<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 31 Aug 2026 06:07:16 +0000</lastBuildDate><item><title>சட்டசபையில் எதிர்க்கட்சியினர் வரிசையில்  காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்டிற்கு  இடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-mla-tharakai-kathbert-allotted-a-seat-in-the-opposition-benches-of-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-mla-tharakai-kathbert-allotted-a-seat-in-the-opposition-benches-of-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">831792fb-8a26-480d-98e1-e8afd340c385</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:04:31 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:04:31.146Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,சட்டசபை,எதிர்க்கட்சி,தாரகை கத்பர்ட்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/hcssoamf/Tharagai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாரகை கத்பர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/hcssoamf/Tharagai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தமிழக சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் திடீரென எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் எனவும் இல்லையென்றால் அமைச்சர் பதவியில் இருந்தும் விலக தயார் என்று காங்கிரஸ் அமச்சர் ராஜேஷ்குமார் நேற்று பேசியிருந்த நிலையில் தாரகை கத்பர்ட் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது சிறிது நேரம் பரபரப்பை கிளப்பியது.</p><h2>சட்டமன்றக்குழு தலைவர்</h2><p>எனினும், சட்டமன்றக்குழு தலைவராக தாரகை கத்பர்ட் அங்கீகரிக்கப்பட்ட நிலையில்,  அவருக்கான இடம் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக சட்டமன்றக்குழு தலைவராக உள்ள சவுமியா அன்புமணி அருகில் தாரகை கத்பர்ட் அமைர்ந்துள்ளார். <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தாரகை கத்பர்ட்</a>டிற்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய திமுக கொறடா எ.வ.வேலு, தங்கள் பக்கம் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். </p>  <h2>சபாநாயகர் விளக்கம்</h2><p>தமிமுன் அன்சாரி, ஜவஹிருல்லா ஆகியோருக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று எ.வ. வேலு கோரிய நிலையில், அது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">ஜேசிடி பிரபாகர் </a>கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் அரிசிபாளையத்தில் தண்ணீர் தொட்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் சடலம் மீட்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mutilated-body-of-a-woman-recovered-from-a-water-tank-in-salems-arisipalayam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mutilated-body-of-a-woman-recovered-from-a-water-tank-in-salems-arisipalayam#comments</comments><guid isPermaLink="false">b462686e-5c88-4be7-b110-71b2446ef1e2</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:59:53 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:59:53.566Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>murder,சேலம்,மீட்பு,police enquiry,body recovered,பெண் சடலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/vhva82jt/000.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தண்ணீர் தொட்டியில் போலீசார் ஆய்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ துண்டு துண்டாக பெண்சடலம் மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/vhva82jt/000.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாநகரப் பகுதியான அரிசிபாளையத்தில், பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு, தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்டார்.</p><h2>துர்நாற்றத்தால் அம்பலமான கொடூரம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சேலம் மாவட்டம்</a> அரிசிபாளையம், மெயின் ரோடு பகுதியில் பூசாரி ஒருவரின் வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியிலிருந்து கடந்த சில நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், இன்று (திங்கட்கிழமை) தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதற்குள் ஒரு மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><h2>மூட்டையில் இருந்த உடல் பாகங்கள்</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் மாநகர போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், தண்ணீர் தொட்டிக்குள் இருந்த மூட்டையை வெளியே எடுத்தனர். அந்த மூட்டையைப் பிரித்து சோதித்தபோது, அதற்குள் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் இருந்தன. </p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>கொலை செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்பதால் சடலம் முற்றிலும் சிதைந்த நிலையில் இருந்தது. போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">சடலத்தை மீட்டு</a>, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூர கொலை தொடர்பாக சேலம் மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது குறித்தும், கடந்த சில நாட்களில் சேலம் மாவட்டத்தில் மாயமான பெண்களின் பட்டியல் குறித்தும் முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">கொலையாளி</a> யார்? என்பதை அறிய அந்த வீட்டின் மாடிக்கு வந்து சென்றவர்கள் யார், அங்கு தங்கியிருந்தவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணிகளும் தீவிரமாக தொடங்கப்பட்டன. </p><p>அரிசிபாளையத்தின் குடியிருப்புப் பகுதியில், பெண்ணை மிகக் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் சேலம் மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-school-student-dies-after-accidentally-falling-into-a-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-school-student-dies-after-accidentally-falling-into-a-well#comments</comments><guid isPermaLink="false">e91ce310-9ad9-4a35-87e0-c5a8429c1979</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:56:04 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:56:04.317Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,கள்ளக்குறிச்சி,well,கிணறு,police enquiry,மாணவன் பலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/5krf1sll/000000.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆழமான கிணறு]]></media:title><media:description type="html"><![CDATA[ கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/5krf1sll/000000.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கள்ளக்குறிச்சி மாவட்டம்</a> உளுந்தூர்ப்பேட்டை அருகே கிணற்றை எட்டிப் பார்த்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி உள்ளே விழுந்த 15 வயது மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>பெற்றோரை பார்க்க சென்றபோது சோகம்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D"> மாணவர் சஞ்சய் </a>(வயது 15). அந்த மாணவனின் பெற்றோர், அங்குள்ள ஒரு பகுதியில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். </p><p>இந்த நிலையில் சஞ்சய் தனது பெற்றோர் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆழமான கிணறு ஒன்றை அவர் ஆர்வம் காரணமாக எட்டிப் பார்த்துள்ளார்.</p><h2>தண்ணீரில் மூழ்கி மரணம்</h2><p>எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய சஞ்சய், ஆழமான அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தண்ணீரில் மூழ்கிய அவரை மீட்டெடுக்க அங்கிருந்தவர்கள் உடனடியாக முயற்சித்தனர். எனினும், கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அவர் சடலமாகவே மீட்கப்பட்டார். இந்த விபத்து அவரது பெற்றோர் மற்றும் புகைப்பட்டி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை பாஜகவால் ஒருபோதும் ஒடுக்க முடியாது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-can-never-crush-struggle-against-caste-discrimination-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-can-never-crush-struggle-against-caste-discrimination-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">e7b72168-a231-455e-9684-c5f1342be208</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:50:37 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:50:37.419Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,சாதியப் பாகுபாடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ol2x0aag/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ol2x0aag/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை பாஜகவால் ஒருபோதும் ஒடுக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை மற்றும் சாதியப் பாகுபாட்டுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடர்பான சம்பவத்தில், ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்திருப்பது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் ஆழமாக வேரூன்றியுள்ள மனுவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது.</p><p>பா.ஜ.க.வின் செய்தி தெளிவாக உள்ளது: சாதியப் பாகுபாட்டைக் கேள்வி கேட்பவர்கள் குறிவைக்கப்படுவார்கள்; அதைத் தொடர்ந்து பாதுகாப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.</p><p>தீண்டாமைக்கும் சமூகப் பாகுபாட்டிற்கும் எதிராக காங்கிரஸ் எப்போதும் போராடி வந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 17-வது பிரிவின் மூலம் தீண்டாமையை ஒழித்ததும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க SC-ST (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தை கொண்டுவந்ததும் சமூக நீதிக்கான போராட்டத்தில் காங்கிரசின் வரலாற்றுச் சாதனைகள்.</p><p>ஆனால், தீண்டாமையை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ். நடத்திய இயக்கம் எங்கே? சாதிய ஏற்றத்தாழ்வையும் மனுவாத சமூக அமைப்பையும் தகர்க்க பா.ஜ.க. செய்த வரலாற்றுச் சாதனை என்ன? சமூகப் பாகுபாட்டை எதிர்கொள்வதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கி, அநீதிக்கு எதிராக எழுப்பப்படும் குரலையே குற்றமாக்க பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.</p><p>இது வெறும் அரசியல் ஆணவம் அல்ல. சமத்துவம், கண்ணியம் மற்றும் சமூக நீதியை வலியுறுத்திய அம்பேத்கரின் அரசியலமைப்புச் சிந்தனையின் மீதான நேரடியான தாக்குதல். FIR-கள் மூலம் ராகுல் காந்தியின் குரலை ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஒடுக்க முயற்சி செய்யலாம். ஆனால், சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை அவர்களால் ஒருபோதும் ஒடுக்க முடியாது.</p><p>மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் ஒட்டுமொத்த காங்கிரஸ் பேரியக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உறுதியாக நிற்கும். தீண்டாமையை எதிர்த்துப் போராடும். மனுவாத சிந்தனையைப் பாதுகாக்கும் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்து தொடர்ந்து போராடும்.</p><p>அரசியலமைப்பைக் காப்போம். சமூக நீதியைக் காப்போம். சாதியப் பாகுபாட்டை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘ரேஷனில் கை வைக்கலாம் என்று நினைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும்’ - பெ.சண்முகம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-you-think-you-can-tamper-with-the-ration-system-your-story-is-over-p-shanmugam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-you-think-you-can-tamper-with-the-ration-system-your-story-is-over-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">d23bb55d-7075-4c0e-ad79-310b318c284f</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:47:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:47:34.617Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெ.சண்முகம்,ரேஷன்,ration rice,P.Shanmugam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/35wfawyt/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/35wfawyt/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“சட்டமன்றத்தில் ஒரு அமைச்சர், ரேஷன் அரிசியில் மக்கள் சோறாக்கி சாப்பிடுவது இல்லை என்றும், ஆடு, மாடு, கோழிக்குதான் போடுகிறார்கள் என்றும் கூறுகிறார். மற்றொரு அமைச்சர், ரேஷன் அரிசியை மக்கள் இட்லி, தோசைக்கு மாவு அரைத்துதான் சாப்பிடுகிறார்கள் என்று சொல்கிறார். இட்லி, தோசை எல்லாம் உணவு கணக்கில் வராதா?</p><p>சாப்பிடும் வகையில் இருந்தால் மக்கள் சாப்பிட மாட்டார்களா? இதில் என்ன பெருமை இருக்கிறது உங்களுக்கு? மக்கள் சாப்பிடும் வகையிலான அரிசியாக இருந்தால் கட்டாயம் சாப்பிடுவார்கள். இந்த மாதிரி காரணங்களை சொல்லி, ரேஷன் கடைகளில் இனிமேல் அரிசி போட வேண்டாம் என்ற முடிவை நோக்கி போய்விடுவார்களோ என்று எனக்கு பதற்றமாக இருக்கிறது. </p><p>ரேஷன் கடைகளில் ஒரு கார்டுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கான குடும்பங்கள் அதை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனித்து வாழக்கூடிய ஏராளமான பெண்கள், தனித்து வாழக்கூடிய முதியவர்கள் பலர் அதை நம்பி வாழ்கிறார்கள். அந்த அரிசிதான் அவர்களின் உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. </p><p>இதெல்லாம் அமைச்சர்களுக்கு தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை. அமைச்சர்கள் ஓட்டு கேட்டு சென்றதுபோல், ரேஷன் கடைகளில் யார் அரிசி வாங்குகிறார்கள்? அதை வைத்து என்ன செய்கிறார்கள்? என்பதை வீடு வீடாக சென்று கொஞ்சம் கேட்டாள் மக்கள் சொல்வார்கள். சட்டசபையில் உட்காந்து சொல்வதை விட, தெருக்களில் வந்து மக்களிடம் கேட்டுவிட்டு பிறகு சட்டசபையில் போய் பேசினால் சிறப்பாக இருக்கும். எனவே, தப்பி தவறி கூட ரேஷனில் கை வைக்கலாம் என்று நினைக்க வேண்டாம். ரேஷனில் கை வைத்தால் உங்கள் கதை முடிந்துவிடும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மீன்பிடி தொழிலாளி போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-5-year-old-girl-sexually-assaulted-fisherman-arrested-under-pocso</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-5-year-old-girl-sexually-assaulted-fisherman-arrested-under-pocso#comments</comments><guid isPermaLink="false">2e0eda83-6334-4b6c-94e6-274f7c676ccf</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:42:35 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:42:35.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,police,Kanyakumari,போக்சோ,POCSO,5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/dvgt1pop/2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்சோவில் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/dvgt1pop/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மீன்பிடி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.</p><h2>பாலியல் தொல்லை</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள கொல்லங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெல்சன் (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டிற்கு விளையாட வந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.</p><h2>போக்சோவில் கைது</h2><p>இது குறித்து சிறுமியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் <a href="https://www.dailythanthi.com/topic/போலீஸ்">போலீஸ்</a> நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார், ஜெல்சனை விசாரணை செய்த போது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B"> போக்சோ </a>சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs3-per-litre-cm-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/milk-procurement-price-hiked-by-rs3-per-litre-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">42603c59-b6d0-44ee-a1a0-cc31fd06b977</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:33:40 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:33:40.872Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,milk price,பால் கொள்முதல் விலை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tzybxg0c/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/tzybxg0c/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.</p><p>கறவை மாடுகளுக்கான இதர இடுபொருட்களின் விலை உயர்வால், பால் கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி, ரூ.44 ஆக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.</p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலை ரூ.38-ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் 3.15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.வில் இருந்து விலகல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-minister-thoppu-venkatachalam-quits-dmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-minister-thoppu-venkatachalam-quits-dmk#comments</comments><guid isPermaLink="false">82d70c2c-1ac2-4d2d-9175-3ae926df2fd7</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:29:11 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:29:11.097Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,தி.மு.க.,Ex-Minister,தோப்பு வெங்கடாசலம்,Venkatachalam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8ty8vfkt/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/8ty8vfkt/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-</p><p>“தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கங்கள். கழகத்தில் என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கினீர்கள். அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகளை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஆனால் நான் மாவட்ட கழக செயலாளராக செயல்படுவதற்கும் சட்டமன்ற தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிற காரணத்தால் இனிமேலும் என்னால் கழகத்தில் பயணிக்க என் மனம் இடம் கொடுக்காத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்பதை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டு:  தவெக எம்.எல்.ஏவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jallikattu-tvk-mlas-remarks-expunged-from-the-house-records</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jallikattu-tvk-mlas-remarks-expunged-from-the-house-records#comments</comments><guid isPermaLink="false">7e19550a-056a-40bd-95ec-bf31f71d1c97</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:17:22 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:17:22.696Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,ஜல்லிக்கட்டு,Jallikkatu,தவெக எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ml6jxtgk/javahirulla.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/ml6jxtgk/javahirulla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்​டப்​பேர​வை​யில் கடந்த வியாழக்கிழமை சோழ​வந்​தான் தவெக எம்​எல்ஏ கருப்​பை​யா,  ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசிய கருத்து சர்ச்​சைக்​குள்​ளாகி​யுள்​ளது. இதற்கு அதி​முக, அமமுக உள்பட பல்​வேறு கட்சி தலைவர்கள் கண்​டனம் தெரி​வித்​து இருந்தனர். எம்.எல்.ஏவின் பேச்சை கண்டித்து அதிமுக வரும் 3 ஆம் தேதி ஆர்ப்பாட்டமும் அறிவித்துள்ளது. </p><p>இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ கருப்பையாவின் ஜல்லிக்கட்டு தொடர்பான கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். முன்னதாக, தனது பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், வருத்தம் தெரிவித்த தவெக எம்.எல்.ஏ கருப்பையா ‘ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கலாசாரப்படி அரங்கம் அமைத்து நடத்துவது தமிழ் கலாசாரத்திற்கு முரணானது.</p><p>பொங்கல் விழாவின்போது அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து ஏறு தழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு மாணவர்கள் ஒழுங்காக செல்லாமல் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகதான் சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி இழிவாகக்கூறவில்லை. மாணவ பருவத்தினரை மனதில் வைத்து கொண்டு, அவர்கள் படித்து பட்டம் பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக அப் படி கூறினேன். இதில் இளைய சமுதாயத்தினரின் மனது புண்படும்படி யாக பேசி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்று கூறியிருந்தார். </p> ]]></content:encoded></item><item><title>தங்கம் விலை மேலும் குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?</title><link>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-further-whats-todays-rate</link><comments>https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-further-whats-todays-rate#comments</comments><guid isPermaLink="false">474d1caf-d969-4c61-bc06-382b976f4d4d</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:56:02 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:56:02.143Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Gold Rate,தங்கம் விலை,வெள்ளி விலை,Silver rate,Gold Price,Silver Price,விலை நிலவரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/hdyt8eww/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/hdyt8eww/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தங்கம் (Gold Rate)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தங்கம் விலை கடந்த 6-ந்தேதியில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. 6-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து, கடந்த 24-ந்தேதி ரூ.1,20,240-க்கு விற்பனையானது. இப்படியாக விலை உயர்ந்து வந்த சூழலில், அதன் பின்னர் சற்று குறையத் தொடங்கியது.</p><p>நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.</p><p>அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.135 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ள நிலையில்  நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/with-the-mettur-dam-set-to-open-tomorrow-water-inflow-has-increased-to-10485-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/with-the-mettur-dam-set-to-open-tomorrow-water-inflow-has-increased-to-10485-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">e4f00f52-79d2-4158-94be-94caddee8256</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:51:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:51:34.342Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,Salem,சேலம்,கனஅடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/71biav2j/mettur-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/71biav2j/mettur-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. இதனால் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறிப் பிட்ட நாளான ஜூன் 12ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே, கர்நா டக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு பரவலாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.</p><h2>நாளை அணை திறப்பு</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90.47 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 35 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினா டிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத் திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சர் விஜய் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.</p><h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் வரும் வழிநெடுகிலும் சாலை யின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது முதல்-அமைச்சர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அவர் செல்லும் வழியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அணை யின் வலதுகரையில் விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.</p><h2>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வ ரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை  இன்று 16-வது நாளாக நீடித்தது.</p>]]></content:encoded></item><item><title>
நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து பணம்-நகை திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cash-and-jewelry-stolen-after-breaking-actors-car-window</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cash-and-jewelry-stolen-after-breaking-actors-car-window#comments</comments><guid isPermaLink="false">8cbe1fa7-2a31-4a1b-9853-88ad28ce0d25</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:29:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:29:55.227Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,திருட்டு,நகை திருட்டு,actor,நடிகர்,Theft,கார் கண்ணாடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/acwhou2h/4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ Image Credits: AI]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/acwhou2h/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் நகை திருடிய வழக்கில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜலாலுதீன் (49) என்பது தெரியவந்தது.</p><h2>கார் கண்ணாடியை உடைத்து திருட்டு</h2><p>சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேந்திரன் வருண் (வயது 33) நடிகர். 'வனமகன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொழிலதிபரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேசனின் தங்கை மகன் ஆவார். </p><p>இவர் தனது காரை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த கார் கண்ணாடியை உடைத்து. அதற்குள் இருந்த ரூ.85 ஆயிரம், தங்க சங்கிலி, தங்க காப்பு மற்றும் ஐபோன், விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார். </p><h2>கேமரா பதிவை வைத்து கைது</h2><p>இதுகுறித்து ஜெயேந்திரன் வருண் அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் இந்த திருட்டில் ஈடுபட்டது, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜலாலுதீன் (49) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.பிரபல கொள்ளையனாக வலம் வந்த இவர் மீது ஏற்கனவே நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரிடம் இருந்து திருட்டுப்பொருட்கள் மீட்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>விளையாடிக் கொண்டிருந்தபோது சோகம்... தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/toddler-dies-after-falling-into-water-bucket-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/toddler-dies-after-falling-into-water-bucket-chennai#comments</comments><guid isPermaLink="false">863678d5-4f6c-4994-ba3e-c7cba73b2bf4</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:03:38 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:03:38.511Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,குழந்தை உயிரிழப்பு,புழல்,Puzhal</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/j53cys3x/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/j53cys3x/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையை அடுத்த புழல் கண்ணப்பசாமி நகர் 24-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு யோகமாயா (1 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது.</p><p>நேற்று மாலை வீட்டில் உள்ள வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தை யோகமாயா விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சுமித்ரா, சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து குழந்தையைப் பார்க்க வந்தபோது, வாளியில் உள்ள தண்ணீரில் குழந்தை மூழ்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><p>உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை... வரதட்சணை கொடுமையா? - ஆர்.டி.ஓ. விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-suicide-near-chennai-dowry-harassment-suspected-rdo-probe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-suicide-near-chennai-dowry-harassment-suspected-rdo-probe#comments</comments><guid isPermaLink="false">12376d58-5aa8-4e2e-9231-b3b42dc2d91c</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:20:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:20:15.557Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தற்கொலை,வரதட்சணை கொடுமை,dowry case,கோவிலம்பாக்கம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/f6kpd5us/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/f6kpd5us/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கோவிலம்பாக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.</p><h2>பட்டதாரி ஆசிரியை</h2><p>சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பிள்ளையார் கோவில் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது 2-வது மகள் புவனேஸ்வரி (27 வயது). இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ்.சி., பி.எட். முடித்து, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.</p><p>கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணையைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கு புவனேஸ்வரியை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின்போது பெண்ணுக்கு 50 பவுன் நகைகளும், மாப்பிள்ளைக்கு 20 பவுன் நகைகளும், ரூ.15 லட்சம் மதிப்புள்ள காரும், வீட்டு உபயோகப் பொருட்களும் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.</p><h2>கூடுதல் வரதட்சணை</h2><p>ஆனாலும் திருமணத்துக்குப் பிறகு ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு புவனேஸ்வரியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் குழந்தையின் முதலாவது பிறந்தநாளையொட்டி புவனேஸ்வரியின் பெற்றோர், 1.25 பவுன் சங்கிலி மட்டும் அணிவித்துள்ளனர். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி தனது தந்தை வீட்டின் அருகே உள்ள கோவிலில் திருவிழா நடைபெறுவதால், புவனேஸ்வரி தந்தை வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். அப்போது அவரிடம் தொலைபேசியில் பேசிய ஜானகிராமன், "வீட்டுக்கு வர வேண்டாம். உன் தாய் வீட்டிலேயே இரு" என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி, இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>ஆர்.டி.ஓ. விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி புவனேஸ்வரியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.</p><p>இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளுக்குள் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால், வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கு கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கூட்டணி கட்சிகள் கடும் நெருக்கடி: ஆட்சியில் தொடர இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-pressure-on-alliance-parties-tvk-faces-the-compulsion-to-win-the-by-election-to-remain-in-power</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/severe-pressure-on-alliance-parties-tvk-faces-the-compulsion-to-win-the-by-election-to-remain-in-power#comments</comments><guid isPermaLink="false">5777d09f-d824-432d-9f85-2d8cbfbc49dd</guid><pubDate>Mon, 31 Aug 2026 02:47:10 +0000</pubDate><atom:updated>2026-08-31T02:47:10.663Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,Congress,த.வெ.க,இடைத்தேர்தல்,கூட்டணி கட்சிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/i0qk5i3p/P-Shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/i0qk5i3p/P-Shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>கூட்டணி ஆட்சி நடத்தும் த.வெ.க.</h2><p>தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான 118 தொகுதிகளில் வெற்றி கிடைக்கவில்லை. த.வெ.க.வுக்கு 107 இடங்களிலேயே வெற்றி கிடைத்த நிலையில், காங்கிரஸ் (5), இந்திய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கம்யூனிஸ்டு</a> கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) ஆகியவை இடம்பெற்றுள்ளன. </p><h2>கூட்டணி கட்சிகளால் குடைச்சல் </h2><p>தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்து 3 மாதங்களே கடந்துள்ள நிலையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் பல்வேறு வகையில் குடைச்சல் கொடுக்க தொடங்கியிருக்கின்றன. அதாவது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தலைமைச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, அரசின் கொள்கை முடிவுகளில், தங்களுடைய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க நெருக்கடி கொடுத்து வருகிறது. </p><p>தற்போது, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">காங்கிரஸ்</a> கட்சியும், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்றும் மிரட்டி வருகிறது. கூட்டணி கட்சிகள் இவ்வாறு நெருக்கடி கொடுத்து வருவது த.வெ.க. அரசுக்கு புதிய தலைவலியை  ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள், த.வெ.க. அரசு எப்போது கவிழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு த.வெ.க. அரசை கவலையடைய செய்துள்ளது. </p> <h2>இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் த.வெ.க. </h2><p>ஆட்சியில்  தொடர வேண்டும் என்றால், தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் த.வெ.க. அரசுக்கு ஏற்பட்டுள்ளது. கடைசியாக கரூர் தொகுதி காலியானதாக கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் மீது தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், குறிப்பிட்ட காலத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><p>மேற்கண்ட 5 தொகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இடைத்தேர்தல்</a> நடத்துவதற்கான தடை செப்டம்பர் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. என்றாலும், இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள த.வெ.க.,விரைவாக தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருகிறது. </p> <h2>முதல்-அமைச்சர் விஜய் பதில் மனு தாக்கல் </h2><p>அந்த வகையில், காலியாக உள்ள 7 தொகுதிகளில், 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை ஐகோர்ட்</a>டில் அவசரமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய 7 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்றால் மட்டுமே சட்டசபையில் அக்கட்சியின் பலம் 114 ஆக உயரும். இதுவும் பெரும்பான்மைக்கு (118) போதாது என்றாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), அ.ம.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு வந்த ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவுடன் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியும்.  எனவே, கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை சமாளிக்க, கட்டாயம் வெற்றி என்ற இலக்குடன் இடைத்தேர்தலை சந்திக்க த.வெ.க. தயாராகிவருகிறது. செப்டம்பர் 8-ந் தேதி அதற்கான விடையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பைக்கில் காதலி அமர்ந்திருந்தால் வாலிபருக்கு உற்சாகம் ஏற்படுவது இயல்புதான் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/its-natural-for-a-youth-to-feel-excited-when-his-girlfriend-sits-on-bike-madurai-high-court-judges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/its-natural-for-a-youth-to-feel-excited-when-his-girlfriend-sits-on-bike-madurai-high-court-judges#comments</comments><guid isPermaLink="false">b96fb925-2ec9-4d35-9f99-a3c16fc0529c</guid><pubDate>Mon, 31 Aug 2026 01:28:26 +0000</pubDate><atom:updated>2026-08-31T01:28:26.649Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,இழப்பீடு,Compensation,மதுரை ஐகோர்ட்டு,பைக் விபத்து,Madurai Highcourt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/it8m3ox9/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/it8m3ox9/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பைக்கின் பின் இருக்கையில் காதலி அமர்ந்திருந்தால் வாலிபருக்கு உற்சாகம் ஏற்படுவது இயல்புதான் என்று விபத்து வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>பைக் விபத்து</h2><p>தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கோபால் (19 வயது). இவர் கடந்த 10.5.2018 அன்று பைக்கில் வீரபாண்டி-வலையபட்டி சாலையில் சென்று கொண்டு இருந்தார். பைக்கின் பின் இருக்கையில் இளம்பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். திடீரென எதிரே வந்த வேனும், பைக்கும் மோதின. இதில் படுகாயம் அடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த இளம்பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது.</p><p>இதையடுத்து கோபாலின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவரது பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தேனி கோர்ட்டு, அவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கும்படி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக இன்சூரன்ஸ் நிறுவனம் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.</p><h2>இயல்பான உற்சாகம்</h2><p>அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் விசாரித்தனர். அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த விபத்துக்கு பைக்கை ஓட்டி வந்த கோபாலும் ஒரு காரணம். எனவே இழப்பீட்டுத்தொகையில் பாதியை குறைத்து இருக்க வேண்டும் என வாதாடினார்.</p><p>பின்னர் மனுதாரர்களின் வக்கீல் ஆஜராகி, நியாயமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு உள்ளது. அதில் தலையிடத் தேவையில்லை என்று வாதாடினார். விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-</p><p>இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது. பைக்கை ஓட்டிய 19 வயது இளைஞரின் பின் இருக்கையில் அவரது காதலி அமர்ந்திருந்தார். காதலி பின் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, எந்தவொரு டிரைவருக்கும் இயல்பாகவே உற்சாகம் ஏற்படும். வரைபடத்தை பார்த்தாலே, இது நேருக்குநேர் மோதிய விபத்து என்பது தெளிவாகிறது. வேன் சரியான பக்கத்தில்தான் வந்து கொண்டிருந்தது.</p><h2>விபத்துக்கு காரணம்</h2><p>பைக்தான் தவறான பக்கத்தில் (சாலையின் வலது புறத்தில்) சென்றுள்ளது. இது போக்குவரத்து விதிமீறலாகும். இறந்தவரின் கவனக்குறைவும் இந்த விபத்துக்கு காரணம் என நாங்கள் கருதுகிறோம். அவரது பங்கு 25 சதவீதம் என நிர்ணயிக்கிறோம். அதற்கேற்ப இன்சூரன்ஸ் தொகையை குறைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>2 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது: 4 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-reconvenes-today-after-a-two-day-break-debate-on-demands-for-grants-for-four-departments</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-reconvenes-today-after-a-two-day-break-debate-on-demands-for-grants-for-four-departments#comments</comments><guid isPermaLink="false">c613ac96-779b-4e8a-b088-a5723efac540</guid><pubDate>Mon, 31 Aug 2026 00:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-31T00:36:29.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,சட்டசபை,மானியக் கோரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/m21quz3o/Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-31/m21quz3o/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>32 துறைகளின் மானியக் கோரிக்கை முடிந்தது</h2><p>தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது  பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">பட்ஜெட்</a> மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.  இந்த நிலையில், 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 32 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.</p><h2>4 துறைகள் மீது விவாதம் </h2><p>இந்த நிலையில், கடந்த 2 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை </a>மீண்டும் கூடுகிறது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. </p><h2>முதல்-அமைச்சரின் துறை</h2><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சரான முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் ஆகியோர் பதில் அளித்து பேசுகிறார்கள். விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக, தங்களது துறை சார்ந்த அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர். </p>]]></content:encoded></item><item><title>அதிக ஆர்வம் கொண்ட அருணா.. ஒரு கட்டத்தில் முடியல...ஆந்திர பெண் கொலையில் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youths-sensational-confession-in-andhra-pradesh-womans-murder</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youths-sensational-confession-in-andhra-pradesh-womans-murder#comments</comments><guid isPermaLink="false">498c37d1-0f10-4ec0-aa86-e37c5428b07b</guid><pubDate>Sun, 30 Aug 2026 16:19:05 +0000</pubDate><atom:updated>2026-08-30T16:19:05.914Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,கைது,ஆந்திரா,வாலிபர் கைது,உல்லாசம்,arreste,ஆந்திரா பெண்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/de9o1o7v/arrest33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆந்திர பெண் கொலை]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/de9o1o7v/arrest33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ஆந்திரமாநிலம், நகரி அருகே உள்ள நின்றை சவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருணா (வயது 48). இவரது கணவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன், மகள் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.</p><h2>கொடூர கொலை</h2><p>அருணா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாமரைப் பாக்கம் அடுத்த வதட்டூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க வந்து இருந்தார்.</p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரியபாளயைம் அருகே உள்ள தொட்டா ரெட்டி குப்பம் வெள்ளக்குளம், வயல் வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றியும், தீயால் எரித்தும் சிதைக்கப்பட்டு இருந்தது.</p><p>இதுகுறித்து ஊத்துக் கோட்டைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கள்ளக் காதல் விவகாரத்தில் அருணா கொலை செய்யப் பட்டு இருப்பது தெரிந்தது.</p><p>இது தொடர்பாக தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை அருகே உள்ள வதட்டூர் கிராமத்தைச்சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான பாரதி ராஜா (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>செக்ஸ் தொல்லை</h2><p>அவரிடம் நடத்திய விசாரணையில் அருணா அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து அழைத்ததால் தீர்த்து கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-</p><p>அருணா வதட்டூரில் உள்ள தனது தாய்வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20">இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.</a></p><h2>அதிக ஆர்வம்</h2><p>அருணா இயற்கைக்கு மாறாக உல்லாசமாக இருக்க கூறுவார். இது எனக்கு பிடிக்கவில்லை. செக்சில் அதிக ஆர்வம் கொண்ட அருணா அடிக்கடி என்னை தனிமையில் இருக்க அழைப்பார்.</p><p>நான் சில நேரங்களில் மறுப்பு தெரிவித்தால் எனக்கு குழந்தைகள் இல்லையே..வரவேண்டியது தானே என்று கூறுவார்.</p><p>உல்லாசமாக இருக்கும் போது ரகசியமாக அருணா அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்தும் ரசிப்பார்.</p><p>இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது என்னை தனிமையில் சந்திக்க உடனடியாக புறப்பட்டு வருமாறு செல்போனில் அழைத்தார். நான் மறுப்பு தெரிவித்தபோது அவர் கடுமையாக பேசினார். </p><h2>தீர்த்துக்கட்ட முடிவு</h2><p>அருணாவின் செக்ஸ் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.</p><p>ஆசிட் ஊற்றினேன். இதையடுத்து அருணா விடம் உல்லாசமாக இருக்க லாம் என்று ஆசை வார்த்தை கூறி அவரை மோட்டார் சைக்கிளில் தொட்டாரெட்டி குப்பம் அழைத்து வந்தேன். பின்னர் அவரை கையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றேன்.</p><p>அருணா இறந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் சிக்காமல் இருப்பதற்காக அவர முகத் தில் ஆசிட் ஊற்றினேன். மேலும் கொண்டு வந்து இருந்த மோட்டார் சைக்கிள் ஆயிலை முகத்தில் ஊற்றி தீவைத்தேன்.</p><p>ஆனால் தீப்பற்றி எரியாததால் பயந்து போய் அங்கிருந்து தப்பி சென்று விட்டோன். ஆனால் போலீ சார் கைது செய்துவிட்டனர். இவ்வாறு பாரதிராஜா கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p><h2>கொலையாளி சிக்கியது எப்படி?</h2><p>அருணா கொலை செய் யப்பட்ட இடத்தில் அவரது செல்போன் கிடந்தது.அதில் கடைசியாக பேசி நபர்களின் விபரங்களை வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது பாரதிராஜா விடம் விசாரித்தபோதுதான் அவர்களது கள்ளக்காதல் வெளிச்சத்துக்கு வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின்போது அவர் அருணாவை கொலை செய்ததை கொண்டார். ஒப்புக்கைதான பாரதிராஜாவை போலீசார் ஊத்துக் கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: நடந்தது என்ன?  டிராவல்ஸ் உரிமையாளர் கூறும் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-what-happened-shocking-information-from-travel-owner</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-what-happened-shocking-information-from-travel-owner#comments</comments><guid isPermaLink="false">7f6edab1-ba0d-4fa6-a193-c39c691c43cd</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:35:06 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:35:06.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,Flood,flood affected,nepal flood,நேபாள வெள்ளம்,டிரவால்ஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/cq6mwqlo/travless33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிராவல்ஸ் உரிமையாளர் கூறும் அதிர்ச்சி தகவல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/cq6mwqlo/travless33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>குடியுரிமை மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான் என டிராவல்ஸ் உரிமையாளர் கூறியுள்ளார்.</p><p>சென்னை குரோம்பேட்டை ராதா நகர் ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனம் சார்பில் கடந்த 14ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து 49 பேர் நேபாளம் வழியாக சீன எல்லையில் உள்ள கைலாஷ் யாத்திரைக்குப்புறப்பட்டுச் சென்றனர்.</p><p>சுற்றுலா நிறுவன உரிமையாளரின் மகன் சத்ய நாராயணன் தலைமையில் சென்ற இந்த குழுவில் சிங்கப்பெருமாள் கோவில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் (28) என்ற வாலிபரும் சென்றுள்ளார். மேலும் குரோம்பேட்டை, பெரம்பூர், ஆழ்வார் பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை,</p><p>கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த பயணத்தில் இடம்பெற்றுள்ளனர். </p><p>சுமார் 14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றுமுன்தினம் சென்னை திரும்ப வேண்டிய நிலையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாள சீன எல்லை</a>ப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் நடைமுறைகளை மேற்கொண்டிருந்த போது எதிர் பாராதவிதமாக சக்திவாய்ந்த காட்டாற்று வெள்ளத்தால் அந்த குடியேற்ற அலுவலக கட்டிடமே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>இந்தநிலையில்,  நேபாளத்திற்கு சென்று வந்த சென்னை குரோம்பேட்டை டிராவல்ஸ் உரிமையாளர் மறவேள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>குடியுரிமை மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான். மலை மேல் ஓடியவர்கள் ஒரு சிலர் தப்பியிருக்கலாம். சீன பகுதிக்குள் ஓடியுள்ளனர். அந்த பகுதி முழுவதும் 6 அடி உயர சேற்றால் மூடப்பட்டுள்ளது. எங்கள் 3 குழுவும் இதில் சிக்கி உள்ளனர்.</p><p>வெள்ள பாதிப்பு குறித்து நேபாள அரசின் தகவல் மட்டுமே கிடைக்கிறது. சீன அரசு மூலம் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் குழுவினர் சீன பகுதிக்குள் சிக்கியுள்ளனர் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் கோர விபத்தில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு: ஜோதிமணி எம்.பி. வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-die-in-horrific-dindigul-accident-mp-jothimani-expresses-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-die-in-horrific-dindigul-accident-mp-jothimani-expresses-anguish#comments</comments><guid isPermaLink="false">728dbe7e-c38a-4fbb-8956-3d9604462030</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:34:50 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:34:50.701Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,காங்கிரஸ்,Congress,ஜோதிமணி,ஜோதிமணி எம்.பி.,Jothimani,jothimani mp</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/r0nntl6t/jothimani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/r0nntl6t/jothimani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>​விளையாடித் திரியும் வயதில், எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுப் பிள்ளைகளின் உயிர் இப்படி அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பதை எவராலும் அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>4 சிறுவர்கள் பலி</h2><p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த புத்தூர் கிராமத்தில், சாலையோரம் அமர்ந்திருந்த 4 சின்னஞ்சிறு பிள்ளைகள் மீது வாகனம் மோதி அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர் என்ற கோரச் செய்தி கேட்டு என் நெஞ்சம் பதைபதைக்கிறது.</p><p>என்ன சொல்லி அந்தப் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் வார்த்தைகளின்றித் தவிக்கிறேன்.</p><p>​விளையாடித் திரியும் வயதில், எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுப் பிள்ளைகளின் உயிர் இப்படி அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பதை எவராலும் அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியாது. தங்கள் உலகமாக நினைத்து வளர்த்த பிள்ளைகளை இழந்து, கதறித் துடிக்கும் அந்தக் குடும்பத்தினரின் கண்ணீருக்கு இந்த உலகத்தில் எந்த ஆறுதலும் ஈடாகாது.</p><p>இந்த ஈடுசெய்ய முடியாத பெருந்துயரத்தில் ஒரு சகோதரியாக அவர்களோடு நான் நிற்கிறேன்.</p><h2>மாபெரும் குற்றம்</h2><p>​இந்தக் கொடூர விபத்தை ஏற்படுத்திவிட்டு, வீதியில் உயிருக்குத் துடித்த குழந்தைகளைக் காப்பாற்ற முனையாமல், ஈவிரக்கமின்றித் தப்பியோடிய அந்த மனிதநேயமற்ற செயல் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். வடமதுரை காவல்துறை உடனடியாக விசாரணையை மேற்கொண்டு, அந்த வாகனத்தையும் குற்றவாளியையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.</p><p>​மேலும், படுகாயமடைந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மருத்துவமனையில் </a>உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வரும் நபருக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>அவர் விரைவில் முழுமையாக நலம்பெற்றுத் திரும்ப மனதாரப் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊட்டி அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி - மக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/midnight-bear-sighting-in-ooty-village-alarms-residents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/midnight-bear-sighting-in-ooty-village-alarms-residents#comments</comments><guid isPermaLink="false">1bf8dcb8-695e-41a1-8af7-0f57f18f5fc8</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:32:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:32:35.101Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊட்டி,Ooty,bear,குடியிருப்புகள்,மக்கள் அச்சம்,fear,Residential Area,கருப்பு கரடி</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/tnx6imn4/bearss.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[  கரடி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஊட்டி அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி - மக்கள் அச்சம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/tnx6imn4/bearss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி,</p><p>ஊட்டி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் கரடி ஒன்று ஜாலியாக உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மளமளவென பரவி வைரலாகி வருகிறது.</p><h2>வனவிலங்குகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டம் ஊட்டி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சமீபகாலமாக கரடி, காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விலங்குகள் அடர்ந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி, உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி விட்டது.</p><h2>பொதுமக்கள் அதிர்ச்சி</h2><p>இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள கோழிப்பண்ணை கிராமத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் பிரம்மாண்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF">கரடி</a> ஒன்று ஊடுருவியது. தெருக்களில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், அந்த கரடி அங்குமிங்கும் உலா வந்துள்ளது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்த்த பொதுமக்கள், ஊருக்குள் கரடி நிற்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.</p> <p>குப்பை தொட்டியில் வேட்டை</p><p>வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் வரும் கரடிகள், மீண்டும் காட்டுக்குள் செல்லாமல் ஊரை சுற்றியுள்ள புதர்களிலேயே பதுங்கி கொள்கின்றன. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை கிளறி, அதில் கொட்டப்படும் உணவு கழிவுகளை சாப்பிட்டு இவை பழகிவிட்டன.</p> <h2>மக்கள் கோரிக்கை</h2><p>தற்போது கோழிப்பண்ணை கிராமத்தில் கரடி உலா வந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு, ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வளசரவாக்கத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precautionary-works-intensifies-in-valasaravakkam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-precautionary-works-intensifies-in-valasaravakkam#comments</comments><guid isPermaLink="false">da89e785-073e-422c-817e-612a37b12529</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:29:20 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:29:20.554Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>work,வளசரவாக்கம்,Valasaravakkam,பணிகள் தீவிரம்,Monsoon Precautions,பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/fu2glmrd/48.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/fu2glmrd/48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மண்டல கண்காணிப்பு அலுவலர் முனைவர் ஜெ.விஜயா ராணி,  இன்று (30.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>வடகிழக்குப்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88"> பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை</a>யாக, வளசரவாக்கம் மண்டலத்தில், வார்டு 148ல் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் தடுப்புச் சுவர் கட்டும் பணி, ஆற்காடு சாலையில் மழைநீர் வடிகால் பணி,போரூர் சந்திப்பில் மழைநீர் வடிகால் பணி, மவுண்ட் பூந்தமல்லி சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் பணிகள் நடைபெறும் இடத்தில் மீண்டும் மழைநீர் வடிகால் கட்டுதல், நந்தம்பாக்கம் கால்வாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மண்டல கண்காணிப்பு அலுவலர் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் முனைவர் ஜெ.விஜயா ராணி,  பார்வையிட்டு, வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னதாக இப்பணிகளை முடித்திடவும், மோட்டார் பம்புகள், இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் கோர விபத்தில் 4 குழந்தைகள் பலி; தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindukkal-fatal-accident-4-children-dead-cm-vijay-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindukkal-fatal-accident-4-children-dead-cm-vijay-announcement#comments</comments><guid isPermaLink="false">4354e2c3-0692-4365-838b-e447088a5ea4</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:20:21 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:20:21.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,Relief,குழந்தைகள் பலி,நிவாரணம் அறிவிப்பு,கோர விபத்து,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,fatal accident</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ldp9kbyp/cmvijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ldp9kbyp/cmvijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி-புத்தூர் சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்</a> அறிவிப்பு. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>வருத்தமும், வேதனையுமடைந்தேன்</h2><p>திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் இன்று சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த புத்தூர் கிராமத்தை சேர்ந்த அஞ்சலையம்மாள் (வயது 60) க/பெ. பழனிச்சாமி, அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் யோகவர்ஷினி (வயது 11) த/பெ. நாகராஜ், அனன்யா (வயது 6) த/பெ. நாகராஜ், தனுஸ்ரீ (வயது 7) த/பெ. ஜெகதீஷ் மற்றும் போஸ்கிரண் (வயது 6) த/பெ. சின்னத்தம்பி ஆகியோர் மகேந்திரா தோஸ்த் வாகனம் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். </p><p>இவர்களில் நான்கு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.</p><h2>சிறப்பு சிகிச்சை</h2><p>இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலையம்மாள் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.</p><h2> நிவாரண நிதி</h2><p>இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பொது நிவாரண நிதியிலிருந்து</a> வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>வடமதுரை அருகே 4 குழந்தைகள் பலி: விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் சரண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-killed-near-vadamadurai-milk-van-driver-who-caused-the-accident-surrenders-to-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-killed-near-vadamadurai-milk-van-driver-who-caused-the-accident-surrenders-to-police#comments</comments><guid isPermaLink="false">86a2dced-d9f9-45c8-b08b-e4dcb77ced4a</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:14:31 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:14:31.905Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>driver,ஓட்டுநர்,குழந்தைகள் பலி,வடமதுரை,Surrender,சரண்,vadamadurai,children die</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/thnbkqgn/47.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/thnbkqgn/47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் சரணடைந்துள்ளார்.</p><p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லம்பட்டி பிரிவில் சாலையோரத்தில் தனுஸ்ரீ(5), யோக வர்ஷி(11). அனன்யா(6) மற்றும் மோசிகீரன்(6) ஆகியோர் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தனர். </p><h2>சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு</h2><p>அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வேன் ஒன்று, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த  சிறுவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதில் 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><h2>போலீசில் சரண்</h2><p>இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D">சரணடைந்தார்</a>.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் ஏற்காவிட்டால், தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் - காங்கிரஸ் பகிரங்க அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-rahul-does-not-accept-the-pm-candidate-we-will-resign-from-the-tdp-cabinet-congress-makes-a-public-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-rahul-does-not-accept-the-pm-candidate-we-will-resign-from-the-tdp-cabinet-congress-makes-a-public-statement#comments</comments><guid isPermaLink="false">ad4045ca-0c76-4928-9825-554b14c0709b</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:08:53 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:08:53.529Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,காங்கிரஸ்,RahulGandhi,Congress Alliance,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/al65rel0/vijayone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக அமைச்சரவை]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் பகிரங்க அறிவிப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/al65rel0/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஏற்காவிட்டால் தவெக அமைச்சராஇயில் இருந்து விலகுவோம் என   தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>2029 மக்களவை தேர்தல்</h2><p>'வரும் 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலில், தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், 40 தொகுதிகளில், த.வெ.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.</p><p>'தெலுங்கானாவில் கவிதா, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, உபி.,யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அணிகளுக்கு, 50 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இப்படி மொத்தம், 130 எம்.பி.,க்கள் அணியை உருவாக்கி, அதற்கு விஜய் தலைமை வகிப்பார். காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் பிரதமராவார் என முதல்-அமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் கணித்துள்ளார்.</p><h2>விஜய் பிரதமர் </h2><p>அவரது கணிப்பு தகவல்களை, த.வெ.க.,வுக்கு ஆதரவாக செயல்படுகிற, 'வெற்றி டிவி' நிர்வாக இயக்குநர் சிங்காரவேலன் வெளியிட்டுள்ளார். தமிழக அரசியலில் இருந்து, தேசிய அரசியலுக்கு விஜயின் பயணம் விரிவடையுமா என்ற விவாதத்தை, ஜோதிடரின் கணிப்பு உருவாக்கி, காங்கிரசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதனிடையே இன்றைய முதல்-அமைச்சர் விஜய், நாளைய பிரதமர்' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள், துாத்துக்குடி மாவட்ட த.வெ.க.,வினரால் ஒட்டப்பட்டு உள்ளன. அதற்கு பதிலடியாக, 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என, சமூக வலைதளங்களில் காங்கிரசார் தங்களது எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><h2>அமைச்சரவையில் இருந்தே வெளியேறுவோம்</h2><p>இந்தநிலையில், குமரியில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்,</p><p>"2029  நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"> ராகுல்காந்தி</a> தான். ஒருவேளை தமிழக வெற்றிக்கழகம் அதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம் என்றார்.</p><p> ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேசி உள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு ரெயில் சேவைகள் நீட்டிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-14-special-train-services-to-southern-districts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-14-special-train-services-to-southern-districts#comments</comments><guid isPermaLink="false">2b4416bc-1255-432c-9f9b-87e00733386e</guid><pubDate>Sun, 30 Aug 2026 14:39:59 +0000</pubDate><atom:updated>2026-08-30T14:39:59.246Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சிறப்பு ரெயில்,Special trains,தெற்கு ரெயில்வே,Southern Railway,Special train,சிறப்பு ரெயில்கள்,சிறப்பு ரெயில் இயக்கம்,சிறப்பு ரெயில் சேவை,Special Train Service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/srnxv4w0/rail.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/srnxv4w0/rail.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாராந்திர 14 சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கும் முக்கிய ரெயில் சேவைகள் குறித்த தகவல்கள் பின்வருமாறு;-</p><p>தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூருக்குச் செல்லும் சிறப்பு விரைவு ரெயில் (எண்: 06059) வரும் செப்டம்பர் 12 முதல் 26 ஆம் தேதி வரையிலும், போடிநாயக்கனூர் தாம்பரம் இடையேயான வாராந்திர விரைவு ரெயில் (எண்: 06060) செப்டம்பர் 13 முதல் 27 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>சென்னை எழும்பூர் கன்னியாகுமரி (வெள்ளிக்கிழமை) விரைவு ரெயில் (எண்: 06045) செப்டம்பர் 4 முதல் 25 ஆம் தேதி வரையிலும், கன்னியாகுமரி எழும்பூர் நிலையம் வரையிலான (ஞாயிற்றுக்கிழமை) விரைவு ரெயில் (எண்: 06046) செப்டம்பர் 6 முதல் 27 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>மங்களூரு சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு ரெயில் (எண்: 06126) வரும் செப்டம்பர் முதல் 28 ஆம் தேதி வரையிலும், சென்னை எழும்பூர் மங்களூரு இடையிலான விரைவு ரெயில் (எண்: 06125) மற்றும் போத்தனூர் சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு ரெயில் (எண்:06028) ஆகியவை செப்டம்பர் 8 முதல் 29 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.</p><p>திருநெல்வேலி மேட்டுப்பாளையம் விரைவு ரெயில் (எண்: 06030) செப்டம்பர் 6 முதல் 27 ஆம் தேதி வரையிலும், மேட்டுப்பாளையம் திருநெல்வேலி விரைவு ரெயில் (எண்: 06029) செப்டம்பர் 7 முதல் 28 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>திருநெல்வேலி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தாம்பரம் </a>விரைவு ரெயில் (எண்: 06166) செப்டம்பர் 6 முதல் 27 ஆம் தேதி வரையிலும், திருநெல்வேலி தாம்பரம் விரைவு ரெயில் (எண்: 06070) செப்டம்பர் 3 முதல் 24 ஆம் தேதி வரையிலும், தாம்பரம் திருநெல்வேலி விரைவு ரெயில் (எண்: 06069) செப்டம்பர் 4 முதல் 25 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொதுமக்களுக்காக சென்னை போர் நினைவிடத்தில் ஒலி-ஒளி நிகழ்ச்சி தொடக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sound-and-light-show-begins-at-chennai-war-memorial-for-the-public</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sound-and-light-show-begins-at-chennai-war-memorial-for-the-public#comments</comments><guid isPermaLink="false">d3e7070e-bab7-498d-aa58-ecd9b492e0fe</guid><pubDate>Sun, 30 Aug 2026 14:33:55 +0000</pubDate><atom:updated>2026-08-30T14:33:55.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,Chennai,சென்னை,Public,நிகழ்ச்சி,War Memorial,போர் நினைவிடம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/351bsnhm/43.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/351bsnhm/43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முப்படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பிணைப்பை வலுப்படுத்தும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய ராணுவத்தின் தெற்குப்பகுதி தலைமையகம், சென்னை போர் நினைவுச் சின்னத்தில் 29 ஆகஸ்ட் 2026 அன்று காணொலிக்காட்சிக்கு <a href="https://www.dailythanthi.com/Topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">நிகழ்ச்சி</a>யை ஏற்பாடு செய்தது.</p><p>இந்த தொடக்க நிகழ்ச்சிக்குக் கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்களுக்காக போர் நினைவுச் சின்னத்தில் இந்த ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. இந்த முயற்சியானது, சென்னை மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், என்.சி.சி வீரர்கள், சுற்றுலாப் பயணிகள், முன்னாள் ராணுவத்தினர்,  குடிமக்கள் ஆகியோருக்கு நாட்டின் ராணுவ வரலாற்றை உணர்வுப்பூர்வமான முறையில் புரிந்துகொள்வதற்கான  வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஒலி-ஒளி நிகழ்ச்சி</h2><p>தமிழ் வசனங்களுடன் கூடிய இந்த சிறப்பான ஒலி-ஒளி நிகழ்ச்சி, தமிழ்நாட்டு மக்களுடன் ஆழமான பிணைப்பை உருவாக்கவும், இந்தியாவின் ராணுவ வரலாற்றின் உத்வேகம் தரும் நிகழ்வுகளைப் பார்வையாளர்கள் அனுபவிக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>முப்படைகளை இளைய தலைமுறையினருக்கு நெருக்கமாக்குவதற்கும், நாட்டுப்பற்று, தேசியப் பெருமிதம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் சென்னையை தலைமையிடமாகக்கொண்ட இந்திய ராணுவத்தின் 'தெற்குப்பகுதி' மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது. இத்தகைய முயற்சிகள் மூலம், முப்படைகளின் தன்னலமற்ற சேவை, உயரிய தியாகம் ஆகியவற்றை அறிந்துகொள்ளவும், பாதுகாப்புப் படைகளின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் புரிந்துகொள்ளவும், முப்படை வீரர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பிலிருந்து உத்வேகம் பெறவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/605ipjrs/45.jpg" /></figure><h2>உணர்வுப்பூர்வமான வரலாறு</h2><p>இந்த ஒலி-ஒளிக்காட்சியானது, இந்தியாவின் முப்படைகளின் வீரம், தியாகம் மற்றும் நீடித்த பாரம்பரியம் குறித்த உணர்வுப்பூர்வமான வரலாற்றை எடுத்துரைக்கிறது; நாட்டின் ராணுவ வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் முப்படைகள் வகிக்கும் தற்போதைய பங்கை இது காட்டுகிறது. வரலாற்றை வெறும் தகவலாக விவரிப்பது மட்டுமல்லாமல், துணிச்சல் மற்றும் தியாகம் சார்ந்த வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு உயிர்ப்புடன் கொண்டு சேர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.</p><p>பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், என்.சி.சி கேடட்டுகள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியையும், அதில் இடம்பெற்ற தமிழ் வசனங்களையும் பாராட்டினர். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு, இந்தியாவின் இராணுவப் பாரம்பரியத்தையும், தேசத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கான தியாகங்களையும் புரிந்துகொள்வதில் அதிகரித்து வரும் பொது ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/8wuvi0u1/46.jpg" /></figure><p>குடிமக்களுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிணைப்பை வலுப்படுத்துவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய வீரர்களின் வீரவரலாறுகளை மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கொண்டு சேர்ப்பதன் மூலம், பொதுமக்களிடையே கடமை, பொறுப்பு, தேசத்தின் மீதான பெருமிதம் ஆகிய உணர்வுகளைத் தூண்ட இயலும். அதே நேரத்தில், இளையோர் ஆயுதப் படைகளில் சேர்வதற்கான ஆர்வத்தை தூண்டவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிக்கவும் ஊக்குவிக்கின்றன.</p><h2>மாதிரிப் பிரதிகள்</h2><p>செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள போர் நினைவிடம், இராணுவப் பாரம்பரியம் தொடர்பான ஒரு மையமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகம் இப்போது குடிமக்களுக்கு வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பிரதிநிதித்துவ இராணுவக் கலைப்பொருட்களைக் காணவும், இந்தியாவின் ஆயுதப் படைகளின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட டி-55 முதன்மை போர்க் டாங்கி,  புகழ்பெற்ற இந்திய கடற்படைக் கப்பல்களான ஐ.என்.எஸ் அஞ்சதீப், ஐ.என்.எஸ் விக்ராந்த் ஆகியவற்றின் மாதிரிப் பிரதிகள் ஆகியவை இங்கு நிறுவப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் இராணுவ வரலாறு, தொழில்நுட்பப் பரிணாம வளர்ச்சி மற்றும் கடல்சார் பாரம்பரியத்துடனான  தொடர்பை விளக்குகின்றன.</p><p>ஐ.என்.எஸ் அஞ்சதீப்பின் மாடலானது இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் திறனையும், நாட்டின் கடற்படை மற்றும் பாதுகாப்பு உற்பத்திச் சூழலுக்குத் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. நினைவிடத்துடன் இந்தக் கலைப்பொருட்கள் இருப்பது, கல்வி மற்றும் பொது ஈடுபாடு ஆகியவை ஒன்றிணையும் ஓர் இடமாக இந்த வளாகத்தை மேம்படுத்துகிறது. போர் நினைவிடத்தை, எளிதில் அணுகக்கூடிய ஓர் இராணுவப் பாரம்பரிய வளாகமாக மாற்றுவது என்பது, ராணுவ தெற்குப்பகுதித் தலைமையகத்தின் பரந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்—அதாவது, வீரமரணம் அடைந்தவர்களை நினைவுகூருதல், சேவையாற்றுபவர்களைக் கௌரவித்தல், நிகழ்காலத்திற்குக் கல்வி புகட்டுதல் மற்றும் எதிர்காலத்திற்கு உத்வேகம் அளித்தல் ஆகியவையே அவையாகும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/mnko9ntb/44.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரத்தில் சோகம்: கிரிக்கெட் பந்து தலையில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-kanchipuram-11-year-old-boy-dies-after-cricket-ball-hits-his-head</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-kanchipuram-11-year-old-boy-dies-after-cricket-ball-hits-his-head#comments</comments><guid isPermaLink="false">bd2b9f86-902d-492f-a198-bfa99ea61b29</guid><pubDate>Sun, 30 Aug 2026 14:17:03 +0000</pubDate><atom:updated>2026-08-30T14:17:03.787Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரிக்கெட்,Cricket,Kanchipuram,காஞ்சிபுரம்,Kanchipuram District,காஞ்சிபுரம் மாவட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/qhl332tk/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/qhl332tk/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம், </p><p>காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த பந்து தலையில் பலமாக தாக்கியதில் 11 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><h2>கிரிக்கெட் விளையாடியபோது விபரீதம்</h2><p>காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுகிர்தா லட்சுமி. இவரது 11 வயது மகன் சாய் மோத்தீஸ்வரன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.</p><p>கடந்த 26-ம் தேதி அரசு விடுமுறையையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க விளையாட்டு மைதானத்தில் சாய் மோத்தீஸ்வரன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.</p><h2>தலையில் பலமாக தாக்கிய பந்து</h2><p>மைதானத்தில் பலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ வேகமாக வந்த கிரிக்கெட் பந்து எதிர்பாராதவிதமாக சாய் மோத்தீஸ்வரனின் தலையில் பலமாக தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.</p><h2>செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை</h2><p>இதையடுத்து, சிறுவனை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.</p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சாய் மோத்தீஸ்வரன், திடீரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கிரிக்கெட் </a>விளையாடச் சென்ற 11 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை பேச்சு: தவெக அரசை கண்டித்து செப்.3-ல் மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversial-talk-about-jallikattu-aiadmk-protest-in-madurai-on-september-3-condemning-the-tvk-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/controversial-talk-about-jallikattu-aiadmk-protest-in-madurai-on-september-3-condemning-the-tvk-government#comments</comments><guid isPermaLink="false">cdc062ce-776f-4987-9e69-bf9e1a75a072</guid><pubDate>Sun, 30 Aug 2026 13:29:39 +0000</pubDate><atom:updated>2026-08-30T13:29:39.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,protest,ஆர்ப்பாட்டம்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/8wfe1yh5/eps.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/8wfe1yh5/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் 'ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது" என்று அநாகரீகமாக கொச்சைப்படுத்திப் பேசி இருக்கின்ற சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரையும், த.வெ.க அரசையும் கண்டித்து. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் கழகங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செப்லம்பர் 3-ந் தேதி நடைபெறும் என <a href="https://www.dailythanthi.com/topic/eps">எடப்பாடி பழனிசாமி </a>கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கடும் கண்டனம்</h2><p>சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சியில் அமர்ந்த ரீல்ஸ் மாடல் தவெக. அரசு, மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அந்த வகையில், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில், சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்கள், தமிழர்களுடைய பாரம்பரியத்தின், கலாசாரத்தின், நாகரீகத்தின், வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது என்று அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது இளைஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மிகுந்த கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தவெ.க-வினர் இதுபோன்று தான்தோன்றித்தனமாக பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>ஜல்லிக்கட்டுப் போட்டிகள்</h2><p>தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலான அரசியல் மற்றும் சட்டப் போராட்ட வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முற்றிலுமாகத் தடை விதித்தது. அப்போதைய முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு கலந்தது என்பதால் இந்தத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததோடு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, 2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் வாலாற்றுச் சிறப்பு மிக்க அறப் போராட்டத்தை நடத்தினர். அப்போதைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் 21.1.2017 அன்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>கலாசார பாரம்பரியம்</h2><p>அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து. எனது தலைமையிலான அப்போதைய அம்மா அரசு தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு நிரந்தர சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் ஐல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது தமிழர்களின் கலாசார பாரம்பரியம் என சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. 2017-ஆம் ஆண்டு கழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்கு அமைப்புகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், 18.5.2023 அன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்றும், ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்கலாம் என்றும் இறுதித் தீர்ப்பு அளித்தது. இவ்வாறு ஐல்லிக்கட்டுப் போட்டி தடையின்றி நடைபெறுவதற்கு கழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களே காரணம் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு கட்டிக்காட்ட விரும்புகிறேன்.</p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>இந்நிலையில், 'தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி, இளைஞர்களை அழிக்கிறது என்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசிய சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரையும். மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வரும் ரீல்ஸ் மாடல் தவெக அரசையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் 3.9.2026 வியாழக் கிழமை காலை 9.30 மணியளவில் 'அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமானசெல்லூர் K ராஜூ கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும். மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான R.B. உதயகுமார், அழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான V.V. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம் Ex M.LA, அவர்கள் முன்னிலையில் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிக் கழகச் செயலாளர்கள். நிர்வாகிகள் கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஐல்லிக்கட்டு காளைபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஐல்லிக்கட்டு நலச் சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுளது அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-arunraj-inspects-krishnagiri-government-medical-college-hospital</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-arunraj-inspects-krishnagiri-government-medical-college-hospital#comments</comments><guid isPermaLink="false">877c4b74-73d2-4159-bb52-9af923edd143</guid><pubDate>Sun, 30 Aug 2026 13:20:05 +0000</pubDate><atom:updated>2026-08-30T13:20:05.285Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,Krishnagiri,மருத்துவக் கல்லூரி,Medical College Hospital,medical college,அருண்ராஜ்,Arunraj,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/hdb23hio/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/hdb23hio/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் இன்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மருத்துவமனையில் ஆய்வு</h2><p>இன்றைய தினம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் நேரடி ஆய்வு மேற்கொண்டோம். </p><p>மருத்துவமனையின் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் மற்றும் கழிவறை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க  அலுவலர்கள் மற்றும் பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினோம். </p><p>கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருதய அவசர சிகிச்சைக்காக Cath Lab வசதியை கொண்டு வருவதற்கான அறிவிப்பை நாம் ஏற்கனவே மருத்துவத்துறையின் மானிய கோரிக்கையில் வெளியிட்டோம்.</p><h2>பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும்</h2><p>மேலும் இம்மருத்துவமனை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை NH 44 விபத்து அதிகம் நடக்கும் பகுதியாக இருப்பதால், விபத்துக்குள்ளானவர்களுக்கான அவசர சிகிச்சைக்காக நரம்பியல் அறுவை சிகிச்சை ( Neurosurgery) மருத்துவர்களுக்கான பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்களுடன்... முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசித்தோம்.</p><p>இந்த ஆய்வின்போது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கிருஷ்ணகிரி </a>சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இளையராஜா, மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சத்தியபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசு பரிசீலனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-considering-expanding-meenambakkam-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-considering-expanding-meenambakkam-airport#comments</comments><guid isPermaLink="false">c22e432f-6ea2-467b-9908-99776b21ab40</guid><pubDate>Sun, 30 Aug 2026 13:11:10 +0000</pubDate><atom:updated>2026-08-30T13:11:10.376Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,மீனம்பாக்கம்,airpot</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/fi1pcxck/airport33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மீனம்பாக்கம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு பரிசீலனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/fi1pcxck/airport33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பரந்தூர் விமான நிலையத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரி வாக்கம் செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.</p><h2>த.வெ.க ஆட்சி </h2><p>பரந்தூர் பசுமை வெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து இதுவரை கையகப்படுத்தப் பட்டுள்ள நிலங்கள்தொழில்துறை செயல்பாடுகளுக்கு பயன்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு திட்டங்கள் குறித்து எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. </p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள நிலத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.</p><p>இதற்கிடையில் ஏராளமான நிலங்களும் அரசால் கையகப்படுத்தப்பட்டுவிவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்பட் டது.ஆனால் விவசாயிகளும், அந்தபகுதிமக்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.</p><h2>சட்டப்பேரவையில் மிகப்பெரிய விவாதம்</h2><p>ஏற்கனவே, அந்த பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து விஜய் அங்கு செல்ல முயன்றது மிகப் பெரிய கவனத்தை எல்லோராலும் ஈர்க்கப்பட்டது. இந்தநிலையில் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது பரந்தூர் விமான நிலையத்திட்டம்கைவிடப் படுகிறது என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். இது சட்டபேரவையில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.</p><p>இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தொழில் வளர்ச்சி தமிழகத் தில் பாதிக்கும் என்று தெரி வித்தது.இந்த சூழலில் பரத் தூர்மக்கள்விமானநிலையத் திட்டம் கைவிடப்பட்டதை ஆதரித்தனர். மகிழ்ச்சி தெரி வித்தனர். இந்நிலையில் பரந்தூரில் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அனைத்துதரப்பினரின்எதிர் பார்ப்பாக இருந்தது.</p><h2>விரிவாக்க பரிசீலனை</h2><p>இப்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் மீனம் பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு நடத்தி விரைவில் டெண்டர்விடப்படும் தெரிகிறது. பொழிச்சலூர், தாராப்பாக்கம் அணுகு சாலை அமைக்கவும் தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.</p><h2>5-ஆவது முனையம்</h2><p>சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை 5-ஆவது முனையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை தமிழக அரசு ஆய்வு நடத்தி வருகிறது. ஓடுபாதை திறன் பணிகளும் நடை பெற்று வருகின்றன. இந்த விரிவாக்கத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படும். பரந்தூர் திட்டத்திற்கான மாற்றாக சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதால் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் பெருகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.</p><p>மீனம்பாக்கம் 5-ஆவது முனையம் அமைக்கப்படுவதால் துரித ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஏர்போர்ட், தாம்பரம், மதுரவாயல் வழியாக புறவழி அணுகு சாலை அமைக்க திட்டப்பணிகள் பரிசீலணை நடைபெற்று வருவதாக தெரிகிறது. அதே நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தபணிகள்நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தலை துண்டிக்கப்பட்டு பெயிண்டர் கொலை; நெல்லையில் பதற்றம்; அதிரடி படையினர் குவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/painter-beheaded-murder-tension-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/painter-beheaded-murder-tension-in-nellai#comments</comments><guid isPermaLink="false">ab3a1cba-d3b2-4e6f-b056-68c1986c5476</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:58:45 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:58:45.985Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,கொலை,killed,Painter,பெயிண்டர்,Rise,பதற்றம்,tension</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/687o3tqu/baskar.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ பாஸ்கர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தலை துண்டிக்கப்பட்டு பெயிண்டர் கொலை; நெல்லையில் பதற்றம்; அதிரடி படையினர் குவிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/687o3tqu/baskar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி,</p><p>நெல்லை உடையார்பெட்டி அருகே உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில், வாலிபர் ஒருவர் தலை துண்டித்து கொடூரமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">படுகொலை </a>செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>நடந்தது என்ன? </h2><p>மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவர், பாஸ்கரை வழிமறித்து திடீரென தாக்கியுள்ளனர். </p><h2>படுகொலை</h2><p>கண் இமைக்கும் நேரத்தில், அவர்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் பாஸ்கரின் தலையை துண்டாக வெட்டி எடுத்தனர். அதோடு நிறுத்தாமல், படுகொலை செய்யப்பட்ட அந்த இளைஞரின் தலையை அறுத்து, அவரது வீட்டின் முன்பே வீசி சென்றனர் அந்த மர்ம நபர்கள்.</p><h2> கொலையாளிகள் சரண்</h2><p>ஆற்றங்கரைக்கு சென்றவர்கள் பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடப்பதை கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தச்சநல்லூர் போலீசார் பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே, கொலையை அரங்கேற்றிய அந்த இரு நபர்களும் நேராக காவல் நிலையம் சென்று போலீசாரிடம்  சரணடைந்தனர்.</p><h2>முன்விரோதமே காரணம்?</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாஸ்கருக்கும் சரணடைந்த நபர்களுக்கும் இடையே இருந்த முந்தைய பகை மற்றும் முன்விரோதம் காரணமாகவே இந்த கொடூரக்கொலை அரங்கேறியுள்ளதா, அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>அதிரடி படையினர் குவிப்பு</h2><p>இந்த நிலையில், பாஸ்கரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதி முழுவதிலும் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதன் காரணமாக, பாதுகாப்பு பணியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது; இந்தியாவுக்கு பெருமை - எல்.முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uzbekistans-highest-award-for-pm-modi-pride-for-india-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uzbekistans-highest-award-for-pm-modi-pride-for-india-l-murugan#comments</comments><guid isPermaLink="false">61f3bd80-283e-40be-ae3b-fd5fd10b3f38</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:30:52 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:30:52.495Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,பிரதமர் மோடி,PM Modi,L. Murugan,Award,உஸ்பெகிஸ்தான்,Uzbekistan,உயரிய விருது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/nls2f7cb/41.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/nls2f7cb/41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது; இந்தியாவுக்கு பெருமை மத்திய இணை-மந்திரி <a href="https://www.dailythanthi.com/topic/l-murugan">எல்.முருகன் </a>தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>உயரிய அரச விருது</h2><p>இந்தியாவுக்குப் பெருமைக்குரிய தருணம்! உஸ்பெகிஸ்தான் குடியரசின் மிக உயரிய அரச விருதான 'ஒலிய தராஜலி தோஸ்த்லிக்' விருதை  பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு வழங்குவது, தேசத்திற்கு ஒரு பெரும் கௌரவமாகும். </p><h2>பெருமிதம் தரும் தருணம்</h2><p>இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே வலுப்பெற்று வரும் நட்புறவு, நம்பிக்கை மற்றும் உத்திசார் கூட்டாண்மைப் பிணைப்புகளைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் இது அளவற்ற பெருமிதம் தரும் தருணம்!.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றபோது சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-tragedy-strikes-while-visiting-a-temple-for-worshipthree-members-of-the-same-family-lose-their-lives</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-tragedy-strikes-while-visiting-a-temple-for-worshipthree-members-of-the-same-family-lose-their-lives#comments</comments><guid isPermaLink="false">991f175d-40b5-482c-bced-73777c08b4a2</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:22:02 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:22:02.275Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,Chennai,சென்னை,Periyapalayam,பெரியபாளையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ougqach2/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/ougqach2/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெரியபாளையம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.</p><h2>லாரி-ஆட்டோ மோதி விபத்து</h2><p>சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் லோகநாதன் (42). ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். இவரது மனைவி பூங்கொடி (39), மகள் தனலட்சுமி (10), மாமியார் ராதா (65), மைத்துனர் மகன்கள் கோகுல் (10), பிரசாந்த் (15) ஆகியோர் நேற்று இரவு பெரியபாளையம் கோவிலுக்கு சாமி கும்பிட ஒரே ஆட்டோவில் சென்றனர்.</p><p>லோகநாதன் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அவர்களது ஆட்டோ பன்பாக்கம் பகுதியில் உள்ள எம்.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்தது.</p><h2>சம்பவ இடத்திலேயே பெண் பலி</h2><p>இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் லோகநாதனின் மனைவி பூங்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.</p><p>விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p><h2>மேலும் 2 பேர் உயிரிழப்பு</h2><p>அங்கு படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆட்டோ ஓட்டுநர் லோகநாதனின் மாமியார் ராதா மற்றும் மைத்துனர் மகன் கோகுல் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.</p><p>இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.</p><h2>3 பேருக்கு தீவிர சிகிச்சை</h2><p>விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 3 பேருக்கு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவள்ளூர் </a>அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>பெரியபாளையம் கோவிலுக்கு வழிபாட்டுக்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 லட்சத்திற்கு பச்சிளம் பெண் குழந்தையை விற்ற பெற்றோர்..! - திருப்பத்தூரில் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-sell-baby-girl-for-rs-1-lakh-shock-in-tirupattur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-sell-baby-girl-for-rs-1-lakh-shock-in-tirupattur#comments</comments><guid isPermaLink="false">a2f343f8-c0a3-472a-b68a-0d304425b92d</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:14:55 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:14:55.729Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ் விசாரணை,hospital,ஆஸ்பத்திரி,குழந்தை விற்பனை,Police action,Thiruppathur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/0gkarurr/2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பச்சிளம் குழந்தை விற்பனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/0gkarurr/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூரில் பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>குழந்தை விற்பனை</h2><p>திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த தம்பதியினர் ரஹ்மத்துல்லா - ஹவாமா. இவர்களுக்கு கடந்த 14-ந்தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 4-வதாக தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அந்த குழந்தையை விற்க முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளனர்.</p><p>இந்த தகவலறிந்து பெங்களூருவில் இருந்து செய்யது - சம்ரின் தாஜ் தம்பதியினர் திருப்பத்தூர் வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதன் காரணத்தால் ரஹ்மத்துல்லா - ஹவாமா தம்பதியரின் குழந்தையை ரூ.1,00,000 கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர்.</p><h2>விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் அடுத்த உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. புகாரின் பேரில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"> போலீசார் </a>வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குழந்தையை விற்ற ரஹ்மத்துல்லா - ஹவாமா மற்றும் வாங்கிய செய்யது - சம்ரின் தாஜ் ஆகிய 4 பேரையும் சட்டவிரோதமாக செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்தனர். மேலும், குழந்தையை சட்டவிரோதமாக விற்றதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">ஆஸ்பத்திரி</a> ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்கள் நீக்கம்: இயக்குநர் அமீர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-periyar-anna-ambedkar-names-director-ameer-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-periyar-anna-ambedkar-names-director-ameer-condemns#comments</comments><guid isPermaLink="false">0047829e-b6b4-4762-9212-8d3d5b928775</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:03:23 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:03:23.167Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Director,இயக்குநர்,அமீர்,Ameer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/kblykogm/ameer.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/kblykogm/ameer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம்பெற்றிருந்த முக்கியத் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன. சமூக நீதி சார்ந்த கருத்துகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் <a href="https://www.dailythanthi.com/topic/director-ameer">இயக்குநர் அமீர்</a>, இந்த வரலாற்றுத் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டதை வன்மையாகக் கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p><h2>தமிழர்களின் கடமை</h2><p>"பெரியார், அண்ணா, அம்பேத்கர் என்பது பெயர்கள் அல்ல... தமிழ்நாட்டின் அடையாளங்கள். அதை அழிக்கவோ மறைக்கவோ எந்த முகமூடியோடு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>போதை கலாச்சாரத்திற்கு முதல்-அமைச்சர் விஜய்  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்;  நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-end-drug-culture-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-must-end-drug-culture-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b09a0bc3-a520-47ca-afdf-2884f8b65536</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:24:17 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:24:17.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,drug,போதை,முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/hoje5tnz/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/hoje5tnz/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இளைஞர்களின் எதிர்காலத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் போதை கலாச்சாரம் முதல்-அமைச்சர் விஜய்  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நயினார் நாகேர்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p> <h2>கொலை</h2><p>ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே பேருந்திற்காக காத்து கொண்டிருந்த இந்து முன்னணி நிர்வாகியான தணிகாசலம் என்பவரை, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88">போதையில்</a> இருந்த இளைஞர்கள் ஓட ஓட விரட்டி சென்று, புறக் காவல் நிலையம் முன்பே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை பதற செய்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். </p><h2>போதை சக்தி</h2><p>“தூய சக்தி” என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொண்ட முதல்-அமைச்சர் விஜய் முதல்அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகம் “போதை சக்தி”யின் பிடியில் சிக்கி கொண்டதாக தான் தெரிகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக்குகளை மூடிவிட்டதாக தவெக அரசு தம்பட்டம் அடித்து கொண்டாலும், இளைஞர்களிடையேயான மதுப்பழக்கமோ, சமூகத்தில் போதையால் உண்டாகும் குற்றச்செயல்களோ குறைந்தபாடில்லை.</p><h2>சட்டம் ஒழுங்கு</h2><p> காவல்துறையினர் மீதோ தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் மீதோ குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. கடந்த மூன்று மாதங்களில் ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரது கைகளிலும் மது புட்டிகளும், போதை பொருட்களும் மிக சரளமாக புழங்குகின்றன என்பதை சமூக வலைத்தளங்களில் உலா வரும் வீடியோக்களை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். </p><h2>முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்</h2><p>ஆனால், முதல்-அமைச்சரும் அவரது அமைச்சர்களும் “<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">ரீல்ஸ்</a>” எடுப்பதில் காட்டும் ஆர்வத்தை, “யதார்த்தம்”-இல் உள்ள மக்கள் பிரச்சினைகளில் காட்டுவதில்லை. இனியாவது எதிர்க்கட்சிகளிடம் எதுகை மோனை வசனம் பேசி காலத்தை கடத்தாமல், இளைஞர்களின் எதிர்காலத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் போதை கலாச்சாரத்திற்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிகிலுக்கு ஓட்டுப் போட்டல்ல... இப்ப திகில் திகில்னு விலை ஏறுது - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-vote-for-bigil-now-the-price-is-going-up-like-crazy-rs-bharathis-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dont-vote-for-bigil-now-the-price-is-going-up-like-crazy-rs-bharathis-criticism#comments</comments><guid isPermaLink="false">920e49ff-fd3c-451d-ab72-2e50bdfccee9</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:20:39 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:20:39.976Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,விஜய்,திமுக,DMK,ஆர்.எஸ்.பாரதி,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/g17oc3qj/barathi33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/g17oc3qj/barathi33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>பிகிலுக்கு ஓட்டுப் போட்டல... இப்ப திகில் திகில்னு விலை ஏறுது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.</p><p>வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ். பாரதி, தி.மு.க.-வைப் பார்த்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் சவால் விடுகிறார்</a>. பைல்ஸ் எல்லாம் தயாராகத் டேபிளில் இருக்கின்றன, நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார். அவிழ்ப்பதுதான் உன்னுடைய வேலை; இந்த பூச்சாண்டி காட்டுவதெல்லாம் எங்களிடம் வேண்டாம். தணிக்கை செய்யப்பட்டது என்று கூறுகிறார். ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள்.</p><p>ஒவ்வொரு வருடமும் சிஏஜி (CAG) அறிக்கை தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் தாக்கல் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை. அந்த சிஏஜி ரிப்போர்ட்தான் இந்த 3 பைல்ஸ் எந்தவொரு சி.ஏ.ஜி அறிக்கையும் அரசாங்கத்தைப் பாராட்டியிருக்காது. ஆடிட் என்பது மாநகராட்சி முதல் அரசாங்கம் வரை அனைத்துத் தளங்களிலும் வழக்கமாக நடக்கக் கூடியது. ஆனால், ஊடகங்களும் பத்திரிகைகளும் உடனே 3 பைல்கள் இருக்கின்றன என்று பரபரப்பாக்குகின்றன.</p><p>பிகிலுக்கு ஓட்டுப் போட்டீர்கள்... இப்போது திகில் திகில் என விலைவாசி ஏறுகிறது. இன்றைக்கு மக்களுக்கு இது தெரியாது. இன்னும் 6 மாதம் ஆகட்டும். இதே மக்கள் வந்து துரைமுருகனின் வீட்டு வாசலில் நின்று, 'காவல் தெய்வமே. நீங்கதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று கையேந்தி நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உசிலம்பட்டி அருகே 16 வயது சிறுமி தற்கொலை - கனிமொழி எம்.பி. வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/suicide-of-16-year-old-girl-near-usilampatti-kanimozhi-mp-expresses-anguish</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/suicide-of-16-year-old-girl-near-usilampatti-kanimozhi-mp-expresses-anguish#comments</comments><guid isPermaLink="false">de3ca988-1e08-4cd0-a08b-2744ba22b689</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:19:51 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:19:51.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/xdmteshv/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/xdmteshv/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சிறுமி தற்கொலை</h2><p>உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்து கொண்டதால், அவரது குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது.</p><p>ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவர்களின் உரிமை.</p><h2>தகுந்த தண்டனை</h2><p>இது போன்ற மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விசாரணை </a>நடத்தி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்; அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-4-children-killed-in-accident-involving-unidentified-vehicle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-4-children-killed-in-accident-involving-unidentified-vehicle#comments</comments><guid isPermaLink="false">008c816b-1c3d-4c74-b937-d1a2ef4ceb7c</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:15:45 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:15:45.845Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Dindigul,திண்டுக்கல்,சிறுவர்கள் உயிரிழப்பு,children die</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/1r1b6akt/40.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-30/1r1b6akt/40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம்  வடமதுரை அருகே  அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 4  சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><h2>சிறுவர்கள் உயிரிழப்பு</h2><p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லம்பட்டி பிரிவில் சாலையோரத்தில் தனுஸ்ரீ(5), யோக வர்ஷி(11). அனன்யா(6) மற்றும் மோசிகீரன்(6) ஆகியோர் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வேன் ஒன்று, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த  சிறுவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதில் 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தனர்</a>.</p><h2>பெரும் அதிர்ச்சி</h2><p>இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இக்கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>