<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 13 Jul 2026 06:40:54 +0000</lastBuildDate><item><title>காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-special-scheme-must-be-formulated-to-protect-cauvery-delta-farmers-anbumani-ramadoss</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-special-scheme-must-be-formulated-to-protect-cauvery-delta-farmers-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">02e1bb1d-849f-4448-a644-9c4817d34cec</guid><pubDate>Mon, 13 Jul 2026 06:40:46 +0000</pubDate><atom:updated>2026-07-13T06:40:46.454Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,Farmers,விவசாயிகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/5d2b5bpv/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/5d2b5bpv/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;</p><p>”காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் திறந்து விடுவதற்கான எந்த அறிகுறியும்  இல்லாததாலும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போகும் என்று கணிக்கப்பட்டிருப்பதாலும் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடியும் நடைபெற வாய்ப்பில்லை என்று உழவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மிக மோசமான இந்த சூழலை சமாளிக்க அரசுத் தரப்பில் எதுவும் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப் படுவது வழக்கம். குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் அந்தப் பருவம் முடிந்த பிறகு தாளடி சாகுபடி செய்வார்கள். பாசன வசதி பெரிதாக இல்லாத பகுதிகளில் ஒருபோகமாக சம்பா சாகுபடி செய்யப்படுவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் கடந்த ஜூன் 12&amp;ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாததாலும், கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுப்பதாலும் இதுவரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.</p><p>அதனால், காவிரி டெல்டாவில் வழக்கமாக 6 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் நடைபெறும் குறுவை சாகுபடி இப்போது பாதிக்கும் கீழாக குறைந்து விட்டது. பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாலும், போதிய அளவு மும்முனை மின்சாரம் வழங்கப்படாததாலும் நீர் பாய்ச்ச முடியாததால் நெல் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. பல பகுதிகளில் டேங்கர் சரக்குந்துகள் மூலம் நீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதனால் குறுவை பருவத்தில் 7 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.</p><p>த்ண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகள், சம்பா சாகுபடிக்கு ஆயத்தமாகி வந்தனர். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாத நிலை உருவாகி விடும் என்று இப்போது அச்சம் தெரிவித்து உள்ளனர். சம்பா சாகுபடியை வெற்றிகரமாக முடிப்பதற்கு செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை குறைந்தது 140 டி.எம்.சி தண்ணீர் தேவை. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 75.65 அடியாக குறைந்து விட்டது. அணைக்கு வினாடிக்கு 80 கன அடி மட்டுமே தண்ணீர் வரும் நிலையில், குடிநீர் தேவைகளுக்காக 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. இதனால் நீர் மட்டம் குறைந்து வருகிறது.</p><p>இன்னொருபுறம் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீர் இருப்பு இன்று காலை 60 டி.எம்.சியாக அதிகருத்துள்ளது. அதே நேரத்தில் இரு நாள்களுக்கு முன்பு வரை 50 ஆயிரம் கனஅடிக்கும் கூடுதலாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 16,830 கன அடியாக குறைந்து விட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் தவிர கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வருவதற்கோ அங்கிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதற்கோ வாய்ப்புகள் இல்லை. ஏற்கனவே, குறுவை பயிர்களை நீரின்றி காப்பாற்ற முடியாத நிலையில், செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக மேட்டூர் அணை  திறக்கப்படுவதுடன், அணையின் நீர்மட்டமும், நீர்வரத்தும் திருப்தியாக இல்லாத சூழலில் சம்பா சாகுபடி  செய்ய காவிரி பாசன மாவட்ட உழவர்கள் தயாராக இல்லை என்று உழவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், அதை நம்பியும் சாகுபடி செய்ய உழவர்கள் தயாராக இல்லை. இதனால், சம்பா சாகுபடி வழக்கமான அளவான 14 லட்சம் ஏக்கரில் இருந்து 5 முதல் 6 லட்சம் ஏக்கராக குறைந்து விடக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பா சாகுபடி இந்த அளவுக்கு குறைந்தால் 16 முதல் 17 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும். இதனால் தமிழ்நாட்டிற்கு இரு வகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். முதலில் 60 முதல் 70% அளவுக்கு விவசாயம் பாதிக்கப்படுவதால் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாவார்கள்.</p><p>இரண்டாவதாக குறுவை, சம்பா பருவங்களில் காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 25 லட்சம் டன் அளவுக்கு நெல் உற்பத்தி குறைந்தால் அது தமிழ்நாட்டில் கடுமையான அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்;  அரிசி விலைகள் ஏற்கனவே கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ள நிலையில், மேலும் உயரக்கூடும்.  இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.</p><p>நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கான எந்தத் திட்டமும் தமிழ்நாடு அரசிடம் இல்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கச் செய்தல், சம்பா தொகுப்பாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி அதன் மூலம் பாசனத் தேவைகளை சமாளித்து சம்பா சாகுபடியை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், தமிழக மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் வெளிச்சந்தை அரிசியையும் வழங்க  வேண்டும்.</p><p>குறுவையைப் போலவே சம்பா சாகுபடியும் பொய்த்துப் போவதைத் தடுக்கவும், அது சாத்தியமாகாத நிலையில் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் உழவர்கள் நலன்களை காக்க வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>நில அபகரிப்பு புகார்: தா.மோ.அன்பரசன் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/land-grabbing-complaint-case-registered-against-tm-anbarasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/land-grabbing-complaint-case-registered-against-tm-anbarasan#comments</comments><guid isPermaLink="false">5fab8bec-24b3-4536-8350-7d377d17fad4</guid><pubDate>Mon, 13 Jul 2026 06:29:22 +0000</pubDate><atom:updated>2026-07-13T06:29:22.708Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தா.மோ.அன்பரசன்,T. M. Anbarasan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/yav04nn1/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/yav04nn1/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தன்னுடைய சொத்தை திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர்  ராஜேஷ் சோமசுந்தரம் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்து இருந்தார். </p><p><strong>அதில் கூறியிருப்பதாவது; </strong></p><p>2024-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது பரங்கிமலையில் தேர்தல் பணிமனைக்காக கொடுத்த 5,500 சதுர அடி நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திருப்பி தர மறுக்கிறார். அன்பரசனின் உதவியாளர் என்ற பெயரில் ஒருவர் வந்து கேட்டதன் பேரில் அந்த இடம் தரப்பட்டது. இதற்கென கட்டாயப்படுத்தி 6 மாத குத்தகை ஒப்பந்தமும் ஏற்படுத்தினர். ஆனால், குத்தகை காலம் முடிந்தும் இடத்தை காலி செய்து தரவில்லை. 2 ஆண்டுகளாக வாடகையும் தரவில்லை.</p><p>குத்தகை ஒப்பந்தம் சிலரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் போலியாக முகவரி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது சட்டவிரோதமாக என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். வாடகை கூட தராமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பரசன் என்னை சந்தித்தார்.</p><p>அப்போது, ஒருவாரத்தில் அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறும், பணம் கொடுத்து விடுவதாகவும் கூறினார். ஆனால் நிலத்தை விற்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு அந்த நிலம் தேவைப்படுகிறது என்று உறுதியாக தெரிவித்து விட்டேன். ஒரு வாரம் கழித்து பேசுவதாக கூறிச் சென்றவர், பிறகு எந்த பதிலும் கூறவில்லை. பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.</p><p>இந்த நிலையில், நில அபகரிப்பு புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அவரது உதவியாளர் ஜெய்சங்கர் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை சாலை விபத்து: டிடிவி தினகரன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-road-accident-ttv-dhinakaran-offers-condolences</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-road-accident-ttv-dhinakaran-offers-condolences#comments</comments><guid isPermaLink="false">61596ade-485a-4178-8fc9-17520222e9fb</guid><pubDate>Mon, 13 Jul 2026 06:17:17 +0000</pubDate><atom:updated>2026-07-13T06:17:17.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,TTV Dhinakaran,டிடிவி தினகரன்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/3m10xl99/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/3m10xl99/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>"மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அரசுப்பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த  வருத்தத்தை ஏற்படுத்துகிறது. </p><p>பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உயரிய சிகிச்சைகள் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் விமானம் தரையிறங்கியபோது பறவை மோதி விபத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-bird-strike-occurred-as-the-aircraft-was-landing-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-bird-strike-occurred-as-the-aircraft-was-landing-in-chennai#comments</comments><guid isPermaLink="false">9d469326-1cd2-4024-b267-4e9b27452d7b</guid><pubDate>Mon, 13 Jul 2026 06:10:05 +0000</pubDate><atom:updated>2026-07-13T06:10:05.350Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானம்,Chennai,சென்னை,aircraft</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/k0598sl7/12.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/k0598sl7/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனில் இருந்து 224 பயணிகள், 12 விமான ஊழியர்களுடன் சென்னை வந்தது. சென்னையில் தரையிறங்கும்போது சுமார் 500 அடி உயரத்தில் பறவை மோதி என்ஜின் பகுதியில் சிக்கியது. விமானி சாமர்த்தியமாக தரையிறக்கியதால் விமானத்தில் இருந்த 236 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.</p> <p>பறவை மோதிய பகுதியை ஆய்வு செய்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேர ஆய்வுக்கு பின் லண்டன் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை லண்டன் செல்ல தயாராக இருந்த பயணிகள் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முழு ஆய்வுக்கு பின்னரே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் விற்கப்படும் மளிகை பொருட்களுக்கு ஆன்லைன் டெண்டர்: முதல்-அமைச்சர் விஜய்க்கு பணியாளர்கள் நன்றி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-tenders-for-groceries-sold-at-ration-shops-staff-thank-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/online-tenders-for-groceries-sold-at-ration-shops-staff-thank-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">95865209-6ce7-4caa-b315-e0b856438109</guid><pubDate>Mon, 13 Jul 2026 05:56:54 +0000</pubDate><atom:updated>2026-07-13T05:56:54.806Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,ration shops,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/zjfkj4o3/11.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/zjfkj4o3/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தமிழ்நாட்டில் உள்ள 34,908 ரேஷன் கடைகள் மூலம் 2 கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் மாதம் தோறும் பயன்பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு, அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. </p><p>இதுபோக, மஞ்சள் பொடி, சேமியா, பெருங்காயத்தூள், உப்பு, வெந்தயம், சீரகம், குளியல் சோப்பு, சலவை சோப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. </p><p>ஆனால், இந்த மளிகை பொருட்கள் எல்லாம் கட்டாயத்தின் பேரில் பொதுமக்களிடம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தன. இதனால், பல நேரங்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. </p><p>கடந்த ஆட்சி காலத்தில், இந்த மளிகை பொருட்கள் எல்லாம் 'கூட்டு கொள்முதல் குழு' மூலம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் வாங்கப்பட்டது. இதன் மூலம் அதிகார மட்டத்தில் உள்ள சில உயர் அதிகாரிகளுடன், ஆளும் தரப்புக்கு நெருக்கமான நிழல் மனிதர்களுமே ஆதாயம் அடைந்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. </p><p>இந்த நிலையில், மளிகை பொருட்கள் கொள்முதலுக்கு, ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. </p> <p>இது தொடர்பாக, அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>​தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மளிகைப் பொருட்களின் கொள்முதல் முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை நிலவ வேண்டும் என்றும், தரமான பொருட்கள் நியாயமான விலையில் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.</p><p>கடந்த காலங்களில், அதிகார மட்டத்தில் உள்ள ஒரு சில உயர் அதிகாரிகளுடன், ஆளும் தரப்புக்கு நெருக்கமான நிழல் மனிதர்கள் சிலர் கைகோர்த்துக்கொண்டு, 'கூட்டு கொள்முதல் குழு' என்ற பெயரில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி தங்களுக்கு வேண்டப்பட்ட டெண்டர்தாரர்களுக்கு மட்டுமே சாதகமாகச் செயல்பட்டு வந்தனர்.</p><p>சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இத்தகைய திரைமறைவு மளிகை பொருள் கொள்முதல் நடைமுறைகள் அரங்கேறின. ரேஷன் கடைகளுக்கு இவ்வளவு பொருட்களை அனுப்பியே தீர வேண்டும் என்று கட்டாய 'டார்கெட்' நிர்ணயம் செய்யப்பட்டது.</p><p>​அதிகார பலத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த முறைகேடுகளின் மூலம் கமிஷன் தொகை யாருக்குச் சென்றது, யார் ஆதாயம் அடைந்தார்கள் என்பதை விட, கடைக்கோடியில் உழைக்கும் ரேஷன் கடை பணியாளர்கள் முற்றிலும் நசுக்கப்பட்டு, பலியாடாக்கப்பட்டனர் என்பதே நிதர்சனமான உண்மை.</p><p>பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டு, விற்காமல் தேங்கிய பொருட்களுக்கான தொகையையும், காலாவதியான பொருட்களுக்கான தொகையையும் ஏழைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் இருந்து கட்டாய வசூல் செய்யும் அவல நிலை நீடித்து வந்தது.</p><p>அதிகார வர்க்கமும், சில அரசியல் சக்திகளும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இத்தகைய பிரம்மாண்ட கூட்டு ஊழலுக்கும், பணியாளர்களின் நீண்டகால இன்னல்களுக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்திலேயே முற்றுப்புள்ளி வைத்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு அதிரடி நடவடிக்கையாகும்.</p><p>​கூட்டுறவு அங்காடிகளுக்கான மளிகைப் பொருட்கள் இனி "ஆன்லைன் டெண்டர்" மூலம் மட்டுமே வெளிப்படையாகக் கொள்முதல் செய்யப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜின் அறிவிப்பு, எங்களது நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரமாகும்.</p><p>​இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்ததில், கூட்டுறவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவின் பங்கும், அர்ப்பணிப்பும் நிரம்ப உண்டு. நேர்மைக்கும், துணிச்சலான நிர்வாகத்திற்கும் பெயர் பெற்ற அவர், இந்தத் துறையை மேலும் சீர்படுத்துவார் என்ற மிகப்பெரிய நம்பிக்கை ரேஷன் கடை பணியாளர்கள் மத்தியில் இன்று ஆழமாக எழுந்துள்ளது.</p><p>வெளிப்படைத்தன்மையோடு தரமான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, வெளி மார்க்கெட் விலையை விடக் மிகக் குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் விற்கப்பட்டால், கூட்டுறவுத் துறை மிகப்பெரிய வணிகப் புரட்சியை ஏற்படுத்த முடியும்.</p><p>இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க துணிச்சலான முடிவை எடுத்துள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜூக்கும், அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவுக்கும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/counseling-for-engineering-student-admissions-has-begun</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/counseling-for-engineering-student-admissions-has-begun#comments</comments><guid isPermaLink="false">3a7ef80b-fb3c-4ea1-96c4-a6b57cc5f05a</guid><pubDate>Mon, 13 Jul 2026 05:49:20 +0000</pubDate><atom:updated>2026-07-13T05:49:20.737Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர் சேர்க்கை,Engineering Studies,பொறியியல் படிப்பு,பொறியியல் மாணவர் சேர்க்கை,பொறியியல் கலந்தாய்வு,Student Admissions,engineering counseling,engineering student admission</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/t1misrpz/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/t1misrpz/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. முதல் நாளான இன்று அரசு பள்ளியில் பயின்ற 7.5% உள்ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. </p><p>38 இடங்கள் உள்ள விளையாட்டு வீரர்கள் பிரிவில் 504 பேர் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 150 இடங்களுக்கு 14 பேர் பங்கேற்றுள்ளனர். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி, பாடப்பிரிவு ஆகியவற்றை காலை 10 மணி முதல் தேர்வு செய்யலாம் என்றும் தேர்வு செய்த கல்லூரிக்கான ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 15 காலை 7 மணிக்கு வெளியிடப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 40 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அணை பகுதியில் மயங்கி கிடந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-elephant-found-unconscious-in-dam-area-dies-after-treatment-fails</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/baby-elephant-found-unconscious-in-dam-area-dies-after-treatment-fails#comments</comments><guid isPermaLink="false">39ccac93-1351-405c-99ef-64993f82b6db</guid><pubDate>Mon, 13 Jul 2026 05:25:41 +0000</pubDate><atom:updated>2026-07-13T05:25:41.118Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,elephant,குட்டி யானை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/un1odor4/Untitled-7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/un1odor4/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உடலில் காயங்களுடன் சுமார் 3 வயது ஆண் குட்டி யானை மயங்கி கிடந்தது. இதைப்பார்த்த வனத்துறை ஊழியர்கள் குட்டி யானையின் உடல்நிலை குறித்து அதிகாரிகளுக்கும், கால்நடை மருத்துவருக்கும் தகவல் கொடுத்தனர். </p><p>அதன்பேரில் கால்நடை உதவி மருத்துவர் சதாசிவம் காயம் அடைந்த குட்டி யானையின் உடலில் இருந்த காயங்களுக்கு மருந்து போட்டு சிகிச்சை அளித்தார். இதைத்தொடர்ந்து மருத்துவர் மற்றும் வனத்துறையினர் குட்டி யானையின் உடல்நிலை குறித்து கண்காணித்து வந்தனர்.</p><p>இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த குட்டி யானை உடல்நலம் தேறிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தது. இதையடுத்து குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.</p><p>குட்டி யானையின் உடலில் காயங்கள் இருந்ததால் வேறு ஏதாவது விலங்குகள் குட்டியானையை தாக்கியதா? என்று பிரேத பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பிறகே தெரியவரும் என்று கால்நடை மருத்துவர் தெரிவித்தார். அதன்பின்னர் குட்டி யானையின் முகத்தில் இருந்த சுமார் 1 அடி நீளமுள்ள 2 தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. பின்னர் வனப்பகுதியில் குட்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மின் தடையால் தண்ணீர் பாய்ச்ச வழியின்றி காய்ந்து வரும் நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-in-distress-as-rice-crops-dry-up-due-to-power-outages</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-in-distress-as-rice-crops-dry-up-due-to-power-outages#comments</comments><guid isPermaLink="false">3bf30977-0383-49d8-9e37-ccccde6d5a85</guid><pubDate>Mon, 13 Jul 2026 05:00:34 +0000</pubDate><atom:updated>2026-07-13T05:00:34.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,மின் தடை,தஞ்சாவூர்,விவசாயிகள்,Tanjore,தண்ணீர்,நெற்பயிர்கள்,water,power cut,Crop cultivation,Samba Crops,kuruvai crops</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/7taqhfhf/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/7taqhfhf/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><h2>முன்பட்ட குறுவை சாகுபடி</h2><p>காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு வசதி உள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் நாற்று விட்டு நடவு செய்த முன்பட்ட குறுவை பயிர்கள் தற்போது கதிர் வந்து காணப்படுகின்றன. சில இடங்களில் மே மாதத்தில் நடவு செய்யப்பட்ட முன்பட்ட குறுவை நெற்பயிர்கள் கதிர் வரும் தருணத்தில் உள்ளன.</p><p>பூதலூர் அருகே மரத்தகுடி என்ற பகுதியில் சில விவசாயிகள் ஆழ்துளை கிணறு தண்ணீரை பயன்படுத்தி முன்பட்ட குறுவை சாகுபடி செய்திருந்தனர். கடுமையான வெயில் மற்றும் காற்று காரணமாக தினந்தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழல் எழுந்துள்ளது.</p><h2>வயல்களில் வெடிப்பு</h2><p>தொடர்ந்து சில நாட்களாக மின்தடை ஏற்பட்டதால் தண்ணீர் பாய்ச்ச வழியின்றி நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. நடவு செய்யப்பட்ட நெல் வயல்கள் காய்ந்து வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மின் தடை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.</p><p>மேட்டூர் அணை திறப்பது தற்போது சாத்தியமில்லாத சூழலில் ஆழ்துளை கிணற்று பாசனத்துக்கும் மின் தடையால் பாதிப்பு ஏற்படுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - 3 குழந்தைகள் பரிதவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-commits-suicide-by-hanging-himself-after-wifes-death</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-commits-suicide-by-hanging-himself-after-wifes-death#comments</comments><guid isPermaLink="false">c3cabef0-c2e5-4752-a014-c9f6cb552e51</guid><pubDate>Mon, 13 Jul 2026 04:47:34 +0000</pubDate><atom:updated>2026-07-13T04:47:34.909Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,தற்கொலை,கயத்தாறு,Kayatharu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/xvhmrtdj/Untitled-6.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/xvhmrtdj/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆசூர் கிராமத்தில் நடுத்தெரு முத்துப்பாண்டி மகன் கருப்பசாமி (37 வயது). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்லத்தாய். இவர்களுக்கு கார்த்திகா, சுமித்ரா ஆகிய 2 மகளும், அருண் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லத்தாய் இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து 3 குழந்தைகள் மற்றும் வயதான தாயார் தங்கமாரியம்மாளுடன் வசித்து வந்தார். மனைவி இறந்தது முதல் கருப்பசாமி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.</p><p>நேற்று காலையில் வீட்டில் குழந்தைகளுடன் டீ குடித்துவிட்டு கருப்பசாமி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரது தாயார் வயல் வேலைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தைகளும் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த கருப்பசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியே சென்ற குழந்தைகள் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். கதவு அடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த குழந்தைகள், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது கருப்பசாமி தூக்கில் தொங்கியதை பார்த்து குழந்தைகள் கதறி அழுதுள்ளனர்.</p><p>அவர்களின் அழுகுரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று, அவரது உடலை கீழே இறக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் அந்த வீட்டிற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>தாய், தந்தையரை இழந்த நிலையில் 3 குழந்தைகளும் பரிதவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார்: அனிதா ராதாகிருஷ்ணன் சூளுரை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-will-be-the-chief-minister-in-6-months-anita-radhakrishnan-soolurai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-will-be-the-chief-minister-in-6-months-anita-radhakrishnan-soolurai#comments</comments><guid isPermaLink="false">6e5e4b5d-9bf3-4859-b32c-311efe23ceca</guid><pubDate>Mon, 13 Jul 2026 04:46:32 +0000</pubDate><atom:updated>2026-07-13T04:46:32.123Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin,Anitha Radhakrishnan,அனிதா ராதாகிருஷ்ணன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/62nx4v6z/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/62nx4v6z/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் நேற்று நடைபெற்றது. இதில், திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். </p><p><strong>கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-</strong></p><p>சிலர் நமது தலைவர்களை பற்றி கேவலமாக பேசுவது; திமுகவில் உள்ளவர்களை கைது செய்வது என மிரட்டி பார்க்கிறார்கள். திமுகவை தொட்டு பார்க்க முடியுமா?. விஜய் எந்த வகையில் முதல்-அமைச்சராக வந்தார்?. அவர் எம்ஜிஆரை குறிப்பிடுகிறார். எம்ஜிஆரும் அவரும் ஒன்றா?. சினிமா நடிக்கும் போது விஜய் என்பது அரசியலுக்கு வந்ததும் ஜோசப் விஜய் என்பது. திருச்சி தேவாலயத்திலே முட்டி போட்டு நடப்பது. எம்.ஜி.ஆ.ரை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. </p><p>அதேபோல, தற்போது விஜய்யா ஆட்சி நடத்துகிறார்?. லாட்டரி வியாபாரி ஆதவ் அர்ஜுனா தான் ஆட்சியை நடத்துகிறார். எவ்வளவு நாட்கள் இந்த ஆட்சி நடைபெறும் என்று நான் குறிப்பிட்டு சொல்கிறேன். 6 மாத காலத்திற்கு இந்த ஆட்சி போகவில்லை என்று சொன்னால் பார்ப்போம். 6 மாதத்தில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருவார். திருச்சி சிவா போன்றவர்கள் எல்லாம் மத்தியில அமைச்சராக அமர்வார்கள். அந்த காலம் வரும்போது, சினிமாவில் நடிக்கும் போது முதல்-அமைச்சர் விஜய் என்னென்ன தப்பு செய்தார்? என்பது எல்லாம் வெளியே வரும்.</p><p>என்னை ஜெயிலில் பிடித்து போட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தமா.? அந்த அம்மாவும் தான் என்னை பிடித்து போட்டார் 37 நாட்கள் திருச்சி சிறையில் அடைத்தார். இப்போது, இவரும் என்னை பிடித்து போட்டு மிரட்டலாம் என்று நினைத்தார் அது நடக்குமா?. காவல்நிலையத்தில், "நீங்க எம்.எல்.ஏ. பதவிய ராஜினாமா செய்யுங்கள் உங்களை மந்திரி ஆக்குவோம் என கூறினார்கள், அதற்கு நான் மந்திரியாவது கிந்திரி ஆவது என கூறிவிட்டு என்று நான் சம்மதிக்கவில்லை. யார் என்ன செய்தாலும் எங்கள் கழகத்தை அசைத்துக் கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பாம்பன் பழைய தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-section-of-the-old-pamban-bascule-bridge-has-been-removed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-section-of-the-old-pamban-bascule-bridge-has-been-removed#comments</comments><guid isPermaLink="false">51e11861-ac3f-4b64-b5c9-be8c5d241e96</guid><pubDate>Mon, 13 Jul 2026 04:46:03 +0000</pubDate><atom:updated>2026-07-13T04:46:03.006Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பாம்பன் பாலம்,பாம்பன் தூக்கு பாலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/3t4f02o7/10.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/3t4f02o7/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>பாம்பன் கடலில் 1914ல் அமைக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால் 2022ல் அதன் வழியாக நடந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு 2025 ஏப்., 6ல் ரயில் போக்குவரத்து துவங்கியது.</p><p>இதையடுத்து பழைய ரயில் துாக்கு பாலத்தை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அகற்ற டெண்டர் விடப் பட்டது. தற்போது துாக்கு பாலத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இன்னும் சில வாரங்களில் துாக்கு பாலம் முழுவதும் அகற்றப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ? அப்போது தவெக ஆட்சி இருக்காது: ராஜேந்திர பாலாஜி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-mk-stalin-get-angry-then-there-will-be-no-tvk-government-rajendra-balaji</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/when-will-mk-stalin-get-angry-then-there-will-be-no-tvk-government-rajendra-balaji#comments</comments><guid isPermaLink="false">4527da4c-5780-4841-942c-7a3c46442c7e</guid><pubDate>Mon, 13 Jul 2026 04:25:19 +0000</pubDate><atom:updated>2026-07-13T04:25:19.249Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,ராஜேந்திர பாலாஜி,Rajendra Balaji,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/g05u22gc/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/g05u22gc/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி,</p><p>சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-</p><p>தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் அ.தி.மு.க.வினர். தற்போது ஆட்சியில் உள்ள கட்சி நேற்று முளைத்த காளான். இதை அ.தி.மு.க.வினர் ஊதி தள்ளிவிடுவார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கடுமையாக தேர்தல் பணியாற்றினார்கள். ஆனால் இந்த தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><p>த.வெ.க.வுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் அந்த கட்சி தமிழகத்தில் 150 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு முழு வெற்றி கிடைக்கவில்லை. இந்த வெற்றி நிலையான வெற்றி கிடையாது. த.வெ.க.வினர் ஆசைவார்த்தை கூறி மாற்று கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அழைக்கிறார்கள். இதற்கு ஆசைப்பட்டு சிலர் இங்கிருந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் சென்றதால் அ.தி.மு.க. அழிந்து விடுமா?. அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறியவர்கள் விரைவில் தாய் கழகமான அ.தி.மு.க.வில் இணைவார்கள்.</p><p>முதல்-அமைச்சர் பதவியில் உள்ள விஜய், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கன்னியகுறைவாக பேசக்கூடாது. மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ? அப்போது தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி இருக்காது. அவருக்கு கோபம் வரணும். வரும்.. அதுவரை உங்கள் ஆட்சி நீடிக்கும். முதல்- அமைச்சர் விஜய் கரூரில் பேசியதை மக்கள் ரசிக்கவில்லை. தமிழகத்தை பல முதல்-அமைச்சர் ஆட்சி செய்துள்ளார்கள். அவர்கள் இப்படி நடந்து கொள்ளவில்லை. ஆனால் விஜய் கரூரில் நடந்து கொண்ட விதம் வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-suddenly-recedes-at-rameswaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-suddenly-recedes-at-rameswaram#comments</comments><guid isPermaLink="false">596bd943-a71f-44e8-b14a-62f10431aeba</guid><pubDate>Mon, 13 Jul 2026 04:16:24 +0000</pubDate><atom:updated>2026-07-13T04:16:24.025Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram,sea,கடல்,ராமேஸ்வரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/70w4gf1s/9.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/70w4gf1s/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம்,  </p><p>ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று கடல் உள்வாங்கி காணப்பட் டது.</p><h2>ராமேஸ்வரம் கோவில்</h2><p>இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல் லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனிடையே சனி, ஞாயிறு 2 நாட் கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து நேற்று ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.</p><p>இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்து இருந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் பூஜை செய்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர்.</p><h2></h2><h2>தனுஷ்கோடி</h2><p>மேலும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ரூ.100, ரூ.200 இலவச தரிசன பாதையிலும், பொது தரிசன பாதையிலும் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர். அதேபோல் ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த ராமர் பாதம், தனுஷ் கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.</p><p>கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் புயலால் அழிந்து போன தனுஷ் கோடி கம்பிப்பாடு கடற்கரை மற்றும் அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு சென்று கடலின் அழகை பார்த்து ரசித்து சென்றனர். இதனால் தனுஷ்கோடியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.</p><h2>உள்வாங்கிய கடல்</h2><p>இதற்கிடையே ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடலில் உள்ள பாசி, பாறைகள் தெளிவாக வெளியே தெரிந்தன. நேற்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் கடல் உள்வாங்கி இருந்ததால் புனித நீராட சிரமப்பட்டனர். மேலும் அங்கு வந்த பக்தர்கள் கடல் உள்வாங்கியதை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர்.</p><p>காலை 9 மணி வரை உள்வாங்கி இருந்த கடலானது அதன் பிறகு நேரம் செல்ல செல்ல மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. காற்று காலத்தில் அக்னி தீர்த்த கடல் மற்றும் துறைமுக பகுதியில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமான ஒன்று தான் என மீனவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>
எழுத்தாளர் பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/writer-poomanis-demise-is-an-irreparable-loss-to-the-world-of-tamil-literature-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/writer-poomanis-demise-is-an-irreparable-loss-to-the-world-of-tamil-literature-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">f9d8144a-0431-45f8-9498-3ca821d410a6</guid><pubDate>Mon, 13 Jul 2026 03:46:47 +0000</pubDate><atom:updated>2026-07-13T03:46:47.512Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,condolences,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay,எழுத்தாளர் பூமணி,Writer Poomani</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/3vx70yns/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/3vx70yns/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிச் சடங்குகள் கோவில்பட்டியில் இன்று மாலை நடைபெறுகிறது.</p><p>இந்த நிலையில் இலக்கியத் துறையில் அவரது பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சாகித்திய அகாடமி விருது பெற்ற  எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் எனும்  பூமணி காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>பூமணி கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார். </p><p>அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது.</p><p>பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால்  வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இலக்கியத் துறையில் பூமணியின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நடைபாதை வசதி கொண்ட நகரங்கள் பட்டியலில்  சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா...?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-you-know-how-many-places-chennai-has-in-the-list-of-cities-with-pedestrian-facilities</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/do-you-know-how-many-places-chennai-has-in-the-list-of-cities-with-pedestrian-facilities#comments</comments><guid isPermaLink="false">ee4f8612-54bf-477d-8847-041670a1ebb5</guid><pubDate>Mon, 13 Jul 2026 03:25:45 +0000</pubDate><atom:updated>2026-07-13T03:25:45.823Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Chennai,சென்னை,நடைபாதை,Walkway</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ckvrt5vh/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ckvrt5vh/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள நடைபாதைகளின் தரம், அவற்றின் உள்கட்டமைப்பு மற்றும் அது மக்கள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா? என்பதை விளக்கும் வகையில் 'ஸ்டேட் ஆப் இந்தியன் ஸ்டிரீட்ஸ் 2026' என்ற அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வு அறிக்கையை ‘நியூ ரல் சிட்டி' என்ற நகர்ப்புற தரவு மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டு உள்ளது.</p><p>இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களின் உள்கட்டமைப்பை செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யும் அமைப்பு ஆகும். அந்த வகையில் சாலைகளின் தரைமட்ட படங்கள், செயற்கைக்கோள் தரவுகளை சேகரித்து இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.</p><p>அதிலும் நடைபாதை இருக்கிறதா? என்று மட்டும் பார்க்காமல், அந்த நடைபாதையில் 100 மீட்டர் தூரத்துக்கு தொடர்ச்சி யாக எந்தவொரு தங்கு தடையுமின்றி ஒரு மனிதரால் நடக்க முடிகிறதா? என்ற அளவுகோலை அடிப்படையாக வைத்து கணக்கிட்டும் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.</p><h2>சென்னைக்கு 4-வது இடம்</h2><p>அதன் அடிப்படையில், உத்தரபிர தேசமாநிலம் லக்னோவில் நடைபாதை வசதிகள் 28 சதவீதம் சரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு பட்டியலில் முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 100 கி.மீ. சாலையில் 28 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை வசதிகள் சரியாக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் அடுத்தபடியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரத்தில் 25.9 சதவீதமும், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரத்தில் 15.1 சதவீதமும் மட்டுமே சரியான நடை பாதை வசதிகள் இருக்கின்றன.</p><p>சென்னை 4-வது இடத்தில் 13.9 சதவீதம் மட்டுமே முறையான நடைபாதை வசதிகளை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விசாகப்பட்டினம் 13.4 சதவீதம், குருகிராம் 12.6 சதவீதம், இந்தூர் 8.5 சதவீதம், டெல்லி 7.8 சதவீ தம், ஆமதாபாத் 5.8 சதவீதம், மும்பை 5.5 சதவீதம் மட்டுமே சரியான நடைபாதை வசதிகள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p><h2>சாலையோர கடை, விளம்பர பலகை</h2><p>இந்தியாவில் சுமார் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை உள்ள நகரச்சாலைகளில் முறையான அல்லது பாதுகாப்பான நடைபாதைகளே இல்லை என்பதையும், இந்தியாவில் வாகனங்களுக்கு சாலைகளில் கொடுக்கப்படும் முக்கியத்துவம், நடந்து செல்லும் சாதாரண மனிதர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p>நடைபாதைகளில் சாலையோர கடைகள், விளம்பர பலகைகள் மற்றும் சட்டவிரோத வாகன நிறுத்தங்களால் ஆக்கிரமிக்கப்படுவது, மின்மாற்றிகள், மின்கம்பங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகள் போன்ற பொதுப்பயன்பாட்டு உள்கட்டமைப்புகள் நடைபாதைகளின் நடுவிலேயே அமைக்கப்படுவது, நகர்ப்புற திட்டமிடல் முழுவதும் 'வாகனங்கள் வேகமாகச் செல்வதற்கே' முக்கியத்துவம் தருவது, பாதசாரிகளுக்கான இடத்தை சாலை விரிவாக்கத்திற்காக குறைத்துவிடுவது போன்றவற்றால் எந்த நகரங்களும் முழுமையான நடைபாதை வசதிகளை மக்களுக்கு கொடுக்க முடியாமல் திணறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்லில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-dindigul-facing-a-power-outage-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-dindigul-facing-a-power-outage-tomorrow#comments</comments><guid isPermaLink="false">0f3131df-4e6e-43b4-9346-32fba1c0cd3f</guid><pubDate>Mon, 13 Jul 2026 03:22:05 +0000</pubDate><atom:updated>2026-07-13T03:22:05.362Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/tg9bsldb/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/tg9bsldb/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p>திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. </p><p>இதையொட்டி பண்ணப்பட்டி, குரும்பப்பட்டி, காரமடை, சர்க்கரை கவுண்டன்சாலை, கீழத்திப்பம்பட்டி, புதுப்பட்டி, சுரக்காய்பட்டி, தெத்துப்பட்டி, மலையாண்டிபுரம், தருமத்துப் பட்டி, பழைய கன்னிவாடி, ராமலிங்கம் பட்டி, தோனிமலை, மேலதிப்பம் பட்டி, வெள்ளமரத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, முத்துராம்பட்டி, டி.கோம்பை, மல்லையாபுரம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற் கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>நீலகிரி: தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephants-run-amok-after-entering-a-tea-estate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephants-run-amok-after-entering-a-tea-estate#comments</comments><guid isPermaLink="false">7cb350e3-b727-4c1a-a847-02fde459d27c</guid><pubDate>Mon, 13 Jul 2026 03:10:33 +0000</pubDate><atom:updated>2026-07-13T03:10:33.229Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,காட்டு யானைகள்,Wild elephants</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/cvkn54wo/5.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/cvkn54wo/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேரம்பாடி, சோலாடி, கண்ணம்பள்ளி, கோரஞ்சால், சப்பந்தோடு, புஞ்சகொல்லி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்கள், பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் பொதுமக்கள், மாணவர்களை விரட்டி வருகிறது. காட்டு யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சேரம்பாடியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் 5 காட்டு யானைகள் முகாமிட்டது. </p><p>அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காட்டு யானைகள் காப்பி காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் சஞ்சீவி, வனவர் முத்தமிழ் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர். இதேபோல் அய்யன்கொல்லி அருகே தட்டாம்பாறை, கருத்தாடு, கோட்டப் பாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதை அறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை நீர்மட்டம் 75.65 அடியாக குறைந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-drops-to-7565-feet</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-drops-to-7565-feet#comments</comments><guid isPermaLink="false">5f96fbf8-85cb-4be6-ba30-56445114e7f4</guid><pubDate>Mon, 13 Jul 2026 02:28:45 +0000</pubDate><atom:updated>2026-07-13T02:28:45.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,Water inflow,தண்ணீர் வரத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/bewgayui/4.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/bewgayui/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கை கொடுக்காத நிலையில் மேட் டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் கடந்த மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு திறக்க வேண்டிய மேட்டூர் அணை இன்று வரை திறக்கப்பட வில்லை. இதனால் இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக் கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. </p><p>ஜூன் மாதம் முதல் ஜனவரி வரை டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை அளிக்கும் மேட்டூர் அணையில் இருந்து தற்போது குடிநீர் தேவைக்காக மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 75.65 அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 91 கனஅடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதல் விவகாரம்; குடும்பத்தினரை தவிக்க விட்டு 17 வயது சிறுவனுடன், பெண் தற்கொலை
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-love-affair-leaving-family-in-distress-woman-commits-suicide-with-17-year-old-boy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-love-affair-leaving-family-in-distress-woman-commits-suicide-with-17-year-old-boy#comments</comments><guid isPermaLink="false">75b87b95-7174-48e8-a105-51d0a7a0de7d</guid><pubDate>Mon, 13 Jul 2026 02:15:51 +0000</pubDate><atom:updated>2026-07-13T02:15:51.926Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்காதல்,திருச்சி,Trichy,fake love</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/8h0cpvev/upael.jpg" width="1366"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/8h0cpvev/upael.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>லால்குடி</p><p>திருச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனுடன் பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது.  திருச்சியின் லால்குடி மற்றும் காட்டூர் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.</p><p>அப்போது அந்த வழியே சென்ற 2 பேர் அந்த ரெயில் முன்பு திடீரென்று பாய்ந்தனர்.  இதில், பலத்த காயமடைந்து அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிருந்தா சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.</p>  <h2>முதல்கட்ட விசாரணை</h2><p>போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்தவர்கள் திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்துள்ள போதாவூர் கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 26) மற்றும் திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் புவனேஸ்வரிக்கு திருமணமாகி 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.</p><p>புவனேஸ்வரிக்கும், அவரது உறவினரான திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்த சிறுவன் ஒரு கல்லூரியில் பட்டய படிப்பு படித்து வந்தார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் இருவரது குடும்பத்தினருக்கும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.</p>  <h2>ஊர் சுற்றினர்</h2><p>இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த சிறுவன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். அதேபோல், புவனேஸ்வரி திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா ஆலயத்துக்கு சென்று வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியுள்ளனர்.</p><p>இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மணக்கால் ரெயில்வே கேட் பகுதிக்கு அவர்கள் வந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.</p>  <h2>வழக்குப்பதிவு</h2><p>இதையடுத்து 2 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் பிருந்தா வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி பயங்கர விபத்து: 5 பேர் பலி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-collides-with-government-bus-in-horrific-accident-near-madurai-5-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-collides-with-government-bus-in-horrific-accident-near-madurai-5-killed#comments</comments><guid isPermaLink="false">956aebfa-311a-40a0-b658-3b885ac851d4</guid><pubDate>Mon, 13 Jul 2026 02:15:46 +0000</pubDate><atom:updated>2026-07-13T02:15:46.806Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,சாலை விபத்து,road accident,Omni Bus,ஆம்னி பஸ்,அரசு பஸ்,Madurai,மதுரை,கிரைம் செய்திகள்,govt bus</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/5ym1f7bp/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/5ym1f7bp/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>சென்னையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று புறப்பட்டது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வண்டிநகரம் பகுதி நான்குவழிச்சாலையில் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் மதுரையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p>அரசு பஸ் மீது மோதிவிட்டு இடது பக்கம் திரும்பி சாலையோரம் உள்ள பயணிகள் நிழற்குடையில் ஆம்னி பஸ் மோதி சுக்குநூறானது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அரசுப் பஸ் தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு பஸ்களிலும் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.</p><p>இந்த விபத்தில் இரு பஸ்களிலும் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 4 ஆண்கள், 1 பெண் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் உட்பட 42 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-36</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-36#comments</comments><guid isPermaLink="false">ed510a37-6ab3-40dd-ba41-409e714c2582</guid><pubDate>Mon, 13 Jul 2026 01:00:07 +0000</pubDate><atom:updated>2026-07-13T01:00:07.321Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,Diesel Price,டீசல் விலை,Petrol price</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ozg6t2r8/2.gif" width="753"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-13/ozg6t2r8/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><p>பெட்ரோல், டீசல் விலை</p><p>இந்நிலையில், சென்னையில் இன்று (13.07.2026 - சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p> ]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க.விற்கு திரும்பி வந்தால் ஜீரோவில் இருந்து மீண்டும் அரசியல் வாழ்க்கை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/returning-to-the-aiadmk-means-starting-a-political-career-from-scratch-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/returning-to-the-aiadmk-means-starting-a-political-career-from-scratch-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">dc01649a-50b1-4064-885c-aa761fd5506e</guid><pubDate>Sun, 12 Jul 2026 23:18:17 +0000</pubDate><atom:updated>2026-07-12T23:18:17.874Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அ.தி.மு.க,Edappadi Palaniasamy</media:keywords><media:content height="542" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/e85og6zo/EPS.jpg" width="794"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/e85og6zo/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு பிரிந்து சென்றவர்கள் அங்கு எப்படி இருக்கிறார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும். என்னை எப்போது வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம். ஆனால் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் த.வெ.க. தலைவரை அவர்களால் சுலபமாக பார்க்க முடியாது. ஆட்சி, காட்சிகள் மாறும்போது, நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். அவ்வாறு வந்தால் அவர்கள் ஜீரோவில் இருந்து தான் அவர்களது அரசியல் பயணம் தொடங்கப்படும். </p> <h2>விஜய்க்கு நம்பிக்கையில்லை</h2><p>தேர்தலில் தி.மு.க. தலைவர் உள்ளிட்ட சில அரசியல் கட்சி தலைவர்கள் வெற்றி பெறமுடியவில்லை. த.வெ.க.தலைவர் விஜய் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் எடப்பாடி தொகுதியில் நான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன், என்றார்.</p><h2>போதைப்பொருள் நடமாட்டம்</h2><p>மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் உருவ படங்களை வைத்து த.வெ.க. தலைவர் விஜய் ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்தார். நமது தலைவர்களை வைத்து வெற்றி பெற்றுள்ளதால் அது உண்மையான வெற்றியாக கருதமுடியாது. ஜனநாயகன் படத்தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியாவும், அவருக்கு ஆலோசகருக்கு தமிழ்நாடு அரசின் ஆலோசகராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது. சொல்லபோனால் முதல்-அமைச்சருக்கு மேக்கப் போடும் நபருக்கும் வரும் நாட்களில் பதவி கொடுப்பார்கள்?. த.வெ.க. ஆட்சிக்கு வந்து 60 நாட்களில் தி.மு.க. ஆட்சியில் இருந்ததுபோல் கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாக நடந்து வருகிறது.</p> <h2>அதிமுக வெற்றி பெறும்</h2><p>தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என நினைத்து ஏராளமான வாக்குறுதிகளை விஜய் அள்ளி வீசினார். தற்போது நிதியில்லாமல் விழி பதுங்கி நிற்கிறார். த.வெ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவில்லை. தி.மு.க. கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் எப்போது வேண்டுனாலும் காலை வாறிவிடுவார்கள். அப்போது இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். எனவே, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதன்பிறகு வரும் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். எனவே, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சி பணியாற்ற வேண்டும்” என்றார். </p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட்ட இலங்கை தம்பதி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-couple-arrested-for-voting-in-tamil-nadu-assembly-election</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-couple-arrested-for-voting-in-tamil-nadu-assembly-election#comments</comments><guid isPermaLink="false">c9920182-8813-4c59-ba6d-edf6bafec6ee</guid><pubDate>Sun, 12 Jul 2026 22:01:49 +0000</pubDate><atom:updated>2026-07-12T22:01:49.373Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை தேர்தல்,Sri Lanka,இலங்கை,vote</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/fezuxjro/Arrest.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/fezuxjro/Arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் குணேஸ்வரன் (வயது 69). இவர் சென்னை தியாகராயநகரில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவி நாகுலாம்பிகையுடன் (60) வசித்து வந்தார். அங்கு சிறிய அளவில் நகைக்கடை ஒன்றையும் வைத்துள்ளார். இவரது மகள் மற்றும் குடும்பத்தினர், இலங்கை யாழ்ப்பாணத்தில் வாழ்கிறார்கள். இலங்கை பாஸ்போர்ட்டில் தமிழகத்தில் தங்கியிருந்த இவர், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.</p> <p>அதை பயன்படுத்தி சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுபோட்டுள்ளார். இது கண்டுபிடிக்கப்பட்டு, மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், இவர்கள் இருவர் மீதும் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் இலங்கை செல்வதற்காக, சென்னை விமான நிலையம் சென் றுள்ளனர். அப்போது இவர்கள் தமிழக வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>பெரம்பூர்  எம்.எல்.ஏ. அலுவலகம் இன்று  திறப்பு: தொகுதி மக்களையும் சந்திக்கிறார் முதல் அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-mla-office-to-open-today-chief-minister-vijay-to-meet-constituents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-mla-office-to-open-today-chief-minister-vijay-to-meet-constituents#comments</comments><guid isPermaLink="false">d131b249-4800-4e1f-a2ea-08df6fa43cae</guid><pubDate>Sun, 12 Jul 2026 20:45:45 +0000</pubDate><atom:updated>2026-07-12T20:45:45.519Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Vijay,பெரம்பூர்,எம்.எல்.ஏ. அலுவலகம்,CM Vijay,முதல் அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/f5ne6sl4/Vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/f5ne6sl4/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பெரம்பூர் தொகுதி அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பகுதியில், "பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ச. ஜோசப் விஜய்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் விஜய்க்காக தனி அறையும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தினுள் தனியாக கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2> இன்று திறந்து வைக்கிறார்</h2><p>இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்து வைக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு,  இன்று முதல் முறையாக அவர் தனது தொகுதிக்குச் செல்வதால், அவருக்கு த.வெ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடம் ஒன்றை புதுப்பித்து, அதனை நவீனமயமான எம்.எல்.ஏ. அலுவலகமாக மாற்றியுள்ளனர். எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு, முதல்-அமைச்சர் விஜய் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஆய்வு செய்கிறார். புதிய ரேஷன் கார்டுகள் மற்றும் பட்டாக்களையும் பொதுமக்களுக்கு அவர் வழங்குகிறார்.</p><h2>புதிய செயலி</h2><p>எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியான அதில், பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்-அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு ‘மக்கள் சேவை தளம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் இந்த பிரத்யேக செல்போன் செயலியையும் நாளை அறிமுகம் செய்து தொடங்கி வைக்கிறார்.</p><h2>அடிப்படை தேவைகள்</h2><p>இந்தச் செயலி மூலம் பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், சாலை வசதி, குடிநீர், துப்புரவுப் பணி, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள், அரசு நலத்திட்டங்கள், வீட்டு வசதி உதவிகள், வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் சட்டரீதியான ஆவண உதவிகள், அவசர உதவிகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நேரடியாக முதல்-அமைச்சர் விஜய்யின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.</p><h2>சில நொடிகளில்</h2><p>இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் தங்களது புகாரைப் பதிவு செய்ததும், அடுத்த சில நொடிகளிலேயே அது பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தைச் சென்றடையும். புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதை ஏற்றுக்கொண்டதற்கான உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி, புகார் அளித்தவரின் செல்போன் எண்ணுக்கு செல்லும் வகையிலேயே செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.புகார் அளித்தவர்கள் தங்களது புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதையும் செல்போன் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.புகார் அளிக்கப்பட்டது முதல், பிரச்சினைகள் தீர்க்கப்படுவது வரை தங்களது மனுக்கள் எந்த நிலையில் உள்ளன என்பதையும் தொகுதி மக்கள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>3 நாட்கள்</h2><p>முதல்-அமைச்சர் விஜய் அறிமுகப்படுத்தும் இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மீது குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.குடிநீர், மின்சாரம், சாலை வசதி, துப்புரவுப் பணிகள் போன்ற அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் முழுமையான தீர்வு காணப்பட்டு, அது குறித்த விரிவான பதிலை மக்களுக்கு செயலி வழியாகவே தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இச்செயலியைப் பிரத்யேகமாகக் கண்காணிப்பதற்கான நவீன கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த 'டிஜிட்டல்' மக்கள் சேவை செயலி பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>தொகுதி மக்கள்</h2><p>இன்று திறக்கப்பட உள்ள பெரம்பூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை பொதுமக்கள்  நேற்றே நேரில் சென்று பார்த்து புகைப்படங்களையும் எடுத்தனர். இந்த அலுவலகத்துக்கு எதிரில் உள்ள பெரிய காம்பவுண்டு சுவரில் த.வெ.க. அரசின் சாதனைகளை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம், சிங்கப்பெண் திட்டம் ஆகியவை பற்றிய புகைப்படங்கள் முதல்-அமைச்சர் விஜய் படத்துடன் இடம்பெற்றுள்ளன. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகளை போலீசார்  நேற்றே தொடங்கியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title> வி.சி.க.வை பலவீனப்படுத்த நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள்- திருமாவளவன்  தாக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-sought-to-weaken-the-vck-have-been-left-disappointed-thirumavalavan-lashes-out</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-sought-to-weaken-the-vck-have-been-left-disappointed-thirumavalavan-lashes-out#comments</comments><guid isPermaLink="false">e861f6fe-4608-4944-ba79-65ca47b9bab0</guid><pubDate>Sun, 12 Jul 2026 20:34:14 +0000</pubDate><atom:updated>2026-07-12T20:34:14.682Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,விசிக,VCK,Thirumavalvan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/3f4ctus8/Thiruma.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/3f4ctus8/Thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரியில் நடந்த திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-நான் ஒருபோதும் கட்சியிலிருந்து யாரையும் வெளியேற்ற வேண்டும் என்று எண்ணியதில்லை. சிலர் வி.சி.க.வை எப்படியாவது சிதறடிக்க வேண்டும். பலவீனப்படுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந் தார்கள். அவர்கள் இப்போது ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.</p><p>ஒருவர் நம் கட்சிக்கு வருகிறார் என்று சொன்னால், அவரிடம் என்ன சொல் லியிருக்க வேண்டும். எங்களுடன் திருமாவளவன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றியுள்ளார். நாளை வி.சி.க. எங்களுக்கு தேவை. நீங்கள் எங்கள் கட்சிக்கு வர வேண்டாம். வேறு கட்சிக்கு செல்லுங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். அதுதான் அரசியல் அறம். எங்களாலும் வி.சி.க.வை பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில் கட்சி யில் இணைத்துக் கொண்டார்கள். </p> <p>நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இயக்கம் எடுத்த முடிவு என் இதயத்தில் முள் குத்தியதை போல் வலியை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தில் நூற்றுக்கணக்கான கருத்தியல் சார்ந்த படை தளபதிகள் வலிமையுடனும் பற்றுதலுடனும் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>அண்ணாமலையின் ஆரோக்கியமான கருத்துகளை ஏற்கிறோம்’-அமைச்சர் விக்னேஷ் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-accept-annamalais-constructive-views-minister-vigneshs-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-accept-annamalais-constructive-views-minister-vigneshs-statement#comments</comments><guid isPermaLink="false">df83a926-af78-48e8-952c-1eea881d899d</guid><pubDate>Sun, 12 Jul 2026 19:31:27 +0000</pubDate><atom:updated>2026-07-12T19:31:27.326Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Annamalai,அண்ணாமலை,விக்னேஷ்,Vignesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/yvr0ccze/minister-vignesh.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/yvr0ccze/minister-vignesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>சட்ட நடவடிக்கை</h2><p>பழனி அருகே உள்ள கோரிக்கடவு கிராமத்தில் த.வெ.க. சார்பில் கூட்டம் நடந்தது. இதில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார். பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வியட்நாம் விபத்தில் பலியான பழனியை சேர்ந்த முருகபிரபுவின் உடலை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக செய்திகள் வந்தன. எனவே இன்று கூட (அதாவது நேற்று) அறநிலையத்துறை அமைச்சரிடம் செல்போனில் பேசினேன். </p> <p>அப்போது, கோவில் நில மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து, அந்த நிலங்கள் மீட்கப்படும் என அவர் கூறியுள்ளார். தவறு யார் செய்திருந்தாலும் தண்டனை வழங்கப்படும்.தமிழகத்தில் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் அரசுக்கு நிதிச்சுமை இருந்தது. தற்போது அதை நிவர்த்தி செய்து வருகிறோம். எனவே அடுத்தகட்டமாக மக்களுக்கு பாதிப்புள்ள டாஸ்மாக் கடைகளை மூட முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்து செயல்பட்டு வந்த பார்கள் தான் மூடப்பட்டுள்ளன.</p><h2>ஆரோக்கியமான கருத்து</h2><p>திண்டுக்கல் மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இதற்காக கலெக் டர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.பின்பு, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> நடத்தும் 'வீ தி லீடர்ஸ்' அமைப்புக்கு அதிகமாக இளைஞர்கள் செல்கிறார்கள், எனவே அவரின் மாநாடு குறித்து தங்களின் கருத்து என்ன? என அமைச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, அவர் இது ஜனநாயக நாடு. கரூரில் கோவில் நிலம் வழங்கப்பட உள்ள விவகாரத்தில் கூட அண்ணாமலை தமிழக அரசை பாராட்டியுள் ளார். எனவே அண்ணாமலையின் ஆரோக்கியமான கருத்துகளை ஏற்கிறோம். யாரையும் எதிரியாக பார்க்கவில்லை, தீயசக்தியை தவிர, என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே 8 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரெயில் இயக்கம்-தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railway-announces-operation-of-an-8-coach-passenger-train-between-chennai-beach-and-tiruvannamalai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railway-announces-operation-of-an-8-coach-passenger-train-between-chennai-beach-and-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">9dfa14d0-d232-492a-a832-5bc173694a8e</guid><pubDate>Sun, 12 Jul 2026 18:40:03 +0000</pubDate><atom:updated>2026-07-12T18:40:03.186Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,train,பயணிகள் ரெயில் சேவை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zs7042fl/Train-new.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/zs7042fl/Train-new.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தாம்பரம் பணிமனையில் இன்று (13-ந்தேதி), நாளை (14-ந்தேதி) ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 12 பெட்டிகள் கொண்ட 5 பயணிகள் ரெயில்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 12 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p> <p>விழுப்புரத்தில் இருந்துகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரெயிலும் (வண்டி எண்.66056), தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயிலும் (66045), விழுப்புரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயிலும் (66046), சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் பயணிகள் ரெயிலும் (66033), இன்று (திங்கட்கிழமை) 8 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக்கப்படும். மேலும், திருவண்ணாமலையில் இருந்து நாளை (14-ந்தேதி) காலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரெயில் (66034) 8 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்: கவர்னருக்கு கிருஷ்ணசாமி கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/explanation-must-be-sought-from-mlas-who-are-resigning-krishnasamys-letter-to-the-governor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/explanation-must-be-sought-from-mlas-who-are-resigning-krishnasamys-letter-to-the-governor#comments</comments><guid isPermaLink="false">ce002f91-ef01-457e-aba2-d4d041c9d24e</guid><pubDate>Sun, 12 Jul 2026 17:11:31 +0000</pubDate><atom:updated>2026-07-12T17:11:31.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Governor,கவர்னர்,கிருஷ்ணசாமி,All over Tamil Nadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/cdl9gcep/krishasamy.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/cdl9gcep/krishasamy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, கவர்னர் அர்லேகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்வதும், பின்னர் ஆளும் கட்சியில் இணைவதும் ஒரு தொடர் கதையாகி வருகிறது. இதுவரை 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.</p><p>இதனை குதிரை பேரமாக கருத வேண்டும். ராஜினாமா செய்த ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடமும் கவர்னராகிய நீங்கள் தலையிட்டு, அவர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும். அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்க வேண்டும்.மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உங்களுக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.</p><p>சாதிவாரி மககள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னதாகவே, தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றுவதற்கான பரிந்துரைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பா.ஜ.க. அரசின் &apos;மதவாத அரசியல்&apos; செயல் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு இணங்கிவிட கூடாது - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-not-yield-to-the-bjp-governments-agenda-of-communal-politics-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-not-yield-to-the-bjp-governments-agenda-of-communal-politics-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">2723bfa3-d7a0-40a6-a7e3-3aa5ebe6fd67</guid><pubDate>Sun, 12 Jul 2026 16:33:20 +0000</pubDate><atom:updated>2026-07-12T16:33:20.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/d7859wpb/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/d7859wpb/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட வேண்டுமென்று இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ( No. 14/2/2025-Publie; Government of India Dt 09.07.2026). எந்தெந்த நிகழ்ச்சிகளில் அதனைப் பாடவேண்டும் என்ற பட்டியலையும் கொடுத்துள்ளது. </p><p>உள்துறை அமைச்சகத்தின் இந்தச் சுற்றறிக்கை  இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்தானது மட்டுமல்ல; மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதுமாகும். எனவே, இந்த சுற்றறிக்கையை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். அத்துடன், 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்பதைத் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று முதல்-அமைச்சர் மத்திய அரசிடம் உரிய முறையில் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். </p><p>இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' பாடல் இருப்பதா? 'வந்தே மாதரம்' பாடல் இருப்பதா? என்ற விவாதம் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே எழுப்பப்பட்டது. விரிவான வாதங்களுக்குப் பிறகே,  'ஜன கண மன' என்னும் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக தேர்வு செய்யப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளாக அதுவே பாடப்பட்டு வருகிறது. இப்போது பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தூண்டுதலால் 'வந்தே மாதரம்' பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது. </p><p>மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் மட்டும் அதனைப் பாடினால் போதும் என்று தொடக்கத்தில் சொன்னார்கள். இப்போதோ 'தேசிய கீதம்' பாடுவதற்கு முன்பு 'தேசிய பாடலென்று' "வந்தே மாதர"த்தைப் பாட வேண்டும் என ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. </p><p>1870-களில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயரால் எழுதப்பட்டு, 1882-ல் வெளியான அவரது 'ஆனந்தமடம்' (Anandamath) நாவலின் மூலம் பிரபலமடைந்த இப்பாடலை தேசிய கீதம் ஆக்கவேண்டும் என்ற கருத்துக்கு சுதந்திரத்துக்கு முன்பேயே அனைத்துத் தரப்பினரின் ஆதரவு கிடைக்கவில்லை. இந்தப் பாடலின் முதல் இரண்டு பத்திகளுக்குப் பிறகு இந்துக் கடவுள்களைப்பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதனை முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற மதங்களைச் சார்ந்தோர் பாடினால் அது அவர்களது வழிபாட்டுக் கொள்கைக்கு எதிராகப் போய்விடும். எனவே, முஸ்லிம் லீக் போன்ற சில அமைப்புகள் அதனை எதிர்த்ததன.</p><p>இந்தப் பிரச்சினையால் நாட்டின் விடுதலை போராட்டம் பின்னடைவைச் சந்திக்கிறது என்பதை உணர்ந்த ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் முதலான காங்கிரஸ் தலைவர்கள் 1937-ல் ஒரு சமரசத்தை ஏற்படுத்தினர். இந்தியர்களிடையே ஒற்றுமையைப் பேணுவதற்காக, இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வெளிப்படையான இந்துமதம் சார்ந்த குறிப்புகளைத் தவிர்த்து, காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுமாறு அவர்கள் பரிந்துரைத்தனர்.</p><p>1950 இல் அரசியல் நிர்ணய சபையிலும்கூட இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டது. 'ஜன கண மன' பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, 'வந்தே மாதரம்' பாடவேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், ரவீந்திரந்தா தாகூர் எழுதிய 'ஜன கண மன' என்னும் பாடலே தேசியகீதம் என முடிவு செய்யப்பட்டது. </p><p>வந்தே மாதரம் பாடலின்  150 ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டதிலிருந்து அதனை தேசிய கீதமாக அறிவித்துவிட வேண்டும் என பா.ஜ.க. அரசு துடிக்கிறது. அதற்காகவே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த சுற்றறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. </p><p>மதச்சார்பின்மைக்கு மாறான - ஒரு குறிப்பிட்ட மதசார்புள்ள பாடலான வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டுமென்றும்; மத்திய பாஜக அரசின் இந்த மதவாத அரசியல் செயல்திட்டத்தைத் தமிழ்நாடு அரசும் ஏற்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அண்ணாமலை மாநாடு: &apos;கொண்டையை மறைக்காம விட்டுட்டீங்கப்பா&apos;&apos; - மாணிக்கம் தாகூர் கிண்டல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-conference-you-left-the-party-without-hiding-it-manickam-tagores-sarcasm</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-conference-you-left-the-party-without-hiding-it-manickam-tagores-sarcasm#comments</comments><guid isPermaLink="false">f6df2853-eeee-446d-9bd7-077ac0ed7351</guid><pubDate>Sun, 12 Jul 2026 16:11:24 +0000</pubDate><atom:updated>2026-07-12T16:11:24.479Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,ManickamThakur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/gpqvx3ae/taqure33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/gpqvx3ae/taqure33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>பாஜகவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் அண்ணாமலை சொல்வது, வடிவேலு காமடியை போல் “அந்த கொண்டய மறைக்காம விட்டியேப்பா..” மாதிரி இருக்கு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.</p><h2>அண்ணாமலை புதிய இயக்கம் </h2><p>தமிழக அரசியல் களத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனியாக புதிய இயக்கம் மற்றும் மாநாடு இன்று நடத்தினார்.</p><p>அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் நகர்வை நடிகர் வடிவேலுவின் காமெடியுடன் கொண்டையை மறைக்காம விட்டுட்டீங்கப்பா' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் கிண்டல் செய்துள்ளார்.</p> <p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், </p><p>தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் புதிய இயக்கங்கள் அல்லது அமைப்புகளைத் தொடங்கலாம்.அதில் எவ்விதத் தவறும் இல்லை. அதற்காக அண்ணாமலைக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், அவர் பேசும்போது தனக்கும் பாஜகவிற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாதது போலக் காட்டிக்கொள்ள முயல்வதுதான் பெரும் ஆச்சரியமாக உள்ளது.</p><h2>அண்ணாமலை திட்டம் பலிக்காது</h2><p> அண்ணாமலை பேசுவதைப் பார்த்தால் அப்படியே சினிமாப் படத்தில் வரும் நடிகர் வடிவேலுவின் காமெடி போல் தான் இருக்கிறது. ஒருவன் தன் தலையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துவிட்டு மாட்டிக்கொள்வதைப் போல, கொண்டையை மறைக்காம விட்டுட்டீங்கப்பா' என்ற கதையாகத்தான் அண்ணாமலையின் புதிய இயக்கம் இருக்கிறது. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பாஜகவின்</a> முகமாக இருந்துகொண்டே, மக்கள் மத்தியில் தனியாக ஒரு பிம்பத்தை உருவாக்க அண்ணாமலை போடும் திட்டம் பலிக்காது.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் வாலிபர் கொலை:  தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-murdered-in-nellai-manhunt-launched-for-three-absconding-suspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-murdered-in-nellai-manhunt-launched-for-three-absconding-suspects#comments</comments><guid isPermaLink="false">53bd7d7d-0116-474d-8885-5fde0f1d460b</guid><pubDate>Sun, 12 Jul 2026 16:02:26 +0000</pubDate><atom:updated>2026-07-12T16:02:26.709Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,கொலை,வாலிபர்,murdered,teenager,A youth</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/1g574940/sea.gif" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/1g574940/sea.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p> நெல்லை நகர் பாறையடி பகுதியை சேர்ந்த வாலிபர் ஆவுடையப்பன் (32) மர்ம நபர்களால் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">வெட்டி படுகொலை</a> செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>மர்ம கும்பல் வெறிச்செயல்</h2><p>பாறையடி பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் இன்று தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென ஆவுடையப்பனை வழிமறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.</p><h2>ரத்த வெள்ளத்தில் பலி </h2><p>இதில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயமடைந்த ஆவுடையப்பன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். </p><h2>முன்விரோதம்</h2><p>முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, கொலையுண்ட ஆவுடையப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுக்க போலீசார் முயன்றனர். ஆனால், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் உடலை எடுக்க விடாமல் போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-5</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-5#comments</comments><guid isPermaLink="false">d4f366cd-080e-416a-8547-746943506390</guid><pubDate>Sun, 12 Jul 2026 15:58:44 +0000</pubDate><atom:updated>2026-07-12T15:58:44.407Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின் தடை,power cut</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/c6a8j5w9/Untitled-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/c6a8j5w9/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னையில் 13.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><h2>மின் தடை ஏற்படும் இடங்கள்</h2><p><strong>ஆவடி</strong>: சிவசங்கரபுரம், ஜாக் நகர், குளக்கரை தெரு, சி.டி.எச். சாலை , சரஸ்வதி நகர், அண்ணா நகர் 1 முதல் 4வது தெருக்கள் வரை, எம்.ஜி.ஆர். நகர், நேரு நகர், வைஷ்ணவி நகர் 1 முதல் 10வது தெருக்கள் வரை, சாந்திபுரம், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர் எ மற்றும் பி தெருக்கள், இந்திரா காந்தி நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டி.ஆர்.ஆர். தெரு, நேதாஜி நகர், முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, செக் போஸ்ட், என்.எம். சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம் மேட்டூர், கன்னிகாபுரம், நேரு பஜார் , கஸ்தூரிபாய் நகர்.</p><p><strong>அனகாபுத்தூர்</strong>: 7வது பிரதான சாலை, 2வது முதல் 8வது குறுக்குத் தெருக்கள் வரை, காந்தி சாலை, இந்திரா காந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, கலைஞர் ரோடு, கலைஞர் குறுக்குத் தெரு, பெரியார் தெரு, இளங்கோ தெரு, சிக்னல் ஆபீஸ் சாலை, கிருபா தெரு, லட்சுமி நாராயணன் தெரு, எஸ்.பி.ஐ. காலனி, கிறிஸ்டோபர் 1, 2, மற்றும் 3வது தெருக்கள், மாருதி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு.</p><p><strong>பம்மல்</strong>: இரட்டை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பிள்ளையார் </a>கோவில் தெரு, ஏழுமலை தெரு, நந்தனார் தெரு, நடராஜன் தெரு, பஜனை கோவில் தெரு, தேவதாஸ் தெரு, ராமானுஜம் தெரு, ரங்கசாமி தெரு, எச்.ஐ. காலனி 1வது பிரதான சாலை, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, வடிவேல் தெரு, கக்கன் தெரு, மருதுபாண்டி தெரு, வீரராகவன் தெரு, நல்லதம்பி சாலை .</p><p><strong>ஐடி</strong>. காரிடார்: ஹிரானந்தனி அபார்ட்மெண்ட்ஸ், ரேடியன்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஒலிம்பியா பனாசே மற்றும் ஒலிம்பியா ஓபலைன் அபார்ட்மெண்ட்ஸ், ஓ.எம்.ஆர். சாலை, நாவலூர், விஜயகணபதி நகர், எகாட்டூர் கிராமம், எமாமி தேஜோமயா அபார்ட்மெண்ட், முட்டுக்காடு, கானத்தூர் கிராமம், ஸ்ரீனிவாசா அபார்ட்மெண்ட், டிவிஎச் டாஸ் அபார்ட்மெண்ட், விர்டூசா எச்.டி. சேவை (எண்: 636), இந்தஸ் அனந்த்யா அபார்ட்மெண்ட், கிரியேஷன்ஸ் அபார்ட்மெண்ட்.</p><p><strong>பெசன்ட் நகர்</strong>: சாஸ்திரி நகர் காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெருக்கள் வரை, பிள்ளையார் கோயில் தெரு , முத்துலட்சுமி தெரு.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவை: ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட 3 மாடி வணிக வளாகம் - கோர்ட்டு உத்தரவின்படி இடித்து அகற்றம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-three-storey-commercial-complex-built-on-encroached-land-demolished-following-court-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-three-storey-commercial-complex-built-on-encroached-land-demolished-following-court-order#comments</comments><guid isPermaLink="false">7baf95e6-2a81-434b-83c9-a43f0d1db152</guid><pubDate>Sun, 12 Jul 2026 15:52:01 +0000</pubDate><atom:updated>2026-07-12T15:52:01.578Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mgt8tcvj/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/mgt8tcvj/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை ஆவாரம்பாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட 3 மாடி வணிக வளாகத்தை நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.</p><p>தாமோதரன் என்பவர் இந்த அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதுகுறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று வணிக வளாக கட்டிடம் இடித்து அகற்றபப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>வேலூர் கிரீன் சர்கிள் பகுதியில் புதிய சுரங்கப்பாதை பணிகள்: போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-subway-construction-work-in-the-vellore-green-circle-area-traffic-diversion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-subway-construction-work-in-the-vellore-green-circle-area-traffic-diversion#comments</comments><guid isPermaLink="false">b9014a78-4b2e-4cf8-8809-3a376df7b3a8</guid><pubDate>Sun, 12 Jul 2026 15:35:18 +0000</pubDate><atom:updated>2026-07-12T15:35:18.132Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,work,போக்குவரத்து மாற்றம்,Subway,traffic diversion,சுரங்கப்பாதை பணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/l157mr07/traffic-changes.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து மாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/l157mr07/traffic-changes.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p>வேலூர் கிரீன் சர்கிள் பகுதியில் புதிய சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதை ஒட்டி, இன்று முதல் முக்கிய <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">போக்குவரத்து மாற்றங்கள்</a> செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.</p> <p>பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்ற விவரங்கள் பின்வருமாறு:</p><p><strong>1. பெங்களூரு நோக்கிச் செல்லும் வாகனங்கள்.</strong></p><p> காட்பாடி மற்றும் சத்துவாச்சாரி சாலைகளில் இருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் வாகனங்கள், கிரீன் சர்கிள் பகுதியிலிருந்து நேரடியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலைக்குள் செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் நேஷனல் தியேட்டர் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி அதன் பின்னர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை வழியாக தங்களது பயணத்தைத் தொடரலாம்.</p><p><strong>2. சித்தூர் மற்றும் காட்பாடி நோக்கிச் செல்லும் வாகனங்கள்.</strong></p><p> சென்னை மற்றும் சத்துவாச்சாரி பகுதிகளில் இருந்து சித்தூர் மற்றும் காட்பாடி நோக்கிச் செல்லும் வாகனங்கள், கிரீன் சர்கிளிலிருந்து நேரடியாக சித்தூர் சாலைக்கு செல்ல கூடாது. அதற்கு பதிலாக, நேஷனல் தியேட்டர் சந்திப்பு வரை நேராக சென்று, அங்கிருந்து யூ-டர்ன் (U-Turn) எடுத்து மீண்டும் கிரீன் சர்கிளை அடைய வேண்டும். பின்னர் இடதுபுறமாகத் திரும்பி வழக்கமான சாலை வழியாகச் செல்லலாம்.</p> <p><strong>3. சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள்.</strong></p><p> பழைய பேருந்து நிலையம் (சி.எம்.சி அவுட்கேட் வழியாக) மற்றும் பழைய பைபாஸ் சாலை ஆகிய இருவேறு வழிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள், நேஷனல் தியேட்டர் சந்திப்பை கடந்து வலதுபுறமாக திரும்ப வேண்டும். பின்னர் கிரீன் சர்கிளை அடைந்து, நேரடியாக சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலைக்கு செல்லாமல், இடதுபுறமாக திரும்பி, அடுத்து வரும் வலதுபுற யூ-டர்னில் (U-Turn) திரும்பி தங்களது பயணத்தை தொடர வேண்டும்.</p><h2>முழு ஒத்துழைப்பு</h2><p>இன்று முதல் இந்த புதிய போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த தற்காலிக மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வியாசர்பாடி விளையாட்டுத் திடலை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/corporation-commissioner-inspects-vyasarpadi-playground</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/corporation-commissioner-inspects-vyasarpadi-playground#comments</comments><guid isPermaLink="false">7eab837f-6b83-43b7-8a3f-5c21e8107650</guid><pubDate>Sun, 12 Jul 2026 15:15:42 +0000</pubDate><atom:updated>2026-07-12T15:15:42.617Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,வியாசர்பாடி,Vyasarpadi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qrufmean/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/qrufmean/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினை மாநகராட்சி ஆணையாளர் ஜி. எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>மாநகராட்சி ஆணையர் ஆய்வு</h2><p>இன்று (12.07.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளையாட்டுத் திடலில் இருந்த இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் கலந்துரையாடி, தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து, விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினை மேம்படுத்துதல், குத்துச்சண்டை பயிற்சிக் கூடம் அமைத்தல், பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைத்தல், கிரிக்கெட் வளைப் பயிற்சி அமைத்தல், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இந்த ஆய்வின்போது இணை ஆணையர் (பணிகள்) செ.சரவணன், மண்டல அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை  மீண்டும் திறந்திட வேண்டும் - மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ambedkar-statue-in-othiyathur-must-be-reopened-marxist-party-urges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ambedkar-statue-in-othiyathur-must-be-reopened-marxist-party-urges#comments</comments><guid isPermaLink="false">1d972dbc-456b-4b9c-9fc6-fe29fc77ed6e</guid><pubDate>Sun, 12 Jul 2026 15:05:35 +0000</pubDate><atom:updated>2026-07-12T15:05:35.749Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வலியுறுத்தல்,சிலை,statue,அம்பேத்கர்,Ambedkar,to insist,Communist Party of India (Marxist),மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/vw1ztxz8/communist.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/vw1ztxz8/communist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஒதியத்தூர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88">அம்பேத்கர் சிலையை</a> மீண்டும் திறந்திட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>வலியுறுத்துகிறது</h2><p>சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை உடனடியாக மீண்டும் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசையும் சேலம் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது.</p><h2>கோரிக்கை</h2><p>சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இச்சிலையை திறப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்திய தலித் மக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகம் இச்சிலையை திறந்து வைத்துள்ளது.</p> <h2>அடிபணிந்து </h2><p>இதனால் ஆத்திரமுற்ற ஒரு தரப்பினர், சிலையை உடனடியாக மூட வேண்டும் என்று மீண்டும் பலமான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அவ்வாறு சாதிய மனப்பான்மையுடன் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு, சிலை திறந்து வைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம், சாதிய மனநிலையுடன் கூடியவர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து அண்ணல் அம்பேத்கர் சிலையை மீண்டும் துணியால் மூடி அடைத்துவிட்டது.</p><h2>கண்டனம்</h2><p>இத்தகைய சூழ்நிலையில், அம்பேத்கர் சிலைக்கு இழைக்கப்பட்ட சாதிய ரீதியான இந்த அநீதிக்கு எதிராக உடனடியாக சிலையை திறக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய தலித் மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதும், தலித் பகுதியை சேர்ந்த சிலரைக் கைது செய்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.</p><h2>வன்கொடுகைகள் தடுப்பு சட்டம்</h2><p>எனவே, மாவட்ட நிர்வாகம் ஒதியத்தூர் அம்பேத்கர் சிலையை உடனடியாக திறந்து வைத்திட வேண்டும். சட்டவிரோதமாக சிலையை மூடிய அரசு அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், சாதிய மனநிலையோடு சிலையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீதிக்காகப் போராடியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சியில் போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - கலெக்டர் நடவடிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pocso-case-convict-in-kallakurichi-arrested-under-the-goondas-act-collector-takes-action</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pocso-case-convict-in-kallakurichi-arrested-under-the-goondas-act-collector-takes-action#comments</comments><guid isPermaLink="false">922b703d-8006-4041-b76b-7452f4cb7533</guid><pubDate>Sun, 12 Jul 2026 14:49:09 +0000</pubDate><atom:updated>2026-07-12T14:49:09.475Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,போக்சோ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/40ynuxb8/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/40ynuxb8/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி,</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் ராமு (47) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்யப்பட்டார். </p><p>இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராமுவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், அவரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பத்மஜா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>உடற்பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு முதல்முறையாக பாடப்புத்தகங்கள் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/physical-education-textbooks-for-teachers-for-the-first-time-school-education-department-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/physical-education-textbooks-for-teachers-for-the-first-time-school-education-department-announcement#comments</comments><guid isPermaLink="false">d420f899-0efe-4f56-a144-3aa292b52cf8</guid><pubDate>Sun, 12 Jul 2026 14:08:18 +0000</pubDate><atom:updated>2026-07-12T14:08:18.620Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>education,உடற்பயிற்சி,ஆசிரியர்கள்,பாடப்புத்தகங்கள்,Education Department,பள்ளிக்கல்வித் துறை,Physical</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/u26bibu9/education-department.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளிக்கல்வித் துறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/u26bibu9/education-department.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">தமிழக பள்ளிக்கல்வித்துறை</a> மிக முக்கிய அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தரமான உடற்கல்வி பயிற்சி அளிப்பதற்காக, ஆசிரியர்களுக்கு முதல்முறையாக பாடத்திட்டங்கள் அடங்கிய பிரத்யேக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.</p><h2>ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு</h2><p>இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்திற்காக தமிழக அரசு சுமார் 2 கோடி ரூபாய் (ரூ.1.93 கோடி) நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிதியிலிருந்து இந்த செலவினங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><h2> ரூ.58,000-க்கும் அதிகமான பள்ளிகள் பலன்</h2><p>இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 58,985 பள்ளிகளுக்கு உடற்கல்வி நூல்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளன. மொத்தமாக 2 லட்சத்து 68 ஆயிரம் புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு வழிகளிலும் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்த புத்தகங்கள் அனைத்தும் முழுமையாக தயாராகி, அடுத்த வாரம் முதல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p> <p>இதன் மூலம் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் பிற பாட வேளைகளாக மாற்றப்படுவது தடுக்கப்பட்டு, மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு திறமை மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம்: அண்ணாமலை பேச்சு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/like-2026-regime-change-is-certain-in-2031-annamalai-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/like-2026-regime-change-is-certain-in-2031-annamalai-speech#comments</comments><guid isPermaLink="false">19d9917a-c735-406a-baf8-fc470fde7a55</guid><pubDate>Sun, 12 Jul 2026 13:55:18 +0000</pubDate><atom:updated>2026-07-12T13:55:18.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,Annamalai,அண்ணாமலை,WeTheLeaders</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/l2uxhy0f/annamalai333.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/l2uxhy0f/annamalai333.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆக்சிப்பட்டியில் வி த லீடர்ஸ் மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:-</p><h2>ஒரு அரசியல் இயக்கம்</h2><p>38 நாட்களில் 19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். இது என் குடும்ப கட்சி இல்லை. ஜூன் 5-ல் ஆரம்பிக்கப்பட்ட வி த லீடர்ஸ் அமைப்பு ஒரு அரசியல் இயக்கம். இன்றுடன் 38-வது நாள். </p><p>பெண்கள், கல்லூரி மாணவிகளை பார்க்கும்போது நம் இலக்கில் 50 சதவீதம் தாண்டிவிட்டோம் என தெரிகிறது. அமைப்பில் சேர்ந்துள்ள 19 லட்சம் பேரில் 17 சதவீதம் மகளிர் இருக்கிறார்கள். இது நம் வெற்றி. இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர்தான். த<a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மிழ்நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள்.</a> </p><p>இங்கு எல்லாருமே தன்னார்வலர்கள்தான். இங்கு அனைவரும் தலைவர்களாக அமர்ந்திருக்கிறோம்.</p><p>பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்போடு அனைவரும் நின்றுகொண்டிருக்கிறோம். நல்லவர்கள் பணி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பு இங்கு வழங்கப்படும். </p><h2>ஆட்சி மாற்றம்</h2><p>6 மாதங்களும் 6 முக்கிய பிரச்சினைகளை எடுத்து வி த லீடர்ஸ் அமைப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளது. 2026 போல </p><p>2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம். மற்றுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படபோகிறது. தலைவர்கள் தானாக வரப்போகிறார்கள். </p><p>ஆகஸ்டில் நதிநீர் சுத்தம், செப்டம்பரில் பெண்கள் நலனுக்கான மாநாடுகளை நாம் நடத்துகிறோம். மது எல்லா இடங்களிலும் கலந்துவிட்டது. தைரியமாக மது குடிக்கும் காலம் வந்திருத்துகிறது.இன்னொரு கட்சியை திட்டுவதற்கு, தலைவர்களை குறை கூறுவதற்கான மாநாடு இது அல்ல.  எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அமைப்பு இருக்கிறதோ அதுவரை ஜூலையில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடக்கும்.  </p><p>5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது. </p><p>5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது.  கஞ்சாவை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களை நாங்கள் தடுக்க இருக்கிறோம்.</p><h2>தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடி</h2><p>தமிழ்நாட்டில் ஒரு ரேஷன் கார்டுக்கு 4.15 லட்சம் கடன் இருக்கிறது. பிரம்மாவே வந்தாலும் தமிழ்நாட்டை இதில் இருந்து காப்பாற்ற முடியாது.  இந்த ஆண்டு தவெக அரசு 85 ஆயிரம் கோடிக்கு குறையாமல் கடன் வாங்கும். இந்த தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யும் போது தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ. 14 முதல் 15 லட்சம் கோடியாக இருக்கும். அதனை நாம் சரி செய்ய வேண்டும். அதற்கு அந்த இடத்திற்கு நல்ல தலைவர்களை கொண்டு வரவேண்டும்</p><h2>வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறும் </h2><p> “யார் நம்மைப் பிரித்தாலும், சேவை, தமிழ்நாட்டின் மாற்றம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் இணைந்திருக்கிறோம். நல்ல தலைவர்களை, தன்னார்வலர்களை நாம் கீழே அடிமட்டத்தில் இருந்து எடுக்கப்போகிறோம். அவர்களை மக்களின் வேட்பாளராக நிற்கவைத்து, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, எம்.பி.யாக மாற்றப்போகிறோம். வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறப்போகிறது. </p><h2>நான் முதலில் இந்தியன்</h2><p>நாட்டிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம். மதுவை ஒழிப்பது மட்டும் நோக்கம் அல்ல, மது குடிப்பவர்களை திருத்துவோம்.  நான் தேசியவாதி, நான் முதலில் இந்தியன், இரண்டாவது தமிழன்.</p><p>பண்பாட்டு மீட்சி, ஆட்சியிலே புரட்சி என்பதும் எங்களின் தாரக மந்திரம். </p><h2>தவெகவில் அனைவரும் புதியவர்கள்</h2><p>கோவில் நிலத்தை வைத்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திமுகவினர் அரசியல் செய்தனர். கரூரில் கோவில் நிலத்தில் குடியிருந்தவர்களுக்கு தவெக அரசு அதை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. மதத்தின் அடிப்படையில் நான் இந்து. உங்களுக்கு உங்கள் மதம் பெரிது. எனக்கு என் மதம் பெரிது. ஆனால் அது வீட்டில் மட்டுமே. சாதி, மதம், சாதியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு அனைவருக்கும் பொதுவானவராக வருகிறேன். </p><p>வி த லீடர்ஸ் -ல் தலைவர் கிடையாது. பேனர், புகைப்பட கலாசாரம் இல்லை. தவெகவில் அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள், தடுமாறுவார்கள். அவர்களை நாம் தூக்கிவிடத்தான் வேண்டும். மூர்க்கத்தனமாக, அதிகாரத்தை பிடிக்க நாம் வரவில்லை. நல்ல நோக்கத்துடன் நம் அரசியல் இருக்கும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது உட்பட 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர் பாடல் அண்ணாமலை மாநாட்டில் ஒளிபரப்பட்டது.  அண்ணாமலை தொடங்கிய வி த லீடர்ஸ் அமைப்பின் செயலி மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  அண்ணாமலை வி த லீடர்ஸ் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றனர்.  போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் புகுந்த காட்டுயானை; எச்சரிக்கை விடுத்த வனத்துறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-enters-tea-estate-near-valparai-forest-department-issues-warning</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-enters-tea-estate-near-valparai-forest-department-issues-warning#comments</comments><guid isPermaLink="false">22a7d67e-58c4-4b98-add3-cb892adf13dc</guid><pubDate>Sun, 12 Jul 2026 13:35:44 +0000</pubDate><atom:updated>2026-07-12T13:35:44.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வால்பாறை,வனத்துறை,எச்சரிக்கை,காட்டுயானை,தேயிலைத் தோட்டம்,A wild elephant,Forest Department warns,valparai tea estate</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2d92t790/wild-elephant.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காட்டுயானை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-12/2d92t790/wild-elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வால்பாறை, </p><p>கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் ஆங்காங்கே பலா மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. தற்போது பலாப்பழ சீசன் என்பதால், பழங்களின் வாசனைக்கு ஈர்க்கப்பட்டு வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் எஸ்டேட்டுக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது.</p><p>இந்த எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாகவும், சில நேரங்களில் ஒற்றையானையாகவும் தொடர்ந்து சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். </p> <h2>பலாப்பழம் அருகே ஒற்றையானை</h2><p>இந்த நிலையில், நேற்று மதியம் வால்பாறை அருகே உள்ள குரங்குமுடி எஸ்டேட் தேயிலை தோட்டத்திற்குள் திடீரென ஒற்றை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">காட்டுயானை</a> ஒன்று புகுந்தது. பட்டப்பகலில் வந்த அந்த யானை, அங்கிருந்தஅங்கிருந்த பலா மரத்தின் அருகே நின்றுகொண்டிருந்தது.</p> <h2>யானை பதுங்கியது</h2><p>அப்போது அந்த வழியாக பேருந்து ஒன்று வந்தது. பேருந்தின் சத்தம் கேட்டதும், பலாப்பழம் அருகே நின்று கொண்டிருந்த அந்த காட்டுயானை, சட்டென்று பலா மரத்தின் அடியில் சென்று மறைந்து பதுங்கி கொண்டது. பேருந்திற்கு வழிவிடுவது போலவும், தன்னை மறைத்து கொள்வது போலவும் அந்த யானை செய்த செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.</p><h2>பயணிகள் ரசிப்பு</h2><p> பேருந்துக்குள் இருந்த பயணிகள், பட்டப்பகலில் மிக அருகில் யானை பதுங்கி நின்ற இந்த அபூர்வ காட்சியை தங்கள் மொபைல் போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><h2>வனத்துறை எச்சரிக்கை</h2><p>தற்போது வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் பலாப்பழ சீசன் தீவிரமடைந்துள்ளதால், காட்டுயானைகளின் நடமாட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளது. எனவே, தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>