<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 09 Aug 2026 08:29:34 +0000</lastBuildDate><item><title>ஆன்லைன் மோசடிகளுக்கு வங்கி கணக்கை வாடகைக்கு விட்டு கமிஷன்: தமிழகம் முழுவதும் 800 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/800-arrested-across-tamil-nadu-for-renting-out-bank-accounts-for-online-scams-in-exchange-for-a-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/800-arrested-across-tamil-nadu-for-renting-out-bank-accounts-for-online-scams-in-exchange-for-a-commission#comments</comments><guid isPermaLink="false">77234071-888e-45ba-8f36-4c55800036fc</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:24:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:24:08.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,போலீஸ்,தமிழகம்,கைது,arrest,வங்கி கணக்கு,Bank account,TN Police,ஆன்லைன் மோசடி,Online fraud,கமிஷன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/dmyw3isf/fra.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/dmyw3isf/fra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆன்லைன் மோசடிகளுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாக தமிழ்நாடு முழுவதும் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h2>மணி மியூல் அக்கவுண்ட்</h2><p>குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் ஆன்லைன் வழியில் கோடிக்கணக்கில் பணம் பறிக்கப்படும் மோசடிகள் தொடர் கதையாகியுள்ளன. 'சைபர்' மோசடி செயல்களில் அபகரிக்கப்படும் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் அனுப்பப்பட்டு எடுக்கப்படுகிறது. </p><p>இத்தகைய வங்கி கணக்குகள் மணி மியூல் அக்கவுண்ட் (Money Mule) என போலீசார் அழைக்கின்றனர். வங்கியில் இருந்த அந்த பணத்தை எடுத்து கொடுப்பதற்காக கமிஷன் தொகை வழங்கப்படுகிறது. </p><h2>சிறப்பு அதிரடி நடவடிக்கை</h2><p>இந்த கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலர் மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்து வருவதை சென்னை ‘சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில் சென்னையில் கடந்த 2 நாட்களில் 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மோசடி பணத்தை பதுக்கும் மணி மியூல் வங்கி கணக்குகள் தொடர்புடைய 800 பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>800 பேர் கைது</h2><p>இதன்படி, இந்த மோசடி தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறாக தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ள 800 பேரிடம் போலீசாரின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பத்திரப்பதிவு முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கை தேவை: தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/strict-action-is-needed-to-prevent-irregularities-in-deed-registration-vanathi-srinivasan-urges-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/strict-action-is-needed-to-prevent-irregularities-in-deed-registration-vanathi-srinivasan-urges-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">8840621d-5822-43f0-bcb0-a8e2905a34c9</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:18:43 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:18:43.829Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Government,சென்னை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,வலியுறுத்தல்,பத்திரப்பதிவு,முறைகேடு,irregularities</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/n138bgpa/5.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/n138bgpa/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பத்தரப்பதிவு</h2><p>திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற பத்திரப் பதிவு முறைகேட்டில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் பழனி ஆயக்குடி பகுதியில் கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான ரூ. 2 கோடி நிலத்தினை ரூ.9 லட்சத்திற்கு பத்தரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>மேலும் பழனி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான நிலம் முறைகேடான பதிவு புகாரில் சிக்கிய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர்தான் இந்நிலத்தினையும் பதிவு செய்ததாகக் கூறப்படுவது பேரதிர்ச்சி. </p><p>இதுகுறித்து திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், பழனி பத்திரப் பதிவாளருக்கு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலத்தினை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியும் கடந்த மாதம் தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது பத்திரப் பதிவுத்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது.</p><h2>நிலமோசடி</h2><p>தற்போது அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு ஒரு நிலம் பதிவு செய்யப்படுகிறது என்றால் அது நிச்சயம் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. இதுபோல் தொடர்ந்து கோவில் நிலங்கள் தனிநபர்களின் பெயரில் நிலமோசடி செய்யப்பட்டு அபகரிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. பத்திரப்பதிவு துறையில் வெளிப்படைத் தன்மை இல்லாததும்,  சாமானிய மக்கள் எளிதில் அறிந்து கொள்ளாத வகையில் சில நடைமுறைகள் பின்பற்றப்படுவதும் இதுபோன்ற முறைகேடான செயல்களுக்கு வழிவகுக்கிறது.  </p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்கள் அனைத்தையும் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்து இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கும் பட்சத்தில் உடனடியாக மீட்க வேண்டும். மேலும் மடத்திற்குச் சொந்தமான நிலங்களும் தனிநபர்கள் பெயரில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">பத்திரப்பதிவு</a> செய்வதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து கோவில் மற்றும் மடங்களின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெயிண்டர் நாயை போல தாவி தாவி ஓடியதால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-painter-who-came-to-the-government-hospital-jumped-and-ran-like-a-dog-causing-a-stir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-painter-who-came-to-the-government-hospital-jumped-and-ran-like-a-dog-causing-a-stir#comments</comments><guid isPermaLink="false">57cb9f64-c7a5-4907-af4a-9684a83df3f4</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:09:48 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:09:48.537Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,Dog bite,நாய்,அரசு ஆஸ்பத்திரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/fvp9q10n/dog33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாயை போல தாவி தாவி ஓடியதால் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/fvp9q10n/dog33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெயிண்டர் நாயை போல தாவி தாவி ஓடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>திருச்சியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் காரைக்காலில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வந்தார். அவர் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலம் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி</a>க்கு அனுப்பி வைத்தனர். </p><p>ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆம்புலன்சில் இருந்து கீழே இறங்கியபோது. திடீரென அவர் நாய் போல் அங்கும். இங்குமாக தாவி தாவி ஓடினார். அப்போது அங்கிருந்த நாய் ஒன்று அவரை நோக்கி வந்து, அவருடன் விளையாடியது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். </p><p>தற்போது அது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.காரைக்காலில் நாய் கடித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோன்று அவருக்கு நாய் கடித்ததால் இதுபோன்ற விபரீதம் ஏற்பட்டுள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்</title><link>https://www.dailythanthi.com/devotional/a-crowd-of-devotees-gathered-at-the-annamalaiyar-temple-in-tiruvannamalai-waited-for-2-hours-to-have-darshan-of-the-deity</link><comments>https://www.dailythanthi.com/devotional/a-crowd-of-devotees-gathered-at-the-annamalaiyar-temple-in-tiruvannamalai-waited-for-2-hours-to-have-darshan-of-the-deity#comments</comments><guid isPermaLink="false">875f98b4-4b50-4454-8f0b-d99478805f4f</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:51:13 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:51:13.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,Annamalaiyar Temple,சாமி தரிசனம்,Devotees darshan,devotees crowd,குவிந்த பக்தர்கள்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/g7sxrn2d/tiruvannamalai.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/g7sxrn2d/tiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (Devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">திருவண்ணாமலை</a> அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதில் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும். </p><h2>சிறப்பு அபிஷேக ஆராதனைகள்</h2><p>அவ்வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார்-உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. </p><h2>சாமி தரிசனம்</h2><p>கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரத்தின் வழியாக தரிசனத்திற்கு சென்ற பக்தர்களின் வரிசையானது வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது. மேலும் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள காத்திருப்பு கூடத்தில் பக்தர்கள் காத்திருந்து நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை: கட்டுமான பொருட்கள் விலை, தொழிலாளர் சம்பளபட்டியல் திருத்தி அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/transparency-in-government-tenders-revision-of-construction-material-prices-and-labor-wage-schedules</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/transparency-in-government-tenders-revision-of-construction-material-prices-and-labor-wage-schedules#comments</comments><guid isPermaLink="false">c9bb042c-f04b-41ea-ae2f-699f6fab0b15</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:37:27 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:37:27.983Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக அரசு,TN govt,construction materials,கட்டுமான பொருட்கள்,தொழிலாளர்கள்,நிபுணர் குழு,Labor,அரசு டெண்டர்கள்,சம்பள பட்டியல்,விலைப்பட்டியல்,overnment tenders</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ur32qf1y/koerr.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ur32qf1y/koerr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அரசு கட்டுமான பணிகளுக்கான டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் வகையில், நியாயமான மற்றும் நடப்பு சந்தை விலைக்கு ஏற்ப கட்டுமானப் பொருட்கள், தொழிலாளர் சம்பளம் அடங்கிய விலைப்பட்டியல் திருத்தி அமைக்கப்படுகிறது.</p><h2>கட்டுமான பணிகள்</h2><p>அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கு வெளிப்படையான, நியாயமான மற்றும் நடப்பு சந்தை விலைக்கு பொருத்தமான டெண்டர்களை ஈர்க்கும் வகையில், கட்டுமான பொருட்கள் மற்றும் தொழிலாளர் கூலிக்கான விலைபட்டியல் தற்போது திருத்தி அமைக்கப்பட்டு வருகிறது.</p><h2>விலைப்பட்டியல்</h2><p>இது அரசு கொள்முதல் விலைகளை நடப்பு சந்தை விலைகளுடன் ஒப்பிடுவதன் மூலம், அனைத்து துறைகளிலும் திட்டச்செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் பொதுப்பணிகளுக்கான கட்டுமான பொருட்கள் மற்றும் கூலி விவரங்களை நிர்ணயிக்கும் இந்த விலைப்பட்டியலை மறுஆய்வு செய்யும் பணியை பொதுப்பணித்துறைத் தொடங்கியுள்ளது.</p><p>இந்த விலைப்பட்டியல் ஆண்டுதோறும் திருத்தப்பட்டாலும், முந்தைய ஆண்டுகளில் சந்தை நிலவரங்கள் குறித்த விரிவான மதிப்பீடு இல்லாமல், முந்தைய ஆண்டின் விலைகளே தொடரப்பட்டோ அல்லது பெயரளவிலான உயர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டோ இருந்து வந்தன.</p><h2>நிபுணர்கள் குழு</h2><p>தற்போது அந்த நிலையை முற்றிலும் மாற்றி, இதற்கான சந்தை விலை நிலவரங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் பொதுப்பணித்துறையின் என்ஜினீயரிங் மற்றும் கட்டுமானப்பிரிவு நிபுணர்கள் குழுவின் மூலம் சிமெண்டு, இரும்பு, நீலக்கல், பி.வி.சி. பொருட்கள் மற்றும் இதர முக்கியப்பொருட்களின் சந்தை விலைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. </p><h2>தச்சரின் தினக்கூலி</h2><p>மேலும், துறை சார்ந்த அட்டவணைகளை இறுதி செய்வதற்கு முன்பு தொழிலாளர்கள் சம்பளமும் மறுஆய்வு செய்யப்பட உள்ளது. </p><p>பொதுப் பணித்துறையின் தற்போதைய (அதாவது 2025-26-ன்) விலைப்பட்டியலின்படி, தச்சரின் தினக்கூலி ரூ.1,148, துப்புரவுப்பணியாளரின் கூலி ரூ.609 மற்றும் பெயிண்டரின் சம்பளம் ரூ.904 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>1,000 எண்ணிக்கை கொண்ட செங்கல் ரூ.7,887 ஆகவும், சிமெண்டு ஒரு டன் ரூ.5,602 ஆகவும், இரும்பு ஒரு டன் ரூ.55,664 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>திட்டங்களின் செலவு குறையும்</h2><p>பொதுப்பணித்துறையின் நிபுணர் குழு ஒவ்வொரு துறையையும் தனித்தனியாக கலந்தாலோசித்து விலைப்பட்டியலை திருத்தும். இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருத்தத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தும் உள்கட்டமைப்பு திட்டங்களின் செலவுகள் குறையும் என்றும் கூறப்படுகிறது.</p><h2>அதிகாரப்பூர்வ வெளியீடு</h2><p>மேலும், விலைப்பட்டியலை முழுமையாக சார்ந்திராமல், சந்தை விலைகளை ஒப்பிட்டு துறைகள் டெண்டர்களை தயாரிக்க முடியும் என்றாலும், திருத்தப்பட்ட விலைப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவுடன் அது அனைத்து டெண்டர்களுக்கும் பொதுவாக பொருந்தும் என்றும், அரசுக்கு கணிசமான சேமிப்பைத்தரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>“வெள்ளையனே வெளியேறு இயக்க வீரர்களை நினைவுகூர்வோம்” – எல்.முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-remember-the-heroes-of-the-quit-india-movement-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-remember-the-heroes-of-the-quit-india-movement-l-murugan#comments</comments><guid isPermaLink="false">e7e3b3a3-e001-468d-aa91-3fca411d271b</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:19:35 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:19:35.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,சென்னை,L. Murugan ​,வீரர்கள்,Movements</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/tsvq6bpm/l-murugan.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எல்.முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/tsvq6bpm/l-murugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து வீர ஆத்மாக்களையும் ஆழ்ந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.</p><p>மத்திய இணை-மந்திரி<a href="https://www.dailythanthi.com/topic/lmurugan"> எல். முருகன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>வெள்ளையனே வெளியேறு இயக்கம்</h2><p>வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து வீர ஆத்மாக்களையும் ஆழ்ந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம். மகாத்மா காந்திஜியின் தலைமையால் உத்வேகம் பெற்ற “வெள்ளையனே வெளியேறு” என்ற முழக்கம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய வலிமையையும் உறுதியையும் ஊட்டியது. </p><p>அது, காலனி ஆதிக்கத்தின் தளைகளை உடைத்து சுதந்திரம் அடைய வேண்டும் என்ற நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியைப் பிரதிபலித்தது. அவர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் தேசபக்தி உணர்வு ஆகியவை இந்தியத் தலைமுறைகளுக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசு தாக்கல் செய்த பொது, வேளாண்மை பட்ஜெட்டில் ‘வெற்றி’ பெயரில் 9 திட்டங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-schemes-under-the-name-vetri-victory-featured-in-the-general-and-agriculture-budgets-presented-by-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-schemes-under-the-name-vetri-victory-featured-in-the-general-and-agriculture-budgets-presented-by-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">21f9354b-cceb-4cc4-af41-570056abc387</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:08:37 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:08:37.565Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,தமிழக அரசு,Tamilaga Vettri Kazhagam,வெற்றி,TN government,பட்ஜெட்,Budget,வேளாண் பட்ஜெட்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4ua5upji/kierer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4ua5upji/kierer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புதிய அரசுகள் பொறுப்பேற்கும்போது, முந்தைய அரசுகளின் திட்டங்களின் பெயர்களை மாற்றுவதும் அல்லது தங்களது கொள்கை அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் புதிய பெயர்களை சூட்டி பட்ஜெட்டில் அறிவிப்பதும் தமிழக அரசியலில் தொடர்ச்சியாக நடந்துவரும் ஒரு மரபாகவே பார்க்கப்படுகிறது. </p><h2>'அம்மா'</h2><p>அந்த வகையில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பொதுமக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டம், உகந்த விலையில் மருந்தகங்கள், குடிநீர் மற்றும் சிமெண்டு, உப்பு வழங்கும் திட்டங்களுக்கு எல்லாம் 'அம்மா' என்ற பெயர் வைக்கப்பட்டன. </p><p>எடுத்துக்காட்டாக அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்டு என்ற பெயரில் திட்டங்கள் உலா வந்தன. இதில் தற்போது அம்மா உணவகம் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.</p><h2>'கலைஞர்'</h2><p>அதேபோல், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 'கலைஞர்' என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதாவது, கலைஞர் கைவினைத் திட்டம், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கலைஞர் தலை மரக்கன்றுக்கள் நடும் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்றவையெல்லாம் மக்கள் திட்டங்களாக அரசால் அறிவிக்கப்பட்டன.</p><h2>9 திட்டங்கள்</h2><p>அந்த வரிசையில் தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க.</a> அரசும், அதுபோல ஒரு பெயரை முன்னிலைப்படுத்தி அரசு திட்டங்களில் முத்திரை பதிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன்படி, கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட்டுகளில் "வெற்றி” என்ற பெயரில் மட்டும் 9 திட்டங்களை அறிவித்து இருக்கின்றன.</p><h2>வெற்றி</h2><p>* வெற்றி மடிக்கணினி திட்டம்</p><p>* வெற்றி திறன் பயிற்சித் திட்டம்</p><p>* வெற்றி தொழில் முனைவோர் திட்டம்</p><p>* வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம்</p><p>* வெற்றி வீடு திட்டம்</p><p>* வெற்றி 150</p><p>* வெற்றி விவசாயி விருது</p><p>* வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்</p><p>* வெற்றி வான்மகள் திட்டம்</p><p>இது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை ஆகும். இனிவரும் நாட்களில் அரசு அறிவிக்கும் புதிய திட்டங்களிலும் இந்த பெயர் பிரதிபலிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பழனி, மதுரை கோவில் நில மோசடி விவகாரங்களில் உடனடியாக நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-on-palani-and-madurai-temple-land-fraud-cases-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-on-palani-and-madurai-temple-land-fraud-cases-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">895d4d4e-e609-46d5-86ce-5575c93612df</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:07:14 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:07:14.615Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Madurai,மதுரை,Meenakshi Amman Temple,இந்து சமய அறநிலையத்துறை,மீனாட்சி அம்மன் கோவில்,land issue,Palani,நில மோசடி,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4o695wb6/CHENNAI-112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4o695wb6/CHENNAI-112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீரங்கம்,</p><p>ஸ்ரீரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>ஸ்ரீரங்கம் கோவிலில் 21 கோபுரங்களில் ஒன்றான ஸ்ரீ தாமோதரகிருஷ்ண கோபுரம் பணிகள் 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பல்வேறு சூழல் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டு தற்போது நம்முடைய ஆட்சியில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.</p><p>அறநிலையத்துறையின் கவனத்திற்கு வராமல் பத்திரப்பதிவுகள் நடக்கிறது. அறநிலைத்துறை கவனத்திற்கு வந்த உடனே சட்டரீதியாக மற்றும் காவல் துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழனி கோவில் நில விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து விவகாரம் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>d விவகாரத்தில் கடந்த திமுக ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?. தூங்கிக் கொண்டிருந்தார்களா?. கோவில் சொத்துக்களாக இருந்தாலும், கோவிலுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக கொடுக்கப்பட்ட அறக்கட்டளை சொத்துக்களாக இருந்தாலும் அது காப்பாற்றப்படும், இந்து சமய அறநிலையத்துறை கைவிடாது. </p><p>கோவில்களில் செல்போன்கள் அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது, சமூக வலைதளங்களில் பல விடியோக்கள் வருவதைப் பார்க்கிறோம். கடந்தகால ஆட்சியில் அதனை செயல்படுத்தவில்லை, இதனால் கோவில் கருவறை விடியோகூட வெளிவருகிறது, முதல் நிலை கோவில்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து செல்போன் கவுன்டர்கள் வைத்து பாதுகாப்பான முறையில் செல்போன்களை பாதுகாக்க கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அனைத்து முதல் நிலை கோவில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கான தடைகள் அமலுக்கு வரும்.</p><p>மனநிறைவுக்காக, கோவிலுக்குள் சாமிகும்பிட செல்லும்போது செல்போன் பயன்படுத்துவது தேவையற்ற ஒன்று, செல்போன்களை பயன்படுத்துவது, புகைப்படம் எடுப்பது, விடியோ எடுப்பது தேவையற்ற ஒன்று, இறைவனை தரிசிக்க செல்லும்போது எண்ணங்கள் இறைவன் மேல் இருக்க வேண்டும், என்ன பிரார்த்தனைக்கு வந்தோமோ, அதன் மேல் கவனம் இருந்தால் சிறப்பாக இருக்கும்.</p><p>அதேநேரம் ஊடக மற்றும் பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் வரும்போது, கோவிலுக்கு வெளியே பேட்டி மற்றும் விடியோ எடுத்துக் கொள்ளலாம். கோவிலுக்குள் அவர்கள் தரிசனத்திற்கு செல்வதை விடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பாஜகவுடன் கூட்டணியா? அரசியலில் யாரும் நிரந்தர எதிரி இல்லை  - கனிமொழி சோமு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/alliance-with-bjp-no-one-is-a-permanent-enemy-in-politics-kanimozhi-somu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/alliance-with-bjp-no-one-is-a-permanent-enemy-in-politics-kanimozhi-somu#comments</comments><guid isPermaLink="false">5bd4b1ba-4934-402d-a2ba-dc894c73cba1</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:06:23 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:06:23.176Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,திமுக,PMModi,கனிமொழி,MKstalin,தொகுதி மறுவரையறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/12fhr1sa/kanimozi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி சோமு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/12fhr1sa/kanimozi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜகவுடன் நட்பு பாராட்டுகிறதா என்ற கேள்விக்கு அரசியலில் யாரும் நிரந்தர எதிரி கிடையாது என்று திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு பதில் அளித்துள்ளார்.</p><h2>அனைத்து கட்சி கூட்டம்</h2><p>தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசனை நடத்த முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீம உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் 19 எம்பிக்கள் பங்கேற்றன.</p><p>இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தேவையில்லை என்றும், 543 தொகுதிகள் என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என்றும் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனிடையே பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு கொடுக்க போவதாக தவெக குற்றம்சாட்டி இருக்கிறது. அதேபோல் திமுக தரப்பில் தொடக்கம் முதலே நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>அந்த நிலைப்பாட்டில் திமுக இப்போதும் தொடர்வதாக திமுக தரப்பில் கனிமொழி அறிவித்தார். இந்த நிலையில் சென்னையில் திமுக சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது. இதனை திமுகவின் முன்னாள் எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு தொடங்கி வைத்தார்.</p><h2>திமுகவின் கொள்கை </h2><p>அதனை தொடர்ந்து திமுக முன்னாள் எம்.பி.கனிமொழி என்.வி.என்.சோமு  செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டிற்கு எது முக்கியம் என்பதில் ஸ்டாலினின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டிற்கு அதிக தொகுதிகள் வர வேண்டும் என்பதிலேயே திமுகவின் கொள்கை என்றைக்கும் இருந்தது. நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சென்னையில் அழைத்து ஸ்டாலின் கூட்டம் நடத்தி இருக்கிறார். அப்படியொரு செயல்பாடுகள் நடந்திருக்கும் போது, தமிழ்நாட்டில் இப்படியொரு ஆட்சி அமைந்திருப்பது துரதிஷ்டவசமானது.</p><h2>பாஜகவுடன் நட்புறவு </h2><p>அந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்தாவது என்ன ஆலோசிக்க வேண்டும் என்பதை பேசி இருக்கலாம். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிக எம்பிக்களை கொண்டுள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=dmk">திமுகவிடம் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை கேட்டிருக்கலாம்</a>. அதில் எந்த தவறும் இல்லை. தவெகவின் விமர்சனத்திற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திமுக தொடக்கம் முதலே தமிழ்நாட்டிற்கான எண்ணிக்கை குறையக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது என்றார்.</p><p>தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் ஒரு நட்புறவு தொடர்வதாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,</p><p>அரசியலில் யாரும் நிரந்த எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. தமிழ்நாட்டுக்கு எது நல்லதோ அது எங்கிருந்து வந்தாலும் அதை ஆமோதிப்போம் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-worker-killed-in-tiger-attack</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-worker-killed-in-tiger-attack#comments</comments><guid isPermaLink="false">004bc0b5-9d4d-44e2-a5e4-93a76e34d316</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:03:30 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:03:30.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,Tiger,புலி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/wihwnvbg/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/wihwnvbg/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி லாரஸ்டன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 63. இவர் நேற்று, தண்ணீர் குழாயை சீரமைக்க தனியார் காபி தோட்டத்தை ஒட்டிய பகுதிக்கு சென்றார். ஆனால் இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. உடனடியாக அப்பகுதியினர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். </p><p>தகவல் அறிந்து வந்த வன ஊழியர்கள் மற்றும் அப்பகுதியினர் இன்று காலை பாலகிருஷ்ணனை தேடி வந்தனர். அப்போது அவர் உடலில் ரத்தக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. புலி தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: கோவில் பூட்டை உடைத்து தாலி, உண்டியல் பணம் திருட்டு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-temple-lock-broken-thali-and-hundi-cash-stolen</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-temple-lock-broken-thali-and-hundi-cash-stolen#comments</comments><guid isPermaLink="false">6e07e668-b5c5-4f19-a07c-d1a257763cfb</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:02:47 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:02:47.230Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/p6dans7v/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/p6dans7v/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி, </p><p>திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை கிராமத்தில் ரெயில் நிலையம் அருகே நாகாலம்மன் கோவில் உள்ளது. </p><h2>தாலி, பணம் திருட்டு!</h2><p>இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 3 கிராம் எடை கொண்ட தாலியை திருடினர். மேலும், கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.5 ஆயிரத்தையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.</p><h2>போலீசார் வலைவீச்சு</h2><p>நேற்று காலை கோவிலுக்கு வந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள்</a>, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி கோபிநாத், திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய புத்தக நேசிப்பாளர்கள் தினம் - பிரேமலதா வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-book-lovers-day-premalatha-greetings</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-book-lovers-day-premalatha-greetings#comments</comments><guid isPermaLink="false">39e125da-c153-49e5-acd6-3d1ae9d1cfc9</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:57:15 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:57:15.404Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,உலக புத்தக தின விழா,PremalathaVijayakanth</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/5n8ome74/premalatha.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/5n8ome74/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> தேசிய புத்தக நேசிப்பாளர்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9 அன்று உலகம் முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களால்  கொண்டாடப்படுகிறது. இந்த நாள் வாசிப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடவும், புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE">பிரேமலதா</a> விஜயகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தேசிய புத்தக நேசிப்பாளர்கள் தினம்</h2><p>புத்தகங்கள் வெறும் பக்கங்கள் அல்ல; அவை அறிவை வளர்க்கும் வழிகாட்டிகள், சிந்தனையை விரிவுபடுத்தும் நண்பர்கள், தலைமுறைகளை இணைக்கும் அறிவுப் பாலங்கள்.</p><p>வாசிப்பை நேசிப்போம்... புத்தகங்களைப் போற்றுவோம்... அறிவார்ந்த தலைமுறையை உருவாக்குவோம்! அனைத்து புத்தக நேசிப்பாளர்களுக்கும் தேசிய புத்தக நேசிப்பாளர்கள் தின நல்வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதாவின்போது திமுக வெளிநடப்பு செய்யப்போவதாக தகவல் - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-that-the-dmk-plans-to-stage-a-walkout-during-the-delimitation-bill-proceedings-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-that-the-dmk-plans-to-stage-a-walkout-during-the-delimitation-bill-proceedings-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">58c1f80a-89c2-4245-807a-1107bd10ff98</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:28:20 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:28:20.510Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,CTR Nirmal kumar,Delimitation of Constituencies,Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா,அமைச்சர் நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/pp14iebw/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/pp14iebw/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>அரசியல் காரணங்களுக்காகவே மத்திய அரசு தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தின் எம்.பி. தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அவசியம் இல்லாமல் தொகுதி மறுவரையை கொண்டுவருகிறார்கள். இது சிறுபான்மை மக்களை ஒதுக்கும் செயல். எனவே, தமிழகத்தின் உரிமைகளைக் காக்க அனைவரும் ஒருங்கிணைந்து இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும்.</p><p>திமுக ஏற்கனவே பாஜகவோடு கைகோர்த்து அவர்களுக்கு ஆதரவாக தொகுதி மறுவரைவு மசோதாவிற்கு ஆதரவாக வெளிநடப்பு வாக்குறுதி கொடுத்திருப்பதாக தகவல் வருகிறது. முன்னதாக ஏப்ரல் மாதம் அவர்கள் தீர்மானம் கொண்டுவந்தார்கள், அந்த தீர்மானத்தின்படி, திமுக மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால், மொத்தமாக எதிர்க்க வேண்டும்;</p><p>மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும்; ஆனால் மறுவரைவு மசோதாவின்போது திமுக வெளிநடப்பு செய்யப்போவதாக தகவல் வருகிறது. அது தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே செய்யும் மிகப்பெரிய துரோகமாக இருக்கும். ஆட்சியில் இருந்தபோதும் எடுத்த முடிவுக்கும் இல்லாதபோது எடுக்கும் முடிவுக்கும் திமுக தனது குடும்பத்தை காப்பாற்ற ஒட்டுமொத்த தமிழக நலனையும் பாஜகவிடம் அடகு வைக்க பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தரிசாக கிடக்கும் வயல்கள் புத்துயிர் பெற வருண பகவான் கருணை கிடைக்குமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-grace-of-the-rain-god-be-bestowed-to-revitalize-the-fallow-fields-farmers-await-hopefully</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-grace-of-the-rain-god-be-bestowed-to-revitalize-the-fallow-fields-farmers-await-hopefully#comments</comments><guid isPermaLink="false">5b8fe8b8-2b05-4c32-8192-64616bfe449c</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:02:38 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:02:38.562Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Rain,மேட்டூர் அணை,Mettur dam,விவசாயிகள்,குறுவை சாகுபடி,வருண பகவான்,paddy fields,வயல்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/9rnj9ret/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/9rnj9ret/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><h2>மேட்டூர் அணை திறக்கவில்லை</h2><p>காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் குறிப்பிட்ட ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட வில்லை. மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து திருப்திகரமாக இல்லாததால் மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின் படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை வழங்கவில்லை. </p><p>காவிரி டெல்டா மாவட்டங்களில் முழுமையாக குறுவை சாகுபடி செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு வசதி உள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொண்டு அறுவடை செய்து வருகின்றனர். இயல்பாக மேட்டூர் அணை திறக்கப்பட்டு கால்வாய்களில் தண்ணீர் வந்து குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் வயல்கள் தரிசாக கிடக்கின்றன.</p><h2>நீர்வரத்து குறைவு</h2><p>டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஒருபோக சாகுப டிக்காக தண்ணீர் வருமா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கடந்த சில நாட்களாக கர்நாடக அணை களில் இருந்து திறக்கப்பட்டதாக கூறப்படும் உபரி நீர் மேட் டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இருப்பினும் அணைக்கு வரும் நீர்வரத்தானது குறைந்துள்ளது.</p><h2>வருணபகவான் கருணை கிடைக்குமா?</h2><p>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானது என்ற செய்தி வந்ததில் இருந்து டெல்டா விவசாயிகள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கை கர்நாடகா அரசு இன்னமும் உபரி நீரை மட்டுமே தமிழகத்துக்கு தருகிறது. உரிமை நீரை தருவதற்கு மனமில்லை என்று பாசனபகுதி விவசாயிகள் கவலையோடு கூறுகிறார்கள். வானிலை ஆய்வாளர்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்து வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருண பகவான் கருணை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆடி திருவாதிரை விழா
நாளை நடக்கிறது</title><link>https://www.dailythanthi.com/devotional/aadi-thiruvadhirai-festival-to-be-held-tomorrow-at-brihadeeswarar-temple-in-gangaikonda-cholapuram</link><comments>https://www.dailythanthi.com/devotional/aadi-thiruvadhirai-festival-to-be-held-tomorrow-at-brihadeeswarar-temple-in-gangaikonda-cholapuram#comments</comments><guid isPermaLink="false">52ffdacd-441b-48d1-afe4-00662eb3d4b7</guid><pubDate>Sun, 09 Aug 2026 05:53:42 +0000</pubDate><atom:updated>2026-08-09T05:53:42.773Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadi festival,ஆடி,கங்கைகொண்ட சோழபுரம்,பிரகதீஸ்வரர் கோவில்,திருவாதிரை திருவிழா</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/8ai5b937/prakathiswarartemple.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/8ai5b937/prakathiswarartemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (Devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அரியலூர்,</p><p>கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் ஆடி திருவாதிரை விழா நாளை நடக்கிறது.</p><h2>ஆடி திருவாதிரை</h2><p>அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் மாமன்னர் ராஜேந்திரசோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை வாயிலாக நடத்திட அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த ஆண்டிற்கான ஆடி திருவாதிரை அரசு விழா நாளை (திங்கட்கிழமை) கங்கைகொண்டசோழபுரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D">பிரகதீஸ்வரர்</a> கோவிலில் நடைபெற உள்ளது.</p><p>இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். காலை 9.30 மணிக்கு மங்கல இசை நிகழ்ச்சியும். காலை 10 மணி முதல் 11 மணி வரை தொடக்க விழா நிகழ்ச்சியும், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மேலும், திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவ-மாணவிகள் மங்கல இசை மற்றும் வீணை இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.</p><h2>கலை நிகழ்ச்சிகள்</h2><p>அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும், கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை, தென்னக பண்பாட்டு மையம் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சிகளும், மக்களிசை கலைஞர்களின் நையாண்டி மேளம், கரகாட்டம், கொம்பிசை, மரக்கால் ஆட்டம், பறையிசை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.</p><p>மேலும் ஆடித்திருவாதிரை விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வசதிக்காக குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குமரியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 107 பேர் மீது வழக்குப்பதிவு.. எதற்கு தெரியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-kumari-107-cases-have-been-registered-in-the-last-week-alone-do-you-know-why</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/in-kumari-107-cases-have-been-registered-in-the-last-week-alone-do-you-know-why#comments</comments><guid isPermaLink="false">73ea78c3-b46e-43df-b26f-09e28458f4f7</guid><pubDate>Sun, 09 Aug 2026 05:46:14 +0000</pubDate><atom:updated>2026-08-09T05:46:14.323Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Kanniyakumari,Case,Superintendent of Police,வழக்குப்பதிவு,போலீஸ் சூப்பிரண்டு,குமரி மாவட்டம்,போலீசார்,Week</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uuhhlf9e/115.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குமரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uuhhlf9e/115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில்,</p><p>குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். விபத்து இல்லா குமரியை உருவாக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக போலீசாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். </p><h2>வழக்குப்பதிவு</h2><p>அதன்படி நாகர்கோவில் மாநகரில் நேற்று மது போதையில் வாகனம் ஒட்டியதாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன்மூலம் கடந்த ஒரு வாரத்தில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>இதேபோல விதிகளை மீறி கனிம வளங்களை ஏற்றி சென்ற 34 டாரஸ் லாரிகள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல் </a>செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனையில் அவலம்: துடைப்பத்துடன் நோயாளிக்கு சிகிச்சை அளித்த பெண் தூய்மை பணியாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-cleaner-treating-patient-with-a-mop</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-cleaner-treating-patient-with-a-mop#comments</comments><guid isPermaLink="false">aadc9d76-1793-4ce7-9473-8499ed704592</guid><pubDate>Sun, 09 Aug 2026 05:46:05 +0000</pubDate><atom:updated>2026-08-09T05:46:05.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,Government Hospital,அரசு மருத்துவமனை,தூய்மை பணியாளர்,டாக்டர்,வந்தவாசி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/8p83713u/docotor33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
அரசு மருத்துவமனையில் அவலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/8p83713u/docotor33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p><p>திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பெண் தூய்மை பணியாளர் கையில் துடைப்பத்துடன் சிகிச்சை அளித்த  வீடியோ வைரலாகி வருகிறது.</p><h2>பெண் தூய்மை பணியாளர் சிகிச்சை</h2><p>திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள அரசு மருத்துவமனையானது பல்வேறு பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றிய பெண் தூய்மை பணியாளர் சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. </p><p>கையில் துடைப்பத்துடன் மருத்துவமனையை சுத்தம் செய்து கொண்டிருந்த அந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">பெண் பணியாளர்</a>, நோயாளிக்கு கையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்ட சிரிஞ்சை சரி செய்வது போன்ற காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. நோயாளிக்கு உதவியாக இருந்த அவரது உறவினரே இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைரலாக்கியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>நோயாளி பாதிக்கப்படும் நிலை</h2><p>கையில் துைடப்பத்துடன் சுத்தம் செய்து வந்த தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்துள்ள நிலையில் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் தொற்று பரவல் அதிகரித்து நோயாளி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைமை டாக்ட ருக்கு தெரியாமல் இது எப்படி நடந்தது என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகமலை, வருசநாடு வன கிராம மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டும்: சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-evict-the-people-of-the-megamalai-and-varusanadu-forest-villages-must-be-abandoned-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-decision-to-evict-the-people-of-the-megamalai-and-varusanadu-forest-villages-must-be-abandoned-seeman#comments</comments><guid isPermaLink="false">ba24bf73-9b47-4654-9344-550e86a05441</guid><pubDate>Sun, 09 Aug 2026 05:31:57 +0000</pubDate><atom:updated>2026-08-09T05:31:57.787Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நாதக,சீமான்,NTK,Seeman,மேகமலை,Megamalai,வருசநாடு,Varusanadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jnnsrjqr/seeman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jnnsrjqr/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>வேதனை அளிக்கிறது</h2><p>தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்துக்குட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் பல தலைமுறையாக வசித்து வரும் 5000க்கும் அதிகமான மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முயல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ப் பழங்குடி மக்கள் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம பகுதியில் உள்ள நிலங்களில் இலவம், முந்திரி, மிளகு, ஏலம் உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர். வன உயிரினங்கள் பெருமளவு அழிந்துவிட்ட தற்காலச் சூழலில் இயற்கை சமநிலைப் பேணுவதில், மனிதர்களால் வளர்க்கப்படும் கால்நடைகள் பெருமளவு பங்கு வகிக்கிறது என்பதே எதார்த்த உண்மையாகும். </p><p>மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் காலங்காலமாக மலைகளுக்கும், காடுகளுக்கும் அவற்றில் வாழும் உயிரினங்களுக்கும் பாதுகாவலனாய் வாழ்ந்து வருகின்றனர். பன்மடங்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ள நவீன உலகத்தின் அத்தனை வசதி வாய்ப்புகளையும் புறக்கணித்துவிட்டு, இன்றளவும் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்ற அப்பெருங்குடி மக்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் முழுக்க முழுக்கக் காடுகளையும், மலைகளையும் சார்ந்தே இருப்பினும், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் அவர்களின் செயல்பாடுகள் ஒருபோதும் இயற்கையை அழிப்பதாகவோ, சிதைப்பதாகவோ இருந்ததில்லை. அந்த அளவுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்வியலை மலைவாழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் தீர்ப்பானது இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர எவ்வகையிலும் பாதுகாப்பதாய் அமையாது.</p><h2>இயற்கையை சீரழிக்கவே வழிவகுக்கும்</h2><p>உண்மையில் அரசு மற்றும் தனியார் பெருமுதலாளிகள் வணிக நோக்குடன் அமைக்கும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழிற்சாலைகள்</a>, தொலைத்தொடர்பு கம்பிவடம் பதித்தல், மின் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவற்றால் மட்டுமே மலைகளும், காடுகளும், நீர்நிலைகளும் அவற்றை நம்பி வாழும் வன உயிரினங்களும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. அவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களையும், மலைவாழ் மக்களையும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்துவது, தனியார் முதலாளிகள் அந்நிலங்களை ஆக்கிரமித்து இயற்கையை மென்மேலும் சீரழிக்கவே வழிவகுக்கும். </p><p>அதுமட்டுமின்றி, மலைக்காடுகளையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற உண்மையான அக்கறை இருக்குமாயின், ஒவ்வொரு நாளும் காடுகளில் முறைகேடாக மரங்கள் வெட்டப்பட்டு டன் கணக்கில் கடத்தப்படுவதையும், சொகுசு விடுதிகள், அடுக்குமாடி கட்டிடங்கள், தண்டவாளங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கருவிகள், அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவை அமைப்பதற்காக, வன விலங்குகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும் சுருக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும்.</p><h2>முடிவைக் கைவிட வேண்டும்</h2><p>ஆகவே, தமிழ்நாடு அரசு கடந்த 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்குவதோடு, மலைக் கிராமங்களை விட்டு மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-enjoy-an-enthusiastic-dip-in-the-courtallam-waterfalls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-enjoy-an-enthusiastic-dip-in-the-courtallam-waterfalls#comments</comments><guid isPermaLink="false">ff121d6f-c304-42ae-a67d-a03cc4d769b6</guid><pubDate>Sun, 09 Aug 2026 05:17:05 +0000</pubDate><atom:updated>2026-08-09T05:17:05.030Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குற்றால அருவி,Courtallam waterfalls</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4zow19yk/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4zow19yk/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,  </p><p>சாரல் மழை காரணமாக குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.</p><h2>குற்றால அருவி</h2><p>தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகள், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.</p><p>முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.</p><p>இன்று விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி பழைய குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.</p><h2>உற்சாக குளியல்</h2><p>குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் 'குளுகுளு' சூழலை அனுபவித்தவாறு சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளியல் போட்டனர். அருவிகளில் குளித்த சுற்றுலா பயணிகள் அருவிக்கரை பகுதியில் உள்ள கடைகளில் தேநீர், தின்பண்டங்களை வாங்கி ருசித்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>விருதுநகர் மேற்கு மாவட்டத்தை வலிமையான மாவட்டமாக உருவாக்குவோம்: அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-build-virudhunagar-west-district-into-a-strong-district-minister-keerthana</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-build-virudhunagar-west-district-into-a-strong-district-minister-keerthana#comments</comments><guid isPermaLink="false">af93010a-a68e-496f-ab44-e5f28c563c46</guid><pubDate>Sun, 09 Aug 2026 05:10:57 +0000</pubDate><atom:updated>2026-08-09T05:10:57.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,மாவட்ட செயலாளர்,கீர்த்தனா,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana,Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/5l9vviaj/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/5l9vviaj/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க. அமைப்பு ரீதியாக 128 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது நிர்வாக வசதிக்காக மேலும் 27 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் நியமித்துள்ளார். அதன்படி, அமைச்சர் கீர்த்தனாவுக்கு விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மனமார்ந்த வாழ்த்துகள் </h2><p>தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் எனது அன்பு நிறைந்த மனமார்ந்த வாழ்த்துகள் </p><p>என் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் பொறுப்பை வழங்கி, என்னை இன்னும் அதிகமாக உழைக்கத் தூண்டும் நம் கழகத் தலைவர், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும் கழகத்தின் வளர்ச்சிக்காக ஊக்கப்படுத்தி வழிகாட்டி வரும் நம் பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அன்பிற்கினிய ஆனந்த்துக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>மனமார்ந்த நன்றி</h2><p>சிவகாசி தொகுதியைச் சேர்ந்த என் அன்பு கழகத் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள்  அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஏற்றுக்கொண்டுள்ள இந்தப் பொறுப்பில் உங்கள் அன்பும், ஆதரவும், ஒற்றுமையும் எனக்கு என்றும் மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்.</p><p>அண்ணன் வழங்கிய இந்த வாய்ப்பு எனக்கு ஒரு பொறுப்பு மட்டுமல்ல; இன்னும் அதிகமாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற உத்வேகம். அந்த நம்பிக்கையை காப்பாற்றி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விருதுநகர் </a>மேற்கு மாவட்டத்தை கழகத்தின் வலிமையான மாவட்டங்களில் ஒன்றாக உருவாக்குவோம்.</p><h2>இது தொடக்கம் மட்டுமே…</h2><p>நமது தலைவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையோடும், கழகத்தின் கொள்கை மற்றும் இலக்குகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் உறுதியோடும், ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் கழகத்தின் வலிமையை கொண்டு சேர்ப்போம்.</p><p>இது தொடக்கம் மட்டுமே…இனி இன்னும் பெரிய இலக்குகளை நோக்கி! உழைப்போம்...வெற்றி நிச்சயம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நிர்வாக வசதிக்காக த.வெ.க.வில் மேலும் 27 மாவட்டங்கள் உருவாக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/27-additional-districts-created-in-tvk-for-administrative-convenience</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/27-additional-districts-created-in-tvk-for-administrative-convenience#comments</comments><guid isPermaLink="false">5edcc7eb-f744-49ab-a355-72fa9bff7611</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:55:21 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:55:21.402Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழக வெற்றிக் கழகம்,district,Tamilaga Vetri Kazhagam,மாவட்டங்கள்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/nbhk2fhz/enne.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/nbhk2fhz/enne.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>த.வெ.க.வில் மேலும் 27 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 2 அமைச்சர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்துள்ளது. </p><h2>முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு</h2><p>த.வெ.க. அமைப்பு ரீதியாக 128 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது நிர்வாக வசதிக்காக மேலும் 27 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை த.வெ.க. தலைவரும், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சருமான விஜய்</a> நியமித்துள்ளார். </p><p>அதன் விவரம் வருமாறு:-</p><h2>மாவட்ட செயலாளர்கள் பட்டியல்</h2><p>1. விருதுநகர் மேற்கு - அமைச்சர் கீர்த்தனா, </p><p>2. மதுரை வடக்கு- கருப்பையா எம்.எல்.ஏ, </p><p>3. மதுரை மத்தியம்- வி.எம்.எஸ். முஸ்தபா எம்.எல்.ஏ., </p><p>4. மதுரை கிழக்கு- கார்த்திகேயன் எம்.எல்.ஏ., </p><p>5. புதுக்கோட்டை மேற்கு- முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், </p><p>6. நாமக்கல் தென்கிழக்கு- சந்திரசேகர் எம்.எல்.ஏ.</p><p>7. தேனி வடகிழக்கு - சபரி ஐயங்கரன் எம்.எல்.ஏ.</p><p>8. தேனி தென்மேற்கு- ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ., </p><p>9. தூத்துக்குடி மத்தியம் - அமைச்சர் ஸ்ரீநாத், </p><p>10. திருவள்ளூர் வடமேற்கு - டாக்டர் அருண்குமார் எம்.எல்.ஏ., </p><p>11.திருப்பூர் தென்கிழக்கு - முன்னாள் எம்.எல்.ஏ. சத்யபாமா, </p><p>12. திருப்பத்தூர் தெற்கு- திருப்பதி எம்.எல்.ஏ., </p><p>13. நெல்லை தெற்கு - டாக்டர் சதீஷ் கிறிஸ் டோபர் எம்.எல்.ஏ., </p><p>14. நெல்லை கிழக்கு - முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, </p><p>15. திருச்சி புறநகர் தெற்கு- நவல்பட்டு விஜி எம்.எல்.ஏ.,</p><p>16. திண்டுக்கல் தென்மேற்கு - அய்யனார் எம்.எல்.ஏ., </p><p>17. தர்மபுரி புறநகர் மேற்கு கஜேந்திரன் எம்.எல்.ஏ., </p><p>18. சேலம் மத்திய மேற்கு லட்சுமணன் எம்.எல்.ஏ., </p><p>19. சேலம் தெற்கு பழனிவேல் எம்.எல்.ஏ., </p><p>20. சென்னை தெற்கு - அருள்பிரகாசம் எம்.எல்.ஏ., </p><p>21. செங்கல்பட்டு வடக்கு - காமாட்சி எம்.எல்.ஏ., </p><p>22. செங்கல்பட்டு கிழக்கு-தையூர் எஸ்.குமரவேல், </p><p>23. கோவை கிழக்கு -ஸ்ரீ கிரி பிரசாத் எம்.எல்.ஏ., </p><p>24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு -இளையராஜா, </p><p>25. கரூர் தெற்கு - சத்யா எம்.எல்.ஏ., </p><p>26. ஈரோடு புறநகர் மேற்கு - முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயக்குமார், </p><p>27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்- சண்முகன் எம்.எல்.ஏ.</p><p>இவ்வாறு த.வெ.க. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? - அன்புமணி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-fair-to-deceive-farmers-who-applied-for-electricity-connections-by-failing-to-provide-them-anbumani-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-fair-to-deceive-farmers-who-applied-for-electricity-connections-by-failing-to-provide-them-anbumani-asks#comments</comments><guid isPermaLink="false">772e00d8-ed04-4dc6-9ff8-d1eed49c63e6</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:53:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:53:08.962Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4laxytzk/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4laxytzk/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 8 மாதமாக இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இலவச மின்சாரம்</h2><p>தமிழ்நாட்டில் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்வதற்காக இலவச மின்சார இணைப்புக் கோரி தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்த 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 8 மாதங்களாக மின்இணைப்பு வழங்காமல் மின்வாரியம் தாமதப்படுத்தி வருகிறது. வறட்சியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் உழவர்களிடம் ரூ.1250 கோடிக்கும் கூடுதலாக வசூலித்துக் கொண்டு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.</p><p>இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்றைத் தவிர தமிழ்நாட்டிலேயே தோன்றி தமிழ்நாட்டுக்குள் பாயும் ஆறுகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை உள்ளிட்ட ஆறுகள் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு பாசன ஆதாரமாக திகழ்கின்றன என்றாலும், இவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கர்நாடகம் கேரளம் போன்ற அண்டை மாநிலங்களில் இருப்பதால், அந்த மாநிலங்கள் மனம் வைத்தால் தான் இவற்றில் தண்ணீர் வரும். அதுமட்டுமின்றி, கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பெரிய அளவிலான பாசனத் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாததால், மாநிலத்தின் ஒட்டுமொத்த பாசனப் பரப்பில் 55% நிலங்கள் மட்டுமே ஆறுகள் மற்றும் கால்வாய் பாசன ஆதாரங்களை நம்பியுள்ளன. மீதமுள்ள 45% நிலங்களில் நிலத்தடி நீரை நம்பித் தான் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.</p><p>நிலத்தடி நீரை நம்பியுள்ள பகுதிகளில் பம்ப் செட்டுகளை இயக்குவதற்காக இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான மின் இணைப்பை பெறுவது தான் உலகில் மிகவும் கடினமான செயலாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே 23.56 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 லட்சம் பேர் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இலவச மின் இணைப்பை முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்காக தட்கல் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் அவ்வப்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக இணைப்பு வழங்கப்படும்.</p><h2>உழவர்களுக்கு பெரும் இழப்பு</h2><p>வேளாண் பம்ப் செட்டுகளுக்கான இலவச மின் இணைப்பு பெறுவற்காக தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திமுக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 31-ஆம் தேதி வரை 47,554 விவசாயிகள் விண்ணப்பித்தனர். அதுமட்டுமின்றி, இலவச மின்சார இணைப்புக்காக   5 குதிரைத்திறன் வரை ரூ.2.50 லட்சம், 5 முதல் 7.5 குதிரைத்திறன் வரை ரூ.2.75 லட்சம், 7.5 முதல் 10 குதிரைத் திறன் வரை ரூ.3 லட்சம், 10 முதல் 15 குதிரைத்திறன் வரை ரூ.4 லட்சம் வீதம் உழவர்கள் கட்டணம் செலுத்தினர்.  விண்ணப்பித்தவர்களில் முதல்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு 15 நாள்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. ஆனால், 8 மாதங்களாகியும் ஒரே ஒரு இணைப்பு கூட வழங்கப்படவில்லை.</p><p>தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் நிலத்தடி நீரைக்கொண்டு குறுவை சாகுபடி செய்திருப்பார்கள். ஆனால், மின்சார இணைப்பு வழங்கப்படாததால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறார்கள். தட்கல் மின் இணைப்புக்காக  47,554 உழவர்களும் சேர்ந்து சுமார் ரூ.1250 கோடி முன்பணமாக செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு முன்பாக கடந்த 2023-ஆம் ஆண்டில் இதே தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 12,566 உழவர்கள் ரூ.250 கோடிக்கும் கூடுதலாக முன்பணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பித்த விவசாயிகள் எவரும் கோடீஸ்வரர்கள் இல்லை. அவர்களில் பெரும்பான்மையினர் வட்டிக்கு கடன் வாங்கி தான் முன்பணத்தை செலுத்தியுள்ளனர். அதற்காக வாங்கிய கடனுக்கு வட்டியும் செலுத்த முடியாமல், குறுவை சாகுபடி செய்ய முடியாததால் வருவாயும் ஈட்ட முடியாமல் பெரும் துயரத்தில் விவசாயிகள் ஆழ்ந்திருக்கின்றனர். அவர்களின் கடன் சுமை அதிகரித்திருக்கிறது.</p><p>வேளாண் இலவச மின்சாரத்திற்கான இணைப்புக்காக 60,120 உழவர்களிடமிருந்து ரூ.1500 கோடியை வசூலித்திருக்கும் மின்சார வாரியம் மின் இணைப்பை வழங்க மறுப்பது பெரும் அநீதி ஆகும். தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாள்களிலிருந்து 90 நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட  வேண்டும் என்பது விதியாகும். ரூ.1000 மின் கட்டணம் செலுத்தத் தவறும் விவசாயிகளின் மின் இணைப்பை  உடனடியாக துண்டிக்கும் மின்சார வாரியம், அவர்களிடமிருந்து ரூ.1500 கோடியை வசூலித்து வைத்துக் கொண்டு 12,566 பேருக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாகவும், மீதமுள்ளவர்களுக்கு 8 மாதங்களாகவும் மின்சார இணைப்பு வழங்க மறுப்பது உழவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். இதை நியாயப்படுத்த முடியாது.</p><h2>மன்னிக்க மாட்டார்கள்</h2><p>திமுக ஆட்சியில் தான் இலவச மின் இணைப்புக்காக உழவர்களிடமிருந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விண்ணப்பங்கள் </a>பெறப்பட்டன என்றாலும், அடுத்த சில வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தான் மின் இணைப்புகள் வழங்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு தவெக அரசு பதவியேற்ற நிலையில், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திமுக அரசுக்கு போட்டியாக தவெக அரசும் மின் இணைப்பு வழங்காமல் துரோகம் செய்திருக்கிறது, இதை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.</p><p>விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாதது, பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது உள்ளிட்ட காரணங்களால் உழவர்கள் ஏற்கனவே பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களிடம் ரூ.1500 கோடி வசூலித்துக் கொண்டு மின் இணைப்பு வழங்காமல் அவர்களுக்கு கூடுதல் துயரத்தை அரசு வழங்கக் கூடாது. தட்கல் திட்டப்படி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-in-the-catchment-area-water-inflow-to-bhavanisagar-dam-has-increased</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-in-the-catchment-area-water-inflow-to-bhavanisagar-dam-has-increased#comments</comments><guid isPermaLink="false">add24744-6236-4044-9f6e-7846533365f6</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:49:49 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:49:49.562Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நீர்வரத்து,Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,Water inflow</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4i8m8z09/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/4i8m8z09/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. </p><h2>பவானிசாகர் அணை</h2><p>தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். நீலகிரி மலைப்பகுதியே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. கடந்த சில மாதங்களாக நீலகிரியில் மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து 54 அடிக்கு வந்தது. வழக்கமாக ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுமா? என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 3,405 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. இது நேற்று மதியம் 2 மணியளவில் வினாடிக்கு 5,327 கன அடியாக அதிகரித்துள்ளது.</p><p>கடந்த 1-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 54.98 அடியாக இருந்தது. நேற்று மதியம் 2 மணியளவில் 58.18 அடியாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 8 நாட்களில் 3 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு - மக்கள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-shortage-continues-in-chennai-people-face-hardship</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-shortage-continues-in-chennai-people-face-hardship#comments</comments><guid isPermaLink="false">4affac4c-c7a6-42c2-8fb2-dafa4f7729fc</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:47:56 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:47:56.042Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Aavin Milk,ஆவின் பால்,Aavin Company,ஆவின் பால் பாக்கெட்,Aavin Milk Packets</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/lzja66vi/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/lzja66vi/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><h2>ஆவின் பால்</h2><p>தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகத்தில் சிக்கல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் கடந்த ஒரு மாதமாக ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடைகளுக்கு ஆவின் பால் விநியோகம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் முன்பு ஒரு கடைக்கு 32 பெட்டிகள் ஆவின் பால் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 20 பெட்டிகள் வழங்கப்படுகிறது எனவும் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பச்சை நிற பால்</h2><p>காலை நேரத்திலேயே பல கடைகளில் ஆவின் பால் கிடைப்பதில்லை எனவும் அண்மைக் காலமாக ஆவின் பாலின் தரம் குறைந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இரண்டு மாதமாக பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் ஆவின் பாலை நம்பியிருக்கும் குடும்பங்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் தேநீர்க் கடை உரிமையாளர்கள் தனியார் நிறுவனங்களின் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><h2>மக்கள் கோரிக்கை</h2><p>தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால், விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக ஆவின் பால் கொள்முதல் குறைந்து தட்டுப்பாடு&nbsp; ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவின் பால் கொள்முதல் விலையை அதிகரித்து, ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசை கண்டித்து 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-to-protest-on-august-14th-against-thaweka-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-to-protest-on-august-14th-against-thaweka-government#comments</comments><guid isPermaLink="false">a5ef81be-2d73-44fe-906e-04a2452536a1</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:38:19 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:38:19.545Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,அதிமுக,protest,ஆர்ப்பாட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/8bqktrpj/palanisamy33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/8bqktrpj/palanisamy33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p> தவெக அரசுக்கு எதிராக வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.</p><h2>மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு மேகதாது பிரச்சினையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>மேகதாதுவில் அணை</h2><p>2026, தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் 5 எக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்: 5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த த.வெக. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ. 75,000/- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்: ரூ. 75,000/-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது. தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.</p><p>மேற்கண்டவாறு, பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும்; மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.</p><p>த.வெக. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும் அப்படி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்நிலையில், த.வெக. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை.</p><p>எனவே விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; <a href="https://www.dailythanthi.com/search?q=admk">மேகதாது பிரச்சனை</a>யில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க.&nbsp; பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்</p><h2>தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு</h2><p>தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.</p><p>சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாநிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள்: கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னான் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>விவசாயிகள் நயனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயிகள், விவசாயத் தொழிவாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவு திட்டத்தில் கடலை மிட்டாய் வழங்க வேண்டும்: கோவில்பட்டியில் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/peanut-candy-should-be-provided-under-the-breakfast-scheme-manufacturers-association-in-kovilpatti-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/peanut-candy-should-be-provided-under-the-breakfast-scheme-manufacturers-association-in-kovilpatti-urges#comments</comments><guid isPermaLink="false">994813f7-a007-4a87-8f02-1d4e7e545026</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:21:07 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:21:07.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kovilpatti,கோவில்பட்டி,breakfast scheme,காலை உணவு திட்டம்,கடலை மிட்டாய்,peanut candy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o51clhad/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/o51clhad/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவில்பட்டி,</p><h2>கோவில்பட்டி கடலை மிட்டாய்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் கரிசல் மண் பூமி என்பதால் இப்பகுதியில் விளைவிக்கப்படும் நிலக்கடலைக்கு இயற்கையாகவே இனிப்பு சுவை உண்டு.</p><p>இந்த நிலக்கடலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்கள் உலகளவில் பிரசித்தி பெற்றது. சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.</p><h2>வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி</h2><p>இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு, லண்டன், அமெரிக்கா, பஹ்ரைன், கத்தார், சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் குடிசை தொழிலாக சுமார் 120 இடங்களில் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் காலை உணவு திட்டத்தில் இடம்பெற வேண்டும். வந்தேபாரத் ரெயில் உணவு பட்டியலிலும் இடம்பெற வேண்டும் என்பது உற்பத்தியாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.</p><h2>காலை உணவு திட்டம்</h2><p>இதுகுறித்து கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க செயலாளர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்கிய புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் மற்றும் உணவு பொருட்களை வந்தே பாரத் ரெயில்களின் உணவு பட்டியலில் இணைக்க வேண்டும்.</p><p>அப்போது தான் இந்த பொருட்களின் பெருமை, வரலாறு, அதன் தரம் குறித்து பொதுமக்களுக்கு தெரியும். மேலும் பள்ளிக்கூடங்களில் தமிழக அரசின் சத்துணவு திட்டம், காலை உணவு திட்டம், அரசு நடத்தும் சமுதாய வளைகாப்பு விழாக்களில் சுவை மற்றும் சத்துள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-day-changes-to-the-erodesengottai-rail-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-day-changes-to-the-erodesengottai-rail-service#comments</comments><guid isPermaLink="false">2a27c2f3-ef5f-4425-bff6-54aab5a7f2ed</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:16:27 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:16:27.977Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Sengottai,செங்கோட்டை,ரெயில் சேவை,Erode,ஈரோடு,Rail service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uz2rbcfi/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/uz2rbcfi/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,  </p><p>ஈரோடு- கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பாலங்கள் பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), வருகிற 13-ந்தேதி ஆகிய நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி- ஈரோடு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்-56809) கரூர் சந்திப்பு வரை மட்டுமே செல்லும். அதாவது கரூரில் இருந்து ஈரோடு வரை பகுதி ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு - செங் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16845) கரூர் வரை மட்டுமே இயங்கும். அதாவது ஈரோட்டில் இருந்து கரூர் வரை பகுதி ரத்தாகிறது. இதேபோல் பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16844) பாசூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி கள் நிறைவுபெற்ற பின்னர் பாசூரில் இருந்து திருச்சி வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.</p><p>மேலும் கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16322) கோவை- திண்டுக்கல் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூர், பொள்ளாச்சி, பழனி வழியாக செல்லும். கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகளூர், கரூர், பாளையம், எரியோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்கும். மேலும் போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களில் மாற்று நிறுத்தம் ஏற்படுத்தப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்புக்காக கேமராக்கள் பொருத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cameras-installed-for-tiger-census-in-mettupalayam-and-sirumugai-forests</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cameras-installed-for-tiger-census-in-mettupalayam-and-sirumugai-forests#comments</comments><guid isPermaLink="false">a1b28960-5c1e-4849-8924-e1af3867d9e0</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:45:56 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:45:56.817Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வனப்பகுதி,மேட்டுப்பாளையம்,Mettupalayam,புலிகள் கணக்கெடுப்பு,tiger census,Forests,கேமராக்கள்,Cameras</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/16ruhx63/23.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/16ruhx63/23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டுப்பாளையம்,</p><p>மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக 194 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.</p><h2>புலிகள் கணக்கெடுப்பு</h2><p>கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், செந்நாய், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளன.</p><p>இந்த நிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு- 2026 (பேஸ்-3) பணிகளுக்காக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின் பேரில் 194 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது.</p><h2>சிறுமுகை</h2><p>மேட்டுப்பாளையம் வனச்சரகம் 9,300 ஹெக்டேர் பரப்பளவில் மேட்டுப்பாளையம், சுண்டப்பட்டி ஆகிய 2 பிரிவுகளில் 6 சுற்றுகளை உள்ளடக்கியது. மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனப்பணியாளர்கள் 6 குழுக்களாக பிரிந்து 94-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>கேமராக்கள் பொருத்தும் பணி</h2><p>சிறுமுகை வனச்சரகம் 11,000 ஹெக்டேர் பரப்பளவில் பெத்திக்குட்டை, ஒடந்துறை ஆகிய 2 பிரிவுகளில் 6 சுற்றுகளை உள்ளடக்கியது. வனச்சரக அலுவலர் தினேஷ் தலைமையில் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட வனப்பணியாளர்கள் 6 குழுக்களாக பிரிந்து 50 இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு அதில் பதிவான காட்சிகளை வைத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">புலிகள்</a> கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆடி மாதம் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி; கணவன் போட்ட பிளான்...சபலத்தால் வந்த வினை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-drug-sales-representative-was-injured-when-his-wife-went-to-his-mothers-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-drug-sales-representative-was-injured-when-his-wife-went-to-his-mothers-house#comments</comments><guid isPermaLink="false">be39ca23-5018-49c0-baf2-568cf11f097c</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:44:49 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:44:49.732Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,பெண்,ஆடி மாதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/vwkuoaya/women33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
ஆடி மாதம் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/vwkuoaya/women33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஆடி மாதத்தில் தாய் வீட்டுக்கு மனைவி சென்றுவிட்டதால் மற்றொரு பெண்ணுக்கு மருந்து விற்பனை பிரதிநிதி காதல் வலை வீசினார். இது அவருக்கு வினையானது. இதை வைத்து அவரை அடித்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>சபலத்தால் வந்த வினை</h2><p>சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற இந்த பரபரப்பு சம்பவம் வருமாறு:-</p><p>சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் சுதர்சன் (வயது 32). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற் றது. ஆடி மாதத்தை முன்னிட்டு அவரது மனைவி கடந்த 17-ந்தேதி அன்று அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். சுதர்சன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.</p><p>அவரது வீட்டின் கீழ் தளத்தில் நமீதா என்ற 22 வயது பெண் வசித்து வருகிறார். மனைவி இல்லாததால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20">சுதர்சன் மனதில் சபல எண்ணம் எழுந்துள்ளது. </a>நமீதாவிடம் பழகி அவரது செல்போன் எண்ணை வாங்கி அவருக்கு காதல் வலை விரித்துள்ளார். சுதர்சன் செல்போ னில் உருக, உருக பேசியதை அந்த பெண் பதிவு செய்துகொண்டு அவரது தோழி மோனி காவிடம் கூறி இருக்கிறார். அப்போது இந்த உரையாடலை வைத்து சுதர்சனை மிரட்டி பணம் பறிக்க 2 பேரும் திட்டம் போட்டனர். இந்த திட்டத்தில் மோனிகாவின் கணவர் பாலகிருஷ் ணன், அவருடைய நண்பர் கணேஷ், மற்றொரு தோழி சிவரஞ்சனி ஆகியோர் கைகோர்த்துள்ளனர்.</p><h2>வீட்டு சிறை</h2><p>நமீதாவும் சுதர்சனை காதலிப்பதாக ஏமாற்றி கடந்த 27-ந்தேதி அவரது தோழி மோனிகாவின் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். ஆசையாக சென்ற சுதர்சனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நமீதா மற்றும் 4 பேரும் சேர்ந்து சுதர்சனை வீட்டு சிறையில் வைத்து. 'செல்போனில் அவர் பேசிய காதல் வசனங்களை காண்பித்து. இதை உனது மனைவியிடம் அனுப்பினால் அவர் பிரிந்து சென்றுவிடுவார். போலீசில் புகார் செய்தால் சிறையில் அடைத்து விடுவார்கள் என்று மிரட்டி ரூ.5 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.</p><p>சுதர்சன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி இருக்கிறார். இதனால் அவரை அடித்து சித்ரவதை செய்து, பணத்தை தயார் செய்து வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவரை மீண்டும் 29-ந்தேதி வரவழைத்து அடித்து உதைத்துள்ளனர். அப்போது நமீதாவின் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.</p><h2>மனைவி அளித்த நம்பிக்கை</h2><p>இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சுதர்சன் தனது மனைவியிடம் நடந்த விவரத்தை செல்போனில் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அப்போது அவரது மனைவி நீங்கள் ஒன்றும் கவ லைப்படாதீர்கள் என்று நம்பிக்கை அளித்தார். மேலும் அவர் தனது கணவர் சுதர்சனை அழைத்துக் கொண்டு சூளைமேடு போலீஸ் நிலையத்தில் கடந்த 4-ந்தேதி அன்று புகார் அளித்தார்.</p><p>இந்த புகார் அடிப்படையில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். சுதர்சனை அடித்து சித்ரவதை செய்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நமீதா உள்பட 5 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-person-arrested-in-meenakshi-amman-temple-land-scam-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-person-arrested-in-meenakshi-amman-temple-land-scam-case#comments</comments><guid isPermaLink="false">9022dbd6-bf39-49f9-9034-86b12e42be66</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:39:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:39:58.403Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,மதுரை,arrest,Madurai Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,Land scam case,நில மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/21f6tdl9/112.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/21f6tdl9/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், அழகர்கோவிலுக்கு சேவை செய்வ தற்காக உருவாக்கப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். </p><h2>கைது</h2><p>விசாரணையில் புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் 2016-ம் ஆண்டு மதுரை வடக்கு முன்னாள் தாசில்தார் அன்பழகன், அந்த சொத்தின் மீதான கோவில் பெயரை நீக்கி ராமாயி ஆயியார் உள்ளிட்ட 9 பேரின் பெயரில் சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். </p><p>இதற்கிடையே அன்பழகன் பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டராக நில எடுப்பு பிரிவில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றினார். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கடந்த 4-ந் தேதி கைது செய்தனர். </p><h2>விசாரணை</h2><p>இந்த வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காளிக்குமார் உள்பட 3 பேர்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF"> மோசடியாக</a> கூட்டுச்சதியில் ஈடுபட்டு வட மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நில அடமான பத்திரம் பதிவு செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி காளிக்குமாரை நேற்று கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 12-ந்தேதி இ.எஸ்.ஐ. குறைதீர்க்கும் முகாம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/esi-grievance-redressal-camp-in-nellai-on-the-12th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/esi-grievance-redressal-camp-in-nellai-on-the-12th#comments</comments><guid isPermaLink="false">6e9cda6d-8259-4312-95f0-03bc22d031b9</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:31:44 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:31:44.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/sopudh6m/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/sopudh6m/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) நெல்லை துணை மண்டலம் சார்பில், இ.எஸ்.ஐ. திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு நெல்லை இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.</p><h2>குறைகளை தெரிவிக்கலாம்</h2><p>முகாமில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர், இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலக குறைதீர்க்கும் அதிகாரி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் இ.எஸ்.ஐ. திட்ட மருந்தக மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். </p><p>எனவே <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பயனீட்டாளர்கள் </a>குறைகள் ஏதேனும் இருப்பின் முகாமில் கலந்து கொண்டு தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலக பொறுப்பு அதிகாரி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குமரியில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: கடைகளின் பூட்டை உடைத்து மது விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-employees-protest-in-kumari-breaking-the-locks-of-shops-selling-liquor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-employees-protest-in-kumari-breaking-the-locks-of-shops-selling-liquor#comments</comments><guid isPermaLink="false">06997c40-1bd1-4912-bc04-721d80a226b6</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:22:02 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:22:02.676Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanniyakumari,போராட்டம்,மது விற்பனை,குமரி,டாஸ்மாக் ஊழியர்கள்,selling liquor,tasmac employees protest</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ajwpfa7i/22.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/ajwpfa7i/22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>2-வது நாளாக ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால், டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து மது விற்பனையை அதிகாரிகள் தொடங்கிய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்</p><p>டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை தடுக்க புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p>இந்த நிலையில் மதுவிற்பனையில் அரசின் குளறுபடியான நடவடிக்கையால் எங்களுக்கு பண இழப்பு ஏற்படுகிறது என்று டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அந்தவகையில் குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கடைகளை அடைத்து போராட்டத்தில் குதித்தனர்.</p><h2>2-வது நாளாக நீடித்தது</h2><p>முதல் நாளில் டாஸ்மாக் மண்டல மேலாளர் சுகிதா மற்றும் தொழிற்சங்கத்தினருடன் நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதில் சமாதானம் அடையாத டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று 2-வது நாளாகவும் கடைகளை அடைத்து போராட்டத்தில் குதித்தனர்.</p><p>அவர்களிடம் டாஸ்மாக் மண்டல மேலாளர் கோட்டை குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் நிர்வாகிகளோ, மதுபாட்டிலில் ஒட்டப்படும் ஸ்டிக்கரை பெற்றால் மட்டுமே கடைகளை திறப்போம். மேலும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் கடைகளின் </a>சாவியையும் கொடுக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர்.</p><h2>மதுவிற்பனையை தொடங்கிய அதிகாரிகள்</h2><p>இதற்கிடையே அதிகாரிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கை டாஸ்மாக் பணியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. அதாவது ஒரு சில இடங்களில் அதிகாரிகள் தலைமையில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மது விற்பனை நடந்தது. ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு தோவாளை தாசில்தார் சிவகலா தலைமையில் உடைக்கப்பட்டது. இதேபோல் பல இடங்களில் ஒவ்வொரு மதுக்கடையாக திறக்கப்பட்டது. இதனை மாலைக்கு பிறகு அறிந்த மதுப்பிரியர்கள், கடைகளுக்கு மதுவாங்க படையெடுத்ததால் ஒரு சில கடைகளில் கூட்டம் அலைமோதியது.</p><h2>பரபரப்பு</h2><p>இந்த பரபரப்புக்கு இடையே தொழிற்சங்கங்களின் கூட்டு குழுவினர், அதிகாரியுடன் நடத்திய இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதாவது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 1 மாதத்திற்குள் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பெரும்பாலான டாஸ்மாக் பணியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த சம்பவம் குமரியில் பரபரப்பை </p><p>ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பரமக்குடி அருகே ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assistant-collector-arrested-for-accepting-rs-50000-bribe-near-paramakudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assistant-collector-arrested-for-accepting-rs-50000-bribe-near-paramakudi#comments</comments><guid isPermaLink="false">2d343d88-323f-43f8-bb59-d1134a867acf</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:16:06 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:16:06.669Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,லஞ்சம்,கலெக்டர்,bribe,பரமக்குடி,paramakudi,Assistant Collector</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jfeplv6g/111.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/jfeplv6g/111.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பரமக்குடி, </p><p>பரமக்குடியில் சவுடுமண் அள்ள அனுமதி வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த டிரைவரும் சிக்கினார்.</p><h2>லஞ்சம்</h2><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி. நயினார்கோவில், போகலூர் ஆகிய பகுதிகளில் சவுடு மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி விவசாயிகள் மண் அள்ளி வருகின்றனர். அள்ளப்படும் மண்ணை சிலர் தனிநபர்களுக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.</p><p>இந்தநிலையில் ஒருவர் சவுடுமண் அள்ளுவதற்காக தடையில்லா சான்று அனுமதி வழங்கக்கோரி பரமக்குடி உதவி கலெக்டர் (வருவாய் கோட்டாட்சியர்) சரவண பெருமாளிடம் (வயது 54) விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு அவர் லஞ்சமாக ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து ராமநாதபுரம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">லஞ்ச ஒழிப்பு</a> போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.</p><h2>உதவி கலெக்டர் கைது</h2><p>இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து உதவி கலெக்டரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் அந்த நபர் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக்கு சென்று சரவணப்பெருமாளிடம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சரவணபெருமாளை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். </p><h2>பறிமுதல்</h2><p>பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட உதவி கலெக்டரின் கார் டிரைவரான சுந்தர்(41) என்பவரிடம் விசாரணை நடத்தி, அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட சரவண பெருமாளின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் ஆகும். பரமக்குடியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-12</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-12#comments</comments><guid isPermaLink="false">67f4a371-1de6-48e8-bde6-9ac47984a1f4</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:02:21 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:02:21.896Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari,விடுமுறை தினம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/u6a7ccur/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/u6a7ccur/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். </p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.   </p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை; துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-come-let-us-defeat-this-treacherous-bill-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-come-let-us-defeat-this-treacherous-bill-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">f7ce259e-c056-45c5-9b31-1ed08856e527</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:02:21 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:02:21.464Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/2y0ls0n6/manickam-tagore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/2y0ls0n6/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>அரசியல் சதி!</h2><p>‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி!. கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை,  50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.  ஏன் இந்த மசோதாவை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்?</p><p>மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி!</p><p>50% உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும்!</p><h2>அரசியல் அதிகாரத்தை பறித்துவிடும்</h2><p>எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும்.</p><p>கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தியும், 2001-ல் வாஜ்பாயும் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது.</p><p>சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.</p><h2>உரிமைப் போராட்டம்!</h2><p>இன்று (ஆகஸ்ட் 9 - வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள 'QUIT UNFAIR DELIMITATION MARCH' பேரணி என்பது செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஜனநாயக </a>உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம்! </p><p>நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைபயணம்.</p><p>மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 'Unfair Delimitation' பாடலை உருவாக்கிய தம்பி சலாம் மாஸ்சுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! </p><h2>மசோதாவை வீழ்த்த வாருங்கள்!</h2><p>இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம்! தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் மயமாகும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasekarapattinam-rocket-launch-pad-to-be-privatized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasekarapattinam-rocket-launch-pad-to-be-privatized#comments</comments><guid isPermaLink="false">d0610faf-cc30-48c2-835e-5f34a1fe233e</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:56:19 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:56:19.949Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,ISRO,Rocket Launch,குலசேகரன்பட்டினம்,ராக்கெட் ஏவுதளம்,Kulasekarapattinam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/yde3yekc/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/yde3yekc/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><h2>ராக்கெட் ஏவுதளம்</h2><p>ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (இஸ்ரோ) சொந்தமான ராக்கெட் ஏவுதளம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு செயற்கைக்கோள் கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இதையடுத்து நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம், தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது.</p><p>பூமத்திய ரேகைக்கு மிக அருகில் குலசேகரன்பட்டினம் இருப் பதால், இங்கிருந்து ராக்கெட்டுகளை குறைந்த எரிபொருளில் விண்ணில் செலுத்தி புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடி யும். முதல்கட்டமாக இங்கிருந்து சிறியவகை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.</p><h2>கட்டும் பணிகள் மும்முரம்</h2><p>குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணி களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவு தள கட்டிடம், ராக்கெட் பராமரிப்பு பணிமனை போன்றவை கட்டப்பட்டு உள்ளன.</p><p>மேலும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர் கள் தரையிறங்கி புறப்படும் வகையில் பிரமாண்ட ஹெலிபேடு தளமும் அமைக்கப்பட்டு உள்ளன. கடற்கரையில் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் 5 அடுக்குகளாக வனத்துறை சார்பில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது குலசகேரன்பட்டினம் இஸ்ரோ மைய வளாகம் வழி யாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்கின்றன.</p><p>ராக்கெட் ஏவுதள பணிகள் முடிந்ததும், அந்த வழியாக வாகனங்கள் செல்லாதவாறு மாற்றுப்பாதையில் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கருமேனி ஆற்றின் குறுக்கே அமராபுரம், காரங்காடு ஆகிய இடங்களில் புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ராக்கெட் ஏவுதளம் செயல்படும் வகையில் அனைத்து பணிகளையும் துரிதமாக நிறைவேற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>தனியார் மயம்</h2><p>இந்த நிலையில், குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ அமைத்து வரும் ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ரூ.986 கோடியில் அமையும் இந்த ஏவுதளத்தை முழுமையாக நிர்வகிக்கவும், ராக்கெட்டுகளை ஏவுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-diversion-in-madurai-city-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-diversion-in-madurai-city-starting-today#comments</comments><guid isPermaLink="false">0a3483f3-2929-4941-87dd-4341c8b86893</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:50:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:50:58.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,போக்குவரத்து மாற்றம்,traffic diversion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/sjszgmlt/traffic.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/sjszgmlt/traffic.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை,  </p><p>மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>போக்குவரத்து மாற்றம்</h2><p>மதுரை கரிமேடு போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அம்மா பாலமானது மிகவும் குறுகியதாக இருப்பதால் இப்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பாலத்தின் இருபக்கங்களிலும் உள்ள நுழைவுவாயில் பகுதியை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலைதுறையினர் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்வதற்காக இலகுவான போக்குவரத்தினை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆரப்பாளையம் ஜல்லிக்கட்டு ரவுண்டானாவில் இருந்து அம்மா பாலம், கே.வி.சாலை வழியாக தத்தனேரி ரோடு செல்லும்.</p><p>அனைத்து வாகன போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. வாகனங்கள் அனைத்தும் ஆரப்பாளையம் ரவுண்டானா, வைகை தென்கரை சாலை வழியாக குரு தியேட்டா சந்திப்பிற்கு சென்று திரும்பி காமராஜர் பாலம், பாத்திமா காலேஜ் ரவுண்டானா சென்று வலதுபுறம் திரும்பி கே.வி. சாலை மற்றும் தத்தனேரி சாலை வழியாக செல்ல வேண்டும்.</p><h2>ஒரு வழிப்பாதை</h2><p>கே.வி.சாலையில் இருந்து அம்மா பாலம் வழியாக ஆரப்பாளையம் ஜல்லிக்கட்டு ரவுண்டானாவிற்கு ஒரு வழிப்பாதையில் செல்ல இருசக்கர மற்றும் இலகுரக நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள் அனைத்தும் கே.வி.சாலையிலிருந்து பாத்திமா கல்லூரி சந்திப்பிற்கு சென்று இடதுபுறம் திரும்பி குரு தியேட்டர் சந்திப்பிற்கு சென்று டி.டி. ரோடு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையம் செல்லலாம். </p><p>மேலும், குரு தியேட்டர் சந்திப்பிலிருந்து இதர சாலைகளுக்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அருள்தாஸ்புரம் சந்திப்பிலிருந்து தத்தனேரி பாலம் வரை ஒருவழிப்பாதையாக தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த சந்திப்பிலிருந்து தத்தனேரி பாலத்திற்கு வழக்கம் போல் அனைத்து வாகனங்களும் செல்லாம். தத்தனேரி பாலத்திலிருந்து அருள்தாஸ்புரம் சந்திப்பிற்கு எந்த வாகனமும் செல்வதற்கு அனுமதி இல்லை.</p><h2>முற்றிலும் தடை</h2><p>இந்த வாகனங்கள் அனைத்தும் தத்தனேரி பாலத்தில் இடதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியாக அருள்தாஸ்புரம் சந்திப்பிற்கு சென்று இடதுபுறம் திரும்பி இ.எஸ்.ஐ. மருத்துவமனை சாலை வழியாக பாத்திமா கல்லூரி சந்திப்பு சென்று இதர சாலைகளுக்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பழங்காநத்தம் காளவாசல் பைபாஸ் சாலையிலிருந்து குரு தியேட்டர் சப்வே, வைகை தென்கரை சாலை, அம்மா பாலம், கே.வி. சாலை வழியாக தத்தனேரி ரோடு செல்லும் அனைத்து வாகன போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்பட்டுகிறது. இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றமானது இன்று முதல் சோதனை அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் சைபர் மோசடி கும்பலுக்கு பணம் எடுத்து கொடுத்த மேலும் 128 பேர் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/128-more-people-arrested-for-taking-money-from-a-cyber-fraud-gang-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/128-more-people-arrested-for-taking-money-from-a-cyber-fraud-gang-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">229643f5-736b-4e00-95ad-7fb4e8d86cd2</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:45:44 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:45:44.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,police,மோசடி கும்பல்,fraud,Crime,cyber,சைபர் கிரைம் போலீசார்,கைதுArrest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/8uk7mamh/110.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் கிரைம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/8uk7mamh/110.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் ஆன்லைன் வழியில் கோடிக்கணக்கில் பணம் பறிக்கப்படும் மோசடிகள் தொடர்கதையாகியுள்ளன. </p><h2>கைது</h2><p>'சைபர்' மோசடி செயல்களில் அபகரிக்கப்படும் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் அனுப்பப்பட்டு எடுக்கப்படுகிறது. இந்த பணத்தை எடுத்து கொடுப்பதற்காக கமிஷன் தொகை வழங்கப்படுகிறது.</p><p>இந்த கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலர் மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்து வருவதை சென்னை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில் நேற்று முன்தினம் 77 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், மேலும் 128 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>சைபர் கிரைம் போலீசார்</h2><p>அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை. நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், நெல்லை, திருச்சி, விருதுநகர் மற்றும் சென்னையைச் சேர்ந்த மொத்தம் 205 பேரை சென்னை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">சைபர் </a>கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.</p><p>ஒருவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பும் பணத்தை கமிஷனுக்காக எடுத்து கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: மசினக்குடி அருகே காட்டு யானை உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephant-dies-near-masinagudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephant-dies-near-masinagudi#comments</comments><guid isPermaLink="false">a016f362-bed0-4b1f-8f04-46d18599c657</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:24:18 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:24:18.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானை,wild elephant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/3ms7bu3k/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/3ms7bu3k/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி கோட்ட வனத்தில் காட்டு யானைகள், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் சீகூர் வனச்சரகம் ஆனைக்கட்டி தெற்கு காவல் பகுதிக்கு உட்பட்ட தனக்கடவு பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர்.</p><p>அப்போது ஒரு பெண் காட்டு யானை இறந்து கிடப்பதை கண்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபாகரன், கோட்ட துணை இயக்குனர் வித்யாதர் ஆகியோர் உத்தரவின் பேரில் சீகூர் வனச்ச கர் ஜெயராஜன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார் வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் காட்டு யானை என்ன காரணத்துக்காக உயிரிழந்தது என தெரியவில்லை. </p><p>இதைத்தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு கால்நடை உதவி டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துஉ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அழுகிய நிலையில் இருந்த காட்டு யானையின் உடலை ஆய்வு செய்தனர். தொடர்ந்து உரிய வழிகாட் டுதலின்படி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முக்கிய உடற்பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது. இறந்த யானைக்கு 48 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-into-mettur-dam-has-decreased</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-into-mettur-dam-has-decreased#comments</comments><guid isPermaLink="false">74f5a471-76f1-4bd6-91f4-e191ec28a6e4</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:17:38 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:17:38.779Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,நீர்வரத்து,Water inflow</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/2se1k43g/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-09/2se1k43g/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 13 ஆயிரத்து 674 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 808 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.</p><p>தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தற்போது அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் 77.57 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 78.03 அடியாக உயர்ந்தது. அதேநேரத்தில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில் அணை நீர்மட்டம் உயருவதிலும் சிக்கல் ஏற்படும்.</p><p>வருணபகவான் தொடர்ந்து கருணை காட்டினால் தான் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் வகையில் நீர்மட்டம் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் எதிர்பார்ப்புடன் கூறினர்.</p>]]></content:encoded></item></channel></rss>