<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 01 Sep 2026 09:26:36 +0000</lastBuildDate><item><title>சென்னையில் பயணிகளுக்கு புதிய வசதி: 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-facility-for-commuters-in-chennai-air-conditioned-bus-shelters-at-11-locations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-facility-for-commuters-in-chennai-air-conditioned-bus-shelters-at-11-locations#comments</comments><guid isPermaLink="false">8fd40470-c5a2-41d8-8070-c8fbf297ea47</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:24:21 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:24:21.325Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,bus,பயணிகள்,பேருந்து நிறுத்தம்,new facility</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/an47bfp0/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/an47bfp0/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் பயணிகளுக்கு புதிய வசதி: 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட்டது. </p><p>இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மக்களுக்கும், பயணிகளுக்கும் உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்கான முன்னோட்டமாக தற்போது பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் அனைத்து வசதிகளுடன் கூடிய 11 குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவுள்ளது.</p><p>அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் இன்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டது.</p><h2>குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுந்தங்கள் அமைக்கப்படவுள்ள விவரம் </h2><p><strong>வ. எண் நிறுவனங்களின் பெயர் மண்டலங்கள் இடங்கள்</strong></p><p>1. அப்பல்லோ மருத்துவமனை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அண்ணாசாலை தேனாம்பேட்டை மயிலாப்பூர் பேருந்து நிறுத்தம்</p><p>2. காவேரி மருத்துவமனை கோடம்பாக்கம் ஜவஹர்லால் நேரு சாலை, வடபழனி</p><p>3. குருநானக் கல்லூரி அடையாறு விஜயநகர் பேருந்து முனையம், வேளச்சேரி</p><p>4. சிம்ஸ் மருத்துவமனை கோடம்பாக்கம் வடபழனி பேருந்து நிறுத்தம் அருகில், சிம்ஸ் மருத்துவமனைக்கு வரும் வழி கோடம்பாக்கம் வடபழனி பேருந்து நிறுத்தம் அருகில், சிம்ஸ் மருத்துவமனையிலிருந்து செல்லும் வழி</p><p>5. ரோகினி ஹோட்டல்ஸ், கிண்டி அடையாறு சின்னமலை, கிண்டி</p><p>6. எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை கோடம்பாக்கம் ஆவிச்சி பள்ளி, ஆற்காடு சாலை ஆலந்தூர் ஆலந்தூர் மெட்ரோ</p><p>7. ஃப்ரையர் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக் இராயபுரம் எழும்பூர் வடக்குப் பகுதி இராயபுரம் எழும்பூர் தெற்குப் பகுதி</p><h2>இந்த குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மேற்கொள்ளப்படும் வசதிகள்</h2><p>1. குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை (Air Conditioned Waiting Hall)</p><p>2. கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV Camera)</p><p>3. வைஃபை வசதிகள் (Wi-fi facility)</p><p>4. சாய்வு தளப் பாதை (Accessible ramp, preferably integrated with the footpath)</p><p>5. பேருந்து வழித்தடத் தகவல்கள் (Bus Route information)</p><p>6. மின்விளக்கு வசதி (Lighting)</p><p>7. வெயில் தாங்கும் கூரை அமைப்பு (Puff panel roofing)</p><p>8. உறுதியான பாதுகாப்பான கண்ணாடி (Toughened / laminated Safety glass)</p><p>9. USB சார்ஜிங் வசதிகள் (USB charging points)</p><p>தொடர்ந்து இதுபோன்ற குளிரூட்டப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">பேருந்து நிறுத்தங்கள்</a> தேவைப்படும் இடங்களில் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும்.</p><p>இந்நிகழ்வில், சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர் பா. சாமுண்டீஸ்வரி, இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், தலைமைப் பொறியாளர் (பொது) பி.சங்கரவேலு, கண்காணிப்புப் பொறியாளர் (பேருந்து சாலைகள்) எம்.பழனி, பங்களிப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஏகாதிபத்திய எதிர்ப்பு களத்தில் போரிட்ட மாவீரர் பூலித்தேவன் - மு.க.ஸ்டாலின் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-pays-tribute-to-anti-imperialist-hero-pulithevan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-pays-tribute-to-anti-imperialist-hero-pulithevan#comments</comments><guid isPermaLink="false">f06d77a9-1dfb-4edb-9785-2410706f2c7f</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:18:36 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:18:36.879Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,பிறந்தநாள்,புகழாரம்,praises,M.K. Stalin,மாவீரன் பூலித்தேவன்,Poolithevan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uwml9f25/144.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uwml9f25/144.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஏகாதிபத்திய எதிர்ப்பு களத்தில் போரிட்ட மாவீரர் பூலித்தேவனுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்.</p><h2>சிப்பாய்க்கலகம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">பூலித்தேவன்</a> (1715–1767), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், நெல்கட்டும்செவலை ஆண்ட தமிழ் பாளையக்காரர் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். விடுதலைப்போர் என கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாக கருதப்படுகிறார்.</p><h2>பூலித்தேவன் பிறந்தநாள்</h2><p>இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> புகழ் வணக்கத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழ் வணக்கம்</h2><p>“சிப்பாய் புரட்சிக்கு நூறாண்டு முன்பே அந்நியர் ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ் வீரர் பூலித்தேவர் பிறந்தநாள். தன்னலத்தை விடுத்து தமிழ்நிலத்தின் தன்மானமே பெரிதெனக் கருதி ஏகாதிபத்திய எதிர்ப்புக் களத்தில் போரிட்ட மாவீரர் பூலித்தேவருக்கு என் புகழ் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு.. 14 சிறப்பு ரெயில்களின் சேவை மேலும் நீட்டிப்பு..</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-service-of-14-special-trains-further-extended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-service-of-14-special-trains-further-extended#comments</comments><guid isPermaLink="false">3a6bb85c-22ac-44a0-b192-b5bfec311a3e</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:17:31 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:17:31.977Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,Special trains,சிறப்பு ரெயில்கள்,பயணிகள்,passengers,service extension,attention,சேவை நீட்டிப்பு,கவனத்திற்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/tiob2wim/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/tiob2wim/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் 14 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சிறப்பு ரெயில்களின்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">சேவை</a> மேலும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">நீட்டிக்கப்பட்டுள்ளதாக</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தெற்கு ரெயில்வே அறிவிப்பு</a> வெளியிட்டுள்ளது.</p><h2>14 சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு</h2><p>பயணிகளின் வசதிக்காக 14 சிறப்பு ரெயில்களின் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>தாம்பரம் - போடிநாயக்கனூர்</h2><p>தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூருக்கு சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06059) செப்டம்பர் 12-ந்தேதி முதல் அக்டோபர் 24-ந்தேதி வரை 7 சேவைகளும், போடிநாயக்கனூரில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06060) செப்டம்பர் 13-ந்தேதி முதல் அக்டோபர் 25-ந்தேதி வரை 7 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது.</p><h2>சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி</h2><p>இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06045) செப்டம்பர் 4-ந்தேதி முதல் செப்டம்பர் 25-ந்தேதி வரை 4 சேவைகளும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06046) செப்டம்பர் 6-ந்தேதி முதல் செப்டம்பர் 27-ந்தேதி வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. </p><h2>மங்களூரு சென்டிரல் - சென்னை எழும்பூர்</h2><p>மேலும், மங்களூரு சென்டிரலில் இருந்து சென்னை எழும்பூருக்கு திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06126) செப்டம்பர் 7-ந்தேதி முதல் அக்டோபர் 26-ந்தேதி வரை 8 சேவைகளும், சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்டிரலுக்கு செவ்வாய்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06125) செப்டம்பர் 8-ந்தேதி முதல் அக்டோபர் 27-ந்தேதி வரை 8 சேவைகளும் நீட்டிக்கப்படுகின்றன. </p><h2>போத்தனூர் - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்</h2><p>போத்தனூரில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06028) செப்டம்பர் 4-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 39 சேவைகளும், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து போத்தனூருக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06027) செப்டம்பர் 4-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 39 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. </p><h2>திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்</h2><p>இதேபோல், திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06030) செப்டம்பர் 6-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 13 சேவைகளும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06029) செப்டம்பர் 7-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரை 13 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. </p><h2>நெல்லை - தாம்பரம் (ஞாயிற்றுக்கிழமை)</h2><p>மேலும், நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06166) செப்டம்பர் 6-ந்தேதி முதல் செப்டம்பர் 27-ந்தேதி வரை 4 சேவைகளும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06165) செப்டம்பர் 7-ந்தேதி முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது. </p><h2>நெல்லை - தாம்பரம் (வியாழக்கிழமை)</h2><p>இதேபோல், திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06070) செப்டம்பர் 3-ந்தேதி முதல் அக்டோபர் 29-ந்தேதி வரை 9 சேவைகளும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06069) செப்டம்பர் 4-ந்தேதி முதல் அக்டோபர் 30-ந்தேதி வரை 9 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. </p><p>இந்த 14 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலிக்கு பெருமை சேர்த்த இளம் கிரிக்கெட் வீரர்  பிஜுமுகேஷனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-congratulates-young-cricketer-biju-mukesh-who-has-brought-pride-to-tirunelveli</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-congratulates-young-cricketer-biju-mukesh-who-has-brought-pride-to-tirunelveli#comments</comments><guid isPermaLink="false">e3a0ac66-5755-41be-bc57-f61e86426811</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:12:41 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:12:41.268Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Tirunelveli,திருநெல்வேலி,கிரிக்கெட் வீரர்,cricketer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/h1yqu1qf/13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/h1yqu1qf/13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>திருநெல்வேலிக்கு பெருமை சேர்த்த இளம் கிரிக்கெட் வீரர்  பிஜுமுகேஷனுக்கு தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- </p><h2>தமிழகத்திற்கு பெருமை</h2><p>திருநெல்வேலி முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் (சிபிஎஸ்இ) பயிலும் மாணவர் பிஜுமுகேஷன் அவர்கள், 14 வயதிற்குட்பட்ட சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான நான்கு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டிருப்பது, திருநெல்வேலி மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.</p><h2>பாராட்டு</h2><p>இளம் வயதிலேயே தனது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர் பிஜுமுகேஷன் அவர்களை இன்று எனது திருநெல்வேலி இல்லத்திற்கு நேரில் அழைத்து, எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன்.</p><p>அவரது விளையாட்டுத் திறமை மேலும் சிறந்து, எதிர்காலத்தில் பல்வேறு உயரங்களைத் தொட்டு, திருநெல்வேலிக்கும், தமிழகத்திற்கும், நம் பாரத தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். இந்த நிகழ்வில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் அவர்கள் உடன் இருந்தார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.. கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்..” - தமிழ்நாடு அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-use-water-judiciously-and-distribute-it-right-up-to-the-tail-end-areas-government-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-use-water-judiciously-and-distribute-it-right-up-to-the-tail-end-areas-government-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">8f94ff3c-06d5-49f0-8d2f-5b9c2a52f8f1</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:32:07 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:32:07.523Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,மேட்டூர் அணை,Mettur dam,water release,தமிழ்நாடு அரசு,நீர் திறப்பு,TN government,தமிழ்நாடு முதல்-அமைச்சர்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/vp7m4w6k/pai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/vp7m4w6k/pai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவை மற்றும் 2026-27 ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா பாசனத்திற்காக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> இன்று (01.09.2026) தண்ணீர் திறந்து வைத்தார். </p><h2>முதல்-அமைச்சர் விஜய்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> அவர்கள் இன்று (1.9.2026) சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளவும், காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யவும் தண்ணீரைத் திறந்து வைத்தார்.</p><p>இன்று (1.9.2026) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாகவும், நீர் இருப்பு 54.452 டி.எம்.சி. ஆகவும், நீர்வரத்து வினாடிக்கு 10,857 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பாசனத் தேவைக்கேற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக முறைப்படுத்தப்படும்.</p> <h2>மேட்டூர் அணை</h2><p>இதுதொடர்பாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகிய துறைகள் மாவட்ட நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><p>மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் ஒவ்வொரு கனஅடி நீரும் விவசாயிகளின் நலனுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுவது உறுதிசெய்யப்படும். காவிரி ஆறு மற்றும் கால்வாய்களின் வழித்தடங்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சுதல், அனுமதியின்றி நீர் எடுத்தல் மற்றும் அனுமதிக்கப்பட்ட நீரேற்றுத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக நீர் எடுப்பது ஆகியவை கண்டிப்பாகத் தடுக்கப்படும்.</p><h2>விட்டுக்கொடுக்க மாட்டோம்</h2><p>இதற்காக நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக அலுவலர்களைக் கொண்ட கூட்டுக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இரவு–பகலாக ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>காவிரி நீர் என்பது நடுவர்மன்றத் தீர்ப்பாலும் மாண்பமை சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பாலும் உறுதிசெய்யப்பட்ட நமது சட்டப்பூர்வ உரிமையாகும். அந்த உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை சுப்ரீம்கோர்ட்டின் 16.02.2018-ஆம் நாளிட்ட தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப்பெற அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><h2>எல் நினோ தாக்கம்</h2><p>மாண்பமை சுப்ரீம்கோர்ட்டையும் அணுகி, தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கையும், டெல்டா விவசாயிகளின் உரிமையையும் பாதுகாப்பதற்கான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.</p><p>தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறை மற்றும் தீவிர எல் நினோ தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தற்போது நீர் திறப்பது, வரையறுக்கப்பட்ட நீரைச் சிக்கனமாகவும், திறம்படவும் நிர்வகித்து சம்பா சாகுபடியைப் பாதுகாப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையாகும். எனவே, விவசாயிகள் குறைந்த நீர்த் தேவையுள்ள மத்திய கால நெல் இரகங்களையும், நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட நீர்ச் சிக்கன சாகுபடி முறைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><h2>சம்பா சாகுபடி</h2><p>“நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்; சம்பா சாகுபடியை வெற்றிபெறச் செய்வோம்.”</p><p>இந்த நிகழ்வில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ந.ஆனந்த், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள்  சோ.லட்சுமணன், கா. சிவக்குமார், மே.ச. பழனிவேல், நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் மு.வடநெரே, இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) எஸ். கோபாலகிருஷ்ணன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர்  ஏ.ஜெயகுமாரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயப் பெருங்குடிமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி - நரசப்பூர் சிறப்பு ரெயிலுக்கு கூடுதலாக 2 நிறுத்தங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-narasapur-special-train-gets-two-extra-stops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-narasapur-special-train-gets-two-extra-stops#comments</comments><guid isPermaLink="false">c940192e-e9e8-4791-ba2d-8d57f71b22ec</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:21:32 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:21:32.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,Thoothukudi,தூத்துக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1j4sr7kq/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1j4sr7kq/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தூத்துக்குடி - நரசப்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலுக்கு கூடுதலாக 2 நிறுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>தூத்துக்குடி - நரசப்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்கள் 06019/ 06020) பண்ருட்டி மற்றும் நாயுடுபேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். தூத்துக்குடியில் இருந்து திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 9.03 மணிக்கு பண்ருட்டி ரெயில் நிலையத்தில் 1 நிமிடமும், மாலை 3.18 மணிக்கு நாயுடுபேட்டை ரெயில் நிலையத்தில் 2 நிமிடமும் நின்று செல்லும்.</p><p>மறுமார்க்கத்தில், நரசப்பூரில் இருந்து புதன்கிழமை காலை 4 மணிக்கு புறப்படும் ரெயில், நாயுடுபேட்டையில் பகல் 12.03 மணி முதல் 2 நிமிடமும், பண்ருட்டியில் மாலை 6.11 மணி முதல் 1 நிமிடமும் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1,000 கோடி நிதி நிறுவன மோசடி:  இளைஞர் தற்கொலைக்கு காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-1000-crore-financial-fraud-police-must-own-responsibility-for-youth-suicide-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-1000-crore-financial-fraud-police-must-own-responsibility-for-youth-suicide-anbumani#comments</comments><guid isPermaLink="false">5bd7d8e6-c3b8-4203-aeda-cd8fecdecdec</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:03:07 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:03:07.244Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,Duping,நிதி நிறுவன மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/70q8zcn2/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/70q8zcn2/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசைகாட்டி ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும்  எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞர் இராசு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் அரங்கேற்றப்படும் நிலையில், அதை காவல்துறையினர் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது.</p><p>மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எப்.க்யூ.எல் நிதி நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் அந்தப் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை காட்டி விளம்பரங்கள் செய்தது. இதற்காக தனிச் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின்படி மக்களிடம் சென்று முதலீடுகளைத் திரட்டுவதற்காக பெருமளவில் முகவர்களும் நியமிக்கப்பட்டனர். எப்.க்யூ.எல் நிதி நிறுவனத்தின் விளம்பரங்களை நம்பிய மக்களும் தங்களிடமிருந்த பணத்தை லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். பலர் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தங்களின் நிலம் உள்ளிட்ட உடமைகளை விற்றும், அடகு வைத்தும் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்த காலத்தில் முதலீட்டைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்த நிறுவனம் சில நாள்களுக்கு முன் மூடப்பட்டு விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக முதலீட்டாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இராசு என்ற இளைஞர் இந்த நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ததுடன், முகவராகவும் செயல்பட்டு லட்சக்கணக்கில் முதலீடு திரட்டிக் கொடுத்து உள்ளார். மோசடி நிதி நிறுவனம் மூடப்பட்டு விட்ட நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட முதலீட்டாளர்களுக்கு பதில் கூற முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. பணம் கட்டி ஏமாந்த மக்களும் மதுரை மாவட்ட காவல்துறையில் கூட்டம், கூட்டமாக வந்து புகார் அளித்து வருகின்றன. மோசடியின் தன்மை மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு இந்த மோசடி வழக்கின் விசாரணையை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால், பணம் கட்டி ஏமாந்த மக்களுக்கு எப்போது பணமும், நீதியும் கிடைக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.</p><p>தமிழ்நாட்டில் திடீர், திடீரென மோசடி நிதிநிறுவனங்கள் தொடங்கப்படுவதும், அவை மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்து விட்டு மூடப்படுவதும் புதிதல்ல. சராசரியாக ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஆரூத்ரா, வேலூரில் எல்.என்.எஸ். சர்வதேச நிதிச்சேவை நிறுவனம், திருச்சியில் எல்பின்ஸ் ஆகிய  3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்தன. கோவையைச் சேர்ந்த மை வி 3 ஆட்ஸ் (MY V3 Ads) நிறுவனம் பொதுமக்களிடம்  ரூ.2,000 கோடி மோசடி செய்ததுடன், அதை அம்பலப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்ட போதிலும், ஏமாற்றப்பட்ட பொதுமக்களுக்கு இன்னும் ஒரு ரூபாய் கூட மீட்டுத் தரப்படவில்லை.</p><p>ஒன்றரை ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், ஆண்டுக்கு 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகவும் மோசடி நிதி நிறுவனங்கள் கூறியதை மக்கள் அப்படியே நம்பியதுதான் இந்த மோசடிக்கு காரணம் ஆகும். அதிக வட்டி, நட்சத்திர விடுதிகளில் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துதல், முதலீடு செய்தவர்களில் ஒரு சிலருக்கு அதிக வட்டியை வழங்கி, அவர்கள் மூலம் மக்களிடம் வாய்மொழி பிரசாரம் செய்ய வைத்தல் போன்றவற்றின் மூலம்தான் மோசடி நிறுவனங்கள் கவர்ந்திழுத்து ஏமாற்றுகின்றன.</p><p>ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மோசடிகளால் ஏராளமானமானோர் பாதிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும், அதனால் விழிப்புணர்வு பெறாத பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மீண்டும், மீண்டும் முதலீடு செய்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டப்படும்போது அதை நம்பி பொதுமக்கள் ஏமாறுவது இயல்புதான். நேர்மையான நிதி நிறுவனங்களையும், மோசடி நிறுவனங்களையும் பகுத்துப் பார்த்து முதலீடு செய்யும் அளவுக்கு ஊரக, கல்வியறிவற்ற மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை.</p><p>இத்தகைய சூழலில், மோசடி நிறுவனங்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு செய்திருக்க வேண்டும். அதிக வட்டி தருவதாகவும், பரிசுகளை அள்ளி வழங்குவதாகவும் அந்த நிறுவனங்கள் துண்டறிக்கைகள் மூலமாகவும், முழுபக்க விளம்பரங்கள் மூலமாகவும் தொடர் விளம்பரங்களை செய்து தான் முதலீடு திரட்டுகின்றன. இவை எதுவும் தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு தடுத்திருக்க வேண்டும். அதுதான் அவற்றின் முதன்மைக் கடமையும் கூட. அதைச் செய்யத் தவறிய காவல்துறைதான் இந்த மோசடிக்கும், உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும்.</p><p>கடந்த காலங்களிலும், இப்போதும் மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 420 போன்ற சாதாரண பிரிவுகளில்தான் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அந்நிறுவன உரிமையாளர்கள் எளிதாக தப்பிவிடக் கூடும். இதைத் தடுப்பதற்காக மோசடியாளர்கள் மீது இன்னும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட வேண்டும். மோசடியாளர்களின் பெயர்களில் மட்டுமின்றி, அவர்களைச் சார்ந்தவர்கள், நெருக்கமானவர்கள் பெயர்களில், மோசடி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திற்கு பின்னர் வாங்கப்பட்ட சொத்துகளையும் முடக்க வேண்டும்; மேலும், நிதி நிறுவனங்கள் தொடங்குவதற்கு பொருளாதாரக் குற்றப்பிரிவில் தடையின்மைச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.</p><p>மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும், காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விமான நிலையம் முதல் வங்கிகள் வரை: இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய விதிமுறைகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-airports-to-banks-key-regulations-coming-into-effect-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-airports-to-banks-key-regulations-coming-into-effect-today#comments</comments><guid isPermaLink="false">a52a5759-7012-4da9-96ad-1d3167d23e79</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:58:02 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:58:02.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,airport,விமான நிலையம்,வங்கிகள்,banks,விதிமுறைகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/umcb61d1/kioerer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/umcb61d1/kioerer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விமான நிலையம் முதல் வங்கிகள் வரை, இன்று (செப்டம்பர் 1ம் தேதி) முதல் சில முக்கிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. </p><h2>போர்டிங் பாஸ்</h2><p><strong>*</strong> அந்த வகையில், வெளிநாடு செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் குடியுரிமை கவுன்டர்களில் போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை. மின்னணு அல்லது அச்சிடப்பட்ட போர்டிங் பாசை காண்பித்தால் போதும். </p><h2>எல்.பி.ஜி. சிலிண்டர்</h2><p><strong>*</strong> அதேபோல், எல்.பி.ஜி. இணைப்பில் இ-கே.ஒய்.சி. செய்யாவிட்டால் வீட்டு உபயோக சிலிண்டரை சலுகை விலையில் பெற முடியாது. இதனால், செப்டம்பர் மாதத்திற்கான எல்.பி.ஜி. சிலிண்டர் விலை மாற வாய்ப்பு இருக்கிறது. </p><h2>காலை 10.10 மணிக்குள்</h2><p><strong>*</strong> மேலும், ரூ.3 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட வைப்பு தொகைகளுக்கான வட்டி விகித விவரங்களை ஒவ்வொரு நாளும் வங்கிகள் காலை 10.10 மணிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். </p><p>ஒரே நாளில் ஒரே தொகைக்கான வைப்பு தொகைக்கு வெவ்வேறு கிளைகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்க முடியாது. வட்டி விகிதங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>தஞ்சாவூர்: அரசலாற்றை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-farmers-demand-dredging-of-arasala-river</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thanjavur-farmers-demand-dredging-of-arasala-river#comments</comments><guid isPermaLink="false">8ecd669a-48d1-43cb-b95f-12ed5fce2edd</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:30:54 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:30:54.964Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தஞ்சாவூர்,விவசாயிகள்,river,Kumbakonam,தூர்வாரும் பணி,Tanjaore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/0pb5lcrr/4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயிகள் கோரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/0pb5lcrr/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்</p><p>காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய கிளை ஆறுகளில் ஒன்றான அரசலாற்றை உடனடியாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:-</h2><p>தஞ்சாவூர் மாவட்டம் கும்பக்கோணத்தில் தொடங்கும் அரசலாறு திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியே சென்று காரைக்கால் கடலில் கலக்கிறது. மேலும், இந்த ஆறு அப்பகுதிகளை சுற்றியுள்ள 1.40 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.</p><p>இந்த ஆண்டு காவிரி சமவெளி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக மிக குறைவான அளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், <a href="https://www.dailythanthi.com/topic/தூர்வாரும்-பணிகள்">தூர்வாரும் பணிகள்</a> நடக்காமல், அரசலாற்றில் புல், பூண்டுகள், செடிகொடிகள் மற்றும் மரங்கள் அதிக அளவில் வளர்ந்து நீர் செல்லும் பாதையை அடைத்துள்ளன.</p><p>இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை எப்படி செல்லும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அரசலாற்றை முழுமையாக சுத்தம் செய்தால் மட்டுமே அதன் கிளை ஆறுகளான நாட்டாறு, நண்டலாறு, கீர்த்தி மானாறு ஆகிய ஆறுகள் வழியாக, இறுதி வரை உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் சென்றடையும். எனவே, விவசாய நிலங்களையும் <a href="https://www.dailythanthi.com/topic/விவசாயிகள்">விவசாயிகளையும்</a> காப்பதற்காக அரசலாற்றில் உள்ள மரம் செடிகளை அகற்றி, ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commercial-cylinder-price-hike-how-much-you-know</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commercial-cylinder-price-hike-how-much-you-know#comments</comments><guid isPermaLink="false">5d315b65-3907-48fa-8525-93912e68d01e</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:39:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:24:12.266Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சிலிண்டர் விலை,எண்ணெய் நிறுவனங்கள்,விலை உயர்வு,price hike,cylinder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/37qz3cjf/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/37qz3cjf/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.</p><h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.</p><h2>விலை நிர்ணயம்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகின்றன.</p><h2>விலை உயர்வு</h2><p>இந்த நிலையில், இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.957.50-க்கு விற்பனையாகிறது.</p>]]></content:encoded></item><item><title>&apos;நந்தன்&apos; சினிமா பட பாணியில் இன்னும் தொடரும் சாதிய அடக்குமுறை - வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nandan-cinema-pada-paaniyil-innum-thodarum-saathiya-adakkumurai-vanathi-srinivasan-kandanam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nandan-cinema-pada-paaniyil-innum-thodarum-saathiya-adakkumurai-vanathi-srinivasan-kandanam#comments</comments><guid isPermaLink="false">184b23d0-a31e-4df4-9d3b-d81c193dffb4</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:23:04 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:23:04.947Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,சாதிய அடக்குமுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rc6m1hi3/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rc6m1hi3/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமர மக்களுக்கான சமூக நீதி என்பது தவெக அரசில் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தாழ்த்தப்பட்ட இன மக்களும், பெண்களும் அதிகாரத்திற்கு வரும்பொழுது இன்னும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதற்கு இந்த செய்தியே சாட்சி. விழுப்புரம் மாவட்டம், கொடுங்கால் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிக்கும் மலர்விழி தனக்கான அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்த விடவில்லை என்று கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>தனக்கான தலைவர் நாற்காலி தரவில்லை எனவும், சுதந்திரதினத்தன்று கொடியேற்ற விடுவதில்லை என்றும் அவர் கூறியதாகக் வெளிவந்துள்ள செய்தியானது இன்னும் தொடர்கின்ற சமூக நீதியின் பேரவலம். பதவியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கே இவ்வாறான சாதிய கொடுமைகள் நடக்கும்போது பாமர மக்களுக்கான சமூக நீதி என்பது தவெக அரசில் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது.</p><p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு என்ன பதில் சொல்லப் போகிறார்? தவெக அரசின் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கொள்கை' இதுதானா முதல்-அமைச்சர் அவர்களே! இவரைப் போன்றே இன்னும் நிறைய 'நந்தன்'கள் தங்களுக்கான உரிமைகள் இருந்தும் சாதிய அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.</p><p>சமூக நீதித்துறை என்பது வெறும் மனுக்களை நின்று கொண்டு வாங்குவதும், அவர்களது வீட்டில் உண்பது மட்டும் இல்லை அமைச்சர் வன்னி அரசு அவர்களே! மலர்விழி போன்றவர்களின் அதிகாரமும், உரிமைகளும் எப்போது முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறதோ அப்போதுதான் உண்மையான சமூக நீதி விடுதலை என்பதற்கான அடையாளம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-permission-denied-for-the-anitha-memorial-meeting-opposition-leader-udhayanidhi-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-permission-denied-for-the-anitha-memorial-meeting-opposition-leader-udhayanidhi-questions#comments</comments><guid isPermaLink="false">eed43092-7d02-4bf2-95ce-ac399a7cc20e</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:01:27 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:01:27.384Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,அனிதா,Anita,சட்டமன்ற கூட்டத்தொடர்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Adhav Arjuna</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/8b7y0bq4/ani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/8b7y0bq4/ani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்திற்கு அரசு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலினுக்கும்</a>, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.</p><h2>நினைவேந்தல் நிகழ்ச்சி</h2><p>அப்போது  <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a> பேசுகையில், “தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு மற்றும் அனிதாவின் குடும்பம் சார்பில் அமைதியான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை. பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட சூழலில், ஜனநாயக ரீதியில் அமைதியாக நடைபெற இருந்த அனிதாவின் நினைவேந்தல் கூட்டத்துக்கு அரசு அனுமதி கொடுக்காதது ஏன்?. </p><p>பெசன்ட் நகர் மாதா கோவிில் கொடியேற்றத்தைக் காரணம் காட்டி அனிதாவின் 9ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அங்கு அந்த அளவில் கூட்டம் இல்லை; உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். அல்லது மாற்று இடத்தை கொடுக்க வேண்டும். அனிதா மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை” என்று தெரிவித்தார்.</p><h2>அனிதா நினைவு நாள்</h2><p>அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித அரசியலும் இல்லை. எனினும், நினைவேந்தல் கூட்டத்தை நடத்துவதற்கு ஏதுவான மாற்று இடத்தை தேர்வு செய்ய அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பெசிய அவர், “இன்றைய நாள் தங்கை அனிதா நினைவு நாள். தன்னுடைய கோரிக்கைக்காக சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று கோரிக்கை நிறைவேறாததால் உயிரிழந்தார். 3 மாநில முதல்வர்கள் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு நீக்கவில்லை.</p><p>வரக்கூடிய காலங்களில் தேர்தல் சூழ்நிலை மாறும் நிலையில், உறுதியாக மாறும். 2029ல் தேர்தல் சூழ்நிலை மாறும் போது, சட்டமன்றத்தில் ஒலித்த குரல், பாராளுமன்றத்தில் நீட் தூக்கி எறியப்படும் நாளாக மாறும். அனிதாவின் தியாகம், கண்ணீர், உழைப்பு, உணர்வு நிறைவேறும்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.</p><h2>ஆதவ் அர்ஜுனாவுக்கு அறிவுரை</h2><p>முன்னதாக அனிதாவின் நினைவு நாள் நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தன் பேச்சின் நிறைவில், "அனிதாவின் நினைவு நாளான இன்றாவது, அரசியல் செய்ய வேண்டாம்" என கூற, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>உடனே குறிக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "அரசின் கவனத்திற்கு எதிர்கட்சி தலைவர் கொண்டு வந்துள்ளார், அத்தோடு அதை முடித்துவிடவும்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அறிவுரை வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் பாதுகாப்புப் பணியின்போது சேலம் தொப்பூரில் 2 சப்- இன்ஸ்பெக்டர்கள் திடீர் மயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-special-sub-inspectors-ssis-suddenly-fainted-at-thoppur-salem-while-on-security-duty-for-the-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-special-sub-inspectors-ssis-suddenly-fainted-at-thoppur-salem-while-on-security-duty-for-the-chief-minister#comments</comments><guid isPermaLink="false">8e7b1254-0c38-4828-be5a-72def8eba332</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:56:33 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:56:33.055Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மயக்கம்,fainted,போலீசார் அணிவகுப்பு,மேட்டூர் அணை திறப்பு,Sub-Inspectors,Chief Minister Vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/olfifaqe/00000.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ராஜேந்திரன்- மது]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/olfifaqe/00000.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சேலம்,</p><p>சேலம் தொப்பூர் பகுதியில் முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">சிறப்பு உதவி ஆய்வாளர்கள்</a> (எஸ்எஸ்ஐ) திடீரென மயங்கி விழுந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மயக்கம்</h2><p>மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை) சேலம் வருகை தந்துள்ளார். இதையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தொப்பூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களான (எஸ்எஸ்ஐ) ராஜேந்திரன் மற்றும் மது ஆகிய இருவரும் திடீரென <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மயக்கமடைந்து</a> கீழே விழுந்தனர்.</p><h2>இருதய நோயால் பாதிப்பு</h2><p>அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீசார், உடனடியாக 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அஸ்பத்திரியில் அனுமதித்தனர். மயக்கமடைந்த 2 சிறப்பு உதவி ஆய்வாளர்களும் ஏற்கனவே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D">இருதய நோயால் </a>பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வால்பாறை சாலை தடுப்புச்சுவரில் ஒய்யாரமாக படுத்திருந்த சிறுத்தை: வனத்துறை எச்சரிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-lounging-on-valparai-roadside-retaining-wall-forest-department-issues-warning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-lounging-on-valparai-roadside-retaining-wall-forest-department-issues-warning#comments</comments><guid isPermaLink="false">0343c6e0-1a09-4279-971f-4a53d587ff25</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:31:02 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:31:02.543Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Forest Department,சிறுத்தை நடமாட்டம்,public fear,Leopard சிறுத்தை,வனத்துறை எச்சரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/xin86464/.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தடுப்புச்சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை]]></media:title><media:description type="html"><![CDATA[ வனத்துறை ஏச்சரிக்கை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/xin86464/.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை மாவட்டம்</a> வால்பாறை மலைப்பாதையில் சாலையோர தடுப்புச்சுவரில் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், சுற்றுலா பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>தடுப்புச்சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை</h2><p>ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதி, அடர்ந்த காடுகளையும் ஏராளமான வனவிலங்குகளையும் கொண்டது. அங்குள்ள வாட்டர்பால்ஸ் மற்றும் டைகர் பள்ளத்தாக்கு இடையே உள்ள முக்கிய மலைப்பாதையில், பகல் நேரத்தில் சிறுத்தை ஒன்று சாலையோர தடுப்புச்சுவர் மீது மிகவும் கம்பீரமாகப் படுத்துக் கிடந்துள்ளது.</p><h2>வீடியோ வைரல்</h2><p>அந்த வழியாக வாகனங்களில் சென்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">சுற்றுலா பயணிகள்</a> சிலர், அந்த அரிய காட்சியைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொதுமக்களிடையே ஒருபுறம் ஆச்சரியமும், மறுபுறம் அச்சமும் ஏற்பட்டுள்ளது.</p><h2>வனத்துறையின் எச்சரிக்கை</h2><p>மலைப்பாதையில் பயணிக்கும் போது வனவிலங்குகளைக் கண்டால், அவற்றைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க வாகனங்களைச் சாலையோரம் நிறுத்தக் கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும் வகையில் சத்தம் எழுப்பவோ அல்லது அவற்றின் அருகே செல்லவோ கண்டிப்பாக முயற்சி செய்யக்கூடாது.</p><p>வால்பாறை பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">சிறுத்தைகள் நடமாட்டம்</a> உள்ளதால், அவசியமற்ற இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சுற்றுலா பயணிகள் வனப்பகுதியின் விதிகளை முறையாகப் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/7uBOzcIc_a0"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையை திறந்துவைத்த 7-வது முதல்-அமைச்சர் விஜய்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-becomes-7th-chief-minister-to-open-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-becomes-7th-chief-minister-to-open-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">83571a84-7da1-4cb3-999d-d2230c0043ac</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:26:44 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:26:44.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர் திறப்பு,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/xhbf8ls8/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/xhbf8ls8/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1934-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. 120 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் குறுவை, சம்பா, தாளடி சாகுபடிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் 3-ல் ஒரு பங்கு நெல் சாகுபடி டெல்டா மாவட்டங்களில்தான் நடக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.</p><p>93 ஆண்டு பாரம்பரியம் கொண்ட மேட்டூர் அணை பாசனத்திற்கு வழக்கமாக ஜூன் 12-ம்தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால், சில நேரங்களில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்யும் சமயத்தில் இது சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது. இந்த ஆண்டும் அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டதால், குறுவை சாகுபடி பொய்த்து போனது. சம்பா சாகுபடிக்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், இன்று (செப்டம்பர் 1) முதல் முறையாக மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார்.</p><p>மேட்டூர் அணை வரலாற்றில் இதுவரை 6 முதல்-அமைச்சர்கள் இங்கிருந்து தண்ணீர் திறந்து வைத்துள்ளனர். அந்த வகையில், தமிழகத்தின் முதல்-அமைச்சர்களாக இருந்த காமராஜர் (1954-1963), கருணாநிதி (1969-1971, 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011), எம்.ஜி.ஆர் (1977-1987), ஜெயலலிதா (1991-1996, 2001-2006, 2011-2014, 2015-2016), எடப்பாடி பழனிசாமி (2016-2021) , மு.க. ஸ்டாலின் (2021-2026) ஆகிய 6 முதல்-அமைச்சர்கள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை ஏற்கனவே திறந்து வைத்துள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் 7-வதாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யும் இணைந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-opens-water-from-mettur-dam-for-delta-irrigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-opens-water-from-mettur-dam-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">e7e44fdb-e3a3-441a-813a-ccfc4c5bb253</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:09:03 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:11:52.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,Salem,சேலம்,நீர் திறப்பு,டெல்டா பாசனம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/hgbj4s0y/vijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/hgbj4s0y/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதல்-அமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார்.</p><h2>மேட்டூர் அணை</h2><p>டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் போன்ற 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.</p><h2>உபரிநீர் திறப்பு</h2><p>ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1 (இன்று) தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், தொடர்ந்து 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.</p><h2>முதல்-அமைச்சர் வருகை</h2><p>அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சேலம் வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து வேனில் சாலை மார்க்கமாக பூசாரிப்பட்டி பிரிவு, வள்ளையூர்கோட்டை, ஜோடுகுளி, தீவட்டிப்பட்டி, மேச்சேரி வழியாக அவர் மேட்டூர் வந்தார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/47saets2/Untitled-7-1.jpg" /></figure><h2>ரோடு ஷோ</h2><p>முதல்-அமைச்சர் விஜய்யின் சேலம் வருகையையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் இருந்து மேட்டூர் வரை சாலையில் இருபுறமும் கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. திறந்த வேனில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபக்கங்களிலும் கூடியிருந்த ஏராளமான பொதுமக்களும், தவெக தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/fgolzhaz/Untitled-7-2.jpg" /></figure><h2>பாசனத்திற்காக நீர் திறப்பு</h2><p>இந்த நிலையில் மேட்டூர் அணை வந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் வலது கரையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை அவர் திறந்து வைத்தார். அணை திறக்கப்பட்டதும் வெளியேறிய காவிரி நீரில் மலர்கள் மற்றும் நெல்லை தூவி முதல்-அமைச்சர் விஜய் வரவேற்றார்.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்டம் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா? - தமிழக அரசு பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-breakfast-scheme-be-extended-to-students-in-classes-9-to-12-tamil-nadu-governments-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-breakfast-scheme-be-extended-to-students-in-classes-9-to-12-tamil-nadu-governments-response#comments</comments><guid isPermaLink="false">eff05374-d6c7-431d-8aa6-5a49073a55b8</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:07:36 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:07:36.999Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக அரசு,TN govt,காலை உணவுத் திட்டம்,breakfast scheme,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,காமராஜர் காலை உணவுத் திட்டம்,Kamarajar Breakfast Scheme</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rn105ft1/kalai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rn105ft1/kalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காலை உணவுத் திட்டத்தை 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளது. </p><h2>காமராஜர் காலை உணவுத் திட்டம்</h2><p>தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட முதல்-அமைச்சர் காலை உணவுத் திட்டம், தற்போது காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயர் மாற்றத்துடன் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் வரும் 17-ந் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது. </p><p>இந்த திட்டத்தை விருதுநகரில் காமராஜர் படித்த தொடக்கப் பள்ளிக்கே நேரில் சென்று <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> தொடங்கிவைக்க இருக்கிறார். </p><h2>9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம்</h2><p>இந்த நிலையில், கோவையை சேர்ந்த சி.ஐ.டி.யு. பொதுச் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் எஸ்.பாஷா என்பவர், தமிழக அரசின் சமூக நல இயக்குநரகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். </p><p>அதில், "காமராஜர் காலை உணவுத் திட்டம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். குறிப்பாக, 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில், அவர்களின் உடல் மற்றும் மனநலத்திற்கும், கவனச் செலுத்தல் மற்றும் கல்விச் செயல்திறனுக்கும் போதிய ஊட்டச்சத்து அவசியமானதாகும்" என்று அவர் தெரிவித்து இருந்தார். </p><h2>கோரிக்கை ஏற்பு </h2><p>இந்த நிலையில், அவருக்கு தமிழக அரசின் சமூக நல இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் கா.பொற்கொடி பதில் அனுப்பியுள்ளார். அதில், "தங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் விரிவுபடுத்துவது குறித்த தங்களது கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>உசிலம்பட்டி மாணவி தற்கொலை விவகாரம்: அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/usilampatti-student-suicide-case-government-school-headmistress-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/usilampatti-student-suicide-case-government-school-headmistress-suspended#comments</comments><guid isPermaLink="false">cbd0e9ed-4876-4de9-9854-cb60f6053def</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:53:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:53:08.175Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சஸ்பெண்ட்,suspend,மாணவி தற்கொலை,தலைமை ஆசிரியர்,Govt school,Student suicide,Usilampatti,உசிலம்பட்டி,அரசுப்பள்ளி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/x1d5agwo/kushe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/x1d5agwo/kushe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>உசிலம்பட்டி மாணவி தற்கொலை விவகாரத்தில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.</p><h2>மாணவி தற்கொலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/மதுரை">மதுரை</a> தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்தவர், மாணவி நிஷாந்தி. இவர், உசிலம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விமலாதேவியின் செயலால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.</p><h2>பொறுப்பற்ற முறையில்</h2><p>அதையடுத்து கல்வி மாவட்ட அலுவலர் நடத்திய விசாரணையில், மாணவியின் பெற்றோரை கை கட்டி நிற்க வேண்டும் என்றோ, மாணவியின் சமூகம் குறித்தோ தலைமை ஆசிரியை விமலாதேவி எதுவும் பேசவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும், மாணவியின் பெற்றோரிடம் கடினமாக நடந்து கொண்டது தெரியவந்தது.</p><p>மாணவியின் பெற்றோரிடம் பொறுப்பற்ற முறையில் நடந்துள்ளார். மாணவியின் முன்பாக அவர் ஏற்கனவே படித்த பள்ளியில், அவரின் கல்வி குறித்த விவரங்களை கேட்டிருக்கக்கூடாது.</p><h2>சஸ்பெண்ட்</h2><p>பொதுவாக புகார் தெரிவிக்க வரும் யாராக இருந்தாலும், உதவி தலைமை ஆசிரியர் மூலம் பிரச்சினையை விசாரித்து அதன் பின்னரே என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை தலைமை ஆசிரியர் முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை சற்று கவனக்குறைவாக நடந்தது கல்வித்துறை விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>3 நிமிடங்கள் மட்டுமே</h2><p>இது குறித்து அவர் கூறியதாவது:-</p><p>தலைமை ஆசிரியை குறித்து தெரிவிக்கும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அவர் இந்த பள்ளிக்கு பணியிட மாற்றம் பெற்று வந்து சில மாதங்களே ஆகிறது. மாணவி நிஷாந்தியும் அந்த பள்ளிக்கு முதன்முதலாக சேர்க்கை கேட்டு சென்றுள்ளார். வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே மாணவியின் பெற்றோரிடம் தலைமை ஆசிரியை பேசியுள்ளார்.</p><p>மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு தலைமை ஆசிரிையயின் செயல்பாடு மட்டும் காரணம் இல்லை என்பது தெரியவருகிறது. அந்த மாணவி 10-ம் வகுப்பில் 415 மதிப்பெண் பெற்று அரசினர் கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் உயிரியல், கணித பாடப்பிரிவில் சேர்க்கை பெற்றுள்ளார். நர்சிங் படிக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்துள்ளது.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>ஆனால், பாடப்பிரிவு கடினமாக இருப்பதால் வணிக பாடப்பிரிவுக்கு மாற்றம் கேட்டு இந்த பள்ளியில் சேர்க்கை விண்ணப்பம் கொடுத்துள்ளார். இருப்பினும் மாணவி உயிரிழப்பு என்பது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும். மாணவியின் தாயார் தவமணி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள உசிலம்பட்டி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையிலும் இந்த விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.</p><h2>ஆலோசனைக்கூட்டம்</h2><p>இருப்பினும் துறைரீதியான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் புகார் கூற மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பெற்றோர் மற்றும் பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளன.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சரக்கு ரெயில் பாதையில் சென்னையை இணைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/request-to-centre-to-link-chennai-via-freight-rail</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/request-to-centre-to-link-chennai-via-freight-rail#comments</comments><guid isPermaLink="false">71a4710f-6319-4cce-b14c-a36587e1f23e</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:51:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:51:35.699Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சரக்கு ரெயில்,Freight Rail</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/8gu8asp9/cpdtc.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/8gu8asp9/cpdtc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>நாட்டில் பல்வேறு துறைமுகங்களை இணைத்து வரும் பிரத்யேக சரக்கு ரெயில் பாதையில், சென்னை துறைமுகத்தையும் இணைக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.</p> <h2>9 மாநிலங்கள்</h2><p>நாட்டின் முக்கிய வழித்தடங்களில், சரக்கு ரெயில்களுக்கு என பிரத்யேக ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் வகையில், இந்த பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  நாட்டின் ஒன்பது முக்கிய மாநிலங்களை இணைக்கும் வகையில் 2,841 கி.மீ. துாரத்திற்கு பிரத்யேக சரக்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த பாதையை சென்னை துறைமுகம் வரை இணைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை துறைமுகம், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.  இதுகுறித்து, சென்னை துறைமுகத்தின் உயர் அதிகாரிகள் கூறுகையில், சரக்கு ரெயில்களுக்கு பிரத்யேக பாதைகள் அமைப்பது முக்கியமான திட்டம். மேற்கு வங்காளம் - குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடாவை இணைக்கும் வகையில், பிரத்யேக சரக்கு ரெயில் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.</p> <h2>அரசுக்கு கோரிக்கை</h2><p>இந்த சரக்கு ரெயில் பாதையை சென்னை துறைமுகம் வரை இணைக்க வேண்டுமென, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். நாட்டின் மூன்றாவது பெரிய துறைமுகமாக இருக்கும் சென்னையை இணைக்கும்போது, கார்கள், கன்டெய்னர்கள், உரம், எண்ணெய் உள்ளிட்டவை அதிகளவில் கையாளப்படும் என்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>காரைக்குடியில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/head-on-collision-between-two-motorcycles-in-karaikudi-one-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/head-on-collision-between-two-motorcycles-in-karaikudi-one-dead#comments</comments><guid isPermaLink="false">cf3a7b1d-4561-4710-afcc-702e0fd40a88</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:29:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:29:08.698Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,காரைக்குடி,பைக்,Death,police enquiry,ஒருவர் பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1p90iqnd/accident.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ விபத்துள்ளான பைக்குகள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காரைக்குடி பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1p90iqnd/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர்ப் பகுதியில் 2 பைக்குகள் அதிவேகமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்  ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>அதிவேகமே விபத்துக்கு காரணம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சிவகங்கை மாவட்டம்</a> காரைக்குடியின் முக்கிய சாலைப் பகுதியில் தினமும் பல வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் (திங்கட்கிழமை) சித்திக் (வயது 38) என்பவர் தனது பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். இதையடுத்து எதிர் திசையில் இருந்து மற்றொருவரும் அதிவேகமாக தனது பைக்கில் வந்துள்ளார். அப்போது வளைவு பகுதி ஒன்றில் எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் கட்டுப்பாட்டை இழந்து, கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.</p><h2>சம்பவ இடத்தில் ஒருவர் பலி</h2><p>இந்த கோர விபத்தில் 2 பைக்குகளும் சுக்குநூறாக நொறுங்கின. இதில் தூக்கி வீசப்பட்ட சித்திக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p>விபத்துக்கான காரணம் குறித்து காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக செல்லும் வாகனங்களால் தொடர்ந்து இதுபோன்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்துகள்</a> அதிகரித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களில் கேமரா இல்லாத செல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு இல்லை:  அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-control-on-camera-less-mobile-phones-minister-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-control-on-camera-less-mobile-phones-minister-announcement#comments</comments><guid isPermaLink="false">f7fa2567-fd89-45b3-93f0-9d4bd737a103</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:27:13 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:27:13.589Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>temples,கோவில்,minister,அமைச்சர்,செல்போன்கள்,Cell phones</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/axbs154q/tntne.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/axbs154q/tntne.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>கோவில்களில் கேமரா இல்லாத செல்போன்களை கொண்டு செல்ல கட்டுப்பாடு இல்லை என அமைச்சர் அறிவித்து உள்ளார்.</p><p>தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 52 பெரிய கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கோவில்களில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>கேமரா இல்லாத செல்போன்</h2><p>இந்த நிலையில், தமிழக அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, கேமரா வசதியுடைய செல்போன்களுக்கு மட்டுமே கோவில்களுக்குள் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது </p><p>கேமரா வசதியில்லாத செல்போன்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றார்.  இதன்படி, கேமரா இல்லாத செல்போன்களை பொதுமக்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் 52 கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை அமலுக்கு வந்த சூழலில், அமைச்சரின் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.</p> <h2>ஆன்மிக சூழல்</h2><p>தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் புனிதத்தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாக்கும் வகையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி எடுக்கிறார்கள்.</p><p>ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் இன்று (செப்டம்பர்-1) முதல் 52 கோவில்களில் செல்போன் கொண்டு செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க கோவில்களில் கட்டணத்துடன் பாதுகாக்கும் பெட்டக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p> <h2>பார்த்தசாரதி-வடபழனி</h2><p>சென்னையில் வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி கோவில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.</p> <p>இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-</p><h2>பாதுகாப்பு பெட்டகம்</h2><p>தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் இன்று முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், நெல்லையப்பர், சுசீந்திரம், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட 52 கோவில்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து பக்தர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரிய கோவில்களில் 20 ஆயிரம் செல்போன்கள் வைக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா காலங்களிலும், முக்கிய நாட்களிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தால் அவர்கள் செல்போன்களை வைக்க இடமில்லாமல் தவிக்க நேரிடும். இதனால் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.</p> <h2>அதிகாரிகள் மீது நடவடிக்கை</h2><p>இதனை தவிர்க்க வீடுகள் மற்றும் வெளியூர் பக்தர்கள், விடுதிகள் அல்லது கார்களில் வைத்துவிட்டு வருவது நல்லது. கோவில்களில் புகைப்படம், வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>கேளம்பாக்கத்தில் ரவுடி கொலை: கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-murdered-in-kelambakkam-arrested-individuals-make-sensational-confession</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-murdered-in-kelambakkam-arrested-individuals-make-sensational-confession#comments</comments><guid isPermaLink="false">8d3cfffc-773e-4127-baa7-fe6676072d28</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:13:56 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:13:56.499Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Chengalpattu,செங்கல்பட்டு,police investigation,Rowdy murder,ரவுடி கொலை,போலீசார் விசாரணை,கேளம்பாக்கம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/tud1s7bh/shakul.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/tud1s7bh/shakul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தங்களை தீர்த்துக் கட்ட திட்டமிட்டதால் தாங்கள் முந்திக்கொண்டு ரவுடியை கொலை செய்ததாக கைதான 5 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.</p><h2>பல்வேறு வழக்குகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/chengalpattu">செங்கல்பட்டு</a> மாவட்டம் கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 27). ரவுடியான இவர் மீது கொலை, கொலை மிரட்டல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர், கேளம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.எஸ்.எஸ் நகர் பகுதியையொட்டிய மயானத்தில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.</p><h2>போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இதுபற்றி கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அருண் (31), ஸ்ரீகாந்த் (35), சூர்யா (32), அப்துல் ரகுமான் (25) ஆகிய 4 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.</p><p>இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பாக கொளத்தூரைச் சேர்ந்த அஜய் (25) என்ற மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரும் போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-</p><h2>தீர்த்துக்கட்ட திட்டம்</h2><p>சாகுல் அமீதும், நாங்களும் நண்பர்களாக இருந்தோம். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாகுல் அமீதை அரிவாளால் வெட்டியதால், எங்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p>அதன்பிறகு சாகுல் அமீது, எங்களை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு இருப்பதாக எங்களுக்கு தெரியவந்தது. எனவே நாங்கள் முந்திக்கொண்டு அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். கஞ்சா வழக்கில் சிறையில் இருந்த சாகுல் அமீது கடந்த 27-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை அவரை தேடி வீட்டுக்கு சென்றோம். அவர் அங்கு இல்லாததால் வழக்கமாக மது அருந்தும் இடங்களில் தேடினோம். இரவு மயானத்தில் போதையில் படுத்திருந்த சாகுல் அமீதை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றோம்.</p><p>இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.</p><h2>சிறையில் அடைப்பு</h2><p>கொலைக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் மற்றும் 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.</p><p>சாகுல் அமீது மற்றும் அருண் தரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், இருதரப்பினரின் நடவடிக்கைகளையும் போலீசார் தொடர்ந்து கண்காணிக்காததால், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த 2-வது நாளிலேயே சாகுல் அமீது கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/slight-rise-in-gold-prices-todays-status</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/slight-rise-in-gold-prices-todays-status#comments</comments><guid isPermaLink="false">30a788cf-2d8e-4522-b601-e9d04363569c</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:30:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:30:14.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uu1s9qqg/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/uu1s9qqg/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும், ஒரு கிராம் ரூ.14,505-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960-க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,370-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,385-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையைப் பொறுத்த வரையில் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தாய்நாட்டு விடுதலைக்காக போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thayinatu-viduthalaikkaga-poradiya-maveeran-poolithevanin-pugazh-endrum-nilaitheirukkattum-mudhal-amaichar-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thayinatu-viduthalaikkaga-poradiya-maveeran-poolithevanin-pugazh-endrum-nilaitheirukkattum-mudhal-amaichar-vijay#comments</comments><guid isPermaLink="false">ec33a701-7a05-4ac0-9826-a9abfbbdefeb</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:11:52 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:11:52.100Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>birthday,பிறந்தநாள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,மாவீரன் பூலித்தேவன்,Poolithevan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/kxbypub2/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/kxbypub2/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தமிழக மண்ணில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னதாகவே துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளில், அவரைப் போற்றிப் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறேன்.</p><p>அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தனது இறுதி மூச்சுவரை அஞ்சாது போராடிய அவரது வீரமும், தாய்மண் மீதான பற்றும், சுயமரியாதை உணர்வும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.</p><p>தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 16வது நாளாக தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coracle-operations-suspended-at-hogenakkal-for-the-16th-consecutive-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coracle-operations-suspended-at-hogenakkal-for-the-16th-consecutive-day#comments</comments><guid isPermaLink="false">7e98fb72-9879-4e1f-9719-5824e49e7b94</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:02:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:02:14.892Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Hogenakkal,ஒகேனக்கல்,காவிரி ஆறு,Hogenakkal Cauvery,பரிசல் இயக்க தடை,Hogenakkal Cauvery river</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ajaabd4m/kier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ajaabd4m/kier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாடம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்லில்</a> சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 16-வது நாளாக நீடிக்கிறது.</p><h2>கே.ஆர்.எஸ். அணை</h2><p>கர்நாடகத்தில் காவிரி படுகையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் உள்ளது. இந்த நிலையில் குடகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 110 அடியை தாண்டியது.</p><p>இந்த நிலையில் தற்போது குடகில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரத்து 377 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 5 ஆயிரத்து 426 கனஅடியாக குறைந்தது.</p><p>124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 110.04 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 170 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.</p><h2>கபினி அணை</h2><p>அதேபோல் வயநாட்டில் மழை பெய்யாததால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரத்து 961 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 480 கனஅடியாக குறைந்துள்ளது. ஆற்றில் இருந்து வலது, இடது கால்வாய்களில் வினாடிக்கு 3 ஆயிரத்து 260 கனஅடி நீரும், ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரத்து 600 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் அமைந்துள்ள கபினி அணையின் நீர்மட்டம், நேற்று காலை நிலவரப்படி 2,270.65 அடியாக இருந்தது.</p><p>கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் டி.நரசிப்புரா அருகே ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது. அதன்படி நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 13 ஆயிரத்து 770 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டது. </p><p>3-வது நாளாக நேற்றும் வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடிக்கு அதிகமான தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>11,000 கன அடி</h2><p>இதனால் <a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்லில்</a> உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது விநாடிக்கு 11,000 கன அடியாக நீடிக்கிறது. </p><h2>பரிசல் இயக்க தடை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/ஒகேனக்கல்">ஒகேனக்கல்</a> காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 16-வது நாளாக நீடிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆதார், பான் கார்டை பயன்படுத்தி ரூ.2.53 கோடி ஜி.எஸ்.டி. மோசடி: 71 வயது மூதாட்டி அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gst-of-253-crore-incurred-using-aadhaar-and-pan-card-71-year-old-woman-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gst-of-253-crore-incurred-using-aadhaar-and-pan-card-71-year-old-woman-shocked#comments</comments><guid isPermaLink="false">d672e3bb-2188-4011-bfc7-a7c4b7c44425</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:26:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:26:35.437Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Aadhar card,மூதாட்டி,கிருஷ்ணகிரி,GST,tax,ஜி.எஸ்.டி.,ஆதார் எண்,பான்கார்டு,PAN card,வரி ஏய்ப்பு,Aadhaar and PAN Cards,krishnagari</media:keywords><media:content height="675" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/iqigzirk/moo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/iqigzirk/moo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி, </p><p>ஊத்தங்கரையை சேர்ந்த மூதாட்டியின் ஆவணங்களை பயன்படுத்தி ரூ.2 கோடியே 53 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.</p> <h2>சேமிப்பு கணக்கு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/krishnagiri">கிருஷ்ணகிரி </a>மாவட்டம் ஊத்தங்கரை இந்திரா நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது71). இவரது மகன் ராமகிருஷ்ணன். கூலித் தொழிலாளி. லட்சுமி ஊத்தங்கரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையிலும், ராமகிருஷ்ணன் மற்றொரு வங்கி கிளையிலும் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க சென்று உள்ளார்.</p><h2>ரூ.2.53 கோடி மோசடி</h2><p>அப்போது அவரது வங்கி கணக்கு வணிக வரித்துறையினரால் முடக்கப்பட்டு உள்ளதாக வங்கி மேலாளர் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக வங்கியில் விசாரித்த போது, ஆம்பூர் வணிக வரி மதிப்பீட்டு வட்டத்தின் உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவில் லட்சுமியின் பெயரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று 2018-19-ம் ஆண்டிற்கான ஜி.எஸ்.டி. வரி நிலுவை தொகையாக ரூ.2 கோடியே 53 லட்சத்து 23 ஆயிரத்து 676 செலுத்த வேண்டி உள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><h2>போலியாக ஜி.எஸ்.டி. பதிவு</h2><p>இதையடுத்து மூதாட்டி லட்சுமி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், வணிக வரித்துறை குறிப்பிட்ட நிறுவனத்திற்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எங்களது ஆதார் மற்றும் பான்கார்டு ஆகிய ஆவண நகல்களை தவறாக பயன்படுத்தி, போலியாக ஜி.எஸ்.டி. பதிவு பெற்று ரூ.2.53 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்து மோசடி செய்து உள்ளனர்.</p><p>மேலும் எனது மகன் ராமகிருஷ்ணனின் வங்கி கணக்கும் ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை செலுத்த வேண்டும் என முடக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் முடக்கப்பட்ட எங்களது வங்கி கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.</p><p>இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஓரினச்சேர்க்கை செயலி மூலம் அழைத்து வாலிபரிடம் ‘ஜிபே&apos; மூலம் பணம் பறித்த கும்பல் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gang-arrested-for-extorting-money-via-gay-dating-app</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gang-arrested-for-extorting-money-via-gay-dating-app#comments</comments><guid isPermaLink="false">a94fb353-6de2-43b0-92bd-654e56743187</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:09:41 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:09:41.415Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Vellore,வேலூர்,arrest,ஓரினச்சேர்க்கை,பணம் பறிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/klwfpmuy/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/klwfpmuy/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>ஓரினச்சேர்க்கை செயலி மூலம் அழைத்து வாலிபரிடம் 'ஜிபே' மூலம் பணம் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பணம் பறிப்பு</h2><p>வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (23 வயது). இவர் மூவரசம்பட்டில் தங்கி, அங்குள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பழவந்தாங்கல் போலீசில் அளித்த புகாரில், வேனில் வந்த 5 பேர் தன்னை மிரட்டி, ரூ.25 ஆயிரத்தை 'ஜிபே' மூலம் பறித்துச் சென்றதாக தெரிவித்திருந்தார்.</p><p>இதுகுறித்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் பசுபதி மற்றும் பழவந்தாங்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><h2>ஓரினச்சேர்க்கை செயலி</h2><p>விசாரணையில், ஏழுமலை ஓரினச்சேர்க்கைக்கான செயலி மூலம் பெருங்குடியை சேர்ந்த வேன் டிரைவர் அய்யனார் (23 வயது) என்பவரை தொடர்பு கொண்டது தெரியவந்தது. தனியாக சந்திக்கலாம் என்று அய்யனார் கூறியதை தொடர்ந்து, ஏழுமலை நேற்று முன்தினம் இரவு அவரை சந்திக்க சென்றுள்ளார்.</p><p>அப்போது வேனில் அய்யனாருடன் அவரது நண்பர்களான பெருங்குடியை சேர்ந்த பால் வியாபாரி கோகுலகிருஷ்ணன் (24 வயது), ஆன்லைன் பொருட்கள் டெலிவரி செய்யும் ஹரிஹரன் (24 வயது). வேளச்சேரியை சேர்ந்த செல்வம் (19 வயது), திருமுல்லைவாயலை சேர்ந்த பால் வியாபாரி மதன்குமார் (24 வயது) ஆகியோர் இருந்துள்ளனர்.</p><h2>பணம் பறிப்பு</h2><p>ஏழுமலையை கண்டதும், அவரது தனிப்பட்ட விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துவிடுவதாக கூறி, பணம் கொடுத்தால் விட்டுவிடுவோம் என்று 5 பேரும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன ஏழுமலை, அவர்களிடம் ரூ.25 ஆயிரத்தை 'ஜிபே' மூலம் அனுப்பினார். பணத்தை பெற்றுக்கொண்ட 5 பேரும் அவரை வேனில் இருந்து இறக்கிவிட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p>இதையடுத்து ஏழுமலையை மிரட்டி பணம் பறித்ததாக வேன் டிரைவர் அய்யனார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
3,500 மெகாவாட்டாக  குறைந்த மத்திய தொகுப்பு மின்சாரம்... அதிகரிக்கும் தேவையால் தமிழகத்திற்கு நெருக்கடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-pool-power-supply-drops-to-3500-mw-tamil-nadu-faces-a-crisis-due-to-rising-electricity-demand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-pool-power-supply-drops-to-3500-mw-tamil-nadu-faces-a-crisis-due-to-rising-electricity-demand#comments</comments><guid isPermaLink="false">0642ff4d-cc57-4539-a81a-095ebabb853c</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:49:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:49:14.596Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,மின்சாரம்,electricity,கூடங்குளம்,நெய்வேலி,மெகாவாட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/938lb337/min.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/938lb337/min.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்திற்கு மத்திய தொகுப்பு மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 5,000 மெகாவாட் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20">மின்சாரம் </a>வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 3,400 முதல் 3,500 மெகாவாட்டாக குறைந்துள்ளது. இதனால், அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் தமிழக மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.</p><h2>7,000 மெகாவாட் </h2><p>நெய்வேலி, திருவள்ளூர் வல்லூர், தூத்துக்குடி, கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மத்திய அரசின் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான மின் நிலையங்கள் உள்ளன.</p><p>இந்த மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 7,000 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மின் நிலையங்களில் ஏற்படும் பழுது உள்ளிட்ட காரணங்களால், சராசரியாக 5,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்து வந்தது.</p><h2>மின்சாரம் குறைவு</h2><p>இந்த நிலையில், தெலுங்கானாவில் உள்ள ராமகுண்டம் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும், நெய்வேலி மின் நிலையத்தின் 3 அலகுகளில் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் கடந்த சில நாட்களாக 3,400 முதல் 3,500 மெகாவாட்டாக குறைந்துள்ளது.</p><h2>நெருக்கடி</h2><p>தற்போது வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தமிழகத்தின் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் குறைந்துள்ளதால், மின் தேவையை சமாளிப்பதில் தமிழக மின் வாரியத்திற்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரிட்டன் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijay-visiting-britain-to-attract-industrial-investments</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijay-visiting-britain-to-attract-industrial-investments#comments</comments><guid isPermaLink="false">8399c8ce-8a6b-419a-b1ed-8c1c3aed00f0</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:18:36 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:18:36.056Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,TN government,தொழில் முதலீடுகள்,பிரிட்டன்,Britain,Industrial Investments,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1w6nr8l2/kier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/1w6nr8l2/kier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்</a> வருகிற 10-ம் தேதியன்று பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>தொழில் முதலீடுகள்</h2><p>தென் மாநிலங்களில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையில் கடும் போட்டி நிலவுகிறது. எனவே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது.</p><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>'செமிகண்டக்டர், ஏ.ஐ., சிப்' உள்ளிட்ட தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் 'செமிகான் மாநாடு, இந்த வாரம் தைவானில் நடக்கிறது. அந்நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழு, தைவானில் வரும் 4ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.</p><h2>முதல் முறையாக</h2><p>இந்நிலையில் தொழில் துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினருடன் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> வரும் 10ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 16ம் தேதி வரை சுற்றுப் பயணம் செய்து அந்நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளனர்.</p><p>இதன்படி தமிழ்நாடு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> முதல் முறையாக வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>
தேங்காய் ஏற்றுமதி 62 சதவீதம் அதிகரிப்பு: ரூ.7,038 கோடியை எட்டிய வர்த்தகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coconut-exports-up-by-62-trade-reaches-7038-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coconut-exports-up-by-62-trade-reaches-7038-crore#comments</comments><guid isPermaLink="false">5ded2ea7-d8c2-408b-af2d-178a3a5a03ad</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:10:38 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:10:38.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வர்த்தகம்,ஏற்றுமதி,exports,Coconut,தேங்காய்,தேங்காய் சிரட்டைக்கரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/vmce9z4q/3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ Image Credits : AI]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/vmce9z4q/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கொச்சி,</p><p>கடந்த நிதியாண்டில் <a href="https://www.dailythanthi.com/topic/coconut">தேங்காய்</a> மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி 62 சதவீதம் அதிகரித்து, ரூ.7,038 கோடியை எட்டியுள்ளதாக தென்னை வளர்ச்சி வாரியம் தெரிவித்துள்ளது.</p>  <p><strong>இதுகுறித்து வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:</strong></p><p>தென்னை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் தேங்காய் சிரட்டைக்கரி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,688.89 கோடி மதிப்பிலான தேங்காய் சிரட்டைக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கயிறு உள்ளிட்ட பொருட்களைத் தவிர்த்து, தேங்காய் சார்ந்த பொருட்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பில் தேங்காய் சிரட்டைக்கரியின் பங்கு 67 சதவீதமாக உள்ளது. இதன் ஏற்றுமதி அளவு 1.80 லட்சம் டன்னாகும். தேங்காய் சார்ந்த பொருட்களுக்கான சர்வதேச தேவை அதிகரிப்பு, பதப்படுத்தும் திறன் மேம்பாடு, பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவை ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p> <h2>தேங்காய் ஏற்றுமதியின் முக்கியத்துவம்</h2><p>தேங்காய் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி, இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய், சிரட்டைக்கரி, நார், கயிறு, தேங்காய் பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், பதப்படுத்துதல், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைகளில் வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன. சர்வதேச சந்தையில் இயற்கை மற்றும் தாவர அடிப்படையிலான பொருட்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் கோதுமை மாவு கிலோ ரூ.15-க்கு விற்க தமிழக அரசு முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-sell-wheat-flour-at-rs15-per-kg-in-ration-shops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-sell-wheat-flour-at-rs15-per-kg-in-ration-shops#comments</comments><guid isPermaLink="false">029e3f3a-a44f-49f2-8491-da73c657950a</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:56:13 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:56:13.435Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,Ration shop,தமிழக அரசு,TN govt,கோதுமை மாவு,Wheat flour</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/xqwfa5y0/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/xqwfa5y0/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவு, கிலோ ரூ.15-க்கு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.</p><h2>பாரத் ஆட்டா</h2><p>வெளிச்சந்தையில், கோதுமை மாவு விலை சராசரியாக, ரூ.60 வரை உள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த, இரு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, 'பாரத் ஆட்டா' என்ற பெயரில், கிலோ, ரூ.27.50-க்கு கோதுமை மாவு விற்கும் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தில், தமிழகத்தில் முக்கிய இடங்களில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில், கோதுமை மாவு விற்கப்பட்டது.</p><h2>முன்னோடி திட்டம்</h2><p>இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், 'பொது வினியோக திட்டத்தில் பாக்கெட்டில் கோதுமை வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோதுமை மாவு, கிலோ ரூ.15-க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "மத்திய அரசிடம் இருந்து கோதுமை வாங்கி, ஆலைகளில் மாவாக அரைத்து, பாக்கெட்டில் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் கோதுமை மாவு என்ன விலைக்கு வழங்கப்படுகிறது என்று, ஆய்வு செய்யப்படுகிறது. அதை விட குறைவாக, கிலோ ரூ.15-க்கு வழங்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
சிமெண்ட் விலை திடீர் உயர்வு.. கட்டுமானத்துறையினர் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-hike-in-cement-prices-construction-sector-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sudden-hike-in-cement-prices-construction-sector-shocked#comments</comments><guid isPermaLink="false">db420140-1e1f-4f07-98de-7ef8f9bf8c12</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:53:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:53:08.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பருவமழை,விலை உயர்வு,price hike,Cement,சிமெண்ட்,கட்டுமானத்துறை,Construction sector</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ik4s0phs/2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ Image credits: AI]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/ik4s0phs/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாகக் குறைந்துள்ளன. இதனால் <a href="https://www.dailythanthi.com/topic/cement">சிமெண்ட்</a> விற்பனை குறையக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, உற்பத்தியாளர்கள் சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ளனர்.</p>  <h2>மூட்டைக்கு ரூ.10 உயர்வு</h2><p>கட்டுமானப் பணிகளுக்கு அத்தியாவசியமான மூலப்பொருளான சிமெண்ட் , மூட்டைக்கு ரூ.10 உயர்ந்துள்ளதாக கட்டுமானத் துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.330 என்ற அளவில் இருந்தது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளால் எரிபொருள் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.40 வரை உயர்ந்தது.அந்த நேரத்தில் கட்டுமானப் பணிகளுக்கான சிமெண்ட் தேவை அதிகமாக இருந்ததால், விலை உயர்வை மக்கள் ஏற்றுக்கொண்டனர். இதனிடையே, வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஓரளவு தணிந்ததைத் தொடர்ந்து, சில சிமெண்ட் உற்பத்தியாளர்கள் விலையைக் குறைக்கத் தொடங்கினர். இதனால், நாடு முழுவதும் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.342 என்ற அளவுக்கு குறைந்தது.இந்நிலையில், தற்போது மீண்டும் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.</p> <h2>பருவமழை காரணமாக விலை உயர்வு</h2><p>இதுகுறித்து கட்டுமானத் துறையினர் கூறியதாவது:</p><p>நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாகக் குறைந்துள்ளன. இதனால் சிமெண்ட் விற்பனை குறையக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, உற்பத்தியாளர்கள் சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ளனர். இதன் விளைவாக, தற்போது சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.10 அதிகரித்துள்ளது’ இவ்வாறு கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர்.</p> <h2>கட்டுமானத் துறையினர் கவலை</h2><p>சிமெண்ட் விலை உயர்வு, ஏற்கனவே அதிகரித்துள்ள கட்டுமானச் செலவுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வீடு கட்டும் பொதுமக்கள் மற்றும் சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொள்பவர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. விலை தொடர்ந்து உயர்ந்தால், கட்டுமானப் பணிகளுக்கான மொத்த செலவும் மேலும் அதிகரிக்கும் என கட்டுமானத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>கரிவலம்வந்தநல்லூர், சோழபுரம் ரெயில் நிலையங்களுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-grants-official-approval-for-karivalamvandanallur-and-chozhapuram-railway-stations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-grants-official-approval-for-karivalamvandanallur-and-chozhapuram-railway-stations#comments</comments><guid isPermaLink="false">65c6ddc1-4abe-4bbc-ada1-613cf8713bc8</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:51:24 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:51:24.618Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Tenkasi,தென்காசி,மத்திய அரசு,railway station,ரெயில் நிலையம்,Central Govt,கரிவலம்வந்தநல்லூர்,Karivalamvandanallur,சோழபுரம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/15hxbymf/shi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/15hxbymf/shi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தெற்கு ரெயில்வேயின் கீழ் வரும் சோழபுரம் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் ரெயில் நிலையங்கள் அமைக்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>அகல ரெயில் பாதை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/மதுரை">மதுரை</a>-செங்கோட்டை ரெயில் வழித்தடத்தில் மீட்டர் கேஜ் காலத்தில் செயல்பட்டு வந்த கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ரெயில் நிலையங்களும் அகல ரெயில் பாதை மாற்றத்தின்போது அகற்றப்பட்டன. </p><h2>மகிழ்ச்சி</h2><p>இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ரெயில் நிலையங்களை அமைக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நீண்ட நாட்களாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் ரெயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>உள்கட்டமைப்பு வளர்ச்சி</h2><p>இந்த நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, உள்ளூர் மக்களின் போக்குவரத்து வசதி மேம்படுவதோடு, சுற்றியுள்ள கிராம மக்களுக்கான நேரடி ரெயில் இணைப்பும் எளிதாகும். புதிய ரெயில் நிலையங்கள் அப்பகுதியின் வணிகம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்து ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vs-babu-victory-challenged-mk-stalin-case-high-court-defers-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vs-babu-victory-challenged-mk-stalin-case-high-court-defers-verdict#comments</comments><guid isPermaLink="false">2a41772c-71e7-4cea-97ac-4ec8f9c60ad3</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:20:37 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:20:37.862Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,கொளத்தூர் தொகுதி,Kolathur Constituency,MKstalin,வி.எஸ்.பாபு,VS Babu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/sbfpvl55/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/sbfpvl55/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><h2>தேர்தல் வழக்கு</h2><p>தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.</p><p>அதேபோல, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து மற்றொரு வழக்கையும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்தார்.</p><h2>வாக்குப்பதிவில் முறைகேடு</h2><p>தேர்தல் வழக்கு மனுவில், "கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில், சரிபார்ப்புக்காக சில எந்திரங்கள் எடுக்கப்பட்டன. அதில் சில எந்திரங்கள் திடீரென கோளாறாகி நின்றுவிட்டன. 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்களான வி.வி.பேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.</p><p>வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேடுகளை சரிபார்க்க உத்தரவிட வேண்டும். த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.</p><h2>தீர்ப்பு தள்ளிவைப்பு</h2><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை சரிபார்க்கக் கோரி தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களில், அதாவது மே 7-ந்தேதியே விண்ணப்பித்துள்ளோம். ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டது.</p><p>எனவே, காலதாமதமாக தாக்கல் செய்துள்ள இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்தல் வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை” என வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேஷாத்திரி நாயுடு, "இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை" என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.</p><h2>திரும்ப பெற அனுமதி</h2><p>அதேபோல, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, வழிகாட்டு நெறிமுறைகளில் புதிதாக கடந்த 2025-ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் மழை..! வானிலை மையம் அப்டேட் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-set-to-lash-14-districts-including-chennai-today-weather-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-set-to-lash-14-districts-including-chennai-today-weather-department-update#comments</comments><guid isPermaLink="false">f8fa9b85-c035-455a-a390-9465edf60892</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:20:30 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:20:30.512Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,TN Rains,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/fmvgez4w/mega.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain , மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/fmvgez4w/mega.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை (02.09.2026) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (01-09-2026) மற்றும் நாளை (02-09-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். </p><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை மறுநாள் (03-09-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>04-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழையும்</a></strong>, ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>05-09-2026 மற்றும் 06-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>01-09-2026 முதல் 04-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>01-09-2026 முதல் 04-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (01-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>01-09-2026 முதல் 04-09-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>01-09-2026 மற்றும் 02-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>03-09-2026 மற்றும் 04-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>01-09-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>02-09-2026 முதல் 04-09-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி புதிய அனல் மின் நிலைய திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: பெ.சண்முகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-abandon-the-new-thermal-power-plant-project-in-thoothukudi-p-shanmugam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-abandon-the-new-thermal-power-plant-project-in-thoothukudi-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">bdf8a776-e39a-426b-bb38-3ce44f394496</guid><pubDate>Tue, 01 Sep 2026 00:07:17 +0000</pubDate><atom:updated>2026-09-01T00:07:17.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,பெ.சண்முகம்,P. Shanmugam,அனல் மின் நிலையம்,Thermal Power Plants</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rtl4io3o/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/rtl4io3o/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-</p><p>தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய், பாலுக்கான கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, ஒரு லிட்டர் ரூ.44 கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதேநேரத்தில் மாட்டுத்தீவனம் விலை உய ராமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் புதிதாக ஒரு அனல்மின் நிலையம் உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே உள்ள அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் தனியார் முதலீட்டில் அனல்மின் நிலையம் என்பது மின்சார கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே தூக்குத்துகுடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மேலும் அனல்மின் நிலையங்களுக்கு பதிலாக மாற்று வழிகளை பயன்படுத்தி மின்சார தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும்.</p><p>டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல் அமைச்சர் விஜய், இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார். இந்த ஆண்டு குறுவை சாகுபடி என்பது முற்றிலும் இல்லாமல் போய், ஒருபோக சாகுபடியா வது முழுமையாக நடைபெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருக்கிறார்கள். எனவே கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய 18 டி.எம்.சி. தண்ணீரை வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இல்லையென்றால் சாகுபடி நிறைவு பெறாமல் விவசாயிக ளுக்கு நஷ்டம் தான் ஏற்படும். மேலும் தரமான விதை, உரம் உள்ளிட்டவைகள் தேவையான அளவுக்கு இருப்பு இருப்பதை அரசு உறுத்திப்படுத்த வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு இன்று முதல் அமல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/srivilliputhur-palkova-price-hike-comes-into-effect-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/srivilliputhur-palkova-price-hike-comes-into-effect-today#comments</comments><guid isPermaLink="false">b4c69e81-15cf-4b2d-9d59-c2f36e7afc13</guid><pubDate>Mon, 31 Aug 2026 23:26:50 +0000</pubDate><atom:updated>2026-08-31T23:26:50.390Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்ரீவில்லிபுத்தூர்,Srivilliputhur,பால்கோவா,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா,Srivilliputhur palkova</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/drkbma42/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/drkbma42/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீவில்லிபுத்தூர்,</p><h2>ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா</h2><p>விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரானது ஆண்டாள் பிறந்த பூமி ஆகும். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.</p><p>ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு தொழிலில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக தயாரிக்கப்படும் பால்கோவா 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தற்போது சீனி விலை அதிகரித்து உள்ளது. இதனால் பால் கோவா விலையை உயர்த்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.</p><h2>கிலோவுக்கு ரூ.40 வரை உயர்வு</h2><p>அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 1 கிலோ பால் கோவா ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.40 விலை உயருகிறது. மேலும் பால் அல்வா ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.</p><p>பால்கோவாவில் இருந்து தயாரிக்கப்படும் பால் கேக் மற்றும் திரட்டி பால் போன்றவை விலையும் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: கோவையில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thai-maman-gold-ring-scheme-survey-work-intensifies-in-coimbatore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thai-maman-gold-ring-scheme-survey-work-intensifies-in-coimbatore#comments</comments><guid isPermaLink="false">0e49b124-64a5-4e53-9f15-fe06cac3414b</guid><pubDate>Mon, 31 Aug 2026 21:52:57 +0000</pubDate><atom:updated>2026-08-31T21:52:57.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,Thai Maman Gold Ring Scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n58e9anu/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/n58e9anu/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>தாய்மாமன் தங்க மோதிரம்</h2><p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவத்தை ஊக்குவிப்பதும், தாய்மாமன் சீராக குழந்தைகளுக்கு தங்கம் வழங்கும் பாரம்பரிய பண்பாட்டை போற்றும் வகையிலும் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. </p><p>இதில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 22 கேரட் 916 தரத்துடன் கூடிய 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக அரசு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய் துள்ளது. டெண்டரும் 2 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக ஆண்டுக்கு 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கணக்கெடுப்பு பணி தீவிரம்</h2><p>இதுதொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி முதல் பிறந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. கோவை மாநகர் மற்றும் புறநகர் என அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை 1,200 குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.</p><p>வருகிற 15-ந் தேதி திட்டம் தொடங்கும்போது, கோவை அரசு ஆஸ்பத்திரி, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர். முதற்கட்டமாக வருகிற 14-ந் தேதி தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு, திட்டம் தொடங்கிய பிறகு அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 52 கோவில்களில் செல்போனுக்கு இன்று முதல் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-52-temples-across-tamil-nadu-comes-into-effect-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-52-temples-across-tamil-nadu-comes-into-effect-today#comments</comments><guid isPermaLink="false">a634b469-0c42-40fb-b6c5-5f12462ca22c</guid><pubDate>Mon, 31 Aug 2026 21:12:25 +0000</pubDate><atom:updated>2026-08-31T21:12:25.165Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,temples,கோவில்கள்,தமிழகம்,cell phone,செல்போன்,mobile phone</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/vt8eic00/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/vt8eic00/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 52 பெரிய கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கோவில் களில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>கோவில்களில் செல்போனுக்கு தடை</h2><p>தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிகச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி எடுக்கிறார்கள்.</p><p>ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் இன்று (செப்டம்பர்-1) முதல் 52 கோவில்களில் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாக்க கோவில்களில் கட்டணத்துடன் பாதுகாக்கும் பெட்டக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>பார்த்தசாரதி- வடபழனி</h2><p>சென்னையில் வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி கோவில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று முதல் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்படுகிறது.</p><p><strong>இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி கள் கூறியதாவது:-</strong></p><h2><strong>பாதுகாப்பு பெட்டகம்</strong></h2><p>தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் நாளை (இன்று) முதல் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், நெல்லையப்பர், சுசீந்திரம், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட 52 கோவில்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து பக்தர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரிய கோவில்களில் 20 ஆயிரம் செல்போன்கள் வைக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா காலங்களிலும், முக்கிய நாட்களிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தால் அவர்கள் செல்போன்களை வைக்க இடமில்லாமல் தவிக்க நேரிடும். இதனால் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.</p><h2>அதிகாரிகள் மீது நடவடிக்கை</h2><p>இதனைத் தவிர்க்க வீடுகள் மற்றும் வெளியூர் பக்தர்கள் விடு திகள் அல்லது கார்களில் வைத்துவிட்டு வருவது நல்லது. கோவில்களில் புகைப்படம், வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு வந்த 850 டன் வெங்காயம்... ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/850-tonnes-of-onions-arrived-in-chennai-dispatched-to-every-district</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/850-tonnes-of-onions-arrived-in-chennai-dispatched-to-every-district#comments</comments><guid isPermaLink="false">7742f00f-abfb-4a09-bcfd-71c07fd4b491</guid><pubDate>Mon, 31 Aug 2026 20:23:24 +0000</pubDate><atom:updated>2026-08-31T20:23:24.233Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,onion,வெங்காயம்,வெங்காயம் விலை,Onion price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/s9nn4sa3/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/s9nn4sa3/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாசிக்கில் இருந்து சென்னைக்கு 'காந்தா எக்ஸ்பிரஸ்' சரக்கு ரெயில் மூலம் 850 டன் வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.35-க்கு வழங் கப்பட உள்ளது.</p><h2>வெங்காய விலை உயர்வு</h2><p>பருவமழை குறைவால் விளைச்சல் பாதிக்கப்பட்டு டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கையிருப்பு வெங்காயத்தை சந்தைகளுக்கு வினியோகிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.</p><h2>850 டன் வெங்காயம்</h2><p>அந்தவகையில், 'காந்தா எக்ஸ்பிரஸ்' சரக்கு ரெயில்கள் மூலம் முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை மத்திய அரசு அனுப்பி வருகிறது. சமீபத்தில் டெல்லிக்கு 500 டன் வெங்காயம் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு 848.50 டன் வெங்காயம் வந்துள்ளது. கடந்த 29-ந்தேதி மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மன்மாட் பகுதியில் இருந்து இந்த வெங்காயம் சரக்கு ரெயிலில் ஏற்றி அனுப்பப்பட்டது. அந்த ரெயில் நேற்று காலை தண்டையார்பேட்டை பணிமனைக்கு வந்து சேர்ந்தது.</p><p>இதனைத்தொடர்ந்து, சரக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட வெங்காயத்தை பிரித்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி மாலை 5 மணிக்கு தொடங்கியது. சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் மலைபோல் குவித்து வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு லாரியில் 25 டன் வீதம் ஏற்றி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இவை ஓரிரு நாட்களுக்குள் கூட்டுறவு அங்காடிகள், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தமிழக அரசால் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>1 கிலோ வெங்காயம்</h2><p>இதுகுறித்து, தேசிய கூட்டுறவு சந்தையியல் சம்மேளனத்தின் மாநில தலைமை அதிகாரி பிரகாஷ் ராவ் கூறியதாவது:- தற்போது ரெயிலில் கொண்டுவரப்பட்ட வெங்காயத்தை தமிழக அரசு, லாரிகள் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு அங்காடி மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும். மாநில அரசு 1 கிலோ வெங்காயத்தை ரூ.35 என்ற அடிப்படையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>