<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 10 Sep 2026 16:29:30 +0000</lastBuildDate><item><title>நாடாளுமன்றமே ரூ.900 கோடி; தலைமைச் செயலகத்திற்கு ரூ.1,200 கோடியா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parliament-900-crore-secretariat-1200-crore-nainar-nagendran-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parliament-900-crore-secretariat-1200-crore-nainar-nagendran-question#comments</comments><guid isPermaLink="false">0237ad6e-c34c-4fed-8cca-ac79315da8f6</guid><pubDate>Thu, 10 Sep 2026 16:28:51 +0000</pubDate><atom:updated>2026-09-10T16:28:51.959Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,நயினார் நாகேந்திரன்,நாடாளுமன்றம்,தலைமைச் செயலகம்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/4th1sw3h/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/4th1sw3h/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு, கள நிலவரத்திற்கு பொருந்தாதது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு, கள நிலவரத்திற்கு (யதார்த்தத்திற்கு) சற்றும் பொருந்தாததாகவே உள்ளது. நாட்டின் புதிய நாடாளுமன்றமே ரூ.900 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், முறையான வரைபடமோ திட்டமிடலோ இன்றி ரூ.1,200 கோடி என அறிவிக்கப்பட்டிருப்பது வெறும் கற்பனையே அன்றி வேறில்லை.</p><p>குறிப்பாக, 20 லட்சம் சதுர அடி கட்டடத்திற்கு உள்கட்டமைப்புடன் சேர்த்து 45 ஏக்கர் தேவைப்படும் சூழலில், அங்கு இருப்பதோ வெறும் 25 ஏக்கர் மட்டுமே. கிண்டியில் 35 ஏக்கர் மாற்று நிலம் இருந்தும், முதல்வர் விஜய்யின் வீட்டிற்கு அருகில் கட்ட வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட இந்த நடைமுறைச் சாத்தியமற்ற திட்டம், சட்டத்தின் முன் ஒருபோதும் நிற்காத வெறும் மணல் கோட்டையே ஆகும்.</p><p>அதனை மீறி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், முள்ளிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1,500-க்கும் மேற்பட்ட பூர்வீக மீனவக் குடும்பங்களின் நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தலின்போது பட்டா தருவதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது தங்களை தவெக அரசு அப்புறப்படுத்த முயல்வதாக மீனவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். மேலும் ஆழிப்பேரலையால் (சுனாமி) பாதிக்கப்பட்ட இக்கடற்கரைப் பகுதியானது, அடையாறு சூழலியல் முகத்துவார மண்டலத்தையும், அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முக்கிய இனப்பெருக்க வாழ்விடத்தையும் கொண்டிருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளுக்கு முரணாகக் கட்ட முயலும் இக்கட்டடம் சட்டத்தின் முன் நிற்காத 'மணல்' கோட்டையாகும்.</p><p>மேலும் இத்திட்டத்தால் சாந்தோம், பட்டினப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு வழியே நாள்தோறும் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான போக்குவரத்து முடக்கத்தால் பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளது. இப்படி அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கும் சூழலில், முதல்வரின் தனிப்பட்ட சௌகரியத்திற்காக மக்கள் நலனைப் பலிகடா ஆக்கும் இந்த "துக்ளக் தர்பார்" திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இத்திட்டத்தை எதிர்த்து மீனவ மக்களுடன் இணைந்து தீவிரப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தமிழக பாஜக தயங்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து மதங்களின் மீதும் எனக்கு மரியாதை உண்டு -  நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-have-respect-for-all-religions-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-have-respect-for-all-religions-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">5ff23094-c48d-49b2-8e06-835013aeb97f</guid><pubDate>Thu, 10 Sep 2026 16:08:59 +0000</pubDate><atom:updated>2026-09-10T16:08:59.180Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/gr9hmgso/nainar.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/gr9hmgso/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு மலிவான அரசியல் ஆதாயத்திற்காகவும், ஊடக வெளிச்சத்திற்காகவும் என் மீது மதவாதி என்ற முத்திரையைக் குத்த நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசியதை முழுமையாகப் புரிந்துகொள்ளாமலோ. அல்லது அரசியல் லாபத்திற்காக வேண்டுமென்றே திரித்துப் பேசி தமிழக மக்கள் மத்தியில் நஞ்சை விதைக்கப் பார்ப்பது உங்களின் இயலாமையையே காட்டுகிறது.</p><h2>தார்மீக உரிமை</h2><p>கிறிஸ்தவ மதத்தின் புனிதத் தலங்களாகப் போற்றப்படும் பெத்லகேம் (Bethlehem). ஜெருசலேம் (Jerusalem) மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய புனித பூமிக்கு நான் நேரில் சென்று வந்தவன், அதேபோலவே, இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவுக்கு மாற்று மதத்தினர் செல்ல அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நேரில் சென்று பார்த்து வந்தவன் நான். எல்லா மதங்களின் மீதும் எனக்குள்ள உளப்பூர்வமான மதிப்பும் மரியாதையும் தான் வாழ்நாளில் அந்தப் புனிதத் தலங்களைத் தரிசிக்க வேண்டும் என்ற என் எண்ணத்திற்குக் காரணம், நான் தம்பி  மாணிக்கம் தாகூர் அவர்களைக் கேட்கிறேன். மதச்சார்பற்ற வேடமிட்டுத் திரியும் நீங்கள். உங்கள் வாழ்நாளில் இதுபோன்ற பிற மதப் புனிதத் தலங்களுக்குச் சென்று உண்மையான நல்லிணக்கத்தை உணர்ந்தது உண்டா?மதச்சார்பற்ற அரசு' என்று வாய்கிழியப் பேசும் நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சியினரும். உண்மையில் ஒரு குறிப்பிட்ட மதத்தைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே அரசியல் செய்து வருகிறீர்கள். அதற்கு சமீப காலமாகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்களே சான்றாகும். இந்து மதத்தின் நம்பிக்கைகளையும். சடங்குகளையும் இழிவுபடுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு, என்னை மதவாதி என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது. நான் கோவிலுக்குச் செல்வது எப்படி மதவாதமாகாதோ, அதேபோல்தான் எனது மத நம்பிக்கைகளைப் போற்றுவதும், தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாத்துப் பேசுவதும் ஆகும். என் பேச்சில் ஒருபோதும் வன்மம் இருந்ததில்லை.</p> <p>தமிழகத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காக்கும் உணர்வு மட்டுமே எப்போதும் உண்டு, ஆனால், உண்மையான மதவாதம் என்பது உங்கள் காங்கிரஸ் கட்சியின் ரத்தத்திலேயே ஊறிப்போன ஓட்டு வங்கி அரசியல்தான். நான் பேசியதன் அர்த்தம் புரியாமல், பொதுவெளியில் வாய்க்கு வந்தபடி பொய்களைப் பேசி மக்களை ஏமாற்றலாம் என்று தம்பி மாணிக்கம் தாகூர் தப்புக் கணக்குப் போட வேண்டாம். பிரித்தாளும் சூழ்ச்சியால் காலத்தை ஓட்டிவிட்ட காங்கிரஸ் கட்சியின் போலி முகமூடி இன்று தமிழக மக்கள் முன்னிலையில் முற்றிலுமாகக் கிழிந்து தொங்குகிறது. மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி. அதில் குளிர்காய நினைக்கும் உங்களின் அரசியல் நாடகங்கள் தமிழக மக்களிடம் இனியும் எடுபடாது. பொய்ப் பிரசாரங்களை விட்டுவிட்டு, மக்கள் நலப் பணிகளிலும் உண்மையான தேசப்பற்றிலும் கவனம் செலுத்துங்கள் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வேலூர்:  தேவாலய விபத்து; 3 பேர் பலி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-church-accident-3-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-church-accident-3-killed#comments</comments><guid isPermaLink="false">76001e60-df0f-4fd8-9fa1-453c606cd030</guid><pubDate>Thu, 10 Sep 2026 16:08:37 +0000</pubDate><atom:updated>2026-09-10T16:08:37.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,தேவாலயம்,church</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/n6ou15ny/kcocts.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/n6ou15ny/kcocts.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>வேலூர்</p><p>வேலூரில் தேவாலய கட்டுமானத்தின்போது மேல்தளம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/news/india">வேலூர்</a> மாவட்டம் காட்பாடி நகரில் திருவலம் அருகே மஞ்சு கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் தேவாலயம் கட்டும் பணி நடந்து வருகிறது.  இதில் இன்று மாலை கட்டுமானத்தின் முதல் தளம் இடிந்து விபத்து ஏற்பட்டது.  இதில், பலர் சிக்கி கொண்டனர்.</p> <h2>4 பேர் மீட்பு</h2><p>இந்த தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதில், 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.  மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்து உள்ளது.  இதுவரை 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சேர்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.</p>  <h2>மீட்பு பணி</h2><p>சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் லீலா அலெக்ஸ், காட்பாடி எம்.எல்.ஏ. சுதாகர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.  அதிநவீன மீட்பு உபகரணங்கள் உடன் சம்பவ இடத்திற்கு 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவும் விரைந்துள்ளது.  இந்த நிலையில் தேவாலய விபத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.</p><p>முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்துள்ளது என தெரிய வந்துள்ளது.  எனினும், கட்டிடம் இடிந்ததற்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.  தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-in-london-featuring-ajith</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-in-london-featuring-ajith#comments</comments><guid isPermaLink="false">6a934f4e-c9e9-4609-be54-cced43e45ae6</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:54:08 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:54:08.518Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தமிழகம்,அஜித்,நடிகர் அஜித்குமார்,கார் பந்தயம்,அஜித் குமார்,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/2h8ioc1w/dhill.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/2h8ioc1w/dhill.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தய போட்டியை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். </p><h2>தொழில் முதலீடுகளை ஈர்க்க</h2><p>உலகளாவிய முதலீட்டாளர்களை சந்திக்கவும், முக்கிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாட்டின் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a>, இன்று இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டுள்ளார். </p><p>முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a>, செப். 16ம் தேதிவரை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.</p><h2>ஒலிம்பிக் நகரம்</h2><p>இந்த சூழலில், நாளை மறுநாள் (செப். 11) மற்றும் 12 ஆகிய தேதிகளில் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியிடுவதை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> நேரில் பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.</p><p>இந்த கார் பந்தயத்தில் போட்டியில் பங்கேற்க உள்ள அஜித்குமார், ஏற்கெனவே லண்டனில் தனது குழுவுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை வெளியிட்ட <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>, தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.</p><h2>மிகுந்த மகிழ்ச்சி</h2><p>இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட அஜித் குமார்,“தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.</p><p>குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.</p><h2>மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி</h2><p>இந்நிலையில் லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> தொடங்கி வைக்க உள்ளதாக லே மான்ஸ் கோப்பை (LE MANS CUP) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட உள்ளார் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>.</p>]]></content:encoded></item><item><title>அண்ணா பிறந்தநாளையொட்டி அதிரடி சலுகை... கைத்தறி துணிகளுக்கு 30 சதவீத தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-offer-on-annas-birthday-30-percent-discount-on-handloom-fabrics</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-offer-on-annas-birthday-30-percent-discount-on-handloom-fabrics#comments</comments><guid isPermaLink="false">12b49a3d-8cc4-4194-9da1-52551cb14631</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:24:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:24:00.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Offer,சலுகை,Handloom,கைத்தறி,அண்ணா பிறந்தநாள்,Anna&apos;s birthday,துணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/weand74d/105.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/weand74d/105.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அண்ணா பிறந்தநாளையொட்டி பருத்தி ரகங்களுக்கு மொத்தம் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது. </p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைத்தறித் தொழிலைப் பாதுகாத்து, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தி, அவற்றைத் தன்னிறைவுபெற்ற அமைப்புகளாக உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கைத்தறித் துணிகளின் விற்பனையை ஊக்குவித்து, நெசவாளர்களின் உற்பத்திக்கு நிலையான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதுடன், வெளிச்சந்தை போட்டியைச் சமாளிக்கும் வகையில் ரூ. 210 கோடி  திட்டச் செலவில் தள்ளுபடி மானியத் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>இந்தத் திட்டத்தின் கீழ், கைத்தறித் துணி விற்பனைக்கு ஆண்டு முழுவதும் 20 விழுக்காடு தள்ளுபடி மானியம், நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பிற்குட்பட்டு வழங்கப்படுகிறது. பருத்தி ரகங்களுக்கு, ஒரு உருப்படிக்கு 20 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையில், இதில் எது குறைவோ அந்தத் தொகை தள்ளுபடி மானியமாக வழங்கப்படும். அதேபோல், பட்டு ரகங்களுக்கு, ஒரு உருப்படிக்கு 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையில், இதில் எது குறைவோ அந்தத் தொகை தள்ளுபடி மானியமாக வழங்கப்படும்.</p><h2>30 சதவீத தள்ளுபடி</h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடும் வகையில், செப்டம்பர் 15, 2026 முதல் ஜனவரி 31, 2027 வரையிலான 139 நாட்களுக்கு பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மேற்குறிப்பிட்ட 139 நாட்களில் பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கு மொத்தம் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். </p><p>இந்தச் சிறப்புத் தள்ளுபடி திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறுவதோடு, தமிழகமெங்கும் செயல்பட்டுவரும் தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பயன்பெறும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, தரமான பட்டு மற்றும் பருத்தி கைத்தறித் துணிகளைச் சிறப்புத் தள்ளுபடி விலையில் வாங்கி, கைத்தறிப் பொருட்களுக்கு ஆதரவளிக்குமாறும், நமது பாரம்பரியமிக்க கைத்தறி நெசவுத் தொழிலின் தனித்துவத்தைப் பாதுகாப்பதுடன், கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பும் நிலையான வருமானமும் கிடைத்திடத் தங்களது ஆதரவை வழங்குமாறும் கைத்தறித் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேலூர்: தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-tragedy-as-two-die-after-church-roof-collapses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-tragedy-as-two-die-after-church-roof-collapses#comments</comments><guid isPermaLink="false">dbb9094e-5996-42e9-96bb-8fd7878b19f9</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:15:46 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:15:46.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Vellore,வேலூர்,தேவாலயம்,church,building collapse,கட்டிட விபத்து,Katpadi,காட்பாடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/dugk34lu/thee.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/dugk34lu/thee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூரில் தேவாலய கட்டுமானத்தின்போது மேல்தளம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். </p><p>வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மஞ்சு கிருஷ்ணாபுரம் பகுதியருகே தேவாலயம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கட்டுமானத்தின் முதல் தளம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில், 6 பேர் சிக்கி கொண்டனர்.இந்த தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். </p><p>இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோரில் 8 பேர் காயங்களுடன் மீட்டநிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 6-க்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/6p54iv7g/perer.jpg" /></figure><p>காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் சேர்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் லீலா அலெக்ஸ், காட்பாடி எம்.எல்.ஏ. சுதாகர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். </p><p>முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்துள்ளது என தெரிய வந்துள்ளது. எனினும், கட்டிடம் இடிந்ததற்கான காரணம் பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/X1i05J21Smo"></iframe></figure>]]></content:encoded></item><item><title>தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணம் - தமிழக அரசு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-chief-minister-vijay-uk-trip-investments-explained</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-chief-minister-vijay-uk-trip-investments-explained#comments</comments><guid isPermaLink="false">de3b294b-f38c-417c-8707-25d61d4612f9</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:15:10 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:15:10.018Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இங்கிலாந்து,England,investment,தமிழக அரசு,TN govt,பயணம்,தொழில் முதலீடுகள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/k3un8dd6/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/k3un8dd6/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இங்கிலாந்து பயணம் மேற்கொள்வதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளதுடன், அவற்றின்மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.</p><p>15.07.2026 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA), இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. CETA ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.</p><p>பல்வேறு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாடு வலுவான தொழில்துறைத் திறன்களைக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இத்துறைகளில் பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகள், பிரிட்டன் சந்தையில் அதிகரித்துவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பான நிலையில் உள்ளன. மேலும், கூட்டு நிறுவன பங்குதாரர்களைப் பெறுவதற்கும், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.</p><p>பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் (GCCs) நிறுவி செயல்பட்டு வருகின்றன. இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் முதல்-அமைச்சர் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.</p><p>மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த ஒரு ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ (Motor Sports City) மாநிலத்தில் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்.</p><p>முதல்-அமைச்சர் தலைமையிலான குழு இன்று (10.9.2026) சென்னையிலிருந்து புறப்பட்டு, 17.9.2026 அன்று சென்னை திரும்பும். இக்குழுவில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் (Guidance) மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெறுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் பள்ளிக்குச் செல்லாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-out-of-school-children-with-disabilities-in-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-out-of-school-children-with-disabilities-in-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">31ddc4a7-228a-4553-a7a1-c9a73eebaf16</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:48:08 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:48:08.326Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,children,குழந்தைகள்,Special camp,சிறப்பு முகாம்,disabilities- மாற்றுத்திறனாளிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/gqtdon9k/104.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/gqtdon9k/104.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் கல்வி, மறுவாழ்வு மற்றும் ஆதரவு சார்ந்த தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் மற்றும் ஆதரவு முகாம் இணை ஆணையாளர் (கல்வி)  க. கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.09.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் (OoSC) தொடர்பான முன்னெடுப்பின் ஆய்வில் 7,302 குழந்தைகள் கண்டறியப்பட்டு, 2,106 குழந்தைகள் முதற்கட்டமாக சரிபார்க்கப்பட்டனர். சரிபார்ப்பு நடவடிக்கையின் முதற்கட்டத்தைத் தொடர்ந்து, 509 குழந்தைகள் பள்ளிகளிலும், 263 குழந்தைகள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் (ITIs) சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட 28 குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் மற்றும் சிறப்பு ஆதரவு தேவைப்படுவதும் கண்டறியப்பட்டது.</p><h2>சிறப்பு முகாம்</h2><p>இவர்களின் கல்வி, மறுவாழ்வு மற்றும் ஆதரவு சார்ந்த குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை, சமூக நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN Rights Project) உள்ளிட்ட துறைகளின் சிறப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட 28 குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர். இம்முகாமில் மாற்றுத்திறன் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள், கல்வி வாய்ப்புகள், உரிமைகள், திறன் மேம்பாட்டு வழிகள் மற்றும் மறுவாழ்வு உதவிகள் குறித்தும், சைகை மொழி உதவி மற்றும் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கான கண்ணாடிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.</p><h2>கண்காணிப்பு நடவடிக்கை</h2><p>மேலும், ஒவ்வொரு குழந்தையின் கல்வி, குடும்பம், உள-சமூக மற்றும் ஆதரவு சார்ந்த தேவைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உளவியலாளர்கள் மூலம் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தனிப்பட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் மறுவாழ்வு ஆதரவு, நலத்திட்டங்களுக்கான இணைப்பு, மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் தங்கள் கல்வி மற்றும் வளர்ச்சி சார்ந்த திறன்களை முழுமையாக வெளிக்கொணர்வதை உறுதிசெய்யும் வகையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இம்முகாம் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் சீனிவாசன் (தெற்கு), சரவண குமார் (வடக்கு), பாலின மற்றும் கொள்கை ஆய்வகத்தின் தலைவர் முனைவர் லெஜிஸ், கல்வி அலுவலர் ஜெ.வசந்தி, தலைமை சமூக மேம்பாட்டு அலுவலர் ராஜ்குமார், சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட அலுவலர்கள், சமூக அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-announces-auction-of-securities-worth-6000-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-announces-auction-of-securities-worth-6000-crore#comments</comments><guid isPermaLink="false">59a95414-1032-47f3-8471-3edc711842a9</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:41:02 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:41:02.008Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Mumbai,ஏலம்,Reserve Bank of India,இந்திய ரிசர்வ் வங்கி,announces,பிணையப் பத்திரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/42hv5xay/thalamai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தலைமைச்செயலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/42hv5xay/thalamai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>அரசு பிணையப் பத்திரங்கள்</h2><p>தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 6000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 7.49 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2036 ரூபாய் 2000 கோடி மறுவெளியீடு, 7.62 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2041 ரூபாய் 2000 கோடி மறுவெளியீடு மற்றும் 7.70 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2051 ரூபாய் 2000 கோடி மறுவெளியீடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">ஏலத்தின்</a> மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. </p><h2>ஏலம்</h2><p>இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் செப்டம்பர் 15, 2026 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System) 1 1 (Electronic format) செப்டம்பர் 15, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேலம் அருகே பரபரப்பு... பொதுமக்களின் தாக்குதலுக்கு பயந்து திருடனே போலீசுக்கு போன் செய்த சம்பவம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thief-calls-police-fearing-public-attack-near-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thief-calls-police-fearing-public-attack-near-salem#comments</comments><guid isPermaLink="false">93fd1baf-0f0e-4e93-b905-90ab06297d15</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:34:16 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:34:16.386Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,திருட்டு,Salem,சேலம்,Theft,திருடன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/rairw053/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/rairw053/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சேலம் அருகே திருடச் சென்ற இடத்தில் மக்களின் தாக்குதலுக்கு பயந்து திருடனே போலீசாரை அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>திறந்து கிடந்த வீடு</h2><p>சேலம் அருகே எம். புதுப்பாளையம் சிவசக்தி அவென்யூவில் வசித்து வருபவர் சிவகுமார் (32 வயது). அவரது மனைவி ஷர்மிளா தேவி (28 வயது). இருவரும் வெளியூர் சென்றுவிட்டு, கடந்த 7-ம்தேதி இரவு சுமார் 10.45 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்கதவு திறந்திருந்ததையும், மாடியில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><h2>தப்பிக்க முயற்சி</h2><p>வீட்டிற்கு உள்ளே யாரோ இருப்பதை அறிந்த ஷர்மிளா தேவி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அந்த சமயத்தில் வீட்டிலிருந்து ஒரு நபர் வெளியேறி தயாராக வெளியில் நிறுத்தியிருந்த தனது பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை விரட்டிச் சென்றனர்.</p><h2>போலீசுக்கு தகவல்</h2><p>இதனால் பயந்த அவர் கூட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். பின்னர் தப்பிக்க வேறு வழியில்லை என்பதை உணர்ந்த அந்த நபர், பொதுமக்களின் தாக்குதலுக்கு பயந்து, போலீசுக்கு போன் செய்து அழைத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை பொதுமக்களின் பிடியிலிருந்து காப்பாற்றி கைது செய்தனர். மேலும் அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.</p><h2>கட்டிடத் தொழிலாளி</h2><p>தொடர்ந்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. புதுக்கோட்டை மாவட்டம், ராஜபட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (35 வயது). கட்டிடத் தொழிலாளி. இவர் தற்போது சேலம், கரிப்பட்டியில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று, அவர் பைக்கில் கோயம்புத்தூருக்குச் சென்றுவிட்டு சேலம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்.</p><h2>நகைகள் மீட்பு</h2><p>அப்போது பூட்டியிருந்த ஒரு வீட்டை கவனித்து, அதை உடைத்து திருட முயன்றுள்ளார். வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டு உரிமையாளர்கள் வந்துள்ளனர். தப்ப முயன்றபோது மாட்டிக்கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் விஜயகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த நகைகளை மீட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆவணி மாத அமாவாசையையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-throng-chathuragiri-on-the-occasion-of-the-amavasya-of-the-month-of-avani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-throng-chathuragiri-on-the-occasion-of-the-amavasya-of-the-month-of-avani#comments</comments><guid isPermaLink="false">0088b880-75e1-464e-9548-cfbd118b5c39</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:18:27 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:18:27.295Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Devotees,amavasai,அமாவாசை,சதுரகிரி,Chathuragiri,Avani month,ஆவணி மாதம்,குவிந்த பக்தர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/e15xefco/saduragiri.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சதுரகிரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/e15xefco/saduragiri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி</a> சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், பவுர்ணமி மற்றும் அமாவாசையையொட்டி பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம். ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு செப். 8 முதல் 11 வரை மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளது.</p><h2>சாமி தரிசனம்</h2><p>காலை நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் இரவில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சிறப்பு பூஜைக்கான முன்னேற்பாடு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-10-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-10-districts#comments</comments><guid isPermaLink="false">077ae0fd-1de2-4c34-bc3f-4d281756eb2c</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:52:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:52:23.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w881v0sa/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w881v0sa/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு ஏற்றுக் கொண்ட அதிகபட்ச கட்டணத்திற்கு மிகாமல் வசூல்: ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-owners-decide-not-to-exceed-the-maximum-fare-approved-by-the-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-owners-decide-not-to-exceed-the-maximum-fare-approved-by-the-government#comments</comments><guid isPermaLink="false">8b0bbbc9-2b2f-46d4-9769-77e3fc628798</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:28:09 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:28:09.982Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Omni Bus,ஆம்னி பஸ்,தமிழகம்,தமிழக அரசு,TN govt,கட்டணம் வசூல்,Fare hike,கட்டணம் நிர்ணயம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/e1neyz9r/koer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/e1neyz9r/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விழாக்காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சரியான நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. </p><h2>ஆம்னி பஸ் உரிமையாளர்கள்</h2><p>இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>அன்புடையீர், வணக்கம்.</p><p>தமிழ்நாட்டில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஆம்னி பஸ்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.</p><p>2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, அன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில், நமது சங்கம் நிர்ணயம் செய்திருந்த அதிகபட்ச ஆம்னி பஸ் பயணக் கட்டணத்திலிருந்து 10 சதவீதம் குறைத்து வசூலிக்க அரசு அறிவுறுத்தலின்படி பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. </p><h2>கட்டண விவரங்கள்</h2><p>மேற்கண்ட கட்டண விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், நமது சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aoboa.co.in-உம் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p>அதே நடைமுறையை எதிர்வரும் அனைத்து விழாக்காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் நமது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முழுமையாகப் பின்பற்றுமாறு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>விழாக்காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார்கள் ஏற்படாத வகையிலும் ஆம்னி பஸ் துறையின் நற்பெயர் பாதுகாக்கப்படும் வகையிலும், அனைத்து உரிமையாளர்களும் சங்கத்தின் இந்த அறிவுறுத்தலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் தொடரும் பாலியல் தொல்லை சம்பவங்கள் - வானதி சீனிவாசன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuing-incidents-of-sexual-harassment-in-tamil-nadu-vanathi-srinivasans-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuing-incidents-of-sexual-harassment-in-tamil-nadu-vanathi-srinivasans-review#comments</comments><guid isPermaLink="false">d510637c-bbf4-4d8a-8d0e-93aa6ec3a8c5</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:26:16 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:26:16.829Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual harassment,பாலியல் தொல்லை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,incident,சம்பவங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/miuag78a/vanathi-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/miuag78a/vanathi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாணவிகள் முதல் பெண்கள் வரை, தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை சம்பவங்கள் நடக்கிறது என முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-redelineation-will-be-a-joy-for-the-people-of-tamil-nadu-vanathi-srinivasan">வானதி சீனிவாசன் </a>கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பாலியல் தொல்லை சம்பவங்கள்</h2><p>கள்ளக்குறிச்சி தெங்கியாநத்தம் அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. கிருஷ்ணகிரி ஊத்தங்கரை ஓடும் பேருந்தில் அரசுப் பேருந்து நடத்துனர் மாணவிக்கு பாலியல் தொல்லை. சிவகங்கை மாவட்டம் சாக்கோடை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. சென்னை அரும்பாக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் உடற்கல்வி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை திருப்பூர் வெள்ளக்கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வட மாநில இளைஞர். சென்னையில் ஜிஎஸ்டி பெண் ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிஎஸ்டி காவல் ஆய்வாளர். ராமநாதபுரம், கீழக்கரை இளைஞர் கஞ்சா இளைஞர்களால் பாலியல் வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம். திண்டுக்கல்லில் தனியார் பஸ் டிரைவர் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.</p><h2>பெண்களின் பாதுகாப்பு</h2><p>இவை வழக்குகளாகப் பதிவாகி செய்திகளில் வந்தவை மட்டுமே. இன்னும் எத்தனை பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ? ஏன். இந்தப் பதிவினை போஸ்ட் செய்யும் போது கூட தமிழகத்தில் ஏதேனும் ஒரு மூலையில் பெண் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். பெருமையாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கப் பெண்படையின் தற்போதைய நிலை என்ன? இத்தனை செய்திகளைப் பார்த்த பின்னும் சொல்வதற்கு ஒன்றுமில்லை..! தவெக அரசில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை மக்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-constituency-byelection-aiadmk-candidates-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-constituency-byelection-aiadmk-candidates-announced#comments</comments><guid isPermaLink="false">31044f9e-df7a-45b2-847a-29b5a53afa8b</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:22:16 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:22:53.470Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,candidate,இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,வேட்பாளர்கள் அறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/gctk11a3/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/gctk11a3/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.</p><h2>2 தொகுதி இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகள் களம் காண்கின்றன.</p><h2>கடும்போட்டி</h2><p>சட்டசபை தேர்தல் முடிந்து 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதால் புதிதாக ஆட்சி அமைத்துள்ள த.வெ.க.வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>வேட்பாளர்கள்</h2><p>தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். த.வெ.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.</p><h2>அ.தி.மு.க. அறிவிப்பு</h2><p>இந்த நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் பானுமதியும் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்-2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்<br><br>- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் <a href="https://x.com/EPSTamilNadu?ref_src=twsrc%5Etfw">@EPSTamilNadu</a> அவர்களின் முக்கிய அறிவிப்பு <a href="https://t.co/mqappC34a2">pic.twitter.com/mqappC34a2</a></p>&mdash; AIADMK (@AIADMKOfficial) <a href="https://x.com/AIADMKOfficial/status/2098037409875451933?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>2028 மகாமக விழா முன்னேற்பாடு: கும்பகோணத்தில் அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/preparations-for-the-2028-mahamaham-festival-review-meeting-held-in-kumbakonam-under-the-leadership-of-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/preparations-for-the-2028-mahamaham-festival-review-meeting-held-in-kumbakonam-under-the-leadership-of-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">6afa3a3f-e331-4d62-b269-86c1a64fe118</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:22:40 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:22:40.555Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆய்வுக்கூட்டம்,Meeting,கும்பகோணம்,Kumbakonam,மகாமகம்,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/50xvvy37/312.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/50xvvy37/312.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்,</p><p>2028 மகாமக விழா முன்னேற்பாடு காரணமாக கும்பகோணத்தில் அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கும்பகோணம் மகாமகம்</h2><p>தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள கும்பகோணம் மகாமகத்தினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் முன்னிலையில், அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் இன்று நடைபெற்றது.</p><p>இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரேவதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா, தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் விஜய்சரவணன். கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஜெயராமன், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன், மாநகராட்சி ஆணையர் சுதா உதவி ஆட்சியர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக், ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.</p><p>இக்கூட்டத்தில் இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தாவது:-</p><h2>ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிற்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், கும்பகோணம் நகரில் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகம் திருவிழாவினை முன்னிட்டு, சைவ மற்றும் வைணவ திருக்கோயில்களில் தேரோட்டங்கள், ஓலைச்சப்பரம், சுவாமி வீதியுலா, தெப்பம் மற்றும் மகாமக குளம், காவிரி ஆற்றில் தீர்த்த வாரி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவிழா சிறப்புற நடைபெற அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.</p><h2>ஆய்வு</h2><p>மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத்துறை, கும்பகோணம் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, போக்குவரத்து துறை, உணவு பாதுகாப்புத்துறை, மின்சார வாரியம் மற்றும் பகிர்மானக் கழகம் போன்ற பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இக்கூட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு</a> செய்யப்பட்டது. மேலும், 2028 மகாமகம் முன்னேற்பாடுகள் தொடர்பாக நிலுவையிலுள்ள பணிகள் அனைத்தும் விரைவாக முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p>இக்கூட்டத்தில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமலை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், துணை ஆணையர்கள் உமாதேவி, ராணி, உதவி ஆணையர்கள் ஹம்சன், அஸ்வினி, கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>
வேலூர்:  தேவாலய கட்டுமான மேல்தளம் இடிந்து விபத்து; 4 பேர் மீட்பு, 2 பேரை மீட்கும் பணி தீவிரம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-church-construction-roof-collapse-accident-4-rescued-2-trapped</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-church-construction-roof-collapse-accident-4-rescued-2-trapped#comments</comments><guid isPermaLink="false">7e54d98c-ce14-4d88-a111-c61abc54f0ea</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:05:29 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:05:29.887Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/m7c1iti9/kcoct.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/m7c1iti9/kcoct.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்</p><p>வேலூரில் தேவாலய கட்டுமானத்தின்போது மேல்தளம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்து உள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/">வேலூர்</a> மாவட்டம் காட்பாடி அருகே மஞ்சு கிருஷ்ணாபுரம் பகுதியருகே தேவாலயம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.  இதில் கட்டுமானத்தின் முதல் தளம் இடிந்து விபத்து ஏற்பட்டது.  இதில், 6 பேர் சிக்கி கொண்டனர்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/x6kruur9/kcocts.jpg" /></figure> <h2>4 பேர் மீட்பு</h2><p>இந்த தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இதில், 4 பேர் மீட்கப்பட்டனர்.  மீதமுள்ள 2 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்து உள்ளது.  4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சேர்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.</p><p>அதிநவீன மீட்பு உபகரணங்கள் உடன் சம்பவ இடத்திற்கு 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.  முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்துள்ளது என தெரிய வந்துள்ளது.  எனினும், கட்டிடம் இடிந்ததற்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நிறைமாத கர்ப்பிணி பலி: மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-of-full-term-pregnant-woman-case-registered-against-timber-merchant-under-the-atrocities-prevention-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-of-full-term-pregnant-woman-case-registered-against-timber-merchant-under-the-atrocities-prevention-act#comments</comments><guid isPermaLink="false">0e011f65-8cd9-4bbc-bef9-54c175f64dea</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:37:20 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:37:20.297Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,உயிரிழப்பு,வழக்குப்பதிவு,வன்கொடுமை தடுப்பு சட்டம்,காஞ்சிபுரம்,case registered,Kancheepuram,நிறைமாத கர்ப்பிணி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/xr19wcfj/kie.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/xr19wcfj/kie.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சீபுரம், </p><p>நிறைமாத கர்ப்பிணி பெண் பலியான சம்பவத்தில், அதற்கு காரணமான மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>ரூ.20 ஆயிரம் கடன்</p><p>காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40). இவரது மனைவி தேன்மொழி (வயது 35). இவர்கள் காஞ்சீபுரம் அருகே உள்ள வெள்ளை கேட் பகுதியில் ஆறுமுகம் என்பவரிடம் கடனாக ரூ.20 ஆயிரம் பெற்றுக் கொண்டு அவரது மரக்கிடங்கில் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தனர். தேன்மொழி 9 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டது.</p><h2>உயிரிழப்பு</h2><p>தங்கி இருந்த இடத்திலேயே பிரசவம் ஆனநிலையில் எதிர்பாராத விதமாக ரத்தப்போக்கு அதிகமானதால் தேன்மொழியும், பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>தேன்மொழி மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் அறிந்து வந்த உறவினர்கள், மரக்கிடங்கு உரிமையாளர் ஆறுமுகம் வாங்கிய கடனை காரணம் காட்டி தேன்மொழியையும் அவரது கணவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து பொன்னேரிகரை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><p>போலீசார் மரக்கடை உரிமையாளர் ஆறுமுகத்திடமும், உயிரிழந்த தேன்மொழியின் கணவர் ஆனந்தனிடமும் விசாரித்தனர்.</p><h2>கொத்தடிமைகளாக</h2><p>போலீஸ் விசாரணையில் ஆனந்தன், மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது மரக்கடை உரிமையாளரை தனது செல்போன் மூலம் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் எடுக்காத நிலையில் நீண்ட நேரம் கழித்து அங்கு வந்த பின்னர்தான் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>மேலும் ஆனந்தன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து, தானும் தனது குடும்பத்தினரும் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்ததாக தனியாக புகார் அளித்துள்ளார். </p><p>அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிப்பதற்காக, புகார் சப்-கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணை மற்றும் சப்-கலெக்டரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி மறுத்த நிலையில் தாய், குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்களுக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-dharapuram-by-elections-stbi-party-supports-dmk-candidates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-dharapuram-by-elections-stbi-party-supports-dmk-candidates#comments</comments><guid isPermaLink="false">34de5261-cd96-466c-b54d-b2a916c0c6d0</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:27:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:27:58.805Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,STBI Party- எஸ்.டி.பி.ஐ. கட்சி,support,ஆதரவு,by-elections,திமுக வேட்பாளர்கள்,DMK Candidates,எஸ்டிபிஐ கட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/vzf1kyo0/nellai-mubarak.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லை முபாரக் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/vzf1kyo0/nellai-mubarak.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர்களுக்கு எஸ்டிபிஐ கட்சி தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D"> நெல்லை முபாரக்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்களாக இருந்தவர்கள், தங்களது சுயநல அரசியல் ஆதாயத்திற்காகப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட இவ்விரு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எஸ்டிபிஐ கட்சி ஆதரவு</h2><p>நடைபெறவுள்ள இத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் வழக்கறிஞர் இ. பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு ஆதரவு கோரியதையடுத்து, எஸ்டிபிஐ கட்சி திமுக வேட்பாளர்களுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்வது எனத் தீர்மானித்துள்ளது. இவ்விரு வேட்பாளர்களும் கற்றறிந்தவர்கள்; மக்கள் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்டவர்கள். ஆகவே, இவர்களை மக்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவர்களின் மகத்தான வெற்றிக்கு எஸ்டிபிஐ கட்சி தீவிரத் தேர்தல் களப்பணியாற்றும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>மேலும், தொகுதி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்துவிட்டு, மக்களால் வழங்கப்பட்ட புனிதமான ஆணையைச் சிறுமைப்படுத்தி, இடைத்தேர்தலுக்கு காரணமாகி மீண்டும் தேர்தலில் போட்டியிடுபவர்களை அடையாளங்கண்டு, இத்தேர்தலில் மக்கள் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். மக்களாட்சி தத்துவத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கும், ஆளும் தவெக அரசுக்கும் தகுந்த பாடம் புகட்ட இத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” </p><p>இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. வேட்பாளர்கள் மரகதம் குமரவேல்-சத்தியபாமா வாழ்க்கை குறிப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-candidates-maragatham-kumaravel-sathyabama-biography-release</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-candidates-maragatham-kumaravel-sathyabama-biography-release#comments</comments><guid isPermaLink="false">0749e2b2-dc1b-4652-bf35-fdee85e3bc7d</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:23:42 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:23:42.284Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,candidates,வேட்பாளர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/02u23sn8/tkpca.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/02u23sn8/tkpca.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>த.வெ.க. வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா வாழ்க்கை குறிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து உள்ளது.  இதில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.  இதனால், காலியாக உள்ள 6 தொகுதிகளில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான த.வெ.க. வெற்றி பெற்று சட்டசபையில் தங்களுடைய பலத்தை அதிகரித்து கொள்வதற்கான ஆர்வத்துடன் களம் இறங்குகிறது.  இதன்படி, மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளராக மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளராக பி. சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு விவரம் வெளியாகி உள்ளது.</p>  <h2>மரகதம் குமரவேல்</h2><p>மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தையூர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை அ.தி.மு.க.வின் நிறுவனர் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்தில் வேலை செய்துள்ளார்.</p><p>அ.தி.மு.க.வில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஒன்றிய தலைவராக இருந்தார்.  2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p>  <p>அ.தி.மு.க.வில் மாவட்ட மகளிர் அணி செயலாளர், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்தவர்.  இவரது கணவர் குமரவேல் திருப்போரூர் ஒன்றிய செயலாளராகவும், தையூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் தற்போது இருந்து வருகிறார். அவரும் அ.தி.மு.க.வில் இருந்த ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து விலகி த.வெ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.</p><p>கடந்த சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க.வில் அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டது. இதையடுத்து மதுராந்தகம் தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2026 தேர்தலில் அவர் 69,284 வாக்குகள் பெற்று, த.வெ.க. வேட்பாளர் ஏழில் கேத்தரீனை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த மே மாதம் 25-ந்தேதி அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் முதல்-அமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தார். தற்போது மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அவருக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.</p>  <h2>சத்தியபாமா</h2><p>திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சத்தியபாமா. இவர் உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்தார். உள்ளாட்சியில் சிறப்பான களப்பணியாற்றிய இவருக்கு, கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தீவிர பிரசாரத்திற்கு பிறகு, 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.</p><p>சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர், அ.தி.மு.க.வில் நிலவி வந்த உட்கட்சி பூசல்கள் மற்றும் தலைமை மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிருப்தி அடைந்தார்.</p>  <h2>விலகினார்</h2><p>இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியதோடு, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தில் (த.வெ.க) அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக்கொண்டார்.</p><p>சத்யபாமாவின் தந்தை பெயர் பொன்னுசாமி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1975-ம் ஆண்டு பிறந்த இவர் முதலில் அ.தி.மு.க. கட்சியில் தீவிரமாக செயல்பட்டு பின்னர் 2026 மே மாதத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தார்.</p><p>2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். தேர்தலில் 81,100 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டி. இந்திராணியை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>  <h2>மும்முனை போட்டி</h2><p>இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியாக த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதில், மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு தி.மு.க. முதல் கட்சியாக 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகிறார்கள்.</p><p>இந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கணிகா சம்பத் போட்டியிடுகிறார்.  தாராபுரம் தொகுதியில் பானுமதி போட்டியிட உள்ளார்.  தி.மு.க., த.வெ.க.வை தொடர்ந்து தற்போது, அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.  இதனால், மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நடுவானில் பயணிக்கு உடல்நலக்குறைவு... இலங்கையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passenger-falls-ill-mid-air-plane-makes-emergency-landing-in-sri-lanka</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passenger-falls-ill-mid-air-plane-makes-emergency-landing-in-sri-lanka#comments</comments><guid isPermaLink="false">b8862c91-b1ca-4e0d-bb47-70d2c28c8917</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:20:47 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:20:47.059Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,திருச்சி,Sri Lanka,இலங்கை,passenger,Emergency Landing,அவசரமாக தரையிறக்கம்,நடுவானம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/lvq9dtkl/50.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமானம்
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/lvq9dtkl/50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகளுடன் திருச்சி நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது .</p><h2>விமானம்</h2><p>அப்போது நடுவானில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விமானம் உடனடியாக இலங்கை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியவுடன் அந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. </p><p>பின்னர் அந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">விமானம்</a> திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகளும் சற்று அவதி அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய விசில் சின்னம்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/silent-democratic-revolution-whistle-symbol-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/silent-democratic-revolution-whistle-symbol-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f5548e90-b377-44d1-bab6-409d19f1443c</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:09:52 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:13:43.421Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக வெற்றிக் கழகம்,Tamilaga Vettri Kazhagam,விசில் சின்னம்,whistle symbol,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/3exe1dvu/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/3exe1dvu/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்கட்சிக்கு விசில் சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.</p><p>எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-ல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.</p><p>மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.</p><p>35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதல்-அமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.</p><p>மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.</p><p>மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.<br><br>முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு…</p>&mdash; TVK Vijay (@TVKVijayHQ) <a href="https://x.com/TVKVijayHQ/status/2098015596944244958?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஓவிய, சிற்பக் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த நிதியுதவி - விண்ணப்பங்கள் வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/funding-to-showcase-the-talents-of-painters-and-sculptors-applications-welcome</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/funding-to-showcase-the-talents-of-painters-and-sculptors-applications-welcome#comments</comments><guid isPermaLink="false">8dad6a7e-2c28-4018-bc1e-3a686adf3954</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:09:21 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:09:21.369Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நிதியுதவி,Painter,கலைஞர்கள்,Funding,Talent,விண்ணப்பங்கள் வரவேற்பு,ஓவியக்கலை,Applications welcome</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/tbjvdcza/103.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/tbjvdcza/103.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஓவிய, சிற்பக் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>விண்ணப்பங்கள் வரவேற்பு</h2><p>தமிழ்நாடு அரசின் சார்பில், கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழுவின் மூலம், தமிழ்நாட்டிலுள்ள ஓவிய சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப் படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனிநபர் கலைக் காட்சியாக நடத்திட ஒரு நபருக்கு ரூ.25,000/- வீதம் 10 கலைஞர்களுக்கும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக் கலைக்காட்சியாக நடத்திட ஒரு குழுவுக்கு ரூ.50,000/- வீதம் 5 குழுக்களுக்கும் அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.</p><p>விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். கலை பண்பாட்டுத் துறை - ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச்செம்மல் விருது பெற்றவர்கள் கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கக் கூடாது. இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோர் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கக்கூடாது.</p><p> விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு (Bio Data), கைபேசி எண். (Cell No.) சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் 5 எண்ணிக்கைகள் (A4 Size) அவரவர்கள் படைப்புத் திறன் பற்றிய செய்தித் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 01.10.2026 க்குள் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. (இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்)</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மோடி அரசுக்கு எதிராக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் பேச வேண்டும் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/everyoneboth-the-ruling-party-and-the-oppositionmust-speak-out-against-the-modi-government-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/everyoneboth-the-ruling-party-and-the-oppositionmust-speak-out-against-the-modi-government-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">c1396a89-1636-4ae4-b0c8-124bdfa0060d</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:01:46 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:01:46.094Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Opposition parties,Modi government,எதிர்கட்சிகள்,மோடி அரசு,Manickam Tagore</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/eam905zc/nit.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/eam905zc/nit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாங்கள் யாருக்காகவும் பயப்பட போவதில்லை. யாருக்காகவும் சைலண்டாக இருக்க போவதில்லை என்று தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். </p><h2>துணை மாப்பிள்ளை</h2><p>இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-</p><p>தமிழ்நாடு அரசியலில், மோடிக்கு எதிராக அனைவரும் திடீரென சைலண்டாக இருக்கிறார்கள். துணை மாப்பிள்ளையான எதிர்கட்சி தலைவர் அமைதியாக இருக்கிறார். மத்திய அரசு செய்யும் அநியாயங்களை சொல்லவேண்டியது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரசின்</a> கடமை. நாங்கள் யாருக்காகவும் பயப்படவில்லை, சைலண்டாகவும் இல்லை. முதலில் பேசிக் கொண்டிருந்தவர்களே பேசவில்லை. ஆளும் த.வெ.க. கட்சியும் இது குறித்து பேச வேண்டும்.</p> <h2>மதவாதம்</h2><p>நான் கோவிலுக்கு செல்வேன். இதையெல்லாம் மதவாதம் என்று சொல்லிவிடமுடியாது, இன்னொரு மதத்திற்கு எதிரானது கிடையாது. நயினார் நாகேந்திரன் பேசுவது தான் மதவாதம். வன்மமாய் பார்க்கிற பார்வை நயினார் நாகேந்திரனுக்கு இருக்கிறது. இந்த வன்மம் தான் தமிழ்நாட்டில் அவரை மதவாதியாக காட்டுகிறது. கடவுளை நம்புவது எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது, ஆனால் இன்னொருவர் நம்பிக்கையை, மதத்தை குறித்து பிரச்சினை செய்யக்கூடாது.</p><h2>குதிரை பேரம்</h2><p>ஒவ்வொரு MLA, MPக்கும் ராஜினாமா செய்ய உரிமை இருக்கிறது, எல்லா ராஜினாமாவும் குதிரை பேரமல்ல. திமுகவுக்கு இடைத்தேர்தல் சவாலாக இருக்கும் என்பதால், அவர்கள் கலக்கமடைந்துள்ளனர். இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும்</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த தறித்தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-loom-worker-arrested-for-sexually-assaulting-a-young-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/power-loom-worker-arrested-for-sexually-assaulting-a-young-girl#comments</comments><guid isPermaLink="false">3bb6a6f2-db7a-455a-bd52-72062f4cf844</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:53:19 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:53:19.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,கைது,arrest,சிறுமி,சேலம்,sexually abusing,தறித்தொழிலாளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7wm92a1a/262.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7wm92a1a/262.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சங்ககிரி,</p><p>சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே எர்ணாபுரம் கிராமம் மேட்டுதெரு பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது39). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். </p><p>இந்த நிலையில் மாதையனுக்கு கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் 34 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாதையன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்து உள்ளார். ஆரம்பத்தில் அந்த பெண்ணை நல்ல முறையில் கவனித்து வந்ததாகவும், பின்னர் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி மாதையன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><h2>பாலியல் பலாத்காரம்</h2><p>இந்த நிலையில் அந்த பெண்ணின் மகளான 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி கடந்த 3 வாரங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது குறித்து தாய் விசாரித்த போது தன்னிடம் மாதையன் கடந்த 4 மாதங்களாக தவறாக பேசி வந்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத போது கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும், வெளியே கூறினால் உனது தாயை அடித்துக்கொலை செய்து விடுவதாகவும் மாதையன் மிரட்டியதாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார்.</p> <h2>கைது</h2><p>இதையடுத்து சிறுமியின் தாய், சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரின் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசி ஆகியோர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாதையனை கைது செய்தனர். பின்னர் அவரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-7-pm-in-11-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-7-pm-in-11-districts#comments</comments><guid isPermaLink="false">7cb4eb48-0d3f-4264-9e25-daaf80d6ea14</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:26:12 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:26:12.166Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w8d1sfqj/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w8d1sfqj/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை: 11 கிலோ குட்கா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/check-on-bengaluru-nagercoil-express-train-11-kg-of-gutkha-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/check-on-bengaluru-nagercoil-express-train-11-kg-of-gutkha-seized#comments</comments><guid isPermaLink="false">6d274f53-3998-419a-85c6-5e78bced8c7a</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:17:55 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:17:55.734Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாகர்கோவில்,எக்ஸ்பிரஸ் ரெயில்,train,Bangaluru,Gutkha,குட்கா பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/t46fh4lv/-000001-001.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ குட்கா புகையிலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனையின் போது 11 கிலோ குட்கா பறிமுதல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/t46fh4lv/-000001-001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த விரைவு ரெயிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கிலோ தடை செய்யப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">குட்கா புகையிலை</a> பொருட்களை ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.</p><h2>ரெயிலில் தீவிர சோதனை</h2><p><a href="https://www.dailythanthi.com/news/india">கர்நாடக மாநிலம்</a> பெங்களூருவில் இருந்து தமிழகத்தின் நாகர்கோவில் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், தடை செய்யப்பட்ட போதை மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், இன்று (வியாழக்கிழமை) ரெயில் நாகர்கோவில் சந்திப்பை நெருங்கிய போது, ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து ரெயிலின் பொதுப் பெட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.</p><h2>11 கிலோ குட்கா பறிமுதல்</h2><p>இந்த சோதனையின் போது, ரெயிலின் ஒரு பகுதியில் கேட்பாரற்று மறைத்து வைக்கப்பட்டிருந்த பையை போலீசார் மீட்டனர். அதனைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதில் இருந்த 11 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ரெயில்</a> நிலையங்களில் போலீசார் சோதனை நடத்துவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த கடத்தல்காரர்கள், மாட்டிக் கொள்ளாமல் இருக்க குட்கா பைகளை ரெயிலிலேயே போட்டுவிட்டு தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள மர்ம நபர்கள் யார், பெங்களூருவில் இருந்து இந்த போதைப்பொருட்களை கடத்தி வந்தது யார், மற்றும் நாகர்கோவிலில் இதனைப் பெற்றுக்கொள்ளவிருந்த நபர்கள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அஞ்சல் சேவையில் குறைகளா? 18-ந் தேதி வரை கருத்துகளை தெரிவிக்கலாம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/issues-with-postal-services-you-can-share-your-feedback-until-the-18th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/issues-with-postal-services-you-can-share-your-feedback-until-the-18th#comments</comments><guid isPermaLink="false">4611dd61-000c-4d73-a4d6-5b1603222588</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:04:38 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:04:38.536Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Postal Service,அஞ்சல் சேவை,குறைதீர்ப்பு முகாம்,Post office- தபால் நிலையம்,feedback</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7a8jy347/311.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அஞ்சல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7a8jy347/311.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு வட்டம் அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 11,745 தபால் நிலையங்களில் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் இதில் பங்கேற்கலாம்.</p><h2>அஞ்சல் சேவைகளின் தரம்</h2><p>அஞ்சல் சேவைகளின் தரம், வாடிக்கையாளர்களின் சேவைகள் ஆகியவற்றை சிறப்பாக மேம்படுத்துவது குறித்த கருத்துகளை அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் என்ற தலைப்புடன்  ஏ. சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">அஞ்சல்</a> துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002  என்ற முகவரிக்கு 18.09.2026 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p><p>மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை  DAK ADALAT என்ற தலைப்புடன் pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை முக்கிய முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-will-communists-support-in-byelection-key-decision-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-will-communists-support-in-byelection-key-decision-tomorrow#comments</comments><guid isPermaLink="false">926e95ed-b453-43fd-9243-5059eaf0d32e</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:55:49 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:55:49.079Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,இடைத்தேர்தல்,By election,CPI,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட்,ஆதரவு,CPM</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/3lc42rz3/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/3lc42rz3/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.</p><h2>2 தொகுதி இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகள் களம் காண்கின்றன.</p><h2>கடும்போட்டி</h2><p>சட்டசபை தேர்தல் முடிந்து 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதால் புதிதாக ஆட்சி அமைத்துள்ள த.வெ.க.வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>வேட்பாளர்கள்</h2><p>தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். த.வெ.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.</p><h2>ஆதரவு கட்சிகள்</h2><p>இந்த நிலையில் த.வெ.க. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை அக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளன. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் முதல்-அமைச்சர் விஜய் அரசின் செயல்பாட்டை அவ்வப்போது கண்டித்து வருகிறார்கள்.</p><h2>முதல்-அமைச்சருக்கு கண்டனம்</h2><p>சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பதிலுரை மற்றும் உடல்மொழி குறித்து இரு கம்யூனிஸ்ட் செயலாளர்களும் கண்டனம் தெரிவித்தனர். த.வெ.க.வின் 5 ஆண்டு ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு அவர்களது நிலைப்பாட்டை பொருத்தே அது அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் கருத்து கூறியிருந்தார்.</p><p>இந்த நிலையில் இடைத்தேர்தலில் 2 கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-</p><h2>நாளை முடிவு</h2><p>அறிவிக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் அதிகம் இல்லை. தமிழகத்தில் 40 மாவட்டங்களில் இடதுசாரி கட்சிகளுக்கு வாக்குகள் உள்ளன. மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் போட்டியிடுவதா? அல்லது கூட்டணி கட்சியான த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதா என்பது பற்றி நாளை (வெள்ளிக்கிழமை) மாலையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்வோம்.</p><p>இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். 2 இடதுசாரி கட்சிகளும் ஒருங்கிணைந்து நல்ல முடிவை எடுத்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மானிய உரங்களை கடத்தும் கும்பல்? “பறக்க முடியாத படையாக பறக்கும் படை” - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-gang-smuggling-subsidized-fertilizers-a-flying-squad-that-cannot-fly-tamil-nadu-farmers-association</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-gang-smuggling-subsidized-fertilizers-a-flying-squad-that-cannot-fly-tamil-nadu-farmers-association#comments</comments><guid isPermaLink="false">75e14aca-cf36-48ae-9168-a7e913f2cdd6</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:42:50 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:42:50.756Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,farmer,smuggling,கடத்தல்,பறக்கும் படை,Fertilizer,உரம்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,பி.எஸ்.மாசிலாமணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/yfndpgd3/masilamani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பி.எஸ்.மாசிலாமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/yfndpgd3/masilamani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>உரம்</h2><p>கரூர் மாவட்டம் செம்பிய நத்தம் ஊராட்சி, நல்லூரான் பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில், விவசாயிகளுக்கு  மானிய விலையில் வழங்கும்  ரசாயன உர முட்டைகளை வேறு தொழில் பயன்பாட்டிற்கு அனுப்பி கொண்டிருந்ததை, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தலைமையிலான குழு, கிடைத்த ரகசிய தகவல் அறிந்து குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, உர மூட்டைகளை கைப்பற்றி இருக்கிறார்கள் என செய்தி வந்துள்ளது.</p><p>இங்கு மொத்தம்  837 யூரியா மூட்டைகளில் 537 மூட்டைகள் டாரஸ் லாரியில் ஏற்றப்பட்ட நிலையிலும். மேலும் 300 மூட்டைகள் ஏற்ற வேண்டிய  நிலையிலும்  கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அனுப்பி வைத்த டி.ஏ.பி மூட்டைகளில் எஞ்சிய 8 மூட்டைகளும் இருந்துள்ளன. விவசாயிகளின் நாடு தழுவிய நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக தான் வேளாண் பயன்பாட்டிற்கான உரங்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது.</p><h2>மத்திய பட்ஜெட்</h2><p>2026-27 ஆம் நிதி ஆண்டிற்கு மத்திய பட்ஜெட்டில் 1.75 லட்சம் கோடி ரூபாய்  இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் யூரியாவுக்கு மட்டுமே ரூ1.17 லட்சம் கோடி. றி/ரி மற்றும் பொட்டாஸ், டி.ஏ.பி.. உரங்களுக்கு ரூ 54,000 கோடி மானிய ஒதுக்கீடு ஆகும். இறக்குமதி உரம் விலை ஏறுகிற நிலையில், விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரிய விலையில் கிடைக்கவே இந்த ஏற்பாடு ஆகும்.</p><p>அரசின் மானிய திட்டத்தில் விவசாயிகளுக்காகவே வழங்கப்படுகிற இரசாயன உர மூட்டைகளை மஞ்சள் நிற சாக்குகளில் இருந்து மாற்றி, வேறொரு கம்பெனி பெயரில் வெள்ளை நிற சாக்கில் நிரப்பி இங்கு ஏற்றப்பட்டுள்ளது. எடை மிஷின்கள், டாக்கிங் உள்ளிட்ட தளவாடங்களும் அங்கு இருந்துள்ளன. இந்நிகழ்வுகளை பார்க்கும் பொழுது நீண்ட காலம் இப்படி இங்கு நடப்பதாக தெரிகிறது. உரம் தயாரிக்கிற ஆலைகளுக்கு  நேராக மானியத்தை அனுப்பி விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.</p><p>விற்பனை கடைகளில் உரம் வாங்குகிற பொழுது அரசின் மானியம் போக தான் இதற்கான எஞ்சிய தொகை  பெறப்படுகிறது. விவசாயிகள் உரம் வாங்குகிற பொழுது அவர்கள் விவசாயிகளுக்கான அடையாள அட்டைகளை காட்ட வேண்டும் என்று நிபந்தனை இருக்கிறது. ஆனால் போலி நிறுவனங்களுக்கு அடையாளம்  இல்லாமல் ஆயிரக்கணக்கான மூட்டைகள் எப்படி போகிறது.</p><h2>மோசடி</h2><p>மானிய உர மூட்டைகளை வேறு பயன்பாட்டிற்கு கடத்துவது, கலப்படம் செய்வது தொடர் நிகழ்வாகிறது. இவர்களுக்கு மொத்த ஏஜென்சியிலிருந்தே நேரடியாக உரங்கள் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் போலியான விற்பனை நிறுவனங்களை தொடங்கி, உர மூட்டைகளை பெற்று மோசடிக்கு பயன்படுத்தப்படுத்துவதாக தெரிகிறது. இப்படியான செயல்களை தடுத்திடவே ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் துணை இயக்குனர் தலைமையில் உர தர கட்டுப்பாட்டு கண்காணிப்பு குழு பறக்கும் படையாக உள்ளது.. விதை மற்றும் உர மோசடிகளை தடுப்பதே இதன் முக்கிய பணி. இது பலன் இல்லாத பறக்க இயலாத படை.</p><p>சேலத்தில் போலி உரங்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி இருந்த இடத்தில்  கண்டுபிடிப்பு, ட்டிரீ பாண்ட் பசை தயாரிக்க கேரளாவிற்கு லாரிகளில் அனுப்பியது, மண்ணைக் கலந்து உரம் என விற்றது. இயற்கை உரம் என போலியை விற்றது. இவர்கள் மீதான நடவடிக்கை என்னவாயிற்று வெளியே வராது. ஆனால் இது எல்லாமே பொதுமக்கள் தலையீட்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பட்டினியிலிருந்து மக்களை பாதுகாத்திட உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான உரங்களில் கூட்டு மோசடிகள் தொடர்வதை உடன் தடுத்திட அரசின் கறார் நடவடிக்கை வேண்டும்.</p><h2>நடவடிக்கை</h2><p>வேறு மாவட்ட  வேளாண் துணை இயக்குனர்களை இக்குழுவில் தலைமையேற்று ஆய்வு செய்திட பொறுப்பு அளிக்க  வேண்டும். மின் திருட்டை கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை நியமித்துள்ளது போல் இக்குழுவில் இவர் ஒருவரை இணைக்க வேண்டும். மோசடியில் ஈடுபடும்  விற்பனை  கடைகளுக்கு தற்காலிக தடை விதிப்பதை நிறுத்தி, நிரந்தரமாக அந்நிறுவனத்தை மூடிடவும், இதன்உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டனை கிடைக்கச் செய்யவும் வேண்டும். உர கடத்தலுக்கு உதவியவர்கள், ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், துணை போனவர்கள் ஆகியோரை  கைது செய்து குற்றவியல் நடவடிக்கை மூலம் கடும் தண்டனை விதித்திட உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடவேண்டும்.</p><h2>ஆய்வு</h2><p>உணவு கலப்படம் போல உணவை தயாரிக்கும் உரத்திலும் கலப்படம் என்கிற நிலையில் குற்றவியல் நடவடிக்கை வேண்டும். உயர்நிலை அலுவலர்களைக் கொண்ட பல குழுக்களை உடனடியாக அமைத்து மாநில அளவில் உடன் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு எதிராக பிரசாரம்.. தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-farmers-association-announces-campaign-against-tvk-in-the-by-election</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-farmers-association-announces-campaign-against-tvk-in-the-by-election#comments</comments><guid isPermaLink="false">b67a699a-b3a7-4a07-84ce-1cd13a9da585</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:42:00.505Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,farmers association,இடைத்தேர்தல்,Tamil Nadu Farmers Association,தமிழக விவசாயிகள் சங்கம்,byelection,பயிர்க்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/upa85zik/kowe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/upa85zik/kowe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத <a href="https://www.dailythanthi.com/topic/tvk">தமிழக வெற்றிக் கழகத்திற்கு</a> எதிராக, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.</p><h2>விவசாயிகளை ஏமாற்றிவிட்டது</h2><p>இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ”தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். பெரு விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்” என <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> வாக்குறுதி அளித்திருந்தது.  ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து முழுமையாக கடன்களை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது.</p><h2>பெரும் அதிர்ச்சி</h2><p>தமிழ்நாட்டில் வறட்சி நிலவும் சூழலில், பாகுபாடின்றி அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும்<a href="https://www.dailythanthi.com/topic/tvk"> த.வெ.க. அரசு</a> கண்டு கொள்ளவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தீவிரப் பிரசாரம்</h2><p>எனவே, அரசின் இந்த விவசாய விரோதப் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அடுத்த மாதம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், விவசாயிகளை ஒன்றுதிரட்டி <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.வை</a> தோற்கடிக்க தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளை மறுநாள் குறை தீர்க்கும் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/grievance-redressal-meeting-to-be-held-by-the-chennai-water-board-the-day-after-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/grievance-redressal-meeting-to-be-held-by-the-chennai-water-board-the-day-after-tomorrow#comments</comments><guid isPermaLink="false">666cb47a-b045-4d78-a986-03c9d7e80469</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:22:16 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:22:16.605Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,Drinking Water Board,குடிநீர் வாரியம்,Chennai Drinking Water Board,சென்னை குடிநீர் வாரியம்,மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்,Chennai Water Board</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/37wyafg2/ch.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/37wyafg2/ch.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் 12.09.2026 (சனிக்கிழமை) அன்று குடிநீர் வாரிய 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>குறை தீர்க்கும் கூட்டம்</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p><a href="https://www.dailythanthi.com/topic/chennai">சென்னை</a> குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் 12.09.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.</p><p>இந்த குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் பகுதி அலுவலகங்கள் விபரம்:</p><p>பகுதி அலுவலகம்-1 - திருவொற்றியூர்</p><p>பகுதி அலுவலகம்-2 - மணலி</p><p>பகுதி அலுவலகம்-3 - மாதவரம்</p><p>பகுதி அலுவலகம்-4 - தண்டையார்பேட்டை</p><p>பகுதி அலுவலகம்-5 - இராயபுரம்</p><p>பகுதி அலுவலகம்-6 - திரு.வி.க.நகர்</p><p>பகுதி அலுவலகம்-7 - அம்பத்தூர்</p><p>பகுதி அலுவலகம்-8 - அண்ணா நகர்</p><p>பகுதி அலுவலகம்-9 - தேனாம்பேட்டை</p><p>பகுதி அலுவலகம்-10 - கோடம்பாக்கம்</p><p>பகுதி அலுவலகம்-11 - வளசரவாக்கம்</p><p>பகுதி அலுவலகம்-12 - ஆலந்தூர்</p><p>பகுதி அலுவலகம்-13 - அடையாறு</p><p>பகுதி அலுவலகம்-14 - பெருங்குடி</p><p>பகுதி அலுவலகம்-15 - சோழிங்கநல்லூர்</p><p>இந்த குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். </p><h2>குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள்</h2><p>எனவே, இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்-இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-plan-to-set-up-the-secretariat-in-pattinapakkam-should-be-abandoned-communist-party-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-plan-to-set-up-the-secretariat-in-pattinapakkam-should-be-abandoned-communist-party-of-india#comments</comments><guid isPermaLink="false">3571fba6-08c7-420f-8c63-9ad915e0424b</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:10:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:10:23.670Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist Party of India,பட்டினப்பாக்கம்,Pattinapakkam,இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி,M Veerapandian,மு. வீரபாண்டியன்,புதிய தலைமைச் செயலகம்,new Secretariat</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/9jadwwz2/veerapandian.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/9jadwwz2/veerapandian.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை,பட்டினப்பாக்கத்தில் முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு. வீரபாண்டியன் </a>கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புதிய தலைமைச் செயலகம்</h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவு தவறானது. மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள், கடலோரச் சூழலியல், காலநிலைப் பாதிப்புகள், பொதுமக்களின் கடற்கரை அணுகல் மற்றும் அரசின் முக்கியமான நிர்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியவை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். தமிழ்நாடு அரசு இம்முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.</p><p>முல்லைக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் மற்றும் நொச்சிக்குப்பம் உள்ளிட்ட ஒன்பது மீனவக் குடியிருப்புகள், முன்மொழியப்பட்ட இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளன. சுற்றியுள்ள மீனவக் குடியிருப்புகளின் மக்கள், கடலை வெறும் குடியிருப்புப் பகுதியாக மட்டும் சார்ந்திருக்கவில்லை. அது அவர்களின் வாழ்வாதாரத்தின் அடித்தளமாகவும், பொது வளமாகவும் உள்ளது. மீன்பிடித்தல், படகுகளின் இயக்கம், மீன் இறக்குதல், வலைகள் மற்றும் மீன்களை உலர்த்துதல், மீன் விற்பனை, சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி சார்ந்த தொழில்கள் இக்கடலோரப் பகுதியைச் சார்ந்தே நடைபெறுகின்றன.</p><h2>கடலோரப் பகுதியை பாதிக்கும்</h2><p>இத்தகைய குறுகிய கடலோரப் பகுதியில் மிகப்பெரிய நிர்வாக வளாகம், அதனுடன் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படுவது, ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியுள்ள கடலோரப் பகுதியை மேலும் பாதிக்கும். 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்கும், பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் நிலைக்கும் தள்ளப்படுவர். உயர் பாதுகாப்பு கொண்ட அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தின் வருகையால் தடுப்புகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும், முக்கியப் பிரமுகர்களின் வாகனப் போக்குவரத்து, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியமர்த்தல் போன்றவை தவிர்க்க முடியாததாகும். இதன் விளைவாக, மக்களுக்கு பொதுவாகச் சொந்தமான கடற்கரைப் பகுதி படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக - பாதுகாப்பு வளாகமாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், காலநிலை அவசரநிலை நிலவும் இன்றைய சூழலில் இத்தகைய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது பொருத்தமற்றதும் ஆபத்தானதுமாகும். </p><h2>பசுமை வளாகம்</h2><p>சென்னையின் கடலோரப் பகுதிகள் புயல்கள், கடல் எழுச்சி, வெள்ளம், கடலோர அரிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வு போன்றவற்றால் அதிகரித்து வரும் ஆபத்தை எதிர்கொள்கின்றன. எனவே, அரசு பாதுகாப்பான மாற்று இடங்களை ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் ஆவணங்களில், இப்பரந்த கடலோரப் பகுதி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எளிதில் உள்ளாகும் பகுதிகளும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்மொழியப்படும் வளாகத்தை “பசுமை வளாகம்” என்று அழைப்பதால் மட்டும் அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகிவிடாது. நிலையான வளர்ச்சி என்பது பசுமைக் கட்டிடத்தை உருவாக்குவதில் தொடங்குவதில்லை; சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில்தான் தொடங்குகிறது. </p><p>மாநிலத்திற்கு நவீன நிர்வாகக் கட்டமைப்பு தேவைப்படலாம். ஆனால் நிர்வாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் உணர்திறன் மிக்க கடலோரப் பகுதியை ஆக்கிரமிப்பதும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதும், பொதுமக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதும், ஜனநாயகப் பொது வெளியைச் சுருக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூக ரீதியாகப் பொருத்தமான மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அக்டோபர் 3-ந்தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-basilica-to-remain-open-24-hours-from-october-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-basilica-to-remain-open-24-hours-from-october-3#comments</comments><guid isPermaLink="false">b4113d95-ab74-4c6d-b1fc-d9f8d43ee353</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:05:15 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:05:15.678Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagapattinam,நாகப்பட்டினம்,Velankanni,வேளாங்கண்ணி,வேளாங்கண்ணி பேராலயம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/63yd74l0/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேளாங்கண்ணி பேராலயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/63yd74l0/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகப்பட்டினம்,</p><p>அக்டோபர் 3-ந்தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று தஞ்சை மறை மாவட்ட ஆயர் அறிவித்துள்ளார்.</p><h2>புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்</h2><p>நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் இந்த ஆலயம் ஆன்மீக தலமாகவும் விளங்குகிறது.</p><h2>10 நாள் திருவிழா</h2><p>இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த (ஆகஸ்ட்) மாதம் 29-ந்தேதி கொடியேற்றுடன் தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாள் வெகு விமரிசையாக நடைபெற்றது.</p><h2>24 மணி நேரமும் திறந்திருக்கும்</h2><p>இந்த நிலையில் வருகிற அக்டோபர் 3-ந்தேதி முதல் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் என்று தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தெரிவித்துள்ளார். பக்தர்கள் எந்த நேரத்திலும் பேராலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஆயர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரெயில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-special-special-train-between-chennai-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-special-special-train-between-chennai-nellai#comments</comments><guid isPermaLink="false">b9525995-a6dd-4b7c-910d-2d5edf74f0b4</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:04:45 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:04:45.324Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,நெல்லை,Nellai,தமிழகம்,சிறப்பு ரெயில்,Special Train ​,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/lpcv1o4s/train.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/lpcv1o4s/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே <a href="https://www.dailythanthi.com/topic/special-train">சிறப்பு ரெயில்</a> இயக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 12-ந் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் <a href="https://www.dailythanthi.com/topic/special-train">சிறப்பு ரெயில்</a> (வண்டி எண் 06151) மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை (நெல்லை) சென்றடையும். </p><p>மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 14-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் <a href="https://www.dailythanthi.com/topic/special-train">சிறப்பு ரெயில்</a> (06152) மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். </p><p>23 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p><p>இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிட வேண்டும் - ஜவாஹிருல்லா பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-project-must-be-abandoned-jawahirullahs-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-project-must-be-abandoned-jawahirullahs-statement#comments</comments><guid isPermaLink="false">d4447c6c-7858-4174-9801-e25f9c7499b3</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:57:40 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:57:40.353Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Jawahirullah,ஜவாஹிருல்லா,புதிய தலைமைச் செயலகம்,new Secretariat</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/19ao01pi/kolai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/19ao01pi/kolai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்பட உள்ள இடம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.</p><h2>ரூ.1,200 கோடி செலவில்</h2><p>கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a>, தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக சுமார் ரூ.1,200 கோடி செலவில் பிரம்மாண்டமான நிர்வாக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ள புதிய நிர்வாக வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக 26 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆரம்பகட்ட நடவடிக்கைகள்</h2><p>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய நிலங்கள் இந்தத் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளன. திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. கட்டிட வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை, கட்டுமான திட்டமிடல், சுற்றுச்சூழல் அம்சங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>புதிய நிர்வாக வளாகம்</h2><p>புதிய தலைமைச் செயலகம் எந்த இடத்தில் அமையும் என்பது தொடர்பாக நந்தம்பாக்கம், கிண்டி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தற்போது பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கடலை ஒட்டிய முக்கியமான பகுதியில் இந்தப் புதிய நிர்வாக வளாகம் அமைய இருப்பதால், இடத் தேர்வு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. நிர்வாக ரீதியாக இது முக்கியமான திட்டமாக பார்க்கப்பட்டாலும், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>இதற்கிடையே, புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கு பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது:-</p><p>புதிய தலைமைச் செயலகத்தை பட்டினபாக்கத்தில் கட்டவிருப்பதாக த.வெ.க. அறிவித்திருக்கிறது. பட்டினபாக்கம் முதல்-அமைச்சர் விஜய் வீட்டிற்கு அருகில் இருக்கும் பகுதியாக இருக்கலாம், ஆனால் அப்பகுதியிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும் செயலாக மாறிவிடும். ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம், சட்டமன்றம் இயங்கி வருகிறது. அங்கு ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லை. பட்டினபாக்கத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் இந்தத் திட்டத்தை த.வெ.க. அரசு கைவிட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>ஆவணி மாத அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-thronged-rameswaram-agni-theertha-to-take-holy-dip-on-the-occasion-of-the-amavasya-of-the-month-of-avani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-thronged-rameswaram-agni-theertha-to-take-holy-dip-on-the-occasion-of-the-amavasya-of-the-month-of-avani#comments</comments><guid isPermaLink="false">f4950dd9-5600-4990-86ab-97052af5f369</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:46:55 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:46:55.585Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,ராமேசுவரம்,amavasai,அமாவாசை,Avani month,ஆவணி மாதம்,Agni Theertha Beach,அக்னி தீர்த்த கடற்கரை,குவிந்த பக்தர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w47p2v89/rameswaram.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ராமேசுவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/w47p2v89/rameswaram.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,</p><p>தென்னகத்து காசியாக விளங்கும் ராமேசுவரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளியூர், வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.</p><h2>ஆவணி மாத அமாவாசை</h2><p>இக்கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத அமாவாசை, சர்வ அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பூஜை செய்வது வழக்கம். அதன்படி ஆவணி மாத சர்வ அமாவாசையையொட்டி இன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.</p><p>முன்னதாக அவர்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">அக்னிதீர்த்த கடலில்</a> புனித நீராடியதை தொடர்ந்து கடற்கரையில் அமர்ந்து உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.</p><h2>சாமி தரிசனம்</h2><p>பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி, அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்திடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரைக்கு ரூ.4,899... கோவைக்கு ரூ.6,154! ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளைக்கு அன்புமணி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4899-to-madurai-rs-6154-to-coimbatore-anbumani-condemns-the-exorbitant-fares-charged-by-private-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4899-to-madurai-rs-6154-to-coimbatore-anbumani-condemns-the-exorbitant-fares-charged-by-private-buses#comments</comments><guid isPermaLink="false">2635437b-9bd9-4414-806b-b4b1b7e8fb1e</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:45:59 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:45:59.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,சென்னை,ஆம்னி பஸ்,கண்டனம்,கட்டணம்,private bus,Charges,Condemn</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/chixnzu4/310.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/chixnzu4/310.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரைக்கு ரூ.4,899... கோவைக்கு ரூ.6,154! ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளைக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தனியார் ஆம்னி பேருந்துகள்</h2><p>விநாயகர் சதுர்த்தி  தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில்  ஈடுப்பட்டிருக்கின்றன. அதைத் தடுக்க வேண்டிய கடமையையும், பொறுப்பையும் கொண்ட தமிழக அரசு, இந்தக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக இதுவரை  பெயரளவில் கூட எச்சரிக்கை  விடுக்காதது கண்டிக்கத்தக்கது.</p><h2>தொடர் விடுமுறை</h2><p>தமிழ்நாட்டில்  வரும் 14-ம் தேதி  விநாயகர்  சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதையொட்டி அரசு விடுமுறை  விடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களான சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாள்கள் தொடர் விடுமுறையைக் கொண்டாடும் வகையில், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வாழும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.  இதைப் பயன்படுத்திக் கொண்டு நாளை செப்டம்பர் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.3,999 வரையிலும்,  மதுரைக்கு ரூ.4000 வரையிலும்,  கோவைக்கு ரூ.6154  வரையிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><h2>கட்டணக் கொள்ளை</h2><p>வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு  திரும்ப திருச்சியிலிருந்து ரூ.4499, மதுரையிலிருந்து ரூ.4899, கோவையிலிருந்து ரூ.4799 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 300 கி.மீக்கும் குறைந்த தொலைவில் உள்ள கும்பகோணத்திற்கு செல்ல ரூ.3179 வரையிலும், அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.3419 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இந்த கட்டண விகிதத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் திருச்சிக்கு சென்று வர வேண்டும் என்றால் பேருந்துக்காக  ரூ.34 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும். இது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் மக்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை விட  அதிக தொகையாகும்.  வரலாறு காணாத கட்டணக் கொள்ளைக்கு எடுத்துக்காட்டு இது தான்.</p><p>இந்தக் கட்டணக் கொள்ளையை தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D">ஆம்னி பேருந்துகள் </a>ரகசியமாகக்கூட செய்யவில்லை.  இந்தக் கட்டண விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில்  வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க  தவெக அரசு எதுவும் செய்யவில்லை.</p><p>திமுக ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளிலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கொள்ளை கொடிகட்டி பறந்தது. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியும், பிற கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கும் போது, பெயரளவுக்காகவாவது கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதைப் போல  திமுக அரசு காட்டிக்கொண்டது.  ஆனால், தவெக அரசு அதையும்  செய்யவில்லை. மாறாக, திமுக ஆட்சியில்  தனியார் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்பட்டதை விட 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இது தான் தவெக ஆட்சியில்  ஏற்பட்ட மாற்றமா?</p><h2>கட்டண நிர்ணயக் குழு</h2><p>தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை  ஆட்சியாளர்கள் தடுக்க வேண்டும்; அதற்காக கட்டண நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் பல முறை ஆணையிட்டிருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் அந்த ஆணைகள் மதிக்கப்படவில்லை. ஆனால், தூய சக்தி என்று கூறிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் அதே நிலை  தொடர்வது கவலையளிக்கிறது.  தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இளைஞர் வெட்டிக் கொலை: இதுதான் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அழகா? - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-murdered-in-chennai-is-this-the-beauty-of-law-and-order-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-murdered-in-chennai-is-this-the-beauty-of-law-and-order-anbumani#comments</comments><guid isPermaLink="false">c5ed5848-6ae8-44f2-bddb-eae3c896018c</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:34:36 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:34:36.424Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Chennai,சென்னை,murder,கொலை,கண்டனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/y921dt64/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/y921dt64/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் கொலைகள் அதிகரித்து வருவது அச்சமும், கவலையும் அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்ற துறைமுக ஒப்பந்த பணியாளர் அவரது வீட்டிற்கு அருகிலேயே கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் இத்தகைய கொலைகள் அதிகரித்து வருவது அச்சமும், கவலையும் அளிக்கிறது. கொல்லப்ப்பட்ட பிரதீப் ராஜின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>பிரதீப் ராஜின் பெற்றோர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தரப்பிலிருந்து தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக காவல் துறையில் பிரதீப் ராஜ் புகார் செய்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன் இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும், துணை ஆணையரிடமும் அவர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், பிரதீப் ராஜையே பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.</p><p>அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் விடப்படுவது குறித்து பிரதீப் ராஜ் மீண்டும் புகார் செய்துள்ளார். அப்போதும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர், தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஊடகங்களிடம் பிரதீப் ராஜ் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அடுத்த நாளான நேற்றிரவு பிரதீப் ராஜ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.</p><p>பிரதீப் ராஜ் அளித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால்,  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களுக்கு ஆதரவாக பிரதீப் ராஜையே காவல் ஆய்வாளர் மிரட்டியதுதான் எதிரிகளுக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது. உயிருக்கு பாதுகாப்பு கேட்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதுதான் காவல்துறையின் கொள்கையா? இந்த விஷயத்தில் கடமையை செய்யத் தவறிய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆளும் தவெக நிர்வாகி உள்ளிட்ட இருவர் ஒரே நாளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த பதட்டம் தணியும் முன்பே அடுத்த கொலை நிகழ்ந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், இதுதான் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அழகா? என வினா எழுப்புகின்றனர். சென்னையில் இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய் - கனிமொழி தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-has-pushed-people-to-live-in-fear-says-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-has-pushed-people-to-live-in-fear-says-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">5157284f-4583-450a-8cb3-2aba2ec11530</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:29:32 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:31:01.797Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி,சட்டம் ஒழுங்கு,Kanimozhi,Law and order,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/09hewufh/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/09hewufh/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள மற்றுமொரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.</p><p>முந்தைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்.</p><p>முதல்-அமைச்சருக்கு காவல்துறையை கையாளத் திறனில்லை என்றால், அதைத் திறம்பட கையாளக்கூடிய வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போகட்டும். மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>