<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 16 Sep 2026 20:27:31 +0000</lastBuildDate><item><title>லண்டன் சுற்றுப்பயணம் நிறைவு:  முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை திரும்புகிறார்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-tour-concludes-chief-minister-vijay-returns-to-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/london-tour-concludes-chief-minister-vijay-returns-to-chennai-today#comments</comments><guid isPermaLink="false">8ff800b0-f92f-4aa4-93bb-33337c54e74c</guid><pubDate>Wed, 16 Sep 2026 20:23:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T20:23:13.731Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,London,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/d0h5p9yh/vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/d0h5p9yh/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல் அமைச்சர் விஜய் கடந்த 10 ஆம் தேதி இரவு லண்டன் புறப்பட்டு சென்றார். 6 நாள் பயணமாக லண்டன் சென்ற முதல் அமைச்சர் விஜய்க்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி முதல்-அமைச்சர் விஜய், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்காக புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு உலகப் புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேசையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><h2>சென்னை புறப்பட்டார் </h2><p>அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.   இதற்கிடையே நேற்று இரவு விஜய், தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்து லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.  </p><h2>தவெகவினர் ஆர்வம்</h2><p>விஜய் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து கிளம்பும் போது அவரைக்காண ஏராளமன ரசிகர்கள்  காத்திருந்தனர். ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்த முதல் அமைச்சர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். சிலருக்கு ஆட்டோகிராப்பும் போட்டு கொடுத்தார்.. லண்டனில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல் அமைச்சர் விஜய், இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க த.வெ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: 99 வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று பரிசீலனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-99-nomination-papers-filed-scrutiny-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-99-nomination-papers-filed-scrutiny-today#comments</comments><guid isPermaLink="false">603a2f3c-9449-4bdf-8524-aca992364c3e</guid><pubDate>Wed, 16 Sep 2026 19:35:19 +0000</pubDate><atom:updated>2026-09-16T19:35:19.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,வேட்பு மனு</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/pqb1hep0/Election.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேட்பு மனுக்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/pqb1hep0/Election.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>இடைத்தேர்தல்</p><p>தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் த.வெ.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன. இதனால் 5 முனைப்போட்டி நிலவுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடந்தது. விறுவிறுப்பாக நடந்த வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. </p><p>மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 30 பேர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.ஏற்கனவே த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 18 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன்மூலம் மதுராந்தகம் தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.</p><h2>தாராபுரத்தில் </h2><p>தாராபுரம் பகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் மற்றும் தொண்டர்களுடன் வந்து, தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜாவிடம் காலை 11 மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது, த.வெ.க. வேட்பாளர் சத்திய பாமாவுக்கு எதிராக அ.தி. மு.க. தொண்டர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு உண்டானது.</p><h2>மொத்தம் 51 வேட்பு மனுக்கள்</h2><p>அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன், கள் இயக்க வேட்பாளர் முத்துசாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர். மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், பிரதான கட்சிகள், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 39 வேட்பாளர்கள் மொத்தம் 51 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இன்று (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘லண்டனில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-release-a-white-paper-on-the-investments-attracted-in-london-former-minister-jayakumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-release-a-white-paper-on-the-investments-attracted-in-london-former-minister-jayakumar#comments</comments><guid isPermaLink="false">070abf6b-1dc2-4ce1-a914-078cfc2f3ba0</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:38:53 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:38:53.881Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெயக்குமார்,Jayakumar,London,லண்டன்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/m3k4ij5h/State-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/m3k4ij5h/State-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் பயணத்தின்போது நடிகர் அஜித்தை சந்தித்தது பண்பாடு. அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை. ஆனால் முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தால் கிடைத்த பயன் என்ன? என்பது குறித்து தமிழக மக்களிடம் தெரிவிக்க வேண்டும். </p><p>லண்டனில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இருதரப்பு ஒப்பந்தங்கள் எப்போது கையெழுத்தாகும்? திட்டங்கள் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? இந்த முதலீடுகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்? என்ற விவரங்கள் அடங்கிய வெளிப்படையான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>குன்னூர் அருகே இறந்த குட்டியை சுமந்து அலையும் தாய் குரங்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kunnur-near-dead-infant-monkey-carried-by-mother</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kunnur-near-dead-infant-monkey-carried-by-mother#comments</comments><guid isPermaLink="false">7134a014-7244-4b96-83cf-a1aa943dbfd4</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:01:48 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:01:48.545Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mother,dead,குரங்கு,monkey,குன்னூர்,Coonoor,carrying,குட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zn2lhojs/mothermonkey.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ குரங்கு]]></media:title><media:description type="html"><![CDATA[ குன்னூர் அருகே இறந்த குட்டியை சுமந்து அலையும் தாய் குரங்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zn2lhojs/mothermonkey.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குன்னூர்,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி</a> மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெலிங்டன், அருவங்காடு, பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட இடங்களில் சமீபகாலமாக குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. </p> <h2>குரங்கு கூட்டம்</h2><p>இப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு வளாகங்களுக்குள் புகுந்து வரும் <a href="https://www.dailythanthi.com/topic//%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">குரங்கு</a> கூட்டங்கள், கேபிள் வயர்கள் மற்றும் இணையதள வயர்களை கடித்து துண்டித்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து உணவுப் பொருட்களையும் சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் நிம்மதியிழந்த பொதுமக்கள், இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><h2>கண்கலங்க வைத்த காட்சி</h2><p>இந்த நிலையில், வெலிங்டன் பகுதியில் பார்ப்போரின் நெஞ்சை உருக்கும் சோகமான காட்சி ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள சாலை ஒன்றில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், குட்டி குரங்கு ஒன்று சாலையோரமாக பரிதாபமாக இறந்து கிடந்தது. ஆனால், தன் குட்டி இறந்தது கூட தெரியாமல் பாச போராட்டம் நடத்திய தாய் குரங்கு, அந்த குட்டியை தனது மார்போடு அணைத்தபடி தூக்கி கொண்டு அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தது. </p> <h2>தாய் பாசம்</h2><p>குட்டிக்கு உயிர் இருப்பதாகவே நினைத்து, அதை தூக்கி கொண்டு தாய் குரங்கு தவிப்புடன் சுற்றிய இந்த நெஞ்சை உருக்கும் காட்சி, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியதுடன், பலரையும் கண்கலங்கச் செய்தது.</p>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருங்குடி கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perungudi-monitoring-officer-holds-consultation-on-monsoon-preparedness-measures</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perungudi-monitoring-officer-holds-consultation-on-monsoon-preparedness-measures#comments</comments><guid isPermaLink="false">c2e8b3d2-0a0b-4d0b-839b-e90d23d548bf</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:51:30 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:51:30.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,பெருங்குடி,Perungudi,பெருங்குடி மண்டலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2mrl4zut/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெருங்குடி கண்காணிப்பு அலுவலர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2mrl4zut/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருங்குடி மண்டலக் கண்காணிப்பு அலுவலர் மகேஷ்வரி ரவிக்குமார் தலைமையில், பெருங்குடி மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. </p><h2>ஆலோசனைக் கூட்டம்</h2><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பெருங்குடி மண்டலத்தில் வார்டு 181 முதல் 191க்குட்பட்ட 11 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மண்டலக் கண்காணிப்பு அலுவலர் மகேஷ்வரி ரவிக்குமார் தலைமையில் இன்று (16.09.2026) பெருங்குடி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில், மண்டல அலுவலர் என்.ஶ்ரீதேவி, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைக் குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சாரத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட சேவைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>இக்கூட்டத்தில், பெருங்குடி மண்டலத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்களை பணிகளை விரைந்து முடித்திடவும், மழைநீர் சீராகச் செல்லும் வகையில் வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், ஆறுகள், குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள், ஆகாயத்தாமரைகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும், மழைநீர் தேங்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புகளை விரைந்து முடித்திடவும், மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>14 நிவாரண முகாம்களில் பொதுமக்களை தங்கவைப்பதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு சமைத்திடும் 6 மைய சமையலறைகளில் உணவுப் பொருட்களின் இருப்பினை உறுதி செய்திடவும், மாநகராட்சி உள்ளிட்ட சேவைத்துறைகளின் சார்பில் நடைபெறும் பணிகளை ஒருங்கிணைந்து செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><h2>கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு</h2><p>இதனைத் தொடர்ந்து, ரேடியல் சாலை முதல் பெருங்குடி குப்பைக் கிடங்கு வரையிலான நெடுஞ்சாலைத்துறையின் சாலைப் பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் உள்ள நீர் எளிதில் வெளியேறும் வகையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மற்றும் இந்த சாலையில் உள்ள 17 கல்வெர்ட்டுகளின் வழியே மழைநீர் தங்குதடையின்றி பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வண்டல்கள் தூர்வாரிடும் பணி ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>பின்னர், இந்த சாலையில் உள்ள பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சரிந்துள்ள மண் மேடு பகுதியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பகுதியில் தண்ணீர் எளிதில் செல்லும் வகையில் சரிந்த மண் மேடுகளை அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள்; தடையில்லா சான்று இல்லாமல் மின் இணைப்பு - தமிழக அரசு அரசாணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/houses-built-on-poramboke-government-owned-land-electricity-connections-granted-without-a-no-objection-certificate-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/houses-built-on-poramboke-government-owned-land-electricity-connections-granted-without-a-no-objection-certificate-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">be0ad5be-2291-47f1-9001-5c80f40d1e9a</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:47:16 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:47:16.246Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,மின் இணைப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xcvq2kp1/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xcvq2kp1/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டிருக்கக் கூடிய வீடுகளுக்கு அரசு அதிகாரியிடம் இருந்து தடையில்லா சான்று பெறாமலேயே மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இது குறித்து எரிசக்தித்துறை அமைச்சர் நிர்மல் குமார் கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்தார். </p><p>இந்த நிலையில், புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு என்.ஓ.சி.(NOC) எனப்படும் தடையில்லா சான்று தேவையில்லை என உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்ட வீடுகளுக்கு மட்டும் தடையில்லா சான்று இல்லாமல் வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>அதே சமயம், நீர்நிலை புறம்போக்கு, மேய்ச்சல் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டிருந்தால் அதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள், வன புறம்போக்கு நிலங்கள், மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள், ரெயில்வே நிலங்கள், மத நிறுவனங்களின் பெயரில் இருக்கக் கூடிய பட்டா நிலங்கள், கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>இபிஎப்ஓ ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: பிரதமர்  மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/epfo-wage-ceiling-raised-to-rs-25000-nainar-nagendran-thanks-pm-modi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/epfo-wage-ceiling-raised-to-rs-25000-nainar-nagendran-thanks-pm-modi#comments</comments><guid isPermaLink="false">3648f382-a1a4-424e-90df-e70808f0bd7c</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:16:59 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:16:59.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>PM Modi,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,EPFO,உயர்வு,thanks,நன்றி,மோடி,Wage,Raised,இபிஎப்ஓ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/vzp570k8/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/vzp570k8/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இபிஎப்ஓ ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: உழைக்கும் வர்க்கத்தின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>நிதி பாதுகாப்பு</h2><p> பாரத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின்  கட்டாய பங்களிப்பிற்கான மாத ஊதிய உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்புதலை வழங்கியுள்ளது. </p><p>இதன் மூலம், 51 லட்சத்துக்கும் அதிகமான கூடுதல் தொழிலாளர்கள் நேரடியாக சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள். குறிப்பாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை மாத ஊதியம் பெறும் முறைசார் துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு இது மிகப்பெரிய நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது.</p><h2>ரூ.56,696 கோடி</h2><p>இந்தத் திட்ட விரிவாக்கத்திற்காக மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.56,696 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் புதிய பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி சேமிப்பு மட்டுமின்றி, ஊழியர் ஓய்வூதியத் திட்டம்  வாயிலாக முதுமைக் கால ஓய்வூதியமும், ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பும் முழுமையாக கிடைக்கும்.</p> <h2>பாராட்டு</h2><p>நாட்டின் வளர்ச்சி நாயகனாகவும், தொழிலாளர்களின் காவலனாகவும் திகழும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடியின்</a> இத்தகைய தொழிலாளர் நலன் காக்கும் தொலைநோக்கு முடிவை மனதார பாராட்டுவதோடு, உழைக்கும் மக்களின் சார்பாக அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா; அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகட்டும் - முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-consecration-ceremony-may-happiness-abound-in-everyones-lives-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-consecration-ceremony-may-happiness-abound-in-everyones-lives-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">29563fed-fd10-4b66-95a8-d901f4120040</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:15:39 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:15:39.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/anxqreag/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/anxqreag/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(செப்டம்பர் 17-ந்தேதி) கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு நாளை மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். </p><p>தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்! </p><p>நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-tokens-to-be-allocated-at-sub-registrar-offices-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-tokens-to-be-allocated-at-sub-registrar-offices-tomorrow#comments</comments><guid isPermaLink="false">317a434a-2329-4997-9d3d-634ddc9f8f02</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:14:41 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:14:41.744Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கூடுதல் டோக்கன்கள்,sub-registrar offices,சார்பதிவாளர் அலுவலகம்,Additional Tokens,Avani,ஆவணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/d1gb35rf/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சார்பதிவாளர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/d1gb35rf/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்தம் தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.</p><h2>கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆவணி </a>மாதத்தில் வரும் கடைசி முகூர்த்தம் தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு</p><p>சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p>தற்போது ஆவணி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்த தினமான 17.09.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.</p><h2>கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகள்</h2><p>எனவே, ஆவணி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்த தினமான 17.09.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவாரா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-chief-minister-fulfill-the-election-promises-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-chief-minister-fulfill-the-election-promises-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">afde0402-cacd-4ddd-954e-970f200e9343</guid><pubDate>Wed, 16 Sep 2026 14:57:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T14:57:27.714Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/w8lhyxly/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/w8lhyxly/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விதை, உரம், பூச்சிக்கொல்லி, தொழிலாளர் கூலி உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், சாகுபடிக்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக விவசாயிகள் கடன் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி கோரி போராட்டம்</h2><p>திருச்சி சமயபுரத்தில் விவசாயிகள், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற முதன்மையான கோரிக்கையை முன்வைத்து இரவு பகலாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>விவசாயிகளின் பிரச்சினை பயிர்க்கடனோடு மட்டும் முடிந்துவிடவில்லை. சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல், அவர்கள் பெரும் செலவில் விளைவித்த நெல்லை அரசு உரிய முறையில் கொள்முதல் செய்வதில் காணப்படும் பிரச்சினைகள் என பல்வேறு நெருக்கடிகளையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், ஏற்கெனவே சுமந்து வரும் கடன் மேலும் பெருகி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளுகிறது.</p><p>மழை, வறட்சி, நீர்ப்பற்றாக்குறை, உற்பத்திச் செலவு உயர்வு, இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, விளைபொருளுக்கான உரிய விலை கிடைக்காத நிலை என ஆண்டுதோறும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு விவசாயம் செய்யும் உழவர்களுக்கு, பயிர்க்கடன் என்பது சாதாரண நிதிச் சுமை அல்ல. அது அவர்களின் குடும்ப வாழ்க்கையையும் அடுத்தடுத்த சாகுபடி காலத்தையும் பாதிக்கும் பெரும் சுமையாக மாறுகிறது.</p><h2>நீருக்காகப் போராடும் நிலை</h2><p>ஒருபுறம், பயிரிடுவதற்குத் தேவையான நீருக்காகப் போராட வேண்டிய நிலை. மறுபுறம், விளைவித்த நெல்லை முறையாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்த வேண்டிய கட்டாயம். இதற்கிடையே, சாகுபடிக்காகப் பெற்ற கடனைச் செலுத்த முடியாமல் தவிக்கும் நிலை. இவை அனைத்தும் விவசாயிகளின் நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன.</p><p>விவசாயிகள் உணவை உற்பத்தி செய்து மக்களின் பசியைப் போக்குகின்றனர். ஆனால் அவர்களது உழைப்புக்கான பாதுகாப்பையும், விளைபொருளுக்கான உரிய கொள்முதலையும், கடன் சுமையிலிருந்து விடுதலையையும் உறுதி செய்வது அரசின் பொறுப்பு.</p><p>தேர்தலுக்கு முன்பாக விவசாயிகளிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் தேர்தல் பரப்புரை வார்த்தைகளாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அவை செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்</h2><p>சமயபுரத்தில் போராடி வரும் விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையான பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதோடு, சாகுபடிக்குத் தேவையான நீரை உறுதி செய்வதற்கும், விவசாயிகள் விளைவித்த நெல்லை காலதாமதமின்றி முறையாகக் கொள்முதல் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>விவசாயிகள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தனித்தனியாகப் போராட்டக் களத்திற்கு வர வேண்டிய நிலை முடிவுக்கு வர வேண்டும். அவர்களின் உழைப்புக்குப் பாதுகாப்பும், விளைபொருளுக்கு உரிய சந்தையும், வாழ்வாதாரத்திற்கு நிலைத்தன்மையும் உருவாக்கப்பட வேண்டும்.</p><p>சமயபுரத்தில் இரவு பகலாகக் காத்திருக்கும் விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையான பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் நீர்ப்பாசனப் பிரச்சினைக்கும், நெல் கொள்முதல் தொடர்பான சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டும். தேர்தல் காலத்தில் விவசாயிகளிடம் அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி, உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><h2>விவசாயிகள் போராட்டம்</h2><p>தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவாரா? இரவு பகலாக விவசாயிகள் போராடுவது ஏன்? திருச்சி சமயபுரத்தில் விவசாயிகள் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற முதன்மையான கோரிக்கையை முன்வைத்து இரவு பகலாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>அவர்களின் போராட்டம் ஒரு கோரிக்கைக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. விவசாயத்திற்குத் தேவையான நீர் கிடைக்காத நிலை, பெரும் செலவில் உற்பத்தி செய்த நெல்லை உரிய முறையில் அரசு கொள்முதல் செய்யாத சிக்கல், சாகுபடிக்காகப் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அதிகரித்து வரும் நிதிச் சுமை என, உழவர்களின் வாழ்வாதாரமே பல்வேறு முனைகளில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.</p><p>விதை, உரம், பூச்சிக்கொல்லி, தொழிலாளர் கூலி உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், சாகுபடிக்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக விவசாயிகள் கடன் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதன்பிறகு விளைச்சலைக் காப்பாற்ற தண்ணீருக்காகப் போராடவும், அறுவடைக்குப் பிறகு நெல்லை விற்பனை செய்ய கொள்முதல் மையங்களை நாடவும் வேண்டிய சூழல் உருவாகிறது. எதிர்பார்த்த வருவாய் கிடைக்காதபோது, அந்தக் கடன் சுமை அடுத்த சாகுபடிக்கும் தொடர்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமை செயலகம் அவசியம்; ஆனால் பட்டினப்பாக்கத்தில் அமைப்பது தவறானது - அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-new-secretariat-is-essential-but-locating-it-at-pattinapakkam-is-a-mistake-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-new-secretariat-is-essential-but-locating-it-at-pattinapakkam-is-a-mistake-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">d645da6f-5ebe-4e34-926c-8eb383b2d21b</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:53:42 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:53:42.432Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/7y26hczn/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/7y26hczn/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தமிழக அரசு புதிதாக பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அவசியமானது. அதில் மாற்றுக் கருத்து கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையும் இதுதான். </p><p>ஆனால் அதே சமயம், பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளகம் கட்டுவது என்பது மிக தவறான ஒரு முடிவு. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கிய காரணம் அந்த பகுதி குறுகிய பகுதி. போக்குவருத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. </p><p>அந்த பகுதியில் பல கல்வி நிலையங்கள், பல கல்லூரிகள், சாந்தோம் தேவாலயம், பத்திரப்பதிவு தலைமை அலுவலகம் ஆகியவை இருக்கின்றன. மேலும் அங்கு குறுகிய சாலைகள்தான் உள்ளன. நாளை அங்கே தலைமை செயலகம், சட்டமன்ற வலாகம் வந்தால் லட்சக்கணக்கான மக்கள் அங்கே செல்வார்கள். அப்போது அங்கே செல்வதற்கு இடம் இருக்காது. போக்குவரத்து நெரிசல் மிக மோசமாக இருக்கும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பல்கலைக்கழகங்கள் அடுக்குமாடி கட்டடங்களாக சுருங்குகின்றனவா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-universities-being-reduced-to-tower-blocks-asks-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-universities-being-reduced-to-tower-blocks-asks-velmurugan#comments</comments><guid isPermaLink="false">e41695b5-7661-4cd5-a943-af0d17e8eb6c</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:45:29 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:45:29.584Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Universities,Velmurugan,வேல்முருகன்,Buildings,கேள்வி,பல்கலைக்கழகங்கள்,asks,அடுக்குமாடி கட்டிடங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/4tr0yo9f/velmurugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/4tr0yo9f/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பல்கலைக்கழகங்கள் அடுக்குமாடி கட்டடங்களாக சுருங்குகின்றனவா? மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D"> வேல்முருகன்</a> கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>திருத்த மசோதா</h2><p>தமிழ்நாட்டில் தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பல்கலைக்கழகங்களை</a> அமைப்பதற்கான விதிமுறைகளில் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், நமது உயர்கல்வி கட்டமைப்பின் எதிர்காலம் குறித்து ஆழமான கவலையை ஏற்படுத்துகின்றன.</p> <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, 2026 மூலம், இதுவரை தனியார் பல்கலைக்கழகம் அமைக்க தேவையான 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் என்ற நிபந்தனை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.</p><h2>நிரந்தர நிதி குறைக்கப்பட்டுள்ளது</h2><p>இனி, சென்னை மாநகராட்சி பகுதியில் 12 ஏக்கர். பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கர். மாநிலத்தின் பிற பகுதிகளில் 25 ஏக்கர் நிலம் இருந்தால் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க முடியும். மேலும், நிறுவனம் பராமரிக்க வேண்டிய நிரந்தர நிதியும் ரூ. 50 கோடியிலிருந்து ரூ. 25 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.</p> <h2>புதிய அளவுகள் </h2><p>சென்னை போன்ற நகர்ப்புற பகுதிகளில் 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலத்தை பெறுவது கடினம் என்பதால் இந்த தளர்வு தேவைப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டடங்கள், விடுதிகள், ஆய்வகங்கள், விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டே புதிய அளவுகள் நிர்ணயிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விதிமுறை மாற்றப்பட்டதா?</h2><p>ஆனால், நில பற்றாக்குறையை சமாளிப்பதற்காக விதிமுறை மாற்றப்பட்டதா? அல்லது தனியார் உயர்கல்வி நிறுவனங்களை அதிகரிப்பதற்கான தடைகள் அகற்றப்படுகின்றனவா? கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்வதைவிட அவற்றின் தரம் உறுதி செய்யப்படுகிறதா? அல்லது தனியார் நிறுவனங்களின் லாப கணக்கா?</p><h2>சட்ட திருத்த முயற்சி</h2><p>இந்தக் கேள்வியை நான் இன்று மட்டும் கேட்கவில்லை! தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டத் திருத்த முயற்சி கடந்த திமுக ஆட்சி காலத்திலும் முன்வைக்கப்பட்டது. அப்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த நான், மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு, சமூகநீதி, ஏழை எளிய குடும்பங்களின் எதிர்காலம் உள்ளிட்ட அம்சங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சட்டப்பேரவையிலேயே சுட்டிக்காட்டினேன்.</p><h2>வேறு வடிவில் </h2><p>பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அப்போது திமுக அரசு அந்த மசோதாவை திரும்ப பெற்றது. 2026 பிப்ரவரி 20 அன்று சட்டப்பேரவையில் அது அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டது. ஆனால், இன்று அதே விவகாரம் வேறு வடிவில் மீண்டும் நம் முன் நிறுத்தப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் திரும்ப பெறப்பட்ட முயற்சியை, இன்றைய அரசு மாற்றிய வடிவில் மீண்டும் முன்னெடுத்து சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.</p><h2>என்ன பதில்?</h2><p>அதனால்தான் நான் மீண்டும் கேட்கிறேன். அன்று எழுந்த ஆட்சேபனைகளுக்கு இப்போது என்ன பதில்? அப்போது தேவைப்பட்ட மறுபரிசீலனை இன்று ஏன் தேவையில்லை? மாணவர்களின் நலன் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்றைய அரசு என்ன விளக்கம் அளிக்க போகிறது?</p> <p>ஒரு பல்கலைக்கழகத்தின் தரத்தை அதன் நிலப்பரப்பை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது. ஆனால் நிலப்பரப்பை கணிசமாக குறைக்கும் நிலையில், அதற்கேற்ப கட்டாயமான உள்கட்டமைப்பு மற்றும் கல்வி தர அளவுகோல்கள் இன்னும் வலுவாக இருக்க வேண்டும்.</p><h2>சமூக அமைப்பு</h2><p>பல்கலைக்கழகம் என்பது வகுப்பறைகளின் தொகுப்பு மட்டுமல்ல. அது அறிவையும் ஆராய்ச்சியையும் உருவாக்கும் சமூக அமைப்பு. தரமான பேராசிரியர்கள், சிறந்த ஆராய்ச்சி, மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சூழல், வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாடு ஆகியவையே அதன் உண்மையான அடையாளம்.</p><h2>உத்தரவாதம்</h2><p>கல்வி வணிகமாகிவிடக் கூடாது. ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, கட்டண சலுகை, இடஒதுக்கீடு ஆகியவை எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதற்கு அரசு தெளிவான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும்.</p> <h2>எதிர்ப்பு இல்லை</h2><p>தனியார் முதலீட்டை வரவேற்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் முதலீட்டின் பெயரில் கல்வியின் நோக்கம் மாறக்கூடாது. அரசு பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் போதிய நிதியின்றி தவிக்கும் நிலையில், தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு விதிமுறைகளை தளர்த்துவதற்கு முன்பாக, அரசு தனது கல்வி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.</p> <h2>மாணவர் பாதுகாப்பு</h2><p>எனவே, 2026-ம் ஆண்டுக்கான தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தத்தின் கீழ் உருவாகும் நிறுவனங்களுக்கு கல்வி தரம், ஆசிரியர் மாணவர் விகிதம், ஆய்வக மற்றும் ஆராய்ச்சி வசதிகள், மாணவர் பாதுகாப்பு, விடுதி மற்றும் அடிப்படை வசதிகள், கட்டண வெளிப்படைத்தன்மை, சமூகநீதி மற்றும் மாணவர் உரிமைகள் ஆகியவற்றில் கடுமையான, வெளிப்படையான விதிமுறைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பல்கலைக்கழகங்கள் அடுக்குமாடிக் கட்டடங்களாகச் சுருங்குகின்றனவா?<br>மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா?<br><br>தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான விதிமுறைகளில் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், நமது உயர்கல்விக் கட்டமைப்பின் எதிர்காலம் குறித்து ஆழமான கவலையை… <a href="https://t.co/zPRtZCf73S">pic.twitter.com/zPRtZCf73S</a></p>&mdash; Velmurugan.T (@VelmuruganTVK) <a href="https://x.com/VelmuruganTVK/status/2100201215556452555?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>‘விஜய் சேதுபதி பேசியது அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும்’ - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-vijay-sethupathi-said-applies-to-all-political-leaders-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-vijay-sethupathi-said-applies-to-all-political-leaders-seeman#comments</comments><guid isPermaLink="false">674fccc0-acb0-4e80-a467-2a1629e8e540</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:42:40 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:42:40.852Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,விஜய் சேதுபதி,vijay sethupathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/nhqg4cf9/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/nhqg4cf9/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-</p> <p>“அரசியல் தெரிந்தவர்கள், அரசியல் தெரிந்தவர்களிடம் நீங்கள் பேசலாம். ஆனால் அவதூறு பேசுபவர்களிடம் எதுவும் பேச முடியாது. நடிகர் விஜய் சேதுபதி சொன்ன கருத்து அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். ஏன் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களுக்கு அது பொருந்தாதா? </p><p>அவர் சொன்னது ஒரு பொதுவான கருத்து. இந்த கருத்தை ‘வையத் தலைமை கொள்’ புத்தகத்தில் வெ.இறையன்பு எழுதியுள்ளார். ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? என உலகம் முழுவதும் இருக்கும் கோட்பாட்டை அவர் எழுதுகிறார். அதை விஜய் சேதுபதி பதிவு செய்துள்ளார். </p><p>அவர் கூறிய பொதுவான கருத்தை ஒருவரோடு பொருத்திப் பார்த்து பிரச்சினை செய்வது அவசியமற்றது. நீங்கள் ஏன் உங்களை சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டும்? அப்படியென்றால் அவர் சொன்னதுபோல் பிரச்சினைகளை கண்டு ஓடுபவர் தானா?”</p><p>இவ்வாறு சீமான் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>‘பரந்தூரில் கேட்டதை பட்டினப்பாக்கம் மக்களிடம் முதல்-அமைச்சர் ஏன் கேட்கவில்லை?’ - செல்வப்பெருந்தகை கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-didnt-the-chief-minister-ask-the-people-of-pattinapakkam-what-he-asked-in-parandur-selvaperunthagai-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-didnt-the-chief-minister-ask-the-people-of-pattinapakkam-what-he-asked-in-parandur-selvaperunthagai-asks#comments</comments><guid isPermaLink="false">f5de2429-a5a0-4109-9ae0-27e24994c289</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:28:25 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:28:25.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>செல்வப்பெருந்தகை,Selvaperunthagai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zaxkhjsq/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zaxkhjsq/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“அரசு சார்பில் ஒரு எதிர்கால திட்டம் போடப்படும்போது அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டும். மேலும் எந்த பகுதியில் ஒரு திட்டம் வருகிறதோ அந்த பகுதிக்கு சென்று அந்த மக்களிடம் ஆலோசனை பெற வேண்டும். </p><p>பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், அந்த பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள மகக்ளிடம் பேசி, விமான நிலையம் வேண்டாம் என்ற முடிவுக்கு முதல்-அமைச்சர் வந்தார். பரந்தூர் மக்களிடம் கேட்டதுபோல் பட்டினப்பாக்கம் மக்களிடம் முதல்-அமைச்சர் ஏன் க்ஜருத்து கேட்கவில்லை? </p> <p>இன்று கம்யூனிஸ்ட்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும், மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். அதே போன்று அனைத்து கூட்டணி கட்சிகளும் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவை; நாளை  &apos;ஆசீர்வாத தீபம்&apos; ஏற்றி பிரார்த்திப்போம் - எல். முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/25-years-of-modis-public-service-let-us-light-blessing-lamp-and-pray-tomorrow-l-murugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/25-years-of-modis-public-service-let-us-light-blessing-lamp-and-pray-tomorrow-l-murugan#comments</comments><guid isPermaLink="false">c8179092-dd25-403f-abf4-b0ab802f4a69</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:22:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:22:02.837Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>L. Murugan,Modi,service,Public,மக்கள்,எல். முருகன்,மோடி,Deepam,prayers,தீபம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ycmbidpe/l.murugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ எல். முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய இணை மந்திரி எல். முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ycmbidpe/l.murugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவை நாளை  'ஆசீர்வாத தீபம்' ஏற்றி பிரார்த்திப்போம் என்று மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">எல். முருகன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>பொது சேவை</h2><p>மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாட்டிற்கு சேவையாற்றுவதே பாரத பிரதமர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">மோடியின்</a> வாழ்க்கையின் வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது. பொது சேவை மற்றும் தேச கட்டமைப்பிற்காக அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றி வரும்  நரேந்திர மோடியின்  25 ஆண்டுகால அரசு தலைமை பணி ஈடு இணையற்றது.</p><h2>முன்மாதிரி மாநிலம்</h2><p>நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகு, அது தேசத்திற்கே முன்மாதிரி மாநிலமாக உருவெடுத்தது. அதுபோலவே, அவர் பாரத பிரதமராக பதவியேற்ற பிறகு நமது நாடு உலகிற்கே குருவாக  மாறி வருகிறது.</p><h2>உயரிய விருது</h2><p>உலகளவில் 37 நாடுகளின் உயரிய விருதை பிரதமர் பெற்றுள்ளார். கொரானா காலத்தில் உலகமே பெரும் இன்னல்களை சந்தித்து திகைத்து நின்றபோது, பிரதமரின் சீரிய தலைமை, கொரனாவைில் இருந்து மக்களை காக்க எடுத்த நடவடிக்கைகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். கொரானா தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. </p><h2>வளர்ச்சியடைந்த இந்தியா- 2047</h2><p>உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டம், முத்ரா கடன் திட்டம், ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் உள்ளிட்ட பிரதமரின் தொலைநோக்கு மக்கள் நல திட்டங்கள் நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்தி பீடுநடை போட செய்துள்ளது. </p> <p>அவரது தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை நாட்டிற்கு ஒரு புதிய திசையையும் புதுப்பிக்கப்பட்ட வலிமையையும் அளித்துள்ளது. பிரதமரின் உறுதிப்பாடு மற்றும் செயல்திறன் காரணமாக வளர்ச்சியடைந்த இந்தியா- 2047 என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.</p><h2>ஆசீர்வாத தீபம்</h2><p>நாட்டின் இந்த முன்னேற்ற பயணத்திற்கும், பிரதமர் நரேந்திர மோடியின்  சிறப்பான தலைமைக்கு நமது நல்வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 17 அன்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் நம் வீடுகளில் 'ஆசீர்வாத தீபம்' ஏற்றுவோம். அவருக்கு நமது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிப்போம்.  அவரது நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம்.</p> <p>இந்தியர்கள் ஒவ்வொருவரும் இணைந்து ஆசிர்வாத தீபத்தை ஏற்றி, நமது பிரதமரின் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் 25 ஆண்டுகால மக்கள் சேவை<br><br>நாளை &#39;ஆசீர்வாத தீபம்&#39; ஏற்றி பிரார்த்திப்போம்<br><br>மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் நாட்டிற்குச் சேவையாற்றுவதே பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கையின் வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது. பொதுச் சேவை… <a href="https://t.co/12wD2HLIZg">pic.twitter.com/12wD2HLIZg</a></p>&mdash; Dr.L.Murugan (@DrLMurugan) <a href="https://x.com/DrLMurugan/status/2100209022624489751?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>‘புதிய தலைமை செயலகத்திற்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்’ - நயினார் நாகேந்திரன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-different-location-must-be-selected-for-the-new-secretariat-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-different-location-must-be-selected-for-the-new-secretariat-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">f85f2277-c679-4900-8e33-c973ffefed37</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:10:48 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:10:48.899Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ddt4ch1o/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ddt4ch1o/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தலைமை செயலகத்தை பட்டினப்பாக்கத்திற்கு மாற்றப்போவதாகவும், ரூ.1,200 கோடியில் திட்டம் போடப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இன்னும் இடத்தை தேர்வு செய்யவில்லை, திட்ட அறிக்கை தயார் செய்யவில்லை, செலவு மதிப்பீடு செய்யவில்லை. இருப்பினும் ரூ.1,200 கோடியில் திட்டம் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று புரியவில்லை. இப்போது ரூ.2,000 கோடி என்று வேறு சொல்கிறார்கள். </p><p>முதல்-அமைச்சர் விஜய் சினிமாவில் இருந்தபோது மீனவர்களை காப்பாற்றுவது போல் ஒரு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இப்போது, மீனவர்களின் வீடுகளை இடிப்பது போல் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இது முற்றிலும் கண்டனத்திற்குரியது. புதிய தலைமை செயலகத்திற்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title> “ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசிய தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது சரியானது தான்” - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-indeed-right-to-register-a-case-against-the-dmk-members-who-spoke-obscenely-at-the-protest-premalatha-vijayakanth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-was-indeed-right-to-register-a-case-against-the-dmk-members-who-spoke-obscenely-at-the-protest-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">f3fcdd17-d4ff-484b-b596-08fdec6141a9</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:09:52 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:09:52.753Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,பிரேமலதா,தி.மு.க.,Premalatha Vijayakand,Premalatha</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2cjgeyg4/premalatha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2cjgeyg4/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசிய தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது சரியானது தான் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.</p><h2>வழக்கு பதிந்தது சரிதான்</h2><p>தேமுதிகவின் 22 ஆம் ஆண்டு கட்சி தொடக்க நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/dmdk">தேமுதிக </a>அலுவலகத்தில் கட்சி கொடியினை, கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது;-</p><p>“ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசிய தி.மு.கவினர் மீது வழக்கு பதிந்தது சரியானது தான்... நிர்மல் குமார் அம்மா என்ன பண்ணாங்க.? எதுக்கு அவங்க அம்மாவ பத்தி பேசுனீங்க? அடுத்தவங்க முதுகை சொரியும் முன் உங்கள் முதுகை பாருங்கள்.. பெற்ற தாய் குறித்து பொதுவெளியில் பேசும் உரிமை யாருக்கும் கிடையாது.</p><h2>பிரேமலதா கண்டனம்</h2><p>பேசிய அவரையும் பெற்றெடுத்தது ஒரு தாய்தான். அதற்கு எனது கடுமையான கண்டனங்கள். மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக, வாய்க்கு வந்தபடி என்னென்னவோ பேசக் கூடாது. அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்தது சரியான முடிவுதான். வார்த்தைகள் என்றைக்கும் மாறாது, வரலாறும் மாறாது.</p><p>சிம்பிளா ஒரு வார்த்தை சொல்லிட்டு போய்டுவேன், யாரையும் காயப்படுத்தக்கூடாதுன்னு என்னோட வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துறேன். முதல்-அமைச்சர் லண்டன் பயணத்தில் நீங்க என்னலாம் பார்த்தீங்களோ. நானும் அதையெல்லாம் பார்த்தேன்”</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 19ம் தேதி கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-fingerprint-registration-at-all-ration-shops-in-tamil-nadu-on-the-19th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-for-fingerprint-registration-at-all-ration-shops-in-tamil-nadu-on-the-19th#comments</comments><guid isPermaLink="false">fcaa156f-6e8e-4473-9b84-6506ab6eda2c</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:49:01 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:49:01.668Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Ration shop,Special camp,சிறப்பு முகாம்,ரேசன் கடை,ration shops,கைவிரல் ரேகை பதிவு,ரேசன் கடைகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/3ph82wi3/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/3ph82wi3/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 19ம் தேதி கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p><h2>ரேசன் கடைகளில் சிறப்பு முகாம்</h2><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக அரசு</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48% (eKYC) பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>கைவிரல் ரேகை பதிவு</h2><p>இந்த (eKYC) பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 19.09.2026 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைதேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை தவிர்த்து) சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>எனவே, இன்று வரை, நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் 19.09.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை (eKYC பதிவினை) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கு - தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-the-construction-of-the-pen-memorial-green-tribunal-warns-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-against-the-construction-of-the-pen-memorial-green-tribunal-warns-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">ecca933c-b51e-45fe-abb1-93acc731a44e</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:47:46 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:47:46.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,Green Tribunal,பசுமை தீர்ப்பாயம்,பேனா நினைவுச் சின்னம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/usjav8nv/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/usjav8nv/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக வங்கக்கடலில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் ஒப்புதல் வந்து வழங்கி இருந்தது. இந்த ஒப்புதலை எதிர்த்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன், சென்னையை சேர்ந்த மீனவர் பாரதி, திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். </p><p>இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு 2022 ஆம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தும் தமிழக அரசு இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் மட்டுமே பெற்று வருவதாக தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்தது. </p><p>மேலும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியையும் தீர்ப்பாயம் எழுப்பியுள்ளது. அதோடு, இந்த பிரதான வழக்கில் வரும் அக்டோபர் 29-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பசுமை தீர்ப்பாயம், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 29-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பரிகாரம் செய்ய வந்த பெண்களுடன் உல்லாசம்: சிறுமியை சீண்டியதால் அம்பலமான சாமியாரின் தந்திரம்...!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/having-fun-with-women-who-came-to-seek-redress-the-preachers-trick-was-exposed-after-he-raped-a-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/having-fun-with-women-who-came-to-seek-redress-the-preachers-trick-was-exposed-after-he-raped-a-girl#comments</comments><guid isPermaLink="false">fd921816-9dfa-475b-9686-16a84847820f</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:35:35 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:35:35.229Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்,சிறுமிக்கு பாலியல் தொல்லை,Preacher arrested,rape attempt,போலி சாமியார் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/u4vb5qmb/13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/u4vb5qmb/13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>வாழப்பாடி அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>சிறுமிக்கு பாலியல் தொல்லை</h2><p>சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வெள்ளாளக்குண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜா. இவர், பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்களை பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். மேலும், தான் ஆன்மிகவாதி என்றும், பல்வேறு தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதாகவும் கூறி வந்ததாக தெரிகிறது.</p><p>இந்த நிலையில், அவரது கடைக்கு சென்ற சிறுமி ஒருவரிடம் <a href="https://www.dailythanthi.com/topic/பாலியல்">பாலியல்</a> ரீதியாக சீண்டியுள்ளார். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் சென்று கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் இது குறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><h2>குற்றவாளி கைது</h2><p>பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பரிகாரம் செய்வதாக கூறி, தன்னிடம் உதவி நாடி வந்த பெண்களிடம் உல்லாசமாக இருந்துள்ளார் எனும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. மேலும், விஜயராஜா பயன்படுத்திய லேப்டாப்பை கைப்பற்றி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a> ஆய்வு செய்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பள்ளி சிறுமிகளின் ஆபாச படங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, லேப்டாப் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>இதில் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பரிகாரம் செய்வதாக கூறி பெண்களிடம் உல்லாசமாக இருந்து, அதை பதிவு செய்து பெண்களை மிரட்டியுள்ளாரா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு பாதிப்பால் பறிபோன 9 உயிர்கள்; உடனடி நடவடிக்கை எடுக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-lives-lost-to-dengue-nainar-nagendran-urges-immediate-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-lives-lost-to-dengue-nainar-nagendran-urges-immediate-action#comments</comments><guid isPermaLink="false">bbe45a62-5e31-42b0-8e28-26fc80311d70</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:17:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:17:14.239Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/n2lejrmd/nainar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/n2lejrmd/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெங்கு பாதிப்பால் 9 உயிர்கள் பறிபோன நிலையில், தவெக அரசு மெத்தனத்தைக் கைவிட்டுப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>நாள்தோறும் 70 முதல் 100 பேர் வரை பாதிப்பு</h2><p>இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதும், இதுவரை 15,933-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 70 முதல் 100 பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழல், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>காலநிலை மாற்றத்தால் கொசுக்கள் பெருகும் எனத் தெரிந்திருந்தும், தவெக அரசின் சுகாதாரத் துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் 9 பேர் உயிரிழக்கும் அளவுக்கு மெத்தனமாகச் செயல்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாதிப்புகள் தீவிரமடைந்த பின் கண்துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், ஆரம்பத்திலேயே கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை முடுக்கிவிட்டிருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதையும் இந்த உயிரிழப்புகளையும் தடுத்திருக்க முடியும்.</p><h2>போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை</h2><p>எனவே, இனியாவது விஜய் அரசு தனது மெத்தனப் போக்கைக் கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/nine-dead-as-dengue-cases-surge-minister-urges-masks">டெங்கு தடுப்பு</a> நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும் போதிய படுக்கைகள், மருந்துகள், ரத்தத் தட்டணுக்கள் (platelets) இருப்பு மற்றும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை 24 மணி நேரமும் உறுதி செய்ய வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் வீடு வீடாகக் கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, தொடர் மருத்துவ முகாம்களை நடத்தி மக்களின், குறிப்பாகக் குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் போக்குவரத்து விதிமீறல்அபராதம் குறித்த தகவல்களைப் பெற 15 இடங்களில் சிறப்பு மையங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-centers-set-up-at-15-locations-in-chennai-to-provide-information-on-traffic-violation-fines</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-centers-set-up-at-15-locations-in-chennai-to-provide-information-on-traffic-violation-fines#comments</comments><guid isPermaLink="false">58560d21-1187-4cb4-bc97-19b4a38299bb</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:14:53 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:14:53.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,fine,traffic violation,போக்குவரத்து விதிமீறல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xep34ufg/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xep34ufg/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு இ-சலான்(E-Challan) மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. நேரடியாக வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு அபராதம் குறித்த தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் இது போன்ற மெசேஜ்கள் மூலமாக சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. </p><p>அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு ஏதேனும் மெசேஜ் வந்தால், அதில் உள்ள லிங்க் போன்றவற்றை தொட்டு உள்ளே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், மோசடி குறித்த பயம் காரணமாக காவல்துறை சார்பில் அனுப்பப்படும் போக்குவரத்து விதிமீறல் அபராதம் தொடர்பான மெசேஜ்களையும் பலர் பார்க்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால் அபராதத்தை செலுத்தாமல் பலர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. </p><p>இதனை தவிர்க்கும் வகையில், அபராதம் குறித்த தகவல்களை பெறுவதற்காக சென்னை காவல்துறை சார்பில் சிறப்பு மையங்களை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு அபராத தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை நேரடியாக அந்த மையங்களுக்கு சென்று தெரிந்து கொண்டு அபராதத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சென்னையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் ஒரு மையம் என்ற அடிப்படையில் மொத்தம் 15 சிறப்பு அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு மையங்கள் வரும் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கணவருடன் கருத்து வேறுபாடு: இன்ஸ்டாகிராமில் ஆறுதல் கூறி..150 பவுன் நகை, ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபர்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-with-husband-young-man-swindles-150-sovereigns-of-gold-and-30-lakhs-after-offering-comfort-on-instagram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dispute-with-husband-young-man-swindles-150-sovereigns-of-gold-and-30-lakhs-after-offering-comfort-on-instagram#comments</comments><guid isPermaLink="false">d8677025-4861-4301-b4be-04f3471b7667</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:54:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:54:33.976Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,இன்ஸ்டாகிராம்,Instagram,திருவொற்றியூர்,தண்டையார்பேட்டை,Tondiarpet,Thiruvotriyur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ph1n5acg/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்ஸ்டாகிராமில் ஆறுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ph1n5acg/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருவொற்றியூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகி, 150 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக இளம்பெண் புகார் அளித்துள்ளார்.</p><h2>குடும்பப் பிரச்சினையை கூறிய பெண்</h2><p>திருவொற்றியூரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (29). இவருக்கு தண்டையார்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இளம்பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.</p><h2>ஆறுதல் கூறி நகை, பணம் பெற்றதாக புகார்</h2><p>இளம்பெண்ணின் தந்தை பாரிமுனையில் நகைக்கடை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்சினைகள் குறித்து ஹரிகிருஷ்ணனிடம் இளம்பெண் கூறிய நிலையில், அவர் ஆறுதல் கூறி, பெண்ணிடம் சிறுகச் சிறுக 150 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் பணத்தை ஹரிகிருஷ்ணன் பெற்றதாக கூறப்படுகிறது.</p><h2>கணவர் கேட்டபோது மோசடி வெளிச்சம்</h2><p>இதற்கிடையே, இளம்பெண்ணின் கணவர் மீண்டும் அவருடன் சேர்ந்தபோது, நகை மற்றும் பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஹரிகிருஷ்ணனிடம் நகை மற்றும் பணத்தை கொடுத்திருப்பதும், அவற்றை அவர் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுவதும் தெரியவந்தது.</p><h2>வாலிபர் கைது</h2><p>இதையடுத்து, இளம்பெண் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">திருவொற்றியூர் </a>போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஹரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கையில் பயங்கரம்: சொகுசு காரில் மது அருந்திய 2 வாலிபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivagangai-two-youths-drinking-in-luxury-car-chased-and-hacked-to-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivagangai-two-youths-drinking-in-luxury-car-chased-and-hacked-to-death#comments</comments><guid isPermaLink="false">e3826d92-6d0d-4d7d-a9c1-8962a2dd993b</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:47:00 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:47:00.156Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,வெட்டிக்கொலை,youths,வாலிபர்கள்,alcohol,மது,hacked to death,ஓட ஓட விரட்டி</media:keywords><media:content height="357" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/dtrjw3gd/sivagangai.jpg" width="680"><media:title type="html"><![CDATA[ 2 வாலிபர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிவகங்கையில் பயங்கரம்: சொகுசு காரில் மது அருந்திய 2 வாலிபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/dtrjw3gd/sivagangai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>சிவகங்கை அருகே காரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த காளையார்கோவிலை சேர்ந்த 2 இளைஞர்களை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டிக்கொலை</a> செய்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சொகுசு காரில் மது அருந்தினர்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">சிவகங்கை</a> மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பழலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு ஒரு சொகுசு காரில் வந்தனர். அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் காரை நிறுத்திவிட்டு, அதன் அருகே அமர்ந்து அவர்கள் மது அருந்தி கொண்டிருந்ததாக தெரிகிறது.</p> <h2>ஓட ஓட விரட்டி கொலை</h2><p>அப்போது, அந்த பகுதிக்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் திடீரென வந்தனர். அவர்கள் காரின் அருகே அமர்ந்திருந்த இளைஞர்களை நோக்கி ஆக்ரோஷமாக பாய்ந்தனர். ஆபத்தை உணர்ந்த இரண்டு இளைஞர்களும் தப்பிப்பதற்காக கண்மாய் பகுதியை நோக்கி ஓடினர். ஆனாலும் விடாமல் துரத்திய அந்த மர்ம கும்பல், இருவரையும் ஓட ஓட விரட்டி பிடித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. </p><p>இதில் தலை மற்றும் உடல் பகுதிகளில் கொடூரமான வெட்டுக்காயங்கள் விழுந்து, தலை சிதைந்த நிலையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். அந்த மர்ம கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றது.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 வாலிபர்களின் உடல்களையும் கைப்பற்றினர். பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். </p><p> இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>8 மணி நேரம் நடந்த சோதனை - ‘அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்’ - அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-hour-raid-political-vendetta-is-the-reason-anbil-mahesh-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-hour-raid-political-vendetta-is-the-reason-anbil-mahesh-alleges#comments</comments><guid isPermaLink="false">d3ef2f82-63e7-4bb0-8b70-39fe883a97f6</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:24:06 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:24:06.560Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbil Mahesh,அன்பில் மகேஷ் பொய்யாமொழி,சோதனை,மத்திய குற்றப்பிரிவு போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2ahtlcdd/an.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்பில் மகேஷ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/2ahtlcdd/an.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தனது வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்  என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அன்பில் மகேஷ்</a> குற்றம் சாட்டி உள்ளார்.</p><h2>சோதனை </h2><p>திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் இன்று காலை முதல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை நிறைவடைந்த நிலையில், இதுகுறித்து அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.</p><h2>8 மணி நேரம்</h2><p>அப்போது அவர் கூறுகையில், “காலை முதல் சுமார் 8 மணி நேரமாக எனது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். எனது அனைத்து கோப்புகள் மற்றும் வீட்டின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தேன்” என்றார்.</p><h2>அரசியல் காழ்ப்புணர்ச்சி</h2><p>ஆளுங்கட்சியை விமர்சித்ததன் காரணமாகவே தனது வீட்டில் சோதனை நடைபெற்றதாக அன்பில் மகேஷ் குற்றம்சாட்டினார்.</p><p>“அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவும், அரசியல் மடைமாற்றத்திற்காகவும் எனது வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.</p><h2>18-ம் தேதி</h2><p>விசாரணைக்காக வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>மேலும், 'எதிர்த்து பேசினால் அடுத்த நிமிடம் ரெய்டு அடிப்பதா?. இந்த மாதிரி சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜரானபின் நேராக தாராபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். என்ன பொய் வழக்கு போட்டாலும் நீதிமன்றத்தை நாடி நீதியை நிலைநாட்டுவோம்’ என்றார். </p>]]></content:encoded></item><item><title>கடலூரில் தங்க செயினுடன் விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்த முன்னாள் அரசு அதிகாரி - நகையை தேடும் பணி தீவிரம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-government-official-immerses-vinayagar-idol-along-with-a-gold-chain-in-the-river-in-cuddalore-intensive-search-for-the-jewelry-underway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-government-official-immerses-vinayagar-idol-along-with-a-gold-chain-in-the-river-in-cuddalore-intensive-search-for-the-jewelry-underway#comments</comments><guid isPermaLink="false">6cc776fc-5d81-4c83-afe5-dd74cca4d0fb</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:07:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:07:27.458Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,விநாயகர் சிலை,vinayagar statue,Gold chain,தங்க செயின்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/26ez6sc4/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/26ez6sc4/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர்,</p><p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளிலும், பொது இடங்களிலும் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் பொதுமக்கள் கரைத்து வருகின்றனர்.  </p><p>அந்த வகையில், கடலூர் மாவட்டம் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டில் வைத்து வழிபட்ட சிலைக்கு ஒன்றரை பவுன் தங்க செயினை அணிவித்திருந்தார். தொடர்ந்து 3-வது நாளில் அந்த சிலையை கடலூர் தேவனாம்பட்டினம் அருகே உப்பனாற்றில் கரைத்துள்ளார். </p><p>சிலையை ஆற்றில் கரைத்த பிறகுதான் அதில் தங்க செயின் இருந்தது நினைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஆற்றில் தேடியும் நகை கிடைக்கவில்லை. தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நகையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>திருவாரூரில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: 4 பேருக்கு டெங்கு உறுதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fever-cases-increase-in-thiruvarur-4-people-confirmed-with-dengue</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fever-cases-increase-in-thiruvarur-4-people-confirmed-with-dengue#comments</comments><guid isPermaLink="false">5140af23-006d-4e2f-95c1-683490060c6e</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:07:06 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:07:06.392Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvarur,திருவாரூர்,hospital,மருத்துவமனை,டெங்குகாய்ச்சல்,dengu</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2022/Jan/202201042134552453_Treatment-for-47-people-infected-with-dengue-fever_SECVPF.gif" width="794"><media:title type="html"><![CDATA[ டெங்கு காய்ச்சல் பாதித்த 47 பேருக்கு சிகிச்சை]]></media:title><media:description type="html"><![CDATA[ டெங்கு காய்ச்சல் 4 பேருக்கு உறுதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/import/Articles/2022/Jan/202201042134552453_Treatment-for-47-people-infected-with-dengue-fever_SECVPF.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>திருவாரூர் பகுதியில் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 27 பேரில் 4 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>4 பேருக்கு டெங்கு</h2><p>தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வெப்பநிலை மற்றும் திடீரென பெய்யும் மழையால் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு வகையான நோய்களும் காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">காய்ச்சல்</a> காரணமாக 27 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு <a href="https://www.dailythanthi.com/topic/சிகிச்சை">சிகிச்சை</a> பெற்று வரும் 27 பேரில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>சுகாதாரத்துறை அறிவுரை</h2><p>காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி, மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-9-districts-until-7-pm-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-in-9-districts-until-7-pm-2#comments</comments><guid isPermaLink="false">38491159-386c-4574-b09d-4a68b35548cb</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:01:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:01:33.504Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,மழை செய்திகள்,Rain News,Rain Alert,மழை எச்சரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zg9mr279/rain1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zg9mr279/rain1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>9 மாவட்டங்களில் மழை</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>இந்த நிலையில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தில் </a>9 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி தென்காசி, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகமலையில் 98 கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றமா? - வனத்துறை விளக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-people-from-98-villages-in-meghamalai-being-evicted-forest-department-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-people-from-98-villages-in-meghamalai-being-evicted-forest-department-clarifies#comments</comments><guid isPermaLink="false">403c8a4e-988c-4d62-a188-758072b51a64</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:32:40 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:32:40.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Forest Department,வனத்துறை,மேகமலை,Meghamalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6wew7n0p/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/6wew7n0p/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் வருசநாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 98 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் பரவியது. </p><p>இந்நிலையில், கிராம மக்கள் வெளியேற்றப்பட உள்ளதாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் விவேக் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். 4,601 பேர் ஆக்கிரமித்துள்ள வனத்துறைக்கு சொந்தமான 5,072 ஏக்கர் நிலங்களை மட்டுமே மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பட்டா வைத்துள்ள வீடுகள், விவசாய நிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>முழுமையாக வன ஆக்கிரமிப்பில் உள்ள குறிப்பிட்ட குக்கிராமங்கள் மட்டுமே நடவடிக்கைக்கு உட்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் வனத்தை மட்டுமே நம்பி 75 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தகுதியானவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் வன உரிமை பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-consecration-arrangements-made-to-provide-free-meals-to-one-lakh-devotees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-consecration-arrangements-made-to-provide-free-meals-to-one-lakh-devotees#comments</comments><guid isPermaLink="false">f8869730-c322-4db2-82f7-cca5b394422a</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:16:11 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:16:11.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/qu33vrkd/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/qu33vrkd/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை(செப்டம்பர் 17-ந்தேதி) கோலாகலமாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. </p><p>கும்பாபிஷேகம் விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாளை காலை மற்றும் மதியம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது.</p> <p>சேதுபதி உயர்நிலை பள்ளி விளாகத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்காக சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் பணியாளர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பக்தர்கள் அமர்ந்து உணவருந்தும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p> <p>கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உணவின் தரத்தை உறுதி செய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அன்னதான ஏற்பாடுகளையொட்டி சேதுபதி பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>விஜய் சேதுபதி பேச்சு விவகாரம்: &apos;இதோடு விட்டால் நல்லா இருக்கும்&apos; -  தவெக எம்.எல்.ஏ. கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-would-be-good-if-it-stopped-here-tvk-mla-kanimozhi-responds-to-vijay-sethupathis-remarks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-would-be-good-if-it-stopped-here-tvk-mla-kanimozhi-responds-to-vijay-sethupathis-remarks#comments</comments><guid isPermaLink="false">c7b56713-c09a-4bba-9914-8bfdfc118288</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:00:22 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:00:22.361Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,கனிமொழி,விஜய் சேதுபதி,Actor Vijay Sethupathi,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/e2mw95i4/ka.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எம்.எல்.ஏ. கனிமொழி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/e2mw95i4/ka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>இதோடு விட்டால் நல்லா இருக்கும் என்று விஜய் சேதுபதியின் பேச்சுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20">தவெக </a>எம்.எல்.ஏ. கனிமொழி பதிலளித்துள்ளார்.</p><h2>தொடங்கி வைத்தார்</h2><p>கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.</p><p>பின்னர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் அவர் அரசு பேருந்தில் பயணம் செய்தார்.</p><h2>விஜய் சேதுபதி குறித்து கேள்வி</h2><p>தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி சந்தோஷிடம், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, முதல்-அமைச்சர் விஜய்யை விமர்சித்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அரசியல் விமர்சனங்களை யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம் என்று கூறினார்.</p><h2>அரசியல் விமர்சனங்கள்</h2><p>மேலும்,  “நேரம் சரியில்லை என்ன செய்வது. இதோடு விட்டால் நல்லா இருக்கும். தலைவர் பெயரை சொல்லி கூட பேசுங்கள். அதற்கு மக்கள் பதில் சொல்வார்கள். நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது” என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் போல் வேடமணிந்து வந்த மர்ம நபர் வீடு வீடாக சென்று திருட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mysterious-man-disguised-as-woman-robs-houses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mysterious-man-disguised-as-woman-robs-houses#comments</comments><guid isPermaLink="false">5ecab100-89bb-4f46-9bc1-e1a586dc538d</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:58:05 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:58:05.105Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருட்டு,House,பெண்,Woman,mysterious person,மர்ம நபர்,வேடம்,stole</media:keywords><media:content height="357" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/00p2g0vb/theifinladiesdress.jpg" width="680"><media:title type="html"><![CDATA[ மர்ம நபர்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெண் போல் வேடமணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் வீடு வீடாக சென்று திருட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/00p2g0vb/theifinladiesdress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF">கன்னியாகுமரி</a> மாவட்டம் இரணியல் அருகே நள்ளிரவில் பெண் போல் வேடமணிந்து வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபர் ஒருவராலும், அவனது கைவரிசை அடங்கிய அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகளாலும் அந்த பகுதி மக்களிடையே பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.</p> <h2>மர்ம ஆசாமி</h2><p>இரணியல் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவன் நடமாட்டம் இருந்து வந்துள்ளது. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஏதோ ஒரு பெண் நடந்து வருவது போல தோன்றினாலும், அவனது உடல் அசைவுகள் மற்றும் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின. </p> <p>பெண்கள் அணியும் ஆடைகளை அணிந்து கொண்டு, முகத்தை துணியால் மூடியபடி வரும் அந்த மர்ம ஆசாமி, ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை குறிவைத்து வீடு வீடாக சென்று பூட்டை உடைக்க முயல்வதும், கண்ணில் படும் பொருட்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">திருடி</a> சென்றுள்ளார்.</p> <h2>கேமராவில் சிக்கிய திருடன்</h2><p>அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், அந்த மர்ம நபர் பெண் வேடமிட்டு நள்ளிரவில் நடந்து வரும் காட்சிகள் மிக துல்லியமாக பதிவாகியுள்ளன. </p><h2>போலீசார் வலைவீச்சு</h2><p>இந்த திருட்டு சம்பவம் குறித்து பொதுமக்கள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீஸ் படையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-and-maduranthakam-by-elections-nomination-filing-concludes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-and-maduranthakam-by-elections-nomination-filing-concludes#comments</comments><guid isPermaLink="false">77f62273-8b0a-4065-a58c-d7bdbe777d44</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:54:12 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:54:12.608Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Election,இடைத்தேர்தல்,By election,வேட்புமனு தாக்கல்,மதுராந்தகம்,தாராபுரம்,Maduranthakam,Nomination,Dharapuram,political news</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ntt85h6e/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேட்புமனு தாக்கல் நிறைவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/ntt85h6e/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நிறைவடைந்துள்ளது.</p><h2>5 முனைப் போட்டி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.</p><p>இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12, 13, 14-ந் தேதி தொடர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.</p><h2>மனு தாக்கல்</h2><p>தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார். தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் வந்து மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மனு தாக்கல் செய்தார். மேலும், பனைமரம் ஏறும் தொழிலாளி சதீஷ்குமார் என்பவர் தனது தொழிலைக் குறிக்கும் வகையில் பனைமரம் ஏறும் உபகரணங்களுடன் வந்து சுயேச்சையாக மனு தாக்கல் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.</p><h2>வேட்புமனு தாக்கல் நிறைவு</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-constituency-by-election-tvk-candidate-files-nomination-papers">தாராபுரம் </a>மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நிறைவடைந்துள்ளது.</p><p>வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9 ஆம் தேதியும் நடைபெறும்.</p>]]></content:encoded></item><item><title>‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம்’ - தொடக்க விழா தேதி மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-expansion-change-of-inauguration-date</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-expansion-change-of-inauguration-date#comments</comments><guid isPermaLink="false">4bd55e01-aa46-441b-93a0-90183e84cb16</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:27:39 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:27:39.397Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெருந்தலைவர் காமராஜர்,காலை உணவு திட்டம் விரிவாக்கம்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,Perunthalaivar Kamarajar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/183xao9i/ka.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/183xao9i/ka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை ‘பெருந்தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%20">காமராஜர் </a>காலை உணவு திட்டம்’ விரிவுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டநிலையில், அதற்கான தொடக்க விழா தேதி மாற்றப்பட்டுள்ளது.</p><h2>22-ம் தேதி</h2><p>முதல்-அமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைப்பதாக இருந்த காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் தொடக்க விழா, தற்போது வரும் 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய், விரிவாக்கப்பட்ட திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.</p><h2>6 முதல் 8-ம் வகுப்பு</h2><p>தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம், 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கூடுதலாக நடுநிலைப்பள்ளி மாணவர்களும் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.</p><h2>15.30 லட்சம் மாணவர்கள் பயன்</h2><p>இந்த திட்ட விரிவாக்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15,30,141 மாணவர்கள் பயன்பெற உள்ளனர் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.</p><h2>2 மாவட்டங்கள் </h2><p>இடைத்தேர்தல் காரணமாக செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: ஏடிஎம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-3-arrested-in-atm-robbery-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-3-arrested-in-atm-robbery-case#comments</comments><guid isPermaLink="false">0660d5bb-6919-4333-9a38-d8668a8a4daf</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:14:57 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:14:57.104Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Thiruvallur,திருவள்ளூர்,கொள்ளை,ATM Machine,ஏடிஎம் எந்திரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/v7q35110/12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏடிஎம் எந்திரம் கொள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/v7q35110/12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர்,</p><p>வெள்ளவேடு அருகே ஏடிஎம் இயந்திரத்தை பணத்துடன் கடத்திச் சென்ற வழக்கில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 3 பேரை ஆவடி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>ஏடிஎம் எந்திரம் கொள்ளை</h2><p>திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.</p><p>வெள்ளவேடு பகுதியில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில், மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மெசினை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்ததும், அதனை அமரர் ஊர்தியில் கொண்டு சென்றதும் சிசிடிவி காட்சியின் மூலம் அம்பலமானது.</p><p>சம்பந்தப்பட்ட வங்கியில் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் ரூ.12 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆவடி துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த தனிப்படையினர் நேற்று இரவு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.</p><p>போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் சமீம் (30), ஷாபாகான், ரசூல் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு வேன் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்து வாகனத்தில் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறுகின்றனர். மேலும், இந்த கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? கொள்ளை சம்பவங்களில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>கைது செய்யப்பட்ட 3 பேரையும் சென்னை அழைத்து வரும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த பின்னர், போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>’தற்போதைய தலைமைச் செயலகத்தில் என்ன பிரச்சினை?” -  சீமான் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-allow-the-new-secretariat-to-be-built-at-pattinapakkam-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-allow-the-new-secretariat-to-be-built-at-pattinapakkam-seeman#comments</comments><guid isPermaLink="false">ff536a46-56a8-4297-92e1-ae546ba3a110</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:08:53 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:08:53.481Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,நாம் தமிழர் கட்சி,பட்டினப்பாக்கம்,Pattinapakkam,தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zfnorfh6/SI.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீமான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/zfnorfh6/SI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>’தற்போதைய தலைமைச் செயலகத்தில் என்ன பிரச்சினை?” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>வெறும் அறிவிப்பு</h2><p>இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:</p><p>’பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் என்பது அறிவிப்பு தான், நடக்கப்போவதில்லை, கட்டப்போவதில்லை, கட்டவிடப்போவதில்லை. புதிய தலைமை செயலகம் வேண்டும் என சிலர் அறிக்கை விடுகிறார்கள், தற்போதைய தலைமை செயலகத்தில் என்ன பிரச்சினை உள்ளது?’ என்றார்.</p><h2>ஓமந்தூரார் மருத்துவமனை</h2><p>“உங்களுக்கு புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்றால், ஓமந்தூரார் மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தில் தலைமைச் செயலகத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.</p><p>கடன் வாங்கி, கடன் வாங்கி அதற்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற செலவு தேவையா?” என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.</p><h2>நெரிசல் ஏற்படும்</h2><p>’சென்னையில் எங்கு தலைமைச் செயலகம் கட்டினாலும் நெருக்கடி ஏற்படும். சொந்த ஊரில் அகதியாக இருக்க முடியாது’ என்றும் சீமான் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>

அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை: திவ்யா சத்யராஜ் வெளியிட்ட பரபரப்பு பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/raid-at-anbil-maheshs-house-divya-sathyaraj-releases-a-sensational-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/raid-at-anbil-maheshs-house-divya-sathyaraj-releases-a-sensational-post#comments</comments><guid isPermaLink="false">3fa0b635-77ff-42b4-b41b-f76e23ab5e24</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:07:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:07:33.161Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Anbil Mahesh,Divya Sathyaraj,திவ்யா சத்யராஜ்,மத்திய குற்றப்பிரிவு போலீசார்,வீட்டில் சோதனை,அன்பில் மகேஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/flweevs8/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/flweevs8/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் இந்த சோதனை கடும் கண்டனத்துக்குரியது என திவ்யா சத்யராஜ் பதிவிட்டுள்ளார். </p>  <h2>அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை</h2><p>முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஷ் வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p>  <h2>திவ்யா சத்யராஜ் கடும் கண்டனம்</h2><p>இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் சத்யராஜின் மகளும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ் தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>"தொடர் மின்வெட்டு, லண்டன் ஏமாற்று வேலை, விலைவாசி உயர்வு, பட்டினப்பாக்கம் மக்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், டெண்டர் ஊழல் புகார்கள் என தொடர்ச்சியாக மக்களிடம் அடிவாங்குவதால் அதை திசைதிருப்புவதற்கு மீண்டும் ரெய்டு எனும் ஆயுதத்தைப் பிரயோகிக்கிறது தவெக அரசு.</p><p>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் இந்த சோதனை கடும் கண்டனத்துக்குரியது. அவரும் கழகமும் இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு வெல்வோம்.</p><p>திமுக இதுபோன்ற மிரட்டல்களுக்கு அஞ்சாது என்பதை 77 வருடங்களாகப் பார்த்தும் இன்னும் திருந்தவில்லை என்றால், திருத்தப்படுவீர்கள்."</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்? - வேல்முருகன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-cauvery-turning-into-a-sewage-canal-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-cauvery-turning-into-a-sewage-canal-velmurugan#comments</comments><guid isPermaLink="false">1d74ca07-5d85-468d-a09c-cc10174312d8</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:48:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:48:14.872Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xp82qag3/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/xp82qag3/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.</p><p>இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சுத்திகரிப்புக்கான கட்டமைப்பு இல்லை</h2><p>பெங்களூருக்குக் காவிரி மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 2,825 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. அதே நகரில் நாளொன்றுக்கு சுமார் 2,580 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது. ஆனால், பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கீழ் செயல்படும் 37 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தற்போதைய சுத்திகரிப்புத் திறன் 1,364.5 மில்லியன் லிட்டர் மட்டுமே. இதனால் நாளொன்றுக்கு 1,215.5 மில்லியன் லிட்டர் அளவுக்குச் சுத்திகரிப்புத் திறன் பற்றாக்குறை இருப்பது கர்நாடக அரசின் அதிகாரிகளாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இதன் பொருள், பெங்களூரில் உருவாகும் கழிவுநீரில் பெரும் பகுதியைச் சுத்திகரிப்பதற்குத் தேவையான கட்டமைப்பு இன்னும் முழுமையாக இல்லை என்பதுதான். குடிநீராகப் பயன்படுத்தப்படும் நதியில் கழிவுநீர் கலப்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினையல்ல. அது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் உயிருடன் தொடர்புடைய தலையாய பிரச்சினை. காவிரி கர்நாடகத்தின் வழியாக மட்டுமே ஓடும் நதியல்ல. அதன் நீரை நம்பித் தமிழ்நாட்டில் குடிநீர் பெறும் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். பாசனம் செய்யும் விவசாயிகள் உள்ளனர். தலைமுறை தலைமுறையாகத் தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் அதனுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது.</p><h2>தண்ணீரின் தரத்தை பாதுகாக்க வேண்டும்</h2><p>ஒருபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டிற்காகத் தமிழ்நாடு தொடர் உரிமைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. மறுபுறம், அதே நதியின் நீர்த் தரம் பாழாகும் அளவுக்குக் கழிவுநீர் மேலாண்மையில் இத்தகைய மெத்தனமும் குறைபாடும் நீடிப்பது எந்த வகையில் நியாயம்?</p><p>தண்ணீரின் அளவை உறுதி செய்வதுடன் நின்றுவிடாமல், அதன் தரத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். சுத்திகரிக்கப்படாதக் கழிவுநீர், நீர்நிலைகளில் கலப்பதைக் கர்நாடக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.</p><p>அதே வேளையில், இதில் தமிழ்நாடு அரசுக்கும் மிகப்பெரிய தலையாய கடமை உண்டு. கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் எல்லையான பிலிகுண்டுலு பகுதியில், காவிரியின் நீர்த் தரம் குறித்து தமிழ்நாடு அரசு தனது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தினசரி ஆய்வுகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நச்சுத் தன்மையோ கழிவுநீரோ கலந்திருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று கர்நாடகத்திற்கு எதிராகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.</p><h2>நீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்</h2><p>தமிழக மக்களின் உயிர் மற்றும் உடல்நலம் சார்ந்த இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காமல், அழுத்தமான எதிர்வினையாற்றுவதே தனது தலையாய கடமை என்பதை உணர வேண்டும்.</p><p>காவிரி வெறும் நீரோட்டம் அல்ல. அது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டின் </a>குடிநீர், விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் அனைத்தையும் சுமந்து வரும் உயிர்நாடி.</p><p>அந்த உயிர்நாடியை நஞ்சாக மாற விடாமல் தடுத்து, எல்லையோர நீரின் தரத்தை ஆய்வுக்குட்படுத்தி, அதன் உண்மைத் தன்மையை மாதந்தோறும் பொதுவெளியில் வெளிப்படையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 18-ந்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-supply-to-be-stopped-in-thoothukudi-on-the-18th-corporation-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-supply-to-be-stopped-in-thoothukudi-on-the-18th-corporation-announcement#comments</comments><guid isPermaLink="false">5045ebcb-4698-4bb5-b300-24f4a8987fce</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:40:45 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:40:45.970Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Announcement,அறிவிப்பு,water supply stopped,குடிநீர் விநியோகம் நிறுத்தம்,Corporation Commissioner,மாநகராட்சி கமிஷனர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/0la11fbn/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி மாநகராட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/0la11fbn/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் வருகிற 18-ம் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">குடிநீர் விநியோகம் நிறுத்தம்</a> செய்யப்படும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">மாநகராட்சி கமிஷனர்</a> பிரியங்கா அறிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அறிவிப்பில்</a> கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>மாதாந்திர பராமரிப்பு பணி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் 18.9.2026, வெள்ளிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறது. </p><h2>குடிநீர் விநியோகம் நிறுத்தம்</h2><p>இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமனார் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-poison-in-family-dispute-husband-and-father-in-law-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-poison-in-family-dispute-husband-and-father-in-law-arrested#comments</comments><guid isPermaLink="false">b4e2a7b6-e73c-4be4-8edb-87d51ead1b1a</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:25:46 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:25:46.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,Family dispute,குடும்ப தகராறு,தற்கொலை,Suicide</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/p4bq0ew6/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-16/p4bq0ew6/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமனாரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள க.அலம்பாலம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் சங்கீதா (24 வயது). இவருக்கும் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் அரவிந்த்குமார் (30 வயது) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அரவிந்த்குமார், தனியார் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.</p><p>இந்த நிலையில் சங்கீதாவுக்கும், அரவிந்த்குமாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அரவிந்த்குமார் குடும்பத்தினரும் சங்கீதாவிடம் பிரச்சினை செய்து வந்ததாக தெரிகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அரவிந்தகுமார் சங்கீதாவை திட்டியுள்ளார்.</p><h2>விஷம் குடித்தார்</h2><p>இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து குடும்பத்தினர் சென்று பார்த்தபோது சங்கீதா வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். தொடர்ந்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இதற்கிடையே இறந்த சங்கீதாவின் தாய் சரசு, கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனது மகள் சாவுக்கு அரவிந்த்குமார், அவருடைய தந்தை சரவணன் (60 வயது), தாய் அஞ்சலை (56 வயது), அக்கா அன்பரசி (35 வயது), உறவினர் அய்யம்பெருமாள் (70 வயது) ஆகியோர் தான் காரணம் எனவும் இவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.</p><h2>கணவர், மாமனார் கைது</h2><p>அதன்பேரில் சங்கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக அய்யம்பெருமாள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அரவிந்த் குமார், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கீதாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், சங்கீதா வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் முருகன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.</p>]]></content:encoded></item></channel></rss>