<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 31 Jul 2026 23:13:31 +0000</lastBuildDate><item><title>தூத்துக்குடி- தாம்பரம் சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-tambaram-special-train-extended-by-one-more-month-southern-railway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-tambaram-special-train-extended-by-one-more-month-southern-railway#comments</comments><guid isPermaLink="false">7cfca2f6-2dfa-49ef-a00e-ec6ae9eadae1</guid><pubDate>Fri, 31 Jul 2026 22:21:26 +0000</pubDate><atom:updated>2026-07-31T22:21:26.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Tambaram,தாம்பரம்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,தூத்துக்குடி,Thoothukkudi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/z3f739c6/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/z3f739c6/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி- சென்னை தாம்பரம் இடையிலான கோடை கால சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.</p><h2>சிறப்பு ரெயில்</h2><p>கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை தாம்பரம் - தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் திங்கட்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னைக்கும், செவ்வாய்க்கிழமைகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடிக்கும் வந்து சேருகிறது.</p><p>இந்த ரெயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ஊர்களில் நின்று செல்கிறது.</p><h2>நீட்டிப்பு</h2><p>இந்த சிறப்பு ரெயில் சேவையை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு வருகிற 3, 10, 17, 24, 31-ந்தேதிகளிலும், சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வருகிற 4, 11, 18, 25 மற்றும் செப். 1 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம் - மத்திய அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilnadu-muzhuvadhum-makkal-thogai-kanakkeduppu-panigal-indru-thodakkam-maththiya-arasu-arivippu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamilnadu-muzhuvadhum-makkal-thogai-kanakkeduppu-panigal-indru-thodakkam-maththiya-arasu-arivippu#comments</comments><guid isPermaLink="false">384d0115-a739-4a35-8915-e5f2086c091f</guid><pubDate>Fri, 31 Jul 2026 21:44:05 +0000</pubDate><atom:updated>2026-07-31T21:44:05.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,மத்திய அரசு,கணக்கெடுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/gvd0mr5n/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/gvd0mr5n/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1-ந் தேதி (இன்று) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.</p><p>அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன. இந்தியாவில் முதல்முறையாக இக்கணக்கெடுப்பில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேக செல்போன் செயலி மூலம் தரவுகள் பதிவு செய்யப்படும். 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.</p><p>சுய-கணக்கெடுப்பு செய்தவர்கள் தங்கள் சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை கணக்கெடுப்பாளர்களிடம் காட்ட வேண்டும். இந்த வசதியைப் பயன்படுத்தாத குடும்பங்களும் களப்பணியின்போது கணக்கெடுக்கப்படுவார்கள். வீட்டுவசதி நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் இந்த தேசியப் பணியில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மண்டல திரைப்பட சென்சார் போர்டு அதிகாரியாக சஞ்சய் கோஷ் நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mandala-thiraippada-censor-boardu-adhigariyaga-sanjay-ghosh-niyamanam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mandala-thiraippada-censor-boardu-adhigariyaga-sanjay-ghosh-niyamanam#comments</comments><guid isPermaLink="false">786b8fe5-fd12-46c8-8772-c6b303100a59</guid><pubDate>Fri, 31 Jul 2026 21:30:35 +0000</pubDate><atom:updated>2026-07-31T21:30:35.672Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Censor Board,சென்னை மண்டலம்,சென்சார் போர்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/rh2yfv67/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/rh2yfv67/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மண்டல திரைப்பட சென்சார் போர்டு அதிகாரியாக சஞ்சய் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச் சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இந்திய தகவல் சேவை பிரிவை (ஏ பிரிவு) சேர்ந்த மூத்த அதிகாரியான சஞ்சய் கோஷ், தற்போது சென்னை புத்தக வெளியீட்டு பிரிவின் (டி.பி.டி.) துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர், டெல்லி புத்தக வெளியீட்டு பிரிவின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பி.ஐ.பி.) கூடுதல் பொறுப்பையும் வகித்து வருகிறார்.</p><p>இந்த நிலையில், தற்போது வகித்து வரும் பொறுப்புகளுடன் சேர்த்து, சென்னை மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் (சென்சார் போர்டு) மண்டல அதிகாரி பொறுப்பிலும் சஞ்சய் கோஷ் நியமனம் செய்யப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச வீடியோவை கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-threatens-to-send-obscene-video-to-husband-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-threatens-to-send-obscene-video-to-husband-arrested#comments</comments><guid isPermaLink="false">b233c449-b6fd-4f36-aa1a-a7d1dd83a488</guid><pubDate>Fri, 31 Jul 2026 19:19:25 +0000</pubDate><atom:updated>2026-07-31T19:19:25.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ஆபாச வீடியோ,Otteri,ஓட்டேரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qfos7w17/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qfos7w17/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த திருமணமான 35 வயது இளம்பெண் ஒருவர், ஓட்டேரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>நான், 2024-ம் ஆண்டு திருவள்ளூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தேன். என்னுடன் வேலை செய்த கோகுல்நாத் (26 வயது) என்பவருடன் நண்பராக பழகி வந்தேன். எங்கள் அலுவலகம் சம்பந்தமாக ஓட்டலில் விருந்து நடந்தபோது கோகுல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை ஆபாசமாக படம் பிடித்தார்.</p><p>பின்னர் அதை காட்டி மிரட்டி என்னை திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட வைத்தார். அதையும் எனக்கு தெரியாமல் செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நான், அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி எனது செல்போன் எண்ணையும் மாற்றி விட்டேன். 2 வருடங்களுக்குப் பிறகு கோகுல்நாத் எனது செல்போன் எண்ணை கண்டுபிடித்து என்னை தொடர்பு கொண்டு மீண்டும் தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டி வருகிறார்.</p><p>தன்னுடன் உல்லாசமாக இருக்க மறுத்தால் இருவரும் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோவை, எனது கணவருக்கும், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>29 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/29-mavattangalil-nalliravu-1-mani-varai-mazhaikku-vaippu</link><comments>https://www.dailythanthi.com/news/weather/29-mavattangalil-nalliravu-1-mani-varai-mazhaikku-vaippu#comments</comments><guid isPermaLink="false">1e015e23-4637-4475-bd8a-63831995ee22</guid><pubDate>Fri, 31 Jul 2026 17:09:33 +0000</pubDate><atom:updated>2026-07-31T17:09:33.901Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/9jm607mf/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/9jm607mf/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மதுரை, விழுப்புரம், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தர்மபுரி, காஞ்சிபுரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகளுக்கு புரதம் தேவை; சிக்கன் பிரியாணி விஷயத்தில் அரசியலை திணிக்க வேண்டாம் - அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/children-need-protein-do-not-politicize-the-issue-of-chicken-biryani-minister-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/children-need-protein-do-not-politicize-the-issue-of-chicken-biryani-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">3ad760ad-04c2-44b7-860b-fcd98f76ec7e</guid><pubDate>Fri, 31 Jul 2026 16:45:32 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:45:32.228Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chicken Biryani,சிக்கன் பிரியாணி,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/yebcpgsk/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/yebcpgsk/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து கருத்துகள் பெறப்பட்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் முடிவை அறிவிப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.</p><p>இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில், ஈரோட்டில் இன்று அமைச்சர் ராஜ்மோகன் இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழகத்தில் கல்வி புரட்சியோடு உணவு புரட்சியும் கலந்தே வந்துள்ளது. அந்த வகையில் எனக்கு ஒரு ஆசை இருந்தது. அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். </p><p>அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது பரிசீலனையில் உள்ளது. சைவம் சாப்பிடுபவர்கள் சைவம் சாப்பிடட்டும். அசைவம் சாப்பிடும் குழந்தைகள் சிக்கன் பிரியாணி சாப்பிடட்டும். குழந்தைகளுக்கு புரதம் தேவை. சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் குழந்தைகள் கெட்டுப் போகாது. இந்த விஷயத்தில் அரசியலை திணிக்க வேண்டாம்.”</p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கர்நாடக அரசை கண்டித்து 3-ந்தேதி தி.மு.க. போராட்டம் - எஸ்.டி.பி.ஐ. கட்சி பங்கேற்கும் என அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-protest-against-the-karnataka-government-on-the-3rd-sdpi-announces-it-will-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-protest-against-the-karnataka-government-on-the-3rd-sdpi-announces-it-will-participate#comments</comments><guid isPermaLink="false">d6caa583-9863-447c-8e86-a12889f177f8</guid><pubDate>Fri, 31 Jul 2026 16:27:25 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:27:25.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,sdpi,எஸ்.டி.பி.ஐ.,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lb0h6s3e/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lb0h6s3e/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ந்தேதி தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“​காவிரி உரிமை, மேகதாது அணை விவகாரம் மற்றும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் ஆகஸ்ட் 3-ந்தேதி தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சி பங்கேற்கும்.</p><p>தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் நடைபெறும் இப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள், களப்பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று காவிரிக்கான நமது உரிமைக் குரலை வலுப்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-fraud-case-two-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-fraud-case-two-arrested#comments</comments><guid isPermaLink="false">81d09314-11b3-4652-a5cd-8a0d5d1dba6c</guid><pubDate>Fri, 31 Jul 2026 16:16:58 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:16:58.174Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,DMK,கைது,arrest,டாஸ்மாக்,Tasmac,செந்தில் பாலாஜி,டாஸ்மாக் முறைகேடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/485tieow/balaji33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
டாஸ்மாக் முறைகேடு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/485tieow/balaji33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், அவரது கூட்டாளி ரமேஷ் கைது செய்யப்பட்டார்.</p> <h2>செந்தில்பாலாஜி முதல் குற்றவாளி</h2><p>முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்புபோலீசார் பதிவுசெய்துள்ளனர். இந்த வழக்கையொட்டி தமிழகம் முழுவதும் செந்தில்பாலாஜி தொடர்புடைய 45 இடங்களில், லஞ்சஒழிப்புபோலீசார் சோதனையும் மேற்கொண்டனர்.</p><p>இந்த புதிய வழக்கில், செந்தில்பாலாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 2-வது குற்றவாளியாக டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர், ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் இருக்கிறார். 3-வது மற்றும்4-வது குற்றவாளிகளாக சீனியர் மண்டல மேலாளர்கள் ராமதுரைமுருகனும், பன்னீர்செல்வமும் இணைக்கப்பட்டுள்ளனர்.</p><p>5-வது குற்றவாளியாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a>யின் தனிப்பட்டஉதவியாளர் பாஸ்கர் உள்ளார். இவர்களை தொடர்ந்து 6-வது மற்றும் 7-வதுகுற்றவாளிகளாக செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான ரத்தேஷ்ராஜ் சண்முகவேல் என்பவரும், கார்த்திக் என்ற மூலநூர் கார்த்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2>செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன்</h2><p>ரத்தேஷ் ராஜ் சண்முகவேலும், மூலநூர் கார்த்திக் என்பவரும்தான் 'கரூர் கேங்' என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன், அவருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்ஜாமீன் கிடைத்துவிட்டதால், இந்த வழக்கில் செந்தில்பாலாஜி விரைவில் லஞ்சஒழிப்பு போலீசில் விசாரணைக்கு ஆஜராவார். </p><h2>நெருங்கிய நண்பர்கள் கைது</h2><p>இந்த நிலையில் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக கூறப்படும், கரூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும், ரமேஷ் என்பரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் கார்த்திக்கின் பெயர்ஏற்கனவே போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், 7-வதாக இடம்பெற்றுள்ளது. கைதான ரமேஷ் என்பவர் புதிதாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக, லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flash-flood-at-courtallam-falls-bathing-prohibited</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flash-flood-at-courtallam-falls-bathing-prohibited#comments</comments><guid isPermaLink="false">ac025f71-9356-4504-92c6-9747e70c0edb</guid><pubDate>Fri, 31 Jul 2026 16:04:44 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:04:44.684Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றால அருவி,வெள்ளப்பெருக்கு,Courtallam Falls</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/3qn3j5za/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/3qn3j5za/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தென்காசி, </p><p>குற்றால அருவிகளில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. குறிப்பாக, புலியருவியில் தண்ணீர் வரத்து இன்று வறண்டு காணப்பட்டது. </p><p>இதற்கிடையே,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அருவிகளில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. மாலையில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘மதிக்காத கர்நாடக அரசிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை’ - அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-point-in-talking-to-the-karnataka-government-which-shows-no-respect-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-point-in-talking-to-the-karnataka-government-which-shows-no-respect-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">c7abc5c0-396b-43dd-bdd6-9760541f679c</guid><pubDate>Fri, 31 Jul 2026 16:01:44 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:01:44.852Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/kqb9oaf6/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/kqb9oaf6/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழக முதல்-அமைச்சர் விஜய் தற்போது கர்நாடகத்திற்கு வர வேண்டாம் என அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 20 நாட்களில் கர்நாடக அரசிடம் தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை வாரியம் 2 முறை வலியுறுத்தியது. ஆனாலும் கர்நாடக அரசு அதை கேட்கவில்லை. </p> <p>கடந்த ஜூன் மாதம் தமிழகத்திற்கு 9.1 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் நமக்கு கிடைத்ததோ 2.1 டி.எம்.சி. மட்டுமே. அதே போல் ஜூலை மாதம் நமக்கு 3.2 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக 0.4 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. </p><p>இப்படி மதிக்காத கர்நாடக அரசிடம் சென்று பேசுவதில் எந்த பயனும் கிடையாது. காவிரியில் தண்ணீர் வரவில்லை, மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறந்திருக்க வேண்டும், ஆனால் இன்றுவரை திறக்கப்படவில்லை. குறுவை சாகுபடி முடிந்துவிட்டது, சம்பாவுக்கு தண்ணீர் இருக்குமா என்று தெரியவில்லை. மேட்டூர் அணையில் சுத்தமாக தண்ணீர் இல்லை. </p><p>ஆனால் கர்நாடக அணைகளில் 67 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. ஒரு நல்லெண்ணத்திற்காக தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீராவது திறந்துவிடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இந்த சூழலில் கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து தமிழக முதல்-அமைச்சர் என்ன பேசப்போகிறார்?”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு சேவைக்கு ஒப்புதல் - துரை வைகோ வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/approval-for-domestic-cargo-service-at-trichy-airport-durai-vaiko-welcomes-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/approval-for-domestic-cargo-service-at-trichy-airport-durai-vaiko-welcomes-move#comments</comments><guid isPermaLink="false">34d4a36d-6339-4d34-830a-91b88c8ea748</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:47:34 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:47:34.450Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>airport,விமான நிலையம்,Durai Vaiko,துரை வைகோ,Approval,ஒப்புதல்,திருச்சிTrichy,வரவேற்புwelcome</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/hw3jxse9/durai-vaiko.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மறுமலர்ச்சி திமுக எம்.பி. துரை வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/hw3jxse9/durai-vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்சி விமான நிலையத்தில்</a> உள்நாட்டுச் சரக்கு சேவைக்கு ஒப்புதல் வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும் என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">துரை வைகோ</a> தெரிவித்தார். இது தொடர்பாக, மறுமலர்ச்சி திமுக எம்பி துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சரக்கு சேவை</h2><p>திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனையம் வழியாக உள்நாட்டு சரக்கு சேவையை தொடங்குவதற்கு, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் ஒப்புதல் வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.</p><h2>பலனளிக்கும்</h2><p>தற்போது திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச சரக்குகள் பயணிகள் விமானங்கள் (Passenger Flights) மூலமாகவே கையாளப்பட்டு வருகின்றன. அதேபோன்று, இந்த புதிய ஒப்புதலின் மூலம் இனி உள்நாட்டு சரக்குகளும் பயணிகள் விமானங்கள் மூலமாகவே அனுப்பப்படுவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. இது திருச்சி மற்றும் மத்திய தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், வணிகர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு குறிப்பிடத்தக்க பலனளிக்கும்.</p><h2>கோரிக்கை</h2><p>அதே நேரத்தில், திருச்சி விமான நிலையத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஏர் கூரியர் சரக்கு முனையத்தை முழுமையாக செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக 08.08.2025 மற்றும் 03.06.2026 ஆகிய தேதிகளில் நேரிலும் இதுகுறித்து  கோரிக்கை வைத்துள்ளேன்.</p> <h2> நடவடிக்கை</h2><p>மேலும், எதிர்காலத்தில் பிரத்யேக சரக்கு விமானங்கள் திருச்சி விமான நிலையத்தில் நேரடியாக இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் எனது வலியுறுத்தலாகும். அதற்கான உட்கட்டமைப்பு மற்றும் தேவையான அனுமதிகளை விரைவாக ஏற்படுத்தி, திருச்சியை தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு மற்றும் ஏற்றுமதி மையமாக உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <h2> வரவேற்பு</h2><p>இந்த உள்நாட்டு சரக்கு சேவைக்கான ஒப்புதலை மனமார வரவேற்கிறேன். இதனைத் தொடர்ந்து சர்வதேச ஏர் கூரியர் சரக்கு முனையமும் செயல்பாட்டிற்கு வந்து, எதிர்காலத்தில் பிரத்யேக சரக்கு விமானங்களும் திருச்சியில் இயக்கப்படும் நாள் விரைவில் வர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நாளை தமிழகம் வருகிறார் ராகுல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-to-arrive-in-tamil-nadu-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-to-arrive-in-tamil-nadu-tomorrow#comments</comments><guid isPermaLink="false">97c8a1d6-7351-4205-8156-79858b329b2a</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:40:37 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:40:37.289Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,காங்கிரஸ்,Congress,Ragul Gandhi,Rahul Gandhi- ராகுல்காந்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qnkz35o3/ragul33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qnkz35o3/ragul33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாளை தமிழகம் வரும் ராகுல் காந்தி, நீட்டால் உயிரிழ்ந்தோர் குடும்பத்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>ராகுல் காந்தி</h2><p>தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மகாபலிபுரத்தில் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 77 மாவட்டத் தலைவர்கள் பங்கேற்று உள்ளார்கள்.</p><p>இந்த முகாமில் முக்கியத் தலைவர்களின் உரைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம் நாளை (1-ந்தேதி) நிறைவடைகிறது.</p><p>முகாமில் பங்கேற்பதற்காக  <a href="https://www.dailythanthi.com/search?q=ragul%20gandhi">நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி</a> நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் வரும் அவர் காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.</p><h2>நீட்டால் உயிரிழந்தோர் குடும்பத்தை சந்திக்கும் ராகுல்</h2><p>அதை தொடர்ந்து கோவை மற்றும் சேலம் பகுதிகளில் இருந்து நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.</p><p>அதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மகாபலிபுரம் புறப்படுகிறார். தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக செல்லும் அவர் பகல் 11.30 மணிக்கு பயிற்சி முகாம் நடைபெறும் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியை சென்றடைகிறார்.</p><p>அங்கு மாவட்டத் தலைவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார். பின்னர் ஒவ்வொரு மாவட்டத் தலைவரின் குடும்பத்தினருடனும் குழுப்புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். மகாபலிபுரம் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.</p><p>ராகுல்காந்தி செல்லும் வழிகளில் தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனில் கூடி விவாதிக்கப்பட்டது.</p><h2>போராட்டம்</h2><p>ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தலாம் என்று உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலை அடுத்து வழிநெடுக பலத்த பாதுகாப்பு மற்றும் ரகசிய கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக பணிபுரிந்த கண்ணப்பன் ஓய்வு; லதாவிற்கு கூடுதலாக ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kannappan-who-served-as-the-director-of-school-education-retires-additional-allocation-for-latha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kannappan-who-served-as-the-director-of-school-education-retires-additional-allocation-for-latha#comments</comments><guid isPermaLink="false">f70c2a9f-06df-4ec3-b835-90be159b5d25</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:19:37 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:19:37.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>tngovt,பள்ளிக் கல்வித் துறை,கண்ணப்பன்,School Educiton</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/fwbpnma5/lathaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளிக் கல்வித் துறை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/fwbpnma5/lathaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பள்ளிக் கல்வி இயக்குனராக பணிபுரிந்த கண்ணப்பன் இன்று பிற்பகலுடன் ஓய்வு பெற்றார். </p><p>பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிலிருந்து முனைவர்.ச.கண்ணப்பன் இன்றுடன் ஓய்வு பெற்றார்.பள்ளிக்  கல்வித்துறை சார்பாக நன்றியும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் இயங்கும் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இவர் பணியாற்றி வந்தார். </p><p>இந்த நிலையில், புதிய இயக்குநர் நியமனம் பற்றி அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பொறுப்பு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதாவிற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">பள்ளிக்கல்வித்துறை</a> வெளியிட்டுள்ள அறிவிப்பில்,</p><p>பள்ளிக்கல்வி இயக்குநராகப் பணிபுரியும் முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள் 31.07.2026 பிற்பகல் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறுவதால், பள்ளிக்கல்வி இயக்குநரின் பணிகளை கவனிக்கும் பொருட்டு நிர்வாக நலன் கருதி, தற்போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக பணிபுரியும் திருமதி. ந. லதாஅவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கான முழு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-added-to-rameswaram-tirupati-express-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-added-to-rameswaram-tirupati-express-train#comments</comments><guid isPermaLink="false">a89ec958-f74d-4b32-9ad6-5446576974cf</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:19:25 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:19:25.449Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Express train,எக்ஸ்பிரஸ் ரெயில்,Additional coach,கூடுதல் பெட்டி இணைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/4eq7aht3/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/4eq7aht3/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வேயில் அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. இதில் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.22667), நாளை (1-ந்தேதி முதல்) வருகிற செப்டம்பர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22668), இன்று (31-ந்தேதி) முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது. </p><p>ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16780), நாளை மறுநாள் (2-ந்தேதி) முதல் செப்டம்பர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருப்பதி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16779), ஆகஸ்டு 3-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.</p><p>இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை - தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/direct-admission-of-trainees-in-industrial-training-institutes-tamil-nadu-government-issues-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/direct-admission-of-trainees-in-industrial-training-institutes-tamil-nadu-government-issues-announcement#comments</comments><guid isPermaLink="false">05ce96d1-2a9a-4ab2-96c6-0a83f843004c</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:13:36 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:13:36.260Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/s8fwdibh/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/s8fwdibh/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 277 தனி யார் நொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026–2027 ம் ஆண்டு கலந்தாய்வுக்கான கால அவகாசம் 31.07.2026 உடன் நிறைவடைந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 14.08.2026 வரை வழங்கப்பட்டிருக்கிறது.</p><p>சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 95% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைாய்ப்பை பெற்றுள்ளனர். தொழிற்சாலைகளில் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.</p><p>இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதாலும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது.குறைந்த பட்சம் ரூ.20,000 முதல் மாணவர்களின் திறனுக்கேற்றவாறு ரூ.30,000 வரை மாதச் சம்பளம் கிடைக்கிறது.</p><p>எட்டாம் வகுப்பு/ பத்தாம் வகுப்பு முடித்து விட்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வராக தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழையும் பெறலாம்.</p><p>தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பிலும் சேரலாம். சம்பாதித்துக்கொண்டே மேற்படிப்புகளை தொடரலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுவதோடு தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளிலும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. </p><p>தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ.1,000/- கூடுதலாக வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள் (Shoes), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி ஆகிய அனைத்தும் வழங்கப்படும். குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விடுதி வசதியும் உள்ளது.</p><p>இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம் இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.</p><p>அலைபேசி எண் : 9499055642</p><p>வாட்ஸ்அப் எண் : 9499055612”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உணவு வழங்கல் துறை: 9 கணினி மேலாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் வெங்கடரமணன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-food-supply-minister-venkataramanan-appoints-9-computer-managers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-food-supply-minister-venkataramanan-appoints-9-computer-managers#comments</comments><guid isPermaLink="false">8cf01e94-45e8-44f3-991b-eb31688979bf</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:12:04 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:12:04.550Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பணிநியமன ஆணைகள்,appointment orders,has been issued,வழங்கினார்,அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7qj01eoe/jobs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 9 கணினி மேலாளர்களுக்கு பணிநியமன ஆணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7qj01eoe/jobs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்  உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் கணினி மேலாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு கணினி மேலாளர் பதவிக்கான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பணிநியமன ஆணைகள்</a> வழங்கும் விழா நடைபெற்றது.</p><h2>பணிநியமன ஆணை</h2><p>உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில், குடும்ப அட்டைகளை அச்சிட்டு வழங்கும் பணிக்காகவும். குடும்ப அட்டை தொடர்பான தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளவும். கணினி மயமாக்கப்பட்ட இத்துறையின் சேவைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்யவும். காலியாக உள்ள 9 கணினி மேலாளர் பணியிடங்களை நிரப்பும்வண்ணம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பணியாளர்களுக்கான ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டது. </p><p>அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு இன்று தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரால் எழிலகம். இயக்குநர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.</p><h2>புகார்களுகான தொலைபேசி எண்களை</h2><p>மேலும், நெல் கொள்முதல் மற்றும் உணவுப் பொருள் விநியோகம் தொடர்பான புகார்களுக்கு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் விவசாயிகள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 1800-599-3540 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.</p><h2>இணையதளம்</h2><p>அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக புகார் தெரிவிக்க 1967 அல்லது 1800-425-5901 கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். மேலும் www.tnpds.gov.in என்ற இணையதளம் வழியாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.</p><h2>குறுஞ்செய்தி</h2><p>நியாயவிலைக் கடையில் உள்ள அத்தியாவசியப் பொருள் இருப்பு விவரங்கள் அறிய பிடிஎஸ் (PDS) 101, நியாயவிலைக் கடையின் நிலை அறிய பிடிஎஸ்  (PDS) 106 மற்றும் போலிப் பட்டியல் / அத்தியாவசியப் பொருட்கள் குறித்த கட்டண தொகை புகார் பிடிஎஸ் (PDS) 107 என்ற குறியீட்டை 8939922990 / 9773904050 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்பலாம். </p><h2>புகார் அளிக்க எண்கள்</h2><p>மாநில அளவிலான சேவைகளுக்கு 044-28592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல்/ பதுக்கல் தொடர்பாக புகார் அளிக்க 1800-599-5950 / 96777 36557எண்களை தொடர்பு கொள்ளவும்.</p><h2>கைரேகை பதிவு சிறப்பு முகாம்</h2><p>நியாயவிலைக் கடைகளில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">கைரேகை பதிவு</a> (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் (eKYC) பதிவுசெய்ய வரும் 02.08.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இதுகுறித்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் தொலைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் இந்த வாய்ப்பினை குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pocso-case-registered-against-a-young-man-who-married-a-minor-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pocso-case-registered-against-a-young-man-who-married-a-minor-girl#comments</comments><guid isPermaLink="false">42b14c6c-9ae4-44d7-a772-c014c104a141</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:00:54 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:00:54.505Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர்,POCSO case,போக்சோ வழக்கு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/eg9j9few/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/eg9j9few/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,  </p><p>திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய வாலிபருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயதுடைய சிறுமிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்று உள்ளது. தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருக்கிறாள்.</p><p>திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் இந்த குழந்தை திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த வாலிபரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் பருவமழை, பயிர் சாகுபடி தொடர்பாக விரிவான ஆய்வுக்கூட்டம் - ரூ.340 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-chairs-a-comprehensive-review-meeting-on-the-monsoon-and-crop-cultivation-orders-allocation-of-340-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-chairs-a-comprehensive-review-meeting-on-the-monsoon-and-crop-cultivation-orders-allocation-of-340-crore#comments</comments><guid isPermaLink="false">7a796c0a-1785-4ac1-89ce-ae66bcdfbdb9</guid><pubDate>Fri, 31 Jul 2026 14:45:03 +0000</pubDate><atom:updated>2026-07-31T14:45:03.239Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆய்வுக்கூட்டம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/yckrzp2e/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/yckrzp2e/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் கருப்பொருட்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.</p><p>i. அணைகளில் நீர் இருப்பு / நீர்த்தேக்க அளவு.</p><p>ii. தமிழ்நாட்டில் தற்போதுவரை பெய்துள்ள தென்மேற்குப் பருவமழையின் அளவு, மழை அளவு குறைவாகப் பதிவாகியுள்ள மாவட்டங்களில் உள்ள நிலவரம்.</p><p>iii. நகர மற்றும் கிராமப்பகுதிகளில் குடிநீர் விநியோகம்.</p><p>iv. நடைபெற்றுவரும் வேளாண் பணிகள் மற்றும் குறுவை சாகுபடி நிலை, வேளாண் பயிர்களுக்கான குறுவைத் தொகுப்பு விநியோகம். </p><p>V. கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் கையிருப்பு.</p><p>vi. குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடு.</p> <p>தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் மாதம் முதல் இன்று வரை (31.07.2026) மழைப்பொழிவு இயல்பைவிடக் குறைவாகப் பெய்துள்ளது. குறிப்பாக, 20 மாவட்டங்களில் (சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, கரூர், ராணிப்பேட்டை, சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பூர்) 19 முதல் 59 சதவீதம்வரை இயல்பைவிடக் குறைவாகவும், செங்கல்பட்டு மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்களில் 60 சதவீதத்திற்குக் குறைவாகவும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.</p><p>இத்தகைய சூழ்நிலையில் குடிநீர் ஆதாரத்தைப் பலப்படுத்துவது இன்றியமையாததாக உள்ளது. எனவே, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளைத் தூர்வாருதல், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், தலைமை நீரேற்ற நிலையத்திலுள்ள நீர் உறிஞ்சு கிணறுகளை புனரமைத்தல், கூடுதல் நீர் உறிஞ்சு கிணறுகள் அமைத்தல், நீரோட்ட திசைமாற்றுக் கால்வாய் அமைத்தல், பழுதடைந்துள்ள மின்சார வடங்களை மாற்றியமைத்தல், மின்மாற்றிகளில் உள்ள பழுது நீக்கம், மின்சாரத் தடையால் நீர் உந்து குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க வால்வு மற்றும் உரிய சாதனங்களை மாற்றியமைத்தல், பழைய நீர் இறைப்பான்களைப் புதிதாக மாற்றுதல், பழுதடைந்த குழாய்களை மாற்றுதல் மற்றும் அத்தியாவசியமான இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியமான குடிநீரினைத் தங்குதடையின்றி வழங்க ஆணையிட்டுள்ளார்.</p> <p>வேளாண்மை உழவர் நலத்துறையில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் 30.07.2026 வரை 2,85,350 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஒதுக்கீடு செய்யப்பட்ட 134 கோடி ரூபாயில் இதுவரை 16.93 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறுவைத் தொகுப்புத் திட்டத்தினை 15.08.2026-க்குள் வழங்கி முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இப்பணியினை வேளாண்மைத் துறை விரைந்து முடித்திட முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். வறட்சியான சூழல் நிலவி வருவதால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் வட்டார அளவில் சேமித்து வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளைத் துரிதமாகச் செயல்படுத்திட, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்திட மற்றும் லாரிகள் மூலமாகக் குடிநீர் விநியோகம் செய்திட 330 கோடி ரூபாயும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மீனவர் நலத்துறைக்கு 10 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். </p><p>மாநிலத்தின் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் உரிய மாவட்டங்களுக்குச் சென்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமை, குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசியத் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடின்றிக் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.</p><p>இக்கூட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ.சித்திக், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் அனு ஜார்ஜ், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் முனைவர் பொ.சங்கர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் பிரசாந்த் மு.வடநெரே, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், பேரிடர் மேலாண்மை ஆணையர் அ.சிவஞானம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம் அருகே போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 9 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-drug-factory-bust-9-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-drug-factory-bust-9-arrested#comments</comments><guid isPermaLink="false">7d390ee4-0628-44a0-b578-5e616e444363</guid><pubDate>Fri, 31 Jul 2026 14:38:10 +0000</pubDate><atom:updated>2026-07-31T14:38:10.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போதைப்பொருள்,ராமநாதபுரம்,Ramanathapuram,drug,factory,தொழிற்சாலை,9 பேர் கைது,9 arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/y8ugggnk/drugs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போதைப்பொருள் தொழிற்சாலை,9 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/y8ugggnk/drugs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்ட காவல்  போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு பெரிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D">போதைப்பொருள்</a> கடத்தல் வலையமைப்பை முறியடித்தது. </p> <h2>9 பேர்  கைது</h2><p>இச்சோதனையில்  1 கிலோ 400 கிராம் மெத்தம்பெட்டமைன், அதை தயாரிக்கப் பயன்படுத்தப்படும்  1.9 கிலோ  சூடோஎபிட்ரின், 5 கிலோ சிவப்பு பாஸ்பரஸ், 4.8 கிலோ அயோடின் உள்ளிட்ட  மூலப்பொருட்கள், பிற அமிலங்கள், வினையூக்கிகள்,  தின்னர்கள்,  மெத்தம்பெட்டமைன் தயாரிப்பு ஆய்வகம், ஆய்வக உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  இக்குற்ற செயல்களில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளிகள் 9 பேர்  கைது செய்யப்பட்னர்.</p><h2>ரகசிய தகவல்</h2><p>ஜூலை 27 மாலை 5  மணியளவில்  போலீஸாருக்கு கிடைத்த தகவல் படி ராமநாதபுரம் மாவட்ட காவல் போதைப் பொருள் தடுப்பு குழு, ராமநாதபுரம் நகராட்சி வாட்டர் டேங்க் அருகே சோதனை மேற்கொண்டனர். </p><h2>8 கிராம் மெத்தம்பெட்டமைனை </h2><p>ராமநாதபுரத்தில் பணிபுரியும் மார்த்தாண்டம், செட்டிச்சார்விளையைச் சேர்ந்த ஜெபிஷ் (25) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்தனர். இவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இப் போதைப்பொருளை முஹமது உமருல் ஜமீன் (22), முஹமது அஸ்லம் (22) ஆகியோரிடமிருந்து ஐபீஷ் வாங்கியது தெரியவந்தது. இக்கும்பல் குறித்த தொடர் விசாரணையில் ராமநாதபுரம் அருகே காரிக்கூட்டம் பள்ளிவாசல் தெரு முஹமது உமருள் ஜமீன் 22, முஹமது அஸ்லம் 22 ஆகியோரது வீட்டைச் சோதனை செய்து, இருவரையும் கைது செய்து 8 கிராம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">மெத்தம்பெட்டமைனை பறிமுதல்</a> செய்தனர்.</p><h2>விசாரணை</h2><p> இருவரிடம்  நடத்திய தொடர்  விசாரணையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, காதர் பிச்சை தெரு  ஷேக் முஹமது (38) என்பவர் இப்போதைப்பொருளை விநியோகம் செய்தது தெரியவந்தது. ஷேக் முஹமது இருப்பிடத்தை  உறுதி செய்த தனிப்படையினர்  அவரிடமிருந்து 120 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர். இப் போதைப்பொருள் இளையான்குடி  ஹபிபுல் ரஹ்மான் (52) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது என ஷேக் முஹமது கூறினார். </p><h2>முக்கிய குற்றவாளி</h2><p>இதையடுத்து  , தனிப்படையினர் ஹபிபுல் ரஹ்மான், இளையான்குடி   சிக்கந்தர் பாதுஷா (53), ஜமால் மொய்தீன் (60) ஆகியோரை கைது செய்து, இவர்களிடமிருந்து முறையே 300 கிராம், 100 கிராம்,  180 கிராம் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் நடத்திய தீவிர விசாரணையில், இக்கடத்தல் கும்பலுக்கு  சென்னையில் தோல்பொருள் தொழில் செய்து வரும்  இளையான்குடி  ஷாகுல் ஹமீது (50) முக்கிய குற்றவாளி என  தெரியவந்தது. </p><h2>இரும்பு கடைசல்  பட்டறை</h2><p> போதைப்பொருள் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்து, இளையான்குடி  ஜாஹிர் உசேனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.  ஜாஹிர் உசேன் (56) உள்பட 3 பேர்  சேர்ந்து, ஜாஹிர் உசேனுக்குச் சொந்தமான இரும்பு கடைசல்  பட்டறையில் மறைத்து வைத்த மெத்தம்பெட்டமைன் தயாரிப்பு ஆய்வகத்தில் இப் போதைப்பொருளைத் தயாரித்து வந்தனர்.</p> <h2>சோதனை </h2><p> இத் தகவல்  அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படையினர் அந்த வளாகத்தில் சோதனை நடத்தி, 670 கிராம் மெத்தம்பெட்டமைன், தயாரிப்பு  மற்றும் போதைப்பொருள் பயன்படும்  1.9 கிலோசூடோஎபிட்ரின்,  5 கிலோ சிவப்பு பாஸ்பரஸ்,  4.8 கிலோ அயோடின் ஆகிய மூலப்பொருட்கள், பிற அமிலங்கள், வினையூக்கிகள், தின்னர்கள்,  ஆய்வக உபகரணங்களைக் கைப்பற்றினர்.</p> <h2>பாராட்டு</h2><p>போலீஸார்  சோதனையில் 1 கிலோ 370 கிராம்  மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்து  இக்குற்ற பின்னணி முற்றிலும்  ஆராய்நது மேலும் இருவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்த 1.4 கிலோ மெத்தம்பெட்டமைன் மதிப்பு ரூ 2 கோடி இருக்கலாம் என போலீஸார்  தரப்பில் கூறப்படுகிறது. துரிதமாக செயல்பட்டு போதைப் பொருள் கும்பலை பிடித்த தனிப்படையினரை ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விகாரத்தில் மவுனம் காக்காதீர் - கனிமொழி எம்.பி. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-remain-silent-on-the-cauvery-issue-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-remain-silent-on-the-cauvery-issue-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">6eddaa33-a6ee-415c-9a98-3ea7ae0ec5fe</guid><pubDate>Fri, 31 Jul 2026 14:36:43 +0000</pubDate><atom:updated>2026-07-31T14:36:43.658Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,திமுக,கனிமொழி,Kanimozhi,காவிரி விவகாரம்,CMVijay,CauveryWater</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wuwrb7dq/kanimozi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wuwrb7dq/kanimozi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி விகாரத்தில்  தவெக அரசு மவுனம் காக்காதீர் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.</p><p>காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை தமிழ்நாடு - கர்நாடகா இடையே 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தநிலையில் கர்நடகா அரசு காவிரி படுக்கையில் 5-வது அணையாக மேகதாதுவில் அணை கட்ட தீவிர முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. </p><p>மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகளில் பாலைவனமாகி விடும் என்றும், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்அடும் என்றும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்தநிலையில், காவிரி விகாரத்தில் மவுனம் காக்காதீர் என திமுக  கனிமொழி எம்.பி.  கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p><p>எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம்.</p><p>மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு?</p><p>டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர்ப் பிரச்சினை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது.<a href="https://www.dailythanthi.com/search?q=kanimozi"> தவெக அரசு</a> இனியும் இப்பிரச்சனையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும்.</p><p> என அதில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு; &quot;இணைய வழியில் பதிவு செய்தேன்&quot; - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-i-registered-online-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-i-registered-online-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">e0c6616a-09b3-4133-8b9a-496888704b81</guid><pubDate>Fri, 31 Jul 2026 14:12:07 +0000</pubDate><atom:updated>2026-07-31T14:12:07.360Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,மக்கள் தொகை,மக்கள் தொகௌ கணக்கெடுப்பு,Census2027</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/08a93d4g/udayai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/08a93d4g/udayai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்றைய தினம் Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1) தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளன.</p><p>இந்தக் காலகட்டத்தில், 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில், 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். அவர்கள் அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பை நடத்துவார்கள். 33 கேள்விகளைக் கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி, இந்தப் பணியானது மேற்கொள்ளப்படும். வீட்டுவசதி நிலை, அடிப்படை வசதிகள் போன்ற முக்கிய தரவுகள் சேகரிக்கப்படும்.</p><p>சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் அனைத்துமே, 'டிஜிட்டல்' முறையில் நடத்தப்பட உள்ளது.</p><p>அதன்படி, மக்கள் அனைவரும் தங்கள் சுயவிபரங்கள் அனைத்தையும், 'ஆன்லைன் வாயிலாக தாமாகவே பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.</p><p>இந்தநிலையில்,  மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு முழுவதும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள் தொகைக் கணக்கெடுப்பு</a> நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் #Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன். </p><p>மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் <a href="https://x.com/hashtag/Census2027?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Census2027</a>-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன். <br><br>மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். <a href="https://t.co/Trdro4pVPF">pic.twitter.com/Trdro4pVPF</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2083177487648137393?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 6 கொலைகள்! - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-murders-in-last-10-days-in-tamil-nadu-nayanar-nagendrans-condemnation-of-thaveka-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-murders-in-last-10-days-in-tamil-nadu-nayanar-nagendrans-condemnation-of-thaveka-government#comments</comments><guid isPermaLink="false">7c6b12f2-64a3-47e6-9be9-4f015244937f</guid><pubDate>Fri, 31 Jul 2026 13:54:03 +0000</pubDate><atom:updated>2026-07-31T13:54:03.037Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/gat97li9/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/gat97li9/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”கடந்த 10 நாட்களில் மட்டும், நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் 6 முதியவர்கள் படுகொலையாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கழித்தும் கூட, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாத முதல்-அமைச்சர் விஜய்யின் நிர்வாகத் திறனின்மை கடும் கண்டனத்திற்குரியது. </p><p>திரும்பும் இடமெல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதை கலாச்சாரம், மாமூல் வேட்டைகள் என குற்றச் செயல்கள் கண்களை மறைக்கின்றன. வீட்டில் தனியே இருக்கவும், குடும்பத்துடன் வெளியில் செல்லவும் தமிழக மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால், ஜோசப் விஜய்யின் தலைமையிலான அமைச்சரவையோ, ஆளுக்கொரு ரீல்ஸ் எடுத்து, அதை Trending BGM உடன் பொருத்தி வெளியிட்டுக் கொண்டிருப்பது மாண்பற்றது.</p><p>சீரழிந்த சட்டம் ஒழுங்கு சமன்படும், மக்களின் உயிர், உடைமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் தான், “மாற்று சக்தி” என்று தங்களைக் கூறிக் கொண்ட தவெகவினை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் செயல்திறன் இல்லை என்றால் முதல்வரும் அவரது அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகிக் கொள்ளட்டும்! தகுதியான தலைமையை தமிழகம் தேடிக் கொள்ளும்!”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல்லில் 30 காசுகள் குறைந்த முட்டை விலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-price-drops-by-30-paise-in-namakkal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-price-drops-by-30-paise-in-namakkal#comments</comments><guid isPermaLink="false">2b78f15c-8024-432b-a5f2-168455777a31</guid><pubDate>Fri, 31 Jul 2026 13:18:57 +0000</pubDate><atom:updated>2026-07-31T13:18:57.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டை விலை,egg price</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/9e8epb3v/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/9e8epb3v/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல், </p><p>நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>30 காசுகள் சரிவு</h2><p>நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை 600 காசுகளாக (ரூ.6) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 30 காசுகள் குறைக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக (ரூ.5.70) குறைந்துள்ளது. ஆடி மாதம் காரணமாக முட்டையின் நுகர்வு குறைந்துள்ளதாக விலை குறைந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.1.10 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>மும்பை - வேளாங்கன்னி இடையே சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-mumbai-and-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-mumbai-and-velankanni#comments</comments><guid isPermaLink="false">16469b2c-b818-4054-80da-b46ed42095df</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:32:27 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:32:27.101Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Special train,மும்பை,Mumbai,Velankanni,சிறப்பு ரெயில் சேவை,வேளாங்கன்னி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/u3ro3o1s/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/u3ro3o1s/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, மும்பை லோக்மான்ய திலக் - வேளாங்கன்னி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>மும்பை லோக்மான்ய திலக்கில் இருந்து ஆகஸ்டு 26 மற்றும் செப்டம்பர் 7-ந் தேதிகளில் பகல் 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 01161) 3-வது நாள் அதிகாலை 2 மணிக்கு வேளாங்கன்னியை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், வேளாங்கன்னியில் இருந்து ஆகஸ்டு 28, செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (01162) மறுநாள் மாலை 4.40 மணிக்கு மும்பை லோக்மான்ய திலக்கை சென்றடைகிறது. </p><p>24 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழகத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு ஆகஸ்டு 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்: தடையை நீட்டித்தது சென்னை ஐகோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-in-5-constituencies-of-tamil-nadu-chennai-high-court-extends-stay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-in-5-constituencies-of-tamil-nadu-chennai-high-court-extends-stay#comments</comments><guid isPermaLink="false">850cc58a-2e80-4bf1-91fa-a5162b6edae3</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:27:57 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:27:57.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,இடைத்தேர்தல்,Madras High Court,By-election</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/q6te5gia/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/q6te5gia/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி (கிழக்கு), மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிகள் காலியானதாக சட்டப் பேரவையின் செயலாளர் அறிவித்திருந்தார்.</p><p>இதற்கிடையே, நெல்லையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், "காலியான தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் என்ற நிலையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 151- ஏ-வின் கீழ் காலியானது இல்லை என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை குறிப்பிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 10-ந்தேதி  விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அதனால், இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.</p><p>அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என 2018- ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் போதும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடக் கூடாது எனவும், நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால், அது வேறுவொரு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சற்று பொறுத்திருந்துப் பார்க்கலாம்." என்று குறிப்பிட்ட நீதிபதிகள் ஜூலை 31-ம் தேதிக்குள் பதில் தர தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர், முதல்-அமைச்சர் விஜய்க்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு, கரூர், விராலி மலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் தடை விதித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர். </p><p>இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, வழக்கு நிலுவை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24ம் தேதி வரை நீட்டித்தது சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் நாளை முதல் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/population-census-fieldwork-to-start-across-tamil-nadu-from-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/population-census-fieldwork-to-start-across-tamil-nadu-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">f8fd426a-1a9b-4b14-a6e6-08aa01b2940e</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:06:50 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:06:50.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Census,தொடக்கம்,tomorrow,நாளை,மக்கள்தொகை கணக்கெடுப்பு,All over Tamil Nadu,தமிழ்நாட்டில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/iv5f2440/census.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/iv5f2440/census.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20">மக்கள்தொகைக் கணக்கெடுப்பு </a>களப் பணிகள் நாளை முதல் தொடக்கம். இது தொடர்பாக, இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ள தெரிவித்திருப்பதாவது:-</p><h2>19,000 அதிகாரிகள்</h2><p>மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டு பட்டியல், வீட்டுவசதி கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளன. இந்தக் காலகட்டத்தில், 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில், 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.  இது தொடர்பாக மத்திய அரசு அதிகார பூர்வ செய்தி</p><h2>33 கேள்விகள்</h2><p>அவர்கள் அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பை நடத்துவார்கள். 33 கேள்விகளை கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளை பயன்படுத்தி, இந்த பணியானது மேற்கொள்ளப்படும். வீட்டுவசதி நிலை, அடிப்படை வசதிகள் போன்ற முக்கிய தரவுகள் சேகரிக்கப்படும்.</p><h2>நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம்</h2><p>விரிவான, துல்லியமான கணக்கெடுப்பை உறுதி செய்வதற்காக, இந்தியாவில் முதல் முறையாக முழுவதும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. கள பணியின்போது, ​​கணக்கெடுப்பாளர்கள் தரவுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஒரு பிரத்யேக மொபைல் செயலியை பயன்படுத்துவார்கள். இது விரைவான செயலாக்கம், அதிக துல்லியம், தடையற்ற கணக்கெடுப்பு அனுபவம் ஆகியவற்றை வழங்கும்.</p> <p>1948-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டு, முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு, புள்ளிவிவர பகுப்பாய்வு, பொதுக்கொள்கை உருவாக்கம் ஆகியவற்றிற்காக மட்டுமே பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும்.</p>  <h2>சுய-கணக்கெடுப்பு வசதி</h2><p>கள செயல்பாடுகளுக்கு முன்னதாக, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுய-கணக்கெடுப்பு வசதியானது, தமிழ்நாட்டு மக்களிடமிருந்து பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 17 ஜூலை 2026 முதல் 31 ஜூலை 2026 வரை, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ இணையதளம் (se.census.gov.in) வழியாகத் தங்கள் விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.  </p> <h2>அடையாள எண்</h2><p>சுய கணக்கெடுப்பை நிறைவு செய்துள்ள அவர்கள், வீட்டு பட்டியல் தயாரிப்பு பணியை எளிதாக்குவதற்காக, வருகை தரும் கணக்கெடுப்பாளரிடம் பகிர்ந்துகொள்ள, தாங்கள் உருவாக்கிய சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை உடனடியாக கைவசம் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுய கணக்கெடுப்பு வசதியை பயன்படுத்தாத குடும்பத்தினர் உட்பட அனைத்து குடும்பங்களும், வீட்டுப்பட்டியல், வீட்டுவசதி கணக்கெடுப்புக் களப்பணிகளின் போது உள்ளடக்கப்படுவார்கள்.</p><p>இந்த பணியின் போது, களப்பணியாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கி, இந்த முக்கியமான தேசிய பணியை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-thoothukudi-tambaram-special-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-thoothukudi-tambaram-special-train-services#comments</comments><guid isPermaLink="false">cc94ea1d-525e-4508-aa5a-3e08d4ffe500</guid><pubDate>Fri, 31 Jul 2026 11:56:53 +0000</pubDate><atom:updated>2026-07-31T11:56:53.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Special trains,Thoothukudi,தூத்துக்குடி,சிறப்பு ரெயில்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/sgq1n2gq/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/sgq1n2gq/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,  </p><p>தென்மாவட்டங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் இயக்கத்தை நீட்டித்து தெற்கு ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06165/06166) இரு மார்க்கங்களிலும் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுபோல் தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06017/06018) இரு மார்க்கங்களி லும் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலத்தில் இன்று முதல் சாரல் விழா: அமைச்சர் ராஜீவ் தொடங்கி வைத்தார்...!

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kutralam-saaral-festival-begins-today-minister-rajiv-opens</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kutralam-saaral-festival-begins-today-minister-rajiv-opens#comments</comments><guid isPermaLink="false">b7af3e2d-15b6-4f8c-818e-35d0dfc42e00</guid><pubDate>Fri, 31 Jul 2026 11:49:12 +0000</pubDate><atom:updated>2026-07-31T11:49:12.681Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றாலம்,சாரல் திருவிழா,Kuttralam,Saaral Thiruvizhaa</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wivi34dk/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wivi34dk/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>தென்காசி,</p><p>குற்றாலத்தில் <a href="https://www.dailythanthi.com/">சாரல் விழா</a> இன்று தொடங்கிய நிலையில் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.</p><h2>சாரல் திருவிழா</h2><p>குற்றாலத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். </p><p>அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சாரல் திருவிழா, குற்றாலம் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான டாக்டர் ராஜீவ் சாரல் விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர். குற்றால சாரல் திருவிழா இன்று முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது.</p><h2>கலைநிகழ்ச்சிகள்</h2><p>சாரல் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று கடையம், கீழப்பாவூர் வட்டார பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து  கிராமிய கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கரகம், காவடி, மயிலாட்டம் போன்றவை நடைபெற்று வருகிறது </p><p>இதையடுத்து, நாளை 1-ந்தேதி காலை 10 மணிக்கு கொழு கொழு குழந்தைகள் போட்டி, காலை 11 மணிக்கு யோகாசனம் மற்றும் ஆணழகன் போட்டி, நண்பகல் 12 மணிக்கு குருவிகுளம் மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள், பிற்பகல் 2 மணிக்கு செல்ல நாய்கள் கண்காட்சி, மாலை 4.30 மணிக்கு பல்கிஷ் கிராமியக் கலைக்குழு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா கலைக்குழுவினர் பரதநாட்டியம், மாலை 5 மணிக்கு ஹரிணி வழங்கும் மேஜிக் ஷோ, மாலை 5.30 மணிக்கு முத்துச்சந்திரன் கலைக்குழு தோல்பாவை கூத்து நடைபெறுகிறது. </p><p>மாலை 6 மணிக்கு மொறப்பூர் பாரதி கிராமிய கலைவளர்ச்சி மையம் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, மதுரை பாலா கலைக்குழுவினர் கரகாட்டம், திருநங்கைகள் பங்குபெறும் பல்சுவை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு தென்காசி, ஐயம்மாள் கலைக்குழு வில்லிசை, சென்னை, ஏஞ்சல் கலைக்குழு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, அபிநயகீதம் குழுவினர் திரைப்பட மெல்லிசை நடைபெற உள்ளது. இதேபோன்று வருகிற 5-ந்தேதி வரையிலும் தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. </p> ]]></content:encoded></item><item><title> 5,000 புத்தகங்களை சிறைக்கும் நூலகத்திற்கும் வழங்கிய மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5000-books-donated-to-prison-and-library-by-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5000-books-donated-to-prison-and-library-by-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">3e58812e-913a-4c82-a312-6270f4e099a1</guid><pubDate>Fri, 31 Jul 2026 11:08:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T11:08:59.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Stalin,புத்தகங்கள்,books,நூலகம்,Libraries,சிறை jail,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/0foqgddv/avadaiappan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/0foqgddv/avadaiappan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்களும், பொதுமக்களும் ஏராளமான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி வருகிறார்கள். அவ்வாறு தனக்கு வந்த 5,000 புத்தகங்களை சிறைச்சாலைக்கும், பொது நூலகத்திற்கும் அவர் நன்கொடையாக அள்ளி வழங்கி அசத்தியுள்ளார்.</p> <h2>கைதிகள் படிக்க 3,000 புத்தகங்கள்</h2><p>பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள கைதிகள் படித்து மனம் திருந்தும் வகையில் 3,000<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> புத்தகங்கள்</a> வழங்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பனிடம்  நேரில் ஒப்படைத்தார். </p><h2>நூலகம்</h2><p> தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள குளக்கரை நூலகத்திற்காக 2,000 புத்தகங்கள் தி.மு.க நிர்வாகி எஸ்.ஆர்.ராஜாவிடம் வழங்கப்பட்டுள்ளன. </p> <figure><img alt="2,000 புத்தகங்கள்" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/s3758zv6/library.jpg" /></figure><h2>சால்வை வேண்டாம்... புத்தகம் தாங்க</h2><p>கடந்த 2018-ஆம் ஆண்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95">தி.மு.க</a> தலைவராக பொறுப்பேற்றது முதல், "என்னை பார்க்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்கு பதிலாக புத்தகங்களை மட்டுமே தர வேண்டும்" என்று ஸ்டாலின் அன்பு கட்டளை விடுத்திருந்தார்.</p><h2>6 லட்சம் புத்தகங்கள்</h2><p>அதன்படி இதுவரை தொண்டர்கள் வழங்கிய சுமார் 6 லட்சம் புத்தகங்கள், தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாசிப்பு பெருகினால் தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் இருக்கும்" என்று உருகிய மு.க.ஸ்டாலின், புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், படிப்பகங்கள் கடிதம் எழுதினால் உடனே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>665 காவல் துறை அதிகாரிகளுக்கு காவலர் பதக்கம்: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-awards-police-medal-to-665-police-officers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-awards-police-medal-to-665-police-officers#comments</comments><guid isPermaLink="false">5b66634e-ef92-4f79-8fb7-c9cce19687f4</guid><pubDate>Fri, 31 Jul 2026 11:01:52 +0000</pubDate><atom:updated>2026-07-31T11:01:52.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,TVKVijay,தவெக,Vijay,தமிழ்நாடு,விஜய்,police,காவல்துறை,PoliceAwards</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/25ga505n/vijayone33.jpgg.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/25ga505n/vijayone33.jpgg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய்  எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று பதக்கங்களை வழங்கினார்.</p><p>தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>அந்த வகையில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான 665 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. </p><p>இதில் ஐ.பி. எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத் தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர் திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதல்-அமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதை அவர் பார்வையிட்டு அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. போலீஸ் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வரவேற்று சிறைப்புரை நிகழ்த்தினார்.</p><p>இந்த விழாவில் போலீஸ் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏக்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p><p>காவல்துறை பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல்துறை சார்பில் முதல்வர் விஜய்க்கு வழங்கப்பட்ட நினைவு பரிசு வழங்கப்பட்டது.</p><p>சென்னை எழும்பூரில் நடைபெற்ற காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் சிறப்பாக பணியாற்றி பதக்கங்களை வென்ற காவலர்களுடன் முதல்வர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-8</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-8#comments</comments><guid isPermaLink="false">8f151463-19d9-4dc6-81d5-a9d7ec9aff51</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:51:46 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:51:46.539Z</atom:updated><atom:author><atom:name>Muthu Pandian K</atom:name><atom:uri>/api/author/2401539</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/udi0c7rt/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/udi0c7rt/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மின்சாரம் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு; </p><p>01.08.2026 சனிக்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்.</p><p>சென்னையில் 01.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p><strong>மாங்காடு:</strong> அம்பாள் நகர், பத்மாவதி நகர், அட்டிசன் நகர், மணலி ராமகிருஷ்ணா நகர், பாலாஜி அவென்யு, எஸ்எஸ் கோவில் தெரு, மேலண்டை மாட வீதி பெருமாள் கோவில் தெரு, பள்ளி தெரு, நரிவன சாலை, நியூ போலீஸ் ஸ்டேஷன் , எம்ஜிஆர் நகர், ஏஎஸ் நகர் பட்டூர், அப்பாவு நகர், வெள்ளீஸ்வரன் நகர், சரஸ்வதி நகர், பாண்டியன் நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராமகிருஷ்ணாபுரம், மாரியம்மன் கோவில் தெரு.</p><p><strong>மாடம்பாக்கம்:</strong> ராஜ்பாரிஸ் பிளாட்ஸ், மாம்பாக்கம் பிரதான சாலை, ராகேஷ் ஷர்மா நகர், விக்டோரியா பார்ம் ஹவுஸ், கோவிலஞ்சேரி, கிரஞ்ச் அண்ட் கரி, குறிஞ்சி நகர், அகரம் தென், திரௌபதி அம்மன் கோவில் தெரு, ஜி.கே. அவென்யூ.</p><p><strong>பள்ளிக்கரணை:</strong> காமகோட்டி நகர், ஐஐடி காலனி, நாகம்மாள் அவென்யூ, விஜிபி ராஜேஷ் நகர், மா.பொ.சி. நகர், என்ஐஓடி.</p><p><strong>திரிசூலம்:</strong> பிவிஆர் மால், சந்தை சாலை, ஆறுமலைச் சாவடி, ஹார்பர் ஆர்ட்டர்ஸ், முக்கண்ணி அம்மன் கோவில் தெரு, ராணி அண்ணா நகர், கென்னடி வெளி, மூவரசன்பேட்டை பிரதான சாலை.</p><p><strong>பல்லாவரம்:</strong> ஜி.இ. நிறுவனம், ராணுவக் குடியிருப்புகள், ஏர் இந்தியா, டிஆர்டிஓ, தாஜ் ஃப்ளைட் கிச்சன், பிபிசிஎல், எல் &amp; டி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பம்மல் காமராஜபுரம், திருநீர்மலை பிரதான சாலை, எல்.ஐ.சி. காலனி விரிவாக்கம், ராஜீவ் காந்தி நகர், விக்டோரியா தெரு, பெரியார் தெரு, நியூஸ்மேன் தெரு, மரியன் தெரு, அன்னை மேரி தெரு, வினாய நகர், இபி காலனி, அமர்சன் நகர், த்ரீ ரோசஸ் அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, பக்தவச்சலம் 1வது முதல் 3வது தெருக்கள் வரை.</p><p><strong>சித்தாலப்பாக்கம்:</strong> வரதராஜ பெருமாள் கோவில் தெரு, ஏடிபி அவென்யூ, வேங்கைவாசல் பிரதான சாலை, பிஎஸ்சிபிஎல், போலினேனி ஹில்சைடு அபார்ட்மென்ட்ஸ், டிஎன்எச்பி காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோவில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், பாசில் அவென்யூ, விவேகானந்தா நகர் நூக்கம்பாளையம் சாலை, விவேகானந்தா நகர், ஜெயா நகர், வள்ளுவர் நகர், காந்தி நகர், ஒட்டியம்பாக்கம், அரசங்கழனி பிரதான சாலை, கரணை பிரதான சாலை, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், ஜோன்ஸ் காசியா, நேசமணி நகர் மால்ஸ் மற்றும் கே.ஜி. அபார்ட்மென்ட், ஆர்.சி. பிளாசம் அபார்ட்மென்ட், நேசமணி நகர், ஏரிக்கரை சாலை, வரதபுரம்.</p><p><strong>வேளச்சேரி:</strong> பேபி நகர், தரமணி 100 அடி பிரதான சாலை, விஜயா நகர், பார்க் அவென்யூ, டாஸ் அவென்யூ, ராமகிரி நகர்.</p><p>பூவிருந்தவல்லி பகுதியில் 33/11 கி.வோ துணை மின் நிலையத்தில் 33 கி.வோ மற்றும் 11 கி.வோ அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளான பழைய பஸ்பார் குழாய்கள் மற்றும் சேதமடைந்த கிளாம்ப்களை மாற்றும் பணிகள் நடைப்பெற உள்ளதால் 01.08.2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p><strong>பூந்தமல்லி :</strong> சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு,குமணன்சாவடி. </p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் விவகாரம்: விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-issue-legal-action-will-be-taken-to-protect-the-interests-of-farmers-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-issue-legal-action-will-be-taken-to-protect-the-interests-of-farmers-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">ea660845-a53d-42ba-8c39-038991bc4d88</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:38:02 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:38:02.226Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,காவிரி நீர் விவகாரம்,CMVijay,அமைச்சர் நிர்மல் குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qav0xj4w/nirmalakumar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
காவிரி நீர் விவகாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qav0xj4w/nirmalakumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி நீர் விவகாரத்தில் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.</p><p>அமைச்சர் நிர்மல் குமார் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>காவிரி நீரில் மாநிலத்திற்குரிய பங்கைப் பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டை நாட உள்ளோம். சட்டரீதியாக சுப்ரீம் கோர்ட்டின் மூலம் நமக்கு தேவையான நீரை பெற வேண்டி உள்ளது.  காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை மீறி, கர்நாடகம் தொடர்ந்து நீரைத் திறந்துவிட மறுத்து வருகிறது.</p><p>காவிரி நீரில் தமிழ்நாடு தனது பங்கைப் பெறுவதை தடுப்பதையே நோக்கமாகக் கொண்ட அரசியலையே கர்நாடகம் நீண்டகாலமாக செய்து வருகிறது.மாநில விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்</p><p>முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களுடன் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறார்; மாநிலத்தின் விரிவான சட்ட உத்தி மற்றும் இறுதி முடிவுகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மேலும், காவிரி நீர் விவகாரத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=supreme%20court">சுப்ரீம் கோர்ட்டை</a> நாடுதல், தீர்ப்பாயத்தை வலியுறுத்துதல், மாநிலங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்துதல் அல்லது மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளை அரசு தற்போது பரிசீலித்து வருகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்டுக - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-convene-an-all-party-meeting-immediately-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-convene-an-all-party-meeting-immediately-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">3f6655d6-4e7e-4841-8d22-dafc8705ff61</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:01:46 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:01:46.889Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,மேகதாது விவகாரம்,Mekedatu Issue</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7w6jfu97/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7w6jfu97/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>"தமிழ்நாடு முதல்-அமைச்சர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தமிழக முதல்-அமைச்சர் தவிர்க்க வேண்டும். காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்ற தீர்ப்பை கர்நாடகா கடைபிடிக்கவில்லை. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா  முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை தீர்வு தராது. </p><p>அதிமுக ஆட்சியில் பல்வேறு தீர்ப்புகள் மூலம் தண்ணீர் பெற்றுத்தந்தோம். மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை. காவிரி விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இரு மாநில உறவுகளை சிதைக்கும் வகையில் பேசி வருகிறார். டி.கே.சிவக்குமாரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. </p><p>மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகிவிடும். உணர்வுப்பூர்வமான விவாதங்களில் விரிவான கருத்து பரிமாற்றம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இதே கருத்தை பல அரசியல் தலைவர்களும் கூறி வரும் நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்னும் வாய் திறக்கவில்லை. மவுனப்புரட்சி செய்வதில் வல்லவர். எதற்கும் பதிலளிக்கவில்லை. மேகதாது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>ஜாமீன்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல்; 3ம் தேதி விசாரணை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markkandeyan-files-bail-plea-again-hearing-on-3rd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markkandeyan-files-bail-plea-again-hearing-on-3rd#comments</comments><guid isPermaLink="false">c7605f05-f22b-426d-b9cf-5fe95e40881d</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:57:49 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:57:49.012Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,எம்.எல்.ஏ.,MLA,மார்க்கண்டேயன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/nxojtmfx/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/nxojtmfx/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/">திமுக </a>எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு 3ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.</p><h2>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு  மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார். </p><p>இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.  </p><p>இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை நேற்று விசாரித்த கோர்ட்டு அந்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.</p><h2>மீண்டும் மனு</h2><p>இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மார்க்கண்டேயன் சார்பில் அவரது வழக்கறிஞரான திமுகவின் சரவணன் அண்ணாதுரை இந்த மனுவை தாக்கல் செய்தார்.  இந்த மனு வரும் 3ம் தேதி ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் தகராறு; விவசாயி படுகொலை - கொடைக்கானல் அருகே பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-grazing-livestock-farmer-murdered-tension-near-kodaikanal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-grazing-livestock-farmer-murdered-tension-near-kodaikanal#comments</comments><guid isPermaLink="false">80afd4bc-7553-47d3-853e-01b8d776a987</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:56:51 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:56:51.539Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயி,murder,கொடைக்கானல்,Kodaikanal,படுகொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/xu77gmup/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/xu77gmup/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>கொடைக்கானல் அருகே விவசாய நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த சேர்ந்த விவசாயி ராமர் என்பவரின் கால்நடைகள், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு விவசாயி ரகுவின் விவசாய நிலத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. </p><p>இது தொடர்பாக ராமரை ஏற்கனவே ரகு கண்டித்துள்ளார். இருப்பினும் அடுத்தடுத்து பலமுறை கால்நடை மேய்ச்சல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ராமர் மற்றும் அவரது நண்பர் பிரசாந்த ஆகியோரை ரகு தனது விவசாய நிலத்திற்கு வரவழைத்து கால்நடை மேய்ச்சல் பிரச்சினை குறித்து பேசியுள்ளார். </p><p>அந்த சமயத்தில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரகு தன்னிடம் இருந்த அரிவாளால் ராமர் மற்றும் பிரசாந்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்த தாக்குதலில் ராமர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பிரசாந்த் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>இதனிடையே ரகு காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்த நிலையில், உயிரிழந்த ராமரின் உறவினர்கள் பூம்பாறையில் உள்ள முக்கிய சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவத்தில் ரகுவோடு சேர்ந்த்து மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். </p><p>இந்த கொலை சம்பவத்தில் கொலையாளி மற்றும் உயிரிழந்தவர் ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்திற்கு நடுவே சிலர் சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை சேதப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>போராட்டக்காரர்களை சமரசம் செய்ய காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோதும், காவல்துறையின் மெத்தனப்போக்கு மற்றும் முறையற்ற விசாரணை ஆகியவற்றைக் சுட்டிக்சாட்டி, உயிரிழந்த ராமரின் குடும்பத்தினரும், போராட்டக்காரர்களும் பின்வாங்க மறுத்துவிட்டனர். நிலைமை மேலும் தீவிரமடைவதை தடுக்க, பூம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்களின் உடல்நலனுடன் விளையாடும் ஆவின் நிர்வாகம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-administration-playing-with-peoples-health-nainar-nagendran-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-administration-playing-with-peoples-health-nainar-nagendran-condemns#comments</comments><guid isPermaLink="false">c4983eb3-705e-4e22-8649-b2dd1c3e545b</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:22:44 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:22:44.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,கண்டனம்,உடல்நலம்,condemns,ஆவின் நிர்வாகம்,பொதுமக்களின்,Aavin management</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/9dau154t/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/9dau154t/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> மக்களின் உடல்நலனுடன் விளையாடும் ஆவின் நிர்வாகம் - முறைகேடுகளை கண்டறிய உயர்மட்டக் குழு அமைத்திட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2> கலப்படம்</h2><p>தமிழகத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D">ஆவின் பால்</a> விநியோகம் தொடர்பாக பொதுமக்களும் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஒருபுறம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக், குளோரின் மற்றும் மருந்து நெடி வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டும் நிலையில், மறுபுறம் கடலூர் சேத்தியாதோப்பில் பாலில் மரவள்ளிக்கிழங்கு மாவு, அகர் அகர் போன்ற ரசாயனங்களை கலந்து கலப்படம் செய்வதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p> <h2>பால் கொள்முதல்</h2><p>மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய ரசாயன கலப்படங்களை அனுமதிப்பதும், முறைகேடுகளை தட்டிக்கேட்பவர்களை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதும் தற்போதைய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20">தவெக </a>அரசின் நிர்வாக சீர்கேட்டை படம்பிடித்துக்காட்டுகிறது. மேலும், முறையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் ஏதுமின்றி, தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை கொள்முதல் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p><h2>உயர்மட்ட குழு</h2><p>எனவே, பாலில் வரும் ரசாயன நெடி மற்றும் சேத்தியாதோப்பு மாவுக்கலப்பட முறைகேடு ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்தும் உடனடியாக உயர்மட்ட குழு அமைத்து அரசு விசாரணை நடத்த வேண்டும். மக்களின் உடல்நலத்தோடு விளையாடும் ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தூய்மையான ஆவின் பால் விநியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘திருச்செந்தூரில் தரிசன நேரம் குறைக்கப்படவில்லை’ - கோவில் நிர்வாகம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/darshan-time-at-tiruchendur-has-not-been-reduced-temple-administration-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/darshan-time-at-tiruchendur-has-not-been-reduced-temple-administration-clarifies#comments</comments><guid isPermaLink="false">150974ec-3f50-4fac-89d7-7e879b509b75</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:07:04 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:07:04.482Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,Tiruchendur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/z7rdvrsk/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/z7rdvrsk/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில், கடற்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். </p> <p>இந்த நிலையில், திருச்செந்தூரில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்படுவதாக ஒரு தகவல் வெளியானது. கோவிலில் தரிசன நேரம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், இன்று இது குறித்து திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவது வழக்கம். இதில் 100 ரூபாய் தரிசனம் மற்றும் இலவச பொது தரிசனம் ஆகிய வழிகளில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். </p> <p>இதனிடையே, இரவு 9 மணி வரை பக்தர்கள் தொடர்ச்சியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால், கோவில் நடையை சாத்துவதற்கு தாமதம் ஏற்பட்டு இரவு 12 மணி வரை ஆகிவிடுகிறது என்பதால், கோவில் நிர்வாகம் தரப்பில் தரிசன நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 100 ரூபாய் கட்டண தரிசனம் அதிகாலை நடை திறப்பு முதல் மாலை 6.30 மணி வரையிலும், இலவச பொது தரிசனம் அதிகாலை நடை திறப்பு முதல் மாலை 7 மணி வரையிலும் அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், கூட்ட நெரிசல் நாட்களில் வரிசையை முறைப்படுத்த மட்டுமே நேரக் கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற நாட்களில் கோவிலில் தரிசன நேரம் குறைக்கப்படவில்லை என்றும் கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை சீர்குலைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-warn-of-strict-action-if-anyone-tries-to-disrupt-the-panimaya-mata-cathedral-festival-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-warn-of-strict-action-if-anyone-tries-to-disrupt-the-panimaya-mata-cathedral-festival-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">28651a1d-f1ab-4d74-b7e5-67e9e1dda0e6</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:34:17 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:34:17.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Festival,தூத்துக்குடி,திருவிழா,Attempt,Strict action,கடும் நடவடிக்கை,Thoothukudi Panimaya Mata,பனிமய மாதா பேராலயம்,காவல்துறை எச்சரிக்கை,disruption,police warning,சீர்குலைக்க முயற்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/xhtrs1cx/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/xhtrs1cx/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பனிமய மாதா பேராலயத்தில்</a> நடைபெறும் 11 நாள் ஆண்டு திருவிழாவை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">காவல்துறை எச்சரிக்கை</a> விடுத்துள்ளது. </p><p>தூய பனிமய மாதா பேராலய ஆண்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">திருவிழா</a>வை முன்னிட்டு காவல்துறையின் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>தூய பனிமய மாதா பேராலயத்தின் 11 நாள் திருவிழா</h2><p>தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 11 நாள் ஆண்டு திருவிழா கடந்த 26.7.2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 5.8.2026 வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. </p><h2>காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>26.7.2026 (கொடியேற்ற விழா): கொடியேற்  நிகழ்ச்சியன்று பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 660 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். </p><h2>27.7.2026 முதல் 2.8.2026 வரை:</h2><p>இந்த நாட்களில் தினமும் சுமார் 150 போலீசார் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>3 நாட்கள்; பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்</h2><p>3.8.2026 முதல் 5.8.2026 வரை இறுதி 3 நாட்களில் 70,000 பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். </p><p>மேலும், தினமும் 50 ஆண் மற்றும் பெண் காவலர்கள் சீருடை அணியாமல் பொதுமக்களுடன் கலந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதி 3 நாட்களில் இந்த எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். </p><h2>6 கண்காணிப்பு கோபுரங்கள், 4 டிரோன் கேமராக்கள்</h2><p>பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், முக்கிய இடங்களில் 82 தற்காலிக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 4 டிரோன் கேமராக்கள் மூலம் வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இதனுடன், சிறப்பு காவல் குழுவும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. </p><p>கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அவசரகால உதவி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>பொதுமக்கள் ஒத்துழைப்பு</h2><p>பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது உரிமையாளர் இல்லாமல் கிடக்கும் பொருட்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p><h2>காவல்துறை எச்சரிக்கை</h2><p>திருவிழாவின் அமைதியையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்லது திருவிழாவை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு: கைது செய்யவும் தடை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/supreme-court-grants-anticipatory-bail-to-senthil-balaji-arrest-stayed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/supreme-court-grants-anticipatory-bail-to-senthil-balaji-arrest-stayed#comments</comments><guid isPermaLink="false">0b250d43-ae7b-4d27-a5eb-a9b2ceb488c3</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:26:50 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:26:50.130Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,Senthil Balaji,செந்தில் பாலாஜி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/ol6r6iwh/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/ol6r6iwh/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Breaking-News</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அவரை கைது செய்யவும் தடை விதித்துள்ளது.</p><h2>செந்தில் பாலாஜி</h2><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.</p><p>தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.</p><h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p>பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.</p><h2>முன்ஜாமீன் தள்ளுபடி</h2><p>இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். </p><h2>சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு</h2><p>முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக பழைய வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறார்கள். அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவரை கைதுசெய்யக் கூடாது.’ என வாதிட்டார். </p><p>அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘டாஸ்மாக் வழக்கில் 100 கோடி ஊழல் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் வழக்கின் விசாரணைக்கு பல்வேறு வழிகளில் தடையை ஏற்படுத்தினார். அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை உள்ளது.’ என வாதிட்டார். </p><h2>கைது செய்ய தடை</h2><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதை உறுதி செய்கிறோம். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்.? என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கூறினர். அத்துடன், செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அவரை கைது செய்யவும் தடை விதித்த நீதிபதிகள், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். </p><p>மேலும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை செந்தில் பாலாஜிக்கு வழங்கிய நீதிபதிகள், நிபந்தனைகளை மீறினால் முன் ஜாமீனை ரத்துசெய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். </p>  ]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: முதல்-அமைச்சர் விஜய்யுடன் கர்நாடகம் செல்லும் 13 பேர் கொண்ட குழு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-13-member-team-to-accompany-chief-minister-vijay-to-karnataka</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-13-member-team-to-accompany-chief-minister-vijay-to-karnataka#comments</comments><guid isPermaLink="false">d01e90a7-a705-45d4-b8a1-114299de2b70</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:13:47 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:13:47.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Karnataka,மேகதாது அணை,மேகதாது,Mekedatu,Mekedatu dam,கர்நாடகம்,CM Vijay,Chief Minister Vijay,Mekedatu Issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/e591ez6l/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/e591ez6l/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>3-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய்யுடன் கர்நாடகா செல்லும் 13 பேர் கொண்ட குழுவின் விவரம் வெளியாகியுள்ளது.</p><h2>காவிரி நீர்</h2><p>கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக மழை பொய்த்து போகும் காலங்களில் இந்த பிரச்சினை தலை தூக்கி வருகிறது. நடப்பாண்டும் கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதில் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.</p><h2>டி.கே.சிவக்குமாருடன் சந்திப்பு</h2><p>இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என முதல்-அமைச்சர் விஜய் கருதுகிறார். எனவே அவர் காவிரி நதி நீர் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச முடிவு செய்து கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) பெங்களூருவுக்கு செல்கிறார். </p><h2>விஜய் ஆலோசனை</h2><p>பெங்களூரு விதானசவுதா (சட்டசபை வளாகத்தில்) மாநாட்டு அரங்கில் டி.கே.சிவக்குமார், விஜய்யை சந்தித்து பேச உள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுபோல் கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>இதற்கிடையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச் செயலாளர், துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>13 பேர் கொண்ட குழு</h2><p>இந்த நிலையில், 3-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய்யுடன் கர்நாடகா செல்லும் 13 பேர் கொண்ட குழுவின் விவரம் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் தலைமைச் செயலாளர் சாய்குமார், நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் உள்ளிட்டோர் முதல்-அமைச்சருடன் கர்நாடகா செல்கின்றனர். 3-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு கர்நாடகா செல்ல இந்த குழு திட்டமிட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் உமாபதியும் முதல்-அமைச்சர் விஜய்யுடன் கர்நாடகா செல்ல உள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>