<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 11 Sep 2026 07:23:27 +0000</lastBuildDate><item><title>ரூ.1,200 கோடி செலவு செய்து புதிய தலைமைச் செயலகம் கட்டுவது அவசியமற்றது - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constructing-a-new-secretariat-at-a-cost-of-1200-crore-is-unnecessary-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constructing-a-new-secretariat-at-a-cost-of-1200-crore-is-unnecessary-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">e3f468a6-e372-4f43-892e-0ac6b96d920a</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:14:04 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:14:04.044Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,புதிய தலைமைச் செயலகம்,new Secretariat</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/opfluczq/eps.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/opfluczq/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் நிறைந்துள்ள, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை த.வெ.க. அரசு கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><h2>மிகவும் நெருக்கடியான பகுதி</h2><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.</p><p>இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.</p><h2>தலைமைச் செயலகம் அவசியமற்றது</h2><p>விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.</p><p>புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூறவில்லை. தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">புதிய தலைமைச் செயலகம்</a> கட்ட உத்தேசிக்கலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நேற்று இரவு 70 ரவுடிகள் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/70-rowdies-arrested-in-chennai-last-night-police-take-swift-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/70-rowdies-arrested-in-chennai-last-night-police-take-swift-action#comments</comments><guid isPermaLink="false">166196fc-2edd-4a09-9dea-40c11cb17eff</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:10:12 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:10:12.100Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,police,கைது,arrest,ரவுடிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/3572lnqz/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/3572lnqz/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை திருவொற்றியூர், பெசன்ட் நகரில் சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு தொடர்பான கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர். </p><p>இந்நிலையில், சென்னையில் தற்போது காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதோடு, ரவுடிகள், குற்றவழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், நேற்று ஒரே இரவில் சுமார் 70 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  </p><p>சிறப்பு கண்காணிப்பு மூலம் நேற்றிரவு முதல் ரவுடிகளை கைது செய்வதற்கான அதிரடி நடவடிக்கையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகத்தில் திமுக வென்றால் 3 மாதங்களில் தவெக ஆட்சி கவிழும்: ஆர்.எஸ் பாரதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-dmk-wins-in-maduranthakam-the-tvk-government-will-collapse-within-three-months-rs-bharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-dmk-wins-in-maduranthakam-the-tvk-government-will-collapse-within-three-months-rs-bharathi#comments</comments><guid isPermaLink="false">f642a916-b025-4586-87ec-9e93938aa02b</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:09:03 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:09:03.380Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,மதுராந்தகம்,ஆர்.எஸ் பாரதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/dqcdi4zl/RS-Bharathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ஆர்.எஸ்.பாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/dqcdi4zl/RS-Bharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>மதுராந்தகம்,  தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுராந்தகத்தில் நடந்த திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்  அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  "தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிலேய தலைசிறந்த முதலமைச்சர் என்று சொல்லுமளவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வளர்ந்தார். அந்த தலைவரையே கொச்சைப்படுத்தியுள்ளனர். 21 நாட்கள் ஒவ்வொரு கட்சிக்காரன் மனதிலும் கலைஞர், தளபதியை பற்றி இழிவுபடுத்தி பேசியவர்களை நினைத்து பணியாற்ற வேண்டும். வேறு எதைப்பற்றியும் யோசிக்க வேண்டாம்.</p><h2>ஜனவரிக்குள் ஆட்சி கவிழும்</h2><p>அப்படி பணியாற்றினால் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன் மிகப்பெரிய வெற்றி பெறுவார்.  சட்டசபையில் இப்படி ஒரு ஆள் தேவை. எந்த பணி செய்தாலும் சிறப்பாக செய்வார். எந்த கருத்தையும் சரியாக பேசுவார். எழும்பூர் எம்எல்ஏவாக இருந்தபோது அற்புதமாக செயல்பட்டார். இவர் சட்டசபைக்கு செல்வாரே ஆனால் 3 மாதங்களில் தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கான எல்லா வேலையும் செய்வார். நான் அதை உறுதியாக சொல்கிறேன். மதுராந்தகத்தில் நாம் வென்றால் ஜனவரிக்குள் இந்த ஆட்சி கவிழும். </p> <h2>தமிழ்நாடு மாற வேண்டும்</h2><p>அது நம் தொண்டர்கள், கூட்டணி கட்சி தோழர்கள் கையில் உள்ளது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் வாய்ப்பு நம் கையில் உள்ளது. தமிழ்நாடு மாற வேண்டும் என்றால் இந்த 21 நாட்கள் வேலை செய்ய வேண்டும். 15 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்வதில் தொடங்கி, பிரச்சாரம் முடியும் வரை தீயாக பணியாற்ற வேண்டும். இந்த 3 வாரம் அர்ப்பணிப்புடன் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்”என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மகாகவி பாரதியார் நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mahakavi-bharathiyars-death-anniversary-tribute-paid-on-behalf-of-the-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mahakavi-bharathiyars-death-anniversary-tribute-paid-on-behalf-of-the-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">df343b1a-2d08-443a-8f75-9bdb105b0f76</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:01:14 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:01:14.567Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,தமிழக அரசு,மகாகவி பாரதியார்,Bharathiyar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/tk7rkfr4/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/tk7rkfr4/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மகாகவி பாரதியார்</h2><p>மகாகவி பாரதியார் 11.12.1882 அன்று தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் சின்னச்சாமி அய்யர் – இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எட்டயபுரத்தில் தொடக்கக் கல்வியை பயின்றார். தமது ஏழு வயதிலேயே அருமையான தமிழ்க் கவிதைகளை விரைந்து இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தார். 11 வயதில் பாரதி (கலைமகள்) என்று புலவர் பெருமக்களால் பட்டம் சூட்டப்பட்டது.</p><p>தமது 15 வயதில் தந்தையின் மறைவுக்குப் பிறகு சில காலம் காசிக்குச் சென்று ஜெய்நாராயண் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை நன்கு கற்று தேர்ந்தார். 1898-ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார். 1902-இல் எட்டயபுரம் அரசவையில் பாரதியார் மூன்றாண்டுகள் பணிபுரிந்தார்.</p><p>1904-இல் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், பின்பு ஜி.சுப்பிரமணிய அய்யர் அழைப்பின் பேரில் சென்னை வந்து “சுதேசமித்திரன்” பத்திரிகை உதவி ஆசிரியராகவும், ‘இந்தியா’ வார இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். மேலும் 1910-ஆம் ஆண்டு ‘கர்மயோகி’ எனும் மாத இதழை தமிழில் நடத்தினார். </p><h2>கவிதைகள், கட்டுரைகள்</h2><p>தமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல் என்ற உறுதியோடு சுதேசமித்திரன், இந்தியா, சக்கரவர்த்தினி, பாலபாரதா போன்ற பல பத்திரிகைகள் மூலம் கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதி மக்கள் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை வளர்த்தார்.</p><p>தமது தாய்நாட்டை எண்ணிப் பெருமிதம் கொண்டதோடு, அதன் எதிர்காலம் குறித்த தெளிவான தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராகத் திகழ்ந்த மகாகவி பாரதி, "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்", “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று பாடியதோடு ‘வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்’ என்று நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.</p><h2>பெண் விடுதலை</h2><p>“ஆணும் பெண்ணும் நிகரெனக்கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்”, "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்", “பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா” என்று பெண்ணுரிமைக்காகவும், பெண் விடுதலைக்காகவும் முழக்கமிட்டவர் மகாகவி பாரதியார்.</p><p>மகாகவி பாரதியார் நூற்றுக்கணக்கான சிறு கவிதைகளோடு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் ஆகிய தொடர்கவிதைகளையும் எழுதியுள்ளார். சின்னச் சங்கரன் கதை, ஞான ரதம், சந்திரிகையின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளதோடு, தாகூரின் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.</p><h2></h2><h2>மகாகவி நாள்</h2><p>மகாகவி பாரதியார் அவர்கள் 12.09.1921 அன்று மறைந்தார். மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவை நினைவு இல்லங்களாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ந்தேதி “மகாகவி நாள்”-ஆகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் “மகாகவி நாள்” ஆக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.</p><h2>அமைச்சர்கள் மரியாதை</h2><p>மகாகவி பாரதியாரின் நினைவு நாளான மகாகவி நாளை முன்னிட்டு இன்று (11.9.2026) சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் த.சரத்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.</p><p>இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>‘இமானுவேல் சேகரனாரின் பணிகளும், தியாகமும் நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்’ - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-work-and-sacrifice-of-immanuel-sekaranar-will-always-support-our-efforts-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-work-and-sacrifice-of-immanuel-sekaranar-will-always-support-our-efforts-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">442a20e2-ca07-48cc-a962-7e844b6ef461</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:59:57 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:59:57.295Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,இமானுவேல் சேகரன் நினைவு தினம்,CM Stalin,Immanuel Sekaranar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/oc8u5fa0/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/oc8u5fa0/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமத்துவ போராளி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசு விழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம்.</p> <p>நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க!”</p><p>இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை: பன்மடங்கு உயர்ந்த விமான கட்டணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-and-long-weekend-airfares-skyrocket</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-and-long-weekend-airfares-skyrocket#comments</comments><guid isPermaLink="false">bc6aa0de-995f-40ba-bbbc-c239e3c314ef</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:49:29 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:49:29.504Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான கட்டணம்,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,Airfares,Airfares  increase</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/nngk4cxv/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/nngk4cxv/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா, இந்த ஆண்டு திங்கள் கிழமை வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள், தொடர் விடுமுறைகள் வருகின்றன.</p><p>இதையடுத்து பெரும்பாலானோர் சொந்த ஊர்களில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு, இன்று வெள்ளிக்கிழமையே புறப்பட்டு செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி வடமாநிலங்களிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுவதால், தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.</p><p>இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட விமானங்களில், இன்று பயணக் கட்டணங்கள், பல மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>சென்னையில் இருந்து தூத்துக்குடி, கோவை, மதுரை, டெல்லி, மும்பை, பெங்களூரு செல்லும் விமானங்களின் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உயர்த்துள்ளது. இது பயணிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகம்: ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-continue-to-rise-10-paise-hike-in-a-single-day</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-continue-to-rise-10-paise-hike-in-a-single-day#comments</comments><guid isPermaLink="false">162ac978-afd6-44cf-9c09-90388d5aca7f</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:29:43 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:29:43.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Namakkal,நாமக்கல்,முட்டை விலை,Egg prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/xl9cmea0/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/xl9cmea0/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல்,  </p><p>நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தி கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. </p><p>நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.70 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து ஜூலை மாதம் 23-ந்தேதி முட்டை விலை ரூ.6.80 ஆக இருந்தது. இது முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். இந்த நிலையில், முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த மாதம் 21-ந் தேதி ரூ.5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.</p><p>16 நாட்களுக்கு பிறகு கடந்த 6-ந் தேதி முட்டை விலை 5 காசுகள் உயர்ந் தது. தொடர்ந்து 7, 8, 9-ந் தேதிகளில் தினமும் 5 காசுகள் உயர்ந்த நிலையில், நேற்று 10 காசுகள் மேலும் உயர்ந்து முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>  ]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள்: மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birth-anniversary-edappadi-palaniswami-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perarignar-annas-118th-birth-anniversary-edappadi-palaniswami-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">2caac038-faf8-4a6a-a53d-d71ebea104b6</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:26:52 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:26:52.491Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,அறிஞர் அண்ணா,அண்ணா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qls5ztfw/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qls5ztfw/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். </p><h2>அண்ணாவின் பிறந்த நாள்</h2><p>அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளான 15.9.2026 செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எடப்பாடி பழனிசாமி</a> மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனர்.</p><h2>நிர்வாகிகளுக்கு அழைப்பு</h2><p>இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகாகவி பாரதியின் அரும்பெரும் பணிகளை எந்நாளும்  போற்றிடுவோம்: டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-always-cherish-and-honor-the-magnificent-contributions-of-mahakavi-bharathi-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-always-cherish-and-honor-the-magnificent-contributions-of-mahakavi-bharathi-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">f352f935-5ccb-4f43-a135-a7c118fa9f5f</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:18:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:18:34.996Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,மகாகவி பாரதியார்,Bharathiyar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qi04vei7/ttv.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qi04vei7/ttv.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் மண்ணின் பெருமையையும், தமிழர்களின் வீரத்தையும் தனது எழுத்தின் மூலம் உலகறியச் செய்த புரட்சியாளருமான மகாகவி பாரதியாரின் நினைவுதினம் இன்று.</p><p>தேசவிடுதலை, மொழிப்பற்று, மனிதநேயம், சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் என சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் மாற்றத்திற்கான விதைகளை விதைத்து, அழியாத வரலாற்றை உருவாக்கிய மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல் – நேபாள இளைஞர்கள் கைது! </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-kg-of-ganja-smuggled-into-chennai-seized-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-kg-of-ganja-smuggled-into-chennai-seized-2-arrested#comments</comments><guid isPermaLink="false">687490ae-def9-4025-a96d-7c7137136810</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:59:31 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:59:31.915Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Nepal,கைது,ரெயில்,arrested,கஞ்சா பறிமுதல்,கஞ்சா கடத்தல்,police enquiry,ganja smuggled</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/fbmbneoy/0000000001-000000000000000.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ககன் பகதூர், டேனியல் கஸ்கார்-கஞ்சா பொட்டலம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/fbmbneoy/0000000001-000000000000000.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வட மாநிலங்களிலிருந்து ரெயில்கள் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>ரகசிய தகவல் -அதிரடி சோதனை</h2><p>வட மாநிலங்களிலிருந்து ரெயில்கள் மூலம் சென்னை, பெரம்பூர் ரெயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">போதைப்பொருட்கள்</a> கடத்தி வரப்படுவதாக பெருநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், இன்று (வெள்ளிக்கிழமை) போலீசார் சில குறிப்பிட்ட பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.</p><h2>7 கிலோ கஞ்சா பறிமுதல்</h2><p>அப்போது பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த 2 நபர்களைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதித்தபோது, அதில் சட்டவிரோதமாக மறைத்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.</p><h2>நேபாள இளைஞர்கள் கைது</h2><p>இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்த ககன் பகதூர் மற்றும் டேனியல் கஸ்கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். அவர்கள் வட மாநிலங்களிலிருந்து ரெயில் மூலமாக சென்னைக்கு இந்த போதைப்பொருளைக் கடத்தி வந்து, இங்குள்ள உள்ளூர் ஏஜென்ட்டுகளிடம் விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.</p><h2>தீவிர விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட 2 பேரையும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">கோர்ட்டில் </a>ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார், இந்த கஞ்சா சென்னையில் யாருக்கு சப்ளை செய்யப்பட இருந்தது என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immanuel-sekaranar-remembrance-day-nainar-nagendran-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immanuel-sekaranar-remembrance-day-nainar-nagendran-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">fac64787-12c8-49e2-865b-585ed4cfd8bc</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:17:09 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:17:09.415Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,இம்மானுவேல் சேகரன்,Immanuel Sekaranar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ttaxgdrf/nainar.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ttaxgdrf/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அவருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;</p><p>”சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் துணிச்சலுடன் குரல் கொடுத்த தியாகி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">இமானுவேல் சேகரன்</a> அவர்களின் நினைவு தினம் இன்று! சமத்துவம், சுயமரியாதை மற்றும் மனித உரிமைகள் நிலைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் வாழ்ந்த இமானுவேல் சேகரன் அவர்கள், தனது இளம் வயதிலேயே சமூக மாற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர்.</p><p>அவரது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டமும் தியாகமும்</a> சமூக நீதிக்கான பயணத்தில் என்றும் அழியாத தடமாகத் திகழ்கிறது. அவரது நினைவு நாளில், சாதி வேறுபாடுகள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைவருக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் கிடைக்கும் வலிமையான சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்போம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இம்மானுவேல் சேகரனார் நினைவுநாள் - தமிழக அரசு சார்பில் மரியாதை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immanuel-sekaranar-memorial-day-tribute-by-the-government-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immanuel-sekaranar-memorial-day-tribute-by-the-government-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">b8f5bed6-8e2a-4d58-87c8-ac595eb21d9c</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:09:21 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:09:21.720Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Government of Tamil Nadu,இம்மானுவேல் சேகரனார்,Immanuel Sekaranar</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/xwnssvwf/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/xwnssvwf/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது நினைவை போற்றி வருகின்றனர். இந்த நிலையில், இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>தமிழக அமைச்சர்களான நிர்மல் குமார், அருண்ராஜ், பிரபு, மதன் ராஜா, ராஜீவ், விக்னேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். முதலில், இம்மானுவேல் சேகரனாரின் புதிய மணி மண்டபத்தில் மாலை அணிவித்தும், அதன் பின்னர் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். </p><p>இதனை தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுக கட்சியினர் சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்த உள்ளனர். முக்கிய அரசியல் தலைவர்கள் வருவதால், பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/banks-will-not-operate-for-four-days-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/banks-will-not-operate-for-four-days-starting-today#comments</comments><guid isPermaLink="false">3c4f9845-52d4-482f-ae14-d10d00e6fb56</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:07:52 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:07:52.850Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bank,தொடர் விடுமுறை,வங்கி விடுமுறை,Bank Holidays,Bank employees protest,Bank employees strike,வங்கிகள் வேலைநிறுத்தம்,வங்கி சேவை பாதிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/62sfx78i/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வங்கிகள் செயல்படாது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/62sfx78i/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>வெள்ளி முதல் திங்கள் வரை சேவை பாதிப்பு</h2><p>வங்கி ஊழியர்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்களிடம் காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.</p><p>வேலைநிறுத்தம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறையாலும், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>இதனால் வாடிக்கையாளர்களுக்கான நேரடி வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இணையவழி வங்கி சேவைகள் மற்றும் ஏ.டி.எம். உள்ளிட்ட சில சேவைகள் வழக்கம்போல் செயல்படலாம்.</p><h2>இரண்டு கட்ட வேலைநிறுத்தம்</h2><p>இதுகுறித்து அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழக பொதுச்செயலர் ரோஷன் கார்க்கி கூறியதாவது:-</p><p>வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் உயர் அதிகாரிகளுக்கும், சாதாரண ஊழியர்களுக்கும் இடையே காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளை கண்டித்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இரண்டு கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தமும் நடைபெற உள்ளது.</p><p>இவ்வாறு ரோஷன் கார்க்கி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - 15 பேர் படுகாயம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-collides-with-lorry-near-salem-15-seriously-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-collides-with-lorry-near-salem-15-seriously-injured#comments</comments><guid isPermaLink="false">c06f59fb-167a-451c-97d0-a6165c534c81</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:52:24 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:52:24.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Salem,சேலம்,Bus accident</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/wlx5m74x/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/wlx5m74x/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சென்னையில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சுமார் 45 பயணிகளுடன் கோவை நோக்கி புறப்பட்டு சென்ற‌து. அந்த பேருந்து இன்று அதிகாலை சங்ககிரி மேம்பாலம் அருகே வந்தபோது, பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி திடீரென சாலையோர தடுப்பு மீது மோதி நின்றதாக கூறப்படுகிறது. </p><p>இதனால் பின்னால் வந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட பேருந்தில் இருந்த 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p> <p>இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்ககிரி போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காயத்தால் அவதிப்படும் பாகுபலி யானைக்கு மருந்து கலந்த களி உருண்டைகள் கொடுத்த வனத்துறையினர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-department-officials-administered-medicinal-dough-balls-to-baahubali-an-elephant-suffering-from-an-injury</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-department-officials-administered-medicinal-dough-balls-to-baahubali-an-elephant-suffering-from-an-injury#comments</comments><guid isPermaLink="false">84c2e8f2-e490-4750-b0a8-4345af645236</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:29:50 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:29:50.406Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Treatment,சிகிச்சை,elephant,பாகுபலி யானை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/8keoglux/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/8keoglux/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கோவை,</p><p>கோவை மாவட்டம் சிறுமுகை அருகே காயத்தால் அவதிப்படும் பாகுபலி யானைக்கு மருந்து கலந்த களி உருண்டைகள் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.</p><h2>வால் பகுதியில் காயம்</h2><p>சிறுமுகை வனச்சரக பணியாளர்கள் வேடர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பாகுபலி என்று அழைக்கப்படும் காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறியது தெரியவந்தது. அந்த யானையை விரட்டும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது அதன் வால் பகுதி யில் காயம் இருப்பது தெரியவந்தது.</p><p>இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் அரசு வன கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வச்சினம்பாளை யம் பகுதியில் புகுந்த அந்த யானையை சிறுமுகை வனச்சரக அலுவலர் தினேஷ், அரசு வன கால்நடை உதவி மருத்துவ அலுவலர் விஜயராகவன் மற்றும் வனப்பணியாளர்கள் கண்காணித்தனர்.</p><h2>களியில் மருந்து</h2><p>அப்போது, மற்றொரு காட்டுயானையுடன் ஏற்பட்ட மோதலில் பாகுபலி யானை காயம் அடைந்து இருப்பது தெரியவந்தது. ஆனால் காயத்திற்கு நேரடியாக மருந்து செலுத்த முடியாது என்பதால் களி உருண்டை தயாரித்து அதில் மருந்துகளை கலந்து பாகுபலி யானை வரும் வழியில் வாழை இலையில் வைக்க முடிவு செய்யப்பட்டது.</p><p>அதன்படி மருந்து கலந்து வைத்த களி உருண்டைகளை பாகுபலி யானை தின்றது. அதன் உடல் நிலை மற்றும் நடமாட்டத்தை வன பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தொடர் சிகிச்சை அளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.20 ஆயிரம் கடனுக்காக தாய் சேய் உயிரிழக்க வேண்டுமா? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/must-a-mother-and-child-lose-their-lives-over-a-20000-loan-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/must-a-mother-and-child-lose-their-lives-over-a-20000-loan-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">9dc05bfe-a455-4d52-bb60-bb16232f6912</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:04:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:04:51.408Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/62ugfa5s/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/62ugfa5s/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நிறைமாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, கடனை அடைக்காமல் வெளியே செல்லக் கூடாது எனக் கூறி தடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மிகவும் கொடூரமானது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையெனில், ஒரு மனித உயிரைவிட ரூ.20 ஆயிரம் கடன் பெரிதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தாய் சேய் உயிரிழப்பு</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கத்தில் இருளர் பழங்குடியினப் பெண் தேன்மொழியும், அவர் பெற்ற பச்சிளம் குழந்தையும் உரிய மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.</p><p>விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் ரூ.20 ஆயிரம் முன்பணம் பெற்றிருந்த குடும்பம், கடந்த சில மாதங்களாக விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், பணியிடத்தில் தார்ப்பாய் கூடாரத்தில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>நிறைமாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, கடனை அடைக்காமல் வெளியே செல்லக் கூடாது எனக் கூறி மருத்துவமனைக்குச் செல்லத் தடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மிகவும் கொடூரமானது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையெனில், ஒரு மனித உயிரைவிட ரூ.20 ஆயிரம் கடன் பெரிதா? என்ற கேள்வி எழுகிறது.</p><p>இது மரணமா? மறைந்திருக்கும் கொத்தடிமை முறையின் அடையாளமா? முன்பணம் அல்லது கடன் கொடுத்து, அதற்குப் பதிலாகத் தொழிலாளர்களின் உழைப்பையும் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவது சட்டவிரோதமானது.</p><h2>கைது செய்ய வேண்டும்</h2><p>எனவே தமிழ்நாடு அரசு, இந்தச் சம்பவத்தை வெறும் சந்தேக மரணமாகக் கருதாமல், மருத்துவ உதவி மறுக்கப்பட்டதற்கான காரணம், கடன் ஊதியக் கணக்கு, பணியிடத்தில் தங்க வைக்கப்பட்ட விதம், தொழிலாளர்களின் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும்.</p><p>குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், தொடர்புடையவர்கள் மீது கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம், பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கொலைப்பிரிவு உள்ளிட்ட பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.</p><p>காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள விறகுக் கிடங்குகள், கரி உற்பத்தி மையங்கள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட தொழிலிடங்களில் பழங்குடியின மக்கள் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தப்படுகிறார்களா? என்பதைச் சிறப்புக் குழு அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்.</p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் வழங்குவதுடன், வீட்டு மனை, பாதுகாப்பான குடியிருப்பு, வாழ்வாதார உதவி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும். கொத்தடிமை நிலை உறுதி செய்யப்பட்டால், சட்டப்படி விடுதலைச் சான்றிதழும் மறுவாழ்வு உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.</p><p>தேன்மொழிக்கும், உலகைக் காணும் முன்பே உயிரிழந்த அந்தப் பச்சிளம் குழந்தைக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/velmurugan">தமிழக </a>வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் செவ்வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘சிறந்த சிந்தனையாளர்கள் அதிகம் பேசமாட்டார்கள்’ - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/great-thinkers-do-not-speak-much-speaker-jcdprabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/great-thinkers-do-not-speak-much-speaker-jcdprabhakar#comments</comments><guid isPermaLink="false">18c45351-a08d-400c-8e70-c5add9d32d72</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:01:55 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:01:55.003Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜே.சி.டி.பிரபாகர்,JCD Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/1u9sxpct/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/1u9sxpct/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-</p><p>“சட்டமன்றத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் அதிகம் பேசுவதில்லை என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் விமர்சித்தார்கள். ஆனால் முதல்-அமைச்சர் விஜய் தனது பதிலுரையில் அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளித்தார். சிறந்த சிந்தனையாளர்கள் அதிகம் பேசமாட்டார்கள்.</p><p>அடுக்கு மொழியில் பேசி மக்களை ஈர்த்த காலம் எல்லாம் போய்விட்டது. தமிழில் அடுக்கு மொழியில் பிரமாதமாக பேசினார்கள் என்பதற்காக ஓட்டு போட்ட காலமெல்லாம் இருந்தது. இனி அந்த மாதிரி எதுவும் இல்லை. யாரால் உண்மையாக நாட்டுக்கு சேவை செய்ய முடியும் என்று மக்கள் நம்புகிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-naam-tamilar-katchi-candidates-likely-to-be-announced-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-naam-tamilar-katchi-candidates-likely-to-be-announced-today#comments</comments><guid isPermaLink="false">a683b9a5-d0d2-4379-9740-33970b275be4</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:44:13 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:44:13.887Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>NTK,Seeman,நாம் தமிழர் கட்சி,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,by elections</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/fd5qe7w6/seeman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/fd5qe7w6/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து, தங்களை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக காலியான இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>நான்கு முனைப் போட்டி</h2><p>அதன்படி, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் பரந்தாமன் (மதுராந்தகம்), சுகன்யா (தாராபுரம்) போட்டியிடுகிறார்கள். தவெக சார்பில், மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோரும் அதிமுக சார்பில் கணிதா சம்பத், பானுமதி ஆகியோரும் வேட்பளர்களர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியும் இன்று தனது வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான நான்கு முனைப் போட்டி உறுதியானது.</p><h2> கம்யூனிஸ்டு நிலைப்பாடு என்ன?</h2><p>த.வெ.க. தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இணையவில்லை. எனவே அவர்கள் தமிழகத்தில் நடக்கும் 2 தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  இதற்கிடையே, புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுகிறது. </p><p>அக்கட்சியின் வேட்பாளராக சலீம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்தை நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.அதே நேரத்தில் த.வெ.க. கூட்டணி சார்பிலும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, யார். யாரை ஆதரிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கொத்தடிமை உழைப்புச் சுரண்டலை முற்றாக ஒழித்திட தீவிர நடவடிக்கை வேண்டும்! - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/intensive-measures-are-needed-to-completely-eradicate-the-exploitation-of-bonded-labour-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/intensive-measures-are-needed-to-completely-eradicate-the-exploitation-of-bonded-labour-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">184242e7-2a33-4193-91f5-2f6ebd25b17f</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:41:38 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:41:38.389Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan,விசிக,VCK,Kanchipuram,காஞ்சிபுரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/7j4wp6io/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/7j4wp6io/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>கொத்தடிமை உழைப்புச் சுரண்டலை முற்றாக ஒழித்திட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>தாயும் சேயும் பலி</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இருளர் சமூகத்தைச் சார்ந்த நிறைமாத கர்ப்பிணி தேன்மொழியும் அவரது பச்சிளம் சிசுவும் பிரசவத்தின்போதே உயிரிழக்கும் பெருந்துயரம் நடந்துள்ளது. இதன் பின்னணியை அறியும்போது நெஞ்சு பதறுகிறது. பழங்குடியினரை இன்னும் கொத்தடிமைகளாக வைத்து அவர்களின் உழைப்பைச்சுரண்டும் கொடுமைகள் இன்னும் தொடர்கிறது என்பது  இதன்மூலம் உறுதியாகிறது. இந்தக் குரூரம் நடந்தேறுவதற்கு காரணமாக இருந்த மரவியாபாரி ஆறுமுகம் என்பவரின் மனிதாபிமானமற்ற போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  கண்டிக்கிறது. </p><p>மரம் வெட்டும் தொழிலாளியான ஆனந்தன் (40) மற்றும் இவரது மனைவி தேன்மொழி (35) ஆகிய இருவரும் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் உள்ள 'வெள்ளை கேட்' பகுதியில் ஆறுமுகம் என்ற விறகு வியாபாரியிடம் மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். இவர்கள் ஆறுமுகத்திடம் முன்பணமாக ரூ. 20,000 கடன் வாங்கியிருந்ததால், அவர் அமைத்துக் கொடுத்த தார்ப்பாய்க் கூடாரத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 08/09/2026 அன்று, ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்குக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கணவர் ஆனந்தன் முயன்றிருக்கிறார். இதனையறிந்த மரக்கிடங்கு உரிமையாளர் ஆறுமுகம் "வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் அல்லது மரங்களை முழுமையாக வெட்டி முடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்" எனக் கூறி, அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவிடாமல் தடுத்துள்ளார். இவரது மனிதாபிமானமற்ற இந்த குரூர மனநிலை பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பணம், சாதி போன்றவற்றின் அடிப்படையிலான அவரது ஆதிக்கவெறி உளவியல் இதிலிருந்து வெளிப்படுகிறது.</p><h2>முற்றுகை போராட்டம்</h2><p>உரிய நேரத்தில் தேவையான மருத்துவ உதவி கிடைக்காத நிலையில், அந்த தார்ப்பாய்க் கூடாரத்திலேயே தேன்மொழிக்கு பிரசவம் நடந்துள்ளது. கடுமையான பிரசவ வலி மற்றும் அதீதமான இரத்தப்போக்கு ஆகியவற்றின் காரணமாக தேன்மொழியும், அவரது பச்சிளம் குழந்தையும் அந்தக் கூடாரத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்தக் கொடூர சம்பவத்தை அறிந்த தோழர் மகேஷின் தலைமையிலான காஞ்சி மக்கள் மன்றத்தைச் சார்ந்த தோழர்களும் விடுதலைச் சிறுத்தைகளும் 09/09/2026 அன்று பொன்னேரிக்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் காவல்துறையினர் தலையிட்டு பிணக்கூராய்வுக்காக தேன்மொழி உடலை செங்கற்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரைச் சந்தித்து அவர்கள் முறையிட்ட பின்னரே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>சிறப்புப் புலனாய்வுக் குழு</h2><p>இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, 'சிறப்புப் புலனாய்வுக் குழுவை' அமைத்திட அரசு ஆணையிட வேண்டும். மர வியாபாரி ஆறுமுகத்தின் மனிதாபிமானமற்ற செயலுக்காக அவரைச் சிறைப்படுத்தி உரிய தண்டனை கிடைத்திட சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>அத்துடன், பழங்குடியினர், இருளர் மற்றும் விளிம்புநிலை சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் உரிய ஆய்வை நடத்தி அவர்கள் கொத்தடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய வேண்டுமென்றும்; 2030ல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாடு </a>'கொத்தடிமை முறை இல்லாத மாநிலம்' என்கிற செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதனை முற்றாகக் களைவதற்குத் தீவிரமான நடவடிக்கைகள எடுக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுன் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-the-mukkombu-upper-anicut-has-risen-to-9200-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-the-mukkombu-upper-anicut-has-risen-to-9200-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">d6e38dc2-70f7-44f8-b330-6855a1e5cf95</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:27:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:27:51.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நீர்வரத்து,Water inflow,முக்கொம்பு மேலணை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ewlcl1kc/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ewlcl1kc/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,  </p><p>முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி கடல் போல் காட்சி அளிக்கிறது.</p><h2>காவிரியில் தண்ணீர் திறப்பு</h2><p>மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பின்னர் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடகம் தமிழகத்துக்கு சிறிதளவு தண்ணீர் திறந்துவிட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.</p><p>இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு முதல்-அமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து விட்டார். முதல் கட்டமாக வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 3-ந்தேதி மாயனூர் கதவணைக்கு வந்தது.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>பின்னர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் 2,050 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 4-ந்தேதி காலை முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. ஏற்கனவே முக்கொம்பு மேலணைக்கு 1,500 கன அடி நீர் வந்த நிலையில், நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. தற்போது முக்கொம்புக்கு நீர்வரத்து 9,200 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்த நீரும் காவிரியில் முழுமையாக திறந்து விடப்பட்டது. தண்ணீர் வரத்தால் முக்கொம்பு மேலணை கடல் போல் காட்சி அளித்தது.</p> ]]></content:encoded></item><item><title>அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் சோதனை - டி.ஜி.சி.ஏ. உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-testing-for-all-pilots-dgca-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-testing-for-all-pilots-dgca-order#comments</comments><guid isPermaLink="false">b6ed2c72-dd88-43d1-ab39-5bde8ff29b5b</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:23:20 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:23:20.373Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானிகள்,Pilots,DGCA,டிஜிசிஏ,Drug Testing</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/56uw0iwl/National-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/56uw0iwl/National-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய விமானி ஒருவர், கடந்த ஆகஸ்ட் மாதம் விமான பயணத்தின்போது போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடுவானில் அந்த விமானம் சுமார் 300 அடி கீழே சரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக விமானம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. </p><p>இந்த விவகாரம் விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமானி பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் விமான பயணத்தின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அனைத்து விமான நிறுவனங்களிலும் உள்ள விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை செய்ய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டுள்ளது. </p><p>இந்த நடைமுறையை ஜூலை 2027-க்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் நாயுடு கூறும்போது, 'போதைப்பொருள் பரிசோதனை தொடர்பான புதிய விதிமுறைகளின் வரைவு இந்த மாதம் இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என்றார். தற்போது 10 சதவீத விமானிகளுக்கு மட்டும் சீரற்ற முறையில் பரிசோதனை நடக்கிறது. </p><p>இந்திய விமானங்களில் பணிபுரியும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து விமானிகளுக்கு இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது' என்றார். கடந்த ஆகஸ்டில் தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன், போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.300-க்கு விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lemon-prices-skyrocket-selling-at-rs-300-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lemon-prices-skyrocket-selling-at-rs-300-per-kg#comments</comments><guid isPermaLink="false">c03dda97-f521-4f58-9306-44be5f9dfbd6</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:20:29 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:20:29.368Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>lemon,எலுமிச்சை பழம்,எலுமிச்சை விலை,Lemon prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/60fxiylm/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/60fxiylm/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பருவநிலை, நீர்வரத்து மற்றும் நீர்இருப்புக்கு ஏற்றவாறு குறுகிய, மத்திய, நீண்ட கால பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதன் படி காய்கறிகள், கீரைகள், தென்னை, வாழை, கரும்பு, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில் ஒரு சில பகுதியில் எலுமிச்சை சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இதில், ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சையில் ஜூலை முதல் டிசம்பர் வரை அதிக மகசூல் கிடைக்கும். </p><p>இதேபோல், ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடவு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். செடிவகை சமதள பரப்பிலும் கொடிவகை மலைப்பிரதேசங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. நடவு செய்த நாளில் இருந்து 3-ம் வருடம் அறுவடைக்கு தயாராகி விடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு உள்ளதால் அவற்றுக்கான தேவையும் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது.</p><h2>கிலோ ரூ.300</h2><p>வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகளை தன்னகத்தே கொண்ட எலுமிச்சை பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டை வலியை போக்குவதுடன் கிருமிகளை அழித்து அஜீரணப் பிரச்சினையை தீர்க்கும் வல்லமை பெற்றது. மேலும் கோடை காலத்தில் எலுமிச்சைசாறுடன் உப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்கும் பானகமானது உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>ஆனால் பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரத்து குறைந்து வருகிறது. இதன்காரணமாக அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது கிலோ ரூ.300-க்கு விற்பனை ஆகிறது.</p><h2>வரத்து குறைந்ததால்...</h2><p>இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், எலுமிச்சை சாகுபடி உடும்லையை காட்டிலும் கிழக்கு மாவட்டங்களில் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்டம் புளியங்குடி, திண்டுக்கல் மாவட்டம் திருமலை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதியில் இருந்து எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்து வருகின்றோம். தற்போது கிலோ ரூ.300 வரை விற்பனையாகி வருகிறது.</p><p>வரத்து குறைவாக உள்ளதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. என்றனர். இதேபோல் குமரலிங்கம் பகுதியில், எலுமிச்சை பழம் கிலோ ரூ.220 வரை விற்பனை ஆகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>ராசிமணலில் புதிய அணை கோரி விவசாயிகள் 20ம் தேதி நடைபயணம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-to-undertake-a-march-on-the-20th-demanding-a-new-dam-at-rasimanal</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-to-undertake-a-march-on-the-20th-demanding-a-new-dam-at-rasimanal#comments</comments><guid isPermaLink="false">28726be5-8832-4c6c-adfe-714488f806f1</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:01:32 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:01:32.278Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,Krishnagiri,new dam,கிருஷ்ணகிரி செய்திகள்,Krishnagiri Districts,Rasimanal,ராசிமணல்,புதிய அனை,விவசாயிகள் நடைபயணம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/l5n8oomx/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/l5n8oomx/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் மாநிலம் தழுவிய நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.</p><p>காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கான காவிரி நீரோட்டம் பாதிக்கப்படும் என கூறி, தமிழகத்தில் அத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.</p><h2>ராசிமணலில் அணை கட்ட வேண்டும்</h2><p>மேகதாது அணைக்கு மாற்றாக, தமிழகப் பகுதியில் உள்ள ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் மாநிலம் தழுவிய நடைபயணம் நடத்தப்பட உள்ளது.</p><h2>20-ம் தேதி நடைபயணம் தொடக்கம்</h2><p>இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:-</p><p>தமிழகப் பகுதியான ராசிமணலில் அணை கட்ட வேண்டும். இந்த கோரிக்கையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.</p><p>இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி மாநிலம் தழுவிய நடைபயணம் தொடங்க உள்ளது. காவிரி கடலில் கலக்கும் பூம்புகாரில் இருந்து நடைபயணம் தொடங்கி, டெல்டா மாவட்டங்கள் வழியாக சென்று திருவாரூரில் நிறைவு செய்யப்பட உள்ளது.</p><h2>23-ம் தேதி சென்னையில் பிரசாரக்குழு கூட்டம்</h2><p>மேலும், வரும் 23-ம் தேதி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>எழும்பூரில் பிரசாரக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>ராசிமணல் அணை கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில், த.வெ.க. பொதுச்செயலர் ஆனந்த், அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியுள்ளோம்.</p><p>இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>
மதுரமங்கலத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-acquire-land-in-parandur-decision-made-to-establish-sipcot-industrial-park</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-acquire-land-in-parandur-decision-made-to-establish-sipcot-industrial-park#comments</comments><guid isPermaLink="false">3f3fa30a-8ac1-4d95-a5c4-80f133d57689</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:52:33 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:52:33.217Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,சிப்காட் தொழில் பூங்கா,Parandur,பரந்தூர்,தொழில் பூங்கா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/xbsi2jqw/Sipcot.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/xbsi2jqw/Sipcot.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் ஏகனாபுரத்தில், சென்னைக்கான 2-வது விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசுடன் இணைந்து கடந்த தி.மு.க. அரசு திட்டம் தீட்டியது. இதற்கு அங்கிருந்த விவசாயிகள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் அறிவித்தார். அப்ப டியானால் அந்த இடம் எதற்காக பயன்படுத்தப்படும்? என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழ்நிலையில்தான் தற்போது பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பூங்காவுக்காக நிலங்களை கையகப்படுத்ததமிழக அரசு தயாராகி வருகிறது. தொழில் வளர்ச்சியின் காரணமாக, செமிகண்டக்டர் என்ற மின்னணு பொருளுக்கான தேவை அதிகம் ஏற்பட்டுள்ளது.</p> <h2>நில வகைப்பாடு</h2><p>செமிகண்டக்டர் துறையில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மதுரமங்கலத்தில் சிப்காட் மூலம் ரூ.175 கோடி செலவில் செமிகண்டக்டர் மின்னணு உற்பத்தி பூங்காவை அமைக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான நில ஆர்ஜிதம் குறித்த சுற்றறிக்கையை நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார்.அதில், தொழில் பயன்பாட்டுக்காக 8.3820 ஹெக்டேர் நிலம் தேவைப்படு வதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் அதில், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் தரிசு நிலங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவற்றில் வேம்பு மற்றும் தென்னை மரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும், அந்த நிலங்களின் திட்டம் பற்றிய வரைபடங்கள், மாவட்ட வருவாய் சிறப்பு அலுவலர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அலுவலக வேலை நாட்களில் எந்த நேரத்திலும் அவற்றை ஆய்வு செய்யலாம் என்றும் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார்.</p><h2>5 ஆயிரம் பேருக்கு வேலை</h2><p>சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பைதொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த சிப்காட் பூங்காவில் செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுவசதிகளும் இடம்பெறும் என்று அவர்தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இது தமிழகத்தின் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் சூழலியலுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மதுரமங்கலத்தில் 166.31.50 ஹெக்டேர் பட்டா நிலம் (410.80ஏக்கர்) எடுப்பு, 4.67.50 ஹெக்டேர் (11.55 ஏக்கர்) அரசு புறம்போக்கு நிலஉரிமை மாற்றம் மற்றும் அங்கு புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு, தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலஎடுப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு 5.2.2024 அன்று உத்தரவிட்டு இருந்தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலத்தை கையகப்படுத்தவும், நில எடுப் புக்கான புதிய பணியிடங்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும், நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி அந்த ஆணை வெளியிடப்பட்டு இருந்தது.</p> ]]></content:encoded></item><item><title>
திருவொற்றியூரில் துணை நடிகர் கொல்லப்பட்ட சம்பவம்: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-murder-of-a-supporting-actor-in-thiruvottiyur-shocking-details-revealed-during-the-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-involving-the-murder-of-a-supporting-actor-in-thiruvottiyur-shocking-details-revealed-during-the-investigation#comments</comments><guid isPermaLink="false">5da2b26f-e0a5-4a6d-ae85-5d03d8e99d82</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:38:14 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:38:14.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Murder case,supporting actor,துணை நடிகர்,திருவொற்றியூர்,Thiruvotriyur,திடுக்கிடும் தகவல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/9h5b37th/4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/9h5b37th/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவொற்றியூர்,</p><p>திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக துணை நடிகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை</h2><p>திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் ராஜ் (வயது 28). சினிமாவில் துணை நடிகராக நடித்து வந்த இவர் பட வாய்ப்புகள் இல்லாத நேரங்களில் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தார். இவரது தாயார் ராணி, அதே பகுதியை சேர்ந்த நவநீதம் என்ற பெண்ணிடம் கடன் வாங்கி, அந்த பணத்தை பலருக்கு வட்டிக்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை ஏற்பட்டது.</p> <h2>போலீசில் புகார் அளித்த பிரதீப் ராஜ் </h2><p>கடந்த ஜூலை 27-ந் தேதி நவநீதம், பிரதீப் ராஜின் வீட்டுக்கு சென்று ராணியிடம் பணத்தை கேட்டதாக தெரிகிறது. அப்போது பிரதீப் ராஜ், அவரது தாயார் ராணி மற்றும் உறவினர்கள், பணத்தை திருப்பி தர முடியாது என கூறி நவநீதத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நவநீதம், தைராய்டு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் ராஜை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி 3 நாட்களுக்கு முன்பு பிரதீப் ராஜ் திருவொற்றியூர் போலீசிலும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.</p>  <h2>பிரதீப் ராஜ் சரமாரியாக வெட்டிக்கொலை</h2><p>இதையடுத்து திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ், பிரதீப் ராஜ் மற்றும் நவநீதம் தரப்பினரை அழைத்து பேசி எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைப்பது தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை இருந்ததால், இதுகுறித்தும் போலீசார் அவர்களை எச்சரித்தனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் பிரதீப் ராஜ் நடந்து சென்றபோது நவநீதத்தின் மகன், நவீன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.</p>  <h2>கொலை தொடர்பாக 4 பேர் கைது </h2><p>இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை தொடர்பாக நவீன் (32), அரி கிருஷ்ணன் (21), ஜாபர் (24), லோகேஷ் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நவீனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனது தாயார் நவநீதம் டிபன் கடை நடத்தும் இடத்துக்கு அருகே பிரதீப் ராஜும், அவரது நண்பர்களும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மேலும், உங்களது சொந்த பிரச்சினையால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரித்தனர். </p><h2>திடுக்கிடும் தகவல்</h2><p>பண தகராறு உள்ளிட்ட முன்விரோதம் எங்களுக்குள் இருந்து வந்ததால் நண்பர்களுடன் சேர்ந்து பிரதீப் ராஜை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையே, நேற்று திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே பிரதீப் ராஜின் உறவினர்கள், கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளிக்க வந்தபோது போலீசார் தன்னை மிரட்டியதாக பிரதீப் ராஜ் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அதிகரித்த மின் தேவை; தினமும் ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின்தடை என தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-increased-electricity-demand-and-a-daily-one-hour-rotational-power-cut</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-indicate-increased-electricity-demand-and-a-daily-one-hour-rotational-power-cut#comments</comments><guid isPermaLink="false">23ee8066-9424-43f6-8d69-1a94f7739a78</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:26:17 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:26:17.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,electricity,மின் தேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ry017aqy/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ry017aqy/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் கோடை காலங்களில் பொதுவாக மின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி, தமிழகத்தின் மின் தேவை இதுவரை இல்லாத அளவிற்கு 21,211 மெகாவாட் வரை அதிகரித்தது. கோடை காலத்திற்கு பிறகு ஜூலையில் இருந்து வெயில் குறையும்போது, மின் தேவையும் படிப்படியாக குறையும். </p><p>ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் முதல் முறையாக ஜூலை 14-ந்தேதி தமிழகத்தின் மின்தேவை, 21,724 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. அதுமட்டுமின்றி, தினந்தோறும் மாலை நேரங்களில் மின் தேவை சராசரியாக 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வந்த நிலையில், இந்த மாதத்தில் அது 21 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. </p><p>இவ்வாறு மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே சென்னை புறநகர் உட்பட, பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தினமும் ஒரு மணி நேரம், குறிப்பாக இரவு நேரங்களில் முன் அறிவிப்பின்றி மின் தடை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “வழக்கமாக கோடைக் காலத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பரில் மின் தேவை குறையும் ஆனால் இந்த ஆண்டு மின் தேவை குறையவில்லை. மின் வாரியமும் நிதி நெருக்கடியில் உள்ளதால், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை, அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர். சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் தினமும், ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது” என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கிறது எச்.டி.ஹூண்டாய் நிறுவனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hd-hyundai-is-setting-up-a-shipyard-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hd-hyundai-is-setting-up-a-shipyard-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">48f68308-cb56-43f8-8506-baa1ccfdbcbc</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:05:40 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:05:40.790Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Shipyards,கப்பல் கட்டும் தளம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/edaa7323/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/edaa7323/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி., துறைமுகம் அருகில், 18,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசுடன், தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹெச். டி. ஹூண்டாய் நிறுவனம், 2025ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவனத்தின் எச்.டி., கே. எஸ். ஓ.இ., கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் துறையில் ஈடுபட்டு வருகிறது. </p><p>இந்நிறுவனம், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க உள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அந் நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டது. எச். டி., ஹூண்டாயின் முதலீட்டை தக்க வைக்க தமிழக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தினர்.</p><p>எச்.டி., கே.எஸ்.ஓ.இ., நிறுவனத்தின் சன்ஜுன் ஹாங் தலைமையிலான மூத்த குழு, கடந்த 1ம் தேதி முதல், ஒரு வாரம் துாத்துக்குடியில் முகா மிட்டு இடங்களை ஆய்வு பார்வையிட்டு செய்தது.</p> <p>எச்.டி., கே.எஸ்.ஓ.இ., நிறுவனத்தின் சன்ஜுன் ஹாங் தலைமையிலான மூத்த குழு, கடந்த 1ம் தேதி முதல், ஒரு வாரம் துாத்துக்குடியில் முகாமிட்டு இடங்களை ஆய்வு பார்வையிட்டு செய்தது.</p> <p>அக்குழு, சென்னை தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, செயலர் விஜயகுமார் உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் பேச்சு நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தமிழகத்தில் திட்டத்தை முன்னெடுத்து செல்வதாக அந்நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 19ம் தேதி ஆட்டோ டிரைவர்கள் பேரணி..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-rickshaw-drivers-rally-in-chennai-on-the-19th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-rickshaw-drivers-rally-in-chennai-on-the-19th#comments</comments><guid isPermaLink="false">298b4fad-8340-4269-b432-19ad98532b17</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:57:11 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:57:11.837Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,ஆட்டோ டிரைவர்,Auto driver,Auto,ஆட்டோ,auto drivers,பேரணி,rally,ஆட்டோ டிரைவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qw7iu3wv/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆட்டோ டிரைவர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qw7iu3wv/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கடந்த ஜூலை 9-ம் தேதி சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பயணியர் தரப்பினர் பங்கேற்று, ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பான கருத்துகள் பரிமாறப்பட்டன. இதன் அடிப்படையில் தமிழக அரசு இறுதி அறிக்கையையும் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>புதிய கமிட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு</h2><p>இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைப்பதற்காக புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல என பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.</p><p>ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், திருத்தப்பட்ட புதிய ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>கோட்டையை நோக்கி பேரணி</h2><p>மேலும், ‘பைக் டாக்ஸி’ சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் 19-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த பேரணியில் 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான ஆட்டோ <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழிலாளர்கள் </a>பங்கேற்க உள்ளதாகவும் பாலசுப்பிரமணியன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கூடங்குளம்  அணு மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-electricity-allocated-to-tamil-nadu-from-the-kudankulam-nuclear-power-plant</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-electricity-allocated-to-tamil-nadu-from-the-kudankulam-nuclear-power-plant#comments</comments><guid isPermaLink="false">827014c0-2c44-4601-9660-b3a4d5c7e967</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:52:05 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:52:05.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்சாரம்,electricity,கூடங்குளம்,nuclear power plant,அணு மின் நிலையம்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/o7ajm18j/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/o7ajm18j/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,  </p><p>நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், தலா, 1,000 மெகாவாட் திறன் உடைய, 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், மூன்றாம் அணு உலையில், 2027 டிசம்பரிலும், நான்காம் அணு உலையில், 2028 டிசம்பரிலும், மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இந்த இரு அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, முழுமையாக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், 1,507.51 மெகாவாட் மின்</p><p>சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்குவதாக, மத்திய மின் துறை தெரிவித்துள்ளது.</p><p>மேலும், ஆந்திராவுக்கு 226; கர்நாடகாவுக்கு, 256; புதுச்சேரிக்கு, 9 மெகா வாட் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனங்கள், எந்த மாநிலத்தில் மின் நிலையம் அமைக்கிறதோ, அந்த மாநிலத்திற்கு,</p><p>உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில், 50 சதவீதம் ஒதுக்கப்படும்.</p><p>ஆனால், கூடங்குளம் விரிவாக்க மின் நிலையத்தில் இருந்து, தமிழகத் திற்கு 75.63 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு விபரம் தொடர்பாக, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆணை விரைவில் வெளியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mla-kanimozhi-santhosh-appointed-as-a-member-of-the-tamil-nadu-legislative-assemblys-committee-on-subordinate-legislation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mla-kanimozhi-santhosh-appointed-as-a-member-of-the-tamil-nadu-legislative-assemblys-committee-on-subordinate-legislation#comments</comments><guid isPermaLink="false">4f21ab7a-c7dd-41c3-9ba1-9898ebbf780c</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:22:25 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:22:25.339Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி சந்தோஷ்,kanimozhi santhosh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/tscasa2g/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/tscasa2g/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகருக்கும் எனது மரியாதையுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனையும், ஜனநாயகத்தின் மாண்பையும் முன்னிறுத்தி, சட்ட விதிகள் தொடர்பான இந்த முக்கியமான பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றுவேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்-ஈரோடு இடையே தண்டவாள பராமரிப்பு பணி: ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/track-maintenance-work-between-tiruppur-and-erode-changes-to-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/track-maintenance-work-between-tiruppur-and-erode-changes-to-train-services#comments</comments><guid isPermaLink="false">3bd33bb5-8d16-44eb-870e-1ebbe6fce957</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:21:44 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:21:44.821Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,எர்ணாகுளம்,Erode,ஈரோடு,தன்பாத்,Ernakulam,ஆலப்புழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/kqamc07j/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/kqamc07j/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருப்பூர்-ஈரோடு ரெயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளை எளிதாக்கும் வகையில், குறிப்பிட்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>எர்ணாகுளம்-டாடாநகர்</h2><p>அதன்படி, எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.18190) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை). வருகிற 16, 19 மற்றும் 20-ந்தேதிகளில் எர் ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு வழியில் 55 நிமிடங்கள் நிறுத்தப்படும்.</p><h2>ஆலப்புழா-தன்பாத்</h2><p>ஆலப்புழா-தன்பாத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">எக்ஸ்பிரஸ் </a>(13352) நாளை மறுநாள், வருகிற 16, 19 மற்றும் 20-ந்தேதிகளில் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு வழியில் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும். மேற் கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/methods-to-control-whiteflies-attacking-coconut-trees</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/methods-to-control-whiteflies-attacking-coconut-trees#comments</comments><guid isPermaLink="false">08996233-8ee0-4da9-85e4-0da59ef35c72</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:02:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:02:53.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயம்,Tanjore,தஞ்சை,Coconut,தென்னை மரங்கள்,coconut tree,தென்னை,தென்னை விவசாயம்,Coconut Farming,வெள்ளை ஈக்கள்,விவசாய செய்திகள்,agricultural news,வேளாண் செய்திகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/nr7fakbr/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/nr7fakbr/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-</p><h2>வெள்ளை ஈ தாக்குதல்</h2><p>தென்னையில் ரூகோஸ் சுருள் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-control-cotton-whitefly-disease-929226">வெள்ளை ஈ தாக்குதல் </a>காணப்படுகிறது. தென்னை ஓலையில் வெள்ளை ஈக்கள், 50 முதல் 65 முட்டைகள் வரை சுருள் வடிவில் இடுகின்றன. இந்த முட்டைகள் 4 முதல் 7 நாட்களில் குஞ்சு பொறித்து, ஓலையில் சாறு உறிஞ்ச தொடங்குகின்றன. வளர்ச்சியடைந்த நிலையில், பறக்கத் தொடங்கி அருகில் உள்ள மரங்கள், தோப்புகளுக்கு பரவுகின்றன. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகளை இரவு 7 முதல் 11 மணி வரை எரிய விட்டு, கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 10 மஞ்சள் ஒட்டுப் பொறிகளை, நிலத்தில் இருந்து 5 அடி உயரத்தில் கட்டலாம் அல்லது, மரத்தின் தண்டுப் பகுதியில், சுற்றி விடலாம். பாதிப்புள்ள மரங்களின் ஒலைகள் மீது தண்ணீரை விசைத் தெளிப்பான் வாயிலாக அதிக அழுத்தத்துடன் பீய்ச்சி அடித்து, வெள்ளை ஈக்கள் மற்றும் முட்டைகளை அழிக்கலாம்.</p><h2>ஒட்டுண்ணிகள்</h2><p>உயிரியல் முறையில் கட்டுப்படுத்த கிரைசோபெர்லா ஒட்டுண்ணிகள் ஏக்கருக்கு 500 எண்ணிக்கையில் ஓலைகளின் அடிப்பகுதியில் கட்டினால். வெள்ளை ஈக்களின் புழுக்களை உட்கொண்டு அழிக்கும். காக்ஸினெல் லிட் பொறிவண்டு மற்றும் என்கார்சியா ஒட்டுண்ணிகளை ஓலையில் வைத்தால், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும். தெளிப்பு முறையை கையாள விரும்பினால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி., வேப்பெண்ணெய் அல்லது 2 மி.லி., அசாடிராக்டின் கலந்து அத்துடன், 1 மி.லி. ஒட்டு திரவம் கலந்து ஓலைகளின் அடிப்பகுதியில் தெளிக்கலாம்.</p><h2>பூச்சிகொல்லி மருந்துகள்</h2><p>மேலும், வெள்ளை ஈ பாதிப்புள்ள தோப்புகளில், பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருந்தால், இயற்கை எதிரிகள் பெருகி, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் தற்போது கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் வெள்ளை ஈ தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. எனவே அதை கட்டுப்படுத்துவது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி விடுமுறை: ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-holiday-omni-bus-fares-hiked-fourfold</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-holiday-omni-bus-fares-hiked-fourfold#comments</comments><guid isPermaLink="false">a1a70024-28b6-4fbf-9ca7-89710bf443df</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:58:26 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:58:26.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,ஆம்னி பஸ்,விநாயகர் சதுர்த்தி,கட்டணம் உயர்வு,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/48w4kwzu/bus.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்பு படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்னி பஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/48w4kwzu/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p> சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள், விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.  இதனால், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பஸ்,ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.  ரெயில்களில் இருக்கைகள் முன் கூட்டியே நிரம்பிவிடுவதாலும், முக்கியமாக விழாக்காலங்களில் சில நிமி டங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிடுவதாலும் பெரும்பாலான மக்கள் பஸ் போக்குவரத்தையே நம்பி இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள் ளும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்கள் பஸ் பயண டிக்கெட் விலையை விழாக்காலங்களில் கடுமையாக உயர்த்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.</p><h2>4 மடங்கு கட்டணம் உயர்வு</h2><p>அந்த வகையில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகிவிடுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட உள்ளனர். இதனால், சென்னை யில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆம்னி பஸ்</a>களில் கட்ட ணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4 ஆயிரத்து 13-ம், கோவைக்கு ரூ.3 ஆயிரத்து 239-ம், நெல்லைக்கு ரூ.3,499-ம், கன்னியாகு மரிக்கு ரூ.3 ஆயிரத்து 882-ம், நாகர்கோவிலுக்கு ரூ.3 ஆயிரத்து 699-ம், ஈரோட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 580-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>திங்கட்கிழமை கட்டண விவரம்</h2><p>அதே போன்று மறுமார்க்கத்தில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கான அதிகபட்ச பஸ் கட்டணம் விவரம் வருமாறு:-மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 650-ம், கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 999-ம், நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 999-ம், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 831-ம், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 599-ம், ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 40-ம் தற்போதைய கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒருவேளை இந்த கட்டணங்கள் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் மக்களின் தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-seats-for-government-school-students-in-medical-courses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-seats-for-government-school-students-in-medical-courses#comments</comments><guid isPermaLink="false">8e2b2f34-1b72-4a50-b22d-ad1c1be9af7f</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:57:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:57:34.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தலையங்கம்,Editorial,மருத்துவப் படிப்பு,அரசு பள்ளி மாணவர்கள்,Medical Studies,Govt School Students</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/e92p7f0s/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/e92p7f0s/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் பிளஸ்-2 முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் பலரின் முதல் கனவு மருத்துவப் படிப்பாகும். கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்பதுதான். முதல்-அமைச்சர் விஜய்யின் நிலைப்பாடும் அதுதான். அதனால்தான், த.வெ.க. ஆட்சி அமைத்து 100 நாட்களுக்குள் சட்டசபையில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் பேசுகையில், மருத்துவக் கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கானதாக இருக்கக்கூடாது என்றும், நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் பயனடைகின்றன என்றும் கூறினார். மேலும், சமூகத்தில் சமநிலையான கட்டமைப்பு சீர்குலைந்துவிட்டது என்றும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் பேசினார்.</p> <p>ஆக, நீட் தேர்வு வேண்டவே வேண்டாம். பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. என்றாலும், நீட் தேர்வு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நடைபெறுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்து தனிச் சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே அதை ரத்து செய்ய முடியும்.</p><p>அந்த நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கும் வரை நீட் தேர்வு தொடரத்தான் செய்யும். எனவே, அதுவரை மாணவர்கள் நீட் தேர்வை எழுதவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், 25 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 61 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் 7,157 இடங்கள் உள்ளன.</p><p>இதுமட்டுமல்லாமல், பல் மருத்துவப் படிப்புக்கு மாநில ஒதுக்கீட்டின் கீழ் 1,383 இடங்கள் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.</p><p>இதன் பயனாக, இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 510 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 104 மாணவர்களுக்கு பல் மருத்துவமான பி.டி.எஸ். படிப்பிலும் என 614 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இது முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் கிடைத்த இடங்கள் ஆகும். தற்போது 2-வது கட்ட கலந்தாய்வில், அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் 800-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கூடுதலாக வந்திருக்கின்றன. </p><p>அந்த இடங்களிலும் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மேலும் இடங்கள் கிடைக்க இருக்கின்றன. அந்தவகையில் 614 இடங்கள் முதற்கட்ட கலந்தாய்வில் கிடைத்த நிலையில், 2-வது கட்ட கலந்தாய்வு முடிவில் அதைவிட மேலும் சில இடங்களையும் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் அலங்கரிக்க இருக்கிறார்கள். ஆக, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு, பல அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான கனவு கோட்டையின் வாசலைத் திறந்துவைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: பெங்களூரு-நெல்லை இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-special-train-between-bengaluru-and-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-special-train-between-bengaluru-and-nellai#comments</comments><guid isPermaLink="false">80cc92fd-99eb-4121-953b-07fb80796d82</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:42:22 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:42:22.636Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,சிறப்பு ரெயில்,Special Train ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ls53wgwy/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ls53wgwy/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூரு நெல்லை இடையே சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. </p><p>அதன்படி, கே.எஸ்.ஆர். பெங்களூரு நெல்லை சிறப்பு ரெயில் (06527) இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.35 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து புறப்படுகிறது. இந்த ரெயில் பெங்களூரு கன்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக நாளை (சனிக்கிழமை) காலை 4.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் 4.40 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதியம் 1.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.</p><p>மறு மார்க்கத்தில் நெல்லை - பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06528), நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3.45 மணிக்கு நெல்லையில் இருந்து இருந்து புறப்படும். இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக இரவு 9.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர், இரவு 9.55 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு கன்டோன் மென்ட் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>விபத்தில் காயமடைந்தவருக்கு ‘செல்போன் டார்ச்’ வெளிச்சத்தில் சிகிச்சை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-victim-treated-with-cell-phone-torch-light</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-victim-treated-with-cell-phone-torch-light#comments</comments><guid isPermaLink="false">ec7f3142-4ce4-45b8-8607-35bb872dcaad</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:40:06 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:40:06.140Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,மருத்துவமனை,புதுகோட்டை,மின்வெட்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/j528cu8i/hosipital33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ செல்போன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ‘செல்போன் டார்ச்’ வெளிச்சத்தில் சிகிச்சை
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/j528cu8i/hosipital33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை, </p><p>மின்வெட்டு காரணமாக கீரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபத்தில் காயமடைந்தவ ருக்கு 'செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.</p><h2>தொடர் மின்வெட்டு</h2><p>புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.</p><p>இதேபோல் இரவிலும் மின்வெட்டு தொடர்கிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள சிறு, குறு தொழில்களும் முடங்கி உள்ளது.</p><h2>செல்போன் டார்ச் வெளிச்சத்தில்...</h2><p>இந்த நிலையில் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சாரம் இல்லை. இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சை அளிக்க என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர். இதையடுத்து காயமடைந்த வருக்கு நர்சுகள் '<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D">செல்போன் டார்ச்</a>' வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தனர். </p><p>இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து ஆலங்குடி பகுதியில் மின் வெட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-5#comments</comments><guid isPermaLink="false">2b9f6504-97b0-43bc-b259-4b6b16dca25a</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:31:01 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:31:01.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/oj9avc3y/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/oj9avc3y/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (11.09.2026 வெள்ளிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச்செயலகத்துக்கு எதிர்ப்பு: 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-the-new-headquarters</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-the-new-headquarters#comments</comments><guid isPermaLink="false">8413b16b-0f04-480b-8a89-9a6505edd7d9</guid><pubDate>Thu, 10 Sep 2026 22:26:55 +0000</pubDate><atom:updated>2026-09-10T22:26:55.855Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,விஜய்,பட்டினப்பாக்கம்,தலைமைச்செயலகம்,மீனவர்கள் போராட்டம்,புதிய தலைமைச்செயலகம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/byp6meqr/tngovt33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
புதிய தலைமைச்செயலகத்துக்கு எதிர்ப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[  12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/byp6meqr/tngovt33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>புதிய தலைமைச்செயலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் 15-ந்தேதி பட்டினப்பாக்கத்தில் நடக்க உள்ளது.</p><h2>புதிய தலைமைச்செயலகம்</h2><p>தமிழக அரசின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">புதிய தலைமைச்செயலக கட்டிடம்</a> சென்னை பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், மீனவ அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.</p><p>கடலும், கடல் சார்ந்த நெய்தல் இடமான அந்த இடத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டி னால் அது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு பூதாகரமாக கிளம்பியுள்ளது. இது சம்பந்த மாக போராட்டக்களத்துக்கு செல்லவும் மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன.</p><p>ஆமைகள் முட்டையிடும் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவு இருந்தும், அரசு பட்டினப்பாக்கத்தை குறி வைத்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மீனவ அமைப்புகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.</p><h2>மீனவர்களுக்கான இடம்</h2><p>இதுகுறித்து மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம சபை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவ ரான பாரதி கூறியதாவது:-</p><p>புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ள இடமே காலம். காலமாக மீனவர்களுக்கானதுதான். இது கடல்சார் நிலம். அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் அனை வருக்கும் இது தெரியும். எங்களது பூர்வீக இடத்தில் மீனவர்களுக்கான குடியிருப்புகள் தான் கட்டி தர வேண்டும்.</p><p>எங்கள் இடத்தை திருப்பி தர வேண்டும். மாற்றாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க வைக்கும் வகையில் புதிய தலைமை செயலகம் கட்டுவது எந்தவிதத்தில் நியாயம்?.</p><p>பொதுவாக கோட்டையில் சுதந்திர தினத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடக்கும்போதே எங்களை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல விட மாட்டார்கள். இப்போது புதிய தலைமைச்செயலகம் வேறு கட்டி விட்டால், நாங்கள் வீட்டை விட்டு கூட வர முடியாது. ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து எங்களை சுதந்திரமாக நடமாட கூட விட மாட்டார்கள். மீன்பிடிக்கவும் செல்ல முடியாது.</p><h2>12 மீனவ கிராமங்கள் எதிர்ப்பு</h2><p>ஏற்கனவே சாந்தோம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. 2023-ம் ஆண்டில் இருந்தே எங்கள் பூர்வீக இடத்தில் குடியிருப்பு வேண்டும் என்று சொல்லி வருகிறோம். தற்போது அமைச்சராக இருக்கும் வெங்கடரமணன் கூட, தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்தார். எங்களுக்கு சொந்தமான இடத்தை பெற்று தருவோம் என்று தெரிவித்தார். இப் போது அது குறித்து பேச மறுக்கிறார்.</p><p>புதிய தலைமைச்செயலக திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படுவது முள்ளிகுப்பம், முள்ளிமாந கர்தான். பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம். இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம். நொச்சி நகர் உள்பட 12 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படு வார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகும்.</p><p>முள்ளிகுப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவக்குடும் பங்களின் வாழ்வாதாரமும், படகுகளை நிறுத்தவும், வலைகளை பின்னவும் பயன்படுத்தும் கடற்கரை நிலங்களும் பாதிக்கப்படும்.</p><h2>போராட்டம் நடத்த முடிவு</h2><p>அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், எங்களின் நிலை குறித்து ஆலோசனை செய்ய வருகிற 15-ந்தேதி பட்டினப்பாக்கத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை; ஜி.எஸ்.டி. ஆய்வாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-government-official-gst-inspector-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-government-official-gst-inspector-arrested#comments</comments><guid isPermaLink="false">12b8f61a-7682-462f-8d74-8d5234996d16</guid><pubDate>Thu, 10 Sep 2026 21:56:13 +0000</pubDate><atom:updated>2026-09-10T21:56:13.840Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,பாலியல் தொல்லை,அரசு ஊழியர்,பெண் அதிகாரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7nnlz5w5/arrest33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பாலியல் தொல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[  ஜி.எஸ்.டி. ஆய்வாளர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/7nnlz5w5/arrest33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திரு.வி.க நகர், </p><p>அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜி.எஸ்.டி. ஆய்வாளர் கைது செய்யப் பட்டார்.</p><h2>அரசு பெண் அதிகாரி</h2><p>சென்னை முகப்பேர் 2-வது பிரதான சாலையில் ஜி.எஸ்.டி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆந்திராவை சேர்ந்த 32 வயதுள்ள இளம்பெண் ஒருவர் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சவுரவ் (வயது 28) என்பவரும் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.</p><p>இந்நிலையில், சவுரவ் கடந்த சில நாட்களாக பெண் ஆய்வாளரிடம் பாலியல் ரீதியாகவும், இரட்டை அர்த்தத்திலும் பேசி தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண் ஆய்வாளரின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங் களில் பதிவிட்டதுடன், உயர் அதிகாரிகளுடன் அவரை தொடர்புபடுத்தி தகாத வாசகங்களையும் பதிவிட்டு வந்ததாகவும் தெரிகிறது.</p><h2>ஜி.எஸ்.டி. ஆய்வாளர் கைது</h2><p>இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஆய்வாளர், சம்பவம் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில், பெண் ஆய்வாளருக்கு சவுரவ் தொடர்ந்து<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%20"> பாலியல் தொந்தரவு </a>அளித்து வந்தது தெரியவந்தது.</p><p>இதையடுத்து ஜி.எஸ்.டி. ஆய்வாளர் சவுரவ் மீது பெண் வன்முறை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார். அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-lakh-bank-employees-across-the-country-to-go-on-strike-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/8-lakh-bank-employees-across-the-country-to-go-on-strike-today#comments</comments><guid isPermaLink="false">89cdc488-3b01-4e9f-b5b6-4b28d81552d2</guid><pubDate>Thu, 10 Sep 2026 21:24:14 +0000</pubDate><atom:updated>2026-09-10T21:24:14.165Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விடுமுறை,Holiday,வங்கி ஊழியர்கள்,Bank staff strike</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/e09llwc0/work33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வங்கி ஊழியர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ இன்று வேலை நிறுத்தம்|]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-10/e09llwc0/work33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சனி, ஞாயிறு விடுமுறை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 8% லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது.</p><p>சனி, ஞாயிறு விடுமுறை</p><p>சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி ஒருங் கிணைப்பாளரும். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான எச்.வெங் கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கினால், அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களுக்கான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">வணிக சேவை</a> நேரத்தை கூடுதலாக 40 நிமிடங்கள் அதிகரித்து பணியாற்ற வங்கி ஊழியர்கள் தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஆனால், 2% ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த விவகாரம் நிதி அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வு காண வேண்டி அர சுக்கு நோட்டீஸ் வழங்கியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால், வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.</p><p>இதுதவிர, வங்கிகளில் எழுத்தர் மற்றும் துணை ஊழியர்களை போதுமான அளவில் பணிய மர்த்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டமாக மாற்றுதல், பணிக் கொடை உச்சவரம்பை அதிகரித்தல், வங்கிகளில் தொழிலாளர் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை வேண்டும் என்றே நிரப்பாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் நாளை (இன்று) வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>