<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 17 Jul 2026 02:38:22 +0000</lastBuildDate><item><title>மது குடிக்கும்போது தகராறு; கல்லால் தாக்கி வாலிபர் கொலை: 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/argument-over-drinking-alcohol-youth-killed-by-stone-2-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/argument-over-drinking-alcohol-youth-killed-by-stone-2-arrested#comments</comments><guid isPermaLink="false">c0701b94-dcf8-4912-af76-6a9ca52cf53b</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:33:42 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:33:42.169Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>2 arrested,2 பேர் கைது,Kanchipuram,வாலிபர் கொலை,Dispute,தகராறு,காஞ்சீபுரம்,Stone attack,youth killed,Drinking alcohol,கல்லால் தாக்கி,மது அருந்துதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/588ubt29/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கொலை, 2 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/588ubt29/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சீபுரம், </p><p>காஞ்சீபுரம் மாவட்டத்தில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கல்லால் தாக்கி வாலிபர் கொலை</a> செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>ரத்தக்காயங்களுடன் ஆண் பிணம்</h2><p>காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் மனை பிரிவு அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சேத்துப்பட்டு கிராமம், வடவண்டை தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது.</p><h2>போலீசில் சரண்</h2><p>இந்த நிலையில் நேற்று சேத்துப்பட்டு கிராமம் வடவண்டை தெருவை சேர்ந்த தங்கம்(46) மற்றும் ஆனந்தஜோதி(32) ஆகிய 2 பேர் சோமங்கலம் போலீசில் சரண் அடைந்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது அவர்கள் கூறியதாவது: </p><p>நேற்று முன்தினம் இரவு நாங்கள் ராஜேசுடன் சேர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் நாங்கள் அவரை கல்லால் தாக்கினோம். இதில் அவர் இறந்து விட்டார். நாங்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டோம். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>2 பேர் கைது</h2><p>போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்டிரல் ரெயில் நிலைய கழிவறையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-videotaping-woman-bathing-in-central-railway-station-toilet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-videotaping-woman-bathing-in-central-railway-station-toilet#comments</comments><guid isPermaLink="false">6a18b17d-4710-452a-be9e-b282ea2c504e</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:28:21 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:28:21.511Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Central Railway Station,arrest,வாலிபர் கைது,சென்டிரல் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/vv6zv2en/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/vv6zv2en/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை சென்டிரல் வந்திருந்தார். அங்கிருந்து கேரளா செல்ல மற்றொரு ரெயிலுக்காக காத்திருந்தார்.</p><p>அப்போது, பெண்கள் காத்திருப்போர் அறை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்ததால், ஆண்கள் காத்திருப்பு அறையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட கழிவறையில் அந்த பெண் குளிக்க சென்றார். அவர் குளிப்பதை அருகில் இருந்த கழிவறையில் மறைந்திருந்த ஒருவர் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு சக பயணிகள், அந்த நபரை பிடித்து சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.</p><p>விசாரணையில், பிடிபட்டவர் வேலூர் மாவட்டம் கீழந்தூரை சேர்ந்த அருண் (27 வயது) என்பதும், மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் வெளியே தெரியும் ஜெகன்மோகினி குகை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/jaganmohini-cave-in-hogenakkal-is-visible-due-to-low-water-flow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/jaganmohini-cave-in-hogenakkal-is-visible-due-to-low-water-flow#comments</comments><guid isPermaLink="false">39ec65ee-3fa8-494b-802e-237bad573b05</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:21:26 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:21:26.303Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,ஒகேனக்கல்,தர்மபுரி,Dharmapuri,Hogenakkal Cauvery,ஒகேனக்கல் அருவி,குகை,cave,ஜெகன்மோகினி,Jaganmohini</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1vslzxg1/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/1vslzxg1/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><h2>ஜெகன்மோகினி குகை</h2><p>தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்வர்.</p><p>இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பெரிய பாணி காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி இருந்த ஜெகன்மோகினி குகை வெளியே தெரிய தொடங்கி உள்ளது. ஜெகன்மோகினி குகை, 1978-ம் ஆண்டு வெளியான ஜெகன்மோகினி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பாறையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது</p><h2>சுற்றுலா பயணிகள் ஆர்வம்</h2><p>காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களில் இந்த குகை முழுவதும் நீரில் மூழ்கிவிடும். ஆனால் நீர்வரத்து குறையும் காலங்களில் மட்டுமே இது மீண்டும் காட்சியளிக்கும். குகையை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் 10 மீட்டர் தூரம் வரை உள்ளே சென்று வர முடியும். மேலும் அதன் அமைப்பையும், இயற்கை அழகையும் கண்டு வியப்படைந்தனர்.</p><p>தற்போது நீர்வரத்து வினாடிக்கு 300 கனஅடியாக உள்ளதால் பரிசல் ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளை ஜெகன்மோகினி குகை வரை அழைத்து சென்று காட்டுகின்றனர். இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் பயணிகளின் ஆர்வம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை..! மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-bold-move-in-the-palani-temple-land-fraud-case-district-registrar-suspended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-bold-move-in-the-palani-temple-land-fraud-case-district-registrar-suspended#comments</comments><guid isPermaLink="false">ef9adda5-5b69-4b95-8e04-c1ac2dece234</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:19:57 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:19:57.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,பழனி,தமிழகம்,சஸ்பெண்ட்,suspend,மோசடி,நில மோசடி வழக்கு,Palani,Palani temple,நில மோசடி,பழனி கோவில்,Land fraud case,பத்திர பதிவு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0fwod3sh/palani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோவில், நில மோசடி, சஸ்பெண்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/0fwod3sh/palani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/palani-temple">பழனி கோவில்</a> தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர்கள் பெயருக்கு முறைகேடாக பதிவுசெய்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய, பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>விரிவான விசாரணை</h2><p>இந்தக்குழுவில் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர், உதவி பதிவுத்துறைத் தலைவர் மற்றும் ஒரு மாவட்டப் பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் பத்திரப்பதிவு நடைபெற்ற நாளில் பணியில் இருந்த சார்பதிவாளர், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை மேற்கொள்வார்கள்.</p><h2>சஸ்பெண்ட்</h2><p>முன்னதாக பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.</p><p>இந்த நிலையில், அதே விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மாவட்ட பதிவாளர் சசிகலாவையும் தமிழக பதிவுத்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>அடுத்தடுத்து நடவடிக்கைகள்</h2><p>பழனி கோவில் நில பதிவு முறைகேடு தொடர்பான புகாரில் நடைபெற்று வரும் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p>இந்த விவகாரத்தில் மேலும் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காதலுக்கு எதிர்ப்பு: ரெயில் தண்டவாளத்தில் படுத்து உயிரை மாய்த்த காதல் ஜோடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-couple-committed-suicide-by-lying-on-the-railway-tracks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-couple-committed-suicide-by-lying-on-the-railway-tracks#comments</comments><guid isPermaLink="false">fe430fb3-e5e0-4007-aa2d-879eb5f08597</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:03:12 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:03:12.678Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கிரைம் செய்திகள்,Love,காதல் ஜோடி,தர்மபுரி,Dharmapuri,Love couple,காதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sctjdi7b/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/sctjdi7b/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி,</p><p>தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆவலம்பட்டி பிரிவு சாலை எதிரில் சேலம்-சென்னை செல்லும் ரெயில் தண்டவாளத்தில் ஆண், பெண் உடல்கள் துண்டாகி சிதறி கிடப்பதாக மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த உடல்களை மீட்டு விசாரணை நடத்தினார்கள். </p><p>மேலும் உடல்கள் கிடந்த தண்டவாளத்தின் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வண்டி எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் காதல் ஜோடி ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.</p><h2>பிளஸ்-1 மாணவி</h2><p>தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தட்சிணா மூர்த்தி மகன் கன்சிராம் ராணா (வயது 19) என்பவர் காரிமங்கலம் பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த அரசு என்பவரின் மகள் அமுதபிரியா என்ற அறிவுஜோதி (16), அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவரும், மாணவியும் உறவினர்கள் என கூறப்படுகிறது.</p><p>இவர்கள் 2 பேரும் காதலித்து வந்ததாகவும், பள்ளியில் படிக்கிற வயதில் என்ன காதல் என்று அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் அந்த மாணவிக்கு அக்காள்கள் இருப்பதாகவும் அவர்களின் எதிர்காலம் கருதி சிறுமியான பிளஸ்-1 மாணவி படிக்க மட்டும் செய், காதல் எல்லாம் வேண்டாம் என்று பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.</p><h2>உறவினர்கள் கதறல்</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இருவரும் காணாமல் போனதும் தெரியவந்தது. பின்னர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. தண்டவாளத்தில் துண்டு, துண்டாக சிதறிக்கிடந்த 2 பேரின் உடல்களையும் கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை பதைபதைக்க வைத்தது.</p><p>காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் வீட்டு கதவை உடைத்து 17 சவரன் நகை கொள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-sovereigns-of-jewellery-stolen-after-breaking-down-house-door-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/17-sovereigns-of-jewellery-stolen-after-breaking-down-house-door-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">80d56a7d-4829-426b-9d3b-e39043e102d2</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:01:37 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:01:37.669Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,jewelry stolen,mysterious persons,மர்ம நபர்கள்,House,வீட்டின் கதவை உடைத்து,நகை கொள்ளை,போலீசார் வலைவீச்சு,door broken,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/euxzbvc3/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை கொள்ளை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/euxzbvc3/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகைளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>மருத்துவ பரிசோதனை</h2><p>தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கோல்டன் நகரை சேர்ந்தவர் ஆஷிக்தனசிங் (வயது 26). இவர் மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கர்ப்பிணியாக உள்ளதால், கடந்த 12-ந்தேதி மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். </p><h2>17 சவரன் நகை கொள்ளை</h2><p>சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஷிக்தனசிங் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">17 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை</a>யடித்து சென்றிருப்பது தெரியவந்தது.</p><h2>மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு</h2><p>இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம் - மத்திய அரசு ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-charges-for-digital-money-transactions-made-through-upi-central-government-advises</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-charges-for-digital-money-transactions-made-through-upi-central-government-advises#comments</comments><guid isPermaLink="false">369a918b-1a30-4ea2-a645-e7bd424d8e9c</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:58:09 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:58:09.892Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,யுபிஐ,UPI,கட்டணம்,Digital transaction,டிஜிட்டல் பண பரிவர்த்தனை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/cn55g66e/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/cn55g66e/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><h2>யு.பி.ஐ. சேவை</h2><p>இந்தியாவில் இன்று பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து வணிக நிறுவனங்களிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. தேசிய கொடுப்பணவு அமைப்பால் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யு.பி.ஐ. தொழில்நுட்பம், இன்று இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, 24 மணி நேரமும், ஒரே நொடியில் ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்குப் பணத்தை நேரடியாக அனுப்ப முடியும். உள்நாட்டை கடந்து சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் போன்ற பல நாடுகள் இந்தியாவின் இந்த யு.பி.ஐ. கட்டண முறையைத் தங்களின் நாடுகளிலும் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.</p><h2>புதிய கட்டணம்</h2><p>தற்போது இந்தியாவில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ. செயலிகள் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளுக்கு, 5 முதல் 7 அடிப்படை புள்ளிகள் வரை புதிய கட்டணம் வசூலிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளபடி, இந்த புதிய வணிகர் கட்டணம் 0.05 சதவீதம் முதல் 0.07 சதவீதம் வரை விதிக்கப்படவுள்ளது. உதாரணமாக, ஒரு கடையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வர்த்தகம் நடந்தால், அதற்கு அதிகபட்சமாக ரூ.5 முதல் ரூ.7 வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><h2>வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?</h2><p>இந்த புதிய கட்டண முறை சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது ஒரு தனிநபர் மற்றொரு தனிநபருக்கு அனுப்பும் பணப் பரிவர்த்தனைகளுக்கோ முற்றிலும் பொருந்தாது. இது கடைகளில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் நடக்கும் பெரியஅளவிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தற்போது இந்தியாவில் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பச் செலவுகளை வங்கிகளும், கூகுள் பே, போன்பே போன்ற நிறுவனங்களுமே ஏற்றுக்கொள்கின்றன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், வங்கிகளின் பராமரிப்புச் செலவுகளைச் சரி செய்யவும், இந்த மிகக் குறைந்த கட்டண முறையைக் கொண்டு வர நிதி அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆடி பிறப்பையொட்டி ஈரோட்டில் தேங்காய் சுடும் பண்டிகைக்காக அழிஞ்சி குச்சிகள் விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhinjic-sticks-sold-for-coconut-roasting-festival-in-erode-on-the-occasion-of-aadis-birth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhinjic-sticks-sold-for-coconut-roasting-festival-in-erode-on-the-occasion-of-aadis-birth#comments</comments><guid isPermaLink="false">428f8ff0-4d75-40f4-bf6a-cc455ef2e81e</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:51:43 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:51:43.716Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadi festival,ஆடி,Coconut,தேங்காய்,பிறப்பு,festival; பண்டிகை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/5gy926tx/51.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/5gy926tx/51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஆடி மாதம் இன்று பிறக்கிறது. இதையொட்டி தேங்காய் சுடும் பண்டிகைக்காக ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை நேற்று மும்முரமாக நடந்தது.</p><h2>ஆடி மாத பிறப்பு</h2><p>ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறப்பை வெகுசிறப்பாக கொண்டாடி வரவேற்பது வழக்கம். அன்று ஈரோட்டில் தேங்காய் சுடும் பண்டிகை பிரசித்தி பெற்றதாகும். அப்போது வீட்டு வாசலில் பெண்கள் தேங்காய்களை சுட்டு, அருகில் உள்ள கோவில்களுக்கு எடுத்துச்சென்று அதை விநாயகருக்கு படைத்து வழிபாடு நடத்துவது தனிச்சிறப்பு. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%20">ஆடி மாதம்</a> பிறக்கிறது. இதையொட்டி பெண்கள் வீட்டை சுத்தம் செய்து வருகின்றனர். இன்று மாலையில் தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.</p><h2>அழிஞ்சி குச்சி</h2><p>வீட்டு வாசலில் அல்லது கோவில்களின் முன்பு நெருப்பு மூட்டி தேங்காய் சுடுவார்கள். பின்னர் தேங்காயை எடுத்து விநாயகர் முன்பு வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்தவுடன் தேங்காயை உடைத்து, உள்ளே ஏற்கனவே வைக்கப்பட்ட பச்சரிசி, பருப்பு, வெல்லம் கலந்த உணவு பிரசாதமாக வழங்கப்படும். இதற்காக ஈரோடு சந்தை மற்றும் காய்கறி, மளிகை கடைகளில் அழிஞ்சி குச்சிகள் நேற்று காலையிலேயே குவிக்கப்பட்டன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்சென்றதால் அழிஞ்சி குச்சிகள் விற்பனை மும்முரமாக இருந்தது.</p><h2>மருத்துவ குணங்கள்</h2><p>இதுகுறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, 'சித்த மருத்துவத்திலும். ஆன்மிகத்திலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அழிஞ்சில் என்ற மரத்தில் இருந்து இந்த குச்சிகள் வெட்டப்படுகின்றன. அழிஞ்சில் மரத்தின் மருத்துவ குணங்கள் இந்த குச்சியின் மூலம் சுடப்படும் தேங்காயிலும் இறங்குவதால், ஆடி மாத சீதோஷ்ண மாற்றங்களால் ஏற்படும் நோய்களை தடுக்கும் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான அழிஞ்சி குச்சிகள் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தற்போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழிஞ்சி குச்சிகள் சங்ககிரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு ஒரு குச்சி ரூ.15 முதல் ரூ.17 வரையும், பொதுமக்களுக்கு ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது' என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>4 மாவட்டங்களுக்கு வெப்பஅலை எச்சரிக்கை: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பா..? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heatwave-warning-for-4-districts-chance-of-rain-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heatwave-warning-for-4-districts-chance-of-rain-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">ed363a1b-44ca-4515-91dc-119dcc8b0798</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:43:33 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:43:33.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,weather condition,Heat wave,வெப்ப அலை,Weather Status,வானிலை அறிவிப்பு,வானிலை முன்ன்றிவிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/yop893qj/ligam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/yop893qj/ligam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, <strong>இன்று (17-07-2026):</strong> மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>18-07-2026 மற்றும் 19-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>20-07-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>21-07-2026 மற்றும் 22-07-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>17-07-2026 முதல் 20-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>17-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><strong>18-07-2026 முதல் 20-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p> <p><strong>17-07-2026:</strong> அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் (Hot and Humid) இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.</p><h2>4 மாவட்டங்களில் வெப்ப அலை</h2><p><strong>17-07-2026:</strong> கரூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று  (17-07-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. </p><p>அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மதியம்/மாலை நேரங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் இன்று மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-today-4</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-today-4#comments</comments><guid isPermaLink="false">4f938313-f538-4226-8fb6-c70006baa736</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:29:28 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:29:28.655Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/nrqdqj7f/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/nrqdqj7f/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி அய்யனார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அய்யனார் துணை மின் நிலையத்தில் இன்று (17.7.2026, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><h2>காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை</h2><p>இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர், ஹவுசிங்போர்டு, குமரன்நகர், காமராஜ்நகர், டேவிஸ்புரம், சாகிர்உசேன்நகர், சுனாமிநகர், நேரு காலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம், T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம்.</p><p>மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், பனையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், ஆனந்தமாடன்பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம் மற்றும் ராமர்விளை ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கெலவரப்பள்ளி அணையில் 2 மாதங்களாக நுரை பொங்கி செல்லும் தண்ணீர்; விவசாயிகள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-in-kelavarapalli-dam-has-been-foaming-for-2-months-farmers-are-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-in-kelavarapalli-dam-has-been-foaming-for-2-months-farmers-are-shocked#comments</comments><guid isPermaLink="false">e88154ca-3d89-4ff4-ab9b-da7d609633dd</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:26:36 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:26:36.864Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Hosur,Dam,ரசாயன நுரை,கெலவரப்பள்ளி அணை,விவசாயிகள் அதிர்ச்சி,water; தண்ணீர்,foaming</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/m2023mdl/kelavarapalli-dam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/m2023mdl/kelavarapalli-dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஒசூர், </p><p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மாற்றம் இன்றி வினாடிக்கு 1,057 கனஅடி நீர்வரத்து காணப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவு தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">கெலவரப்பள்ளி அணையின்</a> உச்ச நீர்மட்டமான 44.28 அடியில், தற்போதைய நீர்மட்டம் 42.15 அடியாக உள்ளது. </p><h2>விவசாயிகள் அதிர்ச்சி</h2><p>இந்த நிலையில், மழை இல்லாத இக்காலங்களிலும் அதிகளவிலான ரசாயன கலவைகளுடன் குவியல், குவியலாக நுரை பொங்க நீர் செல்வதால் அணை முன்பகுதியில் நுரைமண்டலமாக மட்டுமே காட்சியளிக்கிறது. நுரைகள் காற்றில் பறந்துசென்று அப்பகுதியில் ஆங்காங்கே விழுகின்றன. மழைக்காலங்களில் ஆற்றில் நுரைபொங்கி செல்வது வழக்கம் என்றாலும், மழை இல்லாதபோ தும் ஆற்றில் தொடர்ந்து 2 மாதங்களாக நுரை பொங்கி செல்வது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாடு பயணம்: அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/foreign-travel-central-government-issues-notice-to-ministers-keerthana-and-rajmohan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/foreign-travel-central-government-issues-notice-to-ministers-keerthana-and-rajmohan#comments</comments><guid isPermaLink="false">8206d084-efc8-4aad-940c-4bc6930c2d90</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:22:22 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:22:22.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central Government,வெளிநாடு பயணம்,Foreign Travel,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana,Minister Rajmohan,அமைச்சர் ராஜ்மோகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/7cnleebv/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/7cnleebv/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வெளிநாடு பயணம் தொடர்பாக அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.</p><h2>வெளிநாடு பயணம்</h2><p>தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளி கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகிய இருவரும் சமீபத்தில் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளனர். இவர்களுடன் துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தனி உதவியாளர்களும் சென்று வந்தனர்.</p><h2>விதிமுறை மீறல்</h2><p>அரசு முறை பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த ஒட்டு மொத்தப் பயணமும் இப்போது ஒரு மிகப்பெரிய சட்ட சிக்கலில் வந்து முடிந்துள்ளது. பொதுவாக, ஒரு மாநிலத்தின் அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதியை பெற வேண்டும் என்பது கட்டாய விதியாகும்.</p><p>இத்தகைய பயணங்களின் போது அவர்கள் 'டிப்ளமேடிக் பாஸ்போர்ட்' மூலமாகவே பயணிக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் 2 அமைச்சர்களுமே மத்திய அரசின் எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, 'டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல், தங்களுடைய சொந்த பாஸ்போர்ட் மூலமாக வெளிநாடு சென்று வந்துள்ளனர். இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்றும், நாட்டின் விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.</p><h2>நோட்டீஸ்</h2><p>மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் விளக்க நோட் டீஸ் ('ஷோ காஸ்') இந்த விதிமீறலை கடுமையான குற்றச் சாட்டாக கையில் எடுத்துள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ('ஷோ காஸ்') நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் எப்படி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது கடமையை சரியாகச் செய்யவில்லை என்றும், அரசை முறையாக அவர்கள் வழிநடத்த தவறிவிட்டனர் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டம்: தமிழ்நாட்டில் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-phase-of-the-census-housing-enumeration-work-begins-in-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/first-phase-of-the-census-housing-enumeration-work-begins-in-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">c2600041-5b05-4009-a104-2adfd6875f72</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:14:17 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:14:17.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,இந்தியா,India,தமிழகம்,Online,ஆன்லைன்,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census,Census data,மத்திய அரசு,Central Govt,Tamilnadu ​,டிஜிட்டல் முறை,Digital</media:keywords><media:content height="506" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/vdlqt7ch/cesnu.jpg" width="900"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள் தொகை கணக்கெடுப்பு, Census]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/vdlqt7ch/cesnu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகை கணக்கெடுப்</a>பில் முதல் கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.</p><h2>மக்கள்தொகை கணக்கெடுப்பு</h2><p>இந்தியாவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகை கணக்கெடுப்பு</a> 1872-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்து, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், நாட்டின் 16-வது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகை கணக்கெடுப்பு</a>, சுதந்திரத்திற்கு பிறகு நடத்தப்படும் 8-வது கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது.</p><h2>தமிழ்நாட்டில் இன்று தொடக்கம் </h2><p>தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த அறிவிப்பை தங்களது அரசிதழில் மறுவெளியீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. </p><p>அதன்பின்னர், இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இந்தியா முழுவதும் நிர்வாக எல்லைகள் இறுதி செய்யப்பட்டன. முதற்கட்டமாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்தப் பணிகள் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் முதல் கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சுய கணக்கெடுப்பான இதில் ஆன்லைன் மூலம் தரவுகளை பதிவு செய்யலாம். இந்த சுய கணக்கெடுப்பு பணி இம்மாதம் (ஜூலை) 31-ந் தேதி வரை நடக்கிறது.</p><h2>33 கேள்விகள் கேட்கப்படும்  </h2><p>தொடர்ந்து, ஆகஸ்டு 1-ந் தேதி முதல் வீடு வீடாகச் வீடு கட்டமைப்பு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு பணியின்போது, 33 கேள்விகள் கேட்கப்படும். இந்த தரவுகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படும். ஆகஸ்டு 30-ந் தேதி இந்தப் பணிகள் நிறைவடையும். </p><p>தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்க இருக்கிறது. அது முடிவடைந்த பிறகு, ஏப்ரல் மாதம் இறுதியில் அதன் முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>33 கேள்விகள் என்னென்ன..?</h2><p>முழுவிவரம் காண்க;</p> <aside><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-33-questions-asked-during-the-census-in-tamil-nadu-full-details">தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள் என்னென்ன..? முழு விவரம்</a></aside><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/dl6za6bu/kanm.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>சிவகங்கையில் சோகம்: விஷ ஊசி செலுத்தி பெண் டாக்டர் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-sivaganga-female-doctor-commits-suicide-by-injecting-poison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-in-sivaganga-female-doctor-commits-suicide-by-injecting-poison#comments</comments><guid isPermaLink="false">18565200-7b7c-4931-a37c-dee17ea36bde</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:06:38 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:06:38.764Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>female doctor,சிவகங்கை,Sivagangai,Suicide,பெண் டாக்டர் தற்கொலை,விஷ ஊசி போட்டு,Poison injection</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6w6k1w5n/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை செய்துகொண்ட பெண் டாக்டர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/6w6k1w5n/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா பகுதியில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விஷ ஊசி செலுத்தி பெண் டாக்டர் தற்கொலை</a> செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. </p><h2>7.5 சதவீத இடஒதுக்கீட்டில் படித்தவர்</h2><p>சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே உள்ள கணபதிபட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையா, விவசாயி. இவருடைய மகள் சின்னநம்பி (வயது 25). இவர் 2020-ம் ஆண்டு அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். கடந்த மாதம் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். </p><h2>குடும்ப பிரச்சினை</h2><p>படித்து கொண்டு இருந்தபோது இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த தாய்மாமன் மகனான இளையராஜாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இளையராஜாவும் சென்னையில் வேலைபார்த்து வந்தார். சென்னையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.</p><h2>பரிதாப சாவு</h2><p>இந்த நிலையில் பெண் டாக்டர் சின்னநம்பி, கணபதிபட்டியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார். நேற்று மதியம் ஒரு அறையில் தூங்குவதாக கூறி சென்றுள்ளார். மாலை வரை அவர் எழுந்து வராததால் சின்னையா அவரை எழுப்பி உள்ளார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. மேலும் அவரது அருகில் ஊசி மற்றும் சில மாத்திரைகள் கிடந்தன. இதையடுத்து சின்னையா தனது மகளை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் சின்னநம்பி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.</p><h2>விஷ ஊசி செலுத்தி தற்கொலை</h2><p>தகவல் அறிந்து வந்த புழுதிபட்டி போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், குடும்ப பிரச்சினை காரணமாக விஷ ஊசி செலுத்தியும், மாத்திரைகளை தின்றும் சின்னநம்பி தற்கொலை செய்திருக்கலாம் என கருதுகிறோம். முழுமையான விசாரணைக்கு பின்னரே அதுபற்றி விரிவாக கூற முடியும்" என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்வதற்கு கட்டுப்பாடு - விண்வெளித்துறை அவசர நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-scientists-to-resign-space-ministry-takes-urgent-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-scientists-to-resign-space-ministry-takes-urgent-action#comments</comments><guid isPermaLink="false">986386b1-92f9-48cc-acb7-b9366dff0117</guid><pubDate>Fri, 17 Jul 2026 01:03:48 +0000</pubDate><atom:updated>2026-07-17T01:03:48.907Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விண்வெளித்துறை,இஸ்ரோ,ISRO,ராஜினாமா,Resign,விஞ்ஞானிகள்,scientist</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/c4zsiqug/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/c4zsiqug/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>விஞ்ஞானிகள் ராஜினாமா</h2><p>கடந்த சில மாதங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சுமார் 100 முதல் 120 பேர் வரை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக இந்தியாவின் தற்போதைய சந்திரயான்-3, ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களில் பணியாற்றிய சில மூத்த விஞ்ஞானிகளும் ராஜினாமா செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்வதில் சில கட்டுப்பாடுகளை விதித்து அதனை அவசர நடவடிக்கையாக விண்வெளித்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.</p><h2>விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது</h2><p>அதில் ககன்யான் மற்றும் நாட்டின் பிற முக்கிய விண்வெளி திட்டங்களில் பணியாற்றும் 'குரூப் ஏ' அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு விண்ணப்பங்களை இனி வழக்கமான ஒன்றாக கருதி உடனடியாக ஏற்றுக்கொள்ள கூடாது. அதனை கடுமையான பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.</p><p>முக்கியத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், தங்களது பொறுப்பில் உள்ள திட்டங்கள் அல்லது பணிகள் முழுமையாக முடிவடையும் வரை பணியில் நீடிக்கவேண்டும். அதுவரை அவர்களது ராஜினாமா விண்ணப்பங்களை மைய இயக்குனர்கள் அங்கீகரிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு முன்பு 2020 நவம்பர் 25-ந்தேதியன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, 'குரூப் ஏ' அதிகாரிகளின் ராஜினாமாவை அந்தந்த இஸ்ரோ மையங்களின் இயக்குனர்களே நேரடியாக ஏற்று ஒப்புதல் அளிக்க அதிகாரம் இருந்தது. புதிய சுற்றறிக்கை அதனை ரத்து செய்து, விண்ணப்பங்களை இயக்குனர்களின் பரிந்துரைகளுடன் டெல்லியில் உள்ள விண்வெளித்துறையின் (டி.ஓ.எஸ்.) இறுதி முடிவுக்காக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.</p><h2>இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்</h2><p>இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் தனியார் விண்வெளி நிறுவனங்களின் ஈர்ப்பால் பணியில் இருந்து விலகுவதாக கூறப்படும் நிலையில், இந்த சுற்றறிக்கை மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களுக்குப் பிடித்த நேரத்தில் உடனே பணியைவிட்டு வெளியேற முடியாதபடி, இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை இஸ்ரோவிடமிருந்து விண்வெளித்துறை (அரசாங்கம்) நேரடியாக தன் கைக்கு மாற்றியிருக்கிறது.</p><p>இஸ்ரோ உலக நாடுகளுக்குப் போட்டியாக விண்வெளிப் பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்துவரும் சூழலில், அதன் தொழில்நுட்பமும், விஞ்ஞானிகளும் உலக அளவில் மதிக்கப்படுகிறார்கள். அந்த அரிய மனிதவளத்தைக் காப்பதற்காகவே அரசாங்கம் தற்போது இந்த புதிய கட்டுப்பாட்டு விதியை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில விவகாரம்: பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக்குழு அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-issue-registration-department-forms-3-member-high-level-inquiry-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-issue-registration-department-forms-3-member-high-level-inquiry-committee#comments</comments><guid isPermaLink="false">efe69531-90c6-4078-b09e-a6c4daad4d34</guid><pubDate>Fri, 17 Jul 2026 00:56:51 +0000</pubDate><atom:updated>2026-07-17T00:56:51.457Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Registration department,பதிவுத்துறை,Palani temple,பழனி கோவில்,Inquiry Committee,விசாரணைக்குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/nt3ta0hw/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-17/nt3ta0hw/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழனி கோவில் தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர்கள் பெயருக்கு முறைகேடாக பதிவுசெய்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய, பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசார ணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.</p><p>இந்தக்குழுவில் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர், உதவி பதிவுத்துறைத் தலைவர் மற்றும் ஒரு மாவட்டப் பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் பத்திரப்பதிவு நடைபெற்ற நாளில் பணியில் இருந்த சார்பதிவாளர், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை மேற்கொள்வார்கள். </p><p>மேலும், பத்திரப்பதிவு நடந்த நாளில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்ய இருக்கின்றனர். இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-6#comments</comments><guid isPermaLink="false">c4e3e85a-358d-4c58-8c7d-e90951865f13</guid><pubDate>Thu, 16 Jul 2026 21:37:23 +0000</pubDate><atom:updated>2026-07-16T21:37:23.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/o4iokbae/min.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/o4iokbae/min.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 17.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>பெசன்ட் நகர்:</strong> சாஸ்திரி நகர் காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெருக்கள் வரை, பிள்ளையார் கோயில் தெரு , முத்துலட்சுமி தெரு.</p><p><strong>ஆவடி:</strong> முருகப்பா <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாலிடெக்னிக் </a>கல்லூரி, செக் போஸ்ட், என்.எம். சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம் மேட்டூர், கன்னிகாபுரம், நேரு பஜார் , கஸ்தூரிபாய் நகர்.</p><p><strong>புழல்:</strong> சூரப்பட்டு, புழல், ரெட்ஹில்ஸ் மார்க்கெட் சாலை, காவாங்கரை, சண்முகபுரம், கதிர்வேடு, புத்தகரம், மெட்ரோவாட்டர், புழல் சிறை I, II மற்றும் III.</p><p><strong>தரமணி:</strong> இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 3வது மற்றும் 4வது பிரதான சாலை, 3வது குறுக்குத் தெரு, கேனால் வங்கி சாலை, நேரு நகர் 2 வது முதல் 4 வது பிரதான சாலை வரை, தனலட்சுமி அவென்யூ 1வது முதல் 4 வது தெரு வரை.</p><p><strong>பெசன்ட் நகர்:</strong> 1 வது பிரதான சாலை மற்றும் 1 வது அவென்யூ, பீச் ஹோம் அவென்யூ, தாமோதரபுரம் நியூ தெரு.</p><p><strong>பல்லாவரம்:</strong> டிடிகே கம்பெனி, சாவடி தெரு, ஐ.எச்.எப்.டி. பிளாட்ஸ், ஜி.எஸ்.டி. சாலை பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் பாண்ட்ஸ் பாலம் வரை, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அருந்ததிபுரம்</a>, வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐ.ஜி. சாலை சிக்னல், ரங்கநாதன் சுரங்கப்பாதை அம்பேத்கர் சிலை, கனரா வங்கி.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறை கொலை வழக்கு: அரசு வேலை, நிவாரணத்தை ஏற்க மறுத்த சபரிவர்மனின் குடும்பத்தினர்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prison-murder-case-sabarivarmans-family-refuses-government-job-and-compensation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prison-murder-case-sabarivarmans-family-refuses-government-job-and-compensation#comments</comments><guid isPermaLink="false">4cd1f76a-f5a1-4470-81fe-8bfb9075d6e0</guid><pubDate>Thu, 16 Jul 2026 20:54:20 +0000</pubDate><atom:updated>2026-07-16T20:54:20.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Nagercoil,நாகர்கோவில்,Kanyakumari,சிறை,கைதிகள்,prisoners,அடித்துக் கொலை,Prison,வியாபாரி,beaten to death,8 பேர் கைது,8 people arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/aq59v1w1/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/aq59v1w1/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில் ,</p><p>சிறையில் கொல்லப்பட்ட சபரிவர்மனின் மனைவி அரசு வேலை, நிவாரணத்தை ஏற்க மறுத்ததால், ஆறுதல் கூறி விட்டு அமைச்சர்கள் திரும்பினர்.</p><h2>சிறையில் கொலை</h2><p>நாகர்கோவில் சிறையில் வியாபாரியான சபரிவர்மன் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 சிறை வார்டன்கள், 8 கைதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை, குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக பணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை உறவினர்கள் வலியுறுத்தினர். அதனை நிறைவேற்றும் வரை சபரிவர்மனின் உடலை வாங்க மாட்டோம் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர்.</p><h2>அரசு வேலையை ஏற்க மறுப்பு</h2><p>இந்தநிலையில் நேற்று இரவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் கலெக்டர் பிரதாப், போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் சபரிவர்மன் வீட்டுக்கு நேரில் சென்று அவருடைய மனைவி ஆனந்தவல்லி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.</p><p>அப்போது அரசு வேலை, ரூ.10 <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">லட்சத்துக்கான </a>நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும் சபரிவர்மனின் உடலை வாங்க வேண்டும் என்றனர். ஆனால் அதற்கு சபரிவர்மனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்தனர். அதாவது பிரேத பரிசோதனைக்கான வீடியோ காட்சிகளை எங்களுக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம் காண்பித்து பிரேத பரிசோதனை பற்றிய சந்தேகத்தை தீர்த்து கொள்வோம். அதுவரை அரசு வேலை, நிவாரணத்தை ஏற்க மாட்டோம் என்றனர். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் அங்கிருந்து சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காவல் நிலையங்களும், சிறைகளும் உயிர்ப் பறிக்கும் இடங்களாக மாறுகிறதா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-police-stations-and-prisons-turning-into-places-that-claim-lives-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/are-police-stations-and-prisons-turning-into-places-that-claim-lives-velmurugan#comments</comments><guid isPermaLink="false">a241cde0-e049-4e9c-96ce-7f4820caa082</guid><pubDate>Thu, 16 Jul 2026 19:32:14 +0000</pubDate><atom:updated>2026-07-16T19:32:14.646Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/0f5xk388/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/0f5xk388/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>சென்னையை அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்ததாகக் கூறி அண்மையில் மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  </p><p>தற்போது, சிறையில் இருந்த பாலாஜி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜியின் உறவினர்கள், சிறைக் காவலர்கள் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், சிறை நிர்வாகம் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.  </p><h2>கேள்விகள்  முன்வைப்பு</h2><p>இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி சில <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கேள்விகளை </a>முன் வைக்க விரும்புகிறது.</p><p>கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே, நீதிமன்றக் காவலில் இருந்த ஒருவர் எவ்வாறு உயிரிழந்தார்?  </p><p>பாலாஜியின் உடலில் காயங்கள் இருந்தனவா? இருந்தால் அவை எவ்வாறு ஏற்பட்டன?</p><p>அவர் இருந்த சிறைப்பிரிவின் சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா? அவை நீதிமன்றத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுமா?  </p><p>கைது செய்த காவல்துறை, சிறை நிர்வாகம் மற்றும் மருத்துவப் பதிவுகள் அனைத்தும் வெளிப்படையாக ஆய்வு செய்யப்படுமா?</p><p>இந்த மரணம் குறித்து நீதித்துறை கண்காணிப்பில் சுயாதீன விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடுமா?</p><p>ஒருவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம். நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் வரை, அவர் ஒரு விசாரணைக் கைதிதான். அந்த நபரின் உயிருக்கு முழுப் பொறுப்பு, அரசுக்கும் சிறை நிர்வாகத்திற்குமே உள்ளது.  </p><h2>உரிய நடவடிக்கை வேண்டும்</h2><p>எனவே, உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது சுயாதீன அமைப்பின் கண்காணிப்பில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.</p><p>பிரேதப் பரிசோதனை அறிக்கை, சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.</p><p>விசாரணை முடியும் வரை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சம்பந்தப்பட்ட </a>அதிகாரிகள் மீது உரிய நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது சட்டத்தின் முன் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, தமிழ்நாடு அரசு, இது போன்ற சிறைக்காவல் மரணங்கள் அல்லது அரசின் அலட்சியத்தால் ஏற்படும் மரணங்களுக்கு, 50 லட்சம் அல்லது ஒரு கோடி ரூபாய் வரையிலான தொகையை நிர்ணயித்து வழங்க வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? - வானதி சீனிவாசன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-no-safety-for-women-even-in-the-chief-ministers-own-constituency-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-no-safety-for-women-even-in-the-chief-ministers-own-constituency-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">f5d54f67-deba-4962-8813-14ffb40ce23e</guid><pubDate>Thu, 16 Jul 2026 18:08:27 +0000</pubDate><atom:updated>2026-07-16T18:08:27.766Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/nhn6235n/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/nhn6235n/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பாதுகாப்பு இல்லை</h2><p>சென்னை பெரம்பூரில் இளம்பெண் ஒருவர் தனது முன்னாள் ஆண் நண்பர் மற்றும் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த மாதமும் இதேபோல் பெரம்பூரில் இளம்பெண் ஒருவரை முன்னாள் ஆண் நண்பர் வீடு புகுந்து தாக்கியதாகச் செய்திகள் வந்தது.</p><p>மேடைகள் தோறும் பெண்களை அக்கா, தங்கை, தோழி என உணர்வுப்பூர்வமாகப் பேசும் முதல்-அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலில் தமிழகப் பெண்களுக்கு முதல்-அமைச்சர் எப்படி பாதுகாப்புத் தரப் போகிறார் என்ற கேள்வி ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் எழுந்துள்ளது.</p><h2>எதற்கு தனி சிறப்புப்படை?</h2><p>சீரும் சிங்கங்களாய் ஏதோ பெரிய மாற்றம் கொண்டு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்ட சிங்கப் பெண் அதிரடிப் படை தற்போது சோர்ந்து வழக்கம்போல் மகளிர் காவல் நிலையங்களாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செயல்படுவதற்கு </a>எதற்கு தனி சிறப்புப்படை?</p><p>எனவே பெண்களை காதல் என்ற பெயரில் அத்துமீறும் ஆண்களிடமிருந்து காக்கும் வகையில் சிங்கப் பெண் படையை முடுக்கி விட்டு இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-group-1-main-exam-date-changed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-group-1-main-exam-date-changed#comments</comments><guid isPermaLink="false">b132ef10-f139-4092-8c5e-09ffce3b55a5</guid><pubDate>Thu, 16 Jul 2026 17:32:32 +0000</pubDate><atom:updated>2026-07-16T17:32:32.785Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,TNPSC exam,டி.என்.பி.எஸ்.சி.,டி.என்.பி.எஸ்.சி. தேர்வு,குரூப்-1 முதல்நிலைத் தேர்வு,டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு,TNPSC Group-1 Exam,டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு,குரூப்-1 தேர்வு,டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு,TNPSC Announcement,TNPSC Group 1</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/vvbfvn5y/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/vvbfvn5y/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>26 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கு கடந்த 30-ந்தேதி முதல் ஜூலை 29-ந்தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><h2>தேர்வு தேதி மாற்றம்</h2><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு உயர் பதவிகளுக்கான குரூப்-1 (Group 1 Main Exam) முதன்மைத் தேர்வு நடத்தப்படும் தேதிகளில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>முன்னதாக, செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  அத்தேர்வானது 27.09.2026 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 23.06.2026 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (தொகுதி I பணிகள்) அறிவிக்கையில் முதல்நிலைத் தேர்வானது 06.09.2026 மு.ப. நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது 27.09.2026 மு.ப. அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியானது!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-re-exam-results-released</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neet-re-exam-results-released#comments</comments><guid isPermaLink="false">c37ab8ac-4e28-41be-b3f7-c6fbda14cd76</guid><pubDate>Thu, 16 Jul 2026 17:09:27 +0000</pubDate><atom:updated>2026-07-16T17:09:27.641Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,NEET Exam,NEET,நீட்,நீட் மறு தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/qot920ve/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/qot920ve/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாக இணையத்தில் பரவிய வினாத்தாள், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வித் தாளுடன் ஒத்துப் போவதாக சர்ச்சை வெடித்தது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து, நீட்மறுதேர்வு  கடந்த ஜூன் 21ம் தேதி நாடு முழுவதும் 550 நகரங்களில் உள்ள 5400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 22.79 லட்சம் மாணாக்காரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தோராயமாக 20 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.</p><p>நீட் மறு தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நீட் மறு தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.  இதில் பஞ்சாப்பைச் சேர்ந்த ஆர்யன் குப்தா 715 மதிப்பெண்களும், அரியானாவைச் சேர்ந்த பான்ஷுல் பன்சால் 715 மதிப்பெண்களும் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். </p><p>மேலும், 138 மாணவர்கள் 690க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனை தவிர, நீட் மறுதேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மாணவிகளில் 56.8 சதவீதத்தினரும், மாணவர்களில் 55.1 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பழைய மாமல்லபுரம் சாலையில் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணி நிறைவு - சென்னை மெட்ரோ நிறுவனம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-installing-foundation-pillars-on-old-mahabalipuram-road-completed-chennai-metro-rail-limited-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/work-on-installing-foundation-pillars-on-old-mahabalipuram-road-completed-chennai-metro-rail-limited-announces#comments</comments><guid isPermaLink="false">0a393e2d-74df-432d-a174-03f0b391fb3c</guid><pubDate>Thu, 16 Jul 2026 16:30:55 +0000</pubDate><atom:updated>2026-07-16T16:30:55.519Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை மெட்ரோ,chennai metro</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/hsuxkk61/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/hsuxkk61/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தின் 3-வது வழித்தடத்தில் கட்டுமான பணியில் 2 முக்கிய மைல்கல்கள் எட்டப்பட்டுள்ளன. இப்பணியில், பழைய மாமல்லபுரம் சாலையில் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரை மொத்தம் 3,066 அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும், மொத்தம் 582 முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட யூ-வடிவ கான்கிரீட் தூண் விட்டங்கள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.</p><p>தற்போது அனைத்து அஸ்திவார தூண்கள் பணிகளும், யு-கார்டர் தயாரிப்பு பணிகளும் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இது சென்னை மெட்ரோ 2-ம் கட்டிடத்தின் 3-வது வழித்தட பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க உதவும் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இதன் மூலம் பழைய மாமல்லபுரம் சாலையில் பாதுகாப்பான போக்குவரத்து சேவை விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>
விராலிமலை இடைத்தேர்தலில் துரோகிகளை வெற்றிபெற விடக்கூடாது- எடப்பாடி பழனிசாமி  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traitors-must-not-be-allowed-to-win-the-viralimalai-by-election-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traitors-must-not-be-allowed-to-win-the-viralimalai-by-election-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">bc3f9f54-9f25-4d47-b08b-478eb93bdd88</guid><pubDate>Thu, 16 Jul 2026 16:19:18 +0000</pubDate><atom:updated>2026-07-16T16:19:18.291Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,இடைத்தேர்தல்,விராலிமலை,Viralimalai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/l0epfu11/Edappadi-palanisami.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி  ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/l0epfu11/Edappadi-palanisami.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து  ஆலோசனை நடத்தி வருகிறர். அந்த வகையில் இன்று புதுக்கோடையை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது; </p><h2> துரோகிகள்</h2><p>தங்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சியான த.வெ.க. பக்கம் சென்றுள்ள துரோகிகள் பற்றி கவலைப்பட வேண்டாம். உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக களப்பணியாற்றுங்கள். கட்சிக்கு விசுவாசம் மிக்க இளைஞர்கள், பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். </p><h2>விராலிமலை தொகுதி</h2><p>அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அ.தி.மு.க.வின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். விராலிமலை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற டாக்டர் சி.விஜயபாஸ்கர் கட்சிக்கு துரோகம் இளைத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துள்ளார். விராலிமலை தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற வேண்டும். துரோகிகளை வெற்றிபெற விடக்கூடாது. எனவே, ஒரு நல்ல வேட்பாளரை நீங்களே தேர்வு செய்துவிட்டு வாருங்கள் என்று தெரிவித்து உள்ளார்</p>]]></content:encoded></item><item><title>ரெயில்வே கேட் பகுதியில் நடு வழியில் நின்ற பாமணி ரெயில்: வாகன ஓட்டிகள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bamani-train-stalls-midway-at-railway-crossing-motorists-face-inconvenience</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bamani-train-stalls-midway-at-railway-crossing-motorists-face-inconvenience#comments</comments><guid isPermaLink="false">dd0df660-a67e-439d-9240-fad51e9d9566</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:55:37 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:55:37.118Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,train,ரெயில்,Tiruvannamalai,ரெயில்வே கேட்,Railway Crossing</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/nuo8rx20/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/nuo8rx20/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை, </p> <p>மன்னார்குடியில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி சென்ற பாமணி ரெயில், ரெயில்வே கேட் பகுதியில் நடுவழியில் நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.</p><h2>நடுவழியில் நின்ற ரெயில்</h2><p>மன்னார்குடியில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி நோக்கி சென்ற பாமணி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 11 மணியளவில் திருவண்ணாமலையில், அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட் வழியாக சென்றது. இதையொட்டி ரெயில்வே கேட் இருபுறமும் சாலை இரும்பு தடுப்பால் மூடப்பட்டது.</p><p>அவலூர்பேட்டை சாலை ரெயில்வே கேட் வழியாக சென்ற ரெயில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதைய டுத்து ரெயில்வே துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு தொழில் நுட்பக் கோளாறை உடனடியாக சரி செய்தனர்.</p><h2>வாகன ஓட்டிகள் அவதி</h2><p>பின்னர் சுமார் 15 நிமிடம் காலதாமதமாக அந்த இடத்தில் இருந்து பாமணி ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் நின்றதால் ரெயில்வே கேட் அருகே வாகன ஓட்டிகள் அணிவகுத்து நின்ற னர். அவர்கள் அங்கிருந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ரெயில் அங்கிருந்து சென்ற பின்னர் கேட் திறக்கப்பட்டதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு - அமைச்சர் என்.ஆனந்த் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-election-victory-high-court-orders-minister-n-anand-to-respond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-election-victory-high-court-orders-minister-n-anand-to-respond#comments</comments><guid isPermaLink="false">df48542d-4911-45b7-ab6f-9366fdab5524</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:46:45 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:46:45.030Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,Chennai High Court,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/fnc2ipvm/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/fnc2ipvm/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற தேர்தலில் சென்னை தி.நகர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட என்.ஆனந்த், அ.தி.மு.க. வேட்பாளர் தி.நகர் சத்யாவை 13,200 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அந்த தொகுதி வாக்காளர் பாலசுப்பிரமணிய சர்மா என்பவர் ஒரு தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். </p><p>இதே போல், ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனோஜ் பாண்டியனின் வெற்றியை எதிர்த்து, அந்த தொகுதியை சேர்ந்த த.வெ.க. வேட்பாளர் விபின் சக்கரவர்த்தி, வாக்காளர்கள் இசக்கி ராஜா மற்றும் பத்மநாதன் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளில் சில குறைபாடுகள் இருந்ததால் அதை சரி செய்வதற்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவகாசம் வழங்கியிருந்தார். </p><p>இதற்கிடையில், மானாமதுரை தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளங்கோவனின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் தமிழரசி ஒரு தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இவ்வாறாக மொத்தம் 5 தேர்தல் வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. </p><p>இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, இந்த தேர்தல் வழக்குகள் தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் என்.ஆனந்த், தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய தரப்புகளுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். </p>]]></content:encoded></item><item><title>குழந்தைகள் பாதுகாப்பு சேவை பணியாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/child-protection-service-workers-should-be-paid-their-arrears-immediately-udhayanidhi-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/child-protection-service-workers-should-be-paid-their-arrears-immediately-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">d8f73277-f551-4975-a470-9d57fa58959e</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:39:47 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:39:47.857Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Worker,பணியாளர்கள்,குழந்தைகள்,சேவை,Child Protection</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/em4nuch0/uthayanithistalin-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/em4nuch0/uthayanithistalin-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>குழந்தைகள் நலனுக்கான(Childline)  (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஊதியம் இல்லாத நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு சேவை பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். </p><h2>குழந்தைகள் பாதுகாப்பு சேவை</h2><p>இன்னும் சிலர் இந்த பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம்.</p><p>எனவே <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">குழந்தைகள் பாதுகாப்பு சேவை</a> பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையை தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-plans-must-be-formulated-to-prevent-crimes-against-children-kanimozhi-mp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/action-plans-must-be-formulated-to-prevent-crimes-against-children-kanimozhi-mp#comments</comments><guid isPermaLink="false">bc811f1e-9440-4cf2-83a2-a7c6caeeb525</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:38:06 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:38:06.288Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,Kanimozhi MP,children,குழந்தைகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/w7wuprj6/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/w7wuprj6/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”கோவை -  தொண்டாமுத்தூர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரால் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு, இந்த தவெக அரசு போதிய செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். ஒருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்கதையாக உள்ள சூழலில், குழந்தைகள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவுள்ளது.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை வேளச்சேரி-பள்ளிக்கரணை சாலையில் பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-as-school-bus-catches-fire-on-the-velachery-pallikaranai-road-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/commotion-as-school-bus-catches-fire-on-the-velachery-pallikaranai-road-in-chennai#comments</comments><guid isPermaLink="false">0417ac5c-b622-4210-ad9b-d79588d4e60d</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:25:47 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:25:47.583Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,bus,Fire,பேருந்து,தீ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/i7xlxdzc/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/i7xlxdzc/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் மாணவர்களை பள்ளி பேருந்தில் ஏற்றி அவர்களது வீடுகளில் இறக்கிவிட்டு, மீண்டும் அந்த பேருந்தை பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக வேளச்சேரி-பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தார். </p> <p>அப்போது திடீரென பேருந்தின் முன்பக்கத்தில் புகை வந்தததால் உடனடியாக அவர் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதையடுத்து ஒரு சில வினாடிகளில் பேருந்து தீப்பற்றி எரியத்தொடங்கியது. பேருந்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். </p> <p>இருப்பினும் இந்த சம்பவத்தில் வாகனம் முழுவதுமாக தீயில் எரிந்து சேதமடைந்தது. அதே சமயம், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மின்சார கசிவினால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் சுமார் ஒன்றரை மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>ஈரோடு-திருச்செந்தூர் இடையே புதிய ரெயில் சேவை தேவை: விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-for-new-train-service-between-erode-and-tiruchendur-farmers-protection-association</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-for-new-train-service-between-erode-and-tiruchendur-farmers-protection-association#comments</comments><guid isPermaLink="false">987d4681-ac3c-4367-ba4c-c3f55de5f3c8</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:20:26 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:20:26.204Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,ரெயில் சேவை,train service,Erode,ஈரோடு,Tiruchendur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/da4rdxhw/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/da4rdxhw/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் குப்புசாமி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் இணை மந்திரி எல்.முருகனுக்கு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-</p><p>ஈரோடு-திருச்செந்தூர் புதிய விரைவு ரெயிலை திருப்பூர், கோவை, கிணத் துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை வழியாக இயக்க வேண்டும். இந்த புதிய ரெயில் சேவை மூலம் மேற்கு மற்றும் தென் தமிழ்நாட்டிற்கு இடையே நேரடி ரெயில் இணைப்பு கிடைக்கும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடு மலை, பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பக்தர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறும். முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுத பாணி சாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். </p><p>இப்புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டால் பழனி மட்டுமின்றி, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் மற்றும் அறுபடை வீடு களில் ஒன்றான திருச்செந்தூர் ஆகிய முக்கிய முருகத் திருத்தலங்களுக் கும் ஒரே நேரடி ரெயில் மூலம் பக்தர்கள் எளிதாகச் சென்று வர முடி யும்.பக்தர்களுக்கு மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் வேளாண் வணிகர்களுக்கும் தென் மாவட்டங்களுடன் நேரடி போக்குவரத்து வசதி கிடைக்கும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஈரோடு-திருச்செந் தூர் விரைவு ரெயிலை விரைவில் இயக்க ரெயில்வே அமைச்சகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். </p><p>இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘கறை படியாத அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்’ - சென்னை ஐகோர்ட்டு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/promotions-should-be-granted-only-to-officers-with-an-unblemished-record-madras-high-court</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/promotions-should-be-granted-only-to-officers-with-an-unblemished-record-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">623f5815-01cc-49fa-ae83-4e6383d7409e</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:05:46 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:05:46.812Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/11jyv8yt/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/11jyv8yt/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் பதிவுத்துறையில் கூடுதல் ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் டி.ஐ.ஜி.யாக இருப்பவர்களை கூடுதல் ஐ.ஜி.யாக பதவி உயர்த்துவதற்கு பட்டியல் தயாரிக்கப்படது. அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த டி.ஐ.ஜி. ஆனந்த் என்பவருக்கு எதிராக ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததுனால அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. </p> <p>அதன் தொடர்ச்சியாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து ஆனந்த் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, துறை ரீதியான நடவடிக்கைக்கு முன்பே தயாரிக்கப்பட்ட பதவி உயர்வு பட்டியலின் அடிப்படையில் ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். </p> <p>தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கான பட்டியல்ல பெயர் இடம் பெற்றிருந்தது என்பதற்காக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை உரிமையாக கேட்க முடியாது என்று தெரிவித்தனர். </p><p>அதோடு, கறை படியாத அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பதவி உயர்வு வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-should-come-forward-to-open-navodaya-schools-in-tamil-nadu-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-should-come-forward-to-open-navodaya-schools-in-tamil-nadu-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">160b5639-16da-4539-a712-20f158376db9</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:04:45 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:04:45.931Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,School,பள்ளி,NainarNagendran,தவெக அரசு,Tvk  government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/wd6i3ufi/nainar.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/wd6i3ufi/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>நவோதயா பள்ளி</h2><p>தமிழகத்தில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான, இலவசக் கல்வியை வழங்கும் நவோதயா பள்ளிகளை தொடங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதை வரவேற்கிறோம். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் விஜய்யின் தலைமையிலான தவெக அரசு, முந்தைய திமுக அரசின் பிடிவாத போக்கை தொடராமல், தமிழகத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF">நவோதயா பள்ளிகளை</a> திறப்பதற்கான முறையான ஏற்பாடுகளை செய்ய முன்வர வேண்டும்.</p><h2>இந்தி திணிப்பு அல்ல</h2><p>மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்பு அல்ல என்றும், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு மூன்றாவது மொழியையும் தேர்வு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றமே தெளிவாக விளக்கியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு, பழைய வெற்று அரசியல் காரணங்களைத் தவிர்த்துவிட்டு, மாணவர்களின் கல்வி நலனை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு தவெக அரசு செயல்பட வேண்டும்.</p><p>நீதிமன்ற உத்தரவின்படி, மூன்று வாரங்களுக்குள் தவெக அரசு தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களையும் உடனடியாக கண்டறிய வேண்டும். ஏழை மாணவர்களின் கல்வி உரிமையையும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தையும் முன்னிறுத்தி, இப்பள்ளிகளை தொடங்க போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-that-basic-amenities-be-ensured-for-devotees-at-the-tiruvannamalai-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-that-basic-amenities-be-ensured-for-devotees-at-the-tiruvannamalai-temple#comments</comments><guid isPermaLink="false">2147ba17-956c-45f5-a46f-eef71182682a</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:48:54 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:48:54.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,Thiruvannamalai,ஐகோர்ட்டு,Chennai High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/oxefp70k/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/oxefp70k/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை,</p><p>திருவண்ணாமலை கோவிலில் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை கோவில் நிர்வாகத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவில், கோவிலுக்கு வெளியில் கட்டுமானங்கள் கட்டுவதற்கு புராதன ஆணையத்திடம் ஒப்புதலை பெற்று அதற்கான பணிகளை தொடரலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். </p><p>மேலும், கிரிவல பாதையில் தற்காலிக கடைகள், சந்நியாசிகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், காவல் துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். மலையடிவாரத்தில் அனுமதி இல்லாத கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 30-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>லாக்கப் மரணங்களுக்கு அரசை குறைகூற முடியாது - கார்த்தி சிதம்பரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-cannot-be-blamed-for-lakh-deaths-karti-chidambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-cannot-be-blamed-for-lakh-deaths-karti-chidambaram#comments</comments><guid isPermaLink="false">5376dd24-333d-4b0e-b305-12c42b5429f0</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:36:04 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:36:04.714Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கார்த்தி சிதம்பரம்,Karti Chidambaram,Death,மரணம்,Lockup,லாக்கப்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/99agv50o/karthichidamparam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்த்தி சிதம்பரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/99agv50o/karthichidamparam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>“ஒரு அரசுக்கு அவகாசம் கொடுக்கவேண்டும். பட்ஜெட், திட்டங்களை வைத்துதான் தவெக அரசு குறித்துக் கூறலாம். 5 வருடம் நிலையாக தவெக அரசு நடக்கும். அவர்களுக்கு எந்தக் கட்சி எம்.எல்.ஏக்களும் தேவையில்லை. அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக்களை நான் ஏற்கவில்லை. அது தேவையில்லாதது.</p><h2>லாக்கப் மரணம்</h2><p>லாக்கப் மரணம் என்பது ஒவ்வொரு ஆட்சியிலும் நடக்கிறது. இதில் அரசைக் குறைக்கூற முடியாது. இது காவல்துறையின் கலாசார சீரழிவு. காவல்துறையினர் இன்னும் காலனித்துவக் காவல் துறையாகவே செயல்படுகிறார்கள். காலனித்துவ மனநிலை காவல்துறைக்கு மாறவேண்டும். காவல்துறை சீர்திருத்தக் குழுவை அரசு அமைக்கவேண்டும். அனைத்து நிலை காவலர்களுக்கும் மறுபயிற்சி அளிக்கவேண்டும். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது காவல்துறை. அதனால்தான் அவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள். இதற்கு முந்தைய அதிமுக, திமுக ஆட்சியிலும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">லாக்கப் மரணங்கள்</a> நடந்துள்ளது.  </p><p>தவெக நிர்வாகிகள்மீது குற்றச்சாட்டு வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள். சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் அரசு பொறுப்பேற்க முடியாது. அந்தக் குற்றத்தில் அரசு ஒரு அங்கம் வகிக்கிறது.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பூங்கா ரெயில் நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modi-to-inaugurate-chennai-park-railway-station-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modi-to-inaugurate-chennai-park-railway-station-tomorrow#comments</comments><guid isPermaLink="false">38da3632-b993-46f1-9cce-f8a72a3170f6</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:29:57 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:29:57.282Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி,Prime Minister Modi,Railway Stations,ரெயில் நிலையங்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/x6n18yj1/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/x6n18yj1/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய அரசு நாடு முழுவதும் சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரெயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை நாளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.</p><h2>தமிழகத்தில் முக்கிய நிலையங்கள் திறப்பு:</h2><p>இந்த 75 ரெயில் நிலையங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய ரெயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்கள் முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டு, நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன.</p><h2></h2><h2>உலகத்தரம் வாய்ந்த மாற்றங்கள்:</h2><p>* பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், அடுத்த 40 முதல் 50 ஆண்டுகால தேவையை நிறைவு செய்யும் வகையிலும் இந்த நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><p>* முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் நலனைக் கருதி புதிய எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட் வசதிகள் தாராளமாக நிறுவப்பட்டுள்ளன.</p><p>* மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயணிக்கும் வகையில் பிரத்யேக சாய்தளப் பாதைகள், பிரெய்லி வழித்தடங்கள் மற்றும் சிறப்பு கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.</p><p>* முன்பு 4.5 மீட்டராக இருந்த நடைமேடை மேம்பாலங்கள், பயணிகளின் பாதுகாப்பான நடமாட்டத்திற்காக 12 மீட்டர் வரை அகலப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>* ரெயில் நிலையங்களின் முகப்புகள் மற்றும் உட்புறச் சுவர்கள் அந்தந்தப் பகுதியின் பாரம்பரியக் கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.</p><p>* ரெயில் நிலைய வளாகங்கள் வெறும் பயண இடமாக மட்டுமில்லாமல், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய 'சிட்டி சென்டர்களாக' மாற்றியமைக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் போதை நோக்கில் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனையா? - போலீசார் அதிரடி சோதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-painkiller-tablets-for-recreational-drug-use-in-erode-police-conduct-surprise-raids</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-painkiller-tablets-for-recreational-drug-use-in-erode-police-conduct-surprise-raids#comments</comments><guid isPermaLink="false">903c0412-c169-480f-aec5-cafa85e2d808</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:16:35 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:16:35.900Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/eukk7qpa/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/eukk7qpa/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோட்டில் போதை நோக்கில் பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகள் விற்கப்படுகிறதா? என்பதை அறிய டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு மருந்தகங்களில் நடைபெற்ற இந்த சோதனையில், மருந்தக ஆய்வாளர்களும் பங்கேற்று மருந்துகள் மற்றும் விற்பனை நடைமுறைகளை ஆய்வு செய்தனர். </p><p>இதையடுத்து மருந்தக உரிமையாளர்களிடம், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வழங்கக் கூடாது என்றும், சந்தேகத்திற்கிடமான முறையில் வலி நிவாரண மாத்திரைகள் கேட்பவர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-erode-sengottai-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-erode-sengottai-train-service#comments</comments><guid isPermaLink="false">0ba9fbdb-a359-4981-9b17-e3270f631096</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:13:01 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:13:01.872Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Sengottai,செங்கோட்டை,ரெயில் சேவை,train service,Erode,ஈரோடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/4udcwfx4/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/4udcwfx4/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,  </p><p>கரூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவை மாற்றப்பட்டு உள்ளது.</p><h2>பராமரிப்பு பணி</h2><p>ஈரோடு-கரூர் வழித்தடத்தில் ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை மறுநாள் (சனிக்கி ழமை) ஈரோடு-செங்கோட்டை உள்பட சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.</p><p>அதாவது, திருச்சியில் காலை 7.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்-56809) நாளை மறுநாள் கரூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக கரூரில் இருந்து ஈரோடு வரை அந்த ரெயில் இயக்கப்படாது.</p><h2></h2><h2>கரூர் வரை...</h2><p>இதேபோல், ஈரோட்டில் இருந்து நாளை மறுநாள் மதியம் 2 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு-செங்கோட்டை ரெயில் (16845) கரூரில் இருந்து மதி யம் 3.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் ஈரோடு சந்திப்பில் இருந்து கரூர் சந்திப்பு வரை இயக்கப்படாது.</p><p>அதேபோல், மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 5.20 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை-ஈரோடு ரெயில் (16846) கரூர் ரெயில் நிலையம் வரை இயக்கப்படும். கரூரில் இருந்து ஈரோட்டிற்கு இயக்கப்படாது என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title> முன்னாள் அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்து வழக்கு:-சட்டமன்ற செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்  உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-acceptance-of-former-ministers-resignations-high-court-orders-assembly-secretary-to-file-a-response</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-acceptance-of-former-ministers-resignations-high-court-orders-assembly-secretary-to-file-a-response#comments</comments><guid isPermaLink="false">83963046-6ec8-4bcc-81cd-7b5bed242a3b</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:07:33 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:07:33.055Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஜினாமா,சென்னை ஐகோர்ட்டு,சட்டமன்ற செயலாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/e4o1anco/CHennai-High-Court.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/e4o1anco/CHennai-High-Court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p> <p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் சி.விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றனர். பின்னர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த இவர்கள், ஆளும் கட்சியான த.வெ.க.வில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில், ‘‘கட்சி கொறடா உத்தரவை மீறி த.வெ.க.அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதற்காக இவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது.</p> <p>அந்த புகார் நிலுவையில் இருக்கும்போது, இருவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டது தவறானது. சபாநாயகர், மனதை செலுத்தாமல் எந்திரத்தனமாக முடிவெடுத்துள்ளதால், இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட வேண்டும். சபாநாயகரின் முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த மனு மீது இறுதி முடிவு எடுக்கும் வரை விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், சட்டமன்ற செயலாளர், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.</p>  <p>ஏற்கனவே நான்கு எம் எல்.ஏக்கள் ராஜினாவை ஏற்றதை எதிர்த்த தொடரப்பட்ட வழக்குகளுடன், இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரணைக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை பட்டியலிடவேண்டும். விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மாநில உரிமைகளை அடகுவைத்த ‘மற்றும் பலர்’ இன்று மக்களரசை பழிப்பது மாபெரும் நகைச்சுவை - த.வெ.க. கடும் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-a-huge-irony-for-the-and-otherswho-mortgaged-state-rightsto-criticize-the-peoples-government-today-tvks-scathing-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-a-huge-irony-for-the-and-otherswho-mortgaged-state-rightsto-criticize-the-peoples-government-today-tvks-scathing-criticism#comments</comments><guid isPermaLink="false">0cd076d0-ac20-46a0-99d5-36ebd900d1f9</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:01:50 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:01:50.920Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,விமர்சனம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/wouteay9/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/wouteay9/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“டேபிளுக்கு கீழே தவழ்ந்துபோய் நாற்காலியைப் பிடித்தவர்கள் எல்லாம் நம் ஆட்சியை பார்த்து பழிப்பது கண்டு கொடநாடு எஸ்டேட் மரங்களும் மண்ணும் அங்கு நடந்த மர்மங்களும்கூட பல்லைக் காட்டி சிரிக்கின்றன.</p><p>தவறு செய்தது யாராக இருந்தாலும் உடனே துரித நடவடிக்கையை முடுக்கி விடும் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இழித்துப் பேசும் தீர்ந்துபோன சக்தி, அதிகார வெறியில், ஆற்றாமையில் தீய்ந்துபோய் கருகிய வாசனையில் காண்டாகிக் கதறுவது ஏனோ?</p><p>பழனி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் சிரத்தையுடன் இறங்கி உள்ளது தெரியாமல், பத்தாம்பசலித்தன அரசியல் அறிக்கை விடுவது ஏனோ?.</p><p>ஆட்சி அதிகாரத்திற்காக, பதவி சுகத்திற்காக, மாநில உரிமைகளை அடகுவைத்த ‘மற்றும் பலர்’ தலைமை, இன்று மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத மக்களரசை பார்த்துப் பேசுவதெல்லாம் மாபெரும் நகைச்சுவை.</p><p>ஏ.ஐ. தெரிந்த ஆட்களைத் தேடி அலையும் எடப்பாடி இடர்சாமிகள் ரீல்ஸ் பற்றிப் பேசி அழுதாலும் இனி அரசியலில் அழுது புரள்வதைத் தவிர வேறு வழியில்லை.</p><p>இளைஞர்களுக்காக, பெண்களுக்காக,விவசாயிகளுக்காக என அனைத்து தரப்பு மக்களுக்காக உண்மையாக, நேர்மையாக, லஞ்ச ஊழலற்ற முறையில் உழைக்கத் தெரிந்த அரசை ஆற்றாமையில் அழுதுகொண்டே ஏச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் ஆக. 1- 30-ந்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-in-tamil-nadu-from-august-1-to-30</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-in-tamil-nadu-from-august-1-to-30#comments</comments><guid isPermaLink="false">84df9e82-cabf-4391-9f71-7192c2cb75ec</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:44:21 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:44:21.453Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,மக்கள் தொகை கணக்கெடுப்பு,Census</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/1sm2s8d4/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-16/1sm2s8d4/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்றுகாரணமாக ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டுகாலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இந்திய வரலாற்றில், 2025-2026-ம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்ல் முறையில் நடக்கிறது. மக்கள் தங்களை பற்றிய தகவல்களை "செல்போன் செயலி மூலம்" தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது.</p><p>இந்த நிலையில், ஆகஸ்ட் 1 - 30 வரை மக்கள் கணக்கெடுப்பிற்காக அலுவலவர்கள் வீடு தேடி வருவார்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி சுந்தரேஷ் பாபு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறி இருப்பதாவது;</p><p>”ஆகஸ்ட் 1 - 30 வரை மக்கள் கணக்கெடுப்பிற்காக அலுவலவர்கள் வீடு தேடி வருவார்கள். 33 கேள்விகள் கேட்கப்படும். நாளை முதல் ஜூலை 31 வரை https://se.census.gov.in/ என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இணையதளத்தில் பதிவது கட்டாயமல்ல. ஆன்லைனில் பதிவு செய்தால் அலுவலர்கள் நேரில் வரும்போது அதனை சரிபார்ப்பார்கள். இல்லையென்றால் அவர்களாகவே விவரங்களை கேட்டுப் பெறுவார்கள்.” </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item></channel></rss>