<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 02 Sep 2026 09:36:07 +0000</lastBuildDate><item><title>தூத்துக்குடி: கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-3-people-sentenced-to-life-imprisonment-in-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-3-people-sentenced-to-life-imprisonment-in-murder-case#comments</comments><guid isPermaLink="false">559bdebf-b796-4caa-974c-ca9bdcec6b5d</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:35:56 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:35:56.354Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Murder case,accused,கொலை வழக்கு,life imprisonment,ஆயுள் தண்டனை,குற்றவாளிகள்,3 people,3 பேர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/73bavltb/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/73bavltb/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி </a>மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கொலை வழக்கில்</a> சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">ஆயுள் தண்டனை</a> விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம்- I தீர்ப்பளித்துள்ளது. </p><h2>முன்விரோதத்தில் கொலை; 3 பேர் கைது</h2><p>தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மேலநாட்டார்குளம் பகுதியில் வைத்து செல்லையா மகன் குரு என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதே பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரது மகன்களான மாசிலாமணி (வயது 34), துரை(36) மற்றும் குருநாதன் மகன் செல்லதுரை(54) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><h2>3 பேருக்கு ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் (ADJ - I) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம் நேற்று மாசிலாமணி, துரை மற்றும் செல்லதுரை ஆகிய 3 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் வழக்கு; 4 மாதங்களில் இறுதி அறிக்கை - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-corruption-case-at-madurai-central-prison-high-court-orders-vigilance-department-to-submit-final-report-within-four-months</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-corruption-case-at-madurai-central-prison-high-court-orders-vigilance-department-to-submit-final-report-within-four-months#comments</comments><guid isPermaLink="false">e164f664-bbf1-46e2-a03c-97ac2cf23e4e</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:26:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:26:36.293Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court,ஐகோர்ட்டு,லஞ்ச ஒழிப்புத்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/m2scsmep/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/m2scsmep/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த தபால் கவர்கள், அட்டைகள் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், மருத்துவ உதவி பொருட்கள் போன்றவற்றை பல்வேறு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைத்து, அதற்கு கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது போல போலியாக கணக்கு தயாரித்து 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>வழக்கறிஞரும், சிறை கைதிகள் உரிமை மைய இயக்குனருமான புகழேந்தி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் அதை வந்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. </p><p>இதனிடையே மதுரை மத்திய சிறை பள்ளியில் உதவியாளராக பணியாற்றிய தன்னுடைய கணவருக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி சிறைவாசியின் மனைவி கோகிலா என்பவர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி ஜோதிராமன் அடங்கிய அமர்வில இன்று விசாரணைக்கு வந்தபோது, போலி கணக்கு காட்டி 100 கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த வழக்கு விசாரணை மந்தமாக நடைபெற்று வருவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், விரிவான விசாரணையை முடிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் எனவும், விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்காக சிறப்பு குழுவை அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. </p><p>இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து, 4 மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டனர். அவ்வாறு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் இந்த வழக்கின் விசாரணையை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்ற நேரிடும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மயிலாடும்பாறை அருகே மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற அக்காள்-தங்கை கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sisters-arrested-for-strangling-an-elderly-woman-to-death-near-mayiladumparai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sisters-arrested-for-strangling-an-elderly-woman-to-death-near-mayiladumparai#comments</comments><guid isPermaLink="false">b0a02ee9-29e8-4319-9deb-8be96138deed</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:17:43 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:17:43.189Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,கொலை,மூதாட்டி,Death,sister,rope,மயிலாடும்பாறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ljra3xx6/158.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அக்காள்-தங்கை கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ljra3xx6/158.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடும்பாறை,</p><p>மயிலாடும்பாறை அருகே மூதாட்டி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக. அவரை கழுத்தை நெரித்து கொன்ற அக்காள்-தங்கை கைது செய்யப்பட்டனர்.</p><h2>போலீசார் வழக்குப்பதிவு</h2><p>மயிலாடும்பாறை அருகே பொன்நகரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜக்கம்மாள் (வயது 70). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து பகுதியில் கயிற்றால் இறுக்கியது போன்று தழும்புகள் காணப்பட்டது. இதனால் அவரை மர்மநபர்கள் கயிற்றால் கழுத்தை நெரித்துக்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>மேலும் மர்ம நபர்களை விரைந்து பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களாக பொன்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி பல்வேறு தடயங்களை சேகரித்து வந்தனர். அப்போது ஜக்கம்மாளின் அக்காள் மகள்களான ஜங்கால்பட்டியை சேர்ந்த அய்யம்மாள் (42), நாகராணி (38) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். </p><h2>முன்விரோதம்</h2><p>அதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. அதாவது மூதாட்டியை அவர்கள் 2 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யம்மாள், நாகராணியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். அதில், அய்யம்மாள் மற்றும் நாகராணி குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்ததாகவும், ஜக்கம்மாள் குடும்ப முன்விரோதத்தில் மாந்திரீகம் செய்ததால் தான் தங்களது குடும்பத்துக்கு இந்த நிலை வந்துள்ளதாகவும் 2 பேரும் நினைத்தனர். </p><p>இதனால் மூதாட்டியை கொலை செய்ய அய்யம்மாளும், நாகராணியும் முடிவு செய்தனர். அதன்படி, சம்பவத்தன்று ஜக்கம்மாள் வீட்டுக்குள் சென்று, கயிற்றால் அவரது கழுத்தை நெரித்து 2 பேரும் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொடூர கொலை- போலீஸ்காரர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-policeman-arrested-for-brutally-murdering-woman-in-fake-love-affair</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-policeman-arrested-for-brutally-murdering-woman-in-fake-love-affair#comments</comments><guid isPermaLink="false">6ab53b25-b0ef-43c5-9b62-290a0b103a8b</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:15:51 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:15:51.423Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,arrest,பெண்,fake love,Woman,Policeman,கள்ளக்காதல் விவகாரம்,affair,போலீஸ்காரர் கைது,கொடூர கொலை,Brutal murder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/os7w92w2/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் கொடூர கொலை- போலீஸ்காரர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/os7w92w2/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">கள்ளக்காதல் விவகாரத்தில்</a> ஏற்பட்ட தகராறில், ஜெராக்ஸ் கடை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">பெண்</a> உரிமையாளரை இரும்பு கம்பியால் அடித்து முகம் சிதைத்துக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொடூரமாகக் கொலை</a> செய்த காவலரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>ஜெராக்ஸ் கடை உரிமையாளர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் வெங்கடசுப்பிரமணி. இவரது மனைவி பிரியா (வயது 40). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். </p><h2>கள்ளக்காதல் விவகாரம்</h2><p>பிரியாவின் அக்கா லட்சுமி(42), கணவர் இறந்ததால் பிரியா வீட்டோடு வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்துக்குமார்(33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரியாவுக்கு தெரியவரவே, அவர் தனது அக்காவை கண்டித்துள்ளார். இதனை லட்சுமி முத்துக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.</p><h2>இரும்பு கம்பியால் தாக்கி பெண் கொடூர கொலை</h2><p>இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார், நேற்று இரவு பிரியா தனது ஜெராக்ஸ் கடையைப் பூட்டிக் கொண்டிருந்தபோது அங்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த முத்துக்குமார் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் பிரியாவின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் முகம் சிதைந்து பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் போலீசார், பிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுகிர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து தப்பியோடிய முத்துக்குமாரை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.</p><h2>போலீஸ்காரர் கைது</h2><p>கைது செய்யப்பட்ட முத்துக்குமார், தட்டாரமடம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தவர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், ஏற்கனவே மாமனார் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே வந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி பழனிசாமி மீதான வழக்குகள் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cases-against-edappadi-palaniswami-dropped</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cases-against-edappadi-palaniswami-dropped#comments</comments><guid isPermaLink="false">03da882f-6247-49f2-bfec-9eb411c0a916</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:12:06 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:12:06.457Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,சென்னை ஐகோர்ட்டு,highcourt,எடப்பாடி  பழனிசாமி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/96mnqe3f/eps33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ 
எடப்பாடி பழனிசாமி மீதான வழக்குகள் ரத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/96mnqe3f/eps33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொரோனா கட்டுப்பாட்டை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>சேலம் டவுன் காவல் நிலையத்துக்குட்பட்ட, நாட்டாண்மை கட்டிடம் முன்பு கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாத தமிழக அரசைக் கண்டித்து, சாலையை வழிமறித்து, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி பெறாமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சேலம் டவுன் போலீசார் கடந்த 2021-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள், எம்.பிக்களுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இதேபோல, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி, சேலம் டவுன் காவல் நிலையத்துக்குட்பட்ட கோட்டை மைதானத்தில் சாலையை வழிமறித்து, பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி  ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி,</p><p>அரசியல்வாதிகளுக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு எனக்கூறி, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a>க்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.</p><p>இதேபோல, தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு  தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-condemns-the-hike-in-commercial-lpg-cylinder-prices</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-condemns-the-hike-in-commercial-lpg-cylinder-prices#comments</comments><guid isPermaLink="false">76cae21e-c934-4977-bb49-b93fe9ddf3e2</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:53:26 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:53:26.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Price,கண்டனம்,விலை உயர்வு,Communist Party,வணிக எரிவாயு சிலிண்டர்,LPG Cylinder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/rsg857bj/178.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர் விலை உயர்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/rsg857bj/178.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>ஈரான் மீது சர்வதேச சட்டங்களுக்கு எதிராக, ஐக்கியநாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு எதிராக அமெரிக்கா, தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் ஹார்முஸ் நீரிணையில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இந்த ஹார்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை காரணமாகப் பயன்படுத்திக் கொண்டு&nbsp;சமையல் எரிவாயு விலை&nbsp;இந்தியாவில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.</p><h2>சமையல் எரிவாயு</h2><p>கடந்த மார்ச் மாதத்தில் மட்டும்&nbsp;&nbsp;மூன்று முறை வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. 1768 ரூபாய் 50 காசுக்கு விற்று வந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">வணிக சிலிண்டர்</a>, 2 ஆயிரத்து 246 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டது. இதனால் பல உணவகங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டன. தேநீர், காபி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது.</p><h2>கண்டனம்</h2><p>இந்த சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் காரணமாக கடந்த மாதம் ரூபாய் 192 விலை குறைக்கப்பட்டது. ஜூலை மாதம் ரூபாய் 153&nbsp;விலை குறைக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது மீண்டும் ஒரு சிலிண்டருக்கு 9 ரூபாய் 50 பைசா விலை உயர்தப்பட்டுள்ளது.&nbsp;இதுமக்கள் நலன்களுக்கு எதிரானது, கடும் கண்டனத்திற்குரியது.</p><p>எனவே, வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை&nbsp;உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். அதன் விலையை குறைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை&nbsp;வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2.23 கோடி மோசடி: தனியார் பள்ளி உரிமையாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-223-crore-fraud-against-real-estate-tycoon-private-school-owner-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-223-crore-fraud-against-real-estate-tycoon-private-school-owner-arrested#comments</comments><guid isPermaLink="false">ecda7d7b-f801-44e1-8f78-5112356d5413</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:34:03 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:34:03.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,மோசடி,தனியார் பள்ளி,private school,real estate,ரியல் எஸ்டேட் அதிபர்,உரிமையாளர் கைது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/p9mu9jmf/adjay.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/p9mu9jmf/adjay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>2 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடியே 23 லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி உரிமையாளரை வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.</p><h2>2 ஏக்கர் நிலம் விற்பனை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/vellore">வேலூர்</a> காட்பாடி தாலுகா கார்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 50), ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கும், வேலூர் டிட்டர் லைன் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளர் ஆதவன் பிரகாஷ் (58) என்பவருக்கும் குடியாத்தம் அருகே நிலம் வாங்கிய போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் ஆதவன் பிரகாஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சங்கரை தொடர்பு கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் மெட்ரிக் பள்ளியுடன் கூடிய 2 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் பத்திரத்தை சென்னையில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ.1½ கோடி கடன் வாங்கி உள்ளேன். அதற்கு தற்போது வட்டியுடன் சேர்த்து கடன் ரூ.1 கோடியே 66 லட்சம் உள்ளது. பள்ளியுடன் கூடிய 2 ஏக்கர் நிலத்தை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய உள்ளேன். விருப்பம் இருந்தால் அந்த இடத்தை வாங்கி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.</p><h2>ரூ.2.23 கோடி மோசடி</h2><p>அதற்கு சம்மதம் தெரிவித்த சங்கர் முதற்கட்டமாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 35 ஆயிரம் கொடுத்தார். மீதமுள்ள பணத்தை பத்திரம் பதிவு செய்யும் சமயத்தில் கொடுப்பதாக கூறினார். பணத்தை வங்கியில் செலுத்திவிட்டதாக கூறிய ஆதவன் பிரகாஷ் பத்திரத்தை சங்கரின் பெயருக்கு பதிவு செய்து கொடுக்காமல் காலதாமதம் செய்துள்ளார்.</p><h2>வட்டி, அசல் எதுவும் செலுத்தவில்லை</h2><p>இதனால் சந்தேகம் அடைந்த சங்கர் சென்னைக்கு சென்று தனியார் வங்கியில் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது அந்த நிலத்தின் பெயரில் தற்போது ரூ.4 கோடியே 46½ லட்சம் கடன் நிலுவை தொகை இருப்பதும், இதுவரை அவர் வட்டி, அசல் தொகை எதுவும் செலுத்தவில்லை என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>தனியார் பள்ளி உரிமையாளர் கைது</h2><p>அதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் <a href="https://www.dailythanthi.com/topic/vellore">வேலூர்</a> மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், ஆதவன் பிரகாஷ் நிலத்தை விற்பனை செய்வதாக கூறி சங்கரிடம் ரூ.2 கோடியே 23 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விவசாய நில வகைமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும்: மு.வீரபாண்டியன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drop-agricultural-land-reclassification-amendment-bill-mu-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drop-agricultural-land-reclassification-amendment-bill-mu-veerapandian#comments</comments><guid isPermaLink="false">b875a749-2d45-4762-bd4e-235887f4a538</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:20:49 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:20:49.172Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPI,சட்ட திருத்த மசோதா,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/16fpr0p2/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/16fpr0p2/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி கட்டாயம் என்பதை நீக்குவதற்கான சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு விவசாய நிலங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது கவலை அளிக்கிறது. இதனால் விவசாய நிலங்களின் பரப்பளவும், உணவுப் பொருட்களின் உற்பத்தியும் குறைவதோடு, உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் விவசாயிகளின் நலன்களும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.</p><p>இந்த நிலையில் விவசாய நிலங்களை மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்காக, நில வகை மாற்றம் செய்வதற்கு இருந்து வந்த தடைகளை நீக்க தமிழ்நாடு அரசு முயல்கிறது. இது சரியல்ல. விவசாய நிலங்களை வகைப்பாடு மாற்றுவதற்கு 2017-ம் ஆண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவற்றை தளர்வு செய்ய தற்பொழுது முயற்சிகள் நடைபெறுகின்றன.</p><p>அதன் ஒரு பகுதியாக, தற்பொழுது நகர், ஊரமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள சட்டத்திருத்த மசோதா ஒன்றை தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதில் நில மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும்போது நன்செய் வகைப்பாட்டு நிலங்களை பயன்படுத்த வேண்டிய தேவை எழுகிறது. இதற்கு உள்ளாட்சி அமைப்பு மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவது கட்டாயம் என்பது நீக்கப்படுகிறது.</p><p>அதேபோல் உள்ளாட்சிகளிடம் உள்ள அனுமதி வழங்கும் அதிகாரத்தை நகர் மற்றும் ஊரக அமைப்பு இயக்குனருக்கு மாற்ற இந்த மசோதா வகை செய்கிறது. இது உள்ளாட்சிகளின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். எனவே, இம்மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில்.. கடவுள் சிலைகளுக்கு கூட பாதுகாப்பில்லை - வானதி சீனிவாசன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/under-tvk-rule-even-idols-of-deities-are-not-safe-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/under-tvk-rule-even-idols-of-deities-are-not-safe-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">f8b81fcf-6dcd-44bf-b70f-2235010a2010</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:06:38 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:06:38.733Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,முருகன் சிலை,Murugan statue,சிலை திருட்டு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/an862y6s/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/an862y6s/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> மரகத சிலை திருட்டு தொடர்பான வழக்கில் விரைவில் திருடியவர்களைக் கைது செய்து சிலையை மீட்டு மீண்டும் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும் என முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>சிலை திருட்டு</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான மரகதத்தால் ஆன முருகக் கடவுள் மூலவர் சிலை திருடு போயுள்ளதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>முத்துச்சுவாமி சித்தரின் கடின உழைப்பாலும், தெய்வீக அருளாலும் அமைக்கப்பெற்ற இக்கோவில் காஞ்சி மஹா பெரியவரால் நடுபழனி என்று பெயர் சூட்டப்பட்ட பெருமை உடையது. இப்படி பல சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நடைபெற்ற இந்தத் திருட்டு சம்பவம் பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மீண்டும் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும்</h2><p>தவெக ஆட்சியில் பொதுமக்களுக்குத்தான் பாதுகாப்பில்லாத சூழல் உருவாகி இருக்கும் சூழலில் தற்போது கடவுள் சிலைகளுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் கூட பாதுகாப்பில்லா நிலை ஏற்பட்டுள்ளது ஆட்சி நிர்வாகத்தின் அவல நிலை. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சிலைகளையும், வரலாற்று பொக்கிஷங்களையும் வெளிநாட்டு பயணங்களின் போது பிரதமர் நரேந்திரன் மோடி மீட்டெடுத்து தாயகத்திற்கு கொண்டு வரும் வேளையில், இதுபோன்ற விலைமதிப்பற்ற விக்ரகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாதது கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.</p><p>எனவே மரகத<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/emerald-murugan-idol-stolen-near-chengalpattu"> சிலை திருட்டு</a> தொடர்பான வழக்கில் விரைவில் திருடியவர்களைக் கைது செய்து சிலையை மீட்டு மீண்டும் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு அருகே பெருங்கருணை கிராமத்தில் மரகத முருகர் சிலை திருட்டு - போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/emerald-murugan-idol-stolen-near-chengalpattu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/emerald-murugan-idol-stolen-near-chengalpattu#comments</comments><guid isPermaLink="false">a9906674-4dcc-4e1e-8e02-184aa6b34239</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:02:45 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:02:45.686Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,போலீசார் விசாரணை,சிலை திருட்டு,idol theft</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/soutqi0e/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/soutqi0e/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு,</p><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவில் மற்றும் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு நடுவில் இருப்பதால் இந்த கோவிலை முருக பக்தர்கள் நடுபழனி முருகன் கோவில் என்று அழைக்கின்றனர்.</p><p>இந்த கோவிலில் மரகதத்தால் ஆன மூலவர் முருகர் சிலை இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து கருவறையில் இருந்த சுமார் 2 அடி உயர மரகதத்தினால் ஆன முருகர் சிலையை திருடிச் சென்றுள்ளனர்.</p><p>இதையடுத்து கோவில் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முருகர் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>திருடுபோன முருகர் சிலையின் மதிப்பு பல லட்சம் முதல் கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. முருகர் கோவிலில் மரகதத்தினால் ஆன முருகர் சிலை திருடப்பட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மத்திய மாநில அரசுகள் நெசவுத் தொழிலை அழிக்கத் துடிக்கிறதா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-central-and-state-governments-bent-on-destroying-the-weaving-industry-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-the-central-and-state-governments-bent-on-destroying-the-weaving-industry-velmurugan#comments</comments><guid isPermaLink="false">a85d5c5f-74a0-4b92-8b8c-1dbd74efb703</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:49:35 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:49:35.295Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தி.வேல்முருகன்,Weavers,நெசவாளர்கள்,கைத்தறி நெசவாளர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/44vmn2kp/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/44vmn2kp/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய மாநில அரசுகள், நெசவுத் தொழிலை அழிக்கத் துடிக்கிறதா? நூல்விலை உயர்வுக்கு யார் பொறுப்பு? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/velmurugan">வேல்முருகன் </a>கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நூல்விலை உயர்வு</h2><p>தமிழகத்தின் பாரம்பரியத் தொழிலான நெசவுத்தொழில் ஏற்கனவே மூலப்பொருள் தட்டுப்பாடு, மின்கட்டண உயர்வு, சந்தை மந்தநிலை போன்ற காரணங்களால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களாக நூற்பாலைகள் நூல் விலையைத் தொடர்ந்து படிப்படியாக உயர்த்தி, தற்போது கிலோவுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.30 முதல் ரூ.40 வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது நெசவுத் தொழில்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நூற்பாலைகள் தொடக்கத்தில் ரகங்களுக்கு ஏற்ப (Count-wise) கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தின. அடுத்தடுத்த மாதங்களில் பருத்தி விலை ஏற்றம் மற்றும் வரத்துக் குறைவைக் காரணம் காட்டி மேலும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டது.</p><p>நடப்பு மாதத்தில் மேலும் கிலோவுக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்டதால், மொத்தமாக ஒரு கிலோவிற்கு ரூ.40 வரை விலை ஏற்றம் கண்டுள்ளது.</p><h2>நிதியுதவி வழங்க வேண்டும்</h2><p>இந்தத் தொடர் விலை ஏற்றத்தால், நெசவு உற்பத்தியாளர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பழைய விலை ஒப்பந்தங்களின்படி துணிகளை உற்பத்தி செய்து கொடுக்க முடியாமல் கடுமையான நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றனர். புதிய ஒப்பந்தகளைப் பெற முடியாமல் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறு மற்றும் குறு விசைத்தறி, கைத்தறி கூடங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>இந்த இக்கட்டான சூழலில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பிற்குட்பட்டு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.</p><p>நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இடைக்கால நிவாரண நிதியுதவி மற்றும் உற்பத்தி ஊக்கத்தொகை உடனடியாக வழங்க வேண்டும்.</p><h2>முன்னுரிமை அளிக்க வேண்டும்</h2><p>அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் (Co-optex / TNCSC) மூலம் பருத்தி மற்றும் நூலை முன்கூட்டியே கொள்முதல் செய்து, நெசவாளர்களுக்குச் சந்தை விலையைவிடக் குறைந்த விலையில் தடையின்றி மானியத்தில் வழங்க நிரந்தரக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.</p><p>கூடுதல் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தும் வகையில், தற்போது வழங்கப்படும் இலவச மின்சார உச்சவரம்பை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்.</p><p>பள்ளிச் சீருடைகள், பொங்கல் வேட்டி சேலை உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்துத் துணி கொள்முதல்களிலும் உள்ளூர் கூட்டுறவு மற்றும் நலிவடைந்த நெசவாளர் சங்கங்களுக்கே முழு முன்னுரிமை அளிக்க வேண்டும்.</p><h2>தேவையை நிறைவு செய்த பிறகே ஏற்றுமதி..</h2><p>மாவட்ட வாரியாக மூலதன நெருக்கடியில் சிக்கியுள்ள சிறு நெசவுக் குழுமங்களைக் கண்டறிந்து, சிறப்பு நிதி மறுசீரமைப்புத் தொகுப்பை செயல்படுத்த வேண்டும்.</p><p>பருத்தி மற்றும் நூல் விலையில் மாதாந்திர அடிப்படையில் நிகழும் கட்டுப்பாடற்ற விலை உயர்வைத் தடுத்து, நிலையான தேசிய விலை நிர்ணயக் கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.</p><p>உள்நாட்டு ஜவுளித் தொழிலின் தேவையை முழுமையாக நிறைவு செய்த பிறகே மூலப்பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும்.</p><p>சந்தையில் செயற்கையான பற்றாக்குறையை உண்டாக்கி நூல் விலையை உயர்த்தும் பருத்தி பதுக்கல்காரர்கள் மீதும், கமாடிட்டி சந்தை (MCX) வாயிலான ஊக வணிகத்தின் மீதும் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><h2>மக்களின் எதிர்காலப் பிரச்சினை</h2><p>மத்திய அரசின் மூலப்பொருள் விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்முதல் மானியத்தை சிறு நெசவாளர்களுக்கு மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்.</p><p>சிறு மற்றும் குறு நெசவு நிறுவனங்களின் நவீனமயமாக்கல் மற்றும் நடைமுறை மூலதனத் தேவைகளுக்காக குறைந்த வட்டியில் நீண்டகால சிறப்பு கடனுதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.</p><p>நெசவுத்தொழில் நலிவடைவது என்பது ஒரு தொழில்துறையின் இழப்பு மட்டுமல்ல. தலைமுறை தலைமுறையாக இத்தொழிலை மட்டுமே நம்பி வாழும் எளிய மக்களின் எதிர்காலப் பிரச்சினை. நெசவாளர்களின் தறி ஓசை முழுமையாக நின்றுபோகும் அவல நிலை ஏற்படுவதற்கு முன்பே, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/village-administrator-arrested-for-rs-20000-bribe-in-patta-transfer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/village-administrator-arrested-for-rs-20000-bribe-in-patta-transfer#comments</comments><guid isPermaLink="false">e7704e17-a1c0-492c-8ed9-0832a6ecbed9</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:32:30 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:32:30.984Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,கைது,arrest,லஞ்சம்,Bribery,Tirupur,கிராம நிர்வாக அதிகாரி,பட்டா மாறுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/5d9e3212/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/5d9e3212/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>பட்டா மாறுதலுக்காக விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.</p><h2>பட்டா மாறுதல்</h2><p>திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த மாதப்பூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி (78 வயது). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை சப்-டிவிசன் செய்து பட்டா பெயர் மாறுதல் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார்.</p><p>அதன்பின்னர் வீரசோழபுரம் கிராம நிர்வாக அதிகாரி அருண்குமாரை (36 வயது) சந்தித்து, தனது விண்ணப்பம் குறித்து கேட்டார். அப்போது அவர், நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் செய்து தர வேண்டுமானால் ரூ.40 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கறாராக கூறினார்.</p><p>இதையடுத்து, முதல் கட்டமாக ரூ.10 ஆயிரத்தை கடந்த மாதம் 26-ந்தேதி கிராம நிர்வாக அதிகாரியிடம், ராமசாமி கொடுத்தார். மீதி தொகையை இரண்டு தவணைகளாக தருவதாக கூறினார். ஆனால் அதன் பின்னர் மீதி பணத்தை கொடுத்து பட்டா பெயர் மாற்றம் செய்ய ராமசாமிக்கு விருப்பம் இல்லை.</p><h2>ரூ.20 ஆயிரம் லஞ்சம்</h2><p>இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் அளித்தார். இதனையடுத்து கிராம நிர்வாக அதிகாரி அருண்குமாரை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி ஆகியோர் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை ராமசாமியிடம் கொடுத்தனர். அந்த பணத்தை, கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.</p><h2>கிராம நிர்வாக அதிகாரி கைது</h2><p>அதன்படி, ராமசாமி ரசாயனம் தடவிய பணத்தை எடுத்துக்கொண்டு வீரசோழபுரம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி அருண்குமாரிடம் பணத்தை கொடுத்தார். இதையடுத்து அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று, லஞ்ச பணத்துடன் அருண்குமாரை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர்.</p><p>மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். கைதான கிராம நிர்வாக அதிகாரியின் சொந்த ஊர், திருப்பூர் மாவட்டம் முத்தூரை அடுத்த பழையக்கோட்டை புதூர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.4,800 கோடியில் மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4800-crore-meenjur-desalination-project-cm-vijay-rule-110-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4800-crore-meenjur-desalination-project-cm-vijay-rule-110-announcement#comments</comments><guid isPermaLink="false">ce836fe9-0d1e-41d6-8807-2ce6ad3396e8</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:19:38 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:09:31.640Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,திட்டங்கள்,Budget Session,பட்ஜெட் கூட்டத்தொடர்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/mcgyg3bv/Untitled-8-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/mcgyg3bv/Untitled-8-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.</p><p>நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-</p><h2>பாதுகாப்பான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகத் திட்டங்கள்</h2><p>ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் (Desalination Plant) அமைக்கப்படும்.</p><p>ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாயும், பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.</p><p>சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ.410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><h2>நவீன பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் மேலாண்மை</h2><p>மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும்,</p><p>குன்றத்தூர் மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ.960 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி செலவிடப்படும்.</p><h2>அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி</h2><p>திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், 'திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள்* (Waste to Energy Projects) செயல்படுத்தப்படும். இத்திட்டங்கள் மொத்தம் ரூ. 547 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.</p><h2>மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற சாலைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்பு</h2><p>சாலைகளைச் சீரமைக்க, புதிய சாலைகள் அமைக்க, சென்னை உட்பட அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>பள்ளிகளைச் சுற்றி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலை வசதிகள் (Safe Access to Schools) மற்றும் 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் (Improvement of Traffic Islands) ரூ.110 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பிற மாநகராட்சிகளிலும் இதேபோன்ற மேம்பாட்டுப் பணிகள் ரூ.165 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் அனைத்தும் ரூ.275 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டமாக செயல்படுத்தப்படும்.</p><h2>நகர்ப்புற பசுமையாக்கல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்</h2><p>பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு பசுமைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் ரூ. 130 கோடி செலவிலும், மாநிலம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூ. 175 கோடி செலவிலும், மொத்தம் ரூ. 305 கோடி செலவில் அமைக்கப்படும்.</p><h2>பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு</h2><p>புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் ரூ.335 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.</p><h2>பாரம்பரிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் சீரமைப்பு</h2><p>சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தில்லை நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்த கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளைத் தரைக்கு அடியில் கொண்டு சென்று, வீதிகளை நவீன முறையில் சீரமைக்க ரூ. 36 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>கடலூரில் புனித டேவிட் கோட்டை முதல் வெள்ளி கடற்கரை வரை ரூ.8 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை (Heritage Walk) அமைக்கப்படும். கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தி,</p><p>சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி செலவிடப்படும்.</p><h2>சமச்சீர் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவிடப்படும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ofptwiup/Untitled-8.jpg" /></figure><p><strong>போக்குவரத்து அலுவலகத்தின் சேவைகள்</strong> குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-</p><p>ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே Digital Driving Licence (டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்) வழங்கப்படும். புதிய வாகனம் வாங்குவோர் Digital RC-யை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல் வழங்க வசதி ஏற்படுத்தப்படும்.</p><p>போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் "Anywhere Registration /Licensing" என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் QR code-ஐ scan செய்து மின்னணு முறையில் ஆவணங்களை சரிபார்க்க முடியும். இந்த முறையினால், ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக் கொள்ளவும் முடியும்.</p><p><strong>விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள்</strong> குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ்  முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-</p><p>கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.</p><p>ஜனநாயக உரிமைகளை மதிக்கும் நமது அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைக்களுக்கும் இவ்வரசு உறுதுணையாக நிற்கும்.</p><p>திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நோக்கத்தோடு, விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் மனித நேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p>மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் ஒரு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்பு கம்பி அகற்றம் - அரசு மருத்துவர்கள் சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/iron-rod-removed-from-throat-of-one-year-old-in-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/iron-rod-removed-from-throat-of-one-year-old-in-erode#comments</comments><guid isPermaLink="false">cb6064b1-13b5-4fda-88f2-eee43cf136f2</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:07:25 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:07:25.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,அரசு மருத்துவமனை,Govt Hospital,அரசு மருத்துவர்கள்,Govt Doctors</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/3g7h6s9u/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/3g7h6s9u/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஒரு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்பு கம்பியை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றினர்.</p><h2>உடல்நல பாதிப்பு</h2><p>நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சரியாக சாப்பிடாமல் அடிக்கடி வாந்தி எடுத்தது. இதனால் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.</p><h2>ஈரோடு அரசு மருத்துவமனை</h2><p>அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது குழந்தையின் தொண்டையில் இரும்பு கம்பி சிக்கி இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கடந்த மாதம் 24-ந்தேதி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர்.</p><h2>அறுவை சிகிச்சை</h2><p>அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை அரங்குக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ குழுவினர் சுமார் 1 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த இரும்பு கம்பியை பத்திரமாக அகற்றினர். இதையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் குழந்தை குணமடைந்த பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>புதுக்கோட்டையில் அரசுப் பேருந்தின் கதவை திடீரென திறந்ததால் கீழே விழுந்து 10 பள்ளி மாணவிகள் காயம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ten-school-girls-were-injured-after-falling-from-a-government-bus-in-pudukkottai-when-its-door-suddenly-opened</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ten-school-girls-were-injured-after-falling-from-a-government-bus-in-pudukkottai-when-its-door-suddenly-opened#comments</comments><guid isPermaLink="false">2d9d1840-48b2-4031-8feb-ee81f4643f1b</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:34:57 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:34:57.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government bus,புதுக்கோட்டை,injured,public protest,அரசு பள்ளி மாணவிகள்,10 பேர் காயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/mqdbh87s/02.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பள்ளி மாணவி]]></media:title><media:description type="html"><![CDATA[ பேருந்தில் இருந்து தவறி விழுந்த 10 மாணவிகள் காயம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/mqdbh87s/02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் படியில் பயணம் செய்த பழங்குடியின மாணவிகள் 10 பேர் சாலையில் விழுந்து காயமடைந்தனர். இதனைக் கண்டித்து கிராம மக்கள் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தீவிர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>அரசுப் பேருந்தில் மாணவிகள் பயணிகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">புதுக்கோட்டை மாவட்டம்</a>, கீரனூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளுக்கு அரசுப் பேருந்துகள் மூலம் தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலையும் வழக்கம்போல் பழங்குடியின மாணவிகள் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனர்.</p><h2>கடுமையான கூட்டம்</h2><p>பேருந்து ரெங்கம்மாள்சத்திரம் அருகே வந்தபோது, பேருந்திற்குள் கடுமையான கூட்டம் நிலவியது. இதனால் பேருந்தின் படிக்கட்டுகளில் பயணம் செய்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளை பேருந்தில் இருந்து கீழே இறங்குமாறு நடத்துனர் வற்புறுத்தியுள்ளார்.</p><h2>சாலையில் விழுந்த மாணவிகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவிகள் </a>இறங்கத் தயங்கிய நிலையில், பேருந்தின் கதவு திடீரென திறக்கப்பட்டது. இதில் நிலைதடுமாறி ஒருவர் பின் ஒருவராக 10 மாணவிகள் ஓடும் பேருந்தில் இருந்து சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். இதில் ஒரு மாணவியின் காலில் பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவர் மிக மோசமான நிலையை அடைந்தார்.</p><h2>ஆஸ்பத்திரியில் அனுமதி</h2><p>மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர். மேலும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காயமடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>மக்கள் போராட்டம்</h2><p>பெரும்கல்விப் போராட்டங்களுக்குப் பிறகு தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வரும் தங்களுக்கு, அரசுப் பேருந்திலேயே இத்தகைய சாதிய மற்றும் அராஜகப் போக்கு நிகழ்ந்திருப்பதாகக் கூறி அக்கிராம மக்கள் கொதித்தெழுந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள், திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பேருந்து நடத்துனர் அர்ச்சுனன் மற்றும் ஓட்டுநர் மணிகண்டன் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கிராம மக்கள் கோரிக்கை </a>விடுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>2029-ல் தவெக தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர்- எம்.எல்.ஏ கனிமொழி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaweka-leader-vijay-will-be-the-prime-ministerial-candidate-in-2029-mla</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaweka-leader-vijay-will-be-the-prime-ministerial-candidate-in-2029-mla#comments</comments><guid isPermaLink="false">e7ffacdf-8a7c-4da7-bab8-ec1330118ac2</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:30:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:30:36.097Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chief Minister,prime minister,பிரதமர்,தமிழக சட்டமன்றம்,tvk vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/sxmjuqbh/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2029 பிரதம வேட்பாளர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/sxmjuqbh/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2029-ல் பிரதமர் வேட்பாளர் தவெக தலைவர் விஜய் தான் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ கனிமொழி கூறினார்.</p> <h2>கனிமொழி பேச்சு</h2><p>தமிழக சட்டமன்றத்திற்கு இன்று வருகை தந்த தவெக எம்.எல்.ஏ. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-</p><p>“2029-ம் ஆண்டில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D"> பிரதமர்</a> யார் என்பதை முடிவு செய்வது தான் முக்கியமான விஷயம். ஆனால் இந்த முறை பிரதமரை டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவதில்லை. தமிழ்நாட்டில் இருந்துதான் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யப்போகிறார்கள். 2029-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு மிகப்பெரிய மாற்றத்தை கண்டிப்பாக பார்க்கும்.</p><p>நமது தலைவர் விஜய்யை<a href="https://www.dailythanthi.com/topic/முதல்-அமைச்சர்"> முதல்-அமைச்சர்</a> பதவியில் அமர வைத்ததே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான். அவரே நமது தலைவரின் கையை பிடித்து 2029-ல் பிரதமர் பதவியில் அமர வைப்பார். 2025-ல் கணித்தது 2026-ல் நடந்தது. அதேபோல் 2029-ம் ஆண்டும் நடக்கும்” என்று கனிமொழி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>என்.எல்.சியில் 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம்: அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/347-contract-workers-retrenched-at-nlc-anbumani-condemns-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/347-contract-workers-retrenched-at-nlc-anbumani-condemns-move#comments</comments><guid isPermaLink="false">af592fc7-765e-44f3-a2e5-a057c0e8e431</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:26:23 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:26:23.456Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani,NLC,என்.எல்.சி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/0zs35icg/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/0zs35icg/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>என்.எல்.சியில்  347  ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 713 பேரை நீக்கத் திட்டமிட்டள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>347 தொழிலாளர்கள் பணி நீக்கம்</h2><p>நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தின்  1, 1ஏ, 2 ஆகிய  நிலக்கரி சுரங்கங்களின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த  347 ஒப்பந்தத்  தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் மேலும் 713 பேரை பணி நீக்கம் செய்ய என்.எல்.சி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. என்.எல்.சி நிறுவனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>என்.எல்.சி நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களை என்.எல்.சி நிறுவனம் ஒன்றன் பின் ஒன்றாக ரத்து செய்து வருகிறது. கடந்த  ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை  6 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த 11 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதன் காரணமாக 347 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.  நாளை, செப்டம்பர் 3-ஆம் தேதி இரு நிறுவனங்களின் இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு 64 பேர் பணி நீக்கப்படவுள்ளனர்.  </p><h2>வட இந்தியர்களுக்கு பணி நிரந்தரம்</h2><p>நவம்பர் 16 ஆம் தேதி வரை மொத்தம் 13 நிறுவனங்களின் 27 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு மொத்தம் 1060 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர்களின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குடும்பங்கள் </a>வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகும். என்.எல்.சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டால் அவர்களுக்கு இந்த நிலை நேராது. வட இந்தியர்களை நிரந்தரப் பணிகளில் அமர்த்தும் என்.எல்.சி நிறுவனம் தமிழர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மட்டுமே அமர்த்தி கொத்தடிமைகளாக நடத்துகிறது.</p><p>என்.எல்.சி நிறுவனம் நிலக்கரியை வெட்டி எடுத்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடிகளை லாபமாக ஈட்டி வருகிறது. அதற்கு அடிப்படை நிலங்கள் தான். ஆனால், என்.எல்.சி நிறுவனத்திற்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் அந்த நிலங்களை வழங்கியவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 1827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.</p><h2>நிலம் கொடுத்த மக்களுக்கு துரோகம்</h2><p>கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் மொத்தம் 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளன. அவற்றில் 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு நிரந்தர வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கூட வழங்காமல் நன்றி மறந்த துரோக நிறுவனமாகவே என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருவதற்கு இதுவே சான்றாகும். இது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது.</p><p>என்.எல்.சி நிறுவனத்தின் இந்த அத்துமீறல்களையும், துரோகங்களையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பணி நீக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கச் செய்ய வேண்டும். அங்கு பணியாற்றி வரும் தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்வதற்காக சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தும்படியும் என்.எல்.சி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-youth-arrested-for-sexually-harassing-schoolgirl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-youth-arrested-for-sexually-harassing-schoolgirl#comments</comments><guid isPermaLink="false">5e00ee4a-64c1-4824-a727-664f1bcb4446</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:01:54 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:01:54.068Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,பாலியல் தொல்லை,வாலிபர் கைது,school student,பள்ளி மாணவி,Youth Arrest,sexual abuse</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/flva6sp6/01.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சிலம்பரசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/flva6sp6/01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் அருகே 10-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், வாலிபர் ஒருவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்துள்ளனர்.</p><h2>பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை</h2><p>திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 24) என்ற வாலிபர், அந்த மாணவிக்கு நீண்ட நாட்களாக தொடர்ந்து<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88"> பாலியல் ரீதியாகத் தொல்லை </a>கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, இச்சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்தார்.</p><h2>போலீசார் அதிரடி நடவடிக்கை</h2><p>அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட பெண் போலீசார், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக முயன்ற சிலம்பரசனை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாகக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>கோர்ட்டில் ஆஜர்</h2><p>கைதான வாலிபரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைப்பதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை விரைந்து கைது செய்த காவல்துறையின் நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி மாதா கோவிலில் சாதிய  வழக்கம்: அமைச்சர் மரிய வில்சன் அதை மாற்றுவாரா? - ரவிக்குமார் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-based-practice-at-velankanni-matha-church-will-minister-maria-wilson-change-it-ravikumar-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-based-practice-at-velankanni-matha-church-will-minister-maria-wilson-change-it-ravikumar-asks#comments</comments><guid isPermaLink="false">b99eb0af-9523-4d64-afb9-99672443f0d6</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:49:50 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:49:50.081Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Velankanni Church,வேளாங்கண்ணி மாதா,சாதி பாகுபாடு,RaviKumar MP,ரவிக்குமார் எம்.பி,அமைச்சர் மரிய வில்சன்,Minister Marie Wilson,MarieWilson</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/i7hndux1/kile.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/i7hndux1/kile.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வேளாங்கண்ணி மாதா கோவிலில் கிறித்தவத்துக்குப் புறம்பான சாதிய வழக்கங்கள் இப்போதும் கடைபிடிக்கப்படுகிறதா? என்று ரவிக்குமார் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார். </p><h2>இந்து மதக் கூறுகள்</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் <a href="https://www.dailythanthi.com/topic/mariewilson">நிதி அமைச்சர் மரிய வில்சன்,</a> வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு நடை பயணமாகச் செல்வது ஊடகங்களில் செய்தியாகியிருக்கிறது. </p><p>பாண்டிச்சேரியில் இருக்கும் ப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் வேளாங்கண்ணி&nbsp;திருவிழா குறித்து ஒரு சிறு நூலை வெளியிட்டிருக்கிறது. ப்ரிஜிட் செபஸ்தியா எழுதியுள்ள அந்த நூல் இந்தத் திருவிழாவின் வரலாற்றையும் அது நடைபெறும் முறைகளையும் அதில் கலந்துள்ள இந்து மதக் கூறுகளையும் விவரிக்கிறது. </p><p>வெளியூர்களிலிருந்து வேண்டுதலின்பேரில் நடந்துவரும் பக்தர்கள் நீலம், பச்சை, காவி என ஏதோ ஒரு நிறத்தில் உடையணிந்துகொள்ளவேண்டும். அவர்கள் நாற்பது நாட்கள் விரதமிருக்கவேண்டும். நடந்துவரும்போது செருப்பு அணியக்கூடாது. மது அருந்தவோ புகை பிடிக்கவோ கூடாது. அசைவ உணவையும் தாம்பத்ய உறவையும்  தவிர்க்கவேண்டும். வேளாங்கண்ணியை நெருங்கியதும் குளித்து புத்தாடை உடுத்தி அதன்பிறகே தேவாலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். </p><h2>போப்பாண்டவர்</h2><p>இந்த நடைமுறைகள் இந்து மத வழக்கங்களைப்போல இருப்பதால் இதற்கு 18ஆம் நூற்றாண்டில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இப்படியான வழக்கங்களை மட்டுமின்றி இந்து மதத்தின் சாதிய படிமுறையையும் மதுரை மிஷன் என அழைக்கப்பட்ட ஏசுசபை பாதிரிமார்கள் பின்பற்றினர். மதமாற்றம் தடையின்றி நடக்கவேண்டுமென்றால் இந்து மத நம்பிக்கைகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என அவர்கள் நினைத்தனர். </p><p>அதை பாண்டிச்சேரியிலிருந்த கப்பூச்சியன் சபையினர் கடுமையாக எதிர்த்தனர். கிறித்தவ வரலாற்றில் ‘ Querelle des Rites Malabar’ எனக் குறிக்கப்படும் அந்தக் கலகம் இந்தியா முழுவதும் பரவியது. கடைசியில் போப்பாண்டவர் தலையிட்டு அதில் சமரசம் செய்துவைக்கும் நிலை ஏற்பட்டது. </p> <h2>மாதா கோவில் குளம்</h2><p>இந்துக் கோவில்களில் நடக்கும் மண்டகப்படிகளைப்போலவே இங்கும் நடக்கிறது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி துவங்கும் மண்டகப்படி செப்டம்பர் 10 ஆம் தேதி வரை நடக்கிறது. </p><p>மண்டகப்படி பின்வரும் முறைப்படி நடப்பதாக ப்ரிஜிட் கூறுகிறார் ( பக்கம் 32-33) : </p><p>ஆகஸ்ட் 29 - ஆர்ய நாட்டு செட்டியார்</p><p>ஆகஸ்ட் 30 - அகமுடையார், தேவர்</p><p>ஆகஸ்ட் 31- பனைமர நாடார் </p><p>செப்டம்பர் 1- தென்னைமர நாடார்</p><p>செப்டம்பர் 2- கருங்கண்ணி திருச்சபை</p><p>செப்டம்பர் 3- உடையார்</p><p>செப்டம்பர் 4- ஆங்கிலோ இந்திய குடும்பம்</p><p>செப்டம்பர் 5- திருச்சி எஸ்.எம்.அந்தோணி குடும்பம்</p><p>செப்டம்பர் 6- வேளாங்கண்ணி ஆர்ய நாட்டு செட்டியார் </p><p>செப்டம்பர் 7-  நாகை  ஆர்ய நாட்டு செட்டியார் </p><p>செப்டம்பர் 8,9,10- இரவு ஊர்வலம்- மரியஜோசப் குடும்பம், ஆசாரி, தச்சர் உள்ளிட்டோர் </p> <p>ப்ரிஜிட்டின் நூலைப் படிக்கும்போதும், கிழக்குக் கடற்கரை சாலை நெடுகிலும் அணி அணியாக நடந்துபோகும் பக்தர்களைப் பார்க்கும்போதும் தமிழ்நாட்டில் ஆரோக்கிய மாதா வழிபாட்டை பரவச் செய்வதில் உள்ளூர் வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் கலந்து புனையப்பட்ட நடைமுறைக்கு இருக்கும் முக்கியத்துவம் புரிகிறது. இந்து மதத்தின் சடங்குகளை உள்வாங்கியதோடு நின்றிருந்தால் சிக்கலில்லை,  சாதியப் படிநிலையையும் உள்வாங்கியதுதான் சாதியால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பெருமளவில் கிறித்தவத்தைத்  தழுவாமல் இருப்பதற்குக்  காரணமோ என்ற ஐயமும் எழுகிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/mariewilson">அமைச்சர் மரிய வில்சன்</a>, வேளாங்கண்ணி மாதா கோவிலில் கிறித்தவத்துக்குப் புறம்பான இந்த சாதிய வழக்கங்கள் இப்போதும் கடைபிடிக்கப்படுகிறதா? என ஆராய்ந்து அவ்வாறிருந்தால் அதை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமையும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நாகதோஷம் இல்லை... ஜலதோஷம்தான் இருக்கிறது - சட்டசபையில் கலகல விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-snake-curse-only-cold-says-minister-in-tamil-nadu-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-snake-curse-only-cold-says-minister-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">bce2db30-c123-431c-8d6e-7d7174764203</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:35:26 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:35:26.485Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஓ.பன்னீர்செல்வம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Aadhav Arjuna,தமிழக சட்டசபை,TN Assembly,விவாதம்,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,மானியக் கோரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/odat155x/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/odat155x/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஜலதோஷம்தான் அதிகம் இருக்கிறது. பாம்பு கடி தோஷம் எல்லாம் இருப்பது போல் கேள்விப்படவில்லை என்று அமைச்சர் அருண்ராஜ், திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வத்தின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.</p><h2>வினாக்கள் விடை நேரம்</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக வினாக்கள் விடை நேரத்தில் சுகாதாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்தார்.</p><h2>நாகதோஷம் இருக்கிறது</h2><p>அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, "கேள்வி நேரம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாம்பு கடி தொடர்பாக உரிய விளக்கத்தை அளித்து வருகிறார். பல்வேறு தொகுதிகளில் பாம்பு கடி இருப்பதாக அறிய முடிகிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். ஆகவே, பேரவைத் தலைவர் மூலமாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், நாகதோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனைகள் இருந்தால் அதனை செய்ய வேண்டும்" என்றார்.</p><h2>ஜலதோஷம்தான் இருக்கிறது</h2><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், "தமிழக முதல்-அமைச்சர் தலைமையில், அறிவியல் பூர்வமான அரசைத்தான் மேற்கொண்டு வருகிறோம். தோஷம், பில்லி சூனியம் ஆகியவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால், உங்களுடைய தொகுதிக்கு தோஷம் நிவர்த்தி மேற்கொள்ளலாம். மாநில அளவில் அறிவியல் பூர்வமான முயற்சிகள் மட்டும்தான் நாம் எடுப்போம். ஜலதோஷம்தான் அதிகம் இருக்கிறது. பாம்பு கடி தோஷம் எல்லாம் இருப்பது போல் நாம் கேள்விப்படவில்லை" என்றார்.</p><h2>அறிவியல் பூர்வமாக அணுகுவோம்</h2><p>இதனை தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அமைச்சர் விரும்பினால் இந்த தோஷம் கழிப்பதற்கு உரியவர்களை அனுப்பி வைப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், "தோஷத்தில் நம்பிக்கையும் இல்லை. விருப்பமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "பெரியார் இயக்கம் பேசிய திமுக இன்று, தோஷம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுகக்கூடியவர்கள் என்பதை பதிவு செய்கிறோம்" என்றார்.</p><h2>தீர்வு காண வேண்டும்</h2><p>இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கேட்டது உண்மையாகவே ஜலதோஷத்தை பற்றிதான். எங்களுடைய துணை தலைவருக்கு உண்மையாகவே ஜலதோஷம். அவருக்கு 2 நாட்களாக உடல்நிலை சரியில்லை. அதற்கும் தீர்வு காண வேண்டும்" என்றார். இந்த விவாதம் சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>வள்ளியூர், பண்ருட்டி மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும்: சட்டசபையில் அமைச்சர் அருண்ராஜ் உறுதி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/quality-of-valliyoor-and-panruti-hospitals-to-be-upgraded-minister-arunraj-assures-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/quality-of-valliyoor-and-panruti-hospitals-to-be-upgraded-minister-arunraj-assures-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">1f1b97a6-8064-4169-895b-c1c3d84b65d8</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:26:11 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:26:11.906Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,தமிழக சட்டசபை,Government Hospital,அரசு மருத்துவமனை,Assembly,Panruti,பண்ருட்டி,வள்ளியூர்,Tamilnadu Assembly,Valliyoor,அருண்ராஜ்,Arunraj,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ckf3iyz1/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/ckf3iyz1/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக வினாக்கள் விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.</p><p>பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கான சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p><h2>சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை</h2><p>பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு ப்ரீசர் பாக்ஸ் மற்றும் சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும் என எம்எல்ஏ மோகன் கோரிக்கை விடுத்தார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு 2 ப்ரீசர் பாக்ஸ்கள் வழங்கப்படும் என்றார். மேலும், தேவையிருப்பின் சி.டி. ஸ்கேன் வசதியும் ஏற்படுத்தித் தரப்படும் என தெரிவித்தார்.</p><p>பண்ருட்டி அரசு மருத்துவமனையை கடலூர் அரசு மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.</p><h2>ஆம்பூர் மருத்துவமனையில் மகப்பேறு மையம்</h2><p>ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து, தேவையின் அடிப்படையில் மகப்பேறு மைய வசதி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p><h2>வள்ளியூர் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்</h2><p>வள்ளியூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், தேவையிருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p><h2>புதிய மருத்துவமனை அமைக்க ஆய்வு</h2><p>தலைவாசல் தாலுகாவுக்கு புதிய மருத்துவமனை வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், மருத்துவமனை கட்டுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.</p><h2>ரிஷிவந்தியத்தில் தாலுகா மருத்துவமனை?</h2><p>ரிஷிவந்தியத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்படுமா என்ற உறுப்பினரின் கேள்விக்கு, தேவையின் அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p><h2>மருத்துவக் கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி</h2><p>முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆடிட்டோரியத்தில் ஏசி வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற அமைச்சர், அங்கு ஏசி வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.</p><h2>திருமருகல் மாவுப்பூச்சி தாக்குதல் குறித்து கவன ஈர்ப்பு</h2><p>இதனிடையே, திருமருகல் பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்த விவகாரம் தொடர்பாக ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர உள்ளார். மேலும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதும் இன்றைய கூட்டத்தில் விவாதம் நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல்: கட்சி தலைமை அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/list-of-award-recipients-at-the-dmks-grand-tri-event-celebration-party-leadership-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/list-of-award-recipients-at-the-dmks-grand-tri-event-celebration-party-leadership-announces#comments</comments><guid isPermaLink="false">ce9ab24a-7c91-4dff-a62f-bb004cce0765</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:23:03 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:23:03.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,awards,முப்பெரும் விழா,விருதுகள்,கட்சி தலைமை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/8rzeyvvg/dmk.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/8rzeyvvg/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. </p><h2>முப்பெரும் விழா</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> சார்பில் ஆண்டுதோறும் பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், கட்சி தொடங்கப்பட்ட நாள் ஆகிய 3 முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து தி.மு.க. முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. </p><p>அந்த வகையில், இந்த ஆண்டு (2026) தி.மு.க. முப்பெரும் விழா வரும் 15-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. </p><h2>விருது பெறுவோர்</h2><p>இந்நிலையில் இந்த விழாவில் விருது பெறுவோர் பட்டியலை <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> தலைமை வெளியிட்டுள்ளது. </p><p>அதன்படி, பெரியார் விருது தி.மு.க. விவசாய அணி துணை  செயலாளர் கு.செல்லப்பாவுக்கும், அண்ணா விருது சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் ஜி.கே.சுபாஷூக்கும், கலைஞர் விருது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி.க்கும், பாவேந்தர் விருது கட்சியின் மருத்துவ அணித் தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமுவுக்கும், பேராசிரியர் விருது தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பிக்கும், மு.க.ஸ்டாலின் விருது இளைஞர் அணி துணைச் செயலாளர் நா.இளையராஜாவுக்கும் வழங்கப்பட இருக்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/r1hjehmd/thama.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>கரும்பு சாகுபடியை பெருக்கி படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-sugarcane-cultivation-keep-padalam-cooperative-sugar-mill-running-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-sugarcane-cultivation-keep-padalam-cooperative-sugar-mill-running-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">214aaf1c-91f4-4447-86fc-56ba62eb673f</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:06:17 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:06:17.651Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,சர்க்கரை ஆலை,sugarcane crop,கரும்பு சாகுபடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/rcvyq195/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/rcvyq195/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கரும்பு சாகுபடியை பெருக்கி படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டில் </a>உள்ள பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் அக்டோபர் ஒன்றாம்  தேதி முதல் அரவைப் பருவம் தொடங்கவுள்ள நிலையில், படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஒப்பந்த பணியாளர் நியமனம் உள்ளிட்ட எந்தப் பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் சர்க்கரைக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில், கூட்டுறவு ஆலைகள் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை தமிழக அரசின் சர்க்கரைத் துறை தவறவிடுவது சரியானதல்ல.</p><p>செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் 1961-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தமிழ்நாட்டின் பழமையான மற்றும் அதிக அரவைத் திறன் கொண்ட சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு 2,500 டன் கரும்பு அரவைத் திறன் கொண்ட படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சர்க்கரை உற்பத்தி நடைபெறும். அதற்கான முதல் நடவடிக்கையாக ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை ஜூலை மாதத்தில் தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் ஜூலைக்குப் பிறகு ஆகஸ்ட் மாதமும் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் பிறந்துவிட்ட நிலையில், இன்று வரை ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை தொடங்கவில்லை. அதனால் படாளம் ஆலையை மூட அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.</p><p>அதுமட்டுமின்றி, நிதிப்பற்றாக்குறை காரணமாக படாளம் சர்க்கரை ஆலையை நடப்பாண்டில் இயக்கும் முடிவை அரசு கைவிட்டு விட்டதாக வெளியாகியுள்ள செய்திகளும் இந்த ஆலையை நம்பியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளையும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் தொழிலாளர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த படாளம் சர்க்கரை ஆலையை மூட அரசு முடிவு செய்திருந்தால், அதற்கு ஒரே ஒரு நியாயமான காரணம் கூட கிடையாது. அதனால், அப்படி ஏதேனும் திட்டம் இருந்தால் அதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.</p><p>படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 29,632 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். திண்டிவனம், வானூர், மேல்மருவத்தூர், படாளம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 10 கரும்பு கோட்டங்களில் உள்ள 1,62,327 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் கரும்பு இந்த ஆலைக்கு வழங்கப்பட வேண்டும். அதன்படி, தொடக்கத்தில் ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் கரும்பு அரவையுடன் உற்பத்தியைத் தொடங்கிய படாளம் ஆலை, ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்து சாதனை படைத்தது. ஒரு கட்டத்தில் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்துடன் கரும்பு அரவை படிப்படியாக குறைக்கப்பட்டு, 2001-ம் ஆண்டில் படாளம் சர்க்கரை ஆலை மூடப்பட்டது.</p><p>அதன்பின் ஆலையை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 2008-09ம் ஆண்டுகளில்  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அடுத்தடுத்து இரு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பயனாக அப்போதிருந்த அரசு ரூ.34 கோடியில் ஆலையை சீரமைத்து 2010-ம் ஆண்டு முதல் இயக்கத் தொடங்கியது. அதன்பின் கரும்பு அரவை 2022-23ம் ஆண்டில் 2 லட்சம் டன் என்ற அளவைக் கடந்தது. அதன்பின், கடந்த இரு ஆண்டுகளாக கரும்பு அரவை  69,360 டன், 53,928 டன்னாக குறைந்தது. நடப்பாண்டில் குறைந்தது 67,500 டன் கரும்பு அரவை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில்தான், அதை கைவிட்டு ஆலையை மூட முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.</p><p>தமிழக அரசு நினைத்தால் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளில் 60 லட்சம் டன் வரை கரும்பு சாகுபடி செய்ய வைக்க முடியும். ஆனால், அதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகமும், அரசும் மேற்கொள்ளவில்லை. ஒரு சர்க்கரை ஆலையில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடியை அதிகரிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட ஆலையின் கரும்பு அலுவலர், துணை கரும்பு அலுவலர் ஆகியோரின் பணி ஆகும். ஆனால், இந்த இரு பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள நிலையில், கரும்பு சாகுபடியை எவ்வாறு அதிகரிக்க முடியும்? மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்ததுதான் ஆலையின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் ஆகும்.</p><p>மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேலாண் இயக்குனர், அலுவலக மேலாளர், தொழிலாளர் நல அதிகாரி, தலைமைப் பொறியாளர் ஆகிய 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆலையில் மொத்தம் 535 பணியிடங்கள் இருக்கும் போதிலும் கூட, மேற்கண்ட நால்வரைத் தவிர வேறு எவரும் பணியில் இல்லை. தேவையின்போது பயன்படுத்திக் கொள்ள 381 ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே  ஓய்வு அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் அரவைக் காலத்திலும், இவர்களில்  244 பேர் அரவையில்லா காலத்திலும் பணியில் இருக்க வேண்டும். ஆனால், இவர்களில் ஒருவர் கூட நடப்பாண்டில் பணிக்கு அழைக்கப்படவில்லை. அதனால்தான் படாளம் சர்க்கரை ஆலை முடங்கிக் கிடக்கிறது.</p><p>தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன்தான், கடந்த ஆண்டில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலையான டன்னுக்கு 3,290.50 ரூபாயுடன், ஊக்கத்தொகையாக  ரூ.709.50 சேர்த்து டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நடப்பாண்டில் இது ரூ.4,300 வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இனிவரும் காலங்களில் கரும்பு சாகுபடி அதிகரிக்கும். இத்தகைய சூழலில் பழமையும், பெருமையும் வாய்ந்த ஆலையை மூட நினைப்பது நியாயமல்ல.</p><p>இந்திய சந்தையில் சர்க்கரைக்கான தேவை அதிகரித்து, 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ள நிலையில், படாளம் ஆலைக்கு புத்துயிரூட்டப்பட்டால், அது அடுத்த சில ஆண்டுகளில் லாபம் ஈட்டத் தொடங்கிவிடும். இதைக் கருத்தில் கொண்டு பணியாளர்களின் தேவைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் முதலில் ஒப்பந்த பணியாளர்களையும், பின்னர் படிப்படியாக நிரந்தர பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரித்து படாளம் ஆலை தொடர்ந்து இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-rs-1800-per-sovereign-todays-rate</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-rs-1800-per-sovereign-todays-rate#comments</comments><guid isPermaLink="false">38600a1a-b496-4065-ad52-3cf9c304fc81</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:51:29 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:53:31.380Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/tnieq4nm/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/tnieq4nm/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,370-க்கும், சவரன் ரூ.1,14,960-க்கும் விற்பனையானது. நேற்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.1,680 அதிரடியாக குறைந்தது.</p><p>மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து, ரூ.1,13,400-க்கும், கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.14,175-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.</p><p>அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தம்: வைபை, சார்ஜிங், சிசிடிவியுடன் அமைக்க மாநகராட்சி ஒப்பந்தம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ac-bus-shelters-at-11-locations-in-chennai-corporation-signs-contract-to-install-facilities-with-wi-fi-charging-points-and-cctv</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ac-bus-shelters-at-11-locations-in-chennai-corporation-signs-contract-to-install-facilities-with-wi-fi-charging-points-and-cctv#comments</comments><guid isPermaLink="false">def16cf4-4067-4f2d-b6be-ac9179b45c39</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:50:15 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:50:15.195Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,ஏ.சி. பஸ் நிறுத்தம்,AC bus shelter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/4hqo8zqf/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/4hqo8zqf/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.</p><p>அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் நேற்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டது. </p><h2>ஏ.சி. பஸ் நிறுத்தங்கள்</h2><p>அதன்படி, சென்னை டி.எம்.எஸ். அண்ணாசாலை, மயிலாப்பூர் பஸ் நிறுத்தம், வடபழனி ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரி விஜயநகர் பஸ் முனையம், வடபழனி பஸ் நிறுத்தம் அருகில் (2 இடங்கள்), சின்னமலை, ஆற்காடு சாலை, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது.</p><p>தொடர்ந்து இதுபோன்ற <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குளிரூட்டப்பட்ட </a>பேருந்து நிறுத்தங்கள் தேவைப்படும் இடங்களில் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும்.</p><h2>சிறப்பு அம்சங்கள் என்ன?</h2><ul><li><p>குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை (Air Conditioned Waiting Hall)</p></li><li><p>கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV Camera)</p></li><li><p>வைபை வசதிகள் (Wi-fi facility)</p></li><li><p>சாய்வு தளப் பாதை (Accessible ramp, preferably integrated with the footpath)</p></li><li><p>பேருந்து வழித்தடத் தகவல்கள் (Bus Route information)</p></li><li><p>மின்விளக்கு வசதி (Lighting)</p></li><li><p>வெயில் தாங்கும் கூரை அமைப்பு (Puff panel roofing)</p></li><li><p>உறுதியான பாதுகாப்பான கண்ணாடி (Toughened / laminated Safety glass)</p></li><li><p>USB சார்ஜிங் வசதிகள் (USB charging points)</p></li></ul>]]></content:encoded></item><item><title>சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? - ஐகோர்ட்டு கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-authority-does-dgp-have-to-ban-cockfights-high-court-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-authority-does-dgp-have-to-ban-cockfights-high-court-asks#comments</comments><guid isPermaLink="false">051f818e-4566-410e-997d-7e8d7fc0eb8b</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:13:57 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:13:57.908Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,DGP,டிஜிபி,சேவல் சண்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/mqcrf1r0/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/mqcrf1r0/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.</p><h2>சேவல் சண்டை</h2><p>தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து டி.ஜி.பி. கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் சுற்றறிக்கை பிறப்பித்தார். இந்த நிலையில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண் குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><h2>அனுமதி வழங்க வேண்டும்</h2><p>அந்த மனுவில், "கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயங்கள் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். போலீசார் விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்டம் இல்லை. விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டி.ஜி.பி. பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.</p><h2>என்ன அதிகாரம்?</h2><p>இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், "மிருக வதை தடை சட்டம் மற்றும் சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை அமர்வு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும்" என்று கேட்கப்பட்டது.</p><p>இதை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? என கேள்வி எழுப்பி, மனுவுக்கு பதிலளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த துளியும் மனமில்லாத மோடி அரசு - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-has-absolutely-no-intention-of-conducting-a-caste-based-census-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-has-absolutely-no-intention-of-conducting-a-caste-based-census-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">a8be6226-0035-4a00-9d08-32ef94daabe4</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:37:01 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:37:01.816Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Census,சாதிவாரி கணக்கெடுப்பு,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/b63d2ogo/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/b63d2ogo/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கண்துடைப்பு நாடகங்களை நிறுத்திவிட்டு, அறிவியல் பூர்வமான, வெளிப்படையான, முறையான சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்துங்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சாதிவாரி கணக்கெடுப்பு</h2><p>சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த துளியும் மனமில்லாத ஆர்.எஸ்.எஸ்./மோடி அரசு, சமூகநீதியைத் திட்டமிட்டே சீர்குலைத்துத் தோற்கடிக்க ஒரு மோசடி நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. "யாருடைய மக்கள்தொகை எவ்வளவோ, அதற்கேற்பவே அவர்களின் உரிமையும் பங்கும் அமைய வேண்டும்" என்ற முழக்கத்தோடு, 50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பை உடைத்து, விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தையும் அதிகாரப் பகிர்வையும் பெற்றுத்தரவே ராகுல் காந்தி 2023யில் நியாய யாத்திரையை முன்னெடுத்தார். அந்த யாத்திரையின் மக்கள் எழுச்சிக்கும் எதிர்க்கட்சி தலைவரின் அழுத்தத்திற்கும் பணிந்து சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்வது போல் காட்டிக்கொண்டு, களத்தில் அதை முழுமையாகக் குளறுபடி செய்து கெடுப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடி-ஷா கூட்டணியின் நயவஞ்சக சித்தாந்தத் திட்டம்.</p><p>இந்தியாவில் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் சாதியை எண்ணுகிறோம் என்று தம்பட்டம் அடித்துவிட்டு, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் மலைக்கிராமங்களில் அவசரக் கோலமாகத் தொடங்கியுள்ள கணக்கெடுப்பே இந்த நிர்வாக அலங்கோலத்திற்கு அப்பட்டமான சாட்சி. </p><p>களப் பணியாளர்களுக்கு முறையான வழிகாட்டலோ, நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளோ கிடையாது. 40 கேள்விகளைக் கேட்பதாகக் கூறிச் செல்லும் கணக்கெடுப்பாளர்கள் எந்தவொரு ஆவணச் சரிபார்ப்பும் இன்றி, ஆதார் அட்டை விவரங்களைக்கூட முறையாகப் பதிவு செய்யாமல் செயலியில் தானாக ஒரு 'டிக்' அடித்துவிட்டுச் செல்கிறார்கள்.</p><h2>இடஒதுக்கீட்டு உரிமைக்கு ஆபத்து</h2><p>இதைவிடப் பேராபத்து என்னவென்றால், 1931-ல் 4,147 ஆக இருந்த சாதிகள், 2011 SECC-யில் வரைமுறையற்ற திறந்தவெளிக் கேள்விகளால் 46.7 லட்சமாகச் சிதறிப் பயனற்றதாகிவிட்டது என உச்சநீதிமன்றத்தில் பாஜக அரசே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. SC (1,208) மற்றும் ST (730) பிரிவுகளுக்கு மத்திய அரசிடம் தெளிவான பட்டியல் இருப்பதைப் போல, OBC சாதிகளுக்கான பட்டியலை வைத்து ‘இரண்டடுக்கு வகைப்பாடு’ முறையை அமல்படுத்தாமல், மீண்டும் அதே திறந்தவெளிக் கேள்விகளைத் திணிக்கிறார்கள். இதனால் ஒரு சாதியே பல நூறு சாதிகளாகச் சிதறடிக்கப்பட்டு OBC மக்களின் உண்மையான எண்ணிக்கை திட்டமிட்டு அழிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><p>இந்தக் குளறுபடியான முறையால் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடு உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள OBC இடஒதுக்கீட்டு உரிமைகளும் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளன. பீகாரிலும் தெலங்கானாவிலும் வெற்றிகரமாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னணியில், மத்திய அரசுக்கு உண்மையான நோக்கமிருந்தால் ஒன்றியப் பட்டியலிலுள்ள OBC சாதிகள் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையப் பட்டியலிலுள்ள 252 சாதிகளைக் கொண்டு அறிவியல் பூர்வமாகத் தரவுகளைத் திரட்டியிருக்க வேண்டும். ஆனால், "சாதிவாரி புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மையற்றவை" என்ற போலிக் காரணத்தைக் காட்டி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை உடைக்கும் வாய்ப்பையும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளையும் ஒழித்துக்கட்டுவதே மோடி அரசின் சதி.</p><p>இந்தக் கணக்கெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பே இதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் கார்கேவும், பிரதமருக்குக் கடிதம் எழுதிய பிறகும், எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி இந்த நாடகத்தை மோடி அரசு துவக்கியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><h2>சாதிவாரி கணக்கெடுப்பு அல்ல</h2><p>இப்படி அறிவியல் பூர்வமற்ற முறையில் எடுக்கப்படும் இந்தத் தரவுகள் மீண்டும் ஒரு பயனற்ற சாதிவாரி கணக்கெடுப்பாகவே அமையப் போகிறது. மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை பாழாக்கிவிட்டு, இறுதியில் "தரவுகள் நம்பகத்தன்மையற்றவை" என்று கூறி, இதை வெளியிடாமல் மூடி மறைப்பதே இவர்களின் திட்டம்!</p><p>மோடி அரசே, நீங்கள் நடத்துவது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சாதிவாரி கணக்கெடுப்பு</a> அல்ல; மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் சமூகநீதிக்கு எதிரான அப்பட்டமான அரசியல் ஏமாற்று வித்தை! கண்துடைப்பு நாடகங்களை நிறுத்திவிட்டு, அறிவியல் பூர்வமான, வெளிப்படையான, முறையான சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்துங்கள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாக இசக்கி சுப்பையா கடிதம்: சட்டசபை செயலகம் இன்று பதில் கடிதம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/isakki-subbiahs-letter-withdrawing-his-resignation-will-the-assembly-secretariat-send-a-reply-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/isakki-subbiahs-letter-withdrawing-his-resignation-will-the-assembly-secretariat-send-a-reply-today#comments</comments><guid isPermaLink="false">aa4dce7f-f51d-450d-aecd-751087578548</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:05:10 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:05:10.965Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,Tamilnadu,அதிமுக,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,ராஜினாமா,Resign,அரசியல் களம்,Ambasamudram,அம்பாசமுத்திரம்,இசக்கி சுப்பையா,tn politics,Isakki Subbaiah</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/h3tzmllg/isakki.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/h3tzmllg/isakki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ. <a href="https://www.dailythanthi.com/topic/esakkisubbiah">இசக்கி சுப்பையா</a>, ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாக சட்டசபை செயலகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளார்.</p><h2>அ.தி.மு.க.வில் பிளவு</h2><p>தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில எம்.எல்.ஏ.க்கள் செயல்படத் தொடங்கினர். தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்த்து களம் கண்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்த த.வெ.க.கட்சிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர்.</p><h2>25 எம்.எல்.ஏ.க்கள்</h2><p>அரசை அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்தார். அப்போது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரின் முடிவுக்கு மாறாக 25 எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க.வுக்கு ஆதரவளித்தனர். தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் <a href="https://www.dailythanthi.com/topic/esakkisubbiah">இசக்கி சுப்பையா</a>, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோரும் அவர்களில் இடம் பெற்றிருந்தனர்.</p><h2>எடப்பாடி பழனிசாமி புகார்</h2><p>இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் திடீரென எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க. கட்சியில் இணைந்துவிட்டனர். அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்தார். </p><p>ஆனால் அவர்கள் 4 பேரின் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டது. அதன் அடிப்படையில், அவர்களின் தொகுதிகள் காலியானதாக இந்திய தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.</p><p>மேலும், அவர்கள் 4 பேர் மீதும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.</p><h2>சபாநாயகர் மன்னிப்பு</h2><p>இந்த சூழ்நிலையில், திடீரென்று ஏற்பட்ட திருப்பமாக, அவர்கள் 4 பேர் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கேட்டனர். அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதையடுத்து, அவர்களுக்கு சபாநாயகர் மன்னிப்பு அளித்து உத்தரவிட்டார். ஆனால் மன்னிப்பைப் பெற்றிருந்த டாக்டர் சி.விஜய பாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் மற்றொரு நாளில் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துகொண்டனர்.</p><h2>மீண்டும் தொடருகிறேன்</h2><p>இந்த நிலையில் மற்றொரு திருப்பமாக, <a href="https://www.dailythanthi.com/topic/esakkisubbiah">இசக்கி சுப்பையா</a> கடந்த ஆகஸ்டு 28-ந்தேதியன்று சட்டசபை செயலாளர் சாந்தியிடம் கடிதம் ஒன்றை கொடுத்தார். அதில், தான் ஏற்கனவே கொடுத்திருந்த ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாகவும், அந்த கடிதத்தை ஏற்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும்,எம்.எல்.ஏ.வாக தொடர விரும்புவதாகவும் அந்தக் கடிதத்தில் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.</p><h2>இன்று பதில் கடிதம்?</h2><p>காலியாக அறிவிக்கப்பட்ட தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இடைத்தேர்தல்தான் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், இசக்கி சுப்பையாவின் கடிதத்திற்கு சட்டசபை செயலகம் சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட உள்ளது. இன்று அந்தக் கடிதம் அவருக்கு அனுப்பப்படலாம் என்று சட்டசபை செயலக வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-officer-arrested-for-rs-7000-bribe-in-tambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-officer-arrested-for-rs-7000-bribe-in-tambaram#comments</comments><guid isPermaLink="false">d39882b4-3072-4bd5-b671-0d2bb0cd871e</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:01:26 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:01:26.652Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tambaram,தாம்பரம்,கைது,arrest,லஞ்சம்,Bribery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/u6wiahu6/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/u6wiahu6/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாம்பரத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.</p><h2>மின் இணைப்பு</h2><p>சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் சிவசெல்வன் (47 வயது). இவர் தனது தந்தை ஜெயராமன் பெயரில் உள்ள வீட்டுக்கு கூடுதல் ஒற்றை மின் இணைப்பு கேட்டு கடந்த ஜூலை மாதம் 9-ம்தேதி கடப்பேரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கான கட்டணத்தையும் செலுத்தியுள்ளார்.</p><h2>லஞ்சம்</h2><p>ஆனால், கடந்த மாதம் 6-ந்தேதி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வீட்டின் மின்திறனை 1 கே.வி.யில் இருந்து 3 கே.வி.யாக உயர்த்தக் கோரி கடந்த மாதம் 10-ந்தேதி மீண்டும் விண்ணப்பித்தார். ஆனால் மின்வாரிய உதவி பொறியாளர் சந்திரன் என்பவர், பணியை முடித்து தருவதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த தொகையை ரூ.7 ஆயிரமாக குறைத்ததாக தெரிகிறது.</p><h2>போலீசில் புகார்</h2><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவசெல்வன், இதுகுறித்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனப் பொடி தடவிய ரூ.7 ஆயிரத்தை சிவசெல்வனிடம் கொடுத்து அனுப்பினர்.</p><h2>கைது</h2><p>அப்போது மின்வாரிய அலுவலகத்தில் சந்திரன் இல்லாததால், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தாம்பரம் சானடோரியம் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படி சிவசெல்வன் அங்கு சென்று பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.12,540-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி சமயபுரத்தில் இன்று பாஜக ஆலோசனைக் கூட்டம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-consultative-meeting-in-samayapuram-trichy-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-consultative-meeting-in-samayapuram-trichy-today#comments</comments><guid isPermaLink="false">04a39329-346f-419a-830a-c3a8d5e0d872</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:38:52 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:38:52.914Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,திருச்சி,Trichy,Samayapuram,சமயபுரம்,BJP meeting</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/i34dcag1/Untitled-5.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/i34dcag1/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், திருச்சி சமயபுரத்தில் இன்று நடைபெறுகிறது. பாஜக மாநிலத் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/nainar-nagendran">நயினார் நாகேந்திரன்</a> தலைமையில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.</p><h2>மேலிடப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு</h2><p>இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.</p><h2>உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை</h2><p>கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், தேர்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்தும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசனை</h2><p>மாவட்ட வாரியாக கட்சிப் பணிகளின் நிலை, அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலா..? இந்த எண்ணில் புகார் தரலாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/charging-extra-for-liquor-bottles-you-can-lodge-a-complaint-at-this-number</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/charging-extra-for-liquor-bottles-you-can-lodge-a-complaint-at-this-number#comments</comments><guid isPermaLink="false">48dcaa92-66e6-4c52-a37a-848853fa1812</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:30:34 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:30:34.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,டாஸ்மாக்,Tasmac,மது விற்பனை,மது பாட்டில்,Liquor Sale,Minister Vignesh,அமைச்சர் விக்னேஷ்,வாடிக்கையாளர் சேவை மையம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/wrtxvspy/kavin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/wrtxvspy/kavin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மது கடைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க  வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக மது​விலக்கு, ஆயத்​தீர்வை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்​மாக்</a> சில்​லறை விற்​பனை நிலை​யங்​கள் மற்​றும் சேவை​கள் தொடர்​பாக நுகர்​வோர், பொது​மக்​கள் தங்​களது புகார்​கள், குறை​கள் மற்​றும் இதர பிரச்​சினை​களை தெரிவிக்​கும் வகை​யில், டாஸ்​மாக் கட்​ட​ணமில்லா வாடிக்​கை​யாளர் சேவை மையம் ஆக.31-ம் தேதி முதல் செயல்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது.</p><p>அதன்​படி, கட்​ட​ணமில்லா <strong>தொலைபேசி எண் 1800-889-2015</strong> மற்றும் அதி​காரப்​பூர்வ <strong>வாட்​ஸ்​அப் எண் 73977 20230</strong> ஆகிய​வற்​றைத் தொடர்​பு​கொண்டு 24 மணி நேர​மும் தெரிவிக்​கலாம். மேலும், டாஸ்​மாக் நிறு​வனத்​தின் அதி​காரப்​பூர்வ சமூக ஊடக கணக்​கு​கள் மூல​மும் புகார் தெரிவிக்​கலாம். புகார்​கள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கண்​காணிக்​கப்​படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/qjx1t0eb/pavada.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை: திருச்சியில் பரபரப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10th-grade-student-gives-birth-to-a-baby-boy-in-school-hostel-sensation-in-trichy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10th-grade-student-gives-birth-to-a-baby-boy-in-school-hostel-sensation-in-trichy#comments</comments><guid isPermaLink="false">a11bcae2-9cda-4828-9d38-cf1d7226737b</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:28:17 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:28:17.037Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவி,Cuddalore,கடலூர்,student,திருச்சி,Trichy,பள்ளி விடுதி,school hostel</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/esriqs75/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/esriqs75/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவிக்கு, திங்கள்கிழமை மாலை விடுதி வளாகத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி</h2><p>கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுதியில் தங்கி அவர் கல்வி பயின்று வந்துள்ளார்.</p><h2>அரசு மருத்துவமனையில் அனுமதி</h2><p>இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு திங்கள்கிழமை மாலை திடீரென பிரசவம் ஏற்பட்டுள்ளது. விடுதி வளாகத்திலேயே அவருக்கு ஆண் <a href="https://www.dailythanthi.com/news/india/karnataka-class-9-student-gives-birth-in-school-toilet-28-year-old-booked-for-assault-1176787">குழந்தை </a>பிறந்துள்ளது. இதையடுத்து, தகவலறிந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.</p><h2>குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை</h2><p>சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் காவல் துறைக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் மற்றும் பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை</h2><p>மேலும், பள்ளிக் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கல்வித்துறை </a>சார்பிலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவியின் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான முழு விவரங்களையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.</p><h2>இளைஞர் மீது போலீசார் விசாரணை</h2><p>போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மாணவி காதலித்து வந்ததாகவும், அதன் மூலம் அவர் கர்ப்பமடைந்ததாகவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சு விலை உயர்வால் அதிகரிக்கும் நூல் விலை: ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு - ஜவுளி தொழில்துறையினர் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-yarn-prices-from-cotton-cost-surge-export-trade-hit</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-yarn-prices-from-cotton-cost-surge-export-trade-hit#comments</comments><guid isPermaLink="false">79050431-c841-4e51-a99b-ef1a8df52a41</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:13:22 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:13:22.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏற்றுமதி,export,Cotton,நூல் விலை,Textile industry,ஜவுளி தொழில்,Yarn price,பஞ்சு விலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/duu6hzbu/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நூல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/duu6hzbu/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>தொடரும் பஞ்சு விலை உயர்வால், நூல் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2>நூல் விலை உயர்வு</h2><p>இந்திய பருத்தி கழகத்தின் தவறான அணுகுமுறையால், பருத்தி பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, ஜவுளி தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். நடப்பு சீசன் தொடக்கத்தில், ரூ.54 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, 11 மாதங்களில், ரூ.21 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், ஒசைரி நூல் விலையும், கிலோவுக்கு ரூ.72 வரை உயர்த்தப்பட்டுள்ளது.</p><h2>செயற்கை விலை உயர்வு</h2><p>இதுகுறித்து நூற்பாலை உரிமையாளர்கள் கூறியதாவது:-</p><p>“நடப்பு பருத்தி ஆண்டில் (2025 அக்டோபர் முதல் 2026 செப்டம்பர் வரை) பஞ்சு உற்பத்தி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்ட இடைத்தரகர்கள் அதிகளவில் பஞ்சை கொள்முதல் செய்து இருப்பு வைத்து, செயற்கையாக விலையை உயர்த்தி வருகின்றனர். மேலும், மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கான வரிவிலக்கு சலுகையை காலதாமதமாக அறிவித்ததால், பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p>நேற்றைய நிலவரப்படி, இதர செலவுகள் நீங்கலாக ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.71 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஏற்பட்ட பஞ்சு விலை உயர்வை கணக்கில் எடுத்தால், நூல் விலை கிலோவுக்கு ரூ.92 வரை அதிகரித்திருக்க வேண்டும். இருப்பினும், ஜவுளி உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, கிலோவுக்கு ரூ.72 மட்டுமே உயர்த்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.</p><h2>விலை நிர்ணயம்</h2><p>மேலும் இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறும்போது, “நூல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதால் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய பருத்திக் கழகம் தினசரி பஞ்சு விலையை நிர்ணயம் செய்வதை தவிர்த்து, மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே விலையை நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.</p><p>மேலும், இடைத்தரகர்களின் தலையீட்டால் பஞ்சு விலை செயற்கையாக உயர்வதைத் தடுக்க, இந்திய பருத்திக் கழகம் நூற்பாலைகளுக்கு மட்டுமே பஞ்சை விற்பனை செய்யும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி ஆசிரியரை முட்டிக்கால் போட வைத்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-inquire-into-the-incident-where-a-government-school-teacher-was-made-to-kneel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/officials-inquire-into-the-incident-where-a-government-school-teacher-was-made-to-kneel#comments</comments><guid isPermaLink="false">44a7bfe0-e636-422f-a155-a8fa60b037a9</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:03:40 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:03:40.155Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு பள்ளி,Perambalur,பெரம்பலூர்,Government School,Government school teacher,அரசு பள்ளி ஆசிரியர்,பெரம்பலூர் செய்திகள்,Perambalur district</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/avgcgnt1/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/avgcgnt1/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பலூர்,</p><p>பெரம்பலூர் மாவட்டம், தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர் ஒருவர், அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களான நல்லாசிரியர் விருது பெற்ற ராஜா மற்றும் சித்ரா ஆகியோர் குறித்து வகுப்பறை கரும்பலகையில் ஆபாசமாக விமர்சித்து, கேலிச்சித்திரம் வரைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்றதாக தெரிகிறது.</p><h2>மாணவரை கண்டித்த ஆசிரியர்</h2><p>இதையறிந்த வணிகவியல் ஆசிரியர் கபில் தேவ், மாணவரை கண்டித்ததுடன், அவரை முட்டிக்கால் போட வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவரின் தந்தை ராஜசேகர், பள்ளிக்கு வந்து ஆசிரியர் கபில் தேவிடம் தகராறில் ஈடுபட்டார்.</p><h2>முட்டிக்கால் போட வைத்ததாக புகார்</h2><p>மாணவரின் தந்தையான ராஜசேகர், ஊராட்சி மன்ற செயலராகவும், அவரது மனைவி பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராகவும் உள்ளனர். பள்ளிக்கு வந்த ராஜசேகர், ஆசிரியர் கபில் தேவிடம் மிரட்டல் விடுத்து, அவரை முட்டிக்கால் போட வைத்ததாக ஆசிரியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கலெக்டரிடம் ஆசிரியர்கள் மனு</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஷரண்யா அரியிடம் மனு அளித்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விசாரணை </a>மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>விசாரணைக்கு பிறகு நடவடிக்கை?</h2><p>பள்ளியில் மாணவர் ஒழுக்கம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை, ஆசிரியரை அவரது பெற்றோர் அவமதித்ததாக எழுந்துள்ள புகார் என இரு கோணங்களிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்த முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-order-person-who-converted-to-christianity-cannot-invoke-the-atrocities-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-order-person-who-converted-to-christianity-cannot-invoke-the-atrocities-act#comments</comments><guid isPermaLink="false">32be9517-0a59-4407-acda-aaaf70a644c3</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:00:50 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:00:50.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,மதம் மாற்றம்,converted,வன்கொடுமை சட்டம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/1r8rw4fk/mood.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/1r8rw4fk/mood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதம் மாறியவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்ட நடவடிக்கையை கோர முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.</p><h2>சாதி பாகுபாடு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/தேனி">தேனி</a> மாவட்டம் பெரியகுளம் கள்ளிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக ரவிக்குமார் என்பவர் பணியாற்றினார். பின்னர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.</p><p>இந்த நிலையில் அவர், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த இந்துவான என்னை பள்ளி முதல்வர் உள்ளிட்ட சிலர் சேர்ந்து, சாதிய பாகுபாடு காட்டி அவமானப்படுத்தினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.</p><h2>நேர்மையாக நடக்க வேண்டும்</h2><p>இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-</p><p>மனுதாரர் கிறிஸ்தவ மதத்தில் இணைந்து உள்ளார். அதற்கு ஆதாரம் உள்ளது. ஆனால் மனுவில், நான் ஒரு இந்து என்று கூறியுள்ளார். கோர்ட்டில் வழக்கு தொடரும் நபர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்படும் சம்பவமானது வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சம்பவம் பொது இடத்தில் நடந்திருக்க வேண்டும்.</p><h2>தற்காலிக பணி நீக்கம்</h2><p>ஆனால் மனுதாரர் புகாரில் தேதி, இடம் போன்றவை தெரிவிக்கப்படவில்லை. யார் முன்பு அவமானப்படுத்தப்பட்டார் என்பதை கூறவில்லை. தற்காலிக பணி நீக்கம், இடமாறுதல் போன்ற குற்றச்சாட்டுகள்தான் புகாரில் உள்ளன. நிர்வாக நடவடிக்கையை துன்புறுத்தல் எனக்கூறி போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது.</p><h2>நடவடிக்கை கோர முடியாது</h2><p>சிறப்பு தண்டனை சட்டங்களை தவறாக பயன்படுத்துவது இரு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர் இந்து மதத்தில் இருந்து மதம் மாறிய பிறகு மீண்டும் பழைய மதத்திற்கு திரும்பியதற்கான ஆதாரம் இல்லை என்றால் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோர முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் வேறு எண்ணெய் வழங்கப்படுமா..? - அமைச்சர் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-a-different-oil-be-supplied-instead-of-palm-oil-at-ration-shops-ministers-reply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-a-different-oil-be-supplied-instead-of-palm-oil-at-ration-shops-ministers-reply#comments</comments><guid isPermaLink="false">3912d60c-21bd-4bc4-ac89-7d7f9c2d98fb</guid><pubDate>Wed, 02 Sep 2026 01:39:02 +0000</pubDate><atom:updated>2026-09-02T01:39:02.507Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,ration shops,பாமாயில்,Palm oil,ரேசன் கடைகள்,அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/wenqzzgu/venki.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/wenqzzgu/venki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாதம் 2 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்கிறோம் என்றும், ஆண்டுக்கு 24 கோடி லிட்டர் தேவைப்படுகிறது என்றும் அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.  </p><p><a href="https://www.dailythanthi.com/topic/tn-assembly">சட்டசபையில்</a> மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் நித்தியானந்தன் (பொள்ளாச்சி, கொ.ம.தே.க.) பேசும்போது, 'கேரளாவில் கொப்பரை தேங்காயை சமையல் எண்ணெயாக தயாரித்து விற்பனை செய்வது போன்று கூட்டுறவு அங்காடி மூலம் விற்பனை செய்ய வேண்டும். </p><p>ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு பில் போடுவதில் சிரமம் இருக்கிறது. ஏழை எளிய மக்களை ஆராய்ந்து அவர்களுக்கான ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.</p><p>அதற்கு அமைச்சர் வெங்கடரமணன் பதில் அளித்து கூறியதாவது:-</p><p>ரேஷன் கடைகளில் பில் போடுவதில் தாமதம் ஏற்படுகிறது என்று உறுப்பினர் சொல்லி இருக்கிறார். சர்வரை மேம்படுத்தி வருகிறோம். எனவே இதுபோன்ற பிரச்சினைகள் வருங்காலங்களில் இருக்காது. </p><p>ரேஷன் கடைகள், அம்மா உணவகங்கள், அங்காடி மையங்கள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் போன்ற திட்டங்களுக்காக மாதம் 2 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்கிறோம். ஆண்டுக்கு 24 கோடி லிட்டர் தேவைப்படுகிறது. </p><p>தேங்காய் எண்ணெயை ஒரு மாதம் கொடுத்துவிடலாம். அடுத்த மாதம் கொடுக்க முடியாமல் போய்விடும். ஒரே சீராக கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் வேறு எண்ணெயை மாற்ற முடியவில்லை. வருங்காலங்களில் வேறு எண்ணெய்கள் கிடைத்தால் கண்டிப்பாக வழங்குவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான புதிய தொழில் பயிற்சி - அமைச்சர் பர்வேஸ் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-artificial-intelligence-vocational-training-in-government-institutes-minister-parvees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-artificial-intelligence-vocational-training-in-government-institutes-minister-parvees#comments</comments><guid isPermaLink="false">78dabd77-82ed-4c3a-9aad-76a4fb74acd8</guid><pubDate>Wed, 02 Sep 2026 01:23:43 +0000</pubDate><atom:updated>2026-09-02T01:23:43.481Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,செயற்கை நுண்ணறிவு,அமைச்சர் பர்வேஸ்,தொழில் பயிற்சி நிலையங்கள்,Minister Parvesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/d88qoqzu/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் பர்வேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/d88qoqzu/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான புதிய தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பர்வேஸ் தெரிவித்துள்ளார்.</p><h2>குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம்</h2><p>தமிழக சட்டசபையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை குறித்த மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது:-</p><p>தொழிலாளர்களுக்கு பணியின்போது விபத்துகளின் காரணமாக ஏற்படும் பாதிப்பு மற்றும் மரணத்திற்கு இழப்பீடு வழங்குதல் ஆகிய நிதி சார்ந்த உதவிகளை தொழிலாளர் நலத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.</p><h2>தொழிலாளர்கள் பாதுகாப்பு</h2><p>தமிழ்நாட்டில் 5,415 பதிவு பெற்ற தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கண்காணிப்பு நடவடிக்கைகளை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகம் மூலம் அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பட்டாசு ஆலைகள், வேதிப் பொருட்களை கையாளும் தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு குழுக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.</p><h2>வேலை வாய்ப்பு முகாம்கள்</h2><p>படித்து முடித்த இளைஞர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்பை விரைவாகவும், எளிதாகவும் பெற அரசு பல்வேறு முன்னோடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தனியார் துறையிலும் தொழில் முனைவராக முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். இதுவரை 139 சிறிய மற்றும் 16 பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 513 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 26,330 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><h2>செயற்கை நுண்ணறிவு</h2><p>வெற்றித்தமிழகம் தொலைநோக்கு பார்வையின்படி ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் மிகுந்த முக்கியத்துவம் கருதி, அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் அது தொடர்பான புதிய தொழில் பயிற்சி தொடங்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. அனைத்து தொழில் பிரிவுகளிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் திட்டங்கள் (ஏ.ஆர் மற்றும் பி.ஆர்) அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டென்று மாறும் வானிலை.. 16 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை..!</title><link>https://www.dailythanthi.com/news/weather/rapidly-changing-weather-heavy-rain-set-to-lash-16-districts-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rapidly-changing-weather-heavy-rain-set-to-lash-16-districts-today#comments</comments><guid isPermaLink="false">19f32155-7cd9-45f8-86a9-2c38d1d6eefd</guid><pubDate>Wed, 02 Sep 2026 01:11:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T01:11:19.523Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,weather information,Weather Status,weather center,TN Rain,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/x4dwuek3/rain.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-02/x4dwuek3/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று ( 02-09-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">மிதமான மழை</a> பெய்யக்கூடும். </p><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (03-09-2026):</strong> திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>04-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a>யும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>05-09-2026 முதல் 07-09-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a>யும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>02-09-2026 முதல் 05-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>02-09-2026 முதல் 05-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (02-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>02-09-2026 முதல் 03-09-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>04-09-2026 மற்றும் 05-09-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>02-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>03-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>04-09-2026 மற்றும் 05-09-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>02-09-2026 முதல் 05-09-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி நகைகளுக்கும் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/following-gold-the-hallmark-stamp-is-now-mandatory-for-silver-jewelry-as-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/following-gold-the-hallmark-stamp-is-now-mandatory-for-silver-jewelry-as-well#comments</comments><guid isPermaLink="false">8f3f87aa-4e1d-4175-9159-a6370f7b27eb</guid><pubDate>Tue, 01 Sep 2026 23:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T23:30:00.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>silver,தங்கம்,gold,வெள்ளி,ஹால்மார்க் முத்திரை,ஹால்மார்க்,Silver Jewelry,வெள்ளி நகை,Hallmark</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/333vjq63/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/333vjq63/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பதை அடுத்த மாதம் (அக்டோபர்) கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>'ஹால்மார்க்' முத்திரை</h2><p>வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஒழுங்குமுறை கண்காணிப்பை பலப்படுத்தவும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. இது படிப்படியாக தற்போது வரை 400 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டதை போல, வெள்ளி நகைகளுக்கும் ஒவ்வொரு கட்டமாக அமல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 6 இலக்க 'ஹால்மார்க்' தனித்துவ அடையாள எண் (எச்.யு.ஐ.டி.) முறை மற்றும் உள்கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பான 'பி.ஐ.எஸ்.' 102 மாவட்டங்களில் 341 வெள்ளி பரிசோதனை மையங்களை நடத்தி வருகிறது. இதில் 25 ஆயிரம் நகை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். மேலும் பி.ஐ.எஸ். அமைப்பு 7 தூய்மை தரநிலைகளை அங்கீகரித்துள்ளது.</p><h2>தூய்மை தரம்</h2><p>2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விருப்பத்தின் அடிப்படையில் இருந்த இந்த திட்டத்தில் அதே ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி எச்.யு.ஐ.டி. இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 77 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளி நகைகளுக்கு 'ஹால்மார்க்' வழங்கப்பட்டுள்ளது. 'ஹால்மார்க்' செய்யப்பட்ட நகைகளில் பி.ஐ.எஸ். முத்திரை, 'சில்வர்' என்ற ஆங்கில வார்த்தை, தூய்மை தரம் மற்றும் எச்.யு.ஐ.டி. எண் இடம்பெறும். இதனை 'பி.ஐ.எஸ். கேர்' செயலி மூலம் வாடிக் கையாளர்கள் சரிபார்க்கலாம்.</p><p>'ஹால்மார்க்' முத்திரையை கட்டாயமாக்குவது, நுகர்வோர் தாங்கள் செலுத்தும் பணத்திற்கு ஏற்ற தூய்மையான வெள்ளியைப் பெறுவதை உறுதி செய்யும். மேலும் தூய்மை உத்தரவாதத்தை வழங்கி சந்தைக்கு அதிக வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.</p><h2>தண்டனை-அபராதம்</h2><p>பி.ஐ.எஸ். சட்டம் 2016-ன் படி, விதிகளை மீறும் வியாபாரிகளுக்கு ஓராண்டு வரை சிறை அல்லது குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அபராதம் (பொருட்களின் மதிப்பில் 5 மடங்கு வரை) விதிக்கப்படலாம். முத்திரையை தவறாக பயன்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தியாவில் பெரும்பாலான நகைக் கடைகள் 92.5 சதவீத ‘ஸ்டெர்லிங்' வெள்ளி தரத்தை பின்பற்றுவதாக அனைத்து இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்நாட்டு கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற தானியங்கி எந்திரங்கள்: டெண்டர் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/automated-machines-for-the-return-of-empty-liquor-bottles-tender-issued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/automated-machines-for-the-return-of-empty-liquor-bottles-tender-issued#comments</comments><guid isPermaLink="false">ecc56b99-2bc2-4759-8652-f900506050a1</guid><pubDate>Tue, 01 Sep 2026 23:12:48 +0000</pubDate><atom:updated>2026-09-01T23:12:48.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,டாஸ்மாக்,Tasmac,Tasmac Shops,மதுபாட்டில்,liquor bottles</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/67p65xh1/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-01/67p65xh1/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுபானம் குடித்த பிறகு காலிபாட்டில்களை சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் வீசுவதை தடுக்கும் வகையில், அவற்றை திரும்பப் பெறும் முறையை டாஸ்மாக் நடைமுறைப்படுத்தி உள்ளது. தற்போது இந்தப் பணியை தானியங்கி எந்திரங்கள் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுபான பாட்டில்களை தானாகப் பெற்றுக்கொள்ளும் எந்திரங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட உள்ளன. </p><p>இந்த எந்திரத்தில் காலி பாட்டிலை செலுத்தினால், பாட்டில் சரிபார்க்கப்பட்டு, அதற்கான ரூ.10 ஊக்கத்தொகை நுகர்வோருக்கு வழங்கப்படும். சேகரிக்கப்படும் காலி பாட்டில்கள் வகைப்படுத்தப்பட்டு, மறுபயன்பாடு அல்லது மறுசுழற்சிக்கு அனுப்பப்படும். மறுபயன்பாட் டுக்கு ஏற்ற கண்ணாடி பாட்டில்கள் சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தியாளர்களிடம் திருப்பி வழங்கப்படும். மற்ற கண்ணாடி மற்றும் உலோகப் பொருட்கள் பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.</p><p>இந்தப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய ரூ.50 கோடி மதிப்பில் தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த காலம் 7 ஆண்டுகள் ஆகும். இந்த டெண்டர் விண்ணப்பங்களை அக்டோபர் 5-ந்தேதி காலை 11 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>