<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 08 Aug 2026 02:28:34 +0000</lastBuildDate><item><title>செங்கோட்டை-மயிலாடுதுறை, நாகர்கோவில்-கோவை ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-sengottaimayiladuthurai-and-nagercoilcoimbatore-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-sengottaimayiladuthurai-and-nagercoilcoimbatore-train-services#comments</comments><guid isPermaLink="false">de0ec9cc-d225-4503-9856-0d68f8645993</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:28:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:28:25.234Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,செங்கோட்டை,Rail Transport,ரெயில் போக்குவரத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ia87rk9z/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/ia87rk9z/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (வ.எண்.16848) இன்று முதல் 11-ந் தேதி வரை மற்றும் 13-ந் தேதி, 20, 27-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மதுரைக்கு பதிலாக மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். </p><p>நாகர்கோவில்-கோவை ரெயில் (வ.எண்.16321) வருகிற 17-ந் தேதி. 22, 25, 27 மற்றும் 29-ந்தேதிகளில் விருதுநகரில் இருந்து காரைக்குடி வழியாக இயக்கப்படும். கோவை-நாகர்கோவில் ரெயில் (வ.எண்.16322) அடுத்த மாதம் 3-ந் தேதி கரூரில் இருந்து திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்து சேரும்.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர்: கார் டிரைவரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-4-arrested-for-stabbing-car-driver</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-4-arrested-for-stabbing-car-driver#comments</comments><guid isPermaLink="false">d59d10c1-90c6-4db8-a431-34fd94432d15</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:24:48 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:24:48.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,கைது,car driver,கார் டிரைவர்,பெரம்பூர்,Perambur,arreste</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/men26sf9/92.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/men26sf9/92.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பூர், </p><p>முன்விரோதம் காரணமாக கார் டிரைவரை கத்தியால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>முன்விரோதம்</h2><p>சென்னை ஏழுகிணறு தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது செரிப் (வயது 47). கார் டிரைவரான இவருக்கும், மண்ணடி இப்ராகிம் தெருவைச் சேர்ந்த சாதிக் அலி (45) என்பவருக்கும் இடையே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">முன்விரோதம் </a>இருந்து வந்தது. நேற்று முன்தினம் காலை முகம்மது செரிப் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.</p><p>அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர், அவரை வழிமறித்து, சாதிக் அலி குடும்பத்தினரிடம் ஏன் பிரச்சினை செய்கிறாய்? என கேட்டு கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.</p><h2>கைது</h2><p>இதில் பலத்த காயமடைந்த முகம்மது செரிப், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக சாதிக் அலி, பைசல் ரகுமான் (32), மைதீன் (37), அப்துல் காசிம் (35) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>17-ந்தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு கட்டாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-document-registration-becomes-mandatory-from-the-17th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-document-registration-becomes-mandatory-from-the-17th#comments</comments><guid isPermaLink="false">f4e3bec0-a048-400f-af93-1b3446a7c449</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:22:44 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:22:44.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பத்திரப்பதிவு,Document Registration,ஆன்லைன் பத்திரப்பதிவு,Online Document Registration</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8pcea7jp/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/8pcea7jp/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகளுக்காக, 'ஸ்டார் 3.0' மென் பொருள் அறிமுகமாகி உள்ளது. இதன்படி, புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக கட்டுமான நிறுவனங்களுக்கு, பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் எழுதிய கடிதம் பின்வருமாறு;</p><p>புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனை பத்திரங்களை, ஆக., 17 முதல் ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும்; 'மேனுவல்' முறையில் சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இதன்படி வீடு, மனை வாங்குவோர், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன அலுவலகத்தில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம். இதற்காக அந்த அலுவலகங்களில், குறிப்பிட்ட சில வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். </p><p>* பத்திரப்பதிவுக்காக, 'வெப் கேமரா' வாயிலாக புகைப்படம் எடுக்கும் இடத்தில், பின்னணி திரை தெளிவாக, எவ்வித படங்களும் இன்றி இருக்க வேண்டும் </p><p>* பத்திரப்பதிவு செய்வோரை படம் பிடிப்பதற்கு ஏதுவாக, தரமான, 'வெப் கேமரா' இருக்க வேண்டும்.</p><p>* சொத்து விற்பவர், வாங்குபவர் விரல் ரேகை மற்றும் 'பயோமெட்ரிக்' விபரங்களை பதிவு செய்ய, பதிவுத்துறை மென்பொருளுடன் ஒத்துப்போகக்கூடிய கருவியை அமைக்க வேண்டும்.</p><p>* கருவிழி பதிவுக்கான கருவிகள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.</p><p>* பத்திரப்பதிவு நடக்கும் இடத்தில், 100 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் இணையதள சேவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>* பதிவுத்துறை இணையதளத்தில், 'லாக் இன்' எனப்படும் நுழைவு வசதியை முன்கூட்டியே ஏற்படுத்தி இருக்க வேண்டும்.</p><p>* கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியோர், இதற்கான வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்த வேண்டும். ஆன்லைன் பத்திரப்பதிவு வெற்றிகரமாக நடக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி: கைதானவர் சிறையில் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-palani-temple-land-scam-arrested-individual-dies-in-prison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-palani-temple-land-scam-arrested-individual-dies-in-prison#comments</comments><guid isPermaLink="false">f3c4dba4-1377-41a9-aaec-3d317729adba</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:15:51.229Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,பழனி,தமிழகம்,Madurai,உயிரிழப்பு,Palani,Palani temple,நில மோசடி,பழனி கோவில்,Land fraud case,மதுரை சிறை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/zcdxfthe/ara.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/zcdxfthe/ara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் என்பவர் உயிரிழந்தார்.</p><h2>மோசடி பத்திரப்பதிவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி கோவில்</a> அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது.</p><p>இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>நேரில் விசாரணை</h2><p>அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார்.</p><h2>நீதிமன்ற காவல்</h2><p>திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது.</p><p>இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>உயிரிழப்பு</h2><p>இந்நிலையில் பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, வழியில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p>]]></content:encoded></item><item><title>நில வழிகாட்டி மதிப்புகளை 60% வரை உயர்த்த கிராம வாரியாக பட்டியல் தயாரிப்பு - பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்க நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/preparation-of-village-wise-list-to-hike-guideline-values-by-up-to-60-move-to-boost-registration-revenue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/preparation-of-village-wise-list-to-hike-guideline-values-by-up-to-60-move-to-boost-registration-revenue#comments</comments><guid isPermaLink="false">e2b457fe-1615-4354-a430-defd7a617ea3</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:11:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:11:57.968Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பத்திரப்பதிவு,revenue,வருவாய்,Registration,வழிகாட்டி மதிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/q1bapxi7/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/q1bapxi7/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டுக்கு பின், வழிகாட்டி மதிப்புகள்(Guideline Value) ஒட்டு மொத்த மொத்த அளவில் சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக நிதிநிலை குறித்து, சமீபத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது, நில வழிகாட்டி மதிப்புகளில் காணப்படும் முரண்பாடுகளால், வருவாய் கிடைப்பதில் கசிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், பத்திரப்பதிவில் வருவாய் கசிவு ஏற்படும் வழிகளை சரிசெய்ய, பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.</p><p>அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், வழிகாட்டி மதிப்புகளை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனால், நில வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு அறிக்கை அளிக்க, சார் பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-</p><p>“தமிழக அரசின் உத்தரவுப்படி, வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்கான பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கிராம வாரியாக தற்போதைய மதிப்பு, உயர்த்தப்பட வேண்டிய புதிய மதிப்பு விவரங்கள், பட்டியல் வடிவில் பெறப்படுகின்றன. இதன்படி, நகர்ப்புற வளர்ச்சி அடிப்படையில் மாநகராட்சிகளில், 60 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கு அடுத்தபடியாக நகராட்சிகள், பேரூராட்சிகளில் அவை அமைந்துள்ள பகுதிகளின் தன்மை அடிப்படையில், 50 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளது.</p><p>நகர்ப்புற வளர்ச்சி தாக்கம் இல்லாத ஊரக பகுதிகளில், 30 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்புகள் திருத்தப்பட உள்ளன. அத்துடன் விவசாய நிலங்களின் குறைந்தபட்ச விலை மதிப்பு தற்போது, 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இதை, 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை உயர்த்துவதற்கான பரிந்துரையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டுதான் தற்போது பத்திரப்பதிவு வருவாய் இலக்கு, 35,000 கோடி ரூபாயாக திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.” </p><p>இவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>என்ஜினீயரிங் 2-ம் சுற்று கலந்தாய்வு: 79,403 மாணவர்களுக்கு தற்காலிக ஆணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineering-second-round-counseling-provisional-allotment-orders-for-79403-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engineering-second-round-counseling-provisional-allotment-orders-for-79403-students#comments</comments><guid isPermaLink="false">70e89781-9b18-4c6a-8733-c8ddbb9332c3</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:03:38 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:03:38.091Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>என்ஜினீயரிங்,Engineering College,என்ஜினீயரிங் கலந்தாய்வு,பொறியியல் கல்லூரிகள்,engineering counseling,என்ஜினீயரிங்  கலந்தாய்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/49j69h8r/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/49j69h8r/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் 2-ம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற 79,403 மாணவ-மாணவிகளுக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.</p><h2>முதல் சுற்றில் 28,979 பேருக்கு இடம்</h2><p>பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெற்றது.</p><p>முதல் சுற்றில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 26,802 மாணவ-மாணவிகளுக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 2,177 மாணவ-மாணவிகளுக்கும் என மொத்தம் 28,979 பேருக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.</p><h2> 2-ம் சுற்று கலந்தாய்வு</h2><p>இதைத்தொடர்ந்து பொறியியல் 2-ம் சுற்று கலந்தாய்வு கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதில் 93,117 மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p>அழைக்கப்பட்ட மாணவர்கள் கடந்த 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்தனர். இதையடுத்து, அவர்கள் தேர்வு செய்த விருப்பங்களின் அடிப்படையில் தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>79,403 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு</h2><p>2-ம் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 68,388 மாணவர்களுக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 11,015 மாணவர்களுக்கும் என மொத்தம் 79,403 மாணவ-மாணவிகளுக்கு பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தற்காலிக<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> இட ஒதுக்கீடு </a>ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><h2>இன்று மாலை 5 மணி வரை அவகாசம்</h2><p>தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக இட ஒதுக்கீட்டை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்காக இன்று மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இறுதி இட ஒதுக்கீடு ஆணை நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-supply-board-grievance-redressal-meeting-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-supply-board-grievance-redressal-meeting-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">59b97947-002a-433a-af40-189a8c8bebd7</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:57:46 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:57:46.029Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Meeting,குறை தீர்க்கும் கூட்டம்,சென்னை குடிநீர் வாரியம்,Water Supply Board</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/rzyas0dg/98.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/rzyas0dg/98.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை என்ஜினீயர் தலைமையில்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D"> குறை தீர்க்கும் கூட்டம்</a> நடைபெறும். இதுதொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>குறை தீர்க்கும் கூட்டம்</h2><p>சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இந்த மாதத்துக்கான குறை தீர்க்கும் கூட்டம் இன்று 15 மண்டலங்களில் உள்ள குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடை பெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை என்ஜினீயர் தலைமையில் கூட்டம் நடைபெறும்.</p><p>இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் விரைவில் அறிமுகமாகிறது பயோமெட்ரிக் முறை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/biometric-system-to-be-introduced-soon-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/biometric-system-to-be-introduced-soon-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">1b41173c-bafe-44c6-a11f-dfca3f90c788</guid><pubDate>Sat, 08 Aug 2026 00:55:06 +0000</pubDate><atom:updated>2026-08-08T00:55:06.584Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழக சட்டசபை,TN Assembly,பிரேமலதா விஜயகாந்த்,பயோமெட்ரிக் வருகை பதிவேடு,TN Assembly session,Biometric,பயோமெட்ரிக் முறை,JCD Prabhakar,சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,சட்டசபை கூட்டத் தொடர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/gtn4dmvt/angum.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/gtn4dmvt/angum.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை விரைவில் அறிமுகமாக உள்ளது.  </p><h2>பயோ மெட்ரிக் முறை</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்</a> மீதான விவாதத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தற்போது பதிவேடுகளில் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட வேண்டியதுள்ளது. அதை பயோ மெட்ரிக் முறையில் நவீனப்படுத்த வேண்டும் என்று கேட்டார்.</p><p>அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், பயோமெட்ரிக் முறை ஆய்வில் உள்ளது. விரைவில் அது அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.</p><h2>பாட்டில் தண்ணீர்</h2><p>பின்னர் பேசிய பிரேமலதா, அவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் தரப்படுகிறது. பாதுகாப்பான நீரை பெறுவதற்காக அனைவருக்கும் பாட்டிலில் தண்ணீர் தர வேண்டும் என்று ஏற்கனவே கேட்டேன். அதற்கு ஓ.பன்னீர்செல் வம் (தி.மு.க. எம்.எல்.ஏ.) தடை போடுகிறார் என்று கூறினார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், நான் தடை போடவில்லை. அவர் கேட்பதை கொடுத்துவிடுங்கள் என்று சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவையில் சிரிப்பொலி எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-13</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-13#comments</comments><guid isPermaLink="false">b059a460-ebdc-487f-9947-d41702def044</guid><pubDate>Sat, 08 Aug 2026 00:52:09 +0000</pubDate><atom:updated>2026-08-08T00:52:09.899Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/mqmvlfhp/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/mqmvlfhp/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 08.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பராமரிப்பு </a>பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p><strong>பெரம்பூர்</strong>: திருமலை நகர் பிரதான சாலை, திருமலை நகர் 1 வது முதல் 3வது தெரு வரை மற்றும் விரிவாக்கம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-price-situation-in-chennai-122</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-price-situation-in-chennai-122#comments</comments><guid isPermaLink="false">288f0212-075e-40f2-ba3e-d23face4dab0</guid><pubDate>Sat, 08 Aug 2026 00:43:02 +0000</pubDate><atom:updated>2026-08-08T00:43:02.629Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,Petrol and Diesel price,டீசல் விலை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/1jf8u9hf/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/1jf8u9hf/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><h2> பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (08.08.2026 வெள்ளிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பா..? வானிலை மையம் அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-meteorological-centre-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-meteorological-centre-update#comments</comments><guid isPermaLink="false">9d677e46-c466-434d-b9d9-e3a69a5a89f4</guid><pubDate>Sat, 08 Aug 2026 00:28:55 +0000</pubDate><atom:updated>2026-08-08T00:28:55.715Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,வானிலை தகவல்,Weather Report,வானிலை அறிவிப்பு,weather center,TN weather</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/xnub0ex7/rain.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain, மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-08/xnub0ex7/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மிதமான மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு கடலோர கேரளா வரை தமிழகம் வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன்காரணமாக இன்று (08-08-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (09-08-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>10-08-2026 முதல் 12-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>13-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>08-08-2026 முதல் 11-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>08-08-2026 முதல் 11-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (08-08-2026)</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-kg-of-cannabis-seized-in-paddy-field-youth-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/11-kg-of-cannabis-seized-in-paddy-field-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">a91bfc02-13cd-4786-a32d-75adc370b1b5</guid><pubDate>Fri, 07 Aug 2026 16:26:48 +0000</pubDate><atom:updated>2026-08-07T16:26:48.105Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Tirunelveli,திருநெல்வேலி,Ganja,கஞ்சா,Youth arrested,வாலிபர் கைது,Seizure,பறிமுதல்,patrol,ரோந்து பணி,போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/g45j6wji/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/g45j6wji/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், சீவலப்பேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டு மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 180 கிராம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்த போலீசார், ஒரு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வாலிபரை கைது</a> செய்தனர்.</p><h2>போலீசார் ரோந்து பணி</h2><p>திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்நகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிஸ்(எ) நவீன் (வயது 21) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். </p><p>அப்போது அந்த வாலிபர் அரசால் தடை செய்யப்பட்டு மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 180 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.</p><h2>1 கிலோ 180 கிராம் கஞ்சா பறிமுதல், வாலிபர் கைது</h2><p>இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அந்த வாலிபரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 180 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாலிபரை நீதிமன்ற காவலில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி வருகை: ஆகஸ்ட் 17-ல் திருவாரூரில் டிரோன் பறக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-presidents-visit-drone-flying-banned-in-thiruvarur-on-august-17</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-presidents-visit-drone-flying-banned-in-thiruvarur-on-august-17#comments</comments><guid isPermaLink="false">bf89ab32-0d64-4fd4-857d-f59ed941a518</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:57:36 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:57:36.352Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vice President,Thiruvarur,திருவாரூர்,துணை ஜனாதிபதி,டிரோன் பறக்க தடை,ban on flying drones,வருகை,visit</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/t5mklwsc/77.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/t5mklwsc/77.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர், </p><p>திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வருகைதரவுள்ளதால் அன்றைய தினம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>துணை ஜனாதிபதி பங்கேற்பு</h2><p>திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">துணை ஜனாதிபதி</a> சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 17-ந் தேதி அன்று முழுவதும் டிரோன் கேமரா பறந்திட அல்லது செயல்படுத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்பு விதிமுறைகளை மீறி யாராவது டிரோன்களைப் பயன்படுத்தினால், அவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் வனப்பட்டா, நிலப்பட்டா வழங்க சிறப்பு கிராமசபை கூட்டங்கள்- பெ.சண்முகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-grama-sabha-meetings-for-forest-and-land-patta-in-theni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-grama-sabha-meetings-for-forest-and-land-patta-in-theni#comments</comments><guid isPermaLink="false">5e1190fc-1863-4c2a-9535-41911d89fa3c</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:55:34 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:55:34.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,பெ.சண்முகம்,P. Shanmugam,Gram sabha meetings,ஆர்ப்பாட்டம் protest,கிராமசபை கூட்டங்கள்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/adb3gn9q/shunmugam.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/adb3gn9q/shunmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேனியில் வனப்பட்டா, நிலப்பட்டா வழங்க சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பெ.சண்முகம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தேனி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம் தொடர்பான பணிகள் முடியும் வரை யாரையும் வெளியேற்ற மாட்டோம் - மாவட்ட கலெக்டர் உறுதியளிப்பு.</p> <h2>பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது</h2><p>தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற பெருந்திரள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்ப்பாட்டம்</a> நடைபெற்றது. மக்களின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது</p><h2>மனு</h2><p>•உச்ச நீதிமன்றத்தில் மனு: வனப்பகுதி தொடர்பான தீர்ப்பை மறுசீராவு செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p> <h2>கிராமசபை</h2><p>•வனப்பட்டா &amp; நிலப்பட்டா வழங்க நடவடிக்கை: வனவுரிமைச் சட்டம் 2006-இன் கீழ் மேகமலை, வருசநாடு உட்பட தேனி மாவட்டம் முழுவதும் உரிமையுள்ள மக்களுக்கு வனப்பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.</p> <h2> தடை</h2><p>•வெளியேற்ற தடை: பட்டா வழங்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை யாரையும் வீடுகளிலிருந்தோ அல்லது நிலங்களிலிருந்தோ வெளியேற்ற மாட்டோம் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.</p><h2>கால்நடை மேய்ச்சல்</h2><p>•கால்நடை மேய்ச்சல் உரிமை: தேனி மாவட்டத்திலுள்ள கால்நடைகள் மேய்ச்சலுக்கு எவ்விதத் தடையும் இருக்காது. மேலும், மேய்ச்சல் நிலங்கள் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்படும்.</p><h2> தீர்வு</h2><p>•வனத்துறை தொந்தரவுகளுக்குத் தீர்வு: விவசாயம், போக்குவரத்து போன்றவற்றில் வனத்துறையினரால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க, அடுத்த 1 வாரத்திற்குள் வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் தனிக்கூட்டம் நடத்தப்பட்டுத் தீர்வு காணப்படும்.</p><h2>போராட்டம் நிறைவு பெற்றது</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் வனக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததை தொடர்ந்து போராட்டம் நிறைவு பெற்றது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தீக்குளித்த பக்தரால் பரபரப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotee-self-immolation-thiruchendur-temple-complex-intensive-care</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/devotee-self-immolation-thiruchendur-temple-complex-intensive-care#comments</comments><guid isPermaLink="false">9b2eb04c-891b-4f93-a670-1186507f3a5e</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:40:41 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:40:41.876Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,Tiruchendur temple,திருச்செந்தூர் கோவில்,தீக்குளிப்பு,Tiruchendhur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ehxp7rpj/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/ehxp7rpj/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர்,</p><p>திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.</p><h2>தீக்குளித்த பக்தர்</h2><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வார விடுமுறை நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இன்று காலையில் வழக்கம்போல் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.</p><p>அப்போது கோவில் வளாகத்தில் சண்முகவிலாச மண்டபம் முன்பாக நின்ற பக்தர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த சக பக்தர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அந்த நபரைக் காப்பாற்றினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.</p><h2>மனநலம் பாதிக்கப்பட்டவர்</h2><p>இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவில் வளாகத்தில் தீக்குளித்தவர் கழுகுமலை அருகே கஸ்தூரிரங்கபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் சுரேஷ் (38 வயது) என்பது தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி விட்டது. இவருக்கு குழந்தை இல்லை.</p><p>கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சுரேஷ் திருச்செந்தூர் கோவில் பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், அவர் திடீரென்று தீக்குளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்-ஜனாதிபதி உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-15-new-judges-to-the-madras-high-court-presidents-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-15-new-judges-to-the-madras-high-court-presidents-order#comments</comments><guid isPermaLink="false">e4324891-cbb1-42ce-9761-acd302068dec</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:22:41 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:22:41.559Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜனாதிபதி,நீதிபதிகள்,சென்னை ஐகோர்ட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/mwp1tqik/High-court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/mwp1tqik/High-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 51 நீதிபதிகள் உள்ளனர். 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள் என்று 19 பேருடைய பெயரை சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் ஏற்றுக் கொண்டது. அந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரை பரிசீலித்த மத்திய அரசு, 15 பேரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>அதன்படி, ஐகோர்ட்டுக்கு  ஐந்து வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p> <p>அதன்படி, ஐகோர்ட்டுக்கு  <strong>ஐந்து வழக்கறிஞர்கள்</strong> நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி</p><p> ரஜ்னிஷ் பதியில்</p><p>ரமேஷ் நடராஜன்</p><p>ஜிகே முத்துக்குமார்</p><p>ராமகிருஷ்ணா ராஜேஷ் விவேகானந்தன் </p><p>மேலும் மூன்று வழக்கறிஞர்களும் மற்றும் ஏழு நீதித்துறை அதிகாரிகள் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.</p><p>ரவீகுமார் சங்கரநாராயணன் </p><p> திலீப் குமார் நடராஜன் </p><p>எல்லப்பன் மனோகரன்</p><p>முருகன்( நீதித்துறை அதிகாரி)</p><p>சுமதி </p><p>அல்லி </p><p> திருமகள்</p><p>சண்முகன் கார்கிகேயன்</p><p>முருகேசன் பாலுசாமி </p><p>குணசேகரன் </p>]]></content:encoded></item><item><title>பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வை-பை: சேவை நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wi-fi-in-public-places-chennai-corporation-consults-with-service-companies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wi-fi-in-public-places-chennai-corporation-consults-with-service-companies#comments</comments><guid isPermaLink="false">98430926-cd2c-4646-b800-aba603d069b6</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:17:04 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:17:04.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,ஆலோசனை,Free Wi-Fi,இலவச வை-பை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/jl72lrlf/chennai-corporation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/jl72lrlf/chennai-corporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னையில் பொது மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்களுக்கு இலவச வை-பை (WIFI) குறித்து இணைய சேவை வழங்குநர்களுடனான ஆலோசணைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் இன்று நடைபெற்றது. இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்களுக்கு இலவச வை-பை (WIFI) வசதி ஏற்படுத்துவது குறித்து இணைய சேவை வழங்குநர்களுடனான (Internet Service Providers) ஆலோசணைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் இன்று (07.08.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி (ACT) ஆகிய இணைய சேவை வழங்குநர்கள், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>இலவச வை-பை</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகள், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகளிலும், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வை-பை (WIFI) வசதியினை ஏற்படுத்திட இதற்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களான ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி (ACT) ஆகிய இணைய சேவை வழங்குநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய கைத்தறி தினம்- பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/premalatha-vijayakanth-message-on-national-handloom-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/premalatha-vijayakanth-message-on-national-handloom-day#comments</comments><guid isPermaLink="false">58cd70e8-95b9-4a74-8869-d2b51420623d</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:08:20 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:08:20.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Greetings,வாழ்த்து,Premalatha Vijayakanth,பிரேமலதா விஜயகாந்த்,தேசிய கைத்தறி தினம்,National Handloom Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/l0on8805/premalatha.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய கைத்தறி தினம்- பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/l0on8805/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தேசிய கைத்தறி தினத்தை</a> முன்னிட்டு, பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து. இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>தேசிய கைத்தறி தினம்</h2><p>தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். விஜயகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் கைத்தறி ஆடைகளை அணிவதை ஒரு கடமையாக கொண்டிருந்தார். ஒரு மனிதனுக்கு இரு கண்கள் எப்படி முக்கியமோ, அதுபோல் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயமும் நெசவும் இரு கண்கள் என்று விஜயகாந்த்  கூறுவார்.</p><h2>எளிமையான வாழ்க்கை</h2><p>2003ஆம் ஆண்டு நெசவாளர்களுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, ஒரு கட்சியினர் கஞ்சி தொட்டி திறந்தனர்; மற்றொரு கட்சியினர் பிரியாணி வழங்கினர். ஆனால் விஜயகாந்த், நெசவாளர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன், ரூ.1 கோடிக்கும் மேல் நிதியை வழங்கினார். மேலும், நெசவாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக துணிகளை வழங்கினார். அவரது எளிமையான வாழ்க்கை முறை அனைவருக்கும் முன்மாதிரியாகும்.</p><h2>கோடைக்காலம் ஆடை</h2><p>மகாத்மா காந்தியடிகள் சுதேசி இயக்கத்தின் அடையாளமாக கதர் ஆடையை முன்னிறுத்தினார். அந்நிய ஆடைகளை புறக்கணித்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அணிவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும், சுதந்திர போராட்டத்தையும் வலுப்படுத்தினார். கைத்தறி என்பது ஒரு துணி மட்டுமல்ல; அது தன்னிறைவு, தேசப்பற்று மற்றும் இந்திய பாரம்பரியத்தின் சின்னமாகும். கைத்தறி ஆடைகள் கோடைக்காலத்தில் அணிவதற்கு மிகவும் வசதியானவை.</p><h2>இயற்கை இழைகள்</h2><p>இயற்கை இழைகளால் நெய்யப்படுவதால் இவை உடலுக்குக் குளிர்ச்சியையும், ஆரோக்கியமான உணர்வையும் அளிக்கின்றன. மேலும், கைத்தறி ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் நம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவாக இருக்க முடியும். எனவே, தேசிய கைத்தறி தினமான இன்று மட்டுமல்லாமல், ஆண்டின் அனைத்து நாட்களிலும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை தொடர்ந்து பயன்படுத்துவோம்.</p> <h2> பாரம்பரியத்தை பாதுகாப்போம்</h2><p>இந்தியப் பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்; உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்போம்; நம் நெசவாளர்களின் உழைப்பை மதிப்போம். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம். கதர் ஆடைகள் அணிவோம், கைத்தறியை காப்போம்; இந்தியப் பாரம்பரியத்தை போற்றுவோம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதி சீரமைப்பு மசோதா: பாஜகவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்- கி.வீரமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-bill-k-veeramani-urges-thwarting-bjps-plan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-bill-k-veeramani-urges-thwarting-bjps-plan#comments</comments><guid isPermaLink="false">8bc1a87f-05ac-4205-be99-03b5d50149b4</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:57:59 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:57:59.125Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,கி.வீரமணி,தொகுதி மறுசீரமைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/hq5a0owq/k-veera.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/hq5a0owq/k-veera.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,   </p><p>திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>நாடாளுமன்றத்தில் தொகுதி சீரமைப்பு மற்றும் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதாக்களை எதிர்க்கட்சிகள் உறுதியாக எதிர்க்க வேண்டும். ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், உரிமையையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான பிரச்சினை இது. கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் முயற்சியால் மக்களவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்தது.</p> <p>தற்போது மீண்டும் அந்த முயற்சியை மத்திய பா.ஜனதா அரசு மேற்கொண்டு வருகிறது. தொகுதி எண்ணிக்கையை உயர்த்துவது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்றும் ஆபத்து கொண்டது. இந்த சூழ்ச்சியை எதிர்க்கட்சிகள் உணர்ந்து, வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைய வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும், தொகுதி சீரமைப்பு மசோதாவையும் முடிச்சுப்போட்டு அரசியல் செய்யப் பார்க்கும் பா.ஜனதாவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.</p><p>ஏற்கெனவே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், அதை உடனே செயல்படுத்தாமல் தொகுதி மறுவரையறைக்குக் காத்திருப்பது பா.ஜனதாவின் உள்நோக்கம். ஆரிய நரித்தனமான இந்த மாயவலையில் சிக்காமல், தொகுதி சீரமைப்பு மசோதாவை ஏற்கக்கூடாது என்பதில் தமிழ்நாட்டுக் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும். அரசியல் பிழை இழைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் எந்தச் சூழலிலும் சறுக்கிவிடக் கூடாது. இது எதிர்காலத் தலைமுறை சார்ந்த உரிமையைக் காக்கும் போராட்டமாகும் என்பதால், அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கிணற்றில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-elderly-man-dies-after-drowning-in-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-elderly-man-dies-after-drowning-in-well#comments</comments><guid isPermaLink="false">fb022420-4865-4828-bf93-47aa3911bc77</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:42:03 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:42:03.679Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Elderly man,Death,police investigation,well,கிணறு,போலீசார் விசாரணை,முதியவர் உயிரிழப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/v3utfygz/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவர் உயிரிழப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/v3utfygz/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், புளியம்பட்டி அருகே காணாமல் போன <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">முதியவர்</a> ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார் விசாரணை</a> நடத்தி வருகின்றனர்.</p><h2>திருமணமாகாத முதியவர்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமணியாச்சி கீழத்தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் கருணாநிதி (வயது 70). திருமணமாகாத இவர், உறவினர்கள் யாரும் கவனிக்காத நிலையில் தனியாக ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.</p><h2>காணாமல் போன முதியவர்</h2><p>கடந்த சில நாட்களாக கல்லடைப்பு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த அண்டை வீட்டாரும் பொதுமக்களும் உணவு வழங்கி பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கருணாநிதி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.</p><h2>கிணற்றில் உடல் மீட்பு</h2><p>நேற்று அப்பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆழமான கிணறு ஒன்றில் அவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">சடலமாகக்</a> கிடப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சரியாக படிக்காததை கண்டித்த பெற்றோர்: 8-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-scold-boy-for-poor-studies-8th-grader-takes-extreme-step</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-scold-boy-for-poor-studies-8th-grader-takes-extreme-step#comments</comments><guid isPermaLink="false">ac50e574-9fc8-43c9-bfa3-1e03e9fc1678</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:38:08 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:38:08.316Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,தற்கொலை,கோயம்புத்தூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/lvot5bno/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/lvot5bno/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கோவிந்தநாயக்கன்பாளையம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் ரோகித் (13 வயது). வையம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் ரோகித் சரிவர படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்தனர். மேலும் சரியாக படிக்காவிட்டால் விடுதியில் சேர்த்துவிடுவோம் என்று கூறியதாக தெரிகிறது.</p><p>இதனால் மனமுடைந்த ரோகித் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் சாம்பியன்: பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/st-louis-rapid-blitz-champion-chief-minister-vijay-congratulates-praggnanandha</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/st-louis-rapid-blitz-champion-chief-minister-vijay-congratulates-praggnanandha#comments</comments><guid isPermaLink="false">6ea2b39c-d469-4017-82ea-0857694799c4</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:36:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:36:28.643Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாம்பியன்,வாழ்த்து,champion,பிரக்ஞானந்தா,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Praggnanandha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/cv2k9kiq/76.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/cv2k9kiq/76.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து முதல் அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>சாம்பியன் பட்டம்</h2><p>அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் செஸ் போட்டியில் (2026 Saint Louis Rapid &amp; Blitz) சாம்பியன் பட்டம் வென்ற <a href="https://www.dailythanthi.com/topic/praggnanandhaa">பிரக்ஞானந்தா</a>விற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! </p><h2>வெற்றிவாகை சூடிசாதனை</h2><p>உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், பிரக்ஞானந்தா, தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடிசாதனை படைத்துள்ளார். சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். </p><p>இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையானஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title> கருணாநிதிக்கு மா.சுப்பிரமணியன் மாரத்தான் ஓடி அஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ma-subramanian-runs-marathon-in-memory-of-karunanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ma-subramanian-runs-marathon-in-memory-of-karunanidhi#comments</comments><guid isPermaLink="false">0807ac34-d1ea-4211-99d6-00b4065ab46f</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:31:53 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:31:53.611Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மா.சுப்பிரமணியன்,Tribute,அஞ்சலி,Karunanidhi,கருணாநிதி,marathon,மாரத்தான்,Ma. Subramanian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/on53ivxk/subramani.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மா.சுப்பிரமணியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கருணாநிதிக்கு மா.சுப்பிரமணியன் மாரத்தான் ஓடி அஞ்சலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/on53ivxk/subramani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு மா.சுப்பிரமணியன் அவருக்கு முற்றிலும் வித்தியாசமான முறையில் மாரத்தான் ஓடி அஞ்சலி செலுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.</p> <h2>மாரத்தான்</h2><p>தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF">கருணாநிதி</a> மீது மிகுந்த பற்று கொண்டவர். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போதே, பல்வேறு மாரத்தான் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு அவரிடம் நேரடியாக பாராட்டு பெற்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.</p><h2>நினைவு நாள்</h2><p>இந்த நிலையில், கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மா.சுப்பிரமணியன்</a> அவருக்கு முற்றிலும் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.</p> <h2> '8' வடிவம்</h2><p>கடந்த கொரோனா பொதுமுடக்க காலத்தின் போது, மா.சுப்பிரமணியன் தனது வீட்டு மாடியில் '8' வடிவம் அமைத்து, அதில் தொடர்ந்து 4 மணி நேரம் 8 நிமிடங்கள் 18 விநாடிகள் நிற்காமல் ஓடி ஆசியா புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார். </p><h2>காதில் கேட்டகருணாநிதி பேச்சு</h2><p>கருணாநிதியின் நினைவு நாளான இன்று, அதே பாணியில் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்தார். இதற்காக இன்று அதிகாலை 4.30 மணிக்கே அவர் ஓடத் தொடங்கினார். காதொலி கருவி மூலம் கருணாநிதியின் காந்தக் குரல் மேடைப் பேச்சு தொகுப்புகளை கேட்டபடியே, தனது வீட்டு மாடியில் உள்ள 8 வடிவப் பாதையில் விறுவிறுப்பாக ஓடினார்.12 கிலோ மீட்டர் தூரம்கலைஞரின் பேச்சை கேட்டபடி, சற்றும் சோர்வடையாமல் தொடர்ந்து 12 கிலோ மீட்டர் தூரம் ஓடி முடித்தார்.</p> <h2> வினோத மாரத்தான்</h2><p> நினைவு நாளில் தனது ஆசானுக்கு இந்த வினோத மாரத்தான் ஓட்டத்தின் மூலம் மா.சுப்பிரமணியன் செலுத்திய அஞ்சலி, தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: சென்னை மாநகராட்சி இணை ஆணையாளர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-works-chennai-corporation-joint-commissioner-inspection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-works-chennai-corporation-joint-commissioner-inspection#comments</comments><guid isPermaLink="false">639700ea-e9bb-443b-92b3-ec79c5aedda4</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:13:27 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:13:27.209Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Northeast Monsoon,முன்னெச்சரிக்கை பணிகள்,வடகிழக்குப் பருவமழை,ஆய்வுInspection,இணை ஆணையர்,joint commissioner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5zju0iof/75.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5zju0iof/75.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>இணை ஆணையாளர் ஆய்வு</h2><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்.,  இன்று (07.08.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>மழைநீர் வடிகால் பணி</h2><p>இணை ஆணையாளர் (பணிகள்) அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-70க்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் பணி, வார்டு-68க்குட்பட்ட 70 அடி சாலையில் அமைக்கப்பட்டு வரும் நீர் உறிஞ்சும் பூங்கா பணி, ஜவஹர் நகர், முதல் பிரதான சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணி, வார்டு-72க்குட்பட்ட காந்தி கால்வாயில் ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி மற்றும் பவுடர் மில்ஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இதனைத் தொடர்ந்து, வார்டு-69க்குட்பட்ட சோமையா தெருவில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, மண்டல அலுவலர் (பொ) சதீஷ் மற்றும் மண்டல நல அலுவலர், மண்டல மருத்துவ அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-tomorrow-to-correct-smart-cards-thoothukudi-collector-informs-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-tomorrow-to-correct-smart-cards-thoothukudi-collector-informs-2#comments</comments><guid isPermaLink="false">209ba606-ab5c-4674-85e1-6f1a82f6a58a</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:04:24 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:04:24.922Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Collector information,கலெக்டர் தகவல்,Special camp,சிறப்பு முகாம்,Correction,திருத்தம்,smart card,ஸ்மார்ட் கார்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/aobr6ock/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/aobr6ock/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி </a>மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">ஸ்மார்ட் கார்டுகளில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">திருத்தம்</a> செய்ய நாளை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">சிறப்பு முகாம் </a>நாளை (8.8.2026, சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.</p><h2>புகைப்படம் பதிவேற்றம் செய்யலாம்</h2><p>இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும்.</p><p>மேலும் இந்த முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறலாம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எனக்கு மிகவும் நெருக்கமானவர்: திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-aadav-arjuna-is-very-close-to-me-dmk-mla-karthikeyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-aadav-arjuna-is-very-close-to-me-dmk-mla-karthikeyan#comments</comments><guid isPermaLink="false">8eacbd38-ce1c-4081-8bd1-fb4b7330500e</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:53:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:53:57.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,ஆதவ் அர்ஜுனா,சட்டசபை,Adhav Arjuna</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dhs2x2a1/dmk-mla.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/dhs2x2a1/dmk-mla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,  </p><p>சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எங்கள் கட்சியில் இருந்து வந்தவர். எங்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு நான் வந்த போது, என்னை அழைத்து சென்று என்னுடைய உறவினர் என்று எனக்காக பேசியவர். எனக்கு மிகவும் நெருக்கமானவர். அன்பானவர். நேரு அண்ணனுக்கும் உறவினர்.’ என்றார்.</p> <p>அவருடைய பேச்சை கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சிரித்தபடி அமர்ந்திருந்தார். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், ‘அவர் அமைதியாக அமர்ந்திருக்கிறார். எதற்கு அவரை போட்டு கொத்து விடுகிறீர்கள் என்று தெரியவில்லையே? என்று கேட்டார் இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>&quot;வெற்றித் தறி&quot; மின் வணிகத்தளம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vetrit-thari-ecommerce-platform-launched-by-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vetrit-thari-ecommerce-platform-launched-by-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">c639e4d0-2056-4d72-8b69-71dd9dbae5e4</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:43:33 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:43:33.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தேசிய கைத்தறி நாள்,வெற்றித் தறி,National Handlooms Day</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/hw965pga/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/hw965pga/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். மேலும், 2025–2026ம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு 22.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் நாளன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் நாள் தேசிய கைத்தறி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களின் கலாசார, சமூக மற்றும் பொருளாதாரப் பங்களிப்பைப் போற்றும் நோக்கத்துடன் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.</p><h2>HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தல்</h2><p>தமிழ்நாட்டின் வளமான கைத்தறிப் பாரம்பரியத்தைப் போற்றவும், மாநிலத்தின் கலாசார மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நெசவாளர் சமூகத்தின் பங்களிப்பைக் கவுரவிக்கவும், தமிழ்நாடு கைத்தறித் துறை சார்பில் முதல்-அமைச்சர் தலைமையில் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், இன்று (7.8.2026) முதல் 13.8.2026 வரை ஏழு நாட்கள் நடைபெறும் HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.</p><p>இக்கண்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்திசெய்யும் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம், ஆரணி மற்றும் திருபுவனம் பட்டுச் சேலைகள், கோவை கோரா பருத்திச் சேலைகள், நெகமம் பருத்திச் சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், வீட்டு உபயோக ஜவுளி வகைகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறித் தயாரிப்புகளுடன், பிற மாநிலங்களின் தந்துஜா, மிருக்ணாயினி, குஜ்ஜாரி, பயோனிகா போன்ற புகழ்பெற்ற கைத்தறித் தயாரிப்புகளும் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகள் வழங்குதல்</h2><p>இவ்விழாவில், சிறந்த கைவினைத்திறன், புதுமை மற்றும் தமிழ்நாட்டின் கைத்தறி மரபைப் பாதுகாப்பதில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக, 2025–2026ம் ஆண்டிற்கான மாநில அளவில் பட்டு ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை கும்பகோணம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எல்.பி. சுரேசுக்கும், இரண்டாம் பரிசினை காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் மாணிக்கம் முனுசாமிக்கும், மூன்றாம் பரிசினை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ். ஜெயஸ்ரீக்கும்;</p><p>பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை பரமக்குடி, முருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இ.ஆர்.நாகலம்மாளுக்கும், இரண்டாம் பரிசினை சேலம், மேற்கு வனவாசி தொடக்க பருத்தி மற்றும் சுத்தப்பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பெ. ராஜகணபதிக்கும், மூன்றாம் பரிசினை சேலம், திருவள்ளுவர் தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் மோகனுக்கும்;</p><p>மாநில அளவிலான சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசினை திருவாரூர், கூறைடெக்ஸ் பருத்தி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பத்மாவதி திருமலைராயனுக்கும், இரண்டாம் பரிசினை கும்பகோணம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம். மகேஷ்குமார் மற்றும் திருவண்ணாமலை, ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் வி. பார்த்திபனுக்கும், மூன்றாம் பரிசினை திருப்பூர், கோவில்வழி பருத்தி மற்றும் பட்டு தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் என். கார்த்திக் மற்றும் திருச்செங்கோடு, ராசிபுரம் பட்டு தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம். பிரேமாவுக்கும் என 9 விருதுகளை 11 விருதாளர்களுக்கு மொத்தம் 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கிச் சிறப்பித்தார்.</p><h2>"வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்தல்</h2><p>தமிழ்நாடு அரசின் "வெற்றித் தமிழகம்" தொலைநோக்குத் திட்டங்களின் ஒரு பகுதியாக, தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் நோக்கில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.</p><p>இவ்விழாவில், சென்னையிலுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் (NIFT) உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கருப்பொருள் காட்சி அரங்கில், மாநில அளவில் விருதுபெற்ற நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் உருவாக்கிய கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் புவிசார் குறியீடு (GI) பெற்ற தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், பவானி ஜமக்காளம், மதுரை சுங்குடி சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், கோவை கோரா காட்டன் சேலைகள், ஆரணி பட்டுச் சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், காரைக்குடி கண்டாங்கிச் சேலைகள், நெகமம் பருத்திச் சேலைகள், வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள், உறையூர் பருத்திச் சேலைகள் ஆகிய 11 கைத்தறி ரகங்கள் அழகுற காட்சிப்படுத்தப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு:ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-rs-100-crore-land-fraud-case-justin-manikandan-remanded-to-judicial-custody-until-the-21st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-rs-100-crore-land-fraud-case-justin-manikandan-remanded-to-judicial-custody-until-the-21st#comments</comments><guid isPermaLink="false">3422074b-6ab6-4e8d-a698-5381be43aff0</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:36:41 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:36:41.437Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,கோவில்,நீதிமன்ற காவல்,Palani temple,நில மோசடி,temple land</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wyxfyoun/Justin-manikandan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜஸ்டின் மணிகண்டன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wyxfyoun/Justin-manikandan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p>பழனி அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அடிவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ் (வயது 56) உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு சார் பதிவாளர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2>4 பேர் கைது</h2><p>இதையடுத்து நிலத்தை விற்பனை செய்த ஆசிரியர் முருகதாஸ் (52), நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67), பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் முருகதாஸ் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.</p><h2>மதுரை மத்திய சிறை</h2><p>இதற்கிடையே முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தேவகோட்டை அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/18th-century-inscription-discovered-near-devakottai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/18th-century-inscription-discovered-near-devakottai#comments</comments><guid isPermaLink="false">3fc30321-817f-457f-8722-576cf79849d6</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:28:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:28:52.038Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Devakottai,தேவகோட்டை,கண்டெடுப்பு,discovered,Inscription - கல்வெட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5n692udv/74.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5n692udv/74.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேவகோட்டை, </p><p>தேவகோட்டை அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.</p><h2>18-ம் நூற்றாண்டு</h2><p>சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பிரண்டவயல் கிராமத்தில் பழமையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">கல்வெட்டு</a> இருப்பதாக அக்கிராமத்தை சேர்ந்த முத்து, ஆறாவயல் பெரியய்யா ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் வேலாயுதராஜா களஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>3 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள இந்த கல்வெட்டில் மொத்தம் 5 வரிகள் காணப்படுகின்றன. திருனாகீசர் முத்துகுமாரு தேவர் பிறதோச கட்டளைக்கு நம்புகுளி என அதில் எழுதப்பட்டிருந்தது. கல்வெட்டின் எழுத்தமைதியை கொண்டு இது 18-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். முத்துகுமார் தேவர் என்பவர் திருநாகேசுவரர் கோவிலுக்கு பிரதோஷ கட்டளைக்காக நம்புகுளி எனப்படும் நிலப்பகுதியை கொடையாக கொடுத்ததை தெரிவிக்கிறது. கல்வெட்டில் சிவன் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்படும் நிலங்களை குறிக்கும் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது. நிலத்தை தானமாக கொடுத்தவர் நிலக்கிழாராக இருக்க வாய்ப்புள்ளது. </p><h2>நாகநாதர் கோவில்</h2><p>மேலும் இங்கு நம்புகுளி என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி இன்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டு கிடைத்த பிரண்டவயலுக்கு அருகில் உள்ள கோட்டவயல் கிராமத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான கோவிலான நாகநாதர் கோவில் என்னும் சிவாலயம் அமைந்துள்ளதால் இக்கல்வெட்டு குறிப்பிடும் திருநாகேசுவரர் நாகநாதராக இருக்கலாம். கல்வெட்டில் குழி என்பது குளி என்றும், பிரதோஷம் என்பது பிறதோசம் எனலாம். பிரதோஷ கட்டளை என்பது தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது.</p><p>தஞ்சை பெரிய கோவில், பிற சோழர் கால சிவாலய கல்வெட்டுகளில் "பிரதோஷ காலத்து திரு அமுது செய்ய" (உணவு படைக்க) காசுகளும், பொன்னும் முதலீடாக வைக்கப்பட்ட விவரங்கள் விரிவாக செதுக்கப்பட்டுள்ளன. மன்னர்களும் உள்ளூர் நிலப்பிரபுக்களும் குறிப்பிட்ட விளைநிலங்களை அல்லது முழு கிராமங்களையே கோவிலுக்கு தானமாக வழங்கினர். அந்த நிலத்தில் இருந்து வரும் நெல், வருவாய், பிரதோஷத்தன்று இறைவனுக்கு படைக்கப்படும் அமுதுபடி, சாத்துப்படி (ஆடை, ஆபரணம்) செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காதலிப்பதாக ஆசை காட்டி சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் - உடந்தையாக இருந்த பெற்றோர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-rapes-girl-on-pretense-of-love-parents-who-were-accomplices-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boy-rapes-girl-on-pretense-of-love-parents-who-were-accomplices-arrested#comments</comments><guid isPermaLink="false">4f57d2c8-061d-48a7-83a4-7960808284cf</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:26:02 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:26:02.423Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,Theni,தேனி,பாலியல் பலாத்காரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/mlz42ivu/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/mlz42ivu/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் தேனி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாக தெரிய வந்தது. </p><p>சிறுமியை அந்த சிறுவன் திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்றதும், அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமி இருக்கும் இடத்தை போலீசார் தேடிச் சென்ற நிலையில், அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி சென்று விட்டான். இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டனர்.</p><p>விசாரணையில், இந்த சம்பவத்துக்கு சிறுவனின் பெற்றோர் உடந்தையாக இருந்ததாக தெரிய வந்தது. அதன்பேரில், சிறுவனின் தாய், தந்தை ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தப்பியோடிய சிறுவனை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-10</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-10#comments</comments><guid isPermaLink="false">48da5807-9496-4ea2-b456-8e43b0f1cd65</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:17:26 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:17:26.159Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/gfncqonj/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/gfncqonj/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள பகுதிகளில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>இது தொடர்பாக கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  </p><p>கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில்  நாளை (8.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படும்.</p><p>அதன்படி கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தாக்குதல்: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teenager-gets-10-years-in-prison-for-sexually-assaulting-girl-on-the-pretext-of-marriage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teenager-gets-10-years-in-prison-for-sexually-assaulting-girl-on-the-pretext-of-marriage#comments</comments><guid isPermaLink="false">452b7a3f-c786-4db7-ae6c-53850d54f529</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:01:01 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:01:01.780Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Tirunelveli,திருநெல்வேலி,Marriage,Youth,வாலிபர்,சிறை தண்டனை,Prison sentence,சிறுமி,girl,Sexual assault,ஆசை வார்த்தை,பாலியல் தாக்குதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wsdy3fzv/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/wsdy3fzv/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்டத்தில், 12 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>யிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பாலியல் தாக்குதல் </a>செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சிறை தண்டனை</a>, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்து. </p><h2>12 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் சுபாஷ் (வயது29) என்பவர் 12 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் 17.10.2022 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உவரி காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, அந்த வாலிபரை கைது செய்தார். </p><p>புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த வாலிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் இன்று (7.08.2026) குற்றவாளிக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். </p><h2>தண்டனை விபரம்</h2><p>3(a) r/w 4 POCSO Act-ன்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம். IPC 366-ன்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம். மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் (Concurrent) அனுபவிக்க நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.</p><h2>எஸ்.பி. பாராட்டு</h2><p>இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், உவரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய உவரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா (தற்போது விஜயநாராயணம் காவல் நிலையம்) வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அஜய்குமார், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.</p><h2>16 போக்சோ வழக்குகள்; 16 குற்றவாளிகளுக்கு தண்டனை</h2><p>திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 16 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 16 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 4 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேனி பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் விஜய் ஆணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-orders-release-of-water-from-theni-periyar-dam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-orders-release-of-water-from-theni-periyar-dam#comments</comments><guid isPermaLink="false">9dab135d-9e4c-4d8e-9688-1c2b41014d9f</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:47:14 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:47:14.944Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெரியாறு அணை,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/imjn01tb/cm-vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/imjn01tb/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>தண்ணீர் திறக்க ஆணை</h2><p>தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய் </a>அவர்களின் உத்தரவிற்கிணங்க, தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போகத்திற்கு 14,707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 150 கனஅடி தண்ணீரையும் சேர்த்து வினாடிக்கு 350 கனஅடி தண்ணீரை பெரியாறு அணையிலிருந்து 08.08.2026 முதல் 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப மொத்தம் 3,629 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வரத்து மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.</p><p>இதன் மூலம் தேனி மாவட்டம், உத்தமபாளையம், தேனி மற்றும் போடிநாயக்கனூர் தாலுக்காக்களில் உள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்கள் கண்டித்ததால் ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று மயங்கிய மாணவிகள் - அரசு பள்ளியில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-take-blood-pressure-pills-after-scolding</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-take-blood-pressure-pills-after-scolding#comments</comments><guid isPermaLink="false">da03be07-77e8-4c91-be66-c866bc466d61</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:31:01 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:31:01.013Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/kes9hele/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/kes9hele/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர்கள் கண்டித்ததால் 3 மாணவிகள் ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>மயங்கி விழுந்தனர்</h2><p>திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 3 மாணவிகளை ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 3 மாணவிகளும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை தின்றதாக கூறப்படுகிறது.</p><p>ஒரே நேரத்தில் அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் அங்கேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று அனுமதித்தனர்.</p><h2>வாக்குவாதம்</h2><p>பின்னர் இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். மேலும் அவர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த 3 மாணவிகளில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.</p><h2>பரபரப்பு</h2><p>மாணவிகளுக்கு ரத்த அழுத்த மாத்திரை எங்கிருந்து கிடைத்தது? ஆசிரியர்கள் தனி அறையில் வைத்து கண்டித்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பெற்றோர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை: அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jobs-in-japan-for-tamil-nadu-youth-mou-signed-in-the-presence-of-minister-mohammad-parvez</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jobs-in-japan-for-tamil-nadu-youth-mou-signed-in-the-presence-of-minister-mohammad-parvez#comments</comments><guid isPermaLink="false">7f209bf2-a8a3-49c0-8397-5380d8a28a3e</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:17:11 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:17:11.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,புரிந்துணர்வு ஒப்பந்தம்,கையெழுத்து,sign,Government Vocational Training Institute,அரசு தொழிற்பயிற்சி நிலையம்,Memorandum of Understanding,அமைச்சர் முகமது பர்வேஸ்,Minister Mohammed Parvez</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/3s4ta1al/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/3s4ta1al/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தொழிற்பயிற்சி</a> பெற்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பட்டதாரிகளை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">வேலைவாய்ப்பு</a>க்காக ஜப்பான் நாட்டிற்கு அனுப்பிட தொழிலாளர் நலத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D">அமைச்சர் முகமது பர்வேஸ்</a> முன்னிலையில் இன்று தலைமை செயலகத்தில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. </p><h2>132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்</h2><p>தமிழ்நாட்டில் தற்போது 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பாரம்பரிய தொழிற்பிரிவுகளான பிட்டர், எலக்ட்ரீசியன், ஏ.சி. மெக்கானிக், வெல்டர், கணினி உள்ளிட்ட தொழிற்பிரிவுகளிலும் தொழில் 4.0 தரத்திலான அட்வான்ஸ்டு சி.என்.சி., ரோபோடிக்ஸ், எலக்ட்ரிக் வெஹிக்கிள் போன்ற நவீன தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுகின்றன. </p><h2>31-ம்தேதி வரை நேரடி சேர்க்கை</h2><p>2026-ம் கல்வியாண்டில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், இதுவரை 80 சதவீத இருக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நேரடி சேர்க்கை 31.8.2026 வரை நடைபெறும். கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் 95 சதவீதம் மாணவர்கள் உள்நாட்டு முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர். </p><h2>முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதல்களின்படி, சர்வதேச அளவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்திட வேண்டி முதற்கட்டமாக, தமிழ்நாட்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆட்டோமொபைல் துறைக்கான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி அளித்து, ஆட்டோமொபைல் சர்வீஸ் டெக்னீசியன்களாக ஜப்பான் நாட்டில் உள்ள எஹிமே-நிசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அமைத்துத் தர, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் எஹிமே–நிசான் நிறுவனம் ஆகியோரால் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் இன்று (7.8.2026) தலைமைச் செயலகத்தில் முத்தரப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் </a>கையெழுத்திடப்பட்டது. </p><h2>ஆறு மாத கால ஜப்பானிய மொழிப் பயிற்சி</h2><p>இதன்படி, பயிற்சி பெறும் தொழிற்பயிற்சி பட்டதாரிகளுக்கு ஆறு மாத கால ஜப்பானிய மொழிப் பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை எஹிமே-நிசான் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஜப்பான் சென்றபின் மொழிப் பயிற்சி செலவுகள், ஆவணத் தயாரிப்பு உதவி, மருத்துவ பரிசோதனை கட்டணங்கள் மற்றும் விசா கட்டணங்கள் ஆகியவை அனைத்தும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.</p><p>இந்த நிகழ்வின்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசுச் செயலாளர் வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் டாக்டர் பழனி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், எஹிமே-நிசான் நிறுவன பிரதிநிதி செல்லப்பா ஸ்ரீராம் மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையால் எடுக்கப்பட்ட தொடர் தீவிர நடவடிக்கைகள் என்ன? - டி.ஜி.பி அலுவலகம் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dgp-office-explains-operations-of-singappen-special-strike-force-for-women-and-children-safety</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dgp-office-explains-operations-of-singappen-special-strike-force-for-women-and-children-safety#comments</comments><guid isPermaLink="false">3bf08455-cba8-49ba-b069-61d977686f30</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:05:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:05:52.154Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விழிப்புணர்வு,Awareness,டி.ஜி.பி. அலுவலகம்,Police DGP,action நடவடிக்கை,Lioness Special Task Force,சிங்கப்பெண் அதிரடிப்படை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/yhbi7n9l/singapen.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை]]></media:title><media:description type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையால் எடுக்கப்பட்ட தொடர் தீவிர நடவடிக்கைகள் என்ன? - டி.ஜி.பி அலுவலகம் விளக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/yhbi7n9l/singapen.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சென்னை,</p><p>தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள்பற்றி டி.ஜி.பி அலுவலகம் விளக்கம். இது தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தெரிவித்திருப்பதாவது:-</p><h2>நடவடிக்கை</h2><p>தமிழ்நாடு காவல்துறையின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை</a> பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் துரிதமான கள நடவடிக்கைகள் சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p> <h2> 308 புகார்கள்</h2><p>கடந்த ஒரு வாரகாலத்தில் 31.07.2026 முதல் 06.08.2026 வரை. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 308 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 16 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல்போன 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><h2>விழிப்புணர்வு நிகழ்ச்சி</h2><p> இந்த காலகட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,402 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">விழிப்புணர்வு</a> நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 11,560 குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>போக்சோ சட்டம்</h2><p>இந்த காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுடைய 6 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. 2 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும், 62 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். கடந்த வாரத்தின் போது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை  களப்பிரிவுகள் சென்னை, தாம்பரம். தர்மபுரி, திருநெல்வேலி. சிவகங்கை, மதுரை. பெரம்பலூர். திருவண்ணாமலை ராணிப்பேட்டை, திருப்பூர். மயிலாடுதுறை, கன்னியாகுமரி மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் பதிவான வழக்குகளுக்கு விரைவாக செயல்பட்டு, குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம்.</p><h2>சம்பந்தப்பட்ட நபர்கள் கைது</h2><p>தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் , பாரதிய நியாய சன்ஹிதா  மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.</p><h2>பாதுகாப்பான மாநிலம்</h2><p>இத்தகைய துரிதமான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, தமிழகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பண்ருட்டியில் 2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-class-2-girl-in-panruti-teacher-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-class-2-girl-in-panruti-teacher-arrested#comments</comments><guid isPermaLink="false">314b1f9a-c5f2-443c-9fb7-233868602251</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:42:04 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:42:04.302Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவி,பாலியல் தொல்லை,student,sexually harassed,Teacher Arrested,ஆசிரியர் கைது,பண்ருட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/aoqda87i/abuse.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆசிரியர் கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/aoqda87i/abuse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில், 2-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை </a>கொடுத்த புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் அகஸ்டின் (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பாலியல் தொல்லை</h2><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அருகில் உள்ள சாத்திப்பட்டு பகுதியில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில், அகஸ்டின் (24) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக, ஆசிரியர் அகஸ்டின் அந்த சிறுமிக்கு வகுப்பறையில் தனியாக இருக்கும் போது பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>பள்ளி முற்றுகை</h2><p> பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, ஆசிரியரின் தவறான அத்துமீறல்கள் குறித்து தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். சிறுமி கூறிய விவரங்களை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும், உறவினர்களும் ஆத்திரமடைந்தனர். இன்று, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பள்ளிக்கு சென்று முற்றுகையிட்டனர். </p><h2>கைது</h2><p>அங்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் அகஸ்டினை பிடித்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு, பதற்றமான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன், பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்களின் பிடியில் சிக்கி தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் அகஸ்டினை போலீசார்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது</a> செய்தனர்.</p><p>இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கருணாநிதி நினைவு நாள்: &apos;திட்டங்களிலிருந்து பெயரை நீக்கலாம்; வரலாற்றை மாற்ற முடியாது&apos; – கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karunanidhis-death-anniversary-name-can-be-removed-from-projects-history-cannot-be-changed-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karunanidhis-death-anniversary-name-can-be-removed-from-projects-history-cannot-be-changed-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">9da99e65-3cef-437d-9e0c-ad5b82620cae</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:20:03 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:20:03.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karunanidhi,Memorial Day,Kanimozhi,கனிமொழி எம்பி,கருணாநிதி நினைவு தினம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/coida86y/73.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/coida86y/73.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாள் இன்று கட்சித் தொண்டர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தையின் நினைவு நாளன்று திமுக எம்.பி.<a href="https://www.dailythanthi.com/topic/kanimozhi">கனிமொழி</a> தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-</p><h2>வரலாற்றை மாற்ற முடியாது</h2><p>“திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது. அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!" </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கருணாநிதி கொண்டு வந்த சில முக்கியத் திட்டங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.<br>ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.<br><br>அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, &quot;இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்&quot; என்று எழுதப்பட்டிருக்கிறது!<a href="https://x.com/hashtag/KalaignarForever?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KalaignarForever</a> <a href="https://t.co/ATYAtJ86MY">pic.twitter.com/ATYAtJ86MY</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2085587231260262611?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா: திமுகவின் நிலைப்பாடு என்ன? ஆர்.எஸ்.பாரதி பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-decide-stance-on-delimitation-bill-only-after-it-is-tabled-in-parliament-r-s-bharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-decide-stance-on-delimitation-bill-only-after-it-is-tabled-in-parliament-r-s-bharathi#comments</comments><guid isPermaLink="false">8306086c-d43f-4f40-91ce-1d9b65367ebd</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:18:51 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:18:51.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,ஆர்.எஸ்.பாரதி,RSBharathi,தொகுதி மறுவரையறை மசோதா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5mbmxbua/RS-bharathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.எஸ்.பாரதி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/5mbmxbua/RS-bharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதற்கு ஆதரவு அளிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து தி.மு.க. முடிவு செய்யும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- தொகுதி மறுவரையறை தொடர்பாக தற்போது முடிவு எடுப்பது முன்கூட்டிய நடவடிக்கையாகும். மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்து கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். கடந்த முறை தொகுதி மறுவரையறை தொடர்பாக தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்ததுடன், சில பரிந்துரைகளையும் மத்திய அரசிடம் வழங்கியிருந்தது. </p><h2>மசோதா பார்த்த பிறகே</h2><p>அந்த பரிந்துரைகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.<a href="https://www.dailythanthi.com/news/india">மசோதா</a>வின் ஒவ்வொரு அம்சத்தையும் வரி வரியாக ஆய்வு செய்து, அதன் சாதக-பாதகங்களை விரிவாக விவாதித்த பிறகே ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.மசோதாவை முழுமையாக பார்த்த பிறகே கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்” என்று கூறினார். </p> <h2>பிரதிநிதித்துவ விகிதம்</h2><p>குறிப்பாக, 2026-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள  தொகுதி மறுவரையறை மசோதாவில், தற்போதுள்ள 543 மக்களவை தொகுதிகளை சுமார் 50 சதவீதம் உயர்த்தி 816 தொகுதிகளாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முறையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என்றும், தமிழ்நாட்டின்<a href="https://www.dailythanthi.com/news/india"> மக்களவை தொகுதி</a>கள் 39-ல் இருந்து 59 ஆக உயர்ந்தாலும், அதன் பிரதிநிதித்துவ விகிதம் சுமார் 7.2 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சியில் ஆதரவற்றோர் தங்குமிட ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பு பயிற்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-training-for-homeless-shelter-coordinators-in-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-training-for-homeless-shelter-coordinators-in-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">9b36ca93-6a85-4537-ab0b-d0ed9a816788</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:00:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:00:31.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,volunteers,தன்னார்வலர்கள்,சிறப்பு பயிற்சி,special training</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/59jgcbvo/chennai-corporation.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-07/59jgcbvo/chennai-corporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற ஆதரவற்றோர் தங்குமிடங்களுக்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி இன்று நடைபெற்றது.</p><h2>தன்னார்வலர்களுக்கு பயிற்சி</h2><p>மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற ஆதரவற்றோர் தங்குமிடங்களுக்கான (Shelter for Urban Homeless) நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedures – SOP) குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கான பயிற்சி இன்று (06.08.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இப்பயிற்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (NGOs) இயக்குநர்கள், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் (CCDO), கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டு அலுவலர்கள் (CDOs), தங்குமிட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தங்குமிட மேலாண்மையுடன் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.</p><h2>பாதுகாப்பான மற்றும் தரமான சேவை</h2><p>இப்பயிற்சியின் போது, நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) திறம்பட செயல்படுத்துவது குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக பயனாளிகள் சேர்க்கை மற்றும் மறுவாழ்வு, தங்குமிட மேலாண்மை, பதிவேடுகள் பராமரித்தல், சுகாதாரம் மற்றும் தூய்மை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள், குறைதீர் அமைப்பு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் நகர்ப்புற ஆதரவற்றோருக்கு கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் தரமான சேவைகளை வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.</p><p>மேலும், தங்குமிடங்களின் செயல்பாட்டில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சிறந்த நடைமுறைகள் பகிரப்பட்டு, அனைத்து பங்குதாரர்களிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.</p><p>இப்பயிற்சியானது, பெருநகர<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"> சென்னை மாநகராட்சி</a>, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, நகர்ப்புற ஆதரவற்றோருக்கு பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் கண்ணியமான தங்குமிட வசதிகளை உறுதி செய்வதற்கும், தொடர்ச்சியான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>