<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 07 Sep 2026 05:57:51 +0000</lastBuildDate><item><title>அனல் பறந்த சட்டமன்றம்... தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளி - பதிலுரையை நிறைவு செய்தார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heated-scenes-in-the-assembly-dmk-mlas-create-a-ruckus-chief-minister-vijay-concludes-his-reply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heated-scenes-in-the-assembly-dmk-mlas-create-a-ruckus-chief-minister-vijay-concludes-his-reply#comments</comments><guid isPermaLink="false">357cdc36-09f3-43bc-ba64-b77dec7161ca</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:57:08 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:57:08.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Assembly,சட்டமன்றம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/3adyvtol/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/3adyvtol/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலளித்து பேசினார். அவரது பதிலுரைக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><h2>மானியக் கோரிக்கை விவாதம்</h2><p>கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது. </p><h2>யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது</h2><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார். </p><h2>முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை </h2><p>இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலியுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-</p><p>“மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அடித்தளம் காவல்துறை. ஒரு மாநிலத்தின் அமைதியில் தான் முன்னேற்றம் உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும்.</p><p>அரசு பணியில் இருக்கும் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அவரது பெயர் நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வரும்போது அந்த செய்தி அவரை மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கிறது. எனவே அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் நேர்மையை கடைபிடித்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் எந்த அவப்பெயரும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். </p><p>அதே சமயம், ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்கள் சட்டப்பூர்வமான கடமையை எந்தவித தயக்கமும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் த.வெ.க. அரசு எந்த சமரசமும் செய்யாது. </p><h2>போதைக்கு எதிரான நடவடிக்கைகள்</h2><p>கடந்த கால ஆட்சியாளர்களால் போதைப்பொருள் கலாசாரம் கவனிக்கப்படாமல் இருந்ததால், அது தற்போது வேரூன்றி வளர்ந்து நிற்கிறது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. போதைப்பொருள் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. </p><p>இதற்காக போதைப்பொருள் தடுப்புப்படை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை மட்டும்தான் வெட்டியுள்ளோம். ஆனால் அதனை வேரடி மண்ணோடு அகற்ற வேண்டும். அது ஒரு நாளிலோ, 100 நாட்களிலோ முடிகின்ற பணி அல்ல. </p><p>மாநிலத்தின் 37 மாவட்டங்கள், 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் 3,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,846 கிலோ கஞ்சா மற்றும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 159 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p> <h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை </h2><p>இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுக்காப்பை மையமாக கொண்டு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு, 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு 327 நான்கு சக்கர வாகனங்கள், 109 இரண்டு சக்கர வாகனங்கள், மற்றும் ரூ.357 கோடியில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>இந்த நடவடிக்கைகளின் மூலம் 268 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 21 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. </p><h2>காவல் மரணங்களை தடுக்கும் நடவடிக்கைகள்</h2><p>காவல் மரணம் என்பது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல. காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும். எனவே காவலில் எந்தவொரு மரணம் ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு குறித்து வெளிப்படையான, பாரபட்சமற்ற, சட்டப்பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்தில் தெரிவிக்கப்படுவதோடு, தேவையான மருத்துவ உடற்கூராய்வு மற்றும் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>ஒரு காவலர் தவறு செய்திருந்தால் அவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதற்காக எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரிவர செய்து வருகிறது. காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் சி.சி.டி.வி. கண்காணிப்பு பயிற்சி, மருத்துவ பரிசோதனைல், தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>‘வன்ம நதி ஓடுகிறது..’</h2><p>தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஆபாச நதியாக, வன்ம நதியாக ஓடுகிறது. அரசியல் ரீதியாக கருத்துகளை பதிவுசெய்யலாம். பெண்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க மாட்டோம். பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.</p><p>இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால்தான், இவர்கள் எதிர்கட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்க வேண்டும்.</p><h2>ஒரு சாம்பிள் பார்க்கலாமா?</h2><p>“என் மேஜையில் இருக்கும் 3 பைல்களை ஓப்பன் செய்யுமாறு தி.மு.க.வினர் கூறினர். அதில் ஒரு சாம்பிளை பார்க்கலாமா? கடந்த ஆட்சியில் அமலாக்கத்துறை அனுப்பிய விவரங்களை படிக்கிறேன். </p><p>சர்க்காரியா கமிஷன் -1977: தி.மு.க. ஆட்சியில் வீராணம் குழாய் திட்டத்துக்கு டெண்டர் வேண்டுமென்றால் இரண்டரை சதவீத கமிஷன் வேண்டும் என மாறன் கேட்டாராம். அதவது 40 லட்ச ரூபாய் கமிஷனாம். 1770-1974 வரை மொத்தம் 25 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. தவனையாக லஞ்சம் வாங்கியுள்ளனர். முரசொலி கட்டிடத்துக்கு, மேலும் பல விஷயத்துக்காகவும் கமிஷன் வாங்கியுள்ளனர். இதெல்லாம் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர் கொடுப்பதற்காக கருணாநிதி தனது முதல்-அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார்.</p><p>இதெல்லாம் சொன்னால் ஓடிவிடுவார்கள். ஆதாரங்கள் கேட்டால் இங்குள்ள நூலகத்தில் உள்ளது. அங்கு போய் பாருங்கள். ஆதாரத்தை பக்கத்துலேயே வைத்துக்கொண்டு பிறரிடத்தில் தேடுகின்றனர். ஆதாரம் பக்கத்திலேயே உள்ளது.</p> <h2>கட்சி நிதி</h2><p>கட்சி நிதி குறித்து தி.மு.க.வின் ஊழல் குறித்து அமலாக்கத்துறை கூறியுள்ளது. 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதன் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய சாதனை. அதுதான் தி.மு.க. </p><p>டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதில் சிக்கியுள்ளனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் குறித்தும் அமலாக்கத்துறை சொல்லியுள்ளது. பார்ட்டி பண்ட்(கட்சி நிதி) வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.</p><p>தி.மு.க. இருக்குமிடத்தில் ஊழல் இருக்காது என அவர்கள் கூறுகின்றனர். நான் கூறுகிறேன். தி.மு.க. இருக்குமிடத்தில் ஊழல்கள் இருக்கும். ஊழல்கள் இருக்குமிடத்தில் தி.மு.க. இருக்கும்.</p><h2>ஆதாரம் போதுமா?</h2><p>ஆதாரம் வேண்டும் என்றீர்களே.. போதுமா.. 2 வகை உள்ளது. தவறு செய்து மாட்டிக்கொள்வதற்கள் ஒரு பக்கம். தவறு செய்து, செய்யாதபடி சரியாக செய்பவர்கள் இன்னொரு பக்கம். அதில் தி.மு.க. 2 வது பக்கம். ஊழல் என்று சொன்னாலே தி.மு.க.வினர் எழுந்திரிப்பார்கள். ஊழல் செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியுமா?</p><p>மிசாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். மிசாவை பற்றிய வரலாறு எனக்கும் தெரியும். சட்டம், ஒழுங்கு பற்றி பேசுவதற்கு முன் உங்கள் ஆட்சியில் நடந்ததை கண்ணாடியில் பார்ப்பது நல்லது.</p><h2>இறைவன் நமது பக்கம்</h2><p>அண்ணா, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., விஜய். இயற்கையும், இறைவனும் நமது பக்கம்தான் இருப்பார்கள். அன்புக்கு முன்னாடி அவர்கள் தோற்பது உறுதி. நாற்காலிக்காக அதிகாரத்திற்காக நான் இங்கு வரவில்லை, மக்களுக்கு நல்லது செய்யவும், நன்றி கடன் செய்யவும் மட்டுமே வந்துள்ளேன்.</p><h2>பதிலுரை நிறைவு</h2><p>சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்டுள்ள 22-ம் எண் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான தீர்மானங்களை நான் படித்துப் பார்த்தேன். அவை விதிகளுக்கு உட்பட்டவையாகவும், அரசின் நிதி நிலைக்கு ஏற்ப செயல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கும் பட்சத்தில், அரசு அதனை கனிவுடன் பரிசீலிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>எனவே உறுப்பினர்கள் எனது பதிலுரையில் கூறிய விளக்கத்தை ஏற்றுக் கொண்டு தங்கள் வெட்டுத் தீர்மானங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இந்த மானியக் கோரிக்கைகளை பேரவை தலைவர் நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்படைகள் சிறப்பாக செயல்பட எனக்கு உறுதுணையாக இருந்து வரும் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர் காவல் ஆணையர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர், அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து காவல்துறை சகோதர, சகோதரிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p><h2>கடும் அமளி</h2><p>முதல்-அமைச்சர் தனது பதிலுரையை வழங்கிக் கொண்டிருக்கும்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் எழுந்து நின்று முதல்-அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>அவர்களுக்கு பேச அனுமதி வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. கடும் அமளிக்கு இடையே காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீதான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். </p><h2>சபாநாயகர் கண்டனம் </h2><p>தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்து வந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை கண்டித்தார். இது குறித்து அவர் கூறியதாவது;-</p><p>“முதல்-அமைச்சர் விஜய் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாரே, அவர் எப்போது பதில் சொல்வார் என்றெல்லாம் கேட்டார்கள். முதல்-அமைச்சரின் பதிலுரை திங்கட்கிழமை இருக்கிறது என்று சொன்னேன். அதன்படி முதல்-அமைச்சர் இன்று தனது பதிலுரையை வழங்கியபோது பல ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். </p><p>மக்கள் மன்றத்தின் முன்பாக முதல்-அமைச்சரின் பதிலுரை முழுமையாக நேரலை செய்யப்படும்போது, என்னுடைய அனுமதி இல்லாமல் போஸ்டர்களை கொண்டு வந்து இங்கே காட்டுவதும், குரல் கொடுப்பதும் சரியல்ல. உங்கள் நோக்கம் அவரது பேச்சு வெளியே போகாமல் தடுக்க வேண்டும் என்பதாக இருந்திருந்தால், அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் அலுத்துப் போகும் வரை குரல் கொடுத்தீர்கள், ஆனால் முதல்-அமைச்சர் தனது பேச்சை முழுமையாக நிறைவு செய்துள்ளார். </p><p>முதல்-அமைச்சர் எப்போது பேசுவார் என்று கேட்ட நீங்கள், அவர் பதிலளிக்கும்போது அமைதியாக கேட்டிருக்க வேண்டும். உங்கள் விளக்கத்தை நீங்கள் அளிப்பதற்கான வாய்ப்புகள் எல்லாம் இருந்தன. ஆனால் அந்த வாய்ப்புகளை நீங்கள் இழந்துவிட்டீர்கள். இந்த அவையில் முதல்-அமைச்சர் பேசும்போது ஆரம்பத்தில் இருந்து கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியது தவறு. உங்கள் போஸ்டர்களை கொண்டு வந்து காட்டுகின்ற இடம் அல்ல இது. இதை வன்மையாக கண்டிக்கின்றேன். முதல்-அமைச்சரின் பதிலுரை நிறைவடைந்துவிட்டது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன.?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-prices-dropped-at-the-start-of-the-week-what-is-the-situation-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-prices-dropped-at-the-start-of-the-week-what-is-the-situation-today#comments</comments><guid isPermaLink="false">25af0ab3-fa9f-43e7-9451-829f84d383ba</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:54:04 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:54:04.865Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் விலை,தங்கம் விலை சரிவு,தங்கம் விலை நிலவரம்,Gold prices,today gold rate,gold rate today</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/xmd7xqgo/gold.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/xmd7xqgo/gold.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><h2>தங்கம் விலை</h2><p>தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதற்கிடையே, கடந்த 3-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ. 14,240-க்கும் விற்பனையானது. அதேபோல, 4-ந்தேதியும் தங்கம் விலை  சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.</p><p>ஆனால் நேற்று முன் தினம் தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,530-க்கும், கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. விடுமுறை தினம் என்பதால் நேற்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை.</p><h2>இன்றைய தங்கம் விலை</h2><p>இந்த நிலையில், வார தொடக்கமான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 ஒரு சவரன் ரூ.1,13,020-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,130க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை</h2><p>5-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-stages-a-walkout-from-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-stages-a-walkout-from-the-assembly#comments</comments><guid isPermaLink="false">a23d88f0-47e5-4e24-be14-d81173de579b</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:40:56 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:40:56.540Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,சட்டசபை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/z65f8s31/dm.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/z65f8s31/dm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. </p><h2>பதிலுரை</h2><p>3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. இதில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை அளித்து பேசினார்.</p><h2> பதிலளிக்க அனுமதி மறுப்பு</h2><p>இதையடுத்து முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. </p><p>முதல்-அமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ததால் திமுகவுக்கு பேச அனுமதி தர முடியாது என்று சபாநாயகர் கூறியதால், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.</p><h2>20 நிமிடங்கள் அமளி</h2><p>சுமார் 20 நிமிடங்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டநிலையில், திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-arrested-for-smuggling-ganja-from-odisha-to-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-youths-arrested-for-smuggling-ganja-from-odisha-to-chennai#comments</comments><guid isPermaLink="false">89ac9d20-af15-4a87-9287-c0b9751ff364</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:22:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:22:27.565Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,ஒடிசா,arrested,police enquiry,smuggling ganja,கஞ்சா கடத்திய 2 பேர் கைது,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/dm0y5rdt/00001.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வடமாநில இளைஞர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/dm0y5rdt/00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை செங்குன்றம் அருகே ஒடிசா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 11.2 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, வடமாநில இளைஞர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர். </p><h2>போலீசாரின் அதிரடி சோதனை</h2><p>தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை இயக்குநரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" திட்டத்தின் கீழ் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இன்று (திங்கட்கிழமை) காலை, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.</p><h2>வடமாநில இளைஞர்கள் கைது</h2><p>அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய பைகளுடன் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர்களின் பைகளைச் சோதனையிட்டபோது, அதற்குள் சிறு சிறு பொட்டலங்களாக மடிக்கப்பட்ட 11.2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சாவைக் கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த கிஷோர் பேபாரி மற்றும் பீகாரைச் சேர்ந்த சந்தின் குமார் ஆகிய 2 இளைஞர்களை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒடிசா மாநிலத்தின் உள்பகுதிகளில் இருந்து மிகக் குறைந்த விலைக்கு அந்த கஞ்சா பொட்டலங்களை வாங்கியுள்ளனர். பின்னர் இதனை சென்னை மற்றும் திருப்பூரில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் ஏஜென்ட்டுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு ரெயில்கள் மற்றும் பேருந்துகள் வழியாக கடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>அவர்களிடமிருந்து 11.2 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE">கஞ்சா போதைப்பொருள் </a>மற்றும் அவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தல் நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன’ - முதல்-அமைச்சர் விஜய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2546-new-posts-have-been-created-in-the-lioness-special-task-force-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2546-new-posts-have-been-created-in-the-lioness-special-task-force-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">deb6c638-9e1a-4555-aa38-09a4be88f66a</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:05:22 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:05:22.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Assembly,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ojvrkqb4/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ojvrkqb4/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன தமிழக சட்டமன்றத்தில் இன்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். </p><h2>அனல் பறந்த சட்டசபை</h2><p>கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது. </p><h2>யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது</h2><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார். </p><h2>முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை </h2><p>இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலியுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-</p><p>“மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அடித்தளம் காவல்துறை. ஒரு மாநிலத்தின் அமைதியில் தான் முன்னேற்றம் உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும்.</p><p>அரசு பணியில் இருக்கும் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அவரது பெயர் நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வரும்போது அந்த செய்தி அவரை மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கிறது. எனவே அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் நேர்மையை கடைபிடித்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் எந்த அவப்பெயரும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். </p><p>அதே சமயம், ஊழல் தடுப்பு அமைப்புகள் தங்கள் சட்டப்பூர்வமான கடமையை எந்தவித தயக்கமும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் த.வெ.க. அரசு எந்த சமரசமும் செய்யாது. </p> <h2>போதைக்கு எதிரான நடவடிக்கைகள்</h2><p>கடந்த கால ஆட்சியாளர்களால் போதைப்பொருள் கலாசாரம் கவனிக்கப்படாமல் இருந்ததால், அது தற்போது வேரூன்றி வளர்ந்து நிற்கிறது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. போதைப்பொருள் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. </p><p>இதற்காக போதைப்பொருள் தடுப்புப்படை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை மட்டும்தான் வெட்டியுள்ளோம். ஆனால் அதனை வேரடி மண்ணோடு அகற்ற வேண்டும். அது ஒரு நாளிலோ, 100 நாட்களிலோ முடிகின்ற பணி அல்ல. மாநிலத்தின் 37 மாவட்டங்கள், 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. </p><p>போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் 3,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,846 கிலோ கஞ்சா மற்றும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 159 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதோடு, நமது இளைஞர்களை போதையின் பிடியில் இருந்து விடுவிப்பதே இந்த அரசின் முதன்மையான நோக்கமாகும்.</p> <h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை </h2><p>பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இரண்டு பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக கொண்டுள்ள ஒரே அரசு த.வெ.க. அரசுதான். பெண்களை தாயாக, அக்காவாக, தங்கையாக, தோழியாக பார்க்கக் கூடிய அரசு இது. பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவது இந்த அரசின் மிக முக்கியமான பொறுப்பாகும். </p><p>குற்றம் நடந்த பின்னர் நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல், குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பது இந்த அரசின் நோக்கமாகும். இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுக்காப்பை மையமாக கொண்டு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு, 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு 327 நான்கு சக்கர வாகனங்கள், 109 இரண்டு சக்கர வாகனங்கள், மற்றும் ரூ.357 கோடியில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>இந்த நடவடிக்கைகளின் மூலம் 268 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 21 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. </p><h2>காவல் மரணங்களை தடுக்கும் நடவடிக்கைகள்</h2><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியபோது காவல் மரணங்கள் குறித்து பேசியிருந்தனர். காவல் மரணம் என்பது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல. காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும். எனவே காவலில் எந்தவொரு மரணம் ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு குறித்து வெளிப்படையான, பாரபட்சமற்ற, சட்டப்பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்தில் தெரிவிக்கப்படுவதோடு, தேவையான மருத்துவ உடற்கூராய்வு மற்றும் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>ஒரு காவலர் தவறு செய்திருந்தால் அவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதற்காக எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரிவர செய்து வருகிறது. காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் சி.சி.டி.வி. கண்காணிப்பு பயிற்சி, மருத்துவ பரிசோதனைல், தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>திமுக செய்த ஊழல்கள் இதுதான்.! ஆதாரத்துடன் ஆவேசமாக பேசிய முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/these-are-the-acts-of-corruption-committed-by-the-dmk-chief-minister-vijay-spoke-vehemently-backed-by-evidence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/these-are-the-acts-of-corruption-committed-by-the-dmk-chief-minister-vijay-spoke-vehemently-backed-by-evidence#comments</comments><guid isPermaLink="false">c25bdb65-8206-40f2-908a-a8f2dc86190a</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:01:53 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:01:53.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Corruption,ஊழல்கள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/aqk6p3yi/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/aqk6p3yi/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Breaking-News</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசியதாவது;</p><p>தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஆபாச நதியாக, வன்ம நதியாக ஓடுகிறது. அரசியல் ரீதியாக கருத்துகளை பதிவுசெய்யலாம். பெண்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க மாட்டோம். அவதூறாக, அசிங்கமாக, ஆபாசமாக பேசும் அரசியல் நமக்கு எதற்கு? பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும். </p><p>இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? திமுகவுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால் தான், இவர்கள் எதிர்கட்சியில் அமர்ந்திருக்கிறார். மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்க வேண்டும். </p><h2>ஒரு சாம்பிள் பார்க்கலாமா?</h2><p>“என் மேஜையில் இருக்கும் 3 பைல்களை ஓப்பன் செய்யுமாறு திமுகவினர் கூறினர். அதில் ஒரு சாம்பிளை பார்க்கலாமா? கடந்த ஆட்சியில் அமலாக்கத்துறை அனுப்பிய விபரங்களை படிக்கிறேன். விசாரணை கமிஷனின் அறிக்கையில் நிறைய கூத்துக்கள் வெளியாகியுள்ளது. அதில் உள்ள தகவல்களை மக்களுக்கு சொல்ல வேண்டும். முழூசா படிக்க 2 நாள் ஆகும். அதனால் சுருக்கமாக கூறுகிறேன். </p><h2>சர்க்காரியா கமிஷன் -1977</h2><p>சர்க்காரியா கமிஷன் -1977: திமுக ஆட்சியில் வீராணம் குழாய் திட்டத்துக்கு டெண்டர் வேண்டுமென்றால் இரண்டரை சதவீத கமிஷன் வேண்டும் என மாறன் கேட்டாராம். அதவது 40 லட்ச ரூபாய் கமிஷனாம். 1770-1974 வரை மொத்தம் 25 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. தவனையாக லஞ்சம் வாங்கியுள்ளனர். முரசொலி கட்டிடத்துக்கு, மேலும் பல விஷயத்துக்காகவும் கமிஷன் வாங்கியுள்ளனர். இதெல்லாம் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர் கொடுப்பதற்காக கருணாநிதி தனது முதல்-அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார்.  </p><p>இதெல்லாம் சொன்னால் ஓடிவிடுவார்கள். ஆதாரங்கள் கேட்டால் இங்குள்ள நூலகத்தில் உள்ளது. அங்கு போய் பாருங்கள். ஆதாரத்தை பக்கத்துலேயே வைத்துக்கொண்டு பிறரிடத்தில் தேடுகின்றனர். ஆதாரம் பக்கத்திலேயே உள்ளது. </p><h2>கட்சி நிதி</h2><p>கட்சி நிதி குறித்து திமுகவின் ஊழல் குறித்து அமலாக்கத்துறை கூறியுள்ளது. 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதன் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய சாதனை. அதுதான் திமுக. டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் ஐஏஎஸ் அதிகாரிகளும் இதில் சிக்கியுள்ளனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் குறித்தும் அமலாக்கத்துறை சொல்லியுள்ளது. பார்ட்டி பண்ட் வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.</p><p>இரண்டு துறைகளின் பைல்ஸ்களை திறந்தாலே இந்த நிலைமை என்றால், இன்னும் சில பைல்ஸ்களை திறந்தால் எத்தனை பூதங்கள் வெளிவருமோ?</p><h2>ஊழல்கள் இருக்குமிடத்தில் திமுக</h2><p>திமுக இருக்குமிடத்தில் ஊழல் இருக்காது என அவர்கள் கூறுகின்றனர். நான் கூறுகிறேன். திமுக இருக்குமிடத்தில் ஊழல்கள் இருக்கும். ஊழல்கள் இருக்குமிடத்தில் திமுக இருக்கும்.</p><p>ஆதாரம் வேண்டும் என்றீர்களே.. போதுமா.. 2 வகை உள்ளது. தவறு செய்து மாட்டிக்கொள்வதற்கள் ஒரு பக்கம். தவறு செய்து, செய்யாதபடி சரியாக செய்பவர்கள் இன்னொரு பக்கம். அதில் திமுக 2 வது பக்கம். ஊழல் என்று சொன்னாலே திமுகவினர் எழுந்திரிப்பார்கள். ஊழல் செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியுமா? </p><p>கடந்த திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீரழிவு, போதைப்பொருள் பயன்பாடு இருந்தன. சட்டம், ஒழுங்கு பற்றி பேசுவதற்கு முன் உங்கள் ஆட்சியில் நடந்ததை கண்ணாடியில் பார்ப்பது நல்லது. மிசாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். மிசாவை பற்றிய வரலாறு எனக்கும் தெரியும்.</p><p>1967ல்அண்ணா, 1977ல் எம்ஜிஆர், 1983ல் என்டிஆர், 2026ல் விஜய். இயற்கையும் இறைவனும் நம்ம பக்கம் தான் இருப்பார்கள். அன்புக்கு முன்னாடி அவர்கள் தோற்பது உறுதி. நாற்காலிக்காக அதிகாரத்திற்காக நான் இங்கு வரவில்லை, மக்களுக்கு நல்லது செய்யவும், நன்றி கடன் செய்யவும் மட்டுமே வந்துள்ளேன்."</p><p>இவ்வாறு திமுகவின் ஊழல் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>பரபரக்கும் சட்டமன்றம்... பதிலுரையை தொடங்கினார் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-bustling-legislative-assembly-chief-minister-vijay-has-begun-his-reply-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-bustling-legislative-assembly-chief-minister-vijay-has-begun-his-reply-speech#comments</comments><guid isPermaLink="false">fde4a5f4-6368-4fce-9522-8adc07766474</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:24:06 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:24:06.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Assembly,சட்டமன்றம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/khz7xc0f/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/khz7xc0f/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதம் மீது முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை அளித்து பேசி வருகிறார். </p><h2>அனல் பறந்த சட்டசபை</h2><p>கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது. </p><h2>உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு</h2><p>குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "த.வெ.க. அரசு அமைந்த 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அரசின் அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, எல்லா திட்டத்திற்கும் மொத்தமாக சேர்த்து தாய்மாமன் காதுகுத்து திட்டம் என்று பெயர் வைத்திருக்கலாம். கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளது. இதில், 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் அடங்கும். எங்களுடைய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார். </p><h2>யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது</h2><p>அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன" என்று பேசினார். </p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார். </p> <h2>முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை </h2><p>இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலியுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது உரையை தொடங்கினார். </p><p>அப்போது பேசிய அவர், ‘மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அடித்தளம் காவல்துறை. ஒரு மாநிலத்தின் அமைதியில் தான் முன்னேற்றம் உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஈரோடு வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-service-of-special-trains-running-via-erode</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-service-of-special-trains-running-via-erode#comments</comments><guid isPermaLink="false">a8e2066f-0fe3-4578-9080-dfdabb99efab</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:14:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:14:27.292Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Special trains,Erode,ஈரோடு,சிறப்பு ரெயில்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/w73zot7r/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/w73zot7r/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஈரோடு,  </p><p>அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மங்களூருவில் இருந்து ஈரோடு வழியாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த ரெயில்களின் சேவைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்களூரு சென்ட்ரல் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06126) இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 26-ந்தேதி வரை திங்கட்கிழமைகளில் மாலை 4 மணிக்கு மங்களூரு சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரெயில் திங்கட்கிழமை நள்ளிரவு 12.18 மணிக்கு போத்தனூருக்கும், 1.28 மணிக்கு திருப்பூருக்கும், 2.10 மணிக்கு ஈரோட்டுக் கும் வருகிறது. பின்னர் இங்கிருந்து சேலத்துக்கு 3.17 மணிக்கும். ஜோலார்பேட்டைக்கு 5.20 மணிக்கும் செல்கிறது. </p><p>இதேபோல் சென்னை எழும்பூர் -மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06125) நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் மாதம் 27-ந்தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை சென்றடையும். இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை மாலை 6.05 மணிக்கு ஜோலார்பேட்டைக்கும், இரவு 7.37 மணிக்கு சேலத்துக்கும், 8.35 மணிக்கு ஈரோட்டுக்கும் வருகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு திருப்பூ ருக்கு 9.28 மணிக்கும். போத்தனூருக்கு 10.43 மணிக்கும் செல்கிறது.</p><p>மேற்கண்ட தகவல் சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு? - சென்னையில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-killed-in-collision-with-minister-jagatheeswaris-car-shock-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-killed-in-collision-with-minister-jagatheeswaris-car-shock-in-chennai#comments</comments><guid isPermaLink="false">1f50b98a-5fb0-479e-9369-4f3e9f96b4aa</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:02:41 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:02:41.811Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,சட்டசபை,அமைச்சர் ஜெகதீஸ்வரி,Minister Jagatheeswari</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/sizitwqe/JE.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஜெகதீஸ்வரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/sizitwqe/JE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">அமைச்சர் ஜெகதீஸ்வரி</a>யின் கார் மோதி இளைஞர் உயிரிழந்திருப்பதாக தகவல வெளியாகி உள்ளது. </p><h2>விடுமுறை முடிந்து </h2><p>தமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் இருந்து தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். </p><p>இதற்கிடையில், சட்டசபை விடுமுறையின் காரணமாக தொகுதிக்கு ஜெகதீஸ்வரி சென்றிருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு வாகனத்தில் வந்த நிலையில் அவருக்கு முன்னால் எஸ்கார்ட் பாதுகாப்பு வாகனமும், கடைசியாக அவரின் சொந்த வாகனமும் வந்திருக்கிறது. </p><h2>26 வயது இளைஞர்</h2><p>இதில் மூன்றாவதாக வந்த அவரது சொந்த கார் சென்னை காட்டாங்குளத்தூர் அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது.  இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இளைஞரின் பெயர் இறையன்பு என்றும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. </p><h2>விசாரணை </h2><p>இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த வாகனத்தை பறிமுதல் செய்திருப்பதாகவும்  வாகனத்தை ஓட்டிவந்த டிரைவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகமே காத்திருக்கும் பதிலுரை... சட்டசபைக்கு புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-reply-speech-that-all-of-tamil-nadu-is-awaiting-chief-minister-vijay-has-set-out-for-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-reply-speech-that-all-of-tamil-nadu-is-awaiting-chief-minister-vijay-has-set-out-for-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">77d8e984-daf7-466f-b58f-5d6f31c73f57</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:52:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T03:52:36.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,TN Assembly,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/l1dsanmn/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/l1dsanmn/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேச உள்ளார். இதற்காக அவர் தனது இல்லத்தில் இருந்து சட்டசபைக்கு புறப்பட்டுச் சென்றார். </p><h2>அனல் பறந்த சட்டசபை</h2><p>கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது. </p><h2>யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது</h2><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார். </p> <h2>சட்டசபைக்கு புறப்பட்டார்</h2><p>இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேச உள்ளார். இதற்காக தமது நீலாங்கரை இல்லத்தில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் சற்று முன்பு கார் மூலம் புறப்பட்டுச் சென்றார். சட்டம் ஒழுங்கு குறித்தும், முந்தைய ஆட்சி குறித்தும் முதல்-அமைச்சர் விஜய் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு இதய அறுவை சிகிச்சை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-dmk-minister-sivasankar-undergoes-heart-surgery</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-dmk-minister-sivasankar-undergoes-heart-surgery#comments</comments><guid isPermaLink="false">4b275b4a-4c6a-443d-80c6-0711404065b4</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:23:14 +0000</pubDate><atom:updated>2026-09-07T03:23:14.200Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Sivashankar,சிவசங்கர்,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/k9nn1lp3/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/k9nn1lp3/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவசங்கர், தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய தி.மு.க. அமைத்த குழுவிலும் சிவசங்கர் இடம்பெற்றுள்ளார். </p><p>தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் சூழலில், கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற சிவசங்கருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிவசங்கர் அனுமதிக்கப்பட்டார்.</p><p>அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்தில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தனர். இதன்படி சிவசங்கருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது சிவசங்கர் மருத்துவமனையில் ஓய்வில் உள்ளார். அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். </p> ]]></content:encoded></item><item><title>உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் த.வெ.க. - மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைக்க திட்டம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-gears-up-for-local-body-elections-plan-to-dissolve-municipal-corporations-ahead-of-schedule</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-gears-up-for-local-body-elections-plan-to-dissolve-municipal-corporations-ahead-of-schedule#comments</comments><guid isPermaLink="false">211097c4-7188-4207-a56a-5e79beab3471</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:09:13 +0000</pubDate><atom:updated>2026-09-07T03:09:13.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,உள்ளாட்சி தேர்தல்,local body elections</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/waf4z8id/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/waf4z8id/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தி.மு.க. வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை எதிர்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. </p><p>இதன் ஒரு பகுதியாக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், மார்ச் வரை இருந்தாலும், மாநகராட்சிகளை மட்டும் முன்கூட்டியே கலைக்க த.வெ.க. அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மாநகராட்சிகளில் தனி அதிகாரிகளை நியமித்து, த.வெ.க., கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும், அதன்பிறகு, ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து த.வெ.க.வை சேர்ந்தவர்கள் கூறுகையில், “மாநகராட்சி, நகராட்சிகளில் தி.மு.க.வினர் நடத்திய ஊழல்களை முன்வைத்து உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க த.வெ.க. தயாராகி வருகிறது. அதனால்தான், நகராட்சி துறை டெண்டர்கள் முறைகேடு புகார் மீது அதிக கவனம் செலுத்துகிறது. இது குறித்து, முதல்-அமைச்சர் விஜய்யின் கவனத்துக்கு த.வெ.க., மூத்த அமைச்சர்கள் கொண்டு சென்றுள்ளனர். முதல்-அமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்” என்று தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை: தேரெழுந்துாரில் ராஜராஜன் கால கல்வெட்டு கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayiladuthurai-inscription-from-the-era-of-rajaraja-discovered-at-theralundur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mayiladuthurai-inscription-from-the-era-of-rajaraja-discovered-at-theralundur#comments</comments><guid isPermaLink="false">200d06ce-c584-42f9-8ccd-d8a01c4a501e</guid><pubDate>Mon, 07 Sep 2026 02:14:09 +0000</pubDate><atom:updated>2026-09-07T02:14:09.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayiladuthurai,மயிலாடுதுறை,கல்வெட்டு,Inscription</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/vhptpt1o/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/vhptpt1o/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவினர், மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது இதுவரை நகலெடுக்கப்படாத, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டை அவர்கள் கண்டறிந்தனர்.</p><p>கோவிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள தூணில், சோழர்கால தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு  கல்வெட்டில், சிவனுக்கு அமுது படைக்க பொன்னை தானமாக அளித்த தகவல் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து, கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது;</p><p>இந்த கல்வெட்டு, கோவிராஜ கேசரிவர்மனான முதலாம் ராஜராஜனின் 18வது ஆட்சியாண்டான, 1003ல் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், உய்யக் கொண்டார் வளநாட்டில் உள்ள பிரம்மதேயமான திருவழுந்துார் மகாச்பையில், திருக்கடவுடை நாயனார் தெய்வத்திற்கு அமுது படைக்க, 21 கழஞ்சு தங்கம், தானமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த அறக்கொடையில் இருந்து, கிடைத்த வட்டியில், அமுது படைப்பதற்கான நெல் மற்றும் மற்ற தேவைகளுக்கான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு, அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/12000-cubic-feet-of-water-per-second-released-from-mettur-dam-for-delta-irrigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/12000-cubic-feet-of-water-per-second-released-from-mettur-dam-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">2ed53b95-045a-4b0c-ad4d-c2ef6589d897</guid><pubDate>Mon, 07 Sep 2026 01:03:01 +0000</pubDate><atom:updated>2026-09-07T01:03:01.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர் திறப்பு,mettur dam மேட்டூர் அணை,டெல்டா பாசனம்,Delta irrigation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/maphlmju/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/maphlmju/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர்,</p><p>சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு நீர்திறப்பு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களாக அதே அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.</p><p>இதற்கிடையே, காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் தண்ணீரின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து, நேற்று மாலை 6 மணியளவில் நீர்திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.</p>  <p>இந்த நிலையில், டெல்டா பாசனத்துக்கான நீர்த்தேவை மேலும் அதிகரித்துள்ளதால், இன்று காலை 6 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p>நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.39 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 709 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு சுமார் 55.35 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகளுக்கு தேவையான நீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-13-year-old-girl-elderly-man-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-13-year-old-girl-elderly-man-arrested#comments</comments><guid isPermaLink="false">a59e19d6-8dff-4e2e-bb77-91aa9f701492</guid><pubDate>Mon, 07 Sep 2026 00:48:25 +0000</pubDate><atom:updated>2026-09-07T00:48:25.451Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,போக்சோ சட்டம்,POCSO case</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ee2bgqhv/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/ee2bgqhv/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் கடத்தூர் ஆண்டிபாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 71). இவர் தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பழங்கரை பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் பழனி, அவினாசியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. </p><p>இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து அவினாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-3#comments</comments><guid isPermaLink="false">f46e7b70-37a4-4625-a27e-20f3c93ca4e8</guid><pubDate>Mon, 07 Sep 2026 00:34:53 +0000</pubDate><atom:updated>2026-09-07T00:34:53.439Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/w8cijril/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/w8cijril/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (07.09.2026 திங்கட்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கே.என்.நேருவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-police-investigation-to-knnehru-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-police-investigation-to-knnehru-soon#comments</comments><guid isPermaLink="false">85123619-d815-403b-9634-cb55aa677168</guid><pubDate>Mon, 07 Sep 2026 00:20:48 +0000</pubDate><atom:updated>2026-09-07T00:20:48.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கே.என்.நேரு,Anti-Corruption Police,லஞ்ச ஒழிப்பு போலீஸ்,K.N.Nehru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/1d2mao3o/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/1d2mao3o/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடு மற்றும் அவர் தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். </p><p>இந்த சோதனையில் டெண்டர்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், வழக்கின் புலனாய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து இருந்தனர்.</p><p>இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், அதனடிப்படையில் கே.என்.நேரு, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் கே.என்.நேரு தன் மீதான இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கும்பாபிஷேக விழா: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பில் குதிரைப்படை போலீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-force-police-security-of-the-madurai-meenakshi-amman-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-force-police-security-of-the-madurai-meenakshi-amman-temple#comments</comments><guid isPermaLink="false">961c65bd-1eea-479e-88ae-a1ea4b6dc486</guid><pubDate>Sun, 06 Sep 2026 23:53:17 +0000</pubDate><atom:updated>2026-09-06T23:53:17.195Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Meenakshi Amman Temple,Madurai Meenakshi Amman Temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,மீனாட்சி அம்மன் கோவில்,police security,போலீஸ் பாதுகாப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/wnyh1298/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/wnyh1298/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 17-ந்தேதி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதற்கு தேவையான முன்னேற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. </p><p>இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பக்தர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், மதுரை மாநகர காவல்துறை சார்பில் கூடுதல் போலீசார் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். சீருடை அணியாத மப்டி போலீசாரும் தீவிர ரோந்துப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>சில தினங்களுக்கு முன்பு மாசி வீதிகளில் போலீசார் சைக்கிள்களில் சென்று ரோந்துப் பணியை மேற்கொள்ளும் வகையில் 4 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அதன்படி போலீசார், சைக்கிளில் சென்று, இரவு, பகல் என 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒலி பெருக்கியும் வழங்கப்பட்டு பக்தர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>இன்னும் கும்பாபிஷேகத்திற்கு 10 தினங்களே இருப் பதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் குதிரைகள் மூலம் போலீசார் ரோந்துப் பணிகளை தொடங்கி இருக்கின்றனர். அதற்காக 2 குதிரைகளில் போலீசார் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் வலம் வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து குடும்பத்தினருக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/interfaith-kanduri-festival-ghee-rice-and-meat-curry-in-buckets-for-all-families</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/interfaith-kanduri-festival-ghee-rice-and-meat-curry-in-buckets-for-all-families#comments</comments><guid isPermaLink="false">0f681705-83c2-4f20-8ddb-5e51dd51a70a</guid><pubDate>Sun, 06 Sep 2026 22:45:24 +0000</pubDate><atom:updated>2026-09-06T22:45:24.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,Mosque,பள்ளிவாசல்,கந்தூரி விழா,Kanduri festival</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/nbirg2rw/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/nbirg2rw/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><h2>கந்தூரி விழா</h2><p>சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், கரிசல்பட்டியில் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் ஆண்டுதோறும் மிலாது நபி விழாவையொட்டி மதநல்லிணக்க கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று நடைபெற்றது.</p><p>முன்னதாக முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசலில் ஜமாத் கமிட்டி சார்பில் மிலாது நபியையொட்டி அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடனும், நோய் இன்றி நலமுடன் வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் சிறப்பு துவா ஓதப்பட்டு விழா தொடங்கியது. விழாவில் 75 ஆடுகள் வெட்டப்பட்டு கறிக்குழம்பு தயார் செய்யப்பட்டது.</p><h2>வாளிகளில் நெய்ச்சோறு</h2><p>தொடர்ந்து 1000 கிலோ ஆட்டிறைச்சி, 800 கிலோ அரிசி, 100 கிலோ நெய், 3 ஆயிரம் முட்டைகளுடன், சுமார் 4 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் நெய்ச்சோறு தயார் செய்யப்பட்டது. பின்னர் பல வண்ண நிறமுடைய சுமார் 700 வாளிகளில் ஒவ் வொன்றிலும் சுமார் 5 கிலோ நெய் சோறுடன் 4 முட்டைகள் வைத்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது. தனியாக மட்டன் கறிக்குழம்பும் வழங்கப்பட்டது.</p><p>இதனை கரிசல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாங்கிச்சென்றனர். தொடர்ந்து அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்ற அன்னதானம் நடைபெற்றது. இந்த மதநல்லிணக்க கந்தூரி விழாவையொட்டி கரிசல்பட்டி கிராமம் முழுவதும் நெய்ச்சோறு கமகமத்தது.</p>]]></content:encoded></item><item><title>இஸ்ரோ தனியார் மயமாகாது - ஊழியர் சங்கத்தினருக்கு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-will-not-be-privatized-clarification-given-to-employees-union-members</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-will-not-be-privatized-clarification-given-to-employees-union-members#comments</comments><guid isPermaLink="false">e5539389-388f-41b8-8747-d25f653aa50e</guid><pubDate>Sun, 06 Sep 2026 22:21:40 +0000</pubDate><atom:updated>2026-09-06T22:21:40.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,ISRO,ராக்கெட்,Rocket,ISRO Centre</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/7qe1jygl/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/7qe1jygl/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இஸ்ரோவின் 9 ஊழியர் சங்கங்கள், ராக்கெட் தயாரிப்பு மற்றும் ஏவுதள செயல்பாடுகள் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தனியாருக்கு மாற்றப்படுவதாக கவலை தெரிவித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணனிடம் அதிகாரப்பூர்வ விளக்கம் கோரி கடந்த 4-ந்தேதி கடிதம் எழுதின. </p><p>இஸ்ரோவின் எதிர்கால பங்கு, தற்போதைய ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, எதிர்கால ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை குறித்து சங்கங்கள் கேள்வி எழுப்பி இருந்தன. இருந்தன. இந்த நிலையில் இஸ்ரோ நேற்று இதுகுறித்து எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விளக்கம் வெளியிட்டது.</p><p>அதில், "இஸ்ரோ தனியார் மயமாக்கப்படாது. அதன் முக்கியத்துவம் குறைக்கப்படாது. அடுத்த தலைமுறை விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோவின் பங்கு மேலும் வலுப்படுத்தப்படும். அதே நேரம் ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்களை தொழில்துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் போட்டி முறையில் உற்பத்தி செய்யலாம். இதன்மூலம் அறிவியல் மனிதவளம் மற்றும் வளங்களை புதிய தொழில்நுட்பங்கள், சந்திரன் மற்றும் கோள்கள் ஆய்வில் பயன்படுத்த முடியும்” என்று கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் ஊழியர்கள் மீது வெறுப்பு என்பது இல்லை: அமைச்சர் விக்னேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-animosity-towards-tasmac-employees-minister-vignesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-animosity-towards-tasmac-employees-minister-vignesh#comments</comments><guid isPermaLink="false">80ca10d2-07ab-414a-b7bc-995117004623</guid><pubDate>Sun, 06 Sep 2026 21:43:50 +0000</pubDate><atom:updated>2026-09-06T21:43:50.230Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,டாஸ்மாக் ஊழியர்கள்,Tasmac employees,Minister Vignesh,அமைச்சர் விக்னேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/ksgrhpgj/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/ksgrhpgj/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>பழனி,</p><p>பழனியில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைதுறை அமைச்சர் விக்னேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான முனைப்பில் அரசு உள்ளது. மதுக்கடைகளில் பாட்டில் உடைவதிலும் பிரச்சினை உள்ளது. அதற்கும் ஒரு கடைக்கு 2 பாட்டில்களுக்கான தொகை கொடுக்க தயாராக உள்ளது. இதுபோன்ற எல்லா பிரச்சினைகளும் சரிசெய்யப்படும். உண்மையில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது வெறுப்பு என்பது இல்லை.</p><p>பழனியில் பள்ளி, அரசு அலுவலகங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மாற்றுவது குறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். மக்களுக்கு இடையூறு மற்றும் பிரச்சினை உள்ள டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்யப்படும். அதன்படி பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையும் இடமாற்றம் செய்யப்படும்.</p><p>தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பதில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கள்ளுக்கடை பற்றி முழு ஆய்வு செய்து வருகிறோம். ஏனெனில் கேரளம்-தமிழக எல்லையில் உள்ள 'ஸ்பிரிட்' பறிமுதல் செய்துள்ளனர். இவை சில கள்ளுக்கடைகளுக்கு கொண்டு செல்வதாக தகவல் வருகிறது. எனவே தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பது குறித்து ஆய்வு செய்து அரசு முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று முதல் இரவு நேர மின்சார ரெயில்கள் வழக்கம்போல இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/night-time-electric-trains-in-chennai-to-operate-as-usual-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/night-time-electric-trains-in-chennai-to-operate-as-usual-starting-today#comments</comments><guid isPermaLink="false">c3223f45-7181-4bdc-81da-06f5f6e17523</guid><pubDate>Sun, 06 Sep 2026 21:33:18 +0000</pubDate><atom:updated>2026-09-06T21:33:18.394Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின்சார ரெயில்,electric train,Chennai Electric Train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/g3rt9sl8/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/g3rt9sl8/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. </p><p>இந்த பணியின் காரணமாக கடந்த 25-ந்தேதி முதல் நேற்று வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாகவும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.</p><p>இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் கடற்கரை-தாம்ப ரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது.</p><p>எனவே, இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இன்று முதல் வழக்கம்போல இயக்கப்படும். அடுத்தகட்டமாக ரெயில் மாற்றங்கள் குறித்த புதிய அறிவிப்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வரும் வரையில் இதே நடைமுறை தொடரும்" என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்று அனல் பறக்குமா?: முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-sparks-fly-in-the-assembly-today-chief-minister-joseph-vijays-reply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-sparks-fly-in-the-assembly-today-chief-minister-joseph-vijays-reply#comments</comments><guid isPermaLink="false">4cd111d3-a075-459b-9b45-f14f5b790acb</guid><pubDate>Sun, 06 Sep 2026 19:57:29 +0000</pubDate><atom:updated>2026-09-06T19:57:29.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,TN Assembly,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/2r9u4zcs/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/2r9u4zcs/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) கூடும் சட்டசபையில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்க இருக்கிறார். </p><h2>சட்டசபை மீண்டும் கூடுகிறது</h2><p>சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில், கடந்த 4, 5 மற்றும் 6-ந்தேதி என 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கேள்வி நேரம் இன்று கிடையாது என ஏற்கனவே சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துவிட்ட நிலையில், அரசினர் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.</p><h2>அனல் பறந்த சட்டசபை</h2><p>இதுவரை 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந் தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது.</p><h2>உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு</h2><p>குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "த.வெ.க. அரசு அமைந்த 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அரசின் அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, எல்லா திட்டத்திற்கும் மொத்தமாக சேர்த்து தாய்மாமன் காதுகுத்து திட்டம் என்று பெயர் வைத்திருக்கலாம்.</p><p>கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளது. இதில், 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் அடங்கும். எங்களுடைய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.</p><h2>யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது</h2><p>அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன" என்று பேசினார்.</p><p>முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன்.</p><p>தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார்.</p><h2>சட்டசபையில் இன்றும் அனல் பறக்குமா?</h2><p>இந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேச இருக்கிறார். குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க இருப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்று தெரிகிறது.</p><h2>எதிர்பார்ப்பு</h2><p>அந்த வகையில் முதல்-அமைச்சர் விஜய் என்ன மாதிரியான பதிலை சொல்லப்போகிறார்? ஏற்கனவே இந்த துறைகளுக் கான அறிவிப்புகளை வெளியிட்டுவிட்ட நிலையில், மேலும் புதிய அறிவிப்புகளை எதுவும் வெளியிடுவாரா? என்பது போன்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு இன்று காலை பதில் கிடைத்துவிடும்.</p><p>முதல்-அமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து, வனத்துறை, வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, சுற் றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறைகளின் மானியக் கோரிக்கை அறிவிப்புகள் மற்றும் அதன் மீதான விவாதங்களும், அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் பதிலுரையும் இருக்கும்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்: உலக சந்தையில் இந்திய ஆயத்த ஆடைகளுக்கு புதிய வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-france-agreement-new-opportunities-for-indian-readymade-garments-in-the-global-market</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-france-agreement-new-opportunities-for-indian-readymade-garments-in-the-global-market#comments</comments><guid isPermaLink="false">baaa0678-65cb-46c0-a546-72a8aa4eadb3</guid><pubDate>Sun, 06 Sep 2026 18:23:36 +0000</pubDate><atom:updated>2026-09-06T18:23:36.453Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,பிரான்ஸ்,France,வர்த்தக ஒப்பந்தம்,ஆயத்த ஆடை,Readymade Garments</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/l33ajwgo/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/l33ajwgo/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறையை உயர்மதிப்பு கொண்ட சர்வதேச சந்தைகளுடன் மேலும் வலுப்படுத்தும் வகையில் பாரத் டெக்ஸ் டிரேட் பெடரேஷன் மற்றும் உலகின் முன்னணி சர்வதேச பேஷன் ஜவுளி மற்றும் கொள்முதல் தளமான பிரான்ஸ் நாட்டின் பிரீமியர் விஷன் எஸ்.ஏ. இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் பாரீசில் நடைபெற்ற கண்காட்சியில் நிறைவேற்றப்பட்டது.</p><p>பாரத் டெக்ஸ் டிரேட் பெடரேஷன் மையக்குழு உறுப்பினரும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவருமான சக்திவேல், பிரீமியர் விஷன் பேஷன் பிரிவு தலைமை செயல் 1 அதிகாரி புளோரன்ஸ் ரூசன் ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தம் இறுதியானது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சக செயலாளர் நீலம் ஷமி ராவ், கைத்தறித்துறை மேம்பாட்டு ஆணையாளர் பீனா, மூத்த தொழில்துறை தலைவர்கள், வடிவமைப்பாளர்கள், ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஒப்பந்தத்தை ஏ.இ.பி.சி. வரவேற்றுள்ளது.</p><p>இந்த ஒப்பந்தம் மூலமாக ஆயத்த ஆடை கொள்முதல், வடிவமைப்பு, நிலைத்தன்மை, ஜவுளி பாரம்பரியம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள் முன்னணி பேஷன் நிறுவனங்கள் மற்றும் பிரீமியம் கொள்முதல் வலையமைப்புகளுடன் இணைவதற்கான வாய்ப்பை பெற முடியும்.</p><p>இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் முக்கியத்துவதை இந்த ஒப்பந்தம் பெற்றுக்கொடுக்கும். ஐரோப்பிய சந்தையில் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகும் என்று ஏ.இ.பி.சி. தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்க முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-made-to-release-12000-cubic-feet-of-water-per-second-from-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-made-to-release-12000-cubic-feet-of-water-per-second-from-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">3299ad3d-c142-45c5-86be-f9c9857c1de0</guid><pubDate>Sun, 06 Sep 2026 17:48:03 +0000</pubDate><atom:updated>2026-09-06T17:48:03.297Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/88t4ez71/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/88t4ez71/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதற்கட்டமாக 3,000 கன அடி நீரை முதல் அமைச்சர் விஜய் கடந்த 1-ம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து அன்றைய தினம் மாலை நான்கு மணி அளவில் 4 ஆயிரம் கன அடியாகயும், இரவு 8 மணிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. </p><p>கடந்த ஐந்து நாள்களாக காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 7,000 கனஅடியாக இருந்தது. இதற்கிடையில், இன்று மாலை 6 மணியளவில் 10,000 கனஅடியாக அதிகரிப்பட்டது. அணையின் நீர் மட்டம் தற்போது 92.33 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 55.35 டிஎம்சியாக உள்ளது.</p><p>இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்பட்ட 10,000 கன அடி நீரை, நாளை காலை 6 மணிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்க உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 8,075 கன அடியிலிருந்து 8,612 கன அடியாக அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாரஇறுதி விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-kodaikanal-to-celebrate-the-weekend-holiday</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-kodaikanal-to-celebrate-the-weekend-holiday#comments</comments><guid isPermaLink="false">118510fa-e1ec-4aa2-b74e-1d16dc2648f1</guid><pubDate>Sun, 06 Sep 2026 16:35:58 +0000</pubDate><atom:updated>2026-09-06T16:35:58.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,கொடைக்கானல்,Kodaikanal,tourist</media:keywords><media:content height="384" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/tfwzajax/State-14.jpg" width="640"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/tfwzajax/State-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இன்னும் சில நாட்களில் குளு, குளு சீசன் நிறைவடைந்து, பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி கொடைக்கானலில் இதமான சூழல் நிலவுகிறது. இதனை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். </p><p>இந்தநிலையில் இன்று வாரஇறுதி விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். அதிகாலை முதலே கார், வேன், பஸ் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் சாரை, சாரையாக திரண்டு வந்தனர். இதனால் கொடைக்கானல் நகரின் முக்கிய சாலைகளிலும், வனப்பகுதி சுற்றுலா இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><p>கொடைக்கானலில் இன்று லேசான மழை பெய்தது. மேகங்கள் மலைகளின் மீது மோதி ரம்மியமான காட்சிகளை ஏற்படுத்தின. இதனை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களோடு புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய ஏராளமானோர் குவிந்தனர். அதேபோல் மோயர் பாயிண்ட், குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு, பேரிஜம் ஏரி, அமைதி பள்ளத்தாக்கு. மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. </p> ]]></content:encoded></item><item><title>ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ruling-party-members-not-safe-under-misrule-says-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ruling-party-members-not-safe-under-misrule-says-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">698ae771-ef86-4b38-bef4-eb07b3121126</guid><pubDate>Sun, 06 Sep 2026 16:27:52 +0000</pubDate><atom:updated>2026-09-06T16:27:52.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,முதல்-அமைச்சர்,பாதுகாப்பு,Nayinar Nagendran,ஆளுங்கட்சி,Ruling Party,regime,Chief Minister S.Joseph Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/5u95akcm/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி - நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/5u95akcm/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D"> நயினார் நாகேந்திரன் </a>தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-</p> <h2>சட்டம் ஒழுங்கு</h2><p>நேற்றிரவு சென்னை அடையாறு அருகே, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> நிர்வாகியான கண்ணன் என்பவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காணொளி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரின் பொதுவெளியிலேயே இப்படி ஒரு கொடூரம் நடக்கிறது என்றால், தமிழகத்தின் மற்ற உள் கிராமங்களில் சட்டம் ஒழுங்கின் நிலை எப்படி இருக்கும் என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.</p><h2>திங்கள் முதல் வெள்ளி வரை</h2><p>ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் முழுதாக முடிந்த பிறகும் கூட, மக்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், சட்டம் ஒழுங்கில் சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தாமல், திங்கள் முதல் வெள்ளி வரை  9 முதல் மாலை 5 மணி என்ற கோட்பாட்டின் கீழ் மட்டுமே வேலை பார்த்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்.</p> <h2>200- க்கும் அதிகமான பாலியல் குற்றங்கள்</h2><p>அதனால் தான் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 200- க்கும் அதிகமான பாலியல் குற்றங்களும், கிட்டதட்ட 200 கொலை குற்றங்களும், ஆயிரக்கணக்கான போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன.</p><h2>ரீல்ஸ்களை எடுப்பதில் காட்டும் ஆர்வம்</h2><p>எனவே, சினிமாவை போல, சட்டமன்றத்தில் வசனம் பேசி கொண்டிருக்கும்  ஜோசப் விஜய், தான் தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்பதை முதலில் உணர வேண்டும். கையை அசைப்பது போலவும், பாட்டிக்கு கண்ணாடி கொடுப்பது போலவும் ரீல்ஸ்களை எடுப்பதில் காட்டும் ஆர்வத்தையும் கவனத்தையும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் மீதும் கொஞ்சம் செலுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் - அமைச்சர் அருண்ராஜ் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sports-competitions-for-special-needs-children-in-all-districts-minister-arunraj-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sports-competitions-for-special-needs-children-in-all-districts-minister-arunraj-announces#comments</comments><guid isPermaLink="false">23e995b8-7ae9-40e6-9e65-4805f5f1dd49</guid><pubDate>Sun, 06 Sep 2026 16:27:21 +0000</pubDate><atom:updated>2026-09-06T16:27:21.631Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/r5tlix9a/State-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/r5tlix9a/State-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் அருண்ராஜ் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் ரோட்டரி சங்கத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கி வைத்தோம்.</p><p>ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் திறமைகளை கண்டறிந்து, ஊக்கமும் பயிற்சியும் அவர்களுக்கு அளித்தால் அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை இந்த நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தின.</p><p>இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக Cerebral Palsy எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாய், மனம் தளராமல் தன் குழந்தைக்கு பயிற்சி கொடுத்து வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற வைத்து உதவி மேலாளராக ஆக்கியுள்ளார். அந்த தாயாரின் விடா முயற்சியையும், அந்தக் குழந்தையின் சாதனையையும் பாராட்டி கேடயம் வழங்கினோம்.</p><p>சிறப்பு குழந்தைகளுக்கு இது போன்ற விளையாட்டுப் போட்டிகளை அனைத்து  மாவட்டங்களிலும் நடத்தினால் இன்னும் பல சிறப்பு குழந்தைகள் பயன்பெறுவார்கள்.  இதற்கான முன்னெடுப்புகளை நமது மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அரசு உறுதியாக  மேற்கொள்ளும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>கோத்தகிரி சாலையோரங்களில் அரிய வகை  லங்கூர் குரங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/endangered-langurs-spotted-along-kotagiri-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/endangered-langurs-spotted-along-kotagiri-road#comments</comments><guid isPermaLink="false">13adf9db-e8bf-4d6d-bb6e-ba0a92369723</guid><pubDate>Sun, 06 Sep 2026 15:56:42 +0000</pubDate><atom:updated>2026-09-06T15:56:42.326Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,குரங்குகள்,கோத்தகிரி,Monkeys,roadside,சாலையோரம்,Crowds of tourists</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/0kyi0svb/langor-monkey.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ லங்கூர் குரங்கு]]></media:title><media:description type="html"><![CDATA[ கோத்தகிரி சாலையோரங்களில் அரிய வகை  லங்கூர் குரங்குகள் - சுற்றுலா பயணிகள் ஆர்வம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/0kyi0svb/langor-monkey.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி,</p><p>நீலகிரி மலைப்பகுதிகளுக்கே உரிய, அழியும் அபாய பட்டியலில் உள்ள அரிய வகையான  லங்கூர்’ குரங்குகள், தற்போது குஞ்சப்பனை - மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் கூட்டமாகத் தென்பட தொடங்கியுள்ளன. </p><h2>வறட்சியால் வெளியேறும் விலங்குகள்</h2><p>நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது கடுமையான வறட்சியான சீதோஷண நிலை நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு, பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடர்ந்த காடுகளுக்குள் வாழும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி, காட்டை விட்டு வெளியேறி வன எல்லை பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளன.</p> <h2>அதிசய தோற்றம்</h2><p>மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் அடையாளமாக திகழும் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">லங்கூர் குரங்குகள்</a>, உடல் சாம்பல் (மற்றும் பளபளப்பான கருப்பு) நிறத்திலும், முகம் மட்டும் கரிய கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும். கோத்தகிரி, ஊட்டி, மசினகுடி மற்றும் மந்தூர் போன்ற அடர்ந்த வனப்பகுதிகளில், உயரமான மரங்களின் உச்சிகளில் மட்டுமே இவை கூட்டமாக வாழக்கூடியவை</p><p>இந்த நிலையில் மனிதர்களை கண்டால் அச்சப்படும் அரிய வகை லங்கூர் குரங்குகள் குஞ்சப்பனையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரங்களில் தென்பட தொடங்கியுள்ளன. இவற்றை அந்த வழியாக செல்லும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுற்றுலா பயணிகள்</a> ஆர்வத்துடன் கண்டுகளிப்பதுடன், புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-release-from-mettur-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-release-from-mettur-dam#comments</comments><guid isPermaLink="false">ae4d2ec5-99a6-4e55-ac41-6f63f04a99d1</guid><pubDate>Sun, 06 Sep 2026 15:46:00 +0000</pubDate><atom:updated>2026-09-06T15:46:00.756Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர் திறப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/vww0j7xp/Mettur-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/vww0j7xp/Mettur-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு    7,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் அமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதற்கட்டமாக 3,000 கன அடி நீரை திறந்துவைத்தார். </p><p>இதையடுத்து 1 ஆம் தேதி மாலை நான்கு மணி அளவில் 4 ஆயிரம் கன அடியாகயும், இரவு 8 மணிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.கடந்த ஐந்து நாள்களாக காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 7,000 கனஅடியாக இருந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் 10,000 கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அணையின் நீர் மட்டம் தற்போது 92.33 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 55.35 டிஎம்சியாக உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காவலர் தினத்தையொட்டி காவல்துறை சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-beach-cleanup-event-at-besant-nagar-beach-organized-by-the-police-force-to-mark-police-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-beach-cleanup-event-at-besant-nagar-beach-organized-by-the-police-force-to-mark-police-day#comments</comments><guid isPermaLink="false">84113161-dd18-4218-91f5-a030fd611707</guid><pubDate>Sun, 06 Sep 2026 15:16:55 +0000</pubDate><atom:updated>2026-09-06T15:16:55.450Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,police,காவல்துறை,பெசன்ட் நகர் கடற்கரை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/d1awq3oi/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/d1awq3oi/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காவலர் தினத்தையொட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்.</p><p>இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். கல்லூரி மாணவ-மாணவிகள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கடற்கரைக் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.</p><p>பொதுமக்கள் கடற்கரைகளை சுத்தமாகப் பாதுகாக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் ஆணையர் அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மெரினா கடற்கரையில் காவல்துறை இசைக்குழுவின் சிறப்பு நிகழ்ச்சியும், நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>திருவாரூரில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 வயது குழந்தை உள்பட 10 பேர் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/head-on-collision-between-two-cars-in-tiruvarur-10-people-including-a-3-year-old-child-critically-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/head-on-collision-between-two-cars-in-tiruvarur-10-people-including-a-3-year-old-child-critically-injured#comments</comments><guid isPermaLink="false">4b912043-5aef-4d57-bb52-987c21830946</guid><pubDate>Sun, 06 Sep 2026 14:42:40 +0000</pubDate><atom:updated>2026-09-06T14:42:40.301Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Thiruvarur,திருவாரூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/9i0cf41s/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/9i0cf41s/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இன்று இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற காரும், நாகப்பட்டினத்தில் இருந்து அம்மையப்பன் கிராமத்தை நோக்கி வந்த காரும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  </p><p>இந்த விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  </p> ]]></content:encoded></item><item><title>போதை ஒழிப்பு விழிப்புணர்வு: 48 நிமிடத்தில் 12 கி.மீ ஸ்கேட்டிங் செய்து 6 வயது தஞ்சை சிறுமி சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-drug-awareness-6-year-old-thanjavur-girl-sets-skating-record</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-drug-awareness-6-year-old-thanjavur-girl-sets-skating-record#comments</comments><guid isPermaLink="false">3865ab42-1f5e-465e-beb8-dd9a7af9cbaa</guid><pubDate>Sun, 06 Sep 2026 14:25:05 +0000</pubDate><atom:updated>2026-09-06T14:25:05.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,சிறுமி,girl,விழிப்புணர்வு,தஞ்சை,record,skating,ஸ்கேட்டிங்,சாதனை,போதை ஒழிப்பு,Anti-drug awareness</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qe5pi15m/varshini.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஹர்ஷினி]]></media:title><media:description type="html"><![CDATA[ போதை ஒழிப்பு விழிப்புணர்வு: 48 நிமிடத்தில் 12 கி.மீ ஸ்கேட்டிங் செய்து 6 வயது தஞ்சை சிறுமி சாதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qe5pi15m/varshini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தஞ்சாவூரை சேர்ந்த 6 வயது சிறுமி 48 நிமிடங்களில் 12 கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.</p> <h2>போதை ஒழிப்பு விழிப்புணர்வு</h2><p>தஞ்சாவூரை சேர்ந்தவர் ஹர்ஷினி (வயது 6). இந்த சிறுமிக்கு சிறு வயது முதலே ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்து வந்தது. இதற்காக அவர் முறையான பயிற்சியும் பெற்று வந்தார். இந்த நிலையில், தற்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பெருகி வரும் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுமி ஹர்ஷினி முடிவு செய்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">போதை ஒழிப்பு விழிப்புணர்வை </a>வலியுறுத்தி ஸ்கேட்டிங் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுமி ஹர்ஷினி கலந்து கொண்டு, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக ஸ்கேட்டிங் செய்தார். </p> <h2>உலக சாதனை புத்தகத்தில் இடம்</h2><p>வழவழப்பான சாலையில் மின்னல் வேகத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D">ஸ்கேட்டிங்</a> செய்த சிறுமி ஹர்ஷினி, வெறும் 48 நிமிடங்களில் 12 கிலோமீட்டர் தூரத்தை கடந்து இலக்கை அடைந்தார். இவ்வளவு குறைந்த நேரத்தில் இந்த தூரத்தை கடந்தது புதிய சாதனையாக கருதப்படுகிறது. சிறுமியின் இந்த அசாத்திய சாதனை, ‘அல்டிமேட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ உலக சாதனை புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் சிறுமிக்கு வழங்கப்பட்டன.</p> <h2>பாராட்டு மழை</h2><p>மிகவும் சிறிய வயதில், சமூக நலனை கருத்தில் கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்விற்காக அசாத்திய சாதனை புரிந்த சிறுமி ஹர்ஷினியை சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். </p><p>சிறுமியின் இந்த சாதனை தஞ்சை பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-ooty-for-the-weekend-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-ooty-for-the-weekend-2#comments</comments><guid isPermaLink="false">37a78ef0-1cda-4195-9d44-9ec6613ac078</guid><pubDate>Sun, 06 Sep 2026 14:09:44 +0000</pubDate><atom:updated>2026-09-06T14:09:44.589Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,ஊட்டி,Ooty</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/08cjytzs/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/08cjytzs/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது.</p> <p>இந்நிலையில் இன்று வார விடுமுறையையொட்டி உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மோட்டார் படகுகள், இருவர் மற்றும் நான்கு பேர் செல்லும் மிதி படகுகள், துடுப்பு படகுகளில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். அப்போது பெய்த சாரல் மழையில், குடைகளை பிடித்தும் பாதுகாப்பு உடைகளைத் தலையில் போர்த்தியும் நனைந்தபடி குளுகுளு காலநிலையை ரசித்தனர்.</p><p>இதற்கிடையே, படகு இல்லத்தில் அதிக அளவில் காணப்படும் ஆகாயத்தாமரைகளால் மிதி படகு சவாரியில் சிரமம் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். ஆகாயத்தாமரைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>
 தவெக நிர்வாகி கொலை;   துணை ஆணையர், ஆய்வாளர்  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-functionary-murdered-deputy-commissioner-and-inspector-transferred-to-the-vacancy-reserve-list</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-functionary-murdered-deputy-commissioner-and-inspector-transferred-to-the-vacancy-reserve-list#comments</comments><guid isPermaLink="false">7a4c3271-9a83-4378-94ab-126644887d96</guid><pubDate>Sun, 06 Sep 2026 14:01:25 +0000</pubDate><atom:updated>2026-09-06T14:01:25.700Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,காவல் ஆணையர்,Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/gxdah3ko/Chennai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/gxdah3ko/Chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க.வில் வட்ட செயலாளராக இருந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வண்ணாந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.</p> <h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>இது பற்றி தகவல் கிடைத்ததும் சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதற்கிடையே கண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கண் ணன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருவான்மியூர் பகுதி யில் நடைபெற்ற கொலை ஒன்றில் பழிக்குப்பழி வாங்கும் வகையில் கண்ணனை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடு பட்டு வந்த கண்ணன் அது தொடர்பான முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p> <h2>காத்திருப்போர் பட்டியல்</h2><p>கண்ணன் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்திருந்ததால், அவரது அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காமல் எதி ராளிகள் தீர்த்து கட்டினார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடை பெற்று வருகிறது. சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி களின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையே,   கொலை சம்பவம் தொடர்பாக  சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ரோகினி மற்றும் அடையார் துணை ஆணையர் கார்த்திகேயன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-must-be-taken-to-protect-law-and-order-communist-party-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-must-be-taken-to-protect-law-and-order-communist-party-insists#comments</comments><guid isPermaLink="false">8c90093a-a5b9-4d85-9e38-42f42c57c3f8</guid><pubDate>Sun, 06 Sep 2026 13:45:32 +0000</pubDate><atom:updated>2026-09-06T13:45:32.166Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Action,வலியுறுத்தல்,Communist Party,சட்டம் ஒழுங்கு,Law and order,பாதுகாக்க நடவடிக்கை,கம்யூனிஸ்ட் கட்சி,வேண்டும்,insists,maintain</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/38sfsz4q/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/38sfsz4q/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இதுகுறித்து, இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன்</a> வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளதாவது:-</p> <h2> நம்பிக்கை சீர்குலைக்கிறது</h2><p>சென்னை அடையாறு வண்ணாந்துறையில் ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். இது மனதை பதை பதைக்க செய்கிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயுதங்களுடன் கும்பல்கள் சுதந்திரமாக செயல்படுவது காவல்துறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கிறது.</p> <h2> நடவடிக்கை மட்டும் போதாது</h2><p>தமிழகத்தின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">சட்டம் - ஒழுங்கு</a> நிலை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. காவல் துறை, குற்றம் நடந்த பின்னர் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது மட்டும் போதாது. குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்கை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்.</p> <h2>போதை மற்றும் மதுகலாச்சாரம்</h2><p>தமிழக அரசு சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து வெறும் விளக்கங்களை மட்டுமே அளித்து வருவதை விட்டுவிட்டு, மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். குற்ற செயலயல்கள் அதிகரிப்பதற்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து போக்க வேண்டும். போதை மற்றும் மதுகலாச்சாரத்திற்கு தீர்வு காணவேண்டும்.</p><p>போதை மற்றும் மது கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை மாநிலம் தழுவிய முறையில் தமிழ்நாடு அரசே நடத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கூடலூரில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானை - வீடுகளுக்குள் தஞ்சமடைந்த மக்கள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-through-residential-area-in-gudalur-residents-take-shelter-inside-homes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-through-residential-area-in-gudalur-residents-take-shelter-inside-homes#comments</comments><guid isPermaLink="false">5740bd75-5745-4ab8-b6ad-e9505837d8be</guid><pubDate>Sun, 06 Sep 2026 13:29:27 +0000</pubDate><atom:updated>2026-09-06T13:29:27.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானை,wild elephant</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1dq5hwn6/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1dq5hwn6/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரின் மார்த்தோமா நகர் குடியிருப்பு பகுதியில், பட்டப்பகலில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யானையை கண்ட பொதுமக்கள் வீடுகளுக்குள்ளும், மாடிகளிலும் தஞ்சமடைந்தனர். யானை வருவதை அறிந்த வனத்துறையினர், பொதுமக்களுக்கும், எதிரே வந்தவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.</p> <p>நீண்ட நேரம் குடியிருப்பு பகுதியில் நடமாடிய யானையை, வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் கூச்சலிட்டும் விரட்டினர். யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராத வகையில் அதனை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பெரியார் அருவியில் செந்நிறத்தில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிக்க  தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyar-falls-raging-red-floods-tourists-banned-from-bathing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/periyar-falls-raging-red-floods-tourists-banned-from-bathing#comments</comments><guid isPermaLink="false">5abb3ac8-c43a-41d1-b9f5-5ce5d673cabb</guid><pubDate>Sun, 06 Sep 2026 13:24:00 +0000</pubDate><atom:updated>2026-09-06T13:24:00.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,வெள்ளம்,அருவி,தடை,பெரியார்,Periyar,bathing,banned</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/6nophxdu/periyar-waterfalls.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெரியார் அருவி]]></media:title><media:description type="html"><![CDATA[ பெரியார் அருவியில் செந்நிறத்தில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிக்க  தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/6nophxdu/periyar-waterfalls.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p> கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள புகழ்பெற்ற பெரியார் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காடுகளிலிருந்து மண் மற்றும் மரக்கழிவுகள் அடித்து வரப்படுவதால், அருவியில் செந்நிறத்தில் தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">தடை</a> விதித்துள்ளது.</p><h2>கல்வராயன்மலையில் மழை</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குவது கல்வராயன்மலை ஆகும். இந்த மலை பகுதியில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு முதல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மலை பாதைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.</p> <h2>செந்நிறமாக மாறிய பெரியார் அருவி</h2><p>மழை காரணமாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">கல்வராயன்மலையில்</a> உள்ள பிரசித்தி பெற்ற பெரியார் அருவிக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகரித்துள்ளது. மலையின் அடர்ந்த காட்டு பகுதிகள் மற்றும் மலை பாதைகளில் இருந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து வருவதால், மண்ணும் சகதியும் கலந்து அருவி நீர் முற்றிலும் செந்நிறமாக மாறியுள்ளது. பார்ப்போரை கண் இமைக்க வைக்காத அளவுக்கு அசுர வேகத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.</p> <h2>சுற்றுலா பயணிகளுக்கு தடை</h2><p>விடுமுறை தினம் என்பதால் பெரியார் அருவியில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இன்று காலையிலேயே அங்கு திரண்டனர். இருப்பினும், அருவியின் வேகம் அதிகமாக இருப்பதாலும், செந்நிற நீரில் பாறைகள் மற்றும் மரக்கட்டைகள் அடித்து வரப்படலாம் என்ற அச்சத்தினாலும், அசம்பாவிதங்களை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>நீர்வரத்து சீரான பின்னரே மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருக்கிறதா? கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-administration-under-the-control-of-officials-minister-arunraj-clarifies-regarding-the-communist-partys-allegation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-administration-under-the-control-of-officials-minister-arunraj-clarifies-regarding-the-communist-partys-allegation#comments</comments><guid isPermaLink="false">10a6992a-ba37-4959-8ab6-c83c100d8cbd</guid><pubDate>Sun, 06 Sep 2026 12:39:48 +0000</pubDate><atom:updated>2026-09-06T12:39:48.284Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Communist,கம்யூனிஸ்ட்,அருண்ராஜ்,Arun Raj</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/kby57y98/Arun-raj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அருண்ராஜ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/kby57y98/Arun-raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p> அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் கேள்வி கேட்பது அவர்களின் கடமை. நியாயமான கோரிக்கைகளை கேள்வி எழுப்பும் போது அதற்கு முதல்-அமைச்சர் நிச்சயம் பதில் அளிப்பார். </p><p>சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. முதல்-அமைச்சர் தன்னுடைய பதிலுறையில் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் அளிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>வேடிக்கையானது</h2><p>அதிகாரிகளின் ஆட்சி நடப்பதாக கம்யூனிஸ்டு கட்சிகள் விமர்சனம் செய்ததது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அதிகாரிகளின் ஆட்சி கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் நடந்தது. கடந்த ஆட்சியில் முதல்-அமைச்சருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலும், அவர்கள் சொல்வதைக் கேட்டு மட்டுமே இயங்கிய ஆட்சியாக அது இருந்தது. </p><p>ஆனால், இப்போது அப்படி இல்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரை குறிப்பிட்டு நடந்த ஒரு நிகழ்வுக்கு அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருக்கிறது எனக் கூறுவது வேடிக்கையானது. உண்மையில் ஒரு நேர்மையான, வெளிப்படையான தலைமை இருக்கிறது. ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக பொதுவாக பேச முடியாது.‘ என்றார்.</p>]]></content:encoded></item><item><title>இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா? - சென்னையில் அடுத்தடுத்து இரு படுகொலைகளால் கனிமொழி எம்பி வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-this-a-capital-or-a-murder-capital-kanimozhi-mp-pained-by-two-back-to-back-murders-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-this-a-capital-or-a-murder-capital-kanimozhi-mp-pained-by-two-back-to-back-murders-in-chennai#comments</comments><guid isPermaLink="false">21511e5b-fa74-4199-9427-ff73a904a60c</guid><pubDate>Sun, 06 Sep 2026 12:26:41 +0000</pubDate><atom:updated>2026-09-06T12:26:41.465Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,முதல்-அமைச்சர்,Chief Minister,படுகொலை,கனிமொழி எம்பி,murders,Capital</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qxxpgwfg/kanimozhimp.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கனிமொழி எம்பி]]></media:title><media:description type="html"><![CDATA[ இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா? - சென்னையில் அடுத்தடுத்து இரு படுகொலைகளால் கனிமொழி எம்பி வேதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/qxxpgwfg/kanimozhimp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா? - சென்னையில் அடுத்தடுத்து இரு படுகொலைகளால் வேதனனை அளிப்பதாக திமுக எம்.பி. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>சரித்திர பதிவேடு குற்றவாளி </h2><p>தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக் கொலை</a> செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில்  தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார். </p><h2> கொலைநகரமா</h2><p>இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.</p> <h2>இதுவே சாட்சி</h2><p>முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>