<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 07 Sep 2026 10:52:16 +0000</lastBuildDate><item><title>மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது -  மு.வீரபாண்டியன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-communist-party-members-arrested-for-fighting-for-housing-rights</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-communist-party-members-arrested-for-fighting-for-housing-rights#comments</comments><guid isPermaLink="false">3afdbf0c-64ef-492a-89a9-c0effcaea42c</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:17:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:17:51.356Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,மக்கள்,condemned,Communist Party,members,உரிமை,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/x0mshzl0/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/x0mshzl0/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது -  மு.வீரபாண்டியன் கண்டனம். இதுகுறித்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-</p><h2>20 குடும்பங்கள்</h2><p>சென்னை, சைதாப்பேட்டை தொகுதி, மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவில் நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாடகை செலுத்தி வசித்து வருகிறார்கள். அவர்களில்  20 குடும்பங்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள், அவர்களின் குடியிருப்புகளை காலி செய்ய  வேண்டுமென மிரட்டப்படுகிறார்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்.</p><h2>மிரட்டல்</h2><p>அவர்களின் வசிப்பிடத்தை வேறு சில தனியார் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த  சிலரும், அதிகாரிகளும், தனிநபர்களும்  இணைந்து அவர்களை மிரட்டுகிறார்கள் என பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.</p> <h2>பொது நல வழக்கு</h2><p>தனது வீட்டுக்கு எதிரே ஏழை எளிய மக்களின் குடியிருப்புகள் இருப்பதை விரும்பாத ஒரு நபர், அக்குடியிருப்புகளை அகற்ற பொது நல வழக்கை போட்டுள்ளார் என்றும் ஏழை  மக்களின் குடியிருப்புகள் உள்ள இடத்தை அபகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் பாதிக்கப்பட்டுள்ளோர் கூறுகின்றனர். இந்த நிலையில் இன்று காலை காவல்துறை அந்த குடியிருப்பு பகுதியில் குவிக்கப்பட்டது.</p> <h2>அறநிலைய துறை</h2><p>ஏழை, எளிய மக்களின் குடியிருப்பை பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை பொதுமக்கள் நாடினர். நீதிமன்றத்தில் தனிநபருக்கு ஆதரவாக அறநிலைய துறையில்  உள்ள அதிகாரிகளில் சிலர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><h2>போராட்டம்</h2><p>இந்நிலையில், அரசுக்கு சொந்தமான கோவில் நிலத்தில் வாடகை செலுத்தி நீண்ட காலமாக வசிக்கும் ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை பாதுகாக்க  வேண்டும், அம்மக்களின் வசிப்பிட உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக இந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">அறநிலையத்துறை </a>நீதிமன்றத்தில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து இன்று போராடியது.</p> <h2>கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது </h2><p>போராட்டம் நடத்திய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் அபிஷேக், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ர.சௌமியா, துணைத் தலைவர் கமலக்கண்ணன் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>கண்டனம்</h2><p>தமிழ்நாடு அரசின் காவல்துறையும், இந்து அறநிலையத் துறையும், 20 குடும்பங்களை சேர்ந்தவர்களின் பொருட்களை எடுத்து  சாலையில் வீசிவிட்டன. கைக்குழந்தைகளுடன் உள்ள ஏழை, எளிய மக்களையும் வீட்டுக்குள் புகுந்து வெளியேற்றிவிட்டு, வீடுகளுக்கு சீல் வைத்துள்ளன. தமிழக அரசின் காவல்துறை மற்றும் இந்து அறநிலையத் துறையின் இத்தகைய ஏழை, அடித்தட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.</p> <h2>வலியுறுத்தல்</h2><p>தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும். கோவில் மனைகளில் குடியிருக்கும் அந்த 20 குடும்பங்களின் குடியிருப்பு உரிமைகளை பாதுகாத்திட முன்வர வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாட்டிலே உள்ள சமூகநோய்க்கும் மருந்து கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-urges-cure-and-treatment-for-indias-social-diseases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-urges-cure-and-treatment-for-indias-social-diseases#comments</comments><guid isPermaLink="false">fa1a2402-7423-42a3-bb7b-0338d352db5b</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:55:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:55:28.176Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Treatment,சிகிச்சை,Anna,அண்ணா,சுயமரியாதை திருமணம்,மு.க. ஸ்டாலின்,disease,நோய்,மருந்து,M.K. Stalin</media:keywords><media:content height="500" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ig371srx/stalin-function.jpg" width="935"><media:title type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[  தி.மு.க.  தலைவர் மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ig371srx/stalin-function.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாட்டிலே உள்ள சமூகநோய்க்கும் மருந்து கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக, தி.மு.க.  தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> இன்று சென்னையில் நடைபெற்ற கலைஞர் தொலைக்காட்சி செய்தி பிரிவு தலைவர் - எழுத்தாளர் திருமாவேலன்  இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி ஆற்றிய உரையின் தெரிவித்ததாவது:-</p> <h2>மணவிழா நிகழ்ச்சி</h2><p>அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்! தமிழே வாழ்வு என தொண்டாற்றி வரும் புலவர் படிக்கராமுவின்  குடும்பத்தில், அதுவும் குறிப்பாக திருக்குறள் முறைப்படி - நெறிப்படி, நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.</p><h2>திருமாவேலன்</h2><p>புலவர் மு. படிக்கராமு - ப. முத்துலக்குமி அம்மாள், சு. கிருஷ்ணன் - கி. அழகம்மாள் ஆகியோரின் பேத்தியும், கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் பிரிவு தலைவர் நம்முடைய புரட்சி எழுத்தாளர் – திராவிட இயக்க எழுத்தாளர் இனிய சகோதரர் திருமாவேலன் - ரேணுகா திருமாவேலன் இணையரின் அன்பு மகளுமான டாக்டர் அமிர்தாவுக்கும்.</p><h2>மகிழ்ச்சியடைகிறேன்</h2><p>கா. சுந்தரம் - சு. இலட்சுமி அம்மாள், இரா. பாண்டியராஜன் - பா. ரமணி அம்மாள் ஆகியோரின் பேரனும், டாக்டர் பாலசுப்பிரமணியன் - சுதா பாலசுப்ரமணியன் இணையரின் அன்பு மகனுமான டாக்டர் ரவிந்திரனுக்கும் நடைபெற்றிருக்கும் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதில், உங்களோடு சேர்ந்து நானும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.</p> <h2>தமிழர்களின் நெறி</h2><p>இந்த இனிய மணவிழா திருக்குறள் நெறிப்படி நடந்தேறியிருக்கிறது. இதுதான் தமிழர்களின் நெறி! இதுதான் தமிழர்களின் பண்பாடு! இதைத்தான் திராவிட இயக்கம் நூறாண்டு காலமாக வலியுறுத்தி, தொடர்ந்து நிறைவேற்றி செயல்படுத்தி காட்டி கொண்டிருக்கிறது.</p> <h2>மூன்று திட்டங்கள்</h2><p>இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இது போன்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">சுயமரியாதை திருமணங்கள்</a> 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அன்றைக்கு நாம் பெற்றிருக்கவில்லை. </p><p>ஆனால், முதன்முதலில் ஒரு மாநில கட்சி நம்முடைய தமிழ்நாட்டிலே ஆட்சி பொறுப்பேற்று, திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி உதயமாகி, 1967-இல் அண்ணா முதன்முதலாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்று சட்டமன்றத்திற்குள்ளே சென்று, நம்முடைய தமிழ்நாட்டிற்காக முத்தான மூன்று திட்டங்களை நிறைவேற்றி தந்தார்கள்.</p><h2>சுயமரியாதை திருமண சட்டம்</h2><p>ஒன்று, இருமொழி கொள்கை. இன்னொன்று, தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக்கூடிய நிகழ்வு. அடுத்து, சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாவதற்கான சட்டம். அண்ணாவால் சட்டமன்றத்திலே சுயமரியாதை திருமணங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று நிறைவேற்றி தந்திருக்கும் அந்த திருமணம்தான், இன்றைக்கு இங்கே நடந்தேறியிருக்கிறது.</p> <p>இதுபோன்ற திருமணங்களை நம்முடைய தலைவர் கலைஞரும், இனமான பேராசிரியரும், இந்த இயக்கத்தின் முன்னோடிகளும் ஆயிரக்கணக்கான அளவில் நடத்தி வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து நாமும் அதை நடத்தி வருகிறோம்.</p> <h2>திருவள்ளுவர் விருது</h2><p>இல்வாழ்க்கையை பற்றி வள்ளுவர் சொல்கிறபோது, இல்வாழ்க்கை என்பது அன்பும் அறனும் கொண்டதாக அமைந்திட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நம்முடைய திருமாவேலன் அவர்களுடைய தந்தை புலவர் படிக்கராமு, திருக்குறளை பரப்புகிற பணியிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அதற்காகவே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பணியை பாராட்டி, கடந்த திராவிட மாடல் ஆட்சியில் அவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி சிறப்பித்திருக்கிறோம். தலைமுறைகளை கடந்தும் இன்றும் இந்த பணியை நம்முடைய திருமாவேலனுடைய குடும்பத்தார் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது, பெருமைக்குரியது, போற்றுதலுக்குரியது!</p><h2>கலைஞர் தொலைக்காட்சி</h2><p>நம்முடைய திருமாவேலனிடம் எந்த பணியை கொடுத்தாலும், அதை நேர்த்தியாக, சிறப்பாக, அனைவரும் பாராட்டும் வகையில் நிறைவேற்றி காட்டும் ஆற்றலை பெற்றவர் அவர். இன்றைக்கு கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி பிரிவிலே தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக தன்னுடைய கடமையை நிறைவேற்றி வருகிறார். </p> <h2>முரசொலி நாளிதழ்</h2><p>அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்ற கழகத்தின் போர்முரசாக விளங்கி கொண்டிருக்கும், கலைஞரின் மூத்த பிள்ளையாக விளங்கி கொண்டிருக்கும் 'முரசொலி' நாளிதழின் தலையங்கத்தை தினமும் நீங்கள் படித்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அந்த தலையங்கத்தை நம்முடைய திருமாவேலன் தான் தொடர்ந்து எழுதி வருகிறார்.</p><h2>அரசியல் சூழ்நிலை</h2><p>குறிப்பாக இளைஞர்களுக்கு, இளைய சமுதாயத்தினருக்கு நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாறு மட்டுமல்லாது, நம்முடைய திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும், அதிலும் குறிப்பாக இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலைகளையெல்லாம் தெளிவாக எடுத்து சொல்லி, அந்த பணியை அவர் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.</p> <h2>கடமைப்பட்டிருக்கிறேன்</h2><p>நான் இந்த நேரத்தில் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, திருமாவேலன் முரசொலியில் எழுதும் தலையங்கத்தை தொடர்ந்து இங்கே வந்திருக்கும் அனைவரும் படித்தாக வேண்டும். படிப்பது மட்டுமல்லாமல், மக்களிடம் கொண்டு சேர்த்தாக வேண்டும் என்ற அந்த வேண்டுகோளை இந்த நேரத்திலே நான் எடுத்து வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.</p> <h2>முப்பெரும் விழா</h2><p>அவருடைய பணியை பாராட்டி - திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அந்த வகையில் இந்த மாதம் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில், தமிழறிஞர்களுக்கு, சான்றோர்களுக்கு, திராவிட இயக்கத்தின் முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி நாம் தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறோம். </p> <h2>முரசொலி செல்வம் விருது</h2><p>அந்த வகையில் இந்த ஆண்டு முரசொலி அறக்கட்டளையின் சார்பில், நம்முடைய 'முரசொலி செல்வம் விருது' நம்முடைய திருமாவேலனுக்கு வழங்கப்பட இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை நீங்கள் ஏற்கனவே பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். அதனை நான் மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, அவருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழாவில் அவரை பாராட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.</p><h2>சமூக நோய்</h2><p>இங்கே மணமகன், மணமகள் இரண்டு பேருமே மருத்துவர்கள். மருத்துவர்களாக இருக்கும் அவர்களிடம் நான் கேட்டு கொள்ள விரும்புவது, மனிதர்களின் நோய்க்கு இன்றைக்கு நீங்கள் எப்படி மருந்துகளை கண்டுபிடித்து சிகிச்சை வழங்கி வருகிறீர்களோ, அதுபோல இன்றைக்கு நாட்டிலே உள்ள 'சமூக நோய்க்கும்' மருந்து கண்டுபிடித்து, அதற்கும் நீங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த பணியை நிறைவேற்றும் கடமையை நீங்கள் நிறைவேற்றி தர வேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்.</p> <h2>தமிழ் பெயர்கள்</h2><p>அடுத்து, உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும், அந்த குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன்.</p> <p>புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்து சொல்லியிருக்கும், "வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டராய்" மணமக்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என வாழ்த்தி விடைபெறுகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>
எங்களை ஓட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்: அமைச்சர் ஷாஜகான் ஆவேசம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-have-to-reveal-who-confined-us-in-the-hotel-minister-shahjahan-speaks-out-angrily</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-have-to-reveal-who-confined-us-in-the-hotel-minister-shahjahan-speaks-out-angrily#comments</comments><guid isPermaLink="false">9d59289b-29e9-4585-b352-e961fd01c95e</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:55:20 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:55:20.142Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,குதிரை பேரம்,அமைச்சர் ஷாஜகான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/qeev4zqh/shagajgagan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/qeev4zqh/shagajgagan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாருக் பாஷா பேசுகையில் திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை திமுகவினர் மிரட்டி கோடி கோடியாக பணம் கொடுப்பதாகவும் அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் கூறினர் என நான் கூறியதை திமுகவினர் திரித்து பேசுகிறார்கள்.  தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி வருகிறார்கள். நான் யாரையும் தவறாக பேசவில்லை. மே 7ஆம் தேதி அதிமுக தலைவரை முதல்வராக்க திமுக திட்டமிட்டிருந்தது. அதை எங்கள் தலைவர் காதர் மொய்தீன் ஏற்க மறுத்தார். அவர் பேட்டியில் சொன்னதைதான் நான் எங்கள் கட்சி கூட்டத்தில் சொன்னேன்’ என்றார்.   சையத் பாரூக் பாஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p> அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ஷாஜகான், "சோஃபா மாடல் அரசு, முஸ்லீம் லீக் பணம் வாங்கியது, குதிரை பேரம் என பேசுவதை ஏற்க முடியாது. ஐயுஎம்எல் எம்எல்ஏ சையது பாருக் பாஷா, அதிமுகவினர் பற்றி பேசவில்லை.மே 7 ஆம் தேதி ஐயுஎம்எல் கட்சியை தொடர்புகொண்டு அதிமுக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று கூறினார். திமுகதான் அந்த முடிவை எடுத்தது.</p><p>மே 8 ஆம் தேதி வேறொரு முடிவை எடுத்துக் கூறியது. ஐயுஎம்எல் இதனை ஏற்க மறுத்த காரணத்தால் எங்கள் இரண்டு உறுப்பினர்களை மே 8-ம் தேதி இரவு ஹோட்டலில் அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யார்? எங்களுக்கு காவலுக்கு போட்டது யார்? என்பதை உடைத்து சொல்ல வேண்டியது வரும். ஆளுநர் ஆட்சி இங்கு வந்துவிடக்கூடாது என்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம்" என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>தடுமாறிய திமுக எம்.எல்.ஏ.வுக்கு கைகொடுத்து உதவிய முதல்-அமைச்சர் விஜய் - வைரலாகும் வீடியோ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-helps-dmk-mla-video-goes-viral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-helps-dmk-mla-video-goes-viral#comments</comments><guid isPermaLink="false">4da4cf7e-6e74-488d-bb0f-9e116dc0ea2b</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:47:09 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:47:09.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,திமுக எம்.எல்.ஏ,DMK MLA,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/6m72wqte/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/6m72wqte/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏவை முதல்-அமைச்சர் கைகொடுத்து தூக்கிவிட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><h2>முதல்-அமைச்சர் பதிலுரை</h2><p>காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக மீது அமலாக்கத்துறை வைத்த பல குற்றச்சாட்டுகள் பற்றி பேசியிருந்தார். கடந்த ஆட்சியில் திமுக எல்லா துறைகளிலும் ஊழல் செய்திருக்கிறது. கட்சி நிதி என்ற பெயரில் உதயநிதிக்கும், மு.க ஸ்டாலினுக்கும் பணம் சென்றிருக்கிறது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.</p><h2>திமுக உறுப்பினர்கள் அமளி</h2><p>இதையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பாக தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><h2>தரையில் அமர்ந்து தர்ணா</h2><p>மேலும் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பு தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது முதல்-அமைச்சர் விஜய்யின் இருக்கைக்கு முன்னே திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் (திருவையாறு தொகுதி) கீழே அமர்ந்து தர்ணா செய்தார். அதன்பின்பு அவர் எழுவதற்கு முயன்றபோது தடுமாறினார்.</p><h2>கைகொடுத்த முதல்-அமைச்சர்</h2><p>அப்போது முதல்-அமைச்சர் விஜய், துரை சந்திரசேகரனின் கையை பிடித்து, அவரை தூக்கி விட்டார். மேலும், தர்ணா செய்வதற்கு உதவி செய்யும்படி முதல்-அமைச்சர் தனது டேபிளை கொஞ்சம் பின்னே இழுத்துப் போட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சியில் ‘டிஜிட்டல் கைது’ எனக்கூறி ரூ.17 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-17-lakh-swindled-in-trichy-via-digital-arrest-scam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-17-lakh-swindled-in-trichy-via-digital-arrest-scam#comments</comments><guid isPermaLink="false">89d7c279-fc2a-479a-97fc-f510aad85f26</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:41:47 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:41:47.584Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,Digital arrest,டிஜிட்டல் கைது,பள்ளிschool</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/k4onbo74/187.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/k4onbo74/187.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரிடம் ‘டிஜிட்டல் கைது’ எனக்கூறி ரூ.17 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. </p><h2> பள்ளி ஆசிரியர்</h2><p>திருச்சி அரியமங்கலம் வி.ஓ.சி. தெருவை சேர்ந்தவர் பிலோமின் ராஜ் (வயது 67). இவரது மனைவி, பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் 31-ந் தேதி பிலோமின் ராஜின் மனைவிக்கு செல்போனில் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை மதன்குமார் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு, தான் சி.பி.ஐ.யில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.</p><p>அப்போது அவர், உங்களின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு வங்கிக்கணக்கு உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த வங்கிக் கணக்கிற்கு ஒரு பெரிய தொகை மாற்றப்பட்டு உள்ளது. இதனால் நீங்கள் கைது செய்யப்படாமல் இருக்க பணம் செலுத்த வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ளார். அதனை நம்பிய பிலோமின் ராஜின் மனைவி, வங்கிக்கணக்கு மூலம் ரூ.17 லட்சத்தை, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் தான் அவருக்கு, அந்த நபர் தன்னை மிரட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடியில்</a> ஈடுபட்டது தெரியவந்தது. </p><h2>விசாரணை</h2><p>இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அந்த எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இது குறித்து பிலோமின் ராஜ் ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-three-days-to-read-ed-charges-udayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-three-days-to-read-ed-charges-udayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">85fef16b-1f2d-45d5-a664-31e25d05f838</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:22:23 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:26:35.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,அமலாக்கத்துறை,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN Assembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/dnfba53n/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/dnfba53n/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக மீது அமலாக்கத்துறை வைத்த பல குற்றச்சாட்டுகள் பற்றி பேசியிருந்தார். கடந்த திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் திமுக ஊழல் செய்திருக்கிறது. கட்சி நிதி என்கிற பெயரில் உதயநிதிக்கும், மு.க ஸ்டாலினுக்கும் பணம் சென்றிருக்கிறது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.</p><p>அதன் பிறகு முதல்-அமைச்சரின் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, தி.மு.க.உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>இந்த நிலையில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - திசைதிருப்பும் உத்திகள் - மொத்தத்தில் எந்த தயாரிப்பும் இல்லாமல், ரோல் கேமரா, ஆக்சன் மோடில் Cringe டயலாக் பேசி இருக்கிறார் டம்மி CM. எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், அடுத்த முறை நன்றாகத் தயாராகுங்கள். இன்னும் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யுங்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/light-to-moderate-rain-possible-in-western-ghat-districts-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/light-to-moderate-rain-possible-in-western-ghat-districts-today#comments</comments><guid isPermaLink="false">933e3fe8-6ae9-4a14-b667-72772140e331</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:00:02 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:00:02.730Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/bihdko8z/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/bihdko8z/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p><strong>07-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>08-09-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>09-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>07-09-2026 மற்றும் 11-09-2026:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>07-09-2026 முதல் 11-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உலக பிசியோதெரபி தினம் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-physiotherapy-day-greetings-from-the-communist-party-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-physiotherapy-day-greetings-from-the-communist-party-of-india#comments</comments><guid isPermaLink="false">2e8dc766-43ba-4446-bced-6c48876bf639</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:40:34 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:40:34.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,பிசியோதெரபி தினம்,World Physiotherapy Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/3rxw17ak/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/3rxw17ak/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>உலக பிசியோதெரபி தினம் செப்டம்பர் 8-ந்தேதி(நாளை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிசியோதெரபி மருத்துவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“உலக இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவ தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினம் உலகில் உள்ள பிசியோதெரபி மருத்துவர்களால் கொண்டாடப்படுகிறது. உலக பிசியோதெரபி மருத்துவ அமைப்பு 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்த தினம் 1996 ஆம் ஆண்டு முதல், உலக இயன்முறை மருத்துவர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.</p><p>இருதய நோய் மற்றும் பக்கவாதம் தடுப்பில், சிகிச்சையில் மற்றும் மறுவாழ்வளித்தலில் பிசியோதெரபி மருத்துவத்தின் பங்கு என்பது தான், இந்த 2026 ஆம் ஆண்டின் பிசியோதெரபி மருத்துவ தினத்தின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இருதய நோய் மற்றும் பக்கவாதம் தடுப்பில், சிகிச்சையில் மற்றும் மறுவாழ்வளித்தலில் இயன் முறை மருத்துவம் மற்றும் உடற்பயிற்சி மகத்தான பங்கை வகிக்கிறது. எனவே, அதனை முதன்மை படுத்தி ,கருப்பொருளாகக் கொண்டு, இவ்வாண்டு பிசியோதெரபி தினம் கடைபிடிக்கப்படுவது பாராட்டுக்குரியது.</p><p>இத்துறையை சார்ந்தவர்கள் மக்களிடையே பிசியோதெரபி மருத்துவத்தைப் பற்றியும் அதன் நன்மைகளையும் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். மக்களுக்கு உடலியக்கம், தசைகளின் வலிமையை பாதுகாத்தல், உடல் ஆரோக்கியம், மூட்டுகளின் இயக்கம், அறிவியல் பூர்வமான உடற்பயிற்சி  போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.</p><p>தசைகள், எலும்புகள் மற்றும் மூட்டு வலிகளுக்குச் சிகிச்சை அளித்தல், அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு உடல் இயக்கத்தை மீட்டெடுத்தல், பக்கவாதம் அல்லது நரம்பு மண்டல பாதிப்பு உள்ளவர்களுக்குப் பயிற்சி அளித்தல், விளையாட்டு வீரர்களின் காயங்களைச் சரிசெய்தல் போன்ற பல மருத்துவ சேவைகளை பிசியோதெரபி மருத்துவர்கள் வழங்குகின்றனர்.</p> <p>நவீன அறிவியல் மருத்துவத்துடன் இணைந்து வளரும், செயல்படும், அதன் ஒருங்கிணைந்த முறையாக, பகுதியாக  மகத்தான பங்களிப்பை செலுத்தும் பிசியோதெரபி மருத்துவச் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிட்டிட வேண்டும். அதற்கேற்ப பிசியோதெரபி மருத்துவ வசதிகளை தமிழ்நாடு அரசு பரவலாக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் பிசியோதெரபி மருத்துவத்தை படித்தவர்கள் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பை தமிழ்நாடு அரசு உருவாக்கி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக அடிப்படையில்  பணிபுரியும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.</p><p>தனியார் துறைகளில் பணியாற்றும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு ரூபாய் 7,000 முதல் 15,000 ரூபாய் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். அந்த குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும்.</p><p>உலக பிசியோதெரபி தினத்தில், சேவை மனப்பாங்கோடு செயலாற்றும் அனைத்து பிசியோதெரபி மருத்துவர்களுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>‘த.வெ.க. குதிரை பேரம் நடத்தியதாக தவறான தகவலை பரப்புகிறார்கள்’ - ஐ.யூ.எம்.எல். கண்டனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/false-information-is-being-spread-alleging-horse-trading-by-tvk-iuml-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/false-information-is-being-spread-alleging-horse-trading-by-tvk-iuml-condemns#comments</comments><guid isPermaLink="false">1d574473-18b1-4daa-9083-6c16f58dbb59</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:28:57 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:28:57.875Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,குதிரை பேரம்,ஐ.யூ.எம்.எல்.,IUML,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ntsujv2u/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ntsujv2u/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் திருவள்ளூரில்  இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பாக வெற்றி பெற்றிருக்கக்கூடிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு நிலைகளிலே ஆட்சியாளர்களுக்கு துணையாக நின்று சமுதாயத்தின் பிரச்சினைகளை களைவதில் சிறப்பாக செயலாற்றி வருகின்றார்கள். </p><p>ஆனால் எதிரணியில் இருக்கக்கூடியவர்கள் அவ்வப்போது தவறான பிரசாரங்களை செய்து குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். எங்களுடைய வாணியம்பாடி எம்.எல்.ஏ. சையத் பாரூக் பாஷா பேசியது இன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவர் எந்த கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. </p><p>நடந்து முடிந்த இந்த சட்டமன்ற தேர்தலில் நிலையான ஆட்சியை யார் அமைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு, காலதாமதம் ஆனதன் காரணமாக பல கட்சிகளும் ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்தார்கள். அதன் காரணமாக குதிரை பேரம் நடந்தது என்றுதான் அவர் சொல்லி இருக்கிறார். </p><p>ஆனால் ஒட்டுமொத்தமாக த.வெ.க.தான் குதிரை பேரம் நடத்தியது என்ற தவறான தகவலை பரப்புகிறார்கள். அதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். தேர்தலுக்கு பிறகு நடந்த சூழ்நிலைகளை நாம் அலசி ஆராயும் பொழுது, அப்போது நடந்த விஷயங்களைப் பேசினால் மேலும் பிரச்சினைகள்தான் அதிகமாகும். </p><p>அதை விடுத்து, இப்பொழுது அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியில் என்ன நன்மையான காரியங்கள் இருக்கிறதோ அதைப் பாராட்ட வேண்டும். குறைபாடுகள் இருந்தால் அதை ஆரோக்கியமாக கண்ணியமாக சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு. அதை விட்டுவிட்டு தரம் தாழ்ந்த விமர்சனங்களை செய்வதன் மூலமாக எதையும் சாதிக்க முடியாது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதல்வர் அலுவலகத்தை மாற்ற ரூ.6 கோடிக்கு மேல் செலவிடுவதா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/spending-over-6-crore-to-relocate-the-chief-ministers-office-nainar-nagendran-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/spending-over-6-crore-to-relocate-the-chief-ministers-office-nainar-nagendran-questions#comments</comments><guid isPermaLink="false">940aa283-8f9f-405b-9559-ec369c402add</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:21:11 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:21:11.420Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/sj0eyv5t/nainar.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/sj0eyv5t/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>மாற்றம் தருவேன், புதிய அரசியல் செய்வேன்" என்று கூறி ஆட்சிக்கு வந்த முதல்-அமைச்சரின் சாயம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வெளியாகியுள்ள தகவலின் மூலம் குறுகிய காலத்திலேயே வெளுத்துப் போய்விட்டது. தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், அடிப்படைத் தேவைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் ஜோசப் விஜய் தனது சொகுசுக்காகவும்,  தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மக்கள் வரிப்பணமான ரூ. 6.17 கோடியை தனது அலுவலகத்தை 10-வது தளத்திற்கு மாற்றுவதற்காக வாரி இறைப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>ஒருபுறம் ரூ. 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவித்துவிட்டு, மறுபுறம் தற்காலிகமாக அலுவலகத்தை மாற்ற இத்தனை கோடி ரூபாயை விரயம் செய்வது ஏன்?</p><p>தலைமைச் செயலக கோட்டையில் ஏற்கனவே போதிய வசதிகள் இருக்கும்போது, சொகுசுக்காகவும், தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் முதல்வர் அலுவலகத்தை மாற்ற ரூ.6 கோடிக்கு மேல் செலவிடுவது எந்த விதத்தில் நியாயம்?</p><p>விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளைப் பாதுகாக்கச் சரியான சேமிப்புக் கிடங்குகள் இன்றி, அவை மழையில் நனைந்து வீணாகி வருவதாகக் குமுறி வரும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையைத் தற்காலிக அலுவலகத்திற்காக செலவிட முதல்வருக்கு மனசாட்சி உறுத்தவில்லையா?</p><p>"மாற்றம்" என்பது மக்களின் வாழ்வில் மலர வேண்டுமே தவிர, முதல்வரின் அலுவலகச் சுவர்களில் அல்ல. எனவே, இது போன்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, அந்த நிதியைத் தமிழக மக்களின் நலன் காக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்யை  கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விடுதலை அடைந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகும் தீண்டாமை தொடர்வது பேரவலம் - அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-a-great-tragedy-that-untouchability-persists-even-80-years-after-gaining-independence-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-a-great-tragedy-that-untouchability-persists-even-80-years-after-gaining-independence-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">fbc60365-a927-41fe-9254-00d5a995aa78</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:06:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:06:51.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/4ffpb696/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/4ffpb696/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கம்பூர் ஊராட்சி மன்றத்தில்  தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பணியிடத்தில் தமக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவத்திற்காக மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். பட்டியலினப் பணியாளருக்கு சாதியின் அடிப்படையில் இழைக்கப்பட்ட அநீதிகள் கண்டிக்கத்தக்கவை.</p><p>தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் சசிகலா உள்ளிட்ட சில பணியாளர்களுக்கு எதிராக தீண்டாமைக் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும்,  ஊராட்சி மன்றத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான  தேநீர்க் குவளைகளை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு, காகிதக் குவளைகளைப் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அதுமட்டுமின்றி, கம்பூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் பெண்மணியின் காலணியை தூக்கி வரும்படி சசிகலா கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவரது கணவர் டி.பிரகாஷ்  குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>கம்பூர் ஊராட்சி மன்றத்தில் தமக்கு  இழைக்கப்படும் தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பே  ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்களிடமும் சசிகலா புகார் செய்துள்ளார். ஆனால், மாவட்ட கலெக்டரும் எந்த நடவடிக்கையும்  எடுக்காத நிலையில்தான் சசிகலா இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>இந்தியா விடுதலை அடைந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. பட்டியலின மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களின் முன்னேற்றத்திற்காகவும்,  சமூக நல்லிணக்கத்திற்காகவும் அரசு பதவிகளில் இருப்பவர்கள் துணை நிற்க வேண்டும். ஆனால், அவர்களே தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகளை முன்னெடுப்பவர்களாக இருப்பதை அனுமதிக்க முடியாது.</p><p>தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து மாவட்ட கலெக்டர் வரையிலும் புகார் அளிக்கப்பட்ட பிறகும் கூட, அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை ஏற்க முடியாது. தீண்டாமையை அரசே ஊக்குவிக்கிறதோ என்ற ஐயத்தைத்தான் இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். பணியால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சகோதரர்கள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/brothers-reunited-after-35-years-thanks-to-the-election-commissions-sir-initiative</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/brothers-reunited-after-35-years-thanks-to-the-election-commissions-sir-initiative#comments</comments><guid isPermaLink="false">009d757a-4e48-4e9d-a7e1-cd817a51ce7a</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:38:30 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:38:30.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>SIR,சகோதரர்கள்,Brothers,Chandigarh,எஸ்.ஐ.ஆர். பணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/w9gonjjd/National-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/w9gonjjd/National-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சண்டிகர்,</p><p>அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள மனோஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம்(வயது 55). சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான சீதாராமை, பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள போலியோ சிகிச்சை மையத்தில், 35 ஆண்டுகளுக்கு முன் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர்.</p><p>ஒரு மாதத்துக்கு பின் அவரை பார்க்க சென்றபோது, சீதாராம், அங்கிருந்து வெளியேறியிருந்தார். பல ஆண்டுகளாக தேடியும் சீதாராம் கிடைக்கவில்லை. இதற்கிடையே, பஞ்சாபின் அமிர்தசரசில் அரசு பணியில் சேர்ந்த அவர் அங்கேயே வசித்து வந்தார். </p> <p>இந்நிலையில், பஞ்சாப் மற்றும் அரியானாவில் எஸ்.ஐ.ஆர். பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, தனது படிப்பு சான்றிதழ் தேவைப்பட்டதால், மனோகர்பூரில் தான் படித்த பள்ளிக்கு சீதாராம் சென்றார். அங்கு பணியில் இருந்த உதவி வாக்காளர் பதிவு அதிகாரி ரமேஷ் குமாரிடம், தன் மூத்த சகோதரர் பல்பீர் மனோகர்பூரில் வசித்தார் என்று சீதாராம் கூறியுள்ளார்.  </p><p>இது குறித்து மனோகர்பூரைச் சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் கிருஷன் குமாரிடம் ரமேஷ் குமார் விசாரித்தார். கிருஷனுக்கு பல்பீரை ஏற்கனவே தெரிந்திருந்ததால், சீதாராம் வந்திருப்பது குறித்து பல்பீரிடம் அவர் தெரியப்படுத்தினார். மாயமான தன் சகோதரர், பள்ளிக்கு வந்திருப்பதை அறிந்த பல்பீர் உடனடியாக அங்கு சென்றார். 35 ஆண்டுகளுக்கு பின் தம்பியை சந்தித்த பல்பீர், கண்ணீருடன் அவரை ஆரத்தழுவிக் கொண்டார். நீண்ட காலத்திற்கு முன்பு குடும்பத்தை பிரிந்த சீதாராம், எஸ்.ஐ.ஆர். பணி மூலம் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அரசியல் காழ்ப்புணர்ச்சியை முதல்-அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்: ஜவாஹிருல்லா பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-has-displayed-political-animosity-jawahirullah</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-has-displayed-political-animosity-jawahirullah#comments</comments><guid isPermaLink="false">b66186b6-3417-40eb-877f-fc87216082ae</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:18:52 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:18:52.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Jawahirullah,ஜவாஹிருல்லா,முதல்-அமைச்சர் விஜய்,CMVijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/m05yaki8/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/m05yaki8/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக ஊழல்கள் செய்ததாக அமலாக்கத்துறை கூறியதாக ஆதாரத்துடன் பேசினார். இதையடுத்து, இதற்கு பதில் கூற சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதால் திமுகவினருடன் சேர்ந்து மனிதநேய மக்கள் கட்சியும் வெளிநடப்பு செய்தது.  </p><p>இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>”ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோதும் எதிர்கட்சியை விமர்சிப்பார்கள். அதெல்லம் வரம்பை மீறி இருக்காது. ஆனால் இன்று முதல்-அமைச்சர் விஜய் வரம்பை மீறி பேசியுள்ளார். காவல்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரை அல்ல இது. உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை, கொள்கை விளக்க குறிப்பில் உள்ளவற்றை விளக்கமாக சொல்வது தான் பதிலுரை. அரசியல் காழ்ப்புணர்ச்சியை முதல்-அமைச்சர் விஜய் வெளிப்படுத்தியுள்ளார்.” இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்காதது ஏன்? - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறிய காரணம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-the-leader-of-the-opposition-not-allowed-to-speak-the-reason-given-by-speaker-jctprabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-was-the-leader-of-the-opposition-not-allowed-to-speak-the-reason-given-by-speaker-jctprabhakar#comments</comments><guid isPermaLink="false">4cf400e1-c5ad-45f6-b74a-7aba66b255e6</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:12:46 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:12:46.325Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Assembly,தமிழக சட்டமன்றம்,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,J.C.T. Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/y3ty754p/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/y3ty754p/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தன்னை நிர்பந்தப்படுத்தி முடிவு எடுக்க வைக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஆவேசமாக தெரிவித்தார். </p><h2>முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை</h2><p>தமிழக சட்டமன்றம் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலியுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது உரையை தொடங்கினார். </p><p>அப்போது பேசுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்பது, பெண்கள் பாதுகாப்பு, காவல் மரணங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க மாட்டோம் என்றும், தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரியாக செய்யும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் கூறினார். </p><h2>மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்</h2><p>தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஆபாச நதியாக, வன்ம நதியாக ஓடுகிறது. இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால்தான், இவர்கள் எதிர்கட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்க வேண்டும்” என்று விமர்சித்தார்.</p> <h2>ஊழல் குற்றச்சாட்டுகள்</h2><p>சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. ஆட்சியில் வீராணம் குழாய் திட்டத்துக்கு டெண்டர் வழங்க லஞ்சம் பெறப்பட்டதாக தெரிவித்தார். மேலும் முரசொலி கட்டிடத்துக்கு கமிஷன் வாங்கியுள்ளனர் என்று அமலாக்கத்துறை  குற்றம்சாட்டியிருப்பதாகவும், சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர் கொடுப்பதற்காக கருணாநிதி தனது முதல்-அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும் விஜய் குறிப்பிட்டார். </p><p>தொடர்ந்து கட்சி நிதி குறித்து பேசிய முதல்-அமைச்சர் விஜய், “தி.மு.க. 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதன் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதில் சிக்கியுள்ளனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் குறித்தும் அமலாக்கத்துறை சொல்லியுள்ளது. பார்ட்டி பண்ட்(கட்சி நிதி) வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.</p><p>தி.மு.க. இருக்குமிடத்தில் ஊழல் இருக்காது என அவர்கள் கூறுகின்றனர். நான் கூறுகிறேன். தி.மு.க. இருக்குமிடத்தில் ஊழல்கள் இருக்கும். ஊழல்கள் இருக்குமிடத்தில் தி.மு.க. இருக்கும். ஊழல் என்று சொன்னாலே தி.மு.க.வினர் எழுந்திரிப்பார்கள். ஊழல் செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியுமா?</p><p>மிசாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். மிசாவை பற்றிய வரலாறு எனக்கும் தெரியும். சட்டம், ஒழுங்கு பற்றி பேசுவதற்கு முன் உங்கள் ஆட்சியில் நடந்ததை கண்ணாடியில் பார்ப்பது நல்லது” என்று ஆவேசமாக பேசினார். </p><h2>தி.மு.க. அமளி</h2><p>இதனிடையே முதல்-அமைச்சர் தனது பதிலுரையை வழங்கிக் கொண்டிருக்கும்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் எழுந்து நின்று முதல்-அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பேச அனுமதி வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டமன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. கடும் அமளிக்கு இடையே காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீதான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். </p><h2>சபாநாயகர் கூறிய காரணம்</h2><p>இதனை தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு அமர்ந்தவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களை தங்கள் இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், ‘உங்கள் மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிய முடியாது. பேசுவதற்கு அனுமதி தரமுடியாது. விதிகளை மீறி நடந்து கொள்பவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்படுவார்கள்” என்று கடுமையாக எச்சரித்தார்.</p><p>மேலும், “விதிகளுக்கு உட்பட்டு உங்கள் விளக்கத்தை நீங்கள் அளிப்பதற்கான வாய்ப்புகள் எல்லாம் இருந்தன. ஆனால் அந்த வாய்ப்புகளை நீங்கள் இழந்துவிட்டீர்கள். இந்த அவையில் முதல்-அமைச்சர் பேசும்போது ஆரம்பத்தில் இருந்து கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியது தவறு. உங்கள் போஸ்டர்களை கொண்டு வந்து காண்பிக்கும் இடம் இதுவல்ல. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார்.</p><p>அப்போது முதல்-அமைச்சர் விஜய் எழுந்து, “அவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம், ‘முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி தருகிறேன். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உங்கள் இருக்கைகளில் சென்று அமருங்கள்’ என்றார். இதன்படி அனைவரும் தங்கள் இருக்கைகளில் சென்று அமர்ந்தனர்.</p><h2>பேசுவதற்கு அனுமதி </h2><p>அப்போது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “இதைத்தான் முதலிலேயே நான் செய்வதாக இருந்தேன். முதல்-அமைச்சர் பேசியபோது நீங்கள் அமைதியாக இருந்து அவரது பேச்சைக் கேட்டிருந்தால், நீங்கள் பதில் சொல்ல அனுமதி வழங்கியிருப்பேன். முதல்-அமைச்சர் எப்போது பதில் சொல்வார் என்று கேட்டவர்கள் இன்று அவர் தனது பதிலுரையை வழங்கியபோது அதனை முழுமையாக கேட்டிருக்க வேண்டும். </p><p>உங்கள் நோக்கம் அவரது பேச்சு வெளியே போகாமல் தடுக்க வேண்டும் என்பதாக இருந்திருந்தால், அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் அலுத்துப் போகும் வரை குரல் கொடுத்தீர்கள், ஆனால் முதல்-அமைச்சர் தனது பேச்சை முழுமையாக நிறைவு செய்துள்ளார். இப்போது எதிர்க்கட்சி தலைவரை பேச நான் அனுமதிக்கின்றேன்” என்றார். </p><h2>அனுமதி மறுப்பு</h2><p>ஆனால் அவர் பேசிக் கொண்டிருக்கும்போது மீண்டும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ஆவேசமான சபாநாயகர், “இப்படியெல்லாம் எழுந்து நிர்பந்தப்படுத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எனது முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நான் இப்போது அனுமதிப்பதாக இல்லை” என்று உறுதியாக தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் முறையாகவும் சரியாகவும் நடத்தப்பட வேண்டும்? - மாணிக்கம் தாகூர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-must-a-caste-based-census-be-conducted-systematically-and-accurately-manickam-tagore-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-must-a-caste-based-census-be-conducted-systematically-and-accurately-manickam-tagore-explains#comments</comments><guid isPermaLink="false">c9117797-3dee-493e-8489-43f1f8126cb2</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:02:43 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:02:43.770Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சாதிவாரி கணக்கெடுப்பு,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,Caste-based Census</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/jassvmwi/mani.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/jassvmwi/mani.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதவது;</p><p>சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி மக்களவை எதிர்கட்சித்  தலைவர் ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை வழக்கம் போல் முற்றிலும் அலட்சியம் செய்து வருகிறது மோடி அரசு.</p><p>ஒருபுறம், ஜம்மு-காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கணக்கெடுப்புப் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்; மறுபுறம், தேர்தல் வரவிருக்கும் மாநிலங்களில் அவசர அவசரமாகக் கணக்கெடுப்பை முன்கூட்டியே நடத்தப் பார்க்கிறது நரேந்திர மோடி அரசு. காங்கிரஸ் கட்சிதான் இதற்காகத் தொடக்கம் முதலே சமரசமின்றி குரல் கொடுத்து வருகிறது; இப்போது மோடி அரசின் சதியை மக்களிடம் அம்பலப்படுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி களமிறங்குகிறது !</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் முறையாகவும் சரியாகவும் நடத்தப்பட வேண்டும் ?</p><p>* நாட்டின் சரிபாதிக்கும் அதிகமான மக்கள் ஓ.பி.சி பிரிவினர்தான்; ஆனால் பல ஆண்டுகளாக சரியான எண்ணிக்கை தெரியாமல், அதிகாரத்திலும் உரிமையிலும் புறக்கணிக்கப்பட்ட பெரும்பான்மையாகவே தொடர்கிறார்கள். உண்மையான பலம் அரசு ஆவணங்களில் பதிவானால்தான் நமக்குரிய சமூகநீதி முழுமையாகக் கிடைக்கும்.</p><p>* அரசியலமைப்புச் சட்டம் 340 பிற்படுத்தப்பட்டோரின் நிலையை ஆராய்ந்து அவர்களுக்கு உரிய உரிமைகளை வழங்க வழிவகை செய்கிறது. ஆனால், நம்மிடம் தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லாதவரை அந்தச் சட்ட விதியை அரசு முறையாக நடைமுறைப்படுத்த முடியாது; சரியான கணக்கெடுப்பு மட்டுமே அதைச் சாத்தியமாக்கும்.</p><p>* அரசின் நலத்திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் வெறும் யூகத்தின் அடிப்படையில் செல்லாமல், உண்மையாகவே தேவைப்படும் தகுதியான ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட குடும்பத்திற்கும் போய்ச் சேர வேண்டும் என்றால், அதற்குத் தெளிவான மக்கள் தொகைத் தரவு மிக மிக அவசியம்.</p><p>* மத்திய அரசு கொண்டுவரும் குழப்பமான கேள்வி முறையால், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் சாதிப் பெயரை வெவ்வேறு எழுத்துக்களிலோ, உச்சரிப்புகளிலோ எழுதும்போது அது தனித்தனிப் பிரிவுகளாகப் பதிவாகிவிடும். இதனால் ஒட்டுமொத்த ஓ.பி.சி சமுதாயத்தின் எண்ணிக்கையும் பலமும் கடுமையாக உடைக்கப்பட்டு சிதையும் ஆபத்து உள்ளது.</p><p>‘சாதிவாரிக் கணக்கெடுப்பில் முறைகேடு! ஓ.பி.சி இடஒதுக்கீட்டுக்குப் பெருங்கேடு ! " என்ற முழக்கத்தோடு  மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கிறோம்.</p><p>மத்திய அரசின் இத்தகைய திட்டமிடப்படாத, முறைகேடான கணக்கெடுப்பால் மக்களின் வரிப்பணம் ஆயிரக்கணக்கான கோடிகள் வீணடிக்கப்படுவதுதான் மிச்சம் ! பயன்படாத, தவறான புள்ளிவிவரங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை பாழாக்குவதை விடுத்து, தற்போதைய கேள்வித்தாள்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் முறையான கலந்தாலோசனை நடத்தி, புதிய, வெளிப்படையான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் !</p><p>வரும் செப்டம்பர் 17 அன்று சென்னையில் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படும் இந்தப் பரப்புரை, தமிழகத்தின் அனைத்து மண்டலங்களையும் உள்ளடக்கி சென்னை, திண்டுக்கல், அரியலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. நடைபெறும் அனைத்து டவுன் ஹால் கூட்டங்களிலும் பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் இக்குளறுபடிகளை ஞசு ஊழனந வழியாக நேரலையாக அனுபவித்து உணரும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு, ஈரோட்டில் இந்த விழிப்புணர்வு பயணம் நிறைவடையும்.</p><p>பா.ஜ.க. அரசின் இந்தத் திட்டமிட்ட குளறுபடிகளால் தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீடு பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது; பிற்படுத்தப்பட்ட மக்களைப் பின்னுக்குத் தள்ளி அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க.வின் இந்தச் சதியை முறியடிக்க நாம் அனைவரும் மிகத் துரிதமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் ! சமூக நீதியையும் நமது இடஒதுக்கீட்டு உரிமைகளையும் பாதுகாக்கக் காங்கிரஸ் தொடர்ந்து சமரசமின்றிப் போராடும்!”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பிழைப்புத் தேடி வந்தவருக்கும் தவெக அரசால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-has-failed-to-provide-security-even-to-those-who-came-here-in-search-of-a-livelihood-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-has-failed-to-provide-security-even-to-those-who-came-here-in-search-of-a-livelihood-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">f045d4de-7792-49a9-aa5a-b53b8f1d29e9</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:49:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:49:36.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/8jxvjsy9/nainar.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/8jxvjsy9/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; </p><p>”அடையாறு பகுதியில் தவெக நிர்வாகி ஒருவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட பதற்றம் தணிவதற்குள், சென்னையை அடுத்த நொளம்பூரில் இலவசமாக பீடி தர மறுத்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரை, போதையில் இருந்த கும்பல் உயிர் போகும் அளவிற்கு கொடூரமாகத் தாக்கியதாக வெளியாகியுள்ள காணொளி பதைபதைக்கச் செய்கிறது. தலைநகரில் ஒரே நாளில் நடந்த இந்த இரு படுகொலைகளும், தற்போது தமிழகத்தில் நடைபெறும் “ரீல்ஸ்” ஆட்சியின் ரியாலிட்டியை மக்களுக்கு உணர்த்துகிறது. </p><p>குறிப்பாக, கிட்டத்தட்ட 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை கொண்டுள்ள தமிழகத்தில், தமிழகத்தை சேர்ந்தவருக்கும் பாதுகாப்பில்லை, தமிழகத்திற்கு பிழைப்புத் தேடி வந்தவருக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்பது இந்திய அளவில் நமக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும். நமது மாநிலத்தின் உட்கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும். </p><p>ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மக்களிடம் இருந்து தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய், பொதுமக்களின் பாதுகாப்பை இனியும் அலட்சியம் செய்யக் கூடாது. </p><p>எனவே, காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்றத்தில் இன்று பதிலுரை நிகழ்த்தவிருக்கும் முதல்வர், தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதை குற்றங்கள், காவல் மரணங்கள் என இதுவரை 500 - க்கும் மேற்பட்ட கொடூரக் குற்றங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ள அவலத்தைப் பற்றி விளக்கமளிக்க வேண்டும்! சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கை சமன்செய்ய தவெக அரசு என்னென்ன செயல்திட்டங்கள் வைத்துள்ளது என்பதையும் சமர்ப்பிக்க வேண்டும்!”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>திமுக மீது பொய்யான குற்றச்சாட்டு - உதயநிதி ஸ்டாலின் காட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/false-allegation-against-dmk-udhayanidhi-stalin-lashes-out</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/false-allegation-against-dmk-udhayanidhi-stalin-lashes-out#comments</comments><guid isPermaLink="false">5a285bcc-407f-4882-9946-db314452a088</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:29:53 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:29:53.795Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/nbnhmef8/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/nbnhmef8/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக ஊழல்கள் செய்ததாக அமலாக்கத்துறை கூறியதாக ஆதாரத்துடன் பேசினார். இதையடுத்து, இதற்கு பதில் பேச எதிர்க்கட்சிக்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதனால் திமுகவினர் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><h2>பொய் குற்றச்சாட்டு</h2><p>”தவெகவின் 114 நாட்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை ஆதாரமாக கூறினோம். முதல்-அமைச்சர் இன்று மொத்தம் 45 நிமிடங்கள் பேசினார். 10 நிமிடங்கள் காவல்துறை சாந்து கூறினார். அதன் பின்னர் எந்தவித ஆதாரமுமின்றி எங்கள் மீது குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்தார். நானும், சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து, எங்களுக்கு பதில் கூற வாய்ப்பு வழங்குங்கள் என சபாநாயகரிடம் கூறினோம். ஆனால் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. </p><p>அதனால் எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்துள்ளோம். எங்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் பதில் கூறவில்லை. 3 நாட்கள் நேரமுள்ளது. மனப்பாடம் செய்துவிட்டு, ஒப்புவித்தல் போட்டி மாதிரி முதல்-அமைச்சர் பேசியுள்ளார். பஞ்ச் டயலாக், சினிமா வசனம் போன்றவைதான் அதில் இருந்தது. </p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் உதவியாளர் விஷ்ணு கனமவளங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவேன். </p><h2>அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து</h2><p>திமுக ஆட்சியில் வழக்கு இருப்பதை கூறுகிறார். சென்னையில் பட்டப்பகலில் கொலை நடந்துள்ளது. இதற்கெல்லாம் பதில் கூறாமல் 1970க்கு சென்றுவிட்டார். மிசாவை பற்றி பேச இவருக்கு தகுதி கிடையாது. சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா? இவர் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து. </p><p>அமலாக்கத்துறை கூறியது வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சர்க்காரியா கமிஷனுக்கு பிறகு திமுக 3 முறை ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் தரப்பு அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளது. நாங்கள் பயந்துவிடுவோம் என்பதற்காக முன்னாள் அமைச்சர் நேரு  வீட்டில் சோதனை நடந்தது. 6 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் அங்கு ஒன்றும் சிக்கவில்லை. மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>தேனி: நெருப்பில் மெழுகு போல் உருகிய மொபட் - கலெக்டர் ஆபீஸ் அருகே பகீர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-scooty-melted-like-wax-in-fire-bagir-near-the-collectors-office</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-scooty-melted-like-wax-in-fire-bagir-near-the-collectors-office#comments</comments><guid isPermaLink="false">76f3841f-75ee-4841-aee7-8cedc29df401</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:24:56 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:24:56.710Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேனி,தீயணைப்பு வீரர்கள்,Collector&apos;s Office,மொபட்,தீப்பற்றி எரிந்தது,The fire accident,Scooty</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/08elcnj9/00002.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தீப்பற்றி எரிந்த மொபட்]]></media:title><media:description type="html"><![CDATA[ தேனி கலெக்டர் ஆபீஸ் அருகே  மொபட் ஒன்று நெருப்பில் மெழுகு போல் உருகி சாம்பலானது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/08elcnj9/00002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தேனி</a> கலெக்டர் அலுவலக பின்புற சாலையில், சென்று கொண்டிருந்த மொபட் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து, நெருப்பில் மெழுகு போல் உருகி முற்றிலும் நாசமானது.</p><h2>மொபட்டிலிருந்து புகை</h2><p>தேனி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். அவர் இன்று (திங்கட்கிழமை) தனது மொபட்டில் தேனி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">மாவட்ட கலெக்டர் </a>அலுவலக பின்புற சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக வாகனத்தின் எஞ்சின் பகுதியிலிருந்து திடீரென புகை கிளம்பியது.</p><h2>மளமளவென எரிந்த தீ</h2><p>புகை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாண்டியன், உடனடியாக சமயோசிதமாகச் செயல்பட்டு வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, அதிலிருந்து கீழே இறங்கி தூரமாக ஓடினார். அவர் இறங்கிய சில நொடிகளிலேயே, பைக்கின் பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.</p><h2>மெழுகு போல் உருகிய பைக்- உயிர் தப்பிய வாலிபர்</h2><p>கண்ணிமைக்கும் நேரத்தில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80"> தீ </a>பைக்கின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி, அக்னி பிழம்பாக காட்சியளித்தது. இதில் அந்த மொபட் நெருப்பில் மெழுகு போல் உருகி, முற்றிலும் எரிந்து சாம்பலானது. பாண்டியன் உடனடியாகக் கீழே இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். </p><h2>தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை</h2><p>தகவலறிந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> தீயணைப்பு வீரர்கள் </a>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மாவட்டத்தின் முக்கிய அரசு அலுவலகமான கலெக்டர் ஆபீஸ் அருகிலேயே இந்த பகீர் விபத்து நடந்ததால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Theni Fire Accident நெருப்பில் மெழுகு போல் உருகிய பைக் - கலெக்டர் ஆபீஸ் அருகே பகீர் <a href="https://t.co/vi3GdlHFgc">https://t.co/vi3GdlHFgc</a> <a href="https://x.com/hashtag/theni?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#theni</a> <a href="https://x.com/hashtag/fireaccident?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#fireaccident</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2096819793341054990?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>
உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு வைகோ வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-extends-greetings-on-world-physiotherapy-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-extends-greetings-on-world-physiotherapy-day#comments</comments><guid isPermaLink="false">350f389b-4652-4c39-8301-5452b9985a20</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:19:38 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:19:38.142Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaiko,வைகோ,Physiotherapy,பிசியோதெரபி தினம்,World Physiotherapy Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/nz4qr9cc/9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/nz4qr9cc/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p>  <h2>உலக பிசியோதெரபி தினம்</h2><p>உலக பிசியோதெரபி தினம் என்பது 1951 ஆம் ஆண்டில் உலக பிசியோதெரபி அறக்கட்டளையின் தேதியை நினைவுகூரும் வகையில் 1996 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் உலகளாவிய சுகாதார நிகழ்வாகும். </p><p>பிசியோதெரபி மற்றும் பிசியோதெரபிஸ்டுகளின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், உடல் இயக்கத்தை மேம்படுத்துவதில் அவர்களின் முக்கியத்துவத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் உருவாக்கப்பட்டது.</p>  <h2>வைகோ வாழ்த்து </h2><p>இந்த நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பிசிசோதெரபி என்பது வலி குறைப்பதற்கான ஒரு சிகிச்சை முறை என்பது மட்டுமல்ல, உடல் இயக்கம், செயல்பாடு, செயல்திறன், சுயசார்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தனித்துவமான மருத்துவத் துறையாகும்,</p><p>பக்கவாதம், நரம்பியல் பாதிப்புக்கள், தசை, எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்சினை, முதுகு தண்டு பாதிப்புக்கள், விளையாட்டின்போது ஏற்படும் காயங்கள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மீட்பு, முதியோர் இயக்க திறன் குறைபாடுகள், மாற்றுத் திறனாளிகளின் புனர்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பிசியோ தெரபி மருத்துவத்தின் பங்கு முக்கியமானது ஆகும்.</p><p>ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி, உலக பிசியோதெரபி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.</p><p>இருதய - இரத்த நாள நோய்கள் மற்றும் பக்கவாதத்தைத் தடுப்பது, மேலாண்மை செய்வது மற்றும் புனர்வாழ்வு அளித்தலில் பிசியோதெரபி மற்றும் உடல் இயக்கத்தின் பங்கு என்று இந்த ஆண்டின் கருப்பொருள் பிசியோதெரபி மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து விளக்குகிறது.</p><p>இந்த ஆண்டு தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம், மாநில அளவிலான பிசியோ தெரபி மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா ஆகியவைகளை 27.09.2026 அன்று கோவையில் நடத்த உள்ளது. </p><p>அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவும், மருத்துவத் துறையில் மனிதநேயத்துடன் மகத்தான வகையில் அரும்பணி ஆற்றிடும் மருத்துவர்களுக்கும், மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை இந்நன்னாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அனல் பறந்த சட்டமன்றம்... தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளி - பதிலுரையை நிறைவு செய்தார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heated-scenes-in-the-assembly-dmk-mlas-create-a-ruckus-chief-minister-vijay-concludes-his-reply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heated-scenes-in-the-assembly-dmk-mlas-create-a-ruckus-chief-minister-vijay-concludes-his-reply#comments</comments><guid isPermaLink="false">357cdc36-09f3-43bc-ba64-b77dec7161ca</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:57:08 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:57:08.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Assembly,சட்டமன்றம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/3adyvtol/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/3adyvtol/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலளித்து பேசினார். அவரது பதிலுரைக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது. </p><h2>யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது</h2><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார். </p><h2>முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை </h2><p>இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலியுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-</p><p>“மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அடித்தளம் காவல்துறை. ஒரு மாநிலத்தின் அமைதியில் தான் முன்னேற்றம் உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும்.</p><p>அரசு பணியில் இருக்கும் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அவரது பெயர் நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வரும்போது அந்த செய்தி அவரை மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கிறது. எனவே அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் நேர்மையை கடைபிடித்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் எந்த அவப்பெயரும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். </p><p>அதே சமயம், ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்கள் சட்டப்பூர்வமான கடமையை எந்தவித தயக்கமும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் த.வெ.க. அரசு எந்த சமரசமும் செய்யாது. </p><h2>போதைக்கு எதிரான நடவடிக்கைகள்</h2><p>கடந்த கால ஆட்சியாளர்களால் போதைப்பொருள் கலாசாரம் கவனிக்கப்படாமல் இருந்ததால், அது தற்போது வேரூன்றி வளர்ந்து நிற்கிறது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. போதைப்பொருள் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. </p><p>இதற்காக போதைப்பொருள் தடுப்புப்படை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை மட்டும்தான் வெட்டியுள்ளோம். ஆனால் அதனை வேரடி மண்ணோடு அகற்ற வேண்டும். அது ஒரு நாளிலோ, 100 நாட்களிலோ முடிகின்ற பணி அல்ல. </p><p>மாநிலத்தின் 37 மாவட்டங்கள், 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் 3,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,846 கிலோ கஞ்சா மற்றும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 159 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p> <h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை </h2><p>இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுக்காப்பை மையமாக கொண்டு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு, 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு 327 நான்கு சக்கர வாகனங்கள், 109 இரண்டு சக்கர வாகனங்கள், மற்றும் ரூ.357 கோடியில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>இந்த நடவடிக்கைகளின் மூலம் 268 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 21 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. </p><h2>காவல் மரணங்களை தடுக்கும் நடவடிக்கைகள்</h2><p>காவல் மரணம் என்பது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல. காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும். எனவே காவலில் எந்தவொரு மரணம் ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு குறித்து வெளிப்படையான, பாரபட்சமற்ற, சட்டப்பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்தில் தெரிவிக்கப்படுவதோடு, தேவையான மருத்துவ உடற்கூராய்வு மற்றும் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>ஒரு காவலர் தவறு செய்திருந்தால் அவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதற்காக எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரிவர செய்து வருகிறது. காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் சி.சி.டி.வி. கண்காணிப்பு பயிற்சி, மருத்துவ பரிசோதனைல், தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>‘வன்ம நதி ஓடுகிறது..’</h2><p>தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஆபாச நதியாக, வன்ம நதியாக ஓடுகிறது. அரசியல் ரீதியாக கருத்துகளை பதிவுசெய்யலாம். பெண்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க மாட்டோம். பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.</p><p>இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால்தான், இவர்கள் எதிர்கட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்க வேண்டும்.</p><h2>ஒரு சாம்பிள் பார்க்கலாமா?</h2><p>“என் மேஜையில் இருக்கும் 3 பைல்களை ஓப்பன் செய்யுமாறு தி.மு.க.வினர் கூறினர். அதில் ஒரு சாம்பிளை பார்க்கலாமா? கடந்த ஆட்சியில் அமலாக்கத்துறை அனுப்பிய விவரங்களை படிக்கிறேன். </p><p>சர்க்காரியா கமிஷன் -1977: தி.மு.க. ஆட்சியில் வீராணம் குழாய் திட்டத்துக்கு டெண்டர் வேண்டுமென்றால் இரண்டரை சதவீத கமிஷன் வேண்டும் என மாறன் கேட்டாராம். அதவது 40 லட்ச ரூபாய் கமிஷனாம். 1770-1974 வரை மொத்தம் 25 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. தவனையாக லஞ்சம் வாங்கியுள்ளனர். முரசொலி கட்டிடத்துக்கு, மேலும் பல விஷயத்துக்காகவும் கமிஷன் வாங்கியுள்ளனர். இதெல்லாம் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர் கொடுப்பதற்காக கருணாநிதி தனது முதல்-அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார்.</p><p>இதெல்லாம் சொன்னால் ஓடிவிடுவார்கள். ஆதாரங்கள் கேட்டால் இங்குள்ள நூலகத்தில் உள்ளது. அங்கு போய் பாருங்கள். ஆதாரத்தை பக்கத்துலேயே வைத்துக்கொண்டு பிறரிடத்தில் தேடுகின்றனர். ஆதாரம் பக்கத்திலேயே உள்ளது.</p> <h2>கட்சி நிதி</h2><p>கட்சி நிதி குறித்து தி.மு.க.வின் ஊழல் குறித்து அமலாக்கத்துறை கூறியுள்ளது. 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதன் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய சாதனை. அதுதான் தி.மு.க. </p><p>டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதில் சிக்கியுள்ளனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் குறித்தும் அமலாக்கத்துறை சொல்லியுள்ளது. பார்ட்டி பண்ட்(கட்சி நிதி) வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.</p><p>தி.மு.க. இருக்குமிடத்தில் ஊழல் இருக்காது என அவர்கள் கூறுகின்றனர். நான் கூறுகிறேன். தி.மு.க. இருக்குமிடத்தில் ஊழல்கள் இருக்கும். ஊழல்கள் இருக்குமிடத்தில் தி.மு.க. இருக்கும்.</p><h2>ஆதாரம் போதுமா?</h2><p>ஆதாரம் வேண்டும் என்றீர்களே.. போதுமா.. 2 வகை உள்ளது. தவறு செய்து மாட்டிக்கொள்வதற்கள் ஒரு பக்கம். தவறு செய்து, செய்யாதபடி சரியாக செய்பவர்கள் இன்னொரு பக்கம். அதில் தி.மு.க. 2 வது பக்கம். ஊழல் என்று சொன்னாலே தி.மு.க.வினர் எழுந்திரிப்பார்கள். ஊழல் செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியுமா?</p><p>மிசாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். மிசாவை பற்றிய வரலாறு எனக்கும் தெரியும். சட்டம், ஒழுங்கு பற்றி பேசுவதற்கு முன் உங்கள் ஆட்சியில் நடந்ததை கண்ணாடியில் பார்ப்பது நல்லது.</p><h2>இறைவன் நமது பக்கம்</h2><p>அண்ணா, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., விஜய். இயற்கையும், இறைவனும் நமது பக்கம்தான் இருப்பார்கள். அன்புக்கு முன்னாடி அவர்கள் தோற்பது உறுதி. நாற்காலிக்காக அதிகாரத்திற்காக நான் இங்கு வரவில்லை, மக்களுக்கு நல்லது செய்யவும், நன்றி கடன் செய்யவும் மட்டுமே வந்துள்ளேன்.</p><h2>பதிலுரை நிறைவு</h2><p>சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்டுள்ள 22-ம் எண் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான தீர்மானங்களை நான் படித்துப் பார்த்தேன். அவை விதிகளுக்கு உட்பட்டவையாகவும், அரசின் நிதி நிலைக்கு ஏற்ப செயல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கும் பட்சத்தில், அரசு அதனை கனிவுடன் பரிசீலிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>எனவே உறுப்பினர்கள் எனது பதிலுரையில் கூறிய விளக்கத்தை ஏற்றுக் கொண்டு தங்கள் வெட்டுத் தீர்மானங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இந்த மானியக் கோரிக்கைகளை பேரவை தலைவர் நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்படைகள் சிறப்பாக செயல்பட எனக்கு உறுதுணையாக இருந்து வரும் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர் காவல் ஆணையர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர், அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து காவல்துறை சகோதர, சகோதரிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p><h2>கடும் அமளி</h2><p>முதல்-அமைச்சர் தனது பதிலுரையை வழங்கிக் கொண்டிருக்கும்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் எழுந்து நின்று முதல்-அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>அவர்களுக்கு பேச அனுமதி வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. கடும் அமளிக்கு இடையே காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீதான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். </p><h2>சபாநாயகர் கண்டனம் </h2><p>தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்து வந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை கண்டித்தார். இது குறித்து அவர் கூறியதாவது;-</p><p>“முதல்-அமைச்சர் விஜய் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாரே, அவர் எப்போது பதில் சொல்வார் என்றெல்லாம் கேட்டார்கள். முதல்-அமைச்சரின் பதிலுரை திங்கட்கிழமை இருக்கிறது என்று சொன்னேன். அதன்படி முதல்-அமைச்சர் இன்று தனது பதிலுரையை வழங்கியபோது பல ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். </p><p>மக்கள் மன்றத்தின் முன்பாக முதல்-அமைச்சரின் பதிலுரை முழுமையாக நேரலை செய்யப்படும்போது, என்னுடைய அனுமதி இல்லாமல் போஸ்டர்களை கொண்டு வந்து இங்கே காட்டுவதும், குரல் கொடுப்பதும் சரியல்ல. உங்கள் நோக்கம் அவரது பேச்சு வெளியே போகாமல் தடுக்க வேண்டும் என்பதாக இருந்திருந்தால், அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் அலுத்துப் போகும் வரை குரல் கொடுத்தீர்கள், ஆனால் முதல்-அமைச்சர் தனது பேச்சை முழுமையாக நிறைவு செய்துள்ளார். </p><p>முதல்-அமைச்சர் எப்போது பேசுவார் என்று கேட்ட நீங்கள், அவர் பதிலளிக்கும்போது அமைதியாக கேட்டிருக்க வேண்டும். உங்கள் விளக்கத்தை நீங்கள் அளிப்பதற்கான வாய்ப்புகள் எல்லாம் இருந்தன. ஆனால் அந்த வாய்ப்புகளை நீங்கள் இழந்துவிட்டீர்கள். இந்த அவையில் முதல்-அமைச்சர் பேசும்போது ஆரம்பத்தில் இருந்து கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியது தவறு. உங்கள் போஸ்டர்களை கொண்டு வந்து காட்டுகின்ற இடம் அல்ல இது. இதை வன்மையாக கண்டிக்கின்றேன். முதல்-அமைச்சரின் பதிலுரை நிறைவடைந்துவிட்டது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன.?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-prices-dropped-at-the-start-of-the-week-what-is-the-situation-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-prices-dropped-at-the-start-of-the-week-what-is-the-situation-today#comments</comments><guid isPermaLink="false">25af0ab3-fa9f-43e7-9451-829f84d383ba</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:54:04 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:54:04.865Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் விலை,தங்கம் விலை சரிவு,தங்கம் விலை நிலவரம்,Gold prices,today gold rate,gold rate today</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/xmd7xqgo/gold.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/xmd7xqgo/gold.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><h2>தங்கம் விலை</h2><p>தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதற்கிடையே, கடந்த 3-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ. 14,240-க்கும் விற்பனையானது. அதேபோல, 4-ந்தேதியும் தங்கம் விலை  சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.</p><p>ஆனால் நேற்று முன் தினம் தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,530-க்கும், கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. விடுமுறை தினம் என்பதால் நேற்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை.</p><h2>இன்றைய தங்கம் விலை</h2><p>இந்த நிலையில், வார தொடக்கமான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,130க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை</h2><p>5-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-stages-a-walkout-from-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-stages-a-walkout-from-the-assembly#comments</comments><guid isPermaLink="false">a23d88f0-47e5-4e24-be14-d81173de579b</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:40:56 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:40:56.540Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,சட்டசபை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/z65f8s31/dm.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/z65f8s31/dm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. </p><h2>பதிலுரை</h2><p>3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. இதில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை அளித்து பேசினார்.</p><h2> பதிலளிக்க அனுமதி மறுப்பு</h2><p>இதையடுத்து முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. </p><p>முதல்-அமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ததால் திமுகவுக்கு பேச அனுமதி தர முடியாது என்று சபாநாயகர் கூறியதால், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.</p><h2>20 நிமிடங்கள் அமளி</h2><p>சுமார் 20 நிமிடங்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டநிலையில், திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-arrested-for-smuggling-ganja-from-odisha-to-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-arrested-for-smuggling-ganja-from-odisha-to-chennai#comments</comments><guid isPermaLink="false">89ac9d20-af15-4a87-9287-c0b9751ff364</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:22:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:22:27.565Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஒடிசா,arrested,police enquiry,smuggling ganja,கஞ்சா கடத்திய 2 பேர் கைது,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/dm0y5rdt/00001.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வடமாநில இளைஞர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/dm0y5rdt/00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை செங்குன்றம் அருகே ஒடிசா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 11.2 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, வடமாநில இளைஞர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர். </p><h2>போலீசாரின் அதிரடி சோதனை</h2><p>தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை இயக்குநரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" திட்டத்தின் கீழ் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இன்று (திங்கட்கிழமை) காலை, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.</p><h2>வடமாநில இளைஞர்கள் கைது</h2><p>அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய பைகளுடன் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர்களின் பைகளைச் சோதனையிட்டபோது, அதற்குள் சிறு சிறு பொட்டலங்களாக மடிக்கப்பட்ட 11.2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சாவைக் கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த கிஷோர் பேபாரி மற்றும் பீகாரைச் சேர்ந்த சந்தின் குமார் ஆகிய 2 இளைஞர்களை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒடிசா மாநிலத்தின் உள்பகுதிகளில் இருந்து மிகக் குறைந்த விலைக்கு அந்த கஞ்சா பொட்டலங்களை வாங்கியுள்ளனர். பின்னர் இதனை சென்னை மற்றும் திருப்பூரில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் ஏஜென்ட்டுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு ரெயில்கள் மற்றும் பேருந்துகள் வழியாக கடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>அவர்களிடமிருந்து 11.2 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா போதைப்பொருள் </a>மற்றும் அவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தல் நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன’ - முதல்-அமைச்சர் விஜய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2546-new-posts-have-been-created-in-the-lioness-special-task-force-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2546-new-posts-have-been-created-in-the-lioness-special-task-force-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">deb6c638-9e1a-4555-aa38-09a4be88f66a</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:05:22 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:05:22.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Assembly,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ojvrkqb4/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ojvrkqb4/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன தமிழக சட்டமன்றத்தில் இன்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். </p><h2>அனல் பறந்த சட்டசபை</h2><p>கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது. </p><h2>யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது</h2><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார். </p><h2>முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை </h2><p>இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலியுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-</p><p>“மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அடித்தளம் காவல்துறை. ஒரு மாநிலத்தின் அமைதியில் தான் முன்னேற்றம் உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும்.</p><p>அரசு பணியில் இருக்கும் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அவரது பெயர் நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வரும்போது அந்த செய்தி அவரை மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கிறது. எனவே அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் நேர்மையை கடைபிடித்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் எந்த அவப்பெயரும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். </p><p>அதே சமயம், ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்கள் சட்டப்பூர்வமான கடமையை எந்தவித தயக்கமும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் த.வெ.க. அரசு எந்த சமரசமும் செய்யாது. </p> <h2>போதைக்கு எதிரான நடவடிக்கைகள்</h2><p>கடந்த கால ஆட்சியாளர்களால் போதைப்பொருள் கலாசாரம் கவனிக்கப்படாமல் இருந்ததால், அது தற்போது வேரூன்றி வளர்ந்து நிற்கிறது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. போதைப்பொருள் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. </p><p>இதற்காக போதைப்பொருள் தடுப்புப்படை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை மட்டும்தான் வெட்டியுள்ளோம். ஆனால் அதனை வேரடி மண்ணோடு அகற்ற வேண்டும். அது ஒரு நாளிலோ, 100 நாட்களிலோ முடிகின்ற பணி அல்ல. மாநிலத்தின் 37 மாவட்டங்கள், 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. </p><p>போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் 3,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,846 கிலோ கஞ்சா மற்றும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 159 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதோடு, நமது இளைஞர்களை போதையின் பிடியில் இருந்து விடுவிப்பதே இந்த அரசின் முதன்மையான நோக்கமாகும்.</p> <h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை </h2><p>பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இரண்டு பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக கொண்டுள்ள ஒரே அரசு த.வெ.க. அரசுதான். பெண்களை தாயாக, அக்காவாக, தங்கையாக, தோழியாக பார்க்கக் கூடிய அரசு இது. பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவது இந்த அரசின் மிக முக்கியமான பொறுப்பாகும். </p><p>குற்றம் நடந்த பின்னர் நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல், குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பது இந்த அரசின் நோக்கமாகும். இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை மையமாக கொண்டு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு, 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு 327 நான்கு சக்கர வாகனங்கள், 109 இரண்டு சக்கர வாகனங்கள், மற்றும் ரூ.357 கோடியில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>இந்த நடவடிக்கைகளின் மூலம் 268 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 21 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. </p><h2>காவல் மரணங்களை தடுக்கும் நடவடிக்கைகள்</h2><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியபோது காவல் மரணங்கள் குறித்து பேசியிருந்தனர். காவல் மரணம் என்பது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல. காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும். எனவே காவலில் எந்தவொரு மரணம் ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு குறித்து வெளிப்படையான, பாரபட்சமற்ற, சட்டப்பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்தில் தெரிவிக்கப்படுவதோடு, தேவையான மருத்துவ உடற்கூராய்வு மற்றும் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>ஒரு காவலர் தவறு செய்திருந்தால் அவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதற்காக எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரிவர செய்து வருகிறது. காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் சி.சி.டி.வி. கண்காணிப்பு பயிற்சி, மருத்துவ பரிசோதனை, தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>திமுக செய்த ஊழல்கள் இதுதான்.! ஆதாரத்துடன் ஆவேசமாக பேசிய முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/these-are-the-acts-of-corruption-committed-by-the-dmk-chief-minister-vijay-spoke-vehemently-backed-by-evidence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/these-are-the-acts-of-corruption-committed-by-the-dmk-chief-minister-vijay-spoke-vehemently-backed-by-evidence#comments</comments><guid isPermaLink="false">c25bdb65-8206-40f2-908a-a8f2dc86190a</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:01:53 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:01:53.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Corruption,ஊழல்கள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/stq74epe/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/stq74epe/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Breaking-News</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசியதாவது;</p><p>தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஆபாச நதியாக, வன்ம நதியாக ஓடுகிறது. அரசியல் ரீதியாக கருத்துகளை பதிவுசெய்யலாம். பெண்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க மாட்டோம். அவதூறாக, அசிங்கமாக, ஆபாசமாக பேசும் அரசியல் நமக்கு எதற்கு? பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும். </p><p>இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? திமுகவுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால் தான், இவர்கள் எதிர்கட்சியில் அமர்ந்திருக்கிறார். மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்க வேண்டும். மிசாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். மிசாவை பற்றிய வரலாறு எனக்கும் தெரியும்.</p><h2>ஒரு சாம்பிள் பார்க்கலாமா?</h2><p>“என் மேஜையில் இருக்கும் 3 பைல்களை ஓப்பன் செய்யுமாறு திமுகவினர் கூறினர். அதில் ஒரு சாம்பிளை பார்க்கலாமா? கடந்த ஆட்சியில் அமலாக்கத்துறை அனுப்பிய விபரங்களை படிக்கிறேன். விசாரணை கமிஷனின் அறிக்கையில் நிறைய கூத்துக்கள் வெளியாகியுள்ளது. அதில் உள்ள தகவல்களை மக்களுக்கு சொல்ல வேண்டும். முழூசா படிக்க 2 நாள் ஆகும். அதனால் சுருக்கமாக கூறுகிறேன். </p><h2>சர்க்காரியா கமிஷன் -1977</h2><p>சர்க்காரியா கமிஷன் -1977: திமுக ஆட்சியில் வீராணம் குழாய் திட்டத்துக்கு டெண்டர் வேண்டுமென்றால் இரண்டரை சதவீத கமிஷன் வேண்டும் என மாறன் கேட்டாராம். அதவது 40 லட்ச ரூபாய் கமிஷனாம். 1770-1974 வரை மொத்தம் 25 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. தவணையாக லஞ்சம் வாங்கியுள்ளனர். முரசொலி கட்டிடத்துக்கு, மேலும் பல விஷயத்துக்காகவும் கமிஷன் வாங்கியுள்ளனர். இதெல்லாம் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர் கொடுப்பதற்காக கருணாநிதி தனது முதல்-அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார்.  </p><p>இதெல்லாம் சொன்னால் ஓடிவிடுவார்கள். ஆதாரங்கள் கேட்டால் இங்குள்ள நூலகத்தில் உள்ளது. அங்கு போய் பாருங்கள். ஆதாரத்தை பக்கத்துலேயே வைத்துக்கொண்டு பிறரிடத்தில் தேடுகின்றனர். ஆதாரம் பக்கத்திலேயே உள்ளது. </p><h2>கட்சி நிதி</h2><p>கட்சி நிதி குறித்த திமுகவின் ஊழல் குறித்து அமலாக்கத்துறை 100 பக்கத்திற்கு அனுப்பியுள்ளது. அதாவது, 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதன் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய சாதனை. அதுதான் திமுக. டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் ஐஏஎஸ் அதிகாரிகளும் இதில் சிக்கியுள்ளனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் குறித்தும் அமலாக்கத்துறை சொல்லியுள்ளது. பார்ட்டி பண்ட் வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.</p><p>இரண்டு துறைகளின் பைல்ஸ்களை திறந்தாலே இந்த நிலைமை என்றால், இன்னும் சில பைல்ஸ்களை திறந்தால் எத்தனை பூதங்கள் வெளிவருமோ?</p><h2>தவறு இருக்குமிடத்தில் திமுக</h2><p>திமுக இருக்குமிடத்தில் தவறுகள் இருக்காது என அவர்கள் கூறுகின்றனர். நான் கூறுகிறேன். திமுக இருக்குமிடத்தில் தவறுகள் இருக்கும். தவறுகள் இருக்குமிடத்தில் திமுக இருக்கும்.</p><p>ஆதாரம் வேண்டும் என்றீர்களே.. போதுமா.. 2 வகை உள்ளது. தவறு செய்து மாட்டிக்கொள்பவர்கள்&nbsp;ஒரு பக்கம். தவறு செய்து, செய்யாதபடி சரியாக செய்பவர்கள் இன்னொரு பக்கம். அதில் திமுக 2 வது பக்கம். ஊழல் என்று சொன்னாலே திமுகவினர் எழுந்து நிற்பார்கள். ஊழல் செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியுமா? </p><p>கடந்த திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீரழிவு, போதைப்பொருள் பயன்பாடு இருந்தன. சட்டம், ஒழுங்கு பற்றி பேசுவதற்கு முன் உங்கள் ஆட்சியில் நடந்ததை கண்ணாடியில் பார்ப்பது நல்லது. </p><p>1967ல்அண்ணா, 1977ல் எம்ஜிஆர், 1983ல் என்டிஆர், 2026ல் விஜய். இயற்கையும் இறைவனும் நம்ம பக்கம் தான் இருப்பார்கள். அன்புக்கு முன்னாடி அவர்கள் தோற்பது உறுதி உறுதி உறுதி. நாற்காலிக்காக அதிகாரத்திற்காக நான் இங்கு வரவில்லை, மக்களுக்கு நல்லது செய்யவும், நன்றி கடன் செய்யவும் மட்டுமே வந்துள்ளேன்."</p><p>இவ்வாறு திமுகவின் ஊழல் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்தார்.</p> ]]></content:encoded></item><item><title>பரபரக்கும் சட்டமன்றம்... பதிலுரையை தொடங்கினார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-bustling-legislative-assembly-chief-minister-vijay-has-begun-his-reply-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-bustling-legislative-assembly-chief-minister-vijay-has-begun-his-reply-speech#comments</comments><guid isPermaLink="false">fde4a5f4-6368-4fce-9522-8adc07766474</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:24:06 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:24:06.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Assembly,சட்டமன்றம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/khz7xc0f/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/khz7xc0f/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதம் மீது முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை அளித்து பேசி வருகிறார். </p><h2>அனல் பறந்த சட்டசபை</h2><p>கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது. </p><h2>உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு</h2><p>குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "த.வெ.க. அரசு அமைந்த 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அரசின் அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, எல்லா திட்டத்திற்கும் மொத்தமாக சேர்த்து தாய்மாமன் காதுகுத்து திட்டம் என்று பெயர் வைத்திருக்கலாம். கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளது. இதில், 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் அடங்கும். எங்களுடைய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார். </p><h2>யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது</h2><p>அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன" என்று பேசினார். </p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார். </p> <h2>முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை </h2><p>இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலியுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது உரையை தொடங்கினார். </p><p>அப்போது பேசிய அவர், ‘மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அடித்தளம் காவல்துறை. ஒரு மாநிலத்தின் அமைதியில் தான் முன்னேற்றம் உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஈரோடு வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-service-of-special-trains-running-via-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-service-of-special-trains-running-via-erode#comments</comments><guid isPermaLink="false">a8e2066f-0fe3-4578-9080-dfdabb99efab</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:14:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:14:27.292Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Special trains,Erode,ஈரோடு,சிறப்பு ரெயில்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/w73zot7r/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/w73zot7r/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஈரோடு,  </p><p>அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மங்களூருவில் இருந்து ஈரோடு வழியாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த ரெயில்களின் சேவைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்களூரு சென்ட்ரல் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06126) இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 26-ந்தேதி வரை திங்கட்கிழமைகளில் மாலை 4 மணிக்கு மங்களூரு சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரெயில் திங்கட்கிழமை நள்ளிரவு 12.18 மணிக்கு போத்தனூருக்கும், 1.28 மணிக்கு திருப்பூருக்கும், 2.10 மணிக்கு ஈரோட்டுக் கும் வருகிறது. பின்னர் இங்கிருந்து சேலத்துக்கு 3.17 மணிக்கும். ஜோலார்பேட்டைக்கு 5.20 மணிக்கும் செல்கிறது. </p><p>இதேபோல் சென்னை எழும்பூர் -மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06125) நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் மாதம் 27-ந்தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை சென்றடையும். இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை மாலை 6.05 மணிக்கு ஜோலார்பேட்டைக்கும், இரவு 7.37 மணிக்கு சேலத்துக்கும், 8.35 மணிக்கு ஈரோட்டுக்கும் வருகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு திருப்பூ ருக்கு 9.28 மணிக்கும். போத்தனூருக்கு 10.43 மணிக்கும் செல்கிறது.</p><p>மேற்கண்ட தகவல் சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு? - சென்னையில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-killed-in-collision-with-minister-jagatheeswaris-car-shock-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-killed-in-collision-with-minister-jagatheeswaris-car-shock-in-chennai#comments</comments><guid isPermaLink="false">1f50b98a-5fb0-479e-9369-4f3e9f96b4aa</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:02:41 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:02:41.811Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சட்டசபை,அமைச்சர் ஜெகதீஸ்வரி,Minister Jagatheeswari</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/sizitwqe/JE.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஜெகதீஸ்வரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/sizitwqe/JE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">அமைச்சர் ஜெகதீஸ்வரி</a>யின் கார் மோதி இளைஞர் உயிரிழந்திருப்பதாக தகவல வெளியாகி உள்ளது. </p><h2>விடுமுறை முடிந்து </h2><p>தமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் இருந்து தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். </p><p>இதற்கிடையில், சட்டசபை விடுமுறையின் காரணமாக தொகுதிக்கு ஜெகதீஸ்வரி சென்றிருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு வாகனத்தில் வந்த நிலையில் அவருக்கு முன்னால் எஸ்கார்ட் பாதுகாப்பு வாகனமும், கடைசியாக அவரின் சொந்த வாகனமும் வந்திருக்கிறது. </p><h2>26 வயது இளைஞர்</h2><p>இதில் மூன்றாவதாக வந்த அவரது சொந்த கார் சென்னை காட்டாங்குளத்தூர் அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது.  இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இளைஞரின் பெயர் இறையன்பு என்றும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. </p><h2>விசாரணை </h2><p>இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த வாகனத்தை பறிமுதல் செய்திருப்பதாகவும்  வாகனத்தை ஓட்டிவந்த டிரைவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகமே காத்திருக்கும் பதிலுரை... சட்டசபைக்கு புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-reply-speech-that-all-of-tamil-nadu-is-awaiting-chief-minister-vijay-has-set-out-for-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-reply-speech-that-all-of-tamil-nadu-is-awaiting-chief-minister-vijay-has-set-out-for-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">77d8e984-daf7-466f-b58f-5d6f31c73f57</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:52:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T03:52:36.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/l1dsanmn/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/l1dsanmn/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேச உள்ளார். இதற்காக அவர் தனது இல்லத்தில் இருந்து சட்டசபைக்கு புறப்பட்டுச் சென்றார். </p><h2>அனல் பறந்த சட்டசபை</h2><p>கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது. </p><h2>யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது</h2><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார். </p> <h2>சட்டசபைக்கு புறப்பட்டார்</h2><p>இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேச உள்ளார். இதற்காக தமது நீலாங்கரை இல்லத்தில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் சற்று முன்பு கார் மூலம் புறப்பட்டுச் சென்றார். சட்டம் ஒழுங்கு குறித்தும், முந்தைய ஆட்சி குறித்தும் முதல்-அமைச்சர் விஜய் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு இதய அறுவை சிகிச்சை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-dmk-minister-sivasankar-undergoes-heart-surgery</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-dmk-minister-sivasankar-undergoes-heart-surgery#comments</comments><guid isPermaLink="false">4b275b4a-4c6a-443d-80c6-0711404065b4</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:23:14 +0000</pubDate><atom:updated>2026-09-07T03:23:14.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Sivashankar,சிவசங்கர்,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/k9nn1lp3/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/k9nn1lp3/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவசங்கர், தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய தி.மு.க. அமைத்த குழுவிலும் சிவசங்கர் இடம்பெற்றுள்ளார். </p><p>தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் சூழலில், கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற சிவசங்கருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிவசங்கர் அனுமதிக்கப்பட்டார்.</p><p>அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்தில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தனர். இதன்படி சிவசங்கருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது சிவசங்கர் மருத்துவமனையில் ஓய்வில் உள்ளார். அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். </p> ]]></content:encoded></item><item><title>உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் த.வெ.க. - மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைக்க திட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-gears-up-for-local-body-elections-plan-to-dissolve-municipal-corporations-ahead-of-schedule</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-gears-up-for-local-body-elections-plan-to-dissolve-municipal-corporations-ahead-of-schedule#comments</comments><guid isPermaLink="false">211097c4-7188-4207-a56a-5e79beab3471</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:09:13 +0000</pubDate><atom:updated>2026-09-07T03:09:13.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,உள்ளாட்சி தேர்தல்,local body elections</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/waf4z8id/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/waf4z8id/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தி.மு.க. வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை எதிர்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. </p><p>இதன் ஒரு பகுதியாக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், மார்ச் வரை இருந்தாலும், மாநகராட்சிகளை மட்டும் முன்கூட்டியே கலைக்க த.வெ.க. அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மாநகராட்சிகளில் தனி அதிகாரிகளை நியமித்து, த.வெ.க., கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும், அதன்பிறகு, ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து த.வெ.க.வை சேர்ந்தவர்கள் கூறுகையில், “மாநகராட்சி, நகராட்சிகளில் தி.மு.க.வினர் நடத்திய ஊழல்களை முன்வைத்து உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க த.வெ.க. தயாராகி வருகிறது. அதனால்தான், நகராட்சி துறை டெண்டர்கள் முறைகேடு புகார் மீது அதிக கவனம் செலுத்துகிறது. இது குறித்து, முதல்-அமைச்சர் விஜய்யின் கவனத்துக்கு த.வெ.க., மூத்த அமைச்சர்கள் கொண்டு சென்றுள்ளனர். முதல்-அமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்” என்று தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை: தேரெழுந்துாரில் ராஜராஜன் கால கல்வெட்டு கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayiladuthurai-inscription-from-the-era-of-rajaraja-discovered-at-theralundur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayiladuthurai-inscription-from-the-era-of-rajaraja-discovered-at-theralundur#comments</comments><guid isPermaLink="false">200d06ce-c584-42f9-8ccd-d8a01c4a501e</guid><pubDate>Mon, 07 Sep 2026 02:14:09 +0000</pubDate><atom:updated>2026-09-07T02:14:09.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,மயிலாடுதுறை,கல்வெட்டு,Inscription</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/vhptpt1o/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/vhptpt1o/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவினர், மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது இதுவரை நகலெடுக்கப்படாத, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டை அவர்கள் கண்டறிந்தனர்.</p><p>கோவிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள தூணில், சோழர்கால தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு  கல்வெட்டில், சிவனுக்கு அமுது படைக்க பொன்னை தானமாக அளித்த தகவல் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து, கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது;</p><p>இந்த கல்வெட்டு, கோவிராஜ கேசரிவர்மனான முதலாம் ராஜராஜனின் 18வது ஆட்சியாண்டான, 1003ல் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், உய்யக் கொண்டார் வளநாட்டில் உள்ள பிரம்மதேயமான திருவழுந்துார் மகாச்பையில், திருக்கடவுடை நாயனார் தெய்வத்திற்கு அமுது படைக்க, 21 கழஞ்சு தங்கம், தானமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த அறக்கொடையில் இருந்து, கிடைத்த வட்டியில், அமுது படைப்பதற்கான நெல் மற்றும் மற்ற தேவைகளுக்கான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு, அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/12000-cubic-feet-of-water-per-second-released-from-mettur-dam-for-delta-irrigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/12000-cubic-feet-of-water-per-second-released-from-mettur-dam-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">2ed53b95-045a-4b0c-ad4d-c2ef6589d897</guid><pubDate>Mon, 07 Sep 2026 01:03:01 +0000</pubDate><atom:updated>2026-09-07T01:03:01.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர் திறப்பு,mettur dam மேட்டூர் அணை,டெல்டா பாசனம்,Delta irrigation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/maphlmju/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/maphlmju/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர்,</p><p>சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு நீர்திறப்பு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களாக அதே அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.</p><p>இதற்கிடையே, காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் தண்ணீரின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து, நேற்று மாலை 6 மணியளவில் நீர்திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.</p>  <p>இந்த நிலையில், டெல்டா பாசனத்துக்கான நீர்த்தேவை மேலும் அதிகரித்துள்ளதால், இன்று காலை 6 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p>நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.39 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 709 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு சுமார் 55.35 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகளுக்கு தேவையான நீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-13-year-old-girl-elderly-man-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-13-year-old-girl-elderly-man-arrested#comments</comments><guid isPermaLink="false">a59e19d6-8dff-4e2e-bb77-91aa9f701492</guid><pubDate>Mon, 07 Sep 2026 00:48:25 +0000</pubDate><atom:updated>2026-09-07T00:48:25.451Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,போக்சோ சட்டம்,POCSO case</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ee2bgqhv/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ee2bgqhv/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் கடத்தூர் ஆண்டிபாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 71). இவர் தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பழங்கரை பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் பழனி, அவினாசியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. </p><p>இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து அவினாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-3#comments</comments><guid isPermaLink="false">f46e7b70-37a4-4625-a27e-20f3c93ca4e8</guid><pubDate>Mon, 07 Sep 2026 00:34:53 +0000</pubDate><atom:updated>2026-09-07T00:34:53.439Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/w8cijril/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/w8cijril/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (07.09.2026 திங்கட்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கே.என்.நேருவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-police-investigation-to-knnehru-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-police-investigation-to-knnehru-soon#comments</comments><guid isPermaLink="false">85123619-d815-403b-9634-cb55aa677168</guid><pubDate>Mon, 07 Sep 2026 00:20:48 +0000</pubDate><atom:updated>2026-09-07T00:20:48.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கே.என்.நேரு,Anti-Corruption Police,லஞ்ச ஒழிப்பு போலீஸ்,K.N.Nehru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/1d2mao3o/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/1d2mao3o/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடு மற்றும் அவர் தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். </p><p>இந்த சோதனையில் டெண்டர்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், வழக்கின் புலனாய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து இருந்தனர்.</p><p>இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், அதனடிப்படையில் கே.என்.நேரு, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் கே.என்.நேரு தன் மீதான இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கும்பாபிஷேக விழா: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பில் குதிரைப்படை போலீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-force-police-security-of-the-madurai-meenakshi-amman-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-force-police-security-of-the-madurai-meenakshi-amman-temple#comments</comments><guid isPermaLink="false">961c65bd-1eea-479e-88ae-a1ea4b6dc486</guid><pubDate>Sun, 06 Sep 2026 23:53:17 +0000</pubDate><atom:updated>2026-09-06T23:53:17.195Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Meenakshi Amman Temple,Madurai Meenakshi Amman Temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,மீனாட்சி அம்மன் கோவில்,police security,போலீஸ் பாதுகாப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/wnyh1298/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/wnyh1298/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 17-ந்தேதி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதற்கு தேவையான முன்னேற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. </p><p>இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பக்தர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், மதுரை மாநகர காவல்துறை சார்பில் கூடுதல் போலீசார் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். சீருடை அணியாத மப்டி போலீசாரும் தீவிர ரோந்துப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>சில தினங்களுக்கு முன்பு மாசி வீதிகளில் போலீசார் சைக்கிள்களில் சென்று ரோந்துப் பணியை மேற்கொள்ளும் வகையில் 4 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அதன்படி போலீசார், சைக்கிளில் சென்று, இரவு, பகல் என 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒலி பெருக்கியும் வழங்கப்பட்டு பக்தர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>இன்னும் கும்பாபிஷேகத்திற்கு 10 தினங்களே இருப் பதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் குதிரைகள் மூலம் போலீசார் ரோந்துப் பணிகளை தொடங்கி இருக்கின்றனர். அதற்காக 2 குதிரைகளில் போலீசார் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் வலம் வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து குடும்பத்தினருக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/interfaith-kanduri-festival-ghee-rice-and-meat-curry-in-buckets-for-all-families</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/interfaith-kanduri-festival-ghee-rice-and-meat-curry-in-buckets-for-all-families#comments</comments><guid isPermaLink="false">0f681705-83c2-4f20-8ddb-5e51dd51a70a</guid><pubDate>Sun, 06 Sep 2026 22:45:24 +0000</pubDate><atom:updated>2026-09-06T22:45:24.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,Mosque,பள்ளிவாசல்,கந்தூரி விழா,Kanduri festival</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/nbirg2rw/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/nbirg2rw/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><h2>கந்தூரி விழா</h2><p>சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், கரிசல்பட்டியில் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் ஆண்டுதோறும் மிலாது நபி விழாவையொட்டி மதநல்லிணக்க கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று நடைபெற்றது.</p><p>முன்னதாக முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசலில் ஜமாத் கமிட்டி சார்பில் மிலாது நபியையொட்டி அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடனும், நோய் இன்றி நலமுடன் வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் சிறப்பு துவா ஓதப்பட்டு விழா தொடங்கியது. விழாவில் 75 ஆடுகள் வெட்டப்பட்டு கறிக்குழம்பு தயார் செய்யப்பட்டது.</p><h2>வாளிகளில் நெய்ச்சோறு</h2><p>தொடர்ந்து 1000 கிலோ ஆட்டிறைச்சி, 800 கிலோ அரிசி, 100 கிலோ நெய், 3 ஆயிரம் முட்டைகளுடன், சுமார் 4 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் நெய்ச்சோறு தயார் செய்யப்பட்டது. பின்னர் பல வண்ண நிறமுடைய சுமார் 700 வாளிகளில் ஒவ் வொன்றிலும் சுமார் 5 கிலோ நெய் சோறுடன் 4 முட்டைகள் வைத்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது. தனியாக மட்டன் கறிக்குழம்பும் வழங்கப்பட்டது.</p><p>இதனை கரிசல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாங்கிச்சென்றனர். தொடர்ந்து அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்ற அன்னதானம் நடைபெற்றது. இந்த மதநல்லிணக்க கந்தூரி விழாவையொட்டி கரிசல்பட்டி கிராமம் முழுவதும் நெய்ச்சோறு கமகமத்தது.</p>]]></content:encoded></item><item><title>இஸ்ரோ தனியார் மயமாகாது - ஊழியர் சங்கத்தினருக்கு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-will-not-be-privatized-clarification-given-to-employees-union-members</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-will-not-be-privatized-clarification-given-to-employees-union-members#comments</comments><guid isPermaLink="false">e5539389-388f-41b8-8747-d25f653aa50e</guid><pubDate>Sun, 06 Sep 2026 22:21:40 +0000</pubDate><atom:updated>2026-09-06T22:21:40.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,ISRO,ராக்கெட்,Rocket,ISRO Centre</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/7qe1jygl/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/7qe1jygl/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இஸ்ரோவின் 9 ஊழியர் சங்கங்கள், ராக்கெட் தயாரிப்பு மற்றும் ஏவுதள செயல்பாடுகள் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தனியாருக்கு மாற்றப்படுவதாக கவலை தெரிவித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணனிடம் அதிகாரப்பூர்வ விளக்கம் கோரி கடந்த 4-ந்தேதி கடிதம் எழுதின. </p><p>இஸ்ரோவின் எதிர்கால பங்கு, தற்போதைய ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, எதிர்கால ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை குறித்து சங்கங்கள் கேள்வி எழுப்பி இருந்தன. இருந்தன. இந்த நிலையில் இஸ்ரோ நேற்று இதுகுறித்து எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விளக்கம் வெளியிட்டது.</p><p>அதில், "இஸ்ரோ தனியார் மயமாக்கப்படாது. அதன் முக்கியத்துவம் குறைக்கப்படாது. அடுத்த தலைமுறை விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோவின் பங்கு மேலும் வலுப்படுத்தப்படும். அதே நேரம் ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்களை தொழில்துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் போட்டி முறையில் உற்பத்தி செய்யலாம். இதன்மூலம் அறிவியல் மனிதவளம் மற்றும் வளங்களை புதிய தொழில்நுட்பங்கள், சந்திரன் மற்றும் கோள்கள் ஆய்வில் பயன்படுத்த முடியும்” என்று கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் ஊழியர்கள் மீது வெறுப்பு என்பது இல்லை: அமைச்சர் விக்னேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-animosity-towards-tasmac-employees-minister-vignesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-animosity-towards-tasmac-employees-minister-vignesh#comments</comments><guid isPermaLink="false">80ca10d2-07ab-414a-b7bc-995117004623</guid><pubDate>Sun, 06 Sep 2026 21:43:50 +0000</pubDate><atom:updated>2026-09-06T21:43:50.230Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,டாஸ்மாக் ஊழியர்கள்,Tasmac employees,Minister Vignesh,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/ksgrhpgj/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/ksgrhpgj/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><p>பழனியில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைதுறை அமைச்சர் விக்னேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான முனைப்பில் அரசு உள்ளது. மதுக்கடைகளில் பாட்டில் உடைவதிலும் பிரச்சினை உள்ளது. அதற்கும் ஒரு கடைக்கு 2 பாட்டில்களுக்கான தொகை கொடுக்க தயாராக உள்ளது. இதுபோன்ற எல்லா பிரச்சினைகளும் சரிசெய்யப்படும். உண்மையில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது வெறுப்பு என்பது இல்லை.</p><p>பழனியில் பள்ளி, அரசு அலுவலகங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மாற்றுவது குறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். மக்களுக்கு இடையூறு மற்றும் பிரச்சினை உள்ள டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்யப்படும். அதன்படி பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையும் இடமாற்றம் செய்யப்படும்.</p><p>தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பதில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கள்ளுக்கடை பற்றி முழு ஆய்வு செய்து வருகிறோம். ஏனெனில் கேரளம்-தமிழக எல்லையில் உள்ள 'ஸ்பிரிட்' பறிமுதல் செய்துள்ளனர். இவை சில கள்ளுக்கடைகளுக்கு கொண்டு செல்வதாக தகவல் வருகிறது. எனவே தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பது குறித்து ஆய்வு செய்து அரசு முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>