<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 23 Aug 2026 09:07:20 +0000</lastBuildDate><item><title>அனுபவ நிலங்களுக்கு பட்டா கொடுக்காமல் இருந்த ஆட்சியாளர்கள் மீது என்ன நடவடிக்கை  - பெ. சண்முகம் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-action-against-rulers-who-denied-patta-for-customary-lands-pe-shanmugam-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-action-against-rulers-who-denied-patta-for-customary-lands-pe-shanmugam-asks#comments</comments><guid isPermaLink="false">4c292a58-0c96-4d36-bd91-6cda91426807</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:06:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:06:25.469Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>land,P. Shanmugam,Administrators,கேள்வி,பட்டா,நிலங்கள்,Occupation,ஆட்சியாளர்கள்,என்ன நடவடிக்கை,asks,பெ. சண்முகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/kmytj21q/communist.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெ. சண்முகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாலர் பெ. சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/kmytj21q/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனுபவ நிலங்களுக்குப் பட்டா தராமல் இருந்த ஆட்சியாளர்கள் மீது என்ன நடவடிக்கை?" என்று தவெக அரசுக்கு பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">மார்க்சிஸ்ட் </a>கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாலர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2> நடவடிக்கை</h2><p>தேனி மாவட்டம் மேகமழையில் 118 அரசு ஊழியர்களை அவர்களின் நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் நாளை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.</p> <h2>ஆக்கிரமிப்பாளர்கள்</h2><p>இப்போது அரசு ஊழியர்களாக உள்ளவர்களின் முப்பாட்டன், தாத்தா, அப்பா பயிர் செய்து வந்த நிலங்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஆக்கிரமிப்பு </a>என்றும், எனவே அவர்களின் வாரிசுகளான இப்போது அரசு ஊழியர்களாக உள்ளவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் வகைப்படுத்தி வெளியேற்ற உத்தரவு வழங்கி உள்ளது சுப்ரீம் கோர்ட்டு. இல்லை என்றால் ஊழியர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><h2>இது நீதியா? நியாயமா?</h2><p>இது நீதியா? நியாயமா? இதே அணுகுமுறையை நாடு முழுவதும் கடைப்பிடித்தால் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்கள் பணியை இழக்க வேண்டும் அல்லது நிலத்தை இழக்க வேண்டும்.</p> <h2>வன உரிமைச்சட்டம்</h2><p>பட்டா இல்லாதவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றால் நூறாண்டுகளாக பயிர் செய்தும், குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கொடுக்காததற்கு யார் பொறுப்பு ஏற்பது? அனுபவ நிலங்களுக்கு பட்டா கொடுக்காமல் இருந்த ஆட்சியாளர்கள் மீது என்ன நடவடிக்கை! வன உரிமைச்சட்டம் 2006, 20 ஆண்டுகளாக அமலில் இருந்தும் சட்டத்தை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?</p><h2>மனிதாபிமான கண்ணாடி</h2><p>சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் "ஆக்கிரமிப்பு கண்ணாடியை" அணிந்து கொண்டு பார்த்தால் ஆக்கிரமிப்பாகத் தான் தெரியும். மக்களின் வாழ்வாதாரம் என்ற "மனிதாபிமான கண்ணாடியை" அணிந்து கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்.</p><p>அநீதிக்கு எதிராக அணிதிரள்வீர் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கடலூர்: காதலனை கரம்பிடித்த திருநங்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-transgender-woman-embraces-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-transgender-woman-embraces-lover#comments</comments><guid isPermaLink="false">46f9dd12-521e-49ac-92fe-74ac8eaece0d</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:39:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:39:32.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கடலூர்,Marriage,transgender,திருநங்கை,TemplePriest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ov3ehuiu/lover33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
கடலூர்]]></media:title><media:description type="html"><![CDATA[  காதலனை கரம்பிடித்த திருநங்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ov3ehuiu/lover33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>கடலூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சஞ்சனா தனது காதலன் நாகராஜ் என்பவரை குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.</p><p>கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஆவணி மாத முகூர்த்தத்தை முன்னிட்டு ஒரே நாளில் 84 திருமணங்கள் நடைபெற்றன. இதில் நெகிழ்ச்சியான நிகழ்வாக, கடலூர் பகுதியைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">திருநங்கை</a> சஞ்சனா தனது காதலன் நாகராஜ் என்பவரை குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். </p><p>திருமணம் செய்துகொண்ட திருநங்கை சஞ்சனா நடனக் கலைஞராகவும், அவரது காதலன் நாகராஜ் பூசாரியாகவும் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் நில வெளியேற்ற நடவடிக்கைக்கு எதிராக அணிதிரள மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-party-calls-for-mobilization-against-land-eviction-drive-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-party-calls-for-mobilization-against-land-eviction-drive-in-theni#comments</comments><guid isPermaLink="false">a0ca1a9e-7c80-4996-a2b5-cf1479153557</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:24:35 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:24:35.866Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பெ.சண்முகம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,Communist Party of India (Marxist),p shanmugam,Marxist Party,மார்க்சிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/sviyc05g/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/sviyc05g/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இது நீதியா? நியாயமா?</h2><p>தேனி மாவட்டம் மேகமழையில் 118 அரசு ஊழியர்களை அவர்களின் நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் நாளை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.</p><p>இப்போது அரசு ஊழியர்களாக உள்ளவர்களின் முப்பாட்டன், தாத்தா, அப்பா பயிர் செய்து வந்த நிலங்களை ஆக்கிரமிப்பு என்றும், எனவே அவர்களின் வாரிசுகளான இப்போது அரசு ஊழியர்களாக உள்ளவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் வகைப்படுத்தி வெளியேற்ற உத்தரவு வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம். இல்லை என்றால் ஊழியர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p>இது நீதியா? நியாயமா? இதே அணுகுமுறையை நாடு முழுவதும் கடைப்பிடித்தால் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்கள் பணியை இழக்க வேண்டும் அல்லது நிலத்தை இழக்க வேண்டும்.</p><h2>அநீதிக்கு எதிராக அணிதிரள்வீர்</h2><p>பட்டா இல்லாதவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றால் நூறாண்டுகளாக பயிர் செய்தும், குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கொடுக்காததற்கு யார் பொறுப்பு ஏற்பது? அனுபவ நிலங்களுக்கு பட்டா கொடுக்காமல் இருந்த ஆட்சியாளர்கள் மீது என்ன நடவடிக்கை! வன உரிமைச்சட்டம் 2006, 20 ஆண்டுகளாக அமலில் இருந்தும் சட்டத்தை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?</p><p>உச்சநீதிமன்ற நீதிபதிகள் "ஆக்கிரமிப்பு கண்ணாடியை" அணிந்து கொண்டு பார்த்தால் ஆக்கிரமிப்பாகத் தான் தெரியும். மக்களின் வாழ்வாதாரம் என்ற "<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மனிதாபிமான </a>கண்ணாடியை" அணிந்து கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்.</p><p>அநீதிக்கு எதிராக அணிதிரள்வீர்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்: மருத்துவ ஊழியர் பணியிடைநீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-worker-suspended-after-complaint-of-sexual-harassment-against-student</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-worker-suspended-after-complaint-of-sexual-harassment-against-student#comments</comments><guid isPermaLink="false">fa1da1f9-1e7d-4c9d-8b27-74e981c511a7</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:21:22 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:21:22.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual harassment,பாலியல் தொல்லை,மாணவன்,student,suspended,பணியிடைநீக்கம்,மருத்துவ ஊழியர்,medical workers</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/lhon6vuc/suspension.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/lhon6vuc/suspension.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில்,</p><p>நாகர்கோவிலில் கல்லூரி மாணவனுக்கு, மருத்துவ ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ் சூப்பிரண்டிடம் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.</p><h2>மாணவனுக்கு பாலியல் தொல்லை</h2><p>நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 23 வயதான வாலிபர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-</p><p>நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறேன். குடும்ப வறுமையின் காரணமாக, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் மூலம் பகுதி நேர பணியாளராக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில் அங்கு பணியாற்றும் எனக்கு சீனியரான மருத்துவ ஊழியர் ஒருவர் என்னிடம் சகஜமாக பேசினார். பின்னர் திடீரென பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கினார்.</p><h2>ஓரின சேர்க்கை தொல்லை</h2><p>ஓரின சேர்க்கைக்கு, என்னை வற்புறுத்தி தொல்லை கொடுத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் என்னை தொடர்ந்து ஓரின சேர்க்கைக்கு அழைத்து வருகிறார். இதற்கிடையே பணி நிமித்தமாக சென்னைக்கு செல்ல வேண்டும் என்று அழைத்துச் சென்று பஸ்சில் வைத்து, எனக்கு பாலியல் தொல்லை அளித்து ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தினார். </p><p>மேலும் எனது வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்து மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினார். இந்த செயலால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இது குறித்து வெளியே கூறினால், வெளி மாநில பணியாளர்களை வைத்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p><p>இந்த சம்பவம் வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணியிடை நீக்கம்</a> செய்துள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றம் ரீல்ஸ்-க்காகவே நடைபெறுகிறது - திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-assembly-is-being-held-for-reels-dmk-mp-kanimozhi-criticises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-assembly-is-being-held-for-reels-dmk-mp-kanimozhi-criticises#comments</comments><guid isPermaLink="false">7a1cf4f0-6fbf-4f65-8395-1040f414899f</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:11:37 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:11:37.411Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,DMK,தமிழக சட்டசபை,Kanimozhi MP,கனிமொழி எம்பி,சட்டமன்றம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/07b6et1w/kanimozi33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  திமுக எம்.பி. கனிமொழி ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
சட்டமன்றம் ரீல்ஸ்-க்காகவே நடைபெறுகிறது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/07b6et1w/kanimozi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றமே ரீல்ஸ்காக தான் நடத்தப்படுகிறது என்ற உணர்வை தருகிறார்கள் என  தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.</p><p>தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20">தவெக ஆ</a>ட்சிக்கு வந்தபிறகு தொடர்ந்து குற்றங்கள் பெருகி கொண்டே வருகின்றன. குற்றங்களில் பல குற்றங்களை செய்திருப்பவர்கள் தவெகவினராக இருக்கிறார்கள்.  காவல் நிலைய மரணங்கள், பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது. </p><p>சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இந்த ஆட்சியில் மாறியிருக்கிறது. சட்டமன்றமே ரீல்ஸ்-க்காக நடத்தப்படுகிறது என்ற உணர்வை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>வேலூர்: முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-woman-snatches-3-sovereign-gold-chain-while-pretending-to-ask-for-address</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-woman-snatches-3-sovereign-gold-chain-while-pretending-to-ask-for-address#comments</comments><guid isPermaLink="false">c5df5d6d-aaac-4e52-b5db-8d69d3212af5</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:08:24 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:08:24.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,நகை பறிப்பு,chain snatched</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/gvf8aa7p/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/gvf8aa7p/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரை சேர்ந்தவர் சேகர் (வயது 63) நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (60) நேற்று முன்தினம் வேலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே உள்ள அமரம்பேடு பகுதியை கடந்து செல்லும் போது மழை பெய்ததால் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றனர்.</p><p>மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் மழைக்கு ஒதுங்கி நின்ற கணவன்-மனைவி அருகே வந்து முகவரி கேட்பது போல் கேட்டு தனலட்சுமி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார். இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தையில பேசிக்கிட்டு இருக்காங்க - அமைச்சர் ரமேஷ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-ministers-are-using-inappropriate-language-in-the-assembly-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-ministers-are-using-inappropriate-language-in-the-assembly-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">ccd92890-0559-4768-bc85-b1ee2e74933b</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:53:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:53:32.269Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,சட்டசபை,Trichy,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/gvx8j9kp/ramehs33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மாண்புடன் பேச மாட்றங்க என அமைச்சர் ரமேஷ் கூறினார்.
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/gvx8j9kp/ramehs33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறேன் என சட்டசபை உறுப்பினர் கே.என் நேரு கூறுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், பல இடங்களில் பொது மக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.</p><p>அதனையெல்லாம் சரிசெய்து தரமான பொருட்களை வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திமுககாரர்கள் பக்கம் கேமராவை திருப்பினால் எப்படி ரிலீஸ் போடமுடியும் என்பது மக்களுக்கு தெரியும், முதன்முறையாக சட்டப்பேரவை வந்த உறுப்பினர்கள் நாங்கள் மாண்புடன் கருத்துக்களை முன்வைக்கிறோம். மக்கள் பிரச்சினை பற்றி முன்வைக்கிறோம். எதிர்த்தரப்பின் கருத்துக்கும் பதில் சொல்லுகிறோம்.</p><p>ஆனால் இவர்கள் எழுந்து நின்று கூச்சல் போடுவதும், வரிக்கு வரி கூச்சல் போடுவதும், கத்துவது, ஓடுவது மற்றும் அமைச்சர்கள் பேசும்போது முன்னாள் அமைச்சர்கள் பின் வரிசையில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளில் பேசுவது என்று சட்டப்பேரவையைச் சண்டை நடத்தும் இடமாக மாற்ற செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு முதலில் மாண்பு இருக்கிறதா என்பது தெரிய வேண்டும். சட்டமன்றத்துல எப்படியாவது சண்டை நடக்கணும்னு எதிர்க்கட்சியினர் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.</p><p>நாங்கள் ஏதேனும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. ஜனநாயக முறைப்படி நடைபெறும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">சட்டப்பேரவை</a>யில் அனைவருக்குமான கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு, சில வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபு, கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பது தெரியும், அதனால் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க மாட்டீர்கள். பேரவைத் தலைவர் அவரது பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கோவளம் மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் பேசியது குறித்து சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்? - கிருஷ்ணசாமி கேள்வி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-no-statement-submitted-in-the-legislative-assembly-regarding-chief-minister-vijays-speech-at-the-kovalam-conference-krishnasamy-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-no-statement-submitted-in-the-legislative-assembly-regarding-chief-minister-vijays-speech-at-the-kovalam-conference-krishnasamy-asks#comments</comments><guid isPermaLink="false">5166c3f1-b438-4283-8d52-ca99c96bcd81</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:32:21 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:32:21.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக சட்டசபை,TN govt,TN Assembly,டாக்டர் கிருஷ்ணசாமி,Dr. Krishnasamy,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,புதிய தமிழகம்,TN Assembly session,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/p4mq2l3l/joes.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/p4mq2l3l/joes.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கோவளம் மாநாட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய் </a>பேசியது குறித்து சட்டமன்றத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்? என புதிய தமிழகம் கட்சி நிறுவனரும், தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார். </p><h2>ஆக்கபூர்வமான பதில்</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>துறை ரீதியான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அன்றாடம் எழும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் வினாக்களுக்கு, ஆக்கபூர்வமாகப் பதிலளிக்க வேண்டிய அமைச்சர்களின் அர்த்தமற்ற, திசைதிருப்பும் பதில்கள் -  'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை என்ன?' என்று கேட்பது போல உள்ளன.</p> <h2>இருதலைக்கொள்ளி எறும்பு</h2><p>நேரலை ஒளிபரப்பில் அவர்களின் இத்தகைய வீராவேசப் பதில்கள் சமூக ஊடக Content-களுக்கு பயன்படுமே தவிர, மக்களுக்குக் கிஞ்சித்தும் பயன் தராது. ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையில் உள்ள பேரவைத் தலைவர், இருதலைக்கொள்ளி எறும்பைப் போல் நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கிறார்.</p><p>அமைச்சர்களின் அடாவடியான, அருவருக்கத்தக்க பேச்சுக்கள் லட்சக்கணக்கான மக்களிடையே நேரலையில் சென்றடைந்த பிறகு, அதைக் குறிப்பிலிருந்து நீக்குவது ”குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குச் சமம்”. இதனால் யாருக்கு என்ன பலன்? </p><h2>முதல்-மந்திரிகள் மாநாடு</h2><p>காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனை தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழக்த்திலிருந்து எதிர்ப்புகள் எழும் என்று எண்ணி, எவ்வித முன்அறிவிப்புமின்றி, தமிழகத்திலுள்ள கோவளம் பகுதியில், உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தென்னிந்திய முதல்-மந்திரிகள் மாநாடு  நடைபெற்றது.</p><p>இதில் மேகதாது பிரச்சனை, காவிரி நதிநீர்ப் பங்கீடு, பெரியாறு அணைக்கட்டு உயரத்தை 152 அடியாக உயர்த்துவது, ஆந்திராவுடனான பாலாறு குறித்த பிரச்சனைகள் குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழக முதல்-அமைச்சர்</a> பேசியது என்ன? என்பது குறித்து தமிழகச் சட்டமன்றத்திற்கு அறிக்கையாகச் சமர்ப்பித்திருக்க வேண்டுமே, ஏன் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்கள் அதைச் செய்யவில்லை? இது குறித்து எதிர்கட்சியினர் எவரும் வினா எழுப்பவில்லையே ஏன்?</p><h2>Reels content</h2><p>’பட்டுக்கோட்டைக்கு’ வழி கேட்டால் ’கொட்டைப்பாக்கின்’ விலை என்ன? என்பதற்கேற்ப அமையும் தமிழக அமைச்சர்களின் பதில்கள்!</p><p>“Reels content”- மீடியா வெளிச்சத்தை  குறிவைத்து பேசும் தமிழக அமைச்சர்கள்!</p><p>கோவளம் மாநாட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்கள் பேசியது குறித்து சட்டமன்றத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்?</p><p>தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் திசைமாறிப் போகிறதா?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே எதிர்க்கட்சியினருக்கு கோபம் வருகிறது -அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-parties-get-angry-when-they-mention-corruption-and-party-funding-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-parties-get-angry-when-they-mention-corruption-and-party-funding-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">f237d5ab-1eb1-4e37-896a-274e5635a42c</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:23:53 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:23:53.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Madurai,மதுரை,அமைச்சர் நிர்மல்குமார்,CTRNirmalkumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/o4q760nc/nirmalakumar33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே எதிர்க்கட்சியினருக்கு கோபம் வருகிறது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/o4q760nc/nirmalakumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே எதிர்க்கட்சியினருக்கு கோபம் வருகிறது என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.</p><p>மதுரையில் தவெக பொதுக் கூட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல் குமார்</a> பேசியதாவது:-</p><p>நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மக்களே பழிவாங்கி விட்டனர். அவர்களை நாங்கள் ஏன் தனியாக பழிவாங்க வேண்டும்?</p><p>இத்தனை ஆண்டுகளில் நீங்கள் என்னென்ன கொள்ளை அடித்தீர்கள்? என்னென்ன செய்தீர்கள்? என்பதைப் பார்த்த மக்களே, உங்களைத் தூக்கி வெளியில் போட்டு விட்டார்கள்.</p><p>முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தீய சக்தி திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறினர். அதற்காகத்தான் அந்தக் கட்சியையே (அதிமுக) தொடங்கினர். ஆனால், தற்போது திமுகவை விஜய் ஒழித்துக் கட்டி விட்டார்.</p><p>இனிமேல், அறிவாலயத்தை வெள்ளையடித்து, வாடகைக்குத்தான் விட வேண்டும். முரசொலி அறக்கட்டளைக்குத்தான் அவர்களுக்கு இவ்வளவு போட்டி. அதில்தான் சொத்துகள் அனைத்தும் உள்ளன. அந்த அறக்கட்டளையை யார் எந்த குடும்பம் கைப்பற்றுகிறது? என்பதுதான் போட்டி.</p><p>இன்னும் 2 ஆண்டுகளில் அறக்கட்டளையைக் கைப்பற்றிவிட்டு, அறிவாலயத்தை வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கச் சென்று விடுவர். இது (தவெக) மக்களுக்கான அரசு. ஒவ்வோர் ஆண்டும் உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். வரும் 5 ஆண்டுகளில் நிச்சயமாக ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவோம். எதிர்க்கட்சியினருக்கு ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே கோபம் வருகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஈஷா கிராமோத்சவம் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: எம்.எல்.ஏ. கனிமொழி தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/isha-gramotsavam-zonal-level-sports-competitions-mla-kanimozhi-inaugurated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/isha-gramotsavam-zonal-level-sports-competitions-mla-kanimozhi-inaugurated#comments</comments><guid isPermaLink="false">6df610d0-5bfe-40d3-ad62-85709b98f727</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:23:44.249Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,ஈஷா மையம்,Isha,Sports competitions,கனிமொழி சந்தோஷ்,kanimozhi santhosh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/0s3uy34j/154.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/0s3uy34j/154.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், கடலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் இன்று மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றன. </p><p>இதில் கோவையில் நடைபெற்ற போட்டிகளை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மற்றும் கொங்குநாடு கல்லூரியின் செயலாளர் வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். </p><h2>ஈஷா கிராமோத்சவம்</h2><p>இதில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கான கிராமப்புற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். கனிமொழி சந்தோஷ் பேசுகையில், “சமூகத்தில் பலரும் பல்வேறு சங்கங்களையும் இயக்கங்களையும் தொடங்குகிறார்கள். ஆனால், அவற்றைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவது இல்லை. ஒரு நிகழ்வைத் தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய மற்றும் கடினமான செயலாகும். </p><p>ஆனால், ஈஷாவிடம் நான் கண்ட ஒரு முக்கியச் சிறப்பு அவர்களின் ஒருங்கிணைப்புத் திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகும். 18 ஆண்டுகளாக இளைஞர்களுக்காகவும் மக்களுக்காகவும் ஒரு சமூக நோக்கத்தோடு ஈஷா கிராமோத்சவத்தை தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய செயலாகும்.</p><p>நமது முதல்-அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, அங்குள்ள இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வெளிக்கொண்டு வருவதில் நமது முதல்-அமைச்சர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தற்போதைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்கிறதோ, அந்த அளவிற்கு நமது உடல்நலனும் குறைந்துகொண்டே வருகிறது. </p><p>இன்றைய சூழலில், குழந்தைகள் காலை முதல் இரவு வரை அலைபேசியிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். மது மற்றும் புகைப்பழக்கத்தை விட, அலைபேசியின் அதீதப் பயன்பாடு குழந்தைகளின் சிந்தனைத் திறனைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. எனவே, குழந்தைகளுக்கு அலைபேசியை அளவோடு பயன்படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும்.</p><p>பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் தற்போதைய சூழலில், குழந்தைகளின் கவனத்தைத் சரியான திசையில் செலுத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE">ஈஷா </a>நடத்தும் இதுபோன்ற விளையாட்டு நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன. விளையாட்டை ஊக்குவிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், மனத்தெளிவையும், எதிர்கால இலக்குகளை நோக்கிய கவனத்தையும் குழந்தைகளுக்கு வழங்குகிறது. </p><p>விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியது போல் உங்களின் வேலைப்பளு எவ்வளவு இருந்தாலும், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது விளையாட்டிற்காக நேரம் ஒதுக்க வேண்டும். எனக் கூறினார். இதில் வெற்றி பெற்ற வாலிபால் மற்றும் த்ரோபால் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக த்ரோபால் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஒரு வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டிகள் நடைபெற்ற 6 மண்டலங்களிலும் ஒரு சிறந்த த்ரோபால் வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்றி, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சத்குருவின் வழிகாட்டுதலில் 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டுத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.</p><h2>இறுதிப்போட்டி</h2><p>கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகிய நிலைகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் கிளஸ்டர் அளவிலான முதற்கட்ட போட்டிகள் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் இம்மாத முதல் 2 வாரங்களில் நடைபெற்றது. தற்போது மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இறுதிப்போட்டி செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறும்.</p><h2>பரிசுத்தொகை</h2><p>ஈஷா கிராமோத்சவம் 2026-இன் இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ரூ.50,000-மும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுத் திருவிழாவில், கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.</p><h2>வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம்</h2><p>ஈஷா கிராமோத்சவம் இந்தாண்டு புதிதாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன. </p><p>இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில், சுமார் 7,005 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 20,000 பெண்கள் உட்பட 80,352 கிராமப்புற மக்கள் பங்கேற்றுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>போதையில் லாரி மோதி விபத்து..! தர்ம அடிக்கு பயந்து குளத்தில் குதித்து தப்பியோடிய டிரைவர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-driver-crashes-lorry-jumps-into-pond-to-escape-a-thrashing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-driver-crashes-lorry-jumps-into-pond-to-escape-a-thrashing#comments</comments><guid isPermaLink="false">6a620004-3565-417e-9190-56646e8cdfbf</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:03:09 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:03:09.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Nagercoil,நாகர்கோவில்,களியக்காவிளை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/xmoxjwl9/escap.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/xmoxjwl9/escap.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திங்கள்சந்தை,</p><p>கார் மீது டாரஸ் லாரியை மோதி விபத்து ஏற்படுத்திய டிரைவர், பொதுமக்களின் தர்ம அடிக்கு பயந்து குளத்தில் குதித்து தப்பி ஓடிய சம்பவம் நிகந்துள்ளது. </p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>குமரி மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/nagercoil">நாகர்கோவில்</a>- களியக்காவிளை 4 வழிச்சாலை பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுங்கான்கடை அருகே தோட்டியோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குளச்சல் போக்குவரத்து போலீசார் தினமும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வருகின்றனர்.</p><h2>கார்- டாரஸ் லாரி மோதல்</h2><p>இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு டாரஸ் லாரி தக்கலையில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/nagercoil">நாகர்கோவில்</a> நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி தோட்டியோட்டில் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் வந்த போது எதிரே ஒரு சொகுசு கார் வந்தது. எதிர்பாராத விதமாக டாரஸ் லாரியும், சொகுசு காரும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் காரின் ஒரு பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.</p><h2>பொதுமக்கள் சத்தம்</h2><p>விபத்து நடந்ததும் அந்த வழியாக வந்தவர்கள் அங்கு திரண்டு காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். ஆனாலும் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் டாரஸ் லாரி டிரைவரிடம் கீழே இறங்குமாறு சத்தமிட்டனர்.</p><h2>குளத்தில் குதித்து தப்பியோட்டம்</h2><p>பொதுமக்களின் ஆவேச குரலை கேட்டு லாரி டிரைவர் மிகவும் அச்சமடைந்தார். பொதுமக்களின் கையில் சிக்கினால் தர்ம அடி கிடைக்கும் என பயந்து போன டிரைவர் லாரியின் ஜன்னல் வழியாக வெளியே வந்தார். தொடர்ந்து லாரியின் பின்பக்கம் வழியாக வேகமாக சென்று சாலையோரம் இருந்த குளத்தில் குதித்தார். இதைபார்த்த பொதுமக்கள், 'அவரை பிடியுங்கள்... பிடியுங்கள்...' என கூச்சலிட்டனர்.</p><p>இதை கேட்டு மேலும் அச்சமடைந்த டிரைவர் தண்ணீரில் வேகமாக நீந்தி குளத்தின் மறுகரைக்கு சென்று புதர்கள் இடையே கரையேறினார். தொடர்ந்து அருகில் இருந்த தென்னந்தோப்பு வழியாக ஓட்டமும் நடையுமாக தப்பி செல்ல முயன்றார்.</p><h2>சமூக வலைத்தளங்களில் வைரல்</h2><p>இதற்கிடையே அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த குளச்சல் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று லாரி டிரைவரை மடக்கி பிடித்தனர். அப்போதுஅவர் மது போதையில் லாரியை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்தநிலையில் விபத்தில் சிக்கிய வாகனங்கள் சாலையில் நின்றதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், லாரி மற்றும் சொகுசு காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.</p><p>இதற்கிடையே லாரி டிரைவர் ஜன்னல் வழியாக வெளியேறி குளத்தில் குதித்து தப்பி செல்வதை அங்கு நின்ற சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் 9 மணி நேரம் ரெயில் சேவை நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/train-services-suspended-for-9-hours-on-the-dindigul-karur-route</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/train-services-suspended-for-9-hours-on-the-dindigul-karur-route#comments</comments><guid isPermaLink="false">8445ef44-660a-4a08-9ebf-53a818f83e56</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:01:29 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:01:29.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,ரெயில் சேவை,train service</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a9ofs65i/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a9ofs65i/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,  </p><p>தண்டவாள புதுப்பிப்பு பணி காரணமாக திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் 9 மணி நேரம் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.</p><h2>தண்டவாளம் புதுப்பிப்பு</h2><p>திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கரூர், சேலம் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ரெயில் பாதை வழியாக சென்று வருகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் வழித்தடத்தில் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்ட தண்டவாளத்தை புதுப்பிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.</p><p>அதன்படி அந்த வழித்தடத்தில் ஏற்கனவே பதிக்கப்பட்ட 54 கே.ஜி. எடை கொண்ட தண்டவாளத்தை அகற்றிவிட்டு 60 கே.ஜி. தண்டவாளத்தை பதிக்கும் பணி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள், தண்டவாளத்துடன் இணைக்கப்பட்ட சிமெண்டு சிலிப்பர் கட்டைகளுடன் அவற்றை பெயர்த்து எடுக்கும் பிரத்யேக எந்திரம் ஆகியவை கொண்டுவரப்பட்டன. பின்னர் அந்த கருவிகள் மூலம் பழைய தண்டவாளம் அகற்றப்பட்டது.</p><h2>ரெயில்வே சேவை மாற்றம்</h2><p>இதையொட்டி திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 9 மணி நேரம் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. மேலும் அந்த வழித்தடத்தில் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமே பகலில் செல்கிறது. அந்த நேரத்தில் மட்டும் பராமரிப்பு பணி கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகரில் இருந்து வழித்த டம் மாற்றப்பட்டு அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக் குடி, திருச்சி வழியாக கரூருக்கு சென்று, அங்கிருந்து கோவை சென்றது.</p><p>இதற்கிடையே சிமெண்டு சிலிப்பர் கட்டைகளுடன் கூடிய 60 கே.ஜி. எடை கொண்ட புதிய தண்டவாளம் பிரத்யேக எந்திரம் மூலம் பதிக்கப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டது. இதன் மூலம் தண்டவாளத்தின் உறுதி தன்மை அதிகரிக்கும், அதிக எடையிலான பொருட்களை சரக்கு ரெயில் மூலம் அந்த வழித்தடத்தில் கொண்டு செல்ல முடியும். பயணிகள் ரெயிலின் வேகத்தையும் அதிகரிக்க முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் 44 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/44-lakh-metric-tons-of-garbage-disposal-at-kodungaiyur-garbage-dump-through-bio-excavation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/44-lakh-metric-tons-of-garbage-disposal-at-kodungaiyur-garbage-dump-through-bio-excavation#comments</comments><guid isPermaLink="false">fe6437ac-0bd6-4fe2-99fb-332700055fbe</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:54:50 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:54:50.588Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Kodungaiyur,Perungudi,அகற்றம்,Garbage Disposal,குப்பைக்கிடங்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/tl8f9fu5/thalamai-seiyalagam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/tl8f9fu5/thalamai-seiyalagam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் சமீரன், தலைமையில் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. </p><p>இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் சித்ரா விஜயன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பணிகளை ஆய்வு செய்து பேசும்போது தெரிவித்ததாவது:-</p><h2>திடக்கழிவு மேலாண்மைப் பணி</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகளை தனித்தனியே பிரித்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். </p><p>இப்பணிகளை கண்காணித்திட பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குப்பைகளுக்கான குப்பைத் தொட்டிகளையும் குப்பைகளை உருவாக்குபவர்களுடைய வளாகத்திற்குள் வைத்து, குப்பைகளை வழங்கிட வேண்டும். வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி முதல் பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் கட்டாயம் திடக்கழிவினைத் தரம் பிரித்து வழங்கிட வேண்டும் மீறுவோர்களுக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><h2>விழிப்புணர்வு</h2><p>அதைப்போல, குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதற்கு உரிய விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், இன்று தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் மத்திய வட்டாரப் பகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.</p><p>பெருங்குடி குப்பை கிடங்குகளில் குப்பைகளை முதற்கட்டமாக நடைபெற்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி முடிக்கப்பட்டு 94 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக 5.50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி மேற்கொள்ளப்பட்டு இதில் 28 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.</p><p>இதைப் போல கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் 66 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி மேற்கொள்ளப்பட்டு இதுவரை 44 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இப்பணிகளை கண்காணித்து விரைந்து முடித்திட வேண்டும்.</p><p>அத்திப்பட்டு குப்பை கிடங்குகளில் குப்பைகளை முதற்கட்டமாக நடைபெற்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் 1 லட்சம் கன மீட்டர் குப்பைகள் அகற்றப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக 72 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி மேற்கொள்ளப்பட்டு இதில் 36 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88">திடக்கழிவு மேலாண்மைப்</a> பணிகளை அலுவலர்கள் கண்காணித்து மேலும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில் விவசாயிகள் பாதிப்பு: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-affected-under-tvk-administration-udhayanidhi-stalins-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-affected-under-tvk-administration-udhayanidhi-stalins-allegation#comments</comments><guid isPermaLink="false">6e84438b-34b2-45c1-ae8b-969022d88517</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:54:28 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:54:28.207Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Tvk  government,தவெக ஆட்சி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/qs9w3fhj/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/qs9w3fhj/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மணமக்களை வாழ்த்திய அவர், நிகழ்ச்சியில் பேசும்போது தவெக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசியது பின்வருமாறு;</p><p>”தவெக ஆட்சியில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய நிதி இல்லை என தவெக அரசு கூறுகிறது. வறட்சி நிவாரணம் கோரிய விவசாயிகளுக்கு தவெக அரசு இதுவரை பதில்கூறியதா? விவசாயிகளுக்கு கொடுக்க நிதி இல்லை எனக் கூறும் அரசு, எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுக்க மட்டும் நிதி உள்ளதா? </p><p>மக்கள், விவசாயிகள் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு சட்டசபையில் பதில் இல்லை. முதல்-அமைச்சர் பதில் கூறவில்லை. அமைச்சர்கள் சம்பந்தம் இல்லாமல் பதில் கூறுகின்றனர். தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த கேள்விகளுக்கு அரசு கஜானாவை காலியாக்கிவிட்டு சென்றதாக கூறுகின்றனர். பிரச்சினைகளை திசை திருப்பும் நோக்கில் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.  தவெக ஆட்சியின் கோமாளித்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>அம்மை நோய் பாதித்தவர்கள் தங்கும் மண்டபம் தொடர்பாக பரவும் தகவல் தவறானது! - அறநிலையத்துறை விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/false-information-on-smallpox-patient-shelter-clarified-by-hindu-religious-endowments-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/false-information-on-smallpox-patient-shelter-clarified-by-hindu-religious-endowments-department#comments</comments><guid isPermaLink="false">0e546260-91ec-4641-a537-dcb6a06806aa</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:53:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:53:42.354Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அறநிலையத்துறை,இந்து சமய அறநிலையத்துறை,Fact check,மாரியம்மன் கோவில்,Hindu Religious Endowments Department,TN Fact Check,HR&amp;CE Department announcement,தகவல் நம்பகத்தன்மை,தகவல் நம்பகத்தன்மை பிரிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/vahxsnvs/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/vahxsnvs/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம் தொடர்பாக பரப்பப்படும் தகவல் தவறான என இந்து சமய அறநிலையத்துறை அளித்துள்ள விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>அம்மை தடுப்பூசியை குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் வழங்க வழி செய்யாமல், அவர்களுக்காக மண்டபம் அமைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.</p><h2>உண்மை என்ன?</h2><p>இது முற்றிலும் தவறான தகவல்.</p><p>இது தொடர்பாக இந்து சமய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அறநிலையத்துறை </a>அளித்துள்ள விளக்கத்தில், "அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு அவர்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனுக்காக திருக்கோவிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பை சிலர் திட்டமிட்டு அம்மை வார்த்தவர்கள் மற்றவர்களுக்கு பரவும் வகையில் இங்கு தங்குவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தவறாக சித்தரித்து உண்மைக்கு புறம்பாக பரப்புகிறார்கள்"என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர் !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் செய்தால் மரண தண்டனை; முதல்-அமைச்சர் விஜய்க்கு ஸ்ரீதர் வேம்பு பரிந்துரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-penalty-for-corruption-sridhar-vembu-recommends-to-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-penalty-for-corruption-sridhar-vembu-recommends-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">ea1f6f04-91a9-42f1-b04a-02fcc3e03df3</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:50:35 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:50:35.347Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Corruption,ஊழல்,மரண தண்டனை,death penalty,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,ஸ்ரீதர் வேம்பு,Sridhar Vembu</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/mpuka8nq/28.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/mpuka8nq/28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சோகோ நிறுவனர் <a href="https://www.dailythanthi.com/topic/sridhar-vembu">ஸ்ரீதர் வேம்பு</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மரண தண்டனை</h2><p>நமது முதல்-அமைச்சர் விஜய் அவர்களுக்கு நான் கூறும் ஆலோசனைகளில் ஒன்று, போதைப்பொருள் கடத்தல் மற்றும் உயர் மட்ட ஊழல் தொடர்பான சிங்கப்பூர் போன்ற சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதாகும். சிங்கப்பூர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உயர் மட்ட ஊழலுக்கு மரண தண்டனை வழங்குகிறது. அவர்கள் இந்தச் சட்டங்களை அமல்படுத்துகிறார்கள். இந்தியச் சூழலில், அமைச்சர் மட்டத்திலும், அகில இந்திய சேவை மட்டத்திலும் (ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றவை) நாம் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்: </p><p>1. ஊதியத்தை பெருமளவில் உயர்த்த வேண்டும். </p><p>2. எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு ஊழலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். </p><h2>உரிய சட்ட நடைமுறை</h2><p>ஊதியத்தை உயர்த்துவதும் சம முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், கடந்த காலத்தைப் பற்றி முடிவில்லாமல் விவாதிக்காமல் இருப்பதற்காக, கடந்த கால தவறுகளுக்கு நாம் பொது மன்னிப்பு அறிவிக்க வேண்டும். முறையான ஆய்வு மற்றும் உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு நீதிமன்றங்கள் அதை அமல்படுத்த வேண்டும். ஆனால், உரிய சட்ட நடைமுறை என்பது 30 ஆண்டு கால தாமதத்தை குறிக்காது. சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மிகவும் திறமையானவை, நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். எனது வயது வந்த வாழ்க்கை முழுவதும் நான் லீ குவான் யூவின் தீவிர ரசிகனாக இருந்துள்ளேன், அவருடைய ஒவ்வொரு பேச்சையும் நான் படித்திருக்கிறேன்! நாம் அவருடைய அணுகுமுறையைப் படிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கேஸ் சிலிண்டர் - இ-கே ஒய் சி-க்கு காலக்கெடு இன்றுடன் நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gas-cylinder-deadline-for-e-kyc-ends-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gas-cylinder-deadline-for-e-kyc-ends-today#comments</comments><guid isPermaLink="false">8c5ab368-6815-4a65-b3ed-1fe075295001</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:46:08 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:46:08.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>cylinder,Gas Cylinder,கேஸ் சிலிண்டர்,KYC,கேஸ் புக்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/i922qex8/kyc33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
கேஸ் சிலிண்டர்]]></media:title><media:description type="html"><![CDATA[ காலக்கெடு இன்றுடன் நிறைவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/i922qex8/kyc33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய மின்னணு சரிபார்ப்பு பதிவுக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. </p><h2>காலக்கெடு இன்றுடன் நிறைவு</h2><p>இதுவரை தமிழகத்தில் சுமார் 85 சதவீத கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் மின்னணு சரிபார்ப்பு பதிவை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இன்னும் 15 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பதிவை மேற்கொள்ளாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மின்னணு சரிபார்ப்பு பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் நாளை முதல் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p><h2>வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>தமிழகத்தில்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D"> சமையல் எரிவாயு சிலிண்டர்</a> பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 85 சதவீதம் பேர் இதுவரை மின்னணு சரிபார்ப்பு பதிவை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீதம் பேர் இன்னும் பதிவு செய்யவில்லை. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், காலக்கெடு முடிவதற்கு முன்பாக தங்களது மின்னணு சரிபார்ப்பு பதிவை முடித்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>எரிவாயு நிறுவனத்தைன் அதிகாரப்பூர்வ செயலி</h2><p>சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்களின் செயலிகள் மூலமாகவும் மின்னணு சரிபார்ப்பு பதிவை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் எரிவாயு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியைத் திறந்து, அதில் வழங்கப்பட்டுள்ள மின்னணு சரிபார்ப்பு பதிவு வசதியைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைச் சரிபார்த்து பதிவு செய்யலாம்.</p>]]></content:encoded></item><item><title>விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-fee-hike-at-vikravandi-toll-plaza-starting-from-the-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-fee-hike-at-vikravandi-toll-plaza-starting-from-the-1st#comments</comments><guid isPermaLink="false">06479427-1395-4a04-8f75-d7724e462f5a</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:36:17 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:36:17.831Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சுங்கச்சாவடி,tollgate,கட்டண உயர்வு,toll fee</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/jdl9tp2w/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/jdl9tp2w/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><h2>கட்டண உயர்வு</h2><p>விழுப்புரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வருகிற 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்ததப்படுகிறது. இந்த சுங்கச்சாவடியில் ஆண்டுதோறும் நகாய் உத் தரவின் பேரில் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு புதியதாக அறிவிக்கப்பட்ட சுங்கவரி கட்ட ணம் விவரம் பின்வருமாறு: </p><p>கார், ஜீப், பயணிகள் வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு வழி கட்டண மாக ரூ.105-லிருந்து ரூ.110 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.160-லிருந்து ரூ.165 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.3,170-லிருந்து ரூ.3300 ஆகவும் உயர்த்தியுள்ளது. இதேபோல் இலகு ரக வாகனத்திற்கு ஒரு வழி கட்டணம் ரூ.185-லிருந்து ரூ.190 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.275-லிருந்து ரூ.290 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.5,545-லிருந்து ரூ.5 ஆயிரத்து 770 ஆகவும், டிரக், பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணமாக ரூ.370-லிருந்து ரூ.385 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.555-லிருந்து ரூ.575 ஆகவும், மாதாந்திர கட்டணமாக ரூ.11,085-லிருந்து, ரூ.11.545 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>பள்ளி பஸ்களுக்கு மாற்றம் இல்லை</h2><p>பல அச்சுகள் மற்றும் இரு அச்சுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணமாக ரூ.595-லிருந்து ரூ.620 ஆகவும், பல முறை பய ணிக்க ரூ.890-லிருந்து ரூ.930 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.17,820-ல் இருந்து ரூ.18,555 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>மேலும் பள்ளி பேருந்துகளுக்கு மாதாந்திர கட்டணம் ரூ.1000-மும், உள் ளூர் வாகன கட்டணம் வகைகளான மாதாந்திர பாஸ் ரூ.150 மற்றும் ரூ.300 ஆகியவை எந்தவித மாற்றமின்றி வசூலிக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு புதிய கட்டண உயர்வில் சிறிய மாற்றம் மட்டும் செய்து மாதாந் திர கட்டணத்தில் சற்று உயர்த்தி நகாய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக் கது.</p> ]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் - பெ. சண்முகம் கண்டனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/p-shanmugam-condemns-murderous-attack-on-marxist-leaders-in-kallakurichi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/p-shanmugam-condemns-murderous-attack-on-marxist-leaders-in-kallakurichi#comments</comments><guid isPermaLink="false">85380b19-168e-46de-a928-849de15c15aa</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:27:57 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:27:57.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,P. Shanmugam,Marxist Communist Party,leaders,தலைவர்கள்,murderous attack,கொலைவெறி தாக்குதல்,மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி,பெ. சண்முகம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/k59nhjwq/pshanmugam.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ. சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/k59nhjwq/pshanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உளுந்தூர்பேட்டை,</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாலர் <a href="https://dailythanthi.com/topic/p-shanmugam">பெ. சண்முகம் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எழுமலை, மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் டி.எஸ்.மோகன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் மீது சமூக விரோதிகள் நடத்தியுள்ள கொடூரமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.</p><h2>கொலைவெறி தாக்குதல்</h2><p>உளுந்தூர்பேட்டையில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கான தயாரிப்பு பணிகளை முடித்துவிட்டு, ஆகஸ்ட் 21 அன்று இரவு கிளியூர் கிராமத்தைக் கடந்து காரை நிறுத்தியிருந்தபோது, வடமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் கட்சித் தலைவர்களையும், கட்சியின் பெயரையும் மிக அசிங்கமாக திட்டி, காரிலிருந்த கட்சிக் கொடி மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், தோழர்கள் அனைவரையும் கொலைவெறியோடு தாக்கியுள்ளனர்.</p><h2>மார்க்சிஸ்ட் போராட்டம்</h2><p>வடமாம்பாக்கம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், 'பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்' கீழ் 22 வீடுகளை கட்டாமலே அவராகவே பணத்தை எடுத்துக் கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளார். இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் போராடி வருகின்றனர். இதை மனதில் வைத்துக் கொண்டு, ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் மகன்கள் இருவர் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு இந்த வன்முறை மற்றும் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.</p><h2>உரிய தண்டனை</h2><p>இச்சம்பவம் குறித்து களமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும். காயமடைந்த தோழர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், காவல்துறை இதுவரை ஒரே ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளது. பொதுமக்களுக்கு ஆதரவாகப் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட வடமாம்பாக்கம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் மகன்கள் இருவர் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளையும் காவல்துறை உடனடியாகக் கைது செய்து, கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எதுக்கு சட்டமன்றத்தை நேரலையில் போடுறீங்கனு அழு அழுனு அழுறாங்க... அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-are-crying-and-complaining-asking-why-the-assembly-proceedings-are-being-broadcast-live-minister-keerthana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-are-crying-and-complaining-asking-why-the-assembly-proceedings-are-being-broadcast-live-minister-keerthana#comments</comments><guid isPermaLink="false">59ccff99-0c82-43ee-9f97-a6ac5d99d813</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:24:24 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:24:24.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,TN Assembly,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/6x7bhymz/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/6x7bhymz/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி,</p><p>சிவகாசியில் த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தின ராக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கலந்துகொண்டு பேசியதாவது:- </p><p>தேர்தல் பிரசாரத்தின்போது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தபோது இப்பகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தேன். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறேன். என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தி.மு.க. அ.தி.மு.க.வினர் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். எந்த வழியில் பொய் பிரசாரம் செய்தாலும் த.வெ.க. அதைப்பற்றி கவலைப்படாது. இந்த பகுதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்.</p><p>உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். முதல்-அமைச்சர் விஜய்யின் மேஜையில் உள்ள 3 கோப்புகளை திறந்தால் யார் துபாய்க்கு சென்று தலைமறைவு ஆவார்கள் என தெரிய வரும். தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் விமர்சனங்கள், இப்போதும் விமர்சனங்கள். மக்களுக்குச் சேவையாற்ற விடக்கூடாது என எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். அதுதான் அவர்களின் வேலையே.</p><p>தொலைக்காட்சிகளில் நாடகங்கள் பார்த்த காலம்போய், இன்று சட்டசபை நேரலையைத்தான் பார்க்கின்றனர். சட்டசபையில் எதிர்க்கட்சிகள், மக்களுக்காக நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், மக்களும் அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் சட்டசபை நேரலை ஒளிபரப்பப்படுகிறது.</p><p>இதனிடையே, சட்டசபையை நேரலையில் ஒளிபரப்பக்கூடாது என சிலர் அழு அழுனு அழுறாங்க. சட்டசபையை நேரலையில் ஒளிபரப்புவோம் என 2021 தேர்தலில் வாக்குறுதியில் திமுக கூறியிருந்தது. ஆனால், இன்று வரையில் அவர்கள் அதனைச் செய்யவில்லை. சட்டசபையில் அவர்களின் முகத் திரையை நாம் காட்டுவது அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் ஒட்டுமொத்த கட்சியையும் அழித்து விடுவோம் என அவர்கள் பயப்படுகின்றனர்.</p><p>அதே நேரம் பெண்ணாக இருந்தால் அரசியலுக்கு வரக்கூடாதா..? ஆங்கிலத்தில் பேசக்கூடாதா..? கோட் சூட் போடக்கூடாதா? என கேள்வி எழுப்பினார். மேலும் சாதாரண மக்கள் கோட் சூட் போட்டால் எதிர்க்கட்சிகள் புலம்பி தவிக்கிறார்கள் என்று விமர்சித்தார்.</p>]]></content:encoded></item><item><title>15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-of-15-year-old-girl-young-man-arrested-under-pocso-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-of-15-year-old-girl-young-man-arrested-under-pocso-act#comments</comments><guid isPermaLink="false">1059191f-6a15-4eff-bffe-61ee55eea03c</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:19:01 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:19:01.420Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்சோ சட்டம்,POCSO act,சமூக வலைதளம்,social media</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ivblqh1x/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ivblqh1x/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p>திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 20). இளங்கலை பொருளாதாரம் படித்து வந்த இவர், சில காரணங்களுக்காக படிப்பை பாதியில் விட்டார். பின்னர் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு, சமூக வலைத்தளம் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி அறிமுகம் ஆனார். அவர்கள் நீண்ட நாட்களாக பேசி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் நாகராஜ் அவ்வப்போது ஊட்டி வந்து அந்த சிறுமியை சந்தித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உட னடியாக ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் சிக்னல் மூலம் நாகராஜ், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த விடுதியில் சிறுமியும் இருந்தார்.</p> <p>உடனே சிறுமியை போலீசார் மீட்டனர். பின்னர் நடந்த விசாரணையில் திரு மணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை நாக ராஜ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து நாகராஜை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.</p> ]]></content:encoded></item><item><title>தேசிய ஆசிரியர்கள் விருது:  மாணவர்களை செதுக்கும் நல்லாசிரியர்கள்.. - மாணிக்கம் தாகூர் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-teachers-award-exemplary-teachers-who-mold-students-manickam-tagore-extends-his-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-teachers-award-exemplary-teachers-who-mold-students-manickam-tagore-extends-his-wishes#comments</comments><guid isPermaLink="false">06c918a2-d5f1-4cad-bbe8-a5f5b5d84cbb</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:13:05 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:13:05.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Congess,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/rjh2vcor/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/rjh2vcor/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>​அர்ப்பணிப்புடன் உழைத்து தேசத்தின் எதிர்காலமான மாணவர்களை செதுக்கும் இந்த நல்லாசிரியர்களின் தன்னலமற்ற கல்விச் சேவை மென்மேலும் சிறந்து தொடர மனதார வாழ்த்துகிறேன் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>செயல்வழிக் கற்றல் முறை</h2><p>தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தங்கராஜ், தனது சொந்த செலவில் ரூ.2 லட்சம் மதிப்பில் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்கள் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கியுள்ளார். கிராமப்புற மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்காக கதை சொல்லுதல், பிளாஷ் கார்டுகள், ஆடியோ-விஷுவல் கருவிகள் மற்றும் 'மாணவர் அமைச்சரவை' மூலம் காய்கறித் தோட்டம் அமைத்து சத்துணவுக்குப் பயன்படுத்தும் புதுமையான செயல்வழிக் கற்றல் முறைகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தி வருகிறார்.</p><p>​மதுரை திருப்பரங்குன்றம் PM SHRI கேந்திரிய வித்யாலயா (No. 2) பள்ளி முதல்வர் அமுதா, கேந்திரிய வித்யாலயா அமைப்பில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். முன்னாள் என்.சி.சி. மாணவியான இவர், மாணவர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதோடு, அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளைத் தத்தெடுத்து கற்றல் வாய்ப்புகளையும் நவீன நடைமுறைகளையும் பகிர்ந்தளித்து, முதியோர் இல்லங்களுக்கும் சேவை செய்து முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.</p><h2>புதுமையான கற்பித்தல் பணி</h2><p>​புதுச்சேரி மேட்டுப்பாளையம் வி.வி.ஆர்.எஸ் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் கணேசன், தனது 34 ஆண்டுகால கல்விச் சேவையில் அறிவியல் பாடத்தை நாடகம், விளையாட்டு மற்றும் வாட்ஸ்அப், ஸ்மார்ட் இன்டராக்டிவ் டிவி, கூகுள் பார்ம்ஸ் போன்ற நவீன டிஜிட்டல் கருவிகளுடன் இணைத்துக் கற்பித்து வருகிறார். ஏற்கனவே மாநில மற்றும் சர்வதேச நல்லாசிரியர் விருதுகளைப் பெற்ற இவரது புதுமையான கற்பித்தல் பணி போற்றுதலுக்குரியது.</p><p>​அர்ப்பணிப்புடன் உழைத்து தேசத்தின் எதிர்காலமான மாணவர்களைச் செதுக்கும் இந்த நல்லாசிரியர்களின் தன்னலமற்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கல்விச் சேவை</a> மென்மேலும் சிறந்து தொடர மனதார வாழ்த்துகிறேன்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையையொட்டி குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-courtallam-waterfalls-for-the-weekend</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-courtallam-waterfalls-for-the-weekend#comments</comments><guid isPermaLink="false">55112192-799d-4855-ae56-6432b9a421e7</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:10:59 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:10:59.226Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சுற்றுலா பயணிகள்,Tenkasi,தென்காசி,Courtala Falls,குற்றாலம்,Courtallam,Weekend,வார விடுமுறை,அருவிகள்</media:keywords><media:content height="820" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ubdxm5c5/bag.jpg" width="1083"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ubdxm5c5/bag.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர்வரத்து தொடங்கியுள்ளது.</p><h2>அருவிகளில் நீண்ட வரிசை</h2><p>முக்கிய சுற்றுலாத்தலமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">குற்றால அருவிகளுக்கும்</a> தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.</p><p>இன்று விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் <a href="https://www.dailythanthi.com/topic/குற்றாலம்">குற்றாலத்தில்</a> குவிந்துள்ளனர். ஐந்தருவி, மெயின் அருவி பழைய குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.</p><h2>தென்மேற்கு பருவமழை</h2><p>இந்நிலையில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெறும் என்றும், நெல்லை, தென்காசியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியதுடன், தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நெல்லையில் தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தென்காசி தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜா தெரிவித்து உள்ளார்.</p><h2>குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மீண்டும் தென்மேற்கு பருவமழை வலுவாக பெய்ய உள்ளது. கேரளம் மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள மாவட்டங்களில் 3 நாட்கள் மழை பெய்யும். நாளை (திங்கட்கிழமை) தொடங்கி, 26-ந்தேதி வரை மழை நீடிக்கும். </p><p>கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, வால்பாறை, பொள்ளாச்சி, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். 25-ந்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/குற்றாலம்">குற்றாலத்தில்</a> அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தொடர்ந்தும் சீசன் களைகட்டும்" என்று தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் இல்லையென்றால்... மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-isnt-there-for-tvk-to-form-the-government-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-isnt-there-for-tvk-to-form-the-government-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">b14a9625-de36-4333-a809-a181300b58b5</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:51:27 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:51:27.732Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ab95nnac/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ab95nnac/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>இந்தியா கூட்டணியில் தவெக இருக்கிறதா? என்ற கேள்விக்கு "எப்போது தவெகவுக்கு எம்.பி.க்கள் கிடைக்கிறார்களோ, அப்போது அவர்களை இந்தியா கூட்டணியில் இணைத்துக் கொள்ள சொல்வோம். எம்.பி. இல்லாதவர்களை நாங்கள் கூட்டணியில் இணைய வரச்சொல்ல முடியாது. தற்போது அவர்களுக்கு எம்.பி.க்கள் கிடையாது. எம்.பி. இருந்தால் இந்தியா கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.</p><p>சட்டசபை தேர்தலில் தவெக 106 இடங்களைப் பிடித்து வென்ற பிறகு விஜய் முதலில் போன் செய்தது ராகுல் காந்திக்கு தான். அவர் முதல்-அமைச்சராவதற்கு ராகுல் காந்தியிடம் தான் அவர் ஆதரவு கேட்டார். தவெகவுக்கு முதல் ஆதரவு கடிதம் காங்கிரஸ் கட்சி தான் கொடுத்து. அதனால், தவெகவின் இன்றைய அமைச்சர்கள் அனைவருக்கும் அந்த உண்மை தெரியும். அவர்களெல்லாம் அமைச்சராவதற்கு காங்கிரசின் ஆதரவு முதலில் வந்தது.</p><p>இல்லையென்றால், மத்திய மந்திரி அமித்ஷா தவெகவின் கதையையும் முடித்திருப்பார். இந்நேரம் கட்சியை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கியிருப்பார்கள் அவர்களைப் பொறுத்தவரை இந்த நிலை அனைவருக்கும் புரியும். முதலில் தேர்தல் வரட்டும். விஜய் எப்போதும் குறைவாகவேப் பேசுவார். தேர்தல் வரட்டும். பேச வேண்டிய நேரத்தில் அவர் சரியாகப் பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>போலி ஆவணம் மூலம் ரூ.4 கோடி நிலமோசடி.. சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4-crore-land-fraud-using-forged-documents-3-arrested-including-brothers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4-crore-land-fraud-using-forged-documents-3-arrested-including-brothers#comments</comments><guid isPermaLink="false">f32b2135-0f84-4caa-b215-73d9d56e9080</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:45:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:45:42.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,கைது,arrest,ராமநாதபுரம்,Ramanathapuram,நில மோசடி,Land fraud,போலி ஆவணம்,forged documents</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/p25ff4ky/jafffer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/p25ff4ky/jafffer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p>ரூ.4 கோடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>ரூ.4 கோடி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/ramanathapuram">ராமநாதபுரம்</a> அருகே உள்ள வாணிகிராமம் உசேனியா தெருவை சேர்ந்தவர் பக்ருதீன். இவருடைய மனைவி ஹாஜரா பானு. இவருக்கு சொந்தமாக வாணி கிராமத்தில் ஒரு நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.4 கோடி என கூறப்படுகிறது. இந்த நிலத்துக்கு ராமநாதபுரம் வெளிப்பட்டினம் தர்ப்பசயனம் ரோடு பகுதியை சேர்ந்த ஜாபர்அலி (வயது 58) என்பவர் போலியான பவர்பத்திரம் தயாரித்ததாக கூறப்படுகிறது. </p><p>அதன்பேரில் அந்த நிலத்தின் ஒரு பகுதியை ராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகன்களான சந்திரகுமார் (47), செந்தில்குமார் (49) ஆகியோருக்கு தனித்தனியாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சந்திரகுமார் அந்த நிலத்தில் வீடு கட்டி உள்ளார். செந்தில்குமார் நிலத்தை சுற்றி வேலி அமைத்துள்ளார்.</p><p>இந்நிலையில் ஹாஜரா பானு தனது நிலத்தை மேற்கண்ட 3 பேரும் மோசடி ஆவணங்கள் மூலம் அபகரித்ததை அறிந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் ராமநாதபுரம் நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவி வழக்குப்பதிவு செய்து ஜாபர்அலி, சந்திரகுமார், செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னை: புதிய டபுள்டெக்கர் பஸ்கள் இயக்க இருக்கும் வழித்தடங்களில் போக்குவரத்து கழகம் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-transport-corporation-inspects-routes-where-new-double-decker-buses-are-set-to-operate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-transport-corporation-inspects-routes-where-new-double-decker-buses-are-set-to-operate#comments</comments><guid isPermaLink="false">3abd88d8-d603-48d1-9da1-5702e5f09c02</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:30:53 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:30:53.241Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,State Transport Corporation,போக்குவரத்து கழகம்,டபுள் டக்கர்,பஸ் சேவை,Double Decker Bus</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/j2zy2czd/dd-vd.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/j2zy2czd/dd-vd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னையில்</a> 20 புதிய டபுள்டெக்கர் பஸ்களை இயக்கும் வகையில் உத்தேச வழித்தடங்களை தேர்வு செய்து மாநகர போக்குவரத்து கழகம் ஆய்வு செய்துள்ளது.</p><p>1970ம் ஆண்டுகளில் சென்னையை கலக்கி வந்த டபுள் டக்கர் பஸ்கள், <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a>யின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இந்த பஸ் தாம்பரத்தில் இருந்து சென்னை ஐகோர்ட்டு வரை இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் பயணிப்பதற்காகவே அதிகளவில் சுற்றுலா பயணிகள் சென்னைக்கு படையெடுக்க தொடங்கினர். பொதுமக்களின் வரவேற்பு அதிகளவில் இருந்தாலும் பராமரிப்பு செலவு அதிகளவில் இருந்த காரணத்தால் டபுள் டக்கர் பஸ்கள் கடந்த 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.</p><p>இந்த நிலையில் தற்போதைய இளம் தலைமுறைகளை மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஈர்க்கும் வகையில், மாநகர போக்குவரத்து கழகம் பல்வேறு அதிநவீன பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் மீண்டும் 18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.</p><p>இது குறித்து, <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் டபுள் டெக்கர் பஸ் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஒ.எச்.எம்., குளோபல், ஈகிள் கன்ஸ்ட்ரக்ஷன் கோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன.</p><p>ஒப்பந்ததாரரை தேர்வு செய்து 20 டபுள்டெக்கர் பஸ்கள் அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்த பஸ்கள் இயக்குவதற்கான வழித்தடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.</p><p>கடற்கரை - கோவளம், கோயம்பேடு அண்ணாசதுக்கம், சுங்கச்சாவடி - கலங்கரை விளக்கம், பிராட்வே - டி.எம்.எஸ். அல்லது கிண்டி மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக இரண்டு வழித்தடங்களையும் உத்தேசமாக தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இறுதிகட்ட ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து பின்னர் அறிவிக்கப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் -  பொதுமக்கள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-leopards-roaming-near-coonoor-public-fears</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-leopards-roaming-near-coonoor-public-fears#comments</comments><guid isPermaLink="false">4ea50be8-bf67-4ee1-ab68-09b1d7892c3f</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:28:39 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:28:39.928Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,leopard,சிறுத்தைகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/o83wg9if/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/o83wg9if/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட் டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காரணமாக தேயிலை தோட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் அச்சம டைந்து உள்ளனர். </p><p>இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன. பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஓய்வெடுப்பதும், இரவில் ஊருக்குள் உலா வருவதும் வழக்கமாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சிறுத்தைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், அவற்றை பிடிக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே விரைவாக இப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இனிய தேசிய விண்வெளி தின வாழ்த்துகள்! - எல். முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-national-space-day-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-national-space-day-l-murugan#comments</comments><guid isPermaLink="false">080c6aef-f30a-411b-8d7a-6f08878b91fa</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:26:15 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:26:15.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாழ்த்து,தேசிய விண்வெளி தினம்,National Space Day,எல். முருகன்,Union Minister L. Murugan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/h4hieoz6/l-murugan.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  எல். முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/h4hieoz6/l-murugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 இல் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம் ஒரு வரலாற்று சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் படைத்தது. பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கிய அந்த இடத்திற்கு 'சிவசக்தி' என்று பெயரிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.</p><p>இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி அதிகாரபூர்வமாக 'தேசிய விண்வெளி தினமாக' அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதன்படி, சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி. தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. </p> <p>இனிய தேசிய விண்வெளி தினத்தையொட்டி மத்திய இணை மந்திரி எல் முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தேசிய விண்வெளி தினம்</h2><p>இனிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தேசிய விண்வெளி தின</a> வாழ்த்துகள்! நிலவிலிருந்து சூரியன் வரையிலும், அதற்கும் அப்பாலும், இந்தியாவின் விண்வெளிப் பயணம் என்பது உறுதி, புதுமை மற்றும் தேசியப் பெருமிதத்தின் ஒரு காவியமாகும்.</p><p>சாத்தியங்களின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி, ஒரு புதிய தலைமுறையை வானத்தைத் தாண்டி கனவு காணத் தூண்டும் இஸ்ரோவின் தலைசிறந்த விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் எங்கள் வணக்கங்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Happy National Space Day! <br><br>From the Moon to the Sun and beyond, Bharat’s space journey is a story of determination, innovation and national pride.<br><br>Saluting the brilliant scientists and engineers of ISRO who continue to push the boundaries of possibility and inspire a new… <a href="https://t.co/Of0rvm7FXd">pic.twitter.com/Of0rvm7FXd</a></p>&mdash; Dr.L.Murugan (@DrLMurugan) <a href="https://x.com/DrLMurugan/status/2091375600103456873?ref_src=twsrc%5Etfw">August 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்துவோம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-stop-supplying-milk-to-aavin-tamil-nadu-farmers-association-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-stop-supplying-milk-to-aavin-tamil-nadu-farmers-association-announces#comments</comments><guid isPermaLink="false">29271307-f316-4c09-9835-1891e793f210</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:24:36 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:24:36.243Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>farmers association,விவசாயிகள் சங்கம்,ஆவின் நிறுவனம்,Aavin Milk,ஆவின் பால்,Aavin Company</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/oett11bt/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/oett11bt/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய், பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து சட்டசபையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு பால் உற்பத்தியை நம்பி வாழும் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த 5 ஆண்டு களாக உயர்த்தப்படாமல் இருந்த பால் கொள்முதல் விலை தற்போதைய அறிவிப்பின் மூலம் பெரிதும் ஏமாற்றத்தையும், பாதிப்பையும் அளிக்க கூடியதாக உள்ளது.</p><p>தீவனம் விலை உயர்வு, கூலி உயர்வு என உற்பத்தி செலவு உயர்ந்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை வெறும் ரூ.1 மட்டும் உயர்த்தியுள்ளது கண்டனத்துக்கு உரியதாகும். மேலும் கறவை மாடுகளின் நிலையை கருத்தில் கொண்டு பாலின் கொழுப்பு சத்து 4 சதவீதமாகவும், இதர சத்து 8 சத வீதம் அடிப்படையிலும் விலையை நிர்ணயம் செய்ய வேண் டும். கூட்டுறவு சங்கங்கள் நல்லமுறையில் இயங்க 5 சதவீதம் மார்ஜின் தொகை வழங்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் ஆவின் பால் பற்றாக்குறையை சரி செய்ய வெளிமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் வாங்கி பாலுடன் கலந்து விற்பனை செய்யும் நிலையை போக்கி பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டும். சட்டமன்ற கூட்டத்தொடரில் பசும் பால் லிட்டருக்கு ரூ.50-ம், எருமை பால் லிட்டருக்கு ரூ.60-ம் வழங்க வேண்டும். கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்துவோம் என்று தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் திமுகவினர் தேவையின்றி கூச்சலிடுகின்றனர்: அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-members-are-shouting-unnecessarily-in-the-assembly-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-members-are-shouting-unnecessarily-in-the-assembly-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">8524625f-00b0-466b-8302-ba0054a9d470</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:12:04 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:12:04.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,சட்டசபை,TN Assembly,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/p095x4cs/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/p095x4cs/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:-</p><p>ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில மரபுக்கு மீறிய வார்த்தைகள் வரும் போது அதை நீக்குவது வழக்கம். கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமே அளிக்கப்படவில்லை. தவெக ஆட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் சரியாக செய்து கொண்டிருக்கிறார். தவெகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மாண்புடன் அமர்ந்துள்ளனர். உரிய நேரத்தில் பேசுகின்றனர்.</p><p>ஆனால் நாங்கள் பேசும் போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் எப்படியாவது சண்டை நடத்தி விட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். தகாத வார்த்தைகளில் பேசுவது, முன்வரிசைக்கு ஓடி வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சட்டமன்றத்தில் திமுகவினர் தேவையின்றி கூச்சலிடுகின்றனர்; அறநிலையத் துறை அறிவிப்புகள் குறித்து திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். </p><p>முதல்-அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பும்போது அமைச்சர்கள் பதில் சொல்வதில் என்ன தவறு?. அமைச்சர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாக தான் இருக்கின்றனர். எங்களின் ஆட்சியில் எங்கள் முதல்-அமைச்சரை நோக்கி கேள்விகள் வரும் போது நாங்கள் பதில் சொல்கிறோம். உங்களுக்கு எதிர்க்கருத்துகள் இருந்தாலும் எழுந்து பேசுங்கள். யாரும் பேச வேண்டாம் என தடுக்கவில்லை. துறை சார்ந்த அமைச்சர்களும் பதில் சொல்லி கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கு பிரச்சினை என்பது கேள்விகள் சரியாக இருக்கிறதா? பதில்கள் சரியாக இருக்கின்றனவா? இதைத் தான் பார்க்க வேண்டும்.</p><p>சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு சட்டப்பேரவையில் பேசும்போது, நாங்கள் எந்தவித தவறும் இல்லை. மிகவும் தூய ஆட்சியை செய்ததாக குறிப்பிடுகிறார். இத்தகைய சூழலில் தற்போதைய ஆட்சியில் இந்து அறநிலையத்துறையில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகவுள்ளன என்று வேவு பார்க்க வேண்டிய அவசியம் என்ன? நாங்கள் எந்தெந்த கோயில்களில் என்னென்ன வேலைகளை செய்திருக்கிறோம்? ஆடிட் செய்தது என்ன? போன்றவற்றை அதிகாரிகளை வைத்து கொண்டு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? தவறே செய்யாதவர்கள் எதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அரசின் ரகசியமான ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டு, அதை சட்டப்பேரவையில் பேசுவதே தவறு இல்லையா?. இவ்வாறு ஆவ்ர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>படிக்க சென்ற இடத்தில் தமிழக வாலிபர் செய்த லீலை; விமானம் பிடித்து வந்து தூக்கிய தைவான் பெண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/taiwanese-woman-complains-about-plane-crash-in-tears</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/taiwanese-woman-complains-about-plane-crash-in-tears#comments</comments><guid isPermaLink="false">45a1b67f-d1f1-45e8-bfec-f39e72d0e14a</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:58:22 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:58:22.150Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,கைது,இளம்பெண்,arrest,women</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/l6scjc3t/thaiwan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ விமானம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாலிபர் செய்த வீபரீத செயல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/l6scjc3t/thaiwan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உடுமலை.</p><p>படிக்க சென்ற இடத்தில், தைவான் நாட்டு பெண்ணை காதலித்து ஏமாற்றிய தாக தமிழக வாலிபர் கைது செய்யப்பட்டார்.</p> <h2>வெளிநாட்டில் மலர்ந்த காதல்</h2><p>'காதல்' என்ற ஒற்றை வார்த்தையில், ஒட்டுமொத்த உலகமே உழன்று கொண்டிருக்கிறது. சாதி, மத, இன, மொழி, நாடு பாகுபாடின்றி மலர்ந்த சிலரது காதல், திருமணம் என்ற மாலை சூடி மணம் வீசுகிறது. ஆனால் பலருக்கு காதல் என்ற பூ. வாசம் இழந்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது.</p><p>அப்படி தான் இங்கே ஒரு காதல், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">தைவான்</a> நாட்டில் படிக்க சென்ற இடத்தில் மலர்ந்த காதல் பாதியிலேயே கருகியது. தற்போது போலீஸ் நிலையத்தின் படிக்கட்டில் காலடி எடுத்து வைத்து, காதலனை கம்பி எண்ண வைத்திருக்கிறது அந்த காதல். இதுபற்றிய விவரம் வருமாறு:-</p><h2>இந்தியரை திருமணம் செய்ய விரும்பிய தைவான் பெண்</h2><p>திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த போடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் ஜெகதீஷ் (வயது 32), எம்.எஸ்சி. பட்டதாரியான இவர், தத்துவவியல் துறையில் முனைவர் பட்டம் பெற கடந்த 2023-ம் ஆண்டு தைவான் நாட்டுக்குச் சென்றார். அங்குள்ள டேட்டிங் செயலி மூலம் தைச்சுங் நகரத்தைச் சேர்ந்த ஜோயிங்யிங் (35) என்ற பெண்ணுடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. </p><p>இந்தியரைத் திருமணம் செய்ய விரும்பிய ஜோயிங்யிங்குக்கு ஜெகதீசுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்தது. முனைவர் பட்டம் பெற்றதும் திருமணம் செய்வதாக ஜெகதீஷ் உறுதியளித்ததை நம்பி, அவரது படிப்புச் செலவுகள். தங்கும் வசதிகள் மற்றும் அன்றாடத் தேவைகளை ஜோயிங்யிங் கவனித்துக் கொண்டார். தனது பெற்றோரிடம் ஜெக தீஷை அறிமுகப்படுத்தியபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் அந்தப் பகுதியில் தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவியாக வசித்து வந்தனர்.</p><h2>தொடர்பு துண்டிப்பு</h2><p>சில மாதங்களுக்கு முன்பு முனைவர் படிப்பை முடித்த ஜெகதீஷ், இந்தியாவில் உள்ள பெற்றோரிடம் கூறிவிட்டு வந்து திருமணம் செய்வதாகக் கூறி ஊருக்குத் திரும்பினார். ஆரம்பத்தில் செல்போனில் பேசி வந்த அவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜோயிங்யிங்குடனான தொடர்பை திடீரெனத் துண்டித்தார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண். ஆன்லைன் மூலம் உடுமலை வக்கீல் சரஸ்வதியைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெற்றார்.</p><p>வக்கீலின் அறிவுரைப்படி, தைவானில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஜோயிங்யிங், அங்கிருந்து கார் மூலம் உடுமலை சென்றடைந்தார். </p><p>பின்னர் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். தன்னைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு, தைவானில் தன்னைத் தாக்கியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஜெகதீசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ஆதாரமாகச் சமர்ப்பித்தார்.</p><p>கைது</p><p>விசாரணைக்குப் பிறகு ஜோயிங்யிங்கை ஏமாற்றியது உறுதியானதால், உடுமலை போலீசார் ஜெகதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் உடுமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜோயிங்யிங் மருத்துவப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் தேசிய விண்வெளி தின நல்வாழ்த்துகள்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-wishes-to-everyone-on-national-space-day-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-wishes-to-everyone-on-national-space-day-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">ca38bdd7-116c-4757-8c8b-389b8563e819</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:54:45 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:54:45.533Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தேசிய விண்வெளி தினம்,National Space Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/9l8fgd8b/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/9l8fgd8b/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 இல் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம் ஒரு வரலாற்று சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் படைத்தது. பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கிய அந்த இடத்திற்கு 'சிவசக்தி' என்று பெயரிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.</p><h2>தேசிய விண்வெளி தினம்</h2><p>இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி அதிகாரபூர்வமாக 'தேசிய விண்வெளி தினமாக' அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.</p><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நயினார் நாகேந்திரன் வாழ்த்து</h2><p>விண்மீன்களை ரசித்த தலைமுறையிலிருந்து, விண்வெளியை ஆராய்ந்து உலகையே வியக்க வைக்கும் தலைமுறையாக நம் பாரத தேசம் உயர்ந்து நிற்கிறது! நம் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும், அறிவின் மீதான தாகமும் இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு புதிய சிறகுகளை அளித்து வருகின்றன.</p><p>சந்திரனைத் தொட்ட சந்திரயான் முதல் சூரியனை நோக்கிய ஆதித்யா-L1 வரை, ஒவ்வொரு சாதனையும் இந்தியாவின் அறிவியல் ஆற்றலையும், கனவுகளின் உயரத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணிச்சலாக பேசிய மாணவி: பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-speaks-out-bravely-at-awareness-event-worker-arrested-for-sexually-harassing-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-speaks-out-bravely-at-awareness-event-worker-arrested-for-sexually-harassing-her#comments</comments><guid isPermaLink="false">911a4f63-7b5b-44bb-916d-f5b54c77da9d</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:48:02 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:48:02.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவி,கைது,Worker arrested,பாலியல் தொல்லை,student,தொழிலாளி,Awareness,sexually harassing,event,விழிப்புணர்வு நிகழ்ச்சி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/w6o0jr6p/suicide.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/w6o0jr6p/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குழித்துறை, </p><p>பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை பற்றி, பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி அம்பலப்படுத்தினார். இதனை தொடர்ந்து போலீசாரால் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.</p><h2>மாணவிக்கு தொல்லை</h2><p>குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஒரு மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் தாய் இறந்து விட்டார். தந்தையும் மாணவியை கவனிக்கவில்லை.</p><p>இதனை தொடர்ந்து பாட்டியின் பராமரிப்பில் மாணவி இருந்தார். அப்போது பாட்டியின் வீட்டுக்கு மர வேலை பார்க்கும் தொழிலாளியான படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 50) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.</p><h2>பள்ளி நிகழ்ச்சியில் அம்பலம்</h2><p>இந்தநிலையில் மாணவி படிக்கும் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் அத்துமீறல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் அந்த மாணவியும் பங்கேற்றார். அப்போது அங்கு பேசிய அதிகாரிகளின் நம்பிக்கையான பேச்சைக் கேட்டு அந்த மாணவி தனக்கு நடந்த அவலத்தை துணிச்சலாக எடுத்துக் கூறி இருக்கிறார். தொழிலாளி கொடுத்த தொல்லையால் மனஉளைச்சலில் இருப்பதாக கூறி அழுதுள்ளார்.</p><h2>தொழிலாளி கைது</h2><p>இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நிகழ்ச்சியை நடத்திய 'சைல்டு லைன்' அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை <a href="https://www.dailythanthi.com/topic/arrest-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். தொழிலாளியால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி அம்பலப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பொறுப்பில் வனப்பணி அலுவலர்களை நியமிப்பதா? - அன்புமணி கேள்வி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointing-forest-service-officers-to-the-post-of-rural-development-project-director-anbumani-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointing-forest-service-officers-to-the-post-of-rural-development-project-director-anbumani-questions#comments</comments><guid isPermaLink="false">4fa35d32-531a-4d85-b627-c005fadfc38c</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:37:03 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:37:03.251Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ibnyeimf/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/ibnyeimf/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பொறுப்பில் வனப்பணி அலுவலர்களை நியமிப்பதா? ஊரகப்பகுதிகளில் மக்கள் சேவை பாதிக்கப்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வனப்பணி அலுவலர்களை நியமனம்</h2><p>தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்களாக இந்திய வனப்பணி அலுவலர்களை (Indian Forest Service - IFS) நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு நேரடியாக சேவை வழங்க வேண்டிய பொறுப்புகளில், அத்துறைக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத வனப்பணி அலுவலர்களை நியமிப்பது ஊரக மக்களுக்கான சேவையை சீர்குலைத்து விடும்.</p><p>தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் வருவாய்த்துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடியாக தொடர்புள்ள துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தான், கிராமப்பகுதிகளில் சாலைகள், பாலங்கள், வீட்டு வசதி, குடிநீர், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இந்தத் துறை தான் ஏற்படுத்தித் தருகிறது. இவை அனைத்தையும் விட, கடந்த காலங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தையும், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 150 நாள் வேலைத் திட்டத்தையும் இந்தத் துறை தான் செயல்படுத்துகிறது. இந்தத் துறையின் மாவட்ட அளவிலான தலைமை அதிகாரிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனரும் தான். வனப் பணி அலுவலர்களுக்கும் இந்தப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அவர்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்களாக நியமித்தால் ஊரக வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் மெச்சத்தக்கதாக அமையாது.</p><p>ஊரக வளர்ச்சித் துறைக்காக தனியாக பணியாளர் படிநிலைகள் உள்ளன. இந்தத் துறையின் தொடக்க நிலை பணி என்பது இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் தான். இந்தப் பணிகளுக்கு தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்த நிலைகளில் அவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் என பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்தப் பணிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றுபவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள்.</p><h2>மக்களுக்கு வழங்கப்படும் தண்டனை</h2><p>இதுதவிர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் மூலம் ஊரக வளர்ச்சித் துறைக்கு நேரடியாக உதவி இயக்குனர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் இணை இயக்குனர் நிலைக்கு உயரும் போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்களாக நியமிக்கப்படலாம். அவ்வாறு நியமிக்கப்படும் போது ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சிகள், கிராமப்புற மக்களின் தேவைகள் ஆகியவற்றை மிகவும் நன்றாக அறிந்திருப்பார்கள் என்பதால் சிறப்பாக பணியாற்ற முடியும். ஆனால், அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்காமல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நேரடியாக திட்ட இயக்குனர்களாக நியமிப்பதை தமிழக அரசு வாடிக்கையாக வைத்திருந்தது.</p><p>இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இப்பணிக்கு நியமிக்கப்பட்டதற்குக் கூட ஓரளவு ஏற்கத்தக்க வகையில் ஒரு காரணம் கற்பிக்கப்பட்டது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் பிற்காலத்தில் மாவட்ட ஆட்சியர்களாக பணி செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு இந்தப் பணி சிறந்த பயிற்சிக் களமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமிப்பதை விட்டு விட்டு, இந்திய வனப்பணி அதிகாரிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்களாக நியமிப்பதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. இது ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாகவே அமையும்.</p><p>ஊரகப்பகுதி மக்களின் தேவைகள் என்னவென்பதை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான அனுபவம் இந்திய வனப்பணி அலுவலர்களுக்கு இருக்காது. அதனால் ஊரக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப் படும். இந்த நியமனங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்களுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் திட்ட இயக்குனர்களுக்கும் இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாத நிலை உருவாகி அது ஒட்டுமொத்த துறையின் செயல்பாடுகளையும் முடக்கி விடும்.</p><h2>பதவி உயர்வு பாதிப்பு</h2><p>இன்னொருபுறம், தமிழக அரசின் இந்த முடிவால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பதவி என்பது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் பதவிக்கு ஒப்பானதாகும். இந்தப் பணிக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளை பதவி உயர்வின் மூலம் நியமித்தால் தான் அவர்களுக்கு உதவி இயக்குனர், துணை இயக்குனர், இனை இயக்குனர், கூடுதல் இயக்குனர் என பல்வேறு நிலைகளுக்கு பதவி உயர்வு பெற முடியும். மாறாக, திட்ட இயக்குனர் பணிக்கு அகில இந்திய பணி அலுவலர்களை தொடர்ந்து நியமித்து வருவதால், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் 35 ஆண்டுகள் என பணி செய்தாலும் அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் கிடைப்பதில்லை. இந்த அநீதி போக்கப்பட வேண்டும்.</p><p>எனவே, ஊரகப் பகுதிகளின் வளர்ச்சி, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், ஊரகவளர்ச்சித் துறை அதிகாளுக்கு பதவி உயர்வு கிடைப்பதை உறுதி செய்யவும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்களாக இந்திய வனப்பணி அதிகாரிகளை நியமிக்கும் முடிவை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக அரசு</a> கைவிட வேண்டும். அதற்கு பதிலாக திட்ட இயக்குனர் பதவியை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் நிரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொழில் அதிபரை கடத்தி ரூ.26 லட்சம் பணம், நகை பறிப்பு: உண்மையாக நடந்தது என்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-kidnapped-and-robbed-of-jewelry-and-cash-worth-26-lakh-what-really-happened</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/businessman-kidnapped-and-robbed-of-jewelry-and-cash-worth-26-lakh-what-really-happened#comments</comments><guid isPermaLink="false">6cb9e694-37f0-4b47-a3ce-d52c4c265430</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:17:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:17:32.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,தமிழகம்,கடத்தல்,police investigation,போலீஸ் விசாரணை,பணம் பறிப்பு,தொழில் அதிபர்,Kovai,kidnapped,business man</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/pnuqst0x/laj.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/pnuqst0x/laj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>வடமாநில தொழில் அதிபரை கடத்தி ரூ.26 லட்சம் பணம் மற்றும் நகை பறிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>ரூ.1 கோடி கடன்</h2><p>மேற்கு வங்காளம் ஹூக்ளி அருகே மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் தேப்ஜித் ரானா (வயது 25). தொழில் அதிபர். இவருக்கு கோவையை சேர்ந்த ஆனந்த குமார் என்பவர் இணையதளம் மூலம் அறிமுகம் ஆனார். அவரிடம் தேப்ஜித் ரானா, தான் திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருவதாக கூறினார்.</p><p>இந்த நிலையில் கடந்த மாதம் தேப்ஜித் ரானா கோவை வந்தார். அவரை ஆனந்தகுமார், அவருடைய நண்பர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, அவரிடம் செந்தில்குமார் ரூ.1 கோடி கடன் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது.</p><h2>கடத்தல்</h2><p>இதையடுத்து கடந்த வாரம் தேப்ஜித் ரானா தனது நண்பர்களுடன் <a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை </a>வந்து பீளமேடு அருகே ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இதை அறிந்த செந்தில்குமார், ஆனந்தகுமார் உள்பட 10 பேர் அவரை பார்க்க சென்றனர்.</p><p>அப்போது அந்த அறையில் தேப்ஜித் ரானா மற்றும் அவருடைய நண்பர்களான சித்தார்த், ஆதர்ஷ்குமார் ஆகியோர் இருந்தனர். உள்ளே சென்றதும் அந்த 10 பேரும் சேர்ந்து தொழில் அதிபர் உள்பட 3 பேரையும் காரில் ஏற்றி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.</p><h2>தலைமறைவான 8 பேர்</h2><p>பின்னர் அந்த கும்பல் கத்தி முனையில் தேப்ஜித் ரானாவிடம் ரூ.26 லட்சத்து 54 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகை மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். </p><p>மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய செந்தில்குமார், ஆனந்தகுமார் ஆகியேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான 8 பேர் யார்? அவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>தீவிர விசாரணை</h2><p>இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>வடமாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் தேப்ஜித் ரானா மற்றும் பணத்தை பறித்ததாக கூறப்படும் செந்தில்குமார், ஆனந்தகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் தங்களிடம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணத்தை கொடுப்பதாக தேப்ஜித்ரானா கூறி உள்ளார்.</p><p>அதை நம்பிய செந்தில்குமார், ஆனந்தகுமார் உள்பட 10 பேர் ரூ.80 லட்சத்தை தேப்ஜித் ரானா, சித்தார்த் ஆகியோரிடம் கொடுத்து உள்ளனர். அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் 2 பேரும் மேற்கு வங்காளத்துக்கு சென்று விட்டு கோவை வந்து உள்ளனர். </p><h2>உண்மையாக நடந்தது</h2><p>இதை அறிந்த ஆனந்தகுமார், செந்தில்குமார் உள்பட 10 பேரும் சென்று பணத்தை திரும்ப கேட்டு உள்ளனர். அதை கொடுக்காததால் கடத்திச்சென்று பணத்தை பறித்ததாக 2 பேரும் தெரிவித்து உள்ளனர். ஆனால் தேப்ஜித் ரானா, தன்னை கடத்திச்சென்று பணத்தை பறித்ததாக கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மையாக நடந்தது என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் தரமான அரிசி: அதிகாரிகள் குழு ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/quality-rice-in-ration-shops-officials-team-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/quality-rice-in-ration-shops-officials-team-inspects#comments</comments><guid isPermaLink="false">d359a824-383c-4253-9391-d294efb68ebd</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:14:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:14:20.532Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,Ration shop,அரிசி,rice</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/totuylki/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/totuylki/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரேஷன் கடைகளில் தரமான அரிசி மட்டுமே வழங்குவதை உறுதி செய்ய, மாவட்ட வாரி யாக, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர், நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், தரக் கட்டுப்பாடு அலுவலர் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுக்கள், நேற்று முதல் அனைத்து கிடங்குகளிலும் அரிசியின் தரத்தை ஆய்வு செய்து வருகின்றன.</p><p>தமிழக ரேஷன் கடை களில், 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு மாதம் தோறும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மாதம், 3.75 லட்சம் டன் அரிசி தேவை. இந்த அரிசியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. உணவு துறையின் கீழ் செயல்படும் நுகர் பொருள் வாணிப கழகம், அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்கிறது. அவற்றின் வினியோகத்தை, ரேஷன் கடைகள் வாயிலாக கூட்டுறவு துறை மேற் கொள்கிறது.</p><p>ரேஷன் அரிசி தரம் குறைவாக இருப்பதாக, அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இதற்கு காரணம், 'நீங்கள்தான்' என, இரு துறைகளின் பணியாளர்களும் தங்களுக்குள் மாறி மாறி குறைகளை சொல்கின்றனர்.</p><p>இதுதொடர்பாக இம் மாதம், 20ம் தேதி சட்ட சபையில் கூட்டுறவு மற்றும் உணவு துறை மீதான மானிய கோரிக்கையின் போது, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.</p><p>'ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங் கப்படும்' என, உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட வாரியாக கூட்டுறவு, உணவு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது.</p> <p>குழுவில், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர், வாணிப கழக முது நிலை மண்டல மேலாளர், தரக் கட்டுப்பாடு அதிகாரிகள் உள்ளனர். உள்ள வாணிப கழகத்தின் அனைத்து கிடங்கு முதல் மாவட்டங்களில் அக்குழுவினர், நேற்றுகளுக்கும் சென்று, அரிசியின் தரம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு நாளை வரை நடக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-14#comments</comments><guid isPermaLink="false">17fd65c3-1272-451c-a8f2-bf5f5246648b</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:05:08 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:05:08.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari,விடுமுறை தினம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/q62zeegp/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/q62zeegp/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். </p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.   </p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-low-pressure-area-has-formed-over-the-bay-of-bengal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-low-pressure-area-has-formed-over-the-bay-of-bengal#comments</comments><guid isPermaLink="false">77deab34-b044-47f0-b3ab-2312dd940cbb</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:50:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:50:42.442Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,Low pressure area,கன மழை,வானிலை அறிக்கை,weather condition,காற்றழுத்த தாழ்வுப்பகுதி,வங்கக்கடல்,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a70y4if1/sea.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/a70y4if1/sea.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>முன்னதாக தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. </p><p>மேலும் இதன் காரணமாக இன்று (23-08-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந் தது.</p><h2>கடல் சீற்றம்</h2><p>இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை வரை கடல் சீற்றமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை</h2><p>மேலும் மேற்கு வங்காளம், ஒடிசா, வடக்கு ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலையில் 28-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-grievance-redressal-meeting-for-differently-abled-persons-to-be-held-in-tiruvannamalai-on-the-28th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-grievance-redressal-meeting-for-differently-abled-persons-to-be-held-in-tiruvannamalai-on-the-28th#comments</comments><guid isPermaLink="false">18027616-b299-4a8f-b3f1-af32f1965a91</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:44:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:44:32.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,மாற்றுத்திறனாளிகள்,குறைதீர்வு கூட்டம்,A collector- கலெக்டர்,differently-abled persons</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/7e7svpmi/149.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருவண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/7e7svpmi/149.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p>திருவண்ணாமலையில் 28-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடைபெறும்.</p><h2>சிறப்பு குறைதீர்வு கூட்டம்</h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றும் வகையில் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. </p><p>கூட்டத்தில் அனைத்து துறை அலு வலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி நபர்களும் அன்றைய தினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்து உள்ள புதிய குறைதீர்வு கூட்ட அரங்கில் நடைபெறும் சிறப்பு குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என <a href="https://www.dailythanthi.com/topic/collector-orders">கலெக்டர்</a> வந்தனா கார்க் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் ரூ.10 ஆயிரமாக உயருகிறது?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-gold-loan-limit-in-cooperative-banks-being-raised-to-10000</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-gold-loan-limit-in-cooperative-banks-being-raised-to-10000#comments</comments><guid isPermaLink="false">a005c922-55da-4fbd-b280-e5cbd384a528</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:44:22 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:44:22.937Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நகைக்கடன்,கூட்டுறவு வங்கி,தங்க நகைக்கடன்கள்,Cooperative Bank,கூட்டுறவு வங்கிகள்,cooperative banks,gold loan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/n5d7hybs/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-23/n5d7hybs/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்து பெறப்படும் கடன் தொகையை உயர்த்த கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்பட உள்ளது.</p><h2>ரூ.8 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது</h2><p>தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்தால், ஒரு கிராம் தங்கத்திற்கு தற்போது அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கடன் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தங்கம் விலை தொடர்ந்து உயர்வு</h2><p>சர்வதேச சந்தை நிலவரங்களின் தாக்கத்தால் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ஆக இருந்தது. இதனால், தங்கத்தை அடமானம் வைத்து அதிகளவில் கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>தனியார் நிறுவனங்களுடன் போட்டி</h2><p>தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதனால், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் கூட்டுறவு நிறுவனங்களிலும் தங்க நகைக்கடன் தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>விரைவில் அதிகாரப்பூர்வ ஒப்புதல்</h2><p>கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு கிராம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தங்கத்திற்கு </a>ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் வகையில் புதிய வரம்பை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் வாரம் நடைபெற உள்ள கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>