<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 20 Aug 2026 15:36:45 +0000</lastBuildDate><item><title>ராமேசுவரம் கோவில் ஆடித்திருக்கல்யாண திருவிழா: நாளை பக்தர்களுக்கு தரிசனம், தீர்த்த நீராடல் தடை!</title><link>https://www.dailythanthi.com/devotional/rameswaram-temple-aadi-thirukalyana-festival-darshan-and-bathing-in-holy-water-prohibited-for-devotees-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/devotional/rameswaram-temple-aadi-thirukalyana-festival-darshan-and-bathing-in-holy-water-prohibited-for-devotees-tomorrow#comments</comments><guid isPermaLink="false">be79e56d-9942-4839-bb37-324ef0ff0132</guid><pubDate>Thu, 20 Aug 2026 15:35:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T15:35:18.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமேசுவரம் கோவில்,Rameswaram Temple,Aadi,நடை அடைப்பு,Thirukalyana festival,ஆடி திருக்கல்யாண திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/nqpjxtp9/87.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமேசுவரம் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/nqpjxtp9/87.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (Devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,</p><p>நாளை காலை முதல் இரவு வரையிலும் கோவிலில் தீர்த்த கிணறுகளில் நீராடவோ, சாமி தரிசனம் செய்யவோ பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>ஆடித்திருக்கல்யாண திருவிழா</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/rameswaram-temple">ராமேசுவரம்</a> ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 16-ந்தேதி ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. </p><p>இந்த நிலையில் திருவிழாவின்  15-வது நாளான நேற்று மாலை 4 மணி அளவில் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியை தொடர்ந்து ரதவீதிகளில் சாமி வீதிஉலா வந்தார். அதற்கு முன்பாக கோவில் யானை ராமலட்சுமி மீது மஞ்சள் பூசப்பட்டு அழகாக வலம் வந்தது. இதனை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.</p><h2>கோவில் நடை அடைப்பு</h2><p>திருவிழாவின் 16-வது நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவின் கடைசி நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் ராமர்பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 6 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இரவு வரையிலும் கோவிலில் தீர்த்த கிணறுகளில் நீராடவோ, சாமி தரிசனம் செய்யவோ பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. 10 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறாது என சவால்: மீசையை எடுத்துக்கொண்ட அ.தி.மு.க. செயலாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-not-win-more-than-10-seats-challenge-moustache-removed-by-aiadmk-secretary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-will-not-win-more-than-10-seats-challenge-moustache-removed-by-aiadmk-secretary#comments</comments><guid isPermaLink="false">8dd5e9e3-e604-44c2-b651-659cf68db82c</guid><pubDate>Thu, 20 Aug 2026 15:27:42 +0000</pubDate><atom:updated>2026-08-20T15:27:42.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,அதிமுக,மாவட்ட செயலாளர்,சவால்,Challenge</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7kxvznws/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7kxvznws/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பால நந்தகுமார் உள்ளார். வக்கீலான இவருக்கு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாவட்ட செயலாளர் பதவி வழங்கினார். பின்னர் அடுத்த சில நாட்களில் அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டது. இதற்கிடையே நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த கப்பச்சி வினோத் த.வெ.க.வில் இணைந்ததால், பால நந்தகுமார் 2-வது முறையாக மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.</p><p>இந்த நிலையில் அவர் திடீரென தனது மீசையை எடுத்துக்கொண்டார். இதற்கான காரணம் மற்றும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு உள்ளார். அதில், சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பிரசார மேடைகளில் த.வெ.க. 10 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்றால் மீசையை எடுத்துக்கொள்கிறேன் என சவால் விட்டிருந்தேன்.</p><p>மாயாஜாலம் ஏதோ செய்து, 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துவிட்டார்கள். 100 நாள் ஆட்சி நிறைவுற்ற பிறகு நண்பர்கள் சிலர் நினைவுபடுத்தியதை தொடர்ந்து, தற்போது மீசையை எடுத்துக்கொண்டேன் என குறிப்பிட்டு உள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற உறுப்பினர்கள் ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mlas-should-avoid-calling-first-speech-kanni-speech-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mlas-should-avoid-calling-first-speech-kanni-speech-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">f19be581-36ee-480a-8f37-712bc2077c6a</guid><pubDate>Thu, 20 Aug 2026 15:11:47 +0000</pubDate><atom:updated>2026-08-20T15:11:47.857Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,தமிழக சட்டசபை,TN Assembly,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/5ahd27rn/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/5ahd27rn/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், அவ்வப்போது அவற்றைக் கவனித்து வருகிறேன். இந்த சட்டமன்றத்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் பேசும்போது, “எனது கன்னிப் பேச்சைத் தொடங்குகிறேன்” என்று குறிப்பிடுகின்றனர். இன்று (20.8.2026) திருவள்ளூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் அருண்குமார் பேசும்போதும், தனது கன்னிப் பேச்சைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டார்.</p><p>பொதுவாக, திருமணமாகாத பெண்களை ‘கன்னி’ என்று சொல்வார்கள். சமஸ்கிருதத்தில், ‘கன்யா’ என்பது இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் சொல். ‘கன்னி’ என்ற சொல் கற்பு ஒழுக்கத்தின் அடிப்படையிலும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2021-ல் கோவை தெற்கு தொகுதியில் வென்று, முதல் முறையாக நான் எம்.எல்.ஏ. ஆனபோது, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உட்பட பலரும் அதை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிட்டனர்.</p><p>சட்டமன்றத்தில் முதல் முறையாக எனக்குப் பேச வாய்ப்பு கிடைத்தபோது, “வழக்கமாக சட்டமன்றத்தில் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுகிறீர்கள். ‘கன்னி’ என்ற வார்த்தை இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் வார்த்தை. என்னைப் பொறுத்தவரை, இந்த முதல் பேச்சை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுகப் பேச்சு’, ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிட்டால் நாகரிகமாக இருக்கும்” என்றேன்.</p><p>அதற்குப் பதிலளித்த அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். ஆனால், இப்போது புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் ‘கன்னிப் பேச்சு’ என்றே குறிப்பிடுகின்றனர். இது வருத்தம் அளிக்கிறது.</p><p>இப்போது சட்டப்பேரவைத் தலைவராக இருக்கும் ஜே.சி.டி. பிரபாகர், இதைக் கவனத்தில் கொண்டு, ‘கன்னிப் பேச்சு’ என்று உறுப்பினர்கள் கூறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். இனி உரையாற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் கட்சி ஒரு நாளும் யாரையும் முதுகில் குத்தாது:  கேசி வேணுகோபால்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-party-will-never-stab-anyone-in-the-back-kc-venugopal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-party-will-never-stab-anyone-in-the-back-kc-venugopal#comments</comments><guid isPermaLink="false">56ebf0db-09a5-4be7-b418-cfdd90e272c9</guid><pubDate>Thu, 20 Aug 2026 15:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-20T15:04:15.356Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Rahul Gandhi,ராகுல்காந்தி,கேசி வேணுகோபால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/jjckjbnr/KC-venugopal.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கேசி வேணுகோபால்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/jjckjbnr/KC-venugopal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில்  அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 2029 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராவது உறுது. ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக் கொள்ள இந்தியாவே தயாராக இருக்கிறது. தமிழ்நாடும் தயாராகி இருக்கிறது. ஆனால், காங்கிரஸ்காரர்களாகிய நாம் தயாராக இருக்கிறோமா என்பது தான் கேள்வி?நிர்வாகத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். சிலர் பணியாற்ற அலட்சியம் காட்டி வருகிறார்கள். வரும் காலங்களில் வேலை செய்யும் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் பொறுப்பும் பதவிகளும் வழங்கப்படும்.</p> <p>ஆட்சியிலும், அதிகாரத்திலும் கூட்டணி அரசோடு இருக்கிறோம். நம்மைப் பார்த்து சிலர் சொல்கிறார்கள், நம்மை முதுகில் குத்து விட்டார்கள், நம்மை ஏமாற்றி விட்டார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்வேன். காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஒரு நாளும் யாரையும் ஏமாற்றாது. ஒரு நாளும் யாரையும் முதுகில் குத்தாது, முதுகில் குத்தும் பழக்கம் காங்கிரசுக்கு இல்லை.</p><p>தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்திடம் இருந்து பல சலுகைகள் தரப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களா, ராஜ்யசபாவா, ஊராட்சி உள்ளாட்சியா என எதுவானாலும் அதிகாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்றனர். கூட்டாட்சி தத்துவத்திற்காக, சமூக நீதிக்காக நாம் தி.மு.க. உடன் இருக்க வேண்டும் என நினைத்தோம்.ஆனால் தேர்தலுக்குப் பிறகு நிலைமை வேறு. தமிழ்நாட்டில் முன் வாசல் வழியாகவோ, பின் வாசல் வழியாகவோ பா.ஜனதா வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நாம் இந்த நிலைபாட்டை எடுத்தோம். லஞ்சம் ஊழலுக்கு எதிரான ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அதற்கு ஆதரவாக நாமும் இருக்கிறோம் என நினைத்துப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டி.கே.சிவக்குமார் மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dk-shivakumar-pays-tribute-at-the-rajiv-gandhi-memorial-in-sriperumbudur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dk-shivakumar-pays-tribute-at-the-rajiv-gandhi-memorial-in-sriperumbudur#comments</comments><guid isPermaLink="false">4d28baea-8182-4806-86a0-cf5bf9e72cc2</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:41:30 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:41:30.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டி.கே.சிவக்குமார்,ராஜீவ் காந்தி,Rajiv Gandhi,D.K. Shivakumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/cjum3vuo/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/cjum3vuo/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று தமிழகத்திற்கு வருகை தந்தார். </p><p>இதையடுத்து, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று டி.கே.சிவக்குமார் மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“இன்று 'சத்பாவனா திவாஸ்' (நல்லிணக்க நாள்) அன்று, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்தினேன்.</p><p>இங்கு வந்தது எனக்கு நெகிழ்ச்சியான உணர்வை அளித்தது. எனது அரசியல் பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் அவர் என் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், அன்பையும் நினைவுகூரச் செய்தது. இளம் தலைவர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைதான், மக்களுக்கும், நாட்டிற்கும் சேவை செய்ய முன்வருவதற்கான துணிச்சலை என்னைப் போன்ற பலருக்கும் அளித்தது.</p><p>இந்த நினைவிடம் எனக்கும் கர்நாடக மக்களுக்கும் இடையே ஒரு சிறப்பான பிணைப்பைக் கொண்டுள்ளது. கர்நாடகத்துடனான அவரது பிணைப்பின் நீடித்த அடையாளமாக, கனகபுராவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒற்றைக் கல் கிரானைட் பாறையில் அவரது உருவம் பதிக்கப்பட்டு இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சாத்தியமாக்குவதில் முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அளித்த ஆதரவை நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.</p><p>ராஜீவ் காந்தியின் கொள்கைகளும், தொலைநோக்குப் பார்வையும் தொடர்ந்து எனக்கு வழிகாட்டுகின்றன. மக்களுக்கும், நாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதன் மூலம் அவரது லட்சியங்களை முன்னெடுத்துச் செல்ல நான் உறுதியுடன் உள்ளேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் பொருள் வாங்க கார்டு தேவையல்ல -அமைச்சர் வெங்கடரமணன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/card-is-not-required-to-buy-ration-items-minister-venkataramanan-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/card-is-not-required-to-buy-ration-items-minister-venkataramanan-announced#comments</comments><guid isPermaLink="false">dd87b65f-1d76-4454-a3a3-b202eb6c839b</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:33:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:33:05.443Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TNAssembly,ரேஷன் கார்டு,TNGovernment,அமைச்சர் வெங்கடரமணன்,RationCard</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/s6xi3dl0/rastion33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
ரேஷன் பொருள் வாங்க கார்டு தேவையல்ல]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/s6xi3dl0/rastion33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரேசன் கடையில் பொருட்கள் வாங்க அசல் ரேசன் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் ப.வெங்கடரமணன் பேசியதாவது:- </p><p>தமிழகம் முழுவதும் 38,438 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.  அதிகபட்சமாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1,495 கடைகள் இயங்கி வருகிறது. இதற்கு, அடுத்தபடியாகச் சேலம் மாவட்டத்தில் அதிக அளவிலான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.</p><p>ரேஷன் பொருள் வாங்க, அந்த கடைக்கு தான் போக வேண்டும் என்று இல்லை. அருகில் இருக்கும் எந்த கடையிலும் வாங்கிக் கொள்ளலாம். சிலர் கடை வரை வந்து, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">ரேஷன் கார்டு</a> மறந்து விட்டோம் என்று சென்று விடுகின்றனர். கார்டு soft copy இருந்தால் போதும், அட்டை நம்பர் இருந்தால் கூட போதும்.</p><p>வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் மற்றும் வாடகை வீடு மாறிச் செல்பவர்களுக்கு அரசின் இந்த நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், எந்தக் கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்ற இந்த வசதி குறித்து இன்னும் பலருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. எனவே, இந்தச் சட்டப்பேரவையின் வாயிலாக இதனை மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: ஒரு மாதத்தில் கால்வாய்கள், நீர்நிலைகளில் 11,790 டன் வண்டல்கள், ஆகாயத்தாமரைகள் அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-11790-tonnes-weeds-water-hyacinths-removed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-11790-tonnes-weeds-water-hyacinths-removed#comments</comments><guid isPermaLink="false">5426b96f-f6bd-40fe-ac16-fb3a8b7b2637</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:32:16 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:32:16.168Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,வடகிழக்கு பருவமழை,North East Monsoon,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/xs94bh2k/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/xs94bh2k/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் 1,671.39 கிலோமீட்டர் நீளத்திலான மழைநீர் வடிகால்களிலும், 1,10,082 வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் 11,790 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மின்சாரத்துறை உள்ளிட்ட சேவைத்துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால்கள் கட்டுதல், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாருதல், கால்வாய்களில் தூர்வாருதல் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர் உயர்த்திக் கட்டுதல், குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரி மேம்படுத்துதல், அபாயகரமான மரக்கிளைகளை கத்தரித்தல், அனைத்து மோட்டார் பம்புகள், வாகனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார்நிலையில் வைத்திருத்தல், சுரங்கப்பாதை பராமரிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், அண்ணாநகர் மண்டலம், வார்டு-102க்குட்பட்ட 3-வது அவென்யூவில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை இன்று (20.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இதேபோல, மாநகராட்சியின் வடக்கு வட்டாரம், மத்திய வட்டாரம், தெற்கு வட்டாரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை இணை ஆணையாளர்கள், வட்டார துணை ஆணையாளர்கள், மண்டல அலுவலர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினர்.</p><p>மாநகராட்சிப் பகுதியில் சுமார் 1,671.39 கிலோமீட்டர் நீளத்திலான மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 1,10,082 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் (Silt Catch Pit) மழைநீர் சீராகச் செல்லும் வகையில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1,08,041 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கால்வாய்கள், குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் 11,790 டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகர சாலைகள் முழுவதும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடையற்ற நீர் ஓட்டத்தை உறுதி செய்வது, மழைநீர் தேங்குவதைத் தடுப்பது மற்றும் முக்கிய நகர்ப்புற உள்கட்டமைப்புகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>அதனடிப்படையில், நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள 430 கி.மீ. நீளத்திலான மழைநீர் வடிகால்கள் மற்றும் 18,000 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தேங்கியுள்ள வண்டல்கள் மற்றும் திடக்கழிவுகள் முழுமையாக அகற்றுதல், 815 சிறுபாலங்கள் மற்றும் 16 பெரிய பாலங்கள் உள்ளிட்ட குறுக்கு வடிகால் அமைப்புகளை முழுமையாக சுத்தம் செய்தல், தாழ்வான போக்குவரத்துப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கைத் தடுக்க 7 வாகனச் சுரங்கப்பாதைகள் மற்றும் 12 பாதசாரி சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட அனைத்து சுரங்கப்பாதைகளிலும் உள்ள நீர் சேகரிப்பு கிணறுகள் மற்றும் நீரேற்று அமைப்புகளை சுத்தம் செய்வதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் 30.09.2026 முன்னதாகவே முடிக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
சகோதரரின் வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சனின் சமரச முயற்சி தோல்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-involving-attack-on-brothers-house-minister-maria-wilsons-mediation-attempt-fails</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-involving-attack-on-brothers-house-minister-maria-wilsons-mediation-attempt-fails#comments</comments><guid isPermaLink="false">747efbd7-b312-4ac2-8d6c-2cea1348fb68</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:25:15 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:25:15.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்கு,minister,மரிய வில்சன்,Mariawilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7ihijvin/maria.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/7ihijvin/maria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு புதுச்சேரி யில் வசித்து வரும் தனது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தி ருந்தனர்.புதுச்சேரி குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த வழக்கில் சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண சென்னை ஐகோர்ட்டு உத் தரவிட்டது. இதன்படி, 4 முறை சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, நீதி பதி லட்சுமி நாராயணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><h2>விசாரணை</h2><p>அப்போது, வழக்கில் புகார்தாரரான மரிய வில்சனின் சகோதரர் மனைவி கெரோலின் நேரில் ஆஜராகினார். அவர் தரப்பில் ஆஜரான வக்கீல், "வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடத்த புகார்தாரருக்கு விருப்பமில்லை. முன்பு நீதிபதியே சமரச தீர்வு மையத்தை அணுக கூறியதால் அதை மறுக்க முடியவில்லை” என விளக்கம் அளித்தார். அமைச்சர் மரியவில்சன் தரப்பில், "ஒரு பிரச்சினை தவிர மற்ற அனைத் துக்கும் தீர்வு எட்டப்பட்டு விட்டது” என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி, "புகார்தாரர் சமரசத்துக்கு விரும்பாத நிலையில், சமரச தீர்வு மையத்தில் தீர்வு காணும்படி நிர்பந்திக்க முடியாது. எனவே வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு மீது விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.</p><h2>வழக்கை ரத்து செய்யக்கோரி மனு</h2><p>அப்போது அமைச்சர் மரிய வில்சன் தரப்பில், "சட்டசபை நடவடிக்கை களில் பங்கேற்க வேண்டியுள்ளதால், நாளை வழக்கு விசாரணைக்காக புதுச்சேரி கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டது.</p><p>இதை ஏற்று,  விசாரணைக்கு ஆஜராக மரியவில்சனுக்கு விலக்கு அளித்த நீதிபதி, பேச்சுவார்த்தைக்கு புகார்தாரர் விரும்பாததால், சமரச பேச்சுவார்த்தையை நீட்டிக்க அனுமதி கோரிய சமரச தீர்வு மைய கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மரிய வில்சனின் மனு மீதான விசாரணையை வரும் 28-ந் தேதி தேதிக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>கடல்சார் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-japan-agreement-to-strengthen-maritime-security-ties</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-japan-agreement-to-strengthen-maritime-security-ties#comments</comments><guid isPermaLink="false">40897cc8-f730-4ec5-b51a-d5a83ef1af7f</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:09:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:09:24.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,ஜப்பான்,Japan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/ugot5kqd/National-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/ugot5kqd/National-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>டெல்லியில் இன்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரி ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, இந்தியா-ஜப்பான் இடையிலான கடல்வழி, வான்வழிப் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கு தடையாக இருக்கும் நடவடிக்கைகளுக்கு இருதரப்பினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இது சீன கடற்படையின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது. </p><p>இதைத் தொடர்ந்து இந்தியாவும், ஜப்பானும் தங்கள் கடல்சார் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அத்துடன், சுதந்திரமான மற்றும் திறந்தவெளி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கில் ராணுவ ஒத்துழைப்பை ஒருங்கிணைக்க இருநாடுகளும் உறுதியளித்தன. இந்த பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ ஆதிக்க நடவடிக்கைகள் அதிகரித்து வரும் சூழலில் இத்தகைய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் ஒரு கார் பிரியர் - பிரேமலதா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-a-car-enthusiast-premalatha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-a-car-enthusiast-premalatha#comments</comments><guid isPermaLink="false">5f1cca46-260b-423c-8a46-8a9186570f4f</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:54:07 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:54:07.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Actor Vijay,விஜய் 69,தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,PremalathaVijayakanth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/kmyz4md4/lathaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
முதல்-அமைச்சர் விஜய் ஒரு கார் பிரியர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/kmyz4md4/lathaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொருளாதார பலமில்லாமல் சட்டசபை உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதல் முதலாக சட்டசபை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றித் தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக அனைத்து  உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.</p><p>சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப் படியாகவும், அலுவலகப் பணிகளில் உதவிசெய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ. 25000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர்  ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.</p><p>இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE">தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா</a>, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இது முதல்முறை, எந்த முதல்-அமைச்சரும் செய்யாதது. அதை நாங்கள் வரவேற்கிறோம். கார் இல்லாத எம்.எல்.ஏக்களுக்கு வழங்கலாம்.</p> <p>இதற்கு அரசுக்கு ரூ. 150 கோடிக்கு மேல் செலவாகும். என்னுடைய மனதில் இருப்பதைச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 90% அளவில் வாகனம் இருக்கின்றது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக உறுப்பினர்களுக்கும் ஒரு சிலருக்கும் வாகனம் இல்லை.</p> <p>ரூ. 150 கோடியை விவசாயிகளின் முழுக்கடன் தள்ளுபடிக்கு ஒதுக்கிருந்தால், நன்றாக இருந்து இருக்கும். மக்கள்தேவையே நிறைய இருக்கிறது, அதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும். </p><p>குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் இடத்தில் புதிய ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும். மக்காசோளாம், கேழ்வரகு, கம்பு, நவதானிய பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும். பயோ மெட்ரிக் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும், நெல்  உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு அதை உரிய கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு உரிய நேரத்தில் அதனை மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். ரேஷன் பொருட்களில் இன்றும் கூட எடை பிரச்சினை உள்ளது. </p><p>பால்கொள்முதல் விலையில் ரூ.3 உயர்த்தி இருக்கிறார்கள் அதனை இன்னும் உயர்த்தி இருக்கலாம்.  ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.</p><p>இந்தியாவில் யாரும் செய்யாததை முதல்-அமைச்சர் செய்து உள்ளார். அதனை தேமுதிக வரவேற்கிறது. முதல் -அமைச்சர் விஜய் ஒரு கார் பிரியர். தவெகவில் எல்லாரும் கார் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதால் அதனை நிறைவேற்றி உள்ளார். </p><p>திருநெல்வேலியில் கங்கைகொண்டானில் 4 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு தூக்கு தண்டனை வழங்கி இருக்கிறது நீதிமன்றம். அந்த நீதியரசர்களுக்கு தலைவணங்கி வாழ்த்துகளை பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிரியாருக்கு தூக்கு தண்டனை - வானதி சீனிவாசன் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-minors-sexually-assaulted-priest-sentenced-to-death-vanathi-srinivasan-welcomes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-minors-sexually-assaulted-priest-sentenced-to-death-vanathi-srinivasan-welcomes#comments</comments><guid isPermaLink="false">70a71b49-e003-4f15-815b-915000d45255</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:28:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:28:24.511Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூக்கு தண்டனை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,பாலியல் வன்கொடுமை வழக்கு,வரவேற்பு,priest,பாதிரியார்,sexually assaulted,சிறுமிகள்,minors,sentenced to death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/rliaoc8j/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/rliaoc8j/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>4 சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாதிரியார் ஆபிரகாமுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துதீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து தேசிய பாஜக முன்னாள் மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/vanathi-srinivasan">வானதி சீனிவாசன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தூக்கு தண்டனை விதிப்பு</h2><p>நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார் ஆபிரகாமுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது.</p><p>பெண்களையும், குழந்தைகளையும் தவறான நோக்கில் அணுக நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தத் தண்டனை நினைவுக்கு வரவேண்டும். திறமையாக வாதாடி குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்றுக் கொடுத்து நீதியை நிலைநாட்டிய அரசு வழக்கறிஞருக்கும், நீதித்துறைக்கும் மனமார்ந்த நன்றி..</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவி - வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/girl-drinks-poison-goes-to-school-faints-in-classroom</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/girl-drinks-poison-goes-to-school-faints-in-classroom#comments</comments><guid isPermaLink="false">65c325ac-7dcf-4a05-9c6a-947be2e823df</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:16:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:16:18.803Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/putc39ah/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/putc39ah/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூரில் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற பிளஸ்-1 மாணவி, வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>விஷம் குடித்தார்</h2><p>வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள மேலரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் நேற்று காலை 5 மணியளவில் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்துள்ளார். பின்னர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். 10.30 மணியளவில் பள்ளி வகுப்பறையில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.</p><h2>மருத்துவமனையில் அனுமதி</h2><p>இதனை பார்த்த சக மாணவிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அவரை ஆசிரியர்கள் மீட்டு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி விஷம் குடித்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவருடைய பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஒருவர் விஷம் குடித்து விட்டு பள்ளியில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘மாணவர்களின் உரிமைகளை தமிழக அரசு மதிக்கிறது’ - உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-respects-students-rights-higher-education-minister-viswanathan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-respects-students-rights-higher-education-minister-viswanathan#comments</comments><guid isPermaLink="false">9021d172-3b79-4215-91f3-646c86a025f7</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:14:32 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:14:32.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்,Minister Viswanathan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2tosy49x/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2tosy49x/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் குறித்த தவறான குறிப்புகளைக் கொண்டிருந்த, அரசு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்தார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நியாயமான உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார். </p><p>இடதுசாரி கட்சிகள் மற்றும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) ஆகியவை ஏற்பாடு செய்யும் போராட்டங்களில் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்குமாறும், இதற்காகப் பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைகள், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் கல்லூரித் தலைவர்களுக்கு ஆகஸ்ட் 17 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது; அத்துடன் இதுகுறித்த உடனடி நடவடிக்கை அறிக்கைகளும் முதல்-அமைச்சர்களிடம் இருந்து கோரப்பட்டன.</p><p>சட்டப்பேரவையில் இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உறுப்பினர் கே.மாரிமுத்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது, ​​மாணவர் போராட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக முதல்-அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்தார்.</p><p>அரசு கல்லூரிகளில் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதியான கல்விச் சூழலை உறுதி செய்வதற்காக, வளாக ஒழுக்கம் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு முதல்-அமைச்சர்களுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக குறிப்பிட்ட விஸ்வநாதன், "இருப்பினும், அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பெயர்கள் தவறுதலாக இடம்பெற்றுவிட்டன" என்று கூறினார்.</p><p>தவறான வாசகங்கள் இடம்பெற்றிருப்பது கவனத்திற்கு வந்தவுடன், கல்லூரி கல்வி இயக்ககம் அந்தச் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தச் சுற்றறிக்கைக்குப் பின்னால் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், மாணவர் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, தமிழக அரசு அவற்றை மதிக்கிறது மற்றும் பாதுகாக்கிறது என்று அமைச்சர் விஸ்வநாதன் உறுதிப்படுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fees-charged-if-you-withdraw-money-from-banks-more-than-4-times-in-a-month</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fees-charged-if-you-withdraw-money-from-banks-more-than-4-times-in-a-month#comments</comments><guid isPermaLink="false">2c74bc85-6b34-41e9-b3af-16a9133d5e39</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:10:10 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:10:10.675Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>money,ஏடிஎம்,ATM,SBI,எஸ்பிஐ,வங்கி பரிவர்த்தனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6mxoshps/money33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/6mxoshps/money33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%90">எஸ்.பி.ஐ., </a>அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான சேவைக் கட்டண விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் 2026 அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.</p><p>சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்தில் முதல் 4 பணப் பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம்.</p><p>அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி கட்டணமாக வசூலிக்கப்படும்.</p><p>எஸ்.பி.ஐ.யின் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், குறிப்பாக அடிக்கடி ஏ.டி.எம். அல்லது வங்கி கிளை மூலம் பணம் எடுப்பவர்கள், அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய கட்டண விதியை கவனத்தில் கொள்ள வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ. வலியுறுத்தி உள்ளது</p>]]></content:encoded></item><item><title>உணவு தானியங்களை சேமிக்க ரூ.81 கோடியில் 15 கிடங்குகள் - அமைச்சர் வெங்கடரமணன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-warehouses-to-be-built-at-a-cost-of-rs-81-crore-for-storing-food-grains-minister-venkataramanan-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-warehouses-to-be-built-at-a-cost-of-rs-81-crore-for-storing-food-grains-minister-venkataramanan-announces#comments</comments><guid isPermaLink="false">148c398d-9c01-4525-936f-d2c9a41ee551</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:45:20 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:45:20.894Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/nqu0s9lx/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/nqu0s9lx/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் ப.வெங்கடரமணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- </p><p>“உணவு தானியங்கள் சேமிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 13 மாவட்டங்களின் மொத்தம் 31 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் ரூ.81 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். அரியலூர், நாமக்கல் மற்றும் மேட்டுப்பாளையம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் தலா 3400 டன் கொள்ளளவு கொண்ட 3 நவீன சேமிப்பு கிடங்குகள் ரூ.13 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். </p> <p>தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 10 சேமிப்பு கிடங்கு வளாகங்களில், தொழிலாளர் ஓய்வறை வசதி, ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 17 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.12 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். </p><p>தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 18 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் வைக்கப்படும் தானியங்களின் முழு நேர கண்காணிப்பினை உறுதி செய்திட கண்காணிப்பு கேமராக்கள் ரூ.1.25 கோடியில் பொருத்தப்படும். உணவு தானியங்களின் தரத்தினை உறுதி செய்திடும் பொருட்டு, அவற்றினை அடுக்கி அட்டிகளாக வைக்கும்போது தரை வழி ஈரப்பதம் தாக்காமல் இருக்கவும், காற்றோட்ட வசதிக்காகவும், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 12 சேமிப்பு கிடங்குகளுக்கு 6 ஆயிரம் எண்ணிக்கை அட்டிக் கட்டைகள் ரூ.1.44 கோடியில் வழங்கப்படும்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சிவகாசி அரசு மருத்துவமனையில் புதிய தீக்காய சிகிச்சை மையம் - அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-burn-treatment-center-at-sivakasi-government-hospital-minister-keerthana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-burn-treatment-center-at-sivakasi-government-hospital-minister-keerthana#comments</comments><guid isPermaLink="false">cca19c14-ad7c-4072-9111-295226c0e309</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:40:10 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:40:10.197Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government Hospital,அரசு மருத்துவமனை,Sivakasi,சிவகாசி,தீக்காயம்,Treatment Center,சிகிச்சை மையம்,burn,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0vc31p3j/minister-keerthana.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் கீர்த்தனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0vc31p3j/minister-keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் கீர்த்தனா</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தீக்காய சிறப்பு சிகிச்சை மையம்</h2><p>சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படுவதுடன், தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான தோல் சிகிச்சை மற்றும் மாற்று சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் வகையில் தோல் வங்கி (SKIN BANK) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, சிவகாசி மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.</p><h2>விரைவான சிகிச்சை</h2><p>பட்டாசுத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அவசர காலங்களில் தரமான மற்றும் விரைவான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த முக்கியமான மருத்துவ வசதிகள் உருவாக்கப்படுகின்றன.</p><h2>முதல்-அமைச்சருக்கு நன்றி</h2><p>சிவகாசி மக்களின் நீண்ட நாள் மருத்துவத் தேவையை உணர்ந்து, தீக்காய சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் தோல் வங்கி போன்ற உயிர்காக்கும் வசதிகளை ஏற்படுத்த முன்வந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் அண்ணன் விஜய் அவர்களுக்கு, சிவகாசி தொகுதி மக்களின் சார்பாகவும், பட்டாசுத் தொழிலாளர்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மக்களின் உயிர், பாதுகாப்பு, நலன் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு செயல்படும் இந்த மக்கள் நல அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் சிவகாசியின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான முன்னெடுப்பு! மக்கள் நலனே முதன்மை! சிவகாசியின் பாதுகாப்பே எங்கள் பொறுப்பு!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏக்கள் விவகாரம்: சபாநாயகர் நடவடிக்கை சரிதான் - சென்னை ஐகோர்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mlas-issue-speakers-action-was-correct-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mlas-issue-speakers-action-was-correct-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">45706a3a-79b7-4f11-8ace-5b0790b17d13</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:39:54 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:39:54.045Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Chennai High Court,சபாநாயகர்,சென்னை ஐகோர்ட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b3jvrntn/High-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b3jvrntn/High-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் கடந்த  மே 13ம் தேதி  தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு  வந்தது. இதில், அதிமுக கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு ஆதரவாக, அக்கட்சியின் 25 எம்எல்ஏக்கள் ஓட்டளித்தனர். அவர்களுக்கு எதிராக, தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி  கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ள 21 எம்எல்ஏக்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்து உள்ளதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை திரும்பப் பெற்று கொள்வதாக, சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம் அளித்தார்</p><p>இதை ஏற்று சபாநாயகர், 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.  </p><p>இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது, அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டது சரிதான். சட்டப்படி 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏக்களை மன்னித்து கடிதம் அளித்துவிட்டதால் தகுதி நீக்கம் என்ற கேள்வியே எழாது எனவும் தெரிவித்த ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.7,015 கோடியில் சிங்கப்பெண் கடன் திட்டம் - அமைச்சர் காந்திராஜ் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-7015-crore-singappen-loan-scheme-minister-gandhiraj-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-7015-crore-singappen-loan-scheme-minister-gandhiraj-announcement#comments</comments><guid isPermaLink="false">42661808-41fb-43b9-802b-7d262ee37893</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:31:53 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:31:53.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,அமைச்சர் காந்திராஜ்,கடன் திட்டம்,Minister Gandhiraj</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/nx8dtdsi/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் காந்திராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/nx8dtdsi/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சிங்கப்பெண் கடன் திட்டம் ரூ.7,015 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் காந்திராஜ் அறிவித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் வ.காந்திராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>சிங்கப்பெண்கள் கடன் திட்டம்</h2><p>பெண்களை தொழில் முனைவோராக்க புதிதாக சிங்கப்பெண்கள் கடன் திட்டம் ரூ.7,015 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் ஊரகத் தொழில் கடன் 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, சந்தைப் பங்கை அதிகரித்து, லாபத்தை உயர்த்த வெற்றி என்ற பொதுவான வணிகச் சின்னம் (லோகோ) அறிமுகப்படுத்தப்படும்.</p><p>மாநில கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்படும். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் குறைந்தபட்சம் 5 சேவைகள் வழங்கும் சங்கங்களாக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். ரூ.6.90 கோடி மதிப்பீட்டில், 3,452 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் நுண் தானியங்கி சாதனங்கள் நிறுவப்படும். கூட்டுறவு இயக்கத்தினை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த, பெருமளவிலான உறுப்பினர் சேர்க்கை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில், இணைய உறுப்பினர் சேர்க்கை வலைத்தளம் மூலம் மேற்கொள்ளப்படும்.</p><h2>ரேஷன் கடைகளில் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை</h2><p>விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்திட ரூ.50 கோடி மதிப்பீட்டில் பண்ணைக் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும்.  மஞ்சள், முருங்கை மற்றும் மிளகு ஆகிய விளைபொருட்கள் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி செய்யப்படும். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் புதிய இணையவழி கொள்முதல் நடைமுறைகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும். 10 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை நடைமுறைகள் விரிவுபடுத்தப்படும்.</p><h2>நீண்டகால கடன்</h2><p>கூட்டுறவுத்துறையின் அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கு வலைத்தளம் மற்றும் கூட்டுறவு செயலி உருவாக்கப்படும். தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் விவசாயிகளுக்கு, நீண்டகால கடன் வழங்கும் திட்டம் ரூ.50 கோடி அளவிற்கு மீண்டும் தொடங்கப்படும். டான்பெட் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் மற்றும் விதைகள் விற்பனை ரூ.2,500 கோடி அளவிற்கு அதிகரிக்கப்படும். </p><p>புதிதாக 150 ரேஷன் கடை பணியாளர் நியமனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் புதிய பாதுகாப்புப் பெட்டகங்கள் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 82 கூட்டுறவு நிறுவனங்களில் நிறுவப்படும். கூட்டுறவு கடன் அமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் குறித்து விரிவான ஆய்வறிக்கை தயார் செய்யப்படும். வேளாண் விளைபொருள் ஈட்டுக் கடன் ரூ.115 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக அதிகரித்து வழங்கப்படும்.</p><h2>உயிரி உரங்கள் விற்பனை</h2><p>தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாக புதிய ஏலக்கூடம் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்டம் ஆய்க்குடியில் அமைக்கப்படும். 50 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மின்னணு ஏலமுறை விரிவுபடுத்தப்படும். இயற்கை வேளாண் விளைபொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை முதற்கட்டமாக 2 மாவட்டங்களில் கொள்முதல் செய்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் தயாரிக்கும் உயிரி உரங்கள் டான்பெட் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும்.</p><h2>நெல் உலர்த்தும் கருவி</h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நெல் உலர்த்தும் கருவியுடன் கூடிய வசதி மையங்கள் நடத்திட கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் முதல், ரேஷன் கடைகள் வரை அனைத்து செயல்பாடுகளையும் பரீட்சார்த்த முறையில் ஒரே முகமை வாயிலாக நடத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.</p><p>கூட்டுறவு நிறுவனங்களின் சேவைகளை ஒருங்கிணைத்து, வழங்கல் தொடர் மேலாண்மை ஏற்படுத்த ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வறிக்கை தயாரிக்கப்படும். புதிய சேமிப்புக் கிடங்குகளின் தேவை, சேமிப்புக் கிடங்குகளை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த திட்ட அறிக்கை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருமுல்லைவாயலில் நீண்ட நாட்களாக நடைபெறும் பாதாள சாக்கடை பணிகள்.. பொதுமக்கள் அவதி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/underground-sewerage-works-have-been-going-on-in-thirumullaivayal-for-a-long-time-public-is-suffering</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/underground-sewerage-works-have-been-going-on-in-thirumullaivayal-for-a-long-time-public-is-suffering#comments</comments><guid isPermaLink="false">9d3118e2-ebbd-4fa9-b512-10aac68e3a1f</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:28:46 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:28:46.655Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,மாநகராட்சி,பாதாள சாக்கடை,Avadi Corporation,Underground Sewer</media:keywords><media:content height="410" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/tvbbq11x/5.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீர் தேங்கிய ரோடு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/tvbbq11x/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருமுல்லைவாயலில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை தோண்டும் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் சாலையில் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். </p><h2>பாதாள சாக்கடை பணி</h2><p>ஆவடி மாநகராட்சி அருகே திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக  சில மாதங்களுக்கு முன்பு பல குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் தாமதமாக நடைபெறுவதால் குழிகள் இதுவரை முழுமையாக மூடப்படவில்லை. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.</p><p>சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வீடுகளில் கழிவு நீர் செல்வதோடு, சாலையில் நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்தில் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தேங்கிய நீர்களால் பல்வேறு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பிரச்சனைகள் </a>உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக நடைபெறும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">பாதாள சாக்கடை</a> பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என மண்டலக்குழுத் தலைவரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>மழை நீர் தேங்குதல் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பணிகள் முடிக்கப்படும் என மண்டலக்குழுத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் : தலைமைச் செயலகத்தில் டெஸ்ட் டிரைவ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-provided-cars-for-mlas-test-drive-at-the-secretariat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-provided-cars-for-mlas-test-drive-at-the-secretariat#comments</comments><guid isPermaLink="false">62d9dcc1-30d2-428a-b82f-126c60f3ae9d</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:21:15 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:21:15.312Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,கார்கள்,சென்னை தலைமை செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0b8ker3i/Car.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0b8ker3i/Car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் விஜய் அறிவித்தார். விஜய் நேற்று வெளியிட்ட இந்த அறிவிப்பு எம்.எல்.ஏக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.  விஜய் அறிவித்த உடனேயே அரசு சார்பில் என்ன கார் வழங்கப்படும் என்றும்  எம்.எல்.ஏக்கள்   தங்களுக்குள் ஆர்வத்துடன் பேசிக்கொண்டனர். இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்திற்கு மகேந்திர நிறுவனத்தின் ஸ்கார்பியோ, பொலிரோ நியோ, எக்ஸ்யூவி 7 எக்ஸ் ஓ, உள்ளிட்ட 6 வகையான மாடல் கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. டெஸ்ட் டிரைவிற்காக தலைமை செயலகத்திற்கு இந்த கார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் அதிகாரிகள் அதை சோதனை செய்து, ஏதாவது ஒரு காரை தேர்வு செய்து பரிந்துரைப்பார்கள் என்று தெரிகிறது. </p><h2>சட்டசபை</h2><p>தமிழக சட்டமன்றத்தில் கடந்த 12-ந்தேதியன்று காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசும்போது, எந்தவொரு பொருளாதார பலம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி கொண்டிருப்பவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளை செய்ய சொந்த வாகனங்களோ அல்லது உதவியாளர்களையோ வைத்துக்கொள்ள முடிவதில்லை என்று தெரிவித்தார்.  அவரது கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கார் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் விஜய் சட்டசபையில் விதி எண் 110-கீழ் அறிவித்தார். விஜய் அறிவித்தாவது: </p> <h2>அரசு சார்பில் வாகனம்</h2><p> எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியவும், அரசுத் திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கவும், தங்களின் தொகுதி முழுவதும் தொடர் பயணங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.</p> <h2>குறைகளுக்கு தீர்வுகாண</h2><p>இந்த அறிவிப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் பயணத்தேவைகளுக்காக பிறரை சார்ந்து இருப்பதை தடுத்து, அவர்கள் எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தங்களின் தொகுதிக்குட்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூரப்பகுதிகளுக்கு எளிதாக பயணம் செய்து, தொகுதி முழுவதும் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளுக்கு தீர்வுகாண வழிவகுக்கும்.</p> <h2>மாதந்தோறும் ரூ.75 ஆயிரம்</h2><p>அதோடு மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதார சுமையை குறைத்து, கடைகோடி மக்களுக்கு லஞ்சலாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவும் உதவும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்துக்கு டிரைவர், எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப்படியாகவும், அலுவலகப்பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங் கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறையில் தவெக அரசு நடத்திய “தீர்மான நாடகம்” அம்பலம் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-drama-staged-by-the-tvk-government-in-the-constituency-redelineation-is-a-shame-ttv-dinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-drama-staged-by-the-tvk-government-in-the-constituency-redelineation-is-a-shame-ttv-dinakaran#comments</comments><guid isPermaLink="false">af5a1b84-25b5-4a7a-8d85-eff35b88b14b</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:10:15 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:10:15.931Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிடிவி தினகரன்,TTV Dinakaran,தொகுதி மறுவரையறை,Constituency redelineation,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/9gw9eh93/ttv1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/9gw9eh93/ttv1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/ttv-dhinakaran">டிடிவி தினகரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமா? – தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளைத் திசைதிருப்ப சட்டமன்றத்தில் தவெக அரசு நடத்திய “தீர்மான நாடகம்” அம்பலமாகியுள்ளது.</p><p>சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில்,  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்-அமைச்சர் விஜய், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2>எதிரான தீர்மானம்</h2><p>ஆகஸ்ட் 8-ஆம் தேதி தவெக தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும், அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தையும் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் விஜய், ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது.</p><h2>தவெக அரசு நாடகம்</h2><p>தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாமல் விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அதுகுறித்து அடுத்தடுத்து கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி தவெக அரசு நடத்திய நாடகம், முதல்-அமைச்சர் விஜய் அவர்களின் இன்றைய உரையின் மூலமாகவே அம்பலமாகியுள்ளது.</p><p>தொகுதி மறுவரையறையால் மாநிலங்களுக்கான, குறிப்பாக தமிழ்நாட்டின், மக்களவைப் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என ஏற்கனவே உறுதியளித்துள்ள மத்திய உள்துறை  மந்திரி அமித்ஷா அவர்களின் முன்னிலையிலேயே, முதல்-அமைச்சர் விஜய் அதே கோரிக்கையை முன்வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.</p><h2>உண்மையான நிலைப்பாடு</h2><p>ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்துவிட்டு, அடுத்த வாரத்தில் அதே கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த வாரமான இன்று முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலம், வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>எனவே, தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளைத் திசைதிருப்பும் வகையில், இதுபோன்ற அவசியமற்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் முன்வைப்பதை விட்டுவிட்டு, தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-the-day-after-tomorrow-8</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-the-day-after-tomorrow-8#comments</comments><guid isPermaLink="false">d12d33d9-4080-487f-bc26-6216599f4fd4</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:03:33 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:03:33.082Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power cut,மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/1r39khqx/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/1r39khqx/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் நாளை மறுநாள்(22-ந்தேதி) மின்தடை ஏற்பட உள்ளதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னையில் 22.08.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>பூவிருந்தவல்லி : சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு,குமணன்சாவடி.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - சென்னையில் நடைபெற்றது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultative-meeting-on-re-enrolling-out-of-school-children-held-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultative-meeting-on-re-enrolling-out-of-school-children-held-in-chennai#comments</comments><guid isPermaLink="false">019ab706-0536-408c-8d0c-a1990e881938</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:35:40 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:35:40.241Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/24j7zhx9/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/24j7zhx9/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக துறை சார்ந்த ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்கம் குறித்து களப்பணி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இன்று (20.08.2026) ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்துப் பேசினார்.</p><p>இக்கூட்டமானது, பள்ளிக்கு செல்லாத குழந்தைகளைக் கண்டறிதல், அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல், மீண்டும் பள்ளியில் சேர்த்தல் மற்றும் தொடர்ந்து கல்வி பயில்வதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் (GPL), கல்வித் துறை, சமுதாய வளர்ச்சிப் பிரிவு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>பள்ளிக்கு செல்லாத ஒவ்வொரு குழந்தையையும் மீண்டும் கல்வி அமைப்பிற்குள் கொண்டு வருவதும், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதும் இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் முதன்மை நோக்கமாகும். "எந்தவொரு குழந்தையும் பின்தங்கிவிடக்கூடாது" என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.</p><p>இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் செயல்படுத்தும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் களஆய்வில் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களின் குடும்பங்களுடன் தொடர்புகொள்ளுதல், ஆலோசனை வழங்குதல், பள்ளிகளுடன் ஒருங்கிணைத்தல், மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு உதவுதல் மற்றும் முறையான தொடர் நடவடிக்கைகளை உறுதி செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வார்கள்.</p><p>தெளிவான செயல்படுத்தும் இலக்காக, கண்டறியப்பட்ட பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை 31 ஆகஸ்ட் 2026-க்குள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முறையான குடும்பத் தொடர்பு, ஆலோசனை மற்றும் பள்ளி அளவிலான உதவிகள் மூலம் இந்த இலக்கை அடைய சம்பந்தப்பட்ட துறைகளும் களப்பணிக் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படும்.</p><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பேசும்போது, “பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் தொடர்பான பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் கையாள்வதன் முக்கியத்துவத்துடன், கண்டறியப்பட்ட ஒவ்வொரு குழந்தையையும் மீண்டும் கல்வி அமைப்பிற்குள் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். வெறும் கண்டறிதலோடு நின்றுவிடாமல், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ளுதல், அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடுதல், மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு வழிவகுத்தல் மற்றும் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதையும் கல்வி பயில்வதையும் உறுதி செய்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.</p> <p>பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் மொத்தம் 7,302 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்டறிந்ததன் அடிப்படையில், கள அளவில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான செயல்முறைக்கு உதவவும், NULM-ஐச் சேர்ந்த 96 சமூக ஒருங்கிணைப்பாளர்களுக்கு இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.</p><p>இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகம் முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாநகராட்சி கல்வி அலுவலர் ஜெ.வசந்தி மற்றும் உதவி கல்வி அலுவலர்கள், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் (GPL) குழுத் தலைவர் முனைவர் லெஜிஸ், சமுதாய வளர்ச்சி பிரிவு-தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர், NULM-ன் உதவித் திட்ட அலுவலர்கள், சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் NULM தலைமைச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான் மேகதாது அணை - கர்நாடகா முதல்-மந்திரி சிவக்குமார் பேட்டி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-is-for-the-benefit-of-tamil-nadu-karnataka-chief-minister-shivakumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-dam-is-for-the-benefit-of-tamil-nadu-karnataka-chief-minister-shivakumar#comments</comments><guid isPermaLink="false">a3b11deb-8afb-46ed-9d4a-7a600d44ee1b</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:33:41 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:33:41.785Z</atom:updated><atom:author><atom:name>Gopal J</atom:name><atom:uri>/api/author/2406195</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சென்னை,மேகதாது அணை,கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்,CMVijay,DKShivkumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b44idnux/kovalam33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b44idnux/kovalam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான் மேகதாது அணை கட்டப்படுகிறது என கர்நாடகா முதல்-மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார்.</p><p>தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு முடிந்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- </p><p>மேகதாது அணை தமிழகத்துக்காக கட்டப்படுகிறது. கர்நாடகாவிற்காக அல்ல,  மேகதாது அணை மூலம் கர்நாடகாவுக்கு 5 டிம்சி தண்ணீரையே பயன்படுத்த உள்ளோம். பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை கருதியே மேகதாது அணை கட்டப்படுகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் குடிநீருக்காக 5 டிஎம்.சி நீரை எடுத்துக்கொண்டு எஞ்சியதை தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வழங்குவோம் என்றார்.</p><p>முன்னதாக, மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாடுக்குத்தான் அதிக பலன்.மேகதாது அணையின் ஒவ்வொரு சொட்டு நீரும் தமிழ்நாடு, புதுச்சேரி விவசாயிகளுக்கு உதவும்.நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும். </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> கட்டப்படாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும் என அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் சதி: தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-conspiring-to-undermine-the-verdicts-of-the-cauvery-water-disputes-tribunal-and-the-supreme-court-tamil-nadu-government-must-not-be-caught-off-guard-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-conspiring-to-undermine-the-verdicts-of-the-cauvery-water-disputes-tribunal-and-the-supreme-court-tamil-nadu-government-must-not-be-caught-off-guard-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">36b3fed4-0f8a-4027-a3b3-97c0301ed829</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:21:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:21:05.309Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/a9hb4bn7/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/a9hb4bn7/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் நடத்தும் சதியை நம்பி தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“காவிரி நீர் விவகாரத்தில் நதிநீர் பங்கீடு என்ற மனநிலையில் இருந்து விலகி நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலையை நோக்கி நகர வேண்டிய தருணம் வந்து விட்டதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.  இதை காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து துரோகம் செய்ய விரிக்கப்படும் சதி  வலையாகவே பார்க்க வேண்டியுள்ளது. கர்நாடகத்தின் இந்த சதி வலையில் தமிழகம் ஒருபோதும் சிக்கிக் கொள்ளக் கூடாது.</p><p>சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெற்ற 31 ஆம் தென்னிந்திய முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், ‘‘மேகதாது அணை கட்டப்படுவதால் கர்நாடக மாநிலத்திற்கு எவ்வளவு நன்மை கிடைக்குமோ, அதே அளவு நன்மை தமிழகத்திற்கும், புதுவைக்கும் கிடைக்கும். காவிரி நீர் விவகாரத்தில் நதிநீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து விலகி நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலையை நோக்கி நகர வேண்டிய நேரம் வந்து விட்டது’’ என்று தெரிவித்திருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>காவிரி நீர் விவகாரத்தில் ஒத்துழைப்பு என்று பேசும் உரிமையை 100 ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகம் இழந்து விட்டது. 1892 ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்டிருந்த காவிரி நீர்ப்பகிர்வு உடன்பாட்டை மீறி 1910 ஆம் ஆண்டில் கண்ணம்பாடி அணையை கட்ட முயற்சி செய்தது, கண்ணம்பாடி அணை எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை மொத்தம் 11 டி.எம்.சி மட்டுமே கொள்ளளவு கொண்டிருக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் அரசு அறிவுறுத்தியதையும் மீறி, முதலில் 41.50 டி.எம்.சியும், பின்னர் 49.45 டி.எம்.சியும் கொண்ட அணையாக கட்டியது.</p><p>1924 ஆம் ஆண்டு நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்தை 1974 ஆம் ஆண்டில் புதுப்பிக்க மறுத்தது, 1967 &amp;1977 இடையிலான காலத்தில் நிலவிய தெளிவற்ற சூழலை பயன்படுத்திக் கொண்டு காவிரி துணை ஆறுகளின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகளைக் கட்டியது, 1990 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அமைப்பதை எதிர்த்தது, 1991 ஆம் ஆண்டில் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பையும், 2007 ஆம் ஆண்டில் இறுதித் தீர்ப்பையும் எதிர்த்தது, கடந்த 35 ஆண்டுகளில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருவது என காவிரி விவகாரத்தில் கர்நாடகம் இழைத்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது.</p><p>இவ்வளவு துரோகங்களை இழைத்த கர்நாடக அரசு, 1990 முதல் 2018 வரை 29 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி, காவிரி நீரில் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில், இப்போது நீர்ப்பகிர்வு வேண்டாம்; நீர் ஒத்துழைப்பு வேண்டும் என்று கர்நாடம் கூறுவது அப்பட்டமான சதிவலை வீசும் முயற்சி ஆகும். கடந்த அரை நூற்றாண்டுகளில் ஏராளமான சட்டப் போராட்டங்களை நடத்தி காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக நடுவர் மன்றத்திலும், சுப்ரீம் கோர்ட்டிலும் பெற்றுள்ள தீர்ப்புகளை குப்பையில் வீசி விட்டு, 1890 ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு பின்னோக்கி செல்வோம்; எந்த உரிமையும் இல்லாமல் காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் தமிழ்நாடு கையேந்தி நிற்கும் நிலையை ஏற்படுத்துவோம் என்பது தான் இந்த அழைப்பின் பொருள் ஆகும்.</p><p>1892 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மதித்து 1910 ஆம் ஆண்டில் புதிய அணையை கட்டும் பணிகளை தொடங்காமல் இருந்திருந்தாலோ, 1974 ஆம் ஆண்டில் காவிரி நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்து இருந்தாலோ, 1970 ஆம் ஆண்டுகளில் 4 அணைகளை கட்டாமல் இருந்திருந்தாலோ, காவிரி நீர்ப்பகிர்வு குறித்த நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றின் தீர்ப்புகளை மதித்திருந்தாலோ, கர்நாடக முதல்-மந்திரியின் இன்றைய அழைப்பை ஏற்றிருக்கலாம். ஆனால், அதற்கு எதிரான நிலையையே கர்நாடக அரசு மேற்கொண்ட நிலையில், இப்போது அந்த அழைப்பை ஏற்பது தமிழகத்திற்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.</p> <p>கர்நாடக முதல்-மந்திரியின் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்க  கர்நாடக அரசு மறுக்கும் போதெல்லாம் தமிழ்நாடு நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது; மாறாக, கர்நாடக அரசுடன் பேச்சு நடத்திதான் தண்ணீரை பெற வேண்டியிருக்கும். அப்போது கர்நாடகம் பிச்சையாக வழங்கும் நீரை மட்டும்தான் காவிரியில் நாம் பெற முடியும். இது காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பறித்து விடும்.</p><p>எனவே, கர்நாடக முதல்-மந்திரியின் அழைப்பை தமிழக அரசு எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. கர்நாடக அரசுடன் எந்தக் காலத்திலும் பேச்சு நடத்தக் கூடாது. மாறாக, காவிரி நீர்ப்பகிர்வு, மேகதாது அணை ஆகியவை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகளை விரைவாகவும்,  திறமையாகவும் நடத்தி காவிரி நதிநீரில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வனம் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதே உண்மையான சமூகநீதி - மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protecting-livelihood-rights-of-forest-dwelling-people-is-true-social-justice-mu-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protecting-livelihood-rights-of-forest-dwelling-people-is-true-social-justice-mu-veerapandian#comments</comments><guid isPermaLink="false">6963bb87-763e-4d96-b337-2825e78cf538</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:16:12 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:16:12.098Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPI,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/z9dmvafa/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/z9dmvafa/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமை மற்றும் சட்டப்பூர்வ வன உரிமைகளைப் பாதுகாப்பதே உண்மையான சமூகநீதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களைப் புலிகள் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரே அடியாக வெளியேற்றும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு ஆழ்ந்த கவலைக்குரியது.</p><p>மே 29, 2026 தீர்ப்பில், மேகமலைப் பகுதியில் 4,601 ஆக்கிரமிப்புகள் 5,072.653 ஹெக்டேர் பரப்பில் இருப்பதாக நீதிமன்றப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 1,595 பேருக்கு நிரந்தர வீடும், காட்டைச் சார்ந்த வாழ்வாதாரமும்; 233 பேருக்கு தற்காலிக வீடும், காட்டைச் சார்ந்த வாழ்வாதாரமும்; 2,773 பேர் காட்டில் விவசாயத்தை மட்டுமே சார்ந்தவர்களுமாக தமிழ்நாடு அரசு வகைப்படுத்தியுள்ளது. இவர்கள் வெறும் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ அல்ல; வறுமையிலும் வாழ்வாதாரப் பாதுகாப்பின்றியும் காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் ஆவர். பல பத்தாண்டுகளாக, தலைமுறை  தலைமுறைகளாக காடுகளில் வாழும் மக்கள் ஆவர்.</p><p>வன உரிமைகள் சட்டம், 2006 வழங்கியுள்ள உரிமைகள் முழுமையாகக் கண்டறியப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பாக மக்களை வெளியேற்றுவது சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே புறக்கணிப்பதாகும். குறிப்பாக உரிமைகள் அங்கீகரிப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறை முடிவடையும் முன் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான முக்கியமான பாதுகாப்பை வழங்குகிறது.</p><p>சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களின் உரிமைகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. காட்டைப் பாதுகாக்க வேண்டும்; ஆனால் காட்டைப் பாதுகாக்கும் பெயரில் காட்டோடு வாழ்ந்த மக்களை அழித்தொழிக்கக் கூடாது. பெரிய அளவிலான அரசு மற்றும் அதிகார வர்க்க ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக ஏழை வனவாழ் மக்களையே முதன்மை குற்றவாளிகளாக நடத்துவது சமூகநீதிக்கு எதிரானது. நீதிமன்றப் பதிவுகளிலேயே அரசு அதிகாரிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சமீபத்திய அணுகுமுறை தமிழ்நாடு அரசுக்கு ஒரு முக்கிய முன்னுதாரணமாகும். அங்கு 2026 ஜூலை 30-ம் தேதி பழங்குடியினர் விவகாரத்துறை, உரிமைகள் பெறும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு சரிபார்க்கப்படும் வரை அவர்களை வெளியேற்றக் கூடாது என்றும், மாவட்ட நிர்வாகங்கள் மூன்று அடுக்கு சட்ட நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டின் இத்தீர்ப்பை  ஏற்றுக்கொண்டு அவகாசம் கேட்பது பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை உரிமைகளை  பாதுகாக்க வேண்டும் என்ற அரசின் கடமையிலிருந்து தவறும் செயலாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.</p><p>தமிழ்நாடு அரசு, அனைத்து தனிநபர் மற்றும் சமூக உரிமைகளையும் முதலில் முழுமையாகக் கண்டறிந்து அங்கீகரிக்க வேண்டும். அதுவரை கட்டாய வெளியேற்றத்தை நிறுத்த வேண்டும். பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமை மற்றும் சட்டப்பூர்வ வன உரிமைகளைப் பாதுகாப்பதே உண்மையான சமூகநீதியும் சுற்றுச்சூழல் நீதியும் ஆகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காரில் மனைவியை குத்தி கொன்றது ஏன்? கணவர் பரபரப்பு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-the-husband-stab-his-wife-to-death-in-the-car-shocking-news</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-the-husband-stab-his-wife-to-death-in-the-car-shocking-news#comments</comments><guid isPermaLink="false">046e605b-5642-4b70-a8fd-4577692af8b9</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:07:52 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:07:52.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,Car,மனைவி,கிருஷ்ணகிரி,Krishnagiri,Husband wife</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wa3yrd0r/wife33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
காரில் மனைவியை குத்தி கொன்றது ஏன்? ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wa3yrd0r/wife33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>ராயக்கோட்டை அருகே மனைவியை குத்திக் கொன்ற விவசாயி, காரில் இருந்து உடலை கீழே தள்ளி விட்டு ரத்தக்காயங்களுடன் போலீசில் சரண் அடைந்தார்.</p><h2>பிறந்தநாள்</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சின்னபேள கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடசாமி மளகன் எல்லப்பா (வயது 32). விவசாயி. இவருடைய மனைவி பிரேமா (28). இவர்களுக்கு தனுஷ் (11), வெற்றி (8) ஆகிய 2 மகன்களும், லக்ஷயா (10) என்ற மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.</p><p>மூத்த மகன் தனுசுக்கு வருகிற 30-ந்தேதி பிறந்த நாள் என்பதால், நேற்று முன்தினம் அவனுக்கு புத்தாடை வாங்கி கொடுத்துவிட்டு மகன்களை பார்த்து விட்டு கணவன், மனைவி இருவரும் கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.</p><h2>ஓடும் காரில் தகராறு</h2><p>இரவு 8 மணி அளவில் கெலமங்கலம் கூலிசந்திரம் நான்கு வழிச்சாலையில் வந்த போது கணவன்- மனைவி இடையே ஓடும் காரில் தகராறு ஏற்பட்டுள் ளது. உடனே எல்லப்பா காரை நிறுத்தி இருக்கிறார். தகராறு முற்றவே ஆத் திரம் அடைந்த பிரேமா, காரில் இருந்த கத்தியை எடுத்து கணவரை சரமாரி யாக குத்தியதாக தெரிகிறது. இதில் சுதாகரித்துக் கொண்ட எல்லப்பா, மனைவியை தாக்கியதுடன் அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சர மாரியாக குத்தி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரேமா காரி லேயே பிணமானார்.</p><p> உடனே அவரை காரில் இருந்து அங்கேயே கீழே தள்ளி விட்டுவிட்டு எல் லப்பா மத்திகிரி போலீஸ் நிலையம் வந்தார். அவர், கையில் ரத்த காயங் கள் இருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரிடம் போலீசார் விசாரித்த போது, மனைவியை கொலை செய்து விட்டதாகவும். சரண் அடைவதாகவும் கூறியுள்ளார். உடனே போலீசார் அவரை ஒசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இந்த கொலை நடந்த இடம் கெலமங்கலம் போலீஸ் நிலைய எல்லை பகுதி என்பதால், சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கெலமங்கலம் போலீசார் சம் பவ இடத்துக்கு சென்று பிரேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவல்கள் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தன. போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-</p><h2>கருத்து வேறுபாடு</h2><p>எல்லப்பாவுக்கும். பிரேமாவுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 3 குழந்தைகள் பிறந்த நிலை யில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரேமா கெலமங்க லம் அருகே ஜோதிபுரத்தில் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். 2 மகன்களை விடுதியில் தங்கி படிக்க வைத்த எல்லப்பா, மகளை மட்டும் தானே வளர்த்து வந்தார்.</p><p>இதற்கிடையே எல்லப்பாவுக்கும், திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரே மாவுக்கு தெரிந்தவுடன், கணவரை விட்டு பிரிந்து இருப்பதால்தான், அவர் வேறு பெண்ணுடன் பழகுகிறார் என நினைத்துள்ளார். எனவே கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கடந்த 14-ந் தேதி ஒசூர் அனைத்து மகளிர் போலீசில் பிரேமா புகார் அளித்தார்.</p><h2>செருப்பால் அடித்த மனைவி</h2><p>போலீசார் எல்லப்பா, பிரேமா இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேறு பெண்ணுடன் எப் படி பழகலாம் என்று கூறி பிரேமா போலீஸ் நிலையத்தில் வைத்தே கணவரை செருப்பால் அடித்ததாக தெரிகிறது. அத்தனை பேர் மத்தியில் செருப்பால் அடித்து விட்டாளே என்று எல்லப்பா வேதனை அடைந்தார்.</p><p>அப்படி இருந்தும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%20"> கணவன்- மனைவி </a>இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர். கடந்த 3 நாட்களாக எல்லப்பா தன்னுடைய மாமனார் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று முன்தினம்தான் விடுதியில் தங்கி படிக்கும் மகன்களை பார்ப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் காரில் சென்றுள்ளனர்.</p> <h2>யார்? யாரை கொலை செய்வது என்பதில் போட்டி</h2><p>அப்போது போலீஸ் நிலையத்தில் செருப்பால் அடித்து அவமானப்படுத்திய மனைவியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று எல்லப்பா நினைத்துள்ளார். அதற்காகவே கத்தியை எடுத்து காரில் வைத்து இருக்கிறார். ஆனால் கணவன்-மனைவி தகராறு ஏற்பட்ட போது, பிரேமா முந்திக்கொண்டு கத்தியால் கணவரை தீர்த்துக்கட்ட முயன்றுள்ளார். ஆனால் யார்? யாரை கொலை செய்வது என்ற போட்டியில் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டதில் எல்லப் பாவே இறுதியில் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p><p>மனைவியை கணவரே கொலை செய்து விட்டு போலீசில் சரண் அடைந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: தவெக  நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-issue-no-change-in-tvks-stance-minister-nirmal-kumar-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-issue-no-change-in-tvks-stance-minister-nirmal-kumar-clarifies#comments</comments><guid isPermaLink="false">ff79952a-0021-4037-b241-9a3bab0ce57d</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:48:20.876Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா,அமைச்சர் நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/e1r979pj/Nirmal-kumar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/e1r979pj/Nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல் அமைச்சர்  விஜய், தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாக  விமர்சனங்கள் எழுந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடந்த தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய விஜய், “மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். கடந்த வாரம் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><h2>நிலைப்பாடு மாற்றம் என விமர்சனம்</h2><p>543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையை மாற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து முதல் அமைச்சர் விஜய் தற்போது  மாறியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளித்து இருக்கும் அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பதாவது; ஒவ்வொரு மாநிலங்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மின்சார தேவை இருந்தது.  நம்முடைய நிலங்கள் அதிகமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதே மாதிரி ஒவ்வொரு மாநிலங்களின் தேவைகள், பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>கவுன்சிலில் விவாதிக்கவில்லை</h2><p>அடுத்த கூட்டம் தெலுங்கானாவில் வைக்கலாமா? என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 543- என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. யாரும் திரித்து பேச வேண்டாம். காவிரி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம். எனவே அது குறித்து  இந்த கவுன்சிலில் விவாதிக்கவில்லை. முல்லை பெரியாறு அணை உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் 39 எம்பிக்கள் தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.தென் மாநிலங்களைத்தான் தொகுதி மறுவரையறை பாதிக்கும்” என்றார். </p> ]]></content:encoded></item><item><title>பேருந்து சேவைகளை ரத்து செய்யும் முடிவை உடனே கைவிடுக! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediately-reverse-the-decision-to-cancel-bus-services-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediately-reverse-the-decision-to-cancel-bus-services-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">2dd9a722-c95b-4be8-944e-65325b8e2fbf</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:03:48 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:03:48.694Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பேருந்து சேவை,Bus Service</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/lj2krody/8.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/lj2krody/8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டத்தில் வார நாட்களில் 136 பேருந்துச் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பேருந்து சேவை நிறுத்தம்</h2><p>அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்தவும், டீசல் செலவைக் குறைக்கவும் தமிழகம் முழுவதும் பல பேருந்துச் சேவைகளை நிறுத்த தவெக அரசு திட்டமிட்டு வருவதாகவும், ஏற்கனவே விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டத்தில் வார நாட்களில் 136 பேருந்துச் சேவைகள் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.</p><h2>கிராமப்புற மாணவர்கள் அவதி</h2><p>முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 2000-ஆம் ஆண்டில் கொண்டு வந்த 'பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா' திட்டத்தின் மூலம் கிராமங்களுக்குச் சாலைகள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் அரசு, இன்று அனைத்து நகரங்களையும், கிராமங்களையும் இணைக்கும் வகையில் தரமான சாலைக் கட்டமைப்பை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தற்போதைய தவெக அரசு திடீரென பேருந்து சேவைகளை நிறுத்துவதால் கிராமப்புற மாணவர்களும், கூலித் தொழிலாளர்களும் பெரும் அவதிக்குள்ளாவார்கள்.</p><h2>வணிக ரீதியான துறையல்ல</h2><p>அரசுப் போக்குவரத்து என்பது வணிக ரீதியான லாப-நஷ்டத்தைப் பார்க்கும் துறையல்ல; அது சாமானிய மக்களின் அடிப்படை உரிமை மற்றும் சேவைத் துறையாகும். ‘மாற்றத்திற்கான ஆட்சி' என்று முழங்கிவிட்டு, தவெக அரசு அதிகாரத்திற்கு வந்த 100 நாட்களிலேயே ஏழை, எளிய மக்களைப் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, ரத்து செய்யப்பட்ட அனைத்துப் பேருந்துச் சேவைகளையும் உடனடியாக மீண்டும் இயக்குவதோடு, மேலும் சேவைகளைக் குறைக்கும் முடிவையும் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tambaram-and-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tambaram-and-velankanni#comments</comments><guid isPermaLink="false">f9001f0e-495e-4a87-9f4a-9e3cd3f3f8fb</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:51:38 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:51:38.773Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Tambaram,தாம்பரம்,Special train,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/q2s08nw6/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/q2s08nw6/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.50 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 06037) மறுநாள் காலை 7.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடைகிறது.</p><p>மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 26, செப்டம்பர் 2, 9 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) நள்ளிரவு 12.45 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06038) அதேநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. </p><p>21 அம்ரித் பாரத் ரெயில் பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள் - ரூ.16.2 கோடிக்கு ஏலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/letters-handwritten-by-mahatma-gandhi-auctioned-for-rs-162-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/letters-handwritten-by-mahatma-gandhi-auctioned-for-rs-162-crore#comments</comments><guid isPermaLink="false">24c45db9-5268-4dff-91db-7f52ff4ee40e</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:45:42 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:45:42.158Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>auction,ஏலம்,Mahatma Gandhi,மகாத்மா காந்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/jpok163d/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/jpok163d/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>மகாத்மா காந்தி தனது நெருங்கிய கூட்டாளியும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி.ஹிங்கோரனிக்கு எழுதிய, உண்மை, அகிம்சை மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் சார்ந்த 688 கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு ஒன்று, 'சாப்ரானார்ட்' (Saffronart) நிறுவனம் நடத்திய ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையானது. இதன் மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட இந்திய வரலாற்று ஆவணத்திற்கான உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த பிரதிகள் அனைத்தும் மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய கடிதங்கள் ஆகும். ஆனந்த் டி.ஹிங்கோரனியின் மனைவி வித்யா மறைந்த பிறகு, அவருக்கு ஆறுதல் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் மகாத்மா காந்தி இந்த கடிதங்களை எழுதியுள்ளார். பின்னர் இந்த கடித பரிமாற்றம் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்துள்ளது. பின்னாட்களில் இந்த கடிதங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு "A Thought for the Day" என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. </p> <p>இந்த கடிதங்கள் குறித்து ஏல நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மகாத்மா காந்தியின் இந்த கையெழுத்துப் பிரதியானது உண்மை, அகிம்சை, பிரம்மச்சரியம், உடைமை தவிர்த்தல், அச்சமின்மை, மத சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, பிரார்த்தனை, ராமநாமம், சேவை, உழைப்பு, பசி, கடமை, சுயராஜ்யம், தார்மீகப் பொறுப்பு, மௌனம், மனசாட்சி, பற்றின்மை, சுய-உணர்தல் மற்றும் இறைவனைத் தேடுதல் ஆகியவற்றைப் பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இது மட்டுமின்றி, மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் அடங்கிய 86 தொகுப்புகள் இன்று ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக, கடவுள் மற்றும் பகவத் கீதை குறித்த காந்தியின் சிந்தனைகளை உள்ளடக்கிய, கையெழுத்துப் பிரதி மற்றும் கடிதங்களைக் கொண்ட 'Message on God' (கடவுள் குறித்த செய்தி) என்ற தொகுப்பு, ரூ.1.68 கோடிக்கு விற்பனையானது.</p><p>இந்த ஏலத்தில் இடம்பெற்ற தனிப்பட்ட பொருட்களில், காந்தியின் 'பெட்டி ராட்டை' (box spinning wheel) மற்றும் 2 கடிதங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு ரூ. 1.02 கோடிக்கு விற்பனையானது. அதே போல், காந்தி எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட, அவரது கையொப்பம் இடப்பட்ட புகைப்படம் ரூ.78 லட்சத்திற்கும், பொருளாதார சுதந்திரம் குறித்த காந்தியின் கடிதங்கள், தந்தி செய்திகள் மற்றும் அஞ்சல் அட்டைகள் அடங்கிய தொகுப்பு ரூ.57.60 லட்சத்திற்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை - மைத்துனர் உள்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electrician-hacked-to-death-over-illicit-affair-three-arrested-including-brother-in-law</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electrician-hacked-to-death-over-illicit-affair-three-arrested-including-brother-in-law#comments</comments><guid isPermaLink="false">2f3e1227-9d6b-4887-9de3-017ef171c52f</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:41:51 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:41:51.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,murder,கொலை,செங்குன்றம்,Redhills</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wwaoly7i/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/wwaoly7i/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மைத்துனர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>கள்ளக்காதல்</h2><p>சென்னை செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (40 வயது). எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகன்களை பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில், ரத்தினவேல் பாண்டியனுக்கும் அவரது மைத்துனர் சரவணனின் (39 வயது) மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சரவணன் பலமுறை ரத்தினவேல் பாண்டியனை கண்டித்தும், அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், ரத்தினவேல் பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.</p><h2>வெட்டிக்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் செங்குன்றத்தை அடுத்த எம்.எ.நகர். வ.உ.சி. தெருவில் பைக்கில் சென்றுகொண்டிருந்த ரத்தினவேல் பாண்டியனை சரவணன், அவரது தம்பி தனசேகர் (34 வயது), உறவினர் பழனிசாமி (45 வயது) ஆகியோர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ரத்தினவேல் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.</p><p>தகவலறிந்த செங்குன்றம் உதவி கமிஷனர் பிராங்கிளின் ரூபன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ரத்தினவேல் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன், தனசேகர், பழனிசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராஜீவ் காந்தியின் தொலைநோக்குப் பார்வையே இன்றைய டிஜிட்டல் இந்தியா - ஜோதிமணி புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-digital-india-is-rajiv-gandhis-vision-jyothimani-praise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-digital-india-is-rajiv-gandhis-vision-jyothimani-praise#comments</comments><guid isPermaLink="false">ddd279fb-1c5f-4035-b4bb-656e3976b03c</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:40:44 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:40:44.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>birthday,பிறந்த நாள்,Jyothimani MP,ஜோதிமணி எம்பி,Rajiv Gandhi,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/e4k025df/83.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/e4k025df/83.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது.</p><p>இந்தியாவின் இளம் பிரதமராக பொறுப்பேற்று, இளமையின் கனவுகளோடும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையோடும் இந்தியாவை நவீனப் பாதையில் வழிநடத்தியவர் தலைவர் ராஜீவ் காந்தி.</p><p>நவீன இந்தியா, பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம், தொலைத்தொடர்பு புரட்சி என இன்று நாம் காணும் பல மாற்றங்களுக்கான அடித்தளத்தை அவர் தனது தொலைநோக்குப் பார்வையால் உருவாக்கினார்.</p><h2>வாக்களிக்கும் வயது 18</h2><p>அதேபோல், இளைஞர்களை ஜனநாயகத்தின் மையத்திற்கு கொண்டு வருவதற்காக வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்தார். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டிற்கான முயற்சிகள் மூலம், கிராமப்புறப் பெண்களும் அரசியல் அதிகாரத்திலும் முடிவெடுக்கும் அமைப்புகளிலும் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கினார்.</p><h2>ஜனநாயகப் புரட்சி</h2><p>என்னைப் போன்ற கிராமப்புறப் பின்னணியில் இருந்து வரும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண் அரசியலில் அடியெடுத்து வைக்கவும், மக்களுக்காகப் பணியாற்றவும் உருவான வாய்ப்புகளின் பின்னணியில், ராஜீவ் காந்தி முன்னெடுத்த இந்த ஜனநாயகப் புரட்சிக்கும் முக்கியமான பங்கு உண்டு.</p><h2>டிஜிட்டல் புரட்சி</h2><p>இன்று இந்தியா காணும் இளைஞர் எழுச்சியும், டிஜிட்டல் புரட்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கண்ட கனவுகளின் தொடர்ச்சியே. எதிர்கால இந்தியாவை கனவு கண்ட அந்த இளம் பிரதமரின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வைக்கும் நவீன இந்தியாவை உருவாக்கிய அவரது பங்களிப்பிற்கும் அவரது பிறந்த தினத்தில்  எனது நெஞ்சார்ந்த அன்பையும்,  மரியாதையையு.  செலுத்துகிறேன்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/rajiv-gandhi">ராஜீவ் காந்தியின் </a>கனவு நவீனமான, சமத்துவமான, இளைஞர்களின் சக்தியால் முன்னேறும் இந்தியா  என்றும் நமக்கு வழிகாட்டட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>
ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும் ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன்; ஏனென்றால்... கே.என். நேரு விளக்கம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-if-i-have-a-thousand-acres-of-land-i-eat-ration-rice-because-kn-nehrus-explanation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/even-if-i-have-a-thousand-acres-of-land-i-eat-ration-rice-because-kn-nehrus-explanation#comments</comments><guid isPermaLink="false">824665dc-b4c8-49de-bec6-3edbb3771db0</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:05:12 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:05:12.929Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Assembly,Minister K.N. Nehru,கே.என். நேரு,ration rice,ரேஷன் அரிசி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/k7wr431g/fdkne.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கே.என். நேரு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/k7wr431g/fdkne.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும் ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன் என முன்னாள் அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/">கே.என். நேரு</a> அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் காலை 9.30 மணிக்கு இன்றைய அலுவல்கள் தொடங்கின.  கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.  கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை.  அதற்கான விளக்கம் சபாநாயகர் தரப்பில் அளிக்கப்பட்டது.</p><p>இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக அவையில் பேசினர்.</p>  <h2>வெள்ளை நிற அரிசி</h2><p>இன்றைய நிகழ்வில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி அது தொடர்பான விவாதத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார்.</p><p>இதனை அடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கே.என். நேரு பேசினர். அவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ரேஷன் கடை அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும்தான் மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை என்றார். இதனால், சர்ச்சை எழுந்தது. தி.மு.க. தரப்பில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.</p> <h2>பரம ஏழை</h2><p>இதன்பின்னர், பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, கே.என். நேருவிடம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. அதனால், அவற்றிலேயே அவர் நெல் விளைவித்து கொள்கிறார். ஆனால், பரம ஏழையாக ரேஷன் கடையில்தான் அரிசி வாங்குகிறேன் என அவர் கூறி இன்றுதான் தெரிந்து கொண்டேன் என்றார்.</p><p>தொடர்ந்து அவர் பேசும்போது, சன்ன ரக நெல் அரிசிக்கு அதிக ஊக்கத்தொகை வழங்குவதற்கு காரணம், அதனை உற்பத்தி செய்ய வேண்டும் என பல்வேறு விவசாய சங்கங்களுடனான பலகட்ட ஆலோசனைக்கு பின்னர், முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.</p><h2>ரேஷன் அரிசி</h2><p>நான் சிறு வயதில் இருக்கும்போது, ரேஷன் கடைக்கு சென்று அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம் என் குடும்பம். அரிசி பெரிய அளவில் இருக்கும். விவசாயிகள் எங்களிடம், பயிர்களை மாற்ற வேண்டுமென்றால், சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி கொடுங்கள் என்றனர்.</p><p>இதனால் முதல்-அமைச்சர், மற்ற ஆட்சியை விட்டு விடுவோம். நம்முடைய ஆட்சியில் மக்களுக்கு கொடுக்க கூடிய அரிசியை சன்ன ரக அரிசியாக கொடுப்போம் என்றார். அனைத்து ரேஷன் கடைகளிலும் தாய்மார்கள் உள்பட மக்கள் வாங்கி செல்ல கூடிய அரிசி, சாப்பிட கூடிய அளவில் இருக்க வேண்டும் என கூறியவர் முதல்-அமைச்சர் என்று பேசினார்.</p> <h2>தமிழகத்தில் மட்டும்தான்...</h2><p>இதன்பின்னர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான காமராஜ் பேசும்போது, ரேஷன் அரிசி சாப்பிடுவதில்லை. வாங்குவதில்லை என 2 அமைச்சர்களும் கூறினர். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் அனைவருக்கும் அரிசி வழங்கப்படுகிறது. மற்ற எல்லா இடங்களிலும் பகுதியளவே கொடுக்கிறார்கள். தமிழகத்தில் உள்ளது, அனைவருக்கும் அரிசி வழங்கும் ஒரு பெரிய திட்டம் என்றார்.</p><p>அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டு, நாங்கள் கொச்சைப்படுத்தவில்லை. இந்த அனைத்து திட்டங்களும் எந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டாலும் அதில் நல்லவை உள்ளன. அமைச்சர்கள் இலவச அரிசியை பயன்படுத்தியது இல்லை. அது கருணை என்ற அடிப்படையில் இல்லாமல், தகுதி என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். மக்களை சென்றடைய வேண்டும். அது மக்களின் உரிமை. அதனையே கூறினோம் என்றார்.</p> <h2>கே.என். நேரு பேச்சு</h2><p>இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசும்போது, சன்ன ரக நெல்லை நாம் செய்ய முடியாது. அது அதிக அளவில் கிடைப்பதில்லை. ஆந்திரா பொன்னி போன்ற சில அரிசி ரகம் மட்டுமே அதிகம் கிடைக்கும். சன்ன ரகம் ஒரு பட்டத்தில்தான் பெற முடியும். அவற்றை வெளியில் இருந்து தான் வாங்க முடியும். அதிகம் விளைவிக்க முடியாது என்றார்.</p><p>ஆயிரக்கணக்கான நெல் வைத்திருக்கிறேன் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். எவ்வளவு நிலங்கள் இருந்தாலும், சாப்பிடறதுதான் சாப்பிட முடியும். சர்க்கரை நோய் வந்தவர்கள் அந்த ரேஷன் அரிசி சாப்பிட்டால்தான் குறையும் என டாக்டர் கூறினார். அந்த அறிவுரையின் பேரிலேயே அந்த அரிசியை சாப்பிட்டு வருகிறோம். இதுதான் உண்மை.</p><p>ஏதோ நாங்கள் உற்பத்தி செய்து, அவற்றை உங்களை போன்றவர்களுக்கு கொடுப்பதற்காகதான் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>ஒண்டிவீரன் நினைவு தினம் - வானதி சீனிவாசன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ondiveeran-memorial-day-tribute-to-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ondiveeran-memorial-day-tribute-to-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">72af95df-1793-4fe1-be82-591e0ed89c20</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:01:19 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:01:19.307Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Ondiveeran Memorial Day,ஒண்டிவீரன் நினைவு தினம்,புகழஞ்சலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2wf42dig/82.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/2wf42dig/82.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு தினத்தையொட்டி  தேசிய பாஜக முன்னாள் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்  புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.</p><h2>புகழஞ்சலி</h2><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும், தனியாகச் சென்று ஆங்கிலேயப் படைக்கு எதிராகப் பல போர்களில் வெற்றி  கண்ட மாவீரரான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">ஒண்டிவீரன்</a> அவர்களது நினைவு நாளில் அவரது வீரத்தையும்  நாட்டுப் பற்றையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு துணை நிற்போம்&apos; - காங்கிரஸ் கட்சி தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-party-resolves-to-support-the-tamil-nadu-governments-efforts-to-prevent-the-construction-of-a-dam-at-mekedatu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-party-resolves-to-support-the-tamil-nadu-governments-efforts-to-prevent-the-construction-of-a-dam-at-mekedatu#comments</comments><guid isPermaLink="false">26856244-6815-4719-abde-bae7f714b6b3</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:57:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:57:18.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Meghadadu Dam,மேகதாது அணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/dv29xss4/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/dv29xss4/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மறைந்த முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:-</p><p>“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:</p> <h2>அரசியல் தீர்மானம்</h2><p>காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2004 முதல் 2014 வரை இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று மகத்தான சாதனைகளை புரிந்தது. இதற்காக வரலாற்றில் டாக்டர் மன்மோகன்சிங் என்றும் நினைவு கூரப்படுவார்.</p><p>2014 மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது நரேந்திர மோடி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள ரூபாய் 85 லட்சம் கோடி கறுப்புப்  பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்துவோம், ஆண்டுக்கு 2 கோடிப்  பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காகக்  கூட்டுவோம், அனைத்துப் பொருட்களையும் இந்தியாவிலேயே தயாரிப்போம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிப்போம், விலைவாசியைக்  குறைப்போம், எல்லோருக்கும் கழிப்பறை, எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் மின்சாரம், எல்லோருக்கும் சமையல் எரிவாயு இணைப்பு, நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றுவோம், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கில் நிலைநிறுத்துவோம், 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் கோடி டாலராக உயர்த்துவோம், அனைத்து மாநில முதல்வர்களையும் பிரதமருக்கு இணையாக மதிப்போம், இட ஒதுக்கீட்டை உறுதி செய்து சமூகநீதியைக்  காப்போம், அனைத்து மாநில மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்போம் என்ற பல வாக்குறுதிகளை வழங்கினார். தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்து, நரேந்திர மோடி பிரதமராகப்  பொறுப்பேற்று 12 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று பா.ஜ.க.வை கேட்க வேண்டிய இடத்தில்   காங்கிரஸ் கட்சி இருக்கிறது. </p><h2>வரலாறு காணாத சமத்துவமின்மை  </h2><p>நரேந்திர மோடி ஆட்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏழை,எளியவர்களின் நலனைப் புறக்கணித்து சில தொழிலதிபர்கள் பயனடைவதற்கே உதவியிருக்கின்றன. இதை அம்பலப்படுத்துகின்ற வகையில் பல அறிக்கைகள் வெளிவந்துள்ன. 2026ஆம் ஆண்டின் உலக சமத்துவமின்மை அறிக்கையின்படி,  நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 58 சதவீதத்தை மேல்மட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினர் பெற்று வருகின்றனர். கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவிகித மக்களுக்கு வெறும் 15 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. </p><p>மேல்மட்டத்திலுள்ள  10 சதவீத கார்ப்பரேட்டுகள் நாட்டின் 65 சதவீத சொத்துகளை மோடி ஆட்சியில் குவித்துள்ளனர். இதில் உயர்மட்டத்தில் உள்ள  ஒரு சதவிகித நபர்கள் மட்டும் 40 சதவீத சொத்துகளைத் தன்வசப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் தற்போதைய வருமான சமத்துவமின்மை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை விட மோசமான நிலையில் உள்ளது. மேல்மட்டத்தில் உள்ள 10 சதவிகிதத்தினரின் வருமானத்திற்கும், கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினரின் வருமானத்திற்குமான இடைவெளி கடந்த 2014 முதல் 2024 வரை நிலையாக இருக்கிறது. இந்த வரலாறு காணாத சமத்துவமின்மை நரேந்திர மோடியின்  ஆட்சி கார்ப்பரேட்டுகளின் காவலன் என்பதை  உறுதி செய்கிறது. இந்த சொத்துக் குவிப்பை நம்பத்தகுந்த சர்வதேச ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்பார்ம் அறிக்கை உறுதி செய்திருக்கிறது.</p><h2>தொகுதி மறுவரையறை </h2><p>மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுகிறபோதெல்லாம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது தென் மாநில மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்குத்தான் பயன்படும். 1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் 543 மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையே இன்னும் 25 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டுமென்று அன்னை இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது, 1976-ல் அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார். 2002 ஆம் ஆண்டில் பிரதமர் வாஜ்பாய் இதே நிலையை 2026 வரை நீட்டிக்கிற வகையில் மீண்டும் திருத்தம் கொண்டு வந்து மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்று தொடர உறுதி செய்தார். </p><p>ஆனால், 2011 மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை உயர்த்த வேண்டுமென்று பா.ஜ.க. முயற்சி செய்வது, குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் மக்கள் பெருக்கத்தைக்  குறைத்த தென் மாநில மக்களை தண்டிக்கின்ற செயலாகும். எனவே, 1971 மக்கள் தொகை அடிப்படையில் இறுதி செய்யப்பட்ட 543 மக்களவைத் தொகுதிகளையும், அதில் மகளிருக்கான இடஒதுக்கீடு 33 சதவிகிதத்தையும் வழங்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகும். இதன்மூலம் அனைத்து மாநில மக்களையும் உள்ளடக்கி வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற கூட்டாட்சி முறையை உறுதி செய்ய முடியும் என்று  இப்பொதுக்குழுக்  கூட்டம் உறுதியாக நம்புகிறது. </p><h2>விவசாயிகளின் விரோத அரசு </h2><p>விவசாயிகளின் விளை பொருட்களுக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதற்கு மாறாக, குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பறிக்கின்ற வகையில் 3 வேளாண் சட்டங்களை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடும் குளிர், வெயிலைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி அந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைக்கிற நிலையை ஏற்படுத்தினார்கள். பா.ஜ.க.வின் ஒரே நாடு, ஒரே சந்தையை விவசாயிகள் ஏற்கத் தயாராக இல்லை. </p><p>அதற்கு மாறாக, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு என்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கையை ஒன்றிய பா.ஜ.க.  அரசு இதுவரை நிறைவேற்ற முன்வரவில்லை. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதால் அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என்று கூறுகிற ஒருவரை பிரதமராகப் பெற்றிருப்பதற்கு விவசாயிகள் வெட்கித்  தலைகுனிய வேண்டும். நரேந்திர மோடியைப் போன்ற விவசாய விரோத எண்ணம் கொண்ட, கார்ப்பரேட் ஆதரவு பிரதமரை இந்தியா இதுவரை கண்டதில்லை. </p><h2>கறுப்புப் பணம் ஒழிப்பு </h2><p>தேர்தல் பரப்புரையில் கொடுத்த கறுப்புப் பணம் ஒழிப்பு குறித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதற்கு மாறாக, பொருளாதாரப்  பேரழிவுக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி மேற்கொண்டார். ஆனால், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மொத்தத் தொகையில் 99 சதவிகிதம் வங்கிகளுக்குத் திரும்ப வந்து விட்டது. இதனால் கறுப்புப் பணம் ஒழியவில்லை. </p><p>எனவே, கறுப்புப்  பணத்தை கார்ப்பரேட்டுகள் வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்வதற்குத்தான் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை உதவியது. ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால்  35 லட்சம் பேர் வேலையிழந்தனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபாய் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது நரேந்திர மோடியால் நாட்டுக்கு ஏற்பட்ட பேரழிவுகளில் ஒன்றாகும். </p><h2>தேர்தல் பத்திர நன்கொடை குவிப்பு</h2><p>கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை செய்ததற்காக பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திர நன்கொடை குவிந்துள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக அரசியல் கட்சிகள் நிதி பெறுவது  சட்டவிரோதம் என்று கடந்த பிப்ரவரி 2024-ல் உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. </p><p>ஆனால், இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பாக 2018 முதல் 2024 வரை கார்ப்பரேட்டுகள் வழங்கிய மொத்த நன்கொடை ரூபாய் 16,518 கோடி. இதில் பா.ஜ.க. பெற்றது மட்டும் ரூபாய் 8252 கோடி. இது மொத்த நன்கொடையில் 50 சதவிகிதமாகும். இது ஊழல் இல்லை என்றால் வேறு எது ஊழல் என்பதை பா.ஜ.க. விளக்க வேண்டும். </p><h2>தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு</h2><p>தன்னிச்சையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் நரேந்திர மோடியின் கைப் பாவையாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சிறப்பு தீவிர திருத்தம் என்கிற பெயரில் பீகார் தேர்தலுக்கு முன்பாக 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது. இதை எதிர்த்து தலைவர் ராகுல்காந்தி வாக்காளர் உரிமைப் பேரணி நடத்தினார். ஆனாலும், சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் வாக்காளர்களை நீக்கி வாக்கை திருடுகிற தேர்தல் ஆணையத்தின் போக்கு மாறவில்லை. </p><p>சமீபத்தில் மூன்றாவது கட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக 16 மாநிலங்கள் 3 யூனியன் பிரதேசங்களில் ஒன்றரை கோடி வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கையின் காரணமாக தேர்தலில் சமநிலைத்தன்மை இல்லாமல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக செயல்படுகிற போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இதை எதிர்த்து தொடர்ந்து போராடி உரிமைக்குரல் எழுப்பி வருகிற தலைவர் ராகுல்காந்தி அவர்களை இக்கூட்டம் மனதார பாராட்டுகிறது, போற்றுகிறது.</p><h2>காவிரி - மேகதாது</h2><p>நீண்டகாலமாக நிலவி வந்த காவிரி பிரச்சினைக்கு முடிவு கட்டுகின்ற வகையில் 2007 இல் வெளிவந்த நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு, 2018 இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி நீர் பகிர்வு நடைபெற வேண்டும். ஆனால், இவற்றை மீறுகின்ற வகையில் காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. </p><p>தமிழகம் பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரிப் படுகை மாநிலங்களை பாதிக்கின்ற வகையில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீரின் அளவை நிர்ணயிக்கும் தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள பிலிண்குடுலுவிற்கு 4 கி.மீ. தூரத்திற்கு மேலே கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே கட்டுப்படுத்தப்படாத மழை நீரின் மூலம் தமிழகத்திற்கு மட்டுமே கிடைக்கக் கூடிய 80 டி.எம்.சி. நீரை அபகரிக்கும் நோக்கத்துடன் ரூபாய் 9000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தமிழ்நாடு எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளாது. மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால், காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாற வழிகோலும் என தமிழகமே ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. </p><p>இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. இது பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கை உறுதிப்படுத்துகிறது. கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் எல்லோருமே தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவேதான் கடந்த காலங்களில் செயல்பட்டிருக்கிறார்கள். காவிரி நீரின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும் தமிழக அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போம் என்று இப்பொதுக்குழு உறுதி கூறுகிறது. </p> <h2>மாநில உரிமைகள் பறிப்பு  </h2><p>மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்போம் என்று வாக்குறுதி வழங்கிய நரேந்திர மோடி ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் ஒற்றை ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசின் அதிகாரங்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டன. மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் ஜி.எஸ்.டி., திட்டக்குழு கலைப்பு, புதிய கல்விக் கொள்கை, மாநில மொழிகளுக்கான நிதிக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. </p><p>அனைத்து மொழிகளையும் சமமாகக்  கருத வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் புதிய கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழித் திட்டம் திணிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூபாய் 2952 கோடியை விடுவிக்க ஒன்றிய பா.ஜ.க.வின் கல்வியமைச்சர் தயாராக இல்லை. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுகிற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு  ஊதியம் வழங்க முடியாமல் தமிழக அரசே அந்த நிதிச்சுமையை ஏற்று வருகிறது.</p><p>அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக்  கூட்டணி ஆட்சியில்,  2004 இல் தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்பட்டது. 2017 முதல் 2025 வரை சமஸ்கிருத மொழிக்கு ரூபாய் 2532 கோடியும், செம்மொழித்  தகுதி பெற்ற தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கும்  சேர்த்து ரூபாய் 147.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத்  தொகையை விட சமஸ்கிருத மொழிக்கு 17 மடங்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியை இந்தியாவில் பேசுபவர்கள் மொத்தம் 14,000 பேர் தான். பா.ஜ.க.வின் மொழிக் கொள்கை என்பது இந்தி மொழியோடு சமஸ்கிருதத்தையும் திணிப்பதுதான்.</p><h2>வெள்ள நிவாரண நிதி மறுப்பு  </h2><p>கடந்த 12 ஆண்டுகளில் வெள்ளம், வறட்சி நிவாரண நிதியாக தமிழக முதலமைச்சர்கள் ஒன்றிய அரசிடம் கேட்ட மொத்தத் தொகை ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து 500 கோடி. ஆனால், பிரதமர் மோடி வழங்கியதோ ரூபாய் 5778 கோடி. கேட்ட தொகையில் 5 சதவிகிதத்தைக் கூட தர மறுத்த நரேந்திர மோடி தமிழகத்தை வஞ்சித்ததற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. அதனால்தான் தமிழக மக்கள் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வெறுத்து ஒதுக்கினார்கள்.</p><h2>கூட்டணி சகாப்தத்தை வரவேற்கிறோம்</h2><p>கடந்த 60 ஆண்டுகளாக திராவிட இயக்கங்களோடு கூட்டணி வைத்து அவர்கள் ஆட்சி அமைத்ததில்  காங்கிரஸ் கட்சி பெரும் பங்காற்றியிருக்கிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் எந்த வகையிலும் பங்கு கொடுப்பதற்கு திராவிட இயக்கங்கள் தயாராக இருந்ததில்லை. இந்நிலையில் திராவிட இயக்கங்களின் புரையோடிப் போன ஊழலாட்சிக்கு முடிவு கட்டுகின்ற வகையில் த.வெ.க. தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் எடுத்த முயற்சிக்கு 27 மாதங்களில் பலன் கிடைத்து தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக நெஞ்சார இக்கூட்டம் வரவேற்கிறது. </p> <h2>ஊழலற்ற ஆட்சி</h2><p>தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு எந்தவகையிலும் இடமில்லை என்கிற நோக்கத்தோடு, வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவு நிறைவேறியிருக்கிறது. இதைக் கொண்டாடுகிற வகையில் தான் ‘லஞ்சம் தவிர் - நெஞ்சம் நிமிர்” என்கிற இயக்கத்தை காமராஜர் பிறந்தநாளில் தமிழகமெங்கும் காங்கிரஸ் கட்சி பரப்புரை மேற்கொண்டதை இக்கூட்டம் குறிப்பிட விரும்புகிறது. </p><h2>நமது லட்சியமும் இலக்கும்</h2><p>மத்தியில் நடைபெற்று வரும் நரேந்திர மோடி ஆட்சியில் நிகழும் மக்கள் விரோதச்  செயல்களுக்கு எதிராக மக்களவையிலும், மக்கள் மன்றத்திலும் நாள்தோறும் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தமது கடுமையான உழைப்பின் மூலம் எதிர்ப்பைவெளிப்படுத்தி வருகிறார். நரேந்திர மோடியை எதிர்க்கின்ற பேராண்மைமிக்க அரசியல் தலைவராக ராகுல்காந்தி திகழ்ந்து வருகிறார். 140 கோடி மக்களின் ஒற்றைக் குரலாக அவர் ஒலித்து வருகிறார். தலைநகர் டெல்லியில் மாணவர்கள் நிகழ்த்திய பேரணியை சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க. அரசு அடக்குமுறையை ஏவிவிட்டு கடுமையான தாக்குதலை நடத்தியது. இத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு  உத்தரவிட்டவர்கள் யார் என்ற தலைவர் ராகுல்காந்தியின் கேள்விக்கு இதுவரை பதில் சொல்ல பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. </p><p>இந்நிலையில், 2029 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணி வெற்றி பெறுகின்ற வகையில், காங்கிரஸ் கட்சியினர் ஒரே இலக்குடன் பணியாற்ற வேண்டுமென்று இப்பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது. </p><p>தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தலைமையை தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று அவரது கருத்துகளைப்  பரப்பி, மக்கள் ஆதரவைப் பெறுவதன் மூலமே நமது நோக்கத்தை அடைய முடியும். இத்தகைய கடுமையான இயக்கப் பணிகளின் மூலமே 2029 தேர்தலுக்குப் பிறகு தலைவர் ராகுல்காந்தி அவர்களை பிரதமராக்குகிற முயற்சியில் தமிழ்நாடு  பங்களிக்க முடியும். </p><p>தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு த.வெ.க. தலைவர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்த, திராவிட இயக்கங்கள் அல்லாத ஆட்சியில் பங்கேற்க வேண்டுமென காங்கிரஸ் கட்சிக்கு அவர் மிகுந்த விருப்பத்தோடு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொண்டு,  இன்றைக்கு இரு அமைச்சர்கள் ஆட்சியில் பங்கு வகித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் நமது அமைச்சர்களை சந்திப்பதைவிட வேறு மகிழ்ச்சி காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்க முடியாது. </p><p>கடந்த 60 ஆண்டுகளாக திராவிட இயக்கங்களோடு மாறி மாறிக் கூட்டணி வைத்து அவர்களை ஆட்சியில் அமர வைத்தபிறகும்,  காங்கிரஸ் கட்சிக்கு எந்த பங்கையும் அவர்கள் வழங்கியதில்லை. திராவிட இயக்கத்தைச்  சார்ந்தவர்கள்,  தாங்கள் ஆட்சி அமைத்த பிறகு,  கூட்டணிக் கட்சியினரோடு இணைந்து பணியாற்றத் தயாராக இல்லாததற்குக்  காரணம், அவர்களிடம் ஜனநாயக உணர்வோ, வெளிப்படைத் தன்மையோ இல்லாமல் இருந்ததுதான். அதனால்தான் திராவிட இயக்கங்கள் கடந்த தேர்தலில் படுதோல்வி அடைகிற நிலை ஏற்பட்டது. </p><p>தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தனது கொள்கைகளைப்  பறைசாற்றுவதன் மூலம் தனித்தன்மையோடு இயங்கி, நமக்கான கருத்தியலை முன்வைத்து தனித்துவமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கூட்டம் வலியுறுத்துகிறது. இந்த நோக்கத்தை அடைவதன் மூலமே தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி  அமைந்திட பெருந்தலைவர் காமராஜர், பாரத ரத்னா ராஜீவ்காந்தி ஆகியோர் கண்ட கனவை நனவாக்கிட சூளுரை மேற்கொண்டு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வழிகாட்டுதலின்படி கண்துஞ்சாது, அயராது பாடுபடுவோம் என இப்பொதுக்குழுக் கூட்டத்தில் உறுதியேற்போம்.”</p><p>மேற்கண்ட தீர்மானங்கள் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-21-districts-of-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-21-districts-of-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">48f30080-5bcf-433d-8128-e3fc7949d69e</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:56:36 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:56:36.582Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/kp5ijqux/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/kp5ijqux/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.</p><p><strong>20-08-2026:</strong> செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>21-08-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>22-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>20-08-2026 முதல் 24-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>20-08-2026 முதல் 24-08-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
5 ஆண்டு கால ஆட்சியில் நெல் மழையில் நனைந்ததா? இல்லையா? தி.மு.க.-த.வெ.க. வாதம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-paddy-get-drenched-in-rain-in-5-years-of-rule-or-not-dmk-tvk-debate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-paddy-get-drenched-in-rain-in-5-years-of-rule-or-not-dmk-tvk-debate#comments</comments><guid isPermaLink="false">419f8e15-b5b0-4549-bb40-106832533d5b</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:43:50 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:43:50.807Z</atom:updated><atom:author><atom:name>Arun Rajan K</atom:name><atom:uri>/api/author/2406194</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,த.வெ.க.,TNAssembly,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0ppc6xqt/tnpwas.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ த.வெ.க.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/0ppc6xqt/tnpwas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நெல் மழையில் நனைந்ததா? இல்லையா? என தி.மு.க.-த.வெ.க. அவையில் வாதத்தில் ஈடுபட்டனர்.</p><p>தமிழக சட்டசபையில் காலை 9.30 மணிக்கு இன்றைய அலுவல்கள் தொடங்கின.  கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.  கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை.  அதற்கான விளக்கம் சபாநாயகர் தரப்பில் அளிக்கப்பட்டது.</p><p>இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக அவையில் பேசினர்.</p> <h2>வெள்ளை நிற அரிசி</h2><p>இன்றைய நிகழ்வில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதன்படி அது தொடர்பான விவாதத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார்.</p><p>இதனை அடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசும்போது, எங்களுடைய 5 ஆண்டுகளில் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாப்பாக குடோன்களில் வைத்தோம்.  நெல்லை பாதுகாத்தோம்.  நெல்லை நனையாமல், முளைக்க விடாமல், வெள்ளை நிறத்தில் அரிசி கிடைக்க வழி செய்தோம் என்றார்.</p> <h2>கருப்பான அரிசி</h2><p>தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என். நேரு பேசும்போது, 30 வருடங்களுக்கு முன்பு நானும் இந்த உணவு துறையை பார்த்துள்ளேன்.  அப்போது அரிசி கிடைப்பது கஷ்டம்.  கருப்பான அரிசியே கிடைக்கும் என்றார்.</p><p>அமைச்சராக சக்கரபாணி இருந்தபோது, நெல்லை நனையாமல் கொண்டு சென்றவர் என்றார்.  அதனால் ரேஷன் அரிசி கால்நடைகளுக்கு அல்ல.  எல்லா மக்களும் சாப்பிடுகின்றனர்.  இதனால், சர்க்கரை அளவு குறையும் என்பதே உண்மை என்றார்.</p> <h2>1 லட்சம் மூட்டை</h2><p>தொடர்ந்து அவையில் உணவு துறை அமைச்சர் பேசும்போது, கே.என். நேரு உள்பட முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் பேசும்போது, தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியில் நெல் நனையவில்லை என்றனர்.  ஆனால், எங்களிடம் ஓராண்டு கால அறிக்கை மற்றும் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் உள்ளன.  அவை விவசாயிகள் கூறிய விசயம்தான்.</p><p>எடுத்துக்காட்டாக, 2025 டிசம்பரில் மதுராந்தகத்தில் 5 ஆயிரம் மூட்டைகள் மழையில் நனைந்தன.  விருத்தாசலத்தில் 5 ஆயிரம் நெல் முட்டைகள் நனைந்துள்ளன.  ஜனவரி 2025-ல் சிவகங்கையின் இளையான்குடி பகுதியில் நெல் கொள்முதல் தாமதத்திற்காக விவசாயிகள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  2026 பிப்ரவரியில், சேத்தியாதோப்பில் 1 லட்சம் மூட்டை, நெல் கொள்முதல் தேக்கமடைந்தது.  மானாமதுரையில் பல ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்திருக்கின்றன.  பத்திரிகைகளில் வெளிவந்த இதற்கான அறிக்கையை சேகரித்து வைத்திருக்கிறேன் என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>கட்சி உறுப்பினர் விபரத்தை சேகரிக்க வட்டாட்சியர் வெளியிட்ட உத்தரவு சட்டவிரோதம்: சி.பி.ஐ.(எம்)  கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tahsildars-order-to-collect-party-membership-details-is-illegal-cpim-condemns-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tahsildars-order-to-collect-party-membership-details-is-illegal-cpim-condemns-it#comments</comments><guid isPermaLink="false">2573b426-1781-473e-9eb3-29858d6a16e0</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:41:43 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:41:43.675Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,பெ.சண்முகம்,ஜனநாயகம்,சிபிஎம்,CPM,CPI(M),கட்சி உறுப்பினர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/yjzm6io1/cpi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/yjzm6io1/cpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் (பெ.சண்முகம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் 2026 ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. </p><h2>சட்டவிரோத உத்தரவு</h2><p>இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். </p><p>கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..</p><p>தீர்மானம் 1 :</p><p>சிபிஐ(எம்), சிபிஐ கட்சி உறுப்பினர் விபரத்தை சேகரிக்க குஜிலியம்பாறை வட்டாட்சியர் வெளியிட்ட சட்டவிரோத உத்தரவு ! சிபிஐ(எம்) வன்மையான கண்டனம் !</p><p>இந்த சட்டவிரோத உத்தரவுக்கு வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் பொறுப்பேற்கவும் வலியுறுத்தல் !!</p><p>நவீன தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கம், அது கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் நியாயமற்ற சலுகைகள் ஆகிய காரணங்களால், நாடு முழுவதும் ஜனநாயக உரிமைகள், போராட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும் இடதுசாரி அமைப்புகளும் இத்தகைய கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் மற்றும் மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளுக்கு எதிராகவும் வலுவாக போராடி வருகிறது. அரசு கார்ப்பரேட் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் நியாயமற்ற சலுகைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகிறது.</p><h2>கட்சி உறுப்பினர்களின் விவரம்</h2><p>டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் 40 நாட்கள் வரையிலும் ஓரிடத்தில் அமர்ந்து காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுகிறது. உலகில் பல நாடுகளில் மிக முக்கிய நகரத்தின் மைய பகுதியில், பொதுமக்கள், அரசியல் இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களின் கோரிக்கையை முன் வைத்து போராட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுகிறது. </p><p>ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற ஜனநாயக உரிமைகள், கோரிக்கைகளை முன் வைத்து நடத்தும் போராட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்த போராட்டங்களை காவல்துறை மிக கடுமையாக ஒடுக்கும் செயலை அரங்கேற்றுவது, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை மறுக்கும் செயலாகும். அரசின் இத்தகைய ஒடுக்குமுறையை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.</p><p> மேற்படி அடக்குமுறையின் உச்சமாக, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, தனது அதிகார எல்லை மற்றும் வரம்புகளை மீறி, சட்டத்திற்கு விரோதமாக, தாலுகாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  உறுப்பினர்கள் குறித்த விவரத்தை சேகரிக்க சொல்லி, 18.08.2026 அன்று, ந.க.எண். (2017/2026/அ1) உத்தரவிட்டு உள்ளார். </p><p>இந்த உத்தரவின் நகலை, வட்டாட்சியர் அய்யாசாமி, மாவட்ட ஆட்சியர், பழனி கோட்டாட்சியர், தலைமையிடத்து துணை ஆட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார். மாவட்ட ஆட்சியர், பழனி கோட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மேற்படி சட்ட விரோத உத்தரவின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.</p><h2>ஜனநாயக படுகொலை</h2><p>மேற்படி உத்தரவை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட சிபிஐ(எம்) சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மேற்படி வட்டாட்சியர் பயிற்சி முடிந்துவிட்டது என மாவட்ட ஆட்சியர் 18.08.2026 பிற்பகலில், தனியரை மாவட்ட பயிற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக உத்தரவு வெளியிட்டு உள்ளார். </p><p>மேற்படி வட்டாட்சியர் செயல் கண்டிக்கத்தக்கது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஒன்று என ஜனநாயக குரல்கள் அதிகரித்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை, ஜனநாயக படுகொலைக்கு உடந்தையாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் மாநில வருவாய் துறைக்குள் இருக்கும் ஜனநாயக விரோத கருப்பு ஆடுகளின் செயலாக தெரிகிறது.</p><p>மாநில முதல்வரின் கவனத்திற்கு மேற்படி பிரச்சனை எடுத்து செல்லப்பட்ட பின்னரும், மாநிலம் முழுவதும் ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இது குறித்து விவாதித்து வரும் நிலையிலும், மாவட்ட ஆட்சியர் பயிற்சியில் இருந்து விடுவித்ததாக அறிக்கை வெளியிட்டிருப்பது, மாநில ஆட்சியாளர், வருவாய் துறை அதிகாரிகளுக்கு அளிக்கும் வழிகாட்டுதல் மீது சந்தேகம் வலுவாக ஏற்படுகிறது. </p><p>ஆட்சியரின் செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்த சட்டவிரோத மற்றும் அத்துமீறலுக்கு வருவாய் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டுமெனவும், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.</p><h2>இளைஞர்கள் பங்கெடுப்பதை தடுக்க</h2><p><strong>தீர்மானம் 2:</strong></p><p>போராடும் உரிமையை மறுக்கவும், இடதுசாரி கட்சியினரை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்ட கல்வித்துறை சுற்றறிக்கைக்கு சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!</p><p>தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல் !!</p><p>கல்லூரி கல்வி ஆணையர் 17.08.2026 தேதியிட்டு, அரசு கடித ந.க எண். 1075/அ1/2026-1, 14.08.2026 என்பதை பார்வை என குறிப்பிட்டு, ஒரு உத்தரவை அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பி உள்ளார். இந்த உத்தரவு, பார்வையில் குறிப்பிட்ட அரசு கடிதத்தில், இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களில், மாணவ-மாணவியர் மற்றும் இளைஞர்கள் பங்கெடுப்பதை, தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே, துறை இடைத் தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை எடுத்த விவரங்களை தெரிவிக்குமாறு கல்லூரி கல்வி ஆணையர் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>திட்டமிட்டு நடந்த செயல்</h2><p>14.08.2026 தேதியிட்ட அரசின் சிறப்பு செயலாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பிய கடிதம், மேற்படி உத்தரவை கல்லூரி கல்வி ஆணையருக்கு வழங்கியுள்ளது. ஜூலை மாத சட்ட ஒழுங்கு குறித்த பரிசீலனையின்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் எம்.சாய்குமார் ஐ.ஏ.எஸ் வலியுறுத்தியதாக உள்ளது. </p><p>கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி கல்வி ஆணையரகம் இவை குறித்து என்ன நடவடிக்கை எடுத்தது என்ற அரசின் சிறப்பு செயலாளருடைய கேள்வி மிகத் தீவிர தன்மையுடன் ஜனநாயக இயக்கங்களை ஒடுக்கும் நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது.</p><p>தலைமைச் செயலாளரும் கலந்து கொண்ட கூட்டத்தில் போராடும் உரிமை மறுக்கப்படுவது, கல்வி நிலையங்களுக்குள் காவல்துறை அத்துமீறி செல்வதை அனுமதிக்கும் வழிகாட்டுதல் வழங்கியிருப்பது மிகக் கொடிய அடக்குமுறையை கட்டவிழ்க்கும் நோக்கம் கொண்டதாகும்; அனைத்தும் திட்டமிட்டு நடந்த செயலாகும். எனவே, தலைமைச் செயலாளர் உள்ளிட்டு அதிகாரிகள் பங்கெடுத்து நடந்த பரிசீலனைக் கூட்டத்தின் இந்த முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.</p> <h2>ஜனநாயக பறிப்பு சம்பவங்கள்</h2><p>இடதுசாரி கட்சியினரையும், இதர ஜனநாயக நடவடிக்கைகளையும் குறிவைத்து ஒடுக்க வேண்டும் என்ற நோக்கம் ஏன் உருவானது? தலைமைச் செயலாளர் எப்படி அமைச்சரவைக்கு அல்லது முதல்-அமைச்சருக்கு தெரியாமல், இதுபோன்ற மிகப்பெரிய முடிவுகளை எடுத்திருப்பார்? போன்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுவது இயற்கையானதாகும்.</p><p>19.08.2026 அன்று மீண்டும் கல்லூரி கல்வி ஆணையர் ஒரு கடிதம் மூலம் மேற்படி உத்தரவை விலக்கி கொள்வதாக கூறியுள்ளார். ஆனாலும், மேற்படி உத்தரவுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய வழிகாட்டுதலை வழங்கிய தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டுமெனவும், எதிர்வரும் காலத்தில் இது போன்ற ஜனநாயக பறிப்பு சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை தமிழக முதலமைச்சர் உறுதி செய்திட வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அமித்ஷாவின் தமிழக வருகைக்கு கருப்பு கொடி காட்டுவதா? - காங்கிரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">67c774bb-5604-4f71-b4e4-b4edb6d0d57c</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:30:49 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:30:49.927Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,காங்கிரஸ்,Congress</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/mgammsbm/nainar.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/mgammsbm/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“தமிழகத்திற்கு காவேரி நீரை குறித்த நேரத்திற்கு திறந்து விட மறுத்த உங்கள் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் டி.கே.சிவக்குமார் தற்போது தமிழகத்தில் தான் இருக்கிறார். தமிழகத்தின் குறுவை சாகுபடியை திட்டமிட்டு சீரழித்த அவருக்கு எதிராக, தமிழக பாஜகவாலும் போர்க்கொடி தூக்கியிருக்க முடியும். காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் எங்களுடன் கரம் கோர்த்திருப்பார்கள். </p><p>ஆனால், நாங்கள் அதை செய்யவில்லை, செய்யவும் மாட்டோம். காரணம், நாங்கள் பிறந்த இந்த தமிழ் மண் எங்களுக்கு “விருந்தோம்பலின்” முக்கியத்துவத்தை போதித்துள்ளது. நமது மத்திய உள்துறை மந்திரியை சந்திப்பதற்காக, அரசு முறைப் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும், கர்நாடக காங்கிரஸ் முதல்வருக்கு உரிய மரியாதை கொடுப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை. </p><p>தமிழகக் காங்கிரஸாரைக் கூட சந்திக்காமல், அலுவல் ரீதியாக தமிழகம் வந்து, திரும்பும் கர்நாடக முதல்வரின் அரசுப் பயணத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், அந்த அரசியல் நாகரிகம் உங்களிடம் இல்லை என்பது வருத்தத்துக்குரியது. இதனால் தானோ என்னமோ, இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்கள் உங்கள் கட்சியை வெறுக்கிறார்கள். நாட்டின் மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷாவின் அரசுப் பயணத்திற்கு கருப்பு கொடி காட்டி, தமிழகத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்க நினைத்த உங்களை, மக்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>