<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 14 Aug 2026 18:27:23 +0000</lastBuildDate><item><title>நாளை விடுமுறை... இன்றே டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்த மதுப்பிரியர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tomorrow-liquor-enthusiasts-flocked-to-tasmac-shops-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tomorrow-liquor-enthusiasts-flocked-to-tasmac-shops-today#comments</comments><guid isPermaLink="false">4028d75a-1f3d-47c2-84ab-9812ba314172</guid><pubDate>Fri, 14 Aug 2026 17:41:21 +0000</pubDate><atom:updated>2026-08-14T17:41:21.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,டாஸ்மாக்,Tasmac,சுதந்திர தினம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/tw4opr9n/tas.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மதுகடைகள் திறக்கப்படாது என்பதால் இன்றே மதுப்பிரியர்கள் படையெடுத்துள்ளனர். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/tw4opr9n/tas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>நாளை மதுகடைகள் திறக்கப்படாது என்பதால் இன்றே மதுப்பிரியர்கள் படையெடுத்துள்ளனர். </p><h2>விடுமுறை </h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக் </a>மதுபானக் கடைகளுக்கு நாளை (ஆக. 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>குவிந்த மதுபிரியர்கள்</h2><p>இதையடுத்து, நாளை மதுபானக் கடைகள் மூடப்படுவதால், இன்று திருவெறும்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க ஏராளமான மதுபிரியர்கள் குவிந்தனர்.</p><h2>பரபரப்பு</h2><p>ஒரே நேரத்தில் ஏராளமானோர் மதுபானம் வாங்க குவிந்ததால், டாஸ்மாக் கடை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவர் அமுதன் கொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-amudhan-murder-cpm-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-amudhan-murder-cpm-condemns#comments</comments><guid isPermaLink="false">f9566b0e-49ba-418d-8a4c-151677b23ba5</guid><pubDate>Fri, 14 Aug 2026 16:11:47 +0000</pubDate><atom:updated>2026-08-14T16:11:47.161Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கொலை,கண்டனம்,மாணவர்,condemns,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,Student dead,CPI(M)</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qk5z6ldp/communist.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவை மாணவர் அமுதன் கொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qk5z6ldp/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவை மாணவர் அமுதன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> சம்பவத்திற்கு கண்டனம்! இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><h2>கண்டனம்</h2><p>உரிய விசாரணை நடத்தவும், போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றாக ஒழித்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!! <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை</a> மாவட்டம் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர் அமுதன் கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலைக்கு மார்க்சிஸ்ட் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. </p><p>மாணவரை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கொடிய சம்பவம் தற்செயலாக நடந்ததில்லை. இதற்கு முன்பாக தொடர்ச்சியாக சிறிதும் பெரிதுமாக இரண்டு தாக்குதல்கள் மாணவர்களுக்குள் நடந்திருக்கிறது.</p><h2>சிறுமைப்படுத்துவது சரியானது அல்ல</h2><p>மாணவர்களின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு மிக அடிப்படையாக கல்லூரியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் புழக்கம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மாநில அரசும் காவல்துறையும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் என்று இதை சிறுமைப்படுத்துவது சரியானது அல்ல. இவர்கள் கும்பலாக செயல்படுவதற்கும் தயக்கமின்றி தாக்குதல்களில் ஈடுபடுவதற்கும் கஞ்சாவும் போதைப் பொருட்களுமே உந்துதலாக இருந்து வருகிறது.</p><h2>கல்லூரி நிர்வாகம் தயாராக இல்லை</h2><p>கல்லூரி நிர்வாகத்தை பொறுத்தவரை, கொலை செய்யப்படட மாணவர் தங்களிடத்தில் கல்வி கற்க வந்தவர் என்கிற மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை. மாணவர் மறைவுக்கு பின்புகூட பெற்றோரை ஆறுதல் படுத்தக்கூட கல்லூரி நிர்வாகம் தயாராக இல்லை. மாணவரின் பெற்றோர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் உள்பட அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p> <h2>போதை கலாச்சாரம்</h2><p>கோவை மாவட்டத்தில் போதை கலாச்சாரத்தோடு இணைந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் கடந்த 10 நாட்களில் 3 படுகொலை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த உண்மையை மறைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.</p> <h2>சமூக பொறுப்புணர்வு </h2><p>எனவே, கோவையை சூழ்ந்து வருகிற இந்த போதை சார்ந்த வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும், போதை கலாச்சாரத்தை முற்றாக ஒழிப்பதற்கும் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>கல்லூரி நிர்வாகங்கள் பணம் குவிக்கும் நோக்கத்தோடு மாணவர்களை சேர்க்காமல், சமூக பொறுப்புணர்வு கொண்ட குடிமக்களாக மாணவர்களை உருவாக்கிட வேண்டும் என்கிற சமூக அக்கறையுடன் கல்வி நிர்வாகங்கள் நடந்து கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;இன்னும் எத்தனை நாட்களுக்கு முதல்-அமைச்சர் அமைதி காக்கப் போகிறார்?&quot; - கனிமொழி எம்.பி. கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/for-how-much-longer-will-the-chief-minister-remain-silent-mp-kanimozhi-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/for-how-much-longer-will-the-chief-minister-remain-silent-mp-kanimozhi-asks#comments</comments><guid isPermaLink="false">83ddea45-576e-4f4f-961e-0cd9c5f1d4b0</guid><pubDate>Fri, 14 Aug 2026 16:01:10 +0000</pubDate><atom:updated>2026-08-14T16:01:10.097Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,திமுக,DMK,தமிழகம்,கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hp3jyxm5/kanis.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hp3jyxm5/kanis.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேர்தல் வாக்குறுதி அளித்ததை மறந்துவிட்டதால் த.வெ.க. அரசு அமைதி காக்கிறதா? என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி எம்.பி. </a>கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>24 மணி நேரம் கடந்துவிட்டது</h2><p>இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>ஆகஸ்ட் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட MMDR சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்டது.</p><p>தமிழ்நாட்டைப் பொருளாதார இறையாண்மை கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்ததை மறந்துவிட்டதால் த.வெ.க. அரசு அமைதி காக்கிறதா?</p><h2>தீவிரமான பிரச்சினை</h2><p>இச்சட்டத் திருத்தம் மாநிலத்தின் நிதிச்சுமையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ள நிலத்தின் மீது ஒன்றிய அரசு அதிகாரம் செலுத்த முயல்வதும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது.</p><p>இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் இன்னும் எத்தனை நாட்களுக்கு அமைதி காக்கப் போகிறார்?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title> பள்ளி மாணவர் கொலை: தலைநகரிலேயே மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-school-student-murder-raises-questions-on-student-safety-in-capital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-school-student-murder-raises-questions-on-student-safety-in-capital#comments</comments><guid isPermaLink="false">c6db6764-e79a-4d24-9e72-4a373af2abff</guid><pubDate>Fri, 14 Aug 2026 16:01:06 +0000</pubDate><atom:updated>2026-08-14T16:01:06.549Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,murder,கொலை,Question,Velmurugan,வேல்முருகன்,school student,பள்ளி மாணவர்,கேள்வி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/3kacvc2y/velmurugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/3kacvc2y/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> பள்ளி மாணவர் கொலை மாணவர்களின் கைகளில் வன்முறையா? தலைநகரிலேயே மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?  என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>மாணவர்</h2><p>சென்னை திருவொற்றியூரில் பள்ளி அருகே 12ஆம் வகுப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">மாணவர்</a> தனுஷ் தாக்குதலில் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்டோர் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <p>அவ்வப்போது பள்ளி மாணவர்களை மையப்படுத்தி வெளியாகும் வன்முறை செய்திகள், ஒரு மாணவனின் தவறாக மட்டும் கடந்து செல்ல முடியாத அளவிற்கு சமூகத்தின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகின்றன.</p><h2>அச்சம் இயல்பாகவே எழுகிறது</h2><p>உண்மையில் மாணவர்களுக்கு பள்ளியில், பாடங்கள் கற்று தரப்படுகின்றன. தேர்வுக்கு தயார்படுத்தப்படுகிறார்கள். மதிப்பெண்கள் பெறுவதற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? கருத்து வேறுபாட்டை எப்படி கையாள்வது? மற்றொரு மனிதனின் உயிரை எவ்வாறு மதிப்பது? தோல்வியையும் அவமானத்தையும் வன்முறையின்றி எதிர்கொள்வது எப்படி? சமூகத்தில் பொறுப்புள்ள மனிதராக எப்படி வாழ்வது? இவை போதுமான அளவில் கற்று கொடுக்கப்படுகிறதா? பள்ளி மற்றும் கல்லூரிகள் அரசின் நிர்வாக அமைப்புகளால் கண்காணிக்கப்படுகிறதா? கல்வி கற்கும் வயதில் வன்முறை உருவாகிறது என்றால், நாளைய சமூகத்தில் அது எந்த வடிவத்தை எடுக்கும் என்ற அச்சம் இயல்பாகவே எழுகிறது.</p> <h2>மாணவன் உயிரிழக்கும் நிலை </h2><p>மேலும், சென்னை போன்ற மாநிலத்தின் நிர்வாக செயல்பாடு உள்ள தலைநகரிலேயே பள்ளி மாணவன் தாக்குதலில் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது, மாணவர்கள் மட்டுமல்லாமல் பெண்கள், குழந்தைகள், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது.</p> <h2>உறுதி செய்யப்படுகிறது?</h2><p>தலைநகரின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியாத நிலையில், தமிழ்நாட்டின் தொலைதூர பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?</p> <h2>நம்பிக்கை</h2><p>ஒவ்வொரு பள்ளி வாசலும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அச்சமின்றி கல்வி கற்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளை பாதுகாப்பாக வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.</p><h2>அரசின் கண்காணிப்பு</h2><p>இந்த சம்பவத்திற்குப் பிறகாவது, பள்ளிகளில் மாணவர்களின் மனநிலை மற்றும் நடத்தை மாற்றங்கள், மாணவர்களிடையேயான குழு மோதல்கள், போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய ஆலோசனையும், வழிகாட்டுதலும் வழங்கும் வகையில் அரசின் கண்காணிப்பு மற்றும் மாணவர் நல அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.</p><h2>தடுப்பு நடவடிக்கை</h2><p>ஆசிரியர்கள், பெற்றோர், கல்வித்துறை, காவல்துறை என அனைவரும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதிப்பெண் அட்டையில் அதிக மதிப்பெண் பெறும் தலைமுறை மட்டும் நமக்கு தேவையில்லை. மனித உயிரை மதிக்கும் தலைமுறை வேண்டும். வன்முறையை நிராகரிக்கும் தலைமுறை வேண்டும். சகிப்புத்தன்மையுடன் வாழ தெரிந்த தலைமுறை வேண்டும். இன்றைய மாணவர்கள் நாளைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">தமிழ்நாடு</a>.</p><h2>நிரந்தர தடுப்பு நடவடிக்கை</h2><p>அவர்களின் கைகளில் புத்தகத்திற்கு பதிலாக வன்முறை உருவாக தொடங்கினால், கேள்வி மாணவர்களிடம் மட்டும் இல்லை. நாம் உருவாக்கி கொண்டிருக்கும் சமூகத்திடமும் இருக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த சம்பவத்தை ஒரு தனிப்பட்ட குற்றமாக மட்டும் பார்க்காமல், மாணவர்களிடையே உருவாகும் வன்முறையின் வேரை கண்டறிந்து நிரந்தரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வளசரவாக்கத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்:  தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pre-monsoon-preparedness-works-in-valasaravakkam-south-zone-deputy-commissioner-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pre-monsoon-preparedness-works-in-valasaravakkam-south-zone-deputy-commissioner-inspects#comments</comments><guid isPermaLink="false">f3142a45-5724-4656-89c9-1e729bedf865</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:42:24 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:42:24.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,வளசரவாக்கம்,Valasaravakkam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qkelyvu4/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qkelyvu4/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>துணை ஆணையாளர் ஆய்வு</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல் இன்று (14.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-148க்குட்பட்ட விருகம்பாக்கம் கால்வாயின் தொடக்க இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள், வார்டு-149க்குட்பட்ட மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வார்டு-151க்குட்பட்ட ஆற்காடு சாலை, போரூர் சந்திப்புப் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டி பணிகளைப் பார்வையிட்டு, தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>தொடர்ந்து, வார்டு-152க்குட்பட்ட தேவி குப்பம் பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைக் கட்டடப் பணியினைப் பார்வையிட்டு, விரைந்து முடித்திட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அலுவலர்களுக்கு </a>அறிவுறுத்தினார்.</p><p>பின்னர், வார்டு-149க்குட்பட்ட சம்பத் நகரில் உள்ள அம்மா உணவகத்தினைப் பார்வையிட்டு, உணவுப் பொருட்களின் இருப்பு, சமையலைறையினை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ச்சியாக, வார்டு-149ல் உள்ள இலவச ஒப்பனை அறையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினை: தீர்வு காண தெற்கு ரெயில்வே கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railways-urges-upgrade-to-printers-over-fading-ticket-ink</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railways-urges-upgrade-to-printers-over-fading-ticket-ink#comments</comments><guid isPermaLink="false">bbfe2958-d92d-4e73-99d2-ad45c02416d7</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:28:47 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:28:47.689Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,Southern Railway,கடிதம்,letter,பிரச்சினை,டிக்கெட்டு,Tickets,Solution</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/o951wsr7/train-ticket-issue.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ டிக்கெட்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினை: தீர்வு காண தெற்கு ரெயில்வே கடிதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/o951wsr7/train-ticket-issue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினை: தீர்வு காண தெற்கு ரெயில்வே கடிதம். மெலும் டிக்கெட் மை அழிந்து போவதால் டிக்கெட் பரிசோதகர், பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்படுவதால், பிரிண்டர்களின் திறனை மேம்படுத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> வலியுறுத்தல்</p><h2>டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினை</h2><p>ரெயில் டிக்கெட்டுகளில் அச்சிடப்படும் மை மிக விரைவாக அழிந்து போவதால் பயணிகளுக்கும்,<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D"> டிக்கெட் </a>பரிசோதகர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த முக்கிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரி, தெற்கு ரெயில்வே தரப்பில் இந்திய ரெயில்வே வாரியத்திற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>பயணிகள் - டி.டி.ஆர் இடையே மோதல்</h2><p>தற்போது ரெயில் நிலைய கவுண்டர்களில் வழங்கப்படும் கணினிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டுகளில் பயன்படுத்தப்படும் மையின் தரம் குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. டிக்கெட் வாங்கிய சில மணி நேரங்களிலேயே அல்லது பாக்கெட்டில் வைத்திருக்கும் போது, அதில் உள்ள ரெயில் எண், பயண தேதி மற்றும் இருக்கை எண்கள் போன்ற முக்கிய விவரங்கள் முற்றிலும் அழிந்து விடுகின்றன.</p><p>இதனால், ரெயிலில் டிக்கெட் பரிசோதனை செய்யும் போது, பயணிகளுக்கும் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்களும் தேவையற்ற மன உளைச்சல்களும் ஏற்பட்டு வருகின்றன.</p><h2>பிரிண்டர்களின் திறனை மேம்படுத்த வலியுறுத்தல்</h2><p>இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் தற்போது களமிறங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ரெயில் நிலையங்களில் டிக்கெட் அச்சிட பயன்படுத்தப்படும் பிரிண்டர்களின் திறனை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. </p> <h2>நிரந்தர தீர்வு</h2><p>  தரமான மைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், டிக்கெட் அச்சிடும் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்த வேண்டும் என்றும் தெற்கு ரெயில்வே தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்கு ரெயில்வேயின் இந்த நடவடிக்கையால், விரைவில் ரெயில் டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். </p>]]></content:encoded></item><item><title>சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-areas-surrounding-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-areas-surrounding-chennai#comments</comments><guid isPermaLink="false">5a460a8f-fe0b-4073-bef4-fcc9e84cd911</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:08:11 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:08:11.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,weather forecast,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ki7p23ke/vekkali.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ki7p23ke/vekkali.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.</p><h2>கன மழை</h2><p>இதன்காரணமாக இன்று (14-08-2026): கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. </p><h2>லேசான மழை</h2><p>மேலும் ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை </a>பெய்யக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>பலத்த மழை</h2><p>இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்படி சென்னையில் அண்ணாசாலை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்து வருகிறது. வட சென்னையில் பெரம்பூர், ஜமாலியா, மாதவரம், மூலக்கடை, கொளத்தூர் பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/topic/rain">பலத்த மழை</a> பெய்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-independence-day-greetings-to-all-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-independence-day-greetings-to-all-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">695096eb-cb1a-44cd-afc5-a0389a89d91d</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:04:19 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:04:19.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,வாழ்த்துகள்,Hydrogen Train,சுதந்திர தினம்,Independence Day,Wishes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/68qj5eja/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/68qj5eja/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனைவருக்கும் இனிய <a href="https://www.dailythanthi.com/topic/independence-day">சுதந்திர தின நல்வாழ்த்துகள்</a>...! என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்கும் பிரதமர் மோடியின் கனவு நனவாக துணை நிற்போம். </p><h2>வளர்ச்சி</h2><p>சுதந்திர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">இந்தியா</a> இன்று 79 ஆண்டுகளை நிறைவு செய்து, 80-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 79 ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளையே மிரள வைத்துள்ளது.</p> <h2>அன்று கேலி இன்று சாதனை</h2><p>1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, குண்டூசி கூட சொந்தமாகத் தயாரிக்க முடியாத நாடு என்று கேலி பேசினார்கள். பாம்பாட்டிகள் தேசம், பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு என்று ஏளனம் செய்தார்கள். ஆனால், இன்று வணிக ரீதியாக செயற்கைக்கோள்களை ஏவும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது. இந்தியத் தொழில்நுட்பத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறோம். உலகின் நீளமான ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் சாதனையையும் படைத்திருக்கிறோம்.</p><h2>844 மருத்துவக்கல்லூரிகள்</h2><p>கடந்த 2014-ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தபோது, இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகளும், 51,348 எம்.பி.பி.எஸ். இடங்களும் மட்டுமே இருந்தன. மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளால், இன்று இந்தியாவில் 844 மருத்துவக் கல்லூரிகளும், 1,39,000 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.</p> <h2>90 புதிய விமான நிலையங்கள்</h2><p>1947 முதல் 2014 வரை, 67 ஆண்டுகளில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 90 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி மோடி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.</p><h2>4-வது பெரிய பொருளாதார நாடு</h2><p>2014-ல் உலகின் 11-வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, இப்போது அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்த நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் இந்த வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். வங்கதேசம், நேபாளம், இலங்கை போல இந்தியாவையும் அரசியல், பொருளாதார ரீதியாகச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.</p><h2>18 மணி நேரம்</h2><p>எத்தனையோ நெருக்கடிகளை எதிர்கொண்டு, அவதூறுகளை தாங்கிக்கொண்டு, 2047-ல் சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் தருணத்தில், உலகின் முதல் பொருளாதார பலம் மிக்க நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நாளும் 18 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்து வருகிறார்.</p> <h2>மோடியின் கனவு</h2><p>இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்கும், உலகின் வல்லரசாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க நாம் அனைவரும் துணை நிற்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஊழல், அநீதி, அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரம் -  கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/true-freedom-is-freedom-from-corruption-injustice-and-oppression-kanimozhi-santosh-mla</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/true-freedom-is-freedom-from-corruption-injustice-and-oppression-kanimozhi-santosh-mla#comments</comments><guid isPermaLink="false">ef323f35-7f6c-4402-a94a-4fb2e6dbd917</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:59:37 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:59:37.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விடுதலை,சுதந்திர தினம்,Independence Day Festival,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/q8q93c75/mla33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
ஊழல், அநீதி, அடக்குமுறையிலிருந்தும் விடுதலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/q8q93c75/mla33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>ஊழல், அநீதி, அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரம்  என கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ கூறியுள்ளார். </p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:</p><p>நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.</p><p>வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்றது மட்டுமல்ல; ஊழல், அநீதி, அடக்குமுறை இல்லாத சமூகத்தை உருவாக்குவதும் உண்மையான சுதந்திரமே.</p><p>ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை, சமூகநீதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்வதே சுதந்திரத்தின் உண்மையான நோக்கமாகும்.</p><p>மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, வெளிப்படையான நிர்வாகத்தை முன்னெடுத்து, ஊழலில் இருந்து விடுதலை பெற்ற, சமூகநீதி நிறைந்த, வளமான தமிழகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.</p><p>சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D">ஜனநாயகத்தையும் அரசியலமைப்பின் மாண்புகளையும் காப்போம்.</a></p><p>சுதந்திரம் போற்றுவோம்!ஊழலில் இருந்து விடுதலை பெறுவோம்!மக்கள் நலனுடன் புதிய தமிழகத்தை உருவாக்குவோம்</p><p>என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோடம்பாக்கம் மண்டலத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்:  வட்டார துணை ஆணையாளர் ஆய்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-kodambakkam-zone-zonal-deputy-commissioner-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-kodambakkam-zone-zonal-deputy-commissioner-inspects#comments</comments><guid isPermaLink="false">902af53d-c999-475a-8b3b-ce5da76c6304</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:53:57 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:53:57.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Kodambakkam,கோடம்பாக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ft8miezl/kodampakam33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ft8miezl/kodampakam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>துணை ஆணையாளர் ஆய்வு</h2><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக் இன்று (14.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>மத்திய வட்டார துணை ஆணையாளர், கோடம்பாக்கம் மண்டலம்,வார்டு-129க்குப்பட்ட வடபழனி மாநகரப் போக்குவரத்து கழக பேருந்து பணிமனை மற்றும் வார்டு-128க்குட்பட்ட கே.கே.நகர், வேம்புலியம்மன் கோயில் தெருவில் உள்ள காலி இடம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்காமல் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>தொடர்ந்து, வார்டு-136க்குட்பட்ட டாக்டர் ராமசாமி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். கால்வாயின் ஆரம்பிக்கும் இடத்தில் தூர்வாரும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பணிகள் </a>மேற்கொள்ளவும், பி.டி.ராஜன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வுகளின்போது, மண்டல அலுவலர் ஆர்.புருஷோத்தமன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: ஆதியோகி சிலையில் ஒளிர்ந்த மூவர்ணக்கொடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-tricolour-illuminates-adiyogi-statue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-tricolour-illuminates-adiyogi-statue#comments</comments><guid isPermaLink="false">4e481e47-c43f-4f3c-95e6-a6062b2137f4</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:43:42 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:43:42.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,Independence Day,Adiyogi,மூவர்ணக்கொடி,tricolour flag,ஆதியோகி சிலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/bpe5aske/lord-shiva.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மூவர்ணக்கொடி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதியோகி சிலையில் ஒளிர்ந்த மூவர்ணக்கொடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/bpe5aske/lord-shiva.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை, <a href="https://www.dailythanthi.com/topic/national-flag">தேசியக்கொடியின்</a> மூவர்ணத்தில் ஒளிர்ந்தது</p> <h2>தேசியக்கொடி நிறத்தில் ஆதியோகி</h2><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் 112 அடி உயர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">ஆதியோகி சிலை</a>, மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆதியோகி சிலை மீது முப்பரிமாண லேசர் ஒளிப்பாய்ச்சல் மூலம் தேசியக்கொடியின் காவி, வெள்ளை, பச்சை ஆகிய நிறங்கள் பிரதிபலிக்கப்பட்டன. </p><p>இரவு நேரத்தில் வான்வெளியில்  ஒளிர செய்யப்பட்ட மூவர்ண காட்சியானது, அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் பலத்த தேசப்பற்றையும், பரவசத்தையும் ஏற்படுத்தியது.</p> <h2> லேசர் ஒளிக்காட்சி </h2><p>ஆதியோகி சிலையின் இந்த மூவர்ண அலங்கார புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. உலகிலேயே மிகப்பெரிய திருமுக சிலையாக கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்த ஆதியோகி சிலைக்கு, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தேசிய விழாக்களின் போது இதுபோன்று மூவர்ண ஒளியூட்டப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என பரவும் செய்தி - தகவல் நம்பகத்தன்மை பிரிவு மறுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-circulating-about-the-suspension-of-construction-work-on-the-periyar-memorial-hall-information-verification-wing-issues-denial</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-circulating-about-the-suspension-of-construction-work-on-the-periyar-memorial-hall-information-verification-wing-issues-denial#comments</comments><guid isPermaLink="false">0d128235-bd00-4fa3-a27c-70dcb75ec614</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:12:50 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:12:50.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fact Check Unit,Fact check,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,தகவல் நம்பகத்தன்மை பிரிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/c6tv2ofg/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/c6tv2ofg/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>கேரளத்தின் வைக்கம் அருகே தந்தை பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என செய்தி வெளியாகியுள்ளது.</p><h2>உண்மை என்ன?</h2><p>இது முற்றிலும் தவறான தகவல்.</p><p>இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அளித்துள்ள விளக்கத்தில், “கேரள மாநிலம் ஆறுக்குட்டிப் பகுதியில் பெய்து வரும் பருவ மழையால் கட்டட வெளிப்புறப்பணிகள் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனினும் பணிகள் நிறுத்தப்படவில்லை. மழை நின்றவுடன் மீண்டும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தவறான தகவலைப் பரப்பாதீர்!</a></p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாநகராட்சியில் விதிகளை மீறி நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/54-junior-assistants-appointed-in-violation-of-rules-dismissed-by-coimbatore-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/54-junior-assistants-appointed-in-violation-of-rules-dismissed-by-coimbatore-corporation#comments</comments><guid isPermaLink="false">6f05cf44-82f6-4b7f-93f5-ef1e73615162</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:09:23 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:09:23.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,Tamilnadu,கோவை,பணி நீக்கம்,Supreme Court,சுப்ரீம்கோர்ட்டு,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,suspend,Chennai High Court,கோவை மாநகராட்சி,Kovai,Coimbatore Corporation,இளநிலை உதவியாளர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ssb6hr4k/kovai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ssb6hr4k/kovai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a> மாநகராட்சி இளநிலை உதவியாளர்கள் 54 பேர், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் இன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.</p><h2>அ.தி.மு.க. ஆட்சி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை மாநகராட்சி</a>யில், அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.</p><h2>54 இளநிலை உதவியாளர்கள்</h2><p>இந்த சூழலில், இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. காலியான பணியிடங்களுக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், முறைகேடான பணி நியமனங்களுக்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. </p><h2>பணி நீக்கம்</h2><p>சென்னை ஐகோட்டின் தீர்ப்பினை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், 54 பேரையும் பணி நீக்கம் செய்து கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இளநிலை உதவியாளர்கள் 54 பேரும் இன்றுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ராயபுரம் மண்டலத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: துணை ஆணையாளர் நேரில் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-royapuram-zone-deputy-commissioner-inspects-in-person</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-royapuram-zone-deputy-commissioner-inspects-in-person#comments</comments><guid isPermaLink="false">9d55b0aa-a17e-4dac-8595-1c1e71a24264</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:50:57 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:50:57.586Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ராயபுரம்,ராயபுரம் மண்டலம்,Royapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0kvmvvsf/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/0kvmvvsf/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, ராயபுரம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தூர்வாரும் பணிகள்</h2><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராயபுரம் மண்டலம், வார்டு - 61க்குட்பட்ட சேட் காலனி 1ஆவது தெரு மற்றும் வார்டு - 63க்குட்பட்ட பாரதி சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவும், பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>மேலும், வார்டு–61க்குட்பட்ட காந்தி இர்வின் சாலையில் உள்ள இலவச ஒப்பனை அறையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மக்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வார்டு-59க்குட்பட்ட அண்ணா சாலையில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>பின்னர், வார்டு–63க்குட்பட்ட பாரதி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி சீர்செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தெற்கு கூவம் சாலையில் உள்ள இயற்கை உரம் உற்பத்தி மையம், தெற்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் தெருவில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடப் பணி, வீரபத்திரன் தெருவில் உள்ள வள மீட்பு மையம், அங்கு கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையக் கட்டடப் பணி மற்றும் அங்குள்ள கால்நடைக் காப்பகத்தில் பராமரிக்கப்படும் மாடுகளின் விவரங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைந்து முடித்திடவும், கால்நடை காப்பகத்தினை தூய்மையாகப் பராமரித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வுகளின்போது, மேற்பார்வைப் பொறியாளர் (வடக்கு) ஜி.சொக்கலிங்கம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான சகோதரரை தாக்கிய வழக்கு: இன்றும் சமரசம் எட்டப்படவில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-regarding-the-assault-on-minister-maria-wilsons-brother-no-settlement-reached-today-either</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-regarding-the-assault-on-minister-maria-wilsons-brother-no-settlement-reached-today-either#comments</comments><guid isPermaLink="false">a724ce85-7796-4074-9a39-f0b4b2a699bd</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:46:31 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:46:31.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தாக்குதல்,தமிழகம்,வழக்கு,சொத்து தகராறு,சமரசம்,அமைச்சர் மரிய வில்சன்,Minister Maria Wilson,MarieWilson</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/gjetph1t/eddu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/gjetph1t/eddu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான அவரது சகோதரரை தாக்கிய வழக்கில் இன்றும் சமரசம் எட்டப்படாததால் 5வது முறையாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/mariewilson">தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன்</a>, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட்  8ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத்தையும், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. </p><p>இதுகுறித்து, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது‌. புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் அதன் நகலைப் பெற நேரில் ஆஜராக உத்தரவிட்டபோதும், மரிய வில்சன் தொடர்ந்து நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த ஜூலை 10 ஆம் தேதி கட்டாயமாக ஆஜராக வேண்டும் என மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><h2>சமரச தீர்வு மையம்</h2><p>இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மரிய வில்சன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பிலும் சமாதானம் செய்ய தயாராக இருப்பதால், உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பிரச்சனைக்கு தீர்வு காண உத்தரவிட்டது.</p><h2>சமரசம் எட்டப்படவில்லை</h2><p>நீதிமன்றத்தின் உத்தரவின் படி, கடந்த ஜூலை 13ம் தேதி இரு தரப்பிலும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் ஜூலை 21ம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், ஜூலை 21ம் தேதி அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போதும் தீர்வு எட்டப்படவில்லை. அடுத்து கடந்த ஜூலை 28ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் சமரசம் எட்டப்படவில்லை. பின்னர் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>4வது முறையாக</h2><p>இந்நிலையில் சொத்து தகராறு வழக்கில் சமரச தீர்வு மையத்தில் 4வது முறையாக அமைச்சர் மரிய வில்சன் இன்று ஆஜரானார். இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் சமரசம் எட்டப்படவில்லை. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தை அறிக்கையை  உயர்நீதிமன்றத்திக்கு அனுப்ப சமரச தீர்வு மையம் முடிவு செய்துள்ளது. இந்த பணிகளுக்காக வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது. </p> ]]></content:encoded></item><item><title>தீபாவளியை ஒட்டி கிளாம்பாக்கம் ரெயில்நிலையம் திறக்க வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/possibility-of-opening-the-kalampakkam-railway-station-around-diwali</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/possibility-of-opening-the-kalampakkam-railway-station-around-diwali#comments</comments><guid isPermaLink="false">6778d667-83dd-402f-9c4e-80852584bcd1</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:42:34 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:42:34.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தீபாவளி,கிளாம்பாக்கம்,Kilambakkam Bus Stand,Kilambakkam Bus Terminus,Diwali2026,TNNews</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/f9tkls8j/kilnbappakam33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
 கிளாம்பாக்கம் ரெயில்நிலையம் திறக்க வாய்ப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/f9tkls8j/kilnbappakam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தீபாவளி பண்டிகைக்கு முன்பு அல்லது பிறகோ கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் திறக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் கூறியுள்ளார்.</p><h2>கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் </h2><p>சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கம் அமைந்துள்ளதால், கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.</p><p>இந்தநிலையில், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. பேருந்துநிலையம் - ரெயில்நிலையம் இடையிலான ஸ்கை வாக் அமைக்கும் பணி நிறைவடையவில்லை பணிகள் நடைபெற்று வருகின்றன. கிளாம்பாக்கம் ரெயில்நிலையத்தை பராமரிப்பது குறித்து மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>பணிகளை முடித்து, நடப்பாண்டில் தீபாவளிக்கு முன்பாகவோ அல்லது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF">தீபாவளி</a>க்கு பிறகோ கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் திறக்க வாய்ப்புள்ளது.</p><h2>ஆதம்பாக்கம் ரெயில் நிலையம்</h2><p>ஆதம்பாக்கம் ரெயில் நிலைய தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு உள்ளது. தண்டவாளம் வளைந்து உள்ளதால், ஆதம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பயணிகள் இறங்குவதில் சிரமம் இருக்கிறது. எனவே, இதை சரி செய்யும் பணிகளில் ஈடுபட உள்ளோம். இப்பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டு, பணி நடைபெற உள்ளது. விரைவில், இந்த ஒரு ரெயில் நிலைய பாதுகாப்பு பணிகளுக்கான சான்றிதழ் பெற்று ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.</p><h2> ஏசி மின்சார ரெயில் </h2><p>சென்னை ரயில்வே கோட்டத்துக்கு 2-வது ஏசி மின்சார ரெயில் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்ட வர திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம் - கடற்கரை தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சேத்துப்பட்டு நிலையத்தில் நெடுநேரம் நிறுத்தி இயக்கப்படுவதால், பயணிகள் சிரமத்தை சந்திப்பதாக புகார்கள் வருகின்றன. லோக்கல் பாஸ்ட் ரயில்களை விரைவு பாதையில் இருந்து மின்சார ரயில் பாதைக்கு மாற்றி இயக்குவதால், இந்த தாமதம் ஏற்படுகிறது. விரைவில், இப்பிரச்சினை சரிசெய்யப்படும்</p><p>தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது பாதை </p><p>ஆவடி - கும்மிடிப்பூண்டி 3-வது மற்றும் 4-வது பாதை, அரக்கோணம் - செங்கல்பட்டு 2-வது பாதை, தாம்பரம் - செங்கல்பட்டு, 4-வது பாதை, வில்லிவாக்கம் - அம்பத்தூர் 5-வது மற்றும் 6-வது பாதைகள் இந்த நான்கு திட்டங்களும் தற்போது வெவ்வேறு ஒப்புதல் மற்றும் டெண்டர் கட்டங்களில் உள்ளன. சில திட்டங்களில் டெண்டர் கோருதல், டெண்டர் இறுதி செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும் - அண்ணாமலை அழைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-our-voice-be-heard-at-the-gram-sabha-tomorrow-annamalais-call</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-our-voice-be-heard-at-the-gram-sabha-tomorrow-annamalais-call#comments</comments><guid isPermaLink="false">18098c56-1a61-439f-a173-43ffaefcfbe2</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:23:35 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:23:35.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Annamalai,அண்ணாமலை,தமிழகம்,Gram Sabha Meeting,தமிழக செய்திகள்,கிராம சபை,we the leaders,வீ தி லீடர்ஸ் அமைப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/p3bgeq7m/aga.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/p3bgeq7m/aga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாளை (ஆகஸ்ட் 15ம் தேதி), கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும் என்றும், கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம் என்றும் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/annamalai">அண்ணாமலை</a> தெரிவித்துள்ளார். மேலும் வீடியோ பதிவு ஒன்றையும் டேக் செய்துள்ளார். </p><h2>மிக முக்கிய பொறுப்பு</h2><p>முன்னதாக அவர் தனது  எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;-  </p><p>“நம் மண், நம் நீர், நம் காற்று இவை அனைத்தும் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாத்து வழங்க வேண்டிய பொக்கிஷங்கள். நம் தலைமுறையையும், வருங்கால தலைமுறையையும் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.</p><p>சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வரும் ஆகஸ்ட் 16, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெறும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளைப் பாதுகாப்போம். நமது செயல்களால் ஒரு பசுமையான தமிழகத்தை உருவாக்குவோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மாறுவோம். மாற்றுவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வரும் ஆகஸ்ட் 15 அன்று, கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும். <br><br>கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.<br><br>நமது கிராமம், நமது பொறுப்பு! <a href="https://t.co/4nIxgUypO4">pic.twitter.com/4nIxgUypO4</a></p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a href="https://x.com/annamalai_k/status/2088226717672559092?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>தென்பெண்ணை ஆற்றில் ராஜராஜ சோழன் காலத்து செப்பு நாணயம் கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ancient-copper-coin-and-artifacts-found-in-thenpennai-riverbed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ancient-copper-coin-and-artifacts-found-in-thenpennai-riverbed#comments</comments><guid isPermaLink="false">75d6d181-e7c1-4735-b02d-03818a26babe</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:15:40 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:15:40.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜராஜ சோழன்,Rajaraja Cholan,தென்பெண்ணை ஆறு,கண்டெடுப்பு,Thenpennai River,மணி,discovered</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/yc34ed9a/river.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  உதவி இயக்குநர் லோகநாதன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தென்பெண்ணை ஆற்றில் ராஜராஜ சோழன் காலத்து செப்பு நாணயம் கண்டெடுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/yc34ed9a/river.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருக்கோவிலூர்,</p><p>விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றுப் படுகையில், மாமன்னன்  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D">ராஜராஜ சோழன்</a> ஆட்சிக்காலத்து செப்பு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D"> நாணயம்</a> மற்றும் பழங்கால அரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>புதிய கற்கால ஆயுதம்</p><p>திருக்கோவிலூர் தென்பெண்ணை குழுவினர் அளித்த வரலாற்று தகவலின் அடிப்படையில், தொல்லியல் துறையினர் அந்த பகுதியில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது 18 சென்டிமீட்டர் நீளமும், 4.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட ஈட்டி போன்ற அரிய கல் ஆயுதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.</p><p>இது புதிய கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் பயன்படுத்திய வேட்டை ஆயுதம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பகுதியில்  மூதாதையர்கள் பயன்படுத்திய அரிய நீலநிற மணி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்க காலத்தை சேர்ந்தது</p> <p>ஆராய்ச்சியாளர்கள் தீவிரம்</p><p>திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் தென்கரை மற்றும் வடகரை பகுதிகள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களாக கருதப்படுகின்றன. மேலும், இப்பகுதியின் வரலாற்று பெருமையை முழுமையாக வெளிக்கொணர விரிவான தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உதவி இயக்குநர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளியிலேயே மது அருந்திய மாணவிகள்; தலைமை ஆசிரியை அதிரடி பணியிடமாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-caught-drinking-alcohol-at-school-principal-transferred</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-caught-drinking-alcohol-at-school-principal-transferred#comments</comments><guid isPermaLink="false">e4e2cd35-5af6-4e1d-a948-1fb8738d821d</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:08:06 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:08:06.337Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,education,students,பள்ளி மாணவிகள்,அரசு பள்ளி மாணவிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/t782kid7/students33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தலைமை ஆசிரியர் அதிரடி பணியிடமாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/t782kid7/students33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>தக்கலை அருகே அரசு பள்ளியில், மாணவிகள் மது அருந்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளி தலைமை ஆசிரியைபணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>வகுப்பறையில் மது</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி, நீட் தேர்வு, கியூட் தேர்வு, ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி மையமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி, இந்த தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள், இந்த பள்ளியில் நடைபெற்றது.</p><p>இந்த பயிற்சி வகுப்பிற்கு மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர் ஒரு சில மாணவிகள் குழுவாக இணைந்து வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். வெளியில் இருந்து உணவுகளையும் பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டு உள்ளனர்.</p><p>இதனை அவர்களுடன் வந்த சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட  கலெக்டர் பிரதாப் உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட காவல்துறைக்கும் உத்தரவிட்டார். </p> <h2>ஆண் நண்பர் உதவி</h2><p>இதனைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் விசாரணை நடத்தினார். காவல்துறையும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில், மதுபான பாட்டில்களை அவர்களது ஆண் நண்பர் ஒருவர் டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வந்து கொடுத்ததாக மாணவிகள் பேசும் உரையாடலும் பதிவாகியுள்ளது.</p><p>மேலும் இது குறித்து அதிகாரிகள், தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சம்பந்தப்பட்ட மாணவிகள் </a>மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவிகளுக்கு மது பாட்டில் வாங்கி கொடுத்த நபர் யார் என்றும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><h2>தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்</h2><p>இதனிடையே தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த பிரமிளா இவாஞ்சலின், நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் வடசேரி பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டாலின், தக்கலை அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் உத்தரவிட்டுள்ளார்.</p><p>அரசு பள்ளி மாணவிகள் மது அருந்திய சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வகையில், கல்வித் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் என்னென்ன..? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-series-of-actions-taken-by-the-singapenn-special-task-force</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-series-of-actions-taken-by-the-singapenn-special-task-force#comments</comments><guid isPermaLink="false">590b0d82-96d8-400e-9d49-16a5149918de</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:01:56 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:01:56.135Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,குழந்தைகள்,பெண்கள்,womens,Girls,Singapen Athiradi Padai,சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/4mysco0z/moha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/4mysco0z/moha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</h2><p>இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/தமிழ்நாடு">தமிழ்நாடு</a> காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் துரிதமான கள நடவடிக்கைகள் சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p><h2>விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்</h2><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் தினமும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதால், அவர்கள் தன்னம்பிக்கையுடன் தானே முன்வந்து இதற்கு முன்னர் நடந்த சம்பவங்களையும் தெரிவித்து சட்டரீதியான தீர்வுகளை பெறுகின்றனர். </p><p>கடந்த ஒரு வாரகாலத்தில் 07.08.2026 முதல் 13.08.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 255 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 22 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல் போன 2 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,537 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. </p><h2>தீவிர ரோந்து பணிகள்</h2><p>மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,115 குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>இந்த காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுடைய 11 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. 2 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும், 40 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். </p><h2>வழக்குகள் பதிவு</h2><p>கடந்த வாரத்தின்போது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) களப்பிரிவுகள் சென்னை, ஆவடி, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தேனி, திருநெல்வேலி, சிவகங்கை, திருப்பத்தூர், தென்காசி, திருப்பூர், திருச்சி, திருவள்ளுர் மற்றும் நாமக்கல் ஆகிய பகுதிகளில் பதிவான வழக்குகளுக்கு விரைவாகச் செயல்பட்டு, குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் (POCSO Act), தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் (TNPHW), பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita BNS) (Information Technology Act) உள்ளிட்ட தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. </p><h2>பாதுகாப்பான மாநிலம் </h2><p>மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.</p><p>இத்தகைய துரிதமான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, தமிழகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் நாங்கள் இருக்கும்போது...ஆனால் இப்போது? திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-we-were-in-the-assemblybut-now-dindigul-srinivasan-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-we-were-in-the-assemblybut-now-dindigul-srinivasan-interview#comments</comments><guid isPermaLink="false">77883230-8976-4afe-98a0-18d5af8adcb0</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:53:06 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:53:06.633Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>AIADMK,சட்டசபை,திண்டுக்கல் சீனிவாசன்,tngovt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/nfi02ofx/dingul33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/nfi02ofx/dingul33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>ஒரு மோசமான சூழ்நிலையில், சட்டப்பேரவை கேவலமாக நடந்துகொண்டு இருக்கிறது என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.</p><p>விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும் திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.பரமசிவம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.</p><p>ஆர்ப்பாட்ட முடிவில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><h2>சட்டசபை கேவலமாக நடந்துகொண்டு இருக்கிறது</h2><p>சட்டசபையில் நாங்கள் இருக்கும்போது ஜனநாயகம் இருந்தது. இப்போது 'ஜனநாயகன்' என்று பெயர் வைத்திருக்கிற நடிகர் கட்சியில் ஜனநாயகம் கிடையாது. சர்வாதிகாரம்தான் நடந்துகொண்டு இருக்கிறது</p><p>கேலிக்கூத்து நடக்கிறது. ஒரு மோசமான சூழ்நிலையில், சட்டசபை கேவலமாக நடந்துகொண்டு இருக்கிறது; ஒரு லட்சம் கோடி வெளிநாட்டு ஒப்பந்தங்கள் என்று ஏமாற்றுகிறார்கள்.</p><p>எம்.ஜி.ஆர் ஆட்சியை நாங்கதான் கொடுக்கிறோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுவதை விட வெட்கக்கேடு எதுவுமே இல்லை. நிதியமைச்சர் மரிய வில்சன் ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார். நான் இப்படித்தான் இருப்பேன் என்று திமிராக பேசுகிறார். </p><h2>எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிள்ளைகள் நாங்கள்</h2><p>எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிள்ளைகள் நாங்கள். எடப்பாடி தலைமையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக</a> செயல்படுகிறது. அதிமுக ஆட்சிதான் நடக்கிறது என்றால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ராஜினாமா செய்துவிட்டு போய்விடலாம். இன்னும் 6 மாதம் நேரம் கொடுங்கள் என கேட்கலாம். அதை விட்டுவிட்டு எல்லாம் எங்களுக்கு தெரியும் என்பது மாதிரி பேசுவது தவறு.</p><h2>விவசாயிகள் வாழ்க்கையிலும் வயித்துலையும் அடிக்காதீங்க</h2><p>நிதி இல்லன்னு தெரிஞ்சுதான் வாக்குறுதி கொடுக்குறாங்க. விவசாயிகள் வாழ்க்கையிலும் வயித்துலையும் அடிக்காதீங்க.வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்றுதான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம் அறிவித்தார்” </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>“நான் முதல்-அமைச்சர் விஜய்க்கு ஒரு அறிவுரை சொல்வதானால்..!!” - ஆர்.எஸ்.பாரதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-i-were-to-offer-a-piece-of-advice-to-chief-minister-vijay-rs-bharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-i-were-to-offer-a-piece-of-advice-to-chief-minister-vijay-rs-bharathi#comments</comments><guid isPermaLink="false">9783638b-8e3f-4b95-bcb7-a3f6c5e3ecf3</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:34:18 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:34:18.875Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,ஆர்.எஸ்.பாரதி,R.S. Bharathi,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,அமைச்சர் நிர்மல்குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/odcvddzg/bha.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/odcvddzg/bha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமைச்சர் நிர்மல் குமாரது பேச்சிற்கு<a href="https://www.dailythanthi.com/topic/dmk"> தி.மு.க.</a> அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-</p><p>அமைச்சர் நிர்மல் குமாருக்கு வாயில் உண்மையே வராது. அதற்கு காரணம், அவர் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்தவர். RSS மற்றும் BJP-யில் இருந்தவருக்கு மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. நாங்கள் தொடக்கத்திலிருந்தே பாஜகவை எதிர்த்தவர்கள். இன்றும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம்.</p><h2>நிர்மல் குமார்</h2><p>நிர்மல் குமார் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசக்கூடியவர். அவர் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்தார், அதிமுக-வில் இருந்தார். இப்போது தவெக கட்சியில் இருக்கிறார். இன்னும் இந்த ஆட்சி முடிவதற்குள் அவர் எந்தக் கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை. புதுசாக தனுஷ் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போகிறார், அண்ணாமலை ஒரு கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றெல்லாம் பேசுகிறார்கள்.</p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இப்படி புதிதாக யார் கட்சி ஆரம்பித்தாலும், உடனே போய் முதலில் கையெழுத்துப் போட்டு உறுப்பினர் அட்டை வாங்கி வைத்துக்கொள்வது சிலருக்கு பாரம்பரியமான பழக்கம். அதில் முதன்மையானவர்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிர்மல் குமார். அதேபோல ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் எல்லா கட்சிக்கும் சுற்றிவிட்டுப் போவார்கள். ஆகையினால், அவர்கள் வைக்கும் வாதம் சரியாக இருக்க வேண்டும்.</p><p>கடந்த முறை பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டபோது, திமுக-வால் தான் அது தோற்கடிக்கப்பட்டது. எங்கள் தலைவர் தளபதி அவர்கள் அன்று கருப்புச் சட்டை அணிந்து, அந்தச் சட்ட மசோதாவையே எரித்து எதிர்ப்பைப் பதிவு செய்தார். அதற்குப் பிறகுதான் அது தோற்கடிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.</p><p>திமுக மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டது. நாங்கள் கொடுத்த சில திருத்தங்களை மசோதாவில் சேர்த்து வைத்தால், அதை ஆதரிப்பதா இல்லையா என்பதைப் பார்த்துதான் முடிவு செய்ய முடியும். ஆனால், இவர்கள் ஊழலை மறைப்பதற்காகத் திரும்பத் திரும்பத் திசை திருப்புகிறார்கள்.</p><h2>கோவை மாணவர் கொலை</h2><p>கோவையில் மாணவர் கொலை சம்பவம் நடந்துள்ளது. அன்று <a href="https://www.dailythanthi.com/topic/dmk">திமுக</a> ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில் 85 நாட்களுக்குள் தண்டனை பெற்றுத் தந்து தவறு செய்தவர்களை உள்ளே சிறைக்கு அனுப்பினோம். ஆனால், தூத்துக்குடி பெண் பாதிக்கபட்ட விவகாரத்தில், அவர்கள் கட்சியினரே சம்மந்தப்பட்டிருப்பதாக புகார் அளித்தும் 100 நாட்கள் ஆகியும் அதற்கு இன்னும் பரிகாரம் கிடைக்கவில்லை; கேசும் போடவில்லை, ஒன்றும் செய்யவில்லை.</p><h2>'நான்காவது தூண்'</h2><p>நேற்று ஒரு மாநாடு நடந்தது. எவ்வளவு பெரிய மாநாடாக இருந்தாலும், 'நான்காவது தூண்' (Fourth Pillar) எனப்படும் பத்திரிகையாளர்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், பத்திரிகையாளர்களையே உள்ளே விடவில்லை. அங்கு என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை; முதலமைச்சரே பேசவில்லை. முதலீட்டாளர்கள் எல்லாம் வந்துவிட்டதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், எங்கள் தலைவர் அன்றைக்குக் கொண்டுவந்து போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டாம் கட்டத்திற்கான தொகையைப் போட்டிருக்கிறார்கள்; அவ்வளவுதான்.</p><p>அப்படி இருக்கும்போது பத்திரிகையாளர்களை அனுமதித்தால் என்ன? மக்களுக்கு உண்மைகள் வெட்டவெளிச்சமாகத் தெரிந்துவிடும் என்பதற்காகவே இந்த ரகசியம். பத்திரிகையாளர்களையே அனுமதிக்காமல் ஒரு கூட்டத்தை நடத்துவது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை.</p><h2>சொத்து வரி/வீட்டு வரி</h2><p>அதேபோல, சென்னையில் சொத்து வரி/வீட்டு வரி பயங்கரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைக்குக் கார்ப்பரேஷனில் 'சுய மதிப்பீடு' (Self-Declaration) மூலம் வரி போடுகிறார்கள். அபார்ட்மெண்டில் 50 வீடுகள் உள்ள இடத்தில் இரண்டு பேருக்குத்தான் மதிப்பீடு செய்தார்கள் என்று பச்சையாக  பொய் சொல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி மதிப்பீடு மற்றும் பட்டா இருக்கும். அப்படி தவறாக இருந்தால் CMDA மூலம் அந்த கட்டடங்களை இடிக்க வேண்டியதுதானே? அந்த அதிகாரம் உங்களுக்கு இருக்கிறதே!</p><h2>பொய் பேசும் அமைச்சர்கள்</h2><p>இப்படிப் பொய் பேசும் அமைச்சர்கள் தான் இன்றைக்கு இருக்கிறார்கள். நேற்றைய தினம் எங்கள் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியம் கண்டன அறிக்கை வெளியிட்டு, மக்கள் மத்தியில் பெரிய கொதிப்பு ஏற்பட்ட பிறகு, தற்போது தற்காலிகமாக அதை நிறுத்தி வைப்பதாக சொல்கிறார்கள். </p><p>நிரந்தரமான தீர்வை இவர்களால் சொல்ல முடியவில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சரும், அதிகாரிகளும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. இந்த வரி உயர்வைக் கைவிடாவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்.</p><h2>தொகுதி மறுசீரமைப்பு </h2><p>தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவைப் பொறுத்தவரை, திமுக 'Fair Delimitation' என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஏற்றுக்கொண்டது. நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்பதுதான் எங்கள் கொள்கை. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று சொன்னோம்.</p><h2>சர்க்காரியா கமிஷன்</h2><p>அவர் சர்க்காரியா கமிஷனைப் பற்றியெல்லாம் பேசுகிறார். அப்போது அவர் பிறந்திருக்கவே மாட்டார். சர்க்காரியா கமிஷனுக்குச் சவால் விட்ட ஒரே தலைவர் எங்கள் தலைவர் கலைஞர் மட்டும்தான். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்தது. அவர்களால் ஒரு வழக்காவது போட முடிந்ததா? 2001-இல் இரவோடு இரவாகக் கலைஞரைக் கைது செய்தார்களே, அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் அவர்கள் ஆட்சியில்தான் இருந்தார்கள். ஒரு வழக்கையாவது நிரூபிக்க முடிந்ததா? இதெல்லாம் வரலாறு தெரிந்து பேச வேண்டும்.</p> <h2>விஜய்க்கு அறிவுரை</h2><p>அவர் நேத்துதான் கட்சி ஆரம்பித்து வந்திருக்கிறார். நான் விஜய்க்கு ஒரு அறிவுரை சொல்வதானால்.. பல கட்சிகளுக்கு சென்று வந்த இதுபோன்ற ஆட்களைத் தயவுசெய்து பக்கத்தில் சேர்க்காமல் இருப்பது அவருக்கு நல்லது. 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதைப் போல, இந்த ஆட்சிக்கு கேடு இவர்களால் தான் வரப்போகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மீனவர் பிரச்சினை: அரசு உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-issue-government-must-take-a-sensitive-approach-udhayanidhi-stalins-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermens-issue-government-must-take-a-sensitive-approach-udhayanidhi-stalins-post#comments</comments><guid isPermaLink="false">0119a497-a490-4115-a1fa-b2d766654449</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:08:20 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:08:20.596Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Fishermen Issue,தமிழக மீனவர் பிரச்சினை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/girf2nja/seri.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/girf2nja/seri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார். </p><h2>கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. </p><p>இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.</p><p>மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? </p><h2>மீனவர் பிரச்சினை</h2><p>ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.</p><p>இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வகுப்புகள்: அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/training-classes-at-government-industrial-training-institutes-minister-mohammed-parvez-inaugurates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/training-classes-at-government-industrial-training-institutes-minister-mohammed-parvez-inaugurates#comments</comments><guid isPermaLink="false">fbad9659-c024-4567-80e4-e565a62cf38f</guid><pubDate>Fri, 14 Aug 2026 11:54:17 +0000</pubDate><atom:updated>2026-08-14T11:54:17.100Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,அரசு தொழிற்பயிற்சி நிலையம்,அமைச்சர் முகமது பர்வேஸ்,Industrial Training</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hcjnug9f/ten.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/hcjnug9f/ten.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வகுப்புக்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் இன்று தொடங்கி வைத்தார்.</p><h2>அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 36,344 இருக்கைகளுடன் மற்றும் 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் 26,388 இருக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 70 பொறியியல் மற்றும் 34 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. </p><h2>31.08.2026 வரை சேர்க்கை</h2><p>அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பிரபலமான தொழிற்பிரிவுகளான பிட்டர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், வெல்டர், கணினி உள்ளிட்ட தொழிற்பிரிவுகளிலும் தொழில் 4.0 தரத்திலான அட்வான்ஸ்டு சி.என்.சி, ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெஹிக்கிள் போன்ற நவீன தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 31.08.2026 வரை சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையங்களில் ஒவ்வொரு கல்வியாண்டும் ஆகஸ்டு திங்களில் பயிற்சி தொடங்கும். </p><h2>பணி நியமன ஆணை</h2><p>அதன்வழி, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 14.08.2026 அன்று நடைபெற்ற விழாவில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய வகுப்புகளைத் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி மற்றும் வரைபடக் கருவிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் வழங்கினார்.</p><p>சென்ற ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் சென்ற மாணவர்களில் 95 சதவீதம் பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் 10 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.</p><h2>ரூ.50,000/- ரொக்கப்பரிசு</h2><p>2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த துறையால் நடத்தப்பட்ட 9வது மாநில அளவிலான படைப்புத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற 17 அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் அடங்கிய 5 குழுக்களுக்கு தலா ரூ.50,000/- ரொக்கப்பரிசும் பாராட்டுச் சான்றிதழும் அமைச்சர் அவர்கள் வழங்கினார். மேலும், இவ்விழாவில் 2026-ஆம் கல்வியாண்டில் 100 சதவீத சேர்க்கை மேற்கொண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.</p><p>இவ்விழாவில், கொ. வீரராகவராவ், இ.ஆ.ப., அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பிரதமரை அவமதித்த விஷக்கிருமிகளை உடனடியாக கைது செய்க! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediately-arrest-the-toxic-elements-who-insulted-the-prime-minister-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediately-arrest-the-toxic-elements-who-insulted-the-prime-minister-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b304305a-9f44-4a72-b1ff-43b8370242b1</guid><pubDate>Fri, 14 Aug 2026 11:50:33 +0000</pubDate><atom:updated>2026-08-14T11:50:33.601Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/q1p4ve5t/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/q1p4ve5t/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்த விஷக்கிருமிகளை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும். தவறினால், லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களின் போராட்டப் பெருவெள்ளம் உங்கள் அதிகாரக் கோட்டைகளைத் தகர்த்தெறியும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>போஸ்டரால் சர்ச்சை</h2><p>திருச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை கொலையாளி போலவும், ரத்தக்கறை படிந்தவராகவும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள அருவருக்கத்தக்க போஸ்டர்கள் கடும் கண்டனத்திற்குரியவை. உலகம் போற்றும் ஒரு உன்னதத் தலைவரான பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்துவது, ஜனநாயகத்தின் பெயரால் செய்யப்படும் அப்பட்டமான தேசவிரோதச் செயலாகும்.</p><p>இவ்வாறு பாரதப் பிரதமர் மீது நஞ்சைக் கக்கி வருவதைப் பார்த்துப் பொறுமை காக்க <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாஜக </a>ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் இயக்கமல்ல. எனவே, காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படாமல் வன்மத்தைப் பரப்பும் இந்த விஷக்கிருமிகளை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும். தவறினால், லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களின் போராட்டப் பெருவெள்ளம் உங்கள் அதிகாரக் கோட்டைகளைத் தகர்த்தெறியும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.b</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது - சென்னை ஐகோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-harsh-action-should-be-taken-against-former-minister-ev-velu-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-harsh-action-should-be-taken-against-former-minister-ev-velu-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">e55cba1c-89e0-4678-989b-7dfdb1ced75a</guid><pubDate>Fri, 14 Aug 2026 11:21:15 +0000</pubDate><atom:updated>2026-08-14T11:21:15.380Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,எ.வ.வேலு,Chennai High Court,former minister E.V. Velu</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/2g6lc69r/velu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/2g6lc69r/velu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான, நெடுஞ்சாலை முறைகேடு வழக்கில் உத்தரவை நீட்டித்து <a href="https://www.dailythanthi.com/topic/சென்னை-ஐகோர்ட்டு">சென்னை ஐகோர்ட்டு</a> ஆணை பிறப்பித்துள்ளது. </p><h2>லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு </h2><p>நெடுஞ்சாலை துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கோரியும் எ.வ.வேலு சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். </p><h2>லுக் அவுட் நோட்டீஸ் ரத்து</h2><p>இந்த மனுக்கள் மீது கடந்த மாதம் 28-ம்தேதி நடந்த விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வக்கீல், விரிவான பதில் அளிக்க கால அவகாசம் கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க ஆகஸ்ட் 14-ந்தேதி (இன்று) வரை கால அவகாசம் வழங்கினார்.</p><p>எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், எ.வ.வேலு விசாரணைக்கு ஒத்துழைத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. </p> <h2>இடைக்கால உத்தரவு</h2><p>இருப்பினும், வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் வெளிநாடு செல்ல விரும்பினால் கீழமை கோர்ட்டின் அனுமதியை பெற வேண்டும் என்ற நிபந்தனையையும் ஐகோர்ட்டு விதித்தது. அதே நேரத்தில், எ.வ.வேலுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவையும் இன்று (ஆகஸ்ட் 14-ந்தேதி) வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். </p><h2>நீட்டிப்பு</h2><p>இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான, நெடுஞ்சாலை முறைகேடு வழக்கின் இடைக்கால உத்தரவை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: அமுதம் பல்பொருள் அங்காடியில் அமைச்சர் திடீர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-minister-conducts-surprise-inspection-at-amudham-supermarket</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-minister-conducts-surprise-inspection-at-amudham-supermarket#comments</comments><guid isPermaLink="false">1d3b44b9-5b6e-4e42-af78-a1b1945538e6</guid><pubDate>Fri, 14 Aug 2026 11:17:38 +0000</pubDate><atom:updated>2026-08-14T11:17:38.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ஆய்வு,inspection,பல்பொருள் அங்காடி,அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/z6lsj1f7/venket.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கடரமணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பல்பொருள் அங்காடியில் அமைச்சர் திடீர் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/z6lsj1f7/venket.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் வெங்கடரமணன்</a> சென்னை ராமாபுரம் – மணப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அமுதம் பல்பொருள் அங்காடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.</p> <h2>நேரில் ஆய்வு</h2><p>இந்த ஆய்வின் போது அங்காடியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் இருப்பு நிலை, தரம், முறையான பராமரிப்பு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விநியோக நடைமுறைகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது.</p><p>மேலும், அங்காடியின் சுத்தம், பொருட்கள் முறையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதா, பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா என்பதும் பார்வையிடப்பட்டது.</p><h2>ரசீது கட்டாயம்</h2><p>பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்கள் உரிய எடையிலும், தரமாகவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொருட்கள் வழங்கும்போது விற்பனை ரசீது கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.</p><p>பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி, பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆய்வின்போது, துறை சார்ந்த அலுவலர்கள், மற்றும் அங்காடியின் பணியாளர்கள் உடனிருந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு பாட்டி அரிவாள் வெட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-4-year-old-girl-grandmother-hacks-worker-with-sickle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-4-year-old-girl-grandmother-hacks-worker-with-sickle#comments</comments><guid isPermaLink="false">754ba211-6697-4007-a78a-251ce721dea2</guid><pubDate>Fri, 14 Aug 2026 11:08:48 +0000</pubDate><atom:updated>2026-08-14T11:08:48.742Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual harassment,பாலியல் தொல்லை,Worker,தொழிலாளி,grandmother,பாட்டி,அரிவாள்வெட்டு,4 வயது சிறுமி,4-year-old girl</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/9iqq79fp/grandma.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ தொழிலாளிக்கு பாட்டி அரிவாள் வெட்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு பாட்டி அரிவாள் வெட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/9iqq79fp/grandma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் அருகே 4 வயது சிறுமிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> கொடுத்த சென்ட்ரிங் தொழிலாளியை, சிறுமியின் பாட்டி அரிவாளால் வெட்டி காவல் நிலையத்திற்கு இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவழியில் திரண்ட உறவினர்களும் அவரை சரமாரியாக தாக்கியதால், படுகாயமடைந்த தொழிலாளி பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>சிறுமிக்கு பாலியல் தொல்லை</h2><p>கரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 31). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் அதே பகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, இதுகுறித்து தனது பாட்டியிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி ஆத்திரமடைந்தனர்.</p> <h2>அரிவாள் வெட்டு</h2><p>இந்த நிலையில், ஆத்திரத்தை அடக்க முடியாத சிறுமியின் பாட்டி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கொண்டு நேராக மாணிக்கத்திடம் சென்றுள்ளார். அங்கு அவரிடம் சண்டையிட்ட பாட்டி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணிக்கத்தை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணிக்கத்தை வம்படியாக பிடித்து இழுத்து கொண்டு, அவர் காவல் நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினார்.</p><h2>உறவினர்கள் தர்மஅடி</h2><p>அவர் நடுவழியில் இழுத்து செல்லப்படுவதை பார்த்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். மாணிக்கத்திற்கு பாட்டி தண்டிப்பதை கண்ட அவர்களும் ஆத்திரமடைந்து, நடுரோட்டிலேயே அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். இதில் மாணிக்கத்திற்கு தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களின் பிடியில் இருந்து மாணிக்கத்தை மீட்டனர். </p><h2> போலீஸ் விசாரணை</h2><p> பலத்த காயங்களுடன் இருந்த அவரை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் தொல்லை கொடுத்த மாணிக்கம் மீதும், சட்டத்தை கையில் எடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இச்சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தினம்: சென்னையில் நாளை தேநீர் விருந்து இல்லை - கவர்னர் மாளிகை தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-no-tea-party-in-chennai-tomorrow-raj-bhavan-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-no-tea-party-in-chennai-tomorrow-raj-bhavan-announcement#comments</comments><guid isPermaLink="false">cbb24881-10bd-4b94-b6f9-db2af0016ae0</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:58:04 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:58:04.122Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,கவர்னர் மாளிகை,சுதந்திர தினம்,Independece Day,கவர்னரின் தேநீர் விருந்து,தேநீர் விருந்து,Governor tea party,Governor Arlekar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/jyxdk20h/gvk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/jyxdk20h/gvk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>80-வது சுதந்திர தினத்தையொட்டி நாளை கவர்னரின் தேநீர் விருந்து நிகழ்ச்சி இல்லை என்று கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.</p><h2>சுதந்திர தினம்</h2><p>குடியரசு தினம் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தினத்தை</a> ஒட்டி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதித்துறை, பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட பல்துறை சார்ந்தோர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் மக்கள் மாளிகையில் விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. </p><h2>தேநீர் விருந்து இல்லை</h2><p>இந்நிலையில் சென்னையில் நாளை தேநீர் விருந்து இல்லை என்று கவர்னர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. கவர்னர் அர்லேகர் நாளை (ஆக.15) கேரளா செல்வதால் சென்னையில் தேநீர் விருந்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை இரவு கவர்னர் அர்லேகர் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: அன்புமணிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-delimitation-remarks-spark-manickam-thakur-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-delimitation-remarks-spark-manickam-thakur-response#comments</comments><guid isPermaLink="false">99d695ec-cee2-43fb-bc05-223522a75002</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:54:50 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:54:50.301Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadas,மாணிக்கம் தாகூர்,constituency,அன்புமணி ராமதஸ்,Manickam Tagore,தொகுதி மறுவரையறை,Fair Delimitation</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/lsudbdac/manickam.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/lsudbdac/manickam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டிற்கு 59 எம்.பி. தொகுதிகள் கிடைக்கும் என்றும், 2,000 கிராமங்களை நிர்வகிக்க முடியும் என்றும் அன்புமணி கூறியுள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/manickam-thakur-mp">மாணிக்கம் தாகூர் </a>எம்.பி. எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது:-      </p> <h2>சிபிஐ வழக்கு</h2><p>அன்புமணி ராமதாஸ் அவர்களை...  சிபிஐ வழக்கின் நெருக்கடியை கண்டு அஞ்சி, பா.ஜ.க அரசின் தொகுதி மறுவரையறைக்கு வக்காலத்து வாங்குவதற்காகவே இதுபோன்ற அடிப்படை புரிதலற்ற கருத்துகளை பேசுகிறீர்களா?</p> <h2>அரசியலமைப்பு சட்டம் </h2><p>இங்கிலாந்து ஒரு ஒற்றையாட்சி முறை கொண்ட நாடு. அங்கு மத்திய நாடாளுமன்றமே முழு அதிகாரத்தையும் வைத்திருக்கிறது. இந்தியாவை போல தனியாக சட்டமன்றங்களும், சுயாட்சி உரிமைகளும் கொண்ட 'மாநில அரசு' என்ற அமைப்பே அங்கு கிடையாது. இங்கிலாந்தில் கவுன்சில்கள் மற்றும் மாநகராட்சிகள் போன்ற உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளே நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்குகின்றன. ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. </p><h2>ஒற்றையாட்சி</h2><p>இங்கு மாநிலங்களுக்கு தனித்தனியான அதிகாரங்களும், உரிமைகளும், சட்டமன்றங்களும் வழங்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் இந்த ஒற்றையாட்சி உள்ளாட்சி அமைப்பை உதாரணம் காட்டி, இந்தியாவின் மாநில உரிமைகளோடும் இந்திய நாடாளுமன்ற அமைப்போடும் ஒப்பிட்டு பேசுவது உங்கள் அடிப்படை அரசியலமைப்பு புரிதலற்ற தன்மையையும் அறியாமையையுமே காட்டுகிறது.</p> <h2>முடக்கப்பட்டுள்ளனர் </h2><p>தமிழ்நாட்டிற்கு 59 இடங்கள் கிடைக்கும், 2,000 கிராமங்கள் மேலாண்மை செய்யப்படும் என்றெல்லாம் அன்புமணி கூறுகிறார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணி என்பது சட்டங்களை இயற்றுவதும் திருத்துவதும் மட்டுமே; திட்டங்களை நேரடியாக செயல்படுத்துவது எம்.பி.க்களின் வேலை அல்ல. உங்கள் கூட்டணி பா.ஜ.க அரசின் சர்வாதிகார போக்கால், எம்.பி.க்கள் தங்களின் அடிப்படை நாடாளுமன்ற கடமைகளைக்கூட சுதந்திரமாக செய்ய முடியாமல் முடக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த மழைக்கால கூட்டத்தொடரிலேயே உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டுமே!</p><h2>பஞ்சாயத்து ராஜ் சட்டம்</h2><p>பாரத பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் கண்ட கனவு அதிகாரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகும். மாநகராட்சிகளுக்கு, நகராட்சிகளுக்கு, பேரூராட்சிகளுக்கு, மாவட்ட ஊராட்சிகளுக்கு, ஊராட்சி ஒன்றியங்களுக்கு மற்றும்  கிராம ஊராட்சிகளுக்கு தான் உண்மையான அதிகாரங்களும் நிதியும் வழங்கப்பட வேண்டும்; இதை ஒழுங்காக உங்கள் கூட்டணி கட்சியான பா.ஜ.க செய்ய விட்டாலே வளர்ச்சி பணிகள் தானாக நடக்கும். ஆனால் அதை விட்டுவிட்டு மாநில அரசுகளின் உரிமைகளை குறைப்பதிலும், அவற்றை ஒடுக்குவதிலுமே முழு கவனத்தையும் செலுத்திக்கொண்டு,எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது ஜனநாயகத்திற்கு எந்தப் பலனையும் தராது.</p><h2>33% இடஒதுக்கீடு</h2><p>மீண்டும் மக்களவை எம்பி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் தர்மபுரி போன்ற இடங்களில் உங்களுக்கான ஒரு தொகுதி கைநழுவி போய்விட கூடாது என்பதற்காகத்தானே, தொகுதி எண்ணிக்கையை கூட்டி பெண்களுக்கு இன்னொரு சீட் தருவது போல பேசுகிறீர்கள்? பெண்களுக்கு உண்மையாகவே அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இப்போது தர்மபுரியை நடைமுறையில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளிலேயே உடனடியாக 33% இடஒதுக்கீட்டை கொடுத்துவிடலாமே, அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?</p><h2>'சீனா நாடாளுமன்றம்' </h2><p>ஏற்கனவே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மக்களவையில் பேச வாய்ப்பு கிடைக்காத சூழலில், 800-க்கும் மேற்பட்டஎம்.பி.க்களை கொண்டு வந்து நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் 'சீனா நாடாளுமன்றம்' போல முடக்க பார்க்கிறீர்களா? நடப்பு கூட்டத்தொடரில் அன்புமணி எத்தனை நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் பேசினார்? பிரச்சினை எம்பிக்களின் எண்ணிக்கையில் இல்லை, நாடாளுமன்றம் செயல்படும் முறையில் தான் இருக்கிறது.</p><h2>உத்தரப் பிரதேசம்</h2><p>இப்போது உத்தரப் பிரதேசத்தில் 80 இடங்களும், தமிழ்நாட்டில் 39 இடங்களும் உள்ளன; இப்போதே இரண்டுக்கும் இடையே 41 இடங்கள் வித்தியாசம் இருக்கிறது. 50% இடங்கள் அதிகரிக்கப்படும் பட்சத்தில் உத்தரப் பிரதேசத்திற்கு 120 இடங்களாகவும், தமிழ்நாட்டிற்கு 59 இடங்களாகவும் மாறும். இதனால் உத்தரப் பிரதேசத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளி 41-ல் இருந்து 61 இடங்களாக இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்!</p><h2>தமிழ்நாட்டின் குரல்</h2><p>மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாட்டின் அரசியல் பலமும் பிரதிநிதித்துவமும் கடுமையாக சரிந்து, டெல்லியில் தமிழ்நாட்டின் குரல் பலமற்றதாக மாற்றப்படும் என்ற உண்மை உங்களுக்கு தெரியாதா? </p> <h2>எட்டப்பர்களே</h2><p>தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து, மாநிலத்தை அதிகாரமற்றதாக்கும் இத்தகைய தொகுதி மறுவரையறை முறையை ஆதரிப்பவர்கள் அனைவரும் வரலாற்று துரோகம் இழைக்கும் 'எட்டப்பர்களே'! அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரவலாக்குவோம்; தமிழ்நாட்டின் உரிமைகளை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டோம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரெயிலில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகை திருட்டு: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/diamond-jewelry-worth-3-crore-stolen-on-train-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/diamond-jewelry-worth-3-crore-stolen-on-train-2-arrested#comments</comments><guid isPermaLink="false">59ba4dd4-985e-4ec5-aed7-b1853da728e3</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:50:15 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:50:15.908Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கைது,train,arrest,நகை கொள்ளை,police enquiry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qa7000i1/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நகை கொள்ளை]]></media:title><media:description type="html"><![CDATA[ நகை கொள்ளை, 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qa7000i1/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகையை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ரெயில் பயணம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>வேப்பெரி பகுதியைச் சேர்ந்தவர் தீபக் சஞ்செட்டி (வயது 32). அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள ‘மணி ஜூவல்லர்ஸ்’ நகைக்கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த ஜூலை 23-ந்தேதி இரவு மதுரை வழியாக சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தார். மேலும், கையில் 3 கோடி ரூபாய் மதுப்புள்ள வைர நகைகளுடன் தீபக் முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் ஏ 43 இருக்கையில் பயணித்தார்.</p><h2>கொள்ளை</h2><p>அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருச்சி ரெயில் நிலையத்தை அடைந்த போது தீபக் சஞ்செட்டி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்தபோது 3 கோடி ரூபாய் வைரம் வைத்திருந்த தோல் பை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.</p><h2>போலீசில் புகார்</h2><p>இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிழிந்த நிலையில் உள்ள ஒரு தோல் மற்றும் அதற்குள் ஸ்மார்ட் வாட்ச் ஒன்று கல்லகம் ரெயில் நிலையத்தில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனந்தபுரி ரெயிலில் முதல் வகுப்பில் பயணித்த பட்டியலை போலீசார் ஆய்வு செய்தனர்.</p><p>அதே பெட்டியில் பயணித்த 2 பேர் ரெயிலில் இருந்து பாதியில் இறங்கிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. இதையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த 2 பேரும் மதுரை ரெயில் நிலையத்திலிருந்து தீபக் சஞ்செட்டியை பின் தொடர்ந்தது தெரியவந்தது.</p><h2>2 பேர் கைது</h2><p>ரெயில்வே போலீசார் அவர்களின் முகத்தோற்றத்தை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிய வைத்தனர். பின்னர் ஒரு வாரப் போராட்டத்திற்கு பிறகு சிற்குரி அம்மானில் குற்றவாளிகளான பாட்னா மாநகராட்சி கவுன்சிலர் மகனான ராஜன்குமார் மற்றும் அவரது நண்பரான அமர்நாத் ஆகிய 2 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே ரெயிலில் ஏ42 இருக்கையில் பயணித்த அமர்நாத் தோல் பையை<a href="https://www.dailythanthi.com/topic/கொள்ளை"> கொள்ளையடித்து </a>அவரது நண்பர் ராஜன்குமாரிடம் கொடுத்தது தெரியவந்தது. மேலும், சென்னை வந்த 2 பேரும் சவுகார் பேட்டையில் உள்ள நகை கடையில் நகையின் மதிப்பை பற்றி கேட்டறிந்தனர்.</p><p>பின்னர் சென்னையில் இருந்து மும்பை செல்வதற்கு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்து, தக்கல் மூலமாக மீண்டும் டிக்கெட்டை பதிவு செய்து மும்பை சென்ற விவரங்கள் தெரிய வந்தது. இது போன்ற சம்பவங்கள் ரெயிலில் தொடர்ந்து நடைபெறுகின்றன. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராணிப்பேட்டை : சோளிங்கர் ரோப் கார்  சேவை 22 நாட்கள் நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ranipet-cholingar-rope-car-service-suspended-for-22-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ranipet-cholingar-rope-car-service-suspended-for-22-days#comments</comments><guid isPermaLink="false">9bf31c5a-f176-4b74-ba3e-047ec19257b7</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:48:22 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:48:22.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராணிப்பேட்டை,Ranipettai,சோளிங்கர்,ரோப் கார்  சேவை,roap car</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/327xph2g/roap33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோளிங்கர் ரோப் கார்  சேவை 22 நாட்கள் நிறுத்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/327xph2g/roap33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராணிப்பேட்டை,</p><p>சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக ஆகஸ்ட் 19ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை 22 நாட்களுக்கு சேவை நிறுத்தப்படுகிறது.</p><p>சோளிங்கரில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோவில்</a> உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இங்கு பெரியமலையில் ஸ்ரீயோக நரசிம்மர் கோவிலும், சிறிய மலையில் ஸ்ரீயோகஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது.</p><p>இந்தநிலையில்,  இதில் பெரிய மலைக்கு செல்ல படிகள் செங்குத்தாக இருப்பதால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இந்துசமய அறநிலையத்துறையினர் ரோப்கார் அமைத்துள்ளனர். இதில் ரூ.100 கட்டணம் செலுத்தி மலை ஏற முடியாதவர்கள் மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர்.</p><p>மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில்,   சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக ஆகஸ்ட் 19ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை 22 நாட்களுக்கு சேவை நிறுத்தப்படுகிறது. </p><p>செப்டம்பர் 10ம் தேதி முதல் வழக்கம்போல் ரோப்கார் சேவை இயங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் வழக்கம்போல்  படிகள் வழியே செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட பெண் மருத்துவர்!.. அலறி ஓடிய நோயாளிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-doctor-creates-a-ruckus-at-the-hospital-patients-flee-in-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-doctor-creates-a-ruckus-at-the-hospital-patients-flee-in-panic#comments</comments><guid isPermaLink="false">0698ff47-1140-4bd2-9877-9b310a0b30d3</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:25:04 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:25:04.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,female doctor,Riot,hospital,மருத்துவமனை,நோயாளிகள்,Patients,ரகளை,பெண் மருத்துவர்,நோயாளிகள் அவதி,Patients suffer,பெண் ரகளை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/p5avmgdn/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/p5avmgdn/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை மருத்துவர்களான இரு சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இதில் அவரது மனைவிகளும் மருத்துவர்களாக பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சகோதரர்கள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மருத்துவமனையை யார் நிர்வகிப்பது என்ற பிரச்சினை எழுந்துள்ளது.</p><h2>மருத்துவமனையில் ரகளை</h2><p>இந்த நிலையில் நேற்று மாலை பெண் மருத்துவரான அழகானந்தா என்பவர் திடீரென மருத்துவமனையின் 3-வது மாடிக்கு சென்று அங்கு பணியில் உள்ள செவிலியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பொது வார்டுகளின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த 5க்கும் மேற்பட்ட நோயாளிகள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்துள்ளார். இதனால் நோயாளிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மூச்சுத்திணறல் </a>ஏற்பட்டு மருத்துவமனையிலிந்து அலறியடித்து வெளியே ஓடினர். இதனால் அங்கு பணிபுரிந்த செவிலியர்களும் துப்பட்டாவால் மூக்கை பொத்திக் கொண்டு வெளியே ஓடினர் .</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெண் மருத்துவரான அழகானந்தா போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து மற்றொரு மருத்துவர் மோகனசுந்தரி என்பவர் போலீசாரிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்டான்லி மருத்துவமனை முட்டை விவகாரம்: வைரலாகும் காணொலி பழையது என விளக்கம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stanley-hospital-egg-controversy-clarification-issued-that-the-viral-video-is-old</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stanley-hospital-egg-controversy-clarification-issued-that-the-viral-video-is-old#comments</comments><guid isPermaLink="false">d48a8b92-6b90-476b-a5be-6db4d887a316</guid><pubDate>Fri, 14 Aug 2026 10:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-14T10:00:27.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு அரசு,Government Hospital,Fact Check Unit,Fact check,TamilNadu Goverment,ஸ்டான்லி மருத்துவமனை,Stanley Hospital,Govt Stanley Hospital,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,அரசு மருத்துமனை,தகவல் நம்பகத்தன்மை,தகவல் நம்பகத்தன்மை பிரிவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/fa82yt7f/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்டான்லி மருத்துவமனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/fa82yt7f/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டையை ஊழியர் ஒருவர் அலட்சியமாக படுக்கையில் வைத்துவிட்டு சென்றதாக காணொலி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும் இது குறித்து தங்களின் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். </p><h2>மருத்துவமனை விளக்கம்</h2><p>இந்த நிலையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை தொடர்பாக பரவும் காணொலி ஐந்து மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என ஸ்டான்லி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டையை ஊழியர் ஒருவர் அலட்சியமாக படுக்கையில் வைத்துவிட்டு சென்றதாக காணொலிகள் வெளியாகியுள்ளன.</p><h2>இது முற்றிலும் தவறான தகவல்</h2><p>ஐந்து மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காணொலி </a>தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அரசின் நற்பெயரை கெடுக்கும் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என ஸ்டான்லி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திமுகவிற்கு வாக்களிக்காத வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” - ஆர்.எஸ். பாரதி பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-condemns-rs-bharathis-remark-that-voters-who-did-not-vote-for-the-dmk-will-not-have-a-good-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-condemns-rs-bharathis-remark-that-voters-who-did-not-vote-for-the-dmk-will-not-have-a-good-death#comments</comments><guid isPermaLink="false">e9c874ca-542c-4bc0-bed1-c986c01f5e74</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:34:51 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:34:51.288Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,திமுக,DMK,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,ஆர்.எஸ். பாரதி,R.S. Bharathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/2cd55dsd/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/2cd55dsd/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்பிரமணியண் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தால் கூட வெற்றி பெற்று இருப்போம். அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வானதி சீனிவாசன் கண்டனம்</h2><p>இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் இந்த சர்ச்சைக்குறிய பேச்சுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுகவிற்கு வாக்களிக்காத சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” என்று சாபம் விடும் தொனியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை இழிவுபடுத்துவதுதான் திமுகவின் அரசியல் நாகரீகமா?</p><h2>இது என்ன மனநிலை</h2><p>எதிர்க்கட்சியினர், திட்டங்களின் பயனாளிகள், பெண்கள் என தொடர்ந்து பல்வேறு தரப்பினரை இழிவுபடுத்திப் பேசிய திமுகவினர், இப்போது தங்களுக்கு வாக்களிக்காத மக்களையே சாபமிடும் நிலைக்குச் செல்வது என்ன மனநிலை என்று தெரியவில்லை.</p><p>மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்பியதற்கான காரணங்களில் இதுபோன்ற அகங்காரப் பேச்சுகளும் ஒன்று என்பதை திமுக-வினர் மறக்கக் கூடாது. இனியாவது மேடைகள் உங்கள் வீடுகள் அல்ல என்பதை உணர்ந்து, மக்களின் வாக்குரிமையை மதித்து, அரசியல் நாகரீகத்துடன் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“கோவை நகரம் பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா?” - தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-city-of-coimbatore-in-pakistan-or-afghanistan-high-court-questions-the-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-city-of-coimbatore-in-pakistan-or-afghanistan-high-court-questions-the-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">a6b5b698-7d6b-494a-8d56-cabc24c47f52</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:22:26 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:22:26.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Tamilnadu,கோவை,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,தமிழ்நாடு அரசு,Chennai High Court,TN government,national flag,பேரணி,Kovai,தேசியக் கொடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/y5u2lj7v/chn.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/y5u2lj7v/chn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பேரணி நடத்த தி.க., பாஜகவிற்கு அனுமதியில்லை, த.வெ.க.விற்கு மட்டும் அனுமதியா? என்று தமிழ்நாடு அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/சென்னை-ஐகோர்ட்டு">சென்னை ஐகோர்ட்டு</a> கேள்வி எழுப்பி உள்ளது.</p><h2>அவசர வழக்கு</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட தேசியக் கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார். </p><p>இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தேசியக் கொடி பேரணி</h2><p>சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக் கொடி பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. கடந்த 6-ஆம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாக பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது.</p><h2>ஜனநாயக விரோத நடவடிக்கை</h2><p>அதன் பிறகு சிவானந்தா காலனி முதல் பவர்ஹவுஸ் வரை மற்றும் தெப்பக்குளம் மைதானம் முதல் காமராஜர்புரம் வரை என இரு மாற்று வழிகளை பரிந்துரைத்தோம். அதிகாரிகளுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வழித்தடத்துக்கு அனுமதி தருவதாகக் கூறிய நிலையில், மாலையில் திடீரென எந்த வழித்தடத்துக்கும் அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது. </p><p>காந்திபுரத்தில் அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டணி அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கு தடையின்றி அனுமதி வழங்கிய மாநகர காவல் ஆணையர், தேசியக் கொடி பேரணிக்கு மட்டும் அனுமதி மறுத்து ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். காவல் துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியிருந்தார்.</p><h2>த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</h2><p>இந்நிலையில் இன்று நடந்த இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். </p><p>இதன்படி, “பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி இல்லை, பாஜகவுக்கு அனுமதி இல்லை, த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</p><p>கோவை நகரம் என்ன பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா? தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்வது பாவச் செயலா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல் துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். </p> ]]></content:encoded></item><item><title>80ஆவது சுதந்திர தினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-greetings-from-marxist-communist-party</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-greetings-from-marxist-communist-party#comments</comments><guid isPermaLink="false">760de529-61c9-425f-9c14-b65d2e2f72b7</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:12:54 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:12:54.196Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,சுதந்திர தினம்,Independence Day,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,CPI(M)</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/7etn6spb/communist.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/7etn6spb/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>80ஆவது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தினம்</a> ! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து !! இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><h2>நல்வாழ்த்து</h2><p>நமது இந்திய திருநாடு 80ஆவது விடுதலை திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய பொழுதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</a> கட்சியின் சார்பில் சுதந்திர தின புரட்சிகா நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.</p><h2>வீரவணக்கம்</h2><p>'தண்ணீர்விட்டோ வளர்த்தோம் ? இப்பயிரை கண்ணீராற் காத்தோம்' என்ற மகாகவியின் பாட்டு வரிகளுக்கேற்ப நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தோர், சிறைக்கொட்டடியையும், சித்ரவதைகளையும் இன்முகத்தோடு எதிர்கொண்ட தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கத்தை உரித்தாக்குகிறோம்.</p><h2>கம்யூனிஸ்ட் இயக்கம்</h2><p>விடுதலைக்கான நெடிய போராட்டத்தில் முழு விடுதலை என முதலில் முழங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்தியாவின் ஒருமைப்பாடும், பன்முகத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மொழிவழி மாநிலங்களே தீர்வு என முன்பின் முரணின்றி முன்மொழிந்தது கம்யூனிஸ்ட் இயக்கம்.</p> <h2>போராட்டம்</h2><p>விடுதலைப் போரில் வீரம் செறிந்த பங்களிப்பை செய்த கம்யூனிஸ்டுகள், சுதந்திர போராட்டத்தோடு மண்ணுரிமை, பெண்ணுரிமை, தொழிலாளர் வர்க்க உரிமைகள், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம், சமூக நீதி, சம நீதி போன்றவற்றை இணைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.</p><h2>மத வெறி சக்திகள்</h2><p>விடுதலை போராட்டத்திலிருந்து விலகி நின்ற மத வெறி சக்திகளின் வாரிசுகளிடம் மத்திய மற்றும் பல மாநிலங்களின் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத இந்த கூட்டம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை திட்டமிட்டு சிதைத்து வருகிறது. அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்படுகின்றன.</p><h2>அயல்துறை கொள்கை</h2><p>பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றி தரப்படுகிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி விடுதலை பெற்ற நமது நாட்டின் சுயேட்சையான அயல்துறை கொள்கை கைகழுவப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடிபணிவதாக அயல்துறை கொள்கை மாற்றப்பட்டுள்ளது.</p> <h2>மோடி அரசு</h2><p>உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள் அன்று நம் முன்னோர்கள். இன்று விவசாயிகளின் விதை உரிமையை கூட பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கிறது மோடி அரசு. வேலையின்மை, வறுமை, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு முடிவு காணப்படவில்லை. தேசத்தின் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவை முடக்க மோடி அரசு சதி செய்கிறது.</p> <p>ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்ற விழுமியங்களை கொண்ட அரசியல் சட்டத்தை பாதுகாக்க விடுதலை நாளில் உறுதியேற்போம்.</p><h2>இளைஞர் - மாணவர் போராட்டம்</h2><p>போராட்டங்களின் வழியாகவே சாதிக்க முடியும் என்பதற்கு சமீபத்திய சாட்சியமாக டெல்லி துவங்கி நாடு முழுவதும் நடந்த இளைஞர் - மாணவர் போராட்டம் திகழ்கிறது. விடுதலை போராட்ட தியாகிகளின் கனவுகளை நனவாக்கவும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற சமத்துவ சமூகத்தை உருவாக்கிடவும் விடுதலை நாளில் உறுதியேற்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மூன்று நாள் ‘மீடியா ட்ரோன் பயிற்சி’</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-day-media-drone-training-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-day-media-drone-training-in-chennai#comments</comments><guid isPermaLink="false">52cdaced-b74e-498c-959e-302564eec159</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:10:00 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:10:00.603Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Drone,Training,Drone Camera,பயிற்சி வகுப்பு,ட்ரோன்,ட்ரோன் கேமரா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/h7i8s8gw/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/h7i8s8gw/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ‘மீடியா ட்ரோன் பயிற்சி’ வரும் 18.08.2026 முதல் 20.08.2026 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.</p><h2>பயிற்சி நோக்கம் / சிறப்பம்சங்கள்:</h2><p>• ட்ரோன் தொழில்நுட்பம் – அறிமுகம் • ட்ரோன் சினிமாடோகிராஃபி நுட்பங்கள் • வானிலிருந்து(Aerial Photography) புகைப்படம் – அறிமுகம் • FPV சினிமாடோகிராஃபி • DGCA விதிமுறைகள் மற்றும் விமான பாதுகாப்பு</p><h3>மீடியா ட்ரோன் பைலட்டுகளுக்கான தொழில் வாய்ப்புகள்:</h3><p><strong>· திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு.</strong></p><p><strong>· செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள்.</strong></p><p><strong>· ஆவணப்பட தயாரித்தல்.</strong></p><p><strong>· விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங்.</strong></p><p><strong>· கார்ப்பரேட் திரைப்படங்கள்.</strong></p><p><strong>· யூடியூப் மற்றும் சமூக ஊடக உள்ளடக்க உருவாக்கம்.</strong></p><p><strong>· காவல் மற்றும் ராணுவ கண்காணிப்பு.</strong></p><p><strong>· நிகழ்ச்சி செய்தி களிப்பு.</strong></p><p><strong>· சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை.</strong></p><p><strong>· ரியல் எஸ்டேட் புகைப்படம் / வீடியோ தயாரித்தல்.</strong></p><p><strong>· தொழிற்துறை புகைப்படம்.</strong></p><p><strong>· காடு மற்றும் விலங்கியல் புகைப்படம்.</strong></p><p><strong>· தீ மற்றும் மீட்பு பணிகள்.</strong></p><p><strong>· அரசுத் திட்டங்கள்.</strong></p><p>மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.</p><h2>முன்பதிவு அவசியம்</h2><p>இப் பயிற்சியில் ஆர்வமுள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழில் முனைவோர்கள்</a> (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்/ தொழில்முனைவோர்கள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.</p><p>மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 8668100181 / 9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.</p><p>தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர், ஒசூர் விமான நிலையங்கள் அமைப்பதில் த.வெ.க. அரசின் முடிவு என்ன.? டி.ஆர்.பி.ராஜா கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-tvk-governments-decision-regarding-the-establishment-of-airports-at-parandur-and-hosur-trb-rajaa-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-tvk-governments-decision-regarding-the-establishment-of-airports-at-parandur-and-hosur-trb-rajaa-asks#comments</comments><guid isPermaLink="false">b1070256-db7a-4be6-8969-b802ae74dd1d</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:47:20 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:47:20.872Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,TRB Raja,டி.ஆர்.பி. ராஜா</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/97jo690p/klier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/97jo690p/klier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>75 சதவீத MoU-கள் தி.மு.க. ஆட்சியில் தயார் செய்தவை. இந்த 100 நாட்கள்ல பெரிய புதிய திட்டங்கள் ஏன் வரவில்லை? என்று முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, த.வெ.க. அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். </p><h2>தி.மு.க. ஆட்சியில்..</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p><a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> அரசு நடத்திய முதலீட்டாளர்கள் கூட்டம் தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எழுப்பிய கேள்விகள்.</p><p>75 சதவீத MoU கள் தி.மு.க. ஆட்சியில் தயார் செய்தவை. இந்த 100 நாட்கள்ல பெரிய புதிய திட்டங்கள் ஏன் வரவில்லை?..  </p><p>வளர்ச்சிக்கு முக்கியமான பரந்தூர், ஒசூர் விமான நிலையங்கள் அமைப்பதில் இந்த அரசின் முடிவு என்ன.?</p><h2>நம்பர் 1:</h2><p>இந்த Conclave விற்கு ஊடகங்களை ஏன் அனுமதிக்கவில்லை.? ஏன் இவ்வளவு Secrecy? ஏன், இதுல வர திட்டங்கள் எல்லாமே சென்ற திராவிட மாடல் ஆட்சில நாங்க ரெடி பண்ணினது தான் என்பது ஊடகங்களுக்கு தெரிஞ்சிடும் என்ற எண்ணமா.? எதுவாக இருந்தாலும் முதலீடுகளை ஈர்க்கவும் அதை Promotion செய்யவும் Press மிக முக்கியமான ஒன்று. </p><h2>நம்பர் 2:</h2><p>இதுல வந்த MOU-ஸ் களில் கிட்டத்தட்ட ஒரு 75 சதவீதம் திராவிட மாடல் ஆட்சில ரெடி பண்ணி வச்சிருந்த அந்த திட்டங்கள்தான் அப்படின்னு எல்லாருக்கும் தெரியுது. அது உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன். </p><h2>நம்பர் 3:</h2><p>நம்ம "Bullish on TN" லோகோவே மாத்திருக்கீங்கன்னு சொல்றாங்க. எல்லாத்துலயும் ஸ்டிக்கர் ஒட்ட தேவையில்ல. இதெல்லாம் வந்து நாங்க மார்க்கெட் பண்ணி, இவ்ளோ தூரம் Project செய்து, Publicity கொண்டுவந்து வச்சிருக்கோம் . அத நம்ம அப்படியே தொடர்ச்சியா நம்ம தமிழ்நாட்டுக்கு யூஸ் பண்றதுல என்ன தவறுன்னு எனக்கு தெரியல. </p><p>அதுல ஒன்னும் தி.மு.க. பிராண்டிங் எல்லாம் ஒன்றும் நாங்க ஒட்டல. அது தமிழ்நாட்டுக்கான பிராண்டிங். அந்த தமிழ்நாட்டோட பிராண்டிங்க திருப்பி ரீபிராண்ட் (Re-brand) பண்ணி, திருப்பி ரீ-ஸ்டார்ட் (Re-start) பண்ண வைக்காதீங்க. இத்தனை நாள் செய்திருக்கும் அந்த பணிய யூட்டிலைஸ் (Utilize) பண்ணிக்கோங்க. அது அடுத்த கட்டத்துக்கு தமிழ்நாட்ட உயர்த்துறதுக்கு உதவியா இருக்கும். </p><h2>நம்பர் 4:</h2><p>ஆந்திர பிரதேஷ்  CM சந்திரபாபு நாயுடு அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு State Investment Promotion Bureau மீட்டிங்க அவரே நடத்தினார். அதுல ரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை கிளியர் பண்றாரு. </p><p>ஆனா இங்க இன்னும் சென்ற தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தப்பட்டு முடிக்கப்பட்ட அந்த திட்டங்களோட MOU-ஸ் மட்டும்தான் இன்னைக்கு நீங்க சைன் பண்றீங்க. அதுதான்  Predominantly சைன் பண்றீங்க அப்படின்னு சொல்றாங்க. கிட்டத்தட்ட 75% of those MOUs signed today are from... or an outcome of the DMK regime's good work அப்படின்னு சொல்றாங்களே... </p><p>அப்போ புதிய திட்டங்கள் ஏன் வரல? இந்த 100 நாட்கள்ல ஏன் பெரிய புதிய திட்டங்கள் இன்னும் வரல? </p><h2>நம்பர் 5:</h2><p>ரொம்ப முக்கியமான ஒன்று Infrastructure. இவ்வளோ திட்டங்களும் இங்க வரணும், இன்னும் பெரிய திட்டங்கள்லாம் இங்க வரணும்னா, இன்வெஸ்ட்மென்ட் ரேஸ்ல நமக்கு இன்ப்ராஸ்ட்ரக்சர் ரொம்ப ரொம்ப முக்கியம். ஓசூர் அண்ட் பரந்தூர் ஏர்போர்ட்ஸ்  very very critical for Tamil Nadu's industrial growth. இதுல இன்றைய ஆட்சியாளருக்கு என்ன ஸ்டாண்ட் (Stand)ன்றது கிளாரிட்டி இன்னும் வரல. </p><p>எனவே, திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி காலத்துல தமிழ்நாடு பெற்றிருந்த அந்த வளர்ச்சி தொடர வேண்டுமென்றால், Investment promotion நாம இன்னும் கவனம் செலுத்தணும். நிச்சயமாக மிகப்பெரிய அளவுல புதிய நிறுவனங்கள், புதிய வெளிநாட்டு முதலீடுகள் நம்ம தமிழ்நாட்டுக்கு புதிய இடங்களில் வருவதை நாம் உறுதி செய்வது மிக மிக அவசியம். தற்போதைய முதல்-அமைச்சர் இதுல நிச்சயமாக கவனம் செலுத்தணும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நெருக்கடியை சமாளிக்க மக்கள் மீது சுமையை ஏற்ற முயல்வதா? - டி.டி.வி. தினகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-government-shifting-crisis-burden-onto-people-ttv-dhinakaran-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-government-shifting-crisis-burden-onto-people-ttv-dhinakaran-questions#comments</comments><guid isPermaLink="false">23a5b464-6373-49d7-90c3-4abc0db3c143</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:45:17 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:45:17.114Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,சொத்துவரி,Public,மக்கள்,டி.டி.வி. தினகரன்,நெருக்கடி,debt burden,asks</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ic1e2bk5/ttv-dinakaran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ic1e2bk5/ttv-dinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நெருக்கடியை சமாளிக்க மக்கள் மீது சுமையை ஏற்ற முயல்வதா? என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/ttv-dhinakaran">டி.டி.வி. தினகரன் </a>கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <p>சென்னை மாநகராட்சியில் திடீரென உயர்த்தப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">சொத்துவரி</a>; பொதுமக்களிடம் எழுந்த கடும் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு – நிதி நெருக்கடியை சமாளிக்க மக்கள் மீது சுமையை ஏற்ற முயல்வதா?</p> <h2>சொத்துவரி உயர்வு</h2><p>சென்னை மாநகராட்சியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரிக்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆட்சேபனை தெரிவிக்க முகாம்கள் அமைக்கப்படும் என அறிவித்த சென்னை மாநகராட்சி, தற்போது சொத்துவரி உயர்வை நிறுத்திவைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p> <h2>எங்கிருந்து வந்தது?</h2><p>மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, வரிவிதிப்பு நிலைக்குழுவின் வழிமுறைகளின்படி உயர்த்தப்பட வேண்டிய சொத்துவரி, எந்தவித முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்டது எப்படி? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே தெரியாமல் சொத்துவரியை உயர்த்துவதற்கான அதிகாரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்கிருந்து வந்தது?</p><h2>மறைமுக மின்கட்டணம்</h2><p>ஏற்கனவே, மறைமுக மின்கட்டண உயர்வால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது சென்னை மாநகரில் சாதாரண நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு வணிக நிறுவனங்களுக்கு இணையாக வரி மதிப்பீடு செய்து, அவர்களுக்கு கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த முயல்வது எந்த வகையில் நியாயம்?</p> <h2>15 ஆயிரம் கோடி</h2><p>தவெக ஆட்சி பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கருவூலத்திற்கு வந்திருப்பதாக நிதியமைச்சர் கூறியிருக்கும் நிலையில், இதுபோன்ற மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட மின்கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வு ஆகியவையும் அந்த தொகையில் அடங்குமா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p> <h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, சொத்துவரி விதிப்பில் சென்னை மாநகராட்சியில் ஏற்பட்டிருக்கும் நிர்வாகக் குளறுபடிகளை உடனடியாக சரிசெய்திடவும், கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த தொகையை உடனடியாக திருப்பி வழங்கிடவும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>