<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 12 Jul 2026 02:40:19 +0000</lastBuildDate><item><title>சோற்றுக்குள் பாத்தி கட்டி பார்த்திருக்கிறோம்:  ஆற்றுக்குள் குளத்தை  வெட்டி பார்த்திருக்கிறீர்களா?- இந்த கொடுமை நடந்தது தமிழ்நாட்டில் தான்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-you-ever-seen-a-pond-dug-right-inside-a-river-this-atrocity-took-place-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/have-you-ever-seen-a-pond-dug-right-inside-a-river-this-atrocity-took-place-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">bf654a53-5c1b-42e2-acf1-5e51e8dc4376</guid><pubDate>Sun, 12 Jul 2026 02:29:47 +0000</pubDate><atom:updated>2026-07-12T02:29:47.210Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,river,Kancheepuram,காஞ்சீபுரம்,குளம்,125 நாள் வேலை திட்டம்,125 days work,வேகவதி ஆறு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zgqtqafh/puthi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆற்றுக்குள் குளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zgqtqafh/puthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>"வேலைக்காரன்" படத்தில் நடிகர் ரஜினிகாந்த்,  "தோட்டத்தில பாத்தி கட்டி பாத்திருக்கேன்.. பாத்திருக்கேன்.. சோற்றுக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே.." என்று ஒரு பாடல் பாடியிருப்பார். </p><p>அதுபோல, ஆற்றுக்குள் குளத்தை வெட்டிய கதை ஒன்று தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. அதுவும் தலைநகர் சென்னை அருகே உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/காஞ்சீபுரம்">காஞ்சீபுரம்</a> மாவட்டத்தில்தான் அரங்கேறியிருக்கிறது.</p><p>காஞ்சீபுரம் அருகே வேகவதி ஆற்றுக்குள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே குளம் வெட்டப்பட்டு சேதமடைந்துள்ள நிலையில், தற்போது அதே இடத்தில் மீண்டும் குளம் வெட்டும் பணி நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>ஆற்றுக்குள் குளம் வெட்டுவதால் சர்ச்சை</h2><p>அதாவது, காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சியில், வேகவதி ஆற்றில் தற்போது குளம் வெட்டும் பணி நடந்து வருகிறது. ஆற்றுக்குள்ளேயே குளத்தை வெட்டுவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கடந்த 2022-ம் ஆண்டு இதே  ஆற்றுப்பகுதியில் ரூ.9 லட்சத்து 65 ஆயிரம் செலவில் குளம் ஒன்று வெட்டப்பட்டது. ஆனால்,  ஆற்றில் இயல்பான நீரோட்டத்தின்போது அந்த குளம் பெருமளவில் சேதமடைந்தது.</p><h2>அரசு நிதி வீண்</h2><p>இந்த நிலையில், அந்த இடத்தின் அருகிலேயே மீண்டும் 125 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி, புதிய குளம் வெட்டும் பணி தொடங்கியிருக்கிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மழைக்காலத்தில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வரும் என்பது தெரிந்தும், அதே இடத்தில் மீண்டும் அரசு நிதியை செலவழித்து குளம் அமைப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- </p><p>விதி மீறல் இருந்தால் நடவடிக்கை </p><p>வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் பகுதியில் மீண்டும் மீண்டும் குளம் வெட்டுவது மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் செயலாகும். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல இடங்களில் 125 நாள் திட்ட பணிகள் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. </p><p>குளம் வெட்டும் திட்டம் உண்மையான பயனாளிகளுக்காக இல்லாமல், நிதியை செலவிட்டதாக கணக்கு காட்டும் திட்டமா என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, அனுமதி வழங்கிய அதிகாரிகள்,  தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த பொறுப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>வட்டார வளர்ச்சி அலுவலர் கூறும்போது, "குளம் வெட்டப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பொறியாளர்களுடன் ஆலோசித்து, விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>உயர்கல்வி சேர்க்கையில் கோவை அசத்தல்; தொடர்ந்து 2-வது ஆண்டாக மாநிலத்தில் முதலிடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-excels-in-higher-education-admissions-tops-the-state-for-the-second-consecutive-year</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-excels-in-higher-education-admissions-tops-the-state-for-the-second-consecutive-year#comments</comments><guid isPermaLink="false">5f6b1135-c3d1-450b-97b9-31371b7813d9</guid><pubDate>Sun, 12 Jul 2026 02:05:33 +0000</pubDate><atom:updated>2026-07-12T02:05:33.030Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Higher Education,Admissions,உயர்கல்வி சேர்க்கை,தொடர்ந்து முதலிடம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/np7rfoep/clg-students.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/np7rfoep/clg-students.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கோவை முதலிடம் பிடித்து உள்ளது.</p><p>தமிழக அளவில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையில் கோவை முன்னிலையில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 251 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 210 பேர் தவிர்த்து மீதம் உள்ள மாணவ-மாணவிகள்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88"> உயர்கல்வியில் </a>சேர விண்ணப்பித்து உள்ளனர். தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் 944 பேரில் அடுத்த கட்ட படிப்பிற்காக 288 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 656 பேர் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.</p><p>மாநில அளவில் முதலிடம்</p><p>அதன்படி கோவையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளில் 87 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்து உள்ளனர். அத்துடன் மாநில அளவில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கோவை முதலிடம் பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 95.45 சதவீத மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் உயர்கல்வியில் சேராத மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களை உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/improved-irctc-website-coming-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/improved-irctc-website-coming-soon#comments</comments><guid isPermaLink="false">1981b7ae-1442-4448-a21a-6e2e4d681d92</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:52:20 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:52:20.738Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய ரெயில்வே,Indian Railway,IRCTC,IRCTC Website,ஐ.ஆர்.சி.டி.சி.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/s1ghwdga/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/s1ghwdga/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>டிக்கெட் முன்பதிவு</h2><p>இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் அதன் செயலியில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர். </p><p>ஆனால், தட்கல் முன்பதிவின்போது, அடிக்கடி 'சர்வர்' பிரச்சினை ஏற்படுகிறது. 'கேப்ட்சா' குறியீடுகளும் கடினமாக இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறுகளால் டிக்கெட் முன்பதிவு அடிக்கடி தோல்வியில் முடிகிறது. இதனால், பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்களை பயணிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம்</h2><p>இந்தநிலையில், பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.</p><p><strong>இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-</strong></p><p>பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி. இணைதளம் மேம்படுத்தப்பட்டு தற்போது தயாராக உள்ளன. இதற்கான, முன்னோட்ட பணிகளும் நடந்து வருகின்றன. டிக்கெட் முன்பதிவை எளிமையாகவும், தடையின்றியும் செய்வதை நோக்கமாகக் கொண்டு 4 முக்கிய மேம்பாட்டு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.</p><p>முன்பதிவு செய்யும்போது தேவையற்ற கேப்ட்சாக்களை நீக்குதல், தேவையற்ற பாப்-அப்களை அகற்றுதல், ஒளிரும் கிராபிக்ஸ், கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் அம்சங்கள் நீக்கப்படும். அனைத்து வகுப்புகளிலும் இருக்கை கிடைப்பது ஒரே பார்வையில் பார்க்கலாம். இவ்வாறாக டிக்கெட் பதிவு செய்யும் முறைகள் எளிமைப்படுத்தி இருப்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி வழியாக திருச்செந்தூருக்கு கூடுதல் ரெயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-request-additional-trains-to-tiruchendur-via-trichy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-request-additional-trains-to-tiruchendur-via-trichy#comments</comments><guid isPermaLink="false">8ad1e347-baf5-4cfb-9a45-c03cff4f38c5</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:52:19 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:52:19.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,ரெயில் சேவை,train service,Tiruchendur,பயணிகள்,passengers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/fc5ba3pj/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/fc5ba3pj/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி வழியாக பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருச்சி வழியாக சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்க ளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்க ளுக்கும் திருச்சி வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>திருச்சியை சுற்றியுள்ள தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளுக்கு பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் திருச்சி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரெயிலில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. திருச்செந்தூருக்கு ஒரு ரெயில் மட் டுமே இயக்கப்படுகிறது. எனவே திருச்சி வழியாக திருச்செந்தூருக்கு செல்ல மேலும் சிறப்பு ரெயில்கள், வாரந்திர ரெயில்கள் மற்றும் கூடுதலாக தினசரி ரெயில்கள் இயக்க பக்தர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைவு - அமைச்சர் அருண்ராஜ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/birth-rate-is-low-in-tamil-nadu-minister-arunraj</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/birth-rate-is-low-in-tamil-nadu-minister-arunraj#comments</comments><guid isPermaLink="false">4c108fdc-2f17-40bd-b638-a9207411393e</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:42:40 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:42:40.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குறைவு,பிறப்பு விகிதம்,For Tamil Nadu,birth rate,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2ig318p1/minister-arunraj.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2ig318p1/minister-arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.</p><p>இந்த பேரணியை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர். மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், சிறப்பாக பணிபுரிந்த சுகாதார பணியாளர்கள் மற்றும், நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:-</p><p>உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இன்று திகழும் இந்தியா, தன்னுடைய திருப்புமுனையில் நிற்கிறது. நமது தேசியக் கருவுறுதிறன் விகிதம் அதாவது ஒரு  பெண்ணுக்கு பிறக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை 1.9 சதவீதமாக ஆகக்குறைந்து. ஈடு செய் நிலைக்கும் கீழே சென்றுவிட்டது.</p><h2>பிறப்பு விகிதம்</h2><p>நமது தமிழ்நாடோ கடந்த 1993-ம் ஆண்டிலேயே இந்தியாவிலேயே முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக மக்கள்தொகை ஈடுசெய் நிலையை எட்டியது. தமிழகத்தில் தற்போது இன்று கருவுறுதிறன் விகிதம் 1.3 சதவீதம், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">பிறப்பு விகிதம்</a> ஆயிரத்திற்கு 12 ஆக உள்ளது. இரண்டுமே இந்தியாவிலேயே மிகக்குறைவு. எனவே, மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது இனி தமிழ்நாட்டின் சவால் அல்ல. மக்களின் நல்வாழ்வுதான் நமது சவாலாக உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி முதல், தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் வழியாக. முதல்-அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனாக நின்று, ஒரு கிராம் தங்க மோதிரத்தை அக்குழந்தையின் கைகளில் அணிவிக்க இருக்கிறார்.</p><p>இவ்வாறு அவர் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. நிகழ்ச்சியை பள்ளியில் ஒளிபரப்பிய மேலும் ஒரு தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-headmistress-suspended-for-broadcasting-tv-show-in-school</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/another-headmistress-suspended-for-broadcasting-tv-show-in-school#comments</comments><guid isPermaLink="false">3bc522dd-9a92-4df3-bde4-969dffac7644</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:38:52 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:38:52.133Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,த.வெ.க,பணியிடை நீக்கம்,suspended,தலைமை ஆசிரியை,Headmistress,Show.நிகழ்ச்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/widupwne/224.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லைமை ஆசிரியை பணியிடை நீக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/widupwne/224.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணராயபுரம், </p><p>கரூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கரூர் மாவட்டம். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் எல்.இ.டி. திரையில் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>இந்நிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மகாதானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்ட த.வெ.க.வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாணவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணியிடை நீக்கம்</a> செய்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சண்முகவேல் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பா..? வானிலை மையம் வெளியிட்ட தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-information-released-by-the-meteorological-centre-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-chance-of-rain-in-tamil-nadu-today-information-released-by-the-meteorological-centre-2#comments</comments><guid isPermaLink="false">d7f2409f-7240-4899-a26c-50492fbd6409</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:35:55 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:35:55.078Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை ஆய்வு மையம்,weather condition,weather information,வானிலை அறிவிப்பு,weather center,வானிலை முன்ன்றிவிப்பு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/g64u3ea6/rain.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை, rain]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/g64u3ea6/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில், தமிழகக்கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2>மழை</h2><p>இதன் காரணமாக <strong>இன்று (12-07-2026)</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>13-07-2026 முதல் 16-07-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p><p><strong>17-07-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>12-07-2026 முதல் 15-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.</p><h2>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h2><p><strong>12-07-2026 முதல் 15-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்</p><p>அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (12-07-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது</p>]]></content:encoded></item><item><title>பள்ளி மாணவர்களுக்காக நாளை முதல் கூடுதல் பஸ்கள்: போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-buses-for-school-students-from-tomorrow-transport-minister-reviews</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-buses-for-school-students-from-tomorrow-transport-minister-reviews#comments</comments><guid isPermaLink="false">105a629b-930f-48f4-a1ad-ea8a844d1596</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:18:36 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:18:36.245Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,அரசு சிறப்பு பஸ்கள்,school student,Transport Minister,additional buses,போக்குவரத்துத்துறை அமைச்சர்,விஜய் தமிழன் பார்த்திபன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2slip2l0/223.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்துத்துறை அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2slip2l0/223.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசல் இன்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்து சென்றுவர ஏதுவாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 25 பள்ளிகளுக்கு 25 பஸ்கள் மூலம் 50 பயண நடைகள் இயக்கப்பட்டு வந்தது.</p><h2>சிறப்பு பஸ்</h2><p>இந்தநிலையில் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்படி பள்ளி மாணவர்களுக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 41 சிறப்பு பஸ்கள் வாயிலாக 84 பயண நடைகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்களை போக்குவரத்து அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D">விஜய் தமிழன் பார்த்திபன்</a> நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுபோதையில் சாலையில் மயங்கி கிடந்த இளம்பெண், வாலிபர்கள்... குமரியில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-and-teenagers-lying-unconscious-on-the-road-under-the-influence-of-alcohol</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-and-teenagers-lying-unconscious-on-the-road-under-the-influence-of-alcohol#comments</comments><guid isPermaLink="false">812b3b64-086e-4834-b2ec-bd09451c2b9e</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:14:25 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:14:25.632Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,கன்னியாகுமரி,young woman,இளம்பெண்,Kanyakumari,கிரைம் செய்திகள்,மதுபோதை,Liquor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/d8cm7jip/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/d8cm7jip/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>குமரி,</p><h2>மதுபோதை</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்புக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அருமனை-களி யல் சாலையில் ஒரு இளம்பெண் மற்றும் 3 வாலிபர்கள் மதுபோதையில் நடக்க முடியாமல் தள்ளாடி சாலையில் படுத்து இருந்தனர். அதில் 2 வாலிபர்கள் உடலிலும், முகத்திலும் ரத்த காயத்துடன் காணப்பட்டனர். அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும் இருந்தது.</p><p>அப்போது பணிக்கு செல்ல அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கடையாலுமூடு போலீஸ் நிலைய பெண் ஏட்டு பிரேமலதா, போதையில் சாலையில் வாலிபர்களுடன் இளம்பெண் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அந்த பகுதி தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குள் வராத போதிலும், உடனடியாக அவர் வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு அவர்களின் அருகில் சென்றார். அப்போது 3 வாலிபர்களில் ஒருவர் அங்கிருந்து நைசாக நழுவி சென்றுவிட்டார். </p><h2>மருத்துவமனையில் அனுமதி</h2><p>பின்னர் மற்ற 2 வாலிபர்கள் மற்றும் இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஏட்டு பிரேமலதா ஈடுபட்டார். ஆனால் இதற்கு 2 வாலிபர்களும் சிகிச்சைக்கு செல்ல மறுத்து அடம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த ஏட்டு பிரேமலதா அந்த வாலிபர்கள் தப்பிச்செல்லாத வண்ணம் பார்த்துக் கொண்டார்.</p><p>அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த அருமனை போலீசார் போதையில் கிடந்த இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், 2 வாலிபர்களையும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.</p><h2>தனியார் நிறுவன ஊழியர்கள்</h2><p>தொடர்ந்து அருமனை போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் 2 வாலிபர்களில் ஒருவர் அருமனையை சேர்ந்தவர் என்பதும், இன்னொருவர் தென்காசியை சேர்ந்தவர் என்பதும், இளம்பெண் புதுக்கோட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் கடந்த 5-ந் தேதி திற்பரப்புக்கு சுற்றுலா வந்து ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்த இடங்களை சுற்றி பார்ப்பதற்காக வந்தபோது போதையில் காயங்களுடன் சாலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.</p><p>அவர்கள் இடங்களை சுற்றிபார்க்க சென்றபோது விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அருமனை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாமில் பலியான தமிழர்கள்: வாட்ஸ்-அப்பில் வைத்த கடைசி &apos;ஸ்டேட்டஸ்&apos;.. உருக்கமான தகவல்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-who-lost-their-lives-in-vietnam-their-final-whatsapp-status-updates-heart-wrenching-details</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-who-lost-their-lives-in-vietnam-their-final-whatsapp-status-updates-heart-wrenching-details#comments</comments><guid isPermaLink="false">25be16e6-c96e-4e9b-b7a5-1ffe4c5043f8</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:14:24 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:14:24.348Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,சுற்றுலா,வியட்நாம்,Vietnam,தமிழர்கள்,boat accident,படகு விபத்து,Tamils</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/xi77rw1u/viter.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வியட்நாம், படகு விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/xi77rw1u/viter.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் தெரியவந்துள்ளது.</p><h2>வாட்ஸ்-அப்பில் வைத்த கடைசி 'ஸ்டேட்டஸ்'</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">வியட்நாம் படகு விபத்தில்</a> இறந்த பழனியைச் சேர்ந்த முருகபிரபு, செல்போன் கடை உரிமையாளர் ஆவார். செல்போன் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டதால் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனம் சார்பில் முருகபிரபு, அவரது நண்பர் நிர்மல்குமார் ஆகியோரை வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா அழைத்து சென்றது. படகுசவாரி சென்றபோது படகு கவிழ்ந்து முருகபிரபு உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற நிர்மல்குமார், மற்றொரு படகில் சென்றதால் உயிர் தப்பினார்.</p><p>உயிரிழந்த முருகபிரபு, நேற்று காலை தனது செல்போனில் வியட்நாமில் சுற்றுலா சென்ற இடங்களில் எடுத்த படங்களை வாட்ஸ்-அப்பில் 'ஸ்டேட்டஸ்' வைத்துள்ளார். அதனை அவரது நண்பர்கள், உறவினர்கள் பார்த்துள்ளனர். அதுவே அவரது கடைசி 'ஸ்டேட்டஸ்' ஆக அமைந்துவிட்டது.</p><h2>பிறந்த நாளில் இறந்த சோகம்</h2><p>இந்த விபத்தில் தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த தொழிலதிபர் செந்தில் குமார் என்பவரும் இறந்தார். செல்போன் டீலராக இருந்த இவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரங்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பில் உறுப்பினராக இருந்த செந்தில்குமார் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.</p><p>பலியான தொழிலதிபர் செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். இதனால் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செல்போன் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை அனுப்பினார்கள். தர்மபுரியில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைகள் இல்லத்தில் அவருடைய பிறந்தநாளை கொண் டாடும் வகையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.</p><p>பிறந்த நாளில் மகிழ்ச்சியாக வியட்நாமில் பொழுதை கழித்துக் கொண்டிருந்த அவர் படகு கவிழ்ந்த விபத்தில் பலியான சோக சம்பவம் உறவினர்கள், நண்பர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/e08cbx40/phot.jpg" /></figure><h2>திருச்சியைச் சேர்ந்த 3 பேர்</h2><p>படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களில் அழகுராஜன், பாலாஜி, ஷேக் அப்துல்லா ஆகிய 3 பேரும் திருச்சியை சேர்ந்தவர்கள். இதில் அழகுராஜன் தனியார் செல்போன் நிறுவனத்தின் திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்ட விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். பாலாஜி செல்போன் வினியோகஸ்தர் ஆவார்.</p><p>தொழில் அதிபரான ஷேக் அப்துல்லா செல்போன் விற்பனை நிறுவனம் நடத்தி வந்தார். 3 மாத விற்பனை இலக்கை எட்டி சாதனை படைத்ததால் செல்போன் கம்பெனி சார்பில் அழகுராஜன், வினியோகஸ்தர்களான பாலாஜி, ஷேக் அப்துல்லா ஆகியோர் உள்பட பலரை வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக அனுப்பி வைத்துள்ளது.</p> <h2>அழகுராஜன்</h2><p>இந்த விபத்தில் இறந்த அழகுராஜன் திருச்சி கிராப்பட்டி அருணாசலம் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் சரவண பிரியா (34) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு சிவசாய்ராம் (14), சிவசாய் நிரஞ்சன் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். சுற்றுலா சென்ற இடத்தில் அழகுராஜன் இறந்து விட்டார் என்ற தகவல் வெளியானதும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதனர். இதனால் அவர்களது வீடு மட்டுமின்றி அந்த தெருவே சோகமாக காணப்படுகிறது.</p> <h2>பாலாஜி</h2><p>விபத்தில் இறந்த பாலாஜி திருச்சி திருவானைக்காவல் கீழக்கொண்டயம்பேட்டையை சேர்ந்தவர். விஷ்ணுபிரியா (41) என்ற மனைவியும், 8-ம் வகுப்பு படிக்கும் ரமேஷ்ஜி, 5-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீசித்து ஆகிய மகன்களும் உள்ளனர்.</p><p>கடந்த 9-ந் தேதி திருச்சியில் இருந்து பாலாஜி புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த பாலாஜி, நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் செல்போனில் பேசியுள்ளார். நேற்று யாரிடமும் பேசவில்லை. இதுகுறித்து பாலாஜியின் சித்தப்பா கோவிந்தன் கூறுகையில் ‘படகில் பயணித்த யாருக்கும் உயிர் காக்கும் ‘லைப் ஜாக்கெட்' கொடுக்கவில்லை. இதனால்தான் பாலாஜி உள்ளிட்டோர் அநியாயமாக உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகள் உயிரிழந்தோரின் குடும்பத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்' என்றார்.</p><h2>ஷேக் அப்துல்லா</h2><p>படகு விபத்தில் இறந்த ஷேக் அப்துல்லா திருச்சி பீமநகர் யானைக்கட்டி மைதானம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் ஒரு ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராகவும், செல்போன் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார். இவருக்கு நசிமாபானு என்ற மனைவியும், சாகில் என்ற மகனும், சபானா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். செல்போன் விற்பனையில் இலக்கை எட்டியதற்காக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பை தனியார் நிறுவனம் வழங்கியபோது ஷேக் அப்துல்லா தனது மகனை அனுப்பலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அவரது மகன் தனக்கு வேலை இருக்கிறது என்று கூறிவிட்டதால், அரைமனதோடு சுற்றுலா சென்றிருக்கிறார்.</p><p>கடந்த புதன்கிழமை திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற இவர் நாளை (திங்கட்கிழமை) திருச்சிக்கு திரும்புவதாக இருந்தது. சுற்றுலா பயணத்தில் இருந்தபோது தினமும் குடும்பத்தினருடன் செல்போன் மூலம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். நேற்று காலை 10 மணி அளவில் கூட பேத்தியிடம் பேசி கொஞ்சியிருக்கிறார். இந்த நிலையில் தான் படகு விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.</p> <h2>தொழில் அதிபர்</h2><p>இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரையை சேர்ந்த தொழில் அதிபர் பாபுவும் இந்த விபத்தில் இறந்தார். ரேவதி (43) என்ற மனைவியும், ஜஸ்வந்த் (21) என்ற மகனும், நேகா (19) என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு</h2><p>வியட்நாம் நாட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.</p><p>உயிரிழந்த 15 பேரில், 10 நபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><strong>முழு விவரம்:-</strong></p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/3ppc72w7/janag.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>மெட்ரோ பணிகள்: சென்னையில் பின்வரும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/metro-works-traffic-diversions-in-the-following-areas-of-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/metro-works-traffic-diversions-in-the-following-areas-of-chennai#comments</comments><guid isPermaLink="false">79b3bb82-5de6-4957-a6e2-1c646a5d0fdf</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:04:22 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:04:22.366Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போக்குவரத்து மாற்றம்,traffic diversion</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/7l9rws3f/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/7l9rws3f/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்காக (வழித்தடம்-5), திருமங்கலம் சர்வீஸ் சாலையில் மேம்பால பாதை கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. எனவே, இப்பகுதியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 12.07.2027 வரை ஓராண்டு காலத்துக்கு போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-</p><p>* 100 அடி சாலையின் இடதுபக்க சர்வீஸ் சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.</p><p>* பாடி மேம்பாலத்தில் இருந்து அம்பத்தூர் நோக்கிச் செல்லும் வாகனங் கள், 18-வது பிரதான சாலை அல்லது 6-வது அவென்யூ வழியாகச் சென்று, இடதுபுறம் திரும்பி 13-வது பிரதான சாலையில் இணைந்து, பின்னர் வலதுபுறம் திரும்பி 2-வது அவென்யூவுக்குச் செல்ல வேண்டும். அங்கி ருந்து மீண்டும் வலதுபுறம் திரும்பி 100 அடி சர்வீஸ் சாலையை அடைந்து, பின் இடதுபுறம் திரும்பி அம்பத்தூர் எஸ்டேட் சாலையை சென்றடையலாம்.</p><p>* பாடி மேம்பாலத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் வாகனங் கள். வழக்கம்போல் திருமங்கலம் மேம்பாலத்தைப் பயன்படுத்திச் செல்லலாம்.</p><p>போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கும், இப்பணிகள் தொய்வின்றி முடிவதற்கும், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்பாளர்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தலைமையில் மாநில தகவல் ஆணையரை தேர்வு செய்ய குழு அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-select-state-information-commissioner-under-the-chairmanship-of-retired-judge-rs-ramanathan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/committee-formed-to-select-state-information-commissioner-under-the-chairmanship-of-retired-judge-rs-ramanathan#comments</comments><guid isPermaLink="false">693d064e-912a-4333-b844-27bb261be295</guid><pubDate>Sun, 12 Jul 2026 01:01:20 +0000</pubDate><atom:updated>2026-07-12T01:01:20.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தேர்வு,Committee,Retired Judge,ஓய்வு பெற்ற நீதிபதி,தமிழக அரசு உத்தரவு,selection,குழு அமைப்பு,structure,Tamil Nadu Government Order,மாநில தகவல் ஆணையர்,State Information Commissioner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/6n5qxynw/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு உத்தரவு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/6n5qxynw/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தலைமையில் மாநில தகவல் ஆணையரை தேர்வு செய்ய குழு</a> அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>மாநில தகவல் ஆணையரை தேர்வு செய்ய குழு அமைப்பு</h2><p>தமிழக அரசின் மாநில தலைமை தகவல் ஆணையராகப் பணியாற்றி வந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி முகம்மது ஷகீல் அக்தரின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து புதிய தலைமை தகவல் ஆணையர், மாநில தகவல் ஆணையர்களை (4 பேர்) தேர்வு செய்வதற்கு தமிழக அரசு குழுவை அமைத்துள்ளது. </p><h2>ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன்</h2><p>இந்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சுடலைக்கண்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். </p><p>இந்த குழு, மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் பதவிகளுக்கு தகுதியான நபர்கள் பட்டியலை தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில் மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணியில் மாற்றம்: மின்சார ரெயில்கள் இன்று வழக்கம் போல இயக்கப்படும்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-maintenance-schedule-suburban-trains-will-operate-as-usual-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-maintenance-schedule-suburban-trains-will-operate-as-usual-today#comments</comments><guid isPermaLink="false">374095fb-2a53-4a3a-9c66-60d607e04f48</guid><pubDate>Sun, 12 Jul 2026 00:55:42 +0000</pubDate><atom:updated>2026-07-12T00:55:42.313Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின்சார ரெயில்கள்,suburban trains</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/0gkxtbsc/1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/0gkxtbsc/1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>ரெயில்வே பராமரிப்பு பணி காலை 11 முதல் மாலை 3 மணி வரை மாற்றப்பட்டுள்ளது. இதனால் ரத்து செய்யப்பட்டதில் 8 ரெயில்கள் ' வழக்கமான நேரத்தில் இயக்கப்படும். அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி, மாலை 3.15 மணி, மாலை 3.45 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள், செங்கல்பட்டுக்கு காலை 10.45 மணி புறப்படும் ரெயில், இதேபோல செங் கல்பட்டில் இருந்து காலை 9.30 மணி, மதியம் 2.25 மணிக்கு கடற்கரைக்கு புறப்படும் ரெயில்கள், தாம்பரத்தில் இருந்து காலை 10.45 மணி, மாலை 3.30 மணிக்கு கடற்கரைக்கு புறப்படும் ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>படகு விபத்தில் தமிழர்களுக்கு உதவ சேலம் டி.ஐ.ஜி. வியட்நாம் செல்கிறார்-முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-accident-chief-minister-vijay-orders-ips-officer-santosh-hadimani-to-rush-to-vietnam-on-behalf-of-the-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-accident-chief-minister-vijay-orders-ips-officer-santosh-hadimani-to-rush-to-vietnam-on-behalf-of-the-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">10baf82e-e41e-4892-aef6-efd66ead2bb3</guid><pubDate>Sat, 11 Jul 2026 20:56:50 +0000</pubDate><atom:updated>2026-07-11T20:56:50.814Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,வியட்நாம்,Vietnam,படகு விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/6lcjgxa8/vietnam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/6lcjgxa8/vietnam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள் பட இந்தியர்கள் 15 பேர் பலியாகினர். இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் உள்ளது.</p><p>இதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சர் விஜய் தற்போதைய சூழ்நிலையை ஆய்வு செய்து, வியட்நாமில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வரும் பணிகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை வசதிகளை எளிதாக்கவும் தமிழ்நாடு அரசின் சார்பில் சந்தோஷ் ஹடிமானி ஐ.பி.எஸ். (டி.ஐ.ஜி. சேலம்) அதிகாரியை வியட்நாமின் ஹோச மின் நகரத்திற்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>டி.டி.வி. தினகரனின் கருத்து மோசமான முன்னுதாரணம்: அமைச்சர் வன்னி அரசு காட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dhinakarans-remarks-set-a-bad-precedent-minister-vanni-arasu-criticizes-sharply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dhinakarans-remarks-set-a-bad-precedent-minister-vanni-arasu-criticizes-sharply#comments</comments><guid isPermaLink="false">31d647b2-2cd5-4de6-8efb-246ebc7f216f</guid><pubDate>Sat, 11 Jul 2026 20:05:06 +0000</pubDate><atom:updated>2026-07-11T20:05:06.365Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,திமுக,DMK,TTV Dhinakaran,வன்னி அரசு,டி.டி.வி. தினகரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mf68ojbl/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/mf68ojbl/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p> சேலம்,  </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வா கியும், தமிழக சமூக நீதித்துறை அமைச்சரு மான வன்னியரசு நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில் பா.ஜனதாவை கண்டு அனைத்து கட்சிகளும் பயப்படுவதாக நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து நிருபர்களின் கேள்விக்கு, 'பாம்புகளை பார்த்தால் அனைவரும் பயப்படத்தான் செய்வார்கள்' என்றார்.</p><p>மேலும் அவர் கூறும் போது, எனது துறையில் சுதந்திரமாக செயல்படுகிறேன். மக்கள் முன்னேற்றத்திற்காக அச்சமின்றி உழைக்க முதல்-அமைச்சர் எனக்கு முழு வழிகாட்டுதலை வழங்கி உள்ளார். த.வெ.க.வை வீழ்த்துவதற்காக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைய வேண்டும் என்ற டி.டி.வி. தினகரனின் கருத்து மோசமான முன்னுதாரணம் ஆகும். கோட்பாடு அடிப்ப டையில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்ப்பதற்கு இணைந்தால் மட்டுமே அது சரியாக இருக்கும்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் பேச்சுக்கு எதிர்ப்பு: விஜய் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிய வேண்டும்- தி.மு.க. புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-karur-speech-cbi-should-register-a-case-against-vijay-dmk-complaint</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-karur-speech-cbi-should-register-a-case-against-vijay-dmk-complaint#comments</comments><guid isPermaLink="false">c55b8633-6d27-44a5-83d5-8ac7b06a2c28</guid><pubDate>Sat, 11 Jul 2026 19:54:09 +0000</pubDate><atom:updated>2026-07-11T19:54:09.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,விஜய்,சி.பி.ஐ,தி.மு.க</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/1hgmzs2n/Karur.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/1hgmzs2n/Karur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2> கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்</h2><p>கரூரில் த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த நிலையில் கரூருக்கு நேற்று முன்தினம் சென்ற முதல்-அமைச்சர் விஜய், இந்த சம் பவத்தை சுட்டிக்காட்டி முந்தைய தி.மு.க. அரசு மற்றும் காவல்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறினார். அவருடைய இந்த பேச்சு வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே அவர் மீது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">சி.பி.ஐ</a>. தனியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>விஜய் மீது வழக்குப்பதிவு</h2><p>இதுதொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்கும் சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழுவுக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-கரூரில் கடந்த 10-ந்தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்-அமைச் சர் விஜய், கரூர் துயரச் சம்பவத்திற்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">கரூர் </a>போலீஸ்துறை முழுப் பொறுப்பு போலவும், இதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பது போன்றும் பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு வழக்கின் முக்கிய சாட்சிகளை கலைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள எதிர் ஆவணத்தில், த.வெ.க. அமைப்பாளர்களின் திட்டமிடப்படாத செயல்பாடுகளும், விதிமீறல்களுமே இந்த உயிரிழப்பு சம்பவத்துக்கு காரணம் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே உள்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் அதற்கு முற்றிலும் முரணாகப் பொதுவெளியில் பேசி சாட்சிகளைத் திசை திருப்ப முயன்றுள்ளார். எனவே அவர் மீது சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.</p><h2>நீதிமன்றத்தில் ஆஜராகி...</h2><p>கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கரூர் த.வெ.க. மாவட்ட செயலாளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர்-அமைச்சர் ஆனந்த். இணை செயலாளர்-அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், அமைச்சர் ஆதவ் அர் ஜுனா, முதல்-அமைச்சரின் தனி செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் குற்றவாளிகள் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சாட்சிகளைச் சிதைக்கக்கூடாது என்ற நீதிமன்றக் கட்டுப்பாடுகளும் அவர்கள் மீது விதிக்கப்படவில்லை.</p><p>எனவே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகச் செய்து, சாட்சிகளை அச்சுறுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய பிணைப் பத்திரங்களை எழுதி வாங்கவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதே கோரிக்கை அடங்கிய மனுவை டெல்லி சி.பி.ஐ. இயக்குனர் அலுவ லகத்துக்கும் ஆர்.எஸ்.பாரதி அனுப்பி வைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title> காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவர் ஜானகி:  மு.க.ஸ்டாலின் இரங்கல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/janaki-sang-timeless-songs-mk-stalin-offers-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/janaki-sang-timeless-songs-mk-stalin-offers-condolences#comments</comments><guid isPermaLink="false">b3ff94e2-3231-4918-9770-b6ac8de8b818</guid><pubDate>Sat, 11 Jul 2026 16:51:06 +0000</pubDate><atom:updated>2026-07-11T16:51:06.574Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்டாலின்,MK Stalin&apos;,DMK leader MK Stalin,பாடகி ஜானகி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/4wj5k9a4/Janaki.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/4wj5k9a4/Janaki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று கொண்டாடப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 88 வயதான ஜானகி  உடல் நல பாதிப்பால் மைசூருவில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.   பாடகி ஜானகி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.</p><p>முன்னாள் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;  இசைக்குயில் எஸ். ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது. </p><p>அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும். இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார். அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு - முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-veteran-playback-singer-s-janaki-chief-minister-vijay-offers-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passing-of-veteran-playback-singer-s-janaki-chief-minister-vijay-offers-condolences#comments</comments><guid isPermaLink="false">1f9cf731-6744-44ff-9e8a-cdc32997e67b</guid><pubDate>Sat, 11 Jul 2026 16:31:57 +0000</pubDate><atom:updated>2026-07-11T16:31:57.682Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,பாடகி எஸ்.ஜானகி,singer S Janaki</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/fiz70jbm/State-15.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/fiz70jbm/State-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-</p><p>“இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.</p><p>அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘எஸ்.ஜானகி பாடிய பாடல்களின் மூலம் அவரது நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/memories-of-s-janaki-will-endure-forever-through-the-songs-she-sang-communist-party-of-india-condolence</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/memories-of-s-janaki-will-endure-forever-through-the-songs-she-sang-communist-party-of-india-condolence#comments</comments><guid isPermaLink="false">7f0d48e1-0a32-4e9e-8408-add0b01d6cc1</guid><pubDate>Sat, 11 Jul 2026 16:22:15 +0000</pubDate><atom:updated>2026-07-11T16:22:15.062Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,CPI,பாடகி எஸ்.ஜானகி,singer S Janaki</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/eleixf1m/State-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/eleixf1m/State-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-</p><p>“பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ். ஜானகி அம்மாள் காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், மைசூருவில் அவர் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது. 1957-ல் விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம், திரையுலகில் நுழைந்த ஜானகி, 17-க்கும் மேற்பட்ட மொழிகளில், 48,000-த்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் என்பது மாபெரும் சாதனையாகும். அவர்  நான்கு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.</p><p>இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் அவர். அவரது தாய் மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ் மொழிப் பாடல்களையும் மிகச் சிறப்பாக, இனிமையாகப் பாடியவராவார். தான் பாடிய பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவராவார்.</p><p>அவர் பாடிய பாடல்களின் மூலம் அவரது நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும். ஜானகி அம்மாள் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சேலத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தாவுக்கு விரைவில் விமான சேவை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-services-from-salem-to-delhi-mumbai-and-kolkata-to-start-soon</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-services-from-salem-to-delhi-mumbai-and-kolkata-to-start-soon#comments</comments><guid isPermaLink="false">8d411325-3d7d-4e9d-8c42-47487df6b549</guid><pubDate>Sat, 11 Jul 2026 16:19:08 +0000</pubDate><atom:updated>2026-07-11T16:19:08.198Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi,டெல்லி,மும்பை,Mumbai,Salem,சேலம்,Kolkata,கொல்கத்தா,Air service,விமான சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/djuszfj7/salem-airport.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சேலம் விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/djuszfj7/salem-airport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தாவிற்கு விரைவில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத் தெரிவித்துள்ளார்.</p><h2>கோரிக்கை</h2><p>சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/flight-services-to-resume-in-september-from-salem-airport-1019365">சேலம் விமான நிலையம்</a> உள்ளது. இங்கிருந்து தற்போது சென்னை, கொச்சி, பெங்களூரூ, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையை சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம், சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து இரவு நேர விமான சேவை மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என பல் வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.</p><h2>  கடிதம்</h2><p>இந்நிலையில், மேட்டூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயபாரதி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 4 கேள்விகளை கேட்டு சேலம் விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் காலை மற்றும் மாலையில் விமானம் இயக்க வேண்டும். அதேபோல், சேலத்தில் இருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு புதிய நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்துதல், விமான நிலைய முனைய விரிவாக்கம், பயணிகள் வசதிகள் மற்றும் செயல்பாட்டு வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல். இரவு நேர தரையிறக்க வசதிகளை செய்தல் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதற்கு விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத் பதில் அளித்து விளக்கம் தெரிவித்துள்ளார்.</p><h2>டெல்லி, கொல்கத்தா, மும்பை</h2><p>அதில், சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் கூடுதல் விமானங்களை இயக்குமாறு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை கேட்டு கொண்டுள்ளோம். சேலம் விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்த பிறகு சேலத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>அதேபோல், இரவு நேரத்திலும் விமானம் தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்கான தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா கொடுக்கப்பட வில்லை. அந்த பணிகளும் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாடகி ஜானகி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-rajinikanth-condoles-the-death-of-singer-janaki</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-rajinikanth-condoles-the-death-of-singer-janaki#comments</comments><guid isPermaLink="false">2b4d8371-6217-4a48-b4d5-fe7402ef39e6</guid><pubDate>Sat, 11 Jul 2026 16:08:25 +0000</pubDate><atom:updated>2026-07-11T16:08:25.247Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514964</atom:uri></atom:author><description></description><media:keywords>ரஜினிகாந்த்,Rajinikanth,இரங்கல்,condolences,பின்னணி பாடகி,பாடகி எஸ்.ஜானகி,singer S Janaki</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/79o0gedp/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/79o0gedp/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரபல பின்னணி பாடகியான எஸ். ஜானகி, கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. மூச்சுதிணறல் ஏற்பட்டு மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. எஸ்.ஜானகி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.</p><p>அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் எஸ். ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் <a href="https://x.com/hashtag/JanakiAmma?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JanakiAmma</a></p>&mdash; Rajinikanth (@rajinikanth) <a href="https://x.com/rajinikanth/status/2075967337195520158?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-indians-killed-in-vietnam-boat-accident-edappadi-palaniswami-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/15-indians-killed-in-vietnam-boat-accident-edappadi-palaniswami-condoles#comments</comments><guid isPermaLink="false">db03273d-d87b-48e0-97e3-f0ff97b6e28d</guid><pubDate>Sat, 11 Jul 2026 15:55:42 +0000</pubDate><atom:updated>2026-07-11T15:55:42.173Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/zvbm2dzz/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/zvbm2dzz/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><h2>படகு விபத்து</h2><p>இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் உள்பட 35 பேர் இன்று காலை பு குவாக் தீவுக்கு படகில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.</p><p>படகில் சென்றபோது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை உயிருடன் மீட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது.</p><p>ஆனாலும், இந்த சம்பவத்தில் தமிழர்கள் 10 பேர் உள்பட இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.</p><h2>ஆழ்ந்த இரங்கல் </h2><p>இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>வியட்நாம் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.</p><p>உயிரிழந்தோர் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குடும்பத்தாருக்கு </a>எமது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>உயிரிழந்தோர் உடல்கள் தாயகம் திரும்புவதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெறச் செய்யவும் வியட்நாம் நாட்டு அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு - வீரபாண்டியன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indians-die-in-vietnam-boat-accident-veerapandian-expresses-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indians-die-in-vietnam-boat-accident-veerapandian-expresses-condolences#comments</comments><guid isPermaLink="false">21c4f56c-ab5c-465c-8402-dd5894ae9b27</guid><pubDate>Sat, 11 Jul 2026 15:37:17 +0000</pubDate><atom:updated>2026-07-11T15:37:17.463Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வியட்நாம்,Vietnam,படகு விபத்து,M.Veerapandian,வீரபாண்டியன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/yc0n7s1h/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/yc0n7s1h/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“வியட்நாமில் உள்ள தீவிற்கு சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது படகு கவிழ்ந்ததில் தமிழர்கள் 10 பேர் உள்பட இந்திய சுற்றுலா பயணிகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த மன வேதனையையும், துயரத்தையும் தருகிறது.</p><p>இந்தப் படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title> பராமரிப்பு பணி: மெமு ரெயில் சேவையில் நாளை முதல் மாற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-memu-train-services-begin-tomorrow-partial-service-cancellation-due-to-maintenance-work</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-memu-train-services-begin-tomorrow-partial-service-cancellation-due-to-maintenance-work#comments</comments><guid isPermaLink="false">eef71055-7f95-496c-a8ac-02a7c9b59936</guid><pubDate>Sat, 11 Jul 2026 15:33:38 +0000</pubDate><atom:updated>2026-07-11T15:33:38.918Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரத்து,மெமு ரெயில்,tomorrow,நாளை,சேவை,services,Cancel,MEMU train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/7omjcmrq/memu-express-train.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெமு எக்ஸ்பிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/7omjcmrq/memu-express-train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பயணிகள் பாதுகாப்பு கருதி விழுப்புரம் யார்டில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மெமு  ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. வருகிற 12, 13, 14, 15, 17, 18. 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பின்வரும் மெமு ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><h2> ரத்து </h2><p>திருப்பதியில் இருந்து அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 16111, திருப்பதி -புதுச்சேரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AE%E0%AF%81%20%20%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">மெமு  எக்ஸ்பிரஸ்</a>, முண்டியம்பாக்கம் மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக செய்யப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து மாலை 3.35 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66052, புதுச்சேரி- எழும்பூர் மெமு பயணிகள் ரெயில் புதுச்சேரி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. </p><p>நாளை முதல் (12-ந் தேதி), 13, 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பின வரும் மெமு ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66046, விழுப்புரம் சென்னை கடற்கரை மெமு  பயணிகள் ரெயில், விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p> <h2>சென்னை ரெயில்வே கோட்டம்</h2><p>தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66045, தாம்பரம் விழுப்புரம் மெமு பயணிகள் ரெயில், முண்டியம்பாக்கம் மற்றும் விழுப்புரம் இடை யே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 16112, புதுச்சேரி - திருப்பதி மெமு  எக்ஸ்பிரஸ், புதுச்சேரியில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘பா.ஜ.க. என்றால் பயம்... பாம்பை பார்த்தால் பயப்படத்தான் செய்வார்கள்’ - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fear-of-the-bjp-people-naturally-fear-when-they-see-a-snake-minister-vanni-arasu-hits-back-at-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fear-of-the-bjp-people-naturally-fear-when-they-see-a-snake-minister-vanni-arasu-hits-back-at-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">02d40659-3b74-46a4-980f-8a6cb5476b77</guid><pubDate>Sat, 11 Jul 2026 15:28:10 +0000</pubDate><atom:updated>2026-07-11T15:28:10.571Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பா.ஜ.க.,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Vanni Arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tvkadarb/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/tvkadarb/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “பா.ஜ.க.வை தேசிய அளவில் வீழ்த்த தி.மு.க.வும், த.வெ.க.வும் ஒரே அணியில்(இந்தியா கூட்டணி) இணைய வேண்டும்” என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். </p><p>இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “பா.ஜ.க.வைப் பார்த்து அனைவருக்கும் பயம் வந்திருக்கிறது. பிரதமர் மோடியைப் பார்த்து பயந்து போய் இருக்கிறார்கள். பிரதமர் மோடி யாருக்கும் எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார்” என்று தெரிவித்தார். </p><p>இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் கருத்து குறித்து அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாம்புகளைப் பார்த்தால் எல்லாரும் பயப்படத்தான் செய்வார்கள்” என்றார். இதைத் தொடர்ந்து, “சமூக நீதித் துறையில் அமைச்சரா இருக்கும் நீங்கள் உங்கள் துறையில் சுதந்திரமாக செயல்படுறீர்களா? அதற்கான சுதந்திரத்தை இந்த அரசு உங்களுக்கு கொடுத்திருக்கிறதா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த வன்னி அரசு, “சமூகநீதி துறைக்குள் இருக்கின்ற ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சம்பந்தமாக தமிழ்நாடு முழுக்க இது மாதிரியான செயல்பாடுகள் இதற்கு முன் இருந்திருக்கிறதா? என்கின்ற கேள்வியை நான் முன்வைக்கிறேன். நான் பதவியேற்றவுடன் முதல்-அமைச்சர் விஜய் என்னை அழைத்து, ‘நீங்கள் சுதந்திரமாக செயல்படுங்கள். எதை பற்றியும் நீங்க கவலைப்பட வேண்டியதில்லை. எதற்கும் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. நீங்க இந்த மக்களுக்கான முன்னேற்றத்திற்கு இந்த துறையின் மூலமாக செயல்பட வேண்டும்’ என்று எனக்கு வழிகாட்டி இருக்கிறார். </p><p>கள்ளக்குறிச்சியில் பொறுப்பு அமைச்சராகவும் என்னை நியமித்து, தமிழ்நாடு முழுக்க இந்த துறையின் மூலமாக மிகப்பெரிய செயல்பாடுகளை செய்ய முதல்-அமைச்சர் விஜய் ஊக்கப்படுத்தி வருகிறார். எனவே, இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் உள்நோக்கத்தோடு சொல்லப்படுகின்றது. என்னுடைய செயல்பாடுகளே அதற்கு சாட்சி” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு - டிடிவி தினகரன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-people-from-tamil-nadu-lost-their-lives-in-vietnam-boat-accident-ttv-dinakaran-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/10-people-from-tamil-nadu-lost-their-lives-in-vietnam-boat-accident-ttv-dinakaran-condoles#comments</comments><guid isPermaLink="false">7bd8e64e-0efe-41e5-adce-7e6ed11e2041</guid><pubDate>Sat, 11 Jul 2026 15:19:59 +0000</pubDate><atom:updated>2026-07-11T15:19:59.581Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டிடிவி தினகரன்,AMMK,அமமுக,TTV Dinakaran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/u9e43hdj/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/u9e43hdj/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>வியட்நாம் நாட்டில் இந்தியர்கள் பயணித்த சுற்றுலாப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.</p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>விபத்தில் உயிரிழந்தவர்களின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">குடும்பத்தினருக்கு </a>எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, வியட்நாமில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகத்திற்கு கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதுமலை ஜீப் சவாரி; மாலை 5.30 மணிக்கு பின்பு அனுமதிக்க கூடாது - வனத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mudumalai-jeep-safari-high-court-orders-forest-department-not-to-allow-rides-after-530-pm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mudumalai-jeep-safari-high-court-orders-forest-department-not-to-allow-rides-after-530-pm#comments</comments><guid isPermaLink="false">8d31c6b9-f617-4110-8583-a799b7b9d77a</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:55:54 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:55:54.007Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,Chennai High Court,முதுமலை,Mudumalai forest</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/kplj18pk/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/kplj18pk/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஜீப் சவாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வனவிலங்குகளுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நள்ளிரவில் விலங்குகளை தாக்குவது போல ஜீப் ஓட்டுனர்கள் அத்துமிறலில் ஈடுபடுகிறார்கள் என்றும் வேதனை தெரிவித்தனர். </p><p>முதுமலையில் பதிவு செய்யப்பட்ட ஜீப்களில் மட்டுமே சுற்றலா பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், அதிகாலை 6 மணிக்கு முன்பு ஜீப் சவாரியை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், மாலை 5:30 மணிக்கு பின்பு ஜீப் சவாரியை அனுமதிக்க கூடாது என்றும் வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 11 இடங்களில் இன்று வெயில் சதம்</title><link>https://www.dailythanthi.com/news/weather/11-places-in-tamil-nadu-record-100-degrees-celsius-today-2</link><comments>https://www.dailythanthi.com/news/weather/11-places-in-tamil-nadu-record-100-degrees-celsius-today-2#comments</comments><guid isPermaLink="false">7ef015a6-420d-4ba3-8f10-e3db79662553</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:54:01 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:54:01.175Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,வெயில்,heat,வானிலை தகவல்,வெயில் சதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/cq0z2hiq/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/cq0z2hiq/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் காரணமாக, இந்தியப் பகுதிகளில் பருவமழைக் காற்று பலவீனமடைந்து. வறண்ட நிலப்பரப்பும் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இம்மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>தென்மேற்கு பருவமழைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-</p><p>மதுரை விமான நிலையம் - 103.1° பாரன்ஹீட் (39.5° செல்சியஸ்)</p><p>வேலூர் - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)</p><p>சென்னை மீனம்பாக்கம் - 102.2° பாரன்ஹீட் (39.0° செல்சியஸ்)</p><p>திருத்தணி - 101.84° பாரன்ஹீட் (38.8° செல்சியஸ்)</p><p>மதுரை நகரம் - 101.48° பாரன்ஹீட் (38.6° செல்சியஸ்)</p><p>சென்னை நுங்கம்பாக்கம் - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)</p><p>பரங்கிப்பேட்டை - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)</p><p>கடலூர் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 100.58° பாரன்ஹீட் (38.1° செல்சியஸ்)</p><p>திருச்சி - 100.58° பாரன்ஹீட் (38.1° செல்சியஸ்)</p><p>கரூர் பரமத்தி - 100.04° பாரன்ஹீட் (37.8° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>நாசாவில் உலக அளவில் டாப்-100-க்குள் நுழைந்து சாதனை படைத்த தமிழக மாணவர்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-student-from-tamil-nadu-achieved-a-milestone-by-ranking-among-the-global-top-100-at-nasa</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-student-from-tamil-nadu-achieved-a-milestone-by-ranking-among-the-global-top-100-at-nasa#comments</comments><guid isPermaLink="false">1e72cf44-e000-4422-8c9a-ca14f1bac7dd</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:53:09 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:53:09.934Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,student,நாசா,NASA,நாடு,தமிழக மாணவர்,சாதனை achievement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ufkoacuy/nasa.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/ufkoacuy/nasa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், செவ்வாய் கிரகத்தில் மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் கொடியை பறக்கவிட்டுள்ளார்.</p> <h2>சாதனை மாணவர் அகிலேஷ் சந்திரசேகரன்</h2><p>மதுரை மாவட்டம், பசுமலையில் உள்ள சிவகாசி நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் அகிலேஷ் சந்திரசேகரன். சர்வதேச அளவில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறமைகளை வெளிக்கொண்டு வர ஒவ்வொரு ஆண்டும் 'கியூப்ஸ் இன் ஸ்பேஸ்' (Cubes in Space) என்ற பிரம்மாண்ட உலகளாவிய போட்டி திட்டத்தை <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">நாசா</a> (NASA)  நடத்துகிறது.</p><h2>80 நாடுகள் பங்கேற்பு</h2><p>இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட உலகெங்கிலும் உள்ள சுமார் 80 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தீவிரமாக பங்கேற்று தங்களது அறிவியல் மாதிரிகளை சமர்ப்பித்தனர். இந்த ஒரு லட்சம் கண்டுபிடிப்புகளையும் நாசா விஞ்ஞானிகள் குழு மிக தீவிரமாக ஆய்வு செய்தது. இறுதியில், மிகச்சிறந்த 100 கண்டுபிடிப்புகள் மட்டுமே உலக அளவில் இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டன.</p><h2>மின்சாரம்</h2><p>அந்த சர்வதேச பட்டியலில், அகிலேஷ் சந்திரசேகரன் வடிவமைத்த கருவியும் இடம்பிடித்து விண்வெளி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாற்று தொழில்நுட்பத்தின் அவசியம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் மற்றும் ரோவர்கள் அங்கு தொடர்ந்து இயங்குவதற்கு மின்சாரம் மிக மிக முக்கியமான தேவையாகும். </p> <h2>தடையற்ற மின்சாரம்</h2><p>தற்போது அங்கு சோலார் பேனல்கள் மூலமே மின்சாரம் பெறப்படுகிறது. இதற்கு மாற்றாக, செவ்வாய் கிரக மண்ணில் இயற்கையாகவே மின்சாரம் தயாரிக்கும் 4 சென்டிமீட்டர் அளவுள்ள சிறிய கியூப் பெட்டி. இதற்காக செயற்கையான முறையில் செவ்வாய் கிரக மண் மாதிரியை பூமியிலேயே உருவாக்கி இந்த சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளார். இதனால் செவ்வாய் கிரகத்தின் எந்தவொரு கடுமையான சூழ்நிலையிலும் ரோவர்களால் தொடர்ந்து இயங்க முடியும்.</p>]]></content:encoded></item><item><title>திருமங்கலம் மெட்ரோ பணி; ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் - காவல்துறை தகவல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumangalam-metro-work-traffic-diversion-for-one-year-police-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumangalam-metro-work-traffic-diversion-for-one-year-police-announcement#comments</comments><guid isPermaLink="false">b6821fe7-1b53-4a7a-bbbd-aa2aadad57fb</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:41:20 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:41:20.739Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro,Thirumangalam,திருமங்கலம்,மெட்ரோ பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/8oa1sql3/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/8oa1sql3/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக சென்னை திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றமானது ஓராண்டு காலம் நடைமுறையில் இருக்கும் எனவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக திருமங்கலம் 100 அடி சர்வீஸ் சாலையில் மேம்பால பாதை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையொட்டி வரும் ஜூலை 13-ந்தேதி முதல் அடுத்த வருடம் ஜூலை 12-ந்தேதி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>100 அடி சாலையின் இடதுபுற சர்வீஸ் சாலையில் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது. பாடி மேம்பாலத்தில் இருந்து அம்பத்தூர் நோக்கி செல்லும் வாகனங்கள் 18-வது பிரதான சாலை அல்லது 6-வது அவென்யூ வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>கோயம்பேடு செல்லும் வாகனங்கள் பாடி மேம்பாலத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்ல வழக்கம் போல் திருமங்கலம் மேம்பாலம் வழியாக செல்லலாம். அந்த வழியில் எந்த மாற்றமும் இன்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மெட்ரோ கட்டுமான பணிகள் திட்டமிட்டு காலக்கெடுவில் நிறைவடையும் எனவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்பவர்கள் போக்குவரத்து மாற்றங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும்’ - அமைச்சர் வினோத் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-agriculture-budget-will-be-designed-to-benefit-farmers-minister-vinoth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-agriculture-budget-will-be-designed-to-benefit-farmers-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">540c5a29-8e70-4011-a208-37ef40fbac88</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:18:39 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:18:39.966Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வேளாண் பட்ஜெட்,அமைச்சர் வினோத்,Minister Vinoth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vwhlz6z0/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/vwhlz6z0/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் 17.5 சதவீத ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க நெல் சேமிப்பு கிடங்குகளில் நேரில் ஆய்வு செய்த அவர், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.</p> <p>அந்த வகையில், நெல்லையில் இன்று விவசாயிகளை சந்தித்து அமைச்சர் வினோத் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கருத்துகளை கூறியிருக்கிறார்கள். இந்த மண்டலத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரவும், தடுப்பணைகள் கட்டவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும்” என்றார். </p><p>அப்போது செய்தியாளர் ஒருவர், “ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் இன்னும் மின்சார இணைப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. அது எப்போது வழங்கப்படும்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வினோத், “அது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். பட்ஜெட்டில் அது பற்றி அறிவிப்போம்” என்றார். </p>]]></content:encoded></item><item><title>டி.சி. வாங்க சென்றபோது மதுபோதையில் அரசுப் பள்ளி ஆசிரியரை தாக்கிய தொழிலாளி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-for-assaulting-government-school-teacher</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-for-assaulting-government-school-teacher#comments</comments><guid isPermaLink="false">b4339355-556f-411f-8cc5-13d66df4350c</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:16:49 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:16:49.780Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,கைது,arrest,புதுக்கோட்டை,Pudukottai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hvbhdokk/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hvbhdokk/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வீரப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக மணிபாலா (59 வயது) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று அதே பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி மருதுபாண்டியன் (33 வயது) என்பவர் தான் குடும்பத்துடன் புதுக்கோட்டைக்கு செல்ல இருப்பதாக கூறி அங்கு படிக்கும் தனது மகன்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை (டி.சி.) பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டுள்ளார். அப்போது மருதுபாண்டியன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து, பள்ளி தலைமையாசிரியர் நீங்கள் நிதானமாக இல்லை. எனவே உங்களது மனைவியை அழைத்து வாருங்கள், மாற்றுச்சான்றிதழ் தருகிறேன் என கூறியுள்ளார். அப்போது மருதுபாண்டியன் 'பள்ளியில் சேர்க்கும்போது ஒருவர் வந்து சேர்த்தால் போதும். இப்போது மாற்றுச்சான்றிதழ் வாங்கும்போது இருவர் வந்து வாங்க வேண்டுமா? இப்போதே மாற்றுச்சான்றிதழை தர வேண்டும்' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>அப்போது அங்கு வந்த இடைநிலை ஆசிரியர் ஜெரால்டு (38 வயது), மருதுபாண்டியனிடம் சத்தம் போட வேண்டாம் என்று கூறி அவரை சமாதானம் செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மருதுபாண்டியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆசிரியர் ஜெரால்டை தனது செல்போனால் தலை மற்றும் நெஞ்சில் தாக்கி உள்ளார். மேலும், மாணவர்கள் முன்பு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அவரது சட்டையை கிழித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து ஆசிரியர் ஜெரால்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அன்னவாசல் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதன் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை தாக்கிய மருதுபாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு புகார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/land-grabbing-complaint-against-former-dmk-minister-thamo-anbarasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/land-grabbing-complaint-against-former-dmk-minister-thamo-anbarasan#comments</comments><guid isPermaLink="false">54a18b3a-f591-4017-b2ce-cbe125992452</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:12:22 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:12:22.768Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,தேர்தல்,திமுக எம்எல்ஏ,தமோ அன்பரசன்,நில அபகரிப்பு புகார்,LandGrabbing</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bissan0v/anbu33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தா.மோ. அன்பரசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/bissan0v/anbu33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p> தன்னுடைய சொத்தை திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர்  ராஜேஷ் சோமசுந்தரம் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.</p><p>முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது; </p> <h2>6 மாத குத்தகை</h2><p>பரங்கிமலையில் 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தேர்தல் பணிமனை</a>க்காக கொடுத்த இடத்தை 5500 சதுர அடி நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திருப்பி தர மறுக்கிறார். அன்பரசனின் உதவியாளர் என்ற பெயரில் ஒருவர் வந்து கேட்டதன் பேரில் அந்த இடம் தரப்பட்டது. இதற்கென கட்டாயப்படுத்தி 6 மாத குத்தகை ஒப்பந்தமும் ஏற்படுத்தினர். ஆனால், குத்தகை காலம் முடிந்தும் இடத்தை காலி செய்து தரவில்லை. 2 ஆண்டுகளாக வாடகையும் தரவில்லை.</p><p>குத்தகை ஒப்பந்தம் சிலரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் போலியாக முகவரி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது சட்டவிரோதமாக என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். வாடகை கூட தராமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பரசன் என்னை சந்தித்தார்.</p><h2>நிலத்தை மீட்டுத்தர வேண்டும்</h2><p>அப்போது, ஒருவாரத்தில் அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறும், பணம் கொடுத்து விடுவதாகவும் கூறினார். ஆனால் நிலத்தை விற்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு அந்த நிலம் தேவைப்படுகிறது என்று உறுதியாக தெரிவித்து விட்டேன். ஒரு வாரம் கழித்து பேசுவதாக கூறிச் சென்றவர், பிறகு எந்த பதிலும் கூறவில்லை. பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஏற்கனவே, திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஏ.வ.வேலு, சிவசங்கர் ஆகியோர் மோசடி, ஊழல் வழக்குகளில் விசாரணை வளையத்தில் உள்ள நிலையில், தா.மோ.அன்பரசன் மீதும் நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று 32.33 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3233-tons-of-old-materials-received-and-disposed-of-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3233-tons-of-old-materials-received-and-disposed-of-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">d064335d-1d20-40bf-8108-5303847563d0</guid><pubDate>Sat, 11 Jul 2026 14:09:42 +0000</pubDate><atom:updated>2026-07-11T14:09:42.828Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qy53udlu/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/qy53udlu/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (11.07.2026) 138 இடங்களிலிருந்து 32.33 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>138 நபர்களிடமிருந்து..</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் பணி 11.10.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில், இன்று (11.07.2026) மட்டும் 138 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 32.33 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இதற்காக 45 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.</p><h2>நம்ம சென்னை செயலி</h2><p>ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.</p><p>இதனடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்து - முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-chief-minister-vijay-expresses-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-chief-minister-vijay-expresses-condolences#comments</comments><guid isPermaLink="false">647bba1b-e61d-4eff-8053-9757bca97bb0</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:54:51 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:54:51.316Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வியட்நாம்,Vietnam,boat accident,படகு விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/pxycu8tu/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/pxycu8tu/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.</p><p>இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 100 இடங்களை அளித்த பிரதமருக்கு நன்றி -  நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-thanks-the-prime-minister-for-allocating-an-additional-100-seats-to-government-medical-colleges-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-thanks-the-prime-minister-for-allocating-an-additional-100-seats-to-government-medical-colleges-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">0efdfe32-16ea-4ffb-8c5d-d46486a930c7</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:27:29 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:27:29.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தமிழக அரசு,பிரதமர்,thanks,நன்றி,Medical Colleges,மருத்துவ கல்லூரிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hj04tmpj/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/hj04tmpj/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் உள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">அரசு மருத்துவ கல்லூரிகளில்</a> கூடுதலாக 100 மருத்துவ இடங்களை வழங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. </p><h2>மாணவர்களின் மருத்துவராகும் கனவு</h2><p>நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 50 மருத்துவ இடங்களை உயர்த்தி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளிலுள்ள மொத்த மருத்துவ இடங்களை 5,150-ஆக மாற்றும் இந்த அறிவிப்பின் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவு எளிதில் நனவாகுவதோடு, தமிழக மக்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை! </p> <h2>நன்றி</h2><p>தமிழகத்தின் கல்வியிலும் சுகாதாரத்திலும் முக்கிய மைல்கல்லான இத்தகைய சீரிய நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள நமது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.</p> ]]></content:encoded></item><item><title>வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது - அன்புமணி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-loss-of-indians-in-vietnam-boat-accident-anbumani-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-loss-of-indians-in-vietnam-boat-accident-anbumani-condoles#comments</comments><guid isPermaLink="false">0b9396cf-9a6a-446f-b067-2526aae72b35</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:18:35 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:18:35.750Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,அன்புமணி,Anbumani,வியட்நாம்,Vietnam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/5yq93gq0/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/5yq93gq0/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>வியட்நாம் நாட்டின்  ஹான் மே ரூட் ங்வோய்  ( Hon May Rut Ngoai) தீவில்  இன்று மாலை நிகழ்ந்த மோசமான படகு விபத்தில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள்  பெரும் அதிர்ச்சியும்,  வேதனையும் அளிக்கின்றன.  அவர்களை இழந்து வாடும்  குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>படகு கவிழ்ந்து விபத்து</h2><p>தமிழ்நாடு,  கர்நாடகம் உள்ளிட்ட தென் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மாநிலங்களைச் </a>சேர்ந்த  30-க்கும் மேற்பட்டோர் வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர்.  அவர்கள் Hon May Rut Ngoai தீவுக்கு அருகில்  பயணம் மேற்கொண்டிருந்த போது படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த அனைவரும் கடலில்  தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் 15 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்த 15 பேரில்  8 பேர் சென்னை, தருமபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உள்ளிட்ட அனைவரின் உடல்களையும் உடனடியாக மீட்டு,  சொந்த ஊர்களுக்கு கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிரில் கம்பிக்குள் சிக்கிய சிறுமியின் தலை - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/girls-head-stuck-in-grill-wire-firefighters-safely-rescue-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/girls-head-stuck-in-grill-wire-firefighters-safely-rescue-her#comments</comments><guid isPermaLink="false">922dc765-429f-4edd-af4d-838587d5d139</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:14:44 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:14:44.724Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுக்கோட்டை,Pudukottai,தீயணைப்புத் துறையினர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/y2fsd8nr/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/y2fsd8nr/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சந்தனபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் தியாழினி (4 வயது). சம்பவத்தன்று சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு உள்ள கிரில் கம்பியில் அவரது தலை சிக்கிக்கொண்டது. இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறி துடித்தார்.</p><p>இதையடுத்து, சிறுமியை மீட்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரும்பு கம்பியை அறுத்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பாஜகவினர் வழக்கம்போல தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் - ஜோதிமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-is-spreading-wrong-information-as-usual-jothimani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-is-spreading-wrong-information-as-usual-jothimani#comments</comments><guid isPermaLink="false">9b461a90-1169-43dc-98ee-11e93a6b0345</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:10:46 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:10:46.922Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Information,wrong,ஜோதிமணி எம்பி,தவறான தகவல்,jothimani mp</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/il98kf07/jothimani.11.07.2026.jpg" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் எம்பி ஜோதிமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/il98kf07/jothimani.11.07.2026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பாரதிய ஜனதா கட்சியினர் வழக்கம்போல தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-</p><h2>மனமார்ந்த நன்றி</h2><p>கரூர் மாவட்டம் புகழூர், வாங்கல், குப்பிச்சிபாளையம், வெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம், கீழ்பாகம், புங்கம்பாடி மற்றும் கரூர்  உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சொந்தமான 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி, மீண்டும் பத்திரப்பதிவு நடைபெற வழிவகை செய்த  முதல்-அமைச்சருக்கும், வருவாய்த் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கரூர் மாவட்ட மக்கள்</a> சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>மக்களின் பிரச்சினை</h2><p>இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை எடுத்து சென்றோம். அறநிலைய துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  இடையே நேரடி சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. </p><p>தொடர்ந்து வருவாய் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தினேன். முதல்-அமைச்சரிடமும் பிரச்சினையின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து விரிவாக விளக்கிக்கூறினேன். அவரும் பொறுமையுடன் கேட்டு மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டார்.</p><h2>பாஜக பொய் பிரச்சாரம்</h2><p>இதன் அடிப்படையில் இப்பொழுது பாதிக்கப்பட்ட  எமது மக்களின் ஒரு பகுதியினருக்கு  நியாயமான தீர்வு கிடைத்துள்ளது. இந்த நிலங்கள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் வழக்கம்போல தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை அரசு கரூர்  மக்களுக்கு  பட்டா போட்டு வழங்கிவிட்டது என்ற பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <h2>அநீதி</h2><p>உண்மை என்னவென்றால், இந்நிலங்கள் நூற்றாண்டுகளாக மக்களின் பயன்பாட்டிலும் உரிமையிலும் இருந்து வரும் நிலங்கள். 1967ஆம் ஆண்டு இனாம் நில ஒழிப்பு சட்டத்தின் கீழ் இந்நிலங்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நில உரிமை தொடர்பான பதிவுகள் முறையாக மாற்றப்பட வேண்டியிருந்த நிலையில்,  அறநிலைய துறை ஆவணங்களில் மட்டும் மக்களின் பெயரில் பட்டா உள்ள நிலங்களையும் சேர்த்து கோவில் பெயரிலேயே வைத்து கொண்டது மட்டுமல்லாமல், சட்டத்திற்கு புறம்பாக,வருவாய்த்துறையினருக்கு தெரிவிக்காமல் பத்திரப்பதிவை நிறுத்தி வைக்க கடிதம் கொடுக்கப்பட்டு பத்திரப்பதிவு துறையும் எவ்வித ஆவணங்களையும் கோராமல், வருவாய்த்துறையிடம் கருத்து கேட்காமல் பத்திரப்பதிவை அநீதியாக நிறுத்தி வைத்தது.  </p><h2>பத்திரப்பதிவு தடை</h2><p> சம்பந்தப்பட்ட  துறைகளின் உரிய ஆய்வு மற்றும் வருவாய் துறையின் சரிபார்ப்பு இல்லாமல் பத்திரப்பதிவுக்கு தடைகள் விதிக்கப்பட்டதால், விவசாயிகள், நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.</p><p>இந்த நிலங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கோவில் நிலம் அல்ல. இவை முழுமையாக மக்களின் உரிமையில் உள்ள, மக்களின் பெயரில் பட்டா பெற்றுள்ள நிலங்கள். விவசாய நிலங்களாக இருந்தால் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்; குடியிருப்பு பகுதிகளாக இருந்தால் மக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.</p><h2>நம்பிக்கை உள்ளது</h2><p>மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள பிற பகுதிகளிலும் உரிய ஆய்வு செய்து படிப்படியாக தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.</p><h2>பாராட்டுக்குரியது</h2><p>இந்த நேரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனின் நெடிய அனுபவம் மிகுந்த,விரைவான  செயல்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் அர்ப்பணிப்பு மிகுந்த, விரைவான, நடவடிக்கைகளையும் நன்றியோடு நினைவுகூற விரும்புகிறேன். கோவில் நிலங்களை பாதுகாப்பதில் உறுதியோடு உள்ள அதே நேரத்தில் மக்களுக்கு உரிமையுள்ள நிலங்களை தவறாக கையகப்படுத்திவிடக்கூடாது என்கிற அவரது கவனம் பாராட்டுக்குரியது. </p><p>இந்த முயற்சியில் எங்கள் தரப்பு நியாத்தை புரிந்துகொண்டு செயல்பட்ட  வருவாய்த்துறை மற்றும்  இந்து சமய அறநிலையத்துறை  அதிகாரிகள், கரூர் மாவட்ட ஆட்சியர்  முத்துக்குமரன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்  உள்ளிட்ட அனைவருக்கும் எனது  இதயப்பூர்வமான நன்றிகள்.</p>]]></content:encoded></item><item><title>யானை வழித்தடங்கள் குறித்து விரைந்து அறிவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-tamil-nadu-government-to-promptly-notify-elephant-corridors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-tamil-nadu-government-to-promptly-notify-elephant-corridors#comments</comments><guid isPermaLink="false">04ce72f7-9684-44d7-b9e2-51924679b83e</guid><pubDate>Sat, 11 Jul 2026 13:05:38 +0000</pubDate><atom:updated>2026-07-11T13:05:38.181Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,Chennai High Court,யானை வழித்தடம்</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/9pggqap9/State-06.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-11/9pggqap9/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>யானைகள் வழித்தடங்களை அறிவிப்பது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது வனத்துறை தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் 41 யானைகள் வழித்தடங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக அதில், “ஜவளகிரி, அஞ்சட்டி, பில்லிக்கல் உள்ளிட்ட 3 வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இது தவிர 12 வழித்தடங்களை இறுதி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒரு சில வழித்தடங்கள் கைவிடப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இறுதி செய்யப்பட்ட 3 யானை வழித்தடங்கள் குறித்து விரைந்து அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். </p><p>இதேபோல தடாகம் பள்ளத்தாக்கில் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கில், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு ஆரம்ப கட்ட நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாவட்டங்களில் உள்ள பசுமை நிதியை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். </p> ]]></content:encoded></item></channel></rss>