<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 14 Aug 2026 02:26:58 +0000</lastBuildDate><item><title>பள்ளிப்படிப்பு முதல் மருத்துவப்படிப்பு வரை; சிறுவயது முதல் சேர்ந்தே சாதிக்கும் இரட்டையர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-school-to-medical-school-twins-who-have-been-achieving-together-since-childhood</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/from-school-to-medical-school-twins-who-have-been-achieving-together-since-childhood#comments</comments><guid isPermaLink="false">7b28bfd1-b413-406c-928e-5a8154e69fa9</guid><pubDate>Fri, 14 Aug 2026 02:15:59 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:15:59.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Salem,சேலம்,Achievement,இரட்டையர்கள்,twins,சாதனை,மருத்துவ கலந்தாய்வு,medical consultation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/tgsya6hh/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Djpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சேர்ந்து சாதித்த இரட்டையர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/tgsya6hh/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Djpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மருத்துவப் படிப்பு</a>க்கான நேற்று நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">கலந்தாய்வில்</a>, விளையாட்டு பிரிவில் மருத்துவப் படிப்பை தேர்வு செய்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">சேலத்தைச்</a> சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">இரட்டையர்கள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">சாதித்திருக்கின்றனர்</a>.</p><h2>சேலத்தை சேர்ந்த இரட்டையர்கள்</h2><p>சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் தன்னுடைய இரட்டை பிள்ளைகளான நிகில் ஸ்ரீராம், நிக்ஷிதா ஆகிய 2 பேரையும் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு சென்னை அழைத்து வந்திருந்தார். இவர்கள் இருவரும் “வுஷூ" என்ற தற்காப்பு கலை விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கி சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று அதன் மூலம் விளையாட்டு பிரிவில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.</p><h2>மருத்துவப் படிப்பு கலந்தாய்வு</h2><p>நிகில்ஸ்ரீராம் நீட் தேர்வில் 240 மதிப்பெண்ணும், நிக்ஷிதா 370 மதிப்பெண்ணும் விளையாட்டுக்கு மத்தியில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த மதிப்பெண் அடிப்படையிலும், விளையாட்டு பிரிவின் அடிப்படையிலும் நிகில் ஸ்ரீராமுக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியிலும். நிக்ஷிதாவுக்கு சேலம் மருத்துவக் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன.</p><h2>சிறுவயது முதல் சேர்ந்தே சாதித்த இரட்டையர்கள்</h2><p>நிகில் ஸ்ரீராமும், நிக்ஷிதாவும் பள்ளிப் படிப்பில் இருந்து தொடர்ந்து ஒன்றாகவே பயணித்து வருகின்றனர். ஒரே வகுப்பறையில் ஒரே பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவர்கள், விளையாட்டிலும் ஒரே விளையாட்டையே தேர்வு செய்து அதில் சாதித்து, அதன் வாயிலாக இப்போது மருத்துவப் படிப்பு ஆசையையும் நிறைவேற்றியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது. 'எங்கள் குடும்பத்தில் பலர் மருத்துவத்துறையில் பயணிக்கிறார்கள். எங்களுடைய தந்தை மருந்துகள் மொத்த விற்பனையாளராக உள்ளார். அந்த வகையில் நாங்களும் மருத்துவத் துறையில் காலடி வைக்க முயற்சித்தோம். அதை சாதித்து விட்டோம்' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-experiencing-power-outage-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-experiencing-power-outage-today#comments</comments><guid isPermaLink="false">0d12084c-28de-4a2d-8dc4-56ec328a7b3c</guid><pubDate>Fri, 14 Aug 2026 02:07:23 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:07:23.890Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power outage,மின் தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ym9lijjq/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/ym9lijjq/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 14.08.2026 (இன்று) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p>திருவொற்றியூர்: டி.எச். சாலை, ராஜா கடை, திருச்சினாங்குப்பம், கன்னிகோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, கணக்கர் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, மார்கெட் லேன், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, சாத்தாங்காடு பகுதி, நியூ தெரு, வசந்தா நகர், ஜான்ரவார் தெரு, ஐய்யப்பள்ளி தோட்டம், ஷேசாச்சல கிராமணி தெரு, திலகர் நகர், சின்னமேட்டுபாளையம், பெரியமேட்டுபாளையம், மேற்கு மற்றும் வடக்கு மாட வீதி, பிகேஎன் காலனி, வீரராகவன் தெரு, குமரன் நகர், கோமாதா நகர், பிபிடி சாலை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> அமித்ஷா தலைமையில் தென்மண்டல முதல்-மந்திரிகள் மாநாடு: சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-zone-chief-ministers-conference-chaired-by-amit-shah-two-day-event-held-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-zone-chief-ministers-conference-chaired-by-amit-shah-two-day-event-held-in-chennai#comments</comments><guid isPermaLink="false">8ec6219d-39d4-4b63-85bb-e9680e09d780</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:58:21 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:58:21.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்ஷா,Chennai,சென்னை,Amit Sha,மாநில முதல்-மந்திரிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/j1hnx3fb/Amit-sha.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமித்ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித்ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/j1hnx3fb/Amit-sha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>முதல்-மந்திரிகள் மாநாடு</h2><p>இந்தியாவின் தென்மண்டல மாநிலங்களாக ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை உள்ளன. புதுச் சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களையும் இது உள்ள டக்கியுள்ளது. இந்த மாநிலங்களின் மண்டல மாநாடு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுவது வழக்கமாகும்.இதற்கு முன்பு 30-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் 2022-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. இந்தநிலையில் 31-வது மாநாடு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில், சென்னை கோவளத்தில் உள்ள தாஜ் பிஷ்சர்மேன்ஸ் கோவ் என்ற நட்சத்திர ஓட்ட லில் நடைபெறவுள்ளது.</p> <h2>5 முதல்-மந்திரிகள்</h2><p>இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான தென் மண்டல குழுவில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையிலும் இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பார் என்று கூறப்படு கிறது. மேலும், முதல்-மந்திரிகள் சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), டி.கே.சிவ குமார் (கர்நாடகம்), சதீசன் (கேரளம்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), புதுச்சேரி முதல்-அமைச்சர் ரெங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இந்த மாநிலங்களின் முக்கிய மந்திரிகள், அரசுத் துறை செயலாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், மாநில எல்லைப்புறங்களை ஓட்டியுள்ள மாவட்ட கலெக்டர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டின் முன்னோட்டமாக, தமிழகத்தின் அனைத்து அரசுத்துறை செய லாளர்களின் கூட்டம் வருகிற 18-ந் தேதி நடைபெறுவதாக கூறப்படுகிறது.</p><h2>என்னென்ன அம்சங்கள்?</h2><p>இந்த மாநாட்டில் மிக முக்கியமான அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மாநிலங்களின் எல்லைப்புறங்களில் உள்ள பிரச்சினைகள், கடத்தல் குற் றங்கள், மாநிலம் விட்டு மாநிலம் சென்று பதுங்கியுள்ள குற்றவாளிகள் குறித்த தகவல்கள், குற்றங்கள்-நிகழ்வுகள் குறித்த தகவல் பரிமாற்றம், அதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம்,மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பகிர்வு, பிராந்திய உள்கட்ட மைப்பு மற்றும் இணைப்பு, எல்லைப் பகுதிகளில் ஏற்படும் பதற்றநிலை தணிப்பு, கடல்சார் விவகாரங்கள், கடலோரக் காவல், எல்லைகளை ஒட்டிய வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு. சாலை போக்குவரத்து வாகன கண்காணிப்பு, எல்லையோர சோதனை சாவடிகள், சுற்றுச் சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன.இந்த மாநாட்டின் இறுதியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரை யாற்றுவார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;மதுரை பயலுகடா.. கொடூரமடா...&quot; அரசு பஸ்சில் இடம் பெற்ற வாசகத்தால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-payalugada-horror-slogan-on-government-bus-sparks-a-stir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-payalugada-horror-slogan-on-government-bus-sparks-a-stir#comments</comments><guid isPermaLink="false">7aa802ba-6870-4526-beed-ffbeb90a7d0d</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:57:26 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:57:26.151Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பஸ்,Madurai,மதுரை,govt bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/e4x02u5n/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/e4x02u5n/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்ற அரசு பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி. பெயர் பலகையில் 'மதுரை பயலுகடா.. கொடூரமடா..." என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த பயணிகள், அந்த பஸ் எந்த ஊருக்கு இயக்கப்படுகிறது என்பது தெரியாமல் குழம்பியபடி பயணித்தனர். </p><p>இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அரசு பஸ்களில் உள்ள பெயர் பலகைக்கான எல்.இ.டி. திரைகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு ஊர் பெயர்களுக்கு பதிலாக வேறு வார்த்தைகள் இடம்பெறுவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி சீருடையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரல் - தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirls-drink-alcohol-in-uniform-video-viral-action-against-headmistress</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirls-drink-alcohol-in-uniform-video-viral-action-against-headmistress#comments</comments><guid isPermaLink="false">edd8a758-a1ff-4d0c-b261-9ca4deb8cb5d</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:57:11 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:57:11.186Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,தக்கலை,பள்ளி மாணவிகள்,மது அருந்துதல்,Thuckalay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qsi9qtxe/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/qsi9qtxe/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மது அருந்திய மாணவிகள்</h2><p>அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் 2 மாணவிகள் மது அருந்துகிறார்கள். பள்ளியின் வகுப்பறை முன்பு மேஜை போடப்பட்டிருக்கிறது. அதில் சாப்பாடு மற்றும் மது குடிப்பதற்கான தின்பண்டங்கள் இருக்கிறது. பாட்டிலில் உள்ள மதுவை மாற்றி, மாற்றி இருவரும் குடிக்கிறார்கள். அதனை மற்றொரு மாணவி வீடியோவாக படம் பிடிக்கிறார். அப்போது, மதுகுடிப்பதை ஏன் படம் பிடிக்கிறாய் என்று மாணவி ஒருவர் கேட்பது போல் வீடியோ இருக்கிறது.</p><h2>கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை</h2><p>இதுகுறித்து அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், தக்கலை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை</h2><p>இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையை நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கு இடமாற்றம் செய்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் மது குடித்த மாணவிகளுக்கு மதுபாட்டில் கிடைத்தது எப்படி? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-chennai-egmoresalem-express-train-timings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-chennai-egmoresalem-express-train-timings#comments</comments><guid isPermaLink="false">0a084c0c-4729-4168-94e9-128f0626ceed</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:28:55 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:28:55.802Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Express train,எக்ஸ்பிரஸ் ரெயில்,Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/8yfc08ex/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/8yfc08ex/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>சென்னை எழும்பூரில் இருந்து சேலத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர் வழியாக தினசரி சேலம் வருகிறது. </p><p>இந்த ரெயில் நேற்று இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இணைப்பு ரெயில் தாமதமாக வருவதால், இந்த ரெயில் 7 மணி 35 நிமிடங்கள் தாமதமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p><p>&lt;</p><p>&gt; &lt;</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யுடன் ‘செல்பி&apos; எடுத்துக்கொண்ட தொழில் அதிபர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/industrialists-took-a-selfie-with-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/industrialists-took-a-selfie-with-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">ca8dfa1b-7752-4e5b-8eab-cfc56f765abd</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:27:23 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:27:23.290Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தொழில் அதிபர்கள்,செல்பி,selfie,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/dcq2y8qa/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/dcq2y8qa/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் நடந்த த.வெ.க. அரசின் முதல் மாநாட்டில் ரஷியா, நியூசிலாந்து உள்பட சர்வதேச நாடுகளின் நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த மாநாட்டில் கையெழுத்தான 97 ஒப்பந்தங்கள் மூலம் 23 மாவட்டங்களில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.</p><p>மாநாட்டு மேடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான போது பெரும்பாலான நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம், அந்நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விஜய் சிறிது நேரம் பேசினார். தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் மேடையிலேயே விஜய்யுடன் 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.</p><p>வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு என்பதை குறிக்கும் வகையில் 'வி' என்ற குறியீட்டுடன் கூடிய பேட்ஜை விஜய் தனது கோட் மீது அணிந்திருந்தார். மாநாட்டில் பங்கேற்ற தொழில் அதிபர் ஒருவர் பொக்லைன் மினியேச்சரை வழங்கினார். அதனை விஜய் ரசித்து பார்த்தார். மாநாட்டில் அமைச்சர் கீர்த்தனா கம்பீரமாக பேசியதை விஜய் உன்னிப்பாக கவனித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு கட்டிடத்தில் தலைக்கு மேல் தொங்கிய டியூப் லைட், உடைந்து கிடந்த சுவிட்ச் போர்டு - அதிகாரிகளை கடிந்து கொண்ட லயோலா மணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tube-light-hanging-precariously-overhead-and-a-broken-switchboard-in-a-government-buildingloyola-mani-reprimanded-the-officials</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tube-light-hanging-precariously-overhead-and-a-broken-switchboard-in-a-government-buildingloyola-mani-reprimanded-the-officials#comments</comments><guid isPermaLink="false">8bce58d4-723a-4f36-9473-1b1308c15505</guid><pubDate>Fri, 14 Aug 2026 01:18:53 +0000</pubDate><atom:updated>2026-08-14T01:18:53.899Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Loyola Mani,லயோலா மணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/61fz0r8m/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/61fz0r8m/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக த.வெ.க. நிர்வாகி லயோலா மணி கடந்த மாதம் நியமனம் செய்யட்டார். முன்னதாக கடந்த தி.மு.க. ஆட்சியில் பட்டிமன்ற நடுவரும், தி.மு.க. நிர்வாகியுமான திண்டுக்கல் லியோனி இந்த பொறுப்பில் இருந்தார். </p><p>இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமனம் செய்யப்பட்ட லயோலா மணி, பாடநூல் கழகத்தின் குடோன்கள், அலுவலகங்களில் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக குடோனில் லயோலா மணி ஆய்வு மேற்கொண்டார். </p><p>அந்த கட்டிடத்திற்குள் அவர் உள்ளே நுழையும்போது வாசலில் ஒரு பெரிய கான்கிரீட் கல் வைக்கப்பட்டிருந்ததை கண்டார். அது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, படிக்கட்டு கட்டுவதற்கு பதிலாக கல் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அந்த பாதையைத்தான் தினமும் பயன்படுத்தி வருவதாக அவர்கள் கூறினர்.</p><p>இதைக் கேட்டு அதிர்ச்சியான லயோலா மணி, “இப்படி கல் வைப்பதற்கு பதிலாக ஒரு படிக்கட்டு கட்டலாமே? இதில் யாராவது தவறி விழுந்தால் என்ன செய்வது?” என்று அதிகாரிகளை கடிந்து கொண்டார். பின்னர் கட்டிடத்திற்குள் நுழைந்த அவர், அங்கு தலைக்கு மேல் டியூப் லைட் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து மேலும் அதிர்ச்சியானார். அதுமட்டுமின்றி, அங்கு சுவற்றில் இருந்த சுவிட்ச் போர்டு உடைந்து ஆபத்தான முறையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்தைப் பார்த்து, அதிகாரிகளிடம் லயோலா மணி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். </p><p>பின்னர் உடனடியாக தனது செல்போனில் மின்வாரிய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசிய லயோலா மணி, “கடைசியாக எப்போது இங்கு வந்து பார்த்தீர்கள்? இங்கு டியூப் லைட், சுவிட்ச் போர்டு எல்லாம் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. நாளை ஆட்களை அனுப்பி இதை சரிசெய்து கொடுங்கள்” என்று கூறினார். </p><p>இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகளிடம் பேசிய லயோலா மணி, “ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டால் உங்கள் வேலை முடிந்தது என்று நினைக்காதீர்கள். திடீரென்று இங்கு அமைச்சர் ஆய்வுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? என்னிடம்தான் கேள்வி கேட்பார்கள்” என்று கடிந்து கொண்டார். </p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebrations-traffic-diversions-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebrations-traffic-diversions-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6ad4f474-4ed4-42b5-b099-26fa8e562b95</guid><pubDate>Fri, 14 Aug 2026 00:51:08 +0000</pubDate><atom:updated>2026-08-14T00:51:08.092Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து மாற்றம்,Independence Day,சுதந்திர தின விழா,Traffic diversions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/oxl1abdm/traffic.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/oxl1abdm/traffic.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திர தின விழாவையொட்டி போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கியின் சுரங்கப்பாதை வடக்குப்பகுதி வரை அமைந்துள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகியவற்றில் உரிய வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே, வாகனங்களில் செல்லமுடியும். உரிய அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>இதேபோல, காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக திருப்பிவிடப்படும். அதேபோல, பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்களும், வடக்குகோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை சந்திப்பு, முத்துசாமி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.</p><h2>அடையாள அட்டை</h2><p>சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள வாகனங்களில் வருபவர்களுக்கு, வாகன அனுமதி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் 'பர்பிள்' வண்ண அனுமதி அட்டைகள் வைத்திருப்பவர்கள் காலை 8 மணி வரை கோட்டை உள்வாயில் அருகே போக அனுமதி உண்டு. அவர்கள் கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும். ராஜாஜி சாலை வழியாக வருபவர்களுக்கும் இந்த அனுமதி பொருந்தும்.</p><p>இதே அடையாள அட்டையுடன், போர் நினைவுச் சின்னம் வழியாக வருபவர்கள் கொடிமர சாலை, முத்துசாமி பாலம், பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று கோட்டையின் வெளி வாயில் அருகே இறங்கிக்கொண்டு, தங்களது வாகனங்களை கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை இடத்தில் நிறுத்தவேண்டும்.</p><h2>நீல மற்றும் 'பிங்க்' வண்ண அனுமதி அட்டை</h2><p>நீல மற்றும் 'பிங்க்' வண்ண அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக போர் நினைவு சின் னம், கொடிமர சாலை, முத்துசாமி சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி வழியாக சென்று கோட்டையின் வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். வாகனங்களை பொதுப்பணித்துறை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.</p><p>நீல மற்றும் 'பிங்க்' வண்ண அனுமதி அட்டை வைத்திருக்கும், காமராஜர் சாலை வழியாக வருபவர்கள் காலை 8.30 மணிக்கு பின்னர் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணாசாலை வழியாக சென்று முத்துசாமி பாலம், பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக சென்று கோட்டையின் வெளிவாயில் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை இடத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.</p><p>வாகன அனுமதி அட்டை இல்லாதவர்கள் போர் நினைவு சின்னம் அருகே இறங்கிக்கொள்ள வேண்டும். வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்தவேண்டும் என்று போக்குவரத்து போலீசார் சார்பில் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள்</title><link>https://www.dailythanthi.com/others/thalayangam/100-naatkalil-rs-1-latcham-kodi-mudaleedugal</link><comments>https://www.dailythanthi.com/others/thalayangam/100-naatkalil-rs-1-latcham-kodi-mudaleedugal#comments</comments><guid isPermaLink="false">8b81bd3d-f316-4782-9708-0415351bd1ec</guid><pubDate>Fri, 14 Aug 2026 00:50:41 +0000</pubDate><atom:updated>2026-08-14T00:50:41.555Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தலையங்கம்,Thalayangam,தொழில் முதலீடுகள்,Investments,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/xthm6z1q/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/xthm6z1q/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலையங்கம் (Thalayangam)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற ஒரு தெளிவான இலக்கை ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே முதல்-அமைச்சர் விஜய் நிர்ணயித்தார். இத்தகைய பெரும் இலக்கை எட்டுவதற்கு புதிய தொழில்களை உருவாக்குவதும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதும் மிகவும் அவசியம். இதனால், தொழில்துறையை வேகமாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் தொழில்துறை அமைச்சராக கீர்த்தனாவையும், அந்தத் துறைக்கு கூடுதல் தலைமை செயலாளராக எஸ்.விஜயகுமாரையும் நியமித்தார். இந்தியாவிலேயே தமிழ்நாடு, திரிபுரா ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே பெண்கள் தொழில்துறை அமைச்சர்களாக உள்ளனர்.</p><p>பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அமைச்சர் கீர்த்தனாவும், அதிகாரிகள் குழுவினரும் தென்கொரியாவுக்கு சென்று, ரூ.39 ஆயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு நின்றுவிடாமல், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களுடனும், வெளிநாடுகளின் புகழ்பெற்ற நிறுவனங்களுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், தமிழக அரசு வழங்கத் தயாராக உள்ள சலுகைகள், வசதிகள், மானியங்கள் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது கடந்த மே மாதம் 10-ந்தேதிதான். வருகிற 17-ந்தேதிதான் 100 நாட்கள் நிறைவடைகின்றன. ஆனால், இந்தக் குறுகிய காலத்திற்குள்ளாகவே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் குறிப்பிடத்தக்க வேகத்தை தொழில்துறை காட்டியுள்ளது. இந்த முயற்சிகளுக்கு மகுடம் சூட்டுவதுபோல், சென்னையில் நேற்று 'வெற்றி தமிழ்நாடு' என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.</p><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஒரே நாளில் புதிய தொழில்கள் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் 97 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த விழாவில் அமைச்சர் கீர்த்தனா பேசும்போது. "இந்த ஒப்பந்தங்களோடு எங்கள் ஆட்சியின் மொத்த முதலீடுகள் ரூ.1.02 லட்சம் கோடியை தாண்டும். இதன் மூலம் 1.21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். நாங்கள் ஆட்சி நடத்த தொடங்கிய ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.1,000 கோடியை ஈர்த்து இருக்கிறோம். இதை சிலர் பெரிய சாதனை என்று கூறலாம். ஆனால் எங்கள் அரசைப் பொறுத்தவரை இது கதையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. தொழில் முதலீட்டுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு அனைத்து அனுமதிகளையும் வழங்குவதற்கு 21 நாட்கள் காலக்கெடுவை எங்கள் முதல்-அமைச்சர் நிர்ணயித்துள்ளார். இந்த நிறுவனங்களால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடி தங்களது சொந்த ஊரைவிட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்காது" என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக கூறினார்.</p><p>இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் விஜய், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். தொழில் தொடங்குவதற்கும், விரிவாக்கத்துக்கும் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளும் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒப்பந்தம் செய்துள்ள 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக அமைய உள்ளன என்பதுதான் 'வெற்றி தமிழ்நாடு' மாநாட்டின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். குறுகிய 100 நாட்களுக்குள், ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் என்ற ஒரு இமாலய சாதனையை செய்து காட்டிய முதல்-அமைச்சர் விஜய்யும், தொழில்துறையினரும் பாராட்டுக்குரியவர்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-49</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-49#comments</comments><guid isPermaLink="false">dee8680d-e087-4213-9ce8-eff3bb2dc6c8</guid><pubDate>Fri, 14 Aug 2026 00:32:53 +0000</pubDate><atom:updated>2026-08-14T00:32:53.371Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/9hayqzyg/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-14/9hayqzyg/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (14.08.2026 வெள்ளிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>“எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல” - மின் கட்டண சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த யூடியூபர் தம்பதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-do-not-belong-to-any-political-party-youtuber-couple-clarifies-electricity-bill-controversy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-do-not-belong-to-any-political-party-youtuber-couple-clarifies-electricity-bill-controversy#comments</comments><guid isPermaLink="false">124037ce-1ffa-4025-87f7-50a463208b8e</guid><pubDate>Thu, 13 Aug 2026 20:05:13 +0000</pubDate><atom:updated>2026-08-13T20:05:13.497Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் கட்டணம்,electricity bill,யூடியூபர்,வைஷாலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/op6574zt/VAI.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பிரபல யூடியூபர் தம்பதி சத்தியதேவ் மற்றும் வைஷாலி வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் தற்போது விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/op6574zt/VAI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">மின் கட்டண உயர்வு</a> குறித்து சமூக வலைதளங்களில் பிரபல யூடியூபர் தம்பதி சத்தியதேவ் மற்றும் வைஷாலி வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் தற்போது விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளனர்.</p><h2>நடுத்தர மக்களின் சுமை குறித்தே பேசினோம்</h2><p>அந்த வீடியோவில், “நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல” என்று தெரிவித்துள்ள சத்தியதேவ் மற்றும் வைஷாலி, 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தி அதிக கட்டணம் செலுத்தும் நடுத்தர மக்களின் சுமையைப் பற்றியே தாங்கள் பேசியதாக விளக்கம் அளித்துள்ளனர்.</p><p>மேலும், தாங்கள் செலுத்திய மின்கட்டணத்திற்கான ஆதாரங்களையும் வீடியோவில் காண்பித்து, மின் கட்டணம் தொடர்பாக தங்களது கருத்தை மட்டுமே தெரிவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.</p><h2>சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க விளக்கம்</h2><p>முந்தைய வீடியோ பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்திய நிலையில், அதற்கான விளக்கமாக அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெண் காவலரை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்... பணி முடிந்து வீடு திரும்பியபோது பயங்கரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-stabs-policewoman-to-death-horror-unfolds-as-she-returns-home-after-duty</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-stabs-policewoman-to-death-horror-unfolds-as-she-returns-home-after-duty#comments</comments><guid isPermaLink="false">8db0b032-198e-4476-b17e-84fcc45bb01f</guid><pubDate>Thu, 13 Aug 2026 18:58:59 +0000</pubDate><atom:updated>2026-08-13T18:58:59.593Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,குடியாத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/6k1b318t/kaval.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வந்த தாமரைச்செல்வி (40), அவரது கணவர் கத்தியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/6k1b318t/kaval.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">வேலூர் </a>மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வந்த தாமரைச்செல்வி (40), அவரது கணவர் கத்தியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தலைமை காவலர்</h2><p>குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (45), ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தாமரைச்செல்வி, குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.</p><h2>கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம்</h2><p>தாமரைச்செல்விக்கும், அவரது கணவர் அரவிந்தனுக்கும் கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (13-ம் தேதி) இரவு பணி முடித்து வீட்டிற்கு திரும்பிய தாமரைச்செல்வியிடம், நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரது கணவர் அரவிந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.</p><h2>கத்தியால் குத்திய கணவர்</h2><p>வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அரவிந்தன், தாமரைச்செல்வியை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தாமரைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>கணவரிடம் போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாமரைச்செல்வியின் கணவர் அரவிந்தனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை கல்லூரி மாணவர் கொலை: “தாய் மாமனாக விஜய் என்ன சொல்லப் போகிறார்?” - சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-coimbatore-college-student-what-is-vijay-going-to-say-as-a-maternal-uncle-seeman-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-coimbatore-college-student-what-is-vijay-going-to-say-as-a-maternal-uncle-seeman-asks#comments</comments><guid isPermaLink="false">79f6da29-e9f0-45cb-978d-33b057d2fe4b</guid><pubDate>Thu, 13 Aug 2026 17:32:21 +0000</pubDate><atom:updated>2026-08-13T17:32:21.726Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,சீமான்,Seeman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/r1suc1za/see.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/r1suc1za/see.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான் </a>தெரிவித்துள்ளார்.</p><h2>மூடி மறைப்பதா?</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை கல்லூரி மாணவர் அமுதனின் படுகொலையை குழு மோதல் எனக்கூறி மூடி மறைப்பதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மேலும், ஒழுக்கங்களை போதிக்க வேண்டிய கல்விக்கூடங்களில் பகைமை, வெறுப்பு மற்றும் போதைப்பழக்கம் உருவாகி, உயிரைப் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>“போதைப்பொருள் புழக்கம் என்பதை மறைத்து, மாணவர்களின் தகராறு என வழக்கின் கோணத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். தவெக அரசின் போக்கு அநீதிக்கு துணைபோகும் துரோகம் இல்லையா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>“விஜய் என்ன சொல்லப் போகிறார்?”</h2><p>மேலும்,  “இறந்துபோன 19 வயது பிள்ளையின் மரணத்துக்கு ‘தாய் மாமனாக’ விஜய் என்ன சொல்லப் போகிறார்?” என தெரிவித்துள்ளார்.</p><h2> ரூ.25 லட்சம் நிதி</h2><p>மேலும், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், மாணவர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மூடிய கேட்டை கடக்க முயன்ற முதியவர் ரெயில் மோதி பலி... காப்பாற்ற முயன்ற கேட் கீப்பரும் இறந்த பரிதாபம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gatekeeper-dies-while-trying-to-save-person-attempting-suicide-tragically-dragged-500-meters-by-the-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gatekeeper-dies-while-trying-to-save-person-attempting-suicide-tragically-dragged-500-meters-by-the-train#comments</comments><guid isPermaLink="false">db1a60e2-8c3d-49f0-aefb-47a308b32655</guid><pubDate>Thu, 13 Aug 2026 17:19:26 +0000</pubDate><atom:updated>2026-08-13T17:19:26.346Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தஞ்சாவூர்,Railway Gatekeeper,கேட் கீப்பர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/y6qzdvnp/rai.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயிலில் தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்ற முயன்றபோது கேட் கீப்பர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/y6qzdvnp/rai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற முதியவரை காப்பாற்ற சென்ற கேட் கீப்பர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>காப்பாற்ற முயன்றபோது விபரீதம்</h2><p>தஞ்சாவூர் மாவட்டம் கோபுராஜபுரம் ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் (30) பணியாற்றி வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கோபுராஜபுரம் ரெயில்வே கேட்டில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்ற அந்தியோதயா ரெயிலுக்காக கேட்டை பூட்டி விட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மூடியிருந்த ரெயில்வே கேட்டை மீறி தண் டவாளத்தை கடக்க முயன்றார்.</p><h2>இருவரும் உடல் சிதறி பலி</h2><p>அந்த நேரத்தில் ரெயில் அருகில் வந்துவிட்டதால் இதனைக்கண்ட கேட் கீப்பர் ராகுல், அந்த முதியவரை தண்டவா ளத்தில் இருந்து விலகுமாறு எச்சரித்துள்ளார். ஆனால் அந்த முதியவர் தண்டவாளத்தை கடப்பதற்குள் ரெயில் மிக அருகில் வந்துவிட்டது. இதை கவனித்த கேட்கீப்பர் ராகுல், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச்சென்று அவ ரைத் தள்ளிவிட்டு அவரை காப்பாற்ற முயன்றார். </p><p>அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் விபத்தில் சிக்கினர். இருவரும் ரெயிலில் சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>ரெயில்வே போலீசார் விசாரணை</p><p>இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
கோவையில் பரபரப்பு; திடீரென குலுங்கிய மூன்றடுக்கு கட்டிடம் - மக்கள் அலறி ஓட்டம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-in-coimbatore-three-storey-building-shakes-suddenly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-in-coimbatore-three-storey-building-shakes-suddenly#comments</comments><guid isPermaLink="false">c9c13a04-e48d-4d33-b17d-2c8923b4009b</guid><pubDate>Thu, 13 Aug 2026 16:44:30 +0000</pubDate><atom:updated>2026-08-13T16:44:30.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,building,கட்டிடம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/fxf915vs/ctsas.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/fxf915vs/ctsas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை</p><p>கோவையில் மூன்றடுக்கு கட்டிடம் திடீரென குலுங்கியதில் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.</p><p>கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மூன்றடுக்கு கட்டிடத்தில் திடீரென அதிர்வு ஏற்பட்டது.  இதனால், கட்டிடத்தில் இருந்த நகை செய்யும் பணியாளர்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.  நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டு விட்டதா? அல்லது கட்டிடம் பலவீனமடைந்து குலுங்கி விட்டதா? என உடனடியாக தெரியவில்லை.</p> <h2>வெளியேற அறிவுறுத்தல்</h2><p>இந்த கட்டிட அதிர்வுக்கான காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  கட்டிடத்தில் இருந்தவர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி அறிவுறுத்தல் அளிக்கப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதி - முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-orders-financial-assistance-of-rs-4-lakh-each-to-the-families-of-those-who-died-in-the-sivakasi-firecracker-factory-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-orders-financial-assistance-of-rs-4-lakh-each-to-the-families-of-those-who-died-in-the-sivakasi-firecracker-factory-accident#comments</comments><guid isPermaLink="false">3cf7d3b1-bc4d-48e7-bf4b-b7ebfd90ca90</guid><pubDate>Thu, 13 Aug 2026 16:35:49 +0000</pubDate><atom:updated>2026-08-13T16:35:49.219Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivakasi,சிவகாசி,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/y1kdwzh3/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/y1kdwzh3/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடபட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளித்து முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வடபட்டி கிராமத்தில் இன்று (13.08.2026) தனியாருக்குச் சொந்தமான வெடி பொருட்கள் தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்த அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 41) த/பெ.சர்க்கரையப்பன் என்பவர் பலத்த காயமுற்று சிகிச்சைக்காக சிவகாசி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றியும், அவ்விபத்தில் பலத்த காயமுற்ற திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சேர்ந்த அகமது இப்ராஹிம் (வயது 66) த/பெ.காதர் மைதீன் என்பவர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.</p> <p>இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘தவிர்க்க வேண்டிய வார்த்தையை பயன்படுத்திவிட்டேன்’ - வருத்தம் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-used-a-word-that-should-have-been-avoided-minister-arunraj-expresses-regret</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-used-a-word-that-should-have-been-avoided-minister-arunraj-expresses-regret#comments</comments><guid isPermaLink="false">d3b2bf08-c5ee-41f9-827c-a42af3fba0d9</guid><pubDate>Thu, 13 Aug 2026 16:23:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T16:23:00.243Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/6nfpvolz/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/6nfpvolz/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் 2026-27 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். </p><p>இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசியபோது, மாற்றித்திறனாளிகள் குறித்து தவிர்க்க வேண்டிய வார்த்தையை பயன்படுத்திவிட்டதாக அமைச்சர் அருண்ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“இன்றைய தினம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ சேர்க்கை ஆணைகளை வழங்கினோம்.</p><p>இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் மாற்றுத் திறனாளி மாணவர்களை குறிப்பிடும்போது... வழக்கத்தில் இருந்து நாம் தவிர்க்க வேண்டிய வார்த்தையை தவறுதலாக பயன்படுத்தியமைக்காக மிகவும் வருந்துகிறோம்.  </p><p>மாற்றுத்திறனாளிகள் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறோம். அன்பு சகோதர சகோதரிகளுக்கு  நமது மனப்பூர்வமான வருத்தத்தினை இதன் மூலம் பதிவு  செய்கிறோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு செய்திகளில் சைகை மொழிபெயர்ப்பு திரையை பெரிதாக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sign-language-translation-screen-should-be-enlarged-in-government-news-disability-welfare-board-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sign-language-translation-screen-should-be-enlarged-in-government-news-disability-welfare-board-insists#comments</comments><guid isPermaLink="false">977160eb-6456-4da4-a177-6e4d6a5d9d8c</guid><pubDate>Thu, 13 Aug 2026 16:17:53 +0000</pubDate><atom:updated>2026-08-13T16:17:53.083Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government,Chennai,சென்னை,வலியுறுத்தல்,அரசு,நலவாரியம்,மாற்றுத்திறனாளிகள்,news,செய்திகள்,emphasis,Welfare Board,Disabled,பெரிய,screen,சைகை மொழி,திரை,Sign Language,Large</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/6n3n3jbz/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் மனு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/6n3n3jbz/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அரசு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">செய்திகளில்</a> சைகை மொழிபெயர்ப்புத் திரையை 50 சதவீதம் வரை பெரிதாக்க வேண்டும் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாற்றுத்திறனாளிகள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">நல வாரியம்</a> கோரிக்கை விடுத்துள்ளது.</p><h2>அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் மனு</h2><p>அரசு செய்தி வெளியீடுகள் மற்றும் நேரடி ஒளிபரப்புகளின் போது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்படும் சைகை மொழிபெயர்ப்பாளரின் வீடியோ திரையின் அளவை பெரிதாக்க வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">அமைச்சர் ஜெகதீஸ்வரி</a>யிடம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் மெய்கண்டன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81">கோரிக்கை மனு</a> அளித்துள்ளார். </p><h2>சைகை மொழி பெயர்ப்பாளர்கள்</h2><p>அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: </p><p>தமிழ்நாடு அரசு மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை (DIPR) சார்பில் முக்கிய அரசு செய்திகள், அறிவிப்புகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளின் போது சைகை மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துவதற்கு முதற்கண் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>தற்போதைய நேரடி ஒளிபரப்பு மற்றும் செய்தி வீடியோக்களில் சைகை மொழிபெயர்ப்பாளர் தோன்றும் திரையின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால், தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவர்களின் கை மற்றும் முக பாவனைகளை தெளிவாக புரிந்து கொள்ள முடிவதில்லை. </p><h2>திரையின் அளவை அதிகரிக்க வேண்டும்</h2><p>காது கேளாத மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதி செய்யும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு செய்தி வெளியீடுகளின் போது சைகை மொழிபெயர்ப்பாளரின் வீடியோ அளவைக் குறைந்தது திரையின் அளவை 30 முதல் 50 சதவீதம் வரை கணிசமாக பெரியதாக அமைத்து ஒளிபரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். </p><p>இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. </p><p>இந்த கோரிக்கை மனு சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், செய்தி மக்கள் தொடர்புத்துறை (DIPR) இயக்குநர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு வருவாய் மேம்பாட்டுக் குழுவின் முதலாவது நேரடிக் கூட்டம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-in-person-meeting-of-the-tamil-nadu-revenue-enhancement-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-in-person-meeting-of-the-tamil-nadu-revenue-enhancement-committee#comments</comments><guid isPermaLink="false">e8497654-edea-4258-91d9-7e1b23f3e9dc</guid><pubDate>Thu, 13 Aug 2026 16:11:56 +0000</pubDate><atom:updated>2026-08-13T16:11:56.312Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,தமிழ்நாடு அரசு,TamilNadu Goverment,வருவாய் மேம்பாட்டுக் குழு,Revenue Enhancement Committee</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/due6bg1y/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/due6bg1y/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வருவாய் மேம்பாட்டுக் குழுவின் முதலாவது நேரடிக் கூட்டம் இன்று நடைபெற்றது. முக்கிய வருவாய் ஈட்டும் துறைகள் தங்கள் கருத்துக்களை இதில் முன்வைத்தன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முதலாவது நேரடிக் கூட்டம்</h2><p>மாண்டேக் சிங் அலுவாலியாவின் தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த வருவாய் மேம்பாட்டுக் குழுவின் முதலாவது நேரடிக் கூட்டம், சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் கட்டடத்தில் இன்று நடைபெற்றது.</p><p>2. மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரியல்லாத வருவாயை மேம்படுத்தி நிலைத்தன்மையுடன் பராமரிப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கும் பொருட்டு இக்குழு அமைக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் முக்கிய வருவாய் ஈட்டும் துறைகளான வணிக வரிகள், பதிவுத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், போக்குவரத்துத் துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை, நீர்வளத் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் பொதுத் துறை மாநிலக் கழகம் ஆகியவை விரிவான விளக்கக்காட்சிகளை அளித்தன.</p><h2>கருத்துகளை முன்வைத்தன</h2><p>3. ஒவ்வொரு துறையும், தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்ட தனது வருவாய் ஆதாரத்தின் அமைப்பு மற்றும் நிர்வாகம் தகவல், வசூலின் போக்கு, மற்றும் பொருளாதார வளர்ச்சியுடனான இணக்க நிலை, வருவாய் இழப்புகள், வரி ஏய்ப்பு, நிர்வாக நடைமுறை இடர்பாடுகள் உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவிவரும் சவால்கள், முழு வருவாய் ஈட்டும் ஆற்றலுக்கும் ஈட்டப்பட்ட வருவாய்க்கும் இடையேயான இடைவெளி, பிற மாநிலங்களின் நடைமுறைகளுடனான ஒப்பீடு, மற்றும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் வருவாய் மேம்பாட்டிற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குழுவின் முன் வைத்தன.</p><p>4. முதல்-அமைச்சரை குழுவின் தலைவரும், உறுப்பினர்களும், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சருடன் சந்தித்து, குழு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவரித்தனர்.</p><h2>ஆலோசனைகள் வரவேற்பு</h2><p>5. முன்னதாக பொதுமக்கள், துறைசார் சங்கங்கள், கல்வியாளர்களிடமிருந்து மின்னஞ்சல் வழியாக ஆலோசனைகளை குழு வரவேற்றிருந்தது. பெறப்பட்ட ஆலோசனைகளை குழு பதிவு செய்து கொண்டது. தனது ஆய்வின் நோக்கம், அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலவரையறை மற்றும் எதிர்கால <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆலோசனைகள் </a>ஆகியவை குறித்து குழு விவாதித்தது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வரி மாற்றியமைப்பை உடனடியாக நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சி முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-decides-to-immediately-put-the-tax-revision-on-hold</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-corporation-decides-to-immediately-put-the-tax-revision-on-hold#comments</comments><guid isPermaLink="false">6d9381bc-6937-4c33-bab1-da5958900149</guid><pubDate>Thu, 13 Aug 2026 16:10:12 +0000</pubDate><atom:updated>2026-08-13T16:10:12.674Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/kmjo3n2f/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/kmjo3n2f/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில், குறைவான மதிப்பீடு (Under Assessed) செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரி திருத்திய மதிப்பீடு தொடர்பாகப் பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகள் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாகத் நிறுத்தி வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p> <p>“பெருநகர சென்னை மாநகராட்சியில், குறைவான மதிப்பீடு (Under Assessed) செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இந்த வரி மாற்றியமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த சில நாட்களாகப் பொதுமக்களிடமிருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டன.</p><p>இந்த திருத்திய மதிப்பீடு தொடர்பாகப் பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகள் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாகத் நிறுத்தி வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, வரித்தொகையானது மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அளவிற்கே மீண்டும் மாற்றப்படும். மாற்றியமைக்கப்பட்ட வரித்தொகையை ஏற்கனவே செலுத்தியவர்களுக்கு, அந்தத்தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பணவரியாக ஈடு செய்யப்படும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பிளாஸ்டிக் லைட்டர்களால் ஆண்டுக்கு ரூ.600 கோடி தீப்பெட்டி வர்த்தகம் பாதிப்பு: உற்பத்தியாளர்கள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plastic-lighters-are-costing-the-matchbox-trade-by-rs-600-crore-annually-manufacturers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plastic-lighters-are-costing-the-matchbox-trade-by-rs-600-crore-annually-manufacturers-concerned#comments</comments><guid isPermaLink="false">3f432710-a15c-4799-8ece-b5c33f1309e5</guid><pubDate>Thu, 13 Aug 2026 15:51:30 +0000</pubDate><atom:updated>2026-08-13T15:51:30.226Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Kovilpatti,கோவில்பட்டி,Trade,தீப்பெட்டி,பிளாஸ்டிக்,Plastic,affected,வர்த்தகம் பாதிப்பு,Matchbox,லைட்டர்,Lighter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/vhlcs6ob/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/vhlcs6ob/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்களின் ஊடுருவலால் ஆண்டுக்கு ரூ.600 கோடி அளவிலான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">தீப்பெட்டி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக</a> தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. </p><p>தூத்துக்குடி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a>யில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய தீப்பெட்டி<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF"> </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">உற்பத்தியாளர்கள் </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சங்கத்</a> தலைவர் விஜய் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் இதுகுறித்து கூறியதாவது: </p><p>நூற்றாண்டு பழமையான தீப்பெட்டி தொழிலுக்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. ரூ.20-க்கும் குறைவான விலையுள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது அதன் உதிரிபாகங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்படுகின்றன. </p><h2>ரூ.600 கோடி தீப்பெட்டி வர்த்தகம் பாதிப்பு</h2><p>இவை தரம் குறைந்ததாகவும், பாதுகாப்பற்றதாகவும், மண்ணில் மக்காததாகவும் உள்ளன. தீப்பெட்டித் தொழிலில் 80 சதவீதம் பெண் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். பிளாஸ்டிக் லைட்டர்களின் வரவால் ஒரு ஆண்டுக்கு சுமார் 25 சதவீதம், அதாவது ரூ.600 கோடி அளவிலான தீப்பெட்டி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. </p><h2>முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து மனு</h2><p>ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்க வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசின் முறையான ஆதரவு கிடைத்தால் தீப்பெட்டி உற்பத்தியைப் பெருக்குவதுடன், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. </p><p>இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். </p><p>இந்த சந்திப்பின் போது சங்க செயலாளர் வரதராஜன், பொருளாளர் ராஜவேல், துணைத்தலைவர் அம்புரோஸ், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் சேதுரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். </p>]]></content:encoded></item><item><title>‘இன்றைய முதலீட்டு ஒப்பந்தங்களில் 75% தி.மு.க. ஆட்சியில் பேசி முடிக்கப்பட்ட திட்டங்கள்தான்’ - டி.ஆர்.பி.ராஜா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-of-todays-investment-agreements-are-projects-that-were-finalized-during-the-dmks-tenure-trb-rajaa</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-of-todays-investment-agreements-are-projects-that-were-finalized-during-the-dmks-tenure-trb-rajaa#comments</comments><guid isPermaLink="false">e63719b8-c2e7-4ad1-a2df-38b722305daf</guid><pubDate>Thu, 13 Aug 2026 15:37:19 +0000</pubDate><atom:updated>2026-08-13T15:37:19.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TRB Raja,டி.ஆர்.பி.ராஜா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/8esjhe80/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/8esjhe80/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், எனக்கும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, குறிப்பாக தொழில் வளர்ச்சியை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை.</p><p>தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முதலீடும், அமைக்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலையும், உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பும் எங்களுக்கு மகிழ்ச்சியையே தருகின்றன. ஆம், ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும் சரி.</p><p>அதனால்தான், இன்று அறிவிக்கப்பட்ட 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) குறித்த தகவல்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது.இன்றைய தொழில்முனைவோர் மாநாட்டில் செய்தியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பதே பலமான சந்தேகங்களை எழுப்புகிறது.</p><p>பல தசாப்தங்களாக தமிழ்நாட்டின் முதலீட்டு சூழலை முன்னிறுத்துவதில், சென்னையை சேர்ந்த வணிக செய்தியாளர்கள் மிக வலுவான பங்களிப்பை அளித்து வந்துள்ளனர். அப்படிப்பட்டவர்களை ஏன் இந்த மாநாட்டில் இருந்து விலக்கி வைத்தார்கள்? மேலும், அந்த 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த அதிகாரப்பூர்வப் பட்டியல் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை?</p><p>கிடைத்த தகவல்களை தொகுத்துப் பார்க்கையில் பின்வரும் உண்மைகள் தெரியவருகின்றன:-</p><p>• சுமார் 70 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (மொத்த முதலீட்டு மதிப்பில் 75% மற்றும் வேலைவாய்ப்புகளில் 83%-ஐக் கொண்டவை) ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களாகவோ அல்லது முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'திராவிட மாடல்' அரசால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட முதலீட்டு முயற்சிகளாகவோ உள்ளன.</p><p>• 'டைட்டன்' (Titan) நிறுவனத்துக்கான ₹1,000 கோடி மதிப்பிலான முதலீடு என்பது, TIDCO மூலமாக அந்த நிறுவனத்துடன் மாநில அரசுக்கு ஏற்கனவே உள்ள உறவின் அடிப்படையில் அமைந்ததாகும்.</p><p>• புதிய அல்லது புதிதாக அமையக்கூடிய முதலீடுகள் அனைத்தையும் தாராளமாக கணக்கில் கொண்டாலும், அவை மொத்தம் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே; இது மொத்த முதலீட்டு மதிப்பில் சுமார் 23% மற்றும் வேலைவாய்ப்புகளில் 15% மட்டுமே ஆகும்.</p><p>நான் மிகத் தெளிவாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன், தொழில் விரிவாக்கம் வரவேற்கத்தக்கது. முதலீட்டு முயற்சியை இறுதி முதலீடாக மாற்றுவது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு வேலைவாய்ப்பும் வரவேற்கத்தக்கது.</p><p>ஆனால், முந்தைய ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட, பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட ஒரு முதலீட்டை, வெறும் புதிய மாநாடு ஒன்றில் முன்வைக்கப்பட்டதற்காக மட்டும் 'புதிய சாதனை' என்று கூறிவிட முடியாது.</p><p>தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி புதிய உச்சங்களை தொட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் தொழில் வெற்றி என்பது எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் சொத்தும் அல்ல; தி.மு.க.வும் இதை மதித்து வந்துள்ளது.</p><p>அதனால்தான், பன்முகத் திறமை கொண்ட நமது தொழில் சூழலமைப்பின் வலிமையையும், நமது தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் சிறப்புகளையும் நாங்கள் முன்னிலைப்படுத்தி பெருமை கொண்டோம்.</p> <p>முந்தைய அரசு ஒரு தொழில் சூழலமைப்பை உருவாக்கியது, முதலீட்டாளர்களை ஈர்த்தது, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது, முதலீட்டு முயற்சிகளை வளர்த்தெடுத்தது மற்றும் நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போதைய அரசு புதிதாக கொண்டுவரும் விஷயங்களை நியாயமான கண்ணோட்டத்துடன் அணுகுவதோடு, அது உண்மையில் செய்து முடித்தவற்றுக்கான அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்.</p><p>இன்று ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டும். அவர்கள் அதை ஆய்வு செய்யட்டும். எது உண்மையாகவே புதியது, எது விரிவாக்கம் சார்ந்தது, எது ஏற்கனவே செயல்பாட்டில் இருந்தது என்பதை மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.</p><p>விளம்பரங்களில் கூறப்படுவது போல அந்த எண்கள் ஈர்க்கக்கூடியதாக இருந்தால், வெளிப்படைத்தன்மை அந்த சாதனையை மேலும் வலுப்படுத்தும். தமிழ்நாடு இதற்கு சற்றும் குறைவானதை ஏற்காது. தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கை கொள்வோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மருத்துவப் படிப்பு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு: ஆணைகளை வழங்கினார் அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-education-75-internal-reservation-for-government-school-students-minister-arunraj-issued-the-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-education-75-internal-reservation-for-government-school-students-minister-arunraj-issued-the-orders#comments</comments><guid isPermaLink="false">0f8d4fe6-ebc4-420f-b1ff-b1560228b3a7</guid><pubDate>Thu, 13 Aug 2026 15:02:35 +0000</pubDate><atom:updated>2026-08-13T15:02:35.055Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மருத்துவப் படிப்பு,Medical Education,அருண்ராஜ்,Arunraj,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/az45pdin/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/az45pdin/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ் 2026-27 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணாக்கர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்கைப் பெற்ற மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். </p><h2>7.5% உள்ஒதுக்கீடு</h2><p>மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ் இன்று (13.08.2026) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற 2026-27 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணாக்கர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்கைப் பெற்ற மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் சார்பில் 2026-27 ஆம் ஆண்டிற்கான மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய இளநிலை படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தின் வாயிலாக 29.06.2026 முதல் 27.07.2026 மாலை 3 மணி வரை பெறப்பட்டன.</p><p>அதன்படி மொத்தம் 72,633 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 7.5% அரசு பள்ளி மாணாக்கர்களின் உள்ஒதுக்கீட்டுக்கு 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. மேலும் சிறப்பு பிரிவுகளான விளையாட்டு பிரிவுக்கு 468 விண்ணப்பங்களும், முன்னாள் படை வீரர் பிரிவிற்கு 524, விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவிற்கு 212 விண்ணப்பங்களும் பெறப்பட்டிருந்தன.</p><h2>நேரடி கலந்தாய்வு</h2><p>பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் தேர்வு குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் 7.5% அரசு பள்ளி மாணாக்கர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான தர வரிசைக் பட்டியலும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் 10.08.2026 அன்று வெளியிடப்பட்டது.</p><p>இதனைத் தொடர்ந்து 7.5% அரசு பள்ளி மாணாக்கர்களின் உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு ஒதுக்கீடுகளுக்கான நேரடி கலந்தாய்வு இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.</p><p>இன்றைய தினம் 7.5% அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான உள்ஒதுக்கீட்டு பிரிவில் உள்ள 614 இடங்களுக்கும், சிறப்பு பிரிவு ஒதுக்கீடுகளான விளையாட்டு பிரிவில் உள்ள 15 இடங்களுக்கும், முன்னாள் படைவீரர் பிரிவிற்கு உள்ள 11 இடங்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவிற்கு உள்ள 224 இடங்களுக்கு தகுதியுடைய விண்ணப்பங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 108 மாணாக்கர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.</p><h2>ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்</h2><p>இக்கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொண்டு அரசு மாணாக்கர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு ஒதுக்கீடுகளில் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்த மாணாக்கர்களுக்கு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி, தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.</p><p>இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நல்வாழ்வுத்துறை </a>அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) வா.லோகநாயகி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி துணை இயக்குநர்கள் (தேர்வுக்குழு) டாக்டர் கராமத், டாக்டர் பாலநாக நந்தினி, டாக்டர் சாந்தினி ஆகியோர் கலந்த கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தர்மபுரி: ரெயிலில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-boy-dies-after-falling-from-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-boy-dies-after-falling-from-train#comments</comments><guid isPermaLink="false">5064022d-7ed8-4b64-b976-64e22523158f</guid><pubDate>Thu, 13 Aug 2026 14:32:25 +0000</pubDate><atom:updated>2026-08-13T14:32:25.820Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>railway station,ரெயில் நிலையம்,தர்மபுரி,Dharmapuri,தவறி விழுந்து,Boy dies,சிறுவன் பலி,Falls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/fcsg5u8f/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BFjpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுவன் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/fcsg5u8f/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BFjpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF">தர்மபுரி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">ரெயில் நிலையத்தில்</a> ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">சிறுவன்</a> சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">பலி</a>யானான். </p><h2>தர்மபுரி ரெயில் நிலையம்</h2><p>தர்மபுரி மாவட்டம் பைசுஅள்ளியைச் சேர்ந்த முனியப்பன் (வயது 34), மகன் யாசிரியன்(7) ஆகியோர், உறவினர்களை கேரளா கோவிலுக்கு வழியனுப்ப தர்மபுரி ரெயில் நிலையம் வந்தனர். பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, உறவினர்களை வழியனுப்பினர். </p><h2>தவறி விழுந்து 7 வயது சிறுவன் பலி</h2><p>அப்போது ரெயில் கிளம்பியதும் மகனை தூக்கிக்கொண்டு இறங்க முயன்ற முனியப்பன், சிறுவனுடன் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்தார். இதில் யாசிரியன் உடல் துண்டாகி உயிரிழந்தான். படுகாயமடைந்த முனியப்பன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை குறித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-writes-to-prime-minister-modi-regarding-constituency-delimitation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-writes-to-prime-minister-modi-regarding-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">91f565a2-da43-4fed-80ad-f7adfb68cbf5</guid><pubDate>Thu, 13 Aug 2026 14:28:04 +0000</pubDate><atom:updated>2026-08-13T14:28:04.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,பிரதமர் மோடி,PM Modi,Prime Minister Modi,மத்திய அரசு,Central Government,தொகுதி மறுவரையறை,Delimitation,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/cl3clpv9/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/cl3clpv9/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர், மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இந்தியப் பிரதமர்நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (13.8.2026) கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முதல்-அமைச்சர் விஜய் கடிதம்</h2><p>அக்கடிதத்தில், நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்தல், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் ஆகிய பொருண்மைகள்மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 12.8.2026 அன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது என்றும், அத்தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதே நிலையில் நிரந்தரமாகத் தொடர்வதற்கும், மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ அளவைப் பாதுகாப்பதற்கும் (அதாவது, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சாரப் பகிர்வை ஏற்கெனவே உள்ளவாறே தொடர்வதற்கும்), மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையேயான விகிதத்தைப் (2.2 : 1) பேணுவதற்கும், தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>பெரும் அநீதி</h2><p>மேலும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பகிர்வை மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் பின்னணியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்னர், அரசியலமைப்பின் 81(2)(a)-ஆம் சட்டப்பிரிவைப் பின்பற்றி தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், 1967-இல் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்டது போன்று, தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும் என்று சட்டமன்றப் பேரவையில் விவாதிக்கப்பட்டது என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் எந்தவொரு மறுவரையறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக அமையுமென்றும் அக்கடிதத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>தீர்மானத்தில் பின்வருவன வலியுறுத்தப்பட்டுள்ளன:-</h2><p>(i) மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும்;</p><p>(ii) மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எண்ணிக்கை </a>தற்போதைய அளவிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும்; அதாவது, மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இடப் பகிர்வு முறை தொடர வேண்டும்.</p><p>(iii) எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தல்களிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்துகிறது.</p><p>மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்திருப்பதாகவும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தைப் பரிசீலித்து, இது தொடர்பான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமரை கனிவுடன் கேட்டுக் கொள்வதாகவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமேஸ்வரம் மீனவர்கள் கைது விவகாரம்; வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rameswaram-fishermen-arrest-issue-cm-vijays-letter-to-external-affairs-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rameswaram-fishermen-arrest-issue-cm-vijays-letter-to-external-affairs-minister#comments</comments><guid isPermaLink="false">28ec64e3-036d-4362-93f9-d0e92c04fe26</guid><pubDate>Thu, 13 Aug 2026 14:12:42 +0000</pubDate><atom:updated>2026-08-13T14:12:42.196Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள் கைது,ராமேஸ்வரம்,தமிழக மீனவர்கள் கைது,fishers arrest,முதல்-அமைச்சர் விஜய்,CMJosephVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/kwx3est7/vijaycmone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் கடிதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/kwx3est7/vijaycmone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் அவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய்  கடிதம் எழுதி உள்ளார்.</p><p>மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கருக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> எழுதி உள்ள கடிதத்தில் கூறியதாவது:-</p><p>12.08.2026 அன்று இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9  இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். </p><p>இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதேபோன்று இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீனவ சமூகத்தினரிடையே, குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், மிகுந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>எனவே, தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை முன்வைத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இவ்விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கும். இப்பொருண்மை குறித்து  மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் உடனடித் தலையீட்டைத் தான் எதிர்நோக்குவதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/foreign-currency-gold-worth-rs94-lakh-seized-at-trichy-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/foreign-currency-gold-worth-rs94-lakh-seized-at-trichy-airport#comments</comments><guid isPermaLink="false">8741c4c6-dd03-45fd-9aed-e767887bd624</guid><pubDate>Thu, 13 Aug 2026 14:05:51 +0000</pubDate><atom:updated>2026-08-13T14:05:51.150Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>airport,Seizure,விமான நிலையம்,பறிமுதல்,திருச்சி,Trichy,தங்கம்,gold,inspection,பயணிகள்,passengers,சோதனை,வெளிநாட்டு பணம்,Foreign Currency</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/q9g802tx/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெளிநாட்டு பணம் பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/q9g802tx/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">திருச்சி விமான நிலையத்தில்</a> மொத்தம் ரூ.94 லட்சம் மதிப்புள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">வெளிநாட்டு பணம்</a> மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">கடத்தல் தங்கத்தை</a> சுஙகத்துறை அதிகாரிகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்து, அந்த பயணிகளிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். </p><h2>விமான பயணிகளிடம் சோதனை</h2><p>திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் வழியாக வியட்நாம் செல்ல வந்த 2 பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.13 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2>ரூ.94 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்</h2><p>இதேபோல கோலாலம்பூரில் இருந்து வந்த பயணியிடம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 10 சவரன் தங்கம் சிக்கியது. கடந்த 5-ந்தேதி 2 பயணிகளிடம் ரூ.70 லட்சம் மதிப்பிலான டாலர், பவுண்ட், யூரோவும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் 5 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.94 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் மற்றும் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கோவை கல்லூரி மாணவர் கொலை வழக்கு - மேலும் 3 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-college-student-murder-case-3-more-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-college-student-murder-case-3-more-arrested#comments</comments><guid isPermaLink="false">31f93657-2ae4-4506-b8e1-dc6915b09b5b</guid><pubDate>Thu, 13 Aug 2026 14:03:49 +0000</pubDate><atom:updated>2026-08-13T14:03:49.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கைது,arrest,கல்லூரி மாணவர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ovl0klzt/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ovl0klzt/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன்(வயது 19) என்ற மாணவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அவர் சகமாணவர்களால் அமுதன் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.</p> <p>இதைத் தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஆரமுதன் (20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த அரவிந்த் (21), தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் சிவா ரோகித் (20), பெரம்பலூர் மாவட்டம் குன்னம்பகுதியை சேர்ந்த மணி பாலு (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்திருந்தனர். தொடர்ந்து சந்தோஷ் என்ற மற்றொரு மாணவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். </p><p>இந்நிலையில் கல்லூரி மாணவன் அமுதன் கொலை வழக்கில், தற்போது மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ஸ்ரீராம், ஹரீஷ் பாண்டியன் மற்றும் லலித் ஆதித்யா ஆகிய 3 பேரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சோழிங்கநல்லூர் மண்டலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: இணை ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-sholinganallur-zone-joint-commissioner-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-in-sholinganallur-zone-joint-commissioner-inspects#comments</comments><guid isPermaLink="false">84ef7eb3-26b8-4563-95ba-7878df8711be</guid><pubDate>Thu, 13 Aug 2026 13:54:39 +0000</pubDate><atom:updated>2026-08-13T13:54:39.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சோழிங்கநல்லூர்,Sholinganallur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/e97ycv68/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/e97ycv68/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த சமூகச் சந்தை மற்றும் நலவாழ்வு மையம், கண்ணகி நகர் விளையாட்டுத் திடல் ஆகியவற்றை இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன் இன்று (13.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இணை ஆணையாளர் பணிகள், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-196க்குட்பட்ட ஒக்கியம் மடுவில் நீர் வெளியேறும் பகுதியினைப் பார்வையிட்டு, பருவமழைக்கு முன்னதாக 5 மதகுகளிலும் நீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>இணை ஆணையாளர் ஆய்வு</h2><p>இதனைத் தொடர்ந்து, வார்டு-199க்குட்பட்ட சோழிங்கநல்லூர் போக்குவரத்து சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறையின் மழைநீர் வடிகாலில் நீர் வெளியேறும் பகுதியினைப் பார்வையிட்டு, மழைநீர் தங்குதடையின்றி வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>பின்னர், வார்டு-195க்குட்பட்ட எழில் நகரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சமூகச் சந்தை மற்றும் நலவாழ்வு மையக் கட்டடப் (Integrated Community Market &amp; Welfare Centre) பணி, வார்டு-196க்குட்பட்ட கண்ணகி நகரில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் கபடி உள்விளையாட்டு அரங்கில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.</p><p>இந்த ஆய்வுகளின் போது, தெற்கு வட்டார துணை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆணையாளர் </a>அதாப் ரசூல் மண்டல அலுவலர் ஜி.லோகேஸ்வரன், மாநகராட்சி மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி 62 ஆடுகள் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/62-goats-die-of-electrocution-in-kallakurichi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/62-goats-die-of-electrocution-in-kallakurichi#comments</comments><guid isPermaLink="false">9f09ede6-c0a1-433b-b9a0-a68d688e323c</guid><pubDate>Thu, 13 Aug 2026 13:37:27 +0000</pubDate><atom:updated>2026-08-13T13:37:27.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,கனமழை,farmer,விவசாயி,heavy rain,மின்சாரம் தாக்கி பலி,ஆடுகள்,goats,electrocution death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ablmps1m/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-62-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி 62 ஆடுகள் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ablmps1m/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-62-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கள்ளக்குறிச்சி</a> மாவட்டத்தில் விவசாய நிலத்தில் அடைத்து வைத்திருந்த 62 செம்மறி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆடுகள்</a> கனமழையின்போது மின்கம்பி அறுந்து விழுந்தததில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">மின்சாரம் தாக்கி பலி</a>யாகின. </p><h2>செம்மறி ஆடுகள்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரை சேர்ந்த ஆடு வளர்க்கும் விவசாயி சுந்தர்ராஜ், குரூர் கிராம விவசாய நிலத்தில் தனது 62 செம்மறி ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். </p><h2>மின்சாரம் தாக்கி 62 ஆடுகள் பலி</h2><p>நேற்று முன்தினம் இரவு காற்றுடன் பெய்த கனமழையில் அங்கு மின்கம்பி அறுந்து ஆடுகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி 62 ஆடுகளும் பலியாகின. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோ இருந்த செல்போன் பறிப்பு: த.வெ.க. பிரமுகர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cellphone-containing-secret-video-seized-from-female-executive-tvk-leader-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cellphone-containing-secret-video-seized-from-female-executive-tvk-leader-arrested#comments</comments><guid isPermaLink="false">6c6ee3d3-eeac-4f1a-9579-a41d80c6cb43</guid><pubDate>Thu, 13 Aug 2026 13:07:09 +0000</pubDate><atom:updated>2026-08-13T13:07:09.315Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>த.வெ.க.,Video,கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,T.V.K.,செல்போன் பறிப்பு,வீடியோ,பெண் நிர்வாகி,cell phone seized,female executive</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ntj6pe0u/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செல்போன் பறிப்பு, கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/ntj6pe0u/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், ஆறுமுகநேரி அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">த.வெ.க.</a> பெண் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">நிர்வாகி</a>யிடம் ரகசிய வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்படும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">செல்போனை பறித்துச்</a> சென்ற விவகாரத்தில், நாடகமாடிய அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>த.வெ.க. பெண் நிர்வாகி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி ரோஹிணி (வயது 35), தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த ஜூன் 26-ம் தேதி ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் சாலையில் பைக்கில் நின்றபடி, த.வெ.க. உறுப்பினரான ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த சிபாஸ்(28) என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். </p><h2>செல்போன் பறிப்பு</h2><p>அப்போது பைக்கில் வைக்கப்பட்டிருந்த ரோஹிணியின் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பினார். அவரை பிடிப்பது போல சென்ற சிபாஸ், மர்ம நபர் தப்பிவிட்டதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து ரோஹிணி அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். </p><h2>ரகசிய வீடியோக்கள்</h2><p>விசாரணையில், மணப்பாடு பகுதியைச் சேர்ந்த த.வெ.க. உறுப்பினர் ரூஸ்வெல்ட்(44) என்பவருக்கும் ரோஹிணிக்கும் பழக்கம் இருந்துள்ளது. கட்சியில் பொறுப்பு வாங்கித் தருமாறு ரூஸ்வெல்ட் கேட்டு வந்த நிலையில், இருவரின் பழக்கம் தொடர்பான சில ரகசிய வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் ரோஹிணியின் செல்போனில் இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>த.வெ.க. பிரமுகர் கைது</h2><p>இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய ரூஸ்வெல்ட், செல்போனைக் கைப்பற்ற சிபாஸின் உதவிய நாடியுள்ளார். இதற்காக சிபாஸ், தனது நண்பரான உடன்குடி புனிதராஜ் என்பவரை வைத்து நாடகமாடி செல்போனைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்த சிபாஸை போலீசார் கைது செய்தனர். </p><h2>மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு</h2><p>செல்போனை பறித்துச் சென்ற புனிதராஜ் ஏற்கனவே வேறு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். தற்போது புனிதராஜிடம் இருந்து செல்போனை பெற்று தலைமறைவாக உள்ள த.வெ.க. உறுப்பினர் ரூஸ்வெல்ட்டை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். அவரை பிடித்த பிறகே செல்போனில் இருந்த ரகசிய வீடியோக்கள் குறித்த முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்க்கு புதிய அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரியது தமிழக அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-office-for-chief-minister-vijay-tamil-nadu-government-invites-tender-for-rs-5-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-office-for-chief-minister-vijay-tamil-nadu-government-invites-tender-for-rs-5-crore#comments</comments><guid isPermaLink="false">79c64030-736a-42d7-942d-7d3082503dfd</guid><pubDate>Thu, 13 Aug 2026 13:00:28 +0000</pubDate><atom:updated>2026-08-13T13:00:28.410Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக அரசு,Actor Vijay,முதல்-அமைச்சர் விஜய்,CMOffice</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/cc92tpg2/cmvijay33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
முதல்-அமைச்சர் விஜய்க்கு புதிய அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/cc92tpg2/cmvijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்க்கு மாற்றபட உள்ள நிலையில்  புதிய அலுவலத்திற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.</p><h2>50 ஆண்டுகளுக்கு மேலாக அலுவலகம்</h2><p>புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமை செயலக கட்டிடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்-அமைச்சர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அந்த மாளிகையின் 10-வது தளத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">புதிய முதல்-அமைச்சர் அறை,</a> தனிச் செயலாளர்களுக்கான அலுவலகங்கள், நவீன ஆலோசனைக் கூட்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தளத்திலிருந்து கடலின் அழகை ரசிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளது.</p><h2>டெண்டர் அறிவிப்பு</h2><p>முதற்கட்டமாக இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள 'கட்டிடக் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டம்-1' கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><p>நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மொத்தம் 3 பிளாக்குகளாக இந்தப் பணிகள் பிரிக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, பிளாக் 1-ல் ரூ.2.41 கோடிக்கு நிர்வாக அலுவலக வசதிகளை மேம்படுத்தவும், பிளாக் 2-ல் ரூ.2.01 கோடியில் உள் கட்டமைப்பு பணிகளுக்கும், பிளாக் 3-ல் ரூ.1.12 கோடிக்கு இதர பணிகளுக்கும் என மொத்தம் ரூ.5.54 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. </p><h2>பொதுப்பணித் துறை கெடு</h2><p>ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்து ஒப்படைக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை கெடு விதித்துள்ளது.</p><p>மேலும், டெண்டர் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் அவை இணைய தளத்திலேயே உடனுக்குடன் பதிவேற்றப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்</p><p>தமிழக முதல்-அமைச்சர்களிலேயே பாரம்பரிய அலுவலகக் கட்டடத்திலிருந்து புதிய இடத்துக்கு அலுவலகத்தை மாற்றும் முதல் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பட்டாசு ஆலை வெடி விபத்து: பலியான தொழிலாளர்களுக்கு நயினார் நாகேந்திரன் இரங்கல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/firecracker-factory-explosion-nainar-nagendran-condoles-the-deaths-of-workers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/firecracker-factory-explosion-nainar-nagendran-condoles-the-deaths-of-workers#comments</comments><guid isPermaLink="false">394bc8a1-6d61-4f67-b39b-314906162f71</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:36:53 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:36:53.676Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பட்டாசு ஆலை,firecracker factory</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/g3rbenzm/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/g3rbenzm/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>விருதுநகர், </p><p>இனி ஒரு உயிர் கூட இது போன்ற விபத்துகளில் பறிபோகக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பட்டாசு ஆலையில் வெடி விபத்து</h2><p>விருதுநகர் மாவட்டம் நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>கடந்த மாதம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோத பட்டாசுக் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு விபத்து நடந்திருப்பது தொழிலாளர்களின் பாதுகாப்பில் தவெக அரசு கொண்டுள்ள அலட்சியத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.</p><h2>போர்க்கால அடிப்படையில்..</h2><p>இனி ஒரு உயிர் கூட இது போன்ற விபத்துகளில் பறிபோகக் கூடாது. எனவே, அரசு அனைத்து ஆலைகளிலும் போர்க்கால அடிப்படையில் முறையான பாதுகாப்புத் தணிக்கை செய்வதோடு, தொழிலாளர்களுக்கான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாதுகாப்பு பயிற்சி</a> மற்றும் அவசர கால வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர் அருகே மதுபான லோடு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-lorry-carrying-a-load-of-liquor-overturned-near-virudhunagar-causing-an-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-lorry-carrying-a-load-of-liquor-overturned-near-virudhunagar-causing-an-accident#comments</comments><guid isPermaLink="false">a44c40db-af98-44ed-9d90-4ad9c9a3f996</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:34:00.817Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Virudhunagar,விருதுநகர்,லாரி,மதுபாட்டில்கள்,liquor bottles</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/m7qwhskp/3.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ லாரி கவிழ்ந்து விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுபாட்டில்களை பொதுமக்கள் எடுத்துச் செல்லாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/m7qwhskp/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>சென்னையில் இருந்து<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> திருநெல்வேலி </a>நோக்கி அரசு டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/விபத்து">விபத்து</a> ஏற்பட்டது.</p><h2>லாரி கவிழ்ந்து விபத்து</h2><p>சென்னையில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபானப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நெல்லை நோக்கிப் புறப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) லாரி விருதுநகர் எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலைப் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலேயே தலைகீழாகக் கவிழ்ந்தது.</p><h2>ஓட்டுநர் உயிர் தப்பினார்</h2><p>இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி மற்றும் சரக்கு ஏற்றிச் சென்ற பகுதி பலத்த சேதமடைந்தது. லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளித்தனர்.</p><h2>போலீஸ் பாதுகாப்பு</h2><p>லாரி கவிழ்ந்ததில் சில மதுபாட்டில்கள் உடைந்த சிதறிய நிலையில், எஞ்சிய மதுபாட்டில்களைப் பொதுமக்கள் யாரும் எடுத்துச் செல்லாமல் இருக்க சம்பவ இடத்திற்கு விரைந்த போலாரோ ரோந்து போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்துக்குள்ளான லாரியை மீட்டெடுத்து போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம்: அரசு மருத்துவமனையில் 8 மணி நேரமாக நீடித்த மின் தடை;  நோயாளிகள் கடும் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-power-outage-at-government-hospital-continues-for-8-hours-patients-suffer-severely</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-power-outage-at-government-hospital-continues-for-8-hours-patients-suffer-severely#comments</comments><guid isPermaLink="false">a1d06aac-1c94-48bd-83e5-f48e4619995f</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:29:11 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:29:11.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government Hospital,Kanchipuram,காஞ்சிபுரம்,power cut,அரசு ஆஸ்பத்திரி,மின்தடை,நோயாளிகள் அவதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rdlw1kl0/pwer-cut.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ காஞ்சிபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 8 மணிநேரம் மின்தடை நீடித்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/rdlw1kl0/pwer-cut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 8 மணி நேரமாக நீடித்த மின்தடையால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.</p><h2>8 மணிநேரம் நீடித்த மின்தடை</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (வியாழக்கிழமை) திடீரென <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> ஏற்பட்டது. இந்த 8 மணி நேர மின்தடை காரணமாக ஒட்டுமொத்த ஆஸ்பத்திரி செயல்பாடுகளும் முடங்கின. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.</p><h2>பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை</h2><p>ஆஸ்பத்திரியின் சிறுநீரகப் பிரிவில் வழக்கம்போல் காலை முதலே டயாலிசிஸ் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் திடீரென மின் விநியோகம் தடைப்பட்டதால், டயாலிசிஸ் எந்திரங்கள் அனைத்தும் இயங்காமல் நின்றன.</p><p>இதனால் பல நோயாளிகளுக்கு சிகிச்சை பாதியிலேயே நிறுத்தப்பட்டதுடன், புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழலும் உருவானது. சுமார் 8 முதல் 9 மணி நேரமாக நோயாளிகள் அனைவரும் எந்திரங்களின் அருகிலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.</p><h2>நோயாளிகள்- உறவினர்கள் குற்றச்சாட்டு</h2><p>காலை 7:30 மணியளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், நீண்ட நேரமாகியும் வராததால் வார்டுகளில் இருந்த நோயாளிகள் புழுக்கத்தினால் கடும் அவதி அடைந்தனர். அவசர கால மின் தேவைக்கான மாற்று ஏற்பாடுகளோ அல்லது ஜெனரேட்டர் வசதிகளோ முறையாகச் செயல்படவில்லை என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.</p><p>இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகார்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இப்பகுதியில் நிலவி வரும் தொடர் மின்தடை சிக்கல்களுக்கு மின்சார வாரியமும், <a href="https://www.dailytanthi.com/topic/2ஆஸ்பத்திரி">ஆஸ்பத்திரி </a>நிர்வாகமும் உடனடியாகப் பொறுப்பேற்று நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் உயிரிழப்பு; முதல்-அமைச்சர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-dies-after-treatment-at-theni-government-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-dies-after-treatment-at-theni-government-hospital#comments</comments><guid isPermaLink="false">fde61664-73c3-45b1-aceb-f11f77197a8f</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:26:57 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:26:57.475Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/wdwj6g6r/tncaf.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/wdwj6g6r/tncaf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.</p><p>தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், இந்திரா காலனியை சேர்ந்த சிறுவன் நிவாஸ் (வயது 13).  சிறுவனின் தந்தை நாராயணசாமி உயிரிழந்து விட்டார்.  இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் சில நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டான்.  சிறுவனின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் விஜய் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.</p> <h2>தீவிர சிகிச்சை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், இந்திரா காலனியை சேர்ந்த சிறுவன் நிவாஸ் என்பவர் மூக்கில் தசை வளர்ந்துள்ளதற்கு சிகிச்சை மேற்கொள்ள கடந்த 3.06.2026 அன்று பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சிகிச்சை பலனின்றி கடந்த 10.08.2026 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.</p><p>இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்’ - அமைச்சர் சம்பத்குமார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-a-democratic-country-anyone-can-start-a-party-minister-sampathkumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-a-democratic-country-anyone-can-start-a-party-minister-sampathkumar#comments</comments><guid isPermaLink="false">d3084640-7eed-4573-82a5-f54defefacc8</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:24:40 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:24:40.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் சம்பத்குமார்,minister sambathkumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/vczc8one/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/vczc8one/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் அமைச்சரும், கோவை வடக்கு தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வுமான சம்பத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் கோவை மாவட்டத்தில் தொகுதி வாரியாக உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெறுவதாகவும், முதல்-அமைச்சர் விஜய் பாணியில் நடிகர் தனுஷ் அரசியல் பயணத்தை மேற்கொள்கிறாரா? என்ற கேள்வி எழுந்திருப்பது குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். </p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் சம்பத்குமார், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து, மக்களை சந்தித்து வாக்கு கேட்கலாம். அதற்கான உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் யார் தங்களை ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்யப் போகிறார்கள். இன்று மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>மக்களே உஷார்: யாசகம் கேட்பது போல் திருட்டில் ஈடுபடும் வடமாநில பெண்கள்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-from-north-indian-states-engage-in-theft-under-the-guise-of-begging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/women-from-north-indian-states-engage-in-theft-under-the-guise-of-begging#comments</comments><guid isPermaLink="false">55366208-4bb0-4e6a-8fa9-21a08ae1bc51</guid><pubDate>Thu, 13 Aug 2026 12:13:25 +0000</pubDate><atom:updated>2026-08-13T12:13:25.867Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Covai,வடமாநில பெண்கள்,மக்களே உஷார்,Public Alert</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/wrqe929u/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/wrqe929u/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை சிங்காநல்லூர் சிஜி ரெஜிடென்சி பகுதியில் கடந்த 8-ந் தேதி வெளிமாநில பெண்கள் சிலர் யாசகம் பெறுவதற்கு வந்தனர். அப்போது யாசகம் பெற்று விட்டு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் செம்பு கம்பிகள், ஏ.சி. செம்பு குழாய்கள் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் அங்குள்ள கண்கானிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது . </p><h2>போலீசாரிடம் ஒப்படைப்பு</h2><p>இந்த நிலையில், மீண்டும் அதே பகுதிக்கு வந்த வடமாநில பெண்களை, அப்பகுதி மக்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த பெண்கள் ஆளுக்கொரு திசையில் கூச்சலிட்டபடி ஓடினர்.</p><p>நீண்ட நேரம் போராடி அந்த திருட்டு கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் ஆதார் கார்டு இல்லாததால் அந்த கும்பலை போலீசார் விடுவித்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவர் கொலை சம்பவம்: உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-murder-incident-real-culprits-must-be-identified-er-eswarans-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-murder-incident-real-culprits-must-be-identified-er-eswarans-statement#comments</comments><guid isPermaLink="false">c3e19a1c-ac0a-4f7d-b84a-f5329f7e6ea8</guid><pubDate>Thu, 13 Aug 2026 11:51:09 +0000</pubDate><atom:updated>2026-08-13T11:51:09.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R. Easwaran</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/fa5gpb4b/State-03.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/fa5gpb4b/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“கோவை தனியார் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி மெக்கானிக்கல் படித்து வந்த மாணவன் அமுதனை நேற்று முன்தினம் அதே கல்லூரியை சேர்ந்த இருவருக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி மைதானம் அருகே கத்தியால் குத்தியும், இரும்புராடல் அடித்தும் கொலை செய்துள்ளனர். </p><p>இக்கொலை சம்பவத்திற்கு காரணம் கல்லூரி அருகே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் அதிக அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் தரப்போ இது கோஷ்டி மோதல் என்று கூறுகிறது. மொத்தத்தில் போதைப் பொருளும் இருந்துள்ளது, கோஷ்டி மோதலும் கலந்துள்ளது. கோஷ்டி மோதல் போதை வஸ்துகளால் வந்தது. இதுதான் அங்கு நிலவும் உண்மையாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அமைதி மண்டலமாக திகழும் கொங்கு மண்டலத்தில் இதுபோன்ற செய்திகள் எல்லாம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.</p><p>தொழிலுக்கு பெயர் போன நகரம் கோவை. அது மட்டுமின்றி மருத்துவத்துறையில் இன்று உலக அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ஏன் பல்வேறு மிக முக்கியஸ்தர்கள் எல்லாம் நல்ல மருத்துவம் எடுத்துக் கொள்ளும் நகரமாக கோவை உருவாகி உள்ளது. இது போன்ற செயல்களெல்லாம் கோவை நகரத்திற்கு தொழில் முனைவோர்கள் வருவதை தடுக்கும் செயலாக அமையும். </p><p>எந்த செயல் நடந்தாலும் இதில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்ளலாம் என்ன காரணங்களை சொல்லலாம் என்று காவல்துறையும், அரசும் யோசித்து முடிவு எடுப்பதை தவிர்த்து விட்டு இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு எவ்வாறு அடக்கலாம் என்ற சிந்தனை மேலோங்கி இருந்தால் தான் குற்றங்களை தடுக்க இயலும்.</p><p>கல்லூரி மாணவன் அமுதன் கொலையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமைதி பூங்காவன கொங்கு மண்டலம் குறிப்பாக கோவை தனது தன்மையை இழக்க வேண்டிய அவல நிலை ஏற்படும். எந்த விஷயம் என்றாலும் பேசுவது எளிது அதன் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து காட்டுவதுதான் உண்மையான தலை சிறந்த அரசாங்கம்.</p><p>ஆகையால் முதல்-அமைச்சர் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவன் உயிரிழப்புக்கு முறையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். மேலும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த அரசு இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>