<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 05 Sep 2026 01:58:01 +0000</lastBuildDate><item><title>11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/11-mavattangalil-kalai-10-mani-varai-mazhaikku-vaayppu</link><comments>https://www.dailythanthi.com/news/weather/11-mavattangalil-kalai-10-mani-varai-mazhaikku-vaayppu#comments</comments><guid isPermaLink="false">008ffd77-07c2-4e84-85f0-85e476ee5458</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:52:43 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:52:43.405Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/77o5en37/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/77o5en37/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.</p><p>நேற்று முன்தினம் தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவிய பலவீனமான காற்றழுத்தத்தாழ்வுப் பாதை மேல் குறிப்பிட்ட காற்றழுத்த தாழ்வுப் பாதையுடன் இணைந்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் சென்னை, சேலம், திருவள்ளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பூனைகளை குறிவைக்கும் மர்மநபர்கள்... ஓட்டல் இறைச்சியாகிறதா? பொதுமக்கள் சந்தேகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mysterious-people-targeting-cats-is-the-hotel-turning-into-meat-public-doubts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mysterious-people-targeting-cats-is-the-hotel-turning-into-meat-public-doubts#comments</comments><guid isPermaLink="false">18f65c26-417b-493e-b736-f35b311c189f</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:44:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:44:08.831Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பூனை,meat,இறைச்சி,மர்மநபர்கள்,Mysterious people,Cats</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/nbusjfe5/229.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/nbusjfe5/229.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடியில் தெருக்களில் சுற்றித்திரியும் பூனைகளை மர்ம கும்பல் வேட்டையாடி வருகிறது. அந்த பூனைகளை ஓட்டல்கள், சாலையோர கடைகளில் இறைச்சிக்காக பிடித்து செல்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு நிலவியது.</p><h2>200 பூனைகள்</h2><p>தூத்துக்குடியில் வீடுகள், திறந்தவெளி பகுதியில் நாட்டு பூனைகள் அதிகமாக உள்ளன. பூனைகளை பலர் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் வெளியிலும் ஏராளமான பூனைகள் சுற்றித்திரிகின்றன. மீன்விற்பனை கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் பூனைகள் அதிகமாக உள்ளன.</p><p>இந்த பூனைகளை சமீபகாலமாக மர்மகும்பல் பிடித்து செல்வதாக புகார்கள் எழுந்தன. தூத்துக்குடியில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பூனைகள் பிடித்து செல்லப்பட்டு உள்ளதாக செல்லப்பிராணிகள் ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.</p><h2>பொதுமக்கள் சந்தேகம்</h2><p>தூத்துக்குடி பூபாலராயர்புரம், திரேஸ்புரம், சங்குகுளி காலனி, குருஸ்புரம், இன்னாசியார்புரம், மேட்டுபட்டி, விவேகானந்தாநகர், கிருஷ்ணராஜபுரம், சுந்தரவேல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88">பூனை</a>களை மர்மநபர்கள் பிடித்து செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகின. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின. எனவே, சாலையோர கடைகள், ஓட்டல்களில் இறைச்சிக்காக பூனைகளை பிடித்து செல்கிறார்களா? அல்லது நாட்டு மருந்து தயாரிப்பதற்காக பூனைகளை பிடித்து செல்கிறார்களா? என்ற சந்தேகம் எழுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.</p><p>இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள போலீஸ் நிலையங்களில் 4 பேர் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் மனு ரசீது வழங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் பூனைகளை பிடித்து செல்லும் மர்மகும்பலை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madras-high-court-bans-collecting-caste-religion-data-in-educational-institutions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madras-high-court-bans-collecting-caste-religion-data-in-educational-institutions#comments</comments><guid isPermaLink="false">a6bf1cc0-45e2-4b06-9ea1-fee7a0f18598</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:37:56 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:37:56.059Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை ஐகோர்ட்டு,Caste,Madurai Highcourt,சாதி,மதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/kq93nouo/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/kq93nouo/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரமன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் சாதி விவரங்களை சேகரிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது சாதி, மத விவரங்கள் கேட்கப்படுகின்றன.</p><p>இதுபோன்ற நடைமுறைகள் மாணவர்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குகின்றன. இதற்கு தடை விதித்து, உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.</p><p>இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தும் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-dengue-and-swine-flu-in-tamil-nadu-compared-to-last-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-dengue-and-swine-flu-in-tamil-nadu-compared-to-last-year#comments</comments><guid isPermaLink="false">bde4e92f-29e2-4eb9-a516-318e8c1a4710</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:29:17 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:29:17.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெங்கு காய்ச்சல்,Dengue Fever,Fever,swine flu,காய்ச்சல் பாதிப்பு,பன்றிக் காய்ச்சல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/ae5nc0nd/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/ae5nc0nd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மழைக்காலம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.</p><h2>வைரஸ் தொற்றுகள்</h2><p>மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் கொடிய வைரஸ் தொற்றுகளில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் முதன்மையான இடத்தை சமீப ஆண்டுகளாக பெற்றுள்ளன. அந்த வகையில் இந்த இரு நோய்களின் தாக்கம் இந்தியாவில் நடப்பாண்டில் சற்று அதிகமாகவே இருக்கிறது. அதிலும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதை பொது சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்</h2><p>அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி வரையிலான நிலவரப்படி, 13,573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவர்களில் 0.06 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்தனர். இது சற்று ஆறுதல் தரும் செய்தி என்றாலும், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.</p><p>கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாதவாரியாக எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரமும் கிடைத்திருக்கிறது. அதில் ஜனவரியில் 1,722 பேரும், பிப்ரவரியில் 1,322 பேரும், மார்ச்சில் 1,228 பேரும், ஏப்ரலில் 1,201 பேரும், மே மாதத்தில் 1,062 பேரும், ஜூனில் 1,384 பேரும், ஜூலையில் 2,339 பேரும், ஆகஸ்டில் 3,315 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>சென்னை, கோவையில்...</h2><p>அதாவது ஜனவரியில் பாதிப்பின் தாக்கம் ஏற்றம் கண்டு பிறகு குறைந்து வந்து ஜூனில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் பாதிப்புகள் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.</p><p>கடந்த ஆண்டு ஜூலையில் 1,880 பேர் என்றிருந்த பாதிப்பு இந்த ஆண்டில் 2,339 பேராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,832 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, இந்த ஆண்டில் 3,315 ஆக எகிறியுள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில்தான் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்ட் வரையிலான தமிழ்நாடு மொத்த டெங்கு பாதிப்பான 13,573-ல் சென்னையில் மட்டும் 2,584 உள்ளது. அதற்கடுத்தபடியாக கோவையில் 1,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>மழைக்காலம்</h2><p>ஆண்டுவாரியான பாதிப்பில் கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு வெகுவாக குறைந்து, ஆண்டு பாதிப்பு 25,533 ஆக இருந்தது.</p><p>இந்த நிலையில் நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரையிலான எண்ணிக்கை 13,573 ஆக உள்ளது. இன்னும் மழைக்காலம் வேறு தொடங்க இருக்கிறது. எனவே நோய் பாதிப்பு எப்படி இருக்கும்? என்பதை கணிக்க முடியாது.</p><h2>பன்றிக் காய்ச்சல்</h2><p>இதேபோல் பன்றிக் காய்ச்சல் பாதிப்பைப்பொறுத்தவரையில், இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1,558 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் பாதிப்புப் பட்டியல்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.</p><p>2010-ம் ஆண்டில் இருந்து பன்றிக் காய்ச்சல் பாதிப்பை ஒப்பிடும்போது, 2024, 2025-ம் ஆண்டை விட நடப்பாண்டில் பாதிப்பு அதிகரித்து இருப்பது புள்ளிவிவரத்தில் தெரிகிறது. 2024-ல் 1,777 பேரும், 2025-ல் 1,288 பேரும் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் இந்த ஆண்டில் 1,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மாதம் வாரியான பாதிப்பில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் பல மடங்கு பாதிப்பு உயர்ந்திருக்கிறது. உதாரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் 46 ஆக இருந்த பன்றி காய்ச்சல் பாதிப்பு, இந்த ஆண்டில் 645 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>கவனம் வேண்டும்</h2><p>இவ்விரு நோய்களும் தனிமனிதனின் உடல்நலத்தைப் பாதிப்பதோடு மட்டுமின்றி, சமூகத்தில் ஒரு சுகாதார நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றன. எனவே, உரிய விழிப்புணர்வு, சுற்றுப்புறத் தூய்மை, கொசு ஒழிப்பு மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளே இவற்றின் பிடியிலிருந்து மக்களைக் காப்பதற்கான அத்தியாவசிய தேவைகளாக உள்ளன. மேலும், தனிமனித நடவடிக்கை, சுகாதார பாதுகாப்பு போன்ற முன்னெச்சரிக்கை முன்னெடுப்புகளை மிகுந்த கவனத்தோடு மக்கள் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.</p><aside><cite>சென்னையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவுவது குறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது:- சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக இருக்க முக்கிய காரணம் பொது சுகாதாரத்துறையின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாததுதான். மக்கள் தொகை அடர்த்தியாக இருப்பதால், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று எளிதில் பரவுகிறது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காணப்படும் நபர்கள் 5 நாட்களாவது தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்கள் முகக்கவசம் கூட அணியாமல் பொது இடங்களுக்கு சென்று நோய் பரவலை அதிகப்படுத்துகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு தென்பட்டால் அவர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பரவும் தன்மை கொண்ட காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. மேலும், பொதுமக்கள் காய்ச்சல் தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்கள்.</cite>சென்னையில் பாதிப்பு ஏன் அதிகம்?</aside>]]></content:encoded></item><item><title>தேனி: மஞ்சளாறு அணை நீர்மட்டம் 26 அடியாக சரிவு.. விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-manjalaru-dam-water-level-drops-to-26-feet-farmers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-manjalaru-dam-water-level-drops-to-26-feet-farmers-concerned#comments</comments><guid isPermaLink="false">94994cb9-c8b8-4096-9332-0676763a9091</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:29:16 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:29:16.142Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Theni,தேனி,விவசாயிகள்,மஞ்சளாறு அணை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/8l2tqpay/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/8l2tqpay/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,   </p><p>தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நீர்மட்டம் 26 அடி யாக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.</p><h2>மஞ்சளாறு அணை</h2><p>தேவதானப்பட்டி அருகே 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 258 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிகள், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பழைய வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.</p><p>ஆண்டுதோறும் அக்டோபர் 15-ந்தேதி முதல் போக பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணை நிரம்பவில்லை. இதனால் முதல் போக பாசனத்துக்கு அணை திறக்கப்படாததால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது.</p><h2>26 அடியாக சரிவு</h2><p>இதற்கிடையே, குடிநீர் தேவைக்காக கடந்த ஆண்டு 3 முறை அணையில் இருந்து வினாடிக்கு 10 கனஅடி வீதம் 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் கிணறுகள் மற்றும் ஆற்றங்கரையோர விவசாய கிணறுகளில் ஓரளவு நீர்ஊற்று கிடைத்தது.</p><p>இந்தநிலையில், கடந்த 5 மாதங்களாக மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்புபகுதிகள் மற்றும் தேவதானப்பட்டி சுற்றுவட்டாரத்தில் மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. அணையின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து தற்போது 26 அடியாக உள்ளது.</p><p>தற்போது அணைக்கு நீர்வரத்து இல்லாததால், ஆற்றங்கரையோர குடிநீர் கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் சுற்றுவட்டார பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், வருகிற முதல் போக பாசனத்துக்கும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. அணை திறக்க இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், அதற்குள் பலத்த மழை பெய்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும். இதனால் பாசனத்தை எதிர்பார்த்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..? வானிலை மையம் அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-districts-are-likely-to-receive-rain-today-meteorological-centre-update</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-districts-are-likely-to-receive-rain-today-meteorological-centre-update#comments</comments><guid isPermaLink="false">f7fe4ed7-4504-4cdd-aece-ef69878e2a1b</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:26:27 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:26:27.723Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,weather forecast,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain,TN weather,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/7lbghfrs/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/7lbghfrs/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி</p><p>நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>நேற்று தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவிய பலவீனமான காற்றழுத்தத்தாழ்வுப் பாதை (Feeble Trough) மேல் குறிப்பிட்ட காற்றழுத்த தாழ்வு பாதையுடன் இணைந்துள்ளது.</p><p>இதன்காரணமாக <strong>இன்று (05-09-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>06-09-2026 முதல் 08-09-2026 வரை:</strong> தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>09-09-2026 மற்றும் 10-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>05-09-2026 முதல் 08-09-2026 வரை:</strong> கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>05-09-2026 முதல் 08-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (05-09-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் &amp; அரபிக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>05-09-2026 முதல் 08-09-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>போடி-தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekly-special-train-between-bodi-and-tambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weekly-special-train-between-bodi-and-tambaram#comments</comments><guid isPermaLink="false">48ae26df-60c3-44b6-a406-0d318aca31cc</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:26:04 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:26:04.319Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Tambaram,தாம்பரம்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/estidoon/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/estidoon/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போடி,  </p><p>போடி-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரெயில் கடந்த ஜூலை மாதம் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து செப்டம்பர் 12-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், அதிக அளவில் டிக்கெட் டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.</p><p>அதன்படி, சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு போடி வந்தடையும். பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு போடியில் இருந்து புறப்படும் ரெயில், திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தாம்பரம் சென்றடையும். </p><p>விழுப்புரம், திருச்சி வழியாக இயக்கப்படும் இந்த ரெயிலில் 6 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்ளன. இதில் பெண்களுக்கு தனி பெட்டியும் உள்ளது. முன்பதிவு இல்லாத டிக்கெட் கட்டணம் ரூ.235 ஆகும். இதன்மூலம் சுமார் 600 பேர் வரை பயணம் செய்ய முடியும். இந்த சிறப்பு ரெயில் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai#comments</comments><guid isPermaLink="false">00aa6360-7931-47cb-92cc-6a314e3f7c55</guid><pubDate>Sat, 05 Sep 2026 00:34:13 +0000</pubDate><atom:updated>2026-09-05T00:34:13.052Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/24p3iujd/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/24p3iujd/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (05.09.2026 சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>7 மாத கர்ப்பமான காதலியை தீர்த்துக்கட்டிய வாலிபர் - பரபரப்பு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-kills-pregnant-girlfriend</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-kills-pregnant-girlfriend#comments</comments><guid isPermaLink="false">0b7b4b59-33a8-417d-bd44-5855fc428f6f</guid><pubDate>Sat, 05 Sep 2026 00:01:40 +0000</pubDate><atom:updated>2026-09-05T00:01:40.192Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,husband,Salem,murder,கொலை,வாலிபர்,கிரைம் செய்திகள்,சேலம்,காதல் மனைவி,love wife</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/vu48atxy/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/vu48atxy/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><h2>7 மாத கர்ப்பம்</h2><p>சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கருங்குள்ளன் வட்டம் பகுதியை சேர்ந்த பேராக்கவுண்டர் மகள் கோகிலா (வயது 23), பட்டதாரியான இவருக்கும், பக்கத்து ஊரான கன்னியாம்பட்டி பகுதியை சேர்ந்த அம்மாசி (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே கோகிலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. </p><p>அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதற்கு அம்மாசி தான் காரணம் என்று கோகிலா தரப்பில் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அம்மாசியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோகிலாவை அவருடன் அனுப்பி வைத்தனர்.</p><h2>கொலை</h2><p>இதற்கிடையே கோகிலா கொலை செய்யப்பட்டு உடலை மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் வீசப்பட்டு இருந்தது. இதனை கைப்பற்றிய கொங்கணாபுரம் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். சந்தேகத்தின் பேரில் அம்மாசியை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கோகிலாவை கொலை செய்தது அம்மாசி என்பது தெரிய வந்தது.</p><h2>அசிங்கப்படுத்தியதால் ஆத்திரம்</h2><p>போலீசார் நடத்திய மேல் விசாரணையில், கோகிலாவுடன் குடும்பம் நடத்துவதாக கூறி அம்மாசி அழைத்து சென்றுள்ளார். வீட்டுக்கு சென்றதும், திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதை வெளியில் சொல்லி தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி கோகிலாவிடம், அம்மாசி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அம்மாசி கோகிலாவை தாக்கியதாக தெரிகிறது. இதில் மயங்கி விழுந்த கோகிலாவை, அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>பின்னர் கொலையை மறைக்க உடலை சாக்கு மூட்டையில் கட்டி தனது மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்து சென்றுள்ளார். பின்னர் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் வீசி விட்டு கோகிலா காணாமல் போனதாக கூறி எல்லோரிடமும் நாடகம் ஆடியது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அம்மாசி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் எடப்பாடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கணவனுடன் மனைவி வசித்தால்தான் தவறான நடத்தைகள் நிகழாது என்பதா? - ஐகோர்ட்டு அதிருப்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/does-living-with-ones-husband-guarantee-that-misconduct-will-not-occur-high-court-expresses-displeasure</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/does-living-with-ones-husband-guarantee-that-misconduct-will-not-occur-high-court-expresses-displeasure#comments</comments><guid isPermaLink="false">b83987c7-e1e5-4c42-ac77-5718731b93ee</guid><pubDate>Fri, 04 Sep 2026 23:12:20 +0000</pubDate><atom:updated>2026-09-04T23:12:20.301Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>husband,wife,மனைவி,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,கணவன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/osqv74gh/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/osqv74gh/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், எனது மனைவிக்கு மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எனது கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். எனவே அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.</p><h2>சாத்தியமற்றது</h2><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- இந்த மேல் முறையீட்டு மனுதாரர் செய்த தவறு என்ன? இவர் வேலை தேடி சிவகங்கையை விட்டு வெளியேறியிருந்தார். அவர் மும்பையில் பணிபுரிந்து வந்தார். ஆனால் அவர் தனது மனைவியை அங்கு அழைத்து சென்று இருக்க வேண்டும். அவரது பாலியல் விருப்பத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். கணவன் எங்கு சென்றாலும் மனைவியை உடன் அழைத்து சென்றால்தான், அதாவது கணவனுடன் வசித்தால்தான் தவறான நடத்தைகள் நிகழாமல் இருக்கும் என்பது கீழ் கோர்ட்டு நீதிபதியின் கருத்து.</p><p>அவரது இந்த புரட்சிகரமான அணுகுமுறையிலான தீர்ப்பை தீவிர பெண்ணியவாதிகள் பாராட்டக்கூடும். ஆனால் இதை நாங்கள் ஒப்புக்கொள்ள இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மனைவியை எப்போதும் உடன் அழைத்துச் செல்வது சாத்தியமானதாக இருக்காது. உதாரணமாக, கணவன் ஒரு ராணுவ வீரராக இருந்தால், ராணுவ முகாமில் குடும்பத்துடன் வசிப்பது இயலாத காரியம்.</p><p>ஒரு விளம்பர காட்சியில் வரும் நாய் போல கணவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் மனைவியும் உடன் செல்ல வேண்டும் என்பது சாத்தியமற்றது. இந்த மனுதாரருக்கு தற்போது 67 வயதாகிறது. கணவனும், மனைவியும் கடந்த 16 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். நாங்கள் இருவரிடமும் நடத்திய ஆலோசனையில், அந்த பெண் மீண்டும் கணவருடன் இணைந்து வாழ்வதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இருவருக்கும் இடையிலான உறவு புதுப்பிக்க முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது.</p><h2>விவாகரத்து அனுமதி</h2><p>மீண்டும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்ப தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே இவர்களுக்கு விவாகரத்து அனுமதிக்கப்படுகிறது. எனவே ரூ.7 லட்சத்தை தன் மனைவிக்கு செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவிடுகி றோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் அலுவலகம் கட்டும்பணி: நிர்ணயித்த தொகையைவிட 32 சதவீதம் குறைவாக கேட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/construction-of-chief-ministers-office-contract-awarded-to-the-company-that-quoted-32-below-the-estimated-cost</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/construction-of-chief-ministers-office-contract-awarded-to-the-company-that-quoted-32-below-the-estimated-cost#comments</comments><guid isPermaLink="false">62bebf45-8d9d-4aa3-a07a-e0c6f6a05210</guid><pubDate>Fri, 04 Sep 2026 21:52:03 +0000</pubDate><atom:updated>2026-09-04T21:52:03.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுப்பணித்துறை,Public Works Department,முதல்-அமைச்சர் அலுவலகம்,Chief Minister Office</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/2yh63qkz/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/2yh63qkz/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>முதல்-அமைச்சர் அலுவலகம்</h2><p>சென்னை தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் முதல்-அமைச்சரின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு இடப்பற்றாக்குறை நிலவுவதாலும், நிர்வாக ரீதியான பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலும், முதல்-அமைச்சர் அலுவலகத்தை அதே வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.</p><p>இதற்காக அங்கு முதல்-அமைச்சரின் புதிய பிரத்யேக அறை, அதிநவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு மற்றும் உட்புற வடிவமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை திட்டமிட்டது. இந்த பணிகளுக்காக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5.54 கோடி மதிப்பீட் டில் 3 பிரிவுகளாக ஒப்பந்தம் கோரப்பட்டது.</p><h2>32 சதவீதம் குறைவு</h2><p>இதில் அரசு நிர்ணயித்த மதிப்பீட்டை விட 32 சதவீதம் குறைவாக, அதாவது ரூ.3.78 கோடிக்கு பணிகளை முடித்துக்கொடுப்பதாக குறிப்பிட்ட சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் (ராசி பில்டர்ஸ்) இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது. புதிய அலுவலகப் பணிகளை அடுத்த 3 மாதங்களுக்குள் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடையில் வாங்கிய குவாட்டர் பாட்டிலில் ‘வண்டு’ - குடித்த மதுப்பிரியருக்கு வாந்தி-மயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/beetle-found-in-quarter-bottle-bought-at-tasmac-shop-drinker-suffers-vomiting-and-dizziness</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/beetle-found-in-quarter-bottle-bought-at-tasmac-shop-drinker-suffers-vomiting-and-dizziness#comments</comments><guid isPermaLink="false">a8613dd7-5ade-4959-a04b-fb6f26222a3f</guid><pubDate>Fri, 04 Sep 2026 21:27:11 +0000</pubDate><atom:updated>2026-09-04T21:27:11.078Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,டாஸ்மாக்,Tasmac,Tiruchendur,மது பாட்டில்,liquor bottles</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ql3bwumm/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ql3bwumm/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><h2>வாந்தி, மயக்கம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 44). கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் சிலருடன் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். </p><p>அங்கு 3 குவாட்டர் மதுபாட்டில்கள் வாங்கியுள்ளார். அதில் ஒரு பாட்டிலில் இருந்த மதுவை பேச்சிமுத்து அருந்தினார். சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட் டது.</p><h2>மதுபாட்டிலில் வண்டு</h2><p>இதையடுத்து தாங்கள் வாங்கிய மற்றொரு மதுபாட்டிலை பார்த்தபோது, அதில் இறந்த நிலையில் வண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். எனவே தான் அருந்திய மதுபாட்டிலும் இறந்த நிலையில் வண்டு கிடந்திருக்கலாம் எனவும், அதை குடித்ததால் தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சிமுத்து கூறினார்.</p><p>உடனடியாக மற்ற நண்பர்கள் சேர்ந்து பேச்சிமுத்துவை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் இறந்த நிலையில் வண்டுகள் கிடந்த மதுவை குடித்த மதுப்பிரியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேவை குறைபாடு: தனியார் ஆம்னி பேருந்துக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்- நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/service-deficiency-private-omni-bus-fined-rs210-lakh-consumer-court-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/service-deficiency-private-omni-bus-fined-rs210-lakh-consumer-court-orders#comments</comments><guid isPermaLink="false">59f22157-58e4-4deb-8ffd-ee89827cfcf4</guid><pubDate>Fri, 04 Sep 2026 17:41:55 +0000</pubDate><atom:updated>2026-09-04T17:41:55.819Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,Thoothukudi,தூத்துக்குடி,fine,அபராதம்,Kovilpatti,கோவில்பட்டி,உத்தரவு,சேவை குறைபாடு,ஆம்னி பேருந்து,consumer court order,நுகர்வோர் நீதிமன்றம்,service deficiency</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/w60qu4g3/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/w60qu4g3/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">சேவை குறைபாடு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">புகார் </a>காரணமாக தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">ஆம்னி பேருந்து</a> நிறுவனத்திற்கு ரூ.2.10 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> விதித்துத் தூத்துக்குடி மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">நுகர்வோர் நீதிமன்றம்</a> அதிரடி உத்தரவிட்டுள்ளது. </p><h2>கல்லூரி மாணவர்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சண்முக சிகாமணி நகர், பல்லக்கு ரோடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஜான் பிரேம்குமார் மகன் ரூபன் பால் (வயது 21). இவர் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.டெக். இறுதி ஆண்டு படித்து வருகிறார். </p><h2>ஆம்னி பேருந்து பயணம்</h2><p>இவர் கடந்த 24.1.2026 அன்று கோவில்பட்டியில் இருந்து தனது கல்லூரி அமைந்துள்ள கோவை காருண்யா நகருக்குச் செல்வதற்காக, 'ஏர் இந்தியா' என்ற தனியார் ஆம்னி பேருந்தில் ரூ.500 செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தார். அன்று இரவு 11:40 மணிக்குக் கோவில்பட்டியில் இருந்து அப்பேருந்தில் கோவைக்குப் புறப்பட்டார். </p><h2>பேருந்து சேவை குறைபாடு</h2><p>மறுநாள் (25.1.2026) காலை கோவை சென்றடைந்ததும், மாணவர் முன்பதிவு செய்த இடமான காருண்யா நகரில் இறக்கிவிடாமல், அதற்கு முன்பாகவே காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் அவரை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுள்ளனர். பேருந்து ஊழியர்களிடம் இதுகுறித்துக் கேட்டதற்கு அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி, அம்மாணவர் ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து வேறொரு பேருந்து மூலமாகவே கல்லூரிக்கு சென்றடைந்தார். </p><h2>ஆம்னி பேருந்துக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்</h2><p>இதுகுறித்து மாணவரின் தந்தை ஜான் பிரேம்குமார் ஆம்னி பேருந்து நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களும் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தூத்துக்குடியில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் முத்துசாமி மற்றும் கௌதம் ஆகியோர் வாதாடினர். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத், சேவை குறைபாட்டைச் சுட்டிக்காட்டி தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 135 அபராதம் விதித்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>மேற்கு மாம்பலம் கோவில் நில ஆக்கிரமிப்பு: இந்து சமய அறநிலையத் துறைக்கு ஐகோர்ட்டு கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/encroachment-of-temple-land-high-court-reprimands-hindu-religious-and-charitable-endowments-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/encroachment-of-temple-land-high-court-reprimands-hindu-religious-and-charitable-endowments-department#comments</comments><guid isPermaLink="false">75ffcc10-f630-4a98-a435-ecd1a9671579</guid><pubDate>Fri, 04 Sep 2026 17:02:46 +0000</pubDate><atom:updated>2026-09-04T17:02:46.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,இந்து சமய அறநிலையத் துறை,Hindu Religious and Charitable Endowments Department,West Mambalam,மேற்கு மாம்பலம்,கோவில் நிலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/nr4rz268/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/nr4rz268/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பாஷ்யகார ஆதி சென்ன கேசவ பெருமாள் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சி.ஜனார்த்தனன் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.</p><p>இந்த வழக்கு தொடர்பாக, 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிக்கை தாக்கல் செய்த அறநிலையத்துறை இணை ஆணையர், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தில் அன்னதான கூடமும், பக்தர்கள் வசதிக்காக இருசக்கர வாகன நிறுத்துமிடமும் அமைக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.</p><p>இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். கார்த்திகைபாலன் ஆஜராகி வாதிட்டார். அறநிலையத் துறை ஆணையர் சார்பில், கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், வாடகை பாக்கியில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பாளர்கள் செலுத்தியுள்ளதால், நிலத்தை அவர்களுக்கே மீண்டும் வாடகைக்கு வழங்க இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.</p><p>ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஓராண்டுக்கு முன் தெரிவித்த போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள், அன்னதான கூடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப் போவதாக தெரிவித்த அறநிலையத்துறை, தற்போது ஆக்கிரமிப்பாளர்களை தொடர அனுமதிக்க இருப்பதாகக் கூறியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>25 லட்சத்து 29 ஆயிரத்து 907 ரூபாய் வாடகை பாக்கி உள்ள நிலையில், ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் என வெறும் 7 சதவீத தொகையை ஏற்றுக்கொண்டு, அவர்களை மீண்டும் வாடகைதாரர்களாக ஆக்க, அறநிலையத்துறை முயல்வது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த ஆக்கிரமிப்புகளை வருகிற 7-ம் தேதிக்குள் அகற்றி, 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், புராதன சின்ன ஆணையத்தின் அனுமதியின்றி, ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலுக்குள், அன்னதான கூடம் கட்டுவது ஐகோர்ட்டு உத்தரவுக்கு முரணானது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி மாணவரின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்தல்: 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-harassed-by-sprinkling-chili-powder-on-his-private-parts-5-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-harassed-by-sprinkling-chili-powder-on-his-private-parts-5-arrested#comments</comments><guid isPermaLink="false">c942f319-11ed-4820-8556-96198fca358a</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:39:35 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:39:35.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,school student,உடல் உறுப்பு,பள்ளி மாணவர்,துன்புறுத்தல்,5 people arrested,5 பேர் கைது,மிளகாய் பொடி தூவி,அந்தரங்க,Private part,chili powder,Sprinkle,harassed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/e1l3jx8o/5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/e1l3jx8o/5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், தருவைகுளம் அரசு மேல்நிலைப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">பள்ளியில் மாணவரின்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அந்தரங்க உறுப்பில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF">மிளகாய்ப்பொடி</a> தூவி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">துன்புறுத்திய</a> சக மாணவர்கள் 5 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.</p><h2>மாணவரின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்தல்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி மாலை, பள்ளி நூலக அறையில் வைத்து 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் (பிறப்புறுப்பில்) மிளகாய்ப் பொடியைத் தூவி சக மாணவர்கள் கொடூரமாக துன்புறுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். </p><h2>போலீசாரிடம் புகார்</h2><p>இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த மாதம் பாதிக்கப்பட்ட மாணவர் 7-ம் வகுப்பு பயின்று வந்த காலம் முதலே, இந்த மாணவர்கள் தொடர்ச்சியாக அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய்ப் பொடியைத் தூவித் துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. </p><h2>5 மாணவர்கள் கைது</h2><p>இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ (POCSO) சட்டங்களின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 5 மாணவர்களை கைது செய்தனர்.</p><h2>5 பேரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு</h2><p>பின்னர், தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதிக்குழுமம் முன்பாக அவர்களை ஆஜர்படுத்தி, செப்டம்பர் 1-ம் தேதி இரவு திருநெல்வேலியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பிற 3 மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம்: எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் பழுதாகி நின்ற அரசு பஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-government-bus-breaks-down-on-rail-track-as-express-train-approaches</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-government-bus-breaks-down-on-rail-track-as-express-train-approaches#comments</comments><guid isPermaLink="false">af2009d1-58c1-429c-9c6e-a29cac9c6dfe</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:36:23 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:36:23.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எக்ஸ்பிரஸ் ரெயில்,அரசு பஸ்,Government bus,விழுப்புரம்,Villupuram,பழுது,தண்டவாளங்கள்,Breakdown</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/8ja1ijih/bus.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பேருந்து]]></media:title><media:description type="html"><![CDATA[ விழுப்புரம்: எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் பழுதாகி நின்ற அரசு பஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/8ja1ijih/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உளுந்தூர்பேட்டை,</p><p>விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ரெயில்வே கேட்டுக்கு நடுவே அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.</p><h2>நடுவழியில் நின்ற பேருந்து</h2><p>விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">அரசு பேருந்து</a> ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ரெயில்வே கேட்டை பேருந்து கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக தண்டவாளத்தின் நடுவே திடீரென பழுதாகி நின்றது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் பேருந்தை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை.</p><h2>கொல்லம் எக்ஸ்பிரஸ்</h2><p>அந்த சமயம், அதே தடத்தில் கொல்லம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">எக்ஸ்பிரஸ்</a> ரெயில் வரும் நேரம் ஆகும். தூரத்தில் ரயில் வரும் சத்தமும், ஹாரன் ஒலியும் கேட்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ரெயில்வே கேட் கீப்பர், உடனடியாக பேருந்தை அப்புறப்படுத்துமாறு சத்தமிட்டார்.</p> <h2> பயணிகள் </h2><p>ரெயில் நெருங்கி வருவதை உணர்ந்ததும், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கி ஓடினர். இதனால் அங்கு பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது. ரெயில் வருவதற்கு சில நொடிகள் மட்டுமே இருந்த விறுவிறுப்பான சூழ்நிலையில், ஓட்டுநர் தனது சாதுரியத்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தை ஸ்டார்ட் செய்தார்.</p> <p>பின்னர் பஸ் தண்டவாளத்தில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது. அடுத்த சில நொடிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த தண்டவாளத்தை அதிவேகமாக கடந்து சென்றது.</p> ]]></content:encoded></item><item><title>வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 2 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு நோட்டீஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/notices-issued-to-2000-tasmac-employees-participating-in-the-strike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/notices-issued-to-2000-tasmac-employees-participating-in-the-strike#comments</comments><guid isPermaLink="false">42c66818-3e0a-4dcb-887a-909fbedb9c70</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:36:21 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:36:21.124Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/tw7ugjbf/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/tw7ugjbf/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கு சமீபத்தில் தமிழக அரசு சம்பள உயர்வை அறிவித்தது. இதனால், நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த கூடுதல் வசூல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கூடுதல் வசூல் குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.</p><p>கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களின் விவரம் அவர்களின் பணிப் பதிவேட்டில் பதிவாகும். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது முதன்முறை கண்டறியப்பட்டால் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.</p><p>அதே போல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது 2-வது முறையாக கண்டறியப்பட்டால் 3 மாதம் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். 3-வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். 3-வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p>எனினும் சில இடங்களில் முறை​கேடு​கள் தொடர்ந்​தன. கூடு​தல் வசூல் தொடர்​பான புகார்​களை பொதுமக்​கள் எளி​தில் தெரிவிக்க, தமிழக அரசு அண்​மையில் பிரத்​யேகப் புகார் சேவை மையத்​தைத் தொடங்​கியது. இந்த மையத்​துக்கு வந்த ஏராள​மான புகார்​களை ஆய்வு செய்த அதி​காரி​கள், கள சோதனை​யில் ஈடுபட்​டனர்.</p><p>இந்நிலையில், நேற்று முன்​தினம் முதல்கட்​ட​மாக 67 டாஸ்​மாக் ஊழியர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். அதன் தொடர்ச்​சி​யாக நேற்று மேலும் 150 ஊழியர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர் கடந்த 2 நாட்​களில் மட்​டும் 217 பேர் மீதான இந்த அதிரடி நடவடிக்​கை, டாஸ்​மாக் ஊழியர்கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சி​யை​ ஏற்படுத்​தி​ய நிலையில், ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆங்காங்கே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 2 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. சம்பள உயர்வு மற்றும் இதர செலவுகளுக்கு அரசே பணம் தரும் நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லையென்றால் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் பயங்கரம்: ஊராட்சி மன்றத் தலைவர் கல்லெறிந்து கொலை - போலீஸ் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-nellai-panchayat-president-stoned-to-death-police-investigation-underway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-nellai-panchayat-president-stoned-to-death-police-investigation-underway#comments</comments><guid isPermaLink="false">9a4e3b03-70dc-4c0f-ad44-9d5aaa909170</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:19:30 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:19:30.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/klohtf72/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/klohtf72/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று குற்றம்சாட்டி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.  </p> <p>அப்போது அங்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. இதற்கிடையில், வாக்குவாதம் முற்றியபோது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் மீது கல்லை எறிந்ததாக கூறப்படுகிறது. </p> <p>இதில் படுகாயமடைந்த மகாராஜன் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-hold-talks-with-sanitation-workers-in-chennai-regarding-their-demands</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-hold-talks-with-sanitation-workers-in-chennai-regarding-their-demands#comments</comments><guid isPermaLink="false">ec3cb118-7e3c-48b7-bfb2-9f1f784de094</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:05:38 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:05:38.908Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/crcxtq3v/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/crcxtq3v/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி, வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி.ஆர்.நிர்மல்குமார், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை இன்று (04.09.2026) ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. </p> <p>இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்,  இணை ஆணையாளர் (சுகாதாரம்) ஸ்ரேயா பி. சிங், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக், உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘ஊழலை ஒழிப்பதில் த.வெ.க. வெற்றி பெற்று வருகிறது’ - வைகோ </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-succeeding-in-eradicating-corruption-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-succeeding-in-eradicating-corruption-vaiko#comments</comments><guid isPermaLink="false">a683f8bc-ea64-4995-aedd-d8c076578b82</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:55:51 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:55:51.049Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,Vaiko,வைகோ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/vd3jcq4j/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/vd3jcq4j/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“த.வெ.க. ஆதரவுக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று ம.தி.மு.க. நிச்சயம் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும். சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் பார்ப்பதால் மக்களுக்கு ஒரு தெளிவு ஏற்படுகிறது. இதன் மூலமாக ஆளுங்கட்சிக்கு மக்கள் மன்றத்தில் ஆதரவு பெருகி வருகிறது. </p><p>சட்டமன்ற நிகழ்வுகள் தொலைக்காட்சியில் முழுமையாக வருவது நிர்வாகத்திற்கும் நல்லது, ஜனநாயகத்திற்கும் நல்லது. எதிர்க்கட்சிகளிடம் இருந்து எப்படிப்பட்ட கேள்விக்கணைகள் பாய்ந்து வந்தாலும், அவற்றை சிறப்பாக இடைமறித்து பதில் சொல்லக்கூடிய ஆற்றலை அமைச்சர்கள் பெற்றிருக்கிறார்கள். </p><p>த.வெ.க. அரசு ஊழலை ஒழிப்பதே எங்கள் குறிக்கோள் என்று சொன்னது மட்டுமல்லாமல், இன்று அரசு அலுவலகங்களில் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும் வகையில், ஊழலை ஒழிப்பதில் த.வெ.க. வெற்றி பெற்று வருகிறது. ஒரு ஆட்சிக்கு இதைவிட சிறப்பான மகுடம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.   </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 3 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-rowdies-arrested-in-thoothukudi-under-the-prevention-of-gangsters-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-rowdies-arrested-in-thoothukudi-under-the-prevention-of-gangsters-act#comments</comments><guid isPermaLink="false">19cfa228-82a0-4953-a3d5-132ebf4eed75</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:47:03 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:47:03.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,arrested,தூத்துக்குடி,Goondas act,குண்டர் சட்டம்,3 people,3 பேர்,rowdies,ரவுடிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/11xdaoiz/3-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/11xdaoiz/3-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> சிப்காட் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 ரவுடிகளை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது</a> செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். </p><h2>பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவித்தல்</h2><p>தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்த வரலாற்றுப் பதிவேடு ரவுடிகளான 3 நபர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் எஸ்.பி. பரிந்துரை செய்தார். </p><h2>3 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</h2><p>அதனடிப்படையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் நியூ முனியசாமிபுரம், தாளமுத்துநகர் மாரிமுத்து மகன் சிவா(எ) ஜீவா (வயது 20), அம்பேத்கர் நகர் 1-வது தெரு, சேகர் மகன் சந்திரன்(23), அம்பேத்கர் நகர் 4-வது தெரு, வெள்ளைப்பாண்டி மகன் சந்தனராஜ்(எ) பம்பு(25) ஆகிய 3 பேரையும் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.</p><h2>காவல்துறை எச்சரிக்கை</h2><p>தூத்துக்குடி நகரில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை தொடரும் என காவல்துறை எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேனி: பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் காட்டுத்தீ.. அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-forest-fire-in-the-panchamthangi-hill-area-rare-trees-destroyed-by-fire</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-forest-fire-in-the-panchamthangi-hill-area-rare-trees-destroyed-by-fire#comments</comments><guid isPermaLink="false">60a8944b-e618-4bfe-aad4-77a34cfa8f25</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:40:55 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:40:55.823Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,காட்டுத்தீ,Wild Fire</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/j5bk9ql1/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/j5bk9ql1/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால், தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவியது. நேற்று காலை தொடங் கிய காட்டுத்தீ இரவு வரை கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் ஏராளமான அரிய வகை மரங்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. மேலும், அப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து தீப்பற்றி எரிந்து வருவதால், வனப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>காதலனுக்கு பைக் வாங்க தோழியின் வீட்டில் திருட்டு: 19 வயது மாணவி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-arrested-for-stealing-friends-gold-to-buy-bike-for-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-arrested-for-stealing-friends-gold-to-buy-bike-for-lover#comments</comments><guid isPermaLink="false">c57079d3-8055-4c18-9ddc-d3e73ef04dcf</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:37:39 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:37:39.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருட்டு,பைக்,வீட்டில்,காதலன்,Theft,மாணவி கைது,தோழி,Boy friend,College student arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/6sujntrq/bik.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மாணவி]]></media:title><media:description type="html"><![CDATA[ காதலனுக்கு பைக் வாங்க தோழியின் வீட்டில் திருட்டு: 19 வயது மாணவி கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/6sujntrq/bik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பொள்ளாச்சி,</p><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">மாணவி</a>, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் காதல் மலர்ந்துள்ளது. தனது காதலன் பைக் கேட்டு அடம் பிடித்ததால், எப்படியாவது பைக் வாங்கி கொடுக்க மாணவி திட்டமிட்டுள்ளார்.</p><h2>9 பவுன் தங்க நகை</h2><p>இதற்காக, அடிக்கடி தான் சென்று வரும் தனது நெருங்கிய தோழியின் வீட்டையே குறி வைத்துள்ளார். தோழியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திய அந்த மாணவி, அங்கிருந்த 9 பவுன் தங்க நகைகளை நைசாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">திருடி</a> சென்றுள்ளார்.</p><h2> ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனை</h2><p>திருடிய 9 பவுன் நகைகளையும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு அடகு கடையில் ரூ.2.50 லட்சத்திற்கு விற்றுள்ளார். அந்த பணத்தை அப்படியே கொண்டு போய், தனது காதலன் ஆசைப்பட்ட புத்தம் புதிய இருசக்கர வாகனத்தை  வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோழியின் பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p> <h2> சிறையில் அடைப்பு</h2><p>போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற கல்லூரி மாணவி மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரித்த போது, தோழி வீட்டில் நகையை திருடி காதலனுக்கு பைக் வாங்கி கொடுத்ததை அழுதுகொண்டே ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மாணவியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர். </p><p>ஆசை காதலனுக்கு பைக் வாங்கி தந்த மாணவி, தற்போது சிறைச்சாலைக்கு சென்ற சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?’ - லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் பதில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-is-the-tvk-government-performing-lalgudi-mla-leema-rose-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-is-the-tvk-government-performing-lalgudi-mla-leema-rose-responds#comments</comments><guid isPermaLink="false">3053ed9e-3e33-4f7f-9ac5-8adddc41beac</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:28:52 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:28:52.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,லீமா ரோஸ்,Leema Rose Martin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/facg5j7w/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/facg5j7w/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>சிவகங்கை மாவட்டத்தில், லால்குடி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் த.வெ.க. அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-</p><p>“த.வெ.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு நிறைய திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். லால்குடி தொகுதியில் உள்ள மாமன்னர் ராஜராஜசோழன் கட்டிய 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன். அவர்கள் 1 கோடி அல்லது 2 கோடி ஒதுக்குவார்கள் என்று நினைத்தேன். ஆனால் கோவில்களை புனரமைக்க மொத்தமாக 125 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். </p><p>அதே போல் காவல்துறையினருக்கு சம்பள உயர்வு, காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் முன்வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளை ஓரளவு நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறார்கள். </p><p>மக்களுக்கு தேவை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான். அந்த வகையில் த.வெ.க. அரசு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரை, கொலைகள் நடப்பதை தடுப்பது கடினம். அதே சமயம் சிங்கப்பூர், துபாய் போன்ற இடங்களில் கடுமையான தண்டனைகளை கொடுக்கிறார்கள். தண்டைகள் கடுமையானால் தான் கொலைக்குற்றங்கள் குறையும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>தன்னை ஆசான் என பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumavalavan-thanks-udhayanidhi-stalin-for-referring-to-him-as-asan-mentor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumavalavan-thanks-udhayanidhi-stalin-for-referring-to-him-as-asan-mentor#comments</comments><guid isPermaLink="false">a3c954a6-6c98-46f3-8d9e-6f7bc1dd8989</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:10:46 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:10:46.073Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/5mulnmls/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/5mulnmls/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>'தனது அரசியல் ஆசான் திருமாவளவன்' என சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார். இந்த நிலையில், தன்னை ‘கொள்கை ஆசான்’ எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அன்பு இளவல் உதயநிதி, உணர்ச்சிவசப்படாமல், உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையிலேயே தனது கருத்தை கூறியுள்ளார். அவரது கருத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எதிர்மறையான கருத்துகளைப் பேசி வருகின்றனர். எந்த தயக்கமும், நெருடலும் இல்லாமல் என்னை கொள்ளை ஆசான் என உதயநிதி கூறியுள்ளார். </p><p>உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையில் மனம் திறந்து அரசியல் ஆசான் திருமா என உதயநிதி பேசியுள்ளார். இதனை பொறுக்க முடியாமல் பலர் எதிர்மறை கருத்து பேசுகின்றனர், விசிகவினர் எதிர்விமர்சனம் செய்யாமல் கடந்து செல்ல வேண்டும்." என  திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘சட்டமன்றத்தில் நாங்கள் எந்த பிரச்சினையும் செய்வதில்லை’ - அமைச்சர் பர்வேஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-do-not-create-any-trouble-in-the-legislative-assembly-minister-parvez</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-do-not-create-any-trouble-in-the-legislative-assembly-minister-parvez#comments</comments><guid isPermaLink="false">c34bebde-8360-4077-ab7c-8813242dba4b</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:08:46 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:08:46.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் பர்வேஸ்,Minister Parvesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/it1fmgab/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/it1fmgab/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் தற்போது நேரலையில் வருகின்றன. சட்டமன்றத்தில் யார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்களே பார்த்து தெரிந்து கொள்ள முடியும். எதிர்க்கட்சிகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, மக்களுக்கான திட்டங்கள் குறித்து விரிவாக த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விளக்கமளித்து வருகிறோம். </p><p>சட்டமன்றத்தில் நாங்கள் எந்த பிரச்சினையும் செய்வதில்லை. யார் பிரச்சினை செய்வார்கள் என்பது உங்களுக்கே தெரியும். நான் அணிந்திருக்கும் கண்ணாடி குறித்து சர்ச்சையை எழுப்புகின்றனர். இந்த கண்ணாடியை மருத்துவர் அறிவுரையின் பேரில் நான் அணிந்திருக்கிறேன். இதை ஏ.ஐ. கண்ணாடி என்று சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது. எதையாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>வீட்டில் தனியாக வசித்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-living-alone-at-home-tied-up-jewelry-and-cash-stolen</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-living-alone-at-home-tied-up-jewelry-and-cash-stolen#comments</comments><guid isPermaLink="false">3eb8bdcc-4d1b-48a1-a957-790c9f5b6d80</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:57:26 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:57:26.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ராணிப்பேட்டை,நகை கொள்ளை,Jewelry robbery,Ranipet</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/j5ra7cem/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/j5ra7cem/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராணிப்பேட்டை,</p><p>திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு, முகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளைய டித்து சென்றனர்.</p><h2>முகமூடி கொள்ளையர்கள்</h2><p>ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தில்  வசிப்பவர் சுப்பிரமணி மனைவி அமுதா (வயது 45). சுப்பிரமணி இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால் அமுதா தனியாக வசித்து வந்தார். விவசாய கூலி வேலை செய்து கொண்டு, கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.</p><p>வீட்டின் பின்புறம் மாடுகளை கட்டிவைத்திருப்பதால் அமுதா இரவில் பின்பக்க கதவை திறந்து வைத்திருப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமுதா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். 10.30 மணி அளவில் 25 வயது மதிக்கத்தக்க 3 நபர்கள் முகமூடி, கையுறை அணிந்து கொண்டு பின்வாசல் வழியாக அமுதாவின் வீட்டுக்குள் புகுந்தனர்.</p><h2>நகை, பணம் கொள்ளை</h2><p>அவர்கள் அமுதாவின் முகத்தை துணியால் மூடி, அங்கிருந்த கயிறை எடுத்து கை, கால்களை கட்டினர். கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டி, ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டதுடன், பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தையும் எடுத்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.</p><p>பின்னர் அமுதா தானாகவே கட்டை அவிழ்த்துக் கொண்டு சற்று தூரத்தில் உள்ள வீட்டுக்காரரிடம் நடந்ததை கூறி உள்ளார். உடனே அவர் ஆரணி மெயின் ரோட்டில் பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் தெரிவித்தார். திமிரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் லோகேஷ், தனிப்பிரிவு போலீஸ்காரர் ரகுராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>மேலும் இந்த சம்பவம் குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிந்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அமுதா வீட்டில் 5 கறவை மாடுகள் திருட்டு போய் இருக்கிறது. இது குறித்து திமிரி போலீசில் புகார் அளித் தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்தார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தவெகவில் நாங்கள் கூட்டணியிலும் இல்லை, அமைச்சரவையிலும் இல்லை - வீரபாண்டியன் பேட்டி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neither-in-the-coalition-nor-in-the-cabinet-veerapandian-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neither-in-the-coalition-nor-in-the-cabinet-veerapandian-interview#comments</comments><guid isPermaLink="false">d32aea4b-96ad-4ecd-831b-35ab6743e63b</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:55:43 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:55:43.613Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,CPI,மு. வீரபாண்டியன்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/t7jsj6vr/pandiyan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வீரபாண்டியன் பேட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ 
தவெகவில் நாங்கள் கூட்டணியிலும் இல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/t7jsj6vr/pandiyan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாங்கள் கூட்டணியிலும் இல்லை, அமைச்சரவையிலும் இல்லை என இந்திய கம்யூ மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20">தவெக ஆதரவு </a>கட்சிகளின் 2வது கூட்டம் செப்.9ம் தேதி நடைபெறவுள்ளது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் உள்ளிட்டோர் நேரில் அழைப்புவிடுத்தனர்.</p><p>கட்சியில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என இந்திய கம்யூ மாநில செயலாளர் வீரபாண்டியன் வீரபாண்டியன் கூறியுள்ளார். </p><p>இது தொடர்பாக இந்திய கம்யூ மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>எங்களை சந்தித்த அமைச்சர்களுடன் அரசியல்தான் பேசினோம்.அமைச்சர்களாக இல்லாமல் தவெகவை சேர்ந்த நிர்வாகிகளாக எங்களை சந்தித்தனர்.  இந்த சந்திப்பின்போது நாங்கள் அரசியல் பேசினோம். இந்திய அரசியலில் மத்திய அரசின் நாடாளுமன்ற ஜனநாயக மீறல் குறித்தும், இந்தியா கூட்டணியின் பொறுப்பு, கடமை அதிகரித்திருப்பது குறித்து பேசினோம். எதிர்கால அரசியல் குறித்து எங்கள் கருத்தை கேட்டனர்.</p><h2>கூட்டணியில் இல்லை</h2><p>தவெகவின் முதல் கூட்டணி கூட்டம், ஒரு விருந்து தான். விருந்தில் கூட்டணி குறித்து பேசுவதில் உடன்பாடில்லை. அந்த தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதால் கலந்து கொள்ளவில்லை. அது குறித்து அன்றே முதல்வரை சந்தித்து விளக்கிவிட்டோம். கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்பது தான் எங்களது நிலைப்பாடு, அதில் உறுதியாக இருக்கிறோம்</p><h2>தவெகவை விமர்சிப்போம் </h2><p> இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை (05.09.26) நடைபெறவுள்ளது. நாங்கள் கூட்டணியிலும் இல்லை, அமைச்சரவையிலும் இல்லை. தவெக அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகிறோம். தவெக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்போமா என்பதை கட்சிதான் முடிவு செய்யும். அதிகாரத்தில் கவர்னர் அமர கூடாது என்பதற்காகவே தவெக ஆட்சிக்கு ஆதரவு தருகிறோம். மதச்சார்பின்மையை நோக்கி நகரும் வரை தவெக விமர்சிப்போம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர்: 32 சவரன் நகைகள், ரூ.65 ஆயிரம் திருடிய பணிப்பெண் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruchendur-maid-arrested-for-stealing-32-sovereigns-worth-rs65-thousand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruchendur-maid-arrested-for-stealing-32-sovereigns-worth-rs65-thousand#comments</comments><guid isPermaLink="false">8fb2fe5b-7408-4dcd-9397-c50e85795ba9</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:49:43 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:49:43.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,arrest,Complaint,புகார்,maid,Thiruchendur,நகை-பணம் திருட்டு,stole jewelry and money,பணிப்பெண் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/oz3oh4v9/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை திருட்டு, கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/oz3oh4v9/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூரில்</a> உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் வீட்டில், 32 சவரன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தங்க நகைகள்</a>, ரூ.65 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">பணத்தை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருடிச் சென்ற</a> பணிப்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">பெண்</a>ணை புகார் அளித்த 1 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>வீட்டு பணிப்பெண்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து மனைவி மாரியம்மாள் (வயது 61). இவரது வீட்டில் அதே பகுதியில் செட்டி அம்மன் கோவில் அருகே வசிக்கும் முத்துமாலை என்பவரது மனைவி இசக்கியம்மாள்(40) கடந்த 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். </p><h2>32 சவரன் நகைகள், ரூ.65 ஆயிரம் பணம் திருட்டு</h2><p>இந்த நிலையில், மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பணிப்பெண் இசக்கியம்மாள், மாரியம்மாளின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள பீரோ மற்றும் மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளார். </p><h2>நகை, பணம் திருட்டால் அதிர்ச்சி</h2><p>மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி மாரியம்மாள் வீட்டிற்கு திரும்பியுள்ளார். நேற்று முன்தினம் பீரோ மற்றும் மேஜை டிராயரைத் திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த தாலி முறுக்கு செயின், முத்துமாலை, பெண்டன் மாலை, ஓம் டாலர் செயின், வாட்ச், வளையல், சிமிக்கி கம்மல், மோதிரங்கள் உள்பட மொத்தம் 32 சவரன் தங்க நகைகளும், ரூ.65 ஆயிரம் ரொக்கமும் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். </p><h2>போலீசாரிடம் புகார்</h2><p>இதுகுறித்து பணிப்பெண் இசக்கியம்மாளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாரியம்மாள் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என இசக்கியம்மாள் மறுத்துள்ளார். உடனடியாக இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். </p><h2>புகார் அளித்த 1 மணி நேரத்திற்குள் நகை, பணம் மீட்பு</h2><p>புகார் அளிக்கப்பட்ட ஒரே மணி நேரத்திற்குள் பணிப்பெண் இசக்கியம்மாளை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த திருடப்பட்ட 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் முழுமையாகக் கைப்பற்றினர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சிவகங்கையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து - பள்ளி நிர்வாகத்திற்கு கல்வி அலுவலர் நோட்டீஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/van-carrying-students-meets-with-accident-in-sivaganga-education-officer-issues-notice-to-school-management</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/van-carrying-students-meets-with-accident-in-sivaganga-education-officer-issues-notice-to-school-management#comments</comments><guid isPermaLink="false">80e3f7a8-afe9-4a72-91ec-a415b73005e4</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:21:37 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:21:37.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,School van accident,பள்ளி வேன் விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/b6gp1nf9/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/b6gp1nf9/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>தமிழகத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் இன்று பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். </p><p>நாளை பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா நடப்பதன் காரணமாக, சீருடைகளை வழங்குவதற்காக பல மாணவர்களை வேன் மூலமாக பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.  </p><p>இந்நிலையில், மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன், ஒரு லாரியோடு மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவர்கள் 3 பேர் மற்றும் ஓட்டுனர், உதவியாளர் என மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p> <p>இந்த விபத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், விடுமுறை நாளான இன்று பள்ளி இயங்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.</p><p>மாவட்ட கல்வி அலுவலரின் நோட்டீருக்கு பள்ளி நிர்வாகம் விரைவில் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விளக்கத்தின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தாமிரபரணி நீர் கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-suddenly-block-road-demanding-thamirabarani-water-tension-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-suddenly-block-road-demanding-thamirabarani-water-tension-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">e55e4cbc-b648-4690-91ba-383ac7744ffc</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:05:20 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:05:20.411Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Thoothukudi,தூத்துக்குடி,விவசாயிகள்,demand,கோரிக்கை,Srivaikundam,ஸ்ரீவைகுண்டம்,Sudden road blockade,திடீர் சாலை மறியல்,தண்ணீர் திறக்க,open water</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/wid1t8ph/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாமிரபரணி நீர் கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/wid1t8ph/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>கடைமடை பாசனத்திற்கு முழுமையான அளவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95">தண்ணீர் திறக்க</a> கோரி தூத்துக்குடியில் மாட்டு வண்டி, டிராக்டர்களுடன் விவசாயிகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">சாலை மறியல் போராட்டத்தில்</a> ஈடுபட்டதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பரபரப்பு</a> ஏற்பட்டது. </p><h2>விவசாயிகள் திடீர் சாலை மறியல்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிகளுக்கு பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து முழுமையான அளவில் தாமிரபரணி தண்ணீரை திறந்து விடக்கோரி, விவசாயிகள் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளுடன் நெல்லை - தூத்துக்குடி பிரதான சாலையில் இன்று காலையில் திரண்டு வந்து, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>தாமிரபரணி தண்ணீரை திறந்து விட கோரிக்கை</h2><p>ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிக்குட்பட்ட கடைமடை நிலங்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் சரிவர வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து முழுமையான அளவில் தாமிரபரணி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கோரிக்கை</a> விடுத்து வந்தனர். </p><p>இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைமடை பாய்மான விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று காலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி - நெல்லை நான்கு வழிச்சாலையில் புதுக்கோட்டை அருகே உள்ள தட்டப்பாறை விலக்கில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, குலையன்கரிசல் விவசாயிகள் சங்கத் தலைவர் ஹேம்நாத் ஜெகன், கூட்டாம்புளி தலைவர் பட்டு முருகேசன், சேர்வைக்காரன்மடம் தலைவர் தங்கதுரை, கோரம்பள்ளம் விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் சுந்தரபாண்டி மற்றும் அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். </p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களுடன் சாலைக்கு வந்து அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். விவசாயிகளின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக, தூத்துக்குடி - நெல்லை பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைச் சீர்செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னை அருகே கல்லூரியில் மாணவி, மாணவர் செயலால் காலவரையற்ற விடுமுறை அறிவித்த நிர்வாகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-administration-has-declared-an-indefinite-holiday-due-to-student-action-in-the-college</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-administration-has-declared-an-indefinite-holiday-due-to-student-action-in-the-college#comments</comments><guid isPermaLink="false">fa2b7bbf-164d-4ad6-acc1-83f6e733798b</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:05:01 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:05:01.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கல்லூரி மாணவி,student,collage student</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/utnfexsa/students33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்லூரியில் மாணவி, மாணவர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/utnfexsa/students33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியின் 5-ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நேற்று மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.</p><h2>கல்லூரி வளாகத்தில்</h2><p>சென்னை அருகே உள்ள பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் தங்கி படிக்கிறார்கள். சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து மாணவ,மாணவிகள் கல்லூரி பஸ் மூலம் சென்று வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், நேற்று மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>5-வது மாடியில் </h2><p>கல்லூரி வேலை நேரத்தில் மாணவி ஒருவர் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஷெரின் (19). ஏ.ஐ.2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர். தினமும்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF"> கல்லூரி</a>க்கு சென்று வந்துள்ளார். இவரது தந்தை அருள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். தாயார் சென்னையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். பெற்றோருக்கு ஷெரின் ஒரே மகள் ஆவார். வழக்கம் போல கல்லூரிக்கு வந்த ஷெரின் திடீ ரென 5-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்து உள்ளார். அதில் பெற்றோர் அன்பும், அரவணைப்பும் இல்லாததால் இந்த முடிவை மேற்கொள்வதாக குறிப்பிட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மாணவ - மாணவிகள் அதிர்ச்சி</h2><p>மாணவியின் தற்கொலை சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த சக மாணவ, மாணவிகள் சோகத்தில் இருந்த நிலையில் நேற்று மற்றொரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் சசிதரன் (19). இவர் நேற்று கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென 3-வது மாடியில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு கை, கால்கள் முறிந்தன. உயிருக்கு போராடிய அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சசிதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள்</h2><p>மாணவர் சசிதரன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்று ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் கல்லூரிக்கு முறையாக வருவதில்லை என்றும் அதனால் கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். கல்லூரி மாணவர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றதை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நேரில் பார்த்ததால் அதிர்ச்சியில் உறைந்தனர். </p><h2>காலவரையற்ற விடுமுறை </h2><p>தனியார் பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவத்தால் மாணவ-மாணவிகள் கலக்கத்தில் உள்ளனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை நேற்று அறிவித்தது.</p><p>கல்லூரி வளாகத்தில் தங்கிப் படித்த விடுதி மாணவ-மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தனியார் கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் அந்த கல்லூரி 7-ந்தேதி திறக்கப்படும் என்று மாணவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: 2 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுற்றிவளைத்த வனத்துறையினர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-forest-department-officials-surround-man-eater-tiger-that-killed-two-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-forest-department-officials-surround-man-eater-tiger-that-killed-two-people#comments</comments><guid isPermaLink="false">433d8bef-d755-4454-a72e-9cf6bba2f965</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:02:35 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:02:35.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,புலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/lwp5yg9g/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/lwp5yg9g/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த மாதம் 9-ம் தேதி ஒருவர், 21-ம் தேதி ஒருவர் என இரண்டு பேரை புலி தாக்கிக் கொன்றது. ஒரே பகுதியில் இரண்டு பேரை தாக்கிக் கொன்ற புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>இதனையடுத்து புலியை கூண்டு வைத்தோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்கரா உத்தரவிட்டார். இதன்படி புலியை கடந்த 15 நாட்களாக வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். </p><p>இந்நிலையில், ஓவேலி அருகே ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயன் என்ற கும்கி யானையின் உதவியோடு புலியை வனத்துறை நெருங்கி உள்ளதாகவும், வன கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசியோடு புலியை  நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் சிறப்பாக பதில் அளிக்கும் தவெக அமைச்சர்கள் - வைகோ பாராட்டு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-praises-thaweka-ministers-for-giving-excellent-answers-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-praises-thaweka-ministers-for-giving-excellent-answers-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">0f6038ad-9036-4ecb-9bca-fca36e0b9901</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:38:24 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:38:24.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,Vaiko,வைகோ,TN Assembly session,CMVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/p8szwl74/vaiko33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வைகோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
சட்டமன்றத்தில் சிறப்பாக பதில் அளிக்கும் தவெக அமைச்சர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/p8szwl74/vaiko33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக ஆதரவு கட்சி கூட்டத்தில் நிச்சயம் மதிமுக கலந்துகொள்ளும் என வைகோ கூறியுள்ளார்.</p><p>வரும் 9-ம் தேதி தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில், </p><p>இடதுசாரி தலைவர்களை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன்  அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர்  சந்தித்தனர். அதனை தொடர்ந்து  தவெக அமைச்சர்கள் சந்திப்பிற்கு பின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>எதிர்க்கட்சியிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் பாய்ந்தாலும், அவற்றை இடைமறித்து சிறப்பாகப் பதிலளிக்கும் ஆற்றலை தவெக அமைச்சர்கள் பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சட்டமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டு சாதித்து வருகிறார்கள்.</p><h2>சட்டமன்ற நேரலை... யாருக்கு ஆதரவு?</h2><p>சட்டமன்ற நேரலையை மக்கள் பார்க்கும்போது ஒரு தெளிவு ஏற்படுகிறது. அது ஆளும் கட்சிக்கு மக்கள் மன்றத்தில் ஆதரவைப் பெருக்கி கொடுக்கிறது. தொலைக்காட்சியில் சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக ஒளிபரப்பப்படுவது, ஒட்டுமொத்தமாக நிர்வாகத்திற்கும் நல்லது. ஜனநாயகத்திற்கும் நல்லது.</p><h2>கண்டிப்பாக பங்கு பெறுவோம்</h2><p>தவெக ஆதரவு கட்சி இரண்டாம் கட்ட கூட்டம் 9ம் தேதி நடைபெறுகிறது, கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள். கண்டிப்பாக அதில் நாங்கள் பங்கு பெறுவோம். சட்டசபையில் முதல்-அமைச்சர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். தவெகவின் 110 நாட்கள் ஆட்சியில் ஊழலை ஒழிப்பதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.</p><h2>கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லாமல்</h2><p>'ஊழலை ஒழிப்பது ஒன்றே எங்களின் குறிக்கோள்' என்று சொன்னது மட்டுமல்லாமல், அதில் வெற்றி பெற்று வருகிறார்கள்; ஒரு ஆட்சிக்கு இதைவிட மகுடம் வேறு ஒன்றும் இருக்க முடியாது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக ஜெ.காமராஜ் பொறுப்பேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/j-kamaraj-takes-over-as-additional-director-general-central-bureau-of-communication</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/j-kamaraj-takes-over-as-additional-director-general-central-bureau-of-communication#comments</comments><guid isPermaLink="false">44c767e9-6a4c-4f50-b10d-0d909083ce9e</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:38:11 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:38:11.489Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Director,இயக்குநர்,Central,செய்தி மக்கள் தொடர்புத்துறை,பொறுப்பேற்பு,மத்திய,General</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/2dev8po1/kamaraj.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜெ. காமராஜ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக ஜெ.காமராஜ் பொறுப்பேற்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/2dev8po1/kamaraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">பத்திரிகை</a> தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் மண்டலத்திற்கான கூடுதல் தலைமை இயக்குநராக ஜெ. காமராஜ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.</p><h2>கூடுதல் பெறுப்பு</h2><p> இம்மண்டலத்திற்கான கூடுதல் பத்திரிகை தலைமை பதிவாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.நெடிய அனுபவம் கொண்ட அதிகாரி இந்திய தகவல் பணியின் 2008-ம் ஆண்டு பிரிவு அதிகாரியான ஜெ. காமராஜ், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவம் மிக்கவர் ஆவார். </p><p>அவரது பணிக் காலம் பின்வருமாறு:-</p><p><strong>2008–2010:</strong> இந்திய ரெயில்வே போக்குவரத்து பணியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.</p><p><strong>2011:</strong> புதுடெல்லி ஆகாசவாணியின் செய்திப் பிரிவில் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.</p><p><strong>2013:</strong> புதுடெல்லி டிடி நியூஸ் தொலைக்காட்சியின் துணை இயக்குநராக பொறுப்பேற்றார்.</p><p><strong>2014–2016:</strong> டிடி தமிழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தொலைக்காட்சியில்</a> துணை இயக்குநராக இணைந்தார்.</p><p><strong>2016–2018:</strong> டிடி தமிழ் செய்திப் பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்தார்.</p><p><strong>2018–2020:</strong> புதுடெல்லி ஆகாசவாணி செய்தி பிரிவின் இணை இயக்குநராக பணியாற்றினார்.</p><p><strong>2020–2021:</strong> சென்னை மத்திய மக்கள் தொடர்பகத்தின் மண்டல இணை இயக்குநராக பொறுப்பேற்றார்.</p><p><strong>2021–2024:</strong> சென்னை மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநராகப் பதவி வகித்தார்.</p><p><strong>2024–2025:</strong> சென்னை ஆகாசவாணியின் மண்டல செய்தி பிரிவு இயக்குநராக பணியாற்றினார்.</p> <p><strong>2025 (ஜூலை) முதல்:</strong> மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநராக மீண்டும் இணைந்து பணியாற்றி வந்தார். தற்போது கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ள ஜெ. காமராஜ், இன்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மண்டல தலைமை அலுவலகத்தில் தனது புதிய பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார்.  </p><p>காமராஜருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் வாகனம் மோதி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-devotee-on-foot-pilgrimage-to-tiruchendur-dies-after-being-hit-by-vehicle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-devotee-on-foot-pilgrimage-to-tiruchendur-dies-after-being-hit-by-vehicle#comments</comments><guid isPermaLink="false">753c22bc-0837-4ce0-978a-76efcc570342</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:37:06 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:37:06.667Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,திருச்செந்தூர்,Tirunelveli,திருநெல்வேலி,dies,Kanyakumari,பெண்,Tiruchendur,Female,பக்தர்,devotee,பாதயாத்திரை,Padayatra,வாகனம் மோதி பலி,hit by vehicle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/6xzmdjjz/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து, பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/6xzmdjjz/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்செந்தூருக்கு</a> நடைபயணம் சென்றபோது, உவரி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF">கன்னியாகுமரி</a>யைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">பெண்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D">பக்தர்</a> சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">உயிரிழந்தார்</a>. </p><h2>கன்னியாகுமரியைச் சேர்ந்த பக்தர்கள்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள  பூவியூர் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மனைவி வசந்தா (வயது 60). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் கணவர் சிதம்பரம் இறந்துவிட்டதால், வசந்தா தனியாக வசித்து வந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். </p><h2>திருச்செந்தூருக்கு சென்ற பெண் பக்தர் வாகனம் மோதி பலி</h2><p>இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வசந்தா உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருச்செந்தூருக்கு நடைபயணம் புறப்பட்டுச் சென்றனர். வசந்தா, இளந்தேரிவிளையைச் சேர்ந்த செந்தில்(43) என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் 2 பேரும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">நெல்லை மாவட்டம்</a>, திசையன்விளையை அடுத்த உவரி அருகே உள்ள காரிக்கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் திருச்செந்தூரை நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வசந்தா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட வசந்தா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><h2>பாதயாத்திரை பக்தர்களிடையே சோகம்</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உவரி போலீசார் வசந்தாவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். நடைபயணம் சென்ற பெண் பக்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பாதயாத்திரை பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆதரவு கட்சிகளுடன் வரும் 9-ம் தேதி தவெக ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-meeting-with-supporting-parties-on-the-9th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-meeting-with-supporting-parties-on-the-9th#comments</comments><guid isPermaLink="false">dafefe3f-d6a0-4a80-8336-7913201aaef6</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:12:08 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:12:08.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,கூட்டணி கட்சிகள்,CMVijay,tvk govt,Allianceparties</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/f4t0nhxa/tvk33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக ஆலோசனை]]></media:title><media:description type="html"><![CDATA[ 

ஆதரவு கட்சிகளுடன் வரும் 9-ம் தேதி தவெக ஆலோசனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/f4t0nhxa/tvk33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக ஆட்சிக்கு ஆதரவு தந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் செப்.9-ம் தேதி நடைபெறுகிறது.</p><p>தவெக ஆட்சி அமைத்த நாளில் இருந்தே கூட்டணியை வலுவாக உருவாக்க திட்டமிட்டு வருகிறது. முதலில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், பின்னர் விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. இதன்பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரடியாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார்.</p><h2>கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு </h2><p>இதன்பின் ஜூலை 1ஆம் தேதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF">தவெக கூட்டணி</a> கட்சிகளின் ஆதரவு கூட்டம் கோவளத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், அமைச்சர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல் விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் சார்பாக காதர் மொய்தீன், மதிமுக சார்பாக வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு முந்தைய நாள் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசித்தனர். இந்த நிலையில் தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தை கூட்ட தவெக ஆயத்தமாகி வருகிறது.</p><h2>கூட்டணிக்கு பெயர்</h2><p>செப்டம்பர் 8ஆம் தேதியுடன் சட்டசபைக் கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதி தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதற்காக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று அழைப்பு விடுத்தனர். </p><p>அங்கிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சென்று மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.  இந்த சந்திப்புக்கு பின் நேராக வைகோ வீட்டிற்கு சென்று அமைச்சர்கள் அழைப்பு விடுத்தனர்.</p><p> நாளை விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>
 இரு சக்கர வாகனங்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: தவெக நிர்வாகி உட்பட 2 பேர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-involving-goods-vehicle-and-two-wheelers-two-dead-including-tvk-functionary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-involving-goods-vehicle-and-two-wheelers-two-dead-including-tvk-functionary#comments</comments><guid isPermaLink="false">44550aa5-80c6-4373-8d8c-70e651cc02d4</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:07:20 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:07:20.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,தவெக</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/azninlhk/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/azninlhk/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கடலூர்,</p> <p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை முந்தி செல்ல முயன்ற சரக்கு வாகனம் சாலையோரமாக சென்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனம் மீது மோதியது. பின்னர் அந்த வாகனம் விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது.</p> <p>இந்த விபத்தில் தவெக நிர்வாகி குகன் மற்றும் அஜித் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பைக்கில் சென்றவர் படுகாயமடைந்தார் அவர் அருகிலுள்ள கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.</p> <p>இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>  ]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணை வந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-release-from-mettur-dam-arrives-at-trichy-mukkombu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-release-from-mettur-dam-arrives-at-trichy-mukkombu#comments</comments><guid isPermaLink="false">07d7cd2d-37e2-4994-a03b-3c71a752d7ae</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:05:32 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:05:32.147Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,காவிரி நீர்,திருச்சி,Released,Kaveri,வந்தது,முக்கொம்பு அணை</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/el1697nz/Mukkombu.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ முக்கொம்பு மேலணை]]></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணை வந்தது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/el1697nz/Mukkombu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணையில்</a> இருந்து சம்பா சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர், மாயனூர் கதவணையைத் தாண்டி இன்று காலை முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p> <p>ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE">டெல்டா</a> பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஜூன் மாதம் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.</p> <h2>அதிர்ஷ்டம் தந்த கனமழை</h2><p>இந்த நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் விளைவாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.</p><h2>முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்</h2><p>இதனை தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். முதற்கட்டமாக வினாடிக்கு 7,000 கன அடி வீதம் தண்ணீர் காவிரியில் சீறிப்பாய்ந்தது.</p><h2>மாயனூர் கதவணைக்கு வருகை</h2><p>அணையில் இருந்து திறக்கப்பட்ட இந்தத் தண்ணீர் நேற்று காலை கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வந்தடைந்தது. நேற்று காலை 6 மணி அளவில் வினாடிக்கு 2,737 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேரம் செல்லச் செல்ல படிப்படியாக அதிகரித்து 4,081 கன அடியாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்து வினாடிக்கு 2,050 கன அடி வீதம் மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.</p> <h2>முக்கொம்பில் நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>மாயனூரில் இருந்து சீறி வந்த காவிரி நீர், இன்று காலை திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. ஏற்கனவே முக்கொம்பு மேலணைக்கு 777 கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது புதிய தண்ணீரின் வரவால் அது 1,500 கன அடியாக உயர்ந்துள்ளது.</p><p>இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமேஸ்வரன் கூறுகையில்,</p><p>"நேரம் செல்ல செல்ல முக்கொம்பு மேலணைக்கான நீர்வரத்தின் அளவு மேலும் சற்று உயர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார். தண்ணீர் முக்கொம்பை வந்தடைந்ததை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் கிளை கால்வாய்களிலும் தண்ணீர் விரைவில் பாயும் என்பதால் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் சுறுசுறுப்புடன் தொடங்கியுள்ளனர்.</p><h2>கல்லனை</h2><p>தற்போது வரும் 1500 கன அடி நீரும் காவிரியில் முழுமையாக திறந்து விடப்படுகிறது. இந்த நீர் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88">கல்லணைக்கு</a> சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் கல்ல ணையில் இருந்து தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களின் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. </p><p>ஏற்கனவே முக்கொம்பு மேலணையில் இருந்து பாசனத்துக்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-immediately-from-papanasam-dam-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-immediately-from-papanasam-dam-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">e79b4fde-69f4-4f6f-a552-3fb5ecad0f83</guid><pubDate>Fri, 04 Sep 2026 12:52:00 +0000</pubDate><atom:updated>2026-09-04T12:52:00.315Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பாபநாசம் அணை,Papanasam dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/df9n25zu/nainar.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/df9n25zu/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் நடத்திய போராட்டம், அவர்களின் நியாயமான மனக் குமுறலாகும். தங்கள் உதிரத்தை வியர்வையாகச் சிந்தி, பெற்ற பிள்ளைகளைப் போல வளர்த்த பயிர்கள் கருகக் கண்டு ஒரு விவசாயி சிந்தும் கண்ணீர் இந்த மண்ணின் சாபமாகும். 5,000 ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி அழியும் நிலையில் இருப்பதைக் கண்டும், தவெக அரசு காட்டும் மெத்தனம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>கடந்த ஆறு மாத காலமாக தண்ணீர் கேட்டு கதறித் துடித்த விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத தவெக அரசு, இன்று நியாயம் கேட்டுப் போராடியவர்களைக் காவல்துறையை ஏவி கைது செய்திருப்பது கொடுமையின் உச்சம். தங்களின் வயிற்றிலடித்துவிட்டு தொழிற்சாலைகளுக்குத் தண்ணீரைத் தாரைவார்ப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். முதல்-அமைச்சர் விஜய்  தலைமையிலான அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கு கண்டிக்கத்தக்கது.</p><p>விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல், பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடத் தவெக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட விவசாயிகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அவர்களுக்காக பாரதிய ஜனதா கட்சி முன்னின்று களம் இறங்கும் என எச்சரிக்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item></channel></rss>