<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 15 Sep 2026 09:20:19 +0000</lastBuildDate><item><title>சென்னை எம்.ஜி.ஆர். பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் - நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mgr-university-convocation-nirmala-sitharaman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mgr-university-convocation-nirmala-sitharaman#comments</comments><guid isPermaLink="false">14a3b34c-a0be-45aa-970e-dc414221219b</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:18:59 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:18:59.306Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பட்டமளிப்பு விழா,ceremony,மகிழ்ச்சி,convocation,மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்,Union Minister Nirmala Sitharaman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/ny69n8wr/n.nwithniramla.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நிர்மலா சீதாராமன், நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் - நயினார் நாகேந்திரன் மகிழச்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/ny69n8wr/n.nwithniramla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்</a> கலந்து கொண்டது மகிழ்ச்சி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது:-</p> <h2>பட்டமளிப்பு விழா</h2><p>இன்றைய தினம் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36-ஆவது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">பட்டமளிப்பு விழாவில்</a>, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சிதாராமன் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் பெரும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தேன்.</p><h2>பாராட்டுகள்</h2><p>இந்நிறுவனத்தின் தலைவரும், புதிய நீதிக் கட்சியின் நிறுவன தலைவருமான ஏ.சி. சண்முகம், தொடர்ந்து பல ஆண்டுகளாக கல்வி சேவையில் ஈடுபட்டு, எளிய குடும்பங்களை சேர்ந்த பல மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கி வருவதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>புதிய பொறுப்பு</h2><p>தங்களது கல்வி பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டி, பட்டம் பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இன்று அவர்கள் பெற்றுள்ள இந்த பட்டம், தங்களது அறிவையும் திறமையையும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் அர்ப்பணிக்கும் புதிய பொறுப்பிற்கான தொடக்கமாக அமையட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமைச்சர் - பூட்டிய பூங்காவால் நீண்ட நேரம் காத்திருப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-arrives-to-garland-anna-statue-long-wait-due-to-closed-park</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-arrives-to-garland-anna-statue-long-wait-due-to-closed-park#comments</comments><guid isPermaLink="false">9829350a-e948-4c87-be11-9f2770705f5c</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:03:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:03:55.890Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணா சிலை,Anna statue,அமைச்சர் மரிய வில்சன்,minister mariya wilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/rv0ury1c/116.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/rv0ury1c/116.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கொடைக்கானல் </p><p>கொடைகானலில் அமைச்சர் மரிய வில்சன் பூட்டி கிடந்த அண்ணா பூங்காவால் நீண்ட நேரம் காத்திருந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><h2>நீண்ட நேரம் காத்திருப்பு</h2><p>பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, கொடைக்கானல் அண்ணா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் மரிய வில்சன்</a> அங்கு சென்றார். ஆனால், பூங்கா பூட்டப்பட்டிருந்ததால் அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.</p><h2>பூட்டை உடைக்க வேண்டாம்</h2><p>இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர், நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முறையாக செய்யாதது குறித்து உள்ளூர் நிர்வாகிகளை கடிந்துகொண்டார். இதற்கிடையில், ஊழியர் ஒருவர் பூட்டை உடைத்து திறக்க முயன்றார். அப்போது, “பூட்டை உடைக்க வேண்டாம். திண்டுக்கல் அல்லது மதுரையில் மாலை அணிவித்து கொள்கிறேன்” என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து, சில நிமிடங்களில் பூங்காவின் பூட்டு திறக்கப்பட்டது. பின்னர் அண்ணா சிலைக்கு அமைச்சர் மரிய வில்சன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title> “மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக நின்றவர் அண்ணா” - அண்ணாமலை புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-stood-firm-on-the-policy-of-prohibition-annamalai-pugazharam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-stood-firm-on-the-policy-of-prohibition-annamalai-pugazharam#comments</comments><guid isPermaLink="false">92a37fdd-3577-443d-85b5-7ffa33d44662</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:42:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:42:06.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,Anna,அண்ணா பிறந்தநாள் விழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/9wobu4zz/115.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/9wobu4zz/115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில்  ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88"> அண்ணாமலை </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>அண்ணா பிறந்தநாள்</h2><p>திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினம் இன்று.</p><h2>எளிமையான தலைவர்</h2><p>மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக நின்றவர். ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிராக வாழ்ந்தவர். எளிமையையும் நேர்மையையும் தனது அரசியல் வாழ்வில் கடைப்பிடித்தவர். </p><p>தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-month-old-baby-dies-after-being-electrocuted-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-month-old-baby-dies-after-being-electrocuted-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">b56f3f4b-6334-4885-86a3-d0542dee4ff0</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:28:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:28:36.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,குழந்தை பலி,மின்சாரம் தாக்கி,Child dies,electrocution</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/3kytpzs9/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குழந்தை பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/3kytpzs9/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">ஆண் குழந்தை</a>, எதிர்பாராதவிதமாக மின் மோட்டாரைத் தொட்டதில் மின்சாரம் தாக்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்த</a> சம்பவம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சோகத்தை</a> ஏற்படுத்தியது. </p><h2>11 மாத ஆண்குழந்தை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> திரேஸ்புரம் சங்குமால் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் - பாஸ்டினா தம்பதியரின் 11 மாதக் குழந்தை மகிழன். தாய் பாஸ்டினா குழந்தையை அழைத்துக்கொண்டு திரேஸ்புரம் தீர்த்தக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் முன்புறம் குழந்தை மகிழன் விளையாடிக் கொண்டிருந்தான். </p><h2>மின்சாரம் தாக்கி பலி</h2><p>அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இயங்கிக் கொண்டிருந்த நீரேற்றும் மின் மோட்டாரை குழந்தை மகிழன் தொட்டுள்ளான். இதில் பலத்த மின்சாரம் தாக்கியதில் குழந்தை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. </p><h2>சோகம்</h2><p>குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>“தமிழ் சமூகத்திற்கு புதிய அடையாளம் தந்தவர் அண்ணா” - செல்வப்பெருந்தகை புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-gave-a-new-identity-to-tamil-society-selvapperunthakai-pugazharam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-gave-a-new-identity-to-tamil-society-selvapperunthakai-pugazharam#comments</comments><guid isPermaLink="false">5b3e9f66-3a21-4392-b1f3-a8ce6c83b82d</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:26:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:26:36.252Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,செல்வப்பெருந்தகை,பிறந்தநாள்,Annadurai,Revolution,அண்ணாதுரை,Selvapperunthakai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/5m5130vp/343.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செல்வப்பெருந்தகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/5m5130vp/343.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ் சமூகத்திற்கு புதிய அடையாளம் தந்தவர் அண்ணா என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செல்வபெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழாரம்</h2><p>தமிழ் சமூகத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை அமைத்த மாபெரும் ஆளுமை, எளிய மக்களுக்கும் அதிகாரம் சாத்தியம் என்பதை நிரூபித்த தொலைநோக்குச் சிந்தனையாளர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்.</p><p>கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அரசியல் வாழ்விலும் தனிமனித வாழ்விலும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய உயரிய தாரக மந்திரமாக இதை அமைத்து தந்தார். சாதி, மத எல்லைகளைக் கடந்து, மனித நேயத்தையும் சுயமரியாதையையும் முன்னிறுத்தும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தினார்.</p><h2>'தமிழ்நாடு'</h2><p>'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற கொள்கை முழக்கம் மூலம் மாநில உரிமைகளுக்கான அடித்தளமிட்டார். நம் தாய் நிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டி, வரலாற்றுச் சாதனையின் மூலம் தமிழ் மொழியின் பெருமையையும் அடையாளத்தையும் உலகறியச் செய்தார்.</p><p>'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்ற அண்ணாவின் வாக்கிற்கேற்ப, துணிவு, இன்சொல், மற்றும் தொலைநோக்குப் பார்வையோடு சமூகத்தைச் செப்பனிட இந்நாளில் உறுதியேற்போம். தமிழ் மண்ணிற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE">பேரறிஞர் அண்ணா</a> புகழும், கொள்கைகளும் என்றும் நிலைத்து வாழ்க.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன்.. கோவிலுக்கு சென்று திரும்பிய மனைவி அதிர்ச்சி..</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-found-dead-inside-locked-house-wife-shocked-after-returning-from-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-found-dead-inside-locked-house-wife-shocked-after-returning-from-temple#comments</comments><guid isPermaLink="false">701924c6-7ca0-4376-b400-33425a549085</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:06:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:06:55.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,Thoothukudi,husband,தூத்துக்குடி,Family dispute,குடும்ப தகராறு,உயிரிழப்பு,police investigation,loss of life,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/nevrm813/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/nevrm813/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்திருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">கணவர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தது</a> குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><h2>குடும்ப பிரச்சினை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், புதியம்புத்தூர் வட்டத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் ஜெயசங்கர் (வயது 54). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை நேரம் குடிபோதையில் இருந்த ஜெயசங்கர் தனது மனைவியுடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88">குடும்ப பிரச்சினை</a> காரணமாக தகராறில் ஈடுபட்டுள்ளார். </p><h2>கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்</h2><p>பின்னர் வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டார். அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஜெயசங்கரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கோவிலுக்குச் சென்றுவிட்டனர். பின்னர் இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.</p><h2>பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன்</h2><p>நீண்ட நேரம் தட்டியும் கதவைத் திறக்காததால், சந்தேகமடைந்த அவரது மூத்த மகன் ஜெயபாரத் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஜெயசங்கர் பாயில் சலனமற்று இறந்த நிலையில் படுத்துக் கிடப்பத்தைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதியம்புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸ்லின், ஜெயசங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணாவின் கொள்கை வழியில் அர்ப்பணிப்புடன் பயணிப்போம்: ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-travel-with-dedication-along-the-path-of-annas-principles-aadhav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-travel-with-dedication-along-the-path-of-annas-principles-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">cacbcacd-309d-413c-9255-ea6a925497ee</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:05:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:05:15.347Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/wz70io8v/16.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/wz70io8v/16.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”அண்ணா! இந்த மூன்றெழுத்து தமிழ் நிலத்தில் புது சரித்திரம் படைத்தது. மாநிலக் கட்சிகள் ஆட்சியமைத்து ஜனநாயகத்தைப் பரவலாக்க முடியும் என்று இந்திய அரசியலுக்கு புதிய அத்தியாயத்தை எழுதியது. கூட்டாட்சி தத்துவமே இந்திய நாட்டின் அடையாளம் என்று அரசியலமைப்பு சிறப்பை முழுமைப்படுத்தியது. சாமானியர்களும் ஆட்சியாளர்கள் ஆகலாம் என்ற மக்களாட்சி புரட்சியை நிலைநாட்டியது.</p><p>சமத்துவத்தை முன்னிறுத்திய தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தேர்தல் அரசியலில் வென்றெடுத்தார்; சமூகநீதியை அரசின் திட்டங்களில் அமல்படுத்தினார்; 'மாநில சுயாட்சி' என்ற வலிமையான அரசியலின் மூலம் 'தமிழ்நாடு' தனித்துவத்தோடு தலைநிமிர வழிகாட்டினார்.</p> <p>'மக்களிடம் செல்', 'உன்னால் முடியும் தம்பி', 'அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாள்' ஆகிய அண்ணாவின் பிரசாரங்களே என்னைத் தேர்தல் அரசியல் சிந்தனை நோக்கிப் பயணிக்க வைத்தன. அரசியல் அறிவியல் மாணவனான எனது ஆசிரியர்களில் மூத்தவரான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவே எப்பொழுதும் எனது வழிகாட்டி.</p><p>'அண்ணாவின் கொள்கை வழியில் அர்ப்பணிப்புடன் பயணிப்போம். அண்ணாவின் மாபெரும் கனவுகளை மீட்டுருவாக்குவோம்' என்று அவரது பிறந்தநாளான இன்று உறுதியேற்போம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-4-pm-in-5-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-4-pm-in-5-districts#comments</comments><guid isPermaLink="false">fa76f9a9-afbd-4b26-abba-de4ff987729a</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:00:12 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:00:12.664Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/gan8srrd/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/gan8srrd/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-birthday-tribute-by-the-government-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-birthday-tribute-by-the-government-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">11c53c1f-979d-4ecd-9b6c-ce63b4ca76ce</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:59:03 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:59:03.974Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Government of Tamil Nadu,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xugqujro/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xugqujro/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.</p><h2>பேரறிஞர் அண்ணா</h2><p>பேரறிஞர் அண்ணா அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர். கோ.க.. அருண்ராஜ், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார். ரா ஆகியோர் இன்று (15.9.2026) சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அருகில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.</p> <h2>தமிழ்நாடு</h2><p>பேரறிஞர் அண்ணா, காஞ்சிபுரத்தில் நடராஜர் – பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு 15.09.1909 அன்று மகனாகப் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து சிறந்த மாணவராகவும், எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், பண்பட்ட அரசியல் வாதியாகவும், சீரிய தலைவராகவும் திகழ்ந்தார். தனது பேச்சாற்றல் மூலம் மக்களிடையே அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியதுடன், “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்கின்ற கோட்பாட்டை மக்களிடையே கொண்டு சென்றார். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத்தந்த மாபெரும் தலைவர் ஆவார்.</p><p>பேரறிஞர் அண்ணா அவர்கள், தனது ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்கள் முன்னேற்றம் அடையும் வகையில் சிறப்பான பல திட்டங்களை வழங்கி ”ஏழையின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்” என்ற கூற்றுக்கு ஏற்ப தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். தாய் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக, ”சென்னை மாகாணம்” என்று அழைக்கப்பட்டு வந்ததை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தார்.</p><p>1967-ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை என்ற பெயரை ‘தமிழ்நாடு அரசு – தலைமைச் செயலகம்’ என மாற்றம் செய்தார். 1968-ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியதுடன் கல்வியில் தமிழுக்கு முதலிடம் வழங்கினார்.</p> <h2>வாய்மையே வெல்லும்</h2><p>தமிழ்நாடு அரசின் முத்திரையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்மெண்ட் ஆப் மெட்ராஸ்’ என்ற ஆங்கில வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழ்நாடு அரசு’ என மாற்றினார். தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் அரசு முத்திரையில் ‘வாய்மையே வெல்லும்’ என்ற சொல்லை இடம் பெறச் செய்தார். சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் பேரறிஞர் அண்ணா மறைந்தும், மக்கள் மனதில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.</p><p>பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணாவின் கொள்கைத் தெளிவு,  உறுதியை  போற்றுவோம்: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-cherish-annas-clarity-of-principles-and-steadfastness-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-cherish-annas-clarity-of-principles-and-steadfastness-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">217e6aed-0d3a-4580-b1c8-623360925074</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:19:56 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:19:56.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,அண்ணா</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/akg7bqqz/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/akg7bqqz/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; </p><p>”தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 118ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கையும்,  சமூகநீதியையும்  ஆதரித்தவர்;  அவை தொடர்பான கொள்கைகளில் தெளிவாகவும், உறுதியாகவும்  இருந்தவர்  என்ற வகையில் அவருக்கு எனது வணக்கங்களையும், மரியாதைகளையும் செலுத்துகிறேன்.</p><p>செண்பகம் துரைராஜன் வழக்கில்  தமிழகத்தில் நடைமுறையில் இருந்த  இட ஒதுக்கீடு செல்லாது என்று  சென்னை உயர்நீதிமன்றமும்,  உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்ததைத்  தொடர்ந்து,  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முழங்கி தந்தைப் பெரியார்  போராடிய நிலையில் அறிஞர் அண்ணாவும்  திமுக சார்பில் தொடர் போராட்டங்களை நடத்தி  சமூகநீதி கோரிக்கைக்கு வலு சேர்த்தார். அப்போராட்டங்களின் பயனாகத் தான்  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.</p><p>மாநில சுயாட்சி கொள்கையில் உறுதியாக இருந்தவர்.  மதுவிலக்கை நீக்கினால் வருவாய் கொட்டும் என அதிகாரிகள் ஆசை காட்டிய போதும், மக்கள் நலனே முக்கியம் என்று கூறு மதுக்கடைகளை திறக்க மறுத்தவர். அவரது இந்த கொள்கை துணிவையும், மக்கள் நலனையும் இந்த நாளில் போற்றி வணங்குவோம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: பைக் வழுக்கி விழுந்து கார் கம்பெனி சூப்பர்வைசர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-car-company-supervisor-dies-after-falling-off-bike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-car-company-supervisor-dies-after-falling-off-bike#comments</comments><guid isPermaLink="false">90af4545-dcb8-43f4-8528-4c6311a47ff6</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:14:48 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:14:48.079Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Thoothukudi,தூத்துக்குடி,கார்,பலி,bike,பைக்,கம்பெனி,killed,car company,Supervisor,சூப்பர்வைசர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/m25to2vf/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து, பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/m25to2vf/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஏரல் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பைக்கிலிருந்து வழுக்கி விழுந்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">கார்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF">கம்பெனி</a> சூப்பர்வைசர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. </p><h2>கார் கம்பெனி சூப்பர்வைசர்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளையை சேர்ந்த ராமசாமி மகன் சொரிமுத்து (வயது 30), தூத்துக்குடியில் உள்ள தனியார் பேட்டரி கார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்செந்தூருக்கு பைக்கில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.</p><h2>பைக் வழுக்கி விழுந்து பலி</h2><p>குரும்பூர் அடுத்த சேதுக்குவாய்த்தான் புதுநகர் பகுதியில் வளைவில் திரும்பும்போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சென்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக பைக் வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரும்பூர் போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்: நிவேதா மீது தாக்குதல்? - வேல்முருகன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-demanding-justice-for-students-death-attack-on-nivetha-velmurugan-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-demanding-justice-for-students-death-attack-on-nivetha-velmurugan-condemns#comments</comments><guid isPermaLink="false">cb460eaf-7a0f-42c5-9620-8aced92861e7</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:14:02 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:14:02.779Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,police,student,Death,கண்டனம்,Velmurugan,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/tew5irue/342.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/tew5irue/342.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிவேதா மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குறியது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>காவல்துறையினர் தாக்குதல்</h2><p>மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு நீதி கேட்டு, மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்தின் போது, தோழர் நிவேதா மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>மாணவரின் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விடை கேட்டு ஜனநாயக வழியில் போராடியவர்களை, காவல்துறையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பெண் மீது காவல்துறையினர் வன்முறையை ஏவுவது, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.</p><h2>விசாரணை</h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் நிவேதா மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உடனடியாக உரிய விசாரணை நடத்தி, தவறு உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் அத்துமீறல் குறித்த குற்றச்சாட்டுகளை மூடிமறைக்காமல், வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்.</p><h2>சிபிசிஐடி</h2><p>அதேவேளையில், மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணம் தொடர்பான உண்மை முழுமையாக வெளிச்சத்திற்கு வர வேண்டும். இந்த வழக்கில் தற்போதைய விசாரணை குறித்து குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரை நேரடியாகத் தலையிட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.</p><h2>அரசின் கடமை</h2><p>மரணத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு உண்மையும் கண்டறியப்பட வேண்டும். குற்றம் நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரியவருமானால், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும். </p><p>மக்களின் கேள்விக்கு அதிகாரத்தின் அடக்குமுறை பதிலாக இருக்கக்கூடாது. உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதே அரசின் கடமை.</p><h2>வலியுறுத்தல்</h2><p>மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு முழுமையான நீதியைப் பெற்றுத்தரவும், போராட்டத்தின்போது காவல்துறையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்</a> சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஏர்வாடி அருகே பயங்கரம்! 2 பேர் வெட்டிப் படுகொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-near-airwadi-2-people-hacked-to-death-police-launch-a-net-to-track-down-the-suspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-near-airwadi-2-people-hacked-to-death-police-launch-a-net-to-track-down-the-suspects#comments</comments><guid isPermaLink="false">0227e0d4-560e-48cc-92e3-c5b94ecdbf9b</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:13:48 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:13:48.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,hospital,ramanadhapuram,2 பேர் கொலை,மர்ம நபர்களுக்கு வலைவீச்சு,ஏர்வாடி அருகே</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/lneoyry5/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இரட்டை கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/lneoyry5/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ஏர்வாடி அருகே இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>இரட்டை கொலை</h2><p>ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த கீழக்கரை காட்டுப்பகுதியில் உள்ள புதருக்குள் 2 பேரின் சடலங்கள் கிடந்துள்ளன. அவற்றை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 2 சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் கோபி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">மருத்துவமனைக்கு</a> அனுப்பி வைக்கப்பட்டன.</p> <h2>மர்ம நபர்களுக்கு வலைவீச்சு</h2><p>மேலும், இந்த கொலையை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">b994428e-34a2-448e-bc3e-d4ed495a46f8</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:13:10 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:13:10.513Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கோட்டையன்,Sengottaiyan,சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/2lk88set/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/2lk88set/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். இதனையடுத்து செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p>அதில், செங்கோட்டையனின் வேட்பு மனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்பு மனுவை ஏற்றதே தவறு எனக் கூறியிருந்தார். இதேபோல், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.</p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார். இன்று இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சாதிவாரிக் கணக்கெடுப்பு: வெறும் எண்ணிக்கைக்காக அல்ல; சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-wise-census-not-just-numbers-rights-ledger-for-social-justice-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-wise-census-not-just-numbers-rights-ledger-for-social-justice-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">108bcbe0-7508-4966-a4a8-3f27f8698719</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:00:29 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:00:29.368Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,சாதிவாரி கணக்கெடுப்பு,மாணிக்கம் தாகூர்,Caste Census,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/45lu76co/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/45lu76co/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாதிவாரிக் கணக்கெடுப்பு வெறும் எண்ணிக்கைக்காக அல்ல; சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பெருநிறுவனங்களின் வாராக்கடன் விவரங்களை வெளியிட மோடி அரசு தொடர்ந்து தயங்குவது, ஆதிக்கச் சலுகைகளை பொதுவெளியில் மறைக்கும் அவர்களின் வர்க்க மற்றும் சாதிய இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது. சுப்ரீம் கோர்ட்டு 2015-லேயே தீர்ப்பளித்தும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா போன்ற பொதுத்துறை வங்கிகள் 28 சதவிகிதம் மட்டுமே வசூலான ரூபாய் 35,716 கோடி பெருநிறுவனக் கடன்களைத் தள்ளுபடி செய்து வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் (Willful Defaulters) பெயர்களை வெளியிட மறுக்கின்றன.</p><p>அதேபோல, தொகுதி மறுவரையறை காரணங்களுக்காகக் கணக்கெடுப்பைத் தள்ளிப்போட்ட மோடி அரசு, சமூக நீதி அமைச்சகம் எஸ்.சி. / ஓ.பி.சி. பட்டியல்களைத் தரத் தயாராக இருந்தும் 'பட்டியல் இல்லை' எனப் பொய் சொல்லி, சாதிவாரி கணக்கெடுப்பை முடக்க 'திறந்தவெளிக் கேள்வி' (Open-ended question) என்ற சதியை அரங்கேற்றியுள்ளது.</p><p>பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு கிடைத்துவிடக் கூடாது என்பதும், உண்மையான ஓ.பி.சி. எண்ணிக்கை வெளிவந்துவிடக் கூடாது என்பதும் ஆர்.எஸ்.எஸ்.-ன் திட்டமிட்ட சதி! ஆர்.எஸ்.எஸ்.-ன் உள்நோக்கத்தை நிறைவேற்ற, தன்னை பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லிக்கொள்ளும் மோடி வெறும் முகமூடியாக இருந்து, அமித்ஷாவுடன் சேர்ந்து இந்த வஞ்சகத்தை அரங்கேற்றுகிறார்.</p><p>2-ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் தலையாய நோக்கமே சாதி விவரங்களைச் சேகரிப்பதுதான்; அது சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான விவகாரம் என்பது அனைவரும் அறிந்தது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தெளிவான பட்டியல் இருக்கும் போது, ஓ.பி.சி. சாதி விவரங்களை மட்டும் முன்பே வரையறுக்கப்பட்ட பட்டியல் இன்றி open-ended முறையில் சேகரிப்பது ஏன்?</p><p>ஒன்றிய அரசின் பட்டியலிலேயே தமிழ்நாட்டில் மட்டும் 220-க்கும் மேற்பட்ட ஓ.பி.சி. சாதிகள் இருக்கும்போது, துல்லியமான பட்டியலைத் தராமல் பொதுவான கேள்வியாக வைப்பது மோடி அரசின் திட்டமிட்ட நாடகம்! 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடும் ஒரு நடைமுறையில், முன்வரையறுக்கப்பட்ட பட்டியல் எதுவும் இல்லாமல் தவறுகளின் அளவைக் கட்டுப்படுத்திவிடலாம் என நினைப்பது வடிகட்டிய பகல்கனவு!</p><p>ஒரு சிறிய எழுத்துப் பிழை கூட ஒரு சமுதாயத்தை வேறொரு சமூகப் பிரிவாக மாற்றிவிடும் பேராபத்து இதில் உள்ளது. தெளிவான Drop-down பட்டியலைத் தவிர்த்துவிட்டு இப்படி ஒரு குளறுபடியான முறையைக் கையாள்வது மொத்தக் கணக்கெடுப்பையும் படுதோல்வியிலேயே முடிக்கும்.</p><p>இது வெறும் நிர்வாகக் குளறுபடி அல்ல உண்மையான ஓ.பி.சி. எண்ணிக்கையைத் திட்டமிட்டே குறைத்துக்காட்டி, எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டையே அடியோடு சிதைத்துவிடும் பேராபத்து! பிற்படுத்தப்பட்ட மக்களை அதிகாரமற்றவர்களாகவே முடக்கி வைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.-ன் நூற்றாண்டு கால சித்தாந்தம். ஆர்.எஸ்.எஸ்.-ன் சமூக நீதி எதிர்ப்பு அஜெண்டாவைச் செயல்படுத்தும் முகமூடிகளாகத்தான் மோடியும் அமித்ஷாவும் இந்த துரோகத்தை அரங்கேற்றுகிறார்கள்.</p><p>ஒரே சமூகப் பெயர் பலவித எழுத்துப் பிழைகளுடன் சிதறிப்போய், துல்லியமற்ற தரவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 69 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமையையே கேள்விக்குறியாக்கும் மோடி அரசின் ஆபத்தான சூழ்ச்சியை அம்பலப்படுத்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவு மாநிலத் தலைவர் டி.ஏ. நவீன் ஒருங்கிணைப்பில் மாநிலம் தழுவிய களப் பிரசாரக் கலந்துரையாடல் நிகழ்வுகளை முன்னெடுக்கிறது !</p><p>செப்டம்பர் 17 அன்று சென்னையில் எனது தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் முன்னிலையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் தொடங்கி வைக்கப்படும் இப்பயணம், தமிழகத்தின் முக்கிய 10 நகரங்களில் விரிவான மக்கள் சந்திப்பு மற்றும் நேரடிச் செயல்விளக்கக் கலந்துரையாடல்களாக நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பாளர்கள் முன்னிலையில், 'Open-ended' முறையினால் உருவாகும் குளறுபடிகளையும், காங்கிரஸ் முன்வைக்கும் சரிபார்க்கப்பட்ட Dropdown முறை மூலமே நம்பகமான சமூகநீதித் தரவுகளைப் பெற முடியும் என்பதையும் நேரடிச் செயல்விளக்கம் மூலம் மெய்ப்பித்துக் காட்டுவோம்.</p><p>கலந்துரையாடல் நிகழ்வு அட்டவணை:</p><p>24.09.2026, தூத்துக்குடி - சி. ராபர்ட் புரூஸ், எம்.பி.</p><p>27.09.2026, கள்ளக்குறிச்சி - கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்</p><p>30.09.2026, சிவகாசி - எஸ். பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி.</p><p>11.10.2026, திண்டுக்கல் - இ.எம். சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் மத்திய அமைச்சர்</p><p>14.10.2026, ராணிப்பேட்டை - ஏ. செல்லக்குமார், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்</p><p>18.10.2026, தஞ்சாவூர் - வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், எம்.பி.</p><p>22.10.2026, விழுப்புரம் - எம்.கே. விஷ்ணு பிரசாத், எம்.பி.</p><p>25.10.2026, திருப்பூர் - கே.வீ. தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்</p><p>28.10.2026, புதுக்கோட்டை - சு. திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்</p><p>01.11.2026, ஈரோடு - விஜய் வசந்த், எம்.பி.</p><p>நமது தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து முழங்குவது போல, சாதிவாரிக் கணக்கெடுப்பு பெயரளவில் கண்துடைப்பாக நடத்தப்படக் கூடாது; அது நேர்மையாகவும் முறையாகவும் நடத்தப்பட வேண்டும்! சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யப் பார்க்கும் மோடி அரசின் வஞ்சக சதியை ஒருபோதும் ஏற்க முடியாது. பின்தங்கிய மக்களின் உரிமைகளை முடக்கும் நோக்கிலான குறைபாடுள்ள வினாத்தாளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஏமாற்று வேலைகளை நிறுத்திவிட்டு, அங்கீகரிக்கப்பட்ட சாதிப் பட்டியலுடன் அரசியல் கட்சிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆலோசனைகளைப் பெற்று சரியான வினாத்தாளை ஒன்றிய மோடி அரசு உடனே உருவாக்க வேண்டும்! சாதிவாரிக் கணக்கெடுப்பு - வெறும் எண்ணிக்கைக்காக அல்ல; சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மின்வெட்டு இருப்பது உண்மைதான்: தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-true-that-there-are-power-cuts-the-tvk-government-needs-to-pay-closer-attention-to-this-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-true-that-there-are-power-cuts-the-tvk-government-needs-to-pay-closer-attention-to-this-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">5110d03d-f7d9-48f1-ac06-af65579ae3ca</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:47:20 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:47:20.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,மின்வெட்டு,மின்வெட்டு பிரச்சினை,power cut - மின்தடை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/jo1i2k2h/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/jo1i2k2h/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>”தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான்.  மின்வெட்டு பிரச்சனையை சீர்செய்ய தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் கூறுவதை கேட்டு தான் அமைச்சர்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் உண்மை தகவலை கூற வேண்டும்.</p><p> திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு. விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்கின்றனர். பதவிக்காக விசிக கூட்டணி மாறியதாக திமுக ஆதரவாளர்கள் பேசுகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியாக வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார்</p>]]></content:encoded></item><item><title>“தமிழக அரசியல் வரலாற்றில் தனியிடம் பதித்தவர் அண்ணா” - டிடிவி தினகரன் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-has-carved-a-unique-place-in-the-history-of-tamil-nadu-politics-ttv-dhinakaran-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-has-carved-a-unique-place-in-the-history-of-tamil-nadu-politics-ttv-dhinakaran-praises#comments</comments><guid isPermaLink="false">5d9ea656-0b73-4fe8-9334-6d2827e67d53</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:32:59 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:32:59.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,political,அண்ணா,புகழாரம்,Anna birthday</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/utzq56oj/341.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/utzq56oj/341.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>புகழாரம்</h2><p>தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்த தமிழ் தாயின் தலைமகன், ஏழை எளிய மக்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த மாபெரும் தலைவர், அறிவால் அரசியலையும் அன்பால் மக்களின் இதயங்களையும் வென்று, தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனியிடத்தைப் பதித்த அரசியல் ஆசான், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE">பேரறிஞர் அண்ணா</a> பிறந்த நாள் இன்று.</p><h2>பேரறிஞர் அண்ணா</h2><p>"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்ற கொள்கையை வாழ்வின் நெறியாக ஏற்று, பேச்சில் நயம், எழுத்தில் வலிமை, செயல்பாட்டில் நேர்மை ஆகியவற்றைத் தனது அடையாளமாகக் கொண்டு, தமிழக அரசியலுக்கு புதிய பாதையை அமைத்து மக்கள் ஆட்சியை நிலைநாட்டிய மகத்துவமிக்க தலைவர் பேரறிஞர் அண்ணா பிறந்த இந்நாளில், மக்கள் நலனுக்காக அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி நினைவுகூர்ந்து கொண்டாடுவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் மந்தம்: கரும்பு கட்டுகளை சாலையோரம் வீசிச்சென்ற வியாபாரிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/business-slows-down-at-koyambedu-market-traders-throw-sugarcane-bundles-on-the-roadside</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/business-slows-down-at-koyambedu-market-traders-throw-sugarcane-bundles-on-the-roadside#comments</comments><guid isPermaLink="false">9141bc1c-50af-4be4-add4-b45cf9f707c8</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:29:38 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:29:38.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Business,கோயம்பேடு மார்க்கெட்,Koyambedu market,sugarcane,கரும்பு,மந்தம்,வியாபாரம்,வியாபாரிகள் கவலை,traders worried,Slowdown</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/l4l7ljbs/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்த கரும்புகள் விற்பனை ஆகாததால் கரும்புக்கட்டுகளை விவசாயிகள் சாலையோரம் வீசி சென்றதால், அதனை அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்றனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/l4l7ljbs/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">கோயம்பேடு மார்க்கெட்</a>டில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கரும்பு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">வியாபாரம்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">மந்தமாக</a> நடந்ததால் கரும்பு கட்டுகளை சாலையோரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வியாபாரிகள்</a> வீசி சென்றனர். அவற்றை பொதுமக்கள் கட்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர். </p><h2>கரும்பு விற்பனை</h2><p>விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள், மலர்கள் மற்றும் பழங்கள் விற்பனை களைகட்டியது. அவற்றை பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் அதிகளவில் வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் கரும்பு முக்கியப்பங்கு வகிப்பதால், கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து டன் கணக்கில் கரும்புகள் லாரிகள் மூலம் கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் கரும்புகளை வாங்குவதற்கு சில்லறை வியாபாரிகளோ, பொதுமக்களோ எதிர்பார்த்த அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை. </p><h2>கரும்பு கட்டுகளை சாலையோரம் வீசிச்சென்ற வியாபாரிகள்</h2><p>இதனால் கரும்பு விற்பனை போதிய அளவில் நடைபெறவில்லை. இதனால் 30 லாரிகளில் கொண்டுவரப்பட்ட கரும்பு கட்டுகள் அனைத்தும் வீணாயின. கரும்பு வெட்டும் கூலி, லாரி வாடகை கொடுத்து கொண்டுவரப்பட்ட கரும்புகள், விற்பனை ஆகாததாலும், வாங்கிய முதலை கூட எடுக்க முடியாததாலும் விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை அடைந்தனர். கரும்புகளை மீண்டும் சொந்த ஊருக்கு ஏற்றிச் செல்ல போக்குவரத்து செலவு கூடுதல் சுமையாகும் என்பதால், வேறு வழியின்றி கோயம்பேடு பகுதியில் சாலையோரங்களிலேயே கரும்பு கட்டுகளை வீசி விட்டு வியாபாரிகள் கவலையுடன் வீடு திரும்பினர். சாலையோரம் வீசப்பட்ட கரும்பு கட்டுகளை அப்பகுதி மக்கள் கட்டுகட்டாக வீடுகளுக்கு தூக்கிச் சென்றனர். மாடுகளுக்கும் அந்த கரும்பு இரையானது. </p><h2>வியாபாரிகள் வேதனை</h2><p>இதுகுறித்து, கரும்பு வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:</p><p>கோயம்பேடு மார்க்கெட்டில் இந்த ஆண்டு விற்பனைக்காக ஒதுக்கப்பட்ட புதிய இடத்தில், உள்ளே வருவதற்கு மட்டுமே வழி உள்ளது. வெளியே செல்வதற்கு வழி இல்லை. இதனால் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புதிய இடத்துக்குள் வந்து கரும்புகளை வாங்க அதிக அளவில் வரவில்லை. இதனால் போட்ட முதலீட்டை கூட எடுக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. லாரி வாடகை கொடுக்கும் அளவுக்கு கூட விற்பனை நடைபெறவில்லை. 3 நாள் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதும் விற்பனை பாதிப்புக்கு காரணமாக அமைந்தது. எனவே, கரும்பு வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்புகளை விற்பனை செய்ய தனி மார்க்கெட் அல்லது முறையான இடத்தை ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">வேதனை</a>யுடன் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-by-election-dmk-candidate-suganya-files-nomination</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-by-election-dmk-candidate-suganya-files-nomination#comments</comments><guid isPermaLink="false">5ad4d7ad-c48f-4c4c-8dcf-7f856982acae</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:28:39 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:28:39.614Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,இடைத்தேர்தல்,By election,வேட்புமனு தாக்கல்,தாராபுரம்,Nomination,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/rzbdk0d8/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/rzbdk0d8/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தாராபுரம்,</p><p>தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தவெக சார்பில் சத்திய பாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதனால் 5 முனைப் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.</p><p>இந்த நிலையில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யா இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் பெலிக்ஸ் ராஜாவிடம் சுகன்யா தனது வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது திமுக துணை பொதுச்செயலாளர் மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p><p>அதனை தொடர்ந்து மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல் செய்தார். மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு தொண்டர்கள் புடைசூழ வந்து வேட்புமனு தாக்கல் செய்தார் பரந்தாமன். அப்போது முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineers-role-in-building-modern-india-chief-minister-vijay-greeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineers-role-in-building-modern-india-chief-minister-vijay-greeting#comments</comments><guid isPermaLink="false">21f25438-9264-4398-8ea0-2dd43a8e1565</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:27:23 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:27:23.460Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தேசிய பொறியாளர் தினம்,National Engineers&apos; Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/lmamlmwc/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/lmamlmwc/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியப் பொறியியலின் தந்தை என்று அழைக்கப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய பொறியாளர் தின'மாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தேசிய பொறியாளர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!</p><p>அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் துணையுடன் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது. சாலைகள், பாலங்கள், அணைகள், விண்வெளி ஆய்வுகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் என நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் நமது பொறியாளர்களின் திறனும், உழைப்பும் மிளிர்கின்றன.</p><p>பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! <br><br>அறிவியல், தொழில்நுட்பம்…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2099735682273210573?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>குன்னூர்: குடியிருப்பு பகுதியில் கரடி உலா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coonoor-bear-wanders-into-residential-area</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coonoor-bear-wanders-into-residential-area#comments</comments><guid isPermaLink="false">1e379b2e-73eb-4546-bc48-e038b6a4b76f</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:13:04 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:13:04.386Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கரடி,bear,குன்னூர்,Coonoor</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/ld0yweum/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/ld0yweum/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஆறுகள், அணைகள் போன்ற நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் கரடிகள் உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. </p> <p>இந்தநிலையில் குன்னூர் பகுதியில் சந்திரா காலனி, கரிமரா ஹட்டி பகுதிகளில் உள்ள சாலையில் கரடி உலா வந்தது. இதனை சிலர் செல் போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். பகல். இரவில் கரடி நடமாடி வருவதால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.</p><p>இந்த பகுதிகளில் முறையாக தூய்மை பணி மேற்கொள்ளாததால், குப்பை தொட்டியில் உணவு கழிவுகள், அழுகிய பழங்களை கரடி உட்கொண்டு வருகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை வனவிலங்குகள் உண்பதால், அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் அடித்து கொலை; 6 பேரிடம் தீவிர விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-government-bus-driver-beaten-to-death-during-vinayagar-chaturthi-procession-6-people-under-intensive-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-government-bus-driver-beaten-to-death-during-vinayagar-chaturthi-procession-6-people-under-intensive-investigation#comments</comments><guid isPermaLink="false">6ccb46cd-d5cc-473f-89ce-16832d7ca186</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:56:52 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:56:52.020Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,murder,கொலை,driver,ஓட்டுநர்,அரசு பேருந்து,govt bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/h3y4yqaz/2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பேருந்து ஓட்டுநர் அடித்து கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/h3y4yqaz/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசு ஊழியர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ராஜ்பந்தமதி விநாயகர் ஆலயத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதையடுத்து மாலை விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலம் சென்றபோது இருதரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அது கைகலப்பாக மாறியது.</p><h2>பேருந்து ஓட்டுநர் கொலை</h2><p>இதில், அரசு போக்குவரத்துக்கழக <a href="https://www.dailythanthi.com/topic/பேருந்து-ஓட்டுநர்">பேருந்து ஓட்டுநர்</a> சீனிவாசன் என்பவர் சரமாரியாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார்<a href="https://www.dailythanthi.com/topic/மருத்துவமனை"> மருத்துவமனைக்கு</a> அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>6 பேரிடம் தீவிர விசாரணை </h2><p>இது குறித்து தகவலறிந்த ராமாபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“தமிழ்நாட்டில் அதிக சிலைகள் கொண்ட தலைவர் அண்ணா” - கவிஞர் வைரமுத்து புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-is-the-leader-with-the-most-statues-in-tamil-nadu-poet-vairamuthu-praises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-is-the-leader-with-the-most-statues-in-tamil-nadu-poet-vairamuthu-praises#comments</comments><guid isPermaLink="false">4bf8d566-d45a-4119-916f-7b03ab3af912</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:41:21 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:41:21.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கவிஞர் வைரமுத்து,அண்ணா,புகழாரம்,Poet Vairamuthu,Anna birthday</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/n3clylgm/340.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கவிஞர் வைரமுத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/n3clylgm/340.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிவித்திருப்பதாவது:-</p><h2>புகழாரம்</h2><p>அண்ணா! </p><p>காலவெளியில்</p><p>உன் இருப்பு சிறிதுதான்</p> <p>நீ வாழ்ந்தது</p><p>59.4 ஆண்டுகள்</p> <p>உன் பொதுவாழ்வு</p><p>35 ஆண்டுகள்</p> <p>கட்டியெழுப்பிய கட்சியோடு </p><p>19.5 ஆண்டுகள்</p> <p>ஆட்சிப் பொறுப்பில்</p><p>வெறும் 22 மாதங்கள்</p><p>ஆனால்,</p><p>நீ செய்த சாதனை புரிய</p><p>300 ஆண்டு</p><p>வாழ்ந்தவனாலும் முடியாது</p> <p>உன் பெயர் சொல்லாமல்</p><p>அரசாள இயலாது</p><p>உன் கொள்கை இல்லாமல்</p><p>அரசியல் கிடையாது</p> <p>நீ</p><p>சாமானியர்க்காகவே வாழ்ந்தவன்;</p><p>சாமானியனாகவே மரித்தவன்</p> <p>பூமியின் மீது </p><p>அதிகச் சிலைகள் புத்தருக்கு;</p><p>இந்தியாவில் அம்பேத்கருக்கு;</p><p>தமிழ்நாட்டில் உனக்கு</p> <p>பொன்னடிகளுக்குப் </p><p>புகழ் வணக்கம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர் அண்ணா: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-who-created-new-chapter-in-tamil-nadu-political-history-says-cm-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anna-who-created-new-chapter-in-tamil-nadu-political-history-says-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">9612ace3-eba1-4804-9a41-5155daac360a</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:19:40 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:19:40.061Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Anna,பேரறிஞர் அண்ணா,Anna birthday,அண்ணா பிறந்தநாள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/l1nysqie/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/l1nysqie/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா என்று முதல்-அமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்</h2><p>தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.</p><h2>முத்திரை பதித்தவர்</h2><p>எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி, தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா.</p><h2>உறுதியேற்போம்</h2><p>“கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு”, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் இரு கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து களம் காண்பது யாருக்கு லாபம்?, யாருக்கு நஷ்டம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-stands-to-gain-and-who-stands-to-lose-from-the-two-communist-parties-joining-forces-to-contest-the-by-election</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-stands-to-gain-and-who-stands-to-lose-from-the-two-communist-parties-joining-forces-to-contest-the-by-election#comments</comments><guid isPermaLink="false">db766e12-ce82-4804-b049-f9342e89f2f9</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:18:56 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:18:56.617Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,இடைத்தேர்தல்,By election,Marxist Communist Party,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,Communist Parties,கம்யூனிஸ்டு கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/wrlz7qei/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/wrlz7qei/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>2 தொகுதி இடைத்தேர்தலில் இரு கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து களம் காண்பதால், 5 முனைப்போட்டி உருவாகியுள்ள நிலையில், யாருக்கு லாபம்?, யாருக்கு நஷ்டம்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. </p><h2>பொதுத் தேர்தலில் 4 முனைப்போட்டி</h2><p>தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை பொதுத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. தேர்தல் களத்தில் புதிதாக இறங்கிய த.வெ.க. வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இடைத்தேர்தலில் ஆதரவு இல்லை</h2><p>2 தொகுதி இடைத்தேர்தலிலும், பொதுத் தேர்தல் போலவே 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவால், தற்போது 5 முனைப்போட்டி நிலவுகிறது. பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த இரு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. த.வெ.க.வுக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை தேவைப்பட்டபோது, அக்கட்சிக்கு இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆதரவு அளித்தன. ஆனால், இடைத்தேர்தலில் ஆதரவு கிடையாது என்று அறிவித்ததுடன், இரு கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டன.</p><h2>யாருக்கு லாபம்?, யாருக்கு நஷ்டம்?</h2><p>அதன்படி, மதுராந்தகம் (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தாராபுரம் (தனி) தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் வேட்பாளர்களை களம் இறக்குகின்றன. இவ்வாறு இடைத்தேர்தலில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து களம் காண்பது யாருக்கு லாபம்?, யாருக்கு நஷ்டம்? என்பதைப் பற்றி தொடர்ந்து காண்போம்.</p><h2>வாக்கு சதவீதம் எவ்வளவு?</h2><p>தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு 34.92 சதவீத வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு 24.19 சதவீத வாக்குகளும், அ.தி.மு.க.வுக்கு 21.21 சதவீத வாக்குகளும் கிடைத்தன. தேசிய கட்சிகளான காங்கிரசுக்கு 3.37 சதவீதமும், பா.ஜ.க.வுக்கு 2.97 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன. தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சிக்கு 4 சதவீத வாக்குகள் கிடைத்தன.</p><h2>இடைத்தேர்தலில் 39.67 சதவீத வாக்குகள்</h2><p>பொதுத் தேர்தலில் தனித்து களம்கண்ட த.வெ.க.வுடன் (34.92 சதவீதம்) இந்த முறை (இடைத்தேர்தல்) காங்கிரஸ் (3.37), ம.தி.மு.க. (?), விடுதலை சிறுத்தைகள் (1.09), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (0.29) ஆகிய கட்சிகள் கைகோர்த்துள்ளன.</p><p>அதனால், த.வெ.க. தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநல வெற்றிக் கூட்டணிக்கு, இடைத்தேர்தலில் 39.67 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் ம.தி.மு.க., தி.மு.க.வின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டதால், அக்கட்சிக்கு என தனியாக வாக்கு சதவீதம் பதிவாகவில்லை.</p><h2>தி.மு.க. கூட்டணிக்கு எவ்வளவு வாக்கு?</h2><p>இதேபோல், எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணியில், தி.மு.க. (24.19), தே.மு.தி.க. (1.20) என்ற இரு கட்சிகளே பிரதானமாக இருப்பதால், அந்தக் கூட்டணிக்கு 25.39 சதவீத வாக்குகள் கிடைக்கும் நிலை உள்ளது. மற்றொரு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. (21.21), பா.ஜ.க. (2.97), பா.ம.க. (2.17), அ.ம.மு.க. (0.87) ஆகிய கட்சிகள் இருப்பதால், அந்தக் கூட்டணிக்கு 27.22 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>இரு கம்யூனிஸ்டு கட்சிகளால் தி.மு.க.வுக்கு பாதிப்பு</h2><p>இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து தலா ஒரு தொகுதியில் நிற்பதால், அந்தக் கூட்டணிக்கு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 0.60, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 0.66) 1.26 சதவீத வாக்குகளே கிடைக்கும் நிலை உள்ளது. இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து தனியாக களம் காண்பது, தி.மு.க.வுக்கே பாதகமாக அமைந்திருப்பதாக தெரிகிறது. அந்த வகையில், அ.தி.மு.க.வுக்கு லாபம் தான். ஆனால், த.வெ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே கூறப்படுகிறது.</p><h2>அ.தி.மு.க.வுக்கு 2-வது இடம்</h2><p>இந்த வாக்கு சதவீதங்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது, இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க. 2-வது இடத்தை பிடிப்பதுடன் தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி 4-வது இடத்தையும், இரு கம்யூனிஸ்டு கூட்டணி 5-வது இடத்தையும் பிடிக்கும் நிலை உள்ளது.</p><p>இது, ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டதுதான். த.வெ.க. அரசின் 4 மாத ஆட்சி மக்களிடம் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பொறுத்து, வாக்கு சதவீதத்தில் சற்று மாற்றங்கள் ஏற்படலாம்.</p>]]></content:encoded></item><item><title>குளிர்சாதன பெட்டி பொருத்தும்போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-electrocuted-while-installing-refrigerator</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-electrocuted-while-installing-refrigerator#comments</comments><guid isPermaLink="false">27fcbce3-49b6-4624-84b8-99de843816e5</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:11:17 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:11:17.388Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Youth dies,மின்சாரம் தாக்கி,வாலிபர் உயிரிழப்பு,குளிர்சாதன பெட்டி,electric shock,refrigerator</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/9cqa79ku/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இறந்த உடலை வைப்பதற்கான குளிர்சாதன பெட்டி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/9cqa79ku/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே துக்க வீட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">குளிர்சாதன பெட்டி</a> பொருத்தும்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">மின்சாரம் தாக்கி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">வாலிபர் உயிரிழந்தார்</a>. </p><h2>மூதாட்டி உயிரிழப்பு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள செம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துசசி (வயது 25). அதே ஊரைச் சேர்ந்த மாரியம்மாள்(70) என்பவர் காலமானதைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக முத்து சசி அங்கே சென்றுள்ளார். </p><h2>குளிர்சாதன பெட்டிக்கு  மின் இணைப்பு; மின்சாரம் தாக்கியது</h2><p>அங்கே பிரேதத்தை வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட குளிர்சாதன பெட்டிக்கு மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக முத்துசசி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.</p><h2>வாலிபர் பலி</h2><p>அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், முத்துசசி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வாலிபரின் உடல் உடற்கூறாய்வுக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-condition-is-stable-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-condition-is-stable-hospital#comments</comments><guid isPermaLink="false">075b50ad-5122-40e6-bee3-7cc71ff76e67</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:07:13 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:07:13.556Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>hospital,மருத்துவமனை,வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.,V.S. Babu MLA</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/h92qv613/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/h92qv613/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.</p><p>இந்த நிலையில், வி.எஸ்.பாபுவுக்கு கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, உடனடியாக அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து அவசர சிகிச்சைகளை தொடங்கினர்.</p> <p>சுவாசக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ மேலாண்மை மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தீவிர மருத்துவ மேற்பார்வையின் கீழ் வி.எஸ்.பாபு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.</p><p>இந்த நிலையில் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நாளை மறுநாள் கும்பாபிஷேகம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 5 டன் மலர்கள் வருகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consecration-ceremony-the-day-after-tomorrow-5-tonnes-of-flowers-arrive-at-madurai-meenakshi-amman-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consecration-ceremony-the-day-after-tomorrow-5-tonnes-of-flowers-arrive-at-madurai-meenakshi-amman-temple#comments</comments><guid isPermaLink="false">fda69474-7f5e-46b3-9705-b590cb818e74</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:57:29 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:57:29.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Meenakshi Amman Temple,Madurai Meenakshi Amman Temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8akrun8t/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8akrun8t/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><h2>மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்</h2><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 17-ந்தேதி விமரிசையாக நடக்கிறது. </p><p>கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் 11-ந்தேதி தொடங்கின. அதன்படி முதல் கால யாகசாலை பூஜைகள் கோவில் வடக்காடி வீதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் தொடங்கி நடந்து வருகிறது. அங்கு ஹோமம் வளர்க்கப்பட்டு 400 சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று வருகின்றன.</p><h2>5 டன் மலர்கள்</h2><p>இதற்கிடையே கும்பாபிஷேக விழாவுக்காக கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள், மூலவர் சன்னதிகள், கொடிமரங்கள் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளன. அதற்காக வெளிநாடு, வெளி மாநிலங்கள், உள்ளூரில் இருந்து தற்போது 5 டன் மலர்கள் கோவிலுக்கு வந்தன. அதில் சம்பங்கி, சிவப்பு, வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற அரளிப்பூக்கள், இருவாச்சி பூக்கள், மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு நிற சாமந்தி பூக்கள், பல வண்ணங்களில் உள்ள ஆந்தூரியம் என பல வண்ண மலர்கள் வந்துள்ளன.</p><h2>மாலை கட்டும் பணி</h2><p>இவை நீண்ட நாள், நீண்ட நேரம் வாடாமல் நறுமணம் வீசக் கூடியது என கூறப்படுகிறது. இந்த பூக்கள் தற்போது புதுமண்டபத்தில் இறக்கி வைத்து அதனை மாலையாகக் கட்டும் பணியில் 50 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் கட்டமாக 4 ராஜ கோபுரங்களுக்கு சுமார் 175 அடி உயரத்தில் மாலைகள் கட்டும் பணி தொடங்கி உள்ளதாகவும், இறுதி கட்டத்தில் மூலவர் மற்றும் கொடிமரம் பகுதியில் பூக்களால் அலங்காரம் செய்யும் வேலைகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணி கள் மும்முரமாக நடந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரைக்கு 50 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/announcement-of-50-special-buses-to-madurai-for-the-consecration-of-meenakshi-amman-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/announcement-of-50-special-buses-to-madurai-for-the-consecration-of-meenakshi-amman-temple#comments</comments><guid isPermaLink="false">544db609-5980-4290-9639-b6795149f57f</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:40:38 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:40:38.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கும்பாபிஷேகம்,சென்னை,Meenakshi Amman Temple,Announcement,Special Bus,சிறப்பு பஸ்,மதுரை மீனாட்சியம்மன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/hyb5exoy/339.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/hyb5exoy/339.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 17-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. </p><h2>சிறப்பு பஸ்கள்</h2><p>அதன்படி, நாளை (புதன்கிழமை) சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் மதுரைக்கு இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து 30, திருப்பூர் 30, ராமநாதபுரம் 30. அருப்புக்கோட்டை25, சிவகாசி 30, ராஜபாளையம் 30, விருதுநகர் 10, தேனி 30, திண்டுக்கல் 20 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. </p><p>மேலும், மதுரை மாநகரப் பகுதியில், திருமங்கலம், மேலூர், திருப்புவனம், வாடிப்பட்டி, நத்தம், பூவந்தி மற்றும் உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தலா 20 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த தகவல், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">போக்குவரத்து துறை</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-suffers-health-setback-dmks-grand-tripartite-conference-postponed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-suffers-health-setback-dmks-grand-tripartite-conference-postponed#comments</comments><guid isPermaLink="false">30380fc6-5c91-4b57-b126-5a1ca6614e53</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:37:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:37:00.165Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/igmhywcz/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/igmhywcz/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தொடங்கிய நாள் (செப்டம்பர் 17), தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளான (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில், ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>இந்த முப்பெரும் விழாவின் போது, தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா 15-ந்தேதி (அதாவது இன்று) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் இன்று மாலை நடக்க இருந்த நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது; முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-commits-suicide-by-hanging-police-investigate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-commits-suicide-by-hanging-police-investigate#comments</comments><guid isPermaLink="false">eb6d4459-ae9a-4fa8-be6c-1c826018ac49</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:36:54 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:36:54.284Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>College student,கல்லூரி மாணவி,Thoothukudi,தூத்துக்குடி,தூக்குப்போட்டு தற்கொலை,commits suicide by hanging,Police investigating,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/3i2i1h2i/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூக்குப்போட்டு தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/3i2i1h2i/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், பசுவந்தனை அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">கல்லூரி மாணவி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><h2>கல்லூரி மாணவி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே பரமன்பச்சேரி கிழக்கு தெருவைச் சேர்ந்த சமுத்திரவேல் (வயது 48), கொத்தனார் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மூத்த மகள் ஸ்ரீவள்ளி(18), சில்லாங்குளத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வந்தார். </p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல சமுத்திரவேல் கொத்தனார் வேலைக்கும், அவரது மனைவி மாரியம்மாள் ஆடு மேய்க்கும் வேலைக்கும் சென்றுவிட்டனர். மாலையில் மாரியம்மாள் வீடு திரும்பியபோது, வீட்டின் மின்விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் ஸ்ரீவள்ளி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். </p><p>அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்களின் உதவியுடன் அந்த மாணவியை தூக்கிலிருந்து கீழே இறக்கினர். எனினும் மாணவி ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பசுவந்தனை காவல் நிலைய போலீசார், மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை சமுத்திரவேல் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை மேலும் குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-further-todays-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-further-todays-status#comments</comments><guid isPermaLink="false">8ef2783b-9453-4234-9202-6cf13649118e</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:24:02 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:24:02.907Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zrc5h8eg/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zrc5h8eg/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.14,125-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையை பொறுத்தவரையில் 4-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அசாமில் இருந்து வந்த 5 வயது யானைக்கு மலர் தூவி வரவேற்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-year-old-elephant-arrives-from-assam-for-the-world-famous-madurai-meenakshi-amman-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-year-old-elephant-arrives-from-assam-for-the-world-famous-madurai-meenakshi-amman-temple#comments</comments><guid isPermaLink="false">1075b9d3-2d34-45b6-9f65-8e0b0487ee67</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:22:41 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:22:41.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அசாம்,யானை,மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/g9e7yt84/ecfas.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/g9e7yt84/ecfas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>கும்பாபிஷேக பூஜைகள் நடந்து வரும் நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 5 வயது யானை அசாமில் இருந்து வந்தது.</p><p>உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். திருவிழாவின்போது சுவாமிக்கு முன்பு டங்கா மாடு, யானை, ஒட்டகங்கள், குதிரைகள் அணிவகுத்து செல்வது வழக்கம். இதற்காக மீனாட்சி அம்மன் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள் இருந்தன. முன்பு கோவிலில் 7 யானைகள் இருந்தன. தற்போது பார்வதி என்ற ஒரு யானை மட்டுமே உள்ளது. அந்த யானையும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறது.</p> <p>எனவே கோவிலுக்கு கூடுதலாக ஒரு யானை வாங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.  அதற்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு 5 யானைகள் அசாமில் இருந்து கொண்டு வரப்பட்டன. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் புதிய யானை கோவிலுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 9-ந் தேதி ராஜஸ்தானில் இருந்து 2 ஒட்டகங்கள் உபயதாரர்கள் மூலம் கோவிலுக்கு கொடுக்கப்பட்டன.</p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான நேற்று அதிகாலை 2 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு துர்கா என்ற 5 வயது யானை அசாமில் இருந்து 3 நாட்கள் பயணமாக வந்தது. அந்த யானைக்கு கோவில் ஸ்தானீக பட்டர்கள் சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பித்தனர். கோவில் பணியாளர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.</p> <p>இந்த யானை அசாமில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு மதுரை வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 7 யானைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் படிப்படியாக அந்த யானைகள் எண்ணிக்கை குறைந்தன.  68 ஆண்டுகள் வரை வாழ்ந்த பார்வதி யானை முதுமை காரணமாக உயிரிழந்தது. அதனுடன் இருந்த அங்கையர்கண்ணி என்ற யானையும் 2007-ம் ஆண்டு இறந்தது.</p><h2>5 வயது யானை</h2><p>அதன் பின்பு கோவில் யானை பார்வதி மட்டும் தனியாக இருந்ததால் அதற்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே பக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது 5 வயதுள்ள துர்கா என்ற பெண் யானை விநாயகர் சதுர்த்தி தினத்தன்றும், கும்பாபிஷேகத்தையொட்டியும் வந்துள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: நகைக்கடை உரிமையாளரை தாக்கிய பழ கடைக்காரர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-fruit-vendor-arrested-for-attacking-jewellery-shop-owner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-fruit-vendor-arrested-for-attacking-jewellery-shop-owner#comments</comments><guid isPermaLink="false">29173b64-c439-492c-98af-f4d198fca605</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:08:09 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:08:09.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,arrested,தூத்துக்குடி,Debt,உரிமையாளர்,owner,கடன்,நகைக்கடை,Fruits,jewelry shop,கடைக்காரர்,shopkeeper,பழம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/k1q1erhv/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/k1q1erhv/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் கடனாகப் பெற்ற பணத்தை திருப்பிக் கேட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">நகைக்கடை உரிமையாளரை</a> தாக்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D">பழ</a> கடைக்காரரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>நகைக்கடை உரிமையாளர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி </a>மாவட்டம், சாத்தான்குளம் செக்கடி புதுத்தெருவைச் சேர்ந்த ரவி (வயது 63), சாத்தான்குளம் முதன்மை சந்தைப் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சாத்தான்குளத்தில் பழக்கடை நடத்தி வரும் கொம்பன்குளம் மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. </p><h2>ரூ.1 லட்சம் கடன்</h2><p>இந்த நிலையில், பாஸ்கர் தான் வங்கியில் அடமானம் வைத்த நகை ஏலத்திற்கு வருவதாகவும், அதை மீட்பதற்கு ரூ.1 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">கடனாக</a> தருமாறும் ரவியிடம் கேட்டுள்ளார். அதனை நம்பி ரவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாஸ்கரின் வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சம் பணம் பரிமாற்றம் செய்துள்ளார்.</p><h2>நகைக்கடை உரிமையாளரை தாக்கிய பழ கடைக்காரர்</h2><p>அதன்பின்னர் பாஸ்கர் ரூ.70 ஆயிரத்தை மட்டும் ரவியிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.30 ஆயிரத்தைக் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரவி, பாஸ்கரின் வீட்டிற்கு நேரில் சென்று பணத்தைத் தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், நகை வியாபாரி ரவியை அவதூறாகப் பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். </p><h2>கைது</h2><p>இதில் காயமடைந்த ரவி, சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாஸ்கரை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் பற்றி அவதூறு பேச்சு: திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/defamatory-remarks-against-chief-minister-vijay-case-registered-against-dmk-mp-a-raja-under-seven-sections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/defamatory-remarks-against-chief-minister-vijay-case-registered-against-dmk-mp-a-raja-under-seven-sections#comments</comments><guid isPermaLink="false">443f444c-f0b0-4c49-ade8-e930affffe0e</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:05:39 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:05:39.215Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்குப்பதிவு,case registered,ஆ.ராசா,A. Raja</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vzqcy29z/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/vzqcy29z/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்-அமைச்சர் விஜய் திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.</p><p>மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்றும் மிசா குறித்து பேசும்போது, மு.க.ஸ்டாலினை சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாக முதல்-அமைச்சர் விஜய் உடல்மொழி செய்ததாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.</p> <p>இதற்கிடையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 12-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா, முதல்-அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். ஆ.ராசாவின் பேச்சுக்கு தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.</p><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய ஆ.ராசா மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அமைதியை குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவமதிப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>அண்ணா ஆட்சியை  மீண்டும் நிறுவிட உறுதியேற்போம் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-re-establish-anna-rule-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-re-establish-anna-rule-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">7a35dcf6-1b07-4988-af09-e4fd211199f7</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:02:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:02:16.436Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,பிறந்தநாள்,Anna,பேரறிஞர் அண்ணா,Anna birthday,அண்ணா பிறந்தநாள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xjghhf77/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xjghhf77/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, அண்ணா ஆட்சியை  மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>ஒப்பற்ற தலைவர்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. 
</p><h2>கலங்கரை விளக்கம்</h2><p>அதிகாரத்தை விட கொள்கையையும், பதவியை விட மக்களையும், தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
</p><h2>உறுதியேற்போம்</h2><p>தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன். மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம்! வாழ்க அண்ணா நாமம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். <br><br>அதிகாரத்தை விட கொள்கையையும், <br>பதவியை விட… <a href="https://t.co/BFMvHbCtoa">pic.twitter.com/BFMvHbCtoa</a></p>&mdash; Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&amp;AIADMK (@EPSTamilNadu) <a href="https://x.com/EPSTamilNadu/status/2099703807483793694?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் தோற்றத்தில் விநாயகர் சிலை... உடனடியாக அகற்ற வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-statue-of-lord-ganesha-in-the-guise-of-chief-minister-vijay-should-be-removed-immediately-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-statue-of-lord-ganesha-in-the-guise-of-chief-minister-vijay-should-be-removed-immediately-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">03832a94-c551-428a-aa66-322b34caec6c</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:50:49 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:50:49.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,விநாயகர் சிலை,அகற்ற வேண்டும்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/schofesi/38.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/schofesi/38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விஜய் தோற்றத்தில் விநாயகர் சிலையினை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>விநாயகர் சிலை</h2><p>சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முதல்-அமைச்சர் விஜய் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது மக்களின் ஆன்மிக உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயலாகும்.</p><p>புனிதமான விழாவை அரசியல் சுயலாப மேடையாக்கி, இறை வழிபாட்டைத் தேர்தல் பிரச்சாரமாகத் தரம் தாழ்த்தும் தவெகவினரை முதல்-அமைச்சர் விஜய் ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் மௌனம் காத்ததே இத்தகைய எல்லை மீறிய செயல்கள் தொடர்வதற்குக் காரணமாகும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, மக்களின் மத உணர்வுகளையும் வழிபாட்டு மரபுகளையும் சீர்குலைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இத்தகைய சிலைகளை தவெக அரசு உடனடியாக அகற்ற வேண்டும். இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சுற்றுலா செல்ல அனுமதி மறுத்த பெற்றோர்: மனமுடைந்த கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-deny-trip-college-student-dies-by-suicide</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-deny-trip-college-student-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">295e3d23-5ab2-4c27-a1cc-8674313cfdc7</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:29:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:30:31.741Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,தற்கொலை,Suicide,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/6tmzv150/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/6tmzv150/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>கோவை அருகே சுற்றுலா செல்ல பெற்றோர் அனுமதிக்காததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>அனுமதி மறுப்பு</h2><p>கோவையை அடுத்த வேடப்பட்டி குரும்பம்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி (54 வயது). இவருடைய மகள் பூர்வஜா (20 வயது). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் படித்து வரும் மாணவ-மாணவிகள் பெங்களூருவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து பூர்வஜா தனது பெற்றோரிடம் சென்று பெங்களூருவுக்கு சுற்றுலா செல்ல அனுமதி கேட்டார். அதற்கு அவர்கள் அனுமதி மறுத்ததாக தெரிகிறது.</p><h2>விபரீத முடிவு</h2><p>இதனால் மனமுடைந்த பூர்வஜா, கோபத்தில் தனது அறைக்கு சென்று கதவை பூட்டினார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய், அறையின் கதவை பலமுறை தட்டினார். ஆனால் கதவை திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மின்விசிறியில் பூர்வஜா தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பூர்வஜா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/request-to-attach-additional-coaches-to-the-trichy-rameswaram-express-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/request-to-attach-additional-coaches-to-the-trichy-rameswaram-express-train#comments</comments><guid isPermaLink="false">e0cf5cac-d1cc-49a2-9e5a-31084bb3a0dd</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:29:54 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:29:54.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Express train,Rameswaram,ராமேசுவரம்,எக்ஸ்பிரஸ் ரெயில்,திருச்சி,Trichy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/qgwixusw/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/qgwixusw/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ்</h2><p>திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16849) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேசுவரத்துக்கு பகல் 12.35 மணிக்கு சென்றடை கிறது. மறுமார்க்கத்தில் (வண்டிஎண்: 16850) மதியம் 2.50 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு அதே வழியில் திருச்சிக்கு இரவு 8.05 மணிக்கு வந்து சேருகிறது.</p><p>இந்த ரெயிலில் காலை, மாலை நேரங்களில் நாள்தோறும் அரசு ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என்று ஏராளமானோர் பயணிக்கின்றனர். இந்த ரெயிலில் தினந்தோறும் திருச்சி மற்றும் ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் போதே கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும் பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகரித்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் பயணிகள் தொலை தூரத்துக்கு நின்று கொண்டே பயணிக்க வேண்டி உள்ளது.</p><h2></h2><h2>கூடுதல் பெட்டிகள்</h2><p>இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், "திருச்சி-ராமேசுவரம் ரெயிலில் திருச்சியிலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுவதால் புதுக் கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரையில் ஏறும் பயணிகள் ராமேசுவரம் வரை உட்கார இடமின்றி நின்று கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது. அதுபோல், ராமேசுவரம் திருச்சி ரெயிலில் ராமேசுவரத்திலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுவதால் ராமநாதபுரம், பரமக்குடி. மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் ஏறும் பயணிகள் திருச்சி வரை அமர இடமின்றி நின்றுகொண்டே செல்ல வேண்டியுள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாள்: உதயநிதி ஸ்டாலின் புகழ் வணக்கம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birthday-udhayanidhi-stalins-praise-and-salutations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birthday-udhayanidhi-stalins-praise-and-salutations#comments</comments><guid isPermaLink="false">2d8ec349-dc90-4a89-b0de-d205ae721bb8</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:27:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:27:31.667Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,சென்னை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,பிறந்தநாள்,பேரறிஞர் அண்ணா,Anna birthday</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/n7jlz18o/338.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/n7jlz18o/338.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><h2>பேரறிஞர் அண்ணா</h2><p>பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று. கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!</p><p>தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.</p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் -  மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE">அண்ணா </a>என்றும் நம்மை வழிநடத்துவார். வாழ்க அண்ணாவின் புகழ்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>