<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 26 Jul 2026 05:38:52 +0000</lastBuildDate><item><title>மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு - தேனியில் கடையடைப்பு போராட்டம்   </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-protest-against-the-eviction-of-hill-village-residents-shop-closure-strike-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-protest-against-the-eviction-of-hill-village-residents-shop-closure-strike-in-theni#comments</comments><guid isPermaLink="false">5365d3b7-13f0-4aaa-b46f-e61841576377</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:35:55 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:35:55.934Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,கடையடைப்பு போராட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/erueajpk/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/erueajpk/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, 3 தலைமுறைகளாக வசித்து வரும் மலை கிராம மக்களை அவர்களின் கிராமங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>இதனால் அங்கு ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு ஆவணங்களுடன் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக வருசநாடு சுற்றுவட்டார கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. </p> ]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: திருச்செந்தூர் கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-devotees-wait-for-5-hours-at-tiruchendur-temple-to-have-darshan-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-devotees-wait-for-5-hours-at-tiruchendur-temple-to-have-darshan-2#comments</comments><guid isPermaLink="false">b1b84843-5059-4f2f-84bb-c670beb80c7e</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:30:57 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:30:57.423Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,Holiday,திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்,சாமி தரிசனம்,விடுமுறை தினம்,Sami Darshan,Tiruchendur Subramania Swamy Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ja26etw9/tiruchendhur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ja26etw9/tiruchendhur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர், </p><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக, சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளதாலும் நாள் தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.</p><h2>சாமி தரிசனம்</h2><p>இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சாமி தரிசனம் </a>செய்தனர்.</p><h2>உதயமார்த்தாண்ட அபிஷேகம்</h2><p>பக்தர்கள் வாகனங்கள் வருகையால் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் தெப்பக்குளம் அருகில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் சாலையில் இரு பக்கமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஞாயிறு விடுமுறை நாளான இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசி அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/explosion-at-a-cracker-warehouse-near-sivakasi-2-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/explosion-at-a-cracker-warehouse-near-sivakasi-2-dead#comments</comments><guid isPermaLink="false">ac14da68-419c-4196-8fce-a900c54dee7a</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:25:43 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:25:43.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivakasi,சிவகாசி,வெடிவிபத்து,Fireworks Factory,சிவகாசி பட்டாசு ஆலை,fireworks accident,பட்டாசு குடோன்,Fireworks explosion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/cyavrmxa/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/cyavrmxa/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><h2>தகர கொட்டகை</h2><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாகத் தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p><p>பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், விண்ணை முட்டும் அளவிற்கு அடர்ந்த கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தின் காரணமாகச் சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்குப் பலத்த அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். </p><h2>2 பேர் பலி</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை, போலீசார், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் குடோனில் ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பட்டாசு ஆலை</h2><p>இதைபோல சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியில் ஜெய் விநாயகா கம்பி மத்தாப்பு பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக காகித அட்டைகளில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கோவை கோனியம்மன் கோவில் ஊழியர்கள், அதிகாரிகள் என 8 பேர் சஸ்பெண்ட் - அமைச்சர் ரமேஷ் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-employees-and-officials-of-coimbatore-koniamman-temple-suspended-minister-ramesh-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-employees-and-officials-of-coimbatore-koniamman-temple-suspended-minister-ramesh-orders#comments</comments><guid isPermaLink="false">297e2304-72d9-47be-b2a9-17d80a90632f</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:15:54 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:15:54.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,சஸ்பெண்ட்,suspend,Koniamman Temple,கோனியம்மன் கோவில்,Officers- அதிகாரிகள்,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/99e7z5cv/minister-ramesh1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/99e7z5cv/minister-ramesh1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவில் உண்டியலை திருடிய  4 ஊழியர்கள் மற்றும் அதை கண்டுபிடிக்காத 4 அதிகாரிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.</p><p>கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது ஒரு உண்டியலை அங்குள்ள ஊழியர்கள் திருடியுள்ளனர். பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில், முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>8 பேர் சஸ்பெண்ட்</h2><p>இந்த நிலையில் கோனியம்மன் கோவிலில் வேலை செய்து வந்த  ஊழியர்கள் பாலசுப்ரமணியன், சரவணன், பிரதீப் குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரும் அதை கண்டுபிடிக்காமல் உடந்தையாக இருந்த  அதிகாரிகள்  ராம்குமார், உதயகுமார், குமார், உஷா நந்தினி என  இவர்கள் 4 பேரையும் சேர்த்து மொத்தமாக 8 பேரை அமைச்சர் ரமேஷ் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சஸ்பெண்ட்</a> செய்து உத்தரவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் கூறியது உண்மைக்கு முரணானது:  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalins-remarks-on-the-cauvery-issue-are-contrary-to-the-truth-minister-aadhav-arjuna-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalins-remarks-on-the-cauvery-issue-are-contrary-to-the-truth-minister-aadhav-arjuna-clarifies#comments</comments><guid isPermaLink="false">e29813b1-827b-45f6-927e-19f9077d56e0</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:15:42 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:15:42.012Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜுனா,Stalin,ஸ்டாலின்,காவிரி ஆணையம்,Adhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/in1urleu/Adhav-arjuna.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/in1urleu/Adhav-arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>காவிரி விவகாரத்தில் முதல்  அமைச்சர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முன்னாள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை குறித்த பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் விஜய் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனும் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது உண்மைக்கு முரணானதாகும் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர் மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><h2>பிரதமரிடம் வலியுறுத்தல்</h2><p>அந்த அடிப்படையில், முதலமைச்சர் 27.05.2026 அன்று   பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, காவிரி நீர் பகிர்வு தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமைகள், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் மற்றும் அதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும்,  2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.</p><h2>கடிதம்</h2><p>அதே நாளான 19.06.2026 அன்று, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் ஒருதலைப்பட்ச முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) ஜல் சக்தி அமைச்சகம் எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு சட்டம், 1956-இன் பிரிவு 4-ன் கீழ் நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசின் DPR-ஐ மத்திய நீர்வள ஆணையம் பரிசீலிக்கவோ, செயல்படுத்தவோ அல்லது அதற்கு ஒப்புதல் வழங்கவோ கூடாது என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் மேகதாது அல்லது காவிரி ஆற்றுப்படுகையில் வேறு எந்த இடத்திலும் புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை  முதலமைச்சர் கடிதம் மூலம் பிரதமருக்கு அனுப்பி வைத்து, தமிழ்நாடு சட்டமன்றம் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டங்களில் தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்குரிய நீரை உரிய காலத்தில் திறந்துவிட வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.எனவே, தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனைத்து நடவடிக்கைகளையும்  முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>உரிய  வாதங்கள் வைக்கவில்லை</h2><p>ஆனால், முதலமைச்சர் பொறுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க ஆட்சியில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் 13.11.2025 அன்று தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்ததை எதிர்த்து, அன்றைய தி.மு.க அரசு, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த சீராய்வு மனுவும் 15.04.2026 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, மறுசீராய்வு மனுவை அன்றைய தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக உரிமைக் காக்கும் கடைசி வாய்ப்பாக இருந்த அந்த மனு மீதும் கவனமாக, உரிய வாதங்களை வலுவாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தி.மு.க அரசு எடுத்து வைக்கவில்லை. அதையடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, மறு சீராய்வு மனுவையும் 25.04.2026 அன்று தள்ளுபடி செய்தது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற சட்டக் குளறுபடிகளால்தான், தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நநி நீர் பிரச்சினையும், மேகதாது அணை விவகாரமும் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது.</p><h2>விமர்சனங்களை வரவேற்கிறோம்</h2><p>இதுபோன்ற கடந்தகால குளறுபடிகளைப் பேசுவதன் மூலம், காவிரி நதி நீர் விவகாரத்தில், மேகதாது அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக் குரலை திசைதிருப்ப நாங்கள் விரும்பவில்லை. அப்படிப்பட்ட குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல... வேறு யாரிடம் இருந்தும்... ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்வதற்கும், கவனப்படுத்துவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.</p> <h2>மக்களின் வாழ்வுரிமை</h2><p>காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதார பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமைப் பிரச்சினையாகும். அதில், எந்தவித குறுகிய அரசியல் நோக்கத்தோடும், அரசியல் ஆதாயத்தின் கணக்குகளோடும்,முதலமைச்சர் .சி.ஜோசப் விஜய்  தலைமையிலான அரசு செயல்படவில்லை. மாறாக, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்படும் வரையிலும், தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கும். காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும்! தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும்!” என்று பதிவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 6 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-with-6-kg-of-ganja-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-with-6-kg-of-ganja-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">9795c7b9-0bec-4b27-8fe1-f553d6940a3c</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:02:44 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:02:44.609Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Thoothukudi,Ganja,தூத்துக்குடி,கஞ்சா,Youth arrested,வாலிபர் கைது,Seizure,பறிமுதல்,patrol,ரோந்து பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/gsncseul/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/gsncseul/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச்பார்க் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக 6 கிலோ <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a> வைத்திருந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வாலிபர் கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>போலீஸ் ரோந்து பணி</h2><p>தூத்துக்குடி மாநகர், ரோச்பார்க் பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணிக்கு சென்றபோது, அங்கே சந்தேகப்படும்படியான நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர் சட்ட விரோதமாக விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.</p><h2>6 கிலோ கஞ்சா பறிமுதல் </h2><p>இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் ஜேம்ஸ் சந்தோசம் (வயது 27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார். </p>]]></content:encoded></item><item><title>கூட்டுறவுத்துறை சார்ந்த கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-resolution-for-petitions-related-to-the-cooperative-department-guidelines-issued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-resolution-for-petitions-related-to-the-cooperative-department-guidelines-issued#comments</comments><guid isPermaLink="false">aad1e70a-941c-477f-babc-616d088b9a75</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:58:08 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:58:08.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கூட்டுறவுத்துறை,Cooperative Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/kat0ip09/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/kat0ip09/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கூட்டுறவு துறை சார்ந்த கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வட்டார அளவில் கூட்டுறவு சார் பதிவாளர் அலுவலர்கள் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மணுக்களை பெற்று அவற்றை தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்றும், கூட்டுறவு பதிவாளர் மற்றும் கள அலுவலர் அளவில் தீர்வு காண இயலாத கோரிக்கை மணுக்களையும் துணை பதிவாளர்களால் நேரடியாக பெறப்படும் கோரிக்கை மனுக்களையும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து தீர்வு காணவும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p> <p>அதேபோல் தீர்வு காண முடியாத கோரிக்கை மணுக்களையும் மண்டல இணை பதிவாளர்களால் நேரடியாக பெறப்படும் மணுக்களையும் மாதம்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை என்று மண்டல இணைப்பதிவாளர்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உடனுக்குடன் தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்த மாதாந்திர அறிக்கையை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மாணவர் போராட்டம் என்ற கண்ணாடியில் மோடி அரசின் சர்வாதிகார முகம் தோலுரிக்கப்பட்டுவிட்டது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-modi-governments-authoritarian-face-has-been-exposed-in-the-mirror-of-student-protests-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-modi-governments-authoritarian-face-has-been-exposed-in-the-mirror-of-student-protests-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">6d893a86-f299-42d6-a1fb-ddda651b61b0</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:46:03 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:46:03.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Modi government,Manickam Tagore MP,மோடி அரசு,student protest,மாணவர் போராட்டம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ul6qbc35/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ul6qbc35/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>நேற்று மதியம் 2:30 மணிக்கு அப்புறம் பாஜக 'Eco-system'க்கு திடீர் விழிப்பு வந்துடுச்சோ? முன்னாள் கல்வி அமைச்சர்2:30அது பண்ணாரு, இது பண்ணாருன்னு "சீர்திருத்த" புராணம் பாடுறவங்க... மாணவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கி போராடியபோது எங்க போனாங்க? மாணவர்களுக்கு தர்மேந்திர பிரதான் அது பண்ணாரு, இது பண்ணாருன்னு "சீர்திருத்த" புராணம் பாடுறவங்க... மாணவர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கி போராடியபோது எங்க போனாங்க? மாணவர்கள் குரலை நசுக்குவதும், பதவி தப்பியதும் முட்டுக்கொடுப்பதும் தான் பாஜகவின் 'System' - அரசு அதிகாரமும் கல்வி அமைப்பும் தங்களின் 'தனிச்சொத்து' என்று ஆளும் பாஜக நினைக்கலாம், ஆனால் அது மக்களுக்கானது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமானது!</p><h2>மாணவர் போராட்டம்</h2><p>வீதியில் இறங்கிப் போராடிய இந்திய இளைஞர்கள், மோடி அரசுக்கு அந்த நிதர்சனமான உண்மையை கண்ணாடியாக நின்று சுட்டிக்காட்டிவிட்டார்கள். அதிகார போதைக்கு மக்கள் சக்தி தான் பதில்! <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20">மாணவர் போராட்டம் </a>என்ற கண்ணாடியில் மோடி அரசின் சர்வாதிகார முகம் தோலுரிக்கப்பட்டுவிட்டது. இளைஞர்கள் விழித்துக்கொண்டார்கள், மோடி அரசே... உங்கள் போலி முட்டுகளுக்கு இனி வேலை இல்லை! இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்களுக்காக உங்கள் 'Eco-system' நிற்கவில்லை, எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுடன் களத்தில் நின்றார். அதனால்தான் தைரியமாகச் சொல்கிறார்: "மோடி இந்தியாவின் கடந்த காலம், கடந்த காலத்தால் ஒருபோதும் எதிர்காலத்தை எதிர்த்துப் போராட முடியாது!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: அருவிகளில் ஆனந்த குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-courtallam-enjoying-a-blissful-bath-in-the-waterfalls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-courtallam-enjoying-a-blissful-bath-in-the-waterfalls#comments</comments><guid isPermaLink="false">b1945814-13dc-4eb8-a1bd-7c9f87417c2f</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:45:38 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:45:38.728Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குற்றாலம்,Courtallam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/kmn3k8bs/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/kmn3k8bs/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளா மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.</p><p>இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியூர்களில் இருந்து கார், வேன், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பமாக வருகை புரிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவிட்டு குற்றாலத்தில் உள்ள பூங்கா பகுதி மற்றும் அருவி கரைகளுக்கு செல்லும் சாலை ஓரப் பகுதிகளில் உள்ள மர நிழல்களில் அமர்ந்து குடும்பமாக உணவு உண்டு மகிழ்ந்து நேரத்தை செலவிட்டனர். </p><p>மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. இதனால் அருவிகளுக்கு வரும் நீரின் அளவும் கனிசமாக குறைந்துள்ளது. எனினும், சுற்றுலா பயணிகள் குறைவாக வரும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஆடிக்கூழ் திருவிழா: தமிழர்களின் வாழ்க்கை முறையும் ஆரோக்கியப் பாரம்பரியமும்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadikkoozh-festival-the-lifestyle-and-health-tradition-of-tamils</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadikkoozh-festival-the-lifestyle-and-health-tradition-of-tamils#comments</comments><guid isPermaLink="false">3c66983d-43f8-402f-ae6d-63318c8bf160</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:18:34 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:18:34.105Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>health,திருவிழா,Aadi festival,ஆடி,ஆரோக்கிய உணவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/p57elqra/78.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/p57elqra/78.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>இந்த கூழ் ஊற்றும் திருவிழாவுக்குப் பின்னால், ஒரு ஊரையே காப்பாற்றும் அசாத்தியமான மருத்துவ அறிவியல் ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?</p><p>பொதுவாக ஆடி மாதம் (ஜூலை - ஆகஸ்ட்) என்பது பருவநிலை மாறும் ஒரு காலகட்டம். கோடை வெயில் குறைந்து, 'ஆடிக் காற்று' பலமாக வீசத் தொடங்கும் நேரம். இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அம்மை நோய், காலரா, மற்றும் காற்றில் பரவும் பல்வேறு கொடிய வைரஸ் காய்ச்சல்கள் மிக எளிதாக மக்களைத் தாக்கும் அபாயம் இருந்தது. இன்றைய நவீன மருத்துவமனைகளோ, தடுப்பூசிகளோ இல்லாத அந்தப் பழங்காலத்தில், இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற நம் முன்னோர்கள் கண்டுபிடித்த 'மாஸ்டர் பிளான்' தான் இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE!">ஆடித் திருவிழா!</a></p><h2>ப்ரோ-பயோடிக் உணவு</h2><p>கேழ்வரகு அல்லது கம்பை வைத்து தயாரிக்கப்படும் இந்தக் கூழ், முதல் நாளே காய்ச்சப்பட்டு புளிக்க வைக்கப்படும். மறுநாள் அதனுடன் மோர், சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறப்படும். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், இது உலகத்திலேயே மிகச் சிறந்த ஒரு 'ப்ரோ-பயோடிக்' உணவு! இதைச் சாப்பிடும்போது நமது உடலில் உள்ள குடல் பாக்டீரியாக்கள் வலுவடைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி பல மடங்கு அதிகரிக்கிறது.</p><p>அதுமட்டுமல்லாமல், கிருமி நாசினியான வேப்பிலையையும், மஞ்சள் நீரையும் கோவில் மற்றும் வீடுகள் முழுவதும் தெளிப்பதன் மூலம், காற்றில் பரவும் வைரஸ்களை முற்றிலுமாக அழித்தார்கள். இந்த நோய் எதிர்ப்பு உணவை 'மருந்து' என்று கொடுத்தால் மக்கள் குடிக்க மாட்டார்கள் என்பதால், அதை 'அம்மனின் பிரசாதம்' என்று பக்தி பூர்வமாக மாற்றி, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி சாப்பிடும் ஒரு மாபெரும் மருத்துவ முகாமாகவே இந்தத் திருவிழாவை மாற்றி அமைத்தார்கள் நம் தமிழர்கள். ஒட்டுமொத்த மனிதவள சமூகத்தையும் காக்கும் நம் தமிழர்களின் ஆழமான அறிவியல் இருப்பதை நினைத்தால் நிஜமாகவே மெய்சிலிர்க்கிறது.</p>]]></content:encoded></item><item><title>கன்னட அமைப்பு ஆர்ப்பாட்டம்: ஓசூர் எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kannada-organization-protests-tamil-nadu-buses-stop-at-hosur-border</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kannada-organization-protests-tamil-nadu-buses-stop-at-hosur-border#comments</comments><guid isPermaLink="false">f228cf5e-c14b-46c2-902e-fb6495f06def</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:48:41 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:48:41.650Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,ஓசூர்,govt bus,மேகதாது அணை,கன்னட அமைப்பு,Kannada Organization,தமிழக பேருந்துகள்,தமிழக பேருந்து,tamilnadu bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/11vl5tty/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/11vl5tty/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஓசூர்,</p><h2>மேகதாது அணை</h2><p>கர்நாடகம்-தமிழ்நாடு இடையே நீண்ட காலமாக காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.</p><h2>பேருந்துகள் நிறுத்தம்</h2><p>இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் எல்லைப் பகுதியில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா நோக்கிச் செல்லும் பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓசூர் எல்லை பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேவேளையில், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு நோக்கி வரும் பேருந்துகள் வழக்கம்போல தடையின்றி இயங்கி வருகின்றன.</p><h2>போலீசார் குவிப்பு</h2><p>மற்றபடி கார், சரக்கு வாகனங்கள் வழக்கமாக சென்று வருகின்றன. ஓசூரிலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் பயணிகள் தமிழக மாநில எல்லை வரை செல்லும் நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் அத்திப்பள்ளிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பெங்களூரு செல்கின்றனர். மேலும் தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 346 புகார்களுக்கு உடனடி தீர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-resolution-of-346-complaints-within-a-single-week-through-the-singappenn-special-task-force</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-resolution-of-346-complaints-within-a-single-week-through-the-singappenn-special-task-force#comments</comments><guid isPermaLink="false">fe2d1555-c561-4131-b1c3-516082350bf7</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:20:58 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:20:58.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/04as6yht/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/04as6yht/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநிலம் முழுவதும் துரிதமான கள் நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p><p>இந்த நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 346 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தவிர 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன 14 குழந்தைகள், 6 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <p>இதே காலகட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் 3,580 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் 51 பேர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை ‘உங்கள் அருகில் பி.எப்.&apos; முகாம்: குறைகளை நிவர்த்தி செய்யலாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pf-near-you-camp-tomorrow-in-chennai-we-can-address-grievances</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pf-near-you-camp-tomorrow-in-chennai-we-can-address-grievances#comments</comments><guid isPermaLink="false">94eee44c-0644-4e1b-bdbb-e82ae00e7fca</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:18:40 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:18:40.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Information,தகவல்,Commissioner,Zonal,EPFO,Grievance Redressal Camp,குறைதீர் முகாம்,இபிஎப்ஓ,மண்டல ஆணையர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/6ggzl8vv/Untitled4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ‘உங்கள் அருகில் இ.பி.எப்.' முகாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/6ggzl8vv/Untitled4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அண்ணா சாலையில் உள்ள மவுண்ட் ரோடு பிலாலில் நாளை நடைபெறும் ‘உங்கள் அருகில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D.%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">பி.எப்.' முகாமில்</a> கலந்து கொண்டு உங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம். </p><p>இ.பி.எப்.ஓ. அமைப்பின் தகவல் வைப்பு நிதி மண்டல ஆணையர் ரேணு ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இ.பி.எப்.ஓ.) சார்பில் “உங்கள் அருகில் பி.எப்." என்ற பெயரில் முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மவுண்ட் ரோடு பிலாலில் நாளை (திங்கட்கிழமை) முகாம் நடைபெற உள்ளது. </p><p>இதுவரை தீர்க்கப்படாத குறைகளை கொண்டுள்ள இ.பி.எப். சந்தாதாரர்கள் உள்பட எந்தவொரு பங்குதாரரும், தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக உரிய ஆவணங்களுடன் நேரடியாக வருகை தரலாம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-coimbatore-metro-rail-project-rejected-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-coimbatore-metro-rail-project-rejected-again#comments</comments><guid isPermaLink="false">c97cb6e9-fe16-428f-bb46-5758276dd3e0</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:15:48 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:15:48.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Madurai,மதுரை,மெட்ரோ ரெயில்,மத்திய அரசு,Metro train,Metro Rail Project</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/fnhkurbl/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/fnhkurbl/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மதுரை, கோவை மெட்ரோ திட்டம்</h2><p>சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவையில் 39 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது. </p><p>மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த உள்ளது. 27 கி.மீ. உயர்மட்டப்பாதையில் 23 மெட்ரோ ரெயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்க திட்டமிடப்பட்டது. கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்கெனவே வழங்கியது.</p><h2>முதல் நிராகரிப்பு</h2><p>இதையடுத்து, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க குறைந்தது 20 லட்சம் மக்கள்தொகை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி, திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.</p><h2>2-வது முறை...</h2><p>இதனை தொடர்ந்து மெட்ரோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது. </p><p>மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை எனவும் மதுரை, கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை எனவும் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பதில் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் என மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>கடந்த நவம்பரில் நிராகரிக்கப்பட்டு மே மாதத்தில் மீண்டும் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: ஏரியில் சட்டவிரோதமாக ரசாயன கழிவு வெளியேற்றம் - பொதுமக்கள் புகார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-illegal-discharge-of-chemical-waste-into-the-lake-public-complaint</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-illegal-discharge-of-chemical-waste-into-the-lake-public-complaint#comments</comments><guid isPermaLink="false">8c219244-ddaa-423c-90b2-6b8d16335572</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:12:28 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:12:28.520Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/sfrsg2uj/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/sfrsg2uj/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் டேங்கர் லாரி மூலம் ஏரி பகுதியில் சட்டவிரோதமாக ரசாயன கழிவு வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் 400-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பல்வேறு நீர்நிலைகளில் சட்டவிரோதமாக கொட்டப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/niKay7K2New"></iframe></figure>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flocked-to-kanyakumari-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flocked-to-kanyakumari-2#comments</comments><guid isPermaLink="false">96499fd9-f8c9-4f76-939d-e083a32279b5</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:09:44 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:09:44.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/i8opxv43/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/i8opxv43/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.</p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.</p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.</p><p>படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.</p><p>கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானின் சேவையை நாடு என்றும் நினைவுகூரும் – தமிழிசை சௌந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-country-will-always-remember-dharmendra-pradhans-service-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-country-will-always-remember-dharmendra-pradhans-service-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">cf29e2cb-1d16-4b06-9a09-8cb091ca946a</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:59:47 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:59:47.406Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilisai Soundararajan,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,தமிழிசை சௌந்தரராஜன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/g0y6nt8r/tamilisai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/g0y6nt8r/tamilisai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முன்னாள் பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D">தமிழிசை சவுந்தரராஜன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தார்மீகப் பொறுப்பை ஏற்று தனது பதவியை விலகியுள்ள தர்மேந்திர பிரதான் அவர்களின் முடிவு, ஜனநாயகப் பொறுப்புணர்வின் உயரிய எடுத்துக்காட்டாகும். ஆனால், மத்திய கல்வி மந்திரியாக அவர் நாட்டிற்காக ஆற்றிய மகத்தான பங்களிப்பை எதுவும் மங்கச் செய்ய முடியாது. தேசிய கல்விக் கொள்கை (NEP) உருவாக்கம் மற்றும் இந்திய கல்வி அமைப்பில் அவர் கொண்டு வந்த தொலைநோக்குப் பார்வையுடனான சீர்திருத்தங்கள், நாட்டின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன. நான் நன்றியோடு ஒன்றை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.</p><h2>தன்னலமற்ற சேவை</h2><p>புதுச்சேரி துணைநிலை கவர்னராக நான் பணியாற்றிய காலத்தில், ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளிகளை CBSE பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வர தீர்மானித்தோம். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை செயல்படுத்துவதற்கு தர்மேந்திர பிரதான் முழு மனதுடன் ஆதரவு ஆதரவளித்து அத்தனை முயற்சிகளுக்கும் உடன் நின்றார்கள்.அதன் பின்னர் புதுச்சேரிஅரசு பள்ளிகளுக்குச் சென்று, சமூகத்தின் மிகவும் விளிம்புநிலை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் CBSE கல்வியின் மூலம் புதிய தன்னம்பிக்கையுடனும் உயர்ந்த கனவுகளுடனும் படிப்பதை நான் நேரில் கண்டேன். கல்வித் துறைக்கும், பாரதத்திற்கும் அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவையை நாடு என்றும் நன்றியுடன் நினைவுகூரும். இனிவரும் காலங்களிலும் அவர் தனது திறமையாலும் அர்ப்பணிப்பாலும் நாட்டிற்கு மேலும் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக சேவை செய்வார் என்ற முழு நம்பிக்கை எனக்குள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓசூரில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gst-officer-arrested-for-accepting-rs1-lakh-bribe-in-hosur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gst-officer-arrested-for-accepting-rs1-lakh-bribe-in-hosur#comments</comments><guid isPermaLink="false">7f8f30ac-bfe0-4688-a8f1-67fd41d939b2</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:46:57 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:46:57.275Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,Bribery,Hosur,ஓசூர்,கிருஷ்ணகிரி,Krishnagiri,GST,அலுவலகம்,Office,Commercial Tax Department,வணிக வரித்துறை,Officer arrested,ஜி.எஸ்.டி. அதிகாரி கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/asscffp0/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.எஸ்.டி. அதிகாரி கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/asscffp0/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஓசூர், </p><p>ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகில் சீதாராம் மேடு பகுதியில் வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">ஜி.எஸ்.டி. அதிகாரி</a> ரூ.1 லட்சம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> வாங்கியபோது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>ரூ.1 லட்சம் லஞ்சம்</h2><p>ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகில் சீதாராம் மேடு பகுதியில் வணிக வரித்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி காலனியை சேர்ந்த கலையரசன் (வயது45) என்பவர் மாநில வரி அலுவலராக (ஒசூர் வடக்கு) பணியாற்றி வருகிறார். ஒசூர் ஜூஜூவாடி பகுதியை சேர்ந்த நம்பி(75) என்ற தொழிலதிபர், ஜி.எஸ்.டி. தொகையை பெறுவதற்காக கலையரசனை அணுகினார். அப்போது அவர் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் முடித்து தருவதாக கூறியுள்ளார்.</p><h2>ஜி.எஸ்.டி. அதிகாரி கைது</h2><p>ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத நம்பி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் அங்கு வந்தனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய பணத்தை கலையரசனிடம் நம்பி கொடுக்கும்போது அவர் கையும், களவுமாக பிடிபட்டார்.</p><p>இதனை தொடர்ந்து போலீசார் கலையரசனிடம் விசாரணை நடத்தி, பின்னர் அவரை கைது செய்தனர். தொடர்ந்து வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் ஒசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-egg-laying-hens-drops-by-rs-5-per-kg-in-the-namakkal-zone-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-egg-laying-hens-drops-by-rs-5-per-kg-in-the-namakkal-zone-2#comments</comments><guid isPermaLink="false">05669afd-7a20-4aea-9797-913ba1821df0</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:31:36 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:31:36.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டைக்கோழி,hens</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/j1h31om7/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/j1h31om7/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாமக்கல்,  </p><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர்.</p><p>எனவே முட்டை கோழி விலை கிலோ ரூ.115ஆக குறைந்து உள்ளது. கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பெருக்குக்கு காவிரியில் புனித நீராட மேட்டூர் அணை திறக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-mettur-dam-be-opened-for-holy-bathing-in-cauvery-for-aadi-perukku-peoples-expectations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-mettur-dam-be-opened-for-holy-bathing-in-cauvery-for-aadi-perukku-peoples-expectations#comments</comments><guid isPermaLink="false">e6a33e31-7ba0-4ccc-9ebe-3e7bd8dcc06e</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:28:12 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:28:12.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,Cauvery,காவிரி,ஆடிப்பெருக்கு,aadi perukku</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/3fw7i440/77.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/3fw7i440/77.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர், </p><p>அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றங்கரைகளில் புனித நீராட வசதியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.</p><h2>ஆடிப்பெருக்கு</h2><p>பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை தவிர்த்தாலும், சுப காரிய பேச்சுக்களை தொடங்கவும், புதிய முயற்சிகளை தொடங்கவும் ஏற்ற நாளாக ஆடிப்பெருக்கு கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு என்றதும், காவிரிக்கரையில் செய்யப்படும் வழிபாடுகளே நம் அனைவரின் நினைவுக்கு வரும்.</p><p>புதிதாக திருமணமான பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் தாலி பெருக்குதலைச் செய்யலாம். பிற சுமங்கலிகள் ஆற்றங்கரைக்குச் சென்று தாலிக்கயிறு மாற்றிக்கொள்வதும் உண்டு. சிலர் மஞ்சள் கயிற்றை மூத்த சுமங்கலிகள் அல்லது கணவன் கையில் கொடுத்துக் கட்டிக்கொள்வதும் உண்டு. இவ்வாறு செய்வதன் மூலம் நித்திய சுமங்கலி பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை ஆகும். பருவமழை தவறிய காலக்கட்டங்களில் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் ஆடிப்பெருக்கை காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் கொண்டாட ஏதுவாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.</p><h2>தண்ணீர் திறக்கப்படுமா?</h2><p>அதாவது ஆடி 18-ந் தேதிக்கு சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி வருகிறது. அதே நேரத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வருவதால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்து உள்ளது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 74.26 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு வெறும் 41 கனஅடி என்ற அளவில் தான் உள்ளது.</p><p>தற்போதைய சூழலில் பருவமழை தீவிரம் அடையாத பட்சத்தில் காவிரி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பதே கேள்விக்குறியாகி வருகிறது. இந்த நிலையில், ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் பொதுமக்கள் வழிபட தண்ணீர் திறக்கப்படுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும் புனித நீராட வசதியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.</p><h2>பொதுப்பணித்துறை விளக்கம்</h2><p>இது குறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்ட போது. 'வழக்கமாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை</a>யில் இருந்து ஆடிப்பெருக்கை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழக அரசு இந்த மாத இறுதிக்குள் தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கோவை விமான நிலைய விரிவாக்கம்: சாலை அமைக்க நில அளவை பணி நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-airport-expansion-land-survey-work-for-road-construction-completed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-airport-expansion-land-survey-work-for-road-construction-completed#comments</comments><guid isPermaLink="false">d09a3bc6-56c8-4cb2-9de7-9e1e94790cee</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:15:33 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:15:33.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கோவை விமான நிலையம்,Coimbatore Airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/xed2w01m/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/xed2w01m/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>விமான நிலைய விரிவாக்கம்</h2><p>கோவையின் வளர்ச்சிக்கு விமான நிலைய விரிவாக்கம் மிகவும் அவசியம். இங்குள்ள 9 ஆயிரம் அடி நீள ஓடுபாதையை 12 ஆயிரம் அடியாக நீட்டிக்க வேண்டும். இதற்காக கடந்த காலத்தில் ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்ப டுத்தப்பட்டது. ஆனால் கூடுதலாக 7 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. எனவே நிலத்தை கையகப்படுத்தும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.</p><p>கோவை விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டால் போயிங் 777, ஏர்பஸ் ஏ350 போன்ற பெரிய சர்வதேச விமானங்களை கோவையில் இருந்து நேரடியாக இயக்க முடியும். மேலும் சரக்கு விமானங்களையும் பிற நாடுகளுக்கு இயக்க முடியும். இதனால் தொழில் வளர்ச்சி மேம்படும்.</p><h2>சுற்றுச்சுவர் கட்டும்பணி</h2><p>இந்த நிலையில் கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது பயன்பாட்டிற்கு 10.5 மீட்டர் அகலமுள்ள சாலை அமைக்கும் அளவிற்கு இடம் விட்டு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று கூறினர்.</p><p>ஆனால் விமான நிலைய அதிகாரிகள் 4 மீட்டர் மட்டும் சாலைக்கு விடப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் 10.5 மீட்டர் அகல சாலைக்கு இடம் விடக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுச்சுவர் கட்டும் பணி பாதிக்கப்பட்டது.</p><h2>நில அளவை பணி</h2><p>இதைத்தொடர்ந்து கலெக்டர் பவன்குமார் அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்து அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்டார். அப்போது 10.5 மீட்டர் அகல சாலை இருந்தால் மட்டுமே தங்களது பகுதியில் கட்டுமான பணிகள் எதுவும் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும். வாகனங்கள் எளிதாக சென்று வர முடியும் என்றனர்.</p><p>அதை ஏற்று அந்த பகுதியில் 10.5 மீட்டர் அகல சாலை அமைக்க நில அளவை பணி மாவட்ட நிர்வாகத்தால் கடந்த 3 நாட்களாக நடைபெற்று நிறைவடைந்தது. இது தொடர்பாக விமான நிலைய ஆணையத்திடம் அறிக்கை மற்றும் வரைபடம் வழங்கப்பட்டு உள்ளது. ஆணையத்தின் ஒப்புதல் பெற்றதும் விமான நிலைய சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சார்லப்பள்ளி-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekly-special-train-service-between-charlapally-kollam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekly-special-train-service-between-charlapally-kollam#comments</comments><guid isPermaLink="false">1b6b5815-a1d6-46ab-a2a9-1a0f0a1da4d2</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:10:54 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:10:54.267Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Kollam,Special train,கொல்லம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/u22fdpo1/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/u22fdpo1/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருப்பூர், </p><p>அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக ஐதராபாத்தில் உள்ள சார்லப்பள்ளி-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சார்லப்பள்ளி-கொல்லம் (வண்டி எண்.07195) வாராந்திர சிறப்பு ரெயில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 14-ந்தேதி முதல் செப்டம்பர் 4-ந்தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் (4 சேவைகள்) சார்லப்பள்ளியில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு கொல்லம் சென்றடையும். </p><p>இந்த ரெயில் திருப்பூருக்கு சனிக்கிழமைகளில் நள்ளிரவு 2.25 மணிக்கு வந்து 2.30 மணிக்கு புறப்படும். கொல்லம்-சார்லப்பள்ளி (07196) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 15-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை சனிக்கிழமைகளில் (4 சேவைகள்) கொல்லத்தில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு சார்லப்பள்ளியை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 2 மணிக்கு வந்து 2.05 மணிக்கு புறப்படும்.</p><p>மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சண்டே ஸ்பெஷல்: சுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி?</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/sunday-special-how-to-make-delicious-mango-rice</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/sunday-special-how-to-make-delicious-mango-rice#comments</comments><guid isPermaLink="false">3a76d66e-660d-468e-b631-67f4af214244</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:09:15 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:09:15.116Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sunday Special,Bachelors Cooking Tips,சண்டே ஸ்பெஷல்,பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ்,make delicious,சுவையான,மாங்காய் சாதம்,செய்வது எப்படி?,Mango Rice,How to Make?</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/nv3xn80n/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுவையான மாங்காய் சாதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/nv3xn80n/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>தேவையான பொருட்கள்</h2><p>பொன்னி அரிசி - 200 கிராம்</p><p>மாங்காய் - 200 கிராம் </p><p>சீரகம் - 1 டீஸ்பூன் </p><p>மிளகு - ¾ டீஸ்பூன் </p><p>வெந்தயம் - ½ டீஸ்பூன் </p><p>கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன் </p><p>கடுகு - 1 டீஸ்பூன் </p><p>உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன் </p><p>கடலை பருப்பு - 1 டீஸ்பூன்</p><p>கறிவேப்பிலை - 2 கொத்து </p><p>வறுத்த வேர்கடலை -3 டேபிள்ஸ்பூன்</p><p>முந்திரி பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் </p><p>பச்சை மிளகாய் - 3 </p><p>காய்ந்த மிளகாய் - 3</p><p>பெருங்காயப் பொடி - 2 சிட்டிகை </p><p>மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன் </p><p>உப்பு - தேவையான அளவு. </p><h2>செய்முறை</h2><p>முதலில், அரிசியை வேகவைத்து சாதமாக வடித்து, உதிரி உதிரியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். சாதம் குழைந்துவிடக்கூடாது. அடுத்து, மாங்காயை தோல் நீக்கி, துருவி எடுத்துக்கொள்ளவும்.</p><h2>மசாலா பொடி</h2><p>தொடர்ந்து, மாங்காய் சாதத்துக்கு தேவையான மசாலா பொடியை தயார் செய்ய வேண்டும். அதற்கு கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைக்கவும். பாத்திரம் சூடாகியதும் சீரகம், வெந்தயம், மிளகு சேர்த்து நன்கு வறுக்கவும். சிவக்க வறுத்தால்போதும், கரிந்துவிடக்கூடாது. பின்னர், அதை ஆற வைத்து பொடியாக திரித்து வைத்துக்கொள்ளவும்.</p><h2>வறுத்தல்</h2><p>அடுத்து, அடுப்பில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, பாத்திரம் சூடானவுடன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடாகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொறியவிடவும். நன்கு பொறிந்த உடன் 2 கொத்து கறிவேப்பிலை, வறுத்த வேர்க்கடலை, உடைத்த முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். நன்கு வறுபட்டவுடன், பச்சை மிளகாயை இரண்டாக கீறி சேர்க்கவும். தொடர்ந்து, காய்ந்த மிளகாயையும் போடவும். நன்கு வறுத்துக் கொண்டே பெருங்காய தூளை சேர்க்கவும். அதன்பிறகு, துருவிவைத்த மாங்காயை சேர்க்கவும். ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.</p><h2>சாதத்தை சேர்த்து களந்து விட வேண்டும்</h2><p>தொடர்ந்து, வடித்து உதிரி உதிரியாக எடுத்துவைத்துள்ள சாதத்தை சேர்க்கவும். வறுத்து திரித்து வைத்த மசாலா பொடியையும் சேர்க்கவும். சாதத்தில் எல்லா இடங்களிலும் மசாலா படும் அளவுக்கு நன்கு களந்துவிடவும். உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும். சுவையான, மனமான மாங்காய் சாதம் ரெடி. பள்ளி செல்லும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/freedom-of-speech-has-been-curtailed-under-the-tvk-government-former-minister-raghupathy-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/freedom-of-speech-has-been-curtailed-under-the-tvk-government-former-minister-raghupathy-alleges#comments</comments><guid isPermaLink="false">3bbf51a0-9dda-4471-bff5-8d169a0bca72</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:06:19 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:06:19.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,ரகுபதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/gcu1oxnu/Ragupati.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் அமைச்சர் ரகுபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/gcu1oxnu/Ragupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> நெல்லை </p><p>தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.அவரை தி.மு.க முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று சிறைக்கு சென்று சந்தித்தனர்.பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>பொய் வழக்கு</h2><p>த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அரசை விமர்சித்து சாதாரண பேச்சுவாக்கில் பேசுபவர்கள் மீதெல்லாம் பொய் வழக்கு போடப்படுகிறது. த.வெ.க அரசு முழுக்க முழுக்க பா.ஜனதாவின் 'சிலீப்பர் செல்லாக' இயங்குகிறது. பா.ஜனதா மிரட்டுவதற்கு ஏற்ப செயல்படாவிட்டால் தங்களுக்கு வரும் நிதி நின்றுவிடுமோ என்ற பயத்திலேயே த.வெ.க. அரசு செயல்படுகிறது. மக்கள் மீது அரிசி விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என பொருளாதார சுமையை சுமத்தி விட்டு, சட்டமன்றத்தையே ஒரு திரைப்படக் கொட்டகை போலவும், தயாரிப்பு நிறுவனம் போலவும் மாற்றி சினிமாவை வேடிக்கை பார்க்கும் அரசாக இது உள்ளது. 'ஜனநாயகன்' படத்தில் நான்கு அமைச்சர்கள் நடித்துள்ள சூழலில், கரூர் சம்பவத்தின்போது கண்ணீர் விடாதவர்கள் இப்போது அந்த படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்.</p><h2>உரிமை மீறல் பிரச்சினை</h2><p>சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வெளிநடப்பு செய்ய முழு உரிமை உண்டு. ஆனால், 'சட்டமன்றக் கதவுகளை மூடுங்கள்' என முதல்-3 அமைச்சர் விஜய் கூறியது உறுப்பினர்களை சிறை வைப்பதற்கு சமமான ஜனநாயக உரிமை மீறலாகும். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வரும் நிலையில், இது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோ சித்து உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும். இதுமட்டுமன்றி, கோவிலுக்கு சொந்தமான நிலங்களைப் பட்டா மாற்றம் செய்து சூறையாடுவதும், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளதும் தான் த.வெ.க. அரசின் நிஜ முகமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா ஆக. 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aral-chairman-arunachalasamy-temple-aadi-amavasya-festival-begins-with-flag-hoisting-on-aug-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aral-chairman-arunachalasamy-temple-aadi-amavasya-festival-begins-with-flag-hoisting-on-aug-3#comments</comments><guid isPermaLink="false">d434c30c-ac04-4d7f-86bb-05f9f5c9ab22</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:00:16 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:00:16.584Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவில்,ஏரல்,Eral,Aadi Amavasai festival,ஆடி அமாவாசை திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/g5hzbwt4/76.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/g5hzbwt4/76.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>ஏரல், </p><p>ஏரலில் உள்ள சேர்மன் அருணாச்சலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.</p><h2>கொடியேற்றம்</h2><p>ஏரலில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சேர்மன் அருணாச்சலசாமி கோவில்</a> உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 3-ந் தேதி காலை 6.30 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருணாச்சலசாமி கோவிலில் வலம் வருதல் நடைபெறுகிறது. 4-ந் தேதி இரவு 8 மணிக்கு திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி. 5-ந் தேதி இரவு 8 மணிக்கு முல்லை சப்பரத்தில் சதாசிவ மூர்த்தி அலங்காரத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 11-ந் தேதி வரை பல்வேறு சப்பரத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந் தேதி பகல் 1.30 மணிக்கு சாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, மாலை 5 மணிக்கு இலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலம், இரவு 11 மணிக்கு சாமி கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளால் நடக்கிறது.</p><h2>வெள்ளை சாத்தி தரிசனம்</h2><p>13-ந் தேதி காலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு உள்ளிட்டவை நடக்கிறது. 14-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, பொருநை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம். மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடைபெறுகிறது. அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அத்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வறண்ட 3,488 ஏரிகள் - நீர்வளத்துறை தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3488-lakes-dry-up-in-tamil-nadu-water-resources-department-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3488-lakes-dry-up-in-tamil-nadu-water-resources-department-information#comments</comments><guid isPermaLink="false">0d11ce20-e07f-4a7f-8dc3-879b73498962</guid><pubDate>Sun, 26 Jul 2026 01:51:59 +0000</pubDate><atom:updated>2026-07-26T01:51:59.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அணைகள்,dams,குடிநீர்,drinking water,Water Resources Department,நீர்வளத்துறை,lakes,ஏரிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/n4c2j85t/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/n4c2j85t/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். இதில் மேட்டூர், பவானிசாகர், பெரி யாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட் டும் 198 டி.எம்.சி. இந்த அணைகள் பல்வேறு மாவட்டங்களின் பாசனம், குடிநீர் தேவையை மட்டுமின்றி, தொழிற்சாலைகளின் நீர் தேவையையும் பூர்த்தி செய்கின்றன.</p><p>தற்போது 90 அணைகளிலும் சேர்த்து, 70.29 டி.எம்.சி. அதா வது 31.33 சதவீதம் நீர் மட்டுமே உள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 36.47 டி.எம்.சி. ஈரோடு பவானிசாகரில் 6.25, கோவை பரம்பிக்குளத்தில் 3.65, சாத்தனூர் 2.12 டி.எம்.சி., பேச்சிப்பாறை 2 டி.எம்.சி., தண்ணீர் அதிகபட்சம் இருப்பு உள்ளது. அணைகளில் சேமிக்கப்பட்டுள்ள நீர், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக திறக்கப்பட்டு வருகிறது.</p><h2>வறண்ட ஏரிகள்</h2><p>தமிழகத்தில் 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகள் உள்ளன. அவற்றில் 419 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 579 ஏரி கள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பியுள்ளன. 1,060 ஏரிகள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. அதேபோல், 2 ஆயிரத்து 476 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 6 ஆயிரத்து 119 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. 3 ஆயிரத்து 488 ஏரிகள் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.</p><p>இதில் அதிகபட்சமாக மதுரையில் 1,340 ஏரிகளில் 1,062 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. அதேபோல், சிவகங்கையில் 1,459-ல் 523 ஏரிகளிலும், திருவண்ணாமலையில் 697-ல் 309 ஏரிகளிலும், தஞ்சாவூரில் 641-ல் 280 ஏரிகளிலும், திருவள்ளூ ரில் 578-ல் 156 ஏரிகளிலும், திண்டுக்கலில் 190-ல் 151 ஏரிகளிலும், நெல்லையில் 780-ல் 132 ஏரிகளிலும் தண்ணீர் இல்லை. இதற்கு தற்போது கடும் வெயில் கொளுத்துவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.</p><h2>வறட்சி அபாயம்</h2><p>நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையும் எந்த அளவுக்கு பெய்யும் என்று உறுதியாக கூற முடியாது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதைப் போல, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் கடுமையான அளவில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர்-மாணவி பலி: கடலில் குளித்து &apos;ரீல்ஸ்&apos; எடுத்தபோது சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-after-being-caught-in-giant-wave-tragedy-as-he-took-reels-while-bathing-in-the-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-dies-after-being-caught-in-giant-wave-tragedy-as-he-took-reels-while-bathing-in-the-sea#comments</comments><guid isPermaLink="false">2f7638f0-9974-4661-be70-9ca0d2faf46f</guid><pubDate>Sun, 26 Jul 2026 01:17:32 +0000</pubDate><atom:updated>2026-07-26T01:17:32.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மாணவி,பலி,ரீல்ஸ்,Reels,students,sea wave,மாணவர்,Ennore,எண்ணூர்,Engineering College,என்ஜினீயரிங் கல்லூரி,killed,Giant,ராட்சத கடல் அலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/6bym8nbk/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ என்ஜினீயரிங் கல்லூரி மாணவர், மாணவி பலி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/6bym8nbk/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எண்ணூர் அருகே கடலில் குளித்தபோது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">ராட்சத அலையில் சிக்கி</a> <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்-மாணவி பலி</a>யான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்</h2><p>சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் மகன் ஆகாஷ் (வயது 20). இவர் புழல் அடுத்த சூரப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த பலராமன் மகள் கிருத்திகா(21). இவரும் அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு விடுமுறை என்பதால் கிருத்திகா, ஆகாஷ் மற்றும் அதே கல்லூரியில் படிக்கும் மேலும் 3 சக மாணவ, மாணவிகள் என மொத்தம் 5 பேர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">எண்ணூர்</a> ராமகிருஷ்ணாநகர் கடற்கரைக்கு வந்தனர். </p><h2>ராட்சத அலையில் சிக்கி பலி</h2><p>பின்னர் கிருத்திகா, ஆகாஷ் மற்றும் அவர்களது நண்பர் என 3 பேர் கடலில் குளித்தனர். மற்ற 2 பேரும் கரையில் நின்றபடி, அவர்கள் குளிப்பதை 'ரீல்ஸ்' போடுவதற்காக செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தோன்றிய ராட்சத அலை, கிருத்திகா மற்றும் ஆகாஷ் இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது நண்பர்கள் 3 பேரும் கூச்சலிட்டனர். அங்கு மீன்பிடி வலைகளை சீரமைத்து கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து போராடி, கிருத்திகாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். </p><p>பின்னர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், கிருத்திகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h2>உடல் கரை ஒதுங்கியது</h2><p>இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருத்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலில் மாயமான ஆகாசை தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் தேடி வந்தனர். இதற்கிடையில் ஆகாஷ் உடலும் அதே பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>போதை ஒழிப்பை வலியுறுத்தி மாமல்லபுரம் முதல் மெரினா வரை 60 கி.மீ தூரம் கடலில் நீச்சல் அடித்து 23 வீரர்கள் சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/23-athletes-set-a-record-by-swimming-60-km-in-the-sea-from-mamallapuram-to-marina-to-emphasize-drug-eradication</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/23-athletes-set-a-record-by-swimming-60-km-in-the-sea-from-mamallapuram-to-marina-to-emphasize-drug-eradication#comments</comments><guid isPermaLink="false">31710c75-771e-4dc6-b19b-2dfb77d61a59</guid><pubDate>Sun, 26 Jul 2026 01:13:50 +0000</pubDate><atom:updated>2026-07-26T01:13:50.712Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழிப்புணர்வு,சாதனை,போதை ஒழிப்பு,Anti-drug awareness,Swimmer,நீச்சல் வீரர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/9cefy9rs/75.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/9cefy9rs/75.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக மாமல்லபுரத்தில் இருந்து மெரினா வரை 60 கி.மீ தூரம் கடலில் நீச்சல் அடித்து 23 வீரர்கள் சாதனை படைத்தனர்.</p><h2>தொடர் நீச்சல் பயணம்</h2><p>போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக செங்கல்பட்டு மாவட்ட கடலோர பாதுகாப்பு படை மற்றும் சென்னை தனியார் நீச்சல் வீரர்கள் அமைப்பு சார்பில் மாமல்லபுரம் கடலில் இருந்து சென்னை மெரினா கடல் வரை 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு இடைவெளி இல்லாமல் நீந்தும் சாதனை போட்டி நடத்தப்பட்டது. இதில் நீச்சல் வீரர்கள் 23 பேர் கடலோர காவல் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் முன்னிலையில் மாமல்லபுரம் கடலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்களின் தொடர் நீச்சல் பயணத்தை தொடங்கினர்.</p><h2>நீச்சல் பயணம் நிறைவு</h2><p>தொடர்ந்து தேவனேரி. பட்டிபுலம், புதுஎடையூர்குப்பம். நெம்மேலிகுப்பம். புதுகல்பாக்கம், கோவளம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், பெசன்ட் நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட ஆழ்கடல் வழியாக நீந்தி சென்று மெரினா கடலில் மாலை 4.30 மணிக்கு தங்கள் தொடர் நீச்சல் பயணத்தை நிறைவு செய்தனர். அவர்களுடன் கடலில் 5 படகில் நீச்சல் வீரர்களுக்கு அருகில் மருத்துவ குழுவினர், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">நீச்சல்</a> பயிற்சியாளர்கள், உறவினர்கள் சென்றனர். மெரினா கடலில் கரை ஏறிய 23 நீச்சல் வீரர்களை உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினார்.</p>]]></content:encoded></item><item><title>கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் ‘நீட்’ ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது - கனிமொழி எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-a-possibility-that-neet-could-be-scrapped-if-education-is-moved-to-the-state-list-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-a-possibility-that-neet-could-be-scrapped-if-education-is-moved-to-the-state-list-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">b3daf1a5-2236-46b5-bf14-ed8fc05e63be</guid><pubDate>Sun, 26 Jul 2026 00:58:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T00:58:00.242Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Kanimozhi MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/daezf4st/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/daezf4st/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- </p><p>“மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்ற பிம்பத்தை பரப்பக்கூடிய சூழலில், இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை கையில் எடுத்து மத்திய அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். </p><p>அடுத்ததாக மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள். தி.மு.க. தொடர்ந்து முன்வைக்கக்கூடிய கோரிக்கையும் அதுவே. மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வந்தால் நிச்சயமாக ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.”</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/deadline-to-apply-for-medical-counseling</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/deadline-to-apply-for-medical-counseling#comments</comments><guid isPermaLink="false">5f0cf4b5-9127-4516-a3b1-860d5bac5095</guid><pubDate>Sun, 26 Jul 2026 00:54:06 +0000</pubDate><atom:updated>2026-07-26T00:54:06.998Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விண்ணப்பம்,Application,deadline,Counseling,கலந்தாய்வு,medical college student,அவகாசம்,மருத்துவப்படிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/axpnnv9p/68.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/axpnnv9p/68.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு கடந்த 23-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அதில் 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. இந்த நிலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20">மருத்துவப் படிப்பு </a>கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்து இருக்கிறது.</p><h2>நாளை பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பிக்கலாம்</h2><p>அதன்படி, tnmedicalselection.org என்ற இணையதளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பிக்க முடியும். இது வரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-37</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-37#comments</comments><guid isPermaLink="false">6b3127ae-fc47-4803-ab07-59b05e9d219c</guid><pubDate>Sun, 26 Jul 2026 00:35:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T00:35:00.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/5c60lfev/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/5c60lfev/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (26.07.2026 ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாப சாவு: வீட்டிற்குள் புகுந்த மற்றொரு மான் உயிர் தப்பியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deer-dies-after-dog-attack-another-deer-survives-in-house-toilet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deer-dies-after-dog-attack-another-deer-survives-in-house-toilet#comments</comments><guid isPermaLink="false">b9d29585-2759-4217-a7e3-4b96fc0ba490</guid><pubDate>Sat, 25 Jul 2026 23:45:30 +0000</pubDate><atom:updated>2026-07-25T23:45:30.161Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Covai,உயிர்,புள்ளிமான் சாவு,survived,நாய்கள்dogs,Deer death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/kddwnk3f/deer.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/kddwnk3f/deer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை பேரூர் அருகே உள்ள கிராமப்பகுதியில், வெறிநாய்கள் கடித்ததில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">புள்ளிமான்</a> ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. நாய்களிடம் இருந்து தப்பிக்க குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, வீட்டின் கழிவறையில் தஞ்சமடைந்த மற்றொரு மான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.</p><h2>வெறிநாய்கள் கூட்டம்</h2><p>நேற்று அதிகாலை இரண்டு புள்ளிமான்கள் தண்ணீர் மற்றும் உணவு தேடி பேரூர் செட்டிபாளையம் கிராம பகுதிக்குள் நுழைந்துள்ளன. அப்போது, அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள் கூட்டம், மான்களை கண்டு குரைத்தபடி துரத்தி சென்றன .இதனால் அதிர்ச்சியடைந்த மான்கள், தங்களை காப்பாற்றி கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடின.  </p> <h2>புள்ளிமான் இறந்தது</h2><p>எனினும், ஒரு மானை விடாமல் துரத்திய நாய்க்கூட்டம், அதனை சூழ்ந்து கொண்டு உடலின் பல்வேறு இடங்களில் கொடூரமாக கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அந்த புள்ளிமான், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தது.</p><h2>வீட்டில் தஞ்சமடைந்த மான்</h2><p>இதற்கிடையே, நாய்களிடம் இருந்து தப்பிய மற்றொரு மான், அந்த பகுதியில் இருந்த ஒரு குடியிருப்பு பகுதிக்குள் அஞ்சியபடி ஓடியது. அங்கிருந்த ஒரு வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்ட அந்த மான், உள்ளே புகுந்து அங்கிருந்த கழிவறையில் தஞ்சமடைந்தது. வீட்டிற்குள் மான் புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக கழிவறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, பேரூர் போலீசாருக்கும், போளுவாம்பட்டி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.</p><h2>வனத்துறை மீட்பு</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், உயிரிழந்த மானின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டின் கழிவறையில் பத்திரமாக அடைக்கப்பட்டிருந்த மற்றொரு மானை லாவகமாக பிடித்து மீட்டனர். மீட்கப்பட்ட அந்த மானுக்கு லேசான காயங்கள் இருந்ததால், அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அந்த மான் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டது.</p><p> இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
பணம் கேட்டு மிரட்டி.. கல்குவாரியை சூறையாடிய த.வெ.க. நிர்வாகி அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-functionary-arrested-for-threatening-and-ransacking-a-stone-quarry-while-demanding-money</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-functionary-arrested-for-threatening-and-ransacking-a-stone-quarry-while-demanding-money#comments</comments><guid isPermaLink="false">e847ad8b-76d3-4f7f-99e8-6568a3fec15c</guid><pubDate>Sat, 25 Jul 2026 23:10:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T23:10:00.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கல்குவாரி,தூத்துக்குடி,arrest,Srivaikundam,ஸ்ரீவைகுண்டம்,Stone Quarry,TVK Candidate,த.வெ.க. நிர்வாகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xjswgw0h/9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/xjswgw0h/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஸ்ரீவைகுண்டம், </p><p>தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டியதுடன், அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக த.வெ.க. நிர்வாகி மற்றும் அவரது அண்ணன் ஆகிய  2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p>  <h2>கம்ப்யூட்டர், டி.வி., மோட்டார் சைக்கிள் சேதம்</h2><p>சம்பவத்தன்று ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய த.வெ.க. செயலாளர் பாலமுருகன் (33) மற்றும் அவரது அண்ணன் முண்டன் என்ற முண்டசாமி (36) ஆகியோர் கல்குவாரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும், அங்கிருந்த கம்ப்யூட்டர், டி.வி., மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.</p> <h2>புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை</h2><p>இந்த சம்பவம் குறித்து கல்குவாரி மேலாளர் பூலையா, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பாலமுருகன் மற்றும் முண்டசாமி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>2 பேரும் அதிரடியாக கைது</h2><p>தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலமுருகன் மற்றும் முண்டசாமி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மனைவி நடத்தையில் சந்தேகம்: கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-behaviour-suspicion-husband-stabs-to-death-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wife-behaviour-suspicion-husband-stabs-to-death-arrested#comments</comments><guid isPermaLink="false">707c2726-8c31-4eaa-ad3c-9136421c0eef</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:32:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:32:28.822Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,கைது,husband,arrest,wife,மனைவி,சந்தேகம்,குத்திக்கொலை,Suspicious behavior</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zfumdo39/family-issue.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெபேக்கா,பாகபிரகாஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/zfumdo39/family-issue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானிசாகர், </p><p>ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், கணவனால் இளம் தாய் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20">கத்தியால் குத்திக்கொலை </a>செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>இலங்கை தமிழர் முகாம்</h2><p>ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் லூர்துகுமார். அவருடைய மனைவி இந்திரகுமாரி. இவர்களுடைய மகள் ரெபேக்கா (வயது 24). இவருக்கும், ராமேசுவரத்தை சேர்ந்த தொழிலாளி பாகபிரகாஷ் (36) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் பாகபிரகாசும், ரெபேக்காவும் ராமேசுவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.</p><h2>பிரிந்து வந்த மனைவி</h2><p>இந்த நிலையில், ரெபேக்காவின் நடத்தையில் பாகபிரகாசுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கருத்து வேறுபாடு முற்றியதால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த ரெபேக்கா, தனது 3 குழந்தைகளுடன் தாய் வீடான பவானிசாகர் முகாமிற்கு வந்துவிட்டார்.</p><h2>சரமாரி கத்திக்குத்து</h2><p>மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரத்தில் இருந்த பாகபிரகாஷ், நேற்று காலை 10 மணி அளவில் ரெபேக்காவை பார்ப்பதற்காக பவானிசாகர் முகாமிற்கு வந்தார். அப்போது ரெபேக்காவிடம், தன்னுடன் மீண்டும் ராமேசுவரத்திற்கு குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு ரெபேக்கா மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற பாகபிரகாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரெபேக்காவை சரமாரியாக குத்தினார்.</p> <h2>பரிதாப உயிரிழப்பு</h2><p>இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரெபேக்கா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கொலையாளி பாகபிரகாஷை பிடித்து பவானிசாகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து பாகபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
சிறுமி உள்பட 9 பேரை கடித்து குதறிய வெறிநாய்.. பீதியில் பொதுமக்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabid-dog-mauls-9-people-including-a-young-girl-public-in-a-state-of-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rabid-dog-mauls-9-people-including-a-young-girl-public-in-a-state-of-panic#comments</comments><guid isPermaLink="false">cafdba21-02ed-4df9-8e88-664552c4f903</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:24:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:24:00.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>street dogs,தூத்துக்குடி,தெருநாய்கள்,சிறுமி,Tuticorin,வெறிநாய்,dog mauls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/vaezgddw/8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ Image credits: AI]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/vaezgddw/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்திருப்பேரை, </p><p>தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை புளியமரத்து தெரு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை அவ்வப்போது விரட்டிச் சென்று கடிக்கின்றன.</p> <p>இதில் பலரும் காயமடையும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. நேற்று காலையில் அந்த பகுதியில் வெறிநாய் ஒன்று சாலையில் சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை விரட்டிச்சென்று கடித்தது. அதன்பிறகு நாயின் கவனம் அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களின் மீது திரும்பியது. சாலையில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, மாரி (45), பேச்சியம்மாள் (25), கவிதா (17) ஆகியோரை விரட்டிச்சென்று கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே அதே நாய் தென்திருப்பேரையை சேர்ந்த பால்சாமி, சுந்தரி உள்ளிட்ட 3 பேரையும் கடித்தது.</p><p>படுகாயமடைந்த 3 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர அதே பகுதியில் வெறிநாயால் கடிபட்ட மேலும் 2 பேர் அங்கு சென்று சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர்களின் பாதுகாப்பிற்காக பதவியையே தியாகம் செய்த தர்மேந்திர பிரதான் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhan-who-sacrificed-his-post-for-students-safety-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhan-who-sacrificed-his-post-for-students-safety-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">a409c9a8-237c-4fa1-852e-6c53a3f3ef96</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:03:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:03:10.086Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,பாதுகாப்பு,மாணவர்கள்,தர்மேந்திர பிரதான்,தியாகம்,பதவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/tmkr5d9y/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/tmkr5d9y/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவர்களின் பாதுகாப்பிற்காக பதவியையே தியாகம் செய்த தர்மேந்திர பிரதான் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-எதிர்க்கட்சிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டன! இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டது!</p>  <h2>தியாகம்</h2><p>மாணவர் நலனை தவிர எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை என்பதை வார்த்தையில் மட்டுமன்றி தனது செயலிலும் செய்து காட்டியுள்ளார், நமது பிரதமர் மோடி. சமூக விரோத சக்திகளின் சூழ்ச்சிகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் உன்னத நோக்கத்திற்காக தனது பதவியையே துணிச்சலுடன் தியாகம் செய்துள்ளார், நமது முன்னாள் மத்திய கல்வி மந்திரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">தர்மேந்திர பிரதான்</a>.</p><p>சுயநலத்தை ஒதுக்கிவிட்டு, பொதுநலத்தை போற்றும் இத்தகைய தலைவர்களை பெற்றதால் தான், பாஜக ஓர் பேரியக்கமாக இன்றும் வளர்ந்து கொண்டே வருகிறது. </p> <h2>சமூக விரோத அமைப்பு</h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்காக அமைதியான வழியில் முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டத்திற்குள், சமூக விரோத அமைப்புகள் ஊடுருவ தொடங்கியதையும், நமது தேச ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் எதிரான முழக்கங்கள் ஒலிக்க ஆரம்பித்ததையும் யாரும் மறுக்க முடியாது. தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாணவர்களை குறி வைத்து காய் நகர்த்த துவங்கின. அதன் விளைவாகவே, அமைதிப் போராட்டம் அலங்கோல கலவரமாக உருவெடுக்கத் துவங்கியது. ஏராளமான பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. </p><h2>போராட்டம் நீடித்தது</h2><p>வினாத்தாள் கசிவினை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய தேர்வு முகமையின் 47  அதிகாரிகள் பணிநீக்கம், வினாத்தாள் கசிவு வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 10 கோடி வரை அபராதம் மற்றும் வினாத்தாள் கசிவிற்கு எதிரான வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா 2026 உள்ளிட்ட பல கடும் நடவடிக்கைகளை நமது பிரதமர் முன்மொழிந்த பிறகும் கூட, மாணவர்கள் போராட்டம் நீடித்தது.</p><h2>மாணவர் போராட்டம்</h2><p>இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, “மாணவர் போராட்டம்” என்ற போர்வையில், பொது அமைதிக்கும், மாணவர் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்க, சில சமூக விரோத அமைப்புகள் காத்துக் கொண்டிருந்தன. </p><h2>தார்மீகம்</h2><p>எனவே, தேசத்தின் ஒற்றுமையை காக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நமது மாணவர்கள் சட்டச் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் தங்கள் படிப்பிலும், எதிர்காலத்திலும், வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டுமென்ற நோக்கத்துடனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் தர்மேந்திர பிரதான் . இதற்கு பெயர் தோல்வியல்ல, “தார்மீகம்”.</p><h2>செவிசாய்க்க தவறுவதில்லை</h2><p>இளைஞர்களின் குரலுக்கு நமது பாஜக தலைமையிலான மத்திய அரசு என்றுமே செவிசாய்க்க தவறுவதில்லை என்பதை உணர்த்தும் இந்நிகழ்வு, நமது நாட்டில் கருத்துரிமையும், அடிப்படை சுதந்திரமும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான சான்று.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
பைக்குக்கு பதில் குதிரை... அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த டெலிவரி பாய்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-horse-instead-of-a-bike-a-delivery-boy-who-made-everyone-turn-and-look</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-horse-instead-of-a-bike-a-delivery-boy-who-made-everyone-turn-and-look#comments</comments><guid isPermaLink="false">b70f4ba2-3776-4e7f-8dec-1a2ad1d92809</guid><pubDate>Sat, 25 Jul 2026 20:40:13 +0000</pubDate><atom:updated>2026-07-25T20:40:13.252Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Viral Video,ஆலந்தூர்,டெலிவரி பாய்,delivery boy,Food delivery,குதிரை,horse</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/nuoym7mf/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/nuoym7mf/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஆலந்தூர், </p><p>சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில், குதிரையில் சென்று உணவு வினியோகம் செய்த ஊழியர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில், குதிரை மீது அமர்ந்தபடி உணவு பார்சல்களை எடுத்துச் செல்லும் அந்த வினியோக ஊழியரின் காட்சிகள் பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.</p><p>வழக்கமாக இருசக்கர வாகனங்களில் உணவு வினியோகம் செய்யப்படும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குதிரையை பயன்படுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், “ஈ.சி.ஆர். ராஜா டெலிவரி பாய்”, “டிராபிக்கை தவிர்க்க சூப்பர் ஐடியா” என நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். வித்தியாசமான இந்த முயற்சி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>போடிநாயக்கனூர்: கிணற்றில் தள்ளி 2 பள்ளி மாணவர்கள் படுகொலை; வாலிபர் கைது
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bodinayakkanur-two-schoolboys-murdered-thrown-into-well-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bodinayakkanur-two-schoolboys-murdered-thrown-into-well-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">ec267392-5eb6-4bbd-b9ed-1e04ff3249ac</guid><pubDate>Sat, 25 Jul 2026 20:19:27 +0000</pubDate><atom:updated>2026-07-25T20:19:27.694Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Youth,வாலிபர்,படுகொலை,murdered,well,கிணற்றில்,கைதுArrest,மாணவர்கள் students,போடிநாயக்கனூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/nfdwf3kf/well.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளி மாணவர்கள் படுகொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/nfdwf3kf/well.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போடிநாயக்கனூர், </p><p>தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பள்ளி செல்லும் இரண்டு சிறுவர்கள், புறா பிடித்து தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்டு, கிணற்றில் தள்ளி<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88"> படுகொலை</a> செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>புறா ஆசை காட்டி கடத்தல்</h2><p>ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மாலை இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த கேசவ் பாலாஜி (வயது 19) என்ற வாலிபர் பேச்சு கொடுத்துள்ளார். சிறுவர்களிடம், "உங்களுக்கு அழகான புறாக்கள் பிடித்து தருகிறேன், என்னோடு வாருங்கள்" என்று ஆசை வார்த்தை கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.</p><h2>கிணற்றில் தள்ளி கொலை</h2><p>அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்று பகுதிக்கு சிறுவர்களை கூட்டி சென்ற கேசவ் பாலாஜி, எதிர்பாராத விதமாக இரண்டு சிறுவர்களையும் கிணற்றுக்குள் தள்ளியுள்ளார். கிணற்றில் விழுந்த சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி, பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவர்களை பல இடங்களில் தேடினர். </p> <h2>தலைமறைவு</h2><p>சிறுவர்கள் மாயமானது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, வாலிபர் கேசவ் பாலாஜியுடன் சிறுவர்கள் சென்ற அதிர்ச்சி தகவல் அவர்களுக்கு கிடைத்தது. உடனடியாக பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கேசவ் பாலாஜியை தேடி புறப்பட்டனர். ஆனால், அதற்குள் அவர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானது தெரியவந்தது.</p><h2>வாலிபர் கைது </h2><p>தகவல் கிடைத்து் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கிணற்றிலிருந்து சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையை அரங்கேற்றிவிட்டு வெளியூருக்கு தப்பியோட முயன்ற வாலிபர் கேசவ் பாலாஜியை (19), போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.</p><p>நள்ளிரவில் போடி அருகே உள்ள மறைவிடத்தில் அவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்று, தப்பியோட முயன்ற வாலிபர் கேசவ் பாலாஜியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நல்லூர் சுங்கச்சாவடியில் 4 மாதங்களில் 3வது முறையாக கட்டணம் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nallur-toll-plaza-third-hike-in-four-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nallur-toll-plaza-third-hike-in-four-months#comments</comments><guid isPermaLink="false">59bed5e4-0aaa-4b99-bfe7-d6e54467e361</guid><pubDate>Sat, 25 Jul 2026 19:49:09 +0000</pubDate><atom:updated>2026-07-25T19:49:09.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுங்கச்சாவடி,கட்டணம் உயர்வு,hike,நல்லூர்,Nallur,toll booth fare</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7d7mlnsw/toll-gate.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/7d7mlnsw/toll-gate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p> சென்னை அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அடுத்தடுத்து கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், தற்போது வெறும் 4 மாத காலத்திற்குள் 3-வது முறையாக இந்த சுங்கக்கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது தினசரி பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><strong>வாகனங்கள் வாரியான புதிய கட்டண விவரங்கள்:</strong></p><h2>உள்ளூர் வாகன மாதாந்திர பாஸ் </h2><p>சுங்கச்சாவடியை சுற்றியுள்ள உள்ளூர்வாசிகளுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350-ல் இருந்து ரூ.360 ஆக (ரூ.10 உயர்வு) அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><h2>பேருந்து மற்றும் லாரிகள்</h2><p> கனரக மற்றும் வணிக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற வாகனங்கள்: இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் மல்டி-ஆக்சில் வாகனங்களுக்கும் அதற்கேற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.</p><h2>சுங்கக் கட்டண உயர்வு</h2><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்க கட்டணங்களை மாற்றியமைக்கும். ஆனால்,<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D"> நல்லூர் சுங்கச்சாவடியில்</a> கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களை தொடர்ந்து, தற்போது 4 மாதங்களுக்குள் 3-வது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.மொத்த விலை குறியீட்டு எண்  அடிப்படையிலான பணவீக்க தரவுகள் மற்றும் 'இணைப்பு காரணி' தொழில்நுட்ப மாற்றங்களின் காரணமாகவே இந்த அடுத்தடுத்த சுங்கக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 3-வது முறை</h2><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்க கட்டணங்களை மாற்றியமைக்கும். ஆனால், நல்லூர் சுங்கச்சாவடியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களை தொடர்ந்து, தற்போது 4 மாதங்களுக்குள் 3-வது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.</p> <h2>விலை உயர்வு அபாயம்</h2><p>சுங்கக் கட்டண உயர்வால் லாரிகளின் வாடகை அதிகரிக்கும் போது, வியாபாரிகள் அந்த கூடுதல் செலவை பொருட்களின் விலையில் சேர்த்துவிடுவார்கள். இதனால் சாமானிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-nainar-nagendran-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-nainar-nagendran-greetings#comments</comments><guid isPermaLink="false">40ecbc79-e538-425a-941c-ab9ee6f67ffa</guid><pubDate>Sat, 25 Jul 2026 17:53:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T17:53:40.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,birthday,வாழ்த்து,பிறந்தநாள்,best wishes,பாமக நிறுவனர் ராமதாஸ்,PMK founder Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/gboc0anl/ramdossnainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமதாஸ்,நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-25/gboc0anl/ramdossnainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">ராமதாஸ்</a> நல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டுமென, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>சமூகநீதிப்போராளி</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்; சமூகநீதிப்போராளி. மருத்துவர். ராமதாஸ், தான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தனக்கு பிறகு கட்சியை அன்புமணி ராமதாஸ் வழி நடத்தி  செல்வார்கள் என்றும் அறிவித்துள்ளார்.</p> <h2>சமூக நீதிக்காக போராடி சிறை சென்றவர்.</h2><p>மருத்துவர் தனது அரசியல் பணியை 40 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக தொய்வில்லாமல் நடத்தி வந்தவர். வன்னியர் சங்கம் தொடங்கி வன்னியர்களின் சமூக நீதிக்காக போராடி சிறை சென்றவர். </p><h2>உரிமைப்போராட்டம்</h2><p>சமூக நீதி, இடஒதுக்கீடு, கிராமப்புற வளர்ச்சி, தரமான கல்வி, பொதுசுகாதாரம், விவசாய முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூரண மதுவிலக்கு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற தனது கட்சியின் அடிப்படை கொள்கைகளை எந்த சமரசமும் இன்றி போராடி காத்துவருபவர் மருத்துவர் ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயக்கர் போன்ற மாபெரும் தலைவர்களுக்கு பின் அரசியல் களப்பணியாற்றி, அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக , 1980 களில் நடந்த அவரது வன்னியர் உரிமைப்போராட்டம் அரசியல் வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத காவியமாக இருக்கிறது.</p><h2>போட்டியிட மாட்டேன்</h2><p>நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ தான் போட்டியிட மாட்டேன் என்று ஆரம்ப கட்ட அரசியலில் அவர் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை காத்துவரும் பெரும் தலைவர்.  வன்னியர்கள், தலித்துகளை கொண்டு தன் அரசியல் பயணத்தை தொடங்கி அதற்கு விதையிட்டு அதை ஆலவிருட்சமாக வளர்த்தவர் ராமதாஸ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மீதும் பாரதப்பிரதமர் மோடி மீதும் அளப்பரிய பற்றும், பாசமும் கொண்டவர். </p> <h2>நம்பிக்கை</h2><p>இன்று அவரது 88 வது பிறந்தநாளையொட்டி, தனது பாட்டாளி சொந்தங்களிடம் இருந்தும், தனது 40 ஆண்டுளாக தீவிர அரசியல் களத்திலிருந்தும் அவர் விடைப்பெற்று இருப்பது, மனதிற்கு சற்று ஏற்க முடியாது என்றாலும் அவரது தீர்க்கதரிசனமான முடிவு நிச்சயம் இந்திய ஜனநாயகத்திற்கு தகுந்த பலனை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.</p><h2> வாழ்த்து</h2><p>மருத்துவர் நல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டுமென, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். </p><h2>பிராத்தனை</h2><p>கட்சியின் தலைமை பொறுப்பேற்று வழிநடத்த இருக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது தந்தையார் போல, அரசியல் களத்தில் பேரும், புகழும் பெற்று சிறப்பாக பணியாற்ற இந்நேரத்தில் எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்து அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>