<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 30 Aug 2026 08:20:35 +0000</lastBuildDate><item><title>ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்கள் 3-வது நாளாக புகார்: திணறும் போலீசார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/victims-of-online-fraud-file-complaints-for-the-third-consecutive-day-police-struggle-to-cope</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/victims-of-online-fraud-file-complaints-for-the-third-consecutive-day-police-struggle-to-cope#comments</comments><guid isPermaLink="false">f09b8675-db4e-4e2b-a0bf-898be8bb47e2</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:16:26.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,police,தமிழகம்,ஆன்லைன் மோசடி,Melur,மேலூர்,online scam,போலீசார்,புகார் மனுக்கள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/mp82km55/badriu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/mp82km55/badriu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேலூர், </p><p>மேலூர் பகுதியில் ஆன்லைன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் புகார் அளிக்க குவிந்தனர்.</p><h2>ஆன்லைன் செயலியில் மோசடி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடம் பலர், எப்.கியூ..எல். நிறுவனம் என்ற நிதி நிறுவனம் சார்பில் செல்போன் செயலிகள் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக நேரில் வந்து ஆசைவார்த்தை கூறியுள்ளனர். குறிப்பாக பெண்களிடம் பேசினர். </p><p>இதற்காக ஏஜெண்டுகள் செயல்பட்டனர். இந்த செயலிகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் கடன் வாங்கி முதலீடு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பணத்தை இரட்டிப்பு செய்து தரவில்லை என கூறப்படுகிறது.</p><h2>போராட்டம்</h2><p>இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் மேலூரில் மதுரை- சென்னை நான்கு வழிச்சாலையில் 4 மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தினர். மற்றொரு இடத்திலும் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p><h2>25 ஆயிரம் பேர் மனு</h2><p>இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் நேரடி மேற்பார்வையில் நேற்று 3 இடங்களில் பொதுமக்கள் புகார் அளிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளலூர் நாடு கோட்டநத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் முகாம் நடந்தது.</p><p>இதில் மேலூரில் நடந்த முகாமில் 18,500-க்கும் மேற்பட்ட மனுக்களும், செட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முகாமில் 1,450-க்கும் மேற்பட்ட மனுக்களும், வெள்ளலூர்நாடு கோட்டனத்தம்பட்டி தனியார் திருமண மண்டப முகாமில் 3,077-க்கும் மேற்பட்ட மனுக்களும் பொதுமக்கள் அளித்தனர். </p><p>குறிப்பாக ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையாக நின்று புகார் அளித்தனர். நேற்று ஒரே நாளில் இந்த முகாம்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட புகார் மனுக்களை கட்டுக்கட்டாக மலை போல போலீசார் அடுக்கி வைத்திருந்தனர்.</p><h2>கூட்டம் கூட்டமாக</h2><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a>, மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் 3வது நாளாக இன்றும் புகார் கொடுக்க கூட்டம் கூட்டமாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.  இதனால் போலீசார் திணறி வருகின்றனர். </p><p>இன்று மட்டும் இதுவரை 1,200 பேர் தங்களது புகார் மனுக்களை அளித்துள்ள நிலையில், தலா ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாக புலம்பி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும்: திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-previously-provided-to-mk-stalin-must-be-restored-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/security-previously-provided-to-mk-stalin-must-be-restored-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">397d239a-00ba-4123-8da1-fbb41f0fa8ba</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:00:34 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:00:34.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/rui25kn8/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/rui25kn8/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>சட்டசபை கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது இது உள்ளக்கத்தோடு நடந்துள்ளதா என கேள்வி எழுகிறது. இதற்குப் பொறுப்புள்ள அதிகாரிகளும், அமைச்சர்களும் உரிய விளக்கத்தை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். </p><p>இனி வரும் காலங்களில் அது போன்ற பிழைகள் நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது ஏற்புடையதல்ல; இதுவரை வழங்கி வந்த பாதுகாப்பை அவருக்கு வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.</p><p>தவெக தலைமையிலான இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தலித் மக்களுக்கு இன்னும் பல சட்டப்பூர்வ உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. குறிப்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்தியா முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அதிகாரிகளின் கருத்துக்களால் பல நல்ல திட்டங்கள் முடங்குகின்றன. ஆட்சியாளர்கள் விரும்பினாலும் அதிகாரிகள் சில இடங்களில் முட்டுக்கட்டை போடுகின்றனர்.</p><p>தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியாக, தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அரசு செய்ய வேண்டிய அவசியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் உரிய தீர்வுகளைப் பெற விசிக தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் மரிய வில்சனின் எம்.எல்.ஏ. சான்றிதழை திரும்ப பெற வேண்டும்-தேர்தல் கமிஷனுக்கு வக்கீல் நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilsons-mla-certificate-must-be-revoked-legal-notice-sent-to-the-election-commission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-maria-wilsons-mla-certificate-must-be-revoked-legal-notice-sent-to-the-election-commission#comments</comments><guid isPermaLink="false">5902f7c8-f33a-4ac8-85a8-46cf563a710b</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:48:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:48:35.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Election Commission,தேர்தல் கமிஷன்,chennaihighcourt,வக்கீல் நோட்டீஸ்,மரிய வில்சன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/rg3028kk/maria-wislon.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/rg3028kk/maria-wislon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தன்னுடைய கல்வி நிறுவனத்துக்காக லஞ்சம் கொடுத்ததாக சட்டசபை யில் பேசிய அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்வதுடன், அவருடைய எம்.எல்.ஏ. சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இந்திய தேர்தல் கமிஷனர், தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனர் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சி.ஜெனிபர் என்பவர் தன் வக்கீல் பி.விஜயேந்திரன் மூலம் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில் கூறியிருப்பதாவது:-</p> <p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன். இவர், தற்போது மாநில நிதி அமைச்சராக உள்ளார். சமீபத்தில் சட்டசபையில் அவர் பேசும்போது தனது கல்வி நிறுவனத்துக்கு அனுமதி தொடர்பாக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார். இது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்லாமல் ஊழல் தடுப்பு சட்டத்தின்படி குற்றமாகும் எனவே, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.</p> <p>அவர் அமைச்சராக பதவியேற்றபோது எடுத்த பதவி பிரமாணத்திற்கு முரணாகவும், தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் செயல்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் பதவியை திரும்ப பெற முடியாது. அதேநேரத்தில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வானதற்காக வழங்கப்பட்ட சான்றிதழை திரும்ப பெற தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.எனவே, அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் கோர்ட்டு வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேகதாது அணைக்கு அவசரம் காட்டும் கர்நாடகா: தமிழக அரசு காவிரி உரிமையை இழக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-shows-urgency-for-mekedatu-dam-tamil-nadu-government-must-not-lose-its-cauvery-rights-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-shows-urgency-for-mekedatu-dam-tamil-nadu-government-must-not-lose-its-cauvery-rights-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">7b204ffe-d1f9-41bc-b1fb-76b2be1ceb72</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:42:10 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:42:10.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,தமிழகம்,மேட்டூர் அணை,Mettur dam,Karnataka,கர்நாடகா,தமிழக அரசு,TN govt,AnbumaniRamadoss</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/6u51mjda/tnmere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/6u51mjda/tnmere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மேகதாது அணை கட்டப்பட்டால், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடகம் பயன்படுத்தும். அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். </p><h2>மேகதாது அணை</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: -</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே <a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணை</a> கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், மேகதாது அணையை கட்டுவதற்கான அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடக அரசு விரைவில் அணுக இருப்பதாகவும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் நேற்று நடைபெற்ற சுத்தூர் மடத்தின் மறைந்த ஆதீனம் ஸ்ரீ இராஜேந்திர சுவாமிகளின் 111ஆம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய டி.கே.சிவக்குமார் அவர்கள், "கர்நாடக மாநில விவசாயிகளின் நலனுக்கு கிருஷ்ணராஜசாகர் அணை எந்த அளவுக்கு உதவியதோ, அதேபோல் மேகதாது அணையும் உதவும். மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு அண்மையில் அளித்த தீர்ப்பு கர்நாடகத்திற்கு சாதகமாக இருப்பதால், அதன்படி அணை கட்ட அனுமதி அளிக்கும்படி மத்திய அரசை கர்நாடக அரசு கோர உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.</p><h2>தண்ணீர் கிடைக்காது</h2><p>கர்நாடக முதல்-மந்திரியின் கூற்றுப்படி இரு விஷயங்கள் அம்பலமாகியுள்ளன. முதலாவது மேகதாது கர்நாடக உழவர்களை மேலும் வலிமைப்படுத்த உதவும் என்று அவர் கூறியிருப்பதன் மூலம், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடக அரசு, விவசாயத்திற்குப் பயன்படுத்த உள்ளது என்பது தெளிவாகிறது. </p><p><a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணையில்</a> தேக்கி வைக்கப்படும் நீரில் இருந்து குடிநீர் தேவைக்கு தவிர, பாசனத்திற்காக ஒரு வாளி நீரைக்கூட கர்நாடகம் எடுக்காது என்று இதுவரை கர்நாடக அரசு கூறி வந்த நிலைப்பாட்டுக்கு இது முற்றிலும் மாறாக உள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடகம் பயன்படுத்தும்; அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறிவந்த குற்றச்சாட்டை கர்நாடக அரசின் இந்தப் புதிய நிலைப்பாடு உறுதி செய்துள்ளது.</p><h2>சுற்றுச்சூழலுக்கு ஆபத்து</h2><p>மேலும் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் மேகதாது அணையை கட்டப்போவதாக கூறிவந்த கர்நாடக அரசு, இப்பொது அதன் நீரை பாசனத்திற்கும் பயன்படுத்தப்போவதாக கூறியிருப்பது மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்கு எதிரானது. இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரிப்பதற்கு போதுமானது. இதை மத்திய அரசின் கவனத்திற்கும், சுப்ரீம்கோர்ட்டின் கவனத்திற்கும் தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணையின்</a> நீர்த்தேக்கப்பகுதி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்பதும் கர்நாடக முதல்-மந்திரியின் உரை மூலம் தெரியவந்துள்ளது. மேகதாது அணையின் நீர்த்தேக்கப்பகுதி 5,000 ஹெக்டேர், அதாவது 12,500 ஏக்கராக இருக்கும் என்று கூறப்பட்டது. </p><p>ஆனால் நீர்த்தேக்கப் பகுதி 5,400 ஹெக்டேர், அதாவது 13,500 ஏக்கராக இருக்கும் என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். இதன் மூலம் விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள 67 டிஎம்சியை விட அதிக நீரை மேகதாது அணையில் தேக்கி வைக்க முடியும். அதுமட்டுமின்றி மேகதாது அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கும். இதை அனுமதிக்கக் கூடாது.</p><h2>சுப்ரீம்கோர்ட்டு அனுமதியா..?</h2><p>கர்நாடகத்தின் முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவியேற்ற நாளில் இருந்தே மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கலாம் என்று தான் சுப்ரீம்கோர்ட்டு கூறியிருக்கிறதே தவிர, மேகதாது அணையைக் கட்ட அனுமதி அளிக்கவில்லை. </p><p>ஆனால்,  <a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணையை</a> கட்ட சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்துவிட்டதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அவர்கள் தொடர்ந்து பொய்யான பரப்புரை செய்து வருகிறார். இதை மறுத்து, உண்மை நிலையை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய தமிழக அரசோ, எதையும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது.</p><p>நேபாளத்தில் இமயமலையில் உருவாகியிருந்த ஏரிகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல், இயற்கை சீற்றங்களால் எதிர்காலத்தில் மேகதாது அணைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதன்கீழ் பகுதியில் உள்ள தமிழக பகுதிகள் பேரழிவை சந்திக்கும் ஆபத்தும் உள்ளது.</p><h2>அலட்சியம் காட்டக்கூடாது</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணை</a> கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக, காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல. தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும்.</p><p>எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா..  குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncle-who-impregnated-class-12-student-arrested-under-the-goondas-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uncle-who-impregnated-class-12-student-arrested-under-the-goondas-act#comments</comments><guid isPermaLink="false">f371b0ce-a986-49a4-bc36-3367ca4893e0</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:10:58 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:10:58.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,கைது,arrest,Goondas act,குண்டர் சட்டம்,ராமநாதபுரம்,Ramanathapuram,பாலியல் பலாத்காரம்,sexual abuse</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/r64d13it/schi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/r64d13it/schi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தொண்டி, </p><p>பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். </p><h2>பிளஸ்-2 மாணவி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/ramanathapuram">ராமநாதபுரம்</a> மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி வசித்து வந்த வீட்டில் அவரது சித்தி குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.</p><h2>3 மாத கர்ப்பம்</h2><p>இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த மாணவியை அவருடைய சித்தப்பா மகேந்திரன் (வயது 39) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி, 3 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. </p><h2>குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</h2><p>இதுகுறித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் குழந்தைகள் நல அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகேந்திரனை கைது செய்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ், இதுகுறித்து விசாரித்தார். </p><p>மாணவியை கர்ப்பமாக்கிய மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைதொடர்ந்து அதற்கான உத்தரவை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் பிறப்பித்தார். இதையடுத்து மகேந்திரன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-does-mustafa-shed-tears-when-terrorists-are-punished-nainar-nagendran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-does-mustafa-shed-tears-when-terrorists-are-punished-nainar-nagendran-asks#comments</comments><guid isPermaLink="false">ffb44495-36cb-4f79-b5c3-06ecd89a27cb</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:50:00 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:50:00.808Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தீவிரவாதிகள்,Mustafa,முஸ்தபா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/urvfgcjh/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/urvfgcjh/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பாரதத் தாயின் மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர்  முகுந்த் வரதராஜனின் வீர வரலாற்றைப் போற்றும் 'அமரன்' திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்?. ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை முஸ்தபா ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்?. பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது. உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா?.</p><p>மேலும், முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் முஸ்தபா. திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. </p><p>முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களை முதல்-அமைச்சர் விஜய் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இதுதான் தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: சுடுகாட்டில் ரவுடி வெட்டி கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-rowdy-hacked-to-death-in-crematorium-police-launch-net-to-nab-mysterious-persons</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-rowdy-hacked-to-death-in-crematorium-police-launch-net-to-nab-mysterious-persons#comments</comments><guid isPermaLink="false">dffd2d78-ac44-4a20-ae41-1aee3e457e10</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:49:44 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:49:44.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,murder,கொலை,Kelambakkam,போலீசார்,கேளம்பாக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/iwjb2p1g/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை வழக்கில் சுடுகாட்டில் விசாரணை நடத்திய போலீசார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/iwjb2p1g/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுடுகாட்டில் ரவுடியை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>வெட்டி கொலை   </h2><p>சென்னை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஒருவரின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இதனை அந்த வழியே சென்றவர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் வெட்டு காயங்களை பார்த்ததும் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், <a href="https://www.dailythanthi.com/topic/கொலை">கொலை</a> செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் ரவுடி சாஹூல் ஹமீது (வயது 29) என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை </h2><p>மேலும் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா என்பதை <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசார் </a>பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாமியாரை குத்திக்கொன்ற புதுமாப்பிள்ளை: மனைவி கண்முன் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/newlywed-man-stabs-mother-in-law-to-death-frenzied-act-committed-before-his-wifes-eyes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/newlywed-man-stabs-mother-in-law-to-death-frenzied-act-committed-before-his-wifes-eyes#comments</comments><guid isPermaLink="false">181551b7-9138-4c13-9b49-5ae497784d1e</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:34:11 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:34:11.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Virudhunagar,விருதுநகர்,Murder case,கிரைம் செய்திகள்,மாமியார் கொலை,புதுமாப்பிள்ளை கைது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/7d9peh5t/satt.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/7d9peh5t/satt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர், </p><p>மனைவி குடும்பம் நடத்த வரமறுத்தது தொடர்பான தகராறில் மாமியாரை அவரது வீட்டில் புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த மைத்துனருக்கும் சரமாரி கத்திக் குத்து விழுந்தது.</p><h2>6 மாதங்களுக்கு முன்பு திருமணம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/virudhunagar">விருதுநகர்</a> அருகே பாலையம்பட்டியை சேர்ந்த அதிராமிளகி என்பவருடைய மகன் சிவா (வயது 26). இவர், சூலக்கரை பகுதியில் உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் செவல்பட்டியை சேர்ந்த வாசகதேவி (27) என்பவரும் வேலைபார்த்தார்.</p><p>அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.</p><h2>குடிப்பழக்கம் </h2><p>திருமணத்திற்கு பிறகு சிவா கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வேலையில்லாத நாட்களில் மது குடித்து விட்டு வந்து வாசகதேவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக வாசகதேவி கணவரை பிரிந்து செவல்பட்டியில் உள்ள தாய் சாந்தியின் (55) வீட்டிற்கு சென்றுவிட்டார்.</p><h2>சமாதானம்</h2><p>புதுமாப்பிள்ளை சிவாவுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>இந்தநிலையில் நேற்று அதிகாலையில் செவல்பட்டியில் மாமியார் வீட்டுக்கு சிவா சென்றார். மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.</p><h2>கத்திகுத்து </h2><p>மேலும் வாசகதேவியிடம் விவாகரத்து வழக்கை திரும்ப பெற்று மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, மனைவியை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு இழுத்துச் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதை மாமியார் சாந்தி, வாசகதேவியின் சகோதரர் சாமிமுருகன் (33) ஆகியோர் தடுத்துள்ளனர். </p><p>இதில் ஆத்திரம் அடைந்த சிவா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார், மைத்துனரை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாமி முருகன் பலத்த காயம் அடைந்தார்.</p><h2>தலைமறைவாக இருந்த நபர் கைது</h2><p>இதற்கிடையே இவர்களது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். சாமி முருகன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூலக்கரை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் .</p><p>கொலை செய்துவிட்டு செவல்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த சிவாவை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பருத்தி நூல் ஏற்றுமதியை முறைப்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ஏ.இ.பி.சி. வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cotton-yarn-exports-must-be-regulated-aepc-urges-central-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cotton-yarn-exports-must-be-regulated-aepc-urges-central-government#comments</comments><guid isPermaLink="false">083d5e50-906c-44b1-9bcd-05a220311eff</guid><pubDate>Sun, 30 Aug 2026 05:41:34 +0000</pubDate><atom:updated>2026-08-30T05:41:34.938Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,மத்திய அரசு,Central Government,ஆயத்த ஆடை,பருத்தி நூல்,நூல் ஏற்றுமதி,yarn exports,Cotton yarn</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/3vq9yqul/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/3vq9yqul/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><h2>60 சதவீதம் உயர்வு</h2><p>பருத்தி வினியோகத்தில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள், ஜின்னிங் ஆலைகளிடம் குறைந்துள்ள பருத்தி இருப்பு மற்றும் சந்தைக்கு வரும் பருத்தியின் அளவு குறைந்துள்ளதால் நூற்பாலைகளுக்கு பருத்தி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.</p><p>கடந்த ஜனவரி மாதத்தில் 1 கிலோ பருத்தி நூல் சுமார் ரூ.250 ஆக இருந்த நிலையில், தற்போது சுமார் ரூ.400 வரை உயர்ந்துள்ளது. அதாவது 60 சதவீதம் விலை அதிகரித்துள்ளதால், ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் கடுமையான செலவினத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றமும் உற்பத்தி செலவை மேலும் அதிகரித்துள்ளது.</p><h2>மதிப்பு கூட்டப்பட்ட பொருள்</h2><p>மேலும் வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இந்திய பருத்தி மற்றும் பருத்தி நூல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு மூலப்பொருள் விலையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற புதிய வரி யில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட்ட நாடுகளின் சந்தைகளில் இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நூல் விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஒரு கிலோ பருத்தி ரூ.275, நூலாக மாற்றப்பட்டால் ரூ.325 மதிப்பை பெறுகிறது. ஆனால், அதே பருத்தி மதிப்பு கூட்டப்பட்ட ஆடையாக மாற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் போது, ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.800 முதல் ரூ.1,200 வரை மதிப்பு கிடைக்கக்கூடும். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.</p><h2>நூல் ஏற்றுமதியை முறைப்படுத்துங்கள்</h2><p>இந்தநிலையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத் தின் (ஏ.இ.பி.சி.) தலைவர் சக்திவேல், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், '20 எஸ் கவுண்ட் மற்றும் அதற்கு மேற்பட்ட பருத்தி நூல் ஏற்றுமதியை உரிய முறையில் முறைப்படுத்தி, உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவையான நூல் உரிய விலையில் கிடைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மத்திய அரசின் விரைவான தலையீடு ஆயத்த ஆடை ஏற்றுமதித் துறைக்கு நிவாரணம் அளிப்பதுடன், இந்தியாவின் மதிப்பு கூட் டப்பட்ட ஆடை ஏற்றுமதியை உலகளவில் மேலும் விரிவுபடுத்தவும், சர்வதேச போட்டித்திறனை வலுப்படுத்தவும் உதவும்' என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தர்மபுரி அருகே கொடூரம்: தனது தாயையும், மகளையும் ஒரே நேரத்தில் வெட்டிக்கொன்ற சமையல் மாஸ்டர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/atrocity-near-dharmapuri-chef-hacks-his-mother-and-daughter-to-death-simultaneously</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/atrocity-near-dharmapuri-chef-hacks-his-mother-and-daughter-to-death-simultaneously#comments</comments><guid isPermaLink="false">4c79b4e8-9839-4cf7-a1cc-f5800add537f</guid><pubDate>Sun, 30 Aug 2026 05:15:01 +0000</pubDate><atom:updated>2026-08-30T05:15:01.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கிரைம் செய்திகள்,police investigation,போலீஸ் விசாரணை,தர்மபுரி,Dharmapuri,double murder,இரட்டை கொலை,பாப்பிரெட்டிப்பட்டி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/3jxc34iu/dhar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/3jxc34iu/dhar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பாப்பிரெட்டிப்பட்டி, </p><p>பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுபோதையில் தாய், மகளை வெட்டிக் கொன்ற சமையல் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>கருத்து வேறுபாடு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/dharmapuri">தர்மபுரி</a> மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிகாரப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). ஓட்டல் சமையல் மாஸ்டர். இவருடைய மனைவி ஷாலினி. இவர்களது மகள் சின்மயி (19). இவர் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.</p><p>இதனால் சின்மயி, பாட்டி உமாராணி (60) உடன் வசித்து வந்தார். இன்னொரு வீட்டில் சுரேஷ் வசித்து வருகிறார். சேலத்தில் தனியார் ஓட்டலில் தங்கி கூலி வேலை செய்து வரும் ஷாலினி அவ்வப்போது ஊருக்கு வந்து மகள் சின்மயியை பார்த்து செல்வது வழக்கம். இதனிடையே நேற்று முன்தினம் இரவு சின்மயி சுரேசுக்கு சாப்பாடு கொடுக்க சென்றார்.</p><h2>அரிவாள் வெட்டு</h2><p>அப்போது சின்மயிடம், யாரிடம் நீ போன் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார். நான் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன் நீ சரியாக இருந்திருந்தால் நான் தாயை பிரிந்து தனியாக இருப்பேனா?, நீ சரியில்லை எனக்கூறி தந்தையை சின்மயி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மது போதையில் வீட்டில் இருந்த அரிவாளால் மகளை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.</p><p>இதனை தடுக்க வந்த உமாராணியையும் அவர் தாக்கி அரிவாளால் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த உமாராணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.</p><h2>கைது</h2><p>இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சின்மயியை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது.</p><p>இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுரேசை போலீசார் கைது செய்தனர்.</p><h2>சிகிச்சை பலனின்றி மகளும் உயிரிழப்பு</h2><p>இந்த நிலையில் நேற்று மாலை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்மயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரட்டை கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார், ஏ.பள்ளிப்பட்டி இன்ஸ்பெக்டர் வான்மதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.</p><p>தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-sales-at-ration-shops-central-government-to-supply-70000-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-sales-at-ration-shops-central-government-to-supply-70000-kg#comments</comments><guid isPermaLink="false">80294ec4-3cd9-451d-b224-36d90f35f10d</guid><pubDate>Sun, 30 Aug 2026 05:09:50 +0000</pubDate><atom:updated>2026-08-30T05:09:50.233Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,Ration shop,onion,வெங்காயம்,வெங்காயம் விலை,Onion price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/1qvh1qza/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/1qvh1qza/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமையலுக்கு பிரதானமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை சமீபகாலமாக விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த மாதம் இறுதியில் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரித்து ரூ.60 வரை விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்து ரூ.70 வரை விற்பனை ஆகிறது.</p><p>வெளிச்சந்தையில் முக்கிய காய்கறிகள் விலை உயரும்போது, அதை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. அந்த வகையில், ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. </p><p><strong>இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி கூறியதாவது:-</strong></p><p>பொதுமக்களுக்கு வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்க, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, 'நாபெட்' எனப்படும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம், முதல் கட்டமாக, 70,000 கிலோ வெங்காயம் வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து கிடைத்ததும், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இந்த வெங்காயம் விற்கப்பட உள்ளது. ஒரு கிலோ, ரூ.30 முதல் ரூ.40-க்குள் விற்பனை செய்யப்படும். என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரபல ரவுடி கொலையில் கணவன்-மனைவி கைது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-and-wife-arrested-shocking-details-revealed-during-interrogation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-and-wife-arrested-shocking-details-revealed-during-interrogation#comments</comments><guid isPermaLink="false">bba02a18-bc89-4ba5-bd6a-ec5a63ab745b</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:34:38 +0000</pubDate><atom:updated>2026-08-30T04:34:38.619Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,விசாரணை,arrest,கிரைம் செய்திகள்,investigation,Rowdy murder,ரவுடி கொலை,கணவன் மனைவி கைது</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/dmk0oeh4/arere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/dmk0oeh4/arere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடங்குளம், </p><p>கூடங்குளம் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர். </p><h2>ரவுடி வெட்டிக்கொலை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/கன்னியாகுமரி">குமரி</a> மாவட்டம் தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் செல்வம் (வயது 46). பிரபல ரவுடியான இவர் மீது குமரி, தூத்துக்குடி தாளமுத்துநகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. </p><p>செல்வத்துக்கு சொந்தமான தோட்டம், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கனேரி கிராமத்தில் உள்ளது. இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்துக்கு சென்றபோது, மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.</p><p>பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>சிக்கிய தம்பதி </h2><p>மேலும் இன்ஸ்பெக்டர் நவீன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.</p><p>விசாரணையில் செல்வத்தின் கூட்டாளிகளான பொட்டல்குளத்தை சேர்ந்த சந்துரு (26), அவரது மனைவி கவுரி ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.</p><h2>திடுக்கிடும் தகவல்</h2><p>இதையடுத்து போலீசார் 2 பேரையும் நேற்று முன்தினம் இரவில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, செல்வம், சந்துரு சேர்ந்து குளத்தை குத்தகைக்கு எடுத்து அதில் தாமரை பூக்களை வளர்த்து விற்பனை செய்தனர்.</p><p>சமீபத்தில் ஒரு குளத்தை குத்தகைக்கு எடுத்த விவகாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக செல்வத்தை 2 பேரும் சேர்ந்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.</p><h2>அதிரடி கைது</h2><p>இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து சந்துரு, கவுரி ஆகிேயைார அதிரடி யாக கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு ஊழியர்களுக்கான மாதாந்திர இடைக்கால உதவித்தொகை விதிகளில் திருத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/amendment-to-the-rules-regarding-monthly-interim-relief-for-government-employees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/amendment-to-the-rules-regarding-monthly-interim-relief-for-government-employees#comments</comments><guid isPermaLink="false">4c8b4e83-e595-4434-b060-3e0f7ede1449</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:22:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T04:22:35.369Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,அரசு ஊழியர்கள்,Govt employees,உதவித்தொகை,Interim Relief</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/4x8qniex/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/4x8qniex/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-</p><p>கடந்த 1.1.2026 அன்று அல்லது அதற்கு பிறகு பணிநிறைவு பெற்றவர்கள், பணியின்போது இறந்தவர்கள் மற்றும் பணிநி றைவுக்கு பின் இறந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (சி.பி.எஸ்.) உள்ள தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர இடைக்கால உதவித்தொகை மற்றும் குடும்ப உதவித்தொகை வழங்கும் அரசாணை கடந்த 16.6.2026 அன்று நிதித் துறையால் வெளியிடப்பட்டது. அதன்படி, கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதிகமோ, அத்தொகையுடன் 60 சதவீதம் அகவிலைப்படி நிவாரணமும் வழங்கப்பட்டது.</p><p>6-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெற்று ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 1.1.2026 முதல் அகவிலைப்படி விகிதம் 262 சதவீதம் என்பதால், இவ்விதிகளில் திருத்தம் செய்து தற்போது புதிய அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. அதன் அடிப்ப டையில், 6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாகச் சம்பளம் பெற்று, 30 சதவீத அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமாக இருந்து. 7-வது ஊதியக்குழுவிற்கு மாற்றப்படாத ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் 262 சதவீத விகிதத்தில் வழங்கப்படும்.</p><p>6-வது ஊதியக்குழுவின் கீழ் 30 சதவீத அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால், இடைக்காலத்தில் குறைந்தபட்சத்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு 60 சதவீதம் அகவிலைப்படி நிவாரணம் வழங்கப்படும். ஆனால், 7-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெற்ற அரசு ஊழியர்களுக்கு 60 சதவீதம் மட்டுமே அகவிலைப்படி நிவாரணமாக கணக்கிடப்படும். இதனடிப்படையில் கருவூலக்கணக்கு ஆணையர் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பைக் மீது கார் மோதி தம்பதி காயம்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-injured-after-car-hits-bike-anti-corruption-police-inspector-jailed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/couple-injured-after-car-hits-bike-anti-corruption-police-inspector-jailed#comments</comments><guid isPermaLink="false">9f5283bb-9989-4197-b87d-6c1a0a5460cf</guid><pubDate>Sun, 30 Aug 2026 03:58:04 +0000</pubDate><atom:updated>2026-08-30T03:58:04.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Karaikudi,காரைக்குடி,புதுக்கோட்டை,சிறை தண்டனை,Pudukottai,லஞ்ச ஒழிப்பு போலீஸ்,தம்பதி காயம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ntlgkva3/lock.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ntlgkva3/lock.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காரைக்குடி, </p><p>பைக் மீது கார் மோதி தம்பதி காயமடைந்த வழக்கில், சம்பந்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/pudukkottai">புதுக்கோட்டை</a> மாவட்டம் திருமயம் தாலுகா ஊனையூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் கார்த்திகேயன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி கணவன்- மனைவி இருவரும் ஊனையூரில் இருந்து காரைக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். </p><h2>பலத்த காயம்</h2><p>மறிச்சுகட்டு பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த கார், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் பலத்த காயம் அடைந்தார். தமிழ்ச்செல்வி லேசான காயம் அடைந்தார். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h2>லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்</h2><p>இதுகுறித்த புகாரின் பேரில் செட்டிநாடு போலீசார் காரை ஓட்டி வந்த காரைக்குடி பாரிநகரை சேர்ந்த பீட்டர் (வயது 51) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர் தற்போது புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். </p><h2>சிறை தண்டனை</h2><p>இந்த வழக்கு காரைக்குடி கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் செல்வராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி கார்மேக கண்ணன், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆன்லைனில் மின் கட்டணம்: 10 கோடியை தாண்டிய நுகர்வோர் எண்ணிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-electricity-bill-payments-number-of-consumers-crosses-10-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-electricity-bill-payments-number-of-consumers-crosses-10-crore#comments</comments><guid isPermaLink="false">4769bfe1-eb96-4079-8ca4-06c3a5d65b33</guid><pubDate>Sun, 30 Aug 2026 03:27:49 +0000</pubDate><atom:updated>2026-08-30T03:27:49.646Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,ஆன்லைன்,மின் கட்டணம்,electricity bill,TNEB,சேவை கட்டணம்,மின் பகிர்மானக் கழகம்,onlie paymet</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/nswor61s/moni.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/nswor61s/moni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தமிழகத்தில் ஆன்லைன் உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் <a href="https://www.dailythanthi.com/topic/electricity-bill">மின் கட்டணம்</a> செலுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மின் கட்டணம்</h2><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், மின்சார நுகர்வோர்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் முறையில் <a href="https://www.dailythanthi.com/topic/electricity-bill">மின் கட்டணம்</a> செலுத்தும் வசதியும் அடங்கும். தமிழ்நாடு முழுவதும் 2.54 கோடி வீடுகள் உட்பட அனைத்து பிரிவுகளிலும் 3.51 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். </p><h2>டிஜிட்டல் முறையில்</h2><p>இலவச மின்சார பயனாளிகள் போக மாதம் சராசரியாக 1 கோடி முதல் 1.15 கோடி வரை நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துகின்றனர். செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் பலரும் அரசு மற்றும் தனியார் துறை சேவைகளுக்கான கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தவே ஆர்வம் காட்டுகின்றனர்.</p><p>இதனால் 2025 - 26ல், மின் வாரியத்திற்கு டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தியவர்கள் எண்ணிக்கை, 10.63 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்படி அவர்கள் 62,537 கோடி ரூபாய் டிஜிட்டல் முறையில் செலுத்தியுள்ளனர். இது 2024 - 25ல் 9.56 கோடி நுகர்வோர்களாகவும், செலுத்திய கட்டணம் 58,285 கோடி ரூபாயாகவும் இருந்தது.</p><h2>புதிய சேவைகள்</h2><p>இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு, 10 முதல் 15 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டில் மின் கட்டணம் செலுத்தியதில் டிஜிட்டலின் பங்கு 87 சதவீதம் ஆகும். ஆன்லைனில் இன்னும் புதிய சேவைகள் தொடங்கப்பட உள்ளன. அதன் வாயிலாக எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் ஜல்லிக்கட்டு போட்டியை இழிவுபடுத்தவில்லை-சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. விளக்கம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jallikattu-was-not-disparaged-in-the-assembly-sholavandan-constituency-mla-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jallikattu-was-not-disparaged-in-the-assembly-sholavandan-constituency-mla-clarifies#comments</comments><guid isPermaLink="false">638d91cc-cb2e-4d61-ac0b-f689ccaf84f6</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:58:38 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:58:38.656Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜல்லிக்கட்டு,சட்டசபை,Jallikkatu,சோழவந்தான் தொகுதி,sholavandan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/vg3oqro2/Solavandhan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/vg3oqro2/Solavandhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் குடிமக்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பது வரலாற்று உண்மை. அதில் எந்த மாற் றமும் இல்லை. ஜல்லிக்கட்டு நான் பிறந்த மண்ணின் வீர விளையாட்டு. அதை நான் எப் படி இழிவுபடுத்துவேன். அலங்காநல்லூர் பகுதியில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிதி இன்றி மூடப்பட்டு உள்ளது. அதை மீண்டும் இயக்குவதற்கு ரூ.50 கோடி நிதி தேவைப்படும் நிலையில், யாருக்கும் பயனின்றி ரூ.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஏறு தழுவுதல் அரங்கத்துக்கு செலவிட்ட நிதியை பயன்படுத்தி சர்க்கரை ஆலையை திறக்க உதவி இருக்கலாம் என்ற கருத்தைதான் கூறினேன். </p> <p>ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கலாசாரப்படி அரங்கம் அமைத்து நடத்துவது தமிழ் கலாசாரத்திற்கு முரணானது. பொங்கல் விழாவின்போது அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து ஏறு தழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு மாணவர்கள் ஒழுங்காக செல்லாமல் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தனர். </p><p>அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகதான் சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி இழிவாகக்கூறவில்லை. மாணவ பருவத்தினரை மனதில் வைத்து கொண்டு, அவர்கள் படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக அப் படி கூறினேன். இதில் இளைய சமுதாயத்தினரின் மனது புண்படும்படி யாக பேசி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>துாத்துக்குடி துறைமுகத்தில் முதல்முறையாக கச்சா பாமாயில் இறக்குமதி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/crude-palm-oil-imported-at-tuticorin-port-for-the-first-time</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/crude-palm-oil-imported-at-tuticorin-port-for-the-first-time#comments</comments><guid isPermaLink="false">b6a03f3e-4655-4a28-aa2e-af38c9606758</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:54:46 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:54:46.644Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,துறைமுகம்,Thoothukudi,தூத்துக்குடி,இறக்குமதி,Import,Tuticorin port,கச்சா பாமாயில்,Crude palm oil</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/am46i3xe/prohit.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கச்சா பாமாயில் இறக்கும் பணியை துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்த குமார் புரோஹித் தொடங்கி வைத்தார்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/am46i3xe/prohit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/thoothukudi">தூத்துக்குடி</a> துறைமுகத்தில் முதல் முறையாக மலேசியா கப்பலில் இருந்து 15 ஆயிரம் டன் கச்சா பாமாயிலை இறக்கி சாதனை படைக்கப்பட்டது.</p><h2>சரக்கு கப்பல்</h2><p>மலேசியாவின் குனாக் துறைமுகத்தில் இருந்து 15 ஆயிரம் டன் கச்சா பாமாயிலை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு கப்பல் நேற்று முன்தினம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது. 143 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் 9.70 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது.</p><p>துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்தகுமார் புரோஹித் முன்னிலையில் கச்சா பாமாயிலை இறக்கும் பணி தொடங்கியது. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன், கே.டி.வி. ஹெல்த் புட் நிறுவன நிர்வாக இயக்குனர் கே.டி.வி.நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><h2>4 சேமிப்பு தொட்டிகள்</h2><p>மாற்றியமைக்கப்பட்ட முனையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள சேமிப்பு தொட்டிகளுக்கு குழாய்கள் மூலம் பாமாயில் கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் உள்ள 15 ஆயிரம் டன் பாமாயிலும் நாளைக்குள் (திங்கட்கிழமை) இறக்கப்பட்டு விடும்.</p><p>கே.டி.வி. ஹெல்த் புட் நிறுவனம் துறைமுகத்தின் தொழில் மண்டலத்தில் 4 சேமிப்பு தொட்டிகளை அமைத்துள்ளது. இந்த நிறுவனம் நாளொன்றுக்கு 1,000 டன் சுத்திகரிக்கப்பட்ட பாமோலின் தயாரிக்கும் திறன் கொண்டது.</p><h2>பசுமை ஹைட்ரஜன்</h2><p>இங்கு தயாரிக்கப்படும் பாமோலின், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் நுகர்வுக்காக வினியோகிக்கப்படுகிறது. துறைமுகம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் வ.உ.சி. துறைமுக நிர்வாகம் சுமார் 1,633 ஏக்கர் நிலத்தை மின் உற்பத்தி நிலையங்கள், ரசாயன தொழில்கள், கிடங்குகள், உணவு பதப்படுத்துதல், சமையல் எண்ணெய் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட தொழில்களுக்கு ஒதுக்கி உள்ளது.</p><h2>முதல் முறையாக..</h2><p>மாற்றியமைக்கப்பட்ட நிலக்கரி முனையத்தில் முதல் முறையாக கச்சா பாமாயில் கப்பல் கையாளப்பட்டிருப்பது, துறைமுகத்தில் சரக்கு வகைகளைப் பல் வகைப்படுத்தவும், துறைமுகம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கும், பிராந்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் சமையல் எண்ணெய் துறையின் விரிவாக்கத்துக்கும் உதவும் என்று துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்த குமார் புரோஹித் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: 13-வது நாளாக பரிசல் இயக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal-coracle-operations-suspended-for-the-13th-consecutive-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-water-inflow-in-the-cauvery-river-at-hogenakkal-coracle-operations-suspended-for-the-13th-consecutive-day#comments</comments><guid isPermaLink="false">dbd83e7d-96c1-44a2-b18c-43324ab7edbe</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:32:55 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:32:55.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Hogenakkal,ஒகேனக்கல்,காவிரி நீர்,Karnataka,கர்நாடகா,Hogenakkal Cauvery,Cauvery,பரிசல் இயக்க தடை,Hogenakkal Cauvery river</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/lswc58ul/hoge.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/lswc58ul/hoge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பென்னாடம், </p><p>கர்நாடகத்தில் காவிரி படுகையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கிருஷ்ணராஜ சாகர்(கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் மற்றும் கேரளம் மாநிலம் வயநாடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் குடகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. </p> <h2>கே.ஆர்.எஸ். அணை</h2><p>இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 589 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது குடகில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 85 கனஅடி ஆக இருந்தது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 110.26 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 179 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.</p><h2>கபினி அணை</h2><p>இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரத்து 45 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 993 கனஅடியாக குறைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,271.90 அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரத்து 600 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.</p><p>கே.ஆர்.எஸ். கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் டி.நரசிப்புரா அருகே ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வருகிறது. அதன்படி நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 13 ஆயிரத்து 685 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரத்து 758 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.</p><h2>ஒகேனக்கல்</h2><p>கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் வழக்கம். இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.  </p><h2>நீர்வளத்துறை அதிகாரிகள்</h2><p>இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><h2>பரிசல் இயக்க தடை</h2><p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 13-வது நாளாக நீடிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>பெண்ணை கொன்று உடலை கூறுபோட்ட கள்ளக்காதலன்... பரபரப்பு தகவல்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-lover-who-killed-woman-and-dismembered-her-body</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-lover-who-killed-woman-and-dismembered-her-body#comments</comments><guid isPermaLink="false">5e52d627-81c8-4e6b-bc0e-cd509f1c43e4</guid><pubDate>Sun, 30 Aug 2026 01:23:02 +0000</pubDate><atom:updated>2026-08-30T01:23:02.949Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,கள்ளக்காதல்,கிரைம் செய்திகள்,fake love</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/2i1ko8pn/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/2i1ko8pn/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>சூட்கேசில் மனித உறுப்புகள்</h2><p>சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அப்போது ரெயிலின் கடைசி பெட்டியில் யாரும் உரிமை கோராத சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்தது. போலீசார் அதை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே தலை இல்லாத மனித எலும்புக்கூடுகள் மற்றும் சில உடல் உறுப்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>இதையடுத்து போலீசார் எலும்புக்கூடு கள் மற்றும் உடல் உறுப்புகளை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவை யாருடையது? எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.</p><h2>சென்டிரலில் சிக்கிய காட்சி</h2><p>இதன் ஒரு பகுதியாக ஆக்ரா போலீசார் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத் தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்றை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்புற பெட்டியில் ஏற்றிவிட்டு இறங்கிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.</p><p>இதையடுத்து அவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? என்பது குறித்து பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிவப்பு நிற சூட்கேசை ரெயிலில் ஏற்றியவர்கள் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2>மைதா மாவு கலக்கப்பட்ட சதைப்பகுதி</h2><p>இதுகுறித்த தகவலின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப் போது அந்த இருவரும் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.</p><p>அப்போது வீட்டுக்குள் பிரியாணி தயாரிக்க பயன்படுத் தப்படும் பெரிய அண்டா பாத்திரம் ஒன்று சிவப்பு நிற துணியால் மூடப்பட்டிருந்தது. மேலும் வீட்டுக்குள் கடுமையான துர்நாற்றம் வீசியது. அந்த பாத்திரத்தை திறந்து பார்த்தபோது அதற்குள் மனித உடலின் சதைப்பகுதிகள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தன. அந்த சதைப்பகுதிகளில் மைதா மாவு கலக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மனித சதைப்பகுதிகளை அண்டாவுடன் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>தகாத உறவு</h2><p>இதற்கிடையே ஆக்ரா ரெயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மனித எலும்புகள் மற்றும் உடல் உறுப்புகளும், கூடுவாஞ்சேரி வீட்டில் கைப்பற்றப்பட்ட மனித சதைப்பகுதிகளும் ஒரே நபருடையதா? என்பது குறித்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒரே நபருடையது என்பது உறுதி யானது. தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா (வயது 38) என்பது தெரியவந்தது.</p><p>இவர் சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும் உள்ளார். அவர் தாம்பரத் தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். அவரி டம் நடத்தப்பட்ட விசாரணையில் 'தனது தாயார் ஒருவருடன் தகாத உறவில் இருந்ததால் நான் தனியாக தங்கி வேலை செய்து வருகிறேன்' என கூறியுள்ளார்.</p><h2>தம்பதி மீது சந்தேகம்</h2><p>இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் ஹயாத் நிஷாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபர் யார்? என விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், ஹயாத் நிஷா தங்கி இருந்த வீட் டில் கடந்த 2 மாதங்களாக தம்பதிகளான அசாம் மாநிலத்தை சேர்ந்த மணிக்உத்தீன் லஸ்கர் (22) என்பவரும், ஒடிசா மாநி லத்தை சேர்ந்த பகவதி மாஜி என்பவரும் தங்கி இருந்தது தெரியவந்தது.</p><p>இதனால் போலீசாரின் சந்தேகம் அந்த தம்பதி யினர் மீது திரும்பியது. ஹயாத் நிஷாவை கொலை செய்து விட்டு இருவரும் தங்களது சொந்த ஊர்களான அசாம் அல்லது ஒடிசாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் அசாம் மாநிலத்திற்கு விரைந்து சென்றனர்.</p><h2>மணிப்பூரில் கைது</h2><p>ஒரு வாரத்துக்கும் மேலாக போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள காசிம்பூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மணிப்பூர் போலீசாரின் உதவியுடன் காசிம்பூர் பகுதிக்குச் சென்று அங்கு பதுங்கி யிருந்த மணிக்உத்தீன் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.</p><p>தற்போது கைதான இருவரையும் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்காக நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்டுள்ள தம்பதியினரை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், அவர்கள் கொலை செய்த விதம் குறித்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும் தொடர் விசாரணைக்குப் பிறகே இந்த கொலையின் முழுமையான பின்னணி குறித்து தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர்-கன்னியாகுமரி இடையிலான சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-special-train-service-between-egmore-and-kanyakumari</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-special-train-service-between-egmore-and-kanyakumari#comments</comments><guid isPermaLink="false">d3dcb8f9-baab-42f7-892d-a1c11bf7bd72</guid><pubDate>Sun, 30 Aug 2026 01:19:41 +0000</pubDate><atom:updated>2026-08-30T01:19:41.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,சிறப்பு ரெயில்,Special train,train,எழும்பூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/yn8x8c4b/Train.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/yn8x8c4b/Train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06045) இயக்கப்படுகிறது. அதேபோல, கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06046) இயக்கப்படுகிறது.</p><p>நெல்லையில் இருந்து அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) மற்றும் அடுத்த மாதம் 3-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில்கள் (06166, 06070) இயக்கப்படுகின்றன. அதேபோல, தாம்பரத்தில் இருந்து அடுத்த மாதம் 7-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) மற்றும் அடுத்த மாதம் 4-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் (06165, 06069) இயக்கப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!வானிலை மையம் அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-one-or-two-places-in-tamil-nadu-today-weather-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-one-or-two-places-in-tamil-nadu-today-weather-department-update#comments</comments><guid isPermaLink="false">e0f6466e-9407-42a7-8ad5-67e1c6c2d72d</guid><pubDate>Sun, 30 Aug 2026 00:56:03 +0000</pubDate><atom:updated>2026-08-30T00:56:03.920Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,weather information,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN weather,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/o4qmkn0e/kli.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/o4qmkn0e/kli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>இதன்காரணமாக இன்று (30-08-2026):</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (31-08-2026):</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>லேசான மழை</h2><p><strong>01-09-2026 மற்றும் 02-09-2026:</strong> வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>03-09-2026:</strong> வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும்.</p><p><strong>04-09-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>30-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>30-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (30-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 ° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>30-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>30-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>31-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>30-08-2026 முதல் 02-09-2026 வரை:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>

தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kiran-kumar-reddy-likely-to-be-appointed-as-governor-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kiran-kumar-reddy-likely-to-be-appointed-as-governor-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">ee78f261-e52a-4995-ac2e-7de355f0dcee</guid><pubDate>Sun, 30 Aug 2026 00:47:07 +0000</pubDate><atom:updated>2026-08-30T00:47:07.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கவர்னர்,TN Governor,கிரண்குமார் ரெட்டி,Kirenkumar reddy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/285yjc21/kiren-kumar-redddy.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரண் குமார் ரெட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/285yjc21/kiren-kumar-redddy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேரள மாநிலத்தின் கவர்னர் ஆர்.வி.அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். ந்இவர்தான் முதல்-அமைச்சர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த  6 மாத காலமாக தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படாமல் இருக்கும் நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட இருப்பதாக பேச்சுகள் எழுந்து உள்ளன.</p><h2>மத்திய மந்திரி சபையில் மாற்றம்</h2><p>கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் இது பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே மத்திய மந்திரி சபையில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக வும், அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கவர்னர்கள் புதிதாக நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் கவர்னர் நியமனம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு, நாடு திரும்பிய பிறகு இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p> ]]></content:encoded></item><item><title>
அமராவதி அணையில் இருந்து இன்று முதல் நீர் திறப்பு: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/amaravati-anaial-irundu-indru-mudhal-neer-thirappu-mudhal-amaichar-vijay-utharavu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/amaravati-anaial-irundu-indru-mudhal-neer-thirappu-mudhal-amaichar-vijay-utharavu#comments</comments><guid isPermaLink="false">69b15844-e664-4d62-941a-faa7835eecda</guid><pubDate>Sat, 29 Aug 2026 20:32:37 +0000</pubDate><atom:updated>2026-08-29T20:32:37.853Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமராவதி அணை,Amaravati dam,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/oimj59i9/tngoa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/oimj59i9/tngoa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.</p><p>தமிழக அரசின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, தற்போது, எல்.நினோ பாதிப்பினால் மழைப்பொழிவு இல்லாததால் அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் உயர்வதற்கும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்கும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக 30.08.2026 முதல் 07.09.2026 வரை நாளொன்றுக்கு, வினாடிக்கு 1,000 கன அடி வீதம் 8 நாட்களுக்கும் போதிய மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், மேலும் 4 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம், அமராவதி அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து, அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>
நாகை:  வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் பலூன்; 2 பேர் படுகாயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagai-velankanni-basilica-festival-helium-balloon-explosion-two-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagai-velankanni-basilica-festival-helium-balloon-explosion-two-injured#comments</comments><guid isPermaLink="false">e8fcdf64-e84b-4d52-b622-2dfac3bcda63</guid><pubDate>Sat, 29 Aug 2026 19:02:34 +0000</pubDate><atom:updated>2026-08-29T19:02:34.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாகை,Nagai,Velankanni,வேளாங்கண்ணி,பலூன்,balloons</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/819i47uj/ndcfc.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாகை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/819i47uj/ndcfc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நாகை</p><p>நாகை வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் ஹீலியம் பலூன் வெடித்து சிதறியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.</p><p>நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. 'கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.</p><p>அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா நேற்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடி ஏற்றினார்.</p> <h2>ஹீலியன் பலூன்</h2><p>இந்த நிலையில், வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவில் பட்டாசுகள் பட்டு பெரிய அளவிலான அலங்கார ஹீலியன் பலூன் வெடித்து சிதறியது.  இதில் பக்தர்கள் மத்தியில் தீப்பற்றி எரிந்தபடி பலூன் விழுந்தது.  இந்த சம்பவத்தில் சென்னையை சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.</p><p>உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் திருவிழாவில் பக்தர்கள் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் இனி ரூ.1,000 அபராதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fine-of-rs-1000-for-littering-at-railway-stations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fine-of-rs-1000-for-littering-at-railway-stations#comments</comments><guid isPermaLink="false">5a70b088-ff67-4bdc-8f27-e65ae0446080</guid><pubDate>Sat, 29 Aug 2026 16:33:43 +0000</pubDate><atom:updated>2026-08-29T16:33:43.674Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குப்பை,அபராதம்,Railway Stations,ரெயில் நிலையங்கள்,fine collection,attraction</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fiiyyrmp/train-fine.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ ரெயில் நிலையங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் இனி ரூ.1,000 அபராதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/fiiyyrmp/train-fine.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">ரெயில் நிலையங்கள்</a> மற்றும் ரெயில் பெட்டிகளில் கண்ட இடங்களில் குப்பை போடுபவர்களுக்கான அபராத தொகையை ரூ.1,000 ஆக உயர்த்தி ரெயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p> <h2>ரூ.500 அபராதம்</h2><p>இந்திய ரெயில்வேயை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் ரெயில்வே விதியை மீறி ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில்வே வளாகங்களில் கண்ட இடங்களில் குப்பை போடுபவர்கள் மற்றும் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், ரெயில் நிலைய பகுதிகளில் குப்பை போடும் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. பயணிகள் பலர் தொடர்ந்து பொது இடங்களில் குப்பைகளை வீசி வந்தனர்.</p><h2>அபராதம் இரட்டிப்பு</h2><p>இதனால், ரெயில்வே வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதில் பெரும் சவால் நீடித்து வந்தது. இதையடுத்து, குப்பை போடுபவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன் ஒருபகுதியாக, குப்பை போடுவோருக்கான அபராதத் தொகையை இரட்டிப்பாக்க தீர்மானிக்கப்பட்டது. அந்தவகையில், இனி ரெயில் நிலைய பகுதிகள் மற்றும் ரெயில் பெட்டிகளில் விதிகளை மீறி குப்பை போடுபவர்களுக்கு ரூ.1,000 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> விதிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>அரசிதழில் வெளியீடு</h2><p>கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்ட இந்த அபராத தொகை உயர்வு, தற்போது மத்திய ரெயில்வே துறை சார்பில் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பயணிகள் அனைவரும் ரெயில்வே வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை: அதிர்ச்சியில் தாய் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bunk-employees-suicide-mother-takes-drastic-step-in-shock</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/petrol-bunk-employees-suicide-mother-takes-drastic-step-in-shock#comments</comments><guid isPermaLink="false">c60de6a1-6736-4f01-8dd7-e5a843e31db8</guid><pubDate>Sat, 29 Aug 2026 16:12:02 +0000</pubDate><atom:updated>2026-08-29T16:12:02.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Cuddalore,கடலூர்,தற்கொலை,Suicide,பெட்ரோல் பங்க் ஊழியர்,petrol bunk</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/1twaqdlc/ila.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/1twaqdlc/ila.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குறிஞ்சிப்பாடி, </p><p>குள்ளஞ்சாவடி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில தாயும் தூக்குப்போட்டு இறந்தார்.</p><h2>பெட்ரோல் பங்க் ஊழியர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/cuddalore">கடலூர்</a> மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுக்கம்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் சந்தோஷ்குமார் (வயது 39). இவர் குள்ளஞ்சாவடியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கவிதா (34) என்ற மனைவியும், லோகேஸ்வரன் (7) என்ற மகனும் உள்ளனர். ஆதிமூலம் ஏற்கனவே இறந்து விட்டதால், அவரது மனைவி ராஜகுமாரி (65) தனது மகன் சந்தோஷ்குமாருடன் வசித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. </p><h2>தற்கொலை</h2><p>இதனால் பதறிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது சந்தோஷ்குமார் அதே ஊரில் இருக்கும் முந்திரி தோப்பில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர், வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.</p><p>இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி கவிதா, குள்ளஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>அதே இடத்தில் தாயும் உயிரிழப்பு</h2><p>இதற்கிடையே மகன் இறந்ததை அறிந்து துக்கம் தாங்காமல் பரிதவித்த ராஜகுமாரி நேற்று மதியம் சந்தோஷ்குமார் தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கு சென்று கதறி அழுதுள்ளார். பின்னர் அவர், தனது மகன் தற்கொலை செய்து கொண்ட மரத்தின் அருகே உள்ள மற்றொரு மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><p>இந்த பரிதாப சம்பவம் பற்றி அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து ராஜகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மகன், தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு போலீஸ் பாதுகாப்பு குறைப்பு; தி.மு.க.வினர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-security-reduced-for-mk-stalin-dmk-members-condemn</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-security-reduced-for-mk-stalin-dmk-members-condemn#comments</comments><guid isPermaLink="false">6138e5bc-3cb3-4239-894f-e402bbd73e37</guid><pubDate>Sat, 29 Aug 2026 16:04:48 +0000</pubDate><atom:updated>2026-08-29T16:04:48.684Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/htkwa5n8/dmk33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/htkwa5n8/dmk33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு 'இசட் பிளஸ்'பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை இழந்தது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினும் தோல்வி அடைந்தார்.</p><p>அவருக்கு தொடர்ந்து '<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D">இசட் பிளஸ்' பாதுகாப்பு </a>வழங்கப்பட்டு வந்தது. தினமும் 55 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கி வந்தனர். ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, முதல்-அமைச்சர் பதவி பறிபோனால் பாதுகாப்பு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பு 'இசட்' பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது.</p><p>சென்னை ஆழ்வார்ப்பேட்டை செனடப் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு செல்லும் 4 நுழைவுவாயில்களில் 20 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது 2 நுழைவுவாயில்களில் மட்டும் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.</p><p>தமிழகத்தில் வசிக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடைமுறை குறித்து உளவுப்பிரிவு போலீசார் அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க.வினர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நில மோசடி வழக்கு விசாரணை; போலீஸ் கமிஷனரை  சந்தித்த நடிகை கவுதமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/land-scam-case-investigation-actress-gauthami-meets-police-commissioner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/land-scam-case-investigation-actress-gauthami-meets-police-commissioner#comments</comments><guid isPermaLink="false">274fe404-72e0-4ee6-8aad-041449f58345</guid><pubDate>Sat, 29 Aug 2026 16:04:31 +0000</pubDate><atom:updated>2026-08-29T16:04:31.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Commissioner,போலீஸ் கமிஷனர்,நடிகை கவுதமி,நில மோசடி வழக்கு,Actress Gauthami,Land scam case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/lqpxfi94/kavuthami.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கவுதமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/lqpxfi94/kavuthami.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நடிகை கவுதமி நில மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக போலீஸ் கமிஷனரை  சந்தித்தார்.</p><p>நடிகை கவுதமி, சினிமாவில் சம்பாதித்த பணத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கரில் இடம் வாங்கி இருந்தார். இந்த இடத்தை விற்பனை செய்வதற்கான அதிகாரத்தை காரைக்குடியை சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் கொடுத்திருந்தார். ஆனால் அவர், ஸ்ரீபெரும்புதூரில் கவுதமி பெயரில் இருந்த ரூ.25 கோடி மதிப்பிலான சொத்தை ரூ.6 கோடிக்கு மட்டும் விற்று மோசடியில் ஈடுபட்டார்.</p><h2>நடிகை கவுதமி உதவி கமிஷனருடன் சந்திப்பு</h2><p>இதுகுறித்து கவுதமி, தகுந்த ஆதராங்களுடன் சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீசாரிடம் கடந்த 2023-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அழகப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை கேரள மாநிலம் திருச்சூரில் வைத்து கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நடிகை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF">கவுதமி</a> சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு உதவி கமிஷனரை இன்று சந்தித்துவிட்டு சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளம் பனிச்சரிவு; முன்கூட்டியே கணித்த பஞ்சாங்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-avalanche-almanack-predicts-in-advance</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-avalanche-almanack-predicts-in-advance#comments</comments><guid isPermaLink="false">68f98dbb-5853-4c72-a297-ae3df1352fe2</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:36:29.135Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,பஞ்சாங்கம்,இன்றைய பஞ்சாங்கம்,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/7hnllmo9/depth33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
நேபாளம் பனிச்சரிவு]]></media:title><media:description type="html"><![CDATA[ 

நேபாளம் பனிச்சரிவு; முன்கூட்டியே கணித்த பஞ்சாங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/7hnllmo9/depth33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திபெத் பனிப்பாறை விபத்து குறித்த முன்கூட்டிய கணிப்புகள் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மிகப்பெரிய பனிச்சரிவு </h2><p>திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ம் தேதி மிகப்பெரிய பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தை தாக்கியது</a>. அங்குள்ள ஆறுகளில் கடு ம்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 8 மத்திய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. வெள்ளத்துடன் பாறைகள், மண் மரங்கள் உள்ளிட்டவைகள் கலந்து அசுர வேகத்தில் பாய்ந்ததில் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாயமனார்கள்.</p><h2>4-வது நாளாக தொடரும் மீட்பு பணி</h2><p>இதனையடுத்து நேபாள ராணுவம், போலீசார், தேசிய பேரிடர் படையினர் மீட்புபடையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேறும் - சகதிகள் முழுவதும் பரவி உள்ள நிலையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் பலரது உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது.</p><h2>2,301 பேர் பத்திரமாக மீட்பு</h2><p>நேபாளத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேபாளம் - திபெத்தில் மொத்தம் 2,400க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். நேபாளத்தில் மீட்பு பணிகள் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. நேபாள பெருவெள்ளத்தில் 2,301 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் 4,854 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>முன்கூட்டியே கணித்த பஞ்சாங்கம்</h2><p>இந்தநிலையில், திபெத் பனிப்பாறை விபத்து மற்றும் நேபாள வெள்ளப்பெருக்கு குறித்த முன்கூட்டிய கணிப்புகள் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளது சமூக வளைதளங்களில்  விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஆகஸ்ட் 26, 2026 அன்று திபெத்-நேபாள எல்லையில் இமயமலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு (Glacier Collapse) மற்றும் பெருவெள்ளம் கடும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில், நடப்பு துர்முகி (2026-2027) தமிழ்ப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தில் இதற்கான எச்சரிக்கை முன்கூட்டியே எழுதப்பட்டிருந்ததாக ஜோதிடர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.</p><h2>வெள்ளப்பெருக்கு ஏற்படும் </h2><p> "2026 - 2027 ஆண்டுகளில் சீனா அருகில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">திபெத்</a> மலையில் பனிமலை உருகி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்" என்று வாக்கிய பஞ்சாங்கத்தின் பொதுப் பலன்களில் முன்கூட்டியே அச்சிடப்பட்டுள்ளது. </p><p>துல்லியமான பகுதி: விபத்து நடக்கும் பகுதி (திபெத்) மற்றும் பேரழிவின் தன்மை (பனி உருக்கம் மற்றும் வெள்ளம்) ஆகிய இரண்டும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பஞ்சாங்கக் கணிப்பு</a>டன் பொருந்திப் போவதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.</p><p>புவி வெப்பமயமாதல் காரணமாக இமயமலையில் உள்ள  பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதே இத்தகைய தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமராவதி அணையில் இருந்து நாளை முதல் நீர் திறப்பு: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-release-from-amaravathi-dam-to-begin-tomorrow-chief-minister-vijay-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-release-from-amaravathi-dam-to-begin-tomorrow-chief-minister-vijay-orders#comments</comments><guid isPermaLink="false">975a14de-5fc6-4989-a47c-14415ed4bea4</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:26:42 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:26:42.002Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,water release,தமிழக அரசு,TN govt,நீர் திறப்பு,அமராவதி அணை,amaravathi dam,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/v6skfqi3/adamva.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/v6skfqi3/adamva.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக அரசு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் </a>அவர்களின் உத்தரவிற்கிணங்க, தற்போது, எல்.நினோ பாதிப்பினால் மழைப் பொழிவு இல்லாததால் அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் உயர்வதற்கும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்வதற்கும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக 30.08.2026 முதல் வரை, 07.09.2026 வரை நாளொன்றுக்கு, வினாடிக்கு 1,000 அடி வீதம் 8 நாட்களுக்கும் போதிய மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், மேலும் 4 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம், அமராவதி அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து, அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை: சென்னையில் முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-review-of-precautionary-measures-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-review-of-precautionary-measures-in-chennai#comments</comments><guid isPermaLink="false">3e94ec67-1d79-40fe-a0ef-3a82472450f6</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:13:31 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:13:31.348Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Northeast Monsoon,வடகிழக்குப் பருவமழை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/83orlhyv/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/83orlhyv/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டல அளவில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கைப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின், பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மண்டல அளவில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலரர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள்.</p><p>இதனைத் தொடர்ந்து, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளை கள ஆய்வு செய்து, பணிகளை விரைவு படுத்தி வருகின்றனர்.</p><h2>மழைநீர் வடிகால் பணிகள்</h2><p>இதன் ஒரு பகுதியாக, இன்று (29.08.2026) திரு.வி..க. நகர் மண்டல கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் மேலாண்மை இயக்குநர் பி.கணேசன், திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-77க்குட்பட்ட யானைகவுனி சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு-73க்குட்பட்ட ஸ்டிபன்சன் சாலை, செங்கை சிவம் பாலம் பகுதியில் உள்ள ஒட்டேரி நல்லா கால்வாயில் உள்ள மோட்டார் பம்புடன் கூடிய மதகு, வார்டு-75க்குட்பட்ட எஸ்எஸ் புரம் பகுதியில் உள்ள ஒட்டேரி நல்லா கால்வாயில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவர் கட்டும் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திடவும், பம்புடன் கூடிய மதகினை தயார் நிலையில் வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.</p><p>அண்ணாநகர் மண்டல <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கண்காணிப்பு </a>அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநர் காயத்ரி கிருஷ்ணன், அண்ணாநகர் மண்டலம், வார்டு-103க்குட்பட்ட அண்ணாநகர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு-99க்குட்பட்ட பிரிக்லின் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ஒட்டேரி நல்லா கால்வாயில் தடுப்புச் சுவர் உயர்த்திக் கட்டும் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-fire-broke-out-during-the-velankanni-flag-hoisting-festival</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-fire-broke-out-during-the-velankanni-flag-hoisting-festival#comments</comments><guid isPermaLink="false">77f84ce2-fb23-4abc-a3fb-08687df6feb0</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:08:01 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:08:01.152Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவிழா,நாகை,Velankanni,வேளாங்கண்ணி,Christian Church</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/48d19z7i/fire33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 

வேளாங்கண்ணி]]></media:title><media:description type="html"><![CDATA[ 
வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/48d19z7i/fire33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகை,</p><p>நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. 'கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். </p><p>அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடி ஏற்றினார். </p><p>இந்தநிலையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%20">வேளாங்கண்ணி </a>கொடியேற்ற திருவிழாவில் பட்டாசுகள் பட்டு பெரிய அளவிலான அலங்கார ஹீலியன் பலூன் வெடித்து சிதறியதால் தீ பற்றியதால் கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது.   அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை</p><p>உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-government-employee-arrested-for-demanding-rs-6000-bribe-for-providing-water-connection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-government-employee-arrested-for-demanding-rs-6000-bribe-for-providing-water-connection#comments</comments><guid isPermaLink="false">0799b054-3c86-467f-bcb7-17804bfa287e</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:07:56 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:07:56.626Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,arrested,லஞ்சம்,government employee,bribe,அரசு ஊழியர் கைது,Water connection,குடிநீர் இணைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/znlhyajh/38.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/znlhyajh/38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ரூ.6 ஆயிரம்  லஞ்சம் கேட்ட அரசு ஊழியரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.</p><p>சென்னை மாவட்டம் மாதவரம் அருகே தணிக்காச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 46). இவர் தனது புதிய வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கழிவு நீரகற்று வாரியத்தின் மூலம் விண்ணப்பித்திருந்தார். அப்பகுதியில் குடிநீர் இணைப்பு உதவிப் பொறியாளராக முருகேசன் என்பவர் பணியாற்றி வந்தார். விண்ணப்பத்தை பார்த்து, இந்த வேலையை செய்வதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தருமாறு ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளார். </p><h2>ரூ.6 ஆயிரம் லஞ்சம்</h2><p>அரசு நிர்ணயித்த தொகையை விட, தனியாக லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஜெயக்குமார், இதனை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவகத்திற்கு சென்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உதவிப் பொறியாளரை கையும், களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர். அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரம் பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுத்து முருகேசனிடம் வழங்கும்படி கூறினர். </p><h2>கைது</h2><p>அந்த பணத்தை ஜெயக்குமார் எடுத்து சென்று அலுவலகத்தில் இருந்த முருகேசனிடம் வழங்கினார். அதை பெற்றவுடன், அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை <a href="https://www.dailythanthi.com/topic/arrest-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர். பின்னர், அவரது கைகளில் ரசாயன சோதனை நடத்தியபோது லஞ்சம் பெற்றது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலின் இசட் பாதுகாப்பு வாபஸ்: தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கூடாது - நெல்லை முபாரக்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdrawal-of-z-security-for-mk-stalin-political-grudges-should-not-affect-leaders-protection-nellai-mubarak</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/withdrawal-of-z-security-for-mk-stalin-political-grudges-should-not-affect-leaders-protection-nellai-mubarak#comments</comments><guid isPermaLink="false">8fa239c6-2f9c-452f-9710-7d6bac2a6f8e</guid><pubDate>Sat, 29 Aug 2026 14:58:04 +0000</pubDate><atom:updated>2026-08-29T14:58:04.270Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,நெல்லை முபாரக்,withdrawal,வாபஸ்,Nellai Mubarak,இசட் பாதுகாப்பு</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/txpjq9lm/mubark.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ நெல்லை முபாரக்]]></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/txpjq9lm/mubark.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>​மக்கள் தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளோ, உள்நோக்கங்களோ துளியும் தலைதூக்கக் கூடாது என்று <a href="https://www.dailythanthi.com/topic/nellai-mubarak">நெல்லை முபாரக்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><h2>அதிர்ச்சி</h2><p>திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின் </a>இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.</p><h2>பாதுகாப்பு </h2><p>​ஒரு மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் தலைவராகவும், பிரதான எதிர்க்கட்சி தலைவராகவும் மக்கள் பணியில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் மு.க.ஸ்டாலின் பொதுவெளியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கும் இத்தகைய மக்கள் தலைவர்களின் பாதுகாப்பு என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது.</p><h2>அரசியல் உள்நோக்கம்</h2><p>​சமகால அரசியல் சூழலில் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், திடீரென பாதுகாப்பை குறைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதோ என்ற நியாயமான சந்தேகத்தை எழ செய்கிறது.</p><h2>அரசியல் காழ்ப்புணர்ச்சி</h2><p>​மக்கள் தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளோ, உள்நோக்கங்களோ துளியும் தலைதூக்கக் கூடாது. மாற்றுக் கருத்துகள், அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, மு.க.ஸ்டாலின் மக்கள் தொடர்பையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அதே முழுமையான இசட் பிரிவு பாதுகாப்பை தாமதமின்றி மீண்டும் வழங்கிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய்-ஐ அடுத்த பிரதமராக முன்னிறுத்தும் தவெகவினர்; தமிழிசை கொடுத்த பதில்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-can-even-think-of-another-prime-minister-on-par-with-modi-tamilisai-soundararajan-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-can-even-think-of-another-prime-minister-on-par-with-modi-tamilisai-soundararajan-2#comments</comments><guid isPermaLink="false">65bcb932-ab16-4cf8-9cd0-0082b80441a4</guid><pubDate>Sat, 29 Aug 2026 14:46:58 +0000</pubDate><atom:updated>2026-08-29T14:46:58.022Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,பிரதமர் மோடி,PM Modi,தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/sfa5ucum/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/sfa5ucum/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/">விஜய் </a>தலைமையிலான தவெக அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நாட்டின்  அடுத்த பிரதமராக விஜய் வருவார் என்று தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் , கட்சி நிர்வாகிகள் சிலர் கூறிவருகின்றனர். இதற்கு தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் விமர்சனம், எதிர் கருத்தை தெரிவித்து வருகிறது.</p><h2>பிரதமர் மோடிக்கு இணையாக யாரையும் பேச முடியாது </h2><p>இந்நிலையில்,  மோடிக்கு இணையாக மற்றொரு பிரதமரை யாரும் சிந்தித்து பார்க்க முடியாது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.</p><p>அடுத்த பிரதமர் என விஜய்-ஐ தவெகவினர் முன்னிறுத்துவது குறித்து பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். </p><p>அதற்கு பதில் அளித்த <a href="https://www.dailythanthi.com/">தமிழிசை </a>கூறுகையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்கள் மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்துள்ளனர். அந்த வாய்ப்பை அவரும், அவரது கட்சியினரும் சரியாக பயன்படுத்த வேண்டும். மோடிக்கு இணையாக மற்றொரு பிரதமரை யாரும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது. மோடி 3 முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 12 ஆண்டுகள் மட்டுமல்ல 25 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் உள்ளார். அவர் நெடுங்கால அரசியல் வாழ்க்கையை பெற்றுள்ளார். </p><p>பிரதமர் மோடிக்கு இணையாக யாரையும் பேச முடியாது. விஜய் தற்போது தமிழக மக்களால் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த வேலையை அவர் முழுமையாகவும், சரியாகவும் செய்ய வேண்டும். பிரதமர் மோடிக்கு இணையாக யாரையும் பேச முடியாது. ஜனநாயகத்தில் அனைவருக்கும் பேச உரிமை உள்ளது. ஆனால், அதைப்போல் நடக்க  முடியாது. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.  </p> ]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalins-z-category-security-withdrawn</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalins-z-category-security-withdrawn#comments</comments><guid isPermaLink="false">15245904-88a9-4359-bc5d-9f55cbbbeca4</guid><pubDate>Sat, 29 Aug 2026 14:21:34 +0000</pubDate><atom:updated>2026-08-29T14:21:34.065Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,Security,TNPolice,ஸ்டாலின்,இசட் பாதுகாப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/q129hz8a/stalinone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/q129hz8a/stalinone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.</p><p>இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது மத்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த பாதுகாப்பு வகைகளில் ஒன்றாகும். உயிருக்கு மிகுந்த ஆபத்து உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.</p><p>முக்கியமாக நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மாநில முதல்-மந்திரிகள், முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.</p><h2>இசட் பிளஸ் பாதுகாப்பின் முக்கிய அம்சங்கள்</h2><p>ஒரு நாளைக்கு 36 பேர் கொண்ட பாதுகாப்பு குழு மூன்று வேளைகளில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் இதில் அடங்குவர்.</p><p>இந்த பாதுகாப்பு குழுவினருக்கு நவீன துப்பாக்கிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்கப்படும். இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது இசட் பாதுகாப்பை விட அதிகமான பாதுகாப்பு அளிக்கும் மிக உயர்நிலை பாதுகாப்பு முறையாகும்.</p><h2>இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்</h2><p>இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.  ஆட்சி மாறியதும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20">இசட் பிளஸ் பாதுகாப்பு </a>இசட் பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டிருந்தது.   இந்தநிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. </p><p>முன்னாள் முதல்-அமைச்சர்  பழனிசாமிக்கு வழங்கப்பட்ட அதே பாதுகாப்புதான் இனி ஸ்டாலினுக்கும் இனி ஒரு எஸ்ஐ தலைமையில் தமிழக போலீசார் 4 பேர் மட்டுமே பாதுகாப்பு அளிப்பர். </p><p>தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான மு.க.ஸ்டாலினின் பாதுகாப்புப் பிரிவு திடீரெனக் குறைக்கப்பட்டிருப்பது, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வருங்கால மனைவிக்கு திருமண பரிசாக நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கிய புது மாப்பிள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/groom-buys-one-acre-on-moon-for-future-wife</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/groom-buys-one-acre-on-moon-for-future-wife#comments</comments><guid isPermaLink="false">3a84c301-4969-4b66-a4d7-0c915acce86e</guid><pubDate>Sat, 29 Aug 2026 14:16:21 +0000</pubDate><atom:updated>2026-08-29T14:16:21.648Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மனைவி,நிலம்,land,Moon,wedding,நிலா,புது மாப்பிள்ளை,திருமண பரிசு,பரிசு gift</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2s6ghwch/moon.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ அசோக் சரவணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ வருங்கால மனைவிக்கு திருமண பரிசாக நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கிய புது மாப்பிள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2s6ghwch/moon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல், </p><p>நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர், நிஜமாகவே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE">நிலவில்</a> ஒரு ஏக்கர் நிலத்தைத் தனது வருங்கால மனைவிக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81">திருமண பரிசாக </a>வாங்கி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.</p><h2>கட்டிட பொறியாளர்</h2><p>நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக் சரவணன் (வயது 32). கட்டிடப் பொறியாளரான இவருக்கும், ராதிகா (என்ற வர்ஷினி) என்ற பெண்ணுக்கும் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந் தேதி திருமணம் நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தனது வருங்கால மனைவிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பரிசை வழங்க அசோக் சரவணன் திட்டமிட்டார். </p><h2>நிலவில் 1 ஏக்கர் நிலம்</h2><p>வழக்கமாக திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு தங்க நகைகள், சொகுசு கார்கள் அல்லது பட்டு புடவைகள் வழங்குவதுதான் வழக்கம். ஆனால், அசோக் சரவணன் இந்த வழக்கமான பாணியை முற்றிலுமாக தள்ளி வைத்தார். விண்வெளியில் உள்ள நிலவில் தனது காதல் மனைவிக்கு இடம் வாங்கி தர ஆசைப்பட்டார். இதற்காக, லண்டனில் வசித்து வரும் தனது சகோதரியின் உதவியை அவர் நாடினார். அவரது வழிகாட்டுதலின்படி, சர்வதேச நிலவு நிலப் பதிவேடு  இணையதளம் மூலம் ஆன்லைனில் தொடர்பு கொண்டு, நிலவில் வெற்றிகரமாக 1 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார்.</p><h2>மக்கள் பாராட்டு</h2><p>நிலா நிலத்திற்கான அதிகாரப்பூர்வ பத்திரப்பதிவு மற்றும் உரிமை சான்றிதழ்கள் லண்டனில் இருந்து அசோக் சரவணனின் கைக்கு வந்து சேர்ந்தன. இதனை தனது வருங்கால மனைவி ராதிகாவிடம் காண்பித்து அவர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த விபரத்தை அறிந்த உறவினர்களும், நாமகிரிப்பேட்டை பகுதி பொதுமக்களும், "இப்படியும் ஒரு காதலா!" என்று ஆச்சரியமடைந்து, புது மாப்பிள்ளையின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு தங்களின் மனமார்ந்த பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனைக்கு தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-sale-of-packet-milk-in-ooty-kodaikanal-madras-high-court-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-sale-of-packet-milk-in-ooty-kodaikanal-madras-high-court-orders#comments</comments><guid isPermaLink="false">60353524-c52f-43f8-91c8-c3ffb4349fa2</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:46:03 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:46:03.958Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,ஊட்டி,Ooty,கொடைக்கானல்,Kodaikanal,milk,பால்,Ban on sale,Madras High Court,விற்பனைக்கு தடை,பாக்கெட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2ny5cp47/37.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/2ny5cp47/37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தனியார் பால் நிறுவனங்களுக்கு பாக்கெட் பால் விற்பனைக்கு தடை விதித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">சென்னை ஐகோர்ட்டு</a> உத்தரவிட்டுள்ளது.</p><h2>பாக்கெட் பால் விற்பனைக்கு தடை</h2><p>சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாக்கெட் பால் விற்பனையைத் தவிர்த்து தானியங்கி பால் விற்பனை எந்திரங்களை பயன்படுத்துமாறு தனியார் பால் நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்துவது தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது. இதன் போது, பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்வதற்கு மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.</p><h2>தானியங்கி பால் விற்பனை எந்திரம்</h2><p>இதனைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனம் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை அடிப்படையில் தானியங்கி பால் விற்பனை எந்திரங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொடைக்கானலில் தானியங்கி எந்திரங்கள் மூலம் முதல் இரண்டு நாட்களில் 40 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஊட்டியில் வெறும் 6 லிட்டர் மட்டுமே விற்பனையானதாகவும் தெரிவிக்கப்பட்டது. </p><h2>போதிய விழிப்புணர்வு</h2><p>இந்த விவரங்களை கவனித்த நீதிபதிகள், தானியங்கி பால் விற்பனை முறை குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், தானியங்கி பால் விற்பனை எந்திரங்கள் குறித்து விரிவான விளம்பரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவை பயன்பாட்டுக்கு வந்துள்ள பகுதிகளில் பாக்கெட் பால் விற்பனையை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.</p><p>ஆவின் நிறுவனத்தைப் போலவே, தனியார் பால் நிறுவனங்களும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் தங்களது சொந்த தானியங்கி பால் விற்பனை எந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: கண்காணிப்பு அலுவலர்களுடன் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-northeast-monsoon-review-gagandeep-singh-bedi-holds-coordination-meeting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-northeast-monsoon-review-gagandeep-singh-bedi-holds-coordination-meeting#comments</comments><guid isPermaLink="false">21f23b17-1c91-4804-9eb3-a780a5135435</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:15:51.485Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,வடகிழக்கு பருமழை,முன்னெச்சரிக்கை,monitoring,Consultation,ஆலோசனை,Gagandeep Singh Bedi,ககன்தீப் சிங் பேடி,கண்காணிப்பு</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/8n8fxw2l/badi.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: கண்காணிப்பு அலுவலர்களுடன் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/8n8fxw2l/badi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF">ககன்தீப் சிங் பேடி</a>, தலைமையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.</p><h2>மீட்பு நடவடிக்கை</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சியில்</a> வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மண்டல அளவில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலரர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள். </p> <h2>ஆலோசனைக்கூட்டம்</h2><p>இதனைத் தொடர்ந்து, இன்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆஷிஷ் சட்டர்ஜி,  மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், கண்காணிப்பு அலுவலர்கள், மாநகராட்சி இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, இரயில்வே, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, காவல் துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட தொடர்புடைய சேவைத் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p> <p>இக்கூட்டத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பேசும்போது தெரிவித்ததாவது:-</p><h2>நடவடிக்கை</h2><p> சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள நீர்வழிக்கால்வாய்கள், ஆறுகள், நீர்நிலைகள், மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் தூர்வாரும் பணிகளையும், மேம்பாட்டு பணிகளையும் கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து செப்டம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>மோட்டார் பம்புகள்</h2><p>ஒவ்வொரு மண்டலத்திலும் மழைநீர் தேங்க கூடிய தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுவதற்கு தேவையான மோட்டார் பம்புகள் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத பகுதிகளில் இணைப்பினை உருவாக்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கால்வாய்கள் மற்றும் ஆறுகள் சேரும் இடங்களிலும், முகத்துவாரத்திலும் மழை வெள்ளம் நீர் தங்குதடையின்றி செல்கின்ற வகையில் அடைப்பினை நீக்கிட வேண்டும்.</p><h2>முன்னெச்சரிக்கை பணிகள்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகாலில் தூர்வாருதல், வார்டு வாரியாக முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளுதல், சாலை சீரமைப்புப் பணிகள், தேவையான மோட்டார் பம்புகள், மோட்டார் பம்புகள் பழுது பார்த்தல், மழைக்கால பணிக்காக வார்டு ஒன்றிற்கு 5 பணியாளர்கள் வீதம் 1000 பணியாளர்கள் நியமித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>215 வெள்ள நிவாரண மையங்கள்</h2><p>சென்னை மாநகராட்சியில் 36 படகுகளும், மீனவளத்துறையின் சார்பில் மினவர்களிடமிருந்து 275 படகுகளும் இதனை இயக்குவதற்கான நபர்கள் தயார் நிலையில் உள்ளதையும் உறுதி செய்திட வேண்டும். வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, 215 வெள்ள நிவாரண மையங்கள் மற்றும் 111 சமையல் கூடங்களை ஆய்வு செய்து, தேவையான வசதிகளை மேற்கொண்டு ஆயத்த நிலையில் வைத்திட வேண்டும்.</p><h2>வண்டல்கள் அகற்றும் பணி</h2><p>சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1671 கீ.மி. நீளத்தில் மழைநீர் வடிகாலில் இருந்து வண்டல்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 1,10,082 வண்டல் வடிகட்டி தொட்டிகளில் மழைநீர் சீராக செல்லும் வகையில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2> தயார் நிலை</h2><p>வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள், இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், மர அறுவை இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><h2>20 இடங்களில் நீர் தேக்கத்தொட்டி</h2><p>சென்னை மாநகராட்சி பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்ட 207 பகுதிகளில் 117 இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன. 20 இடங்களில் நீர் தேக்கத்தொட்டி அமைத்து, நீர் வெளியேற்றும் மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. 48 இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மீதமுள்ள பகுதிகளில் இதர நடவடிக்கைகள் மூலம் மழைநீரை வெளியேற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p> <h2>தன்னார்வலர்கள் பதிவு செயலி</h2><p> சென்னை மாநகராட்சியில் மழைக்காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் 1000த்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 721 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், செப்டம்பர் முதல் வாரத்தில் மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செயலி  பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இதில் பதிவு செய்யும் தன்னார்வலர்கள் மழைக்காலவ நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.</p><h2>1913 தொலைபேசி</h2><p>ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் 1913 தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக வரப்பெறும் புகார்களின் மீது உடனக்குடன் நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.</p><h2>36 டீசல் ஜெனரேட்டர்கள்</h2><p> சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 115 எண்ணிக்கையிலான விடுப்பட்ட இணைப்புகள் உள்ளன. இதில் 42 எண்ணிக்கையிலான மழைநீர் வடிகால் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு மழைக்காலத்திற்கு முன்பு முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிடும் வகையில் பம்ப் அறைகளில் ஏற்கனவே 132 பம்புகளும் 36 டீசல் ஜெனரேட்டர்களும் உள்ளன.</p><h2>ரெயில்வே மதகுகள்</h2><p>சென்னை மாநகராட்சியில் 28 எண்ணிக்கையிலான ரெயில்வே மதகுகள் உள்ளன. இதில் 3 ரெயில்வே மதகுகளில் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து, மீதமுள்ள ரெயில்வே மதகுகளில் மழைக்காலத்திற்கு முன்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும். மேலும், இப்பணிகளை கண்காணிப்பதற்காக இரயில்வே துறையின் சார்பில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு இதுவரை 50625 எண்ணிக்கையிலான மரங்களின் கிளைகள் கத்தரிக்கப்பட்டுள்ளது.</p><h2>மின் கசிவு</h2><p>நீர்வளத்துறை சார்பில் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மின் சாரத் துறையில் மின் இணைப்புபெட்டிகளை தரையில் இருந்து உயர்த்தி வைப்பதோடு, மின்சார கேபிள்கள் வெளியில் தெரியாத வகையிலும், மின்கசிவு இல்லாமலும் தரையின் அடியில் செல்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மின் கசிவு காரணமாக எந்த ஒரு உயிர் இழப்பும் ஏற்படுவதை தவிர்த்திட வேண்டும்.</p><h2>செப்டம்பர் மாதம்</h2><p>சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அலுவலர்கள் கண்காணித்து விரைந்து மேற்கொள்ள வேண்டும். நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சாரத் துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ரெயில்வே துறை உள்ளிட்ட சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 1 முதல் 15 வரையிலான மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள்</p><p><strong>வ.எண் மண்டலம் கண்காணிப்பு அலுவலர்களின் பெயர்</strong></p><p>1. திருவொற்றியூர் கே.பாலசுப்பிரமணியம், இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை</p><p>2. மணலி பி.குமரவேல் பாண்டியன், உறுப்பினர்/செயலர், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு</p><p>3. மாதவரம் எஸ்.அருண்ராஜ், கூடுதல் இயக்குநர், சர்க்கரை இயக்ககம்</p><p>4. தண்டையார்பேட்டைஆர்.கண்ணன்,  சர்க்கரைத் துறை ஆணையர்</p><p>5. இராயபுரம் ஆஷா அஜித், இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்</p> <p>6. திரு.வி.க. நகர் பி.கணேசன், மேலாண்மை இயக்குநர், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம்</p><p>7. அம்பத்தூர் கே.விவேகானந்தன், அரசு சிறப்புச் செயலாளர், தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறை</p><p>8. அண்ணாநகர் பி.காயத்ரி கிருஷ்ணன், இயக்குநர், சமூக பாதுகாப்பு திட்டங்கள்</p><p>9. தேனாம்பேட்டை டி.கிறிஸ்துராஜ், இயக்குநர், நில அளவை மற்றும் நில வரித் திட்டம்</p><p>10. கோடம்பாக்கம் எஸ்.கோபால சுந்தர ராஜ், கூடுதல் ஆணையர், நில நிர்வாக ஆணையரகம்</p> <p>11. வளசரவாக்கம் ஜெ.விஜய ராணி, இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை</p><p>12. ஆலந்தூர் வாகே சங்கேத் பல்வந்த், நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்</p><p>13. அடையாறுகே.செந்தில் ராஜ்,  இயக்குநர் ஆதி திராவிடர் நலன்</p><p>14. பெருங்குடி மகேஷ்வரி ரவிகுமார், கலை பண்பாட்டுத் துறைத்துறை இயக்குநர்</p><p>15. சோழிங்கநல்லூர் டி.பாஸ்கர பாண்டியன்,  அருங்காட்சியக இயக்குநர்</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-annual-festival-of-the-holy-mother-of-health-cathedral-velankanni-began-with-the-hoisting-of-the-flag</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-annual-festival-of-the-holy-mother-of-health-cathedral-velankanni-began-with-the-hoisting-of-the-flag#comments</comments><guid isPermaLink="false">624a6501-3193-4892-98b9-e2c94896ebfd</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:02:59 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:02:59.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆன்மிகம்,திருவிழா,Flag hoisting,Velankanni Matha Temple,வேளாங்கண்ணி மாதா பேராலயம்,கொடியேற்றத்துடன் தொடங்கியது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/0y1qr49d/annai33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-29/0y1qr49d/annai33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>வேளாங்கண்ணி,</p><p>வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது.</p><h2>கொடியேற்றம்</h2><p>நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. 'கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-flagging">கொடியேற்றத்துடன் </a>தொடங்கியது. முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடி ஏற்றினார். தொடர்ந்து, திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் ஆகியவை நடைபெறுகிறது.</p><h2>சிலுவைப்பாதை ஊர்வலம்</h2><p>தொடர்ந்து, நாளை (30-ந்தேதி) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது. இதனிடையே வருகிற 1-ந்தேதி சிலுவைப்பாதை ஊர்வலம் நடக்கிறது.</p><h2>பெரிய தேர்பவனி</h2><p>விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. தேர்பவனியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, 8-ந்தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்று காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு. கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவடைகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>