<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 13 Aug 2026 02:12:07 +0000</lastBuildDate><item><title>வீட்டுமனை ஆவணத்தை வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் - சார் பதிவாளர் உட்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-15000-bribe-for-house-plot-document-three-arrested-including-sub-registrar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-15000-bribe-for-house-plot-document-three-arrested-including-sub-registrar#comments</comments><guid isPermaLink="false">d3e34f59-a51a-4dcb-ba3c-d058615b1d63</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:07:44 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:07:44.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,திருவள்ளூர்,லஞ்சம்,Bribery,வீட்டுமனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/gyfk1sks/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/gyfk1sks/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனை ஆவணத்தை வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சார் பதிவாளர் உள்பட 3 பேரை திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.</p><h2>லஞ்சம்</h2><p>சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், இவர் பொன்னேரி தாலுகா சிறுளப்பாக்கம் கிராமத்தில் 2 வீட்டுமனைகளை விலைக்கு வாங்கி, அவற்றை பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார். பின்னர் பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக சார் பதிவாளர் சங்கரை அணுகினார். அப்போது, பத்திரத்தை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என சார் பதிவாளர் சங்கர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத நடராஜன் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை நடராஜனிடம் கொடுத்து அனுப்பினர்.</p><h2>கையும் களவுமாக சிக்கினர்</h2><p>மேலும் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். ஆடி அமாவாசையையொட்டி பத்திரப்பதிவு செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் அலுவலகத்தில் திரண்டிருந்தனர். போலீசார் பொதுமக்களோடு பொதுமக்களாக கலந்து கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது நடராஜன் லஞ்சமாக கொடுத்த ரூ.15 ஆயிரத்தை சார் பதிவாளர் சங்கர், பத்திரப்பதிவு எழுத்தர் ரமேஷ் மற்றும் எழுத்தரின் உதவியாளர் நித்யா ஆகியோர் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டனர். பின்னர் கைதான 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தந்தையின் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-killed-after-getting-caught-under-lorry-wheels-right-before-her-fathers-eyes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-killed-after-getting-caught-under-lorry-wheels-right-before-her-fathers-eyes#comments</comments><guid isPermaLink="false">27dc34e6-dbe9-4292-ab3d-bd38e817e362</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:07:10 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:07:10.116Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>lorry,லாரி,Treatment,திருவொற்றியூர்,மோட்டார் சைக்கிள்,இளம்பெண் young lady,பலிdies</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/nubw6mto/53.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/nubw6mto/53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர், </p><p>அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை கண் எதிரேயே இளம்பெண் பலியானார்.</p><p>எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் திருவளர் செல்வி (வயது 21). பி.காம் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.</p><p>இந்த நிலையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவருடன் மோட்டார் சைக்கிளில் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மகேந்திரன் ஓட்டி வந்தார்.</p><h2>விபத்து</h2><p>திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் தந்தை-மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் திருவளர்ச்செல்வி தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தந்தை எண் எதிரேயே அவர் தலை நசுக்கி பரிதாபமாக இறந்தார்.</p><p>மகேந்திரன் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அவர், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திருவொற்றியூர் கலைஞர் நகரை சேர்ந்த சரவணன் (29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை பெயர் பலகையை உடைத்த மர்ம நபர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-unidentified-persons-vandalize-major-mukund-varadarajan-road-nameboard</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-unidentified-persons-vandalize-major-mukund-varadarajan-road-nameboard#comments</comments><guid isPermaLink="false">e64bac3d-2203-45d6-bf3d-b6c559d88311</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:06:17 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:06:17.337Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,பெயர் பலகை,மேஜர் முகுந்த் வரதராஜன்,Major Mukund Varadarajan,Nameboard</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/1uxb5tbb/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/1uxb5tbb/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ல் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில், ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். அவரது தியாகத்தை போற்றும் வகையில் அமைதிக்கான உயரிய விருதான "அசோக் சக்ரா'வை அவரது குடும்பத்தினருக்கு வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.</p><h2>மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை</h2><p>இந்த நிலையில், அவர் வசித்த பகுதியான, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு, 'மேஜர், முகுந்த் வரதராஜன் சாலை" என, ஜூன் மாதம், தமிழக அரசு பெயர் சூட்டியது. </p><p>இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி நிர்வகிக்கும் அச்சாலையில் கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப். சந்திப்பு, சோலையூர்,  கேம்ப் சாலை உட்பட பல இடங்களில் மேஜர் முகுந்த வரதராஜன் சாலை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. </p><h2>பெயர் பலகை உடைப்பு</h2><p>இதில், கேம்ப் சாலை சந்திப்பில், இடதுபுறம் உள்ள காவல் உதவி மையத்தை ஒட்டி வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை, மர்ம நபர்கள் அடியோடு பிடுங்கி சாலையோரம் வீசியுள்ளனர். </p><p>மேலும், பலகையில் அச்சிடப்பட்டிருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என்ற வாக்கியத்தையும் அட்டையை னவத்து முடியுள்ளனர். இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது;</p><p>'பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே கடை உள்ளது. இந்த கடைக்கு வரும் வாகனங்களை நிறுத்த பெயர் பலகை இடையூறாக இருப்பதால் பிடுங்கி வீசப்பட்டிருக்கலாம். மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, மறைந்த ராணுவ வீரரின் பெயர் பலகையை பிடுங்கி வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-wait-20-hours-for-free-darshan-at-the-tirupati-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-wait-20-hours-for-free-darshan-at-the-tirupati-temple#comments</comments><guid isPermaLink="false">4323018d-b9da-4498-863d-03a261f1df1b</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:46:39 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:46:39.655Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,Devotees,திருப்பதி கோவில்,Tirupati Temple</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/98zxmigr/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/98zxmigr/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருமலை,  </p><p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 78 ஆயிரத்து 956 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 14 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 46 லட்சம் ஆகும்.</p><p>மேலும் 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 211 பக்தர்கள் மருத்துவச் சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி பெற்றனர்.</p><p>வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்மெண்ட்டில் பக்தர்கள் நிரம்பி சிலாத்தோரணம் பகுதியில் உள்ள காத்திருப்பு அறைகள் மற்றும் வெளிப் புற வரிசைகளில் காத்திருந்தனர். 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்துக்காக பக்தர்கள் 18 முதல் 20 மணி நேரம் வரை காத்திருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>நெல்லை: கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்ற மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-young-man-arrested-for-snatching-jewelry-from-an-elderly-woman-on-her-way-to-a-christian-church</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-young-man-arrested-for-snatching-jewelry-from-an-elderly-woman-on-her-way-to-a-christian-church#comments</comments><guid isPermaLink="false">20c33e12-96d9-45d5-ba1c-5fcad4925adc</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:25:39 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:25:39.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,நகை பறிப்பு,chain snatching</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/i8130vm3/chainsnatching.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/i8130vm3/chainsnatching.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றபோது மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.</p><h2>சங்கிலி பறிப்பு</h2><p>பணகுடியை அடுத்த காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஏஞ்சல் (வயது 60). தனியாக வசித்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலையில் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று மேரி ஏஞ்சலின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.</p><p>இதுகுறித்து மேரி ஏஞ்சல் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>வாலிபர் கைது</h2><p>விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரது மகன் விக்னேஷ் (25) என்பவர் இந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்த தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>மறுசீரமைப்பு பணி: எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-work-platforms-1-to-5-at-egmore-railway-station-closed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-work-platforms-1-to-5-at-egmore-railway-station-closed#comments</comments><guid isPermaLink="false">f553b3cb-dd38-47d6-8f40-feabab3fea64</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:25:35 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:25:35.524Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore,எழும்பூர்,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/6p0hiom9/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/6p0hiom9/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வருகை மற்றும் பார்சல் பிரிவுக்கான நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடப்பட்டது.</p><h2>மறுசீரமைப்பு பணி</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மறுசீரமைப்பு பணியானது புதிய வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், மேம்படுத்தப்பட்ட நிலைய உள்கட்டமைப்பு மற்றும் பிற அதிநவீன வசதிகளை அமைப்பதை உள்ளடக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது வருகை மற்றும் பார்சல் பிரிவுக்கான நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>முதல் கட்டமாக நடைமேடை 1 முதல் 5 வரையில் 18 மீட்டர் அகலம், 120 மீட்டர் நீளத்துக்கு புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.</p><h2>தண்டவாளங்கள் மூடல்</h2><p>நேற்று முதல் நடைமேடை 1 முதல் 5 வரையில் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, நடைமேடை 4-ல் பள்ளம் தோண்டப்பட்டு பில்லர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, “மறுசீர மைப்பு பணி காரணமாக தற்போது நடைமேடை 1 முதல் 5-வரை உள்ள தண்டவாளங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. எனவே, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 முதல் 9 வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படும்.</p><p>தற்போது நடைபெறும் முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததும், 2-ம் கட்டமாக நடைமேடைகள் 6 முதல் 8 வரையிலான பகுதிகளில் நடைமேம்பாலத்துக்கான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைப்பதற்கான பணிகள் நடை பெற இருக்கிறது. அப்போது அதற்கேற்ப ரெயில் சேவையில் மாற்றம் செய்யப் படும். 3-ம் கட்டமாக நடைமேடைகள் 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-10</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-tomorrow-10#comments</comments><guid isPermaLink="false">2df7b681-6e63-4a0a-9648-8dad9cef5e00</guid><pubDate>Thu, 13 Aug 2026 01:08:49 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:08:49.174Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power outage,மின் தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/yfldoomx/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/yfldoomx/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 14.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>திருவொற்றியூர்:</strong> டி.எச். சாலை, ராஜா கடை, திருச்சினாங்குப்பம், கன்னிகோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, கணக்கர் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, மார்கெட் லேன், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, சாத்தாங்காடு பகுதி, நியூ தெரு, வசந்தா நகர், ஜான்ரவார் தெரு, ஐய்யப்பள்ளி தோட்டம், ஷேசாச்சல கிராமணி தெரு, திலகர் நகர், சின்னமேட்டுபாளையம், பெரியமேட்டுபாளையம், மேற்கு மற்றும் வடக்கு மாட வீதி, பிகேஎன் காலனி, வீரராகவன் தெரு, குமரன் நகர், கோமாதா நகர், பிபிடி சாலை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசையில் 100 அடி உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: காரணம் என்ன? - ஆராய்ச்சியாளர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-retreats-100-feet-at-tiruchendur-on-aadi-amavasai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-retreats-100-feet-at-tiruchendur-on-aadi-amavasai#comments</comments><guid isPermaLink="false">75d40d95-d7e2-4959-b1c0-70ae289247b8</guid><pubDate>Thu, 13 Aug 2026 00:58:21 +0000</pubDate><atom:updated>2026-08-13T00:58:21.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,Tiruchendur Murugan Temple,Tiruchendur,திருச்செந்தூர் முருகன் கோவில்,ஆடி அமாவாசை,கடல் உள்வாங்கியது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/h8iirxfp/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/h8iirxfp/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>ஆடி அமாவாசை தினமான நேற்று காலையில் திருச்செந்தூரில் சுமார் 100 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணம் என்ன என்று ஆராய்ச்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>100 அடி உள்வாங்கிய கடல்</h2><p>அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தின, பிந்தின நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடல் உள்வாங்குவது வாடிக்கையாக நிகழ்கிறது. ஆடி அமாவாசை தினமான நேற்று காலையில் திருச்செந்தூரில் சுமார் 100 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரபதி வரையிலும் கடல் உள்வாங்கி காணப்பட்டது.</p><h2>புனித நீராடிய பக்தர்கள்</h2><p>இதனால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும் பக்தர்கள் அச்சமின்றி வழக்கம்போல கடலில் புனித நீராடினர். சிலர் பாசிபடர்ந்த பாறைகளில் ஏறி நின்று செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் மாலையில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.</p><h2>உள்வாங்குவதன் காரணம் என்ன?</h2><p>கடல் உள்வாங்குவது ஏன்? என்பது குறித்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் துறை உதவி பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான செல்வம் கூறியதாவது:-</p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் கடல் அலைகளின் வேகம், உயரத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அதேநேரத்தில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வழக்கமாக கடல் மட்டம் குறைவதும், உயர்வதும் இயல்பாக உள்ளது.</p><p>தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் நில அமைப்புகளை வைத்து பார்க்கும்போது மிகவும் மேடான பகுதியாகும். அதே போன்று அந்த பகுதி ஒரு முனை போன்று வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும். இதனால் கடல் அந்த பகுதியில் உள்வளைந்து செல்லும். இந்த சூழலில் வழக்கம்போல் கடல் நீர்மட்டம் குறையும்போது, நீண்ட தூரம் கடல் உள்வாங்கி மேடான பகுதி வெளியில் தெரிகிறது. இது சாதாரணமாக நடக்கக்கூடிய நிகழ்வுதான். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-tamil-nadu-fishermen-detained-by-the-sri-lankan-navy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-tamil-nadu-fishermen-detained-by-the-sri-lankan-navy#comments</comments><guid isPermaLink="false">b21bb887-7ea2-4be4-a8c4-ce5abd55ef07</guid><pubDate>Thu, 13 Aug 2026 00:54:57 +0000</pubDate><atom:updated>2026-08-13T00:54:57.032Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமேசுவரம்,இலங்கை கடற்படை,Sri Lankan Navy,Tamil Nadu fishermen,மீனவர்,சிறை jail</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/u2tuf5bk/267.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/u2tuf5bk/267.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம், </p><p>இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்தனர்.</p><h2>மீனவர்கள்</h2><p>ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் விசைப்படகு ஒன்றில் 9 மீனவர்கள் சென்று இருந்தனர்.</p><p>நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். விசைப்படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து கைது செய்தனர். மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். </p><h2>கைது</h2><p>5 நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகின் என்ஜின் பழுதாகி, இலங்கை பகுதியில் கரை ஒதுங்கியதால் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் மீண்டும் 9 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீனவர்களை </a>இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்தது ராமேசுவரம் மீனவர்களை வேதனை அடையச்செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் வெற்றியை எதிர்த்து வழக்கு:  விஜய் மனு தாக்கல் செய்ய அவகாசம்-ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-perambur-election-result-high-court-grants-time-for-vijay-to-file-petition</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-perambur-election-result-high-court-grants-time-for-vijay-to-file-petition#comments</comments><guid isPermaLink="false">79583e32-bc7e-4023-ae8d-00c3e49ad082</guid><pubDate>Thu, 13 Aug 2026 00:47:24 +0000</pubDate><atom:updated>2026-08-13T00:47:24.222Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Chennai,ஐகோர்ட்டு,Chennai High Court,பெரம்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/lq9skbiq/Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/lq9skbiq/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>தேர்தலில் வெற்றி</h2><p>தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவர் பெரம்பூர் தொகு தியில் விஜய் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">சென்னை</a> ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஆர்.டி.சேகர், அந்த தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமிநரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல, திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p> <h2>நிராகரிக்கக் கோரி மனு</h2><p>இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஜி.மாசிலாமணி, ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோர் ஆஜராகி, "இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>தரப்பில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அதற்காக விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை வருகிற 25-ந்தே திக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.</p> <h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>அதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தல் வழக்கை ஆர்.சிவ ராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கையும் வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டென மாறும் வானிலை..! இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/weather-taking-a-sudden-turn-heavy-rain-set-to-lash-down-todaydo-you-know-where</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/weather-taking-a-sudden-turn-heavy-rain-set-to-lash-down-todaydo-you-know-where#comments</comments><guid isPermaLink="false">f5539535-80fd-4f97-b441-86776d6db5b4</guid><pubDate>Thu, 13 Aug 2026 00:44:50 +0000</pubDate><atom:updated>2026-08-13T00:44:50.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN weather</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/euyuanac/om-chuam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/euyuanac/om-chuam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன்காரணமாக இன்று (13-08-2026): நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும். </p><p>மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>மழை</h2><p><strong>நாளை (14-08-2026):</strong> நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை </a>பெய்யக்கூடும்.</p><p>மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>15-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை</a> பெய்யக்கூடும். </p><p><strong>16-08-2026 மற்றும் 17-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>18-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை</a> பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p>13-08-2026 முதல் 16-08-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>13-08-2026 முதல் 16-08-2026 வரை:</strong> வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (13-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய <a href="https://www.dailythanthi.com/topic/rain">லேசான மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>13-08-2026 முதல் 16-08-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p><strong>13-08-2026 மற்றும் 14-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>15-08-2026 மற்றும் 16-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <h2>அரபிக்கடல் பகுதிகள் :</h2><p><strong>13-08-2026 முதல் 16-08-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-48</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-48#comments</comments><guid isPermaLink="false">08094293-3e0d-4d6b-b022-98c058dd9d4c</guid><pubDate>Thu, 13 Aug 2026 00:40:51 +0000</pubDate><atom:updated>2026-08-13T00:40:51.701Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/3gvs19ku/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-13/3gvs19ku/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (13.08.2026 வியாழக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சாமி தரிசனத்துக்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... சதுரகிரியில் மூச்சுத்திணறி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-strikes-a-young-man-visiting-the-temple-dies-of-breathlessness-at-sathuragiri</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-strikes-a-young-man-visiting-the-temple-dies-of-breathlessness-at-sathuragiri#comments</comments><guid isPermaLink="false">5a91efd8-9ad0-46a5-8dc8-3bc58ac0e8b8</guid><pubDate>Wed, 12 Aug 2026 20:41:46 +0000</pubDate><atom:updated>2026-08-12T20:41:46.088Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sathuragiri,சதுரகிரி,சுந்தர மகாலிங்கம் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/4uwkvjb5/sathu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர், மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/4uwkvjb5/sathu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>ஆடி அமாவாசையை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">சதுரகிரி </a>சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர், மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சாமி தரிசனத்திற்காக சென்ற இளைஞர்</h2><p>மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மேலதிருமாணிக்கத்தை சேர்ந்தவர் சிவகுமார் (33). ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வந்த இவர், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது சதுரகிரி மலையேறும் போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு</h2><p>இதையடுத்து சிவகுமாரின் உடல் டோலி மூலம் தாணிப்பாறை மலைப்பாதை வழியாக அடிவாரத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 17 வயது சிறுவன் - கடலூர் இளைஞர் கொலை வழக்கில் வெளிவந்த பகீர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-year-old-boy-made-a-country-made-bomb-by-watching-youtube-shocking-detail-revealed-in-cuddalore-youth-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-year-old-boy-made-a-country-made-bomb-by-watching-youtube-shocking-detail-revealed-in-cuddalore-youth-murder-case#comments</comments><guid isPermaLink="false">dae42b9a-23d4-43a5-8332-995559e8cff0</guid><pubDate>Wed, 12 Aug 2026 19:33:28 +0000</pubDate><atom:updated>2026-08-12T19:33:28.673Z</atom:updated><atom:author><atom:name>Muthulingam Basker</atom:name><atom:uri>/api/author/2401553</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,YouTube,யூடியூப்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/k2oauoa2/YO.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கடலூரில் கடந்த திங்கட்கிழமை முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பகீர் தகவல் வெளிவந்துள்ளது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/k2oauoa2/YO.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர், </p><p>கடலூரில் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பகீர் தகவல் வெளிவந்துள்ளது. </p><h2>8 பேர் கைது</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கடலூர் </a>அருகே பெரிய காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 31). இவர் கார் டிரைவராக பணி புரிந்து வந்தார். சம்பவத்தன்று புதுச்சேரி எல்லை அருகே உள்ள இரட்டைசாவடி அருகே தனது காரை நிறுத்தி சுத்தம் செய்து கொண்டிருந்த சசிக்குமார் மீது,  இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசினர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடினர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், 8 பேர் கைது செய்ப்பட்டனர்.</p><h2>யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரிப்பு</h2><p>கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் யூடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுவன் தயாரித்த நாட்டு வெடிகுண்டுகளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலுக்கு கொடுத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>கீரை கட்டுகள், கோல மாவுக்குள்</h2><p>நாட்டு வெடிகுண்டுகளை போலீசாரின் சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் கீரை கட்டுகள் மற்றும் கோல மாவுக்குள் மறைத்து சம்பவ இடத்திற்கு கொண்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 3.9 ஆயிரம் கிலோ புகையிலை பொருட்கள் புதைத்து அழிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/39-thousand-kg-of-stormwater-materials-buried-and-destroyed-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/39-thousand-kg-of-stormwater-materials-buried-and-destroyed-in-nellai#comments</comments><guid isPermaLink="false">8b0b8f45-d71b-4f72-b9fc-b5fc31229c84</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:40:21 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:40:21.630Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,burial,Tobacco products,புகையிலை பொருட்கள்,குப்பை கிடங்கு,Garbage dump,destruction,அழிப்பு,புதைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/o0rl306v/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் 3.9 ஆயிரம் கிலோ புகையிலை பொருட்கள் புதைத்து அழிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/o0rl306v/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">நெல்லை</a> தச்சநல்லூர் அடுத்துள்ள ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 3 ஆயிரத்து 904 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">புகையிலை பொருட்கள்</a> புதைத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அழிக்கப்பட்டது</a>.</p><p>திருநெல்வேலி மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 3,904 கிலோ கிராம் எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. </p><h2>3,904 கிலோ புகையிலை பொருட்கள் புதைத்து அழிப்பு</h2><p>இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தலைமையில் நேற்று நடைபெற்ற போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்வின் பொருட்டு, நெல்லை மாநகரில் பறிமுதல் செய்யப்பட்ட 3,904 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவுபடி, போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரியின் முன்னிலையில் திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் அடுத்துள்ள ராமையன்பட்டி குப்பை கிடங்கில் புதைத்து அழிக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - துரை வைகோ வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-unanimously-passed-in-the-tamil-nadu-legislative-assembly-durai-vaiko-welcomes-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-unanimously-passed-in-the-tamil-nadu-legislative-assembly-durai-vaiko-welcomes-it#comments</comments><guid isPermaLink="false">eca41b6b-d0e4-4cbe-93e7-e6d1d107f8be</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:37:15 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:37:15.834Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>துரை வைகோ,Durai Vaiko MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/rs199p3s/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/rs199p3s/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய அரசு கொண்டுவரவுள்ள வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா – 2026 (FCRA Amendment Bill, 2026)-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை மனதார வரவேற்பதாக ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“கல்வி, சுகாதாரம், சமூகநலம் உள்ளிட்ட துறைகளில் நாட்டிற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வரும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களானது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இத்தகைய தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் FCRA திருத்த மசோதா கொண்டுவரப்படுவது கவலைக்குரியது.</p><p>இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்போது, அவற்றின் மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகநலச் சேவைகளைப் பெற்று வரும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களும் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள். இந்த விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே எனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளேன்.</p><p>04.08.2026 அன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், இந்த FCRA திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்க வேண்டும் என்று எனது கோரிக்கையை வலியுறுத்தினேன்.</p><p>அதேபோல், 08.08.2026 அன்று கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அன்புச் சகோதரர் ஜோசப் விஜய்யின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டத்திலும் இது குறித்து எடுத்துரைத்தேன். </p><p>சிறுபான்மை மக்கள் முதல்-அமைச்சர் மீது வைத்துள்ள நம்பிக்கையை சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள வெளிநாட்டு நிதியைப் பெறும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும் FCRA திருத்தச் சட்டத்தையும் நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தேன்.</p><p>தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசும், தோழமைக் கட்சிகளும் ஒன்றுபட்டு வலுவாக எதிர்ப்போம் என்ற ஒருமித்த கருத்துடன் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், சிறுபான்மை மக்களின் நலன்களுக்கும் எதிரான எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும், இதுகுறித்து சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அன்றைய கூட்டத்திலேயே முதல்-அமைச்சர் உறுதியளித்தார்.</p><p>அந்த உறுதியை செயல்படுத்தும் வகையில், FCRA திருத்த மசோதாவைத் திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>நாடாளுமன்றத்தில் இந்த திருத்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது   என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், கொண்டுவரப்படவுள்ள FCRA திருத்த மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவின் (JPC) பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு முன்வந்துள்ளது.</p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஒருமித்த தீர்மானம், JPC பரிசீலனையின்போதும் முக்கியத்துவம் பெறும். இதேபோல மற்ற மாநிலங்களிலும் இந்த மசோதாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போது இந்த மசோதா நிறைவேற்றம் தவிர்க்கப்படும் என்றும் நம்பிக்கை உள்ளது. சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், தொண்டு நிறுவனங்களின் சமூகப் பணிகளையும் பாதுகாப்பதற்கான எங்களது குரல் நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து வலுவாக ஒலிக்கும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூர்: போலி நகையை வைத்து தங்க மோதிரத்தை திருட முயற்சி – 19 வயது பெண் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-attempt-to-steal-a-gold-ring-using-fake-jewelry-19-year-old-woman-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupathur-attempt-to-steal-a-gold-ring-using-fake-jewelry-19-year-old-woman-arrested#comments</comments><guid isPermaLink="false">254adbdc-0266-4b41-8565-e4c008ee5b7e</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:18:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:18:44.110Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirupattur,திருப்பத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/scrz5x27/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/scrz5x27/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நகை கடை ஒன்றில், 19 வயது இளம்பெண் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து தன்னிடம் இருந்த போலி நகையை வைத்து, 2 கிராம் தங்க மோதிரத்தை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>அந்த பெண் நகையை மாற்ற முயன்றபோது, கடை உரிமையாளர் அவரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணிடம் இருந்து பல போலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவர் கொலை சம்பவம்; உண்மை முழுமையாக வெளிவர வேண்டும் - வேல்முருகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-murder-incident-the-full-truth-must-be-revealed-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-student-murder-incident-the-full-truth-must-be-revealed-velmurugan#comments</comments><guid isPermaLink="false">3e49ac33-a6c1-49f2-b2d3-d740be056ec2</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:07:15 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:07:15.652Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Velmurugan,வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/qeynjxax/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/qeynjxax/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு காரணம் போதைப்பொருள் புகாரா? அல்லது முன் பகையா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“கோவை அருகே கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான அமுதன், கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>முதற்கட்ட காவல்துறை விசாரணையின்படி, மாணவர்களுக்கிடையே ஏற்கெனவே இருந்த மோதல், செல்போன் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளின் தொடர்ச்சியாக, இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்பகைக் காரணமாக அமுதன் தாக்கப்பட்டதாக காவல்துறை தரப்புக் கூறுகிறது.</p><p>ஆனால், இந்த வழக்கில் இன்னொரு மிகத் தீவிரமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அமுதன் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்திருந்ததாகவும், அந்தத் தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு கசிந்ததன் காரணமாகவே அமுதன் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். </p><p>இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது, போதைப்பொருள் குறித்து அமுதன் தகவல் அளித்தார் என்பதும், அந்தத் தகவல் கசிந்ததால் அவர் கொல்லப்பட்டார் என்பதும், தற்போது குற்றச்சாட்டுகளாகவே உள்ளன. அவை விசாரணை மூலம் உறுதி செய்யப்பட வேண்டியவை. அதேவேளையில், காவல்துறை போதைப்பொருள் தொடர்பான காரணத்தை மறுத்து, மாணவர்களுக்கிடையேயான மோதலே முதற்கட்ட விசாரணையில் தெரியவரும் காரணம் எனக் கூறுகிறது.</p><p>எனவே, இந்த வழக்கில் ஒரு கோணத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு விசாரணையை முடித்துவிடாமல், இரு கோணங்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குறிப்பாக, அமுதன் காவல்துறைக்கு போதைப்பொருள் தொடர்பாகத் தகவல் அளித்தாரா?</p><p>அவ்வாறு தகவல் அளித்திருந்தால், அவரிடம் காவல்துறை எப்போது, எந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்தியது?</p><p>அவர் அளித்ததாகக் கூறப்படும் தகவல் யாருக்கெல்லாம் சென்றது?</p><p>காவல்துறையிலிருந்து தகவல் கசிந்ததா? கல்லூரி மற்றும் விடுதியில் போதைப்பொருள் பயன்பாடு அல்லது விற்பனைத் தொடர்பான புகார்கள் ஏற்கெனவே இருந்தனவா? அமுதன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, அவரை யாராவது மிரட்டினார்களா? செல்போன் பறிப்பு மற்றும் முன்பகைத் தொடர்பான காவல்துறை கூறும் சம்பவத்திற்கும் கொலைக்கும் உள்ள தொடர்பு என்ன? தாக்குதலில் பங்கேற்ற அனைவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனரா? என்பவைத் தெளிவாக விசாரிக்கப்பட வேண்டும்.</p><p>அமுதன் கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது எந்த அரசியல் அழுத்தத்திற்கும், எந்த முன்முடிவிற்கும் இடமின்றி ஆதாரங்களின் அடிப்படையில் கண்டறியப்பட வேண்டும். கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் நடமாட்டம் இருந்திருந்தால், அது ஒரு மாணவரின் உயிரை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இளைஞர் தலைமுறையின் எதிர்காலத்தையே பாதிக்கும் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகும். அதேபோல், ஒரு மாணவர் காவல்துறைக்கு இரகசியத் தகவல் அளித்ததற்காகக் குறிவைக்கப்பட்டிருந்தால், தகவல் அளிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறையின் பொறுப்பும் கேள்விக்குள்ளாகிறது.</p><p>எனவே, அமுதன் மரணத்தின் பின்னணியில் உள்ள முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல், கொலைக்குப் பின்னால் வேறு சதி, தூண்டுதல் அல்லது தகவல் கசிவு இருந்தால் அதற்குக் காரணமான அனைவரும் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அமுதனுக்கு நீதி கிடைக்க வேண்டும். உண்மை முழுமையாக வெளிவர வேண்டும்.</p><p>அதோடு, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-goonda-act-in-nellai-murder-attempt-case-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-goonda-act-in-nellai-murder-attempt-case-2#comments</comments><guid isPermaLink="false">a81754d2-afed-4c84-a6df-3ab666be542b</guid><pubDate>Wed, 12 Aug 2026 16:00:56 +0000</pubDate><atom:updated>2026-08-12T16:00:56.847Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,கைது,arrest,குண்டர் சட்டம்,Youth,வாலிபர்,Thug Act,கொலை முயற்சி வழக்கு,attempted murder</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/a0wbyei2/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/a0wbyei2/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>நெல்லை மாநகர பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். </p><h2>கொலை முயற்சி வழக்கு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a>, தச்சநல்லூர், வடக்கு சிதம்பரநகரைச் சேர்ந்த சுந்தரம் மகன் பேச்சிராஜா (வயது 26) என்பவர் நெல்லை மாநகர பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கொலை முயற்சி வழக்கு</a>களில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.  </p><h2>வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</h2><p>இதனையடுத்து அந்த வாலிபர், தச்சநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி இன்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்</a> பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>முதுமலை முகாமில் விழாக்கோலம்: வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு விருந்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-elephant-day-celebrations-special-feast-at-mudhumalai-camp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/world-elephant-day-celebrations-special-feast-at-mudhumalai-camp#comments</comments><guid isPermaLink="false">ba6115f3-efff-4f54-8f2d-111206532fc8</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:57:39 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:57:39.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விருந்து,உலக யானைகள் தினம்,Mudumalai,முதுமலை,Elephants-யானைகள்,World Elephant Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/1bzft0za/elephant-day.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வளர்ப்பு யானைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதுமலை முகாம் யானைகள் தினம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/1bzft0za/elephant-day.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>நீலகிரி,</h2><p>உலக யானைகள் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">முதுமலை யானைகள் முகாமில்</a> உள்ள வளர்ப்பு யானைகளுக்கு பொங்கல், கரும்பு, வெள்ளம், தர்பூசணி மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட அறுசுவை உணவுகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. </p> <h2>யானைகள் தினம்</h2><p>ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சர்வதேச புகழ்பெற்ற முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. </p><h2>அறுசுவை உணவு விருந்து</h2><p>முகாமில் உள்ள ரகு, பொம்மி உள்ளிட்ட வளர்ப்பு யானைகள் அனைத்தும் ஆற்றுக்கு அழைத்து செல்லப்பட்டு, சுத்தமாக குளிப்பாட்டப்பட்டன. பின்னர், யானைகள் அனைத்தும் கம்பீரமாக அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, யானைகள் தின சிறப்பு விருந்தாக பச்சரிசிப் பொங்கல், கரும்பு, வெள்ளம், தர்பூசணி, ஆப்பிள் மற்றும் அன்னாசி போன்ற பழங்கள் தயார் செய்யப்பட்டன. பாகன்கள் மற்றும் வனத்துறையினர் இந்த அறுசுவை உணவுகளை யானைகளுக்கு ஆசையோடு ஊட்டி மகிழ்ந்தனர். தங்களுக்கு பிடித்தமான பழங்களை யானைகளும் மிகவும் உற்சாகத்துடன் தும்பிக்கையால் வாங்கி ருசித்து சாப்பிட்டன. </p><h2>சுற்றுலா பயணிகள் வாழ்த்து</h2><p>இந்த கொண்டாட்டத்தை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலை முகாமில் குவிந்திருந்தனர். வளர்ப்பு யானைகள் வரிசையாக நின்று பழங்களை சாப்பிடுவதை கண்டு அவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.மேலும், அங்கு திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் ஒருசேர கைகளை தட்டி, 'ஹேப்பி எலிபன்ட் டே என உற்சாகக் குரல் எழுப்பி யானைகளுக்குத் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். </p><p>உலக யானைகள் தினத்தை முன்னிட்டு முதுமலை முகாம் இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>200 யூனிட் இலவச மின்சாரம்: அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/200-units-of-free-electricity-are-excessive-charges-being-levied-clarification-from-the-information-verification-wing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/200-units-of-free-electricity-are-excessive-charges-being-levied-clarification-from-the-information-verification-wing#comments</comments><guid isPermaLink="false">200bf1f5-ddf0-4dbe-9c69-5fc3b972c3d7</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:31:08 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:31:08.533Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு அரசு,electricity bill,Fact check,Free electricity,மின்கட்டணம்,மின்கட்டணம் உயர்வு,Fake News,இலவச மின்சாரம்,தவறான தகவல்,electricity bills,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,தகவல் நம்பகத்தன்மை,தகவல் நம்பகத்தன்மை பிரிவி,200 யூனிட்,Fact Verification</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/uqkrqkxz/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/uqkrqkxz/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>200 யூனிட் கட்டணமில்லா மின் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பரவும் செய்தி</h2><p>தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 200 யூனிட் கட்டணமில்லா மின் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.</p><h2>உண்மை என்ன ?</h2><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>மின் பகிர்மானக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில், "200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1  கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாததால், அது  குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் - அரசாணை வெளியீடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-must-be-sung-first-government-order-issued</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-must-be-sung-first-government-order-issued#comments</comments><guid isPermaLink="false">cc1240d6-f2b7-4045-ba96-e1e48bc74896</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:23:55 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:23:55.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TN govt,அரசாணை,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vaalthu Song</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/u9xy4g64/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/u9xy4g64/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மு.சாய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழக முதல்-அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மொழியப்பெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானம் - தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாக "தமிழ்த்தாய் வாழ்த்து" கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என ஆணை வெளியிடப்படுகிறது. </p> <p><strong>அரசாணை (நிலை) எண். 531</strong></p><p>நாள்: 12.08.2026</p><p>பராபவ வருடம், ஆடி - 27.</p><p>திருவள்ளுவர் ஆண்டு 2057.</p><p><strong>படிக்கப்பட்டது:-</strong></p><p>1. அரசாணை (நிலை) எண்.1393, பொது (அரசியல்)த் துறை, நாள் 17.06.1970.</p><p>2. குறிப்பாணை எண்.6678/71-6, பொது (அரசியல்)த் துறை, நாள் 05.05.1972.</p><p>3. அரசாணை (நிலை) எண்.1037, பொது (அரசியல்)த் துறை, நாள் 17.12.2021.</p><p>4. மத்திய அரசின் உள்துறை அமைச்சக கடித எண் 14/2/2025, 09.07.2026.</p><p>5. நேர்முகக் கடித எண். 7204/2026, சமபேசெ (சமுவ-1), நாள் 10.08.2026. </p><p><strong>ஆணை</strong></p><p>மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், பிரார்த்தனைப் பாடல்கள் பாடுவதில் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக எந்தவொரு மதத்தினருக்கோ பிரிவினருக்கோ தொடர்பு இல்லாத ஒரு பாடலை பிரார்த்தனைப் பாடலாக வைக்கவேண்டும் என்பதால், திரு. சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய "மனோன்மணீயம்" என்ற நூலிலிருந்து ஆறு வரிகள் கொண்ட பாடலினை எடுத்து பிரார்த்தனைப் பாடலாக வைக்கலாம் என ஆணை வெளியிட்டுள்ளது.</p><p>2. அதனைத் தொடர்ந்து, மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடலை தமிழக அரசின் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது. </p><p>3. இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதியிட்ட கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>4. இந்நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 10.08.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மொழியப்பெற்று ஒருமனதாக கீழ்க்காணும் தனித்தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது:-</p><p>“தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட "மனோன்மணீயம்" என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட "தமிழ்த்தாய் வாழ்த்து" 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. </p><p>2021 டிசம்பர் 17 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதியிட்ட கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1970-களில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்" முதலில் பாடப்படுவது மரபுத்தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது. </p><p>ஆகவே, "தமிழ்த்தாய் வாழ்த்து" தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது."</p><p>5. அதனைத் தொடர்ந்து, மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலக செயலாளரிடமிருந்து பெறப்பட்ட நேர்முக கடிதத்தில், மேற்காணும் தீர்மானத்தின் நகலினை உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனுப்பியுள்ளார்.</p><p>6. எனவே, முதல்-அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மொழியப்பெற்று ஒருமனதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தினை ஏற்று, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன், மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாக "தமிழ்த்தாய் வாழ்த்து" கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என அரசு ஆணையிடுகிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-to-be-closed-in-tirunelveli-district-on-august-15-collector-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-to-be-closed-in-tirunelveli-district-on-august-15-collector-orders#comments</comments><guid isPermaLink="false">0ce6ed62-663d-408f-9faa-8a6323e1e7f2</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:10:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:10:51.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Collector orders,கலெக்டர் உத்தரவு,சுதந்திர தினம்,Independence Day,டாஸ்மாக் கடைகள் மூடல்,TASMAC shop closure</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9l3l8n5j/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9l3l8n5j/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி </a>மாவட்டத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ம் தேதி டாஸ்மாக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மதுபானக்கடைகளை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D">மூட வேண்டும்</a> என மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">கலெக்டர் </a>ஆனந்த் மோகன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81">உத்தரவிட்டுள்ளார்</a>. </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் 15.8.2026, சனிக்கிழமை, சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA &amp; FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. </p><p>எனவே, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 15.8.2026 (சனிக்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-ips-officers-transferred-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-ips-officers-transferred-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">fdf5df31-17f3-46fa-9580-1508711548fc</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:10:29 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:10:29.703Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,IPS Officers,ஐபிஎஸ் அதிகாரிகள்,ips,ஐபிஎஸ்,transferred,அதிகாரிகள் இடமாற்றம்,TamilNadu Goverment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/i04vef0l/tamilnadu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/i04vef0l/tamilnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி,</p><ul><li><p>பாலநாகதேவி - சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி. காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) நியமனம்.</p></li><li><p>அபின் தினேஷ் மொடக் - சென்னை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நியமனம்.</p></li><li><p>வித்யா ஜெயந்த் குல்கர்னி - சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நியமனம்.</p></li><li><p>எம். ராமமூர்த்தி - சென்னை சி.ஐ.டி. ‘கியூ’ பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமனம்.</p></li><li><p>பி.கே. அரவிந்த் - சென்னை சிறப்பு பிரிவு சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர்-1 ஆக நியமனம்.</p></li></ul><ul><li><p>அர்பிதா ராஜ்புத் - சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக நியமனம்.</p></li><li><p>ஐ. ஈஸ்வரன் - சென்னை தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளராக நியமனம்.</p></li><li><p>எஸ்.ஆர். செந்தில்குமார் - நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் கண்காணிப்பாளராக நியமனம்.</p></li><li><p>வி. சரவணகுமார் - சென்னை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) காவல் கண்காணிப்பாளராக நியமனம்.</p></li><li><p>டி. ரமேஷ் பாபு - திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக நியமனம்.</p></li></ul>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையவழி விற்பனை தளம் - அமைச்சர் ராஜ்குமார் திறந்து வைத்தார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-housing-boards-online-sales-portal-minister-rajkumar-inaugurates-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-housing-boards-online-sales-portal-minister-rajkumar-inaugurates-it#comments</comments><guid isPermaLink="false">33a206e3-2c7f-4667-b71d-affefe9bd92b</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:07:02 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:07:02.610Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,அமைச்சர் ராஜ்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/eiocyxpq/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/eiocyxpq/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனை தளத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனைத் தளத்தை இன்று (12.08.2026) சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூட்ட அரங்கில் துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மனைகள் மற்றும் வீடுகள் கடந்த ஆண்டு 2,630 அலகுகள் மட்டும் மின்னணு முறையில் விற்பனை செய்யப்பட்டது.</p> <p>தற்பொழுது, இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பல்வேறு திட்டங்களில் விற்பனைக்கு உள்ள 7,659 அலகுகளில் 1) 21.08.2026 முதல் குலுக்கல் முறையில் 2,842 அலகுகளுக்கும், 2) 24.08.2026 முதல் முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமை அடிப்படையில் (FCFS) இடஒதுக்கீடு விகிதாச்சார முறையில் 2,184 அலகுகளுக்கும், 3) 25.08.2026 முதல் பொது ஒதுக்கீடு முறையில் (Common Pool) இட ஒதுக்கீடு விகிதாச்சாரமின்றி, முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமையில் 1,749 அலகுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக Tamil Nadu Housing Board Online Portal-இல் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும், இன்றைய தினத்தில் இருந்து 7 தினங்கள் கடந்து விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். பொதுமக்கள் பின்வருவனவற்றினை தயார் செய்ய மேற்படி கால இடைவெளியினை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>* இணையதளத்தில் உள்நுழைவு செய்வதற்கான பயனாளர் பெயர் மற்றும் L (User ID and Password)</p><p>* இணைய தளத்தில் உள்ள விவரங்கள் அடிப்படையில் அல்லது திட்டப் பகுதிக்கு நேரடியாகச் சென்று விருப்பமான அலகினை தெரிவு செய்து கொள்ளலாம்.</p><p>* இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.</p><p>* முன்பதிவு செய்வதற்கான கட்டண தொகையினை செலுத்துவதற்கு ஏதுவாக தங்களது வங்கி பணப் பரிவர்த்தனை வரம்பினை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.</p><p>* எந்தெந்த பிரிவில் விண்ணப்பிக்கப்படுகிறதோ, அதற்கான நிபந்தனைகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். </p><p>மேலும், விற்பனைக்கு தயாராக உள்ள 884 வணிக அலகுகள் (கடைகள் /பிரதான வணிக மனைகள் மற்றும் பொது உபயோக மனைகள்) e-Tender cum e-Auction முறையில் 25.08.2026 முதல் 24.09.2026 வரை மின் ஏலத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தளம் Tamil Nadu e-Tenders Portal ஆகும். </p><p>தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வெளிப்படையான இந்த செயல்பாடு, பொதுமக்களுக்கு வீடு மற்றும் மனைகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை பெருமளவில் அதிகரிப்பதுடன், வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படுகின்றது. மேலும் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இவ்வாண்டில் விலை உயர்வு ஏதும் செய்யாமல் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்குள் இணையவழி விற்பனைத் தளம் மூலம் விண்ணப்பித்து (அல்லது) முன்பதிவு செய்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் (TNHB) வீட்டுவசதி சேவையினை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சுங்கச்சாவடி அருகே வசிப்பவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாமா? நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-people-living-near-toll-booths-travel-without-paying-highways-authority-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/can-people-living-near-toll-booths-travel-without-paying-highways-authority-explains#comments</comments><guid isPermaLink="false">c962bcd2-111a-4d17-8f45-c15faf2f3944</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:00:42 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:00:42.482Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Explanation,விளக்கம்,சுங்கச்சாவடி,ஆணையம்,நெடுஞ்சாலை,கட்டணம்,பயணம்,Travel,National Highways Authority,toll booth fare</media:keywords><media:content height="358" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ohwm8aij/Untitled-2.jpg" width="630"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடிகளில் கட்டணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ohwm8aij/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">சுங்கச்சாவடி</a>களின் அருகே வசிப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு இந்தியத் தேசிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">நெடுஞ்சாலை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">ஆணையம்</a> (NHAI) மறுப்பு தெரிவித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">விளக்கம் </a>அளித்துள்ளது. </p><p>நாடெங்கிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அடையாள அட்டையை மட்டும் காட்டிவிட்டுக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">கட்டணமின்றி </a>வாகனங்களை இயக்கலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. </p><h2>உள்ளூர் மாதாந்திர பாஸ்</h2><p>சுங்கச்சாவடிகளில் அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளூர் வாசிகள் முற்றிலும் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்பது தவறான தகவலாகும். சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்குக் கட்டணச் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதற்காக 'உள்ளூர் மாதாந்திர பாஸ்' (Local Monthly Pass) முறை நடைமுறையில் உள்ளது. </p><p>குறிப்பிட்ட அந்தச் சுங்கச்சாவடிக்கு உரிய விதிகளின்படி முறைப்படி விண்ணப்பித்து இந்த மாதாந்திர பாஸை பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே, வெறுமனே அடையாள அட்டையைக் காட்டி இலவசமாகச் செல்ல முடியாது என்றும், சலுகையைப் பெற விரும்புவோர் அந்தந்தச் சுங்கச்சாவடியின் விதிமுறைகளைப் பின்பற்றி மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-11</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-11#comments</comments><guid isPermaLink="false">64976254-6195-4d07-b31f-602550812dd9</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:27:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:27:51.637Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8ozxgkgj/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8ozxgkgj/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (13.8.2026, வியாழக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>இது தொடர்பாக சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கரிவலம்வந்தநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (13.8.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினத் கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையன்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை ஆட்டோவில் கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/instagram-obsession-husband-arrested-for-killing-wife-by-slitting-her-throat-in-auto</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/instagram-obsession-husband-arrested-for-killing-wife-by-slitting-her-throat-in-auto#comments</comments><guid isPermaLink="false">b2b8c8c5-e672-42ca-93a6-0a50bbca316c</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:21:24 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:21:24.984Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,murder,இன்ஸ்டாகிராம்,Instagram,Auto,ஆட்டோ,problem,கணவன் மனைவி தகராறு,Husband wife,கழுத்து அறுத்து கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9ucpx92j/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மனைவியை ஆட்டோவில் கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/9ucpx92j/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அம்பத்தூரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">இன்ஸ்டாகிராமில்</a> ஆண் நண்பர்களுடன் பழகியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை ஏமாற்றி அழைத்து, ஆட்டோவில் வைத்து கொடூரமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கழுத்தை அறுத்து கொலை</a> செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><h2>இளம்பெண் கொலை</h2><p>சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென ஆட்டோவில் இருந்து பெண் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வெளியே தூக்கி வீசப்பட்டார். பின்னர் அத்த ஆட்டோ அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் அந்த பெண் இறந்தார். அவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சடையாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். </p><h2>ஆட்டோ டிரைவர்</h2><p>இதில் அம்பத்தூரைச் சேர்ந்த வைதேகி என்பவரை நடத்தை சந்தேகத்தில் கணவரே ஓடும் ஆட்டோவில் கழுத்தை அறுத்து கொன்று இருப்பது தெரிந்தது. இச்சம்பவம் குறித்த விபரம் பின்வருமாறு: </p><p>சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திராநகரை சேர்ந்த சின்னா, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வைதேகி (வயது 24). இவரும் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.</p><h2>இன்ஸ்டாகிராம் மோகத்தால் பிரச்சினை</h2><p>சின்னா வேலைக்குச் சென்ற பிறகு வைதேகி தினந்தோறும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் நேரத்தை செலவிட்டார். இதில் பல ஆண் நண்பர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் நாள் முழுவதும் வைதேகி இன்ஸ்டாகிராமிலும், செல்போனில் ஆண் நண்பர்களுடன் பேசுவதிலும் மூழ்கினார். இதனை அறிந்த சின்னா மனைவி வைதேகியை பலமுறை கண்டித்தார். எனினும் வைதேகியின் இன்ஸ்டாகிராம் மோகம் குறையவில்லை. அப்படியே நீடித்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட மோதலினால் கோபம் அடைந்த வைதேகி திருமுல்லைவாயிலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கினார். அங்கேயும் இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பர் ஒருவருடன் வைதேகி தொடர்ந்து பழக்கத்தில் இருந்தது சின்னாவிற்கு தெரியவந்தது. </p><h2>சமாதான பேச்சு</h2><p>இதையடுத்து நேற்று மாலை சின்னா, மனைவி வைதேகியிடம் செல்போனில் பேசினார். அப்போது "நாம் இருவரும் மீண்டும் ஒன்றாக குடும்பம் நடத்தலாம். நமக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். இது தொடர்பாக நாம் பேசி தீர்த்து கொள்ளலாம்" என்று கூறி அம்பத்தூர் இந்திரா நகரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்தார். </p><h2>கொலை திட்டம்</h2><p>கணவர் அழைத்ததால் வைதேகி தனக்கு நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் வீட்டுக்கு வந்தார். இருவரும் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வைதேகி இன்ஸ்டாகிராம் பழக்கத்தை கைவிடுவதாக கூறவில்லை என்று தெரிகிறது. எனினும் சமாதானம் அடைந்ததாக சின்னா நாடகமாடினார். மேலும் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். இதைத் தொடர்ந்து வைதேகியிடம் "நீ தான் நன்றாக ஆட்டோ ஓட்டுவாயே... நீ ஆட்டோ ஓட்டு, நான் பின்னால் அமர்ந்து சவாரி செய்கிறேன். எனக்கு ஆசையாக உள்ளது" என்று சின்னா கூறினார். </p><h2>மனைவி கழுத்தை அறுத்து கொலை</h2><p>இதை நம்பிய வைதேகி ஆட்டோ ஓட்ட, சின்னா பின்னால் அமர்ந்து கொண்டார். அவர்கள் அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றபோது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வைதேகியின் கழுத்தை கொடூரமாக கொலை வெறியுடன் அறுத்தார். மேலும் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் வைதேகி அலறியபடி ஆட்டோவை நிறுத்தினார். சிறிது நேரத்தில் வைதேகி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே வைதேகியின் உடலை சாலையோரம் வீசிவிட்டு அதே ஆட்டோவில் சின்னா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். </p><p>இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் உள்ள ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி சின்னாவை தேடி வந்தனர். அப்போது மனைவியை கொலை செய்த சின்னா எந்தவித பதட்டமும் இல்லாமல் அம்பத்தூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள காமராஜர்புரத்தில் தனது நண்பர்களுடன் மது குடித்துக்கொண்டு இருந்தது தெரிந்தது.</p><h2>கணவர் கைது</h2><p>நள்ளிரவு 12 மணியளவில் போலீசார் விரைந்து சென்று சின்னாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><h2>ஆண் நண்பர்கள் யார்?</h2><p>மேலும் கொலை செய்யப்பட்ட வைதேகியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தினையும் ஆய்வு செய்து அவருடன் நெருங்கி பழகிய ஆண் நண்பர்கள் யார்? யார்? என்ற விபரங்களையும் சேகரித்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்களுடன் பழகியதால் மனைவியை ஏமாற்றி அழைத்து, ஆட்டோவில் வைத்து கொடூரமாக கணவர் கொலை செய்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்க பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-tvk-government-trying-to-cover-up-the-truth-by-making-an-innocent-student-a-criminal-kanimozhi-question</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-tvk-government-trying-to-cover-up-the-truth-by-making-an-innocent-student-a-criminal-kanimozhi-question#comments</comments><guid isPermaLink="false">63bcdf73-a9ac-4c5e-8688-9b951f7f9405</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:11:22 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:11:22.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றவாளி,student,Question,கனிமொழி,மாணவர்,Criminal,கேள்வி,Kanimozhi Karunanidhi,உண்மை,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/3k1i1ftz/33.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கனிமொழி]]></media:title><media:description type="html"><![CDATA[  திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/3k1i1ftz/33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா தவெக அரசு?" என்று <a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி</a> கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>கோஷ்டி மோதல்</h2><p>கோவையில் தனியார் கல்லூரியில் படித்துவந்த முதலாம் ஆண்டு மாணவர், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D">போதைப் பொருள்</a> விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததற்காக போதை பழக்கத்தில் ஈடுபட்ட மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அதை மாணவர்கள் இடையேயான கோஷ்டி மோதல் என்று திசைதிருப்பும் வகையில் வழக்கை முடித்து வைக்கப்பார்க்கிறது தவெக அரசு.</p> <h2>தவெக அரசு?</h2><p>கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் அளித்த பின் பாதுகாக்க தவறியதால் தான், அம்மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கூறும் நிலையில், பலியான அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்க பார்க்கிறதா, தவெக அரசு?</p> <h2> நடவடிக்கை</h2><p>இந்த கொலையை செய்தவர்கள் மட்டுமின்றி, பாதுகாப்பு வழங்க தவறிய காவல்துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின கொண்டாட்டம்; வார இறுதி நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebrations-weekend-special-bus-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/independence-day-celebrations-weekend-special-bus-services#comments</comments><guid isPermaLink="false">5501f5d9-191e-4426-b453-01a18622a347</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:57:10 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:57:10.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,special buses,Independence Day Celebration,சுதந்திர தின கொண்டாட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/mqhryjvh/idcsa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/mqhryjvh/idcsa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.</p><p>இந்திய நாடு, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.  அந்த நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.</p>  <h2>சிறப்பு பஸ்கள் இயக்கம்</h2><p>இந்த நிலையில், சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் வார இறுதி நாட்களை (ஆகஸ்டு 14, 15, 16) முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.</p><p>இதன்படி, சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு ஆகஸ்டு 14 மற்றும் 15-ல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.</p><p>மேலும், சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக 3 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - கோர்ட்டில் தமிழக அரசு பதில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/disciplinary-action-against-three-government-officials-regarding-the-thoothukudi-firing-incident-tamil-nadu-governments-reply-in-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/disciplinary-action-against-three-government-officials-regarding-the-thoothukudi-firing-incident-tamil-nadu-governments-reply-in-court#comments</comments><guid isPermaLink="false">eddf8432-d039-469a-9c26-ffb8c3e69168</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:49:28 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:49:28.145Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,தூத்துக்குடி துப்பாக்கி சூடு,Tuticorin firing incident</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/fplohlnp/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/fplohlnp/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோறி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பொறுப்பானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. </p><p>இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 3 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசின் நிலைபாடு என்ன?’ என்று கேள்வி எழுப்பினர். இது குறித்து பதிலளிக்க கால அவகாசம் தேவை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை வரும் 19-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>‘குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் மாவட்ட கலெக்டர் கவனிக்க வேண்டும்’ - மதுரை ஐகோர்ட்டு கிளை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/district-collector-must-exercise-due-diligence-before-granting-permission-for-quarries-madurai-bench-of-the-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/district-collector-must-exercise-due-diligence-before-granting-permission-for-quarries-madurai-bench-of-the-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">c963d2c7-91ee-4902-a08d-7e6d91b2ba77</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:33:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:33:13.719Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை ஐகோர்ட்டு கிளை,Madurai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0yjd7vy0/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/0yjd7vy0/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>கனிமவள குவாரி அனுமதி தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் மாவட்ட கலெக்டர் கவனிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.</p><p>மேலும் நீர்நிலைகள் சேதமடையாமல் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும், குவாரி நடவடிக்கைகளால் நீர்நிலைகளுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ள நீதிபதிகள், தூர விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-the-day-after-tomorrow-7</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-the-day-after-tomorrow-7#comments</comments><guid isPermaLink="false">f3c3b944-05f5-4351-b05e-2a3fbfccc0f2</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:24:39 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:24:39.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/b2q79q45/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/b2q79q45/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 14.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை</h2><p><strong>திருவொற்றியூர்</strong>: டி.எச். சாலை, ராஜா கடை, திருச்சினாங்குப்பம், கன்னிகோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, கணக்கர் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, மார்கெட் லேன், எண்ணூர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எக்ஸ்பிரஸ் </a>சாலை, சாத்தாங்காடு பகுதி, நியூ தெரு, வசந்தா நகர், ஜான்ரவார் தெரு, ஐய்யப்பள்ளி தோட்டம், ஷேசாச்சல கிராமணி தெரு, திலகர் நகர், சின்னமேட்டுபாளையம், பெரியமேட்டுபாளையம், மேற்கு மற்றும் வடக்கு மாட வீதி, பிகேஎன் காலனி, வீரராகவன் தெரு, குமரன் நகர், கோமாதா நகர், பிபிடி சாலை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய ராணுவம் சார்பில் சென்னை பரங்கிமலையில் சைனிக் நிலையம் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sainik-centre-inaugurated-by-the-indian-army-at-parangimalai-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sainik-centre-inaugurated-by-the-indian-army-at-parangimalai-chennai#comments</comments><guid isPermaLink="false">02e7cd1f-0971-4c94-b434-9d97633fc65a</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:23:49 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:23:49.456Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,இந்திய ராணுவம்,indian army</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/zmtbinkj/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/zmtbinkj/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பரங்கிமலையில் இந்திய ராணுவத்தின் சார்பில் சைனிக் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சீருடை பணியாளர்கள், சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக, ஆகஸ்ட் 12-ந்தேதி(இன்று) சென்னையில் உள்ள பரங்கிமலையில் 'சைனிக் இன்ஸ்டிடியூட்' (Sainik Institute) கல்வி மையத்தை இந்திய ராணுவம் திறந்து வைத்துள்ளது. </p><p>ராணுவத்தின் 'தக்ஷின் பாரத் ஏரியா' (Dakshin Bharat Area) பிரிவின் கீழ் செயல்படும் இந்த மையம், ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் (பணியில் உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள்) மற்றும் அவர்களது குடும்பத்தினர், முக்கியமான விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சென்னையின் மையத்தில் உள்ள இடத்தில், நியாயமான கட்டணத்தில் நடத்துவதற்கான வசதியான மற்றும் விசாலமான இடமாகத் திகழ்கிறது.</p><p>இந்த மையத்தில் குளிரூட்டப்பட்ட விசாலமான அரங்கம், திறந்தவெளி புல்வெளி மற்றும் ஒரு சிறிய ஓய்வறை ஆகியவை உள்ளன. மேலும், பாத்திரங்கள் கழுவும் வசதியுடன் கூடிய சுய-சேவை சமையலறை மற்றும் போதுமான வாகன நிறுத்துமிட வசதிகளும் இதில் அடங்கும்; இதனால் பல்வேறு அளவிலான கூட்டங்களை நடத்த இது ஏற்ற இடமாக அமைகிறது. இதனை 'தக்ஷின் பாரத் ஏரியா'வின் ராணுவ மகளிர் நலச் சங்கத்தின் (AWWA) மண்டலத் தலைவர் திறந்து வைத்தார்.</p><p>OTA-நங்கநல்லூர் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மையம், சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் பணியாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை அளிக்கிறது. இந்த மையம் 2026 ஆகஸ்ட் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளா? மனிதாபிமானமற்ற கட்டிடங்களா? - வானதி சீனிவாசன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospitals-or-inhumane-buildings-vanathi-srinivasan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospitals-or-inhumane-buildings-vanathi-srinivasan-asks#comments</comments><guid isPermaLink="false">3b37040a-172a-4bc1-88b0-938be612bbb3</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:11:47 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:11:47.542Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Government Hospital,அரசு மருத்துவமனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/4hs6ei2o/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/4hs6ei2o/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒரு சில ஊழியர்களின் மனிதாபிமானமற்ற செயல்களால் உயிர்காக்கும் அரசு மருத்துவமனைகளின் புனிதமும், நம்பிக்கையும் சீர்குலைவது வேதனையளிக்கிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வானதி சீனிவாசன்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>அவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்களா?</h2><p>சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோர்க்கு வழங்கப்படும் முட்டை உள்ளிட்ட உணவினை சுகாதாரமற்ற முறையிலும், மனிதாபிமானமின்றியும் வழங்கப்படுவதாகக் கூறும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவர்கள் என்றால் அவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்களா?</p><p>ஏற்கனவே பல அரசு மருத்துவமனைகளில் எலிகள் தொல்லை மற்றும் சுகாதாரமற்ற சூழல் நிலவும் நிலையில் தற்போது சிகிச்சை பெறுவோர்களுக்கு  இதுபோன்று  உணவினை வழங்கும் போது அவர்கள் உடல் நோயுடன் மன அழுத்தமும் அதிரிக்கும் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.</p><h2>மனிதாபிமானமற்ற செயல்</h2><p>எத்தனை நவீன வசதிகள், கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிகிச்சை பெறுவோரிடம் கனிவுடன் நடந்து கொண்டாலே அவர்களின் பாதி நோய்க்கு அதுவே மருந்து.  ஆனால் ஒரு சில ஊழியர்களின் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களால் உயிர்காக்கும் அரசு மருத்துவமனைகளின் புனிதமும், நம்பிக்கையும் சீர்குலைவது வேதனையளிக்கிறது.</p><p>எனவே அரசு மருத்துவமனைகளில் இதுபோன்று நடக்கும் அவலங்களைக் கருத்தில் கொண்டு சிகிச்சை பெறுவோரை கண்ணியமாகவும், கனிவுடனும் நடத்த மக்கள் நல்வாழ்வு &amp; சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈஷாவின் இலவச யோகா வகுப்பு ‘உயிர்நோக்கம்’: மிஸ்டு கால் மூலம் பதிவு செய்யலாம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-online-yoga-class-uyirnokkam-by-isha-foundation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-online-yoga-class-uyirnokkam-by-isha-foundation#comments</comments><guid isPermaLink="false">84f3f8df-fc21-47e1-bfde-4f7c0175b647</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:02:37 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:02:37.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பதிவு,Isha,ஈஷா,Yoga Program,இலவசம்,Register,யோகா வகுப்புகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/xe2bhhd7/yoga.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஈஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈஷாவின் இலவச யோகா வகுப்பு ‘உயிர்நோக்கம்’: மிஸ்டு கால் மூலம் பதிவு செய்யலாம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/xe2bhhd7/yoga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>முதுகுதண்டு பலம், மன அமைதி பெற ஈஷாவின் இலவச <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE">யோகா வகுப்பு</a> ‘உயிர்நோக்கம்’: மிஸ்டு கால் மூலம் பதிவு செய்யலாம்!</p><h2>யோகா வகுப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88">ஈஷா அறக்கட்டளை </a>சார்பில், தமிழ் மக்களுக்காகவே சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'உயிர்நோக்கம்' எனும் 3 நாள் இலவச ஆன்லைன் யோகா வகுப்பு வரும் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறுகிறது.</p><h2>மிஸ்டு கால்</h2><p> இந்த இலவச யோகா வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ‘83000 99555’ என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சியில் யோக நமஸ்காரம், நாடி சுத்தி மற்றும் ஈஷா கிரியா எனும் 3 யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. 3 நாட்கள் நடைபெறும் இந்த ஆன்லைன் யோக வகுப்பில், தினமும் 2 மணி நேரம் பங்கேற்றால் போதுமானது.</p><h2>சத்குரு</h2><p>சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பயிற்சி நமது உடல், மனம், உணர்ச்சிகள், சக்திகள் மற்றும் நமக்குள் இருக்கும் பஞ்ச பூதங்களை நமது நல்வாழ்வை நோக்கி செயல்பட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.</p><h2>யோக நமஸ்காரம்</h2><p>இப்பயிற்சியில் கற்றுத்தரப்படும் 'யோக நமஸ்காரம்' முழு உடலுக்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக முதுகுதண்டை பாதுகாத்து புத்துணர்வாக்குகிறது. மேலும், முதுகுத்தண்டின் அடிப்பகுதியை சுறுசுறுப்பாகவும் சீராகவும் செயல்பட வைப்பதுடன், வயதாகும் வேகத்தை குறைத்து உடலை இளமையுடன் வைக்கவும் உதவுகிறது. </p><h2>'நாடி சுத்தி' பயிற்சி</h2><p>'நாடி சுத்தி' பயிற்சி நம் உடலில் பிராண சக்தி பாயும் பாதைகளான நாடிகளைத் தூய்மைப்படுத்துகிறது. இதன்மூலம் சிறந்த உடலமைப்பையும் உளவியல் நல்வாழ்வையும் பெற முடியும். மேலும் 'ஈஷா கிரியா' எனும் 12 நிமிட தியானம் ஆரோக்கியம், உயிரோட்டம், அமைதி மற்றும் நல்வாழ்வை கொண்டுவர உதவும் என்பதோடு, நவீன வாழ்க்கையின் பரபரப்பை சமாளிக்க இது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.</p><h2>வாழ்க்கை</h2><p>இப்பயிற்சி குறித்து சத்குரு கூறுகையில், "உயிர்நோக்கம் என்றால் உயிரின் நோக்கத்திற்கு நாம் மாறுவது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளிலிருந்து, உங்களுள் உள்ள உயிரின் நோக்கத்திற்கு நீங்கள் மாறினால், நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையின் இயக்குனராக இருப்பீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>மிஸ்டு கால்</h2><p>தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களின் வீடுகளிலிருந்தே ஆன்லைனில் பங்கேற்றுப் பயன்பெறும் வகையில் இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் 83000 99555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். மிஸ்டு கால் கொடுத்தவுடன், அடுத்த கட்ட சேர்க்கை வழிகாட்டுதல்கள் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். </p><h2>இணையதள முகவரி</h2><p>மேலும், isha.co/uyirnokkam என்ற இணையதள முகவரி மூலமாகவும் நேரடியாகப் பதிவு செய்து இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சரின் உத்தரவை மீறி செயல்பட்ட தவெக நிர்வாகி!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-functionary-acted-in-defiance-of-the-chief-ministers-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-functionary-acted-in-defiance-of-the-chief-ministers-order#comments</comments><guid isPermaLink="false">49954be8-317f-45a4-940f-5815e97aab6d</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:42:50 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:42:50.912Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Virudhunagar,விருதுநகர்,தவெக நிர்வாகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/lqpzv517/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/lqpzv517/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>கடந்த மாதம் பள்ளி மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் தவெக உறுப்பினர்கள் தேவையில்லாமல் ஆய்வு மேற்கொள்ளக்கூடாது. அத்துமீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல் அமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார்.</p><h2>உத்தரவை மீறிய நிர்வாகி</h2><p>இந்த நிலையில், தவெக நிர்வாகியான விக்னேஷ்குமார் இன்று (புதன்கிழமை) விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதியிலுள்ள மாநகராட்சி நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்களில் ஆய்வினை மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டார். இது குறித்த வீடியோ பாடலுடன் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><h2>நடவடிக்கை எடுக்கப்படுமா?</h2><p>கட்சித் தலைமையின் அறிவுறுத்தலுக்கு மாறாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுதொடர்பாக கட்சி நிர்வாகம் சார்பில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘காவிரி பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு நிறுவப்படவேண்டும்’ - பழ.நெடுமாறன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-cauvery-valley-authority-must-be-established-pazha-nedumaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-cauvery-valley-authority-must-be-established-pazha-nedumaran#comments</comments><guid isPermaLink="false">ba1c8780-3140-4fe8-a1f6-39b8b0b0c4c9</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:29:21 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:29:21.946Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery,காவிரி,பழ.நெடுமாறன்,Pazha.Nedumaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ugxj8mgi/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/ugxj8mgi/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் தில்லியில் நடைபெற்று, அதையடுத்து காவிரியிலிருந்து தமிழகத்திற்கு “கர்நாடகம் நாளொன்றுக்கு 1 டி.எம்.சி. வீதம் 15 நாட்களுக்கு 15 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூடி அதை உறுதி செய்து அவ்வாறே 15 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்கு ஆணைப் பிறப்பித்தது.</p><p>ஏற்கெனவே சூலை 28 ஆம் நாள் கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகத்திற்கு ஆணையிட்டது. அந்த ஆணையை கர்நாடகம் நிறைவேற்ற மறுத்தது.</p><p>இப்போது 15 டி.எம்.சி. தண்ணீரை அளிக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை “அணைகளில் தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்” என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். மேலும், “கர்நாடக விவசாயிகளைப் பாதுகாக்கவே மக்கள் எங்களை ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்துள்ளனர். எந்த காரணத்திற்காகவும் எந்தவொரு விவசாயிக்கும் இன்னல் நேரிட நாங்கள் விடமாட்டோம்” என அறிவித்திருப்பதின் மூலம் தமிழகத்திற்குத் தண்ணீர் தர முன்வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>1974 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் டெல்லியில் தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்சு, கேரள முதல்வர் அச்சுதமேனன் ஆகிய மூன்றுபேரும் கூடிப் பேசி காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு ஏற்படுத்தும் யோசனையை ஒப்புக்கொண்டார்கள். ஆனால், அந்த அமைப்பு அமைக்கப்படுவதற்கு முன்னரே இந்திய அரசு தானே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக கூறியதால், முதல்வர்களிடையே கொள்கையளவு உடன்பாட்டுடன் இந்தப்பேச்சுகள் நின்றன. அதன்பிறகு இந்திய அரசு காலம் கடத்தியதே தவிர, காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க முன்வரவில்லை. தொடர்ந்து வந்த பிரதமர்களும் அவ்வாறே செய்தனர். பிரதமராக பி.வி. நரசிம்மராவ் இருந்தபோது, மூன்று மாநில முதல்வர்களும் ஒப்புக்கொண்டபடி, காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை அமைக்காமல் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என எந்த அதிகாரமும் இல்லாத அமைப்புகளை நிறுவி பிரச்சனையை நீர்த்துப்போக வைத்தார்.</p><p>காவிரி பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு அமைக்கப்பட்டால் அதனுடைய முழு கட்டுப்பாட்டில் காவிரி தொடர்பாக இந்த மூன்று மாநிலங்களிலும் உள்ள அணைகள் பாசனக் கால்வாய்கள் அனைத்தும் அதன் அதிகார வரம்பிற்குள் சென்றுவிடும். எந்த மாநிலத்திற்கும் அணைகளின் நீரைத் திறந்துவிடுவதோ அல்லது மூடுவதோ அனைத்தும் அதனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். அணையில் நீர் இல்லை நாங்கள் என்ன செய்வது? என்று கர்நாடகம் நாடகம் ஆடுவதுபோன்ற செயல்கள் நடைபெற முடியாது. அனைத்து அதிகாரமும் படைத்த அமைப்பாக அது விளங்கும்.</p><p>காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் மதிக்க மறுக்கும்போது, யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. தமிழகம் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் கதவைத் தட்டவேண்டிய நிலைமையில்தான் இருக்கிறது. காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை நிறுவினாலொழிய காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும். இல்லாவிட்டால் அதுவரை தமிழகம் காவிரியில் பெருகிவரும் வெள்ள நீரைத் தவிர தனக்கு உரிமையான நீரை உரிய காலத்தில் பெறவே முடியாது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>3 மாதத்தில் திருமணம்: பைக்கில் தந்தையுடன் சென்ற இளம்பெண் லாரி மோதி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-to-marry-in-3-months-dies-after-lorry-hits-bike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-to-marry-in-3-months-dies-after-lorry-hits-bike#comments</comments><guid isPermaLink="false">1db86aca-d252-4058-af61-77a93bb3219f</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:28:09 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:28:09.509Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,இளம்பெண்,Marriage,bike,பைக்,லாரி,Father,தந்தை,tipper lorry,மோதி பலி,young woman killed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/guttuhbv/bride-death.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ இளம்பெண் லாரி மோதி பலி]]></media:title><media:description type="html"><![CDATA[ 3 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த இளம்பெண், தந்தையுடன் பைக்கில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் பலியானார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/guttuhbv/bride-death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர், </p><p>3 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த இளம்பெண், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">தந்தையுடன்</a> பைக்கில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் பலியானார். </p><h2> திருமண ஏற்பாடு</h2><p>சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் திருநிறைச்செல்வி. இவருக்கு ஏற்கனவே திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த 3 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. </p> <h2>ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி</h2><p>இந்த நிலையில், மகேந்திரனுக்கு உடல் நலம் சரியில்லாததால், இன்று மகள் திருநிறைச்செல்வியை பைக்கில் அழைத்துக்கொண்டு, ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.</p><h2>லாரி பைக் மீது மோதியது</h2><p>பின்னர், திருவொற்றியூர் - எண்ணூர் விரைவுச் சாலையில் பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். கடற்கரை ஒட்டிய இந்த சாலையில் பைக் வந்தபோது, எல்லையம்மன் கோவில் அருகே, அதிவேகமாக வந்த சரக்கு<a href="https://www.dailythanthi.com/topic/lorry-wheel"> லாரி பைக்</a> மீது கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக மோதியது. இதில், இருவரும் கீழே விழுந்தனர். பைக்கில் பின்புறமாக இருந்த திருநிறைச்செல்வியின் தலையில் லாரியின் டயர் ஏறியது. சம்பவ இடத்திலேயே அவர் தலை தசுங்கி இறந்தார். </p><h2>தந்தை கதறி அழுதார்</h2><p>மகேந்திரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தனது கண்முன்னே மகள் இறந்து கிடப்பதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். அது பார்ப்போரை கண்கலங்க செய்தது. விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர். திருநிறைச்செல்வியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். </p> <h2>திருமண கணவு</h2><p>உயிரிழந்த திருநிறைச்செல்விக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தத்திற்கும், 3 மாதம் கழித்து திருமணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். திருமணக் கனவோடு இருந்த இளம்பெண், இப்படி தந்தை கண்முன்னே விபத்தில் சிக்கி பலியான சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>
எம்.ஜி.ஆர். பாடலை பாடி முதல்-அமைச்சர் விஜய்யை புகழ்ந்த நிதி அமைச்சர் மரிய வில்சன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/finance-minister-maria-wilson-praised-chief-minister-vijay-by-singing-an-mgr-song</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/finance-minister-maria-wilson-praised-chief-minister-vijay-by-singing-an-mgr-song#comments</comments><guid isPermaLink="false">2d963799-7f2c-45a2-92fc-c7165381b737</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:34:04 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:34:04.793Z</atom:updated><atom:author><atom:name>Irudaya Raja</atom:name><atom:uri>/api/author/2562829</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamil Nadu Assembly,தமிழக சட்டசபை,எம்ஜிஆர்,பட்ஜெட் கூட்டத்தொடர்,maria wilson,குட்டிக்கதை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8c02jho3/mariya-vilsan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் - மரிய வில்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன், முதல்-அமைச்சரை பாராட்டி பேசினார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-12/8c02jho3/mariya-vilsan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,</p><p>பாடல், கவிதை, குட்டிக்கதையை மேற்கோள் காட்டி முதல்-அமைச்சர் விஜய்யை நிதி அமைச்சர் மரிய வில்சன் பாராட்டி பேசினார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D"> பட்ஜெட் மீதான விவாதம் </a>நடைபெற்றது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானத்தை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> முன்மொழிந்தார்.</p><h2><strong>குட்டிக் கதை</strong></h2><p>இந்த விவாதத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் மரிய வில்சன்</a> பேசுகையில், குட்டிக்கதை கூறினார். ‘இன்று ஒரு கதை சொல்லி ஆரம்ப்பிக்க போகிறேன், தலைவர் அவர்களைப்போல் குட்டிக்கதை  வாராது என்று கதையை கூற ஆரம்பித்தார்.. </p><p>“அடுத்து யார் தேசத்தை ஆள போகிறார்” என்கிற போட்டியை ஒரு பெரியவர் வைத்தார். அதில் கலந்துக்கொள்ள இளைஞர்கள் வந்தனர். அந்த பெரியவர் அனைவருக்கும் விதை ஒன்று கொடுத்து, மூன்று மாதம் கழித்து இந்த விதையை நன்கு முளைக்க வைத்து வளர்த்து வரும்படி அனுப்பி வைத்துள்ளார். மூன்று மாதம் கழித்து, அந்த விதையை முளைக்க வைத்து வளர்த்து அனைவரும் கொண்டு வந்தனர். அதில் ஒருவர் மட்டும் அந்த விதையை அப்டியே கொண்டு வந்தார். பெரியவர் உடனே இவர் தான் இந்த போட்டியின் வெற்றியாளர் என்று அறிவித்தார். </p><p>அனைவரும் ஏன் என்று கேள்வி எழுப்பவே, நான் கொடுத்த விதை வேகவைத்தது, அது ஒருநாளும் முளைக்காது. வெற்றி அடையும் என்கிற நோக்கில் குறுக்கு வழியில் செல்லாமல் அந்த விதையை அவ்வாறே கொண்டு வந்ததால் அவரே வெற்றியாளர் என்றார். வெற்றிபெற பொய் சொல்லாமல் குறுக்கு வழியை கடைப்பிடிக்காமல் நேர்மையாக இருந்தால் எல்லாம் இங்கு சாத்தியம் என்பதற்கு எங்க தலைவரே (முதல் அமைச்சர் - விஜய்) சாட்சி’ என்று நிதி அமைச்சர் தனது குட்டிக்கதையை முடித்தார்.</p><h2>கவிதை</h2><p>அதன்பின் தொடர்ந்து பேசிய அவர், முதல் அமைச்சர் அவர்கள் எப்பவும் <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D">எம்ஜிஆர்</a>-ஐ  மறுபதிப்பு செய்வார், அவ்வாறு அவர் ஸ்ரீபெரும்பதூரில்- அவரே சொல்லி இருப்பார். அதை இங்கே ஒரு கவிதையாக (qoute) சொல்கிறேன், உங்கள் அனுமதியோடு, என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டு பேச்சை தொடர்ந்தார்.</p><p>“மர்மயோகி என்ற படத்தில் எம்ஜிஆரின் பெயர் கரிகாலன், அதில் தலைவர் அழகாக சொல்லியிருப்பார். குறிவைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்கமாட்டேன்” அதை திரும்பவும் நிகழ்த்தி சாதித்து காட்டியது நமது தலைவர் தான், என்று கவிதையை முடித்தார்.</p><h2><strong>பாட்டு</strong></h2><p>ஒரு கதை சொல்லியாச்சு, ஒரு கவிதை சொல்லியாச்சி, இன்னும் ஒரு பாட்டு மட்டும் பாடிக்கொள்கிறேன், புரட்சி தலைவர் நினைவாக எதிர்க்கட்சியை பார்த்து, என்று கூறி அந்த பாடலை பாடினார். </p><p> “கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்,</p><p>    கடமை இருந்தால் வீரன் ஆகலாம்,</p><p>    பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்,</p><p>    மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்”</p><p>என்று முதல் அமைச்சர் விஜய்-ஐ கைகாட்டி பாடி முடித்தார். </p> <p>இந்த பாராட்டு மழையில் நனைந்த முதல்-அமைச்சர் தலையை குனிந்தவாறு சிரித்தார். </p><p>அதன்பின் தொடர்ந்து பேசிய மரிய வில்சன், “எங்கள் அண்ணன், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களை பற்றி எம்ஜிஆர் பாடியதற்கு ரொம்ப சந்தோஷம், அப்பவே சொல்லிட்டாருனு நினைக்கிறேன்” என்று கூறி தனது உரையை முடித்தார். அப்போது தவெக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.</p>]]></content:encoded></item></channel></rss>