<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 19 Sep 2026 13:14:08 +0000</lastBuildDate><item><title>திருச்சியில் கூட்டுறவுத்துறை ஆலோசனைக் கூட்டம்... அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cooperative-department-consultative-meeting-in-trichy-officials-inspect-under-the-leadership-of-the-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cooperative-department-consultative-meeting-in-trichy-officials-inspect-under-the-leadership-of-the-minister#comments</comments><guid isPermaLink="false">545ef34d-3eb4-47d2-bd31-859131537702</guid><pubDate>Sat, 19 Sep 2026 13:10:08 +0000</pubDate><atom:updated>2026-09-19T13:10:08.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,Consultative meeting,ஆலோசனைக் கூட்டம்,அமைச்சர் காந்திராஜ்,Minister Gandhiraj</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/120m2esg/45.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/120m2esg/45.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சியில் கூட்டுறவுத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் காந்திராஜ் </a>தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் இன்று (19.09.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் துறை சார்ந்த பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:</p><h2>விவசாயிகளுக்கு கடன் வசதி:</h2><p>பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் 2026-ன் கீழ், 100% முழுமையாகக் கடன் தள்ளுபடி பெற்ற 20,192 விவசாயிகளுக்கு பயிர்க்கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.</p><h2>மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி:</h2><p>'சிங்கப்பெண்கள் கடன் உதவித் திட்டம்' மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு உரிய காலத்தில் அதிக அளவில் கடன் உதவிகளை வழங்கி, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.</p><h2>நியாயவிலைக் கடைகளில் ஆய்வு:</h2><p>பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்களில் எடையளவில் எவ்விதக் குறைபாடும் ஏற்படக் கூடாது என்றும், விநியோக முறையைத் துல்லியமாகக் கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.</p><h2>வணிக மேம்பாடு &amp; உள்கட்டமைப்பு:</h2><p>அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய 'சுயசேவைப் பிரிவு' (Self-service section) ஒன்றைத் தொடங்குவதற்கும், பண்டகசாலையில் இயங்கி வரும் திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்குப் புதிய கட்டிடம் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாய்வுக் கூட்டத்தில், மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் அரசு, அமராவதி நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, லால்குடி துணைப்பதிவாளர் சாய்நந்தினி, முசிறி துணைப்பதிவாளர் குமார், துணைப்பதிவாளர் / பணியாளர் அலுவலர் பிரேமலதா, டான்பெட் துணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் ஹபிபுல்லா மற்றும் பாரத மிகுமின் ஊழியர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குலசை தசரா: சினிமா பிரபலங்களை அழைத்து வர தடை - கோட்டாட்சியர் உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasai-dasara-ban-on-inviting-film-celebrities-sub-collectors-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasai-dasara-ban-on-inviting-film-celebrities-sub-collectors-order#comments</comments><guid isPermaLink="false">310ff1a4-317e-40f6-9d04-04ac984d2df7</guid><pubDate>Sat, 19 Sep 2026 13:07:45 +0000</pubDate><atom:updated>2026-09-19T13:07:45.733Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kulasekaranpattinam,Dussehra,குலசை தசரா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/6bmji7c5/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/6bmji7c5/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10-ம் திருநாளான 20-ந்தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள். </p><p>காளி வேடம் அணியும் பக்தர்கள் 61 நாட்கள், 41 நாட்கள், 21 நாட்கள், 11 நாட்கள் என பல்வேறு நாட்கள் விரதம் கடைபிடிக்கின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி, துளசிமாலை வாங்கி, கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். பல்வேறு ஊர்களிலும் விரதம் இருக்கும் பக்தர்கள் அங்குள்ள கோவில்களில் பிறை அமைத்து தங்கியிருந்து வழிபடுகின்றனர்.</p><p>இந்நிலையில், குலசை தசரா திருவிழாவிற்கு சினிமா பிரபலங்களை அழைத்து வர தடை விதித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் குலசை தசரா திருவிழாவின்போது சினிமா பிரபலங்களை அழைத்து வந்து நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் இந்த முறை சினிமா பிரபலங்களை அழைத்து வர தடை விதிக்கப்படுவதாகவும், மீறி அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>அதே போல், குலசை தசரா திருவிழாவிற்கு உலோகத்தால் ஆன ஆயுதங்களை கொண்டு வர தடை விதிக்கப்படுவதாகவும், திருவிழாவில் பக்தர்கள் தங்கள் சாதி அடையாளங்களுடன் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. முப்பெரும் விழா: 7 பேருக்கு விருதுகள் வழங்கினார் மு.க.ஸ்டாலின்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmks-grand-tripartite-event-mk-stalin-presented-awards-to-seven-individuals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmks-grand-tripartite-event-mk-stalin-presented-awards-to-seven-individuals#comments</comments><guid isPermaLink="false">8afcea42-d767-40b0-9e56-eb8c52c676b7</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:53:23 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:53:23.122Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,Chennai,சென்னை,awards,திமுக முப்பெரும் விழா,விருதுகள்,mk stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/kubsfsxc/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/kubsfsxc/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் 7 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. </p><h2>தி.மு.க. முப்பெரும் விழா</h2><p>இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவால யத்தில்கடந்த 15ம் தேதிநடை பெறுவதாக இருந்தது., விழா நடைபெற இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் செப்டம்பர் 15ம் தேதி நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கியது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட்டன.</p><h2>7 பேருக்கு விருது</h2><ol><li><p>பெரியார் விருது - விவசாய அணி துணைச்செயலாளர் கு.செல்லப்பா,</p></li><li><p>அண்ணா விருது = சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே. சுபாஷ்,</p></li><li><p>கலைஞர் விருது - திருச்சி சிவா,</p></li><li><p>பாவேந்தர் விருது - கனிமொழி என் வி.என். சோமு</p></li><li><p>பேராசிரியர் விருது -மிசா எஸ். அகமது தம்பி,</p></li><li><p>மு.க.ஸ்டாலின் விருது - நா. இளையராஜா,</p></li><li><p>முரசொலி செல்வம் விருது - ஊடகவியலாளர் ப. திருமாவேலன்</p></li></ol><p>ஆகிய 7 பேருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்; அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/political-leaders-urge-the-repeal-of-the-uapa-act-and-the-release-of-political-prisoners</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/political-leaders-urge-the-repeal-of-the-uapa-act-and-the-release-of-political-prisoners#comments</comments><guid isPermaLink="false">91de3cbf-9003-4db6-a71e-d1d68420c88e</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:52:01 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:52:01.073Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>cases,Release,அரசியல்,ரத்து,விடுதலை,political,கைதிகள்,prisoners,சட்டம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/mdvufhy9/meet.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அரசியல் தலைவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்; அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/mdvufhy9/meet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p> <h2>ரத்து செய்ய வேண்டும்</h2><p>அரசியலமைப்பு மற்றும் நீதி பரிபாலன முறைக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு  சட்டத்தை (யுஏபிஏ) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a> உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள உழைக்கும் மக்கள் கல்வி மாமன்றத்தில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.</p><h2>அரசியல் தலைவர்கள்</h2><p>பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான யா.அருள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன்</a>, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி, சென்னை ஐகோர்ட்டு கிளை மூத்த வழக்கறிஞர் மோகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எழுத்தாளர் வ.கீதா, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p> <h2>மனித உரிமை மீறல்</h2><p>நிகழ்வில் பங்கேற்ற பேச்சாளர்கள் பேசுகையில், "நாட்டின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், தற்போது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் அடக்குமுறை கருவியாகவும், அரசியல் பழிவாங்கும் ஆயுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி' என்ற அடிப்படை நீதித்துறை கோட்பாட்டை தலைகீழாக மாற்றி, இயல்பான பிணை ஜாமீன் உரிமையை தடுப்பதன் மூலம் இச்சட்டம் மிகப்பெரிய மனித உரிமை மீறலுக்கு வழிவகுக்கிறது.</p> <h2>காலக்கெடு</h2><p>ஜனநாயக ரீதியாக குரல் எழுப்புபவர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஒடுக்கப்பட்ட பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போரை ஒடுக்குவதற்காகவே இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. முந்தைய 'தடா', 'பொடா' போன்ற சட்டங்களுக்கு காலக்கெடு இருந்த நிலையில், யுஏபிஏ சட்டத்திற்கு எந்த காலக்கெடுவும் இன்றி நீடித்து வருகிறது.</p> <figure><img alt="விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/3qiw4y6f/meet.1.jpg" /><figcaption>திருமாவளவன்</figcaption></figure><h2>8,719 வழக்குகள்</h2><p>பீமா கோரேகான் வழக்கு உட்பட தற்போதைய பாஜக ஆட்சியில் இச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட 8,719 வழக்குகளில், வெறும் 2.25 சதவீதம் வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் கைது செய்யப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் எந்தவொரு விசாரணையுமின்றி 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையிலேயே வாடும் அநீதி தொடர்கிறது. இது முறையான சட்ட நடைமுறைகளுக்கு அப்பால், விசாரணையின்றி தண்டனை வழங்கும் 'கருப்பு சட்டமாக' விளங்குகிறது.</p> <h2>ரத்து செய்ய வேண்டும்</h2><p>எனவே, அரசியலமைப்பு உரிமைக்கும், நீதிக்கும், மனிதநேயத்திற்கும் பெரும் சவாலாக விளங்கும் யுஏபிஏ சட்டத்தை உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; இச்சட்டத்தின் கீழ் எவ்வித ஆதாரமுமின்றி சிறையில் வாடுபவர்களை மனிதநேய அடிப்படையில் விரைந்து விடுதலை செய்ய வேண்டும்" என்று மத்திய அரசை வலியுறுத்தினர்.</p><p>இந்த கருத்தரங்கில் வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-aiims-hospital-director-change</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-aiims-hospital-director-change#comments</comments><guid isPermaLink="false">3a7f8c7f-f275-4977-9e89-af60c602f99a</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:49:54 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:49:54.571Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Director,இயக்குனர்,Change,மாற்றம்,எய்ம்ஸ் மருத்துவமனை,AIIMS Hospital</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ubjve249/44.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ubjve249/44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய இயக்குனராக ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் பேராசிரியர் டாக்டர் விர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>மதுரை தோப்பூரில் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில், வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் வெளிநோயாளிகளுக்கு மருத்துவ சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.</p><h2>புதிய இயக்குனர் நியமனம்</h2><p>இந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/madurai-aiims-hospital">மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை</a>யின் ராக ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் பேராசிரியர் டாக்டர் விர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இதுவரை மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய டாக்டர் மங்கு ஹனுமந்த ராவுக்கு பதிலாக விர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான மருத்துவ சேவைகளை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது நிர்வாகத் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி முடிந்து சென்ற மாணவிகளிடம் ஆபாச சைகை; வாலிபருக்கு தர்ம அடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-thrashed-by-public-for-making-obscene-gestures-at-schoolgirls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-thrashed-by-public-for-making-obscene-gestures-at-schoolgirls#comments</comments><guid isPermaLink="false">bb560da9-e52f-4a2a-9121-039ec4512505</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:32:26 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:32:26.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,people,கும்மிடிப்பூண்டி,attack,Kummidipoondi,வடமாநில இளைஞர்,ஆபாச செய்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/60tha51q/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடமாநில இளைஞர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/60tha51q/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை காட்டிய வடமாநில நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.</p><h2>ஆபாச சைகை</h2><p>திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள், நேற்று மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, கரும்புக்குப்பம் பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த ஒருவர், மாணவிகளை நோக்கி ஆபாச சைகை காட்டியுள்ளார்.</p><p>இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அங்கிருந்த பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர், கும்மிடிப்பூண்டி <a href="https://www.dailythanthi.com/topic/போலீசார்">போலீசாருக்கு</a> தகவல் தெரிவித்தனர்.</p><h2>விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை கைது செய்து <a href="https://www.dailythanthi.com/topic/விசாரணை">விசாரணை</a> நடத்தினர். </p><p>போலீசார் நடத்திய விசாரணையில், ஆபாச சைகை காட்டியது பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.தனது சகோதரி வீட்டிற்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: பெட்ரோல் கேன் வெடித்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-petrol-can-explodes-2-dead</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-petrol-can-explodes-2-dead#comments</comments><guid isPermaLink="false">e78c9c6f-a707-4e4e-887c-1cee307f5ac6</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:27:54 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:27:54.425Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ee0sbw6b/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ee0sbw6b/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, கடந்த 15-ந்தேதி விநாயகர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றபோது, இசை வாத்தியக் குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளை சூடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் கேன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. </p><p>இந்த சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவனேசன்(வயது 58) மற்றும் சஞ்சய் ஹரிஹரன்(வயது 19) ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ராகுல் என்ற இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த இரண்டு பேரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>2027-ல் அண்ணாமலை புதிய கட்சி தொடக்கம்? 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிரடி வியூகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-new-party-in-2027-strategy-for-2029-lok-sabha-polls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-new-party-in-2027-strategy-for-2029-lok-sabha-polls#comments</comments><guid isPermaLink="false">70a0e9f9-b782-4b0f-8c5e-3c4bfeeeb456</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:15:58 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:15:58.326Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,நாடாளுமன்ற தேர்தல்,தொடக்கம்,Launch,New Party,புதிய கட்சி</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/fkedg1z5/annamalai.21.06.2026.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:title><media:description type="html"><![CDATA[ 2027-ல் அண்ணாமலை புதிய கட்சி தொடக்கம்? 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிரடி வியூகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/fkedg1z5/annamalai.21.06.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ஜனதாவில் இருந்து விலகி, ‘வி த லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a>, 2027-ம் ஆண்டில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2029 நாடளுமன்ற தேர்தலை குறிவைத்து, தனது கட்சியின் பலத்தை நிரூபிக்க அவர் இப்போதே வியூகம் வகுத்து வருகிறார்.</p><h2>மக்கள் சேவை</h2><p>‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் மூலம் ‘போதையில்லா தமிழகம்’ என்ற முழக்கத்துடன், தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்களை அண்ணாமலை முன்னெடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, நீர்நிலைகள் தூர்வாருதல், கடற்கரை தூய்மை பணி போன்றவற்றிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். </p><p>கன்னியாகுமரி கடற்கரை தூய்மை பணி மற்றும் மதுரை வைகை ஆற்று தூய்மை பணியில் அவரே நேரடியாக களமிறங்கி செயல்பட்டார்.</p> <h2>20 லட்சம் உறுப்பினர்கள்</h2><p>அண்ணாமலையின் தலைமையில் இந்த அமைப்பில் இதுவரை 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இணையதளம் மூலம் ஓ.டி.பி. பெற்று உறுப்பினராகும் முறை உள்ளதால், சாதாரண மக்களுக்காக ‘மிஸ்டு கால்’ மூலம் இணையும் புதிய வசதியை அண்ணாமலை விரைவில் அறிவிக்கவுள்ளார்.</p> <h2>நிர்வாகிகள் தேர்வு மும்முரம்</h2><p>அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளாக, அமைப்பின் பொது செயலாளராக கரு.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற முக்கிய பதவிகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியில் அண்ணாமலை தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.</p><h2>2029 நாடளுமன்ற தேர்தலே இலக்கு</h2><p>தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, வரும் 2027-ஆம் ஆண்டில் அண்ணாமலை முறைப்படி புதிய அரசியல் கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. 2029<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D"> நாடளுமன்ற </a>தேர்தலில் தனது கட்சியின் அரசியல் பலத்தை காட்டுவதே இதற்கு காரணம் என தெரிகிறது. அதேநேரம், விரைவில் வரவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அண்ணாமலை இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>தருமபுரி: கவரமலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-decomposed-body-of-a-man-recovered-in-the-kavaramalai-forest-area</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-decomposed-body-of-a-man-recovered-in-the-kavaramalai-forest-area#comments</comments><guid isPermaLink="false">711a6020-b503-41e0-b880-9d5b8546f7c5</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:14:06 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:14:06.611Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரோந்து பணி,police enquiry,Forest area,தருமபுரி,dead body recovery,ஆண் உடல் மீட்பு,Dharmapuri District</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/42y0vhkn/19.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தடயவியல் நிபுணர்கள் சடலத்தை ஆய்வு செய்யும் காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ கவரமலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/42y0vhkn/19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி,</p><p>தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>வனப்பகுதியில் ஆண் சடலம் கண்டுபிடிப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தருமபுரி மாவட்டம்</a> பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கதிரிபுரம் கவரமலை வனப்பகுதியில் இன்று (சனிக்கிழமை) வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வனக்காப்பாளர்கள், துர்நாற்றம் வீசிய திசையை நோக்கிச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள அடர்ந்த காட்டின் ஒரு மரக்கிளையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">ஆண் சடலம் </a>ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த உடல் முற்றிலும் அழுகி, சிதைந்த நிலையில் காணப்பட்டது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த உடலை கீழே இறக்கி மீட்டனர். உடல் மிகவும் சிதைந்து போயிருந்ததால், அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்களை உடனடியாக கண்டறிய முடியவில்லை. அவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை</a> செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p><p>இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் அண்மைக் காலங்களில் காணாமல் போன நபர்களின் பட்டியலை சேகரித்து, சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது குறித்த அடையாளத்தைக் காணும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு <a href="https://t.co/jedMtXn0eu">https://t.co/jedMtXn0eu</a><a href="https://x.com/hashtag/dharmapuri?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#dharmapuri</a> <a href="https://x.com/hashtag/forest?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#forest</a> <a href="https://x.com/hashtag/body?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#body</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2101226863561728095?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தொழில் முதலீடு மாநாட்டில் பங்கேற்பு; முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-travels-abroad-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-travels-abroad-again#comments</comments><guid isPermaLink="false">3fea35e3-2333-4b4d-8e8d-3dd3ca7170ba</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:57:18 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:57:18.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,சென்னை,வெளிநாடு பயணம்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/98kzone1/cmo44.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ 

தொழில் முதலீடு மாநாட்டில் பங்கேற்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/98kzone1/cmo44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு செல்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் தொழில் முதலீடு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு </h2><p>முதல்-அமைச்சர் விஜய், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் கிளோஸ்டர்ஸ் நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 22ம் தேதி வரைநடை பெறவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட் டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள், கொமில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பதன் மூலம், தமிழகத்தின் முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளுக்கு மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அலோய்ஸ் ஸ்விங்ஜி, நிர்வாக இயக்குநர் மாரோன் கைரூஸ் ஆகியோரின் அழைப்பை ஏற்று  முதல்-அமைச்சர் விஜய் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 100 க்கும்மேற்பட்டநாடுகளைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகள், 1,000க்கும் மேற்பட்ட முன்னணி உலகளாவிய நிறுவனங்கள், சர்வ தேச அமைப்புகள், சிவில் சமூகபிரதிநிதிகள்,கல்வியாளர்கள் மற்றும் ஊடகங்க ளைச்சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள்.</p><h2>டாவோஸ் பயணம் </h2><p>உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் ஒரே இடத்தில் கூடும் இந்த மாநாட்டில், பொருளாதாரம், முதலீடு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படுவதுடன் உலகளாவிய பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகளை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்படும்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>யின் டாவோஸ் பயணம் தமிழக அரசின் முதலீடு மற்றும் தொழில் கொள்கை தொடர்பான அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, முதலீட்டை ஈர்ப்பது மற்றும் தொழில் கொள்கைகள் தொடர்பான விவாதங்களில் அரசியல் தலைமை நேரடியாகவும் அதிக அளவிலும் பங்கேற்கும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>அரசின் அணுகு முறையில் மாற்றம்</h2><p>இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர்கூறுகையில், டாவோஸ் மாநாட்டில் முதல்-அமைச்சர் பங்கேற்பதன் மூலம் அரசின் அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது. முதலீட்டு வசக்குவிப்பு மற்றும் தொழில் கொள்கை தொடர்பானவிவாதங்களில் அரசியல் தலைமை அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பை இது ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.</p><p>உலகின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே முதலீடுகளை ஈர்ப்பதற்கான போட்டி அதிகரித்து வரும் நிலையில், தமிழகமும் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதிலும், வளர்ந்து வரும் தொழில் துறைகளுக்கான முக்கிய மையமாக தன்னை நிலைதிறுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகிறது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் நேரடியாக விஜய் நேரடியாக பங்கேற்பு </h2><p>குறிப்பாக, எதிர்காலத்தில் வேகமாக வளரக்கூடிய தொழில் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், டாவோஸ் உலக பொருளா தார மன்றத்தில் முதல-மைச்சர் விஜய் பங்கேற்பது தமிழகத்தின் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதுவரை டாவோஸ் உலக பொருளாதார மாநாட் டில் முன்னாள் தொழில்துறை அமைச்சர்கள் மட்டுமே பெருமளவில் பங்கேற்று வந்த நிலையில், தற்போது, முதல்-அமைச்சர் விஜய் நேரடியாக இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவது பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுபோதையில் பணிக்கு வந்த ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/panchayat-secretary-suspended-for-reporting-to-work-under-the-influence-of-alcohol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/panchayat-secretary-suspended-for-reporting-to-work-under-the-influence-of-alcohol#comments</comments><guid isPermaLink="false">feeb6664-7f01-4c65-a479-392527ae1b59</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:56:28 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:56:28.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,Tirupur,alcohol,Panchayat Secretary,மது,ஊராட்சி செயலர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9axnffke/2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுபோதையில் வந்த ஊராட்சி செயலர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9axnffke/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>மதுபோதையில் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றிய ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.</p><h2>மது போதையில் ஊராட்சி செயலர்</h2><p>திருப்பூர் மாவட்டம் மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலராக ராஜேந்திரன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் மதுபோதையில் அலுவலகத்திற்கு வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டி அவரிடம் விளக்கம் கேட்டனர். </p><p>அப்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரால் அதிக பணிச்சுமை அளிக்கப்படுவதாகவும், அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும் அவர் கண்ணீருடன் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><h2>சஸ்பெண்ட்</h2><p>இதையடுத்து, பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஆய்வுக்காக அதிகாரி ஒருவர் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டார். அவர் மேற்கொண்ட ஆய்வில், ஊராட்சி செயலர் <a href="https://www.dailythanthi.com/topic/மது">மது</a>போதையில் இருந்தது உறுதியானது. </p><p>இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி செயலர் ராஜேந்திரனை உடனடியாக <a href="https://www.dailythanthi.com/topic/சஸ்பெண்ட்">சஸ்பெண்ட் </a>செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் தீவிர கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நிறைவேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-coast-guard-conducts-intensive-beach-cleanup-mission</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-coast-guard-conducts-intensive-beach-cleanup-mission#comments</comments><guid isPermaLink="false">a3c121f3-d1ef-4a97-a339-e3b329b8c198</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:47:50 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:47:50.486Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian Coast Guard,இந்திய கடலோர காவல் படை,நிறைவேற்றம்,mission,தூய்மைப்படுத்தும் பணி,Cleanup</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/jlebzq15/42.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/jlebzq15/42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் தீவிர கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியக் கடலோரக் காவல் படையின் (ICG) கிழக்கு மண்டலத் தலைமையகம், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள 17 கடற்கரைகளில் மாபெரும் தூய்மைப்பணியை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தியது. சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. "தூய கடல், பாதுகாப்பான கடற்கரை, நமது அடையாளம்" என்ற கருப்பொருளின் கீழ் இப்பணி நடைபெற்றது.</p><h2>அசைக்க முடியாத அர்ப்பணிப்பு</h2><p>இக்கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியின் மூலம் 8,200 கிலோவிற்கும் அதிகமான கடல்சார் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டன. கடல்சார் சூழல் மண்டலங்களைப் பாதுகாத்தல், கடல் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல் மற்றும் இந்தியாவின் கடற்கரைப் பகுதியின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">இந்தியக் கடலோரக் காவல் படை</a>யின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இப்பணி உறுதிப்படுத்தியது.</p><h2>தன்னார்வலர்கள் பங்கேற்பு</h2><p>மாநில அரசுத் துறைகள், இந்திய ராணுவம், சிஐஎஸ்எஃப் (CISF), என்எஸ்எஸ் (NSS), என்சிசி (NCC) கேடட்டுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசு சாரா அமைப்புகளைச் (NGOs) சேர்ந்த சுமார் 7,700 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர். இத்தகைய பங்கேற்பானது, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மீது பொதுமக்களிடையே அதிகரித்து வரும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்த தன்னார்வலர்கள் கடற்கரைகளைச் சுத்தப்படுத்தினர்; அப்போது பிளாஸ்டிக் கழிவுகள், கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மட்காத கழிவுகள் ஆகியவற்றை கவனமாகப் பிரித்தெடுத்தனர்.</p><p>சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் புதுச்சேரி ராக் பீச் (Rock Beach) கடற்கரையில் புதுச்சேரி துணைநிலை கவர்னர் கே. கைலாஷ்நாதன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் "தூய கடற்கரை, பாதுகாப்பான கடல்" என்ற இயக்கத்தின் ஐந்தாவது பதிப்புடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு வாயிலாக, இந்தியப் பெருங்கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதைக் குறைக்கும் வகையில், இந்நிகழ்ச்சியின்போது சேகரிக்கப்பட்ட கழிவுகளின் வகைகள் மற்றும் அளவுகள் குறித்த தரவுகள் அறிவியல் பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தலைமை செயலகம் முன்பு 24-ந்தேதி முற்றுகைப் போராட்டம் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-associations-announce-a-siege-protest-in-front-of-the-secretariat-on-the-24th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-associations-announce-a-siege-protest-in-front-of-the-secretariat-on-the-24th#comments</comments><guid isPermaLink="false">8dd74725-221d-4cc6-9330-ce16c6597aaf</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:46:34 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:46:34.079Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,protest,போராட்டம்,விவசாய சங்கங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/65w4t9mp/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/65w4t9mp/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><h2>வாக்குறுதி </h2><p>“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.</p><p>ஆனால் தற்போது ஒரு லட்சத்திற்கும் கீழ் விவசாய கடன் பெற்றிருந்தால் ரூபாய் 75 ஆயிரம் விவசாய கடன் தள்ளுபடி என்றும், ஒரு லட்சத்திற்கும் மேல் விவசாய கடன் பெற்றிருந்தால் ரூபாய் 35 ஆயிரம் விவசாய கடன் தள்ளுபடி என்றும் அறிவித்து 17 நிபந்தனைகளை விதித்து விவசாய கடன் வசூலில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.</p><h2>கண்டனம்</h2><p>குறிப்பாக விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் கடும் மழை மற்றும் வெயிலிலும், பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட் டம் நடத்தி வருகிறார்கள். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஒடுக்கும் விதமாக காவல்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனை வேடிக்கை பார்க்கும் மாநில அரசுக்கு விவசாயிகள் சங்கங்கள் சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>மேலும் தேர்தல் வாக்குறுதியின்படிஉடனடியாக விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மாநில அரசு விவசாயிகளை ஒடுக்கும் முற்றுகைப் போராட்டம்விதமாகவும், நசுக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறது.</p><h2>முற்றுகைப் போராட்டம்</h2><p>ஆகையால் இத்தகைய போக்கை கண்டித்து வரும் 24-ந்தேதி சென்னை தலைமை செயலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து முற்றுகை போராட் டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.</p><p>மேலும் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தும்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குறிப்பிட்ட விவசாயசங்கங்களை அழைத்து மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. எனவே, அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களை அழைத்து உடனடியாக மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>காலை உணவு திட்ட விரிவாக்கம்: திருவான்மியூரில் 22-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-cm-vijay-launches-on-22nd-in-thiruvanmiyur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-cm-vijay-launches-on-22nd-in-thiruvanmiyur#comments</comments><guid isPermaLink="false">6121a4cc-ca30-4c3b-b88f-d83668943443</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:44:30 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:44:30.865Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>breakfast scheme,காலை உணவு திட்டம்,திருவான்மியூர்,Thiruvanmiyur,விரிவாக்கம்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,inaugurates</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ksa1vycj/cm-vijay.03.jpg" width="682"><media:title type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காலை உணவு திட்ட விரிவாக்கம்: திருவான்மியூரில் 22-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ksa1vycj/cm-vijay.03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்ட</a> விரிவாக்க தொடக்க விழா, வருகிற 22-ந்தேதி சென்னை திருவான்மியூரில் 22-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.</p><h2>காமராஜர் காலை உணவு திட்டம்</h2><p>தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் பசியை போக்கி, கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு மட்டுமே காலை உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். </p><h2>திருவான்மியூர்</h2><p>காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதல்-அமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்</h2><p>இந்த காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா, வருகிற 22-ந்தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளது. திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்</a> நேரில் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களுக்கு  இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.</p> <h2>15 லட்சம் மாணவர்கள் பயன்</h2><p>இந்த திட்ட விரிவாக்கத்தின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் கூடுதலாக பயனடைவார்கள். இதற்காக நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழக அரசு கூடுதலாக ரூ. 217.63 கோடி நிதியை வழங்கியுள்ளது. </p> <h2>வரவேற்பு</h2><p>இதன் மூலம் ஒட்டுமொத்த திட்ட மதிப்பு ரூ. 724 கோடியாக உயர்ந்துள்ளது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியின்றி பாடம் படிக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் இந்த முயற்சி, அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை: பைக்கில் சாவி போட முயன்றபோது எட்டிப்பார்த்த நாகப்பாம்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-cobra-peeks-out-while-attempting-to-insert-key-into-motorcycle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-cobra-peeks-out-while-attempting-to-insert-key-into-motorcycle#comments</comments><guid isPermaLink="false">eadfcd9f-63e4-4e5b-afa3-42cbd0577078</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:41:31 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:41:31.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,பைக்,firefighters,மீட்பு,recovery,Motorcycle,நாகப்பாம்பு,cobra</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0g93kqju/18.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பைக் சாவி துளையிலிருந்து நாகப்பாம்பு தலையை வெளியே நீட்டிய காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவையில் பைக்கில் சாவி போட முயன்றபோது எட்டிப்பார்த்த நாகப்பாம்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0g93kqju/18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் பைக்கில் சாவி போட முயன்றபோது, சாவி துளையிலிருந்து திடீரென நாகப்பாம்பு ஒன்று எட்டிப்பார்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பைக் சாவி துளையிலிருந்து எட்டிப்பார்த்த நாகப்பாம்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோவை மாவட்டம்</a> சூலூர் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், இன்று (சனிக்கிழமை) அதிகாலை தனது பைக்கை ஓட்டுவதற்காக வந்துள்ளார். அவர் பைக்கை ஸ்டார்ட் செய்வதற்காக அதன் சாவி துளையில் சாவியை நுழைக்க முயன்றார்.</p><p>அப்போது, சாவி துளையின் உள்ளே பதுங்கியிருந்த சிறிய அளவிலான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">நாகப்பாம்பு </a>ஒன்று திடீரென தலையை நீட்டி வெளியே எட்டிப்பார்த்தது. இதைக் கண்டு நிலைகுலைந்து போன பைக் ஓட்டுநர், அலறியடித்துக் கொண்டு பைக்கிலிருந்து இறங்கினார். சாவியை நுழைத்திருந்தால் பாம்பு கடித்திருக்கக்கூடும் என்பதால், அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.</p><h2>பாம்பு மீட்பு</h2><p>இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பைக்கின் முன் பகுதியை லாவகமாகப் பிரித்து, உள்ளே மறைந்திருந்த நாகப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர். </p><h2>பாம்பை காட்டில் விடுவித்தல்</h2><p>பின்னர், மீட்கப்பட்ட அந்த நாகப்பாம்பு எந்தவித காயமுமின்றி, மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இக்காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தீயணைப்பு துறையினரின் எச்சரிக்கை</h2><p>மழை மற்றும் குளிர் காலங்களில் வெப்பத்தைத் தேடி பாம்புகள் வாகனங்களின் எஞ்சின், சீட்டின் அடிப்பகுதி மற்றும் சிறிய துளைகளுக்குள் தஞ்சமடைவது வழக்கம். எனவே, வாகனங்களை எடுப்பதற்கு முன், அவற்றை நன்கு தட்டிப் பார்த்துவிட்டு, கவனமாக சோதித்த பின்பே பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Kovai | Snake | பைக்கில் சாவி போட முயன்றபோது எட்டிப்பார்த்த நாகப்பாம்பு..பதறிப்போன டிரைவர் <a href="https://t.co/84XlLmchmH">https://t.co/84XlLmchmH</a> <a href="https://x.com/hashtag/kovai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#kovai</a> <a href="https://x.com/hashtag/snake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#snake</a> <a href="https://x.com/hashtag/thanthitv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thanthitv</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2101227428618395926?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>‘20 ஆண்டுகளில் இந்தியாவின் ஜி.டி.பி. ரூ.3.65 லட்சம் கோடியாக உயரும்’ - அஜித் தோவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indias-gdp-will-rise-to-rs-365-lakh-crore-in-20-years-ajit-doval</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indias-gdp-will-rise-to-rs-365-lakh-crore-in-20-years-ajit-doval#comments</comments><guid isPermaLink="false">dc365966-e5c7-42c6-b5be-6e9177ff3717</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:13:24 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:13:24.586Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,அஜித் தோவல்,Ajit Doval,GDP,ஜி.டி.பி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/6ti91a3z/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/6ti91a3z/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>டேராடூன்,</p><p>உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள ஐ.ஐ.டி. கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-</p><p>“மாணவர்களாகிய நீங்கள், மாற்றத்தை உருவாக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வருவது உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பாகும். உங்கள் எதிர்காலம் மிகுந்த நம்பிக்கைக்குரியதாக அமைந்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன; நாடு ஒரு சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்கிறது.</p><p>மாணவர்கள் தங்கள் வாழ்வில் பகவான் ராமரைப் போல் துணிச்சலுடன் திகழ வேண்டும். பகவான் ராமரின் துணிச்சலான குணத்தை கருத்தில் கொண்டே, அரக்கர்களை அழிப்பதற்காக முனிவர் விஸ்வாமித்திரர் அவரை தேர்ந்தெடுத்தார்.</p><p>2047-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை 'அம்ரித் கால்' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள நிலையில், இது உண்மையிலேயே ஒரு அற்புதமான காலம் ஆகும். இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) என்பது, 4.015 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. இது அடுத்த 20 ஆண்டுகளில் 38 டிரில்லியன் டாலராக(ரூ.3.65 லட்சம் கோடியாக) உயரும். </p><p>நான் ஆரம்பக் காலங்களில் சிக்கிமில் பணியாற்றியபோது, ​​வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான மூன்று மந்திரங்களை ஒரு பழங்குடியினத்தவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். முதல் மந்திரம் - நாம் தற்போது எங்கே இருக்கிறோம் என்பதை அறிவது; இரண்டாவது - நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதை அறிவது; மூன்றாவது - அங்கு சென்று திரும்புவதற்கான பாதையை அறிவது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>உசிலம்பட்டியில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம்... அதிகாரிகள் நேரில் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/usilampattis-maternal-uncle-gold-ring-scheme-officials-inspect-in-person</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/usilampattis-maternal-uncle-gold-ring-scheme-officials-inspect-in-person#comments</comments><guid isPermaLink="false">1affcfc8-a381-4498-acd5-54f718dba89b</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:10:11.746Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Usilampatti,உசிலம்பட்டி,அதிகாரிகள் ஆய்வு,Officials inspect,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,Thai Maman Gold Ring Scheme</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/v58jvcps/41.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/v58jvcps/41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உசிலம்பட்டி,</p><p>உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட  தலைமை மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.</p><h2>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.</p><h2>ஆய்வு</h2><p>தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை  மதுரை, உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட  தலைமை மருத்துவமனையில் வரும் 28-ஆம் தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கும் நிலையில் அங்கு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் திட்ட இயக்குநர் உமா தலைமையிலான அதிகாரிகள் நேரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு</a> செய்தனர்,</p>]]></content:encoded></item><item><title>கும்பகோணம் நாட்டு மருந்து கடையில் தீ விபத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-accident-at-a-traditional-medicine-shop-in-kumbakonam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-accident-at-a-traditional-medicine-shop-in-kumbakonam#comments</comments><guid isPermaLink="false">d939a238-6969-4c25-a941-12043ea63018</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:57:00 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:57:00.823Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire accident,தீ விபத்து,தீயணைப்பு வீரர்கள்,கும்பகோணம்,Kumbakonam,medical shops,நாட்டு மருந்து கடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/32limsuf/17.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கடையில் தீப்பற்றி எரியும் காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ கும்பகோணம் நாட்டு மருந்து கடையில் தீ விபத்து.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/32limsuf/17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்,</p><p>கும்பகோணத்தில் உள்ள நாட்டு மருந்து கடை ஒன்றில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.</p><h2>திடீர் தீ விபத்து</h2><p>கும்பகோணத்தின் முக்கிய பகுதியான ராமசாமி கோவில் சன்னதி தெருவில் பிரபல நாட்டு மருந்து கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) மதியம் வழக்கம்போல் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென கடையின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அங்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மூலிகைகள்</a> மற்றும் உலர் பொருட்கள் அதிகம் இருந்ததால், தீ நொடிப் பொழுதில் கடை முழுவதும் வேகமாக பரவி, அசுர வேகத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>தீயணைப்பு படை விரைவு</h2><p>இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தீயணைப்பு வீரர்கள்</a>, பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் சமயோசித செயலால், தீ அருகிலுள்ள மற்ற வணிக வளாகங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.</p><h2>சேத விபரங்கள்</h2><p>இந்த விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த அரிய வகை மூலிகைகள், நாட்டு மருந்துகள் மற்றும் மர சாமான்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாகின. சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிர்ஷ்டவசமாக கடையில் இருந்த ஊழியர்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக வெளியேறியதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.</p><h2>போலீசார் விசாரணை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ விபத்து</a> மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து உள்ளூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">kumbakonam | fire | incident கும்பகோணத்தில் தீ விபத்து <a href="https://t.co/XquuRVkXM7">https://t.co/XquuRVkXM7</a> <a href="https://x.com/hashtag/kumbakonam?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#kumbakonam</a> <a href="https://x.com/hashtag/fire?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#fire</a> <a href="https://x.com/hashtag/incident?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#incident</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2101228724683522347?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் இந்திய பாதுகாப்புப் பொறியியல் சேவையின் 77-வது ஆண்டுவிழா கொண்டாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/77th-anniversary-celebration-of-indian-defence-engineering-service-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/77th-anniversary-celebration-of-indian-defence-engineering-service-in-chennai#comments</comments><guid isPermaLink="false">0e3ddc4b-5d6a-452a-b1d1-8349e1dd7d7d</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:48:35 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:48:35.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,service,Defence,Engineering,சேவை,பொறியியல்,இந்திய பாதுகாப்பு படை,In Chennai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/oket8nr8/40.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/oket8nr8/40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் உள்ள இந்திய பாதுகாப்புப் பொறியியல் சேவை (IDSE) அதிகாரிகள், இச்சேவையின் 77-வது நிறுவன நாளை கொண்டாடினர். இச்சேவையானது, இந்திய ராணுவப் பொறியியல் சேவையின் (MES) கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு சிவில் பணியாளர் பிரிவாகும்.</p><h2>கட்டமைப்பு வசதி</h2><p>ராணுவப் பொறியியல் சென்னை பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் ஈஸ்வர் தத் இந்நிகழ்ச்சியில் பேசுகையில், பொறியியல் திறன், சிறந்த தலைமைத்துவம், பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் அர்ப்பணிப்புமிக்க சேவை ஆகிய பெருமைமிக்க பாரம்பரியத்தை இந்திய பாதுகாப்புப் பொறியியல் சேவை (IDSE) தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது என்றார். </p><h2>பொறியியல் நடைமுறை</h2><p>2047-க்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முன்னேறி வரும் நிலையில், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற உள்கட்டமைப்பை உருவாக்கவும்,  ஆயுதப் படைகளின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஐ டி எஸ் ஈ அதிகாரிகள் மேம்பட்ட தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பொறியியல் நடைமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அனைத்து ஐ டி எஸ் ஈ அதிகாரிகளுக்கும், குடும்பத்தினருக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இச்சேவை தனது சிறந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, தேசக் கட்டமைப்புப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.</p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரியில் ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shortage-of-aavin-milk-in-kanyakumari-public-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shortage-of-aavin-milk-in-kanyakumari-public-alleges#comments</comments><guid isPermaLink="false">f3f18288-ed62-4f00-91fe-2db59b1c35fa</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:44:35 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:44:35.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,Aavin,ஆவின்,milk,பால்,தட்டுப்பாடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pbdg17hn/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மூடப்பட்ட ஆவின் பாலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pbdg17hn/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரியில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><h2>ஆவின் பால் தட்டுப்பாடு</h2><p>கன்னியாகுமரி மற்றும் குளச்சல் பகுதிகளில் உள்ள ஆவின் பாலகங்கள் காலை நேரத்தில் மட்டுமே செயல்படுவதாகவும், மாலை நேரங்களில் திறக்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, ஆரஞ்சு நிற<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D"> ஆவின் பால் </a>பாக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனால் தினமும் ஆவின் பால் வாங்கும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், தேவைக்கேற்ப ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படாததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>எனவே, பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு போதுமான அளவில் ஆவின் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யவும், குறிப்பாக மாலை நேரங்களிலும் ஆவின் பாலகங்கள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று<a href="https://www.dailythanthi.com/topic/பொதுமக்கள்-கோரிக்கை"> பொதுமக்கள் கோரிக்கை</a> விடுத்துள்ளனர். அதேபோல், குளச்சல் பகுதியில் உள்ள ஆவின் பாலகங்களின் செயல்பாட்டை முறைப்படுத்தி, தடையின்றி பால் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: காந்தி கிராமம் நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-breakfast-scheme-minister-jagadeeswari-inspects-gandhigram-middle-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-breakfast-scheme-minister-jagadeeswari-inspects-gandhigram-middle-school#comments</comments><guid isPermaLink="false">0ea7b82f-5c8a-4e4d-9758-6394aac361bf</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:16:12 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:16:12.373Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,காலை உணவுத் திட்டம்,breakfast scheme,ஜெகதீஸ்வரி,அமைச்சர் ஜெகதீஸ்வரி,Jagadeeswari,Kamarajar Breakfast Scheme,Minister Jagadeeswari</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/mzhe6n7r/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஜெகதீஸ்வரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/mzhe6n7r/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு, காந்தி கிராமம் சென்னை நடுநிலைப்பள்ளியில் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். </p><h2>பள்ளியில் அமைச்சர் ஆய்வு</h2><p>இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் வருகின்ற 22.09.2026 அன்று அடையாறு மண்டலம், காந்தி கிராமம் சென்னை நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு இப்பள்ளியில் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி இன்று (19.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.</p><p>இந்த ஆய்வின்போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ம.மரியம் பல்லவி பல்தேவ், சமூக நல இயக்குநர் டாக்டர் ரா.பிருந்தா தேவி, இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-tarapuram-by-elections-final-list-of-candidates-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-tarapuram-by-elections-final-list-of-candidates-released#comments</comments><guid isPermaLink="false">4eb9be41-a7f6-488a-b24a-7247f9f3d862</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:08:44 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:08:44.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,மதுராந்தகம்,Tarapuram,தாராபுரம்,candidates,by-elections,Madhurandakam,Final list release,இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/3mh6zkru/39.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/3mh6zkru/39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>மதுராந்தகம்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.</p><h2>தாராபுரம்</h2><p>அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கியது. கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன்படி, த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடந்தது. இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.</p><h2>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</h2><p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D">இறுதி வேட்பாளர் பட்டியல் </a>வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27-ஆக ஆனது. தாராபுரம் தொகுதியில் 14 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 22 பேர் போட்டியிடுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: பெயிண்ட் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-mini-truck-carrying-paint-overturns-driver-critically-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-mini-truck-carrying-paint-overturns-driver-critically-injured#comments</comments><guid isPermaLink="false">1eff7ade-2acf-42aa-b6db-453bfd54438d</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:05:08 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:05:08.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,Thoothukudi,தூத்துக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/nl31y594/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/nl31y594/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் பெயிண்ட் வாளிகளை ஏற்றிச் சென்ற மினி லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக் கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அந்த மினி லாரியை மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டிச் சென்றார். </p> <p>இந்த விபத்தில் லாரியில் ஏராளமான பிளாஸ்டிக் வாளிகளில் வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் சாலையில் கொட்டி ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. விபத்தில் ஓட்டுநர் சக்திவேல் படுகாயமடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த சக்திவேலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p> <p>சாலையில் சிதறிக் கிடந்த பெயிண்ட் வாளிகளை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றிய நிலையில், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் சாதி ரீதியாக பேருந்து நிலையத்தில் மாணவர்கள் மோதல்: 10-க்கும் மேற்பட்டோர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-based-clash-between-students-at-nellai-bus-stand-over-10-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/caste-based-clash-between-students-at-nellai-bus-stand-over-10-arrested#comments</comments><guid isPermaLink="false">46d2ec1d-b76b-4bdb-a7a6-5abfcc072c8b</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:52:00 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:52:00.042Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,students,மோதல்,பேருந்து நிலையம்,bus stand,fight,மாணவர்களிடையே</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/yz92xkz5/35.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ நெல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ பிளஸ்-2 மாணவரை கட்டையால் அடித்த சக மாணவன் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-28/yz92xkz5/35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>சாதி ரீதியாக நெல்லை பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>மாணவர்களிடையே மோதல்</h2><p>திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் தினமும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருப்பது வழக்கம். இந்த நிலையில், தச்சநல்லூர், கரிசல்குளம், பிராஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களில் சிலர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">இன்ஸ்டாகிராமில்</a> சாதி ரீதியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்துள்ளனர். </p><p>இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த முன்விரோதம் காரணமாக பேருந்து நிலையத்தில் மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அது கைகலப்பாக மாறியது.</p><h2>விசாரணை</h2><p>இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை மடக்கி பிடித்தனர். சிலர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். </p><p>கைது செய்யப்பட்ட அனைவரும் 16 முதல் 17 வயதுடைய சிறார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மோதலுக்கான காரணம் மற்றும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: பாலியல் உறவுக்கு அழைத்த நபர் - நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-young-woman-stabbed-after-trusting-man-who-invited-her-for-sexual-relations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-young-woman-stabbed-after-trusting-man-who-invited-her-for-sexual-relations#comments</comments><guid isPermaLink="false">74f2681c-ea4e-447c-8983-d6eb7b676a6c</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:43:25 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:43:25.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/e28e9yo5/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/e28e9yo5/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையை சேர்ந்த 31 வயது பெண்ணை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி அரும்பாக்கத்தில் உள்ள விடுதிக்கு அந்த பெண் சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த நபர், அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.</p><p>ஆனால் அப்பெண் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். காயமடைந்த பெண்ணை பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரும்பாக்கம் போலீசார், பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8 கொலைகள்: சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழப்பு - கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-murders-in-just-the-last-24-hours-law-and-order-has-completely-collapsed-mp-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-murders-in-just-the-last-24-hours-law-and-order-has-completely-collapsed-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">65d45250-21ba-4117-8b93-8aebfad523cf</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:32:08 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:32:08.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0zhlla55/kanimoli.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0zhlla55/kanimoli.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். </p><h2>24 மணிநேரத்தில் 8 கொலைகள்</h2><p>இது தொடர்பாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி.</p><h2>காவல்துறை செயல்படுகிறதா?</h2><p>ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate -ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டில் </a>மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதல்-அமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவக் கட்டமைப்பை பாதுகாக்க நடவடிக்கை தேவை: சிபிஎம் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-needed-to-protect-medical-infrastructure-cpm-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-needed-to-protect-medical-infrastructure-cpm-insists#comments</comments><guid isPermaLink="false">2e747b53-a96d-4138-a8f8-875b3bdf2644</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:30:47 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:30:47.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>medical,சிபிஎம்,மருத்துவம்,CPM,Infrastructure,கட்டமைப்பு,p shanmugam,பெ சண்முகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/r9yce7n8/pshanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/r9yce7n8/pshanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மருத்துவக் கட்டமைப்பை பாதுகாக்க நடவடிக்கை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பெ. சண்முகம்</a> கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் B.Sc (Naning) படிப்புக்கான 7 செவிலியர் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை கடந்த 16.9.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த செவிலியர் கல்லூரிகளில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய மையங்களில் உள்ள செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை ஒன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி உள்ளார்.</p><p>அந்த வழிகாட்டுதல் நெறிமுறையில் செவிலியர் கல்லூரிகளில் உருவாக்கப்படும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் கண்டிப்பாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும், நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை என்பதையும், அரசாங்கத்திற்கு ஓய்வூதியம் அல்லது வேறு எந்தத் தொடர் பொறுப்புகளும் இதனால் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும். அதன் பின்னரே செவிலியர் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>அரசாணை</h2><p>இது அரசு பணியில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் நிரந்தரம் செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானதாகும். அதேபோன்று படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் செவிலியர்களும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை  என்றும் 11.09.2026 அன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>மருத்துவ கட்டமைப்பு</h2><p>இவையெல்லாம் படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களை அதிலும் குறிப்பாக பெண்களை அந்த கூலிக்கு தான் அமர்த்துவேன் என்று சொல்வதாகும். அதேபோன்று, இந்தியாவில் மிகச்சிறந்த கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைப்பதாகும். இது சாதாரண ஏழை எளிய மக்களின் அரசு மருத்துவமனை பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும்.</p><p>எனவே மேற்கண்ட இரண்டு அரசாணைகளையும் அரசு திரும்பப்பெற்று செவிலியர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கும், செவிலியர் ஆசிரியர்களையும் நிரந்தர பணியாளர்களாக்குவதற்கும் உரிய உத்தரவு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையம்; தனியாருக்கு தாரை வார்ப்பதை விசிக ஏற்காது - வன்னி அரசு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-vck-will-not-accept-the-handover-of-the-project-to-a-private-company-vanniarasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-airport-vck-will-not-accept-the-handover-of-the-project-to-a-private-company-vanniarasu#comments</comments><guid isPermaLink="false">d7b7cb02-3c5c-479a-8cc4-184c0c4245c8</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:29:39 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:29:39.520Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,சென்னை விமான நிலையம்,திமுக அரசு,வன்னி அரசு,minister vanni arasu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pmffu29x/vck33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சென்னை விமான நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/pmffu29x/vck33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>சென்னை விமான நிலையம் தனியாருக்கு தாரை வார்ப்பது குறித்து தமிழக அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> கூறியுள்ளார்.</p><p>சென்னை விமான நிலைய நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் </p><p>விழுப்புரத்தில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><h2>அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை</h2><p>பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டவுடன், அன்றே சட்டப்பேரவையில் இதுகுறித்து விரிவாக்கம் செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே சென்னை விமான நிலையத்தின் ஒரு பகுதி தனியாருக்குத்தான் தாரை வார்க்கப்பட்டுள்ளது, அப்பொழுதே விசிக எதிர்ப்பு தெரிவித்தோம். கொள்கை அடிப்படையில் தனியாருக்கு தாரை வார்ப்பதை விசிக ஏற்காது. தமிழக அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.</p><h2>திமுக அரசியல் செய்கிறது</h2><p>மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. திமுகதான் அரசியல் செய்கிறது.</p><p>உண்மையில் திமுகவுக்கு பட்டியலின மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், அம்பேத்கர் அயலக கல்வி உதவித் திட்டத்தில் 601 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், 153 பேருக்குதான் கொடுத்திருக்கிறார்கள். மீதியுள்ள மாணவர்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறார்கள்.</p><h2>வேங்கைவயல்</h2><p>வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்கு போட்டது திமுகதான். அதில் பாதிக்கப்பட்ட ஒரு காவலர் என்னிடம் வந்து புகார் தெரிவித்தார். எங்களுடைய தலைவர் திருமாவளவன், அப்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் சென்று இதுபற்றி கேள்வி எழுப்பினார். பட்டியலின மாணவர்கள், இளைஞர்களுக்கு மிக மோசமாக வஞ்சகம் செய்த அரசு திமுக அரசு. வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?  - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-guarantee-for-the-students-lives-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-guarantee-for-the-students-lives-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">137206b6-a2d1-4c6e-830a-fc647572eec0</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:18:21 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:18:21.605Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/o5kn2y6e/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/o5kn2y6e/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பள்ளி வளாகங்களைச் சுற்றிலும் தாராளமாகக் கிடைக்கும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்? என வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.</p><h2>மாணவர்கள் கொல்லப்படும் அவலம்</h2><p>இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இளைய தலைமுறையினர் அடுத்தடுத்து வன்முறைக்குப் பலியாகி உயிரிழக்கும் தொடர் அவலங்கள் தமிழக மக்களைப் பெருங்கவலையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன. கல்வி பயில வேண்டிய இளங்குருத்துகள் கொடூரமாகக் கொல்லப்படும் அவலம் நீடிப்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.</p><p>நடப்பு 2026 ஜூன் முதல் செப்டம்பர் 18 வரை அரங்கேறியுள்ள மரணங்கள் அரசின் கண்களுக்குத் தெரியவில்லையா?</p><ul><li><p>சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பயின்ற 15 வயது மாணவர் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கொடூரம்.</p></li><li><p>புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி அருகே 4-ஆம் வகுப்பு பயின்ற 9 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை.</p></li><li><p>தேனி மாவட்டத்தில் போடி அருகே பள்ளிக் குழந்தைகள் இருவர் கிணற்றில் தள்ளிக் கொலை.</p></li><li><p>கோவை மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சக மாணவர் குழுவால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழப்பு.</p></li><li><p>சென்னையில் திருவொற்றியூரில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர வழக்கில் 12 பள்ளி மாணவர்கள் கைது.</p></li><li><p>சேலம் மாவட்டத்தில் கே.ஆர்.தோப்பூரில் 10-ஆம் வகுப்பு மாணவர் மர்ம மரணம்.</p></li></ul><p>இவை ஒவ்வொன்றும், மாணவர் சமுதாயத்தின் மனங்களில் வன்முறைக் கலாச்சாரம் எந்த அளவிற்குப் புரையோடிப்போயுள்ளது என்பதற்கான சாட்சியங்கள்.</p><h2>போதைப்பொருள் புழக்கம்</h2><p>பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் பத்திரமாக வீடு திரும்புவார்களா? என்ற மரண பயத்தில் பெற்றோர் வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி வளாகங்களைச் சுற்றிலும் தாராளமாகக் கிடைக்கும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்? குற்றங்கள் நிகழ்ந்த பிறகு ஆட்களைப் பிடித்து அடைப்பது மட்டுமே காவல்துறையின் சாதனையா? உளவுத்துறையும் காவல்துறையும் செயலிழந்து கிடக்கின்றனவா?</p><p>வெற்று அறிக்கைகளோடு கடந்து செல்லாமல், போர்க்கால அடிப்படையில் தீர்வு காணத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?</p><h2>காவல்துறை ரோந்து கட்டாயமாக்கப்பட வேண்டும்</h2><p>போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், கல்வி நிலையங்களின் சுற்றுவட்டாரத்தில் போதைப்பொருள் விற்பனையை வேரறுக்கத் தயவுதாட்சண்யமற்ற அதிரடி வேட்டை நடத்தப்பட வேண்டும்.</p><p>வெறும் கண்துடைப்பாக இல்லாமல், உளவியல் நிபுணர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அடங்கிய ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழுக்கள் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உடனடியாகக் களமிறக்கப்பட வேண்டும்.</p><p>பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் காவல்துறை ரோந்துப் பணிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.</p><p>ஒவ்வொரு மாணவரின் உயிரும் ஒரு குடும்பத்தின் எதிர்காலம். அரசின் நிர்வாக அலட்சியத்தால் எதிர்காலத் தலைமுறையினர் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை வேடிக்கை பார்க்க முடியாது.</p><p>மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூர்: மீன் வறுவல், குழம்பு லஞ்சமாக கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-village-administrative-officer-suspended-after-demanding-fish-fry-and-fish-curry-for-lunch</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-village-administrative-officer-suspended-after-demanding-fish-fry-and-fish-curry-for-lunch#comments</comments><guid isPermaLink="false">5b9080d2-3119-4773-9947-c9b866176e96</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:16:47 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:16:47.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,லஞ்சம்,சப்-கலெக்டர்,பணியிடை நீக்கம்,suspended,விஏஓ,village administrative officer,fish curry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/oh1dr0gl/16.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மீன் வறுவல்- மீன் குழம்பு- கார்த்திக்]]></media:title><media:description type="html"><![CDATA[ கரூரில் மீன் வறுவல், குழம்பு லஞ்சமாக கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/oh1dr0gl/16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>கரூர் மாவட்டம் நிலத்தின் சிட்டா நகல் வழங்க லஞ்சமாக மீன் வறுவல் மற்றும் குழம்பு பார்சல் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் ஒருவரை கரூர் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணியிடை நீக்கம் </a>செய்து உத்தரவிட்டுள்ளது.</p><h2>சிட்டா நகல் கேட்டு விண்ணப்பம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கரூர் மாவட்டம்</a>, கடவூர் தாலுகாவுக்குட்பட்ட தேவர்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வங்கிக் கடன் பெறுவதற்காக தன் நிலத்தின் 'சிட்டா' நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.</p><h2>லஞ்சம்</h2><p>விண்ணப்பம் குறித்து பேசுவதற்காக விவசாயியை மொபைல் மூலம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) கார்த்திக் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போனில் பேசியது விவசாயியின் மகன் என்று தெரியாமல், "பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பிரண்ட்ஸ் ஹோட்டலில் இருந்து 2 மீன் வறுவல், தனியாக குழம்பு பார்சல் வாங்கி வா" என்று கார்த்திக் லஞ்சமாக கேட்டுள்ளார்.</p><h2>வைரலான ஆடியோ</h2><p>விஏஓ -வின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயியின் மகன், "அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தரவில்லையா?" என்று கார்த்திக்கை நோக்கி கேள்வி எழுப்பியதுடன், அந்த முழு உரையாடலையும் ஆடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியது.</p><h2>அதிரடி நடவடிக்கை</h2><p>இந்த வினோதமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்ச விவகாரம்</a> மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, குளித்தலை சப்-கலெக்டர் சேஷத்ரி அவர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் மீனவர்களின் வலியைப் புரிந்துகொள்ள வேண்டும் - எல். முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-should-understand-the-pain-of-fishermen-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-should-understand-the-pain-of-fishermen-l-murugan#comments</comments><guid isPermaLink="false">1dfe2476-cb7c-4376-92e3-9cb00f4afdee</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:07:55 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:07:55.411Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,BJP,விஜய்,சென்னை,L. Murugan ​,new Secretariat,புதிய தலைமைச்செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/84ozx999/murugan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ எல். முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/84ozx999/murugan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் சுறா படத்துல மீனவனா நடிச்சா மட்டும் போதாது.மீனவர்களின் வலியைப் புரிந்துகொள்ள வேண்டும் என மத்திய இணை மந்திரி எல்.  முருகன் கூறியுள்ளார்.</p><p>மீனவர்கள் வாழ்வாதாரமே கடலில்தான் இருக்கிறது. மீனவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும்.<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>, மீனவராக சுறா படத்தில் நடித்தார். மீனவராக நடித்தால் மட்டும் போதாது. மீனவர்களின் உண்மையான வலியை புரிந்தவராக இருக்க வேண்டும்</p><p>கடலை விட்டால் மீனவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. அப்படியான மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள புதிய தலைமைச் செயலக அறிவிப்பை பட்டினப்பாக்கத்தில் இருந்து கைவிட வேண்டும். சென்னையில் எவ்வளவோ இடம் இருக்கிறது. அந்த இடங்களை பார்த்து கட்டிக்கொள்ளலாம்.</p><p>நவோதயா பள்ளிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்பது தான் என் வேண்டுகோள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-infection-confirmed-in-253-people-in-tamil-nadu-yesterday-alone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dengue-infection-confirmed-in-253-people-in-tamil-nadu-yesterday-alone#comments</comments><guid isPermaLink="false">6890bc5b-b63f-43f3-a138-fd35f5680b68</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:02:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:02:11.695Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,டெங்கு,Dengue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/et33lvfc/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/et33lvfc/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. வெயில் மற்றும் மழை என காலநிலை மாற்றத்தால், டெங்குவை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.</p><p>குறிப்பாக தினசரி, 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,830 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகப்படுத்தவும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-should-be-made-aware-of-dengue-fever-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-should-be-made-aware-of-dengue-fever-anbumani#comments</comments><guid isPermaLink="false">bc233442-96a7-4fc3-91f9-8a41b50d86ef</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:00:56 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:00:56.800Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Dengue Fever,விழிப்புணர்வு,Anbumani Ramadas,Awareness,டெங்கு காய்ச்சல் பாதிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/muxiipsd/10.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/muxiipsd/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பாமக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ் </a>கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாலும்,  இதுவரை 9  பேர் உயிரிழந்திருப்பதாலும் மக்களிடம் பெரும் அச்சமும், கவலையும் ஏற்பட்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவம் அளிப்பது ஒருபுறம் இருக்க, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?  டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன?  அவை தென்பட்டால்   என்ன செய்ய  வேண்டும்  என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தான் இன்றைய முதன்மைத் தேவை ஆகும்.</p><h2>உயிரிழப்புகள்</h2><p>தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இதுவரை 16,830 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையே இவ்வளவு என்றால் குறைந்தபட்சம் இதை விட 10 மடங்கு பேருக்கு  டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, அது குறித்த புரிதலும்,  விழிப்புணர்வும் இல்லாமல் சாதாரண காய்ச்சலுக்கான மருத்துவத்தை பெற்றுக் கொண்டிருக்கக் கூடும். மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலுக்கான  மருத்துவத்தை பெறாததால் தான்  உயிரிழப்புகள்  அதிகரித்திருக்கின்றன.</p><h2>விழிப்புணர்வு</h2><p>அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் மூவர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.  அவர்களில் கடைசியாக இறந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் டெங்கு அல்ல... விஷக்காய்ச்சல் என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் அலட்சியமும்,  விழிப்புணர்வு இல்லாமையும் தான்.  மாணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு  2 அல்லது 3 நாள்களில் குணமடையாத  நிலையில், மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால் காய்ச்சலின்  தன்மையைக் கண்டறிந்து  மருத்துவம் அளித்திருக்க முடியும். அதை செய்யுமாறு அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கத் தவறியது தான் உயிரிழப்புக்கு காரணம் ஆகும். டெங்கு காய்ச்சல் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கான சிகிச்சை வசதிகளும், மருந்துகளும்  அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் உள்ளன.  டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும்.</p><p>பொதுமக்களும்,  அரசு அமைப்புகளும்  இணைந்து நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.</p><h2>அரசு நடவடிக்கை</h2><p>டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை முதன்மை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு விளக்கம் தேவை - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/clarification-sought-regarding-the-letter-on-the-change-in-chennai-airport-administration-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/clarification-sought-regarding-the-letter-on-the-change-in-chennai-airport-administration-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">ee583f63-9f30-4078-a62a-5215c588e014</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:49:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:49:11.389Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/aw32l2ly/vanathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/aw32l2ly/vanathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு விளக்கம் தேவை முதல்-அமைச்சரே என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.</p><h2>நிர்வாகத்தை மாற்ற கோரி கடிதம்</h2><p>இது தொடர்பாக, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வரலாற்றுச் சிறப்பு மிக்க, பழமை வாய்ந்த சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய AAI நிர்வாகத்தை மாற்றி வேறு ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க தவெக அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது?</p><p>சென்னை விமான நிலையம் கடந்த 2024-25 அறிக்கையின் படி சுமார் 2.24 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டு லாப வருவாயுடன் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாகவும் செயல்பட்டு வருகிறது.</p><h2>முதல்-அமைச்சர் விளக்கம் தரவேண்டும்</h2><p>இதுமட்டுமன்றி தற்போது விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்காக AAI ரூ. 2,467 கோடி நிதியில் வளர்ச்சித் திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது. இப்படி தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுவதிலும், சரக்குகள், பயணிகளைக் கையாள்வதிலும் சிறப்புடன் செயல்பட்டுவரும் AAI நிர்வாகத்தினை மாற்ற வேண்டிய அவசியம் தவெக அரசுக்கு என்ன? இதுகுறித்து மக்களுக்கு தெளிவான விளக்கத்தை முதல்-அமைச்சர் தரப்பிலிருந்து தரவேண்டியது கடமை.</p><p>மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்ட கடிதம எனது தற்போது வெளிவந்திருப்பதன் கால தாதமம் ஏன்? ஏற்கனவே பரந்தூர் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு தமிழகத்தை 10 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய தவெக அரசு அடுத்து பொதுத்துறை நிறுவனங்கள் மீதும் கைவைத்திருப்பது இந்த அரசு உண்மையாகவே மக்களுக்கான அரசாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.</p><h2>கடிதத்தினை வாபஸ் பெற வேண்டும்</h2><p>சென்னை விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பான எந்த முடிவும் பயணிகள் நலன், ஊழியர்கள் நலன், <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுத்துறை </a>முதலீடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே எடுக்கப்பட வேண்டும். முதல்-அமைச்சர் விஜய் அனுப்பிய இக்கடிதத்தினை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“கூண்டில் சிக்கியது ஆட்கொல்லி புலி..”: மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்னென்ன.? வனத்துறை விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-eating-tiger-trapped-in-a-cage-what-measures-were-taken-forest-department-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-eating-tiger-trapped-in-a-cage-what-measures-were-taken-forest-department-explains#comments</comments><guid isPermaLink="false">29413766-b0e2-4bcc-9991-a8401675d53a</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:39:53 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:39:53.927Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Forest Department,வனத்துறை,நீலகிரி,புலி,Gudalur,கூடலூர்,Vandalur,வண்டலூர்,Nilgiri,ஆட்கொல்லி புலி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/aefwwns8/kala.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/aefwwns8/kala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர்,</p><p>கூடலூர் அருகே ஓவேலி வனச்சரகத்தில் ஆட்கொல்லி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">புலி </a>பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. </p><h2>மனித-விலங்கு மோதல்</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலளாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் ஆகியோரின் மேற்பார்வையில், முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரினக்காப்பாளர் அவர்களால் கூடலூர் வனக்கோட்டம், ஓவேலி வனச்சரகத்தில் மனித-விலங்கு மோதலில் ஈடுபட்ட புலியைப் பிடிப்பதற்கான உரிய உத்தரவுகள் மற்றும் தொழில் நுட்ப வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு, 21-08-2026 அன்று புலியைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.</p><h2>305 கண்காணிப்புக் கேமராக்கள்</h2><p>அதன் அடிப்படையில் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், முதுமலை புலிகள் காப்பகம், மாவட்ட வன அலுவலர், உதவி வனப் பாதுகாவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வன கால்நடை மருத்துவர்கள், விரைவு மீட்புக் குழு கொண்ட 105 வனப் பணியாளர்கள் இப்பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் முதுமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த புலிக் கண்காணிப்பாளர்களும் (Tiger Trackers), வன கால்நடை மருத்துவர்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><p>சந்தேகிக்கப்படும் புலியைப் பிடிப்பதற்காக 305 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, புலியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் மூன்று வெப்ப உணரி ட்ரோன்கள் (thermal drones) இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு, சந்தேகிக்கப்படும் புலியின் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.</p><h2>நேற்று அதிகாலை</h2><p>குறிப்பாக வனத்துறை அமைச்சர் அவர்கள் 11.09.2026 அன்று நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை சந்தித்து பாதுகாப்பாக இருக்குமாறும், புலியை விரைவில் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.</p><p>இப்பணியானது முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரினக் காப்பாளர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் 28 நாட்களாக எவ்விதத் தொய்வுமின்றி மேற்கொள்ளப்பட்டு வந்தது.</p><p>இந்நிலையில், புலியைப் பிடிப்பதற்காக கூடலூர் வனச்சரகப் பகுதியில், அல்லலா எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொறிக் கூண்டில் (18.09.2026) அன்று அதிகாலை சந்தேகிக்கப்படும் புலியானது சிக்கியது.</p><h2>வண்டலூர்</h2><p>புலி உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக கால்நடை மருத்துவரின் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வழிகாட்டுதல் குழுவின் ஆய்வு மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் பிடிப்பட்ட புலியானது 12 வயதுக்கு மேற்பட்டதாக இருப்பதாலும் அதன் சிங்கபற்கள் தேய்மானம் அடைந்திருப்பதாலும் உடல் நலிவுற்ற நிலையில் உள்ளதால் மேற்கொண்டு அதனை அடர்வனப்பகுதியில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரியவருகிறது. அதன் அடிப்படையில் புலியானது தொடர் சிகிச்சை மற்றும் மருத்துவ மேலாண்மைக்காக சென்னை வண்டலூரில் உள்ள மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மதுரையில் காவல் நிலையம் அருகே நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-hacked-to-death-in-the-middle-of-the-road-near-a-police-station-in-madurai-after-being-chased-down</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-hacked-to-death-in-the-middle-of-the-road-near-a-police-station-in-madurai-after-being-chased-down#comments</comments><guid isPermaLink="false">08f96f1d-a31c-4b1d-a340-a2991cbcbd2c</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:36:14 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:36:14.773Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,murder,வெட்டிக்கொலை,ரவுடி,police enquiry,மர்ம கும்பல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/len1vta5/15.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ போலீசார் விசாரணை செய்த காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் காவல் நிலையம் அருகே நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/len1vta5/15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே ரவுடி ஒருவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ரவுடி- நிலுவையில் உள்ள வழக்கு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மதுரை மாவட்டம்</a> சோலை அழகுபுரம் சப்பாணிகோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). 'சப்பாணி சரவணன்' என்று அழைக்கப்படும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் இவர் சிறைக்கும் சென்று வந்துள்ளார். சப்பாணி சரவணன் டீக்கடைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நேரத்தில், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடைக்கு சரவணன் வந்துள்ளார்.</p><h2>வெட்டிக்கொலை</h2><p>அப்போது அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட ஆயுதமேந்திய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D">மர்ம கும்பல்</a>, திடீரென சரவணனை நோக்கிப் பாய்ந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க சரவணன் நடுரோட்டில் அலறியபடி ஓடியுள்ளார். எனினும், விடாமல் துரத்திய அந்த கும்பல், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே அவரை ஓட ஓட விரட்டி பயங்கரமான கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.</p><p>தப்பியோடிய 5 பேர் கொண்ட கொலையாளிகளைப் பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டைநடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் தொடங்கும் அதிகாலை வேளையில், அதுவும் காவல் நிலையம் அருகிலேயே நடந்த இந்த துணிகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">படுகொலை</a> மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை இன்றி தவிப்பு: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/87-crore-youth-are-facing-lack-of-education-and-jobs-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/87-crore-youth-are-facing-lack-of-education-and-jobs-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">d4bbbbb3-cbd4-47b4-a5c1-34e68ec1ae98</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:34:28 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:34:28.359Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,education,மாணிக்கம் தாகூர்,Jobs,இளைஞர்கள்,Manickam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/nplx0309/168.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/nplx0309/168.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி முடங்கியுள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர் எம்.பி. </a>தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>இளைஞர்கள்</h2><p>2014-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு, ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை அள்ளித்தருவோம் என்று இளைஞர்களிடம் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றி வந்துள்ளது. </p><p>கடந்த ஆகஸ்ட் 2026-ல் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி முடங்கியுள்ளனர் என்பதும், 79.6 கோடி பேர் உழைக்கும் சந்தைக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் அதிகாரப்பூர்வமாக அம்பலமானது.</p><p>படித்த பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவீதம் பேருக்கு மட்டுமே தகுதிக்குரிய வேலை கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும், பட்டம் பெற்ற பெண்களிடம் 20.4 சதவீதம் வேலையின்மை நிலவுவதும் மோடி அரசின் விளம்பர அரசியலின் உண்மை முகத்தைக் காட்டியது.</p><h2>நீட்</h2><p>ஒருபுறம் மருத்துவக் கனவைச் சிதைக்கும் மருத்துவ ‘நீட்’ என்றால், மறுபுறம் இளைஞர்களை வேலைக்கே போகவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் சமூக-பொருளாதார ‘நீட்’ நெருக்கடி! தற்போது செப்டம்பர் 2026-ல் மத்திய புள்ளியியல் அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ள மாவட்ட அளவிலான PLFS அறிக்கை, இந்த அவல நிலையை உள்ளூர் அளவில் மேலும் தோலுரித்துள்ளது. </p><p>நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 25 சதவீதக்கும் அதிகமான இளைஞர்கள் கல்வி அல்லது வேலையின்றி முடங்கிக் கிடக்கின்றனர். மொத்தமாக ஆய்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23.7 சதவீதம் பகுதிகளில் 30 சதவீதக்கும் அதிகமான இளைஞர்கள் எவ்வித எதிர்காலமுமின்றித் தவிக்கின்றனர். உ.பி., பீகார், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் பெரும்பாலான மாவட்டங்கள் வேலையின்மையில் தத்தளிப்பதோடு, 75 சதவீதம் மாவட்டங்களில் இளம்பெண்களின் ‘நீட்’ விகிதம் 25 சதவீதத்தை தாண்டியுள்ளது.</p><h2>வேலையின்மை</h2><p>மோடி அரசின் இந்த நிர்வாகத் தோல்வியும் புறக்கணிப்பும் தமிழ்நாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தென் தமிழ்நாட்டின் முதன்மை நகரான மதுரையில் வேலையின்மை விகிதம் 7.0 சதவீதம் ஆக விஸ்வரூபமெடுத்துள்ளது. திருவள்ளூரில் 24.9 சதவீதம், திருச்சியில் 23. 9 சதவீதம், மதுரையில் 23.8 சதவீதம், சென்னையில் 22.4 சதவீதம் என இளைஞர்கள் முறையான வாழ்வாதார வழியின்றி முடங்கியுள்ளனர். கிராமப்புறத் தமிழ்நாட்டில் நிலையான ஊதிய வேலைகள் கிடைக்காமல், 30.4 சதவீதம் குடும்பங்கள் முறைசாரா தினக்கூலி வேலைகளையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். </p><p>இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சியை வழங்குவதாகக் கூறி புதிய கல்விக் கொள்கையைத் (NEP) திணிக்கும் மத்திய அரசு, களத்தில் அவர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது.</p><p>தேசிய அளவில் 8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடியதோடு, மாவட்ட வாரியாகப் பல கோடி இளைஞர்களின் உழைப்பையும் ஆற்றலையும் வீணடித்து நடுத்தெருவில் நிறுத்தியுள்ள மோடி அரசின் பொருளாதாரத் துரோகங்களுக்கு, தங்களின் எதிர்காலத்தை இழந்து தவிக்கும் இந்த இளைய தலைமுறை ஒருபோதும் துணை நிற்காது!</p>]]></content:encoded></item><item><title>சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர கொசு ஒழிப்பு பணி: மாநகராட்சி கமிஷனர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/intensive-mosquito-eradication-work-at-anna-university-campus-in-chennai-corporation-commissioner-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/intensive-mosquito-eradication-work-at-anna-university-campus-in-chennai-corporation-commissioner-inspects#comments</comments><guid isPermaLink="false">da48952a-5334-4e3c-ab78-73179f132b0c</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:29:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:29:33.108Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,inspection,Anna University,அண்ணா பல்கலைக்கழகம்,Mosquito,Corporation Commissioner,control,சுகாதார பணி,கொசு ஒழிப்பு பணி,மாநகராட்சி கமிஷனர் ஆய்வு,Health work</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/8azjwubn/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர கொசு ஒழிப்பு பணி: மாநகராட்சி கமிஷனர் ஆய்வு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/8azjwubn/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> கிண்டி, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">அண்ணா பல்கலைக்கழக</a> வளாகத்தில் தேங்கிய குப்பைக் கழிவுகளை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். </p><h2>கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு</h2><p>பெருநகர சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">மாநகராட்சி கமிஷனர்</a> டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இன்று (19.9.2026) கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர சுகாதாரப் பணிகளையும், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கொசு ஒழிப்பு</a> நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். </p><h2>சுகாதார பணியில் 100 பணியாளர்கள்</h2><p>அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேங்கிய குப்பைக் கழிவுகளை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுகாதாரப் பணிகளில்</a> 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். </p><h2>மாணவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்</h2><p>இந்த நடவடிக்கைகளை மாநகராட்சி கமிஷனர் சமீரன் ஆய்வு செய்து, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தோட்டக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்திடவும், கொசுப்புழுக்கள் உருவாவதைத் தடுக்கும் விதத்தில் தண்ணீர் தேங்காமல் அகற்றிடவும், கொசு ஒழிப்பு புகை பரப்பும் பணியினை மேற்கொள்ளவும், மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சிகிச்சைகளை சிறப்பாக வழங்கிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். </p><p>மேலும், சென்னையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இதுபோன்ற சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அலுவலர்கள் தொடர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆய்வு </a>மேற்கொண்டு இந்த நடவடிக்கைகளை கண்காணித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். </p><p>இந்த ஆய்வின்போது அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன், மாநகர நல அலுவலர் டாக்டர் ஜெகதீசன், இணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் செந்தில்குமார், தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் டாக்டர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். </p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் பரப்புரைக்காக தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/40-star-speakers-announced-by-thaveka-for-by-election-campaigning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/40-star-speakers-announced-by-thaveka-for-by-election-campaigning#comments</comments><guid isPermaLink="false">76f1fa03-98db-423b-b92f-8979ebb5d189</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:15:01 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:15:01.701Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,இடைத்தேர்தல்,by-elections</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/dnz532lm/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/dnz532lm/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தா மன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள் ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. அதேபோல, தாராபுரம் தொகுதியில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.  </p>  <p>இன்று (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். எனவே இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், இனி பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த நிலையில், இடைத்தேர்தல் பரப்புரைக்காக தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, காதர் மொய்தீர் உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.</p>  ]]></content:encoded></item><item><title>மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா: நிலம் எடுப்பு அறிவிப்பை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசு: சி.பி.ஐ. வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/melma-sipcot-industrial-park-tamil-nadu-government-withdraws-land-acquisition-notification-cpi-welcomes-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/melma-sipcot-industrial-park-tamil-nadu-government-withdraws-land-acquisition-notification-cpi-welcomes-the-move#comments</comments><guid isPermaLink="false">ae8d65a0-36a5-4cbc-bef6-6014a29c8c36</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:10:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:10:33.517Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,தமிழகம்,சி.பி.ஐ.,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,CPI,சிப்காட் தொழில் பூங்கா,Tamilnadu government,Communist Party,நிலம் கையகப்படுத்துதல்,Sipcot</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zn9m9rwe/mum.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zn9m9rwe/mum.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>செய்யாறு மேல்மா கிராமத்தில் தொழிற் பூங்காவிற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) வரவேற்பு தெரிவித்துள்ளது</p><h2>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி</h2><p>திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் செய்யாறு தொழிற்பூங்கா 3வது நிலை விரிவாக்கத்திற்காக, மேல்மா உள்பட 11 கிராமத்தில் சிப்காட் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பு திரும்பப்பெறுவதாக சிப்காட் மேலாண் இயக்குநர் அறிவித்தார். </p><p>இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">மு.வீரபாண்டியன் </a>வரவேற்பு தெரிவித்துள்ளார்.</p><h2>தமிழ்நாடு அரசு</h2><p>இதுதொடபாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. </p><p>திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா நிலை-3 விரிவாக்க திட்டத்திற்காக, 22.16 ஹெக்டேர் (சுமார் 54 ஏக்கர்) புன்செய் நிலங்களை கையகப்படுத்த கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டத்தின் கீழ் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.</p><p>விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து பல்வேறு  போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த நில எடுப்பு அறிவிக்கையை VI(1)/443(d-6)2026 திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.</p><p>அதே வேளையில், போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>