<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 27 Jul 2026 03:45:53 +0000</lastBuildDate><item><title>மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-cannot-lay-even-a-brick-in-mekedatu-minister-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-cannot-lay-even-a-brick-in-mekedatu-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">dd1080c6-078d-402a-a944-55a71805da2b</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:44:10 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:44:10.783Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கோட்டையன்,Sengottaiyan,Karnataka,கர்நாடகா,மேகதாது அணை,Mekedatu,Mekedatu dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/k93xznc3/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/k93xznc3/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய், சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுத்து வருகிறார். கோவை, மதுரையில் மெட்ரோ அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரின் விருப்பம். எனவே இது தொடர்பாக பிரதமரிடம் கடிதங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது.</p><p>அ.தி.மு.க.வில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் விலகியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சபாநாயகர் நேரடியாக விசாரணை மேற்கொள்ள கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே சபாநாயகர் அதற்கான முடிவுகளை எடுப்பார்.</p><p>நீட் தேர்வு போராட்டம் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கிற உணர்வுதான். நீட் வேண்டாம் என்பதுதான் முதல்-அமைச்சரின் கொள்கை முடிவு. அந்த முடிவில் அவர் தெளிவாக இருக்கிறார். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பாக இருப்பதையும் அவர் பிரதமரிடம் தெரிவித்து இருக்கிறார்.</p><p>மேகதாது அணை யில் ஒரு செங்கலை கூட கர்நாடகம் எடுத்து வைக்க முடியாது. அதை தமிழக முதல்-அமைச்சர் விஜய் அனுமதிக்கவும் மாட்டார். தமிழக பட்ஜெட் என்பது சீக்ரெட். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் காவல் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு; வடமாநில இளைஞர் கைது - ரெயில் முன்பு பாய்வேன் என மனைவி மிரட்டல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mobile-phone-snatched-from-female-police-officer-youth-from-north-india-arrested-wife-threatens-to-jump-in-front-of-a-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mobile-phone-snatched-from-female-police-officer-youth-from-north-india-arrested-wife-threatens-to-jump-in-front-of-a-train#comments</comments><guid isPermaLink="false">7a49eb2e-8918-4e58-a470-1750988a974a</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:36:53 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:36:53.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,train,செல்போன் பறிப்பு,காவல் அதிகாரி,வடமாநில இளைஞர்,Cellphone snapped</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/mztmx2t5/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/mztmx2t5/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தடய அறிவியல் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அடலின் பிரபா(வயது 25). தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இவர், சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்து, தினமும் அலுவலகத்திற்கு சென்று வருகிறார். </p><p>இந்நிலையில் நேற்று தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயிலில் அடலின் பிரபா பயணம் செய்துள்ளார். அந்த ரெயில் தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்தில் நின்றபோது, ஜன்னல் வழியாக வடமாநில இளைஞர் ஒருவர் அடலின் பிரபாவின் கையில் இருந்த செல்போனை பறித்துள்ளார். </p><p>அந்த நபரை பிடிப்பதற்காக காவல் அதிகாரி அடலின் பிரபா ரெயிலில் இருந்து இறங்க முயன்றார். அந்த சமயத்தில் ரெயில் புறப்பட்டுவிட்டதால் பிளாட்பாரத்தில் தவறி விழுந்து அடலின் பிரபாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. </p><p>இதற்கிடையில் அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் அஜய்(வயது 27) என்பதும், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. </p><p>அதே சமயம், காயமடைந்த பெண் காவல் அதிகாரி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது முகத்திலும், தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு 32 தையல்கள் போடப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.</p> <p>செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அவரது மனைவி அங்கு வந்துள்ளார். அவர் போலீசாரிடம் தனது கணவரை விடுவிக்குமாறு கூறி வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், தனது கணவரை விடுவிக்கவில்லை என்றால் ரெயில் முன்பு பாய்ந்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். </p><p>அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காயமடைந்த பெண் காவல் அதிகாரிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருச்சியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-trichy-facing-a-power-outage-tomorrow-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-trichy-facing-a-power-outage-tomorrow-2#comments</comments><guid isPermaLink="false">543dca8e-fe87-44f8-a4e1-c96ee1ce282a</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:28:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:28:41.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>power outage,மின் தடை,திருச்சி,Trichy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/28ioqrpd/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/28ioqrpd/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,</p><p>திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்டம், வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மூவானூர், வேங்கைமண்டலம், தண்ணீர்பந்தல், மேல கண்ணுகுளம், கீழக்கண்ணுகுளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நம்பர் 2 கரியமாணிக்கம், சென்னக்கரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வால்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண் டியபுரம், சுனைபுகநல்லூர் ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் டவுன் ஆகிய பகுதிகளில் மின் தடை எய்ய்யப்பட உள்ளது.</p><p>மேலும், அலுவலகத்திற்கு உட்பட்ட மூவராயன்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில் லாம்பட்டி, பழையூர், செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, திருவரங்கபட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிகொட்டம், காளவாய் பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம் பாளையம், சாலக்காடு, புலிவலம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட புலிவலம், மண்பறை, சந்தனப் பட்டி, புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லையம்பட்டி ஆகிய பகுதி களில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினி யோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கஞ்சா வியாபாரியை விசாரிக்க சென்ற போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-8-police-officers-who-went-to-question-a-ganja-dealer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-8-police-officers-who-went-to-question-a-ganja-dealer#comments</comments><guid isPermaLink="false">4f4c3621-48cc-4603-a90c-1cac1f9558d6</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:28:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:28:03.754Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,police,Case,வழக்குப்பதிவு,ganja case,போலீசார்,கஞ்சா வியாபாரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fcxpv2h8/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fcxpv2h8/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>கஞ்சா வியாபாரி</h2><p>கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக-கேரளம் எல்லையில் உள்ள அட்டப்பாடி அருகே அகழிபுதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 51). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது ஏராளமான கஞ்சா வழக்குகள் உள்ளன.</p><p>கோவை அருகே உள்ள தடாகம் பகுதியில் உள்ளவர்களுக்கு அவர்தான் கஞ்சா சப்ளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தடாகம் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் கேரளம் மாநிலம் அகழி அருகே உள்ள புதூர் பகுதிக்கு சென்று அங்கு மறைந்து இருந்த முருகேசை பிடித்து விசாரணை நடத்திவிட்டு கோவை திரும்பினர்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதற்கிடையில் தடாகம் போலீசார் எப்படி எங்களின் அனுமதி இல்லாமல் கேரளத்துக்குள் வந்து விசாரணை செய்யலாம் என்று அந்த மாநில போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முருகேஷ் தன்னிடம் தேவையில்லாமல் தடாகம் போலீசார் வந்து விசாரணை நடத்துவதாகவும், கேரளம் போலீசில் புகார் செய்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அகழி போலீசார் கோவையை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.</p><p>அதில் போலீசார் என்று குறிப்பிடாமல், தமிழகத்தில் உள்ள கோவையை சேர்ந் தவர்கள் என்று குறப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதி செய்ய முடியவில்லை. கேரளம் மாநிலம் அகழியை சேர்ந்த போலீசாரின் இந்த நடவடிக்கை கோவை மாவட்ட காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் கேரளம் போலீசாரின் இந்த செயலுக்கு பலர் கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும்; அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பு பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/list-of-dmks-corrupt-acts-to-be-released-during-the-budget-session-minister-maria-wilson-makes-sensational-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/list-of-dmks-corrupt-acts-to-be-released-during-the-budget-session-minister-maria-wilson-makes-sensational-remarks#comments</comments><guid isPermaLink="false">9336a275-dcb5-4786-806a-e3d806fde60a</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:12:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:12:59.838Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,பட்ஜெட்,Budget,தி.மு.க,மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/pj263rno/Maria-wilson.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/pj263rno/Maria-wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. சார்பில் முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் தொகுதியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 'முதல்வரின் கரம்' என்ற தலைப்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், நிதி அமைச்சர் மரிய வில் சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.</p><h2>பட்ஜெட் கூட்டத்தொடர்</h2><p>நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தனியாக தணிக்கை அறிக்கையை வெளியிட போகிறோம். அந்த ஊழல் பட்டியலில் என்ன இருக்கிறது என்பது அப்போது உங்களுக்கு தெரியும்.</p><h2>'நீட்' தேர்வு விவகாரம்</h2><p>நீங்கள் (எதிர்க்கட்சி) ஒருமையில் பேசி எங்களை கோபப்படுத்தினாலும் நாங்கள் உங்களை போன்று பேச மாட்டோம். உங்களுடைய ஊழல் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு பேசப்போகிறோம். ஊழல், லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டில் அனைவரும் வாழ போகிறோம். 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருங்கள். இந்த நோக்கத்தை சிதைப்பதற்காக இந்த ஆட்சி 60 நாட்கள், 3 மாதம், 6 மாதம் என்று சில பேர் பேசுகிறார்கள். அவர்கள்தான் 5 மாதத்தில் ஆள், 'அட்ரஸ்' இல்லாமல் போக போகிறார்கள். </p> <p>தற்போது 'நீட்' தேர்வை தடை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது. மாணவர்கள் நம்பிக்கையுடன் இருங்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் எப்படி பெரிய மாற்றம் வந்ததோ, அதே போன்று 'நீட்' விவகாரத்தில் நிரந்தர தீர்வை பெற 2029 நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய தலைவர் (முதல்-அமைச்சர் விஜய்) மூலம் சாதிக் கக்கூடிய எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படும். இதை இந்த நாடு பார்க்க போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.</p><h2>100 சதவீதம் நன்மை இருக்கும்</h2><p>விழா முடிந்ததும் அமைச்சர் மரிய வில்சனிடம், 'தமிழக பட்ஜெட்டில் ஊழல் பட்டியல் வெளியிட போகிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதில் எந்த மாதிரியான ஊழல்கள் இடம் பெற்றுள்ளது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார். மேலும் அவர், 100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>உத்தவ் தாக்கரே பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uddhav-thackerays-birthday-mk-stalin-wishes-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uddhav-thackerays-birthday-mk-stalin-wishes-him#comments</comments><guid isPermaLink="false">09456220-e12e-467b-83ba-c539466e6ccb</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:07:46 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:07:46.854Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,birthday,வாழ்த்து,பிறந்தநாள்,Uddhav Thackeray,உத்தவ் தாக்கரே,Wishes,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/7j186lga/80.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/7j186lga/80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.</p><h2>வாழ்த்து</h2><p>நேற்று சிவாஜி பூங்காவில் வெளிப்பட்ட இந்த மகத்தான ஆதரவு, உங்களை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும், உங்களுடன் துணை நிற்பதற்கான மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாக நினைவூட்டியது. உங்கள் அசைக்க முடியாத போராட்ட குணத்தால் சவால்களை வென்று, நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-fees-to-increase-at-chennais-vanagaram-and-surapattu-toll-plazas-from-midnight</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-fees-to-increase-at-chennais-vanagaram-and-surapattu-toll-plazas-from-midnight#comments</comments><guid isPermaLink="false">638b0a70-f1a8-4475-a483-5d282beb190c</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:04:36 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:04:36.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சுங்கச்சாவடி,சுங்கச்சாவடி கட்டணம்,toll plaza fee,toll plazas,வானகரம்,Vanagaram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ppnuuv29/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ppnuuv29/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கட்டண உயர்வு</h2><p>தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளில் 80 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஏப்.1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில், செப்டம்பர் 1-ந்தேதியும் மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் காரணமாக ஏப்ரல் மாத கட்டண உயர்வு, மே 23-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.</p><p>தற்போது சென்னை புறவழிச்சாலையில் உள்ள வானகரம், அம்பத்தூர் அருகில் உள்ள சூரப்பட்டு உள்பட 10-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் அமலுக்கு வந்துள்ளது. </p><h2>2-வது கட்டண உயர்வாகும்...</h2><p>அதுபோல், சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கான, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350 லிருந்து ரூ.360 ஆக உயர்த்தப்பட் டுள்ளது. மே மாதத்திற்கு பிறகு, இது 2-வது கட்டண உயர்வாகும். இதனால்</p><p>இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கடந்த ஆண்டு மொத்த விலை குறியீடு கட்டணத்தை குறைத்தது. இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கில், கோர்ட்டு முந்தைய விலை குறியீடு கட்டணத்தை, மீண்டும் பயன்படுத்த உத்தரவிட்டது.</p><p>அதன் அடிப்படையில், அமைச்சகம் கடந்த மாதம் 29-ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டு, பழைய கணக்கீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தியது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒரு முறை கட்டணம் குறைப்பு ரத்து செய்யப்பட்டு, பல தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது ‘பெல்லட்’ குண்டு தாக்குதல் - மாநிலங்களவையில் இன்று விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pellet-gun-attack-on-students-trinamool-congress-urges-for-a-discussion-in-the-rajya-sabha-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pellet-gun-attack-on-students-trinamool-congress-urges-for-a-discussion-in-the-rajya-sabha-today#comments</comments><guid isPermaLink="false">292ff298-6072-4f2e-90de-cca0df708213</guid><pubDate>Mon, 27 Jul 2026 02:52:05 +0000</pubDate><atom:updated>2026-07-27T02:52:05.939Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திரிணாமுல் காங்கிரஸ்,Trinamool Congress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/vdzgttvm/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/vdzgttvm/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>நாடாளுமன்ற மாநிலங்களவை திரிணாமுல் காங்கிரஸ் துணைத்தலைவர் சகாரிகா கோஸ், மாநிலங்களவை செயலாளரிடம் ஒரு நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளார். அதில், இன்று (திங்கட்கிழமை) மாநிலங்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய அத்துமீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்ப தாவது:-</p><p>“அமைதியாக போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. இருப்பினும், அமைதியாக போராடிய மாணவர்கள், உயிருக்கு அச்சுறுத்தலான ஆயுதங்களால் குறிவைக்கப்பட்டது கவலை அளிக்கிறது. 'பெல்லட்' குண்டு' பயன்படுத்தப்பட்டதால் சில மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஒரு மாணவரின் கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது. 'பெல்லட்' குண்டு பயன்படுத்த யார் அதிகாரம் அளித்தது?”</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி-மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flight-service-between-trichy-and-muscat-resumes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flight-service-between-trichy-and-muscat-resumes#comments</comments><guid isPermaLink="false">c2eec811-c904-4450-9b6f-8f4951238c9d</guid><pubDate>Mon, 27 Jul 2026 02:46:27 +0000</pubDate><atom:updated>2026-07-27T02:46:27.183Z</atom:updated><atom:author><atom:name>Muthu Pandian K</atom:name><atom:uri>/api/author/2401539</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,Air service,விமான சேவை</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/aid6rbbf/plane.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/aid6rbbf/plane.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில மாதங்க ளாக வளைகுடா நாடுகளில் நடைபெற்ற வரும் போர் காரணமாக பல்வேறு விமான சேவைகளை விமான நிறுவனங்கள் நிறுத்தி வைத்தன. </p><p>இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருச்சியில் இருந்து மஸ்கட்டிற்கு நிறுத்தப் பட்டிருந்த நேரடி விமான சேவையை மீண்டும் வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்க உள்ளது. புதன், வெள்ளி, ஞாயிறு என வாரத்திற்கு 3 விமான சேவைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் குறைந்திருந்த பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>10 ஆண்டு பாஜக ஆட்சியில் மாணவர் தற்கொலையும் கல்வி வியாபாரமும் உச்சம் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-suicides-and-education-business-have-peaked-in-the-10-years-of-bjp-rule-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-suicides-and-education-business-have-peaked-in-the-10-years-of-bjp-rule-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">81aaaa39-c1e1-41d9-84b2-53abd4c3dc26</guid><pubDate>Mon, 27 Jul 2026 02:29:39 +0000</pubDate><atom:updated>2026-07-27T02:29:39.951Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP Government,Student suicide,மாணவர் தற்கொலை,பாஜக ஆட்சி,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/nbmlzhkq/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/nbmlzhkq/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>நீட் தேர்வு சுமை, கேள்வித்தாள் கசிவு மற்றும் நாட்டின் கல்விச் சூழல் குறித்து NTA, NCRB (ADSI) மற்றும் CMS:E 2025 அறிக்கைகள் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் இதோ:</p><p>மாணவர் தற்கொலைகள் அதிகரிப்பு: 2014-ல் 8,068 ஆக இருந்த மாணவர் தற்கொலை எண்ணிக்கை 2024-ல் 14,488 ஆக அதிகரித்து, 80% உயர்வைக் கண்டுள்ளது.</p><p>மொத்த தற்கொலைகள்: கடந்த 10 ஆண்டுகளில் (2014-2024) மட்டும் நாட்டில் 1.23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.</p><p>தேர்வுத் தோல்வியால் உயிரழப்பு: 2014 - 2024 காலகட்டத்தில் தேர்வில் தோல்வி அடைந்த அச்சத்தால் மட்டுமே 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.</p><p>பாதிக்கப்படும் இளைஞர்கள்: தற்கொலை செய்துகொண்டவர்களில் 55% பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 42% பேர் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.</p><p>நீட் தேர்வுத் தேர்ச்சி: 2015 முதல் ஆண்டுதோறும் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்தாலும், 57%-க்கும் குறைவானவர்களே (11.21 லட்சம் பேர்) தகுதி பெற முடிகிறது.</p><p>பயிற்சி மையங்களின் ஆதிக்கம்: மேல்நிலைக் கல்வி படிக்கும் மாணவர்களில் 37% பேர் (நகர்ப்புறங்களில் 44.6%) கட்டாயமாகத் தனியார் பயிற்சி மையங்களை நாடும் அவலநிலை உள்ளது.</p><p>பொருளாதாரச் சுமை: பெற்றோர் தங்களின் பள்ளிச் செலவில் மூன்றில் ஒரு பங்கை (மேல்நிலைக் கல்வியில் சராசரியாக ரூ.6,384) பயிற்சி மையங்களுக்கே செலவிட வேண்டியுள்ளது.</p><h2>உயிரைப் பறிக்கும் ஆயுதம்</h2><p>மோடி ஆட்சியில் ஏழை எளிய  மாணவர்களின் மருத்துவராகும் கனவை நசுக்கி, கோச்சிங் மாஃபியா கோடிக்கணக்கிலான கொள்ளைக்குத் துணை போகிறது இந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">பாஜக அரசு</a>. வினாத்தாள் கசிவும், தவறான கல்விக்கொள்கையும் நமது மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ஆயுதங்களாக மாறியுள்ளன.</p><p>மாணவர்களின் ரத்தத்திலும், பெற்றோர்களின் கண்ணீரிலும் வியாபாரம் நடத்தும் இந்த சீரழிந்த அமைப்புக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். 2029-ல் நமது தலைவர் ராகுல் காந்தி தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததும், கோச்சிங் மாஃபியாக்கள் ஒழிக்கப்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நேர்மையான கல்வி முறை கட்டாயம் உருவாக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 6 மாதங்களில் 19 யானைகள் உயிரிழப்பு.!அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-news-19-elephants-have-died-in-tamil-nadu-in-six-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-news-19-elephants-have-died-in-tamil-nadu-in-six-months#comments</comments><guid isPermaLink="false">719f140e-ab45-41cc-bc02-8d32c4605970</guid><pubDate>Mon, 27 Jul 2026 02:29:19 +0000</pubDate><atom:updated>2026-07-27T02:29:19.413Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானைகள்,Wild elephants,Elephants,யானைகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/rwuxmvlc/1.gif" width="721"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/rwuxmvlc/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில், 2025 எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில், 3,170 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 2024ல் யானைகள் எண்ணிக்கை, 3,063 ஆக இருந்தது.</p><p>மொத்த எண்ணிக்கை யில், 70 சதவீத யானைகள், நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகளில் வாழ்கின்றன. யானைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதன் வாழிட பரப்பளவும் அதிகரிக்க வேண்டிய தேவை எழுகிறது.</p><p>இந்நிலையில், யானைகள் திட்டத்துக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி வழங்குவதால், அதன் இறப்பு தொடர்பான விஷயங்களை, அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் எந்த பகுதியில், காட்டு யானைகள் இறந்தாலும், அது குறித்த பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை அறிக்கையை,</p><p>மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.</p><p>யானைகள் இறப்பை துல்லியமாக கண்காணிக்க, இதுதொடர்பான விபரங்களை, தமிழக வனத்துறை தணிக்கை செய்து வருகிறது. இருப்பினும், யானைகள் இறப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இதுகுறித்து வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது;</p><p>தமிழகத்தில், காட்டு யானைகள் இறப்புக்கு காரணமான விஷயங்களை தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும், நடப்பு ஆண் டில், ஜனவரி முதல் ஜூன் இறுதி வரையிலான ஆறு மாதங்களில், 19 யானைகள் இறந்துள்ளன.இதில், 18 யானைகள் இயற்கையான முறையிலும், ஒரு யானை விபத்து காரணமாகவும் இறந்தது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் முதுமலை, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், தலா, எட்டு யானைகள் இறந்துள்ளன.</p><p>இந்த யானைகள் இறப்பு குறித்த, பிரேத பரிசோதனை அறிக்கை, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2025ல், 127 யானைகள் இறந்தன என்ற தகவலுடன் ஒப்பிட்டால், தற்போது யானைகள் இறப்பு குறைந்துள்ளது. இதையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>வருங்கால வைப்பு நிதி வட்டி: ரூ.1.44 லட்சம் கோடி செலுத்தியது மத்திய அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/provident-fund-interest-central-government-paid-rs-144-lakh-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/provident-fund-interest-central-government-paid-rs-144-lakh-crore#comments</comments><guid isPermaLink="false">7f18e22d-2b97-4fc9-9f65-4f715eb666e1</guid><pubDate>Mon, 27 Jul 2026 01:56:12 +0000</pubDate><atom:updated>2026-07-27T01:56:12.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central Government,Provident Fund,interest,வருங்கால வைப்பு நிதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/r3xl7ffo/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/r3xl7ffo/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) கணக்கில் இருக்கும் இருப்பு தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி கணக்கிட்டு மத்திய அரசு வழங்கி வருகிறது.</p><p>அந்தவகையில் 2025-26-ம் நிதியாண்டுக்கு 8.25 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டது. ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்பட்டு சந் தாதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பது வழக்கம். அந்த வகையில், 2025-26-ம் நிதியாண்டில் 34 கோடி சந்தாரர்களுக்கு ரூ.1.44 லட்சம் கோடியை வட்டியாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.</p><p>அதன்படி, தற்போது ஒவ்வொரு சந்தாதாரர்களின் வங்கி கணக்கிலும் வட்டி வரவு வைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சந்தாதாரர்களின் பி.எப். கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஒருவேளை இதுவரை வட்டி வரவு வைக்கப்படவில்லையெனில் பதற்றம் அடைய தேவையில்லை என்றும், அடுத்த சில நாட்களில் வட்டி வரவு வைக்கப்படும் என்றும் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>‘வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும்’ - மத்திய இணை மந்திரி எல்.முருகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-airport-will-be-opened-soon-union-minister-of-state-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-airport-will-be-opened-soon-union-minister-of-state-l-murugan#comments</comments><guid isPermaLink="false">b6eb739d-164b-4d93-ac08-30646a345cee</guid><pubDate>Mon, 27 Jul 2026 01:38:05 +0000</pubDate><atom:updated>2026-07-27T01:38:05.776Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L.Murugan,Vellore,வேலூர்,airport,விமான நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/hh5l6u5t/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/hh5l6u5t/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ‘சர்வதேச கூட்டுறவு ஆண்டு – 2026’ நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து வேலூர் வடக்கு மண்டலத்தில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை எல்.முருகன் கேட்டார். </p><p>இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல்.முருகனிடம், வேலூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “வேலூர் விமான நிலையத்திற்கான பணிகள் நிறைவு பெறப் போகின்றன. இது குறித்து விமானத்துறை மந்திரியிடம் பேசியிருக்கிறேன். மீதமுள்ள பணிகள் முடிந்ததும், வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும்” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-petrol-diesel-price-in-chennai-8</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-petrol-diesel-price-in-chennai-8#comments</comments><guid isPermaLink="false">aa3789d2-03ca-4476-ba25-437205fd8813</guid><pubDate>Mon, 27 Jul 2026 01:09:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T01:09:18.002Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,Diesel Price,டீசல் விலை,Petrol price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/mqxs35yh/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/mqxs35yh/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (27.07.2026 திங்கட்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை - அமைச்சர் வெங்கடரமணன் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-underway-to-scan-faces-at-ration-shops-minister-venkataramanan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-underway-to-scan-faces-at-ration-shops-minister-venkataramanan#comments</comments><guid isPermaLink="false">7c92735d-ce5b-4ea7-b7b6-3c8e78c646da</guid><pubDate>Mon, 27 Jul 2026 01:09:02 +0000</pubDate><atom:updated>2026-07-27T01:09:02.075Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fy33t8jn/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/fy33t8jn/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>“மாநிலம் முழுவதும் இதுவரை 20 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு தபாலில் அனுப்ப ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. ரேஷன் கார்டில் உள்ள அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும். </p><p>அதற்கான பணிகள் 97 சதவீதம் முடிந்து உள்ளது. ரேகை பதிவாகாதவர்களுக்கு கண் விழி ஸ்கேன் செய்யப்படுகிறது. வருங்காலத்தில் ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.” </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: அடுத்த மாதம் முதல் சில ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egmore-railway-station-renovation-work-plans-to-operate-some-trains-from-tambaram-from-next-month</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egmore-railway-station-renovation-work-plans-to-operate-some-trains-from-tambaram-from-next-month#comments</comments><guid isPermaLink="false">4a911795-731f-415d-abfc-ac60ebabc614</guid><pubDate>Mon, 27 Jul 2026 01:01:26 +0000</pubDate><atom:updated>2026-07-27T01:01:26.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Renovation work,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,மறுசீரமைப்பு பணி,தாம்பரம் ரெயில் நிலையம்,Tambaram Railway Station</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ultvfqwk/79.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/ultvfqwk/79.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எழும்பூர் ரெயில் நிலையத்தில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>மறுசீரமைப்பு பணி</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.840 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன. இதற்காக அவ்வப்போது ரெயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே எழும்பூரில் இருந்து இயக்கப்பட்ட சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப் படுகின்றன.</p><h2>இரும்பு நடைமேம்பாலம்</h2><p>இந்தநிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்தில் தற்போது இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 500 டன் எடைக்கும் அதிகமான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு இரும்பு ராடர்கள் பாலமாக நிறுவப்படுகிறது. இந்த பாலம் 18 மீட்டர் அகலத்துடனும், 120 மீட்டர் நீளத்துடனும் அமைய உள்ளது. தற்போது காந்தி இர்வின் சாலை பகுதியில் உள்ள நடைமேடை 1 முதல் 5 வரையில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">எழும்பூர் ரெயில் நிலைய </a>6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரெயில் இயக்கப்படும் நடைமேடைகளான 10 மற்றும் 11 வரையில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதனால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.</p><h2>தாம்பரத்தில் இருந்து...</h2><p>இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, 'நடை மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கவும், மின்சார ரெயில்களை நடைமேடை 5 மற்றும் 6-ல் இருந்து இயக்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடை மேம்பாலம் அமைக்கும் பணி அடுத்த மாதம் முதல் அல்லது 2-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. அப்போது, இந்த மாற்றங்களை நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெரியகுளம் அருகே பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fatal-tractor-accident-near-periyakulam-two-people-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fatal-tractor-accident-near-periyakulam-two-people-killed#comments</comments><guid isPermaLink="false">f3d76998-cc62-4290-a031-189c785cc730</guid><pubDate>Mon, 27 Jul 2026 00:04:14 +0000</pubDate><atom:updated>2026-07-27T00:04:14.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிராக்டர்,periyakulam,பெரியகுளம்,விபத்தில் 2 பேர் பலி,tractor overturned,Two people died</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/xybzm4lc/tractor-accident.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-27/xybzm4lc/tractor-accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரியகுளம்,</p><p>தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">பரிதாபமாக உயிரிழந்தனர்</a>.</p><h2> விபத்து</h2><p>பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி இளங்கோவன் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). இவரது உறவினர் ரவிச்சந்திரன் (37). இவர்கள் இருவரும் ஜெயமங்கலம் அருகே உள்ள கீழக்காமக்காபட்டி பகுதியில் உள்ள ஒரு கிரசரில் இருந்து டிராக்டரில் எம்-சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு கைலாசபட்டி நோக்கி புறப்பட்டனர்.</p> <p> டிராக்டரை ரவிச்சந்திரன் ஓட்டினார். டிராக்டர் மேல்மங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.</p> <h2>மின்கம்பம் முறிந்து விழுந்தது</h2><p>பள்ளத்தில் கவிழ்ந்த வேகத்தில் அங்கிருந்த மின்சார கம்பத்தின் மீது டிராக்டர் பலமாக மோதியது. இதில் மின் கம்பம் அடியோடு முறிந்து டிராக்டர் மீது விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ரவிச்சந்திரன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஜெயமங்கலம் போலீசார் மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளில் சடலமாக கிடந்த இருவரையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து, உடனடியாக ஜே.சி.பி. வரவழைக்கப்பட்டு, இடிபாடுகள் மற்றும் மின் கம்பம் அகற்றப்பட்டது. பின்னர் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,  விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர் மார்க்கெட்டில் மீன் விலை சரிவு: அசைவ பிரியர்கள் குவிந்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-market-fish-price-slump-attracts-non-veg-buyers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-market-fish-price-slump-attracts-non-veg-buyers#comments</comments><guid isPermaLink="false">fff10da5-5d81-4bc2-93db-c3dc5114e2ee</guid><pubDate>Sun, 26 Jul 2026 23:29:29 +0000</pubDate><atom:updated>2026-07-26T23:29:29.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,Fish,மார்க்கெட்,மீன்கள் விலை சரிவு,prices fall,Big market</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/mc01gz00/tirupur-fish-market.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பூர் மீன் மார்க்கெட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/mc01gz00/tirupur-fish-market.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பூர் மீன் மார்க்கெட்டில்</a>  விலை சரிவினால் அசைவ பிரியர்கள் குவிந்தனர். திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் புகழ்பெற்ற மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் தினமும் டன் கணக்கில் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. </p><p>இங்கிருந்து திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள் தங்களுக்கு தேவையான மீன்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கிச் செல்கின்றனர்.</p><h2>விலை சரிவு</h2><p>தற்போது ஆடி மாதம் என்பதால், பெரும்பாலான பொதுமக்கள் ஆன்மீக வழிபாட்டிற்காக மாலை அணிந்து, மாமிசம் தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். இதனால் பொதுவாக அசைவ மார்க்கெட்டுகளில் கூட்டம் குறைவாகவே காணப்படும். ஆனால், நேற்று, தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்களும், வியாபாரிகளும் மீன்களை போட்டிப்போட்டு வாங்க ஆர்வம் காட்டினர். மீன்களின் வரத்து அதிகரித்ததால், அதன் விலை கணிசமாகக் குறைந்து இருந்ததே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.</p><h2>80 டன் வரத்து</h2><p>நேற்று மார்க்கெட்டிற்கு மீன் வரத்து அதிகமாக இருந்தது. குறிப்பாக, வஞ்சிரம், மத்தி, நெத்திலி உள்ளிட்ட கடல் மீன்கள் 30 முதல் 35 டன்களும், ஜிலேபி, கட்லா, ரோகு போன்ற அணை மீன்கள் 45 டன்களும் என மொத்தம் சுமார் 80 டன் வரை மீன்கள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆடி மாதமாக இருந்தாலும் விலை மலிவாக கிடைத்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப்பாதையில் மீண்டும் ஒரு பெண் சிக்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvannamalai-idukku-pillaiyar-kovil-cave-path-again-woman-trapped</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvannamalai-idukku-pillaiyar-kovil-cave-path-again-woman-trapped#comments</comments><guid isPermaLink="false">0db4d7ae-9584-44ba-9a22-07570791e3a2</guid><pubDate>Sun, 26 Jul 2026 22:57:41 +0000</pubDate><atom:updated>2026-07-26T22:57:41.081Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,பெண்,Woman,Trapped சிக்கினார்,cave,பிள்ளையார் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/axf1vhm5/iduku-pillyar-temple.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடுக்கு பிள்ளையார் கோவில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/axf1vhm5/iduku-pillyar-temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p>திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள புகழ்பெற்ற <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">இடுக்கு பிள்ளையார் கோவில்</a> குகைப்பாதையில், நேற்று முன் தினம் ஆந்திர வாலிபர் ஒருவர் உடல் பருமன் காரணமாக சிக்கி, மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகம் மறைவதற்குள், நேற்று அதே இடத்தில் ஆந்திராவை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p> <h2>வணங்கி செல்கின்றனர்</h2><p>திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர்.</p> <h2>இடுக்கு பிள்ளையார் கோவில்</h2><p> கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் 36 வயது) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்த மணிக்குமார், குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார்.</p> <h2>மூச்சுத்திணறல்</h2><p> குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் போராடி அவரை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h2>பெண் பக்தர் சிக்கினார்</h2><p>இந்த நிலையில் நேற்று, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர், திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் சென்று, அங்கிருக்கும் குறுகிய குகைப்பாதை வழியாக நுழைந்து சாமி தரிசனம் செய்ய முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது உடல் பருமன் காரணமாக அந்த குறுகிய இடுக்கிற்குள் அவர் மாட்டிக்கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் கையை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர். </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-6#comments</comments><guid isPermaLink="false">95ef677b-4f49-4d91-8598-8399ab970593</guid><pubDate>Sun, 26 Jul 2026 16:20:45 +0000</pubDate><atom:updated>2026-07-26T16:20:45.526Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/6v3l1exq/Untitled-7.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/6v3l1exq/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 27.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>வேளச்சேரி</strong>: விஜயா நகர் 3 வது, 6 வது, 9 வது முதல் 11வது தெருக்கள் வரை, ராம் நகர் 4 வது முதல் 7 வது தெருக்கள் வரை, கோமதி நகர் 8 வது தெரு, வேளச்சேரி பிரதான சாலை.</p><p><strong>கொட்டிவாக்கம்</strong>: சாஸ்திரி நகர், வால்மீகி நகர், 2வது சீவார்டு சாலை முதல் 4வது சீவார்டு சாலை வரை, பாலகிருஷ்ணன் சாலை, கே.கே. சாலை, ராஜா ரங்கசாமி அவென்யூ, சுப்பிரமணியம் அவென்யூ, திருவள்ளுவர் நகர் 7வது முதல் 33வது குறுக்குத் தெருக்கள் வரை, திருவள்ளுவர் நகர் 1 மற்றும் 3 முதல் 6வது பிரதான சாலைகள் வரை, 1 மற்றும் 3வது அவென்யூ, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.</p><p><strong>சித்தாலப்பாக்கம்</strong>: பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு, நற்குணம் அவென்யூ, ஸ்ரீ சாய் கார்டன், நூக்கம்பாளையம் பிரதான சாலை, இந்திரா நகர் பிரதான சாலை , காமராஜ் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ரோஸ் கார்டன் சாலை, டி.என்.யு.எச்.டி.பி. ஏ பிளாக் முதல் யூ வரை, ஏஏ முதல் எச் , மற்றும் 209 முதல் 212 பிளாக் வரை.</p><p><strong>தாம்பரம்</strong> : இரும்புலியூர் சர்வீஸ் சாலை, இன்விகான் பிளாட், TTK நகர், ஜெருசீலம் நகர், சர்ச் சாலை, ரத்தின குமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ்.ராஜன் நகர், ஜி.கே.மூப்பனார் அவென்யூ.</p><p><strong>திருமுல்லைவாயல்</strong>: கிரீன் ஃபீல்ட், சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாசிலாமணீஸ்வரர் </a>நகர், வெங்கடேஸ்வரா நகர், ஒரகடம் சொசைட்டி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணையை கட்டவிடாமல் தடுக்க மோடியிடம் அன்புமணி கோரிக்கை வைப்பாரா? - மாணிக்கம் தாகூர் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-anbumani-urge-modi-to-prevent-the-construction-of-the-mekedatu-dam-manickam-tagore-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-anbumani-urge-modi-to-prevent-the-construction-of-the-mekedatu-dam-manickam-tagore-asks#comments</comments><guid isPermaLink="false">c217ce73-2389-4720-a59d-1515457bc276</guid><pubDate>Sun, 26 Jul 2026 15:49:57 +0000</pubDate><atom:updated>2026-07-26T15:49:57.912Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,அன்புமணி,Anbumani,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,மேகதாது அணை,Mekedatu dam,Manickam Tagore MP,மேகதாது அணை விவகாரம்,மாணிக்கம் தாகூர் எம்.பி.,மேகதாது அணை பிரச்சினை,Mekedatu Dam Issue,Manickam Tagore,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி,tamilnadu congress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/aq8ofio6/Untitled-5.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/aq8ofio6/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ,</p><p>சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>கோரிக்கை வைப்பாரா?</h2><p>தமிழ்நாடு உரிமைகள் விட்டு போய்விடக்கூடாது. தமிழ்நாடு உரிமைகளை நீதிமன்றத்தின் முலம் பெறலாம். தண்ணீர் பெறுவது, மேகதாது அணை கட்ட விடாமல் தடுப்பது ஆகியவை மத்திய அரசின் கையில் உள்ளது. மத்திய அரசின் அனுமதியில்லாமலோ பிரதமரின் அனுமதி இல்லாமலோ மேகதாது அணை கட்ட முடியாது. மேகதாது அணைக்கு அனுமதி வரும் போது கட்டவிடாமல் தடுக்க வேண்டும் என பிரதமரிடம் அன்புமணி சொல்ல வேண்டும். இதை பிரதமரிடம் சொல்வாரா?</p><p>எம்.ஜி.ஆர். அப்பொதைய கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து பேசிய போது தண்ணீர் கேட்ட வரலாறு உள்ளது. நாம் இந்தியா- பாகிஸ்தான் கிடையாது. கர்நாடகாவிலும் தமிழர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் கன்னடர்கள் உள்ளனர். காவிரி என்பது தமிழ்நாடு வாழ்வாதார பிரச்சினை. காவிரி நீர் நம்முடைய ஜீவநதி. காவிரியில் நமக்கு நியாயப்படி தண்ணீர் கிடைக்க வேண்டும். முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதை அரசியலாக்குவது நியாயமில்லாதது.</p><h2>தடுக்க வேண்டும்</h2><p>முதல்-அமைச்சர் போகிறாரா இல்லையா என்பது சரியாக தெரியவில்லை. அதற்கு முன் போக கூடாது என்று பேசுவது அதிர்ச்சியாக உள்ளது. 2 மாநில முதல்-அமைச்சர்கள் சந்திப்பதில் என்ன தவறு என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்டு உள்ளது. நியாயப்படி நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தான் கேட்கிறோம். தமிழ்நாடு உரிமைகளை எந்த காலத்திலும் விட்டு கொடுக்க கூடாது என்பதில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.</p><p>மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு முயன்றாலும் மத்திய அரசு அனுமதியில்லாமல் கட்ட முடியாது. மேகதாது அணை கட்டவிடாமல் தடுக்க வேண்டும் என்பதை மோடியிடம் அன்புமணி கூற வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்த எலக்ட்ரீசியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electrician-who-slits-schoolgirls-throat-after-refusing-to-accept-love</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electrician-who-slits-schoolgirls-throat-after-refusing-to-accept-love#comments</comments><guid isPermaLink="false">ebf19dfb-2333-4b36-9fe4-74a03491e471</guid><pubDate>Sun, 26 Jul 2026 15:44:20 +0000</pubDate><atom:updated>2026-07-26T15:44:20.461Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கடலூர்,பள்ளி மாணவி,Electrician,Schoolgirl,எலக்ட்ரீசியன்,கழுத்தை அறுத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/a5ozgqf6/95.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கழுத்தை அறுத்த]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/a5ozgqf6/95.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிதம்பரம்,</p><p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 28). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.</p><h2>மாணவி மறுப்பு</h2><p>இந்த நிலையில் இன்று காலை அய்யப்பன். அந்த மாணவி வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்க சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு தனியாக இருந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். மேலும் அந்த மாணவியிடம் அத்துமீறியும் நடக்க முயன்றதாக தெரிகிறது. </p><p>இதனால் அந்த மாணவி சத்தம் போட்டார். இதனால் கோபம் அடைந்த அய்யப்பன் சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். மாணவி தொடர்ந்து சத்தம் எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் தான் கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்தார்.</p><h2>சிகிச்சை</h2><p>இதில் பலத்த காயம் அடைந்த மாணவி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்ததும் அய்யப்பன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து கழுத்தில் பலத்தகாயங்களுடன் உயிருக்கு போராடிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">மாணவியை </a>அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-the-day-after-tomorrow-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-the-day-after-tomorrow-5#comments</comments><guid isPermaLink="false">bada418f-e677-48bf-9aa2-4065d094f7d2</guid><pubDate>Sun, 26 Jul 2026 15:05:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T15:05:17.204Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/u4l4z6tf/Untitled-6.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/u4l4z6tf/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 28.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p>ஐடி காரிடார்: எம்.சி.என். நகர் மற்றும் விரிவாக்கம், ஃபவுண்ட்ரி சாலை, பிள்ளையார் கோயில் தெரு, எஸ்.பி.ஐ. காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, தபால் நிலையத் தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, குளக்கரை தெரு, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகர், ஆனந்த் நகர், ஆர்.இ. நகர், பாலாஜி நகர், விநாயகா நகர், சாய் நகர், மேபிள் அவென்யூ, செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், கார்ப்பரேஷன் சாலை, செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு, ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, தொழிற்பேட்டை சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர். சாலை, திருமலை நகர் மற்றும் விரிவாக்கம், ராமப்பா நகர், சி.பி.ஐ. காலனி, ராஜீவ் நகர், வேளச்சேரி பிரதான சாலை, ஐ.ஐ.டி. காலனி, மீனாட்சிபுரம், மனோகர் நகர், வி.ஜி.பி. சாந்தி நகர்.</p><p>ராமாபுரம்: மணப்பாக்கம், கிருஷ்ணா கோர்ட், சி.ஆர்.ஆர். புரம், கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், ஸ்ரீராம் கார்டன், லக்ஷ்மி நகர், பிள்ளையார் கோயில் தெரு, மைக்ரோ மார்வல், தர்மராஜாபுரம், காசாகிராண்ட் உட்சைட் மற்றும் கேஸ்டல், டி.வி.எஸ். எமரால்ட்.</p><p><strong>மேடவாக்கம்</strong>: பட்டேல் கம்பெனி சாலை, ஏரிக்கரை தெரு, சி.பி.ஐ. காலனி 1வது முதல் 7வது தெரு வரை, வேளச்சேரி பிரதான சாலை, பி.எச்.இ.எல். நகர் 1 முதல் 5வது தெரு வரை, சிவகாமி நகர், பஜனை கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ரங்கநாதபுரம், பிரின்ஸ் கல்லூரி.</p><p><strong>வளசரவாக்கம்</strong>: விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர்.</p><p><strong>நொளம்பூர்</strong>: எஸ் அண்ட் பி கார்டன், வி.ஜி.என். மான்டே கார்லோ, எஸ்.ஆர்.ஆர். நகர், ராஜா கார்டன், குருசாமி சாலை, நொளம்பூர் பேஸ் I மற்றும் II, யூனியன் சாலை, வி.ஜி.என். நகர் பேஸ் I முதல் IV வரை, 1 வது முதல் 8வது பிளாக் வரை, கம்பன் சாலை, கவிமணி சாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, ரெட்டி பாளையம் அவென்யூ, எம்.சி.கே. லேஅவுட், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், பனஞ் சோலை தெரு, மாதா கோயில், பெருமாள் கோயில், கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீ ராம் நகர், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பச்சையப்பன் </a>நகர், சக்தி நகர், பாடசாலை தெரு.</p><p><strong>ஆதம்பாக்கம்</strong>: நிலமங்கை நகர், கேசரி நகர்,சாந்தி நகர், சுரேந்தர் நகர்,பாரதிதாசன் தெரு,பாரத் நகர்.</p><p><strong>தாம்பரம்</strong> : செம்பாக்கம், ரங்கா காலனி, எஸ்பி காலனி, நேதாஜி தெரு, பவணந்தியார் தெரு, ஆர்பி அவென்யூ 1வது முதல் 5 வது வரை , வேணுகோபால் சாமி நகர், பாரதிதாசன் தெரு மற்றும் மாருதி நகர்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-banned-from-viewing-kurinji-flowers-due-to-heavy-elephant-movement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-banned-from-viewing-kurinji-flowers-due-to-heavy-elephant-movement#comments</comments><guid isPermaLink="false">869aaa2c-bdae-4944-a870-6676f63bc42b</guid><pubDate>Sun, 26 Jul 2026 14:58:50 +0000</pubDate><atom:updated>2026-07-26T14:58:50.624Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,பொதுமக்கள்,தமிழகம்,Forest Department,வனத்துறை,நீலகிரி,Nilgiri,குறிஞ்சி மலர்கள்,Kurinji</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/0d4brifb/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/0d4brifb/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p>குறிஞ்சி மலர், தமிழர்களின் பண்பாட்டோடும், இயற்கை வளத்தோடும் நெருங்கிய தொடர்புடைய மலராகும். இது நீல நிறத்தில் பூக்கும். சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் என்ற பெயருக்கு இந்த மலரே காரணமாக விளங்குகிறது. குறிஞ்சி மலரின் அறிவியல் பெயர் 'ஸ்டிராபிலாந்தஸ் குந்தியானா' ஆகும். </p><h2>நீலகிரி மாவட்டம்</h2><p>வழக்கமாக <a href="https://www.dailythanthi.com/topic/nilgiris">நீலகிரி</a> உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிஞ்சி செடிகள் வளருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதால், சிறப்பு வாய்ந்த மலராக மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடு காணி, ஓவேலி, நடுவட்டம் ஊசிமலை காட்சி முனை வனப்பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளன.</p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>மலைகள் முழுவதும் நீல நிற போர்வை போர்த்தியது போல் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கி காட்சியளிக்கிறது. இதனால் கூடலூர் சுற்றுவட்டார மக்கள் குறிஞ்சி மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதேபோல் கேரளம், கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகளும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள தகவல் அறிந்து, அதிக அளவு வர தொடங்கியுள்ளனர்.</p><h2>யானைகள் நடமாட்டம்</h2><p>இந்நிலையில் கூடலூர் ஓவேலி மலைத் தொடரில் பூத்துள்ள குறிஞ்சி பூக்களைப் பார்வையிட, பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி ஓவேலியின் கடைக்கோடி வனப் பகுதி, விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள மலைத் தொடரில் இந்தப் பூக்கள் பூத்துள்ளதால் அதைக் காண சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், தொடர் கண்காணிப்புப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா? - அன்புமணி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-we-destroy-pallikaranai-marshlands-gift-of-nature-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-we-destroy-pallikaranai-marshlands-gift-of-nature-anbumani#comments</comments><guid isPermaLink="false">a91772b8-d34d-4a6b-a0e6-344aaa5470bd</guid><pubDate>Sun, 26 Jul 2026 14:28:53 +0000</pubDate><atom:updated>2026-07-26T14:28:53.230Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/0tzk7yq6/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/0tzk7yq6/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என </p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து காணொலி ஒன்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நிலத்தை அழிக்கலாமா?</h2><p>வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா? ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம்.</p><p>ஆனால், இத்தகைய பொக்கிஷத்தை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும், கட்டுமானங்களை நிகழ்த்தியும் அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம்.</p><h2>காணொலி பதிவு</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாதுகாக்க </a>வேண்டும்?</p><p>அந்த நிலம் இல்லாவிட்டால் சென்னை மாநகரம் என்னவாகும்?</p><p>அறிந்து கொள்ளுங்கள்.... இந்தக் காணொலியிலிருந்து......</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா?<br><br>ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம்.… <a href="https://t.co/7lUiF1gLDE">pic.twitter.com/7lUiF1gLDE</a></p>&mdash; Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) <a href="https://x.com/draramadoss/status/2081379722702078381?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஏ.டி.எம் பணம் வரும் பாதையில் ஸ்டிக்கர் ஒட்டி திருட்டு: திரிபுராவைச் சேர்ந்த 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/atm-cash-withdrawal-scam-2-arrested-from-tripura</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/atm-cash-withdrawal-scam-2-arrested-from-tripura#comments</comments><guid isPermaLink="false">b1193494-008a-48f1-b860-09de141062e7</guid><pubDate>Sun, 26 Jul 2026 14:28:21 +0000</pubDate><atom:updated>2026-07-26T14:28:21.647Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கைதுArrest,திருட்டுtheft,ஏ.டி.எம். எந்திரத்தில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/tnjz1nf4/92.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/tnjz1nf4/92.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை புழல் கல்பாளையத்தில் ஒரு வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்தார். ரூ.20 ஆயிரம் எடுப்பதற்காக ஏ.டி.எம். கார்டு மூலம் முயற்சித்தார். ஆனால் பணம் வரவில்லை. அதே வேளையில் ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி வங்கி விநாயகபுரம் கிளையில் கேட்டார்.</p><p>வங்கி அதிகாரிகள் அந்த ஏ.டி.எம். குறித்து ஆய்வு செய்தபோது யாரோ மாம் நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் வரும் பாதையில் ஸ்டிக்கர் ஒட்டி பணத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது. ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லை என்று வாடிக்கையாளர்கள் சென்றதும் ஸ்டிக்கரை எடுத்து பணத்தை சுருட்டியுள்ளனர். மேலும் இதுபோல 4 வாடிக்கையாளர்களின் பணத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர். இது தொடர்பாக வங்கி கிளை மேலாளர் விஜயலட்சுமி புழல் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் செய்தார்.</p><h2>கைது</h2><p>போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ராஜிப் ஆலம் (வயது 30) மற்றும் நியாஸ் உதின் (22) ஆகிய 2 பேர் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. </p><p>இதையடுத்து 2 பேரையும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான 2 பேர் மீதும் சோழவரம் காவல் நிலையத்தில் இதே போன்று திருட்டு வழக்கு உள்ளது என்பது 5 குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சிவகாசி பட்டாசு விபத்து - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivakasi-firecracker-accident-death-toll-rises-to-4</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivakasi-firecracker-accident-death-toll-rises-to-4#comments</comments><guid isPermaLink="false">e1f39f80-ee9c-4d6a-9239-468a92a1cfd1</guid><pubDate>Sun, 26 Jul 2026 12:53:21 +0000</pubDate><atom:updated>2026-07-26T12:53:21.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Sivakasi,சிவகாசி,பட்டாசு ஆலை,பட்டாசு விபத்து,fireworks accident</media:keywords><media:content height="543" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/g6sn2g3h/melum.jpg" width="805"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/g6sn2g3h/melum.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி, </p><p>பட்டாசு விபத்தில் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளநிலையில், செங்கமலப்பட்டி சுற்று வட்டாரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 11 பேரை கைது செய்தனர். </p><p>விருதுநகர் மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/sivakasi">சிவகாசி</a> அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.</p><h2>மருத்துவமனையில் அனுமதி</h2><p>இந்த சம்பத்தின்போது பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். எனினும், இந்த விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர்.படுகாயமடைந்த மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரும் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது.</p><h2>4 பேர் பலி</h2><p>இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது நான்காக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>பறிமுதல்</h2><p>இதனிடையே சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டாசு விபத்தில் 4 பேர் இன்று உயிரிழந்துள்ளநிலையில், செங்கமலப்பட்டி சுற்று வட்டாரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>ஓசூர் - பெங்களூரு இடையே தற்காலிமாக நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-service-between-hosur-and-bengaluru-which-had-been-temporarily-suspended-has-resumed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-service-between-hosur-and-bengaluru-which-had-been-temporarily-suspended-has-resumed#comments</comments><guid isPermaLink="false">974595a3-e16a-4ee0-a002-a4295db24dd7</guid><pubDate>Sun, 26 Jul 2026 12:33:21 +0000</pubDate><atom:updated>2026-07-26T12:33:21.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,பெங்களூரு,Bengaluru,Hosur,ஓசூர்,மேகதாது அணை,mekathathu dam,Bus Service,கன்னட அமைப்பு,பஸ் சேவை,தமிழக பேருந்து</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ph5n24wj/annama.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ph5n24wj/annama.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஒசூர்,</p><p>கர்நாடகம்-தமிழ்நாடு இடையே நீண்ட காலமாக காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். </p><p>இந்த சூழலில், காவிரி விவகாரத்தில் எல்லைப் பகுதியில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா நோக்கிச் செல்லும் பஸ்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓசூர் எல்லை பஸ் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேவேளையில், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு நோக்கி வரும் பஸ்கள் வழக்கம்போல தடையின்றி இயங்கி வந்தன. </p><p>மற்றபடி கார், சரக்கு வாகனங்கள் வழக்கமாக சென்று வந்தன. ஓசூரிலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் பயணிகள் தமிழக மாநில எல்லை வரை செல்லும் நகர பஸ்களில் சென்று அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் அத்திப்பள்ளிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பெங்களூரு சென்றனர். தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.</p><h2>மீண்டும் தொடக்கம்</h2><p>இந்நிலையில் ஓசூர் - பெங்களூரு இடையே கன்னட அமைப்பினர் போராட்டம் காரணமாக தற்காலிமாக நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் தொடங்கியது</p> ]]></content:encoded></item><item><title>நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் சரிவு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-in-namakkal-drop-by-20-paise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-in-namakkal-drop-by-20-paise#comments</comments><guid isPermaLink="false">71b7546d-1778-40cc-8c11-ea73296104f6</guid><pubDate>Sun, 26 Jul 2026 12:27:55 +0000</pubDate><atom:updated>2026-07-26T12:27:55.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டை விலை,egg price,முட்டை,முட்டை கொள்முதல் விலை,Egg price in Chennai,Egg prices</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/geqy2swd/egg.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/geqy2swd/egg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>20 காசுகள் சரிவு</h2><p>நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை நேற்றை நிலவரப்படி 650 காசுகளாக (ரூ.6.50) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 630 காசுகளாக (ரூ.6.30) குறைந்துள்ளது.</p><p>இதன் காரணமாக, சென்னையில் ஒரு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முட்டையின் </a>விலை 710 காசுகளுக்கு (ரூ.7.10) விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பூண்டு வரத்து குறைவு: கிலோ ரூ.350-ஐ தொட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/garlic-supply-down-housewives-shocked-as-price-touches-rs350-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/garlic-supply-down-housewives-shocked-as-price-touches-rs350-per-kg#comments</comments><guid isPermaLink="false">9886a80e-a070-4df3-97d5-189bc1b69d95</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:38:26 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:38:26.244Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Price,உயர்வு,பூண்டு விலை,Shocked,Garlic,வாணாபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/13c8gyik/90.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பூண்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/13c8gyik/90.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வாணாபுரம்</p><p>வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. மேலும் இப்பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பூண்டு, காய்கறிகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் விளையும் காய்கறிகள், பூண்டு ஆகியவை இப்பகுதியில் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>விலை</h2><p>இந்த நிலையில் காய்கறி கடைகளில் கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து படிப்படியாக குறைந்ததால் பூண்டின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. கடந்த வாரம் பூண்டு கிலோ ரூ.160 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது.</p><p>அதே நேரத்தில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.310 முதல் ரூ.360 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையலுக்கு அன்றாடம் பூண்டு தேவைப்படுவதால் விலை உயர்வை கண்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் வேறு வழியின்றி கிலோ கணக்கில் இல்லாமல் ரூ.50 மற்றும் ரூ.100க்கு வாங்கி செல்கின்றனர்.</p><p>இதுதவிர மற்ற காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் தற்போது மழையின்றி விவசாய பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சியில் இருந்து வரும் நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">பூண்டு</a> வரத்து குறைந்துள்ளதால் பூண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சில வாரங்கள் நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-people-arrested-for-illegal-firecracker-manufacturing-in-sivakasi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-people-arrested-for-illegal-firecracker-manufacturing-in-sivakasi#comments</comments><guid isPermaLink="false">698c5462-f953-47f5-a6dd-6e946b73a1a3</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:16:02 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:16:02.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,police investigation,Sivakasi,சிவகாசி,வெடி விபத்து,பட்டாசு ஆலை,பட்டாசு ஆலை விபத்து,போலீசார் சோதனை,பட்டாசு தயாரிப்பு,fire cracker factory</media:keywords><media:content height="543" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ehogan8m/melum.jpg" width="805"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ehogan8m/melum.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி, </p><p>பட்டாசு விபத்தில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளநிலையில், செங்கமலப்பட்டி சுற்று வட்டாரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். </p><h2>வெடி விபத்து</h2><p>விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.</p><h2>3 பேர் பலி</h2><p>இந்த சம்பத்தின்போது பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். எனினும், இந்த விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர்.படுகாயமடைந்த மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரும் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.</p><p>இதனிடையே பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>11 பேர் கைது</h2><p>இந்நிலையில் சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாசு விபத்தில் 3 பேர் இன்று உயிரிழந்துள்ளநிலையில், செங்கமலப்பட்டி சுற்று வட்டாரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>கார்கில் வெற்றி நாள்: நாட்டை காத்த வீரர்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kargil-victory-day-heartfelt-tribute-to-the-soldiers-who-defended-the-country-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kargil-victory-day-heartfelt-tribute-to-the-soldiers-who-defended-the-country-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">f2714ffa-47a9-4590-9513-93f96adcd9c9</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:54:39 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:54:39.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Tribute,Kargil Victory Day,கார்கில் போர் வெற்றி தினம்,மு.க.ஸ்டாலின் MK Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/y3jcjioo/88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/y3jcjioo/88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>அஞ்சலி</h2><p>கார்கில் வெற்றி நாளில், மிகக் கடுமையான சூழலிலும் ஒப்பற்ற துணிச்சலுடனும் மன உறுதியுடனும் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நம் இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறோம்!</p><p>தாய்நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் நினைவைப் போற்றுகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி:  மாணிக்கம் தாகூர் வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-to-visit-tamil-nadu-on-august-1-says-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-to-visit-tamil-nadu-on-august-1-says-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">ad0fba90-2ac5-4c15-aefe-5f3f5036fd46</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:48:26 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:48:26.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/vsc4u8l5/Untitled-3.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/vsc4u8l5/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- </p><h2>ராகுல் காந்தி வருகை</h2><p>ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் எங்கள் அன்புத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திய்யை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் அறிவித்தபடி, ராகுல் காந்தி ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் வருகிறார்.</p><p>அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தி அவர்களின் இந்த வருகை, தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்.</p><h2>மாணிக்கம் தாகூர் வரவேற்பு</h2><p>தமிழக மக்கள் சார்பிலும், தமிழக காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>2029-ல் ராகுல் காந்தியை இந்தியாவின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பிரதமராக்கும் </a>இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும்!.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூர்: நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ. 57 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-anti-corruption-raid-at-municipal-office-rs-57k-cash-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-anti-corruption-raid-at-municipal-office-rs-57k-cash-seized#comments</comments><guid isPermaLink="false">d1bbeffd-23a3-4dc4-b495-8e270c285fdd</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:45:40 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:45:40.783Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,Anti-Corruption Police,லஞ்ச ஒழிப்பு போலீசார்,லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/oml43eok/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/oml43eok/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனைகளை நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். </p><p>அந்த வகையில் <a href="https://www.dailythanthi.com/">கரூர் </a>மாவட்டம் புகழூர் நகராட்சி அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். 4 மணிநேரத்திற்கு மேல் நடந்த இந்த சோதனை நடைபெற்றது.  </p><h2>ரூ. 57 ஆயிரம் பறிமுதல்</h2><p>நகராட்சி ஆணையர்  வெங்கடாசலபதி மற்றும் 5க்கும் மேற்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்றது.  இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 57 ஆயிரம் ரொக்கப்பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-mbbs-and-bds-course-applications</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-mbbs-and-bds-course-applications#comments</comments><guid isPermaLink="false">6404409d-b675-4ebe-a27c-aa33ac23c715</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:18:12 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:18:12.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,MBBS,BDS,பி.டி.எஸ்,எம்.பி.பி.எஸ். படிப்பு,மருத்துவ கல்வி இயக்குநரகம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ybqb00br/saooli.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/ybqb00br/saooli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>கலந்தாய்வு</h2><p>எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவை மருத்துவ கல்வி இயக்குனரகம் கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி தொடங்கியது. </p> <h2>மாணவர் சேர்க்கைக் குழு</h2><p>விண்ணப்பப்பதிவு கடந்த 23-ம் தேதி நிறைவு பெற்றது. அதன்படி, இளங்கலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40 ஆயிரத்து 760 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29 ஆயிரத்து 726 விண்ணப்பங்களும் என மொத்தம் 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்திருந்தது.</p><h2>கடந்த ஆண்டை விட குறைவு</h2><p>இது கடந்த ஆண்டுகளுடனான விண்ணப்பங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, குறைவு ஆகும். கடந்த ஆண்டில் 72 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p><h2>கால அவகாசம் நீட்டிப்பு</h2><p>இந்நிலையில் ஜூலை 23ம் தேதியுடன் விண்ணப்பக் காலம் முடிந்த நிலையில் ஜூலை 27ம் தேதி (நாளை) மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த மீன்பிடி விசைப்படகு  

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-fishing-boat-catches-fire-mid-sea</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-fishing-boat-catches-fire-mid-sea#comments</comments><guid isPermaLink="false">4c23b043-01be-4841-906d-3561fe58db2a</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:16:58 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:16:58.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire accident,தீ விபத்து,boat,படகு,தூத்துக்குடி,Tuticorin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/a7gex0zp/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/a7gex0zp/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>தூத்துக்குடி,</p><p><a href="https://www.dailythanthi.com/">தூத்துக்குடி </a>மாவட்டம் தருவகைக்குளத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 160 நாடிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் இன்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.</p><h2>தீ விபத்து</h2><p>நடுக்கடலில் மீன்பிடி விசைப்படகில் மீனவர்கள் இன்று காலை சமையல் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக விசைப்படகில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அனைவரும் கடலில் குதித்து உயிர் தப்பினர். </p><p>இதையடுத்து, அங்கிருந்த மற்றொரு விசைப்படகு மீனவர்கள் இவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் மீன்பிடி விசைப்படகு முற்றிலும் எரிந்து நாசமானது. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு தீயில் எரிந்து நாசமானதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>68 வயது  மூதாட்டியை எலி கடித்த சம்பவம்: தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-a-rat-biting-a-68-year-old-woman-tamil-nadu-directorate-of-medical-education-issues-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-a-rat-biting-a-68-year-old-woman-tamil-nadu-directorate-of-medical-education-issues-clarification#comments</comments><guid isPermaLink="false">7242a99a-8935-467b-a65a-10f660ea54f7</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:47:14 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:47:14.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,திருச்சி,Trichy,மூதாட்டி,எலி,Rat,Directorate of Medical Education,மருத்துவ கல்வி இயக்குநரகம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/o39735id/skier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/o39735id/skier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>கடந்த 23ஆம் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/திருச்சி">திருச்சி</a> அரசு மருத்துவமனையில் 68 வயது  மூதாட்டியை எலி கடித்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. </p><p>திருச்சி மேலகல்கண்டார்கோட்டை அருகில் உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி தமிழ்க்கொடி (வயது 68). நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் படுத்திருந்தபோது கட்டிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.</p><h2>எலும்பு முறிவு</h2><p>இதனை தொடர்ந்து குடும்பத்தினர் தமிழ்க்கொடியை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் எலும்பு முறிவிற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததாலும், சளி பிரச்சினை காரணமாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை.</p><h2>அறுவை சிகிச்சை</h2><p>இதையடுத்து கடந்த 21-ம் தேதி தான் எலும்பு முறிவை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்ததும் தமிழ்க் கொடி சிகிச்சைக்கு பிந்தைய கண்காணிப்பு வார்டிற்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சையில் இருந்து வந்தார். தமிழ்க்கொடியின் மகன்கள் இருவரும் இரவு, பகல் என மாறி மாறி உடனிருந்து அவருக்கு உதவி செய்து வந்தனர்.</p><h2>எலி கடித்தது</h2><p>இந்நிலையில் கடந் த 23-ம் தேதி அன்று அதிகாலை 5 மணி அளவில் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்க்கொடியின் கால் பெருவிரலை எலி கடித்துக்கொண்டிருந்ததையும், விரலில் இருந்து ரத்தம் வழிந்ததையும் அவரது இளைய மகன் விஜயகுமார் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக எலியை அவர் விரட்டியுள்ளார். ஆனாலும் ரத்தம் தொடர்ந்து வழிந்து கொண்டே இருந்ததால் இதுபற்றி உடனடியாக அந்த வார்டில் இருந்த நர்சிடம் தெரிவித்துள்ளார்.</p><h2>எலி கடித்துக்குதறிய வீடியோ</h2><p>அதன்பின்னர் டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்து, தமிழ்க்கொடியை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றி உள்ளனர். தற்போது அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்க்கொடி கால் பெருவிரலின் பெரும்பகுதியை எலி கடித்துக்குதறிய வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. </p><p>இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் 68 வயது  மூதாட்டியை எலி கடித்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. </p><h2>தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ்</h2><p>இதுதொடர்பான விளக்கத்தில், “சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததால் மூதாட்டிக்கு காலில் உணர்வு இல்லை, மூதாட்டி தற்போது நலமுடன் உள்ளார். மூதாட்டியின் விரல்கள் நல்ல இயக்கத்தில் உள்ளது. பழமையான கட்டிடம் என்பதால் மீண்டும் மீண்டும் எலி வளைகள் உருவானது. கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட திட்டம் உள்ளது. மாதாந்திர எலி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-should-ban-social-media-use-by-those-under-16-anbumani-demands</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-should-ban-social-media-use-by-those-under-16-anbumani-demands#comments</comments><guid isPermaLink="false">f8976ebd-feb3-4009-8198-9a93fcd3884d</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:34:42 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:34:42.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,சென்னை,மத்திய அரசு,Central Government,சமூக ஊடகம்,social media,தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/nxl2qkux/87.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/nxl2qkux/87.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">அன்புமணி</a> ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும் போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இத்தகைய தடையை முன்னெடுக்க வேண்டும்.</p><h2>முதல் நாடு </h2><p>பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் தடை வரும்  ஜனவரி மாதம் முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும். இந்த சட்டத்தின்படி வரும் செப்டம்பர் மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளைத் தொடங்க முடியாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகள் ஜனவரி முதல் முடக்கப்படும். ஐரோப்பிய யூனியனில் இத்தகைய தடையை கொண்டு வந்துள்ள முதல் நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>குழந்தைகளின் நலன் கருதி அவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த முதன்முதலில் தடை விதித்த நாடு  ஆஸ்திரேலியா தான். கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டில் இந்தத் தடை நடைமுறைக்கு வந்த பிறகு கனடா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன. இங்கிலாந்து, ஸ்பெயின், கிரீஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இதே போன்ற தடையை கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவில் கர்நாடகம் மற்றும் ஆந்திர அரசுகள் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளன.</p><p>இந்தியாவிலும் சமூக ஊடகங்களை தடை செய்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. சமூக ஊடகங்களின் வாயிலாக ஆபாச உள்ளடக்கங்கள் குழந்தைகளுக்கு செல்வதாகவும், அதனால் கவனச் சிதறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025-26ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், சமூக ஊடகங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல, உடல்நல பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது.</p><h2>சமூக ஊடகப்பயன்பாடு</h2><p>குழந்தைகளின் பதட்டம், மன அழுத்தம், சுயமரியாதைக் குறைவு, இணையவழி சீண்டல்களால் ஏற்படும்  பாதிப்புகள் ஆகியவற்றுக்கு சமூக ஊடகங்களில் மூழ்கிக்கிடப்பது தான் காரணம் என்றும். 16 முதல் 24 வயது பிரிவினர் தான் இத்தகைய பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இவற்றைத் தடுக்க குழந்தைகளின் சமூக ஊடகப்பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்; ஆன்லைன் வகுப்பு கூட குழந்தைகளுக்கு கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.</p><p>அண்மையில் நடத்தப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், சமூக ஊடகங்களின் பயன்பாடு காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் குறைவதாகவும், கவனச் சிதறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை தங்களுடன் மாணவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவும், அதனால், அவர்களின் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் குறைவதாகவும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.</p><p>இவை அனைத்துக்கும் மேலாக புத்தகங்களையும், கட்டுரைகளையும் படிக்கும் வழக்கம்  வீழ்ச்சியடைந்து வருகிறது. சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் மாணவர்கள், ஏதேனும் காணொலியைப் பார்க்கும் போது 8 வினாடிகளுக்குள் அது தங்களை கவரவில்லை என்றால், அவர்கள் அதை தவிர்த்து விட்டு அடுத்த காணொலியைப் பார்க்கச் சென்று விடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரியவர்களுக்கே இந்த பிரச்சினை இருக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சொல்லத் தேவையில்லை.</p><h2>தடை</h2><p>சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அடிமையான பிறகு விளையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளை குழந்தைகள் மறந்து விட்டனர். ஆன்லைன் விளையாட்டுகளை மட்டுமே அவர்கள் விளையாட்டாக கருதுகின்றனர். இதனால் உடல் பருமன், விட்டமின்-டி குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்த பாதிப்புகளிலிருந்து  குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பது தான் தீர்வாகும்.</p><p>கர்நாடகம், ஆந்திரம், கோவா ஆகிய மாநிலங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை தடை செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், அதை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை எந்த மாநில அரசும் மேற்கொள்ளவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை. இந்தியாவில்  தொலைத்தொடர்பு (Communication) என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மத்தியப் பட்டியலில் 31ஆம்  பொருளாக இடம் பெற்றுள்ளது. அதனால், மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரம், குழந்தைகள் நலன் ஆகிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு மாநில அரசுகள் தடை விதித்தாலும் அவை சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் வாய்ப்புள்ளது.</p><h2>மத்திய அரசு</h2><p>குழந்தைகளின் உடல் நலன், மன நலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களை சமூக ஊடங்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை பின்பற்றி இந்தியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டமளிப்பு விழா: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduation-ceremony-tamil-thai-vazhthu-song-should-be-sung-first-manikkam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduation-ceremony-tamil-thai-vazhthu-song-should-be-sung-first-manikkam-tagore#comments</comments><guid isPermaLink="false">4c2aab32-4d9d-433b-8611-3ebf08d281fe</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:26:23 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:26:23.145Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி,tamilnadu congress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/dcqkiabj/Untitled-5.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/dcqkiabj/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும்.  தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளோடு, மீண்டும் மீண்டும் விளையாடுவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>திருநெல்வேலி  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா, வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார்.  </p><h2>பெரும் அநீதி</h2><p>இந்த விழாவில், முதலில், 'வந்தே மாதரம்', அடுத்து, 'தேசிய கீதம்', மூன்றாவதாக, 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாட வேண்டும் என்று, கவர்னர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என். சந்திரசேகர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் மனோன்மணியம் சுந்தரனார். அவரது பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலேயே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என்று மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்துவது, தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி.</p><h2>மன்னிப்பு கேட்க வேண்டும்</h2><p>"மாநில கவர்னர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், முதலில், 'வந்தே மாதரம்' அடுத்து, 'தேசிய கீதம்', மூன்றாவதாக, மாநிலப் பாடல் பாடப்பட வேண்டும்" என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அவமதிக்கப்பட இதுவே காரணம்.  இந்த உத்தரவை திரும்பப் பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் அமித்ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்</p><p>'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்றாலே பாஜகவுக்கும், அமித்ஷாவுக்கும் வேப்பங்காயாக கசக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது, அந்த வரிசையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் சேர்ந்திருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த தமிழ்நாடு, எப்போதும் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே வந்திருக்கிறது. அதே நேரத்தில், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், மாநில உரிமைகளை உயிருக்கு மேலாக போற்றி வரும் மாநிலம் தமிழ்நாடு. இதை அமித்ஷா உணர்ந்து கொள்வது நல்லது. மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை துச்சமென மதித்து அதிகார அத்துமீறலில் ஈடுபடும் அமித்ஷாவின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. </p><h2>முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>கவர்னரின் பின்னால் ஒளிந்து கொண்டு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அவமானம் இழைக்க நினைக்கும் அமித்ஷாவின் செயலை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது.    </p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில், கவர்னர் உரையின்போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. அதே நடைமுறையை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும், இனிவரும் அரசு விழாக்கள் அனைத்திலும் பின்பற்ற வேண்டும். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஒட்டுமொத்த </a>தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் இதுதான். அதை மத்திய பாஜக அரசும், அமித்ஷாவும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளோடு, மீண்டும் மீண்டும் விளையாடினால், அதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அது மிகக் கடுமையானதாக இருக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசி அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து: உயிரிழப்பு 3 ஆக உயர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/explosion-at-firecracker-godown-near-sivakasi-death-toll-rises-to-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/explosion-at-firecracker-godown-near-sivakasi-death-toll-rises-to-3#comments</comments><guid isPermaLink="false">91cad78e-5573-4f95-9e5a-bbff605c7aae</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:19:37 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:19:37.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,உயிரிழப்பு,police investigation,Sivakasi,சிவகாசி,வெடி விபத்து,cracker factory,போலீசார் விசாரணை,பட்டாசு குடோன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/q7p7ptw3/mins.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-26/q7p7ptw3/mins.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி, </p><p>சட்டவிரோதமாக செயல்பட்ட குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.</p><h2>பட்டாசு குடோன்</h2><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாகத் தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p><h2>கரும்புகை</h2><p>பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், விண்ணை முட்டும் அளவிற்கு அடர்ந்த கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தின் காரணமாகச் சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்குப் பலத்த அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.</p><h2>3 பேர் பலி</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை, போலீசார், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் குடோனில் ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>சட்டவிரோதமாக செயல்பட்ட குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p>இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/w2-VGzq1eDQ"></iframe></figure>]]></content:encoded></item></channel></rss>