<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 18 Aug 2026 05:26:12 +0000</lastBuildDate><item><title>அமைச்சர் நிர்மல் குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு - அவையில் சலசலப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-reprimands-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-reprimands-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">221fb62a-e6ab-4ad8-9d7f-a55b420bdbc6</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:25:20 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:25:20.118Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,CTR Nirmal kumar,JCD Prabhakar,அமைச்சர் நிர்மல் குமார்,ஜே.சி.டி. பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/2cib8f9q/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/2cib8f9q/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? என்று அமைச்சர் நிர்மல் குமாரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கண்டித்தார்.</p><p>சென்னை,</p><h2>கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கர்நாடகா வனத்துறையில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுகவின் இபிஎஸ், பாமகவின் சௌமியா, பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாது..</h2><p>இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்து பேசியதாவது:-</p><p>கர்நாடக வனப்பகுதியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வசித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நீதி விசாரணைக்கு கர்நாடக முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக வனத்துறையின் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>முதலில் சுட்டது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேர்மையான, உயர்மட்ட விசாரணைக்கு முதல்-அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். உலகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய். தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும் முதல் குரல் கொடுப்பவர் முதல்-அமைச்சர் விஜய்தான். என்று பேசினார்.</p><h2>சபாநாயகர் கண்டிப்பு</h2><p>தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், ஒரு சில பேருக்கு திடீர் தமிழ் பாசம், தமிழர்கள் மீது பாசம் இருக்கும். அதனை நாம் அனைவரும் வரலாற்றில் பார்த்திருப்போம்; 2009-ம் ஆண்டு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் பற்றி ஒரு கருத்தை தெரிவித்தார்.</p><p>அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே குறுக்கீட்ட சபாநாயகர் அமைச்சர் நிர்மல் குமார் கூறிய தேவையற்ற கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி உத்தவிட்டார். மேலும் அமைச்சர் நிர்மல் குமார் இனி தேவையற்றதை பேச அனுமதிக்கமாட்டேன் என்றும் கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒட்டி தான் அனைவரும் பேச வேண்டும் என்றும் யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? என அமைச்சர் நிர்மல்குமாரை சபாநாயகர் கண்டித்தார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஓமனில் சிக்கித் தவித்து வரும் தமிழக மீனவர்களான மீட்க நடவடிக்கை தேவை: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-fishermen-stranded-in-oman-need-action-to-rescue-them-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-fishermen-stranded-in-oman-need-action-to-rescue-them-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">030bcf25-a5cd-4d2c-915e-5118ec5f7b76</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:22:27 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:22:27.228Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/s8h08zl1/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/s8h08zl1/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”ஓமனில் பணி விசா பெற்றுத் தருவதாக ஏமாற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி முதல் தவித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களான சிரில் ராபின் ஜார்ஜ் (47 | கன்னியாகுமரி), அந்தோணி பிச்சை அலெக்ஸ் ரவி (46 | கன்னியாகுமரி), அந்தோணி பிச்சை சரோன் ஜோசவா (22 | கன்னியாகுமரி), தாமஸ் அருள் (51 | கன்னியாகுமரி) மற்றும் மாரியப்பன் ஜெட்லி (29 | ராமநாதபுரம்) ஆகியோரை உடனடியாகப் பாதுகாப்பாக மீட்கக் கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாகத் தலையிட்டு, நமது மீனவர்களுக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளை வழங்கி, அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீனவர்களை ஏமாற்றிய போலி ஏஜென்ட் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் சபாநாயகர் ஆக்கபூர்வமான விவாதங்களை அனுமதித்து நடத்த வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-should-allow-constructive-debates-in-assembly-eriswaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/speaker-should-allow-constructive-debates-in-assembly-eriswaran#comments</comments><guid isPermaLink="false">75d9c8c3-b6d6-4226-b5fc-31d65215ff23</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:12:31 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:12:31.666Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈ.ஆர்.ஈஸ்வரன்,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,Speaker J.C.D. Prabhakar,E.R. Eswaran</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/3siqj62t/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/3siqj62t/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”தொடர்ந்து சட்டமன்ற நிகழ்வுகளை தமிழக மக்களோடு சேர்ந்து நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சட்டமன்ற விவாதங்கள் விதண்டாவாதமாக நடந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றம் தமிழக மக்களுடைய தலையெழுத்தை எழுதக்கூடிய மன்றம். அங்கு நடக்கக்கூடிய விவாதங்கள் தமிழக உரிமைகளை பாதுகாக்க கூடியதாகவும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடியதாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடக் கூடியதாகவும் அமையப் பெற வேண்டும். அப்படி ஆக்கபூர்வமாக மாற்ற வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு இருக்கிறது. </p><p>இன்றைய சபாநாயகர் அனுபவம் மிகுந்தவர் தான் அவருடைய அனுபவத்தை பயன்படுத்தி சட்டமன்றத்தில் என்ன பேச அனுமதிக்க வேண்டுமோ அதை அனுமதிக்க வேண்டும். நேரலையில் உலகம் முழுவதும் சபை நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே எந்த பயனும் இல்லாத வாக்குவாதங்கள் நடக்கிறது என்றால் சபாநாயகர் தான் பொறுப்பேற்க வேண்டும். சபை நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இல்லையென்ற குற்றச்சாட்டை சபாநாயகர் மேல் தான் சுமத்துவார்கள். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு சபாநாயகர் தாமதம் இல்லாமல் விழித்துக் கொள்ள வேண்டும்.</p><p>அநாகரிகமான, கண்ணியம் இல்லாத பேச்சுக்களை சபையில் எந்த உறுப்பினர் பேசினாலும் அதை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு அவருடைய மைக்கை செயலிழக்க செய்வதற்கு சபாநாயகருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. பேச விட்டு விட்டு அது நேரலையில் உலகம் முழுவதும் பார்த்த பிறகு சபை குறிப்புகளில் இருந்து நீக்குகிறேன் என்று அறிவிப்பது எந்தப் பயனையும் தராது. இதேபோன்று சபை நடவடிக்கைகளை சபாநாயகர் தொடர விட்டால் கைகலப்பிலே சென்று முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. </p><p>உங்கள் அனுமதியுடன் சட்டசபைக்குள்ளே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வார்த்தை பிரயோக வாக்குவாதம் வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்ற கட்சி உறுப்பினர்களிடையே தமிழகம் முழுவதும் வன்முறையாக மாறுவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. நாம் அச்சப்படுகிற விஷயங்கள் நாளை நடந்தால் சபாநாயகர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இன்றைய சபை நடைமுறை என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பதை மனதில் கொண்டு சட்டசபைக்குள்ளே வானளாவிய அதிகாரம் கொண்ட சபாநாயகர் ஆக்கபூர்வமான விவாதங்களை அனுமதித்து நடத்த வேண்டும். தமிழகத்தின் அமைதிக்காக, பாதுகாப்புக்காக, வளர்ச்சிக்காக தமிழக சட்டசபையில் சபாநாயகரின் அணுகுமுறை அமைய பெற வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெரியார் பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு: விண்ணப்பிக்க 28-ந் தேதி வரை அவகாசம்</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/special-examination-for-aryan-students-of-periyar-university-deadline-to-apply-is-28th</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/special-examination-for-aryan-students-of-periyar-university-deadline-to-apply-is-28th#comments</comments><guid isPermaLink="false">7fa0d451-286f-4d87-afac-39954734c931</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:01:07 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:01:07.969Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வு,Students apply,Salem Periyar University,சேலம் பெரியார் பல்கலைக்கழகம்,arrears,அரியர் மாணவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/a1g3eqgy/periyar-university.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியார் பல்கலைக்கழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/a1g3eqgy/periyar-university.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பெரியார் தொலைநிலைக்கல்வி நிறுவனம் தற்போது தொலைநிலை மற்றும் இணையவழிக் கல்வி மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தொழிற்சாலைப் புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற்று இளநிலை, முதுநிலை மற்றும் பிற பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்களின் படிப்புக்காலம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தங்களது அரியருக்கு உரிய தேர்வை எழுதுவதற்காக சிறப்பு தேர்வு நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.</p><h2>காலஅவகாசம் நீட்டிப்பு</h2><p>2017-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு படித்த மாணவர்கள் தாங்கள் படித்த பாடத்திட்டத்திலேயே அரியர் தேர்வுகளை எழுதலாம் என்றும், சிறப்புத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் சிறப்புக் கட்டணமாக ஒவ்வொரு பாடத்தாளிற்கும் ரூ.2 ஆயிரம் சேர்த்துச் செலுத்த வேண்டும். இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் கடந்த மாதம் 15-ந் தேதியுடன் முடிந்து விட்டது. இந்த நிலையில் சிறப்புத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வருகிற 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக வலைத்தளமான www.periyaruniversity.ac.in இல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறும் <a href="https://www.dailythanthi.com/topic/salem-periyar-university">பெரியார் பல்கலைக்கழக</a> துணைவேந்தர் குழு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவல் மரணங்களை விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-high-level-committee-must-be-constituted-to-investigate-custodial-deaths-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-high-level-committee-must-be-constituted-to-investigate-custodial-deaths-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">5a21d6b0-346c-46b4-be36-e55bd08a746e</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:58:57 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:58:57.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,காவல் மரணங்கள்,Custodial deaths</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/9nt3avhm/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/9nt3avhm/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“மதுரை சிந்தாமணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்ததாக புகார் – தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். </p><p>மதுரை அனுப்பானடி அருகே பொது இடத்தை பயன்படுத்துவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக விசாரணைக்காக சிந்தாமணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பரமசிவம் உயிரிழந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன.  </p><p>கடந்த ஜூலை 19ஆம் தேதி சிந்தாமணி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் பரமசிவம் பலத்த காயமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்</p><p>பொதுமக்களுக்கு பாதுகாப்பையும், சட்டத்தின் மீது நம்பிக்கையையும் அளிக்க வேண்டிய காவல்நிலையங்களில் தொடர்ந்து அரங்கேறும் இதுபோன்ற காவல் மரணங்கள், காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.  </p><p>எனவே, சிந்தாமணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்திடுவதோடு, தொடர்ந்து அதிகரிக்கும்  காவல் மரணங்கள் குறித்து உயர்மட்ட  குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-three-tamils-shot-dead-in-karnataka-calling-attention-motion-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-three-tamils-shot-dead-in-karnataka-calling-attention-motion-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">fe75cac8-f48f-4533-a7a7-0e536a7ec44c</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:55:49 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:55:49.656Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Karnataka,கர்நாடகா,TN Assembly,கவன ஈர்ப்பு தீர்மானம்,Tamilans,தமிழர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/915oskfn/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/915oskfn/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.</p><p>சென்னை,</p><h2>பட்ஜெட்</h2><p>சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.</p><p>இந்த நிலையில், மானிய கோரிக்கை விவாததின் 2-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஷ பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் சரத்குமார் ஆகியோர் பதில் அளித்து பேசுவார்கள். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள்.</p><h2>கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கர்நாடகா வனத்துறையில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுகவின் இபிஎஸ், பாமகவின் சௌமியா, பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றினர்.</p><p><strong>திமுக சார்பில் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் பேசியதாவது:-</strong> “கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் போலி என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். எங்கே தமிழன் பாதிக்கப்பட்டாலும் முதல்முதலில் குரல்கொடுதவர் எங்கள் தலைவர் (மு.க.ஸ்டாலின்).. 3 பேரை சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறல்.</p><p>வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து தெளிவான நீதி விசாரணை நடைபெற வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த கொலையை கண்டித்து, கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.</p><p><strong>அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,</strong> “கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணை வேண்டும் என்றால் சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும்; கர்நாடகா வழங்கிய ரூ.5 லட்சம் நிதியுதவி மிக குறைவானது; தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்” என்றார்.</p><p><strong>இ.கம்யூ எம்.எல்.ஏ ராமச்சந்திரன் பேசுகையில்,</strong> “கர்நாடாகவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பாக கர்நாடக அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை; குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வண்டும்’ என்று கூறினார்.</p><p><strong>பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் கூறியதாவது:-</strong> “மாடுகளை தேடி சென்ற தமிழர்கள் என்கவுன்ட்டர். குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். மான் வேட்டைக்கு சென்றார்கள் என கூறுவது பொய். சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார்.</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதே தமிழ்நாடு காங்கிரஸின் நிலைப்பாடு என்று எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை கோவில் பூசாரி மரணம்: காவல் நிலைய மரணங்களை தடுக்க அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-temple-priest-dies-anbumani-urges-government-to-prevent-police-station-deaths</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-temple-priest-dies-anbumani-urges-government-to-prevent-police-station-deaths#comments</comments><guid isPermaLink="false">baf5d199-0a49-4536-b053-7514ae7986c9</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:37:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:37:03.137Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,Madurai,மதுரை,temple priest,கோவில் பூசாரி,காவல் மரணம்,Lockup Death</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/f7e2hek2/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/f7e2hek2/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் பூசாரி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். </p><h2>கோவில் பூசாரி உயிரிழப்பு</h2><p>மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட  மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம் என்பவரை, காவல்நிலையத்தில் வைத்து  கொடூரமாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்  தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார் என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  பூசாரி பரமசிவம் அவர்களை இழந்து வாடும்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல்</h2><p>காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் எந்த தவறும் செய்யவில்லை. அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம்  19-ஆம் தேதி  அழைத்துச் சென்ற  சிந்தாமணி காவல் நிலைய காவலர்கள், அவரை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்ட பரமசிவம்  மதுரை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் பயனின்றி  உயிரிழந்திருக்கிறார். காவல்துறையினர் தம்மை கொடூரமாகத் தாக்கியது தான் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதற்கு காரணம் என்று இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட காணொலியில் பரமசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2>காவல்துறையினர் கொடூர தாக்குதல்</h2><p>விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குவதும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதும்  அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.  நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளியும், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞரும் முறையே சிறைத்துறையினர், காவல்துறையினர்  தாக்கியதில் உயிரிழந்ததால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே  மதுரை கோவில் பூசாரி பரமசிவம் உயிரிழந்தது மனித உரிமை மீறல்கள் குறித்த கவலையை  அதிகரித்துள்ளது.</p><h2>6 காவல் மரணங்கள்</h2><p>ஆட்சிக்கு வந்தால் காவல் மரணங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று கடந்த தேர்தலின் போது தவெக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்  இது வரை 6 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளது.  இனிவரும் காலங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">காவல் மரணங்கள்</a> நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த  பரமசிவம்  குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சற்று உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன.?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-price-rises-slightly-what-is-the-situation-today-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-price-rises-slightly-what-is-the-situation-today-2#comments</comments><guid isPermaLink="false">2390c623-c6a4-4f38-8733-ef4233dea761</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:29:47 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:29:47.516Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் விலை,தங்கம் விலை நிலவரம்,இன்றைய தங்கம் விலை,Gold Price,today gold rate,gold rate today</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/s1tp3ft4/gold.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/s1tp3ft4/gold.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><h2>தங்கம் விலை</h2><p>இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>வெள்ளி விலை</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>10 நாட்களுக்குப் பின் அனுமதி: அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள்  உற்சாக குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-granted-after-10-days-tourists-enjoy-an-enthusiastic-dip-at-agasthiyar-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/permission-granted-after-10-days-tourists-enjoy-an-enthusiastic-dip-at-agasthiyar-falls#comments</comments><guid isPermaLink="false">d1b76d37-6150-44c8-97a4-48ff207b8360</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:24:36 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:24:36.422Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,அகஸ்தியர் அருவி,agasthiyar falls</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/6g6mqute/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/6g6mqute/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>10 நாட்களுக்கு பிறகு பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.</p> <p>10 நாட்கள் தடைக்கு பிறகு அனுமதி</p><p>பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் கடந்த 12-ந்தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா மற்றும் இதன் முன்னேற்பாடு பணிகள், தூய்மைப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு கீழே மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவிக்கு கடந்த 7-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரையிலும் 10 நாட்கள் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடைவி தித்து இருந்தனர். தொடர்ந்து நேற்று முதல் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அகஸ்தியர் அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.</p><p>சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்</p><p>இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காலை யில் இருந்தே குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்து சென்றனர். இதேபோல் கடந்த இரு தினங்களாக சொரிமுத்து அய்யனார் கோவில் தூய்மைப் பணிகள் காரணமாக பாபநாசம் வனச்சோதனை சாவடியும் மூடப்பட்டு இருந்த நிலையில் நேற்று முதல் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் பக்தர்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>குரங்கினை பிடித்து துன்புறுத்திய விவகாரம்: 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-capture-and-torment-of-a-monkey-two-individuals-fined-25000-each</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-capture-and-torment-of-a-monkey-two-individuals-fined-25000-each#comments</comments><guid isPermaLink="false">04a3447c-95ef-4541-b6e5-87d32d424c4a</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:21:10 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:21:10.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,அபராதம்,Perambalur,பெரம்பலூர்,குரங்கு,monkey,அரசு பாலிடெக்னிக் கல்லூரி,Government Polytechnic</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/gcegu0jt/mon.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/gcegu0jt/mon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/perambalur">பெரம்பலூர்</a> மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>வீடியோ காட்சிகள்</h2><p>இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் நலன் கருதி கல்லூரி நிர்வாகம், வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று குரங்குகளை பிடிக்க 2 பேர் கல்லூரிக்கு வந்துள்ளனர். அவர்கள் குரங்குகளை துன்புறுத்தி பிடித்ததாக கூறப்படுகிறது. குரங்கினை துன்புறுத்தி பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. </p><h2>ரூ.25 ஆயிரம் அபராதம்</h2><p>இதனை கண்ட பெரம்பலூர் வனத்துறையினர் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் குரங்கினை துன்புறுத்தி பிடித்த விவகாரம் குறித்து கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக, குரங்கு பிடிப்பாளர்களான புதுக்கோட்டை மாவட்டம் மாதிரிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஜீவா(வயது 20), திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்த சின்னத்துரை (70) ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை திவிஷா தற்கொலை வழக்கு; கணவர், மாமியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/actress-divisha-suicide-case-charge-sheet-filed-against-husband-and-mother-in-law</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/actress-divisha-suicide-case-charge-sheet-filed-against-husband-and-mother-in-law#comments</comments><guid isPermaLink="false">6a164725-c830-4a29-80c2-ef92c65250b4</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:18:15 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:18:15.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றப்பத்திரிகை,தற்கொலை வழக்கு,திவிஷா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/4x986c37/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/4x986c37/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>போபால்,</p><p>மாடல் அழகியும், நடிகையுமான திவிஷாவுக்கும், மத்தியபிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த வக்கீல் சமர்த் சிங்குக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி திருமணம் நடந்தது. போபாலில் கணவர் வீட் டில் வசித்து வந்த திவிஷா, அங்கு கடந்த மே 12-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். </p><p>இதையடுத்து திவிஷாவின் குடும்பத்தினர் போலீசில் அளித்த புகாரில், திவிஷாவின் புகுந்த வீட்டினர் கூடுதல் வரதட்சணை கேட்டு திவிஷாவை சித்ரவதை செய்ததாகவும், மனஉளைச்சல் ஏற்படுத்தியதாகவும் கூறியிருந்தனர்.</p><p>அதன்பேரில், சமர்த் சிங்கும், அவரது தாயாரும், முன்னாள் மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங்கும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போபாலில் உள்ள தனிக் கோர்ட்டில் சமர்த் சிங், கிரிபாலா சிங் ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.</p>]]></content:encoded></item><item><title>கோவில் திருவிழாவில் மோதல்: 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை; ஒருவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-at-temple-festival-two-youths-hacked-to-death-one-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-at-temple-festival-two-youths-hacked-to-death-one-arrested#comments</comments><guid isPermaLink="false">60151ee0-20b8-4a41-b60c-4db4fbff12e5</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:01:15 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:01:15.682Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,கிரைம் செய்திகள்,Kanchipuram,காஞ்சிபுரம்,Temple festival,கோவில் திருவிழா,double murder,இரட்டை கொலை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/rzqfitdh/nker.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/rzqfitdh/nker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம், </p><p>கோவில் விழாவில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>வாலிபர்கள் வெட்டிக்கொலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/kanchipuram">காஞ்சிபுரம்</a> மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. ஆடித்திருவிழாவின் ஒரு பகுதியாக இரவு சாமி வீதிஉலா நடைபெற இருந்த நிலையில் கோவில் அருகே சாமியை அலங்காரம் செய்யும் பணி நடைபெற்றது. சாமி அலங்காரம் செய்யும் இடத்தில் இரு பிரிவினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.</p><p>இதனால் கோபம் அடைந்த நபர்கள் சிலர் கஞ்சா போதையில் நள்ளிரவில் படுநெல்லி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 27), நீலகண்டன் (27) ஆகியோரை மதுபான பாட்டில்களால் அடித்தும், கத்தியால் வெட்டி விட்டும் தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து போனார்கள். இதனால் படுநெல்லி கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>தப்பி ஓடிய நபர்கள்</h2><p>இந்த கொலை சம்பவம் குறித்து பொன்னேரிகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொன்னேரிகரை போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து கஞ்சா மற்றும் மது போதையில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர்களை தேடும் பணி யில் ஈடுபட்டனர்.</p><h2>உறவினர்கள் சாலை மறியல்</h2><p>கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சிலர் காஞ்சிபுரம்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு கொலையாளிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலையில் நேற்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><p>இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பாதுகாப்புக்காக வந்த போலீசார், கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வைத்தனர்.</p><h2>ஒருவர் கைது</h2><p>இந்நிலையில் கோவில் திருவிழாவின்போது இருவரை வெட்டிக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடுக்கி விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் சில நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ரெயில் பெட்டிக்குள் அமர்ந்து சாப்பிடலாம்! சேலத்தில் வித்தியாசமான உணவகம் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-can-eat-sitting-inside-the-train-compartment-a-unique-restaurant-opens-in-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/you-can-eat-sitting-inside-the-train-compartment-a-unique-restaurant-opens-in-salem#comments</comments><guid isPermaLink="false">c8fafa1f-e7e4-4244-bb01-67e1f3939cf7</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:58:49 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:58:49.149Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,Salem,சேலம்,தொடக்கம்,open,ரெயில் பெட்டி,உணவகம்,restaurant,compartment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qft8osze/120.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qft8osze/120.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் அயோத்தியாப்பட்டணம் மெயின் ரோட்டில் ரெயில் பெட்டி உணவகம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இந்த உணவகத்தை நேற்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பன்னாலால் திறந்து வைத்தார். ரெயில் பெட்டிக்குள் அமர்ந்து உணவு சாப்பிடும் வித்தியாசமான அனுபவத்தை இந்த உணவகம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-</p><h2>ரெயில் பெட்டி உணவகம்</h2><p>அயோத்தியாப்பட்டணத்தில் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ரெயில் </a>பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில்வேயின் கட்டணமில்லா வருவாய் கொள்கையின் கீழ் இந்த உணவகம் நடத்துவதற்கு 5 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய ரெயில் பெட்டி ஒன்று ஒப்பந்ததாரர் மூலம் புதுப்பிக்கப்பட்டு, பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு விற்பனை செய்யும் வகையில் தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த திட்டத்தின் மூலம் ஒப்பந்த காலமான 5 ஆண்டுகளில் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு ரூ.46 லட்சத்து 20 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். நிகழ்ச்சியில் சேலம் கோட்ட கூடுதல் ரெயில்வே மேலாளர் சரவணன், கோட்ட வணிக மேலாளர் மல்லிகா, முதுநிலை கோட்ட மின் பொறியாளர் (பொது) பல்ராம்குமார். கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் பாண்டே மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கணவரின் இறப்புக்கு நிவாரணம் கேட்டு 54 ஆண்டுகளாக போராடும்  85 வயது மூதாட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/85-year-old-woman-fights-for-54-years-seeking-compensation-for-husbands-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/85-year-old-woman-fights-for-54-years-seeking-compensation-for-husbands-death#comments</comments><guid isPermaLink="false">a6d5e8d4-64a7-4db4-b6be-45085d9e5430</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:53:35 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:53:35.659Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Compensation,Thoothukudi,தூத்துக்குடி,நிவாரணம்,மூதாட்டி,Elderly woman</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/pigm0p02/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/pigm0p02/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,  </p><p>தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த குப்புசாமி, பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக, வேலை பார்த்தார். கடந்த, 1972 அக்., 2ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்ற, கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டபோது, குப்புசாமி உட்பட மூவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.</p><p>அவரது இறப்புக்கு, நிவாரணம் கேட்டு, 54 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில், உச்சிமகாளி தொடர்ந்து மனு அளித்து வருகிறார். இதுவரை எந்த பலனும் இல்லை. நேற்று, துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், உச்சிமகாளி அளித்த மனுவில், 'என் கணவர் இறப் புக்கு நிவாரணம் கேட்டு, 54 ஆண்டுகளாக அரசாங்கத்திடம் மனு அளித்தும், உரிய நடவடிக்கை இல்லை. 'கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். வறுமையில் வாழும் எனக்கு, கணவரின் பணிக்கால இறப்புக்கான உரிய நஷ்ட ஈடும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்' என, கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியையை கட்டிப்போட்டு நகை பறித்த தோழி உள்பட 2 பெண்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-women-including-friend-arrested-for-tying-up-teacher-and-stealing-her-jewelry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-women-including-friend-arrested-for-tying-up-teacher-and-stealing-her-jewelry#comments</comments><guid isPermaLink="false">595746fd-5714-4f96-b941-1f61c5e11507</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:36:38 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:36:38.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நகை பறிப்பு,2 பெண்கள் கைது,Teacher,ஆசிரியை,women arrested,stealing jewelry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/r1aowyrx/arrest1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/r1aowyrx/arrest1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சோழவந்தான், </p><p>சோழவந்தானில் ஆசிரியையை கட்டிபோட்டு நகை பறித்த சம்பவத்தில் பர்தா அணிந்து வந்து கைவரிசை காட்டிய அவரது தோழி உள்பட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ஆசிரியை மீது தாக்குதல்</h2><p>மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 43). ராஜலட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் டியூசனும் நடத்தி வந்தார் நேற்று முன்தினம் ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட பர்தா அணிந்த 2 பெண்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ராஜலட்சுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து. அவரது கை மற்றும் கால்களை கட்டிப் போட்டதாக கூறப்படுகிறது. 2 பெண்களும் ராஜலட்சுமியை அடித்து, உதைத்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.</p><h2>2 பெண்கள் கைது</h2><p>இதுகுறித்து சோழவந்தான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் ஆலோசனையின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.</p><p>தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சோழவந்தான் அருகே தென்கரையை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி அன்னபூரணி (41), அதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி கனிமொழி (36) என்பதும் தெரியவந்தது. இதில் அன்னபூரணி ஆசிரியை ராஜலட்சுமிக்கு தோழி என்றும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் <a href="https://www.dailythanthi.com/topic/arrest-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்து, அவர்களிடம் இருந்து நகையை கைப்பற்றினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வாலிபரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முதலில் தாக்கினாரா? - தஞ்சை போலீஸ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-special-sub-inspector-attack-the-young-man-first-thanjavur-police-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-special-sub-inspector-attack-the-young-man-first-thanjavur-police-clarification#comments</comments><guid isPermaLink="false">cfe0d1d5-4092-4aba-a4fd-236588d757b4</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:23:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:23:17.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Thanjavur,Youth,வாலிபர்,தஞ்சாவூர்,சப்-இன்ஸ்பெக்டர்,Tanjore,Sub Inspector,Thanjavur police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/vbd4gnu3/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/vbd4gnu3/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சையில் தன்னை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ் பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p> <p><strong>இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் போலீஸ் வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>தஞ்சை ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை 12 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அப்போது, ஆகாஷ் (26) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தபோது, தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>வாக்குவாதம் மேலும் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஹீம் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.</p><p>தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை எஸ்.எஸ்.ஐ. ரஹீம் பயன்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் உடனடியாக ரஹீமை கன்னத்தில் அறைந்துள்ளார். உடனடியாக போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p>இந்த சம்பவத்தில் அந்த நபரின் செயல் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை உருவாக்காமல் தடுக்கும் நோக்கத்திலேயே குறைந்தபட்ச பலபிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வருகிறது.</p><p>மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் இடத்தில் தனது மேற்பார்வையாளரிடம் தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக அவருடைய மேற்பார்வையாளர் மூலம் புகார் அளிக்கப்பட்டு பின்னர் இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. போலீசார் ஆகாஷை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது.</p><p>அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் முற்றி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் முதன்மையான நோக்கமாக இருந்தது. சம்பவத்தின் போது போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><p><strong>வழக்கின் முழுவிரம்:-</strong></p><h2>விசிகவினர் சாலை மறியல்</h2><p>தஞ்சை ரெயில் நிலையம் முன்பு விசிக சார்பில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அனுமதியின்றி அந்த விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்ததாக அந்த பேனரை நேற்று மாநக ராட்சி அலுவலர்கள் அகற்றினர்.</p><p>இதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் எனக் கூறி, மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.</p><h2>போக்குவரத்து நெரிசல்-வாக்குவாதம்</h2><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பேனரை மீண்டும் வைத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள் வழிவிடுமாறி கூறி வி.சி.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><h2>போலீசார் சமாதானம்</h2><p>இதேபோல அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் வழிவிடுமாறு கூறியதால் வி.சி.க.வினர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபரை சமாதானப்படுத்த முயன்றார். தன்னை சமாதானப்படுத்திய போலீசாரிடம், அந்த வாலிபர், தான் வேலைக்கு செல்ல வேண்டும். நான் வேலைக்கு செல்லாவிட்டால் என்னுடையை சம்பளத்தை யார் தருவார்கள்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது போலீசார், வாலிபரிடம் அமைதியாக இருக்கும்படி கூறினர்.</p><h2>கன்னத்தில் அறைந்த...</h2><p>இது தொடர்பாக போலீசாருக்கும். அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம், தாக்கினார். உடனே ஆவேசமான அந்த வாலிபர் பதிலுக்கு அப்துல் ரஹீமின் கன்னத்தில் அறைந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த இளைஞரை குண்டுக்கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.</p><h2>கைது</h2><p>போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ்(வயது 26) என் பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும், வாலிபரும் சாலையில் தாக்கிக்கொண்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங் களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த ஆகாஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-to-mettur-dam-increases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-to-mettur-dam-increases#comments</comments><guid isPermaLink="false">08c4ff5f-29e4-4104-8d2c-adb5db25e47b</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:21:33 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:21:33.608Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மேட்டூர் அணை,Mettur dam,Salem,சேலம்,காவிரி ஆறு,நீர்வரத்து அதிகரிப்பு,Cauvery,மேட்டூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/wu3ni61x/mettur.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/wu3ni61x/mettur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/mettur-dam">மேட்டூர் அணை</a>க்கு காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,350 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. </p><h2>தண்ணீர் திறப்பு</h2><p>காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்க ளுக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 298 கன அடி தண்ணீரும் என மொத்தமாக 12 ஆயிரத்து 298 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>காவிரி ஆறு </h2><p>இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 12 ஆயிரத்து 500 கன அடியானது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.</p><p>மேலும், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிப்பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>3-வது நாளாக தடை</h2><p>காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக -கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஆக.18) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><h2>மேட்டூர் அணை</h2><p>இதற்கிடையே <a href="https://www.dailythanthi.com/topic/mettur-dam">மேட்டூர் அணை</a>க்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 15-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 4,385 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்றுமுன்தினம் வினாடிக்கு 6,179 கன அடியாக அதிகரித்தது. இந்தநிலையில், நேற்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 8 ஆயிரத்து 555 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.</p><p>மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. </p><p>இந்நிலையில் மேட்டூர் அணைக்கு இன்று (செவ்வாய் கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,350 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. குடிநீருக்காக 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர் இருப்பு 44.701 டிஎம்சியாக உள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெரம்பலூர் டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-toll-rises-to-4-in-perambalur-tea-shop-cylinder-explosion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-toll-rises-to-4-in-perambalur-tea-shop-cylinder-explosion#comments</comments><guid isPermaLink="false">34af5111-7274-4811-95bb-17826540a33a</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:58:35 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:58:35.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Perambalur,பெரம்பலூர்,tea shop,சிலிண்டர் விபத்து,டீக்கடை,cylinder explosion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/lc1tn8oz/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/lc1tn8oz/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலூர்,</p><p>பெரம்பலூரில் உள்ள டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.</p><h2>சிலிண்டர் வெடித்தது</h2><p>பெரம்பலூர் காமராஜர் வளைவு போக்கு வரத்து சிக்னல் அருகே குறிஞ்சி நகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் நடத்தி வந்த டீக்கடையில் கடந்த 11-ந்தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 16 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். மேலும், டீக்கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த 17 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன.</p><p>படுகாயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த பொம்மனப்பாடியை சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன் கடந்த 13-ந்தேதியும், டீ மாஸ்டர் சிறுகுடலை சேர்ந்த தினேஷ்குமார், பெரம்பலூர் ரெங்கா நகரை சேர்ந்த சகாதேவன் ஆகியோர் கடந்த 15-ந்தேதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><h2>டீக்கடை ஊழியர் சாவு</h2><p>இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டீக்கடை ஊழியரான ஆலத்தூர் தாலுகா, கொட்டரை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 12 பேருக்கு மருத்துவமனைகளில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தன்னை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-young-man-who-slapped-a-special-sub-inspector-who-had-assaulted-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-young-man-who-slapped-a-special-sub-inspector-who-had-assaulted-him#comments</comments><guid isPermaLink="false">6e409931-d406-4090-bf0f-9b9f40348342</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:52:56 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:52:56.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தஞ்சாவூர்,சப்-இன்ஸ்பெக்டர்,விசிக,VCK,விசிக மாநாடு,Sub Inspector,Tanjaore,V.C.K.</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/yhgryfwd/arest.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/yhgryfwd/arest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தன்னை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><p>தஞ்சையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-</p><h2>வி.சி.க.வினர் சாலை மறியல்</h2><p>தஞ்சை ரெயில் நிலையம் முன்பு <a href="https://www.dailythanthi.com/topic/vck">வி.சி.க.</a> சார்பில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அனுமதியின்றி அந்த விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்ததாக அந்த பேனரை நேற்று மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.</p><p>இதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு <a href="https://www.dailythanthi.com/topic/vck">வி.சி.க.</a>வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் எனக்கூறி, மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.</p><h2>போக்குவரத்து நெரிசல்-வாக்குவாதம்</h2><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பேனரை மீண்டும் வைத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என வாக்குவாதம் செய்தனர்.</p><p>இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள் வழிவிடுமாறி கூறி <a href="https://www.dailythanthi.com/topic/vck">வி.சி.க.</a>வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><h2>போலீசார் சமாதானம்</h2><p>இதேபோல அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் வழிவிடுமாறு கூறியதால் <a href="https://www.dailythanthi.com/topic/vck">வி.சி.க.</a>வினர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபரை சமாதானப்படுத்த முயன்றார்.</p><p>தன்னை சமாதானப்படுத்திய போலீசாரிடம், அந்த வாலிபர், தான் வேலைக்கு செல்ல வேண்டும். நான் வேலைக்கு செல்லாவிட்டால் என்னுடையை சம்பளத்தை யார் தருவார்கள்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது போலீசார், வாலிபரிடம் அமைதியாக இருக்கும்படி கூறினர்.</p><h2>சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர்</h2><p>இது தொடர்பாக போலீசாருக்கும், அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தாக்கினார். உடனே ஆவேசமான அந்த வாலிபர் பதிலுக்கு அப்துல் ரஹீமின் கன்னத்தில் அறைந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த இளைஞரை குண்டுக்கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>காட்டு யானை  மசினகுடி வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wild-elephant-was-found-dead-in-the-masinagudi-forest-area</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wild-elephant-was-found-dead-in-the-masinagudi-forest-area#comments</comments><guid isPermaLink="false">500c7735-fb4c-4562-9abd-5b1f6bef2442</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:49:13 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:49:13.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானை,wild elephant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/px97zj63/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/px97zj63/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><h2>காட்டு யானை சாவு</h2><p>நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் காட்டு யானை கள், புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களும் உள்ளது. இதனால் வனப்பகுதியை பாதுகாப்பது, வன குற்றங்களை தடுப்பது தொடர்பான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி வனச்சரகத்துக்கு உட்பட்ட அவரல்லா பிரிவு குதிரைப்பாறை வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். ஆனால், யானை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புலிகள் காப்பக இயக்குனர் கிருபா சங்கர் உத்தரவின்பேரில், துணை இயக்குனர் வித்யாதர், வனச்சரகர் ராஜன் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.</p><h2>வயது மூப்பு</h2><p>மேலும் தெப்பக்காடு வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் இணைந்து ஆய்வு நடத்தினர். அப்போது இறந்த பெண் காட்டு யானைக்கு 50 வயது இருக்கும் எனவும், வயது மூப்பு காரணமாக யானை இறந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் இறந்த பெண் யானைக்கு 50 வயது இருக்கும். மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ததில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், பிரேத பரிசோதனை நாளை (அதாவது இன்று) நடைபெறும். அதில் யானையின் உடலில் உள்ள முக்கிய உடற்பாகங்களை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அறிக்கை கிடைத்த பின்னர் முழு விவரம் தெரிய வரும் என்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை: 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gang-sexual-abuse-of-14-year-old-girl-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gang-sexual-abuse-of-14-year-old-girl-4-arrested#comments</comments><guid isPermaLink="false">856709eb-c88c-4bfc-a0a8-5926d26808cd</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:29:27 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:29:27.469Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,போக்சோ சட்டம்,POCSO act,சிறுமி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xq407530/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xq407530/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>சேலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, 9-ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தினாள். மேலும் அவளுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண் நண்பர்கள் சிலர் பழக்கம் ஆனார்கள். இதனிடையே அந்த சிறுமி சமீபத்தில் நண்பர் ஒருவரது வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடினாள். இதில் ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகள் சிலர் கலந்து கொண்டனர். அப்போது மது போதையில் இருந்த நண்பர்களான சிறுவர்கள் உள்பட 7 பேர் கூட்டாக அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. </p><p>இதுகுறித்து சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><p>இதில் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 21), ஆகாஸ் (19) மற்றும் 13, 17 வயதுடைய சிறுவர்கள் உள்பட 7 பேர் என தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகன், ஆகாஷ் மற்றும் சிறுவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிறுமிக்கு கூட்டாக பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டுக்குள் நீட்டை கொண்டு வந்தது அதிமுக ஆட்சிதான் – மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-the-aiadmk-regime-that-brought-neet-to-tamil-nadu-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-the-aiadmk-regime-that-brought-neet-to-tamil-nadu-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">d56ad3da-91f9-45e8-9aab-30e511d5b1d0</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:20:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:20:21.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>AIADMK,NEET Exam,நீட்,அதிமுக ஆட்சி,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/bg0q7n3e/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/bg0q7n3e/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>சட்டப்பேரவையில் நீட் விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேஷ் குமார் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்களே, காங்கிரஸ் மீது வீண் பழி போட்டு உங்கள் வரலாற்றுத் துரோகத்தை மறைக்க முடியாது!</p><h2>அடிமை ஆட்சி</h2><p>மறைந்த ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்தவரை தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாத நீட் தேர்வு, நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, அதிமுகவை பாஜகவின் காலடியில் அடகு வைத்த பிறகு 2017-ல் தான் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது! தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது காங்கிரஸ் அல்ல, உங்கள் அடிமை ஆட்சிதான். இந்த வரலாற்று உண்மையை உங்களால் எப்போதும் மறைக்க முடியாது.</p><p>ஏழை, எளிய மாணவர்களின் நலனை முன்னிறுத்தித் திட்டங்களை யோசித்தாலும், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முடிவுகளை மாற்றிக்கொள்ளும் இயக்கம் காங்கிரஸ். காலின் அளவுக்குத் தக்கபடிதான் காலணியைத் தைக்க வேண்டுமே தவிர, காலணிக்காக காலை வெட்ட முடியாது!</p><h2>குரங்கு கையில் கிடைத்த பூமாலை</h2><p>ஆனால் பாஜக அரசோ ‘குரங்கு கையில் கிடைத்த பூமாலை’ போல, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் NTA என்ற ஒரே அமைப்பிடம் கொடுத்து, வினாத்தாள் கசிவு, ஊழல், பயிற்சி மைய மாஃபியாக்கள் என நீட் தேர்வை வணிகச் சந்தையாக்கிவிட்டது. அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்களின் உயிர்கள் பறிபோயும் ‘பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என மோடி அரசு பிடிவாதம் பிடிக்கிறது.</p><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் உறுதியளித்தபடி, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவானது: "எந்த மாநிலத்திற்கு நீட் வேண்டாம் என்று நினைக்கிறதோ, அந்த மாநிலத்திற்கு முழு விலக்கு அளிக்கப்படும்." இதை உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சொல்ல வைக்க முடியுமா?</p><h2>கேள்வி கேட்கும் துணிச்சல்</h2><p>பாஜகவின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்து, மாணவர்களின் நலனுக்காக "தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்" என்று மோடி அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சல் இப்போதாவது உங்களுக்கு இருக்கிறதா எடப்பாடி பழனிசாமி அவர்களே?</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்</p>]]></content:encoded></item><item><title>போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சென்றவர் கொலை; 5 பேர் கைது
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/patient-killed-in-de-addiction-center-five-held</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/patient-killed-in-de-addiction-center-five-held#comments</comments><guid isPermaLink="false">923383e2-61c2-43c2-a0cb-a70783d81d75</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:11:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:11:22.414Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,போதை மறுவாழ்வு மையம்,drug rehabilitation center</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/ewyvdt9h/upael.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/ewyvdt9h/upael.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தாம்பரம்</p><p>போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சென்றவர் கொலையான சம்பவத்தில் நிர்வாகி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 39). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், சேலையூர் அருகே செம்பாக்கம் வி.ஜி.பி. நகரில் செயல்பட்டு வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்ததும் அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வீட்டிற்கு சென்ற சில நாட்களிலேயே மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.</p><p>இதனையடுத்து கடந்த 10-ந்தேதி அருண்குமாரை மீண்டும் அதே போதை மறுவாழ்வு மையத்தில் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர்.  இந்த நிலையில் அருண்குமார் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.  இதனால் ஊழியர்கள் அவரை பிடித்து தடுத்து வைத்ததாகவும், அவர் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டபோது கட்டிலில் கட்டிப்போட்டதாகவும் கூறப்படுகிறது.</p>  <h2>போலீசார் விசாரணை</h2><p>சிறிது நேரத்தில் அருண்குமார் மயக்கமடைந்த நிலையில், அவரை தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போதை மறுவாழ்வு ஊழியர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><p>இதுகுறித்த புகாரின் பேரில் சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அருண்குமாரை கட்டிலில் கட்டிப்போட்டு, அவரது வாயில் துணியை வைத்து அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போதை மறுவாழ்வு மைய நிர்வாகி மணிகண்டன் (36), அங்கு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை (40), குணசீலன் (43) ராஜாசுதாகர் (41) ராஜ்கமல் (33) ஆகிய 5 பேரை சேலையூர் போலீசார் கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lack-of-rainfall-in-catchment-areas-mullaperiyar-dam-water-level-drops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lack-of-rainfall-in-catchment-areas-mullaperiyar-dam-water-level-drops#comments</comments><guid isPermaLink="false">9b366f63-3cad-4ae4-bc3f-6c4604aa7dfa</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:50:52 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:50:52.427Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முல்லைப்பெரியாறு அணை,Mullaperiyar Dam,நீர்மட்டம் குறைவு,The water level is low</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/kcxk977c/mullai-periyar-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/kcxk977c/mullai-periyar-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியாக சரிந்துள்ளது.</p><h2>முல்லைப்பெரியாறு அணை</h2><p>தமிழக-கேரளம் மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய பாசன நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.</p><p>இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 122.95 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 921 கன அடியாக காணப்பட்டது.</p><h2>நீர்மட்டம் சரிவு</h2><p>இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைய தொடங்கியதால். நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் சரிந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி <a href="https://www.dailythanthi.com/topic/mullaperiyar-dam">முல்லைப்பெரியாறு அணையின்</a> நீர்மட்டம் 122.90 அடியாக சரிந்தது. நீர் வரத்து வினாடிக்கு 690 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் 3,202 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-departments-demands-for-grants-are-being-debated-in-the-legislative-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-departments-demands-for-grants-are-being-debated-in-the-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">db3f9739-7cb5-49da-bb2e-fd0c54dce0fa</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:50:31 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:50:31.479Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,விளையாட்டு துறை,Tamil Nadu Sports Department,Highway Department,நெடுஞ்சாலை துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xjrdry7u/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xjrdry7u/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சட்டசபை</h2><p>சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.</p><p>இதனையடுத்து இந்தநிலையில் 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சட்டசபை நேற்று மீண்டும் கூடியது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பின்னர், இந்த துறைகளில் சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.</p><h2>மானிய கோரிக்கை விவாதம்</h2><p>இந்த நிலையில், 2-வது நாளாக இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஷ பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் சரத்குமார் ஆகியோர் பதில் அளித்து பேசுவார்கள். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள்.</p><p>மேலும் கடலூரில் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தின் கிணறுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க 3-வது நாளாக  தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-increases-in-the-cauvery-river-at-hogenakkal-coracle-operations-suspended-for-the-third-consecutive-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-increases-in-the-cauvery-river-at-hogenakkal-coracle-operations-suspended-for-the-third-consecutive-day#comments</comments><guid isPermaLink="false">1792a49e-74aa-4a53-91ac-fe633e4cf78e</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:43:24 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:43:24.156Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Hogenakkal,ஒகேனக்கல்,தர்மபுரி,காவிரி ஆறு,Hogenakkal Cauvery,Cauvery,பரிசல் இயக்க தடை,Hogenakkal Cauvery river,காவிரி ஆணையம்,பரிசல்,Cauvery Commission</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/j61rg78a/cauvery.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/j61rg78a/cauvery.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம், </p><p>கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.</p><h2>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து</h2><p>காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 298 கனஅடி தண்ணீரும் என மொத்தமாக 12 ஆயிரத்து 298 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கரைபுரண்டு ஓடிய காவிரி</h2><p>இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 12 ஆயிரத்து 500 கன அடியானது. இதன் காரணமாக ஒகேனக்கல் <a href="https://www.dailythanthi.com/topic/cauvery">காவிரி ஆற்றில்</a> தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.</p><h2>கண்காணிப்பு பணி</h2><p>மேலும், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிப்பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்புபடையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>3-வது நாளாக தடை</h2><p>காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக -கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் (செவ்வாய் கிழமை) தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.</p><p>ஒகேனக்கல் <a href="https://www.dailythanthi.com/topic/cauvery">காவிரி ஆற்றில்</a> இன்று (ஆக.18) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆசனூர் அருகே குட்டிகளுடன் சாலையை கடந்த யானை கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-herd-of-elephants-with-calves-crossed-the-road-near-asanur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-herd-of-elephants-with-calves-crossed-the-road-near-asanur#comments</comments><guid isPermaLink="false">c9888084-2041-4c82-8881-92bfb410fca2</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:30:12 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:30:12.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை,Forest area,Elephants யானைகள்,யானை கூட்டம்,ஆசனூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qk9zn483/119.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qk9zn483/119.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாளவாடி, </p><p>சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சகரகங்களிலும் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. இந்த வனச்சரகங்கள் வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் அடிக்கடி இந்த தேசிய நெடுஞ்சைாலக்கும், மற்ற வனப்பகுதி கிளை சாலைகளுக்கும் வந்து விடுகின்றன.</p><h2>யானை கூட்டம்</h2><p>இந்தநிலையில் நேற்று ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் திடீரென குட்டியுடன் யானைகள் ரோட்டை கடந்தன. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் யானைகளை கண்டதும், வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். சிலர் வாகனங்களில் இருந்தபடியே யானை கூட்டத்தை வீடியோ எடுத்தனர். யானைகள் ரோட்டை கடந்து மறுபக்கம் சென்றதும் வாகனங்கள் மீண்டும் செல்ல தொடங்கின.</p><p>இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிளை சாலைகளில் அடிக்கடி <a href="https://www.dailythanthi.com/topic/elephants-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">யானைகள்</a> கடந்து செல்கின்றன. அதனால் வாகனத்தில் செல்பவர்கள் மெதுவாக செல்லவேண்டும். செல்பி எடுப்பதற்காக அருகே செல்லக்கூடாது' என்று எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இன்று கொட்டி தீர்க்கப்போகும் கனமழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.? </title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-set-to-lash-down-today-do-you-know-which-districts-will-be-affected-2</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-set-to-lash-down-today-do-you-know-which-districts-will-be-affected-2#comments</comments><guid isPermaLink="false">f8457306-3f49-4be8-9db4-ae093fa0c909</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:22:43 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:22:43.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை செய்தி,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,weather update news,TN weather</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/nhphsag7/meena.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/nhphsag7/meena.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நாளை (புதன் கிழமை) பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன்காரணமாக <strong>இன்று (18-08-2026):</strong> செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p> <p><strong>நாளை (19-08-2026):</strong> நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும். </p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>20-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>21-08-2026 முதல் 23-08-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>18-08-2026 முதல் 21-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>18-08-2026 முதல் 21-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (18-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>18-08-2026 முதல் 21-08-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>18-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>19-08-2026 21-08-2026 :</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>18-08-2026 முதல் 21-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பட்டாசு சத்தம் கேட்டு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை... தனி ஆளாக விரட்டிய வீரப்பெண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-enters-house-upon-hearing-firecracker-noise-brave-woman-chases-it-away-single-handedly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-enters-house-upon-hearing-firecracker-noise-brave-woman-chases-it-away-single-handedly#comments</comments><guid isPermaLink="false">756dd7c8-c6c7-4283-a4c7-9912494a2d16</guid><pubDate>Tue, 18 Aug 2026 00:56:30 +0000</pubDate><atom:updated>2026-08-18T00:56:30.713Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெண்,Woman,Nilgiris,நீலகிரி,leopard,சிறுத்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/1ck00254/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/1ck00254/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><h2>வேளாங்கண்ணி ஆலய திருவிழா</h2><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் காமராஜபுரம், ஆரோக்கியபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது.</p><p>அதன் சத்தம் கேட்டு மிரண்டு போன சிறுத்தை, அங்குள்ள தர்மா என்பவரது வீட்டுக்குள் திடீரென புகுந்தது. அங்கு கட்டிலுக்கு அடியில் புகுந்து பதுங்கி இருந்தது. இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அச்சம் அடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுத்தையை விரட்ட முயன்றனர்.</p><h2>வெளியே ஓடிய சிறுத்தை..</h2><p>பின்னர் தர்மாவின் தாய் பூஜம்மாள் (வயது 60), பயப்படாமல் கையில் கம்பை வைத்து கொண்டு சத்தமிட்டு சிறுத்தையை விரட்டினார். இதனால் சிறுத்தை வீட்டில் இருந்து வெளியே ஓடி, புதருக்குள் சென்று மறைந்தது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டுக்குள் சிறுத்தை புகுந்ததால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.</p><p>இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சிறுத்தைகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த வனத்துறையினர் நட வடிக்கை எடுக்காமல் உள்ளனர். மனித-வனவிலங்கு மோதலில் உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர், நடவடிக்கை எடுப்பதால் எந்த பயனும் இல்லை. எனவே, இப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்றனர்.</p><p>கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 15-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊருக்குள் சிறுத்தைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என இந்திரா நகர் மக்கள் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பொறியியல் கலந்தாய்வு: 2 சுற்றுகளில் 86,802 இடங்கள் நிரம்பின!</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/engineering-counseling-86802-seats-filled-in-2-rounds</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/engineering-counseling-86802-seats-filled-in-2-rounds#comments</comments><guid isPermaLink="false">596a9faa-e71f-4bb8-a4f5-e2d1ab219673</guid><pubDate>Tue, 18 Aug 2026 00:53:48 +0000</pubDate><atom:updated>2026-08-18T00:53:48.216Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>என்ஜினீயரிங் படிப்பு,Engineering course,பொறியியல் கலந்தாய்வு,engineering counseling</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/iitkl24c/counseiling.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/iitkl24c/counseiling.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் தற்போது பொதுப் பிரிவினருக்கும், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கிறது. முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 3-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அதில் பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத ஒதுக்கீடு என மொத்தம் 26 ஆயிரத்து 851 இடங்கள் நிரம்பின.</p><h2>2-வது சுற்று கலந்தாய்வு நிறைவு</h2><p>2-வது சுற்று கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் இரு பிரிவிலும் சேர்த்து மொத்தம் 59 ஆயிரத்து 951 இடங்கள் நிரம்பின. அதாவது முதல் மற்றும் 2-வது சுற்று கலந்தாய்வு நிறைவில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 77 இடங்களில் 86 ஆயிரத்து 802 இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 275 இடங்களுக்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">கலந்தாய்வு</a> நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 761 பேர் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: சேலம் வழியாக பெங்களூரு-கண்ணூர் சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-bengaluru-kannur-special-train-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-bengaluru-kannur-special-train-via-salem#comments</comments><guid isPermaLink="false">8e211189-0eda-4c3c-8574-705e50d3e947</guid><pubDate>Tue, 18 Aug 2026 00:49:35 +0000</pubDate><atom:updated>2026-08-18T00:49:35.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Onam festival,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/8r8ply3t/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/8r8ply3t/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக பெங்களூரு கன்டோன்மென்ட்-கண்ணூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, பெங்களூரு கன்டோன்மென்ட்- கண்ணூர் சிறப்பு ரெயில் (06567) வருகிற 20-ந் தேதி இரவு 10.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம் வழியாக மறுநாள் அதிகாலை 2.10 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடையும்.</p><p>சேலத்தில் இருந்து அதி காலை 2.20 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வழியாக சென்று, மதியம் 12.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும். இதேபோல், கண்ணூர்-பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06568) வருகிற 21-ந் தேதி மாலை 4.10 மணிக்கு கண்ணூ ரில் இருந்து புறப்பட்டு இரவு 12.15 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடையும். </p><p>பின்னர் சேலத்தில் இருந்து 12.25 மணிக்கு புறப் பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-51</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-51#comments</comments><guid isPermaLink="false">8cb6ea40-1deb-4e87-91b8-5c1ccd06a7fc</guid><pubDate>Tue, 18 Aug 2026 00:33:38 +0000</pubDate><atom:updated>2026-08-18T00:33:38.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/3hakjjlr/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/3hakjjlr/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (18.08.2026 செவ்வாய்க்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை  பிடித்த வாலிபர் தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/brave-youth-rescues-6-foot-rock-python-from-canal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/brave-youth-rescues-6-foot-rock-python-from-canal#comments</comments><guid isPermaLink="false">fa2c4dc1-731b-4ac3-bce7-2e2f97760d88</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:31:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:31:16.947Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர்,மலைப்பாம்பு,Fire Department,The python was caught,தீயணைப்பு துறை,A young man</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/umnul8as/snakee.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மலைப்பாம்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை  பிடித்த வாலிபர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/umnul8as/snakee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தக்கலை,</p><p>தக்கலை அருகே கால்வாயில் மிதந்த 6 அடி நீள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மலைப்பாம்பை </a>வாலிபர் ஒருவர் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இந்த துணிச்சலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கால்வாயில் மிதந்த மலைப்பாம்பு</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பூவங்காபறம்பு வழியாக திருவிதாங்கோடு கிளை கால்வாய் செல்கிறது. நேற்று மாலை இந்த கால்வாய் கரையின் உடைந்த பகுதியில் சுமார் 6 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று தனது தலையை நுழைத்துக்கொண்டு, உடல் முழுவதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த ஜெரோம் என்பவர், கால்வாயில் மலைப்பாம்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து அருகில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார். விஷயம் காட்டுத்தீ போல் பரவியதால், மலைப்பாம்பை பார்க்க அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். </p> <h2>வாலிபர் துணிச்சல்</h2><p>இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், மலைப்பாம்பு அங்கிருந்து நகர்ந்து தண்ணீருக்குள் சென்று மறைந்துவிடும் என்று பொதுமக்கள் கருதினர். அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென கால்வாயில் இறங்கினார். </p><p>அவர் தண்ணீரில் கிடந்த 6 அடி நீள மலைப்பாம்பை நெஞ்சுரத்துடன் லாவகமாக பிடித்து கரைக்கு கொண்டு வந்தார். வாலிபரின் இந்த துணிச்சலான செயலை கண்டு அங்கிருந்தவர்கள் பாராட்டும் அதே வேளையில் அதிர்ச்சியும் அடைந்தனர்.</p> <h2>வனத்துறையிடம் ஒப்படைப்பு</h2><p>இதனை தொடர்ந்து பொதுமக்கள் அந்த மலைப்பாம்பை ஒரு சாக்குப்பையில் போட்டு பத்திரமாக கட்டினர். பின்னர் சித்திரங்கோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, அங்குள்ள வன அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். மலைப்பாம்பை மீட்ட வாலிபரால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு அருகே கார் மோதி காய்கறி வியாபாரி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vegetable-vendor-dies-after-being-hit-by-car-near-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vegetable-vendor-dies-after-being-hit-by-car-near-erode#comments</comments><guid isPermaLink="false">cf5b44b2-2a20-42ca-b747-cd7c613731d5</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:16:57 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:16:57.336Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,கார்,Erode,ஈரோடு,உயிரிழப்பு,Vehicle,வியாபாரி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/256qezw4/24.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/256qezw4/24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அந்தியூர், </p><p>ஈரோடு மாவட்டம் பருவாச்சி அருகே பெட்ரோல் போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிய காய்கறி வியாபாரி மீது கார் மோதிய விபத்தில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>பவானி நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 46). இருசக்கர வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர். நேற்று மோட்டார் வாகனத்தில் பருவாச்சியில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்று பெட்ரோல் நிரப்பியுள்ளார். </p><h2>விபத்து</h2><p>அதன் பின்னர், பவானி சாலையில் மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, நிறுத்தம் அருகே பின்னால் பருவாச்சி காந்திநகர் பஸ் கார் எதிர்பாராதவிதமாக அன்பழகனின் வாகனம் மீது மோதியது.</p><p>இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குத் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். </p><h2>விசாரணை</h2><p>எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்பழகன் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அந்தியூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான கார் ஓட்டுநரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி யானை பசிக்கு சோளப்பொறி போல் இருக்கிறது ;பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-crop-loan-waiver-is-like-a-corn-trap-for-a-hungry-elephant-premalatha-vijayakanths-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-crop-loan-waiver-is-like-a-corn-trap-for-a-hungry-elephant-premalatha-vijayakanths-criticism#comments</comments><guid isPermaLink="false">6b536587-d063-43a7-8236-4832e9a6c5a8</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:12:55 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:12:55.131Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,பயிர்க்கடன் தள்ளுபடி,பிரேமலதா கண்டனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/3yymsols/lathaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி யானை பசிக்கு சோளப்பொறி போல் இருக்கிறது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/3yymsols/lathaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை தலைமை செயலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>த.வெ.க. அரசு 100 நாட்களைக் கடந்துள்ளது அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்லை. மாற்றம் வரும் என்று சொன்னார்கள். சட்டசபை நடைபெறாத கடந்த 4 நாட்களிலேயே அதிக பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் நடந்துள்ளன. இதுதான் அந்த மாற்றமா? மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டார்கள் இளைஞர்கள். இன்று இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.</p><p>அந்த குற்றவாளிகளுக்கு கர்நாடக அரசு உச்சபட்ச தண்டனையை அளிக்க வேண்டும். இதைத்தான் இந்த 100 நாட்களில் பார்த்துள்ளோம். மக்கள் வரிப்பணத்தில் தான் சட்டசபை நடந்து வருகிறது. சட்டசபைக்குள் தனிமனித தாக்குதலும் ஒரு கட்சி மற்றொரு கட்சியிடம் வாக்குவாதம் செய்வதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய் </a>அறிவித்துள்ள கூடுதல் பயிர் கடன் தள்ளுபடி என்பது யானை பசிக்கு சோளப்பொறி போல் தான் இருக்கிறது. நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் தான் முழு பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை ஆகும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-sholingar-tvk-mla-kapil</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-sholingar-tvk-mla-kapil#comments</comments><guid isPermaLink="false">fc39081c-ee60-4a08-8871-2723bdbc77e1</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:05:03 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:05:03.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,சோளிங்கர்,தவெக எம்.எல்.ஏ.,Sholingur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/y952aobg/solingar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 

சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/y952aobg/solingar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராணிப்பேட்டை,</p><p>செய்தியாளர்களை தாக்கிய புகாரில் சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், யூடியூபர் மற்றும் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. கபில் மீது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) புகார் அளிக்கப்பட்டது.</p><p>தகவலின்படி, சோளிங்கரில் உள்ள ஒரு திரையரங்கில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த எம்.எல்.ஏ. கபிலிடம், யூடியூபர் சிவா திரைப்படம் குறித்து கருத்து கேட்க மைக்கை நீட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கபில் அவரை தாக்க முயன்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதுடன், அந்த சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகின.</p><p>இதனைத் தொடர்ந்து, யூடியூபர் சிவாவை தேடி கபிலும், அவரது ஆதரவாளர்களும் சென்றதாகவும், பின்னர் சிவாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற நாளிதழ் நிருபர்கள் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரமும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டதைத் தொடர்ந்து சோளிங்கர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தின் போது நிருபர்களின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோக்கள் காவல்துறை அதிகாரியால் அழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த யூடியூபர் மற்றும் இரு செய்தியாளர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.</p><p>இந்த சம்பவத்தை கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. சிபினையும் நேரில் சந்தித்து நடவடிக்கை கோரி மனு வழங்கினர்.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்தனர். </p><p>இந்தநிலையில்,  செய்தியாளர்களை தாக்கிய வழக்கில் 21 நாட்களுக்குப் பிறகு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சோளிங்கர்  தொகுதி தவெக எம்.எல்.ஏ.</a> கபில் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் மற்றும் சிலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>242 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்; தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/242-industrial-firms-fined-labour-welfare-department-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/242-industrial-firms-fined-labour-welfare-department-action#comments</comments><guid isPermaLink="false">aa923829-68c7-4062-a4c5-bdbbb3d13def</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:01:33 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:01:33.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நடவடிக்கை,அபராதம்,தொழிலாளர் நலத்துறை,fines,தொழில் நிறுவனங்கள்,Labor Welfare Board</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sqzo9qaa/govt.gif" width="750"><media:title type="html"><![CDATA[ தொழிலாளர் நலத்துறை ]]></media:title><media:description type="html"><![CDATA[ 242 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்; தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sqzo9qaa/govt.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>242 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்; தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை. இது தொடர்பாக, தொழிலாளர் உதவி ஆணையர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>ஆய்வு</h2><p>சென்னை மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள், உணவகங்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர்கள் (வட்டம் 1,2,3) ஆகியோர் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், தொழிலாளர்கள் துணை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.</p><h2>நிறுவனங்களுக்கு அபராதம் </h2><p>தேசிய விடுமுறை நாளில் இரட்டைப்படி ஊதியம் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்புடன் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனரா என்பது குறித்து 377 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 108 கடைகள்-நிறுவனங்கள், 132 உணவு நிறுவனங்கள், 2 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 242 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>கேரளம் - தெலுங்கானா இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-between-kerala-and-telangana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-between-kerala-and-telangana#comments</comments><guid isPermaLink="false">191ea391-792c-4888-867b-0d8ef038027e</guid><pubDate>Mon, 17 Aug 2026 15:49:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T15:49:16.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெலுங்கானா,Telangana,சிறப்பு ரெயில்,கேரளா,Kerala,கோட்டயம்,சார்லபள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/advea0k0/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/advea0k0/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து வருகிற 23,30 ஆகிய தேதிகளில் காலை 7.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07197), காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 12.25 மணிக்கு கேரள மாநிலம் கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து வருகிற 24, 31 ஆகிய தேதிகளில் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07198), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் நள்ளிரவு 12.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இது ஒரு நியூ எரா - 100 நாளில் 546 குற்ற சம்பவங்கள்; திமுக பரந்தாமன் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-a-new-era-546-crimes-in-100-days-dmk-paranthaman-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-a-new-era-546-crimes-in-100-days-dmk-paranthaman-allegation#comments</comments><guid isPermaLink="false">acefaae3-b106-4df1-be4c-e0b0f2146d13</guid><pubDate>Mon, 17 Aug 2026 15:26:08 +0000</pubDate><atom:updated>2026-08-17T15:26:08.599Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,DMK,College student,குற்றச்சாட்டு,Criminal,கல்லூரி மாணவன்,incidents</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/i2ddbm2m/parathaman.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பரந்தாமன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/i2ddbm2m/parathaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>100 நாள் அவல ஆட்சியை பற்றி திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக  அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-</p><h2> மக்களுக்கு நம்பிக்கை இல்லை </h2><p>100 நாளில் 546 குற்றச்சம்பவங்கள் பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a>க்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். கஞ்சா வாங்கினால் மாத்திரை ப்ரீ ஆட்சி இந்த அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை!</p> <h2>சர்க்கஸ் சர்க்கார்</h2><p>தவெக அரசு பொறுப்பேற்ற போது ‘இட்ஸ் எ பிகினிங் ஆப் ஏ நியூ எரா’ என்று சொன்னார். உண்மைதான், இது ஒரு நியூ எரா—100 நாளில் 546 குற்ற சம்பவங்களை செய்த ஒரு நியூ எரா!. இன்னைக்கு விஜய்யினுடைய சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியின் சாதனை இது. 'பெண்கள் பாதுகாப்பு ரொம்ப நான் ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன்'னு சொன்னார். ஆனால், இன்னைக்கு பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் தமிழ்நாட்டில் இருக்கின்றது என நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும்.<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95"> தவெக</a> கட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு பலவீனமான சர்க்காராகத்தான் இது.</p> <h2>சர்க்கஸ் சர்க்கார்</h2><p> 'போதை கலாச்சாரத்திலிருந்து நம்ம பசங்களை மீட்கணும், அவங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு'னு சொன்னார். ஆனால் போதை பழக்கமும் கடத்தலும் இங்க தீவிரமாக இருக்கிறது. 'இந்த கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது' என்று காவல்துறைக்கு தகவல் கொடுத்த கோவை கல்லூரி மாணவன் அமுதனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத  சர்க்கஸ் சர்க்கார் அரசுதான் இந்த விஜய்யின் அரசு.</p><h2>கொலை பழி</h2><p> காவல்துறையை கையில் வச்சிருக்கக்கூடிய முதல்-அமைச்சர். 'ஜென்-ஜி' பிள்ளைகள் எல்லாம் உங்களுக்கு ஆர்வமாக வாக்களித்தார்களே, இந்த முதல்-அமைச்சருக்கு, இன்னைக்கு 'ஜென்-ஜி'கள் மட்டும் ஏறத்தாழ 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்றைக்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள், இந்த கொலை பழியை முதல்-அமைச்சர்  ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த 100 நாளில் பல குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கு. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி 546 குற்ற சம்பவங்கள் இருக்கு. இந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக்கிட்டீங்களா?</p><h2>அமைச்சர் என்ன சொல்றாரு?</h2><p>கோவையில் போதைப்பொருளைப் பற்றி தகவல் கொடுத்ததாக சொல்லி, அமுதன் என்கிற மாணவனை அடித்து கொன்றுள்ளனர். அந்த மாணவன் போதை பொருள் பற்றி கொடுத்த தகவலை காவல்துறையே போதை கும்பலிடம் கொடுத்துள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் என்ன சொல்றாரு? 'இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்'னு சொல்லிட்டு வழக்கின் தன்மையை திசைதிருப்புறார்.</p> <h2>இளைஞர்களுக்கான அரசு</h2><p>நான் கேட்கிறேன் முதல்-அமைச்சர் அவர்களே, 'இளைஞர்களுக்கான அரசு' என்று நீங்கள் மார்தட்டி கொள்கிறீர்கள். 'இளைஞர்கள் மூலமாகவே ஆட்சிக்கு வந்தேன்' என்று சொல்லுகிற நீங்கள், ஒரு இளைஞன் குற்றம் நடைபெறுகிறது என்று காவல்துறைக்கு சொன்ன ரகசியத்தை காப்பாற்றாத காவல்துறை அப்படிப்பட்ட காவல்துறை வைத்திருக்கும் உங்களுக்கு முதல்-அமைச்சராக இருப்பதற்கு கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் உங்களை நோக்கி நான் கேட்கிறேன்.</p><h2>திமுக மீதுதான் நம்பிக்கை </h2><p> அமுதனுடைய தாயார் சொல்லுகிறார்கள், 'அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் உதயநிதிதான் எங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்' என்று சொல்லுகிறார்கள் என்றால், ஆளுகிற அரசின் மீது இந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை! எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதுதான் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.</p><h2>100 நாள் சாதனை</h2><p> நேற்றைக்கு திருவொற்றியூரில் இரண்டு அமைச்சர்களை (ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன்) ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த 100 நாள் சாதனை என்னவென்று சொன்னால், அமைச்சர்களைத் தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் சாதனை! இதே மாதிரி தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்றதைத் தட்டிக் கேட்ட பையனை அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செஞ்சிருக்காங்க. திருவெறும்பூரில் இரண்டு தவெக காரங்க ஒருத்தரை வெட்டிக் கொலை பண்ணியிருக்காங்க.</p> <h2>ஒரு வார குற்ற சம்பவங்கள் </h2><p>விருதுநகரில் ஒரு பள்ளி பொண்ணை துன்புறுத்தியதை தட்டி கேட்ட அப்பாவை வெட்டி கொன்றிருக்காங்க. காஞ்சிபுரத்தில் கோவில் திருவிழாவில் இரண்டு இளைஞர்களை வெட்டி கொன்றிருக்காங்க. திருவனந்தபுரத்தில் 25 வயசு இளைஞரை வெட்டி கண்மாயில் வீசியிருக்காங்க. திருப்பூர்ல காதலை மறுத்த பெண்ணை கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த அம்மாவையும் இளைஞர்களையும் கொன்றிருக்காங்க. ஈரோட்டில்பேன்சி ஸ்டோருக்குள் புகுந்து ஒரு பெண்ணை கத்தியால் குத்தியிருக்காங்க. இதெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் நடந்த குற்றச் சம்பவங்கள்!</p> <h2>எந்த கலாச்சாரத்தை் காட்டுகிறது?</h2><p>அம்பத்தூர் புதூரில் ஆட்டோவில் ஒரு பெண்ணை உட்கார வச்சு கழுத்தை அறுத்து ரோட்டில் வீசியிருக்காங்க. இந்த மாதிரியான குற்ற சம்பவங்கள் எல்லாம் இதற்கு முன்னாடி நடந்ததே இல்லை. சினிமா படத்தில் வருகிற மாதிரியான கொலை காட்சிகளை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள். கும்மிடிப்பூண்டியில் 17 வயசு இளைஞனை கொன்று கல்லறை மேல போட்டு, சில கொலை சம்பவங்களைச் செய்து ரீல்ஸ் எடுத்து வெளியிடுகிறார்கள்! இதெல்லாம் எந்த கலாச்சாரத்தை காட்டுகிறது?</p><h2>தவறான முன்னுதாரணம்</h2><p>ஒரு திரைத்துறையிலிருந்து வந்தவர் தமிழ்நாட்டுக்கு முதல்-அமைச்சர். அதனுடைய விளைவு என்னவென்றால், நீங்கள் திரைப்படத்தில் ஹீரோவாக இருக்கலாம், நடித்த ஹீரோயிசத்தை பார்த்து இன்னைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இதை செய்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.</p> <h2>குற்ற சம்பவங்கள் நடக்கிறது</h2> <p>வேலூரில் தலைமை பெண் காவலரையே குத்தி கொன்றிருக்கிறார்கள்! இதைவிட என்ன கேவலம் இருக்கு? வெட்கமாக இல்லை முதல்-அமைச்சருக்கு? காவல்துறையை தன் கையில் வச்சிருக்கக்கூடிய முதல்-அமைச்சர், காவல்துறையிடம் தகவலை கொடுக்கும் பையனை காப்பாற்றுவதற்குமுடியல்லை இந்த காவல்துறைக்கு! ஆனால் எதிர்க்கட்சி தலைவர் கைதின் போது, சாலைகளில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞரை பார்த்து இரண்டு கையை வைத்து அடிப்பார் சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்! எந்த காவல் ஆணையர் ஒரு கைது நடவடிக்கைக்கு ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள்? இருக்கிற வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை நீங்கள் செய்வதனால்தான் இந்த குற்ற சம்பவங்கள் நடக்கிறது.</p> <h2>சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் லட்சணமா?</h2><p> கோயம்புத்தூரில் இதே மாதிரி நகைக்காக ஒரு வயதான பெண்ணை கொன்றிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் பச்சிளம் குழந்தையிலிருந்து பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். 'நான் ஆட்சிக்கு வந்தா சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவேன்'னு சொன்னாரே, இதான் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் லட்சணமா?</p> <h2>வாய் திறந்திருக்கீங்களா?</h2><p> நான் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கான ஆட்சியை தருவேன்'னு சொன்னீங்களே, மக்களுக்கான பிரச்சனையைப் பற்றி இதுவரைக்கும் எதாவது பேசியிருக்கீங்களா? காவிரி நதி பிரச்சனைக்காக நீங்கள் வாய் திறந்திருக்கீங்களா? கர்நாடகாவில் தமிழர்களை சுட்டுக் கொன்றார்களே, அதற்காக வாய் திறந்து பேசியிருக்கீங்களா? ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் தண்ணீர் திறந்து விட வேண்டுமே, அதைப்பற்றி வாய் திறந்து பேசியிருக்கீங்களா?</p> <h2>பாயும் முதல்-அமைச்சர்</h2><p> மேகதாது அண கட்டப்படுவதை தடுக்க தனியாக டிரிப்யூனல் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரிடத்தில் போய் கேட்டிருக்கீங்களா? மத்திய அரசிடத்தில் பயப்படுகிறார் முதல்-அமைச்சராகத்தான் இருக்கிறீர்களே தவிர, தமிழ்நாட்டில் சட்டமன்றத்திலும் வெளியிலேயும் மட்டும்தான் பாயும் முதல்-அமைச்சராக காட்டிக்கொள்கிறீர்கள்.</p><h2>நடந்திருக்கா?  </h2><p>ஆடி மாதம் வந்தால் தள்ளுபடி கொடுப்பார்கள்—ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை ப்ரீ, ஒரு பேண்ட் வாங்கினால் ஒரு பேண்ட் ப்ரீ, ஒரு ஜாக்கெட் பிட் வாங்கினால் இன்னொன்று ப்ரீ என்று தள்ளுபடி கொடுப்பார்கள். அதுமாதிரி, இந்த கொக்கைன் பவுடர் பயன்படுத்திய சரத் மந்திரியுடைய தொகுதியில் 'கஞ்சா வாங்கினால் மாத்திரை ப்ரீ'! இப்படிப்பட்ட ஆட்சி தமிழ்நாட்டில் இதுவரைக்கும் நடந்திருக்கா? கஞ்சா வாங்கினால் மாத்திரை ப்ரீ என்று விஜய்யின் அரசாங்கமாக நடந்துகொண்டிருக்கிறது!</p><h2> கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். கோவையில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கும், தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிற பல்வேறு கொலை குற்றங்களுக்கும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்து, பதில் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கக்கூடிய முதல்-அமைச்சர் இன்னைக்கு சட்டமன்றத்திற்குள் வந்து உட்காரவில்லை!</p><h2>இது என்ன மாண்பு?</h2><p>காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பேசாமல் ஓடி ஒளிந்துகொண்டிருக்க, சம்பந்தமே இல்லாத அமைச்சர்கள் எல்லாம் எழுந்து எழுந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது என்ன மாண்பு? என்ன சட்டமன்ற மரபை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்?</p> <h2>சிஎம் விஜய் சார் எழுந்து நிற்பாரா?</h2><p>இதுல லட்சணம் என்னவென்றால், ஒரு அமைச்சர் சொல்கிறார்—'முதல்-அமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டும்' என்று. எதிர்க்கட்சி தலைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான், முதல்-அமைச்சரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான். அப்ப எதிர்க்கட்சி தலைவர் வரும்போது சிஎம் விஜய் சார் எழுந்து நிற்பாரா? என்ன பேச்சு இது? சட்டமன்றத்தில் பேரவைத் தலைவர் வரும்போது மட்டும்தான் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்க வேண்டும். பேரவைத் தலைவரைத் தவிர வேறு யாருக்கும் அந்த இடத்தில் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை!</p> <h2>சட்டம்-ஒழுங்கு</h2><p>இந்த 100 நாட்களில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்திருக்கிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறியிருக்கிறது—அரிசி விலை கிலோவுக்கு ரூ. 30 ஏறியிருக்கிறது, ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது, மின்சாரக் கட்டணம் ஷாக் அடிக்கிறது! மக்களுடைய அன்றாடப் பிரச்சனையைப் பற்றி அரசாங்கத்தில் யாராவது வாய் திறந்து பேசுகிறார்களா? சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விக்கு அந்தந்தத் துறை மந்திரிகள் யாராவது பதில் சொல்கிறார்களா?</p> <h2>அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம்</h2><p>அதேபோல இன்னைக்கு ஒரு பெரிய 'அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம்'. தவெக கட்சியின் நிர்வாகியான ஒரு பெண்மணி தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்குப் போய் 'அட்ஜஸ்ட்மென்ட் பண்ணச் சொல்கிறார்கள்' என்று புகார் கொடுக்கிறார். இது மக்களுக்கான ஆட்சியா அல்லது அட்ஜஸ்ட்மென்ட்க்கான ஆட்சியா? எந்தப் பெண்களின் பாதுகாப்பைச் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்களோ, இன்னைக்கு தினமும் பெண்களின் அலறல் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறதே, விஜய் சார் உங்கள் காதில் கேட்கவில்லையா? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்களே!</p><h2> பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை </h2><p>இன்னொரு விஷயம்—சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும்போது தேவையில்லாமல் முதல்-அமைச்சரோ அமைச்சர்களோ வெளியில் நிகழ்ச்சிகளில் போய் கலந்துகொள்ளக்கூடாது. கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது எங்கே போயிருந்தீர்கள் சார்? போன இடத்தில் உங்கள் சாதனையைப் பேசினீர்களா? இல்லையே. முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதித்தீர்களா? ஏனென்றால் குட்டு வெளிப்பட்டுவிடும்! உள்ளே போனால் வந்திருப்பவர்கள் உண்மையான முதலீட்டாளர்களா அல்லது கோட்-சூட் மாட்டி வந்தவர்களா என்பது தெரிந்துவிடும் என்பதால் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை!</p> <h2> சாதனையை அல்ல! </h2><p>சினிமா படத்தில் நடிப்பது போலவே இன்னைக்கு ஆட்சியிலும் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். 100 நாளில் சாதித்தது என்ன என்று ஒரு வீடியோ வெளியிடுகிறீர்கள்; அதில் பதவி ஏற்பு விழாவில் பேசிய பேச்சையும் விட்ட டயலாக்குகளையும்தான் காட்டியிருக்கிறீர்களே தவிர, சாதனையை அல்ல! பத்திரிகையாளர்களை சந்தித்து சாதனை எதையாவது சொல்லியிருக்கிறாரா? 100 நாள் ஆச்சே! இது அறிவிக்கப்படாத அவசரநிலை.</p> <h2>பொய் சொல்கிறார்கள்</h2><p>ரூ. 15,000 கோடி வருவாய் வந்துவிட்டதாக பொய் சொல்கிறார்கள். லீக்கேஜை அடைத்துவிட்டோம் என்று வாயில் வடை சுடுகிறார்களே தவிர, நிஜமாக எந்த ஆதாரமும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. பாரதிய ஜனதா கட்சியைக் கண்டு அஞ்சிப் பம்பும் 'டம்மி முதலமைச்சராக' விஜய் இருக்கிறார். இந்த 100 நாள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்! சட்டமன்றத்தில் அந்தந்த கேள்விகளுக்கு அந்தந்த அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் ஆனால் அது எல்லாம் தெரியாமல் அரவேக்காட்டு அமைச்சராக உள்ளார்கள். </p> <h2>முதல்-அமைச்சர் விஜய் </h2><p>நீட் மசோதா பற்றிப் பேசும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிப்படை அரசியல் அறிவோ பாராளுமன்ற நடவடிக்கைகளோ தெரியவில்லை. 'மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா' அறிவிப்பை நாடாளுமன்ற மசோதா என்று அரைகுறையாகப் பேசுகிறார்கள். மாநில உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம் என்று சொல்லும் முதல்-அமைச்சர் விஜய், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் UGC பிரதிநிதியை நியமிக்க ஒப்புக்கொண்டது ஏன்? பொம்மை முதல்-அமைச்சராக, டம்மி முதலமைச்சராகத்தான் இவர் இருக்கிறார்.</p> <h2> சர்க்கஸ் சர்க்கார்</h2><p>இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான 'சர்க்கார்' அல்ல, வெறும் 'சர்க்கஸ் சர்க்கார்'! நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது. இந்த 100 நாட்களில் செய்ததெல்லாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என எதையும் சரிசெய்ய முடியாமல் பல்லிளிக்குது இந்த 100 நாள் ஆட்சி என்று தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>“வளமான பயணமாக அமைந்தது” - வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-has-been-a-fruitful-journey-vanathi-srinivasan-laichi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-has-been-a-fruitful-journey-vanathi-srinivasan-laichi#comments</comments><guid isPermaLink="false">5336fc43-a820-41c5-8582-961b65a624f8</guid><pubDate>Mon, 17 Aug 2026 15:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-17T15:18:18.811Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சென்னை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,success,நன்றி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/3sf4cy3j/135.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/3sf4cy3j/135.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த ஆண்டுகள் உண்மையிலேயே ஒரு வளமான பயணமாக அமைந்தது என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வளமான பயணம்</h2><p>பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவர் பொறுப்பை கடந்த காலத்தில், என்னிடம் ஒப்படைத்ததற்காக, கட்சிக்கும் நமது மூத்த தலைமைக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டுகள் உண்மையிலேயே ஒரு வளமான பயணமாக அமைந்தன. நாடு முழுவதும் உள்ள பெண் தொண்டர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் பன்முகக் கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் வாழ்க்கைப் பயணங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு நபராக என்னை வடிவமைத்து, எண்ணற்ற பாடங்களையும் நினைவுகளையும் எனக்கு அளித்துள்ளது.</p><h2>நன்றி</h2><p>நமது பெண் சக்தியைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன் அவர்களின் உறுதி, தைரியம் மற்றும் சாதனைகள். பல பெண்கள் தடைகளைத் தகர்த்து, உயரப் பறப்பதைப் பார்ப்பது ஆழ்ந்த உத்வேகம் அளிக்கிறது. மத்திய தலைமைக்கும் ஒவ்வொரு தொண்டருக்கும் அவர்களின் நம்பிக்கை, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்காக எனது மனமார்ந்த நன்றிகள். புதிய அணிக்கு மாபெரும் வெற்றியும், நிறைவான பயணமும் அமைய வாழ்த்துகிறேன். இந்த அமைப்பை இன்னும் பெரிய உயரங்களுக்குக் கொண்டு செல்லட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>