<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 03 Aug 2026 06:25:43 +0000</lastBuildDate><item><title>தீரன் சின்னமலையின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-remember-and-pay-tribute-to-the-courage-and-sacrifice-of-theeran-chinnamalai-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-remember-and-pay-tribute-to-the-courage-and-sacrifice-of-theeran-chinnamalai-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">bb192819-ca8d-490a-b461-d55ef4204727</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:20:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:20:49.267Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/x0q3enmd/12.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/x0q3enmd/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தீரன் சின்னமலையின் 221-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரரும், தனது வீரத்தாலும் அசாத்தியமான போர்த் திறமையாலும் ஆங்கிலேயப் படைகளை விரட்டியடித்த பெருமைமிக்க மாவீரருமான தீரன் சின்னமலையின் நினைவுதினம் இன்று..</p><p>போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளால் வீழ்த்தவே முடியாத மாவீரராக வலம் வந்ததோடு , கொங்கு மண்ணின் பெருமையாகவும், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த மாவீரன் தீரன் சின்னமலையின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பணக்காரர்களுக்கான ஆட்சி நடத்தும் மோடி அரசு - மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-runs-for-the-rich-manickam-thakur-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-runs-for-the-rich-manickam-thakur-criticizes#comments</comments><guid isPermaLink="false">69d6748d-c718-4870-993b-d6efcabb5224</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:12:44 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:12:44.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமர்சனம்,Modi government,மோடி அரசு,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Thakur MP,பணக்காரர்கள்,rich people</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/u9w4wmzc/manikamtakore.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/u9w4wmzc/manikamtakore.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="http://dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பொருளாதார சமத்துவமின்மை</h2><p>'உலக சமத்துவமின்மை ஆய்வகம்' என்ற அமைப்பு வெளியிட்ட, '2026 உலக சமத்துவமின்மை' அறிக்கையில், 'இந்தியாவின் மொத்த செல்வத்தில், 40 சதவீதம், ஒரு சதவீதம் பேரிடம் குவிந்துள்ளது. உலகிலேயே பொருளாதார சமத்துவமின்மை அதிகம் உள்ள நாடு இந்தியா' என்பது ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நாட்டின் மொத்த வருமானத்தில் 58 சதவீதம், 10 சதவீதம் பேருக்கு செல்கிறது. 50 சதவீத மக்களுக்கு, 15 சதவீத வருமானமே செல்கிறது. இந்தியாவில் 'வருமானம், செல்வம், பாலினம்' ஆகிய மூன்று பரிமாணங்களிலும் சமத்துவமின்மை ஆழமாக வேரூன்றியுள்ளது' என்று, அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமத்துவம், சமூக நீதியை விரும்பும் அனைவருக்கும், இது இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சியது போல உள்ளது.</p><h2>300 சதவீதம் அதிகரிப்பு</h2><p>'இந்தியாவில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டியவர்களின் எண்ணிக்கை 2025 - 2026ஆம் ஆண்டில், 576 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2021-2022ஆம் ஆண்டில் 142 பேராக இருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது' என நாடாளுமன்றத்தில் மோடி அரசே ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சி என்பது, அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கான ஆட்சிதான் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாக உயர்ந்து கொண்டே செல்கிறார்கள்; ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள்; நடுத்தர மக்கள் வாங்கும் சக்தியை இழந்து கீழே சென்று கொண்டிருக்கிறார்கள்.</p><h2>அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்வு</h2><p>2014ஆம் ஆண்டில், சுமார் 44,000 கோடி ரூபாயாக இருந்த, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு, இப்போது சுமார் 7.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சொத்து குவிப்பில், அதானி குழுமம் கின்னஸ் சாதனை படைக்க உதவியதுதான், கடந்த 12 ஆண்டுகளில் மோடி அரசு நிகழ்த்திய ஒரே சாதனை. பல்வேறு மதங்கள், ஜாதிகள், மொழிகள், இனங்கள், கலாசாரங்கள் கொண்ட இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி என்பது சமச்சீராக இருக்க வேண்டும். மாறாக, ஒரு சதவீதம் பேரிடம், 40 சதவீத செல்வம் குவிந்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி. ஆட்சி நிர்வாகத்தின் மிகப்பெரிய தோல்வி. இதற்காக மோடி அரசு வெட்கப்பட வேண்டும். இந்த அவலத்திற்கு ஏழைகள் நலனில் அக்கறை இல்லாத,  வலதுசாரி மனப்பான்மையே காரணம்.</p><p>பொருளாதார சமத்துவமின்மை என்பது, சிலிண்டருக்குள் அடைக்கப்பட்ட எரிவாயு போன்றது. அளவுக்கு அதிகமானால் வெடித்து சிதறிவிடும். பொருளாதார சமத்துவமின்மை தொடர்ந்தால், மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை வரும். அதானி, அம்பானிக்காக ஆட்சி நடத்தும் மோடி அரசை, விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள். இந்தியாவில் சமச்சீரான வளர்ச்சி சாத்தியமாக, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். விரைவில் அது நடக்கும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெகவுக்கு எதுவுமே தெரியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-knows-nothing-edappadi-palaniswamis-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-knows-nothing-edappadi-palaniswamis-criticism#comments</comments><guid isPermaLink="false">798279eb-3ffc-43e6-95fd-6dddb61e27da</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:48:23 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:48:23.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xcfubf3v/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xcfubf3v/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><p><strong>அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-</strong></p><p>கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த தவெகவுக்கு காவிரி பிரச்சினை பற்றி முழுமையாக எதுவுமே தெரியாது; அனுபவம் இல்லாததால் மற்ற கட்சிகளின் கருத்துகளை தவெக அரசு கேட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை.</p><h2>காவிரி பிரச்சினை</h2><p>உச்சநீதிமன்றத்தில் பெற்ற தீர்ப்பை கூட காப்பாற்ற கூட முடியாத அரசாக தவெக அரசு உள்ளது. மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து காவிரி பிரச்சினை, மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் அரசியல் கட்சி தலைவர்கள் கூறுவதை தவெக அரசு கேட்கவில்லை. கர்நாடக அரசு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகளை மதித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது.</p><p>காவிரி நீர் விவகாரத்தில் அதிமுக, திமுக ஆட்சியில் எவ்வளவு போராட்டம் நடந்தது என மக்களுக்கு தெரியும். அதிமுக, திமுக என எந்த ஆட்சியாக இருந்தாலும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்டது. அதைபோல காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும். விவசாய பிரதிநிதிகளையும் அழைத்து கருத்துக்களை பெற வேண்டும். அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வல்வில் ஓரி திருவிழா கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் - அண்ணாமலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-wishes-to-everyone-celebrating-the-valvil-ori-festival-annamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/best-wishes-to-everyone-celebrating-the-valvil-ori-festival-annamalai#comments</comments><guid isPermaLink="false">53ebfa7e-1f81-4e5b-b476-a3fd290ebea4</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:43:34 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:43:34.045Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,வள்ளல் ஓரி விழா,Vallal Oori Festival</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ttqgn64w/74.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ttqgn64w/74.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>வி த லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வல்வில் ஓரி திருவிழா</h2><p>எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தமிழின் பழம்பெரும் இலக்கியங்களில் பாடப்பட்ட மன்னரும், 14 நாடுகளை உள்ளடக்கிய கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மாவீரருமான வல்வில் ஓரி அவர்களின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>பெரும் கொடையாளி</h2><p>பெரும் கொடையாளியாகவும், இணையற்ற வீரராகவும் விளங்கிய அவரது வாழ்க்கை, தமிழரின் வீரத்திற்கும் அறத்திற்கும் எடுத்துக்காட்டாகும். வீரம், கொடை, நீதி ஆகிய உயரிய பண்புகள் கொண்ட மாவீரர் வல்வில் ஓரி அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.</p><p>இவ்வாரு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு மின்வாரியத்தில் மேலும் ஒரு சாதனை: 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-milestone-for-the-tamil-nadu-electricity-board-promotion-for-700-assistant-engineers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-milestone-for-the-tamil-nadu-electricity-board-promotion-for-700-assistant-engineers#comments</comments><guid isPermaLink="false">08158426-e12c-411e-a39e-27cdaa352b9a</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:32:06 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:32:06.833Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,மின்வாரியம்,Electricity Board,பொறியாளர்கள்,பதவி உயர்வு,Promotion,தமிழ்நாடு மின்வாரியம்,TamilNadu Goverment,Tamilnadu Electricity Board</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/bnel1nub/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/bnel1nub/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 700 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்), இன்று ( 03.08.2026 ) உதவி செயற்பொறியாளர்கள் (மின்னியல்) ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பொறியாளர்களுக்கு பதவி உயர்வு</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படியும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் அறிவுறுத்தல் மற்றும் தொடர் கண்காணிப்பின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளிப்படையான, மூப்பு மற்றும் தகுதி அடிப்படையிலான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த பதவி உயர்வின் மூலம், மின்வாரியத்தின் களப்பணிகள் மேலும் வலுப்பெறுவதுடன், எதிர்வரும் பருவ மழைக்காலங்களில் மின் விநியோகம், பராமரிப்பு, புதிய மின் இணைப்புகள், துணை மின் நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் கூடுதல் திறனுடனும், விரைவாகவும் மேற்கொள்ள இயலும் .</p><h2>முக்கியமான மைல்கல்</h2><p>இப்பதவி உயர்வு பெற்றுள்ள பொறியாளர்கள், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் தரமான மின் விநியோக சேவையை வழங்குவதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.</p><p>மின்வாரிய ஊழியர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வெளிப்படையான </a>முறையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இந்நடவடிக்கை, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்வதோடு, ஊழியர்களின் மன உறுதியையும், பணித் திறனையும் மேலும் உயர்த்தும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் அரசு மருத்துவமனை நர்சுகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospital-nurses-working-wearing-request-cards</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospital-nurses-working-wearing-request-cards#comments</comments><guid isPermaLink="false">40a3dc58-ab6c-428d-a463-50e6713cb1e0</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:25:43 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:25:43.054Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Nurse,Govt Hospitals,நர்சுகள்,நர்சுகள் போராட்டம்,Nurse protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/dccdpokv/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/dccdpokv/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கோரிக்கை அட்டை</h2><p>தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடக் கோரி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசாணை 204-ஐ ரத்து செய்யவும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடவும் கோரி கடந்த 29.7.2026 முதல் 30.7.2026 வரை 3 நாட்கள் நர்சுகள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர். </p><p>இந்நிலையில் அரசாணை 204-ஐ ரத்து செய்வது தொடர்பாகவோ, ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடுவது தொடர்பாகவோ அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த திட்டமும் செயல்பாடோ இல்லாத காரணத்தால் ஏற்கனவே அறிவித்திருந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை கடிதம் வழங்கும் இயக்கத்துடன் சேர்த்து  கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் இயக்கத்தையும் இன்று முதல் 5-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர முடிவு செய்யப்பட்டது. </p><h2>அரசுக்கு வேண்டுகோள்</h2><p>அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்சுகள், மீண்டும் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/unresolved-grievances-of-police-personnel-must-be-addressed-anbumani-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/unresolved-grievances-of-police-personnel-must-be-addressed-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">692dc9db-e895-4117-806c-22910ac2b5b0</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:22:51 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:22:51.909Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,police,காவல்துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/hrewskif/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/hrewskif/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>காவல்துறையினரின் பதவி உயர்வு தொடர்பாக நியாயத்தின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுப்பதற்கு  பதிலாக, அனைத்து சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகள் மூலம் எதிர்கொள்வதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதால், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. காவல்துறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நிவாரணமும் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க.  அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது  நியாயமல்ல.</p><p>கொள்கை முடிவுகளை எடுப்பதில் கடந்த ஆட்சியாளர்களும், இன்றைய ஆட்சியாளர்களும் இழைத்த தவறுகளாலும், தவறுகளை சரி செய்வதில் ஆர்வம் காட்டாததாலும் ஏற்பட்ட அநீதியின் வரலாறு 1994&amp;ஆம்  ஆண்டில் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு நீதி வழங்கப்படாததால், அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினருக்கும் நீதி கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு நீதி வழங்குவதில் அரசுகளும் ஆர்வம் காட்டவில்லை.</p><p>தமிழக காவல்துறைக்கு 1198 சார் ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை 1994&amp;95ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 500 பேருக்கு 1996&amp;ஆம் ஆண்டிலும், 600 பேருக்கு 1997&amp;ஆம் ஆண்டிலும் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 98 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்படாத நிலையில், அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 1998&amp;99ஆம் ஆண்டில் 968 சார் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 1994&amp;95 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 சார் ஆய்வாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாததை சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவர்களுக்கு 22.05.2000&amp;ஆம் நாளில் நியமன ஆணை  வழங்கப் பட்டது. ஆனால், அவர்களுக்கு 1994&amp;95ஆம் ஆண்டின் பணி மூப்பு வழங்கப்படாதது தான் சிக்கல் ஆகும்.</p><p>அதைவிட பெரிய அநீதி என்னவென்றால், 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில்  நியமிக்கப்பட்ட 98 சார் ஆய்வாளர்களில் இருவருக்கு மட்டும் 1995&amp;ஆம் ஆண்டின் பணிமூப்பு வழங்கப்பட்டு    காவல் ஆய்வாளராகவும், காவல் துணை கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதமுள்ள  96 பேர் காவல் ஆய்வாளர் என்ற நிலைக்கு மட்டுமே உயர்ந்துள்ளனர். அவர்களின் 46 பேர் ஓய்வு பெற்று விட்ட நிலையில், மீதமுள்ள 50 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் 3 ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள்.</p><p>இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அவர்களுடன் நிற்கவில்லை. அவர்களுக்குப் பிறகு இன்று வரை பணியில் சேர்ந்த அனைத்து காவல் சார் ஆய்வாளர்களுக்கும் அநீதி தொடர்கிறது. இவர்களுக்குப் பிறகு 1998&amp;99ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 968 காவல் சார் ஆய்வாளர்களுக்கு 2008&amp;ஆம் ஆண்டில் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், 2020&amp;21ஆம் ஆண்டில் துணை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், 2004&amp;ஆம் ஆண்டில் சார் ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு இப்போது துணை கண்காணிப்பாளர்களாகவும், 2016&amp;ஆம் ஆண்டில் தேர்வான ஆய்வாளர்களுக்கு இப்போது  ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பதவி உயர்வு வழங்கப்படவில்லை.</p><p>அதற்கான காரணம், 1994&amp;95ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்களில் மணிமாறன் உள்ளிட்ட சிலர், தங்களுக்கு 1995-ஆம் ஆண்டு பணிமூப்பு வழங்க ஆணையிடக் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை தான். இந்தத் தடை வரும் 10&amp;ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்காததற்கு காரணம் அவர்கள் செய்த தவறு அல்ல... மாறாக அரசு செய்த தவறு தான். 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1198 காவல் சார் ஆய்வாளர்களுக்கு ஒரே கட்டமாக பணி ஆணை வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரே பணி மூப்பு வழங்கப் பட்டிருந்தாலோ இந்த சிக்கல் எழுந்திருக்காது; இரு தலைமுறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.</p><p>காவல்துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து பணியில் சேருவதும், 6 முதல்  9 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் எத்தகைய மனவலியை ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். இந்தத் தவறை அரசு தான் சரி செய்ய வேண்டும். 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். அதை செய்வதுடன் 1998&amp;99, 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் காவல் சார்&amp;ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டை இது குறித்த வழக்கு வரும் 10&amp;ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அரசு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் 30 ஆண்டு கால சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.</p><p>அதேபோல், காவல்துறை பணிகளில் சேருவதற்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் பணியில் உள்ள காவலர்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள 20% இடங்களில் போட்டியிடும் தமிழ்வழிக் கல்வியில் படித்த காவலர்களுக்கு அதற்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே ஒருமுறை தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றவர்கள், அதே துறையின் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வில் மீண்டும் அனுபபிக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஜனவரி 23&amp;ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காததாலும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதாலும் அந்த சட்டம் காலாவதியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்த சட்டத்தை மீண்டும் இயற்றி காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் துறை சார்ந்த ஒதுக்கீட்டில் போட்டியிடும் தமிழ்வழியில் கற்ற காவலர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.</p><p>காவல்துறையினருக்கு படி வழங்குவதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு ஊதியம், இரவு நேரப் பணிக்கான படிகள், பணி ஆபத்து படிகள் ஆகியவை அதே துறையில் பணியாற்றும் விரல் ரேகை வல்லுனர்களுக்கு வழங்கப்ப்படுவதில்லை. சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களில் பணியாற்றும் விரல்ரேகை பிரிவினருக்கு உணவுப்படி கூட வழங்கப்படுவதில்லை. இந்த பாகுபாடு உடனடியாக களையப்பட வேண்டும்.</p><p>தமிழக அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும். இதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை பெற்று காவல்துறையினரின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் குறைகளையும் தமிழக அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/conditional-bail-for-vilathikulam-dmk-mla-markandeyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/conditional-bail-for-vilathikulam-dmk-mla-markandeyan#comments</comments><guid isPermaLink="false">dc0333c1-f311-4228-b361-e1248536449f</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:22:32 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:22:32.014Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,vilathikulam,விளாத்திகுளம்,நிபந்தனை ஜாமீன்,மார்க்கண்டேயன்,Markandeyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/llp4wnk9/Markandeyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்க்ண்டேயன் எம்.எல்.ஏ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/llp4wnk9/Markandeyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தூத்துக்குடி </a>கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த  ஜாமீன் மனுவும்   தள்ளுபடி செய்தது.   இதையடுத்து,  திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். </p><h2>நிபந்தனை ஜாமீன்</h2><p>இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இனிமேல் இதுபோன்று பேசமாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்க  வேண்டும்: தூத்துக்குடி காவல் நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சட்டமன்றம் நடைபெறும் நாளில் மட்டும் கையெழுத்திடுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.</p><h2>மார்க்கண்டேயன் பேசியது என்ன?</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மார்க்கண்டேயன்</a> பேசியது என்ன? மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதல் அமைச்சர்.. உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துகுறோம்.. நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை. என மார்க்கண்டேயன் பேசியிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>உரிமைகளையும், அரசியலமைப்பையும் காக்க சூழ்ச்சிகளை வீழ்த்தி உறுதியோடு போராடுவோம்! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-fight-with-determination-to-safeguard-our-rights-and-the-constitution-by-defeating-conspiracies-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-fight-with-determination-to-safeguard-our-rights-and-the-constitution-by-defeating-conspiracies-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">b138a8c7-f724-4d22-a010-f3c3e62c4ee7</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:19:37 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:19:37.281Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,தமிழ்நாடு காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore,tamilnadu congress</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/zzvuaogn/manikam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/zzvuaogn/manikam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பையும் காக்க சூழ்ச்சிகளை வீழ்த்தி உறுதியோடு போராடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மசோதா தோற்கடிப்பு</h2><p>​கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், அவைக்கு வந்திருந்த 528 உறுப்பினர்களில் ஆதரவாக 298 வாக்குகளும் (56.44%), எதிராக 230 வாக்குகளும் பதிவாகின. அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்குத் தேவையான 66.67% (மூன்றில் இரண்டு பங்கு) பெரும்பான்மை கிடைக்காமல், வெறும் 56.44% வாக்குகளை மட்டுமே பாஜக கூட்டணி பெற்றதால், 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவைத் தோற்கடித்து இந்திய ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் நாம் வெற்றிபெறச் செய்தோம். அன்றைய தினத்தில் அவைக்கு உறுப்பினர்கள் அனைவரும் நேரில் வருகை தந்து வாக்கெடுப்பில் பங்கேற்றதும், எதிர்க்கட்சிகளின் உறுதியான ஒற்றுமையும்தான் அந்தச் சூழ்ச்சியை முறியடித்தது. ஏனெனில், இந்த மசோதாவைத் தோற்கடிக்க நாடாளுமன்ற அவைக்கு உறுப்பினர்கள் நேரில் வருகை தருவது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.</p><p>ஆனால், சமீபகாலமாகப் பாஜக தனது அத்துமீறிய ஜனநாயக விரோத முறைகள் மூலம் சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 540 ஆக உள்ளது. இதில் 66.7% (2/3) பெரும்பான்மைக்கு 360 வாக்குகள் தேவை என்ற நிலையில், மோடி தலைமையிலான NDA கூட்டணிக்கு 318 (58.89%) உறுப்பினர்களும்,  காங்கிரஸ் (98), சமாஜ்வாதி (37), திரிணாமுல் (8) உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகளைக் கொண்ட INDIA கூட்டணிக்கு 184 உறுப்பினர்களும் உள்ளனர். </p><h2>துணைபோகப் போகிறீர்களா?</h2><p>இங்கு எஞ்சியுள்ள 38 உறுப்பினர்களின் நிலைப்பாடுதான் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.</p><p>​இந்த முக்கியமான கட்டத்தில், எஞ்சியுள்ள பிரிவினர் எதிர்த்து வாக்களிப்பதோ அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்து விலகியிருப்பதோ மோடி அரசுக்கு மறைமுகமாக 2/3 பெரும்பான்மையைப் பெற்றுத் தரவே வழிவகுக்கும். தமிழ்நாட்டு மக்களும் இந்திய தேசமும் உங்களை உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு அளித்த வாக்கையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் காக்க கொள்கைப் பிடிப்போடு நிற்கப்போகிறீர்களா? அல்லது மோடியின் அரசியலமைப்புத் தாக்குதலுக்குத் துணைபோகப் போகிறீர்களா?</p><h2>தப்பிக்கவே முடியாது</h2><p>​வரலாற்றில் துரோகத்தின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அடையாளமாக </a>"எட்டப்பன்" எப்படி நூற்றாண்டு கடந்தும் நினைவுகூரப்படுகிறானோ, அதேபோலத் தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து மோடி அரசுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்பிக்கவே முடியாது. தமிழ்நாட்டின் குரலாய், மக்களாட்சியின் காவலனாய் நாம் இறுதிவரை களத்தில் நிற்போம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்; அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/freedom-fighter-dheeran-chinnamalai-remembrance-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/freedom-fighter-dheeran-chinnamalai-remembrance-day#comments</comments><guid isPermaLink="false">1ec3614c-5ae0-456f-9cf7-a9d011d029ea</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:16:17 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:16:17.371Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நினைவு நாள்,Memorial Day,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/t8k0m0vh/tntsa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/t8k0m0vh/tntsa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதனையொட்டி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, சென்னையின் கிண்டி பகுதியில் திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் இன்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><p>இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.</p> ]]></content:encoded></item><item><title>சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-allowed-to-bathe-at-suruli-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-allowed-to-bathe-at-suruli-falls#comments</comments><guid isPermaLink="false">7ab0f9ed-ee1f-4858-8e69-7d8c884c7d89</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:08:13 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:08:13.681Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,Suruli Falls,சுருளி அருவி,குளிக்க அனுமதி,allowed to bathe</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/zplntm5q/suruli-falls.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/zplntm5q/suruli-falls.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உத்தமபாளையம்,</p><p>ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக வந்து கம்பம் அருகே சுருளி அருவியாக கொட்டும். சுருளி அருவிக்கு தினந்தோறும் தேனி மற்றும் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.</p><h2>சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி</h2><p>ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சமீபத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF">சுருளி அருவி</a>யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக தடைவிதித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பின் இன்று(திங்கள்கிழமை) காலையில் இருந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபட்டனர். </p>]]></content:encoded></item><item><title>அரசியல் சூட்டை தணித்து அள்ளித்தந்த வானம்: தமிழகம் நோக்கி பொங்கி வரும் காவிரி நீர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-sky-that-calmed-the-political-heat-cauvery-water-flowing-towards-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-sky-that-calmed-the-political-heat-cauvery-water-flowing-towards-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">e45affa6-8d80-42b3-82d0-02a5432e66dd</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:01:19 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:01:19.374Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மேட்டூர் அணை,Mettur dam,காவிரி நீர்,Karnataka,கர்நாடகா,காவிரி மேலாண்மை ஆணையம்,Cauvery water,Cauvery Management Authority,கபினி அணை,குறுவை சாகுபடி,kuruvai cultivation,Kabini Dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/q6w5xjpb/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/q6w5xjpb/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் தமிழகம் நோக்கி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.</p><h2>குறுவை சாகுபடி பாதிப்பு</h2><p>தமிழகத்தில் முக்கிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையில் 79 அடிக்கும் தண்ணீர் குறைவாக இருந்த காரணத்தால், இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. </p><p>இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தமிழகம் கேட்டது. ஆனால், வழக்கம் போல் கர்நாடகம் மறுத்துவிட்டது. </p><h2>கர்நாடகம் மறுப்பு </h2><p>இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அரசு காவிரியில் கர்நாடகம் அரசு தண்ணீர் திறந்துவிட தனது வாதங்களை அழுத்தமாக முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து, 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம், அதாவது 4½ டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட கர்நாடகத்தை காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியது. ஆனால், அதற்கும் கர்நாடகம் மறுத்துவிட்டது. </p><h2>காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு</h2><p>அதுமட்டுமல்லாமல், காவிரி மேலாண்மை ஆணையத்தில் இதுகுறித்து முறையிடுவோம் என்றுகூறி, கர்நாடக அரசு முறையிட்டது. இந்த முறையீட்டின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி மீண்டும் கூடியது. அப்போது கர்நாடகத்தின் வாதத்தை நிராகரித்த ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நடந்துகொள்ள கர்நாடக அரசை வலியுறுத்தியதுடன், காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.</p><h2>இருமாநில முதல்-மந்திரிகள் சந்திப்புக்கு எதிர்ப்பு</h2><p>இந்த உத்தரவுக்கு கர்நாடக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. இதற்கிடையே, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் இன்று பெங்களூருவில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து, இரு மாநில முதல்-மந்திரிகளும், தங்கள் மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்கு மத்தியில், தமிழக எதிர்க்கட்சிகள் இருமாநில முதல்-மந்திரிகள் சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன.</p><h2>அரசியல் சூட்டை தணித்த மழை</h2><p>கர்நாடகத்திலும் எதிர்ப்பு வலுத்ததால், கர்நாடக மாநில முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், தமிழக முதல்-அமைச்சர் இப்போது வரவேண்டாம் என்று கூறிவிட்டார். இப்படி, இருமாநில அரசியலில் அனல் பறந்து கொண்டிருந்த நேரத்தில், அரசியல் சூட்டை தணிக்கும் வகையில் கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.</p><p>இதனால், பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போதைய நிலையில், தமிழகத்திற்கு 28 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பொங்கி வந்த காவிரி இப்போது எல்லையை கடந்து தமிழக மண்ணை முத்தமிட்டு இருக்கிறது. இதனால்,டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>நீர்வரத்து அதிகரிக்கும்</h2><p>தற்போதைய நிலையில், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகரில் 91.8 அடியும் (மொத்த கொள்ளளவு 124.8 அடி), கபினியில் 56.28 அடியும் (65 அடி), ஹேரங்கியில் 127.55 அடியும் (129 அடி), ஹேமாவதியில் 100.98 அடியும் (117 அடி) தண்ணீர் உள்ளது.</p><p>கர்நாடக அணைகள் வேகமாக நிரம்புவதால், தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், மேட்டூர் அணையில் 73.82 அடி கொள்ளளவு தண்ணீர் உள்ளது. காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் மேட்டூர் அணையை அடையும்போது, தண்ணீர் அளவு வேகமாக உயரும். டெல்டா பாசன பகுதியில், குறுவை சாகுபடி தப்பினாலும் அடுத்து வரும் சம்பா சாகுபடிக்காவது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியும்.</p>]]></content:encoded></item><item><title>சேலம்:  தனியார் ஆலையில் தீ விபத்து, வாயுக்கசிவு; 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-fire-accident-gas-leak-11-hospitalised</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-fire-accident-gas-leak-11-hospitalised#comments</comments><guid isPermaLink="false">85abb6bf-c92a-4bf0-a6fe-f3f8d2d71533</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:42:13 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:42:13.723Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,gas leak,வாயுக்கசிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/o0ly5u5j/tnsaf.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ai image]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/o0ly5u5j/tnsaf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சேலம்</p><p>சேலத்தில் தனியார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>சேலம் ஆத்தூரில் தனியார் ஜவ்வரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.  இதில் மரவள்ளி கிழங்குகளை அரவை செய்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்த நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் ஆலையில் மின் கசிவு ஏற்பட்டது.  இதில், சாக்கு பைகள் எரிந்து, தீ விபத்து ஏற்பட்டது.</p>  <h2>தீ விபத்து</h2><p>கிழங்குகளை சுத்தம் செய்வதற்கு, மூட்டைகளில் குளோரின் பவுடர் வைக்கப்பட்டிருந்தது. தீ விபத்து தொடர்ச்சியாக குளோரின் பவுடர் பகுதியில் இருந்து புகை எழுந்தது.  இதனால், அதிர்ச்சியான தொழிலாளர்கள், அதனை தணிக்க தண்ணீரை ஊற்றியுள்ளனர்.</p>  <h2>வாயுக்கசிவு</h2><p>அபபோது, குளோரின் பவுடர், புகையுடன் சேர்ந்து வாயுக்கசிவாக மாறியது.  இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று, தீ மற்றும் வாயுக்கசிவை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  வாயுக்கசிவு பாதிப்பால், 11 பேருக்கு மூச்சுத்திணறல், சுவாச பாதிப்பு, மயக்கம் போன்றவை ஏற்பட்டன.</p><p>அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  2 மணிநேரம் வரை போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலையின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் - முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pay-tribute-to-the-bravery-and-sacrifice-of-theeran-chinnamalai-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pay-tribute-to-the-bravery-and-sacrifice-of-theeran-chinnamalai-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">cb8e6b84-477e-47f1-87da-48a489142d5b</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:32:25 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:32:25.047Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Memorial Day,நினைவு தினம்,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai,புகழஞ்சலி,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/w6b4bl4a/73.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/w6b4bl4a/73.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தீரன் சின்னமலை நினைவு நாள்</h2><p>ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">தீரன் சின்னமலை </a>அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.</p><h2>தியாக உணர்வு</h2><p>கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. </p><p>சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாவீரர் தீரன் சின்னமலையின் புகழ் காலம் கடந்தும் நிலைத்திருக்கும்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/famous-hero-dheeran-chinnamalai-will-remain-forever-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/famous-hero-dheeran-chinnamalai-will-remain-forever-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">72c23737-0738-479f-99aa-99fa12f75969</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:28:14 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:28:14.601Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தீரன் சின்னமலை,Dheeran Chinnamalai</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/023h7zjp/9.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/023h7zjp/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தீரன் சின்னமலையின் 221-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”தமிழ் மண்ணின் வீர வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அந்நிய ஆட்சியின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பேராதிக்கத்தை துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் உயிரையே அர்ப்பணித்த அவரது ஒப்பற்ற வீரத்தையும் தியாகத்தையும் மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.</p><p>மக்களின் உரிமைகளையும், சுயமரியாதையையும் காக்க போராடிய அவரது அசைக்க முடியாத மன உறுதியும், தாயகத்தின் மீது கொண்ட அளப்பரிய பற்றும், தலைமுறைகள் தோறும் விடுதலை உணர்வை விதைக்கும் ஒளிவிளக்காகத் திகழ்கின்றன.</p><p>மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் புகழ் காலம் கடந்தும் நிலைத்திருக்கும்; அவரது விடுதலைச் சிந்தனையும் வீர மரபும் தமிழர் நெஞ்சங்களில் என்றும் உயிர்ப்புடன் வாழும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-a-power-outage-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-a-power-outage-tomorrow#comments</comments><guid isPermaLink="false">6ab0df42-1c32-409a-95d3-e1ca8b976336</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:10:10 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:10:10.524Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/hhpvxwa9/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/hhpvxwa9/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் 04.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். </p><h2>வேளச்சேரி</h2><p>சாரதி நகர், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர்.</p><h2>அடையாறு</h2><p>காந்தி மண்டபம் சாலை, சர்தார் பட்டேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோயில் தெரு, காணகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, கே.பி. நகர் 1 வது முதல் 5வது பிரதான சாலைகள், அடையாறு 6வது பிரதான சாலை, கோவிந்தராஜபுரம், பக்தவத்சலம் நகர் 1வது முதல் 5வது சாலைகள்.</p><h2>முடிச்சூர்</h2><p>அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், குமரன் நகர், ஏ.என். காலனி, மணிமங்கலம் பிரதான சாலை, சாஸ்திரி நகர், கணேசபுரம் பிரதான சாலை.</p><h2>மேடவாக்கம்</h2><p>பெரும்பாக்கம் சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், அந்தோணி நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் சாலை, மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி 1வது முதல் 7வது தெருக்கள் வரை, விசாலாட்சி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, கோபாலபுரம் நகர், விக்னராஜபுரம் மோஹி ப்ளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர், பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், சாய் பாலாஜி நகர்,கிருஷ்ணா நகர், துளுக்காத்தம்மன் கோயில் பிரதான சாலை, அருண் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயபால் நகர், மல்லிகேஸ்வரன் நகர், ஆதிசாமி நகர்.</p><h2>செயின்ட் தாமஸ் மவுண்ட்</h2><p>ராமர் கோயில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, நசரத்புரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குடியிருப்பு, செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரிசன் 1வது முதல் 6வது தெரு வரை, திருவள்ளுவர் நகர், எம்.கே.என் சாலை, குமரன் நகர், குளத்துமேடு, மாங்காளியம்மன் கோயில் தெரு, டிபன்ஸ் காலனி, பர்மா காலனி, கரையார் கோயில் தெரு, நார்த் பரேட் சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, நேவி ரெசிடென்சி பகுதி, வுட்கிரீக் கன்ட்ரி, துளசிங்கபுரம், மாரியாபுரம், மாத்தியாஸ் நகர், ஐரோப்பியன் லைன், பஜார் சாலை, மேட்டு தெரு, ஆர்காட் பேட்டை, ஹாப்மேன் 1வது மற்றும் 2வது தெரு, வி.ஜி.பி முர்பி சதுக்கம், நோபல் தெரு, கண்ணன் காலனி, ஆசிரியர் காலனி, எம்.ஜி.ஆர் நகர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சாலையோர வியாபாரியின் உழைப்பை பாராட்டிய பிரதமர் மோடி; நயினார் நாகேந்திரன் பெருமிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-praises-street-vendors-hard-work-nainar-nagendran-expresses-pride</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modi-praises-street-vendors-hard-work-nainar-nagendran-expresses-pride#comments</comments><guid isPermaLink="false">3cabeffc-b44b-470a-8cfd-42c87e74085a</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:05:03 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:05:03.926Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,பிரதமர் மோடி,PM Modi,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ciyz8t9x/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ciyz8t9x/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய அரசின் திட்டம் மூலம் தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ள தேசியமணியின் கடிதத்திற்கு பிரதமர் மோடி நேரடியாகப் பாராட்டுக்கடிதம் அனுப்பிக் கவுரவித்திருப்பது, சாமானிய மக்கள் மீது அவர் கொண்டுள்ள எல்லையற்ற அன்பையும், அக்கறையையும் காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கடனுதவி திட்டம்</h2><p>நாட்டில் உள்ள சாலையோர வியாபாரிகள் எவ்விதப் பிணையமும் இன்றி எளிய முறையில் கடனுதவி பெற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியால் “ஸ்வநிதி" (PM SVANidhi) திட்டம் கொண்டு வரப்பட்டது. கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் நலிவடைந்த சிறு வியாபாரிகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பேருதவியாக அமைந்த இத்திட்டம், இன்று லட்சக்கணக்கான மக்களின் சுயதொழில் கனவை நனவாக்கி, அவர்களைத் தற்சார்புடையவர்களாக மாற்றி வெற்றியடையச் செய்துள்ளது.</p><h2>பிரதமர் பாராட்டு கடிதம்</h2><p>ஸ்வநிதித் திட்டத்தின் கீழ் பெற்ற கடனைத் தனது கடின உழைப்பின் மூலம் நேர்மையுடன் உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தி, தனது தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ள தேசியமணியின் கடிதத்திற்கு பாரதப் பிரதமர் மோடி நேரடியாகப் பாராட்டுக்கடிதம் அனுப்பிக் கவுரவித்திருப்பது, சாமானிய மக்கள் மீது அவர் கொண்டுள்ள எல்லையற்ற அன்பையும், அக்கறையையும் காட்டுகிறது.</p><h2>நயினார் நாகேந்திரன் பாராட்டு</h2><p>இவ்வாறு தனது கடின உழைப்பாலும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நேர்மையாலும் </a>முன்னேறியுள்ள தேசியமணிக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இந்த அர்ப்பணிப்பும் கடமை உணர்வும் மற்றவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று, வளமான வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அதிக கனிமங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-allows-sale-of-more-minerals-at-additional-cost</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-allows-sale-of-more-minerals-at-additional-cost#comments</comments><guid isPermaLink="false">7256fde6-97b3-4a74-aefd-7a33871d8057</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:00:26 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:00:26.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,கனிமங்கள்,ஜல்லி,கிரானைட்,Granite Quarry,Mines,jalli</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/qrdnuwfp/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/qrdnuwfp/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கனிமங்கள்</h2><p>தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட கனிமத்துடன் அதிக மதிப்புள்ள வேறு கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்தி அவற்றையும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் வகையில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-</p><h2>சிறு கனிம விதிகளில் திருத்தம்</h2><p>சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை) சட்டம், 1957-ன் கீழ் தமிழக சிறு கனிம சலுகை விதிகள், 1959-ல் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, கட்டிடம் மற்றும் சாலை அமைக்கும் பொருட்களுக்கான கற்கள் தொடர்பான பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இடம் பெற்றிருந்த 'கிரானைட் அல்லாத கற்கள்' என்ற வகைப்பாட்டுக்கு பதிலாக, இயற்கையாக சிதைந்த கருங்கல், கல் துண்டுகள், பெரிய பாறைக்கற்கள், உடைக்கப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட கற்கள், மெட்டல் ஜல்லி, சாலை அமைப்பதற்கான கற்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.</p><h2>ஆய்வக பரிசோதனை</h2><p>சுரங்க குத்தகைதாரர் ஒருவர் தனது அனுமதிக்கப்பட்ட சுரங்க பகுதியில் கிடைக்கும் இயற்கையாக சிதைந்த கருங்கல்லை விற்பனை செய்ய விரும்பினால், அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த கல்லில் என்னென்ன கனிமங்கள் உள்ளன என்பதை கண்டறிய புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனரகத்தின் ஆய்வகத்தில் மாதிரி பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்த ஆய்வில் அதிக மதிப்புள்ள கனிமங்கள் இருப்பது கண் டறியப்பட்டால், சட்டம் மற்றும் விதிகளின்படி அந்த கனிமங்களை விற்பனை செய்ய வேண்டும்.</p><h2>கூடுதல் கட்டணம்</h2><p>அதேபோன்று, அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட வேறு கனிமங்கள் அந்தக் கல்லில் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றுக்கான கூடுதல் கட்டணத்தை செலுத்திய பின்னர், இயற்கையாக சிதைந்த கருங்கல்லாகவே அதனை விற்பனை செய்ய வும் அனுமதி வழங்கப்படும். இதற்கான திருத்தத்தை தமிழக அரசு கடந்த ஜூலை 23-ந் தேதி அமல்படுத்தி அரசிதழில் வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை நினைவு தினம் - வானதி சீனிவாசன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribute-to-theeran-chinnamalai-on-his-death-anniversary-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tribute-to-theeran-chinnamalai-on-his-death-anniversary-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">216f35b7-2db8-4f2f-8401-b8cd40097f33</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:55:09 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:55:09.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Memorial Day,நினைவு தினம்,தீரன் சின்னமலை,Theeran Chinnamalai,புகழஞ்சலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xvqh9vim/72.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xvqh9vim/72.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தீரன் சின்னமலை நினைவு தினம்</h2><p>கொங்கு மண்ணின் வீரமகனும், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்திற்கு அஞ்சாமல் எதிர்த்து நின்ற மாமன்னரான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">தீரன் சின்னமலை</a> அவர்களின் நினைவு தினத்தில், நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற தியாகங்களையும், மக்கள் நலப் பணிகளையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.</p><p>இளைஞர்களின் மனதில் வீரம் விதைத்து, விடுதலை வேட்கையைத் தூண்டிய தீரன் சின்னமலை அவர்களின் வீரமும், தியாகமும், தேசப்பற்றும் என்றும் நம் வரலாற்றில் அழியாப் புகழாக நிலைத்திருக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்! - எல்.முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/warm-aadi-perukku-wishes-to-everyone-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/warm-aadi-perukku-wishes-to-everyone-l-murugan#comments</comments><guid isPermaLink="false">7c50ef65-a5d4-4685-9cc7-8d4294392db8</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:49:18 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:49:18.060Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L. Murugan,ஆடிப்பெருக்கு,aadi perukku,ஆடிப்பெருக்கு விழா,Aadi Perukku festival</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/kqwpuo6i/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/kqwpuo6i/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>ஆடிப்பெருக்கு</h2><p>நமது தமிழர் பண்பாட்டின் சிறப்புமிக்க திருநாள்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு திருநாள் இன்று.</p><p>தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில், இயற்கைக்கும், நீர்வளத்திற்கும், வளமான வாழ்விற்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, ஆற்றங்கரைகளிலும் கோவில்களிலும் குடும்பத்தினருடன் ஒன்றுகூடி, தலைமுறை தலைமுறையாக பேதமின்றி கொண்டாடப்பட்டு வரும் இந்தத் திருநாள், நமது கலாசாரத்தின் ஒற்றுமையையும் பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கிறது.</p><h2>நல்வாழ்த்துகள்</h2><p>இந்த இனிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆடிப்பெருக்கு </a>திருநாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளம் மற்றும் நல்வாழ்வு பெருகிட எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறேன்.</p><p>அனைவருக்கும் இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-defrauded-of-1-lakh-with-the-promise-of-a-job-abroad</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-defrauded-of-1-lakh-with-the-promise-of-a-job-abroad#comments</comments><guid isPermaLink="false">c701966f-e587-4647-87d6-025026c760ad</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:28:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:28:24.296Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>fraud case,நெல்லை,Nellai,young woman,இளம்பெண்,மோசடி</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/qem50cvv/7.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/qem50cvv/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை,  </p><p>நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலைக்காக முயற்சி செய்து வந்தார். அதற்காக அவர் ஆன்லைனில் ஒரு ஏஜென்சி மூலம் விவரங்கள் சேகரித்தபோது, அதில் ஐக்கிய அரபு அமீரக நாட்டின் சார்ஜாவில் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணி காலியாக உள்ளதாக கூறி அந்த இளம்பெண்ணிடம் நேர்காணல் நடத்திய மர்மநபர்கள், பள்ளி ஆசிரியர் பணிக்கான போலி நியமன ஆணை வழங்கியுள்ளனர். </p><p>மேலும் அவரிடம் சுமார் ரூ.1 லட்சம் வரை அனுப்ப சொல்லி அவரை ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>ராமேசுவரம் கோவிலில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளம்பெண்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-women-took-reels-at-rameswaram-temple-and-posted-them-on-instagram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-women-took-reels-at-rameswaram-temple-and-posted-them-on-instagram#comments</comments><guid isPermaLink="false">0381ef51-5b66-4c53-b40d-ececbfb1391b</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:22:59 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:22:59.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>young women,இளம்பெண்கள்,இன்ஸ்டாகிராம்,Instagram,ராமேசுவரம் கோவில்,Rameswaram Temple,ரீல்ஸ் வீடியோ,Reels Video</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/oxkuhky0/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/oxkuhky0/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,</p><p>ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.</p><p>இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் கோவிலில் உள்ள 3-ம் பிரகாரத்தில் 2 பெண்கள் நடனம் ஆடியபடி செல்போனில் ரீல்ஸ் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததாக தெரிகிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. </p><p>கோவிலுக்குள் ரீல்ஸ் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட் டுள்ள நிலையில் அதையும் மீறி 2 இளம்பெண்கள் 3-ம் பிர காரத்தில் ரீல்ஸ் எடுத்து வீடியோ பதிவு செய்ததற்கு பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது கோவில் நிர்வாகம் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-bathing-in-courtallam-waterfalls-for-the-second-consecutive-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-bathing-in-courtallam-waterfalls-for-the-second-consecutive-day#comments</comments><guid isPermaLink="false">059c319a-bbd2-4232-a8d8-6d07f05bb28e</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:22:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:22:49.025Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>வெள்ளப்பெருக்கு,குற்றாலம் அருவி,குற்றாலம்,Courtallam Falls,flooding</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ylunfbv1/6.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/ylunfbv1/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. </p><p>நேற்று காலை நீர்வரத்து இன்று சீரானதால், 2 நாட்கள் தடைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் நேற்று குற்றால அருவிகளில் சுற்றுலாவாசிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சிறிது நேரத்திற்குள் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஐந்தருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. </p><p>இந்த நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதான அருவி, மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>
மதுரை:  2 கார்கள் நேருக்கு நேர் மோதல்; 5 பேர் பலி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-two-cars-head-on-collision-5-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-two-cars-head-on-collision-5-killed#comments</comments><guid isPermaLink="false">0eaeb651-f493-4f7d-bd15-eacd266f7e45</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:15:25 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:15:25.486Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Madurai,மதுரை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/88bri0bg/tnmats.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/88bri0bg/tnmats.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை</p><p>மதுரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.</p><p>மதுரையில் மேலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில் கார்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளன.  விபத்தில் சிக்கி 3 வயது பெண் குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள்.</p>  <h2>2 பேர் காயம்</h2><p>அவர்கள் தவிர 2 பேர் காயமடைந்து உள்ளனர்.  தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.</p><p>இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை.  அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை? - தொழில்துறையினர் எதிர்பார்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/direct-flight-service-from-coimbatore-to-thoothukudi-industry-expectations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/direct-flight-service-from-coimbatore-to-thoothukudi-industry-expectations#comments</comments><guid isPermaLink="false">dd59c079-2347-42cf-8c15-0ced14ecfe37</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:05:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:05:58.362Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Thoothukudi,தூத்துக்குடி,விமான சேவை,கோவை விமான நிலையம்,Coimbatore Airport,Flight service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/huqtf7qf/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/huqtf7qf/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>கோவை விமான நிலையம்</h2><p>கோவையில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விமான நிலைய விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.</p><p>கோவையில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் கோவையில் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இங்கிருந்து ஜவுளி, எந்திரங்களின் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த பொருட்கள் அனைத்தும் கொச்சி மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாகதான் செல்கின்றன.</p><h2>தொழில் நிறுவனங்கள்</h2><p>கோவையில் இருந்து கொச்சிக்கு விமான சேவை உள்ளது. ஆனால் கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை இல்லை. இதனால் தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ரெயில்கள், ஆம்னி பஸ்கள், கார்களில்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது தவிர பின்னலாடை நகரமான திருப்பூரில் இருந்தும் பலர் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கார்களில்தான் செல்லக்கூடிய நிலை நீடித்து வருகிறது.</p><p>இதனால் தொழில் நகரான கோவை யில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கினால் கோவையை சேர்ந்த தொழில் துறையினர் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த தொழில் துறையினரும் பயன்படுத்தி கொள்வார்கள். தற்போது கோவை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.</p><p>இந்த சூழ்நிலையில் கோவையில் இருந்து தூத்துக்குடிக்கும், தூத்துக்குடியில் இருந்து கோவைக்கும் விமானங்கள் இயக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கோவை தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் நந்தகுமார் மற்றும் தொழில் துறையினர் கூறியதாவது:-</p><h2>தூத்துக்குடிக்கு விமானம்</h2><p>மத்திய அரசு உதான் திட்டம் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சிறிய மற்றும் நடுத் தர நகரங்களை விமான பாதை மூலம் இணைக்க வழிவகுக்கிறது. இந்த திட்டம் மூலம் கோவையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்துக்கு விமான சேவையை தொடங்க வேண்டும். கோவை, திருப்பூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு தொழில் தொடர்பாக தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆனால் போதிய ரெயில் வசதி இல்லை. கோவை யிலும், தூத்துக்குடியிலும் விமான நிலையம் உள்ளது. இதனால் கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் இயக்கலாம்.</p><h2>நடவடிக்கை வேண்டும்</h2><p>ஏ.டி.ஆர்.-72 என்ற சிறிய ரக விமானத்தில் 72 முதல் 78 பேர் வரை பயணம் செய்யலாம். முதலில் இந்த ரக விமானத்தை இயக்கலாம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தால் பெரிய விமானத்தை இயக்கலாம். அப்படி இயக்கினால் தொழில்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்பெறுவார்கள். அதுபோன்று கோவையில் இருந்து தினமும் பலர் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்கள்.</p><p>இதனால் ஆன்மிக பயணம் செல்பவர்களுக்கும் இந்த விமான சேவை பயனளிக்கும். அத்துடன் திருவனந்தபுரத்துக்கும் கோவையில் இருந்து விமான சேவை இல்லை. கோவை வேகமாக வளர்ந்து வருவதால், பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை இருப்பது அவசியம். எனவே மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>தயாராக உள்ளோம்</h2><p>கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, கோவையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு நகரங்களுக்கு விமானம் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. இது தொடர்பாக மத்திய விமான நிலைய ஆணையத்துக்கு தெரிவித்து உள்ளோம். அவர்கள் அனுமதி கொடுத்தால் விமானத்தை இயக்க தயாராக உள்ளோம் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே நாளில் போலீஸ் நிலையத்திற்கு அடுத்தடுத்து வந்த 3 காதல் ஜோடிகள்; அனல் பறந்த சமரச பேச்சுவார்த்தை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-couples-who-came-to-the-police-station-one-after-the-other-on-the-same-day-heated-reconciliation-talks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-couples-who-came-to-the-police-station-one-after-the-other-on-the-same-day-heated-reconciliation-talks#comments</comments><guid isPermaLink="false">6c8c655f-8e83-4d5e-884e-80e0a642b778</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:05:09 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:05:09.613Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police station,போலீஸ் நிலையம்,couples,காதல் ஜோடிகள்,சமரச பேச்சுவார்த்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/j5sb28b3/lovers.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/j5sb28b3/lovers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆத்தூர். </p><p>ஆத்தூரில் அடுத்தடுத்து வந்த காதல் ஜோடிகளால் மகளிர் போலீஸ் நிலையம் களைக்கட்டியது. அனல்பறந்த சமரச பேச்சுவார்த்தையால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>காதலுக்கு எதிர்ப்பு</h2><p>ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 24). பட்டதாரியான இவர் கார் டிரைவர். அரவிந்தும் அதே பகுதியை சேர்ந்த வசித்ரா (22) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் கடந்த மாதம் 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னை பெரியமேடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவீட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தி அரவிந்துடன் வசித்ராவை அனுப்பி வைத்தனர்.</p><h2>இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்</h2><p>இதேபோல் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி உலிபுரம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திப ராஜ் (26). டிரைவரான இவருக்கும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த தனுசுதா (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த 13-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு சென்று உலிபுரம் சிவன் கோவிலில் திருமணம் செய்தனர். இந்தநிலையில் பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து தனுசுதாவை பார்த்திபராஜ் உடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.</p><h2>களைக்கட்டிய போலீஸ் நிலையம்</h2><p>ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் 10 ஏக்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி (22). இவர் அதேபகுதியில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்சி. படித்து வருகிறார். இவர் தனது காதலனான வாழப்பாடி துக்கிஅம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவருடன் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் 29-ந் தேதி திருமணம் செய்தார். இதையடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் இருவரின் பெற்றோரும் திருமணத்தை ஏற்றுக் கொண்டதால் சதீஷ்குமாருடன் தமிழ்மணியை அனுப்பி வைக்கப்பட்டார். ஒரே நாளில் அடுத்தடுத்து வந்த<a href="https://www.dailythanthi.com/topic/love-couple-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF"> காதல் ஜோடி</a>களாலும், அனல்பறந்த பேச்சுவார்த்தைகளாலும் மகளிர் போலீஸ் நிலையம் களைக்கட்டியது.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சையில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ய முயன்றவர் கைது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/person-arrested-in-thanjavur-for-attempting-to-commit-fraud-by-pledging-fake-jewelry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/person-arrested-in-thanjavur-for-attempting-to-commit-fraud-by-pledging-fake-jewelry#comments</comments><guid isPermaLink="false">dbff17b2-6c6d-457b-8c51-6b7a0f31832a</guid><pubDate>Mon, 03 Aug 2026 02:36:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T02:36:33.142Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சை,Thanjavur District,தஞ்சை மாவட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/l74ckwrx/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/l74ckwrx/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>திருச்சிற்றம்பலத்தில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற முயன்றவர் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.</p><h2>நகை கடன்</h2><p>தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கோவில் தெருவில் சமீபத்தில் நகை அடகு கடை ஒன்று திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சம்பவத்தன்று வந்த ஒருவர் ஒரு பவுன் எடையுள்ள 2 வளையல்களை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். அப்போது கடை ஊழியர், அந்த நபரிடம் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெற்றுக்கொண்டார்.</p><p>அந்த விவரங்களை சரிபார்த்த ஊழியர் ஏற்கனவே கடந்த மாதம் (ஜூலை) 28-ந் தேதி இதே செல்போன் எண்ணை பயன்படுத்தி குருவம்மா என்ற பெயரில் 4 கிராம் மோதிரத்தை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் கடன் பெற்றிருப்பதை கண்டறிந்தார்.</p><h2>போலி நகைகள்</h2><p>அதன்பிறகு கடை ஊழியர் ஏற்கனவே அடகு வைக்கப்பட்ட நகையை சோதித்து பார்த்த போது, அது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரியவந்தது. மேலும் தற்போது கொண்டு வந்த நகைகளும் போலி என்பதும் கண்டறியப்பட்டது.</p><p>இதுகுறித்து கடை உரிமையாளர்களில் ஒருவரான கல்யாணசுந்தரம் திருச்சிற்றம்பலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் பகுதியை சேர்ந்த விஜயன் (வயது 55) என்பது தெரியவந்தது.</p><h2>மேலும் சிலருக்கு வலைவீச்சு</h2><p>தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஒரு ஆணும், பெண்ணும் தன்னை காரில் அழைத்து வந்து இந்த நகைகளை அடகு வைத்து தருமாறு கூறியதாக விஜயன் போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்தனர்.</p><p>மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/counseling-for-admission-to-medical-courses-begins-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/counseling-for-admission-to-medical-courses-begins-tomorrow#comments</comments><guid isPermaLink="false">8459e69c-6045-4d80-8bfc-56eb34f08045</guid><pubDate>Mon, 03 Aug 2026 02:29:02 +0000</pubDate><atom:updated>2026-08-03T02:29:02.172Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Counseling,கலந்தாய்வு,மருத்துவ படிப்பு,Medical Courses,நாளை தொடக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/alp50uvh/doctor.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/alp50uvh/doctor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'நீட்' தகுதி மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை தொடங்கி நடைபெறும் என்று மத்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.</p><h2>72,627 மாணவர்கள் விண்ணப்பம்</h2><p>தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க tnmedicalselection.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த 23-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.</p><p>மேலும் விண்ணப்பிக்க கடந்த 26-ந்தேதி காலை 10 மணி முதல் 27-ந்தேதி பிற்பகல் 3 மணி வரையில் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் 2,141 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த வகையில் மொத்தம் 72 ஆயிரத்து 627 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று விண்ணப்பித்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.</p><h2>முதற்கட்ட கலந்தாய்வு</h2><p>இந்த நிலையில் நாடு முழுவதும், 'நீட்' தகுதி மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான பட்டியலை மத்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது.அதன்படி, முதற்கட்ட அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மாநில அளவிலான கலந்தாய்வு வருகிற 13-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, 4 கட்ட கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் அக்டோபர் 10-ந்தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள 72 ஆயிரத்து 627 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">கலந்தாய்வு </a>அட்டவணையை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு கைமாறிய பிரிட்டன் ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-trade-agreement-garment-export-orders-from-britain-shift-to-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-trade-agreement-garment-export-orders-from-britain-shift-to-india#comments</comments><guid isPermaLink="false">ef79c666-c81c-471e-86a3-f4eaa0c6c986</guid><pubDate>Mon, 03 Aug 2026 02:26:11 +0000</pubDate><atom:updated>2026-08-03T02:26:11.020Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தடையற்ற வர்த்தகம்,ஆடை ஏற்றுமதி,Free Trade,Garment Exports</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/8c6svar4/4.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/8c6svar4/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், வங்கதேசத்துக்குச் செல்ல இருந்த ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள் இந்திய நிறுவனங்கள் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் கூறியதாவது;</p><p>இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த 15ம் தேதி அமலுக்கு வந்தது. இதன் வாயிலாக, நம் நாட்டு ஜவுளி, ஆடை ஏற்றுமதிக்கு பூஜ்ஜிய சுங்க வரி சலுகை கிடைத்துள்ளது. இதற்கு முன் வங்கதேசம், வியட் நாம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மட்டுமே இந்தச் சலுகையை அனுபவித்து வந்தன. தற்போதைய சலுகையின் காரணமாக, வங்கதேசத்துக்கு ஆர்டர் வழங்கி வந்த பிரிட்டன் வர்த்தகர்களும், வர்த்தக முகமைகளும் இந்திய நிறுவனங்களை அணுகத் தொடங்கியுள்ளன. வங்கதேசத்துக்குச் செல்ல இருந்த 4 கோடி டி-ஷர்ட் உற்பத்தி ஆர்டரை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு முயற்சியும் நடந்து வருகிறது. வழங்கும்</p><p>இந்த புதிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த, ஒவ்வொரு நிறுவனமும் உற்பத்தித் திறனையும் கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் சர்வதேச சந்தையில் கிடைக்கும் புதிய ஆர்டர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்.</p><p>இவ்வாறு, அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>இன்று ஆடிப்பெருக்கு விழா: காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராட ஷவர் அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-perukku-festival-today-shower-arrangements-for-people-to-take-a-holy-dip-in-the-cauvery-river</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-perukku-festival-today-shower-arrangements-for-people-to-take-a-holy-dip-in-the-cauvery-river#comments</comments><guid isPermaLink="false">48127864-de64-4189-b30c-26546086a9c7</guid><pubDate>Mon, 03 Aug 2026 02:01:16 +0000</pubDate><atom:updated>2026-08-03T02:01:16.535Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,திருச்சி,Trichy,தஞ்சாவூர்,Erode,ஈரோடு,Cauvery River,காவிரி ஆறு,ஆடிப்பெருக்கு,aadi perukku,ஆடிப்பெருக்கு விழா,திருவையாறு,Thiruvaiyaru,Aadi Perukku festival</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/6d9gjv8o/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/6d9gjv8o/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராட ஷவர் அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆடிப்பெருக்கு விழா</h2><p>தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் 18-ந்தேதி காவிரி கரையோர மாவட்டங்களில் இந்த விழா ஆண்டாண்டு காலமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>அகண்ட காவிரி பாயும் திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டும். கடந்த ஆண்டு அம்மா மண்டபத்தின் 12 படிக்கட்டுகளையும் தொட்டபடி காவிரி புதுப்புனலாக பாய்ந்து சென்றது. இதன் காரணமாக காவிரியில் புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.</p><p>ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்தது மற்றும் கர்நா டகத்தில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படாததால் காவிரி ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், ஆடிப்பெருக்கு விழாவையும் மக்கள் கடந்த ஆண்டைப்போல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.</p><h2>ஷவர் அமைப்பு</h2><p>ஆனாலும் ஆடிப்பெருக்கு நாளன்று சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வார்கள். புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு, புனித நீராடி வழிபாடு செய்வது உண்டு. காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.</p><p>காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் சாக்கடை போல் தண்ணீர் சிறிதளவே தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ள அந்த தண்ணீரில் புனித நீராட முடியுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் காரணமாக அம்மா மண்டபம் படித்துறையில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள 'ஷவரில்' பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக அம்மா மண்டபம் படித்துறை பகுதியில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>ஆடிப்பெருக்கு விழாவின்போது மக்கள் அதிக அளவில் கூடும்போது கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றுக்குள் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.</p><h2>புஷ்யமண்டப படித்துறை</h2><p>திருவையாறு காவிரி புஷ்யமண்டப படித்துறையில் மக்கள் புனித நீராட வசதியாக அங்கு பம்பு செட் அமைக்கப்பட்டுள்ளன. வருண பகவானும், கர்நாடக மாநில அரசும் கைவிட்டதால் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள ஊர்களில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா களை இழந்து காணப்படுகிறது. இந்த புண்ணிய நாளில் ஆறுகளில் தண் ணீர் இல்லாததால் குழாயடியில் பூ. பழங்களை படைத்து வழி பட மக்கள் திட்டமிட்டுள்ளனர்.</p><h2>பவானி கூடுதுறை</h2><p>ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் ஓடுவதால் ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடுவார்கள் என்பதால் படித்துறை பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்களுக்காக படித்து றைகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு குளிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.</p><p>ஆற்றங்கரையோரம் பவானி தீயணைப்பு நிலையம் சார்பில் நீச்சல் வீரர்களும், பவானி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்களுடன் நடமாடும் முதலுதவி சிகிச்சை மையமும், ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><h2>6 ஆண்டுகளுக்கு பிறகு...</h2><p>இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீரின்றி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அப்போது பக்தர்கள் குளிக்க வசதியாக 'ஷவர்' அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2020, 2021, 2022, 2023, 2024, 2025-ம் ஆண்டுகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியதால், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் இல்லாமல் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசை கண்டித்து தஞ்சையில் திமுக இன்று  கண்டன ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-holds-a-protest-demonstration-in-thanjavur-today-condemning-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-holds-a-protest-demonstration-in-thanjavur-today-condemning-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">48ebc7d6-3270-429c-94f4-ecf5255e1b32</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:56:30 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:56:30.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,தஞ்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/zgemdzm2/udhayandishi-stalin.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/zgemdzm2/udhayandishi-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து சாதனை படைத்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாத தால் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது. இதனால் விவ சாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிக்கிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு குறுவை நிவார ணமாக ரூ.25 ஆயிரம் அறிவிக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தி முழு காப்பீடு கிடைக்க உதவி செய்ய வேண்டும்.</p> <h2>ஆர்ப்பாட்டம்</h2><p>சம்பா சாகுபடிக்கான மறுமுதலீடாக விதை, உரம், பூச்சிக்கொல்லி என இடுபொருட்கள் மானியம் வழங்க வேண்டும். விவசாய கடன்களை முழு மையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.</p><h2> உதயநிதி ஸ்டாலின் தலைமையில்...</h2><p>இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகி றார். முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரு மான கே.என்.நேரு வரவேற்று பேசுகிறார்.இதில் மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ., மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமி முன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். </p> ]]></content:encoded></item><item><title>கம்பம்மெட்டு மலைப்பாதையில் சபரிமலைக்கு செல்லும் வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-turn-back-vehicles-heading-to-sabarimala-on-the-kambammedu-mountain-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-turn-back-vehicles-heading-to-sabarimala-on-the-kambammedu-mountain-road#comments</comments><guid isPermaLink="false">739b2f32-01e0-4600-bd19-44048f45a9db</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:43:54 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:43:54.924Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Vehicles,வாகனங்கள்,மலைப்பாதை,போலீசார்,Sabarimala devotees,சபரிமலை பக்தர்கள்,Kambam,கம்பம்,Mountain Roads</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/mulqzvdi/71.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/mulqzvdi/71.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கம்பம்,</p><p>கேரளம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை இடுக்கி மாவட்டம் வழியாக செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>இதையடுத்து நேற்று காலை தமிழக-கேரளம் எல்லையான கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் கம்பம் புற வழிச்சாலை பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் அப்பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D">போக்குவரத்து நெரிசல்</a> ஏற்பட்டது. பின்னர் கம்பம் வடக்கு போலீசார், கம்பம்மெட்டு போலீசாருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர். மற்ற வாகனங்கள் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு வாகன போக்குவரத்து சீரானது.</p>]]></content:encoded></item><item><title>குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மலைப்பாதையில் காட்டு யானை உலா: வாகன ஓட்டிகள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-on-the-coonoor-mettupalayam-mountain-road-motorists-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-on-the-coonoor-mettupalayam-mountain-road-motorists-alarmed#comments</comments><guid isPermaLink="false">b0e1ca73-6d50-4c29-bbc9-db5552981977</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:31:05 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:31:05.723Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானை,wild elephant</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/wgbiu1bc/3.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/wgbiu1bc/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சீசன் காரணமாக தற்போது பலாப்பழங்கள் அதிகமாக காய்த்துள்ளன. இதனை ருசித்து சாப்பிடுவதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் முகாமிட்டு உள்ளன. தண்ணீர் மற்றும் பலாப்பழங்களை தேடி காட்டு யானைகள் சாலையோரங்களில் நடமாடி வருகின்றன. தற்போது மரப்பாலம், குறும்பாடி, சின்ன குறும்பாடி, புதுக்காடு, கோழிக்கரை போன்ற பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானை ஒன்று சாலைகளில் உலா வருகிறது. இதனால் வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க, வனத்துறையினர் வழிவகை செய்து வருகின்றனர்.</p><p>இந்தநிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை கே.என்.ஆர். பகுதி அருகே ஒற்றை காட்டு யானை சாலையோரத்தில் முகாமிட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் காட்டு யானை அருகே சென்று வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை - கான்பூர் சென்டிரல் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-madurai-and-kanpur-central-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-madurai-and-kanpur-central-via-salem#comments</comments><guid isPermaLink="false">5180882a-e45e-4021-b79a-43bf1100898a</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:10:45 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:10:45.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Madurai,மதுரை,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/nh6bo5b0/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/nh6bo5b0/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,  </p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்டிரலில் இருந்து வருகிற 5,12,19,26 ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01925), காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 7.15 மணிக்கு மதுரை வந்தடையும். </p><p>மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 8,15,22,29 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (01926), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு கான்பூர் சென்டிரல் சென்றடையும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-11</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-11#comments</comments><guid isPermaLink="false">25ae0a06-b7fe-4e95-a695-39b1fdf50df6</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:07:31 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:07:31.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1mzuab0z/electricity.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/1mzuab0z/electricity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 03.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>அம்பத்தூர்</strong>: கொரட்டூர், மண்ணூர்பேட்டை, டிஎன்ஹெச்பி, சென்ட்ரல் அவென்யூ, எம்.டி.எச். சாலை, ஆர்.எஸ். சாலை, முகப்பேர் சாலை, கிழக்கு அவென்யூ, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயில் சாலை.</p><p><strong>அடையாறு</strong>: இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாடமி, வ.ஊ.சி. நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, ஜோஷ்னா பிளாட்ஸ், ஸ்ரீனிவாச நகர், தேவி பிளாட்ஸ், முருகு நகர், கோமதி நகர், ஜெயின் பிளாட்ஸ்.</p><p><strong>தாம்பரம்</strong>: பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜி.எஸ்.டி. சாலை, சர்வீஸ் சாலை, இரும்புலியூர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதல்-அமைச்சர் விஜய் இன்று பார்வையிடுகிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-visiting-private-factories-in-sriperumbudur-and-oragadam-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-visiting-private-factories-in-sriperumbudur-and-oragadam-today#comments</comments><guid isPermaLink="false">3c991be7-ddee-440d-835e-c109324ae82b</guid><pubDate>Mon, 03 Aug 2026 00:56:12 +0000</pubDate><atom:updated>2026-08-03T00:56:12.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,ஸ்ரீபெரும்புதூர்,தனியார் தொழிற்சாலை,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/3czncuvg/Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/3czncuvg/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில், 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' என்ற நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ‘டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள் உற் பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசு டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 'பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட பஸ்களை யும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. வணிக வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தை இன்று (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.</p> <h2>கண்ணாடி தொழிற்சாலை</h2><p>அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் செயல்படும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின்ட் கோபின் நிறுவனமும், தமிழக அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>இந்த நிறுவனம் உலகத்தரத்திலான கண்ணாடி தயாரிப்பு வளாகத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதனை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நிசான் கார் கம்பெனியையும் முதல்-அமைச்சர் விஜய் பார்வையிடுகிறார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடக அரசை கண்டித்து காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-protest-by-burying-themselves-in-the-sand-in-the-cauvery-river-to-condemn-the-karnataka-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-protest-by-burying-themselves-in-the-sand-in-the-cauvery-river-to-condemn-the-karnataka-government#comments</comments><guid isPermaLink="false">41d30742-f7c5-48ec-af36-13ed34be60cf</guid><pubDate>Mon, 03 Aug 2026 00:55:50 +0000</pubDate><atom:updated>2026-08-03T00:55:50.497Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள் போராட்டம்,Cauvery River,காவிரி,Farmers protest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xk6s6ssx/70.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/xk6s6ssx/70.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.</p><h2>மேகதாது விவகாரம்</h2><p>காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பிலும் போராட்டம் நடந்து வருகிறது.</p><p>தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக 4.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டது.</p><h2>விவசாயிகள் போராட்டம்</h2><p>இந்நிலையில் தற்போது திடீரென கர்நாடக அரசு காவிரியில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டு உள்ளது. உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், மேகதாது அணை கட்டும் பணியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று திருச்சி காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள ஒரு மணல் திட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.</p><p>குழித்தோண்டி கழுத்தளவு மணலில் புதைந்தும், தூக்குக்கயிறு மாட்டிக் கொண்டும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">விவசாயிகள் போராட்டத்தில்</a> ஈடுபட்டனர். அப்போது சாகும் நிலையில் உள்ள விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினார்கள். காவிரி ஆற்றின் நடுவில் நடைபெற்ற இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: பாலம் அமைக்கும் பணியால் ஓமலூரில் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-traffic-diversion-in-omalur-due-to-bridge-construction-work</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-traffic-diversion-in-omalur-due-to-bridge-construction-work#comments</comments><guid isPermaLink="false">a6e7b061-eaf1-4cf6-8bfe-16bc036b3977</guid><pubDate>Mon, 03 Aug 2026 00:52:59 +0000</pubDate><atom:updated>2026-08-03T00:52:59.374Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,போக்குவரத்து மாற்றம்,traffic diversion</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/yz8f0epn/1.gif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-03/yz8f0epn/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>சேலம் மாவட்டம் ஓமலூரில் மேச்சேரி சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் வருகிற 8-ந் தேதி முதல் பணிகள் நிறைவடையும் வரை ஓமலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஓமலூர், மேச்சேரி, பென்னாகரம் வழியாக பெரும்பாலை சாலை அனைத்து வகையான போக்குவரத்திற்கும் மூடப்படுகிறது. </p><p>வாகன ஓட்டிகள் ஓமலூர்-சங்ககிரி சாலையில் இருந்து அம்மன் கோவில்பட்டி, ரெட்டிப்பட்டி வழியாக அமரகுந்தி செல்லும் சாலை, எம்.செட்டிப்பட்டி-பாலிக்கடை சாலை வழியாக மாநில நெடுஞ்சாலையை அடைந்து மேச்சேரி நோக்கி செல்ல வேண்டும். அதேபோல், மேச்சேரியில் இருந்து ஓமலூர் நோக்கி செல்லும் வாகனங்கள், எம்.செட்டிப்பட்டி-பாலிக்கடை சாலை மற்றும் காமலாபுரம்-சின்னதிருப்பதி-ஜோடுகுளி சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து ஓமலூர் நோக்கி செல்ல வேண்டும். </p><p>எனவே பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்தி போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு எடப் பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மனுக்களோடு வாருங்கள்; பணத்தோடு வந்தால் அனுமதி இல்லை</title><link>https://www.dailythanthi.com/others/thalayangam/come-with-petitions-not-with-money</link><comments>https://www.dailythanthi.com/others/thalayangam/come-with-petitions-not-with-money#comments</comments><guid isPermaLink="false">e74c266e-2950-4436-80e9-2a0d63dcbae8</guid><pubDate>Sun, 02 Aug 2026 23:42:39 +0000</pubDate><atom:updated>2026-08-02T23:42:39.379Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தலையங்கம்,லஞ்சம்,Bribery,Govt Offices,அரசு அலுவலகங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/bltgn396/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/bltgn396/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலையங்கம் (Thalayangam)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்த உடனேயே மக்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் இருக்க லஞ்சத்துக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களுக்கு லஞ்சமாக கொடுத்து வந்த பணத்தை ஒரு ரூபாய் கூட வேறு எங்கும் கொடுக்க வேண்டாம் என்று கூறி மடைமாற்றி அரசின் கஜானாவுக்கு திருப்பிவிட்டார். இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களின் நிறுவனங்களுக்கு கூட நேர்மையான முறையில் அனுமதியும், அவர்களிடம் கொள்முதலை நடத்தியதும் வியப்பை கொடுத்தது. பாரபட்சம், சலுகை காட்டாமல் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சமமான முறையில் கொள்முதல் செய்துவருவது விமர்சனங்களுக்கு வழிவகுத்தாலும், அந்த நிலையே தொடர்கிறது. ஜூன் மாதம் 23-ந்தேதி சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசும்போது, மிகவும் ஆவேசமாக மக்கள் பணத்தை தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம் என்று சொன்னது லஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கி விட்டது.</p><p>தமிழக அரசின் டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை இருந்து வருகிறது. ஒப்பந்த புள்ளியில் குறைவான தொகையை குறிப்பிடுபவர்களுக்கு தங்கு தடையில்லாமல் ஒப்பந்தம் கிடைத்து வருகிறது. முன்பு வழங்கப்பட்ட பல டெண்டர்கள், முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களோடு அதிகம் தொடர்புடையதும், பணப்புழக்கம் அதிக உள்ள அலுவலகங்களில் ஒன்றான பதிவுத்துறையின் சார்பதிவாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், சோதனைச்சாவடிகள் என்று பல அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து சோதனை நடத்தினார்கள். அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் 9498180936 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த எண்ணை மனதில் பதிந்து வைத்திருக்க சிரமமாக இருக்கிறது. எனவே 100, 108 என்பதுபோல மூன்று இலக்க எண்ணை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைக்கிறார்கள். அதையும் தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.</p><p>முதல்-அமைச்சர் விஜய் வகுத்து கொடுத்த லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான பாதையில் அதிகாரிகள் பயணிக்கத் தொடங்கி விட்டனர். அந்த வகையில், மானாமதுரையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கிருஷ்ணகுமார் நூதனமான அறிவிப்பு பலகை வைத்திருக்கிறார். அதில், "வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வரவேண்டும். பணம் வைத்து இருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை" என்று குறிப்பிட்டுள்ளதோடு, அலுவலகத்தின் நுழைவுவாயிலில், "லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம்" என்ற அறிவிப்பையும் வைத்திருக்கிறார்.</p><p>இதை ஒரு மாதிரி தாலுகா அலுவலகம் என்றே கூறலாம். அய்யன் திருவள்ளுவர், "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்று கூறினார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் செய்ததுபோல அனைத்து அரசு அலுவலகங்களும் இதே நடைமுறைகளை பின்பற்றினால் மக்களும் நேர்மையான அரசு அலுவலகத்துக்கு செல்கிறோம் என்ற பெருமையுடன் வெறுங்கையை வீசிக்கொண்டு மனுக்களோடு செல்ல முடியும். அரசு ஊழியர்களும் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற கவுரவத்தோடு நெஞ்சை நிமிர்த்தி என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று யாருக்கும் அஞ்சாமல் அலுவலகத்துக்குள் வர முடியும், பணி முடிந்து மனநிறைவோடு வீட்டுக்கும் செல்லமுடியும்.</p>]]></content:encoded></item><item><title>கர்ப்பமானதால் கைவிரித்த காதலன்: பச்சிளம் குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் வீசிய நர்ஸ் - அதிர்ச்சி சம்பவம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nurse-kills-newborn-throws-in-coconut-grove</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nurse-kills-newborn-throws-in-coconut-grove#comments</comments><guid isPermaLink="false">14824409-9562-4060-b73f-ea1144a73464</guid><pubDate>Sun, 02 Aug 2026 23:33:45 +0000</pubDate><atom:updated>2026-08-02T23:33:45.358Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,நாகர்கோவில்,Kanniyakumari,குழந்தை கொலை,Nagarcoil</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/o98pf1zm/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-02/o98pf1zm/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>காதலனுடன் தவறான உறவில் பிறந்ததால் பச்சிளம் ஆண் குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் நர்ஸ் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பச்சிளம் குழந்தை பிணம்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தின் அருகே உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் இறந்து கிடந்தது.</p><p>இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை மருத்துவர், வடசேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.</p><h2>காதலனால் கர்ப்பமான நர்ஸ்</h2><p>தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இதனால் நர்ஸ் கர்ப்பமானார்.</p><p>இதனையறிந்த அந்த வாலிபர், நர்சுடனான பழக்கத்தை துண்டித்து விட்டார். ஆனால், தான் கர்ப்பமாக இருந்ததை அந்த நர்ஸ் வேறு யாரிடமும் சொல்லாமல் மறைத்தபடி இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் நடைபெறாத நிலையில் காதலனால் கர்ப்பமாகி குழந்தை பெற்றது வெளியே தெரிந்தால் தனக்கும், தனது குடும்பத்துக்கும் அவமானம் என்று அந்த நர்ஸ் கருதினார். எனவே, குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் கொலை செய்து, முதியோர் இல்ல வளாக தென்னந்தோப்பில் வீசிச் சென்றிருக்கிறார்.</p><h2>மருத்துவமனையில் சிகிச்சை</h2><p>இதனை தொடர்ந்து அந்த நர்சை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே உடல் நலக்குறைவு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய சிகிச்சைக்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>