<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 31 Jul 2026 04:12:05 +0000</lastBuildDate><item><title>இன்று கடைசி நாள்: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் எவ்வளவு அபராதம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/itr-filing-last-day-what-if-you-miss-the-july-31-deadline-today-know-the-penalty-and-consequences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/itr-filing-last-day-what-if-you-miss-the-july-31-deadline-today-know-the-penalty-and-consequences#comments</comments><guid isPermaLink="false">21347045-e395-4b79-bd8f-c9d0bdd26d34</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:10:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:10:59.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Income Tax Department,மத்திய அரசு,Central Govt,Income Tax,New Income Tax,வருமானவரி,IncomeTax,Income Tax Check,வருமானவரி கணக்கு தாக்கல்,Income tax filing,income taxes,புதிய வருமானவரி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/vkrcenkm/fikli.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/vkrcenkm/fikli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாத ஊதியதாரர்கள் உள்ளிட்டோர் <a href="https://www.dailythanthi.com/topic/income-tax">வருமான வரிக்கணக்கு தாக்கல்</a> செய்ய இன்று (ஜூலை 31) கடைசி நாள் ஆகும். தவறவிட்டால் டிச.31ம் தேதி வரை ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம்.</p><h2>கிராஷ் ஆகாது</h2><p>தனிநபர்கள், வரி செலுத்தும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் வரி தணிக்கை தேவைப்படாதோர் (ஐடிஆர் 1 அல்லது ஐடிஆர் 2) மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான (நிதியாண்டு 2025-26) <a href="https://www.dailythanthi.com/topic/income-tax">வருமான வரி கணக்கை</a> இன்றிரவு 12 மணிக்குள் (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும்.</p><p>மத்திய அரசு இந்த தேதியை நீட்டிப்பதாக எந்த ஒரு பரிசீலனையும் இல்லை என அறிவித்து விட்டது. மேலும் கடைசி நேரத்தில் எத்தனை பேர் ஐடிஆர் இணையதளத்தை பயன்படுத்தினாலும் இணையதளம் கிராஷ் ஆகாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>அபராதம் எவ்வளவு..?</h2><p>சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் இதுவரை கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் லட்சக்கணக்கான சம்பளதாரர்கள் ஒரே சமயத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>ஒருவேளை இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறுபவர்கள், தாமதமான வருமான வரி தாக்கல் (Belated Return) முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இதற்கு அபராதம் விதிக்கப்படும். உங்களின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.</p><h2>அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள்</h2><p>வணிகம் அல்லது தொழில் வருமானம் ஈட்டும் நபர்கள் மற்றும் தணிக்கை தேவையில்லாத நபர்கள் ஐடிஆர் 3 மற்றும் ஐடிஆர் 4 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கு ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். அதே போல கணக்கு தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள வணிகம் அல்லது தொழில் செய்பவர்களுக்கு அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் ஆகும்.</p><h2>இரண்டு வழிமுறை</h2><p>பழைய வரி கணக்கு நடைமுறை, புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து வருமான வரியை தாக்கல் செய்யலாம். புதிய வரி கணக்கு நடைமுறையில் பல்வேறு வரி சலுகைகள் கிடைக்காது என்றாலும் இதில் வருமான வரி உச்சவரம்பு அதிகம், ஆனால் பழைய வரி முறையில் பல்வேறு முதலீடுகளை குறிப்பிட்டு வரி சேமிப்பு செய்யலாம். உங்களுக்கு எது பொருத்தமானதோ அதனை பயன்படுத்தி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். </p><p>வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் இறுதியில் e- verification கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்போதுதான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டது உறுதி செய்யப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>தேனியில் 400 ஆண்டுகள் பழமையான் 4 நடுகற்கள் கண்டுபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/400-year-old-center-stones-discovered-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/400-year-old-center-stones-discovered-in-theni#comments</comments><guid isPermaLink="false">668eba76-3800-4d3b-9aa5-6d7271411212</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:50:14 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:50:14.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,கண்டுபிடிப்பு,discovered,Stones,நடுகற்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wktfdn3e/92.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/wktfdn3e/92.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி, </p><p>சின்னமனூர் அருகே வேப்பம்பட்டியில் அரிய துப்பாக்கி வீரன் உள்பட 4 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><h2>நடுகற்கள்</h2><p>சின்னமனூர் அருகே வேப்பம்பட்டி பகுதியில், தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியருமான செல்வம், பழமையான நடுகற்கள் தொடர்பாக கள ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் 4 அரிய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் செல்வம் கூறியதாவது:-</p><p>வேப்பம்பட்டியை சேர்ந்த ஆசிரியர் ராமமூர்த்தி அளித்த தகவலின் அடிப்படையில் இந்த கள ஆய்வு நடத்தப்பட்டது. வேப்பம்பட்டி சீப்பாலக்கோட்டைச் சாலையில் 500 மீட்டர் இடைவெளியில் 2 வெவ்வேறு இடங்களில் இந்த வரலாற்றுச் சின்னங்கள் அமையப்பெற்றுள்ளன. ஸ்ரீரெங்கன் குளக்கரையில், முதன்மைப் படைத்தலைவன் சிற்பம் உள்ளது. 3 அடி உயரமுள்ள அது கி.பி. 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது. அதில், வீரன் தனது வலது கையில் நீண்ட வாளையும், இடது தோளில் இருந்து தொங்கும் வில்லை இடது கையாலும் ஒருசேரப் பற்றியது போல் இது உள்ளது.</p><h2>துப்பாக்கி வீரன்</h2><p>நடராஜ் என்பவருடைய வீட்டின் அருகில் 6 அடி ஆழத்தில் புதைந்திருந்து கண்கெடுக்கப்பட்ட மற்றொரு சிற்பம் 2 அடி உயரம் கொண்டது. அது 16, 17-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு வாள் வீரனின் நடுகல். வலது கையில் ஓங்கிய வாளுடனும், இடது தோளில் தொங்கும் வில்லுடனும், மற்றொரு கையை இடுப்பில் ஊன்றியவாறும் போர்க்கோலத்தில் அமைந்துள்ளது. அதே பகுதியில், அரிய திணிப்பு துப்பாக்கி வீரனின் நடுகல் கண்டறியப்பட்டது. அது 17 அல்லது 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது. 2 அடி உயரமுள்ள அந்த நடுகல்லில், வீரன் தனது இடது கையில் நீண்ட திணிப்புத் துப்பாக்கியை தலைகீழாகத் தரையில் ஊன்றிப் பிடித்துள்ளான். வலது கையில் கூரிய உடைவாள் கீழ்நோக்கிப் பாயும் நிலையில் உள்ளது. தமிழகத் தொல்லியலில் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் நடுகற்கள் மிக அரிது என்பதால், இது ஆயுதப் பரிணாமத்தின் முதன்மைச் சான்றாகக் கருதப்படுகிறது. இந்த இரு நடுகற்களையும் உள்ளூர் மக்கள் 'கோட்டை கருப்பன்', 'கொத்தால முத்து' ஆகிய சிறுதெய்வப் பெயர்களில் வழிபாட்டில் வைத்துள்ளனர். அதே பகுதியில் கிடைமட்ட நடுகற்பலகை ஒன்றும் உள்ளது.</p><h2>வரலாற்று உண்மைகள்</h2><p>இந்த நடுகற்கள் தென் தமிழகத்தின் 400 ஆண்டுகால ராணுவ மற்றும் சமூக வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. 500 மீட்டர் இடைவெளியில் இவை பரவியிருப்பதால், இங்கு ஒரு பிரம்மாண்டமான பாளையக் கோட்டை அரணும் காவற்சாவடியும் இருந்திருக்க வேண்டும். இப்பகுதியில் தொல்லியல் துறை முறையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">அகழாய்வு</a> மற்றும் பாதுகாக்கப்பட்ட வரலாற்று மண்டலம் சார்ந்த களஆய்வுகளை மேற்கொண்டால் மேலும் பல வரலாற்று உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் பணம் எங்கே? - பிரதமர் மோடியிடம் மாணிக்கம் தாகூர் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-peoples-money-manickam-thakur-asks-prime-minister-modi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-peoples-money-manickam-thakur-asks-prime-minister-modi#comments</comments><guid isPermaLink="false">99315dc2-5667-416c-bb2f-2a607778b2fc</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:30:06 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:30:06.821Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,பிரதமர் மோடி,PM Modi,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,பிரதமர்,பிரதமர் நரேந்திர மோடி,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Narendra Modi ‏,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/fz8fkh5n/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/fz8fkh5n/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பணம் எங்கே?</h2><p>மக்கள் பணம் எங்கே பிரதமர் நரேந்திர மோடியே? ZERO ACCOUNTABILITY </p><p>பொதுமக்களின் வியர்வைச் சிந்திய பணமும், அரசு ஊழியர்களின் சம்பளப் பங்களிப்பும் இணைந்து உருவாக்கப்பட்டது தான் இந்த PMCARES நிதி! </p><p>2022-23 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.909.64 கோடி நன்கொடை உட்பட ரூ.6,723.07 கோடி வரவு வந்த நிலையில், அதில் வெறும் ரூ.439.38 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, மீதம் ரூ.6,283.68 கோடி கையிருப்பில் உள்ளது.</p><h2>வெளியிடப்படாதது ஏன்?</h2><p>1. 2022-23க்கு பின் ஆடிட் ஸ்டேட்மெண்ட்ஸ் வெளியிடப்படாதது ஏன்?</p><p>2. அமைச்சர்கள் இருக்கும் அமைப்பிற்கு ஆர்.டி.ஐ. (RTI) பொருந்தாது எனக் கூறித் தப்பிப்பது ஏன்?</p><p>மத்திய அமைச்சர்களே இதன் அறங்காவலர்களாக பொறுப்பில் இருக்கும் போது, சட்டப்படி பொது ஊழியர்களான அவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்! எனவே, PM CARES நிதி நிச்சயம் ஆர்.டி.ஐ. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வரம்பிற்குள் </a>(Ambit of RTI Act) தான் வருகிறது. </p><p>மக்கள் பணத்தின் கணக்கை மறைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பெருக்கு அன்று பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/entry-to-bhavanisagar-dam-reservoir-area-prohibited-on-aadi-perukku</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/entry-to-bhavanisagar-dam-reservoir-area-prohibited-on-aadi-perukku#comments</comments><guid isPermaLink="false">7ba7ff0c-b96b-479e-97a0-25eca359a4bd</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:14:02 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:14:02.590Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,ஆடிப்பெருக்கு,aadi perukku,Prohibited,செல்ல தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lgqdsu8k/bavani-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/lgqdsu8k/bavani-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தளமாக பவானிசாகர் அணை மற்றும் பூங்கா உள்ளது. இதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">பவானிசாகர் அணை</a>யின் மேல்பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆடி 18-ந்தேதி அதாவது ஆடிப்பெருக்கு தினத்தில் மட்டும் பொதுமக்கள் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிப்பெருக்கு அன்றும் பொதுமக்கள் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. </p><h2>சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்</h2><p>இதனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்குக்கு அணையின் மேல் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டும் அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அணையின் பூங்காவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட ஊஞ்சல், படகுசவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. எனவே ஆடிப்பெருக்கை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அணையின் முன்பு உள்ள பூங்காவில் பண்டிகையை கொண்டாடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பஸ்களில் பார்சல் வசதி.. நஷ்டத்தை போக்க புதிய முடிவு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parcel-service-in-government-buses-a-new-decision-to-overcome-losses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parcel-service-in-government-buses-a-new-decision-to-overcome-losses#comments</comments><guid isPermaLink="false">21f2786e-4afd-460e-a9af-0ed065532800</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:04:01 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:04:01.566Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,அரசு பஸ்,Tamil Nadu Government,TN govt,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்,Govt Buses,Parcel Service,பார்சல் வசதி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/iu16slfb/buyse.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/iu16slfb/buyse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/tamil-nadu-government">தமிழ்நாடு அரசு</a> போக்குவரத்து கழகங்களில் பார்சல் அனுப்பும் வசதி விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது.</p><h2>வருவாயை பெருக்க புதிய திட்டம்</h2><p>அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாயை பெருக்க, தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, பார்சல்கள் ஏற்றிச் செல்லும் வசதியுடன் புதிய பஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. அதுபோன்ற பஸ்சை போக்குவரத்துதுறை அமைச்சர் பார்த்திபன் ஆய்வு செய்தார்.</p><h2>வணிக வளாகம்</h2><p>இது குறித்து, அரசு போக்குவரத்துகழக அதிகாரிகள் கூறுகையில், “கட்டண உயர்வு இன்றி இதர வழிகளில் வருவாயை பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி இடங்களை தனியாருக்கு நீண்ட நாட்களுக்கு குத்தகைக்கு விடுவது, சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவது, பஸ் நிலையங்களில் வணிக வளாகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.</p><h2>'பார்சல்' புக்கிங்</h2><p>உடனடியாக செயல்படுத்தும் வகையில் வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்களில் பார்சல் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தொடங்க முடிவு செய்துள்ளோம். பயணிகள் தங்களது பயணத்தின்போது, கையில் எடுத்து செல்ல முடியாத பெரிய பொருட்கள், லக்கேஜ்களை, 'பார்சல்' என புக்கிங் செய்து அதற்கான கட்டணம் செலுத்தி எடுத்து செல்லலாம்.</p><p>இதற்காக, புதிய பஸ் பின்பகுதியில், பிரத்யேக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.  நியாயமான முறையில் கட்டணம் இருக்கும். முதல் கட்டமாக, சென்னை உட்பட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஆயிரம் அரசு விரைவு பஸ்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம்” என்று அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை: வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டிக்கொலை- காரில் வந்த கும்பல் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-famous-rowdy-hacked-to-death-after-breaking-into-house-gang-in-car-commits-brutal-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-famous-rowdy-hacked-to-death-after-breaking-into-house-gang-in-car-commits-brutal-act#comments</comments><guid isPermaLink="false">37fdb821-c464-42d1-af06-d28b3c6b13e7</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:53:23 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:53:23.400Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,கார்,கும்பல்,சிவகங்கை,Sivagangai,Rowdy murder,வெறிச்செயல்,Gang,வீடு புகுந்து,Enter the house,பிரபல ரவுடி வெட்டிக்கொலை,madness</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/2358yswp/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊர்க்காவலன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/2358yswp/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">சிவகங்கை</a> மாவட்டத்தில் 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">ரவுடி</a>யை காரில் வந்த கும்பல் வீடு புகுந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக்கொலை</a> செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><h2>ஜாமீனில் வந்த ரவுடி</h2><p>சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஊர்க்காவலன் (வயது 31). பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஊர்க்காவலனை வழக்கு ஒன்றில் கைது செய்ய கடந்த மார்ச் மாதம் திருப்பாச்சேத்தி போலீசார் தேடிச்சென்றனர்.  அப்போது அவர் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். இதையடுத்து அவரை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஊர்க்காவலன், சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.</p><h2>வீடு புகுந்து வெட்டிக்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று காலை ஊர்க்காவலன் தனது வீட்டையொட்டி உள்ள ஒரு கடையில் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு காரில் வந்து இறங்கிய 5 பேர் திடீரென ஊர்க்காவலனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து காயங்களுடன் ஊர்க்காவலன் தப்பி தனது வீட்டுக்குள் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் பின்தொடர்ந்து சென்று வீட்டுக்குள் புகுந்து ஊர்க்காவலனை கொடூரமாக வெட்டிக்கொன்றது. மேலும் ஊர்க்காவலனின் முகத்தை முழுமையாக சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஊர்க்காவலனை வெட்டிக்கொன்ற கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சிவகங்கையில் அம்பேத்கர் சிலை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-allow-dravidar-kazhagams-campaign-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-allow-dravidar-kazhagams-campaign-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">1ee7de3f-9d4c-4f46-87be-f381851ec19b</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:42:23 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:42:23.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,Dravidar Kazhagam,திராவிடர் கழகம்,பரப்புரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/bxz5un3c/thiruma.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/bxz5un3c/thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>‘நீட்’ தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென 30-07-2026 முதல் 02-08-2026 வரை மத்திய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின்  இளைஞரணி,  மாணவர் அணி, மற்றும் மகளிர் பாசறை ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். </p><h2>அனுமதி</h2><p>உரிய முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத நடவடிக்கை ஆகும். 'நீட்' தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது. திராவிடர் கழகத்தின் இந்தப் பரப்புரைக்கு அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>புதிதாக  93 ஊராட்சிகள், 9 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/93-new-panchayats-and-9-panchayat-unions-formed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/93-new-panchayats-and-9-panchayat-unions-formed#comments</comments><guid isPermaLink="false">4870452f-115c-4ddc-8e6d-557a88d9dea1</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:32:01 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:32:01.828Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,panchayat,ஊராட்சிகள்,TamilNadu Goverment,Panchayat Office,ஊராட்சி ஒன்றியம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/scc1gavp/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/scc1gavp/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் புதிதாக ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள், 93 ஊராட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.</p><p>மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, நிர்வாக வசதிக்காக, புதிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த தி.மு.க., ஆட்சியில், புதிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>93 ஊராட்சிகள்</h2><p>இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, புதிதாக ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள், 93 ஊராட்சிகளை உருவாக்கி உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலர் பிரசாந்த் வடநேரே, இதற்கான அரசாணையை வெளியிட்டு உள்ளார்.</p><p>அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பண்டலுார்; திருவள்ளூரில் மாதர்பாக்கம்; காஞ்சிபுரத்தில் சாலவாக்கம்; விழுப்புரத்தில் கிளியனுார், கஞ்சனுார்; திருவண்ணாமலையில் மழையூர்; கிருஷ்ணகிரியில் அஞ்செட்டி; கள்ளக்குறிச்சியில் வானபுரம் ஆகிய, ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.</p><h2>சிறப்பு அதிகாரிகள் நியமனம்</h2><p>இப்புதிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு, மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், நிர்வாக பணிகளை மேற்கொள்ள துணை இயக்குநர் அந்தஸ்தில், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.</p><p>அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 61; ஈரோட்டில் 9; கோவையில் 7; கள்ளக்குறிச்சி, திருச்சியில் தலா 4; திண்டுக்கல், வேலுாரில் தலா 2; தென்காசி, தர்மபுரி, சிவகங்கை, கரூர் ஆகிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாவட்டங்களில்</a>, தலா ஒரு ஊராட்சி என, புதிதாக 93 ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஆடிப்பெருக்கு: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-perukku-additional-tokens-allocated-for-document-registration</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-perukku-additional-tokens-allocated-for-document-registration#comments</comments><guid isPermaLink="false">282394a7-1820-4b4c-acb7-25a077d9ad65</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:23:43 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:23:43.576Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு அரசு,பத்திரப்பதிவு,பத்திரப்பதிவுத்துறை,ஆடிப்பெருக்கு,Aadiperukku,பத்திரப்பதிவு அலுவலகம்,Additional Tokens,Document Registration</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/w5sb1myf/token.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/w5sb1myf/token.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p> <h2>ஆடிப்பெருக்கு</h2><p>இந்நிலையில் ஆடிப்பெருக்கை ஒட்டி, வரும் 3ம் தேதி, அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களில், கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஆடிப்பெருக்கு தினத்தன்று, <a href="https://www.dailythanthi.com/topic/பத்திரப்பதிவு">பத்திரப் பதிவு</a>களுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், பொதுமக்களுக்கான, 'டோக்கன் ' எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><h2>கூடுதல் டோக்கன்கள்</h2><p>அதன்படி, ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில், 100க்கு பதிலாக, 150 பத்திரங்கள் பதிவு செய்யும் வகையில் டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில், 200க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும்.</p><p>மேலும், அதிகளவில் ஆவண பதிவுகள் நடக்கும் 100 அலுவலகங்களில், 150 டோக்கன்களும், ஏற்கனவே வழங்கப்படும், 12 தத்கால் பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக நான்கு டோக்கன்களும் வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மும்பை பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mumbais-famous-dada-chhota-rajan-sentenced-to-7-years-in-prison-chennai-cbi-court-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mumbais-famous-dada-chhota-rajan-sentenced-to-7-years-in-prison-chennai-cbi-court-verdict#comments</comments><guid isPermaLink="false">42ce36ad-e45a-45e3-a78e-9c16e4f06c28</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:13:20 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:13:20.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மும்பை,Mumbai,சிறை தண்டனை,Prison sentence,சோட்டா ராஜன்,Chhota Rajan,CBI Court,போலி பாஸ்போர்ட் வழக்கு,Fake passport case,சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/62xy8m14/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மும்பை பிரபல தாதா சோட்டா ராஜன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/62xy8m14/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>போலி பாஸ்போர்ட் வழக்கில் மும்பை பிரபல தாதா <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D">சோட்டா ராஜனுக்கு</a> 7 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> விதித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சி.பி.ஐ. கோர்ட்டு</a> தீர்ப்பளித்துள்ளது. </p><h2>பிரபல தாதா சோட்டா ராஜன் கைது</h2><p>பிரபல தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான மும்பையைச் சேர்ந்த சோட்டா ராஜன் மீது 50-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. போலீஸ் பிடியில் 27 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த சோட்டா ராஜன், கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.</p><h2>போலி பாஸ்போர்ட் வழக்கு</h2><p>இந்த நிலையில், மத்திய மும்பை காம்தேவி பகுதியில் 'கோல்டன் கிரவுன்' ஓட்டல் உரிமையாளர் ஜெயா ஷெட்டியை கொலை செய்த வழக்கு, பத்திரிகையாளர் ஜே.டே கொலை வழக்கு ஆகியவற்றில் சோட்டா ராஜனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.</p><p>கடந்த 2002-ம் ஆண்டு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றதாக சோட்டா ராஜன் மீது சென்னை சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>7 ஆண்டு சிறை தண்டனை</h2><p>இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கோர்ட்டில் உள்ள பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி சிவசக்தி, சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை: செந்தில்பாலாஜி தலைமறைவு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/failed-to-appear-at-the-triplicane-police-station-has-senthil-balaji-gone-into-hiding</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/failed-to-appear-at-the-triplicane-police-station-has-senthil-balaji-gone-into-hiding#comments</comments><guid isPermaLink="false">2f900b86-3079-4b2c-a67e-82c4e0d5de68</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:57:46 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:57:46.140Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,Tamilnadu,திமுக,DMK,Supreme Court,சுப்ரீம்கோர்ட்டு,தமிழகம்,சென்னை ஐகோர்ட்டு,தலைமறைவு,former minister,முன்னாள் அமைச்சர்,புதுடெல்லி,Chennai High Court,முன் ஜாமீன்,Senthil Balaji,செந்தில் பாலாஜி,bail plea</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/cf36u07l/sehtin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செந்தில்பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/cf36u07l/sehtin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத்துறை விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.</p><h2>செந்தில் பாலாஜி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/senthilbalaji">தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி</a> அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.</p><p>த.வெ.க. அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.</p><h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p>இந்த நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.</p><h2>முன்ஜாமீன்</h2><p>இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்தவிதமான ஆதரமும் இல்லை; பொத்தம் பொதுவாக செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகிகள் செய்த குற்றத்திற்காக செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டுவது சரியல்ல என வாதிட்டார்.</p><p>இதனையடுத்து காவல் துறை தரப்பில் ஆஜரான வக்கீல், "100 கோடி முறைகேடு புகாரின் புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை முற்றிலுமாக பாதிக்கப்படும்; வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டிய இருப்பதால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிட்டார்.</p><h2>விரைவில் கைது?</h2><p>இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><p>முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியை தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத்துறை விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.</p><h2>செந்தில்பாலாஜி தலைமறைவு?</h2><p>இதனிடையே 'குதிரைபேர' வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் நேரில் ஆஜராக வேண்டும்.</p><p>ஆனால் நேற்று செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை. அசோக்குமார் மட்டும் ஆஜரானார். காலையில் ஆஜரானபோது நிருபர்கள் செந் தில்பாலாஜி பற்றி அவரிடம் கேட்டபோது, 'அவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறார்' என்று தெரிவித்தார். அதே சமயம் மாலையில், ஆஜராக வந்த அவரிடம், செந்தில்பாலாஜி பற்றி நிருபர்கள் கேட்டபோது, 'அவரை பற்றி எனக்கு தெரியவில்லை' என்று பதில் அளித்துவிட்டு போனார்.</p><p>எனவே செந்தில்பாலாஜி தலைமறைவாகிவிட்டாரா? அல்லது ஏதாவது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறாரா? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. நீதிபதியின் உத்தரவை பொறுத்தே போலீசாரின் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும்.</p><p>அதே நேரத்தில் முன்ஜாமீன் நிபந்தனைப்படி, செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகாமல் இருப்பதால், அவரது முன்ஜாமீனை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டில், திருவல்லிக்கேணி போலீசார் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லஞ்சஒழிப்பு போலீசாரும், சுப்ரீம் கோர்ட்டின் முடிவை எதிர்பார்த்துள்ளனர்.</p> <h2>சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு - இன்று விசாரணை</h2><p>ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சார்பில் வக்கீல் மிஷா ரோத்தகி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி மூத்த வக்கீல் கபில்சிபல், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் நேற்று முறையிட்டார். </p><p>முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இந்தநிலையில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்போது தங்களது தரப்பு கருத்தையும் கேட்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட மாணவர் சேர்க்கை அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-enrollment-in-government-schools-increases-compared-to-last-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-enrollment-in-government-schools-increases-compared-to-last-year#comments</comments><guid isPermaLink="false">b16ffabf-32e8-4228-be07-20561a011eb6</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:55:08 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:55:08.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிகரிப்பு,பள்ளிகள்,அரசு,Government School,Increased,Student Admission மாணவர் சேர்க்கை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/0qzpd1ne/students.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/0qzpd1ne/students.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அரசு தொடக்கப் பள்ளிகளில், கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">மாணவர் சேர்க்கை </a>சற்று அதிகரித்துள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறையின் கீழ், 37,863 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில், 31,936 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை, கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில், 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.</p><h2>மாணவர் சேர்க்கை அதிகரிப்பு</h2><p>இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில், கடந்த 28-ம் தேதி நிலவரப்படி, 4 லட்சத்து, 23,955 மாணவ, மாணவியர் புதிதாக சேர்ந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பில், 2 லட்சத்து 94,209 மழலையர் வகுப்பில் 41,231 பேர், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, 88,518 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த கல்வி ஆண்டில், 4.13 லட்சம் பேர் மட்டுமே சேர்ந்திருந்த நிலையில், இந்த கல்வியாண்டில் சேர்க்கை அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்... - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-supply-has-been-disrupted-since-the-formation-of-the-tvk-government-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-supply-has-been-disrupted-since-the-formation-of-the-tvk-government-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">6074e2df-1000-4e96-83c7-09194c4dbef2</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:46:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:46:59.704Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,மின் கட்டணம்,electricity bill,electricity consumer,மின்வெட்டு,மின்வெட்டு பிரச்சினை,M.K. Stalin,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qprgeeq8/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/qprgeeq8/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>மின்கட்டணத்தில் பிரச்சினை</h2><p>முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.</p><h2>அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்</h2><p>இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செலுத்துவதற்கான </a>கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.</p><p>இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் பாதுகாப்பு பணி; சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 11 காவலர்கள் மயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-security-duty-11-policemen-fainted-after-eating-chicken-biryani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-security-duty-11-policemen-fainted-after-eating-chicken-biryani#comments</comments><guid isPermaLink="false">200e7cb1-1afa-4c52-9147-5995c526ebc8</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:40:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:40:59.507Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மயக்கம்,காவலர்கள்,policemen,Chicken Biryani,சிக்கன் பிரியாணி,fainted</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/jt2n51fm/91.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/jt2n51fm/91.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கிழக்கு கடற்கரை சாலையில், முதல்-அமைச்சர்  விஜய் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி பரபரப்பானது. முதல்-அமைச்சர் விஜய் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், பாதுகாப்பு பணிக்காக, 53 போலீசார் நேற்று, பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு, மதிய உணவாக பட்டாலியன் கம்பெனி உணவகத்திலிருந்து, சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.</p><h2>வாந்தி, மயக்கம்</h2><p>அதை சாப்பிட்ட நிலையில், 11 போலீஸ் காரர்களுக்கு திடீரென தலைச்சுற்றல், <a href="https://www.dailythanthi.com/topic/vomiting-dizziness">வாந்தி, மயக்கம்</a> ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, திருவான்மியூர் மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பினர். முதற்கட்ட விசாரணையில் அந்த உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய கோர்ட்டுகளில் 5.64 கோடி வழக்குகள் தேக்கம்: 9-வது இடத்தில் தமிழகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/564-crore-cases-pending-in-indian-courts-tamil-nadu-ranks-9th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/564-crore-cases-pending-in-indian-courts-tamil-nadu-ranks-9th#comments</comments><guid isPermaLink="false">f57e3ac4-9895-4175-8887-f43332e6377a</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:35:06 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:35:06.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,cases,வழக்குகள்,Courts,தேக்கம்,கோர்ட்டுகள்,எத்தனையாவது இடம்,backlog,9th place</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7ky1prqz/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வழக்குகள் தேக்கம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/7ky1prqz/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இந்திய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கோர்ட்டுகளில்</a> 5.64 கோடி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வழக்குகள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88">நிலுவை</a>யில் உள்ளன. அதிக வழக்குகள் நிலுவையில் இருக்கும் மாநிலங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தமிழகம்</a> 9-வது இடத்தில் இருக்கிறது.</p><h2>நம்பிக்கையை இழக்க நேரிடுகிறது</h2><p>'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்' என்பது மிக ஆழமான சட்ட மற்றும் தார்மீக கோட்பாடாகும். நீதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர், நீதியின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடுகிறது. குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் சரியான நேரத்தில் கிடைத்தால்தான் நீதி நிலைநாட்டப்படும். இதை வலியுறுத்தும் வகையில், இந்திய நீதித்துறை பல முக்கிய வழக்குகளில் உரிய காலத்தில் வழக்குகளை முடிக்கவும், தீர்ப்புகளை வழங்கவும் நீதிமன்றங்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.</p><h2>5 கோடியே 64 லட்சம் வழக்குகள்</h2><p>ஆனாலும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அந்தவகையில், தற்போது இந்தியாவில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 5 கோடியே 64 லட்சத்து 79 ஆயிரத்து 821 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் 95 ஆயிரத்து 825 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக 26 வழக்குகளும், 20 ஆண்டுகளுக்கு மேலாக 558 வழக்குகளும், 10 ஆண்டுகளுக்கு மேலாக 10 ஆயிரத்து 94 வழக்குகளும் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மொத்தம் 5 லட்சத்து 69 ஆயிரத்து 436 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 3 ஆயிரத்து 513 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாகவும், 76 ஆயிரத்து 298 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் நிலுவையில் இருந்து வருகின்றன.</p><h2>அலகாபாத் ஐகோர்ட்டு முதலிடம்</h2><p>மதுரை ஐகோர்ட்டு கிளையில் மட்டும் 1 லட்சத்து 89 ஆயிரத்து 959 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வரிசையில் அலகாபாத் ஐகோர்ட்டு 12 லட்சத்து 28 ஆயிரத்து 353 வழக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. சிக்கிம் ஐகோர்ட்டில் மிக குறைவாக 318 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. </p><p>கீழமை நீதிமன்றங்கள் எனப்படும் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தாலுகா அளவிலான நீதிமன்றங்களை பொறுத்தமட்டில் தமிழகத்தில் மொத்தம் 17 லட்சத்து 89 ஆயிரத்து 467 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக 450 வழக்குகளும், 20 ஆண்டுகளுக்கு மேலாக 4 ஆயிரத்து 173 வழக்குகளும், 10 ஆண்டுகளுக்கு மேலாக 63 ஆயிரத்து 962 வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.</p><h2>9-வது இடத்தில் தமிழகம்</h2><p>கீழமை நீதிமன்றங்களில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 1 கோடியே 19 லட்சத்து 46 ஆயிரத்து 397 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதை பொறுத்தமட்டில் இந்தியாவில் உள்ள பிற ஐகோர்ட்டுகளை ஒப்பிடும்போது சென்னை ஐகோர்ட்டு 4-வது இடத்தில் இருக்கிறது. அதேவேளையில் ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களை சேர்த்து பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் 9-வது இடத்தில் இருக்கிறது. நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.</p><h2>நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் குழு</h2><p>5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து தீர்வு காண அனைத்து ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு அவ்வப்போது ஆய்வு நடத்தி, வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கான காரணங்களை கண்ட றிந்து அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தவிர, மாற்றுமுறை தகராறு தீர்வு முறைகள் மற்றும் மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்), சமரச தீர்வு மையங்கள் மூலமாகவும் வழக்குகளை சுமூகமாக தீர்க்க அரசு ஊக்குவித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; முதல்-அமைச்சர் விஜயுடன் சந்திப்பு?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-is-coming-to-tamil-nadu-tomorrow-will-he-meet-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-is-coming-to-tamil-nadu-tomorrow-will-he-meet-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">b2461b03-0678-44fa-b6f8-455835e0c641</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:28:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:28:42.543Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,காங்கிரஸ்,Congress,ராகுல் காந்தி,Rahul Gandhi,சந்திப்பு,ராகுல் காந்தி வருகை,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/8boegwf3/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/8boegwf3/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நாளை தமிழகம் வருகிறார். தமிழக காங்கிரஸ், தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்றதும், ஒரு கோடி ரூபாய் செலவில், 'இயக்க மறுசீரமைப்பு திட்டம்' என்ற பெயரில், மாமல்லபுரத்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்தார்.</p><h2>ராகுல் தமிழகம் வருமை</h2><p>கடந்த 23ம் தேதி முதல் ஆகஸ்டு, 1 வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், நாளை ராகுல் பங்கேற்கிறார். இதற்காக, நாளை தமிழகம் வரும் அவர், பயிற்சி முகாமில் மூன்று மணி நேரம் செலவிடும் வகையில், பயண திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மாவட்ட தலைவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.</p><h2>முதல்-அமைச்சருடன் சந்திப்பு</h2><p>காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஒருவர் கூறுகையில், முகாமில் விவசாயிகள், நுாறு நாள் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்டோருடன் சந்திப்பு போன்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">களப்பயிற்சி </a>அளிக்கப் பட்டது. "எங்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ராகுல் எங்களை சந்திக்கிறார். முதல்-அமைச்சர் விஜயையும் ராகுல் காந்தி சந்திப்பார்," என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு துணை போகிறதா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-central-government-support-the-karnataka-government-velmurugan-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-central-government-support-the-karnataka-government-velmurugan-questions#comments</comments><guid isPermaLink="false">310b4153-f984-4179-8ce6-f540472a4be6</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:11:24 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:11:24.096Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடக அரசு,மத்திய அரசு,Central Government,Velmurugan,வேல்முருகன்,Karnataka government,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/hu5vl0xc/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/hu5vl0xc/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தனி சொத்தல்ல</h2><p>காவிரி ஒழுங்காற்றுக் குழு (CWRC), தமிழ்நாட்டிற்கு ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி (cusecs) காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும், கர்நாடக முதல்-மந்திரியும், நீர்வளத்துறை மந்திரியுமான டி.கே. சிவக்குமார், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க முடியாது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று அறிவித்திருப்பது, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை அமைப்புகளுக்கும், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும் வெளிப்படையான சவாலாகும். இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.</p><p>காவிரி என்பது கர்நாடகத்தின் தனிச் சொத்தல்ல. அது தமிழ்நாட்டின் வாழ்வாதார நதி. நீதிமன்றமும், சட்டமும், காவிரி நீர்ப் பங்கீட்டுத் திட்டமும் தமிழ்நாட்டின் உரிமையை ஏற்கும்போது, கர்நாடக அரசு மட்டும் அதை மறுப்பது அரசியல் ஆணவத்தின் உச்சக்கட்டமாகும்.</p><h2>குறுவைச் சாகுபடி பாதிப்பு</h2><p>தமிழ்நாட்டின் விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் திட்டமிட்டு நெருக்கடிக்குள் தள்ளும் மோசமான செயலாகும். மேட்டூர் அணைக்கு உரிய அளவில் நீர் வராததால் குறுவைச் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீருக்காகக் காத்திருக்கின்றன. காவிரி டெல்டாதான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். அந்த நெற்களஞ்சியத்தை வறட்சிக்குத் தள்ளுவது தமிழர்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம்.</p><h2>3.5 டி.எம்.சி. மட்டுமே</h2><p>ஏற்கனவே இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூலை 22 வரை, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய 31 டி.எம்.சி. நீருக்கு பதிலாக, தமிழ்நாட்டிற்கு சுமார் 3.5 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளதாகத் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>இந்நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச 3,500 கனஅடி நீரைக்கூட திறக்க மறுப்பது தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலுமாக நிராகரிக்கும் செயலாகும்.</p><p>மத்திய அரசு இனியும் மவுனம் காக்க முடியாது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு, உச்சநீதிமன்றம் என அனைத்து சட்ட அமைப்புகளின் உத்தரவுகளையும் ஒரு மாநில அரசு தொடர்ந்து புறக்கணிக்கும்போது, அதைத் தடுக்கத் தவறும் மத்திய அரசும் இந்த அநீதிக்குப் பொறுப்பேற்க வேண்டும்.</p><h2>அவசரக் கூட்டம்</h2><p>தமிழக அரசு வெறும் கண்டன <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அறிக்கைகளிலும்</a>, கடித அரசியலிலும் நிற்காமல், உடனடியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தைக் கோர வேண்டும். உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடுக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து காவிரி உரிமைக்கான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்சார வாரியத்தில் 700 உதவி பொறியாளர்களுக்கு
பதவி உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/700-assistant-engineers-promoted-in-electricity-board</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/700-assistant-engineers-promoted-in-electricity-board#comments</comments><guid isPermaLink="false">1b11fcdd-0a75-4f21-b04d-660998389507</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:06:14 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:06:14.565Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு மின்சார வாரியம்,Electricity Board,பதவி உயர்வு,Promotion,Assistant Engineer,உதவி பொறியாளர்</media:keywords><media:content height="270" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/6y11tt1f/eb.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/6y11tt1f/eb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மின்சார வாரியத்தில் 700 உதவி பொறியாளர்களுக்கு. உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.</p><h2>மின்சார வாரியத்தில் பதவி உயர்வு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்றவுடன், மின்சாரத்துறை வரலாற்றில் முதல்முறையாக ஒரேநேரத்தில் 300 பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது கடந்த 2012-ம் ஆண்டு உதவி பொறியாளர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி 700 உதவி பொறியாளர்களுக்கு. உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. அதற்கான கோப்பில் துறை அமைச்சர் நிர்மல் குமார் கையெழுத்திட உள்ளார்.</p><p>அதற்கு பிறகு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள் ஒதுக்கப்படும். அவரவர் விரும்பும் இடங்களில் பணிகளை ஒதுக்கவும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மின்சார வாரியம்</a> திட்டமிட்டுள்ளது. இதற்கான பதவி உயர்வு உத்தரவுகளை முதல்-அமைச்சர் விஜய் கையால் வழங்குவதற்கான விழாவை நடத்தி அதன் மூலம் வழங்கலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><h2>பணியிட மாறுதல்</h2><p>அதேபோல், மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் 200 உதவி செயற்பொறியாளர்களுக்கு. ஊர் மாறுதல் உத்தரவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கேட்ட இடத்திற்கு விருப்பு ஊர் மாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்கனவே இருந்த வாரிய விதிகளின் படி வழங்கப்பட்டு உள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் கவுன்சிலிங் முறையில் வழங்கப்பட்ட இந்த பணியிட மாற்றம் கோருபவர்களிடம் 3 இடங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதில் காலியாக இருக்கும் இடத்திற்கு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.</p><p>வெளிப்படைத்தன்மையுடன், எந்தவித சிபாரிசுகளும், பரிசு பொருட்கள் எவையும் பெறாமல் நேர்மையுடன் பணியிட மாற்றம் வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தரமான சேவை கிடைப்பதற்காக இந்த பணியிட மாற்றம் அளிக்கப்படுகிறது என்று வாரிய அதிகாரிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-today-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-today-5#comments</comments><guid isPermaLink="false">fef89cee-1fcf-4036-ae7f-ed34c4a7a95e</guid><pubDate>Fri, 31 Jul 2026 00:51:18 +0000</pubDate><atom:updated>2026-07-31T00:51:18.869Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/4gd1zyk5/Untitled-1.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/4gd1zyk5/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 31.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>வேளச்சேரி</strong>: டி.ஏ. கோவில், காந்தி சாலை, கோகிலம் தெரு, நியூ காலனி, கபாலி தெரு, ஆண்டாள் அவென்யூ, சோனி நகர், புறவழி பிரதான சாலை , லட்சுமி நகர் 1 வது முதல் 8வது தெருக்கள் வரை, வடுவாம்பாள் நகர், எம்.ஜி.ஆர். நகர் 1 வது முதல் 10வது தெருக்கள் வரை.</p><p><strong>அடையாறு</strong>: வெங்கடேஸ்வரா நகர் 1 வது முதல் வது தெருக்கள் வரை, ஜீவரத்தினம் நகர் 1 வது மற்றும் 2ஆம் தெருக்கள், கற்பகம் கார்டன் 1 வது முதல் 7 வது குறுக்குத் தெருக்கள் மற்றும் 1 வது பிரதான சாலை, பெசன்ட் நகர் பென்கோ காலனி, பீச் ஹோம் அவென்யூ, சி.பி.டபிள்யூ பழைய குடியிருப்புகள், 4வது அவென்யூ, சுங்கத்துறை காலனி, தாமோதரபுரம்.</p><p><strong>பல்லாவரம்</strong>: காந்தி சாலை, காமாட்சி நகர், அலிக்விப்பா நகர், ஏ.ஆர்.ஜி. நகர், மகாலட்சுமி சாலை, ஜெயலட்சுமி நகர், பிராமின் தெரு.</p><p><strong>திருவான்மியூர்</strong>: சாஸ்திரி நகர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவள்ளுவர் </a>சாலை, 1 வது முதல் 4 வது கிழக்கு தெருக்கள், வால்மீகி தெரு, சிவசுந்தரா அவென்யூ 1 வது மற்றும் 2 வது தெருக்கள், கலாக்ஷேத்ரா சாலை, பாலு அவென்யூ.</p><p><strong>நசரத்பேட்டை</strong>:மெட்ரோ வாட்டர் உயர் மின் அழுத்த மின் இணைப்பு 661, மடவிளாகம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..? வானிலை மையம் அப்டேட் </title><link>https://www.dailythanthi.com/news/weather/which-districts-in-tamil-nadu-are-likely-to-receive-heavy-rain-today-meteorological-centre-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/which-districts-in-tamil-nadu-are-likely-to-receive-heavy-rain-today-meteorological-centre-update#comments</comments><guid isPermaLink="false">47d3f2a7-573c-4512-890d-e4fee6ad98cd</guid><pubDate>Fri, 31 Jul 2026 00:45:14 +0000</pubDate><atom:updated>2026-07-31T00:45:14.604Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,weather update news,TN Rain</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/66hkjan5/raind.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain, மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/66hkjan5/raind.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (31-07-2026):</strong> கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/கனமழை">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <p><strong>நாளை (01-08-2026)</strong> கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/கனமழை">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a>யும் பெய்யக்கூடும்.</p> <p><strong>நாளை மறுநாள் (02-08-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p>03-08-2026 முதல் 05-08-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>31-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>01-08-2026 முதல் 03-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>31-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><strong>01-08-2026 முதல் 03-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று  (31-07-2026)</strong> : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong>தமிழக கடலோரப்பகுதிகள்:</strong></p><p><strong>31-07-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>01-08-2026:</strong> குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>02-08-2026 மற்றும் 03-08-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>31-07-2026 முதல் 02-08-2026 வரை:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும்.</p><p><strong>03-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வீசக்கூடும்.</p> <h2>அரபிக்கடல் பகுதிகள் :</h2><p><strong>31-07-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>01-08-2026 மற்றும் 02-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>03-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>12-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: சித்தப்பா மீது போக்சோ வழக்கு - போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/class-12-girl-pregnant-uncle-booked-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/class-12-girl-pregnant-uncle-booked-under-pocso#comments</comments><guid isPermaLink="false">66687147-e3d0-4b12-a9bc-fbc347a0dff2</guid><pubDate>Fri, 31 Jul 2026 00:16:16 +0000</pubDate><atom:updated>2026-07-31T00:16:16.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,POCSO case,போக்சோ வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/voikv18r/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-31/voikv18r/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய், தந்தை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சிறுமி தனது தாயுடன், அவரது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். சிறுமியின் சித்தியும் கணவரை பிரிந்து சிறுமியின் பாட்டி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.</p><p>சித்தியின் கணவர் தனது குழந்தைகளை பார்க்க அவ்வப்போது அங்கு வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சித்தியின் கணவர் அங்கு வந்துள்ளார். அப்போது அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பலமுறை சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.</p><p>இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையறிந்த ராமநாதபுரம் சைல்டு ஹெல்ப்லைன் அலுவலர்கள் விசாரணை நடத்தி சிறுமியுடன் திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.</p><p>அதன்பேரில் போலீசார், சிறுமியின் சித்தியின் கணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மனைவி இறந்த துக்கத்தில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/painter-commits-suicide-after-wifes-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/painter-commits-suicide-after-wifes-death#comments</comments><guid isPermaLink="false">826b2250-178b-43ff-9f83-d6ece8d1e27d</guid><pubDate>Thu, 30 Jul 2026 22:02:21 +0000</pubDate><atom:updated>2026-07-30T22:02:21.783Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Manali,மணலி,தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hezaa9ea/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hezaa9ea/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மணலி அரிகிருஷ்ணாபுரம் அம்மன் நகர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (43 வயது). பெயிண்டர். இவரது மனைவி சுந்தரி (37 வயது). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. கடந்த 27-ந்தேதி சுந்தரி உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார்.</p><p>இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மனைவி இறந்த சோகத்தில் இருந்த ராஜசேகர், நேற்று காலை வீட்டின் கதவை உட்புறமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p><p>மனைவி இறந்த துக்கம் தாங்காமல், அவர் இறந்த 3-வது நாளில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர் மற்றும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க.வில் தொடரும் உட்கட்சி பூசல்: எடப்பாடி பழனிசாமி அழைப்பை வேலுமணி, தங்கமணி ஏற்பார்களா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/internal-feud-continues-in-aiadmk-will-velumani-and-thangamani-accept-edappadi-palanisamis-invite</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/internal-feud-continues-in-aiadmk-will-velumani-and-thangamani-accept-edappadi-palanisamis-invite#comments</comments><guid isPermaLink="false">cd138e67-775a-4bb1-9153-e7b12871696a</guid><pubDate>Thu, 30 Jul 2026 21:34:02 +0000</pubDate><atom:updated>2026-07-30T21:34:02.215Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,எஸ்.பி.வேலுமணி,SP Velumani,தங்கமணி,Thangamani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/niblxsib/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/niblxsib/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. அதில் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் பங்கேற்கவில்லை.</p><p>அதாவது இருவரும் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள அதிருப்தி காரணமாக பங்கேற்கவில்லை என்று அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் இருவருக்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள் வருகிற 3-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர். சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்.</p><p>அதேபோல், ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், சேலம் மாவட்டம் சங்ககிரி - ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை நினைவுச்சின்னத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் மரியாதை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ளார்.</p><p>இந்த அழைப்பை ஏற்று வேலுமணி, தங்கமணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா? அல்லது புறக்கணிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>6 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-4-am-in-6-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-till-4-am-in-6-districts#comments</comments><guid isPermaLink="false">6d127e34-7a61-4fde-870e-eecb3f1a1c4e</guid><pubDate>Thu, 30 Jul 2026 20:18:21 +0000</pubDate><atom:updated>2026-07-30T20:18:21.203Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/0o164u8e/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/0o164u8e/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, தேனி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை சென்டிரல் - திருப்பதி இடையிலான சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-tirupati-saptagiri-express-additional-coach</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-tirupati-saptagiri-express-additional-coach#comments</comments><guid isPermaLink="false">1a6a634a-60d8-4b2c-a39f-4ee5d2a7a309</guid><pubDate>Thu, 30 Jul 2026 19:09:29 +0000</pubDate><atom:updated>2026-07-30T19:09:29.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தெற்கு ரெயில்வே,திருப்பதி,Chennai Central,சென்னை சென்டிரல்,Tirupathi,கூடுதல் பெட்டி இணைப்பு,சப்தகிரி எக்ஸ்பிரஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/meun0qvp/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/meun0qvp/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சென்டிரல் - திருப்பதி இடையிலான சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தற்காலிகமாக கூடுதல் பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தெற்கு ரெயில்வேயில் அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை சென்டிரலில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16057), மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16058) நாளை (1-ந்தேதி) முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரையில் தற்காலிகமாக ஒரு இருக்கை வசதி கொண்ட பெட்டி (சேர் கார்) இணைத்து இயக்கப்பட உள்ளது.</p><p>சென்னை சென்டிரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (12679) கோவை - சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (12680) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை கூடுதலாக ஒரு சேர் கார் பெட்டி இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வள்ளலார் மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-build-vallalar-centre-dropped-welcome-move-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-build-vallalar-centre-dropped-welcome-move-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">c44269e6-5067-4687-ba60-9be65a0e8f1f</guid><pubDate>Thu, 30 Jul 2026 17:46:12 +0000</pubDate><atom:updated>2026-07-30T17:46:12.698Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,வள்ளலார்,Vallalar,Vadalur,வடலூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/414xbzym/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/414xbzym/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. பார்வதிபுரம் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், வள்ளலாரின் நோக்கங்களுக்கு எதிராகவும் முந்தைய திமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது.</p><p>வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக அவருக்கு பன்னாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் காண சத்தியஞான சபை வளாகத்தில் பல லட்சம் பக்தர்கள் கூடும் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தபோது தான் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. பல போராட்டங்களை நடத்தியது. பெருவெளியைக் காக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். மக்கள் உரிமை பயணத்தின் போதும் அங்கு சென்று வழிபட்டு வந்தேன்.</p><p>ஆனால், முந்தைய திமுக அரசு சில சுயநல நோக்கங்களுக்காக அங்கு தான் வள்ளலார் மையம் அமைக்கப்படும் என்பதில் உறுதியாக இருந்தது. அதற்கு எதிராக போராடிய மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முயன்றபோது அதற்கு அனுமதி கூட கொடுக்காமல் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது.</p><p>ஆனால், புதிய அரசு பதவியேற்ற பிறகு பாமக மற்றும் பார்வதிபுரம் மக்களின் கோரிக்கையை ஏற்று அத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருப்பது சிறந்த முடிவு. பெருவெளியியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்கக் கூடாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. அதே நேரத்தில் பெருவெளியை பாதிக்காத வகையில் பன்னாட்டு மையம் அமைக்கப்படுவதை எதிர்க்கவில்லை.</p><p>எனவே, வள்ளலாருடன் தொடர்புடைய வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: ஈரோடு வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-operation-through-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-operation-through-erode#comments</comments><guid isPermaLink="false">56ba596e-4cd9-4fc1-99ab-e4c2bd88b81d</guid><pubDate>Thu, 30 Jul 2026 17:23:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T17:23:43.613Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,ஈரோடு,ஓணம் பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4nq8nbb9/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4nq8nbb9/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் -கொல்லம் வாரத்திற்கு இருமுறை இயங்கும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06117) அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.</p><p>அதேபோல் கொல்லம் சென்னை சென்ட்ரல் வாரத்திற்கு இருமுறை இயங்கும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06118) அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 6-ந்தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-quality-medicines-government-hospitals-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-quality-medicines-government-hospitals-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">75443048-a5fb-4a28-ae82-bdd206529010</guid><pubDate>Thu, 30 Jul 2026 16:58:38 +0000</pubDate><atom:updated>2026-07-30T16:58:38.686Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,அரசு மருத்துவமனைகள்,Govt Hospitals,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/yf59ixan/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/yf59ixan/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படாததால் விபத்தில் காயமடைந்த பரமேஸ்வரன் என்பவர் உயிரிழந்து விட்டதாகவும், கோபிச்செட்டிபாளையம் அருகே குழந்தைகள் நல மையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகவும், தேனி பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக 14 வயது சிறுவன் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை பார்க்கையில், தமிழகத்தின் சுகாதாரத்துறை எந்தளவிற்கு சீரழிந்து கிடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகக் தெரிகிறது.</p><p>பதவியேற்ற புதிதில், “அரசு அமைச்சர்கள் எல்லாம் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுவோம்” என்று வசனம் பேசிய, சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், படத்திற்கு போவது போலவும், பைக்கில் செல்வது போலவும் விதவிதமாக ரீல்ஸ்கள் எடுப்பதில்தான் தற்போது அதீத ஆர்வம் காட்டுகிறாரே தவிர, அரசு மருத்துவமனைகளின் தர மேம்பாட்டிற்காக இதுவரை ஒரு செங்கல்லைக் கூட நகர்த்தவில்லை. மொத்தத்தில் “மாற்றம்” என்று கூறி, மக்களை “ஏமாற்றி” ஆட்சிக்கு வந்த தவெக அரசு, தற்போது நிர்வாகம் தெரியாமல் திணறுகிறது என்பதுதான் உண்மை. </p><p>எனவே, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் கூட, இன்னும் “Reels Mode”-லேயே உலவிக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய்யும், அவரது அமைச்சர்களும், இனியாவது மக்களின் அடிப்படைத் தேவைகளையும், பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டும்! அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்து ஏழை, எளிய மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்! இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி: மாணவிக்கு தொடர் தொந்தரவு அளித்ததாக புகார் - தனியார் கல்லூரி தாளாளர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-private-college-correspondent-arrested-following-complaint-of-repeated-harassment-of-a-female-student</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-private-college-correspondent-arrested-following-complaint-of-repeated-harassment-of-a-female-student#comments</comments><guid isPermaLink="false">8ebe55aa-6f46-44a6-b258-833c4e8c58c2</guid><pubDate>Thu, 30 Jul 2026 16:35:26 +0000</pubDate><atom:updated>2026-07-30T16:35:26.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/70yo5sgr/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/70yo5sgr/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2024-ம் ஆண்டு பயின்ற கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கு, கல்லூரியில் தாளாளரான பினு என்பவர் தொடர்ந்து பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. </p><p>அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் பேசியதை வீட்டில் கூறிவிடுவேன் என்றும் அவர் மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து மாணவி தரப்பில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் தென்காசி மகளிர் காவல்நிலைய போலீசார், கல்லூரி தாளாளர் பினு மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். </p><p>இந்த நிலையில், காவல் நிலையத்தில் வைத்து நெஞ்சு வலிப்பதாக கூறியதால், பினுவை தென்காசி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: கர்நாடகம் செல்லும் முடிவை முதல்-அமைச்சர் விஜய் கைவிட வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. அறிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-chief-minister-vijay-should-drop-plans-to-visit-karnataka-sdpi-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-chief-minister-vijay-should-drop-plans-to-visit-karnataka-sdpi-statement#comments</comments><guid isPermaLink="false">3f06934f-8f49-491f-99da-8d9cc0694584</guid><pubDate>Thu, 30 Jul 2026 16:24:47 +0000</pubDate><atom:updated>2026-07-30T16:24:47.770Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>sdpi,எஸ்.டி.பி.ஐ.,மேகதாது,Megha Dadu,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/x6e409ox/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/x6e409ox/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காவிரிபடுகையில் 5-வது அணையாக மேகதாதுவை கட்டி முடிக்க கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் ஆகஸ்டு 3-ந் தேதி பெங்களூருவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியானது. </p><p>அதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பில் பங்கேற்கக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><p>இதனால், எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜோசப் விஜய் - டி.கே.சிவகுமார் சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இருமாநில முதல்வர்கள் சந்திப்பு நடப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக, ஆகஸ்டு 3-ந் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூரு செல்ல இருக்கிறார். அன்று பிற்பகல் 12 மணிக்கு கர்நாடக தலைமைச் செயலகமான விதான் சௌதாவில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசுகிறார். </p><p>இந்த நிலையில், கர்நாடகம் செல்லும் முடிவை முதல்-அமைச்சர் விஜய் கைவிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் முகமது முபாரக் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு அரசு ஒப்புக்கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின் சட்ட வலிமையை குறைத்து விடும்.</p><p>காவிரி நீர் உரிமையை எந்த காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க கூடாது. எனவே கர்நாடகம் செல்லும் முடிவை முதல்-அமைச்சர் விஜய் உடனே கைவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>
2 மதிப்பெண்களுக்காக திட்டிய தாய்... 5-ம் வகுப்பு மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-scolds-daughter-over-2-marks-5th-grade-girl-takes-shocking-step</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-scolds-daughter-over-2-marks-5th-grade-girl-takes-shocking-step#comments</comments><guid isPermaLink="false">16522eeb-8147-4864-a317-bb10c373e96d</guid><pubDate>Thu, 30 Jul 2026 16:24:38 +0000</pubDate><atom:updated>2026-07-30T16:24:38.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மாணவி,student</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/s5dxnnb2/upael.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/s5dxnnb2/upael.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சைதாப்பேட்டை</p><p>2 மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததற்காக தாய் திட்டிய வருத்தத்தில், 5-ம் வகுப்பு மாணவி அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.</p><p>சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜசேகர். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.</p><p>இவர்களது மகள் புகழினி (வயது 9). மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி புகழினி அறிவியல் தேர்வில் 15-க்கு 13 மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமி தேர்வுத்தாளில் தனது தாயாரிடம் கையெழுத்து வாங்க சென்றார்.</p> <h2></h2><h2>2 மதிப்பெண்கள்</h2><p>அப்போது அவரது தாயார் 2 மதிப்பெண்கள் ஏன் குறைந்தன? என்று கேட்டதுடன் தேர்வுத்தாளில் கையெழுத்திட மறுத்து, தந்தையிடம் வாங்கி கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. தந்தையிடம் கையெழுத்து கேட்டால் திட்டுவார் என நினைத்து, என்ன செய்வது என்று தெரியாமல் சிறுமி மன அழுத்தத்திற்கு ஆளானார். பின்னர் நேற்று இரவு வீட்டில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><p>வீட்டுக்குள் சென்று கதவை சாத்திய சிறுமி வெகுநேரமாக திறக்காததால் சந்தேகமடைந்த தாயார் கதவை தட்டியபோது உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. உடனே தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது சிறுமி தூக்கில் பிணமாக தொங்கினார்.</p><p>இதுகுறித்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று மாணவி புகழினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மேகதாதுவில் அணைக்கட்ட விடமாட்டோம்; அமைச்சர் ராஜேஷ்குமார் உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajesh-kumar-assures-that-we-will-not-allow-the-dam-to-be-built-in-mekedatu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajesh-kumar-assures-that-we-will-not-allow-the-dam-to-be-built-in-mekedatu#comments</comments><guid isPermaLink="false">c6b366f7-bf96-4215-90d3-aaf4b7b8f1f5</guid><pubDate>Thu, 30 Jul 2026 16:14:12 +0000</pubDate><atom:updated>2026-07-30T16:14:12.572Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,Tamilnadu,Karnataka,மேகதாது அணை,Megadadu Dam issue,மேகதாது அணை விவகாரம்,Cauvery case,அமைச்சர் ராஜேஷ்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/kfdbxx8g/rajesh33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ராஜேஷ்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/kfdbxx8g/rajesh33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ‘குயிக் பைட்ஸ்" என்ற சிற்றுண்டியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்  திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-</p><p>இந்த சிற்றுண்டியகத்தில் குறைந்த விலையில் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா பயணம் 2024-ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதுபற்றி ஆந்திர மாநில அரசு அதிகாரிகளிடம் பேசி மீண்டும் திருப்பதிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஆன்மிக சுற்றுலா அழைத்துச்செல்ல பயணத்தை தொடங்கும்படி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். விரைவில் ஆந்திர அதிகாரிகளிடம் பேசி அந்த திட்டத்தை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">காவிரி</a> விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ், தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அதனால்தான் தமிழக சட்டசபையில் காவிரி விவகாரத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தோம்.</p><p>இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது. அரசியல் ரீதியாக பார்த்தால், தமிழ்நாடு தண்ணீர் இல்லாமல் பாலைவனமாக மாறிவிடும். மேகதாதுவில் அணைக்கட்ட விடமாட்டோம். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முதன்மை தலைவரான ராகுல்காந்தியின் நிலைப்பாடு பற்றி கேட்டால், காவிரி விவகாரத்தை மாநில அரசியலோடு மட்டுமே பார்க்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிரான திராவிட கழக இருசக்கர வாகன பிரசாரத்திற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-grant-permission-for-the-dravidar-kazhagams-two-wheeler-campaign-against-the-neet-exam-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-grant-permission-for-the-dravidar-kazhagams-two-wheeler-campaign-against-the-neet-exam-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">01a65751-fcbf-4b8b-a386-ae70a5c8b496</guid><pubDate>Thu, 30 Jul 2026 16:10:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T16:10:46.921Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டி.டி.வி.தினகரன்,TTV Dinakaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/2dc7s4m1/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/2dc7s4m1/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் தேர்வுக்கு எதிரான திராவிட கழக இருசக்கர வாகன பிரசாரத்திற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு முழுவதும் எந்தெந்தப் பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற உள்ளது என்பது குறித்த முழுமையான பட்டியலை முன்கூட்டியே காவல்துறையிடம் வழங்கப்பட்டு, அந்தந்த காவல்நிலையங்களில் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறைத் தலைவர் திராவிடர் கழகத்தினருக்கு அறிவுறுத்திய நிலையில், பிரச்சாரம் தொடங்கும் இன்று காலை அதற்கான அனுமதியை மறுத்திருப்பதோடு, பெரியார் திடலை காவல்துறையின் மூலம் முடக்கியிருப்பது ஜனநாயக நடைமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.</p> <p>தந்தைப் பெரியாரை தன் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக முன்னிறுத்தி அரசியல் செய்யும் த.வெ.க., பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு அவரின் வழியில் நிர்வகிக்கப்பட்டு வரும் திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்திருப்பதன் மூலம், த.வெ.க. ஆட்சி என்பது திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றும் ஆட்சி அல்ல என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.</p><p>அறவழிப் போராட்டம் நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை மதித்து செயல்பட வேண்டிய த.வெ.க. அரசு, தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காவல்துறையிடம் அனுமதி கேட்டு அமைதியான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த திராவிடர் கழகத்தினரின் இருசக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு அனுமதியை மறுத்திருப்பது த.வெ.க. அரசின் சகிப்புத்தன்மையின்மையையே வெளிப்படுத்துகிறது.</p><p>எனவே, திராவிடர் கழகம் திட்டமிட்ட இருசக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு உடனடியாக அனுமதி வழக்கிடுவதோடு, இனிவரும் காலங்களில் அரசியல் பாகுபாடின்றி அனைவருக்கும் அமைதியான முறையில் பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை நடத்திடுவதற்கான அனுமதியை வழங்கி ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>தாமிரபரணி ஆற்றில் துணி, சடங்கு பொருட்கள் வீச தடை: மதுரை ஐகோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-throwing-cloth-ritual-objects-in-thamirabarani-river-madurai-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-throwing-cloth-ritual-objects-in-thamirabarani-river-madurai-high-court#comments</comments><guid isPermaLink="false">40ef3566-cc0f-4f06-9a79-4fad9785f2bd</guid><pubDate>Thu, 30 Jul 2026 16:06:14 +0000</pubDate><atom:updated>2026-07-30T16:06:14.156Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thamirabarani River,மதுரை,Madurai High Court Branch,தாமிரபரணி,மதுரை ஐகோர்ட்டு,தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/zd1w3jeb/147.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாமிரபரணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/zd1w3jeb/147.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தாமிரபரணி நதியைத் தூய்மையாகப் பராமரிப்பது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மிக முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஆற்றங்கரையோரங்களில் உயிரிழந்தவர்களுக்கான இறுதி சடங்குகளை செய்யும்போது, அவர்கள் பயன்படுத்திய துணிமணிகள், பொருட்கள் மற்றும் சடங்குப் பாத்திரங்களை நீரில் தூக்கி எறிவதால் நதியின் தூய்மை பெருமளவில் பாதிக்கப்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளனர்.</p><h2>தாமிரபரணி</h2><p>திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ஆனந்த விலாஸ் மண்டபம் தொடர்பான ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து சிவனுபாண்டியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். </p><p>விசாரணையின்போது, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF">தாமிரபரணி</a> ஆற்றில் ஈமச்சடங்குகளின் பெயரில் துணி, பானை, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் கொட்டப்பட்டு ஆறு மாசுபடுவது குறித்து நீதிமன்றம் தானாகவே கவனம் செலுத்தியது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.</p><h2>தடை</h2><p>தாமிரபரணி நதியின் தூய்மையைப் பாதுகாக்கும் வகையில், ஈமச்சடங்குகள் என்ற பெயரில் ஆற்றில் துணிமணிகள் மற்றும் கழிவுப் பொருட்களை வீசுவதற்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது. </p><p>அஸ்தியைத் தவிர்த்துப் பிற பொருட்களை வீசுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலம் மெயின் அருவியில் சுற்றித்திரிந்த உடும்பு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monitor-lizard-spotted-roaming-near-courtallam-main-falls-fire-and-rescue-services-personnel-rescue-it-safely</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monitor-lizard-spotted-roaming-near-courtallam-main-falls-fire-and-rescue-services-personnel-rescue-it-safely#comments</comments><guid isPermaLink="false">edd2d709-5670-4acc-b3fb-e4e29599f55b</guid><pubDate>Thu, 30 Jul 2026 15:57:29 +0000</pubDate><atom:updated>2026-07-30T15:57:29.786Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றாலம்,Courtallam,உடும்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ywk0q0vp/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ywk0q0vp/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் முற்றிலும் குறைவாகவே விழுந்தது. புலியருவியும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.</p><p>மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது. புலியருவிக்கும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.</p><p>இந்நிலையில், குற்றால அருவியில் அடித்து வரப்பட்ட உடும்பு மெயின் அருவியில் சுற்றித்திரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், உடும்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இதனால் குற்றலாம் மெயின் அருவியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்ட‌து. </p> ]]></content:encoded></item><item><title>இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி ,மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-admitted-to-hospital-after-taking-iron-tablets</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-admitted-to-hospital-after-taking-iron-tablets#comments</comments><guid isPermaLink="false">67537709-1d14-4266-b1db-022ea8bd21c4</guid><pubDate>Thu, 30 Jul 2026 15:30:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T15:30:06.805Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,மருத்துவமனை,மாணவ-மாணவிகள்,govtschool</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8b52fn2o/tvimalai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8b52fn2o/tvimalai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு வழக்கமான சுகாதாரத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே 6-ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்களுக்குச் திடீரென கடுமையான வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டது.</p><p>இதனைத் தொடர்ந்து உடனடியாகப் பள்ளிக் கூட நிர்வாகத்தின் மூலம் அந்த குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவியது.s</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20">மருத்துவமனை</a>யில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் மருத்துவர்கள் குழுவினர் உடனடியாக முழுமையான பரிசோதனைகளை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் மாணவர்களின் உடல்நிலையில் எந்தவிதமான ஆபத்தான பாதிப்புகளும் இல்லை என்று தெரியவந்ததை அடுத்து பெற்றோர் மற்றும் ஆசிரியர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>நெல்லை: சொரிமுத்து அய்யனார் கோவிலில் தங்கி வழிபட அனுமதித்திடுக: டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-allow-devotees-to-stay-and-worship-at-sorimuthu-ayyanar-temple-ttv-dhinakaran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-allow-devotees-to-stay-and-worship-at-sorimuthu-ayyanar-temple-ttv-dhinakaran-urges#comments</comments><guid isPermaLink="false">87d5f99d-cf00-48ab-982c-911b084df6b7</guid><pubDate>Thu, 30 Jul 2026 15:11:23 +0000</pubDate><atom:updated>2026-07-30T15:11:23.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Sorimuthu Ayyanar Temple,சொரிமுத்து அய்யனார் கோவில்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/bo9y4yyt/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/bo9y4yyt/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”நெல்லை மாவட்டம் காரையாறு அணைப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி வனப்பகுதிக்குள் தங்கி வழிபடுவதற்கான அனுமதியை வழங்குமாறு அப்பகுதி பக்தர்கள் அனைவரும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருநாளன்று ஆண்டுதோறும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வனப்பகுதிக்குள் தற்காலிக குடிசைகள் அமைத்துத் தங்கி வழிபடுவது   முன்னோர்கள் காலத்திலிருந்து தொடரும் ஆன்மீகப் பாரம்பரியமாகும்.</p><p>கொரோனோ பரவல் தொற்று காலத்தில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நடப்பாண்டில் தொடரும் நிலையில், அத்தகைய கட்டுப்பாடுகளை நீக்கி, வனவிலங்குகளுக்கும், இயற்கைக்கும் எந்தவித பாதிப்புமின்றி அப்பகுதி பக்தர்கள் தங்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையைத் தொடர அனுமதிக்குமாறு வனத்துறையிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.</p><p>எனவே, தலைமுறை, தலைமுறைகளாகத் தொடரும் பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையை நடப்பாண்டிலும் தொடரும் வகையில் அப்பகுதி பக்தர்கள் வனப்பகுதிக்குள் 10 நாட்கள் தங்கியிருந்து வழிபாடு நடத்துவதற்கான அனுமதியையும், காரையாறு மற்றும் சேர்வலாறு அணைப்பகுதிகளைப் பக்தர்கள் பார்வையிடுவதற்கான  அனுமதியையும் வழங்கிடுமாறு வனத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் காலணி அணிந்து சென்றது ஏன்? - அமைச்சர் ரமேஷ் விளக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-he-enter-the-srirangam-temple-wearing-footwear-minister-ramesh-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-he-enter-the-srirangam-temple-wearing-footwear-minister-ramesh-explains#comments</comments><guid isPermaLink="false">e15f2901-806f-47d5-9a82-8802b67059cf</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:57:33 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:57:33.660Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Srirangam,ஸ்ரீரங்கம்,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/jo8f52xi/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/jo8f52xi/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது அவர் கால்களில் காலணி அணிந்தபடி கோவில் வளாகத்திற்குள் சென்றதாக வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் காலணி அணிந்து சென்றது ஏன்? என்பது குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்ரீரங்கம் கோவிலில் நீண்ட காலமாக கோபுர சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் தரையில் ஆணிகள் விழுந்திருக்கலாம் என்பதால், அங்கு ஊழியர்கள் கூறியதன்படி நான் காலணி அணிந்து சென்றேன். பகுத்தறிவு இல்லாதவர்கள்தான் இது போன்ற சர்ச்சையை கிளப்பி விடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>திராவிடர் கழகத்தின் நீட் எதிர்ப்பு வாகன பரப்புரைக்கு தடை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-dravidar-kazhagams-anti-neet-vehicle-campaign-communist-party-of-india-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-dravidar-kazhagams-anti-neet-vehicle-campaign-communist-party-of-india-condemns#comments</comments><guid isPermaLink="false">e6bd9550-34b2-49c9-a91f-b22ce2224e59</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:47:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:47:06.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>campaign,சென்னை,Communist Party of India,கண்டனம்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,திராவிடர் கழகம்,தடை,NEET,நீட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/wzk9ryry/146.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/wzk9ryry/146.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திராவிடர் கழகம் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தை மேற்கொள்ள விருந்த நிலையில் ,அந்த பரப்புரைக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்தற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  கண்டனம்  தெரிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><h2>நீட் எதிர்ப்பு பரப்புரை தடை</h2><p>திராவிடர் கழகம் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தை மேற்கொள்ள விருந்த நிலையில் ,அந்த பரப்புரைக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p><p>அரசியல் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படுவது கூடாது.</p><p>திராவிடர் கழகம் மேற்கொள்ள உள்ள பரப்புரைக்கு உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டுமென, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு , தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி; தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-says-the-teva-government-is-more-scared-of-the-protests-than-the-central-bjp-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-says-the-teva-government-is-more-scared-of-the-protests-than-the-central-bjp-government#comments</comments><guid isPermaLink="false">74e17561-b35e-4bcc-aa0a-1055bd4f7d3f</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:42:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:42:00.861Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,MKstalin,DravidarKazhagam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/x2klgd9u/stalin33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/x2klgd9u/stalin33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் தேர்வையும், இ.டபிள்.எஸ் இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பாக இன்று சென்னை வேப்பேரியில், இருசக்கர வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.</p><p>வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து இருசக்கர வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இப்பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெரியார் திடலில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>இந்நிலையில், இந்த பேரணியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. </p><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p><p>நீட், இ.டபிள்.எஸ்  இடஒதுக்கீட்டையும் எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு மத்திய பா.ஜ.க. அரசைவிடத் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">த.வெ.க. அரசு</a>தான் அதிகம் மிரளுகிறது. தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலீசாரைக் குவித்திருப்பது ஏன்? </p><p>திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்? கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.</p><p>அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, வீரமணி  அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>