<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 29 Jul 2026 09:31:17 +0000</lastBuildDate><item><title>தவெகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு: விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/o-panneerselvam-decides-to-join-tvk-mla-will-resign-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/o-panneerselvam-decides-to-join-tvk-mla-will-resign-soon#comments</comments><guid isPermaLink="false">1371a8a0-666e-43ed-a51f-abb13b334b59</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:45:52 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:45:52.384Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திமுக,DMK,ஓ.பன்னீர்செல்வம்,O Panneer selvam,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/mxgqkl7n/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/mxgqkl7n/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க.வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.</p><h2>அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்</h2><p>தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.  அ.தி.மு.க.வை விட்டு வெளியேறிய நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் வழியில் அவரும் த.வெ.க.வில் சென்று இணைவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அவருடைய மகன் ரவீந்திரநாத்தின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது. </p><h2>தி.மு.க.வில் பதவி வழங்கப்படவில்லை</h2><p>ஆனால், சட்டசபை தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் பக்கம் இழுத்தது. சட்டசபை தேர்தலிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில், த.வெ.க. ஆட்சி அமைத்ததால், தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டியதாகிவிட்டது.</p><p>தி.மு.க.வில் கடந்த பிப்ரவரி மாதமே ஓ.பன்னீர்செல்வம் இணைந்த நிலையில், இதுவரை அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. தேர்தலில் தி.மு.க.வும் தோல்வி அடைந்தால், அடுத்து என்ன செய்வது என்று ஓ.பன்னீர்செல்வம் யோசித்து வருகிறார்.</p><h2>த.வெ.க.வில் இணைய முடிவு</h2><p>இந்த நிலையில், தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், த.வெ.க.வில் சென்று இணைவதே சிறப்பு என்று ரவீந்திரநாத் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.</p><p>அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, த.வெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.</p><h2>த.வெ.க. சம்மதித்தது ஏன்?</h2><p>அமைச்சர்கள் இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கூற, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், தென்மாவட்டங்களில்தான் த.வெ.க. வலுகுறைந்து காணப்படுகிறது. அதற்கு, முக்கிய அரசியல் முகம் அங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, அந்தக் குறையை ஓ.பன்னீர்செல்வம் மூலம் தீர்த்துக்கொள்வதுடன், கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்று த.வெ.க. தலைமை கருதுகிறது.</p><h2>விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா</h2><p>முன்னாள் முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால், த.வெ.க.வில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.</p><h2>நாடாளுமன்ற தேர்தல்</h2><p>2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாராயணபுரம், வேளச்சேரி ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணி: அமைச்சர் என். ஆனந்த் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/narayanapuram-velachery-lake-dredging-and-restoration-work-minister-n-anand-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/narayanapuram-velachery-lake-dredging-and-restoration-work-minister-n-anand-inspects#comments</comments><guid isPermaLink="false">aedd74fe-1375-4a2b-802f-536446faaec9</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:57:08 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:57:08.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Pallikaranai Swamp,ஆய்வுInspection,Restoration works,வேளச்சேரியில்,அமைச்சர் என். ஆனந்த்,Minister N. Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/pehlei1c/2531.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் என். ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/pehlei1c/2531.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாராயணபுரம், வேளச்சேரி ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணியை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் என். ஆனந்த்</a> ஆய்வு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்து களப்பணியை ஆய்வு செய்தார்.</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவுப்படி இன்று காலை 9.00 மணியளவில் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பள்ளிக்கரணை நாராயணபுரம் கிராமம், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு, காலை 11.00 மணியளவில் சென்னை மாவட்டம், வேளச்சேரி வட்டம், வேளச்சேரி கிராமம், வேளச்சேரி ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கள ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்கள்.</p><h2>நாராயணபுரம் ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் – 14, வார்டு எண் 186 எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் அமைந்துள்ள நாராயணபுரம் ஏரியின் பெரும்பாலான பகுதிகள் நகரமயமாதலின் விளைவாக குடியிருப்பு பகுதிகளாக மாற்றமடைந்துள்ளதால், தற்போது இந்த ஏரியானது நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருக்கவும், சுற்று சூழல் பாதுகாக்கவும் பயன்பட்டு வருகிறது. நாராயணபுரம் ஏரியானது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள கடைகோடி ஏரியாகும். ஆகையால், இந்த ஏரிக்கு மேற்புறத்தில் அமைந்துள்ள தென் சென்னை பகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை அணை ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, பல்லாவரம் ஏரி ஆகிய ஏரிகளின் உபரிநீரானது நாராயணபுரம் ஏரியில் வடிந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு சென்றடையும் வகையில் அமைந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்த ஏரியில் ஆகாயத்தாமரைகள், மிதவைத் தாவரங்கள் மற்றும் மிதவைப் பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.</p><p>நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்ளப்படுவதால் சென்னை பெருநகராட்சிக்குட்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ள பாதிப்புகள் குறைக்கப்படும்.</p><h2>வேளச்சேரி ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி</h2><p>வேளச்சேரி ஏரியானது பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் – 13, வார்டு எண் 175 உட்பட்ட, சென்னை மாவட்டம், வேளச்சேரி வட்டம், வேளச்சேரி கிராம புல எண்: 123/1 பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் ஆயக்கட்டு பகுதிகள் அனைத்தும் நகரமயமாதலின் விளைவாக பல வருடங்களுக்கு முன்னரே அடர்ந்த குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் அடைந்துவிட்டதால், விவசாய பணிகள் ஏதுமின்றி இந்த ஏரி தற்போது நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருக்கவும், சுற்று சூழல் பாதுகாக்கவும் பயன்பட்டு வருகிறது.</p><p>தற்போது இந்த ஏரியில் 22.40.0 ஹெக்டேரில் மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இவ்விதமாய் தேக்கி வைக்கப்படும் நீர் சுற்றுப்பகுதிகளுக்கு நிலத்தடிநீரை மேம்படுத்தும் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஏரியில் ஆகாயதாமரை படர்ந்துள்ளதால் ஏரியின் கொள்ளளவு மற்றும் நீர் கடத்தும் திறன் குறைந்த நிலையில் உள்ளது.</p><p>இவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">தமிழ்நாடு முதல்-அமைச்சர்</a> உத்தரவுப்படி, நீர்வளத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் பெருநிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன், வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள, வேளச்சேரி ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருட்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி மழைக்காலங்களில் மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படவுள்ளது.</p><p>பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு முடிக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.</p><h2>பங்கேற்பு</h2><p>இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சரும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான குமார், சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.சரவணன், நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃப்தாப் ரசூல், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமை பொறியளார் ஜானகி, பாலாறு வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் மாரியப்பன்,காஞ்சிபுரம் கீழ் பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியளார் விஜயகுமார், செங்கல்பட்டு கீழ் பாலாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியளார் பாஸ்கரன், உதவி பொறியளார்கள் பிரஸ்னேவ் பிரபு, குஜராஜ், சாய்சரன், சேதுராணி மற்றும் பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பணி துவக்க விழாவை சிறப்பித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் பா.ம.க. தலைவராக பொதுக்குழுவில் தேர்வானார் அன்புமணி: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-re-elected-as-pmk-leader-at-the-general-council-meeting-key-resolutions-passed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-re-elected-as-pmk-leader-at-the-general-council-meeting-key-resolutions-passed#comments</comments><guid isPermaLink="false">3311bcb4-208d-435c-bfd7-83db68fd6089</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:48:40 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:48:40.599Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,தமிழகம்,Mamallapuram,மாமல்லபுரம்,பொதுக்குழு கூட்டம்,தீர்மானங்கள்,Pattali Makkal Katchi,பாட்டாளி மக்கள் கட்சி,பாமக தலைவர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/tu7wopoo/esmk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/tu7wopoo/esmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரம்,</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பாமக பொதுச் செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலுக்கு முன் ராமதாஸ் - அன்புமணி பிரிந்து இருந்த நிலையில், தேர்தலுக்கு பின் மீண்டும் இணைந்தனர்.</p><h2>பொதுக்குழு கூட்டம்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.</p><p>இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 31 தீர்மானங்கள் அந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.   </p><h2>நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன..?</h2><p>1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ச.வடிவேல் இராவணன், ம. திலகபாமா ஆகியோருக்கு வாழ்த்துகள்.</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் ச.வடிவேல் இராவணன், பொருளாளர் ம.திலகபாமா மற்றும் பிற நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டுமே 28-ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம்  தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அவர்களின் பதவிக்காலம்   இந்திய தேர்தல் ஆணையத்தால் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. </p><p>நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியுடன் நிறைவடைவதால், அப்பதவிகளுக்கு கட்சி அமைப்பு விதி எண்கள் 26, 27 ஆகியவற்றின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் அளவிலான தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டன. </p><p>அதைத் தொடர்ந்து மாநில பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தலைவர் பதவிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் பதவிக்கு ச.வடிவேல் இராவணன், பொருளாளர் பதவிக்கு ம.திலகபாமா ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அவர்கள் மூவரும் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பா.ம.க. அமைப்புத் தேர்தலை நடத்த அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அவர்களின் தேர்வை இப்பொதுக்குழு அங்கீகரிப்பதுடன், அவர்களின் பணி சிறக்க  நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.</p><h2>அன்புமணி ராமதாஸ்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை 25-ஆம் நாள் தொடங்கி நவம்பர் 9-ஆம் நாள் வரை மொத்தம் 109 நாள்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது. </p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வீசிய அலை பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக உள்ள மாவட்டங்களில் நுழையாமல் தடுத்ததும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் சதிக்கு எதிராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட 4 நாள் விழிப்புணர்வு பரப்புரை பயணம் உழவர்களிடம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. </p><p>இத்தகைய முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியை மேலும் வலுப்படுத்துவார்; அதிகாரத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் இந்த பொதுக்குழுக் கூட்டம், அதற்காக அவர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவளிக்க உறுதியேற்கிறது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/nq5fe05x/ysire.jpg" /></figure><h2>மருத்துவர் அய்யா</h2><p>2. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் சமூகநீதி, அரசியல் சாதனைகளை இப்பொதுக்குழு பாராட்டுகிறது; நன்றி தெரிவித்துக் கொள்கிறது!</p><p>தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அண்மையில் 88-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில் அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என இப்பொதுக்குழு வாழ்த்துகிறது.</p><p>தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் 6 வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்து, 100 கோடிக்கும் கூடுதலான மக்களுக்கு சமூகநீதி வழங்கியவர்; சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியவர்; சமச்சீர் கல்வி  கொண்டு வந்தவர்; மருத்துவம், வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்து ஏராளமான முன்னெடுப்புகளை மேற்கொண்டவர்; சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர்; ஈழத்தமிழர் நலனுக்காக எண்ணற்ற  போராட்டங்களை முன்னெடுத்தவர்; தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களாலும் மதிக்கப்பட்டவர் என ஏராளமான பெருமைகள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு உண்டு. தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளுக்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><h2>முதல்-அமைச்சர் விஜய்</h2><p>3. தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று கவர்னர் உரை வாயிலாக அறிவித்த <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்களுக்கும்,  அறிவிக்கச் செய்த பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும் - சமூகநீதி சர்வேயை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.              </p> <h2>மேகதாது அணை</h2><p>4. மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் சதித்திட்டத்தை முறியடிப்பதற்காக காவிரி பாசன மாவட்டங்களில் 4 நாள்கள் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  அவர்களுக்கு பாராட்டுகள்.            </p><p>5. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம்: புதிய நடுவர் மன்ற கோரிக்கையையும், கர்நாடக அரசுடன் நேரடியாக பேச்சு நடத்தும் முடிவையும் கைவிட்டு, தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.                </p><p>6. விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வெளிச்சந்தையில் கடன் வாங்கியாவது கூட்டுறவு வங்கிகளில் அரசு செலுத்த வேண்டும்.                </p><p>7. மாணவர்களின் உயிர்களைப் பறிக்கும் நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் சட்டத்தை மீண்டும் இயற்றி, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற அனைத்து அரசியல் கட்சிகளும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும்.  </p><h2>மாநிலப் பட்டியலில் கல்வி            </h2><p>8. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும்  மாற்ற வேண்டும்; 50 ஆண்டு கால அநீதிக்கு  இப்போதாவது மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்.           </p><p>9. தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் செலுத்த வேண்டிய  நிலவரியை முழுமையாக ரத்து செய்வதுடன், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.            </p><p>10. வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாத உழவர்களுக்கு ஏக்கருக்கு  ரூ.10 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.               </p> <h2>போதைப்பொருள் நடமாட்டம்</h2><p>11. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5000 வீதம் கொள்முதல்  விலை வழங்க வேண்டும்.               </p><p>12. பள்ளிக்கரணை உள்ளிட்ட 26,883 சதுப்பு நிலங்களையும் உடனடியாக எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும் .                </p><p>13. ரெஸ்டோ பார்களை திறக்கும் கேடான திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.                 </p><p>14. தமிழ்நாட்டில் இன்னும் கட்டுப்படுத்தப்படாத போதைப்பொருள்கள் நடமாட்டம்: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.               </p><p>15. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்: சிங்கப்பெண் சிறப்புப் படைகளை வலுப்படுத்த வேண்டும்.    </p><h2>கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை         </h2><p>16. தமிழ்நாட்டிலிருந்து கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது; கடந்த காலகனிமவளக் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.               </p><p>17. 12 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். கட்டுமானத்  தேவைகளுக்கு மணல் இறக்குமதியை ஊக்குவிக்க வேண்டும்.                 </p><p>18. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்பும் வகையில் அடுத்த ஓராண்டில் ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.                </p><p>19. தமிழ்நாட்டில் தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% பணிகளை  தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.                </p><p>20. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை  செயல்படுத்த வேண்டும்.               </p> <h2>விண்ணைத் தொடும் அரிசி விலை</h2><p>21. அரசு பள்ளிகளின் வீழ்ச்சியை தடுக்க வேண்டும்; அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.                </p><p>22. பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுக்களில் யு.ஜி.சி பிரதிநிதியைச் சேர்க்கக் கூடாது; பல்கலைக்கழக சட்டங்களில் இதற்காக திருத்தம் செய்யக் கூடாது.               </p><p>23. பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும்; தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலையை கட்டுப்படுத்த  ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்.                </p><p>24. விண்ணைத் தொடும் அரிசி விலையால்  ஏழை மக்கள் அவதி. விலையைக் கட்டுப்படுத்த  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.               </p><p>25. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயார். கிராம அளவில் மக்களை சந்தித்து ஆதரவைத் திரட்ட வேண்டும்.               </p><p>26. தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்; 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத்  தொடங்க வேண்டும்.  </p><h2>உள்இடஒதுக்கீடு              </h2><p>27. மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி.களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான ரோகிணி ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உடனடியாக செயல்படுத்த வேண்டும்.                </p><p>28. காவிரி பிரச்சினையில் புதுச்சேரியின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.               </p><p>29. புதுவையில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயல்பட்டு வரும் மதுக்கடைகள், சாராயக்கடைகளை மூட வேண்டும்.               </p><p>30. புதுவையில்  தனியார் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்பில்  75 விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும்.               </p><p>31. பாட்டாளி மக்கள் கட்சியின் கணக்குத் தணிக்கையாளர் அரங்க. சுப்புரத்தினம் மறைவுக்கு  இரங்கல்; புதிய தணிக்கையாளராக திருவாளர்கள் பி.எஸ். மூர்த்தி அசோசியேட்ஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு ஒப்புதல். </p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்ய சென்னைஅடையாறை சேர்ந்த திருவாளர்கள் பி.எஸ்.மூர்த்தி அசோசியேட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்திற்கு இந்தப் பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக உரிமையை பாதுகாக்க திமுக-கம்யூனிஸ்டுகள் கைகோர்க்கும்: உதயநிதி ஸ்டாலின்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-communists-join-hands-to-protect-tamil-nadu-rights-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-communists-join-hands-to-protect-tamil-nadu-rights-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">41b46519-f4ba-46be-8968-9cb6f2af3f78</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:47:32 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:47:32.494Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/cvo0zxvx/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/cvo0zxvx/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p>சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்வில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்<a href="https://www.dailythanthi.com/"> நல்லகண்ணு</a>வின் மார்பளவு திருவுருவச் சிலையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து “அம்மாச்சி - கற்பனையின் முதல் ஆசிரியர்” என்ற நூலை வெளியிட்டார்.</p><h2>அதன்பின்னர் விழாவில் பேசியதாவது:-</h2><p>தோழர் நல்லகண்ணுவின் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் நல்லகண்ணுவுக்கு சிலை அமைத்ததன் மூலம் யாரை நாம் கொண்டாட வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது. மக்களுக்கான களப் போராளிகளை கொண்டாடுவதை விட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுப்பவர்களை சமூகம் அதிகம் கொண்டாடுகிறது. </p><h2>கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது  தனிப்பாசம்</h2><p>2016-ஆம் ஆண்டு திமுக வெற்றி வாய்ப்பை இழந்த போதும்,  கருணாநிதி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, "திமுக ஆட்சியை இழந்ததை விட, தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத சட்டப்பேரவை அமைந்திருக்கிறது. அதுதான் எனக்கு வருத்தம்” என தெரிவித்தார். அந்தளவுக்கு கம்யூனிஸ்ட்  தலைவர்கள் மீது  கருணாநிதிக்கு தனிப்பாசம் இருந்தது.</p><p>கருணாநிதி வழியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கம்யூனிஸ்ட்  கட்சியினர் மீது தனிப் பாசம் கொண்டுள்ளார்.  தமிழ் மொழி உரிமையையும், தமிழ்நாட்டு உரிமையையும் பாதுகாக்க திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றும் ஓரணியில் கைகோர்த்து நிற்கும். தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக எது நடந்தாலும் திமுக-கம்யூனிஸ்ட் ஓரணியில் நிற்கும். </p><p>நீட் எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. நீட் நுழைவுத் தேர்வு என்று வந்ததோ அன்றிலிருந்தே திமுக எதிர்த்து வருகிறது. 2021 திமுக ஆட்சி அமைந்ததும் நீட் பாதிப்பை கண்டறிய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு அமைத்தார். அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நீட் விலக்கு வேண்டி திமுக அரசு சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை கொண்டு வந்தோம். </p><p>அதற்கு கவர்னர் ஒப்புதல் தராத நிலையில், இதற்காக சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியது திமுக தான். நீட் தேர்வு போராட்டம் முடிந்துவிட்டதாக கருதவில்லை. இப்போதுதான் இன்னும் வீரியமாக ஆரம்பித்துள்ளது. நீட் தேர்வை முற்றிலும் ஒழிப்பதற்கான தொடக்கமாகத் தான் இந்தப் போராட்டம் உள்ளது. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆவடியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட தூய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-in-avadi-hospitalized-after-eating-food-containing-a-fallen-lizard</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-in-avadi-hospitalized-after-eating-food-containing-a-fallen-lizard#comments</comments><guid isPermaLink="false">0560afd4-ecb6-44c5-86ac-c18949b95605</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:41:15 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:41:15.757Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sanitation workers,ஆவடி,தூய்மை பணியாளர்கள்,பல்லி,Aavadi,பல்லி விழுந்த உணவு</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/8sq7mbgy/39.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ சாம்பாரில் பல்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்தது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/8sq7mbgy/39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை</a> ஆவடியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட தூய்மை பணியாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h2>சாம்பாரில் பல்லி</h2><p>சென்னை, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்கா பகுதியில் இன்று காலை தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. பணியாளர்கள் உணவை உட்கொண்டிருந்தபோது, வழங்கப்பட்ட சாம்பாரில் இறந்த நிலையில்<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu"> பல்லி</a> ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><h2>திடீர் உடல்நலக்குறைவு</h2><p>அதற்குள் அந்த உணவை சாப்பிட்ட பல பணியாளர்களுக்கு அடுத்தடுத்து திடீர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வாந்தி</a>, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டன. </p><h2>ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை</h2><p>இதில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக  சிகிச்சைக்காக ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். </p><h2>பணியாளர்கள் குமுறல்</h2><p>"ஏற்கனவே ஒருமுறை வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தன, இன்று சாம்பாரில் பல்லி விழுந்துள்ளது; எங்களுக்கு வழங்கப்படும் உணவில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது" என பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தங்களது வேதனையைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-have-lost-151-highly-specialized-government-doctors-mk-stalin-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-have-lost-151-highly-specialized-government-doctors-mk-stalin-condemns#comments</comments><guid isPermaLink="false">160209c3-0751-4f99-a26a-e00ca545d214</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:15:50 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:15:50.020Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,government doctors,Medical study,மருத்துவ படிப்பு,அரசு மருத்துவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/aeai8p4q/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/aeai8p4q/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை மத்திய அரசுக்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, அரசின் நிர்வாக தோல்வியே காரணம் என மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அரசின் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்ய எதிர்ப்பு கூட தெரிவிக்க முடியாமல் போயுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.</p><p><strong>இதுகுறித்து முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</strong></p><p>ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது.  ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.</p><p>தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்</p><p>* தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?</p><p>* மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?</p><p>* நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?</p><p>* அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?</p><p> தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?</p><p>* 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?</p><p>இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது. த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் சாலையோரம் தூங்கியவர் கார் மோதி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-sleeping-on-the-roadside-dies-after-being-hit-by-car-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-sleeping-on-the-roadside-dies-after-being-hit-by-car-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">9f215a41-ff30-4b53-ac6a-3eae9b33a870</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:56:34 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:56:34.929Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Car,Death,உயிரிழப்பு,hit,sleep,தூக்கம்,man,சாலையோரம்,கார் மோதி,Road side</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/v4c574gj/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலையோரம் தூங்கியவர் கார் மோதி உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/v4c574gj/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் கிரேட் காட்டன் ரோட்டில் உள்ள கடை வாசலில் சாலையோரம் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF">கார் மோதி</a>யதில், அவர் சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>.</p><h2>மனநலம் பாதிப்பு</h2><p>தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த முத்துமாலை மகன் சேகர் (வயது 50). இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநல பாதிப்புக்குள்ளான சேகர், வீட்டை விட்டு வெளியேறி சிவன் கோவில் அருகிலும் சாலையோரங்களிலும் தங்கி உணவருந்தி வந்துள்ளார்.</p><h2>கார் மோதி உயிரிழப்பு</h2><p>இந்த நிலையில் சேகர் நேற்று இரவு கிரேட் காட்டன் ரோட்டில் உள்ள ஓர் இட்லி கடை முன்பாக படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலையில் அப்பகுதியில் வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>போலீசார் ஆய்வு</h2><p>இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.</p><h2>விசாரணை</h2><p>அதில் சேகர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த இடத்தில் வெள்ளை நிற கார் ஒன்று பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய வெள்ளை நிற கார் மற்றும் அதை ஓட்டி வந்தவர் யார் என்பது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்: மதிய உணவில் விரைவில் சிக்கன் பிரியாணி..! அமைச்சர் சொன்ன தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-government-school-students-chicken-biryani-in-the-midday-meal-soon-minister-shares-the-update</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-government-school-students-chicken-biryani-in-the-midday-meal-soon-minister-shares-the-update#comments</comments><guid isPermaLink="false">a1321761-d5db-4aa7-9f69-a88a20929a78</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:45:11 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:45:11.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,TN govt,School students,Tamilnadu government,lunch,அரசு பள்ளி மாணவர்கள்,Government Schools,Chicken Biryani,சிக்கன் பிரியாணி,மதிய உணவு,CM Vijay,தவெக அரசு,TVK Government,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="720" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ulom3m11/viji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன் பிரியாணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ulom3m11/viji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் விரைவில் சிக்கன் பிரியாணி வர இருப்பதாக அமைச்சர் ராஜ் மோகன் கூறினார்.</p><h2>மதிய உணவு திட்டம்</h2><p>தமிழ்நாட்டில் 37,595 அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில், 52 லட்சத்து 75 ஆயிரத்து 203 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 2 லட்சத்து 25 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். </p><p>இதுதவிர, 7,289 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 1,046 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளும், 65 மத்திய அரசு பள்ளிகளும் உள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் மூலம் சுமார் 46 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதில், காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் 19 லட்சத்து 34 ஆயிரம் தொடக்கப் பள்ளி மாணவர்களும் அடங்குவார்கள். </p><h2>விரைவில் சிக்கன் பிரியாணி  </h2><p>தற்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை போன்ற கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் அனைத்து நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கப்படுகிறது. </p><p>இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/tvk">த.வெ.க. அரசு</a> மதிய உணவில் அதிரடி மாற்றம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><p>அதன்படி, விரைவில் மதிய உணவுடன் வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. </p><h2>பட்ஜெட்டில் வரும் அறிவிப்பு</h2><p>இதுகுறித்த தகவலை, சென்னையில் இன்று நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். </p><p>மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து கருத்துகள் பெறப்பட்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் முடிவை அறிவிப்பார் என்றும் அவர் கூறினார். </p><h2>வாரம் ஒருமுறை</h2><p>இதனால், சட்டசபையில் ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் அறிவிப்பும் இடம்பெறும் என்று தெரிகிறது. </p>]]></content:encoded></item><item><title>கோவில்பட்டியில் அரிவாளால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு: 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-attacked-with-a-sickle-in-kovilpatti-police-net-2-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-attacked-with-a-sickle-in-kovilpatti-police-net-2-people#comments</comments><guid isPermaLink="false">48185e44-862e-4d0f-9271-9cbe4f7e00e4</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:28:35 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:28:35.192Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,அரிவாள் வெட்டு,Youth,வாலிபர்,Death,உயிரிழப்பு,Kovilpatti,கோவில்பட்டி,2 பேர்,2 people,போலீசார் வலைவீச்சு,police net sweep,slashed with sickle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/1917tqq9/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரிவாளால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/1917tqq9/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தகராறில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">அரிவாளால் வெட்டப்பட்டு </a>பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>தகராறு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (வயது 30). கடந்த 23-ம் தேதி அன்று மாலை நேரத்தில், பாரதிநகர், அம்பேத்கர் மண்டபம் அருகே ஞானதிரவியத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜா, முத்துராஜ் ஆகிய 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.</p><h2>அரிவாள் வெட்டு; வாலிபர் படுகாயம்</h2><p>வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த மகாராஜா, முத்துராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஞானதிரவியத்தை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><h2>வாலிபர் உயிரிழப்பு; 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">வாலிபர் உயிரிழந்தார்</a>. இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மகாராஜா, முத்துராஜ் ஆகிய 2 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க இளையராஜா வேண்டுகோள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-2027-ilaiyaraaja-urges-the-public-to-participate-enthusiastically</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-2027-ilaiyaraaja-urges-the-public-to-participate-enthusiastically#comments</comments><guid isPermaLink="false">6c5ab32e-19b9-4115-b56c-26312574019f</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:27:47 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:27:47.044Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,இளையராஜா,Census,Ilaiyaraaja,மக்கள்தொகை கணக்கெடுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/vmcqzp25/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/vmcqzp25/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் பிறகு 2021-ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கணக்கெடுப்பு பணி தள்ளிவைக்கப்பட்டது.</p><h2>தமிழகத்தில் கணக்கெடுப்பு</h2><p>இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம். முதன்முறையாக டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 30 வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று விபரங்கள் சேகரிக்க உள்ளனர்.  இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 33 கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>இளையராஜா வேண்டுகோள்</h2><p>இந்த நிலையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என இளையராஜா வேண்டுகோள் விடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, </p><p>இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறுகிறது. இந்தக் காலப்பகுதியில் https://se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>அதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறும் வீட்டுப் பட்டியலிடல் (HLO) கட்டத்தில் வருகை தரும் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.</p><p>துல்லியமான மக்கள்தொகைத் தகவல்கள் நாட்டின் சிறந்த திட்டமிடல் மற்றும் வளர்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. அனைவரும் இணைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம் .</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்-அமைச்சர் விஜய்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-handed-over-appointment-orders-to-126-individuals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-handed-over-appointment-orders-to-126-individuals#comments</comments><guid isPermaLink="false">b1dde81b-4976-4d51-8bd1-cc7394e0e4da</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:27:19 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:27:19.070Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,Government job,பணி நியமன ஆணைகள்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/05b4z2jp/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/05b4z2jp/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் வழங்கினார். இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>126 நபர்களுக்கு அரசு பணி</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (29.07.2026) தலைமைச் செயலகத்தில், மனித வள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.</p><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி-I பணிகளுக்கு 28 துணை ஆட்சியர்கள், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 19 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 15 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் 6 உதவி ஆணையர்கள் (தொழிலாளர்) என மொத்தம் 78 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் (தொழிலாளர்) பணியிடம் முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-I-இல் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.</p><h2>ஆணைகளை வழங்கினார் முதல்-அமைச்சர்</h2><p>மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் மூலம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், 40 உதவி பொறியாளர்கள், 6 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் 2 நூலகர்கள் தரம்-II என மொத்தம் 48 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>இந்நிகழ்ச்சியில், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வே.க. ராஜீவ், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அனுராக் மிஷ்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறிய நகரங்களில் மெட்ரோ திட்டத்துக்கு அனுமதித்தது எப்படி? - ரெயில்வே தொழிற்சங்கம் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-was-approval-granted-for-metro-projects-in-small-cities-railway-trade-union-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-was-approval-granted-for-metro-projects-in-small-cities-railway-trade-union-questions#comments</comments><guid isPermaLink="false">bedd4dfe-83c8-4257-8500-1c7ede38e8c7</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:12:57 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:12:57.112Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,கோவை,தமிழகம்,Madurai,மதுரை,ரெயில் சேவை,மெட்ரோ ரெயில்,Metro Rail,MetroRail,Kovai,தொழிற்சங்கம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/bjkhchvp/small.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/bjkhchvp/small.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>வடமாநிலங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட நகரங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/metrorail">மெட்ரோ ரெயில்</a> திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது எந்த அடிப்படையில் என்று டி.ஆர்.பி.யூ. தொழிற்சங்கம் கேள்வி எழுப்பியது.</p><h2>மதுரை, கோவை</h2><p>மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டம் மக்கள் தொகை குறைவாக இருப்பதாக கூறி மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. அதற்கு பதிலாக பஸ் போக்குவரத்தை மேம்படுத்தவும் அறிவுறுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. </p><p>அதாவது, திருமங்கலம்-ஒத்தக்கடை இடையே 31 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிக்கு ரூ.11,360 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p><h2>மீண்டும் நிராகரிப்பு</h2><p>இதற்காக மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையை தமிழக அரசின் சென்னை மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் நிறுவனம் மத்திய அரசிடம் வழங்கியது. ஆனால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தமிழக அரசு இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதற்கிடையே, மீண்டும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் நிராகரித்துள்ளது.</p><h2>தமிழகத்துக்கு இழைக்கும் அநீதி</h2><p>இது குறித்து டி.ஆர்.பி.யூ. தொழிற்சங்கத்தின் பொது செயலாளர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை மக்கள் தொகையை காரணமாக காட்டி மத்திய அரசு 2-வது முறையாக நிராகரித்துள்ளது. இது தமிழகத்துக்கு இழைக்கும் அநீதி ஆகும். தொழில்நுட்பரீதியாக காரணங்களை சொல்லாமல், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து திட்டத்தை மறுப்பது ஏற்கத்தக்கது இல்லை.</p><h2>20 லட்சத்துக்கும் குறைவாக..</h2><p>மதுரையின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 20 லட்சத்தை தாண்டியுள்ளது. மெட்ரோ திட்டத்தை தொடங்கி முடிக்கும் போது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மெட்ரோ ரெயில் திட்டம் என்பது மக்கள் தொகையை கொண்டு முடிவு செய்யும் திட்டம் இல்லை. </p><p>ஒரு நகரின் எதிர்கால கட்டமைப்பு வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம், நகர்ப்புற விரிவாக்கம், மக்கள் தொகை உயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய அனைத்து அம்சங்களையும் கொண்டது. தென்தமிழகத்தின் நுழைவுவாயிலாக உள்ள மதுரைக்கு மெட்ரோ திட்டம் கட்டாயமாகும்.</p><h2>கான்பூர், நாக்பூர்</h2><p>ஆனால், உத்தரபிரதேசத்தின் கான்பூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர், மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் ஒடிசாவின் புவனேசுவர் ஆகிய நகரங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ளது. எந்த அடிப்படையில் அங்கு மட்டும் மெட்ரோ திட்டம் அனுமதிக்கப்பட்டது.</p><p>அத்துடன் மெட்ரோவுக்கு பதிலாக பி.ஆர்.டி.எஸ். எனப்படும் பஸ் போக்குவரத்து திட்டத்தை பரிந்துரைத்தது. அதற்கான சாலை கட்டமைப்பு வசதிகள் மதுரையில் இல்லை. எனவே மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. மந்திரி ஆதரவு: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-ministers-support-for-the-karnataka-government-is-like-rubbing-salt-into-the-wound-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-ministers-support-for-the-karnataka-government-is-like-rubbing-salt-into-the-wound-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">c569c28f-5b70-4b74-9bb0-e9b019f4e126</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:37:40 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:37:40.217Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,Udhayanidhi Stalin,காங்கிரஸ்,Congress,Karnataka,கர்நாடகா,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/jjokdnns/manik.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/jjokdnns/manik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a>, எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  </p><p>மத்திய நீர்வளத்துறை இணைமந்திரி ராஜ்பூஷன் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பில் எந்த தடையும் இல்லை என்று பேசியது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. </p> <h2>பா.ஜ.க. மந்திரி</h2><p>5.2.2007 இல் காவிரி நடுவர்மன்றமும், 16.2.2018 இல் சுப்ரீம்கோர்ட்டும் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி காவிரி படுகை மாநிலங்களை பாதிக்கிற வகையில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  பா.ஜ.க. மந்திரி கர்நாடக அரசுக்கு ஆதரவாக பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. </p><h2>காவிரி டெல்டா விவசாயிகள்</h2><p>நடுவர்மன்றம், சுப்ரீம்கோர்ட்டு ஆகியவற்றின் மூலம் தமிழகம் போராடிப் பெற்ற உரிமைகளின் அடிப்படையில் ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வழங்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசு இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு, வழங்க வேண்டிய தண்ணீர் மறுக்கப்படுவதால் காவிரி டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். </p><h2>ஒருமித்த குரலில் எதிர்ப்பு</h2><p>இந்நிலையில் காவிரி நீரின் அளவை நிர்ணயிக்கும் பிலிகுண்டுலுவிற்க்கு 4 கி.மீ. தூரத்திற்கு மேலே கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே ரூபாய் 9,000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தமிழ்நாடு எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளாது. மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால், காவிரிப்படுகை வறண்ட பாலைவனமாக மாற வழிகோலும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், விவசாய சங்கங்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><h2>விரிவான திட்ட அறிக்கை</h2><p>மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு 2018 இல் சுப்ரீம்கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் போது, 2019 நவம்பர் 22 ஆம் தேதி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசிடம் சமர்ப்பித்தது.  விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இது தமிழகத்திற்கு பாஜ.க. அரசு செய்த மிகப்பெரிய துரோகமாகும். இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு சட்டரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிற சூழலில் த.வெ.க.வும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழகத்தின் நலன்களை தாரை வார்த்ததாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பதை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகவே கருத வேண்டும். ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது.</p><h2>உரிமைக்குரல்</h2><p>கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டுமே தவிர, பரஸ்பர குற்றச்சாட்டுக்களை எழுப்புவது தமிழகத்தின் நிலையை பலவீனப்படுத்தும். </p><h2>உரிமை மீட்டெடுப்பு</h2><p>கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் எல்லோருமே தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே தான் கடந்த காலங்களில் பேசியிருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் மேகதாது பிரச்சினையில் அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து தமிழக அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதே நமது உரிமையை மீட்டெடுப்பதற்கு உரிய வாய்ப்பாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மாணவர்களை மிரட்டும் வகையில் பேச்சு: சிங்கப்பெண் அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/singapen-special-task-force-sub-inspector-transferred-for-threatening-students</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/singapen-special-task-force-sub-inspector-transferred-for-threatening-students#comments</comments><guid isPermaLink="false">9d7d1cd2-7028-4e09-b081-2c20f8314d68</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:17:52 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:17:52.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Ariyalur,அரியலூர்,சப்-இன்ஸ்பெக்டர்,Sub Inspector,Singapen Athiradi Padai,சிங்கப்பெண் அதிரடிப்படை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/4tqrd8ky/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/4tqrd8ky/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>அரியலூர்,</p><h2>விழிப்புணர்வு நிகழ்ச்சி</h2><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் அறி வித்த திட்டங்களில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டமும் ஒன்றாகும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. </p><p>அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்டங்களில் தலா 4 போலீசார் கொண்ட 2 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. இதில் அரியலூர் உட்கோட்ட படையில் சிறப்பு பாதுகாப்பு அலுவலராக பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் சுமதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.</p><h2>போக்சோ சட்டம்....</h2><p>அப்போது அங்குள்ள மாணவர்களிடம் '18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந் தைகளிடம் யார் பேசினாலும், ஹாய் என குறுஞ்செய்தி அனுப்பினாலோ அல்லது அவர்களிடம் அசிங்கமாகவோ, அருவருப்பாகவோ பேசினால் போக்சோ சட்டத்தின்கீழ் சிறைக்கு செல்வீர்கள்' என்று மாணவர்களை மிரட்டும் வகையில் அவர் பேசியதாக தெரிகிறது. மேலும் இதனை அவரே வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>அதனை பார்த்த பொதுமக்கள் பலரும், '18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளிடம் பேசினாலே சிறைக்கு செல்வீர்' என பேசியது தவறு என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில், சுமதியை அரியலூர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் பிரிவுக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கோவையில் ரூ.3 கோடி தங்கம் மோசடி: நகைக்கடை உரிமையாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs3-crore-gold-scam-in-coimbatore-jewelry-shop-owner-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs3-crore-gold-scam-in-coimbatore-jewelry-shop-owner-arrested#comments</comments><guid isPermaLink="false">6cee6fab-e531-4964-8489-e4981fc7fcfe</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:04:39 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:04:39.828Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,கைது,Madurai,மதுரை,arrested,gold,fraud,owner,நகைக்கடை உரிமையாளர்,jewelry shop,தங்கம் மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ca4mkqhx/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை மோசடி, கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ca4mkqhx/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவையில் ரூ.3 கோடி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">தங்கம் மோசடி </a>தொடர்பாக மதுரையைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">நகைக்கடை உரிமையாளரை</a> போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர்.</p><h2>ரூ.3 கோடி நகை மோசடி</h2><p>கோவை ராஜவீதி அசோக்நகரை சேர்ந்த ஆனந்தன் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு மதுரையில் நகைக்கடை நடத்தி வரும் சுதர்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தங்க நகைகளைக் கொடுத்தால் 20 நாட்களில் விற்று பணமாகத் தருவதாக சுதர்சன் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை ஆனந்தன் அவரிடம் வழங்கியுள்ளார்.</p><h2>நகைக்கடை உரிமையாளர் கைது</h2><p>ஆனால் அதற்குரிய பணத்தைக் கொடுக்காமல் சுதர்சன் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து ஆனந்தன் அளித்த புகாரின் பேரில், கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதர்சனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு - கர்நாடகா இடையே மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது பிரச்சினை: இதற்கு தீர்வுதான் என்ன? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mekedatu-issue-between-tamil-nadu-and-karnataka-is-escalating-once-again-what-is-the-solution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mekedatu-issue-between-tamil-nadu-and-karnataka-is-escalating-once-again-what-is-the-solution#comments</comments><guid isPermaLink="false">cd11d68e-60d6-4353-a012-7e275d4b5cb9</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:58:24 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:58:24.628Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,தமிழ்நாடு,விஜய்,தமிழகம்,Karnataka,கர்நாடகா,TN govt,D.K.Shivakumar,TN government,மேகதாது அணை,மேகதாது,Mekedatu,Mekedatu dam,மேகதாது திட்டம்,மேகதாது அணை விவகாரம்,மேகதாது விவகாரம்,மேகதாது அணை திட்டம்,மேகதாது அணை பிரச்சினை,Mekedatu Dam Issue,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Chief Minister Vijay,Tamil Nadu Chief Minister Vijay,Mekedadu Dam,Mekedatu Issue,MekedatuDam</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/6gk3iar1/kler.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/6gk3iar1/kler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்பு செய்திகள்</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு - கர்நாடகா இடையே <a href="https://www.dailythanthi.com/topic/mekedatu">மேகதாது அணை</a> பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், இதற்கு தீர்வுதான் என்ன? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். </p><h2>காவிரி நதிநீர் பிரச்சினை </h2><p>கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இருமாநிலங்களுக்கு இடையே பாயும் காவிரி ஆறு 805 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கர்நாடகாவின் தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, அம்மாநிலத்தில் 320 கி.மீ. நீளமும், தமிழ்நாட்டில் 461 கி.மீ. தூரமும், இருமாநில எல்லையில் 24 கி.மீ. நீளமும் பாய்ந்து இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வங்கக்கடலில் கலக்கிறது. </p><p>தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சினை என்பது இன்று, நேற்றல்ல, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே தொடங்கியிருக்கிறது. நதிநீர் பங்கீடு தொடர்பாக 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளிலேயே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. சென்னை மாகாணம் - மைசூர் சமஸ்தானம் இடையே 50 ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><h2>சட்டப் போராட்டம்</h2><p>ஆனால், இந்த ஒப்பந்தம் 1974-ம் ஆண்டு காலாவதியான பிறகு, நவீன கால பிரச்சினையாக மீண்டும் உருவெடுத்தது. அதன்பிறகு, தமிழக முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் சட்டப்போராட்டம் நடத்தியதன் விளைவாக, ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. </p><p>கோர்ட்டு உத்தரவுப்படி, தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>மேகதாதுவில் புதிய அணை </h2><p>இந்த ஆண்டு இதுவரை தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்துள்ள நிலையில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஜூன் மாதம் 2.915 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் 0.459 டி.எம்.சி.யும் மட்டுமே தண்ணீர் வழங்கியுள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். </p><p>இந்தப் பிரச்சினை ஒருபுறம் இருக்க, கர்நாடகா மாநிலத்தில் மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான அறிவிப்பை கடந்த 2013-ம் ஆண்டு கர்நாடக அரசு வெளியிட்டது. அது காவிரி பிரச்சினையை மேலும் பூதாகரமாக்கியது.</p><h2>காவிரியின் குறுக்கே 5-வது அணை </h2><p>ஏற்கனவே, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவில் ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகளும், தமிழ்நாட்டில் மேட்டூர், கல்லணை, முக்கொம்பு ஆகிய 3 அணைகளும் இருக்கின்றன. </p><p>தற்போது, கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமாரின் சொந்தத் தொகுதியான கனகபுராவில்தான் மேகதாது வருகிறது. எனவே, காவிரியின் குறுக்கே எப்படியும் 5-வது அணையை கட்டிவிட வேண்டும் என்று அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். </p><h2>மத்திய இணை மந்திரியின் பதில்</h2><p>இந்த நிலையில், நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் சமீபத்தில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 'மேகதாது அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலை கர்நாடகா பெற்றுள்ளதா? மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள அத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?' என்று கேள்வி எழுப்பினார்.</p><p>அதற்கு பதிலளித்த மத்திய நீர்வளத் துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி, 'காவிரி நீர் தொடர்பான வழக்கில், 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான அணையையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என, எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை' என்று கூறினார். </p><p>மத்திய இணை மந்திரியின் இந்த பதில் கர்நாடகா அரசுக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு எதிராகவும் அமைந்தது.</p><h2>மீண்டும் விஸ்வரூபம்  </h2><p>இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு - கர்நாடகா இடையே மேகதாது பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆகஸ்டு 3-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை பெங்களூருவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. </p><p>ஆனால், இந்த சந்திப்புக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் செல்லக்கூடாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக விவசாயிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/agg3v70y/kav-ver.jpg" /></figure><h2>இருமாநில எல்லையில் பதற்றம்</h2><p>பதிலுக்கு கர்நாடகாவிலும் சில எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் குதித்து இருக்கின்றன. இதனால், தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான ஓசூர் பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. </p><p>கர்நாடகாவில் 2028-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ளது. எனவே, அதை முன்வைத்தே கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மேகதாது அணை கட்டும் முயற்சியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து கூறியிருப்பதும், பா.ஜ.க. கர்நாடகாவில் தங்களுக்கான ஆதரவை பெருக்கிக்கொள்வதற்கே என்றும் தெரிகிறது. </p><h2>முந்தைய சந்திப்புகளில் சுமூக முடிவு இல்லை </h2><p>ஏற்கனவே, காவிரி பிரச்சினை தொடர்பாக, தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, கர்நாடகா முதல்-மந்திரிகள் ராமகிருஷ்ண ஹெக்டே, குண்டு ராவ் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார். </p><p>இதேபோல், 1997-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த ஜே.எச்.பட்டீலை சந்தித்து பேசினார். 2012-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, கர்நாடக முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேசினார். ஆனால், இதுபோன்ற சந்திப்புகளில் எந்தவித சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. </p><h2>என்னதான் தீர்வு..? </h2><p>இதுபோன்ற நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசுவதில் சுமூக முடிவு எட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><p>தற்போது, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்றாலும், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகுவதே சரியானதான இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதற்கு முன்னதாக, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, அதில் எடுக்கும் முடிவின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டை நாடினால் மட்டுமே மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியும். தமிழகத்தின் உரிமையும் பாதுகாக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>சாத்தான்குளத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-assaulting-government-bus-driver-in-sathankulam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-assaulting-government-bus-driver-in-sathankulam#comments</comments><guid isPermaLink="false">f8ff8984-ca2d-4c09-b960-a642bb1e788d</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:33:42 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:33:42.060Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Government bus,Thoothukudi,தூத்துக்குடி,Youth arrested,வாலிபர் கைது,Sathankulam,சாத்தான்குளம்,driver,ஓட்டுநர்,assault,அரசு பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ho1sscuh/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/ho1sscuh/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">அரசு பேருந்தை</a> வழிமறித்து ஓட்டுநரைத் தாக்கிய வாலிபரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20">கைது </a>செய்தனர்.</p><h2>அரசு பேருந்து</h2><p>கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பேருந்தை, கன்னியாகுமரியைச் சேர்ந்த ரவி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்தின் நடத்துநராக ஜெயகோபி என்பவர் பணியில் இருந்துள்ளார். இப்பேருந்து சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்றபோது, சாத்தான்குளம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை (வயது 31) என்பவர் மீது மோதுவது போல் சென்றதாகக் கூறப்படுகிறது. </p><h2>ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது</h2><p>இது தொடர்பாக ஓட்டுநருக்கும், சின்னத்துரைக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சின்னத்துரை, அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் ரவியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஓட்டுநர் ரவி, சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநரைத் தாக்கிய சின்னத்துரையை கைது செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு - சம்பல்பூர், ராமேஸ்வரம் - ஹூப்ளி ரெயில்களின் சேவை நீட்டிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-erodesambalpur-and-rameswaramhubli-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-erodesambalpur-and-rameswaramhubli-train-services#comments</comments><guid isPermaLink="false">ae147cc1-2a39-462e-abba-7e9251fca01e</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:28:27 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:28:27.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Rameswaram,தெற்கு ரெயில்வே,Special train,Erode,ஈரோடு,ராமேஸ்வரம்,Sambalpur,hubli,சம்பல்பூர்,ஹூப்ளி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/bhehvig2/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/bhehvig2/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஈரோடு - சம்பல்பூர், ராமேஸ்வரம் - ஹூப்ளி ரெயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>ஈரோடு - சம்பல்பூர்</h2><p>சம்பல்பூரில் இருந்து புதன்கிழமைகளில் காலை 11.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10.50 மணிக்கு ஈரோட்டை வந்தடையும் வாராந்திர ரெயில் (வண்டி எண் 08311) ஆகஸ்டு 5, 12-ந் தேதிகளில் நீட்டிக்கப்படுகிறது.  </p><p>மறுமார்க்கத்தில், ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும் ரெயில் (08312), ஆகஸ்டு 7, 14-ந் தேதிகளில் நீட்டிக்கப்பபட்டுகிறது. </p><h2>ராமேஸ்வரம் - ஹூப்ளி</h2><p>இதேபோல், ஹூப்ளியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும் ரெயில் (07355) ஆகஸ்டு 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்படுகிறது. </p><p>மறுமார்க்கத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளியை சென்றடையும் ரெயில் (07356)  ஆகஸ்டு 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீட்டிக்கப்படுகிறது</a>. </p><p>இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/directorate-of-vigilance-and-anti-corruption-raids-41-locations-across-tamil-nadu-over-tasmac-irregularities</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/directorate-of-vigilance-and-anti-corruption-raids-41-locations-across-tamil-nadu-over-tasmac-irregularities#comments</comments><guid isPermaLink="false">c35606e1-9d4c-4d42-bf6f-d174d9f9ac0e</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:17:41 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:17:41.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,டாஸ்மாக்,Tasmac,லஞ்ச ஒழிப்புத்துறை,Anti-Corruption Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/njkwn938/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/njkwn938/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவுக்கு முறைசாரா வழிகள் மூலம் <a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> வருவாய் கட்சி நிதி என்ற பெயரில் திசை திருப்பப்பட்டு வந்ததுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மூலம் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் ரூ.3,600 கோடியை தொட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டது.</p> <h2>வருவாயில் வெளிப்படைத்தன்மை</h2><p>இது குறித்து மூத்த அரசு அதிகாரிகள் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் கூறியதையடுத்து, புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடைய செயல்பாட்டை தொடங்க உத்தரவிட்டது. மேலும், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் முறையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. </p><h2>717 மதுபான விற்பனை நிலையங்கள்</h2><p>இதனிடையே தமிழக அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பள்ளி, கல்லூரிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்கி வந்த 717 மதுபான விற்பனை நிலையங்களை தமிழக அரசு மூடியிருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வரும் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக அரசின் கருவூலத்துக்கு வந்து சேருவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகள்</h2><p>தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக்கின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதும் நீண்ட காலமாக இயங்கி வரும் அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளை கலைத்துவிடவும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><h2>41 இடங்களில் சோதனை</h2><p>இந்நிலையில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி ஈரோடு, கோவை (பீளமேடு), பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன் பாளையம், நவகரையில் உள்ள கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேட்டுப்பாளையம் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் சிவாஸ் மதுபான தயாரிப்பு ஆலை மற்றும் மன்னார்குடியில் உள்ள டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. </p><p>சிவகங்கை மாவட்டம் தொண்டி சாலையில் உள்ள டாஸ்மாக் குடோனில், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த  சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் முதல்-அமைச்சர் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-force-is-the-chief-minister-going-to-form-to-protect-women-from-tvk-functionaries-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-force-is-the-chief-minister-going-to-form-to-protect-women-from-tvk-functionaries-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">a95122ab-fe55-4bfb-bdf2-8c4bac7942ad</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:16:57 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:16:57.059Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/96ol1wvz/Untitled-22.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/96ol1wvz/Untitled-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இளம்பெண் புகார்</h2><p>கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது பெண் குழந்தையையும் பாலியல் ரீதியாக விமர்சித்ததாகவும் தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. </p><h2>கைது செய்யப்படவில்லை</h2><p>அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண் பலமுறை புகார் அளித்தும் கூட, இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள தகவல், தமிழகக் காவல்துறையின் நேர்மையின் மீதும், அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்-அமைச்சரின் நிர்வாகத் திறன் மீதும் கடும் சந்தேகத்தை எழுப்புகிறது.</p><h2>எந்தப் பயனும் இல்லை</h2><p>எனவே, தனது சொந்தக் கட்சிக்குள் இத்தனை காமுகர்களை பாதுகாத்து வைத்துக் கொண்டு, பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசுவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது உடனடியாக சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எடுக்கப்படுவதை </a>உறுதி செய்ய வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர் ரெயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/13-kg-of-ganja-seized-at-egmore-railway-station-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/13-kg-of-ganja-seized-at-egmore-railway-station-2-arrested#comments</comments><guid isPermaLink="false">0afcef9b-a215-4f4f-9fef-99c8490c70e1</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:16:56 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:16:56.580Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,2 arrested,2 பேர் கைது,railway station,ரெயில் நிலையம்,Egmore,எழும்பூர்,கஞ்சா பறிமுதல்,Ganja seized</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/swa27kkf/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/swa27kkf/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 13 கிலோ <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்தது தொடர்பாக ரெயில்வே போலீசார் 2 வடமாநிலத்து நபர்களை<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"> கைது</a> செய்துள்ளனர்.</p><h2>விசாரணை</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று, ஹவுராவிலிருந்து ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் இருந்து பயணிகள் ஒருவர் பின் ஒருவராக இறங்கி சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நடந்து சென்றனர். அவர்களை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு சிறப்புப் பிரிவினர் விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.</p><h2>2 பேர் கைது</h2><p>இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 13 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ்லென்கா (வயது 37), பூர்ணசந்திரா(35) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி சென்னையில் உள்ளவரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/verification-of-electronic-voting-machines-begins-in-kolathur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/verification-of-electronic-voting-machines-begins-in-kolathur#comments</comments><guid isPermaLink="false">e9e3e7c9-85f6-44c9-bf75-d9e525c5b3cd</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:07:31 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:07:31.358Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,தேர்தல் ஆணையம்,Election Commission,கொளத்தூர்,Kolathur,வாக்குப்பதிவு எந்திரங்கள்,Voting Machines</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/sm189ugg/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/sm189ugg/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>கொளத்தூர் தொகுதி</h2><p>சட்டமன்ற தேர்தல்களில் சென்னை கொளத்தூர் தொகுதியில் (2011, 2016, 2021) 'ஹாட்ரிக்' வெற்றியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்திருந்தார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வி அடைந்தார்.</p><p>இந்த நிலையில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.</p><h2>சரிபார்க்கும் பணி</h2><p>அதனடிப்படையில் கொளத்தூர் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது. தி.மு.க. முகவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இன்று முதல் 7 நாட்களுக்கு இப்பணி நடைபெறும் என்றும் ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேபோல புகார்கள் வந்துள்ள காஞ்சீபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய தி.மு.க., அ.தி.மு.க. மனுக்களின் மீது நாளை விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-hearing-tomorrow-on-petitions-by-dmk-and-aiadmk-seeking-a-cbi-probe</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-hearing-tomorrow-on-petitions-by-dmk-and-aiadmk-seeking-a-cbi-probe#comments</comments><guid isPermaLink="false">c79127ce-a05d-4efe-b775-9c8cb8da8631</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:23:20 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:23:20.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,பழனி,தமிழகம்,CBI,முருகன் கோவில்,சி.பி.ஐ. விசாரணை,Murugan Temple,Madurai High Court,மதுரை ஐகோர்ட்டு,Palani,நில மோசடி,Land fraud case</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/5rnc4jvz/sop.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/5rnc4jvz/sop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி கோவில்</a> நில மோசடி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய தி.மு.க., அ.தி.மு.க. மனுக்களின் மீது நாளை மதுரை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது.</p><h2>பழனி மலை அடிவாரம்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/topic/palani">பழனி</a> மலை அடிவாரத்தில் உள்ள, முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால் சேனாதிபதி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><h2>அ.தி.மு.க., தி.மு.க.</h2><p>இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கள் ரவீந்திரன், வீரா கதிரவன் ஆகியோர், இதே விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி தங்கள் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டனர்.</p><h2>நாளை விசாரணை</h2><p>இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பழனி கோவில் நில மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் வருகிற 30-ந்தேதி (நாளை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>திருமணம் நிச்சயிக்கப்பட்ட நர்ஸ் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து கீழே விழுந்து பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/engaged-nurse-dies-after-falling-from-hospital-floor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/engaged-nurse-dies-after-falling-from-hospital-floor#comments</comments><guid isPermaLink="false">567e0369-ab81-4417-a737-48f12fe891b6</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:20:21 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:20:21.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Crime News,கன்னியாகுமரி,Kanyakumari,Marriage,கிரைம் செய்திகள்,Nurse,நர்ஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/dhgb7xwq/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/dhgb7xwq/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>குமரி,</p><h2>திருமணம் நிச்சயிக்கப்பட்ட நர்ஸ்</h2><p>குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் கல்லுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ராஜ். இவரது மகள் ஆஷிகா (வயது22). இவர் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு கடந்த 8 மாதங்களாக மார்த்தாண்டம் வெட்டுமணியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.</p><p>இவருக்கு கடந்த 7-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.</p><h2>மாடியில் இருந்து விழுந்து பலி</h2><p>இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் ஆஷிகா வழக்கம்போல் வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து இரவு 10.30 மணிக்கு அவர் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்ட தாக செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.</p><p>அங்கு ஆஷிகா பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆஷிகா ஆஸ்பத்திரி மாடியில் நின்று கொண்டு யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டி ருந்துள்ளார். அப்போது திடீரென அவர் மாடியில் இருந்து கீழே விழுந்த சத்தம் கேட்டுள்ளது.</p><p>உடனே ஆஸ்பத்திரி ஊழி யர்கள் விரைந்து சென்று பார்த்த போது ஆஷிகா ரத்த வெள் ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது செல்போன் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.</p><h2>தற்கொலையா?</h2><p>இதுகுறித்து ஆஷிகாவின் தாயார் சுதாராணி (51) மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படை யில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரி மாடியில் இருந்து நர்ஸ் கீழே விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியையிடம் 16 சவரன் செயின் பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-sovereign-chains-seized-from-teacher-in-government-school-premises-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-sovereign-chains-seized-from-teacher-in-government-school-premises-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">02203102-ca5b-42b2-aaee-de39f90fcc50</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:07:03 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:07:03.015Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,chain snatching,Teacher,அரசு பள்ளி,ஆசிரியை,mysterious person,செயின் பறிப்பு,Government School,வளாகம்,மர்ம நபர்,போலீசார் வலைவீச்சு,campus,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/aha7qe1x/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிரியையிடம் தங்க செயின் பறிப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/aha7qe1x/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF">அரசு நடுநிலைப்பள்ளி</a> வளாகத்தில் புகுந்து, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88">பெண் ஆசிரியை</a>யிடம் 16 சவரன் தங்கச் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">செயினை பறித்துச் சென்ற</a> மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>மாநகராட்சி நடுநிலைப்பள்ளி</h2><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> அருகிலுள்ள அத்திமரபட்டியில் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரத்னா தலைமை ஆசிரியராகவும், புதிய துறைமுக ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த சாந்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.</p><h2>ஆசிரியையிடம் 16 சவரன் செயின் பறிப்பு</h2><p>இந்த நிலையில் நேற்று மதிய நேரத்தில் ஆசிரியை சாந்தி கைகழுவுவதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்குள் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், திடீரெனப் பாய்ந்து வந்து ஆசிரியை சாந்தியின் கழுத்தில் இருந்த 16 சவரன் தங்க தாலிச் செயினைப் பறித்துக்கொண்டு தப்பியோடினான். </p><p>தாலிச் செயினைப் பறித்த வேகத்தில் ஆசிரியை கீழே விழுந்து அலறியுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு மற்றவர்கள் ஓடி வருவதற்குள், அந்த மர்ம நபர் கிழக்குத் திசையில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து தப்பியோடிவிட்டான். பறிகொடுக்கப்பட்ட தங்க செயினின் மதிப்பு ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. </p><h2>போலீசார் வலைவீச்சு</h2><p>இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய அந்த மர்ம நபரை பிடிக்க மோப்ப நாய் மற்றும் டிரோன் கேமராக்களின் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அரசுப் பள்ளி வளாகத்திலேயே நடைபெற்ற இந்தத் துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுக்கு காரணம் இதுதான்..! அமைச்சரை அதிர வைத்த தலைமை ஆசிரியர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-the-reason-for-the-drop-in-student-enrollment-in-government-schools-headmasters-stun-the-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-the-reason-for-the-drop-in-student-enrollment-in-government-schools-headmasters-stun-the-minister#comments</comments><guid isPermaLink="false">8cf274b0-fe3e-4a3f-901e-e6c57537956c</guid><pubDate>Wed, 29 Jul 2026 03:54:32 +0000</pubDate><atom:updated>2026-07-29T03:54:32.539Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,School students,பள்ளி மாணவர்கள்,அரசு பள்ளி,Govt Schools,head master,தலைமை ஆசிரியர்கள்,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wqob5659/minis.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wqob5659/minis.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என <a href="https://www.dailythanthi.com/topic/அமைச்சர்-ராஜ்மோகன்">அமைச்சர் ராஜ்மோகன்</a> தெரிவித்தார்.</p><h2>ஆசிரியர் சங்கங்கள்</h2><p>சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கலந்துரையாடினார். அப்போது சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.</p><p>அப்போது கழிப்பறைகள் சுத்தமாக இல்லாதது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.</p><p>அதனை கேட்டறிந்த பின்னர் அவர்கள் மத்தியில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:-</p><p>உலகில் பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் கிடையாது. இருமாநிலங்களுக்கு இடையேயான ஆறுகள் பிரச்சினைகள் ஆனாலும் சரி, நாடுகளுக்கு இடையே ஓடும் ஆறுகளின் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி தீர்க்க முடியாத பிரச்சினைகள்கூட பேசி தீர்த்து இருக்கிறார்கள். அந்தவகையில் நாமும் பிரச்சினைகளை பேசி அதற்கு தீர்வு காணப்போகிறோம்.</p><h2>கோரிக்கைகள்நிறைவேற்றப்படும்</h2><p>எது மக்களுக்கு நல்லது? எது மாணவர்களுக்கு நல்லது? எது பெற்றோருக்கு நல்லது? எது ஆசிரியர்களுக்கு நல்லது? என்பதை மட்டுமே இலக்காக கொண்டு பயணித்து வருகிறது நமது பள்ளிக்கல்வித்துறை. அப்படிப்பட்ட இத்துறையின் ஆணிவேராக இருப்பவர்கள் ஆசிரியர்கள். தமிழக முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் என்னென்ன கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமோ? அவற்றை எல்லாம் நிறைவேற்றுவேன். ஆசிரியர் சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஒரே இலக்கு. இதில் நடிப்புக்கோ, பாசாங்கு செய்வதற்கோ இடமே இல்லை.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>இதில் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ், அரசு தேர்வுகள் இயக்குனர் சசிகலா உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.</p><h2>கோரிக்கைகள் என்னென்ன..?</h2><p>முன்னதாக அமைச்சருடனான கலந்துரையாடலில் பங்கேற்ற ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் சில கோரிக்கைகள் வருமாறு:-</p><p>பழைய ஓய்வூதியத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பணியில் இருக்கும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேவையில்லை என சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர்களை கற்பித்தல் பணிகளை தவிர பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது,எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேரத்தை 2.30 மணி நேரமாக மாற்ற வேண்டும், 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான அனைவருக்கும் தனியார் பள்ளிகளை போல் நேர்த்தியான வண்ண உடைகளும், ஷூவும் வழங்க வேண்டும், தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் மழலையர் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் அருணாச்சலம் மரணத்திற்கு நீதி கோரி சி.பி.எம். ஆர்ப்பாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpm-protests-in-thoothukudi-demanding-justice-for-arunachalams-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpm-protests-in-thoothukudi-demanding-justice-for-arunachalams-death#comments</comments><guid isPermaLink="false">d6c3d06e-1364-495e-bd12-bb3715c03a13</guid><pubDate>Wed, 29 Jul 2026 03:26:41 +0000</pubDate><atom:updated>2026-07-29T03:26:41.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,ஆர்ப்பாட்டம்,Thoothukudi,தூத்துக்குடி,நிவாரணம்,Relief,insistence,வலியுறுத்தல்,youth death,சிபிஎம்,CPM,வாலிபர் மரணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/u8seq1vf/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் சி.பி.எம். ஆர்ப்பாட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/u8seq1vf/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த அருணாச்சலம் மரணத்திற்கு நீதி கேட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a> சார்பில் வி.வி.டி. சிக்னல் அருகில் கண்டன <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">ஆர்ப்பாட்டம்</a> நடைபெற்றது.</p><h2>வாலிபர் மரணம்</h2><p>தூத்துக்குடியைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">அருணாச்சலம் என்ற வாலிபரின் லாக்-அப் மரணத்திற்கு</a> உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அனைத்து போலீசார் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். வழக்கை தீவிரமாக விசாரித்து உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>ரூ.25 லட்சம் நிவாரணம்</h2><p>உயிரிழந்த அருணாச்சலத்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை பாக்கெட்டில் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-decided-to-distribute-toor-dal-and-sugar-in-packets-at-ration-shops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-decided-to-distribute-toor-dal-and-sugar-in-packets-at-ration-shops#comments</comments><guid isPermaLink="false">493bfca2-9d31-4148-b27e-86d41bd9c47c</guid><pubDate>Wed, 29 Jul 2026 03:08:14 +0000</pubDate><atom:updated>2026-07-29T03:08:14.270Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு அரசு,Sugar,சர்க்கரை,Tamilnadu government,Ration items,ரேஷன் பொருட்கள்,ration shops,துவரம் பருப்பு,Toor Dal</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/o163uz1w/ker25.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/o163uz1w/ker25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை பாக்கெட்டில் வழங்க, <a href="https://www.dailythanthi.com/topic/tamil-nadu-government">தமிழ்நாடு அரசு</a> முடிவு செய்துள்ளது. இதனால், எடை குறைவு பிரச்னை தடுக்கப்படுவதுடன், தரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மானிய விலையில்</h2><p>தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாகவும், 2 கிலோ சர்க்கரை, கிலோ துவரம் பருப்பு, லிட்டர் பாமாயில் ஆகியவை மானிய விலையிலும் விற்கப்படுகின்றன. இதில், பாமாயில் மட்டும் பாக்கெட்டில் வழங்கப்படுகிறது.</p><h2>அரசு முடிவு</h2><p>மற்ற பொருட்களை வாங்க, கார்டுதாரர்கள் பை எடுத்துச் செல்ல வேண்டும். சில ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை எடை போட்டு வழங்குவதில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுகின்றன. இதனால், கார்டுதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர். </p><p>ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் வழங்குமாறு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே துவரம் பருப்பு, சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raid-at-senthil-balajis-house-in-karur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raid-at-senthil-balajis-house-in-karur#comments</comments><guid isPermaLink="false">8f9636ed-a2d3-40ef-9365-c78ef248a5ef</guid><pubDate>Wed, 29 Jul 2026 03:04:17 +0000</pubDate><atom:updated>2026-07-29T03:04:17.678Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,Senthil Balaji,செந்தில் பாலாஜி,லஞ்ச ஒழிப்புத்துறை,Anti-Corruption Police,Anti-Corruption Department,லஞ்ச ஒழிப்பு போலீசார்,Anti-corruption police raid</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/lf5xu4af/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/lf5xu4af/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. </p><p>தற்போது தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். அவர்களிடம் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான உயர்மட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>மண்மங்கலம் அருகே உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு, அவரது உதவியாளர் சுப்பிரமணி வீடு, திமுக நிர்வாகி பாஸ்கரன் வீடு மற்றும் கோதைநகர் பகுதியில் உள்ள கார்த்தி, ரமேஷ் ஆகியோரின் வீடுகள் உட்பட மொத்தம் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>மேலும் கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>எதன் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. சோதனையில் முடிவிலேயே முழு விவரமும் தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>சிறுமிக்கு பாலியல் தொல்லை: பேக்கரி உரிமையாளர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bakery-owner-arrested-under-pocso-law-for-sexually-harassing-minor-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bakery-owner-arrested-under-pocso-law-for-sexually-harassing-minor-girl#comments</comments><guid isPermaLink="false">e93b60a1-9ac6-4088-9fc4-0ec0afd30f2a</guid><pubDate>Wed, 29 Jul 2026 02:55:22 +0000</pubDate><atom:updated>2026-07-29T02:55:22.715Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,தூத்துக்குடி,arrest,Sexual harassment,பாலியல் தொல்லை,சிறுமி,போக்சோ,POCSO,minor,உரிமையாளர்,owner,bakery,பேக்கரி கடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/rdi0up1l/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பேக்கரி உரிமையாளர் போக்சோவில் கைது ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/rdi0up1l/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 4 வயது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">சிறுமிக்கு பாலியல் தொல்லை</a> கொடுத்த பேக்கரி உரிமையாளரை அனைத்து மகளிர் போலீசார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">போக்சோ சட்டத்தில் கைது</a> செய்து சிறையில் அடைத்தனர். </p><h2>பேக்கரி உரிமையாளர்</h2><p>சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பேருந்து நிலையப் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 54). இவர் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சுப்பிரமணியபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக 'ஐயங்கார் பேக்கரி' என்ற பெயரில் கடை நடத்தி வந்துள்ளார். இதற்காக அந்த பகுதியிலேயே வீடு எடுத்து வாடகைக்கு வசித்து வந்தார்.</p><h2>4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை</h2><p>இந்த நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியைத் தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை நேரில் கண்ட சிறுமியின் தாய், குமாரை தட்டிக்கேட்டு, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.</p><h2>கைது</h2><p>இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணைக்குப் பின் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நிலவின் மீது மோத உள்ள பால்கன்-9 ராக்கெட்: அச்சப்பட தேவையில்லை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/falcon-9-rocket-about-to-crash-into-the-moon-no-need-to-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/falcon-9-rocket-about-to-crash-into-the-moon-no-need-to-panic#comments</comments><guid isPermaLink="false">71aa0247-6a14-4d7d-acb5-01375d9ee601</guid><pubDate>Wed, 29 Jul 2026 02:28:36 +0000</pubDate><atom:updated>2026-07-29T02:28:36.420Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராக்கெட்,Rocket,நிலவு,Moon,பால்கன்-9 ராக்கெட்,Falcon-9 rocket</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/gp8hb0xw/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/gp8hb0xw/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><h2>பால்கன்-9 ராக்கெட்</h2><p>அமெரிக்காவின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன்-9 ரக ராக்கெட், நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதி 2 லேண்டர்களுடன் நிலவுக்கு புறப்பட்டு சென்றது. 2 லேண்டர்களும் நிலவை அடைந்து விட்டன. அதில், ஒரு லேண்டர் நிலவின் மீது மோதி விட்டது. 'புளு கோஸ்ட்' என்ற மற்றொரு லேண்டர் நிலவில் வெற்றியுடன் தரையிறங்கி உள்ளது.</p><p>2 வாரங்கள் செயல்பட்டு, நிலவில் சூரியன் மறையும் புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பியது. எனினும், நிலவில் சூரியன் மறைந்ததும் தன்னுடைய ஆற்றலை அது இழந்தது. இந்த நிலையில், லேண்டர்களை இறக்கி விட்ட அந்த ராக்கெட்டின் மேல் பகுதி, தன்னுடைய வேலையை முடித்து விட்டு பூமிக்கு திரும்ப வேண்டும். ஆனால், அது உயர்மட்ட சுற்று வட்டப்பாதையில் சிக்கிக்கொண்டது. </p><h2>விஞ்ஞானிகள் ஆய்வு</h2><p>பூமிக்கு திரும்பாததால், ராக்கெட் என்ன ஆனது? என விஞ்ஞானிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இதுபோன்று 1,053 முறை கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டதில், பல முறை பூமி மற்றும் நிலவு ஆகியவற்றின் சுற்றுவட்டப்பாதைகளை அது கடந்து சென்றது கவனிக்கப்பட்டது. ஆனால், அதன் மீதும் மோதும் வகையில் நெருங்கி செல்லவில்லை.</p><p>இந்த விண்கலப் பகுதி எரிபொருள் தீர்ந்து கட்டுப்பாட்டை இழந்து நிலவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் நிலவின் மேல்பரப்பில் இந்த மோதல் விரைவில் நடக்கப்போகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி, சுற்றுவட்டப்பாதை தொடர்பான விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். அதன் பயணம் மற்றும் வருங்காலத்தில் அதற்கு என்ன நடக்கும்? என்பது பற்றி கணித்துள்ளனர்.</p><h2>அச்சப்பட தேவையில்லை...</h2><p>அதன்படி, வருகிற 5-ந்தேதி மதியம் 1.14 மணியளவில் அது நிலவில் உள்ள ஐன்ஸ்டீன் பள்ளம் அருகில் மோதக்கூடும். அப்போது மணிக்கு 8 ஆயிரத்து 700 கி.மீ. அல்லது ஒலியின் 7 மடங்கு வேகத்தில் அது இயங்கும் என விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். இதனால், யாரும் அச்சப்பட தேவையில்லை. </p><p>விண்வெளியில் இதுபோன்ற குப்பைகள் சேராமல் அதனை கவனத்துடன் அகற்றுவது பற்றிய தேவையை உணர்த்தியுள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த ராக்கெட்டின் மேல் பகுதி, இதுவரை 26 நாட்களில் பூமியை ஒரு முறை சுற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-tomorrow-5#comments</comments><guid isPermaLink="false">1853463e-efb0-4f71-ae3d-d6d32e21ba43</guid><pubDate>Wed, 29 Jul 2026 02:22:06 +0000</pubDate><atom:updated>2026-07-29T02:22:06.144Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wo4s6ysz/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wo4s6ysz/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், நகர்ப்புற மின் விநியோக பிரிவிற்கு உட்பட்ட துணைமின் நிலைய பகுதியில் நாளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக தூத்துக்குடி நகர் விநியோக செயற்பொறியாளர் எல்.சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், அரசு துணை மின் நிலையத்தில் நாளை (30.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை</h2><p>இதன் காரணமாக மேலஅரசடி, கீழஅரசடி தருவைகுளம் மற்றும் தருவைகுளம் உப்பளப் பகுதிகள் பட்டினமருதூர் மற்றும் பட்டினமருதூர் உப்பளப் பகுதிகள் சில்லாநத்தம் வாலசமுத்திரம் கிழக்குக் கடற்கரை சாலை, புதூர்பாண்டியாபுரம், எட்டையாபுரம் ரோடு வடபுறம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது உடனடியாகத் தண்ணீர் வந்தாக வேண்டும்! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-immediately-at-least-for-the-upcoming-samba-cultivation-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-immediately-at-least-for-the-upcoming-samba-cultivation-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">9d26628c-8f9b-474d-9e10-199782caa153</guid><pubDate>Wed, 29 Jul 2026 02:07:27 +0000</pubDate><atom:updated>2026-07-29T02:07:27.957Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/zvkjfc0d/Untitled-5.jpg" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/zvkjfc0d/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>விரிசலை உருவாக்கும்</h2><p>தமிழ்நாட்டின் குறுவை விவசாயம் ஏற்கனவே காய்ந்துவிட்டது, வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது உடனடியாகத் தண்ணீர் வந்தாக வேண்டும்! </p><p>CWRC அமைப்பின் உத்தரவை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்வோம் என்றும், தண்ணீர் திறக்க முடியாது என்றும் கர்நாடக மந்திரி ராமலிங்க ரெட்டி பேசுவது தேவையற்ற பதற்றத்தையும் மாநிலங்களுக்கு இடையே விரிசலையும் மட்டுமே உண்டாக்கும். இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.</p><h2>தண்ணீர் திறக்க வேண்டும்</h2><p>29.07.2026 முதல் 15 நாட்களுக்குப் பிலிகுண்டுலுவில் தினமும் 3,500 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்ற CWRC உத்தரவைக் கர்நாடகா எவ்விதச் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சாக்குப்போக்கும் </a>இன்றி உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்!</p><p>26.07.2026 வரை பிலிகுண்டுலுவில் வழக்கமாக வரவேண்டிய 35.391 டிஎம்சி-க்கு பதிலாக வெறும் 3.543 டிஎம்சி (10.01%) மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு 9.46 டிஎம்சி நீர் பாக்கி உள்ள நிலையில், சட்டப்பூர்வ தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் மதித்து நடப்பதே கூட்டாட்சி தர்மத்திற்கு அழகு. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அம்பத்தூரில் ரூ.1,000 செலுத்திய வீட்டுக்கு ரூ.14 ஆயிரம் மின் கட்டணமா? - மக்கள் கொந்தளிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-bill-of-rs-14-thousand-for-a-house-that-paid-rs-1000-in-ambattur-peoples-unrest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-bill-of-rs-14-thousand-for-a-house-that-paid-rs-1000-in-ambattur-peoples-unrest#comments</comments><guid isPermaLink="false">6d4f0b7d-07f1-4f95-9ce3-6a25871e4c71</guid><pubDate>Wed, 29 Jul 2026 02:00:09 +0000</pubDate><atom:updated>2026-07-29T02:00:09.331Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் கட்டணம்,electricity bill,கொளத்தூர்,Kolathur,அம்பத்தூர்,Ambattur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/n4nmnmoe/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/n4nmnmoe/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 38). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மாதனாங்குப்பம் பிரதான சாலை, தீப்பாச்சியம்மன் நகரிலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்கான மின் கட்டணமாக ரூ.14 ஆயிரத்து 264 செலுத்த வேண்டும் என ஆசீர்வாதத்தின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.</p><p>இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசீர்வாதம், புழல் மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது அது 'பெண்டிங்' தொகை என மின்வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆசீர்வாதம் கூறும்போது, 'ஒவ்வொரு முறையும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்து கூறும் தொகையை தவறாமல் செலுத்தி வருகிறேன். கடந்த முறை வரை ரூ.1,000-க்கும் குறைவாகவே மின்கட்டணம் செலுத்திய நிலையில், இந்த முறை திடீரென ரூ.14 ஆயிரத்து 264 செலுத்த வேண்டும் என்கிறார்கள்.</p><p>இதேபோல், எனது வீட்டின் அருகில் உள்ள மற்ற வீடுகளிலும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை 'பெண்டிங்' தொகை செலுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் முறையாக மீட்டர் கணக்கீட்டை செய்யவில்லை. திடீரென இவ்வளவு பெரிய தொகை வந்தால் நாங்கள் எங்கு செல்வது? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதைபோல கொளத்தூர் அடுத்த செக்ரட்டரி காலனியிலும் பல வீடுகளுக்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் மின் கட்ட ணம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கொளத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-convicted-in-thoothukudi-murder-case-sentenced-to-double-life-imprisonment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-convicted-in-thoothukudi-murder-case-sentenced-to-double-life-imprisonment#comments</comments><guid isPermaLink="false">f74e2a2e-c4d8-4f9e-a3f9-217ef096da8c</guid><pubDate>Wed, 29 Jul 2026 01:59:39 +0000</pubDate><atom:updated>2026-07-29T01:59:39.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Murder case,accused,கொலை வழக்கு,குற்றவாளிகள்,இரட்டை ஆயுள் தண்டனை,2 பேர்,2 people,double life imprisonment</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/03cqz0j2/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/03cqz0j2/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கொலை வழக்கில்</a> சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">இரட்டை ஆயுள் தண்டனை</a> விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><h2>கொலை வழக்கில் 2 பேர் கைது</h2><p>தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண்பகப்பேரி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் (வயது 25) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் சதீஷ்(26) மற்றும் பாலமுருகன் மகன் மதன்(24) ஆகிய 2 பேரையும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><h2>இரட்டை ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட PCR (Protection of Civil Rights Act - குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி வசீத்குமார் நேற்று (28.7.2026) சதீஷ், மதன் ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் அருகே கோர விபத்து: லாரி-சரக்கு வாகனம் மோதல்; டிரைவர் பலி - 20 பேர் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-near-salem-lorry-and-goods-vehicle-collide-driver-killed-20-seriously-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-near-salem-lorry-and-goods-vehicle-collide-driver-killed-20-seriously-injured#comments</comments><guid isPermaLink="false">813c3b07-71d0-48ef-8bc7-48a51278a143</guid><pubDate>Wed, 29 Jul 2026 01:53:44 +0000</pubDate><atom:updated>2026-07-29T01:53:44.580Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,Salem News,சேலம் செய்திகள்,சேலம் மாவட்டம்,Salem district</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/huxm4d5p/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/huxm4d5p/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே நேற்று இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்தார். மேலும், அரசு பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h2>விபத்து எப்படி நடந்தது?</h2><p>மேட்டூரில் இருந்து அரசு பஸ் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் பின்னால் வந்த சரக்கு வாகனம் அரசு பஸ்சை முந்திச் செல்ல முயன்றது. அந்த நேரத்தில் எதிரே வந்த லாரியுடன் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.</p><h2> 20-க்கும் மேற்பட்டோர் காயம்</h2><p>இந்த விபத்தில் லாரி, சரக்கு வாகனம் மற்றும் அரசு பஸ் ஆகியவை கடுமையாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சேதமடைந்தன</a>. லாரி டிரைவர், கிளீனர், சரக்கு வாகன டிரைவர் மற்றும் அரசு பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.</p><h2>மீட்புப் பணியில் போலீசார்</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் மேச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><h2>டிரைவர் உயிரிழப்பு</h2><p>மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த விபத்தால் மேச்சேரி-மேட்டூர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சாலையில் </a>ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் சேதமடைந்த வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடி விவகாரம்: வெள்ளத்துரை உள்பட 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-three-people-including-vellathurai-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-three-people-including-vellathurai-arrested#comments</comments><guid isPermaLink="false">066aeb70-5212-468e-8959-b0cd854bd375</guid><pubDate>Wed, 29 Jul 2026 01:49:12 +0000</pubDate><atom:updated>2026-07-29T01:49:12.465Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி,Palani,CBCID,சிபிசிஐடி,கோவில் நில மோசடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/gbf8tibh/Palani-temple.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/gbf8tibh/Palani-temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை, மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, கடந்த 6-ஆம் தேதி வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய இருவரின் பெயரில் அந்த இடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த நிலத்தை வெறும் 2 கோடிக்குக் கணக்கு கிரயம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. </p> <h2>வழக்குப்பதிவு</h2><p>அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் கோயில் சொத்து என்பதை மறைத்து தனிநபர்களுக்குக் கிரயம் செய்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><h2>சிபிசிஐடி போலீசார்</h2><p>மேலும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.  இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,    நில மோசடி விவகாரத்தில் வெள்ளத்துரை, முருகதாஸ் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>4 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-sentenced-to-life-imprisonment-for-sexually-assaulting-4-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-sentenced-to-life-imprisonment-for-sexually-assaulting-4-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">ae8ecd36-9466-42f5-8ce1-36a986b98b74</guid><pubDate>Wed, 29 Jul 2026 01:28:36 +0000</pubDate><atom:updated>2026-07-29T01:28:36.963Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Elderly man,முதியவர்,சிறுமி,Sexual assault,Minor girl,பாலியல் தாக்குதல்,சாகும் வரை ஆயுள் தண்டனை,life imprisonment till death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/gdywzzie/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/gdywzzie/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் விரைவான விசாரணை மூலம் 4 மாதங்களிலேயே, மாவட்டத்தில் 4 வயது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>யை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பாலியல் தாக்குதல்</a> செய்த வழக்கில் முதியவருக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">சாகும்வரை ஆயுள் தண்டனை</a> விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.</p><h2>4 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதல்; முதியவர் கைது</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 16.3.2026 அன்று கணபதி (வயது 81) என்பவர் 4 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு மேல்நடவடிக்கைக்காக சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன முதியவரை கைது செய்தார். </p><h2>முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை</h2><p>புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மேற்சொன்ன முதியவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் நேற்று (28.7.2026) குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.</p><h2>எஸ்.பி. பாராட்டு</h2><p>இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், சேரன்மகாதேவி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி மற்றும் வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய சேரன்மகாதேவி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி (தற்போது தூத்துக்குடி மாவட்டம்),  வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு துர்காதேவி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.</p><h2>15 போக்சோ வழக்குகளில், 15 குற்றவாளிகளுக்கு தண்டனை</h2><p>திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 15 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 15 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 4 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.</p><p>திருநெல்வேலி மாவட்ட காவல் துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை-செய்யாறு இடையே 4 வழிச்சாலை அமைக்கும் டெண்டர் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-for-construction-of-4-lane-road-between-chennai-seyyaru-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-for-construction-of-4-lane-road-between-chennai-seyyaru-cancelled#comments</comments><guid isPermaLink="false">843faba8-8da5-430e-b7d0-9257760800e1</guid><pubDate>Wed, 29 Jul 2026 01:22:33 +0000</pubDate><atom:updated>2026-07-29T01:22:33.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சாலை,tender,டெண்டர்,செய்யாறு,Seyyaru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wp1o7s4e/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/wp1o7s4e/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையுடன் செய்யாறு தொழில் வழித்தட பகுதியை இணைக்கும் வகையில், 43 கி.மீ.க்கு 4 வழிச்சாலை அமைக்க தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு உள்ளது. </p><p>புலிவாயலில் இருந்து மனமதி இடையே 15.30 கி.மீ. நீளமுள்ள 4 வழி நெடுஞ்சாலை 2 பக்க சர்வீஸ் சாலையுடன் அமைக்கவும், பழவேரில் இருந்து புலிவாய்க்கு 13.40 கி.மீ. நீளமுள்ள 4 வழி நெடுஞ்சாலை அமைக்கவும், வளையகரணையில் இருந்து பழவேரிக்கு 14.50 கி.மீ. நீளமுள்ள 4 வழி நெடுஞ்சாலை அமைக்கவும் கடந்த 10.3.2026 அன்று டெண்டர் விடப்பட்டது.</p><p>செய்யூர் 'சிப்காட்'டுக்காக முன்மொழியப்பட்ட தொழில் வழிச்சாலையின் ஒரு பகுதியாக இந்த சாலைகள் அமைக்கப் படும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையகம் பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற திட்டமா? - தகவல் சரிபார்ப்பகம் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-plan-to-rename-the-kilambakkam-bus-terminus-fact-check-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-plan-to-rename-the-kilambakkam-bus-terminus-fact-check-response#comments</comments><guid isPermaLink="false">2f43569e-186d-4fbc-ba77-33ea50f6a68a</guid><pubDate>Wed, 29 Jul 2026 01:01:59 +0000</pubDate><atom:updated>2026-07-29T01:01:59.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிளாம்பாக்கம்,Kilambakkam,கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்,Kilambakkam Bus Stand,தகவல் சரிபார்ப்பகம்,TN Fact Check,தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்,Fact-check</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/xi4d4lw4/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-29/xi4d4lw4/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற திட்டம் என பரவும் தவறான தகவல்</p><h2>பரவும் செய்தி</h2><p>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் பண்டிதர் அயோத்திதாசர் நவீன பேருந்து நிலையம் என்று மாறுகிறது என சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.</p><h2>உண்மை என்ன ?</h2><p>"கிளாம்பாக்கம் பேருந்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நிலையத்தின் </a>பெயரை மாற்றம் செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவும் தகவல் தவறானது" என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA ) தெரிவித்துள்ளது.</p><p>தவறான தகவலைப் பரப்பாதீர் !</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>