<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 28 Aug 2026 11:32:35 +0000</lastBuildDate><item><title>பெண் துணை மேயர் சஸ்பெண்ட்: சேலம் மேயரின் நடவடிக்கைக்கு ஜோதிமணி எம்.பி. கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-deputy-mayor-suspended-mp-jothimani-condemns-salem-mayors-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-deputy-mayor-suspended-mp-jothimani-condemns-salem-mayors-action#comments</comments><guid isPermaLink="false">baf9b772-1a0f-4788-bc80-92b86bd294b9</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:31:49 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:31:49.654Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,ஜோதிமணி,ஜோதிமணி எம்.பி.,Jothimani,jothimani mp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ho13wwsb/jothimani-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜோதிமணி எம்.பி. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ho13wwsb/jothimani-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒரு பெண் பிரதிநிதியை மாமன்றத்தில் இவ்வாறாக அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் எம்.பி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">ஜோதிமணி </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது;-</p><h2>துணை மேயர் சஸ்பெண்ட்</h2><p>சக மக்கள் பிரதிநிதி என்றும் பாராமல், சேலம் மாநகராட்சி காங்கிரஸ் துணை மேயர் சாரதா தேவியின் இருக்கையை மாற்றுவதற்காக, மேயரே கவுன்சிலர்களுடன் சென்று நெருக்கடி கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>தனது உரிமைக்காகத் தரையில் அமர்ந்து முழக்கமிட்டு தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பெண் துணை மேயரை, 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ள மேயரின் சர்வாதிகார நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாது</h2><p>ஜனநாயகத்தின் மாண்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படும் மரியாதையில்தான் அடங்கியுள்ளது. ஒரு பெண் பிரதிநிதியை மாமன்றத்தில் இவ்வாறாக அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் துணை மேயரை சஸ்பெண்ட் செய்வதா? - மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suspending-a-democratically-elected-female-deputy-mayor-manickam-tagore-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suspending-a-democratically-elected-female-deputy-mayor-manickam-tagore-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">6a70e6e2-932f-4bd6-b425-8c90754661c7</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:28:51 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:28:51.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Deputy Mayor,துணை மேயர்,Manickam Tagore</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/56brle7f/mani.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/56brle7f/mani.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”சென்னை மாநகராட்சியில் மேயர் அருகில் துணை மேயர் மகேஷ் குமார் அமர வைக்கப்படும் போது, சேலம் மாநகராட்சியில் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் துணை மேயர் சகோதரி சாரதா தேவியின் இருக்கையை மேடையை விட்டு மாற்றி, அவரை சஸ்பெண்ட் செய்த செயல் திமுக மேயர் ராமச்சந்திரனின் மற்றும் திமுகவின் அப்பட்டமான பெண் பிரதிநிதித்துவத்திற்கு எதிரான போக்கை வெளிப்படையாகக் காட்டுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!</p><p>பெண்கள் அதிகாரப் பொறுப்புகளுக்கு வரும்போது அவர்களை ஒடுக்கி அவமதிப்பதுதான் திமுக மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் உண்மையான மனநிலையா? மக்களுக்கு ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றாமல் நாற்காலியை வைத்து பழிவாங்கும் அரசியல் செய்யும் இவர்களின் அப்பட்டமான பெண் விரோதப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சேலம் திமுக மேயரின் இந்த செயலை வண்மையாக கண்டிக்கிறேன்.</p><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை மேயர் சகோதரி திருமதி சாரதா தேவி அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை நிற்கும்; எத்தனை தடைகள் வந்தாலும் மக்களுக்கான மக்கள் பணியைத் தொடர்ந்து உறுதியோடு முன்னெடுக்கும்!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை எங்கெல்லாம் கரைக்கலாம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/locations-for-the-immersion-of-vinayagar-idols-in-tiruvannamalai-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/locations-for-the-immersion-of-vinayagar-idols-in-tiruvannamalai-district#comments</comments><guid isPermaLink="false">b053d087-584f-44ea-a4e6-26c6b5b65b54</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:16:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:16:00.833Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>Aanmigam,Devotional,ஆன்மிகம்,விநாயகர் சதுர்த்தி,விநாயகர் சிலைகள்,விநாயகர் சிலைகள் கரைப்பு,Vinayagar Idols,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/zkctjm7j/Vinayagar-Chaturthi-idols.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சதுர்த்தி விழா, விநாயகர் சிலைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/zkctjm7j/Vinayagar-Chaturthi-idols.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை கரைக்கும் இடங்கள் குறித்த விவரம் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p><h2>விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்</h2><p>இந்த ஆண்டு <a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-chathurthi">விநாயகர் சதுர்த்தி</a> செப்டம்பர் 14-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் சிலைகளை கரைக்கும் வழிமுறைகள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.</p><p>எனவே, களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.</p><h2>சிலைகளை கரைக்கும் இடங்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-idols">சிலைகளின் ஆபரணங்கள் </a>தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள். வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக. இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.</p><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/vinayagar-idols">விநாயகர் சிலைகள்</a> கரைப்பதற்காக கண்டறியப்பட்ட தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, செங்கம் பச்சை யம்மன் கோவில் குளம், கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராவதி குளம், பூமா செட்டிகுளம், போளூர் ஏரி, கூர் ஏரி ஆகிய இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சோனியா காந்தியின் புத்தகத்தை தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/blocking-sonia-gandhi-book-is-like-killing-freedom-of-expression-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/blocking-sonia-gandhi-book-is-like-killing-freedom-of-expression-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">63e33390-c787-4180-aa05-f2e915418c43</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:15:51.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Book,புத்தகம்,Sonia Gandhi,சோனியா காந்தி,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/9m3ocbso/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/9m3ocbso/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சோனியா காந்தியின் புத்தகத்தை அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெங்குயின் வேர்ல்ட்வைட் நிறுவனம், சோனியா காந்தியின் வரவிருக்கும் புத்தகத்தை எந்தவித மாற்றமும் செய்யாமல், உலகம் முழுவதும் அதன் அசல் வடிவிலேயே வெளியிடத் தயாராக உள்ளது. ஆனால், இந்தியாவில் அதை வெளியிடுவதற்கு Penguin Random House India சில மாற்றங்களைச் செய்ய விரும்புகிறது.</p><p>உலகம் முழுவதும் அசல் வடிவில் வெளியிடப்படும் ஒரு புத்தகத்தை இந்தியாவில் மட்டும் அப்படியே வெளியிட முடியாத அளவுக்கு என்ன காரணம்? அல்லது எந்த அழுத்தம் அவர்களைத் தடுக்கிறது? </p><p>சோனியா காந்தியின் வாழ்க்கை தியாகத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் நாட்டிற்காக ஆற்றிய பணியின் தூய்மையும் கண்ணியமும் போற்றத்தக்கது. இப்படிப்பட்ட சிறப்புமிக்க, மூத்த அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சோனியா காந்தியின் புத்தகத்தை அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தையே படுகொலை செய்வதற்கு ஒப்பானது. </p><p>உண்மையான பிரச்சினை என்னவென்றால், மோடி ஆட்சிக் காலத்தில் இந்தியப் பகுதிகளை மோடி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சீனா ஆக்கிரமித்தது தொடர்பான பகுதிகளை புத்தகத்திலிருந்து நீக்குமாறு Penguin India மீது அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இந்த உண்மையை இந்திய மக்களிடமிருந்து ஏன் மறைக்க வேண்டும்? அழுத்தத்தின் பேரில் உண்மைகளை மாற்றுமாறு பதிப்பகங்களையும் மோடி அரசு நிர்பந்திக்குமா? இந்தியாவில் அச்சிடப்படும் ஒரு புத்தகத்தில் உண்மையை எழுதுவதற்குக்கூட அனுமதி பெற வேண்டிய நிலை ஏன் உருவாக வேண்டும்? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் கவலையளிக்கின்றன - ஈ.ஆர்.ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-of-the-floods-in-nepal-are-concerning-er-eswaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-of-the-floods-in-nepal-are-concerning-er-eswaran#comments</comments><guid isPermaLink="false">48023fb7-fdb3-4ead-a75a-110b69b033c8</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:11:16 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:11:16.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Nepal,நேபாளம்,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Eswaran,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/d9dnjaez/nepa.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/d9dnjaez/nepa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/nepal">நேபாள </a>பெரு வெள்ளவிபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறோம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். </p><h2>எதிர்பாராத விபத்து</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>இதுவரை கேள்விப் படாத அளவிற்கு இமயமலை அடிவாரத்தில் எதிர்பாராத விபத்தும், பெரும் சேதமும் நடந்திருக்கிறது. ஏன் நடந்தது என்பதற்கான பல்வேறு விமர்சனங்களும், விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களை கண்டறிந்து மக்களுக்கு விளக்க வேண்டும். </p><h2>இதுவரை தெளிவுபடுத்தவில்லை</h2><p>அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் மட்டுமில்லாமல் ஆன்மீக பயணம் சென்ற பல மாநில மக்களும் விபத்தில் சிக்கி பேராபத்தில் உள்ளார்கள். ஆன்மீகப் பயணம் சென்ற தமிழர்களும் மிகப்பெரிய எண்ணிக்கையில் அங்கே சிக்கிக் கொண்டுள்ளார்கள். இன்றைக்கு 3வது நாளாக பலரிடமிருந்தும் தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மத்திய, மாநில அரசுகளும் யார் தப்பித்தார்கள் யார் சிக்கிக் கொண்டார்கள் என்ற விவரத்தையும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. </p><h2>மாவட்ட கலெக்டர்கள்</h2><p>தகவல் கிடைக்காத குடும்பத்தினர் மிகவும் வேதனையில் உள்ளார்கள். உயிரோடு இருப்பவர்களை மீட்டு அவரவர் மாநிலத்துக்கு அனுப்புவதும், துரதிஷ்டவசமாக உயிரிழந்தவர்களுடைய விபரங்களையும் தாமதமில்லாமல் கண்டுபிடித்து தர வேண்டும். அந்தந்த மாவட்டத்திலே இருக்கின்ற மாவட்ட கலெக்டர்கள் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்கவில்லை. </p><h2>கூட்டுப் பிரார்த்தனை</h2><p>இப்படிப்பட்ட இந்த சூழலில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும்  பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சென்று சந்தித்து அரசு எடுக்கின்ற முயற்சிகளை தெளிவுபடுத்தி நம்பிக்கையூட்ட வேண்டும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் AKP சின்ராஜ் மூலமாகவும், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் VS மாதேஸ்வரன் மூலமாகவும் வெளியுறவுத்துறை அமைச்சரையும், இந்திய துணை ஜனாதிபதியையும் தொடர்பு கொண்டு விபரங்களை அறிய முயற்சித்து வருகிறோம்.</p><p>நேற்றைய தினம், விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக அனைத்து குடும்பங்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்திருக்கிறோம். நேபாளத்தில் விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பிரக்ஞானந்தா மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pragnananda-to-achieve-many-more-world-records-udhayanidhi-stalin-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pragnananda-to-achieve-many-more-world-records-udhayanidhi-stalin-wishes#comments</comments><guid isPermaLink="false">3e2796a1-df53-4622-a251-43ea4873520f</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:08:16 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:08:16.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,பிரக்ஞானந்தா,Praggnanandhaa</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/u2fzoxbj/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/u2fzoxbj/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற, முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் தம்பி பிரக்ஞானந்தாவுக்கு எனது பாராட்டுகள்!</p><p>உலகின் முன்னணி வீரர்களை எதிர்கொண்டு, தனது அபாரமான திறமை மற்றும் தன்னம்பிக்கையால் இந்த வெற்றியை அவர் பெற்றிருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை.  தம்பி பிரக்ஞானந்தா மென்மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க என் அன்பும், வாழ்த்தும்!”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் அருகே முகத்தில் ஆசிட் ஊற்றி பெண் கொடூர கொலை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-murdered-by-pouring-acid-on-her-face-near-thiruvallur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-murdered-by-pouring-acid-on-her-face-near-thiruvallur#comments</comments><guid isPermaLink="false">4b48a228-68b2-44b1-a7af-146271156823</guid><pubDate>Fri, 28 Aug 2026 11:07:10 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:07:10.408Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,women,Tiruvallur,பெண் கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/nhb9he5r/one33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/nhb9he5r/one33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரியபாளையம்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டிக்குப்பம் பகுதியில் மர்ம நபர்களால் முகத்தில் ஆசிட் ஊற்றி ஆந்திர பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>முகத்தில் ஆசிட் வீச்சு</h2><p>பெரியபாளையம் அருகே உள்ள குப்பம் தொட்டாரெட்டி கிராமம். வெள்ளக் குளம் அருகில் உள்ள வயல் வெளி அருகே இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">பெண் ஒருவர் கொலை </a>செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஊதுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.</p><h2>பெண் கொடூர கொலை</h2><p>இதில் கொலையுண்ட பெண் ஆந்திர மாநிலம், நாகலாபுரம் அருகே நின்ரை,சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (40) என்பது தெரிந்தது. அவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை அருகே உள்ள பதட்டூர் கண்டிகை கிரா மத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். </p><h2>கொலையாளிகள் யார்? </h2><p>அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது. அவரது முகம் முழுவதும் எரிக்கப்பட்டது போல் கருப்பு கிரீஸ் பூசப்பட்டு இருந்தது, அவர் அணிந்து இருந்த  தாலி மற்றும் கம்மல் உள்ளிட்டவை அப்படியே உள்ளன.</p><p>கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது.</p><p>அதனை கைப்பற்றி போலீ சார் பல்வேறு கோணங்க ளில் விசாரணை செய்து வருகிறார்கள். பெண் கொடூரமாக ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>கொலையாளிகள் யார்? </h2><p>அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது. அவரது முகம் முழுவதும் எரிக்கப்பட்டது போல் கருப்பு கிரீஸ் பூசப்பட்டு இருந்தது, அவர் அணிந்து இருந்த  தாலி மற்றும் கம்மல் உள்ளிட்டவை அப்படியே உள்ளன.</p><p>கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது.</p><p>அதனை கைப்பற்றி போலீ சார் பல்வேறு கோணங்க ளில் விசாரணை செய்து வருகிறார்கள். பெண் கொடூரமாக ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>திருவள்ளூரில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள்</h2><p>திருவள்ளூர் மாவட்டத் தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><p>கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இதேபோல் கடம் பத்தூர் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய தகராறில் வாலிபர் கொல்லப்பட்டார். </p><p>தற்போது ஊத்துக் கோட்டை அருகே பெண் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சத்தை கொள்ளையர்கள் அள்ளி சென்று உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>2029-ல் &apos;இந்தியா&apos; கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் - அமைச்சர் விஸ்வநாதன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-india-blocs-2029-pm-candidate-tn-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-india-blocs-2029-pm-candidate-tn-minister#comments</comments><guid isPermaLink="false">3df976d3-4fd0-4978-be7f-be269121ecb5</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:54:30 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:54:30.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,விஜய்,தமிழகம்,India Alliance,இந்தியா கூட்டணி,காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi,பிரதமர் வேட்பாளர்,PM candidate,உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்,Minister Viswanathan</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/t32hhy6u/viswa.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/t32hhy6u/viswa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>2029 மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். </p><h2>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</h2><p>அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பிற தேசிய தலைவர்கள் குறித்தும் பரவலான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆளும் தரப்பு (தவெக) அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் ஒரு பகுதியினரிடமிருந்து எழுந்துள்ள சூழலில் இவரது கருத்து வெளியாகியுள்ளது. </p><h2>பிரதமர் வேட்பாளர்</h2><p>இது குறித்து அவர் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர்களாகிய நாங்கள் இதில் மிக தெளிவாக இருக்கிறோம். எங்கள் அன்பிற்குரிய தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திதான் 2029-க்கான 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்" என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். </p><h2>கட்டுப்பாட்டு அறைகள்</h2><p>இதனைத்தொடர்ந்து நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவரித்த அமைச்சர் விஸ்வநாதன், மீட்புப் பணிகளை மேற்பார்வையிட நான்கு பேர் கொண்ட அமைச்சர்கள் குழு நேற்று இரவு அவசரமாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சூழ்நிலையை 24 மணி நேரமும் கண்காணிக்க, சென்னை மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறைகளை தமிழக அரசு  திறந்துள்ளது” என்று தெரிவித்தார். </p><h2>தேவையற்ற விவாதங்கள்</h2><p>சட்டமன்ற நடவடிக்கைகளில் பல மணிநேரம் "தேவையற்ற விவாதங்களுக்காக" செலவிடப்படுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்புள்ள விவாதத்திற்கான சரியான தளம் சட்டமன்றமே” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தலைக்கவசம், தண்ணீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்கும் திட்டம்:  ஒப்பந்தம் கோரிய தமிழக அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/scheme-to-provide-modern-bicycles-with-helmets-and-water-bottles-tamil-nadu-government-invites-tenders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/scheme-to-provide-modern-bicycles-with-helmets-and-water-bottles-tamil-nadu-government-invites-tenders#comments</comments><guid isPermaLink="false">4a23bf87-20b9-41f7-9cd0-681f8604d6a0</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:51:01 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:51:01.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழக அரசு,சைக்கிள்,ஒப்பந்தம்,bicycles,TamilNadu Goverment,ஒப்பந்தப்புள்ளி,இலவச சைக்கிள்,Free Bicycles</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/u82u19w7/tamilnadu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/u82u19w7/tamilnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவி யர்களுக்கு விலையில்லா நவீன மிதி வண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவதற்காகத் தமிழ்நாடு அரசு மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.</p><h2>நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்</h2><p>நடப்பு 2026-27-ம் கல்வியாண்டிற்காக 11-ஆம் வகுப்பு படிக்கும் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் என மொத்தம் 5,32,388 நவீன மிதிவண்டிகள், அவற்றுடன் தலைக்கவசம் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தகுதியான உற்பத்தி மற்றும் தண்ணீர் பாட்டில் நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் 29, 2026 முதல் செப்டம்பர் 28, 2026 பிற்பகல் 3 மணி வரை https://tntenders.gov.in https://tntenders. gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.</p><h2>150 நாட்களுக்குள் விநியோகம்</h2><p>செப்டம்பர் 8, 2026 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர் நல இயக்ககத்தில் நடைபெறும். இதில் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கான மாதிரி மிதிவண்டிகளைச் செப்டம்பர் 28, 2026 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் செப்டம்பர் 29, 2026 அன்று முற்பகல் 11.30 மணிக்கு இணையவழியாகத் திறக்கப்படும். கொள்முதல் ஆணை பெறப்பட்ட 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சால்வை அணிவிக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதம்: மாறிமாறித் தாக்கிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-argument-broke-out-while-donning-the-shawl-congress-functionaries-took-turns-attacking</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/an-argument-broke-out-while-donning-the-shawl-congress-functionaries-took-turns-attacking#comments</comments><guid isPermaLink="false">63655e81-b8c9-4999-8a7e-0ef71ea450fa</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:44:01 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:44:01.400Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>attacked,திருவண்ணாமலை,காங்கிரஸ்,Congress,thiruvanamalai,தாக்கினர்,கைகலப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/vafake4i/congress.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ இருதரப்புக்கு கைகலப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ சால்வை அணிவதுக்கு வாக்குவாதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/vafake4i/congress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை</p><p>திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சால்வை அணிவிக்கும் போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.</p> <h2>கூட்டம்</h2><p>திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கூட்டம்  இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் திருவண்ணாமலை மாநகரம் செங்கம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்களுக்கு இயக்க மறுசீராய்வு நிர்வாகிகள் நியமனம் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனை நடைபெற்றது.</p> <h2>மோதல்</h2><p>கூட்டத்தில்  சால்வை அணிவிக்கும்போது இருவருக்கு ஏற்பட்ட வாக்குவாதம், அது இருதரப்பினர் இடையே கைகலப்பாக மாறியது. ஒருவருக்கொருவர் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. </p> <h2>வெளியேறினர்</h2><p>கூட்டத்தில் ஏற்பட்ட இந்த  உட்கட்சி பிரச்சனையால் அங்கிருந்து 40-க்கும் மேற்பட்டோர் பாதியிலேயே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சரியாக படிக்கவில்லை என கண்டித்த ஆசிரியை... பிளஸ் 1 மாணவி எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-scolds-student-over-studies-plus-one-girl-dies-by-suicide</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-scolds-student-over-studies-plus-one-girl-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">25d10114-df71-4d16-bd6a-c4b7ef4de2cd</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:25:15 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:39:58.025Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ndr9ealn/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ndr9ealn/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>சரியாக படிக்கவில்லை என ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அந்திஸ்வரன். இவருடைய மனைவி ஆனந்த லட்சுமி. இந்த தம்பதியின் மகள் ஜீவிதா (16 வயது). இவர், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில் சரியாக படிக்கவில்லை என ஒரு ஆசிரியை, மாணவி ஜீவிதாவை கண்டித்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனால் மனவருத்தம் அடைந்த ஜீவிதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த சமயநல்லூர் போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இதற்கிடையே மாணவி படித்த அரசு பள்ளி முன்பாக அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவியின் சாவுக்கு காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி செப்.8-ல் போராட்டம்  - தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-on-september-8-demanding-increase-in-auto-meter-fares-trade-unions-announce</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-on-september-8-demanding-increase-in-auto-meter-fares-trade-unions-announce#comments</comments><guid isPermaLink="false">8f12bd99-418d-4628-94ba-7fb6ad61e34d</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:39:57 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:39:57.160Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போராட்டம்,Auto,ஆட்டோ,சிஐடியு தொழிற்சங்கத்தினர்,கட்டணம்,CITU Trade unions protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/nyjg6rfb/citu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/nyjg6rfb/citu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செப்.8-ந் தேதி காலையில் கோட்டை முற்றுகை போராட்டம் அல்லது தொடர் முழக்கப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.</p><p>தமிழகத்தில் கடந்த 13 வருடமாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, வட்டார போக்குவரத்து அலுவலக கட்டணங்கள் உயர்வு போன்றவற்றால் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், குறைந்த கட்டணமாக ரூ.100 வசூலிப்பதால் பொதுமக்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.</p><h2>தொடர் போராட்டம்</h2><p>ஆட்டோவுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று கடந்த ஆட்சி காலத்தில் இருந்தே தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் அந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை ஆட்டோ தொழிலாளர்கள் நடத்தி வருகிறார்கள். போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகள் கருத்துக்கள் கேட்கப்பட்டது.</p><h2>ஆட்டோ தொழிற்சங்கத்தினர்</h2><p>அப்போது அவர்கள் தமிழ்நாட்டில் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணமாக முதல் 1.5 கி.மீட்டருக்கு ரூ.60 -ம் அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கு ரூ.30-ம் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சட்டசபையில் போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த போக்குவரத்து மானிய கோரிக்கை செப்டம்பர் 8-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தொழிற்சங்கத்தினர் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81">சி.ஐ.டி.யு</a> ஆட்டோ தொழிற்சங்க மாநில செயலாளர் எஸ். பாலசுப்பிர மணியம் கூறியதாவது:-</p><p>ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்காமல் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><h2>கோட்டை முற்றுகை போராட்டம்</h2><p>வருகிற 8-ந் தேதி மானிய போக்குவரத்து கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது போக்குவரத்து துறையில் பல அறிவிப்புகள் வெளியிடப்படும். ஆட்டோ தொழிலாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் குறைந்தபட்ச கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டும். பைக் டாக்ஸிக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அன்று காலையில் கோட்டை முற்றுகை போராட்டம் அல்லது தொடர் முழக்கப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.</p><p>எழும்பூர் ராஜரத்தினம், ஸ்டேடியத்தில் இருந்து இந்த போராட்டம் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எளியோர் வாழ்வை வளமாக்கிய பிரதமர் மோடியின் &apos;ஜன்-தன்&apos; நிதிப் புரட்சி! - நயினார் நாகேந்திரன் பெருமிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modis-jan-dhan-financial-revolution-has-enriched-the-lives-of-the-common-people-nainar-nagendran-expresses-pride</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modis-jan-dhan-financial-revolution-has-enriched-the-lives-of-the-common-people-nainar-nagendran-expresses-pride#comments</comments><guid isPermaLink="false">54e56c1a-1e52-450e-999e-0f75c3b4272f</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:30:46 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:30:46.868Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,பிரதமர் மோடி,PM Modi,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,ஜன்தன் திட்டம்,Jan Dhan accounts</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/6p8glqd4/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/6p8glqd4/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதமர் மோடியின் இச்சாதனை, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிதிச் சரித்திரம் என தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/nainar-nagendran">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>12-ஆம் ஆண்டு விழா</h2><p>"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு</p><p>இறை என்று வைக்கப்படும்"</p><p>என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கு இலக்கணமாகத் திகழும் பிரதமர் நரேந்திர மோடி, எளியோரின் துயர் துடைத்து அவர்களின் வாழ்வை வளமாக்கும் வகையில் தொடங்கி வைத்த 'ஜன்-தன்' திட்டத்தின் 12-ஆம் ஆண்டு விழாவை இன்று நாம் பெருமையுடன் கொண்டாடுகிறோம். நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும் வங்கிச் சேவையை உறுதி செய்த இத்திட்டம், கடந்த 12 ஆண்டுகளில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.</p><h2>பொருளாதார புரட்சி</h2><p>2026 ஆகஸ்ட் வரையிலான தரவுகளின்படி, இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 59.09 கோடி பயனாளிகள் வங்கிச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 45.95 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அவற்றில் தமிழக கணக்குகள் 1,93,55,776 கோடி என்பதும், 32.92 கோடி பெண் பயனாளிகளுக்கு நிதி ரீதியாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளதும், இதன் மூலம் ஜன் தன் கணக்குகளில் மொத்தமாக ரூ.3,16,513.80 கோடி வைப்புத்தொகை சேமிக்கப்பட்டுள்ளதும் ஒரு மாபெரும் பொருளாதாரப் புரட்சியாகும்.</p><h2>பிரதமர் மோடியின் சாதனை</h2><p>இந்த ‘ஜன் தன்’ கணக்குகள் மூலம் எரிவாயு மானியம், விவசாயிகளுக்கான நிதி உள்ளிட்ட அரசின் உதவிகள் இடைத்தரகரின்றி நேரடியாகப் பயனாளிகளுக்குச் சென்றடைகின்றன. ஊழலை வேரறுத்து, நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்த பாரதப் பிரதமர் மோடியின் இச்சாதனை, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிதிச் சரித்திரமாகும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில்வே மேம்பால பணிகள்: செங்கோட்டை செல்லும் ரெயில்கள் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/railway-overbridge-works-trains-to-sengottai-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/railway-overbridge-works-trains-to-sengottai-cancelled#comments</comments><guid isPermaLink="false">feb06367-e4a3-4d5a-95b7-1df4b1d43147</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:15:09 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:15:09.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Sengottai,செங்கோட்டை,Railway Bridge,ரெயில்வே மேம்பாலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/cyafv92m/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/cyafv92m/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,  </p><p>தென்காசி மாவட்டம் இலஞ்சி ரெயில்வே மேம்பாலத்துக்கான தூண்கள் பொருத்தும் பணி நாளை (சனிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி செங்கோட்டை ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><h2>ரெயில்வே மேம்பாலம்</h2><p>தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் இருந்து குற்றாலம் செல்லும் ரோட்டின் குறுக்கே தென்காசி -செங்கோட்டை ரெயில்வே பாதையும், கேட்டும் அமைந்திருந்தது. இங்கு கேட் அடைக்கும் போது நிலவிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் ரெயில்வே துறை இணைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்கு பணிகளை தொடங்கியது. இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை பாலத்தை கட்டி முடித்து விட்டது. ஆனால் தண்டவாளத்துக்கு மேல் உள்ள பகுதியில் மட்டும் ரெயில்வே துறையால் பாலம் இணைக்கப்படாமல் உள்ளது.</p><h2>கிர்டர்கள் இணைக்கும் பணி</h2><p>இதற்காக ரெயில்வே ஒப்பந்த நிறுவனம் இரும்பு தூண்கள் (கிர்டர்கள்) கொண்டு வந்து பாலத்தின் அருகே வரிசையாக இறக்கி போட்டிருந்தது. பகுதி, பகுதியாக இருந்த கிர்டர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இந்த கிர்டர்களை கான்கிரீட் தூண்கள் மீது தூக்கி வைத்து இணைத்து, கான்கிரீட் போடும் பணி நாளை (சனிக்கிழமை) தொடங்கி 31-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.</p><h2>ரெயில்கள் பகுதியாக ரத்து</h2><p>இந்த பணிக்காக தென்காசி -செங்கோட்டை இடையே 3 நாட்களுக்கு சில ரெயில்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் (வண்டிஎண் 56776) செங்கோட்டை- நெல்லை பாசஞ்சர் ரெயில், செங்கோட்டை- தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>இந்த ரெயில் தென்காசியில் இருந்து புறப்படும். நெல்லையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 56773) நெல்லை- செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் தென்காசி-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும்.</p><p>மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் (56771) ரெயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்டும். செங்கோட்டையில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர் ரெயில் (56772) செங்கோட்டை-தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. தென்காசியில் இருந்து வழக்கமான 12.33 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும்.</p><p>இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்து உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>முத்துராமலிங்கத்தேவர் பீடம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-muthuramalinga-thevar-peetham-vanathi-srinivasan-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bomb-thrown-at-muthuramalinga-thevar-peetham-vanathi-srinivasan-condemns#comments</comments><guid isPermaLink="false">aa100cab-a1dd-4933-8199-e2d2c822b7a7</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:08:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:08:00.340Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முத்துராமலிங்க தேவர்,கண்டனம்,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,பெட்ரோல் குண்டு வீச்சு,petrol bomb thrown</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/jjinz413/1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/jjinz413/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் இருந்து தச்சநல்லூர் செல்லும் சிவசக்தி சாலையில் ஊருடையான் குடியிருப்பு பகுதியில் 2 சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் முத்துராமலிங்க தேவரின் நினைவு பீடம் உள்ளது. அந்த பீடத்தின் அருகே நேற்று நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>திருநெல்வேலி தச்சநல்லூர் ஊருடையான்புரம் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரப்போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவர் பீடத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மக்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டும் தேச விரோத சக்திகளின் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“செப்.10 முதல் 16 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்” - அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16000-cubic-feet-of-water-should-be-released-from-september-10-farmers-association-demands-the-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16000-cubic-feet-of-water-should-be-released-from-september-10-farmers-association-demands-the-government#comments</comments><guid isPermaLink="false">206e77d7-a596-4420-b6bc-cc64245bb860</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:50:58 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:50:58.598Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காவிரி நீர்,Cauvery,Tamil Nadu Farmers Association,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,பி.எஸ்.மாசிலாமணி,P.S. Masilamani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ag7ofzgo/14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ag7ofzgo/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">பி.எஸ்.மாசிலாமணி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நடப்பு 2026-27 ஆம் ஆண்டு நெல் சாகுபடிக்கும், குடிநீருக்குமாக  செப்டம்பர் 1ஆம் தேதி அன்று மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் திறக்க உள்ளதை வரவேற்கிறோம். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர். திருச்சி ஆகிய மாவட்டங்களில் வேளாண்மைக்கும், பிற மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், வாழ்வு நிலைக்கும் அடிப்படையானது காவிரி நீர் என்ற நிலையில் ஜீன் 12 ல் திறக்க வேண்டிய மேட்டூர் அணை இரண்டரை மாதம் கழித்து திறக்கப்படுகிறது.</p><h2>நிலத்தடி நீர் மட்டம்</h2><p>பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் கிடைக்காது, குடிநீர் மிகப் பெரிய தட்டுப்பாடாக உள்ளது.டெல்டாவில் நிலத்தடி நீர் மட்டம்  வெகு கீழாக இறங்கி விட்டது. 700 நீர் இருப்பு நிலைகளில் நீர் இல்லை. ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் புல் தரை காய்ந்து கருகி விட்டது. ஆறில் ஒரு பங்கு நிலத்தில் மட்டுமே சாகுபடி செய்த குறுவைப் பயிர்களும் சில இடங்களில் கருகி வருகிறது.தென்னை மரங்கள் உள்ளிட்ட பலன் தரும் மரங்கள் கருகத் தொடங்கி விடடன. இந்த நிலையில்  திறக்கப்படும் தண்ணீர் என்பது நல்லது. மக்களின் வாழ்வு நிலை காத்திட, வெப்பநிலை  உயர்வை குறைத்திட நிலத்தடி நீர் உயர்விற்கும் வாய்ப்பாகும் என்ற நிலையில் நல்லது.</p><h2>கால நீர் பங்கீடு</h2><p>காவிரி நீர் பங்கீட்டுக்கான இறுதி தீர்ப்பின் படி மூன்றில் இரண்டு பங்கு நீரை ஜூன் முதல் செப்டம்பர், ஆகிய 4 மாதங்களில் கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்திட வேண்டும் என்ற தீர்ப்பே  குறுவை சாகுபடிக்காகத்தான். ஏனெனில் தென்மேற்கு பருவ மழை தமிழகத்தை விட கர்நாடகத்திற்கு சாதகமாக இருக்கும்  என்பதால் குருவை நெல் சாகுபடி என்பது முழுமையாக கர்நாடகத்தை நம்பியே உள்ளது என்ற நிலையில் தான் இந்த தீர்ப்பு. ஆனால், பற்றாக்குறை கால நீர் பங்கீடு படி கூட திறந்து விடாது  கர்நாடக அரசு அடம்பிடித்த நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் தலையீட்டில்  நமக்கு தண்ணீர் திறந்து வருகிறது. இந்த நிலையில் கபினியியில்  திறக்கப்படும் நீருக்கும், பிலிகுண்டலு வரும் நீருக்கும் குறைபாடு உள்ளது. கபினியில் திறக்கப்படும் நீர் வெளி கால்வாய் மூலம் அங்கேயே பாசனத்திற்கு திருப்பப்படுவதாக சொல்லப்படுகிறது.</p><h2>டெல்டா பாசனம்</h2><p>நீர் வரத்தை பொறுத்து 45 நாட்களுக்கு 10,500 க.அடி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்வதை கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை குடிநீருக்கும், விவசாயிகள் பாசனத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நீர்வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஒரு டி.எம்.சி.க்கும் குறைவான இந்த நீர் டெல்டா பாசனத்திற்கு பயன்பட வாய்ப்பில்லை. திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கே  4 நாட்கள் கழித்து தான் வரும். வந்தாலும் கீழே 4 ஆயிரம் கன அடி தான் வரும். கடைமடை வரை செல்லவே 10 நாட்களுக்கு மேலாகும். ஆறுகளில் செல்லுமே தவிர பாசன வாய்க்கால்களில் ஏறி செல்ல வாய்ப்பில்லை. இந்தத் தண்ணீர் நிச்சயம் இப்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யும். வெப்ப நிலை தாழும். தென்னை போன்ற மரங்களுக்கு நீர் ஆதாரம் ஓரளவு தரும். </p><h2>16,000 கன அடி தண்ணீர்</h2><p>ஆனால் இந்த தண்ணீரை நம்பி வேளாண்  சாகுபடி பணிகளை தொடங்கிட அறிவுறுத்துவது என்பதும், நம்புவது என்பதும் சாத்தியமில்லை.. சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து இதன் பின்னர் 16 ஆயிரம் கன அடியாக உயர்த்தி திறந்தால் தான் பாசனத்திற்கு வாய்ப்பாகும். தென்மேற்கு பருவமழை செப்டம்பரில்  நிறைவுபெறும் நிலையில் கர்நாடகத்திற்கு மழைக்கான வாய்ப்புள்ளது. எனவே அங்கு நிரம்பும் தண்ணீரை தமிழகத்திற்கு பெற வாய்ப்புள்ளது. தற்போதைய மேட்டூர் அணை நீர் இருப்பு அடுத்து கூடுவதற்கு வாய்ப்புள்ளது. இச்சூழலில் தற்பொழுது திறக்கப்படும் தண்ணீரை கொண்டு சாகுபடி பணிகளை தொடங்க அரசு அறிவுறுத்துவது என்பது விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளில் இக்கட்டான நிலைகளை ஏற்படுத்தும். தற்போது திறக்கப்படும் தண்ணீரை  நிலத்தடி நீர் மட்ட உயர்விற்கு மட்டுமே பயன்பாடாகும். அடுத்து ஒரு வாரத்தில் 16,000 கன அடி தண்ணீர்  திறக்க வேண்டும். அது முதல் சம்பா சாகுபடி பணிகளை முழு வேகத்தில் தொடங்கிட விவசாயிகளுக்கு காலத்தில் அறிவுறுத்திட வேண்டும்.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>மேட்டூர் அணை நீர் இருப்பை பொறுத்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு முழுமையாகவோ, முறை பாசனம் வைத்தோ சம்பா மத்திய கால நெல் விதைகளை விதைக்கலாம் என விவசாயிகள் கருதுகின்றனர். அக்டோபர் இறுதியில் வரும் வடகிழக்கு பெருமழையிலிருந்தும் நெல் பயிர்கள் கதிர் வராத நிலையில் பாதுகாக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழக முதல்-அமைச்சர் மற்றும் வேளாண் துறை, நீர்வளத்துறை அமைச்சர்கள், நீர் வள துறை உயர் அலுவலர்கள் இதற்கான உரிய நடவடிக்கைகள் எடுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பூலித்தேவர் பிறந்தநாள்: பாண்டியர்கள் சமஸ்தானத்தில் காங்கிரஸ் மரியாதை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-birthday-congress-pays-tribute-at-the-pandya-kingdoms-seat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-birthday-congress-pays-tribute-at-the-pandya-kingdoms-seat#comments</comments><guid isPermaLink="false">639d6d6a-d543-4257-aeb4-142f16842490</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:47:31 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:47:31.067Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,பூலித்தேவர்,பூலித்தேவர் பிறந்த நாள்,Puli Thevar,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/voup22ob/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/voup22ob/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நெல்கட்டும்செவல் பாண்டிய மாமன்னர் பூலித்தேவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பூலித்தேவர் சிலைக்கு மரியாதை</h2><p>முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பாண்டிய மன்னன் காத்தப்ப பூலித்தேவர் கி.பி.1715 முதல் 1767 வரை இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட மாமன்னர் ஆவார். அவருடைய 311 ஆவது ஜெயந்தி விழா, வருகின்ற 1.9.2026 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல், பாண்டியர்கள் சமஸ்தானத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. கலந்து கொண்டு முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நெல்கட்டும்செவல் பாண்டிய மாமன்னர் பூலித்தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.</p><p>நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத் தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் முன்னிலையில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர். மனோகரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் எம். ராமேஸ்வரன், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் வி.பி. துரை, திண்டுக்கல் மாநகர் மாவட்டத் தலைவர் துரை மணிகண்டன், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் மா. சின்னதம்பி, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் எஸ். பழனி நாடார், கே. சங்கரபாண்டியன், வீ. கார்த்திகேயன், கொடிக்குறிச்சி முத்தையா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே. ரவி அருணன், ஊத்துமலை ஜமீன்தார் முரளிராஜா, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார, நகர, பேரூர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காங்கிரஸ் </a>தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கூடலூர்: ஆட்கொல்லி புலியை பிடிக்க 2 கும்கி யானைகள் முதுமலையில் இருந்து வரவழைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gudalur-two-kumki-elephants-brought-from-mudumalai-to-capture-the-man-eating-tiger</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gudalur-two-kumki-elephants-brought-from-mudumalai-to-capture-the-man-eating-tiger#comments</comments><guid isPermaLink="false">b42cb2cd-ca4b-4f7d-9408-c1635ae4aba3</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:35:17 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:35:17.791Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Forest Department,ஊட்டி,வனத்துறையினர்,Ooty,Tiger,புலி,Gudalur,கூடலூர்,Kumki elephants,கும்கி யானைகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/aiyj1oc0/tiker.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/aiyj1oc0/tiker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>வனவிலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கக்கோரி கூடலூர் பகுதியில் 48 மணி நேர கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. </p><h2>48 மணி நேர வேலைநிறுத்தம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/நீலகிரி">நீலகிரி</a> மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் லாரஸ்டன் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரை கடித்துக் கொன்ற புலியை சுட்டு கொல்ல வேண்டும். வனவிலங்குகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்றும், கூடலூர் தொகுதியில் செக்சன்-17 நில பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><h2>ஊருக்குள் வந்த புலி</h2><p>இந்நிலையில் 2 பேரை புலி கடித்து கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கூடலூர் நகருக்குள் மற்றொரு புலி பட்டப்பகலில் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது.</p><p>விமலகிரி, புத்தூர் கவலை, மார்த்தோமா நகர் பகுதியில் தொடர்ச்சியாக கால் நடைகளை கொன்றது. இதுதொடர்பாக வனத்துறையினர் அப்பகுதியில் கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் கூடலூர் அத்திப்பாளி அரசு பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள வீடுகளுக்கு முன்பு புலி வந்து நின்றது. இதைக்கண்ட அப்பகுதி மக் கள் அச்சமடைந்தனர். ஆனால், புலி எந்தவித பதட்டமும் இன்றி அவர்களை பார்த்து கொண்டிருந்தது.</p><p>இதனால் பொதுமக்கள் சத்தம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து புலி அங்கிருந்து ஓடி, கூடலூர்-ஸ்ரீ மதுரை செல்லும் சாலையை கடந்தபடி தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. இதனிடையே பட்டப்பகலில் வீடுகள் முன்பு புலி வந்த தகவல் அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். மேலும் தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து புலியின் கால் தடயங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.</p><h2>கும்கி யானைகள்</h2><p>இந்நிலையில் கூடலூர் அருகே நாலாம் நம்பர் பகுதியில் 2 பேரை அடித்துக் கொன்ற புலியை கண்காணித்துப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் முதுமலையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. 120க்கும் மேற்பட்ட வன ஊழியர்களும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>ஆதவ் அர்ஜுனா இல்லாததால் பேரவை சீக்கிரம் முடியும் என நினைத்தேன் - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-thought-the-assembly-would-end-soon-due-to-the-absence-of-adhav-arjuna-premalatha-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-thought-the-assembly-would-end-soon-due-to-the-absence-of-adhav-arjuna-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">3cc129da-89f4-4883-a6f5-2eebeaec7eae</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:29:32 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:29:32.777Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Assembly,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,சட்டப்பேரவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/1p6hlld3/23.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/1p6hlld3/23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இல்லாததால் சட்டப்பேரவை சீக்கிரம் முடிந்துவிடும் என நினைத்தேன் என்று தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><p>இதில் தேமுதிக எம்.எல்.ஏ. <a href="https://www.dailythanthi.com/topic/premalatha">பிரேமலதா</a> விஜயகாந்த் பேசுகையில், பேரவையில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் ரக்‌ஷாபந்தன் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் பெண் ஒருவர் அமில வீச்சுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தினார்.</p><h2>அவையில் இல்லை என்றாலும்...</h2><p>பின்னர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சட்டப்பேரவையில் இல்லாததை குறிப்பிட்டுப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ஆதவ் அர்ஜுனா இன்று அவையில் இல்லை என்பதால், ஒன்றரை மணிக்கெல்லாம் பேரவை முடிந்துவிடும் என நினைத்தேன். ஆனால், பேரவை நீண்டு கொண்டே செல்கிறது.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-9-districts-today-meteorological-centre-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-9-districts-today-meteorological-centre-update#comments</comments><guid isPermaLink="false">bad15495-7896-45d0-b1ff-0e5b0a3ebcb1</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:28:25 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:28:25.678Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,weather forecast,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7ukprpe2/corer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7ukprpe2/corer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. </p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.</p><p>செப்டம்பர் 3-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கிராண்ட் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன்: டிடிவி தினகரன், வானதி சீனிவாசன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/praggnanandhaa-grand-chess-tour-champion-ttv-dhinakaran-vanathi-srinivasan-congratulate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/praggnanandhaa-grand-chess-tour-champion-ttv-dhinakaran-vanathi-srinivasan-congratulate#comments</comments><guid isPermaLink="false">0b37f77c-220b-4765-8e73-236f1f4f3591</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:14:13 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:14:13.529Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Greetings,வாழ்த்து,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,பிரக்ஞானந்தா,Grand Chess Tour Series,Praggnanandha,கிராண்ட் செஸ் தொடர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7o3hazby/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7o3hazby/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கிராண்ட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வானதி சீனிவாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றிருக்கும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அபாரமான திறமையாலும், தளராத தன்னம்பிக்கையாலும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் வீரர் பிரக்ஞானந்தாவின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><p>வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், "அமெரிக்​கா​வில் நடை​பெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். தங்களது விடாமுயற்சியின் மூலம் அடுத்தடுத்த சாதனைகளால் தேசமே பெருமை கொள்கிறது. தாங்கள் இன்னும் பல சாதனைகளைப் புரிந்து தேசத்திற்கு பெருமை தேடித்தர வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பனிப்பாறைகளில் ஏற்படும் பனிச்சரிவுகள் தொடக்கமும் அல்ல, முடிவும் அல்ல! - டாக்டர் கிருஷ்ணசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/avalanches-on-glaciers-are-neither-the-beginning-nor-the-end-dr-krishnasamy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/avalanches-on-glaciers-are-neither-the-beginning-nor-the-end-dr-krishnasamy#comments</comments><guid isPermaLink="false">07778971-4d67-4449-8c70-5f2ae2799568</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:12:38 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:12:38.592Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>டாக்டர் கிருஷ்ணசாமி,Dr. Krishnasamy,புதிய தமிழகம் கட்சி,கிருஷ்ணசாமி,Krishnasamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/14tjqxsd/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாக்டர் கிருஷ்ணசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/14tjqxsd/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெள்ளப்பெருக்கை முடிந்த அளவுக்கு முன்கூட்டியே கண்டறிந்து, அங்குப் பயணிப்போரை எச்சரித்து, உரிய பாதுகாப்பு வழங்கிட இந்தியா, சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் தகவல்களைப் பரிமாறக்கூடிய நவீன சாதனங்களைக் கொண்டு கண்காணிக்க உடனடி நடவடிக்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">கிருஷ்ணசாமி </a>வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பனிப்படலத்தின் தாயகம்</h2><p>ஏறக்குறைய 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மிக ஆழத்தில் இருக்கும் 'டெக்டானிக்' தட்டுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கடலின் ஒரு பகுதியாக இருந்து மேலேழுந்து உருவானதே 'இமயமலை'.</p><p>இந்தியா, சீனா, பாகிஸ்தான், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இமயமலை, 2,500 கிலோமீட்டர் நீளமும், 300 முதல் 400 கிலோமீட்டர் அகலமும், ஏறக்குறைய 8 ½ கிலோமீட்டர் உயரமான உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை உள்ளடக்கிய "பனிப்படலத்தின் தாயகமாகும்".</p><p>இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பாயக்கூடிய பெருநதிகளின் தொடக்கமாக இமயமலை திகழ்கிறது. இதன் மேற்குப் பகுதி மிக அகலமாகவும், கிழக்குப் பகுதி மிகக் குறுகலாகவும்; இமயமலையின் பெரும்பகுதி இந்திய தேசத்திற்குள் உள்ளடங்கியும் இருக்கிறது.</p><h2>பனிச்சரிவு</h2><p>வடக்கே இந்தியாவின் மாபெரும் அரணாக இருப்பது இமயமலையே; இது வெறும் எல்லைக் கோடு மட்டுமல்ல; இந்திய தேசத்தின் பூர்வீகம், கலை, கலாசாரப் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்ததாகும். மிகப்பெரிய புண்ணியத் தலங்களாகக் கருதப்படும் அமர்நாத், கேதர்நாத், மானசரோவர் உள்ளிட்ட பகுதிகள் இமயமலையின் பனிப்படலங்களுக்கு இடையேதான் அமைந்து இருக்கின்றன.</p><p>ஆனால், இமயமலையில் பனிச்சரிவு ஏற்படும் வரலாறு என்பது நேற்று, இன்று உருவானது அல்ல, இமயமலையின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்ததாகும். இமயமலையின் எவரெஸ்ட் சிகர உச்சியையும், பிற சிகரங்களையும் அடைந்துவிட வேண்டும் என்பதற்காக மலையேற்றத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்கொண்ட ஆபத்துகள் பனிச்சரிவுகளால் ஏற்பட்டவையே. ஆனால், சிறிய அளவிலான ஆபத்துகளை மலையேறிகள் எதிர்கொண்டதால் அதைப் பெரிதாக யாரும் கருதுவதில்லை.</p><p>கடந்த 26-ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவு என்பது பிரம்மாண்டமானது. தரையிலிருந்து ஏறக்குறைய 5 கிலோமீட்டர் உயரத்தில் இருந்த 1 ½ முதல் 2 கிமீ பரப்பளவு கொண்ட பனிப்பாறைகள் உடைந்து சிதறி, பல கிலோமீட்டர்களுக்குக் கீழே ஓடிக்கொண்டிருந்த நதிகளில் விழுந்து, அதனால் நதிகளின் ஓட்டம் தடைபட்டது. அதைத் தொடர்ந்து செயற்கையாக உருவான நீர்தேக்கங்கள் உடைந்து, பல நதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குகள்தான் அண்மைக்கால வரலாற்றில் காணாத இவ்வளவு பெரிய உயிர்ச்சேதங்களுக்கும் பொருட்சேதங்களுக்கும் காரணமாகும்.</p><h2>ஆய்வு செய்ய வேண்டும்</h2><p>இவ்வளவு பெரிய பேரழிவுகளும் வெறும் 30 நிமிடங்களில் நடந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது; அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ‘அழகையும் அழிவையும் உள்ளடக்கிய மகத்துவமுடையது இயற்கை’ என்பதே இதன் வெளிப்பாடாகும்.</p><p>இமயமலைப் பிராந்தியத்தில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்குகளுக்குப் பனிப்பாறை வெடிப்புகளே முதன்மையான காரணியாகப் பார்க்கப்படுகின்றன. எனினும், அதன் தூண்டுதல் காரணிகள் (Triggering Factors) என்னென்ன? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பதையும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். அதே சமயம் "எல் நினோ" (El Nino) என்று அழைக்கப்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்களும் இதுபோன்ற பனிப்பாறைகள் வெடிப்புகளுக்கு மூலக்காரணமாக இருக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. அப்பேரிடரில் பாதிக்கப்பட்டோர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.</p><p>இமயமலையின் பிரம்மாண்டமும், அதன் அளவு கடந்த பொருண்மையுமே (Height and Massiveness of the Himalayas) அதற்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது</p><h2>எண்ணிக்கை குறையாது</h2><p>இயற்கைச் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மட்டுமே இமயமலைக்கு வரக்கூடிய ஆன்மீக விருப்பமுள்ள மக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று எவரும் எண்ணிவிடக் கூடாது.</p><p>ஏனெனில், இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியைக் காண்பதும், வடகோடியில் உள்ள இமயமலையின் பனிப்படலங்களுக்கு ஊடே இருக்கும் அமர்நாத் குகைகளின் சிவலிங்கத்தையும் கேதர்நாத்தின் அற்புதக் காட்சிகளையும் காண்பது இந்தியப் பண்பாட்டின் ஒரு அங்கமாகவே கருதி எண்ணற்றோர் வாழ்ந்து வருகின்றனர்.</p><p>எனவே, இமயமலை பகுதிகளில் அவசியமில்லாமல் ஆபத்தான பகுதிகளில் குடியேறுவதைத் தடுத்திடவும், நவீன கட்டுமானங்களை அறவே தவிர்த்திடவும், பனிப்பாறைகளின் வெடிப்புகள், எதிர்பாராத மேகவெடிப்புகள், பெருவெள்ளங்கள் அனைத்தையும் முடிந்த அளவுக்கு முன்கூட்டியே கண்டறிந்து, அங்குப் பயணிப்போரை எச்சரித்து, உரிய பாதுகாப்பு வழங்கிட இந்தியா, சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் தகவல்களைப் பரிமாறக்கூடிய நவீன சாதனங்களைக் கொண்டு கண்காணிக்க உடனடி நடவடிக்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“புரட்சித்தீயை பற்றவைத்த வீரத்தமிழச்சி” - செங்கொடிக்கு  சீமான் வீரவணக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-brave-tamil-woman-who-ignited-the-revolution-seeman-salutes-the-red-flag</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-brave-tamil-woman-who-ignited-the-revolution-seeman-salutes-the-red-flag#comments</comments><guid isPermaLink="false">5ae79899-3040-447c-8f23-08c5e87fcee4</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:03:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:03:33.450Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,Nam Tamilar party</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2c43j4wn/seeman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2c43j4wn/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/topic/seeman">சீமான்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>உலக வரலாற்றில் அடுத்தவரின் உயிர் காக்க தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் புரிந்த முதல் அரசியல் புரட்சிப்பெண்!</p><p>தன்னுடைய மூன்று அண்ணன்மார்களின் உயிர், தூக்குக் கயிற்றின் எதிரே நிற்கும்போது, தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது அதைக் காக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, தன் உடலுக்குத் தீயிட்டு, ஒரு புரட்சித்தீயை இந்த நிலத்தில் பற்றவைத்த பெரும் நெருப்பு!</p><h2>காவல் தெய்வம்</h2><p>தமிழர் பண்பாட்டு மரபில் தன்னைச் சார்ந்தவர் நலன் காக்க தம்முயிர் துறந்து தெய்வங்களான தமிழின முன்னோர்கள் போல, இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்து உலகத்தமிழர் உள்ளங்களில் நீக்கமற நிறைந்து வாழும் நம் இனத்தின் காவல் தெய்வம்!</p><h2>வீரவணக்கம்</h2><p>தம்முயிரையே ஈகம் தந்த புனிதப்போராட்டத்தின் மூலம் எழுவர் விடுதலைக்கு வித்திட்ட வீரத்தமிழச்சி தங்கை செங்கொடிக்கு நம்முடைய வீரவணக்கத்தை செலுத்துவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திமுகவை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை வீழ்த்த அணிதிரள்வோம் - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-rally-to-defeat-the-deceitful-forces-plotting-to-destroy-the-dmk-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-rally-to-defeat-the-deceitful-forces-plotting-to-destroy-the-dmk-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">0faff65d-43c6-487c-8d40-ce8d5bd98f4e</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:00:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:00:05.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/gtwsml35/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/gtwsml35/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் இன்று! </p><p>தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்! இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்!”</p><p>இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ரக்‌ஷா பந்தன் திருநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/raksha-bandhan-ttv-dhinakarans-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/raksha-bandhan-ttv-dhinakarans-greetings#comments</comments><guid isPermaLink="false">a2e4a9bb-236d-48a7-947e-c6482555da61</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:53:17 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:53:17.700Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,ரக்‌ஷா பந்தன்,Raksha Bandhan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/kyljd241/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/kyljd241/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”சகோதர, சகோதரிகளுக்கிடையே நிலவும் அன்பு, பாசம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் திருநாளை கொண்டாடி மகிழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>உறவுகளின் புனிதத்தையும், சகோதரத்துவத்தின் மகத்துவத்தையும் போற்றும் இந்நன்னாளில், பெண்களின் கண்ணியத்தையும், உரிமைகளையும் பாதுகாத்து, அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சமூகத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பும் தமிழர்கள்: தமிழ்நாடு அரசு ஏற்பாடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-returning-to-chennai-from-nepal-tamil-nadu-government-makes-arrangements</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-returning-to-chennai-from-nepal-tamil-nadu-government-makes-arrangements#comments</comments><guid isPermaLink="false">a0e09e74-8ecc-4fe4-a0a2-b995a046294b</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:49:14 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:49:14.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,டெல்லி,சென்னை,தமிழகம்,Nepal,நேபாளம்,தமிழ்நாடு அரசு,TN govt,தமிழர்கள்,Tamils,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,nepal flood</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2vapccw0/thiru.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2vapccw0/thiru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளம் வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் விமானம் மூலம் இன்று (வெள்ளி கிழமை) இரவு சென்னை திரும்புகின்றனர்.</p><h2>தமிழக அரசு</h2><p>நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற மொத்தம் 85 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p><p>இதனிடையே, மீட்புப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர்.</p><h2>தமிழக அமைச்சர்கள்</h2><p>இந்த நிலையில், நேபாள பேரிடரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.</p><h2>100-க்கும் மேற்பட்டோர்</h2><p>உதவி மையத்தின் செயல்பாடுகள், பெறப்படும் அழைப்புகள், தகவல் சேகரிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர். தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தான் நேபாளம் சென்றிருப்பார்கள் என்று நினைத்தோம். </p><p>தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. 26 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிலரை கண்டறிய முடியவில்லை. மத்திய அரசு, நேபாள அரசுடன் பேசி அவர்களுக்கான உதவிகளை செய்வோம். விரைவில் அவர்களை மீட்டு வருவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம்’ என்றார்.</p><h2>இன்று இரவு</h2><p>இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய, கும்பகோணத்தில் இருந்து கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற 57 பேரில் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 பேர் இன்று இரவு சென்னை வந்து நாளை அவர்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் விமானம் 3.45க்கு டெல்லி வரவுள்ளது. அங்கிருந்து 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.</p><p>முன்னதாக நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிந்த <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>, மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையைக் கண்டறிந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தார். </p>]]></content:encoded></item><item><title>வரலாறு படைத்த சாம்பியன் பிரக்ஞானந்தா - நயினார் நாகேந்திரன் வாழ்த்து..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/champion-praggnanandhaa-makes-history-nayinar-nagendran-extends-his-congratulations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/champion-praggnanandhaa-makes-history-nayinar-nagendran-extends-his-congratulations#comments</comments><guid isPermaLink="false">f3669536-ae19-40b0-8f37-7e349f7cf5e3</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:46:18 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:46:18.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பிரக்ஞானந்தா,Praggnanandhaa</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/l897s4fq/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/l897s4fq/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வரலாற்று சாதனை</h2><p>அமெரிக்காவில் நடைபெற்ற (Grand Chess Tour) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று, இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா!</p><p>தனது அசாத்திய திறமை, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் உலக சதுரங்க அரங்கில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்கச் செய்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!</p><h2>வாழ்த்துகள்</h2><p>உங்கள் வெற்றி <a href="https://www.dailythanthi.com/topic/nainar-nagendran">தமிழ்நாட்டின் </a>பெருமை, உங்கள் சாதனை இந்தியாவின் பெருமை!</p><p>இன்னும் பல வரலாற்று வெற்றிகளைப் படைத்து, உலக அரங்கில் இந்தியாவின் புகழை மேலும் உயர்த்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-11</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-11#comments</comments><guid isPermaLink="false">53b7cfbc-0593-48e1-a3c2-620449ff8dbc</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:46:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:46:00.001Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,powercut,மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/tbdx0ow7/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/tbdx0ow7/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்கள் மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;</p><p>சென்னையில் 29.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பிற்பகல் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>கிண்டி : கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் தெரு 3, 5 மற்றும் 6வது தெருக்கள், ஏ,பி,சி மற்றும் டி பிளாக், மவுண்ட் ரோடு ஒரு பகுதி, ஜே.என். சாலை, பூமகள் தெரு, தெற்கு கட்டம், பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு, காந்தி நகர் பகுதி, பூந்தமல்லி சாலை பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.</p><p>சித்தாலபாக்கம்:- புஷ்பா நகர் பூங்கா, சந்தானம் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, மாம்பாக்கம் மெயின் ரோடு, மகேஸ்வரி நகர், பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, டி.வி. நகர், ஸ்கைலேப் அவென்யூ, வள்ளுவர் நார், ஜெயா நகர், விவேகானந்தா நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.</p><p>ஈஞ்சம்பாக்கம்:- ஈ.சி.ஆர். ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், ஈஞ்சம்பாக்கம் முதல் வெட்டுவான்கேணி இணைப்புச் சாலை, வெட்டுவான்கேணி 1 மற்றும் 2வது அவென்யூ, அக்கரை, அல்லிகுளம் அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தல் நகர், பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டலக் கலைஞர்கள் கிராமம், சோழமண்டல தேவி நகர். கடற்கரை சாலை, டாக்டர் நஞ்சுண்டராவ் சாலை, கங்கையம்மன் கோயில் தெரு, குணால் தோட்டம், ஹனுமான் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4 தெருக்கள், கக்கன் தெரு, கே.கே. சாலை, கே.வி. நகர், கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி. அவென்யூ, சனிஸ் அவென்யூ, நைனார் குப்பம், உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர் குப்பம், பனையூர் மற்றும் குப்பம், என்ஆர்ஐ மற்றும் விஜிபி லேஅவுட், பெப்பிள் பீச், பெரியார் மற்றும் பொதிகை மற்றும் பொன்னியம்மன் கோயில் தெரு, பிரெஸ்டீஜ் மற்றும் ராஜ்லிங் தெரு, ராஜ்லிங் &amp; மந்திரி நகர், ராயல் என்கிளேவ், கடல் பாறை, சீ ஷெல் அவென்யூ, சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், ஸ்பார்க்ளிங் சாண்ட் மற்றும் ஷேஷாத்ரி அவென்யூ, ஸ்பிரிங் கார்டன், டி.வி.எஸ். அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, வி.ஓ.சி. தெரு, விமலா கார்டன் மற்றும் ஜுஹு கடற்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மனதை ஆசிரியர்கள் அன்புடன் கையாள வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-should-handle-students-minds-with-love-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-should-handle-students-minds-with-love-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">275ddbe6-d942-4f6f-8c72-73550c8645d7</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:43:57 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:43:57.644Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Teacher,மாணவர்கள்,students,ஆசிரியர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/b95qa6a6/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/b95qa6a6/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>எனதன்பு மாணவக் கண்மணிகளே, தற்கொலை எதற்கும் தீர்வாகாது! மதுரை அலங்காநல்லூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், விருதுநகர் காரியாபட்டி அரசுப் பள்ளியில் சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் அடித்து கேலி செய்ததால் 6 ஆம் வகுப்பு மாணவன் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள், எனது மன அமைதியையே குலைத்து விட்டன. </p><h2>அன்பு எனும் குடை</h2><p>கல்வியின் துணையுடன் காலத்தை வெல்ல வேண்டிய நம் குழந்தைச் செல்வங்கள், மரணத்தின் வாசற்படியை இப்படி அவசரமாக அடைய நினைப்பதும், அதற்கு ஏதோவொரு வகையில் இச்சமூகம் காரணமாக அமைவதும் நமது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இறகை விடவும் மிக மென்மையான மனநிலை கொண்ட, மழலை செல்வங்களின் உளவியல் சிந்தனைகளை வலுப்படுத்துவதில் கல்விக்கூடங்களும், ஆசிரியப் பெருமக்களும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். எனவே, மாணவர்களை “அன்பு” எனும் குடையின் கீழ், ஆசிரியர்கள் அரவணைத்து வழிநடத்த வேண்டும். குழந்தைச் செல்வங்களை மிக கவனமாக கையாள வேண்டும். </p><h2>தற்கொலை எதற்கும் தீர்வாகாது</h2><p>அதே சமயம், ஒரு அரசியல் கட்சியின் தலைவராக அல்லாமல், அன்புள்ள அப்பாவாக, அக்கறை கொண்ட ஒரு தோழனாக அனைத்து மாணவக் கண்மணிகளிடமும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். வாழ்க்கையில் எத்தனை ஆயிரம் சோதனைகள் வந்தாலும், உங்கள் குடும்பத்தாரிடமோ, நெருங்கியவர்களிடமோ பகிர்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சியுங்கள். தற்கொலை எதற்கும் தீர்வாகாது!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் - பிரக்ஞானந்தாவுக்கு எல்.முருகன் வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-indian-to-win-the-grand-chess-tour-title-l-murugan-congratulates-praggnanandhaa</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-indian-to-win-the-grand-chess-tour-title-l-murugan-congratulates-praggnanandhaa#comments</comments><guid isPermaLink="false">0808fb24-0ac2-489b-8e1e-093504bb6a2e</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:27:26 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:27:26.337Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L.Murugan,செஸ்,Chess,பிரக்ஞானந்தா,Praggnanandha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/0vk4ndwj/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/0vk4ndwj/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா- அமெரிக்க வீரர் பேபியானோ கருவானா மோதினர். இது 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும்.</p><p>கிளாசிக்கல், ராபிட், பிலிட்ஸ் என மூன்று பிரிவு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா, நடப்பு சாம்பியன் பேபியானோ கருவானாவை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூரை வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார்.</p><p>இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-</p><p>“கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் நட்சத்திரம் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.</p><p>இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பேபியானோ கருவானாவை வீழ்த்தி பெற்றுள்ள இந்தச் சிறப்புமிக்க வெற்றி, நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த உத்வேகமாக அமையும். பிரக்ஞானந்தா தனது செஸ் பயணத்தில் மேலும் பல உயரங்களைத் தொட்டு, இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை திருட்டு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-house-burglary-jewellery-worth-rs-4-lakh-stolen-police-nab-mysterious-person</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-house-burglary-jewellery-worth-rs-4-lakh-stolen-police-nab-mysterious-person#comments</comments><guid isPermaLink="false">4c0845a2-bac5-4356-b048-5fadc69db038</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:22:25 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:22:25.753Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,நகை திருட்டு,போலீஸ் வலைவீச்சு,jewelry theft,mysterious person,மர்ம நபர்,வீடு புகுந்து,police netting,house break-in</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/hlfkcatn/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை திருட்டு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/hlfkcatn/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே வீடு புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">தங்க நகையை திருடிய</a> மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள நடுக்கூட்டன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கல்யாணி (வயது 61). இவர்கள் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வீட்டின் கதவை காற்றுக்காக திறந்து வைத்துவிட்டு அனைவரும் வராண்டாவில் படுத்துத் தூங்கினர். </p><h2>நகை திருட்டு</h2><p>நள்ளிரவில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">மர்ம நபர்</a>, அங்கிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 4 சவரன் நகையைத் திருடிச் சென்றுள்ளார். நகை திருட்டு போனது குறித்து கல்யாணிக்கு ஆகஸ்ட் 26-ம் தேதியே தெரியவந்தது. இதுகுறித்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். </p><h2>மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜூடி வழக்குப்பதிவு செய்து, வீட்டிற்குள் புகுந்து திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம்: சட்டசபையில் மீண்டும் அனல் பறந்த விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-vehicles-for-mlas-heated-debate-in-the-assembly-once-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-vehicles-for-mlas-heated-debate-in-the-assembly-once-again#comments</comments><guid isPermaLink="false">e90c3711-bb59-4710-9da2-4e5e3670ce66</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:21:20 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:21:20.806Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/armw0bea/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/armw0bea/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் இன்றைய அவை நடவடிக்கையின்போது எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம் வழங்கப்படுவது குறித்து சட்டசபையில் மீண்டும் அனல் பறந்த விவாதம் நடந்தது.</p><p>முதலில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கூறுகையில், விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுத்து என்ன பயன்? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “காரை எடுத்துக்கொண்டு தொகுதிக்கு செல்ல வேண்டும். தொகுதியை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு பணி செய்யவே எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுக்கப்படுகிறது” என்றார்.</p><p>தொடர்ந்து அவை முன்னவர் செங்கோட்டையன் கூறுகையில், “அரசு கொடுக்கின்ற காரில் போகிறபோது அதற்கு தனி மரியாதை இருக்கும். திமுகவினர் கார் ரேசுக்கு ரூ.24 கோடி செலவு செய்தீர்கள். அது யார் அப்பா வீட்டு காசு?” என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு, “நீங்கள் (செங்கோட்டையன்) விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.10 கோடிக்கு எதுவுமே செய்யாமல் அந்த பணத்தை அப்படியே வைத்திருந்தீர்கள். நாங்களும் உங்களை போலவே செயல்பட வேண்டுமா?” என்றார்.</p><p>தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “எந்தெந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் வாங்கிக்கொடுங்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவின்படி திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என தெரிவித்தார்.</p><p>சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், “திமுகவினர் தாங்கள் வசதியாக இருப்பதால் கார் வேண்டாம் என்கிறார்கள். அதனால் கார் இல்லாதவர்கள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம், கார் இருப்பவர்கள் அவரவர் காரிலேயே சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொள்வார்கள்” என்றார்.</p><p>தொடர்ந்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், அரசு கஜானாவில் பணமில்லை, அதனால் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுக்க வேண்டாம் என்று திமுகவினர் சொல்கிறார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் கலைஞருக்கு கடலில் பேனா வைக்க வேண்டும் என்று சொன்னீர்களே, அப்போது மட்டும் நிதி இருந்ததா?’ என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த திமுக கொறடா எ.வ.வேலு, “மத்திய அரசு கலைஞருடைய பேனா சிலையை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி தந்தது. ஆனால், எங்களுடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சூழலில் அது தேவையா? என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பொருளாதாரம் எப்போது சீர் ஆகிறதோ... அப்போது வைத்துக் கொள்ளலாம். தற்போது வேண்டாம் என்று சொன்னார். இது அனைவரும் அறிந்தது.” என்றார். இவ்வாறு சட்டசபையில் மீண்டும் அனல் பறந்த விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆதவ் அர்ஜுனா வழக்கு - மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-issues-notice-to-mk-stalin-regarding-the-1-crore-compensation-suit-filed-by-aadhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-issues-notice-to-mk-stalin-regarding-the-1-crore-compensation-suit-filed-by-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">d8878913-4433-430f-844e-f7ae900c922b</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:17:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:17:33.254Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,Chennai,ஆதவ் அர்ஜுனா,High Court,MK Stalin&apos;,ஐகோர்ட் செய்திகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2j6sr0pg/Chennai-high-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/2j6sr0pg/Chennai-high-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜான் பிரிட்டோ என்பவருடன் தன்னை தொடர்புபடுத்தி அவதூறாக பேசியதாக கூறி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை ஐகோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பியதற்காக, மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனுவில்  கோரியிருந்தார். </p><h2>‘ஜான் பிரிட்டோவுடன் தொடர்பு இல்லை’</h2><p>போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜான் பிரிட்டோவுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், அவருடன் தன்னை தொடர்புபடுத்தி தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கும்   ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தங்களது பதிலை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-immediately-declare-tamil-nadu-a-drought-affected-state-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-immediately-declare-tamil-nadu-a-drought-affected-state-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">724d3f74-5cf2-4ade-b431-de224a247391</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:08:02 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:08:02.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ce7rv9q8/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/ce7rv9q8/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ம.க.  தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சுமார் 30% அளவுக்கு குறைவாக பெய்திருப்பதால் பாதிக்கப்பட்டுள்ள 101 வட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.  இத்தகைய சூழலில் கர்நாடகத்தை விட கொடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் இன்னும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படாதது ஏன்? என்ற வினா எழுகிறது.</p><p>கர்நாடகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை கர்நாடகத்தில் 666 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில், 465 மி.மீ மழை மட்டுமே பெய்திருக்கிறது. வழக்கமாக சாகுபடி செய்யப்படும் 84.10 லட்சம் ஹெக்டேருக்கு பதிலாக 60 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 71 விழுக்காடு மட்டுமே  சாகுபடி செய்யப்பட்டிருப்பது தான் 101 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு காரணமாக கூறப்பட்டிருக்கிறது.</p><p>ஆனால், தமிழகத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.  ஜூன் ஒன்றாம்  தேதி முதல் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 180 மி.மீ. அளவுக்கு மட்டுமே மழை பெய்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு  6.31 லட்சம் ஏக்கரில்  குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில்  சுமார் 2 லட்சம்  ஏக்கரில் மட்டுமே  குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் அளவில் வெறும் 30% மட்டும்தான்.</p><p>தமிழகத்தில் மொத்தம் உள்ள 14,141 நீர்நிலைகளில், 4208 நீர்நிலைகள், அதாவது 29.25% நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. மேலும், 5,814 நீர்நிலைகளில் 1% முதல் 25% வரை மட்டுமே நீர் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை.  காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.</p><p>நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து விட்டதால்  காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகுகின்றன.  இதே நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால் தமிழ்நாட்டில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து  ஏற்பட்டிருக்கிறது.  நிலைமை இந்த அளவுக்கு மோசமாக மாறியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து வறட்சி தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் சிறந்ததாக இருக்கும்.</p><p>எனவே, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதமும், குறுவை சாகுபடி செய்து நீரின்றி பயிர்கள் வாடியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். சம்பா சாகுபடி செய்யமுடியாத நிலை  உருவாகும் சூழலில் அதனால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10000 உதவி வழங்க வேண்டும். நிலமில்லா தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-10-year-old-girl-elderly-man-gets-life-imprisonment-until-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-10-year-old-girl-elderly-man-gets-life-imprisonment-until-death#comments</comments><guid isPermaLink="false">e1348469-b7b3-434b-b1bc-7e01c178ac6c</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:44:59 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:44:59.451Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Sexual harassment,Elderly man,முதியவர்,சிறுமி,minor,பாலியல் துன்புறுத்தல்,சாகும் வரை ஆயுள் தண்டனை,life imprisonment till death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/23bjpncg/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/23bjpncg/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் 10 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>யை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பாலியல் துன்புறுத்தல்</a> செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">முதியவருக்கு </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சாகும் வரை ஆயுள் தண்டனை</a> மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><h2>10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் சித்திரை செல்வன் (வயது 64) என்பவர் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், மேற்சொன்ன வழக்கு மேல் நடவடிக்கைக்காக சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் 5.8.2020 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய சேரன்மகாதேவி உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிரதிப் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, முதியவரை கைது செய்தார். </p><h2>முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை</h2><p>புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து. வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போகசோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முதியவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி சுரேஷ்குமார் நேற்று குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். </p><p>இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் துர்காதேவி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர் திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷவேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார். இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த காவல் அதிகாரி, அப்போதை சேரன்மகாதேவி உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிரதீப் ஆவார். தற்போது அவர் சென்னை மாநகரில் உதவி காவல் துறை தலைவராக (சட்டம் மற்றும் ஒழுங்கு, பொறுப்பு) பணியாற்றி வருகிறார். </p><h2>18 போக்சோ குற்றவாளிகளுக்கு தண்டனை</h2><p>திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 18 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 18 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 5 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. </p><h2>தீவிர நடவடிக்கை</h2><p>தமிழ்நாடு காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடரச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல-சென்னை  ஐகோர்ட் கடும் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilson-is-not-the-king-of-england-madras-high-court-expresses-strong-condemnation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilson-is-not-the-king-of-england-madras-high-court-expresses-strong-condemnation#comments</comments><guid isPermaLink="false">ccd04de0-e7a2-4dd9-8325-88209c6df3f1</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:35:42 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:35:42.756Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,High Court,ஐகோர்ட்,மரிய வில்சன்,Minister Maria Wilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/jdcgqo4r/Maria-wilson.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/jdcgqo4r/Maria-wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி, புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் தனது சகோதரர் மரிய குலோத்தின் வீட்டுக்குள் கதவை உடைத்து அத்துமீறி நுழைந்து, அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கை ரத்து செய்யக்கோரி மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அமைச்சர் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.</p> <h2>‘இங்கிலாந்து அரசர் அல்ல’</h2><p>இந்த கோரிக்கைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது என்று கூறுவதற்கு நிதியமைச்சர்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D"> மரிய வில்சன்</a> இங்கிலாந்து அரசர் அல்ல. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதுகூட கோர்ட்டில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரர் தற்போது மாநிலத்தின் நிதியமைச்சராக உள்ளார். அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு கோர்ட்டில் ஆஜரான அவர், பதவிக்கு வந்த பிறகு மட்டும் ஆஜராக மாட்டாரா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.</p><h2>‘சட்டத்துக்கு மேலானவர் அல்ல’</h2><p>இதனிடையே, புதுச்சேரி போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல், வேளாங்கண்ணி ஆலய கொடியேற்று நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதி, வேளாங்கண்ணிக்கு சென்று திரும்பும்போது அமைச்சர் புதுச்சேரி   கோர்ட்டில்  ஆஜராகலாமே என்று கேள்வி எழுப்பினார்.மேலும், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">கோர்ட்டில்</a> ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, அமைச்சர் எந்த தேதியில் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராவார் என்பதை தெரிவிக்கும்படி அவரது தரப்பு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.</p> ]]></content:encoded></item><item><title>திமுகவில் இனி 110 மாவட்டச் செயலாளர்கள் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-have-110-district-secretaries-henceforth-mk-stalin-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-have-110-district-secretaries-henceforth-mk-stalin-announces#comments</comments><guid isPermaLink="false">946cd0e9-238d-41a0-8b23-d00f95b16c34</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:33:36 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:33:36.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/t5latzf4/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/t5latzf4/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுகவில் 110 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்கு வசதியாக தொகுதிகளை பிரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மட்டும் 3 தொகுதிகளை கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>கடந்த 22.8.2026 அன்று நடைபெற்ற திமுக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிகமுக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம். திமுக தொடங்கப்பட்ட நாள் முதல், இதுவரையில் 15 முறை கழக அமைப்புரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். </p><p>இதன் தொடர்ச்சியாக 16-வது கழக அமைப்புத் தேர்தலை நடத்திடவும் - பல்வேறு அமைப்புரீதியாக நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது மாவட்டக் கழகங்கள் குறித்த தீர்மானமாகும்.</p><p>அதில், தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110-ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து, கழக மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், திமுக முன்னணியினருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன். அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.</p><p>அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் தற்போதுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள நகர கழக மாவட்டங்களின் அடிப்படையில், ஒன்றிய - பகுதி - பேரூர் - வட்ட கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும், தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், கழக மறுசீரமைப்புக்குழு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை புழல் சிறையில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-conducts-a-surprise-inspection-at-chennais-puzhal-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-conducts-a-surprise-inspection-at-chennais-puzhal-prison#comments</comments><guid isPermaLink="false">6660b021-4f03-41f7-9b6e-b346ec151edf</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:14:10 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:14:10.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,சென்னை,புழல் சிறை,Puzhal Jail,Puzhal prison,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7ro69oio/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7ro69oio/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளன. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.</p><p>இந்த நிலையில், சென்னை புழலில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலை மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.</p><p>மேலும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவு தயாரிக்கப்படும் கூடும், மருத்துவ வசதிகள் என அனைத்தையும் முதல்-அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்-அமைச்சரின் ஆய்வின்போது உயர் அதிகாரிகள், சிறைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-must-grant-approval-for-the-tamil-nadu-civil-supplies-corporation-to-procure-paddy-gkvasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-must-grant-approval-for-the-tamil-nadu-civil-supplies-corporation-to-procure-paddy-gkvasan#comments</comments><guid isPermaLink="false">d0783cf9-6825-441b-8e60-a1376091ec5d</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:05:20 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:05:20.356Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>G.K.Vasan,ஜி.கே.வாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/luk9svo3/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/luk9svo3/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாட்டில் நடப்பாண்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (DPC) மூலம் விவசாயிகளிடம் இருந்து தடையின்றி நெல் கொள்முதல் செய்யத் தேவையான விரைவான ஒப்புதல்களை மத்திய அரசு வழங்க வேண்டும். காரணம் செப்டம்பர் 1 முதல் நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.</p><p>அப்படி என்றால் இன்னும் 3 நாட்களுக்குள் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் தமிழக அரசு நெல் கொள்முதல் செய்யும். மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமானது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.</p><p>கொள்முதல் செய்யும் நெல்லை அரிசியாக்கி ரேஷன் கடைகளுக்கு கொடுத்து இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக மத்திய மாநில அரசுகளின் சார்பில் 100 கிலோ எடை உள்ள குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது. ஆனால் நடப்பாண்டில் இன்று வரை மத்திய அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு நெல் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை அளிக்கவில்லை.</p><p>இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். தமிழக விவசாயிகளிடம் இருந்து காலம் தாழ்த்தாமல் நெல் கொள்முதல் செய்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் உடனடி ஒப்புதல் அளிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>சென்னை: மதுபோதையில் ரகளை செய்த இளம்பெண்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-young-woman-creates-a-ruckus-while-intoxicated-public-gives-her-a-sound-thrashing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-young-woman-creates-a-ruckus-while-intoxicated-public-gives-her-a-sound-thrashing#comments</comments><guid isPermaLink="false">915e5238-90e6-4f08-aa80-583239d84fb4</guid><pubDate>Fri, 28 Aug 2026 06:44:36 +0000</pubDate><atom:updated>2026-08-28T06:44:36.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,இளம்பெண்,Public,police enquiry,மதுபோதையில் ரகளை,intoxication</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/l47mhzty/102.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மதுபோதையில் பெண் ரகளை]]></media:title><media:description type="html"><![CDATA[ பொதுமக்கள் தர்ம அடி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/l47mhzty/102.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மதுபோதையில் பொதுமக்களிடம் ஆபாசமாகப் பேசி தகராறில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் மீட்டு, அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.</p><h2>மதுபோதையில் இளம்பெண் தகராறு</h2><p>சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் நேற்றிரவு (வியாழக்கிழமை) சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் கடுமையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மதுபோதையில்</a> இருந்துள்ளார்.  உணவகத்தில் இருந்தபோதும், சாலையில் நடந்து சென்றபோதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களைப் பார்த்து அந்த பெண் திடீரென ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த வழியாக வந்த கார் ஒன்றை தனது காலால் எட்டி உதைத்தார்.</p><h2>பொதுமக்கள் கண்டனம்</h2><p>பெண்ணின் இந்த அநாகரிகமான செயலால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பொதுமக்கள்</a> மற்றும் வாகன ஓட்டிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு தட்டிக்கேட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த ஒருவர் அந்த பெண்ணின் தலையில் பலமுறை அடித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த மோதல் தொடர்பான காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களிலும் பரவியது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், பொதுமக்களிடம் இருந்து அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88"> விசாரணை</a> நடத்தினர். பின்னர் அந்த பெண்ணின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், அவர்களுக்கு உரிய அறிவுரைகளையும், எச்சரிக்கையையும் வழங்கி அந்த பெண்ணை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Chennai Drunkard Girl Viral Video| போதையில் சென்னை இளம்பெண் ரகளை..  பொளந்துவிட்ட பப்ளிக் <a href="https://x.com/hashtag/chennaidrunkardgirl?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#chennaidrunkardgirl</a> <a href="https://x.com/hashtag/drunkardgirlviralvideo?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#drunkardgirlviralvideo</a><a href="https://t.co/ovCPqeM57N">https://t.co/ovCPqeM57N</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2093207918904844317?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item></channel></rss>