<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 30 Jul 2026 15:11:27 +0000</lastBuildDate><item><title>நெல்லை: சொரிமுத்து அய்யனார் கோவிலில் தங்கி வழிபட அனுமதித்திடுக: டிடிவி தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-allow-devotees-to-stay-and-worship-at-sorimuthu-ayyanar-temple-ttv-dhinakaran-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-allow-devotees-to-stay-and-worship-at-sorimuthu-ayyanar-temple-ttv-dhinakaran-urges#comments</comments><guid isPermaLink="false">87d5f99d-cf00-48ab-982c-911b084df6b7</guid><pubDate>Thu, 30 Jul 2026 15:11:23 +0000</pubDate><atom:updated>2026-07-30T15:11:23.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Sorimuthu Ayyanar Temple,சொரிமுத்து அய்யனார் கோவில்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/bo9y4yyt/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/bo9y4yyt/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”நெல்லை மாவட்டம் காரையாறு அணைப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி வனப்பகுதிக்குள் தங்கி வழிபடுவதற்கான அனுமதியை வழங்குமாறு அப்பகுதி பக்தர்கள் அனைவரும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருநாளன்று ஆண்டுதோறும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வனப்பகுதிக்குள் தற்காலிக குடிசைகள் அமைத்துத் தங்கி வழிபடுவது   முன்னோர்கள் காலத்திலிருந்து தொடரும் ஆன்மீகப் பாரம்பரியமாகும்.</p><p>கொரோனோ பரவல் தொற்று காலத்தில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நடப்பாண்டில் தொடரும் நிலையில், அத்தகைய கட்டுப்பாடுகளை நீக்கி, வனவிலங்குகளுக்கும், இயற்கைக்கும் எந்தவித பாதிப்புமின்றி அப்பகுதி பக்தர்கள் தங்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையைத் தொடர அனுமதிக்குமாறு வனத்துறையிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.</p><p>எனவே, தலைமுறை, தலைமுறைகளாகத் தொடரும் பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையை நடப்பாண்டிலும் தொடரும் வகையில் அப்பகுதி பக்தர்கள் வனப்பகுதிக்குள் 10 நாட்கள் தங்கியிருந்து வழிபாடு நடத்துவதற்கான அனுமதியையும், காரையாறு மற்றும் சேர்வலாறு அணைப்பகுதிகளைப் பக்தர்கள் பார்வையிடுவதற்கான  அனுமதியையும் வழங்கிடுமாறு வனத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் காலணி அணிந்து சென்றது ஏன்? - அமைச்சர் ரமேஷ் விளக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-he-enter-the-srirangam-temple-wearing-footwear-minister-ramesh-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-he-enter-the-srirangam-temple-wearing-footwear-minister-ramesh-explains#comments</comments><guid isPermaLink="false">e15f2901-806f-47d5-9a82-8802b67059cf</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:57:33 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:57:33.660Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Srirangam,ஸ்ரீரங்கம்,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/jo8f52xi/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/jo8f52xi/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது அவர் கால்களில் காலணி அணிந்தபடி கோவில் வளாகத்திற்குள் சென்றதாக வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் காலணி அணிந்து சென்றது ஏன்? என்பது குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்ரீரங்கம் கோவிலில் நீண்ட காலமாக கோபுர சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் தரையில் ஆணிகள் விழுந்திருக்கலாம் என்பதால், அங்கு ஊழியர்கள் கூறியதன்படி நான் காலணி அணிந்து சென்றேன். பகுத்தறிவு இல்லாதவர்கள்தான் இது போன்ற சர்ச்சையை கிளப்பி விடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>திராவிடர் கழகத்தின் நீட் எதிர்ப்பு வாகன பரப்புரைக்கு தடை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-dravidar-kazhagams-anti-neet-vehicle-campaign-communist-party-of-india-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-dravidar-kazhagams-anti-neet-vehicle-campaign-communist-party-of-india-condemns#comments</comments><guid isPermaLink="false">e6bd9550-34b2-49c9-a91f-b22ce2224e59</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:47:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:47:06.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>campaign,சென்னை,Communist Party of India,கண்டனம்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,திராவிடர் கழகம்,தடை,NEET,நீட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/wzk9ryry/146.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/wzk9ryry/146.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திராவிடர் கழகம் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தை மேற்கொள்ள விருந்த நிலையில் ,அந்த பரப்புரைக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்தற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  கண்டனம்  தெரிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><h2>நீட் எதிர்ப்பு பரப்புரை தடை</h2><p>திராவிடர் கழகம் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தை மேற்கொள்ள விருந்த நிலையில் ,அந்த பரப்புரைக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p><p>அரசியல் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படுவது கூடாது.</p><p>திராவிடர் கழகம் மேற்கொள்ள உள்ள பரப்புரைக்கு உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டுமென, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயற்குழு , தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி; தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-says-the-teva-government-is-more-scared-of-the-protests-than-the-central-bjp-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-says-the-teva-government-is-more-scared-of-the-protests-than-the-central-bjp-government#comments</comments><guid isPermaLink="false">74e17561-b35e-4bcc-aa0a-1055bd4f7d3f</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:42:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:42:00.861Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,MKstalin,DravidarKazhagam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/x2klgd9u/stalin33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/x2klgd9u/stalin33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நீட் தேர்வையும், இ.டபிள்.எஸ் இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பாக இன்று சென்னை வேப்பேரியில், இருசக்கர வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.</p><p>வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து இருசக்கர வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இப்பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெரியார் திடலில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>இந்நிலையில், இந்த பேரணியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. </p><p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p><p>நீட், இ.டபிள்.எஸ்  இடஒதுக்கீட்டையும் எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு மத்திய பா.ஜ.க. அரசைவிடத் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">த.வெ.க. அரசு</a>தான் அதிகம் மிரளுகிறது. தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலீசாரைக் குவித்திருப்பது ஏன்? </p><p>திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்? கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.</p><p>அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, வீரமணி  அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>2026-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 414 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது - மத்திய அரசு தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-us-deported-414-indians-during-the-first-three-months-of-2026-central-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-us-deported-414-indians-during-the-first-three-months-of-2026-central-government#comments</comments><guid isPermaLink="false">11364907-c070-4f89-ad38-1d092b9e5375</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:06:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:06:43.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,India,மத்திய அரசு,இந்தியர்கள்,Indians</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/io6jp6hz/National-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/io6jp6hz/National-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்திய குடிமக்கள் திருப்பி அனுப்பப்படுவது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று பதிலளித்தார். </p><p>அதன்படி, “2026 ஜனவரி 1-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரையிலான 3 மாத காலத்தில், அமெரிக்காவில் இருந்து 414 இந்தியர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதே காலகட்டத்தில் மற்ற நாடுகளில் இருந்து 170-க்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். </p> <p>இதே காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 174 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து 57 இந்தியர்களையும், சைப்ரஸ் நாடு 53 இந்தியர்களையும் திருப்பி அனுப்பியுள்ளது. </p><p>இதே போல், 2026 ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் இந்தியர்களைத் திருப்பி அனுப்பிய பிற ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில் கிரீஸ் (10), துருக்கி (8), பிரான்ஸ் (6), இத்தாலி (5), ஜெர்மனி (4), ஸ்வீடன் (4), நெதர்லாந்து (4), பெல்ஜியம் (3), போர்ச்சுகல் (3), ருமேனியா (3), செர்பியா (3), டென்மார்க் (2), ஆஸ்திரியா (1), போலந்து (1) மற்றும் லாட்வியா (3) ஆகிய நாடுகள் உள்ளன.</p><p>மொத்தத்தில், 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து 588 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>வடலூர் வள்ளலார் சர்வதேச மைய திட்டம் கைவிடப்பட்டது; சென்னை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vadalur-vallalar-international-centre-project-abandoned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vadalur-vallalar-international-centre-project-abandoned#comments</comments><guid isPermaLink="false">031a38f2-47dd-48b6-83b4-b8bf39f418a6</guid><pubDate>Thu, 30 Jul 2026 13:54:20 +0000</pubDate><atom:updated>2026-07-30T13:54:20.225Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,இந்து சமய அறநிலையத்துறை,வடலூர் சத்திய ஞான சபை,வடலூர்,Vallalar International Centre,MadrasHC,TVKVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/6sknpheq/madrashc33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/6sknpheq/madrashc33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கி சர்வதேச மையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.</p> <p>இதற்கிடையே, சத்தியஞான சபை பெருவெளியில் பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறாக சர்வதேச மையத்தை அமைக்கக்கூடாது என்றும், வேறு இடத்தில் கட்டடம் கட்டவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கட்டிடம் கட்ட ஆதரவாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அரசாணைக்கு எதிரான வழக்கில் கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்பட்ட‌து. இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தநிலையில், இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில்  நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">அறநிலையத்துறை</a> சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக" தெரிவித்தார். மேலும், ஜோதி தரிசனத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாற்று இடத்தில் யாகசாலை, நூலகம், நூலகம், முதியோர் இல்லம் கட்ட திட்டம் உள்ளதாகவும், சத்திய ஞானசபைக்கு சொந்தமான 71.24 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சுவர் கட்ட உள்ளதாக தெரிவித்தார். இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-15-districts-of-tamil-nadu-until-10-pm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-15-districts-of-tamil-nadu-until-10-pm#comments</comments><guid isPermaLink="false">5c47c4d2-22d3-4c7b-9a76-9235d364d5f1</guid><pubDate>Thu, 30 Jul 2026 13:46:21 +0000</pubDate><atom:updated>2026-07-30T13:46:21.721Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,Rain,மழை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/9z9jecw2/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/9z9jecw2/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில், தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, குமரி, நெல்லை, கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>
கொளுத்தி விடுவேன்... பேசிய வாடகையை தராமல் ஆட்டோ ஓட்டுனரை மிரட்டிய பெண்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-burn-woman-threatens-auto-driver-for-not-paying-fare</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-will-burn-woman-threatens-auto-driver-for-not-paying-fare#comments</comments><guid isPermaLink="false">01d26e50-e16d-42c3-b779-1b731ce453ad</guid><pubDate>Thu, 30 Jul 2026 13:46:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T13:46:00.482Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Auto driver,Rent,வாடகை,ஆட்டோ ஓட்டுனர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/87k0hkhw/ywtadt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/87k0hkhw/ywtadt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை</p><p>கோவையில், பேசிய வாடகையை தராமல் ஆட்டோ ஓட்டுனரை பெண் ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.</p><p>கோவை காந்திபுரத்தில் இருந்து வடகோவை வரை செல்வதற்காக ஆன்லைன் மூலமாக ஆட்டோவை புக் செய்த பெண் ஒருவர் 100 ரூபாய்க்கு வாடகை பேசிவிட்டு இறங்கும்போது வாடகை தர மாட்டேன், அப்புறம் தருகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.</p>  <h2>ஆட்டோ ஓட்டுனர்</h2><p>அப்போது ஆட்டோ ஓட்டுனர் நான் பேசிய வாடகையை தர வேண்டும் என கூறியுள்ளார்.  அப்போது தன்னை துன்புறுத்தியதாக புகார் அளிப்பேன், என அந்த ஆட்டோ ஓட்டுனரை மிரட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.</p><p>அந்த பெண், கூடுதலாக பணம் கேட்கிறீர்கள்.  இதுபோன்று பணம் கேட்பது கூட துன்புறுத்தல்தான்.  இந்த விதி தெரியாதா? என கேட்கிறார்.  தற்போது பணம் தர முடியாது.  பிறகு பணம் தருகிறேன் என்றார்.  ஆனால், அந்த ஓட்டுநர், நீங்கள் பணம் தருவேன் என முன்பே பேசினீர்கள்.  அதனால்தானே நான் உங்களை என்னுடைய ஆட்டோவில் அழைத்து வந்தேன்.  தற்போது, பிறகு பணம் தருகிறேன் என்கிறீர்கள்.</p>  <h2>காரசார வாக்குவாதம்</h2><p>நீங்கள் யாரென்றே தெரியாது.  பிறகு எப்போது பணம் தருவீர்கள்.  எனக்கு, உடனே பணம் கொடுங்கள் என கேட்கிறார்.  தொடர்ந்து காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது ஓட்டுனர், நீங்கள் பெண் என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வீர்களா? என கேட்கிறார்.</p><p>அதற்கு அந்த பெண், ஆம்.  நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்.  என் முன்னால், விரலை நீட்டி பேசுகிறாய்.  விரலை வெட்டி விடுவேன்.  ஆட்டோவை கொளுத்தி விடுவேன்.  என்ன நினைத்து கொண்டிருக்கிறாய்? எல்லாவற்றையும் வெட்டி விடுவேன் என மிரட்டும் வகையில் பேசியது வைரலாகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>‘குழந்தை தொழிலாளர் விவகாரத்தை கண்காணிக்க சிறப்பு குழு’ - அமைச்சர் பர்வேஸ் தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-committee-to-monitor-child-labour-issue-minister-parvezs-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-committee-to-monitor-child-labour-issue-minister-parvezs-statement#comments</comments><guid isPermaLink="false">0d0ee3c8-5c29-4dea-8a4b-ce2ac65a2b01</guid><pubDate>Thu, 30 Jul 2026 13:24:40 +0000</pubDate><atom:updated>2026-07-30T13:24:40.266Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் முகமது பர்வேஸ்,Minister Mohamed Parvez</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/85sdi3su/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/85sdi3su/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தொழில் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதை த.வெ.க. அரசு அனுமதிப்பதில்லை. குழந்தை தொழிலாளர் முறை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. </p><p>வெளியில் தெரியாமல் தொழிற்சாலைகளில் மறைவாக குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதை கண்காணிப்பதற்கு சிறப்பு குழு அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். </p><p>குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் ஊடகங்களுக்கு தெரியவந்தாலும், அதை அரசிடம் தெரிவிக்கலாம். இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்படி, சுமார் 70 குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 150 பேர் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு.. எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: முக்கிய ரெயில்களின் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-egmore-railway-station-redevelopment-work-changes-to-the-services-of-key-trains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-egmore-railway-station-redevelopment-work-changes-to-the-services-of-key-trains#comments</comments><guid isPermaLink="false">849d3803-c25d-4249-b0d2-31fbdf071675</guid><pubDate>Thu, 30 Jul 2026 13:24:34 +0000</pubDate><atom:updated>2026-07-30T13:24:34.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,Train Services</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/wk0qxjlz/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/wk0qxjlz/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, சில ரெயில்கள் தாம்பரம் மற்றும் மாம்பலத்தில் இருந்து புறப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>உழவன் எக்ஸ்பிரஸ்</h2><p>தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்தே புறப்படும். தாம்பரம் ரெயில் நிலையத்திற்கே வந்து சேரும். அதாவது, ஆகஸ்டு 5-ந் தேதி தஞ்சாவூரில் இருந்து புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் மறுநாள் காலை 3.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். ஆகஸ்டு 6-ந் தேதி இரவு 11 மணிக்கு அங்கிருந்தே புறப்படும். </p><p>இதேபோல், மங்களூரு சென்டிரல் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை தாம்பரம் வரையே இயக்கப்படும். ஆகஸ்டு 6-ந் தேதி இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்தே புறப்படும்.  </p><h2>அனந்தபுரி எக்ஸ்பிரஸ் </h2><p>மேலும், கொல்லம் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை தாம்பரம் வரையே இயக்கப்படும். ஆகஸ்டு 6-ந் தேதி இரவு 8.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்தே புறப்படும். சேலம் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும். </p><p>மேலும், திருச்சி - சென்னை இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை மாம்பலம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். ஆகஸ்டு 7-ந் தேதி முதல் ஆகஸ்டு 21-ந் தேதி வரை இந்த ரெயில் நள்ளிரவு 12.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். </p><h2>மாற்றுப் பாதையில் இயக்கம்</h2><p>இதேபோல், அகமதாபாத் - திருச்சி வாராந்திர ரெயில் ஆகஸ்டு 6 மற்றும் 13-ந் தேதி ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. ஆகஸ்டு 9 மற்றும் 16-ந் தேதிகளில் மீண்டும் அதே பாதை வழியாக திரும்பிச் செல்கிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  </p>  ]]></content:encoded></item><item><title>எழும்பூரில் ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரெயில்களால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-trains-on-the-same-track-create-chaos-in-egmore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-trains-on-the-same-track-create-chaos-in-egmore#comments</comments><guid isPermaLink="false">f7976959-8db6-49a4-8f52-7ee91a50cd36</guid><pubDate>Thu, 30 Jul 2026 13:23:12 +0000</pubDate><atom:updated>2026-07-30T13:23:12.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Egmore,மின்சார ரெயில்,புறநகர் மின்சார ரெயில்,MEMU train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/96pf3zlw/trainone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
எழும்பூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/96pf3zlw/trainone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். அலுவலக பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் மின்சார ரெயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. </p> <p>தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு ரெயில்கள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருமின்சார ரெயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் பாதுகாப்பு நடவடிக்கையாக உடனே நடுவழியில் நிறுத்தப்பட்டது.  ஒரே தண்டவாளத்தில் இரு ரெயில்கள் வந்ததை உணர்ந்த பயணிகள், பீதியில் ரெயிலில் இருந்து குதித்து வெளியே ஓடினர். பயணிகள் நடுவழியில் இறங்கி தண்டவாளத்தில் ஆபத்தான முறையில் நடந்து சென்றனர். </p><p>விபத்தை தவிர்க்க நடுவழியில் இரு ரெயில்களும் எழும்பூர்- சேத்துப்பட்டு இடையே நிறுத்தபட்டது. ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்ததால் தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. </p><p>ரெயிலுக்கு தண்டவாளத்தை மாற்றி தரும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சிக்கலால் இது நேரிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோழி இறைச்சி விற்பனையாளர்களின் கடையடைப்பு போராட்டம் வாபஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chicken-meat-sellers-call-off-shop-closure-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chicken-meat-sellers-call-off-shop-closure-protest#comments</comments><guid isPermaLink="false">822cbaf5-f4a9-46d8-978f-845ed473754b</guid><pubDate>Thu, 30 Jul 2026 13:17:10 +0000</pubDate><atom:updated>2026-07-30T13:17:10.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கடையடைப்பு போராட்டம்,கோழி இறைச்சி,Chicken Meat,Shop Closure Protest</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/2gc3sfye/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/2gc3sfye/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விற்பனைக்கு அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு குறைந்தது 15 மணிநேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்குவதை உற்பத்தியாளர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வலியுறுத்தி, இதனை அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைத் துறை அதிகாரிகள் மூலம் அரசு அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.</p><p>ஆனால் வணிகர்களின் கோரிக்கை ஏற்க மறுக்கப்பட்டதாக கூறி, நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக  தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்தன. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வந்தது. </p><p>இந்த நிலையில்,  தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்திய தீவன கட்டுப்பாட்டை கடைபிடிப்பதாக உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த உத்தரவாதத்தை அடுத்து, நாளை முதல் நடைபெற இருந்த பிராய்லர் கறிக்கோழி விற்பனையாளர்களின் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தீவன கட்டுப்பாட்டை கடைபிடிப்பதாக உற்பத்தியாளர்கள் கொடுத்த உறுதியை அடுத்து கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கறிக்கோழி விற்பனையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.  </p>  ]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-announces-protest-against-tvk-government-in-thanjavur-on-august-3rd</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-announces-protest-against-tvk-government-in-thanjavur-on-august-3rd#comments</comments><guid isPermaLink="false">f28bd6c3-4c44-4b8b-a6ef-9c3e061a4d5b</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:47:27 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:47:27.139Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,சென்னை,த.வெ.க.,Thanjavur,T.V.K.,தஞ்சாவூர்,அறிவிப்பு,கண்டன ஆர்ப்பாட்டம்,Udayanidhi Stalin-உதயநிதி ஸ்டாலின்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/wgzguxyl/144.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/wgzguxyl/144.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்  03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,தெரிவித்திருப்பதாவது:-</p><p>வேதனை தரும் த.வெ.க. ஆட்சி! விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி! என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப்பார்த்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர்.</p><h2>கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்</h2><p><strong>தேர்தலுக்கு முன்பு:</strong>  “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்.”</p><p><strong>தேர்தலுக்குப் பின்பு:</strong>  50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக்கடன் தள்ளுபடி என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டு, அதன்காரணமாக விவசாயிகள் வெகுண்டெழுந்து தற்போது வரை போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால், 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.</p><p>சொன்னதை செய்ய நேரம் கேட்ட முதல்-அமைச்சர், இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும்.</p><h2>மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசின் செயல்படா நிலை</h2><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.</p><p><strong>ஜூன் 11:</strong> மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை கர்நாடக முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து மேகதாது நிதியுதவி கோரி மனு அளித்துள்ளார்.</p><p><strong>ஜூன் 12:</strong> ஒன்றிய ஜல்சக்தி துறை மந்திரி நேரில் சந்தித்து மேகதாது திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தினார்.</p><p><strong>ஜூலை 27:</strong> டெல்லியில் கர்நாடகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கூட்டம் நடத்தி, மேகதாது அணைகட்ட கடைமடை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய ஜல்சக்தி துறை தெரிவித்த பதிலை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.</p> <p>அதேநாளில், கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மேகதாது அணை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார். ஊடகங்களிடம் தொடர்ந்து மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனவும், தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை எனவும் பேசி வருகிறார்.</p><p>இதற்கு மாறாக, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மவுனம் காத்து வருகிறார். இதற்கிடையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று வேளாண் துறை அமைச்சர் சொன்னார். பின்னர் அவரும் இன்னும் சிலரும் இல்லை என்று மறுத்தார்கள்.</p><p>இப்போது தமிழ்நாடு சார்பில் சில விவகாரங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக, கர்நாடக முதல்-அமைச்சரே தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் கர்நாடக செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், காவிரியில் நமக்கு உரிய பங்கினை வழங்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், அதனை நிறைவேற்ற முடியாது என்று கர்நாடக மாநில முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்.</p><p>அதுமட்டுமல்ல, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்துபோகச் செய்யாதா? என்ற கேள்வியும் எழுகிறது. இப்படி இந்த அரசைப் பொறுத்தவரையில் எந்தத் தகவல்களிலும் தெளிவு இல்லை; எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. எதற்கெடுத்தாலும் குழப்பம்; எல்லாவற்றிலும் ஏமாற்றம். இதுவே இந்த அரசின் வழக்கமாக மாறியிருக்கிறது.</p><p>தனது திரைப்படம் கர்நாடகம் வெளியாவதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே முதல்-அமைச்சர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன. அதற்கும் எந்தப் பதிலும் இல்லை.</p><h2>அனைத்துக்கட்சி கூட்டம்</h2><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்தோடு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தையும் கூட்டச் சொல்லி, முதல்-அமைச்சருக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார் முதல்-அமைச்சர். மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.</p><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.</p><h2>விவசாயிகளின் அடுத்த பெரும் பிரச்சினை </h2><p><strong>குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு</strong>: கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 1.5 லட்சம் ஏக்கர் சாகுபடி மட்டுமே நடப்பதாகச் செய்திகள் வருகிறது. இதனால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்குக் கீழ்க்கண்ட வகையில் தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும்.</p><p>1) ஏக்கர் ஒன்றுக்குக் குறுவை நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய்.</p><p>2) காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தி முழுக் காப்பீடு கிடைக்க உதவி.</p><p>3) சம்பா சாகுபடிக்கான மறுமுதலீடாக விதை, உரம், பூச்சிக்கொல்லி என இடுபொருட்கள் மானியமாக வழங்குதல்.</p><h2>கழகம் சார்பில் டெல்டா மண்ணில் போராட்டம்</h2><p>இப்படி, விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 அன்று காலை 10.00 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் கழக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளது.</p><p>இப்போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழகத் துணை அமைப்புகளானப் பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.</p><p>மேலும், அனைத்து விவசாய சங்கங்களை சேர்ந்த தோழர்களும், இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளின் தோழர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் வென்றிடத்துணை நிற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இந்தக் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கண்டன ஆர்ப்பாட்டம்</a> என்பது, விவசாயிகளின் குரலைக் கேட்காமல் இருக்கும் த.வெ.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் முதல்கட்ட நடவடிக்கைதான். அரசின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-a-power-outage-the-day-after-tomorrow-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-a-power-outage-the-day-after-tomorrow-2#comments</comments><guid isPermaLink="false">33f00d5d-c920-4ddf-aad3-146ccc7eae36</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:42:57 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:42:57.526Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/q3yfub7l/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/q3yfub7l/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மின்சாரம் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு; </p><p>01.08.2026 சனிக்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்.</p><p>சென்னையில் 01.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p><strong>மாங்காடு:</strong> அம்பாள் நகர், பத்மாவதி நகர், அட்டிசன் நகர், மணலி ராமகிருஷ்ணா நகர், பாலாஜி அவென்யு, எஸ்எஸ் கோவில் தெரு, மேலண்டை மாட வீதி பெருமாள் கோவில் தெரு, பள்ளி தெரு, நரிவன சாலை, நியூ போலீஸ் ஸ்டேஷன் , எம்ஜிஆர் நகர், ஏஎஸ் நகர் பட்டூர், அப்பாவு நகர், வெள்ளீஸ்வரன் நகர், சரஸ்வதி நகர், பாண்டியன் நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராமகிருஷ்ணாபுரம், மாரியம்மன் கோவில் தெரு.</p><p><strong>மாடம்பாக்கம்:</strong> ராஜ்பாரிஸ் பிளாட்ஸ், மாம்பாக்கம் பிரதான சாலை, ராகேஷ் ஷர்மா நகர், விக்டோரியா பார்ம் ஹவுஸ், கோவிலஞ்சேரி, கிரஞ்ச் அண்ட் கரி, குறிஞ்சி நகர், அகரம் தென், திரௌபதி அம்மன் கோவில் தெரு, ஜி.கே. அவென்யூ.</p><p><strong>பள்ளிக்கரணை:</strong> காமகோட்டி நகர், ஐஐடி காலனி, நாகம்மாள் அவென்யூ, விஜிபி ராஜேஷ் நகர், மா.பொ.சி. நகர், என்ஐஓடி.</p><p><strong>திரிசூலம்:</strong> பிவிஆர் மால், சந்தை சாலை, ஆறுமலைச் சாவடி, ஹார்பர் ஆர்ட்டர்ஸ், முக்கண்ணி அம்மன் கோவில் தெரு, ராணி அண்ணா நகர், கென்னடி வெளி, மூவரசன்பேட்டை பிரதான சாலை.</p><p><strong>பல்லாவரம்:</strong> ஜி.இ. நிறுவனம், ராணுவக் குடியிருப்புகள், ஏர் இந்தியா, டிஆர்டிஓ, தாஜ் ஃப்ளைட் கிச்சன், பிபிசிஎல், எல் &amp; டி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பம்மல் காமராஜபுரம், திருநீர்மலை பிரதான சாலை, எல்.ஐ.சி. காலனி விரிவாக்கம், ராஜீவ் காந்தி நகர், விக்டோரியா தெரு, பெரியார் தெரு, நியூஸ்மேன் தெரு, மரியன் தெரு, அன்னை மேரி தெரு, வினாய நகர், இபி காலனி, அமர்சன் நகர், த்ரீ ரோசஸ் அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, பக்தவச்சலம் 1வது முதல் 3வது தெருக்கள் வரை.</p><p><strong>சித்தாலப்பாக்கம்:</strong> வரதராஜ பெருமாள் கோவில் தெரு, ஏடிபி அவென்யூ, வேங்கைவாசல் பிரதான சாலை, பிஎஸ்சிபிஎல், போலினேனி ஹில்சைடு அபார்ட்மென்ட்ஸ், டிஎன்எச்பி காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோவில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், பாசில் அவென்யூ, விவேகானந்தா நகர் நூக்கம்பாளையம் சாலை, விவேகானந்தா நகர், ஜெயா நகர், வள்ளுவர் நகர், காந்தி நகர், ஒட்டியம்பாக்கம், அரசங்கழனி பிரதான சாலை, கரணை பிரதான சாலை, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், ஜோன்ஸ் காசியா, நேசமணி நகர் மால்ஸ் மற்றும் கே.ஜி. அபார்ட்மென்ட், ஆர்.சி. பிளாசம் அபார்ட்மென்ட், நேசமணி நகர், ஏரிக்கரை சாலை, வரதபுரம்.</p><p><strong>வேளச்சேரி:</strong> பேபி நகர், தரமணி 100 அடி பிரதான சாலை, விஜயா நகர், பார்க் அவென்யூ, டாஸ் அவென்யூ, ராமகிரி நகர்.</p><p>பூவிருந்தவல்லி பகுதியில் 33/11 கி.வோ துணை மின் நிலையத்தில் 33 கி.வோ மற்றும் 11 கி.வோ அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளான பழைய பஸ்பார் குழாய்கள் மற்றும் சேதமடைந்த கிளாம்ப்களை மாற்றும் பணிகள் நடைப்பெற உள்ளதால் 01.08.2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p><strong>பூந்தமல்லி :</strong> சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு,குமணன்சாவடி. </p>]]></content:encoded></item><item><title>வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உலா வந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-spotted-roaming-the-valparai-pollachi-road-motorists-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-spotted-roaming-the-valparai-pollachi-road-motorists-alarmed#comments</comments><guid isPermaLink="false">5194514f-fd2d-4d38-a088-92ae9e61cd25</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:36:51 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:36:51.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வால்பாறை,Valparai,leopard,சிறுத்தை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/0dz7mfrw/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/0dz7mfrw/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஐயர்பாடி மற்றும் ரொட்டிக்கடை பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தைகள் இரவு நேரங்களில் மட்டும் அல்லாமல் பகலிலும் உலா வருகிறது. </p><p>இந்நிலையில் நேற்று இரவு ஐயர்பாடி துணை மின் நிலையம் அருகில் இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக சாலையை கடந்து கம்பீரமான நடையுடன் சிறுத்தை சென்றுள்ளதை கண்ட சுற்றுலா பயணிகள் படம்பிடித்து தற்போது வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். அது வைரலாகி வருகிறது.</p><p>எனவே வனத்துறை இதனை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சிறுத்தைகளால் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அப்பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். </p>  ]]></content:encoded></item><item><title>எதிர்ப்புக்கு மத்தியில் பயணம்: ஆகஸ்டு 3-ந்தேதி ஜோசப் விஜய்-டி.கே.சிவக்குமார் சந்திப்பு உறுதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/visit-amidst-opposition-meeting-between-joseph-vijay-and-dk-shivakumar-confirmed-for-august-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/visit-amidst-opposition-meeting-between-joseph-vijay-and-dk-shivakumar-confirmed-for-august-3#comments</comments><guid isPermaLink="false">7c56d683-5e5a-4aa7-9f74-83ca2bc1edff</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:35:21 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:35:21.759Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டி.கே.சிவக்குமார்,D.K.Sivakumar,CM Vijay,ஜோசப் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/6q0vel07/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/6q0vel07/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் ஆகஸ்டு 3-ந்தேதி ஜோசப் விஜய்-டி.கே.சிவகுமார் சந்தித்து பேசுவது உறுதியாகியுள்ளது. </p><h2>காவிரி நதிநீர் பிரச்சினை </h2><p>காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையானது தமிழ்நாடு - கர்நாடகா இடையே நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்தாலும், மேகதாது அணை பிரச்சினை என்பது கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காவிரி படுகையில் 5-வது அணையாக மேகதாதுவை கட்டி முடிக்க கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. </p><h2>அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு</h2><p>இதற்கிடையே, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் ஆகஸ்டு 3-ந் தேதி பெங்களூருவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பில் பங்கேற்கக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><h2>தனி விமானத்தில் செல்லும் விஜய்</h2><p>இதனால், எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜோசப் விஜய் - டி.கே.சிவகுமார் சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இருமாநில முதல்வர்கள் சந்திப்பு நடப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக, ஆகஸ்டு 3-ந் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூரு செல்ல இருக்கிறார். அன்று பிற்பகல் 12 மணிக்கு கர்நாடக தலைமைச் செயலகமான விதான் சௌதாவில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசுகிறார். </p><h2>எதிர்பார்ப்பு</h2><p>அதன்பின்னர், இருவரும் ஹெலிகாப்டரில் மேகதாது அணை அமைய உள்ள இடத்தையும், கர்நாடகாவில் உள்ள காவிரி பாசன பகுதிகளையும் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த இருமாநில முதல்வர்கள் சந்திப்பில் என்ன முடிவு எட்டப்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இப்போதே ஏற்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதா.? - சீமான் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-200-acres-of-farmland-be-destroyed-to-set-up-a-solar-power-plant-seeman-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-200-acres-of-farmland-be-destroyed-to-set-up-a-solar-power-plant-seeman-condemns#comments</comments><guid isPermaLink="false">3a5317fb-71a9-4a75-b5d8-2c8f4764ac15</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:23:01 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:23:01.688Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,Solar Power Plants,சூரிய ஒளி மின் உற்பத்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/pvbmtwzf/seeman.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/pvbmtwzf/seeman.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காத மாற்று மின்பெருக்கத்திற்கு நாடும், மக்களும் முழுவதுமாக மாறவேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் முதன்மையான கொள்கை என்ற போதிலும், விளைநிலங்களை அழித்து, அதன் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க முயல்வதை எதன் பொருட்டும் ஆதரிக்க முடியாது. நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி ஆலைகளும் நிறுவப்பட வேண்டும் என்பதன் நோக்கமே, மக்களின் நல்வாழ்வின் உயிர்நாடியான வேளாண்மையையும், வேளாண் நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, அந்த உயரிய நோக்கத்தைச் சிதைக்கும் விதமாக வேளாண் நிலங்களை அழித்து அந்த இடத்தில் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை அமைப்பதை அனுமதிக்க முடியாது. அதிலும் திருவாரூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வரும் நிலையில், அங்கு 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்தது எப்படி? அரசு அனுமதிக்கவில்லையெனில் முறைகேடாக அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? </p><p>தமிழ்நாட்டில் ஏற்கனவே காலநிலை மாற்றம், பருவ மழை பொய்ப்பு, பாசன நீர் இன்மை, உரத்தட்டுப்பாடு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி, விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, மேலும் மேலும் விளைநிலங்களை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா? இதுதான் விளைநிலங்களையும், வேளாண்மையையும் தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் முறையா? அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் சுற்றுப்புற வெப்பத்தைக் குறைக்கக்கூடியவை. அதற்கு மாறாக சூரிய ஒளி மின் உற்பத்தி மையமோ சுற்றுப்புற வெப்பத்தை அதிகரிக்கும் தன்மைகொண்டவை. ஆகவே, விளைநிலங்களை அழித்து அமைக்கப்படும் சூரிய ஒளி மின் ஆலைகள் சுற்றுப்புற வெப்பநிலையை அதிகரித்து உள்ளூர் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலைகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோரிக்கையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு, நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகக் குறைக்கும், பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்களை விளை நிலங்கள் மீதோ, அதன் அருகிலோ அமைத்திட ஒருபோதும் அனுமதிக்காது, தரிசு நிலங்களில் மட்டுமே அமைத்திட வேண்டும். </p><p>ஆகவே, தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் 200 ஏக்கர் விளைநிலங்களை அழித்து, தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>எல் நினோ காலநிலை மாற்ற நிகழ்வு குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழக அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-forms-7-member-committee-to-study-el-ni%C3%B1o-climate-change-phenomenon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-forms-7-member-committee-to-study-el-ni%C3%B1o-climate-change-phenomenon#comments</comments><guid isPermaLink="false">4e0330cb-d8f2-4871-aa7b-5cc1235ddf9f</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:14:27 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:14:27.967Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,வானிலை,Climate Change,Committee,குழு,சூப்பர் எல் நினோ,Super El Niño</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/fuzvhnkr/143.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/fuzvhnkr/143.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எல் நினோ எனும் காலநிலை மாற்ற நிகழ்வு - பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகரிப்பதால் உருவாகும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B">எல் நினோ</a> (El Nino) எனும் காலநிலை மாற்ற நிகழ்வு, உலகளாவிய மழைப்பொழிவு மற்றும் வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகும். எல் நினோ நிகழ்வானது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும். கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயரும்போது அது தீவிர எல் நினோ எனக் கருதப்படுகிறது.</p><h2>வானிலை </h2><p>வானிலை ஆய்வுகளின்படி, 2026ஆம் ஆண்டு தீவிர எல் நினோ நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, தென்மேற்குப் பருவமழை இயல்பைவிடக் குறைவாகப் பெய்யக்கூடும். மேலும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதீத மழை, வெள்ளம் உள்ளிட்ட தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, தீவிர எல் நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அறிவியல் அடிப்படையில் முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையின் கீழ் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு "தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை" யின் கீழ் பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைக்க ஆணையிடப்பட்டது.</p><p>அக்குழுவில் காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், கடலோர வள மேலாண்மை, நகர்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அனுபவம் பெற்ற பின்வரும் நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.</p><h2>நிபுணர்கள்</h2><p><strong>*</strong> பேராசிரியர் எஸ்.கண்மணி, தலைவர், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் (CCCDM), அண்ணா பல்கலைக்கழகம் அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்படும் CCCDM-இன் மாற்று இயக்குநர்.</p><p><strong>*</strong> பாலாஜி நரசிம்மன், பேராசிரியர், நீரியல் மற்றும் நீர்வளப் பொறியியல் ஆய்வகம், குடிசார் பொறியியல் துறை, இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை.</p><p><strong>*</strong> அறிவுடை நம்பி அப்பாதுரை, இயக்குநர், காலநிலை மீள்திறன் பிரிவு, WRI இந்தியா; உறுப்பினர், தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுமைக் குழு.</p><p><strong>*</strong> பேராசிரியர் ரமேஷ் ராமச்சந்திரன், ஆலோசகர், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம். நிபுணர் உறுப்பினர் - நிலையான மற்றும் காலநிலை மீள்திறன்</p><p>கொண்ட நீலப் பொருளாதாரத்தை (Blue Economy) மேம்படுத்துதல்.</p><p><strong>*</strong> டாக்டர் ஆர்.வெங்கடேசன், நிபுணர் உறுப்பினர் - மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு; நிபுணர் உறுப்பினர் தொழில்நுட்ப நிபுணர் குழு (CRZ) மற்றும் TNMRF.</p><p><strong>* </strong>டாக்டர் ஜே.கே. பேட்டர்சன் எட்வர்ட், இயக்குநர்- சுகந்தி தேவதாசன் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் (SDMRI)-பவளப்பாறைகள், கடற்புல் சூழலமைப்பு, கடல்சார் உயிரினப் பன்மை மற்றும் கடலோர சூழலமைப்பு மீட்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களின் தலைமைப் பொறுப்பாளர்.</p><p><strong>*</strong> திரு.ஆர். பிரதீப் ஜான், மூத்த மேலாளர், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் (TNUIFSL).</p>]]></content:encoded></item><item><title>தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரம்; சிறப்பு குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன் தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-private-school-fees-special-committee-to-be-formed-minister-rajmohan-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-private-school-fees-special-committee-to-be-formed-minister-rajmohan-announces#comments</comments><guid isPermaLink="false">f9d267c0-af9b-4e19-9674-962616cd6a5a</guid><pubDate>Thu, 30 Jul 2026 12:00:57 +0000</pubDate><atom:updated>2026-07-30T12:00:57.750Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/86rx554s/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/86rx554s/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தனியார் பள்ளிகளில் கட்டண முறையை வெளிப்படைத்தன்மையுடன் வைக்க வேண்டும் என்று பல முறை அறிவுறுத்தியும், சில இடங்களில் அவ்வாறு செய்யப்படுவதில்லை என புகார்கள் வருகின்றன. எனவே, தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரத்தை கண்காணிக்க, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் அனுமதி பெற்று, கல்வியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தமாக இல்லை என்று புகார்கள் வருகின்றன. பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்குத்தான் நான் முதல் கையெடுத்து போட்டேன். ஆனால், கழிப்பறைகளை கட்டுவதோடு வேலை முடிந்து விடுவதில்லை. அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். </p><p>கழிப்பறைகளை பராமரிக்க ஒரு அரசு பள்ளிக்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கே 30 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கிறது என்ற சூழல் இருக்கும்போது, தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளம், கழிப்பறை சுத்தம் செய்யும் உபகரணங்கள் ஆகிய செலவுகளை எப்படி செய்ய முடியும்? சில ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து கழிப்பறைகளை பராமரித்து வருகிறார்கள். </p><p>ஒரு கழிப்பறை எவ்வளவு முக்கியம் என்றால், வகுப்பறை இல்லாத கழிப்பறைக்கு பயன் இருக்கிறது, ஆனால் கழிப்பறை இல்லாத வகுப்பறைக்கு எந்த பயனும் கிடையாது. எனவே, தமிழக முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்று, பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்புக்கான நிதி ஒதுக்கிட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரத்தில் பயங்கரம்..சம்பாதித்த பணம் எங்கே போகிறது என கேட்ட கணவன்.. குடும்பத்தில் வெடித்த மோதல்...கொலையுண்ட மனைவி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-kills-wife-mother-in-law-in-ramanathapuram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-kills-wife-mother-in-law-in-ramanathapuram#comments</comments><guid isPermaLink="false">f1b01b00-8530-4e1c-90ca-76aa0e2f6c27</guid><pubDate>Thu, 30 Jul 2026 11:56:42 +0000</pubDate><atom:updated>2026-07-30T11:56:42.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>murder,கொலை,ராமநாதபுரம்,Ramanathapuram,கணவன் - மனைவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/n99scdu8/ramanathapuram33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
ராமநாதபுரத்தில் பயங்கரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/n99scdu8/ramanathapuram33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மண்டபம்,</p><p>ராமநாதபுரம் வைகை நகர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 48) இவரது மனைவி சர்மிளா (வயது 42) இந்த தம்பதிக்கு 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். </p><h2>வெளிநாட்டில் வேலை</h2><p>உள்ளூரில் வேலை பார்த்து வந்த செல்ல முத்து, போதிய வருமானம் இல்லாததால் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்து அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஏஜென்சி மூலம் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.</p><p>இதனால் சர்மிளா தனது குழந்தைகளுடன் ராமநாதபுரத்தில் வசித்து வந்தார். இதற்கிடையே சர்மிளாவின் தாய் பத்மாவதி என்பவர் ஏற்கனவே துபாய் நாட்டில் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.</p><p>ஆண்டுக்கு ஒருமுறை 2 மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்போது அவர் மகளுடன் தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் ராமநாதபுரத்திற்கு வந்திருந்த பத்மாவதி மீண்டும் துபாய் செல்லவில்லை உடல்நலக்குறைவு, சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் இங்கேயே இருந்தார். முன்னதாக செல்ல முத்துவுக்கு மனைவி சர்மிளாவின் நடத்தையில் அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனை காரணம் காட்டி செல்போனில் பலமுறை செல்லமுத்து மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.</p><h2>பணத்திற்கு உரிய கணக்கு எங்கே?</h2><p>அதேபோல் துபாயில் வேலை பார்த்து அனுப்பும் பணத்திற்கு செல்லமுத்து உரிய கணக்கு கேட்டு வந்துள்ளார். அதன் காரணமாகவும் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இப்படி சந்தேகப்படும் கணவரிடம் தன்னால் வாழ முடியாது என்று கருதிய சர்மிளா தனது தாயிடம் கூறிவிட்டு கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.</p><p>சர்மிளா மற்றும் செல்ல முத்துவின் உறவினர்கள், குழந்தைகளின் நலன் கருதி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பலமுறை அறிவுரை கூறியும் சந்தேகப்படும் கணவருடன் குடும்பம் நடத்த முடியாது என்று சர்மிளா திட்டவட்டமாக கூறி இருந்தார்.</p><p>இதனையடுத்து <a href="https://www.dailythanthi.com/search?q=ramanathapuram">ராமநாதபுரம் </a>வைகை நகர் பகுதியில் மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து சர்மிளா, அவரது தாய் மற்றும் குழந்தைகள் குடியிருந்தனர். இதற்கிடையே சமீபத்தில் துபாயில் இருந்து ராமநாதபுரம் வந்திருந்த செல்லமுத்து, மனைவியின் வீட்டிற்கு வந்து அவரது நடத்தை குறித்து பேசி தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அக்கம்பக்கத்தினர் கண்டித்து உள்ளனர். உன்னுடன் வாழபிடிக்காமல்தான் தனது தாயுடன் வசித்து வருகிறார். இப்போதும் இங்கு வந்து சண்டை போடுவது நல்லதல்ல, இங்கே வராதீர்கள் என்று கூறியுள்ளனர்.</p> <h2>மனைவி மீது கடும் ஆத்திரம்</h2><p>இதனால் ஆத்திரம் அடைந்த செல்ல முத்து மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார் இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் மனைவியின் வீட்டிற்கு செல்லமுத்து சென்றார். அப்போது அவர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராகி கொண்டு இருந்தார். ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் சர்மிளாவிடம் தகராறு செய்தார்.</p><p>இதனை சர்மிளாவின் தாய் பத்மாவதியும் கடுமையாக கண்டித்தார். நேரம் செல்ல செல்ல வாக்குவாதமாக மாறி செல்ல முத்து மனைவியை தாக்கினார்.</p><p>தொடர்ந்து கோபத்தின் உச்சிக்கே சென்ற செல்ல முத்து தான் வயிற்றில் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து மனைவி சர்மிளாவை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சரிந்து விழுந்தார். அதனை தடுக்க வந்த மாமியார் பத்மாவதியையும் விட்டு வைக்காமல் செல்லமுத்து சர்மாரியாக வெட்டினார்.</p><p>இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பள்ளிக்கு தயாராகி கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் இதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றனர்.</p> <h2>போலீஸ் நிலையத்தில் சரண்</h2><p>பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த செல்லமுத்து மனைவி மற்றும் மாமியாரை வெட்டிகொன்ற ரத்தம் வடிந்த வாளுடன் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>தாய், பாட்டியை இழந்து தந்தையும் சிறைக்கு சென்றுவிட்டதால் ஆதரவற்ற நிலையில் குழந்தைகள் கதறி அழுதனர். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். </p> ]]></content:encoded></item><item><title>அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை வழங்கிய அமைச்சர் முகமது பர்வேஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-mohammad-parvez-issues-promotion-orders-to-government-vocational-training-institute-instructors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-mohammad-parvez-issues-promotion-orders-to-government-vocational-training-institute-instructors#comments</comments><guid isPermaLink="false">0df95a60-c242-48ec-be16-af75153405a4</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:55:51 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:55:51.565Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,order,அரசு தொழிற்பயிற்சி நிலையம்,அமைச்சர் முகமது பர்வேஸ்,Vocational Training Institute,Minister Mohammad Parvez</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/r8auwbjr/141.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முகமது பர்வேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/r8auwbjr/141.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை தொழிலாளர் நலத்துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D">அமைச்சர் முகமது பர்வேஸ்</a> வழங்கினார்.</p><p>பணியாளர்களின் பதவி உயர்வு தொடர்பான முடிவுகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் மேற்கொள்ளும் நோக்கில், அரசு முன்னெடுத்துள்ள வெளிப்படையான நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்க, பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான அரசால் இன்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கு முதுநிலையையும், விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு, கணினி வழியாக கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்வு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.</p><h2>பதவி உயர்வு ஆணைகள்</h2><p>இதன் மூலம், 136 இளநிலை பயிற்சி அலுவலர்கள் உதவி பயிற்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றனர். பதவி உயர்வுக்கான ஆணைகள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார்.</p><p>இந்நிகழ்வின்போது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பழனி, மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் தவெக அரசு - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-betraying-farmers-udhayanidhi-stalins-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-betraying-farmers-udhayanidhi-stalins-allegation#comments</comments><guid isPermaLink="false">08db0a62-8661-4534-a597-be50e63a494d</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:51:32 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:51:32.283Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8jq0ndox/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8jq0ndox/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி - மேகதாது பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது - மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்காதது - காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது - கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது...</p><p>இப்படி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் #ShootingModel த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், கழகத்தின் சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட்-3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். தஞ்சையில் கூடுவோம் - விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்!”</p><p>இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.  </p>]]></content:encoded></item><item><title>மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என ராகுல் காந்தி ஒரு வார்த்தை கூறுவாரா.? - அன்புமணி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-rahul-gandhi-say-a-single-word-against-the-construction-of-the-mekedatu-dam-anbumani-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-rahul-gandhi-say-a-single-word-against-the-construction-of-the-mekedatu-dam-anbumani-asks#comments</comments><guid isPermaLink="false">e7b2da87-8018-4fca-a9bf-617102f984d7</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:29:35 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:29:35.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,மேகதாது அணை,Mekedatu dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ols6h7qw/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ols6h7qw/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; </p><p>கர்நாடக அணையில் இன்றைக்கு 62 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. ஆனால், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, கடந்த மாதத்தில் இரு முறை அறிவுறுத்தியபோதிலும், அவர்களிடம் நீர் இல்லை என்று கூறினர். மேகதாது அணை கட்டுவதற்கு முன்பாகவே, கர்நாடகத்தில் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்குத் தர மறுக்கும்நிலையில், அணை கட்டியபிறகு குடிப்பதற்குக்கூட தண்ணீர் கிடைக்காது. ஆகையால், தமிழக முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு செல்லக் கூடாது.  </p><p>முதலமைச்சர் விஜய், கர்நாடகா சென்று, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசிவிட்டு, மேகதாது அணை கட்டும் பகுதியை பார்வையிட்டால், அது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு பாதகமாக இருக்கும்.</p><p>மேகதாது அணையை, தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. அவ்வாறு அங்கீகரிக்காத ஒன்றுக்காக, பேச்சுவார்த்தை நடத்துவதில், எந்த அர்த்தமும் கிடையாது. அது சம்பந்தமாக பேச்சுவார்த்தை, மத்திய அரசிடம், பிரதமர் மோடியிடம் நடத்த வேண்டும்.</p><p>மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள். அவரிடம் வலியுறுத்த நாங்கள் தயாராக உள்ளோம். அதேபோல, மேகதாது அணை கட்டக் கூடாது என ராகுல் காந்தியிடம் சொல்ல மாணிக்கம் தாகூருக்கு தைரியம் இருக்கிறதா?</p> <p>மேகதாது அணை கட்டக் கூடாது என ராகுல்காந்திக்கு அழுத்தம் தர மாணிக்கம் தாகூருக்கு தைரியம் இருக்கா? கர்நாடகத்தில் மேகதாது  அணை கட்டக் கூடாது என ராகுல் காந்தி சொன்னால், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து நான் விலகி விடுகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை அதிரடி நடவடிக்கை - ஒரு வாரத்தில் 781 பேர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-crackdown-on-history-sheeters-781-arrested-in-a-week</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-crackdown-on-history-sheeters-781-arrested-in-a-week#comments</comments><guid isPermaLink="false">d889e1cf-084b-4b03-b914-3759cb9dd522</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:23:02 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:23:02.911Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,police,காவல்துறை,சரித்திர பதிவேடு குற்றவாளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/yxij17ym/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/yxij17ym/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில தமிழக காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், சரித்திர பதிவேடு அல்லாத குற்றவாளிகள் என வகைப்படுத்தப்பட்டு, இதில் தலைமறைவாக இருந்து வரும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>குறிப்பாக கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்து வரும் நபர்களை பிடிக்க காவல்துறை சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில கடந்த 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை, மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>இந்த நடவடிக்கையில 245,74 சரித்திர பதிவேடு ரவுடிகள் கண்காணிக்கப்பட்ட நிலையில், அதில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 781 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. </p><p>இதில் பிணையில் வெளிவர முடியாத பிரிவாரண்ட்டுகளை நிறைவேற்றக்கூடிய சிறப்பு நடவடிக்கையில், 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மொத்தம் 1,967 பிணையில் வெளியவர முடியாத பிடிவாரண்ட்டுகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மாநிலம் முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர்கள், சிறப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தமிழக டி.ஜி.பி. தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தமிழக காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு பணிகளையும், கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு: ஆகஸ்டு 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-august-14th-declared-a-local-holiday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-august-14th-declared-a-local-holiday#comments</comments><guid isPermaLink="false">ba883856-80d5-4a87-9b50-4324daa9e960</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:15:39 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:15:39.243Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chengalpattu,செங்கல்பட்டு,Local Holiday,உள்ளூர் விடுமுறை,மாவட்ட ஆட்சியர்,மேல்மருவத்தூர் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/58hz2rbq/140.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செங்கல்பட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/58hz2rbq/140.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு</p><p>செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஆகஸ்டு 14-ல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">உள்ளூர் விடுமுறையை</a> அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:</p><p>செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூரத் திருவிழா நடைபெறவுள்ளது.</p><h2>உள்ளூர் விடுமுறை</h2><p>இந்த நிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, வருகிற 28-ந்தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. </p><p>உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 29-ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வீரப்பன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கனிமவளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து வழக்கு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-tamil-nadu-governments-ban-on-transporting-mineral-resources-to-other-states</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-tamil-nadu-governments-ban-on-transporting-mineral-resources-to-other-states#comments</comments><guid isPermaLink="false">67247c40-8e8c-4a44-ae2a-8c2df86e0453</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:00:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:00:28.370Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,தமிழக அரசு,Mineral resources,கனிம வளங்கள்,ஐகோர்ட்டு கிளை,High Court Bench</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hr5np9on/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hr5np9on/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால், தமிழ்நாட்டிற்கு செயற்கை தட்டுப்பாடு எழுவதாகவும், தங்கு தடையின்றிப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்த தற்காலிகத் தடை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து இருந்தாலும்,  ஒருசிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என கேரள முதல் மந்திரி வி.டி.சதீசன், முதல்-அமைச்சர் விஜய்க்கு  கடிதம் எழுதி இருந்தார்.</p><p>இந்த நிலையில், கனிமவளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீசா என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  </p> ]]></content:encoded></item><item><title>பழனி நிலம் மோசடி வழக்கு: சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-scam-case-madurai-high-court-orders-cbcid-to-file-status-report</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-scam-case-madurai-high-court-orders-cbcid-to-file-status-report#comments</comments><guid isPermaLink="false">4bbbfabd-c945-4f48-bea6-b424a2b0dd81</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:56:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:56:43.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,order,உத்தரவு,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,CBCID,சிபிசிஐடி,பழனி கோவில்,நிலம் மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/x8i9c1g3/139.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி இடம் மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/x8i9c1g3/139.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பழனி இடம் மோசடி தொடர்பான பத்திரப்பதிவு விவகார விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88">மதுரை ஐகோர்ட்டு கிளை</a> உத்தரவிட்டுள்ளது.</p> <h2>மனு தாக்கல்</h2><p>அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால், அன்னபூரணி சிவக்குமார் மற்றும் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர், பழனி கோவில் இட பத்திரப்பதிவு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.</p><h2>உத்தரவு</h2><p>இந்த மனு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி தரப்பில் விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p><p>மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் வழக்கு: முன் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-case-senthil-balaji-appeals-in-supreme-court-seeking-anticipatory-bail</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-case-senthil-balaji-appeals-in-supreme-court-seeking-anticipatory-bail#comments</comments><guid isPermaLink="false">34eb16be-59e4-45a1-ac77-72d82cf42cad</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:29:38 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:29:38.866Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,Senthil Balaji,செந்தில் பாலாஜி,டாஸ்மாக் வழக்கு,TASMAC Case</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/k9g7hy81/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/k9g7hy81/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>அடுக்கடுக்கான வழக்கு</h2><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.</p><p>இதற்கிடையே தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் தற்போது திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். </p><h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p>இந்த நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் நேற்று முன்தினம் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர்.</p><p>இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவு உள்பட 9 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. </p><h2>செந்தில் பாலாஜியிடம் விசாரணை</h2><p>செந்தில்பாலாஜி சென்னை ஆழ்வார்பேட்டை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கிருந்துதான் அவர் தினமும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார். நேற்று காலையில் இந்த ஓட்டலுக்கும், லஞ்சஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு யுவராஜ் தலைமையில், 3 அதிகாரிகள் சென்றனர்.</p><p>அங்கு செந்தில்பாலாஜி தங்கியிருந்த அறையில், செந்தில்பாலாஜி முன்னிலையில் சோதனை நடத்தினார்கள். பிற்பகலில் சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சோதனையின்போது, செந்தில்பாலாஜியிடம் சில ஆவணங்களை காட்டி விசாரணை நடத்தப்பட்டது. லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணைக்கு, செந்தில்பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.</p><h2>முன்ஜாமின் மனு தள்ளுபடி</h2><p>இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வக்கீல், "100 கோடி முறைகேடு புகாரின் புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கினால் விசாரணை முற்றிலுமாக பாதிக்கப்படும். வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதால் அவருக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது” என வாதிட்டார்.</p><p>இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "டாஸ்மாக் முறைகேடு நடந்ததற்கும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். </p><h2>சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு </h2><p>இந்த நிலையில், முன் ஜாமீன் வழங்க மறுத்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் செந்தில்  பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார். செந்தில் பாலாஜியின் மனுவை அவசரமாக பட்டியலிடக் கோரி தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியை தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத் துறை விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனாலேயே சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. </p>  ]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரத்தில் தமிழக நலன் பாதிக்கப்பட அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது - தவெக</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-will-never-allow-tamil-nadus-interests-to-be-harmed-tvk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-will-never-allow-tamil-nadus-interests-to-be-harmed-tvk#comments</comments><guid isPermaLink="false">13bb917f-21eb-405b-8638-14ba6fb2fe07</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:25:38 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:25:38.246Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,Cauvery River,மேகதாது அணை,Mekedatu dam,MKstalin,மேகதாது விவகாரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8wga6t9u/tvk33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/8wga6t9u/tvk33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>ஆகஸ்ட் 3ல் தமிழ்நாடு முதல்-அமைச்சர்  கர்நாடகா செல்வதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக, முதல்-அமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார். மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் நாம் வலியுறுத்தி இருப்பதை இந்தப் பயணம் நீர்த்து போகச் செய்யாதா?</p><p>மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் திமுகதான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். மாநிலத்தின் முக்கியப் பிரச்னையில் யார் குரலையும் கேட்காமல் Indifferent ஆகவும், Inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.</p><p>இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேகதாது விவகாரத்தில் தமிழக மக்கள் நலன் பாதிக்கப்பட அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது என தவெக  கூறியுள்ளது.</p><p>இது தொடர்பாக  தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-</p><p>மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே?</p><p>தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முமுதல்-அமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.</p><p>ஆட்சியில் இருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே.</p><p>யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது விவகாரம்</a> மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது என அதில் பதிவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேலைக்கு போகாததை கண்டித்த தந்தை... ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-reprimanded-for-not-going-to-work-son-commits-shocking-act-in-anger</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-reprimanded-for-not-going-to-work-son-commits-shocking-act-in-anger#comments</comments><guid isPermaLink="false">c5f70791-0db3-445e-9a44-cb52c1f96008</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:20:22 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:20:22.861Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வேலூர்,மகன்,வெட்டிக்கொலை,போலீசார்,கைதுArrest,தொழிலாளிWorker</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/eq6a8pfd/138.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/eq6a8pfd/138.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர், </p><p>வேலைக்கு செல்லாததை தட்டிக்கேட்டதால் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.</p><h2>தகராறு</h2><p>வேலூர் மாவட்டம், சலவன்பேட்டை, அம்மணாங்குட்டை ரோட்டை சேர்ந்தவர் சந்திரன் (வயது 70). இவரது மகன் சக்திவேல் (42). இருவரும் தச்சுத்தொழிலாளிகள். சக்திவேலுக்கு 2 மனைவிகள். மதுபோதைக்கு அடிமையான சக்திவேல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் 2 மனைவிகளும் அவரை விட்டு பிரிந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மதுபோதையில் சக்திவேல் வீட்டுக்கு வந்தார். அப்போது சந்திரன், மகனிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றித்திரிகிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல், சந்திரனை கத்தியால் வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>கைது</h2><p>இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் தந்தையை மகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை தலைமை செயலகத்தில் 3 பெண்கள் திடீர் தற்கொலை முயற்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-women-attempt-suicide-at-chennai-secretariat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-women-attempt-suicide-at-chennai-secretariat#comments</comments><guid isPermaLink="false">2161d366-32a9-4e76-bc17-a3dc30dc7865</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:05:51 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:05:51.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,தலைமைச்செயலகம்,Secretariat,womens</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hbi9vb46/hospital33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  தற்கொலை முயற்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/hbi9vb46/hospital33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நான்காவது நுழைவு வாயில் முன்பு தூக்க மாத்திரை உட்கொண்டு இரு பெண்கள் தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>திருச்சியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சென்னை தலைமை செயலகத்தில்</a> உள்ள முதல் அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிப்பதற்காக இன்று காலை வந்துள்ளார்.</p><p>ஆனால், புகார் மனு வழங்குவதற்கு முன்னதாகவே, மூன்று பேரும் தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><p>திருச்சியில் தாய் மற்றும் இரு மகள்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் உடனடியாக காலி செய்யச் சொல்லி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.</p><p>இதுதொடர்பாக திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரின் தனிப் பிரிவில் புகார் அளிப்பதற்காக இன்று வந்திருந்ததாக தகவலகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தலைமை செயலக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>13 முன்னாள் வீரர்களுக்கு ஓய்வூதியம்; 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-adhav-arjuna-issues-pension-to-13-former-athletes-appoints-6-coaches</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-adhav-arjuna-issues-pension-to-13-former-athletes-appoints-6-coaches#comments</comments><guid isPermaLink="false">71d48aaf-218c-436c-8603-51b0bc58464a</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:50:44 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:50:44.279Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,pension,ஓய்வூதியம்,Athlete,பணி நியமன ஆணைகள்,Appointed,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Adhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/lfnoults/137.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/lfnoults/137.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%20">ஆதவ் அர்ஜுனா </a>இன்று தலைமைச் செயலகத்தில், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையினையும், 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.</p><h2>ஓய்வூதிய திட்டம்</h2><p>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.9.36 இலட்சத்திற்கான காசோலைகளும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.4.77 இலட்சத்திற்கான காசோலைகளும், 4 பெண் பயிற்றுநர்கள், 2 ஆண் பயிற்றுநர்கள் என 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார்.</p><p>விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், ஓய்விற்குப் பின் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதற்காகவும், 58 வயதை எட்டிய பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000 ஓய்வூதியமாகவும் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 82 நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களும் மற்றும் 13 குடும்ப ஓய்வூதியதாரர்களும் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.</p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், பொது மேலாளர் சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் பைக் விபத்தில் இன்ஜினியர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineer-dies-in-bike-accident-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineer-dies-in-bike-accident-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">b707178a-7ae0-4853-8ccd-352aa9afdab8</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:42:26 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:42:26.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Death,உயிரிழப்பு,Engineer,bike accident,பைக் விபத்து,இன்ஜினியர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/zi28cf18/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/zi28cf18/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பைக் விபத்தில் </a>படுகாயம் அடைந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">இன்ஜினியர்</a> மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. </p><h2>என்ஜினியர்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகிலுள்ள வெள்ளாளன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிச்செல்வம் (வயது 27). பி.இ. சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், தனியார் சோலார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவில் வெள்ளாளன்கோட்டை கிராமத்திலிருந்து செட்டிகுறிச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.</p><h2>பைக் விபத்து</h2><p>அப்போது எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், மாரிச்செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><h2>உயிரிழப்பு</h2><p>பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-permitted-to-bathe-in-courtallam-waterfalls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-permitted-to-bathe-in-courtallam-waterfalls#comments</comments><guid isPermaLink="false">6715fa91-07a1-45c9-80ae-53f6f688766f</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:41:11 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:41:11.113Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,குற்றாலம் அருவி,tourist,Courtalam Falls</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ohmzieh2/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ohmzieh2/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. </p><h2>குற்றாலம் அருவிகள்</h2><p>தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் முற்றிலும் குறைவாகவே விழுந்தது. புலியருவியும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.</p> <h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது. புலியருவிக்கும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணி கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.</p><p>குற்றாலம், இலஞ்சி பகுதியில் மாலையிலும் சாரல் மழை பெய்தது. குற்றாலம், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p><h2>குளிக்க தடை </h2><p>இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவால் குற்றாலம் அருவிகளில் இன்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. </p><h2>சாரல் திருவிழா</h2><p>ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. தற்போது அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சாரல் திருவிழாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>அனுமதி</h2><p>இந்நிலையில் அருவிகளில் தற்போது நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்குள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.  </p>]]></content:encoded></item><item><title>சென்னை - கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-attached-to-the-chennai-coimbatore-intercity-express-train</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-attached-to-the-chennai-coimbatore-intercity-express-train#comments</comments><guid isPermaLink="false">da39afaa-61c5-4017-9245-01feb9b792f0</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:17:46 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:17:46.904Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,கோவை,Chennai,சென்னை,தமிழகம்,Express train,எக்ஸ்பிரஸ் ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Kovai,இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்,Intercity Express</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/lhyvj8pa/kiererr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/lhyvj8pa/kiererr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை சென்டிரல் - கோவை இடையேயான இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது. </p><h2>இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - கோவை இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு இருக்கை வசதி முன்பதிவு பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த நடைமுறை இன்று (ஜூலை 30) முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 2 மாதங்கள் அமலில் இருக்கும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-11</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-11#comments</comments><guid isPermaLink="false">8276962b-8f95-4c82-b37f-3dc8c6de7e97</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:17:18 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:17:18.880Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,power outage,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4zoq51qz/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/4zoq51qz/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்,  திருநெல்வேலி கிராமப்புறம், கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  </p><p>சங்கரன்கோவில், பெருமாள்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் அன்று சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். </p><p>மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். </p><p>எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம். </p><p>கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. </p><p>அதன்படி ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம். </p><p>ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழுநீர்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>புளியங்குடி மற்றும் வீரசிகாமணி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (1.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ளகவுண்டன்பட்டி. </p><p>வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோயில், வென்றி லிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கால்நடை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/veterinary-science-courses-rank-list-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/veterinary-science-courses-rank-list-released#comments</comments><guid isPermaLink="false">0601bf73-21e5-4588-be9c-4221ce606ff8</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:17:09 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:17:09.450Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கால்நடை மருத்துவம்,தரவரிசைப் பட்டியல்,மருத்துவ படிப்புகள்,கால்நடை மருத்துவப் படிப்பு,கால்நடை மருத்துவ படிப்பு,Veterinary College,Veterinary medicine courses,veterinary courses,Veterinary Science Courses</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/szmmcxnp/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/szmmcxnp/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பட்டியல் வெளியானது</h2><p>தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (B.V.Sc &amp; A.H.) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (B.Tech உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு) தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியல் 30.07.2026 (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ. கமலியால் வெளியிடப்பட்டது. </p><h2>முதல் 5 இடங்களை பெற்ற மாணவர்கள்</h2><p>இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் அரசு செயலர் அனு ஜார்ஜ், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர்(பொறுப்பு) ர. நரேந்திரபாபு மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ச.மு.க. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். தரவரிசைப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் (B.V.Sc &amp; A.H. மற்றும் B.Tech) விவரங்களும் வெளியிடப்பட்டன.</p><h2>இணையதளத்தில் காணலாம்</h2><p>தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை (B.V.Sc &amp; A.H. மற்றும் B.Tech) பல்கலைக்கழக இணையதளத்தில் https://adm.tanuvas.ac.in அல்லது https://tanuvas.ac.in காணலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Online Counselling) விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். தரவரிசைப் பட்டியலில் உள்ள சந்தேகங்களுக்கு 31.07.2026 முதல் 02.08.2026 வரை 044-29997349 மற்றும் 044-29997348 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது admission@tanuvas.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ்: சிறுவன் உள்பட 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reels-with-weapons-on-social-media-2-people-including-a-boy-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reels-with-weapons-on-social-media-2-people-including-a-boy-arrested#comments</comments><guid isPermaLink="false">771f0f62-320d-4a58-b910-d9526df039aa</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:07:35 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:07:35.697Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,2 arrested,2 பேர் கைது,ரீல்ஸ்,weapons,ஆயுதங்கள்,சமூக வலைதளம்,Reels,social media,சிறுவன்,boy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ic8rvwlg/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ic8rvwlg/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சமூக வலைதளங்களில்</a> பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் '<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">ரீல்ஸ்</a>' வீடியோ பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>சமூக வலைதளங்களில் கத்தியுடன் ரீல்ஸ்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், காயல்பட்டினம், வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மகன் மதன் (வயது 18). இவரும், இவரது நண்பரான 16 வயது சிறுவன் ஒருவரும் சேர்ந்து பொதுமக்களுக்கு பயத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கையில் ஏந்தியபடி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.</p><h2>சிறுவன் உள்பட 2 பேர் கைது</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த காயல்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இருதயராஜ் உடனடியாக இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் தலைமையிலான போலீசார் மதன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கான்பூர் - மதுரை, பிரயாக்ராஜ் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-trains-between-kanpurmadurai-and-prayagrajnellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-trains-between-kanpurmadurai-and-prayagrajnellai#comments</comments><guid isPermaLink="false">cc04a8ee-1a8f-4fb0-8dda-992986f13404</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:05:29 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:05:29.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,நெல்லை,Nellai,தமிழகம்,சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,Southern Railway,Madurai,மதுரை,Special train,Kanpur,கான்பூர்,பிரயாக்ராஜ்,Prayagraj</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/lidi01g3/kan.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/lidi01g3/kan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் இருந்து மதுரைக்கும், பிரயாக்ராஜில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. </p><h2>மதுரையில் இருந்து</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>கான்பூர் சென்டிரலில் இருந்து ஆகஸ்டு 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 01925) 3-வது நாள் காலை 7.15 மணிக்கு மதுரையை வந்தடைகிறது. </p><p>மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து ஆகஸ்டு 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (01926) 3-வது நாள் காலை 4.30 மணிக்கு கான்பூர் சென்டிரலை சென்றடையும்.</p><p>22 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் தமிழ்நாட்டில், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><h2>பிரயாக்ராஜில் இருந்து</h2><p>இதேபோல், பிரயாக்ராஜில் இருந்து ஆகஸ்டு 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) காலை 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (04171) 3-வது நாள் மதியம் 1.15 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். </p><h2>திருநெல்வேலியில் இருந்து</h2><p>மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்டு 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (04172) 4-வது நாள் அதிகாலை 3.30 மணிக்கு பிரயாக்ராஜ் சென்றடைகிறது. </p><p>19 பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><h2>நாளை டிக்கெட் முன்பதிவு</h2><p>இதில், கான்பூர் சென்டிரல் - மதுரை இடையேயான சிறப்பு ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியிட்டது. பிரயாக்ராஜ் - நெல்லை இடையேயான சிறப்பு ரெயிலுக்கு டிக்கெட் முன்பதிவு நாளை (31-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mous-signed-with-various-industrial-companies-in-the-presence-of-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mous-signed-with-various-industrial-companies-in-the-presence-of-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">b0a95b7d-683d-43fe-b336-68cb2dc6421f</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:54:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:54:50.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,புரிந்துணர்வு ஒப்பந்தம்,தொழில் நிறுவனங்கள்,Industrial companies,தொழில்துறை,MoU signed,CM Vijay,Chief Minister Vijay,industrial development</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ijypozm8/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-30/ijypozm8/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>சென்னை நந்தனத்தில் உள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்குமிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக, தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சப் நிறுவனம்</h2><p>சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் நிறுவனம், தனது உலகளாவிய திறன் மையம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ்நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை தமிழ்நாட்டில் முதன்முறையாக நிறுவ முன்வந்துள்ளன. சப் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 220 பேருக்கும், நார்டெக்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 1,000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் மொத்தம் 1,220 உயர்தர ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.</p><p>இந்த முதலீடுகள், உயர்மதிப்புடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக சென்னை நகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும். புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல், அறிவுசார் திறன் சார்ந்த முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் திறன்மிக்க மனிதவளத்திற்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற முதல்-அமைச்சரின் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றாற்போல், இம்முதலீடுகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்</h2><p>மேலும், உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia - UWA), இந்தியாவில் தனது வளாகத்தை சென்னை நகரில் நிறுவ உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாகும். 1911-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், QS உலகப்பல்கலைக்கழக தரவரிசை 2026-ல் 77-வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை வேளச்சேரியில் சுமார் ரூ.125 கோடி முதலீட்டில் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தென் கொரிய நிறுவனம்</h2><p>தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ் லிங்க் (Motive Link), காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><h2>முதல்-அமைச்சர் உறுதி</h2><p>இந்த முதலீடுகள், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார். மேலும், இந்நிறுவனங்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அமைய தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் முதல்-அமைச்சர் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>