<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 25 Aug 2026 02:26:38 +0000</lastBuildDate><item><title>மரபணு நோயால் உயிருக்கு போராடும் 6 மாத குழந்தை: அரசு உதவி கோரி பெற்றோர் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-petition-government-for-help-for-six-month-old-infant-battling-a-genetic-disease</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-petition-government-for-help-for-six-month-old-infant-battling-a-genetic-disease#comments</comments><guid isPermaLink="false">33af504a-1ff7-476c-ab3b-5d523b8ec314</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:23:13 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:23:13.408Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government,ஊட்டி,நீலகிரி,அரசு,Parents,ஊசி,Help,கலெக்டர் அலுவலக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/nahsshrt/293.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெற்றோர் மனு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/nahsshrt/293.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி, </p><p>மரபணு நோயால் உயிருக்கு போராடும் ஆறு மாத குழந்தைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கோரி பெற்றோர், குழந்தையுடன் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.</p> <h2>குழந்தை</h2><p>ஊட்டி அருகே ஆறு குச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகன் - பிரேமலதா தம்பதியின் 6 மாத குழந்தை லக்ஸ்வின், மரபணு குறைபாட்டால் முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, குழந்தை மூன்று மாதங்களாக உயிருக்கு போராடி வரும் நிலையில், அந்த நோயை குணப்படுத்த உடனடியாக, 16 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டில் இருந்து வரவழைக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF">ஊசி</a> மருந்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்படும்' என, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>மனு</h2><p>கூலி வேலை செய்யும் தங்களால் இத்தொகையை செலுத்த முடியாத நிலையில், தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கோரி பெற்றோர், குழந்தையுடன் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். </p><p>குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று வருவதாகவும், சிகிச்சைக்கான மருத்துவச்சான்றுகளை அரசிடம் அளித்துள்ளதாகவும் தந்தை முருகன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஒசூர் -பொம்மசந்திரா இரு மாநில மெட்ரோ ரெயில் சேவை சாத்தியமில்லை: பெங்களூரு மெட்ரோ அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inter-state-metro-rail-service-between-hosur-and-bommasandra-is-not-feasible-bengaluru-metro-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inter-state-metro-rail-service-between-hosur-and-bommasandra-is-not-feasible-bengaluru-metro-announces#comments</comments><guid isPermaLink="false">f634295d-5d83-42ea-b081-d146ab394fd1</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:22:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:22:15.654Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Hosur,ஓசூர்,Metro Rail service,மெட்ரோ ரெயில் சேவை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/49os408j/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/49os408j/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு,</p><p>கர்நாடக மாநிலம், பொம்மசந்திராவிலிருந்து, மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை, 11.7 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோரயில் சேவையை நீட்டிக்க, அம்மாநில அரசு ஆலோசிக்கிறது. அங்கிருந்து, தமிழகத்தின் ஒசூர் வரை, 11 கி.மீ., தூரத்திற்கு இந்த சேவையை நீட்டிக்க கோரிக்கை வலுத்துள்ளது.</p><p>இது சாத்தியமானால், தென்னிந்தியாவில் இரு மாநிலங்களுக்கு இடையே, முதல் மெட்ரோ ரயில் சேவை என்ற அந்தஸ்து கிடைக்கும். அதற்காக, சென்னை மெட்ரோரயில் நிறுவனம், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.</p><p>கடந்தாண்டு அக்டோபரில், பொம்மசந்திரா -ஒசூர் மெட்ரோ ரயில் நேரடி இணைப்பு, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை' என, கர் நாடகா மாநில அரசிற்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிக்கை அளித்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய், தென்னிந்திய முதல்வர்கள் -மாநாட்டில், ஒசூர் பொம்மசந்திரா மெட்ரோ ரயில் சேவை குறித்து வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.</p><p>இச்சூழலில், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 'இணைப்பு திட்டம் மீண்டும் சாத்தியமில்லை' என்ற அறிக்கையை, கர்நாடகா மாநில அரசுக்கு வழங்கி யுள்ள தகவல் வெளியாகி உள்ளது.</p><p>சென்னை, பெங்களூரு இரு மெட்ரோ நிறுவனங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப கட்ட மைப்புகளை கொண்டது. இவற்றை, ஒரே பாதையில் இணைத்து இயக்குவது பெரும் தொழில்நுட்ப சவாலாக இருக்கும்.</p><p>மேலும், நிர்வாக அனுமதி, நிதி,வருவாய் பங்கீடு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள், உயர் மின் அழுத்த வேறுபாடு, சிக்னல் கட்டமைப்புகள் போன்றவையும் வேறுபட்டிருப்பதால், இத்திட்டம் சாத்தியமில்லை என, கர்நாடகா அரசிற்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhavanisagar-dam-water-level-declines-risk-of-water-shortage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhavanisagar-dam-water-level-declines-risk-of-water-shortage#comments</comments><guid isPermaLink="false">bc141f7d-0fbe-4525-8b90-784424d23bdb</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:21:19 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:21:19.217Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,நீர்மட்டம் குறைவு,drinking water shortage,குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்,low water level</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/rd24u1hp/88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/rd24u1hp/88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானிசாகர், </p><p>நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.</p><h2>பவானிசாகர் அணை</h2><p>தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வழியாக வரும் மாயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகின்றன.</p><p>இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடி. ஆனால் சேறு, சகதிகள் போக 105 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.</p><h2>நீர்வரத்து குறைவு</h2><p>அதேபோல் பவானி ஆற்றில் திறக்கப்படும் நீரின் மூலம் அரக்கன்கோட்டை- தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் பாசனப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைய தொடங்கியது. நேற்று காலை 10 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 52.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,661 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 750 கன அடியும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 3 ஆயிரத்து 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.</p><h2>குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">பவானிசாகர் அணை</a>யின் நீர்மட்டம் 53 அடிக்கு கீழ் சென்றதாலும், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதாலும் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை: மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-organs-of-a-brain-dead-one-and-a-half-year-old-child-donated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-organs-of-a-brain-dead-one-and-a-half-year-old-child-donated#comments</comments><guid isPermaLink="false">9faf420a-2e5b-4bab-aacb-a921b6711398</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:08:35 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:08:35.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>குழந்தை,child,மூளைச்சாவு,உடல் உறுப்புகள்,body organs,Brain-Dead</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mfp37geo/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mfp37geo/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 19 மாத குழந்தை, முளை பாதிப்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆறு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தாலும், குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. தொடர் கண்காணிப்பு மற்றும் அதிதீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.</p><p>ஆனால், குழந் தையின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, பெற்றோர் முன்வந்தனர். அதன்படி, இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம் தானமாக பெறப்பட்டன.</p><p>இதன் வாயிலாக, 'தமிழகத்தில், மிகவும் குறைந்த வயதுடைய உடல் உறுப்பு கொடையாளார்' என்ற பெருமையை அக்குழந்தை பெற்றது. இதற்கு முன், 20 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டிருந்தது. இந்த உறுப்பு தானச் செயலுக்கு, அரசு சார்பில், குழந்தை உடலுக்கு மரியாதை செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: சிமெண்டு கல்லால் தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-northern-state-worker-dies-after-being-hit-by-cement-stone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-northern-state-worker-dies-after-being-hit-by-cement-stone#comments</comments><guid isPermaLink="false">5e5ff865-e545-4322-baa3-38feb54905b4</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:07:35 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:07:35.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Thiruvallur,திருவள்ளூர்,Murder case,கொலை,Death,attack,உயிரிழப்பு,வழக்குப்பதிவு,வடமாநில தொழிலாளர்கள்,Northern State workers,registered</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/7an89z6v/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/7an89z6v/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் சிமெண்டு கல்லால் தாக்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">வடமாநில தொழிலாளி</a> ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  </p><h2>வடமாநில தொழிலாளர்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவள்ளூர்</a> மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சமீம் (வயது 23), நசீம்(29), ஜார்கண்டை சேர்ந்த இஸ்மாயில்ஷேக்(20) ஆகியோர் தங்கி வேலை செய்து வந்தனர். </p><h2>கல்லால் தாக்குதல்</h2><p>சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கடந்த 16-ந்தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த சமீம், நசீம் ஆகியோரை இஸ்மாயில்ஷேக் சிமெண்டு கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். </p><h2>கொலை வழக்குப்பதிவு</h2><p>சமீம், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்.</a> இதையடுத்து பட்டாபிராம் போலீசார் இஸ்மாயில்ஷேக்கை கைது செய்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lemon-prices-rise-sharply-due-to-shortage-in-supply-in-koyambedu-market</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lemon-prices-rise-sharply-due-to-shortage-in-supply-in-koyambedu-market#comments</comments><guid isPermaLink="false">c2830bec-e5f6-45c7-9982-26772b1ed968</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:03:16 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:03:16.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu market,lemon,கோயம்பேடு சந்தை,shortage,வரத்து குறைவு,விலை கிடுகிடு உயர்வு,prices rise,எலுமிச்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/i6qh56j3/lemon.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/i6qh56j3/lemon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்பேடு,</p><p>கோயம்பேடு காய்கறி சந்தைக்கு எலுமிச்சை பழங்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>விளைச்சல் குறைவு</h2><p>கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழங்கள் வரத்து உள்ளது. ஆனால், தற்போது அந்த பகுதிகளில் விளைச்சல் குறைந்துள்ளதால், மராட்டிய மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.</p><p>மராட்டியத்தில் இருந்து ரெயில் மற்றும் லாரிகள் மூலம் எலுமிச்சை பழங்கள் சென்னை வருவதற்கு சுமார் 4 நாட்கள் ஆகிறது. இதனால், வழியிலேயே அதிகளவில் பழங்கள் அழுகி சேதமடைகின்றன.</p><h2>விலை உயர்வு</h2><p>கோயம்பேடு சந்தைக்கு தினமும் 150 முதல் 180 டன் வரை எலுமிச்சை பழங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 20 முதல் 30 டன் மட்டுமே வரத்து உள்ளது. அதிலும் சுமார் 10 டன் மட்டுமே தரமான எலுமிச்சை பழங்கள் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.250 வரையிலும், ஒரு பழம் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இதற்கிடையே, சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் <a href="https://www.dailythanthi.com/topic/lemon">எலுமிச்சை</a> பழங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. விற்பனை குறைந்ததால் சந்தையில் பழங்கள் தேங்குவதுடன், அவை அழுகி குப்பையில் கொட்டப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மழை: அமராவதி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incessant-rains-amaravati-dam-water-level-rises-sharply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incessant-rains-amaravati-dam-water-level-rises-sharply#comments</comments><guid isPermaLink="false">9657e64d-5cd7-45a5-b460-35782c5eac09</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:01:40 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:01:40.143Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,அமராவதி அணை,amaravathi dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/c6dk5b4i/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/c6dk5b4i/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>உடுமலை,  </p><p>நீர்ப்பிடிப்பு பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால், அமராவதி அணையின் நீர்மட்டம் 58 அடைய எட்டியது.</p><h2>அமராவதி அணை</h2><p>உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு கேரளம் மற்றும் தமிழக வனப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து அளிக்கிறது. மேலும் இந்த அணையை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 29 ஆயிரத்து 387 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் ஆக மொத்தம் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.</p><p>இந்த சூழலில் ஆடிப்பட்டம் சாகுபடிக்காக கை கொடுத்து உதவும் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டில் முற்றிலுமாக ஏமாற்றி விட்டது. இதனால் நீர்வரத்து நின்று போய் அணை குறைந்தபட்ச நீர் மட்டமே தள்ளாடி வந்தது.</p><h2>57.91 அடியாக உயர்வு</h2><p>இந்த சூழலில் கடந்த மாதம் 28-ந்தேதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள வனப்பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. தற்போதும் மழை கொட்டித்தீர்த்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. எனவே அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் 29-ந் தேதி முதல் நேற்று வரை 33.37 அடி உயர்ந்து, 57.91 அடியை தொட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 164 கன அடி தண்ணீர் வந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் அணை 88.16 அடியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாலம் கட்ட அனுமதிக்க ரூ.3 லட்சம் லஞ்சம்: 2 நீர்வளத்துறை அதிகாரிகள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-lakh-bribe-to-permit-bridge-construction-2-water-resources-department-officials-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-lakh-bribe-to-permit-bridge-construction-2-water-resources-department-officials-arrested#comments</comments><guid isPermaLink="false">9ec4b1e9-1e6f-4406-a003-ff7aee2e4353</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:54:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:54:34.826Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவாரூர்,கைது,arrest,லஞ்சம்,Water Resources Department,நீர்வளத்துறை,bribe</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/yuedhpjv/292.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/yuedhpjv/292.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர், </p><p>தங்கும் விடுதிக்கு செல்ல வாய்க்காலில் பாலம் கட்ட ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய நீர் வளத்துறை என்ஜினீயர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.</p> <h2>நீர்வளத்துறை அலுவலகம்</h2><p>நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த அபினேஷ் தங்கும் விடுதி கட்டி வருகிறார். தனது விடுதி முன்பாக செல்லும் வாய்க்காலில் பாலம் கட்ட அனுமதி கோரி திருவாரூர் நீர்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.</p><p>இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த நீர்வளத்துறை வெண்ணாறு வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல்(வயது 46), உதவி என்ஜினீயர் வினோத்(36) ஆகியோர் பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்க அபினேசிடம், லஞ்சமாக ரூ.3 லட்சம் கேட்டுள்ளனர்.</p><h2>லஞ்ச ஒழிப்பு துறை</h2><p>ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அபினேஷ் இது குறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் 1 போலீசார், லஞ்சம் கேட்ட நீர்வளத்துறை அதிகாரிகளை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.</p><p>இதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அபினேஷிடம் கொடுத்து இந்த பணத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> கேட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் வழங்குமாறு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று திருவாரூர் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு சென்ற அபினேஷ் அங்கிருந்த உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல் மற்றும் உதவி பொறியாளர் வினோத் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.</p><p>அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் சித்ரா, அனிதா மற்றும் போலீசார் திடீரென அலுவலகத்துக்குள் நுழைந்து உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல் மற்றும் உதவி பொறியாளர் வினோத் ஆகியோரை கையும், களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து லஞ்சப்பணம் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் பறவைகள் தொல்லையால் பயணிகள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-suffer-due-to-bird-nuisance-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-suffer-due-to-bird-nuisance-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">89999bb1-976e-4bf8-8ea4-9459956cd5bf</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:40:57 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:40:57.018Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,airport,விமான நிலையம்,பயணிகள் அவதி,pigeon,புறா,Passengers suffer,தொல்லை,nuisance,காகம்,crow</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/gctzpr8z/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமான பயணியின் உணவை உண்ணும் புறா.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/gctzpr8z/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை விமான நிலையத்தில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE">புறா</a>க்கள், காகங்கள் சுற்றித்திரிவதாகவும், உணவகங்களில் பயணிகள் உணவு சாப்பிடும்போது பறவைகள் பறந்து வந்து தட்டுகளில் உள்ள உணவை சாப்பிடுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சென்னை விமான நிலையத்தில் பறவைகள் தொல்லை</h2><p>சென்னை மீனம்பாக்கம் உள்நாடு மற்றும் வெளிநாடு விமான நிலையங்களில் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் புகார்கள் அதிகரித்துள்ளன. விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட புறப்பாடு பகுதிகளில் புறாக்கள், காகங்கள் சுற்றித்திரிவதாகவும், உணவகங்களில் பயணிகள் உணவு சாப்பிடும்போது பறவைகள் பறந்து வந்து தட்டுகளில் உள்ள உணவை சாப்பிடுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவை சாப்பிட முடியாமல் பயணிகள் அப்படியே விட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். </p><h2>வலைகள் பழுது</h2><p>விமான நிலையத்துக்குள் பறவைகள் வருவதை தடுக்க வலைகள் பொருத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் அந்த வலைகள் பழுதடைந்து தொய்வு ஏற்பட்டதால் பறவைகள் உள்ளே வந்திருக்கலாம் என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழுதடைந்த வலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. இதேபோல், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகள் கன்வேயர் பெல்ட்டில் தாமதமாக கிடைப்பதாகவும், லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் டிராலிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பயணிகள் புகார்</a> தெரிவித்துள்ளனர். </p><h2>நடவடிக்கைகள் தீவிரம்</h2><p>இதுகுறித்து நிர்வாகம் அளித்துள்ள பதிலில், "பழுதடைந்த டிராலிகளை குழுவினர் கண்டறிந்து அப்புறப்படுத்தி, சீரமைத்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இனிமேல் பழுதடைந்த டிராலிகளை உடனடியாக கண்டறிந்து அகற்றி சீரமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்றும் கூறியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி  உயர்ரக கஞ்சா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-cannabis-worth-145-crore-seized-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-cannabis-worth-145-crore-seized-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">cb9cf909-e7d3-46de-8008-2a20a66d9918</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:28:41 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:28:41.356Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai Airport,seized,Cannabis,விமான நிலையத்தில்,உயர்ரக கஞ்சா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wg8rgnmp/291.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wg8rgnmp/291.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மீனம்பாக்கம், </p><p>சென்னை விமான நிலையத்தில் ரூ.14. 4 கோடி உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அதனை தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த பெண்ணை கைது செய்தனர்.</p><h2>சென்னை விமான நிலையம்</h2><p>தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும்படியான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.</p><h2>சோதனை</h2><p>இதில் சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்று திரும்பிய பெண் ஒருவரின் சூட்கேஸ் ஸ்கேனிங் செய்யப்பட்டபோது. அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.</p><p>இதையடுத்து சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது, தாய்லாந்து நாட்டு உணவுப்பொருட்கள் அடங்கிய 6 பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பிரித்து சோதனை செய்ததில், பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 14 கிலோ 437 கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.14. 5 கோடி என கூறப்படுகிறது.</p><h2>கைது</h2><p>இதையடுத்து போதைப்பொருளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-seizure-of-cannabis">பறிமுதல் </a>செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கடத்தல் குருவியாக செயல்பட்டாரா?, போதைப்பொருளை யாரிடம் ஒப்படைக்க கொண்டு வந்தார்?. அவரை தாய்லாந்துக்கு அனுப்பி வைத்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண் தூய்மை பணியாளரை சுத்தியலால் அடித்துக்கொன்ற முதியவர்: கள்ளத்தொடர்பை முறித்ததால் ஆத்திரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-beats-female-cleaner-to-death-with-hammer-outrage-as-he-breaks-off-illicit-relationship</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-beats-female-cleaner-to-death-with-hammer-outrage-as-he-breaks-off-illicit-relationship#comments</comments><guid isPermaLink="false">5565670a-e3b5-4fee-acae-fe58da4a29ba</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:12:51 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:12:51.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,murder,கொலை,பெண்,Woman,தூய்மை பணியாளர்,Tiruvallur,cleaner,Elderly man arrested,முதியவர் கைது,கள்ளத்தொடர்பு விவகாரம்,illicit Relationship</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/905h9kr6/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட முனிவேல், கொலை செய்யப்பட்ட லதா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/905h9kr6/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டுக்குள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">பெண் தூய்மை பணியாளர்</a> பிணமாக கிடந்த வழக்கில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கள்ளத்தொடர்பை</a> முறித்ததால் அவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பெண் தூய்மை பணியாளர் பிணமாக மீட்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவள்ளூர்</a> மாவட்டம், ஆவடி அடுத்த கரலப்பாக்கம் யாதவர் தெருவை சேர்ந்த லதா (வயது 45), கரலப்பாக்கம் ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். கணவர் இறந்துவிட்ட நிலையில், குழந்தைகள் இல்லாததால் வீட்டில் தனியாக வசித்து வந்தார். </p><p>கடந்த 22-ந்தேதி லதாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி பொதுமக்கள் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, லதா உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். </p><h2>முதியவர் கைது</h2><p>விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முனிவேல்(65) என்பவர் லதாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் லதாவுக்கும், முனிவேலுக்கும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 20-ந்தேதி லதா வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, முனிவேலும் அங்கு சென்றார். அப்போது, வயதாகிவிட்டதால் இனிமேல் தன்னுடன் தொடர்பில் இருக்க வேண்டாம் என லதா கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. </p><h2>சுத்தியலால் அடித்துக்கொலை</h2><p>இதில் ஆத்திரமடைந்த முனிவேல், லதாவை தாக்க முயன்றபோது அவர் முனிவேலை தள்ளிவிட்டதாக தெரிகிறது. பின்னர் லதா தரையில் தலையணை வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, சமையல் அறை அருகே கிடந்த இரும்பு சுத்தியலை எடுத்த முனிவேல், அவரது தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த லதா, சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு முனிவேல் தப்பிச் சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> வழக்குப்பதிவு செய்து, கைதான முனிவேலை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: இ.பி.எப்.ஓ. புதிய திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pension-for-construction-workers-new-epfo-scheme</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pension-for-construction-workers-new-epfo-scheme#comments</comments><guid isPermaLink="false">2fc178cc-1215-4825-8e83-b702eb6dafe1</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:10:52 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:10:52.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,pension,ஓய்வூதியம்,Construction worker,கட்டுமான தொழிலாளர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/o3989buj/290.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்டுமான தொழிலாளர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/o3989buj/290.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் பரிசீலனை செய்துவருகிறது.</p><h2>கட்டுமான தொழிலாளர்கள்</h2><p>'இ.பி.எப்.ஓ. 3.0' என்ற புதிய தளத்தின் ஒரு பகுதியாக, கட்டுமான தொழிலாளர்கள் நல வரி மூலம் திரட்டப்பட்ட உபரி நிதியை இதற்காக பயன்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த கட்டுமான தொழிலாளர்களை பயனாளிகளாக சேர்க்க ஆலோசிக்கப்படுகிறது.</p><h2>மத்திய அறங்காவலர் குழு</h2><p>சமீபத்தில் நடந்த மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. திட்டம் இறுதி செய்யப்பட்ட பிறகு, இறுதி முடிவுக்காக மீண்டும் அறங்காவலர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்படும் இந்த வரி, 1996-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் பயன்பாடு கவலையளிக்கும் வகையில் இருந்ததால், இந்த நிதியை முறையாக பயன்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p> <p>கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 5.7 கோடி தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்திருக்கின்றனர். அதே ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்த வாரியங்கள் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடி வரியாக வசூலித்துள்ளன. இதில் ரூ.64 ஆயிரத்து 190 கோடி செலவிடப்பட்டு உள்ளது. வட்டி மற்றும் இதர வருவாய்கள் போக, ரூ.65 ஆயிரத்து 970 கோடி கையிருப்பில் உள்ளது.</p><h2>முறைசாரா துறை</h2><p>கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும். மேலும், அவர்களுக்கு இ.எஸ்.ஐ. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">மருத்துவ காப்பீட்டு</a> வசதிகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பங்களிப்பை கட்டுமான தொழிலாளர் நல நிதியிலிருந்து செலுத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பமானதால் அதிர்ச்சி; டாக்டர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocked-as-woman-who-used-family-planning-becomes-pregnantrelatives-argue-with-doctors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocked-as-woman-who-used-family-planning-becomes-pregnantrelatives-argue-with-doctors#comments</comments><guid isPermaLink="false">e9a5aaef-1fd0-405c-ab2e-7b587359bfaf</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:07:30 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:07:30.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>family,பெண்,கர்ப்பம்,pregnant woman,வாக்குவாதம்,குடும்ப கட்டுப்பாடு,Planning,argue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/2d7a8uaq/pregnant.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/2d7a8uaq/pregnant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பம் அடைந்ததால் அவருடைய உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>குடும்ப கட்டுப்பாடு</h2><p>ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு, சத்தியபிரியாவுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 2-வது குழந்தை பிறந்தது. அப்போது குடும்ப கட்டுப்பாடு செய்து விடும்படி சத்தியபிரியா கூறி உள்ளார். இதையடுத்து குடும்ப கட்டுப்பாடு செய்ய கணவன், மனைவியிடம் கையெழுத்து பெற்று, ஒப்புதல் வழங்கினர். குழந்தை பிறப்பு மருத்துவ குறிப்பு டிஸ்சார்ஜ் ஆவணத்தில், சத்தியபிரியாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக குறிப்பிட்டு அனுப்பி வைத்தனர்.</p><h2>மீண்டும் கர்ப்பம்</h2><p>ஆனால் மீண்டும் சத்தியபிரியா கர்ப்பமானதால், அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த சுரேஷ், சத்தியபிரியா தம்பதியினர் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை மற்றும் மகப்பேறு பிரிவு டாக்டர்கள், சத்தியபிரியாவை அழைத்து சென்று பரிசோதனை செய்து அவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF">கர்ப்பமாக </a>இருப்பதை உறுதி செய்து, தொடர் சிகிச்சை. பரிசோதனைக்கு பரிந்துரைத்தனர்.</p><h2>வாக்குவாதம்</h2><p>இதற்கிடையில், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆவணங்களை எடுத்து வந்த டாக்டர்கள் அங்குள்ள ஆவணத்தில், சத்தியபிரியாவுக்கு 2-வது குழந்தை பிறந்தபோது அவருடைய உடல் நிலை மோசமாக இருந்ததால், அப்போது அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யவில்லை. என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சத்தியபிரியாவுக்கு வழங்கிய 'டிஸ்சார்ஜ் குறிப்பில்' குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தவறாக குறிப்பிட்டு விட்டனர் என தெரிவித்தனர்.</p><p>இதனால் ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர். டாக்டர்களிடம் வெகுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கருஞ்சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilagiri-black-panther-roaming-residential-areas-public-fear</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilagiri-black-panther-roaming-residential-areas-public-fear#comments</comments><guid isPermaLink="false">8e4a0a01-c39a-48fe-bcc6-3cd96dd65ee2</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:03:36 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:03:36.066Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,கருஞ்சிறுத்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/gotl5pbs/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/gotl5pbs/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,  </p><p><a href="https://www.dailythanthi.com/">நீலகிரி </a>மாவட்டம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, குறைந்த எல்லைக்குள் அதிக வனவிலங்குகள் உள்பட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. </p><h2>கருஞ்சிறுத்தை</h2><p>இந்நிலையில்,  குன்னூர் அருகே கரோலினா பகுதியில் நேற்று இரவு கறுஞ்சிறுத்தை உலா வந்தது. இரை தேடி குடியிருப்பு பகுதிகளில் கருஞ்சிறுத்தை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  </p> ]]></content:encoded></item><item><title>ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-erode-jolarpettai-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-erode-jolarpettai-train-service#comments</comments><guid isPermaLink="false">4691d5eb-4598-4c9d-9804-d4a8bcea2306</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:55:37 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:55:37.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,train service,Erode,ஈரோடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ebflpop3/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ebflpop3/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம்-ஜோலார்பேட்டை வழி மார்க்கத்தில் சாமல்பட்டி- திருப்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள காகங்கரை ரெயில்வே யார்டு பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோடு-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. </p><p>அதன்படி ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரெயில் (56108) ஈரோட்டில் இருந்து காலை 6 ' மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மொரப்பூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மொரப்பூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரெயில் இயக்கப்படாது. இதேபோல் ஜோலார்பேட்டை- ஈரோடு பாசஞ்சர் ரெயில் (56107) இன்று ஜோலார்பேட்டையில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மொரப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.47 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும். </p><p>இதனால் ஜோலார்பேட்டை-மொரப்பூர் இடையே ரெயில் இயக்கப்படாது என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ்கள்: முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/750-ac-electric-buses-for-chennai-phase-2-chief-minister-vijay-to-inaugurate-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/750-ac-electric-buses-for-chennai-phase-2-chief-minister-vijay-to-inaugurate-today#comments</comments><guid isPermaLink="false">d6f9e1b6-d032-4079-a445-58e75b30fa26</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:45:49 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:45:49.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,சென்னை,Electric Buses,மின்சார பஸ்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/xlet9leq/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/xlet9leq/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ் சேவையை முதல்-அமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கிவைக்கிறார். </p><p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பஸ்கள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இதில், முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதல்-அமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தை இருந்தபடி இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி வைக்கிறார். மேலும், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்து 5 மின்சார பஸ்களை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று முதல் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/night-time-suburban-train-services-in-chennai-cancelled-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/night-time-suburban-train-services-in-chennai-cancelled-starting-today#comments</comments><guid isPermaLink="false">c614964b-5cdd-4347-bab9-b4480647a768</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:45:20 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:45:20.207Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின்சார ரெயில்கள்,suburban trains</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/l167fyvs/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/l167fyvs/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் மின் சார ரெயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் பணிகள் நடைபெற உள்ளது. </p><p>எனவே சென்னை கடற்கரையில் இருந்து இன்று முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 10.20 மணி முதல் 11.59 வரை இயக்கப்படும் மின்சார ரெயில்களும், அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து இயக்கப் படும் ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. எனவே, பயணிகள் தங்களுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு பயணம் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-departments-are-being-debated-in-the-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-departments-are-being-debated-in-the-assembly-today#comments</comments><guid isPermaLink="false">d209aa0b-e551-4656-b0b3-8fa8b3ad83c1</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:22:14 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:22:14.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Assembly,debate,விவாதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/259kzuk5/tnaet.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/259kzuk5/tnaet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/news/india">சட்டசபையில்</a> த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.</p><p>இந்தநிலையில் சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் சட்டசபை கடந்த 17-ந்தேதி மீண்டும் கூடியது.  அது முதற்கொண்டு, பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. பின்னர், இந்த துறைகளின் சார்பில் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.</p><h2>கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>தமிழ்நாட்டில் ஹீமோபிலியா (Hemophilia) மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட மருத்துவப் பயனாளிகளுக்கு எமிசிஜுமாப் (Emicizumab) என்ற மருந்தை விலையில்லாமல் வழங்க வேண்டியது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் கவனத்திற்கு தவெக எம்.எல்.ஏ. டாக்டர் எம்.எஸ். ரவி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளார்.</p><p>அதைபோல பழனி தொகுதி, ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள அரசு மாணவியர் விடுதிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டியது குறித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசின் கவனத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ. கு. ரவி மனோகரன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளார். இந்த இரண்டு தீர்மானங்களுக்கும் அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.</p><h2>டிஜிட்டல் சேவைகள்</h2><p>இந்நிலையில், சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். மேலும் அவர்கள் துறையின் சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கோவில் உண்டியல் திருடுவோம்... சரக்கடிப்போம்... பிடிக்க வந்தால் கடிப்போம் - அமாவாசை திருடர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-steal-temple-offerings-we-will-booze-if-you-catch-us-we-will-bite-amavasai-thieves</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-steal-temple-offerings-we-will-booze-if-you-catch-us-we-will-bite-amavasai-thieves#comments</comments><guid isPermaLink="false">386cf6b0-02c5-4630-8e08-3802b8f6a676</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:28:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:28:52.416Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,புதுக்கோட்டை,Pudukottai,thieves,தனிப்படை போலீசார்,திருடர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/qypd8u7q/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/qypd8u7q/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>அமாவாசை நாளில் கோவில்களில் உண்டியல் திருடிய அமாவாசை திருடர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.</p><h2>உண்டியல் திருட்டு</h2><p>புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கடி கோவில் உண்டியல்கள் திருடப்பட்டு வருகிறது. பல சம்பவங்களில் இதுவரை யாரும் பிடிபடவில்லை. கடந்த மாதம் அமாவாசை நாளில் கீரமங்கலம் கொடிக்கரம்பையில் ஒரு கோவிலில் திருட முயன்றபோது கிராம மக்கள் திரண்டதால் பைக் மற்றும் செல்போனை போட்டுவிட்டு தப்பி ஓடியவர்கள் சற்று தூரத்தில் ஒரு வீட்டு வாசலில் நின்ற பைக்கை திருடிச் சென்றுவிட்டனர்.</p><p>அதேபோல இந்த மாதம் அமாவாசை நாளில் கீரமங்கலம் காவல் சரகம் மேற்பனைக்காடு கிராமத்தில் மழைமாரியம்மன் கோவில், வீரமாகாளியம்மன் கோவில் என ஒரே இரவில் 2 கோவில்களிலும் உண்டியல்கள் திருடப்பட்டிருந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடியில் 2 கோவில்களிலும், ஆவுடையார்கோவிலில் ஒரு கோவிலிலும் உண்டியல்கள் திருட்டு நடந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.</p><h2>தனிப்படை போலீசார்</h2><p>இந்த நிலையில் கோவில்களில் உண்டியல் உடைத்தவர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். முதல்கட்டமாக அமாவாசை திருடர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, பழைய வழக்குகளில் உள்ளவர்களின் கைரேகை பதிவுகளை வைத்து பார்த்தபோது சில கைரேகைகள் ஒத்துப் போனது. அதன் அடிப்படையில் அறந்தாங்கி அருகே நாகுடி வேதியன்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மகன் காளிதாஸ் சில்லரை காசு மூட்டையை தலைக்கு வைத்து படுத்திருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்தனர். </p><p>காளிதாஸிடம் விசாரித்தபோது, "நான் சிறையில் இருந்தபோது அறந்தாங்கியில் உள்ள திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்த கோழி திருடன் விஜய், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா களசங்காடு ஆடு திருடன் கோவிந்தராஜ் மகன் நாகராஜ் ஆகியோர் எனக்கு பழக்கமானார்கள். வெளியே வந்ததும் இன்ஸ்டாகிராமில் பேசிக்கொள்வோம். அடிக்கடி அறந்தாங்கியில் சந்திப்போம். பகலில் ஊர் ஊராகப் போய் நோட்டம் பார்த்துவிட்டு பைக்குகள் கிடைத்தால் திருடுவோம்.</p><h2>திருடுவோம்... சரக்கடிப்போம்</h2><p>இரவில் உண்டியல்கள் உடைத்து திருடி பங்கு வைத்து செலவு செய்வோம். நன்றாக சரக்கடிப்போம்; சாப்பிடுவோம். போன மாதம் கொடிக்கரம்பையில் உண்டியல் உடைக்கும்போது, ஆட்கள் வந்ததால் பைக், செல்போனை விட்டுவிட்டு, ஒரு வீட்டு வாசலில் நின்ற பைக்கை திருடி தப்பிட்டோம். அப்போதே எங்களை பிடித்துவிடுவீர்கள் என்று நினைத்தோம். ஆனால் பிடிக்கவில்லை. அதன் பிறகு பல பைக்குகள், உண்டியல்கள் திருடிவிட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் நாகராஜை பிடிக்கும்போது ஜாக்கிரதையாக இருங்கள். யாராவது பிடிக்க வந்தால் கடித்துவிட்டு தப்பிவிடுவான் என்று கூறியுள்ளார்.</p><p>அதேபோல பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் பிடிக்கும்போது 2 பேரை கடித்துவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இருப்பினும் போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அதே போல திருநாளூர் விஜய்யையும் கைது செய்து, அமாவாசை உண்டியல் திருடர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். </p><h2>சிறையில் அடைப்பு</h2><p>கீரமங்கலம் காவல் ஆய்வாளர் சத்தியதேவி, அவர்களிடம் விசாரணை செய்து, அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை கைப்பற்றினார். தொடர்ந்து அமாவாசை திருடர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு திருடர்களை பிடித்த ஆலங்குடி டிஎஸ்பி மனோகரன், தனிப்படை போலீசார் மற்றும் கீரமங்கலம் போலீசாருக்கு மேற்பனைக்காடு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்ல... வைரல் வீடியோ பெண் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/its-me-not-minister-keerthana-viral-video-woman-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/its-me-not-minister-keerthana-viral-video-woman-clarifies#comments</comments><guid isPermaLink="false">5c2b56a0-259c-4633-8ab6-3d6b6b8d392e</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:14:07 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:14:07.856Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Viral Video,வைரல் வீடியோ,பெண்,விளக்கம்,To clarify,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/idcuve2x/miniss.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெண்]]></media:title><media:description type="html"><![CDATA[ அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்ல... வைரல் வீடியோ பெண் விளக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/idcuve2x/miniss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூக வலைதளங்களில் தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் கீர்த்தனா</a> என தவறாக கூறி, மேலைநாட்டு உடையில் பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் வீடியோ அண்மையில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. </p><h2>வீடியோ</h2><p>இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் உண்மையான பெண் தற்போது "அது நான்தான், அமைச்சர் இல்ல..." என்று உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>மனவேதனை</h2><p>சமூக வலைதளங்களில் வைரலாக்கப்படும் வீடியோவில் இருப்பது அமைச்சர் கீர்த்தனா அல்ல, அது நான்தான் என்று அந்த பெண் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளார். தேவையற்ற அரசியல் காரணங்களுக்காக தனது வீடியோவை எடுத்து, தவறான தகவல்களுடன் பரப்பி வருவதை பார்த்து கடும் மனவேதனை அடைந்ததாக அவர்  கூறியுள்ளார். </p><h2> வேண்டுகோள்</h2><p> தனக்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், தன்னை பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை பெற்ற ரகு கணேஷ் - தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்க கோர்ட்டு அனுமதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-grants-permission-to-raghu-ganeshsentenced-to-death-in-the-sathankulam-caseto-attend-his-fathers-funeral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-grants-permission-to-raghu-ganeshsentenced-to-death-in-the-sathankulam-caseto-attend-his-fathers-funeral#comments</comments><guid isPermaLink="false">00b5158f-3b86-440e-821c-0e1410fa5df0</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:08:48 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:08:48.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாத்தான்குளம்,மதுரை ஐகோர்ட்டு கிளை,Sathankulam case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/0tw80qox/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/0tw80qox/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்துரை என்பவர் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். </p><p>இந்த இரட்டைக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். இதையடுத்து 9 போலீஸ்காரர்களுக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். </p><p>இந்நிலையில், மரண தண்டனை கைதியாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த ரகு கணேஷின் தந்தை காலமான நிலையில், இறுதிச் சடங்குகளில் பங்கேற்க ரகு கணேஷுக்கு அனுமதி வழங்கக்கோரி அவரது மனைவி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரகு கணேஷுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>போராட்டத்தை கைவிட பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-writes-to-milk-producers-association-to-call-off-the-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-writes-to-milk-producers-association-to-call-off-the-protest#comments</comments><guid isPermaLink="false">b8c6da58-7f9b-47c2-b096-f2cafe54989e</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:50:08 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:50:08.118Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/7nvcvpcy/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/7nvcvpcy/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பால் கொள்முதல் விலை உயர்வு கோரி பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் அஜய் யாதவ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பால் உற்பத்தியாளர்களின் பால் கொள்முதல் விலை உயர்வு கோரிக்கை தொடர்பாக இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் தங்களுடன் நேரில் கலந்து பேசி சுமுகமான முடிவெடுக்க பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படுவதை எதிர்நோக்கி தாங்கள் பால் நிறுத்த போராட்டத்தை உடனடியாக கைவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘கோரிக்கைகளுக்காக போராடும் தூய்மை பணியாளர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது’ - நெல்லை முபாரக்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arresting-sanitation-workers-who-are-protesting-for-their-demands-is-condemnable-nellai-mubarak</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arresting-sanitation-workers-who-are-protesting-for-their-demands-is-condemnable-nellai-mubarak#comments</comments><guid isPermaLink="false">00d87a7d-48c7-4884-8d2d-8c6e212f7aa6</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:20:01 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:20:01.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை முபாரக்,Nellai Mubarak</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/g63vgmn3/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/g63vgmn3/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்யும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை. அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு தூய்மைப் பணியாளர்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்றால் த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது?’ - எல்.முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-parandur-airport-project-is-rejected-what-does-the-tvk-government-intend-to-do-l-murugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-parandur-airport-project-is-rejected-what-does-the-tvk-government-intend-to-do-l-murugan-asks#comments</comments><guid isPermaLink="false">81591ae2-5935-47af-9a6a-fef762ca4e6f</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:08:49 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:08:49.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L.Murugan,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9y5fa526/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9y5fa526/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“சென்னை விமான நிலையத்தின் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், சென்னை நகரின் வளர்ச்சியை மையப்படுத்தியும் காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது . பரந்தூர் பகுதியில் முந்தைய தி.மு.க. அரசு இடத்தை தேர்வு செய்வதற்கே பல காலம் தாமதம் செய்தது. பெரும் தாமதம், நெருக்கடி, சிக்கல் என பல கட்ட தடைகளை தாண்டி விமான நிலையத்திற்கு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. </p><p>ரூ.27,400 கோடி மதிப்​பில், சுமார் 5,746 ஏக்​கர் பரப்​பள​வில் இந்த விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதற்​காக சுமார் 1,700 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளதாக தெரிகிறது. </p><p>இந்த நிலையில் தமிழகத்தில் பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கும் பணி கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்த திட்டம் கைவிடப்படுகிறது என்பது குறித்து விரிவான விளக்கம் எதுவும்  தரப்படவில்லை. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் இந்த முடிவு என்பது முழுக்க முழுக்க அரசியல் அன்றி வேறல்ல. </p><p>தேர்தலுக்கு முன்பு பரந்தூர் பகுதிக்கு சென்ற ஜோசப் விஜய், த.வெ.க. ஆட்சியமைந்தால் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படும் என பேசினார். எனவே பரந்தூர் விமான நிலையத்தை த.வெ.க. அரசு முழுக்க முழுக்க அரசியலாகவே பார்ப்பதாக தெரிகிறது. பரந்தூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுகிறது. இதற்காக செலவிடப்பட்ட இழப்பீட்டுத் தொகை என்னாகும் என்னாகும்?</p><p>த.வெ.க. அரசின் இந்த முடிவால் சென்னைக்கு புதிய விமான நிலையம் என்பது கானல் நீராகி விடும். இப்போது பரந்தூர் வேண்டாம் என்றால் த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது? வேறு இடம் என்றால் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பது பெரும் காலதாமதமாகும் என்ற கவலை எழுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் புதிய இடத்தை அடையாளம் காணுவது எப்படி? எப்போது? என்ற கேள்வி எழுகிறது.</p><p>நாடு முழுவதும் பல நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணி பெருமளவு முடிந்து வருகின்றன. சென்னையின் தற்போதைய விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறன் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. பெங்களூரு, ஐதராபாத் என தென் மாநிலங்களில் உள்ள மற்ற பல விமான நிலையங்கள் சென்னையை முந்தி செல்கின்றன.</p><p>பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டம் கைவிடப்​பட்​டால் அந்த பகுதியின் ஒட்​டுமொத்த போக்​கு​வரத்து மற்​றும் வணிக வளர்ச்​சியும் பெரிய அளவில் தடைபடும். மெட்ரோ ரெயில் மற்​றும் சாலை உள்​கட்​டமைப்​புத் திட்டங்களின் நிலையும் கேள்விக்குரியாகி விடும். பூந்தமல்லி வரை இருக்கும் மெட்ரோ ரெயில் திட்​ட​மும் பரந்​தூரை மையப்​படுத்தி நீட்​டிக்கப்படவும் திட்டமிடப்பட்டு இருந்தது. </p><p>பரந்தூர் விமான நிலையத்தை முதன்​மைப்​படுத்தி பரந்​தூர் வழி​யாகச் செல்​லும் வகை​யில் சென்னை - பெங்​களூர் விரைவு வழிச்​சாலை உருவாக்கப்​பட்​டு வருகிறது. வி​மான நிலை​யம் நிறுத்​தப்​பட்​டால், பல  கோடி மதிப்​பீட்​டில் உரு​வாக்​கப்​பட்ட சென்னை - பெங்​களூர் விரைவுச் சாலை மற்​றும் உள்​கட்​டமைப்​பு திட்டங்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுகிறது.</p><p>தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும்,  உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை பொறுத்தவரையில் த.வெ.க. அரசு அரசியலை விடுத்து மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடும் முடிவை திரும்ப பெற வேண்டும்  என  கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் நலனை மனதில் கொண்டு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி முழுவீச்சில் நடத்தி  முடித்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">bc1989a0-d6c2-4e0e-8003-e9646eb97baf</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:02:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:02:27.761Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Rain,கனமழை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/27o6bdd7/rain-in-chennai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/27o6bdd7/rain-in-chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டியும் வருகிறது. நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. திடீர் மழையை எதிர்பார்க்காத மக்கள் பலரும் குடை எதுவும் இல்லாததால், மழையில் நனைந்தபடி சென்றதை பார்க்க முடிந்தது.</p><p>இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருந்த நிலையில், இரவு 8 மணியளவில் திடீரென மழை வெளுக்கத் தொடங்கியது. சென்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி, எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை பெய்து வருவதால் சென்னையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பலரும் மழையில் நனைந்தபடியே சென்றதையும் பார்க்க முடிந்தது.</p>]]></content:encoded></item><item><title>‘முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்’ - சேகர்பாபு எம்.எல்.ஏ.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lord-murugan-himself-will-vote-for-the-dmk-mla-sekar-babu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lord-murugan-himself-will-vote-for-the-dmk-mla-sekar-babu#comments</comments><guid isPermaLink="false">5a437024-d638-418d-9c69-bfe4c701f5ae</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:51:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:51:15.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sekar Babu,சேகர்பாபு,முருகப்பெருமான்,Lord Murugan,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/owyg0flt/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/owyg0flt/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“அரசியலுக்காக நாங்கள் ஒருபோதும் ஆண்டவனை பயன்படுத்துவது இல்லை. நாங்கள் பக்தியை வைத்து பகை வளர்ப்பவர்கள் அல்ல, பக்தியை வைத்து இறை நம்பிக்கையை வளர்ப்பவர்கள். திருச்செந்தூர் முருகன் கோவிலை தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், 400 கோடி ரூபாய் செலவில் புனரமைத்துள்ளார். </p><p>எல்லாம் வல்ல தமிழ்க்கடவுளான முருகனுக்கு 22 நாடுகள் பங்கேற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்திக் காட்டியவர். பழனி முருகன் கோவிலுக்கு பெருந்திட்ட வரைவு வாயிலாக குடமுழுக்கை நடத்தியது நாங்கள்தான். முதல் படை வீடான திருப்பரங்குன்றத்திலும் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் குடமுழுக்கை கண்டோம். மருதமலையிலும், சுவாமிமலையிலும் பக்தர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு, மின்தூக்கியை நாங்கள்தான் கொண்டுவந்தோம். </p><p>முருகப்பெருமானுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்குமேயானால், தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பணிகளுக்காக, தி.மு.க.வுக்குத்தான் அவர் வாக்களித்திருப்பார். அந்த அளவிற்கு தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைக்கு பெருமை சேர்த்த ஆட்சி தி.மு.க. ஆட்சி.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி அருகே 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/13th-century-jewish-inscription-found-near-krishnagiri</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/13th-century-jewish-inscription-found-near-krishnagiri#comments</comments><guid isPermaLink="false">b3c3170b-e689-4c21-9d6c-53f0786784f4</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:42:44 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:42:44.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,Krishnagiri,கல்வெட்டு,Jews,யூதர்கள்,கண்டெடுப்பு,Inscription,discovered</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/g2cjimef/stone.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கல்வெட்டு ]]></media:title><media:description type="html"><![CDATA[ 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/g2cjimef/stone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">கிருஷ்ணகிரி </a>அருகே ஆனந்தூரில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய யூதர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ளது ஆனந்தூர் கிராமம். இங்குள்ள பழமை வாய்ந்த தான்டோன்றீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள புதர்களை பொதுமக்கள் அண்மையில் அகற்றினர்.</p><p>கல்வெட்டு</p><p> அங்கு பழங்கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">கல்வெட்டு</a> ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.</p><p>இது குறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:-</p> <h2>யூதர்கள் குறித்த கல்வெட்டு</h2><p>ஆனந்தூரில் கண்டறியப்பட்டுள்ள யூதர்கள் குறித்த கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கொச்சியில் யூதர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடியேறி இருந்தாலும், இதுவரை யூதர்கள் குறித்து தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தை அடுத்த வாலாந்தரவை என்ற ஊரில் மட்டும் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.</p> <h2>13-ம் நூற்றாண்டை சேர்ந்தது</h2><p>தற்போது 2-வதாக யூதர்களை பற்றிய கல்வெட்டு ஆனந்தூரில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே குலோத்துங்கன் காலத்திய வணிகக்குழு கல் வெட்டு, 3 நடுகற்கள் ஆகியவை தான்தோன்றீஸ்வரம் கோவில் பகுதியில் புதர்களில் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கிடைத்துள்ள கல்வெட்டும் வணிகக்குழு கல்வெட்டே ஆகும். சூதகர், மண்டல வணிகர், தென்னி லங்கை வளஞ்சியர், எழுநூற்றுவர் ஆகிய 4 வணிகக்குழுக்கள் இணைந்து, இங்குள்ள தான்தோன்றீஸ்வரமுடைய நாயனார் கோவிலில் ஒரு மண்டபத்தை கட்டிய செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.</p><p>இதில் குறிப்பிடப்படும் நான்கு வணிக குழுக்களில் முதலாவது இருப்பது சூதகர் என்பதாகும். யூதர் என்பதையே இங்கு சூதகர் என குறிப்பிட்டுள் ளனர். 13-ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல்வெட்டில் வணிகக்குழுக்களில் ஒருவராக யூதர்கள் குறிக்கப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மழைநீர் வடிகால் பணிகளை முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறைவு செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rainwater-drain-works-must-be-completed-with-proper-safety-measures-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rainwater-drain-works-must-be-completed-with-proper-safety-measures-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">f2067d14-3cf1-4cf6-9568-427b9a1426f7</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:34:30 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:34:30.905Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,AMMK,அமமுக,மழைநீர் வடிகால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/94bjpmdn/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/94bjpmdn/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறைவு செய்திட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை அண்ணாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>மழைநீர் வடிகால் பணிக்காகப் பள்ளங்கள் தோண்டப்படும்போது, அவற்றைச் சுற்றி உரிய தடுப்புச் சுவர்கள், எச்சரிக்கைப் பலகைகள் உள்ளிட்ட அடிப்படைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்கூட முறையாகச் செய்யப்படாததே ஒரு உயிர் பறிபோகக் காரணமாக அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும் செயல்படுத்தப்படும் மழைநீர் வடிகால் பணிகள், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளின் ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் ‘மரண வடிகால்’ பணிகளாக மாறி வருவது வேதனைக்குரியது.</p><p>முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகளால் பெண் ஒருவரின் உயிர் பறிபோன பின்னர் விசாரணை நடத்துவதும், அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்வதும் நிரந்தரத் தீர்வாக அமையாது என்பதை தவெக அரசு இனியாவது உணர வேண்டும்.</p><p>எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்படாத வகையில், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறைவு செய்திட வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘தினத்தந்தி படித்து வளர்ந்தவன் நான்’ - சட்டமன்றத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-grew-up-reading-dina-thanthi-said-minister-viswanathan-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-grew-up-reading-dina-thanthi-said-minister-viswanathan-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">96f7ecbb-d36a-45be-9175-68350a3db093</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:27:07 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:27:07.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தினத்தந்தி,Dailythanthi,உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்,Minister Viswanathan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/srgi9tu0/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/srgi9tu0/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரும், மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான விஸ்வநாதன், சட்டமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-</p><p>“வாழ்க்கை துவங்குகிற பொழுது சிலருக்கு வசந்தமாக துவங்கும், சிலருக்கு வசதியோடு துவங்கும். ஆனால் வாழ்க்கை எனக்கு துவங்குகிற பொழுது வசந்தமும் இல்லை, வசதியும் இல்லை. </p><p>நானே எனது வாழ்க்கையை உருவாக்கி, குட்டை, குளங்களிலும், ஓடுகிற நதியிலும் என் ஆடைகளை துவைத்து, சைக்கிளை மிதித்து, தினந்தோறும் தினத்தந்தி பத்திரிகையை படித்து வளர்ந்து, அரசியல் ஆசையால் இன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்திருக்கிறேன். ஒரு அரசியல் தலைவராக நான் பெருமையோடு இங்கு நிற்கிறேன்.</p><p>காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாளைய வருங்காலத்தின் பிரதமர், என் தலைவர் ராகுல் காந்தி என்னை சட்டமன்றத்திற்கு அனுப்புகிற வாய்ப்பினை எனக்கு கொடுத்திருக்கிறார். நான் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒருவன். ஆனால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒருவனை, நான் அனுப்பிய ஒரு ஆடியோவின் மூலமாக, ‘நான் ஒதுக்கப்பட்டேன், வாய்ப்புகளை எனக்கு வழங்கித்தான் ஆக வேண்டும்’ என்று என் தலைமைக்கு நான் கொடுத்த வேண்டுகோளின் காரணத்தினால், ஒரே இரவில் அந்த குரல் என் தலைவனுக்கு கேட்டது. மறுநாள் காலை மேலூர் சட்டமன்ற பொதுத்தொகுதியின் வேட்பாளராக நான் ஆக்கப்பட்டேன்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>தேனியில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-announces-manimandapam-for-director-bharathiraja-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-announces-manimandapam-for-director-bharathiraja-in-theni#comments</comments><guid isPermaLink="false">043ebc90-ba90-4a59-99ac-175e1d752af2</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:09:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:09:14.307Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514964</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,Director Bharathiraja,இயக்குநர் பாரதிராஜா,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/sf6ez84a/7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/sf6ez84a/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சினிமா செய்திகள் (Cinema News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளை போற்றும் வகையில் ரூ.2.50 கோடியில் தேனியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/o76i222a/7a.jpg" /></figure><p>இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் உடல் தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. </p><p>மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.</p><p>இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.</p><p>இன்று சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் பாரதிராஜாவின் சாதனைகளை போற்றும் வகையில் ரூ.2.50 கோடியில் தேனியில் மணி மண்டபம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். இது பாரதிராஜா ரசிகர்கள் மற்றும் உறவினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம் - பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-free-travel-scheme-for-women-pmk-mla-sowmya-anbumani-welcomes-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-free-travel-scheme-for-women-pmk-mla-sowmya-anbumani-welcomes-the-move#comments</comments><guid isPermaLink="false">9b74702c-f7ab-450f-8dae-03ff26b692c7</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:48:39 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:48:39.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sowmiya Anbumani,சவுமியா அன்புமணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5fwyeacl/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5fwyeacl/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். </p><p>முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். </p><p>வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. திருநங்கையரும் (Transgender) கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என முதல்-அமைச்சர் விஜய் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். </p><p>இந்நிலையில், மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கத்திற்கு பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-</p><p>“ஏராளமான பெண்களுக்கு இன்றுவரை பொருளாதார சுதந்திரம் இல்லாத நிலைதான் உள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தை நம்பி பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பது மிகவும் பயனுள்ள, நல்ல விஷயமாக இருக்கும். </p><p>இது ஏற்கனவே இருக்கின்ற திட்டம்தான் என்றாலும், அந்த திட்டத்தை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்த திட்டம் மிகவும் வரவேற்கக் கூடிய திட்டம். 10 ரூபாய் மிச்சமானாலும் பெண்களுக்கு அது மிகவும் உபயோகமாக இருக்கும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-22-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-22-districts#comments</comments><guid isPermaLink="false">cec5eb63-d2b5-43f3-b849-4583919ce8dc</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:41:44 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:41:44.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9ackip4w/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9ackip4w/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலைகளை புனரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/roads-must-be-repaired-on-war-footing-says-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/roads-must-be-repaired-on-war-footing-says-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">c64d782c-5b0e-4e57-a9d6-750f866aec08</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:37:10 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:37:10.916Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,நடவடிக்கை,வலியுறுத்தல்,roads,சாலைகள்,போர்க்கால அடிப்படை,restore,Urges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/na9k05xm/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/na9k05xm/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாலைகளை புனரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல். இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/nainar-nagendran">நயினார் நாகேந்திரன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2> வருத்தமளிக்கிறது</h2><p>மக்களின் உயிரை குடிக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D">மழைநீர் வடிகால்</a> பள்ளங்கள். சென்னை அண்ணாநகரில் சாலையோரம் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த பெண் ஒருவர் அநியாயமாக உயிரிழந்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வருத்தமளிக்கின்றன. </p><h2>மழைநீர் வடிகால் பள்ளங்கள்</h2><p>சென்னை முழுவதிலும் இதுபோன்ற மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளங்கள் நிறைய தென்படுகின்றன. சாதாரண நேரத்தில் அவைகளை கடந்து செல்வது எளிதாக இருந்தாலும், மழை காலங்களில் முழுக்க நீர் நிரம்பி சிறு குளம் போலவே காட்சியளிக்கும் அந்தப் பள்ளங்களை பெரும்பாலான மக்கள் கவனிக்க தவறி விடுகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. </p> <h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, தமிழகம் முழுவதிலுமுள்ள மழைநீர் வடிகால் பள்ளங்களை உடனடியாக மூடவும், குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளை புனரமைக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டுமென முதல்-அமைச்சர் விஜய்யை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-thanks-minister-rajmohan-for-raising-her-plea-in-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-thanks-minister-rajmohan-for-raising-her-plea-in-assembly#comments</comments><guid isPermaLink="false">65715878-fcb8-4d4f-a87d-e4a097c2e62a</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:13:42 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:13:42.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோரிக்கை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Legislative Assembly,Request,நன்றி,சட்டமன்றம்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dtu53pnj/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி - வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/dtu53pnj/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கன்னிப்பேச்சு</h2><p>சட்டமன்றத்தில் இனி ‘கன்னிப் பேச்சு’ என்ற வார்த்தை இடம்பெறக் கூடாது. கடந்த 2021-ஆம் ஆண்டு கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று, முதல் முறையாக நான் எம்.எல்.ஏ. ஆனபோது, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட பலரும் அதை ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிட்டனர்.</p> <h2> நாகரிகமாக இருக்கும்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சட்டமன்றத்தில்</a> முதல் முறையாக எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தபோது, “வழக்கமாக சட்டமன்றத்தில் முதல் உரையை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுகிறீர்கள். ‘கன்னி’ என்ற வார்த்தை இளம் வயது பெண்ணை குறிக்கும் வார்த்தை. என்னை பொறுத்தவரை, இந்த முதல் பேச்சை ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுகப்பேச்சு’, ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிட்டால் நாகரிகமாக இருக்கும்” என்றேன்.</p><h2>சட்டப்பேரவை தலைவர் அப்பாவு</h2><p>அதற்கு பதிலளித்த அன்றைய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாக கூறினார். ஆனால், இப்போது புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியிலும் ‘கன்னிப்பேச்சு’ என்றே குறிப்பிடுகின்றனர்.</p> <h2>அறிக்கை</h2><p>இதை மாற்றி, ‘அறிமுக பேச்சு’ அல்லது ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிடுமாறு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் தெரிவிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தேன். அது பரவலாக கவனம் பெற்றிருந்தது. பலரும் என்னை தொடர்புகொண்டு, “முக்கியமான ஒரு விஷயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று பாராட்டினர்.</p><h2>எதிர்ப்பு</h2><p>அதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இன்று பாமக சட்டமன்ற கட்சி தலைவர் சௌமியா அன்புமணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. லதாவும், ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடுவதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.</p><h2>அறிமுக உரை</h2><p>அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a>, “கடந்த சட்டப்பேரவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘கன்னிப்பேச்சு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக ‘அறிமுக உரை’ என்று பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கியிருந்தார். </p><p>அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் இதைப் பரிசீலிப்பதாக கூறியிருந்தார். சட்டப்பேரவை தலைவர் இதை பரிசீலித்து, ‘அறிமுக உரை’ என்று குறிப்பிடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.</p><h2>நன்றி</h2><p>எனது கோரிக்கையை ஏற்று, அதை வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இனி சட்டமன்றத்தில் பேசும் எந்த உறுப்பினரும், ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடாமல், ‘அறிமுக உரை’ அல்லது ‘முதல் உரை’ என்றே குறிப்பிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை மாற்றக்கூடாது’ - அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/physical-education-classes-in-schools-must-not-be-changed-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/physical-education-classes-in-schools-must-not-be-changed-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">2cd928a3-c09c-47ac-bc72-06a64684da54</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:55:29 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:55:29.197Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/mdxpj5oo/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/mdxpj5oo/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற மானியக்கோரிக்கை உரையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;-</p><p>“எந்த சமூகத்தை பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயே வரகூடாது என்று சொன்னார்களோ, அந்த சமூகத்தில் இருந்து வந்த என்னை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கிய நமது முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரால் மட்டுமே இது சாத்தியம். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஒரு சபாநாயகருக்கு ரசிகர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்றால், அவர் நமது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்தான். அவரிடாம் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். </p><h2>புதிய வெற்றிக் கல்வி</h2><p>எது கல்வி? புத்தகத்தில் இருப்பது எல்லாம் அறிவை கொடுத்துவிடும் என்றால், அடுத்தவர்கள் எழுதியதை அச்செடுத்து எழுதுபவர்கள் அறிவாளிகள் ஆகிவிடுவார்களா? இல்லை. சுயமாக சிந்திக்கக் கூடிய மனிதர்களை உருவாக்குவதுதான் உண்மையான கல்வி. அதுதான் நமது புதிய வெற்றிக் கல்வி. </p><p>இதை பாடத்திட்டத்தில் இருந்து நாம் தொடங்க முடிவு செய்துள்ளோம். இத்தனை நாட்கள் நாம் படித்து வந்த பாடத்திட்டம் நமக்கு இதுவரை உதவி செய்துள்ளது. அதில் சிறிய மாற்றங்களை செய்ய உள்ளோம். </p><h2>தன் வேகத்தில் கற்கும் குழந்தை</h2><p>புத்தகங்களில் இருப்பது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக புரிவது இல்லை. இதில் சராசரி மாணவர்கள்(Average Student) என்று யாரும் கிடையாது. நமது த.வெ.க. அரசின் பள்ளிக்கல்வித்துறை இனி யாரையும் சராசரி மாணவர் என்று சொல்லக் கூடாது என்று தீர்மானித்துள்ளது. </p><p>மெல்ல கற்கும் குழந்தை என்று கூட சொல்ல வேண்டாம், ‘தன் வேகத்தில் கற்கும் குழந்தை’ என்றுதான் அவர்களை குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு தேவையான, சரியான கல்விச் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம் என்பதை விட, எப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம் என்பதைதான் எங்கள் மானியக் கோரிக்கை யோசிக்கிறது. </p><h2>உடற்கல்வி வகுப்புகள்</h2><p>சமீபத்தில் ஒரு பள்ளி சார்ந்த பிரச்சினையின்போது முதல்-அமைச்சர் விஜய் என்னை அழைத்து பேசினார். அந்த பிரச்சினை குறித்து நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை அவரிடம் விளக்கினேன். அவர் என்னை நிறுத்தி, ஒரு மாணவர் தவறு செய்கிறார் என்றால், அந்த மாணவரை குற்றவாளியாக பார்க்காமல், பாதிக்கப்பட்டவராக பார்க்க வேண்டும் என்று கூறினார். </p><p>மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் எப்படி தடுப்பது? இதற்கு நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் உடற்கல்வி வகுப்புகள்தான். தமிழ்நாட்டில் எந்தவொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி வகுப்பைக் கூட மாற்றம் செய்யக் கூடாது என த.வெ.க. அரசு முடிவெடுத்திருக்கிறது. உடற்கல்வி வகுப்பை மாற்றிவிட்டு, கணிதம் அல்லது அறிவியல் வகுப்பு எடுக்கிறார்கள். என்றைக்காவது கணித வகுப்பை மாற்றிவிட்டு உடற்கல்வி வகுப்பிற்கு அனுப்பியிருக்கிறார்களா? </p><h2>ஆசிரியர்கள் பிரச்சினை</h2><p>இந்த சூழலை மாற்றுவதற்காக, உடலை உறுதி செய்வதற்காக, மாணவர்களின் சிந்தனையை செதுக்குவதற்காக பல்வேறு அறிவிப்புகளை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆசிரியர்கள் பிரச்சினையை பேசி தீர்ப்பதற்காக உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு, ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>புதிய ஐபோன் மாடல்களின் விலையை 9% வரை உயர்த்தும் ஆப்பிள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/apple-to-raise-prices-of-new-iphone-models-by-up-to-9</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/apple-to-raise-prices-of-new-iphone-models-by-up-to-9#comments</comments><guid isPermaLink="false">a97652e8-f4a4-44b7-a66c-61324296bbe1</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:45:54 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:45:54.084Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>America,Apple iPhones,அமெரிக்க டாலர்,பங்குச் சந்தை,ஐபோன் தொழிற்சாலை,விலை  உயர்வு,iphone price hike</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/05/04/43771378-3a.webp" width="750"><media:title type="html"><![CDATA[ ஆப்பிள் நிறுவனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்க டாலர் அடிப்படையில் சுமார் 9 சதவீதம் வரை உயர்த்த திட்டம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/h-upload/2025/05/04/43771378-3a.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம், தனது வரவிருக்கும் புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">ஐபோன்</a> (18 புரோ) மாடல்களின் விலையை <a href="https://www.dailythanthi.com/news/world">அமெரிக்க டாலர் </a>அடிப்படையில் சுமார் 9 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சந்தையில் நிலவும் கடுமையான உதிரிபாகங்கள் பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2>விலை உயர்வுக்கான காரணம்</h2><p>ஆப்பிள் நிறுவனம் தனது அடிப்படை ப்ரோ மாடலின் விலையை 100 அமெரிக்க டாலர் வரை உயர்த்த உள்ளது. இதன் மூலம் இதன் ஆரம்ப விலை சுமார் $1,199 (இந்திய ரூபாய் மதிப்பு சுமார் ரூ.1,14,663) ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் மெமரி சிப்கள் மற்றும் சிலிக்கான் செயலிகளின் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி செலவு பெருமளவு அதிகரித்துள்ளது. ஆப்பிளின் முதன்மை போட்டியாளர்களான சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது புதிய தயாரிப்புகளின் விலையை 100 டாலர் வரை உயர்த்தியுள்ளன.</p><h2>சந்தையில் ஏற்படும் மாற்றங்கள்</h2><p>ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தனது ஐபேட் மற்றும் மேக்புக் சாதனங்களின் விலையை உலக சந்தையில் கணிசமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலர் மதிப்பிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி வரிகள் காரணமாக, இந்தியாவில் இதன் விலை உயர்வு இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.</p><p>எனினும், இந்த விலை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ஆப்பிள் நிறுவனம்</a> இன்னும் வெளியிடவில்லை. வழக்கமாக செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆப்பிளின் மெகா வெளியீட்டு விழாவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்க்கரை விலை உயர்வு: ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விலை கிலோவுக்கு ரூ.80 அதிகரிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sugar-price-hike-palcoa-price-hiked-by-rs-80-per-kg-in-srivilliputhur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sugar-price-hike-palcoa-price-hiked-by-rs-80-per-kg-in-srivilliputhur#comments</comments><guid isPermaLink="false">c6bba82d-10c7-43fe-ba1a-42d10eaaa315</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:36:36 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:36:36.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்ரீவில்லிபுத்தூர்,Srivilliputhur,Sugar,விலை அதிகரிப்பு,சீனி,பால்கோவா,sugar price hike</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/x2t2agkm/46.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பால்கோவா]]></media:title><media:description type="html"><![CDATA[ பால்கோவா விலை கிலோவுக்கு ரூ.80 அதிகரிப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/x2t2agkm/46.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>தமிழகத்தில் சர்க்கரை விலை அதிரடியாக உயர்ந்துள்ளதை அடுத்து, உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் விலையும் கிலோவுக்கு ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">இனிப்பு</a> பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>கிலோ ரூ.400-க்கு விற்பனை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விருதுநகர் மாவட்டம் </a>ஸ்ரீவில்லிபுத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட பால்கோவா தயாரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு தயாரிக்கப்படும் பால்கோவாக்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.320-க்கு விற்கப்பட்ட பால்கோவா, தற்போது ரூ.80 உயர்ந்து ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரை கிலோ பால்கோவா ரூ.160-லிருந்து ரூ.200 ஆகவும், கால் கிலோ ரூ.80-லிருந்து ரூ.100 ஆகவும் அதிகரித்துள்ளது.</p><h2>விலை உயர்வுக்கான காரணங்கள்</h2><p>தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:-</p><p>"பால்கோவா தயாரிப்பிற்கு பால் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டும் முக்கிய மூலப்பொருட்களாகும். கடந்த சில நாட்களாக சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.25 வரை உயர்ந்து, தற்போது ரூ.72-க்கு விற்கப்படுகிறது. அத்துடன் பால் தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவுகளும் அதிகரித்துள்ளன. இந்த கடுமையான விலை உயர்வால் பால்கோவா விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் விலை உயர்வு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை சற்று சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>19 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/19-month-baby-organ-donation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/19-month-baby-organ-donation#comments</comments><guid isPermaLink="false">bf9d8db7-9fba-4f40-93c4-e1d0ebce1af5</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:35:18 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:35:18.758Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குழந்தை,child,brain death,மூளைச்சாவு,உடல் உறுப்புகள் தானம்,organs donated</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9dqisfc3/hospital.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 19 மாத குழந்தை]]></media:title><media:description type="html"><![CDATA[ 19 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9dqisfc3/hospital.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெற்ற பிள்ளையை இழந்த துயரத்திலும், பிற உயிர்களை காக்க முன்வந்த பெற்றோரின் நெகிழ்ச்சியான செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ செய்துள்ளது. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, மிகக் குறைந்த வயதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">உறுப்பு தானம்</a> செய்த பெருமையை இந்த 19 மாத  குழந்தை பெற்றுள்ளது.</p> <h2>தீவிர சிகிச்சை</h2><p>சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 'தலைநீர் கோர்வை' எனப்படும் மூளை பாதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த 19 மாதக் குழந்தை  ஒன்று அனுமதிக்கப்பட்டது. அந்த பிஞ்சு குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 6 நாட்களாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.</p><h2>உடல் உறுப்புகள் தானம்</h2><p>இருப்பினும், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81">மூளைச்சாவு</a> அடைந்தது. தங்களின் செல்ல குழந்தை இனி மீண்டு வரமாட்டான் என்ற அதிர்ச்சி தகவலை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர். இந்த துயரமான சூழ்நிலையிலும், தங்களின் குழந்தை மற்றவர்களின் உடலாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில், குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.</p> <h2>பெற்றோரின் சம்மதம்</h2><p>பெற்றோரின் சம்மதத்தை தொடர்ந்து, 19 மாத குழந்தையிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. குழந்தையின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு, உறுப்புகள் தேவைப்படும் மற்ற குழந்தைகளுக்கு பொருத்தப்பட உள்ளன. சோகத்திலும் துணிச்சலான முடிவெடுத்து, பல உயிர்களுக்கு மறுவாழ்வு தந்துள்ள அந்த பெற்றோரின் தியாகத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.</p> ]]></content:encoded></item><item><title>‘அரிசி பருப்பு, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-must-be-taken-to-curb-the-rise-in-prices-of-rice-lentils-and-sugar-communist-party-of-india-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-must-be-taken-to-curb-the-rise-in-prices-of-rice-lentils-and-sugar-communist-party-of-india-urges#comments</comments><guid isPermaLink="false">b4c38a7a-56ab-417c-9c6e-7ab9508a1b21</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:22:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:22:52.008Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jfygrzlq/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/jfygrzlq/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.48 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது ரூபாய் 70 வரை விலை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால்  விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p>பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்றவை நெருங்கி வரும் காலத்தில் சர்க்கரை தேவை அதிகரிக்கும். இந்நிலையில் அதன் விலை ஏற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும்.</p><p>சர்க்கரை விலை உயர்வால் டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, வணிக நிறுவனங்களுக்கான  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக  உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ விலை  15 ரூபாய் வரை உயர்ந்தது. காபி விலை ரூ 20 வரை உயர்ந்தது. தற்போது அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.</p><p>கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொன்னி அரிசி ரூபாய் 80க்கு விற்பனை ஆகிறது. இட்லி அரிசி ரூபாய் 35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பருப்பு வகைகளும் விலை உயர்ந்துள்ளன.</p><p>உளுத்தம் பருப்பு கிலோ ரூபாய் 120 லிருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு 80 லிருந்து 100 ஆகவும், தனியா 160 லிருந்து ரூ250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. அதனால் ஏழை, எளிய  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <p>அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது துரதிஷ்டவசமானது: ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-to-drop-parandur-greenfield-airport-a-setback-for-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-to-drop-parandur-greenfield-airport-a-setback-for-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">0f630ad7-e6ff-45c7-a50d-4818b075fe1e</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:18:00 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:18:00.804Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>report,அறிக்கை,பரந்தூர் விமான நிலையம்,Paranthur Airport,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Easwaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5jm39ie5/e.r.eswaran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஈ.ஆர்.ஈஸ்வரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது துரதிஷ்டவசமானது: ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/5jm39ie5/e.r.eswaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தமிழ்நாடு சட்டமன்றத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது என்று முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது துரதிஷ்டவசமானது என்று ஈஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்</a> பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p> <h2>எதிர்கால தேவை</h2><p> புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பசுமை விமான நிலையமாக பரந்தூரில் அமைப்பதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயலாக்கத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.</p> <h2>கடந்த கால அரசு </h2><p> ஐந்து ஆண்டு காலமாக இடத்தை தேடி நான்கு இடங்களை மத்திய அரசின் ஒப்புதலுக்கு கடந்த கால அரசு கொடுத்தது. அதிலே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">பரந்தூர்</a> தான் தகுதியான இடமென்று இந்திய விமான போக்குவரத்து துறை ஒப்புதல் கொடுத்தது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக முடியும் தருவாயில் இருந்தது. </p><h2>மெட்ரோ ரெயில் திட்டம்</h2><p>விமான நிலையத்திற்கான ஏற்பாடுகள் மட்டுமில்லாமல் விமான நிலையத்தை சென்னை மாநகரத்தோடு இணைக்கும் மெட்ரோ ரெயில் திட்டம், சென்னை - பெங்களூர் விரைவு வழி தடத்தோடு இணைக்கும் திட்டம், செய்யாறு மற்றும் ஒரகடம் போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியை நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கும் திட்டம், சென்னை மாநகரத்தோடு இணைக்க விரைவுச்சாலை வசதி என்று பல்வேறு ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டன. </p><h2> பின்னடைவு</h2><p>இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்தை கைவிட்டு விட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வோம் என்று அறிவித்திருப்பது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.</p> <h2>அறவே இல்லை</h2><p>வேறு பல இடங்களை பார்த்து இந்திய விமான போக்குவரத்து துறையின் ஒப்புதலை பெற்று தேவையான நிலங்களை கையகப்படுத்தி புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால் இன்னும் 15 ஆண்டுகள் ஆகி போகும். அரசினுடைய அறிவிப்பை பார்க்கும் பொழுது இரண்டாவது விமான நிலையம் சென்னைக்கு கொண்டு வரும் திட்டமே இந்த அரசுக்கு அறவே இல்லை என்று தோன்றுகிறது.</p><h2>சர்வதேச விமான நிலையம்</h2><p> பெங்களூர் மற்றும் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையங்கள் தற்போது சென்னை விமான நிலையத்தோடு ஒப்பிடுகையில் மிக பெரும் வளர்ச்சியை பெற்றிருக்கின்றன. பரந்தூர் விமான நிலையத்தை தடுத்திருப்பது தமிழக எல்லை பகுதியில் ஆந்திர அரசு திட்டமிடுகின்ற விமான நிலைய கோரிக்கைக்கு வலு சேர்க்கும். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் இருப்பவர்கள் கர்நாடகாவில் இருக்கின்ற பெங்களூர் விமான நிலையத்தை பயன்படுத்துவது போல சென்னை பகுதியிலும், வட மாவட்டங்களிலும் உள்ள மக்கள் உருவாக போகும் ஆந்திர சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள். </p><h2>மறுபரிசீலனை</h2><p>அதன்மூலம் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களுடைய பொருளாதார வளர்ச்சிக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை விட்டு கொடுப்பதாக அமையும். தமிழகத்தினுடைய தொழில்துறையினரை தமிழக அரசு கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் பரந்தூர் விமான நிலைய விசயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>