<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 12 Aug 2026 07:24:44 +0000</lastBuildDate><item><title>வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.61.73 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velinaatil-velai-vaangi-tharuvathaga-vaalibaridam-rs-61-73-latcham-mosadi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velinaatil-velai-vaangi-tharuvathaga-vaalibaridam-rs-61-73-latcham-mosadi#comments</comments><guid isPermaLink="false">cbb345c4-de69-48e6-94d6-46615ef2db46</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:24:10 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:24:10.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மோசடி,சிவகங்கை,Sivagangai,Duping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/drygiu96/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/drygiu96/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.61.73 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>ஜெர்மன் நாட்டில் வேலை</h2><p>திருப்பத்தூரை அடுத்த பட்டமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேஷ் (28 வயது). இவருடைய செல்போனில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்பு கொண்டு பேசிய 2 பேர் ஜெர்மன் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பிய கணேஷ் அவர்கள் கூறியபடி பதிவு கட்டணம், இன்சூரன்ஸ், விசா, மருத்துவ பரிசோதனை, பணம் டெபாசிட் செய்வது உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு தவணைகளில் ரூ.61 லட்சத்து 73 ஆயிரத்து 461 செலுத்தியதாக கூறப்படுகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அதன் பின்னர் அவர்கள் கணேசை ஜெர்மன் நாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கணேஷ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-prime-minister-must-emerge-from-tamil-nadu-aadav-arjuna</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-prime-minister-must-emerge-from-tamil-nadu-aadav-arjuna#comments</comments><guid isPermaLink="false">8f504e22-7070-477b-85e9-3fc243c50d1c</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:13:01 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:13:01.008Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,சட்டசபை,TN Assembly,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9wnerm94/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9wnerm94/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.</p><p><strong>தொகுதி மறுவரையறை எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-</strong></p><p>வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். மாநிலங்கள் இல்லாமல், ஒன்றிய அரசு இல்லை. மாநிலங்கள் இல்லாமல், இந்தியா வளர முடியாது. ஒன்றிய அரசு எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். தேர்தல் அரசியலுக்காக பாஜக சட்டங்களை கொண்டு வர நினைக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. அரசியலமைப்பை பாதுகாக்கவே தற்போது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு உள்ளது.</p><p>தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. மாநில சுயாட்சிக்காக கருணாநிதியும் ஜெயலலிதாவும் குரல் கொடுத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மாறுபடும் நேரத்தில் நமக்கான உரிமை பறிபோகும். நீட்டை விட முக்கியமான தீரம்னம் தொகுதி மறுவறையறைக்கு எதிரான தீர்மானம். தொகுதி மறுவறையறைக்கு எதிராக முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். அதனை வரவேற்கிறோம்.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த திமுகவிற்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்படும்போது தமிழ்நாட்டின் 39 எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்யாமல், மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அரசியல் ரீதியாக திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இருந்து அதனை எதிர்க்க வேண்டும்.</p><p>Fair Demilitation Freeze Delimitation தற்போது முக்கியமானது. 50% உயர்ந்தால் நமக்கு பலன் கிடைக்கும் என பிரேமலதா கூறினார்; ஆனால் அது அப்படி கிடையாது. தொகுதிகளை 50% உயர்த்தினாலும் வட இந்திய ஆதிக்கம் உருவாகும் சூழல் ஏற்படும். அண்ணா அன்றே முழங்கினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று. மாநில நலனுக்காக கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். 5 முதல் 6 இந்தி பேசும் மாநிலங்கள் ஒன்றிணைந்தாலே பிரதமரை தேர்வு செய்யலாம் என்ற சூழல் உள்ளது; அது மாற்றப்பட வேண்டும்; தென் இந்தியாவில் இருந்து.., ஏன் தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிமச் சட்டத் திருத்தம் தேவையற்றது - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/min-sattath-thiruththam-thevaiyatraathu-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/min-sattath-thiruththam-thevaiyatraathu-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">318b9471-f27f-485b-8122-37e695dac7c9</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:03:59 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:03:59.067Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,கனிமச் சட்ட திருத்தம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/d3hshzbu/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/d3hshzbu/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் 9டி என்ற புதிய பிரிவை சேர்ப்பதற்கான சட்டத் திருத்த முன்வரைவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தக் கூடிய இச்சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்த முன்வரைவின் மூலம் சேர்க்கப்படவுள்ள 9டி பிரிவு மிகவும் ஆபத்தானது. அந்த பிரிவின்படி, கனிம வளங்கள் உரிமை மீது எந்த வரியையும், கூடுதல் வரியையும், தீர்வைகளையும் மாநில அரசுகள் தன்னிச்சையாக  விதிக்க முடியாது. அதுமட்டுமின்றி, மாநில அரசுகளால் ஏற்கனவே இதுபோன்ற வரிகள் விதிக்கப்பட்டு, அதை கனிமச் சுரங்க ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் இருந்தால், இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும்போது, நிலுவையில் உள்ள வரித் தொகையை செலுத்தத் தேவையில்லை. கனிமங்கள், அவை கிடைக்கும் நிலங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும், மத்திய அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் மட்டும்தான் வரி விதிக்க முடியும்.</p><p>சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத் திருத்த முன்வரைவு மாநில அரசின் வரி விதித்து, வருவாய் ஈட்டும் அதிகாரத்தைப் பறிக்கிறது. நிலங்கள், கனிமங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும் கூட, வரி விதிப்பை முறைப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதை பயன்படுத்தி கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு முயல்கிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.</p><p>2025&amp;26ம் ஆண்டில் கனிம வளங்கள் மீதான வரி, ராயல்டி உள்ளிட்ட அம்சங்கள் மூலம் தமிழ்நாடு அரசு ரூ.4,100 கோடி வருவாய் ஈட்டியது. 2026&amp;27ம் ஆண்டில் இந்த வருவாயை ரூ.11 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தமிழ்நாட்டின் கனிமவளங்கள் முறையாக கையாளப்பட்டால் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்ட முடியும் என்பது பாமகவின் நிலைப்பாடு ஆகும். எந்தெந்த வகைகளில் எல்லாம் இந்த வருவாயை ஈட்ட முடியும் என்பதை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நிழல் நிதிநிலை அறிக்கைகளில் பாட்டாளி மக்கள் கட்சி தெளிவாக விவரித்திருக்கிறது.</p><p>சரக்குகள் மற்றும் சேவை வரி விதிப்பு சட்டம் 2017ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த பிறகு மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டு விட்டது. மதிப்புக் கூட்டு வரி, மோட்டார் வாகன வரி, பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் கனிமங்கள் மீதான வரிகள் மூலமாகத் தான் மாநில அரசுகள் தங்களுக்கான வருவாயைத் திரட்ட வேண்டியுள்ளது. அதையும் பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றுவது மாநில அரசுகளின் வருவாய் ஆதாரங்களை முடக்கி மக்களுக்கு எந்த வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.</p><p>அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தான் இந்த சட்டத் திருத்தத்தால் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெற்றது. கனிமக் கொள்ளையை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததைத் தொடர்ந்து கனிமக் கொள்ளைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றின் மீது பல்வேறு வரிகளும், அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தவணை முறையிலும் செலுத்தலாம் என்று சலுகை வழங்கப்பட்டதால், அவற்றில் பெரும்பாலான தொகை இன்னும் வசூலிக்கப்படவில்லை. இப்போது கனிமச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், கனிமக் கொள்ளை நடத்தியவர்களிடமிருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய வருமானம் தடைபடும் ஆபத்து உள்ளது.</p><p>கனிமங்களைத் தாங்கி நிற்கும் நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில் கடந்த 25.07.2024ம் நாள் தீர்ப்பளித்த 9 நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சட்ட அமர்வு, கனிமங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாக அறிவித்தது. அந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தான் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு கொண்டு வரும் சட்டத் திருத்தங்கள் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர, மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாது. எனவே, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு உரிமைகளுக்காக இறுதிவரை களத்தில் நிற்போம் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-stand-firm-in-the-battle-for-tamil-nadus-rights-and-oppose-the-constituency-delimitation-bill-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-stand-firm-in-the-battle-for-tamil-nadus-rights-and-oppose-the-constituency-delimitation-bill-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">963ddc36-d37a-42b8-8ff3-a53e7c874f7f</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:03:40 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:03:40.839Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,constituency,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,In Tamil Nadu,Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/d58izrxj/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/d58izrxj/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>தொகுதி மறுவரையறை மசோதா</h2><p>மக்களவை உறுப்பினர்களின் தற்போதுள்ள எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும். இந்த தொகுதிகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ள, அரசின் தனித் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்.</p><p>கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட ‘தொகுதி மறுவரையறை மசோதா”வை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மீண்டும் கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது.</p><p>இந்த மசோதா சட்டமானால், மாநிலங்களுக்கு இடையிலான மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த போக்கை தடுத்து நிறுத்தத் தான் 1971 மக்கள் தொகை அடிப்படையில் தற்போதுள்ள 543 தொகுதிகளே நீடிக்க வேண்டுமென்ற வகையில் அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 1976 இல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து  2001 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டுமென்று முடிவெடுத்தார். அதற்கு பிறகு 2001 ஆம் ஆண்டில்  பிரதமராக இருந்த ஏ.பி.வாஜ்பாய் இதே நிலையை இன்னும் 25 ஆண்டுகளுக்கு 2026 வரை நீட்டிப்பு செய்தார். ஆனால், தற்போதுள்ள நரேந்திர மோடி அரசு, மக்கள் தொகை பெருக்கத்திற்கு இணையாக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்தினால் மாநிலங்களிடையே வேறுபாடு வளர்ந்து, சமநிலைத்தன்மை சீர்குலைந்து விடும்.</p><h2>வித்தியாசம்</h2><p>இந்த மசோதா சட்டமானால், ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, மக்கள் தொகையைக் குறைத்த தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்குத் தண்டனை கொடுத்தது போலவும், மக்கள் தொகையைக் குறைக்காத வட மாநிலங்களுக்குப் பரிசு கொடுத்தது போலவும் ஆகிவிடும். உத்தரப் பிரதேசம் - தமிழ்நாடு இடையிலான தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம், 41இல் இருந்து 62 ஆக அதிகரிக்கும். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், மாநிலங்களவை அதிகாரமற்றதாக மாறிவிடும்.</p><p>மக்களவையில் 815 எம்.பி.க்கள் இருந்தால், பெரும்பாலானோருக்குப் பேச வாய்ப்புக் கிடைக்காது. தனிப்பட்ட எம்.பி.யின் முக்கியத்துவம் குறைந்து, ‘ஒரு எம்.பி., ஒரு வாக்கு” என்பது அர்த்தமற்றதாகிவிடும். ஒட்டுமொத்தத்தில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> சட்ட மசோதா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும். மாநில சுயாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய நம் இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிடும்.</p><h2>இறுதிவரை களத்தில் நிற்போம்</h2><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதி, துரோகம். எனவே, அப்படிப்பட்ட கட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.</p><p>தமிழ்நாட்டின் உரிமைகளையும், இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து மத்திய பாஜக அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்பிக்கவே முடியாது. தமிழ்நாட்டின் குரலாய், மக்களாட்சியின் காவலனாய் நாம் இறுதிவரை களத்தில் நிற்போம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யானைக் கூட்டத்தை சீண்டியவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-25000-fine-for-those-who-harassed-a-herd-of-elephants</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-25000-fine-for-those-who-harassed-a-herd-of-elephants#comments</comments><guid isPermaLink="false">4320e923-e4e0-4fbb-8c59-469b25178c6f</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:02:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:02:13.535Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,அபராதம்,Kovai,Penalties,யானை கூட்டம்,Forest Officer</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9iz30rb2/3.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ யானைக் கூட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ யானைக் கூட்டத்தை தொந்தரவு செய்த 5 இளைஞர்களுக்கு வனத்துறையினர் ரூ. 25,000 அபராதம் விதித்தனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9iz30rb2/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோயம்புத்தூர் மாவட்டம்</a> மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, யானைக் கூட்டத்தை தொந்தரவு செய்த 5 இளைஞர்களுக்கு வனத்துறையினர் ரூ. 25,000 அபராதம் விதித்தனர்.</p><h2>வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள்</h2><p>கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை நீர்நிலை பகுதிக்கு, வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வருவது வழக்கம். சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பதிவுகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள், பைக்குகளில் தடைசெய்யப்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர். அவர்கள் அங்கு வந்த யானைகளின் வழித்தடத்தில் காத்திருந்து, அவற்றை நெருங்கி வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க முயன்று தொந்தரவு செய்தனர்.</p><h2>வனத்துறை நடவடிக்கை</h2><p>அப்போது, அந்தப் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், அத்துமீறி நுழைந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர். வனச்சட்ட விதிகளின்படி, வனப்பகுதிக்குள் அத்துமீறிய குற்றத்திற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5,000 வீதம், மொத்தம் ரூ. 25,000 கூட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு குறித்த கடுமையான எச்சரிக்கையும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வனப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.</p><h2>வனத்துறையின் கடுமையான எச்சரிக்கை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/வனவிலங்கு">வனவிலங்கு </a>பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் யானைகள் மிக உயர்ந்த பாதுகாப்பைப் பெற்ற விலங்கினமாகும். சமூக ஊடக லைக்ஸ்களுக்காக யானைகளின் அருகில் செல்வது, செல்பி எடுப்பது, கற்களை எறிந்து தொந்தரவு செய்வது சட்டப்படி குற்றமாகும்.</p><p>சமீபத்தில் பொள்ளாச்சி அருகே யானையை விரட்ட முயன்ற நபர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய செயல்கள் விலங்குகளை ஆக்ரோஷமடையச் செய்து மனித-விலங்கு மோதல்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் வனப்பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-against-constituency-delimitation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-against-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">b9325528-eec0-48c6-b234-03f9949cb676</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:43:36 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:43:36.014Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,திமுக,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,TN govt,Delimitation of Constituencies,தனித்தீர்மானம்,தமிழக செய்திகள்,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/s492e7pp/thoikuuth.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/s492e7pp/thoikuuth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். </p><h2>சட்டசபையில் தனித் தீர்மானம்</h2><p>தமிழக சட்டசபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானத்தை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> முன்மொழிந்தார். </p><p>அப்போது பேசிய <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>, "நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கு இடையே, அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போது உள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும். வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.</p><h2>பா.ஜ.க., பா.ம.க., அ.தி.மு.க. எதிர்ப்பு</h2><p>இதையடுத்து இந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி பாஜகவின் போஜராஜன் பேசுகையில், பரிசீலனையில் உள்ள மசோதா குறித்து அவசரப்பட்டு தீர்மானம் கொண்டு வருவதாக எதிர்ப்பு தெரிவித்தார்.</p><p>பாமக எம்.எல்.ஏ., கணேஷ் குமார் பேசுகையில், “ஒன்றிய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வருமா? வராதா? என்ற சூழ்நிலையில், செவிவழி செய்தியை வைத்துக் கொண்டு இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதன் அவசியம் என்ன? முதல்-அமைச்சர் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும். மகளிர் உரிமை அதிகாரத்திற்கு எதிராக பாமக ஒருபோதும் நிற்காது” என்று அவர் கூறினார்.</p><p>அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக தவெக அரசு அவசரமாக தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தீர்மானத்தை எதிர்க்கும் அதேநேரம் மகளிர் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்துவதை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.</p><h2>தி.மு.க. தலைவர் கடிதம்</h2><p>சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தொகுதி மறுவரையறை எனக்கூறி தமிழ்நாட்டின் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம் என 2024ம் ஆண்டே தீர்மானம் போட்டோம். இதன் ஆபத்தை விளக்கி தென் மாநில முதல்வர்களுக்கு எங்கள் தலைவர் கடிதம் எழுதி இருந்தார்.</p><p>DELIMITATION கொண்டுவந்தால் அது எவ்வளவு பெரிய பாதிப்பாக அமையும் என்பதை இந்தியாவுக்கே முதலில் சொல்லியவர் அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.</p><p>7 மாநில முதல்-மந்திரிகளுக்கு தொகுதி மறுவரையறை பற்றிய ஆபத்தை எடுத்து உரைத்து தி.மு.க. தலைவர் கடிதம் எழுதினார். Join Action Committee யை சென்னையில் உருவாக்கினோம். ஒருங்கிணைந்த செயல்திட்ட கூட்டத்தையும் எங்கள் தலைவர் நடத்தினார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை இந்த சட்டமன்றத்திலும் விளக்கி கூறினார். மசோதா நகலை எரித்து எதிர்ப்பை வெளிக்காட்டினோம்.</p><h2>தி.மு.க. வரவேற்பு</h2><p>தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது.  அதற்கு திமுக தெரிவித்த எதிர்ப்பு தான் நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தோல்வி அடைந்தது. மீண்டும் அந்த மசோதாவை தற்போது கொண்டு வர நினைக்கிறார்கள். நாங்கள் காட்டிய எதிர்ப்பு தான் மசோதா தோற்கடிக்கப்பட்ட காரணம். திமுகவை பொறுத்தவரை 33 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறோம். வரவேற்கிறோம். </p><p>மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பிரதிநிதித்துவம் 7.18% என்ற அளவில் இருந்து குறையக் கூடாது. </p><p>அரசினர் தனித்தீர்மானத்திற்கு திமுக வரவேற்கிறது. அரசு கொண்டு வந்த இரண்டு தீர்மானத்திற்கும் திமுக ஆதரவு தெரிவித்து வரவேற்கிறது” என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>யானைகளைப் பாதுகாப்போம்; காடுகளைப் பாதுகாப்போம் - அமைச்சர் ரஞ்சித்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-protect-elephants-let-us-protect-forests-minister-ranjithkumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-protect-elephants-let-us-protect-forests-minister-ranjithkumar#comments</comments><guid isPermaLink="false">79a32ed2-00a2-498a-bae2-4f5d3e6c0d2c</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:03:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:03:51.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,யானை,Forest,protect,A wild elephant,காடுகள்,வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார்,Minister Ranjithkumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/hx52rtg9/264.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரஞ்சித்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/hx52rtg9/264.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>யானைகளைப் பாதுகாப்போம்; காடுகளைப் பாதுகாப்போம் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார்.</p><p>உலக யானைகள் தினத்தையொட்டி வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்திருப்பதாவது:-</p><h2>யானைகள்</h2><p>யானைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், அவற்றின் இயற்கையான வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கும் நாளாக இது அமைகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின் படி, யானைகள் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல் மற்றும் மனித – யானை மோதலைத் தணித்தல் ஆகியவற்றிற்கு அறிவியல் சார்ந்த, நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான மற்றும் சமூகப் பங்கேற்புடன் கூடிய அணுகுமுறைகள் மூலம் தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.</p><p>யானைகள் நமது காடுகளின் வளத்தையும் இயற்கைச் சூழலின் சமநிலையையும் பேணுவதில் மிக முக்கியப் பங்காற்றும் உயிரினங்களாகும். காடுகளில் விதைகளைப் பரப்புதல், தாவர வளர்ச்சிக்கு வழிவகுத்தல், வனப்பகுதிகளில் இயற்கையான பாதைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சூழலியல் பணிகளை மேற்கொள்வதால், யானைகள் “சூழலியல் பொறியாளர்கள் (Ecological Engineers)” எனப் போற்றப்படுகின்றன. எனவே, யானைகளைப் பாதுகாப்பது என்பது ஓர் உயிரினத்தை மட்டும் பாதுகாப்பது அல்ல; அவற்றைச் சார்ந்துள்ள காடுகள், நீராதாரங்கள், இயற்கையான வாழ்விடங்கள் மற்றும் அங்கு வாழும் ஒட்டுமொத்த பல்லுயிரினங்களையும் பாதுகாப்பதாகும்.</p><h2>வரலாறு மற்றும் பண்பாடு</h2><p>தமிழ்நாட்டின் இயற்கை, வரலாறு மற்றும் பண்பாட்டுடன் யானைகளுக்கு நீண்டகாலத் தொடர்பு உள்ளது. தமிழ் மரபில் யானை, வேழம், களிறு, பிடி, கரி, குஞ்சரம், வாரணம் எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களால் யானைகள் அழைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் தொடங்கி பல்வேறு தமிழ் இலக்கியங்களிலும் யானைகள் வலிமை, வளம் மற்றும் வீரத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டுள்ளன. “களிறுமிக உடையஇக் கவின்பெறு காடே” எனப் புறநானூறு யானைகள் நிறைந்த வளமான காட்டின் அழகைப் போற்றுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யானைகளும் வளமான காடுகளும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை என்ற சூழலியல் புரிதல் தமிழர் வாழ்வியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>இந்தியாவில் யானைகள் வாழும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பரவியுள்ள விரிவான யானை வாழ்விடங்கள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகத்தின் வனப்பகுதிகளுடன் இயற்கையாகத் தொடர்ச்சியடைந்து, பரந்த மாநிலங்களுக்கு இடையேயான யானை வாழ்விட நிலப்பரப்பாக அமைந்துள்ளன. 2025 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த யானைகள் எண்ணிக்கைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 3,170 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9.1 இலட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் ஐந்து யானைகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2>முகாம்களில் பயிற்சி</h2><p>தமிழ்நாடு வனத்துறையின் நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட யானைகள் முகாம்களில், பராமரிப்பில் உள்ள யானைகள் அறிவியல் அடிப்படையிலான நடைமுறைகளின்படி பராமரிக்கப்பட்டு வருகின்றன. இம்முகாம்களில் பயிற்சி பெற்ற கும்கி யானைகள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிகளுக்குத் திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட மனித–யானை மோதல் தணிப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.</p><p>மாறிவரும் நிலப் பயன்பாடு, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள மனிதக் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளால், மனித – யானை எதிர்கொள்ளல்கள், நம் மாநிலம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சவாலாக உருவெடுத்துள்ளன.</p><p>இச்சவால்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தின் வனப்பரப்பு மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிப்பதுடன், வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில், மாநிலத்தின் வனப்பரப்பு மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்கும், முக்கிய இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பாதுகாத்து மறுசீரமைப்பதற்கும் அரசு உறுதியுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதுகாப்புப் பணிகள்</h2><p>அரசின் இந்த உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் வாழ்விடத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யானைகளின் இயற்கையான வாழ்விடங்களுக்குள் அவற்றிற்குத் தேவையான தீவன வளத்தை அதிகரித்தல், நீராதாரங்களை மேம்படுத்துதல், சீரழிந்த வனப்பகுதிகளை மறுசீரமைத்தல், அந்நிய ஆக்கிரமிப்பு தாவரங்களைக் கட்டுப்படுத்துதல், மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் யானைகளின் பாரம்பரிய வலசைப் பாதைகளைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.</p><p>குறிப்பாக, அதிகரித்து வரும் மனித–வனவிலங்கு மோதல்களை ஒருங்கிணைந்த முறையில் தணிப்பதற்காக இந்த ஆண்டு ரூ.20 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள யானைத்தடுப்பு அகழிகள் மற்றும் கதிரொளி மின்வேலிகளைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல், கூடுதல் மனிதவளத்தைப் பயன்படுத்தி சிறப்பு ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுதல், யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகள், முன்கூட்டிய எச்சரிக்கை வசதிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் மூலம் யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, பொதுமக்களுக்கும் களப் பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்கும் நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>யானைகளின் தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகளைத் தடுப்பதும் மிக முக்கியமானதாகும். குறிப்பாக சட்டவிரோதமாக மின்வேலிகள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் உள்ளிட்ட காரணங்களால் யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு வனத்துறையும் தொடர்புடைய துறைகளும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. விவசாய நிலங்களில் வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின்வேலிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் செலுத்துதல் போன்ற செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.</p><h2>விவசாயிகளின் ஒத்துழைப்பு</h2><p>யானைகளைப் பாதுகாப்பது அரசு மற்றும் வனத்துறையின் பொறுப்பு மட்டுமல்ல. குறிப்பாக யானைகளின் வாழ்விடங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். யானைகள் குடியிருப்பு அல்லது விவசாயப் பகுதிகளுக்குள் வந்தால், வனத்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பதன் மூலம் மனித உயிரிழப்பு, பயிர் மற்றும் உடைமைச் சேதம் மட்டுமின்றி யானைகளின் உயிரிழப்பையும் பெருமளவில் தவிர்க்க முடியும்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">யானைகள்</a> பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய காடுகள் ஆரோக்கியமான காடுகளாகும். அத்தகைய காடுகளே நமக்கு நீர், தூய காற்று, வளமான மண், பல்லுயிரின வளம் மற்றும் காலநிலைத் தாங்குதிறனை வழங்குகின்றன.</p><h2>யானைகள் தினம்</h2><p>எனவே, இந்த உலக யானைகள் தினத்தில், யானைகளைப் போற்றுவோம்; அவற்றின் இயற்கையான வாழ்விடங்களையும் வலசைப் பாதைகளையும் பாதுகாப்போம்; காடுகளைப் பாதுகாப்போம்; வனத்துறையுடன் இணைந்து மனித-யானை நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என்ற உறுதியை அனைவரும் ஏற்போம்.</p><p>யானைகளைப் பாதுகாப்பது நமது காடுகளைப் பாதுகாப்பது; காடுகளைப் பாதுகாப்பது நமது எதிர்கால சந்ததியைப் பாதுகாப்பது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் - சென்னை மாநகராட்சி ஆணையாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-cooperation-needed-for-census-operations-says-chennai-corporation-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-cooperation-needed-for-census-operations-says-chennai-corporation-commissioner#comments</comments><guid isPermaLink="false">7eef64bf-f5e9-4953-8bf8-6aa0dac7bea9</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:02:55 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:02:55.061Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,மாநகராட்சி ஆணையாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/gwol7bzm/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/gwol7bzm/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கும், பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை முறையாகத் திட்டமிடுவதற்கும் முக்கியமான பணியாகும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 தொடர்பான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.</p><p>இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் (Enumerators) தங்களது அடையாள அட்டையை காண்பித்து பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, தேவையான விவரங்களை சேகரித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது சம்மந்தமாக விவரம் வேண்டின், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.</p><p>தொடர்பு கொள்ள வேண்டிய மண்டல அலுவலகங்கள்</p><p>மண்டலம் மண்டலத்தின் பெயர் தொடர்பு எண்</p><p>மண்டலம் – 1 திருவொற்றியூர் 9445190201</p><p>மண்டலம் – 2 மணலி 9445190202</p><p>மண்டலம் – 3 மாதவரம் 9445190203</p><p>மண்டலம் – 4 தண்டையார்பேட்டை 9445190204</p><p>மண்டலம் – 5 ராயபுரம் 9445190205</p><p>மண்டலம் – 6 திரு.வி.க. நகர் 9445190206</p><p>மண்டலம் – 7 அம்பத்தூர் 9445190207</p><p>மண்டலம் – 8 அண்ணா நகர் 9445190208</p><p>மண்டலம் – 9 தேனாம்பேட்டை 9445190209</p><p>மண்டலம் – 10 கோடம்பாக்கம் 9445190210</p><p>மண்டலம் – 11 வளசரவாக்கம் 9445190211</p><p>மண்டலம் – 12 ஆலந்தூர் 9445190212</p><p>மண்டலம் – 13 அடையாறு 9445190213</p><p>மண்டலம் – 14 பெருங்குடி 9445190214</p><p>மண்டலம் – 15 சோழிங்கநல்லூர் 9445190215</p><p>மேலும், பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கும் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளைப் பெறலாம்.</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்/சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-mariyavilsan-must-apologise-for-insulting-tamil-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-mariyavilsan-must-apologise-for-insulting-tamil-seeman#comments</comments><guid isPermaLink="false">f660b110-c99d-4d31-917f-f859b4b48ce3</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:51:10 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:51:10.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,தமிழக சட்டசபை,TN Assembly,அமைச்சர் மரிய வில்சன்,Minister Maria Wilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/x54ui3oe/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/x54ui3oe/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழை அவமதிக்கும் வகையில், பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகச் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதையும், பார்த்து படிக்கும்போதே எண்களைப் பிழையாகக் கூறியதையும் மானியக்கோரிக்கை மீதான விவாத்தில் சுட்டிக்காட்டி, அதனை திருத்திக்கொள்ளக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனுக்கு, நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த பதிலும், வெளிப்படுத்திய உடல்மொழியும் ஆணவத்தின் உச்சம். தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். அப்பண்பு துளியுமற்று, தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாதென அமைச்சர் மரியவில்சன் அதிகாரத்திமிரில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு  ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா? உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், பிற மாநிலத்தவரும் நேரலையில் உற்று நோக்கும் ஓர் அவையில், உங்களைச் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கே இது மாபெரும் அவமதிப்பல்லவா? </p><p>அப்பிழையை ஒருவர் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் கோபம்கொள்வது ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த திருநாட்டில், தமிழைப் பிழையற உச்சரிக்கவே ஒரு அமைச்சர் தடுமாறுவதா? என, நியாயமாக மக்கள்தான் உங்கள் மீது கோபம்கொள்ள வேண்டும்! நாங்கள் குற்றம் சொல்வதில் ஓர் அறம் உள்ளது. நீங்கள் கோபப்படுவதில் என்ன அர்த்தம் உள்ளது? </p><p>'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’. தமிழைப் பிழையின்றிப் பேச நீங்கள் பயிற்சியும், முயற்சியும் எடுத்தால், அது எளிதில் வசப்படும். அதைவிடுத்து "நான் பிறப்பால் கிறிஸ்தவன்; அதுவே எனக்கு அன்பைப் போதித்தது. எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது" என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?</p><p>நீங்கள் கிறிஸ்துவராக பிறந்திருக்கலாம்; பைபிள் உங்களுக்கு அன்பை போதித்திருக்கலாம். அதைச் சொல்வது உங்கள் உரிமை; உங்கள் உணர்வு; அதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் சார்ந்துள்ள மதம் அன்பைப் போதிக்கிறது என்று சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எங்கள் அன்னை தமிழ்மொழி அன்பைப் போதிக்காது, பெறமுடியாது என்று சொல்ல நீங்கள் யார்? உடன்பிறந்த தம்பி குடும்பத்தை, உருட்டுகட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும், இரக்கத்தையும்தான் உலகமே கண்டதே அமைச்சரே!</p><p>உலகிற்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி,  தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா? 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க்குறள்களை அமைச்சர் படித்ததில்லையா?</p><p>உங்கள் கட்சியின் முகப்பில் உள்ள "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உயிர்களின் சமத்துவத்தைப் போதித்தது எங்கள் தமிழ் இல்லையா? "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்று பகிர்ந்துண்ணும் உயரிய பண்பினை கற்பித்தது எங்கள் தமிழ் இல்லையா?</p><p>"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும், ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றும், உலகம் யாவையும் தாமுளவாக்கலும் என்றும், பாரடா உன் மானுட பரப்பை; மானுட சமுத்திரம் நானென்று கூவு! என்றும், புதியதோர் உலகம் செய்வோம்; கெட்டப்போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! என்றும், "உலகு, உலகு" என்று உலக மாந்தர் அனைவரையும் உறவாகக் கருதி நேசித்தது, எங்கள் தமிழ் இல்லையா?</p><p>காக்கைக்குருவி எங்கள் சாதி;  நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம்!  என்று பேரன்பு கொண்டு பாடியது எங்கள் தமிழ் இல்லையா? தன் தவறுக்கு மதத்தை உள்ளிழுத்து தப்பிக்க முயலும் மலிவான அரசியல் செய்யும் மரியவில்சன் அவர்களே! எல்லா சமயங்களும், எல்லா வேதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன! என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. </p><p>இறைமகன் இயேசு "அண்டை அயலானிடமும் அன்பு காட்டு" என்றார்; நபிகள் நாயகம் (ஸல்) "பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் பொழுது நீ உணவருந்தாதே" என்றார்; தமிழ்ச்சைவ திருமுறையோ "அன்பே சிவம்" என்கிறது. பெரும்பாவலர் பாரதியோ "பகைவனுக்கும் அருள்வாய் நன்னஞ்சே" என்று பாடினார். </p><p>'வாடியப்பயிரை கண்டு வாடிய' வள்ளலாரும், 'அன்புவழி' என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளர்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி,  இழிவுபடுத்துவதை எப்படி ஏற்க முடியும்? உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய்  எங்கள் தமிழ்! </p><p>"தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே!" என்றார் பாவேந்தர் தாத்தா பாரதிதாசன்.</p><p>அதே அவையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் "தமிழ் நம் உயிருக்கு நேர்; தமிழ் நம் தாய்" என்று பேசும்போது, தாங்களோ "என் சமயம் மட்டுமே அன்பைப் போதித்தது, தமிழ் போதிக்கவில்லை" என்று பேசுவது ஏற்புடையதன்று. தமிழின் பேரன்பை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பிழைக்கு வருந்தித் திருந்துவதை விடுத்து கோபப்படக் கூடாது.</p><p>கிறிஸ்துவ சமயப்போதகராக தமிழ்நாட்டுக்கு வந்த ஜி.யு.போப், தமிழ்த்தொண்டராகி, தனது கல்லறையில் தமிழ் மாணவனெனப் பொறிக்கச் சொன்ன வரலாறு தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு? இத்தாலியிலிருந்து வந்து தமிழ் இலக்கியங்களை லத்தீனில் மொழிபெயர்த்து, ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை வீரமாமுனிவராக மாற்றிக் கொண்ட மகத்தான மாமனிதர் குறித்து தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு? கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப்போதகர்களே இங்கு தமிழுக்குத் தொண்டாற்றித்தான் மறைந்தார்கள். </p><p>நீங்கள் பிறந்த மதம் கிறிஸ்தவம் என்கிறீர்கள்! அது சரிதான். ஆனால் எத்தனை தலைமுறையாக நீங்கள் கிறித்தவர்கள்? அதற்கு முன்பு? ஆனால், ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் தமிழர்கள். கிறித்துவம் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள சமயம். ஆனால், உங்களின் மொழி என்ன? உங்களின் இனம் என்ன? உங்கள் இனத்திற்கான அடையாளம் என்ன? உங்கள் தாய்மொழி தமிழா? இல்லையா? என்பதை அதே அவையில் நீங்கள் விளக்க வேண்டும். கல்வி நிறுவனம் வைத்து நடத்துகிறேன் என்கிறீர்கள். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம்.</p><p>ஐரோப்பா முழுவதும் கிறிஸ்துவர்கள்தான். பிறகு ஏன் இத்தனை நாடுகள்? ஏனென்றால், மொழி வழியேதான் தேசிய இனங்களும், நிலங்களும். ஒரே கிறிஸ்தவ மதம்தான், ஆனாலும் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது ஏன்? காரணம் மொழி! அவர்கள் இங்கிலிஷ், இவர்கள் ஐரிஷ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். ஆனால், பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மதமல்ல, மொழி! தாய்மொழிதான் அடையாளம்.</p><p>அதனால்தான் I am English, I am French, I am Spanish, I am Irish என்று தாய்மொழியை வைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். எனவே, ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவருடைய தாய்மொழிதானே ஒழிய, ஏற்றிருக்கும் மதமல்ல; மதம் என்பது மாறிக்கொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறிக்கொள்ள முடியாதது என்ற </p><p>அடிப்படை உண்மையை உணராது, தமிழைப் பிழையாக உச்சரிப்பதும், அதனை நியாயப்படுத்தி, தமிழை அவமதிக்கும் வகையில் பேசுவதும், கிறிஸ்துவச் சமயத்தை உள்ளிழுத்து, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தமிழென்பது பேரன்பின் தாய்; அன்பின் உயிர்நிலை! எனவே, எங்களின் உயிர்மொழியான தமிழ்  அன்பைப் போதிக்காது என்று இழித்துரைப்பது, தமிழையும், தமிழ்த்தேசிய இனத்தையும் அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை அவமதிக்கும் வகையிலே, பேசிய அமைச்சர் மரியவில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, அதே அவையில் மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லை - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-nothing-wrong-with-constituency-delimitation-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-nothing-wrong-with-constituency-delimitation-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">68a0d539-a515-44fe-ad29-1948c9e657e5</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:49:30 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:49:30.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,Delimitation of Constituencies,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8522jvld/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8522jvld/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிர்வாக வசதிக்காக தொகுதி மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p><p><strong>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-</strong></p><p>மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது. விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது. அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.</p><h2>அதிமுக எதிர்ப்பு</h2><p>7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கான எம்.பி.க்கள் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும். தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். நிர்வாக வசதிக்காக வாக்காளர்கள் அதிகம் உள்ள மக்களவை தொகுதிகள், சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதில் தவறு இல்லை.</p><p>அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை மட்டும் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>என்ஜின் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-malfunction-indigo-flight-makes-emergency-landing-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-malfunction-indigo-flight-makes-emergency-landing-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">efc5c63b-d53f-4500-8ff8-179a5f04668c</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:48:41 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:48:41.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,airport,இண்டிகோ,சென்னை விமானநிலையம்,என்ஜின்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/4wmvjoc7/Indigo.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இண்டிகோ ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/4wmvjoc7/Indigo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு  224 பயணிகளுடன் இண்டிகோ நிறுவனத்தின் 6இ-723 விமானம் வந்து கொண்டிருந்தது.  இரவு 11.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்த நிலையில், விமானத்தை தரையிறக்க விமானி தயாரானபோது இடதுபுற என்ஜின் செயலிழந்திருப்பதை கண்டறிந்தார்.இதையடுத்து விமானி உடனடியாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். </p><h2>அவசரநிலை</h2><p>விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விமானம் இரவு 11.37 மணியளவில் ஓடுபாதை 25-ல் பாதுகாப்பாக தரையிறங்கியது.   விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, இரவு 11.47 மணியளவில் முழு அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது. இதன் பின்னர் சென்னை விமான நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகள் எந்தவித பாதிப்புமின்றி தொடர்ந்து நடைபெற்றன.</p><h2>உறவினர்கள் பதற்றம்</h2><p>விமானத்தின் என்ஜின் கோளாறுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தில் என் ஜின் கோளாறு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் மற்றும் அவர்களை வரவேற்க காத்திருந்த உறவினர்கள் மத்தியில் பதற்றம் தொற்றியது. </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறையை எதிர்த்து தனித்தீர்மானம்: பா.ம.க. எதிர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-must-be-withdrawn-pmk-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-must-be-withdrawn-pmk-insists#comments</comments><guid isPermaLink="false">2470e556-bd7f-4026-a163-796427268d2d</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:27:28 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:27:28.377Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,Tamilnadu,விஜய்,பாமக,PMK,தமிழகம்,தமிழக சட்டசபை,தமிழக அரசு,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,தனித்தீர்மானம்,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ffufpw8r/shree.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ffufpw8r/shree.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டபேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்தார்.  </p><h2>முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம்</h2><p>மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> தனித்தீர்மானம் கொண்டுவந்தார். இதன்படி 1.நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>2.மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கு இடையே, அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போது உள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>3.வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. </p><h2>பா.ம.க. எதிர்ப்பு</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக பாமக எம்.எல்.ஏ., கணேஷ் குமார் சட்டசபையில் பேசுகையில், “ஒன்றிய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வருமா? வராதா? என்ற சூழ்நிலையில், செவிவழி செய்தியை வைத்துக் கொண்டு இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதன் அவசியம் என்ன? முதல்-அமைச்சர் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும். மகளிர் உரிமை அதிகாரத்திற்கு எதிராக பா.ம.க. ஒருபோதும் நிற்காது” என்று அவர் கூறினார். </p> ]]></content:encoded></item><item><title>இளைஞர்களின் வேலை இல்லாதோர் விகிதம் 15.9 சதவீதமாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-unemployment-rate-rises-to-159-percent</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-unemployment-rate-rises-to-159-percent#comments</comments><guid isPermaLink="false">a34fb85d-c8ba-4dad-9312-e18a5305b9f5</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:22:01 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:22:01.193Z</atom:updated><atom:author><atom:name>S.Mariappan</atom:name><atom:uri>/api/author/2422435</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,இளைஞர்,Female,Unemployment,Rate,decline,வேலை jobs,Labour,தொழிலாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/f4kvvv9k/263.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/f4kvvv9k/263.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாட்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலை இல்லாதோர் விகிதம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இல்லாத அளவுக்கு இது அதிகமாகும்.</p><h2>வேலை இல்லாதோர் விகிதம்</h2><p>மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் கூறியிருப்பதாவது:-</p><p>கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் வேலை இல்லாதோர் விகிதம் 5 சதவீதமாக இருந்தது. தற்போது அது 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் இதே அளவான 5.4 சதவீதம் பதிவாகி இருந்தது. கிராமப்புறங்களில் வேலை இல்லாதோர் விகிதம் 4.3 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6.6 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.</p><h2>பெண்கள்</h2><p>பெண்களுக்கான வேலை இல்லாதோர் விகிதம் 5.3 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகவும், ஆண்களுக்கான விகிதம் 4.8 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களின் வேலை இல்லாதோர் விகிதம் 15 சதவீதத்தில் இருந்து 15.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற இளைஞர்களிடம் இது 13.5 சதவீதத்தில் இருந்து 14.7 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 18.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.</p> <h2>தொழிலாளர் பங்கேற்பு விகிதம்</h2><p>இளம் பெண்களிடம் வேலை இல்லாதோர் விகிதம் 19.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் இது 17.7 சதவீதமாக இருந்தது. இதுவே இதுவரை பதிவான காலாண்டு புள்ளிவிவரங்களில் இளம் பெண்களுக்கான அதிகபட்ச வேலை இல்லாதோர் விகிதமாகும். வேலை செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையை குறிக்கும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 55.5 சதவீதத்தில் இருந்து 54.6 சதவீதமாக குறைந்துள்ளது. பெண்களின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">தொழிலாளர் </a>பங்கேற்பு விகிதம் ஜூன் மாதத்தில் 32.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஒரு ஆண்டில் பதிவான குறைந்த அளவாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எப்.சி.ஆர்.ஏ.-க்கு எதிராக தனித்தீர்மானம்: தேவையற்ற விளம்பர நாடகம் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fcra-resolution-unnecessary-publicity-drama-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fcra-resolution-unnecessary-publicity-drama-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">8aa0c82b-5bf3-4fb0-9fce-89aa58787c2f</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:13:46 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:13:46.563Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,தனித்தீர்மானம்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0qmhqcgt/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0qmhqcgt/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, தேவையற்ற விளம்பர நாடகம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அனைத்து மதங்களைச் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் (NGOs) வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும், 'வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா' (FCRA)-2026க்கு எதிராக, ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசு தனித்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, தேவையற்ற விளம்பர நாடகம்.</p><p>காரணம், இச்சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலமான 1976-ல் கொண்டு வரப்பட்டு, அந்தந்த கால மாற்றங்களுக்கு ஏற்ப 2010, 2016, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஏதோ மத்திய பாஜக-வால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டம் போலவும், சிறுபான்மையின மக்களின் NGO-க்களுக்கு வரும் நிதியை முடக்கும் சட்டம் போலவும் தவெக அரசு ஒரு போலி பிம்பத்தை கட்டமைக்க முயல்வது கண்டனத்திற்குரியது.</p><p>மேலும், NGO-க்களை முறையாக பதிவு செய்வது. விதிமுறைகளின்படி நிதியுதவி பெறுவது, வரவு-செலவுகளுக்கான அறிக்கையை வெளியிடுவது உள்ளிட்ட விதிமுறைகளைத்தான் தற்போதைய மசோதா முன்மொழிகிறதே தவிர, NGO-க்களின் நிதியுதவியை முடக்குவதற்கான எந்த முகாந்திரமும் இதில் இல்லை. சமூக நலனுக்காக வழங்கப்படும் நிதியுதவி, சரியான நோக்கத்திற்காக மட்டுமே செலவழிக்கப்பட வேண்டும் என்பது தான் FCRA-வின் முக்கிய நோக்கம்.</p><p>அதுமட்டுமன்றி ஓர் அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டால், அதன் வெளிநாட்டு பங்களிப்புகளும், அதன் மூலம் உருவான சொத்துக்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்ற 2010-ன் விதியை திருத்தி, ரத்து செய்யப்பட்ட அமைப்பு தனது பதிவை மீண்டும் மீட்டெடுக்கும் பட்சத்தில் அனைத்து சொத்துக்களும், பயன்படுத்தப்படாத நிதிகளும் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்பதை உறுதி செய்கிறது FCRA-வின் புதிய திருத்த மசோதா.</p><p>எனவே, தேசப் பாதுகாப்பையும், தொண்டு நிறுவனங்களின் சமூகப் பாதுகாப்பையும் ஒருசேர உறுதி செய்யும் FCRA-2026 திருத்த மசோதாவை, தங்களின் வாக்கரசியலுக்காக கண்மூடித்தனமாக எதிர்க்கும் போக்கை மாற்றுக் கட்சியினர் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்துக்கு பெருமை: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-entire-society-gains-pride-only-when-women-rise-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-entire-society-gains-pride-only-when-women-rise-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">4cad4e59-0a17-406b-89ad-ec141b836cf1</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:05:36 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:05:36.774Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,TN Assembly,பெண்கள்,womens,Delimitation of Constituencies,தொகுதி மறுவரையறை,Delimitation,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/mntsp3tz/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/mntsp3tz/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெண்கள் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்துக்கு பெருமை என்று முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் ம் கொண்டுவந்தார். </p><h2>தனி தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது:-</h2><p>நன்றி, விசுவாசத்துடன் இங்கு நின்று பேசுகிறேன். இன்னைக்கு இந்த விஜய்க்கு கிடைத்திருக்க இந்த இடத்திற்கு காரணமே என்னுடையா அம்மா, பாட்டி, அக்கா, தங்கைகள் தான்... வீட்டுப் பெண்கள் சமூகத்தில் உயர்ந்தால் தான் நாட்டிற்கே பெயர். அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு பெரிது.</p><p>நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் பெண்கள். பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். 2021 சட்டசபையில் 12 பெண் உறுப்பினர்கள்; இப்போது 23 பெண் உறுப்பினர்கள். சதவீத கணக்குப்படி பேரவையில் பெண் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயரவில்லை.</p><h2>முன்னோடி மாநிலம்</h2><p>பெண்கள் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்துக்கு பெருமை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவது சலுகை அல்ல; சமூக நீதி அரசியல் அமைப்பு சார்ந்தது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் தமிழக வெற்றிக் கழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உள்ளாட்சி 50 சதவீத இட ஒதுக்கீட்டால் அதிகாரத்தில் பெண்கள் உள்ளனர்.</p><p>தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும். தொகுதி மறுவரையறை சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 தொடர வேண்டும். இந்த அடிப்படையில் தான் 2029 தேர்தலையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.. 3-ல் 1 பங்கு தொகுதியை மகளிருக்கு வழங்க வேண்டும்.</p><h2>பெண்களுக்கு சம வாய்ப்பு</h2><p>ஒரு பெண் அதிகாரம் பெறும் போது அந்த குடும்பம் உயர்கிறது.. ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரத்தை பெறும் போது அந்த நாடே உயரும். ஆகையால் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டு மக்கள் தொகையில் பாதி பேர் பெண்கள் தான்; அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும்.</p><p>நம் வீட்டு பெண்கள் அரசியலில் முன்னேற இட ஒதுக்கீடு தர வேண்டும். மக்கள் தொகுதி கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகு தான் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மகளிருக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டாலும், அதை செயல்படுத்துவதில் கால தாமதம் ஆகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையை காரணம் காட்டி நிறுத்தக் கூடாது.</p><h2>தீர்மானம்</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக்கு பிறகு தான் தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றலாம் என முடிவு செய்யப்பட்டது. தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்.. இது ஒரு அரசியல் கட்சியின் தீர்மானம் மட்டும் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாடு கிணற்றில் விழாமல் தடுக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-trying-to-save-cow-from-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-dies-trying-to-save-cow-from-well#comments</comments><guid isPermaLink="false">89692818-5856-48b3-97fe-c54e02de0563</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:57:31 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:57:31.830Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/lq5qzor1/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/lq5qzor1/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே கிணற்றுக்குள் மாடு விழுவதை தடுக்க ஓடிய பெண் கால் தவறி அதே கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>போளூர் தாலுகா சந்தவாசலை அடுத்த ஆத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வேண்டா (40 வயது). நேற்று காலையில் வேண்டா, அவர்களது நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாடு கிணறு பக்கம் சென்றது. கிணற்றுக்குள் தவறி விழுந்து விடுமோ என அஞ்சிய அவர் அதனை தடுப்பதற்காக வேகமாக ஓடினார்.</p><p>அப்போது நிலை தடுமாறி அதே கிணற்றில் விழுந்தார். அந்த கிணற்றில் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையில், மண் தரையில் விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>தகவல் அறிந்து வந்த சந்தவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வி.ஐ.பி., வி.வி.ஐ.பி.களுக்காக ரூ.6.85 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-685-crore-allocated-for-vips-and-vvips</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-685-crore-allocated-for-vips-and-vvips#comments</comments><guid isPermaLink="false">6c8e0c5c-b33b-4b1e-9e8d-d1a67888884b</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:45:46 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:45:46.455Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/hsv7uxbx/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/hsv7uxbx/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதலமைச்சர், அமைச்சர்களை தவிர்த்து பிற முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய செலவுகளுக்காக ஓராண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>ஏ-பிரிவில் உள்ள கோவை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், பி-பிரிவில் உள்ள நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், சி-பிரிவில் உள்ள மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ.15 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-on-a-child-worker-sentenced-to-20-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-on-a-child-worker-sentenced-to-20-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">c55723d2-ebc9-41aa-94f9-037c653d6bdd</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:32:41 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:32:41.930Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,child,Sexual assault,பெண் குழந்தை,கூலித்தொழிலாளி,சிறைத்தண்டனை,போக்சோ கோர்ட்டு தீர்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/um5japx5/262.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறை தண்டனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/um5japx5/262.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p>3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.</p><p>இமாச்சல பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் நதோன் தாலுகாவை சேர்ந்த பிரகாஷ் சந் மகன் தேசுராஜ் (வயது 42). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பில்லாந்தாங்கல் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து கூலி தொழில் செய்து வந்து உள்ளார்.</p><h2>பாலியல் சில்மிஷம்</h2><p>கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் வருவதை அறிந்த தேசுராஜ் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேசுராஜை கைது செய்தனர்.</p><p>இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. </p><h2>தீர்ப்பு</h2><p>இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா தீர்ப்பு கூறினார். அதில் பெண் குழந்தையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி தேசுராஜூக்கு 20 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறைத்தண்டனையும்</a>, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து தேசுராஜை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஆந்திரா, கர்நாடகாவில் விமான நிலையங்கள் கட்டப்பட்டால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கும் - தி.மு.க. எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-warns-airports-in-andhra-karnataka-may-hurt-tamil-nadu-industry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-warns-airports-in-andhra-karnataka-may-hurt-tamil-nadu-industry#comments</comments><guid isPermaLink="false">49c519b6-3b0d-4c3d-93b2-ad30ca0b03af</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:17:15 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:17:15.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,Karnataka,Andhra,ஆந்திரா,airport,விமான நிலையம்,கர்நாடகா,தமிழக சட்டசபை,TN Assembly,தொழில் வளர்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/jlhc8qt0/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/jlhc8qt0/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆந்திரா, கர்நாடகாவில் விமான நிலையங்கள் கட்டப்பட்டால் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ. சீனிவாசன் (தி.மு.க.) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>ஆந்திரா முயற்சி</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படாவிட்டால், மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சிப்பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். ஆந்திர மாநில முதல்-மந்திரி மத்திய அரசு கூட்டணியில் இருக்கிறவர். அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் விமானப் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருக்கிறார். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலை முடக்குவதற்காகவும், இங்குள்ள தொழிலை அங்கு கொண்டு செல்வதற்காகவும் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.</p><h2>தமிழகத்திற்கு பாதிப்பு</h2><p>கர்நாடக மாநில முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தரப்பிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விமான நிலையம் வராமல் தடுப்பதற்காக அவர்கள் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களும் தங்கள் பகுதிகளில்</p><p>விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு விமான நிலையம் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் தமிழகம் மற்றும் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>ஆதாரங்களோடு பேச வேண்டும்</h2><p>இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "ஆதாரங்கள் இல்லாமல் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டு, சட்டசபையில் தவறான தகவல்களை தெரிவிக்கக்கூடாது. ஆதாரங்களை தந்துவிட்டு பேச வேண்டும்" என்று குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-moved-a-special-resolution-in-the-legislative-assembly-against-constituency-delimitation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-moved-a-special-resolution-in-the-legislative-assembly-against-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">3dcc8dbd-e94a-4fa5-a972-ab1d9d8c5730</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:13:07 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:13:07.415Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,சட்டசபை,TN Assembly,Delimitation of Constituencies,தொகுதி மறுவரையறை,Delimitation,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/3uo914ao/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/3uo914ao/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டுவந்தார். </p><p>தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>சட்ட திருத்த மசோதா தோல்வி</h2><p>தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை/சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது.</p><p>ஏப்ரல் 2026-ல் நாடாளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-ல் இருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது.</p><h2>மத்திய அரசின் கடமை</h2><p>இந்த நிலையில், மீளவும் மேற்குறிப்பிட்ட அரசியமைப்புச் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது எனத் தெரிந்ததன் அடிப்படையில் 1971-ம் ஆண்டுக்கு பிறகு உள்ள எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள்தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.</p><p>மத்திய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்தவொரு மாநிலமும் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது மத்திய அரசின் தலையாய கடமையாகும்.</p><h2>543 எண்ணிக்கையே தொடர வேண்டும்</h2><p>எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கைப் பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், மேலும், தற்போது மக்களவை - மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதே வேளையில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது.</p><h2>விகிதாச்சார பிரதிநிதித்துவம்</h2><p>1.நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>2. தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><h2>மத்திய அரசுக்கு வலியுறுத்தல்</h2><p>3.வரவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.</p><h2>தீர்மானம் நிறைவேற்றம்</h2><p>அதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித்தீர்மானத்தின் மீது கட்சி வாரியாக உறுப்பினர்கள் பேசி, தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன.</p><p>பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தீர்மானத்தின் சில அம்சங்களை தே.மு.தி.க. எதிர்த்தது. இதில், பா.ஜ.க, அ.தி.மு.க., தே.மு.தி.க. ஆகியவை பெண்களுக்கான இடஒதுக்கீடு தீர்மானத்தை மட்டும் ஆதரித்தன. அதன்பின்னர், தீர்மானம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. தொடர்ந்து அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தப் பகுதி: மீண்டும் தீவிரமடையுமா தென்மேற்கு பருவமழை..?</title><link>https://www.dailythanthi.com/news/weather/new-low-pressure-area-forms-in-the-bay-of-bengal-will-the-southwest-monsoon-intensify-again</link><comments>https://www.dailythanthi.com/news/weather/new-low-pressure-area-forms-in-the-bay-of-bengal-will-the-southwest-monsoon-intensify-again#comments</comments><guid isPermaLink="false">0f12cbdf-a375-4e60-ae6e-bb5d412eb0ba</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:00:11 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:00:11.145Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,weather forecast,வானிலை ஆய்வு மையம்,Low pressure area,வானிலை அறிக்கை,weather condition,காற்றழுத்த தாழ்வுப்பகுதி,Bay of Bengal,தென்மேற்கு பருவமழை,வானிலை முன்னறிவிப்பு,வங்கக் கடல்,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="590" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/l6mmqyln/wind.jpg" width="1063"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/l6mmqyln/wind.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. </p><h2>மிதமான மழை</h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது என்றும், இதன் காரணமாக இன்று (12-08-2026) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. </p> <h2>அடுத்த 48 மணி நேரத்தில்</h2><p>இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதன்படி மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. </p><h2>பருவமழை தீவிரமடையும்</h2><p>வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடக்கு, வடமேற்கு மாநிலங்கள் மற்றும் கடலோரப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nia-officials-conduct-raids-at-various-locations-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nia-officials-conduct-raids-at-various-locations-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">c9f7113f-ca03-4de1-9c80-72621adf70e7</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:56:58 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:56:58.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,NIA,NIA Raid,என்.ஐ.ஏ.,என்.ஐ.ஏ. சோதனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/n6050hkg/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ என்.ஐ.ஏ. சோதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/n6050hkg/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மற்றும் கோவை உள்பட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 6 இடங்கள் மற்றும் மதுரையில் 1 இடம் உட்பட பல இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.</p><h2>போதைப்பொருள் வழக்கு</h2><p>கடந்த 2024-ம் ஆண்டு அந்தமான் பகுதியில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் பிடிபட்ட 7 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>பர்மாவில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. மியான்மரில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/posters-pasted-condemning-rb-udhayakumars-remarks-about-actress-trisha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/posters-pasted-condemning-rb-udhayakumars-remarks-about-actress-trisha#comments</comments><guid isPermaLink="false">64581ec9-f180-4e05-93f9-f93c95520739</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:40:35 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:40:35.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Trisha,நடிகை திரிஷா,அதிமுக,Madurai,மதுரை,ஆர்.பி. உதயகுமார்,RB Udhayakumar,Actress Trisha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ozegxbiz/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ozegxbiz/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>நடிகை திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மதுரை முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.</p><p>தூத்துக்குடியில் நடந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.</p><p>அவர் பேசுகையில், "அ.தி.மு.கவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க, அழிக்க நினைக்கிறான். அ.தி.மு.க.வை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாக போகும். மேலும் காவிரி தண்ணீரை பற்றி பேசினால், காவிரியாவது, தண்ணீராவது, எங்க அண்ணி திரிஷா பற்றி யார் பேசியது? என்று அக்கட்சியினர் கேட்கிறார்கள்" என்றார்.</p><p>இதனையடுத்து முதல்-அமைச்சர் விஜய், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகு மார் மீது த.வெ.க. நிர்வாகி போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>கண்டன போஸ்டர்கள்</h2><p>இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மதுரை முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'இருவரின் நட்பை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்துக்குரியது. ”யாகாவா ராயினும் நாகாக்க’ வேண்டும் என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின் மாண்பு.</p><p>முன்னாள் அமைச்சரே, மாண்பு தவற வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ”எங்கள் அன்பு அக்கா திரிஷாவை பற்றி யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது. மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புலன் விசாரணை பெயரில் துன்புறுத்தல் கூடாது: விதிமுறை உருவாக்கி ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-harassment-under-the-guise-of-investigation-high-court-orders-formulation-of-guidelines</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-harassment-under-the-guise-of-investigation-high-court-orders-formulation-of-guidelines#comments</comments><guid isPermaLink="false">ae0b3866-ad6e-4ec0-8438-2c52a73c8a07</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:28:54 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:28:54.952Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,High Court,order,ஐகோர்ட்டு உத்தரவு,investigate,புலன் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/aqov2ove/chennai-highcourt.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/aqov2ove/chennai-highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புலன் விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.</p><h2>சென்னை ஐகோர்ட்</h2><p>புலன் விசாரணை என்ற பெயரில் தன்னை போலீசார் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிடக்கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. </p><p>போலீசாரின் புலன் விசாரணையில் பொதுவாக ஐகோர்ட்டு தலையிடுவதில்லை. அதேநேரம் புலன் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> என்ற பெயரில் துன்புறுத்துவதை கண்டுகொள்ளாமல் இருக்கவும் முடியாது.</p><h2>விதிமுறை</h2><p>எனவே, கீழ்கண்ட விதிமுறைகளை உருவாக்குகிறேன். விசாரணைக்கு அழைக்கப்படுபவருக்கு முறையாக சம்மன் அனுப்ப வேண்டும். அதில் எந்த தேதியில், எந்த நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிட வேண்டும்.</p><p>விசாரணை நடவடிக்கைகளை, போலீஸ் நிலைய குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படும் யாரையும் துன்புறுத்தக்கூடாது" என்று உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-supporter-of-kolathur-mla-vs-babu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-supporter-of-kolathur-mla-vs-babu#comments</comments><guid isPermaLink="false">d8de963f-fa64-4fa3-9343-859fd47d3b92</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:20:26 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:20:26.140Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,வழக்கு,கொளத்தூர்,Kolathur,வி.எஸ்.பாபு,VS Babu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/r87it13z/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/r87it13z/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் ஆதரவாளர் என கூறப்படும் ஜமால் முகமது குறித்து வழக்கறிஞர் ரியாஸ் அவதூறாக பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரியாஸை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட கும்பல் அவரை பெரம்பூரின் கே.கே.ஆர். அவென்யூ பகுதிக்கு வரவழைத்து அங்குவைத்து ரியாஸ் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.</p><p>இந்தத் தாக்குதலில் ரியாஸின் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு ரியாஸ் பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து தாக்குதல் குறித்து வழக்கறிஞர் ரியாஸ் திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>புகாரின் அடிப்படையில் கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் ஆதரவாளர் ஜமால் முகமது உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கட்டுக்குள் வந்த காட்டுத்தீ:  சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி</title><link>https://www.dailythanthi.com/devotional/devotees-are-permitted-to-climb-the-sathuragiri-hills-today-the-day-of-aadi-amavasai</link><comments>https://www.dailythanthi.com/devotional/devotees-are-permitted-to-climb-the-sathuragiri-hills-today-the-day-of-aadi-amavasai#comments</comments><guid isPermaLink="false">ad70eacb-a9e6-496b-84ee-37fccbe25e83</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:20:21 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:20:21.949Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,விருதுநகர்,வனத்துறை,சதுரகிரி கோவில்,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்,Sathuragiri Temple,sathuragiri hills,Sathuragiri,வத்திராயிருப்பு,சதுரகிரி,aadi amavasai,ஆடி அமாவாசை,ஆடி அமாவாசை விழா,Aadi Amavasai festival,ஆடி அமாவாசை திருவிழா,சதுரகிரி மலை,சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி,சதுரகிரி மலை கோவில்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/piave6hw/aadki.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/piave6hw/aadki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (Devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வத்திராயிருப்பு, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி</a> மலையில் மீண்டும் காட்டுத்தீ பரவியதால் இன்று ஆடி அமாவாசை தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது.</p><h2>ஆடி அமாவாசை திருவிழா</h2><p>விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில்</a> அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 10-ந் தேதி முதல் நாளை (வியாழக்கிழமை) வரை பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.</p><h2>சதுரகிரி மலையேற தடை</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி</a> அருகே சாப்டூர், வத்திராயிருப்பு ஆகிய வனப்பகுதிகளில் பற்றிய காட்டுத்தீ நேற்று முன்தினம் மாலை சதுரகிரி மலையின் கீழ் பகுதிக்கு பரவியது. இதையடுத்து பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று பக்தர்கள் சதுரகிரி மலையேற தடை விதித்து மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் உத்தரவிடப்பட்டது.</p><h2>மீண்டும் காட்டுத்தீ</h2><p>காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று பிற்பகலில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு 7 மணி அளவில் சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு அருகே உள்ள தவசிப்பாறை சந்தையூர் படிவெட்டி பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பற்றி பரவியதால் அதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். </p><p>எனவே பக்தர்கள் பாதுகாப்பு கருதி இன்று (புதன்கிழமை) சதுரகிரிக்கு ஆடி அமாவாசை தரிசனத்துக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், இயல்பு நிலை திரும்பும் வரை இதுதொடரும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>பக்தர்கள் போராட்டம்</h2><p>இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/சதுரகிரி">சதுரகிரிக்கு</a> செல்ல நேற்று ஏராளமான பக்தர்கள் வந்து, தாணிப்பாறை அடிவார பகுதிகளில் குவிந்தனர். தங்களுக்கு மலை ஏற அனுமதி வழங்க வேண்டும் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.</p><h2>மீண்டும் அனுமதி </h2><p>இந்நிலையில் ஆடி அமாவாசை நாளான இன்று (புதன்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/சதுரகிரி">சதுரகிரி</a> மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையில் பரவும் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். </p><p>அதிகாலை முதல் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் தற்போடு சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மலையேறி வருகின்றனர். இன்று ஆடி அமாவாசை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் மலையேறி சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அம்பத்தூர் அருகே ஆட்டோவில் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-hacked-to-death-in-an-auto-rickshaw-near-ambattur-police-launch-manhunt-for-a-mysterious-gang</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-brutally-hacked-to-death-in-an-auto-rickshaw-near-ambattur-police-launch-manhunt-for-a-mysterious-gang#comments</comments><guid isPermaLink="false">9f46d32a-bf8c-45f8-b3b6-23ebfbe435a0</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:52:11 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:52:11.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,கொலை,Death,பெண்,ஆட்டோ,Launch,அம்பத்தூர்,A woman</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/1lnz68pf/53.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெட்டிக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/1lnz68pf/53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திரு.வி.க நகர், </p><p>அம்பத்தூர் அருகே ஆட்டோவில் வைத்து பெண்ணை வெட்டிக்கொலை செய்து மர்ம கும்பல் உடலை சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பெண் கொலை</h2><p>அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவிற்குள்ளிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் திடீரென கேட்டுள்ளது. அதைக் கவனித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். அடுத்த சில வினாடிகளில், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்.</p><p>இந்த சம்பவம் குறித்து உடனடியாக புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றபோது 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணை ஆட்டோவுக்குள்ளேயே வைத்து கத்தியால் சரமாரியாக வெட்டியதும், வலி தாங்காமல் அந்த பெண் சத்தமிட்டு கதறியதால் ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசிவிட்டு அதே ஆட்டோவில் மர்ம கும்பல் தப்பியோடியதும் தெரியவந்துள்ளது. </p><p>நேற்று இரவு நடைபெற்ற இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? மற்றும் கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுக-பாஜக கூட்டணி உருவாகிறதா? - வானதி சீனிவாசன் பரபரப்பு பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-a-dmk-bjp-alliance-in-the-making-vanathi-srinivasans-sensational-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-a-dmk-bjp-alliance-in-the-making-vanathi-srinivasans-sensational-response#comments</comments><guid isPermaLink="false">e96b4aea-c6f1-488e-bff9-24e6a17db1e9</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:51:06 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:51:06.661Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,திமுக,DMK,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/z3l693e1/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/z3l693e1/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திமுக-பாஜக கூட்டணி உருவாகிறதா? என்பது குறித்து வானதி சீனிவாசன் பரபரப்பு பதில் அளித்துள்ளார்.</p><p>கோவை,</p><p>கோவையில் பாஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள், தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உருவாகிறதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவிக்காத அவர், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. கூட்டணி உருவாகும்போது பார்ப்போம் என்று கூறினார்.</p><p>மேலும் அவர் கூறும்போது, சட்டம்-ஒழுங்கு இன்னும் மாற வில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கையில் இருப்பவர்கள் மட்டும் மாறி உள்ளனர். பெண்களுக்கு. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால், சுப்ரீம் கோர்ட்டை நாடலாமே தவிர, நீட் தேர்வு ரத்து என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறுவது போன்றது.</p><p>இந்த நீட்தேர்வில் உள்ள பிரச்சினைகளை மத்திய அரசு சரி செய்துள்ளது. த.வெ.க. அரசு தனி கமிட்டியை அமைத்து, கோவை, மதுரை பகுதிகளுக்கு தகுதியான திட்ட அறிக்கையை கொடுத்து மெட்ரோ ரெயில் வருவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-thousands-of-devotees-flock-to-rameswaram-perform-rituals-and-offer-prayers-for-ancestors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-thousands-of-devotees-flock-to-rameswaram-perform-rituals-and-offer-prayers-for-ancestors#comments</comments><guid isPermaLink="false">88edbf7b-5fad-4075-83d3-717d98094718</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:48:12 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:48:12.065Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Tenkasi,Kanyakumari,ராமேஸ்வரம்,Rameshwaram,முன்னோர்கள்,aadi amavasai,ஆடி அமாவாசை,ஆடி அமாவாசை விழா,முன்னோர்களுக்கு தர்ப்பணம்,Aadi Amavasai festival,ஆடி அமாவாசை திருவிழா,Tiruchendhur</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/usl19nvb/ramesh.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/usl19nvb/ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம், </p><p>இன்று <a href="https://www.dailythanthi.com/topic/ஆடி-அமாவாசை">ஆடி அமாவாசை</a>யை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.</p><h2>பித்ருகளுக்கு தர்ப்பணம்</h2><p>அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்து அவர்களின் பரிபூரணமான ஆசியைப் பெறக்கூடிய அற்புத நாள். மாதந்தோறும் அமாவாசை வரும். அதுவே முன்னோர்களை வணங்குவதற்கு உண்டான நாள்தான். </p><p>குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் புனித நீர்நிலைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவது மக்களின் வழக்கம். இந்த நாட்களில் முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.</p><h2>ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல்</h2><p>அவ்வகையில் <a href="https://www.dailythanthi.com/topic/ஆடி-அமாவாசை">ஆடி அமாவாசை</a> நாளான இன்று புனித நீராடல் நிகழ்ச்சி அதிகாலை முதலே தொடங்கியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.</p><p>ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வரும் நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு பின்னரே நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/kiz890u9/neer.jpg" /></figure><h2>கன்னியாகுமரி</h2><p>இதேபோல் கன்னியாகுமரியில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். </p><p>இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும், கோடியக்கரையிலும் ஏராளமானோர் குவிந்தனர். காலை முதலே புனித நீராடிய அவர்கள் பித்ருக்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை, திருவையாறு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். </p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/doul0rmj/kanya.jpg" /></figure><h2>குற்றாலம் மெயின் அருவி</h2><p>தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் அதிகாலை முதலிலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர்.</p><p>மாமல்லபுரம் கடற்கரை மற்றும் தலசயன பெருமாள் கோயில் திருக்குளம் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் பகுதிகளில் இருந்து வந்து ஏராளமானோர் தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் - புதிய டெண்டர் கோர மின் வாரியம் திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-to-install-5-6-million-smart-meters-new-tender-plan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-to-install-5-6-million-smart-meters-new-tender-plan#comments</comments><guid isPermaLink="false">53b5c9b4-acd0-4b41-b9ac-a4e7b8821a76</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:42:39 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:42:39.599Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity Board,tender,டெண்டர்,மின் வாரியம்,ஸ்மார்ட் மீட்டர்,Smart Meter</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/u2m6r0nt/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/u2m6r0nt/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகம் முழுவதும் 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த புதிய டெண்டர் கோர மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் வீடுகளை உள்ளடக்கிய மின் இணைப்புகளில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை, மின் வாரிய பணியாளர்கள், நேரில் சென்று கணக்கு எடுத்து வருகின்றனர். சிலர், நேரில் செல்லாமல் கணக்கெடுப்பதால், நுகர்வோருக்கு அதிக மின் கட்டணம் வருகிறது.</p><h2>ஸ்மார்ட் மீட்டர் திட்டம்</h2><p>இதன் காரணமாக ஆளில்லாமல் கணக்கெடுக்க, 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்தது. இந்த ஸ்மார்ட் மீட்டரில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு, அலுவலக 'சர்வர்' உடன் இணைக்கப்படும். மின் பயன்பாடு கணக்கெடுக்க வேண்டிய தேதி வந்ததும், தானாகவே கணக்கெடுத்து, நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.</p><h2>முடிவு எடுக்கப்படாமல் இருந்தது</h2><p>கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட செலவில், மாநிலம் முழுவதும், 3.04 கோடி மின் இணைப்புகளில், 'ஸ்மார்ட் 'மீட்டர் பொருத்தி, பராமரிக்கும் பணிக்கு 'டெண்டர்' கோரப்பட்டது. இந்த டெண்டரில், 50 நிறுவனங்கள் பங்கேற்றன. அவை வழங்கிய தொழில்நுட்ப புள்ளி திறக்கப்பட்ட நிலையில், அரசின் அனுமதி கிடைக்காததால், விலைப் புள்ளி திறக்கப்படாமல் இருந்தது. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 'ஸ்மார்ட்' மீட்டர் டெண்டரில், எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.</p><h2>டெண்டர் ரத்து</h2><p>இந்த நிலையில், 'சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள, 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. எனவே, கடந்த தி.மு.க., ஆட்சியில், 3 கோடி மின் இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கோரிய 'டெண்டர்' ரத்து செய்யப்பட உள்ளது. இது குறித்து, விரைவில் நடக்க உள்ள மின் வாரிய இயக்குநர்கள் குழு கூட்டத்தில், முடிவு எடுக்கப்பட உள்ளது.</p><h2>புதிய டெண்டர்</h2><p>ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 56 லட்சம் 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்த, மின் வாரியம் புதிதாக 'டெண்டர்' கோர ஆயத்தமாகி வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில், 1.25 லட்சம் 'ஸ்மார்ட்' மீட்டர்களை, மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், மின் வாரியம் பொருத்த உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் த.வெ.க.வுடன் உறவுமுறை பேச்சா..? தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நேரில் அழைத்த மு.க.ஸ்டாலின்?!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/talks-of-an-alliance-with-tvk-in-the-assembly-mk-stalin-personally-summons-dmk-mlas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/talks-of-an-alliance-with-tvk-in-the-assembly-mk-stalin-personally-summons-dmk-mlas#comments</comments><guid isPermaLink="false">1da3f61e-2a06-4123-aa25-79e4090a3621</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:19:17 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:19:17.714Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,எம்.எல்.ஏ.க்கள்,MLAs,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Budget,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,M.K. Stalin</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/bhcoubzb/kmke.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/bhcoubzb/kmke.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/budget">தமிழக சட்டசபையில் பட்ஜெட்</a>, வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக நேற்று நடைபெற்றது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க.எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். </p><h2>பெயர் மாற்றப்பட்டியல்</h2><p>ஐந்தாண்டுகளாக நாங்கள் 'டென்ஷனாக' இருந்தோம். நீங்கள் 'ரிலாக்ஸ்' ஆக இருக்கிறீர்கள். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது நாளிதழ்களை படித்து அதிகாலையிலேயே எங்களை அழைத்து கேள்வி கேட்பார்” என்று கூறினார்.</p><h2>உணர்ச்சி வேகத்தில்</h2><p>தற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், “அதற்குதான் நாங்கள் டென்ஷனாக இருப்போம் என சொன்னேன். பயமுறுத்தும் விதமாக அதை சொல்லவில்லை. தலைவர் எப்போது நம்முடன் பேசுவார் என எங்கள் உறுப்பினர்கள் நினைத்திருந்தார்கள். இப்போது செல்போன் அழைப்பு அவரிடம் இருந்து வந்தாலே பயம் இருக்கிறது. ஏதாவது தொகுதியில் சின்ன விஷயமாக இருந்தாலும் அதை ஏன் செய்ய வில்லை என்று கேட்கக்கூடியவர் எங்கள் முதல்-அமைச்சர்” என்று கூறினார். </p><p>தொடர்ந்து கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் கைதான தி.மு.க. எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் சட்டசபையில் பேசியபோது, 'நான் கரிசல் காட்டு மண்ணை சேர்ந்தவன். உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டேன். முதல்-அமைச்சரை காயப்படுத்தும் நோக்கம் இல்லை. மறந்து விடுங்கள்” என்று கூறினார். </p><h2>எம்.எல்.ஏ.க்களுக்கு கண்டிப்பு</h2><p>இதனிடையே நிதியமைச்சர் மரிய வில்சன் பேசுவதை, தி.மு.க. எம்.எல்.ஏ., ராஜேந்திரன் விமர்சித்தார். இதனால் கோபமடைந்த மரிய வில்சன், நான் தமிழ் பேசுவதில் குறைபாடு இருக்கலாம். அதற்காக என்னை கேலி செய்வது சரியல்ல. நான் இப்படித்தான் பேசுவேன். இது என் ஸ்டைல் என ஆவேசமாக பதிலளித்தார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதிலடி தராமல் மவுனமாகி விட்டனர். </p><p>அதேநேரத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலு, என் அண்ணனோட மாப்பிள்ளை மரிய வில்சன் என நிதியமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் பேசினார். இந்த தகவல்கள் தெரிந்ததும், எம்.எல்.ஏ.க்கள் சிலரை, தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அழைத்ததாக கூறப்படுகிறது. </p><p>அப்போது, சட்டசபை கூட்டத்தொடரில், சம்பந்தப்பட்ட துறை, விவாதிக்கப்படும் விஷயங்களை பற்றி மட்டும் பேசுங்கள். சப்ஜெக்டை விட்டுவிட்டு வேறு எதுவும் தேவையின்றி பேசாதீர்கள் என கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>ஆக்ரோஷ அரசியல்</h2><p>முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் சட்டசபையில், த.வெ.க. அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை உறவுமுறையை சுட்டிக்காட்டி பேசினார். </p><p>இது குறித்து, தி.மு.க., முன்னாள் எம்.பி., செந்தில்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில், 'தி.மு.க., தொண்டர்கள் தொடங்கி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வரை கைது செய்து, கழக தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆக்ரோஷ அரசியலை கையில் எடுத்துள்ள விஜய் அரசை, நமது MLAகள், ஆளும் கட்சி அமைச்சர்களை உறவு வைத்து சட்டமன்றத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். </p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 14.31 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-tamil-nadu-1431-lakh-ration-cardholders-have-not-registered-their-fingerprints</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-tamil-nadu-1431-lakh-ration-cardholders-have-not-registered-their-fingerprints#comments</comments><guid isPermaLink="false">fd7ead96-68a1-41c8-ab12-ba6126d8923d</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:08:11 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:08:11.044Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,Ration shop,Ration card,ரேஷன் கார்டு,கைவிரல் ரேகை பதிவு,Fingerprint,ரேஷன் அட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/27k6ksyh/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/27k6ksyh/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் 14.31 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள முன்னுரிமை ரேஷன் அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்னயோ ஜனா ரேஷன் அட்டைகளில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தும் வகையில் கைவிரல் ரேகை, கண் கருவிழி பதிவை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதனால், இந்த வகை ரேஷன் அட்டைகளின் உறுப்பினர்களிடம் இருந்து கைவிரல் ரேகை பதிவு மற்றும் கருவிழி பதிவை ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.</p><h2>95.96 சதவீதம் பேர் பதிவு</h2><p>அதன்படி, தமிழகம் முழுவதும் 99.39 லட்சம் முன்னுரிமை ரேஷன் அட்டைகள், 18.61 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகள் என ஒரு கோடியே 18 லட்சம் ரேஷன் அட்டைகளில் உள்ள 3 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரத்து 227 உறுப்பினர்கள் அனைவரின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழிப் பதிவை பெறுமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.</p><p>அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் வரை 95.4 சதவீதம் உறுப்பினர்களிடம் இருந்து கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2-ந்தேதி மற்றும் 8, 9-ந்தேதிகளில் கைவிரல் ரேகை பதிவு செய்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 985 பேர் தங்கள் கைவிரல் ரேகையை ரேஷன் கடைகளில் சென்று பதிவு செய்துள்ளனர்.</p><h2>வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள்</h2><p>மேலும், இடைப்பட்ட நாட்களில் 22 ஆயிரத்து 734 பேர் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்துள்ளனர். அந்த வகையில், 3 கோடியே 43 லட்சத்து 47 ஆயிரத்து 73 பேர் நேற்று வரை கைவிரல் ரேகை பதிவு செய்துள்ளனர். இது சதவீதத்தில் கணக்கிடும்போது 95.96 சதவீதம் ஆகும். </p><p>இன்னும் 14 லட்சத்து 31 ஆயிரத்து 154 பேர் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டியதாக உள்ளது. அவர்களை விரைந்து கைவிரல் ரேகை பதிவு செய்யுமாறு உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இதில், பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டத்தை முடக்குவது ஏன்? - தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-block-protests-against-neet-high-court-asks-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-block-protests-against-neet-high-court-asks-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">588090b5-b362-44ee-a353-cc6c3b101393</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:46:30 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:46:30.685Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,தமிழ்நாடு அரசு,TN govt,நீட் தேர்வு,NEET Exam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9hezmhtw/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9hezmhtw/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஏன் முடக்குகிறது? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.</p><h2>வாகன பேரணி</h2><p>'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மோட்டார் சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். இதற்கு அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் கொடுக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, "போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி மோட்டார் சைக்கிள் பிரசாரத்துக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர்” என்று வாதிட்டார்.</p><h2>போலீஸ் விளக்கம்</h2><p>போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன், தமிழ்நாடு அரசு 'நீட்' தேர்வு போராட்டங்களுக்கு எதிரானது இல்லை. இது சமூக ஊடகங்களின் காலம் ஆகும். சமூக ஊடகங்களில் தகவல் பரவினால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிடும். இதுபோன்ற போராட்டங்களால் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்படும்.</p><p>பேரணி தொடங்க அனுமதி கோரியுள்ள இடங்கள் அனைத்துமே மக்கள் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளாகும். அதனால், அனுமதி மறுக்கப்பட்டது. இந்த பேரணியில் பங்கேற்க ஒருவருக்கு அனுமதி கொடுத்தால், பின்னர் இந்த எண்ணிக்கை அதிகமாகி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். அதனால், சூழ்நிலைக்கு ஏற்ப அனுமதி வழங்கும் விதமாக அந்தந்த போலீஸ் நிலையங்களை அணுகும்படி மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்தார்.</p><h2>ஏன் தடுக்கிறது?</h2><p>அதற்கு நீதிபதி, "கன்னியாகுமரி முதல் சென்னை வரை பேரணி வரவேண்டும் என்றால் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் அனுமதி பெற வேண்டுமா?. 'நீட்' தேர்வு முடிந்து, முடிவும் வெளியாகி விட்டது. இருந்தாலும், 'நீட்' தேர்வுக்கு எதிராக போராட மனுதாரருக்கு உரிமை உள்ளது. பேச்சுரிமை, கருத்துரிமை போல போராட்டம் நடத்துவது, பேரணி செல்வது அடிப்படை உரிமையாகும்.</p><p>'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும், பேரணியையும் தமிழ்நாடு அரசு ஏன் முடக்குகிறது? தடுக்கிறது? இந்த மோட்டார் சைக்கிள்கள் பேரணிக்கான பெட்ரோல் செலவை அரசு ஏற்கப்போகிறதா? போக்குவரத்து நெரிசல், மக்கள் பாதுகாப்பு காரணம் கூறி பேரணிக்கு மறுத்தால், ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? மோட்டார் சைக்கிளில் வெளியேறும் புகையினால் புற்றுநோய் வரும் என்பதற்காக மோட்டார் சைக்கிள்களை தடை செய்ய முடியுமா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.</p><p>உடனே, பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்து கூடுதல் விளக்கம் அளிக்க போலீஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சுங்கச்சாவடிகளில் உள்ளூர்வாசிகளுக்கு கட்டணமில்லா பயணமா? - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-free-travel-for-locals-at-toll-plazas-national-highways-authority-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/toll-free-travel-for-locals-at-toll-plazas-national-highways-authority-clarifies#comments</comments><guid isPermaLink="false">bf998b02-0c5f-4acd-9931-c43cdb0308ee</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:37:27 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:37:27.103Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சுங்கச்சாவடி,Toll,தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,National Highways Authority,Local,பாஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/pnimui3g/260.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/pnimui3g/260.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சுங்கச்சாவடிகளின் அருகாமையில் உள்ளவர்கள் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி பயணிக்கலாமா? என்பது குறித்து நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.</p><h2>சுங்கச்சாவடிகள்</h2><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் பங்களிப்புடன் சாலைகளை சீரமைத்து, அதற்கான கட்டணத்தை வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கச்சாவடி மூலமாக வசூலித்து வருகிறது. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் கார், ஜீப், ஆட்டோ, பஸ், லாரி, டெம்போ உள்பட பல்வேறு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><p>இந்தநிலையில் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி கடந்து செல்லலாம் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த தகவலுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.</p><h2>பாஸ்</h2><p>அதில் "தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், அடையாள அட்டையை காண்பித்தால் உள்ளூர் வாசிகள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்பது தவறான கருத்து. உள்ளூர்வாசிகளுக்கு கட்டணமில்லா பயணம் கிடையாது. ஆனால் சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக உள்ளூர் மாதாந்திர பாஸ் முறை நடைமுறையில் உள்ளது.</p><p>சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள். குறிப்பிட்ட அந்த சுங்கச்சாவடிக்கென அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படியே இந்த பாஸ்கள் வழங்கப்படுகின்றன. எனவே, அடையாள அட்டையை காண்பித்து கட்டணமில்லாமல் செல்லலாம் என்று கருத வேண்டாம். சலுகை பெற விரும்புவோர் அந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">சுங்கச்சாவடியின் </a>விதிகளைப் பின்பற்றி முறைப்படி உள்ளூர் மாதாந்திர பாஸை பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“மு.க.ஸ்டாலின் படத்தை பாக்கெட்டில் வைத்திருப்பது ஏன்..?” - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-keep-a-picture-of-mk-stalin-in-your-pocket-o-panneerselvam-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-keep-a-picture-of-mk-stalin-in-your-pocket-o-panneerselvam-explains#comments</comments><guid isPermaLink="false">a31109fe-62bd-4f02-9bb2-aeea67eb9981</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:29:04 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:29:04.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,ஓ.பன்னீர்செல்வம்,செங்கோட்டையன்,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,Minister KA Senkottaiyan,O.Paneer Selvam</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ghrw2qw7/amid.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ghrw2qw7/amid.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டைப்பையில் புகைப்படம் வைத்திருப்பது தொடர்பான விவகாரத்தில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. </p><p>சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/topic/budget">பட்ஜெட்</a> மீதான விவாதத்தின்போது, அது ஏமாற்றம் அளிப்பதாக தி.மு.க. உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டி பேசிய நேரத்தில், அவை முன்னவர் செங்கோட்டையன் எழுந்து பேசினார். </p><h2>அப்போது நடந்த விவாதம் </h2><p><strong>அவை முன்னவர்:-</strong> உறுப்பினர் ஏற்கனவே நிதி அமைச்சராக இருந்தவர். ஒரு அரசு தேர்தல் நேரத்தில் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் 5 ஆண்டு இறுதி வரை நிறைவேற்றுவோம். 3 மாதங்களில் ஒரு சரித்திரம் படைக்க இயலாது. அப்படி முடிந்தால் அதை நீங்கள் சொல்லுங்கள்.</p><p><strong>ஓ.பன்னீர்செல்வம்:-</strong> தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவைகளை புதிய அரசு தங்களுடைய முன்னோடித் திட்டங்களாக அறிவித்திருக்கலாம். அப்படியும் அறிவிக்கவில்லை என்பதுதான் எங்களின் வாதமாக இருக்கிறது. தமிழக மக்கள் ஏமாந்து நிற்கும் எண்ணங்களின் வடிவமாக இருக்கிறது.</p> <p><strong>அவை முன்னவர்:-</strong> தமிழகமே பாராட்டிக்கொண்டிருக்கிற தூய ஆட்சியை, ஏமாற்றத்தை உருவாக்கும் ஆட்சி என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் இடம் மாறியிருக்கிறீர்கள். அதற்காக துதிபாட வேண்டிய அவசியம் இல்லை.</p><h2>சட்டைப்பையில் புகைப்படம்</h2><p><strong>ஓ.பன்னீர்செல்வம்:-</strong> அந்த இடத்தை முதலில் மாற்றியவர் அவர்தான் (செங்கோட்டையன்) என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.</p><p><strong>அமைச்சர் ராஜ்மோகன்:-</strong> இடத்தை முதலில் மாற்றியவர் நம்முடைய அமைச்சர் (செங்கோட்டையன்) என்றார். இடத்தை மாற்றியபோதும் இதயத்தின் அருகில் இருந்த நிழற்படத்தை மாற்றவே வேண்டாம் என்று சொன்னவர் எங்கள் தலைவர். ஆனால் நீங்கள் இடமும் மாறியிருக்கிறீர்கள். உங்கள் இதயமும் மாறியுள்ளது.</p><p><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:-</strong> செங்கோட்டையன் இடம் மாறியிருக்கலாம். ஜெயலலிதாவை இன்னும் இதயத்தில், சட்டப்பையில் வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவால், முதல்-அமைச்சர் ஆக்கப்பட்டவர் இன்று சட்டப்பையில் யாருடைய புகைப்படம் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.</p><p><strong>ஓ.பன்னீர்செல்வம்:-</strong> அமைச்சர்களுக்கு பதில் சொல்ல நேரம், காலம் இருக்கிறது. நான் பேசி முடித்தவுடன் நீங்கள் பேசலாம். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை இதயங்களில் என்றும் கடைசி காலம் வரை வைத்திருப்போம் படத்தை காட்டி ஏமாற்றும் பழக்கம் எங்களுக்கு இல்லை.</p><p>இதனையடுத்து அவை முன்னவர் எழுந்து ஒரு கருத்தை முன்வைத்தார். அப்போது தி.மு.க.வினர் எழுந்து அதை நீக்கச் சொல்லி அமளியில் ஈடுபட்டனர். அதனையடுத்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 'இந்த பிரச்சினையை இதனோடு விட்டுவிட்டு தொடர்ந்து பேசலாம்' என்றார்.</p><p><strong>ஓ.பன்னீர்செல்வம்:-</strong> என்னோடு நீங்களும், உங்களும் நானும் பயணித்திருக்கிறேன். நான் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்கு 100-க்கு 200 சதவீதம் நன்றாக தெரியும். எந்த நிலையிலும் மாற மாட்டேன். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாகத்தான் என்னுடைய நிலை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும். அமைச்சர்கள் படத்தை வைத்திருக்கிறீர்களே என்று சொல்வதெல்லாம் தவறு.</p><p><strong>அவை முன்னவர்:-</strong> என்னை பொறுத்தவரையில் படத்தை வைத்திருப்பதை பற்றி நான் பேசவில்லை. படத்தை வைத்துக்கொண்டு ஏமாற்றாதீர்கள் என்று நீங்கள் சொல்வதுதான் கொச்சையாக இருக்கிறது. வேடிக்கையாகவும் உள்ளது. நான் ஏமாற்றுகிறேன் என்றால், நீங்களும் ஏமாற்றுகிறீர்கள் என்று அர்த் தமா?.</p><p><strong>சபாநாயகர்:-</strong> தனிப்பட்ட விவாதம் வேண்டாம். இருபக்கமும் சொல்லப்பட்ட கருத்துக்களை நகைச்சுவையாகவும், நயமானதாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதை விட்டுவிடுங்கள்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/iqc8rhvw/yaro.jpg" /></figure><h2>“மு.க.ஸ்டாலின் படத்தை பாக்கெட்டில் வைத்திருப்பது ஏன்..?”</h2><p>தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், சட்டைப்பையில் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்திருப்பதற்கு என்பதற்கு விளக்கம் அளித்தார்.</p><p>இது தொடர்பாக அவர் கூறியதாவது:- </p><p>சட்டமன்ற உறுப்பினராக நின்றுகொண்டிருப்பதற்கு காரணம், திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இன்று வீற்றிருக்கிற கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தின் உரிமைகளை எந்நாளும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஆட்சியிலும், கட்சியிலும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கத்தான் அவருடைய புகைப்படத்தை இதயப்பக்கத்தில் இருக்கும் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.</p><h2>உரிமைத்தொகை உயரவில்லை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/budget">பட்ஜெட்</a> ஏமாற்றத்தின் வடிவமாக இருக்கிறது. திருப்புகின்ற பக்கமெல்லாம் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்கள்தான் ஜொலித்து கொண்டிருக்கிறது. மக்கள் மன தில் நிலைகொண்டுள்ள மு.க.ஸ்டாலின் உருவாக்கிய திட்டங்களே புது உருக்கொண்டு நிற்கின்றன. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, உரிமைத்தொகை உயரவில்லை. ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் வரும் என நம்பிய மகளிர் ஏமாந்து நிற்கிறார்கள். நாடே திரும்பி பார்த்த விடியல் பயணம் திட்டத்தை விரிவுபடுத்தி எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றநிலையை ஏற்படுத்துவீர்கள் என்பதையும் ஏமாற்றிவிட்டீர்கள்.</p><h2>மக்கள் நலனில் மு.க.ஸ்டாலின்</h2><p>நிதி, அதிகாரப்பகிர்வு தி.மு.க. தொடர்ந்து முன்வைக்கும் உயிர் கொள்கைகள். அதைத்தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று அண்ணா விதைத்தார், கலைஞர் ஆழமாக வளர்த்தார். மு.க.ஸ்டாலின் சமரசம் இல்லாமல் போராடிக் கொண்டு வருகிறார். தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால் நிதி பகிர்வு போதுமானதாக இல்லை என்ற உண்மையை கூட பட்ஜெட்டில் சுட்டிக்காட்டவில்லை. பட்ஜெட்டில் அறிவிப்புகள் அதிகம், ஆனால் செயலாக்கத்துக்கான முதலீடுகள் குறைவு என்பதே பட்ஜெட்டின் உண்மை முகம்.</p><p>திராவிட மாடல் திட்டங்களை கடக்க முடியாது. மக்கள் நலனில் மு.க.ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதுதான் பட்ஜெட்டில் புலப்படும் உண்மைத் தன்மை. திராவிட மாடல் திட்டங்களின் மறுபதிப்புதான் இந்த அரசின் முதல் <a href="https://www.dailythanthi.com/topic/budget">பட்ஜெட்</a>.</p><p>இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரம் மாற்றம்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-ration-shop-working-hours-in-chennai-and-kanchipuram-districts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-ration-shop-working-hours-in-chennai-and-kanchipuram-districts#comments</comments><guid isPermaLink="false">2cc3abf3-4c41-45d0-9598-ed234a41a4e2</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:24:42 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:24:42.515Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ரேஷன் கடை,Ration shop,காஞ்சிபுரம்,Kancheepuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/qsce87ji/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/qsce87ji/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தற்போது ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது.</p><p>அதன்படி, மதிய இடைவேளை நேரம் நீட்டிக்கப்பட்டு, பணி நேரம் சுமார் 12 மணி நேரமாக உள்ளது. இதனால் பணியாளர்கள் மனச்சோர்வுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் உள்ளது.</p><p>ஆனால், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் இருப்பதால், விடுமுறை நாட்கள் யாருக்கும் பயனுள்ளதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மாற்றி அமைக்க வேண்டும்.</p><p>மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகளை வேலை நாட்களாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனுவின்படி, மாற்றங்களைச் செயல்படுத்தினால் கள அளவில் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துணைப்பதிவாளர்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குன்னூரில் வீட்டு மாடியில் உலா வந்த கரடி.. பொதுமக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-wanders-onto-house-terrace-in-coonoor-residents-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-wanders-onto-house-terrace-in-coonoor-residents-alarmed#comments</comments><guid isPermaLink="false">6c83663d-a91b-4b2a-a22c-bf4767faabdd</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:10:04 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:10:04.240Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,bear,தேயிலை,குன்னூர்,கரடி உலா,அச்சம்,வீட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/zdbv12aj/259.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/zdbv12aj/259.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வெலிங்டன்,</p><p>நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபக லமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கரடி கள் பகல் நேரங்களில் நகரப்பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இதை கண்டு குன்னூர் பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.</p> <h2>கரடி</h2><p>இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று குன்னூர் அருகே கரிமரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. தேயிலைச்செடிகளுக்கு இடையே கரடி நடமாடுவதை கண்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த கரடி பிரதான சாலை வழியாக சென்றது.</p><p>குன்னூர் ஒட்டுப்பட்டறை என்ற இடத்தில் வீட்டின் மொட்டை மாடியில் ஏறிய கரடி சாவகாசமாக நடந்து சென்றது. இதை வீடியோ பதிவு செய்தவர், அந்த வீட்டில் இருப்பவர்களை நோக்கி கரடி வருகிறது. கதவை மூடி கொள்ளுங்கள் என்று சத்தம் போட்டார். அந்த கரடி மொட்டை மாடியில் நடந்து சென்று இரும்பு படிக்கட்டு வழியாக இறங்கி, வீட்டின் முன் சிறிது நேரம் நின்றது.</p><h2>பொதுமக்கள் அச்சம்</h2><p>பின்னர் வீடியோ எடுத்த நபர் கரடி, கரடி என்று சத்தம் போடவே அங்கிருந்து அந்த கரடி பக்கத்து ஓட்டு வீட்டின் மீது தாவி குதித்து ஓடியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வீட்டின் மொட்டை மாடியில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF">கரடி</a> உலா வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தெருக்களுக்கு சாதி பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதி கருத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-ensure-streets-have-no-caste-names-high-court-judge</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-ensure-streets-have-no-caste-names-high-court-judge#comments</comments><guid isPermaLink="false">54c62894-f99d-4042-9ede-28ee28f2733b</guid><pubDate>Wed, 12 Aug 2026 00:59:28 +0000</pubDate><atom:updated>2026-08-12T00:59:28.698Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,சாதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/6kreuwv6/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/6kreuwv6/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் தெருக்களுக்கு சாதி பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.</p><h2>நீதிபதி அதிர்ச்சி</h2><p>நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீசார் பதிவு செய்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் தகவல் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட சாதி பெயரை கொண்ட தெரு என்று குறிப்பிட்டு இருந்தது. இதை படித்து பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.</p><h2>அரசு உறுதி செய்யவேண்டும்</h2><p>"2026-ம் ஆண்டிலும் இப்படி சாதி பெயரை குறிப்பிட்ட தெரு உள்ளதா? தெருக்கள், சாலைகளில் உள்ள சாதிப் பெயர் களை நீக்கவேண்டும் என்று 1998-ம் ஆண்டே தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பல உத்தரவுகளை ஐகோர்ட்டும் பிறப்பித்துள்ளன. அப்படியிருந்தும், ஒரு தெருவுக்கு குறிப்பிட்ட சாதி பெயரை வைத்து எப்படி அழைக்க முடியும்? இதனால்தான் அண்மையில், ஆதி திராவிடர் நலத்துறையை, சமூக நீதித்துறை என்று தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் தெருக்களுக்கு சாதி பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும்" என்று கருத்து கூறினார்.</p><h2>தாமாக முன்வந்து வழக்கு</h2><p>பின்னர், "தமிழ்நாடு முழுவதும் தெருப் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கிறேன். இந்த வழக்கை தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடும்படி ஐகோர்ட்டு பதிவாளருக்கு பரிந்துரைக்கிறேன்” என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு..? வானிலை மையம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/weather/which-areas-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today-meteorological-department-provides-details</link><comments>https://www.dailythanthi.com/news/weather/which-areas-in-tamil-nadu-are-likely-to-receive-rain-today-meteorological-department-provides-details#comments</comments><guid isPermaLink="false">cfd80121-ea8b-4d14-be76-1bba11f8bb97</guid><pubDate>Wed, 12 Aug 2026 00:51:09 +0000</pubDate><atom:updated>2026-08-12T00:51:09.465Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,WeatherUpdate,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,Weather Status,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/yx7b7yd3/umai-baba.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/yx7b7yd3/umai-baba.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மிதமான மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (12-08-2026)</strong> மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>பலத்த காற்றுடன் கூடிய மழை</h2><p><strong>நாளை (13-08-2026):</strong> மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>14-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான<a href="https://www.dailythanthi.com/topic/rain"> மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>15-08-2026 முதல் 17-08-2026 வரை:</strong> மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>12-08-2026 முதல் 14-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong>15-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>12-08-2026 முதல் 14-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட சற்று அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>15-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-</h2><p><strong>இன்று (12-08-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான/மிதமான மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக... இன்று சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரும் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-today-against-the-delimitation-of-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-move-a-special-resolution-in-the-assembly-today-against-the-delimitation-of-constituencies#comments</comments><guid isPermaLink="false">b15decc2-725c-476b-b14d-41a3c99283d6</guid><pubDate>Tue, 11 Aug 2026 20:07:34 +0000</pubDate><atom:updated>2026-08-11T20:07:34.546Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Assembly,தொகுதிகள் மறுவரையறை,தனித் தீர்மானம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/a7d7oipw/vj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக இன்று (புதன் கிழமை) சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-11/a7d7oipw/vj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக இன்று (புதன் கிழமை) சட்டசபையில் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். </p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் தொடர்பாக கடந்த 8ம் தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாகத் தக்க வைக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில் தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக இன்று (12.08.2026) சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தனித் தீர்மானம்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற பேரவை நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>2026 ஆகஸ்டு 12ம் தேதி, புதன்கிழமை காலை 9.30 மணி </p><p><strong>1. அரசினர் தனித் தீர்மானம்</strong></p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவார்:-</p><p>"தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை / சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. </p><p>ஏப்ரல் 2026-இல் நாடாளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-லிருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது.</p><h2>அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா</h2><p>இந்நிலையில் மீளவும் மேற்குறிப்பிட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது எனத் தெரிந்ததன் அடிப்படையில் 1971-க்கு பிறகு உள்ள எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை. </p><p>ஒன்றிய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்த ஒரு மாநிலமும் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒன்றிய அரசின் தலையாய கடமையாகும்.</p><h2>33 சதவீத இடஒதுக்கீடு</h2><p>எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும். மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், மேலும், தற்போது மக்களவை மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதேவேளையில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது. </p><h2>விகிதாச்சார பிரதிநிதித்துவம்</h2><p>i) நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>ii) தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.</p><p>iii) வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டு பலனை பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.</p><h2>வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கை</h2><p>2. 2026-2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் 2026-2027-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை</p><p>2026-2027-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் 2026-2027-ம் ஆண்டுக்கான வேளாண்மை திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>