<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 21 Jul 2026 07:38:25 +0000</lastBuildDate><item><title>தவெக அரசின் ஆணவத்திற்கு மக்கள் முடிவுகட்டுவர்: மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-will-put-an-end-to-the-arrogance-of-the-tvk-government-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-will-put-an-end-to-the-arrogance-of-the-tvk-government-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">47fb021f-2292-4734-802f-cce3fbe4a480</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:37:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:37:04.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/k5yyw044/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/k5yyw044/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் பற்றி அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நீதிபதி வருகிற 3-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, மார்க்கண்டேயனை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.</p><p>திமுக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். <strong>அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது தனியார் ஆங்கில நாளிதழின் இன்றைய தலையங்கம்.</p><p>நம் முதல்-அமைச்சருக்குப் புரிவதுபோல சொல்ல வேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது. ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி  சாகும் வரை உண்ணாவிரதத்தை துவக்கிய விவசாயி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-begins-hunger-strike-to-demand-permanent-closure-of-quarries</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-begins-hunger-strike-to-demand-permanent-closure-of-quarries#comments</comments><guid isPermaLink="false">865efacc-ff8c-4886-ab3a-e40b71c814a8</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:35:40 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:35:40.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கல்குவாரி,farmer,விவசாயி,பொள்ளாச்சி,Pollachi,உண்ணாவிரதம்,quarries</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/4o4parz1/64.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/4o4parz1/64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பொள்ளாச்சி,  </p><p>பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு பகுதியில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயி ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அரசின் அனுமதி காலம் முடிந்த நிலையிலும் சில குவாரிகள் முறைகேடாக இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி வெடிவைத்து கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். அதோடு இந்த குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் பாதிப்பதாகவும்  கனிம வளத்துறை மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு விவசாயிகள் அடிக்கடி புகார் மனுவும் அனுப்பி வருகின்றனர்.</p><h2>சாகும் வரை உண்ணாவிரதம்</h2><p>இந்நிலையில் நம்பர் 10 முத்தூரைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம், கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறி நேற்று தனது போராட்டத்தை துவக்கினார். இது குறித்து முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிணத்துக்கடவு வட்டாரத்தில் அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் அதிக அளவு வெடிபொருட்கள் பயன்படுத்தி கற்கள் வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கிறது. கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் பெரிதும் பாதிக்கிறது. இது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து புகார் மனு கொடுத்து வருகிறோம்.</p><h2>நடவடிக்கை</h2><p>ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்ற அரசிடமும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">குவாரிகள்</a> மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு கொடுத்தோம். தலைமைச் செயலர் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் புகார் மனு கொடுத்தோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அவர்களும் உறுதி அளித்தனர். ஆனால் இங்குள்ள மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்டோர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.</p><p>கிணறுகளில் நீர் வற்றி விவசாயம் பாதித்த நிலையில், தற்போது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே கிணத்துக்கிடவு வட்டாரத்தில் உள்ள ஒட்டுமொத்த குவாரிகளையும் நிரந்தரமாக மூட வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தகவல் அறிந்து வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முருகானந்தம் மற்றும் விவசாயிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது: சபாநாயகர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyan-arrested-speaker-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyan-arrested-speaker-explains#comments</comments><guid isPermaLink="false">a964b202-2614-4c9d-a88a-2f164d081cbb</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:24:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:24:05.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,DMK MLA,திமுக எம்.எல்.ஏ.,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,Speaker J.C.T. Prabhakar,மார்க்கண்டேயன்,Markandeyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/kg5q4rxl/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/kg5q4rxl/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்து கூறியதாவது:-</p><p>பேரவை தலைவரை கேட்டுவிட்டுதான் கைது செய்ய வேண்டும் என்கிற விதி இல்லை. 291-வது விதி என்ன சொல்கிறது என்றால்.. “பேரவைத் தலைவர் முன் அனுமதியின்றி எவரையும் பேரவை அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக்கூடாது. அதைபோன்று உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் கட்டளையையோ, அறிவிப்பையோ பேரவை தலைவர் முன் அனுமதியின்றி பேரவையின் அமைப்பு எல்லைக்குள் சேர்ப்பித்தல் கூடாது.</p><p>அமைப்பு எல்லை என்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுமக்களும் தெரிய வேண்டும் என்பதை கடமையாக கருதுகிறேன். பேரவையின் அமைப்பு எல்லை என்பது சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை பேரவை மண்டபம், அதன் புறக்கூடங்கள், அதனை சார்ந்த அலுவலகங்கள், அமைச்சர்களின் அறைகள், நூலகம், சிற்றுண்டி சாலை, தலைமை செயலகத்தில் உள்ள குழுக்கள் கூடும் அறை, அண்ணா சாலை அரசினர் தோட்டத்தில் உள்ள உறுப்பினர் குடியிருப்புக்குள் உள்ள குழுக்கள் கூடும் அறை, நூலகம் மற்றும் பேரவை தலைவரால் அவ்வப்போது குறிப்பிடப்படும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தும் பொருந்தும்.</p><p>வெளியே நடைபெறும் சம்பவங்களில் கைது செய்ய பேரவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை. திமுக எம்.எல்.ஏ.வை கைது செய்த உடன் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நான் முறையாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; அதன்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் மார்க்கண்டேயன் கைது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.</p><p>பேரவை தலைவரை பொறுத்தவரைக்கும் என் கவனத்திற்கு இந்த பிரச்சினை கொண்டு வரப்படுமானால் என்ன நடவடிக்கை எடுக்கலாம்? எந்த காலக்கட்டத்தில் எடுக்கலாம்? என்பது பற்றி நான் முக்கியமாக முடிவு எடுப்பேன். என்னிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் அதை முறையாக சட்டவிதிகளுக்கு உட்பட்டு, சபை விதிகளுக்கு உட்பட்டு நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-guruvayur-express-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-guruvayur-express-train-service#comments</comments><guid isPermaLink="false">d0cfbbba-d8f6-4cbf-afeb-473ecf8859d7</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:14:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:14:42.758Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,train service,குருவாயூர் எக்ஸ்பிரஸ்,Guruvayur Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/fbcmybmb/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/fbcmybmb/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்; </p><p>மாற்றுப்பாதையில்... </p><p>நாகர்கோவில் -மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) வரு கிற 23,26 மற்றும் 30-ந்தேதிகளிலும், கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12666) வருகிற 25-ந்தேதியிலும், கன்னியாகுமரி-ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (17070) வருகிற 24 மற்றும் 31-ந்தேதிகளிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16848) வருகிற 23,24,25,26,27,28,30,31-ந்தேதிகளிலும் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். </p><p>இதேபோல் குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வருகிற 22,23,24,25,26,27,29,30,31-ந்தேதிகளில் மதுரை சந்திப்பை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். </p><p>மேலும், மதுரை பிகானேர் அனுவ்ரத் ஏசி அதிவிரைவு ரெயில் (22631) வருகிற 23-ந்தேதியில் மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். கடலூர் துறைமுகம் -மைசூர் எக்ஸ்பி ரஸ் ரெயில் (16231) வருகிற 31-ந்தேதி கார்மேலாரம், பையப்பனஹள்ளி கேபின், பானஸ்வாடி, யஷ்வந்த்பூர் கேபின், சிக்பானவர், ஹசன் வழி யாக திருப்பி விடப்படும்.</p><p>காரைக்குடி திருச்சி பாசஞ்சர் ரெயில் (56832) நாளை (புதன்கிழமை) முதல் 31-ந்தேதி வரை காரைக்குடியில் இருந்து 25 நிமிடம் தாமதமாக காலை 10.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசுவதா? காவல்துறையினர் கண்ணியம் தவறக்கூடாது - நயினார் நாகேந்திரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/addressing-journalists-in-a-disrespectful-singular-tone-police-personnel-must-not-compromise-on-dignity-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/addressing-journalists-in-a-disrespectful-singular-tone-police-personnel-must-not-compromise-on-dignity-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">740b43b6-2612-4076-b917-727ee5a33dc7</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:03:11 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:03:11.106Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,காவல்துறை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/3ikd5cbs/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/3ikd5cbs/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது! </p><p>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிக்கையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை “வாடா, போடா” என ஒருமையில் சாடியுள்ள, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. திபு அவர்களின் நாகரிகமற்ற செயல் கண்டனத்திற்குரியது. </p><p>காக்கிச் சட்டைக்கென்று ஒரு தனி மரியாதையும், கண்ணியமும் உண்டு என்பதை மறந்து விட்டு, காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியே “பேட்டை ரவுடி” போல இப்படி பொதுவெளியில் சண்டைக்கு நிற்பது ஒட்டுமொத்த காவல்துறையின் பிம்பத்தையும் சிதைத்து விடும். ஏற்கனவே தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் தங்களது “Decorum”-மை கடைபிடிக்க வேண்டும். </p><p>மேலும், காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்-அமைச்சர் விஜய், காவல்துறையை வெறும் “ஏவல்துறை”யாக மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனே சரி செய்ய வேண்டும் -  தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-shortage-should-be-resolved-immediately-tamilisai-soundararajan-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-shortage-should-be-resolved-immediately-tamilisai-soundararajan-insists#comments</comments><guid isPermaLink="false">7271bed1-6f45-4911-a265-a69d6cf9fc8a</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:58:16 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:58:16.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan,shortage,தட்டுப்பாடு,Aavin Milk,ஆவின் பால்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/1gplj9k0/tamilisai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழிசை சவுந்தரராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/1gplj9k0/tamilisai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D">ஆவின் பால் </a>விநியோகம் குறைந்துள்ளதாகவும் சில இடங்களில் தினசரி 30- லிருந்து 50 லிட்டர் வரையில் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பச்சை மற்றும் ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் கிடைப்பது சிக்கல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன இது குழந்தைகள் முதியவர்கள் நோயாளிகள் என அன்றாடம் பாலை நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்பங்களை நேரடியாக பாதிக்கும் ஒரு விஷயம்... அது மட்டுமல்ல குடும்பங்கள் பால் காபி போன்றவர்களுக்கு தினமும் பயன்படுத்தும் பச்சை பால் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது என்பதும்.. அதிக அடர்த்தியுடைய ஆரஞ்சு பால் கேட்பவர்களுக்கு இதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட நீலப் பால் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆவின் நிர்வாகம் இதை உடனே சரி செய்ய வேண்டும் மரியாதைக்குரிய தமிழக முதல்-அமைச்சர்   இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமல்ல விவசாயிகளிடமிருந்தும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்தும் பால் கொள்முதல் செய்வது ஆவின் ஒரு லிட்டருக்கு ரூ.35 கொடுப்பதாகவும் இதே தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு ரூ.50 கொடுப்பதால்.. ஆவினுக்கு பால் கிடைப்பதிலும் சிரமம் இருக்கிறது என்பதையும் சில அதிகாரிகள் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.</p><h2>நெய் விலை உயர்வு</h2><p>பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதே  சமயத்தில் நெய்யின் விலையை  ஏற்றி இருப்பதும் கண்டனத்திற்குரியது. 500 எம்எல் நெய் ரூ.332.4-லிருந்து ரூ.342.6-க்கும் உயர்த்தப்பட்டிருப்பது ஒரு லிட்டர் பெட் பாட்டில் நெய் ரூ.650.72-லிருந்து ரூ.664.78-ஆக ஏற்றப்பட்டிருப்பது.. பொதுமக்கள் மீது சுமையை ஏற்றுவதாகும்.  ஆக ஆவின் நிர்வாகம் உடனே தனி கவனம் செலுத்தி பால் கொள்முதல் விலையை உயர்த்தி.. கிடைக்க வேண்டிய பாலின் அளவு குறையாமல் பார்த்து எந்த மாவட்டத்திற்கும் பால் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையம்: மத்திய அரசு முக்கிய பதில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-central-governments-important-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-central-governments-important-response#comments</comments><guid isPermaLink="false">5f91c67d-8ba7-4823-8108-717d877afec2</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:44:33 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:44:33.077Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,மத்திய அரசு,Central Govt,Parandur,பரந்தூர்,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/rktmjcs5/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/rktmjcs5/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை மந்திரி முரளிதர் மோஹோல் அளித்த பதில் பின்வருமாறு;-</p><p><strong>கேள்வி:</strong> சென்னை, பரந்தூரில் முன்மொழியப்பட்டுள்ள பசுமை வழி விமான நிலையத்தின் தற்போதைய நிலை, கட்டம் வாரியான முன்னேற்றம், மொத்த மதிப்பிடப்பட்ட திட்டச் செலவு, இதுவரை ஒதுக்கப்பட்ட வரவு-செலவு நிதி மற்றும் அதை முடிப்பதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு ஆகிய விவரங்கள்; தருக.</p><p><strong>பதில் :</strong> பரந்தூரில் சர்வதேச பசுமை வழி விமான நிலையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசின் நிறுவனமான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 07.04.2025 அன்று 'கொள்கை அளவிலான' ஒப்புதலை வழங்கியுள்ளது. செப்டம்பர் 2024-இல் TIDCO சமர்ப்பித்த கொள்கை அளவிலான விண்ணப்பத்தின்படி, கட்டம்-1க்கான மதிப்பிடப்பட்ட திட்டச் செலவு தோராயமாக ரூ. 10,500 கோடி ஆகும்.</p><p>பசுமை வழி விமான நிலையக் கொள்கை, 2008-இன் படி, நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு, நிதி திரட்டுதல், சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுதல் உள்ளிட்ட பசுமைப் புல விமான நிலையத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட விமான நிலைய உருவாக்குநர் அல்லது மாநில அரசைச் சேர்ந்ததாகும். விமான நிலையத் திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு நிலம் கையகப்படுத்துதல், கட்டாய அனுமதிகள் கிடைப்பது, நிதி நிருவாக முடிவு போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.</p><p><strong>கேள்வி:</strong> பசுமைப் வழி விமான நிலையத்திற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு புதிய தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதா, ஆம் எனில், அத்தகைய கோரிக்கையின் தேதி வாரியான விவரங்கள் மற்றும் அதற்கு அரசின் பதில் என்ன.?</p><p><strong>பதில்:</strong>  இல்லை.</p><p><strong>கேள்வி:</strong> சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை, திட்டம் வாரியான பட்ஜெட் ஒதுக்கீடு, புவியியல் மற்றும் நிதி முன்னேற்றம், எதிர்பார்க்கப்படும் நிறைவு தேதி மற்றும் பிற தொடர்புடைய விவரங்களைக் குறிப்பிடவும்?</p><p><strong>பதில்:</strong> தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்துவது/ நவீனப்படுத்துவது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் முக்கிய விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் வருமாறு:</p><p>சென்னையில் ரூ. 2,467 கோடி செலவில் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் புவியியல் மற்றும் நிதி முன்னேற்றம் முறையே தோராயமாக 81% மற்றும் 71% ஆக உள்ளது. மேலும், மழைநீர் வடிகால் சீரமைப்பு (ரூ. 209.01 கோடி), முனையம் 1-ஐப் புதுப்பித்தல் (ரூ. 81.8 கோடி) மற்றும் ஏர்சைட் உட்கட்டமைப்பு மேம்பாடு (ரூ. 480.06 கோடி) போன்ற கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>திருச்சியில் ரூ. 80.17 கோடி செலவில் புதிய ATC கோபுரம் மற்றும் தொழில்நுட்பக் கூடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் புவியியல் மற்றும் நிதி முன்னேற்றம் முறையே தோராயமாக 76% மற்றும் 49% ஆக உள்ளது.</p><p>கோயம்புத்தூரில் புதிதாகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ரூ. 51.31 கோடி செலவில் சுற்றடைப்புச் சுவர் கட்டுதல் மற்றும் ரூ. 13.71 கோடி செலவில் தற்போதுள்ள முனையக் கட்டிடத்தை விரிவாக்கம் செய்தல் மற்றும் மாற்றியமைத்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என பதில் அளிக்கப்பட்டது. </p><h2>தவெக அரசு</h2><p>பரந்தூருக்கு மாற்றாக வேறு இடம் தேர்வு செய்யப்படும் என கூறி, பரந்தூர் விமானநிலைய பணிகள் தவெக அரசால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மாற்று இடம் பற்றி மத்திய அரசிடம் எந்த கோரிக்கையுமே இதுவரை தவெக அரசு வைக்கவில்லை என்ற தகவல் வெளிவந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேயர் பிரியாவுக்கு சிக்கல்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டங்களின் மதிப்பீடு மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trouble-for-mayor-priya-government-orders-a-review-of-the-cost-estimates-for-90-projects-announced-in-the-corporation-budget</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trouble-for-mayor-priya-government-orders-a-review-of-the-cost-estimates-for-90-projects-announced-in-the-corporation-budget#comments</comments><guid isPermaLink="false">d9cea290-b358-4e5a-982d-7ad72daef5e8</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:22:34 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:22:34.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayor Priya,மேயர் பிரியா,சென்னை மாநகராட்சி பட்ஜெட்,Chennai Corporation budget,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/jv9e00wy/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/jv9e00wy/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 90 திட்டங்களின் மதிப்பீட்டை மறு ஆய்வு செய்ய த.வெ.க. அரசு உத்தரவிட்டுள்ளதால், மேயர் பிரியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. </p><h2>பற்றாக்குறை பட்ஜெட் </h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 90 புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை மேயர் பிரியா வெளியிட்டார். </p><p>பட்ஜெட்டில் மொத்த வரவு ரூ.7,717 கோடியாகவும், செலவு ரூ.9,319 கோடியாகவும் இருக்கும்  என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், நிதி பற்றாக்குறை ரூ.1,602 கோடியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. </p><h2>ரூ.2 ஆயிரம் கோடி கடன் </h2><p>இதுபோக, ஏற்கனவே உலக வங்கி, ஜப்பான் வளர்ச்சி வங்கி உள்ளிட்டவைகளில் வாங்கிய ரூ.2 ஆயிரம் கோடி கடனுக்கு ஆண்டுக்கு ரூ.95 கோடியே 20 லட்சம் வட்டி செலுத்தப்பட்டு வருவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. </p><p>மேயர் பிரியா அறிவித்த முக்கிய திட்டங்களான மாநகராட்சி பள்ளிகளுக்கு 50 கி.மீ. பாதுகாப்பான வழித்தடங்கள் அமைக்க ரூ.200 கோடி, 30 நீர்நிலைகளை சீரமைக்க ரூ.100 கோடி, 60 பூங்காக்களை அறிவியல்பூர்வமாக பொலிவூட்ட ரூ.60 கோடி, நீர்வழி கால்வாய்களில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்க ரூ.55 கோடி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. </p><h2>மேயர் பிரியாவுக்கு சிக்கல் </h2><p>அதில் ஒன்று, 100 பள்ளிகளுக்கு 60 லட்சம் மதிப்பில் பிரிண்டர் வாங்கப்படும் என்பது. ஆனால், புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. அரசு 100 பள்ளிகளுக்கும் ரூ.22 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலேயே பிரிண்டர்களை வாங்கி கொடுத்துள்ளது. இதனால், ரூ.37 லட்சத்து 78 ஆயிரம் அரசுக்கு மிச்சமாகியுள்ளது. </p><p>அதனைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான நிதி குறித்து ஆராயப்பட்டது. அதில் பல திட்டங்களின் மதிப்பீடு கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின்போது மேயர் பிரியா அறிவித்த 90 திட்டங்களின் மதிப்பை மறு ஆய்வு செய்ய த.வெ.க. அரசு உத்தரவிட்டுள்ளது. இது மேயர் பிரியாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட் ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-to-be-presented-on-august-5th-speaker-jct-prabhakar-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-to-be-presented-on-august-5th-speaker-jct-prabhakar-announces#comments</comments><guid isPermaLink="false">122edf03-b9e6-428a-a254-440d8b1a933d</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:17:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:17:05.560Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,TN Assembly,சபாநாயகர்,பட்ஜெட் தாக்கல்,தமிழக பட்ஜெட்,Tamilnadu Budget,TN Budget,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/unbwi7a1/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/unbwi7a1/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>முதல் சட்டசபை கூட்டம்</h2><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார்.</p><h2>பட்ஜெட் கூட்டத் தொடர்</h2><p>அதனைத் தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.</p><h2>5-ந்தேதி பட்ஜெட் தாக்கல்</h2><p>இந்த நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- </p><p>தமிழக சட்டசபையில் ஆகஸ்டு 5-ந் தேதி காலை 10 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடந்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>முதல் நாளில், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களை பட்டியலிட்டு பேசுவார். அடுத்த நாள், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். அதன்பின்னர், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.</p><h2>முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா?</h2><p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பல்வேறு அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை பெண்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். என்றாலும், த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் முத்தான பட்ஜெட்டாக இருக்குமா? என்பது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mallikarjun-kharges-birthday-chief-minister-vijay-extends-wishes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mallikarjun-kharges-birthday-chief-minister-vijay-extends-wishes#comments</comments><guid isPermaLink="false">30aed2e9-dd75-40ea-a8b5-5c51b86b363f</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:08:36 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:08:36.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Mallikarjun Kharge,மல்லிகார்ஜுன கார்கே,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/sy6kex83/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/sy6kex83/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 84-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்பிற்குரிய மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட எனது உளமார்ந்த வாழ்த்துகள்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>83வது பிறந்தநாள் விழாவை ரத்து செய்த வைகோ... &quot;யாரும் கொண்டாட வேண்டாம்&quot; என உருக்கமான வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-cancels-83rd-birthday-party-heartfelt-request-no-one-should-celebrate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-cancels-83rd-birthday-party-heartfelt-request-no-one-should-celebrate#comments</comments><guid isPermaLink="false">df64d8f4-bf4a-4f12-bdf7-15999e0c1644</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:02:52 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:02:52.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரத்து,பிறந்தநாள் விழா,birthday party,Cancel,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,MDMK General Secretary Vaiko</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/70570dby/vaiko.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/70570dby/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>நான் 1944 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 ஆம் நாள் பிறந்தேன். ஆனால், கலிங்கப்பட்டி ஆரம்ப பாடசாலையில் என்னை சேர்க்கும் போது வயது குறைவாக இருக்கிறது என்று கூறி, நான்கு மாதங்கள் முன்னதாக மே 22 இல் நான் பிறந்தேன் என்று பள்ளி ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது. என்னுடைய இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) சான்றிதழில் எனது பிறந்த நாள் மே 22 என்று குறிக்கப்பட்டுள்ளது. எனக்கு வாழ்த்துக் கூற விரும்புகிறவர்கள் பல நேரங்களில் மே 22 ஆம் நாள் அன்று வாழ்த்துக் கூறுவார்கள். இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல என்று தெரிவித்துவிடுவேன்.</p><p>எம் இயக்கத்தில் யாரும் எனது பிறந்தநாளைக் கொண்டாடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி வந்தேன். 2002 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் அன்று காலையில் அன்றைய இந்திய தலைமை மந்திரி அடல்பிகாரி வாஜ்பாய் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வருவதாக என்று வாழ்த்தினார். நான் உடனே அவரிடம், இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல. பள்ளியில் சேர்ப்பதற்காக முன்னதாக உள்ள நாளை சேர்த்துவிட்டார்கள் என்றேன்.</p><h2>வாஜ்பாய் வாழ்த்து</h2><p>வாஜ்பாய் கவிஞர் அல்லவா? கணமும் தாமதிக்காமல் ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு நாள் உங்கள் பிறந்தநாளாகத்தானே இருக்கும்! என்னுடைய வாழ்த்துகள் அந்த நாளுக்கு போய்ச் சேரட்டும் என்றார். திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் 40 வயதிலேயே பிறந்தநாள் விழா கொண்டாட ஆரம்பித்துவிட்டார்களே! நீங்கள் ஏன் இப்படி மறுக்கிறீர்கள்? என்று கூறி வந்தனர். பின்னர் எப்படியோ எனது பிறந்த நாள் செப்டம்பர் 22 என்று அறிந்துகொண்டார்கள். எனக்குத் தெரியாமலேயே பல இடங்களில் அந்த நாளைக் கொண்டாடினார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்றைய துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் ஜீவன் பலரிடமும் கூறி, என் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் என்று எனக்குத் தெரியாமலேயே நடத்தி வந்தார்.</p><h2>மாபெரும் மாநாடு</h2><p>இந்தப் பின்னணியில், கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு “அண்ணே, இந்த வருடம் நீங்கள் எங்களை ஏமாற்ற விடமாட்டோம். செப்டம்பர் 22ஐ மிகப் பெரிய விழாவாகக் கொண்டாட கழக முன்னணியினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் மறுக்கவே கூடாது” என்று பிடிவாதமாக நிர்பந்தித்தார்கள். நான் அரை மனதுடன் அதற்கு இசைவு அளித்தேன். உடனே அவர்கள் எழும்பூரில், ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தை பதிவு செய்து, முன்பணமும் செலுத்திவிட்டார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக என் மனதில் இந்த ஏற்பாடு உறுத்தலாகவே இருந்தது. அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் மாபெரும் மாநாடுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். அறிஞர் அண்ணாவின் 100ஆவது பிறந்த நாள் விழாவை செப்டம்பர் 15 இல் தி.மு.க. கொண்டாடவில்லை. மதுரை மாநகரே குலுங்கும் வகையில் நாம் எழுச்சி மாநாடாக நடத்தினோம்.</p><h2>திமுக மாநாடு</h2><p>தி.மு.கழகம், அண்ணா பிறந்த நாளுக்கு அகில இந்திய தலைவர்களையோ, இந்திய தலைமை மந்திரியையோ அழைத்து நடத்தவில்லை. அதற்கு மாறாக அந்த ஆண்டில் அவர்கள் செப்டம்பர் 15க்குப் பதிலாக செப்டம்பர் 21 ஆம் நாளில் காஞ்சிபுரத்தில் நடத்தினார்கள். “தி.மு.க தலைவர் தனது பிறந்தநாளை ஜூன் 3 ஆம் தேதிக்குப் பதிலாக வேறு நாளில் நடத்துவாரா?” என்று மாநாட்டில் கேட்டேன்.</p><h2>அண்ணா பிறந்தநாள் விழா</h2><p>தி.மு.க ஆட்சியில் இருந்த காலத்திலும், இந்தியாவின் தலைமை மந்திரியை அழைத்துக் கொண்டு வந்து அண்ணா பிறந்தநாளை நடத்தும் எண்ணமாவது வந்ததா? இல்லை. ஆனால் நாங்கள் 1998 செப்டம்பர் 15 இல் தலைமை மந்திரி வாஜ்பாய், உள்துறை மந்திரி அத்வானி, காஷ்மீர் முதல்-மந்திரி டாக்டர் பரூக் அப்துல்லா , பஞ்சாப்  முதல்-மந்திரி பர்காஷ்சிங் பாதல், இராணுவ  மந்திரி ஜார்ஜ் பெர்ணான்டஸ், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோரை பங்கேற்கச் செய்து, மெரினா கடற்கரையில் விடியற்காலை இரண்டரை மணி வரை நடத்தினோம். இயக்கத்தில் தோழர்கள் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்திவிட்டு, எனக்கு தெரியாமல் பொருட் செலவு செய்து, எனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.</p><h2>வைகோ 83 இலச்சினை</h2><p>இந்த ஆண்டு ‘<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> 83’ என்று இலச்சினை தயாரித்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடத்துவது மட்டும்தான் கழகத்தின் கடமை ஆகும். எனக்கு பிறந்தநாள் விழா எடுப்பதை நான் முற்றிலும் விரும்பவில்லை. இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அந்த நாளில் யாரும் என்னைச் சந்திக்க முற்பட வேண்டாம். நான் எங்காவது பிறர் அறியாவண்ணம் அமைதியாக கழிக்க நினைக்கிறேன். என் புகைப்படம் போட்ட சுவரொட்டிகளை ஒட்டுவது, பேனர் அடிப்பது போன்ற செயல்களில் கழகத் தோழர்கள் ஈடுபட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம். ‘வைகோ 83’ என்ற தலைப்பில் என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எவரும் முற்பட வேண்டாம் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறிக் கொள்கிறேன். இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மனம் காயப்படுமானால் என் மன அமைதிக்காக, என் எண்ணத்தைச் செயல்படுத்துமாறு உரிமையுடனும், நீங்காத பற்றுடனும் வேண்டிக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அண்ணாமலை தலைமையில் ’வீ த லீடர்ஸ்’ மாநில மாநாடு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-the-leaders-state-conference-in-chennai-led-by-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-the-leaders-state-conference-in-chennai-led-by-annamalai#comments</comments><guid isPermaLink="false">7f05a048-db61-408a-9571-47f7968e3c31</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:48:32 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:48:32.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,வி தி லீடர்ஸ்,we the leaders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/5pcn27on/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/5pcn27on/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p> <p>பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் <a href="https://www.dailythanthi.com/">அண்ணாமலை</a>. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், பாஜகவில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் உள்ளவர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி உள்ளார்.</p><h2>சென்னையில் மாநாடு</h2><p>தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய விவகாரங்களை சுட்டிக்காட்டி, அது தொடர்பான கருத்துக்களை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் வெளிப்படுத்தி வருகிறது. மேலும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முழக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் ஒருங்கிணைத்து வருகிறது.</p><p>இதையடுத்து, அண்ணாமலை தலைமையில் வீ த லீடர்ஸ் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 12ம் தேதி கோவையில் நடைபெற்றது. </p><p>இந்நிலையில், வீ த லீடர்ஸ்  இயக்கத்தின் 2வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் அடுத்த மாதம் இம்மாநாட்டை நடத்த வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2வது மாநில மாநாட்டிற்கான இடம், தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-elderly-man-arrested-for-sexually-harassing-7-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-elderly-man-arrested-for-sexually-harassing-7-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">1d8712f7-9ed5-4837-aaff-7cd91dee339a</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:43:14 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:43:14.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,பாலியல் தொல்லை,Elderly man arrested,முதியவர் கைது,sexually abusing</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/6p4e2bdf/small-brother-arrested.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட சின்ன அண்ணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/6p4e2bdf/small-brother-arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர், திருச்சுழி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பாலியல் தொல்லை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விருதுநகர் மாவட்டம் </a>திருச்சுழி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சின்ன அண்ணன் (வயது 69) என்ற முதியவர், அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.</p><h2>முதியவர் கைது</h2><p>இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், உடனடியாக திருச்சுழி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் சின்ன அண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> கைது</a> செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: வீட்டிற்குள் புகுந்த நாகப் பாம்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-cobra-that-entered-house-rescued-forest-department-takes-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-cobra-that-entered-house-rescued-forest-department-takes-action#comments</comments><guid isPermaLink="false">5b504dc0-93d5-4411-b704-006b63d95183</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:40:39 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:40:39.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,Snake,வனத்துறை அதிகாரிகள்,பாம்பு புகுந்தது,Forest Officer</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/vz44wnlz/snake-thenkasi.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பிடிபட்ட நாகப்பாம்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ தென்காசியில் வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/vz44wnlz/snake-thenkasi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி அருகே வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள நாகப் பாம்பை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.</p><h2>வீட்டிற்குள் புகுந்த பாம்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தென்காசி மாவட்டம்</a> குற்றாலம் அடுத்துள்ள மேலகரம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது வீட்டின் சமையலறைக்குள் இன்று காலை திடீரென நச்சுத்தன்மை கொண்ட நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி, குற்றாலம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.</p><h2>பாம்பு மீட்பு</h2><p>தகவலறிந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வனத்துறை போலீசார் </a>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சமையலறைப் பொருட்களுக்கு இடையே மறைந்திருந்த நாகப் பாம்பை பிரத்யேகக் கருவிகள் மூலம் லாவகமாகப் பிடித்தனர். மீட்கப்பட்ட பாம்பு சுமார் 5 அடி நீளத்தில் இருந்தது.</p><h2>பொதுமக்கள் பாராட்டு</h2><p>பின்னர், பிடிபட்ட <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நாகப் பாம்பு </a>பாதுகாப்பான பெட்டியில் அடைக்கப்பட்டு, செங்கோட்டை அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டது. வனத்துறையினரின் இந்த விரைவான மற்றும் துரிதமான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி: பெ.சண்முகம் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/p-shanmugam-alleges-collusion-at-official-level-in-palani-issue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/p-shanmugam-alleges-collusion-at-official-level-in-palani-issue#comments</comments><guid isPermaLink="false">a92c062b-3180-4155-bb22-70f1f87be12c</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:37:18 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:37:18.583Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,பெ.சண்முகம்,land issue,Palani,பழனி கோவில,Palani temple,நில மோசடி,P.Shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/n9gnvksl/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/n9gnvksl/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழனி கோவில் நில மோசடி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது:-</p><p>பழனி கோவில் நில மோசடி என்பதில் மேலிருந்து கீழ் வரை பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். மோசடியில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய முக்கிய பிரமுகராக இருந்தாலும் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.</p><p>பழைய வழக்குகளை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் மறைத்து, நீதிமன்றத்தையே ஏமாற்றி இந்த மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி என்றே பழனி விவகாரத்தை சொல்லலாம். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்.</p><p>இந்த நில மோசடி விவகாரத்தில் அரசுக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ நேரடியாகத் தொடர்பு இருக்கிறது என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை; அதுபோன்ற எந்த விவரங்களும் வரவில்லை. மாறாக, பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளைக் கொண்டு வந்து வைத்துப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.</p><p>அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதுதான் இப்போது வரை வந்துள்ள விவரம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரே நேரடியாகத் தலையிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, உயர்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இந்த மோசடியில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உழவர்களிடம் தொடரும் கையூட்டு வசூல்... உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continued-collection-of-bribes-from-farmers-immediate-action-must-be-taken-anbumani-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continued-collection-of-bribes-from-farmers-immediate-action-must-be-taken-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">f97dd46e-31fd-492d-9623-1718cdd5055f</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:21:15 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:21:15.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,நெல் கொள்முதல்,உழவர்கள்,Dr Anbumani Ramadoss,Delta farmers</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/au5itf20/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/au5itf20/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாகக் கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.</p><h2>நெல் மூட்டைகள் தேக்கம்</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் உழவர்களுக்கு பெரும் துயரமாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள்&nbsp;தங்களின் நெல்லை விற்பனை செய்வதற்கு  ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்கிறது.</p><h2>கையூட்டு</h2><p>40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டையை எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை உழவர்கள் தர வேண்டியுள்ளது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக கூடுதலாக எடை வைத்து கொள்முதல் செய்வதன் வாயிலாகவும், பதர்களைத் தூற்றுவதாகக் கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாகவும் 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வகையில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு ரொக்கமாக ரூ.150, நெல்லாக ரூ.175 என மொத்தம்  ரூ.325 கையூட்டாக பறிக்கப்படுகிறது. தனியார் வணிகர்களை விட அரசு  கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதல் விலை கிடைக்கிறது என்பதால் தான் அரசு கொள்முதல் நிலையங்களைத் தேடி உழவர்கள் வருகிறார்கள். அதற்காக அவர்களை வாரக் கணக்கில் காத்திருக்க வைப்பதும், குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டாக பறித்துக் கொள்வதும் பெரும் அநீதி. இதே நிலை தொடர்ந்தால் உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்கத் தயாராகி விடுவார்கள்.அப்படி  ஒரு நிலை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசியே கிடைக்காத நிலை உருவாகி விடும்.</p><h2>நெல் கொள்முதலில் முறைகேடுகள்</h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை  தமிழக அரசு மறுக்க முடியாது. சில நாள்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர், நெல் விற்பனை செய்த உழவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார். கொள்முதலுக்காக கையூட்டு ஏதேனும் கொடுத்தீர்களா? என்று அமைச்சர் கேட்டபோது, எதிர்முனையில் இருந்த உழவர் மூட்டைக்கு ரூ.50 கையூட்டு கொடுத்ததாக தெரிவிக்கிறார். இதைத் தொடர்ந்து உழவரிடம் கையூட்டு வாங்கிய கொள்முதல் நிலைய எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ஆணை பிறப்பிக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், கொள்முதல் நிலைய  ஊழலுக்கான காரணங்களை கண்டுபிடித்து சரி செய்யாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வதால் ஊழல் ஒழியப்போவதில்லை; உழவர்களும் பயனடையப் போவதில்லை.</p><h2>நிரந்தர முன்வைப்புத் தொகை</h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கையூட்டு வாங்கப்படுவதற்கு கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தரப்பில் சில நியாயங்கள் கூறப்படுகின்றன.  நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்கு போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின்  தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தொகை முறையாக வழங்கப்படவில்லை. அதே போல், நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல என்றெல்லாம் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறுவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இதை சரி செய்தால் மட்டும் தான் கொள்முதல் நிலைய ஊழலை ஒழிக்க முடியும்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> நிலைய கையூட்டு கலாசாரம் புதிதாக தோன்றியதில்லை. பல ஆண்டுகளாகவே இந்த சுரண்டல்  தொடர்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் உழவர்கள் வாக்களித்தனர். அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் அறை இடம் மாறுகிறதா?: பரபரப்பு தகவல்கள் 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijays-secretariat-office-moving</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijays-secretariat-office-moving#comments</comments><guid isPermaLink="false">17064aa8-2f19-475a-a378-0c5132761756</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:16:31 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:16:31.801Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,முதல்-அமைச்சர்,தலைமை செயலகம்,Secretariat,Chief Secretariat,Cheif Minister</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/qs3lx89k/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/qs3lx89k/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/">சென்னை </a>தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் அறை இடம் மாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><h2>முதல்-அமைச்சர் அறை </h2><p>சென்னை காமராஜர் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச்செயலகம் இயங்கிவருகிறது. </p><p>கோட்டை கட்டிடத்தின் முதல் தளத்தில், முதல்-அமைச்சர் அறை மற்றும் அலுவலகம் உள்ளது. இதேபோல், அமைச்சர்கள் அலுவலகம், சட்டசபை கூட்ட அரங்கம், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த செயலாளர்களின் அலுவலகங்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறை, நூலகம் உள்ளிட்டவை அந்தக் கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன. </p><h2></h2><h2>10-வது மாடிக்கு மாற்ற திட்டம்</h2> <p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜயை சந்திக்க நாள்தோறும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் வந்து செல்கின்றனர்.</p><p>இதனால், தற்போதுள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இடநெருக்கடி ஏற்படுவதால், அவரை சந்திக்க வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இதனால், முதல்-அமைச்சர் அறை மற்றும் அலுவலகத்தை, கோட்டை கட்டிடத்திற்கு அருகே உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2></h2><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/r8z0u45z/0.jpg" /></figure><h2>மாற்றத்துக்கான காரணம் என்ன?</h2><p>தற்போது, அங்கு கருத்தரங்க கூடமும், ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான உணவருந்தும் கூடமும் உள்ளது. அவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, 10-வது மாடி முழுவதுமே முதல்-அமைச்சர் அறை மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இடநெருக்கடியால், முதல்-அமைச்சர் அறை மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டாலும், வாஸ்துப்படி தற்போதைய அறை சரியில்லை என்று, அவருடைய ஆஸ்தான ஜோதிடர் கூறியதாகவும், தொடர்ந்து உச்சத்தில் இருக்க உயரமான கட்டிடத்தில் முதல்-அமைச்சர் அலுவலகம் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும், அதுவும் கடலை பார்த்தபடி முதல்-அமைச்சர் அறை இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. அதன்படியே, முதல்-அமைச்சர் அறை மற்றும் அலுவலகம் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p> ]]></content:encoded></item><item><title>கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம்: வீடுகள் விலை குறைய வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/party-funding-for-construction-permits-suspended-housing-prices-likely-to-fall</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/party-funding-for-construction-permits-suspended-housing-prices-likely-to-fall#comments</comments><guid isPermaLink="false">02eb1c4f-7ec6-46ef-9ab6-d15ee91b01ad</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:07:01 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:07:01.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN govt,House,வீடுகள்,construction companies,கட்டுமான திட்டம்,கட்சி நிதி,Party fund</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/nr9d7h4a/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/nr9d7h4a/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கட்சி நிதி</h2><p>சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பிலும், நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. சார்பிலும், கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இதில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது சதுர அடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை கட்சி நிதி என்ற பெயரில், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.</p><p>கட்டிட அனுமதிக்கான கோப்புகள் அதிகாரிகள் வசம் இருந்தாலும், அதில் உள்ள விபரங்களை பெறும் அரசியல் புள்ளிகள் கட்டுமான நிறுவனங்களை அணுகி கட்சி நிதி கேட்பது உண்டு. இதற்கு உடன்படாத நிறுவனங்களுக்கு, கட்டிட அனுமதி நிறுத்தி வைக்கப்படும். இதில் கட்சிநிதி கொடுப்பதற்கான செலவையும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் விலையில் சேர்த்து, மக்களிடம் வசூலித்து வந்தன. இதனால், வீடுகளின் விலைகள் வெகுவாக உயர்ந்தன.</p><h2>வீடுகள் விலை</h2><p>இந்த நிலையில், கட்டிட அனுமதி வழங்க கட்சி நிதி வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் முடிவை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம் ஆகியவை வரவேற்றுள்ளன.</p><p>இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:</p><p>கட்சி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டதால், கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு மிச்சமாகி. உள்ளது. இதன் பயனை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில், மாற்று கருத்து இல்லை. புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில், வீடுகள் விலையை சதுரடிக்கு 100 ரூபாய் வரை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-encroachments-on-meenakshi-amman-temple-lands-government-informs-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-encroachments-on-meenakshi-amman-temple-lands-government-informs-high-court#comments</comments><guid isPermaLink="false">247992d0-33a1-4b22-aac9-983b7d24cd66</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:06:41 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:06:41.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,encroachments</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/m0bqbixc/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/m0bqbixc/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,  </p><p>திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-</p><p>2021-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில் சொத்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்த ரவிட்டது. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களுக்கு சொந்தமாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சொத்துகளை முறையாக பராமரித்து பாதுகாக்கவும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தவும் உத்தரவிட வேண்டும்.</p><p>இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.</p><p>இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளின் நிலை என்ன, பிரசாத சமையல் அறை எவ்வாறு செயல்படுகிறது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு இருந்தது.</p><p>இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு வக்கீல் ஆஜராகி, வீரவசந்தராயர் மண்டப பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. புதிய நவீன சமையலறை அமைப்பதற்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதிக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.</p><p>பின்னர் மனுதாரர் ஆஜராகி, மீனாட்சி அம்மன் கோவிலின் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் வசூலிக்கப்பட வேண்டிய தொகை வசூலிக்கப்படாமல் உள்ளது என்றார்.</p><p>இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>அவதூறு வழக்குகளில் சட்டமன்ற உறுப்பினர்களை அவசரமாக கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் - ஈ.ஆர். ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hasty-arrest-of-mlas-in-defamation-cases-should-be-avoided-er-easwaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hasty-arrest-of-mlas-in-defamation-cases-should-be-avoided-er-easwaran#comments</comments><guid isPermaLink="false">cd94a6f4-f853-4a1f-af09-7a34040d2e15</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:59:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:59:24.251Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,சட்டமன்ற உறுப்பினர்,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Easwaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/f0y5eelv/eswaran.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/f0y5eelv/eswaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p> தவெக அரசாங்கம் தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைத்து ஆலோசனை சொல்பவர்களை அதிரடியாக கைது செய்வது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல. சமூக வலைதளங்களில் எதிர் கருத்து பதிவிடுபவர்களையும், அரசியல் மேடைகளில் அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசுபவர்களையும் அதிரடியாக கைது செய்வது என்பது ஆட்சியாளர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினர்களையும் கைது செய்வது தொடர் கதையாக இருக்கிறது. அரசியல்வாதிகளை மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்களையும் கைது செய்வதும், அலைக்கழிக்கப்படுவதையும் சர்வாதிகாரப் போக்காக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் குற்றம் செய்திருக்கின்ற ஆளுங்கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடாமல் இருப்பதையும், கைது செய்யாமல் இருப்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.</p><h2>நீதிமன்றம் முடிவு செய்யட்டும்</h2><p>புதிதாக அமைந்திருக்கின்ற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத்திட்டங்களை தீட்டுவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் சுணக்கம் காட்டுவதை திசை திருப்புவதற்காக இதைப் போன்ற செயல்பாடுகள் செய்யப்படுகிறதா? சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், பழனி மோசடி பத்திரப்பதிவை விமர்சித்தவர்களையும், தொழில்துறை அமைச்சர் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டியவர்களையும் கைது செய்வதன் மூலமாக எதிர்க்கட்சியில் இருக்கிற தலைவர்களுக்கு இந்த அரசை பற்றி எதுவும் பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடப்படுகிறதா? தனி மனிதர்களைப் பற்றி பேசினால் வழக்கு போடுங்கள் நீதிமன்றம் முடிவு செய்யட்டும். காவல்துறை அதிரடியாக சட்டமன்ற உறுப்பினர்களையும், பத்திரிகையாளர்களையும்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது</a> செய்வது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதாக அமையும். முன்னாள் முதல்-அமைச்சரை  பற்றி தனிப்பட்ட முறையில் எவ்வளவோ எதிர் கருத்துக்களை கடந்த காலங்களில் பேசியிருக்கிறார்கள் என்பதையும் அரசு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ed-raid-at-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ed-raid-at-chennai#comments</comments><guid isPermaLink="false">59a846f7-17d3-4673-9375-064b6c1df8af</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:55:37 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:55:37.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Enforcement Directorate,Chennai,அமலாக்கத்துறை,சென்னை,ED Raid,அமலாக்கத்துறை சோதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ndo69eqd/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ndo69eqd/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சென்னையில் 2 இடங்களில் இன்று அதிகாலை முதல் <a href="https://www.dailythanthi.com/">அமலாக்கத்துறை </a>அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><h2>சட்டவிரோத பண பரிவர்த்தனை</h2><p>அதன்படி, சென்னை  தேனாம்பேட்டையில் உள்ள ஓய்வுபெற்ற ஆர்டிஓ அதிகாரி (போக்குவரத்து அலுவலக அதிகாரி) வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். </p><p>அதேபோல், திருவொற்றியூரில் உள்ள தொழிலதிபர் முருகேசன் என்பவரின் வீட்டிலும் அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  மத்திய பாதுகாப்புப்படை வீர‌ர்கள் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கோவில் திருவிழா பேனரில் அம்மன் வேடத்தில் திரிஷா: 2 பேர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trisha-dressed-as-amman-in-temple-festival-banner-case-registered-against-2-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trisha-dressed-as-amman-in-temple-festival-banner-case-registered-against-2-people#comments</comments><guid isPermaLink="false">8909395f-2fe3-40ed-adb6-37cdda4e8433</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:27:40 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:27:40.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Trisha,நடிகை திரிஷா,Salem,சேலம்,Temple festival,கோவில் திருவிழா,திரிஷா,Actress Trisha,Trisha Krishnan,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/yar1ebwb/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/yar1ebwb/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><h2>அம்மன் வேடத்தில் திரிஷா</h2><p>சேலம் மாவட்டம், ஆத்துார் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஆத்துார் பயணியர் மாளிகை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ஒரு பேனரில் தமிழகம் முதல்-அமைச்சர் விஜய்யின் மிகப்பெரிய படமும், அதற்கு பின்னால், ராவணன் தலை இருப்பது போன்றும். அதற்கு கீழே நடிகை திரிஷா அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டிருந்தது.</p><p>இந்த பேனரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கோவில் திருவிழாவில் நடிகையின் போட்டோவை அம்மன் வேடத்தில் வைத்து பேனர் அடிக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் திருவிழாவிற்கு சினிமா பிரபலங்களுக்கும் சம்பந்தமே இல்லாத விஷயத்தை ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று விவாதத்திற்குள்ளானது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/di9zv13p/CHENNAI-09.jpg" /></figure><h2>2 பேர் மீது வழக்குப்பதிவு</h2><p>மேலும் பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றங்களும் அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் பேனர்கள் எப்படி வைக்கப்படுகின்றன? கோவில் திருவிழா என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அச்சிடிட்டு வைக்கலாமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இரவோடு இரவாக பேனரில் இருந்து நடிகை திரிஷா புகைப்படம் மாற்றப்பட்டது. திரிஷா படம் இருந்த இடத்தில் வேறு ஒரு பெண் அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படத்தை ஒட்டி வைத்தனர்.</p><p>இந்த நிலையில், ஆத்தூர் பயணியர் மாளிகை முன்பு அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் டவுன் போலீசார் கடைவீதியை சேர்ந்த சந்துரு, தலைவாசல் பகுதியை சேர்ந்த கோகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு என்றும் தமிழர் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-memory-of-actor-thilakam-sivaji-ganesan-will-always-remain-in-the-hearts-of-tamils-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-memory-of-actor-thilakam-sivaji-ganesan-will-always-remain-in-the-hearts-of-tamils-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">7f78068e-3522-47af-a4a2-24d107d95505</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:09:20 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:09:20.274Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Memorial Day,Actor Sivaji Ganesan,நினைவு தினம்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ib9uvs50/63.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/ib9uvs50/63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தமிழ் திரையுலகின் ஒப்பற்ற கலை மேதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று, தனது அபாரமான நடிப்பாலும், உணர்வுகளை உயிர்ப்பிக்கும் வசன உச்சரிப்பாலும், தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் இதயங்களில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.</p><h2>பெரும் ஆளுமை</h2><p>ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தமிழ் மொழியின் பெருமையையும் கலை உலகின் உயர்வையும் உலக அரங்கில் எடுத்துச் சென்ற பெரும் ஆளுமை அவர். அவர் ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும், வெளிப்படுத்திய ஒவ்வொரு உணர்வும், இன்றளவும் போற்றப்படுகிறது.</p><p>காலம் கடந்தாலும் அவரது புகழும், கலைப் பாரம்பரியமும் என்றும் நிலைத்திருக்கும். நடிகர் திலகம்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D"> சிவாஜி கணேசன் </a>அவர்களின் நினைவு என்றும் தமிழர் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.</p><p>இவ்வறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-4</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-4#comments</comments><guid isPermaLink="false">98fbc666-1e39-48be-b1fb-59a8f824df9d</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:12:44 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:12:44.125Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,Power outages</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/zf0l7fcc/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/zf0l7fcc/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 22.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். </p><h2>கோவிலம்பாக்கம்</h2><p>வடக்குப்பட்டு ஓம் சக்தி நகர், சுபிக்ஷா அவென்யூ, சுசிலா நகர், பெரியார் சாலை, வடக்குப்பட்டு பிரதான சாலை, திருவேங்கடம் நகர், திருவள்ளூர் தெரு, நாவின்ஸ், விஷ்ராந்தி, செல்வகணபதி நகர், சத்யா நகர்.</p><h2>ராமாபுரம்</h2><p>ராயலா நகர், காந்தி நகர், நேரு நகர், குமரன் நகர்,ஜெயபாலாஜி நகர், வள்ளுவர் சாலை, ஜி ஆர் நகர், ராஜீவ் காந்தி நகர், கங்கை அவன்யு, மாந்திநாயகம் தோட்டம், மாரியம்மன் கோயில் தெரு.</p><h2>முகலிவாக்கம்</h2><p>சுரேஷ் நகர், உதயா நகர், குருசாமி நகர், சந்தோஷ் நகர், அவலன்சேரி, லக்ஷ்மி நகர், ஒத்தவாடை தெரு, ஏவி மல்லீஸ், ப்ரைம் எக்ஸ், மேக்ஸ் வொர்த் நகர் பேஸ்1, நாராயணன் நகர் பேஸ்1, 2, தட்டான்குளம்.</p><h2>அடையாறு</h2><p>காந்தி நகர் 1 வது முதல் 3வது பிரதான சாலை வரை.</p><h2>பல்லாவரம்</h2><p>மல்லிகா நகர், ஹரியன் தெரு, பாரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு, ஆபீசர் லேன், வெட்டரன் லேன்.</p><h2>கீழ்க்கட்டளை</h2><p>ஈஸ்வரி நகர், நியூ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சித்ரா டவுன்ஷிப், ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ், லத்தீப் காலனி, காமராஜர் நகர்.</p><h2>ஆலந்தூர்</h2><p>எம்.கே.என். சாலை, அஷர்கானா, ஆலந்தூர் பிரதான சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி. சாலை, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம் பகுதி, சாந்திநிகேதன் அபார்ட்மெண்ட்ஸ், மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், குரோவ் அபார்ட்மெண்ட்ஸ், மஸ்தான் கோரி அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, வேளச்சேரி சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபீஸ் காலனி, கக்கன் நகர், என்.ஜி.ஓ.காலனி, எஸ்.பி.ஐ. காலனி, மண்ணடியம்மன் மற்றும் பழனியம்மன் கோயில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.  </p><h2>பெரும்பாக்கம்</h2><p>டிஎச்எஸ்சிபி பிளாக் எண் ஏஐ, ஏஜே, ஏகே, பிளாக் எண் 8 முதல் 86 வரை மற்றும் 152 முதல் 158 வரை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், பெரும்பாக்கம் பிரதான சாலை, மாம்பாக்கம் பிரதான சாலை, பாரதியார் தெரு, அரசு மருத்துவமனை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, விமலா நகர், நல்லதம்பி தெரு, கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, சி.பி.ஐ. காலனி 1 வது முதல் 7 வது குறுக்குத் தெருக்கள் வரை.</p><h2>மாங்காடு</h2><p>ஜனனி நகர், சிதம்பரம் நகர், மலையம்பாக்கம், ரகுநாதபுரம், இந்திர நகர், செல்வராஜ் நகர், சாதிக் நகர், சிவானந்த நகர், ஸ்ரீராம் நகர், சக்ரா நகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், வீரா ஆஞ்சநேயர் கோவில் தெரு, மல்லிகா தியேட்டர், குன்றத்தூர் பிரதான சாலை.</p><h2>ஆவடி</h2><p>சி.டி.எச் சாலை, போலீஸ் கன்வர்சன் ஹால் முதல் ஹோட்டல் ஏ மற்றும் பி வரை, சரஸ்வதி நகர், தென்றல் நகர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தினமும் ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர்... நோய் எதிர்ப்பு சக்தி முதல் இதய ஆரோக்கியம் வரை பல நன்மைகள்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-glass-of-cumin-water-every-day-has-many-benefits-from-immunity-to-heart-health</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-glass-of-cumin-water-every-day-has-many-benefits-from-immunity-to-heart-health#comments</comments><guid isPermaLink="false">3996a8b8-5840-47c7-9a4b-af89291c05db</guid><pubDate>Tue, 21 Jul 2026 02:52:52 +0000</pubDate><atom:updated>2026-07-21T02:52:52.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆரோக்கியம்,நோய் எதிர்ப்பு சக்தி,Immunity,Water தண்ணீர்,- Heart health,Cumin,கருஞ்சீரகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/fxq4l1xa/62.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/fxq4l1xa/62.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>தினமும் காலையில் எழுந்ததும் சிறிது சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை பருகும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. அது சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். குறிப்பாக அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும். மேலும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையும்.</p><h2>சீரகத் தண்ணீர்</h2><p>ஜீரா அல்லது சீரகம் என்று அழைக்கப்படும் இந்த அற்புத சமையல் பொருள் ஒரு மிக முக்கிய மூலிகையாக உள்ளது. நமது சமையலறைகளில் எப்போதும் கிடைக்கும் சீரகம், உணவின் சுவையை கூட்டுவதைத் தவிர, பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. சீரகத்தை ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைத்து, சீரகத் தண்ணீராக உட்கொள்வது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.</p><p>சீரகத் தண்ணீர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இவற்றில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு மிகவும் நல்லது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு கிளாஸ் சீராக தண்ணீரைக் குடிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யும். அது உங்கள் இதயம், வயிறு, முடி அல்லது தோலுக்கும் நன்மை பயக்கும்.</p><h2>நோய் எதிர்ப்பு சக்தி</h2><p>சீரகம் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது தொற்றுநோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது.</p><p>இவை தவிர சீரகத்தில் மெக்னீசியம், கால்சியம் போன்ற பல்வேறு தாதுக்களும் உள்ளன. மேலும் ஏராளமான வைட்டமின்கள் ஏ, பி, சி ஆகியவை தொற்றுநோய்களைத் தடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.</p><p>பச்சை மற்றும் முழு சீரகத்தை பயன்படுத்த வேண்டும். வறுத்த அல்லது பொடியாகப் பயன்படுத்தினால் அதன் சில ஊட்டச்சத்துக்களை இழக்கலாம்.</p><h2>அழற்சி எதிர்ப்பு விளைவு</h2><p>சீரகத் தண்ணீரில் தைமோகுவினோன் என்ற சக்திவாய்ந்த இரசாயன கலவை உள்ளது. இது கல்லீரலை அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.</p><p>சீரகத் தண்ணீரின் அழற்சி எதிர்ப்பு விளைவுகள், வயிற்று மற்றும் வயிற்று வலி போன்ற பிற நிலைமைகள் தொடர்பான வலியைக் குறைக்கவும் உதவுகிறது. அதன் ஸ்பாஸ்மோடிக் எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் பிடிப்பைக் குறைக்க உங்கள் மாதவிடாய் காலத்தில் உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.</p><p>வெதுவெதுப்பான சீரகத் தண்ணீரை குடிப்பது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.</p><h2>செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம்</h2><p>சீரகத் தண்ணீர் உங்கள் வயிற்று ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்பை உடைக்கும் என்சைம்கள் போன்ற சேர்மங்களை சுரக்க உதவுகிறது. இது கல்லீரலில் பித்த அமிலங்களின் உற்பத்தி செயல்முறையை துரிதப்படுத்துகிறது மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு உதவுகிறது.</p><p>கூடுதலாக, இது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் அஜீரணம், வீக்கம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது, ஏனெனில் இதில் சக்திவாய்ந்த வாயு எதிர்ப்பு இரசாயனங்கள் உள்ளன.</p><p> சீரகத் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும்.</p><h2>மாதவிடாய்களை ஒழுங்குபடுத்துகிறது</h2><p>பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சில நேரங்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளை கடந்து செல்கிறார்கள். இது சில நேரங்களில் மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சீரகத் தண்ணீர் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும், ஏனெனில் இது கருப்பை சுருங்குவதற்கு காரணமாகிறது. இது பொதுவாக சிக்கியுள்ள இரத்தத்தை வெளியிடுகிறது.</p><p>சீரகத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு சீரகத் தண்ணீர் மிகவும் ஆரோக்கியமான பானமாகும். இது பாலூட்டி சுரப்பிகளில் பால் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கடத்த உதவுகிறது.</p><p> சீரகத்துடன் வெந்தயத்தை வேகவைத்து, தண்ணீரை நன்கு வடிகட்டி பருகி வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும்.</p><h2>ஆரோக்கியமான மற்றும் இளமையான சருமம்</h2><p>சீரகத் தண்ணீரில் கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் புத்துணர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உங்கள் சருமத்தில் தெளிவான மற்றும் ஆரோக்கியமான பளபளப்பைப் பெற உதவுகின்றன.</p><p>மேலும், சீரகத் தண்ணீரில் ஏராளமான வைட்டமின் ஈ உள்ளது. இது முன்கூட்டிய வயதைத் தடுக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. வழக்கமாக ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீரைக் குடிப்பதால், உங்கள் சருமத்தில் தோன்றும் சுருக்கங்களைத் தாமதப்படுத்தலாம்.</p><p> மஞ்சள் மற்றும் சீரகத் தண்ணீர் கலந்த கலவையை, முகத்திற்கான பேக்காக பயன்படுத்தினால் பளபளப்பான பொலிவு கிடைக்கும்.</p><h2>முகப்பருவை நீக்குகிறது</h2><p>சீரகத்தில் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் முகப்பருவை அழிக்க உதவுகின்றன. மேலும் எதிர்காலத்தில் வரும் வெடிப்புகளைத் தடுக்கின்றன.</p><p>ஃப்ரீ ரேடிக்கல்கள் என்பது நச்சுகள் நமது உடலில் நுழைந்து நமது சருமத்தின் புரதத்தை உடைக்கிறது. இது கறைகள் மற்றும் தளர்வான சருமத்தை ஏற்படுத்துகிறது.</p><p>சீரகம் ஒரு உணவு நார்ச்சத்து, நம் உடலில் இருந்து இந்த நச்சுகளை எளிதாக நீக்குகிறது.</p><p> சீரகத் தண்ணீர் சூட்டை ஏற்படுத்தக்கூடிய ஒரு பானம் என்பதால், இதை அதிகமாக பருகுவதை தவிர்க்கவும்.</p><h2>முடியை ஆரோக்கியமாக வைக்கிறது</h2><p>முன்பு குறிப்பிடாது போல சீரகத் தண்ணீர் பல பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை குடிப்பது உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்தும்.</p><p>இதில் புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் அவற்றை வேர்களில் இருந்து நிரப்புகிறது. இது முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது.</p><p>உங்கள் தலைமுடிக்கு இதைப் பயன்படுத்துவதால், ஈரப்பதத்தால் அடிக்கடி ஏற்படும் முடி உதிர்வதைக் குறைத்து, மென்மையாக மாற்றுகிறது.</p><p> பொடுகை எதிர்த்துப் போராட சீராக தண்ணீரில் உங்கள் தலைமுடியைக் கழுவவும்.</p><h2>இதய ஆரோக்கியம்</h2><p>இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவத்தில் சீரகம் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. இது ஒரு இயற்கையான ஆக்ஸிஜனேற்றம் மற்றும் இதயத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பல <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">இதயப் பிரச்சினைகளுக்கு</a> சிகிச்சையளிப்பதிலும் மிகவும் உதவியாக இருக்கிறது.</p><p>சீரகத் தண்ணீர் குடிப்பது இதய தசைகளை வலுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் சேர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இதய அடைப்பு, மாரடைப்பு மற்றும் இரத்த உறைவு ஆகியவற்றின் ஆபத்து கணிசமாகக் குறைக்கப்படுகிறது.</p><p>சீரகத் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.</p><h2>இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்</h2><p>சீரகத் தண்ணீர் குடிப்பது உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது நீரிழிவு நோயால் கண்டறியப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இது கிளைகோசைலேட் ஹீமோகுளோபின் அளவையும் குறைக்கிறது.</p><p>ஒவ்வொரு உணவிற்கும் 30 நிமிடங்களுக்குப் பிறகு சீரக தண்ணீரைக் குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.</p><p>இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகக் குறைவதைத் தவிர்க்க ஏற்கனவே நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொண்டால், சீரகத்தை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.</p><h2>இரத்த சோகை சிகிச்சை</h2><p>சீரகத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாவதற்குத் தேவையானது. மேலும், இது நம் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல அவசியம். குறைந்த ஹீமோகுளோபின் அளவுகள் சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், தலைச்சுற்றல் போன்ற இரத்த சோகையின் பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.</p><p>சீரகத் தண்ணீரை தவறாமல் குடிப்பது இந்த அறிகுறிகளை நிர்வகிப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.</p><p>இரத்த சோகை நோயாளிகள் சீரகத் தண்ணீருடன் கருப்பு எள் சேர்த்து சாப்பிடுவது அதிசயங்களைச் செய்ய உதவும்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-passing-through-trichy-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-passing-through-trichy-2#comments</comments><guid isPermaLink="false">d6042649-6ab0-4562-80ea-c7a0c032111a</guid><pubDate>Tue, 21 Jul 2026 02:25:25 +0000</pubDate><atom:updated>2026-07-21T02:25:25.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/9ji0291x/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/9ji0291x/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்; </p><h2>திருச்சி-காரைக்கால் டெமுரெயில்</h2><p>அதன்படி திருச்சி காரைக்கால் டெமு ரெயில் (76820) நாளை (புதன்கி ழமை) முதல் 31-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும்.</p><p>இதேபோல் திருச்சி - மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (56700) மேற் கண்ட தேதிகளில் திருச்சியில் இருந்து ஆடுதுறை வரையும், காரைக்குடி-மயிலாடுதுறை பாசஞ்சர் டெமு ரெயில் (56836) வருகிற 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரையும், மயிலாடு துறை சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16811) வருகிற 22, 24, 26, 28, 31 மற்றும் அடுத்த மாதம் ஆகஸ்டு 2 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து கரூர் வரையும், கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12663) வருகிற 25-ந்தேதியில் கன்னியாகுமரியில் இருந்து சந்தராகச்சி வரை மட்டுமே இயங்கும்.</p><h2>பகுதி ரத்து</h2><p>காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (76819) நாளை (புதன்கிழமை) முதல் 31-ந்தேதி வரை காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு செல் லும். இதேபோல், மயிலாடுதுறை செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (16847) மேற்கண்ட தேதிகளில் ஆடுதுறையில் இருந்து நள்ளிரவு 12.58 மணிக்கும், சேலம் - மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் (16812) வருகிற 22,24,26, 28, 31 மற்றும் அடுத்த மாதம் ஆகஸ்டு 2 ஆகிய தேதி களில் கரூரில் இருந்து மதியம் 3.40 மணிக்கும், ஹவுரா-திருச்சி அதிவி ரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12663) வருகிற 26-ந்தேதி சந்தராகச்சியில் இருந்து மாலை 5.41 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மருத்துவமனைகளில் ஆதார் பதிவு செய்வது வாழ்நாள் முழுவதும் சிகிச்சைக்கு உதவும்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadhaar-registration-in-hospitals-will-help-in-lifelong-treatment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadhaar-registration-in-hospitals-will-help-in-lifelong-treatment#comments</comments><guid isPermaLink="false">90eab118-386f-4867-bcdd-e6970bc621af</guid><pubDate>Tue, 21 Jul 2026 02:22:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T02:22:05.648Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhaar,Treatment,சிகிச்சை,hospital,மருத்துவமனை,ஆதார் கார்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/3iakhkw5/61.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/3iakhkw5/61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'மருத்துவமனைகளில் ஆதார் எண் அளித்து, ஆபா ஐ.டி., உருவாக்குவதன் வாயிலாக, நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், முந்தைய சிகிச்சைகளை பார்த்து, தொடர் சிகிச்சை பெற முடியும்' என, அரசு மருத்துவமனை முதல்வர்கள் தெரிவித்தனர்.</p><p>'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்' திட்டத்தின்கீழ், ஹெச்.எம்.ஐ.எஸ்., என்ற சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த தகவல் அமைப்பில், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம், அவர்களின் ஆதார் எண் பெற்று, அதன் வாயிலாக, 'ஆபா ஐ.டி.,' உருவாக்கப்படுகிறது. இந்த ஐ.டி., உருவாக்குவோரின் சிகிச்சை விவரங்களை, ஹெச்.எம்.ஐ.எஸ்., தகவல் அமைப்பில் சேகரித்து வைக்க முடியும். அதேபோல், தனியார் மருத்துவமனைகள், தனித் தனி தகவல் அமைப்பை பயன்படுத்தினாலும், மத்திய அரசின் தகவல் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.</p><h2>ஆபா ஐ.டி.</h2><p>இத்தகவல் அமைப்பில் நோயாளிகளின் விவரங்களை சரியாக சேகரிக்காத, 203 மருத்துவமனைகளின் பட்டியலை, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த 26 மருத்துவமனைகள் உள்ளன. அனைத்து மருத்துவமனைகளிலும், 'மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, ஆபா ஐ.டி., உருவாக்கி, அவர்களின் சிகிச்சை விவரங்களை சேகரிக்க வேண்டும்' என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ஆதார்</a> எண் கட்டாயம் என்பதால், அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளிடம் ஆதார் எண் பெறுவது சிரமமாக உள்ளது என, மருத்துவமனை முதல்வர்கள் தெரிவித்தனர்.</p><h2>'விழிப்புணர்வு அவசியம்'</h2><p>இது குறித்து, அரசு மருத்துவமனை முதல்வர்கள் கூறியதாவது:</p><p>தனியார் மருத்துவமனைகளில், ஒரு நோயாளி செல்லும்போது, அங்கு ஆதார் எண் கேட்டால், ஆட்சேபனை தெரிவிக்காமல் கொடுக்கின்றனர். அதேநேரம், அரசு மருத்துவமனைகளில் மத்திய அரசின் அறிவுறுத்தல் படி, ஆபா ஐ.டி., உருவாக்க, ஆதார் எண் கேட்டால், அவற்றை வேறு மாதிரியாக சித்தரிக்கின்றனர். குறிப்பாக, ஆதார் இருந்தால்தான், அரசு மருத்துவமனையில் சிகிச்சையா என, கேட்கின்றனர்.</p><p>ஆபா ஐ.டி., என்பது, நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும்பயனளிக்க கூடியது. இதை உருவாக்குவோர், நாடு முழுவதும் எந்தவொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்றாலும், அங்கு தங்கள் மொபைல் எண்ணை அளிப்பதன் வாயிலாக, அவர்களின் முந்தைய மருத்துவ சிகிச்சையை, அங்குள்ள டாக்டர் தெரிந்து கொள்ள முடியும். இது குறித்து, மருத்துவமனைக்கு வரும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநில அரசும் அறிவுறுத்தி உள்ளது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>தவெக கொடி, நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட மாநகர பஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/city-buses-in-tvk-flag-colors-photo-goes-viral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/city-buses-in-tvk-flag-colors-photo-goes-viral#comments</comments><guid isPermaLink="false">98daca27-9e85-4805-b0c8-77e8233486ae</guid><pubDate>Tue, 21 Jul 2026 02:20:15 +0000</pubDate><atom:updated>2026-07-21T02:20:15.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,மாநகர பஸ்,city bus</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/abzvlsuz/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/abzvlsuz/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>சென்னை மாநகர போக்குவரத்து கழகத் தில் தற்போது, 650க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும், 3,454 பஸ்கள் படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும், இயக்கப் 34.60 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.</p><p>வரும், 2030ல் மாநகர பஸ்களின் தேவை 7,000 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநகர பஸ்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்து இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.</p><p>இந்நிலையில், புதிய பஸ்சில், த.வெ.க.,வின் கொடி நிறத்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் மாற்றப்பட்டு இருக்கும் புகைப்படம் சமூக வளைதளத்தில் நேற்று பரவியது. இதை பார்த்து பலரும் விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது; </p><p>”திருச்சியில் தயாராகும், 300 பஸ்கள், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு அடுத்த மாத இறுதிக்குள் வர உள்ளன. ஏற்கனவே, பல்வேறு வண்ணங்களில் பஸ்கள் இயக்கி வருகிறோம். இந்த புதிய பஸ்களுக்கு, புதிய நிறத்தில் வண்ணம் பூசுவது தமிழக அரசின் முடிவு” என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவை வருகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-coimbatore-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-coimbatore-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a05f28f0-2e01-440c-8975-7531094c40eb</guid><pubDate>Tue, 21 Jul 2026 02:04:11 +0000</pubDate><atom:updated>2026-07-21T02:04:11.937Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Vice President,துணை ஜனாதிபதி,சி.பி.ராதாகிருஷ்ணன்,C.P. Radhakrishnan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/qt198lel/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/qt198lel/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>கோவை வருகை</h2><p>கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை உள்ளது. இங்கு ஜி.கே.என்.எம். நர்சிங் கல்லூரி திறப்பு விழா நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து விமா னம் மூலம் கோவை வருகிறார்.</p><p>பின்னர் அவர் விழாவில் பங்கேற்று நர்சிங் கல்லூரியை திறந்து வைத்து பேசுகிறார். அதன் பின்னர் இரவு கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதி கோவை வருவதை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்</p><h2>டிரோன் பறக்க தடை</h2><p>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருவதை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணி வரை உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவினாசி ரோடு, லட்சுமி மில் சந்திப்பு, ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சித்ரா, நேரு நகர், காளப்பட்டி, சின்னியம்பாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கேளம்பாக்கம்: 8-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kelambakkam-plus-1-student-commits-suicide-by-jumping-from-8th-floor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kelambakkam-plus-1-student-commits-suicide-by-jumping-from-8th-floor#comments</comments><guid isPermaLink="false">ab2c1a4e-99c2-4498-9aa8-5f7e35589e56</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:42:56 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:42:56.669Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,Suicide,பிளஸ்-1 மாணவி,Plus-1 student</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/gneompuq/death.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/gneompuq/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கேளம்பாக்கம், </p><p>அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை</a> செய்து கொண்டார்.</p><h2>பிளஸ்-1 மாணவி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 8-வது மாடியில் வசித்து வருபவர் அஜிஸ். இவரது மகள் சபியா (வயது 16). இவர், அதே வளாகத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சபியா, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் செல்போனில் 'இன்ஸ்டாகிராம்' பயன்படுத்தி வந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் தெரிகிறது. நேற்று மாலை மீண்டும் செல்போன் பயன்படுத்தியதை அவரது தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது.</p><h2>8-வது மாடியில் இருந்து...</h2><p>இதனால் விரக்தி அடைந்த சபியா, அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>2-வதும் பெண்ணாக பிறந்ததால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர பாட்டி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cruel-grandmother-arrested-for-killing-infant-because-second-child-was-born-a-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cruel-grandmother-arrested-for-killing-infant-because-second-child-was-born-a-girl#comments</comments><guid isPermaLink="false">1a3a4c63-0757-4368-9d0d-df55eac7e393</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:26:16 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:26:16.432Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை,பச்சிளம் குழந்தை,Arrested.,grandmother,பாட்டி கைது,child baby</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/vtwaalwm/arrest1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/vtwaalwm/arrest1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானி, </p><p>பவானியில் பிறந்த பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர பாட்டியை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பெண் குழந்தை</h2><p>சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொத்தபாளையம் செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி (வயது 25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரியதர்ஷனி 2-வது முறையாக கர்ப்பம் ஆனார். கடந்த 17-ந்தேதி பிரியதர்ஷினிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து பிரியதர்ஷினியை அவரது தாய் தங்கமணி (47) ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு 18-ந்தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே எந்த அசைவும் இன்றி பேச்சுமூச்சின்றி கிடப்பதாக டாக்டரிடம் தங்கமணி கூறி உள்ளார்.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>இதைத்தொடர்ந்து டாக்டர் குழந்தையை பரிசோதித்துள்ளார். அப்போது குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தை திடீரென உயிரிழந்ததால் சந்தேகம் அடைந்த டாக்டர் இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>அப்போது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதாக தங்கமணி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் தங்கமணி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதனால் குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>கொலை</h2><p>இதுகுறித்து மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வெளிவந்தது. அதில், கழுத்தை நெரித்து பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து தங்கமணியை பிடித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் தங்கமணி அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-</p><h2>மகள் கஷ்டப்படுவாள்</h2><p>எனது மகளுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. மகளின் கணவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தாள். இதனால் எனது மகளுக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனால் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. 2 பெண் குழந்தைகளை வளர்க்க மகள் கஷ்டப்படுவாள் என்பதற்காக பிறந்த சில மணி நேரத்தில் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றேன்.</p><p>இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தங்கமணியை நேற்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/certificate-verification-for-75-percent-reservation-begins-at-coimbatore-agricultural-university</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/certificate-verification-for-75-percent-reservation-begins-at-coimbatore-agricultural-university#comments</comments><guid isPermaLink="false">b1b56582-e371-47b1-8ed2-a3bd082edc13</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:00:22 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:00:22.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,சான்றிதழ் சரிபார்ப்பு,7.5% reservation,7.5% இடஒதுக்கீடு,CertificateVerification,வேளாண்மை பல்கலைக்கழகம்,Tamil Nadu Agricultural University</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/hejt0gu1/60.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/hejt0gu1/60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று தொடங்கியது</p><h2>விண்ணப்பங்கள்</h2><p>கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை வேளாண் படிப்புகளுக்கு மொத்தம் 26,709 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 24,435 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 3-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து வேளாண் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு கடந்த 9-ந் தேதி தொடங்கியது.</p><h2>சான்றிதழ் சரிபார்ப்பு</h2><p>இதனை தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/search?q=7.5%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%20%E0%AE%87%E0%AE%9F%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்</a> கீழ் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவ - மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். தொடர்ந்து அவர்களின் சான்றிதழ்களை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சரிபார்ப்பில் ஈடுபட்டனர்.</p><h2>சேர்க்கை கட்டணம்</h2><p>இதுகுறித்து மாணவர் சேர்க்கை குழுவினர் கூறியதாவது:-</p><p>தமிழகம் முழுவதும் வேளாண் பல்கலைக்கழகம் உள்பட அரசு கல்லூரிகளில் வேளாண்மை படிப்பில் ஆங்கில வழியில் 1,793 பேரும், தமிழ் வழியில் 51 பேரும் சேர உள்ளனர். அதே போல் தோட்டக்கலை படிப்புகள் ஆங்கில வழியில் 546 இடங்களும், தமிழ்வழியில் 51 இடங்களும் அரசு கல்லூரிகளில் உள்ளன. மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் வனவியல் பாடத்தில் 127 இடங்கள், பட்டுப்பூச்சியியல் பிரிவில் 62 இடங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் 3,367 இடங்கள், 28 தனியார் கல்லூரிகளில் 4,736 இடங்கள் என மொத்தம் 8,103 இடங்களும் உள்ளன. தோட்டக்கலை பாடங்கள் புதியதாக சில கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் வேளாண்மை கல்லூரிகளில் சேர்வதற்கான அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கி உள்ளது. எனவே கலந்தாய்வில் தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். அசல் சான்றிதழ்களின் சரிபார்ப்புக்கு பின், மாணவர்கள் அவர்களுடைய இடஒதுக்கீட்டினை உறுதி செய்ய ரூ.20 ஆயிரம் சேர்க்கை கட்டணமாக செலுத்த வேண்டும். இது தவறும் பட்சத்தில் அவர்களுடைய இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, காலியிடமாக அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை ugadmissions@tnau@ac.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><p>இந்த நிலையில் நேற்று நடந்த கலந்தாய்வில், 128 இடங்கள் நிரம்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை, நீலகிரியில் அணைகளின் நீர்மட்டம் குறைந்தது: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dam-water-levels-have-dropped-in-coimbatore-and-nilgiris-risk-of-drinking-water-shortage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dam-water-levels-have-dropped-in-coimbatore-and-nilgiris-risk-of-drinking-water-shortage#comments</comments><guid isPermaLink="false">ddbb8fa5-9ac1-4631-a3f3-7c14363e7221</guid><pubDate>Tue, 21 Jul 2026 01:00:14 +0000</pubDate><atom:updated>2026-07-21T01:00:14.127Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Nilgiris,நீலகிரி,குடிநீர் தட்டுப்பாடு,Drinking water shortages</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/qacihl5n/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/qacihl5n/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை,</p><p>பசிபிக் பெருங்கடலில் இயல்பை விட வெப்பநிலை மாற்றம் அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைந்து வருகிறது. ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை வெப்பநிலை நீடிக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>கோவை மாவட்டம் தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெறும் மாவட்டம் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது, பில்லூர், சிறுவாணி, ஆழியாறு, சோலையாறு, திரு மூர்த்தி, அமராவதி அணைகளுக்கு தண்ணீர் வரும். அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை காலத்திலும் மழை பெய்யும். இரு பருவங்களிலும் மழை பெய்யும் மாவட்டமாக விளங்கிய கோவையில், எல்நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை பெய்வது குறைந்து வருகிறது. </p><p>கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வழக்கமாக கோவை மாவட்ட பகுதிகளில் ஜூலை மாதம் மழை பெய்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த நிலை மாறி வெயில் வாட்டுவதுடன், மழை குறைந்து வருகிறது.</p><p>இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. சோலையார் அணையின் நீர்மட்டம் மள, மளவென குறைந்து 78.92 அடியாக உள்ளது. ஆழியாறு-55.60 அடி, பரம்பிக்குளம்-21 அடி, திருமூர்த்தி அணை-33.94 அடி, சிறுவாணி அணை-21 அடி, பில்லூர் அணை-85 அடி என்று குறைந்துள்ளது.</p><p>எனவே இதே நிலை நீடித்தால் கோவை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படும். விவசாயத்துக்கும் போதிய அளவு நீர் கிடைக்காத நிலை ஏற்படும். அதனால் பொதுமக்கள், விவசாயிகள் நீர் சிக்கன முறையை கடை பிடிக்க வேண்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சேலம்-மயிலாடுதுறை ரெயில்கள் பகுதியாக ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-mayiladuthurai-trains-partially-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-mayiladuthurai-trains-partially-cancelled#comments</comments><guid isPermaLink="false">6814e2eb-4112-4779-a773-72220ec0d080</guid><pubDate>Tue, 21 Jul 2026 00:41:41 +0000</pubDate><atom:updated>2026-07-21T00:41:41.205Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,ரெயில் சேவை,சேலம்,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/tygcaigv/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/tygcaigv/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>மோகனூர் மற்றும் நாமக்கல் ரெயில் நிலைய யார்டுகளில் தண்டவாளம் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சேலம்-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16811) நாளை (புதன்கிழமை) 24, 26, 28, 31 மற்றும் ஆகஸ்டு 2 ஆகிய தேதிகளில் கரூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். இந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து கரூர் வரை மட்டுமே இயங்கும். கரூரில் இருந்து சேலம் வரை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. </p><p>மறுமார்க்க மாக சேலத்திலிருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16812) நாளை 24, 26, 28, 31 மற்றும் ஆகஸ்டு 2 ஆகிய தேதிகளில் சேலத்திற்கு பதிலாக கரூரில் இருந்து மதியம் 3.40 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும். இந்த ரெயில் சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்படாது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறை &apos;டாஸ்மாக்&apos; நிர்வாகம் அதிரடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-procedure-in-liquor-procurement-tasmac-administration-takes-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-procedure-in-liquor-procurement-tasmac-administration-takes-action#comments</comments><guid isPermaLink="false">96035294-84f1-4338-b430-c94f6d0a5ce0</guid><pubDate>Tue, 21 Jul 2026 00:38:53 +0000</pubDate><atom:updated>2026-07-21T00:38:53.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,டாஸ்மாக்,கொள்முதல்,Liquor,புதிய நடைமுறை,மதுபானங்கள்,tasmac bar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/rl8nyfz5/136.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுபானங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-21/rl8nyfz5/136.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான வகைகளை 11 நிறுவனங்களிடம் இருந்தும், 'பீர்' வகைகள் 6 நிறுவனங்களிடம் இருந்தும் 'டாஸ் மாக்' நிர்வாகம் கொள்முதல் செய்கிறது.</p><h2>கொள்முதல்</h2><p>இதில் பிரபல அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நடத்தும் நிறுவனங்களும் அடங்கும். எந்த நிறுவனத்தின் மதுபானம் அதிகம் விற்பனையாகிறதோ, அவை கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டன. அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகள் மட்டும் 60 முதல் 70 சதவீதம் வரையில் கொள்முதல் செய்யப்பட்டது.</p><h2>நிர்வாக கூட்டம்</h2><p>இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. அரசு அமைந்தவுடன் 'டாஸ் மாக்' நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 6-ந் தேதி அன்று 'டாஸ்மாக்' நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிகளவு மதுபானங்களை கொள்முதல் செய்யாமல் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சரி சமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.</p><h2>உத்தரவு</h2><p>அதன்படி அனைத்து நிறுவனங்களிடம் இருந்து சரி சமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. உயரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் 'எலைட்' கடை களில் பிரீமியம், மீடியம் ரக மதுவகைகளில் ஒரு பெட்டி கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.</p><p>'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை செய்யப்படும் சாதாரண ரக மதுபான வகைகளை அனைத்து மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சமமாக கொள்முதல் செய்தால், மதுபிரியர்கள் விரும்பும் மது வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இது மறைமுகமாக குறிப் பிட்ட நிறுவனத்தின் மதுவகைகளை அதிகளவில் கொள்முதல் செய்வதற்கு புறவழி செயல் போன்று அமைந்துவிடும். மதுபிரியர்கள் விரும்பாத மதுபானங்கள் விற்பனையாகாமல் அப்படியே கடையில் தேங்கிவிடும்' என்பது 'டாஸ்மாக்' ஊழியர்களின் கருத்தாக உள்ளது.</p><p>புதுச்சேரி போன்று அண்டை மாநிலங்களில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளை யும் '<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9">டாஸ்மாக்</a>' நிர்வாகம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்பது மதுபிரியர்களின் விருப்பமாக இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>யானைகளுக்கு தனியார் அமைப்புகள் சிகிச்சை அளிக்கக் கூடாது - சென்னை ஐகோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-organizations-should-not-provide-treatment-to-elephants-chennai-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/private-organizations-should-not-provide-treatment-to-elephants-chennai-high-court#comments</comments><guid isPermaLink="false">4a8c031f-f7e7-4500-b643-27c6ac1f61f0</guid><pubDate>Mon, 20 Jul 2026 22:41:07 +0000</pubDate><atom:updated>2026-07-20T22:41:07.767Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஐகோர்ட்டு,Chennai High Court,elephant,யானை,Treatment; சிகிச்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/0ynelggh/134.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/0ynelggh/134.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ஐகோர்ட்டில், விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "தமிழ்நாட்டில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கும், கோவில் யானைகளுக்கும் சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனத்துக்கு தலைமை வனப்பாதுகாவலர் அனுமதி வழங்கியுள்ளார்.</p><h2>யானைகளுக்கு சிகிச்சை</h2><p>வனத்துறையில் தகுதியான கால்நடை டாக்டர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதை தலைமை வனப்பாதுகாவலர் விளக்கம் அளிக்கவில்லை. எனவே, யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.</p><h2>உத்தரவு</h2><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">யானைகளுக்கு சிகிச்சை</a> அளிக்க தனியார் தொண்டு நிறுவனங்களை பணியமர்த்தக்கூடாது. இந்த மனுவுக்கு வருகிற 31-ந்தேதிக்குள் வனத்துறை பதில் அளிக்கவேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்துவதா? பால் முகவர்கள் நலச்சங்கம் கண்டனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-aavin-management-raising-ghee-prices-milk-agents-welfare-association-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-aavin-management-raising-ghee-prices-milk-agents-welfare-association-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">d2adb4b4-2f61-474a-861b-c652a7d11a31</guid><pubDate>Mon, 20 Jul 2026 20:37:42 +0000</pubDate><atom:updated>2026-07-20T20:37:42.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aavin,ஆவின்,விலை உயர்வு,ஆவின் நிர்வாகம்,ghee,price increase,நெய் விலை,Aavin management</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/pz3kse14/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/pz3kse14/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>ஆவின் நெய்க்கு பொதுமக்களுக்கான அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் மொத்த வினியோகஸ்தர்களுக்கான விலையில் 500 மி.லி. ஆவின் நெய்க்கு ரூ.5.25ம் (ரூ.327.17-லிருந்து ரூ.332.42 ஆகவும்), ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.23.10-ம் (ரூ.627.62-லிருந்து ரூ.650.72 ஆகவும்), பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்களுக்கான விலையில் 500 மி.லி. ஆவின் நெய்க்கு ரூ.3.15-ம் (ரூ.339.45-லிருந்து ரூ.342.60 ஆகவும்), ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.13.65-ம் (ரூ.651. 13-லிருந்து ரூ.664.78 ஆகவும்) கடந்த 15-ந்தேதியில் இருந்து உயர்த்தி பால் முகவர்கள், சில்லரை வணிகர்கள் மற்றும் மொத்த வினியோகஸ்தர்கள் வயிற்றில் அடிக்கும் வகையில் ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டிருப்பதையும், அதனை சத்தமின்றி அமல்படுத்தி இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன். எனவே ஆவின் நெய் விலை உயர்வு குறித்த உத்தரவை உடனடியாக ஆவின் நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஆவின் நெய் விற்பனையை புறக்கணிப்போம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணத்தில் இருந்த 1,200 பேர் மீட்பு: மருத்துவ அதிகாரிகள் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1200-people-in-tamil-nadu-who-were-contemplating-suicide-rescued-medical-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1200-people-in-tamil-nadu-who-were-contemplating-suicide-rescued-medical-officials#comments</comments><guid isPermaLink="false">fc92cdca-4fcd-4fdd-9384-65f4526a0366</guid><pubDate>Mon, 20 Jul 2026 19:50:43 +0000</pubDate><atom:updated>2026-07-20T19:50:43.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தகவல்,தற்கொலை,Suicide,rescued,மருத்துவ உதவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/553k5f9h/130.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நட்புடன் உங்களோடு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/553k5f9h/130.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நேசித்தவர்களை இழப்பது, கடன் சுமை, காதல் தோல்வி, பொருளாதார காரணங்கள் போன்றவை ஒருவரின் மனநிலையை கடுமையாக பாதிக்கின்றன. இதில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை எனும் கொடிய முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.</p><h2>மனநல சேவை திட்டம்</h2><p>இதனை தடுக்கும் 2022-ம் ஆண்டு ‘நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவை திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மனநல பிரச்சினையில் இருப்பவர்களுக்கு 14416 என்ற இலவச உதவி எண் மூலம் தொலைபேசி வழியாக 24 மணி நேரமும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.</p><p>இந்தசேவை குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>மன உளைச்சல், மன கவலை, பாலியல் துன்புறுத்தல், உறவுகள் சார்ந்த சிக்கல்கள், தேர்வு பயம் உள்ளிட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் மக்கள் எங்களின் உதவி கோரியுள்ளனர். அவர்களுக்கு ஆலோசனைகளை கொடுத்துள்ளோம். இந்த அழைப்புகளில் ஏறக்குறைய 1,200 பேர் பல்வேறு காரணங்களால் தற்கொலை எண்ணத்தில் இருந்தனர். அவர்களுக்கும் தகுந்த மனநல ஆலோசனை வழங்கி, அவர்களது உயிரை காப்பாற்றியுள்ளோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கே.கே. நகரில் கார் மோதி பெண் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-after-being-hit-by-car-in-chennais-kk-nagar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-after-being-hit-by-car-in-chennais-kk-nagar#comments</comments><guid isPermaLink="false">e37aaec4-07cc-467a-b740-54d65b2ca80c</guid><pubDate>Mon, 20 Jul 2026 18:03:19 +0000</pubDate><atom:updated>2026-07-20T18:03:19.129Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,உயிரிழப்பு,Die,கார்car</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/b8ckmwxk/murder.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார் மோதி பெண் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/b8ckmwxk/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 26). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஹேமலதா, நேற்று சென்னை தியாகராயநகர் நோக்கி மொட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கே.கே.நகர் அண்ணா சாலையில் சென்றபோது, திடீரென மொபட் கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி ஹேமலதா கீழே விழுந்தார்.</p><p>அப்போது ஹேமலதா ஓட்டிச்சென்ற மொபட்டின் பின்னால் வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் ஹேமலதா மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். </p><h2>கைது</h2><p>அங்கு ஹேமலதாவை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். தகவலறிந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் காரை ஓட்டிவந்த சென்னை நேசப்பாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (50) என்பவரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்படும் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyan-being-taken-to-palayamkottai-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-markandeyan-being-taken-to-palayamkottai-prison#comments</comments><guid isPermaLink="false">9ce6aec6-534c-4c3d-b8dc-c74a31f760d9</guid><pubDate>Mon, 20 Jul 2026 17:39:15 +0000</pubDate><atom:updated>2026-07-20T17:39:15.765Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாளையங்கோட்டை,நீதிமன்றக் காவல்,திமுக எம்எல்ஏ,DMK MLA,Markandeyan,ஜி.வி. மார்க்கண்டேயன்,Palayamkottai Prison</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/yqone7hm/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-20/yqone7hm/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கா. கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18-ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் பி. கீதாஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன், தமிழக முதல்-அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் இன்று காலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார், ஜி.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்தனர்.</p>  <p>இந்த தகவல் அறிந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரது வீட்டின் முன்பு திரண்டு போலீஸ் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி எம்.எல்.ஏ.வை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.</p> <h2>ஆகஸ்ட் 3 வரை காவல்</h2><p>பின்னர் எம்.எல்.ஏ.விடம் போலீசார் விசாரணை நடத்தி, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, ஜி.வி. மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். </p><h2>சிறைக்கு அழைத்து செல்லப்படும் எம்எல்ஏ</h2><p>இதையடுத்து, திமுக எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்து பாளயைங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு அவர் 15 நாட்கள் நீதிமன்றக்காவலில்  சிறையில் அடைக்கப்பட உள்ளார்.  </p> ]]></content:encoded></item></channel></rss>