-the-drop-in-student-enrollment-in-government-schools-headmasters-stun-the-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-the-reason-for-the-drop-in-student-enrollment-in-government-schools-headmasters-stun-the-minister#comments</comments><guid isPermaLink="false">8cf274b0-fe3e-4a3f-901e-e6c57537956c</guid><pubDate>Wed, 29 Jul 2026 03:54:32 +0000</pubDate><atom:updated>2026-07-29T03:54:32.539Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,School students,பள்ளி மாணவர்கள்,அரசு பள்ளி,Govt Schools,head master,தலைமை ஆசிரியர்கள்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wqob5659/minis.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wqob5659/minis.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என <a href="https://www.dailythanthi.com/topic/அமைச்சர்-ராஜ்மோகன்">அமைச்சர் ராஜ்மோகன்</a> தெரிவித்தார்.</p><h2>ஆசிரியர் சங்கங்கள்</h2><p>சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கலந்துரையாடினார். அப்போது சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.</p><p>அப்போது கழிப்பறைகள் சுத்தமாக இல்லாதது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.</p><p>அதனை கேட்டறிந்த பின்னர் அவர்கள் மத்தியில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:-</p><p>உலகில் பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் கிடையாது. இருமாநிலங்களுக்கு இடையேயான ஆறுகள் பிரச்சினைகள் ஆனாலும் சரி, நாடுகளுக்கு இடையே ஓடும் ஆறுகளின் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி தீர்க்க முடியாத பிரச்சினைகள்கூட பேசி தீர்த்து இருக்கிறார்கள். அந்தவகையில் நாமும் பிரச்சினைகளை பேசி அதற்கு தீர்வு காணப்போகிறோம்.</p><h2>கோரிக்கைகள்நிறைவேற்றப்படும்</h2><p>எது மக்களுக்கு நல்லது? எது மாணவர்களுக்கு நல்லது? எது பெற்றோருக்கு நல்லது? எது ஆசிரியர்களுக்கு நல்லது? என்பதை மட்டுமே இலக்காக கொண்டு பயணித்து வருகிறது நமது பள்ளிக்கல்வித்துறை. அப்படிப்பட்ட இத்துறையின் ஆணிவேராக இருப்பவர்கள் ஆசிரியர்கள். தமிழக முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் என்னென்ன கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமோ? அவற்றை எல்லாம் நிறைவேற்றுவேன். ஆசிரியர் சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஒரே இலக்கு. இதில் நடிப்புக்கோ, பாசாங்கு செய்வதற்கோ இடமே இல்லை.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>இதில் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ், அரசு தேர்வுகள் இயக்குனர் சசிகலா உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.</p><h2>கோரிக்கைகள் என்னென்ன..?</h2><p>முன்னதாக அமைச்சருடனான கலந்துரையாடலில் பங்கேற்ற ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் சில கோரிக்கைகள் வருமாறு:-</p><p>பழைய ஓய்வூதியத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பணியில் இருக்கும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேவையில்லை என சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர்களை கற்பித்தல் பணிகளை தவிர பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது,எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேரத்தை 2.30 மணி நேரமாக மாற்ற வேண்டும், 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான அனைவருக்கும் தனியார் பள்ளிகளை போல் நேர்த்தியான வண்ண உடைகளும், ஷூவும் வழங்க வேண்டும், தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் மழலையர் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் அருணாச்சலம் மரணத்திற்கு நீதி கோரி சி.பி.எம். ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpm-protests-in-thoothukudi-demanding-justice-for-arunachalams-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpm-protests-in-thoothukudi-demanding-justice-for-arunachalams-death#comments</comments><guid isPermaLink="false">d6c3d06e-1364-495e-bd12-bb3715c03a13</guid><pubDate>Wed, 29 Jul 2026 03:26:41 +0000</pubDate><atom:updated>2026-07-29T03:26:41.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,ஆர்ப்பாட்டம்,Thoothukudi,தூத்துக்குடி,நிவாரணம்,Relief,insistence,வலியுறுத்தல்,youth death,சிபிஎம்,CPM,வாலிபர் மரணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/u8seq1vf/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் சி.பி.எம். ஆர்ப்பாட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/u8seq1vf/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த அருணாச்சலம் மரணத்திற்கு நீதி கேட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a> சார்பில் வி.வி.டி. சிக்னல் அருகில் கண்டன <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்ப்பாட்டம்</a> நடைபெற்றது.</p><h2>வாலிபர் மரணம்</h2><p>தூத்துக்குடியைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">அருணாச்சலம் என்ற வாலிபரின் லாக்-அப் மரணத்திற்கு</a> உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அனைத்து போலீசார் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். வழக்கை தீவிரமாக விசாரித்து உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>ரூ.25 லட்சம் நிவாரணம்</h2><p>உயிரிழந்த அருணாச்சலத்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.</p>]]></content:encoded></item></channel></rss>