<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 19 Sep 2026 08:29:35 +0000</lastBuildDate><item><title>சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர கொசு ஒழிப்பு பணி: மாநகராட்சி கமிஷனர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/intensive-mosquito-eradication-work-at-anna-university-campus-in-chennai-corporation-commissioner-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/intensive-mosquito-eradication-work-at-anna-university-campus-in-chennai-corporation-commissioner-inspects#comments</comments><guid isPermaLink="false">da48952a-5334-4e3c-ab78-73179f132b0c</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:29:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:29:33.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,inspection,Anna University,அண்ணா பல்கலைக்கழகம்,Mosquito,Corporation Commissioner,control,சுகாதார பணி,கொசு ஒழிப்பு பணி,மாநகராட்சி கமிஷனர் ஆய்வு,Health work</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/8azjwubn/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர கொசு ஒழிப்பு பணி: மாநகராட்சி கமிஷனர் ஆய்வு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/8azjwubn/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> கிண்டி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அண்ணா பல்கலைக்கழக</a> வளாகத்தில் தேங்கிய குப்பைக் கழிவுகளை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். </p><h2>கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு</h2><p>பெருநகர சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">மாநகராட்சி கமிஷனர்</a> டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இன்று (19.9.2026) கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர சுகாதாரப் பணிகளையும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கொசு ஒழிப்பு</a> நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். </p><h2>சுகாதார பணியில் 100 பணியாளர்கள்</h2><p>அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேங்கிய குப்பைக் கழிவுகளை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுகாதாரப் பணிகளில்</a> 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். </p><h2>மாணவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்</h2><p>இந்த நடவடிக்கைகளை மாநகராட்சி கமிஷனர் சமீரன் ஆய்வு செய்து, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தோட்டக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்திடவும், கொசுப்புழுக்கள் உருவாவதைத் தடுக்கும் விதத்தில் தண்ணீர் தேங்காமல் அகற்றிடவும், கொசு ஒழிப்பு புகை பரப்பும் பணியினை மேற்கொள்ளவும், மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சிகிச்சைகளை சிறப்பாக வழங்கிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். </p><p>மேலும், சென்னையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இதுபோன்ற சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அலுவலர்கள் தொடர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு </a>மேற்கொண்டு இந்த நடவடிக்கைகளை கண்காணித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். </p><p>இந்த ஆய்வின்போது அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன், மாநகர நல அலுவலர் டாக்டர் ஜெகதீசன், இணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் செந்தில்குமார், தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் டாக்டர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். </p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் பரப்புரைக்காக தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/40-star-speakers-announced-by-thaveka-for-by-election-campaigning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/40-star-speakers-announced-by-thaveka-for-by-election-campaigning#comments</comments><guid isPermaLink="false">76f1fa03-98db-423b-b92f-8979ebb5d189</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:15:01 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:15:01.701Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,இடைத்தேர்தல்,by-elections</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/dnz532lm/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/dnz532lm/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தா மன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள் ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. அதேபோல, தாராபுரம் தொகுதியில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.  </p>  <p>இன்று (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். எனவே இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், இனி பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த நிலையில், இடைத்தேர்தல் பரப்புரைக்காக தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, காதர் மொய்தீர் உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.</p>  ]]></content:encoded></item><item><title>மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா: நிலம் எடுப்பு அறிவிப்பை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசு: சி.பி.ஐ. வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/melma-sipcot-industrial-park-tamil-nadu-government-withdraws-land-acquisition-notification-cpi-welcomes-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/melma-sipcot-industrial-park-tamil-nadu-government-withdraws-land-acquisition-notification-cpi-welcomes-the-move#comments</comments><guid isPermaLink="false">ae8d65a0-36a5-4cbc-bef6-6014a29c8c36</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:10:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:10:33.517Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,தமிழகம்,சி.பி.ஐ.,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,CPI,சிப்காட் தொழில் பூங்கா,Tamilnadu government,Communist Party,நிலம் கையகப்படுத்துதல்,Sipcot</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zn9m9rwe/mum.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zn9m9rwe/mum.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>செய்யாறு மேல்மா கிராமத்தில் தொழிற் பூங்காவிற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) வரவேற்பு தெரிவித்துள்ளது</p><h2>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</h2><p>திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் செய்யாறு தொழிற்பூங்கா 3வது நிலை விரிவாக்கத்திற்காக, மேல்மா உள்பட 11 கிராமத்தில் சிப்காட் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பு திரும்பப்பெறுவதாக சிப்காட் மேலாண் இயக்குநர் அறிவித்தார். </p><p>இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன் </a>வரவேற்பு தெரிவித்துள்ளார்.</p><h2>தமிழ்நாடு அரசு</h2><p>இதுதொடபாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. </p><p>திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா நிலை-3 விரிவாக்க திட்டத்திற்காக, 22.16 ஹெக்டேர் (சுமார் 54 ஏக்கர்) புன்செய் நிலங்களை கையகப்படுத்த கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டத்தின் கீழ் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.</p><p>விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து பல்வேறு  போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த நில எடுப்பு அறிவிக்கையை VI(1)/443(d-6)2026 திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.</p><p>அதே வேளையில், போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விரைந்து டெங்குவை ஒழிக்க தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-take-initiative-to-eradicate-dengue-quickly-ereaswaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-take-initiative-to-eradicate-dengue-quickly-ereaswaran#comments</comments><guid isPermaLink="false">e1f1c7a9-2ca9-46cc-9e11-1865f6dd7a95</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:49:36 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:49:36.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,நடவடிக்கை,Dengue,தமிழக அரசு,report,அறிக்கை,eradication,டெங்கு ஒழிப்பு,Tamil Nadu government action,ஈ.ஆர்.ஈஸ்வரன்,E.R.Eswaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ionxyq86/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ionxyq86/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சுகாதார பணியாளர்களை முடுக்கிவிட்டு விரைந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">டெங்கு</a>வை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஒழிக்க</a> தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். </p><h2>டெங்குவால் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு</h2><p>கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">ஈ.ஆர்.ஈஸ்வரன்</a> வெளியிட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">அறிக்கை</a>யில் கூறியிருப்பதாவது: </p><p>தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிதீவிரமாக பரவி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்களோடு சேர்த்து 12 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். </p><h2>கொசு ஒழிப்பு பணிகள்</h2><p>டெங்கு பரவலை தடுக்க தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், விழிப்புணர்வும் குறைவாக உள்ளதாகவே கருதுகிறேன். வருமுன் காப்பதே நோய் வராமல் காப்பதின் சாராம்சம் என்பதனை உணர வேண்டும். தமிழக அரசு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">டெங்கு பாதிப்பை</a> தடுக்க கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். </p><h2>விரைந்து டெங்குவை ஒழிக்க நடவடிக்கை</h2><p>சாதாரண காய்ச்சலும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சளி, இருமல், உடல் சோர்வு ஆகியவையும் பொதுமக்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. சென்னையில் பரவியுள்ள டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பிற பகுதியில் அதிக அளவில் பரவுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம். அனைத்து மாவட்ட தாலுகா மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">நடவடிக்கை </a>எடுப்பதுடன் சுகாதார பணியாளர்களை முடுக்கிவிட்டு விரைந்து டெங்குவை ஒழிக்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழக அரசு</a> முனைப்பு காட்ட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/improvement-in-the-health-condition-of-kolathur-mla-vs-babu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/improvement-in-the-health-condition-of-kolathur-mla-vs-babu#comments</comments><guid isPermaLink="false">c6fe4430-cf46-4b97-b7c6-8c1a9a8e73cd</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:41:22 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:41:22.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>MLA,கொளத்தூர்,Kolathur,வி.எஸ்.பாபு,V.S. Babu MLA</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9o611qoe/vs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எம்எல்ஏ வி.எஸ்.பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9o611qoe/vs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81">வி.எஸ்.பாபு</a> உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>தீவிர சிகிச்சை</h2><p>கடந்த செப்டம்பர் 9-ம் தேதி வி.எஸ்.பாபுவுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அன்றைய தினமே அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>உடல்நிலையில் முன்னேற்றம்</h2><p>இந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>அதில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க கோருவது ஏற்புடையதல்ல: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/handing-over-the-airport-to-the-private-sector-is-unacceptable-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/handing-over-the-airport-to-the-private-sector-is-unacceptable-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">bc1c1789-00cc-4689-9f04-0086fc448694</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:37:29 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:37:29.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Chennai Airport,சென்னை விமான நிலையம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/i127meqj/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/i127meqj/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.</p> <p>சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.</p><p>பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும் என்பதோடு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.</p><p>எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் &quot;காற்றில் பறக்கும் சட்டம் ஒழுங்கு&quot; - உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/law-and-order-in-tamil-nadu-is-blowing-in-the-wind-udhayanidhi-stalins-scathing-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/law-and-order-in-tamil-nadu-is-blowing-in-the-wind-udhayanidhi-stalins-scathing-criticism#comments</comments><guid isPermaLink="false">4cae60a4-53e7-4ccd-9a27-1bf33d3f010b</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:31:40 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:31:40.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சிவகங்கை,Sivagangai,double murder,இரட்டை கொலை,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9subdm4m/dmk.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9subdm4m/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சிவகங்கை இரட்டைக் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/udhayanidhi-stalin">உதயநிதி ஸ்டாலின்</a> வலியுறுத்தி உள்ளார். </p><h2>சட்டம் ஒழுங்கு</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>Dummy முதல்-அமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. </p><p>ராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும்  இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.</p><p>காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?</p><p>‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><h2>இரட்டைக்கொலை</h2><p>அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன். </p><p>இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கோவையில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-flight-service-from-coimbatore-to-bengaluru</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-flight-service-from-coimbatore-to-bengaluru#comments</comments><guid isPermaLink="false">50726578-4a6c-4461-a6df-3e4b39bca995</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:14:42 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:14:42.028Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Air service,விமான சேவை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pw37sn9k/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pw37sn9k/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவையில் இருந்து பெங்களூருவுக்கு அடுத்த மாதம் 25-ந் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்குகிறது.</p><h2>கோவை விமான நிலையம்</h2><p>கோவையில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கி ருந்து சென்னை. பெங்களூரு, புதுடெல்லி, மும்பை உள்பட உள்நாட்டு நகரங்களுக்கும், சார்ஜா, அபுதாபி, துபாய் உள்பட வெளிநாட்டு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கடந்த 1-ந் தேதி முதல் கோவை-மும்பை இடையே தினந்தோறும் 2 புதிய விமான சேவையை தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவை-பெங்களூரு இடையே தினமும் 2 முறை விமானங்களை இயக்க உள்ளது. அதன்படி கோவையில் காலை 9.10 மணிக்கு புறப்படும் விமானம் பெங்களூரு விமான நிலையத்தை காலை 10.05 மணிக்கு சென்றடையும். இதுபோன்று இரவு 9.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் மற்றொரு விமானம் இரவு 10.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.</p> <p>மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.25 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வந்து சேரும். இதுபோன்று இரவு 7.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப் படும் மற்றொரு விமானம் இரவு 8.15 மணிக்கு கோவையை வந்தடையும். இந்த புதிய விமான சேவை முதற்கட்டமாக அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந் தேதி முதல் தொடங்கும் என்றும், அதன்பின்னர் நவம்பர் 1-ந் தேதி முதல் முழுமையான விமான சேவையாக இயக்கப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.</p><p>இதன் மூலம் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இயக் கும் கோவை-பெங்களூரு இடையேயான விமான சேவைகளின் எண்ணிக்கை தினமும் 5 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>மலேசியாவில் படிக்கும் மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-2395-lakh-released-for-bharathidasan-a-student-studying-in-malaysia</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-2395-lakh-released-for-bharathidasan-a-student-studying-in-malaysia#comments</comments><guid isPermaLink="false">3d1ed304-4ed5-44f9-b5d8-496558eb7795</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:06:35 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:06:35.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Malaysia,மலேசியா,தமிழகம்,தமிழ்நாடு அரசு,Medical student,மருத்துவ மாணவர்,கல்வி நிதி,Tamilnadu government,education fund</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zurcu14s/j-ker.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zurcu14s/j-ker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மலேசியாவில் படிக்கும் மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. </p><h2>ஆராய்ச்சி படிப்பு</h2><p>அண்ணல் அம்பேத்கர் உயர் கல்வித் திட்டத்தின்கீழ், மலேசியாவில் திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பாரதிதாசன்.</p><p>இவர் சில மாதங்களுக்கு முன்பு, தனக்கு அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின்கீழ் கிடைக்கக் கூடிய நிதி வரவில்லை. ஆகையால், சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் இருந்த கடன் பெற்று தன்னுடைய ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்து வருவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.</p><h2>விமர்சனம்</h2><p>இந்த வீடியோ தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகையால், இந்த விவகாரம் ஆளும்கட்சியான தவெக மீதான விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. அதேசமயம், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அரசு தரப்பில் அவ்வப்போது விளக்கம் அளித்து வருகிறார்.</p><p>அந்த வகையில், மாணவன் பாரதிதாசனின் இரண்டாம் ஆண்டு படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது தொடர்பாக சமூக நீதித்துறை நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) மீண்டும் விளக்கம் அளித்திருந்தது.</p><h2>கல்விக் கட்டணம்</h2><p>இந்த சூழலில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந் திப்பில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “வெளிநாட்டில் படிக்கும் மாணவர் பாரதிதாசன் விவகாரம் குறித்து துறை ரீதியாக நேற்று முழு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவரின் படிப்புக்கு தமிழ்நாடு அரசு முழு உதவி செய்யும். மூளை திசுக்கள் தொடர்பான பி.எச்.டி. ஆராய்ச்சியை தமிழ்நாட்டிலேயே அவர் மட்டுமே மேற்கொள்கிறார். அவர், படித்து முடித்து வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.</p><p>இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.6 லட்சம், வாழ்வாதார தொகை ரூ.6 லட்சம் அனுப்பப்பட்டு விட்டது. ஆராய்ச்சி பொருட்களுக்கான தொகை கேட்டுள்ளார். அதுவும் ஓரிரு நாட்களில் அவரை சென்றடையும். இதில் அரசியல் செய்ய வேண்டாம். கடந்த தி.மு.க. ஆட்சியில் அயோத்திதாசர் வெளிநாட்டுக்கல்வி உதவித் திட்டத்தில் 609 பேர் விண்ணப்பித்ததில் 601 பேர் தகுதி பெற்றும் 181 பேருக்கு மட்டுமே ரூ.84.89 கோடி வழங்கப்பட்டது. நாங்கள் இந்த ஆண்டு 437 விண்ணப்பங்களில் 365 பேருக்கு ரூ.131 கோடி ஒதுக்கியுள்ளோம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு யு.ஜி. மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.4,750-ல் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், பி.எச்.டி. மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தியுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.</p><h2>சமூக நீதித் துறை</h2><p>இந்நிலையில் மலேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு பயின்று வரும் மாணவர் பாரதிதாசனுக்கு அயலக கல்வி உதவித்தொகையாக ரூ.23.95 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கல்விக்காக ஏற்கனவே ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. </p><p>தனக்கான கல்வி நிதி விடுவிக்கப்படவில்லை என மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தமிழக அரசின் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக சமூக நீதித் துறை தகவல் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பட்டப்பகலில் பயங்கரம்... நடுரோட்டில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-broad-daylight-a-mysterious-gang-hacked-and-killed-a-rowdy-in-the-middle-of-the-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-broad-daylight-a-mysterious-gang-hacked-and-killed-a-rowdy-in-the-middle-of-the-road#comments</comments><guid isPermaLink="false">a9493422-e9e8-470f-aba9-a0be327553bc</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:03:44 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:03:44.869Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,murder,கொலை,Rowdy,ரவுடி,Pudhucherry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pk49c1u2/12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pk49c1u2/12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி,</p><p>பட்டப்பகலில் ரவுடியை ஓட ஓட வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>ரவுடி வெட்டி கொலை</h2><p>புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). இவர் மீது 2 கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், பிறந்தநாள் தினமான நேற்று ஆனந்த் கருவடிக்குப்பம் சிவாஜி சிலை மற்றும் கிருஷ்ணா நகர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து 5 பைக்கில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆனந்தின் பைக்கை இடித்து அவரை கீழே தள்ளியது.</p><p>பின்னர் கீழே விழுந்த ஆனந்தை அந்த கும்பல் சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் படுகாயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லாஸ்பேட்டை போலீசார், ஆனந்தின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி <a href="https://www.dailythanthi.com/topic/மருத்துவமனை">மருத்துவமனைக்கு</a> அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>மேலும், கடந்த ஆண்டு புதுச்சேரி நவீனா கார்டன் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரமுகர் விக்கி கொலை வழக்கில் ஆனந்த் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக தெரிகிறது . இதனால் அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆனந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்</a> தப்பிச் சென்ற மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கருவடிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கண்டெய்னர் லாரி மீது காய்கறி லாரி மோதி விபத்து: உரிமையாளர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vegetable-truck-collides-with-container-truck-in-accident-owner-dies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vegetable-truck-collides-with-container-truck-in-accident-owner-dies#comments</comments><guid isPermaLink="false">8a8e4d53-9cb0-4cc5-8c45-4ba05b658d4b</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:51:38 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:51:38.282Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,காய்கறி,Death,lorry,உயிரிழப்பு,லாரி,உரிமையாளர்,owner,பாளையங்கோட்டை,container lorry,கண்டெய்னர் லாரி,Palayankottai,vegetable</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/3p7genfc/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கண்டெய்னர் லாரி மீது காய்கறி லாரி மோதி விபத்து.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/3p7genfc/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பாளையங்கோட்டை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88">பாளையங்கோட்டை</a> அருகே நான்குவழிச் சாலையில் கண்டெய்னர் லாரி மீது காய்கறி லாரி மோதிய கோர விபத்தில், லாரியின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><h2>காய்கறி லாரி</h2><p>மதுரையிலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">மினி லாரி</a> ஒன்று, இன்று அதிகாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் கலைக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். லாரியின் முன்பக்க இடதுபுற இருக்கையில் லாரியின் உரிமையாளரான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் காசிலிங்கம் (வயது 56) அமர்ந்திருந்தார். </p><h2>கண்டெய்னர் லாரி</h2><p>பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதி நான்கு வழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, முன்னர் சென்று கொண்டிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">கண்டெய்னர் லாரி</a>யின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக காய்கறி லாரி பலமாக மோதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்து</a>க்குள்ளானது.</p><h2>விபத்தில் லாரி உரிமையாளர் உயிரிழப்பு</h2><p>இந்த கோர விபத்தில் லாரியின் இடதுபக்கம் பலத்த சேதமடைந்ததில், அங்கு அமர்ந்திருந்த லாரி உரிமையாளர் காசிலிங்கம் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. ஓட்டுநர் கலைக்குமார் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை மீட்புப் படையினர் மற்றும் போலீசார், லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த காசிலிங்கத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செவிலியர் நியமனத்தில் ஒப்பந்த முறையை கைவிடுக: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandon-contract-system-in-recruitment-of-nurses-stbi-urges-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandon-contract-system-in-recruitment-of-nurses-stbi-urges-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">39e340c0-a40f-4221-bc87-63b0bf0f5b02</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:36:36 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:36:36.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,recruitment,வலியுறுத்தல்,ஆசிரியர்கள்,நியமனம்,செவிலியர்,SDPI Party,எஸ்டிபிஐ கட்சி,nurs</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/botyauqu/368.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்டிபிஐ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/botyauqu/368.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>லட்சக்கணக்கான இளைஞர்களின் நிரந்தர அரசுப் பணிக் கனவைச் சிதைக்கும் அரசாணைகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ</a> கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>செவிலியர் கல்லூரிகள்</h2><p>தேர்தல் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணாக, படித்த இளைஞர்களின் நிரந்தர அரசு வேலைவாய்ப்புக் கனவுகளைச் சிதைத்து, உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.</p><p>சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் ‘7 புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்’ என அறிவித்துவிட்டு, கடந்த செப்டம்பர் 16 அன்று வெளியிடப்பட்ட அரசாணை (எண்: 261) மூலம் அரசு தனது பொறுப்பை அடியோடு கைகழுவியுள்ளது ஏற்புடையதல்ல. நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமையவுள்ள புதிய அரசு செவிலியர் கல்லூரிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யாது என்றும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமே ரூ.270.27 கோடியைத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்திருப்பது பெரும் நிர்வாகச் சீர்கேடாகும். பல்கலைகழகம் அந்த நிதியை எந்த வகையில் திரட்டும் என்கிற கேள்வி எழுகிறது. அந்த நிதி திரட்டலுக்கு மாணவர்கள் கட்டண உயர்வு மூலம் பலிகடா ஆக்கப்படுவார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.</p><p>மேலும், இக்கல்லூரிகளுக்குத் தேவைப்படும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவர் என்றும், அவர்களுக்கு நிரந்தரப் பணியிடங்களோ ஓய்வூதியப் பலன்களோ கிடையாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பது ஏற்க முடியாத ஒன்று.</p><h2>அரசாணை</h2><p>அதேபோன்று, செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட அரசாணை (எண்: 258) மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களில் ஒரு சதவீதத்தினரை மட்டுமே (4,724), அதுவும் சொற்ப ஊதியத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.</p><p>"ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உயர்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகளில் ஒப்பந்த முறையைத் திணிப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.</p><p>கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல அரசே ஒப்பந்த முறையைப் புகுத்தி உழைப்பைச் சுரண்டினால், தனியார் துறையின் தொழிலாளர் உரிமை மீறல்களை அரசு எவ்வாறு தட்டிக்கேட்க முடியும்? இத்தகைய கொள்கைகளால் அரசு மருத்துவக் கட்டமைப்பு சீர்குலையும் சூழலே உருவாகும்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் செப்டம்பர் 11 மற்றும் செப்டம்பர் 16 ஆகிய தேதிகளின் அரசாணைகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். புதிய செவிலியர் கல்லூரிகளுக்குத் தேவையான முழு நிதியையும் அரசே ஏற்றுக்கொண்டு, செவிலியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தரப் பணிகளாக உடனே நிரப்ப வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ </a>கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தை  தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுக: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandon-the-move-to-privatize-chennai-airport-cpi-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/abandon-the-move-to-privatize-chennai-airport-cpi-urges#comments</comments><guid isPermaLink="false">17506441-4fd5-45e0-a961-c4d41756cf27</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:34:37 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:34:37.960Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,Chennai Airport,சென்னை விமான நிலையம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/xmhkin0w/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/xmhkin0w/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>சென்னை விமான நிலையத்தை  தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி பின்வருமாறு;</p><p>”சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (கிகிமி) இடத்தில் வேறு ஒரு இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது, சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முயற்சியாகும். இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.</p><p>சென்னை விமான நிலையம் ஒரு சாதாரண வணிக நிறுவனம் அல்ல. அது தனிநபர் சொத்தல்ல, மக்களின் பொதுச்சொத்தாகும். நாட்டின் முக்கியமான பொது உள்கட்டமைப்பாகும். தமிழ்நாட்டின் தொழில், வர்த்தகம், சுற்றுலா மற்றும் சரக்கு போக்குவரத்தின் முக்கியமான பங்களிப்பை அது செலுத்துகிறது.</p> <p>சென்னை விமான நிலையத்தில் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். பயணிகள் சேவை, விமான இயக்கம், சரக்கு கையாளுதல், சாலை இணைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும். அதைவிடுத்து, விமான நிலையத்தை&nbsp;&nbsp;தனியார்மயமாக்குதல் அதற்கு தீர்வல்ல.</p><p>கிகிமி நாடு முழுவதும் விமான நிலையங்களை இயக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க வருவாயும் லாபமும் ஈட்டி வருகிறது. 2025-26 நிதியாண்டில் கிகிமி-யின் நிகர லாபம் ரூ.6,522 கோடியாக இருந்ததாக அதன் நிதிநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சென்னை விமான நிலையமும் 2024-25ல் கிகிமி நிர்வகிக்கும் விமான நிலையங்களில் அதிக லாபம் ஈட்டிய விமான நிலையங்களில் இரண்டாவது இடத்தில் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன் லாபம் சுமார் ரூ.492.48 கோடி என தரவுகள் காட்டுகின்றன.</p><p>அப்படியிருக்க, லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனமான&nbsp;சென்னை விமான நிலையத்தை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது அவசியமற்றது. பொதுமக்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட, சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பால் கிடைக்கும் வருவாயும், லாபமும் அரசின் பொதுவளமாகத் தொடர வேண்டும். தனியார் நிறுவனத்தின் லாபமாக மாற்றப்படக் கூடாது.</p><p>சென்னை விமான நிலையம் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி பொருளாதாரத்திற்கு முக்கியமான&nbsp;சரக்கு போக்குவரத்து மையமாகும்.</p><p>கிகிமி-யின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, சென்னை விமான நிலைய சரக்கு முனையம் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் சரக்கு இடமாற்றங்களை கையாள்கிறது. தற்போது சரக்கு முனையத்தில் நெரிசலைக் குறைக்க 19.06 ஏக்கர் நிலத்தை ரூ.278 கோடிக்கு கிகிமி பெறும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் சரக்கு அனுப்பும் முகவர்கள் எதிர்கொள்ளும் தாமதங்களைத் தீர்ப்பதே இதன் நோக்கம். மேலும், சென்னை விமான நிலையத்தின் சரக்கு இயக்கத்தை மேம்படுத்த 5.2 கி.மீ சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. பயணிகள் விமானங்களில் கொண்டு செல்லப்படும் சரக்கு ஏற்றுமதி சென்னை விமானச் சரக்குப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><p>எனவே, விமான நிலையத்தை, தனியார் லாப நோக்கில் இயக்குவது என்பது,&nbsp;பயணிகள் சேவை தொடர்பான பிரச்சினை மட்டும் அல்ல. அது,&nbsp;&nbsp;தமிழ்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் வளர்ச்சி மற்றும் சரக்கு விநியோகச் சங்கிலியுடனும் தொடர்புடைய பிரச்சினையாகும்.</p><p>பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள&nbsp;&nbsp;நிலையில், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தி ஐந்தாவது முனையத்தை (ஜிமீக்ஷீனீவீஸீணீறீ-5) அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தப் பயணிகள் கையாளும் திறனை ஆண்டு தோறும் 5.5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் 5 வது முனையம் திட்டம் இன்னும் ஆரம்பக் கருத்தாக்க நிலையிலேயே இருப்பதாகவும், முழுமையான தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கிகிமி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>பொதுத்துறை திட்டமிடப்பட்டு, பொதுமுதலீடு செய்யப்பட்டு, உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அதன் பலனை தனியார் லாபத்திற்கு விடுவது தேசவிரோதச் செயலாகும். பரந்தூரில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அது வரவேற்கத்தக்கது.</p> <p>ஆனால் விவசாய நிலத்தைப் பாதுகாப்பது மட்டும் பொதுநலன் அல்ல. மாறாக,&nbsp;&nbsp;பொதுச்சொத்து, பொதுத்துறை நிறுவனங்கள், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அரசின் வருவாயையும் பாதுகாப்பதே பொதுநலனாகும். தமிழ்நாட்டிற்கு நவீன விமான நிலையம் வேண்டும். பயணிகளுக்கு உலகத்தரமான வசதிகள் வேண்டும். சரக்குப் போக்குவரத்து வேகமாகவும் திறமையாகவும் நடைபெற வேண்டும். விமான நிலையத்தின் திறன் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஆனால் நவீனமயமாக்கலுக்கு தனியார்மயமாக்கல் அவசியம் என்ற வாதத்தை ஏற்க முடியாது.</p><p>கிகிமி-யின் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். தேவையான அதிகாரம், முதலீடு, தொழில்நுட்ப வசதி மற்றும் நிர்வாகத் திறன் வழங்கப்பட வேண்டும்.பொதுச்சொத்தை தனியார் லாபத்திற்காக ஒப்படைப்பது வளர்ச்சி அல்ல. பொதுத்துறை விமான நிலையத்தை வலுப்படுத்துவதே மாற்று வழி. தமிழ்நாடு அரசு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும்.</p><p>சென்னை விமான நிலையத்தை கிகிமி-யின் பொதுத்துறை நிர்வாகத்தின் கீழேயே நவீனப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் , இதன் மூலமே இட ஒதுக்கீட்டுடன் கூடிய வேலைவாய்ப்புகளையும், சமூக நிதியையும் காக்க முடியும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய - மாநில அரசுகளுக்கு &nbsp;&nbsp;வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கல்லால் அடித்துக் கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-bludgeoned-to-death-with-a-stone-near-krishnagiri-cctv-footage-sparks-a-sensation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-bludgeoned-to-death-with-a-stone-near-krishnagiri-cctv-footage-sparks-a-sensation#comments</comments><guid isPermaLink="false">cb5847d8-6e28-406b-bd9e-e808a489ca7a</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:25:17 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:25:17.490Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrest,வாலிபர் கைது,murder,கிருஷ்ணகிரி,டாஸ்மாக் கடை,police enquiry,இளைஞர் அடித்துக் கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/w3eo4kdh/14.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மது- இளைஞரை கல்லால் அடித்து கொல்லும் காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கல்லால் அடித்துக் கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/w3eo4kdh/14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டிலை திரும்பக் கொடுத்துவிட்டு 10 ரூபாய் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கல்லால் அடித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொடூரமாக கொலை </a>செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>காலி பாட்டில் தகராறு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீலகிரி மாவட்டம்</a> ஊட்டி நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 33). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் வேளாண் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அருண்குமார் அவரது நண்பர்களான ஊத்தங்கரை அடுத்த வெங்கடதாம்பட்டியை சேர்ந்த தீபன்ராஜ், இன்பசேகர், மதன் மற்றும் பாரதிராஜா ஆகியோருடன் கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆர். பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார்.</p><p>மது அருந்தி முடித்த பின், காலி பாட்டிலை அங்கிருந்த கடையில் திரும்ப கொடுத்துவிட்டு, அதற்குரிய 10 ரூபாய் பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த கோவிந்தராஜ் (வயது 48) மற்றும் அவரது மகன் கார்த்திக் (வயது 24) ஆகியோருக்கும், அருண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><h2>கல்லால் அடித்து கொலை</h2><p>வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, அருண்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும் ஆத்திரமடங்காத கார்த்திக், சுமார் 50 மீட்டர் தூரம் அருண்குமாரைப் பின்தொடர்ந்து சென்று, அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அருண்குமார், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>வாலிபர் கைது</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிருஷ்ணகிரி போலீசார், அருண்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கொலையாளி கார்த்திக்கை அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கல்லால் அடித்துக்கொலை <a href="https://t.co/u92eDfSks5">https://t.co/u92eDfSks5</a> <a href="https://x.com/hashtag/kirishnagiri?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#kirishnagiri</a> <a href="https://x.com/hashtag/murder?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#murder</a> <a href="https://x.com/hashtag/police?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#police</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2101183550968197209?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>லாட்ஜில் ஒன்றாக தங்கியிருந்த போது பெண்ணை கொன்றது ஏன்..? - கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-he-kill-the-woman-while-staying-together-at-the-lodge-arrested-driver-makes-sensational-confession</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-he-kill-the-woman-while-staying-together-at-the-lodge-arrested-driver-makes-sensational-confession#comments</comments><guid isPermaLink="false">5ea086e4-9978-4d0f-a72a-a9a7a7a5d1e9</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:24:53 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:24:53.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Nagercoil,நாகர்கோவில்,கிரைம் செய்திகள்,பெண் கொலை,வாக்குமூலம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/5zuoctel/kloer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/5zuoctel/kloer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>லாட்ஜில் ஒன்றாக தங்கியிருந்த போது ரூ.20 ஆயிரத்தை அபகரிக்க முயன்றதால் பெண்ணை கொலை செய்ததாக கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள ஆத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் செல்வி (வயது 50). இவர் கடந்த 16-ந் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/கன்னியாகுமரி">கன்னியாகுமரி</a> விவேகானந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியை கொலை செய்த ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த செல்வராஜை (31) கைது செய்தனர். </p><h2>லாட்ஜில் அறை</h2><p>அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-</p><p>நான் சென்னையில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். சவாரி இல்லாத நாட்களில் வெளியூர் செல்வது வழக்கம். அதன்படி கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக வந்தேன். அப்போது வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த செல்வி அறிமுகமானார். அவரை அழைத்து கொண்டு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் வந்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம்.</p><h2>வாக்குவாதம்</h2><p>பின்னர் நான் குளித்து விட்டு வந்த போது என்னிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை செல்வி எடுத்தார். இதைப்பார்த்த நான் பணத்தை கொடுக்கும்படி கேட்டேன். அப்போது அவர், உன்னிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் எனக்கு குறைவாக ரூபாய் தருகிறாய், என்று என்னிடம் வாக்குவாதம் செய்தார். இதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது நான் ஆத்திரத்தில் செல்வியை கீழே தள்ளி தலையணையால் முகத்தை அழுத்தினேன். இதில் மயக்கமடைந்தார்.</p><h2>தனிப்படை போலீசார்</h2><p>இதையடுத்து நான் அவரது கம்மலை பறித்து விட்டு பஸ் மூலம் கோவைக்கு தப்பி சென்றேன். ஆனால், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி என்னை கோவையில் வைத்து கைது செய்தனர். அப்போதுதான் செல்வி இறந்தது தெரியும். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து செல்வராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-plan-to-set-up-a-garbage-incinerator-in-salem-should-be-abandoned-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-plan-to-set-up-a-garbage-incinerator-in-salem-should-be-abandoned-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">f3a08c99-81ff-4e7f-acc0-42fcf5ea78cd</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:03:30 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:03:30.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,சென்னை,சேலம்,Plan,In Salem,திட்டத்தை,Garbage குப்பைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/w9iqzi3a/198.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/w9iqzi3a/198.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சேலத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>குப்பை எரிஉலை திட்டம்</h2><p>சேலம் மாநகரம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 92 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரிஉலை அமைத்து குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா, குப்பை எரியுலை உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி சேலம் மாநகர மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தத்துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடியில் 10 மெகாவாட் திறனுக்கும், நெல்லையில் ரூ.256 கோடியில் 9 மெகாவாட் அளவுக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வெள்ளக்கல்பட்டியில் கொங்கு எஸ்.ஆர்.வி பள்ளிக்கு எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான 92.49 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவு குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது சேலம் மாநகரத்திற்கு பேரழிவை ஏற்படுத்திவிடும்.</p><h2>நச்சுத் துகள்கள்</h2><p>குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன. குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும் என்பதால், அதிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு, பியூரன் உள்ளிட்டவை வெளியாகும். காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10  நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள்  ஆகியவை வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலுடன் கலந்து அழியாமல் நிலைத்திருக்கக் கூடிய மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை.</p><p>மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது குப்பை எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு  டையாக்சின், 3 மடங்கு  நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு  சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகின்றன. இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசு மட்டுமல்லாமல், எரிஉலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் குப்பை எரிஉலைகளால் படிப்படியாக ஏற்படும் ஆபத்து உள்ளது.</p><h2>தவெக அரசு</h2><p>இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்து தான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வடசென்னை கொடுங்கையூர், தென்சென்னை பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம், கோவை வெள்ளலூர் ஆகிய இடங்களில் ஆபத்தான குப்பை எரிஉலை திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, அதன் பங்குக்கு சேலம் ஜாகிர் அம்மாபாளையம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் குப்பை எரிஉலை அமைக்கத் துடித்து வருகிறது.</p><p>சேலம் ஜாகிர் அம்மாபாளையம் குப்பை எரிஉலைத் திட்டம் கூட கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டம் தான். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது முதல் இடம் அடையாளம் காணப்பட்டு, இறுதி செய்யப்பட்டது வரை அனைத்தும் திமுக ஆட்சியில் தான் இறுதி செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக அரசு</a>, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?</p><p>சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும், கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சியில் இருந்தும் திடக்கழிவு குப்பைகள் சாலைவழியாக் கொண்டு வரப்பட்டு சேலம் குப்பை எரிஉலையில் எரிக்கப்படும். இவற்றில் 60 சதவீதம் வரை ஈரக்கழிவுகள் இருப்பதால், அவை கொண்டு வரப்படும் பாதை நெடுகிலும் துர்நாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, நோய்ப்பரவல் உள்ளிட்ட கேடுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த ஆலைக்காக தினமும் ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதில் ஒரு பகுதி கழிவுநீரை சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் என்றாலும், பெரும்பகுதி நீர்  நிலத்திலிருந்து தான் எடுக்கப்படும் என்பதால் நிலத்தடி நீர்மட்டத்தின் மீது மிகப்பெரும் அழுத்தம் ஏற்படும்.</p><h2>ஜவுளி பூங்கா</h2><p>சேலம் ஜாகிர்பாளையத்தில் ஏற்கனவே 119 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.800 கோடியில் அமைக்கப்படும் இந்த ஜவுளி பூங்காவில்  60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக ஒருபுறம் நிலத்தடி நீர் பெருமளவில்  உறிஞ்சப்படுவது மட்டுமின்றி, சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருள்களும், நச்சுப் பொருள்களும் கலந்த கழிவுநீர் நிலம், நீர், வாயு ஆகிய மூன்றையும் நஞ்சாக்கி விடும். அதே பகுதியில் தான் இப்போது குப்பை எரிஉலை அமைக்கப்படவுள்ளது என்பதால், அதையொட்டி 30 கி.மீ சுற்றளவில் வாழும் மக்களுக்கு அவர்கள் சுவாசிக்கும் காற்று, குடிநீர் ஆகியவையே புற்றுநோய், இதயநோய் என பட்டியலிட முடியாத எண்ணிக்கையில் நோய்களை ஏற்படுத்தி விடும். இவ்வளவு பேரழிவுகளையும் ரூ.291 கோடி மக்களின் வரிப்பணத்தைக் கொட்டிக் கொடுத்து வாங்க வேண்டுமா? என்பது தான் பா.ம.க.வின் வினா.</p> <h2>ஹிட்லர்</h2><p>இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஸி படைகளால் பிடிக்கப்பட்ட  யூதர்கள் ஜெர்மனியில் அமைக்கப்பட்டிருந்த கொலை முகாம்களில் அடைக்கப்பட்டு, நச்சுவாயு செலுத்தப்பட்டு  கொல்லப்பட்டனர். சேலம் ஜாகிர் அம்மாபாளையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும் குப்பை எரிஉலைகளும் அவற்றுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. </p><h2>திடக்கழிவு மேலாண்மை விதி</h2><p>எனவே, சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றம் ஆணையிடவாறு,  வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து  கழிவுகளை ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து  சேகரிக்கும் சேகரிக்கப்படும் கழிவுகளை மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெண் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்ற முயன்ற வடமாநில தொழிலாளி காயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-commits-suicide-by-setting-herself-on-fire-worker-from-northern-state-injured-while-trying-to-save-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-commits-suicide-by-setting-herself-on-fire-worker-from-northern-state-injured-while-trying-to-save-her#comments</comments><guid isPermaLink="false">408a0b72-4608-4d38-a53b-fcdfdb5c4f0c</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:55:56 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:55:56.032Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/2f0pzdfz/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண் தீக்குளித்து தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/2f0pzdfz/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் கணவரைப் பிரிந்து வசித்து வந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">பெண்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தீக்குளித்து தற்கொலை</a> செய்து கொண்டார். அவரைப் போராடி மீட்க முயன்ற வடமாநில தொழிலாளி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><h2>கணவருடன் கருத்து வேறுபாடு</h2><p>ராமநாதபுரம் மாவட்டம், ராஜசூரியமடை பசும்பொன்நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மனைவி மாணிக்கவேல் (வயது 35). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த மாணிக்கவேல், தனது மகள் சசி(13), மகன் விஷால்(7) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார்.</p><h2>பெண் தீக்குளிப்பு</h2><p>கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் கீரைத்தோட்டத் தெருவில் குடியிருந்து வந்த அவர், அருகே எம்ப்ராய்டரி தொழில் செய்து வந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">வடமாநில தொழிலாளர்களுக்கு</a> சமையல் செய்து கொடுத்து வந்தார். சம்பவத்தன்று மாலை பணி செய்யும் இடத்தில் உள்ள ஒரு அறையை உட்புறமாக பூட்டிக்கொண்ட மாணிக்கவேல், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். </p><h2>காப்பாற்ற முயன்ற வடமாநில தொழிலாளி காயம்</h2><p>அவரது அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து அறையில் வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி அல்டெப் நஸ்கர்ப்(31) என்பவர் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்கப் போராடியுள்ளார். இருப்பினும், மாணிக்கவேல் தீயில் கருகி உயிருக்குப் போராடிய நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற அல்டெப் நஸ்கர்ப்பிற்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. </p><h2>பெண் உயிரிழப்பு</h2><p>அங்கிருந்த சக தொழிலாளர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணிக்கவேல், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>தாயின் உடலை பார்த்து அவரது குழந்தைகள் கதறி அழுத காட்சி அங்கே இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. காயமடைந்த வடமாநில தொழிலாளி அல்டெப் நஸ்கர்ப் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரையில் இளைஞர் வெட்டி கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-in-madurai-police-launch-net-to-nab-mysterious-persons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-hacked-to-death-in-madurai-police-launch-net-to-nab-mysterious-persons#comments</comments><guid isPermaLink="false">a20dec5b-ed66-4de2-b2c1-0739f318836e</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:51:23 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:51:23.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Madurai,மதுரை,murder,கொலை,இளைஞர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/m36fd8i1/11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெட்டி கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/m36fd8i1/11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>இளைஞர் கொலை</h2><p>மதுரை மாவட்டம் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மேலூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏ.எஸ்.பி சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தினர்.</p><p>பின்னர் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சிவகங்கை மாவட்டம் மேலப்பூவண்டி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டியின் மகன் செல்லத்துரை என்பது தெரியவந்தது.</p><p>செல்லத்துரை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மேலூர் கஸ்தூரிபாய் நகரில் தனது சகோதரி செல்விபிரியா வீட்டில் தங்கியிருந்தார். மேலும், தனது உறவினரான முருகனின் மெக்கானிக் கடையில் உதவியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்த நிலையில், நேற்று இரவு தனது சகோதரியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு செல்லத்துரை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.இதனிடையே, மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><h2>விசாரணை</h2><p>அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்லத்துரைக்கு நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார்</a> சந்தேகித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்கள் உடைப்பு: “சாரி” என சுவரில் எழுதிச் சென்ற மர்ம ஆசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/property-damaged-after-finding-no-cash-or-jewelry-in-house-targeted-for-burglary-mysterious-intruder-leaves-sorry-written-on-the-wall</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/property-damaged-after-finding-no-cash-or-jewelry-in-house-targeted-for-burglary-mysterious-intruder-leaves-sorry-written-on-the-wall#comments</comments><guid isPermaLink="false">67c794c8-18cc-453f-a1a5-18cab30d7ad5</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:49:56 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:49:56.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,திருட்டு,Theft,கோயம்புத்தூர்,Kovai,நகை பணம் திருட்டு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/qv0yqre7/vijji.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/qv0yqre7/vijji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் 'சாரி' என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.</p><h2>மர்ம ஆசாமி</h2><p>தங்கம் விலை உயர்ந்துள்ள சூழலில் வீடு புகுந்து நகை திருடுவது மற்றும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபடுவது போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடும் கும்பல், சில நேரங்களில் அங்கேயே சமைத்து சாப்பிடுவது, ஓய்வெடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுவதுண்டு.</p><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவையில்</a> உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம ஆசாமி, அங்கு திருடுவதற்கு நகை, பணம் இல்லாத விரக்தியில் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பெரும் அதிர்ச்சி</h2><p>இது சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/coimbatore">கோவை</a> ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு, கேரளம் மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.</p><p>சில நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.</p><p>உடனடியாக படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டு இருந்தன. மேலும், கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மிஷின் மற்றும் பிரிட்ஜ் ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.</p><h2>சாரி</h2><p>வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டது உள்ளார். ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாத ஆத்திரத்தில், அந்த நபர் பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார்.</p><p>அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருவனந்தபுரம் -தாம்பரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-thiruvananthapuramtambaram-special-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-thiruvananthapuramtambaram-special-train-service#comments</comments><guid isPermaLink="false">245b4d81-9b3f-4876-b1bd-55e20360d123</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:45:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:45:11.570Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,திருச்சி,Trichy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/8n1wyb15/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/8n1wyb15/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருவனந்தபுரம் தாம்பரம் இடையே திருச்சி வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு வாராந்தோறும் புதன்கிழமை இயக்கப்பட்டு வரும் திருவனந்தபுரம் - தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் : 06110) வருகிற 23, 30 மற்றும் அடுத்த மாதம் 7, 14, 21, 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. </p> <p>இதேபோல் மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வாராந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06109) வருகிற 24 மற்றும் அடுத்த மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உளுந்தூர்பேட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-in-ulundurpet-municipality-stage-a-sudden-strike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-in-ulundurpet-municipality-stage-a-sudden-strike#comments</comments><guid isPermaLink="false">a5bb3eb0-d1de-4cbf-8ea9-408723683c82</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:30:40 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:30:40.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Sanitation workers,தூய்மைப் பணியாளர்கள்,municipality,பொதுமக்கள் கோரிக்கை,போராட்டம் protest,Ulundurpettai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/wfj3tlx8/13.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தூய்மைப் பணியாளர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உளுந்தூர்பேட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/wfj3tlx8/13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேங்கி, சுகாதார பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.</p><h2>திடீர் போராட்டம்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பணிபுரியும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தூய்மைப் பணியாளர்கள்</a>, தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) காலையில் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சியில் தினசரி துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு, நிர்வாக தரப்பில் இருந்து முறையான வாழ்வாதார உரிமைகள் வழங்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள்</h2><p>பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாத ஊதியத்தை எவ்வித தாமதமும் இன்றி உரிய காலத்தில் தடையின்றி வழங்க வேண்டும். நகரின் பல்வேறு வார்டுகளில் குப்பைகளை அள்ளுவதற்கும், சாக்கடைகளைத் தூய்மைப்படுத்துவதற்கும் தேவையான கையுறைகள், முகக்கவசங்கள், கூடைகள் மற்றும் உரிய தூய்மைப் பணி உபகரணங்களை நகராட்சி நிர்வாகமே வழங்க வேண்டும்.</p><h2>பாதிப்புகள் </h2><p>தூய்மைப் பணியாளர்களின் இந்த திடீர் போராட்ட அறிவிப்பால் உளுந்தூர்பேட்டை நகராட்சியின் முக்கிய வீதிகள், வணிக வளாக பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வழக்கம் போல் நடைபெறும் குப்பை சேகரிப்பு பணிகள் இன்று காலை முதல் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>கொசுத்தொல்லை மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">பொதுமக்கள் கோரிக்கை</a> விடுத்துள்ளனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து, அவற்றை நிறைவேற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>10-ம் வகுப்பு மாணவனை கொன்று தொழிலாளி தற்கொலை: காரணம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-kills-10th-grade-student-and-commits-suicide-what-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-kills-10th-grade-student-and-commits-suicide-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">de651ecd-6295-461f-8da1-c54b20411e4a</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:18:51 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:18:51.090Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Salem,கிரைம் செய்திகள்,சேலம்,student murder,தொழிலாளி தற்கொலை,மாணவன் கொலை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/5dywzci4/kad.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/5dywzci4/kad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>10-ம் வகுப்பு மாணவனை கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு தறித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>நண்பர்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/salem">சேலம்</a> மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி விஜயலட்சுமி. கூலித்தொழிலாளர்கள். இவர்களுடைய மகன் தவுசிக் (வயது 15). இவன் கே.ஆர்.தோப்பூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். தவுசிக்கும், இடங்கணசாலை அருகே உள்ள சிட்டனூரை சேர்ந்த வடிவேல் என்பவரின் மகனும், விசைத்தறி தொழிலாளியுமான சிவராஜ் (24) என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.</p><p>நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டில் இருந்த தவுசிக்கை, சிவராஜ் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வெளியில் சென்று உள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீடு திரும்பவில்லை.</p><p>இதையடுத்து அவர்களது பெற்றோர் 2 பேரையும் இரவு முழுவதும் பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து மகுடஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தனர்.</p><h2>கழுத்தை நெரித்துக்கொலை</h2><p>இந்த நிலையில் கே.ஆர்.தோப்பூர் சாலையில் உள்ள மேட்டுக்காடு பகுதியில் இரும்பாலைக்கு சொந்தமான இடத்தில் தவுசிக், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர் விரைந்து சென்று தவுசிக் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது சிவராஜ் தான் தங்கள் மகனை கொலை செய்து இருப்பான் என்று கூச்சலிட்டனர். </p><p>இதைத்தொடர்ந்து போலீசார் சிவராஜை தேடத்தொடங்கினர். அதே நேரத்தில், தாரமங்கலம் அருகே உள்ள பெரியபட்டி சுடுகாடு பகுதியில் ஒரு மரத்தில் சிவராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் தொடர்பாக மகுடஞ்சாவடி போலீசார் கொலை வழக்கும், தாரமங்கலம் போலீசார் தற்கொலை வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>என்ன காரணம்..?</h2><p>இது குறித்து போலீசார் கூறியதாவது:- </p><p>தவுசிக், சிவராஜ் 2 பேரும் நண்பர்களாக பழகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் பேசாமல் இருந்து உள்ளனர். நேற்று முன்தினம் தவுசிக்கை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு இருக்கலாம். இதில் ஆத்திரம் அடைந்த சிவராஜ், தவுசிக்கின் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம். பின்னர் பயத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. மேலும் இவர்கள் செல்போனில் பிரிபயர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் அடிக்கடி ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. குடிபோதையில் கொலை செய்து விட்டு தற்கொலை நடந்ததா? அல்லது ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>ஊர்வலத்தில் ரகளை; போலீசாருக்கு கொலை மிரட்டல்- 2 வாலிபர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/riot-at-procession-2-youths-arrested-for-threatening-to-kill-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/riot-at-procession-2-youths-arrested-for-threatening-to-kill-police#comments</comments><guid isPermaLink="false">b3d54836-0b33-491b-8f3a-5cc1bbce40ed</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:10:47 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:10:47.864Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Riot,Kovilpatti,கோவில்பட்டி,கொலை மிரட்டல்,Procession,ஊர்வலம்,Death threats,ரகளை,2 வாலிபர்கள் கைது,2 youths arrested,போலீசாருக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/tc0lq6x8/2-pg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 வாலிபர்கள் கைது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/tc0lq6x8/2-pg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவில்பட்டி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கோவில்பட்டி</a>யில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் ரகளையில் ஈடுபட்டு போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><h2>ஊர்வலம்</h2><p>விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் உள்ள விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் இருந்து கடந்த வியாழக்கிழமை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">ஊர்வலம்</a> புறப்பட்டுச் சென்றது.</p><h2>பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடனம்</h2><p>அப்போது, ஊர்வலத்தில் பங்கேற்ற விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையைச் சேர்ந்த சேகர் மகன் சுபாஷ் (வயது 22) மற்றும் தென்காசி மாவட்டம் வீரணம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் கருப்பசாமி(21) ஆகிய 2 பேரும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81">இடையூறா</a>க சாலையில் நடனம் ஆடிக்கொண்டே வந்துள்ளனர்.</p><h2>போலீசாருக்கு கொலை மிரட்டல்</h2><p>அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> அவர்களைக் கண்டித்து, முறைப்படுத்தி செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சுபாஷ் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசாரை ஏளனமாகப் பேசி, அவதூறான வார்த்தைகளால் திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">கொலை மிரட்டலும்</a> விடுத்துள்ளனர். </p><h2>2 வாலிபர்கள் கைது</h2><p>இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த சுபாஷ் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூர்: பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து - 5 மாணவர்கள் காயம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppathur-school-van-lorry-accident-5-students-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppathur-school-van-lorry-accident-5-students-injured#comments</comments><guid isPermaLink="false">9eb4a299-c926-4793-b4d4-a90505fdc105</guid><pubDate>Sat, 19 Sep 2026 04:59:06 +0000</pubDate><atom:updated>2026-09-19T04:59:06.859Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Tirupattur,திருப்பத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/a2lpjxdw/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/a2lpjxdw/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூரில் பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவர்கள் காயமடைந்தனர்.</p> <p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருப்பத்தூர் </a>மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர்.</p> <h2>விபத்து</h2><p>இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பள்ளி வேன் மீது சாலையில் எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த 5 மாணவர்கள் காயமடைந்தனர்.</p> <p>இதையடுத்து விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை - பெங்களூரு சாலையில் மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>6 ஆண்டுகளாக காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்ததால் ஏ.சி. மெக்கானிக் வெறிச்செயல்: இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ac-mechanic-commits-violent-act-after-refusal-to-marry-following-six-year-relationship-tragedy-befalls-young-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ac-mechanic-commits-violent-act-after-refusal-to-marry-following-six-year-relationship-tragedy-befalls-young-woman#comments</comments><guid isPermaLink="false">210d221b-002b-459f-bac6-b0fd875cb3b5</guid><pubDate>Sat, 19 Sep 2026 04:44:49 +0000</pubDate><atom:updated>2026-09-19T04:44:49.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Cuddalore,கடலூர்,கிரைம் செய்திகள்,Panruti,பண்ருட்டி,கத்தி குத்து</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/qzkd4re7/mac.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/qzkd4re7/mac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பண்ருட்டி, </p><p>காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை ஏ.சி. மெக்கானிக் சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/cuddalore">கடலூர்</a> மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சின்னபுறங்கனி கிராமத்தை சேர்ந்தவர் சரவணமூர்த்தி மகன் சந்தோஷ்(வயது 25). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இதற்காக சென்னையிலேயே தங்கியுள்ள அவர், அவ்வப்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்வார்.</p><h2>காதல் விவகாரம்</h2><p>இவரும், பண்ருட்டி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண்ணும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்தனர். அந்த இளம்பெண், பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் விற்பனையாளராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது காதல் விவகாரம் இளம்பெண் வீட்டிற்கு தெரிந்ததும், பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஓராண்டாகவே இளம்பெண், சந்தோஷிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.</p><h2>காதலியிடம் கடும் வாக்குவாதம்</h2><p>இந்த நிலையில் நேற்று இளம்பெண் பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் பணியில் இருந்தார். மதியம் 12.30 மணியளவில் வாடிக்கையாளர்கள் யாரும் வராததால் கம்ப்யூட்டரில் மருந்தின் இருப்பு விவரங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தார். </p><p>அப்போது அங்கு திடீரென வந்த சந்தோஷ், 6 ஆண்டுகளாக காதலித்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பது ஏன்?, பேசுவதை நிறுத்தியது ஏன்? என்று கேட்டு காதலியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக வெட்டினார். இதில் அவரின் கழுத்து, கை, உடல் பகுதியில் 6 இடங்களில் வெட்டு விழுந்தது.</p><h2>இளம்பெண் அலறல்</h2><p>இதனால் வலி தாங்க முடியாமல் இளம்பெண் அலறினார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அங்கிருந்து தப்பி ஓட முயன்ற சந்தோஷை விரட்டிப்பிடித்து கத்தியை பிடுங்கிவிட்டு தர்ம அடி கொடுத்தனர். மேலும் இளம்பெண்ணை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.</p><p>தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, சந்தோஷை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி கடலோர பகுதிகளில் கடல் சீற்ற எச்சரிக்கை: மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-level-rise-warning-in-thoothukudi-coastal-areas-fishermen-prohibited-from-venturing-into-the-sea-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-level-rise-warning-in-thoothukudi-coastal-areas-fishermen-prohibited-from-venturing-into-the-sea-today#comments</comments><guid isPermaLink="false">6b7d2ebb-8e4b-486f-b040-e242522824bd</guid><pubDate>Sat, 19 Sep 2026 04:35:48 +0000</pubDate><atom:updated>2026-09-19T04:35:48.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,fishermen,Thoothukudi,தூத்துக்குடி,warning,எச்சரிக்கை,Ban on going to sea,கடலுக்கு செல்ல தடை,கடல் சீற்றம்,Sea Storm</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/noue2dhz/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி கடலோர பகுதிகளில் கடல் சீற்ற எச்சரிக்கை- மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/noue2dhz/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>கடல் சீற்ற எச்சரிக்கை காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><h2>கடல் சீற்றம்</h2><p>இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">கடல் சீற்றம் </a>அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. </p><h2>எச்சரிக்கை</h2><p>தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட உயரமான கடல் அலைகள் எழும் என்றும், தாழ்வான கடலோரப் பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகக்கூடும் என்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">எச்சரிக்கப்பட்டுள்ளது</a>. </p><h2>இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்</h2><p>இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை அறிவிப்புப் பலகையிலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக சுற்றறிக்கையிலும் இன்று (19.9.2026) ஒரு நாள் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கடலுக்கு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">செல்ல தடை </a>விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையம்:  தனியாருக்கு மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-did-chief-minister-vijay-write-to-prime-minister-modi-requesting-its-transfer-to-the-private-sector</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-did-chief-minister-vijay-write-to-prime-minister-modi-requesting-its-transfer-to-the-private-sector#comments</comments><guid isPermaLink="false">b04e0a1a-ebec-4f81-8118-fe907ad5177c</guid><pubDate>Sat, 19 Sep 2026 04:08:08 +0000</pubDate><atom:updated>2026-09-19T04:08:08.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,பிரதமர் மோடி,PM Modi,தமிழகம்,Chennai Airport,சென்னை விமான நிலையம்,தமிழ்நாடு அரசு,கடிதம்,தனியார் நிறுவனம்,விமானநிலையம்,Narendra Modi ‏,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/tc1ig6ki/cheni.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/tc1ig6ki/cheni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை விமான நிலைய நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. </p><h2>பிரதமருக்கு கடிதம்</h2><p>இது தொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ”சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜோசப் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a> கடந்த ஆகஸ்டு மாதம் கடிதம் எழுதி உள்ளார். </p><h2>சென்னை விமான நிலையம்</h2><p>அதில், “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உள்கட்டமைப்பும் நிர்வாகமும் முக்கியமானவை. பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகிய மூன்று அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும்.</p><h2>தனியார் மயம்</h2><p>தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டுக்கு அதற்கேற்ற சிறப்பான விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர்- நிர்வாகமான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (Airports Authority of India – AAI) மாற்றிவிட்டு வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.</p><p>அதாவது சென்னை விமான நிலையத்தின் ஆபரேட்டரை மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கை, அடிப்படையில் விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கான முயற்சியாக அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட முடிவு செய்ததன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் புதிதாக 7 நர்சிங் கல்லூரிகள்: கூடுதல் இடங்கள் உருவாக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/seven-new-nursing-colleges-in-tamil-nadu-additional-seats-created</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/seven-new-nursing-colleges-in-tamil-nadu-additional-seats-created#comments</comments><guid isPermaLink="false">21f974c6-4ad9-4c7d-ac63-7c977746f2bd</guid><pubDate>Sat, 19 Sep 2026 03:28:47 +0000</pubDate><atom:updated>2026-09-19T03:28:47.493Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,விஜய்,தமிழகம்,தமிழ்நாடு அரசு,Tamilnadu government,செவிலியர்,அரசாணை வெளியீடு,நர்சிங் கல்லூரி,Nursing College</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/1twpqneb/koer.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ AI]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/1twpqneb/koer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் புதிதாக 7 நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>கூடுதல் மாணவர் சேர்க்கை</h2><p>தமிழகத்தில் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய அரசு நர்சிங் (செவிலியர்) கல்லூரிகள் தொடங்கப்படாததால், செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப்படிப்புகளில் ரூ.351 கோடியில் ஆயிரக்கணக்கான கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்கும் அறிவிப்பை <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> சட்டசபையில் வெளியிட்டார். </p><h2>புதிய அரசு நர்சிங் கல்லூரிகள்</h2><p>அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளில் கூறியிருப்பதாவது:-</p><p>நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிகளில், தலா 100 பி.எஸ்சி செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்களுடன் 6 புதிய அரசு நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கான ரூ.270.26 கோடி செலவீனம் முழுவதும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக நிதியிலிருந்தே ஏற்கப்படுகிறது. அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் தற்போதுள்ள இடவசதியில் 600 இடங்களுக்கும் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும்.</p><h2>கூடுதல் இடங்கள்</h2><p>அதேபோல், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 60 பி.எஸ்சி செவிலியர் இடங்களுடன் 7-வது புதிய அரசு நர்சிங் கல்லூரியும் தொடங்கப்படுகிறது. ஏற்கெனவே உள்ள அரசு நர்சிங் கல்லூரிகள் மற்றும் நர்சிங் பள்ளிகளில் 1,925 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுகின்றன. </p><p>அதாவது டி.ஜி.என்.எம்.படிப்பில் 1,290 இடங்கள், பி.எஸ்சி நர்சிங் படிப்பில் 440 இடங்கள், எம்.எஸ்சி நர்சிங் படிப்பில் 75 இடங்கள் மற்றும் பட்டப்படிப்புக்கு பிந்தைய பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 120 இடங்கள் என மொத்தம் 2,585 கூடுதல் நர்சிங் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படுகின்றன. அதே போல், 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,788 கூடுதல் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுகின்றன.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலை ஊர்வலம்: இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganesha-idol-procession-tasmac-orders-closure-of-shops-today-and-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ganesha-idol-procession-tasmac-orders-closure-of-shops-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a042aea1-be80-435f-85c6-be6b85f955d6</guid><pubDate>Sat, 19 Sep 2026 03:24:37 +0000</pubDate><atom:updated>2026-09-19T03:24:37.499Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,உத்தரவு,Tasmac Shops,விநாயகர் சிலை ஊர்வலம்,Vinayagar idol procession,2 நாட்கள்,2 Days,டாஸ்மாக் கடைகள் மூடல்,closure order</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/a8u06nl9/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலை ஊர்வலம்- டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/a8u06nl9/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF">கன்னியாகுமரி</a> மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் குறிப்பிட்ட சில டாஸ்மாக் கடைகளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D">மூட வேண்டும்</a> என மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>11 இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம்</h2><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு இன்று (19.9.2026) மற்றும் நாளை (20.9.2026) ஆகிய 2 நாட்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">விநாயகர் சிலை</a> கரைப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">ஊர்வலம்</a> நாகர்கோவில் முதல் சொத்தவிளை கடற்கரை, மேல்புறம் முதல் குழித்துறை, நாகர்கோவில் முதல் சங்குதுறை கடற்கரை, சுசீந்திரம் முதல் கன்னியாகுமரி, தோவாளை முதல் பள்ளிகொண்டான் அணை, கூனாலுமூடு முதல் மிடாலம், அஞ்சுகண்கலுங்கு முதல் தேங்காய்பட்டணம், செருப்பாலூர் முதல் திற்பரப்பு, வைகுண்டபுரம் முதல் வெட்டுமடை, மேல்புறம் முதல் குழித்துறை மற்றும் பம்மம் முதல் குழித்துறை வரை உள்ள 11 இடங்களில் நடைபெற உள்ளது. </p><h2>டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு</h2><p>எனவே இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் (<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் கடைகள்</a>) மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை மட்டும் மேற்சொன்ன விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கி, முடியும் வரை மூடிவைத்திட வேண்டுமென உத்தரவிடப்படுகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலையில் 11 டன் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-tons-of-non-recyclable-waste-sent-to-cement-plant-in-tiruvannamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-tons-of-non-recyclable-waste-sent-to-cement-plant-in-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">b001ea0c-deb0-4e34-a94a-a4271b4ba1fb</guid><pubDate>Sat, 19 Sep 2026 03:20:31 +0000</pubDate><atom:updated>2026-09-19T03:20:31.500Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Corporation,மாநகராட்சி,Tiruvannamalai,recycling,மறுசுழற்சி,கழிவுகள்,சிமெண்டு ஆலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ff8okd8h/367.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கழிவுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ff8okd8h/367.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலையில் மறு சுழற்சி செய்ய முடியாத 11 டன் கழிவு பொருட்கள் சிமெண்டு தொழிற்சாலைக்கு எரி பொருளாக அனுப்பி வைக்கப்பட்டது.</p><p>திருவண்ணாமலை மாநகராட்சி 39 வார்டுகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட போது இணைக்கப் பட்ட 18 ஊராட்சிகளை கொண்ட பகுதியாக உள்ளது. இந்த பகுதிகளில் தினமும் காலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சி பகுதியில் உள்ள 12 நுண் உர மையங்கள் மற்றும் 5 வள மீட்பு மையங்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.</p><h2>மறுசுழற்சி</h2><p>இதில் மக்கும் குப்பைகள் இயற்கை உரங்களாக தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மக்காத குப்பைகளில் மறுசுழற்சி செய்ய இயலாத உலர் கழிவுகள் சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.</p><h2>சிமெண்டு தொழிற்சாலை</h2><p>இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் மாநகராட்சியில் மறுசுழற்சி செய்ய இயலாத 11 டன் உலர் கழிவுகள் அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.</p><h2>மக்கும் குப்பை, மக்காத குப்பை</h2><p>இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், பொதுமக்கள் வீட்டின் அருகில் வரும் குப்பை வண்டியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் பெருமளவு கழிவுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மாநகராட்சி</a> இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தங்கள் நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை தங்கள் வளாகத்திலேயே தரம் பிரித்து ஈர கழிவுகளை உரமாக்க வேண்டும். மக்காத கழிவுகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மரத்தில் கார் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர்-மாணவி பலியான சோகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-engineering-student-male-and-female-killed-after-car-crashes-into-a-tree</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-engineering-student-male-and-female-killed-after-car-crashes-into-a-tree#comments</comments><guid isPermaLink="false">7aa957cd-9121-43d7-908a-cd07aeddf744</guid><pubDate>Sat, 19 Sep 2026 02:54:53 +0000</pubDate><atom:updated>2026-09-19T02:54:53.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,சாலை விபத்து,road accident,Karur,Student dead,மாணவர் பலி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/i4sqc1ou/kloer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/i4sqc1ou/kloer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p>மரத்தில் கார் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர்-மாணவி பலியாகினர். மேலும் 3 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். </p><h2>என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/karur">கரூர்</a> மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 21). இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். </p><p>நேற்று கவுதம் தனது கல்லூரியில் படித்து வரும் கரூர் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்த மதுப்பிரியா, காமினி, அனுசுயா, தேவதர்ஷினி ஆகியோருடன் காரில் கரூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். காரை கவுதம் ஓட்டினார்.</p><h2>சாலை விபத்து</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/karur">கரூர்</a> தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி எதிரே கார் வந்த போது, திடீரென கவுதமின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.</p><p>இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த கவுதம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த மாணவிகளும் படுகாயமடைந்தனர்.</p><h2>மருத்துவமனையில் சிகிச்சை</h2><p>விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக அங்கு சென்று, காயமடைந்த மாணவிகளை மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக கரூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இதில் மதுப்பிரியா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காமினி, அனுசுயா, தேவதர்ஷினி ஆகிய 3 மாணவிகளும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தில் கார் மோதியதில் மாணவர்-மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருமண மண்டபத்தில் ரூ.3 லட்சம் திருடிய வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-stealing-rs3-lakh-from-wedding-hall</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-stealing-rs3-lakh-from-wedding-hall#comments</comments><guid isPermaLink="false">898e130e-1fd6-4bd2-8d52-36ccd5dd6381</guid><pubDate>Sat, 19 Sep 2026 02:52:40 +0000</pubDate><atom:updated>2026-09-19T02:52:40.081Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Youth arrested,வாலிபர் கைது,பணம் திருட்டு,money theft,வாடகை,Wedding Hall,திருமண மண்டபம்,rental</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/xul6mvea/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.3 லட்சம் திருடிய வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/xul6mvea/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், கயத்தாறில் திருமண மண்டப வீட்டில் புகுந்து, அலமாரியில் இருந்த ரூ.3 லட்சத்தை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். </p><h2>திருமண மண்டபம், வாடகை வீடுகள்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு மதுரை மெயின் ரோட்டில் ஒரு தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D">திருமண மண்டபம்</a> மற்றும் வாடகை வீடுகளைக் கட்டி, வாடகைக்கு விட்டு வந்தவர், மறைந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் விஜயமுத்துப்பாண்டியன். இவரது மறைவுக்குப் பின், அவரது மனைவி சிவகாமி அந்த திருமண மண்டபம் மற்றும் வாடகை வீடுகளைப் பராமரித்து வருகிறார். </p><h2>வாடகை பணம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம்</h2><p>இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் திருமண மண்டபத்திற்கான வாடகைத் தொகையான ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்தைப் பெற்றுக்கொண்ட சிவகாமி, அந்த தொகையை தனது வீட்டில் உள்ள அலமாரியில் பூட்டி வைத்துள்ளார். பின்னர், வீட்டின் சாவியை யாருக்கும் தெரியாத இடத்தில் மறைத்து வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.</p><h2>ரூ.3 லட்சம் திருட்டு</h2><p>வெளியே சென்ற சிவகாமி மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, அலமாரியின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே வைத்திருந்த பணத்தைச் சரிபார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருட்டு</a> போயிருந்தது தெரியவந்தது. மீதம் ரூ.40 ஆயிரம் மட்டும், 200 ரூபாய் நோட்டுகளாக அலமாரியிலேயே இருந்துள்ளது. </p><h2>வாலிபர் கைது</h2><p>இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கயத்தாறு வடக்குத் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் சிவக்குமார் (வயது 26) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது</a> செய்து விசாரணை நடத்தி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். </p>]]></content:encoded></item><item><title>என்ஜின் பழுதால் இலங்கையில் கரை ஒதுங்கிய ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் அபராதத்துடன் விடுவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-rameswaram-fishermen-stranded-in-sri-lanka-due-to-engine-failure-released-with-fine</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-rameswaram-fishermen-stranded-in-sri-lanka-due-to-engine-failure-released-with-fine#comments</comments><guid isPermaLink="false">6ec9909d-970c-433b-96ea-64f7d778ac96</guid><pubDate>Sat, 19 Sep 2026 02:36:08 +0000</pubDate><atom:updated>2026-09-19T02:36:08.741Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,ராமேசுவரம்,Sri Lanka,அபராதம்,விடுவிப்பு,Rameswaram fishermen,Released</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/vezbude8/355.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விடுவிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/vezbude8/355.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,</p><p>படகு என்ஜின் பழுதாகி இலங்கையில் கரை ஒதுங்கிய நிலையில், எல்லை தாண்டியதாக கைதான ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை அபராதத்துடன் அந்நாட்டு கோர்ட்டு விடுவித்தது.</p><h2>கைது</h2><p>ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 6-ந்தேதி விசைப்படகு ஒன்றில் 11 மீனவர்கள் மீன்பிடிக்க சென்று இருந்தனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது இந்த மீனவர்களின் படகானது என்ஜின் பழுதாகி கடல் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகத்தால் இலங்கை பகுதியில் கரை ஒதுங்கியது.</p><p>இந்த படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதில் இருந்த 11 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். தொடர்ந்து இலங்கை ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>அபராதம்</h2><p>இந்த 11 பேரும் நேற்று வழக்கு விசாரணைக்காக இலங்கை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 11 பேருக்கும் இலங்கை பணம் தலா ரூ.50 ஆயிரம் (இந்திய மதிப்பில் தலா ரூ.14 ஆயிரம்) அபராதம் விதித்து விடுவிப்பதாகவும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.</p><p>மேலும் படகின் மீதான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி அன்று நடைபெறும் என்றும், அப்போது படகின் உரிமையாளர் படகிற்கான அனைத்து ஆவணங்களுடன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு: குளியல் அறையில் பூட்டி வைத்துவிட்டு தப்பிய பெண் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-after-stealing-10-pounds-of-jewelry-from-elderly-woman-after-locking-herself-in-bathroom</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-arrested-after-stealing-10-pounds-of-jewelry-from-elderly-woman-after-locking-herself-in-bathroom#comments</comments><guid isPermaLink="false">a7d83b95-4dc8-43f3-bd06-23ee3e62bd6e</guid><pubDate>Sat, 19 Sep 2026 02:17:56 +0000</pubDate><atom:updated>2026-09-19T02:17:56.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கைது,arrest,மூதாட்டி,பெண்,bathroom,குளியல் அறை,A woman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/y2i6ngvd/366.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/y2i6ngvd/366.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மடிப்பாக்கம்,</p><p>சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அய்யப்பன் நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் (வயது 78). இவரது மனைவி நிர்மலா (74). இவர்களது மகன்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிர்மலாவை கவனிக்க அரியலூரை சேர்ந்த சித்ரா (44) என்பவர் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தார். </p><h2>10 பவுன் தாலிச்சங்கிலி</h2><p>சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தபோது, குளியல் அறை குழாய் சரியாக மூடவில்லை எனக்கூறி நிர்மலாவை அங்கு அழைத்துச் சென்ற சித்ரா, அவர் கீழே குனிந்தபோது கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தார். பின்னர் நிர்மலாவை குளியல் அறைக்குள் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு, அவரது செல்போனையும் எடுத்துக்கொண்டு தப்பினார். </p><h2>போலீசார்</h2><p>நிர்மலாவின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் குளியல் அறை கதவை திறந்து அவரை மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீசார் செல்போன் கோபுர சிக்னல் மூலம் மடிப்பாக்கம் கூட்ரோட்டில் பஸ்சுக்காக காத்திருந்த சித்ராவை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகை, செல்போன் மீட்கப்பட்டது. புகார் அளித்த 1 மணி நேரத்தில் நகையை மீட்ட போலீசாருக்கு நிர்மலா நன்றி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி கடன் பெற்று தருவதாக கூறி பண மோசடி: 5 பேர் அதிரடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-for-fraud-claiming-to-get-rs1-crore-loan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-for-fraud-claiming-to-get-rs1-crore-loan#comments</comments><guid isPermaLink="false">7945824a-9502-48df-a79f-ac1045407ad0</guid><pubDate>Sat, 19 Sep 2026 02:14:40 +0000</pubDate><atom:updated>2026-09-19T02:14:40.620Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tirunelveli,திருநெல்வேலி,பண மோசடி,money laundering,loan,Commission,கடன்,5 people arrested,5 பேர் கைது,கமிஷன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/fpyipf6w/Untitled-1.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பண மோசடி- 5 பேர் அதிரடி கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/fpyipf6w/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம் வி.கே.புரம் அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">பண மோசடி </a>முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.3.68 லட்சத்தை பறிமுதல் செய்தனர். </p><h2>ரியல் எஸ்டேட் தொழில்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அகஸ்தியர்பட்டியில், தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 29) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகக் கூறி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். </p><h2>ரூ.1 கோடி கடன் பெற்றுத்தர ரூ.1 லட்சம் கமிஷன்</h2><p>இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(47) என்பவர் ரூ.1 கோடி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">கடன்</a> தேவைப்படுவதாக சென்னையைச் சேர்ந்த முகம்மது அக்தர்(23) என்பவரை அணுகியுள்ளார். முகம்மது அக்தர், தனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் கடன் தொகையை பெற்றுத் தருவதாகவும், அதற்காக ரூ.1 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D">கமிஷன்</a> வழங்க வேண்டும் எனவும் கூறி, ஜெயச்சந்திரனை அகஸ்தியர்பட்டியில் உள்ள வெங்கடேஷின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். </p><h2>போலீசார் சோதனை</h2><p>அங்கு பணம் இருப்பது போன்று கட்டுக்கட்டாக காண்பித்து, ஜெயச்சந்திரனிடம் கடன் பத்திரத்தில் கையெழுத்தும், 7 வங்கி காசோலைகளில் கையெழுத்தும் பெற்றதாகத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் போலீஸ் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.</p><h2>ரூ.3.68 லட்சம் பறிமுதல்</h2><p>அப்போது, வீட்டின் மாடியில் ரூ.500 நோட்டுகள் அடங்கிய கட்டுகள் மற்றும் மாதிரி நோட்டுகள் என மொத்தம் ரூ.3 லட்சத்து 68 ஆயிரம் ரொக்கப் பணம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்யப்பட்டது. </p><h2>5 பேர் அதிரடி கைது</h2><p>இதுதொடர்பாக வி.கே.புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்(29), ராஜேஷ்(23), சிவசுப்பிரமணியன்(23), கதிர்வேல்பாண்டி(23) மற்றும் சென்னையைச் சேர்ந்த முகம்மதுஅக்தர்(23) ஆகியோர் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 5 பேரையும் போலீசார் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். </p><h2>பொதுமக்களுக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்</h2><p>பொதுமக்கள் இதுபோன்ற மோசடி முயற்சிகளில் சிக்காமல் விழிப்புடன் இருக்குமாறும், அறிமுகமில்லாத நபர்கள் மூலம் அதிக தொகை கடன் பெற்றுத் தருவதாகக் கூறப்படும் ஆசைவார்த்தைகளை நம்பி பணம் அல்லது முக்கிய ஆவணங்களை வழங்க வேண்டாம் எனவும் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">அறிவுறுத்தியுள்ளார்</a>. </p>]]></content:encoded></item><item><title>முதுமலையில் 17 வயது பெண் காட்டு யானை உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-year-old-female-wild-elephant-dies-in-mudumalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-year-old-female-wild-elephant-dies-in-mudumalai#comments</comments><guid isPermaLink="false">73b5f861-8079-4cc1-b136-4910cec022c5</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:56:55 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:56:55.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானை,wild elephant,Mudumalai,முதுமலை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/7lcb1yn0/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/7lcb1yn0/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>முதுமலையில் 17 வயது பெண் காட்டு யானை இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>பெண் காட்டு யானை சாவு</h2><p>முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.. இதே போல் விலை உயர்ந்த மரங்களும் வனப்பகுதியில் உள்ளது. இதனால் வன குற்றங்கள் ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் தினமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.</p> <p>இந்த நிலையில் புலிகள் காப்பகத்தின் உள்மண்டல பகுதியான தெப்பக்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட கக்கநல்லா வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது இம்பரல்லா ஓடை அருகில் 17 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர். உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.</p><h2></h2><h2>வனத்துறையினர் விசாரணை</h2><p>அதன் அடிப்படையில் துணை இயக்குநர் வித்யாதர் உத்தரவின்படி வனச்சரகர் சிவக்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் காட்டு யானை இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இறந்த பெண் யானையின் உடற்கூராய்விற்கான முன்னேற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டனர்.</p><p>பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு பெண் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முக்கிய உடற்பாகங்களை மருத்துவ குழுவினர் சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் அறிக்கை வந்த பிறகு காட்டு யானையின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து தெப்பக்காடு வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கூடலூரில் 2 பேரை கொன்ற ஆட்கொல்லி ஆண் புலி கூண்டில் சிக்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-male-tiger-that-killed-two-people-in-gudalur-was-caught-in-a-cage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-male-tiger-that-killed-two-people-in-gudalur-was-caught-in-a-cage#comments</comments><guid isPermaLink="false">c51c52ca-a20e-4cc6-9912-9b0d42b8060c</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:54:45 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:54:45.721Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiger,புலி,கூடலூர்,Vandalur,வண்டலூர்,கூண்டில் சிக்கியது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/bs0bil12/365.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆண் புலி கூண்டில் சிக்கியது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/bs0bil12/365.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர், </p><p>கூடலூரில் 2 பேரை கொன்ற ஆண்புலி கூண்டில் சிக்கியது. இதைத்தொடர்ந்து வண்டலூர் மறுவாழ்வு காப்பகத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை புலி கடித்துக் கொன்றது. அடுத்தடுத்து 2 பேரை புலி கடித்துக் கொன்றதால் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.</p><h2>தேடுதல் வேட்டை</h2><p>இதையடுத்து கூடலூர் வன அலுவலர் தேவராஜ் தலைமையில் 150 வனத்துறையினர் உடனடியாக புலி தேடுதல் வேட்டையை தொடங்கினர். மேலும் லாரஸ்டன், பாரம், தெய்வ மலை மற்றும் ஹலாலா எஸ்டேட் உள்பட மொத்தம் 305 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் 14 இடங்களில் இறைச்சி துண்டுகளுடன் கூடிய கூண்டுகள் இலை, தழைகளால் மறைத்து வைக்கப்பட்டது.</p><h2>கூண்டில் சிக்கியது</h2><p>இதற்கிடையே கூடலூர் பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டுகளில் சிறுத்தைகளும் சிக்கி வந்தது. ஆனால் புலி சிக்காமல் இருந்ததால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். இந்தநிலையில் கூடலூர் நகராட்சி மேல் கூடலூர் பகுதியில் உள்ள ஹலாலா எஸ்டேட் பகுதியில் வனத்துறை சார்பில் வைத்திருந்த கூண்டில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆட்கொல்லி ஆண் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">புலி</a> சிக்கியது. </p><h2>வண்டலூர்</h2><p>இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது புலியை வாகனத்தில் ஏற்றி முதுமலை கார்குடிக்கு கொண்டு சென்றனர். பின்னர், முதுமலையிலிருந்து சென்னை வண்டலூர் மறுவாழ்வு காப்பகத்துக்கு மைசூரு வழியாக வனத்துறையினர் புலியை கொண்டு சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை-சொரனூர் ரெயில் நாளை ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-shoranur-train-cancelled-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-shoranur-train-cancelled-tomorrow#comments</comments><guid isPermaLink="false">b462aa83-2817-4c77-be0b-b1d97ea1ab2e</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:38:10 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:38:10.526Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,ரெயில் சேவை,train service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pkw7240i/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pkw7240i/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-</p><p>கேரளம் மாநிலம் சொரனூர் அருகே ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக கோவை-சொரனூர் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. </p> <p>அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சொரனூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் சொரனூர்-கோவை ரெயில் மற்றும் மாலை 4.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-சொரனூர் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rape-of-8-year-old-girl-pocso-convict-gets-20-years-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rape-of-8-year-old-girl-pocso-convict-gets-20-years-in-prison#comments</comments><guid isPermaLink="false">b6bed506-e9bf-44b1-a9b8-530cd8818db4</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:33:10 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:33:10.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,குற்றவாளி,rape,சிறை தண்டனை,Prison sentence,சிறுமி,பாலியல் பலாத்காரம்,girl,போக்சோ,POCSO,culprit</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ytgmwh8z/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ytgmwh8z/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a> வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><h2>8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 8 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">சிறுமியை பாலியல் பலாத்காரம்</a> செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த சுப்பையா மகன் மாரியப்பன் (வயது 55) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><h2>போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை</h2><p>இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி முருகன் நேற்று (18.9.2026) மாரியப்பனை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">குற்றவாளி</a> என உறுதி செய்து அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a> மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலையோடு 7 பவுன் நகையை தவறவிட்ட மூதாட்டி: பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/old-woman-who-lost-7-pounds-of-jewelry-with-ganesha-idol-police-rescue-with-public-help</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/old-woman-who-lost-7-pounds-of-jewelry-with-ganesha-idol-police-rescue-with-public-help#comments</comments><guid isPermaLink="false">e4942aea-8e6e-4109-a152-43565166ed0f</guid><pubDate>Sat, 19 Sep 2026 01:29:35 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:29:35.295Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Pallikaranai,மீட்பு,Rescue,ஆலந்தூர்,விநாயகர் சிலை,போலீசார்,மூதாட்டி old woman,நகைjewelry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0129zew9/364.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீசார் மீட்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0129zew9/364.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆலந்தூர், </p><p>சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்தவர் கோகிலா (வயது 65). விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து வழிபட்டார். அந்த விநாயகர் சிலைக்கு 7 பவுன் தங்க நெக்லஸ் அணிவித்து பூஜை செய்தார். பூஜை முடிந்ததும் அந்த விநாயகர் சிலையை, அருகில் வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலை அருகே வைத்துவிட்டு கோகிலா வீட்டுக்கு வந்துவிட்டார்.</p><h2>விநாயகர் சிலை</h2><p>சிறிது நேரத்துக்கு பிறகுதான் விநாயகர் சிலைக்கு அணிவித்திருந்த 7 பவுன் தங்க நெக்லஸ் அவரது நினைவுக்கு வந்தது. பதறியடித்து அங்கு சென்று பார்த்தபோது. தனது விநாயகர் சிலை மற்றும் நகையை காணாதது கண்டு அதிர்சி அடைந்தார். இது குறித்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ், அங்கு பெரிய விநாயகர் சிலை வைத்திருந்த பலராமனிடம் கேட்டபோது, அங்கிருந்த சிறிய சிலைகளை பள்ளிக்கரணை ஏரியில் கரைத்து விட்டதாகவும், பூக்களை அருகில் உள்ள குப்பையில் கொட்டியதாகவும் தெரிவித்தார்.</p><h2>மீட்பு</h2><p>இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலரின் உதவியுடன் குப்பை மற்றும் ஏரியில் இறங்கி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>தேடினர். அப்போது ஏரியில் கிடந்த 7 பவுன் தங்க நெக்லசை மீட்டு மூதாட்டி கோகிலாவிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். நகையை மீட்ட போலீசாருக்கு கோகிலா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>