<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 15 Jul 2026 13:46:31 +0000</lastBuildDate><item><title>கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-release-of-water-from-krishnagiri-reservoir-for-120-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-release-of-water-from-krishnagiri-reservoir-for-120-days#comments</comments><guid isPermaLink="false">6d444edd-49c0-46d3-91ba-2d473b8309cd</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:41:50 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:41:50.103Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,கிருஷ்ணகிரி,Krishnagiri</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/p39ixdom/World-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/p39ixdom/World-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து 16-ந்தேதி(நாளை) முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p> <p>“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து 2026-27 ஆம் ஆண்டின் முதல் போக பாசனத்திற்கு வலது மற்றும் இடதுபுறக்கால்வாய்களில் 16.07.2026 முதல் 12.11.2026 வரை 120 நாட்களுக்கு மொத்தம் 1563 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டம் மற்றும் மாவட்டத்திலுள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி, ஒரத்தநாடு கால்நடை கல்லூரிகளுக்கு புதிய மாணவியர் விடுதிகள்: திறந்து வைத்த அமைச்சர் கமலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-hostels-for-veterinary-colleges-in-tirunelveli-and-orathanadu-minister-kamali-inaugurates</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-hostels-for-veterinary-colleges-in-tirunelveli-and-orathanadu-minister-kamali-inaugurates#comments</comments><guid isPermaLink="false">785c2c6b-20ea-4bed-89f6-a119c41f957e</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:21:56 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:21:56.020Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,கால்நடை மருத்துவம்,hostel,விடுதிகள்,Veterinary College,அமைச்சர் கமலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/co31s27h/236.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் கமலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/co31s27h/236.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நல்லாசியுடன், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  கமலி, இன்று காலை 10.00 மணிக்கு, சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS), திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றிற்காக புதிதாக கட்டப்பட்ட மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.</p><h2>மாணவியர் விடுதி</h2><p>திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.475.00 லட்சம் மதிப்பீட்டிலும், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.456.00 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் மாணவியர் விடுதிகள், இளங்கலை மற்றும் முதுகலை கால்நடை மருத்துவ மாணவியர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் தங்கி கல்வி பயிலும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>விடுதிக் கட்டடங்களைத் திறந்து வைத்ததை தொடர்ந்து, அமைச்சர் மாதவரம் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கப்பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்தார். மேலும், தரமான கல்வி மற்றும் மாணவர் நலனை மேம்படுத்தும் நோக்கில் உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், பல்கலைக்கழகம் மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளை பாராட்டினார்.</p><h2>பெருந்தலைவர் காமராஜர்</h2><p>மேலும், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு செயலாளர் அனு ஜார்ஜ், மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) டாக்டர் ஆர். நரேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பல்கலைக்கழக அலுவலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.</p><p>திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் எஸ்.சி.எட்வின், அக்கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்களுடன், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் டி. ஏ. கண்ணன், அக்கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்களுடன் தங்களது கல்லூரி வளாகங்களிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultative-meeting-of-aiadmk-district-functionaries-led-by-edappadi-palaniswami-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consultative-meeting-of-aiadmk-district-functionaries-led-by-edappadi-palaniswami-2#comments</comments><guid isPermaLink="false">f6f32c95-810f-403c-a0aa-653e99f4dfdf</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:11:34 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:11:34.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,AIADMK,Consultative meeting,ஆலோசனை கூட்டம்,மாவட்ட நிர்வாகிகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/dy42lrgm/eps.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/dy42lrgm/eps.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கலந்தாலோசனை கூட்டம்</h2><p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி கே. பழனிசாமி</a> தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு, மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.</p><p><strong>கூட்டம் நடைபெறும் தேதி,கிழமை,நேரம் மற்றும் பங்குபெறும் மாவட்டங்களின் விவரங்கள்:-</strong></p><p><strong>20.7.2026 -  திங்கள்</strong></p><p>காலை 10 மணி மதுரை மாநகர்</p><p>காலை 11.30 மணி ராமநாதபுரம்</p><p>மாலை 4.30 மணி மதுரை புறநகர் கிழக்கு மதுரை புறநகர் மேற்கு</p><p><strong>21.7.2026 –  செவ்வாய்</strong></p><p>காலை 10 மணி தென்காசி வடக்கு தென்காசி தெற்கு</p><p>காலை 11.30 மணி கன்னியாகுமரி கிழக்கு கன்னியாகுமரி மேற்கு</p><p>மாலை 4.30 மணி தூத்துக்குடி வடக்கு தூத்துக்குடி தெற்கு</p> <p> <strong>22.7.2026 - புதன்</strong></p><p>காலை 10 மணி திருப்பூர் மாநகர் திருப்பூர் புறநகர் மேற்கு</p><p>காலை 11.30 மணி திருப்பூர் புறநகர் கிழக்கு</p><p>மாலை 4 மணி நாமக்கல்</p><p>மாலை 5.30 மணி வட சென்னை தெற்கு (கிழக்கு) வட சென்னை தெற்கு (மேற்கு)</p> <p><strong>23.7.2026 - வியாழன்</strong></p><p>காலை 10 மணி கோவை மாநகர் கோவை புறநகர் வடக்கு</p><p>காலை 11.30 மணி கோவை புறநகர் தெற்கு கோவை புறநகர் மத்தியம்</p><p>மாலை 4 மணி திண்டுக்கல் கிழக்கு திண்டுக்கல் மேற்கு</p><p>மாலை 5.30 மணி வட சென்னை வடக்கு (கிழக்கு) வட சென்னை வடக்கு (மேற்கு)</p><p><strong>24.7.2026 - வெள்ளி</strong></p><p>காலை 10 மணி விழுப்புரம்</p><p>காலை 11.30 மணி திருவாரூர்</p><p>மாலை 4.30 மணி சேலம் மாநகர் சேலம் புறநகர்</p> <p><strong>25.7.2026 - சனி</strong></p><p>காலை 10 மணி கள்ளக்குறிச்சி</p><p>காலை 11.30 மணி தென் சென்னை வடக்கு (கிழக்கு) தென் சென்னை தெற்கு (கிழக்கு)</p><p>மாலை 4 மணி தென் சென்னை வடக்கு (மேற்கு) தென் சென்னை தெற்கு (மேற்கு)</p><p>மாலை 5.30 மணி சென்னை புறநகர் திருவள்ளூர் தெற்கு</p> <p>இந்த ஆலோசனை கூட்டங்களில், நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகள் குறித்தும்; கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘காவல்துறையே மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறும் அவலம் இனிமேலும் தொடரக் கூடாது’ - எஸ்.டி.பி.ஐ. </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-deplorable-situation-where-the-police-force-itself-becomes-a-threat-to-peoples-lives-must-not-continue-any-longer-sdpi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-deplorable-situation-where-the-police-force-itself-becomes-a-threat-to-peoples-lives-must-not-continue-any-longer-sdpi#comments</comments><guid isPermaLink="false">8299612f-8582-4c65-bb08-2ae17721c780</guid><pubDate>Wed, 15 Jul 2026 12:37:25 +0000</pubDate><atom:updated>2026-07-15T12:37:25.220Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>sdpi,எஸ்.டி.பி.ஐ.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/xki03yhz/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/xki03yhz/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கிளைச் சிறையில், குட்கா புகையிலை விற்பனை தொடர்பான புகாரில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன், சிறைத்துறையினரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. </p><p>அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதும், அவர் சித்ரவதை செய்து படுகொலை செய்யப்பட்டிருப்பதும் உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது. மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த கொடூர அராஜகப் போக்கை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>தமிழகத்தில் தொடரும் காவல் நிலைய மற்றும் சிறை மரணங்கள், காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம், முறையற்ற விசாரணை முறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் இன்மையையே மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கின்றன. காவல்துறையில் மனிதாபிமானமற்ற செயல்களுக்கும், இத்தகைய முறையற்ற காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளுக்கும் எவ்வித இடமும் அளிக்கக் கூடாது. காவல்துறை என்பது மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறும் அவலம் இனிமேலும் தொடரக் கூடாது. தமிழகத்தில் இனி ஒரு காவல் மரணம் கூட நிகழாத நிலையை உருவாக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>உயிரிழந்த சபரிவர்மனின் குடும்பம் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், தமிழக அரசு உடனடியாக அக்குடும்பத்திற்கு உரிய அரசு வேலை மற்றும் தகுந்த நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். இச்சம்பவத்தை அரசு மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, தவறு செய்த காவலர்கள் மற்றும் சிறைத்துறை ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். </p><p>அப்பாவிகள் மீது தாக்குதல், சித்ரவதை மற்றும் காவல் மரணங்களுக்கு காரணமான அனைத்து காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தப்பவிடாமல் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு காவல் மற்றும் சிறை மரணங்கள் குறித்தும் முறையான, வெளிப்படையான நீதித்துறை விசாரணை கட்டாயமாக்கப்பட வேண்டும்.</p><p>இத்தகைய மரணங்களைத் தடுக்கவும், தமிழக காவல்துறையின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் களையவும் அவசர அவசியமாக உறுதியான காவல்துறை சீர்திருத்தங்களை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். காவல்துறை மக்களின் பாதுகாவலராகச் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு உடனடியாக இது குறித்து ஆலோசித்து, காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கீரனூர்: 2 கார்களுக்கு இடையே சிக்கி மாமியார், மருமகள் பலி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/keeranur-mother-in-law-and-daughter-in-law-killed-after-being-caught-between-two-cars</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/keeranur-mother-in-law-and-daughter-in-law-killed-after-being-caught-between-two-cars#comments</comments><guid isPermaLink="false">4a997cbd-9c96-4d96-916f-0f4507a6ad20</guid><pubDate>Wed, 15 Jul 2026 12:12:55 +0000</pubDate><atom:updated>2026-07-15T12:12:55.271Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,புதுக்கோட்டை,உயிரிழப்பு,மாமியார்-மருமகள்,Keeranur,Mother-in-law and daughter-in-law</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/clh3qt05/keeranur-accident.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ விபத்தில் சிக்கிய வாகனங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கீரனூரில் 2 கார்களுக்கு இடையே சிக்கி மாமியார்- மருமகள் பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/clh3qt05/keeranur-accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 2 கார்களுக்கு இடையே சிக்கி மாமியார், மருமகள் பலியாகினர்.</p><h2>விபத்தும், உயிரிழப்பும்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">புதுக்கோட்டை மாவட்டம் </a>கீரனூர் அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரு கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது, எதிர்பாராதவிதமாக அந்த இரு கார்களுக்கும் இடையே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இரண்டு பெண்கள்</a> சிக்கிக் கொண்டனர். </p><p>கார்களுக்கு இடையில்  சிக்கிய ஸ்கூட்டர் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் ஸ்கூட்டரில் பயணித்த மருமகள் சாந்தி மற்றும் அவரது மாமியார் வீராயி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். </p><p>மேலும், விபத்துக்கு காரணமான கார்களின் ஓட்டுநர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/150-additional-medical-seats-allocated-to-tamil-nadu-government-medical-colleges-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/150-additional-medical-seats-allocated-to-tamil-nadu-government-medical-colleges-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">36a1d4cb-9135-449d-a384-f80fb07ef39c</guid><pubDate>Wed, 15 Jul 2026 12:10:10 +0000</pubDate><atom:updated>2026-07-15T12:10:10.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,தமிழக அரசு,Medical Colleges,மருத்துவ கல்லூரிகள்,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/l1ocy3cs/arunraj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/l1ocy3cs/arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 150 இளங்கலை மருத்துவ இடங்களைப் பெற்று, மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளதாக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தகவல்.</p><h2>கூடுதல் இளங்கலை மருத்துவ இடங்கள்</h2><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம், நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்கனவே உள்ள மருத்துவ இடங்களுடன் தலா 50 இளங்கலை மருத்துவ இடங்களைக் கூடுதலாக வழங்கியுள்ளது. அதன்படி, இந்த மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைத் திறன் தலா 100-லிருந்து 150 இடங்களாக உயர்ந்துள்ளது.</p><h2>அறிக்கை</h2><p>மாநில சுகாதாரத்துறையின் தீவிர உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விதிமுறை இணக்க அறிக்கைகள் ஆகியவற்றின் மூலம், தமிழ்நாடு அரசு இதுவரை மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,200 இடங்களாக வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது.</p><h2>உறுதியாக உள்ளது</h2><p>மருத்துவ உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான நமது தொடர்ச்சியான முயற்சிகளை இந்த விரிவாக்கம் பிரதிபலிக்கிறது. நாட்டின் முதன்மை சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி மையமாக நமது மாநிலத்தின் நிலையைத் தக்கவைத்துக்கொள்வதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.</p><p>நடப்பு 2026-27 கல்வியாண்டில் வரவிருக்கும் மாநில கலந்தாய்வு செயல்முறையில் இந்த 150 கூடுதல் இடங்களை சுமூகமாக ஒருங்கிணைக்க மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையானது இறுதி செய்யப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய இட ஒதுக்கீட்டுப் பட்டியலை கண்டிப்பாகப் பின்பற்றி நடைபெறும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலம் நீட்டிப்பு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tn-chief-secretary-m-sai-kumars-service-extended-extension-sought</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tn-chief-secretary-m-sai-kumars-service-extended-extension-sought#comments</comments><guid isPermaLink="false">5330ded9-0198-4d1a-b663-dd5a6d1ad7d1</guid><pubDate>Wed, 15 Jul 2026 11:29:57 +0000</pubDate><atom:updated>2026-07-15T11:29:57.206Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக தலைமை செயலாளர்,Chief Secretary,தலைமை செயலாளர்,சாய்குமார்,Saikumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/jzpk2qlu/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/jzpk2qlu/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசின் தலைமை செயலாளர் <a href="https://www.dailythanthi.com/">சாய்குமார்</a>. இவரை கடந்த ஏப்ரல் 23ம் தேதி தலைமை செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்தது. சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு முன்னாள் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.</p><p>1990ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சாய்குமார் மதுரை, தர்மபுரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். மேலும், தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.</p><h2>பதவி காலம் நீட்டிப்பு</h2><p>இதனிடையே, தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவிகாலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய இருந்தது. ஆனால், சாய்குமாரின் பதவி காலத்தை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.</p><p>இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவடைய இருந்த தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலம் ( 6 மாதங்கள் நீட்டிப்பு) அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>ஓய்வூதியம் என்பது சலுகையல்ல; அது உரிமை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pension-is-not-a-privilege-it-is-a-right-communist-party-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pension-is-not-a-privilege-it-is-a-right-communist-party-of-india#comments</comments><guid isPermaLink="false">d37c1fdf-b7b7-4c91-975f-232182b29063</guid><pubDate>Wed, 15 Jul 2026 11:03:19 +0000</pubDate><atom:updated>2026-07-15T11:03:19.506Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,pension,ஓய்வூதியம்,RIGHT,சலுகை,Retirees,உரிமை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/s3k35twj/M.-Veerapandian.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/s3k35twj/M.-Veerapandian.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஓய்வூதியம் என்பது சலுகையல்ல; அது உரிமை. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்.</p><p>இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி.</p><h2>ஓய்வூதியம் வழங்கப்படவில்லை</h2><p>தமிழ்நாட்டில் 2003 ஏப்ரல் 1 முதல் பணியில் சேர்ந்து, 31.12.2025 வரை ஓய்வு பெற்ற,  உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் (சிறிஷி) வரக்கூடிய ஊழியர்கள் 46 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20">இடைக்கால ஓய்வூதியம் </a>வழங்குவதற்காக 16.06.2026 அன்று அரசாணை 111  பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 01.01.2026 முதல் இடைக்கால ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.</p><h2> இடைக்கால ஓய்வூதியம்</h2><p>ஆனால் 31.12.2025 வரை ஓய்வு பெற்ற 46 ஆயிரம் பேருக்கு இந்த இடைக்கால ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு, 01.04.2003 முதல் பணியில் சேர்ந்து, 31.12.2025 வரை ஓய்வு பெற்ற அனைவருக்கும், இந்த இடைக்கால ஓய்வூதியம் ரூ.10,000-த்தை மாதம்தோறும் வழங்கிட வேண்டும்.</p> <h2>சமூகத்தின் கடமை</h2><p>ஓய்வூதியம் என்பது சலுகையல்ல; அது உரிமை. சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தங்களது கடந்த கால உழைப்புச் சக்தியை இச்சமூகத்திற்கு வழங்கியவர்களுக்கு, சமூகப் பொருளாதார பாதுகாப்பை வழங்க வேண்டியது இச் சமூகத்தின் கடமையாகும். ஊழியர்களின் கண்ணியமான வாழ்விற்கு ஓய்வூதியம் அவசியம் என உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது. எனவே, இடைக்கால ஓய்வூதியத்தை, இவ்வூழியர்களுக்கு வழங்குவதோடு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.</p> <h2>7864 பேர் மரணம்</h2><p>அது மட்டுமின்றி இந்த பணியாளர்களில் ஏறத்தாழ 7864 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவ்வாறு மரணமடைந்தவர்களின் இணையர்களுக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கிட வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலப் பத்திரப்பதிவு மோசடி: உடந்தையாக இருந்த மேலிடப் புள்ளிகள் யார்? - கிருஷ்ணசாமி கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-deed-registration-scam-who-were-the-top-brass-involved-krishnasamy-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-deed-registration-scam-who-were-the-top-brass-involved-krishnasamy-questions#comments</comments><guid isPermaLink="false">9b8277cb-2fa4-442f-9f9e-55cc1ad4f867</guid><pubDate>Wed, 15 Jul 2026 10:57:13 +0000</pubDate><atom:updated>2026-07-15T10:57:13.298Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாக்டர் கிருஷ்ணசாமி,Dr. Krishnasamy,பத்திரப்பதிவு,Registration,Palani temple,பழனி கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/wxkmbnov/234.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிருஷ்ணசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/wxkmbnov/234.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>புதிய தமிழகம் கட்சித் தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20">கிருஷ்ணசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான, பழனியின் மையப்பகுதியில் கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்த ரூ. 100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை சட்ட விதிமுறைகளுக்கு மாறாக மூன்று தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்தது எப்படி?</p><h2>நில மோசடி</h2><p>இரவுகளில் கன்னக்கோல் போடுவதைப் பற்றியும், வீடு புகுந்து திருடுவதைப் பற்றியும், பிக்பாக்கெட் அடிப்பதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று?</p><p>பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில், பழனி நகராட்சியின் 3-ஆவது வார்டு, 25-ஆவது பிளாக்கில், சர்வே எண்கள் 998 மற்றும் 999-இல் உள்ள 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை, கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ், பழனி அருகே உள்ள பாப்பாங்குளம் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி அருகே உள்ள டி.கே.என் புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய மூவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும்; இதற்கு உடந்தையாகச் சார்பதிவாளர் மணிகண்டன் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவருகிறது. இந்த நிலம் ஆட்சேபனைக்குரியது என அறநிலையத்துறை ஆணை  இருப்பது தெரிந்தும், யாருடைய தூண்டுதலின் பேரில் அல்லது ஆதரவின் பேரில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.</p><h2>குற்றச்சாட்டு</h2><p>இந்த குற்றச்சாட்டு வெளியானவுடன், அடிமட்ட அளவில் சார்பதிவாளர் உள்ளிட்ட ஒருசிலர் பெயரைக் குறிப்பிட்டு வெறுமனே ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மை வெளிவராது. ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு மாதத்தில், சட்டமன்றத்திற்கு உள்ளும், பொதுவெளியிலும் விஜய் தூய ஆட்சியைப் பற்றி வலியுறுத்தி வருகிறார். ஆனால், பழனி முருகன் கோவில் சொந்தமான நிலம் சட்டவிரோதமாக சில தனிநபர்களின் பெயரில் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலிடப் புள்ளிகளின் ஆதரவு இல்லாமல் இந்த குற்றம் நடைபெற வாய்ப்பில்லை. தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆட்சி வந்த பிறகு எழுப்பப்பட்டிருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுவாகும். ஒரு அரசை வீழ்த்த 100 குற்றச்சாட்டுகள் தேவையில்லை; வலுவான ஒரு குற்றச்சாட்டே போதுமானது. </p><h2>வலியுறுத்தல்</h2><p>எனவே, விஜய் அரசு பழனி முருகன் கோவில் மோசடி நிலப்பத்திரபதிவு உண்மைத்தன்மையை நடுநிலையான, நேர்மையான, சுதந்திரமான விசாரணை, குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதியின் கீழ் நடத்தப்பட்டு, அந்த மேலிடப்புள்ளி யார் என்பது ஆன்மீகப் பெரியோர்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டு சமந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் கல்வி சூழல் கடும் கவலையை ஏற்படுத்துகிறது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-educational-landscape-is-a-cause-for-grave-concern-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-educational-landscape-is-a-cause-for-grave-concern-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">01628511-0b57-41bc-bcde-f60f0d52778a</guid><pubDate>Wed, 15 Jul 2026 10:35:36 +0000</pubDate><atom:updated>2026-07-15T10:35:36.836Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,கல்வி,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,Educational,கவலை,In Tamil Nadu,சூழல்,grave</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/6shj7xfh/vanathi-srinivasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/6shj7xfh/vanathi-srinivasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் கல்வி சூழல் கடும் கவலையை ஏற்படுத்துவதாக பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறி உள்ளார்,.</p><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கவலை</h2><p>சிவகங்கை மாவட்டம் மல்லல் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களுக்கிடையேயான தகராறில் சகமாணவர் கத்தியால் தாக்கப்பட்டதாகவும், அதேபோல் நேற்றைய தினம் திருச்சி திருவெறும்பூர் அரசன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டதாகவும் வெளியான செய்திகள் தவெக அரசில் தமிழகத்தின் கல்வி சூழல் குறித்து கடும் கவலையை ஏற்படுத்துகின்றன.</p><h2>அலட்சிய போக்கே காரணம்</h2><p>அரசு பள்ளிகள் என்றாலே சாதனை மாணவர்கள் என்ற நிலை மாறி சமீப காலங்களாக தொடர்ந்து அவப்பெயரை பெற்று வருவதற்கு பள்ளி கல்வித் துறை மாணவர்கள் நலனில் காட்டும் அலட்சிய போக்கே காரணமாகும். கல்விக்கூடங்கள் அறிவை வளர்க்கும் இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, ஆயுதங்களும் வன்முறையும் நுழையும் இடங்களாக மாற கூடாது. செல்லும் பள்ளிகளிெலெல்லாம் ரீல்ஸ் எடுக்கும் தவெக-வினர் அதில் காட்டும் அக்கறையை மாணவர்கள் நலனில் காட்டியிருந்தாலே இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம்.</p><h2>துரித நடவடிக்கை</h2><p>எனவே அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பள்ளிகளில் மனநல ஆலோசனை, நன்னெறிக்கல்வி, மாணவர்களிடையே நட்பு மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கும் சிறப்பு விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் விதமாக துரித நடவடிக்கைகளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">பள்ளி கல்வித்துறை</a> செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை அருகே மரத்தில் மோதிய லாரி: டிரைவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/truck-crashes-into-a-tree-near-tiruvannamalai-driver-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/truck-crashes-into-a-tree-near-tiruvannamalai-driver-killed#comments</comments><guid isPermaLink="false">9019bc75-2e10-42b3-ae31-e3b3177bcc42</guid><pubDate>Wed, 15 Jul 2026 10:17:36 +0000</pubDate><atom:updated>2026-07-15T10:17:36.756Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Tiruvannamalai,உயிரிழப்பு,injured,லாரிlorry</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/kkh6ghql/233.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரத்தில் மோதிய லாரி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/kkh6ghql/233.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கலசபாக்கம்,</p><p>ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி, கலசபாக்கம் அருகே சாலை ஓர மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். கிளீனர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>விபத்து</h2><p>ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரியை, செங்கம் அருகே பாய்ச்சல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (42) ஓட்டினார். அவருடன் திருவண்ணாமலை பாலாஜி நகரைச் சேர்ந்த சேகரன் (42) கிளீனராக பயணித்தார்.</p> <p>நேற்று அதிகாலை கலசபாக்கம் அருகே கொண்டம் காரியந்தல் பகுதியில் வந்தபோது, லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர், கலசபாக்கம் போலீசார் ஆகியோர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.</p><p>இந்த விபத்தில் டிரைவர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கிளீனர் சேகரன், சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘காமராஜரின் புகழை பாடக்கூடிய தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு’ - ராஜேந்திர பாலாஜி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-the-aiadmk-has-the-standing-to-sing-the-praises-of-kamarajar-rajendra-balaji</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-the-aiadmk-has-the-standing-to-sing-the-praises-of-kamarajar-rajendra-balaji#comments</comments><guid isPermaLink="false">428b5ee5-a414-45ab-8e5c-69b33975af6a</guid><pubDate>Wed, 15 Jul 2026 10:04:13 +0000</pubDate><atom:updated>2026-07-15T10:04:13.327Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kamarajar,காமராஜர்,ராஜேந்திர பாலாஜி,Rajendra Balaji</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/mtltctz0/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/mtltctz0/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ‘த.வெ.க.வின் கொள்கை தலைவர்களில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரும் ஒருவர். தற்போது தமிழ்நாட்டில் காமராஜரின் ஆட்சி நடைபெறுகிறதா?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்தபோது ராஜேந்திர பாலாஜி கூறியதாவது;-</p><p>“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பெருந்தலைவர் காமராஜர் ஒரு கவுரவ தலைவராகவும், வழிகாட்டியாகவும் உள்ளார். அவர் இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் இல்லை. அந்த அளவிற்கு, விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் கர்மவீரர் காமராஜர். அவரை த.வெ.க. மட்டுமே சொந்தம் கொண்டாடுவது என்பது பொருத்தமில்லாதது. </p><p>பெருந்தலைவர் காமராஜரின் உயர்வும், பண்பும் மிகப்பெரியது. அ.தி.மு.க.வை உருவாக்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ‘எனது தலைவர் பெருந்தலைவர் காமராஜர், எனது வழிகாட்டி அறிஞர் அண்ணா’ என்று கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு காமராஜரை மதிக்கின்ற கட்சி அ.தி.மு.க. இன்றைக்கும் காமராஜரின் பிறந்தநாள் விழாவை பெரிய அளவில் கொண்டாடக்கூடிய கட்சி அ.தி.மு.க.தான். </p><p>காமராஜரின் நூற்றாண்டு விழாவை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்பாக கொண்டாடினார். அதே போல் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்றும், பாசமும் கொண்டவர். எனவே காமராஜரின் புகழை பாடக்கூடிய முழு தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>குன்னூர்: ரெயில் நிலையத்திற்குள் புகுந்த கரடி.. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-enters-coonoor-railway-station-public-flee-in-panic</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-enters-coonoor-railway-station-public-flee-in-panic#comments</comments><guid isPermaLink="false">acdebdc1-40f7-4a85-bf64-c379dd579413</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:49:10 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:49:10.033Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுமக்கள்,people,ரெயில் நிலையம்,Railway Stations,bear,கரடிகள் நடமாட்டம்</media:keywords><media:content height="422" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/5m00t3v7/coonur-bear.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ குன்னூர் ரெயில் நிலையத்தில் புகுந்த கரடி]]></media:title><media:description type="html"><![CDATA[ குன்னூர் ரெயில் நிலையத்தில் கரடி புகுந்ததால் மக்கள் அலறியடித்து ஓடினர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/5m00t3v7/coonur-bear.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நீலகிரி மாவட்டம்</a> குன்னூர் அருகே ரெயில் நிலையத்திற்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.</p><h2>ரெயில் நிலையத்தில் புகுந்த கரடி</h2><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே  பழைய அருவங்காடு ரெயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்திற்குள் சமீபத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கரடி</a> ஒன்று புகுந்தது. அந்த கரடி, அங்கிருந்த பயணிகளையும் பொதுமக்களையும் தாக்குவது போல ஆக்ரோஷமாக பாய்ந்தது. இதனால் பீதியடைந்த  மக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.</p><h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>எனினும், அதிர்ஷ்டவசமாக கரடி யாரையும் தாக்காமல், அருகில் இருந்த அடர்ந்த புதருக்குள் ஓடி மறைந்தது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வந்தது.</p><p>அதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-medical-camp-at-kasimedu-fishing-harbour-minister-srinath-inaugurated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-medical-camp-at-kasimedu-fishing-harbour-minister-srinath-inaugurated#comments</comments><guid isPermaLink="false">a814accd-1918-45c8-ba1d-1cf30a15f3a7</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:46:39 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:46:39.806Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,medical camp,மருத்துவ முகாம்,அமைச்சர் ஸ்ரீநாத்,Minister Srinath</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/iumvwny0/232.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஸ்ரீநாத்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/iumvwny0/232.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காசிமேடு மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் மீனவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் ஸ்ரீநாத்</a> இன்று தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>சிறப்பு மருத்துவ முகாம்</h2><p>மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் இன்று நடைபெற்ற மீனவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.</p><p>இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், தொற்று நோய்கள், இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் காசிமேடு பகுதியில் உள்ள காசிமாநகர், காசிபுரம், நாகூரார் தோட்டம், சிங்காரவேலன் நகர், அண்ணாநகர், திடீர் நகர், பல்லவன் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்</p><p>இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் விஜயகார்த்திகேயன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: பத்திரப்பதிவை ரத்து செய்தது மதுரை ஐகோர்ட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/justices-who-cancelled-the-deed-registration-in-the-temple-land-land-misappropriation-case-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/justices-who-cancelled-the-deed-registration-in-the-temple-land-land-misappropriation-case-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">61ced768-fe4e-4fad-8c47-6d2e59f7a726</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:32:57 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:32:57.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Case,வழக்கு,ரத்து,cancelled,பத்திரப்பதிவு,Registration,நில முறைகேடு,temple land,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/wn9h6pt9/high-court-madurai-bench.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஐகோர்ட் மதுரை கிளை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஐகோர்ட் மதுரை கிளை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/wn9h6pt9/high-court-madurai-bench.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழனி கோவில் மடத்திற்கு சொந்தமான நில முறைகேடு வழக்கில் பத்திரப்பதிவை  ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்துள்ளது.</p><p>இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மேல்முறையீட்டு மனு</h2><p>பழனி அடிவாரம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">தண்டபாணி சுவாமி</a> மடத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி, கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக உள்ள வழக்குகளை மறைத்து, தக்காரை வழக்கில் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் பெற்ற உத்தரவுக்கு எதிராக, கடந்த ஜூன் 30 அன்று தண்டபாணி சுவாமிகள் மடம் சார்பில் பழனி திருக்கோவில் இணை ஆணையர் மூலம் மேல்முறையீட்டு மனுவை (WA(MD)1010/2026) தாக்கல் செய்திருந்தோம். </p> <figure><img alt="இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/yimndzy5/minister-ramesh.jpg" /><figcaption>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்</figcaption></figure><h2>கடிதம் எழுதப்பட்டது</h2><p>மேலும் இந்த மடத்தின் நிலத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று இந்த வழக்குகளை மேற்கோள் காட்டி, கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று பழனி கோவில் இணை ஆணையர் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது. </p> <h2>குற்றவியல் விசாரணை</h2><p>இந்த சூழலில் கடந்த ஜூலை 6ஆம் தேதியன்று நீதிமன்ற வழக்கு மற்றும் இணை ஆணையர் கடிதத்தையும் பரிசீலனை செய்யாமல் நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது. </p> <h2>பத்திரப்பதிவு ரத்து</h2><p>இந்நிலையில் இன்று ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரித்ததில், மடத்தின் நிலமானது முறைகேடாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை நீதியரசர்கள் உறுதி செய்து பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளனர். மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். </p><h2>பொய் கதைகள்</h2><p>அரசின் மீதும், என் மீதும் சில தீய சக்திகள் எப்படியெல்லாம் பொய் கதைகளை பரப்ப முயற்சித்தாலும் அதையல்லாம் தாண்டி, உண்மையை நிலைநாட்டி கோவில் நிலங்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு என்றும் உறுதியாக நிற்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கட்சியின் நற்பெயருக்கு களங்கம்: நெல்லை காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tarnishing-the-partys-reputation-notice-to-senior-nellai-congress-leaders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tarnishing-the-partys-reputation-notice-to-senior-nellai-congress-leaders#comments</comments><guid isPermaLink="false">07fb1e6b-9f1b-43eb-baf9-2a7f31ea9fba</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:24:22 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:24:22.110Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,காங்கிரஸ்,Congress,Notice,நோட்டீஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/5x5r2hgv/231.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/5x5r2hgv/231.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஆ. கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் இன்று காலை 11.00 மணியளவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சங்கரலிங்கம் மற்றும்  உபதி சிவன் ஆகியோர் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், பொதுவெளியிலும் ஊடகங்களிலும் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாகப் புகார்கள் எழுந்தன.</p><h2>நோட்டீஸ்</h2><p>இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">தமிழ்நாடு காங்கிரஸ்</a> ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி சார்பில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>இந்தக் கடிதம் கிடைத்த 10 நாட்களுக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் நடைபெற இருந்த அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-we-the-leaders-conference-scheduled-to-be-held-in-tiruchendur-has-been-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalais-we-the-leaders-conference-scheduled-to-be-held-in-tiruchendur-has-been-cancelled#comments</comments><guid isPermaLink="false">5da4c1f0-d4e9-48af-bfa5-2234cfbd80a2</guid><pubDate>Wed, 15 Jul 2026 09:05:01 +0000</pubDate><atom:updated>2026-07-15T09:05:01.271Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,வி த லீடர்ஸ்,we the leaders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/y6dyzuj0/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/y6dyzuj0/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அவர், பா.ஜ.க.வில் இருந்து விலகி 'வீ த லீடர்ஸ்' என்ற இயக்கத்தை நிறுவினார். அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் உள்ளவர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி உள்ளார்.</p><p>இந்த இயக்கத்தின் முதல் மாநாடு கடந்த 12-ந்தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. ‘போதையில்லா தமிழகம்’ என்ற பெயரில் நடைபெற்ற விழிப்புணர்வு மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் 2-வது மாநாடு வரும் 26-ந்தேதி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. </p> <p>இந்த நிலையில், திருச்செந்தூரில் நடைபெற இருந்த மாநாடு ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, இயற்கை மற்றும் சுற்றுப்புற விழிப்புணர்வு சார்ந்த மாபெரும் சமூகநல நிகழ்வு வரும் ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் நடைபெறும் எனவும், இந்த சுற்றுச்சூழல் நிகழ்வு குறித்த தேதி, இடம் உள்ளிட்ட தகவலக்ள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ‘வீ த லீடர்’அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டாம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு - கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-partys-stance-is-not-to-raise-a-voice-against-the-central-government-mp-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-partys-stance-is-not-to-raise-a-voice-against-the-central-government-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">e019e4bc-80ab-46a9-87a8-b77c85ad9a06</guid><pubDate>Wed, 15 Jul 2026 08:59:33 +0000</pubDate><atom:updated>2026-07-15T08:59:33.350Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,மத்திய அரசு,கனிமொழி எம்.பி.,Central Government,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/qkeapljk/kanimozhi-mp.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/qkeapljk/kanimozhi-mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டாம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு என்று கனிமொழி தெரிவித்தார். இது தொடர்பாக தூத்துக்குடியில் இன்று, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20">கனிமொழி கருணாநிதி </a>செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:-</p><h2>இருமொழி கொள்கை</h2><p>திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் தெளிவாக சொல்லி வருவது இருமொழி கொள்கைதான். ஏனெனில், மொழி கொள்கை எந்த குழந்தைகள் மீதும் பாரமாக மாறிவிடக்கூடாது, பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கக்கூடிய மாணவ மாணவிகள் நிச்சயமாக கற்றுக்கொள்ள இன்றைய உலகில் அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது.</p><h2>மும்மொழி கொள்கை கட்டாயம்</h2><p>மேலும், பல மொழிகளை கற்றுக்கொள்ள வழிமுறைகள் இருக்கிறது. ஆனால் பாடத்திட்டத்தோடு குழந்தைகள்  மீது சுமையாக மொழியை சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்து மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு மும்மொழி கொள்கையை அமல்படுத்த அனைத்து வழிமுறையையும் கையாண்டு வருகிறது.  </p><p>மும்மொழி கொள்கை கட்டாயம் என்று வலியுறுத்தி குழந்தைகள் மனதிலே ஒரு அவநம்பிக்கையை உருவாக்க கூடாது என்பதுதான் திராவிட முன்னேற்ற கழகம் சொல்கிறது. இது குழந்தைகளுக்கு கற்றலில் மனச்சோர்வை அளிக்கக்கூடிய வகையில் அமைந்துவிடும்.</p><h2>எதிர்பார்ப்பதே தவறு</h2><p>முன்னதாக த.வெ.க அரசு  ஒன்றிய அரசாங்கத்தை எதிர்த்து பேசவேண்டாம்  என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்களிடம்  இருந்து நாம் எதிர்பார்ப்பதே தவறு என்றார்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில நபர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-man-dies-after-being-hit-by-unidentified-vehicle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-man-dies-after-being-hit-by-unidentified-vehicle#comments</comments><guid isPermaLink="false">8b085c71-6c27-42f8-b22d-5d16be03d6fa</guid><pubDate>Wed, 15 Jul 2026 08:33:53 +0000</pubDate><atom:updated>2026-07-15T08:33:53.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,பலி,Northern state,வடமாநில,killed,Police investigating,நபர்,போலீசார் விசாரணை,Person,vehicle collision,வாகனம் மோதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/s85ds0m2/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்தில் பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/s85ds0m2/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வட மாநில நபர் உயிரிழந்தார்</a>. </p><h2>வாகனம் மோதி வடமாநில நபர் பலி</h2><p>தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்பாண்டியாபுரம் பாலத்தின் மீது நடந்து சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>அவர் யார் என்பது அடையாளம் தெரியவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த நபர் மற்றும் மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஊழலற்ற ஆட்சி&quot; வெற்று முழக்கமா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-corruption-free-government-an-empty-slogan-nainar-nagenthran-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-corruption-free-government-an-empty-slogan-nainar-nagenthran-questions#comments</comments><guid isPermaLink="false">8e93c437-f11c-4e48-b85d-a5086f1e186d</guid><pubDate>Wed, 15 Jul 2026 08:14:04 +0000</pubDate><atom:updated>2026-07-15T08:14:04.078Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Chengalpattu,செங்கல்பட்டு,ஊழல்,bribe,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/422e8lah/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/422e8lah/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>உதட்டளவில் நேர்மை பேசி, உள்ளுக்குள் ஊழல் செய்யும் தவெகவின் நிஜ முகம் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது. மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீரா, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகித் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. முதல்வர் ஒருபுறம் நேர்மை பேச, அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மறுபுறம் லஞ்ச வேட்டையாடி வருவது தவெக அரசின் இரட்டை வேடத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.</p><p>தன் கட்சியினரின் ஊழலையே தட்டிக்கேட்க முடியாத முதல்வர் விஜய்யால் எப்படி மாநிலத்தை நேர்மையாக வழிநடத்த முடியும்? என்ற கேள்வி எழுகிறது. ஒப்பந்ததாரர்களை மிரட்டி, லஞ்சப் பணத்தை வெளிப்படையாக வாங்கும் தவெக நிர்வாகி வீராவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 'லஞ்சம் இல்லாத தமிழகம்' என்பது வெறும் விளம்பர வாசகம் மட்டுமே என்பதை தவெக அரசு நிரூபித்துள்ளது.</p><p>எனவே, தவெக நிர்வாகி லஞ்சம் வாங்கியது உண்மையா? என்பதை தீர விசாரித்து, புகார் உண்மையெனில் உடனடியாக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் பன்றி இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-in-thoothukudi-pork-vendor-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/5-arrested-in-thoothukudi-pork-vendor-murder-case#comments</comments><guid isPermaLink="false">72859049-1469-4b63-adf8-1f55a18cd4d6</guid><pubDate>Wed, 15 Jul 2026 08:07:55 +0000</pubDate><atom:updated>2026-07-15T08:07:55.639Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,bike,பைக்,murder,கொலை,youths,வாலிபர்கள்,தகராறு,5 பேர் கைது,Speed,வேகம்,Pig,பன்றி,5 arrested,இறைச்சி வியாபாரி,meat seller</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/1od9abvw/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வியாபாரி கொலை, 5 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/1od9abvw/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை</a> செய்யப்பட்ட வழக்கில் 5 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். </p><h2>பைக்கில் வேகமாக சென்றது குறித்து தகராறு</h2><p>தூத்துக்குடி தாளமுத்துநகர், திரேஸ்நகரைச் சேர்ந்த மணி மகன் சேகர் (வயது 40). இவர் மாதாநகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். கடந்த 13-ம் தேதி இரவு, மாதாநகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்கள் 2 பேருடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்துள்ளனர். குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் என சேகர் அவர்களை வழிமறித்துக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் அந்த வாலிபர்களில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.</p><h2>பன்றி இறைச்சி வியாபாரி கொலை</h2><p>தாக்குதலுக்குள்ளான வாலிபர், சிறிது நேரத்தில் தனது நண்பர்களுடன் பத்ரகாளியம்மன் கோவில் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த சேகரை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். பலத்த காயமடைந்த சேகர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சேகர் உயிரிழந்தார்.</p><p>இந்த கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில், ஏட்டுகள் கோவிந்தராஜ், ரவிகுமார், வேல்முருகன் மற்றும் முதல் நிலை காவலர் சரவணகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த கொலையில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். </p><h2>5 பேர் கைது</h2><p>இந்த நிலையில், கொலை தொடர்பாக தாளமுத்துநகர் விவேகானந்தா நகரைச் சேர்ந்த முருகன் மகன் சச்சின்(24), தாளமுத்துநகர் மேல அழகாபுரியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அஜய்(19), மாதாநகரைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் நாகராஜ்(19), சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் சுதன்(18), தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமுத்து(30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தவெக மீதான குதிரை பேர குற்றச்சாட்டு - பெ.சண்முகம் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-allegations-against-tvk-p-shanmugam-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-allegations-against-tvk-p-shanmugam-responds#comments</comments><guid isPermaLink="false">4857f2ca-2186-465d-8968-435aa30b1c76</guid><pubDate>Wed, 15 Jul 2026 08:04:37 +0000</pubDate><atom:updated>2026-07-15T08:04:37.783Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Communist Party of India,பெ.சண்முகம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,குதிரை பேரம்,P.Shanmugam,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/e77ukgfy/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/e77ukgfy/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று சந்தித்து பேசினார். </p><p><strong>அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பெ.சண்முகம் கூறியதாவது:-</strong></p><p>மேகமலை, கரூர் இனாம் நிலத்திற்கான தடை உத்தரவு குறித்து முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினேன். நிலப்பிரச்சினைகளை தீர்வு காண தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். மேகமலையில் கிராம மக்களை வெளியேற்றக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை என சொல்வதை ஏற்க முடியாது. தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். வன உரிமை, நில உரிமை வழங்கப்பட வேண்டும்.</p><p>இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதை இடதுசாரிகள் சேர்ந்து தீர்மானிப்போம். குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டாலும் அது கடுமையான கண்டனத்துக்குரிய விஷயம். குதிரை பேரம் விவகாரத்தில் மக்களுக்குதான் கோபம் வரவேண்டும்.</p><p>தொகுதி மக்கள் குதிரை பேரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். 20 நாட்கள் அல்லது ஒரு மாதத்தில் ஏன் ராஜினாமா செய்கிறீர்கள் என மக்கள் கேள்வி எழுப்பினால் எம்.எல்.ஏ.க்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள். குதிரை பேரம் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இதை திமுக, தவெக என அனைவருக்கும் தான் சொல்கிறோம்.</p><p>எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வளைத்து கட்சிகளை உடைத்து பாஜக தனது பலத்தை அதிகரித்துக் கொள்கிறது. ஆனால், இங்கே இவர்கள் (அதிமுக) ராஜினாமா செய்துவிட்டுத்தான் வேறு கட்சியில் இணைந்துள்ளனர். அதோடு, அதிமுகவில் உட்கட்சி பிரச்சினையும் உள்ளது. அதையும் இதையும் சம்பந்தப்படுத்தக் கூடாது.</p><p>தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கட்டாயம் இடம்பெறாது. கிருஷ்ணகிரி மண்ணிலிருந்து ஒருவர் அமைச்சராக வருவார் என இந்திய கம்யூ. மாநிலச் செயலர் வீரபாண்டியன் நேற்று கூறினார்; எதன் அடிப்படையில் கூறினார் என அவரிடம் இன்று கேட்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்தது ஏன்..? - கேரள உள்துறை மந்திரி பதில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-the-chief-minister-meet-vijay-kerala-home-minister-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-did-the-chief-minister-meet-vijay-kerala-home-minister-responds#comments</comments><guid isPermaLink="false">06024d7a-4d6a-4619-8e9d-05945f4ab1b3</guid><pubDate>Wed, 15 Jul 2026 07:52:49 +0000</pubDate><atom:updated>2026-07-15T07:52:49.747Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,உள்துறை மந்திரி,கேரளம்,keralam,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,ரமேஷ் சென்னித்தலா,Ramesh Chennithala</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/fadr9rat/misher.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/fadr9rat/misher.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை, கேரள மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா இன்று சென்னையில் நேரில் சந்தித்து பேசினார். </p><p>இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-</p><p>போதை ஒழிப்பு சம்பந்தமாக முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்தேன். போதைப்பொருள் ஒழிப்பு கேரள தூதுவராக மோகன்லால் இருக்கிறார்.</p><p>கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் கும்பல் செயல்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய் கேரளம் வர அழைப்பு விடுத்து இருக்கிறேன்.</p> <p>தமிழ்நாடு கேரள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்து இருக்கிறார். போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விரைவில் 5 மாநில டிஜிபிக்கள் சந்திப்பு நடக்க இருக்கிறது. இளைஞர்கள், மாணவர்களிடம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை விஜய் ஏற்படுத்த வேண்டும்.</p><p>போதைப்பொருள் ஒழிப்புக்கு அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆப்ரேசன் டூபான் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக முதல்-அமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>முன்னதாக கேரள உள்துறை மந்திரி ரமேஷ் சென்னித்தலா கொச்சியில் நிருபர்களிடம் கூறுகையில், “கேரளத்தில் போதைப்பொருளுக்கு எதிராக, அதன் உறைவிடங்களை கண்டறிந்து வேரோடு களைய அரசு உறுதி கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆபரேஷன் டூபான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பொதுமக்கள் பங்களிப்பு மூலம் வெற்றி பெற்றுள்ளது.</p><p>மேலும் போதைப்பொருளை ஒழிக்க கேரளம் போலீஸ் டி.ஜி.பி., தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநில டி.ஜி.பி.க்கள் உடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) நான் முதல்-அமைச்சர் விஜய்யை தொடர்பு கொண்டு பேச உள்ளேன்.</p><p>இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு எங்களுடன் ஒத்துழைக்கும். ஏற்கனவே, இதுகுறித்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருடன் கலந்துரையாடினேன். ஆபரேஷன் டூபான் திட்டத்தின் கீழ். போலீசார் நடத்திய சோதனையில் ரூ.70 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது” என்று அவர் கூறி இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பள்ளியில் பயங்கரம்.. 12-ம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-at-government-school-12th-grade-student-stabbed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-at-government-school-12th-grade-student-stabbed#comments</comments><guid isPermaLink="false">2de32394-38d3-411b-9eb3-d9b94008e41b</guid><pubDate>Wed, 15 Jul 2026 07:38:27 +0000</pubDate><atom:updated>2026-07-15T07:38:27.379Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,plus-2 student,கிரைம் செய்திகள்,சிவகங்கை,Sivagangai,Govt school,அரசுப் பள்ளி,12-ம் வகுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/k6krky7x/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/k6krky7x/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே மல்லல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் பள்ளி வகுப்பறைக்குள் வைத்து 2 மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவரும் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. உடனே ஆசிரியர்கள் இருவரையும் சமாதானம் செய்து கண்டித்து அனுப்பி வைத்தனர்.</p><p>இந்த நிலையில், மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்தபோது, 2 மாணவர்களுக்குள் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக மாணவனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சக மாணவனுக்கு முதுகு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.</p><p>கத்திக்குத்தில் காயமடைந்த மாணவனை மீட்ட ஆசிரியர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 12-ம் வகுப்பு மாணவர் மீது சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில்: யுனெஸ்கோ அந்தஸ்தின் 21-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettupalayam-ooty-mountain-railway-21st-anniversary-celebration-of-unesco-status</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettupalayam-ooty-mountain-railway-21st-anniversary-celebration-of-unesco-status#comments</comments><guid isPermaLink="false">c0b44a9a-cf6b-4099-ae78-36973bff5a0a</guid><pubDate>Wed, 15 Jul 2026 07:37:13 +0000</pubDate><atom:updated>2026-07-15T07:37:13.058Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,ஊட்டி மலை ரெயில்,Ooty Hill Train,கொண்டாட்டம்,மேட்டுப்பாளையம்,Nilgiri,யுனெஸ்கோ,UNESCO,Hill Train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/7xcaerk4/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/7xcaerk4/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை ரெயிலுக்கு (NMR) யுனெஸ்கோ (UNESCO) அந்தஸ்து வழங்கப்பட்டதன் 21-ம் ஆண்டு தொடக்க விழா இன்று மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. ​இவ்விழாவை முன்னிட்டு, இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த மலை ரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு, ரெயில்வே அதிகாரிகள் முன்னிலையில் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/qpyk2wq5/Untitled-11-1.jpg" /><figcaption>கோப்புப்படம்</figcaption></figure><p>​மலை ரெயிலின் வரலாற்றுச் சிறப்புகள், அதன் தனித்துவமான பல்சக்கர அமைப்பு (Rack and Pinion System) மற்றும் இந்த பாரம்பரியச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் பயணிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.</p><p>​விழாவிற்கு நீலகிரி மலை ரெயில் உதவி இயக்குநர் திருமலையான் தலைமை தாங்கினார். ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசாரின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பயணிகளின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காலை 7:10 மணிக்கு மலை ரெயில் ஊட்டி நோக்கித் தன் பாரம்பரியப் பயணத்தைத் தொடங்கியது.</p><h2>​யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து என்றால் என்ன?</h2><p>​யுனெஸ்கோ அந்தஸ்து (World Heritage Site): உலக அளவில் மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட மிக அரிய கட்டடக்கலை, பொறியியல் சாதனைகள் அல்லது இயற்கையான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பாதுகாக்கும் நோக்கில், ஐநா சபையின் அங்கமான யுனெஸ்கோ வழங்கும் உயரிய அங்கீகாரமே 'உலக பாரம்பரிய அந்தஸ்து' ஆகும்.</p><h2>​கிடைக்கும் பயன்கள்</h2><p>​<strong>சர்வதேசப் பாதுகாப்பு:</strong> இந்த அந்தஸ்து பெற்ற பின், குறிப்பிட்ட தளம் சர்வதேசச் சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்படும்.</p><p><strong>​சுற்றுலா மேம்பாடு:</strong> உலக சுற்றுலா வரைபடத்தில் இந்த இடம் முக்கியத்துவம் பெறுவதால், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரிக்கும்.</p><p>​<strong>நிதியுதவி மற்றும் தொழில்நுட்பம்:</strong> இந்த கட்டமைப்பைப் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் சர்வதேச அளவிலான நிதியுதவிகளும், நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளும் கிடைக்கப் பெறும்.</p><h2>யாருக்கெல்லாம் பெருமை?</h2><p>​இந்தியாவில் டார்ஜிலிங், கால்கா-சிம்லா ஆகிய மலை ரெயில்களுடன் இணைந்து நீலகிரி மலை ரெயிலும் "இந்தியாவின் மலை ரெயில்கள்" என்ற கூட்டுப் பெயரின் கீழ் இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனை பல தரப்பினருக்குப் பெருமிதத்தைத் தேடித்தந்துள்ளது.</p><p>உலக அளவில் இந்தியாவின் பொறியியல் வியக்கத்தக்க தொழில்நுட்பத்திற்கு கிடைத்த சர்வதேச மகுடம் இது. நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் சுற்றுலாத்துறையையும் உலக அரங்கில் உயர்த்திய பெருமை உள்ளூர் மக்களையே சாரும். </p><p>செங்குத்தான மலைப்பாதையில், அடர்ந்த காடுகளையும், இக்கட்டான நிலப்பரப்பையும் கடந்து இந்த ரெயில் பாதையை அமைத்த அன்றைய பொறியாளர்களுக்கும், இன்றுவரை இதனைத் தொய்வின்றி இயக்கி வரும் தற்போதைய ரெயில்வே தொழிலாளர்களின் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த ஆகச்சிறந்த கவுரவம் இதுவாகும்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் அரசு மருத்துவர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-doctor-commits-suicide-by-hanging-in-thoothukudi-police-investigating</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-doctor-commits-suicide-by-hanging-in-thoothukudi-police-investigating#comments</comments><guid isPermaLink="false">5ad1fd92-342c-4efa-9f52-ed2086ef7c38</guid><pubDate>Wed, 15 Jul 2026 07:37:01 +0000</pubDate><atom:updated>2026-07-15T07:37:01.234Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,தூக்குப்போட்டு தற்கொலை,doctor,Government Hospital,அரசு மருத்துவமனை,commits suicide by hanging,மருத்துவர்,மயக்கவியல் துறை,Anesthesiology Department</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ncvp0ka1/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரசு மருத்துவர் தூக்குப்போட்டு தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/ncvp0ka1/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மயக்கவியல் மருத்துவர் தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்துகொண்ட சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>அரசு மருத்துவமனை மயக்கவியல் துறை மருத்துவர்</h2><p>தூத்துக்குடி பிரையண்ட்நகர் 3-வது தெரு மத்திய பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் நவநீதபிரபு (வயது 38). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் அரசு மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நேற்று மதியம் இவரது மனைவி பூர்ணிமா குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.</p><h2>செல்போனில் வீடியோ கால்</h2><p>இந்த நிலையில், மாலையில் நவநீதபிரபு தனது மனைவி பூர்ணிமாவுடன் செல்போனில் வீடியோ கால் செய்து பேசியுள்ளார். அப்போது தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பூர்ணிமா, உடனடியாக நவநீதபிரபுவுடன் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சக மயக்கவியல் மருத்துவர் அருள்செல்வத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை </h2><p>அருள்செல்வம் மற்றும் சக மருத்துவர்கள் பிரையண்ட்நகரில் உள்ள நவநீதபிரபுவின் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், கிரில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நவநீதபிரபு வீட்டிலிருந்த சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தென்பாகம் போலீசார், நவநீதபிரபுவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கன்னட அமைப்புகள் போராட்டம்: கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பேருந்துகள் நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kannada-organizations-protest-tamil-nadu-buses-going-to-karnataka-stopped</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kannada-organizations-protest-tamil-nadu-buses-going-to-karnataka-stopped#comments</comments><guid isPermaLink="false">fc6d97f3-2992-43cb-933a-7aecf75579c8</guid><pubDate>Wed, 15 Jul 2026 07:12:30 +0000</pubDate><atom:updated>2026-07-15T07:12:30.446Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,Karnataka,கர்நாடகா,மேகதாது அணை,பேருந்து நிறுத்தம்,கன்னட அமைப்பு,Bus Stops,Kannada organizations</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/bdszuckv/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/bdszuckv/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேகதாது அணையைக் கட்டுவதற்கு தொடர்ந்து கர்நாடக அரசு முயன்று வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கக்கூடாது என தெரிவித்து வருகின்றனர்.</p><p>மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்து கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேநேரம் தமிழக விவசாயிகள் மேகதாது அணைக் கட்டும் விவகாரத்தை எதிர்த்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். </p><p>இந்த நிலையில் மேகதாது அணை கட்ட எதிர்க்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கன்னட ஒக்கூடா கூட்டமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில் அத்திப்பள்ளியில் எல்லை அடைப்பு பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு எந்தவிதமான பதற்றமான சூழலும் ஏற்பட்டு விடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக ஓசூர் அருகே இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.</p><p>ஒசூரில் பேருந்துகள் இன்றி மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் இருமாநில எல்லைப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் ஒழிப்பை பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-eradication-should-be-done-in-action-not-in-name-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-eradication-should-be-done-in-action-not-in-name-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">91448892-7192-4d8e-a49d-d586efb830e4</guid><pubDate>Wed, 15 Jul 2026 07:10:13 +0000</pubDate><atom:updated>2026-07-15T07:10:13.365Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Chengalpattu,செங்கல்பட்டு,லஞ்சம்,ஊழல்,bribe,திருப்போரூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/g5zqv60v/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/g5zqv60v/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றார் போல திரைப்பட வசனங்களை அடுக்கிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது? எப்படி ஒழிக்கப் போகிறார்? </p><p>செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. </p><p>ஏற்கனவே ஊழல் புகார்களுக்கு உள்ளாகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி, தவெகவில் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட வீராசாமி, தற்போது ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், அவர் மீது ஏற்கனவே குவிந்திருக்கும் ஊழல் புகார்களையும், பொதுமக்கள் அவர் மீது வைத்த குற்றச்சாட்டுகளையும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. </p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஒருவர் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், தவெகவின் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழல்  ஒழிப்பு ஆகியவற்றின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. </p><p>எனவே, ஒப்பந்ததாரரிடம் தவெக நிர்வாகி லஞ்சம் வாங்குவது போல சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி, லஞ்சம் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் ஊழல் ஒழிப்பை பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stoned-to-death-in-thoothukudi-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stoned-to-death-in-thoothukudi-2-arrested#comments</comments><guid isPermaLink="false">0071891f-5eb0-4fb0-ba6a-be096df9bb89</guid><pubDate>Wed, 15 Jul 2026 07:01:59 +0000</pubDate><atom:updated>2026-07-15T07:01:59.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,murder,Youth,வாலிபர்,2 arrested,2 பேர் கைது,முன்விரோதம்,previous enmity,கல்லால் தாக்கி கொலை,attacked with stone</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/r5o3c0b4/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கொலை, 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/r5o3c0b4/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அண்ணாநகரில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கொலை</a> வழக்காக மாற்றி தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.</p><h2>முன்விரோதம்</h2><p>தூத்துக்குடி அண்ணாநகர் 8-வது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கருப்பசாமி (வயது 33). இவர் அங்குள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். கருப்பசாமிக்கும் அண்ணாநகர் 9-வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ்(24) என்பவருக்கும் மது அருந்துவது தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வெங்கடேஷ், கருப்பசாமியை கொலை செய்துவிடுவதாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>வாலிபர் மீது கல்லால் தாக்குதல்</h2><p>கடந்த 9-ம் தேதி இரவில் அண்ணாநகர் 8-வது தெருவில் கருப்பசாமி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ் மற்றும் அவருடைய நண்பரான முனியசாமி மகன் அரவிந்தன்(21) ஆகிய 2 பேரும் கருப்பசாமியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றிய நிலையில், அருகில் கிடந்த கல்லை எடுத்து கருப்பசாமியின் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2>உயிரிழப்பு</h2><p>தலையில் பலத்த காயமடைந்த கருப்பசாமியை, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி உயிரிழந்தார்.</p><h2>கொலை வழக்கு பதிவு</h2><p>இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் முதலில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து வெங்கடேஷ், அரவிந்தன் ஆகிய 2 பேரை கைது செய்து பேருரணி சிறையில் அடைத்திருந்தார். தற்போது கருப்பசாமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி இன்ஸ்பெக்டர் திருமுருகன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் கூப்பன் - சி.விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bridge-coupon-for-voters-notice-to-c-vijayabaskar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bridge-coupon-for-voters-notice-to-c-vijayabaskar#comments</comments><guid isPermaLink="false">01dd8b3e-c9bc-4f78-9cb3-f370fc1917df</guid><pubDate>Wed, 15 Jul 2026 06:38:25 +0000</pubDate><atom:updated>2026-07-15T06:38:25.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை தேர்தல்,TN Assembly Election,சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,சி.விஜயபாஸ்கர்,C.Vijayabaskar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/2adn2tw5/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/2adn2tw5/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நடந்த முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சி.விஜயபாஸ்கர், 1,05,773 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் முருகேசனை விட 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.</p><p>இதனையடுத்து சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற கே.கே.செல்லப்பாண்டியன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்கள் தனக்கு ஆதரவாக வாக்களிக்க கூறி ரூ.10,000 மற்றும் ரூ.2,000-க்கான கூப்பன்களை விநியோகித்தார். வாக்காளர்கள் ப்ரிட்ஜ் வாங்க கூப்பன்களை விநியோகித்து தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். எனவே சி.விஜயபாஸ்கர் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.</p><p>இந்த வழக்கு இன்று நீதிபதி என் செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கூப்பன்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதை மனுதாரர் சுட்டிக்காட்டி பதிவு செய்தார். மேலும் வழக்கு குறித்து சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளி வைத்தார்.</p><p>தற்பொழுது சி.விஜயபாஸ்கர் தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஜே.இ.இ. தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி - மாணவர் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jee-disappointment-after-failing-the-exam-students-bizarre-decision</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jee-disappointment-after-failing-the-exam-students-bizarre-decision#comments</comments><guid isPermaLink="false">6bb5334a-9efb-48be-985e-72d04826c9de</guid><pubDate>Wed, 15 Jul 2026 06:28:55 +0000</pubDate><atom:updated>2026-07-15T06:28:55.766Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Nagercoil,நாகர்கோவில்,Kanniyakumari,JEE Examination,ஜேஇஇ தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/6ox5x9tg/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/6ox5x9tg/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில்,</p><p>கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (59 வயது). இவர் திருநெல்வேலி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கீதா, நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.</p><p>இந்த தம்பதிக்கு 2 மகள்கள். ஒரு மகன் இருந்தனர். மூத்த மகள் அபிநயா வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இன்னொரு மகள் ஆர்த்தி வெளியூரில் படித்து வரும் நிலையில், கடைசி மகன் கோகுல் (19 வயது) கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 முடித்திருந்தார்.</p><p>அதன் பிறகு ஜே.இ.இ. முதல் நிலை தேர்வுக்கு தீவிரமாக படித்து வந்தார். மேலும் இந்த ஆண்டு நடந்த ஜே.இ.இ. தேர்விலும் பங்கேற்று எழுதினார். சமீபத்தில் தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் கோகுல் தோல்வி அடைந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜே.இ.இ. முதல் நிலை தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் இந்த விபரீத முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.</p>]]></content:encoded></item><item><title>திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்.. தடுக்க முயன்ற பெண்ணின் தாயார்  வெட்டிக்கொலை - வாலிபர் வெறிச்செயல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-attacked-for-refusing-marriage-youth-hacks-her-mother-to-death-after-she-tried-to-intervene</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-attacked-for-refusing-marriage-youth-hacks-her-mother-to-death-after-she-tried-to-intervene#comments</comments><guid isPermaLink="false">96342a1e-f192-4fdf-b085-f572bc78ca26</guid><pubDate>Wed, 15 Jul 2026 06:09:33 +0000</pubDate><atom:updated>2026-07-15T06:09:33.440Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Virudhunagar,விருதுநகர்,கிரைம் செய்திகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/15d8hfii/dere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/15d8hfii/dere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/விருதுநகர்">விருதுநகர்</a> மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் வீடு புகுந்து இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. </p><h2>திருமணம் நிறுத்தம்</h2><p>காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் வர்ஷா என்பவருக்கும் அவரது உறவினர் யுவராஜாவிற்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்நிலையில் யுவராஜாவை வர்ஷா மணம் முடிக்க மறுத்துவிட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் தன்னை திருமணம் செய்ய மறுத்த வர்ஷாவை வீடு புகுந்து யுவராஜா இன்று வெட்டியதாக கூறப்படுகிறது. </p><h2>தாயார் வெட்டி கொலை</h2><p>மகள் வெட்டப்படுவதை பார்த்து அதனை தடுக்க வந்த வர்ஷாவின் தாய் விநாயக ஜோதி மீதும் யுவராஜா கொடூரமாக அரிவாளால் வெட்டியதில் வர்ஷாவின் தாயார் விநாயக ஜோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.</p><p>யுவராஜால் அரிவாளால் வெட்டப்பட்ட வர்ஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய யுவராஜ், மல்லாங்கிணறு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ev-velu-appears-at-the-anti-corruption-bureau</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ev-velu-appears-at-the-anti-corruption-bureau#comments</comments><guid isPermaLink="false">b52b24af-e1fd-42cc-940b-773b8ae6369c</guid><pubDate>Wed, 15 Jul 2026 06:04:57 +0000</pubDate><atom:updated>2026-07-15T06:04:57.920Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எ.வ.வேலு,Ev Velu,லஞ்ச ஒழிப்புதுறை,Anti-Corruption Department,லஞ்ச ஒழிப்பு போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/78pyxbk6/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/78pyxbk6/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது நெடுஞ்சாலை துறையில் ரூ.3.23 கோடி முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 3-ந் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.</p><p>ஆனால் சிங்கப்பூர் சென்று இருந்த எ.வ.வேலு, அங்கு உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சென்னை ஐகோர்ட்டு, நிபந்தனையுடன் இடைக்கால தடை விதித்துள்ளதுடன், 15-ந்தேதி (அதாவது இன்று) லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு ஆஜராகவும் உத்தரவிட்டது.</p><p>இந்த நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின்படி, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்றும் ஆஜராகியுள்ளார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-7</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-7#comments</comments><guid isPermaLink="false">f2afabb6-f798-4158-9ebc-a4ea6dab7ca0</guid><pubDate>Wed, 15 Jul 2026 06:04:09 +0000</pubDate><atom:updated>2026-07-15T06:04:09.807Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/bs9fuzzo/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/bs9fuzzo/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட கடைநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகர சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில்  நாளை (16.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>அதன்படி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காமராஜரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்: மு.க.ஸ்டாலின்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamarajs-fame-will-remain-only-in-tamil-nadu-mkstalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kamarajs-fame-will-remain-only-in-tamil-nadu-mkstalin#comments</comments><guid isPermaLink="false">60eefe20-386f-4f5d-9bd3-18fd38187c21</guid><pubDate>Wed, 15 Jul 2026 05:51:30 +0000</pubDate><atom:updated>2026-07-15T05:51:30.253Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>M.K.Stalin,Chennai,சென்னை,X Page,எக்ஸ் பதிவு,பிறந்தநாள்,காமராஜர்,DMK leader,Kamaraj&apos;s birthday,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/zrmi6li5/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/zrmi6li5/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும் என்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் </a>தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். </p><p>பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: </p><p>தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!</p><p>மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராஜர். பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர். உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர். </p><p>காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது வழியிலான நமது திராவிட மாடல் அரசிலும், காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த காமராஜருக்கு திருவுருவச் சிலை, திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம்! </p><p>தலைமுறைகள் தழைக்க கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்! </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி கொலை: சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-jail-murder-cbi-probe-should-be-ordered-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-jail-murder-cbi-probe-should-be-ordered-anbumani#comments</comments><guid isPermaLink="false">7b6fc6d6-ef91-4a58-848a-bd8bcbc820c8</guid><pubDate>Wed, 15 Jul 2026 05:49:37 +0000</pubDate><atom:updated>2026-07-15T05:49:37.533Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,சிபிஐ விசாரணை,CBI action</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/eoto4jkr/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/eoto4jkr/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெட்டிக்கடையில் போதைப்பாக்குகளை விற்பனை செய்ததற்காக நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி, சிறைக்காவலர்களால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. விசாரணைக் கைதி உயிரிழந்தது தெரிந்தும் அதை மூடி மறைக்க முயன்றதாகவும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவை உண்மை எனில் காவல்துறை, சிறைத்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.</p><p>கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த ஈத்தங்காடு கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்ற உடற்திறன் மாற்றுத்திறனாளி, அவர் நடத்தி வந்த பெட்டிக்கடையில் 200 கிராம் குட்கா எனும் போதைப்பாக்கை சட்ட விரோதமாக வைத்திருந்ததாகக் கூறி கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்ட அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி நேற்று முன்நாள் திங்கள்கிழமை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவம் பயனின்றி சபரிநாதன் உயிரிழந்த நிலையில், அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்து விட்டதாகக் கூறி மூடி மறைக்க காவல்துறையினர் முயன்றதாக கூறப்படுகிறது.</p><p>ஆனால், சபரிநாதன் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரை சிறைக்காவலர்கள் கொலை செய்து விட்டு,  அதை மூடி மறைக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் சபரிநாதனின் உடலில் 19 காயங்கள் இருந்ததும், குறைபாடுள்ள வலது கை 3 இடங்களில் உடைக்கப்பட்டிருந்ததும், இடது கை, இரு கால்கள், தலை, மார்பு ஆகிய உறுப்புகளும் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அதன்பிறகு தான் இதற்கு காரணமான நாகர்கோவில் தலைமை சிறைக்காவலரும், இரு சிறைக்காவலர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.</p><p>நாகர்கோவில் சிறையில் சபரிநாதனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் மன்னிக்க முடியாதது. சிறைக்காவலர்களை கோபப்படுத்தும் வகையில் கூட அவர் எதுவும் செய்யவில்லை. ஒரு தவறும் செய்யாத என்னை எதற்காக சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டு அவர் தொடர்ந்து ஓலமிட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த  சிறைக்காவலர்கள் அவரது கைகள் மற்றும் கால்களைக் கட்டி, படுக்க வைத்து கொடூரமாக தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த சபரிநாதன் ஞாயிற்றுக் கிழமை இரவே இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அவரை திங்கள் கிழமை காலை உயிருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்குதான் அவர் உயிரிழந்து விட்டதாகவும் சிறைத்துறையினர் ஒரு நாடகத்தை எழுதி அரங்கேற்றியுள்ளதாக கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>சபரிநாதன் உயிரிழந்த பிறகும் கூட அவர் இயற்கையாகவே மரணமடைந்ததைப் போலவும், அவரது மறைவுக்கும் சிறைத்துறையினரின் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த காவல்துறையும், சிறைத்துறையும் முயன்றதாக கூறப்படுகிறது. இறந்து போன சபரிநாதனின் உடலை உடனே வாங்கிச் சென்று தகனம் செய்யவும் உறவினர்களுக்கு காவல்துறை அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப் படுகிறது. ஆனால், அதற்கு குடும்பத்தினர் உடன்பட மறுத்து போராடியதால் தான், தாமதமானாலும் கூட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைத்துள்ளது. இல்லாவிட்டால் இந்தக் கொலை மூடிமறைக்கப்படிருக்கும்.</p><p>அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் பெனிக்ஸ், ஜெயராஜ், திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார் வரிசையில் தவெக ஆட்சியில் சபரிநாதனின் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்தே இந்த கொலையை மூடி மறைக்க முயற்சிகள் நடந்த நிலையில், தமிழக காவல்துறையினர் விசாரித்தால் இந்த வழக்கில் நீதி கிடைக்காது. எனவே, சாத்தான்குளம், மடப்புரம் வழக்கின் விசாரணைகள் எவ்வாறு சிபிஐக்கு மாற்றப்பட்டனவோ?  அதேபோல், இந்த வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்களுக்கு வழக்கின் விசாரணை முடியும் வரை பிணை மறுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிந்தைய இரு மாதங்களில் காவல்துறையினரின் காவலில் இருந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அதற்கான காரணங்களை கண்டறியவும் விசாரணைக்கு  ஆணையிட வேண்டும். கொடூரமாக கொல்லப்பட்ட சபரிநாதனின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whatsapp-number-introduced-to-report-bribery-in-government-offices</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whatsapp-number-introduced-to-report-bribery-in-government-offices#comments</comments><guid isPermaLink="false">1c6f45f8-2beb-430e-8499-c961a19e1c77</guid><pubDate>Wed, 15 Jul 2026 05:01:01 +0000</pubDate><atom:updated>2026-07-15T05:01:01.147Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,லஞ்சம்,Bribery,Introduction,அறிமுகம்,Complaint,புகார்,தமிழக அரசு உத்தரவு,Tamil Nadu Government Order,வாட்ஸ்அப் எண்,WhatsApp number</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/1b34irx5/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு உத்தரவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/1b34irx5/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால், அது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வாட்ஸ்அப் உதவி எண்</a>ணை தமிழக அரசு அறிமுகம் செய்து உத்தரவிட்டுள்ளது.</p><h2>லஞ்ச புகார்களுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம்</h2><p>இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழகத்தில் லஞ்சம் வாங்கப்பட்டால் அது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க 9498180936 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு துறைகளின் இணையதளத்திலும் இந்த வாட்ஸ்அப் எண் இடம்பெற வேண்டும் என்றும், அதனுடன் லஞ்ச ஒழிப்பு துறையின் இணையதளத்தின் இணைப்பும் இடம்பெற வேண்டும் என்றும்" அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை: பயிற்சியாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kabaddi-player-sexually-harassed-in-chennai-coach-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kabaddi-player-sexually-harassed-in-chennai-coach-arrested#comments</comments><guid isPermaLink="false">ae84a0ce-0e19-437d-98c0-aa7bb3847289</guid><pubDate>Wed, 15 Jul 2026 04:54:02 +0000</pubDate><atom:updated>2026-07-15T04:54:02.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Chennai,சென்னை,பாலியல் தொல்லை,கிரைம் செய்திகள்,கபடி வீராங்கனை,Sexual harassement,Kabbadi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/7aikra4n/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/7aikra4n/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அருகே கண்ணகி நகரில் கபடி பயிற்சியாளராக இருப்பவர் ராஜூ (34). இவர், மீது கண்ணகி நகர் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு கபடி வீராங்கனை, செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.</p><p>அதில் ராஜூ தனக்கு பாலியல் தொல்லை அளித்து மிரட்டியதாகவும், பின்னர் தனது வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் 3 முறை வந்த ராஜூ, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தன்னைபோன்று பல மாணவிகள் அவரால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ராஜூ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.</p><p>இந்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.</p><p>இந்த நிலையில், கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் ராஜூ கைது செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானலில் பதுங்கியிருந்த ராஜூவை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர் காமராஜர் - முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-praises-kamaraj-a-great-leader-who-made-a-difference-in-the-lives-of-the-people-of-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-praises-kamaraj-a-great-leader-who-made-a-difference-in-the-lives-of-the-people-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">09d4e58c-6346-4c44-a51f-8584867372d6</guid><pubDate>Wed, 15 Jul 2026 04:49:49 +0000</pubDate><atom:updated>2026-07-15T04:49:49.358Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Kamarajar,காமராஜர் பிறந்தநாள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/qlugjjb0/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/qlugjjb0/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர் காமராஜர் என்று முதல்-அமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.</p><p>கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.</p><p>எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜரின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்! கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை… <a href="https://t.co/8n8yjbbmIP">pic.twitter.com/8n8yjbbmIP</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2077248638578036791?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அரசு கலைக்கல்லூரிகளில் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/counseling-for-the-transfer-of-non-teaching-staff-in-government-arts-colleges-applications-open-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/counseling-for-the-transfer-of-non-teaching-staff-in-government-arts-colleges-applications-open-today#comments</comments><guid isPermaLink="false">b174b648-00b7-46e9-9ced-6b4317f917ca</guid><pubDate>Wed, 15 Jul 2026 04:28:14 +0000</pubDate><atom:updated>2026-07-15T04:28:14.085Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,கலந்தாய்வு,அரசு கலைக்கல்லூரி,Govt Arts College,பணியிட மாறுதல்,உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/3xrgw56z/klere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-15/3xrgw56z/klere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித்துறையின் கீழுள்ள கல் லூரிக்கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்ககங் கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்களின் ('டி' பிரிவு தவிர்த்து) நலன்கருதி 2026-27-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடத்த ஆணையிடப்பட்டு உள்ளது.</p><p>அதன்படி, உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் கல்லூரிக்கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறி வியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர் கள் 'டி' பிரிவு தவிர்த்து) 2026-27-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்கள் ('டி'பிரிவு தவிர்த்து) www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.</p><p>மேற்கண்ட தகவல் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>