<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 18 Aug 2026 03:28:43 +0000</lastBuildDate><item><title>வாலிபரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முதலில் தாக்கினாரா? - தஞ்சை போலீஸ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-special-sub-inspector-attack-the-young-man-first-thanjavur-police-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-special-sub-inspector-attack-the-young-man-first-thanjavur-police-clarification#comments</comments><guid isPermaLink="false">cfe0d1d5-4092-4aba-a4fd-236588d757b4</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:23:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:23:17.466Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,Thanjavur,Youth,வாலிபர்,தஞ்சாவூர்,சப்-இன்ஸ்பெக்டர்,Tanjore,Sub Inspector,Thanjavur police</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/vbd4gnu3/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/vbd4gnu3/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சையில் தன்னை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ் பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p> <p><strong>இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் போலீஸ் வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>தஞ்சை ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை 12 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அப்போது, ஆகாஷ் (26) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தபோது, தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>வாக்குவாதம் மேலும் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஹீம் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.</p><p>தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை எஸ்.எஸ்.ஐ. ரஹீம் பயன்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் உடனடியாக ரஹீமை கன்னத்தில் அறைந்துள்ளார். உடனடியாக போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p>இந்த சம்பவத்தில் அந்த நபரின் செயல் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை உருவாக்காமல் தடுக்கும் நோக்கத்திலேயே குறைந்தபட்ச பலபிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வருகிறது.</p><p>மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் இடத்தில் தனது மேற்பார்வையாளரிடம் தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக அவருடைய மேற்பார்வையாளர் மூலம் புகார் அளிக்கப்பட்டு பின்னர் இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. போலீசார் ஆகாஷை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது.</p><p>அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் முற்றி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் முதன்மையான நோக்கமாக இருந்தது. சம்பவத்தின் போது போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><p><strong>வழக்கின் முழுவிரம்:-</strong></p><h2>விசிகவினர் சாலை மறியல்</h2><p>தஞ்சை ரெயில் நிலையம் முன்பு விசிக சார்பில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அனுமதியின்றி அந்த விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்ததாக அந்த பேனரை நேற்று மாநக ராட்சி அலுவலர்கள் அகற்றினர்.</p><p>இதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் எனக் கூறி, மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.</p><h2>போக்குவரத்து நெரிசல்-வாக்குவாதம்</h2><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பேனரை மீண்டும் வைத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள் வழிவிடுமாறி கூறி வி.சி.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><h2>போலீசார் சமாதானம்</h2><p>இதேபோல அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் வழிவிடுமாறு கூறியதால் வி.சி.க.வினர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபரை சமாதானப்படுத்த முயன்றார். தன்னை சமாதானப்படுத்திய போலீசாரிடம், அந்த வாலிபர், தான் வேலைக்கு செல்ல வேண்டும். நான் வேலைக்கு செல்லாவிட்டால் என்னுடையை சம்பளத்தை யார் தருவார்கள்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது போலீசார், வாலிபரிடம் அமைதியாக இருக்கும்படி கூறினர்.</p><h2>கன்னத்தில் அறைந்த...</h2><p>இது தொடர்பாக போலீசாருக்கும். அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம், தாக்கினார். உடனே ஆவேசமான அந்த வாலிபர் பதிலுக்கு அப்துல் ரஹீமின் கன்னத்தில் அறைந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த இளைஞரை குண்டுக்கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.</p><h2>கைது</h2><p>போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ்(வயது 26) என் பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும், வாலிபரும் சாலையில் தாக்கிக்கொண்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங் களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த ஆகாஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-to-mettur-dam-increases</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-to-mettur-dam-increases#comments</comments><guid isPermaLink="false">08c4ff5f-29e4-4104-8d2c-adb5db25e47b</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:21:33 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:21:33.608Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மேட்டூர் அணை,Mettur dam,Salem,சேலம்,காவிரி ஆறு,நீர்வரத்து அதிகரிப்பு,Cauvery,மேட்டூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/wu3ni61x/mettur.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/wu3ni61x/mettur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/mettur-dam">மேட்டூர் அணை</a>க்கு காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,350 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. </p><h2>தண்ணீர் திறப்பு</h2><p>காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்க ளுக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 298 கன அடி தண்ணீரும் என மொத்தமாக 12 ஆயிரத்து 298 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>காவிரி ஆறு </h2><p>இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 12 ஆயிரத்து 500 கன அடியானது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.</p><p>மேலும், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிப்பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>3-வது நாளாக தடை</h2><p>காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக -கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஆக.18) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><h2>மேட்டூர் அணை</h2><p>இதற்கிடையே <a href="https://www.dailythanthi.com/topic/mettur-dam">மேட்டூர் அணை</a>க்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 15-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 4,385 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்றுமுன்தினம் வினாடிக்கு 6,179 கன அடியாக அதிகரித்தது. இந்தநிலையில், நேற்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 8 ஆயிரத்து 555 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.</p><p>மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. </p><p>இந்நிலையில் மேட்டூர் அணைக்கு இன்று (செவ்வாய் கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,350 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. குடிநீருக்காக 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர் இருப்பு 44.701 டிஎம்சியாக உள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பெரம்பலூர் டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-toll-rises-to-4-in-perambalur-tea-shop-cylinder-explosion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-toll-rises-to-4-in-perambalur-tea-shop-cylinder-explosion#comments</comments><guid isPermaLink="false">34af5111-7274-4811-95bb-17826540a33a</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:58:35 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:58:35.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Perambalur,பெரம்பலூர்,tea shop,சிலிண்டர் விபத்து,டீக்கடை,cylinder explosion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/lc1tn8oz/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/lc1tn8oz/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலூர்,</p><p>பெரம்பலூரில் உள்ள டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.</p><h2>சிலிண்டர் வெடித்தது</h2><p>பெரம்பலூர் காமராஜர் வளைவு போக்கு வரத்து சிக்னல் அருகே குறிஞ்சி நகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் நடத்தி வந்த டீக்கடையில் கடந்த 11-ந்தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 16 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். மேலும், டீக்கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த 17 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன.</p><p>படுகாயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த பொம்மனப்பாடியை சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன் கடந்த 13-ந்தேதியும், டீ மாஸ்டர் சிறுகுடலை சேர்ந்த தினேஷ்குமார், பெரம்பலூர் ரெங்கா நகரை சேர்ந்த சகாதேவன் ஆகியோர் கடந்த 15-ந்தேதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><h2>டீக்கடை ஊழியர் சாவு</h2><p>இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டீக்கடை ஊழியரான ஆலத்தூர் தாலுகா, கொட்டரை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 12 பேருக்கு மருத்துவமனைகளில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தன்னை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-young-man-who-slapped-a-special-sub-inspector-who-had-assaulted-him</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-young-man-who-slapped-a-special-sub-inspector-who-had-assaulted-him#comments</comments><guid isPermaLink="false">6e409931-d406-4090-bf0f-9b9f40348342</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:52:56 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:52:56.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தஞ்சாவூர்,சப்-இன்ஸ்பெக்டர்,விசிக,VCK,விசிக மாநாடு,Sub Inspector,Tanjaore,V.C.K.</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/yhgryfwd/arest.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/yhgryfwd/arest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், </p><p>தன்னை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><p>தஞ்சையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-</p><h2>வி.சி.க.வினர் சாலை மறியல்</h2><p>தஞ்சை ரெயில் நிலையம் முன்பு <a href="https://www.dailythanthi.com/topic/vck">வி.சி.க.</a> சார்பில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அனுமதியின்றி அந்த விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்ததாக அந்த பேனரை நேற்று மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.</p><p>இதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு <a href="https://www.dailythanthi.com/topic/vck">வி.சி.க.</a>வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் எனக்கூறி, மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.</p><h2>போக்குவரத்து நெரிசல்-வாக்குவாதம்</h2><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பேனரை மீண்டும் வைத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என வாக்குவாதம் செய்தனர்.</p><p>இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள் வழிவிடுமாறி கூறி <a href="https://www.dailythanthi.com/topic/vck">வி.சி.க.</a>வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><h2>போலீசார் சமாதானம்</h2><p>இதேபோல அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் வழிவிடுமாறு கூறியதால் <a href="https://www.dailythanthi.com/topic/vck">வி.சி.க.</a>வினர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபரை சமாதானப்படுத்த முயன்றார்.</p><p>தன்னை சமாதானப்படுத்திய போலீசாரிடம், அந்த வாலிபர், தான் வேலைக்கு செல்ல வேண்டும். நான் வேலைக்கு செல்லாவிட்டால் என்னுடையை சம்பளத்தை யார் தருவார்கள்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது போலீசார், வாலிபரிடம் அமைதியாக இருக்கும்படி கூறினர்.</p><h2>சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர்</h2><p>இது தொடர்பாக போலீசாருக்கும், அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தாக்கினார். உடனே ஆவேசமான அந்த வாலிபர் பதிலுக்கு அப்துல் ரஹீமின் கன்னத்தில் அறைந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த இளைஞரை குண்டுக்கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>காட்டு யானை  மசினகுடி வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wild-elephant-was-found-dead-in-the-masinagudi-forest-area</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wild-elephant-was-found-dead-in-the-masinagudi-forest-area#comments</comments><guid isPermaLink="false">500c7735-fb4c-4562-9abd-5b1f6bef2442</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:49:13 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:49:13.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானை,wild elephant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/px97zj63/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/px97zj63/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><h2>காட்டு யானை சாவு</h2><p>நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் காட்டு யானை கள், புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களும் உள்ளது. இதனால் வனப்பகுதியை பாதுகாப்பது, வன குற்றங்களை தடுப்பது தொடர்பான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி வனச்சரகத்துக்கு உட்பட்ட அவரல்லா பிரிவு குதிரைப்பாறை வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். ஆனால், யானை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புலிகள் காப்பக இயக்குனர் கிருபா சங்கர் உத்தரவின்பேரில், துணை இயக்குனர் வித்யாதர், வனச்சரகர் ராஜன் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.</p><h2>வயது மூப்பு</h2><p>மேலும் தெப்பக்காடு வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் இணைந்து ஆய்வு நடத்தினர். அப்போது இறந்த பெண் காட்டு யானைக்கு 50 வயது இருக்கும் எனவும், வயது மூப்பு காரணமாக யானை இறந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் இறந்த பெண் யானைக்கு 50 வயது இருக்கும். மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ததில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், பிரேத பரிசோதனை நாளை (அதாவது இன்று) நடைபெறும். அதில் யானையின் உடலில் உள்ள முக்கிய உடற்பாகங்களை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அறிக்கை கிடைத்த பின்னர் முழு விவரம் தெரிய வரும் என்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை: 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gang-sexual-abuse-of-14-year-old-girl-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gang-sexual-abuse-of-14-year-old-girl-4-arrested#comments</comments><guid isPermaLink="false">856709eb-c88c-4bfc-a0a8-5926d26808cd</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:29:27 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:29:27.469Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,போக்சோ சட்டம்,POCSO act,சிறுமி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xq407530/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xq407530/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>சேலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, 9-ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தினாள். மேலும் அவளுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண் நண்பர்கள் சிலர் பழக்கம் ஆனார்கள். இதனிடையே அந்த சிறுமி சமீபத்தில் நண்பர் ஒருவரது வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடினாள். இதில் ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகள் சிலர் கலந்து கொண்டனர். அப்போது மது போதையில் இருந்த நண்பர்களான சிறுவர்கள் உள்பட 7 பேர் கூட்டாக அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. </p><p>இதுகுறித்து சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.</p><p>இதில் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 21), ஆகாஸ் (19) மற்றும் 13, 17 வயதுடைய சிறுவர்கள் உள்பட 7 பேர் என தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகன், ஆகாஷ் மற்றும் சிறுவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிறுமிக்கு கூட்டாக பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டுக்குள் நீட்டை கொண்டு வந்தது அதிமுக ஆட்சிதான் – மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-the-aiadmk-regime-that-brought-neet-to-tamil-nadu-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-the-aiadmk-regime-that-brought-neet-to-tamil-nadu-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">d56ad3da-91f9-45e8-9aab-30e511d5b1d0</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:20:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:20:21.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>AIADMK,NEET Exam,நீட்,அதிமுக ஆட்சி,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/bg0q7n3e/9.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/bg0q7n3e/9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>சட்டப்பேரவையில் நீட் விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேஷ் குமார் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்களே, காங்கிரஸ் மீது வீண் பழி போட்டு உங்கள் வரலாற்றுத் துரோகத்தை மறைக்க முடியாது!</p><h2>அடிமை ஆட்சி</h2><p>மறைந்த ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்தவரை தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாத நீட் தேர்வு, நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, அதிமுகவை பாஜகவின் காலடியில் அடகு வைத்த பிறகு 2017-ல் தான் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது! தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது காங்கிரஸ் அல்ல, உங்கள் அடிமை ஆட்சிதான். இந்த வரலாற்று உண்மையை உங்களால் எப்போதும் மறைக்க முடியாது.</p><p>ஏழை, எளிய மாணவர்களின் நலனை முன்னிறுத்தித் திட்டங்களை யோசித்தாலும், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முடிவுகளை மாற்றிக்கொள்ளும் இயக்கம் காங்கிரஸ். காலின் அளவுக்குத் தக்கபடிதான் காலணியைத் தைக்க வேண்டுமே தவிர, காலணிக்காக காலை வெட்ட முடியாது!</p><h2>குரங்கு கையில் கிடைத்த பூமாலை</h2><p>ஆனால் பாஜக அரசோ ‘குரங்கு கையில் கிடைத்த பூமாலை’ போல, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் NTA என்ற ஒரே அமைப்பிடம் கொடுத்து, வினாத்தாள் கசிவு, ஊழல், பயிற்சி மைய மாஃபியாக்கள் என நீட் தேர்வை வணிகச் சந்தையாக்கிவிட்டது. அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்களின் உயிர்கள் பறிபோயும் ‘பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என மோடி அரசு பிடிவாதம் பிடிக்கிறது.</p><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் உறுதியளித்தபடி, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவானது: "எந்த மாநிலத்திற்கு நீட் வேண்டாம் என்று நினைக்கிறதோ, அந்த மாநிலத்திற்கு முழு விலக்கு அளிக்கப்படும்." இதை உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சொல்ல வைக்க முடியுமா?</p><h2>கேள்வி கேட்கும் துணிச்சல்</h2><p>பாஜகவின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்து, மாணவர்களின் நலனுக்காக "தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்" என்று மோடி அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சல் இப்போதாவது உங்களுக்கு இருக்கிறதா எடப்பாடி பழனிசாமி அவர்களே?</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்</p>]]></content:encoded></item><item><title>போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சென்றவர் கொலை; 5 பேர் கைது
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/patient-killed-in-de-addiction-center-five-held</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/patient-killed-in-de-addiction-center-five-held#comments</comments><guid isPermaLink="false">923383e2-61c2-43c2-a0cb-a70783d81d75</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:11:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:11:22.414Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,போதை மறுவாழ்வு மையம்,drug rehabilitation center</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/ewyvdt9h/upael.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/ewyvdt9h/upael.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தாம்பரம்</p><p>போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சென்றவர் கொலையான சம்பவத்தில் நிர்வாகி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 39). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், சேலையூர் அருகே செம்பாக்கம் வி.ஜி.பி. நகரில் செயல்பட்டு வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்ததும் அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வீட்டிற்கு சென்ற சில நாட்களிலேயே மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.</p><p>இதனையடுத்து கடந்த 10-ந்தேதி அருண்குமாரை மீண்டும் அதே போதை மறுவாழ்வு மையத்தில் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர்.  இந்த நிலையில் அருண்குமார் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.  இதனால் ஊழியர்கள் அவரை பிடித்து தடுத்து வைத்ததாகவும், அவர் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டபோது கட்டிலில் கட்டிப்போட்டதாகவும் கூறப்படுகிறது.</p>  <h2>போலீசார் விசாரணை</h2><p>சிறிது நேரத்தில் அருண்குமார் மயக்கமடைந்த நிலையில், அவரை தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போதை மறுவாழ்வு ஊழியர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><p>இதுகுறித்த புகாரின் பேரில் சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அருண்குமாரை கட்டிலில் கட்டிப்போட்டு, அவரது வாயில் துணியை வைத்து அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போதை மறுவாழ்வு மைய நிர்வாகி மணிகண்டன் (36), அங்கு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை (40), குணசீலன் (43) ராஜாசுதாகர் (41) ராஜ்கமல் (33) ஆகிய 5 பேரை சேலையூர் போலீசார் கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lack-of-rainfall-in-catchment-areas-mullaperiyar-dam-water-level-drops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lack-of-rainfall-in-catchment-areas-mullaperiyar-dam-water-level-drops#comments</comments><guid isPermaLink="false">9b366f63-3cad-4ae4-bc3f-6c4604aa7dfa</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:50:52 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:50:52.427Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முல்லைப்பெரியாறு அணை,Mullaperiyar Dam,நீர்மட்டம் குறைவு,The water level is low</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/kcxk977c/mullai-periyar-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/kcxk977c/mullai-periyar-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியாக சரிந்துள்ளது.</p><h2>முல்லைப்பெரியாறு அணை</h2><p>தமிழக-கேரளம் மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய பாசன நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.</p><p>இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 122.95 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 921 கன அடியாக காணப்பட்டது.</p><h2>நீர்மட்டம் சரிவு</h2><p>இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைய தொடங்கியதால். நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் சரிந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி <a href="https://www.dailythanthi.com/topic/mullaperiyar-dam">முல்லைப்பெரியாறு அணையின்</a> நீர்மட்டம் 122.90 அடியாக சரிந்தது. நீர் வரத்து வினாடிக்கு 690 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் 3,202 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-departments-demands-for-grants-are-being-debated-in-the-legislative-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-departments-demands-for-grants-are-being-debated-in-the-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">db3f9739-7cb5-49da-bb2e-fd0c54dce0fa</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:50:31 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:50:31.479Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,விளையாட்டு துறை,Tamil Nadu Sports Department,Highway Department,நெடுஞ்சாலை துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xjrdry7u/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/xjrdry7u/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சட்டசபை</h2><p>சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.</p><p>இதனையடுத்து இந்தநிலையில் 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சட்டசபை நேற்று மீண்டும் கூடியது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பின்னர், இந்த துறைகளில் சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.</p><h2>மானிய கோரிக்கை விவாதம்</h2><p>இந்த நிலையில், 2-வது நாளாக இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஷ பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் சரத்குமார் ஆகியோர் பதில் அளித்து பேசுவார்கள். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள்.</p><p>மேலும் கடலூரில் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தின் கிணறுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க 3-வது நாளாக  தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-increases-in-the-cauvery-river-at-hogenakkal-coracle-operations-suspended-for-the-third-consecutive-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-increases-in-the-cauvery-river-at-hogenakkal-coracle-operations-suspended-for-the-third-consecutive-day#comments</comments><guid isPermaLink="false">1792a49e-74aa-4a53-91ac-fe633e4cf78e</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:43:24 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:43:24.156Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Hogenakkal,ஒகேனக்கல்,தர்மபுரி,காவிரி ஆறு,Hogenakkal Cauvery,Cauvery,பரிசல் இயக்க தடை,Hogenakkal Cauvery river,காவிரி ஆணையம்,பரிசல்,Cauvery Commission</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/j61rg78a/cauvery.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/j61rg78a/cauvery.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாகரம், </p><p>கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.</p><h2>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து</h2><p>காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 298 கனஅடி தண்ணீரும் என மொத்தமாக 12 ஆயிரத்து 298 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கரைபுரண்டு ஓடிய காவிரி</h2><p>இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 12 ஆயிரத்து 500 கன அடியானது. இதன் காரணமாக ஒகேனக்கல் <a href="https://www.dailythanthi.com/topic/cauvery">காவிரி ஆற்றில்</a> தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.</p><h2>கண்காணிப்பு பணி</h2><p>மேலும், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிப்பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்புபடையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>3-வது நாளாக தடை</h2><p>காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக -கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் (செவ்வாய் கிழமை) தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.</p><p>ஒகேனக்கல் <a href="https://www.dailythanthi.com/topic/cauvery">காவிரி ஆற்றில்</a> இன்று (ஆக.18) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆசனூர் அருகே குட்டிகளுடன் சாலையை கடந்த யானை கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-herd-of-elephants-with-calves-crossed-the-road-near-asanur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-herd-of-elephants-with-calves-crossed-the-road-near-asanur#comments</comments><guid isPermaLink="false">c9888084-2041-4c82-8881-92bfb410fca2</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:30:12 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:30:12.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை,Forest area,Elephants யானைகள்,யானை கூட்டம்,ஆசனூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qk9zn483/119.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/qk9zn483/119.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாளவாடி, </p><p>சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சகரகங்களிலும் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. இந்த வனச்சரகங்கள் வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் அடிக்கடி இந்த தேசிய நெடுஞ்சைாலக்கும், மற்ற வனப்பகுதி கிளை சாலைகளுக்கும் வந்து விடுகின்றன.</p><h2>யானை கூட்டம்</h2><p>இந்தநிலையில் நேற்று ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் திடீரென குட்டியுடன் யானைகள் ரோட்டை கடந்தன. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் யானைகளை கண்டதும், வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். சிலர் வாகனங்களில் இருந்தபடியே யானை கூட்டத்தை வீடியோ எடுத்தனர். யானைகள் ரோட்டை கடந்து மறுபக்கம் சென்றதும் வாகனங்கள் மீண்டும் செல்ல தொடங்கின.</p><p>இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிளை சாலைகளில் அடிக்கடி <a href="https://www.dailythanthi.com/topic/elephants-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">யானைகள்</a> கடந்து செல்கின்றன. அதனால் வாகனத்தில் செல்பவர்கள் மெதுவாக செல்லவேண்டும். செல்பி எடுப்பதற்காக அருகே செல்லக்கூடாது' என்று எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இன்று கொட்டி தீர்க்கப்போகும் கனமழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.? </title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-set-to-lash-down-today-do-you-know-which-districts-will-be-affected-2</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-set-to-lash-down-today-do-you-know-which-districts-will-be-affected-2#comments</comments><guid isPermaLink="false">f8457306-3f49-4be8-9db4-ae093fa0c909</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:22:43 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:22:43.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை செய்தி,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,weather update news,TN weather</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/nhphsag7/meena.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/nhphsag7/meena.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நாளை (புதன் கிழமை) பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன்காரணமாக <strong>இன்று (18-08-2026):</strong> செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p> <p><strong>நாளை (19-08-2026):</strong> நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும். </p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>20-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p><strong>21-08-2026 முதல் 23-08-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>18-08-2026 முதல் 21-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>18-08-2026 முதல் 21-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (18-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>18-08-2026 முதல் 21-08-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>18-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>19-08-2026 21-08-2026 :</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>18-08-2026 முதல் 21-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பட்டாசு சத்தம் கேட்டு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை... தனி ஆளாக விரட்டிய வீரப்பெண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-enters-house-upon-hearing-firecracker-noise-brave-woman-chases-it-away-single-handedly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-enters-house-upon-hearing-firecracker-noise-brave-woman-chases-it-away-single-handedly#comments</comments><guid isPermaLink="false">756dd7c8-c6c7-4283-a4c7-9912494a2d16</guid><pubDate>Tue, 18 Aug 2026 00:56:30 +0000</pubDate><atom:updated>2026-08-18T00:56:30.713Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெண்,Woman,Nilgiris,நீலகிரி,leopard,சிறுத்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/1ck00254/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/1ck00254/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><h2>வேளாங்கண்ணி ஆலய திருவிழா</h2><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் காமராஜபுரம், ஆரோக்கியபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது.</p><p>அதன் சத்தம் கேட்டு மிரண்டு போன சிறுத்தை, அங்குள்ள தர்மா என்பவரது வீட்டுக்குள் திடீரென புகுந்தது. அங்கு கட்டிலுக்கு அடியில் புகுந்து பதுங்கி இருந்தது. இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அச்சம் அடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுத்தையை விரட்ட முயன்றனர்.</p><h2>வெளியே ஓடிய சிறுத்தை..</h2><p>பின்னர் தர்மாவின் தாய் பூஜம்மாள் (வயது 60), பயப்படாமல் கையில் கம்பை வைத்து கொண்டு சத்தமிட்டு சிறுத்தையை விரட்டினார். இதனால் சிறுத்தை வீட்டில் இருந்து வெளியே ஓடி, புதருக்குள் சென்று மறைந்தது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டுக்குள் சிறுத்தை புகுந்ததால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.</p><p>இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சிறுத்தைகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த வனத்துறையினர் நட வடிக்கை எடுக்காமல் உள்ளனர். மனித-வனவிலங்கு மோதலில் உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர், நடவடிக்கை எடுப்பதால் எந்த பயனும் இல்லை. எனவே, இப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்றனர்.</p><p>கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 15-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊருக்குள் சிறுத்தைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என இந்திரா நகர் மக்கள் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பொறியியல் கலந்தாய்வு: 2 சுற்றுகளில் 86,802 இடங்கள் நிரம்பின!</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/engineering-counseling-86802-seats-filled-in-2-rounds</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/engineering-counseling-86802-seats-filled-in-2-rounds#comments</comments><guid isPermaLink="false">596a9faa-e71f-4bb8-a4f5-e2d1ab219673</guid><pubDate>Tue, 18 Aug 2026 00:53:48 +0000</pubDate><atom:updated>2026-08-18T00:53:48.216Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>என்ஜினீயரிங் படிப்பு,Engineering course,பொறியியல் கலந்தாய்வு,engineering counseling</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/iitkl24c/counseiling.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/iitkl24c/counseiling.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் தற்போது பொதுப் பிரிவினருக்கும், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கிறது. முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 3-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அதில் பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத ஒதுக்கீடு என மொத்தம் 26 ஆயிரத்து 851 இடங்கள் நிரம்பின.</p><h2>2-வது சுற்று கலந்தாய்வு நிறைவு</h2><p>2-வது சுற்று கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் இரு பிரிவிலும் சேர்த்து மொத்தம் 59 ஆயிரத்து 951 இடங்கள் நிரம்பின. அதாவது முதல் மற்றும் 2-வது சுற்று கலந்தாய்வு நிறைவில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 77 இடங்களில் 86 ஆயிரத்து 802 இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 275 இடங்களுக்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">கலந்தாய்வு</a> நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 761 பேர் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: சேலம் வழியாக பெங்களூரு-கண்ணூர் சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-bengaluru-kannur-special-train-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-bengaluru-kannur-special-train-via-salem#comments</comments><guid isPermaLink="false">8e211189-0eda-4c3c-8574-705e50d3e947</guid><pubDate>Tue, 18 Aug 2026 00:49:35 +0000</pubDate><atom:updated>2026-08-18T00:49:35.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Onam festival,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/8r8ply3t/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/8r8ply3t/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக பெங்களூரு கன்டோன்மென்ட்-கண்ணூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, பெங்களூரு கன்டோன்மென்ட்- கண்ணூர் சிறப்பு ரெயில் (06567) வருகிற 20-ந் தேதி இரவு 10.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம் வழியாக மறுநாள் அதிகாலை 2.10 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடையும்.</p><p>சேலத்தில் இருந்து அதி காலை 2.20 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வழியாக சென்று, மதியம் 12.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும். இதேபோல், கண்ணூர்-பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06568) வருகிற 21-ந் தேதி மாலை 4.10 மணிக்கு கண்ணூ ரில் இருந்து புறப்பட்டு இரவு 12.15 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடையும். </p><p>பின்னர் சேலத்தில் இருந்து 12.25 மணிக்கு புறப் பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-51</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-51#comments</comments><guid isPermaLink="false">8cb6ea40-1deb-4e87-91b8-5c1ccd06a7fc</guid><pubDate>Tue, 18 Aug 2026 00:33:38 +0000</pubDate><atom:updated>2026-08-18T00:33:38.391Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/3hakjjlr/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-18/3hakjjlr/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (18.08.2026 செவ்வாய்க்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை  பிடித்த வாலிபர் தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/brave-youth-rescues-6-foot-rock-python-from-canal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/brave-youth-rescues-6-foot-rock-python-from-canal#comments</comments><guid isPermaLink="false">fa2c4dc1-731b-4ac3-bce7-2e2f97760d88</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:31:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:31:16.947Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர்,மலைப்பாம்பு,Fire Department,The python was caught,தீயணைப்பு துறை,A young man</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/umnul8as/snakee.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மலைப்பாம்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை  பிடித்த வாலிபர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/umnul8as/snakee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தக்கலை,</p><p>தக்கலை அருகே கால்வாயில் மிதந்த 6 அடி நீள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மலைப்பாம்பை </a>வாலிபர் ஒருவர் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இந்த துணிச்சலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கால்வாயில் மிதந்த மலைப்பாம்பு</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பூவங்காபறம்பு வழியாக திருவிதாங்கோடு கிளை கால்வாய் செல்கிறது. நேற்று மாலை இந்த கால்வாய் கரையின் உடைந்த பகுதியில் சுமார் 6 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று தனது தலையை நுழைத்துக்கொண்டு, உடல் முழுவதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த ஜெரோம் என்பவர், கால்வாயில் மலைப்பாம்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து அருகில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார். விஷயம் காட்டுத்தீ போல் பரவியதால், மலைப்பாம்பை பார்க்க அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். </p> <h2>வாலிபர் துணிச்சல்</h2><p>இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், மலைப்பாம்பு அங்கிருந்து நகர்ந்து தண்ணீருக்குள் சென்று மறைந்துவிடும் என்று பொதுமக்கள் கருதினர். அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென கால்வாயில் இறங்கினார். </p><p>அவர் தண்ணீரில் கிடந்த 6 அடி நீள மலைப்பாம்பை நெஞ்சுரத்துடன் லாவகமாக பிடித்து கரைக்கு கொண்டு வந்தார். வாலிபரின் இந்த துணிச்சலான செயலை கண்டு அங்கிருந்தவர்கள் பாராட்டும் அதே வேளையில் அதிர்ச்சியும் அடைந்தனர்.</p> <h2>வனத்துறையிடம் ஒப்படைப்பு</h2><p>இதனை தொடர்ந்து பொதுமக்கள் அந்த மலைப்பாம்பை ஒரு சாக்குப்பையில் போட்டு பத்திரமாக கட்டினர். பின்னர் சித்திரங்கோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, அங்குள்ள வன அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். மலைப்பாம்பை மீட்ட வாலிபரால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு அருகே கார் மோதி காய்கறி வியாபாரி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vegetable-vendor-dies-after-being-hit-by-car-near-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vegetable-vendor-dies-after-being-hit-by-car-near-erode#comments</comments><guid isPermaLink="false">cf5b44b2-2a20-42ca-b747-cd7c613731d5</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:16:57 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:16:57.336Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,கார்,Erode,ஈரோடு,உயிரிழப்பு,Vehicle,வியாபாரி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/256qezw4/24.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/256qezw4/24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அந்தியூர், </p><p>ஈரோடு மாவட்டம் பருவாச்சி அருகே பெட்ரோல் போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிய காய்கறி வியாபாரி மீது கார் மோதிய விபத்தில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>பவானி நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 46). இருசக்கர வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர். நேற்று மோட்டார் வாகனத்தில் பருவாச்சியில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்று பெட்ரோல் நிரப்பியுள்ளார். </p><h2>விபத்து</h2><p>அதன் பின்னர், பவானி சாலையில் மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, நிறுத்தம் அருகே பின்னால் பருவாச்சி காந்திநகர் பஸ் கார் எதிர்பாராதவிதமாக அன்பழகனின் வாகனம் மீது மோதியது.</p><p>இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குத் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். </p><h2>விசாரணை</h2><p>எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்பழகன் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அந்தியூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான கார் ஓட்டுநரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி யானை பசிக்கு சோளப்பொறி போல் இருக்கிறது ;பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-crop-loan-waiver-is-like-a-corn-trap-for-a-hungry-elephant-premalatha-vijayakanths-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-crop-loan-waiver-is-like-a-corn-trap-for-a-hungry-elephant-premalatha-vijayakanths-criticism#comments</comments><guid isPermaLink="false">6b536587-d063-43a7-8236-4832e9a6c5a8</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:12:55 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:12:55.131Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,பயிர்க்கடன் தள்ளுபடி,பிரேமலதா கண்டனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/3yymsols/lathaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி யானை பசிக்கு சோளப்பொறி போல் இருக்கிறது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/3yymsols/lathaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை தலைமை செயலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>த.வெ.க. அரசு 100 நாட்களைக் கடந்துள்ளது அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்லை. மாற்றம் வரும் என்று சொன்னார்கள். சட்டசபை நடைபெறாத கடந்த 4 நாட்களிலேயே அதிக பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் நடந்துள்ளன. இதுதான் அந்த மாற்றமா? மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டார்கள் இளைஞர்கள். இன்று இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.</p><p>அந்த குற்றவாளிகளுக்கு கர்நாடக அரசு உச்சபட்ச தண்டனையை அளிக்க வேண்டும். இதைத்தான் இந்த 100 நாட்களில் பார்த்துள்ளோம். மக்கள் வரிப்பணத்தில் தான் சட்டசபை நடந்து வருகிறது. சட்டசபைக்குள் தனிமனித தாக்குதலும் ஒரு கட்சி மற்றொரு கட்சியிடம் வாக்குவாதம் செய்வதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய் </a>அறிவித்துள்ள கூடுதல் பயிர் கடன் தள்ளுபடி என்பது யானை பசிக்கு சோளப்பொறி போல் தான் இருக்கிறது. நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் தான் முழு பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை ஆகும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-sholingar-tvk-mla-kapil</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-sholingar-tvk-mla-kapil#comments</comments><guid isPermaLink="false">fc39081c-ee60-4a08-8871-2723bdbc77e1</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:05:03 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:05:03.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,சோளிங்கர்,தவெக எம்.எல்.ஏ.,Sholingur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/y952aobg/solingar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 

சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/y952aobg/solingar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராணிப்பேட்டை,</p><p>செய்தியாளர்களை தாக்கிய புகாரில் சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், யூடியூபர் மற்றும் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. கபில் மீது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) புகார் அளிக்கப்பட்டது.</p><p>தகவலின்படி, சோளிங்கரில் உள்ள ஒரு திரையரங்கில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த எம்.எல்.ஏ. கபிலிடம், யூடியூபர் சிவா திரைப்படம் குறித்து கருத்து கேட்க மைக்கை நீட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கபில் அவரை தாக்க முயன்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதுடன், அந்த சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகின.</p><p>இதனைத் தொடர்ந்து, யூடியூபர் சிவாவை தேடி கபிலும், அவரது ஆதரவாளர்களும் சென்றதாகவும், பின்னர் சிவாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற நாளிதழ் நிருபர்கள் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரமும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டதைத் தொடர்ந்து சோளிங்கர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தின் போது நிருபர்களின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோக்கள் காவல்துறை அதிகாரியால் அழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த யூடியூபர் மற்றும் இரு செய்தியாளர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.</p><p>இந்த சம்பவத்தை கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. சிபினையும் நேரில் சந்தித்து நடவடிக்கை கோரி மனு வழங்கினர்.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்தனர். </p><p>இந்தநிலையில்,  செய்தியாளர்களை தாக்கிய வழக்கில் 21 நாட்களுக்குப் பிறகு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சோளிங்கர்  தொகுதி தவெக எம்.எல்.ஏ.</a> கபில் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் மற்றும் சிலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>242 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்; தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/242-industrial-firms-fined-labour-welfare-department-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/242-industrial-firms-fined-labour-welfare-department-action#comments</comments><guid isPermaLink="false">aa923829-68c7-4062-a4c5-bdbbb3d13def</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:01:33 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:01:33.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நடவடிக்கை,அபராதம்,தொழிலாளர் நலத்துறை,fines,தொழில் நிறுவனங்கள்,Labor Welfare Board</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sqzo9qaa/govt.gif" width="750"><media:title type="html"><![CDATA[ தொழிலாளர் நலத்துறை ]]></media:title><media:description type="html"><![CDATA[ 242 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்; தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sqzo9qaa/govt.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>242 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்; தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை. இது தொடர்பாக, தொழிலாளர் உதவி ஆணையர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>ஆய்வு</h2><p>சென்னை மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள், உணவகங்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர்கள் (வட்டம் 1,2,3) ஆகியோர் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், தொழிலாளர்கள் துணை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.</p><h2>நிறுவனங்களுக்கு அபராதம் </h2><p>தேசிய விடுமுறை நாளில் இரட்டைப்படி ஊதியம் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்புடன் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனரா என்பது குறித்து 377 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 108 கடைகள்-நிறுவனங்கள், 132 உணவு நிறுவனங்கள், 2 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 242 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>கேரளம் - தெலுங்கானா இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-between-kerala-and-telangana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-between-kerala-and-telangana#comments</comments><guid isPermaLink="false">191ea391-792c-4888-867b-0d8ef038027e</guid><pubDate>Mon, 17 Aug 2026 15:49:16 +0000</pubDate><atom:updated>2026-08-17T15:49:16.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெலுங்கானா,Telangana,சிறப்பு ரெயில்,கேரளா,Kerala,கோட்டயம்,சார்லபள்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/advea0k0/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/advea0k0/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து வருகிற 23,30 ஆகிய தேதிகளில் காலை 7.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07197), காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 12.25 மணிக்கு கேரள மாநிலம் கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து வருகிற 24, 31 ஆகிய தேதிகளில் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07198), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் நள்ளிரவு 12.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இது ஒரு நியூ எரா - 100 நாளில் 546 குற்ற சம்பவங்கள்; திமுக பரந்தாமன் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-a-new-era-546-crimes-in-100-days-dmk-paranthaman-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-a-new-era-546-crimes-in-100-days-dmk-paranthaman-allegation#comments</comments><guid isPermaLink="false">acefaae3-b106-4df1-be4c-e0b0f2146d13</guid><pubDate>Mon, 17 Aug 2026 15:26:08 +0000</pubDate><atom:updated>2026-08-17T15:26:08.599Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,DMK,College student,குற்றச்சாட்டு,Criminal,கல்லூரி மாணவன்,incidents</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/i2ddbm2m/parathaman.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பரந்தாமன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/i2ddbm2m/parathaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>100 நாள் அவல ஆட்சியை பற்றி திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக  அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-</p><h2> மக்களுக்கு நம்பிக்கை இல்லை </h2><p>100 நாளில் 546 குற்றச்சம்பவங்கள் பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a>க்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். கஞ்சா வாங்கினால் மாத்திரை ப்ரீ ஆட்சி இந்த அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை!</p> <h2>சர்க்கஸ் சர்க்கார்</h2><p>தவெக அரசு பொறுப்பேற்ற போது ‘இட்ஸ் எ பிகினிங் ஆப் ஏ நியூ எரா’ என்று சொன்னார். உண்மைதான், இது ஒரு நியூ எரா—100 நாளில் 546 குற்ற சம்பவங்களை செய்த ஒரு நியூ எரா!. இன்னைக்கு விஜய்யினுடைய சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியின் சாதனை இது. 'பெண்கள் பாதுகாப்பு ரொம்ப நான் ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன்'னு சொன்னார். ஆனால், இன்னைக்கு பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் தமிழ்நாட்டில் இருக்கின்றது என நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும்.<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95"> தவெக</a> கட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு பலவீனமான சர்க்காராகத்தான் இது.</p> <h2>சர்க்கஸ் சர்க்கார்</h2><p> 'போதை கலாச்சாரத்திலிருந்து நம்ம பசங்களை மீட்கணும், அவங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு'னு சொன்னார். ஆனால் போதை பழக்கமும் கடத்தலும் இங்க தீவிரமாக இருக்கிறது. 'இந்த கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது' என்று காவல்துறைக்கு தகவல் கொடுத்த கோவை கல்லூரி மாணவன் அமுதனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத  சர்க்கஸ் சர்க்கார் அரசுதான் இந்த விஜய்யின் அரசு.</p><h2>கொலை பழி</h2><p> காவல்துறையை கையில் வச்சிருக்கக்கூடிய முதல்-அமைச்சர். 'ஜென்-ஜி' பிள்ளைகள் எல்லாம் உங்களுக்கு ஆர்வமாக வாக்களித்தார்களே, இந்த முதல்-அமைச்சருக்கு, இன்னைக்கு 'ஜென்-ஜி'கள் மட்டும் ஏறத்தாழ 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்றைக்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள், இந்த கொலை பழியை முதல்-அமைச்சர்  ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த 100 நாளில் பல குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கு. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி 546 குற்ற சம்பவங்கள் இருக்கு. இந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக்கிட்டீங்களா?</p><h2>அமைச்சர் என்ன சொல்றாரு?</h2><p>கோவையில் போதைப்பொருளைப் பற்றி தகவல் கொடுத்ததாக சொல்லி, அமுதன் என்கிற மாணவனை அடித்து கொன்றுள்ளனர். அந்த மாணவன் போதை பொருள் பற்றி கொடுத்த தகவலை காவல்துறையே போதை கும்பலிடம் கொடுத்துள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் என்ன சொல்றாரு? 'இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்'னு சொல்லிட்டு வழக்கின் தன்மையை திசைதிருப்புறார்.</p> <h2>இளைஞர்களுக்கான அரசு</h2><p>நான் கேட்கிறேன் முதல்-அமைச்சர் அவர்களே, 'இளைஞர்களுக்கான அரசு' என்று நீங்கள் மார்தட்டி கொள்கிறீர்கள். 'இளைஞர்கள் மூலமாகவே ஆட்சிக்கு வந்தேன்' என்று சொல்லுகிற நீங்கள், ஒரு இளைஞன் குற்றம் நடைபெறுகிறது என்று காவல்துறைக்கு சொன்ன ரகசியத்தை காப்பாற்றாத காவல்துறை அப்படிப்பட்ட காவல்துறை வைத்திருக்கும் உங்களுக்கு முதல்-அமைச்சராக இருப்பதற்கு கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் உங்களை நோக்கி நான் கேட்கிறேன்.</p><h2>திமுக மீதுதான் நம்பிக்கை </h2><p> அமுதனுடைய தாயார் சொல்லுகிறார்கள், 'அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் உதயநிதிதான் எங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்' என்று சொல்லுகிறார்கள் என்றால், ஆளுகிற அரசின் மீது இந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை! எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதுதான் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.</p><h2>100 நாள் சாதனை</h2><p> நேற்றைக்கு திருவொற்றியூரில் இரண்டு அமைச்சர்களை (ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன்) ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த 100 நாள் சாதனை என்னவென்று சொன்னால், அமைச்சர்களைத் தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் சாதனை! இதே மாதிரி தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்றதைத் தட்டிக் கேட்ட பையனை அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செஞ்சிருக்காங்க. திருவெறும்பூரில் இரண்டு தவெக காரங்க ஒருத்தரை வெட்டிக் கொலை பண்ணியிருக்காங்க.</p> <h2>ஒரு வார குற்ற சம்பவங்கள் </h2><p>விருதுநகரில் ஒரு பள்ளி பொண்ணை துன்புறுத்தியதை தட்டி கேட்ட அப்பாவை வெட்டி கொன்றிருக்காங்க. காஞ்சிபுரத்தில் கோவில் திருவிழாவில் இரண்டு இளைஞர்களை வெட்டி கொன்றிருக்காங்க. திருவனந்தபுரத்தில் 25 வயசு இளைஞரை வெட்டி கண்மாயில் வீசியிருக்காங்க. திருப்பூர்ல காதலை மறுத்த பெண்ணை கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த அம்மாவையும் இளைஞர்களையும் கொன்றிருக்காங்க. ஈரோட்டில்பேன்சி ஸ்டோருக்குள் புகுந்து ஒரு பெண்ணை கத்தியால் குத்தியிருக்காங்க. இதெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் நடந்த குற்றச் சம்பவங்கள்!</p> <h2>எந்த கலாச்சாரத்தை் காட்டுகிறது?</h2><p>அம்பத்தூர் புதூரில் ஆட்டோவில் ஒரு பெண்ணை உட்கார வச்சு கழுத்தை அறுத்து ரோட்டில் வீசியிருக்காங்க. இந்த மாதிரியான குற்ற சம்பவங்கள் எல்லாம் இதற்கு முன்னாடி நடந்ததே இல்லை. சினிமா படத்தில் வருகிற மாதிரியான கொலை காட்சிகளை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள். கும்மிடிப்பூண்டியில் 17 வயசு இளைஞனை கொன்று கல்லறை மேல போட்டு, சில கொலை சம்பவங்களைச் செய்து ரீல்ஸ் எடுத்து வெளியிடுகிறார்கள்! இதெல்லாம் எந்த கலாச்சாரத்தை காட்டுகிறது?</p><h2>தவறான முன்னுதாரணம்</h2><p>ஒரு திரைத்துறையிலிருந்து வந்தவர் தமிழ்நாட்டுக்கு முதல்-அமைச்சர். அதனுடைய விளைவு என்னவென்றால், நீங்கள் திரைப்படத்தில் ஹீரோவாக இருக்கலாம், நடித்த ஹீரோயிசத்தை பார்த்து இன்னைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இதை செய்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.</p> <h2>குற்ற சம்பவங்கள் நடக்கிறது</h2> <p>வேலூரில் தலைமை பெண் காவலரையே குத்தி கொன்றிருக்கிறார்கள்! இதைவிட என்ன கேவலம் இருக்கு? வெட்கமாக இல்லை முதல்-அமைச்சருக்கு? காவல்துறையை தன் கையில் வச்சிருக்கக்கூடிய முதல்-அமைச்சர், காவல்துறையிடம் தகவலை கொடுக்கும் பையனை காப்பாற்றுவதற்குமுடியல்லை இந்த காவல்துறைக்கு! ஆனால் எதிர்க்கட்சி தலைவர் கைதின் போது, சாலைகளில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞரை பார்த்து இரண்டு கையை வைத்து அடிப்பார் சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்! எந்த காவல் ஆணையர் ஒரு கைது நடவடிக்கைக்கு ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள்? இருக்கிற வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை நீங்கள் செய்வதனால்தான் இந்த குற்ற சம்பவங்கள் நடக்கிறது.</p> <h2>சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் லட்சணமா?</h2><p> கோயம்புத்தூரில் இதே மாதிரி நகைக்காக ஒரு வயதான பெண்ணை கொன்றிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் பச்சிளம் குழந்தையிலிருந்து பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். 'நான் ஆட்சிக்கு வந்தா சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவேன்'னு சொன்னாரே, இதான் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் லட்சணமா?</p> <h2>வாய் திறந்திருக்கீங்களா?</h2><p> நான் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கான ஆட்சியை தருவேன்'னு சொன்னீங்களே, மக்களுக்கான பிரச்சனையைப் பற்றி இதுவரைக்கும் எதாவது பேசியிருக்கீங்களா? காவிரி நதி பிரச்சனைக்காக நீங்கள் வாய் திறந்திருக்கீங்களா? கர்நாடகாவில் தமிழர்களை சுட்டுக் கொன்றார்களே, அதற்காக வாய் திறந்து பேசியிருக்கீங்களா? ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் தண்ணீர் திறந்து விட வேண்டுமே, அதைப்பற்றி வாய் திறந்து பேசியிருக்கீங்களா?</p> <h2>பாயும் முதல்-அமைச்சர்</h2><p> மேகதாது அண கட்டப்படுவதை தடுக்க தனியாக டிரிப்யூனல் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரிடத்தில் போய் கேட்டிருக்கீங்களா? மத்திய அரசிடத்தில் பயப்படுகிறார் முதல்-அமைச்சராகத்தான் இருக்கிறீர்களே தவிர, தமிழ்நாட்டில் சட்டமன்றத்திலும் வெளியிலேயும் மட்டும்தான் பாயும் முதல்-அமைச்சராக காட்டிக்கொள்கிறீர்கள்.</p><h2>நடந்திருக்கா?  </h2><p>ஆடி மாதம் வந்தால் தள்ளுபடி கொடுப்பார்கள்—ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை ப்ரீ, ஒரு பேண்ட் வாங்கினால் ஒரு பேண்ட் ப்ரீ, ஒரு ஜாக்கெட் பிட் வாங்கினால் இன்னொன்று ப்ரீ என்று தள்ளுபடி கொடுப்பார்கள். அதுமாதிரி, இந்த கொக்கைன் பவுடர் பயன்படுத்திய சரத் மந்திரியுடைய தொகுதியில் 'கஞ்சா வாங்கினால் மாத்திரை ப்ரீ'! இப்படிப்பட்ட ஆட்சி தமிழ்நாட்டில் இதுவரைக்கும் நடந்திருக்கா? கஞ்சா வாங்கினால் மாத்திரை ப்ரீ என்று விஜய்யின் அரசாங்கமாக நடந்துகொண்டிருக்கிறது!</p><h2> கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். கோவையில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கும், தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிற பல்வேறு கொலை குற்றங்களுக்கும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்து, பதில் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கக்கூடிய முதல்-அமைச்சர் இன்னைக்கு சட்டமன்றத்திற்குள் வந்து உட்காரவில்லை!</p><h2>இது என்ன மாண்பு?</h2><p>காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பேசாமல் ஓடி ஒளிந்துகொண்டிருக்க, சம்பந்தமே இல்லாத அமைச்சர்கள் எல்லாம் எழுந்து எழுந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது என்ன மாண்பு? என்ன சட்டமன்ற மரபை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்?</p> <h2>சிஎம் விஜய் சார் எழுந்து நிற்பாரா?</h2><p>இதுல லட்சணம் என்னவென்றால், ஒரு அமைச்சர் சொல்கிறார்—'முதல்-அமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டும்' என்று. எதிர்க்கட்சி தலைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான், முதல்-அமைச்சரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான். அப்ப எதிர்க்கட்சி தலைவர் வரும்போது சிஎம் விஜய் சார் எழுந்து நிற்பாரா? என்ன பேச்சு இது? சட்டமன்றத்தில் பேரவைத் தலைவர் வரும்போது மட்டும்தான் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்க வேண்டும். பேரவைத் தலைவரைத் தவிர வேறு யாருக்கும் அந்த இடத்தில் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை!</p> <h2>சட்டம்-ஒழுங்கு</h2><p>இந்த 100 நாட்களில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்திருக்கிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறியிருக்கிறது—அரிசி விலை கிலோவுக்கு ரூ. 30 ஏறியிருக்கிறது, ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது, மின்சாரக் கட்டணம் ஷாக் அடிக்கிறது! மக்களுடைய அன்றாடப் பிரச்சனையைப் பற்றி அரசாங்கத்தில் யாராவது வாய் திறந்து பேசுகிறார்களா? சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விக்கு அந்தந்தத் துறை மந்திரிகள் யாராவது பதில் சொல்கிறார்களா?</p> <h2>அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம்</h2><p>அதேபோல இன்னைக்கு ஒரு பெரிய 'அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம்'. தவெக கட்சியின் நிர்வாகியான ஒரு பெண்மணி தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்குப் போய் 'அட்ஜஸ்ட்மென்ட் பண்ணச் சொல்கிறார்கள்' என்று புகார் கொடுக்கிறார். இது மக்களுக்கான ஆட்சியா அல்லது அட்ஜஸ்ட்மென்ட்க்கான ஆட்சியா? எந்தப் பெண்களின் பாதுகாப்பைச் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்களோ, இன்னைக்கு தினமும் பெண்களின் அலறல் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறதே, விஜய் சார் உங்கள் காதில் கேட்கவில்லையா? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்களே!</p><h2> பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை </h2><p>இன்னொரு விஷயம்—சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும்போது தேவையில்லாமல் முதல்-அமைச்சரோ அமைச்சர்களோ வெளியில் நிகழ்ச்சிகளில் போய் கலந்துகொள்ளக்கூடாது. கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது எங்கே போயிருந்தீர்கள் சார்? போன இடத்தில் உங்கள் சாதனையைப் பேசினீர்களா? இல்லையே. முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதித்தீர்களா? ஏனென்றால் குட்டு வெளிப்பட்டுவிடும்! உள்ளே போனால் வந்திருப்பவர்கள் உண்மையான முதலீட்டாளர்களா அல்லது கோட்-சூட் மாட்டி வந்தவர்களா என்பது தெரிந்துவிடும் என்பதால் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை!</p> <h2> சாதனையை அல்ல! </h2><p>சினிமா படத்தில் நடிப்பது போலவே இன்னைக்கு ஆட்சியிலும் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். 100 நாளில் சாதித்தது என்ன என்று ஒரு வீடியோ வெளியிடுகிறீர்கள்; அதில் பதவி ஏற்பு விழாவில் பேசிய பேச்சையும் விட்ட டயலாக்குகளையும்தான் காட்டியிருக்கிறீர்களே தவிர, சாதனையை அல்ல! பத்திரிகையாளர்களை சந்தித்து சாதனை எதையாவது சொல்லியிருக்கிறாரா? 100 நாள் ஆச்சே! இது அறிவிக்கப்படாத அவசரநிலை.</p> <h2>பொய் சொல்கிறார்கள்</h2><p>ரூ. 15,000 கோடி வருவாய் வந்துவிட்டதாக பொய் சொல்கிறார்கள். லீக்கேஜை அடைத்துவிட்டோம் என்று வாயில் வடை சுடுகிறார்களே தவிர, நிஜமாக எந்த ஆதாரமும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. பாரதிய ஜனதா கட்சியைக் கண்டு அஞ்சிப் பம்பும் 'டம்மி முதலமைச்சராக' விஜய் இருக்கிறார். இந்த 100 நாள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்! சட்டமன்றத்தில் அந்தந்த கேள்விகளுக்கு அந்தந்த அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் ஆனால் அது எல்லாம் தெரியாமல் அரவேக்காட்டு அமைச்சராக உள்ளார்கள். </p> <h2>முதல்-அமைச்சர் விஜய் </h2><p>நீட் மசோதா பற்றிப் பேசும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிப்படை அரசியல் அறிவோ பாராளுமன்ற நடவடிக்கைகளோ தெரியவில்லை. 'மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா' அறிவிப்பை நாடாளுமன்ற மசோதா என்று அரைகுறையாகப் பேசுகிறார்கள். மாநில உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம் என்று சொல்லும் முதல்-அமைச்சர் விஜய், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் UGC பிரதிநிதியை நியமிக்க ஒப்புக்கொண்டது ஏன்? பொம்மை முதல்-அமைச்சராக, டம்மி முதலமைச்சராகத்தான் இவர் இருக்கிறார்.</p> <h2> சர்க்கஸ் சர்க்கார்</h2><p>இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான 'சர்க்கார்' அல்ல, வெறும் 'சர்க்கஸ் சர்க்கார்'! நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது. இந்த 100 நாட்களில் செய்ததெல்லாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என எதையும் சரிசெய்ய முடியாமல் பல்லிளிக்குது இந்த 100 நாள் ஆட்சி என்று தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>“வளமான பயணமாக அமைந்தது” - வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-has-been-a-fruitful-journey-vanathi-srinivasan-laichi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-has-been-a-fruitful-journey-vanathi-srinivasan-laichi#comments</comments><guid isPermaLink="false">5336fc43-a820-41c5-8582-961b65a624f8</guid><pubDate>Mon, 17 Aug 2026 15:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-17T15:18:18.811Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சென்னை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,success,நன்றி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/3sf4cy3j/135.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/3sf4cy3j/135.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த ஆண்டுகள் உண்மையிலேயே ஒரு வளமான பயணமாக அமைந்தது என்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a> தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>வளமான பயணம்</h2><p>பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவர் பொறுப்பை கடந்த காலத்தில், என்னிடம் ஒப்படைத்ததற்காக, கட்சிக்கும் நமது மூத்த தலைமைக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டுகள் உண்மையிலேயே ஒரு வளமான பயணமாக அமைந்தன. நாடு முழுவதும் உள்ள பெண் தொண்டர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் பன்முகக் கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் வாழ்க்கைப் பயணங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு நபராக என்னை வடிவமைத்து, எண்ணற்ற பாடங்களையும் நினைவுகளையும் எனக்கு அளித்துள்ளது.</p><h2>நன்றி</h2><p>நமது பெண் சக்தியைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன் அவர்களின் உறுதி, தைரியம் மற்றும் சாதனைகள். பல பெண்கள் தடைகளைத் தகர்த்து, உயரப் பறப்பதைப் பார்ப்பது ஆழ்ந்த உத்வேகம் அளிக்கிறது. மத்திய தலைமைக்கும் ஒவ்வொரு தொண்டருக்கும் அவர்களின் நம்பிக்கை, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்காக எனது மனமார்ந்த நன்றிகள். புதிய அணிக்கு மாபெரும் வெற்றியும், நிறைவான பயணமும் அமைய வாழ்த்துகிறேன். இந்த அமைப்பை இன்னும் பெரிய உயரங்களுக்குக் கொண்டு செல்லட்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு? - நயினார் நாகேந்திரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/under-the-tvk-regime-is-the-kosasthalai-river-turning-into-a-sewage-canal-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/under-the-tvk-regime-is-the-kosasthalai-river-turning-into-a-sewage-canal-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">c7a29a34-dc60-485e-90fb-4e30e56cac3c</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:53:13 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:53:13.680Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,சென்னை,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Kosasthalai river,கொசஸ்தலை ஆறு,தவெக அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/cc1n240p/134.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/cc1n240p/134.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>எண்ணூர் கழிமுகத்திற்கு அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்ததால், டன் கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த வருத்தமுமளிக்கின்றன. சுமார் 8 மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்நிகழ்வை, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  </p><h2>வலியுறுத்தல்</h2><p>வழக்கம் போல எம்எல்ஏக்களையும், அமைச்சர்களையும் வைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை மூடி மறைப்பதை விட்டுவிட்டு, இறந்த மீன்களை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி, இந்தப் பேரழிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பதை தவெக அரசு மக்கள் முன் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும். </p><p>அதுமட்டுமன்றி செத்து மிதக்கும் டன் கணக்கான மீன்களால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக இறந்த மீன்களை அப்புறப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டுமென முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு? <br><br>எண்ணூர் கழிமுகத்திற்கு அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்ததால், டன் கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த வருத்தமுமளிக்கின்றன. சுமார் 8 மீனவக்… <a href="https://t.co/F2CzRKW34n">pic.twitter.com/F2CzRKW34n</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2089334096128557513?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றது ஏன்? - சென்னை ஐகோர்ட்டில் சபாநாயகர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-speaker-accept-aiadmk-mlas-resignations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-speaker-accept-aiadmk-mlas-resignations#comments</comments><guid isPermaLink="false">305998b2-3594-453f-85ee-673528d6235f</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:46:00 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:46:00.921Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Highcourt,Resignation,ராஜினாமா,சபாநாயகர்,அதிமுக எம்.எல்.ஏக்கள்,Assembly Speaker,சென்னை ஐகோர்ட்டு,AIADMK MLAs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/f020z6yk/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/f020z6yk/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றது ஏன்? என்பது குறித்து சபாநாயகர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா</h2><p>கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எஸ்.ரவி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர்.</p><p>இந்த வழக்குகள் விசாரணையின்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்தின்படி ராஜினாமா செய்தார்களா? என சபாநாயகர் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியும், சபாநாயகர் வழக்கை எதிர்கொள்ளவில்லை எனவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><h2>சட்டப்படி செல்லும்</h2><p>இந்நிலையில், இது சம்பந்தமாக விளக்கமளிக்கும் வகையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'இந்த வழக்கில் சட்டசபை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவே போதுமானது என்பதால், தனியாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை.</p><p>கோர்ட்டின் மீது அதிகபட்ச மரியாதை வைத்திருக்கிறேன். சட்டசபை செயலாளர் மூலமாக பதில் மனு தாக்கல் செய்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். சுய விருப்பத்தின்படிதான் ராஜினாமா செய்கிறார்களா என ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பிறகே அவற்றை ஏற்றுக் கொண்டேன்' என கூறப்பட்டுள்ளது.</p><p>மேலும், 'அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். எந்த சட்டவிரோதமும் இல்லை என்பதால், மனுவை ஏற்று தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என்று அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அவகாசம்</h2><p>இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகரின் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.ஆர்.ராஜகோபால் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று, சபாநாயகர் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்புக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவர்களுக்கும், மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் தீர்வு எங்கே? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velmurugan-has-also-raised-the-question-what-is-the-benefit-of-the-demand-for-grants</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velmurugan-has-also-raised-the-question-what-is-the-benefit-of-the-demand-for-grants#comments</comments><guid isPermaLink="false">5dd07cc9-7970-4388-8e59-c72877db147e</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:25:48 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:25:48.270Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/moy44r9r/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/moy44r9r/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நோயாளிகளுக்கான சேவைகள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்த ஆண்டறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது;-</p><h2>நிரந்தரத் தீர்வு வேண்டும்</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அரசு வெளியிடும் அறிவிப்புகள் வெறும் காகித அறிவிப்புகளாக இல்லாமல், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்.</p><p>அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர், ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், மாவட்ட அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளை நவீனப்படுத்த வேண்டும். தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை, சென்னைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லாத அளவுக்கு மாவட்ட அளவிலேயே மருத்துவக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வெளிப்படையான கொள்முதல் மற்றும் விநியோக நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். இலவச மருத்துவம் என்ற அரசின் கொள்கை, நோயாளிகள் மருந்துகளை வெளியில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படாதபோதுதான் முழுமை பெறும்.</p><h2>போதைப்பொருள் பிரச்சினை</h2><p>மாணவர்களை அச்சுறுத்தும் போதைப்பொருள் பிரச்சினையை எதிர்கொள்ள, சம்பவம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட , சுகாதாரம், காவல்துறை மற்றும் சமூக நலத்துறைகள் இணைந்த நிரந்தர முன்தடுப்பு மற்றும் ஆலோசனை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.</p><p>முதியோர் மருத்துவப் பாதுகாப்பிற்காக, மொபைல் மருத்துவச் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு, அரசு மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள கிராமங்கள் மற்றும் பின்தங்கியப் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.</p><h2>பட்டா வழங்கும் சிறப்பு நடவடிக்கை</h2><p>வருவாய்த் துறையில், பல ஆண்டுகளாக பட்டா கேட்டுக் காத்திருக்கும் மக்களின் விண்ணப்பங்களை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பட்டா வழங்கும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><p>பேரிடர் மேலாண்மையில் நிவாரணம் வழங்குவது மட்டுமே இலக்காக இருக்கக் கூடாது. மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, வடிகால், நீர்வழித்தடம் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பேரிடர் ஏற்பட்டவுடன் மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல், மாநிலத்தின் சொந்த நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் நிரந்தர நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.</p><h2>ஆண்டறிக்கையை வெளியிட வேண்டும்</h2><p>அரசுத் திட்டங்களின் செயல்திறனை மக்கள் அறியும் வகையில், சுகாதாரத் திட்டங்கள், பணியாளர் நியமனங்கள், நோயாளிகளுக்கான சேவைகள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்த ஆண்டறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.</p><p>மானியக் கோரிக்கை என்பது துறைகளின் வரவு செலவுக் கணக்கை வாசிக்கும் நிகழ்வாக மட்டும் இருக்கக் கூடாது. மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான செயல்திட்டமாக இருக்க வேண்டும்.</p><p>மருத்துவமனையில் போதிய மருத்துவப் பணியாளர்கள் உள்ளனரா?</p><p>மாணவர்கள் போதைப்பொருளிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்களா?</p><p>ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் மக்களுக்கு பட்டா கிடைக்கிறதா?</p><p>பேரிடர் ஏற்பட்டால் மக்களைப் பாதுகாக்க அரசு தயாராக உள்ளதா?</p><p>இந்தக் கேள்விகளுக்கான நடைமுறைத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தீர்வுகள்தான் </a>மானியக் கோரிக்கைகளின் வெற்றியை அளவிடும் அளவுகோல் ஆகும்.</p><p>எனவே, சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளின் மானியக் கோரிக்கைகளில் மக்கள் நலனுக்கான முக்கியத் தேவைகள் விடுபடாமல், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு, செயலாக்கக் காலக்கெடு மற்றும் பொறுப்புக்கூறல் முறையைத் தமிழ்நாடு அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும் -  திருமாவளவன் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vishik-should-become-the-ruling-party-of-tamil-nadu-thirumavalavans-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vishik-should-become-the-ruling-party-of-tamil-nadu-thirumavalavans-speech#comments</comments><guid isPermaLink="false">f0333951-f203-4b96-915d-c0208c43156b</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:22:09 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:22:09.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thirumavalavan,விசிக,VCK,திருமாவளவன் எம்.பி,விசிக மாநாடு,tvk govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/5087hjtr/thirumaa33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/5087hjtr/thirumaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும்  என திருமாவளவன் கூறினார்.</p><p>உளுந்தூர்பேட்டை மாநாட்டில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">விசிக தலைவர் திருமாவளவன்</a> பேசியதாவது:-</p><p>தமிழர்களின் மொழி, இன மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க, இலக்கியம் மற்றும் பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு மூலமாக மத்திய அரசிடம் வலியுறுத்துகிறேன்.</p><h2>விசிக வளர வேண்டும்</h2><p>ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே அரசு, ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்கிற ஆதிக்க அரசியலை முற்றிலுமாக நிராகரித்து, மதச்சார்பற்ற, சமத்துவ ஜனநாயக இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும். பிற மொழி மற்றும் இன மக்களைப் பகையாகக் கருதாமல் அனைத்து தேசிய இனங்களின் எழுச்சிக்கும், ஐக்கியத்திற்கும் துணைநின்று கூட்டாட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்த மாநாடு உறுதியேற்கிறது.</p> <p>தமிழகத்தின் ஆளுங்கட்சியாக விசிக வளர வேண்டும்; இத்தனை காலம் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தோம். திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆளும் கட்சி; இன்று அன்பு சகோதரர் ஜோசப் விஜயுடன் கூட்டணி வைத்துள்ளோம். விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்; விசிகவும் ஆளுங்கட்சியாக பரிணமிக்கும்.</p><p>கட்டுக்கடங்காமல் அரங்கத்தில் உள்ள கூட்டத்தைவிடவும் வெளியே லட்சக்கணக்கான சிறுத்தைகள் திரண்டு இருக்கிறார்கள்.  உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இந்த இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>திருமாவளவன் பேச்சின்போது மேடையில்  தொண்டர்கள் குவிந்ததால் மாநாடு விரைந்து முடிக்கப்பட்டது. தேசிய கீதம் பாடப்பட்டு விசிக மாநாடு நிறைவடைந்தது.</p>]]></content:encoded></item><item><title>தீண்டாமை சுவரை இடிக்க சொல்லி நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால்  தலைமை செயலகத்தில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solo-protest-at-secretariat-over-16-year-untouchability-wall</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solo-protest-at-secretariat-over-16-year-untouchability-wall#comments</comments><guid isPermaLink="false">8a687852-76a2-46b9-8847-56e8cc824f5b</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:22:00 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:22:00.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,தலைமை செயலகம்,Secretariat,நபர்,Untouchability,தீண்டாமை,சுவர்,wall</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/4s2vakjn/wall.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தீண்டாமை சுவர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தீண்டாமை சுவரை இடிக்க சொல்லி நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால்  தலைமை செயலகத்தில் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/4s2vakjn/wall.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டியில் பட்டியிலயின மக்களின் நடமாட்டத்தை முடக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88">தீண்டாமை</a> சுவரை உடனடியாக இடிக்க வலியுறுத்தி, சென்னை தலைமை செயலக வளாகத்தில் நபர் ஒருவர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>16 ஆண்டுகால அவலம்</h2><p>விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிராமத்தில் கடந்த 2010-ம் ஆண்டு அரசு நிலத்தை ஆக்கிரமித்து 10 அடி உயரத்திற்கு ஒரு பெருஞ்சுவர் கட்டப்பட்டது. இந்த சுவரானது, அங்கு வசிக்கும் சுமார் 350 பட்டியிலயின குடும்பங்களின் அத்தியாவசிய போக்குவரத்தை 16 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றிலும் முடக்கியுள்ளது.</p><h2>தீண்டாமை சுவர்</h2><p> பட்டியிலயின மக்கள் பொது பாதை, பள்ளி மற்றும் பொதுக் கழிப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகளை பயன்படுத்த முடியாதவாறு இந்த சுவர் தடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர். </p> <h2>அதிகாரிகள் மெத்தனம்</h2><p>இந்த சுவரை அகற்றக்கோரி உள்ளூர் அதிகாரிகளிடம் மனு அளித்தும், தொடர்ந்து காலம் தாழ்த்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் கடும் விரக்தியடைந்த வ.புதுப்பட்டியை சேர்ந்த நபர் ஒருவர், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி நேரடியாக சென்னைக்கு விரைந்தார். </p> <h2> கோட்டையில் பரபரப்பு</h2><p>உடனடியாக தீண்டாமை சுவரை இடி பட்டியிலயின மக்களின் வாழ்வுரிமையை பறிக்காதே!" என முழக்கமிட்டு தனிநபராய் போராட்டத்தில் குதித்தார். முக்கியப் பாதுகாப்பு வளையமான தலைமை செயலகத்திற்குள் நபர் ஒருவர் திடீரென முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலைமைச் செயலகத்தில் முட்டி போட்டு நடந்து வந்த நபரை, குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார்</p><p>முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க போலீசார் அறிவுறுத்தினர்.</p> <h2>உத்தரவிட வேண்டும்</h2><p> அவரிடமிருந்த கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்று கொண்டதோடு, இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே விருதுநகர் சிவகாசி விஸ்வநாதம் பகுதியில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர் அதிகாரிகளால் இடித்து தள்ளப்பட்ட நிலையில், இந்த வ.புதுப்பட்டி சுவரையும் இடிக்க அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. </p><p>இந்தத் திடீர் தனிநபர் போராட்டத்தால் தலைமை செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.</p> ]]></content:encoded></item><item><title>தியாகராய நகரில் பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-pounds-gold-chain-snatched-from-woman-in-thiagarajan-nagar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-pounds-gold-chain-snatched-from-woman-in-thiagarajan-nagar#comments</comments><guid isPermaLink="false">21f6b28e-2f5a-44e7-b331-cdcbfd8b58d6</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:21:15 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:21:15.232Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,police station,காவல் நிலையம்,Complaint,புகார்,T Nagar,தியாகராய நகர்,Gold chain,தங்க சங்கிலி பறிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/gxnrlzen/133.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்கச் சங்கிலி பறிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/gxnrlzen/133.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தியாகராய நகரில் பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு எற்படுத்தியது.</p><h2>சங்க சங்கிலி</h2><p>தியாகராய நகர் பகுதியை சேர்ந்தவர் உஷா(வயது 53). இவர் நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள கடைக்கு செல்வதற்கு தியாகராய நகர் மேட்லி 1-வது தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல் உஷாவிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென்று அவர்கள் உஷா கழுத்தில் அணிந்து இருந்த தங்க சையினை பறித்தனர். </p><p>சுதாரித்துக்கொண்ட உஷாரான பெண் தங்க சையினை விடாமல் இருக்கிப்பிடித்து கொண்டு திருடன் திருடன் என்று சத்தம் போட்டவாறு கொள்ளையர்களிடம் இருந்து போராடினார்.  உடனே கொள்ளையர்கள் உஷாவை தாக்கி கீழே தள்ளி விட்டு 4 பவுன் தங்க சையினை பறித்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். </p><h2>வழக்கு பதிவு</h2><p>இது குறித்து உஷா மாம்பலம் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி. வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-10-pm-in-10-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-10-pm-in-10-districts#comments</comments><guid isPermaLink="false">25c659aa-51e3-4873-83b6-fa9f36f2d0f4</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:04:28 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:04:28.324Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,மழைக்கு வாய்ப்பு,வானிலை அறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u7fn33de/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/u7fn33de/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை :ராயபுரம் மண்டலத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-warning-corporation-commissioner-inspects-rayapuram-zone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-warning-corporation-commissioner-inspects-rayapuram-zone#comments</comments><guid isPermaLink="false">90078242-ab8a-4beb-af32-e0f3bc98a33a</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:23:40 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:23:40.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon,ஆய்வு,முன்னெச்சரிக்கை,Corporation Commissioner,Rain Warning,மாநகராட்சி ஆணையாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/9dcn4nf7/132.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/9dcn4nf7/132.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், இன்று நேரில்  ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள், ஏரிகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>ஆய்வு</h2><p>இதன் ஒரு பகுதியாக, இன்று மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், பெருநகர <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>, ராயபுரம் மண்டலம், வார்டு-61க்குட்பட்ட எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டி மற்றும் மழைநீர் வடிகால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, மீதமுள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலும் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வின்போது, கண்காணிப்புப் பொறியாளர் சொக்கலிங்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விவசாய கடன் குறைந்தபட்சம் ரூ.75 ஆயிரமாவது தள்ளுபடி செய்ய வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farm-loan-waiver-should-be-at-least-rs-75-thousand-marxist-communist-demand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farm-loan-waiver-should-be-at-least-rs-75-thousand-marxist-communist-demand#comments</comments><guid isPermaLink="false">460d182d-6ef3-40a8-9eb2-0aafecba769a</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:16:02 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:16:02.779Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோரிக்கை,demands,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தள்ளுபடி,CPI(M),விவசாய கடன்,waived,Agricultural loans</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/j4mdpsjo/communist.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/j4mdpsjo/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விவசாய கடனில் குறைந்தபட்சம் ரூ.75 ஆயிரமாவது தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் </a>மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>முதல்-அமைச்சர்</h2><p>விவசாயிகள் பெற்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF">பயிர்க்கடன் தள்ளுபடி</a> தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><h2> 50 சதவிதம் தள்ளுபடி</h2><p>தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி என்றும், மற்ற விவசாயிகளுக்கு அவர்கள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50 சதவிதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 75 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி என்றும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>75 ஆயிரம் ரூபாயாவது தள்ளுபடி</h2><p>எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் 75 ஆயிரம் ரூபாயாவது தள்ளுபடி என்று அறிவிப்பதுதான் விவசாயிகளுக்கு ஓரளவாவது திருப்தியை கொடுக்கும். எனவே, இதை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அகில இந்திய காவல் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு தமிழக டிஜிபி பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-dgp-congratulates-medal-winning-police-officers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-dgp-congratulates-medal-winning-police-officers#comments</comments><guid isPermaLink="false">7e886233-43a1-43d9-95c6-9fb252e3cce9</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:10:17 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:10:17.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக டிஜிபி,Medals,விளையாட்டு போட்டிகள்,பதக்கம்,Games,Tamilnadu DGP,காவல் விளையாட்டு போட்டிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/j7gnbuiq/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/j7gnbuiq/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அகில இந்திய காவல் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>2026-ம் ஆண்டிற்கான 11-வது அகில இந்திய காவல் ஜூடோ குழு போட்டிகள் (ஜூடோ, டேக்வாண்டோ, வூஷு, பென்காக் சிலாட் &amp; கராத்தே), கடந்த மாதம் 23.07.2026 முதல் 30.07.2026 வரை தெலுங்கானா மாநிலம் கச்சிபௌலியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழக காவல்துறை சார்பில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஆக மொத்தம் 67 நபர்கள் இந்த 5 பிரிவுகளிலும் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில் 1-வெள்ளி மற்றும் 12-வெண்கல பதக்கங்கள் உட்பட மொத்தம் 13 பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.</p><p>மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால் (இன்று 17.08.2026) நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-relieved-of-bjp-national-womens-wing-chief-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vanathi-srinivasan-relieved-of-bjp-national-womens-wing-chief-post#comments</comments><guid isPermaLink="false">fc5af691-8471-45c6-9c08-464b0e4c2fbc</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:52:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:52:20.054Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,புதுடெல்லி,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,நியமனம்,மகளிர் அணி,Appointed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/4xh21b9c/131.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/4xh21b9c/131.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">வானதி சீனிவாசன்</a>  விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2>வானதி சீனிவாசன்</h2><p>வானதி சீனிவாசன், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக முதன்முதலில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு முறை அந்தப் பொறுப்பை வகித்து வந்த அவர், சுமார் 6 ஆண்டுகள் தேசிய அளவில் மகளிர் அணியை வழிநடத்திய நிலையில் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><h2>நியமனம்</h2><p>வானதி சீனிவாசனுக்குப் பதிலாக மகளிர் அணியின் புதிய தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரூப் குமாரி சவுத்ரி, சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய பாஜாக எம்.பி ஆவார். இதற்கு முன்பு அவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், அம்மாநில அரசின் நாடாளுமன்றச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சில்லறைக்கு சண்டை: ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fight-over-change-hotel-owner-brutally-attacked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fight-over-change-hotel-owner-brutally-attacked#comments</comments><guid isPermaLink="false">53da5412-7bba-416a-8ef1-21c595858d84</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:41:48 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:41:48.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>hotel owner,clash,சண்டை,வாக்குவாதம்,ஹோட்டல்,Attacks,சரமாரி தாக்குதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sxm3a0dp/tea-shop-fight.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஹோட்டல் உரிமையாளர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சில்லறைக்கு சண்டை: ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/sxm3a0dp/tea-shop-fight.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,</p><p>நாமக்கல்லில் ரூ.500 நோட்டை கொடுத்துவிட்டு 3 சிகரெட் கேட்டபோது, சில்லரை இல்லை என்று கூறிய ஹோட்டல் உரிமையாளரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>ஹோட்டல் வியாபாரம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">நாமக்கல்</a> நகர் பகுதியில் உள்ள ஒரு முக்கிய சாலையில் ஹோட்டல்  கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு இந்த ஹோட்டலில் வழக்கம்போல் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. </p><h2> 4 இளைஞர்கள்</h2><p>அப்போது அந்த கடைக்கு 4 இளைஞர்கள் கொண்ட ஒரு கும்பல் வந்தது. அவர்கள் கடையின் உரிமையாளரிடம் சென்று, தங்களுக்கு 3 சிகரெட்டுகள் தருமாறு கேட்டுள்ளனர். உரிமையாளரும் சிகரெட்டுகளை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார்.</p> <h2>ரூ.500 நோட்டு</h2><p>3 சிகரெட்டுகளுக்கு பணமாக அந்த இளைஞர்கள் தங்களது பையிலிருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்துள்ளனர். சிகரெட்டின் மதிப்பு மிக குறைவு என்பதால், அவ்வளவு பெரிய தொகைக்கு தன்னிடம் தற்போது சில்லரை இல்லை என்று ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார். மேலும், வேறு ஏதேனும் சிறிய தொகை இருந்தால் தருமாறும், அல்லது ஆன்லைன் மூலம் பணம் செலுத்துமாறும் கேட்டுள்ளார்.</p><h2>வாக்குவாதம்</h2><p>இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 பேர் கொண்ட கும்பல், 500 ரூபாய் நோட்டை கொடுத்தால் சில்லரை இல்லை என்று சொல்கிறாயா என்று கூறி தகாத வார்த்தைகளால், ஹோட்டல் உரிமையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><h2>சரமாரி தாக்குதல்</h2><p>வாக்குவாதம் முற்றவே, கண்ணிமைக்கும் நேரத்தில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த கும்பல், ஹோட்டல் உரிமையாளரை சட்டையை பிடித்து இழுத்து, சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்க தொடங்கியது</a>. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்களும், அங்கிருந்த பொதுமக்களும் ஓடிவந்து அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால், அந்த கும்பல் அவர்களையும் மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டது.</p><h2>அரசு மருத்துவமனை</h2><p>இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர், வலியால் அலறித்துடித்தார். உடனடியாக அவரை மீட்ட  ஊழியர்கள், சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள அந்த 4 மர்ம நபர்களையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திடீரென ஹாரன் அடித்ததால் நிலைகுலைந்த பைக்.. தனியார் பேருந்து ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த தம்பதி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bike-derailed-due-to-sudden-horn-blast-couple-had-an-argument-with-private-bus-staff</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bike-derailed-due-to-sudden-horn-blast-couple-had-an-argument-with-private-bus-staff#comments</comments><guid isPermaLink="false">737cb165-3df0-4e3b-aa25-a18273f18983</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:40:55 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:40:55.336Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bus,பஸ்,couple,தம்பதி,வாக்குவாதம்,Discussion</media:keywords><media:content height="400" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/83nqvg93/Untitled-2.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  வாக்குவாதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/83nqvg93/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாமக்கல்,</p><p>நாமக்கல் மாவட்டத்தில், தனியார் பேருந்து ஹாரன் ஒலியை எழுப்பியதால் முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதி  தடுமாறினர்.</p><h2>தடுமாற்றம் - வாக்குவாதம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நாமக்கல் மாவட்டம்</a> பள்ளிப்பாளையம் சாலையில் இன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தின் முன்னால் தம்பதியினர் பைக்கில் சென்றனர். அப்போது பேருந்து ஓட்டுநர் தம்பதியின் பைக்கின் அருகில் சென்று ஹாரன் அடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத தம்பதி, பதற்றத்தில் தடுமாறினர். இதனால் பைக்குடன் அவர்கள் கீழே விழும் நிலை ஏற்பட்டது. எனினும் சுதாரித்துக்கொண்டு பைக்கை நிறுத்தினர்.</p><p>அதன்பின், தங்களை அச்சுறுத்தும் வகையில் ஹாரன் அடித்த பேருந்தை பின் தொடர்ந்து சென்றனர். அந்த பேருந்து பள்ளிப்பாளையம் அருகே சென்றபோது பேருந்தை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் நீண்டநேரம் முடிவுக்கு வராததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அங்கு திரண்ட பொதுமக்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளி துறையில் தனியார் துறையை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/allowing-private-sector-in-space-is-welcome-mayilsamy-annadurai-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/allowing-private-sector-in-space-is-welcome-mayilsamy-annadurai-interview#comments</comments><guid isPermaLink="false">de793b0a-528e-46a1-b81b-b6a173c4c255</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:25:32 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:25:32.572Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,private,மயில்சாமி அண்ணாதுரை,Mayilsamy Annadurai,விண்வெளி துறை,Space Research Center,தனியார் துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/dfz7xn6g/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மயில்சாமி அண்ணாதுரை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/dfz7xn6g/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>விண்வெளி துறையில் தனியார் துறையை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.</p><p>புதுக்கோட்டையில் இஸ்ரோ முன்னாள் தலைவரும், தமிழ்நாடு அரசின் பாடத்திட்ட வழிகாட்டு குழு தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இஸ்ரோவால் பலதரப்பட்ட விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது மனிதனை விண்ணிற்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. மிகவும் சிக்கனமாக விண்கலம் தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது தனியார் பங்களிப்புடன் செயற்கைக்கோள் தயாரிக்கும் பணியில் இஸ்ரோ இறங்குவதற்கு தயாராக உள்ளது.</p><h2>ஆரோக்கியமான போட்டி</h2><p>குலசேகரப்பட்டினத்தில் ஏவுகணைகள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியும் தொடங்குவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும் என்று தனியார் பங்களிப்புடனும் இது நடைபெற வேண்டும் என்று இஸ்ரோ மற்றும் மத்திய அரசு முயற்சிகளை எடுத்துள்ளது. இதுவரை மத்திய அரசு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. தற்போது தனியார் பங்களிப்புடன் இது நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.</p><p>விண்வெளித் துறையில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அரசுத்துறை இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தாலும், தனியார் துறை வந்தால் இன்னும் ஆரோக்கியமான போட்டிகள் வந்து அதிக தயாரிப்புகளை நாம் செய்ய முடியும். ஆகையால் விண்வெளி துறையில் தனியார் துறை வருவது என்பது தவறு கிடையாது. </p><h2>2 மொழிகளில் திறன்</h2><p>தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் திறன்பட மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வகுப்பறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கரும்பலகையை தாண்டி ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பதற்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>சரியாக புரிதல் இருந்தால் எந்த பாடத்திட்டத்திலும் மாணவர்கள் திறம்பட செயல்படலாம். எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியும். போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை விரைவில் எடுக்க போகிறோம். புத்தகத்தை எவ்வளவு எளிதாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம்.</p><h2>போட்டி தேர்வுகளில் தோல்வி</h2><p>3-ம் வகுப்பு முடிக்கும்போது மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத, புரிந்து கொள்ள ஏதுவாக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டம் விரைவில் உலகத்தரம் வாய்ந்ததாக மாறறப்படும்.</p><p>சி.பி.எஸ்.சி. மட்டுமல்லாது மற்ற நாடுகளில் உள்ள பாடத்திட்டங்களையும் ஆய்வு செய்து நமது மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போட்டி தேர்வுகளில் தோல்வியுற்றால் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். அதை தடுப்பதற்கு உளவியல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாணவர்களை தயார் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இன்சுலின்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/insulin-for-children-under-18-years-of-age-throughout-the-year-minister-arunraj-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/insulin-for-children-under-18-years-of-age-throughout-the-year-minister-arunraj-announces#comments</comments><guid isPermaLink="false">f5108309-4023-45a5-913f-149aafff19f5</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:21:27 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:21:27.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TNAssembly,Insulin,அமைச்சர் அருண்ராஜ்,மருத்துவ பணியாளர் தேர்வு,HealthDepartment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/mfgwwggc/arun33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-17/mfgwwggc/arun33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ரூ.9.94 கோடியில் ஆண்டு முழுவதும் இன்சுலின் மருந்துகள் வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</p><p>தமிழக சட்டசபையில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் மீது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ் </a>பதில் அளித்தார்.</p><p>அப்போது,"திமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாலும் லஞ்சத்தை எதார்த்தமாக மாற்றி விட்டார்கள். அதுதான் பிரச்சினை" என்றார்.</p><p>கடந்த ஆட்சியாளர்கள் ஊழலை அன்றாட வாழ்வின் எதார்த்தமாக பார்த்ததாக அமைச்சர் அருண்ராஜ் பேசியதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.</p><p>ஊழலை எதார்த்தமாக பார்த்த கடந்த ஆட்சியாளர்கள் என அமைச்சர் அருண்ராஜ் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது, எந்த கட்சி என்றே அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிடவில்லை, ஊழல் என்றால் திமுகவினர் கத்துவது ஏன் என அமைச்சர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.</p><p>அதனை தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில்,</p><p>அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் 16.5 இலட்சம் வளரிளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு, ரூ.6.37 கோடியில் இரத்த சோகையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் இரும்பு கண்மணி திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>தமிழ்நாட்டில் முதன்முறையாக, அரசு மருத்துவமனைகளில், Type-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ரூ.9.94 கோடியில் ஆண்டு முழுவதும் இன்சுலின் மருந்துகள் வழங்கப்படும்.</p><p>நவீன, விரிவான மற்றும் எதிர்கால நோக்குடைய புதிய தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் இயற்றப்படும்</p><p>சமூகம், குடும்பம் மற்றும் தனிமனித அளவில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தும் வகையில் புதிய positive health policy உருவாக்கப்படும்</p><p>தமிழ்நாட்டில் முதன் முறையாக 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான உச்ச வரம்பு இன்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்</p><p>3594 மருத்துவ பணியாளர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 1695 தொகுப்பூதிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>வீடு மற்றும் மருத்துவமனை அல்லாத இடங்களில் சுயமாக பிரசவம் செய்வதை சட்டப்படி குற்றம் என்பதைச் சேர்த்து புதிய |பொது சுகாதார சட்டம் கொண்டு வரப்படும். முதலமைச்சரின் முதியோர் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் எனவும் மருத்துவத்துறை மானியக் கோரிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>