<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 22 Aug 2026 13:34:40 +0000</lastBuildDate><item><title>நிலத்தகராறில் முதியவர் கொலை: இந்து முன்னணி நிர்வாகி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-murdered-over-land-dispute-hindu-munnani-executive-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-murdered-over-land-dispute-hindu-munnani-executive-arrested#comments</comments><guid isPermaLink="false">3dfba0ae-b412-4786-9dc3-f6305b42f149</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:33:06 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:33:06.070Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,arrested,தூத்துக்குடி,Murder case,கொலை,Elderly man,முதியவர்,Executive,இந்து முன்னணி நிர்வாகி,Land dispute,Hindu Front,நிலத்தகராறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7u88ewcb/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவர் கொலை; இந்து முன்னணி நிர்வாகி கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7u88ewcb/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">நிலத்தகராறில்</a> ஏற்பட்ட மோதலில் காயமடைந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">முதியவர்</a> சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">இந்து முன்னணி நிர்வாகி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கொலை வழக்கில் கைது</a> செய்யப்பட்டுள்ளார்.</p><h2>நிலப்பிரச்சினை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், கயத்தார் தாலுகா, வடக்கு ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 70). இவருக்கும் இவரது உறவினரான இந்து முன்னணி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் செல்லத்துரை(55) என்பவருக்கும் இடையே 50 சென்ட் நிலம் தொடர்பாகப் பிரச்சினை இருந்து வந்தது.</p><h2>வாக்குவாதம்</h2><p>அந்த இடத்தில் வேலுச்சாமி நில அளவீடு செய்யாமல் வீடு கட்ட முயன்றதைச் செல்லத்துரை கடந்த 6 மாதங்களாக தடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி வேலுச்சாமி ஆட்களை வைத்து வீட்டுக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். அங்கு வந்த செல்லத்துரை அதைத் தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.</p><h2>முதியவர் தலையில் காயம்</h2><p>இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் இரும்பு பைப் மற்றும் ஊன்றுகோலால் ஒருவரையொருவர் மாற்றி மாற்றித் தாக்கிக்கொண்டனர். செல்லத்துரை ஊன்றுகோலால் தாக்கியதில் வேலுச்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். </p><h2>முதியவர் உயிரிழப்பு, இந்து முன்னணி நிர்வாகி கைது</h2><p>அங்கே சிகிச்சை பெற்று வந்த வேலுச்சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக, வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில் கயத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று விடுவிக்கப்பட்ட செல்லத்துரையை, முதியவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்; காவிரி ஆற்றில் நீர் வரத்து  10 ஆயிரம் கனஅடியாக சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hogenakkal-water-inflow-into-the-cauvery-river-drops-to-10000-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hogenakkal-water-inflow-into-the-cauvery-river-drops-to-10000-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">3de5a5a0-5b02-4da7-b8c0-bd7527a8dab5</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:17:54 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:17:54.828Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒகேனக்கல்,காவிரி,கனஅடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/mg6o1hkm/Mekatadu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/mg6o1hkm/Mekatadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்ததுகர்நாடகா அணிகளில் இருந்து திறந்த விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது </p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 12ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது . இந்த நீர் வரத்து குறைந்துநேற்று காலை6 மணி நிலவரப்படி 10ஆயிரம் கன அடியாக குறைந்தது .இருப்பினும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது</p> <h2>தீவிர கண்காணிப்பு</h2><p>மேலும் ஒகேனக்கலில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி ,சினிப்பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்</p><h2>பரிசல் இயக்க 7-வது நாளாக தடை</h2><p>இந்த நிலை சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர் . அவர்கள் மெயின் அருவி, காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளித்து மகிழ்ந்தனர் . மேலும்ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 7-வது நாளாக நீடிக்கிறது . இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் .</p> ]]></content:encoded></item><item><title>18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-until-10-pm-in-18-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-until-10-pm-in-18-districts#comments</comments><guid isPermaLink="false">d8a6436a-3404-44e9-804d-5743c239ef8f</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:13:48 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:13:48.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/4swzedqw/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/4swzedqw/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ,கோயம்புத்தூர், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>387-வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/387th-madras-day-special-photo-exhibition-ministers-inaugurate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/387th-madras-day-special-photo-exhibition-ministers-inaugurate#comments</comments><guid isPermaLink="false">fc15f011-57c3-4376-a45e-36f79c989b08</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:53:16 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:53:16.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Day,சென்னை தினம்,Madras Day,புகைப்பட கண்காட்சி,Photo exhibition,மெட்ராஸ் தினம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/lfuglio7/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/lfuglio7/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>387-வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு “சென்னை முதல் மெட்ராஸ்” சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சென்னையின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில், 387-வது மெட்ராஸ் தினக் கொண்டாட்டங்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை சார்பில்,</p><p>● மெட்ராஸ் போட்டோ பிளாகர்ஸ்” (Madras Photo Bloggers) குழுவினர் இணைந்து நடத்திய புகைப்படப் போட்டி</p><p>● “இன்ஸ்டாகிராம் மெட்ராஸ் தினம் – 2026” கட்டுரைப் போட்டி</p><p>● “கலைகள் நாம்” (Kalaigal Naam) குழுவினர் நடத்திய சுவர் ஓவியப் போட்டி</p><p>● “நம் வீடு, நம் ஊரு, நம் கதை” குழுவினர் செனட் ஹவுஸ் – மெட்ராஸ் பல்கலைக்கழகம்,சேப்பாக்கம் அரண்மனை,புனித ஜார்ஜ் கோட்டை, விக்டோரியா பொது மண்டபம், மெட்ராஸ் மெமோரியல் ஹால் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒருங்கிணைத்த பாரம்பரிய நடைப்பயணங்கள்</p><p>● “சைக்ளிங் யோகிஸ்” (Cycling Yogis) குழுவினர் நடத்திய “மெட்ராஸ் – தி ஃபர்ஸ்ட் சைக்ளிங் ட்ரெயில்” (Madras – The First Cycling Trail) நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>● வரலாற்று அறிஞர் வி. ஸ்ரீராம் தொகுத்து வழங்கிய புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.</p><p>இன்று (22.08.2026) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், “சென்னை டு மெட்ராஸ்“ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து புகைப்படங்களை பார்வையிட்டனர்.</p><p>சர்வதேசப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டாக்டர் எல். ராமச்சந்திரன் கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்த கறுப்பு-வெள்ளை புகைப்படங்களின் சிறப்புத் தொகுப்பு இக்கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சமாகும். இப்புகைப்படங்கள் சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக்கலை, நகரின் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகளை அழகிய கலைநயத்துடன் வெளிப்படுத்துகின்றன.</p><p>22.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள், கலைச் சேகரிப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம்.</p><p>அதனைத் தொடர்ந்து, இன்று, சென்னை விக்டோரியா பொது அரங்கத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரைப்பட பின்ணனி பாடகி மீனாட்சி இளையராஜா மற்றும் முத்து மண்ணிசை பாடல்கள் பாட அரவிந்த் கரகம், குருநாதன் குழு ஒயில், மயிலாட்டம் கலை நிகழ்ச்சிகள், "சென்னை முதல் மெட்ராஸ் வரை”, “சென்னையும் பாரதியும்” உள்ளிட்ட காணொளிகள் மற்றும் “மெட்ராஸ் வரலாற்றுத் தொடர்” ஆகியவை வெளியிடப்பட்டன. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகளும் வெளியிடப்பட்டன.</p><p>சென்னையின் உணவு, கலாச்சாரம் மற்றும் தனித்துவமான அடையாளங்களை உலக அளவில் அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட “டேஸ்ட் ஆஃப் சென்னை” (Taste of Chennai) இலச்சினையும் வெளியிடப்பட்டது. மேலும், காமிக் லைப்ரரி சார்பில் சென்னையின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “தி லாஸ்ட் டிராம்” (The Last Tram) காமிக் புத்தகமும் வெளியிடப்பட்டது.</p><p>இறுதியாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த குழுக்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.7.87 கோடியில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை: ஆலந்தூர் எம்.எல்.ஏ. ஹரிஷ் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dog-sterilization-center-and-hospital-worth-rs787-crore-alandur-mla-harish-inaugurated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dog-sterilization-center-and-hospital-worth-rs787-crore-alandur-mla-harish-inaugurated#comments</comments><guid isPermaLink="false">efb8bbd4-b3fb-4e1d-960b-d3c973454efb</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:52:28 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:52:28.421Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,inaugurated,நாய்கள்,Dogs,ஆலந்தூர்,Alandur,திறந்து வைத்தார்,கருத்தடை மையம்,எம்.எல்.ஏ. ஹரிஷ்,Sterilization Center,MLA Harish</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/i42rumz3/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.7.87 கோடியில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை: ஆலந்தூர் எம்.எல்.ஏ. ஹரிஷ் திறந்து வைத்தார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/i42rumz3/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>, ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர்.சாலையில் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நாய்கள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">கருத்தடை</a> மையம் மற்றும் மருத்துவமனை கட்டிடத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">ஆலந்தூர்</a> எம்.எல்.ஏ. ஹரிஷ் திறந்து வைத்தார்.</p><h2>ரூ.7.87 கோடியில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-158க்குட்பட்ட நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர்.சாலையில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை கட்டிடத்தை ஆலந்தூர் எம்.எல்.ஏ. ஹரிஷ் இன்று (22.8.2026) திறந்து வைத்து, பார்வையிட்டார்.</p><p>இந்த நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவர் சந்திரன், கவுன்சிலர் பாரதி, மண்டல அலுவலர் முருகதாஸ், தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் கமால் உசைன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். </p><h2>1,408 சதுர மீட்டர் பரப்பளவு</h2><p>இந்த நாய்கள் கருத்தடை மையம் மருத்துவமனை கட்டிடமானது தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் 1,408 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் செல்லப் பிராணி மருத்துவமனை, நிர்வாக அறை, கால்நடை மருத்துவர் அறை, மருத்துவர்கள் அறை, இருப்பு அறை, மீட்பு அறை, கண்காணிப்பு அறை, சமையலைறை, காத்திருப்பு அறை, மருந்தகம், ஆய்வகம், பழுது பார்ப்புப் பிரிவு, மின் அறை, 2 அறுவை சிகிச்சை அரங்கம், கிருமி நீக்கச் சேவைப் பிரிவு அறை, கவச உடை அணியும் அறை, கழுவுமிடம், பொறுப்பு மருத்துவர் அறை, மண்டல கால்நடை மருத்துவர் அறை, மருத்துவப் பொருட்கள் வைப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து, ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், அப்பகுதியில் உள்ள அமைந்துள்ள நவீன மாடுகள் காப்பகத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாடுகள் மற்றும் காப்பகத்தினைத் தூய்மையாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.</p><h2>11 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம்</h2><p>தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்காக புளியந்தோப்பு, லாய்ட்ஸ் காலனி, கண்ணம்மா பேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், மணலி மண்டலத்தில் செட்டிமேடு, திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மண்டத்தில் செட்டிமேடு, கண்ணப்பர் திடல் ஆகிய 11 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கத்தில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்திப்பட்டு, வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூரில் பயோ சி.என். ஜி. பிளான்ட் பகுதி என மூன்று இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><h2>6 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை மையம்</h2><p>பெருங்குடியில் உள்ள நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் தற்காலிகமாக நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கான காப்பகமாக செயல்பட்டு வருகிறது. மணலி மற்றும் பெருங்குடியில் நோயினால் பாதிக்கப்பட்ட தலா 250 நாய்களுக்கான காப்பகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், புளியந்தோப்பு மற்றும் லாய்ட்ஸ் காலனி ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டு, சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. </p><h2>நாள் ஒன்றுக்கு 200 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை</h2><p>தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 200 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நடைபெற்று வருகின்ற 3 நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையத்தின் பணிகளையும் விரைந்து முடித்திடவும், தெரு நாய்களை கட்டுப்படுத்துகின்ற வகையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 350 முதல் 400 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், அனைத்து தெரு நாய்களுக்கும், செல்லப்பிராணிகளுக்கும் வெறிநாய்க்கடி தடுப்பூசியினை செலுத்தி நூறு சதவீதம் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளததை உறுதி செய்திடவும் செல்லப் பிராணிகளுக்கான உரிமங்களை விரைந்து வழங்கிடவும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு - கோர்ட்டு தீர்ப்புக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mlas-case-speaker-jct-prabhakar-welcomes-the-court-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mlas-case-speaker-jct-prabhakar-welcomes-the-court-verdict#comments</comments><guid isPermaLink="false">f07117f5-8d1a-4206-a1b0-bbc593cf54df</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:40:11 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:40:11.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அ.தி.மு.க.,ஜே.சி.டி.பிரபாகர்,J.C.T. Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/1e2jxihe/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/1e2jxihe/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்ட 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவது என சட்டப்பேரவைத் தலைவர் எடுத்த முடிவு சரியானதுதான் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோர்ட்டு தீர்ப்புக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு நன்றி. கோர்ட்டு தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன். இதையடுத்து, சட்டமன்ற நேரலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அவைக்குறிப்பில் இருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டாலும், நேரலை மூலம் அவற்றை ரீல்ஸ் வீடியோவாக வெளியிடுகிறார்கள் என்று கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  </p><p>இதற்கு பதிலளித்த ஜே.சி.டி.பிரபாகர், “இது குறித்து சட்டமன்றத்தில் ஏற்கனவே நான் கூறிவிட்டேன். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை எடுத்து, எந்த வகையில் அதை பயன்படுத்தினாலும் அது அவையின் மாண்பை குறைக்கும் செயல். இது குறித்து உரிமை மீறல் பிரச்சினைக்காக கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கடிதங்கள் என்னுடைய ஆய்வில் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.  </p> ]]></content:encoded></item><item><title>‘வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியாளர்களை சாதி, மதம் கடந்து பார்க்க வேண்டும்’ - ராம்நாத் கோவிந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-must-view-historically-significant-rulers-beyond-the-confines-of-caste-and-religion-ram-nath-kovind</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-must-view-historically-significant-rulers-beyond-the-confines-of-caste-and-religion-ram-nath-kovind#comments</comments><guid isPermaLink="false">f93b54eb-043a-4d45-b36f-d6da2782dff5</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:27:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:27:03.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராம்நாத் கோவிந்த்,Ramnath Kovind</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/zckrio77/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/zckrio77/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சிக்கு வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், இன்று மன்னர் 2-ம் பெரும்பிடுகு முத்தரையரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, ​​வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியாளர்களை சாதி, இனம் மற்றும் மத எல்லைகளைக் கடந்து நாம் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். </p><p>'சுவரன் மாறன்' என்றும் அழைக்கப்பட்ட 2-ம் முத்தரையர், 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்தரையர் வம்சத்து மன்னராவார். இவர் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு காவிரி டெல்டா பகுதியின் சில பகுதிகளை ஆட்சி செய்தார். பல்லவ மன்னன் 2-ம் நந்திவர்மனுக்கு ஒரு வலிமையான சிற்றரசராகவும், கூட்டாளியாகவும் திகழ்ந்த இவர், மத்திய தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் முத்தரையர் சமூகத்தினரால் ஒரு கலாசார அடையாளமாகப் போற்றப்படுகிறார்.</p> <p>இந்நிலையில் திருச்சியில் இன்று 2-ம் பெரும்பிடுகு முத்தரையரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த மன்னருக்கு மரியாதை செலுத்துவதைப் பெருமையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன். ஒவ்வொரு பேரரசரும் சமூகம், சாதி, கோட்பாடு மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.</p><p>எந்தவொரு மன்னரையும் மதம், சாதி, சமூகம், பிராந்தியம் அல்லது மொழியுடன் யாரும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியாளர்களை சாதி, இனம் மற்றும் மத எல்லைகளைக் கடந்து நாம் பார்க்க வேண்டும்” என்றார். தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம் செய்தார். </p> ]]></content:encoded></item><item><title>தவெக அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே மக்கள் விரோத அரசு என்று பெயர் பெற்றுள்ளது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-government-labeled-anti-people-within-months-says-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-government-labeled-anti-people-within-months-says-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">cdd7cc60-eb61-4095-acae-e51dd717b439</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:26:14 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:26:14.060Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Chennai,சென்னை,கொலை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,கேளம்பாக்கம்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/fbj5ulca/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/fbj5ulca/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே மக்கள் விரோத அரசு என்ற அவப்பெயரைப் பெற்றுக் கொண்டிருப்பதுதான் நிஜம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னையை அடுத்த கேளம்பாக்கம் தையூர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஏழுமலை என்பவரின் மகளைக் காதலித்த 22 வயதான பிரவீன் என்ற இளைஞர், ஏழுமலை உள்பட 4 பேர் கொண்ட கும்பலால் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.</p><p>‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தவெக-வின் கொள்கைகளைக் கொண்ட கட்சியின் பிரமுகரே தனது மகளைக் காதலித்தார் என்பதற்காக அந்தஸ்தைக் காரணம் காட்டி  ஆணவக் கொலை வரை சென்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. </p><p>தவெக அரசு பதவியேற்ற 100 நாட்களில் சட்டம் ஒழுங்கும், சமத்துவமும் காற்றில் பறந்து இன்று தமிழகம் லாக்கப் மரணங்களாலும், ஆணவப் படுகொலைகளாலும், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களாலும் இரத்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.</p><p>சட்டம் ஒழுங்கை சீர்செய்து மக்களை பாதுகாப்பார்கள் என்று பார்த்தால் சட்டமன்றத்தில் முதல்வரின் புகழ்துதி பாடி பாட்டுக்குப் பாட்டு நடத்திக் கொண்டு பொழுதை போக்கிக் கொண்டிருக்கும் இந்த அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே மக்கள் விரோத அரசு என்ற அவப்பெயரைப் பெற்றுக் கொண்டிருப்பதுதான் நிஜம்.</p><p>இன்னும் சாதிப் பெயரையும், அந்தஸ்தையும் காரணம் காட்டி நடைபெறும் ஆணவக் கொலைகள் சமுதாயம் இன்னும் அடுத்த நிலைக்குச் செல்லவில்லை என்பதையே காட்டுகிறது. அதுவும் குறிப்பாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தவெக-வின் நிர்வாகியே இப்படி ஓர் கொடுங்குற்றத்தைப் புரிந்திருப்பது அவர்கள் கொள்கை எல்லாம் வெறும் பெயரளவுக்கே என்பதையே காட்டுகிறது. உயிரிழந்த இளைஞர் பிரவீன் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் இவ்வழக்கை விரைவில் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் காவல்துறையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சொந்த விருப்பு, வெறுப்பில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அறிக்கை அனுப்பியுள்ளார் - நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uziliyamparai-tahsildar-has-submitted-a-report-based-on-personal-likes-and-dislikes-nirmalkumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uziliyamparai-tahsildar-has-submitted-a-report-based-on-personal-likes-and-dislikes-nirmalkumar#comments</comments><guid isPermaLink="false">d570cde3-8e52-4588-a510-dbf0a4077f3e</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:43:33 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:43:33.508Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வட்டாட்சியர்,Nirmal Kumar,குஜிலியம்பாறை,நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/u84wvfyb/Nirmal-kumar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/u84wvfyb/Nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக மின் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; "குஜிலியம்பாறை வட்டாட்சியர் அவருடைய சொந்த விருப்பு, வெறுப்பின் கீழ் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். அவர் இன்னும் 6 மாத காலத்தில் ரிட்டையர் ஆக போகிறார். இது தொடர்பாக நான் சிபிஎம் தலைவர்களிடம் பேசினேன். அந்த வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். இது கவனத்திற்கு வந்த உடனே.. சுற்றறிக்கை திரும்பப்பெறப்பட்டு, அவரும் இடமாற்றம் செய்யப்பட்டு.அவர் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.  இந்த சம்பவத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார். </p><p>சர்ச்சையை கிளப்பிய  வட்டாட்சியரின் அறிக்கை, "திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள் வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட அறிவுறுத்தப்படுகிறது. அறிக்கை அளிக்க தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என உத்தரவு வெளியாகியிருந்தது.</p> <p> அதேபோல இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் கரப்பான் ஜனதா கட்சியின் அமைப்பின் கீழ் நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்றும் உயர்கல்வித்துறையிலிருந்து அறிக்கை வெளியாகியிருந்தது. இந்த இரண்டு அறிக்கைகளும் கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு பின்வாங்கப்பட்டன. மட்டுமல்லாது இந்த அறிக்கை வெளியாக தமிழக தலைமை செயலாளர் சாய் குமார்தான் காரணம், அவர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று இடதுசாரி கட்கள் போராட்டத்தை நடத்தியிருந்தன. இந்த சூழலில்தான் சிடிஆர் நிர்மல் குமார் மேற்கண்ட கருத்தை கூறியுள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயற்சி; தடுக்க முயன்ற தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-smuggle-ration-rice-to-kerala-gang-attacks-tamil-nadu-officials-who-tried-to-stop-them</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-smuggle-ration-rice-to-kerala-gang-attacks-tamil-nadu-officials-who-tried-to-stop-them#comments</comments><guid isPermaLink="false">6c2955de-7da6-4253-bd2d-c30e91817492</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:25:25 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:25:25.954Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,கடத்தல்,அதிகாரிகள்,ration rice,ரேஷன் அரிசி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/uss3qz2b/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/uss3qz2b/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை வழியாக கேரளாவுக்கு  மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாகனத்தை குமரி மாவட்ட உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு பறக்கும் படை அதிகாரிகள்  பின்னால் துரத்தி சென்றனர். களியக்காவிளை வழியாக கேரளாவுக்குள் நுழைந்த மினி லாரி, இஞ்சிவிளை பகுதியில் உள்ள தனியார் அரிசி குடோனுக்குள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், உடனடியாக குடோன் கதவை மூடி உள்ளனர். </p><p>அவர்களை பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து பின்னால் துரத்தி சென்றபோது, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தமிழக அதிகாரிகள் குழுவில் இருந்த வருவாய் ஆய்வாளரை தாக்கி விட்டு, பெண் அதிகாரி உள்பட மூவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்பு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.</p> <p>இதையடுத்து தமிழக அதிகாரிகள் குழுவினர் உடனடியாக இது குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கேரள வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கேரள மற்றும் தமிழ்நாடு போலீசார், குடோனில் இருந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் குடோன் நடத்தி வரும் அலீம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு பறக்கும் படை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவான கடத்தல் கும்பலை இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் - மு.வீரபாண்டியன் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delta-districts-should-be-declared-drought-hit-mu-veerapandian-demand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delta-districts-should-be-declared-drought-hit-mu-veerapandian-demand#comments</comments><guid isPermaLink="false">f7689fea-8ba0-4989-adec-ecd9928c5bd6</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:13:13 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:13:13.522Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>demand,கோரிக்கை,Delta Districts,மாவட்டங்கள்,டெல்டா,Drought,வறட்சி,அறிவிக்க வேண்டும்,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/stquz70d/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/stquz70d/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று மு.<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">வீரபாண்டியன்</a> கோரிக்கை. இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில்  நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது  மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியதாவது:-</p> <p> <strong>டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம். நாள் 28.08.2026.</strong></p> <p><strong>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.</strong></p><p>குருவை சாகுபடி செய்ய முடியாததால் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15,000&nbsp;<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">நிவாரணம்</a> வழங்க வேண்டும். விவசாய வேலைகள் இல்லாததால் விவசாய தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.</p> <h2>அத்தியாவசிய பொருட்கள் </h2><p>விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. அதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. எனவே வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கிட வேண்டும்.</p><p> <strong>பழங்குடிச்&nbsp;சங்கம் மாநாடு நாளை மாமல்லபுரத்தில் நாளை&nbsp;நடைபெறுகிறது.</strong></p><h2>தனித்துறை</h2><p>பழங்குடியினர் நலத்தை கவனிக்க தனித்துறையை உருவாக்க வேண்டும். வனத்திலிருந்து பழங்குடியினரை வெளியேற்ற நீதி மன்றங்கள் உத்திரவிட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட் சமீபத்திய உத்திரவு மேகமலையில் பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. வன உரிமைசட்ட படி வன உரிமைகள அங்கீகரிக்கும் பணிகள் முடியும் வரை வனத்திலிருந்து யாரையும் வெளியேற்றமாட்டோம் என்ற நிலையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.</p> <h2>சத்துணவு தொகுப்பு</h2><p>தமிழ்நாட்டில் பழங்குடி பெண்கள் ரத்தசோகையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு அம்மாநில பழங்குடியினருக்கு,உணவு தாணியம்-முட்டை-நெய்-பயறுகள்- பருப்புகள்-சமையல் எண்ணெய் போன்றவைகள் அடங்கிய சத்துணவு தொகுப்பினை வழங்கி வருகிறது. தமிழ் நாடு அரசும் இதைப்போன்றவொரு திட்டத்தை தமிழ் நாட்டு பழங்குடியினருக்கு கொண்டு வரவேண்டும்.</p><p>மேகமலை பகுதியில் மக்களை வெளியேற்ற அரசு முயல்வதால் ஒரு பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற கொடுமைகள் நிகழாமல் தடுக்க வேண்டும்.</p><p> <strong>டாஸ்மாக் பணியாளர்கள் 28 ஆம் தேதி வேலை நிறுத்தம்.</strong></p><h2>பணி நிரந்தரம்</h2><p>13 சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளன. 23 சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. பணி நிரந்தரம் வழங்க வேண்டும் . காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதிய வழங்க வேண்டும். காலி பாட்டில்களை திரும்ப பெற கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.</p><h2>வரவேற்பு</h2><p>717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரவேற்பு கூறியது. ஆனால், அதே பகுதியில் தனியார் மதுக்கடைகளை அனுமதித்தது சரியல்ல. இது முரண்பாடாக உள்ளது. அவைகளை அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.</p><h2>மேகதாது அணை</h2><p> இடதுசாரி மாணவர் அமைப்புகளை கண்காணித்தல் தொடர்பான சுற்றறிக்கைக்கு முதல்-அமைச்சரும், தலைமை செயலாளரும் விளக்கம் அளிக்க வேண்டும். மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்டக்கூடாது. மத்திய அரசு கட்ட அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் உறுதியாக நின்று இந்த அணை கட்டப்படுவதை தடுத்திட வேண்டும். இப்பிரச்சனைக் குறித்து தமிழ்நாட்டில் ஒத்தக் கருத்தை உருவாக்கிட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.</p> <h2>மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்</h2><p> உள்ளாட்சித்துறை தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். கும்மிடிப்பூண்டி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களில் இரண்டாம் உலக போரின் போது பிரிட்டிஷ் அரசால் சேமித்து வைக்கப்பட்ட குண்டுகள் பல இடங்களில் புதைந்திருப்பதாகவும் அது எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் நிலவுகிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.</p><h2>வந்தே மாதரம் பாடலின் சர்ச்சை</h2><p>வந்தே மாதரம் பாடலின் சர்ச்சைக்குரிய பகுதிகளையும் சேர்த்து முழுமையாக பாடவேண்டும் என அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங் கூறிவரும் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. அவர்களின் கருத்துகள் நாட்டின் மதச்சார்பின்மைக்கும், அரசியல் சட்டத்திற்கும், பன்முகத்தன்மைக்கும் எதிரானது. நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதாகும்.</p><h2>நடவடிக்கை</h2><p> டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராடிய பொழுது பெல்லட் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது அத்துப்பாக்கிச்சூட்டை நடத்திய காவலர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <h2>கார் வழங்கும் திட்டம்</h2><p> தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் மதச்சார்பற்ற கொள்கையை உறுதியோடு கடைபிடிக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். கார் இல்லாதவர்களுக்கு கார் வாங்கிட அரசு கடன் வழங்கலாம்.</p><p> <strong>பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும்.</strong> </p><h2>புதிய மருத்துவமனை</h2><p>பொது சுகாதாரத்துறையை தமிழ்நாடு அரசு வலுப்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டை ரூ 5 லட்சத்திலிருந்து, ரூ 25 லட்சமாக அதிகப்படுத்துவதின் மூலமாக மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு அனைத்து சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் முழுமையாக இலவசமாக வழங்கிவிட முடியாது. இதனால் அரசு காப்பீட்டு நிறுவனத்திற்கு கட்டவேண்டிய பிரிமியம் தொகை ரூ.1400 கோடியிலிருந்து ரூ.5000 கோடிக்கு மேல் சென்று விடும். இதனால் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளுக்குமே அதிக லாபத்தை கொடுக்கும். இந்த ரூ.5000 கோடி ரூபாயில் அரசே புதிய மருத்துவமனையும் கட்ட முடியும், தரமான சிகிச்சை இலவசமாக வழங்க முடியும்.</p> <h2>மக்கள் பாதிப்பு</h2><p> அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்கு காப்பீட்டு அட்டை இல்லாவிட்டால் சிகிச்சை மறுக்கப்படுகிறது. காப்பீட்டு அட்டை இருந்தாலும் காப்பீட்டு நிறுவனங்கள் ஏதேனும் சில சிறிய காரணங்களை கூறி காப்பீட்டை மறுத்து வருகின்றன. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.</p> <h2>மருத்துவக்காப்பீடு</h2><p>பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்துவதற்கு பதில் மருத்துவக்காப்பீடு அடிப்படையிலான சுகாதாரத் துறையாக, தமிழ்நாடு சுகாதாரத் துறையை மாற்றுவது மக்கள் நலனுக்கு எதிரானதாகும். இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக்குழு வருகிற 05.09.2026 ஆம் தேதி இந்தியக் கம்யூனுஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் பாலன் இல்லத்தில் நடைபெறுகிறது.</p><h2>பேரணி</h2><p>06.10.2026 ஆம் தேதி திருச்சியில் இடதுசாரிகளின் பேரணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சிறப்பு ரெயில் அனுமதியை ரத்து செய்ததற்கு கண்டனம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற 01.10.2026 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மாற்றத்தை நோக்கி... என்ற முழக்கத்துடன் மிகப் பிரம்மாண்டமான பேரணி நடைபெறுகிறது.</p><h2>பேரணி நடைபெறும்</h2><p>இந்தப் பேரணிக்கு தமிழ்நாடு மற்றும் கேரளத்திலிருந்து செல்வதற்காக சிறப்பு ரெயிலுக்கு முன்பணம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று மத்திய அரசு அந்த ரெயிலுக்கு அனுமதித்தர மறுத்து விட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியை முடக்குவதற்காகமத்திய அரசு சதி செய்துள்ளது. ஆனாலும், கட்சித் தோழர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் வேறு மார்க்கத்தில் செல்வதற்கு முடிவெடுத்துள்ளனர். வெற்றிகரமாக அந்த பேரணி நடைபெறும்.</p> <p>இன்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மாநில துணைச் செயலாளர் எம்.ரவி, செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சு.மோகன்குமார், மாநிலக்கு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, லி.உதயக்குமார், க.இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சமூக வலைதள மோதல்களுக்கு மதுரை ஐகோர்ட்டு கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-madras-high-court-condemns-social-media-clashes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-madras-high-court-condemns-social-media-clashes#comments</comments><guid isPermaLink="false">c33515c9-6627-44ac-ae41-83ba96ee2e9b</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:53:45 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:53:45.491Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,social media post,சென்னை ஐகோர்ட்,சமூக வலைதளங்கள்,Madras High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b3jvrntn/High-court.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b3jvrntn/High-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>சமூக வலைதளங்களில் தனிநபர்களுக்கிடையே அல்லது இரு தரப்பினரிடையே நடக்கும் ஈகோ சண்டைகளையும், பரஸ்பர அவதூறுகளையும் கண்காணித்துக் கொண்டிருப்பது போலீசாரின் பணி அல்ல என்று  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88">மதுரை</a> ஐகோர்ட்டு அமர்வு அதிருப்தி வெளியிட்டுள்ளது.</p><h2>வழக்கின் பின்னணி</h2><p>பாஜக நிர்வாகி ஒருவர், சமூக வலைதள பக்கத்தில் இஸ்லாமிய சமூகத்தினரைத் புண்படுத்தும் வகையிலும், அவதூறான முறையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்த எப்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்தும், தன் மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் அந்த பாஜக நிர்வாகி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><h2>நீதிமன்ற விசாரணையும் நீதிபதியின் கேள்விகளும்</h2><p>அந்த மனு நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மற்றும் எதிர் தரப்பினரின் சமூக வலைதள செயல்பாடுகளைக் கவனித்த நீதிபதி, இரு தரப்பினரின் போக்கிற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.</p><p>விசாரணையின் போது நீதிபதி எழுப்பிய முக்கிய கேள்விகள் மற்றும் கருத்துகள்:-</p><p>சமூக வலைதளங்களிலேயே எப்போதும் ஒருவர் மாற்றி ஒருவர் மோதிக்கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறார்களே தவிர, இரு தரப்பினருக்கும் வேறு உருப்படியான வேலைகள் எதுவுமே இல்லையா? என்றும் பேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் நடக்கும் சண்டைகளையும், விவாதங்களையும் பின்தொடர்ந்து கண்காணிப்பது போலீசாரின் முதன்மை வேலை கிடையாது எனவும் கேள்விகள் கேட்கப்பட்டது.</p><h2>பதிலடி கொடுப்பது தீர்வாகாது</h2><p>ஒரு தரப்பினர் தவறான அல்லது அவதூறான பதிவை வெளியிட்டால், அதற்குப் போட்டியாக மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளத்திலேயே அவதூறுகளைப் பரப்புவது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் தவறான அணுகுமுறையாகும். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">நீதிமன்றம் </a>காட்டிய சட்ட வழிமுறைசமூக வலைதளங்களில் யாரேனும் அவதூறுகளைப் பரப்பினால் அதற்கு இணையத்திலேயே சண்டையிட்டுப் பதிலடி கொடுக்கக் கூடாது என்று நீதிபதி அறிவுறுத்தினார்.</p><p>பாதிக்கப்பட்ட தரப்பினர் உடனடியாக முறையான புகார் அளிக்க வேண்டும் என்றும், அந்தப் புகாரின் அடிப்படையில் சட்டம் அனுமதிக்கும் வழிகளின் கீழ் முறையாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே சரியான தீர்வு என்றும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பணம் கொடுத்தால் தான் வேலை என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை- அமைச்சர் ஆனந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-longer-any-room-for-the-notion-that-work-gets-done-only-if-money-is-paid-minister-anand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-longer-any-room-for-the-notion-that-work-gets-done-only-if-money-is-paid-minister-anand#comments</comments><guid isPermaLink="false">9d7e4d9e-441a-433b-acd9-e1b45c3fee3c</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:52:39 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:52:39.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பணம்,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/vyex03v4/bussy.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/vyex03v4/bussy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் 2-ம் மாநில மாநாட்டின் பொதுமாநாடு நடைபெற்றது.இதில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-உலகத்திலேயே தூய்மை பணியாளர்கள் போல் சேவை செய்திட யாரும் இல்லை. யாரும் இருக்க மாட்டார்கள். கைதட்டுவதற்காக இதை சொல்லவில்லை. தூய்மை பணியாளர்களுக்கு கடந்த காலத்தில் நலத்திட்டங்களை செய்திட ஏன் மனசு வரவில்லை என்று தெரியவில்லை. ஆனால் இப்போது முதல்-அமைச்சர் விஜய் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பார்.தலைவர் முகத்துக்காகத்தான் அனைத்து மக்களும் ஓட்டு போட தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லி இன்று வெற்றி பெற்று இருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஒரு போதும் தவறு செய்ய மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.</p> <p>ஏழை மக்கள் மீது எப்போதும் பரிவு காட்டும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. தொழிலாளர்களுக்காக போராடும் கட்சி. எளிமையானவர்கள் நிறைந்த கட்சி. இதேபோல் தமிழக வெற்றிக்கழகமும் ஏழை எளிய மக்களுக்கான கட்சிதான். இனிமேல் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட வேண்டிய அவசியம் இருக்காது. அது கடந்த ஆட்சி காலம். இப்போதுள்ள முதல்வர் ஏழை மக்களுக்கானவர். கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே போராட்டம் தான் என்பார்கள். ஆனால் இனி அப்படியான நிலை இருக்காது.தூய்மை பணியாளர்கள் தங்களின் நிலையை சொல்லும் போதே கஷ்டமாக இருந்தது. அனைவருக்கும் சொல்கிறேன். உங்கள் முதல்வர் உங்களை கண்டிப்பாக கைவிட மாட்டார். லஞ்சம் பெறாமல் இருந்தாலே செழிப்பாக இருப்போம். இனி லஞ்சமே இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர்: அம்மிக்கல்லால் தாக்கி மூதாட்டி கொடூர கொலை- மகன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruchendur-old-woman-brutally-murdered-by-being-attacked-with-a-machete-son-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruchendur-old-woman-brutally-murdered-by-being-attacked-with-a-machete-son-arrested#comments</comments><guid isPermaLink="false">4334a54d-a214-4a6a-817d-e2fd16afdf48</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:35:46 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:35:46.111Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,Thoothukudi,தூத்துக்குடி,Tiruchendur,son arrested,மகன் கைது,மூதாட்டி கொலை,woman murdered</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/w9vwd4ed/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மூதாட்டி கொலை, மகன் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/w9vwd4ed/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்செந்தூர்</a> அருகே ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியையான தாயை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">அம்மிக்கல்லால் அடித்து கொலை</a> செய்து, அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் படம் அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மனநலம் பாதிப்பு, சிகிச்சை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் ஜெயா நகரைச் சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி ரேணுகா (வயது 62), ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார். இளைய மகன் தங்க பாலன்(27). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். </p><h2>அம்மிக்கல்லால் அடித்து மூதாட்டி கொலை</h2><p>நேற்று காலை அன்புமணி பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது வீட்டில் தாயுடன் தனியாக இருந்த தங்க பாலன், திடீரென வீட்லிருந்த அம்மிக்கல்லை எடுத்து, தாய் ரேணுகாவின் தலையில் அடித்து கொடூரமாகக் கொலை செய்தார். மேலும் இந்த சம்பவத்தை தனது அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் புகைப்படமாக எடுத்து அனுப்பி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.</p><h2>மகன் கைது</h2><p>இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருச்செந்தூர் தாலுகா போலீசார், உயிரிழந்த ரேணுகாவின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்ட தங்க பாலன் தற்போது அரசு மருத்துவமனையில் காவல் துறையினரின் கண்காணிப்பில் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - ஏற்பாடுகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-consecration-ceremony-preparations-in-full-swing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-consecration-ceremony-preparations-in-full-swing#comments</comments><guid isPermaLink="false">7186fe1c-5347-41db-98bf-5a60a9b4a3c7</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:23:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:23:53.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,கும்பாபிஷேக விழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/2vldh8gd/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/2vldh8gd/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கூட்ட நெரிசலை திறம்பட கையாள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். </p><p>இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும், விழா நடைபெறும் சமயத்தில் முதல்-அமைச்சர் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே கும்பாபிஷேக விழாவில் கூட்டம் அதிகரித்து காணப்படும் என்பதால், முதல்-அமைச்சரின் வருகையால் மேலும் கூட்ட நெரிசல் அதிகரிக்கக் கூடும்” என்று தெரிவித்தார். </p><p>முன்னதாக கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் மேலாண்மை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல் துறை, மின்சார வாரியம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். </p><p>இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், கும்பாபிஷேக விழாவில் கூட்டத்தை சீரமைக்கும் வகையில் கியூ.ஆர்.(QR) குறியீடுகளைக் கொண்ட ஹாலோகிராபிக் நுழைவுச் சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும், இது தொடர்பான முழுமையான அட்டவணை ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். </p><p>மேலும், “தற்காலிகக் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் விரிவான சி.சி.டி.வி. கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறைந்தது 8,000 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்படுகின்றன. முக்கிய வளாகத்திற்குள் நுழைய முடியாத பக்தர்களுக்காக பொது இடங்களில் எல்.இ.டி. (LED) திரைகள் அமைக்கப்படும்” என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் புதுப்பிக்கப்பட்ட வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opening-of-renovated-vandalur-butterfly-park-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opening-of-renovated-vandalur-butterfly-park-in-chennai#comments</comments><guid isPermaLink="false">f6ea51ce-a0c4-4455-8de7-713bf4751be4</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:08:50 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:08:50.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,திறப்பு,வண்டலூர் பூங்கா,Vandalur Park,வண்ணத்துப்பூச்சி,Butterfly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/ago0z3y5/butterfly-park.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் புதுப்பிக்கப்பட்ட வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/ago0z3y5/butterfly-park.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">வண்டலூா் </a>பூங்காவில் உள்ள புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று முதல் பார்வையாளர்களுக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.</p> <h2>ஜெயலலிதா</h2><p>சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஓட்டேரி எரிக்கு அருகே 2.7 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">வண்ணத்துப்பூச்சி </a>பூங்கா கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.</p> <h2>வண்ணத்துப்பூச்சி பூங்கா</h2><p>இன்று முதல் பார்வையாளர்களுக்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.  இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா, நீண்ட நாட்களாக புனரமைக்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பார்வையாளர்களை கவரும் வகையில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. </p> <h2>புதிய மேற்கூரை</h2><p> பூங்காவின் மையப்பகுதியில் உள்ள உட்புற அரங்கம் கம்பளிப்பூச்சி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதி முழுவதும் புதிய பாலிகார்பனேட் தாள்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. </p> <h2>பாதுகாப்பு வலைகள்</h2><p> பார்வையாளர்கள் வண்ணத்துப்பூச்சிகளை மிக அருகில் பாதுகாப்பாக ரசிக்கும் வகையில், துருப்பிடிக்காத இரும்பு வலைகள் மற்றும் புதிய மூங்கில் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  பார்வையாளர்கள் தங்களின் சொந்த ‘மெய்நிகர்’வண்ணத்துப்பூச்சிகளை டிஜிட்டல் திரையில் வடிவமைக்கும் புதிய தொழில்நுட்ப வசதி இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p> <h2>சனிக்கிழமை தோறும் சிறப்பு நிகழ்ச்சி</h2><p>வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்க 200-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் நடப்பட்டு, பூங்காவின் நீரூற்றுகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. !பூங்கா நிர்வாகத்தின் புதிய முயற்சியாக, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11:30 மணிக்கு வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிடும் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. </p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>இதில் பொதுமக்களும் நேரடியாக பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் வண்டலூர் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா ஒரு புதிய மற்றும் சிறந்த அனுபவமாக இருக்கும்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghat-districts-today-and-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghat-districts-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">75c75c43-ae73-42cc-9bb7-a963b6cdbdaa</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:03:35 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:03:35.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/02p4l8r3/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/02p4l8r3/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>22-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>23-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>22-08-2026 மற்றும் 23-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong>24-08-2026 முதல் 26-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>22-08-2026 மற்றும் 23-08-2026:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>24-08-2026 முதல் 26-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உதவியாளர் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assistant-demise-condolence-by-dmk-chief-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assistant-demise-condolence-by-dmk-chief-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">a44f4c29-4ae4-4fef-8012-c8f9f6f14f7a</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:00:36 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:00:36.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,மு.க. ஸ்டாலின்,தி.மு.க. தலைவர்,DMK President M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3ybimh6f/tnfcs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3ybimh6f/tnfcs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அவருடைய உதவியாளர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.</p><p>தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், என்னுடைய உதவியாளராக பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவெய்திய செய்தியால் மிகவும் மனம் வருந்தி நிற்கிறேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.</p>  <h2>சென்னை மேயர்</h2><p>நான் சென்னை மேயராக பொறுப்பு வகித்தபோது, மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி, பின்னர் அந்த பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, என்னுடைய உதவியாளராக நெடுங்காலம் பணியாற்றியவர் அவர். என் உழைப்புக்கு உறுதுணையாக, காலநேரம் பாராது - கண் துஞ்சாது அவர் பணியாற்றிய காட்சிகளெல்லாம் நினைவலைகளாய் என்னுள் எழுந்து, நெஞ்சத்தை கனக்க செய்கின்றன; துயரை அதிகரிக்கின்றன.</p><p>கடந்த சில ஆண்டுகளாக பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவர், அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று நீடுதுயில் கொண்டுவிட்டார்.  பழகுதற்கினிய குணம் கொண்ட ஹரிகிருஷ்ணனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன் என தெரிவித்து உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் 25-ம் தேதி மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-on-the-25th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-on-the-25th#comments</comments><guid isPermaLink="false">c418ef8e-3158-4246-83f5-5405efa973dd</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:58:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:58:18.008Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/14zltw56/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/14zltw56/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக வருகிற 25-ம் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் வருகிற 25.8.2026, செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான்குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயகபேரி, மீனவன்குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காணாமல் போன பூனை: கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவித்த குடும்பத்தினர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/missing-cat-family-offers-rs-50000-reward</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/missing-cat-family-offers-rs-50000-reward#comments</comments><guid isPermaLink="false">88a13dc0-5d61-46b0-9bfa-9e2536186c5d</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:44:21 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:44:21.164Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,Reward,பூனை,Cat,சன்மானம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/im34zujd/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/im34zujd/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோட்டில் காணாமல் போன பூனையை கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்குவதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.</p><h2>செர்பியன் இன பூனை</h2><p>ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் லாசர். இவருடைய மகள் ஆருத்ரா. இவர் கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். ஆருத்ரா செர்பியன் இன பூனை ஒன்றை வளர்த்துள்ளார். அந்த பூனையின் பெயர் ரோச்.</p><h2>திடீரென காணவில்லை</h2><p>சமீபத்தில் ஆருத்ரா ஈரோடு வந்துள்ளார். அப்போது அவருடைய செல்லபிராணி பூனையையும் உடன் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த பூனை திடீரென காணாமல் போனது. இதைத்தொடர்ந்து பூனையை பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் பூனை கிடைக்கவில்லை. இதனால் ஆருத்ரா மனமுடைந்தார்.</p><h2>ரூ.50 ஆயிரம் சன்மானம்</h2><p>இதையடுத்து ஜான் லாசர் சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'உரிமையாளர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் தனது அன்பான பூனைக்காக ஏங்கி கொண்டிருக்கிறார். எனவே தயவுசெய்து பூனையை கண்டுபிடிக்க உதவுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பூனையை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருவொற்றியூர்: கழிவு நீர் தொட்டியில் மணல் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-dies-after-sand-collapses-into-water-tank</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-dies-after-sand-collapses-into-water-tank#comments</comments><guid isPermaLink="false">1e46b430-fe7f-4c49-ae97-d3bbe9f8d069</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:32:11 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:32:11.751Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவொற்றியூர்,Police action,கழிவு நீர் தொட்டி,passed away,ஒப்பந்த ஊழியர்,shortness of breath</media:keywords><media:content height="417" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/iwz7z4f1/Untitled-1.jpg" width="717"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழந்த தொழிலாளி பூமிநாதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/iwz7z4f1/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருவொற்றியூர் பகுதியில் கழிவுநீர் தொட்டி பள்ளத்தில் மணல் சரிந்து விழுந்து ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.</p> <h2>தொழிலாளி உயிரிழப்பு </h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பூமிநாதன்(வயது 37). இவர் சென்னை மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளியாக கழிவுநீர் குழி தோண்டும் பணியினை செய்து வருகிறார். </p><p>இந்த நிலையில் திருவொற்றியூர் அருகே  புதிய கழிவு நீர் தொட்டி அமைப்பதற்காக 15 அடி ஆழமான குழி தோண்டப்பட்டு வந்தது. அப்போது பூமிநாதன் குழியினுள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக குழியின் மேல் இருந்த மணல் திடீரென சரிந்து அவர் மீது விழுந்தது. மணலுக்கு அடியில் சிக்கியதால் வெளியே மீண்டு வரமுடியாமல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D">மூச்சுத்திணறல்</a> ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பூமிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடைமுறைகள் பின்பற்ற பட்டதா என்ற பல்வேறு கோணத்தில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"> போலீசார்</a> விசாரணை செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆட்சி நடத்த கம்யூனிஸ்டுகள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? முதல்-அமைச்சர் விஜய்க்கு சண்முகம் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shanmugam-questions-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shanmugam-questions-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">9ce79aec-27a5-4e84-8d91-88a57ddba04f</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:54:22 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:54:22.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVKVijay,விஜய்,Chennai,போராட்டம்,Communist Party,கம்யூனிஸ்ட் கட்சி,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/h4d0rcy8/sanmygam33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ விஜய்க்கு சண்முகம் கேள்வி]]></media:title><media:description type="html"><![CDATA[ 
ஆட்சி நடத்த கம்யூனிஸ்டுகள் வேண்டுமா?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/h4d0rcy8/sanmygam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடரப் போகிறீர்களா? என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.</p><p>சமீபத்தில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்களை தகவல்களை திரட்டக்கோரி சுற்றறிக்கை அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் விதமாகவும் அறிவிப்பு வெளியானது கடுமையான எதிர்ப்புகளை கிளப்பியது. அதன்பின்னர் இந்த இரண்டு அறிவிப்புகளும் திருப்பி பெறப்பட்டது.</p><p>இந்நிலையில் இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைதாப்பேட்டையில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், சிபிஎம் சார்பில் இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.</p><p>இடதுசாரி மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தலைமை செயலாளர் தலைமையிலான கூட்டத்தின் அடிப்படையில் தான் கல்லூரி கல்வி ஆணையர் இத்தகையை சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு சம்பவம் அனேகமாக எங்குமே நடந்தது இல்லை.</p><p>ஆகவே தமிழ்நாடு தலைமை செயலாளரின் இந்த செயல்பாடு சட்ட விரோதமானது. வனமையான கண்டனத்துக்கு உரியது. அவர் தலைமை செயலாளராக நீடிப்பதற்கு தகுதி இல்லாதவர். உடனடியான அவர் பதவில் இருந்து அகற்றப்பட வேண்டியவர். சட்டமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விவாதத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. தவறுதலாக நடந்துள்ளதாக அவர் பேசியுள்ளது ஏற்கத்தக்கது இல்லை.</p><p>இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் உண்டு அதோடு தலைமை செயலாளர் பதவி நீட்டில் தான் உள்ளார். எனவே அவரை பொறுப்பில் இருந்து நீக்கி, திறமை வாய்ந்த அதிகாரியை பணியில் அமர்த்த வேண்டும்.</p><p>அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடரப் போகிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.</p>]]></content:encoded></item><item><title>கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள் - நயினார் நாகேந்திரன் சாடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tavega-executives-turning-into-hired-gang-leaders-nainar-nagendran-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tavega-executives-turning-into-hired-gang-leaders-nainar-nagendran-criticism#comments</comments><guid isPermaLink="false">b462c7cd-cdb1-4388-b32f-6d67b712f4d0</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:52:01 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:52:01.109Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/hh867xfg/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/hh867xfg/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தனது கட்சிக்குள் “நிர்வாகிகள்” என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>கேளம்பாக்கம் அருகே தையூரில் தவெக நிர்வாகியான ஏழுமலை என்பவர் தனது மகளின் காதலனை கூலிப்படை ஏவி கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.</p><p>விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், தவெக நிர்வாகிகளின் அராஜகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், ரவுடியிசம், மாமூல் பிரச்சினைகள் என ஒரு பெரிய சட்டவிரோத வலையமைப்பே தவெகவிற்குள் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆனால், கட்சித் தலைமை அதை கவனிக்க மறுப்பது கண்டனத்திற்குரியது.</p><p>ஒரு பிரச்சினை நடந்த பிறகு நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதும், கைது செய்வதும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே என்பதை ஜோசப் விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும். தனது கட்சிக்குள் “நிர்வாகிகள்” என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்?’ - தமிழக அரசுக்க்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-the-hesitation-to-release-the-thirupugazh-committee-report-anbumani-ramadoss-questions-the-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-the-hesitation-to-release-the-thirupugazh-committee-report-anbumani-ramadoss-questions-the-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">c56cb2d8-637a-4fb7-ad76-275633170720</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:38:46 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:38:46.891Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/p37j0u17/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/p37j0u17/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய திருப்புகழ் குழு அறிக்கை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று த.வெ.க. அரசு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பேரிடரிலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான மிகவும் முக்கியமான ஓர் ஆவணம் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அரசு பதிலளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணி, சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 41 மாதங்களாகியும் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி, அதை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரினார்.</p><p>அதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், ‘‘திருப்புகழ் குழுவின் அறிக்கையை தி.மு.க. அரசு வெளியிட்டிருக்க வேண்டும்; ஆனால், ஏன் அவர்கள் வெளியிடவில்லை என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பத்திரிகை செய்திகள் வந்ததை மட்டும்தான் பார்த்தோம். இப்போது வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க வருவாய் நிர்வாக ஆணையர்  முருகானந்தம் தலைமையில் 7 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். </p> <p>மழை, வெள்ளத்திலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கையை தி.மு.க. அரசு வெளியிடாதது தவறு; அதை நாங்கள் உடனடியாக வெளியிடுவோம் என்பதாகத்தான் அமைச்சரின் பதில் இருந்திருக்க வேண்டும். அத்தகைய பதில் அரசிடமிருந்து வராதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.</p><p>2021-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழையும், அதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமும் மறக்க முடியாத கொடுமையான நிகழ்வுகள். அதைத் தொடர்ந்து சென்னையில் எத்தகைய வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழுவை திமுக அரசு அமைத்தது. அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை 2022-ம் ஆண்டு மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023- மார்ச் 14-ம் தேதியும் அரசிடம் தாக்கல் செய்தது.</p><p>நான் அறிந்தவரை திருப்புகழ் குழுவின் அறிக்கையில் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன; அவற்றை செயல்படுத்தியிருந்தாலே சென்னையில் எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும். இத்தகைய  அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போது, அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திருப்புகழ் குழுவை அமைத்த தி.மு.க. அரசே, ஏதோ காரணங்களுக்காக திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்தது. அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி பல தருணங்களில் வினா எழுப்பிய போது, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருப்புகழ் குழு அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன; மொத்தமுள்ள 161 பரிந்துரைகளில் 101 செயல்படுத்தப்பட்டு  வருவதாகத் தெரிவித்தார். ஆனால், செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகளும் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.</p><p>என்னாலும், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வல்க்லுனர்களாலும் புரிந்து கொள்ள முடியாத உண்மை என்னவென்றால், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு, விரிவான ஆய்வுகளின்  அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திருப்புகழ் குழுவை வெளியிட முடியாத அளவுக்கு அதில் என்ன ரகசியம் இருக்கிறது என்பதுதான்? மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையை  யாருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு கிடப்பில் போட்டது என்பது தான்?</p><p>திருப்புகழ் குழுவின் அறிக்கை என்பது கடையில் வாங்கப்பட்ட புத்தகம் அல்ல. 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு  பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதற்காக கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை எந்த வகையிலும் வீணடிக்கப்படக் கூடாது.</p> <p>சென்னையில் இனி வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு திருப்புகழ் குழுவின் அறிக்கையை செயல்படுத்துவதுதான். அந்த அறிக்கையை திமுக வெளியிடாமல் இருந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், தவெக அரசுக்கு அத்தகைய காரணங்கள் எதுவும்  இல்லை. முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு உரையாற்றிய முதல்-அமைச்சர் விஜய், எனது அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று அறிவித்தார். அதை வெளிப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பு திருப்புகழ் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதுதான்.</p><p>திருப்புகழ் குழு அறிக்கையை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நகராட்சி நிர்வாகத்துறையை முதல்-அமைச்சர் விஜய் தான் நிர்வகித்து வருகிறார். அதனால், திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதற்கான முன்முயற்சிகளை முதல்-அமைச்சரே மேற்கொள்ள வேண்டும். தி.மு.க. அரசின் தவறுகளை தமது அரசு திருத்தி வருவதாகக் கூறி வரும் முதல்-அமைச்சர், தி.மு.க.வின் இந்தத் தவறையும் திருத்த வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 50 நாள்களே உள்ளன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்; மீண்டும் ஒருமுறை சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடக்கூடாது என வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கார் தேவையில்லாத எம்.எல்.ஏ.க்களின் நிதியை சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் சேர்க்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/funds-allocated-for-cars-for-mlas-who-do-not-require-them-should-be-diverted-to-the-legislative-assembly-development-fund-er-eswaran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/funds-allocated-for-cars-for-mlas-who-do-not-require-them-should-be-diverted-to-the-legislative-assembly-development-fund-er-eswaran-urges#comments</comments><guid isPermaLink="false">355dca71-679e-4384-95a7-f3e32fe085b3</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:25:59 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:25:59.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Car,கார்,எம்.எல்.ஏ,fund,தொகுதி மேம்பாட்டு நிதி,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Eswaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7sjnju7g/145.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈ.ஆர்.ஈஸ்வரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7sjnju7g/145.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கார் தேவையில்லாத எம்.எல்.ஏ.க்களின் நிதியை சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் சேர்க்க வேண்டும் என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>தமிழக சட்டமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது பற்றி முதல்-அமைச்சர் அறிவிப்பும், பல தரப்பட்ட விவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் விமர்சனங்களும், மாறுபட்ட கருத்துக்களும் நிலவிக் கொண்டிருக்கிறது. </p><h2>தமிழக அரசு</h2><p>இந்த சூழ்நிலையில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வசதி இருக்கின்றன கார் தேவை இல்லை என்று நேர்மையாக பொது வாழ்வின் மீது பற்று கொண்டு அறிவித்திருக்கிறார்கள். </p><p>அதை தமிழக அரசு ஆக்கபூர்வமான கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு காருக்காக நிதி கொடுக்க முன்வந்தும் அதை வேண்டாமென்று கூறியிருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திலே பாராட்ட வேண்டும். </p><h2>நிதி</h2><p>கார் தேவையில்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காருக்கான நிதியை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்காக சேர்க்க வேண்டும். அவரவர் சட்டமன்ற தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக அந்த நிதியை சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். </p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/car">கார் </a>பெறுவதை தவிர்ப்பதை அரசின் மீது உள்ள விமர்சனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;குட்கா கடத்தியவர்களுக்கு ஆதரவு&apos;- இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiding-gutkha-smugglers-3-police-personnel-including-an-inspector-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiding-gutkha-smugglers-3-police-personnel-including-an-inspector-suspended#comments</comments><guid isPermaLink="false">4db33334-6337-4eec-9838-aca12966f225</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:16:04 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:16:04.695Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,police,தமிழகம்,சஸ்பெண்ட்,suspend,Thanjavur,தஞ்சாவூர்,Inspector,இன்ஸ்பெக்டர்,போலீசார்,Gutka,குட்கா கடத்தல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/dr0lw69v/nirem.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/dr0lw69v/nirem.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>குட்கா வழக்கை முறையாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். </p><h2>இரவு ரோந்து பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/தஞ்சாவூர்">தஞ்சையை</a> அடுத்த சாலியமங்கலம் அருகே இரும்புதலை பகுதியில் காரில் இருந்து குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனைக்காக சப்ளை செய்யப்படுவதாக கடந்த 10-ந் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் (வயது45) தலைமையிலான போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் தன்னுடன் ஏட்டு கவுதமன் (35), போலீஸ்காரர் அழகர்சாமி (37) ஆகியோரை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.</p><h2>போதைப்பொருள் பறிமுதல்</h2><p>அங்கு குட்கா போன்ற போதைப்பொருட்களுடன் நின்று கொண்டிருந்த அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (45), மற்றும் முருகன் (48), ஆகிய 2 பேரையும் பிடித்து அவர்களிடம் இருந்து சுமார் 73 கிலோ குட்கா போன்ற போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் குட்காவுடன் 2 பேரையும் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். மறுநாள் காலையில் அவர்களிடம் எந்தவித விசாரணையும் செய்யாமல் போலீஸ் நிலையத்தில் இருந்து அனுப்பிவிட்டனர்.</p><h2>ஆதாயம் அடையும் நோக்கத்தில்</h2><p>குட்கா பறிமுதல் செய்த வழக்கில் சரியாக விசாரணை செய்யாததுடன், குட்கா கடத்தியவர்களுக்கு ஆதரவாக போலீசாரே செயல்பட்டு இருப்பதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கவனத்திற்கு உளவுபிரிவு போலீசார் கொண்டு சென்றனர். </p><p>இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குட்கா கடத்தியவர்களிடம் சரியாக விசாரணை நடத்தாமல், அவர்களிடம் ஆதாயம் அடையும் நோக்கத்தில் போலீசாரே விடுவித்தது தெரியவந்தது.</p><h2>காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்</h2><p>உடனே குட்கா கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து குட்கா கடத்தியதாக ஆறுமுகம், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் கடந்த 13-ந் தேதி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.</p><p>இதைத்தொடர்ந்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, போலீஸ் இன்ஸ் பெக்டர், அவருக்கு துணையாக இருந்த ஏட்டு, போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பரிந்துரை செய்தார்.</p><h2>சஸ்பெண்ட்</h2><p>அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், ஏட்டு கவுதமன், போலீஸ்காரர் அழகர்சாமி ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் உத்தரவு பிறப்பித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் இனிய சென்னை தின நல்வாழ்த்துகள் - அண்ணாமலை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-madras-day-to-everyone-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-madras-day-to-everyone-annamalai#comments</comments><guid isPermaLink="false">a44d4b7c-34bd-4806-96f5-966927e46348</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:13:43 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:13:43.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,Chennai,சென்னை,Chennai Day,சென்னை தினம்,Madras Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/4vkm9npf/annamalai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/4vkm9npf/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகரம் இன்று (ஆகஸ்டு 22) தனது 387-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த நிலையில்,  வருங்கால தலைமுறைக்கு பசுமையான சென்னையை பரிசளிப்போம் என 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை சென்னை தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சென்னை தின நல்வாழ்த்துகள்</h2><p>வரலாற்றையும், பாரம்பரியத்தையும், நவீனத்தையும் ஒருங்கே கொண்டிருக்கும் சென்னை மாநகரில் வசிக்கும் அனைவருக்கும், இனிய சென்னை தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அன்பும் அரவணைப்பும், கலையும், கல்வியும், அனைவரின் பங்களிப்பும் இணைந்து உருவாக்கிய நமது சென்னை மாநகரம், நம்பி வந்தவர்களை தன்னுடையவர்களாக ஏற்றுக் கொள்ளும் தனிச்சிறப்பு கொண்டது. சென்னை என்பது ஒரு பெயர் மட்டுமல்ல, அது ஒரு உணர்வு.</p><h2>பசுமையை மீட்டெடுப்போம்</h2><p>ஆனால் நாளுக்கு நாள் குறைந்து வரும் பசுமையும், அதிகரித்து வரும் வெப்பமும் சென்னையின் எதிர்காலம் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது. இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>தினத்தில், ஒவ்வொரு சென்னை மக்களும் ஒரு உறுதி எடுத்துக்கொள்வோம். முடிந்தவரை பல மரங்களை வளர்ப்போம். நம் தெருக்கள், வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள் என ஒவ்வொரு இடத்திலும் பசுமையை மீட்டெடுப்போம். வருங்கால தலைமுறைக்கு பசுமையான சென்னையை பரிசளிப்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் வெற்றித் தலைநகராக திகழும் நம் சென்னை: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/our-chennai-stands-as-the-capital-of-success-for-tamil-nadu-chief-minister-vijay-extends-his-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/our-chennai-stands-as-the-capital-of-success-for-tamil-nadu-chief-minister-vijay-extends-his-wishes#comments</comments><guid isPermaLink="false">438c655a-3a33-4fec-9266-7269fa6870ef</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:50:20 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:50:20.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,Chennai,சென்னை,தமிழகம்,வாழ்த்து,Chennai Day,சென்னை தினம்,Wishes,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3w40vhfj/chennai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3w40vhfj/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளை, இன்று (சனிக்கிழமை) கொண்டாடி வருகிறது. </p><h2>சென்னை நாள்</h2><p>இந்நிலையில் சென்னை நாளை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையை போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்”  நல்வாழ்த்துகள்!</p><h2>சிறப்பான வளர்ச்சி</h2><p>வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.</p><h2>சென்னையை மேலும் உயர்த்துவோம்</h2><p>சென்னையின் வரலாற்று பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம்.  அனைவருக்கும் சமவாய்ப்பும்,  பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம். </p><p>வளரட்டும் சென்னைப் பெருநகரம்!</p><p>உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்!<br><br>வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம்,… <a href="https://t.co/8CNCLndNO9">pic.twitter.com/8CNCLndNO9</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2091060899956289777?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>சமயோஜித புத்தியால்...பெரும் விபத்தை தடுத்த ஓட்டுநர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-prevents-major-accident-through-quick-thinking</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-prevents-major-accident-through-quick-thinking#comments</comments><guid isPermaLink="false">1c3b3812-a44a-410d-8f36-230ce1ae18fc</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:34:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:34:17.528Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Fire,lorry,லாரி,திருத்தணி,தீப்பற்றி</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/b9pie770/37.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ தீப்பற்றிய லாரி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஓட்டுநரால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/b9pie770/37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி,</p><p>ஓடிக்கொண்டிருந்த லாரியில் தீ வேகமாகப் பரவிய நிலையில், ஓட்டுநர் மேற்கொண்ட சமயோஜித நடவடிக்கையால் பெரும் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.</p><h2>திடீர் தீ விபத்து</h2><p>திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல்  லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீப்பிடித்து</a> குபு குபுவென எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், என்ஜின் பகுதியில் பற்றிய தீ மிக வேகமாக வாகனத்தின் மற்ற பகுதிகளுக்கும், பின்னால் இருந்த சரக்கு பெட்டகத்திற்கும் பரவத் தொடங்கியது.</p><h2>ஓட்டுநரின் சாதுரிய செயல்</h2><p>தீப்பற்றியதை உணர்ந்த ஓட்டுநர், சற்றும் பதற்றமடையாமல் உடனடியாக வாகனத்தை சாலையோரமாக நிறுத்தினார். தீ மற்ற பகுதிகளுக்குப் பரவினால் முழு வாகனமும் எரிந்து சாம்பலாகிவிடும் என்பதையும், பின்னால் இருக்கும் பகுதிக்குத் தீ பரவினால் ஆபத்து அதிகம் என்பதையும் அவர் நொடிப்பொழுதில் உணர்ந்தார். உடனே துணிச்சலுடன் செயல்பட்ட அவர், லாரியின் கேபின் மற்றும் என்ஜின் பகுதியை, பின்னால் இருந்த சரக்கு ஏற்றிச் செல்லும் பகுதியிலிருந்து தனியாகப் பிரித்துவிட்டார்.</p><h2>தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து</h2><p>ஓட்டுநர் என்ஜின் பகுதியை தனியாகப் பிரித்து அப்புறப்படுத்தியதால், பின்னால் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்களும், வாகனத்தின் பெரும் பகுதியும் தீயில் கருகாமல் முழுமையாகக் காப்பாற்றப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D"> தீயணைப்புத் துறையினர்</a>, என்ஜின் பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>ஓட்டுநரின் இந்த விரைவான மற்றும் சமயோஜிதமான செயலால் எவ்வித உயிர்ச்சேதமும் இன்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு காரணமாக இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்து</a> ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நெருக்கடியான நேரத்தில் பதற்றப்படாமல் சாதுரியமாகச் செயல்பட்டு பெரும் விபத்தைத் தடுத்த ஓட்டுநருக்கு பொதுமக்களும், அதிகாரிகளும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இளம்பெண்ணை ஏமாற்றியதாக இன்ஸ்பெக்டர் மீது புகார்: 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-against-inspector-for-deceiving-a-young-woman-case-registered-under-five-sections</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-against-inspector-for-deceiving-a-young-woman-case-registered-under-five-sections#comments</comments><guid isPermaLink="false">82d899e2-5bcc-46b3-a5b1-cf0657b85766</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:29:16 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:29:16.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,young woman,வழக்குப்பதிவு,டி.ஐ.ஜி,Inspector,இன்ஸ்பெக்டர்,Complaint,பணியிடை நீக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3mual0u1/143.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணியிடை நீக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3mual0u1/143.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த அருண்குமார் (40), மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய புகாரில் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>மதுரையைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுடன் இன்ஸ்பெக்டர் அருண்குமாருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவர் தன்னை ஏமாற்றியதாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இந்தப் புகாரின் அடிப்படையில், வீரவநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருண்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இளம்பெண்ணை ஏமாற்றியது மற்றும் அச்சுறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், அவர் மீது மொத்தம் 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">இன்ஸ்பெக்டர்</a> அருண்குமாரைப் பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கிராமப்புற மாணவர்களின் கல்விச் சேவைக்கு தேசிய விருது - ஆசிரியர் தங்கராஜுக்கு  நயினார் நாகேந்திரன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-award-for-educational-service-to-rural-students-nainar-nagendran-praises-teacher-thangaraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-award-for-educational-service-to-rural-students-nainar-nagendran-praises-teacher-thangaraj#comments</comments><guid isPermaLink="false">69a01e21-97c1-48c6-87fd-cab2739565c5</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:28:02 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:28:02.333Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பாராட்டு,praises,தேசிய நல்லாசிரியர் விருது,National Award for Teachers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/njej90d3/81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/njej90d3/81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தேசிய நல்லாசிரியர் விருது</h2><p>தமிழகத்தின் தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் , மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81">தேசிய நல்லாசிரியர் விருது</a>க்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டின் கல்விப் பெருமைக்கு கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரம்! வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான ஆசிரியர் தினத்தன்று, குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு அவர்களின் கரங்களால் விருது பெறவிருப்பது, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வு!</p><h2>மனமார்ந்த பாராட்டு</h2><p>கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, ஆசிரியர் பணியின் மகத்துவத்தை நாடறியச் செய்துள்ள தங்கராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!</p><p>தேசிய அளவில் தமிழகத்தின் கல்வித் தொண்டை அங்கீகரித்து, நல்லாசிரியர்களை கௌரவிக்கும் மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும்,  மத்திய கல்வி மந்திரி பிரகலாத் ஜோஷி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 7 மாநகரங்களில் ‘டவுன் ஹால்’ கூட்டங்கள்: மாணிக்கம் தாகூர் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/town-hall-meetings-in-7-cities-across-tamil-nadu-manickam-tagore-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/town-hall-meetings-in-7-cities-across-tamil-nadu-manickam-tagore-announces#comments</comments><guid isPermaLink="false">ba4291c4-9d12-4042-b289-44681b70e84a</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:26:31 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:26:31.511Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,தமிழ்நாடு காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,tamilnadu congress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/ph8tjeku/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/ph8tjeku/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி கட்சியினர் எழுப்பிய பிரச்சினைகள் குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்தும் தமிழக மக்களிடையே விளக்குவதற்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தில் </a>7 மாநகரங்களில் ‘டவுன் ஹால்’ கூட்டங்கள் நடைபெற உள்ளதாக மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>7 மாநகரங்களில் கூட்டம்</h2><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெற்ற போது, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ பதில் தர முன்வரவில்லை. குறிப்பாக, தலைநகர் டெல்லியில், நீட் வினாத்தாள் கசிவு குறித்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் பெல்லட் துப்பாக்கி குண்டுகளை ஏவி, தடியடி நடத்திட யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்விக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ பதில் தர முன்வரவில்லை.</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி கட்சியினர் எழுப்பிய பிரச்சினைகள் குறித்தும் அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்தும் தமிழக மக்களிடையே விளக்குவதற்கு, மாநகரங்களில் ‘டவுன் ஹால்” என்ற தலைப்பில் விளக்க கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 7 மாநகரங்களில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கீழ்க்கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.</p><h2>நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு</h2><p>22.08.2026 அன்று காலை 11.00 மணிக்கு கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கே. சுப்பராயன், செல்வி எஸ். ஜோதிமணி, விஜய் வசந்த்</p><p>23.08.2026 அன்று மாலை 3.00 மணிக்கு திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் துரை வைகோ, செல்வராஜ், கிறிஸ்டோபர் திலக்</p><p>24.08.2026 அன்று காலை 11.00 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறும் கூட்டத்தில் கார்த்தி ப. சிதம்பரம், துரை வைகோ, சி. ராபர்ட் புரூஸ்</p><p>27.08.2026 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் ப. சிதம்பரம், எஸ். ரவிக்குமார், பிரவீன் சக்கரவர்த்தி</p><p>28.08.2026 அன்று காலை 11.00 மணிக்கு வேலூரில் நடைபெறும் கூட்டத்தில் சசிகாந்த் செந்தில், வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன்</p><p>29.08.2026 அன்று காலை 11.00 மணிக்கு சேலத்தில் நடைபெறும் கூட்டத்தில் சச்சிதானந்தம், டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத்</p><p>29.08.2026 அன்று காலை 11.00 மணிக்கு மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் ப. சிதம்பரம், சு. வெங்கடேசன், நவாஸ்கனி</p><p>மாநகரங்களில் நடைபெறும் டவுன் ஹால் கூட்டங்களை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இந்தியா கூட்டணி கட்சியினரோடு இணைந்து கூட்டம் சிறப்பாக நடத்திட ஒருங்கிணைப்புப் பணிகளை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் நாட்டின் நலனிலும், மக்கள் பிரச்சினைகளிலும் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் எந்த அளவிற்கு சர்வாதிகார, ஜனநாயக உணர்வில்லாத பா.ஜ.க.வினரோடு எத்தகைய போராட்டங்களை நடத்தினார்கள் என்பதை தமிழக மக்கள் அறிவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இக்கூட்டங்கள் அமைய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் குறைந்தது - விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-water-level-in-varattupallam-dam-drops-farmers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-water-level-in-varattupallam-dam-drops-farmers-concerned#comments</comments><guid isPermaLink="false">2d824e6f-6608-41fe-8b03-99bc663c81e0</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:17:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:17:03.375Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,வரட்டுப்பள்ளம் அணை,Varattupallam Dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/0z4bllug/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/0z4bllug/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. 33.46 அடி நீர்மட்டம் உயரம் கொண்ட இந்த அணைக்கு பர்கூர் மலைப்பகுதியே நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணை நிரம்பும்போது அதன் உபரி தண்ணீர் கெட்டி சமுத்திரம் ஏரி, அந் தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்லும். இதன் மூலம் ஏராளமான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக அமைந்துள்ளது. </p><p>இது தவிர வரட்டுப்பள்ளம் வனப்பகுதியில் உள்ள விலங்குகளும் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதிக்கு வந்தே தண்ணீர் குடித்து செல்லும். இந்தநிலையில் இந்த ஆண்டு பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 33.46அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 14.96 அடியே உள்ளது. பருவமழை பெய்யுமா? வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வருமா? என்று விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தையூரில் இளைஞர் ஆணவக் கொலை: நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/honor-killing-of-a-young-man-in-thaiyur-neelam-cultural-centre-condemns-the-incident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/honor-killing-of-a-young-man-in-thaiyur-neelam-cultural-centre-condemns-the-incident#comments</comments><guid isPermaLink="false">a3ec09cb-b3c8-4698-b165-8ff4e404daf7</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:10:38 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:10:38.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இளைஞர்,ஆணவக் கொலை,Honor Killing,சாதி வெறி,incident,A young man- வாலிபர்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3ewy088l/36.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பிரவீன் குமார் -  பா.இரஞ்சித்தின்]]></media:title><media:description type="html"><![CDATA[ நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3ewy088l/36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தையூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் பிரவீன் குமார் கூலிப்படையால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ‘நீலம் பண்பாட்டு மையம்’ தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><h2>இளைஞர் படுகொலை</h2><p>தையூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். அதற்கு அப்பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவீன் குமார் ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டப்பட்டார். ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>4 பேர் கைது</h2><p>அக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருப்போரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தொடர்புடைய தையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, மணிகண்டன், நந்தீஸ், கவுதம் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரைத் தேடி வருகின்றனர்.</p><h2>முற்றுகைப் போராட்டமும் போக்குவரத்து பாதிப்பும்</h2><p>பிரவீன் குமாரின் மரணச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் திரண்டனர். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரியும், ஆணவக் கொலைக்கு நீதி கேட்டும் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டம் </a>தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.</p><h2>நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்</h2><p>இச்சம்பவம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">நீலம் பண்பாட்டு மையம்</a>’ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவக் கொலைகள் சமூகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தையூர் பிரவீன் கொலைக்குக் காரணமான பின்னணியில் உள்ள அனைவரையும் தப்பவிடாமல் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், இதுபோன்ற சாதி வெறிப் படுகொலைகளைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாக ‘<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">ஆணவக் கொலை </a>தடுப்பு தனிச்சட்டம்’ இயற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;கம்பேக் கொடுப்பதில் நாம் ஸ்பெஷலிஸ்ட்..! அதை சிறப்பாக கொடுப்போம்!&quot;  - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-specialists-in-making-a-comeback-we-will-do-it-in-grand-style-dmk-president-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-specialists-in-making-a-comeback-we-will-do-it-in-grand-style-dmk-president-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">02730b37-0551-49d0-826e-2f1d7c83792b</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:09:00 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:09:00.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,Chennai,சென்னை,தமிழகம்,செயற்குழு கூட்டம்,Anna Arivalayam,அண்ணா அறிவாலயம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/9ed4hdx1/dmkmkm.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/9ed4hdx1/dmkmkm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. கழகத்தின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக எடுத்துக் கொள்வோம் என்று தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">தலைவர் மு.க.ஸ்டாலின்</a> தெரிவித்தார். </p><h2>75 ஆண்டுகள் கடந்த பிறகும்</h2><p>தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. </p><p>பின்னர் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-</p><p>நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பாரக்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. கழகத்தின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக எடுத்துக் கொள்வோம். </p><p>கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது. உங்களின் ஒப்புதலுடன் கழகத்தின் அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த பிறகும், கழகம் வலிமையோட இருப்பதற்கான காரணம், நம் அமைப்புமுறை தான்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/qz1ovx1x/aman.jpg" /></figure><h2>திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்வு முடியாது</h2><p>கலைவர் கலைஞரின் வரிகளை நீங்க மறந்திருக்க மாட்டீர்கள். “இந்த கருணாநிதியின் வாழ்வு முடிந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்வு முடியாது! அதனை, அதன் அமைப்புமுறை காப்பாற்றும்!”. இதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது. அப்படிப்பட்ட அந்த அமைப்பு முறையின் வலிமையாலதான், நாம் நிற்கிறோம்.</p><p>நாம் தோல்வியடைய பல காரணங்கள் இருப்பினும் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று. அதையும் நாம் மறைக்கத் தேவையில்லை. நம் தவறுகளை முதலில் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டும். எந்தத் தனிமனிதரின் தவறாக இருந்தாலும் - அதனால் பாதிக்கப்படுவது எழுபத்தைந்தாண்டு காலக் கழகம்.</p><h2>சுய பரிசோதனை</h2><p>தோல்விக்கு பிறகு, எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியாக பார்த்து குறைகளைக் கண்டறிந்து ஆளை மாற்றுவதைவிட முழுமையான ஒரு சுய பரிசோதனை வேண்டும் என முடிவெடுத்தேன். அந்த வகையில் கழகத்தின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம். கடுமையானதாகத்தான் இருக்கும்; சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும். கசப்புதான் உடலுக்கு நன்மை செய்யும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். </p><p>இந்த மாறுதல்கள் அடுத்த நூறாண்டுக்கு கழகம் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்யும். தேர்தல் தோல்விக்கு பிறகு, 38 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை அமைத்தேன்.  தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்டு அதை அறிக்கையாக கொடுத்திருக்கிறார்கள். அது தவிர, தனியாக இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலமும் பல்லாயிரக்கணக்கான கருத்துகள் பெறப்பட்டு, இவை அனைத்தையும் தொகுத்து நான் முழுமையாக வாசித்து உள் வாங்கியிருக்கிறேன்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/au33iygf/dlsjrjwe.jpg" /></figure><h2>புதிய உறுப்பினர் சேர்க்கை</h2><p>ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம். இந்தக் கருத்துகளின் அடிப்படையில - திட்டங்களை வகுக்க, தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில, மறுசீரமைப்புக் குழுவை அமைத்தேன்.</p><p>அந்தக்குழு அறிவாலயத்தில்  பல நாள் கூடி, ஒவ்வொரு பிரச்சனையாக ஆய்வு செய்து, இடைக்கால அறிக்கையை என்னிடம் கொடுத்தார்கள். முக்கியமான தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தீர்மானமாக உருவாக்கியுள்ளோம். இளைஞர்கள், பெண்கள் நம்பிக்கையை மீண்டும் நமக்கு  பெற்றுத் தருவது போல நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.</p><p>இனி வரும் நிர்வாகிகளுக்கு,  அந்தந்த பொறுப்புகளுக்கு ஏற்ப வயது வரம்பையும், பதவிக்காலத்தையும் அறிமுகப்படுத்த போகிறோம். புதுமுகங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் பொறுப்புகளை வழங்கப் போகிறோம். விரைவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நாம் தொடங்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கை நேர்மையானதாக - உண்மையானதாக அமைய வேண்டும். </p><h2>கட்சி மறுசீரமைப்பு</h2><p>உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு அனைத்து மட்டத்திலும் உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்துவோம். தகுதி வாய்ந்த புதிய நிர்வாகிகள் வெற்றி பெற்று வருவார்கள். நியமனங்களாக இல்லாமல் தேர்தல் மூலமாக வெல்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. கட்சியை மறுசீரமைப்பு செய்வது மூலமாக மட்டும்தான், நாம் மீண்டும் அரசியல் வெற்றியை பெற முடியும்.</p><p>எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக கட்சி சீரமைப்புகளைச் செய்ய வேண்டும். அதற்கு முதலில் நமக்கு மனமாற்றம் வர வேண்டியது அவசியம். மாறுதலுக்குத் தயார் ஆகாமல் வெற்றி பெற முடியாது. என்னுடைய வருத்தமெல்லாம், கொள்கை – கோட்பாட்டில், உழைப்பில் – உறுதியில், போராட்டக் குணத்தில் வலிமையாக இருக்கிறவர்கள் கூட  நிர்வாகிகளை அரவணைப்பதில் சறுக்கிவிடுகிறார்கள். </p><p>இன்னும் சிலர் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிக்காரர்களைப் பாத்தால் மலரும் முகம், நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலர்வது இல்லை. எதிர்க்கட்சிக்காரர்களைப் பாத்தால் வணங்கும் கை, நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் வணங்குவது இல்லை. தனக்கு இணையாக யாரும் வளரக் கூடாது என நினைத்தால் அந்த மாவட்டத்தில அவர்கள் மட்டும்தான் இருப்பார்கள்.</p><h2>Bore அடிக்கிறது என அரசியலுக்கு வரவில்லை</h2><p>ஒரு மாவட்டச் செயலாளரை மட்டும் வைத்து அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிட முடியாது. ஒரு MLA மட்டுமே வலிமையாக இருந்தால் அந்தத் தொகுதியில் வென்றுவிட முடியாது. ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாக செயல்படும் போதுதான் இயக்கம் வளரும்; இயக்கம் வாழும்! </p><p>படைக்கு இளையோர் வரும்போது, அவர்களை மூத்தோர் வரவேற்று வழி நடத்துவதுதான் வலுவான படைக்கு  அடையாளம். இப்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? மக்களுக்காக உழைக்காமல் - போராட்டம் நடத்தாமல் - கொள்கை இல்லாமல் - நிர்வாகக் கட்டமைப்பு இல்லாமல் - ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதை பார்த்து நாமும் அப்படி ஆக முடியாது - ஆகிடவும் கூடாது! அது போன்று நாமும் கட்சியை நடத்தலாம் என்று நினைக்கவே கூடாது. </p><p>நாம் நிரந்தரம்! நாம் Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்கள இல்லை – போராட வந்தவர்கள்! வெற்றி தோல்வியில் நம் இயக்கத்தின் வாழ்க்கை அடங்கி இருக்கப் போவது இல்லை. ஒரு தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தல் வரும் வரை தூங்கி வழிவதுதான் மற்ற கட்சிகளின் வழக்கம். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/npygu0nu/ererer.jpg" /></figure><h2>Comeback கொடுப்பதில் நாம் Specialist</h2><p>எதிர்கட்சியாக இருந்தாலும் சுணங்கிடாமல், மக்கள் நலனுக்காக சிறப்பாகச் செயல்படும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என நம் எதிரிகளே சொல்வார்கள். Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! </p><p>கடந் முறை வென்ற பிறகு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நல்லாட்சி கொடுப்போம் எனச் சொன்னோம்; அதைச் செய்தும் காட்டினோம். இப்போது தோற்ற பிறகும் நான் சொல்கிறேன், நமக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் போராட போகிறோம். அவர்களின்  நலனுக்கும் துணைநிக்க போகிறோம். </p><p>நம் கட்சிக்காரர்கள் முதலில் அவர்கள் வீட்டில் அரசியல் பேச வேண்டும். நம் பிள்ளைகள், நம் உறவினர்களிடம் முதலில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். நம் உறவினர்கள், அக்கம்பத்தினர் வாக்குகளை முழுமையாக வாங்க வேண்டும். இப்போதைய முதலமைச்சர் நாம் கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிசியாக இருக்கிறார்.</p><h2>கருப்பு சிவப்புக் கொடி</h2><p>சட்டப்பேரவையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். நம்மை பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ, மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவர்கள் நாம். இனமும் - மொழியும் - நாடும் இருக்கும் வரை கருப்பு சிவப்புக் கொடி . பறக்க வேண்டும் என்ற நினைப்புடன் நாம் உழைக்க வேண்டும்.</p><p>அப்படி, உழைக்கத் தேவையான உடன்பிறப்புகளைக் கழகத்தில் அதிகம் சேர்க்க வேண்டும். எல்லாரும் சேர்ந்து உழைப்போம்!. பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தை - தமிழினத் தலைவர் கலைஞர் வளர்த்த இயக்கத்தை இன்னும் வலிமை கொண்டதாக வளர்த்தெடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தவெகவின் 100 நாள் ஆட்சியை விசிக பாராட்டுகிறது: திருமாவளவன் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-praises-tvks-100-day-governance-thirumavalavans-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-praises-tvks-100-day-governance-thirumavalavans-remarks#comments</comments><guid isPermaLink="false">dbce97c5-8aaa-44a7-b5dd-2e4e15478c72</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:04:36 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:04:36.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திருமாவளவன்,Thirumavalavan,விசிக,VCK</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/r32781ja/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/r32781ja/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p>திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>தேர்தலுக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கரைந்துவிட்டது என சிலர் வதந்திகளை பரப்பினர். வதந்திகளை பொய்யாக்கும் வகையில் ஜென்சி தலைமுறையினர் இந்த மாநாட்டில் லட்சக்கணக்கில் கலந்து கொண்டனர். மாநாட்டில் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது, உயிர் சேதம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் தான் எனது உரையை 2 நிமிடத்தில் முடித்துக்கொண்டேன். வி.சி.க.வினர் ஒழுங்கீனமானவர்கள் என சமூக ஊடகங்களில் சித்தரிக்க தொடங்கினர். தமிழக அரசியல் களத்தில் ஒழுக்கம் நிறைந்த இளைஞர்களை கொண்ட கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. மாநாடு வெற்றி பெற வாழ்த்து செய்தியை அனுப்பிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது இந்த மாநாடு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது என பாராட்டினார். வருகிற 29-ந் தேதி மாநாட்டு மலர் சென்னையில் வெளியிடப்படும். மாநில சுயாட்சி என்ற கோரிக்கை முழக்கத்தை உரக்க பேசவே இந்த மாநாடு நடைபெற்றது. மாநில சுயாட்சி என்பது தி.மு.க.வால் முன் நிறுத்தப்பட்ட ஒரு மகத்தான கோட்பாடு. இதை வி.சி.க. உரக்க பேசி வருகிறது. மாநில சுயாட்சி கோரிக்கை அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.</p><p>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பது வி.சி.க.வின் நிலைப்பாடு. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை வி.சி.க. வரவேற்கிறது. தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க.விடம் தனித்து நில்லுங்கள், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டாம். தனித்து நின்றாலே உங்கள் செல்வாக்கு நிலைத்து நிற்கும் என கூறினேன். அந்த நேரத்தில் எங்களுக்கு புத்திமதி சொல்ல நீங்கள் யார் என்ற கேள்வியை எழுப்பினார்கள். த.வெ.க.வின் 100 நாள் ஆட்சியை வி.சி.க. பாராட்டுகிறது. இந்த 100 நாள் என்பது த.வெ.க.விற்கு கற்று கொள்ளும் காலம். 100 நாள் த.வெ.க. ஆட்சியில் எந்த துறையிலும் லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை என்ற பெயரை சம்பாதித்து சாதித்துள்ளார்கள். பலர் மனம் திறந்து இந்த நிலைப்பாட்டை பாராட்டுகிறார்கள். இதே நிலை நீடிக்க வேண்டும், ஊழல் இல்லாத அரசாக 5 ஆண்டுகள் செயல்பட்டு த.வெ.க. சாதனை படைக்க வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். சௌகார் ஜானகி மறைவு எனக்கு துயரம் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>திமுகவில் 13 மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்க வாய்ப்பு? யார் யார் தெரியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/likelihood-of-13-dmk-district-secretaries-losing-their-posts-do-you-know-who-they-are</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/likelihood-of-13-dmk-district-secretaries-losing-their-posts-do-you-know-who-they-are#comments</comments><guid isPermaLink="false">90130a8b-11c9-4cab-b6e2-e50f2fdfa85a</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:04:32 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:04:32.469Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,District Secretaries,மாவட்ட செயலாளர்கள்,mk stalin,தமிழக அரசியல்,tn politics,திமுக மாவட்ட செயலாளர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/josixzki/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/josixzki/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><h2>பதவி இழக்க வாய்ப்பு</h2><p>குறிப்பாக, கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பதவி வகிப்போருக்கு வயது வரம்பும் விதிக்கப்பட்டது. அதன்படி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-number-of-district-secretaries-increased-to-110-resolution-in-the-executive-committee">மாவட்ட செயலாளர்</a> பதவிக்கு 70 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>இதை வைத்து பார்த்தால், 13 தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் பதவி பறிபோகும் என்று தெரிகிறது. ஏனென்றால், இவர்கள் 13 பேரும் 70 வயதை கடந்தவர்கள் ஆவார்கள். இதேபோல், மாவட்ட செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறைக்கு மேல் அந்தப் பதவியில் இருக்க முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>13 பேர் யார்?</h2><p>செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அடுத்த 15 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில், தற்போது திமுகவில் 70 வயதிற்கு மேற்பட்ட மாவட்ட செயலாளர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி,</p><ol><li><p>காஞ்சிபுரம் தெற்கு: சுந்தர் - 72</p></li><li><p>ராணிப்பேட்டை: ஆர் காந்தி - 80</p></li><li><p>திருவண்ணாமலை தெற்கு: ஏவா வேலு - 75</p></li><li><p>விழுப்புரம் வடக்கு: செஞ்சி மஸ்தான் - 71</p></li><li><p>சேலம் கிழக்கு: எஸ் ஆர் சிவலிங்கம் - 75</p></li><li><p>ஈரோடு தெற்கு: முத்துசாமி - 77</p></li><li><p>தஞ்சாவூர் வடக்கு: சாக்கோட்டை அன்பழகன் - 72</p></li><li><p>புதுக்கோட்டை தெற்கு: ரகுபதி - 76</p></li><li><p>மதுரை மாநகர்: கோ தளபதி - 70</p></li><li><p>தேனி தெற்கு: ராமகிருஷ்ணன் - 77</p></li><li><p>விருதுநகர்: கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் - 77</p></li><li><p>தூத்துக்குடி தெற்கு: அனிதா ராதாகிருஷ்ணன் - 74</p></li><li><p>திருநெல்வேலி மேற்கு: ஆவுடையப்பன் - 81</p></li></ol>]]></content:encoded></item><item><title>உடுமலை பஸ் நிலையத்தில் புதிய இருக்கைகள் அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-seating-arrangement-at-udumalai-bus-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-seating-arrangement-at-udumalai-bus-station#comments</comments><guid isPermaLink="false">31e70d38-30fe-42ff-99c6-6965d285c3ec</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:02:01 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:02:01.500Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உடுமலை,Udumalai,பஸ் நிலையம்,Seats,bus station,அமைப்பு,இருக்கைகள்,arrangement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/pm9k7vwv/80.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/pm9k7vwv/80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போடிப்பட்டி,       </p><p>உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில், அதன் அருகிலேயே புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இந்த பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.</p><h2>கால் கடுக்க காத்திருக்கும் நிலை</h2><p>குறிப்பாக, பழனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், இருக்கை வசதி இல்லாமல் கால் கடுக்க காத்திருக்கும் நிலை இருந்தது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால், பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.</p><h2>பயணிகள் மகிழ்ச்சி</h2><p>இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி பிரசுரமானது. அதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து <a href="https://www.dailythanthi.com/topic/bus">பஸ் </a>நிலையத்தில் பயணிகள் இருக்கை வசதி அமைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை தினம் - பிரேமலதா வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-day-premalatha-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-day-premalatha-greetings#comments</comments><guid isPermaLink="false">079b130f-f57b-4e95-8865-40a9ed1af8df</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:42:30 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:42:30.087Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா,Chennai Day,சென்னை தினம்,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/fuw8eqc8/premalatha1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/fuw8eqc8/premalatha1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளை, இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகிறது. இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>சென்னை தினம்</h2><p>உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், நவீன வளர்ச்சியும் கொண்ட நமது அன்புச் சென்னை மாநகருக்கு என் இனிய<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D"> சென்னை தின </a>நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>சென்னையின் பெருமையும், வளர்ச்சியும் மேலும் உயர்ந்து, அனைவரும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு: செயற்குழுவில் தீர்மானம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-number-of-district-secretaries-increased-to-110-resolution-in-the-executive-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-number-of-district-secretaries-increased-to-110-resolution-in-the-executive-committee#comments</comments><guid isPermaLink="false">da07a93a-5c3e-4866-ba9c-e7a65fc97175</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:33:41 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:33:41.896Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,District Secretaries,மாவட்ட செயலாளர்கள்,தி.மு.க</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/nkyzvs6x/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/nkyzvs6x/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. </p><p>சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். முதியவர்களை விடுவித்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. </p><p>குறிப்பாக, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார்.  இந்த பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. </p><p>குறிப்பாக, தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 75-ல் இருந்து 110 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பதவி வகிப்போருக்கு வயது வரம்பும் விதிக்கப்பட்டது. </p><p>அதன்படி, கிளை செயலாளர் பதவிக்கு 45 வயது என்றும், வட்டச் செயலாளர் பதவிக்கு 50 வயது என்றும், மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>இதை வைத்து பார்த்தால், 13 தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் பதவி பறிபோகும் என்று தெரிகிறது. ஏனென்றால், இவர்கள் 13 பேரும் 70 வயதை கடந்தவர்கள் ஆவார்கள். இதேபோல், கட்சியில் எந்த பதவியாக இருந்தாலும், ஒருவர் 2 முறைக்கு மேல் அந்தப் பதவியில் இருக்க முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அடுத்த 15 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>