<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 30 Aug 2026 11:26:23 +0000</lastBuildDate><item><title>போதை கலாச்சாரத்திற்கு முதல்-அமைச்சர் விஜய்  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்;  நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-end-drug-culture-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-end-drug-culture-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b09a0bc3-a520-47ca-afdf-2884f8b65536</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:24:17 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:24:17.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,drug,போதை,முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/hoje5tnz/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/hoje5tnz/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இளைஞர்களின் எதிர்காலத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் போதை கலாச்சாரம் முதல்-அமைச்சர் விஜய்  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நயினார் நாகேர்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p> <h2>கொலை</h2><p>ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே பேருந்திற்காக காத்து கொண்டிருந்த இந்து முன்னணி நிர்வாகியான தணிகாசலம் என்பவரை, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88">போதையில்</a> இருந்த இளைஞர்கள் ஓட ஓட விரட்டி சென்று, புறக் காவல் நிலையம் முன்பே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை பதற செய்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். </p><h2>போதை சக்தி</h2><p>“தூய சக்தி” என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொண்ட முதல்-அமைச்சர் விஜய் முதல்அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகம் “போதை சக்தி”யின் பிடியில் சிக்கி கொண்டதாக தான் தெரிகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக்குகளை மூடிவிட்டதாக தவெக அரசு தம்பட்டம் அடித்து கொண்டாலும், இளைஞர்களிடையேயான மதுப்பழக்கமோ, சமூகத்தில் போதையால் உண்டாகும் குற்றச்செயல்களோ குறைந்தபாடில்லை.</p><h2>சட்டம் ஒழுங்கு</h2><p> காவல்துறையினர் மீதோ தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் மீதோ குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. கடந்த மூன்று மாதங்களில் ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரது கைகளிலும் மது புட்டிகளும், போதை பொருட்களும் மிக சரளமாக புழங்குகின்றன என்பதை சமூக வலைத்தளங்களில் உலா வரும் வீடியோக்களை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். </p><h2>முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்</h2><p>ஆனால், முதல்-அமைச்சரும் அவரது அமைச்சர்களும் “<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">ரீல்ஸ்</a>” எடுப்பதில் காட்டும் ஆர்வத்தை, “யதார்த்தம்”-இல் உள்ள மக்கள் பிரச்சினைகளில் காட்டுவதில்லை. இனியாவது எதிர்க்கட்சிகளிடம் எதுகை மோனை வசனம் பேசி காலத்தை கடத்தாமல், இளைஞர்களின் எதிர்காலத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் போதை கலாச்சாரத்திற்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிகிலுக்கு ஓட்டுப் போட்டல... இப்ப திகில் திகில்னு விலை ஏறுது - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-vote-for-bigil-now-the-price-is-going-up-like-crazy-rs-bharathis-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-vote-for-bigil-now-the-price-is-going-up-like-crazy-rs-bharathis-criticism#comments</comments><guid isPermaLink="false">920e49ff-fd3c-451d-ab72-2e50bdfccee9</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:20:39 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:20:39.976Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,திமுக,DMK,ஆர்.எஸ்.பாரதி,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/g17oc3qj/barathi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/g17oc3qj/barathi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>பிகிலுக்கு ஓட்டுப் போட்டல... இப்ப திகில் திகில்னு விலை ஏறுது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.</p><p>வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ். பாரதி, தி.மு.க.-வைப் பார்த்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் சவால் விடுகிறார்</a>. பைல்ஸ் எல்லாம் தயாராகத் டேபிளில் இருக்கின்றன, நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார். அவிழ்ப்பதுதான் உன்னுடைய வேலை; இந்த பூச்சாண்டி காட்டுவதெல்லாம் எங்களிடம் வேண்டாம். தணிக்கை செய்யப்பட்டது என்று கூறுகிறார். ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள்.</p><p>ஒவ்வொரு வருடமும் சிஏஜி (CAG) அறிக்கை தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் தாக்கல் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை. அந்த சிஏஜி ரிப்போர்ட்தான் இந்த 3 பைல்ஸ் எந்தவொரு சி.ஏ.ஜி அறிக்கையும் அரசாங்கத்தைப் பாராட்டியிருக்காது. ஆடிட் என்பது மாநகராட்சி முதல் அரசாங்கம் வரை அனைத்துத் தளங்களிலும் வழக்கமாக நடக்கக் கூடியது. ஆனால், ஊடகங்களும் பத்திரிகைகளும் உடனே 3 பைல்கள் இருக்கின்றன என்று பரபரப்பாக்குகின்றன.</p><p>பிகிலுக்கு ஓட்டுப் போட்டீர்கள்... இப்போது திகில் திகில் என விலைவாசி ஏறுகிறது. இன்றைக்கு மக்களுக்கு இது தெரியாது. இன்னும் 6 மாதம் ஆகட்டும். இதே மக்கள் வந்து துரைமுருகனின் வீட்டு வாசலில் நின்று, 'காவல் தெய்வமே. நீங்கதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று கையேந்தி நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உசிலம்பட்டி அருகே 16 வயது சிறுமி தற்கொலை - கனிமொழி எம்.பி. வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suicide-of-16-year-old-girl-near-usilampatti-kanimozhi-mp-expresses-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suicide-of-16-year-old-girl-near-usilampatti-kanimozhi-mp-expresses-anguish#comments</comments><guid isPermaLink="false">de3ca988-1e08-4cd0-a08b-2744ba22b689</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:19:51 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:19:51.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/xdmteshv/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/xdmteshv/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சிறுமி தற்கொலை</h2><p>உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்து கொண்டதால், அவரது குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது.</p><p>ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவர்களின் உரிமை.</p><h2>தகுந்த தண்டனை</h2><p>இது போன்ற மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விசாரணை </a>நடத்தி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்; அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-4-children-killed-in-accident-involving-unidentified-vehicle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-4-children-killed-in-accident-involving-unidentified-vehicle#comments</comments><guid isPermaLink="false">008c816b-1c3d-4c74-b937-d1a2ef4ceb7c</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:15:45 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:15:45.845Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Dindigul,திண்டுக்கல்,சிறுவர்கள் உயிரிழப்பு,children die</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/1r1b6akt/40.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/1r1b6akt/40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம்  வடமதுரை அருகே  அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 4  சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><h2>சிறுவர்கள் உயிரிழப்பு</h2><p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லம்பட்டி பிரிவில் சாலையோரத்தில் தனுஸ்ரீ(5), யோக வர்ஷி(11). அனன்யா(6) மற்றும் மோசிகீரன்(6) ஆகியோர் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வேன் ஒன்று, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த  சிறுவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதில் 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தனர்</a>.</p><h2>பெரும் அதிர்ச்சி</h2><p>இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இக்கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2029ல் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் - அமைச்சர் விஸ்வநாதன் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-will-be-the-prime-ministerial-candidate-in-2029-minister-viswanathan-replies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-will-be-the-prime-ministerial-candidate-in-2029-minister-viswanathan-replies#comments</comments><guid isPermaLink="false">72bdc0ac-c37d-43a9-b5a3-93c3043022ff</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:09:52 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:09:52.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,ராகுல் காந்தி,RahulGandhi,உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ujv2n37a/viswanathan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  ராகுல்காந்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன் பதில்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ujv2n37a/viswanathan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>முதல்-அமைச்சர்விஜய்தான் அடுத்த பிரதமர் என சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளிவருவது குறித்து காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.</p><p>இதுகுறித்து, திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பதிலளித்துப் பேசியதாவது, </p><p>காங்கிரசை பொருத்தவரையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திதான், 2029-ல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்.</p><p>கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் இருக்கின்றனர். மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மோடி அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.</p><p>2029-ல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல் காந்தி</a>தான் பிரதமர். அவர் பிரதமராவதற்கு நாங்கள் அனைவரும் ஒத்த குரலில் பணியாற்றுவோம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தெற்கு வட்டார துணை ஆணையர் ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-commissioner-south-zone-inspects-stormwater-drain-works-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deputy-commissioner-south-zone-inspects-stormwater-drain-works-in-chennai#comments</comments><guid isPermaLink="false">94be9ae8-768a-495a-afab-f65b11d65ac1</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:08:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:08:35.082Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/om45trxz/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/om45trxz/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஆதம்பாக்கம் ஏரியில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மழைநீர் வடிகால் பணிகள்</h2><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள், மழைநீர் வடிகால், கால்வாய்கள் ஆறுகளில் தூர்வாருதல், மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத இடங்களில் இணைப்பினை ஏற்படுத்துதல், நீர்நிலைகளில் தூர்வாரி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இதன் ஒரு பகுதியாக, வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நந்தம்பாக்கம் வடிகால்வாய், ஆதம்பாக்கம் ஏரியில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல் இன்று (30.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h3>தெற்கு வட்டார துணை ஆணையர் ஆய்வு</h3><p>வளசரவாக்கம் மண்டலத்தில், ஆற்காடு சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திடவும், வார்டு-153க்குட்பட்ட மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளைத் தொடர்ந்து, இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் இணைப்பு ஏற்ப்படுத்துவது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இணைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>பின்னர், வார்டு-155க்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய் சேருமிடமான நந்தம்பாக்கம் கால்வாயினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இக்கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் தூர்வாரிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>இதனைத் தொடர்ந்து, ஆலந்தூர் மண்டலம், வார்டு-162க்குட்பட்ட வேளச்சேரி உள்வட்டச் சாலையில் உள்ள ஆதம்பாக்கம் ஏரி அருகில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் பாலப்பணிகளையும், அப்பகுதியில் உள்ள மழைநீர் ஆதம்பாக்கம் கால்வாயில் சேரும் வகையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளுதல் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆதம்பாக்கம் ஏரியில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வின் போது, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநகராட்சி</a>, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரக்கோணம்: 2 மகன்களுடன் தாய் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arakkonam-mother-dies-by-suicide-with-two-sons-in-front-of-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arakkonam-mother-dies-by-suicide-with-two-sons-in-front-of-train#comments</comments><guid isPermaLink="false">635a86e0-f706-4b62-aaca-1535be2916e3</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:59:48 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:59:48.224Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>train,ரெயில்,தற்கொலை,Suicide,Mother,தாய்,Arakkonam,அரக்கோணம்,Sons,மகன்கள்</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/vxeaf45z/sucidewithchildren.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ வள்ளி,பரத், சந்தோஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அரக்கோணம்: 2 மகன்களுடன் தாய் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/vxeaf45z/sucidewithchildren.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அரக்கோணம், </p><p>அரக்கோணத்தில் கணவரின் மரணம், மீளமுடியாத துயரத்தில் இரு பிள்ளைகளுடன் ரெயில் முன் பாய்ந்த தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>திடீரென மரணம்</h2><p>ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி (27). இவருடைய கணவர் கோட்டையா (30). அம்மிக்கல் செதுக்கும் தொழிலாளி. இவர்களுக்கு பரத் (7), சந்தோஷ் (3) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டையா உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார்.</p><h2>வறுமை</h2><p>கணவரின் மறைவால் வள்ளி மீளமுடியாத துயரத்தில் மூழ்கினார். மேலும் குடும்பத்தை நடத்த வருமானம் இன்றியும், பிள்ளைகளை காப்பாற்ற வழியின்றியும் கடும் வறுமையில் தவித்து வந்துள்ளார்.</p> <h2>ரெயில் முன் பாய்ந்தனர்</h2><p>கணவரை இழந்த சோகமும், வறுமையும் வாட்டியதால் வள்ளி வாழ்க்கையில் விரக்தியடைந்தார். இதனால் தன் பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இன்று காலை சுமார் 9 மணியளவில், மங்கம்மாபேட்டை ரெயில் தண்டவாள பகுதிக்கு தன் 2 மகன்களையும் வள்ளி அழைத்து சென்றார். அப்போது சென்னையிலிருந்து திருப்பதி நோக்கி சென்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மின்சார ரெயில்</a> வருவதை கண்ட வள்ளி, தன் இரு குழந்தைகளையும் கட்டியணைத்தபடி ஓடும் ரெயில் முன்பு திடீரென பாய்ந்தார்.</p><h2>உடல் சிதறி பலி</h2><p>இதில் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட வள்ளி மற்றும் அவரது மகன்கள் பரத், சந்தோஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p> இந்த நெஞ்சை உருக்கும் துயர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமை காரணமாக 2 பிள்ளைகளுடன் தாய் ரெயில் முன் பாய்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை</a> செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சத்தியமூர்த்தி பவனை பற்றி குறை பேசவும், பெயர் மாற்ற சொல்லவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவிற்கு ரூபி ஆர். மனோகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-has-what-right-to-criticise-and-rename-sathyamoorthi-bhavan-asks-ruby-r-manoharan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-has-what-right-to-criticise-and-rename-sathyamoorthi-bhavan-asks-ruby-r-manoharan#comments</comments><guid isPermaLink="false">5650141d-f34d-4e4d-8c7a-b992658e3d8d</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:34:28 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:34:28.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கேள்வி,தகுதி,Questions,Ruby Manoharan,ரூபி மனோகரன்,சத்தியமூர்த்தி பவன்,Sathyamoorthy Bhavan</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/bkyy5n7e/ruby.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ ரூபி ஆர். மனோகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/bkyy5n7e/ruby.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">சத்தியமூர்த்தி பவனை</a> பற்றிக்குறை பேசவும், பெயர் மாற்ற சொல்லவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவிற்கு ரூபி ஆர். மனோகரன் கேள்வி. இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>விரக்தியின் உச்சம்</h2><p>மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் உச்சத்தில் நின்று பிதற்றி கொண்டிருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுகவும்</a> அதன் செய்தித் தொடர்பாளர்களும் முதலில் தங்களின் கடந்த கால கொள்கை விளக்க குறிப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும்.</p><h2>நிதர்சனமான உண்மை</h2><p>இ.பரந்தாமன், மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் கண்மூடித்தனமா யோசிக்க தோணும் போல! பேசுவதற்கு முன்னாடி கொஞ்சம் ஆதாரங்களை எடுத்து உண்மை சரிபார்ப்பு பண்ணிட்டு வாங்க. 2022-2023, 2023-2024, 2024-2025 ஆகிய முந்தைய திமுக ஆட்சி காலங்களில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வ கொள்கை விளக்க குறிப்புகளில் நேரு மற்றும் அம்பேத்கர் பெயர்கள் எங்குமே இடம்பெறவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.</p><h2>உங்கள் சமூக நீதி?</h2><p>அந்த காலகட்டத்தில் நீங்களும் சட்டமன்ற உறுப்பினராகத்தானே இருந்தீர்கள்? அப்போதெல்லாம் உங்கள் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கொள்கை விளக்க குறிப்பை படிக்கும்போது அவையிலேயே தூங்கி கொண்டு இருந்தீர்களா? ஆட்சி அதிகாரத்தில் இருந்த பல வருடங்களாக அம்பேத்கர் பெயரையும், நேருவின் பெயரையும் கொள்கை விளக்க குறிப்பில் சேர்க்காமல் திட்டமிட்டுப் புறக்கணித்தீர்களா? அப்போது எங்கே போனது உங்கள் சமூக நீதி? அன்று நீங்களே சமூக நீதி வரலாற்றையே இருட்டடிப்பு செய்து, சமூக நீதியின் வேர்களையே வெட்டத் துணிந்துவிட்டு, இப்போது வந்து வெட்கம், மானம், ரோஷம் என்று பேசுகிறீர்களே... அதே கேள்வியை நான் இப்போது உங்களிடம் திருப்பிக் கேட்கிறேன்-இன்று இதையெல்லாம் பற்றிப் பேசும் உங்களுக்கு வெட்கம், மானம், ரோஷம், சொரணை எதுவும் துளியாவது இருக்கிறதா?</p><h2>கபட நாடகம்</h2><p>2026 தேர்தல் நேரத்தில் மட்டும் திடீரென அரசியல் லாபத்திற்காகவும் கூட்டணி கணக்குகளுக்காகவும் மெய்யநாதன் மூலமாக பெயர்களை சேர்த்த உங்கள் கபட நாடகத்தை மக்கள் அறியாதவர்களா? இந்த முறை திமுகவில் உங்களுக்கு எம்.எல்.ஏ சீட் கூட கிடைக்காத விரக்தியா, இல்லை 'நல்லா கூவி பேசுனாத்தான் அடுத்த முறையாவது சீட் தருவோம்' என்று அறிவாலயம் சொல்லிவிட்டதா என்று தெரியவில்லை.</p><h2>அரசியல் நாடகம்</h2><p>சத்தியமூர்த்தி பவனை பற்றி குறை பேசவும், பெயர் மாற்றச் சொல்லவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அன்று நேருவையும் அம்பேத்கரையும் வசதியாக மறந்துவிட்டு, இன்று தேர்தல் தோல்வி பயத்தில் மட்டும் அவர்களை கையில் எடுக்கும் உங்கள் ‘அறிவாலயத்தின்’ பெயரை என்னவென்று மாற்ற போகிறீர்கள் என்று முதலில் சொல்லுங்கள். மக்கள் வழங்கிய புதிய மாற்றத்தை ஜீரணிக்க முடியாமல், சொந்த கட்சியின் இரட்டை வேடத்தை மறைத்துவிட்டு பிறர் மீது பழிபோடும் இந்த மலிவான அரசியல் நாடகம் இனியும் எடுபடாது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-departure-time-of-chennai-howrah-express-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-departure-time-of-chennai-howrah-express-train#comments</comments><guid isPermaLink="false">b531f4c6-5d8a-4a4e-9acb-301e8c37bed6</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:33:40 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:33:40.294Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,West Bengal,மேற்கு வங்கம்,ஹவுரா,Howrah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/p11kvp65/rail.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/p11kvp65/rail.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பெடபரியா–நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 237-வது பாலத்தில், தற்போதுள்ள இரும்பு பாலத்தை அகற்றி கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, சில ரெயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>1 மணி நேரம் தாமதம்</h2><p>சென்னை சென்ட்ரல் – மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே இயக்கப்படும் 12840-வது எண் எக்ஸ்பிரஸ் ரெயில், ஆகஸ்ட் 31, செப்டம்பர் 3 மற்றும் 10-ம் தேதிகளில் மாலை 7 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இதனால் ரெயில் புறப்படும் நேரம் 1 மணி நேரம் தாமதமாகும்.</p><h2>2 மணி நேரம் தாமதம்</h2><p>இதேபோல், செப்டம்பர் 5 மற்றும் 12-ம் தேதிகளில் புறப்பட வேண்டிய 12840-வது எண் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், மாலை 7 மணிக்கு பதிலாக இரவு 9 மணிக்கு புறப்படும். அன்று ரெயில் சேவை 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.</p><h2>பயணிகள் கவனிக்க வேண்டுகோள்</h2><p>பாலம் மாற்றும் பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், மேற்கண்ட தேதிகளில் பயணம் செய்யும் பயணிகள் மாற்றப்பட்ட ரெயில் புறப்படும் நேரத்தை கவனத்தில் கொண்டு பயணத்தை திட்டமிடுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வளர்ந்த பாரதம்; போதைப்பொருள் இல்லாத பாரதம்! - நயினார் நாகேந்திரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-developed-bharat-a-drug-free-bharat-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-developed-bharat-a-drug-free-bharat-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">6acb1e24-2c29-4b2d-b2de-ca062c8204d1</guid><pubDate>Sun, 30 Aug 2026 09:58:26 +0000</pubDate><atom:updated>2026-08-30T09:58:26.323Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Man Ki Baat,மனதின் குரல் நிகழ்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ly072pj9/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ly072pj9/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மனதின் குரல் நிகழ்ச்சி</h2><p>நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் இன்றைய 137-வது அத்தியாயமானது, தேசிய உணர்வு, சமூக அக்கறை, இளைஞர் நலன், பெண்கள் முன்னேற்றம், தற்சார்பு பொருளாதாரம் உள்ளிட்ட பல நல்ல தகவல்களை உள்ளடக்கிய கலவையாக இருந்தது. </p><p>தேசிய கைத்தறி தினம், சுதந்திர தினம், தேசிய விண்வெளி தினம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்ட நாள், பிரிவினை கொடுமைகள் நினைவு நாள் உள்ளிட்டவைகளை கொண்ட இந்த ஆகஸ்ட் மாதம், ஒவ்வொரு இந்திய குடிமகனின் நெஞ்சிலும் தேசிய உணர்வை விதைப்பதாகவும், “வந்தே மாதரம்” பாடல் உருவாக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் குறிப்பிட்டுப் பேசினார் நமது பாரதப் பிரதமர். மேலும், “ஹர் கர் திரங்கா” மற்றும் “சூர்யபத் திரங்கா” உள்ளிட்ட பிரசாரங்கள் உலகெங்கிலும் உள்ள இந்தியர்களின் மத்தியில் தேசப்பற்றையும் ஒற்றுமையுணர்வையும் வலுப்படுத்தி உள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். </p><h2>போதைப்பொருள் இல்லாத பாரதம்</h2><p>அதுமட்டுமன்றி, இளைஞர்களின் எதிர்காலத்தையும், நமது சமூகக் கட்டமைப்பையும் முற்றிலுமாக சீர்குலைக்கும் போதைப்பொருளுக்கு எதிராக, நமது மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட “வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான, போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்” என்ற பிரசாரத்தில், இளைஞர்கள் அதிதீவிரமாக தங்களை இணைத்துக் கொள்வதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார் நமது பாரதப் பிரதமர். அதுமட்டுமன்றி, போதைப்பொருளின் ஆபத்துக்களை எடுத்துரைத்து, போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் அனைவரும் உதவ முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.</p><p>மேலும், நாடு முழுவதிலுமுள்ள 35 லட்சம் பெண் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழில் முனைவோர்கள்</a> தங்கள் தொழில்களை மேலும் விரிவாக்க உதவும் “PM ஸ்வநிதி யோஜனா” திட்டம் குறித்தும், எந்த ஆண்டில் எந்தப் பகுதியை யார் ஆண்டார்கள் என்பதை துல்லியமாக விளக்கும் http://bharatrajya.com என்ற இணையதளம் குறித்தும் விரிவாகப் பேசிய நமது பாரதப் பிரதமர், பண்டிகை காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதிலும், நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதிலும் மக்கள் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.</p><h2>தேசத்திற்கு கிடைத்த வரம்!</h2><p>மொத்தத்தில் இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியானது, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள அளவற்ற அன்பின் வடிகாலாக இருந்ததை நம்மால் உணர முடிந்தது. நாட்டின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கி, மக்களின் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் நரேந்திர மோடி, தேசத்திற்கு கிடைத்த வரம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கும்பகோணம்: பேருந்து நிலையத்தில் வாலிபர் தீக்குளிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-attempts-self-immolation-kumbakonam-bus-stand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-attempts-self-immolation-kumbakonam-bus-stand#comments</comments><guid isPermaLink="false">cabebb75-2c93-430f-84c5-e7b1ddbfe367</guid><pubDate>Sun, 30 Aug 2026 09:44:53 +0000</pubDate><atom:updated>2026-08-30T09:44:53.142Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர்,தீக்குளிப்பு,பேருந்து நிலையம்,bus stand,கும்பகோணம்,Kumbakonam,A young man</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/lqney1xo/sumanraj.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ சுமன் ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ கும்பகோணம்: பேருந்து நிலையத்தில் வாலிபர் தீக்குளிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/lqney1xo/sumanraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம், </p><p>தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கண் முன்னே வாலிபர் ஒருவர் திடீரென <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற</a> சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சுமன் ராஜ் ஒரு தலை காதல்</h2><p> கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்தவர் சுமன் ராஜ் (வயது 28). இவர் அங்கு உடற்பயிற்சிக்கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கும்பகோணம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் பெண் ஒருவரை சுமன் ராஜ் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் இவருடைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">காதலை</a> ஏற்க மறுத்ததோடு, தனக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.</p><h2>மக்களை உலுக்கிய அலறல் சத்தம்</h2><p> இதனால் கடும் மனமுடைந்த சுமன் ராஜ், இன்று காலை கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த எரிபொருளை உடல் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார். உடல் கருகி அவர் அலறியதை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து நிலைய பொதுமக்களும், அங்கிருந்த புறக்காவல் நிலைய போலீசாரும் ஓடிவந்து தீயை அணைத்து அவரை மீட்டனர். </p><h2>மருத்துவமனையில் தீவிர சிகிச்சை</h2><p>பலத்த தீக்காயமடைந்த சுமன் ராஜ், உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொது இடத்தில் அரங்கேறிய இந்த தற்கொலை முயற்சி குறித்து கும்பகோணம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதல் விவகாரம் மற்றும் பொது பாதுகாப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்ட 2 அம்ரித் பாரத் ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-amrit-bharat-trains-manufactured-at-chennais-icf-handed-over-to-southern-railway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-amrit-bharat-trains-manufactured-at-chennais-icf-handed-over-to-southern-railway#comments</comments><guid isPermaLink="false">66715a31-60cb-43d8-b96c-79b5b14004e8</guid><pubDate>Sun, 30 Aug 2026 09:41:48 +0000</pubDate><atom:updated>2026-08-30T09:41:48.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தெற்கு ரெயில்வே,Southern Railway,அம்ரித் பாரத் ரெயில்,Amrit Bharat,அம்ரித் பாரத்,Amrit Bharat train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/zifmuyso/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/zifmuyso/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்ட 2 புதிய அம்ரித் பாரத் ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்களை தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கோவை வழித்தடங்களில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>130 கி.மீ. வேகத்தில் இயக்கம்</h2><p>சென்னை ஐ.சி.எப்.-ல் தற்போது வந்தே பாரத், அம்ரித் பாரத் உள்ளிட்ட பல்வேறு வகையான ரெயில்கள் தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரெயிலுக்கு இணையான வேகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் அம்ரித் பாரத் ரெயில்கள் 'புஷ்-புல்' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன.</p><p>இந்த ரெயிலின் இருபுறங்களிலும் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளதால், மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை இயக்க முடியும். ஒரே நேரத்தில் 1,834 பயணிகள் பயணம் செய்யும் வகையில், 12 முன்பதிவு பெட்டிகள் உள்பட மொத்தம் 22 எல்.எச்.பி. பெட்டிகள் இதில் இடம்பெற்றுள்ளன.</p><h2>தமிழகத்தில் இயக்க பயணிகள் கோரிக்கை</h2><p>இந்நிலையில், ஐ.சி.எப்.-ல் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட 2 அம்ரித் பாரத் ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்களை தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், கோவை வழித்தடத்திலும் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.</p><h2>‘ஏசி’ வசதி இல்லாததால் கட்டணம் குறையும்</h2><p>இதுகுறித்து தெற்கு ரெயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது:</p><p>நாடு முழுவதும் தற்போது 30 வழித்தடங்களில் 60 அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரெயிலுக்கு இணையான வேகம் மற்றும் வசதிகளுடன் 2 புதிய ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் வழங்கப்பட்டுள்ளன.</p><p>இந்த ரெயில்களில் 12 முன்பதிவு பெட்டிகள் உள்ளன. இதில் 'ஏசி' பெட்டிகள் இடம்பெறவில்லை. இதனால் சாதாரண முன்பதிவு கட்டணத்தில் அதிகமான பயணிகள் பயணம் செய்ய முடியும். புதிய அம்ரித் பாரத் ரெயில்களை தமிழகத்துக்குள் இயக்குவது தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்படும்.</p><h2>மேம்படுத்தப்பட்ட புதிய பெட்டிகள் தயாரிப்பு</h2><p>மேலும், அம்ரித் பாரத் ரெயில்களில் கணிசமான அளவில் 'ஏசி' பெட்டிகள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட புதிய வகை பெட்டிகளும் ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த புதிய பெட்டிகளில் தரை, இருக்கை மற்றும் படுக்கைகளில் ரெக்சின், சிற்றுண்டி மேசைகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. பயணிகளை கவரும் வகையில் நவீன உள்அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய வகை<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> அம்ரித் பாரத்</a> ரெயில்களையும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம்: காரணத்தை தமிழக அரசு விளக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-names-of-periyar-ambedkar-nehru-tamil-nadu-government-should-explain-the-reason-communist-party-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-names-of-periyar-ambedkar-nehru-tamil-nadu-government-should-explain-the-reason-communist-party-of-india#comments</comments><guid isPermaLink="false">7e02d7d3-2627-4360-82c7-3db9d15e1ece</guid><pubDate>Sun, 30 Aug 2026 09:04:17 +0000</pubDate><atom:updated>2026-08-30T09:04:17.045Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,Tamil Nadu Government,தமிழக அரசு,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/c8xc876a/veerapandian.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/c8xc876a/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பண்டிட் ஜவஹர்லால் நேரு பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும். இது குறித்து , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன் </a>வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. கண்டனக் கணைகளின் தாக்கத்திற்குப் பிறகு, தற்பொழுது அத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பேட்டில் சேர்க்கப்படும் என அமைச்சர் வி.சம்பத்குமார் கூறியுள்ளார். எனினும் , இதற்குக் காரணமானவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படவில்லை.</p><h2>மதச்சார்பின்மை கொள்கை</h2><p>தந்தை பெரியார்,டாக்டர் அம்பேத்கர் , நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆகியோர் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் ஆவர். பிற்போக்குத் தனங்களை, இந்துத்துவ மதவெறி அரசியலை ,வகுப்புவாதத்தை வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடியவர்கள் ஆவர். நவீன இந்தியாவை உருவாக்குவதில் மகத்தான பங்களிப்பை தத்தம் வழிகளில் செலுத்தியவர்கள் ஆவர். அவர்களை சமூக நீதிக்காகப் போராடியவர்கள் என்று மட்டுமே  பார்த்து விட முடியாது.  அதற்கும் மேலாக உண்மையான சுதந்திரம் ,சமத்துவம் ,சகோதரத்துவம் என்ற உன்னதக் கோட்பாட்டை இந்திய மண்ணில்  நடைமுறைப்படுத்த வேண்டும் என அயராது பாடுபட்டவர்கள் ஆவர் .</p><p>அப்படிப்பட்ட மகத்தானத் தலைவர்களின் பெயர்கள்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டது  என்பதை, தற்செயலானதாக, சாதாரண ஒரு தவறாக பார்க்க முடியாது. அதை ஒரு திட்டமிட்டச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. இந்த மாபெரும் தலைவர்களின் பெயர்கள் இந்துத்துவா சக்திகளுக்கு, மத அடிப்படை வாதிகளுக்கு ,பிற்போக்குச் சக்திகளுக்கு எப்பொழுதுமே எட்டிக்காய் போன்று கசப்பதாகும். அவர்கள் மீது வெறுப்பு எனும் நெருப்பை இச்சக்திகள்  தொடர்ந்து அள்ளி வீசுகின்றன. அத்தலைவர்களை இழிவு படுத்தி வருகின்றன.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>எனவே , இந்நிலையில், இத்தலைவர்கள்  பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன? இந்த நீக்கத்துக்குப் பின்னால்  உள்ள சக்திகள் எவை ?  என்பவை குறித்து முழுமையான ,நேர்மையான விசாரணையை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். இத்தலைவர்களின் பெயர் நீக்கத்திற்குக் காரணமானவர்களை கண்டறித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு , தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூர் மக்களின் குடிநீர் நெருக்கடிக்கு உடனடி தீர்வு வேண்டும் - ஜோதிமணி எம்.பி. கோரிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-solution-needed-for-the-drinking-water-crisis-faced-by-the-people-of-karur-mp-jothimanis-demand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-solution-needed-for-the-drinking-water-crisis-faced-by-the-people-of-karur-mp-jothimanis-demand#comments</comments><guid isPermaLink="false">597b0126-402a-4c41-b565-37f4d28fb13e</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:51:15 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:51:15.080Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,ஜோதிமணி,ஜோதிமணி எம்.பி.,Jothimani,jothimani mp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/mqedzzb3/jothimani-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/mqedzzb3/jothimani-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உரிய அளவு நீரை அமராவதி அணையிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு உடனடியாக  திறந்து விட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>குடிநீர் நெருக்கடி</h2><p>கரூர் மாவட்ட மக்கள் இன்று மிகக் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இதுவரை கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து உரிய அளவில் ஒரு முறைகூட நீர் திறக்கப்படவில்லை.</p><p>மழையின்றி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு நிற்கும் நிலையில், குடிநீருக்கே மக்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அவசர நிலையை கருத்தில் கொண்டு, நீர்வளத்துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், விவசாயிகள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.</p><p>மதுரை உயர்நீதிமன்றம், கரூர் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 29.08.2026 அன்று  அமராவதி அணையிலிருந்து படிப்படியாக 10 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிட்டது. அதன்படி,</p><h2>10 நாட்களுக்கு நீர் திறப்பு</h2><p>முதல் நாள் - 3,000 கனஅடி இரண்டாம் நாள் - 3,000 கனஅடி மூன்றாம் நாள் - 2,000 கனஅடி நான்காம் நாள் - 2,000 கனஅடி ஐந்தாம் நாள் - 1,500 கனஅடி ஆறாம் நாள் - 1,500 கனஅடி ஏழாம் நாள் - 1,000 கனஅடி எட்டாம் நாள் - 1,000 கனஅடி ஒன்பதாம் நாள் - 750 கனஅடி பத்தாம் நாள் - 750 கனஅடி என்ற முறையில் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>ஆனால், தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில், தினமும் 1,000 கனஅடி வீதம் மட்டுமே நீர் திறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>நீதிமன்றம் முதல் இரண்டு நாட்களிலேயே 3,000 கனஅடி வீதம் நீர் திறக்க உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு தற்போது 1,000 கனஅடி என்ற அளவில் நீர் திறப்பது கரூர் மக்களின் அவசர குடிநீர் தேவையை நிறைவேற்றாது.</p><h2>குடிநீருக்கான அவசர நிலை</h2><p>ஏற்கனவே நீர் கிடைக்காமல் தவிக்கும் கரூர் மக்களுக்கு இது மீண்டும் ஒரு அநீதியாக அமையும். 1,000 கனஅடி நீர் திறப்பதால் கரூர் மாவட்டத்திற்கு தேவையான அளவு நீர் சென்றடையாது. காவிரியில் மட்டுமல்ல கடைமடைப் பகுதியில் இருக்கும் கரூர் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அமராவதியிலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருவது ஏற்புடையதல்ல. நாங்கள் கேட்பது கரூர் மாவட்டத்திற்கு உரிமையுள்ள நீர்ப்பகிர்வை மட்டுமே.</p><p>கரூர் மாவட்டத்தில் குடிநீருக்கான அவசர நிலையை அரசு புரிந்துகொள்ள வேண்டும். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் </a>ஜோசப் விஜய் உடனடியாகத் தலையிட்டு, உயர்நீதிமன்ற உத்தரவின்படி புதிய அரசாணை வெளியிட்டு, உரிய அளவு நீரை அமராவதி அணையிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு உடனடியாக திறந்து விட வேண்டும். கரூர் மக்களின் குடிநீர் உரிமையை பாதுகாக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்கள் 3-வது நாளாக புகார்: திணறும் போலீசார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/victims-of-online-fraud-file-complaints-for-the-third-consecutive-day-police-struggle-to-cope</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/victims-of-online-fraud-file-complaints-for-the-third-consecutive-day-police-struggle-to-cope#comments</comments><guid isPermaLink="false">f09b8675-db4e-4e2b-a0bf-898be8bb47e2</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:16:26.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,police,தமிழகம்,ஆன்லைன் மோசடி,Melur,மேலூர்,online scam,போலீசார்,புகார் மனுக்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/mp82km55/badriu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/mp82km55/badriu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேலூர், </p><p>மேலூர் பகுதியில் ஆன்லைன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் புகார் அளிக்க குவிந்தனர்.</p><h2>ஆன்லைன் செயலியில் மோசடி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடம் பலர், எப்.கியூ..எல். நிறுவனம் என்ற நிதி நிறுவனம் சார்பில் செல்போன் செயலிகள் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக நேரில் வந்து ஆசைவார்த்தை கூறியுள்ளனர். குறிப்பாக பெண்களிடம் பேசினர். </p><p>இதற்காக ஏஜெண்டுகள் செயல்பட்டனர். இந்த செயலிகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் கடன் வாங்கி முதலீடு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பணத்தை இரட்டிப்பு செய்து தரவில்லை என கூறப்படுகிறது.</p><h2>போராட்டம்</h2><p>இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் மேலூரில் மதுரை- சென்னை நான்கு வழிச்சாலையில் 4 மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தினர். மற்றொரு இடத்திலும் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p><h2>25 ஆயிரம் பேர் மனு</h2><p>இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் நேரடி மேற்பார்வையில் நேற்று 3 இடங்களில் பொதுமக்கள் புகார் அளிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளலூர் நாடு கோட்டநத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் முகாம் நடந்தது.</p><p>இதில் மேலூரில் நடந்த முகாமில் 18,500-க்கும் மேற்பட்ட மனுக்களும், செட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முகாமில் 1,450-க்கும் மேற்பட்ட மனுக்களும், வெள்ளலூர்நாடு கோட்டனத்தம்பட்டி தனியார் திருமண மண்டப முகாமில் <strong>3 ஆயிரத்திற்கும்&nbsp;</strong>மேற்பட்ட மனுக்களும் பொதுமக்கள் அளித்தனர். </p><p>குறிப்பாக ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையாக நின்று புகார் அளித்தனர். நேற்று ஒரே நாளில் இந்த முகாம்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட புகார் மனுக்களை கட்டுக்கட்டாக மலை போல போலீசார் அடுக்கி வைத்திருந்தனர்.</p><h2>கூட்டம் கூட்டமாக</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a>, மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் 3வது நாளாக இன்றும் புகார் கொடுக்க கூட்டம் கூட்டமாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.  இதனால் போலீசார் திணறி வருகின்றனர். </p><p>இன்று மட்டும் இதுவரை 1,200 பேர் தங்களது புகார் மனுக்களை அளித்துள்ள நிலையில், தலா ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாக புலம்பி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும்: திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-previously-provided-to-mk-stalin-must-be-restored-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-previously-provided-to-mk-stalin-must-be-restored-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">397d239a-00ba-4123-8da1-fbb41f0fa8ba</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:00:34 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:00:34.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/rui25kn8/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/rui25kn8/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>சட்டசபை கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது இது உள்நோக்கத்தோடு நடந்துள்ளதா என கேள்வி எழுகிறது. இதற்குப் பொறுப்புள்ள அதிகாரிகளும், அமைச்சர்களும் உரிய விளக்கத்தை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். </p><p>இனி வரும் காலங்களில் அது போன்ற பிழைகள் நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது ஏற்புடையதல்ல; இதுவரை வழங்கி வந்த பாதுகாப்பை அவருக்கு வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.</p><p>தவெக தலைமையிலான இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தலித் மக்களுக்கு இன்னும் பல சட்டப்பூர்வ உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. குறிப்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்தியா முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அதிகாரிகளின் கருத்துக்களால் பல நல்ல திட்டங்கள் முடங்குகின்றன. ஆட்சியாளர்கள் விரும்பினாலும் அதிகாரிகள் சில இடங்களில் முட்டுக்கட்டை போடுகின்றனர்.</p><p>தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியாக, தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அரசு செய்ய வேண்டிய அவசியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் உரிய தீர்வுகளைப் பெற விசிக தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் மரிய வில்சனின் எம்.எல்.ஏ. சான்றிதழை திரும்ப பெற வேண்டும்-தேர்தல் கமிஷனுக்கு வக்கீல் நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilsons-mla-certificate-must-be-revoked-legal-notice-sent-to-the-election-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilsons-mla-certificate-must-be-revoked-legal-notice-sent-to-the-election-commission#comments</comments><guid isPermaLink="false">5902f7c8-f33a-4ac8-85a8-46cf563a710b</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:48:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:48:35.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Election Commission,தேர்தல் கமிஷன்,chennaihighcourt,வக்கீல் நோட்டீஸ்,மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/rg3028kk/maria-wislon.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/rg3028kk/maria-wislon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தன்னுடைய கல்வி நிறுவனத்துக்காக லஞ்சம் கொடுத்ததாக சட்டசபை யில் பேசிய அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்வதுடன், அவருடைய எம்.எல்.ஏ. சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இந்திய தேர்தல் கமிஷனர், தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனர் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சி.ஜெனிபர் என்பவர் தன் வக்கீல் பி.விஜயேந்திரன் மூலம் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில் கூறியிருப்பதாவது:-</p> <p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன். இவர், தற்போது மாநில நிதி அமைச்சராக உள்ளார். சமீபத்தில் சட்டசபையில் அவர் பேசும்போது தனது கல்வி நிறுவனத்துக்கு அனுமதி தொடர்பாக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார். இது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்லாமல் ஊழல் தடுப்பு சட்டத்தின்படி குற்றமாகும் எனவே, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.</p> <p>அவர் அமைச்சராக பதவியேற்றபோது எடுத்த பதவி பிரமாணத்திற்கு முரணாகவும், தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் செயல்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் பதவியை திரும்ப பெற முடியாது. அதேநேரத்தில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வானதற்காக வழங்கப்பட்ட சான்றிதழை திரும்ப பெற தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.எனவே, அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் கோர்ட்டு வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேகதாது அணைக்கு அவசரம் காட்டும் கர்நாடகா: தமிழக அரசு காவிரி உரிமையை இழக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-shows-urgency-for-mekedatu-dam-tamil-nadu-government-must-not-lose-its-cauvery-rights-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-shows-urgency-for-mekedatu-dam-tamil-nadu-government-must-not-lose-its-cauvery-rights-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">7b204ffe-d1f9-41bc-b1fb-76b2be1ceb72</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:42:10 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:42:10.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,தமிழகம்,மேட்டூர் அணை,Mettur dam,Karnataka,கர்நாடகா,தமிழக அரசு,TN govt,AnbumaniRamadoss</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/6u51mjda/tnmere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/6u51mjda/tnmere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேகதாது அணை கட்டப்பட்டால், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடகம் பயன்படுத்தும். அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். </p><h2>மேகதாது அணை</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: -</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே <a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணை</a> கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், மேகதாது அணையை கட்டுவதற்கான அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடக அரசு விரைவில் அணுக இருப்பதாகவும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் நேற்று நடைபெற்ற சுத்தூர் மடத்தின் மறைந்த ஆதீனம் ஸ்ரீ இராஜேந்திர சுவாமிகளின் 111ஆம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய டி.கே.சிவக்குமார் அவர்கள், "கர்நாடக மாநில விவசாயிகளின் நலனுக்கு கிருஷ்ணராஜசாகர் அணை எந்த அளவுக்கு உதவியதோ, அதேபோல் மேகதாது அணையும் உதவும். மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு அண்மையில் அளித்த தீர்ப்பு கர்நாடகத்திற்கு சாதகமாக இருப்பதால், அதன்படி அணை கட்ட அனுமதி அளிக்கும்படி மத்திய அரசை கர்நாடக அரசு கோர உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.</p><h2>தண்ணீர் கிடைக்காது</h2><p>கர்நாடக முதல்-மந்திரியின் கூற்றுப்படி இரு விஷயங்கள் அம்பலமாகியுள்ளன. முதலாவது மேகதாது கர்நாடக உழவர்களை மேலும் வலிமைப்படுத்த உதவும் என்று அவர் கூறியிருப்பதன் மூலம், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடக அரசு, விவசாயத்திற்குப் பயன்படுத்த உள்ளது என்பது தெளிவாகிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணையில்</a> தேக்கி வைக்கப்படும் நீரில் இருந்து குடிநீர் தேவைக்கு தவிர, பாசனத்திற்காக ஒரு வாளி நீரைக்கூட கர்நாடகம் எடுக்காது என்று இதுவரை கர்நாடக அரசு கூறி வந்த நிலைப்பாட்டுக்கு இது முற்றிலும் மாறாக உள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடகம் பயன்படுத்தும்; அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறிவந்த குற்றச்சாட்டை கர்நாடக அரசின் இந்தப் புதிய நிலைப்பாடு உறுதி செய்துள்ளது.</p><h2>சுற்றுச்சூழலுக்கு ஆபத்து</h2><p>மேலும் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் மேகதாது அணையை கட்டப்போவதாக கூறிவந்த கர்நாடக அரசு, இப்பொது அதன் நீரை பாசனத்திற்கும் பயன்படுத்தப்போவதாக கூறியிருப்பது மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்கு எதிரானது. இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரிப்பதற்கு போதுமானது. இதை மத்திய அரசின் கவனத்திற்கும், சுப்ரீம்கோர்ட்டின் கவனத்திற்கும் தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணையின்</a> நீர்த்தேக்கப்பகுதி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்பதும் கர்நாடக முதல்-மந்திரியின் உரை மூலம் தெரியவந்துள்ளது. மேகதாது அணையின் நீர்த்தேக்கப்பகுதி 5,000 ஹெக்டேர், அதாவது 12,500 ஏக்கராக இருக்கும் என்று கூறப்பட்டது. </p><p>ஆனால் நீர்த்தேக்கப் பகுதி 5,400 ஹெக்டேர், அதாவது 13,500 ஏக்கராக இருக்கும் என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். இதன் மூலம் விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள 67 டிஎம்சியை விட அதிக நீரை மேகதாது அணையில் தேக்கி வைக்க முடியும். அதுமட்டுமின்றி மேகதாது அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கும். இதை அனுமதிக்கக் கூடாது.</p><h2>சுப்ரீம்கோர்ட்டு அனுமதியா..?</h2><p>கர்நாடகத்தின் முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவியேற்ற நாளில் இருந்தே மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கலாம் என்று தான் சுப்ரீம்கோர்ட்டு கூறியிருக்கிறதே தவிர, மேகதாது அணையைக் கட்ட அனுமதி அளிக்கவில்லை. </p><p>ஆனால்,  <a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணையை</a> கட்ட சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்துவிட்டதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அவர்கள் தொடர்ந்து பொய்யான பரப்புரை செய்து வருகிறார். இதை மறுத்து, உண்மை நிலையை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய தமிழக அரசோ, எதையும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது.</p><p>நேபாளத்தில் இமயமலையில் உருவாகியிருந்த ஏரிகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல், இயற்கை சீற்றங்களால் எதிர்காலத்தில் மேகதாது அணைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதன்கீழ் பகுதியில் உள்ள தமிழக பகுதிகள் பேரழிவை சந்திக்கும் ஆபத்தும் உள்ளது.</p><h2>அலட்சியம் காட்டக்கூடாது</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணை</a> கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக, காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல. தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும்.</p><p>எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா..  குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncle-who-impregnated-class-12-student-arrested-under-the-goondas-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncle-who-impregnated-class-12-student-arrested-under-the-goondas-act#comments</comments><guid isPermaLink="false">f371b0ce-a986-49a4-bc36-3367ca4893e0</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:10:58 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:10:58.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,கைது,arrest,Goondas act,குண்டர் சட்டம்,ராமநாதபுரம்,Ramanathapuram,பாலியல் பலாத்காரம்,sexual abuse</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/r64d13it/schi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/r64d13it/schi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொண்டி, </p><p>பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். </p><h2>பிளஸ்-2 மாணவி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/ramanathapuram">ராமநாதபுரம்</a> மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி வசித்து வந்த வீட்டில் அவரது சித்தி குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.</p><h2>3 மாத கர்ப்பம்</h2><p>இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த மாணவியை அவருடைய சித்தப்பா மகேந்திரன் (வயது 39) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி, 3 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. </p><h2>குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</h2><p>இதுகுறித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் குழந்தைகள் நல அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகேந்திரனை கைது செய்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ், இதுகுறித்து விசாரித்தார். </p><p>மாணவியை கர்ப்பமாக்கிய மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைதொடர்ந்து அதற்கான உத்தரவை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் பிறப்பித்தார். இதையடுத்து மகேந்திரன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-does-mustafa-shed-tears-when-terrorists-are-punished-nainar-nagendran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-does-mustafa-shed-tears-when-terrorists-are-punished-nainar-nagendran-asks#comments</comments><guid isPermaLink="false">ffb44495-36cb-4f79-b5c3-06ecd89a27cb</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:50:00 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:50:00.808Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தீவிரவாதிகள்,Mustafa,முஸ்தபா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/urvfgcjh/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/urvfgcjh/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பாரதத் தாயின் மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர்  முகுந்த் வரதராஜனின் வீர வரலாற்றைப் போற்றும் 'அமரன்' திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்?. ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை முஸ்தபா ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்?. பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது. உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா?.</p><p>மேலும், முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் முஸ்தபா. திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. </p><p>முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களை முதல்-அமைச்சர் விஜய் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இதுதான் தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: சுடுகாட்டில் ரவுடி வெட்டி கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-rowdy-hacked-to-death-in-crematorium-police-launch-net-to-nab-mysterious-persons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-rowdy-hacked-to-death-in-crematorium-police-launch-net-to-nab-mysterious-persons#comments</comments><guid isPermaLink="false">dffd2d78-ac44-4a20-ae41-1aee3e457e10</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:49:44 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:49:44.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,murder,கொலை,Kelambakkam,போலீசார்,கேளம்பாக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/iwjb2p1g/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை வழக்கில் சுடுகாட்டில் விசாரணை நடத்திய போலீசார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/iwjb2p1g/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுடுகாட்டில் ரவுடியை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>வெட்டி கொலை   </h2><p>சென்னை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஒருவரின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இதனை அந்த வழியே சென்றவர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் வெட்டு காயங்களை பார்த்ததும் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், <a href="https://www.dailythanthi.com/topic/கொலை">கொலை</a> செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் ரவுடி சாஹூல் ஹமீது (வயது 29) என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை </h2><p>மேலும் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா என்பதை <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார் </a>பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாமியாரை குத்திக்கொன்ற புதுமாப்பிள்ளை: மனைவி கண்முன் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/newlywed-man-stabs-mother-in-law-to-death-frenzied-act-committed-before-his-wifes-eyes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/newlywed-man-stabs-mother-in-law-to-death-frenzied-act-committed-before-his-wifes-eyes#comments</comments><guid isPermaLink="false">181551b7-9138-4c13-9b49-5ae497784d1e</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:34:11 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:34:11.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Virudhunagar,விருதுநகர்,Murder case,கிரைம் செய்திகள்,மாமியார் கொலை,புதுமாப்பிள்ளை கைது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/7d9peh5t/satt.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/7d9peh5t/satt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர், </p><p>மனைவி குடும்பம் நடத்த வரமறுத்தது தொடர்பான தகராறில் மாமியாரை அவரது வீட்டில் புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த மைத்துனருக்கும் சரமாரி கத்திக் குத்து விழுந்தது.</p><h2>6 மாதங்களுக்கு முன்பு திருமணம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/virudhunagar">விருதுநகர்</a> அருகே பாலையம்பட்டியை சேர்ந்த அதிராமிளகி என்பவருடைய மகன் சிவா (வயது 26). இவர், சூலக்கரை பகுதியில் உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் செவல்பட்டியை சேர்ந்த வாசகதேவி (27) என்பவரும் வேலைபார்த்தார்.</p><p>அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.</p><h2>குடிப்பழக்கம் </h2><p>திருமணத்திற்கு பிறகு சிவா கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வேலையில்லாத நாட்களில் மது குடித்து விட்டு வந்து வாசகதேவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக வாசகதேவி கணவரை பிரிந்து செவல்பட்டியில் உள்ள தாய் சாந்தியின் (55) வீட்டிற்கு சென்றுவிட்டார்.</p><h2>சமாதானம்</h2><p>புதுமாப்பிள்ளை சிவாவுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>இந்தநிலையில் நேற்று அதிகாலையில் செவல்பட்டியில் மாமியார் வீட்டுக்கு சிவா சென்றார். மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.</p><h2>கத்திகுத்து </h2><p>மேலும் வாசகதேவியிடம் விவாகரத்து வழக்கை திரும்ப பெற்று மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, மனைவியை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு இழுத்துச் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதை மாமியார் சாந்தி, வாசகதேவியின் சகோதரர் சாமிமுருகன் (33) ஆகியோர் தடுத்துள்ளனர். </p><p>இதில் ஆத்திரம் அடைந்த சிவா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார், மைத்துனரை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாமி முருகன் பலத்த காயம் அடைந்தார்.</p><h2>தலைமறைவாக இருந்த நபர் கைது</h2><p>இதற்கிடையே இவர்களது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். சாமி முருகன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூலக்கரை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் .</p><p>கொலை செய்துவிட்டு செவல்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த சிவாவை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பருத்தி நூல் ஏற்றுமதியை முறைப்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ஏ.இ.பி.சி. வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cotton-yarn-exports-must-be-regulated-aepc-urges-central-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cotton-yarn-exports-must-be-regulated-aepc-urges-central-government#comments</comments><guid isPermaLink="false">083d5e50-906c-44b1-9bcd-05a220311eff</guid><pubDate>Sun, 30 Aug 2026 05:41:34 +0000</pubDate><atom:updated>2026-08-30T05:41:34.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,மத்திய அரசு,Central Government,ஆயத்த ஆடை,பருத்தி நூல்,நூல் ஏற்றுமதி,yarn exports,Cotton yarn</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/3vq9yqul/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/3vq9yqul/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><h2>60 சதவீதம் உயர்வு</h2><p>பருத்தி வினியோகத்தில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள், ஜின்னிங் ஆலைகளிடம் குறைந்துள்ள பருத்தி இருப்பு மற்றும் சந்தைக்கு வரும் பருத்தியின் அளவு குறைந்துள்ளதால் நூற்பாலைகளுக்கு பருத்தி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.</p><p>கடந்த ஜனவரி மாதத்தில் 1 கிலோ பருத்தி நூல் சுமார் ரூ.250 ஆக இருந்த நிலையில், தற்போது சுமார் ரூ.400 வரை உயர்ந்துள்ளது. அதாவது 60 சதவீதம் விலை அதிகரித்துள்ளதால், ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் கடுமையான செலவினத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றமும் உற்பத்தி செலவை மேலும் அதிகரித்துள்ளது.</p><h2>மதிப்பு கூட்டப்பட்ட பொருள்</h2><p>மேலும் வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இந்திய பருத்தி மற்றும் பருத்தி நூல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு மூலப்பொருள் விலையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற புதிய வரி யில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட்ட நாடுகளின் சந்தைகளில் இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நூல் விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஒரு கிலோ பருத்தி ரூ.275, நூலாக மாற்றப்பட்டால் ரூ.325 மதிப்பை பெறுகிறது. ஆனால், அதே பருத்தி மதிப்பு கூட்டப்பட்ட ஆடையாக மாற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் போது, ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.800 முதல் ரூ.1,200 வரை மதிப்பு கிடைக்கக்கூடும். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.</p><h2>நூல் ஏற்றுமதியை முறைப்படுத்துங்கள்</h2><p>இந்தநிலையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத் தின் (ஏ.இ.பி.சி.) தலைவர் சக்திவேல், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், '20 எஸ் கவுண்ட் மற்றும் அதற்கு மேற்பட்ட பருத்தி நூல் ஏற்றுமதியை உரிய முறையில் முறைப்படுத்தி, உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவையான நூல் உரிய விலையில் கிடைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மத்திய அரசின் விரைவான தலையீடு ஆயத்த ஆடை ஏற்றுமதித் துறைக்கு நிவாரணம் அளிப்பதுடன், இந்தியாவின் மதிப்பு கூட் டப்பட்ட ஆடை ஏற்றுமதியை உலகளவில் மேலும் விரிவுபடுத்தவும், சர்வதேச போட்டித்திறனை வலுப்படுத்தவும் உதவும்' என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தர்மபுரி அருகே கொடூரம்: தனது தாயையும், மகளையும் ஒரே நேரத்தில் வெட்டிக்கொன்ற சமையல் மாஸ்டர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/atrocity-near-dharmapuri-chef-hacks-his-mother-and-daughter-to-death-simultaneously</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/atrocity-near-dharmapuri-chef-hacks-his-mother-and-daughter-to-death-simultaneously#comments</comments><guid isPermaLink="false">4c79b4e8-9839-4cf7-a1cc-f5800add537f</guid><pubDate>Sun, 30 Aug 2026 05:15:01 +0000</pubDate><atom:updated>2026-08-30T05:15:01.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கிரைம் செய்திகள்,police investigation,போலீஸ் விசாரணை,தர்மபுரி,Dharmapuri,double murder,இரட்டை கொலை,பாப்பிரெட்டிப்பட்டி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/3jxc34iu/dhar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/3jxc34iu/dhar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பாப்பிரெட்டிப்பட்டி, </p><p>பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுபோதையில் தாய், மகளை வெட்டிக் கொன்ற சமையல் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>கருத்து வேறுபாடு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/dharmapuri">தர்மபுரி</a> மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிகாரப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). ஓட்டல் சமையல் மாஸ்டர். இவருடைய மனைவி ஷாலினி. இவர்களது மகள் சின்மயி (19). இவர் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.</p><p>இதனால் சின்மயி, பாட்டி உமாராணி (60) உடன் வசித்து வந்தார். இன்னொரு வீட்டில் சுரேஷ் வசித்து வருகிறார். சேலத்தில் தனியார் ஓட்டலில் தங்கி கூலி வேலை செய்து வரும் ஷாலினி அவ்வப்போது ஊருக்கு வந்து மகள் சின்மயியை பார்த்து செல்வது வழக்கம். இதனிடையே நேற்று முன்தினம் இரவு சின்மயி சுரேசுக்கு சாப்பாடு கொடுக்க சென்றார்.</p><h2>அரிவாள் வெட்டு</h2><p>அப்போது சின்மயிடம், யாரிடம் நீ போன் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார். நான் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன் நீ சரியாக இருந்திருந்தால் நான் தாயை பிரிந்து தனியாக இருப்பேனா?, நீ சரியில்லை எனக்கூறி தந்தையை சின்மயி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மது போதையில் வீட்டில் இருந்த அரிவாளால் மகளை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.</p><p>இதனை தடுக்க வந்த உமாராணியையும் அவர் தாக்கி அரிவாளால் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த உமாராணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.</p><h2>கைது</h2><p>இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சின்மயியை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது.</p><p>இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுரேசை போலீசார் கைது செய்தனர்.</p><h2>சிகிச்சை பலனின்றி மகளும் உயிரிழப்பு</h2><p>இந்த நிலையில் நேற்று மாலை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்மயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரட்டை கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார், ஏ.பள்ளிப்பட்டி இன்ஸ்பெக்டர் வான்மதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.</p><p>தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-sales-at-ration-shops-central-government-to-supply-70000-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-sales-at-ration-shops-central-government-to-supply-70000-kg#comments</comments><guid isPermaLink="false">80294ec4-3cd9-451d-b224-36d90f35f10d</guid><pubDate>Sun, 30 Aug 2026 05:09:50 +0000</pubDate><atom:updated>2026-08-30T05:09:50.233Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,Ration shop,onion,வெங்காயம்,வெங்காயம் விலை,Onion price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/1qvh1qza/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/1qvh1qza/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமையலுக்கு பிரதானமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை சமீபகாலமாக விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த மாதம் இறுதியில் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரித்து ரூ.60 வரை விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்து ரூ.70 வரை விற்பனை ஆகிறது.</p><p>வெளிச்சந்தையில் முக்கிய காய்கறிகள் விலை உயரும்போது, அதை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. அந்த வகையில், ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. </p><p><strong>இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி கூறியதாவது:-</strong></p><p>பொதுமக்களுக்கு வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்க, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, 'நாபெட்' எனப்படும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம், முதல் கட்டமாக, 70,000 கிலோ வெங்காயம் வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து கிடைத்ததும், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இந்த வெங்காயம் விற்கப்பட உள்ளது. ஒரு கிலோ, ரூ.30 முதல் ரூ.40-க்குள் விற்பனை செய்யப்படும். என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரபல ரவுடி கொலையில் கணவன்-மனைவி கைது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-and-wife-arrested-shocking-details-revealed-during-interrogation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-and-wife-arrested-shocking-details-revealed-during-interrogation#comments</comments><guid isPermaLink="false">bba02a18-bc89-4ba5-bd6a-ec5a63ab745b</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:34:38 +0000</pubDate><atom:updated>2026-08-30T04:34:38.619Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,விசாரணை,arrest,கிரைம் செய்திகள்,investigation,Rowdy murder,ரவுடி கொலை,கணவன் மனைவி கைது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/dmk0oeh4/arere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/dmk0oeh4/arere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடங்குளம், </p><p>கூடங்குளம் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர். </p><h2>ரவுடி வெட்டிக்கொலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/கன்னியாகுமரி">குமரி</a> மாவட்டம் தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் செல்வம் (வயது 46). பிரபல ரவுடியான இவர் மீது குமரி, தூத்துக்குடி தாளமுத்துநகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. </p><p>செல்வத்துக்கு சொந்தமான தோட்டம், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கனேரி கிராமத்தில் உள்ளது. இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்துக்கு சென்றபோது, மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.</p><p>பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>சிக்கிய தம்பதி </h2><p>மேலும் இன்ஸ்பெக்டர் நவீன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.</p><p>விசாரணையில் செல்வத்தின் கூட்டாளிகளான பொட்டல்குளத்தை சேர்ந்த சந்துரு (26), அவரது மனைவி கவுரி ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.</p><h2>திடுக்கிடும் தகவல்</h2><p>இதையடுத்து போலீசார் 2 பேரையும் நேற்று முன்தினம் இரவில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, செல்வம், சந்துரு சேர்ந்து குளத்தை குத்தகைக்கு எடுத்து அதில் தாமரை பூக்களை வளர்த்து விற்பனை செய்தனர்.</p><p>சமீபத்தில் ஒரு குளத்தை குத்தகைக்கு எடுத்த விவகாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக செல்வத்தை 2 பேரும் சேர்ந்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.</p><h2>அதிரடி கைது</h2><p>இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து சந்துரு, கவுரி ஆகிேயைார அதிரடி யாக கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு ஊழியர்களுக்கான மாதாந்திர இடைக்கால உதவித்தொகை விதிகளில் திருத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/amendment-to-the-rules-regarding-monthly-interim-relief-for-government-employees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/amendment-to-the-rules-regarding-monthly-interim-relief-for-government-employees#comments</comments><guid isPermaLink="false">4c8b4e83-e595-4434-b060-3e0f7ede1449</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:22:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T04:22:35.369Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,அரசு ஊழியர்கள்,Govt employees,உதவித்தொகை,Interim Relief</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/4x8qniex/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/4x8qniex/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-</p><p>கடந்த 1.1.2026 அன்று அல்லது அதற்கு பிறகு பணிநிறைவு பெற்றவர்கள், பணியின்போது இறந்தவர்கள் மற்றும் பணிநி றைவுக்கு பின் இறந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (சி.பி.எஸ்.) உள்ள தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர இடைக்கால உதவித்தொகை மற்றும் குடும்ப உதவித்தொகை வழங்கும் அரசாணை கடந்த 16.6.2026 அன்று நிதித் துறையால் வெளியிடப்பட்டது. அதன்படி, கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதிகமோ, அத்தொகையுடன் 60 சதவீதம் அகவிலைப்படி நிவாரணமும் வழங்கப்பட்டது.</p><p>6-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெற்று ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 1.1.2026 முதல் அகவிலைப்படி விகிதம் 262 சதவீதம் என்பதால், இவ்விதிகளில் திருத்தம் செய்து தற்போது புதிய அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. அதன் அடிப்ப டையில், 6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாகச் சம்பளம் பெற்று, 30 சதவீத அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமாக இருந்து. 7-வது ஊதியக்குழுவிற்கு மாற்றப்படாத ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் 262 சதவீத விகிதத்தில் வழங்கப்படும்.</p><p>6-வது ஊதியக்குழுவின் கீழ் 30 சதவீத அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால், இடைக்காலத்தில் குறைந்தபட்சத்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு 60 சதவீதம் அகவிலைப்படி நிவாரணம் வழங்கப்படும். ஆனால், 7-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெற்ற அரசு ஊழியர்களுக்கு 60 சதவீதம் மட்டுமே அகவிலைப்படி நிவாரணமாக கணக்கிடப்படும். இதனடிப்படையில் கருவூலக்கணக்கு ஆணையர் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பைக் மீது கார் மோதி தம்பதி காயம்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-injured-after-car-hits-bike-anti-corruption-police-inspector-jailed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-injured-after-car-hits-bike-anti-corruption-police-inspector-jailed#comments</comments><guid isPermaLink="false">9f5283bb-9989-4197-b87d-6c1a0a5460cf</guid><pubDate>Sun, 30 Aug 2026 03:58:04 +0000</pubDate><atom:updated>2026-08-30T03:58:04.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Karaikudi,காரைக்குடி,புதுக்கோட்டை,சிறை தண்டனை,Pudukottai,லஞ்ச ஒழிப்பு போலீஸ்,தம்பதி காயம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ntlgkva3/lock.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ntlgkva3/lock.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காரைக்குடி, </p><p>பைக் மீது கார் மோதி தம்பதி காயமடைந்த வழக்கில், சம்பந்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/pudukkottai">புதுக்கோட்டை</a> மாவட்டம் திருமயம் தாலுகா ஊனையூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் கார்த்திகேயன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி கணவன்- மனைவி இருவரும் ஊனையூரில் இருந்து காரைக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். </p><h2>பலத்த காயம்</h2><p>மறிச்சுகட்டு பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த கார், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் பலத்த காயம் அடைந்தார். தமிழ்ச்செல்வி லேசான காயம் அடைந்தார். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h2>லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில் செட்டிநாடு போலீசார் காரை ஓட்டி வந்த காரைக்குடி பாரிநகரை சேர்ந்த பீட்டர் (வயது 51) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர் தற்போது புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். </p><h2>சிறை தண்டனை</h2><p>இந்த வழக்கு காரைக்குடி கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் செல்வராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி கார்மேக கண்ணன், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைனில் மின் கட்டணம்: 10 கோடியை தாண்டிய நுகர்வோர் எண்ணிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-electricity-bill-payments-number-of-consumers-crosses-10-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-electricity-bill-payments-number-of-consumers-crosses-10-crore#comments</comments><guid isPermaLink="false">4769bfe1-eb96-4079-8ca4-06c3a5d65b33</guid><pubDate>Sun, 30 Aug 2026 03:27:49 +0000</pubDate><atom:updated>2026-08-30T03:27:49.646Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,ஆன்லைன்,மின் கட்டணம்,electricity bill,TNEB,சேவை கட்டணம்,மின் பகிர்மானக் கழகம்,onlie paymet</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/nswor61s/moni.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/nswor61s/moni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழகத்தில் ஆன்லைன் உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் <a href="https://www.dailythanthi.com/topic/electricity-bill">மின் கட்டணம்</a> செலுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மின் கட்டணம்</h2><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், மின்சார நுகர்வோர்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் முறையில் <a href="https://www.dailythanthi.com/topic/electricity-bill">மின் கட்டணம்</a> செலுத்தும் வசதியும் அடங்கும். தமிழ்நாடு முழுவதும் 2.54 கோடி வீடுகள் உட்பட அனைத்து பிரிவுகளிலும் 3.51 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். </p><h2>டிஜிட்டல் முறையில்</h2><p>இலவச மின்சார பயனாளிகள் போக மாதம் சராசரியாக 1 கோடி முதல் 1.15 கோடி வரை நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துகின்றனர். செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் பலரும் அரசு மற்றும் தனியார் துறை சேவைகளுக்கான கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தவே ஆர்வம் காட்டுகின்றனர்.</p><p>இதனால் 2025 - 26ல், மின் வாரியத்திற்கு டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தியவர்கள் எண்ணிக்கை, 10.63 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்படி அவர்கள் 62,537 கோடி ரூபாய் டிஜிட்டல் முறையில் செலுத்தியுள்ளனர். இது 2024 - 25ல் 9.56 கோடி நுகர்வோர்களாகவும், செலுத்திய கட்டணம் 58,285 கோடி ரூபாயாகவும் இருந்தது.</p><h2>புதிய சேவைகள்</h2><p>இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு, 10 முதல் 15 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டில் மின் கட்டணம் செலுத்தியதில் டிஜிட்டலின் பங்கு 87 சதவீதம் ஆகும். ஆன்லைனில் இன்னும் புதிய சேவைகள் தொடங்கப்பட உள்ளன. அதன் வாயிலாக எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் ஜல்லிக்கட்டு போட்டியை இழிவுபடுத்தவில்லை-சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. விளக்கம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jallikattu-was-not-disparaged-in-the-assembly-sholavandan-constituency-mla-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jallikattu-was-not-disparaged-in-the-assembly-sholavandan-constituency-mla-clarifies#comments</comments><guid isPermaLink="false">638d91cc-cb2e-4d61-ac0b-f689ccaf84f6</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:58:38 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:58:38.656Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜல்லிக்கட்டு,சட்டசபை,Jallikkatu,சோழவந்தான் தொகுதி,sholavandan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/vg3oqro2/Solavandhan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/vg3oqro2/Solavandhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் குடிமக்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பது வரலாற்று உண்மை. அதில் எந்த மாற் றமும் இல்லை. ஜல்லிக்கட்டு நான் பிறந்த மண்ணின் வீர விளையாட்டு. அதை நான் எப் படி இழிவுபடுத்துவேன். அலங்காநல்லூர் பகுதியில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிதி இன்றி மூடப்பட்டு உள்ளது. அதை மீண்டும் இயக்குவதற்கு ரூ.50 கோடி நிதி தேவைப்படும் நிலையில், யாருக்கும் பயனின்றி ரூ.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஏறு தழுவுதல் அரங்கத்துக்கு செலவிட்ட நிதியை பயன்படுத்தி சர்க்கரை ஆலையை திறக்க உதவி இருக்கலாம் என்ற கருத்தைதான் கூறினேன். </p> <p>ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கலாசாரப்படி அரங்கம் அமைத்து நடத்துவது தமிழ் கலாசாரத்திற்கு முரணானது. பொங்கல் விழாவின்போது அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து ஏறு தழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு மாணவர்கள் ஒழுங்காக செல்லாமல் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தனர். </p><p>அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகதான் சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி இழிவாகக்கூறவில்லை. மாணவ பருவத்தினரை மனதில் வைத்து கொண்டு, அவர்கள் படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக அப் படி கூறினேன். இதில் இளைய சமுதாயத்தினரின் மனது புண்படும்படி யாக பேசி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>துாத்துக்குடி துறைமுகத்தில் முதல்முறையாக கச்சா பாமாயில் இறக்குமதி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/crude-palm-oil-imported-at-tuticorin-port-for-the-first-time</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/crude-palm-oil-imported-at-tuticorin-port-for-the-first-time#comments</comments><guid isPermaLink="false">b6a03f3e-4655-4a28-aa2e-af38c9606758</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:54:46 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:54:46.644Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,துறைமுகம்,Thoothukudi,தூத்துக்குடி,இறக்குமதி,Import,Tuticorin port,கச்சா பாமாயில்,Crude palm oil</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/am46i3xe/prohit.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கச்சா பாமாயில் இறக்கும் பணியை துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்த குமார் புரோஹித் தொடங்கி வைத்தார்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/am46i3xe/prohit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/thoothukudi">தூத்துக்குடி</a> துறைமுகத்தில் முதல் முறையாக மலேசியா கப்பலில் இருந்து 15 ஆயிரம் டன் கச்சா பாமாயிலை இறக்கி சாதனை படைக்கப்பட்டது.</p><h2>சரக்கு கப்பல்</h2><p>மலேசியாவின் குனாக் துறைமுகத்தில் இருந்து 15 ஆயிரம் டன் கச்சா பாமாயிலை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு கப்பல் நேற்று முன்தினம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது. 143 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் 9.70 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது.</p><p>துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்தகுமார் புரோஹித் முன்னிலையில் கச்சா பாமாயிலை இறக்கும் பணி தொடங்கியது. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன், கே.டி.வி. ஹெல்த் புட் நிறுவன நிர்வாக இயக்குனர் கே.டி.வி.நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><h2>4 சேமிப்பு தொட்டிகள்</h2><p>மாற்றியமைக்கப்பட்ட முனையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள சேமிப்பு தொட்டிகளுக்கு குழாய்கள் மூலம் பாமாயில் கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் உள்ள 15 ஆயிரம் டன் பாமாயிலும் நாளைக்குள் (திங்கட்கிழமை) இறக்கப்பட்டு விடும்.</p><p>கே.டி.வி. ஹெல்த் புட் நிறுவனம் துறைமுகத்தின் தொழில் மண்டலத்தில் 4 சேமிப்பு தொட்டிகளை அமைத்துள்ளது. இந்த நிறுவனம் நாளொன்றுக்கு 1,000 டன் சுத்திகரிக்கப்பட்ட பாமோலின் தயாரிக்கும் திறன் கொண்டது.</p><h2>பசுமை ஹைட்ரஜன்</h2><p>இங்கு தயாரிக்கப்படும் பாமோலின், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் நுகர்வுக்காக வினியோகிக்கப்படுகிறது. துறைமுகம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் வ.உ.சி. துறைமுக நிர்வாகம் சுமார் 1,633 ஏக்கர் நிலத்தை மின் உற்பத்தி நிலையங்கள், ரசாயன தொழில்கள், கிடங்குகள், உணவு பதப்படுத்துதல், சமையல் எண்ணெய் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட தொழில்களுக்கு ஒதுக்கி உள்ளது.</p><h2>முதல் முறையாக..</h2><p>மாற்றியமைக்கப்பட்ட நிலக்கரி முனையத்தில் முதல் முறையாக கச்சா பாமாயில் கப்பல் கையாளப்பட்டிருப்பது, துறைமுகத்தில் சரக்கு வகைகளைப் பல் வகைப்படுத்தவும், துறைமுகம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கும், பிராந்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் சமையல் எண்ணெய் துறையின் விரிவாக்கத்துக்கும் உதவும் என்று துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்த குமார் புரோஹித் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: 13-வது நாளாக பரிசல் இயக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal-coracle-operations-suspended-for-the-13th-consecutive-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal-coracle-operations-suspended-for-the-13th-consecutive-day#comments</comments><guid isPermaLink="false">dbd83e7d-96c1-44a2-b18c-43324ab7edbe</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:32:55 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:32:55.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Hogenakkal,ஒகேனக்கல்,காவிரி நீர்,Karnataka,கர்நாடகா,Hogenakkal Cauvery,Cauvery,பரிசல் இயக்க தடை,Hogenakkal Cauvery river</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/lswc58ul/hoge.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/lswc58ul/hoge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாடம், </p><p>கர்நாடகத்தில் காவிரி படுகையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கிருஷ்ணராஜ சாகர்(கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் மற்றும் கேரளம் மாநிலம் வயநாடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் குடகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. </p> <h2>கே.ஆர்.எஸ். அணை</h2><p>இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 589 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது குடகில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 85 கனஅடி ஆக இருந்தது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 110.26 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 179 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.</p><h2>கபினி அணை</h2><p>இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரத்து 45 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 993 கனஅடியாக குறைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,271.90 அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரத்து 600 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.</p><p>கே.ஆர்.எஸ். கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் டி.நரசிப்புரா அருகே ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வருகிறது. அதன்படி நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 13 ஆயிரத்து 685 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரத்து 758 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.</p><h2>ஒகேனக்கல்</h2><p>கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் வழக்கம். இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.  </p><h2>நீர்வளத்துறை அதிகாரிகள்</h2><p>இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><h2>பரிசல் இயக்க தடை</h2><p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 13-வது நாளாக நீடிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>பெண்ணை கொன்று உடலை கூறுபோட்ட கள்ளக்காதலன்... பரபரப்பு தகவல்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-lover-who-killed-woman-and-dismembered-her-body</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-lover-who-killed-woman-and-dismembered-her-body#comments</comments><guid isPermaLink="false">5e52d627-81c8-4e6b-bc0e-cd509f1c43e4</guid><pubDate>Sun, 30 Aug 2026 01:23:02 +0000</pubDate><atom:updated>2026-08-30T01:23:02.949Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,கள்ளக்காதல்,கிரைம் செய்திகள்,fake love</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/2i1ko8pn/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/2i1ko8pn/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சூட்கேசில் மனித உறுப்புகள்</h2><p>சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அப்போது ரெயிலின் கடைசி பெட்டியில் யாரும் உரிமை கோராத சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்தது. போலீசார் அதை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே தலை இல்லாத மனித எலும்புக்கூடுகள் மற்றும் சில உடல் உறுப்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>இதையடுத்து போலீசார் எலும்புக்கூடு கள் மற்றும் உடல் உறுப்புகளை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவை யாருடையது? எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.</p><h2>சென்டிரலில் சிக்கிய காட்சி</h2><p>இதன் ஒரு பகுதியாக ஆக்ரா போலீசார் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத் தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்றை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்புற பெட்டியில் ஏற்றிவிட்டு இறங்கிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.</p><p>இதையடுத்து அவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? என்பது குறித்து பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிவப்பு நிற சூட்கேசை ரெயிலில் ஏற்றியவர்கள் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2>மைதா மாவு கலக்கப்பட்ட சதைப்பகுதி</h2><p>இதுகுறித்த தகவலின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப் போது அந்த இருவரும் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.</p><p>அப்போது வீட்டுக்குள் பிரியாணி தயாரிக்க பயன்படுத் தப்படும் பெரிய அண்டா பாத்திரம் ஒன்று சிவப்பு நிற துணியால் மூடப்பட்டிருந்தது. மேலும் வீட்டுக்குள் கடுமையான துர்நாற்றம் வீசியது. அந்த பாத்திரத்தை திறந்து பார்த்தபோது அதற்குள் மனித உடலின் சதைப்பகுதிகள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தன. அந்த சதைப்பகுதிகளில் மைதா மாவு கலக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மனித சதைப்பகுதிகளை அண்டாவுடன் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>தகாத உறவு</h2><p>இதற்கிடையே ஆக்ரா ரெயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மனித எலும்புகள் மற்றும் உடல் உறுப்புகளும், கூடுவாஞ்சேரி வீட்டில் கைப்பற்றப்பட்ட மனித சதைப்பகுதிகளும் ஒரே நபருடையதா? என்பது குறித்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒரே நபருடையது என்பது உறுதி யானது. தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா (வயது 38) என்பது தெரியவந்தது.</p><p>இவர் சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும் உள்ளார். அவர் தாம்பரத் தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். அவரி டம் நடத்தப்பட்ட விசாரணையில் 'தனது தாயார் ஒருவருடன் தகாத உறவில் இருந்ததால் நான் தனியாக தங்கி வேலை செய்து வருகிறேன்' என கூறியுள்ளார்.</p><h2>தம்பதி மீது சந்தேகம்</h2><p>இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் ஹயாத் நிஷாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபர் யார்? என விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், ஹயாத் நிஷா தங்கி இருந்த வீட் டில் கடந்த 2 மாதங்களாக தம்பதிகளான அசாம் மாநிலத்தை சேர்ந்த மணிக்உத்தீன் லஸ்கர் (22) என்பவரும், ஒடிசா மாநி லத்தை சேர்ந்த பகவதி மாஜி என்பவரும் தங்கி இருந்தது தெரியவந்தது.</p><p>இதனால் போலீசாரின் சந்தேகம் அந்த தம்பதி யினர் மீது திரும்பியது. ஹயாத் நிஷாவை கொலை செய்து விட்டு இருவரும் தங்களது சொந்த ஊர்களான அசாம் அல்லது ஒடிசாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் அசாம் மாநிலத்திற்கு விரைந்து சென்றனர்.</p><h2>மணிப்பூரில் கைது</h2><p>ஒரு வாரத்துக்கும் மேலாக போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள காசிம்பூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மணிப்பூர் போலீசாரின் உதவியுடன் காசிம்பூர் பகுதிக்குச் சென்று அங்கு பதுங்கி யிருந்த மணிக்உத்தீன் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.</p><p>தற்போது கைதான இருவரையும் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்காக நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்டுள்ள தம்பதியினரை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், அவர்கள் கொலை செய்த விதம் குறித்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும் தொடர் விசாரணைக்குப் பிறகே இந்த கொலையின் முழுமையான பின்னணி குறித்து தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர்-கன்னியாகுமரி இடையிலான சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-special-train-service-between-egmore-and-kanyakumari</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-special-train-service-between-egmore-and-kanyakumari#comments</comments><guid isPermaLink="false">d3dcb8f9-baab-42f7-892d-a1c11bf7bd72</guid><pubDate>Sun, 30 Aug 2026 01:19:41 +0000</pubDate><atom:updated>2026-08-30T01:19:41.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,சிறப்பு ரெயில்,Special train,train,எழும்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/yn8x8c4b/Train.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/yn8x8c4b/Train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06045) இயக்கப்படுகிறது. அதேபோல, கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06046) இயக்கப்படுகிறது.</p><p>நெல்லையில் இருந்து அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) மற்றும் அடுத்த மாதம் 3-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில்கள் (06166, 06070) இயக்கப்படுகின்றன. அதேபோல, தாம்பரத்தில் இருந்து அடுத்த மாதம் 7-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) மற்றும் அடுத்த மாதம் 4-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் (06165, 06069) இயக்கப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!வானிலை மையம் அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-one-or-two-places-in-tamil-nadu-today-weather-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-one-or-two-places-in-tamil-nadu-today-weather-department-update#comments</comments><guid isPermaLink="false">e0f6466e-9407-42a7-8ad5-67e1c6c2d72d</guid><pubDate>Sun, 30 Aug 2026 00:56:03 +0000</pubDate><atom:updated>2026-08-30T00:56:03.920Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,weather information,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN weather,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/o4qmkn0e/kli.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/o4qmkn0e/kli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>இதன்காரணமாக இன்று (30-08-2026):</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (31-08-2026):</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>லேசான மழை</h2><p><strong>01-09-2026 மற்றும் 02-09-2026:</strong> வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>03-09-2026:</strong> வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும்.</p><p><strong>04-09-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>30-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>30-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (30-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 ° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>30-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>30-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>31-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>30-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>

தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kiran-kumar-reddy-likely-to-be-appointed-as-governor-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kiran-kumar-reddy-likely-to-be-appointed-as-governor-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">ee78f261-e52a-4995-ac2e-7de355f0dcee</guid><pubDate>Sun, 30 Aug 2026 00:47:07 +0000</pubDate><atom:updated>2026-08-30T00:47:07.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கவர்னர்,TN Governor,கிரண்குமார் ரெட்டி,Kirenkumar reddy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/285yjc21/kiren-kumar-redddy.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரண் குமார் ரெட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/285yjc21/kiren-kumar-redddy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேரள மாநிலத்தின் கவர்னர் ஆர்.வி.அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். ந்இவர்தான் முதல்-அமைச்சர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த  6 மாத காலமாக தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படாமல் இருக்கும் நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட இருப்பதாக பேச்சுகள் எழுந்து உள்ளன.</p><h2>மத்திய மந்திரி சபையில் மாற்றம்</h2><p>கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் இது பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே மத்திய மந்திரி சபையில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக வும், அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கவர்னர்கள் புதிதாக நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் கவர்னர் நியமனம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு, நாடு திரும்பிய பிறகு இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p> ]]></content:encoded></item><item><title>
அமராவதி அணையில் இருந்து இன்று முதல் நீர் திறப்பு: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/amaravati-anaial-irundu-indru-mudhal-neer-thirappu-mudhal-amaichar-vijay-utharavu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/amaravati-anaial-irundu-indru-mudhal-neer-thirappu-mudhal-amaichar-vijay-utharavu#comments</comments><guid isPermaLink="false">69b15844-e664-4d62-941a-faa7835eecda</guid><pubDate>Sat, 29 Aug 2026 20:32:37 +0000</pubDate><atom:updated>2026-08-29T20:32:37.853Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமராவதி அணை,Amaravati dam,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/oimj59i9/tngoa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/oimj59i9/tngoa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.</p><p>தமிழக அரசின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, தற்போது, எல்.நினோ பாதிப்பினால் மழைப்பொழிவு இல்லாததால் அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் உயர்வதற்கும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்கும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக 30.08.2026 முதல் 07.09.2026 வரை நாளொன்றுக்கு, வினாடிக்கு 1,000 கன அடி வீதம் 8 நாட்களுக்கும் போதிய மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், மேலும் 4 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம், அமராவதி அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து, அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
நாகை:  வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் பலூன்; 2 பேர் படுகாயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagai-velankanni-basilica-festival-helium-balloon-explosion-two-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagai-velankanni-basilica-festival-helium-balloon-explosion-two-injured#comments</comments><guid isPermaLink="false">e8fcdf64-e84b-4d52-b622-2dfac3bcda63</guid><pubDate>Sat, 29 Aug 2026 19:02:34 +0000</pubDate><atom:updated>2026-08-29T19:02:34.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாகை,Nagai,Velankanni,வேளாங்கண்ணி,பலூன்,balloons</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/819i47uj/ndcfc.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/819i47uj/ndcfc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாகை</p><p>நாகை வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் ஹீலியம் பலூன் வெடித்து சிதறியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.</p><p>நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. 'கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.</p><p>அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா நேற்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடி ஏற்றினார்.</p> <h2>ஹீலியன் பலூன்</h2><p>இந்த நிலையில், வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவில் பட்டாசுகள் பட்டு பெரிய அளவிலான அலங்கார ஹீலியன் பலூன் வெடித்து சிதறியது.  இதில் பக்தர்கள் மத்தியில் தீப்பற்றி எரிந்தபடி பலூன் விழுந்தது.  இந்த சம்பவத்தில் சென்னையை சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.</p><p>உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் திருவிழாவில் பக்தர்கள் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் இனி ரூ.1,000 அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fine-of-rs-1000-for-littering-at-railway-stations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fine-of-rs-1000-for-littering-at-railway-stations#comments</comments><guid isPermaLink="false">5a70b088-ff67-4bdc-8f27-e65ae0446080</guid><pubDate>Sat, 29 Aug 2026 16:33:43 +0000</pubDate><atom:updated>2026-08-29T16:33:43.674Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குப்பை,அபராதம்,Railway Stations,ரெயில் நிலையங்கள்,fine collection,attraction</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fiiyyrmp/train-fine.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ ரெயில் நிலையங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் இனி ரூ.1,000 அபராதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fiiyyrmp/train-fine.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">ரெயில் நிலையங்கள்</a> மற்றும் ரெயில் பெட்டிகளில் கண்ட இடங்களில் குப்பை போடுபவர்களுக்கான அபராத தொகையை ரூ.1,000 ஆக உயர்த்தி ரெயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p> <h2>ரூ.500 அபராதம்</h2><p>இந்திய ரெயில்வேயை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் ரெயில்வே விதியை மீறி ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில்வே வளாகங்களில் கண்ட இடங்களில் குப்பை போடுபவர்கள் மற்றும் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், ரெயில் நிலைய பகுதிகளில் குப்பை போடும் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. பயணிகள் பலர் தொடர்ந்து பொது இடங்களில் குப்பைகளை வீசி வந்தனர்.</p><h2>அபராதம் இரட்டிப்பு</h2><p>இதனால், ரெயில்வே வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதில் பெரும் சவால் நீடித்து வந்தது. இதையடுத்து, குப்பை போடுபவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன் ஒருபகுதியாக, குப்பை போடுவோருக்கான அபராதத் தொகையை இரட்டிப்பாக்க தீர்மானிக்கப்பட்டது. அந்தவகையில், இனி ரெயில் நிலைய பகுதிகள் மற்றும் ரெயில் பெட்டிகளில் விதிகளை மீறி குப்பை போடுபவர்களுக்கு ரூ.1,000 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> விதிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>அரசிதழில் வெளியீடு</h2><p>கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்ட இந்த அபராத தொகை உயர்வு, தற்போது மத்திய ரெயில்வே துறை சார்பில் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பயணிகள் அனைவரும் ரெயில்வே வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை: அதிர்ச்சியில் தாய் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bunk-employees-suicide-mother-takes-drastic-step-in-shock</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bunk-employees-suicide-mother-takes-drastic-step-in-shock#comments</comments><guid isPermaLink="false">c60de6a1-6736-4f01-8dd7-e5a843e31db8</guid><pubDate>Sat, 29 Aug 2026 16:12:02 +0000</pubDate><atom:updated>2026-08-29T16:12:02.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Cuddalore,கடலூர்,தற்கொலை,Suicide,பெட்ரோல் பங்க் ஊழியர்,petrol bunk</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/1twaqdlc/ila.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/1twaqdlc/ila.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குறிஞ்சிப்பாடி, </p><p>குள்ளஞ்சாவடி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில தாயும் தூக்குப்போட்டு இறந்தார்.</p><h2>பெட்ரோல் பங்க் ஊழியர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/cuddalore">கடலூர்</a> மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுக்கம்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் சந்தோஷ்குமார் (வயது 39). இவர் குள்ளஞ்சாவடியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கவிதா (34) என்ற மனைவியும், லோகேஸ்வரன் (7) என்ற மகனும் உள்ளனர். ஆதிமூலம் ஏற்கனவே இறந்து விட்டதால், அவரது மனைவி ராஜகுமாரி (65) தனது மகன் சந்தோஷ்குமாருடன் வசித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. </p><h2>தற்கொலை</h2><p>இதனால் பதறிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது சந்தோஷ்குமார் அதே ஊரில் இருக்கும் முந்திரி தோப்பில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர், வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.</p><p>இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி கவிதா, குள்ளஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>அதே இடத்தில் தாயும் உயிரிழப்பு</h2><p>இதற்கிடையே மகன் இறந்ததை அறிந்து துக்கம் தாங்காமல் பரிதவித்த ராஜகுமாரி நேற்று மதியம் சந்தோஷ்குமார் தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கு சென்று கதறி அழுதுள்ளார். பின்னர் அவர், தனது மகன் தற்கொலை செய்து கொண்ட மரத்தின் அருகே உள்ள மற்றொரு மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><p>இந்த பரிதாப சம்பவம் பற்றி அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து ராஜகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மகன், தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>