<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 07 Aug 2026 07:33:12 +0000</lastBuildDate><item><title>திருப்பூர் மேம்பால பகுதியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து சீரமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-reorganization-at-the-tiruppur-flyover-area-through-the-installation-of-barricades</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-reorganization-at-the-tiruppur-flyover-area-through-the-installation-of-barricades#comments</comments><guid isPermaLink="false">da821a4d-c34a-4f6a-aed6-a8e48baf644e</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:16:34 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:16:34.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,Traffic,போக்குவரத்து</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/a2z6rcqq/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/a2z6rcqq/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருப்பூர் மாநகர பகுதியில் யுனிவர்சல் சாலையையும், ஈஸ்வரன்கோவில் சாலையையும் இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி செலவில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை கடந்த 4-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். ஆனால் சரியான திட்டமிடுதல் இல்லாமல் மேம்பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் தாறுமாறாக சென்ற வாகனங்களால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது.  </p><p>இந்தநிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி புதிய பாலப்பகுதிக்கு நேற்று காலை வந்தார். சிறிதுநேரம் அவர் அங்கு போக்குவரத்து நடைபெறுவதை பார்வையிட்டார். இதையடுத்து போக்குவரத்தை முறைப்படுத்த அங்கு தடுப்புகளை (பேரிகார்டுகள்) அமைக்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஈஸ்வரன் கோவில் செல்லும் பகுதியிலும், ஸ்ரீசக்தி தியேட்டர் பகுதியிலும் போக்குவரத்தை முறைப்படுத்த சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. </p><p>இதன் காரணமாக தற்போது பாலத்தின் இருபகுதிகளிலும் போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தடுப்புகள் உயரமாக இருப்பதால் எதிரேயும், வலது, இடது புறத்திலும் இருந்து வரும் வாகனங்களை இருசக்கர வாகன ஓட்டிகளால் பார்க்க முடியவில்லை. எனவே கூடிய விரைவில் இந்த தடுப்புகளை அகற்றிவிட்டு உயரம் குறைந்த கான்கிரீட் தடுப்புகளை அமைக்கவேண்டும். மேலும் பாலத்துக்கு சற்று நெருக்கமாக வேகத்தடைகள் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவோம் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-strengthen-the-livelihood-of-weavers-nayanar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-strengthen-the-livelihood-of-weavers-nayanar-nagendran#comments</comments><guid isPermaLink="false">f49ddc97-0280-471b-a34e-82dcf50d559d</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:13:15 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:13:15.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Weavers,நெசவாளர்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ofny48xs/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ofny48xs/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“நம் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கைவினைக் கலையையும் தலைமுறைகள் தாண்டி பாதுகாத்து வரும் கைத்தறி நெசவாளர்களின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் மனமார்ந்த தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துகள்!</p><p>கைத்தறியில் உருவாகும் ஒவ்வொரு ஆடையும் நம் மண்ணின் அடையாளத்தையும், நம் கலாச்சாரத்தின் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைக்கிறது.</p><p>கைத்தறி பொருட்களை ஆதரிப்போம். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவோம். நம் பாரம்பரியத்தைப் போற்றி, அடுத்த தலைமுறைக்கும் பெருமையுடன் கொண்டு சேர்ப்போம்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ் மோகம், போதைப் பொருள் புழக்கத்தால் பெருகும் வன்முறைக் கலாசாரம்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/violence-culture-fueled-by-the-obsession-with-reels-and-the-prevalence-of-drugs-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/violence-culture-fueled-by-the-obsession-with-reels-and-the-prevalence-of-drugs-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">3b6b21fc-19ff-4c39-bfcb-a0c9e05c0174</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:07:35 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:07:35.273Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/8v5hjiot/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/8v5hjiot/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>‘ரீல்ஸ்’ அரசியலில் கவனம் செலுத்துவதை விடுத்து, போதைப் பொருள் புழக்கத்தையும் இந்த வன்முறைக் கலாசாரத்தையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சடலத்துடன் செல்பி </h2><p>கோவை கிணத்துக்கடவு சுலபம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இருவர், ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் சடலத்துடன் செல்பி எடுத்து அவற்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள கொடூரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் சீர்குலைந்து கிடக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் அமைச்சர்கள் எப்போதும் 'ரீல்ஸ்' மோகத்தில் மூழ்கிக் கிடப்பது போலவே, இன்று தமிழக இளைஞர்களும் வன்முறையை ஒரு 'மாஸ்' (Mass) செயலாகக் கருதி, கொலை செய்துவிட்டு ரீல்ஸ் எடுக்கும் அளவிற்குச் சீரழிந்து போயிருப்பது வேதனைக்குரியது.</p><h2>இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்</h2><p>தமிழகத்தில் தடையின்றி கிடைக்கும் போதைப் பொருட்களும், மதுவுமே இதுபோன்ற மிருகத்தனமான வன்முறைகளுக்கு முக்கியக் காரணமாகும். இளைஞர்களை நல்வழிப்படுத்தத் தவறிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, வெறும் ‘ரீல்ஸ்’ அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதை விடுத்து, போதைப் பொருள் புழக்கத்தையும் இந்த வன்முறைக் கலாசாரத்தையும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இரும்புக்கரம் </a>கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வரக்கூடாது என்றுதான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர்: சவுமியா அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dam-is-being-planned-with-the-specific-intention-of-preventing-water-from-reaching-tamil-nadu-sowmiya-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dam-is-being-planned-with-the-specific-intention-of-preventing-water-from-reaching-tamil-nadu-sowmiya-anbumani#comments</comments><guid isPermaLink="false">926b3d85-6d54-434a-ab0a-0b4a4db26a86</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:29:14 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:29:14.876Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேகதாது அணை,Mekedatu dam,Sowmiya Anbumani</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/j8u6cuks/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/j8u6cuks/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசியதாவது;</p><p>”கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை. காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சட்ட முன்னெடுப்புகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில்தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்று தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அணை கட்ட வேண்டும், அல்லது கூடாது. அவ்வளவு தான். நடுவில் என்ன முயற்சி என்ன இருக்கு? நடுவில் முயற்சி செய்வது எல்லாம் தேவையில்லை." </p><p>என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஊசி மூலம் உடலில் போதை மருந்து செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-in-chennai-after-injecting-drugs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-in-chennai-after-injecting-drugs#comments</comments><guid isPermaLink="false">c0cc09a7-9a50-47c8-88e2-f2f80154959b</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:27:38 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:27:38.622Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ஊசி,போதை மருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/330754fn/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/330754fn/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பழையவனார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்ளும் பழக்கம் கொண்டவராகவும் இருந்து வந்துள்ளார். </p><p>இவ்வாறு அடிக்கடி போதையை ஊசி அவர் உடலில் செலுத்திக் கொண்ட காரணத்தினால், உடல்நிலை பாதிக்கப்பட்டு வெகு நாட்களாக சென்னை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் ஆகாஷ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் போதை ஊசியின் பழக்கத்தினால் நரம்புகள் அனைத்தும் தளர்வடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகாஷ் மருத்துவமனையில் உயிரிழந்தார். </p><p>இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, போதை ஊசிகள் எங்கு கிடைக்கிறது? யாரெல்லாம் இதை பயன்படுத்துகிறார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத முதல்-அமைச்சர் விஜய்... விசாரணை ஒத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/divorce-case-chief-minister-vijay-fails-to-appear-in-court-hearing-adjourned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/divorce-case-chief-minister-vijay-fails-to-appear-in-court-hearing-adjourned#comments</comments><guid isPermaLink="false">cd972a88-bb19-4ed3-b68f-6ae08ed932c8</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:16:03 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:16:03.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விவாகரத்து வழக்கு,சங்கீதா,divorce case,செங்கல்பட்டு கோர்ட்டு,Chengalpattu Court,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/i4m1qcr4/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/i4m1qcr4/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.</p><h2>விவாகரத்து கோரி மனு</h2><p>த.வெ.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p>சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><h2>முந்தைய விசாரணையில் என்ன நடந்தது?</h2><p>இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்று தரப்புகள் கோரிக்கை வைத்தன.</p><h2>இன்று விசாரணை</h2><p>அதனை தொடர்ந்து இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். </p> <h2>விசாரணை ஒத்திவைப்பு</h2><p>முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றிருந்ததால், அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>அதேவேளையில், லண்டனில் இருக்கும் சங்கீதா, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>‘சுற்றுச் சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’: மதுபானங்கள் மீது புதிய வரியை விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/environmental-and-social-welfare-levy-tamil-nadu-government-decides-to-impose-a-new-tax-on-alcoholic-beverages</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/environmental-and-social-welfare-levy-tamil-nadu-government-decides-to-impose-a-new-tax-on-alcoholic-beverages#comments</comments><guid isPermaLink="false">1cfd4bb5-dd13-4aa2-b4f1-d81293286655</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:11:19 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:11:19.225Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு அரசு,TN government,மதுபானம்,Liquor</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/4m7kyrrf/tnner.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/4m7kyrrf/tnner.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அளித்த விளக்க உரையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மதுபான நுகர்வினாலும், அதிலிருந்து உருவாகும் கண்ணாடி மற்றும் நெகிழி கழிவுகளினாலும் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து அரசு மிகுந்த கவலை கொண்டுள்ளது. </p><p>மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததும், போதிய அளவில் மறுசுழற்சி செய்யாததும், வனவிலங்குகள் மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிப்பதுடன், சூழலியல் சீரழிவிற்கும் பெரும் காரணமாக அமைகிறது என்பதும் அறியப்பட்டுள்ளது.</p> <h2>சமூக பாதிப்பு</h2><p>2. மேலும், அத்தகைய மோசமான பாதிப்புகளைக் குறைப்பதற்கு மாநில அரசுக்கு உள்ள கடமையை பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்த மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான நடைமுறைகளை வாக்குவிப்பதற்கும் தகுந்த நிதி மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் அரசு கருதுகிறது.</p><h2>'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை'</h2><p>3. அதற்கிணங்க, மதுபான விற்பனையின் மீது 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை' எனும் தீர்வையை விதிக்க அரசு முன்மொழிந்துள்ளது. இந்தத் தீர்வை மூலம் கிடைக்கும் நிதி வருவாய், பின்வரும் நோக்கங்களுக்காக அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றிற்காகப் பயன்படுத்தப்படும், அவையாவன, (a) மதுபானக் கொள்கலன்களை முறையாக மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் மற்றும் மறுபயன்பாடு ஆகியவற்றை எளிதாக்குதல்; (b) மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மதுப் பழக்க மீட்புத் திட்டங்கள்: (c) மதுப் பழக்க அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குதல்; (d) மது அருந்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் மற்றும் மதுபான அலகு கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் அபாயங்களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு மற்றும் கல்விப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல்; (e) சூழலியல், காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல்; மற்றும் (1) விதிகளின் மூலம் வகுத்துரைக்கப்படலாகிற சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் தொடர்புடைய ஏதேனும் பிற நோக்கங்கள்.</p> <p>4. எனவே, அரசானது, கூறப்பட்ட நோக்கத்திற்காக, 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தை தகுந்தவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.</p><p>5. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>மத்திய வரிகள் பகிர்வுக்கான அளவுகோல் எந்த மாநிலத்தையும் பாதிக்கக்கூடாது: சட்டசபையில் தனித்தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-tax-sharing-criteria-should-not-affect-any-state-separate-resolution-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-tax-sharing-criteria-should-not-affect-any-state-separate-resolution-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">c32759d9-04ab-4190-94e0-f558d3e53f7c</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:02:10 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:02:10.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,சட்டசபை,மத்திய அரசு,TNAssembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/xpw53y2u/mariyam33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/xpw53y2u/mariyam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய வரிகள் பகிர்வுக்கான அளவுகோல் எந்த மாநிலத்தையும் பாதிக்கக்கூடாது என்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><h2>அரசினர் தனித் தீர்மானம்</h2><p>தமிழக சட்டசபையில் இன்று, மத்திய அரசின் வரிப் பகிர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை உறுதி செய்யக் கோரி தனித் தீர்மானத்தை அரசு கொண்டு வந்தது. இந்த தனித் தீர்மானத்தை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">நிதி அமைச்சர் மரிய வில்சன்</a> கொண்டுவந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பு </h2><p>இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகளை நினைவுகூர்ந்தும், மாநிலங்கள் தங்களது அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது என்பதை அரசு உணர்ந்துள்ளது. </p><p>தமிழ்நாடு மாநிலம் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. </p><h2>கொள்கை அடிப்படையில் அமைய வேண்டும்</h2><p>மேலும், மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும், மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்தவித பாதகமான நிலையிலும் வைக்கப்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டும், இப்பேரவையில் இந்திய அரசை பின்வருமாறு வலியுறுத்தித் தீர்மானிக்கிறது:- </p><h2>உரிய நிதிப் பகிர்வு</h2><p>இந்திய அரசியலமைப்பின் நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகள், சமத்துவம் மற்றும் நியாயம் ஆகியவற்றிற்கு இணங்க, மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிய நிதிப் பகிர்வினை உறுதி செய்ய வேண்டும். </p><p>மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை உரிய முறையில் அங்கீகரிக்கும் வகையில், மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான, புறநிலையற்ற மற்றும் சமமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். </p><p>எந்த மாநிலத்தையும் பாதிக்கக்கூடாது</p><p>மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக, மத்திய வரிகளின் பகிர்விற்கான அளவுகோல்கள் எந்த மாநிலத்தையும் பாதகமான நிலையில் வைக்காதவாறு அமைக்கப்பட வேண்டும். </p><p>எதிர்காலத்தில் மத்திய  வரிகளின் பகிர்வு தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது, தமிழ்நாடு மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். </p><p>இவ்வாறு அவர் பேசினார். </p><p>இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு,  இந்த தீர்மானம் பொதுப்படையாக உள்ளது. இதில் முக்கியமான திருத்தம் செய்ய வேண்டும்.நிதி பகிர்வில் 50 சதவீத மாநிலங்களுக்கு இருக்க வேண்டும் அதை குறிப்பிட்டு தீர்மானத்தை மாற்ற வேண்டும் .மாநில அரசுகளின் வலிமைதான் மத்திய அரசின் வலிமை என பேரறிஞர் அண்ணா கூறினார்.   நிதி ஆயோக் கூட்டங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கருத்தை வலிமையாக குறிப்பிட்டார் என்றார்.</p><p>அதனை தொடர்ந்து தீர்மானத்தை முழு மனதாக அரசின் தனித்தீர்மானத்துக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் , நிதி பகிர்வை அதிகரிக்க அதிமுக வலியுறுத்தியது. நிதி பகிர்வில் தமிழகம் பாதிக்க கூடாது என  அவை தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.  அனைத்து கட்சிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது என சபாநாயகர் கூறினார். </p><p>அமைச்சர் மரிய வில்சன் கொண்டுவந்த அரசினர் தனித்திர்மானம் குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது. </p>]]></content:encoded></item><item><title>கோவிலுக்கு வந்த சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்... என்ன நடந்தது திருத்தணியில்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sekar-babus-car-stopped-upon-arrival-at-the-temple-what-happened-in-tiruttani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sekar-babus-car-stopped-upon-arrival-at-the-temple-what-happened-in-tiruttani#comments</comments><guid isPermaLink="false">ca4c82c1-643b-4195-b4ef-12e357bb6dfa</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:58:01 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:58:01.374Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Thiruvallur,திருவள்ளூர்,Sekar Babu,P. K. Sekar Babu,சேகர்பாபு,பி.கே.சேகர்பாபு,Tiruttani Murugan temple,திருத்தணி,tiruttani,Tiruttani Murugan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wo6tawy8/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wo6tawy8/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி,</p><p>ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சுவாமி தரிசனத்திற்கு வந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான பி.கே. சேகர்பாபுவின் கார், மலை அடிவாரத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>கோவிலில் பலத்த பாதுகாப்பு</h2><p>ஆடி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இந்த நிலையில், சேகர்பாபு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரது வாகனத்தை மலை அடிவாரத்திலேயே நிறுத்தினர். தனது வாகனத்திற்கு கார் பாஸ் இருப்பதுடன், தாம் எம்.எல்.ஏ. என்பதையும் சுட்டிக்காட்டி மேலே செல்ல அனுமதிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.</p><h2>போலீசாருடன் வாக்குவாதம் </h2><p>ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அனுமதி கிடைத்தால் மட்டுமே வாகனத்தை மேலே அனுமதிக்க முடியும் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">போலீசார் </a>தெரிவித்தார். இதையடுத்து சேகர்பாபு மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>கார் பாஸ் வைத்திருந்த பிற வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், சேகர்பாபுவின் வாகனம் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோவில் அறங்காவலர்கள் எடுத்துக்கூறியும் உடனடியாக அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><h2>பரபரப்பு நிலவியது</h2><p>சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக மலை அடிவாரத்தில் காத்திருந்த பின்னர், மாவட்ட எஸ்.பி. சாய் பிரணீத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து சேகர்பாபுவின் வாகனம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ap-tamim-ansari-appointed-as-chairman-of-the-tamil-nadu-minorities-economic-development-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ap-tamim-ansari-appointed-as-chairman-of-the-tamil-nadu-minorities-economic-development-corporation#comments</comments><guid isPermaLink="false">2701a793-9fea-4cb0-b15e-d031b6e3386e</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:28:30 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:28:30.206Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,TN govt,சிறுபான்மையினர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/cwoifvdd/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/cwoifvdd/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி,  ஏ.பி.தமீம் அன்சாரி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) தலைவராக (Chairman) நியமிக்கப்பட்டுள்ளார். இன்று 07.08.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 4.15 மணிக்கு, சென்னை TAMCO தலைவர் அறையில், அமைச்சர்கள் தலைமையிலும், IAS அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையிலும், புதிய தலைவர் பொறுப்பேற்க உள்ளார்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி விவாகத்தில் தவெக அரசு சமரசம் செய்யாது - அமைச்சர் ஆனந்த் உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-anand-affirms-that-the-tvk-government-will-not-compromise-on-the-cauvery-issue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-anand-affirms-that-the-tvk-government-will-not-compromise-on-the-cauvery-issue#comments</comments><guid isPermaLink="false">89848c46-13fb-4076-8f8c-b152dbd067e6</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:24:47 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:24:47.810Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery issue,காவிரி விவகாரம்,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dpnetsfy/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dpnetsfy/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசியதாவது;</p><p>மாதந்தோறும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கான  உரிய நீரை பெறுவதில் சாவாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக இரு மாநில முதல்-அமைச்சர்கள் இடையே கடந்த 3-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கர்நாடக முதல் மந்திரி அதை மறுத்துவிட்டார். தகுந்த நேரம் வரும்போது நேரில் சந்தித்து பேசுவோம் என தெரிவித்து விட்டார்.</p><p>மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. குடிநீர் தேவைக்கு மட்டும் அணை திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததன் காரணமாக காவிரியில் தண்ணீர் வரவில்லை. சூழலுக்கு தகுந்தபடி மேட்டூர் அணை திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். </p><p>தவெக அரசு காவிரி விவாகத்தில்  சமரசத்தில் ஈடுபடாது. சட்ட, நிர்வாக, தொழில்நுட்பரீதியாகநடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் முதல்-அமைச்சர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் நலன், மற்றும் காவிரி உரிமையை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>அனைத்தும் தனியார்மயமா? தவெக அரசின் பயணப் பாதை ஆபத்தானது: அன்புமணி எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/everything-to-be-privatized-the-tvk-governments-path-is-dangerous-anbumani-warns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/everything-to-be-privatized-the-tvk-governments-path-is-dangerous-anbumani-warns#comments</comments><guid isPermaLink="false">fd9a4184-60b7-43e3-b6b1-6b7bfab0966f</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:19:40 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:19:40.105Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/8wgzkqqp/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/8wgzkqqp/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள 6 லட்சம் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அரசின் அணுகுமுறை ஆபத்தானது</h2><p>தமிழ்நாட்டில் இளைய தலைமுறையின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்த தவெகவின் ஆட்சியில்  இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கும்; அரசு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு முற்றிலும் எதிராக அரசின் பல்வேறு சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், மனிதநேயத்துக்கும் எதிரான அரசின் இந்த அணுகுமுறை ஆபத்தானது ஆகும்.</p><p>தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தனியார் கூட்டாண்மையுடன் செயல்படுத்துவதற்கான 5 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பிலும் மின்சாரப் பேருந்துகளை தனியார் நிறுவனங்களின் மூலம் மொத்த செலவு ஒப்பந்த முறையில் இயக்குதல், மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த விடுதிகளை அமைத்தல், கோவை - அரியலூர் இடையே  ரூ.4000 கோடி மதிப்பிலான மின்வழித்தடம் அமைக்கும் திட்டம்,  மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைத்தல், சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.15,000 கோடியில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்டுதல் ஆகியவை தான் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களாகும்.</p><h2>வேலைவாய்ப்பு குறையும்</h2><p>கடந்த திமுக ஆட்சியிலேயே சென்னையில் தனியார் நிறுவனங்களின் மூலம் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டன. இந்த முறையில் ஏற்கனவே 625 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், நடப்பாண்டில் மேலும் 1000 பேருந்துகள் சேர்க்கப்படவுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக் கழகங்களின்  அனைத்துப் பேருந்துகளும் மின்மயமாக்கப்பட்டு தனியார் முறையில் இயக்கப்படும். இந்த முறையில் பேருந்துகளை தனியார் நிறுவனங்களே இயக்கும்; கி.மீக்கு ரூ.81 வீதம் ஒரு நாளைக்கு 400 கி.மீ இயக்கப்பட்டால் அதற்காக ரூ.32,400-ஐ போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளும். ஓட்டுனர் - நடத்துனர் உள்ளிட்ட பணியாளர்களையும் தனியார் நிறுவனங்களே நியமித்துக் கொள்ளும் என்பதால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இனி ஓட்டுனர்கள், நடத்துனர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். அதனால் வேலைவாய்ப்பு குறையும்.</p><p>தனியார் பங்களிப்புடன் அரசு செயல்படுத்தவுள்ள மற்ற திட்டங்களிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படும். அதனால் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்பது குதிரைக் கொம்பாகி விடும். ஏற்கனவே, போக்குவரத்து, மின்சாரம், உயர்கல்வி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை பணி நியமனங்கள் நடைமுறைக்கு வந்து விட்டன. அதன்படி ஒவ்வொரு அலுவலகத்திற்கும் தேவையான பணியாளர்களை தனியார் மனிதவள நிறுவனங்களே அனுப்பும். அவர்களுக்கான ஊதியத்தை தனியார் மனிதவள நிறுவனத்திற்கு அரசு செலுத்தும். அந்த ஊதியத்தின் ஒரு பகுதியை மட்டும் பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுத்து விட்டு, மீதமுள்ள தொகையை சுருட்டிக் கொள்ளும். இந்த நடைமுறையில் பணியாளர்களின் உழைப்பும், ஊதியமும் சுரண்டப்படும். அவர்களுக்கு எந்த உரிமைகளும் தனியார் நிறுவனங்களால் வழங்கப்படாது.</p><h2>உரிமைகள் பறிக்கப்பட்டு விடும்</h2><p>இத்தகைய சூழலில் அரசு மற்றும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுத்துறை </a>நிறுவனங்களின் சேவைகளும் தனியார்மயமாக்கப்பட்டால்,  அத்துறைகளின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் சூறையாடப்படும். சேவை வழங்குவதற்கான பணியாளர்களை தனியார் நிறுவனங்களே நியமித்துக் கொள்ளும். இந்த நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப் படாது; ஊழியர்களுக்கு சட்டப்படியாக வழங்க வேண்டிய எந்த உரிமைகளும் வழங்கப்படாது. தனியார் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக பணியாளர்கள் மாற்றப்படுவார்கள். பல நூற்றாண்டுகளாக போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விடும். தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவராகக் கொண்ட த.வெ.க. இத்தகைய சுரண்டல் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது.</p><p>ஆனால், இனிவரும் காலங்களில் இத்தகைய சுரண்டல் திட்டங்கள் அதிகரிக்குமோ? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற சமூகநீதியில் அக்கறை கொண்ட கட்சிகளின் ஐயமாக உள்ளது. அதற்கு காரணம் தமிழக அரசின் வருவாய் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டிருப்பது தான். உலக வங்கியில் நீண்டகாலம் பணியாற்றிய மாண்டெக் சிங் அலுவாலியா, சீர்திருத்தம் என்ற பெயரில் உலக வங்கியின் விருப்பத்திற்கு ஏற்ற இத்தகைய திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்துவார் என்பது தான் எங்களின் அச்சத்திற்கு காரணம் ஆகும்.</p><h2>இளைஞர்களுக்கு செய்யும் துரோகம்</h2><p>தமிழ்நாட்டில் இன்று தவெக ஆட்சி நடைபெறுகிறது என்றால் அதற்கு முழுமுதல் காரணம் இளைஞர்கள் தான். அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய முதல்-அமைச்சர் விஜய்க்கு உண்டு. அதற்காக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்குதல், தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அதற்கு மாறாக, வேலைவாய்ப்புகளையும், சமூகநீதியையும் சூறையாடும் தனியார்மயமாக்கல், வேலைவாய்ப்புகளை குத்தகைமயமாக்குதல் போன்ற அநீதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் அது தமிழகத்திற்கும், இளைஞர்களுக்கும் செய்யும் துரோகம்.</p><p>எனவே, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன சேவைகளை தனியார்மயமாக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இனியும் இத்தகைய திட்டங்கள் அனுமதிக்கப்படாது என்று தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதுடன், அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள 6 லட்சம் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாளைய எம்பிக்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா? - சட்டசபையில் அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-dmk-participate-in-tomorrows-mp-meeting-minister-nirmal-kumar-questions-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-dmk-participate-in-tomorrows-mp-meeting-minister-nirmal-kumar-questions-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">bd6a6296-9739-42db-b6a3-804fcc74e7cd</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:15:44 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:15:44.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,DMK,தமிழக சட்டசபை,TNAssembly,எம்.பி.க்கள் கூட்டம்,நிர்மல் குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/iraam3cv/nirmalkumar33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/iraam3cv/nirmalkumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p> <p>சட்டசபையில் அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:-</p><p>யாரை பார்த்தும் முதல்-அமைச்சர் விஜய்க்கு பயம் இல்லை. அனைத்து கட்சி கூட்டம் நடத்த என்ன பயம் என உதயநிதி கேட்கிறார். 3 வருடங்களாக எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஒருமனதாக தான் தீர்மானத்தை நிறைவேற்றின. நாளைய எம்பிக்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா?</p><p>தொகுதி மறுவரையறை குறித்து அனைத்து எம்.பி.க்கள் கூட்டத்தை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">முதல்-அமைச்சர் விஜய்</a> நாளை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூற வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/felix-gerald-appointed-as-chairman-of-the-tamil-nadu-minorities-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/felix-gerald-appointed-as-chairman-of-the-tamil-nadu-minorities-commission#comments</comments><guid isPermaLink="false">12fe3045-e27c-4cd8-a287-03a1921bbf4e</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:49:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:49:57.801Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,TN govt,செய்தி தொடர்பாளர்,சிறுபான்மையினர் ஆணையம்,Felix Gerald</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/cy097j3u/atalk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/cy097j3u/atalk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் பெலிக்ஸ் ஜெரால்டு. இவர் தற்போது தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து அரசு அறிவித்துள்ளது. மேலும் மூன்று ஆண்டுகள் அவர் இந்த பதவியை வகிப்பார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>மூத்த பத்திரிகையாளரான பெலிக்ஸ் ஜெரால்டு, அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு,  யூடியூப் சேனல் நடத்தி சமூக மற்றும் அரசியல் கருத்துகளை வீடியோவாக வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/xgC9KNlKjC8"></iframe></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/7zyvtd9r/karu.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/adequate-compensation-must-be-provided-to-farmers-engaged-in-kuruvai-cultivation-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/adequate-compensation-must-be-provided-to-farmers-engaged-in-kuruvai-cultivation-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">61a417ee-0ecc-4dad-8e26-2a7d149c0137</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:48:58 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:48:58.470Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,Cauvery issue,காவிரி விவகாரம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5fmjumao/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5fmjumao/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;</p><p>மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். விவசாய பிரதிநிதிகளிடமும் ஆலோசனை செய்யவேண்டும். இதுதான் கடந்த கடந்த காலங்களில் நடந்துள்ளது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்கு திறந்துவிட அம்மாநில அரசு மறுக்கிறது. காவிரி ஒழுங்காற்று வாரியத்தின் பரிந்துரையையும், காவிரி மேலாண்மை ஆணையத்தில் உத்தரவுகளையும் கர்நாடக அரசு மதிப்பதில்லை. </p><p>கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் வரும் என 2 லட்சம் ஏக்கரில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் திறக்காததால் 2 லட்சம் ஏக்கரில் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து போயுள்ளன. எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p> ]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம்: தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க நான் தயாராக இருக்கிறேன்; முதல்-அமைச்சர் விஜய்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-ready-to-bear-that-for-the-people-of-tamil-nadu-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-am-ready-to-bear-that-for-the-people-of-tamil-nadu-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">5ad2e4d2-4f83-4f78-99f0-266ecfc78546</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:43:45 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:43:45.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TNAssembly,காவிரி விவகாரம்,CauveryIssue,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/lukfuztl/cmvijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/lukfuztl/cmvijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.  இந்தநிலையில்,  தவெக அரசு அமைந்த பிறகு மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு இதுவரை இல்லாத வேகத்தில் செயல்படுகிறது.</p><p>காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன. ஆனால், இங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட தமிழ்நாடு அரசு மறுக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றியதாவது:- </p><p>காவிரி நமக்கு உயிர் ஆதாரம்; அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை.மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்.  காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கோரிக்கை வைத்தது நான்தான்.</p><p>பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை பிரதமருக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் சேர்ந்ததுதான் தீர்மானம் நிறைவேற்றினோம். </p><p>மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலுக்குபின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினேன்.   கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டபோது 1969-ல் இதே பேரவையில் விவாதங்கள் நடந்தன.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20">காவிரிப் பிரச்னை</a>யில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கோரிக்கை வைத்தது நான்தான். .காவிரி விவகாரத்தை தீர்ப்பதற்கான ஒரே எண்ணத்துக்காகவே பெங்களூரு செல்ல முடிவெடுத்தேன். பெங்களூரு சென்று கர்நாடக முதல்-மந்திரியுடன் பேசி பார்ப்போமே என நினைத்துதான் முடிவெடுத்தேன்.பகை நாடுகளே பேசி தீர்க்கின்றன. </p><p>பக்கத்து மாநிலத்துடன் பேசி பார்க்கலாம் என்றுதான் நினைத்தேன். பெங்களூரு சென்று அவமானம் நடந்தால் என்னாகும் என கேட்டார்கள். மக்களுக்காக அதையும் தாங்க தயார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-passing-through-trichy-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-passing-through-trichy-3#comments</comments><guid isPermaLink="false">054efb7c-f467-4d84-9284-99717823bdf0</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:37:56 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:37:56.969Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/7gam9mxf/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/7gam9mxf/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><h2>பராமரிப்பு பணிகள்</h2><p>தெற்கு ரெயில்வேயின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருவதால், திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் (வண்டி எண்: 76820) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 10-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும்.</p><p>மறுமார்க்கமாக காரைக்காலில் இருந்து மாலை 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால்-திருச்சி டெமு ரெயில் (வண்டி எண்: 76819) மேற்கண்ட தேதி களில் காரைக்கால் திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படு கிறது. இந்த ரெயிலானது திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப் பட்டு திருச்சி செல்லும்.</p><h2>எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</h2><p>இதேபோல் செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16848) நாளை (சனிக்கிழமை) முதல் 11-ந்தேதி வரையும், கன்னியா குமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12666) நாளையும், நாகர்கோவில் மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16352) வருகிற 9-ந் தேதியும் திருப்பி விடப்பட்டு மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். இந்த தக வலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை  - துரைமுருகன் காட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-party-has-the-standing-to-offer-advice-to-the-dmk-duraimurugan-lashes-out</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-party-has-the-standing-to-offer-advice-to-the-dmk-duraimurugan-lashes-out#comments</comments><guid isPermaLink="false">df2547bb-e313-4066-a3fb-89527d9f8e37</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:32:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:32:55.045Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,Duraimurugan,துரைமுருகன்,துரைமுருகன் அறிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/xp2ds048/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/xp2ds048/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரிப் பிரச்சினையில் ஒற்றுமையாக இருந்து தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில், த.வெ.க. அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது</p><h2>Fair Delimitation</h2><p>தமிழ்நாட்டின் நலனையும், நம் மாநிலத்திற்குரிய பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் ‘Fair Delimitation’ மேற்கொள்ள வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு.</p><p>கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் தி.மு.க. இப்போதும் உறுதியாக இருக்கிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை.</p><p>நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. முறையற்ற தொகுதி மறுசீரமைப்பால் இந்திய அளவில் ஏற்படவுள்ள ஆபத்தை முதன்முதலாக எடுத்துரைத்து, அதற்கெதிரான வலுவான கருத்தை உருவாக்கி, ஒருமித்த குரல்களை ஒன்றிணைத்ததே தி.மு.க.வும் எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும்தான் என்பதை நாடறியும்.</p><h2>எங்களுக்குத் தயக்கம் இல்லை</h2><p>சென்னையில் இதற்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மாநிலங்களையும் ஓரணியில் திரட்டி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, இந்த விவகாரம் குறித்து தேசிய அளவில் விவாதிக்க வைத்தோம்.</p><p>இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் இருந்தபோதே, “தேர்தல் கூட எங்களுக்குப் பிறகுதான்; தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்திருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்ப்பதுதான் எங்களது முதல் பணி” எனப் பிரகடனம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள இல்லங்களின் முன் கருப்புக் கொடியேற்ற அழைப்பு விடுத்து, அந்தச் சட்டமுன்வரைவின் நகலை எரித்து எதிர்ப்புக் காட்டியவர்தான் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்.</p><p>எனவே, இவற்றின் அடிப்படையில், தற்போதைய அரசு ஆகஸ்ட் 8 அன்று அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை.</p><h2>‘டேக் டைவர்ஷன்’ வேண்டாம் </h2><p>ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழ்நாடு அரசிடம் திராவிட முன்னேற்றக் கழகம் முன்வைக்கிறது.</p><p>புதுக் கூட்டாளியான காங்கிரசின் மனம் புண்படும் என்பதால் மேகதாது விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது!</p><p>தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது; பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்கும் முன்னணிப் படையாகக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. இருக்கும். அதேநேரத்தில், இன்றைய சூழலில் காவிரி உரிமையை மீட்பதும், மேகதாது அணையைத் தடுப்பதும் மிக மிக முக்கியமானவை. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசிய அவசரம் இப்போது எழுந்துள்ளது. இந்த நேரத்தில் த.வெ.க. அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
சட்டசபையில் இயக்குநர் பாக்யராஜ்,  பாடகி எஸ்.ஜானகி உள்ளிட்டோருக்கு இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/condolences-offered-in-the-legislative-assembly-to-director-bhagyaraj-singer-s-janaki-and-others</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/condolences-offered-in-the-legislative-assembly-to-director-bhagyaraj-singer-s-janaki-and-others#comments</comments><guid isPermaLink="false">54e49b2d-ad8a-4dae-a5d0-ce58d0d3dbef</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:31:19 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:31:19.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Legislative Assembly,condolences,Tamilnadu ​,இரங்கல் தீர்மானம்,பாடகி எஸ்.ஜானகி,இயக்குநர் பாக்யராஜ்,ஜே.சி.டி. பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/777nb61g/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/777nb61g/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 6-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (ஆகஸ்ட் 7) தொடங்கியது.</p><h2>இரங்கல் தீர்மானம் வாசித்த சபாநாயகர்</h2><p>இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும், முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார்.</p>  <h2>பிரபலங்களுக்கு அஞ்சலி</h2><p>அந்த இரங்கல் தீர்மானத்தில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், எழுத்தாளர் புவியரசு, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுருளிவேல், பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி உள்ளிட்டோர் நினைவுகூரப்பட்டு, அவர்களின் மறைவுக்கு சட்டசபை சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p><h2>மவுன அஞ்சலி செலுத்திய உறுப்பினர்கள்</h2><p>இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்டசபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தி, மறைந்தோருக்கு மரியாதை செலுத்தினர்.</p><p>இதையடுத்து சட்டசபை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று, பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கியது.</p> ]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரத்தில் தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? - உதயநிதி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-action-has-the-tvk-government-taken-regarding-the-mekedatu-issue-udhayanidhi-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-action-has-the-tvk-government-taken-regarding-the-mekedatu-issue-udhayanidhi-asks#comments</comments><guid isPermaLink="false">1f7ca845-6e5e-4535-a761-8c77d847a777</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:29:21 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:29:21.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,மேகதாது அணை,Mekedatu dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/xz7uswsf/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/xz7uswsf/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;</p><p>மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாவில் அணை கட்ட நிதி உதவி கோரியிருந்தார். ஜல்சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து மேகதாது அணைக்கட்ட ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்தார். </p><p>கடந்த ஒரு மாதத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு பணிகளை கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுகிறது. இதற்காகத்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட நாம் கோரிக்கை விடுத்தோம். விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி கொடுத்துவிட்டு அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன்? </p><p>மேகதாது அணை குறித்து விவாதிக்க தவெக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். குறுவை சாகுபடி விவாசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>“முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று..” - உதயநிதி ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/following-the-path-of-kalaignar-udhayanidhi-stalins-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/following-the-path-of-kalaignar-udhayanidhi-stalins-post#comments</comments><guid isPermaLink="false">5550517f-1f31-4182-bdb4-b1e090953ea6</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:19:50 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:19:50.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Karunanidhi,கருணாநிதி,கலைஞர் கருணாநிதி,former chief minister,Kalaignar Karunanidhi,முன்னாள் முதல்-அமைச்சர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/2xzdevxv/ora.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/2xzdevxv/ora.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.</p><p>திருவாரூர் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ம் தேதி பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 40 ஆண்டுகள் தி.மு.க. தலைவர், ஐந்து முறை தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர். கருணாநிதியின் 8வது நினைவுநாளையொட்டி, திமுக தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் அந்த பதிவில் தி.மு.க. முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி குறித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் <a href="https://x.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்கள்… <a href="https://t.co/zJnTSuI4Rx">pic.twitter.com/zJnTSuI4Rx</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2085572593864831357?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>கருணாநிதியின் நினைவுதினம்: நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி! - மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karunanidhis-remembrance-day-the-architect-who-built-modern-tamil-nadu-mk-stalins-tributes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karunanidhis-remembrance-day-the-architect-who-built-modern-tamil-nadu-mk-stalins-tributes#comments</comments><guid isPermaLink="false">6ddaf75c-7582-4bb2-843c-8b12e0b43453</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:09:11 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:09:11.758Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,Karunanidhi,கருணாநிதி,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ro5s78hr/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ro5s78hr/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது</p><h2>கலைஞர் கருணாநிதி</h2><p>திருவாரூர் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ம் தேதி பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 40 ஆண்டுகள் தி.மு.க. தலைவர், ஐந்து முறை தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கலைஞர் கருணாநிதி காலமானார். கருணாநிதியின் 8வது நினைவுநாளையொட்டி, திமுக தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.</p><h2>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</h2><p>கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ள அமைதிப் பேரணி, இன்று காலை சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது. இதனைத்தொடர்ந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.</p><p>இந்த நிலையில், கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அவர்தான் நமக்கு எல்லாம்</h2><p>எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!</p><p>அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!</p><p>ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர்!</p><p>13 முறை சட்டமன்ற உறுப்பினர்!</p><p>தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!</p><p>அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!</p><p>நவீனத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டை </a>உருவாக்கிய சிற்பி!</p><p>அரசியலும் ஆட்சியும்,</p><p>கலையும் இலக்கியமும்,</p><p>திரையும் நாடகமும்,</p><p>சின்னத்திரையும்</p><p>சமூக வலைத்தளமும் என</p><p>அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!</p><p>கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!</p><p>அவர்தான் நமக்கு எல்லாம்!</p><p>அவரின்றி நாம் இல்லை!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>16 வயது மாணவி கர்ப்பம்: கல்லூரி மாணவர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-student-pregnant-college-student-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-student-pregnant-college-student-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">5e7d7404-1071-4ea2-8388-ddf291783b91</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:56:06 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:56:06.510Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>College student,POCSO act,கல்லூரி மாணவர்,கர்ப்பம்,போக்சோ,pregnancy</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/j21k7g2c/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/j21k7g2c/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வெலிங்டன்,  </p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர், ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் அறிமுகமாகி பழகி வந்தனர். இது காதலாக மாறியது. சமீபத்தில் கல்லூரி மாணவி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். </p><p>அங்கு பரிசோதனை செய்த டாக்டர், கல்லூரி மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் குன்னூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீ சார் விசாரணை நடத்தினர். இதில் கல்லூரி மாணவர் மாணவியுடன் நெருங்கி பழகி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>‘ஜனநாயகன்’ படத்தில் வரும் விழிப்புணர்வு காட்சி... படம் பார்த்த சிறுமி பெற்றோரிடம் கூறிய அதிர்ச்சி தகவல் - போக்சோவில் ஒருவர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/awareness-scene-injananayagan-a-young-girl-who-watched-the-film-revealed-shocking-information-to-her-parents-one-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/awareness-scene-injananayagan-a-young-girl-who-watched-the-film-revealed-shocking-information-to-her-parents-one-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">6ce95c6f-2e26-4603-aeec-09fab624e7b9</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:45:13 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:45:13.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,போக்சோ,POCSO,ஜனநாயகன்,Jananayagan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/klwkvdkh/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/klwkvdkh/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த படத்தில், பள்ளி குழந்தைகளிடம் ‘குட் டச், பேட் டச்’ (Good touch, Bad touch) குறித்து விஜய் விளக்குவது போன்ற விழிப்புணர்வு காட்சி இடம்பெற்றிருந்தது. பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த காட்சியில் கூறப்பட்டிருந்தது. </p><p>இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் வரும் விழிப்புணர்வு காட்சியை பார்த்து, சென்னையை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்து தந்தையிடம் கூறியதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். </p> <p>சென்னை கே.கே.நகரை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அந்த தம்பதியினர் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் இருவரும் தந்தையுடன் வசித்து வரும் நிலையில், தாய் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி அங்கேயே வீட்டு வேலை செய்து வருகிறார். அந்த தாய் சில சமயங்களில் தனது குழந்தைகளை, தான் வேலை செய்யும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். </p><p>இந்நிலையில், கடந்த 30-ந்தேதி சிறுமியும், அவரது தந்தையும் ‘ஜனநாயகன்’ படம் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அந்த படத்தில் வரும் பாலியல் அத்துமீறல் தொடர்பான விழிப்புணர்வு காட்சியை பார்த்த சிறுமி, இதே போன்ற சம்பவம் தனக்கு நடந்துள்ளதாக தந்தையிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, ‘யார் அவ்வாறு செய்தது?’ என்று விசாரித்துள்ளார். </p><p>தனது தாய் வேலை செய்து வரும் வீட்டில் உள்ள ஒரு நபர் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை உடனடியாக இது குறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பெரியன் என்ற நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். </p> ]]></content:encoded></item><item><title>கட்சி வேறுபாடின்றி ஆலோசனை: முதல்-அமைச்சரின் நடவடிக்கைக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultation-across-party-lines-manickam-tagore-praises-chief-ministers-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultation-across-party-lines-manickam-tagore-praises-chief-ministers-move#comments</comments><guid isPermaLink="false">54d0c39f-a354-4123-948a-45c597990f17</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:44:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:44:31.206Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/vnz9w31a/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/vnz9w31a/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கட்சி வேறுபாடு இன்றி ஆலோசனை நடத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடுத்திருக்கும் முடிவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வேறுபாடு இன்றி ஆலோசனை </h2><p>இன்று காலை 6:30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்திலிருந்து நேரில் வந்த இந்த அதிகாரப்பூர்வ அழைப்பிற்கு எனது நன்றிகள். </p><p>கடந்த 12 ஆண்டுகளில் 5 முதல்-அமைச்சர்களை எம்பியாகப் பார்த்திருக்கிறேன். ஆனால், முதல்முறையாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் அழைத்து, கட்சி வேறுபாடு இன்றி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆலோசனை </a>நடத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடுத்திருக்கும் இந்த சிறப்புமிக்க முடிவை வெகுவாகப் பாராட்டுகிறேன்.</p><h2>நல்ல மரபு தொடரட்டும்!</h2><p>மத்திய பாஜக அரசின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்நாடு ஒரே குரலாக டெல்லியில் ஒலிக்க அனைவரும் இணைந்து நிற்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையுடன், அழைப்பு இந்த நல்ல மரபு தொடரட்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவுதினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8th-death-anniversary-of-former-chief-minister-karunanidhi-silent-procession-led-by-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8th-death-anniversary-of-former-chief-minister-karunanidhi-silent-procession-led-by-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">d2b5b241-523d-44f2-9881-8e3c8ba08af8</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:19:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:19:52.047Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,தமிழகம்,Karunanidhi,கருணாநிதி,கலைஞர் கருணாநிதி,அமைதிப்பேரணி,former chief minister,Kalaignar Karunanidhi,நினைவுதினம்,முன்னாள் முதல்-அமைச்சர்,silent procession</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/vf623t9w/kopp.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/vf623t9w/kopp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய முன்னாள் முதல்-அமைச்சரும், <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது </p><h2>கலைஞர் கருணாநிதி</h2><p>திருவாரூர் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ம் தேதி பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 40 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> தலைவர், ஐந்து முறை தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கலைஞர் கருணாநிதி காலமானார். கருணாநிதியின் 8வது நினைவுநாளையொட்டி, திமுக தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். </p><h2>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</h2><p>இந்நிலையில் கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ள அமைதிப் பேரணி, இன்று காலை சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது. இதனைத்தொடர்ந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> தலைவர் மு.க.ஸ்டாலின்.  </p><h2>நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்</h2><p>இந்த அமைதிப் பேரணியில், முன்னாள் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.  </p>]]></content:encoded></item><item><title>108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு - தொழில் தீர்ப்பாயம் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/25-salary-hike-for-108-ambulance-staff-industrial-tribunal-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/25-salary-hike-for-108-ambulance-staff-industrial-tribunal-order#comments</comments><guid isPermaLink="false">396d837d-0873-4f99-90da-11d446ec55a1</guid><pubDate>Fri, 07 Aug 2026 02:58:27 +0000</pubDate><atom:updated>2026-08-07T02:58:27.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ambulance,ஆம்புலன்ஸ்,108 ஆம்புலன்ஸ்,ambulance driver,ஆம்புலன்ஸ் சேவை,ambulance service,108 Ambulance Service,ஆம்புலன்ஸ் ஊழியர்கள்,108 ambulance staff,தொழில் தீர்ப்பாயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/g0g5t0ic/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/g0g5t0ic/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 2022–23ஆம் ஆண்டிற்கான 25 சதவீத ஆண்டு ஊதிய உயர்வையும், 8.33 சதவீத குறைந்தபட்ச போனசையும் வழங்க வேண்டும் என்று சென்னை தொழில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>தொழில் தீர்ப்பாயத்தில் வழக்கு</h2><p>தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு 108 அவசரகால ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், 2021–22 மற்றும் 2022–23ஆம் ஆண்டுகளுக்கு 30 சதவீத ஆண்டு ஊதிய உயர்வும், 2022–23ஆம் ஆண்டிற்கான தீபாவளி போனசும் வழங்கக் கோரி, 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை தொழில் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p>இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத் தலைவர் பி. முருகன், இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின்னர் தீர்ப்பு வழங்கினார்.</p><h2>25 சதவீத ஊதிய உயர்வு</h2><p>தீர்ப்பில், 2021–22ஆம் ஆண்டுக்கான 16 சதவீத ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை அடிப்படையில் வழங்கப்பட்டதால், அந்த ஆண்டிற்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.</p><p>அதேசமயம், 2022–23ஆம் ஆண்டில் புதிய பேச்சுவார்த்தை நடத்தாமல் அதே 16 சதவீத ஊதிய உயர்வைத் தொடர்ந்ததும், அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படாததும் கருத்தில் கொண்டு, அந்த ஆண்டிற்கு 25 சதவீத ஆண்டு ஊதிய உயர்வை இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏற்கனவே வழங்கப்பட்ட 16 சதவீத உயர்வை இதில் கழித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.</p><h2>போனஸ் வழங்க வேண்டும்</h2><p>மேலும், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஊக்கத்தொகை </a>மற்றும் பண்டிகைச் செலவுத்தொகையை போனசாகக் கருத முடியாது என்பதால், 2022–23ஆம் ஆண்டிற்கு தகுதியுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் 8.33 சதவீத குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.</p><p>அத்துடன், வழக்குச் செலவாக இரு தொழிற்சங்கங்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம், இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப் பாதையில் செல்லும் என அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/announcement-guruvayur-express-to-run-on-an-alternate-route</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/announcement-guruvayur-express-to-run-on-an-alternate-route#comments</comments><guid isPermaLink="false">858d3ae0-a3cb-43ba-879a-cb57fe156cea</guid><pubDate>Fri, 07 Aug 2026 02:55:47 +0000</pubDate><atom:updated>2026-08-07T02:55:47.994Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,train service,குருவாயூர் எக்ஸ்பிரஸ்,Guruvayur Express</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/098vd361/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/098vd361/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>மதுரை கோட்டத்தில் நடைபெற இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக, சில எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12666), மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல்லாது. </p><p>நாகர்கோவிலில் இருந்து வருகிற 9, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மராட்டிய மாநிலம் லோகமான்ய திலக் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16352), மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். திண்டுக்கல் செல்லாது. </p><p>குருவாயூரில் இருந்து வருகிற 12-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை செல்லாது. நாகர்கோவிலில் இருந்து வருகிற 22, 29 ஆகிய தேதிகளில் காலை 9.25 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16354), விருநகர், மானாமதுரை, காரைக்குடி. திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக காச்சிகுடா செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.” </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மரபணு ஆய்வில் புதிய தகவல்: கீழடி மக்கள் அதிகளவு இறைச்சி உண்டனர்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-finding-from-genetic-analysis-the-people-of-keeladi-consumed-large-amounts-of-meat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-finding-from-genetic-analysis-the-people-of-keeladi-consumed-large-amounts-of-meat#comments</comments><guid isPermaLink="false">ca1d8009-f1ff-4bf0-abb8-51817a0bdfa6</guid><pubDate>Fri, 07 Aug 2026 02:02:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T02:02:12.695Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,கீழடி,கீழடி அகழாய்வு,Keeladi,புதிய தகவல்,மரபணு சோதனை,genetic analysis</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/0s7krcux/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/0s7krcux/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>கீழடியில், 2014 முதல் அகழாய்வு நடந்து வந்தாலும், 2021ல் கொந்தகையில் அகழாய்வு தொடங்கிய பின், மதுரை காமராஜர் பல்கலை மரபணு பிரிவும் இதில் இணைந்தது. கொந்தகையில், 137 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. அத்துடன் மக்களின் எலும்பு கூடுகளும் கண்டறியப்பட்டன. அவற்றை, மதுரை காமராஜர் பல்கலை மரபணு பிரிவு தலைவர் குமரேசன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.</p><h2>மரபணுத்துறை ஆய்வு</h2><p>சமதளம் மற்றும் தாழிகளில் இருந்த எலும்பு திசுக்கள், தாழிகளின் பக்க சுவர்களில் இருந்த கொழுப்புகள், பற்களில் இருந்த 'பாக்டீரியாக்கள்' உள்ளிட்டவற்றை பகுப்பாய்விற்காக எடுத்து சென்றனர். அதில், பண்டைய கால மக்களின் உணவு பழக்கங்களை கண்டறியும் பணி நடந்தது.</p><p>மதுரை காமராஜர் பல்கலை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மரபணுத்துறை </a>தலைவர் குமரேசன் கூறியதாவது:-</p><p>கீழடி கொந்தகை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய தளங்களில் இருந்து, 75,000 மரபணு குறியீடுகளை வைத்து ஆய்வு மேற்கொண்டோம். இதில், கொந்தகையில் கி.மு.,600, சிவகளையில் கி.மு., 3,300, ஆதிச்சநல்லுாரில் கி.மு., 1,000 ஆகிய ஆண்டுகளில் வாழ்ந்த மக்களின் மரபணு அமைப்பிற்கும், தற்போதைய தமிழக மக்கள், தென்கிழக்கு ஆசிய மக்கள், இலங்கை மக்களின் மரபணு அமைப்பிற்கும் தொடர்புள்ளன.</p><h2>இறைச்சி உண்டனர்</h2><p>தாழிகளில், கொழுப்பு அதிகளவு படிந்துள்ளதால் கீழடி மக்கள் இறைச்சியை அதிகம் சாப்பிட்டிருக்க கூடும். மரபணு ஆய்வில் பால், தினை, அரிசி, தேங்காய் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. கீழடி மக்கள் வளர்த்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கால்நடைகள்</a>, அவற்றின் நகர்வுகளை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்: மாற்றமா?, தடுமாற்றமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-governments-first-budget-change-or-stumble</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-governments-first-budget-change-or-stumble#comments</comments><guid isPermaLink="false">d485c5c7-861a-4966-bbdf-ff904ded9f51</guid><pubDate>Fri, 07 Aug 2026 02:01:54 +0000</pubDate><atom:updated>2026-08-07T02:01:54.105Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக அரசு,TN government,election promises,தேர்தல் வாக்குறுதி,Budget Session,தமிழக பட்ஜெட்,TN Budget,பட்ஜெட் கூட்டத்தொடர்,கடன் சுமை,தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/gav9ovva/pabye.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tn budget, தமிழக பட்ஜெட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/gav9ovva/pabye.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><h2>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்</h2><p>'ஆட்சி' மாறினால் 'காட்சி' மாறும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே வாக்களித்த மக்களிடம் உண்டு. அதுபோன்ற எதிர்பார்ப்பில்தான் தற்போது த.வெ.க. கையில் ஆட்சியை வழங்கியிருக்கிறார்கள். </p><p><a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> ஆட்சி பொறுப்பேற்று 88 நாட்கள் ஆகும் நிலையில், தங்களுடைய அரசின் முதல் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்திருக்கிறது. நேற்று முன்தினம் (5-ந் தேதி) பொது பட்ஜெட்டும், நேற்று (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>தேர்தல் வாக்குறுதி இடம்பெற்றதா? </h2><p><a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க. அரசு</a> ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்தது. 'ஆட்சி' மாறியவுடன் 'காட்சி' மாறுவதுபோன்ற மனநிலையை மக்களுக்கு இது ஏற்படுத்தினாலும், எதிர்கால திட்டமிடலுடன் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இது எதிரொலித்ததா?  என்ற கேள்வியையும் எழுப்புகிறது. </p><p>பொதுவாக, ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் மக்கள் எதிர்பார்ப்பது, ஆளுங்கட்சி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா?  என்பதாகத்தான் இருக்கும். இந்த முறையும் தேர்தலின்போது த.வெ.க. அளித்த வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கிறதா?  என்ற தேடல் மக்களிடம் இருக்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/vjz38qlv/maa.jpg" /></figure><h2>பெண்களுக்கு ஏமாற்றம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகளில், மணப்பெண்ணுக்கு 1 பவுன் தங்கம், பட்டுச்சேலை வழங்குவது, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது போன்றவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. </p><p>அதே நேரத்தில், மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும், ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் இடம்பெறவில்லை. இந்த 2 அறிவிப்புகளையும் மிகவும் எதிர்பார்த்த பெண்களுக்கு சற்று ஏமாற்றம்தான்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/t9cgtr7g/wil.jpg" /></figure><h2>ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.4.80 லட்சம் கடன் சுமை</h2><p>இதுதவிர, துறை வாரியாக செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கும், செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்புகளை பொறுத்தவரை முந்தைய ஆட்சியாளர்களிடம் இருந்து சற்று மாற்றம் ஏற்பட்டதுபோல் தெரிந்தாலும், நிதி மேலாண்மையை பொறுத்தவரை தடுமாற்றத்தை காட்டுவதாகவே தெரிகிறது. </p><p>தமிழக அரசின் தற்போதைய கடன் அளவு ரூ.10.98 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது, ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் என்ற அளவில் கடன் சுமை உள்ளது.</p><h2>கடனுக்கான வட்டி அதிகரிப்பு  </h2><p>இதுமட்டுமல்லாமல், இந்த நிதி ஆண்டில் (2026-27) ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி கடன் பெற திட்டமிடப்பட்டிருப்பதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, வாங்கிய கடனுக்கு ஆண்டுதோறும் அதிக அளவில் வட்டி கட்டப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மட்டும் ரூ.78,683 கோடி வட்டி கட்டப்பட உள்ளது. </p><p>இந்த வட்டித்தொகை அடுத்த நிதியாண்டில் (2027-28) ரூ.89,698 கோடியாகவும், 2028-29-ம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 256 கோடியாகவும் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, கடன் வாங்கும் அளவு குறையப்போவதில்லை என்பதையே இது காட்டுகிறது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/9sbzl5i6/maniya.jpg" /></figure><h2>3 மாதங்களில் ரூ.21 ஆயிரம் கோடி கடன்  </h2><p>தமிழக பட்ஜெட்டே ரூ.4 லட்சம் கோடிக்குத்தான் போடப்படுகிறது. வரவு அதைவிட குறைவாக இருப்பதால், பற்றாக்குறை அதிகரிக்கிறது. அதை சமாளிக்க கடன் வாங்கப்படுகிறது. த.வெ.க. அரசின் கடந்த 3 மாதகால ஆட்சியில் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. </p><p>தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறும்போது, "தமிழக அரசின் நிதிநிலையை சீரமைக்க 2 ஆண்டுகள் தேவைப்படும்" என்று கூறியுள்ளார். </p><p>அதேநேரத்தில், நிதித்துறை செயலாளர் சித்திக், "தமிழக அரசின் கடன் 50 ஆண்டுகள் கடந்தாலும் இருந்து கொண்டேதான் இருக்கும். அதை குறைக்க முடியாது" என்று அதிரடியாக கூறியிருக்கிறார். </p><h2>கடன் அளவு குறையாதா?</h2><p>அப்படி என்றால், இனி தமிழ்நாட்டின் கடன் அளவு குறையவே குறையாதா?, ஒவ்வொருவரும் கடன் சுமையுடன் தான் அலைய வேண்டுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. </p><p>கடன் வாங்கும் அளவை குறைக்க வேண்டும் என்றால், செலவை குறைக்க வேண்டும். ஆனால், கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளைப் போல், த.வெ.க. அரசும் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பதால், அதை நிறைவேற்றும்போது செலவு அதிகரிக்கத்தான் செய்யும். </p><h2>வருவாயை பெருக்க முடியாதா?</h2><p>வரியை உயர்த்த வேண்டும் என்றாலும், பெரும்பாலான வரிகள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருவதால், மத்திய அரசால் மட்டுமே வரி உயர்வை கொண்டுவர முடியும். சொத்து வரி, மின் கட்டணம், பஸ் டிக்கெட் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவற்றை மாநில அரசே உயர்த்த முடியும் என்றாலும், மக்கள் மத்தியில் எதிர் வினைகளை உருவாக்கும் என்பதால், அதற்கு ஆட்சியாளர்கள் முன்வருவது கடினம். </p><p>தற்போதைய நிலையில், தமிழக அரசால் மதுபானத்துக்கான வரி, வணிக வரி உள்பட ஒருசில இனங்களில் மட்டுமே வரிகளை மாற்றியமைக்க முடியும். அரசின் தேவையை பார்க்கும்போது, இதுபோன்ற இனங்களின் வரியை உயர்த்தினாலும், பெரிய அளவில் கைகொடுக்காது. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ajr7h1hq/avlo.jpg" /></figure><h2>த.வெ.க. அரசின் தடுமாற்றம்</h2><p>எனவே, <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் சுமார் ரூ.9 லட்சம் கோடி கடன் வாங்கும் நிலையே உள்ளது. நடப்பாண்டில் மட்டுமே ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் கோடி கடன் வாங்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>அந்த வகையில், நிதி மேலாண்மையை கையாள்வதில் த.வெ.க. அரசு தடுமாறுவதாகவே தெரிகிறது. அதாவது, பட்ஜெட் அறிவிப்புகளில் சில ஆரோக்கியமான மாற்றங்கள் தென்பட்டாலும், நிதி நிலைமையை பார்க்கும்போது, அதை சரிசெய்ய அரசு தடுமாறுவதையே பார்க்க முடிகிறது.  </p>]]></content:encoded></item><item><title>சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-chariot-procession-today-at-the-fort-mariamman-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-chariot-procession-today-at-the-fort-mariamman-temple#comments</comments><guid isPermaLink="false">42d92c1e-0b17-44ac-a50f-5604b4f7fd47</guid><pubDate>Fri, 07 Aug 2026 01:39:29 +0000</pubDate><atom:updated>2026-08-07T01:39:29.223Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,தேரோட்டம்,சேலம்,கோட்டை மாரியம்மன் கோவில்,chariot</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/6c1b75k4/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/6c1b75k4/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவி லில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக் கம். அதன்படி இந்தாண்டு ஆடித்திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 22-ந்தேதி கொடியேற்றமும், 28-ந்தேதி கம்பம் நடுதலும் நடைபெற்றது.</p> <p>முன்னதாக ஆடி மாதம் முதல், 2-வது, 3-வது வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி ஆடி 18 சிறப்பு பூஜையும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. அன்று இரவு சக்தி அழைத்தல் நடைபெற்றது. 4-ந் தேதி காலை சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.</p><p>தொடர்ந்து அன்று இரவு முதல் கோவிலில் பொங்கல் வைத்தல் வைபவம் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் 2-ம் நாளாக கோவி லில் விடிய, விடிய பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் உருளுதண்டம் போட்டும், மாவிளக்கு எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று 3-ம் நாளாக ஏராளமான பெண்கள் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட னர்.</p><p>விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. கோவில் முன்பு தொடங்கும் தேரோட்டம் முதல் அக்ரகாரம், தேர்வீதி, ஆனந்தா இறக்கம், வள்ளுவர் சிலை, பட்டை கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி இறக்கம், டவுன் போலீஸ் நிலையம் ரோடு வழியாக மதியம் 12 மணிக்கு கோவிலை வந்தடையும். தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்றது. அதன்படி தேர் முழுவதும் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. நகர் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.</p> <p>தேரோட்டத்தையொட்டி தேர் ஊர்வலத்திற்கு முன்பு அம்மன் வேடம் அணிந்து பக்தர்கள் ஆடிப்பாடி, நாதஸ்வரம், பம்பை, கேரள செண்டை வாத்தியம் முழங்க நடத்து வருவார்கள்.</p><p>மேலும் குழந்தைகளின் தடி விளையாட்டு, பாரம்பரிய கலை நிகழ்ச்சி, தாரை, தப்பட்டை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. அதன்படி தேரோட் டம் வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.</p><p>நாளை (சனிக்கிழமை) அதிகாலை கூடு துறை பவானி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ந்தேதி சத்தாபரணம் மற்றும் திருவீதி உலாவும், மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்: பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-debate-in-the-assembly-begins-today-opposition-parties-plan-to-raise-various-issues</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-debate-in-the-assembly-begins-today-opposition-parties-plan-to-raise-various-issues#comments</comments><guid isPermaLink="false">8769fd38-ae97-4555-8c1b-84d6c49c4af2</guid><pubDate>Fri, 07 Aug 2026 01:22:53 +0000</pubDate><atom:updated>2026-08-07T01:22:53.473Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly,பட்ஜெட்,Tamilnadu ​,எதிர்க்கட்சிகள்,Budget,வேளாண் பட்ஜெட்,தமிழக பட்ஜெட்,TN Budget,TN Assembly session,தமிழக சட்டமன்றம்,தமிழக வேளாண் பட்ஜெட்,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,சட்டமன்ற கூட்டத்தொடர்,Budget 2026</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/1drm0rb0/maniya.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/1drm0rb0/maniya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. </p><h2>பட்ஜெட் மீதான விவாதம் தொடக்கம்</h2><p>தமிழக சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க. </a>அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் (ஆகஸ்டு 5) தாக்கல் செய்யப்பட்டது. நேற்று (ஆகஸ்டு 6) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. </p><p>இன்று காலை 9.30  மணிக்கு சட்டசபை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து, மறைந்த முக்கிய பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட உள்ளது. </p><h2>உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் </h2><p>அதன்பின்னர், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள். உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளிப்பார்கள். </p><p>அடுத்த 2 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை ஆகும். தொடர்ந்து, 10 மற்றும் 11-ந் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 12-ந் தேதி பொது விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பேச இருக்கின்றனர். </p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. முதல் நாளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவை எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. </p><p>பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட இருக்கும் நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் <a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணை</a> விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பட்டப்பகலில் துணிகரம்... பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6½ பவுன் நகை பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/brazen-daylight-robbery-chilli-powder-thrown-in-womans-face-6-sovereigns-of-gold-snatched</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/brazen-daylight-robbery-chilli-powder-thrown-in-womans-face-6-sovereigns-of-gold-snatched#comments</comments><guid isPermaLink="false">7738efb9-145d-42fc-ae75-e3ec2da8db2e</guid><pubDate>Fri, 07 Aug 2026 01:22:23 +0000</pubDate><atom:updated>2026-08-07T01:22:23.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,நகை பறிப்பு,சேலம்,jewelry snatching</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/fplukktj/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/fplukktj/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலத்தில் பெண் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.</p><p>பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-</p><p>ஸ்கூட்டர் வழிமறிப்பு</p><p>சேலம் குரங்குசாவடி நகர மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 44). இந்த தம்பதி மாமாங்கம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியில் சொந்த மாக மளிகை கடை நடத்தி வருகின்றனர்.</p><p>தம்பதி மாமாங்கம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியில் சொந்த மாக மளிகை கடை நடத்தி வருகின்றனர்.</p> <p>நேற்று காலை சரஸ்வதி தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் டால்மியா போர்டு பகுதியில் உள்ள மளிகை கடைக்கு புறப்பட்டு சென்றார். அவர் சென்று கொண்டிருந்தபோது, அவரை மோட்டார் சைக்கிளில் அடையா ளம் தெரியாத 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென சரஸ் வதியின் ஸ்கூட்டரை வழிமறித்து நிறுத்தினர்.</p> <p>பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் சரஸ்வதியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். இதனால் நிலைதடுமாறி சரஸ்வதி அலறி த்துடித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள், சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க நகையை கண்ணி மைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு. தங்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச்சென்றனர்.</p><p>இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (குற்றப்பிரிவு) சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.</p><p>மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்க ளின் பதிவு காட்சிகளை போலீசார் சேகரித்துள்ளனர். நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து கண்காணிப்பு கேமரா காட் சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகை பறிக்கப் பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-consumer-grievance-redressal-meeting-in-chennai-today-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-consumer-grievance-redressal-meeting-in-chennai-today-3#comments</comments><guid isPermaLink="false">3ae114fc-8fe2-4c4c-817e-021c361c54cb</guid><pubDate>Fri, 07 Aug 2026 01:13:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T01:13:28.886Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/9jpzm1qd/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/9jpzm1qd/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>எழும்பூர், ஆவடி மற்றும் பெரம்பூர் கோட்டங்களில் ஆகஸ்ட் 07 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்</p><p><strong>எழும்பூர் கோட்டம்:</strong> செயற்பொறியாளர் இ&amp;ப/ எழும்பூர் கோட்ட அலுவலகம், எண். 53, ஈ.வி.கே.சம்பத் சாலை, 33/11 கி.வோ. எழும்பூர் துணை மின் நிலைய வளாகம், வேப்பேரி, சென்னை-600 007.</p><p><strong>ஆவடி கோட்டம்:</strong> செயற்பொறியாளர்/ இ&amp;ப/ ஆவடி கோட்ட அலுவலகம், 230 கி.வோ ஆவடி துணை மின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி சென்னை-600 062.</p><p><strong>பெரம்பூர் கோட்டம்:</strong> <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செயற்பொறியாளர் </a>இ&amp;ப பெரம்பூர் அலுவலகம், 110 கி.வோ செம்பியம் துணை மின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.ரோடு, சிம்சன் எதிரில், சென்னை-600 011.</p><p>பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மையம், மேற்கு மற்றும் வடக்கு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-sangeetha-divorce-case-hearing-at-chengalpattu-court-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-sangeetha-divorce-case-hearing-at-chengalpattu-court-today#comments</comments><guid isPermaLink="false">822d49d3-f079-4d42-86e0-4d2c6f7290cb</guid><pubDate>Fri, 07 Aug 2026 01:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-07T01:10:18.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவாகரத்து வழக்கு,சங்கீதா,sangeetha,divorce case,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/2zzot741/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/2zzot741/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.</p><h2>விவாகரத்து கோரி மனு</h2><p>த.வெ.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p>சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><h2>முந்தைய விசாரணையில் என்ன நடந்தது?</h2><p>இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்று தரப்புகள் கோரிக்கை வைத்தன.</p><h2>இன்று விசாரணை</h2><p>அதனை தொடர்ந்து இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வர இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>இன்று கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? வானிலை மையம் அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-set-to-lash-today-do-you-know-which-districts-meteorological-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-set-to-lash-today-do-you-know-which-districts-meteorological-department-update#comments</comments><guid isPermaLink="false">94636514-02c0-4f2f-88b4-8b079f6f270e</guid><pubDate>Fri, 07 Aug 2026 00:59:02 +0000</pubDate><atom:updated>2026-08-07T00:59:02.358Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,weather forecast,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/omnve9u1/pass.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/omnve9u1/pass.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளா வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>வட தமிழக கீழ்மட்ட வளிமண்டலத்தில் கடலோரப்பகுதிகளில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. </p><h2>கனமழை</h2><p>இதன் காரணமாக <strong>இன்று (07-08-2026):</strong> கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p> <p><strong>08-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>09-08-2026 முதல் 12-08-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <p><strong><ins>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</ins></strong></p><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>07-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும்.</p><p><strong>08-08-2026 முதல் 10-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</p><p><strong>07-08-2026 முதல் 10-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (07-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,264 கனஅடியாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-mettur-dam-increases-to-19264-cubic-feet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-mettur-dam-increases-to-19264-cubic-feet#comments</comments><guid isPermaLink="false">c63b419f-ab5f-4950-8d13-c5a584333aff</guid><pubDate>Fri, 07 Aug 2026 00:56:19 +0000</pubDate><atom:updated>2026-08-07T00:56:19.669Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர்வரத்து,Water inflow</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5trhbzyl/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5trhbzyl/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர்,  </p><p>மேட்டூர் அணை</p><p>கடந்த 3 நாட்களாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத் துக்கு காவிரியில் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று அது வினாடிக்கு 11 ஆயிரத்து 42 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதேநேரத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.</p><p>நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 905 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலையில் வினாடிக்கு 19 ஆயிரத்து 264 கனஅ டியாக அதிகரித்தது. இதன்காரணமாக அணை நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் 74.01 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலையில் 76.18 அடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 1½ நாளில் அணை நீர்மட்டம் சுமார் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் இன்று அரசு தீர்மானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-to-table-assembly-resolution-seeking-fairer-share-of-central-taxes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-to-table-assembly-resolution-seeking-fairer-share-of-central-taxes#comments</comments><guid isPermaLink="false">847ff4b9-95f1-45e1-9f1d-a2e8a4123297</guid><pubDate>Thu, 06 Aug 2026 23:04:19 +0000</pubDate><atom:updated>2026-08-06T23:04:19.080Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN government,வரிப்பகிர்வு,சட்டசபையில் தீர்மானம்,Assembly Resolution,central taxes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5g2v61q6/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/5g2v61q6/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் இன்று அரசு தீர்மானம் கொண்டு வருகிறது.</p><h2>சிறந்த தமிழகம்</h2><p>தமிழக சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை ) அரசினர் தனித் தீர்மா னத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிய உள்ளார். அதன் விவரம் வருமாறு:-</p><p>மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாததாகும்.தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற் றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூ லிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.</p><p>மேலும், மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல் பட்ட மாநிலங்கள், எந்தவித பாதகமான நிலையிலும் வைக்கப்படக் கூடாது.</p><h2>உரிய நிதிப்பகிர்வு</h2><p>இந்த அம்சங்களையெல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அரசை வலியு றுத்தி தீர்மானத்தை இந்த அவை கொண்டு வந்துள்ளது.</p><p>அதன்படி, மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட் டுக்கு உரிய நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும். மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான, சமமான நடைமுறையை பின்பற்ற வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக, மத்திய வரிகளின் பகிர்விற்கான அளவுகோல்கள், எந்த மாநிலத்தையும் பாதகமான நிலை யில் வைக்காதவாறு அமைக்கப்பட வேண்டும். மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>குரல் வாக்கெடுப்பு</h2><p>இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் விவாதிப்பார்கள். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்படும். அதிக வாக்கு கிடைக்கும்பட்சத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை 86 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/86-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/86-people-have-been-arrested-under-the-detention-act-in-nellai-so-far-this-year#comments</comments><guid isPermaLink="false">23af57e9-5627-4c4f-80e5-49f52645daf5</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:33:26 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:33:26.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,கைது,Tirunelveli,திருநெல்வேலி,காவல்துறை,arrest,இந்த ஆண்டு,This year,இதுவரை,so far,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம்,Tamil Nadu Detention Act</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/3x1ziz6y/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/3x1ziz6y/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல், குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டனர். </p><h2>2 பேருக்கு நீதிமன்ற காவல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கொலை முயற்சி</a>, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மூலச்சி பகுதியைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் மகன் மணிமாறன்(எ) மணி (வயது 20), ராஜையா மகன் சுபாஷ்(26) ஆகிய 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். </p><h2>கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல்</h2><p>இந்த நிலையில் மேற்சொன்ன 2 பேரும் கொலை, கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தடுப்பு காவல் சட்டத்தின்</a> கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். </p><h2>2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 2 பேரும் இன்று (6.8.2026) தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். </p><h2>இந்த ஆண்டு இதுவரை 86 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 86 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத் திட்டம்: மக்களவையில் மத்திய அரசு முக்கியத் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-central-government-shares-key-information-in-the-lok-sabha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-central-government-shares-key-information-in-the-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">0b70e867-7491-4f61-928d-84b051984765</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:22:38 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:22:38.168Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,airport,விமான நிலையம்,Parandur Airport,பரந்தூர் விமானநிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qb97yk2t/Parandur-airport.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தூர் விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-06/qb97yk2t/Parandur-airport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை:</p><p>சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,750 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முந்தைய தி.மு.க. அரசு தீவிரமாக முன்னெடுத்து வந்தது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த திட்டத்துக்காக வளத்தூர், தண்டலூர், சிங்கிலிப்பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் வருவாய்த்துறை ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் பகுதி விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர். </p> <h2>விஜய் எதிர்ப்பு</h2><p>அப்போது, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டார். தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரசாரத்தின்போதும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.</p><h2>திமுக எம்பி கேள்வி</h2><p>இந்தநிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார். "பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடருகிறதா அல்லது கைவிடப்படுகிறதா? இது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் அல்லது தகவல் வந்துள்ளதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், "பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்த திட்டத்தை கைவிடுவது தொடர்பாக 2026-ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு தமிழக அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.</p><h2>மேம்பாட்டு நிறுவனம்</h2><p>விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து பொறுப்புகளும் சம்பந்தப்பட்ட விமான நிலைய மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில அரசைச் சார்ந்தவை. நிலம் கையகப்படுத்துதல், தேவையான அனுமதிகளைப் பெறுதல், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே திட்டம் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>