<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 15 Sep 2026 02:23:32 +0000</lastBuildDate><item><title>நீளமான சரக்கு பெட்டக கப்பலை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tuticorin-port-achieves-a-milestone-by-handling-a-long-container-vessel</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tuticorin-port-achieves-a-milestone-by-handling-a-long-container-vessel#comments</comments><guid isPermaLink="false">e744d388-1ee6-4630-ba02-48fb3996ad13</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:23:28 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:23:28.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Tuticorin,தூத்துக்குடி துறைமுகம்,Thoothukudi port,சரக்கு கப்பல்,Cargo ship,Tuticorin port</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/7aftap7l/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/7aftap7l/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பெரிய வகை கப்பல்கள் வந்து செல்லும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், துறைமுகத்திற்கு முதல் முறையாக 335.23 மீட்டர் நீளம், 51 மீட்டர் அகலமும், 13.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட எம்.வி., சி.எம்.ஏ., சி.ஜி.எம்., தோரியம் என்ற சரக்கு கப்பலை நேற்று கையாண்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.</p><p><strong>இதுகுறித்து துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-</strong></p><p>தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பிரேசிலின் சாண்டோஸ் துறைமுகத்தில் இருந்து சி.எம்.ஏ. சி.ஜி.எம். தோரியம் என்ற சரக்கு பெட்டக கப்பல் நேற்று வந்தது. இந்த கப்பல் 335.23 மீட்டர் நீளம், 51 மீட்டர் அகலம் மற்றும் 13.5 மீட்டர் மிதவை ஆழம் கொண்டதாகும். 13 ஆயிரம் டி.இ.யு. சரக்கு பெட்டக கொள்ளளவு கொண்ட பெரியவகை சரக்கு கப்பல் ஆகும்.</p><p>டி.இ.யு. என்பது கடல்சார் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அளவீட்டு குறியீடு ஆகும். இந்த கப்பல் மெத்தனால் மற்றும் கடல்சார் எரிபொருள் ஆகிய இருவகை எரிபொருட்களிலும் இயங்கும் திறன் கொண்டது. துறைமுகத்துக்கு வந்த கப்பலை வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன் மற்றும் துறைமுக அதிகாரிகள், சரக்கு பெட்டக முனைய அதிகாரிகள் வரவேற்றனர்.</p><p>இந்த கப்பலில் இருந்து மொத்தம் 3,276 டி.இ.யு. சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட உள்ளன. இதில் 1,324 டி.இ.யு. இறக் குமதி சரக்குகளும், 1,952 டி.இ.யு. ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளும் அடங்கும். இந்த கப்பல் வ.உ.சி. துறைமுகத்தில் இதுவரை கையாண்டுள்ள சரக்குப் பெட்டக கப்பல்களிலேயே மிக நீளமானதா கும். 2026-27 நிதியாண்டில் கடந்த ஆகஸ்டு மாதம் வரையிலான காலகட்டத்தில், வ.உ.சி. துறைமுகம் 3.67 லட்சம் டி.இ.யு. சரக்கு பெட்டகங்களை கையாண்டுள்ளது.</p><p>இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப் பட்ட 3.62 லட்சம் டி.இ.யு. சரக்கு பெட்டகங்களை விட அதிகமாகும். ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்தை பொறுத்தவரை 18.27 மில்லியன் டன் சரக்குகளை துறைமுகம் கையாண்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 17.89 மில்லயன் டன் சரக்குகளுடன் ஒப்பிடுகையில், இது 2.10 சதவீதம் வளர்ச்சி ஆகும்.</p><p>தற்போது வ.உ.சி. துறைமுகம் நீளமான கப்பலை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை, பெரிய கப்பல்களை ஈர்ப்பது, சரக்குப் பெட்டக கையாளுதலை அதிகரிப்பது மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் நேரடி இணைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் விநாயகர் படத்துடன் பிரியாணி விளம்பர பேனர்: ஓட்டல் உரிமையாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hotel-owner-arrested-for-advertising-biryani-with-ganesha-image-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hotel-owner-arrested-for-advertising-biryani-with-ganesha-image-in-nellai#comments</comments><guid isPermaLink="false">51efd3b7-52b0-4103-9689-918c2569983c</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:22:25 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:22:25.595Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Tirunelveli,திருநெல்வேலி,arrested,hotel,ஓட்டல்,உரிமையாளர்,owner,விநாயகர்,Ganesha,படம்,picture,விளம்பர பேனர்,Advertising banner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xxodwvdd/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் விநாயகர் படத்துடன் பிரியாணி விளம்பர பேனர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xxodwvdd/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">ஓட்டல் </a><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">விளம்பர பேனரில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">விநாயகர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">படத்தை</a> சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தியதாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">பிரியாணி கடை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">உரிமையாளரை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வி.எம்.சத்திரத்தில் உள்ள தூத்துக்குடி சாலையில் இயங்கி வரும் அசைவ ஓட்டல் ஒன்றில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சலுகை விலையில் பிரியாணி வழங்கப்படுவதாக விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதில் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. </p><h2>இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு</h2><p>அந்த படமானது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உணவகத்தின் முன்பு திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. </p><h2>மாநகர போலீசார் பேச்சுவார்த்தை</h2><p>இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர போலீசார், பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சர்ச்சைக்குரிய விளம்பர பதாகையை உடனடியாக அகற்றினர். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். </p><p>இந்துக்களின் கடவுளை அவமதிக்கும் வகையிலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்நோக்கத்துடன் இந்தப் பதாகை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நரசிங்கநல்லூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். </p><h2>ஓட்டல் உரிமையாளர் கைது</h2><p>அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அசைவ உணவகத்தின் உரிமையாளரான கே.டி.சி. நகரைச் சேர்ந்த முருகையா என்பவரின் மகன் ஜெயந்த் (வயது 30) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாள்: மு.க. ஸ்டாலின் புகழ் வணக்கம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birthday-mk-stalins-praise-and-worship</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birthday-mk-stalins-praise-and-worship#comments</comments><guid isPermaLink="false">b6e75420-ae32-456b-b0d4-0b514ecc374e</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:16:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:16:00.455Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பிறந்தநாள்,Anna,பேரறிஞர் அண்ணா,மு.க. ஸ்டாலின்,Anna birthday,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8gkv024d/336.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பேரறிஞர் அண்ணா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/8gkv024d/336.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>புகழ் வணக்கம்</h2><p>தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாக பிறந்து தாய்க்கு பெயரிட்ட மாபெரும் தமிழ் கனவு அவர்!</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE">பேரறிஞர் அண்ணா</a> சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-worker-dies-after-being-struck-by-lightning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-worker-dies-after-being-struck-by-lightning#comments</comments><guid isPermaLink="false">386e8dbc-526d-42fd-9f32-f6511005c2ce</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:51:57 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:51:57.833Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திண்டுக்கல்,Worker,உயிரிழப்பு,வடமாநில தொழிலாளி,மின்னல்,lightning,Die</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/mg5og2g1/335.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/mg5og2g1/335.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னிவாடி,</p><p>திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சில்வாரப்பட்டியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் திருச்செங்கோடு போர்வெல் வண்டியுடன் வந்திருந்தனர். </p><p>நேற்று மாலை போர் போடும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது லேசான மழை பெய்தது. அப்போது மழையில் நனையாமல் இருப்பதற்காக ஒடிசா மாநிலம் நபரங்குபூர் பகுதியை சேர்ந்த சோனு ராம்கோண்டு (வயது 25) என்பவர் அருகில் இருந்த வேப்ப மரத்தடியில் சென்று நின்றார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் வேப்ப மரத்தின் வழியாக மின்சாரம் பாய்ந்து சோனு ராம்கோண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். </p><p>இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராம்கோண்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியை கொடுமைப்படுத்திய தோழிகள்: கையில் கற்பூரம் ஏற்றி துன்புறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-engineering-student-tortured-over-ghost-possession-claim</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-engineering-student-tortured-over-ghost-possession-claim#comments</comments><guid isPermaLink="false">6317f216-5eca-4460-90c9-356ab7c050ec</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:51:46 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:51:46.453Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,College student,கல்லூரி மாணவி,வழக்குப்பதிவு,Case filed,கொடுமை,சின்னசேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/cxnhvd7w/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/cxnhvd7w/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>கல்லூரி மாணவி</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இதயா மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வாணாபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி முதலாம் ஆண்டு சி.எஸ்.இ. படித்து வருகிறார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார்.</p><p>அவருடன், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவி, வாணாபுரம் பகுதியை சேர்ந்த பி.டெக் முதலாம் ஆண்டு மற்றும் சி.எஸ்.இ. முதலாம் ஆண்டு படிக்கும் 2 மாணவிகள், கடலூர் பகுதியை சேர்ந்த பி.டெக். முதலாம் ஆண்டு மாணவியும் விடுதியில் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது.</p><h2>தோழிகள் கொடுமை</h2><p>இந்த நிலையில் வாணாபுரம் பகுதியை சேர்ந்த மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி, அவருடன் தங்கியிருந்த தோழிகளான 4 பேரும் அந்த மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளனர். மேலும் துடைப்பத்தால் அந்த மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். தோழிகளின் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி, சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சக மாணவிகள் 4 பேர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தேங்காய் ஏற்றுமதி விலை கிலோ ரூ.70 ஆக உயர்வு.! காரணம் என்ன.?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/export-price-of-coconut-increased-to-rs-70-per-kg-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/export-price-of-coconut-increased-to-rs-70-per-kg-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">13cd96de-7584-48c9-b5b8-e05a10b55fbc</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:46:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:46:16.791Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏற்றுமதி,தேங்காய் விலை,Coconut Export,Coconut Price</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xmsgx63a/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/xmsgx63a/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தேங்காய் ஏற்றுமதி விலை இரண்டாண்டுளுக்கு முன்பு கிலோ சராசரியாக 25 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 55-70 ரூபாயாக உயர்ந்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளது. என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன் கூறியதாவது:</p><p>நாட்டின் மொத்த தேங்காய் ஏற்றுமதியில் தமிழகம் 31 சதவீதம் பங்களிப்புடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்திலிருந்து கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஏமன், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய் யப்படுகிறது. அதற்கடுத்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகிறது. ஏற்றுமதிக்கான 96 தேங்காய் அளவு 13 அங்குல சுற்றளவும், 100-300 கிராம் எடையும் இருக்க வேண்டும். ஒரு மூட்டைக்கு 13 கிலோ அல்லது 25 தேங்காய்கள் இடம்பெற வேண்டும். ஒரு கன்டெய்னருக்கு கிட்டத்தட்ட 18,000 தேங்காய்கள் அனுப்பப்படும். </p><h2></h2><h2>மேற்காசிய போர்</h2><p>தேங்காய் ஏற்றுமதிக்கான திருப்பூர் மாவட்டம், காங்கேயம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஆகிய இடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பதற்றம் குறைந்த பின் தற்போது தேங்காய் ஏற்றுமதி படிப்படியாக அதிகரித்து வருகிறது.</p><p>இரண்டாண்டுகளுக்கு முன் கிலோ தேங்காய் சராசரியாக 25 ரூபாய்க்கும், கடந்தாண்டு 40 முதல் 48 ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. எப்போதும் தேங்காய் ஏற்றுமதி விலை 25-30 ரூபாய்க்குள் இருந்த நிலையில், தற்போது 3 மடங்கு உயர்ந்துள்ளது. தேங்காய் விலை உயர்வால் ஏற்றுமதி செலவு அதிகரித்துள்ளது. போதுமான மழை இல்லாததால் உற்பத்தி குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், ஏற்றுமதிக்கான தரமான தேங்காய் கிடைப்பது சிரமமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகரால் முருகன் புறக்கணிப்பு.. வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagaral-murugan-purakkanippu-verichchodi-thiruthani-murugan-kovil</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagaral-murugan-purakkanippu-verichchodi-thiruthani-murugan-kovil#comments</comments><guid isPermaLink="false">b86ef557-4e65-404c-bc7a-95e3050f312e</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:44:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:44:36.048Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முருகன் கோவில்,Murugan Temple,திருத்தணி,Thiruttani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/6kiowght/tltld.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/6kiowght/tltld.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கூடக்கூடிய சூழலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.</p><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக விளங்கும் திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.</p> <h2>பஞ்சாமிர்த அபிஷேகம்</h2><p>இந்த நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா என்பதால் வெளியூர்களில் இருந்து திருத்தணி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைவாக காணப்பட்டது. இதனால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.</p><p>இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எவ்வித கூட்ட நெரிசலும் இன்றி பொது வழியில் விரைவாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.  முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறு: விவசாயி குத்திக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-placement-of-ganesha-idol-farmer-stabbed-to-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-over-placement-of-ganesha-idol-farmer-stabbed-to-death#comments</comments><guid isPermaLink="false">1a5f9517-1fcc-455a-b139-473332f0e613</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:28:49 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:28:49.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திண்டுக்கல்,farmer,விவசாயி,Dispute,தகராறு,விநாயகர் சிலை,குத்திக்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/10gpa961/334.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/10gpa961/334.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p>விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>தகராறு</h2><p>திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, ராமகிரி அடுத்த பொம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பொம்மன் (வயது 47). விவசாயியான இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். 2 மனைவிகள் திண்டுக்கல் மாவட்டம் பொம்ம நாயக்கன் பட்டியில் வசித்து வருகின்றனர். 3-வது மனைவி கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சியை அடுத்த கருவாடு நாயக்கனூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொம்மனின் சொந்த ஊரான பொம்ம நாயக்கன்பட்டியில் விநாயகர் சிலை வைப்பதில் அங்குள்ள சிலருக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.</p> <h2>வெள்ளியணை போலீசார்</h2><p>பின்னர் பொம்மன் நள்ளிரவு 1 மணிக்கு குஜிலியம்பாறையில் இருந்து புறப்பட்டு மூக்கணாங்குறிச்சியை அடுத்த கருவாடு நாயக்கனூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். ஆனால் அவர் 3-வது மனைவியின் வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் முஷ்டகிணத்துபட்டி சாலையில் பொம்மன் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு, காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதனையடுத்து வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொம்மனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து பொம்மனை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதி இடைத்தேர்தல்: கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-for-two-constituencies-communist-parties-to-announce-candidates-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-for-two-constituencies-communist-parties-to-announce-candidates-today#comments</comments><guid isPermaLink="false">7cf073e3-9d25-45c9-a929-a2c4e1dbc678</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:21:05 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:21:05.608Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,Communist Parties,கம்யூனிஸ்டு கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/qxf09iks/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/qxf09iks/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுகின்றனர். மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிடுகிறது. 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படுகிறார்கள்.</p><p>சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்களை அறிவித்து, அறிமுக கூட்டம் நடைபெற உள்ளதாக மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு). சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-the-hubballi-kollam-special-train-service-operating-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-the-hubballi-kollam-special-train-service-operating-via-salem#comments</comments><guid isPermaLink="false">279c88cb-130e-487d-b989-efe973d280c4</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:17:24 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:17:24.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zqfnhu9i/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zqfnhu9i/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>சிறப்பு ரெயில் நீட்டிப்பு</h2><p>கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரளம் மாநிலம் கொல்லத்திற்கு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-07313) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண்-07314) இயக்கப்படுகிறது.</p><p>இந்த ரெயில் இயக்கத்தின் சேவை இந்த மாதத்தோடு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் 2 மாதம் அதாவது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரையிலும் நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07313) அக் டோபர் 4-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கி ழமை தோறும் (9 சேவை) நீட்டித்து இயக்கப்படுகின்றன. ஹூப்ளியில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு ஹாவேரி, பீரூர், தும்கூரு, பெங்களுரு. கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக சேலத்திற்கு மறுநாள் அதி காலை 3.07 மணிக்கு வரும். அதன்பிறகு ஈரோடு. திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியாக கொல்லத்திற்கு மதியம் 1.15 மணிக்கு சென்றடைகிறது.</p><h2>கொல்லம்-ஹூப்ளி</h2><p>அதேபோல் மறுமார்க்கத்தில் கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் (07314) வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும் (9 சேவை) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கொல்லத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, போத்த னூர் வழியாக சேலத்திற்கு மறுநாள் அதிகாலை 4.05 மணிக்கும் வந்தடையும்.</p><p>இதையடுத்து சேலத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில், பங்காரு பேட்டை, பெங்களூரு வழியாக ஹூப்ளிக்கு மாலை 6.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐ.ஆர்.சி.டி.சி. வரலாற்றில் புதிய சாதனை: ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/irctc-history-new-record-over-2-million-tickets-in-a-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/irctc-history-new-record-over-2-million-tickets-in-a-day#comments</comments><guid isPermaLink="false">6666cbfd-ec24-4427-84ad-3e39ffffdc0f</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:15:05 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:15:05.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிக்கெட் முன்பதிவு,Ticket Booking,train,ரெயில்,IRCTC,சாதனை,ஐ.ஆர்.சி.டி.சி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/9bwdkg7y/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/9bwdkg7y/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஐ.ஆர்.சி.டி.சி. வரலாற்றில் புதிய சாதனையாக ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய் யப்பட்டு உள்ளன.</p><h2>ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம்</h2><p>இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளத்தின் மூலம் ஏராளமான பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களுக்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாததால், பொதுமக்கள் இந்த வசதியை பெரிதும் விரும்புகின்றனர்.</p><p>தங்கள் செல்போனில் உள்ள செயலி மூலமாகவே, தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே எளிமையாக டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். சாதாரண நாட்களை விட, பண்டிகை காலங்களில் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில், பயணிகள் அனைவரும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தைப் பயன்படுத்தி முன்பதிவு செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.</p><h2>தீபாவளிப் பண்டிகை</h2><p>அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வருகிற நவம்பர் 8-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கான 60 நாட்கள் முன்னதாகச் செய்யும் ரெயில் டிக்கெட் முன்பதிவு கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இதனால் சொந்த ஊர்களுக்குச் செல்ல நினைக்கும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். இதன் காரணமாக, கடந்த 7-ந்தேதி ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 20 லட்சத்து 6 ஆயிரத்து 353 டிக்கெட்டுகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் வெற்றிகரமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><h2>வரலாற்று சாதனை</h2><p>ஐ.ஆர்.சி.டி.சி. வரலாற்றில் 20 லட்சம் என்ற எண்ணிக்கையை ஒரே நாளில் கடந்து, ஆன்லைன் ரெயில் டிக்கெட் முன்பதிவில் புதிய உலகளாவிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ந்தேதி பண்டிகை காலத்தில் 18.40 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. இதேபோல, கடந்த 8-ந்தேதி சுமார் 19 லட்சத்து 50 ஆயிரத்து 699 டிக்கெட்டுகள் முன்பதிவாகின. இது கடந்த ஆண்டின் பண்டிகைக் கால முன்பதிவை விட 6 சதவீதம் அதிகமாகும்.</p><h2>புதிய சர்வர்</h2><p>ஐ.ஆர்.சி.டி.சி. தரவுகளின்படி, முன்பதிவு திறக்கப்படும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலான முதல் ஒரு மணி நேரத்தில் ஒட்டுமொத்த நாளின் டிக்கெட்டுகளில் 8.43 சதவீதம் முதல் 14.14 சதவீதம் வரை மட்டுமே பதிவாகிறது. குறிப்பாக, காலை 8 மணி முதல் 8.15 மணி வரையிலான முதல் 15 நிமிடங்களில் அதிவேக முன்பதிவும் நடைபெறும். மீதமுள்ள 85 சதவீதத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் அந்த நாளின் அடுத்தடுத்த மணி நேரங்களில் நிதானமாக பதிவு செய்யப்படுகின்றன.</p><p>கூட்ட நெரிசலையும், பயனர்களின் தேவையையும் சமாளிக்கும் பொருட்டு ஐ.ஆர்.சி.டி.சி.யின் தொழில்நுட்ப கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு. புதிய 'சர்வர்'கள் மூலம் அதன் செயல்திறன் மற்றும் வேகம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான முன்பதிவின் போதும் இணையதளத்தில் பெரிய அளவில் எந்தவொரு தொழில்நுட்பக் கோளாறோ அல்லது முடக்கமோ ஏற்பட வில்லை.</p><h2>அதிரடி தணிக்கை</h2><p>இதேபோல, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய, சட்ட விரோதமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு எதிராக ஐ.ஆர்.சி.டி.சி. கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் போலி இணையதள முன்பதிவு 55 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கும் முதல் 10 நிமிடங்களுக்கு (காலை 8 முதல் 8.10 வரை) பொது அங்கீகாரம் பெற்ற முகவர்கள் டிக்கெட் புக் செய்ய தடையும் விதிக்கப்பட்டது.</p><p>அதிரடி தணிக்கை மூலம் சுமார் 3.04 கோடி போலி பயனர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் 6.33 கோடி கணக்குகள் மறு-சரிபார்ப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் ரெயில்களில் முன்பதிவு செய்யப்படும் மொத்த டிக்கெட்டுகளில் சுமார் 89 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் போல் சித்தரித்து விநாயகர் சிலை: போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணி நிர்வாகி தர்ணா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindu-front-executive-stages-dharna-in-front-of-police-station-to-deface-ganesha-statue-depicting-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hindu-front-executive-stages-dharna-in-front-of-police-station-to-deface-ganesha-statue-depicting-chief-minister#comments</comments><guid isPermaLink="false">95e4c9db-3a7a-4153-bfee-28a37b785a3f</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:11:30 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:11:30.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்து முன்னணி,Chennai,சென்னை,Executive,நிர்வாகி,hindu munnani,விநாயகர் சிலை,Dharna,தர்ணா,Ganesha Statue,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/alhakk79/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் போல் சித்தரித்து விநாயகர் சிலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/alhakk79/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> கொருக்குப்பேட்டை பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> போல் சித்தரித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">விநாயகர் சிலை</a> வைக்கப்பட்டதை கண்டித்து ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் முன்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF">இந்து முன்னணி</a> மாநில <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">நிர்வாகி</a> ஒருவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE">தர்ணா</a>வில் ஈடுபட்டார். </p><h2>முதல்-அமைச்சர் விஜய் போல் சித்தரித்து விநாயகர் சிலைகள்</h2><p>சென்னை கொருக்குப்பேட்டை, கருமாரியம்மன் நகரில் முதல்-அமைச்சர் விஜய் போல் சித்தரித்து விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.</p><h2>போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணி நிர்வாகி தர்ணா</h2><p>இந்த நிகழ்வு இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் இந்து முன்னணி மாநில இளைஞரணி துணை செயலாளர் செல்வம் என்பவர் நேற்று மதியம் சென்னை ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்தனர். </p><h2>த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிய வலியுறுத்தல்</h2><p>அப்போது அவர், தெய்வங்களை நடிகர் மற்றும் முதல்-அமைச்சர் போல் சித்தரிக்க கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிய வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு போலீசார், அந்த சிலைகளை பறிமுதல் செய்து தனியார் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் பறக்கும் படை சோதனை: மதுராந்தகத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-flying-squad-raid-rs-1-lakh-seized-in-madhurantakam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/election-flying-squad-raid-rs-1-lakh-seized-in-madhurantakam#comments</comments><guid isPermaLink="false">a7f34656-6d52-4192-989b-efea09fc4b0f</guid><pubDate>Tue, 15 Sep 2026 01:01:09 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:01:09.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>raid,தேர்தல்,seized,பறக்கும் படை,சோதனை,Election Flying Squad,மதுராந்தகம் அருகே</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/tgrnahen/333.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பறக்கும் படை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/tgrnahen/333.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், </p><p>மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.</p><h2>பறிமுதல்</h2><p>மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தவமணி என்பவர், சென்னையில் உள்ள உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்காக காரில் சென்று கொண்டிருந்தார். </p><p>மதுராந்தகம் அடுத்த அரைப்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தலைமையிலான குழுவினர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தவமணியின் காரை சோதனையிட்டதில், அதில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.</p><p>பறிமுதல் செய்யப்பட்ட பணம் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">பறக்கும் படை</a> மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் சோதனையைத் தீவிர படுத்தியுள்ளனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-58</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-58#comments</comments><guid isPermaLink="false">9ed45565-d613-47c5-8490-65232bf72a50</guid><pubDate>Tue, 15 Sep 2026 00:49:11 +0000</pubDate><atom:updated>2026-09-15T00:49:11.691Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zt3i490q/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-15/zt3i490q/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (116.09.2026 திங்கட்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் முதல் அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு குறைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-reduced-for-former-chief-minister-o-panneerselvam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-reduced-for-former-chief-minister-o-panneerselvam#comments</comments><guid isPermaLink="false">9ce47f08-834b-4a19-93d5-365a45d52903</guid><pubDate>Mon, 14 Sep 2026 22:36:27 +0000</pubDate><atom:updated>2026-09-14T22:36:27.302Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,cm,பன்னீர்செல்வம்,O pannerselvam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/auaaaqsu/O-panner-selvam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/auaaaqsu/O-panner-selvam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திகழ்கிறார். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 3 முறை முதல்-அமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். மேலும் துணை முதல்-அமைச்சர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அவர் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் போடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><h2>அடிப்படை பாதுகாப்பு</h2><p>முன்னாள் முதல்-அமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத் துக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப் பட்டுள்ளது. அவருடைய வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆயுதப்படை பிரிவுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். அதுபோல், 'வி.ஐ.பி.' வாகன பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அவருக்கான பாதுகாப்பு 'ஒய்' பிரிவில் இருந்து 'எக்ஸ்' பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. 'எக்ஸ்' பிரிவு என்பது அடிப்படை பாதுகாப்பு வழங்குவது ஆகும்.</p><h2>அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வு</h2><p>இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் ‘அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வு' மேற்கொள்ளப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது" என்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு திடீரென குறைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
தொடர் விடுமுறை நிறைவு:  ரெயில், பஸ்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/end-of-long-holiday-crowds-of-passengers-thronged-trains-and-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/end-of-long-holiday-crowds-of-passengers-thronged-trains-and-buses#comments</comments><guid isPermaLink="false">dd8cc571-53de-4db3-aa8e-21197041101f</guid><pubDate>Mon, 14 Sep 2026 22:15:51 +0000</pubDate><atom:updated>2026-09-14T22:15:51.299Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bus,ரெயில்,Crowd,rail,பயணிகள் கூட்டம்,பஸ் bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/uba24far/passenger.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/uba24far/passenger.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>வார விடுமுறையோடு விநாயகர் சதுர்த்தி விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பணிபுரியும் இடங்களான சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் உற்றார் உறவினர்களை சந்தித்து விட்டு விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு புறப்பட்டனர்.இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்து ரெயில் மற்றும் பஸ்களில் ஏறி அவர்கள் பயணம் செய்தனர்.</p><p>நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்வதற்காக மக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதுநெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களில் முழுமையாக இருக்கைகள் நிரம்பிய நிலையில் அந்த ரயிலில் உள்ள பொதுப்பட்டிகளில் ஏராளமான பயணிகள் முண்டியெழுத்து ஏறி பயணம் செய்தனர் மேலும் நாகர்கோவில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு இயக்கப்படும் முழுவதும் முன்பதிவு இல்லாத அந்தியோதயா ரெயியில் பயணிக்க 3-வது நடைமேடையில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். மாலை 5.05 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்து சேர்ந்த அந்தியோதயா ரெயிலில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறி இடம் பிடித்தனர். இடம் கிடைக்காதவர்கள் நின்று கொண்டும் தரையில் அமர்ந்தும் பயணித்தனர்.</p><p>கட்டணம் குறைவு குறித்த நேரத்தில் சென்னை சென்று சேர்ந்து விடலாம் உள்ளிட்ட காரணங்களால் பேருந்துகளை விட மக்கள் அதிக அளவில் ரயில்களை பயன்படுத்தப்பட்டனர் கூடுதல் ரெயில்கள் விழாக்காலங்களில் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.</p><h2>பஸ் நிலையம்</h2><p>இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது அங்கிருந்து சென்னை பெங்களூர் கோவை திருப்பூர் போன்ற நகரங்களுக்கு இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகளில் மற்றும் அரசு பஸ்களில் பயணிகள் போட்டி போட்டு ஏறிச் சென்றனர் மேலும் மதுரைக்கும் அதிக அளவு பயணிகள் பஸ்களில் ஏறி பயணம் செய்தனர் இதை வட்டி நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை, தென்காசி பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-lashes-nellai-and-tenkasi-regions-residents-happy-as-heat-subsides</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-lashes-nellai-and-tenkasi-regions-residents-happy-as-heat-subsides#comments</comments><guid isPermaLink="false">39410766-cfa4-4a38-8446-27b11b8d3d0b</guid><pubDate>Mon, 14 Sep 2026 20:23:03 +0000</pubDate><atom:updated>2026-09-14T20:23:03.243Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,நெல்லை,மழை,தென்காசி,tenkas</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/3woaydms/rain.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/3woaydms/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக நெல்லையில் 105 டிகிரி வெயில் பதிவாகி பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் பகலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை வீட்டு வெளியே வருவதை தவிர்த்தனர். சாலையிலும் அனல்காற்று வீசியது.இந்த நிலையில் நேற்று மதியம் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, பெருமாள்புரம், தச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. மாலையில் சந்திப்பு பகுதியில் சாரல் மழை பெய்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.</p> <h2>மழை அளவு</h2><p>விக்கிரமசிங்கபுரம், மானூர், ராமையன்பட்டி, திசையன்விளை, இட்ட மொழி, அம்பை, சேரன்மாதேவி, வீரவநல்லூர், மணிமுத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 12 மில்லி மீட்டர் மழை பதிவானது. அம்பையில் 8 மி.மீ., சேரன்மாதேவியில் 2.40 மி.மீ., மணிமுத்தாறு பகுதியில் 2.20 மி.மீ., பாளையங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது.</p> <h2>மின்னல் தாக்கி தொழிலாளி பலி</h2><p>தென்காசி மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கடையநல்லூரில் மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது கடைய நல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பாட்டு சாலையில் வீடு கட்டுமான பணியில், புளியங்குடி டி.என்.புதுக்குடி தியாகராஜநகரைச் சேர்ந்த தொழி லாளி காசிராஜ் (வயது 42) என்பவர் ஈடுபட்டு இருந்தார்.இவர் வீட்டின் 2-வது மாடியில் நின்று வேலை செய்தபோது, திடீரென்று மின்னல் தாக்கியது. </p> <p>இதில் உடல் கருகி கீழே விழுந்ததில் பலத்த காயம டைந்த காசிராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடையநல் லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழி யிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இறந்த காசிராஜிக்கு மனைவி மற் றும் 2 மகள்கள் உள்ளனர். இதேபோல் தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், அச்சன்பு தூர், இடைகால், நயினாரகரம், வடகரை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக் களில் மழைநீர் தேங்கியது.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு: மீனவர்கள் இன்று ஆலோசனை கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-new-secretariat-fishermen-to-hold-consultative-meeting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-new-secretariat-fishermen-to-hold-consultative-meeting-today#comments</comments><guid isPermaLink="false">3ee79426-b5c2-486c-9657-e2fe0cf32800</guid><pubDate>Mon, 14 Sep 2026 19:52:44 +0000</pubDate><atom:updated>2026-09-14T19:52:44.566Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,Fisherman- மீனவர்,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/360qsmor/Pattinampakkam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/360qsmor/Pattinampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க முள்ளிக்குப்பம்- சீனிவாசபுரம் மற்றும் முள்ளிமாநகர் மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் பட்டினப்பாக்கம் முள்ளிக்குப்பம் சமூக நலக் கூடம் எதிரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.</p> <p>இதில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் நைனார்குப்பம் வரையுள்ள அனைத்து மீனவக் கிராம நிர்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர். 9 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் இந்த அரசாணையைத் திரும்பப்பெற வலியுறுத்தி போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என மீனவ சங்க வட்டாரத்தினர் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>கூடலூர் வனப்பகுதியில் கடும் வறட்சியால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kudalur-forest-drought-green-fodder-shortage-for-wildlife</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kudalur-forest-drought-green-fodder-shortage-for-wildlife#comments</comments><guid isPermaLink="false">d2ec0b71-8df9-4b9c-b40e-fee70bfc67d4</guid><pubDate>Mon, 14 Sep 2026 16:17:34 +0000</pubDate><atom:updated>2026-09-14T16:17:34.129Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வனப்பகுதி,Forest,கூடலூர்,வனவிலங்குகள்,wild animals,Kudalur,வறட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/n9pgbhot/dry.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வனவிலங்குகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கூடலூர் வனப்பகுதியில் கடும் வறட்சியால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/n9pgbhot/dry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>நீலகிரி மாவட்டத்தில் எல்-நினோ பாதிப்பு காரணமாக நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதிகளான மாவனல்லா, மசினகுடி, மாயார், சிரியூர், சிங்காரா மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">வறட்சி</a> ஏற்பட்டுள்ளது.</p> <h2>இடம் பெயரும் வனவிலங்குகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">வனப்பகுதியில்</a> உள்ள புற்கள் அனைத்தும் காய்ந்து கருகி காட்சியளிக்கின்றன. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட பெரிய வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வேறு பகுதிகளுக்கு இடம் பெயர தொடங்கியுள்ளன. </p> <h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>அதே சமயம், போதிய உணவு மற்றும் தண்ணீரின்றி மான்கள் உள்ளிட்ட சிறு வனவிலங்குகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. எனவே, வனவிலங்குகளின் பசியை போக்க வனத்துறையினர் வெளியில் இருந்து பசுந்தீவனங்களை கொண்டு வந்து வழங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை எண்ணூர் கடலில் குளிக்கச் சென்ற ஆசிரியை அலையில் சிக்கி உயிரிழப்பு - மற்றொருவர் மாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-who-went-swimming-in-the-sea-at-ennore-chennai-dies-after-getting-caught-in-the-waves-another-person-is-missing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-who-went-swimming-in-the-sea-at-ennore-chennai-dies-after-getting-caught-in-the-waves-another-person-is-missing#comments</comments><guid isPermaLink="false">1ca59949-08cd-46ab-b66c-ee83fbd38884</guid><pubDate>Mon, 14 Sep 2026 16:03:31 +0000</pubDate><atom:updated>2026-09-14T16:03:31.702Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Ennore,எண்ணூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/03n5ism3/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/03n5ism3/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தாழங்குப்பத்தைச் சேர்ந்த 26 வயதான கலைச்செல்வி, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடன் பணியாற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் மற்றும் வேலூர் ஆரணியை சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் கலைச்செல்வி வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட வந்திருந்தனர்.  </p><p>பின்னர் மதிய உணவு முடித்து கலைச்செல்வி, நவீன், கார்த்தி மற்றும் கலைச்செல்வியின் தங்கை கவுசல்யா ஆகியோர் தாழங்குப்பம் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கலைச்செல்வியும், நவீனும் ராட்சத அலையில் சிக்கினர்.</p><p>இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் கடலில் குதித்து இருவரையும் மீட்க முயன்றனர். இதில் கலைச்செல்வி மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நவீன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். மீட்கப்பட்ட கலைச்செல்வி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். மாயமான நவீனை எண்ணூர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ. ரூ.97 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hydroponic-ganja-worth-rs-97-lakh-seized-at-chennai-international-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hydroponic-ganja-worth-rs-97-lakh-seized-at-chennai-international-airport#comments</comments><guid isPermaLink="false">b3ccc9e7-585a-46bb-9e9a-bd05dc1de819</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:56:26 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:56:26.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கஞ்சா,பறிமுதல்,சர்வதேச விமான நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/hkbytrwg/kanja.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஹைட்ரோபோனிக் கஞ்சா]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ. ரூ.97 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/hkbytrwg/kanja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>துபாயில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை சுங்கத்துறை விமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய உளவுத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். </p><p>அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இந்திய ஆண் பயணி ஒருவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.ரூ.97 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா</a> சிக்கியது.</p><h2>பச்சை வழித்தடம்</h2><p>அவர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், ‘பச்சை வழித்தடம்’ வழியாக நைசாக வெளியேற முயன்றார். உடனே அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து, அவரது உடைமைகளை அங்குள்ள தனி அறைக்கு கொண்டு சென்று விரிவாக பரிசோதித்தனர். அப்போது அவரது பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில பொட்டலங்கள் சிக்கின. </p><h2>ரூ.97 லட்சம்</h2><p>பொட்டலங்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, மண்ணில்லாமல் நீர் மூலம் பயிரிடப்பட்ட உயர் ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப்பொருள் கண்டறியும் நவீன கருவியை கொண்டு சோதித்ததில், அது கஞ்சா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 2,794 கிராம் எடையுள்ள இந்த போதைப்பொருளின் சர்வதேச கள்ளச்சந்தை மதிப்பு சுமார் ரூ.97 லட்சம் ஆகும்.</p><h2>பயணி கைது</h2><p>இதனை தொடர்ந்து, போதைப்பொருள் மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.97 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், போதைப்பொருள் கடத்தி வந்த அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இது குறித்த மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-catches-fire-on-salem-coimbatore-national-highway-family-escapes-unharmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-catches-fire-on-salem-coimbatore-national-highway-family-escapes-unharmed#comments</comments><guid isPermaLink="false">35308985-d77d-45df-997f-efdae7499dd5</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:47:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:47:18.084Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire,Car,கார்,Salem,சேலம்,தீ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/sxt0i9as/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/sxt0i9as/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கொண்டிருந்தார். அவர்களது கார் நெய்க்காரப்பட்டி பகுதி அருகே வந்தபோது திடீரென இன்ஜின் சூடாகி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. </p> <p>இதையடுத்து பாலசுப்பிரமணியம் உடனடியாக காரை நிறுத்தி, தனது குடும்பத்தினரை காரில் இருந்து வெளியேற்றினார். இதனால் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. </p><p>கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-falling-from-chennais-kathipara-flyover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-falling-from-chennais-kathipara-flyover#comments</comments><guid isPermaLink="false">b7c4a304-c8aa-4fd7-859f-e98281b5b064</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:34:10 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:34:10.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7jaxoa24/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7jaxoa24/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர், பாலத்தின் மேல் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். </p><p>இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>விடுமுறை முடிந்து சென்னை நோக்கி திரும்பும் மக்கள்... சிங்கப்பெருமாள் கோவிலில் 2 கி.மீ. தூரத்திற்கு வாகன நெரிசல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-returning-to-chennai-after-the-holidays-traffic-jam-for-2-km-at-singaperumal-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-returning-to-chennai-after-the-holidays-traffic-jam-for-2-km-at-singaperumal-temple#comments</comments><guid isPermaLink="false">a91c9b47-ed00-412d-99d6-93a7faf0ed6e</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:25:46 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:25:46.680Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,விடுமுறை,Holiday,traffic jam,வாகன நெரிசல்,Chennai City,சிங்கப்பெருமாள் கோவில்,Singaperumal Kovil</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/2ra7b8yd/114.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/2ra7b8yd/114.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுமுறை முடிந்து சென்னை நோக்கி மக்கள் திரும்பி வருவதால்  சிங்கபெருமாள் கோவிலில் 2 கி.மீ. தூரத்திற்கு வாகன நெரிசல்ஏற்பட்டுள்ளது.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்கப் பலரும் சென்னையில் இருந்து கிளம்பி சென்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த பொதுமக்கள் சென்னை திரும்பி வருவதால், சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><h2>வாகனங்கள் அணிவகுத்து நின்றன...</h2><p>குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சென்னை நோக்கி ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">கடும் போக்குவரத்து நெரிசல் </a>ஏற்பட்டது. இதனால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.</p><p>வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால், சென்னை திரும்பும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - பயணிகள் காயம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-near-ramanathapuram-passengers-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-near-ramanathapuram-passengers-injured#comments</comments><guid isPermaLink="false">e467b9d4-bd23-4c5e-b6ed-b4e912f73c42</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:22:05 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:22:05.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/kup499tx/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/kup499tx/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரம் மாவட்டம் முதுகுலத்தூர் அருகே பூசேரி பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக சாலையோரம் ஒதுங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. </p><p>இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>மலேசிய உரிமை கட்சி தலைவர் பேராசிரியர் ராமசாமி சென்னை வருகை: வைகோவுடன் சந்திப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/malaysian-rights-party-chief-prof-ramasamy-chennai-visit-meets-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/malaysian-rights-party-chief-prof-ramasamy-chennai-visit-meets-vaiko#comments</comments><guid isPermaLink="false">f669cc25-5c1f-4cc4-bebe-92471c07f7ae</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:58:08 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:58:08.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Malaysia,Chennai,சென்னை,Vaiko,வைகோ,சந்திப்பு,வருகை,visits,ராமசாமி,Ramasamy</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/iw3l1ssm/d1.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ பேராசிரியர் ராமசாமி,வைகோ,துரை வைகோ]]></media:title><media:description type="html"><![CDATA[ மலேசிய உரிமை கட்சி தலைவர் பேராசிரியர் ராமசாமி சென்னை வருகை: வைகோவுடன் சந்திப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/iw3l1ssm/d1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியும், மலேசிய உரிமை கட்சியின்  நிறுவன தலைவருமான பேராசிரியர் பி. ராமசாமி சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை அண்ணா நகரிலுள்ள இல்லத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">துரை வைகோ</a> வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p> <h2>வரவேற்பு</h2><p>மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியும், மலேசிய உரிமை கட்சியின் நிறுவன தலைவருமான பேராசிரியர் ராமசாமி தங்கள் இணையருடன், இன்று  எங்களது அண்ணா நகர் இல்லத்திற்கு வருகை தந்து, தலைவரையும் என்னையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். அவரை பட்டாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தேன்.</p> <h2>மதிய விருந்து</h2><p>அப்போது, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">மலேசிய</a> நாட்டின் அரசியல், பொருளாதாரம் குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் குறித்தும் பல்வேறு கோணங்களில் உரையாடினோம். அதன்பிறகு, எங்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.</p><figure><img alt="பேராசிரியர் ராமசாமி,வைகோ,துரை வைகோ" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/o2npo85u/d2.jpg" /></figure><p>இந்த சந்திப்பிலும் விருந்து உபசரிப்பிலும் மலேசிய உரிமை கட்சியின் துணை தலைவரும், மலேசிய தமிழர் குரல் அறக்கட்டளையின் தலைவருமான டேவிட் மார்ஷல், பினாங்கு மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மலேசிய உரிமை கட்சியின் பொது செயலாளருமான சதீஷ் முனியாண்டி, மலேசிய உரிமை கட்சியின் பொருளாளர் கிருஷ்ணசாமி மற்றும் மலேசிய உரிமை கட்சியின் அரசியல் ஆலோசகரும் மலேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சம்ஷேர் சிங் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும், மலேசிய உரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பெருமரியாதைக்குரிய பேராசிரியர் இராமசாமி அவர்கள் தங்கள் இணையருடன், இன்று (14.09.2026) எங்களது அண்ணா நகர் இல்லத்திற்கு வருகை தந்து, தலைவர் அவர்களையும் என்னையும் மரியாதை நிமித்தமாகச்… <a href="https://t.co/CWE7M8QrQX">pic.twitter.com/CWE7M8QrQX</a></p>&mdash; Durai Vaiko (@duraivaikooffl) <a href="https://x.com/duraivaikooffl/status/2099507382040801441?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: நில பிரச்சினையில் இரு கிராம மக்கள் மோதல்;  40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-land-dispute-clash-between-two-villages-40-booked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-land-dispute-clash-between-two-villages-40-booked#comments</comments><guid isPermaLink="false">54db2cdd-7368-42d5-afe1-2c846dfa53b9</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:33:24 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:33:24.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,தூத்துக்குடி,cases,வழக்குப்பதிவு,clash,மோதல்,கிராம மக்கள்,போலீசார்,Register,In Thoothukudi,நில பிரச்சினை</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/rnsit765/filght.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ கிராம மக்கள் மோதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி: நில பிரச்சினையில் இரு கிராம மக்கள் மோதல்;  40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/rnsit765/filght.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p> விளாத்திகுளம் அருகே உள்ள லெக்கம்பட்டி மற்றும் இலந்தைகுளம் ஆகிய இரு கிராம மக்களுக்கு இடையே குறிப்பிட்ட ஒரு இடத்தில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF"> கபடி</a> விளையாடும் நிலம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p> <h2>கபடி </h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம் விளாத்திகுளம் அருகே, கபடி விளையாடும் நிலம் தொடர்பாக லெக்கம்பட்டி மற்றும் இலந்தைகுளம் கிராம மக்களிடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>வாக்குவாதம் </h2><p>இந்நிலையில், இந்த நில விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் பெரிய அளவில் மோதலாக வெடித்தது. ஆத்திரமடைந்த இரு கிராம மக்களும்  கற்களை வீசி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.</p> <h2>போலீசார் குவிப்பு</h2><p>இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81">கல்வீச்சு</a> சம்பவத்தில் இரு தரப்பையும் சேர்ந்த சிலர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>40 பேர் மீது வழக்கு</h2><p>இந்த கலவரம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது தொடர்பாக இரு கிராமங்களையும் சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பேன்சி வாகனப்பதிவு எண்கள் பெறுவதற்கு 2,008 முறை பயன்படுத்தப்பட்ட ஒரே செல்போன் நம்பர் - சி.ஏ.ஜி. தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cag-reveals-a-single-mobile-number-was-used-2008-times-to-obtain-fancy-vehicle-registration-numbers-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cag-reveals-a-single-mobile-number-was-used-2008-times-to-obtain-fancy-vehicle-registration-numbers-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">ae242c06-8e6a-4da4-a11d-2ae5aa692f96</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:22:58 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:22:58.227Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,CAG,சிஏஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/8j2wlzwd/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/8j2wlzwd/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2024 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலத்துக்கான தமிழக அரசின் வருவாய் தொடர்பான சி.ஏ.ஜி.(இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அமைப்பு) அறிக்கை, கடந்த செப்டம்பர் 8-ந்தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-20 முதல் 2023-24 வரையிலான வாகனப்பதிவு தரவுகளின்படி, 6.75 லட்சம் வாகனங்களுக்கு 'பேன்சி' எண்களை ஒதுக்க 4.16 லட்சம் தனித்தனி செல்போன் நம்பர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><p>மேலும் 53,000 செல்போன் எண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்தப்பட்டு, 3.12 லட்சம் 'பேன்சி' பதிவு எண்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் ஒரே தனிநபர் செல்போன் எண் சுமார் 2,008 முறை வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி.சுட்டிக்காட்டியுள்ளது. </p> <p>ஒரே செல்போன் எண் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், சில தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் 'பேன்சி' பதிவு எண்களை மொத்தமாகப் பெற்று, பின்னர் அவற்றை மறுவிற்பனை செய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. மேலும், பதிவு எண்கள் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், கிடைக்கக்கூடிய ஆனால் ஒதுக்கப்படாத பதிவு எண்களை அறிய பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. </p><p>இதனால் வாகனப்பதிவு நடவடிக்கைகளுக்காக இடைத்தரகர்கள் அல்லது ஏஜென்சிகளை பொதுமக்கள் அதிகம் சார்ந்திருக்கும் சூழல் உருவாகிறது. இது குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அளித்த விளக்கத்தில், 'வாஹன்' இணையதளத்தில் 'பேன்சி' பதிவு எண்கள் ஒதுக்கீடு ஆதார் அடையாள சரி பார்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரே செல்போன் எண்ணைப் பயன்படுத்தி பல பதிவு எண்கள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>லண்டனில் மின்சாதன உற்பத்தி ஆலை நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் விஜய் ரூ.300 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-signs-mou-with-electronics-manufacturer-in-london-for-rs-300-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-signs-mou-with-electronics-manufacturer-in-london-for-rs-300-crore#comments</comments><guid isPermaLink="false">6a1dd4bb-de26-4357-bd73-4eb2f43a7b92</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:58:53 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:58:53.508Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புரிந்துணர்வு ஒப்பந்தம்,power plant,London,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Signs</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/g159jdpz/300.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ லண்டனில் மின்சாதன உற்பத்தி ஆலை நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் விஜய் ரூ.300 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/g159jdpz/300.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லண்டனில் மின்சாதன உற்பத்தி ஆலை நிறுவனத்துடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> ரூ.300  கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டன.இது குறித்து, அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2>ரூ.300 கோடி முதலீடு</h2><p>இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று, தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தி துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்துடன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">புரிந்துணர்வு ஒப்பந்தம்</a> மேற்கொள்ளப்பட்டது. </p><h2>பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம்</h2><p>இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழும தொழில்நுட்ப இயக்குநர்  ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், ஆகியோரால் கையெழுதிடப்பட்டு, ஒப்பந்தம் பரிமாறி கொள்ளப்பட்டது. </p><p>இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, ஐஎப்எஸ்,  நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகம் மற்றும் புதுச்சேரி இடைத்தேர்தல்: தபால் ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-and-puducherry-by-elections-election-commission-allows-postal-voting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-and-puducherry-by-elections-election-commission-allows-postal-voting#comments</comments><guid isPermaLink="false">f18a037c-8767-400c-b245-c74709992b38</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:55:45 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:55:45.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,Election Commission,தமிழகம்,அனுமதி,இடைத்தேர்தல்,by-elections,தபால் ஓட்டு,In Tamil Nadu,Postal Voting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ne6wrk90/113.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தபால் ஓட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/ne6wrk90/113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தபால் ஓட்டு வசதி நடைமுறையில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் ஓட்டு வசதியை பயன்படுத்தி வாக்களிக்கலாம். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்டோருக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்படுகிறது.</p><h2>தபால் ஓட்டு</h2><p>மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி தபால் ஓட்டு வசதி வழங்கப்பட்டது.</p><h2>இடைத்தேர்தலிலும் தொடரும்</h2><p>கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இந்த வகைகளைச் சேர்ந்தவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களித்தனர். இதற்காக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பே, தற்போது நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலிலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">தபால் ஓட்டு</a> வசதி தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: ரேஷன் குடோனில் பயங்கர தீ விபத்து - பழைய ஆவணங்கள் எரிந்து சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-massive-fire-at-ration-warehouse-old-documents-destroyed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-massive-fire-at-ration-warehouse-old-documents-destroyed#comments</comments><guid isPermaLink="false">2e957c66-4264-47af-a652-134c2a7f6d96</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:52:39 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:52:39.575Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தீ விபத்து,Fire,Thoothukudi,தூத்துக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/3psedc8u/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/3psedc8u/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது மைல் பகுதியில் இந்திய உணவுக் கழகத்திற்கு சொந்தமான குடோனில், பயனாளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக ரேஷன் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த ரேஷன் குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. </p><p>டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த குடோனில் பழைய ஆவணங்கள் மற்றும் சாக்குகள் இருந்த பகுதியில் தீ மளமளவென பரவியது. இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சுமார் 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். </p><p>இருப்பினும் இந்த தீ விபத்தில் பழைய ஆவணங்கள் முழுவதும் எரிந்து சாம்பலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தீ வேகமாக கட்டுப்படுத்தப்பட்டதால் குடோனில் இருந்த சுமார் 40 டன் ரேஷன் பொருட்கள் தீயில் சிக்காமல் பாதுகாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய் கிணறு அமைக்க அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-opposes-oil-wells-near-mayiladuthurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-opposes-oil-wells-near-mayiladuthurai#comments</comments><guid isPermaLink="false">db3918c5-28ee-4671-bc5d-b0dd18666a10</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:38:39 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:38:39.920Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani Ramadoss,Mayiladuthurai,மயிலாடுதுறை,Bay of Bengal,வங்கக்கடல்,Construction,எதிர்ப்பு,அன்புமணி ராமதஸ்,Oil well,எண்ணெய் கிணறு,oppose</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/w4fhx1we/anbumani.gif" width="750"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/w4fhx1we/anbumani.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய் கிணறு அமைக்க வேண்டாம் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கவலையளிக்கின்றன</h2><p>மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் 81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்  5 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைப்பதற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D">சுற்றுச்சூழல்</a> அனுமதி கோரி  அமெரிக்காவை சேர்ந்த ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் &amp; புரொடக்‌ஷன்  நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. </p><p>பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களின் சூழலை கெடுப்பதற்கான எந்தத் திட்டமாக இருந்தாலும் அவை முறியடிக்கப்பட வேண்டியவை தான்.</p><h2>எண்ணெய் கிணறுகள்</h2><p>மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய கடல் பகுதியில் 1997-ஆம் ஆண்டில்  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81">எண்ணெய் கிணறுகளும்</a>, எரிவாயு கிணறுகளும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால்  அமைக்கப்பட்டன. பின்னாளில் ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் &amp; புரொடக்‌ஷன் என்ற அமெரிக்க நிறுவனம்  ஓ.என்.ஜி.சி  நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில்  இந்த எண்ணெய் கிணறுகளை பராமரித்து வந்தது. </p> <h2>அமெரிக்க நிறுவனம்</h2><p> 2011-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட இந்த எண்ணெய் கிணறுகளில் கடந்த ஆண்டு மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தொடங்கப்பட்டது. அந்த எண்ணெய் கிணறுகளை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் கூடுதலாக 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அமெரிக்க நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.</p> <h2>சுற்றுச்சூழல் பாதிப்பு</h2><p>வங்கக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்;  ஏற்கனவே அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  எண்ணெய் கிணறுகளால்  கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள்  ஏற்பட்டுள்ளன. </p> <p>இப்போது கூடுதலாக எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்த பகுதியில் மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரமும் மிக கடுமையாக பாதிக்கப்படும்.</p><h2>வேளாண் மண்டலம்</h2><p>ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான்  மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி சாதித்தது. </p><p>அதனால் இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முயல்கின்றன. இதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவே கூடாது. அதுமட்டுமின்றி, அப்பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் எண்ணெய் கிணறுகளையும் மூட ஆணையிட வேண்டும்.</p><h2>தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது</h2><p>ஒரு வேளை இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் கூட,  எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அதற்கு தமிழக  அரசு மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின்  அனுமதி  கட்டாயம் ஆகும். இந்த அனுமதியை தமிழக அரசு வழங்கக் கூடாது.</p> <h2>அணுகுமுறை</h2><p>இதேபோல், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம்  சில மாதங்களுக்கு முன் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின்  அனுமதி விண்ணப்பித்தது. </p><p>அதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுவரை தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதே அணுகுமுறையை தான் எதிர்காலத்தில் இந்தத் திட்டத்திற்கும் தமிழக அரசு கடைபிடிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடை வாசலில் இளைஞர் வெட்டி கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-at-tasmac-shop-entrance-police-launch-net-to-nab-mysterious-persons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-at-tasmac-shop-entrance-police-launch-net-to-nab-mysterious-persons#comments</comments><guid isPermaLink="false">38d80dc5-c3d7-4011-8159-7124e66cf763</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:35:28 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:35:28.961Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>mysterious persons,Death,டாஸ்மாக் கடை,Tasmac shop,வெட்டி கொலை,மர்ம நபர்களுக்கு வலைவீச்சு,young boy</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/8176y9j0/10.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/8176y9j0/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>சமயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். </p><h2>வெட்டிக் கொலை </h2><p>திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்குவதற்காக பிரகாஷ் (வயது 30) என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக வரிசையில் நின்ற போது அங்கு இருந்தவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டாஸ்மாக் கடை வாசலில் பிரகாஷை சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக் கொலை</a> செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சமயபுரம் போலீசார், பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லண்டனில் கார் உதிரி பாக நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் விஜய் ரூ.11 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-signs-rs-11000-crore-mou-with-london-car-parts-company</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-signs-rs-11000-crore-mou-with-london-car-parts-company#comments</comments><guid isPermaLink="false">fc03914d-a2f9-413e-9ae2-11e57684e83d</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:21:31 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:21:31.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புரிந்துணர்வு ஒப்பந்தம்,உதிரி பாகங்கள்,நிறுவனம்,Memorandum of Understanding,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/cxy4hurr/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/cxy4hurr/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லண்டனில் கார் உதிரி பாக நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் விஜய் ரூ.11 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டன.</p><p>இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- </p><h2>ரூ.11ஆயிரம் கோடி முதலீடு</h2><p>இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து,  வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11ஆயிரம் கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி,  கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">ஒப்பந்தம் </a>மேற்கொள்ளப்பட்டது. </p><p>இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்,  சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு; நாளை ஆலோசனை கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermen-oppose-new-secretariat-pattinapakkam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermen-oppose-new-secretariat-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">99dc28b3-bea3-459f-84e3-d313c17cedf4</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:57:43 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:57:43.162Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,Chennai,சென்னை,fishermen,பட்டினப்பாக்கம்,தலைமை செயலகம்,ஆலோசனை கூட்டம்,Pattinapakkam,எதிர்ப்பு</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/71vv01n5/new.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ பட்டினப்பாக்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு; நாளை ஆலோசனை கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/71vv01n5/new.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/pattinapakkam">பட்டினப்பாக்கம்</a> பகுதியில் தமிழக அரசின் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலக வளாகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த பிரம்மாண்ட கட்டடம் அமைய உள்ளது.</p> <h2>மக்கள் அச்சம்</h2><p>இந்நிலையில், இந்த திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடலோர பகுதியில் இத்திட்டம் வருவதால், தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p> <h2>கலந்தாய்வு கூட்டம்</h2><p>அரசின் இந்த முடிவை எதிர்த்து அடுத்தகட்டமாக போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதிக்க, மயிலாப்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த 9 மீனவ கிராம மக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சார்பில் நாளை மாலை 4 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.</p> <h2>மாற்று இடம்</h2><p>நாளை நடைபெறும் இந்த முக்கியக் கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில், புதிய தலைமை செயலகத்தை மாற்று இடத்தில் அமைக்க அரசை வலியுறுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மீனவர்களின் அடுத்தகட்ட போராட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்பதால், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: மைனர் சிறுமிக்கு திருமணம் - வரவேற்பு நிகழ்ச்சியை அதிரடியாக நிறுத்திய காவல்துறையினர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-police-abruptly-halt-reception-for-minor-girls-marriage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-police-abruptly-halt-reception-for-minor-girls-marriage#comments</comments><guid isPermaLink="false">8f811af5-df3e-4d91-932e-45ea39d49b8c</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:35:19 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:35:19.305Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/pn3kig7v/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/pn3kig7v/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள குமரஞ்சேரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. </p><p>இதனிடையே மணப்பெண் இன்னும் திருமண வயது எட்டவில்லை என்றும், மைனர் பெண்ணிற்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவதாகவும் காவல்துறைக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் திருமண மண்டபத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். </p><p>மணப்பெண்ணின் ஆவணங்களை காவல்துறையினர் சோதனை செய்தபோது, அவருக்கு 16 வயது மட்டுமே நிரம்பி உள்ளது என்பதும், மைனர் சிறுமியான அவருக்கு 24 வயது இளைஞருடன் திருமண ஏற்பாடுகள் நடந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-mous-signed-in-the-presence-of-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-mous-signed-in-the-presence-of-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f157207f-1b16-4950-80a7-40aa9470a7a0</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:32:15 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:32:15.825Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கையெழுத்து,புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்,MoU signed,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/76giepq8/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/76giepq8/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.</p><p>இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young)  நிறுவனத்துடன் புரிந்துணர்வு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">ஒப்பந்தம்</a> ஒன்றை மேற்கொண்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.</p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</h2><p>ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, IFS,  நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகை ஆட்டிப் படைக்கிறது’ - ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/artificial-intelligence-is-dominating-the-world-across-all-sectors-high-court-judge-anand-venkatesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/artificial-intelligence-is-dominating-the-world-across-all-sectors-high-court-judge-anand-venkatesh#comments</comments><guid isPermaLink="false">a50585c6-feeb-4083-b6c7-a417ecb7796d</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:24:46 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:24:46.677Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,செயற்கை நுண்ணறிவு,நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,Justice Anand Venkatesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/hm0w7584/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/hm0w7584/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டி.வி.எம். சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின் 29 ஆம் ஆண்டு கல்வி விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எம்.இருளப்பன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கலந்து கொண்டு பல்வேறு தேர்வுகளில் சிறப்பிடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.மேலும் சிறந்த மருத்துவர், சிறந்த பள்ளி முதல்வர், சிறந்த சமூக சேவகர் உள்ளிட்ட பலருக்கும், நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் நீதிபதி வழங்கினார். அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது;-</p><p>“தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் என்பது உலகெங்கிலும் காணக் கிடைக்காத தொன்மையான பொக்கிஷங்களை உள்ளடக்கியது என்பதில் பெருமை கொள்ளலாம். நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தமிழ் இலக்கியத்தில் இருந்து சில முக்கிய அம்சங்களை தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். தியாகமும், நற்பண்புகளும் நிறைந்த சேவை மனப்பான்மை கொண்ட மனிதர்களே மிக அழகானவர்கள் என்று அவ்வையார் தெரிவித்துள்ளார். </p><p>வள்ளுவர் ஒப்புரவு, ஈகை ஆகிய அதிகாரங்களில் சமுதாயத்தில் நலிவடைந்தவர்களின் சேவைகளை பூர்த்தி செய்வது, ஒவ்வொரு மனிதனும் தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்வதற்கான ஈகை குண நலன்கள் குறித்தும் தெளிவாக தெரிவித்துள்ளார். கல்லால் கட்டப்பட்ட கோவில்களில் காணிக்கை செலுத்துவதற்கு முன்பாக நடமாடும் கோவில்களாக விளங்கும் நலிவடைந்தவர்களுக்கு ஈதல் வேண்டும் என்பதை திருமூலர் விளக்கமாகவே கூறியுள்ளார். </p><p>அதிக மதிப்பெண், உயர்ந்த பதவி, அளவற்ற செல்வங்களை பெறுவதுதான் உண்மையான வெற்றி என போற்றுகிறோம். ஆனால் வாழ்வில் நாம் செய்யும் சேவைகளின் மூலம் பெறப்படும் மன நிறைவுதான் வாழ்க்கையில் உண்மையான வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை குழந்தைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி போதிக்க வேண்டும்.</p><p>இன்று நமது தலைமுறையினர் அனைவரும் அலைபேசியில் மூழ்கி கிடக்கின்றனர். ஒரு நிமிடம் கூட அலைபேசி இல்லாமல் இருக்க இயலாது நிலை ஏற்பட்டுவிட்டது. செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இருப்பினும் செயற்கை நுண்ணறிவுக்கு ஆன்மா ஒன்று கிடையாது. செயற்கை நுண்ணறிவு மூலம் சேவைகளை செய்திட இயலாது என்பதுதான் எதார்த்த உண்மை. எனவே சமூக சேவை ஆற்றுபவர்கள் தான் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-will-win-the-by-elections-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-will-win-the-by-elections-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">1c4fd72e-6cb0-4630-854f-a8ba9469858a</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:09:46 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:09:46.755Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,அதிமுக,AIADMK,இடைத்தேர்தல்,Edappadi Palaniswami ​,by-elections</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7i5270rh/eps.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/7i5270rh/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்,</p><p>சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><h2>அதிமுக வெற்றி பெறும்</h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக</a> நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். மேலும் முதல்-அமைச்சர் விஜய் லண்டன் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். </p><p>இதற்கு தமிழக முதல்-அமைச்சர் லண்டம் சென்றிருப்பதாக பத்திரிகைகள் மற்றும் சேனல்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் தொழில் ஈர்ப்பு குறித்து இன்னும் ஏதும் செய்திகள் வெளியாகவில்லை. அதன்பின் தான் அது குறித்து கருத்து கூற முடியும். </p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் - மக்கள் அச்சம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilagiri-kudiyiruppu-pagudikkul-pugundha-kattu-yanai-kootam-makkal-achcham</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilagiri-kudiyiruppu-pagudikkul-pugundha-kattu-yanai-kootam-makkal-achcham#comments</comments><guid isPermaLink="false">fa1d570d-3ef6-4c55-8ef9-b3cac2177184</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:56:43 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:56:43.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,Elephants,யானைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/f8fkrzfp/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-14/f8fkrzfp/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>நீலகிரி,</p><p>நீலகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.</p> <p>நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் தீவன பற்றாக்குறை, குறைந்த எல்லைக்குள் அதிக வனவிலங்குகள் உள்பட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.</p> <h2>குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்</h2><p>இந்நிலையில், <a href="https://www.dailythanthi.com/sports/நீலகிரி">நீலகிரி </a>மாவட்டம் குன்னூர் அருகே முத்த நாடு எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் நுழைந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, குட்டிகளுடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த யானைகளை மக்கள் சத்தம் போட்டு விரட்டியடித்தனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>