<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 10 Jul 2026 12:33:39 +0000</lastBuildDate><item><title>கரூரில் 31 பேருக்கு வழங்கப்பட்ட பணிகள் விவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/details-of-jobs-given-to-31-people-in-karur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/details-of-jobs-given-to-31-people-in-karur#comments</comments><guid isPermaLink="false">6d2e83c5-aa39-4e7c-a1b4-063241d28d7f</guid><pubDate>Fri, 10 Jul 2026 12:25:14 +0000</pubDate><atom:updated>2026-07-10T12:25:14.555Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Karur Stampede,கரூர் கூட்டநெரிசல்,பணி நியமன ஆணை,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/u5g3enu3/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/u5g3enu3/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p>தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்துபோனார்கள். இவர்களது குடும்பத்தினர்களில் 31 பேருக்கு அரசுப் பணியும், ஒருவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கமும் வழங்கும் நிகழ்வு கரூரில் இன்று நடைபெற்றது.</p><p>இதில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.  அதன்படி, க.சாந்திக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. 31 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அவர்களது பெயர் மற்றும் நியமனம் செய்யப்படும் துறை விவரம் வருமாறு:-</p><p>ஆனந்த ஜோதி - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), மா.நிவேதா - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), சு.கலைச் செல்வி - அலுவலக உதவியாளர் (மாவட்ட வருவாய் அலகு), செ.சதீஸ் குமார் - அலுவலக உதவியாளர் (மாவட்ட வருவாய் அலகு), வெ.விமல் - அலுவலக உதவியாளர் (மாவட்ட வருவாய் அலகு).</p><p>வை.சங்கவி - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), பா.ரகுநாதன் - இரவு காவலர் (மாவட்ட வருவாய் அலகு), பெ.செல்வராணி - மசால்ஜி (மாவட்ட வருவாய் அலகு), ச.திவ்யா - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), ந.கிருஷ்ணமூர்த்தி - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), மோனிஷா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை).</p><p>ப.சந்திரகலா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை), ச.மகாலட்சுமி - இளநிலை உதவியாளர் (காவல் துறை), பா.தனலட்சுமி - இளநிலை உதவியாளர் (காவல் துறை), சு.முருகன் - அலுவலக உதவியாளர் (கரூர் மாவட்ட அலகு), செ.பிரபாகரன் - இளநிலை உதவியாளர் (பதிவுத்துறை), ம.ஷர்மிளா - இளநிலை உதவியாளர் (பதிவுத்துறை), ச.சந்தியா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை).</p><p>அஷ்வின் குமரன் - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), ச.சுதன் - அலுவலக உதவியாளர் (கரூர் மாவட்ட அலகு),  அகிலா - அலுவலக உதவியாளர் (மாவட்ட வருவாய் அலகு), குணசேகர் - இளநிலை உதவியாளர் (பேரூராட்சிகள் துறை), ஜெயபிரகாஷ் - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சித் துறை), நிவேதிதா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), தீபலட்சுமி - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை).</p><p>மல்லிகா - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), பிரபாகரன் - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), ஜோதி - இரவு காவலர் (பழங்குடியினர் அடிமலைப்புதூர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி), ம.பிரியதர்ஷினி - இளநிலை உதவியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஊராட்சித் துறை), க.சக்திவேல் - இளநிலை உதவியாளர் (பள்ளி கல்வித்துறை), ந.யோகேஷ்குமார் - இரவு காவலர் (மாவட்ட வருவாய் அலகு).</p>]]></content:encoded></item><item><title>ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auction-of-bonds-worth-rs-2000-crore-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auction-of-bonds-worth-rs-2000-crore-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">942f83fd-e61f-4c17-b846-aa4925abe091</guid><pubDate>Fri, 10 Jul 2026 12:06:10 +0000</pubDate><atom:updated>2026-07-10T12:06:10.288Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Bonds,TamilNadu Goverment,பிணையப் பத்திரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/muaa2lo2/tamilnadu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/muaa2lo2/tamilnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>பிணையப் பத்திரம் ஏலம்</h2><p>தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான ரூ. 1000 கோடி மதிப்புள்ள 8 ஆண்டுகால பிணையப் பத்திரம் மற்றும் ரூ. 1000 கோடி மதிப்புள்ள 15 ஆண்டுகால பிணையப் பத்திரம் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜூலை 14, 2026 அன்று நடத்தப்படும். </p><p>போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மணியிலிருந்து </a>11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஜூலை 14, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதா? -  விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/handing-over-temple-properties-to-encroachers-nainar-nagendran-condemns-the-vijay-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/handing-over-temple-properties-to-encroachers-nainar-nagendran-condemns-the-vijay-government#comments</comments><guid isPermaLink="false">90b0ab2c-a5ba-41dd-a43b-a1739a52e37e</guid><pubDate>Fri, 10 Jul 2026 12:06:04 +0000</pubDate><atom:updated>2026-07-10T12:06:04.351Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,கண்டனம்,கோவில் சொத்துகள்,விஜய் அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/n87bohf3/nainar-nagendheran.new.gif" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/n87bohf3/nainar-nagendheran.new.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ரூ.25,000 கோடி மதிப்பிலான திருக்கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதா? - ஜோசப் விஜய் அரசுக்கு கண்டனம்! இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p> <h2>அதிர்ச்சியளிக்கிறது</h2><p>தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்யின் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆலய சொத்துகளை சூறையாட தொடங்கி தங்களின் உண்மை முகத்தை காட்டியுள்ளது. கரூரில் உள்ள 4 முக்கிய கோவில்களுக்கு சொந்தமான ரூ.25,000 கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்கும் நோக்கில் அவற்றின் மீதான பத்திரப்பதிவு தடையை இந்து சமய அறநிலையத்துறை நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><h2>அசாதாரண வேகம்</h2><p>குறிப்பாக, நேற்று காலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பரிந்துரை கடிதத்தை அனுப்புகிறார்; அதே நாளில் திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரை குறிப்பும் வருகிறது; அதே ஜூலை 9-ஆம் தேதியன்றே சென்னையிலுள்ள ஆணையரும் மின்னல் வேகத்தில் தனது இறுதி உத்தரவை பிறப்பிக்கிறார். </p><p>ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அரசு துறைகள் இவ்வளவு அசுர வேகத்தில் கோப்புகளை நகர்த்தி இறுதி உத்தரவை வெளியிட்டதன் பின்னணி என்ன? கோவில் நிலங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதில் காட்டும் இந்த அசாதாரண வேகத்தை, மக்கள் நல பணிகளிலும் ஏழை எளிய மக்களின் தேவைகளிலும் இந்த தவெக அரசு காட்ட மறுப்பது ஏன்?</p><h2>இமாலய துரோகம்</h2><p>ஆக, கோவில்களின் சொத்துகளை காப்பதாக கூறிக்கொண்டே ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகிறார் அமைச்சர் ரமோஷ். முந்தைய திமுக ஆட்சியில் கூட அரங்கேறாத இந்த இமாலய துரோகத்தை, ஆன்மீக போர்வையில் வந்துள்ள ஜோசப் விஜய் அரசு மிக துணிச்சலாக செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p> <p>எனவே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உட்பட 4 கோவில்களின் 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான பத்திரப்பதிவு தடையை நீக்க ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய் </a>தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உதவியது யார்? ஓடியது யார்? என்பது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் - செந்தில் பாலாஜி பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-helped-karur-people-know-very-well-who-ran-away-senthil-balaji-retorts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/who-helped-karur-people-know-very-well-who-ran-away-senthil-balaji-retorts#comments</comments><guid isPermaLink="false">4fbd3b71-2e35-409a-bbe6-1a3760a24e98</guid><pubDate>Fri, 10 Jul 2026 11:35:47 +0000</pubDate><atom:updated>2026-07-10T11:35:47.636Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Karur Stampede,கரூர் கூட்டநெரிசல்,Senthil Balaji,செந்தில் பாலாஜி,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/wf3bi4sk/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/wf3bi4sk/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கரூரில் இன்று பேசிய முதல்-அமைச்சர் விஜய், "கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தரு எங்க இருக்காருனே தெரியல... ஓடு ஓடுனு ஓடிக்கிட்டே இருக்காரு.." என்று வேட்டைக்காரன் பட பாடலை பாடி செந்தில் பாலாஜியை விமர்சித்திருந்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சருக்கு பதிலடி தெரிவித்து செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்? </p><p>மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலினும், அன்றைய தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்.</p><p>அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும்,  தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?</p><p>திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல்,  தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஓடு. ஓடு.. ஓடு... இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-riding-bike-with-husband-robbed-of-7-pounds-of-jewelry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-riding-bike-with-husband-robbed-of-7-pounds-of-jewelry#comments</comments><guid isPermaLink="false">ddf1f7dc-c3ab-4c60-bde3-fff5b2519fc5</guid><pubDate>Fri, 10 Jul 2026 11:26:05 +0000</pubDate><atom:updated>2026-07-10T11:26:05.129Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanniyakumari,நகை பறிப்பு,chain snatching</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xeo6zhl9/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xeo6zhl9/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.</p><p>கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (40 வயது), தொழிலாளி. இவருடைய மனைவி அனிஷா (35 வயது). இவர்களுக்கு ஆஸ்னா என்ற மகள் உள்ளார். ஆஸ்னாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவத்தன்று மகளின் சிகிச்சைக்காக குமார் தனது பைக்கில் மனைவி மற்றும் மகளை அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.</p><p>அவர்கள் தமிழக-கேரள எல்லை பகுதியான பாறசாலை அருகே நான்கு வழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் மர்ம ஆசாமி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்த ஆசாமி, குமாரின் பைக்கின் அருகில் வந்து திடீரென அனிஷா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன் என கூச்சலிட்டார்.</p><p>மேலும், மர்ம ஆசாமி நகையை பறித்ததில் அனிஷா நிலைத் டுமாறியதால் பைக்குடன் அவர்கள் 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட் டது. இதற்கிடையே அந்த மர்ம ஆசாமி பைக்கில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.</p><p>பின்னர், இதுகுறித்து குமார் பாறைசாலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை ஐகோர்ட்டு தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-stays-announcement-of-by-elections-in-5-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-stays-announcement-of-by-elections-in-5-constituencies#comments</comments><guid isPermaLink="false">1b01b340-3bc0-4926-9396-4665926401d8</guid><pubDate>Fri, 10 Jul 2026 11:19:41 +0000</pubDate><atom:updated>2026-07-10T11:19:41.328Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தேர்தல் ஆணையம்,சென்னை ஐகோர்ட்டு,ராஜினாமா,Resign,madras highcourt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/1mfp5b0q/madrashc33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/1mfp5b0q/madrashc33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி (கிழக்கு), மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிகள் காலியானதாக சட்டப் பேரவையின் செயலாளர் அறிவித்திருந்தார்.</p><p>இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடாசலபதி, சென்னை  ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், "காலியான தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் என்ற நிலையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 151- ஏ-வின் கீழ் காலியானது இல்லை என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.</p><h2>தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்</h2><p>வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை குறிப்பிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.</p><p>இந்த வழக்கு சென்னை  ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என  சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அதனால், இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.</p><h2>சபாநாயகர் அரசாணை</h2><p>தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "ராஜினாமா செய்யப்பட்ட தொகுதிக்கு எதிரான தேர்தல் வழக்குகளை பொறுத்தவரை அதன் நிலைபாடுகள் கோர்ட்டில் மாறுபடலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜினாமா செய்வதற்கு முன் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதை கருத்தில் கொள்ள வேண்டியது இல்லை எனவும்  கோர்ட்டு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.</p><p>இந்த வழக்கை பொறுத்தவரை, வேட்பாளர்களின் ராஜினாமாவை உரிய ஆய்வுக்கு பின் சபாநாயகர் ஏற்று அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உத்தரவிட்டால் அது தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும். 10 ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்த பழமையான தேர்தல் வழக்கை தற்போது தான் கோர்ட்டு ரத்து செய்துள்ளது" என்று வாதிட்டார்.</p><h2>எந்த தொடர்பும் இல்லாமல் வழக்கு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமாணி, "காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தேர்தல் ஆணையம்</a> தான் முடிவு எடுக்க முடியும். தனி நபர்கள் தேர்தலை நடத்தக் கூடாது என வழக்கு தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கே உகந்தது இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதை எதிர்த்து குறிப்பிட்ட தொகுதி வாக்காளர்கள் மட்டுமே வழக்கு தொடர உரிமை உள்ளது. மனுதாரர் எந்த தொடர்பும் இல்லாமல் வழக்கை தொடர்ந்துள்ளார் என்று வாதிட்டார்.</p><p>அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என 2018- ஆம் ஆண்டு  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் போதும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடக் கூடாது எனவும், நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில்  கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால், அது வேறுவொரு பாதிப்பை ஏற்படுத்தும்.</p><h2>இடைத்தேர்தல் அறிவிக்க தடை</h2><p>குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருந்தால், எப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும்? நிலுவையில் வழக்குகள் இல்லாதபோது ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது கட்டாயம் தான். அதே நேரத்தில் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அங்கே எப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிட முடியும்? இடைத்தேர்தலில் புதிய வேறு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது? அதனால் சற்று பொறுத்திருந்துப் பார்க்கலாம்" என்று குறிப்பிட்ட நீதிபதிகள் ஜூலை 31-ம் தேதிக்குள் பதில் தர தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர், முதல்-அமைச்சர் விஜய்க்கு  கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு, கரூர், விராலி மலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் தடை விதித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கிளிமஞ்சாரோ மலையில் பறந்த உலகின் மிகப்பெரிய இந்திய தேசிய கொடி - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worlds-largest-indian-national-flag-flown-on-mount-kilimanjaro-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worlds-largest-indian-national-flag-flown-on-mount-kilimanjaro-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">d22888ee-c7cb-4403-9857-296b394cf3d8</guid><pubDate>Fri, 10 Jul 2026 11:11:19 +0000</pubDate><atom:updated>2026-07-10T11:11:19.579Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,இந்திய தேசிய கொடி,Indian national flag,கிளிமஞ்சாரோ,Patriotism</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/glpv26df/vanathi-seenivasan.10.07.20.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/glpv26df/vanathi-seenivasan.10.07.20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோ மலையில், தமிழக பெண் முத்தமிழ்ச்செல்வி தலைமையிலான குழுவினர் உலகின் மிகப்பெரிய இந்திய தேசிய கொடியை ஏற்றி புதிய சாதனை படைத்துள்ளனர்.</p> <h2>80 அடி நீள தேசிய கொடி</h2><p>தான்சானியா நாட்டில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலையின் மிக உயர்ந்த பகுதியான 'உஹுரு சிகரத்தில்' (Uhuru Peak) கடந்த 8-ம் தேதி இந்த வரலாற்று சிறப்புமிக்க உலக சாதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. முத்தமிழ்ச்செல்வி தலைமையில் சென்ற 16 இந்திய மலையேற்ற வீரர்கள் அடங்கிய குழுவினர், கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் உயரத்தில் 80 அடி நீளமும், 120 அடி அகலமும் (மொத்தம் 9,600 சதுர அடி) கொண்ட  மிகப்பெரிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88">இந்திய தேசிய கொடியை</a> விரித்து பறக்கவிட்டனர்.</p> <h2>போதைப்பொருள் இல்லாத இந்தியா</h2><p>ஒரே கொடி. ஒரே நோக்கம். போதைப்பொருள் இல்லாத இந்தியா” என்ற உன்னத இலக்கை உலகறிய செய்யும் நோக்கில் இந்த மலையேற்ற பயணம் அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல், இந்திய மலையேற்ற குழுவினர் காட்டிய துணிச்சல், விடாமுயற்சி மற்றும் தேசபக்தி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது. </p> <p>இந்த வரலாற்று சாதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <p>இந்தியாவுக்கு ஒரு பெருமைமிகு தருணம்!</p><p>"ஒரே கொடி. ஒரே லட்சியம். போதைப்பொருள் இல்லாத இந்தியா" என்ற ஊக்கமளிக்கும் முன்னெடுப்பின் கீழ், கிளிமஞ்சாரோ மலையின் உஹுரு சிகரத்தில் உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி (80 அடி × 120 அடி) ஏற்றப்பட்டது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம்: காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து அறிக்கை தயார் செய்ய குழு அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-committee-formed-to-deliberate-on-the-congress-partys-stance-and-prepare-a-report</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-committee-formed-to-deliberate-on-the-congress-partys-stance-and-prepare-a-report#comments</comments><guid isPermaLink="false">c1066d62-eb6e-4349-8c28-02c2ebf0c87d</guid><pubDate>Fri, 10 Jul 2026 10:46:11 +0000</pubDate><atom:updated>2026-07-10T10:46:11.905Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/fgkdrmi9/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/fgkdrmi9/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து அறிக்கை தயார் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர், எம்.பி. அறிவுறுத்தலின் பேரில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமானம் நிலைய திட்டத்தின் தற்போதைய சூழலில் காங்கிரசின் நிலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களிடம் கலந்து பேசி அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்திலை ஒருங்கிணைப்பாளராக கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இக்குழுவில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சா.பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் திரு. மோகன் குமாரமங்கலம் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.” </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாரம்பரிய அரிசி மூலம் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பது எப்படி? - சென்னையில் 2 நாட்கள் பயிற்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-make-value-added-food-products-from-traditional-rice-2-days-training-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-make-value-added-food-products-from-traditional-rice-2-days-training-in-chennai#comments</comments><guid isPermaLink="false">0ce6bcdc-f64d-4200-937e-206ae10d48ce</guid><pubDate>Fri, 10 Jul 2026 10:41:57 +0000</pubDate><atom:updated>2026-07-10T10:41:57.760Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,பயிற்சி,Training Class,பயிற்சி வகுப்பு,Training course</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/ufjb5f0k/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/ufjb5f0k/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>2 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் " சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி"</p><h2>பாரம்பரிய அரிசி வகைகள்</h2><p>தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 2 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி வரும் 15.07.2026 முதல் 16.07.2026 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது.</p><p>இப்பயிற்சியில் சிறுதானிய பொருட்களின் இரத்தசாலி அரிசி மாவு லட்டு, திணை நாட்டு சர்க்கரை பூந்தி லட்டு கருப்பு கவுனி அல்வா, கேழ்வரகு மைசூர் பாக், பூங்கார் அரிசி முறுக்கு, திணை ஓமப்பொடி, குதிரைவாலி சீவல், வரகு மிச்சர் , சோளம் காராசேவ், சாமை பட்டர், முறுக்கு ,வரகு காராபூந்தி, கம்பு முறுக்கு வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.</p><h2>விண்ணப்பிக்கலாம்</h2><p>இப்பயிற்சியில் ஆர்வமுள்ள <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தொழில்முனைவோர் </a>(ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.</p><p>இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி, கைபேசி எண்கள்.</p><p><strong>முகவரி :</strong> தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032.  </p><p><strong>கைபேசி எண்கள்:</strong> 8668102600/7806918309</p><p><strong>முன்பதிவு அவசியம்:</strong> அரசு சான்றிதழ் வழங்கப்படும்</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கரூரில் விஜய் தாமதமாக சென்றதுதான் உயிரிழப்புக்கு காரணம் - டி.கே.எஸ்.இளங்கோவன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-late-arrival-in-karur-was-the-reason-for-the-death-tks-ilangovan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-late-arrival-in-karur-was-the-reason-for-the-death-tks-ilangovan#comments</comments><guid isPermaLink="false">1be362b8-409f-44c8-a034-1b0b669a74a1</guid><pubDate>Fri, 10 Jul 2026 10:39:50 +0000</pubDate><atom:updated>2026-07-10T10:39:50.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,கரூர்,விஜய்,திமுக,DMK,KarurStampede,CMVijay,TKSElangovan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/8numj2pc/vijay33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/8numj2pc/vijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கரூர் சென்ற முதல்-அமைச்சர் விஜய், கரூர் போலீசார் நினைத்திருந்தால் எங்களை எச்சரித்து, </p><p>அன்று கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம்.கூட்டத்துக்கு ஏற்றபடி போலீஸ் பாதுகாப்பு தந்தீர்களா?அன்று ஸ்டாலின் சார் அரசியல் ஆதாயம் தேடினார்.என் குடும்ப உறவுகளை இழந்து வலியில் இருந்த என் மேலேயே பழியை போட்டீர்கள். அந்த வலியோடு வீட்டில் இருந்தேன். அப்போது என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என்று சொன்னீர்களே. வாய்னு ஒண்ணு இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? என அவர் கேள்வி எழுப்பினர்.</p><h2>திமுக பதிலடி</h2><p>இந்த நிலையில் இதைவிட மோசமான ஒரு பொய்யை முதல்-அமைச்சர் சொல்ல முடியாது அடிப்படை அறிவுள்ள மனிதர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் கரூரில் முதல்வர் விஜய் பேசியதற்கு திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">  டி.கே.எஸ்.இளங்கோவன்</a> அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>கரூரில் நிலவிய உண்மையான சூழல் என்ன? கலவரம் வெடித்ததா அல்லது பேரிடர் ஏதேனும் ஏற்பட்டதா?அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. மதியம் 12 மணிக்கு விஜய் உரையாற்றுவார் என நினைத்து 9 மணிக்கே மக்கள் வந்தனர்.</p><h2>தாமதமாக வந்தார் விஜய்</h2><p>விஜய்யை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் முன்னரே வந்து காத்துக்கிடந்தனர். உட்காரக்கூட இல்லை, கிட்டத்தட்ட 12 மணிநேரம் வெயிலிலேயே நின்றனர். 7.30 மணிக்குத்தான் விஜய் வந்தார்.</p><p>சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர், உணவு இல்லாமல் ஒருவர் நின்றால் மயங்கி விழுவார்கள் என்பது குறைந்தபட்சம் பொது அறிவும், மனிதநேயமும் உள்ளவர்களுக்கு தெரியும்.</p><p>10 மணிநேரம் தண்ணீர், உணவு இல்லாமல் விஜய் நின்றாக்கூட மயங்கிதான் விழுவார். இது முழுவதும் தாமத்தின் விளைவு. ஆனால் அவர் திமுகவை குற்றம் சாட்டுவதில்தான் இருக்கிறார்.</p><p>100 பேர் மயங்கியதில் 41 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 60 பேரை திமுக காப்பாற்றியது. விஜய் காப்பாற்றவில்லை. அதைமுதலில் அவர் புரிந்துகொள்ள வேண்டும். திமுக சம்பவ இடத்திற்கு விரைந்து</p><h2>சென்னைக்கு ஓட்டம்</h2><p>இதற்கிடையே சென்னைக்கு ஓடினாரே தவிர, பாதிக்கப்பட்டவர்களை சென்று ஒருமுறைக்கூட பார்க்கவில்லை. தாமதத்தின் விளைவுதான் இந்த விபத்து என்பதை அவர் முதலில் உணரவேண்டும். கரூரில் விஜய் தாமதமாக சென்றதுதான் உயிரிழப்புக்கு காரணம். பலரை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றியது திமுக அரசு.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-gujarat-to-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-gujarat-to-velankanni#comments</comments><guid isPermaLink="false">a67b91d3-8759-40d8-a10a-022b6d7ef760</guid><pubDate>Fri, 10 Jul 2026 10:29:55 +0000</pubDate><atom:updated>2026-07-10T10:29:55.178Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,Gujarat,சிறப்பு ரெயில்,Special train,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/cynyxzn7/special-train.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குஜராத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/cynyxzn7/special-train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>குஜராத் மாநிலம் வல்சாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><h2>சிறப்பு ரெயில்</h2><p>யணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, குஜராத் மாநிலம் வல்சாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-charlapalli-weekly-special-train-permanently-operational">சிறப்பு ரெயில்</a> (வண்டி எண் 09030) இயக்கப்படுகிறது. வல்சாத்தில் இருந்து ஜூலை 14-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 6.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், 3-வது நாள் காலை 10 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடைகிறது. </p> <p>மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணி - மராட்டிய மாநிலம் தஹானு ரோடு இடையே சிறப்பு ரெயில் (09029) இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியிலர் இருந்து ஜூலை 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மதியம் 2.50 மணிக்கு தஹானு ரோடு ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.</p><p>22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில்கள், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், திருநள்ளார், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும்.</p><p>இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (11-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை: வரதட்சணை கொடுமையா? - உதவி கலெக்டர் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teen-commits-suicide-within-3-months-of-marriage-is-dowry-cruel-assistant-collector-inquiry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teen-commits-suicide-within-3-months-of-marriage-is-dowry-cruel-assistant-collector-inquiry#comments</comments><guid isPermaLink="false">30e709ef-5818-4e3c-bf68-4443648bbff5</guid><pubDate>Fri, 10 Jul 2026 10:29:38 +0000</pubDate><atom:updated>2026-07-10T10:29:38.877Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thanjavur,தஞ்சாவூர்,தற்கொலை,Suicide</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/gsxxsz65/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/gsxxsz65/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சக்கராப்பள்ளி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவருடைய மனைவி அனீப்நிஷா (22 வயது). இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மாதத்துக்கு முன்பு அனீப்நிஷா கணபதி அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.</p><p>நேற்று முன்தினம் ரியாஸ் அகமது தனது வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சிக்காக உறவினர்கள் வந்திருப்பதாக கூறி அனீப்நிஷாவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். விசேஷ நிகழ்ச்சிகள் முடிந்து இரவு 10 மணிக்கு மேல் அனீப் நிஷாவை அவருடைய தாயார் வீட்டில் ரியாஸ் அகமது அழைத்துச்சென்று விட்டுள்ளார்.</p><p>இந்த நிலையில் வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் அனீப்நிஷா சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதைப் பார்த்து பதறிப்போன அவருடைய தாயார் பரிதா உடனடியாக அனீப்நிஷாவை அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைகு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p><p>இதுகுறித்து பரிதா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனீப்நிஷாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கும்பகோணம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.</p><p>திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோயம்புத்தூரில் மனித, வனவிலங்கு மோதல் குறித்த திறன்சார் மையத்தை தொடங்கி வைத்தார்- பூபேந்தர் யாதவ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhupender-yadav-inaugurated-a-centre-of-excellence-on-human-wildlife-conflict-in-coimbatore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhupender-yadav-inaugurated-a-centre-of-excellence-on-human-wildlife-conflict-in-coimbatore#comments</comments><guid isPermaLink="false">5aa4628d-160e-4fee-9999-39195c5ecb54</guid><pubDate>Fri, 10 Jul 2026 10:12:11 +0000</pubDate><atom:updated>2026-07-10T10:12:11.458Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோயம்புத்தூர்,நிகழ்ச்சி,Union Minister Bhupender Yadav,மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ்,function</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/zbsjkzmi/buvendra-singh.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மந்திரி  பூபேந்தர் யாதவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/zbsjkzmi/buvendra-singh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர்,</p><p>கோயம்புத்தூரில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை மையத்தில் இன்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் மனித  வனவிலங்கு மோதல் குறித்த திறன்சார் மையத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை மந்திரி  <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D">பூபேந்தர் யாதவ்</a> தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, மனித வனவிலங்கு மோதல் குறித்த தேசிய பயிலரங்கையும் அவர் தொடங்கி வைத்தார்.</p><p><strong>இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மந்திரி தெரிவித்ததாவது:-</strong></p><p> சிறு, சிறு குடியிருப்புகள், நில பயன்பாட்டு முறையில் மாற்றம், மனித செயல்பாடுகளின் விரிவாக்கம் போன்றவற்றால் மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரிப்பது, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சவால்களாக மாறியுள்ளது. நமது அணுகுமுறை என்பது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீர்வு சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, பிரச்சனையை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது.</p> <h2>விழிப்புணர்வு</h2><p>புலிகள், சிறுத்தைகள், யானைகள் சரணாலயங்களுக்கு வெளியே மனிதர்களுடன் அவற்றுக்கு ஏற்படும் மோதல்களை தடுக்க கொள்கை ஒன்றை உருவாக்குவதில் இந்த நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும். மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நகர்ப்பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் இயக்க ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். </p><p>இவ்வாறு அதில் கூறினார்.</p><p> இதில் நாடு முழுவதிலுமிருந்து கொள்கை வகுப்பாளர்கள், வன நிர்வாகிகள், அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணைமந்திரி  கீர்த்திவர்தன் சிங் பங்கேற்றார்.</p> ]]></content:encoded></item><item><title>கரூர் துயரத்தின்போது உதவி செய்தவர்கள் யார், ஓடிப்போனவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-know-who-helped-and-who-fled-during-the-karur-tragedy-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-know-who-helped-and-who-fled-during-the-karur-tragedy-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">c348ae90-2fea-442c-a641-ce8467c2c3df</guid><pubDate>Fri, 10 Jul 2026 09:50:49 +0000</pubDate><atom:updated>2026-07-10T09:50:49.386Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Karur Stampede,கரூர் கூட்டநெரிசல்,கனிமொழி,Kanimozhi,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/40j0ygz6/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/40j0ygz6/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடியில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்த ஆட்சியில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எந்த இடத்திற்கு போகக்கூடாதோ அந்த இடத்திற்கே தொடர்ந்து சென்று, அங்கிருக்கக்கூடிய மக்களுக்கு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று அங்கே இருக்கக்கூடிய குழந்தைகளின் மனநிலையை பாதிக்கக்கூடிய அளவிற்கும், அவர்களுக்கு மன உளைச்சலை தரக்கூடிய அளவிற்கும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.</p><p>இதையெல்லாம் தாண்டி முதல்-அமைச்சரும் அதை செய்யும் பொழுது, இந்த ஆட்சி எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. முதல்-அமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் அவர்களுக்கென பொறுப்புகள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நான் கரூர் துயரம் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. ஏனென்றால், இது போன்ற துயர சம்பவம் குறித்து பேசுவதை பொறுப்புணர்வுடன் தவிர்ப்பதே நல்லது. </p><p>ஏனெனில் விசாரணையில் இருக்கக்கூடிய விஷயம் குறித்து பேச வேண்டாம் என்ற பொறுப்புணர்வு எனக்கு இருப்பதனால் கரூர் துயர சம்பவம் பற்றி நான் பேசாமல் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், கரூர் துயரத்தின்போது மக்களோடு நின்றவர்கள் யார், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் யார், மக்களை தவிக்க விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிப்போனவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை நகரமா?.. மக்களின் நேரத்தை விழுங்கும் நரகமா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chennai-a-city-a-hell-that-devours-peoples-time-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chennai-a-city-a-hell-that-devours-peoples-time-velmurugan#comments</comments><guid isPermaLink="false">d84e5f1a-aae7-43a5-9faa-8911be547a0d</guid><pubDate>Fri, 10 Jul 2026 09:39:22 +0000</pubDate><atom:updated>2026-07-10T09:39:22.100Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Velmurugan,வேல்முருகன்,Chennai City,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்,சென்னை நகரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/awt91xlg/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/awt91xlg/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகரம் இன்று வாழத் தகுதியான நகரமாக இருக்கிறதா? அல்லது தினசரி நரக வேதனையை அனுபவிக்கும் முடிவில்லா காத்திருப்புப் பகுதியாக மாறி இருக்கிறதா? என்ற நியாயமான கேள்வி, ஒட்டுமொத்த மக்கள் மனங்களிலும் எழுந்துள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது;-</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில், தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் செலவிட வேண்டிய பொன்னான நேரங்கள், இன்று சென்னையின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களில் கரைந்து கொண்டிருக்கிறது. </p><p>பள்ளி, கல்லூரி செல்லும் ஒரு மாணவன் தன் அறிவு வளர்ச்சிக்காக எடுத்துச் செல்லும் புத்தகச் சுமையை விட, போக்குவரத்து நெரிசலின் மன உளைச்சல் சுமையையே அதிகமாகச் சுமக்கிறான். ஒரு தொழிலாளி தன் உழைப்பின் வியர்வையைச் சுவாசிப்பதற்கு முன்பாக, வாகனங்கள் கக்கும் நச்சுப் புகையைத்தான் சுவாசிக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.</p><p>அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், சிக்னல்களில் மக்களின் உயிரையே பறிக்கும் அச்சத்தில் காத்துக் கிடக்கின்றன. இது வெறும் போக்குவரத்துச் சிக்கல் அல்ல. முழுக்க முழுக்க நிர்வாகத் திட்டமிடலின் படுதோல்வி.</p><h2>எங்கே போனது தீர்வு?</h2><p>கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்திற்குப் பேருந்து நிலையத்தை மாற்றினால், சென்னையின் நெரிசல் குறையும் என்று அரசுத் தரப்பில் தம்பட்டம் அடிக்கப்பட்டது.  எங்கே அந்த மாற்றம்? எங்கே போனது மக்களின் நிம்மதி?</p><p>ஒருபுறம் முறையான வழிகாட்டுதல்கள் இன்றிக் கிளாம்பாக்கம் திணறுகிறது. மறுபுறம், ஆம்னி பேருந்துகள் இன்னும் கோயம்பேடு பகுதிக்கே வந்து செல்வது போன்ற குளறுபடிகள் தொடர்கின்றன. </p><p>நகரம் முழுவதும் ஒரே நேரத்தில் மெகா திட்டங்கள் என்ற பெயரில் மெட்ரோப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், சாலைத் தோண்டல்கள் என, எவ்வித மாற்றுப்பாதைத் திட்டமிடலும் இன்றி மக்களின் பொறுமை தினந்தோறும் சோதிக்கப்படுகிறது.</p><h2>உண்மையான வளர்ச்சி அல்ல!</h2><p>சென்னை மட்டுமே தமிழ்நாடா?  வளர்ச்சிப் பரவலாக்கல் எங்கே? தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் ஏன் இன்னும் சென்னை என்ற ஒரே ஒரு நகரத்தின் தோள்களில் மட்டுமே சுமத்தப்படுகிறது?</p><p>புதிய தொழிற்சாலைகள், பன்னாட்டுப் பெருநிறுவன அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள், மெகா முதலீடுகள் என எல்லாமே சென்னையை நோக்கியே இருக்கிறதே, ஏன்?, </p><p>ஒவ்வொரு புதிய நிறுவனமும் சென்னையில் திறக்கப்படும் போதும், இன்னும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஆயிரக்கணக்கான </a>வாகனங்களும், இலட்சக்கணக்கான மக்களும் இந்த நகரின் சாலைகளில் தான் வந்திறங்குகிறார்கள். இது உண்மையான வளர்ச்சி அல்ல! ஒரே ஒரு நகரத்தின் மீது ஒட்டுமொத்தச் சுமையையும் ஏற்றி, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும், உரிமைகளையும் பறிக்கும் அபாயகரமான வளர்ச்சி முறை.</p><p>திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, வேலூர் போன்ற பிற முக்கிய நகரங்களில் ஏன் அதே அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படக் கூடாது?  வேலைவாய்ப்புகள் மக்களைத் தேடிச் செல்ல வேண்டுமே தவிர, மக்கள் ஏன் வாழ்நாள் முழுக்கச் சென்னை என்ற ஒற்றை நகரத்தை நோக்கி ஓடி வர வேண்டும்?</p><h2>பிரச்சினை தீராது</h2><p>சென்னையின் சாலைகளை அகலப்படுத்துவதால் மட்டும் இங்குள்ள அடிப்படைப் பிரச்சினை தீராது. மாறாக, தமிழகத்தின் வளர்ச்சியின் பாதையை அகலப்படுத்த வேண்டும். சென்னையில் ஆமை வேகத்தில் நடக்கும் மெட்ரோ மற்றும் இதர உள்கட்டமைப்புப் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பணிகளை </a>உரிய மாற்றுப்பாதைகளுடன், போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும். சென்னையை மட்டுமே மையமாகக் கொண்டு குவியும் முதலீட்டுக் கொள்கையைக் கைவிட வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சமச்சீராகப் பரவலாக்கப்பட்ட புதிய வளர்ச்சித் திட்டங்களை, அரசு உடனடியாக உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டவிரோதமான கடத்தல்களுக்கு, மையப்புள்ளியாகும் தமிழ்நாடு - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-is-a-hub-for-illegal-smuggling-nainar-nagendran-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-is-a-hub-for-illegal-smuggling-nainar-nagendran-alleges#comments</comments><guid isPermaLink="false">fd3acc27-123f-4f16-a955-cc459702cb23</guid><pubDate>Fri, 10 Jul 2026 09:31:19 +0000</pubDate><atom:updated>2026-07-10T09:31:19.206Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagenthran</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xvcdmhl7/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/xvcdmhl7/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கோவை திருமலையாம்பாளையம் அருகேயுள்ள குடோனில், நமது மத்திய அரசு நலத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் வழங்கப்படும் உர மூட்டைகள், டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்படும் உர மூட்டைகள், தமிழகத்தில் பதுக்கி வைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட பின்பு கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்லப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகின்றன. </p><p>அதுமட்டுமன்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற சட்டவிரோதமான கடத்தல்களுக்கு, தமிழகத்தை ஓர் “மையப்புள்ளி”யாக உபயோகிக்குமளவிற்கு நமது அரசு இயந்திரம் “corrupt” ஆகிக் கிடப்பது உள்ளபடியே வருத்தமளிக்கிறது. இத்தகைய சட்டவிரோதச் செயலை முந்தைய திமுக அரசும், தற்போதைய தவெக அரசும் கவனிக்கத் தவறிவிட்டன என்பது அவர்களின் நிர்வாகத் தோல்வியைத்தான் குறிக்கிறது.</p><p>எனவே, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட குடோனின் உண்மையான உரிமையாளர் யார்? பின்புலங்களை முறையாக ஆராயாமல் இத்தகைய குடோனிற்கு அரசு எப்படி அனுமதி வழங்கியது? இதுவரை எத்தனை டன் உர மூட்டைகள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டு, கைமாற்றப்பட்டன? தமிழகத்திற்கு வழங்கப்படும் உர மூட்டைகளும் இதில் பதுக்கப்பட்டுள்ளனவா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் ஜோசப் விஜய் அரசு பதிலளிக்க வேண்டும். </p><p>மேலும், தமிழகத்தில் தன்னிச்சையாக இயங்கும் தனியார் குடோன்களில் உடனடியாக சோதனைகள் மேற்கொண்டு, இதுபோன்று சட்டவிரோதமான செயல்கள் ஏதேனும் நடக்கின்றனவா என்பதை அரசு கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர் அருகே தபால் அலுவலக கட்டிடம் சீரமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-of-post-office-building-near-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-of-post-office-building-near-tiruppur#comments</comments><guid isPermaLink="false">af40c405-d259-4b51-bb95-12622698248f</guid><pubDate>Fri, 10 Jul 2026 09:21:31 +0000</pubDate><atom:updated>2026-07-10T09:21:31.716Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,சீரமைப்பு,Post Office-தபால் அலுவலகம்,Renovation,கட்டிடம் building</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/b33rriae/post-office.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தபால் அலுவலக கட்டிடம் சீரமைப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/b33rriae/post-office.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அருள்புரம், </p><p>திருப்பூர் அருகே கணபதிபாளையத்தில் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தில் கிளை தபால் அலுவலகம் கடந்த 1980 - ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை, பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், மாதேஸ்வரன் நகர், எஸ்.ஆர்.சி. காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஏராளமானபொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கணக்கு வைத்துள்ளனர். </p> <h2>பொதுமக்கள் கோரிக்கை</h2><p>இதேபோல், சேமிப்பு திட்டங்கள், காப்பீட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த கிளை தபால் அலுவலக கட்டிடத்தின் மேல் பகுதியில் "இந்திராகாந்தி மகளிர் சுய உதவி குழு, அரிசி மண்டி மற்றும் மளிகை கணபதிபாளையம்" என்று எழுதப்பட்டு இருந்தது. இதன் காரணமாக இது தபால் அலுவலகமா? அல்லது அரிசி மண்டியா? என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு வந்தது. எனவே இதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.</p> <h2>மக்கள் நன்றி</h2><p> மேலும் இதுகுறித்த செய்தி<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E2%80%98%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E2%80%99%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20"> ‘தினத்தந்தி’யில்</a> படத்துடன் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக,  கணபதிபாளையம் கிளை அஞ்சலகம் என்று எழுதப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதையடுத்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கோயம்புத்தூரில் இருந்து லெய்ப்ஜிக் வரை.. ஒரு ரேசரின் பயணம்</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/gd-naidu-invention-from-coimbatore-to-leipzig-a-racers-journey</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/gd-naidu-invention-from-coimbatore-to-leipzig-a-racers-journey#comments</comments><guid isPermaLink="false">0673dd8e-44a0-4fca-99e0-3b23528b866b</guid><pubDate>Fri, 10 Jul 2026 09:18:04 +0000</pubDate><atom:updated>2026-07-10T09:18:04.071Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜி.டி.நாயுடு,G.D.N movie,G.D.Naidu,GDN Movie</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/qqihbyuh/Rasant-Electric-Razor.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/qqihbyuh/Rasant-Electric-Razor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்பு செய்திகள்</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஒரு இந்திய கண்டுபிடிப்பாளர் பொறியியல் பட்டம்கூட இல்லாமல், நாட்டிலேயே முதல் முறையாக மின்சார ரேசரை, உருவாக்கி அதற்கு ஜெர்மனியில் கைத்தட்டலையும் பெற்றார்.</p><p>கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஜிடி நாயுடு அறிவியல் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்தால் அந்த ஹாலின் அளவுதான், நாம் முதலில் கவனிக்கும் விஷயமாக இருக்கும். அதில் உள்ள பொருட்கள் ஒரு தொழில் முன்னோடிக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் எவ்வளவு படாடோபமாக வைக்கப்பட்டிருக்க வேண்டுமோ அப்படி இருக்காது. வெல்வெட் விரிப்புகள் இருக்காது. வண்ணமயமான விளக்குகளும் இருக்காது. அந்த ஷோகேஸ்கள் மிகவும் பழையதாக காட்சியளிக்கும்.</p><p>அதில், மின்சார மோட்டார், மண்ணெணெயில் இயங்கும் காற்றாடி உள்ளிட்ட விதவிதமான பொருட்களின் நடுவே சற்றும் முக்கியத்துவம் அற்ற வகையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு பொருளை காணலாம். மிகவும் ஒல்லியாக, கையால் தயாரிக்கப்பட்டு கூர்தீட்டப்பட்டிருக்கும் ஒரு ரேசர் (சவரக் கருவி) இருக்கும். அதின் ஸ்டீல் பகுதியில் அந்த ரேசரை உருவாக்கியவர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.</p><h2>ரேசரின் பின்னால் உள்ள மனிதர்</h2><p>ஜி.டி. நாயுடு என நாட்டு மக்களால் அன்போடு அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு, 1893 இல் இன்று உள்ள கோயம்புத்தூரில் சில மணி நேர பயண தொலைவில் இருக்கும் கலங்கல் என்ற பகுதியில் பிறந்தார். சிறுவயதில் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். இதற்கு அவரை குறித்து வெளியான சுயசரிதைகளில் பல காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் பொறுமையற்று இருந்தார். அந்த கல்விக் கட்டமைப்பு அவருக்கு பொருந்தவில்லை. பேனாவை விட தன் கைகளே சிறந்ததாக அவருக்கு பட்டது. எனவே அவர் வேலைக்கு சென்றார். முதலில் பண்ணை வேலைக்கும் பின், ஜவுளி ஆலையிலும் பணியாற்றினார். அதன்பின் சொந்தமாக பஸ் ஒன்றை வாங்கி, மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள சிறிய வழித்தடத்தில் அதை அவரே டிரைவராக இருந்து ஓட்டி வந்தார்.</p><p>அதன் பின் ஒரு சில ஆண்டுகளில் அந்த டிரைவர், ஒரு பஸ் அதிபராக உருவெடுத்தார். அவரின் 20களின் பிந்தைய பகுதியில் யூனியன் மோட்டார் சர்வீஸ் என்ற போக்குவரத்து நிறுவனத்தை நடத்தினார். தென் இந்தியாவிலேயே மிகவும் ஆரம்பகட்டத்தில் இயங்கி வந்த போக்குவரத்து நெட்வொர்க் அவருடையது ஆகும். பஸ் தொழில் அவருக்கு இன்ஜின்களை பற்றிய அறிவை தந்தது. இன்ஜின்கள்,  பொருட்களை வரையும் கருவி மேலான ஆர்வத்தை தூண்டியது. அந்த கருவி பின்னர் தொழிற்பட்டறைக்கு இட்டுச் சென்றது. அந்த தொழில்பட்டறை 1920களின் பிற்பகுதியிலும், 1930களின் முற்பகுதியிலும் மிகசிறந்த ஒன்றாக பரிணமித்தது. ஒரு நபர் தொழில்பட்டறையான அது, பெரிய படிப்பு எதுவும் தேவைப்படாத உள்ளூர் பொறியியலை மையமிட்டு இயங்கியது. கோயம்புத்தூர் ஒரு உற்பத்தி தலைநகரமாக மாறும் என்று அப்போது யாரும் கற்பனை செய்திருக்க முடியாது.</p><p>தன் தொழில் வாழ்க்கை முழுக்க நாயுடுவுக்கு இருந்த அந்த உள்ளுணர்வு  மிகவும் எளிமையுடன் இருந்தது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருளையும் பார்த்து அவருக்கு ஒரு கேள்வி தான் எழுந்தது, "இதை ஏன் இந்தியாவிலேயே செய்யக்கூடாது?” என்ற கேள்விதான் அது. ஏன் ஜவுளி இயந்திரத்தை லான்சசைரில் (இங்கிலாந்து) இருந்து இறக்குமதி செய்யவேண்டும், அதை கோயம்புத்தூரிலேயே ஏன் செய்ய கூடாது? ஒரு மின்சார மோட்டாருக்காக ஏன் வெளிநாட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும்? 1937இல் வளர்ந்து வரும் இந்திய தொழில்சாலைகள் பயன்படுத்துவதற்காக கோயம்புத்தூரிலேயே தொழிற்பட்டறையில் உருவாக்கப்படும் பொருட்களை வைத்து ஏன் அதை உருவாக்க கூடாது?  </p><p> இதுபோல அவருக்கு இருந்த இந்த தீராத தேடல் தான், 1930களின் பிற்பகுதியில் அவரது ஆர்வத்தை ஒரு சிறிய பொருளை நோக்கி நகர்த்தியது. அவரது கழிவறையில் இருந்த ஒரு சேஃப்டி ரேசர் அது.</p><h2>நாயுடு கண்ட பிரச்சனை என்ன?</h2><p>1930 மற்றும் 40களில் இந்திய வீடுகளில் இருந்த ஷேவிங் ரேசர் என்பது இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருள். அதிலும் அமெரிக்காவில் இருந்து வரும் ஜில்லெட், இங்கிலாந்தில் இருந்து வரும் வில்கின்சன் சுவார்ட், ஜெர்மனியில் இருந்து வரும் ராட்பார்ட் ஆகிய சிறந்த ரேசர்கள், ஒரு சராசரி இந்தியனுக்கு எட்டாக்கனியாவே இருந்து வந்தது. மலிவு விலையில் கிடைத்தவை மிகவும் கரடுமுரடாக, பாதுகாப்பு இன்றி, மொன்னையாக இருந்தது. ஒவ்வொரு குடிமகனும் வீட்டில் தினமும் சவரம் செய்துகொள்ளும் ஒரு நாட்டில், கடன்வாங்கப்பட்ட பிளேடும், மிகச்சிறிய ரேசரும் ஒரு கசப்பான பொருளாதார உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியது. இந்தியா அப்போது சொந்தமாக தயாரிக்கத் தொடங்கவில்லை.  </p><p>எனவே அவர் எலக்ட்ரிக் பிளேடை கண்டுபிடித்தார். அது மிகவும் சிறியது. இருப்பினும் சரியான அளவில் கச்சிதமாக இருந்தது. இந்திய வாழ்க்கைமுறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள், இந்தியரின் கைகளால், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, வாங்கக்கூடிய விலையில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டால் அது எப்படி இருக்கும் என்று அவர் சிந்தித்தார். அந்த சிந்தனையின்மீது நம்பிக்கை வைத்து அவர் செயல்பட்டார். அவரின் நம்பிக்கைக்கு சிறந்த உதாரணம் அந்த ரேசர் தான்.  </p><h2>ரேசன்ட் ரேசர் கண்டுபிடிப்பு</h2><p>1935-36 இல் நாயுடுவின் தொழிற்பட்டறையில் இருந்து உருவான ரேசர், அதுவரை இந்தியாவில் உருவாக்கப்பட்ட வேறெதையும் போன்றது அல்ல. அந்த மின் ரேசரை அவர் ரேசன்ட் என அழைத்தார். அந்த பெயர் அதற்கு ஏற்ற கச்சிதமாக, அதன் வேகத்தையும், துல்லியத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. அதற்கு போட்டியாக இருந்தவை மிகவும் பளுவாக இருந்த நிலையில் அது மிகவும் மெலிதாக இருந்தது, கையடக்கமாக இருந்தது. நாயுடுவால் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்களால், அது உற்பத்தி செய்யப்பட்டது.</p><p>ரேசன்ட் உடைய முக்கிய பகுதி அதன் பிளேடும், சட்டகமும் தான். UMS பிளேட் என அழைக்கப்படும் பிளேட் தான் எல்லா ரேஸர்களிலும் முக்கியமான ஒன்று. எந்த கோணத்தில் வெட்ட வேண்டும், பயனர்களின் பாதுகாப்பு, சவரம் செய்வதற்கு சௌகர்யமாக இருப்பது என அனைத்தையும் அது தான் தீர்மானிக்கிறது.</p><p>நாயுடு தயாரித்த பிளேடு, அப்போதும் சரி இப்போதும் சரி, ஆசியாவில் உற்பத்தி செய்யப்பட்டதிலேயே மிகவும் மெல்லியதாகும். அது கைகளாலேயே துல்லியமாக செய்யப்பட்ட நேர்த்தியை ஐரோப்பாவில் இருந்து வந்து அதை சோதித்தவர்களே வியந்தனர்.</p><p>கோயம்புத்தூர் தொழிற்பட்டறையிலேயே செய்யப்பட்ட ரேசரின் சட்டகம் (பாடி), எடை குறைவாக, சமன்பாட்டுடன், குறிப்பாக அதை அசெம்பிள் செய்ய ஜெர்மனியில் உள்ளது போன்ற பெரிய தொழில்நுட்ப குழுவெல்லாம் தேவைப்படாத வகையில் உள்ளூர் தொழிலாளர்களே எளிதில் செய்துமுடிக்கும் வகையில் இருந்தது.</p><p>மின்சாரத்தால் இயங்கும் ரேசர் என்று நினைத்துப் பார்ப்பதே பெரிய விஷயமாக இருந்த அந்த காலத்தில் மின்சார சவரக் கருவியை வடிவமைத்து தயாரித்தது எல்லாம் வியக்கத்தக்க விஷயம். மோட்டார்களையும், மின்சாதனகளையும், தன் பழக்கவழங்களில் புதுமைகளையும் கூட வெளிநாட்டில் இருந்து பெறும் ஒரு நாட்டில் சத்தமே இல்லாமல் சொந்த தயாரிப்பு ஒன்று நிகழ்ந்தது, அதுவும் கோயம்புத்தூரில்.</p><p>ரேசன்ட்டை பொறுத்தவரை ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அப்படி ஒன்று இந்தியாவில் முதல் முறை உருவானது என்பதை விட, அது சிறப்பாகவும் இருந்தது என்பதுதான்.</p><h2>லெய்ப்ஜிக்  தலைவணங்கிய தருணம்</h2><p>லெய்ஜிகர் மெஸ்ஸே எனப்படும் ஜெர்மனியின் லெய்ப்ஜிக் நகரில் நடக்கும் வணிக பொருட்காட்சி, 8-க்கும் மேற்பட்ட நாடுகளை கொண்ட மத்திய ஐரோப்பாவிலேயே நடக்கும் மிகப்பெரிய தொழிற் காட்சி ஆகும். ஐரோப்பிய காலண்டர்படி, 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடக்கும் அந்த மிக முக்கியமான வணிக ஒன்றுகூடலில் ஐரோப்பிய கண்டம் முழுதும் இருக்கும் உற்பத்தியாளர்கள், தங்களின் சிறந்த பொருட்களை உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து பெருந்தொகை கொடுத்து வாங்குபவர்களுக்காக காட்சிப்படுத்துவர். எனவே லெய்ப்ஜிக்கில் ஒரு பொருளை காட்சிப்படுத்துவது என்பது மிகப்பெரிய விஷயம். லெய்ப்ஜிக்கில் வெற்றி பெறுவது என்பது, ஜெர்மன் பொறியியல் பாரம்பரியத்தில் நன்மதிப்பு பெற்ற கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் சிறு சமூகத்திற்குள் இடம்பிடிப்பதை குறிக்கிறது.  </p><p>1936, லெய்ப்ஜிக்கில், ஜிடி நாயடு தனது ரேசன்ட் ரேசரை அதன் பிளேடுடன் எடுத்துச் சென்று காட்சிப்படுத்தி கவனம் பெற்றார். ஜிடி நாயடு அறக்கட்டளை ஆவணகளின்படியும், வாய்மொழியாக 3 தலைமுறைகளாக கூறப்பட்ட வரலாற்றின் படியும் அந்த மின்சார ரேசர் அதன் ஒல்லியான, துல்லியமான நேர்த்தியான வேலைப்பாடு கொண்ட பிளெடுக்காக அங்கு போற்றப்பட்டது. இந்திய தொழில்துறைக்கு வெளிநாட்டில் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. லெய்ஜிக் மியூசியம் மற்றும் லெய்ப்பிஜர் கண்காட்சி ஆவண காப்பகத்தில் உள்ள ஆவணங்களை ஆராய்ந்ததன் மூலம் இந்த கண்டுபிடிப்பு அது காட்சிப்படுத்தப்பட்ட அதே ஆண்டில் கௌரவிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>அந்த காட்சியை சற்று கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஹால் முழுக்க ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பெரிய உற்பத்தியாளர்கள், தங்கள் பொருட்களை காட்சிப்படுத்துபவர்கள், அதை வாங்குபவர்கள் என நிறைந்திருக்கும், சுற்றிலும் ஜெர்மன் பாரம்பிய தொழில் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அந்த இடத்தில், மேடையில் இருப்பவர்களிடம் விருதுக்கு தேர்வான பொருள் குறித்த குறிப்பு செல்கிறது. அந்த குறிப்பில் உள்ள கண்டுபிடிப்பாளரின் ஊர் பெயரை கூட அங்கிருப்பவர்கள் இதன் முன் கேட்டிருக்க மாட்டார்கள். ஒரு மிகச்சிறிய இந்திய கருவி. கச்சிதமான முனைகளை கொண்ட ஒரு பிளேட். அறிவிப்பை கேட்டதும் ஜெர்மானியர்கள் எழுந்து நின்று கைத்தட்டும் அளவுக்கு ஒரு கண்டுபிடிப்பை கோயம்புத்தூரை சேர்ந்த அந்த கண்டுபிடிப்பாளர் வழங்கியிருந்தார்.</p><p>அந்த தருணம் சுதந்திரத்திற்கு பின்னான இந்தியாவின் தொழில் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மாறியது. அதை நாம் கற்றுத் தருவதில்லை. அதை நாம் பாடப்புத்தகத்தில் சேர்க்கவில்லை. அதை மெய்ப்பித்து காட்டிய மனிதனுக்கு ஒரு பாரத ரத்னாவோ, பத்ம விபூஷனோ வழங்கப்படவில்லை. நாடு தழுவிய ரசிகர்கள் அவருக்கு இல்லை. தமிழ்நாடு அவரை நினைவுகூர்கிறது. கோயம்புத்தூர் நினைவுகூர்கிறது. ஜெர்மனி அந்த பிளேடை கௌரவித்தது. ஆனால் இந்தியா வெறும் மௌனத்தையே பரிசாக தந்தது.  </p><h2>ஜிடி நாயுடுவின் நம்பிக்கை</h2><p>UMS ரேசர் பிளேடை பாராட்ட ஐரோப்பா வரிசைகட்டி வந்தது. ஆனால் இந்தியா மறந்தது. இந்த முரண்பாடு வெறும் தற்செயலானது அல்ல, அது ஒரு தொடர்ச்சி.  இந்தியா, சுதந்திரத்திற்கு பின் உலகின் உற்பத்தி தேசங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை போலல்லாமல் உள்நாட்டு பொறியியல் வளர்ச்சிக்கு காட்டிய பாராமுகத்தின் வலிமிகுந்த தொடர்ச்சி அது.</p><p>ரேசன்ட் பிளேட் சிறியது தான். பொருட்செலவை பொறுத்தவரையும் அது மலிவானது தான். ஆனால் அதன் சிக்கனமான தன்மை தான் அது பெருமளவில் உற்பத்தி செய்யப்படுத்தலுக்கும், உள்ளூரில் பொருளை சந்தைப்படுத்துதலுக்கும் சிறந்தது என தற்போதைய இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் மெச்சக்கூடிய ஒன்றாக உள்ளது. அதுவும் கோயம்புத்தூரில், பொறியியல் பட்டமே பெறாத ஒருவரால் அது கண்டுபிடிக்கப்பட்டது.  </p><p>கோயம்புத்தூர் இன்று இந்தியாவின் தற்சார்புள்ள தொழில் சங்கிலி கொண்ட நகரங்களில் ஒன்று. அதன் ஜவுளி சிறு குறு தொழில்கள் உலகுக்கே ஆடைகளை வழங்கி வருகிறது. அதன் சிறு உற்பத்தியாளர்கள் தான் ஒட்டுமொத்த இந்தியாவின் தானே இயங்கும் விநியோக சங்கிலியை உருவாக்கியுள்ளனர்.</p><p>அதன் பொறியியல் கல்லூரிகள், இந்தியாவுக்கு தேவையான திறமையான பொறியியலாளர்களை உருவாக்கி வருகிறது. இது எல்லாம் அதுவாக நடந்த ஒன்று அல்ல. இது ஜிடி நாயுடுவின் நம்பிக்கையால் உருவானது. நம்பிக்கை வைத்து மதித்தால் இந்திய தொழில்துறையும் உலக நாடுகளுக்கு ஈடாக உயரும் என்று அவர் வைத்த நம்பிக்கையின் நிழலில் விளைந்தவை இவை.</p><h2>அருங்காட்சியகத்தில் ரேசன்ட்</h2><p>உங்களால் இன்னும் அந்த நம்பிக்கையின் சின்னத்தை பார்க்க முடியம். கோவையில் உள்ள ஜிடி நாயுடு அறிவியல் அருங்காட்சியகத்தில் அவர் கண்டுபிடித்த அசல் ரேசன்ட் ரேசர் இன்னும் இருக்கிறது. அவர் கண்டுபிடித்த மற்ற சிறிய சிறிய அதியசங்களுக்கு நடுவே அது உள்ளது. 1937இல் அவர் கண்டுபிடித்த மின் மோட்டார், மண்ணெண்ணையில் இயங்கும் விசிறி, யுஎம்எஸ் ரேடியோ, வாக்குப்பதிவு இயந்திரம், ஜவுளி சாதனம் ஆகியவற்றின் நடுவே அந்த ரேசரும் இருக்கிறது. 1960 முதல் இந்த அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்கு திறந்தே உள்ளது.</p><p>நாட்டில் உள்ள வித்தியாசமான தொழில்துறை அருங்காட்சியகங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. பகுதியளவு அவரின் வாழ்க்கை வரலாற்றை  காட்சிப்படுத்துவதாகவும், பகுதியளவு அவர் கண்டுபிடித்த பொருட்களை காட்சிப்படுத்துவதாகவும், உயிரோடு இருக்கும்போது நாடு மதிப்பளிக்க மறந்துவிட்டுட்ட ஒருவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் அந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.  </p><p>ஜிடி நாயுடுவின் வாழ்க்கைக் கதையின் பகுதிகளை சொல்லும் படம் வரும் 17-ம் தேதி வெளியாகிறது. ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு...  <a href="https://events-dailythanthi.com/gdn/">https://events-dailythanthi.com/gdn/</a></p>]]></content:encoded></item><item><title>பாதுகாப்பை மீறி..முதல்-அமைச்சரின் வாகன அணியில் புகுந்த தொண்டரால் பரபரப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-volunteer-who-entered-the-chief-ministers-motorcade-caused-a-stir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-volunteer-who-entered-the-chief-ministers-motorcade-caused-a-stir#comments</comments><guid isPermaLink="false">e0f6da2a-2c99-4967-97d9-b9992ff7c8cd</guid><pubDate>Fri, 10 Jul 2026 09:11:23 +0000</pubDate><atom:updated>2026-07-10T09:11:23.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,கரூர்,விஜய்,Karur,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/wlxuj64r/vijayone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/wlxuj64r/vijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>முதல்-அமைச்சரான பிறகு விஜய் இன்று முதல்முறையாக கரூர் சென்றுள்ளார். கடந்த ஆண்டு கரூர் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கினார்.</p><p>இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், சாலை வழியாக கரூர் சென்றார்.</p><p>கரூர் செல்லும் வழியில் ஆங்காங்கே தவெகவினரும், மக்களும் கூடி <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முதல்-அமைச்சர் விஜய்</a>யின் கார் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.</p><p>திருச்சியிலிருந்து கரூர் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஆங்காங்கே காரை மெதுவாக இயக்கி, மக்களின் வரவேற்பை முதல்-அமைச்சர் ஏற்றார்.</p><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் வாகன அணிக்குள் பாதுகாப்பை மீறி, தொண்டர் திடீரென்று உள்ளே நுழைந்ததால் பதற்றம் நிலவியது.</p><p>இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படை வீரர்கள், உடனடியாக தவெக தொண்டரை அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்க உடனே நடவடிக்கை தேவை! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-is-needed-to-protect-the-livelihood-of-srivilliputhur-weavers-nayinar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-is-needed-to-protect-the-livelihood-of-srivilliputhur-weavers-nayinar-nagendran#comments</comments><guid isPermaLink="false">0ff762f1-292b-4c64-8805-b4f7bb3a5551</guid><pubDate>Fri, 10 Jul 2026 09:04:04 +0000</pubDate><atom:updated>2026-07-10T09:04:04.421Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Nayinar Nagendran,ஸ்ரீவில்லிபுத்தூர்,Srivilliputhur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/sw5wnr9d/Untitled-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/sw5wnr9d/Untitled-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்க உடனே நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>போராடும் நெசவாளர்கள்</h2><p>கைத்தறி நெசவுத் தொழில் மூலம் தமிழக மக்களுக்குப் புத்தாடை நெய்து தரும் நெசவாளர்கள், தங்களின் பசிப்பிணியைப் போக்கிக்கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சித் தொட்டி திறந்து போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது நெஞ்சை உலுக்குகிறது. கடந்த இரண்டு மாதங்களாகக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நூல் வழங்கப்படாததால், 5,000-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன.</p><p>வயிற்றுப் பிழைப்புக்கே வழியின்றித் தவிக்கும் நெசவாளர்கள் மீது, பொங்கல் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பண்டிகைக்கான </a>புதிய ரக சேலை என்ற கூடுதல் சுமையை ஜோசப் விஜய் அரசு திணித்துள்ளது. இந்தப் புதிய ரகத்திற்கு ஏற்ப தறிகளை மாற்றியமைக்க ரூ.10,000 வரை கூடுதல் செலவாவதோடு, ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.</p><h2>கோரிக்கைகளை நிறைவேற்றுக</h2><p>அதிகாரிகள் தற்காலிக வாக்குறுதி அளித்துள்ளபோதிலும், நெசவாளர் குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்க முதல்-அமைச்சர் விஜய் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாத கால வேலையிழப்பிற்குத் தலா ரூ.10,000 நிவாரண உதவியும், உரிய சம்பள உயர்வும் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உடனடியாக மீட்க வேண்டும். நெசவாளர்களை மீண்டும் கஞ்சித் தொட்டி திறக்கும் நிலைக்குத் தள்ளாமல், தங்குதடையற்ற நூல் விநியோகத்தையும், அவர்களின் நியாயமான <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோரிக்கைகளையும் </a>தவெக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/moderate-rain-likely-in-19-districts-of-tamil-nadu-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/moderate-rain-likely-in-19-districts-of-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">53c1301f-514a-46eb-85d0-07c179469f62</guid><pubDate>Fri, 10 Jul 2026 09:00:38 +0000</pubDate><atom:updated>2026-07-10T09:00:38.808Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்ன்றிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/zedyk11u/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/zedyk11u/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.</p><p>சுமார் 1.5 கி.மீ. முதல் 3.1 கி.மீ. உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) தெலங்கானாவிலிருந்து கர்நாடக கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை நிலவுகிறது.</p><p><strong>10-07-2026:</strong> நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>11-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p><p><strong>12-07-2026 முதல் 14-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>10-07-2026 மற்றும் 11-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>12-07-2026 முதல் 14-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் சற்று உயரக்கூடும்.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>10-07-2026 மற்றும் 11-07-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><p><strong>12-07-2026 முதல் 14-07-2026 வரை:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் உயர்ந்தும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தீ விபத்து ஏற்பட்ட ஆலங்குளம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் ஆய்வு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/food-minister-inspects-alangulam-government-paddy-procurement-centre-after-fire-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/food-minister-inspects-alangulam-government-paddy-procurement-centre-after-fire-accident#comments</comments><guid isPermaLink="false">353261aa-763b-46eb-b64b-d03d23e5185d</guid><pubDate>Fri, 10 Jul 2026 08:56:36 +0000</pubDate><atom:updated>2026-07-10T08:56:36.550Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,தென்காசி,நெல் கொள்முதல் நிலையம்,Paddy Procurement Centre,உணவுத்துறை அமைச்சர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/i6dzdw88/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/i6dzdw88/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தென்காசி,</p><p><a href="https://www.dailythanthi.com/">தென்காசி </a>மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாம்கட்டளை கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. </p><h2>தீ விபத்து</h2><p>இங்கு மாவட்டம் முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டிருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் நெல் மூடைகள் தனித்தனியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 7ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் சேதமடைந்தன. </p><h2>அமைச்சர் ஆய்வு</h2><p>இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட ஆலங்குளம் ஐந்தாம் கட்டளை அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று ஆய்வு செய்தார். அப்போது, தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உடன் இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>தோரண மலையில் 2000 விதைப்பந்துகள் விதைக்கும் விழா </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/event-to-sow-2000-seed-balls-at-thorana-malai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/event-to-sow-2000-seed-balls-at-thorana-malai#comments</comments><guid isPermaLink="false">2241a110-e031-4eae-bc32-f90046951d66</guid><pubDate>Fri, 10 Jul 2026 08:53:55 +0000</pubDate><atom:updated>2026-07-10T08:53:55.678Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoranamalai,தோரணமலை,விதை திருவிழா,Seed festival,Girivalam Path,கிரிவல பாதை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/aotddlic/seed-ball.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தோரணமலை  2000 விதைப்பந்துகளை வீசும் விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/aotddlic/seed-ball.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தோரண மலையில் 2000 விதைப்பந்துகள் விதைக்கும் விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இயற்கை எழில் சிறந்த பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள குன்றின் மீது குமரன் அமர்ந்திருக்கும் இயற்கையான குகைக்கோயில் ஆகும் இது இக்கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பழமையும் பெருமையும் உடையதாகும்.</p><h2>லட்சம் மரக்கன்றுகள்</h2><p>இயற்கையை பேணும்  வண்ணம் இக்கோவிலில் 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் மேலும் கிரிவல பாதை முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வைப்பதென முடிவு செய்யப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டு வருகிறது.</p><p> 2000 விதைப்பந்து</p><p>இந்நிலையில் தோரணமலை கோயில் நிர்வாகம் மற்றும் மழை நண்பர் குழு மற்றும் குற்றாலம் சாதனா ரோட்டரி கிளப் ஆகியோருடன் கலந்து கொண்டு  செந்தில் ஆண்டவர் பாலிடெக்னி மாணவர்கள்  கலந்து கொண்டு தோரணமலை சுற்றிலும் 2000 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">விதைப்பந்துகளை வீசும் விழா</a> என்று நடைபெற்றது.</p> <h2>நிகழ்ச்சி</h2><p>விழாவில் மழை நண்பர்கள் குழு நிறுவன தலைவர் சுந்தர மகேஷ் மற்றும் தலைவர் கிருஷ்ணவேணி பொருளாளர் அன்சாரி .மற்றும் குற்றாலம் சாதனா ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டு விதை பந்துகளை வீசினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்து இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி பழனிசாமியின் திசைதிருப்பும் அரசியலை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-will-never-accept-edappadi-palaniswamis-deviant-politics-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/people-will-never-accept-edappadi-palaniswamis-deviant-politics-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">1cf7ebcd-93ed-42c1-9ab1-88dff90f52f9</guid><pubDate>Fri, 10 Jul 2026 08:45:29 +0000</pubDate><atom:updated>2026-07-10T08:45:29.968Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,Edappadi Palaniswami,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,EPS,Manickam Tagore MP,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/jdlhz5vb/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/jdlhz5vb/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>காவிரி விவகாரம்</h2><p>தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயிகள் தண்ணீரின்றித் தவித்து வரும் வேளையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டிய முழுப் பொறுப்பும், அதிகாரமும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே (CWMA) உள்ளது. தார்மீகப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் CWMA உடனடியாகச் செயல்பட்டு தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும். அண்டை மாநிலமான கர்நாடகாவும் இந்த சட்டப்பூர்வ உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.</p><p>இந்த காவிரி விவகாரத்தில், இது காங்கிரசுக்கு எதிராக காங்கிரஸ் என்ற அரசியல் விவாதம் அல்ல. இது தமிழகத்திற்கு எதிராக கர்நாடகம் என்பதாகும். விவசாயிகளின் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தமிழக காங்கிரஸ் பேரியக்கம் என்றும் தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், நமது விவசாயிகளின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நலனுக்காகவும் </a>உறுதியுடன் துணை நிற்கும்.</p><h2>இரட்டை நிலைப்பாடு ஏன்?</h2><p>அரசியல் லாபத்திற்காக மற்றவர்களைப் பழிசுமத்தும் அரசியலைத் தூண்டும் பழனிசாமியே, உங்களின் இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்? தமிழகத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசி வரும் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் அசோகா உள்ளிட்ட பாஜகைவினரை மவுனமாக்க உங்கள் கூட்டாளியான பிரதமர் மோடியை நோக்கி ஏன் நீங்கள் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை?</p><p>மத்தியில் ஆளும் உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜக விடமும், பிரதமரிடமும் தமிழகத்தின் உரிமைக்காகத் துணிவோடு குரல் எழுப்பத் தயங்குவது ஏன்? பிரதமரின் தலையீட்டைக் கோரி தண்ணீரைப் பெற்றுத் தர அழுத்தம் கொடுக்காமல், இங்கு வெற்று அரசியல் விமர்சனங்களை முன்வைப்பது உங்களின் இரட்டை நிலையைத் தான் அம்பலப்படுத்துகிறது.</p><h2>பயந்து நடுங்குவது ஏன்?</h2><p>புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் தாங்கி, செல்வி ஜெயலலிதாவால் துணிவோடு வழிநடத்தப்பட்ட ஒரு பேரியக்கத்தின் இன்றைய நிலை என்ன? மக்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டத் தவறிவிட்டு, மத்தியில் உள்ளவர்களிடம் பணிந்து போய், மோடிக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பேச பயந்து நடுங்குவது ஏன்?</p><p>உங்களின் இந்த பயமும், அடிமைத் தனமுமே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கட்சியை இன்று கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து அழித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் உரிமைகளை அடகு வைத்து, கட்சியை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் உங்களின் இந்த திசைதிருப்பும் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அரசியலைத் </a>தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“எம்.ஜி.ஆரைப் போலவே விஜய்யின் தலைமையும்..” - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகழாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/just-like-mgr-vijays-leadership-former-minister-mr-vijayabhaskar-heaps-praise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/just-like-mgr-vijays-leadership-former-minister-mr-vijayabhaskar-heaps-praise#comments</comments><guid isPermaLink="false">59895272-e154-4ed9-b202-9777c4cf5cdd</guid><pubDate>Fri, 10 Jul 2026 08:37:31 +0000</pubDate><atom:updated>2026-07-10T08:37:31.604Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,கரூர்,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,Karur,MGR,எம்.ஆர்.விஜயபாஸ்கர்,எம்.ஜி.ஆர்.,CM Vijay,M.R.Vijayabaskar</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/h344ysif/klere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/h344ysif/klere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p> <p>தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்துபோனார்கள். இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டது. </p><p>இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று கரூர் வந்தார். இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையும் இன்று நடைபெற்றது. அவர்களுக்கு தற்காலிக பணி வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். </p><p>இந்த நிலையில், கரூரில் உள்ள அட்லஸ் அரங்கத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூருக்கு காரில் வருகை தந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். </p><h2>தளபதி விஜய் பின்னால்</h2><p>அந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  பேசியதாவது:-</p><p>கடந்த திமுக ஆட்சியில் நிலவிய பொருளாதார நெருக்கடி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட சவால்களை தூள்தூளாக நொறுக்கி, தமிழகத்தில் ஒரு பாதுகாப்பான தூய ஆட்சியை வழங்கக்கூடிய தளபதி விஜய் பின்னால், நானும் அதிமுக தொண்டர்களும் இணையத் தொடங்கிவிட்டோம்.</p><h2>கனவா? இல்லை நனவா?</h2><p>நாங்கள் கட்சியில் இணைந்த அடுத்த நாள் முதல்வருடன் 2 மணிநேரம் சந்திப்பு நடந்தது. உடம்பெல்லாம் சிலிர்க்கும்படி அந்த நிகழ்வு இருந்தது. என் மேல் கை போடும்படி ஒரு போட்டோ வேண்டும் என்று கேட்டேன். உடனே அதை எடுத்து கொடுத்தார். கனவா நனவா என்றே தெரியவில்லை.</p><h2>எம்.ஜி.ஆர் பாதை விஜய் பயணம்  </h2><p>எம்ஜிஆரைப் போலவே விஜய்யின் தலைமையையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும், இனி தமிழகம் விஜய்யின் கையில்தான் இருக்கும். புரட்சி தலைவரின் அன்பு, புரட்சி தலைவியின் வீர‌ம் கொண்டவர் விஜய். இந்தியாவே திரும்பி பார்க்கும் வரலாறு படைத்தவர் CM விஜய். பணம் இருந்தால் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற மன கோட்டையை உடைத்த‌வர். </p> <h2>இனி உங்கள் காலம்</h2><p>அரசியல் தெரியுமா என விமர்சிக்கப்பட்ட எம்ஜிஆர் இறுதிவரை முதல்-அமைச்சராக இருந்தார். இனிமேல் தமிழகத்தில் தளபதி ஆட்சிதான். </p><p>பெண்கள் சுதந்திரமாக நடமாடும் ஆட்சியை தந்த உங்கள் பின்னால் கரூர் அதிமுக தொண்டர்கள் புறப்பட்டு விட்டார்கள், எங்க கட்சிக்கு வந்துவிட்டீர்களா தாத்தா என 3 வயது சிறுவன் என்னிடம் கேட்கிறான்.. இனி உங்கள் காலம். தமிழகத்தில் இனிமேல் நிரந்தரமாக விஜய்தான் ஆட்சியமைப்பார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/19wcw3gf/val.jpg" /></figure><p>முன்னதாக முதல்-அமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் ஒன்றை எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>முதல்- அமைச்சராக கரூரில் சாலை வலம் சென்ற விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-toured-karur-as-chief-minister</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-toured-karur-as-chief-minister#comments</comments><guid isPermaLink="false">b33ff66d-7d41-4e1b-a75b-eb28995d3da3</guid><pubDate>Fri, 10 Jul 2026 08:30:53 +0000</pubDate><atom:updated>2026-07-10T08:30:53.665Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/9hxxcfyk/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/9hxxcfyk/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கரூர்,</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.</p><p>கரூரில் விஜய்</p><p>கரூரில் தவெக சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை 9 மணிக்கு நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவர், காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் திருச்சி புறப்பட்டு சென்றார். காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து கரூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். </p><h2>மலர் தூவி வரவேற்பு</h2><p>காரில் முதல்-அமைச்சர் செல்லும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பேசினார். இதனை தொடர்ந்து கரூரில் அவர் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது சாலையின் இரு புறங்களிலும் சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதல்-அமைச்சர் விஜய்யின் காரில் மலர் தூவி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தானர். இதன் பின்னர் கரூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார். </p>]]></content:encoded></item><item><title>மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை அதிகாரிகள் இடமாற்றத்துக்கு தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-work-ban-on-transfer-of-officials-till-august-31st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/census-work-ban-on-transfer-of-officials-till-august-31st#comments</comments><guid isPermaLink="false">8bd126df-f65a-42e8-8f61-76523e09b02e</guid><pubDate>Fri, 10 Jul 2026 08:27:12 +0000</pubDate><atom:updated>2026-07-10T08:27:12.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Census data,Caste Census,மக்கள்தொகை கணக்கெடுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/0czih5k6/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/0czih5k6/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக சுய கணக்கெடுப்பு, வீட்டு பட்டியல் தயாரித்தல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் வருகிற 17-ந்தேதி தொடங்க உள்ளன.</p><p>இந்தப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால் கணக்கெடுப்பு பணிகள் பாதிக்கப்படும் என்பதால், இடமாற்றங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.</p><p>இதையடுத்து, தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் சுமுகமாக நடைபெறுவதற்காக, நாளை (ஜூலை 11) முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இடமாற்றங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், கணக்கெடுப்பு பணிகளில் எந்தவித நிர்வாக சிக்கலும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-tomorrow-to-correct-smart-cards-thoothukudi-collector-informs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camp-tomorrow-to-correct-smart-cards-thoothukudi-collector-informs#comments</comments><guid isPermaLink="false">a68c6810-3e46-430a-bd38-9ddf4fad8ac9</guid><pubDate>Fri, 10 Jul 2026 08:21:03 +0000</pubDate><atom:updated>2026-07-10T08:21:03.475Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Collector information,கலெக்டர் தகவல்,Special camp,சிறப்பு முகாம்,Correction,திருத்தம்,smart card,ஸ்மார்ட் கார்டு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/qswmr9tf/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி கலெக்டர் விஷு மகாஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/qswmr9tf/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம்</a> செய்ய சிறப்பு குறைதீர்க்கும் முகாம்  நாளை நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2026-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை (11.7.2026, சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.</p><h2>ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம்</h2><p>இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும்.</p><p>மேலும் இந்த முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காணாமல் போன பாரம்பரிய சிலைகள் மீட்பு; மோடியின் தமிழ்ப் பற்றை பாராட்டிய நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/recovery-of-missing-traditional-statues-nainar-nagendran-praises-modis-tamil-devotion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/recovery-of-missing-traditional-statues-nainar-nagendran-praises-modis-tamil-devotion#comments</comments><guid isPermaLink="false">860097e7-49ff-4f87-8148-d7bbab5399b8</guid><pubDate>Fri, 10 Jul 2026 07:43:52 +0000</pubDate><atom:updated>2026-07-10T07:43:52.650Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Modi,மோடி,Sami statues,சாமி சிலைகள் மீட்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/1hc652ok/59.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/1hc652ok/59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>திருவாரூர் மாவட்டம் கடுவன்குடி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் திருக்கோவிலின் திரிசூல பத்ரகாளி சிலை, நந்தியின் கருங்கல் சிலை மற்றும் கும்பகோணம் அருகேயுள்ள நாகநாதசுவாமி திருக்கோவிலின் ஆறு முகமுடைய சுப்பிரமணிய சுவாமி சிலைகள் உள்ளிட்ட 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த நம் பொக்கிஷங்களை மீண்டும் தமிழகத்திற்கு மீட்டுக் கொடுத்துள்ள நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். </p><h2>பாரம்பரிய சிலைகள்</h2><p>பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து காணாமல் போன ஆனைமங்கலம் செப்பேடுகள் உள்ளிட்ட பல பாரம்பரிய சிலைகளையும், கலாசார சின்னங்களையும் மீட்டு, நமது அடையாளங்களைப் போற்றிப் பாதுகாத்து வரும் நமது  பாரதப் பிரதமர் அவர்களின் தமிழ்ப் பற்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழை வெறும் அரசியல் மொழியாக மட்டுமே சிலர் பயன்படுத்தி வரும் நிலையில், தமிழ் மொழியையும் அதன் ஆழ்ந்த கலாசாரப் பெருமைகளையும் கொண்டாடுபவர் நமது பிரதமராக வாய்த்தது, நாம் செய்த பெரும் புண்ணியம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மண்ணின் வரலாற்றுச் சாதனை: 1937-ல் உருவான இந்தியாவின் முதல் உள்நாட்டு மின்சார மோட்டார்!</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/gd-naidu-achievement-indias-first-indigenous-electric-motor-created-in-1937</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/gd-naidu-achievement-indias-first-indigenous-electric-motor-created-in-1937#comments</comments><guid isPermaLink="false">8e65bd42-5493-46d8-b2f3-0781fdc2ee67</guid><pubDate>Fri, 10 Jul 2026 07:19:42 +0000</pubDate><atom:updated>2026-07-10T07:19:42.217Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜி.டி.நாயுடு,G.D.N movie,G.D.Naidu,GDN Movie</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/yqfru6pc/GD-Naidu-Motor.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜி.டி.நாயுடு உருவாக்கிய மின்சார மோட்டார்]]></media:title><media:description type="html"><![CDATA[ 1937-ல் உருவான இந்தியாவின் முதல் உள்நாட்டு மின்சார மோட்டார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/yqfru6pc/GD-Naidu-Motor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்பு செய்திகள்</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>இன்று நாம் பெருமையுடன் பேசும் "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India) என்ற திட்டத்திற்கு, சுமார் 89 ஆண்டுகளுக்கு முன்பே கோயம்புத்தூர் மண்ணில் அடித்தளமிட்டு சாதனை படைத்துள்ளார் 'மறைந்த மாமேதை' ஜி.டி.நாயுடு</p><p>1937 ஆம் ஆண்டு, இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார சாதனத் தேவைகளும் பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலத்தில், எவ்வித முறையான பொறியியல் கல்வியும் பயிலாத <a href="https://www.dailythanthi.com/topic/ஜிடிநாயுடு">ஜி.டி.நாயுடு</a>, கோவையில் உள்ள தமது "யுனைடெட் மோட்டார் சர்வீஸ்" பட்டறையில் முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஒரு மின்சார மோட்டாரை உருவாக்கினார்.</p><h2>சவால்களை வென்ற தமிழன்:</h2><p>அக்காலகட்டத்தில் ஆங்கிலேய அரசின் தொழில்துறைக் கொள்கைகள் இந்தியர்கள் சொந்தமாகத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இருந்தன. குறிப்பாக, மோட்டார் தயாரிப்பிற்கு மிக முக்கியத் தேவையான மின்சாரத் தரம் வாய்ந்த செப்பு கம்பிகள் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்தன. இருப்பினும், ஜி.டி. நாயுடு பின்வாங்கவில்லை. தனது சொந்தப் பட்டறையிலேயே செப்புப் பொருட்களை உள்ளூர் வளங்களைக் கொண்டு கம்பி இழைத்து, இரும்புப் பாகங்களைச் செதுக்கி, உலகத் தரத்திற்கு இணையாக இந்த மோட்டாரை வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார்.</p><h2>இது வெறும் மாதிரி அல்ல..</h2><p>இந்த மின்சார மோட்டார் வெறும் காட்சிப் பொருள் அல்லது ஒரு சோதனை முயற்சி மட்டுமல்ல; அது கோவையின் அன்றைய ஜவுளி ஆலைகள் மற்றும் அச்சுக்கூடங்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட ஒரு முழுமையான வணிகத் தயாரிப்பாகும். இந்திய மின்சார மோட்டார் உற்பத்தித் துறையின் முன்னோடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81">ஜி.டி.நாயுடு</a> திகழ்வதற்கு இந்தத் தயாரிப்பே மிக முக்கியச் சான்றாகும்.</p><h2>இன்றும் அழியாத பாரம்பரியம்:</h2><p>அவர் அன்று விதைத்த விதைதான், இன்று கோயம்புத்தூரை இந்தியாவின் முன்னணி ஜவுளி, மோட்டார் பம்ப் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு மையமாக மாற்றியுள்ளது. "யுனைடெட் மோட்டார் சர்வீஸ், கோயம்புத்தூர்" என்று பொறிக்கப்பட்ட அந்த சிறிய உலோக மோட்டார், இன்றும் கோவையில் உள்ள "<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81">ஜி.டி. நாயுடு</a> அறிவியல் அருங்காட்சியகத்தில்" கண்ணாடிப் பெட்டிக்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அது இன்றும் இயங்கும் நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>ஜி.டி.என். திரைப்படம்</h2><p>தொழில்நுட்ப வரலாற்றில் தமிழர்களின் சுயசார்புத் திறமைக்கு மகுடமாய் விளங்கும் இந்த மின்சார மோட்டாரின் கதை,  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81">ஜி.டி. நாயுடு</a> அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் மூலமாக உலகறிய வரவுள்ளது. ‘ஜி.டி.என்.’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.மாதவன் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 17-ம் தேதி வெளியாக உள்ளது. ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு...  <a href="https://events-dailythanthi.com/gdn/">https://events-dailythanthi.com/gdn/</a></p>]]></content:encoded></item><item><title>&quot;கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது என்பது தெரியும்..&quot; - மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-know-at-whose-behest-the-karur-incident-took-place-chief-minister-vijay-speaks-at-the-meeting-the-people-of-karur-event</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-know-at-whose-behest-the-karur-incident-took-place-chief-minister-vijay-speaks-at-the-meeting-the-people-of-karur-event#comments</comments><guid isPermaLink="false">d0f3d262-89d7-445a-9874-4334a9cc5084</guid><pubDate>Fri, 10 Jul 2026 07:17:43 +0000</pubDate><atom:updated>2026-07-10T07:17:43.437Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,TVKVijay,தவெக,கரூர்,Vijay,விஜய்,தமிழக வெற்றிக் கழகம்,Karur,Tamilaga Vettri Kazhagam,tvk vijay,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/9e719jyy/janam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/9e719jyy/janam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p> <p>தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்துபோனார்கள். இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டது. </p><p>இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்காக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> இன்று கரூர் வந்தார். இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையும் இன்று நடைபெற்றது. அவர்களுக்கு தற்காலிக பணி வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.</p><p>இந்த நிலையில், கரூரில் உள்ள அட்லஸ் அரங்கத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூருக்கு காரில் வருகை தந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சியில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 32 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வி  தகுதிக்கு ஏற்ற வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்க உள்ளார். </p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/1vj20jax/thanmn.jpg" /></figure><h2>பணமா? ஜனமா?</h2><p>அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-</p><p>ஒருவன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மனதளவில் சில காயங்கள், வலிகளை மறக்க முடியாது; எனக்கு அனைத்தையும்விட வலியும், காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான்.</p><p>வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என என்னைக் கூறுகின்றனர். </p><p>அன்றைக்கும் சொன்னேன்.. இன்றைக்கும் சொல்கிறேன்..நாளைக்கும் சொல்வேன்.. தில்லா சொல்வேன்... கெத்தா சொல்வேன்.</p><p>பணமா ஜனமா? அப்படி கேட்டால், என் ஜனம்தான் எனக்கு முக்கியம்.  </p><h2>பிரஷர் போட்டது யார்?</h2><p>பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என போலீஸ் கூறியது. நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?</p><p>நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து விட்டது போலீஸ்தான். இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் எனச்சொல்லி பிரஷர் போட்டது யார்?</p><p>கரூர் காவலர்களை முழுமையாக நம்பினேன். அப்போது கரூர் காவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்தது யார்? கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்து என்பது தெரியும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/6br4g4i9/jikiere.jpg" /></figure><h2>நினைவுச் சின்னம்</h2><p>நம்ம எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்; ஆனால், அது மட்டும் போதாது மக்களே... எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். </p><p>இனி இப்படி ஒரு அரசியல் சூழ்ச்சியை யாரும் யோசிக்கவே கூடாதுங்கறதுக்காக கரூரில் ஒரு நினைவுச் சின்னம் தவெக சார்பாக எழுப்பப்படும்.</p><p>அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் அறிமுகம் செய்யப்படும். நான் ரீல் அல்ல ரியல் தாய்மாமன்.</p><h2>PARTY FUND</h2><p>பேசு பேசு என்று சொல்கிறார்கள். ஆனால் பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுகிறார்கள். PARTY FUND என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/uvrva8tz/mke.jpg" /></figure><h2>வாஷிங் மெஷின் Vs வெண்டிங் மெஷின்</h2><p>நம்ம ஆட்சி அமைந்ததில் இருந்து என்னென்னவோ சொல்றாங்க. சோபா ஆட்சி, வாஷிங் மெஷின் ஆட்சி என்றெல்லாம். அரசியல் வியாபாரம் செய்வதற்கான vending மெஷினே திமுகதான்</p><h2>TALK LESS WORK MORE</h2><p>மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பை தமிழகம் ஏற்காது. மேகதாது அணை தொடர்பாக திமுக அரசு முறையாக வாதாடவில்லை.</p><p>மேகதாது அணை குறித்து எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுகிறோம். TALK LESS WORK MORE என்பது தான் எங்கள் கொள்கை.</p> <h2>கரூர் கம்பெனி ஓனர்</h2><p>கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தரு எங்க இருக்காருனே தெரியல... ஓடு ஓடுனு ஓடிக்கிட்டே இருக்காரு.. இன்னொருத்தரு வெளிநாட்டில் செக்கப்-க்கு போயிருக்காரு.(வேட்டைக்காரன் பட பாடலை பாடுகிறார்).</p><h2>கூட்டுக் களவாணிகள்</h2><p>தீயசக்தி இப்போது யார் கதவை தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே தெரியும். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது. கூட்டுக் களவாணிகள் எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என நிரூபிக்க முடியுமா?. இடைத் தேர்தலில் நிரூபியுங்கள், பிறகு பேசுங்கள்.</p><p>தீயசக்தி திமுகவை இந்த இடைத்தேர்தலில் நல்லா வச்சு வெளுத்து விடுங்க...</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/0vavnj7m/janam.jpg" /></figure><h2>லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை</h2><p>உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், கொடுக்க முடியாது எனச் சொல்லுங்கள். நான் இருக்கிறேன்.</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலை டக் டக் என நடக்கிறது</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது. ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும் போது ரொம்ப சந்தோசம்.</p><p>இப்போ நான் சொன்னதெல்லாம் ஒரு சாம்பிள் தான். இனிமே தான் அரசோட விஸ்வரூபத்தை நீங்க பார்ப்பீங்க..</p><p>இவ்வாறு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>கரூரில் ‘நினைவு சின்னம்’ அமைக்கப்படும்: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-incident-is-an-unhealed-wound-in-my-heart-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-incident-is-an-unhealed-wound-in-my-heart-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">421db0b7-b66c-43cb-98e0-ca9b393cb339</guid><pubDate>Fri, 10 Jul 2026 07:17:02 +0000</pubDate><atom:updated>2026-07-10T07:17:02.154Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர் கூட்ட நெரிசல்,கரூர்,விஜய்,Karur,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/rloed274/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/rloed274/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்துபோனார்கள். இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று கரூர் வந்தார்.  இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையும் இன்று நடைபெற்றது. அவர்களுக்கு தற்காலிக பணி வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். </p><p>இந்த நிலையில், கரூரில் உள்ள அட்லஸ் அரங்கத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூருக்கு காரில் வருகை தந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சியில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 32 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.</p><p>நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-</p><p>என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு மனிதன் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதளவில் காயங்கள், வலிகளை மறக்க முடியாது. நிறைய வலிகள், காயங்களை தாண்டித்தான் வந்தேன். கரூர் சம்பவம்தான் எனக்கு அதிக மனவலியை கொடுத்தது. என் அக்கா தங்கைகளை கரூரில் இழந்தேன்... கள்ளங்கபடமற்ற குழந்தைகளை இழந்தேன். என் மனதின் ஆறாத காயம் கரூர் சம்பவம். </p><p>பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என போலீஸ் கூறியது; நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?. நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து விட்டது போலீஸ்தான்; இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் எனச்சொல்லி பிரஷர் போட்டது யார்?.</p><p>போலீஸ் நினைத்திருந்தால் கரூர் நிகழ்ச்சியையே கேன்சல் பண்ணியிருக்கலாம். ஆனால், அந்த போலீஸே எங்களை ஹைவேஸ்ல இருந்து அந்த இடத்துக்கு கூட்டிட்டு போன நாடகம் இருக்கு பாருங்க. அதை நான் நம்பிட்டேன். அதனால்தான் கூட்டத்தில் போலீஸுக்கு நன்றி எல்லாம் சொன்னேன்''</p><p>"வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என என்னைக் கூறுவதா?. பணமா? ஜனமா? என என்னைக் கேட்டால், ஜனம்தான் முக்கியம் என நான் கூறுவேன். அதை விட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. நம்ம எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்; ஆனால், அது மட்டும் போதாது மக்களே... எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை; தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலை டக் டக் என நடக்கிறது; தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது; ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எத்தனை கோடி ஊழல் நடந்திருக்கிறது என எங்களுக்கே தெரியவில்லை. தோண்ட தோண்ட ஊழல் வருகிறது.</p><p>மக்கள் அமைத்துக் கொடுத்த அரசு மீது டிசைன் டிசைனாக குறை மட்டும் கூறுவார்கள்; தீய சக்தியும், தீர்ந்த சக்தியும் 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில் அனைத்து துறைகளிலும் கொள்ளை; சட்டசபையில் பார்ட்டி பண்ட் என கூறியதும் எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம்; குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்.</p><p>நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்த, நமக்கு எதிரான சதிய, சூழ்ச்சியை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். "ரீல் அல்ல ரியல் தாய்மாமன்".. அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிகள், கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-urges-closure-of-tasmac-shops-near-schools-and-temples</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-urges-closure-of-tasmac-shops-near-schools-and-temples#comments</comments><guid isPermaLink="false">06d7659b-9318-47b4-80eb-fdf79535b0bb</guid><pubDate>Fri, 10 Jul 2026 07:16:50 +0000</pubDate><atom:updated>2026-07-10T07:16:50.831Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,டாஸ்மாக் கடை,Tasmac shop,மூட வேண்டும்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/w7mazzfn/annamalai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/w7mazzfn/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின்  தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம். சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் மதுக்கடைகள்</a>, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.</p><h2>தமிழ்நாட்டைக் காப்போம்</h2><p>தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம். மாறுவோம், மாற்றுவோம்! </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காதலுக்கு எதிர்ப்பு: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-love-youth-commits-suicide-by-hanging</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opposition-to-love-youth-commits-suicide-by-hanging#comments</comments><guid isPermaLink="false">eeffa426-ce33-47d6-aeae-b649e01f3921</guid><pubDate>Fri, 10 Jul 2026 07:08:39 +0000</pubDate><atom:updated>2026-07-10T07:08:39.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Youth,வாலிபர்,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,Love,காதலுக்கு எதிர்ப்பு,Opposition,arumuganeri,ஆறுமுகநேரி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/4a48aatv/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/4a48aatv/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவிரக்தியடைந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டார்.</p><h2>காதலுக்கு எதிர்ப்பு</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த உச்சிமாகாளி மகன் லட்சுமணராஜா (வயது 20). இந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், லட்சுமணராஜா கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.</p><h2>மனவிரக்தி</h2><p>உறவினர் ஒருவரின் துக்க வீட்டிற்கு குடும்பத்தினர் அனைவரும் சென்றிருந்த சூழலில், லட்சுமணராஜா மது அருந்திவிட்டு அந்த துக்க வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அவரது தந்தை உச்சிமாகாளி அங்கேயே வைத்துக் கண்டித்துள்ளார். இதனால் கடும் மனவிரக்தியடைந்த லட்சுமணராஜா வீட்டிற்கு திரும்பியுள்ளார்.</p><h2>வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>பின்னர் தனது நண்பரான மாதவன் என்பவருக்கு தொலைபேசி மூலம் விபரத்தைக் கூறிவிட்டு, வீட்டின் கூரையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து பதறியடித்தபடி வீட்டிற்கு விரைந்து வந்த நண்பர் மாதவன் மற்றும் உறவினர்கள், லட்சுமணராஜாவை மீட்டு ஆட்டோ மூலம் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.</p><p>அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், லட்சுமணராஜா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ ரெயில்: விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை ரூ.2,500 ஆக அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-rail-fine-for-rule-violators-increased-to-2500</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-rail-fine-for-rule-violators-increased-to-2500#comments</comments><guid isPermaLink="false">06aaf736-99e6-4d88-995f-085a1a118c62</guid><pubDate>Fri, 10 Jul 2026 06:53:28 +0000</pubDate><atom:updated>2026-07-10T06:53:28.301Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,மெட்ரோ ரெயில்,Chennai Metro Train,chennai metro,சென்னை மெட்ரோ ரெயில்,Metro train,விதிகள்,அபராத தொகை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/vw82eg9b/metrop.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மெட்ரோ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/vw82eg9b/metrop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/metro-rail">மெட்ரோ ரெயில்</a> நிர்வாகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/metro-rail">மெட்ரோ ரெயில்</a> பயண ஒழுங்குமுறைகள்: </p><p>விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். </p><p>மெட்ரோ ரெயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.</p><p>மெட்ரோ ரெயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். </p><h2>ஹெட்போன் இன்றி இசை</h2><p><strong>குறிப்பாக:</strong></p><p>• அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல்;</p><p>• செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (<strong>Headphones</strong>) இன்றி இசை அல்லது வீடியோக்களை பார்ப்பது;</p><p>• அலைபேசியில் மெட்ரோ ரெயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல் (<strong>Speaker mode</strong>);</p><p>மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் அலைபேசிகளைப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.</p><h2>அபராதத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு</h2><p>மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) 19.06.2026 அன்றுவெளியிட்ட அரசிதழ் (Gazette) அறிவிப்பின்படி, 'ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026'-இன் கீழ் ஒரு புதிய திருத்தம்கொண்டுவரப்பட்டுள்ளது. </p><p>இதன்படி, மெட்ரோ ரெயில் மற்றும் அதன் வளாகங்களில் மற்ற பயணிகளுக்குஇடையூறு விளைவிக்கும் செயல்களில் (<strong>உதாரணமாக: செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கிஇல்லாமல் உரத்த சத்தத்தில் பாட்டு கேட்பது போன்றவைகளில்</strong>) ஈடுபடுபவர்களுக்கான அபராத தொகை, பிரிவு 59-இன் கீழ், முன்பிருந்த ரூ.500-லிருந்து தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 வரைஉயர்த்தப்பட்டுள்ளது.</p><h2>ஸ்பீக்கர் மோட் பயன்பாடு</h2><p>மேலும், விதிகளை மீறும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.</p><p>எனவே, சக பயணிகளின் பயண சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் செவியில் பொருத்திகொள்ளும் ஒலிபெருக்கியை (Headphones) பயன்படுத்துமாறும், மெட்ரோ ரெயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும்சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவிரியில் தினமும் 2 டி.எம்.சி தண்ணீர் திறக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-pressurize-to-release-2-tmc-of-water-daily-in-cauvery-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-pressurize-to-release-2-tmc-of-water-daily-in-cauvery-anbumani#comments</comments><guid isPermaLink="false">a8a2c9b5-4d32-42a0-92e6-41a63887431c</guid><pubDate>Fri, 10 Jul 2026 06:51:28 +0000</pubDate><atom:updated>2026-07-10T06:51:28.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Tamil Nadu Government,தமிழக அரசு,Anbumani Ramadas,காவிரி ஆறு,Cauvery</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/iyibjgzr/anbumani-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/iyibjgzr/anbumani-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>கர்நாடகம் மற்றும் கேரளத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  தென்மேற்கு பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர் இருப்பு 50.63 டி.எம்.சியாக அதிகரித்திருக்கிறது. கடந்த 9 நாள்களில் கர்நாடக அணைகளின் நீர்  இருப்பு 25 டி.எம்.சிக்கும் கூடுதலாக உயர்ந்துள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.</p><h2>சூப்பர் எல்நினோ தாக்கம்</h2><p>சூப்பர் எல்நினோ தாக்கம் காரணமாக நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் கர்நாடகத்தில் காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைகளின் நீர் இருப்பு 20 டி.எம்.சிக்கும் கீழாக குறைந்திருந்தது. எனினும், ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி  ஹேமாவதி அணைக்கு வினாடிக்கு 15,647 கன அடி, கபினி அணைக்கு 14,574 கன அடி, கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு 12,694, ஹாரங்கி அணைக்கு வினாடிக்கு 3,665  வீதம் ஒட்டுமொத்தமாக வினாடிக்கு 46,580 கன அடி வீதம்  தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.</p><h2>அதிக தண்ணீர் வரத்து</h2><p>கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளின் மொத்த நீர் இருப்பு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி 24.47 டி.எம்.சியாக  இருந்தது. கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு அதிக தண்ணீர்  வருவதால், அணைகளின்  நீர் இருப்பு 50.730 டி.எம்.சியாக உயர்ந்திருக்கிறது.  கடந்த  ஒரு வாரமாகவே அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு சுமார் 45 ஆயிரம் கன அடி முதல் 50 ஆயிரம் கன அடி வரை  தண்ணீர் வரும் போதிலும், அணையிலிருந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">காவிரியில்</a> தண்ணீர் திறக்கப்படவே இல்லை. இன்று காலை கூட கர்நாடக அணைகளில் இருந்து வெறும் 1234  கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><h2>அநீதியான நிலைப்பாடு</h2><p>ஜூன்  மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 9.91  டி.எம்.சி,  ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என மொத்தம் 41.15 தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. ஆனால்,  காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணையை கர்நாடக அரசு மதிக்காததுடன், அவ்வாறு  எந்த ஆணையையும் பிறப்பிக்கவில்லை என்று பொய் கூறுகிறது. கர்நாடக அரசின் இந்த அநீதியான நிலைப்பாடு காலம் காலமாகத் தொடர்கிறது. அதனால் தான் மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><h2>2 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்</h2><p>நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஜூன் மாதம் முதல் இன்று வரை  20 டி.எம்.சி  நீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும்; இம்மாத இறுதி வரை 41.15  டி.எம்.சி  நீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், கர்நாடகத்திலிருந்து இதுவரை வெறும் 3  டி.எம்.சி தண்ணீர் மட்டுமே காவிரியில் வந்திருக்கிறது. கர்நாடக அணைகளின் நீர்மட்டம் 50 டி.எம்.சியை தாண்டியிருப்பதாலும், வினாடிக்கு சுமார் 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து  கொண்டிருப்பதாலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில்  வினாடிக்கு  24,000 கன அடி வீதம் தண்ணீர் திறப்பதில் கர்நாடக அரசுக்கு எந்த சிக்கலும் இருக்க முடியாது. அடுத்த  20 நாள்களுக்கு இந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டால் தினமும் 2 டி.எம்.சி  வீதம் இம்மாத இறுதிக்குள் 40 டி.எம்.சி தண்ணீர் கிடைத்து விடும். அதன் மூலம் காவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியும்.</p><p>எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்திய அளவு நீர் தமிழ்நாட்டுக்கு கிடைப்பதை உறுதி செய்ய, நாளை முதல் காவிரியில் தினமும்  2 டி.எம்.சி அளவுக்கு கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டும்.  இதற்காக கர்நாடக அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி சாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு சென்னையில் தலைமை அலுவலகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lioness-task-force-has-its-headquarters-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lioness-task-force-has-its-headquarters-in-chennai#comments</comments><guid isPermaLink="false">efc7fd94-7759-4daa-95be-bc019b71423d</guid><pubDate>Fri, 10 Jul 2026 06:47:09 +0000</pubDate><atom:updated>2026-07-10T06:47:09.232Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,சிங்கப்பெண் அதிரடிப்படை,Lioness Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/qym646xn/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/qym646xn/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றபோது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் இந்த படை பிரிவு உருவாக்கப்பட்டது.</p><p>கடந்த மாதம் 9-ந்தேதி இந்த பிரிவை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த படைப்பிரிவு தொடங்கிய ஒரு மாதத்தில் மெச்சத்தகுந்த பணிகளையும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.  இந்த நிலையில், சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு தொடங்கிய ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 120 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><p>காணாமல் போன 36 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 16 குழந்தை திருமணங்கள் தக்க நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு என்று தனியாக கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.</p><p>1091 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிற்கு ஒரு நாளைக்கு சுமார் 1500 க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன சிங்கப்பெண் அதிரடி படைக்காக சென்னை அசோக் நகரில் தலைமை அலுவலகம் தொடங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் செயல்படும் 70 சிங்கப்பெண் அதிரடிப்படைகளில் புதிதாக 2,545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி - காரைக்கால் ரெயில் நாளை ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichykaraikal-train-cancelled-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/trichykaraikal-train-cancelled-tomorrow#comments</comments><guid isPermaLink="false">59c6c1b0-9d5b-4e3a-8971-e420b5d8b901</guid><pubDate>Fri, 10 Jul 2026 06:31:13 +0000</pubDate><atom:updated>2026-07-10T06:31:13.340Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,Train Services</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/aszdit6y/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/aszdit6y/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருச்சி,</p><p>திருச்சி கோட்டத்தின் பொன்மலை ஜங்ஷனில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால், திருச்சியில் இருந்து செல்லும் சில ரெயில்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு; </p><h2>திருச்சி காரைக்கால் டெமு ரெயில்</h2><p>”திருச்சி காரைக்கால் டெமு ரெயில் (எண் 76820) நாளையும், திருச்சி -திருப்பாதிரிப்புலியூர் டெமு ரெயில் (எண் 76812) நாளை மற்றும் 12-ந் தேதியும், காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (எண் 76819) நாளையும், தஞ்சாவூர் திருச்சி பாசஞ்சர் ரெயில் (எண் 56819) வருகிற 13-ந்தேதியும், காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (எண் 76825) வருகிற 15-ந்தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. </p><h2>செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில்</h2><p>இதேபோல், செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 16848) வருகிற 15-ந்தேதி திருச்சி சந்திப்பை தவிர்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கரூரில் முதல்-அமைச்சர் விஜய்: வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-in-karur-enthusiastic-welcome-from-thousands-along-the-route</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-in-karur-enthusiastic-welcome-from-thousands-along-the-route#comments</comments><guid isPermaLink="false">720d4ac1-6667-4393-b825-e47262516752</guid><pubDate>Fri, 10 Jul 2026 06:19:30 +0000</pubDate><atom:updated>2026-07-10T06:19:30.325Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Karur,முதல்-அமைச்சர் விஜய்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/oqx5e5x6/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/oqx5e5x6/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.</p><h2>கரூரில் விஜய்</h2><p>கரூரில் தவெக சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை 9 மணிக்கு நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவர், காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் திருச்சி புறப்பட்டு சென்றார். காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து கரூருக்கு காரில் புறப்பட்டு சென்றுகொண்டிருக்கிறார். </p> <h2>மலர் தூவி வரவேற்பு</h2><p>இந்த நிலையில், காரில் முதல்-அமைச்சர் செல்லும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இளைஞர்கள், பெண்கள், என பலர் முதல்-அமைச்சர் விஜய்யின் காரில் மலர் தூவி அவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 6,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டால்..? அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-if-fatalities-occur-at-political-party-public-meetings-in-the-future-ttv-dhinakaran-questions-the-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-if-fatalities-occur-at-political-party-public-meetings-in-the-future-ttv-dhinakaran-questions-the-government#comments</comments><guid isPermaLink="false">d9375861-c2dd-4d2e-a1a9-a25c6003cb34</guid><pubDate>Fri, 10 Jul 2026 06:19:06 +0000</pubDate><atom:updated>2026-07-10T06:19:06.763Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Karur Stampede,தவெக,கரூர்,Tamilnadu,தமிழகம்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,கரூர் கூட்டநெரிசல்,Karur,Govt job,AMMK,அமமுக,அரசு பணி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/orkzjgrb/fte.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-10/orkzjgrb/fte.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அமமுக பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/ttv-dhinakaran">டிடிவி தினகரன்</a> தனது எக்ஸ் வலைதளபதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது, அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலும், ஆபத்தான முன்னுதாரணமும் ஆகும்.</p> <h2>அரசு வேலை</h2><p>முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவு, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் இரவு பகலாக உழைத்து தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மர்ம மரணங்கள்</h2><p>ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்திற்கு, அரசின் நிரந்தர பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறையாகும். இதுபோன்ற முடிவுகள், "கூட்ட நெரிசலில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு அரசு வேலை" என்ற தவறான எண்ணத்தை சமூகத்தில் உருவாக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே சிறிய சொத்து தகராறுகளுக்குக் கூட குடும்பங்களுக்குள் மர்ம மரணங்கள் நிகழும் சூழலில், அரசு வேலை என்ற அரிய வாய்ப்பை தவறான முறையில் பெற வேண்டும் என்ற சிந்தனையை சிலரிடம் தூண்டக்கூடிய ஆபத்தான முன்னுதாரணமாக இது மாறிவிடக் கூடாது.</p><h2>த.வெ.க.வே முழு பொறுப்பு</h2><p>த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியே முழு பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் உதவிகளும் வழங்க வேண்டும். ஆனால், அரசின் அதிகாரத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தால் இயங்கும் நிர்வாகத்தையும் பயன்படுத்தி, வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற அரசு பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக நெறிமுறைகளுக்கும் சம வாய்ப்புக் கொள்கைக்கும் எதிரானதாகும்.</p><h2>அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள்</h2><p>மேலும், எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் அல்லது எதிர்பாராத வகையில் நடைபெறும் பிற துயரச் சம்பவங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அவற்றின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கும் கொள்கையை அரசு பின்பற்றுமா? இல்லையெனில், இந்தச் சம்பவத்திற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது? என்ற நியாயமான கேள்விகளுக்கும் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.</p><h2>சம வாய்ப்புக் கொள்கை</h2><p>அரசுப் பணி என்பது இரக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அல்ல; திறமை, தகுதி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள சம வாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பொது உரிமையாகும். எனவே, இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>