<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 19 Sep 2026 02:19:29 +0000</lastBuildDate><item><title>மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு: குளியல் அறையில் பூட்டி வைத்துவிட்டு தப்பிய பெண் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-after-stealing-10-pounds-of-jewelry-from-elderly-woman-after-locking-herself-in-bathroom</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-after-stealing-10-pounds-of-jewelry-from-elderly-woman-after-locking-herself-in-bathroom#comments</comments><guid isPermaLink="false">a7d83b95-4dc8-43f3-bd06-23ee3e62bd6e</guid><pubDate>Sat, 19 Sep 2026 02:17:56 +0000</pubDate><atom:updated>2026-09-19T02:17:56.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கைது,arrest,மூதாட்டி,பெண்,bathroom,குளியல் அறை,A woman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/y2i6ngvd/366.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/y2i6ngvd/366.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மடிப்பாக்கம்,</p><p>சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அய்யப்பன் நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் (வயது 78). இவரது மனைவி நிர்மலா (74). இவர்களது மகன்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிர்மலாவை கவனிக்க அரியலூரை சேர்ந்த சித்ரா (44) என்பவர் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தார். </p><h2>10 பவுன் தாலிச்சங்கிலி</h2><p>சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தபோது, குளியல் அறை குழாய் சரியாக மூடவில்லை எனக்கூறி நிர்மலாவை அங்கு அழைத்துச் சென்ற சித்ரா, அவர் கீழே குனிந்தபோது கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தார். பின்னர் நிர்மலாவை குளியல் அறைக்குள் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு, அவரது செல்போனையும் எடுத்துக்கொண்டு தப்பினார். </p><h2>போலீசார்</h2><p>நிர்மலாவின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் குளியல் அறை கதவை திறந்து அவரை மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீசார் செல்போன் கோபுர சிக்னல் மூலம் மடிப்பாக்கம் கூட்ரோட்டில் பஸ்சுக்காக காத்திருந்த சித்ராவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகை, செல்போன் மீட்கப்பட்டது. புகார் அளித்த 1 மணி நேரத்தில் நகையை மீட்ட போலீசாருக்கு நிர்மலா நன்றி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி கடன் பெற்று தருவதாக கூறி பண மோசடி: 5 பேர் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-for-fraud-claiming-to-get-rs1-crore-loan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-for-fraud-claiming-to-get-rs1-crore-loan#comments</comments><guid isPermaLink="false">7945824a-9502-48df-a79f-ac1045407ad0</guid><pubDate>Sat, 19 Sep 2026 02:14:40 +0000</pubDate><atom:updated>2026-09-19T02:14:40.620Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tirunelveli,திருநெல்வேலி,பண மோசடி,money laundering,loan,Commission,கடன்,5 people arrested,5 பேர் கைது,கமிஷன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/fpyipf6w/Untitled-1.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பண மோசடி- 5 பேர் அதிரடி கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/fpyipf6w/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம் வி.கே.புரம் அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பண மோசடி </a>முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.3.68 லட்சத்தை பறிமுதல் செய்தனர். </p><h2>ரியல் எஸ்டேட் தொழில்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அகஸ்தியர்பட்டியில், தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 29) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகக் கூறி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். </p><h2>ரூ.1 கோடி கடன் பெற்றுத்தர ரூ.1 லட்சம் கமிஷன்</h2><p>இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(47) என்பவர் ரூ.1 கோடி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">கடன்</a> தேவைப்படுவதாக சென்னையைச் சேர்ந்த முகம்மது அக்தர்(23) என்பவரை அணுகியுள்ளார். முகம்மது அக்தர், தனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் கடன் தொகையை பெற்றுத் தருவதாகவும், அதற்காக ரூ.1 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D">கமிஷன்</a> வழங்க வேண்டும் எனவும் கூறி, ஜெயச்சந்திரனை அகஸ்தியர்பட்டியில் உள்ள வெங்கடேஷின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். </p><h2>போலீசார் சோதனை</h2><p>அங்கு பணம் இருப்பது போன்று கட்டுக்கட்டாக காண்பித்து, ஜெயச்சந்திரனிடம் கடன் பத்திரத்தில் கையெழுத்தும், 7 வங்கி காசோலைகளில் கையெழுத்தும் பெற்றதாகத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் போலீஸ் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.</p><h2>ரூ.3.68 லட்சம் பறிமுதல்</h2><p>அப்போது, வீட்டின் மாடியில் ரூ.500 நோட்டுகள் அடங்கிய கட்டுகள் மற்றும் மாதிரி நோட்டுகள் என மொத்தம் ரூ.3 லட்சத்து 68 ஆயிரம் ரொக்கப் பணம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்யப்பட்டது. </p><h2>5 பேர் அதிரடி கைது</h2><p>இதுதொடர்பாக வி.கே.புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்(29), ராஜேஷ்(23), சிவசுப்பிரமணியன்(23), கதிர்வேல்பாண்டி(23) மற்றும் சென்னையைச் சேர்ந்த முகம்மதுஅக்தர்(23) ஆகியோர் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 5 பேரையும் போலீசார் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். </p><h2>பொதுமக்களுக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்</h2><p>பொதுமக்கள் இதுபோன்ற மோசடி முயற்சிகளில் சிக்காமல் விழிப்புடன் இருக்குமாறும், அறிமுகமில்லாத நபர்கள் மூலம் அதிக தொகை கடன் பெற்றுத் தருவதாகக் கூறப்படும் ஆசைவார்த்தைகளை நம்பி பணம் அல்லது முக்கிய ஆவணங்களை வழங்க வேண்டாம் எனவும் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">அறிவுறுத்தியுள்ளார்</a>. </p>]]></content:encoded></item><item><title>முதுமலையில் 17 வயது பெண் காட்டு யானை உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-year-old-female-wild-elephant-dies-in-mudumalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-year-old-female-wild-elephant-dies-in-mudumalai#comments</comments><guid isPermaLink="false">73b5f861-8079-4cc1-b136-4910cec022c5</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:56:55 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:56:55.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானை,wild elephant,Mudumalai,முதுமலை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/7lcb1yn0/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/7lcb1yn0/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>முதுமலையில் 17 வயது பெண் காட்டு யானை இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பெண் காட்டு யானை சாவு</h2><p>முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.. இதே போல் விலை உயர்ந்த மரங்களும் வனப்பகுதியில் உள்ளது. இதனால் வன குற்றங்கள் ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் தினமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.</p> <p>இந்த நிலையில் புலிகள் காப்பகத்தின் உள்மண்டல பகுதியான தெப்பக்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட கக்கநல்லா வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது இம்பரல்லா ஓடை அருகில் 17 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர். உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.</p><h2></h2><h2>வனத்துறையினர் விசாரணை</h2><p>அதன் அடிப்படையில் துணை இயக்குநர் வித்யாதர் உத்தரவின்படி வனச்சரகர் சிவக்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் காட்டு யானை இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இறந்த பெண் யானையின் உடற்கூராய்விற்கான முன்னேற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டனர்.</p><p>பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு பெண் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முக்கிய உடற்பாகங்களை மருத்துவ குழுவினர் சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் அறிக்கை வந்த பிறகு காட்டு யானையின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து தெப்பக்காடு வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கூடலூரில் 2 பேரை கொன்ற ஆட்கொல்லி ஆண் புலி கூண்டில் சிக்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-male-tiger-that-killed-two-people-in-gudalur-was-caught-in-a-cage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-male-tiger-that-killed-two-people-in-gudalur-was-caught-in-a-cage#comments</comments><guid isPermaLink="false">c51c52ca-a20e-4cc6-9912-9b0d42b8060c</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:54:45 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:54:45.721Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiger,புலி,கூடலூர்,Vandalur,வண்டலூர்,கூண்டில் சிக்கியது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/bs0bil12/365.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆண் புலி கூண்டில் சிக்கியது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/bs0bil12/365.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>கூடலூரில் 2 பேரை கொன்ற ஆண்புலி கூண்டில் சிக்கியது. இதைத்தொடர்ந்து வண்டலூர் மறுவாழ்வு காப்பகத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை புலி கடித்துக் கொன்றது. அடுத்தடுத்து 2 பேரை புலி கடித்துக் கொன்றதால் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.</p><h2>தேடுதல் வேட்டை</h2><p>இதையடுத்து கூடலூர் வன அலுவலர் தேவராஜ் தலைமையில் 150 வனத்துறையினர் உடனடியாக புலி தேடுதல் வேட்டையை தொடங்கினர். மேலும் லாரஸ்டன், பாரம், தெய்வ மலை மற்றும் ஹலாலா எஸ்டேட் உள்பட மொத்தம் 305 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் 14 இடங்களில் இறைச்சி துண்டுகளுடன் கூடிய கூண்டுகள் இலை, தழைகளால் மறைத்து வைக்கப்பட்டது.</p><h2>கூண்டில் சிக்கியது</h2><p>இதற்கிடையே கூடலூர் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டுகளில் சிறுத்தைகளும் சிக்கி வந்தது. ஆனால் புலி சிக்காமல் இருந்ததால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். இந்தநிலையில் கூடலூர் நகராட்சி மேல் கூடலூர் பகுதியில் உள்ள ஹலாலா எஸ்டேட் பகுதியில் வனத்துறை சார்பில் வைத்திருந்த கூண்டில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆட்கொல்லி ஆண் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">புலி</a> சிக்கியது. </p><h2>வண்டலூர்</h2><p>இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது புலியை வாகனத்தில் ஏற்றி முதுமலை கார்குடிக்கு கொண்டு சென்றனர். பின்னர், முதுமலையிலிருந்து சென்னை வண்டலூர் மறுவாழ்வு காப்பகத்துக்கு மைசூரு வழியாக வனத்துறையினர் புலியை கொண்டு சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை-சொரனூர் ரெயில் நாளை ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-shoranur-train-cancelled-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-shoranur-train-cancelled-tomorrow#comments</comments><guid isPermaLink="false">b462aa83-2817-4c77-be0b-b1d97ea1ab2e</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:38:10 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:38:10.526Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,ரெயில் சேவை,train service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pkw7240i/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pkw7240i/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-</p><p>கேரளம் மாநிலம் சொரனூர் அருகே ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக கோவை-சொரனூர் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. </p> <p>அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சொரனூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் சொரனூர்-கோவை ரெயில் மற்றும் மாலை 4.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-சொரனூர் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rape-of-8-year-old-girl-pocso-convict-gets-20-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rape-of-8-year-old-girl-pocso-convict-gets-20-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">b6bed506-e9bf-44b1-a9b8-530cd8818db4</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:33:10 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:33:10.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,குற்றவாளி,rape,சிறை தண்டனை,Prison sentence,சிறுமி,பாலியல் பலாத்காரம்,girl,போக்சோ,POCSO,culprit</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ytgmwh8z/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ytgmwh8z/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a> வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><h2>8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 8 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">சிறுமியை பாலியல் பலாத்காரம்</a> செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த சுப்பையா மகன் மாரியப்பன் (வயது 55) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><h2>போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை</h2><p>இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி முருகன் நேற்று (18.9.2026) மாரியப்பனை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">குற்றவாளி</a> என உறுதி செய்து அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலையோடு 7 பவுன் நகையை தவறவிட்ட மூதாட்டி: பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/old-woman-who-lost-7-pounds-of-jewelry-with-ganesha-idol-police-rescue-with-public-help</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/old-woman-who-lost-7-pounds-of-jewelry-with-ganesha-idol-police-rescue-with-public-help#comments</comments><guid isPermaLink="false">e4942aea-8e6e-4109-a152-43565166ed0f</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:29:35 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:29:35.295Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Pallikaranai,மீட்பு,Rescue,ஆலந்தூர்,விநாயகர் சிலை,போலீசார்,மூதாட்டி old woman,நகைjewelry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0129zew9/364.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீசார் மீட்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0129zew9/364.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆலந்தூர், </p><p>சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்தவர் கோகிலா (வயது 65). விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து வழிபட்டார். அந்த விநாயகர் சிலைக்கு 7 பவுன் தங்க நெக்லஸ் அணிவித்து பூஜை செய்தார். பூஜை முடிந்ததும் அந்த விநாயகர் சிலையை, அருகில் வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலை அருகே வைத்துவிட்டு கோகிலா வீட்டுக்கு வந்துவிட்டார்.</p><h2>விநாயகர் சிலை</h2><p>சிறிது நேரத்துக்கு பிறகுதான் விநாயகர் சிலைக்கு அணிவித்திருந்த 7 பவுன் தங்க நெக்லஸ் அவரது நினைவுக்கு வந்தது. பதறியடித்து அங்கு சென்று பார்த்தபோது. தனது விநாயகர் சிலை மற்றும் நகையை காணாதது கண்டு அதிர்சி அடைந்தார். இது குறித்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ், அங்கு பெரிய விநாயகர் சிலை வைத்திருந்த பலராமனிடம் கேட்டபோது, அங்கிருந்த சிறிய சிலைகளை பள்ளிக்கரணை ஏரியில் கரைத்து விட்டதாகவும், பூக்களை அருகில் உள்ள குப்பையில் கொட்டியதாகவும் தெரிவித்தார்.</p><h2>மீட்பு</h2><p>இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலரின் உதவியுடன் குப்பை மற்றும் ஏரியில் இறங்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>தேடினர். அப்போது ஏரியில் கிடந்த 7 பவுன் தங்க நெக்லசை மீட்டு மூதாட்டி கோகிலாவிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். நகையை மீட்ட போலீசாருக்கு கோகிலா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஊட்டியில் மழை, வெள்ளம்: விவசாயிகள் கவலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-and-flooding-in-ooty-farmers-concerned</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-and-flooding-in-ooty-farmers-concerned#comments</comments><guid isPermaLink="false">c8f50bbf-0b83-4c77-962f-a92c3cb7570f</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:29:17 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:29:17.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,ஊட்டி,Ooty</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/r3ub8px4/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/r3ub8px4/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி,  </p><p>ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக, விளைநிலத்துக்குள் வெள்ளம் புகுந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.</p><h2>நீலகிரியில் மழை</h2><p>நீலகிரி மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் வழியாக நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களான நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.</p> <p>இதற்கிடையே கடந்த சனிக்கிழமை முதலே நீலகிரி மாவட்டத்தில் பரவ லாக மழை பெய்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி நகரம் சுற்று வட்டார பகுதிகளான லவ்டேல், மஞ்சூர், தாவணை, மல்லிக்கொரை மற் றும் நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர்பவானி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டியில் நிலவி வந்த காலநிலை மாறி பழையபடி ஊட்டி ஜில்லென்ற காலநிலைக்கு மாறியுள்ளது.</p><h2>விளைநிலத்துக்குள் புகுந்த தண்ணீர்</h2><p>இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக காட்டேரி அணை அருகே உள்ள கோலணிமட்டம் பகுதியில் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் விளைபொருட்கள் சேதமடையும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.</p><p>மேலும் அந்தப்பகுதியில் உள்ள விவசாயிகள் தோட்டத்தை பாதுகாக்க தண்ணீரை வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறையினர் மற்றும் அதிகரட்டி பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக பாலத்தில் உள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும். ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை மையம் கொடுத்த அப்டேட் </title><link>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-warning-for-11-districts-update-from-the-meteorological-department</link><comments>https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-warning-for-11-districts-update-from-the-meteorological-department#comments</comments><guid isPermaLink="false">7454ecbd-7194-407b-9f7f-03f4797fdc69</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:26:42 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:26:42.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,weather forecast,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,TN Rains,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,weather information,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/xyem4hon/iuht.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கனமழை எச்சரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/xyem4hon/iuht.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் மராத்வாடாயிலிருந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை, உள் கர்நாடகா மற்றும் கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன்காரணமாக <strong>இன்று (19-09-2026):</strong> நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். </p><p>சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும்.</p> <h2>மழை</h2><p><strong>20-09-2026 மற்றும் 21-09-2026</strong>: நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <p><strong>22-09-2026:</strong> நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>23-09-2026 மற்றும் 24-09-2026:</strong> தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>19-09-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்</p><p><strong>20-09-2026 முதல் 22-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>19-09-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><strong>20-09-2026 முதல் 22-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (19-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>19-09-2026 மற்றும் 20-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் அந்தமான் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>21-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள், அந்தமான் கடலின் அநேக பகுதிகள் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் இதர மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள், அந்தமான் கடலின் அநேக பகுதிகள் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள் &amp; அரபிக்கடல் பகுதிகள்:</ins></strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: 5½ சவரன் தங்க நகை, ரூ.2.10 லட்சம் மீட்பு: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-5-sovereigns-of-gold-jewellery-rs210-lakh-recovered-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-5-sovereigns-of-gold-jewellery-rs210-lakh-recovered-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">56c8482f-bac7-4a8d-ad47-1f358ecd29f3</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:13:04 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:13:04.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Youth arrested,வாலிபர் கைது,மீட்பு,recovery,நகை-பணம் திருட்டு,jewelry-money theft</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/kvc7b2aj/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5½ சவரன் தங்க நகை, ரூ.2.10 லட்சம் மீட்பு: வாலிபர் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/kvc7b2aj/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், கயத்தாறு பகுதியில் தங்க நகை மற்றும் பணம் திருடிய நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5½ சவரன் தங்க நகை மற்றும் ரூ.2.10 லட்சம் ரொக்கப் பணத்தை மீட்டனர். </p><h2>போலீசில் புகார்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் விஜய முத்துப்பாண்டி என்பவரது மனைவி சிவகாமி (வயது 64) என்பவர், கடந்த 17.9.2026 அன்று தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">தங்க நகைகள் மற்றும் பணம் திருடு</a> போனதாக கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், சிவகாமி என்பவரது வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது கயத்தாறு வடக்கு தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் சிவகுமார்(28) என்பது தெரியவந்தது.</p><h2>5½ சவரன் தங்க நகை, ரூ.2.10 லட்சம் பணம் மீட்பு, வாலிபர் கைது</h2><p>இதனையடுத்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் மேற்சொன்ன சிவகுமாரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 5½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மீட்டனர்</a>. மேலும், இச்சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>

லஞ்ச வழக்கு: அன்பில் மகேஷிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன?  போலீசார் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-case-what-questions-were-asked-of-anbil-mahesh-police-clarification</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-case-what-questions-were-asked-of-anbil-mahesh-police-clarification#comments</comments><guid isPermaLink="false">a0168859-84b7-4457-877f-20e29e5f058f</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:07:03 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:07:03.295Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbil Mahesh Poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மத்திய குற்றப்பிரிவு போலீசார்,Corruption case,லஞ்ச ஊழல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/q4llmq4q/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/q4llmq4q/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>விசாரணையின்போது, அன்பில் மகேஷிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு ஒன்றை நேற்று இரவு வெளியிட்டனர். </p><h2>7 மணிநேர விசாரணை</h2><p>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவர் மீதான வழக்கு தொடர்பாக நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார்.  அவரிடம் காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது. விசாரணையில் பல்வேறு கேள்விகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 7 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையின்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு ஒன்றை நேற்று இரவு வெளியிட்டனர். </p> <h2>மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம் </h2><p>அதில் கூறியிருப்பதாவது:-</p><p>அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்பு சட்டபிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில்தான், அவர் மீது இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கில் தொடர்புடைய அரசகுமார், முத்துக்குமார் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் உடனான தொடர்புகள், பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் கட்சி நிதி வசூல் தொடர்பான விவரங்கள், அதோடு தொடர்புடையதாக கண்டறியப்பட்ட வங்கிக்கணக்குகள், பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.</p><p>குற்றம் சார்ந்த நிகழ்வுகள் வாரியாகவும், ஆவணங்கள் ஆதார அடிப்படையிலும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அவருடைய பதில்கள் மற்றும் விளக்கங்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மழைநீர் தேங்கினால் ரூ.10,000 அபராதம்... அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-10000-fine-for-rainwater-stagnation-minister-arunraj-warns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-10000-fine-for-rainwater-stagnation-minister-arunraj-warns#comments</comments><guid isPermaLink="false">18b6750b-1bec-45b6-b9de-77f0421f7aae</guid><pubDate>Sat, 19 Sep 2026 00:59:46 +0000</pubDate><atom:updated>2026-09-19T00:59:46.892Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Dengue,அபராதம்,டெங்கு காய்ச்சல்,Rainwater,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/whv74s4q/363.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/whv74s4q/363.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தேங்கும் மழை நீரை அகற்றாத தொழிற்சாலைகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.</p><p>சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் விழித்திரை காப்போம் திட்டம் குறித்த முன் வெளியீட்டு நிகழ்வை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி இயக்குனர் (பொறுப்பு) லோகநாயகி, அரசு ஆஸ்பத்திரி டீன்கள் சாந்தாராமன், அரவிந்தன், ஹரிகரன், கவிதா உள்ளிட் டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>அபராதம்</h2><p>பருவகால மாற்றத்தால் ஒவ்வொரு நாளும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகமாகத்தான் உள்ளது. தேங்கும் மழைநீரை முறையாக அகற்றாத தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை-பிரயாக்ராஜ் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-between-nellai-and-prayagraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-service-between-nellai-and-prayagraj#comments</comments><guid isPermaLink="false">cad8a30d-d040-41c7-92ad-7bd2343feaca</guid><pubDate>Sat, 19 Sep 2026 00:48:43 +0000</pubDate><atom:updated>2026-09-19T00:48:43.593Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,சிறப்பு ரெயில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/mt5qz2vu/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/mt5qz2vu/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், உத்தரபிர தேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இருந்து நெல்லைக்கு சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பிரயாக்ராஜ்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-04171) இன்று (சனிக்கி ழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி வரை சனிக்கிழமை களில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காலை 10.20 மணிக்கு பிரயாக்ராஜ் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காட்பாடி, ஜோலார் பேட்டை வழியாக திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சேலம் வந்த டையும். பின்னர் 4.40 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக மதியம் 1.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.</p> <p>மறுமார்க்கத்தில், நெல்லை-பிரயாக்ராஜ் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-04172) வருகிற 21-ந் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை திங் கட்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரெயில் இரவு 11.30 மணிக்கு நெல் லையில் இருந்து புறப்பட்டு, கரூர், நாமக்கல் வழியாக செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் 6.40 மணிக்கு புறப் பட்டு, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்று வியாழக்கிழமை அதி காலை 3.30 மணிக்கு பிரயாக்ராஜ் சென்றடையும்.</p><p>இந்த சிறப்பு ரெயில்களில் ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2-ம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான வசதியுடன் கூடிய சரக்கு மற்றும் பிரேக் வேன் பெட்டிகள் உள்ளன. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-61</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-61#comments</comments><guid isPermaLink="false">1794b95e-ebd1-49fb-a886-8a3f4d3f1b93</guid><pubDate>Sat, 19 Sep 2026 00:34:50 +0000</pubDate><atom:updated>2026-09-19T00:34:50.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/l9to0ia3/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/l9to0ia3/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (19.09.2026 சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>மேல்மா கிராம சிப்காட் - நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-withdraws-land-acquisition-notification-for-melma-village-sipcot</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-withdraws-land-acquisition-notification-for-melma-village-sipcot#comments</comments><guid isPermaLink="false">b4464397-c5f5-4fc1-a811-0d50750d47c2</guid><pubDate>Fri, 18 Sep 2026 22:31:56 +0000</pubDate><atom:updated>2026-09-18T22:31:56.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிப்காட்,நில எடுப்பு,மேல்மா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/nw6fp1y7/sipcot.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/nw6fp1y7/sipcot.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நில ஆர்ஜிதம் தொடர்பாக நேற்றிரவு 11.30 மணிக்கு மேல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-1.9.2026 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில், சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3 க்காக திருவண்ணாமலை மாவட்டம்,செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் அலகு 1 பிளாக் 2-ல் 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய, தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. </p><p>திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் அந்த அரசிதழில் உள்ள 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சகோதரரை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரியவில்சன் மீதான விசாரணைக்கு தடை நீடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stay-on-inquiry-against-minister-maria-wilson-in-case-involving-assault-on-brother-extended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stay-on-inquiry-against-minister-maria-wilson-in-case-involving-assault-on-brother-extended#comments</comments><guid isPermaLink="false">bf6f7298-f12e-4537-aa89-6982e74bf032</guid><pubDate>Fri, 18 Sep 2026 22:25:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T22:25:00.513Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விசாரணை,புதுவை,maria wilson,மரியவில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/kvi1s4pm/mari-wilson.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/kvi1s4pm/mari-wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படு கிறது. இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் கோர்ட்டில் நீதி பதி சந்திரசேகர் (பொறுப்பு) முன்னிலையில் நடந்து வருகிறது. </p><p>இந்த வழக்கு வருகிற 21-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்கி டையே புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் கடந்த 11-ந் தேதி அமைச்சர் மரியவில்சனை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என அவரது தரப்பில் வக்கீல் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆனந்த், வழக்கை விசாரிக்க நேற்று வரை இடைக்கால தடை விதித்து இருந்தார். இந்த வழக்கு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால தடையை வருகிற 25-ந்தேதி வரை நீடித்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>முல்லை பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்திடம் இருந்து உரிய பதில் வரவில்லை- கேரள மந்திரி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mullaperiyar-dam-issue-kerala-minister-accuses-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mullaperiyar-dam-issue-kerala-minister-accuses-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">cd12bb65-5548-4e68-9ce8-1fa4cf7ffd7d</guid><pubDate>Fri, 18 Sep 2026 21:35:10 +0000</pubDate><atom:updated>2026-09-18T21:35:10.680Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,முல்லை பெரியாறு அணை,கேரள மந்திரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/s2q73swe/Mullai-periyarr-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/s2q73swe/Mullai-periyarr-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருவனந்தபுரம், </p><p>கேரளம் மாநிலம் கோட்டயத்தில் நீர்வளத்துறை மந்திரி மோன்ஸ் ஜோசப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழகத்துடன் பேச்சு வார்த்தையை தொடர கேரளம் அரசு விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய முதல்-அமைச்சர்கள் மாநாட்டின் போது, முதல்-மந்திரி வி.டி.சதீசனும், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். ஆனால், தமிழகத்திடம் இருந்து இதுவரை உரிய பதில் எதுவும் வரவில்லை. இதனை கேரளம் அரசு தீவிர மாக எடுத்துக்கொள்கிறது.</p> <p>முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளம் மக்களின் பாதுகாப்பைக் கருத் தில் கொண்டு, முல்லைப்பெரியாறில் ஒரு புதிய அணையைக் கட்டுவதே இதற்கான தீர்வு. தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை முழுமையாக வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு தண்ணீர் தேவை. கேரளத்துக்கு மக்களின் பாதுகாப்பு முக்கியமானது.  இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், இந்த பிரச்சினையில் ஒருமித்த கருத்தை எட்ட முடியுமா? என்பது குறித்து இரு மாநிலங்களும் விவாதிக்கும். நாங்கள் இப்போது உச்ச நீதிமன்றத்தை நம்பி முன்னேறி வருகிறோம். </p><p>அதே நேரத்தில், கேரளத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கும் பொருட்டு, இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையை தீர்த்து வைக்க மத்திய அரசை ஒரு மத்தியஸ்தராக கொண்டு வரவும், அதனைச் சம்மதிக்க வைக்கவும் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் தொடர்பான வழக்கு தள்ளுபடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-regarding-meenakshi-amman-temple-trustees-dismissed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-regarding-meenakshi-amman-temple-trustees-dismissed#comments</comments><guid isPermaLink="false">a390ec73-b41c-42f4-8bfb-ce5d3c1ae1f8</guid><pubDate>Fri, 18 Sep 2026 21:08:58 +0000</pubDate><atom:updated>2026-09-18T21:08:58.316Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,அறங்காவலர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/c1eraaou/madurai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/c1eraaou/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை எழுமலையைச் சேர்ந்த கீதாலட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தற்போதைய அறங்காவலர் குழுவா னது, அரசியல் கட்சிகளுடன் அதிகம் தொடர்பு கொண்ட நபர்களை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. </p> <p>இது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டவிதிகளுக்கு முரணானது. அறங்காவலர்களின் நியமனம், அரசியல் கட்சிகளின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் இருக்கக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இதில் பல வழிகாட்டு தல்களையும் வழங்கி இருக்கிறது.அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலின் அறங்காவலர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசியல் தலையீடு இன்றி வெளிப்படையாக நியமிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மீனாட்சி அம்மன் கோவிலின் தற்போதைய அறங்காவலர் குழு பதவிக்காலத்தை நீட்டித்ததை எந்த தரப்பினரும் எதிர்க்கவில்லை. அவர்களின் பதவிக்காலம் 2028-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் முடிகிறது. அதன்பின்புதான் புதிய அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>இதைபதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரவில்லை. அரசியல் சார்பற்றவர்களை வெளிப்படை தன்மையோடு நியமிக்குமாறு கோரியிருக்கிறார்.ஆனால் இப்போதைக்கு அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிய வில்லை. எனவே இந்த மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது. எனவே இந்த மனுவை தற்போது விசாரிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்:-இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-constituency-by-elections-final-list-of-candidates-to-be-released-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-constituency-by-elections-final-list-of-candidates-to-be-released-today#comments</comments><guid isPermaLink="false">65c32c40-e64c-48e3-aa67-20e3a6d1e353</guid><pubDate>Fri, 18 Sep 2026 19:06:08 +0000</pubDate><atom:updated>2026-09-18T19:06:08.574Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,வேட்பாளர் பட்டியல்,மதுராந்தகம்,தாராபுரம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/zzrchhij/Maduranthakam.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம், தாராபுரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/zzrchhij/Maduranthakam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாராபுரம், </p><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தா மன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள் ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.</p><h2>தாராரபுரம்</h2><p>அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கியது. கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன்படி, த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீ லனை 17-ந் தேதி நடந்தது.இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.</p><h2>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</h2><p>இன்று (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். எனவே இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், இனி பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதா? உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/filing-cases-against-those-protesting-for-justice-udhayanidhi-stalin-strongly-condemns-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/filing-cases-against-those-protesting-for-justice-udhayanidhi-stalin-strongly-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">96688f2c-0e9b-4187-b2e6-109da92899dd</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:49:47 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:49:47.834Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Madurai,மதுரை,போராட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ibivxx3z/Udhayanidhi-stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ibivxx3z/Udhayanidhi-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின்  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:  மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.பெற்ற பிள்ளையை இழந்து நீதி கேட்டு போராடினால், வழக்கு போடுவதும், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது உறவினரை விசாரணைக்கு வர சொல்லி சம்மன் அனுப்புவதும் எந்த வகையிலும் ஏற்க முடியாதது.</p><h2>மரணத்தில் நடந்தது என்ன?</h2><p>மாணவன் மறைந்து 12 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக போராட்டத்தை ஒடுக்குவதிலும் - வழக்குப் பதிவு செய்வதிலும் தான் காவல்துறை குறியாக இருக்கிறது.இந்த பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு, மாணவன் மரணத்தில் நடந்தது என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அதற்கு காரணம் யார்? என்பதை எல்லாம் எந்த குறுக்கீடும் இல்லாமல் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.</p> <h2>நீதி கிடைக்க</h2><p>குறிப்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மரணமடைந்த மாணவனின் குடும்பத்தார் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற்று, அவர்களுக்கான நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவல் துறையினர் என்னிடம் எழுப்பிய 295 கேள்விகளில் 246 கேள்விகளுக்கு பதில் அளித்தேன் - அன்பில் மகேஸ் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-answered-246-out-of-295-questions-anbil-magesh-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/i-answered-246-out-of-295-questions-anbil-magesh-interview#comments</comments><guid isPermaLink="false">11b202bc-5286-466d-9a21-1965e2f837aa</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:07:34 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:07:34.322Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,அமைச்சர் அன்பில் மகேஸ்,லஞ்ச புகார்,AnbilMahesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/cti01k4t/anbilone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அன்பில் மகேஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[  295 கேள்விகளில் 246 கேள்விகளுக்கு பதில் அளித்தேன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/cti01k4t/anbilone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல் துறையினர் என்னிடம் எழுப்பிய 295 கேள்விகளில் 246 கேள்விகளுக்கு பதில் அளித்தேன் என அன்பில் மகேஸ் கூறினார்.</p><p>திமுக ஆட்சியில் தனி யார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன் னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியி டம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர். </p><p>அன்பில் மகேஷிடம் காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது.  விசாரணையில் பல்வேறு கேள்விகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அமைச்சர் அன்பில் மகேஷிடம் 7 மணிநேரத்திற்கு மேலாக நடந்த மத்தியக் குற்றப்பிரிவு  போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.</p><p>இந்தநிலையில்,  முன்னாள் அமைச்சர்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%20"> அன்பில் மகேஸ் </a>பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>செப்.16-ம் தேதியன்று எனது  வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் மத்திய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இன்றைய விசாரணையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் என்னிடம் 246 கேள்விகள் எழுப்பினர். </p><p>காவல்துறையினர் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதிலளித்தேன்.  வழக்கு தொடர்புடைய ஆதாரங்கள் எதுவும் சிக்காத நிலையில் என்னை விசாரணைக்கு அழைத்தனர். கேள்விகள் இன்னும் எஞ்சியிருப்பதால் அடுத்தவாரம் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்புவதாக கூறியுள்ளனர். அரசகுமாரிடம் இதுவரை நான் பேசியதில்லை. இதுசார்ந்து நீங்கள் அவரிடம் தான் கேட்கவேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-fever-3-students-die-at-anna-university-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-fever-3-students-die-at-anna-university-chennai#comments</comments><guid isPermaLink="false">2cebc9fd-559d-45cc-8658-762b17486bc0</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:03:16 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:03:16.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெங்கு காய்ச்சல்,Dengue Fever,Anna University,அண்ணா பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/towomz69/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/towomz69/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. வெயில் மற்றும் மழை என காலநிலை மாற்றத்தால், டெங்குவை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. </p><p>குறிப்பாக தினசரி, 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p> <p>தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,577ஆக உயர்ந்துள்ளது. டெங்கு பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து படித்து வரும் மாணவ, மாணவிகள் சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 2 பேர் உயிரிழந்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்திலேயே உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் கடந்த 4 நாட்களாக மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்த ஹரிஷ்குமார் என்ற மாணவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பருவமழை: முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-corporation-commissioner-holds-consultation-with-officials-regarding-precautionary-measures</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-corporation-commissioner-holds-consultation-with-officials-regarding-precautionary-measures#comments</comments><guid isPermaLink="false">59bb4490-87ed-4fe3-aeb4-398e9a39f2de</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:59:23 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:59:23.051Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Corporation Commissioner,சென்னை மாநகராட்சி ஆணையர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ehpkjsy7/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ehpkjsy7/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், சென்னையில் தொடர்ந்து மழை இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.</p><h2>வானிலை மையம் எச்சரிக்கை</h2><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இன்று (18.09.2026) மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், சென்னையில் தொடர்ந்து மழை இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசணைக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பேசும்போது தெரிவித்ததாவது:</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னையில் </a>தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, மாநகராட்சி அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியாளர்களை தயார் நிலையில் வைத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு இடையூறின்றி போக்குவரத்து சீராகச் செல்லும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மழையினால் விழும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றுவதற்கான வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>மழைநீர் தேங்கும் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்து தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றிட வேண்டும். நிவாரண மையங்கள் மற்றும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். பணியாளர்களை சுழற்சி முறையில் நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களிடம் இருந்து வரப்பெறும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என ஆணையாளர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகம், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) சித்ரா விஜயன், காணொலிக் காட்சியின் வாயிலாக வட்டார துணை ஆணையாளர்கள் ஸ்வேதா சுமன், (வடக்கு), எச்.ஆர்.கவுஷிக், (மத்தியம்), அதாப் ரசூல், (தெற்கு) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-chief-minister-vijays-instagram-followers-cross-5-million</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-chief-minister-vijays-instagram-followers-cross-5-million#comments</comments><guid isPermaLink="false">436d5780-0b68-4346-9f9b-bf864e8a0e8d</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:45:22 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:45:22.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இன்ஸ்டாகிராம்,Instagram,Followers,சாதனை,50 லட்சம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/o36g6hm6/cmvijayinsta.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து சாதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/o36g6hm6/cmvijayinsta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய், சமூக வலைத்தளங்களிலும் புதிய சாதனை படைத்து வருகிறார். அவரது அதிகாரப்பூர்வ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">இன்ஸ்டாகிராம்</a> பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 50 லட்சத்தை (5 மில்லியன்) கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.</p> <h2>4 லட்சமாக மட்டுமே இருந்தது</h2><p>தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பு, தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">முதல்-அமைச்சர் </a>இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் 4 லட்சமாக மட்டுமே இருந்தது. அவர் பதவியேற்ற பிறகு இந்த எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து, தற்போது 5 மில்லியனை (50 லட்சம்) கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.</p><h2>சமூக வலைத்தளத்தில் சாதனை</h2><p>திரையுலகில் இருந்து அரசியல் களம் புகுந்து, தற்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக மக்கள் பணியாற்றி வரும் விஜய், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பொதுமக்களுடனும், தனது கட்சி தொண்டர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். அவரது அரசு அறிவிப்புகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றன.</p><h2>ரசிகர்கள், தொண்டர்கள் உற்சாகம்</h2><p>இந்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து, 50 லட்சம் என்ற  இலக்கை எட்டியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். </p> ]]></content:encoded></item><item><title>எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/corporation-commissioner-inspects-egmore-government-maternity-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/corporation-commissioner-inspects-egmore-government-maternity-hospital#comments</comments><guid isPermaLink="false">37d1f063-898d-4242-8399-4d7183355f34</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:44:43 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:44:43.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai Corporation,Egmore,எழும்பூர்,அரசு மருத்துவமனை,Chennai Egmore,மாநகராட்சி ஆணையர்,Government Hospitals</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/i0kbw88k/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/i0kbw88k/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் எழும்பூர், அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். </p><h2>மருத்துவமனையில் ஆய்வு</h2><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இன்று (18.09.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் எழும்பூர், அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இம்மருத்துவமனையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின், தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செயல்பாட்டிற்கான தங்க மோதிரங்கள் வைக்கும் பாதுகாப்புப் பெட்டகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட தாய்மார்களுக்கான வசதிகள் குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>இதன் தொடர்ச்சியாக, ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கீழ்காணும் முன்னேற்பாட்டு செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.</p><h2>அலுவலர்களுக்கு ஆலோசனை</h2><p>பாதுகாப்பான சேமிப்பு, கணக்கு பராமரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்காக, 19 பிரசவ மையங்களும் 4 மையங்களுடன் (Hub) இணைக்கப்பட்டுள்ளன. 19 நகர்ப்புற சமுதாய நல மையங்கள், பதிவு, சரிபார்ப்பு மற்றும் பயனாளிகளை ஒருங்கிணைத்தல், தொடர்புடைய மையங்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்துதல்.</p><p>பிரசவங்கள் நடைபெறும் CEmONC மையங்களை அலுவலர்கள் ஆய்வு செய்த நடவடிக்கைகள். அனைத்து அரசு பிரசவங்கள், புறநகர் மரூத்துவமனைகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் நடைபெற்ற பிரசவங்களின் Parturition Register/பிரசவப் பதிவேடு பெறப்பட்டு சரிபார்க்கப்பட்ட விவரம். பயனாளிகள் எண்ணிக்கை தயார் செய்யும் நடவடிக்கைகள். மையம் (Hub) மற்றும் கிளை (Spoke) மையங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தளவாடங்கள் (Infrstructure &amp; Logistics) சரிபார்த்தல் விவரம் உள்ளிட்ட தொடர்புடைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆணையாளர் ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.</p><p>இந்த ஆய்வின்போது, எழும்பூர், அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் குப்புலட்சுமி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் களைகட்டிய பேஷன் ஷோ: சிறப்பு அழைப்பாளர்களாக ஆதவன் ஆதித்தன்-சம்யுக்தா பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fashion-show-in-chennai-comes-alive-athavan-adhithan-and-samyuktha-participate-as-special-guests</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fashion-show-in-chennai-comes-alive-athavan-adhithan-and-samyuktha-participate-as-special-guests#comments</comments><guid isPermaLink="false">2155c3aa-e247-4816-bb40-dddf6be140c2</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:35:26 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:35:26.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பேஷன் ஷோ,fashion show</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/5t90nst5/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/5t90nst5/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆங்கில நாளிதல் நிறுவனத்தின் சார்பில் பேஷன் ஷோ நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரகானே தயாரித்த ஆடைகளை அணிந்தபடி மாடல்கள் மேடையில் ரேம்ப் வாக் சென்றனர்.  </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/hipxb1kk/State-07.jpg" /></figure><p>இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தினத்தந்தி குழும இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், அவரது மனைவியும் 'நேச்சுரல்லி லைஃப்' (Naturealle Life) நிறுவனருமான சம்யுக்தா ஆகியோர் பங்கேற்றனர். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/yiUImDzGmwY"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: பாமக ஆதரவு யாருக்கு? அன்புமணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-dharapuram-by-election-who-will-pmk-support-important-announcement-made-by-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-dharapuram-by-election-who-will-pmk-support-important-announcement-made-by-anbumani#comments</comments><guid isPermaLink="false">87e3324e-b5bd-4ef2-9332-dbafa07f1239</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:33:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:33:53.497Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,Anbumani Ramadas,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,பாமக அன்புமணி ராமதாஸ்,By-election,Madhuranthakam,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/e0k9tk01/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/e0k9tk01/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><h2>5 முனை போட்டி</h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. </p><p>தற்போது நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக பாமக-வின் ஆதரவை எதிர்பார்த்து இருந்து வந்தது. இந்த நிலையில் பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadass">அன்புமணி ராமதாஸ்</a> இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். </p><p>அதில் அவர் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது. </p><h2>எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை...</h2><p>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வுகளின் முடிவில், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-navodaya-schools-in-tamil-nadu-udayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-navodaya-schools-in-tamil-nadu-udayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">c65a4c9c-e57b-42d1-bee6-7b7db7ad7ccb</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:12:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:12:11.906Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,All over Tamil Nadu,தமிழ்நாட்டில்,வேண்டாம்,நவோதயா பள்ளிகள்,Navodaya Vidyalaya</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/br62kbgf/udhyanithi.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/br62kbgf/udhyanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><h2>தனித்தன்மையுடன் இயங்குகிறது</h2><p>நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில், "தமிழ்நாடு, இந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாநிலங்கள் தனி நாடுகளாக இயங்க முடியாது" என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சுப்ரீம் கோர்ட்டு</a> கருத்து தெரிவித்திருக்கிறது. இந்த நேரத்தில், நாங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. தமிழ்நாடு தனி நாடாக இயங்கவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது.</p><h2>வேற்றுமையில் ஒற்றுமை</h2><p>இந்தியை திணிப்பதுதான் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனித்தீவாக அந்நியப்படுத்தும். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதை மதித்து, அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு விருப்பமான மொழி கொள்கையை பின்பற்ற அனுமதிப்பதே இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமையும்.</p> <h2>நாட்டுப்பற்று</h2><p>இந்திய–சீன போர்', 'வங்கதேச விடுதலை போர்', 'கார்கில் போர்', 'குஜராத் நிலநடுக்கம்' என நம் நாடு சந்தித்த ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும், தமிழர்கள் தங்களுடைய நாட்டுப்பற்றை வேறெந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் குறைவில்லாத வகையில் வெளிப்படுத்தியுள்ளனர்.</p> <h2>இந்தி மொழி திணிப்பு வேண்டாம்</h2><p>எனவே, 'இந்தி மொழி திணிப்பு வேண்டாம்' என்று கூறுவதாலேயே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியை கற்பதற்கும் நாட்டுப்பற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இருமொழி கொள்கையை பின்பற்றும் தமிழ்நாடுதான் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. </p> <h2>முதலிடம் வகிக்கிறது</h2><p>உயர்கல்வி சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாக திகழ்கிறது. நோபல் விருதாளர்கள் முதல் இஸ்ரோவின் முன்னணி அறிவியலாளர்கள் வரை, இந்தி தெரியாமலேயே தமிழர்கள் சாதனைகளை படைத்துள்ளனர்.</p><h2>வளர்ச்சி இன்ஜின்</h2><p>எனவே, இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவை சந்திக்கவில்லை; மாறாக, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழ்நாடு விளங்குகிறது.</p><h2>தரமான கல்வி வழங்கப்பட்டுவருகிறது</h2><p>நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், முந்தைய திராவிட மாடல் அரசின் சார்பில் உறுதியான வாதங்களை எடுத்து வைத்தோம். அரசியலமைப்பு சட்டத்தில், கல்வி ஒத்திசைவு பட்டியலில்  இடம் பெற்றுள்ளதால், மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரி பள்ளிகள் எனும் உண்டு-உறைவிட பள்ளிகள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.</p><h2>நவோதயா பள்ளிகள்</h2><p>அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றிபெற்று, நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், நவோதயா பள்ளிகளுக்காக தனியாக இடம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. நவோதயா பள்ளிகளுக்கு அளிக்கும் நிதி நிலையை தமிழ்நாடு அரசிடம் அளித்தால், தற்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பை கொண்டே சிறப்பாக செயல்பட முடியும்.</p><h2>3,548 கோடி நிலுவை தொகை</h2><p> மேலும், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 3,548 கோடி ரூபாயை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம்.</p><h2>மகிழ்ச்சியளிக்கிறது</h2><p>தற்போது அந்த வழக்கில், தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள அரகம் நமது இருமொழி கொள்கையை பின்பற்றி, நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க தேவையில்லை என்பதை தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிலைப்பாட்டில், தற்போதைய அரசு தொடர்ந்து உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும். </p><h2>தனி தீர்மானம்</h2><p>மேலும், தேவை எழுந்தால் உடனடியாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கட்டி, நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது எனும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, தனி தீர்மானம் இயற்றிட வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.</p> <h2>தடுத்து நிறுத்துவோம்!</h2><p>பேரறிஞர் அண்ணாவால் இம்மண்ணில் விதைக்கப்பட்ட இருமொழி கொள்கையை, அரசியல் வேறுபாடுகளை கடந்து சுப்ரீம் கோர்ட்டில் நிலைநாட்டுவோம்! மும்மொழி கொள்கையை திணிக்கும் நவோதயா பள்ளிகளை தடுத்து நிறுத்துவோம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-issue-tamil-nadu-government-files-urgent-petition-in-supreme-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-issue-tamil-nadu-government-files-urgent-petition-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">ef2e19ba-522b-4a32-97d6-43372c4a8334</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:26:25 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:26:25.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்டு,காவிரி நீர்,Tamil Nadu Government,தமிழக அரசு,Petition,மனு,Cauvery Water Issue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/vx7q045h/supreme-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுப்ரீம் கோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/vx7q045h/supreme-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட உத்தரவிடக்கோரி <a href="https://www.dailythanthi.com/topic/supreme-court">சுப்ரீம் கோர்ட்</a>டில் தமிழக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.</p><h2>நடவடிக்கை</h2><p>அந்த மனுவில், ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும் உரிய நீரை வழங்காத கர்நாடகா அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதிய நீர்வரத்து இருக்கும் போதோ அல்லது அணைகள் நிரம்பி வழியும் போது மட்டுமே கர்நாடகா தண்ணீரை திறக்கிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் 4 முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடகா பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். </p><p> "உரிய நீரை வழங்காத கர்நாடகா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 16.01 டி.எம்.சி. நீரை திறந்தவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் 30 முதல் 35 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின் பேரில் கர்நாடக அரசு போதுமான நீரை திறந்து விடாத நிலையில், தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: கரூப்பூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி வி.சி.க.வினர் சாலை மறியல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-vck-members-stage-a-road-blockade-demanding-the-removal-of-the-karuppur-toll-plaza</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-vck-members-stage-a-road-blockade-demanding-the-removal-of-the-karuppur-toll-plaza#comments</comments><guid isPermaLink="false">58f10d2e-a504-4672-89a0-ec506f9d86a4</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:23:47 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:23:47.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Salem,சேலம்,VCK,சாலை மறியல்,வி.சி.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/c69egwlg/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/c69egwlg/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் கரூப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியின் உரிமம் காலாவதி ஆகிவிட்டதாகவும், உள்ளூர் மக்களுக்கான சலுகைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கரூப்பூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>ஓமலூர் தொகுதி வி.சி.க. மாவட்ட செயலாளர் சாம்ராய் குரு தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர், டோல்கேட் சுங்கச்சாவடியின் இருபுற சாலைகளிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>பெண் தலைவர்களுக்கு எதிரான அவதூறு பிரசாரத்தை உடனடியாக நிறுத்துங்கள் - கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stop-defamation-campaign-against-women-leaders-immediately-communist-demands</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stop-defamation-campaign-against-women-leaders-immediately-communist-demands#comments</comments><guid isPermaLink="false">4483e319-f98f-4095-8018-b8ab626f2534</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:22:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:22:11.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெண்,women,insistence,வலியுறுத்தல்,Communist,அவதூறு கருத்து,கம்யூனிஸ்ட் கட்சி,நிறுத்துங்கள்,அரசியல் கட்சிகளின் தலைவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/8awoin9a/miruthula.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மிருதுளா,பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெண் தலைவர்களுக்கு எதிரான அவதூறு பிரசாரத்தை உடனடியாக நிறுத்துங்கள் - கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/8awoin9a/miruthula.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சமூக வலைதளங்களில் சி. மிருதுளாவை ஆபாசமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பதிவிடுவோர்கள் மீது  மீது  நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்</a> தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கண்டனம்</h2><p>இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினருமான சி. மிருதுளா சமூக வலைதளத்தில் அளித்த பேட்டியை குறிப்பிட்டு அவரை இழிவு செய்யும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">சமூக வலைதளத்தில் </a>தொடர்ந்து பதிவிட்டு வருவதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது.</p><h2>இழிசெயலாகும்</h2><p>கடந்த 10 தினங்களாக ஆணாதிக்க, சாதிய வன்மங்களுடன் சி. மிருதுளா சமூக வலைதள பக்கங்களில் தாக்கப்பட்டு வருகிறார். இது கருத்துரிமை மற்றும் போராட்ட நடவடிக்கையை ஒடுக்கும் பிற்போக்கு கருத்தியலை நோக்கமாக கொண்ட இழிசெயலாகும்.</p><h2>ஆபாச சித்தரிப்பு</h2><p>எனவே, உடனடியாக தமிழ்நாடு காவல்துறை தலையீடு செய்வது அவசியம். சமூக வலைதளங்களில் தனிநபர்கள் மீதும், சி. மிருதுளா போன்ற மாநில தலைவர் பொறுப்புகளில் உள்ள பெண்கள் மீதும் நடைபெறும் ஆபாச சித்தரிப்புகளையும், வன்மம் கொண்ட வார்த்தைகளையும் பதிவு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வாகன ஓட்டிகளே உஷார்... நிலுவை இ-சலான்களை செலுத்த சிறப்பு ஏற்பாடு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/motorists-beware-special-arrangement-to-pay-pending-e-challans</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/motorists-beware-special-arrangement-to-pay-pending-e-challans#comments</comments><guid isPermaLink="false">8d9dd2f0-53f0-4364-b4d4-d20d4dc7bc59</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:35:07 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:35:07.320Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Motorists,வாகன ஓட்டிகள்,அபராதம்,சிறப்பு ஏற்பாடு,Special arrangement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/j6wamb5z/police-fine.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/j6wamb5z/police-fine.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு கண்காணிப்பு கேமரா மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.</p><h2>அபராத தொகை</h2><p>ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்வது, செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது மற்றும் லைசென்ஸ் இல்லாமலும், மது அருந்திவிட்டு வாகனங்கள ஓட்டுவதற்காகவும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். தானியங்கி எண் பலகை கண்டறிதல் கேமராக்கள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு போன்றவை மூலம் உருவாக்கப்பட்ட மின் சலான்கள் பற்றி பல வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை. அதனால் அபராத தொகை செலுத்தப்படாமல் நிலுலையில் உள்ளது.</p><p>பல வாகன ஓட்டிகளுக்கு தங்களுக்கு விதிக்கப்பட்ட <a href="http://dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> என்னவென்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். சென்னையில் பல கோடி ரூபாய் அபராத நிலுவைத் தொகை உள்ளது. இதனை வசூலிக்க போக்குவரத்து போலீசார் புதிய திட்டத்தை வகுத்துள்ளனர்.</p><h2>விழிப்புணர்வு</h2><p>போக்குவரத்து விதி மீறலுக்காக விதிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மின் சலான்களை வாகன ஓட்டிகள் சரிபார்த்து செலுத்துவதற்கு உதவ சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நகரம் முழுவதும் 15 சிறப்பு அழைப்பு மையங்களை அமைத்து வசூலிக்க திட்டமிட்டுள்ளது. வருகிற 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்த மையங்கள் செயல்படும். இந்த மையங்கள் 10 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். காவல்துறையினர் வாகன ஓட்டிகளை தொடர்பு கொண்டு நிலுவையில் உள்ள சலான்கள் பற்றி தெரிவிப்பார்கள். மொத்தமாக எஸ்.எம்.எஸ். விழிப்புணர்வுகளை அனுப்புவார்கள். </p><h2>அவகாசம்</h2><p>தொலைபேசி அல்லது நேரில் விவரங்களை கேட்பவர்களுக்கு தகவல்கள் வழங்கப்படும். வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள சலான்களை ஆன்லைனில் சரி பார்த்து ஆன்லைன் போர்ட்டல்கள், பேடிஎம், தபால் நிலையங்கள் மற்றும் மின் சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். மது போதையில் வாகனம் ஓட்டியதற்கான அபராதங்களை நீதிமன்றம் மூலமாக செலுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள செலான்களை சரி பார்த்து அபராதத்தை செலுத்த ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. </p><p>போக்குவரத்து போலீசார் அமைத்துள்ள 15 மையங்கள் விவரம் வருமாறு:</p><p>1 அயனாவரத்தில் உள்ள ஐ.சி. எப். அனெக்ஸ் போலீஸ் பூத்</p><p>2) ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி போலீஸ் பூத்</p><p>3) அபிராமபுரத்தில் உள்ள கிரீன்வேஸ் சந்திப்பு போலீஸ் பூத்</p><p>4) அண்ணா சாலையில் உள்ள டவர் க்ளாக் சந்திப்பு போலீஸ் பூத்</p><p>5) அண்ணா நகர் சுழற்சி</p><p>6)  அண்ணா ஆர்.சி. போக்குவரத்து போலீஸ் பூத்</p><p>7) மதுரவாயல் போக்குவரத்து போலீஸ் நிலையம்</p><p>8) மாதவரம் போக்குவரத்து காவல் நிலையம்</p><p>9) பூக்கடை போலீஸ் நிலையம்</p><p>10) வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம்</p><p>11) புளியந்தோப்பு போலீஸ் நிலையம்</p><p>12) மாம்பலம் போலீஸ் நிலையம்</p><p>13) அடையாறு போலீஸ் நிலையம்</p><p>14) கத்திப்பாரா மேம்பா லத்தின் கீழ் உள்ள போக்கு வரத்து மவுண்ட் சப் டிவிஷன் வளாகம்</p><p>15) வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவ லகத்தில் உள்ள தலைமையகம்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பரப்புரையை 24ம் தேதி தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-edappadi-palaniswami-to-begin-campaigning-on-the-24th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-edappadi-palaniswami-to-begin-campaigning-on-the-24th#comments</comments><guid isPermaLink="false">6e66e6ae-3346-4f9b-9f1d-ff5ee934dd32</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:24:27 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:24:27.947Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,Election,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,Maduranthakam,Dharapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/3zmg89yu/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/3zmg89yu/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை வரும் 24ம் தேதி தொடங்குகிறார்.</p><h2>எடப்பாடி பழனிசாமி பிரசாரம்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தின் விவரத்தை அதிமுகவின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24.9.2026 முதல் 3.10.2026 வரை, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.</p><h2>பிரசாரம் மேற்கொள்ளும் தொகுதி</h2><p><strong>மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி :</strong> 24.9.2026, 25.9.2026, 3.10.2026</p><p><strong>தாராபுரம் சட்டமன்றத் தொகுதி :</strong> 27.9.2026, 28.9.2026, 2.10.2026</p><h2>விரைவில் வழித் தடங்கள் அறிவிப்பு</h2><p>'கழகப் பொதுச் செயலாளர்' சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் வழித் தடங்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.</p><p>சுற்றுப் பயணத் திட்டத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், சம்பந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தேர்தல் </a>பணிக்குழு பொறுப்பாளர்கள், சிறப்பான முறையில் செய்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீமைக் கருவேல மரங்களை அகற்ற நிதியை விடுவிக்க வேண்டும் - வைகோ தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/funds-must-be-released-to-remove-seemai-karuvelam-trees-high-court-orders-tamil-nadu-government-in-case-filed-by-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/funds-must-be-released-to-remove-seemai-karuvelam-trees-high-court-orders-tamil-nadu-government-in-case-filed-by-vaiko#comments</comments><guid isPermaLink="false">89626c72-8a7e-4386-b2ea-7c98c558ecef</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:21:55 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:21:55.014Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வைகோ,ஐகோர்ட்டு,தமிழக அரசு,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/h42qqxor/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/h42qqxor/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சீமைக் மரங்களை அகற்றுவதற்கான பணிக்காக மாவட்ட கனிம நிதியை பயன்படுத்த வேண்டும். அதற்காக கனிம நிதியில் இருந்து ரூ.5 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுருந்தது. </p><p>இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார், நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில அறிக்கை தாக்கல் செய்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், “சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு கனிம நிதியை விடுவிப்பது தொடர்பாக மாவட்ட குழுக்களுடைய ஒப்புதலை பெற்று நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிதியின் பயன்பாடு தொடர்பாக சில கட்டுப்பாடுகள் உள்ளதால், நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.</p><p>அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த வைகோ தனது தரப்பு வாதத்தின்போது, “சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டுக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஐகோர்ட்டின் உத்தரவுகள் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். </p><p>இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியை பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தடையும் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. அதனால் விதிகளை காரணம் காட்டி நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 9-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி லஞ்ச வழக்கு:  அன்பில் மகேஷிடம் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-7-hour-interrogation-of-anbil-mahesh-concludes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-7-hour-interrogation-of-anbil-mahesh-concludes#comments</comments><guid isPermaLink="false">e0c20d96-c901-4ec7-8823-978b6524ac3a</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:55:46 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:55:46.368Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,சென்னை,police,அன்பில் மகேஷ்,மத்திய குற்றப்பிரிவு போலீசார்,லஞ்ச புகார்,anbil magesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/kwgg7vxa/makesh33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
ரூ.100 கோடி லஞ்ச வழக்கு]]></media:title><media:description type="html"><![CDATA[ விசாரணை நிறைவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/kwgg7vxa/makesh33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் 7 மணிநேரத்திற்கு மேலாக நடந்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றது. </p><p>சென்னை தியாகராயநகரில் செயல்படும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுதருவதாக கூறி, ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி நடந்துள்ளது என்றும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.</p><h2>திருமண மண்டபத்தில் வைத்து பணம் வசூல்</h2><p>இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தி.மு.க. பிரமுகரான பி.டி.அரசகுமாரும், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்தும், போரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தும் சந்தித்து, பணம் வசூலித்ததாக தெரியவந்தது.</p><p>அதன் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அவர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை 177 பேர் புகார் கொடுத்துள்ளனர். 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 61 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள்.</p><h2>அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்குப்பதிவு</h2><p>அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது, லஞ்ச ஊழல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது. திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">அன்பில் மகேஷ் பொய்யாமொழி</a> மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இதனையடுத்து நேற்று முன்தினம் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, திருச்சியில் 9 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 18 செல்போன்கள், 3 மடிக்கணி னிகள், 8 பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.</p><h2>விசாரணை நிறைவு</h2><p>சோதனை முடிவில் 18-ந்தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கி சென்றனர். போலீசாரின் சம்மனின்படி வழக்கு விசாரணைக்காக சென்னை வேப்பேரியில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஷ் ஆஜரானார். </p><p>அன்பில் மகேசிடம் காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது.  விசாரணையில் பல்வேறு கேள்விகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    அமைச்சர் அன்பில் மகேஷிடம் 7 மணிநேரத்திற்கு மேலாக நடந்த</p><p>மத்தியக் குற்றப்பிரிவு  போலீஸ் விசாரணை நிறைவு பெற்றவுடன் வெளியே வந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார் அன்பில் மகேஸ். </p><p>தனியார் பள்ளிகளுக்கு அனுமதி, அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி என மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்வர் மருந்தக பெண் ஊழியர் கத்திக்குத்து: “சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் தவெக அரசு” - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-pharmacy-employee-stabbed-the-government-is-destroying-law-and-order-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-pharmacy-employee-stabbed-the-government-is-destroying-law-and-order-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">acf573a7-27e3-45e4-95d4-b5a6582d0a73</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:52:23 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:52:23.973Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கத்திக்குத்து,Woman,stabbed,Kanimozhi,பெண் ஊழியர்,கனிமொழி எம்பி,Law and order,சட்டம்-ஒழுங்கு,தவெக அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/4l8s2f1h/kanimozhi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/4l8s2f1h/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பண்ருட்டி</p><p>பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி</a> கருணாநிதி எம்.பி. தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>மிகுந்த அதிர்ச்சி</h2><p>பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது.</p><h2>சர்வ நாசம்</h2><p>பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில் உருவாக்கி சட்டம் ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்துகொண்டிருக்கிறது தவெக அரசு.</p><p>பண்ருட்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும். குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் தாமதிக்காமல் இனியாவது இந்தப் பொறுப்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? இல்லை ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா?</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தாயை இழந்த பூனைக்குட்டிக்கு பாலூட்டி பசியாற்றிய நாய்: அரியலூரில் நெகிழ்ச்சி சம்பவம்! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dog-nurses-and-feeds-a-motherless-kitten-a-heartwarming-incident-in-ariyalur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dog-nurses-and-feeds-a-motherless-kitten-a-heartwarming-incident-in-ariyalur#comments</comments><guid isPermaLink="false">a86523c5-9ffe-4287-acff-6bfae4e4e8b5</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:41:58 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:41:58.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரியலூர்,milk,பால்,Video viral,dog,நாய்,பூனைக்குட்டி,kitten</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ihvxeysd/12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தாயை இழந்த பூனைக்குட்டிக்கு நாய் பால் கொடுத்தது. ]]></media:title><media:description type="html"><![CDATA[ தாயை இழந்த பூனைக்குட்டிக்கு பாலூட்டி பசியாற்றிய நாய்: அரியலூரில் நெகிழ்ச்சி சம்பவம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/ihvxeysd/12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அரியலூர்,</p><p>அரியலூர் மாவட்டம் நின்னியூர் கிராமத்தில் விலங்கினங்களின் எல்லையைத் தாண்டிய பாசப் பிணைப்பை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.</p><h2>தாய்மையின் உச்சம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அரியலூர் மாவட்டம்</a> செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வருகிறது. அதே பகுதியில் தாயை இழந்து தவித்த சிறிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">பூனைக்குட்டி </a>ஒன்று பசியால் வாடியது. பூனைக்குட்டியின் நிலையை உணர்ந்த அந்த நாய், அதற்கு தன் தாயன்பை வெளிப்படுத்தியுள்ளது. பொதுவாக நாயும் பூனையும் எதிரெதிர் துருவங்களாக கருதப்படும் நிலையில், இந்த நாய் தன் குட்டியைப் போலவே அந்த பூனைக்குட்டியையும் பாவித்து, படுத்துக்கொண்டு அதற்கு பால் கொடுத்து பசியாற்றியுள்ளது.</p><h2>வைரலாகும் காட்சி</h2><p>நாயிடம் எந்தவித பயமும் இன்றி அந்த பூனைக்குட்டி மிக உரிமையோடு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D"> பால் குடிக்கும்</a> நெகிழ்ச்சியான காட்சி, பார்ப்பவர்களின் கண்களைக் குளிரச் செய்துள்ளது. இந்த அரிய மற்றும் பாசப் பிணைப்பைக் கொண்ட காட்சியை அங்குள்ளவர்கள் தங்களது மொபைல் போனில் பதிவு செய்துள்ளனர்.</p><p>இந்த நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மனிதர்களில் சில சமயங்களில் பாசம் குறைந்து வரும் இந்நாட்களில், முற்றிலும் மாறுபட்ட இரு விலங்கினங்களுக்கு இடையே வெளிப்பட்ட இந்த தூய்மையான தாய்மைப் பாசம் மனிதர்களுக்கு ஒரு மிகச் சிறந்த பாடமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில் தாயை இழந்த பூனைக்குட்டி.. பால் கொடுத்து பசியாற்றிய நாய்.. நெகிழ்ச்சி காட்சி  <a href="https://x.com/hashtag/ariyalur?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ariyalur</a> <a href="https://x.com/hashtag/dog?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#dog</a> <a href="https://x.com/hashtag/cat?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#cat</a> <a href="https://x.com/hashtag/mother?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#mother</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a> <a href="https://t.co/vCH5fTPUxN">pic.twitter.com/vCH5fTPUxN</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2100833235211309237?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 28-ல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-to-be-launched-on-september-28</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-to-be-launched-on-september-28#comments</comments><guid isPermaLink="false">018fba03-6157-4b1d-807c-21f5da99587d</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:39:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:39:21.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தொடக்கம்,செப்டம்பர்,September,Launched,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,Thaimaman Gold Ring Project</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/h7xsvmyb/70.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/h7xsvmyb/70.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்  தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வருகிற 28-ந் தேதிஅன்று தொடங்கி வைக்கிறார்.</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p><p>தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.</p> <h2>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.</p><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல் (National Family Health Survey-6) பதிவாகியுள்ளது. இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன. இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><h2>தனித்துவமான வரிசை எண்</h2><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICME-யில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும்.</p><h2>தினமும் 100 குழந்தைகள்</h2><p>இத்திட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வருகிற 28-ந் தேதி அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் (Hubs) தினமும் 100 குழந்தைகள் வீதம் 28- ந் தேதி முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">தங்கமோதிரம் </a>வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்...!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-befalls-a-5-year-old-boy-who-was-playing-near-his-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-befalls-a-5-year-old-boy-who-was-playing-near-his-house#comments</comments><guid isPermaLink="false">9255eda9-9d0a-44e8-b12f-4cf0fd0977bf</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:32:17 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:32:17.999Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,போலீஸ்,விருதுநகர்,மின்சாரம் தாக்கி சிறுவன் பலி,boy death,Virudhunagar District</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/jacpjf2z/17.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி சிறுவன் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/jacpjf2z/17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்</p><h2>மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு</h2><p>விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரச்சாமி தெருவைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவரது மகன் ஜெகன் (வயது 5). சிறுவன் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை சிறுவன் மிதித்ததாக தெரிகிறது.</p><p>இதில் எதிர்பாராதவிதமாக<a href="https://www.dailythanthi.com/topic/மின்சாரம்-தாக்கி"> மின்சாரம் தாக்கி</a> சிறுவன் மயங்கி விழுந்தான். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h2>விசாரணை</h2><p>சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி - சென்னை இடையே 20ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/unreserved-special-train-to-run-between-tirupati-and-chennai-on-the-20th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/unreserved-special-train-to-run-between-tirupati-and-chennai-on-the-20th#comments</comments><guid isPermaLink="false">e7b081e9-fe5c-4717-8d76-043f8758c818</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:31:42 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:31:42.355Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சிறப்பு ரெயில்,Tirupati,திருப்பதி,மெமு ரெயில்,Special Train ​,MEMU train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/fdnb4uen/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்பதிவில்லா சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-18/fdnb4uen/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> திருப்பதியில் நடைபெறும் கருட சேவையை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கும் வகையில் தெற்கு கடற்கரை ரெயில்வே சார்பில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.</p><h2>திருப்பதி - சென்னை கடற்கரை சிறப்பு ரெயில்</h2><p>ரெயில் எண் 07610 திருப்பதி - சென்னை கடற்கரை முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில், செப்டம்பர் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும்.</p><p>இந்த ரெயில் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் ஒரு சேவை மட்டும் இயக்கப்படும்.</p><h2>சென்னை கடற்கரை - ரேணிகுண்டா சிறப்பு ரெயில்</h2><p>ரெயில் எண் 07609 சென்னை கடற்கரை - ரேணிகுண்டா முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில், செப்டம்பர் 20-ம் தேதி காலை 5 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.</p><p>இந்த ரெயில் காலை 8.40 மணிக்கு ரேணிகுண்டாவை சென்றடையும். இதுவும் ஒரு சேவையாக மட்டுமே இயக்கப்படும்.</p>]]></content:encoded></item></channel></rss>